SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 12 Nov 2025 8:31 pm

ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 12 Nov 2025 7:31 pm

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு

H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 12 Nov 2025 7:19 pm

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு

H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு

H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 12 Nov 2025 5:31 pm

சீனா: இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம் - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் நீண்ட ஆயுள் குறித்து ஆராயும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, இன்னும் சில ஆண்டுகளில் 150 வயது வரை வாழ்வதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் எனக் கூறியிருக்கிறது. Anti Ageing நியூயார்க் டைம்ஸ் தளம் கூறுவதன்படி, அந்த நிறுவனம் வயதாவதைத் தடுப்பதற்கான ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்குவதில் வெற்றிகண்டு வருகிறது. திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ரசாயனம் இந்த மாத்திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே ஆயுளை அதிகரிக்கும் மாத்திரைகள் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர். லோன்வி பயோசயின்சஸ் (Lonvi Biosciences) என்ற அந்த நிறுவனம் உருவாக்கும் திராட்சை விதை மாத்திரை, உடலில் உள்ள ஜாம்பி செல்களைக் குறிவைத்து செயல்படும். zombie cells என்பது சேதமடைந்த அதே நேரத்தில் இறக்காமல் உடலில் இருந்து தீங்கான வேதிப்பொருட்களை வெளியிடும் செல்களாகும். இவை வயதாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Human Cell ஆய்வில் வெற்றிகண்ட திராட்சை விதை மாத்திரை! தெற்கு சீனாவின் ஷென்சென் நகரத்தில் உள்ள லோன்வி நிறுவனம் திராட்சை விதையில் இருக்கும் பிரோசியானிடின் சி1 (Procyanidin C1) என்ற பொருளைக் கொண்டு அது உருவாக்கியிருக்கும் மாத்திரைகளால் மனித ஆயுளை 150 ஆண்டுகளாக உயர்த்த முடியும் என்கிறது. அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லியு கிங்குவா, 150 ஆண்டுகள் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளில் யதார்த்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். நேச்சர் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் திராட்சை விதை சாற்றிலிருந்து கிடைக்கும் புரோசியானிடின் C1 (PCC1)-ஐப் பயன்படுத்தி எலிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை வெற்றிகரமாக நீட்டித்துள்ளனர். விரைவில் உலகத்தலைவர்களின் ஆசையை நிறைவேற்றும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Elon Musk: இந்தியாவின் செயற்கைக்கோளை ஏவ Space X நிறுவனத்தை நாடும் இஸ்ரோ - ஏன்?

விகடன் 12 Nov 2025 3:12 pm

Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்'சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ — Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025 சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விகடன் 12 Nov 2025 1:30 pm

”மகளுக்குப் பிடிக்குமென ஹோட்டல் தொடங்கிய தந்தை”- 900 கி.மீ கடந்த பாசப் பயணம்

சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது. லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர், ஒருநாள் தன் தந்தையிடம் பேசும்போது, வீட்டில் சமைத்த ஃபிரைடு ரைஸ் சாப்பிட மிகவும் ஆசையாக இருப்பதாக சாதாரணமாகக் கூறியுள்ளார். Representational Image மகளின் இந்த வார்த்தை, அவரை ஆழமாகத் தொட்டுள்ளது. உடனடியாக, அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுக்காக அவர், படிக்கும் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறார் லீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், மகளை லீ தான் அரவணைத்து வருகிறார். தனது வேலையை விட்ட லீ, சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மகள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். மகளுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொண்டு ஃபிரைடு ரைஸ் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு கடையில் வியாபாரம் நடக்கவில்லை, இதனால் லீ வருத்தமடைந்துள்ளார். தந்தையின் சோகத்தைக் கண்ட மகள், தனது தந்தையின் கடை மற்றும் அவரது பாசம் குறித்த கதையை பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அப்பா மிகவும் சோகமாக இருக்கிறார். தனது தந்தை சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரிக்கிறார், விற்பனையை அதிகரிக்க அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு உடனடியாக வைரலாகி, பலரின் கவனத்தை பெற்றது. மறுநாள் காலை, லீயின் கடைக்கு முன் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியதும் குறிப்பிடத்தக்கது.

