SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

Battle of Galwan `டு'மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமிபத்தில் அனுமதித்தது. இந்நிலையில் பேடில் ஆஃப் கல்வான் படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்திற்கு 'மாத்ருபூமி May War Rest in Peace' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும் என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது திரைக்கு வரும் தேதியை சுதந்திர தினத்திற்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகீறது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் பட்சத்தில் சன்னி தியோல் நடிக்கும் லாகூர் 1947 படத்துடன் இப்படம் மோதிக்கொள்ளும். ஆகஸ்ட் 13ம் தேதி லாகூர் 1947 படம் வெளி வருகிறது. கல்வான் மோதல் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சமீப ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த மிக முக்கியமான ராணுவ மோதல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இக்கதை நிஜ நிகழ்வுகளையும், இப்பிராந்திய அரசியல் பதற்றங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது விவாதங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது. இந்த ராணுவ மோதலோடு தொடர்புடைய விஷயம் என்பதாலும், மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெயரை மாற்றிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.

விகடன் 16 Mar 2026 5:22 pm

ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது. ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது. பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்... ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு? > ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது... இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது. உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம். > எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள். இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது... கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் மேலே சொன்னதுதான் - இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது. இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும். அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா... இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

விகடன் 16 Mar 2026 4:16 pm

Trump: ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும் - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார். ட்ரம்ப் ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும். எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம். அமெரிக்கா Vs சீனா ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பொதுவாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மௌனம் ஏன்? பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி! அமெரிக்கா - ஈரான் போரில் ஒரு ட்விஸ்ட்!

விகடன் 16 Mar 2026 1:50 pm

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் ட்ரம்ப் பதிவு இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும். ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது. அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

விகடன் 16 Mar 2026 1:10 pm

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்த ஒரு விஷயமும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது. இந்தச் சூழலில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான் ஜெய்சங்கர் பேச்சு இது குறித்து 'ஃபைனான்சியல் டைம்ஸ்'-க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது... ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னுடைய பேச்சுவார்த்தைக்கு சில நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இன்னமும் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டினால், அது தொடரும். ஈரான் இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இன்னும் நிறைய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. இந்தியா எல்.பி.ஜி சிக்கலால் கடுமையாக திண்டாடி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்களில் சில இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜியைக் கொண்டு வருகிறது. ஆக, இந்தக் கப்பல்கள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டால், இந்தத் தட்டுப்பாடுகளை ஓரளவு நிச்சயம் குறைக்க முடியும். Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

விகடன் 16 Mar 2026 12:36 pm

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் எல்.பி.ஜி உள்ளிட்ட பல எரிசக்தி பிரச்னைகளை உலகம் சந்தித்து வருகிறது. நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளனர். அவர்கள், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டால், வரும் வாரங்களில் உலக எரிசக்தி சந்தைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளனர். அப்பாஸ் அரக்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் தயாராக இல்லாத ஈரான் தற்போதைய சூழலில், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், ஈரான் அதற்கு தயாராக இல்லை. பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது, நாங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தான் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

