SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, 'கச்சா எண்ணெய் விலை'. இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீதான போர் 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு எப்போது போர் முடிவுக்கு வரும்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர், நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும் என்றும், ''ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை'' என்றும் பேசியிருக்கிறார். தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold நீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார். மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

விகடன் 2 Mar 2026 9:24 am

கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு

ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார். அலிபூர் வந்திருந்த காட்சி இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது. கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்? வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், ''அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன. இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம் என்று கூறினார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் அயதுல்லா கமேனி இச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

விகடன் 2 Mar 2026 8:51 am

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?

விகடன் 1 Mar 2026 6:06 pm

Ali Khamenei: பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. IRAN SUPREME LEADER KHAMENI இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkian கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும். இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?

விகடன் 1 Mar 2026 5:31 pm

Ali Khamenei: பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. IRAN SUPREME LEADER KHAMENI இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkian கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும். இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?

விகடன் 1 Mar 2026 5:31 pm

ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. ட்ரம்ப் ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 1 Mar 2026 12:55 pm

US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது. அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒரே நேரத்தில் 'ஆபரேஷன் எபிக் ப்யூரி' என்ற பெயரில் ஈரான் மீது வான்வெளித்தாக்குதலை நடத்தியது. இதையடுத்து துபாய், அபுதாபி, இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரோடு அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரானும் உறுதிபடுத்தியிருக்கிறது. ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் நிர்வாகம் முயற்சித்தது. ட்ரம்ப் கடந்த கால நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ஈரானியத் தலைமை இப்போது தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிக்கிறார்கள். இப்போது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார். தங்களது தலைவரின் மரணத்திற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அதோடு புதிதாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், ''ஈரான் இன்று மிகவும் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது. இதுவரை தாக்கப்பட்டதை விடவும் கடுமையாகத் தாக்குவோம் என்று கூறி இருக்கிறது. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, எப்படியிருந்தாலும், அவர்கள் செய்தால், இதுவரை கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 1 Mar 2026 12:20 pm

அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்து வந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். கமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode அயதுல்லா அலி கமேனி யார் இந்த அயதுல்லா அலி கமேனி? ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அயதுல்லா அலி கமேனி (86). 1979-ல் ஷா மன்னரின் ஆட்சியை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின்போது கமேனி முக்கியத்துவம் பெற்றார். 1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, மிக உயர்ந்த மதப் பதவியில் இல்லாதபோதிலும், அவர் ஈரானின் உயரிய தலைவராக நியமிக்கப்பட்டார். சமரசத்திலிருந்து எதிர்ப்பு நோக்கி... ஆரம்பத்தில் 'சமரசம் செய்து கொள்ளக்கூடிய' நபராகவே பார்க்கப்பட்டார். ஆனால், காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு குறித்த முடிவுகள், அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஆதரித்தார். 2013-ல் அவர் அறிமுகப்படுத்திய Heroic flexibility என்ற கொள்கை, 2015-ல் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இருப்பினும், 2018-ல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தார். ஆனாலும், கமேனி அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார். `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel ஈரான் மீதான தாக்குதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை? பல ஆண்டுகளாக ஈரானும் இஸ்ரேலும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரங்களில் ஈரான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. பாலஸ்தீனப் போராளி அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கி வந்தது. பதிலுக்கு இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளைக் கொல்வது, சைபர் தாக்குதல் நடத்துவது எனச் செயல்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை ஏவியதும் இந்த 'நிழல் போரை' நேரடிப் போராக மாற்றிவிட்டது. இதுமட்டுமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடிகளும் ஈரானுக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில் போராட்டங்களும் வெடித்தன. இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 'ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்' என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அறிவித்தார். கமேனி இருக்கும்வரை இது சாத்தியமில்லை என்பதால், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். ட்ரம்ப் - நெதன்யாகு ஈரானிய மக்களுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப், ``ஈரானின் பெருமைமிக்க மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை இன்று இரவு நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே இருப்பது மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படும். நாங்கள் எங்களது பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் கைக்கு வரும். பல தலைமுறைகளுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைத்துள்ள அநேகமாக ஒரே வாய்ப்பு இதுதான் எனப் பதிவிட்டிருக்கிறார். ஈரானிய மக்களிடம் பேசிய நெதன்யாகு, ``நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறான். அது உங்களை ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சி செய்யும் கொடூரமான 'அயதுல்லா' ஆட்சிதான். அவர்தான் உங்கள் அற்புதமான நாட்டைச் சீரழித்து, மிகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றவர்கள். உங்களை மொத்தமாகப் படுகொலை செய்தவர்களும் அவர்களே எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்

