US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்
அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மேலும் இருநூறு பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள். மேலும், இந்தியாவில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நாடு கடத்தல் நடிகர் சல்மான் கான் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் சல்மான் கானைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோய் அவர்களோடு சேர்ந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்படுகிறார். அவர் குஜராத்தில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களின் சகோதரர் ஆவர். அமெரிக்காவில் இருந்து இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொலை, பணம் பறித்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் அன்மோல் பிஷ்னோய் ஈடுபட்டு வந்தார். 2022 ஆம் ஆண்டு, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். சித்து மூஸ்வாலா படுகொலையிலும் அன்மோல் பிஷ்னோய்க்கு முக்கிய பங்கு உள்ளது. விமானம் அன்மோல் கைது ரஷ்ய ஆவணங்களை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் கனடா இடையே தொடர்ந்து பயணம் செய்து வந்தார். இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்மோல் பிஷ்னோயின் நடமாட்டத்தை கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோய் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் சாதனம் மூலம் அவரது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்காவில் அடைக்கலம்; அன்மோல் பிஷ்னோய்யின் திட்டமென்ன? ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. அன்மோல் பிஷ்னோய் மட்டுமல்லாமல், பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு கிரிமினல்களும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியாவிற்காக கிளம்பி விட்டது. ஜி.பி.எஸ் இன்று டெல்லி வருகை அந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து அன்மோல் நாடு கடத்தப்பட்டதை கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அரசு இதுபற்றி அவருக்கு மெயில் அனுப்பியதாகவும், அன்மோல் பிஷ்னோய் டெல்லியில் இறங்கியவுடன் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார். மும்பை போலீஸார் அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இரண்டு முறை அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அவன் இந்தியாவிற்கு வந்தவுடன், எந்த விசாரணை ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அன்மோல் பிஷ்னோய் கனடாவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கைது மற்றும் நாடு கடத்தல் பல முக்கிய வழக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மோல் மீது மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு விவகாரம்... லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது..!
5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!
சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெற்கு சீனாவைச் சேர்ந்த சென் யூவென் என்ற நபர், தனது ஐந்து வயதில் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்திற்கு 140 யுவான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அவரது தேசப்பற்றுக்கு மதிப்பளித்து, தற்போது சீன அரசு அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து, ஒரு நினைவுப் பரிசையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்ஷோ நகரைச் சேர்ந்தவர் சென் யூவென். இவரது தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதால், சென் யூவெனுக்கு சிறுவயதிலிருந்தே ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. 1999ஆம் ஆண்டில், அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்கு நன்கொடை வழங்குவது குறித்து அவரது தந்தையும் நண்பர்களும் பேசுவதைக் கேட்டிருக்கிறார். உடனே சென் யூவென் தனது சேமிப்பான 140 யுவானை, தந்தை உதவியுடன் சீன ராணுவத்தின் பொது ஆயுதத் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பதிலும் வந்திருக்கிறது. அவரது நன்கொடை விதிமுறைகளின்படி திருப்பி அனுப்பப்பட்டதுடன், தேசப் பாதுகாப்பிற்கான அவரது ஆதரவைப் பாராட்டி ஒரு வாழ்த்து அட்டையும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென் யூவெனின் சிறுவயது நன்கொடை கதை சமூக ஊடகங்களில் பரவி பெரும் கவனம் பெற்றது. சென் யூவென் சட்டம் பயின்று, தற்போது பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது கதை பரவலானதைத் தொடர்ந்து, சீனாவின் அரசு கப்பல் கட்டும் கழகம் (China State Shipbuilding Corporation) அவரை நவம்பர் 10 அன்று கடற்படைத் தளத்தைப் பார்வையிட அழைத்தது. அவருக்கு நினைவு பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
``பசியில் 50 எலிகளை சாப்பிட்டேன்'' - 35 நாள்கள் காட்டில் வாழ்ந்த சீன பெண்; எதற்காக இப்படி செய்தார்?
