SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 02 எஸ்.ஜி சூர்யா, பாஜக (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. 'AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும். மோடி - ட்ரம்ப் மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான். அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்? இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்: ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும். பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் 'அமெரிக்காவிடம் சரணாகதி' என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy' எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம். வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, 'என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்' என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம். இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு. கச்சா எண்ணெய் காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும் இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், 'Free Trade Agreements' (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை. இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது. 'எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து' என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை. பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01 மோடி என்னும் 'பிராண்ட்' எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்தியா 'ZERO TARIFF' என்று எல்லாவற்றையும் திறந்துவிடவில்லை. எங்கே நமக்குத் தொழில்நுட்பம் தேவையோ, எங்கே நமக்குச் சந்தை தேவையோ அங்கே மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமே ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்கா விதித்திருந்த தடைகளை உடைத்து, நமக்கான சாதகமான சூழலை உருவாக்கியது பிரதமர் திரு.மோடி அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும், உலகத் தலைவர்களுடன் அவர் பேணும் நட்புக்கும் கிடைத்த வெற்றி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்று கண்ணியம் குறையாமல், நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. மோடி சீனாவுக்கு மாற்றாக உலகமே ஒரு உற்பத்தி மையத்தைத் தேடும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வரிச்சலுகை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 500 பில்லியன் டாலர் என்பது வெறும் கொள்முதல் அல்ல; அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகின் நம்பிக்கை. காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்பது புரியும்.! (தொடரும்..!)

விகடன் 5 Feb 2026 12:55 pm

Russian Oil: 'எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்' - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை. ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, 'எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ் இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்! அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது, இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது. இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், 'என்ன நிலைப்பாடு?' என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும். Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!

விகடன் 5 Feb 2026 9:38 am

6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?- வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி

இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது! நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்! மோடி, டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர்.! ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் வரப் போகும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு. உலகில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடக்கும் விவகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதுதான் கேயாஸ் தியரியின் தத்துவம்! இந்த கேயாஸ் தியரி, பிரதமர் மோடியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் கடந்த 30-ஆம் தேதி வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 6 நாட்களில் என்ன நடந்தது? இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகிதப் பரஸ்பர வரியும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித அபராத வரியும் என்று மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 6 நாளிலேயே இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்தார். இடைப்பட்ட 6 நாட்களில் என்ன நடந்தது? என்பதை கேயாஸ் தியரி சொல்லும்! ’’அமெரிக்கா வரியைக் குறைத்தது போல, இந்தியாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியைப் பூஜ்யமாக்க நடவடிக்கையை முன்னெடுப்பார்கள். பிரதமர் மோடி, அமெரிக்கப் பொருட்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய்) எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் பல பொருட்களைக் கூடுதலாக வாங்கவும் சம்மதித்துள்ளார்’’ எனச் சொல்லியிருக்கிறார் ட்ரம்ப். டிரம்ப் அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததை அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்கப் பொருள்களுக்கு இறக்குமதி வரியைப் பூஜ்யமாக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி. அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வைத்துவிட்டோம் எனத் தம்பட்டம் அடித்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில்துறையினருக்கும் ஏற்படப்போகும் பேராபத்தை 18 சதவிகித வரி குறைப்பைக் காட்டி மறைக்க முயல்கிறது மோடி அரசு. அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை... அமெரிக்காவிடம் இருந்து இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடியைச் சம்மதிக்க வைத்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக் களிப்போடு சொல்கிறார். அதாவது, இந்தியாவின் மொத்த பட்ஜெட் மதிப்பில் இது 85 சதவிகிதம். 45.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற யானை, இந்தியாவின் உள்ளூர் வர்த்தகம் என்கிற கரும்புக் காட்டிற்குள் நுழைந்து துவம்சம் செய்யப் போகிறது. நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறார். 18 சதவிகித வரியை அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை. சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த சொல்லி, இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரியை விதித்துவிட்டு, இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்கப் பொருட்களுக்குப் பூஜ்ய வரி என்று சொல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி. நம்மை கட்டுப்படுத்த அமெரிக்கா மாகாணங்களில் இந்தியாவும் ஒன்றா? இந்தியாவை, அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டாரா? போரே நடக்காமல், ஏவுகணைகள் ஏவாமல் இந்தியா மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. அதற்குத் துணை போயிருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என எப்படிக் கொண்டாட முடியும்? 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் அளவிற்கு இந்தியச் சந்தையைக் கட்டுப்பாடின்றித் திறந்து வைத்தால், இந்திய விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்துறையினரின் வாழ்வாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும். எழும் சந்தேகம்! இந்தியாவின் மிகப்பெரிய சந்தையும், மக்கள் தொகையும் தங்கள் நாட்டின் வேளாண் பொருட்களை அதிக அளவிற்கு விற்பதற்கு உதவும். இதனால் கிராமப்புற அமெரிக்காவின் பொருளாதாரம் செழிக்கும் என்று அமெரிக்காவின் வேளாண்துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் கூறியிருக்கிறார். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் முயற்சியா இந்த வர்த்தக ஒப்பந்தம் என்கிற சந்தேகம் எழுகிறது. அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் சோயாபீன், சோளம், பருத்தி மற்றும் கோதுமை போன்றவை இறக்குமதியானால், இந்திய விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை உள்நாட்டுச் சந்தையில் பெருமளவில் குறையக்கூடும். பாதாம், ஆப்பிள் போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால் வியாபாரப் போட்டி அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். டிரம்ப், மோடி நெருக்கடிக்கு தள்ளப்படும் விவசாயிகள் அமெரிக்காவில் விவசாயம் என்பது பெரும்பாலும் சிறிய அளவில் நடைபெறுவதில்லை. அமெரிக்க அரசு அதிக அளவில் மானியம் தருவதாலும் வேளாண் பணிக்காகப் பெரிய இயந்திரங்கள் கிடைப்பதாலும் ஹெக்டேர் கணக்கில் பெரும் பண்ணைகளாகவே அங்கு விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 86 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள் இருப்பதால் அவர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அமெரிக்காவின் பெரும் பண்ணை விவசாயிகளுடன் போட்டி போட முடியாது. அமெரிக்க விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைப்பதால் உற்பத்திப் பொருட்களை மலிவான விலைக்குத் தரும் சூழல் ஏற்படும்போது இந்திய விவசாயிகள் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் அமெரிக்காவின் பால் பொருட்கள் மீதான வரி குறைப்பு கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு ஏற்கும் சூழலில் இந்தியாவின் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருள் மூலம் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விதைகள் இந்தியச் சந்தைக்குள் ஊடுருவினால் அது இந்தியாவின் விவசாயத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியர்களின் உடல்நலனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அமைச்சர் ரகுபதி ஏன் விரிவாகப் பேச மறுக்கிறார்? இந்திய விவசாயிகளையும் வர்த்தகர்களையும் பாதிக்கும் அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் பற்றி ஒன்றிய பாஜக அரசு நாட்டுமக்களுக்கு விளக்கம் தரக் கோரினால், இந்தியாவிற்கு ஏற்படப்போகும் பிரகாசமான எதிர்காலத்தைக் கண்டு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொறாமைப்படுவதாக ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வடிகட்டிய பொய்யைச் சொல்லியிருக்கிறார். அந்த பிரகாசமான எதிர்காலம் என்னென்ன என்பதைப் பட்டியலிடலாமே மிஸ்டர் பியூஸ் கோயல்? தமிழ்நாட்டிற்கு வந்து அதிமுக கூட்டணிக்காகக் களமாடி அதற்கான காரண காரியங்களை எல்லாம் விளக்கும் பியூஸ் கோயல் அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பற்றி மட்டும் ஏன் விரிவாகப் பேச மறுக்கிறார்? எங்கே பதுங்கியிருந்தார்? இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 18 சதவிகிதமாக குறைத்ததை மோடி அரசின் வரலாற்றுச் சாதனையாகப் பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி 3 சதவீதமாகவே இருந்த நிலையில் அதனை மோடி அரசுதானே தனது தவறான வெளியுறவுக் கொள்கையால் 50 சதவீதம் வரை உயர்த்தியது. அப்போது ஓடி ஒளிந்து பதுங்கியவர்கள் எல்லாம், 18 சதவிகிதமாக குறைத்ததற்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் தொடங்கி நாடுமுழுவதும் ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டபோதும் பிரதமர் மோடி எங்கே பதுங்கியிருந்தார்? டிரம்ப் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப் போகிறார்? ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி அதனைப் பெட்ரோலியப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு விற்று அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுக்கள் கொள்ளை லாபம் அடைவதற்கு உதவுவதிலேயே குறியாக இருந்த மோடி அரசு, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் தொழில்துறை நலிவடைந்து, வேலைவாய்ப்புகள் பறிபோனதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பிரதமர் மோடி தனது சுயநலத்தாலும், தவறான வெளியுறவுக் கொள்கையாலும், இந்திய விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை எடுத்தபோதும் தன்னை விவசாயி எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பழனிசாமி இதுவரை வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்குப் பாதகமான வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்தபோது முட்டுக்கொடுத்த வாதாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது என்ன சொல்லப் போகிறார்? என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விகடன் 4 Feb 2026 7:25 pm