விகடன் 1 Mar 2026 9:28 am

ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

விகடன் 1 Mar 2026 8:32 am

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 28 Feb 2026 11:32 pm

மத்திய கிழக்கு எங்கும் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையே ஆனா தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 28 Feb 2026 11:32 pm

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன. அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி. பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்றார். ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

விகடன் 28 Feb 2026 10:29 pm

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்? ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.  கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது.  இஸ்ரேல் - அமெரிக்கா பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார். 8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார்.  அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன. இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ட்ரம்ப் அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்! அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது.  ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.  மிகப் பெரும் போர்: ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது.  அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்: இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. 1979-ல் நடந்த உள்நாட்டுப் போரில், பெஹல்விக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அயோதொல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமிய அரசு அமைந்தது. அதையே Islamic Republic of Iran என்று அழைக்கிறோம்.  மத்திய கிழக்கில் ஈரானை இஸ்ரேல் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் ஈரான் ஆதரவில் இயங்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்கள் இஸ்ரேலுக்கு இடைஞ்சலாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் ஈரான் வளர்வதை இஸ்ரேல் விரும்பவில்லை.  ஈரான் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவெடுக்கப்பட்டு, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை. அதனால்தான், பிப்ரவரி மாதம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அமெரிக்காவுக்கு சென்று ட்ரம்ப்பை சந்த்திருக்கிறார் நெதன்யாஹு. இந்த சந்திப்பின்போது, “பேச்சுவார்த்தை மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வர முடியாது. தாக்குதல்தான் சரி” என்று நெதன்யாஹு ட்ரம்ப்பிடம் கூறியதாகவும், அதற்கு ட்ரம்ப், “ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம், முடிவு எட்டப்படாவிட்டால் தாக்கலாம்” என்று பதிலளித்ததாகவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்ககள் செய்தி வெளியிட்டன.  பிப்ரவரி 26-ம் தேதி ஜெனிவாவில் நடந்த அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பும் கூறியபோதும், நெதன்யாஹு விரும்பியபடியே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.  போரின் ஆபத்து: போரில் உள்ள அனைத்து நாடுகளின் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதைத்தாண்டி, மிக முக்கிய ஆபத்து, இந்தப் போர் ஈரானைத் தாண்டி வளைகுடா முழுவதும் பரவுவதுதான். வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சவுதி, அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரேன் போன்ற நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பதில் தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும், அந்நாடுகள் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான பதில் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்த போர் இன்னும் பெரிய அளவில் விரிவடையும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுவது இரண்டாவது ஆபத்து. பெர்சிய கடலில் உள்ள ஹோர்முஸ் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெறும் 30 கி.மீ அகலம் கொண்ட இந்த பகுதியை ஈரான் முடக்கினால், உலகளவிலான எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு அதிகரித்தால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயரும். அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது.  உலக நாடுகள் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த முயல்வதே இந்நேரத்தின் அத்தியாவசியம்!

விகடன் 28 Feb 2026 10:25 pm

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு'மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன. இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன. ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் - மோடியின் சமீபத்திய பயணம். கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்‌ மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, 'நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்' அவருக்கு வழங்கப்பட்டது. மோடி - நெதன்யாகு மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் அதெல்லாம் சரி... இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு... மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர்‌ விருது கூட பெற்றிருக்கிறார். இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின்‌ 'நல்ல நண்பர்கள்' இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது. மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு

விகடன் 28 Feb 2026 6:54 pm

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப், ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருக்கிறோம். இஸ்ரேல் - ஈரான் பதட்டம் அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது. இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், அபுதாபி, கத்தாரைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் - ஈரான் பதட்டம் மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ஈரான். இந்தத் தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் மக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் போர் பதற்றம் காரணமாக கத்தார் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விகடன் 28 Feb 2026 5:42 pm

