SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது. அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன பேசினார்? 2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ. இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அணு ஆயுத சோதனை அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது. இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. 'இந்த' விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன? சீனாவின் மறுப்பு அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

விகடன் 8 Feb 2026 11:49 am

IND vs USA: எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:32 am

IND vs USA: எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:32 am

India - US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' - க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 03 க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்) (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், வர்த்தக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று உறுதியாக சொல்ல முடியும். ஏற்றுமதி - இறக்குமதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மீது 25 சதவிகிதம் இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்காக 25 சதவிகிதம் தண்டனை வரி என்பதை குறைத்து 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 18 சதவிகிதம் வரி என்பது இதர நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகம் தான் என்றாலும், இந்திய பொருட்களால் போட்டியிட முடியும் என்பது சற்று பலன் தரக்கூடியதுதான். ஆனால், இதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இறக்குமதிக்கு இலக்கா அல்லது இழப்பிற்கு இலக்கா? 2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாகும். அது இப்போது 10 மடங்காக அதிகரித்து 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்) அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறக்குமதி வரி விதிப்பு மூலம் இந்தியா சுமார் 25,000 கோடி ரூபாய் வரியாக பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறக்குமதி 10 மடங்காகும் என்ற சொல்லப்படும் நிலையில் இறக்குமதிக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் அளவிலேயே இறக்குமதி மட்டும் உயர்கிறது என்று வைத்துக் கொண்டால் சுமார் 2 1/2 லட்சம் கோடி அளவிற்கு நாம் இறக்குமதி வரி வசூலிக்க வேண்டும். சிபிஐ(எம்) க.கனகராஜ் ஆனால், அது இனிமேல் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்திய கஜானவிற்கு வரவேண்டிய இரண்டரை லட்சம் கோடி இனி வராது. ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாறுதல் செய்கிறோம். அப்படியே ஒப்பீடு செய்வது சரியல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படி வைத்துக் கொண்டால் கூட அமெரிக்கா சொல்லும் 45 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்தால் அது 4 1/2 லட்சம் கோடி. 5 சதவிகிதம் விதித்தால் 2 1/4 லட்சம் கோடி. ஒரு சதவிகிதம் விதித்தால் கூட 45,000 கோடி. ஆனால், இதை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க மோடி அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இந்திய மக்களின் பிரதான உணவு தானியங்களான அரிசிக்கும், கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உத்தேசமாக, இதன் மூலமாக மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் பெறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை விட்டுத்தர முன்வருகிற இந்தியா உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி-யை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02 இரண்டாவதாக, இந்தியாவிற்கு தேவைப்படுகிற பொருளை தேவைப்படுகிற அளவிற்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், 45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யச் சொல்வதும் அதுபற்றி மோடி அரசாங்கம் மௌனம் காப்பதும் ஏனென்று தெரியவில்லை. 45 லட்சம் கோடி என்பது இந்தியாவின் 2026 பட்ஜெட்டில் 84 சதவிகிதம். இந்த அளவிற்கு இறக்குமதி செய்வது என்று இலக்கு வைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். ஒரு நாடு தன் தேவைக்குத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் வியாபாரத்திற்காக தன் நாட்டு தொழில்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது வெறும் பொருள் இறக்குமதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. இந்திய தொழில்கள் பாதிக்கப்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், அந்நிய செலாவணி குறையும், நடப்பு கணக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார் என்பதற்காக அமைதி காப்பது இந்தியாவின் நலனை காவுக் கொடுப்பதாகும். மோடி - ட்ரம்ப் ரஷ்ய கச்சா எண்ணையும் வெனிசுலா கச்சா எண்ணையும் ஏதோ தான் அமைதிக்காக அவதாரம் எடுத்தது போல் டொனால்ட் ட்ரம்ப் பேசித் திரிகிறார். நரேந்திர மோடி தனது நன்றி அறிவிப்பு எக்ஸ் பதிவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளை பாராட்டி புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் அதிபரை திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் புகுந்து மனைவியோடு கடத்திக் கொண்டுவந்து தன் நாட்டில் சிறை வைப்பது அமைதி நடவடிக்கையா? 66,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தபோது இஸ்ரேலுக்கு துணையாக நின்றது அமைதி நடவடிக்கையா? கனடாவை தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள போகிறேன் என்று கொக்கரிப்பது அமைதி நடவடிக்கையா? கீரின்லாந்து எனக்குத்தான் சொந்தம் என்று திமிர்த்தனமாக பேசுவது அமைதி நடவடிக்கையா? இத்தனை இருந்தபிறகும், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு எண்ணை வியாபாரம் தான் காரணம், எனவே போருக்கு எதிராக எனது நடவடிக்கை இது என்று ட்ரம்ப் பசப்பித்திரிகிறார். இதே ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து போரை நிறுத்து என்று சண்டியர்த்தனம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டவர். அதன்பிறகு அரிய வகை தனிமங்களை அடிமாட்டு விலைக்கு விற்க உக்ரைனை நிர்ப்பந்தித்து அடிமை சாசனம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு போருக்கு ஆயுதமும், பணமும் கொடுத்ததை எந்த வகையில் சேர்க்க. ஆனாலும், அமெரிக்கா சொல்கிறது ரஷ்யாவிடம் எண்ணை வாங்காதே என்று. அதிலாவது, தர்க்க ரீதியாக ஏதோ நியாயம் இருப்பதாக நாமும் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், வெனிசுலாவிடம் தான் கச்சா எண்ணை வாங்க வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் நியாயம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலராக இருந்தபோது ஆரம்பித்து இப்போது வரை ஒரு பீப்பாய் 60 டாலருக்கு ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலர். அதாவது ஒரு பீப்பாய்க்கு 8 டாலர் அதிகம். ஒரு நாளைக்கு 21 லட்சம் பீப்பாய்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஏற்படும் இழப்பை யார் சரிக்கட்டுவார்கள். ஏற்கனவே இறக்குமதி பொருட்களுக்கு வரியே இல்லை என்பதன் மூலம் குறைந்தபட்சம் 45,000 கோடியிலிருந்து சில லட்சம் கோடிகள் வரை இந்தியா இழக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கச்சா எண்ணை இறக்குமதியை ரஷ்யாவிடமிருந்து மாற்றுவதால் அதுவும் ஒரு மிகப்பெரிய இழப்பாக அமையப்போகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை இந்தியாவிற்கு ஆதரவான ஒப்பந்தம் என்று கொண்டாட முடியாது. மாறாக, இத்தகைய அள்ளிக் கொடுக்கும் அடிபணிந்து போகும் ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை, தொழில்களை சீரழிக்கப் போகிறது. ட்ரம்ப் - மோடி இன்னும் என்னவெல்லாம் மறைந்திருக்கிறது என்பது முழுமையான ஒப்பந்தம் வெளிவந்தால் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். அதில் ஒன்றும் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட இந்தியாவிற்கு சாதகமான எதுவும் இருந்துவிடும் என்று நம்புவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் உண்மையில் இருதரப்பு ஒப்பந்தம் அல்ல இந்தியா மீது அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டும்தான்.! (தொடரும்) India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

