'ஆகஸ்ட்'மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail
2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார். உடனடியாக எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது. ஆனால், மெல்ல மெல்ல நிறுத்தப்படும் இப்போது... 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா, வெனிசுலா எண்ணெய்யை வாங்க உள்ளது இவை இரண்டுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து. திரும்பத் திரும்ப... மீண்டும் மீண்டும்... இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ட்ரம்ப் தலையிட்டுக் கொண்டே இருக்கிறார். ட்ரம்ப் வரலாற்று 'Worst Budget Day Loss'-ஐ சந்தித்த பங்குச்சந்தை - முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிவுரை! ஆகஸ்ட் மாதம்... இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன் ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு - இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலனுக்கு எது நல்லதோ, அதைத்தான் இந்திய அரசு செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என இருவருமே கூறியிருந்தார்கள். ஆனால், ஆகஸ்டிற்குப் பின் நிலைமையே வேறு. கடந்த ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது அமெரிக்கா. கடந்த நவம்பர் மாதம் முதல், ரோஸ் நேபிட் மற்றும் லுகோயில் என்னும் இரு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய்களுக்குத் தடை விதித்தது அமெரிக்கா. இந்தியா ரோஸ் நேபிட் நிறுவனத்திடம் இருந்துதான் அதிகம் எண்ணெய் வாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரி... தடை... என அடுத்தடுத்த அடிகளால், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கியது. மோடி, புதின் Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன? ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு... 2023-24 நிதியாண்டில் , ஒரு நாளுக்கு 2.2 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 2024-25 நிதியாண்டில் தோராயமாக 1.8 - 1.9 மில்லியன் பேரல்கள் ஒரு நாளுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களை ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் 31 சதவிகிதம் குறைவாகவே எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. 2025-ம் ஆண்டு, நவம்பர் மாதம், சற்று அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது, கடந்த ஆறு மாதங்களை விட மிக அதிகமான இறக்குமதியாக இருந்தது. இவ்வளவு இறக்குமதிக்குக் காரணம், தடைக்கு முன்பே, குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வைத்துவிடலாம் என்பதுதான். 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் , அதற்கு முந்தைய மாதத்தை விட, 29 சதவிகிதம் குறைந்த அளவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆக, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பின், மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வருகிறது இந்தியா. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன் இந்தியா - ஈரான் இப்போது ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவு சரியில்லை. இதனால், ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார். 2022-ம் ஆண்டு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியதில் இருந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொண்டது இந்தியா. இப்போது ஈரானில் இருந்து இந்தியா பெயரளவிற்கே எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. இதுவும் கூடாது என்கிறார் ட்ரம்ப். ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது... அதற்கு இந்தியாவில் இருந்து செல்லும் பணம் உதவுகிறது என்று ட்ரம்ப் கூறுவது கூட ஒரு பேச்சுக்கு நியாயம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இவருக்கும், ஈரானுக்கும் ஆகவில்லை என்பதால், இந்தியா அவர்களிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என்பதில் என்ன நியாயம்? இறையாண்மை இறக்குமதி, ஏற்றுமதி என்பதெல்லாம் ஒரு நாட்டின் தனிப்பட்ட விஷயம். அது அதன் இறையாண்மை. இதில் வேறு எந்த நாடும் தலையிடக்கூடாது. அது மிகப்பெரிய தவறு. அடுத்ததாக, இந்தியா என்ன முடிவெடுத்துள்ளது என்பது அமெரிக்க அதிபர் கூறுவது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது. இது குறித்து இந்திய எதிர்க்கட்சிகள் ரஷ்யா விஷயத்திலேயே கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தன. இதை மீண்டும் ட்ரம்ப் செய்திருக்கிறார். இந்தியாவின் உள்நாட்டு விஷயத்தில் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தலையிடுவது, அது குறித்துப் பேசுவதை இந்திய அரசு கட்டாயம் தடுக்க வேண்டும். அதற்குக் கட்டாயம் கடும் எதிர்வினையாற்ற வேண்டும். மோடி, ட்ரம்ப் தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ! வர்த்தகம் என்பதும், அதற்கான ஒப்பந்தம் என்பதும் மிக முக்கியம்தான். ஆனால், அதற்காக இறையாண்மையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. உலக அரங்கில், இந்தியா நம்பகமான... தனித்த நாடாக நிற்கிறது. ட்ரம்பின் இந்தச் செயல் இந்தியாவைப் பலவீனமாகக் காட்டலாம். இந்தியாவின் முடிவை இந்தியாதான் அறிவிக்க வேண்டுமே தவிர... அமெரிக்கா அல்ல. இந்த விஷயத்தில் இந்திய அரசு அமைதியாக இருப்பது... ட்ரம்பின் பேச்சை உண்மையாக்குவது போல இருக்கிறது. இதற்குக் கட்டாயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'டக்'கென ரூ.15,000 குறைந்த தங்கம் விலை: இன்னும் குறையுமா? இப்போது எவ்வளவு முதலீடு செய்யலாம்?
Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?
எப்ஸ்டீன் ஃபைல் - இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கிற பாலியல் குற்றவாளியின் ஆவணம் ஆகும். இவர் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல... உலகில் உள்ள பல அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்களுக்கு சிறுமிகளை பாலியல் உறவிற்காக சப்ளை செய்யும் நெட்வொர்க்கையும் வைத்திருந்திருக்கிறார். மேலும், அரசியல், பிசினஸ் என இவர் பல லாபிகளையும் செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிசினஸ்மேன்களின் ஆவணமே எப்ஸ்டீன் ஃபைல். ஜெஃப்ரி எப்ஸ்டீன் துரைமுருகன்: எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' கலைஞரை 'தலைவராக' ஏற்றுக்கொண்டது ஏன்? | Vote Vibes 06 ட்ரம்ப் இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் உள்ளது என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு கூறினார். அதன் பின், மீண்டும் இந்த ஆவணம் பரபரப்பாகப் பேசத் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த ஆவணத்தை வெளியிட அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் ட்ரம்பும் கையெழுத்திட்டார். இதையடுத்து இந்த ஆவணத்தில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மோடியின் பெயர்? சமீபத்தில் வெளியாகிய இந்த ஆவணத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆவணத்தில் 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு மோடி சென்றது எப்ஸ்டீனின் ஆலோசனை என்றும், அது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குச் சாதகமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரந்தீர் ஜெய்ஸ்வால் ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05 வெளியுறவுத் துறை விளக்கம் இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார்... எப்ஸ்டீன் ஃபைல் என்று அழைக்கப்படும் ஆவணங்களில் உள்ள இ-மெயில் அறிக்கையில், பிரதமரின் பெயரும், அவருடைய இஸ்ரேல் பயணமும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்தோம். 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் இஸ்ரேலுக்கு அலுவல் ரீதியாகப் பயணம் மேற்கொண்டார் என்பதைத் தவிர, அதில் இருக்கும் அனைத்துமே குற்றவாளியின் குப்பை வதந்தி. இவை கடும் கண்டனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டும். Union Budget 2026: இன்று தாக்கல் ஆகும் மத்திய பட்ஜெட்! நிர்மலா சீதாராமனின் புதிய ரெக்கார்ட்! |Live
`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்'ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?
வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது. நம்பிக்கை 'போர் வீரனாக'... 1950-ல் ஒரு செல்வாக்கு மிக்க ராணுவக் குடும்பத்தில் பிறந்த ஜாங்கிற்கு, அதிகாரம் என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இவரது தந்தை ஜாங் ஜாங்ஸுன், மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி. அதே காலகட்டத்தில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கின் தந்தையும் அதே ராணுவப் பிரிவில் பணியாற்றியவர். ஒரு சாதாரண வீரராக ராணுவத்தில் சேர்ந்த ஜாங், வெறும் வாரிசுப் பெருமையால் மட்டும் உயரவில்லை; 1979-ல் வியட்நாம் போர்க்களத்தில் அவர் சிந்திய ரத்தமும், காட்டிய வீரமுமே அவரை ஒரு நிஜமான 'போர் வீரனாக' ராணுவத்தின் முன்னணியில் நிறுத்தியது. ராணுவ பதவி - விசுவாசத்தின் அடையாளம் 2012-ஆம் ஆண்டு சீன அரசியலில் ஒரு திருப்புமுனை. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றபோது, ராணுவத்தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடித்தார். அதற்கு அவருக்கு ஒரு நம்பிக்கையான போர் வீரன் தேவைப்பட்டான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஜாங் யூக்ஸியா. ஜாங்கின் மீது ஜி ஜின்பிங் கொண்ட அபார நம்பிக்கையினால், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ராணுவத்தில் அதிபருக்கு அடுத்தபடியாக ஒருவருக்குக் கிடைக்கும் மிக உயரிய பதவி. சீனாவின் அணு ஆயுதப் பிரிவை (Rocket Force) நவீனப்படுத்துவது முதல், அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது வரை அனைத்து ரகசியப் பொறுப்புகளும் ஜாங்கிடமே ஒப்படைக்கப்பட்டன. ராணுவ விதிகளின்படி 72 வயதில் ஓய்வு பெற வேண்டிய ஜாங்கிற்கு, ஜி ஜின்பிங் விதியைத் தளர்த்தி 75 வயது வரை பதவி நீட்டிப்பு வழங்கினார். அந்த அளவிற்கு அவர் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார். அணு ஆயுத தகவல் கசிவு ஆனால், 2026-ன் தொடக்கத்தில் சீனாவின் மிக ரகசியமான அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அமெரிக்க உளவு அமைப்பான CIA-விற்கு இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தகவல்கள் ஜாங் யூக்ஸியாவின் நேரடி மேற்பார்வையில் இருந்த 'ஆயுத மேம்பாட்டுத் துறையிலிருந்து' கசிந்தவை என்பது உறுதி செய்யப்பட்டபோது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட தரவுகளின்படி, பல ஆண்டுகளாக ராணுவ ரகசியங்கள் கைமாறியதன் பின்னணியில் ஒரு பெரும் சதி வலை இருப்பது தெரியவந்தது. ஊழல், தேசத்துரோகம், அதிகார துஷ்பிரயோகம் படிப்படியாக உயர்ந்த ஜாங்கின் அதிகாரம், ஒரே ஒரு வாரத்தில் சரிந்து விழுந்தது. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் நிகழ்ந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் ஒருபுறமிருக்க, ராணுவத்திற்குள் ஜி ஜின்பிங்கின் அதிகாரத்திற்குச் சவால் விடும் வகையில் ஜாங் ஒரு தனி அரசியல் குழுவை உருவாக்கியது விசாரணையில் அம்பலமானது. ஊழல், தேசத்துரோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு ஜாங் உள்ளானார். நேற்றுவரை அதிபருடன் ஒரே மேடையில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டவர், இன்று கைதியாக விசாரணை அறையில் அமர வைக்கப்பட்டார். இது ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி என்பதைத் தாண்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசனனையாக ஆனது. ஜாங்கின் இந்த வீழ்ச்சி, ஜி ஜின்பிங்கின் அதிகாரப் பிடியை இன்னும் பலப்படுத்தியுள்ளதோடு, ராணுவத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையாகத் தொடங்கி, இன்று ஒரு வரலாற்றுச் சுவடாக மறைந்துபோன ஜாங் யூக்ஸியாவின் கதை, அதிகாரத்தின் இருண்ட பக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.!
`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்
மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரிடம் டாக்சி டிரைவர் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார். அர்ஜெண்டினா அரியானோ என்ற அந்த பயணி எக்ஸ் தளத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், ``நான் சமீபத்தில் மும்பை வந்தேன். ஹில்டன் ஹோட்டலுக்கு செல்ல டாக்சியில் ஏறினேன். இரண்டு பேர் என்னை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்று 200(ரூ.18000) அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டு என்னை ஹோட்டலில் கொண்டு போய்விட்டனர். ஆனால் அந்த ஹோட்டல் நான் ஏறிய இடத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது'' என்று குறிப்பிட்டு டாக்சி நம்பரையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவு வைரலானது. டாக்சி டிரைவர் பெண் சுற்றுலா பயணியை டாக்சியில் ஏற்றி 20 நிமிடம் சுற்றிவிட்டு அப்பயணியை ஏற்றிய இடத்திற்கு அருகில் கொண்டு வந்து ஹோட்டலில் இறக்கிவிட்டுள்ளார். அமெரிக்க பெண்ணின் பதிவை தொடர்ந்து மும்பை போலீஸார் தாங்களாக இதனை விசாரிக்க ஆரம்பித்தனர். டாக்சி பதிவு எண் அடிப்படையில் அதன் டிரைவர் தேஷ்ராஜ்(50) என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் என்பவரிடம் துணை போலீஸ் கமிஷனர் மனீஷ் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் போலீஸார் அமெரிக்க சுற்றுலா பயணி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று தகவல்களை சேகரித்தனர். அவர் ஜனவரி 12ம் தேதி ஹோட்டலுக்கு வந்துள்ளார். அடுத்த நாளே ஹோட்டலை காலி செய்துவிட்டு புனே சென்றுள்ளார். அங்கிருந்து அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறுகையில்,'' பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்று வருகிறோம். அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூட கூறவில்லை'' என்றார்.

25 C