விகடன் 16 Mar 2026 11:11 am

Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses). உலகமே இவரை அன்பாக `கிராண்ட்மா மோசஸ்' (Grandma Moses) என்று அழைத்தது. Grandma Moses 1860, செப்டம்பர் 7-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தார் அன்னா மேரி ராபர்ட்சன். வறுமையான குடும்பம், பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய வீடு. இதனால், அன்னாவுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது வாழ்நாளில் அவர் சில மாதங்கள் மட்டுமே ஒரு சிறிய பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். பன்னிரண்டு வயதிலேயே, குடும்ப வறுமையைப் போக்க பக்கத்து வீடுகளில் வேலைக்குச் சேர்ந்தார். தையல், சமையல், விவசாய வேலைகள் என அவர் இளமைக்காலம் முழுவதும் கடுமையான உழைப்பிலேயே கழிந்தது. கலை, ஓவியம் என்பதெல்லாம் அவர் கற்பனையிலும் எட்டாத ஆடம்பரங்களாக இருந்தன. Grandma Moses 1887-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் தாமஸ் சால்மன் மோசஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை எளிதாகிவிடவில்லை. இருவரும் இணைந்து விவசாயம் செய்தனர். அன்னா மொத்தம் 10 குழந்தைகளுக்குத் தாயானார்; ஆனால், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், 5 குழந்தைகளைப் பறிகொடுத்தார். Motivation Story: `உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை வேணும் பாஸ்!’ - மாணவன் உணர்த்திய நம்பிக்கைப் பாடம் எத்தனையோ வலிகள், இழப்புகள், வறுமை இருந்தும், அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. 1927-ஆம் ஆண்டு, தனது கணவர் தாமஸையும் மாரடைப்பால் இழந்தார். அப்போது அன்னாவுக்கு வயது 67. கணவரின் மறைவிற்குப் பிறகு, அன்னாவால் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, ஓய்வு நேரத்தைக் கழிக்க கம்பளி நூல்களைக் கொண்டு எம்ப்ராய்டரி தையல் வேலைப்பாடுகளில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. அவருக்குக் கடுமையான `கீல்வாதம்' (Arthritis) நோய் வந்து, விரல்கள் வளைந்து, ஊசியைக்கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். Grandma Moses அப்போது அவருடைய தங்கை, நீ ஏன் எம்ப்ராய்டரிக்குப் பதிலாக, தூரிகையை (Brush) வைத்து ஓவியம் வரையக் கூடாது? என்று யோசனை கூறினார். வலியில் தவித்த அந்த மூதாட்டி, தனது 78-வது வயதில், எவ்வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் முதல்முறையாக தூரிகையைக் கையில் எடுத்தார். அன்னா தனது கிராமத்து நினைவுகளை, விவசாய வாழ்க்கையை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார். 1938-ஆம் ஆண்டு, அவர் வசித்த ஹூசிக் ஃபால்ஸ் (Hoosick Falls) என்ற ஊரில் இருந்த ஒரு மருந்துக் கடையின் கண்ணாடியில், தனது ஓவியங்களை விற்பனைக்காக வைத்தார். ஒரு ஓவியத்தின் விலை வெறும் 3 முதல் 5 டாலர்கள் மட்டுமே. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! அந்த வழியாக வந்த லூயிஸ் கேல்டார் (Louis J. Caldor) என்ற கலைப்பொருள் சேகரிப்பாளர், இந்த ஓவியங்களைப் பார்த்தார். அதிலிருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் அவரை ஈர்த்தன. உடனே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் வாங்கிய அவர், அன்னாவைத் தேடிச் சென்று அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். Grandma Moses ஓவியம் ஒரு சாதாரண விவசாய மூதாட்டியின் ஓவியங்கள் நியூயார்க் நகரப் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. 1940, அவரது 80-வது வயதில் `ஒரு விவசாய மனைவியின் ஓவியங்கள்’ (What a Farm Wife Painted) என்ற பெயரில் அவரது முதல் தனிக் கண்காட்சி நடந்தது. 1949ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அன்னாவின் கலையைப் பாராட்டி தேசிய விருதினை வழங்கினார். 1953ல் உலகப் புகழ் பெற்ற 'டைம்' (TIME) பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் வெளியாகி வரலாற்றில் இடம்பிடித்தது. அவர் தனது 78 வயதிற்குப் பிறகு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது ஓவியங்கள் பல லட்சங்களுக்கு ஏலம் போயின. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார். அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார். Grandma Moses ஓவியம் தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை. எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை'. நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! 

விகடன் 16 Mar 2026 7:00 am

உயிருடன் இருந்தால் விடமாட்டோம் - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். 'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. 6 விரலுடன் நெதன்யாகு இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளது. இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

விகடன் 15 Mar 2026 1:54 pm

பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும் - திருமாவளவன் எச்சரிக்கை

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். காலியான காஸ் சிலிண்டர் குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன். அதிமுக to தவெக.., மாநிலக் கட்சிகளை விழுங்குகிறதா பாஜக? | TN Election Updates 360 | Vikatan எரிவாயு தட்டுப்பாட்டால் வீடுகள் மட்டுமன்றி, உணவகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மின்சார அடுப்புகளை நோக்கிச் செல்லும் சூழலில், மின் கட்டணச் சுமையும் அதிகரிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில், மின்சார யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விசிக வரவேற்றுப் பாராட்டுகிறது. ஈரான் அதிபர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது ஈரான் மீது நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்கோ கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் அதைக் கண்டிப்பது விந்தையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் பிரதமரின் இத்தகைய வெளியுறவுக் கொள்கை தேசப் பாதுகாப்புக்கும் மக்கள் நலனுக்கும் உகந்தது அல்ல. உலகப்போர் மூளாத வண்ணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க விசிக வலியுறுத்தும். இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்? தமிழகத்தில் மட்டும்தான் இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுவது, அவருக்கு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது. இது தேர்தலுக்கான போராட்டம் அல்ல. உலக அமைதிக்காகவும், அதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு போன்ற மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் நடத்தப்படும் போராட்டம். திருமாவளவன் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிகள் இன்னும் அமையக் கூட இல்லை. பா.ஜ.க தனது கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க நயவஞ்சகமான உத்திகளைக் கையாள்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அவர் அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அவர் அதற்கு இணங்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இடதுசாரிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது போன்ற முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பானதுதான். இதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; இறுதியில் சுமுகமான தீர்வு எட்டப்படும். எங்களின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்றார், ''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்- செல்வப்பெருந்தகை

