SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா... Reza Pahlavi 1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, 'ஷாவுக்கு மரணம்' என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது. இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9. புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர். கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. Leila Pahlavi பிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார். 1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார். ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். Leila Pahlavi Cementery அப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார். ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 5:26 pm

பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல் - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்

வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். அடம் பிடித்த ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார். மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப் பகிர்ந்துகொள்கிறேன்! இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். நோபல் கமிட்டி எதிர்ப்பு ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப் நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார். ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார். நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா! என்று பதிவிட்டிருக்கிறார். மரியா கொரினா மச்சாடோ ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்! செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 16 Jan 2026 9:24 am

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. டிரம்ப் அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி'ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன. அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 8:17 am

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன் மணிவண்ணன் திருமலை (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) தலைநகரில் வெடித்த வர்த்தகர்கள் போராட்டம்! கடந்த இரு வாரங்களாக இரான் பெரும் கொந்தளிப்பிலிருக்கிறது. இரானின் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் இரானிய ஆட்சிக்கு உலை வைத்துவிடுமா என்ற கேள்வியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, இந்த உள் நாட்டு கிளர்ச்சி, மற்றொரு பிராந்தியப் போரைத் தூண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரானின் தலை நகர் டெஹ்ரானில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முதலில் தொடங்கியது பிரச்னை. இரானிய நாணயமான, ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு எதிராக அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் ( 1 டாலர் - கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரியால் ) , டெஹ்ரானின் முக்கிய வணிக வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பின்னர் சேர்ந்துகொள்ள எதிர்ப்புகள் பெருகின. இரான் போராட்டம்! இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் , கடந்த பல ஆண்டுகளாகவே இரான் எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது கடந்த ஆண்டு நடத்திய 12 நாள் குண்டுத்தாக்குதலும் இரானியப் பொருளாதாரத்தை மேலும் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது. இரானின் அணு சக்தித் திட்டம் குறித்து ஒபாமா நிர்வாகம் இரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது. அதை அடுத்து கடுமையாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இரானிய நாணயத்தின் தொடர் வீழ்ச்சி... விலைவாசி உயர்வு! கடந்த ஆண்டு ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக 7 லட்சம் ரியால்கள் என்ற அளவில் மோசமான நிலையில் இருந்த இரானிய நாணயம், டிசம்பர் மாதம் மேலும் சரிந்து ஒரு மில்லியன் ரியால் என்ற அளவுக்கு மேல் வீழ்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொண்டு சென்றது. இரானியப் பணவீக்கம் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு ராக்கெட் போல் பாய்ந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் , வணிகர்களின் வர்த்தகத்தையும் பாதித்தது. இந்த நிலையில் வெடித்த டெஹ்ரான் போராட்டங்கள், மேலும் நாடெங்கும் பரவின. இரான் முழுவதும் சுமார் 68 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. Iran இந்த ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் ஒடுக்கியதைப் போலவே இம்முறையும் ஒடுக்க இரான் எத்தனித்தது. ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை போராட்டக்காரர்களை ஒடுக்க இரானின் மதகுருமார்கள் அரசு ஏவியது. பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தியதில், பல நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர். 2,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! இந்த வன்முறைகளில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இரான் அரசு இதை மறுக்கிறது. இரானின் வெளி நாட்டு எதிரிகள் செய்யும் பொய்ப் பிரசாரம் என்று இரான் வர்ணிக்கிறது. செய்தித் தணிக்கை போர் என்றாலே முதல் பலி உண்மைச் செய்திதான் என்பார்கள். எதேச்சாதிகார நாடுகளிலும் நிலைமை அப்படித்தான் என்பது தெரிந்த விஷயம். இரான் ஏற்கனவே கடும் செய்தித் தணிக்கையை அனுபவித்துவரும் நாடு. வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் அங்கு செயல்படுவதில்லை. இந்த நிலையில் இந்தப் போராட்ட செய்திகள் இணையம் மூலமாக மட்டுமே வெளி உலகுக்குத் தெரியவரும் என்பதை உணர்ந்த இரானிய அரசு, கடந்த ஒருவாரமாக இணைய சேவையை முடக்கியிருக்கிறது. இரான் ஆனால் இதையும் மீறி, இரானில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வி.பி.