US சிறையில் Nicholas Maduro; அவரை என்ன செய்யப்போகிறார் Trump? - Former UN official R Kannan
கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம் - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள். டென்மார்க்கின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விருப்பத்துக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ``எந்த ஒரு நாடுக்கும் சொந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளுக்குதான் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தனர். கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் இந்த நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்களுக்கும் பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து அவர்களைப் பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை) மொத்தமாகப் பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த சதி குறித்த தகவலறிந்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், ``போதும்... இனி இப்படிப்பட்ட கற்பனைகள் வேண்டாம் என அமெரிக்காவை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார். ஐரோப்பிய தலைவர்கள், ``கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; அதன் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பார்கள் என்று கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல!
Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம் - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத்துவத்திற்காக அமெரிக்கா இதைக் குறிவைக்கிறது எனக் கூறப்படுகிறது. ஒருபுறம் டென்மார்க்கின் பாதுகாப்பு ஒப்பந்தப் பங்காளியாக இருக்கும் அமெரிக்கா, மறுபுறம் அதன் இறையாண்மையை மீறி நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறது என ஐ.நா.சபை சுட்டிக்காட்டுகிறது. மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நா சபையின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்படுகிறது. ட்ரம்ப் இதற்கிடையில், ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``கிரீன்லாந்து அதன் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கிரீன்லாந்து தொடர்பான எந்தவொரு முடிவையும் டென்மார்க்கும் கிரீன்லாந்து மக்களும் மட்டுமே எடுக்க முடியும். அமெரிக்கா அதில் தலையிட முடியாது. ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிரிகளைத் தடுக்கவும், நாங்களும் மற்ற பல நட்பு நாடுகளும் எங்கள் இருப்பு, செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்துள்ளோம். மேலும், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதி என்பதால் அதைப் பாதுகாப்பது சர்வதேச கடமை எனக் குறிப்பிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, 1952-ம் ஆண்டு டென்மார்க் அரசு இயற்றிய சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்திருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி, யாராவது (குறிப்பாக அமெரிக்கா) வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல் டென்மார்க் ராணுவ வீரர்கள் உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சட்டம் இன்றும் செல்லுபடியாகும். அதாவது, நாட்டின் எல்லைக்குள் அத்துமீறும் படையெடுப்பாளர்களைத் தாக்கத் தங்கள் வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்க நாடாளுமன்றமே அச்சமடைந்திருக்கிறது. மேலும், வெனிசுலா மீதும், கிரீன்லாந்து போன்ற பிற நாடுகளின் விவகாரத்தில் ட்ரம்ப் தனது ராணுவ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க செனட் சபை ஆலோசித்து வருகிறது. டென்மார்க்: செல்லப்பிராணியை விலங்குகளுக்கு உணவளிக்க கேட்கும் பூங்கா - பின்னணி என்ன?
அட! U டர்ன் இண்டிகேட்டர் செமயா இருக்கே! - ஒண்ணேகால் கோடி ரூபாய்தான்; இது என்ன கார் தெரியுமா?
சும்மா ஒரு ஞாயிறன்று சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த ரீலைப் பார்த்தேன். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை; ஆனால் அசத்தலாகவும், சாலைப் பயனாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருந்ததுபோல் தெரிந்தது. கார் ஒன்று இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டுத் திரும்பியது பார்க்கவே அழகாக இருந்தது. ‛இதில் என்ன அழகு இருக்கு’ என்றால், அந்த U-Turn இண்டிகேட்டர்தான் ஹைலைட்டே! சாதாரண லைட் பிளிங்கிங் இல்லை; அம்புக்குறியெல்லாம் போட்டு U-Turn சிம்பலே இண்டிகேட்டராக ஒளிர்ந்தது அந்த இண்டிகேட்டர். இப்போதைய சிச்சுவேஷனில் இண்டிகேட்டர் ஆன் செய்தால், எந்தப் பக்கம் போகிறோம் என்று தெரியும். ஆனால், யு டர்ன் அடிக்கிறோமா, இடது லேனில் கட் அடிக்கிறோமோ என்று தெரியாதல்லவா? அப்படியென்றால், இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதானே! Hyundai Ioniq 5 - Crab Driving சட்டென்று பார்த்தால், அந்தக் கார் லம்போகினியோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், அது ஒரு சீன நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார். பொதுவாக, ஆட்டோமொபைலில் இது மாதிரியான கண்டுபிடிப்புகளை முதலில் நடைமுறைக்குக் கொண்டு சீன நிறுவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம். ‛குதிக்கும் கார்’ ஒன்றைக் கொண்டுவந்து அதகளம் செய்தது சீன நிறுவனத்தைச் சேர்ந்த BYD கார் கம்பெனி. இதன் ஏர் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்கள் மாயம் செய்யும். இன்னொரு சீன நிறுவனமான ஹூண்டாய், தனது ஐயனிக்5 எனும் எலெக்ட்ரிக் காரில் - 360 டிகிரி பார்க்கிங் வசதியைக் கொண்டு வந்தது. அதாவது - காரின் ரியர் வீல்கள் பக்கவாட்டில் திரும்பி, நண்டு மாதிரி நடக்கும்; பார்க்கிங் செம ஈஸியாகச் செய்து கொள்ளும். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பிஒய்டி நிறுவனம், தனது காரின் சஸ்பென்ஷனைச் சோதிக்கும்விதமாக, காலி ஒயின் கிளாஸ்களில் தண்ணீரை ஊற்றி - அதை பானெட்டில் வைத்து - ஒரு சொட்டு நீர்கூடக் கீழே சிந்தாத வண்ணம் மேடு பள்ளங்களில் காரை ஓட்டிக் காட்டி அசத்தியது. தற்போது இதைத்தான் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 7XO காரில் முயற்சித்திருக்கிறார்கள். BYD Yangwang U8 - Water Car இன்னும் சில மாதங்களுக்கு முன்பு - தண்ணீரில் படகாக மாறி வீல்களையே துடுப்பைப் போட்டுவிட்டு, அப்படியே கரை ஏறினால் வீல்கள் சாலையில் ஓட ரெடியாகும்படியான ஒரு டூ-இன்-ஒன் காரை லாஞ்ச் செய்து அதகளம் செய்ததும் இதே சீன நிறுவனம். இப்போது இந்த யு-டர்ன் இண்டிகேட்டர் சிக்னல். பார்க்கும்போது ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸரீஸாக இதை அந்த டிரைவர் பொருத்தியுள்ளதுபோல் தெரிகிறது. ஆனால், இது ஃபேக்டரி ஃபிட்டட் சமாச்சாரம் போலவே தெரிவதுதான் ஸ்பெஷல். வலது பக்க ஸ்டீயரிங் ஸ்டாக்கை இரண்டு முறை தட்டினால், இந்த U டர்ன் இண்டிகேட்டர் எரியுமாம். சோஷியல் மீடியா முழுவதும், இந்த U டர்ன் ஸ்பெஷல் இண்டிகேட்டர் கார் பிரபலமாகி விட்டது. அந்தக் கார் HiPhi Z எனும் ஹைப்பர் எலெக்ட்ரிக் கார். சீனாவைச் சேர்ந்த Human Horizons எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு இது. HiPhi காரில் மொத்தம் X, Y, Z, A என்று 4 மாடல்கள் இருக்கின்றன. சோஷியல் மீடியாவில் வலம் வரும் அந்த மாடல் HiPhi Z. 1,05,000 யூரோவில் இருந்து இதன் எக்ஸ் ஷோரூம் விலை தொடங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.15 கோடி வருகிறது. இது தொடக்க விலைதான். HiPhi Z ஹைப்பர் கார் என்றால், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கும் ஒரு படி மேலே! ஆம், இது வெறும் 3.8 விநாடிகளில் 0-100 கிமீ-யைத் தொட்டுவிடும். இதில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 672hp. டார்க் 410Nm. எலெக்ட்ரிக் காருக்கு இது வெறித்தனமான ஸ்பெக். இதிலுள்ள பேட்டரி, நம் ஊர் மஹிந்திரா கார்களைவிட 2 மடங்கு பெருசு. ஆம், 120kWh சக்தி கொண்ட, CTP (Cell to Pack) அடிப்படையில் ரெடியாகி இருக்கும் லித்தியம் பேட்டரி. WLTP படி இதன் ரேஞ்ச் 555 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது இந்நிறுவனம். இது ஒரு 5 சீட்டர் எலெக்ட்ரிக் கிராண்ட் டூரர். HiPhi Z நம் ஊர் கார்களில் NFC (Near Field Communication) மாதிரி இதில் இருப்பது NT (No Touch) தொழில்நுட்பம். அதாவது, காரைத் தொடாமலே கதவைத் திறந்து காரில் ஏறிக் கொள்ளலாம். இதன் ரியர் டோர்கள் இன்வெர்ட்டடாகத் திறப்பதும் புதுமையாக இருக்கிறது. இதில் இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது. இதில் AGS (Active Grille Shutter) என்றொரு அம்சம் உண்டு. கார் ஓடும்போது கிரில்கள் தானாகத் திறந்து மூடும். இது டிராக் கோ-எஃபீஷியன்ட் ஃபோர்ஸைக் குறைத்து ஏரோ டைனமிக்கை அதிகப்படுத்தும். இதுவும் வேறெந்தக் கார்களிலும் இல்லை. ‛சின்னக் காலா இருந்தாலும் நல்லா இருக்குடா’ என்று விவேக் சொல்வாரே… அதுபோல் முந்தைய கண்டுபிடிப்புகள் மாதிரி பெரிய இனோவேஷனெல்லாம் இல்லை; சிம்பிளாக இருந்தாலும் அவசியமானதொரு கண்டுபிடிப்பாக இது இருப்பதாலோ என்னவோ, HiPhi Z பிரபலமாகி இருக்கிறது. HiPhi Z சீனாக்காரங்க எவ்வளவோ புதுமைகளைக் கண்டுபிடிக்கிறாங்க; நாம அதை ஃபாலோவாச்சும் பண்ணுவோம்!
இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained
ட்ரம்ப் அரசு ரெஸ்ட்டே எடுக்காது போலும். அது தனது அதிரடிக்கு தயாராகிவிட்டது. நேற்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துள்ளார். இது அமெரிக்காவின் அடுத்த பூகம்பத்திற்கான பிள்ளையார் சுழியாக இருக்கலாம். லிண்ட்சேவும், ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் புளூமெந்தலும், ரஷ்யாவிற்கு எதிரான மசோதா ஒன்றை தயார் செய்துவந்தனர். அந்த மசோதா தற்போது தயாராகி விட்டது. ரஷ்யா, உக்ரைன் இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல் ரஷ்யா - உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீதான போரை தொடங்கியது ரஷ்யா. உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வது... பண உதவி செய்வது என உக்ரைன் பக்கம் நின்றது அமெரிக்காவின் அப்போதைய ஜோ பைடன் அரசு. இதுபோக, வரிகளை அதிகரிப்பது... தடை விதிப்பது என ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடியையும் தந்து பார்த்தது அமெரிக்க அரசு. அமெரிக்கா உடன் சேர்ந்து ஐரோப்ப நாடுகளும் வரி... தடைகளை விதித்தது. ஆனால், இவை எதற்குமே ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை. ட்ரம்ப் என்ட்ரி 2024-ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே, ட்ரம்ப் 'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்' என்று உறுதியாக கூறி வந்தார். மேலும், அவர் எளிதாக இந்தப் போர் நிறுத்தத்தைச் சாதித்துவிடலாம் என்றும் நினைத்தார். இந்த உறுதிக்கு பின்னால் இருந்த காரணம், அவருக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இருந்த வலுவான நட்பு. ஆனால், அவர் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக நடந்தது என்னவோ வேறு. புதின் - ட்ரம்ப் 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று வரும் 20-ம் தேதியோடு ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால், இன்னமும் இந்தப் போர் நிறுத்தத்தில் தள்ளாடி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்தினேன்... தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்தினேன்... இப்படி எத்தனை போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறினாலும், அவர் ஆரம்பத்தில் 'நிறுத்துவேன்' என்று கூறிய போர் இன்னும் முடியவில்லை. இது ட்ரம்பிற்கு ஒருவித அதிருப்தி தான். முயற்சிகள் இந்தப் போரை நிறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அழைத்துப் பேசினார் ட்ரம்ப். அமெரிக்காவில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நடந்தது. புதினும், ஜெலன்ஸ்கியும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் செய்தார். ஆனால், அத்தனைக்கும் பலன் 'ஜீரோ'. இதையடுத்து, வரி அஸ்திரத்தை ட்ரம்ப் கையில் எடுத்தார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அவர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 25 சதவிகித வரி போக, கூடுதலாக 25 சதவிகித வரி விதித்தார். இது ஓரளவு ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தத்தான் செய்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், இப்போது இந்தியா படிப்படியாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained அடுத்ததாக, ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது அமெரிக்கா. இவை அனைத்துமே ரஷ்யாவிற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியது. மசோதா அதன் படிதான், தற்போது லிண்ட்சே மற்றும் ரிச்சர்ட்டின் மசோதா ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. அந்த மசோதாவின் படி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிசக்தி போன்ற ஆற்றல்களை இறக்குமதி செய்தால், அந்த நாடுகளின் மீது 500 சதவிகித வரி விதிக்கப்படும். அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாயம் டாப் இடங்களைப் பிடித்துவிடும். ஆக, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுக்கும் 500 சதவிகித வரி விதிக்கப்படும். இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி, குடியுரசுக் கட்சி இரண்டு கட்சிகளுமே பெருமளவு வாக்களிக்கும் என்று லிண்ட்சே எதிர்பார்க்கிறார். இந்த மசோதாவிற்கு ட்ரம்பின் ஆதரவும் உள்ளது என்று நேற்றைய ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு லிண்ட்சே தெரிவித்துள்ளார். ட்ரம்ப் - பரஸ்பர வரி வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! இந்தியா - வரி இந்தியாவை இந்த வரி என்ன செய்யும் என்கிற கேள்விக்கு, ``அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது எவ்வளவு வரியை ஏற்றினாலும் இனி இந்திய ஏற்றுமதியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், இப்போதே அவர்கள் மிக அதிக வரியைத் தான் சந்தித்து வருகிறார்கள். இதனால், தங்களது ஏற்றுமதிகளை வேறு நாட்டின் பக்கம் திருப்பத் தொடங்கிவிட்டனர் இந்திய ஏற்றுமதியாளர்கள் என்று பதில் கூறுகின்றனர். இன்னொரு பக்கம், இந்தியா, சீனப் பொருள்களின் விலை ஏற்றுவது அமெரிக்காவிற்கும் நஷ்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் என்று கூறுகின்றனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற அமெரிக்க மாகாணங்களில் இந்திய பொருள்களின் நுகர்வோர்கள் மிக அதிகம். இப்போது இந்திய பொருள்களின் மீதுள்ள 50 சதவிகித வரியே, அவர்களுக்கு விலைவாசியைக் கூட்டியுள்ளது. 500 சதவிகிதம் என்று சொன்னால், நிலைமையைக் கேட்கவே வேண்டாம். சீனா சீனாவின் பக்கம் வந்தால், அமெரிக்கா மூலப்பொருள்களை பெரும்பாலும் உற்பத்தி செய்யாது. அவற்றுக்காகப் பிற நாடுகளையே அமெரிக்கா சார்ந்திருக்கும். குறிப்பாக, மூலப்பொருள்களுக்கு சீனாவை பெருமளவு நம்பியிருக்கிறது அமெரிக்கா. சீனா மீது வரி விதித்தால், இந்தியா போன்று அமைதியாக இருக்காது சீனா. அதுவும் அமெரிக்காவிற்கு பரஸ்பர வரியை விதிக்கும். இது அமெரிக்காவிற்கு பெருமளவு சுமையை ஏற்படுத்தும். அங்குள்ள பல தொழில்கள் பாதிக்கப்படும். அடுத்ததாக, அமெரிக்காவின் இந்தச் செயல் உலக அளவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்... உலகப் பொருளாதாரங்களும் பாதிக்கப்படும். Russia - Ukraine - புதின் e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன? ரஷ்யா வழிக்கு வருமா? இதெல்லாம் ஓகே... இவை ரஷ்யாவை வழிக்குக் கொண்டு வந்துவிடுமா என்று பார்த்தால், இப்போதைய நிலவரப்படி, 'நோ'. ரஷ்யாவிற்கு இதுவரை எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும், அது முன் வைத்த காலை பின் வைக்கத் தயாராக இல்லை. இனி அதை புதின் செய்யமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அவரைப் பொறுத்தவரை உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது... உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவிற்கு தந்துவிட வேண்டும். இது நடந்துவிட்டால் போரை நிறுத்திவிடுவார். அதனால், அமெரிக்கா போடும் வரி, அதற்கு பிற நாடுகளுடன் இருக்கும் உறவைத் தான் கெடுக்குமே தவிர, வேறு ஒரு பலனையும் சேர்க்காது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு
Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!