விகடன் 15 Mar 2026 1:29 pm

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலை மிட்டாய் இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம், “சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீர்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமும், கப்பல் மூலமும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம். மத்திய கிழக்கு போர் எதிரொலி - இந்தியாவின் இந்த 30 பங்குகள் கடும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்பு! இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன. கடலை மிட்டாய் உற்பத்தி அத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பி.பி. கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவையின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. ஏற்கெனவே நிலக்கடலையின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் கடலை மிட்டாய் உற்பத்தியைப் பாதிக்கிறது” என்றார்.    நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

விகடன் 15 Mar 2026 12:00 pm

நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும். அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

விகடன் 15 Mar 2026 11:40 am

Trump: பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம் - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப் இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை. ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டார். ஈரான் போர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!

விகடன் 15 Mar 2026 8:40 am

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்'ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார். இந்த நிலையில், ஜப்பான் மீது வட கொரியா தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சானே தகைச்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், வட கொரியா சந்தேகப்படக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளதாவது... இது குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து மக்களுக்கு சரியான விதத்திலும், நேரத்திலும் தர‌ வேண்டும். விமானங்கள், கப்பல்கள் மற்றும் பிற சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்... அசாதாரண சூழலுக்கு தயாராக வேண்டும் என்று பதிவிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி [Emergency alert] North Korea has launched a suspected ballistic missile. More updates to follow. — PM's Office of Japan (@JPN_PMO) March 14, 2026

விகடன் 14 Mar 2026 1:01 pm

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போன்று அவ்வளவு எளிதில் போர் முடியவில்லை. ஈரான் உச்ச தலைவர் அல் கமெனி இப்போரில் கொலை செய்யப்பட்ட பிறகு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா ஆதரவு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் ஈரான் ஏவுகனைகளை கொண்டும் ட்ரோன்களை கொண்டும் கடுமையாக தாக்கியது. அதோடு இஸ்ரேல் மீதும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஈரான் இத்தாக்குதல் நடத்தியது. இரண்டு வார போரில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது. மொஜ்தபா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், ஆயில் நிலைகள் சேதம் அடைந்தாலும், அமெரிக்கா நினைத்த எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்த அமெரிக்காவின் எண்ணம் ஈடேரவில்லை. `20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' இனியும் அது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று அமெரிக்காவே தெரிவித்துவிட்டது. அதோடு ஈரான் சிறிதும் சளைக்காமல் உடனடியாக தங்களது உச்ச தலைவரையும் அறிவித்துவிட்டு எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறது. இப்போர் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ''கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் சந்தித்த தோல்விகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எனவே அதற்கு தக்கபடி ஈரானின் சிறிய ராணுவப் பிரிவுகள் தனித்து நின்று போரிடும் வகையில் எங்களது தற்காப்பு முறையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, எப்போது, எப்படி இந்தப் போர் முடிய வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிப்போம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஈரான் போரிட்டு வருவது குறித்து சர்வதேச நெருக்கடி குழுமத்தின் ஈரான் திட்ட இயக்குனர் அலி வேஸ் கூறுகையில், ''உயர் தலைமையை இழக்க நேரிட்டாலும், அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பரவலாக்கப்பட்ட இராணுவக் கட்டளை அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். எனவேதான் சில மூத்த தலைவர்களை இழந்த போதிலும், ஆட்சி அப்படியே உள்ளது. 2005ம் ஆண்டு ஆப்கான் மற்றும் ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற புதிய ராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஈரான் இப்போது 3 குறிக்கோள்களை மையமாக வைத்து இப்போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாக, எதிரியின் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இருந்து நாட்டின் தலைமை மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, தங்களது இருப்பு அழியாமல் இருப்பதை உறுதி செய்வவது ஆகும். இரண்டாவதாக, போரில் தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிரிக்குத் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதத் திறனைத் தக்கவைத்துக் கொள்வது ஆகும். மூன்றாவதாக, போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பது. இதன் மூலம் எதிரி நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சோர்வடையும் போது, ஈரானுக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். அமெரிக்கா போன்ற ஒரு பெரிய வல்லரசுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால், போரைத் தற்காப்பு ரீதியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கொண்டு செல்வதே ஈரானின் திட்டம்''என்று தெரிவித்தார். இப்போரால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு உள்நாட்டிலும், நட்பு நாடுகளிடமிருந்தும் கடும் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் மலிவான ட்ரோன் (Drone) படைகளைக் கொண்டு, துபாயில் உள்ள ஒரு சொகுசு படகுத் துறைமுகம் (Marina) மற்றும் கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், இந்தப் போரை வளைகுடா நாடுகள், துருக்கி, சைப்ரஸ் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஈரான் விரிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஈரானியப் படைகள் ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடிவிட்டன. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியுள்ளதால் உலக அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த போர் வியூகம் குறித்து உலக அளவில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்தப் போரின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் அமெரிக்க அரசு தெளிவான பதில்களைத் தவிர்க்கிறது. இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி சிட்ரினோவிச் இது குறித்து கூறுகையில், ஈரானின் நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்த புரிதல் எங்களிடம் இல்லை என்று அவர் எச்சரிக்கிறார். இந்தப் போரிலிருந்து சுலபமாக வெளியேற வழி இல்லாததால், அதிபர் ட்ரம்ப் தனது வெற்றி குறித்த இலக்கை  மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு பேராசிரியர் ஜொனாதன் பாக்குயின் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறுகையில், ஈரான் சரணடைய வேண்டும் அல்லது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிட்டு, ஈரானிய மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் அரசை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் விலகிக்கொள்ளப் பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.

