'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி
இது எனக்கு பாட்டி கொடுத்த தங்கக் கம்மல். எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் என்ன... போரால் துயரப்படும் மக்களுக்காக இதைக் கொடுக்கிறேன் - ஒன்பது வயது சிறுமி ஆசிர் ஃபாத்திமா பிஞ்சுக்கரங்களால் அணிந்திருந்த காதணியைக் கழற்றித் தந்திருக்கிறார். ஈரானில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், உலகத்தையே உலுக்கி உள்ளது... மக்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது. உலகத்தையே பாதித்துள்ளது என்றால், அந்தப் போர் நடக்கும் நாடான ஈரானில் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this… pic.twitter.com/bzKAkuGpnI — Iran in India (@Iran_in_India) March 23, 2026 சமீபத்தில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிதியுதவிக்காக ஒரு QR குறியீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதை ஸ்கேன் செய்து ஈரான் மக்களுக்கு உதவ பண செலுத்தலாம் என்பதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். இதற்கு இந்தியாவில் பலரும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். பலரும் பணத்தை அனுப்பி அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படித்தான் ராம்பன் பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஃபாத்திமா தனது கம்மலைக் கழற்றி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல.... அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மிஷா ஷாகிர் தனது உண்டியலை அப்படியே கொண்டு வந்து கொடுத்துள்ளார். இரண்டு வருஷமா ஈத் பண்டிகைக்காக நான் சேர்த்து வைத்த காசு இது. இப்போது அங்கே இருப்பவர்களுக்குத்தான் இது ரொம்பத் தேவை என்று மழலை மொழியில் அவர் கூறியது அங்கிருந்த தன்னார்வலர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த உதவிக்கரம் வெறும் குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. புத்காம் பகுதியைச் சேர்ந்த ஜனா பேகம் (53) தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளைத் தானமாக வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் என் மகளின் திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதே இப்போதைய முதற்கடமை என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார் அவர். ஆரம்பத்தில் ஜாதிபால், ஹஸ்னாபாத் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கிய இந்த இயக்கம், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பெரும் அலையாக மாறியுள்ளது. எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் விரிகிறது... இணைகிறது!
ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5'நிபந்தனைகள் என்ன?
ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் 'The Wall Street Journal' வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரான் முன்வைக்கும் 5 நிபந்தனைகள்... > ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். > அமெரிக்கா எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் நடத்தாது என்கிற உறுதி வேண்டும். ஈரோன் போர் ``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார் - ட்ரம்ப் > இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்க வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும். > ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது. இவற்றுக்கு ஒப்புக்கொண்டாலே அடுத்த பேச்சுவார்த்தை என்று ஈரான் தெரிவித்துள்ளதாம். இதற்கு அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ? சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?
``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார் - ட்ரம்ப்
மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார். அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது... > ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும். > அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும். ஈரான் போர் கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது? > ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது. > ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். > நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும். > சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும். > ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். > அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும். > ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும். > எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail இவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்? > ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும். > புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும். > ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?
RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர். கல் சோமானி ராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர், கல் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல், ஆர்செலர் மிட்டல் போன்ற தொழிலதிபர்களும், முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுமார் 13, 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார். வால்மார்ட், ஃபோர்டு நிறுவனங்களின் முக்கியப் பங்குதாரராக கல் சோமானி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் தனது நாட்டு எல்லைக்குள் ஓடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஈரான் மூடி இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையெனில், ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டி இருந்தார். ஆனால் திடீரென ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் மின் உற்பத்தி மையங்கள் மீது நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதலை 5 நாள்களுக்குத் தள்ளி வைத்து இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் தனது மத்திய கிழக்குத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தனது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார். அதோடு இப்பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், தற்போது அவை மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்வு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் அமெரிக்காவுடன் அது போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்க பாகிஸ்தான், ஓமன் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இவ்விவகாரத்தில் நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், மூன்றாவது நாடு மூலம் பேச மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு இப்போது ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது. இரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'அல் அரபியா' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?
ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர். அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் - நெதன்யாகு 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail அந்தத் தகவல்கள்... ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தெரிய வந்துள்ளது. முன்பு, பிப்ரவரி 28-ம் தேதி இரவு இந்தச் சந்திப்பு நடக்கவிருந்திருக்கிறது. ஆனால், பின்னர் அது காலை நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால், இந்தச் சமயத்தில் தான் கமேனியைக் கொல்ல முடியும் என்று ட்ரம்பை சம்மதிக்க வைத்துள்ளார் நெதன்யாகு. வரலாறு படைப்போம்! ஏற்கெனவே ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்திருந்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால், எப்போது, எப்படி என்பது மட்டும் முடிவு செய்யாமல் இருந்திருக்கிறது. ஆக, இந்தச் சமயத்தில் நேரம் கூடி வரவே, இரு நாடுகளும் தாக்குதல் நடத்த பிளான் செய்திருக்கிறது. 'இதை விட்டால் கமேனியைக் கொல்ல நல்ல நேரம் கிடைக்காது' என்று நெதன்யாகு அழுத்தமாக ட்ரம்பிடம் பதிய வைத்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை ட்ரம்ப் செய்தால், வரலாற்றை உருவாக்குவோம் என்றும் சம்மதிக்க வைத்துள்ளார். காமேனி கமேனி உயிரிழப்பிற்குப் பின், ஈரான் மக்களே வீதிக்கு வந்து போராடி, அந்த ஆட்சியை அகற்றுவார்கள் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆக, நெதன்யாகு தான் ட்ரம்பை ஈரான் போரை தொடங்க வைத்ததற்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், நெதன்யாகு ஆரம்பத்தில் இருந்து, ட்ரம்பை தான் இந்தப் போருக்கு அழைக்கவில்லை என்று கூறி வருகிறார். ட்ரம்புமே 'நான் தான்' ஈரான் போர் குறித்து முடிவு செய்தேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தான், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!
Share Market: 'இவர்கள்'எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!
ஈரானுக்கும், எங்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஐந்து நாள்களுக்கு ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ராணுவ தாக்குதல் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அமெரிக்கா, ஆசிய சந்தைகள் பாசிட்டிவாகவே உள்ளது. இந்திய சந்தையிலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அது ஏன் என்று பார்க்கலாம். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்! போர் தொடங்கியதில் இருந்து சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் தான் உள்ளன. 'Sell on Rise' என்பது சந்தையின் இப்போதைய ஸ்ட்ரேட்டஜி. போரினால் சந்தை இறங்கியிருந்த போது, பங்குகளை வாங்கியவர்கள், இப்போது சந்தை ஏற்றம் காணும்போது அதை விற்கலாம். இந்த நேரத்தில் 'பிராஃபிட் புக்கிங்' செய்வது தான் சரியான அணுகுமுறை. இது ஒரு டிரேடிங் ஸ்டைல் ஆகும். இந்த ஸ்ட்ரேட்டஜியை சந்தை 22,900 - 23,450-க்குள் இருக்கும் போது பயன்படுத்தலாம். இது அப்போது தான் வர்க் அவுட் ஆகும். மீண்டும் வாங்க வேண்டுமென்றால் 22,000 - 22,300 வரும் போது வாங்க வேண்டும். அதன் பின் மேலே சொன்ன ரேஞ்ச் வரும்போது, விற்க வேண்டும். இந்த ரிப்பீட்டு தான் Sell on Rise ஸ்ட்ரேட்டஜி. Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 -உம், பவுனுக்கு ரூ.2,720 -உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நேற்று சந்தையில் தங்கம் விலை மூன்று முறை மாற்றம் கண்டது. மதியம் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைந்து விற்பனை ஆனது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஈரான் உடனான பேச்சுவார்த்தை அறிவிப்பிற்குப் பின், தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,000 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,04,000 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240 -க்கு விற்பனை ஆகி வருகிறது. 5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம் - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
Iran War: எச்சரித்த ஈரான் - முடிவை மாற்றிய Trump | US | Israel | Decode | Vikatan
5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம் - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்! கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு
5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம் - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்! கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு
ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்'சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். என்ன காரணம்? இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும். அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஈரான் போர் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க மேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர். இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம். இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும். அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்... இதனால், விலையும் குறையும். இந்திய ரூபாய் வலுபெறும். இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்
'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் கூடிய எரிசக்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை. இந்த நிலையில், நேற்று, ஈரான் தரப்பு, 'எதிரி கப்பல்களைத் தவிர, அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்க தயார்... பாதுகாப்பும் கொடுக்கிறோம்' என்று கூறியிருந்தது. ஈரான் Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக் 2 மில்லியன் டாலர் ஆனால், தற்போது, ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி. செலவு இருக்கிறதே இது குறித்து ஈரானிய தலைவரான அலாவுத்தீன் போரூஜெர்டி கூறுகையில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைக் காட்டும். மேலும், போர் என்கிற போது செலவுகள் ஆகும். அதற்காக நாங்கள் இதை செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!
ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?
ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நமக்குள் ஆயிரம் சோர்வுகள் இருக்கலாம். இந்த வயதுக்கு மேல் என்னால் புதிதாக எதையாவது சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அனைத்தையும் இழந்து, வாழவே வழியில்லை என நினைத்த ஒரு பெண்மணி, தனது 67-வது வயதில் தடகளப் பாதையில் ஓடத் தொடங்கி, 100 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த சாதனைப் பெண்மணி ஐடா கீலிங் (Ida Keeling). ida-keeling மே 15, 1915-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹார்லெம் பகுதியில் பிறந்தார் ஐடா ஒலிவியா பாட்டர் (Ida Olivia Potter). அமெரிக்காவின் பெரும் பொருளாதார மந்தநிலை காலத்தில் அவரது இளமைக் காலம் கழிந்தது. இளம் வயதிலேயே தன் தாயை இழந்தார். வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி வந்த அவருக்கு, 42 வயதில் மற்றொரு பேரிடி காத்திருந்தது. அவரது கணவர் மாரடைப்பால் திடீரென மரணமடைய, நான்கு குழந்தைகளைத் தனி ஒருத்தியாக வளர்க்கும் பொறுப்பு ஐடாவின் தோள்களில் விழுந்தது. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! வாழ்க்கை அவருக்குத் தந்த வலிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. 1978 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் அவரது இரண்டு மகன்களும் (சார்லஸ் மற்றும் டொனால்ட்) போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். பெற்ற பிள்ளைகளை அடுத்தடுத்து இழந்த துயரம் ஐடாவை மனதளவில் சுக்குநூறாக உடைத்தது. அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, வீட்டிற்குள்ளேயே முடங்கினார். ida-keeling ஐடாவின் மகள் ஷெல்லி கீலிங் (Shelley Keeling) ஒரு வழக்கறிஞர் மற்றும் தடகளப் பயிற்சியாளர். தன் தாயின் இருண்ட மனநிலையைக் கண்டு துடித்த அவர், தாயை மீட்க ஒரு வித்தியாசமான வழியைக் கையாண்டார். 1982-ம் ஆண்டு, தனது 67-வது வயதில் இருந்த ஐடாவுக்கு ஒரு ஜோடி ரன்னிங் ஷூக்களை வாங்கிக் கொடுத்து, 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கட்டாயப்படுத்திப் பங்குபெறச் செய்தார். ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி ஓடத்தொடங்கிய ஐடா, அந்தப் பந்தயத்தை ஓடி முடித்தபோது ஒரு புதிய உத்வேகத்தை உணர்ந்தார். ஓடும்போது என் கவலைகள் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து காணாமல் போவது போல் உணர்ந்தேன், என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். அங்கிருந்துதான் அந்த இரும்புப் பெண்மணியின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? 67 வயதில் ஓடத் தொடங்கிய ஐடா, வயதாக ஆக தனது வேகத்தையும் இலக்கையும் அதிகப்படுத்தினார். உலகம் வியந்த அவரது சாதனைகளின் பட்டியல் இதோ: 95 வயது: மன்ஹாட்டனில் நடந்த ஒரு தடகளப் போட்டியில் 60 மீட்டர் தூரத்தை 29.86 வினாடிகளில் கடந்து தனது வயதுப் பிரிவில் உலக சாதனை படைத்தார். 97 வயது: 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 51.85 வினாடிகளில் ஓடி அமெரிக்க சாதனை (W95 பிரிவு) படைத்தார். 99 வயது: 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து, 99 வயதில் அதிவேகமாக ஓடிய பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். 100 வயது: ஏப்ரல் 30, 2016-ல் 'பென் ரிலேஸ்' (Penn Relays) தடகளப் போட்டியில் சுமார் 44,469 பார்வையாளர்கள் முன், 100 மீட்டர் ஓட்டத்தை (1 நிமிடம் 17.33 வினாடிகள்) முழுமையாக முடித்த வரலாற்றின் முதல் 100 வயது பெண்மணி என்ற மாபெரும் சாதனையைத் தன் வசமாக்கினார். 102 வயது: 100 முதல் 104 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 60 மீட்டர் தூரத்தை 58.34 வினாடிகளில் கடந்து மீண்டும் உலக சாதனை படைத்தார். ida-keeling book ஐடா தனது அனுபவங்களை `Can't Nothing Bring Me Down’ என்ற சுயசரிதை புத்தகமாக 2018-ல் வெளியிட்டார். அதில் அவர், உங்கள் பிரச்னைகளைச் சுமந்துகொண்டு முடங்கிவிடாதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். உங்களை நீங்களே நேசியுங்கள் என்று ஒரு செய்தியை நமக்கு விட்டுச் சென்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, அளவான உணவை உண்பது என மிக எளிமையான ஆனால் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த அவர், ஆகஸ்ட் 25, 2021 அன்று, தனது 106-வது வயதில் அமைதியாக இயற்கை எய்தினார். ஒரு பெண் தன் கணவரையும் இரண்டு மகன்களையும் இழந்து, 67 வயது வரை எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் முடங்கி இருந்து, அதன் பிறகு ஓடத் தொடங்கி 100 வயதில் உலக சாதனைகளை முறியடிக்க முடிகிறது என்றால்... நம் கனவுகளைத் துரத்தவோ, நம் இலக்கை அடையவோ `வயது' ஒருபோதும் தடையாக இருக்காது. Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்!
ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே'நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?
கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது. அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை தான். ஆனாலும், அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியும் வெறும் 30 நாள்களுக்குத் தான். ஈரான் போர் எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்! ஈரானிய எண்ணெய் Kpler தரவுகளின் படி, மத்திய கிழக்கு கடற்பகுதியில் இருந்து சீனா கடற்பகுதிக்கு அருகே வரை, 170 மில்லியன் பேரல்கள் ஈரானிய எண்ணெய் கப்பல்களில் உள்ளன. அமெரிக்காவின் அறிக்கை படி, இந்த எண்ணெயை தான் உலக நாடுகள் வாங்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் ஈரானிய எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஈரானிய எண்ணெய் வாங்கப் போகிறதா? இந்தியாவில் இப்போதே எண்ணெய் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஈரான் போர் நீடித்தால், இந்த நிலை இன்னும் மோசமாகும். அதனால், அமெரிக்காவின் அனுமதிக்குப் பிறகு, ஈரானிய எண்ணெயை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரெடியாக உள்ளனவாம். ஆனால், அதை உடனே செய்யாமல் இந்திய நிறுவனங்கள் இரண்டு விஷயங்களுக்காக காத்திருக்கின்றன. ஒன்று, இந்திய அரசின் வழிகாட்டுதலுக்காக. மற்றொன்று, ஈரானுக்கு எப்படி கட்டணம் செலுத்துவது என்கிற அமெரிக்காவின் நெறிமுறைகளுக்காக. இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டணத்தில் என்ன பிரச்னை? ஈரான் பொதுவாக வர்த்தகங்களுக்கு அமெரிக்க டாலர்களை பெறுவதில்லை. அது தான் சிக்கல். ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்; 47 பேர் காயம்!
ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா இந்த போரில் முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அமெரிக்கா கூடுதல் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானில் எந்த இடத்தை குறிவைத்து தாக்கினாலும் உடனே ஈரான் அது போன்ற இடங்களை இஸ்ரேலில் குறிவைத்து தாக்கி வருகிறது. கடந்த வாரம் ஈரானில் உலகின் மிகப்பெரிய எரிவாயு மண்டலங்களில் ஒன்றாக கருதப்படும் தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு மையங்களில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்கா தலையிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் நேற்று ஈரானில் உள்ள நடன்ஸ் நகரில் இருக்கும் ஷாஹித் அஹ்மதி-ரோஷன் அணு ஆராய்ச்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரில் ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இந்த நகரில் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணையை இஸ்ரேல் வான் தடுப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்த தவறிவிட்டன. இதனால் ஏவுகணை குடியிருப்பு வளாகத்தில் விழுந்து கட்டடங்கள் இடிந்ததில் 47 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவச் சேவை பிரிவு அதிகாரி மேகன் டேவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தாக்குதலில் காயமடைந்த 36-க்கும் மேற்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏவுகணைத் துண்டுகள் விழுந்தும், பாதுகாப்பு அரண்களை நோக்கி ஓடும்போதும் இந்த காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். குறிப்பாக 10 மற்றும் 12 வயது சிறார்கள் காயம் அடைந்துள்ளனர்''என்றார். வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர். சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்''என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.
ஈரானின் 'இந்த'ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை
அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது. தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏன் இவ்வளவு பரபரப்பு? டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது. இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. முக்கியமாக, இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது. ஈரான் போர் '48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான் இஸ்ரேல் என்ன சொல்கிறது? இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது. ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம். இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும். ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது. 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail
'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை'மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?'சீறும் ஈரான்
ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் போர் 'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா? என்ன எச்சரிக்கை? எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக திறக்கவில்லை என்றால்... அமெரிக்கா ஈரானின் வெவ்வேறு எரிசக்தி கட்டமைப்புகளை அழிக்கும். இதில் ஈரானின் மிகப்பெரிய கட்டமைப்பே முதலில் அழிக்கப்படும் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் பதிலடி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தராமல் இருக்குமா என்ன? Fars செய்தி நிறுவனத்தின் வழியாக, ஈரானின் இராணுவ செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி கதம் அல்-அன்பியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஈரானின் எரிபெருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் எதிரிகளால் தாக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உப்புநீக்கம் ஆகிய கட்டமைப்புகள் குறி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் போரினால் உலகளவில் எரிசக்தி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கூறியுள்ளது எல்லாம் நடந்தால் நிலைமை மிகவும் மோசமடையும். 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு

28 C