US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்'அடித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார். இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்தி என்று ட்ரம்ப் கூறுகிறார். நியூயார்க் US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்? மக்களின் பரிசு ஆனால், ஏற்கெனவே குறைவான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக விலை என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு மட்டுமல்ல, மளிகை பொருள்கள் கூட அதிக விலைக்கு தான் விற்கப்படுகின்றன. சமீபத்தில் விர்ஜினியா, நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன விலை உயர்விற்கு பதிலடியாக, இந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்கள் தோல்வியையே பரிசளித்தனர். 'பேக்' அடித்த ட்ரம்ப் இதையடுத்து தற்போது ட்ரம்ப் அமெரிக்கர்களின் உணவுகளில் மிக முக்கியமாக இடம்பெறும் பொருள்களுக்கு 'இறக்குமதி பரஸ்பர வரி'யை ரத்து செய்துள்ளார். இதில் பீஃப், டீ, ஆரஞ்சு, மசாலா பொருள்கள், தக்காளி, வாழைப்பழம் போன்றவை அடங்கும். டொனால்டு ட்ரம்ப் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி தான் விலக்கப்பட்டுள்ளதே தவிர, முன்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருந்த வரி தொடர்ந்து இந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்படும். அதாவது கடந்த ஆகஸ்ட் முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தான் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த வரிகள் தொடரும். தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது?
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?
அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது. என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ: அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன? அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெள்ளை மாளிகை ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா! நிதி ஒதுக்கீடு மசோதா எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சம்பளம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்களை கொண்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் 'பட்ஜெட்', அமெரிக்காவின் 'நிதி ஒதுக்கீடு மசோதா' ஆகும். இப்படி ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டிற்கு நிச்சயம் புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அது நிறைவேற்றப்படவில்லை என்றால், நிதிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் அப்படியே முடங்கிவிடும். இதைத்தான் 'அரசு நிர்வாக முடக்கம்' (US Shutdown) என்று கூறுகிறார்கள். அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவது எப்படி? ஆளும் கட்சி கொண்டுவரும் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சியின் ஒப்புதல் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுகிறது. அந்த மசோதாவில் இரு கட்சிகளுக்கும் ஒப்புதல் ஏற்படும் வரை இந்த முடக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும். தற்போது ஏன் இந்த முடக்கம்? அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி. மற்றொன்று, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி. ஜனநாயகக் கட்சியின் பலமே மருத்துவத் துறையைச் சார்ந்த அவர்களது திட்டங்கள் ஆகும். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டிற்கான மானியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் மானியம் வழங்கப்படும். பாரக் ஒபாமா அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? இதை டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், அந்த மானியம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே செல்லும். அதற்கு மேல் மருத்துவக் காப்பீட்டில் எந்த மானியமும் கிடைக்காது. ஜனநாயகக் கட்சியின் வெற்றிகரமான திட்டத்தை குடியரசு கட்சி ரத்து செய்வதை அந்தக் கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. இதனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர். பொதுவாக, நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவை. ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி இந்த மசோதா 54–44 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது. நல்ல சான்ஸ் அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்... அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர். இதனால், ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி' மோடில் இருந்தார். அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர். இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார். ட்ரம்ப் மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A எப்போது பிரச்னை தொடங்கியது? முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது. இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்... வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை... செயல்படுத்தவும் முடியவில்லை. இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது. இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எப்படி முடிவுக்கு வந்தது? இவை அனைத்துமே ட்ரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், 216 குடியரசு கட்சியினரும், 6 ஜனநாயக கட்சியினரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். 207 ஜனநாயக கட்சியினர் ப்ளஸ் 2 சுயட்சை வேட்பாளர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, பிரதிநிதிகளின் சபை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இறுதியாக, ட்ரம்பும் மசோதாவில் கையெழுத்திட்டு விட்டார். அப்போதிருந்து அரசு நிர்வாகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது. இருந்தும், மருத்துவக் காப்பீடு மானியத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. டொனால்டு ட்ரம்ப் US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு! ட்ரம்பின் சாதனை 1980-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 முறை அரசு நிர்வாக முடக்கம் நடந்துள்ளது. அதில் 2018 - 2019 காலகட்டத்தில் முதல்முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட அரசு நிர்வாக முடக்கம் தான் மிக நீண்ட முடக்கமாக இருந்தது. அது 35 நாள்கள் வரை நீடித்தது. இப்போதைய முடக்கம் 43 நாள்கள் வரை நீடித்துள்ளது மிக நீண்ட அரசு முடக்கமாக பதிவாகியுள்ளது. ஆக, தன் சாதனையை தானே பிரேக் செய்துள்ளார் ட்ரம்ப்.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?
அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அந்த வழக்கில் நீதிபதி கவாய், நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்.... எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது. *Press Release - Chief justice Gavai was paraded naked in the middle of famous NYC Times Square along with famous Times Square massive billboard showing his head with a shoe thrown at him demanding to apologize to Hindus worldwide and resign.* Hindus worldwide take serious… pic.twitter.com/ZYWAcafGuu — Stop Hindu Genocide (@SPHinduGenocide) November 12, 2025 கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். Worklife Descrimination பிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அம்ருதேஷ் வல்லபனேனி வழக்கு தொடர உதவிய ஆலோசகர் ஜெய் பால்மர், இந்திய தொழிலாளர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காவில் தங்குவதாக இருப்பதால், இது அவர்களுக்கு ஸ்க்விட் கேம் போன்றது. என ஊடகத்தில் பேசியுள்ளார். மேலும் அவர், இந்திய சி.இ.ஓக்கள் அவர்களின் சொந்த நாட்டு சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர். இது மிகவும் கொடிய சுரண்டல் கலாச்சாரம் என்றும் பேசியுள்ளார். பால்மர் இதற்கு முன் சில தொழிலாளர் கடத்தல் குற்றங்களையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். America சிரிசாஃப்ட் என்ற நிறுவனம் வல்லபனேனியை ஹெச்-1பி விசா தருவதாகக் கூறி வேலைக்கு சேர்த்துள்ளது. பின்னர், அவரை வெவ்வேறு நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தில் கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, தொழிலாளர் கடத்தல் மற்றும் விசா ஆவணங்களை நிறுத்தி வைப்பது போன்ற குற்றங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வல்லபனேனியின் வழக்கில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், வழக்கமான கட்டணத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இதுபற்றிய அறிக்கைக்கு சிரிசாஃப்ட் (Siri Software Solutions) நிறுவனம் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சீனா: இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம் - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் நீண்ட ஆயுள் குறித்து ஆராயும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, இன்னும் சில ஆண்டுகளில் 150 வயது வரை வாழ்வதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் எனக் கூறியிருக்கிறது. Anti Ageing நியூயார்க் டைம்ஸ் தளம் கூறுவதன்படி, அந்த நிறுவனம் வயதாவதைத் தடுப்பதற்கான ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்குவதில் வெற்றிகண்டு வருகிறது. திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ரசாயனம் இந்த மாத்திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே ஆயுளை அதிகரிக்கும் மாத்திரைகள் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர். லோன்வி பயோசயின்சஸ் (Lonvi Biosciences) என்ற அந்த நிறுவனம் உருவாக்கும் திராட்சை விதை மாத்திரை, உடலில் உள்ள ஜாம்பி செல்களைக் குறிவைத்து செயல்படும். zombie cells என்பது சேதமடைந்த அதே நேரத்தில் இறக்காமல் உடலில் இருந்து தீங்கான வேதிப்பொருட்களை வெளியிடும் செல்களாகும். இவை வயதாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Human Cell ஆய்வில் வெற்றிகண்ட திராட்சை விதை மாத்திரை! தெற்கு சீனாவின் ஷென்சென் நகரத்தில் உள்ள லோன்வி நிறுவனம் திராட்சை விதையில் இருக்கும் பிரோசியானிடின் சி1 (Procyanidin C1) என்ற பொருளைக் கொண்டு அது உருவாக்கியிருக்கும் மாத்திரைகளால் மனித ஆயுளை 150 ஆண்டுகளாக உயர்த்த முடியும் என்கிறது. அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லியு கிங்குவா, 150 ஆண்டுகள் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளில் யதார்த்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். நேச்சர் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் திராட்சை விதை சாற்றிலிருந்து கிடைக்கும் புரோசியானிடின் C1 (PCC1)-ஐப் பயன்படுத்தி எலிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை வெற்றிகரமாக நீட்டித்துள்ளனர். விரைவில் உலகத்தலைவர்களின் ஆசையை நிறைவேற்றும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Elon Musk: இந்தியாவின் செயற்கைக்கோளை ஏவ Space X நிறுவனத்தை நாடும் இஸ்ரோ - ஏன்?
Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்'சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ — Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025 சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்'சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ — Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025 சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
”மகளுக்குப் பிடிக்குமென ஹோட்டல் தொடங்கிய தந்தை”- 900 கி.மீ கடந்த பாசப் பயணம்
சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது. லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர், ஒருநாள் தன் தந்தையிடம் பேசும்போது, வீட்டில் சமைத்த ஃபிரைடு ரைஸ் சாப்பிட மிகவும் ஆசையாக இருப்பதாக சாதாரணமாகக் கூறியுள்ளார். Representational Image மகளின் இந்த வார்த்தை, அவரை ஆழமாகத் தொட்டுள்ளது. உடனடியாக, அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுக்காக அவர், படிக்கும் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறார் லீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், மகளை லீ தான் அரவணைத்து வருகிறார். தனது வேலையை விட்ட லீ, சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மகள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். மகளுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொண்டு ஃபிரைடு ரைஸ் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு கடையில் வியாபாரம் நடக்கவில்லை, இதனால் லீ வருத்தமடைந்துள்ளார். தந்தையின் சோகத்தைக் கண்ட மகள், தனது தந்தையின் கடை மற்றும் அவரது பாசம் குறித்த கதையை பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அப்பா மிகவும் சோகமாக இருக்கிறார். தனது தந்தை சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரிக்கிறார், விற்பனையை அதிகரிக்க அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு உடனடியாக வைரலாகி, பலரின் கவனத்தை பெற்றது. மறுநாள் காலை, லீயின் கடைக்கு முன் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியதும் குறிப்பிடத்தக்கது.

27 C