இதுவரை உக்ரைன் போரினால் அமெரிக்காவும், ரஷ்யாவும் முட்டி மோதிக்கொண்டிருந்தன. இப்போது வெனிசுலா விஷயத்திலும் இந்த இரு நாடுகள் மோதிக்கொள்ள தொடங்கியுள்ளன. என்ன பிரச்னை? நேற்று கரீபியன் கடல், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா. இந்த இரண்டு கப்பல்களும் முன்பு வெனிசுலாவிற்கு கீழ் இருந்து வந்தது. இதனால், இந்தக் கப்பல்களில் வெனிசுலாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கொண்டுவரப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. கச்சா எண்ணெய் 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? மரினேரா இரண்டு கப்பல்களில் மரினேரா என்கிற எண்ணெய் டேங்கர் கப்பலால் தான் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது. முன்பு பெல்லா 1 என்று அழைக்கப்பட்ட மரினேரா கப்பல் கடந்த டிசம்பர் மாதம், ரஷ்யாவின் கீழ் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, இந்தக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய போது, மரினேரா கப்பலில் ரஷ்ய கொடி பறந்துகொண்டிருந்தது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்போக்கை உண்டாக்கி உள்ளது. மரினேரா கப்பலை அமெரிக்கா சட்டென கைப்பற்றிவிடவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக, அந்தக் கப்பலை அமெரிக்கா தொடர்ந்து ட்ரேக் செய்து வந்துள்ளது. இதையறிந்த ரஷ்யா தங்களது கப்பல் படையால் அந்தக் கப்பலை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. இந்தப் பாதுகாப்பையும் மீறி அமெரிக்கா மரினேராவைக் கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா என்ன சொல்கிறது? இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பிரிவு, உலகம் எங்குமே வெனிசுலாவின் எண்ணெய்க்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதனால், அமெரிக்காவின் தடையை மீறிய இந்தக் கப்பல் ட்ரம்ப் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. Reuters செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, கப்பலைக் கைப்பற்றியதும் முதலில் எண்ணெய் டேங்கர் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தே, அமெரிக்காவின் நோக்கம் என்ன(எண்ணெய்)வென்று புரிந்துவிடுகிறது. ரஷ்யா மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained ரஷ்யாவின் எதிர்ப்பு மரினேரா கைப்பற்றலைப் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, அந்தக் கப்பலில் இருந்த அனைத்து ரஷ்ய குடிமகன்களும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பலை இன்னொரு நாடு கைப்பற்றுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிவு செய்துள்ளது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு
மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!
ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்! ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள் என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.
'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்?
'எண்ணெய்க்காகத் தான் எல்லாம்' - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைபிடித்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. ட்ரம்ப் பதிவு இதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். அந்த எண்ணெய் சந்தை விலைக்கு விற்கப்படும். அதில் வருகிற பணம் அமெரிக்க அதிபராகிய என்னால் நிர்வாகிக்கப்படும். இந்தப் பணம் வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்வேன். கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்றும் படி, எரிசக்தி செயலாளர் கிறிஸிற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த எண்ணெய்களை அமெரிக்க சேமிப்பு கப்பல்கள் அமெரிக்காவிற்கு நேரடியாக கொண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்தப் பதிவு 'இது வெறும் ஆரம்பம்' என்பதை காட்டுகிறது. வெனிசுலா விஷயத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகளை இனி அடிக்கடி பார்க்கலாம். மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained
Hugo Chavez - Americaவை மிரட்டிய Venezuela அதிபரின் புரட்சிக் கதை | Decode
e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன?
சீன பிசினஸ்மேன்களுக்கு e-b-4 விசா (e-Production Investment Business Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியா. இந்தத் திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது? இது முழுக்க முழுக்க ஆன்லைன் விசா திட்டம் ஆகும். ஏஜென்டுகள் இல்லாமல், தூதரகத்திற்குச் செல்லாமல் இந்த விசாவிற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விசா 45 - 50 நாள்களில் கிடைத்துவிடும். e-b-4 விசா பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையில் இந்தியாவில் தங்கலாம். https://www.nsws.gov.in/ - இதுதான் விண்ணப்பிப்பதற்கான லிங்க். மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க! என்ன பயன்? இந்த விசா மூலம் இந்தியா வரும் சீன பிசினஸ்மேன்கள் இங்கே உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல், தரத்தை செக் செய்தல், மெயின்டனன்ஸ், உற்பத்தி, பயிற்சி போன்றவற்றை இங்கே செய்யலாம். இந்த விசா மூலம் இந்தியா - சீனா உறவை வலுப்படுத்த நினைக்கிறது இந்திய அரசு. மேலும், இது இந்தியாவிற்குள் முதலீடுகளைக் கொண்டுவரும். மேலும், இது இந்தியாவின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்தியாவின் இந்த முயற்சியை சீன அரசும் பாராட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

26 C