வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?
வே லூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி, மருத்துவர் பெல்கிங் தங்கியிருந்த அறையில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது, 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இதுபற்றி வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மருத்துவர் பெல்கிங்கைத் தேடி வருகின்றனர். கோவா வழக்கில், அமலாக்கத்துறை வெளியிட்ட புகைப்படங்கள் இது குறித்து, போலீஸார் கூறுகையில், ``அண்மையில் கோவா மாநிலத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தபோது, வேலூர் சி.எம்.சி மருத்துவர் பெல்கிங் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.2 லட்சம் வரவு வந்துள்ளது. அதைத்தொடர்ந்தே, மருத்துவர் பெல்கிங் பற்றிய விசாரணையை அமலாக்கத்துறையினர் தொடங்கினர். பெல்கிங் அறையில் இருந்தவை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள்கள் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு போதைப்பொருள்கள் என்பதால், அவற்றின் மதிப்பு உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மருத்துவர் பெல்கிங் கைது செய்யப்பட்டால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்’’ என்றனர். வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?
``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி'பேச்சுக்கே இடமில்லை– வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!
டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை. இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது. நேட்டோ நேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது. ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth
ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'என்னென்ன? |In Depth
டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த 'சம்பவ'ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’. வெளியேற்றம் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! “அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார். இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர். ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது. காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது. மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது. ட்ரம்ப் - பரஸ்பர வரி ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன? அடுத்தது, அமெரிக்காவின் 'சுதந்திர தினம்'. இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான். அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன் அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார். ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025. இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான். பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது. இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது. இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது. பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை. ட்ரம்ப் - நோபல் பரிசு ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்? அடுத்த முக்கியமான சம்பவம் - அது 'நோபல் பரிசு ஆசை'. ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும். அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. இதில் ட்ரம்பிற்கு 'வருத்தம் தாம்பா'. தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது. மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு 'ஃபிஃபா அமைதி பரிசை' வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான். ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், 'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்' இருந்தது. 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை. புதின் - ட்ரம்ப் அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained இப்போது ட்ரம்பின் 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த' முயற்சிகள். ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள் என்பது உலகம் அறிந்தது. இதனால், ட்ரம்ப் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார். ஆனால், 'நட்பு வேறு... அரசியல் வேறு' என ட்ரம்பிற்குக் காட்டிவிட்டார் புதின். ஜெலன்ஸ்கியை அழைத்துப் பேசுவது... புதினை அழைத்துப் பேசுவது என பல முயற்சிகளைச் செய்தார் ட்ரம்ப். அது இன்னமும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் புதினை 'சாஃப்ட்டாக' கையாண்டாலும், இப்போது வரியைக் காட்டி பயமுறுத்தத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். இருந்தும் புதின் வழிக்கு வருவதாக இல்லை. புதினை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்று தான், 'இந்தியா மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது'. கூடுதல் 25 சதவிகித வரி என்பது இந்தியா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்துடன் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரைப் பார்த்துவிடுவோம். ட்ரம்ப் பேசிக்கொண்டு மட்டுமில்லை... சில போர்களை நிறுத்தியும் இருக்கிறார். அதில் ஒன்று தான், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் தரப்பு இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டன. இப்போது காசா அமைதி அமைப்பிற்காக ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார் என்பதை நேற்றிலிருந்து காண முடிகிறது. மேலே சொன்ன போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டன தான் இரு தரப்பும். ஆனால், இப்போதும் அவ்வப்போது பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். 'இது இஸ்ரேலின் தற்காப்பு தாக்குதல்' என்று இதற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார். கம்போடியா - தாய்லாந்து, எகிப்து - எத்தியோப்பியா, செர்பியா - கொசாவோ போன்ற பல நாடுகளின் போர்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எனவே ட்ரம்ப் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ட்ரம்ப் - நெதன்யாகு - காமேனி வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இந்தப் போர் வரிசையில், ஈரானை விட்டுவிட முடியாது. 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' என ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க கிளம்பியது இஸ்ரேல். இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளின் மீது குண்டு வீசியது. இது அமெரிக்காவிற்கு வெற்றிகர தாக்குதலே. இப்போது ஈரானில் நடக்கும் உள்நாட்டு பிரச்னையிலும் தலையிட்டு வருகிறார் ட்ரம்ப். காசு... பணம்... துட்டு... Money... Money... அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார் ட்ரம்ப். இவர்களின் வருகை அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறது என்றும் கருதுகிறார் ட்ரம்ப். இதனால், ஹெச்-1பி விசாவிற்கு கடும் நெருக்கடிகளை விதித்திருக்கிறார். ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தினார். இந்த விலை உயர்வு இந்தியா, சீனாவை அதிகம் பாதித்தது. ஏனெனில், 67 சதவிகித இந்தியர்களும், 10 சதவிகித சீனர்களும் தான் இந்த விசாவைப் பெற்று அமெரிக்கா சென்றுவந்தனர். அடுத்ததாக, தனிநபர்களுக்கு ட்ரம்ப் கோல்டு கார்டு பெற 1 மில்லியன் டாலர் என அறிவித்தார். இந்தக் கோல்டு கார்டு அமெரிக்காவின் நிதிக்காகவே வழங்கப்பட்டது. ஹெச்-1பி விசாவிற்கு மட்டுமல்ல... அனைத்து விசாக்களுக்குமே கெடுபிடிகளை அதிகரித்து வருகிறது ட்ரம்ப் அரசு. அவர்களுக்குத் தேவையெல்லாம், அரசிற்கு பிரச்னை ஏற்படுத்ததாத மக்கள். ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? ட்ரம்பின் சமீபத்திய அத்துமீறல் 'நிக்கோலஸ் மதுரோ கைது'. வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ. அவர் அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல் செய்கிறார் என்று அவரது இருப்பிடத்திற்கே சென்று, இரவில் அவரது படுக்கையறையிலேயே கைது செய்தது ட்ரம்ப் அரசு. இப்போது அவர் நியூயார்க் சிறையில் இருக்கிறார். ஒரு நாட்டிற்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபரைக் கைது செய்துள்ளது பல தரப்பினரிடம் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. 'போதைப்பொருள் கடத்தல்' என்று சொன்னாலும், 'வெனிசுலாவின் எண்ணெய் வளம்' தான் மதுரோவின் கைதிற்கு பின்னணியில் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதுபோலவே, மதுரோவின் கைதிற்குப் பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முழுதாக ஃபோக்கஸ் செய்து வருகிறார் ட்ரம்ப். ட்ரம்பின் லேட்டஸ்ட் குறி, 'கிரீன்லேண்ட்'. டென்மார்க்கின் கீழ் உள்ளது கிரீன்லேண்ட். பாதுகாப்புக் காரணங்களுக்காக வேண்டும் என்று, அதை வாங்கவோ, அபகரிக்கவோ திட்டமிடுகிறார் ட்ரம்ப். இதை ஒத்துக்கொள்ளாத நேட்டோ, அமெரிக்க நாடுகளுக்கு தற்போது 10 சதவிகித வரியை விதித்துள்ளார் ட்ரம்ப். மேலே, கூறியிருப்பவை எல்லாமே, ஒரு சில தான். ட்ரம்ப் செய்த சம்பவங்களோ நிறைய நிறைய. அதில் முக்கியமானவை மட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில், 'Make America Great Again' என்ற ட்ரம்பின் நோக்கத்துக்காகத்தான்! ஓராண்டிற்கே இந்த நிலை என்றால், இன்னும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறதோ? Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?
``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார். வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம். தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

25 C