என் போன்ற வலையமைப்புகளை பயன்படுத்தி ஓரளவு செய்திகளை வெளியே கொண்டுவந்திருக்கின்றனர். எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விண்வெளி வழியே இணையசேவைகளை தரும் நிறுவனம். இந்த ஸ்டார்லின்க் ஏற்கனவே இரானில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதை ரகசியமாக பயன்படுத்தி பல இரானியர்கள் செய்திகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திவருகிறார்கள். டெஹ்ரானில் சுமார் 200 போராட்டக்காரர்களின் சடலங்கள் ஒரு மருத்துவமனை சடலக்கிடங்கில் அடுக்கி வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியெ கொண்டுவந்தது இந்த மாதிரி ரகசிய இணைய சேவைகள் மூலமாகத்தான். போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை? இதனிடையே, இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பலருக்கு அவசர அவசரமாக இரானிய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இதைக் கண்டித்து தனது சமூக ஊடகமான Truth Socialல் பதிவு ஒன்றை செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிப்பதை இரானிய அரசு நிறுத்தவேண்டும் இல்லையேல் அமெரிக்கா நேரடியாக தலையிடும் என்று எச்சரித்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எர்பான் சொல்தானி என்ற 26 வயது இளைஞர். இவர் டெஹ்ரான் அருகே பர்திஸ் என்ற நகரில் துணிக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருபவர். இவரைக் கைது செய்த இரான் பாதுகாப்புப் படையினர், இவர் மீது இரண்டே நாட்களில் விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்து, புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை அடுத்து அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா, மேற்குலக நிலைப்பாடு! வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை தனது கொள்கையாகவே முழங்கி, ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், பதவிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது தாக்குதல், உக்ரைன் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான போக்கு, சமீபத்தில் வெனிசுலா விவகாரத்தில் தலையிட்டு , மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்காவில் சிறை வைத்திருப்பது என்று அடுத்தடுத்து வெளிநாட்டுப் பிரச்னைகளில் தலையிட்டு, இப்போது இப்போது இரானிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருப்பது வியப்புக்குரியதுதான். ஆனால் ட்ரம்ப் என்ன சொன்னாலும், அமெரிக்க நிர்வாக அமைப்புகள் இரான் விவகாரத்தில் சற்று நிதானத்துடனே செயல்படும் என்று கருதுகிறார்கள் மத்தியக் கிழக்குப் பிராந்திய வல்லுனர்கள். வெனிசுலா - அமெரிக்கா இரான் வெனிசுலாவைப் போல எளிதில் வெற்றி கொள்ளக்கூடிய நாடல்ல என்பதை ட்ரம்ப் உணர்ந்திருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு காசா போரின்போது இரானின் அணு ஆயுத சோதனைக்கூடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் முற்றிலும் பலனளிக்காமல் போனதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், மத்தியக் கிழக்குப் பகுதியில் இஸ்லாத்தின் இரு முக்கிய பிரிவுகளான ஷியா சுன்னி நாடுகளிடையே ஏற்கனவே நிலவும் அரசியல்-சமூக முறுகல் நிலையை , அமெரிக்கா ஒரு சார்பாக நடத்தும் எந்த ஒரு தாக்குதலும் மேலும் கூர்மைப்படுத்தும் என்ற அச்சமும் இருக்கிறது. இதனால் அமெரிக்கா இரான் விஷயத்தில் எச்சரிக்கையுடனேயே எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என்றே தோன்றுகிறது. இரானில் உள் நாட்டு நெருக்கடி அதிகரித்து மக்கள் போராட்டத்தின் மூலம் அரசு மாறுவதையே அமெரிக்கா விரும்பும். எனவே அந்த நிலை உருவாவதற்கு அனைத்து தார்மீக மற்றும் பொருளாதார ஆதரவையும் அமெரிக்கா தர முயலும். இஸ்ரேல் போடும் கணக்கு? ஆனால் அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு புறமிருக்க, இரான் கடந்த 40 ஆண்டுகளாக பரம வைரியாகக் கருதிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் இந்த இரானிய உள் நாட்டுப் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறது என்பதும் முக்கியம். இரானிய இஸ்லாமிய மதகுருமார்கள் அரசை தன் இருப்புக்கே ஒரு அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்துவருகிறது. இரானும் இஸ்ரேலை அதே போல ஒரு கடும்போக்குடனே அணுகி வந்திருக்கிறது. இரானின் அணு சக்தித் திட்டங்கள் இஸ்ரேலைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன என்பது இஸ்ரேலின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் காரணமாகவே இரானிய அணு சக்தி நிலைகளின்மீது அமெரிக்கத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட இஸ்ரேல் ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்தது. இப்போது இரானிய உள் நாட்டு அரசியல் மீண்டும் மக்கள் போராட்டங்களால் சிக்கலாகியிருக்கும் நிலையில், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இஸ்ரேல் நிச்சயம் கணக்குப் போடும் என்றே அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள்.ஆனால். அமெரிக்காவின் கண்ணசைவுக்காக அது காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதை உணர்ந்துதான், இரானிய அரசு, இந்த உள் நாட்டுப் போராட்டங்களையே , இரான்-விரோத வெளி நாட்டு சக்திகள் ஆதரவுடன் நடக்கும் போராட்டம் என்று வர்ணித்து வருகிறது. இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, வெளி நாடுகளின் “தீய தலையீட்டை” எதித்து இரான் தன்னைக் காத்துக்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். மன்னராட்சி மீண்டும் திரும்புமா? இந்தப் போராட்டங்களுக்கு உள் நாட்டில் தலைமை தாங்கி நடத்த வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், இரானிய முன்னாள் மன்னர் மறைந்த ரேஸா பஹ்லவியின் வாரிசு , இளவரசர் பஹ்லவி அமெரிக்காவில் இருந்து இந்தப் போராட்டக்காரர்களுக்கு ஊக்கம் கொடுத்துவருகிறார். இவர் கடந்த காலங்களில் இரானியர்களை பிளவுபடுத்தும் ஒரு சக்தியாகத்தான் இருந்தார். ஆனால் தற்போதைய போராட்டத்தில் இவர் இரானியர்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டும் ஒரு கிரியாவூக்கியாகப் பங்கு வகிக்கிறார் என்று சில இரானிய விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் பஹ்லவியின் சர்வாதிகார முடியாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் அயோதுல்லா கொமொனி தலைமை வகித்து நடத்திய இஸ்லாமியப் புரட்சி 1979ல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. இப்போது மீண்டும் இரானியர்கள் மதகுருமார்களின் ஆட்சியை அகற்றிவிட்டு பழைய மன்னராட்சிக்குத் திரும்புவார்களா என்பது தெரியவில்லை. பஹ்லவியிடம் இது குறித்து கேட்டபோது, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அந்த வாக்கெடுப்பு முடிவின் படி இரானின் எதிர்கால அரசு அமையும் என்று பதிலளித்திருக்கிறார். இரான் போராட்டம் 47 வருடங்களாக அதிகாரத்தில் இருந்து வரும் இஸ்லாமிய அரசு, இந்த மாதிரி பல போராட்டங்களை கடந்த சுமார் 16 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறது. கடந்த 2022ல் பெண்கள் முகத்திரை விஷயத்தில், முகத்திரை சரியாக அணியாத ஒரு இளம் பெண், இரானிய மதப் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் கைதியாக இருந்த நிலையில் கொல்லப்பட்டது இரானில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இது போன்ற பல போராட்டங்களை இரானிய அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறது. இந்த முறையும் இதுவரை இந்தப் போராட்டத்தை படை பலத்தைப் பயன்படுத்தி அடக்கியிருக்கிறது இரான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிச்சேதம் அதிகமாக விளைந்திருக்கிறது இம்முறை. இந்தப் போராட்டத்தின் தீவிரத்தன்மை தொடருமா அல்லது இரானிய அரசு மீண்டும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்துத்தான் இரானிய அரசியலின் எதிர்காலம் மட்டுமல்லாது, இரான் அமைந்திருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியல் நிலவரமும் தங்கியிருக்கிறது