சீனாவில் நடைபெற்ற சாகசப் போட்டி ஒன்றில் 35 நாட்கள் காட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் 50 எலிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு தீவில், 'காட்டுயிர் பிழைப்பு' என்ற போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் கலந்துகொண்ட 25 வயதான ஜாவோ டைஜு என்ற பெண், நவம்பர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 35 நாட்கள் அந்தத் தீவில் தங்கியிருந்தார். காட்டின் கடுமையான சூழலை எதிர்கொண்டு நீண்ட நாட்கள் தாங்கியதற்காக, அவருக்கு மூன்றாம் பரிசு மற்றும் 7,500 யுவான் (சுமார் ₹88,608) வழங்கப்பட்டது. Rats இந்த 35 நாட்களில், கடுமையான காலநிலை, பூச்சி கடிகள் போன்ற பல சவால்களை இவர் எதிர்கொண்டார். இந்த சவால்களுக்கு இடையில் அவரது உடல் எடை 85 கிலோவிலிருந்து 71 கிலோவாக, கிட்டத்தட்ட 14 கிலோ குறைந்துள்ளது. காட்டில் கிடைத்த புரதச்சத்து நிறைந்த உணவுகள் தான் எடை குறைப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். தனது உணவுக்காக நண்டுகள், கடல் முள்ளெலிகள் மற்றும் நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு, 35 நாட்களில் சுமார் 50 எலிகளை வேட்டையாடி, சுத்தம் செய்து, வறுத்து சாப்பிட்டதாக அவர் கூறியுள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி தீவை சூறாவளி தாக்கிய பிறகு, போட்டியில் இருந்து வெளியேற ஜாவோ முடிவு செய்து, தனது இலக்கை அடைந்துவிட்டதாகவும், தற்போது ஓய்வெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவறு நடந்தது எங்கே?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி: ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி’ - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு
வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல்தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
‘இது இறைவன் கொடுத்த உயிர்’ - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
’சிங்கக்குட்டியுடன் விளையாடலாம்’; வினோத சேவையால் சர்ச்சையில் சிக்கிய சீன ஹோட்டல்
சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விளையாடலாம் என அறிவிக்கப்பட்ட இந்த சேவைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். சீனாவின் ஜிமு நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவில் உள்ள ஒரு ரிசார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு 'லயன் கப் வேக்-அப் சர்வீஸ்' (Lion Cub Wake-Up Service) என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக ஒரு இரவு தங்குவதற்கு 628 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,804) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. lion cub இந்த சேவையின் கீழ், தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, சுமார் ஏழு நிமிடங்கள் சிங்கக்குட்டி விருந்தினர்களின் அறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நேரத்தில் அவர்கள் அதனுடன் விளையாடலாம். இந்த அனுபவத்தைப் பெற விரும்பும் விருந்தினர்கள் சேவை ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டுமாம். அதில் சிங்கக்குட்டி அறைக்குள் இருக்கும்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும், விருந்தினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வினோத சேவை குறித்த செய்தி பரவியதும், இதற்கு எதிரான விமர்சனங்கள் வலுத்துள்ளன. சிங்கக்குட்டியை அதன் இருப்பிடத்திலிருந்து பிரித்து, ஒரு அறைக்குள் அனுப்புவது விலங்குகள் காட்சிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. சீனாவில் இது போன்று நடப்பது முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதம், சோங்கிங் நகரில் உள்ள ஒரு ஹோட்டல் 'ரெட் பாண்டா வேக்-அப் சர்வீஸ்' என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், உள்ளூர் வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அந்தச் சேவையை நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்
பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது. Oxford Union Society நவம்பர் 13-ம் தேதி ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் இந்தத் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) உள்ளிட்டோரும், ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) உள்ளிட்டோரும் எதிரெதிர் பக்கத்தில் இருந்தனர். தீர்மானத்தை ஆதரித்து பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே தனது உரையில், ``இஸ்ரேல் காலனித்துவ சக்திகளால் நிறுவப்பட்ட ஒரு காலனித்துவ நாடு. சட்டத்துக்கு அப்பாற்பட்ட நாடாக இஸ்ரேல் செயல்படுகிறது, ஐ.நா தீர்மானங்களை மதிப்பதேயில்லை. இஸ்ரேல் அரசானது அணு ஆயுதம் ஏந்தியதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்ட காலனித்துவ ஆட்சியின் மையமாகவும் உள்ளது. இங்கே மிருகத்தனமான ஆக்கிரமிப்பு, குற்றங்கள், இனப்படுகொலை நடக்கிறது. இஸ்ரேல் இப்பகுதியை (பாலஸ்தீனம்) மீண்டும் மீண்டும் மோதல்களுக்குள் இழுத்து வருகிறது. இஸ்ரேல் ஒரு தீய நாடு, அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, காலனித்துவ மனநிலையில் உள்ளது. பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேல்தான் மிகப்பெரிய காரணம் என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும் என்று கூறினார். பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அவரைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிய ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர், ``இஸ்ரேல் ஈரானைவிட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து தவறானது மட்டுமல்லாமல், யதார்த்தத்தில் தலைகீழானது. பிராந்திய ஸ்திரத்தன்மையானது, போர்களை யார் தொடங்குகிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறதே தவிர, யார் அவற்றை நிறுத்துகிறார்கள் என்பதன் மூலம் அல்ல. ஐந்து அரபு நாடுகளில் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதில்லை. ஆனால், ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதைச் செய்கிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளும் இதனை அறியும். Gaza: Trump கூறிய பிறகும் தாக்குதலை தொடரும் Israel - அமைதி திரும்புமா? | Decode அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன. ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும். தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன. ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது. அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது என்றார். இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது. மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?
மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.

30 C