விகடன் 14 Mar 2026 12:27 pm

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்தியா உடனான ஒப்பந்தத்தையும் தாமதம் செய்தது. இப்போது ஈரான் போர் தொடங்கிய உடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா தற்காலிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... சையத் அப்பாஸ் அரக்ச்சி Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் அமெரிக்க பல மாதங்களாக இந்தியாவை மிரட்டியது. ஆனால், ஈரான் உடனான போர் தொடங்கிய இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்க சொல்லி அமெரிக்கா கெஞ்சுகிறது. ஈரான் மீதான சட்டத்திற்குப் புறம்பான அமெரிக்காவின் போருக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்ப நாடுகள் நினைத்தன. பாவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்? The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude. Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia. Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P — Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026

விகடன் 14 Mar 2026 10:24 am

முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும்‌ அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்குப் பின்னான உச்ச தலைவரை சமீபத்தில் தான் ஈரான் அறிவித்தது.‌ அவர் காமேனியின் இளைய மகனான மொஜ்தபா காமேனி. தற்போது இவருக்குக் குறி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் சன்மானம் Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப் அமெரிக்காவின் சன்மானம் அதாவது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) சேர்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க அரசு. இவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர்களை வரை சன்மானம் என்று அறிவித்துள்ளது. 10 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 92.47 கோடி. அமெரிக்கா வெளியிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் மொஜ்தபா காமேனியின் படம் தான் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே ஈரானில் நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கு காயமடைந்திருந்தார். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திகள் கூட பரவின. இப்போது அவர் குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

விகடன் 14 Mar 2026 10:15 am

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; நாகரிகத்திற்காக 'இதை'மட்டும் செய்யவில்லை - ட்ரம்ப்

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது. 90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள். இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர். தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார். ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும். நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை. ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