விகடன் 15 Jan 2026 5:15 pm

'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!

தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. Chinese “எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

விகடன் 14 Jan 2026 6:40 pm

'HELP IS ON ITS WAY' - ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?

ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்... செய்துகொண்டிருக்கிறார். நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் அமெரிக்கா 25 சதவிகிதம் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப். முன்னர், ஈரான் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அது இதுவரை காணாத விளைவுகளைச் சந்திக்கும் என்று வேறு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தான், ஈரான் போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிற செய்தி வெளியாகி உள்ளது. ட்ரம்ப் பதிவு வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ட்ரம்ப் பதிவு நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். ஈரான் நாட்டுப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய அமைப்பைக் கையிலெடுங்கள். போராட்டக்காரர்களை கொல்பவர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும். போராட்டக்காரர்களைக் கொல்லும் இந்த அறிவில்லாத கொலைகள் முடியும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் நடக்கும் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டேன். உதவி உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தாக்குதலா? ஏற்கெனவே, ஈரான் மீது கடும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். 'HELP IS ON ITS WAY' என்று அவர் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், மீண்டும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட போது, தன் பங்கிற்கு, அமெரிக்காவும் ஈரானில் தாக்குதலை நடத்தியது. ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

விகடன் 14 Jan 2026 9:25 am

பிரபலமாகும் ``Are you dead?செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?

நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்? என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனிமை மரணங்கள் (Lonely Deaths) பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளன. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவில் சி-லே-மா (Si Le Ma - Are you dead?) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் இறந்துவிட்டீர்களா? என்று நேரடியாகப் பொருள் தரும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026-ம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனிமை இந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை 'அவசரத் தொடர்பு' (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும். பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடும். சீனாவில் மிகவும் பிரபலமான ஈ-லே-மா (உங்களுக்குப் பசிக்கிறதா?) என்ற உணவு விநியோகச் செயலியின் பெயரைப் போலவே, சி-லே-மா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் என இதன் உருவாக்குநர்களில் ஒருவரான லியூ தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சுமார் 1.15 டாலர் (சுமார் 8 யுவான்) கட்டணத்தில் கிடைக்கிறது. ஆப் ஒரு வருடத்தைக்கூட நிறைவு செய்யாத இந்தச் செயலி, சீனாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்குக் காரணம், அங்கு அதிகரித்து வரும் தனிமைதான் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்ணியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்பதற்கு இந்தச் செயலி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்றப் பாராட்டும் பெற்றிருக்கிறது. திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா?

விகடன் 13 Jan 2026 5:56 pm

ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் தற்போது அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்‌ அந்த நாட்டு மக்கள். டொனால்டு ட்ரம்ப் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ட்ரம்ப இதில் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். மேலும், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், இதுவரை காணாத தாக்குதலை ஈரான் காணும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ட்ரம்ப். அடுத்ததாக, தனது வழக்கமான அஸ்திரமான 'வரி'யை ஈரானிற்கு எதிராக ஏவியுள்ளார் ட்ரம்ப். அதாவது, ஈரான் உடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் உடனடியாக 25 சதவிகித வரி அமலுக்கு வருகிறது என்று தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார். இந்தியாவிற்குப் பாதிப்பா? இந்த உத்தரவால் இந்தியாவும் நிச்சயம் பாதிக்கப்படும். இந்தியா பாஸ்மதி அரிசி, அரிசி, டீ, சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஈரானிலிருந்து பேரீச்சம்ப்பழம், கிவி, பிஸ்தா, ஆப்பிள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. 2024-ம் ஆண்டின் தரவுகளின்படி, 698.51 மில்லியன்‌ டாலர் அளவிற்கு ஈரானுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா. இதுபோக, டீ, காபி, மசாலாக்களை 73.93 மில்லியன் டாலர்களுக்கும், பழங்களை 66.12 மில்லியன் டாலர்களுக்கும், இயந்திரங்களை 32.65 மில்லியன் டாலர்களுக்கும் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஏற்றுமதி - இறக்குமதி Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? இறக்குமதி 86.48 மில்லியன் டாலருக்கு எண்ணெய் சார்ந்த பொருள்களையும், 55.65 மில்லியன் டாலருக்கு உப்பு, கற்கள், சிமெண்ட், பிளாஸ்டர் போன்ற பொருள்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா. இந்த ஏற்றுமதிப் பட்டியல்களும், இறக்குமதிப் பட்டியல்களும் இன்னும் நீள்கின்றன. இந்தியாவிற்கு 75 சதவிகிதமா? இப்போது ஏற்கெனவே ரஷ்ய இறக்குமதிகளால் 25 சதவீத வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவீத வரியைச் சந்தித்து வருகிறது இந்தியா. இதில் இந்த 25 சதவீத வரியும் சேர்ந்தால் 75 சதவீத வரியாக மாறும். இதை இந்திய அரசு அப்படியே விட்டுவிடாது. நிச்சயம் ஏதாவது முடிவெடுக்கும். ஆனால், அந்த முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பாசிட்டிவ் ஆனதா... நெகட்டிவ் ஆனதா என்பது இந்தியாவின் முடிவைப் பொறுத்தே அமையும். 12 நாள்களில் 'அமோக' வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க!

விகடன் 13 Jan 2026 12:52 pm