விகடன் 7 Feb 2026 5:04 pm

`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். மோடி - ட்ரம்ப் இந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் , ``இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் (investment commitment) அளிக்கவில்லை. ஆனால், 'விக்சித் பாரத் 2047' இலக்கை நோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடைவதால், அடுத்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்பது இயல்பானது. அம்ரித் காலத்தில் விக்சித் பாரத் 2047 நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதனால், பெரிய அளவிலான எரிசக்தி (energy), டேட்டா சென்டர் உபகரணங்கள், ஐசிடி பொருட்கள் தேவைப்படும். நமது எஃகு உற்பத்தி திறன் தற்போதைய 140 மில்லியன் டன்னிலிருந்து அடுத்த சில ஆண்டுகளில் 300 மில்லியன் டன்னாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். என்ஜின்கள், உதிரி பாகங்கள் சேர்த்தால் 100 பில்லியன் டாலரை எட்டும். பியூஷ் கோயல் முதல் கட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. அடுத்த 4-5 நாட்களில் கூட்டு அறிக்கை வெளியாகும். அதன் பின்னர் அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 50%-லிருந்து 18%-ஆக குறைக்கும். சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரியைக் குறைக்க முடியும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், மீனவர்கள், MSME-களுக்கு பயன் தரும் எனத் தெரிவித்தார். India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

விகடன் 7 Feb 2026 3:32 pm

வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன் - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப் இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன. இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து 9 ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்திருக்கிறார். நேர்காணலில் பேசிய அவர், ``எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன். நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். பில்கேட்ஸ் மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 6 Feb 2026 5:57 pm

Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?