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப் இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன. இந்நிலையில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து NPR என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், எப்ஸ்டீன் ஃபைல்ஸில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெலிண்டா கேட்ஸ் இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உட்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த சிறுமிக்கும் ஏற்படவே கூடாத ஓர் அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டிருக்கிறது. என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது என்று தெரிவித்திருக்கிறார். மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம்

விகடன் 4 Feb 2026 5:08 pm

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ் களம் 01: இனியன் ராபர்ட் (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர். மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும். இனியன் ராபர்ட் ரஷ்யாவின் பங்களிப்பு..! இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்! இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம். மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது. US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும். அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது. இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.! (தொடரும்..)

விகடன் 4 Feb 2026 4:31 pm

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ் களம் 01: இனியன் ராபர்ட் (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர். மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும். இனியன் ராபர்ட் ரஷ்யாவின் பங்களிப்பு..! இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்! இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம். மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது. US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும். அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது. இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.! (தொடரும்..)

விகடன் 4 Feb 2026 4:31 pm

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு பின், மேலே சொன்ன 'ஹேப்பி நியூஸை' தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர் இருவரும். இந்த ஹேப்பி நியூஸிற்கு பின்னால் இருக்கும் ஒப்பந்தம் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலின் முக்கிய பாயின்ட்கள் இதோ... மோடி, ட்ரம்ப் 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail > இந்தியாவின் மகுடத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு ரத்தினம். இது மோடியின் ஆட்சிக் காலத்தை உரக்க சொல்லும். > இந்த ஒப்பந்தம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 140 கோடி இந்தியர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும். > போட்டியாளர்களுக்கு மத்தியில், இந்தியாவே அமெரிக்காவிடம் இருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. > அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது. பல பிரச்னைகள், தடைகளைத் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். > மோடி எப்போதுமே இந்திய விவசாயிகள், கால்நடை வைத்திருப்பவர்கள், பால் பொருள் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பார். ஆக, இந்த ஒப்பந்தத்திலுமே விவசாயம் மற்றும் பால்பொருள் துறையை மோடி பாதுகாத்திருக்கிறார். > சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, இன்ஜினீயரிங் பொருள் துறை, ஜவுளித்துறை, தோல் துறை, நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. > இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹை-டெக் துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும். > இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களையும் வலுப்படுத்தும். > இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களையும் இரு நாடுகளும் விரைவில் தெரிவிக்கும். இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?

