``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார். வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained
இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை. அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை! இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் . 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப் இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரி கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார். இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது. பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன. இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல. ட்ரம்ப் - ஜி ஜின்பிங் Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா. இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது. இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான். ரூட்டை மாற்றிய சீனா இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும் இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன. முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி. இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது. மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும். அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ். சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே. இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது. பிற நாடுகளுக்கு சிக்கல் இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது. ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும். இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது. தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். சீனா Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? பொருளாதார பிரச்னை?! ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம். அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள். ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும். உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை. சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா? இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது. சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். ! வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained
Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!
ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா... Reza Pahlavi 1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, 'ஷாவுக்கு மரணம்' என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது. இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9. புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர். கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. Leila Pahlavi பிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார். 1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார். ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். Leila Pahlavi Cementery அப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார். ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது.
பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல் - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்
வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். அடம் பிடித்த ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார். மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப் பகிர்ந்துகொள்கிறேன்! இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். நோபல் கமிட்டி எதிர்ப்பு ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப் நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார். ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார். நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா! என்று பதிவிட்டிருக்கிறார். மரியா கொரினா மச்சாடோ ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்! செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

26 C