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை  கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு முக்கிய கேள்வி - இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை ஏதும் இல்லை.  இந்த மோதலுக்கு என்ன காரணம் ? இந்த கேள்விக்கு விடை காண ஈரான் - இஸ்ரேலிய உறவுகளின் கடந்த குறைந்தது சுமார் 40 ஆண்டுகால வரலாற்றைப் பார்க்கவேண்டும். இஸ்ரேல், வரலாற்று ரீதியான பாலத்தீன மண்ணில் 1948ல் ஒரு தனி நாடாக  மேற்குலக உதவியுடன் உருவாக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவுகள் சுமூகமாக இருந்திருக்கின்றன. அதாவது ஈரானில் 1979ல் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு ,  நாடு ஒரு இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்படும்வரை. 1979க்கு முன் நடந்த முகமது ரேசா பஹ்லவியின் மன்னராட்சி ஈரானில் 1953ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் நடந்த அதிரடி ஆட்சி மாற்றத்துக்குப் பின் உருவானது.  மேற்குலக நாடுகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பஹ்லவி,  ஈரானை இரும்புக் கரம் கொண்டு ஆண்டு வந்தார். இஸ்ரேலும் ஈரானும் அந்தக்காலத்தில் நட்பு நாடுகள்.  இஸ்ரேலுடன் உறவு என்பதை மன்னர் பஹ்லவி அரசு,  அரபு தேசியவாதத்தை எதிர்கொள்ளவும்,  சோவியத் ஒன்றிய செல்வாக்கை கட்டுப்படுத்தவும் ஒரு கருவியாக நினைத்தார். மன்னர் முகமது ரேசா பஹ்லவி  ஆரம்ப கால நட்பு! 1950-களிலேயே இஸ்ரேலை தனி நாடாக ஈரான் அங்கீகரித்தது.  இஸ்ரேலை அங்கீகரித்த முதல் சில இஸ்லாமிய நாடுகளில் ஈரானும் ஒன்று என்ற தகவல் இன்று ஈரான்- இஸ்ரேல் உறவுகளின் நிலையைப் பார்ப்போருக்கு ஆச்சரியத்தைத் தரும்.   இன்று ட்ரம்ப்பும், இஸ்ரேலும் அழித்தொழிக்கத் துடிக்கும் ஈரானின் அணு சக்தித் திட்டத்துக்கு அந்தக் கால கட்டத்தில் ஆரம்ப விதையே அமெரிக்கா போட்டதுதான்.  அமைதிக்கான அணுசக்தி  “ Atoms for Peace”  என்ற அமெரிக்க திட்டத்தின் உதவியுடன் தான் ஈரானிய அணு சக்திக் கனவு தொடங்கியது.  அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் காலத்தில் 1953ல் ஈரானுடன் அமெரிக்கா இந்த திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நிலையத்தை உருவாக்கி,  அதை இயக்க பயிற்சியும் எரி பொருட்களும் தந்தது. பின்னர்  ஈரான் 1968ல் அணு ஆயுதப் பரவலாக்கல் தடை ஒப்பந்தத்தில் ( Nuclear Non Proliferation Treaty) கையெழுத்திட்டது.   ஆனால் 1979ல் அயோதுல்லா கொமெனியின் தலைமையில் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்ந்த பின்னர், ஈரானின் நிலைப்பாடு மாறியது.  இஸ்ரேலையும், அமெரிக்காவையும்,  மேற்குலகையும் ஈரான் விரோத நாடுகளாகப் பார்க்கத்தொடங்கியது. இஸ்ரேலுக்கு தனிநாடாக இருக்க உரிமையே இல்லை என்ற நிலைப்பாட்டை  கோமெனி அரசு எடுத்தது.  அமெரிக்காவை “சாத்தான்” என்று தொடர்ந்து விமர்சித்த கோமெனி அரசு ,  ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு பெரும் சர்வதேச நெருக்கடியை உருவாக்கியது.  மத்திய கிழக்கில் ஆதிக்கப் போட்டியும் ஈரானும்! ஈரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளில் பெரும்பாலானவை சுன்னி பெரும்பான்மை நாடுகள்.  லெபனான், ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற சில நாடுகளில்தான் ஷியா அல்லது ஷியா பிரிவினரின் உட்பிரிவினர்  கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.  மத்தியக் கிழக்கில் யார் செல்வாக்கு செலுத்துவது என்ற ஆதிக்கப்போட்டியில் ஈரான் 1979-க்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் மற்ற இஸ்லாமிய நாடுகளை, குறிப்பாக சௌதி அரேபியாவை,  எரிச்சலடைய வைத்தன.  இந்த நிலையில் இஸ்‌ரேலுக்கு எதிராக சண்டையிடும் ஹமாஸுக்கு ( அது ஒரு சுன்னி இஸ்லாமிய அமைப்பாக இருந்தாலும்) ஈரான் அளித்த நிதி மற்றும் ஆயுத உதவி இஸ்ரேலுக்கு கடும் கோபத்தைத் தந்தது.   இஸ்ரேல் - ஈரான் இஸ்‌ரேலின் வட பகுதி நாடான லெபனானிலும் இதே கதைதான். லெபனான் கிறித்தவர்கள்,  ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம்கள் கலந்து வாழும் ஒரு நாடு.  