விகடன் 12 Nov 2025 11:29 am

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 12 Nov 2025 2:03 am

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 12 Nov 2025 1:32 am

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 12 Nov 2025 12:31 am

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 11:31 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 11:04 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 10:31 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 9:31 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 8:32 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 7:31 pm

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

தி ஹிந்து 11 Nov 2025 6:31 pm

அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?

'இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டது... அதனால், நாமும் இந்தியா மீது விதித்திருக்கும் வரியை குறைக்க உள்ளோம்' என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். உண்மையிலேயே, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதா என்று கேட்டால், 'அது உண்மை' தான். கச்சா எண்ணெய் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? குறைந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 4,675 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3,332 மில்லியன் டாலர்களுக்கு தான் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது 28.9 சதவிகித சரிவாகும். இன்னொரு பக்கம், இந்தியா அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் இருந்து தினமும் 2.07 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்), தினமும் 5.93 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கை விட அதிகமாகும். வரி பிரச்னை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை அறிவித்தார். இதில் பிற நாடுகளின் மீது எக்கச்சக்க வரி விதிக்கப்பட, பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றன. அதில் இந்தியாவும் ஒன்று. பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து நாடுகளுடனும் ஓரளவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடந்துகொ...ண்டே இருக்கிறது. மோடி - புதின் '74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்? இந்தியா - ரஷ்யா இதற்கிடையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தான நாடுகளுக்கு குறைந்த வரியும், கையெழுத்தாகாமல் இருக்கும் நாடுகளுக்கு ஒருவித வரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவிற்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அடுத்ததாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதாகவும், அந்தப் பணம் ரஷ்யா உக்ரைன் மீது செய்யும் போருக்கு உதவுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. ஆக, இப்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. ரஷ்யாவை விட்டுக்கொடுக்காத இந்தியா ஆரம்பத்தில், அமெரிக்கா என்ன தான் வரி போட்டாலும், ரஷ்யாவின் உறவை விட்டுக்கொடுப்பதாக இல்லை இந்தியா. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் நல்ல சாட்சி. அதன் பின்னர், ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய அரசு இந்திய மக்களின் நலனை தான் கருத்தில் கொள்ளும். அதை பொறுத்து தான், இந்தியா வர்த்தகம் செய்யும். அதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் என்று வெளிப்படையாகவே பேசினர். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில், சீனாவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி. இது ட்ரம்பிற்கான ஒரு சிக்னலாகவே பார்க்கப்பட்டது. ட்ரம்ப் வரி விதித்தும்... வர்த்தக பேச்சுவார்த்தை ஒரு சுமுக தீர்வை நோக்கி எட்டாத போதும், மோடி - புதின் சந்திப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. அதுவும் சீனாவில் என்பது இன்னும் சிறப்பு. மோடி, ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் நெருக்கம் இந்த சந்திப்பிற்கு பிறகு, ட்ரம்ப் மோடியுடனும், இந்தியா உடனும் சற்று நெருக்கத்தை அதிகப்படுத்தினார். மோடியை புகழ்ந்து தள்ளினார். அதன் பிறகு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்தடுத்து நடந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது வரை பாசிட்டிவாகவே சென்றுகொண்டிருக்கின்றன. நேற்று ட்ரம்ப் விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று கூறியுள்ளார். அதுவும் இருதரப்பிற்குமே நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது இந்தியா. இந்தியா என்ன சொன்னது? இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்று ஸ்ட்ராங்காக கூறி வந்த இந்தியாவும், இப்போது பட்டும் படாமலும் பேசுகிறது. கடந்த மாதம் ட்ரம்ப், 'நான் மோடியிடம் பேசினேன். இந்தியா மெல்ல மெல்ல ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும்' என்று பேசினார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ, நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன. நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். இந்தியா தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது? அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது. இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று ட்ரம்ப் பேச்சிற்கு பின் பதிலளித்தது. ஆனால், ட்ரம்ப் கூறுவதுபோல, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா என்பது குறித்த பதிலே அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கவில்லை. கேள்வி இப்போது, 'அமெரிக்காவிற்காக ரஷ்யாவை விட்டுத்தருகிறதா இந்தியா?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. 'இது இந்தியாவிற்கு நன்மை பயக்குமா?' என்கிற சந்தேகமும் எழுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று ட்ரம்ப் இந்தியா மீதான வரிக்கு ட்ரம்ப் காரணம் கூறினாலும், உண்மை வேறு என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதில் ட்ரம்ப் தனக்கு பங்கு உள்ளது என்று திரும்ப திரும்ப கூறுவதை இந்தியா இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை இந்தியா. பிரேசிலுக்கு மோடி சென்றிருந்தபோது, ட்ரம்ப் அழைத்தும் மோடி அமெரிக்கா செல்லவில்லை. - இவை தான் இந்தியா, மோடி மீதான ட்ரம்பின் கோபம் என்று கூறப்படுகிறது. மோடி-ட்ரம்ப் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாட்டையே சாடும், பாதிக்கும் ட்ரம்ப்பின் குணம் மற்றும் கொள்கையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஓரிரு மாதத்திற்குள்ளேயே தனது பேச்சையும், கொள்கையையும் மாற்றும் ட்ரம்ப் எப்போது எப்படி மாறுவார் என்று கூற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, ஆசியாவில் சீனாவிற்கு போட்டியாக இந்தியாவிற்கு கவனமாக உதவி வந்தது அமெரிக்கா. ஆனால், பதவியேற்று ஒரு ஆண்டு கூட முடியாத சூழலில் இந்த உறவில் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறார் ட்ரம்ப். இதையெல்லாம் பார்க்கும்போது, ட்ரம்பையும், அமெரிக்காவையும் இப்போதைக்கு இந்தியா நம்ப முடியும் என்று தோன்றவில்லை. ரஷ்யா - நண்பன் ரஷ்யாவை பொறுத்த வரை, இந்தியாவின் நீண்ட கால நண்பன். பாதுகாப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை இரண்டு நாடுகளுக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம், இந்தியாவிற்கு வருகிறார் புதின். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா தனது பார்வையை அமெரிக்காவை நோக்கி திருப்புவது இந்தியா - ரஷ்யா உறவில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளின் உறவுமே முக்கியம் தான். அதனால், இந்திய அரசு ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல்... எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளையும் பேலன்ஸ் செய்வது மிக முக்கியம். இதை இந்தியா எப்படி செய்யப்போகிறதோ?