விகடன் 3 Feb 2026 7:08 pm

'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மோடி, ட்ரம்ப் இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், இந்தியா ஒரு காலனி அல்ல. ட்ரம்ப் அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு முன்: *அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்த வரி: 15–70% * இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி: 2–3% இந்த“ஒப்பந்தத்துக்குப்” பிறகு * அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி: பூஜ்ஜியம் * இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி: 18% * இது பேச்சுவார்த்தை அல்ல. * இது முழுமையான சரணடைதல். அமெரிக்கா இப்போது புதிய கிழக்கு இந்தியா கம்பெனியாக இந்தியாவில் நுழைய மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவின் செல்வத்தையும் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் காலடியில் ஒப்படைத்துள்ளது. இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்! இந்திய சந்தைகள் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ,எரிசக்தி, நிலக்கரி ஆகியவற்றுக்கு அகலமாகத் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்திய விவசாயிகள், சிறு ,குறு,நடுத்தர தொழில்கள், இந்திய தற்சார்பு உற்பத்தி ( Make in India ) அனைத்தும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க வேளாண் அமைச்சர் கூட, இந்தியாவை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஒரு மாபெரும் புதிய சந்தை என வெளிப்படையாகக் கொண்டாடுகிறார். இது ஒவ்வொரு இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம். இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஒரு காலனி அல்ல... $500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‘ஷாப்பிங் லிஸ்ட்’ பற்றி அமெரிக்கா பேசுகிறது. அவர்கள் இதை “America First” வெற்றி என அறிவிக்கிறார்கள் . அவர்கள் சொல்வது சரிதான். இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு இவ்வளவு நல்லதென்றால், ஏன் இதை முதலில் ட்ரம்ப் அறிவித்தார்? ஏன் பாராளுமன்றம் இருளில் வைக்கப்பட்டுள்ளது? இந்தியா ஒரு காலனி அல்ல. அமெரிக்காவுக்கே மட்டும் பயன் தரும் இப்படிப்பட்ட முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு ஒப்பந்தத்தின் உண்மையானப் பிரிவுகளை மோடி அரசு தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Feb 2026 6:29 pm

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four Stars of Destiny’ முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதி இன்னும் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான ‘Four Stars of Destiny’ புத்தகத்தை மேற்கோள்காட்டி, ராகுல் பேச முற்பட, அதற்கு பாஜக எம்.பி-க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. `வெளியாகாத புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசுவது என்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது.' - இதுவே பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் வாதம். இந்த விவகாரத்தின் எதிரொலியாக அவை நடவடிக்கைகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ராகுல், `அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரிக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதை நிச்சயம் நான் சொல்வேன். யாரும் தடுக்க முடியாது' எனக் கூறியிருந்தார். இணைய தேடலில் வைரல்... இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பேப்பரைக் கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணைய தேடலில் வைரலானது ` Four Stars of Destiny’ என்ற சர்ச் கீவொர்டு. அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? இன்னும் வெளியிடப்படாத அந்தப் புத்தகம் குறித்து பொது வெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, இனி பார்க்கலாம்! இந்திய ராணுவத்தின் தளபதியாக 2019-2022 வரை பதவி வகித்தவர்தான் ஜெனரல் நரவானே. கொரோனா பேரிடர் காலத்தில் ராணுவப் படைகளை திறம்பட நிர்வகித்தவர். ராணுவ ஜெனரல் என்பதைத் தாண்டி, புத்தக ஆசிரியராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகம்தான் தற்போது வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பாய்வில் இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்துக்கு முன்பு நரவானே எழுதிய `The Cantonment Conspiracy' என்ற மர்டர் மிஸ்ட்ரி புத்தகம் வெளியாகி விற்பனையில் இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. மனோஜ் முகுந்த் நரவானே இந்த இரண்டு புத்தகங்களுமே Penguin Random House India பதிப்பகத்தின் வெளியீடுகள்தான். இதில் ‘Four Stars of Destiny’ புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டே வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியீட்டாளருக்கு, `பதிப்பாய்வு முடியும் வரை, இதன் உள்ளடக்கத்தையோ, பகுதிகளையோ, புத்தகத்தின் சாஃப்ட் காப்பீஸ்-களையோ வெளியிட வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இலக்கிய திருவிழா ஒன்றில் இந்தப் புத்தகம் குறித்து அதன் ஆசிரியரான நரவானேவிடம் கேட்கப்பட்டது. `இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகச் சிறப்பானது. நான் எழுதி, அவர்களிடம் (பதிப்பகம்) கொடுத்துவிட்டேன். இனி அது அவர்கள் வேலை' எனக் குறிப்பிட்டார். இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் என குறிப்பிட்டு சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார். The Cantonment Conspiracy ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன. நரவானே அந்த நினைக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி... `அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020... டேங்கர்களுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்' என்றார். மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம் `என்னுடைய உத்தரவு என்ன?' உடனே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தலைமை தளபதி ஆகியோரை தொலைபேசி மூலமாக அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்கு கேட்க இருந்தது ஒரே கேள்விதான். `என்னுடைய உத்தரவு என்ன?' அவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஆனால், `ஹை கமாண்ட் உத்தரவு வரும் வரை சுடவேண்டாம்' என்பது எனக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாக இருந்தது. இரவு 9:10 மணியளவில் எனக்கு மேலும் ஒரு தகவல் வந்தடைந்தது... அவர்கள் முன்னேறி, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார்கள் என்று. ராஜ்நாத் சிங் 9:25 மணிக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை விவரித்தேன். மேலும், தெளிவான உத்தரவை வேண்டினேன். இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது. சீன தளபதி, `இரு தரப்பும் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி மறுநாள் காலை 9:30 மணியளவில் உள்ளூர் ராணுவ ஜெனரல்கள் சந்திப்பை நடத்தலாம்' என முன்மொழிந்தார். இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இரவு 10 மணியளவில் கடத்தினேன். இந்தியா- சீனா ஆனால், இரவு 10:10 மணிக்கு மீண்டும் அழைத்த ஜெனரல் ஜோஷி, `சீன டாங்கிகள் முன்னேறி, சுமார் 500 மீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன' என்றார். உடனே நிலைமையின் தீவிரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அவர் பிரதமருடன் பேசிவிட்டு திரும்ப அழைப்பதாகக் கூறினார். இரவு 10:30 மணியளவில் அவர் மீண்டும் அழைத்தார். பிரதமர் மோடி `சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்!' தான் பிரதமருடன் பேசியதாகவும், `இது முழுக்க ராணுவ முடிவு. உங்களுக்கு சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்' என்றார். இத்தகைய உத்தரவை பெற்ற பிறகு, முழு பொறுப்பும் என் மீது விழுந்தது. சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்தேன். அந்த நேரத்தில் சுவர் கடிகாரத்தின் டிக்-டிக் சத்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு... நரவானே நினைவுகூர்வதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வெளியாகாத இந்தப் புத்தகம்தான் அரசியல் வெளியில் தற்போது பெரும் பூகம்பங்களுக்கு வித்திட்டிருக்கிறது! INPUTS - The Indian Express Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' - ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!