விகடன் 14 Mar 2026 8:06 am

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக'இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்களைத் தாக்குகிறோம்' என்று தான் ஈரான் கூறுகிறது. ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளையும் தாக்கியுள்ளது. இந்த இடத்தில், பிறகு ஏன் வளைகுடா நாடுகள் ஈரானைத் தாக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் இதோ... ஈரான் போர் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்! > ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று வளைகுடா நாடுகளும் தாக்குதலைத் தொடங்கினால், அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகும். இப்போதே ஈரான் போர் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளும் இந்தப் போரில் இறங்கினால் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். மேலும், வளைகுடா நாடுகளின் நிலை இப்போது இருக்கும் தாக்குதல் நிலைமையை விட இன்னமும் மோசமாகும். முக்கியமாக, இதுவரை ஈரான் வளைகுடா நாட்டில் உள்ள மக்கள் பகுதிகளில் கைவைக்கவில்லை. வளைகுடா நாடுகள் தாக்குதலைத் தொடங்கினால், அதன் மக்கள் பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகும். இது அந்த நாடுகளை மேலும் நிலையற்ற தன்மைக்குள் தள்ளும். > வளைகுடா நாடுகள் மீது உலக அளவில் நல்ல மதிப்பு உண்டு. எரிசக்தித் துறை முதல் விமானத் துறை வரை அங்கே இருக்கும் அனைத்துமே நல்ல பெயர் பெற்றவை... முக்கியமானவை. அப்படி இருக்கையில், அந்த நாடுகளும் தாக்குதலில் இறங்கினால், அவற்றின் பெயர் கெடும். மேலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரிய அடி விழும். > அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, எந்த வளைகுடா நாடுகளிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இதுவே அந்த நாடுகளுக்கு சற்று அதிருப்தி தான். இதனாலே, பல நாடுகள் அமெரிக்கா அவர்கள் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்த அனுமதி தரவில்லை. ஈரான் போர் ஈரான் போர்: அதிக Volatality-ல் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் எதை வாங்கலாம், எதை விற்கலாம்? > வளைகுடா நாடுகள் மெல்ல மெல்ல மத அடையாளத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும், அவை முஸ்லிம் நாடுகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தங்களைப் போல ஒரு முஸ்லிம் நாட்டை பிற நாடுகள் தாக்கும் போது, தாங்களும் தாக்கினால், அது தங்களது பிராந்தியத்தின் வலிமையைச் சற்று குறைக்கும் என்று நினைக்கிறார்கள். > வளைகுடா நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினாலோ... அங்கே ஆட்சி மாற்றம் நடந்தாலோ அங்கு இருந்து வரும் அகதிகள் வளைகுடா நாடுகளில் தான் குடிபுகுவார்கள். இது அந்த நாடுகளுக்கே பின்னடைவாக அமையும். மேலும், தீவிரவாத அமைப்புகள் வளைகுடா நாடுகளிலும் உள்புகும். ஆக, வளைகுடா நாடுகள் இந்தப் போரில் இறங்கினால், அவர்களுக்கே மிகப்பெரிய மைனஸ். அதனால் தான், அவர்கள் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்து வருகின்றனர். நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

விகடன் 13 Mar 2026 5:00 pm

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode'டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் விடமாட்டேன் என்று நிற்கிறது ஈரான். போரும் முடிந்தபாடில்லை. ஏற்கெனவே இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் ஈரான் போர்: அதிக Volatality-ல் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் எதை வாங்கலாம், எதை விற்கலாம்? இந்தியா வந்த 'கச்சா எண்ணெய்' கப்பல் இந்த நேரத்தில், நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று மும்பை துறைமுகத்தை அடைந்திருக்கிறது. அந்தக் கப்பலின் பெயர் ஷென்லாங். இது லைபீரியா கொடியிட்ட கப்பல் என்றாலும், அந்தக் கப்பலை ஓட்டி வந்தது என்னவோ இந்திய மாலுமி. அவர் பெயர் சுக்ஷாந்த் சிங் சந்து. சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுராவில் தொடங்கியிருக்கிறது இந்தக் கப்பலின் பயணம். இந்தக் கப்பல் கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதை மீறி, அதன் வழியாக எந்தக் கப்பல் வந்தாலும் வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது ஈரான். இதனால், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் குறியில் இருந்து தப்பிக்க இந்தியா வந்த கப்பல் டிரிக்ஸ் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளது. AIS 'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?! AIS பொதுவாக கப்பலில் 'Automatic Identification System (AIS)' என்கிற ஒன்று இருக்கும். இது கப்பலின் பாதுகாப்பிற்கும், கப்பலைக் கண்காணிப்பதற்கும் இருக்கும் சிஸ்டம் ஆகும். இதன் மூலம், தொடர்ந்து கப்பலைக் கண்காணிக்கலாம். எதிரில் என்ன கப்பல் வருகிறது, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, அதன் வகை, எடை என்ன என்பதை எல்லாம் காட்டும். இதன் மூலம், ஒரு கப்பலை இன்னொரு கப்பல் இடிப்பது தடுக்கப்படுகிறது. அடுத்ததாக, கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எளிதாக இந்த சிஸ்டம் 'கப்பல் எங்கு இருக்கிறது' என்பதை கண்டுபிடிக்க முடியும். இது டிராபிக்குகளைக் குறைக்கவும் உதவும். 'ஸ்விட்ச் ஆஃப்' டெக்னிக் சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும்போது மட்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆஃப்' செய்திருக்கிறது. இதனால், ஈரானால் இந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றிகரமாக அந்த ஜலசந்தியைக் கடந்த உடன் கப்பல் மீண்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆன்' செய்து பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் பயணித்திருக்கின்றனர். மொத்தம் 29 பேர். ஷென்லாங் கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்திருக்கிறது. இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க கிட்டத்தட்ட 36 மணிநேரம் ஆகும். அதன் பின், மீண்டும் ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது. நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

விகடன் 13 Mar 2026 3:17 pm