SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு. இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறது. ஹெச்-1பி விசா உள்ளிட்ட சில‌ விசாக்கள் வைத்திருக்கும் பணியாளர்களை அமெரிக்காவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தி உள்ளது. ஆப்பிள் - கூகுள் US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி என்ன காரணம்? குறிப்பிட்ட பணியாளர்கள் அமெரிக்காவைத் தாண்டி வேறு எங்காவது சென்றால், அவர்கள் மீண்டும் விசா ஸ்டாம்பிங் பெற, 12 மாதங்கள் வரை ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். இதனால், அவர்களது பணி தடைப்படலாம். 12 மாத காலம் வரையிலான தாமதத்திற்கு சமூக வலைதள சோதனையை மிக முக்கியமாகக் கூறுகிறது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?

விகடன் 21 Dec 2025 9:10 am

RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?

சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணத்தை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது முதலீடு செய்யலாமா? இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சந்தையின் ஆரம்பத்தில் இருந்தே டாலர்களை விற்று வந்தது. அப்படி 5 பில்லியன் டாலர்களை விற்றது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சந்தையில் வலுவானது. ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ரூபாய் மதிப்பு வலுவினால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு நேற்று வந்தது மிக முக்கிய நிகழ்வாகும். டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாள்களைக் கடந்துவிட்டோம். ஆனால், நேற்று தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பெரியளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நேற்று கிட்டத்தட்ட ரூ.1,171 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போது ஒப்பந்தம், உலக அளவிலான அறிக்கை என உலகளவில் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு வந்த காரணம், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் என்பதனால் தான். NPS-ல் 'சூப்பர் 10' மாற்றங்கள் - இனி முதலீடு டு பணம் எடுப்பது.. எல்லாமே ஈசி! | தேசிய பென்சன் திட்டம் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show

விகடன் 18 Dec 2025 12:48 pm