விகடன் 3 Feb 2026 5:47 pm

Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ'முதல் ட்ரம்ப்பின் 'சந்தை'வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!

அறிவிக்கப்படாத வரிப் போர்! அமெரிக்கா அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வலைதளங்களில் பற்றவைக்கும் தீ காட்டுத்தீப் போல பேசுபொருளாகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை நிறுத்தினேன் என்பதில் தொடங்கி, இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, அதை 500 சதவிகிதமாக மாற்றப் போகிறேன் என அறிவித்தது வரை, இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும்படியான கன்டென்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். மோடி, ட்ரம்ப் இந்த அறிவிக்கப்படாத வரிப் போரால், ஆசியாவிலேயே அமெரிக்காவின் அதிக வரி விதிக்கப்பட்ட நாடு என்றப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அமெரிக்கா அதிபருக்கும் - இந்தியப் பிரதமருக்கும் நடந்த உரையாடலுக்குப் பிறகு இந்தியா மீதான பரஸ்பர வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்கு பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ரூ.42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்ககும் வகையிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது என இதற்கு இந்தியா கொடுத்த விலை அதிகம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதே நேரம், இந்தியாவின் இந்த முடிவு தேசிய நலன்களைப் பாதுகாக்கும் மூலோபாய நகர்வு என்றும் சிலர் கருதுகின்றனர். பொருளாதார ஒப்பந்தம் ரஷ்யா - இந்தியா உறவு! இதற்கிடையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்புதலால் ரஷ்யாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விகளும், இந்தியாவுடன் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தகளின் நிலையும் தொக்கி நிற்கிறது. ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாடை முன்வைத்து வருகிறது. 'இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தே தீருவேன்' எனக் கங்கணம்கட்டிக்கொண்டு அதிபராக ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த நாடுகளின் மீது வரியை வாரி வழங்கினார். இதனால், கடுமையான சிக்கலை எதிர்க்கொண்ட நாடுகளில் இந்தியாவும் உண்டு. அப்போதுகூட 'இந்தியா - ரஷ்யா உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது' என இருநாடுகளும் பரஸ்பரம் அறிவித்துக்கொண்டன. கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு கோலகல வரவேற்பளித்து கட்டித் தழுவி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமர் மோடி. அந்த உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ரஷ்ய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை இந்தியாவில் அமைப்பதற்கு ஆர்வம்காட்டின. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு அப்பாற்பட்டு, பொறியியல், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உலோகம் போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை விரிவாக்கும் நோக்கில், இந்தியாவுடன் கூட்டு முயற்சிகளைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டது. அதற்காக பல ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன. மோடி, புதின் இது தொடர்பாக அப்போது ரஷ்யாவின் வர்த்தகப் பிரதிநிதி ஆண்ட்ரி சோபோலேவ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யாவின் அயல்நாட்டுப் பொருளாதாரத் திட்டத்தில் இந்தியா ஒரு முதன்மை இலக்கு. வளம் மற்றும் எரிசக்தி அல்லாத தயாரிப்புகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் $100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் இருதரப்பு வர்த்தக இலக்கை நோக்கிய முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. இந்திய ஏற்றுமதி குறைந்தபட்சம் $30-35 பில்லியனையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சுமார் $60-65 பில்லியனையும் கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். பலமான உறவு! இணைந்த கைகள் இதுமட்டுமில்லாமல், சமநிலையான உலகை உருவாக்க இரு நாடுகளும் BRICS, SCO மற்றும் G20 போன்ற தளங்களில் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும், வரலாற்றில் ரஷ்யாவுடன் ஒரு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. S-400, சுகோய் விமானங்கள் என இந்தியாவின் ராணுவத் தேவைகளில் சுமார் 60 -70 ரஷ்யாவையே சார்ந்துள்ளன. காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கியமான நேரங்களில், ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதரவளித்திருக்கிறது. உக்ரைன் - ரஷ்யாப் போர் தொடர்பாகக் ஐ.நா-வில் வக்கெடுப்பு நடந்தபோதும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல், ``இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறோம். எந்தப் பிரச்னையானாலும் அமர்ந்து பேசினால் சரியாகிவிடும் என இந்தியா வெளிநடப்பு செய்துவந்தது. ஐ.நா அதே காரணம் வேறு முடிவு... அதேக் காரணத்தை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் வரிவித்தபோதும் கூட தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருந்தது இந்தியா. ரஷ்ய அதிபர் புதினும் ​​அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடரத் தயாராக இருப்பதாகக் கூறினார். இப்படி இருநாடுகளின் உறவும் பல ஆண்டுகளாக பலமாக இருந்த நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யவும் முடிவெடுத்திருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் திலகம் வைத்ததைப் போல, பிரதமர் மோடி, ``உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம் என அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்துக்கு பாராட்டு பத்திரம் வேறு வாசித்திருக்கிறார். ஒரே இரவில் இந்தியாவின் இந்த திடீர் அறிவிப்புகளும், இந்த முடிவும் உலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. தொடரும் விடைதெரியாக் கேள்விகள்... இந்தியாவின் முடிவு! இந்தியாவின் இந்த முடிவு குறித்து ஆசிய கொள்கை ஆய்வுகளுக்காக இயங்கும் புரூக்கிங்ஸ் மையத்தின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், ``சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா ஒப்பந்தம், ட்ரம்பின் இந்த திடீர் அறிவிப்புக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். தற்போது இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்தெந்தத் துறைகளுக்குச் சலுகை கிடைக்கும் என்பதில் தான் சிக்கல்கள் இருக்கும். நரேந்திர மோடி அதே நேரம், இந்தியாவுக்கு ரஷ்யாவுடனான நட்புக்கான கேள்வி நீடிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து தனது எண்ணெய் இறக்குமதி கட்டமைப்பை மாற்றிக்கொண்டிருந்தாலும், இந்தியா தனது உறவுகளை நிலையாக வைத்திருக்கவே விரும்பும் என தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் முடிவின்படி எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுக்குத் தரும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகள், ஐநாவில் தரும் 'வீட்டோ' ஆதரவு பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், இதுவரை இருநாடுகளுக்கு மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தகள் என்னவாகும் என்பதும் பொருளாதார அறிஞர்களிடம் இருக்கும் விடைத் தெரியாத கேள்வியாக இருக்கிறது. ஆனால், இதுவரை இந்தியாவின் இந்த அரசியல் நிலை மாற்றம் குறித்து ரஷ்ய தரப்பிலிருந்தும், ரஷ்யாவுடனான உறவுகள் குறித்து இந்தியா தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்திருக்கிறது. விரைவில் இருநாடுகளும் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.! இந்தியா - அமெரிக்கா வரி: கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