விகடன் 6 Feb 2026 1:31 pm

Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?

விகடன் 6 Feb 2026 1:31 pm

இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?

இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை குறித்து, இரண்டு நாடுகளின் அரசு தரப்புகளிலிருந்து வெளிப்படையான விளக்கம் இல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும். அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகளை பூஜ்ஜியமாக்கும்’ என்று அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுகளுக்கு இந்திய அரசு மௌனம் காப்பது, நமக்கு எழும் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இதுவரை ‘பல்தரப்பு கொள்முதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. மலிவான ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்த உதவியது. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் சுயாதீனக் கோணத்திலும் கேள்விக்குறியாகும். அமெரிக்காவிடமிருந்து மட்டும்தான் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைக்குச் சென்றால், அதுவே நாளை நமக்குப் பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம். அதேபோல், பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம் மற்றும் பால் பொருள்கள் போன்ற துறைகளில் அமெரிக்காவின் பொருள்களுக்குச் சந்தை வாய்ப்புகளை அனுமதிப்பது, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். ‘விவசாயிகளின் நலனில் சமரசமில்லை’ என்ற மோடி அரசின் அறிவிப்பும், நடப்பவையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரிகளை அமெரிக்கா விதிக்கும் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி விதிப்பது, சமநிலை இல்லாத ஒப்பந்தமாக மாற்றும் அபாயமும் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதுதான். ஆனால், எந்த ஓர் ஒப்பந்தமும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார நலன், மக்களின் நலன், நாட்டின் சுயாதீன நிலை, விவசாயம் போன்ற ஆதாரமான துறைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. அரசும் அதிகாரிகளும் இதை மனதில் வைத்து ஒப்பந்தங்களை வகுக்க வேண்டும். ‘அமெரிக்காவிடம் இந்தியா அடிபணிந்து விட்டதா?’ என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளிவரும்போது, மக்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். - ஆசிரியர்

விகடன் 6 Feb 2026 6:30 am

India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,  `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 02 எஸ்.ஜி சூர்யா, பாஜக (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. 'AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும். மோடி - ட்ரம்ப் மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான். அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்? இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்: ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும். பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் 'அமெரிக்காவிடம் சரணாகதி' என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy' எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம். வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, 'என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்' என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம். இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு. கச்சா எண்ணெய் காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும் இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், 'Free Trade Agreements' (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை. இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது. 'எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து' என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை. பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01 மோடி என்னும் 'பிராண்ட்' எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்தியா 'ZERO TARIFF' என்று எல்லாவற்றையும் திறந்துவிடவில்லை. எங்கே நமக்குத் தொழில்நுட்பம் தேவையோ, எங்கே நமக்குச் சந்தை தேவையோ அங்கே மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமே ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்கா விதித்திருந்த தடைகளை உடைத்து, நமக்கான சாதகமான சூழலை உருவாக்கியது பிரதமர் திரு.மோடி அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும், உலகத் தலைவர்களுடன் அவர் பேணும் நட்புக்கும் கிடைத்த வெற்றி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்று கண்ணியம் குறையாமல், நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. மோடி சீனாவுக்கு மாற்றாக உலகமே ஒரு உற்பத்தி மையத்தைத் தேடும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வரிச்சலுகை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 500 பில்லியன் டாலர் என்பது வெறும் கொள்முதல் அல்ல; அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகின் நம்பிக்கை. காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்பது புரியும்.! (தொடரும்..!)

விகடன் 5 Feb 2026 12:55 pm

Russian Oil: 'எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்' - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை. ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, 'எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ் இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்! அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது, இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது. இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், 'என்ன நிலைப்பாடு?' என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும். Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!

விகடன் 5 Feb 2026 9:38 am