விகடன் 11 Nov 2025 5:14 pm

வாடகை ரூ.1250; அபராதம் ரூ.3.5 லட்சம் - கோபத்தால் கட்டிய ஃபைன் - என்ன நடந்தது?

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அதன்பின்னர் அதனை ரத்துசெய்ய விரும்பியிருக்கிறார், ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த பெண், வேண்டுமென்றே அறையை வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில், பெண் ஒருவர் இரவு தங்குவதற்காக 108 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,250) செலுத்தி அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அறைக்குள் நுழைந்த பிறகு அதை ரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அறை தரமற்றதாக இருப்பதாகவும் ஒலித்தடுப்பு வசதி இல்லாமல் இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார். Water ( Representational Image) ஹோட்டல் விதிகளின்படி, செக்-இன் செய்த பிறகு முன்பதிவை ரத்து செய்ய முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாதான முயற்சியாக அவருக்கு வேறு ஒரு சிறந்த அறையைக் கட்டணமின்றித் தருவதாகவும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண், காவல்துறை வரும் வரை காத்திருந்த நேரத்தில், குளியலறையில் இருந்த அனைத்து குழாய்களையும் திறந்துவிட்டார். சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீர் தொடர்ந்து ஓடியதால், அந்த அறை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தண்ணீர் கசிந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கும் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார். அறையில் ஏற்பட்ட சேதங்கள், சுவர்கள் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காக ஹோட்டலுக்கு இழப்பீடு வழங்க அவர் சம்மதித்திருக்கிறார். இதையடுத்து, அறை வாடகையான 108 யுவானை விட சுமார் 280 மடங்கு அதிகமான, அதாவது 30,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம்) அபராதமாகச் செலுத்தியுள்ளார்.

விகடன் 11 Nov 2025 3:43 pm

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

தி ஹிந்து 11 Nov 2025 2:47 pm

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 11 Nov 2025 2:37 pm

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

தி ஹிந்து 11 Nov 2025 2:31 pm

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 11 Nov 2025 1:31 pm

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

தி ஹிந்து 11 Nov 2025 1:31 pm

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 11 Nov 2025 12:31 pm

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

தி ஹிந்து 11 Nov 2025 12:31 pm

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 11 Nov 2025 11:31 am

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

தி ஹிந்து 11 Nov 2025 11:31 am

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 11 Nov 2025 10:31 am

`ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்

தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு. இந்த நிலையில், நேற்று இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது. ட்ரம்ப் - செர்ஜியோ கோர் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? விரைவில் ஒப்பந்தம் அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், இந்தியா உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அது முன்பு இருந்த ஒப்பந்தத்தை விட, முற்றிலும் வேறானதாக இருக்கும். இப்போது இந்தியாவிற்கு என்னை பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் என்னை பிடிக்கும். நியாயமான ஒப்பந்தம் போடவிருக்கிறோம். அவர்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகாரர்கள். அதனால், செர்ஜியோ அது குறித்து பார்க்க வேண்டும். இந்தியா உடனான ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது. அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளார். வரி குறைப்பு..? அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இப்போது ரஷ்ய எண்ணெய் பிரச்னையால், இந்தியாவிடம் இருந்து அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அவர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டார்கள். அதனால், இந்தியா மீதான வரியும் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். 'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

விகடன் 11 Nov 2025 9:41 am

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

தி ஹிந்து 10 Nov 2025 4:35 pm

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

தி ஹிந்து 10 Nov 2025 4:31 pm

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

தி ஹிந்து 10 Nov 2025 3:31 pm

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

தி ஹிந்து 10 Nov 2025 2:31 pm

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

தி ஹிந்து 10 Nov 2025 1:31 pm

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? என்ன சொல்கிறது ரஷ்யா? தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை. ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்று பேசியுள்ளார். உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ? '74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

விகடன் 10 Nov 2025 12:12 pm

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ'விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம் என்று உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசா H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? என்னென்ன மருத்துவ உதவி அல்லது சிகிச்சை? இந்த மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளில் இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், உளவியல் ரீதியான பிரச்னைகளும் அடங்கும். உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விசா தருவதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, இவர்களுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்பு இருக்கிறதா? இந்தக் கட்டுப்பாடுகளில் இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தெளிவாகக் கூறப்படவில்லை. இப்போதைக்கு விசா விண்ணப்பிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு ஒருவேளை விசா வழங்கப்பட்டால் அவர்களது மருத்துவச் செலவுகளைக் பார்த்துக்கொள்ள கூடிய அளவுக்கு, குறிப்பிட்ட நபருக்கு நிதி பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, குடியேற்றங்களைக் குறைக்க வேண்டும். இதற்காகத்தான், விசா நடைமுறைகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அவரது அரசாங்கம். அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! - புது ரூல்

விகடன் 9 Nov 2025 11:57 am