விகடன் 3 Feb 2026 5:17 pm

``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்? - விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ட்ரம்ப் - மோடி இந்த நிலையில், அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எம்.பி.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வழங்கியிருக்கும் ஒத்திவைப்பு தீர்மான மனுவில், ``முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன். அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். பிரதமர் தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், மறுபுறம், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியையும் விதிக்காது மற்றும் அதன் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும். மேலும், இந்தியா அமெரிக்காவுடனான அதன் வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்களால் அதிகரிக்க வேண்டும். ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்து கொண்டுள்ளது என்று அர்த்தம். ட்ரம்பின் அறிக்கை, பிரதமர் நமது தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் வலைதளப்பதிவில், அவர் அமெரிக்க வரி குறைப்பை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். திருமாவளவன் இந்தியாவின் வரி குறைப்பு பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதிகள் பற்றிய உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஈரானை அடிபணியவைக்க ட்ரம்ப் படைகளை குவித்தார். இந்திய பிரதமரை அடிபணிய வைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் ட்ரம்புடன் தான் விவாதித்ததை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா - அமெரிக்கா வரி: கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

விகடன் 3 Feb 2026 12:59 pm

என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி - ட்ரம்ப் இந்த நிலையில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது. அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தியா - அமெரிக்கா வரி: கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

விகடன் 3 Feb 2026 12:15 pm

இந்தியா - அமெரிக்கா வரி: கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி - ட்ரம்ப் இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``வாஷிங்டன் டி.சி-யிலிருந்துதான் 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த சமீபத்திய தகவல்களையும் வாஷிங்டனில் இருந்தே அவர் அறிவிக்கிறார். முழு விவரங்களும் இன்னும் வராத நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தையும் வாஷிங்டனில் இருந்தே அவரே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடி மீது அதிபர் ட்ரம்பிற்கு ஒரு பிடி இருப்பதாகத் தெரிகிறது. இப்போது ட்ரம்புடன் வழக்கமான கட்டிப்பிடிக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும், அவருடன் சேர்ந்து காணப்படுவதற்கே இப்போது மோடி வெட்கப்படுகிறார். கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக இது ஒப்பந்தங்களின் தந்தை என்று சொல்லுமளவிற்கு ஒரு சிறந்த ஒப்பந்தமாக இருக்க முடியாது என்றார். ஜெய்ராம் ரமேஷ் அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், ட்ரம்ப், மோடியுடன் பேசியதாகவும், இது குறித்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள் என்றும் அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியா அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிபர் ட்ரம்ப்போ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அமெரிக்க அதிகாரிகளோ சொல்லித்தான் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது அதுவே ஒரு வழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது என்றார். இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

விகடன் 3 Feb 2026 9:18 am

இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக இது கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனவும் தெரியவருகிறது. Putin - Modi மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'மேட் இன் இந்தியா' பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா உடனடியாகக் குறைத்துள்ளது. இதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கி, வரியை பூஜ்ஜியமாக (Zero Tariff) குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``எனது மிகச்சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசியது கௌரவம். அவர் உலக அளவில் மதிக்கப்படும் ஒரு வலிமையான தலைவர். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார். மோடி, ட்ரம்ப் இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி,``இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஜனநாயக நாடுகளின் இந்த இணக்கம், இருநாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம் .எனத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான வரி 18% ஆகக் குறைப்பு. அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல். ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி; அமெரிக்காவிடம் அதிக இறக்குமதி. மார்ச் 2025 முதல் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, புதிய வர்த்தக அத்தியாயம் தொடக்கம். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை வாஷிங்டன் செல்லவிருக்கும் நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Budget 2026: ``இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

விகடன் 3 Feb 2026 8:08 am