அது பிரான்சிடமிருந்து 1943ல் விடுதலை பெற்றபோது , இந்த மூன்று சமூகங்களிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின்படி அப்போது பெரும்பான்மையாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஜனாதிபதி பதவி, அடுத்த பெரிய சமூகமான சுன்னி முஸ்லிம்களுக்கு பிரதமர் பதவி மற்றும் ஷியா பிரிவினருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பதவி என்று பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.  இந்த ஒப்பந்தம் காலப்போக்கில் மக்கள் தொகை மாற்றத்தால் பின்னர் பிரச்சனைக்குள்ளாகி, லெபனானில் 1975-90ல் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்தப் பிரச்சனையின் போது உருவானதுதான் ஹெஸ்பொல்லா இயக்கம் .  இதற்கு ஈரானின் கோமெனி அரசு அளித்து வந்த ஆதரவு இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியைத் தந்தது.   இதே போல சமீபத்தில் யேமனின் கிளர்ச்சிக் குழுவான ஹூத்திகளுக்கும் ஈரான் தரும் ஆதரவும் பிராந்திய அளவில் ஈரான் தனது மேலாண்மையை நிலை நிறுத்தச் செய்துகொள்ளும் ஒரு யுக்தியாகவே, இஸ்ரேலும், சௌதி அரேபியாவும் பார்க்கின்றன.  ஹமாஸ் இயக்கம் சுன்னி பிரிவு அமைப்பு  என்றாலும், ஈரான் அதற்கு அளித்து வந்த நிதி மற்றும் ஆயுத உதவி , ஈரானின் மத்தியக் கிழக்கு அரசியல் கொள்கையின் ஒரு அம்சமாகும்.   பாலத்தீன அரசியலில், யசேர் அராபத்தின் பாலத்தீன விடுதலை அமைப்பு ( PLO)  பலவீனமடைந்த 1990களில் ஹமாஸ் சக்தி வாய்ந்த அமைப்பாக காசா பகுதியில் உருவெடுத்தது.  இஸ்ரேலுக்கு தனி நாடாக இருக்க உரிமை இல்லை என்ற கொள்கையுடைய ஹமாஸுக்கு ஈரான் அளித்த ஆதரவு , இரு நாடுகளிடையே உறவுகளை மேலும் பாதித்தது. இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொலை கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலில் ஊடுருவி நடத்திய பெரும் தாக்குதலுக்குப் பின்னர், ஹமாஸை அழித்தே தீருவேன் என்று சூளுரைத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தினார். அந்த நடவடிக்கையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப்பெரிய  வெற்றிகளில் ஒன்று, 2024ல் ஈரானின் புதிய அதிபராக மசூத் பெஷெஸ்கியன் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு டெஹ்ரான் வந்திருந்த ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹானியேவை அவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொன்றதுதான்.   இஸ்மாயில் ஹனியா இறுதி ஊர்வலம் ஈரான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த இந்த நிகழ்வு இரு நாட்டு உறவுகளை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஈரான் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.  இஸ்ரேலின் ஏவுகணைத் தற்காப்பு கவச அமைப்பு இந்தத் தாக்குதல்களை பெருமளவு முறியடித்த நிலையிலும்,  பின்னர் இஸ்ரேலும் இதற்கு பதிலடியாக ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தியது.  இதே போல ஹெஸ்பொல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பல ஆண்டுகளாகக் குறிவைத்துக்கொண்டிருந்தது.   இஸ்ரேல் மீது ஹமாஸின் 2023 தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸுக்கு ஆதரவாக தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்திய ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தலைமைச் செயலர் முல்லா நஸ்ரல்லாவை நேரம் பார்த்து கடந்த ஆண்டு நடத்திய ஒரு வான் தாக்குதலில் இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹெஸ்பொல்லாவிற்கும், அதன் “போஷகர்” ஈரானுக்கும் பேரிடியாக அமைந்தது.  ஈரானின் ஆதரவு பெற்ற மற்றொரு கிளர்ச்சிக்குழு அமைப்பான யேமென் நாட்டின் ஹூத்திக்குழுவும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலை தாக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பல முறை ஹூத்திக் குழுவினர் மீது, யேமனின் தலைநகர் சனா மீதும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.  மீண்டும் பலம் பெறுமா ? அச்சாணி உடைந்ததா ?  ஹூத்திகள்,  ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இந்த மூன்று அமைப்புகளுமே ஈரானால் அமெரிக்க - இஸ்ரேல் “எதிர்ப்புக்கான அச்சாணி”  (Axis of resistance) என்று வர்ணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியின் உறுப்பினர்கள்.   சிரியாவில் பஷார் அல் அசாத் ஆட்சி கடந்த ஆண்டு அகற்றப்படும்வரை சிரியாவும் இந்த கூட்டணியில் இருந்து வந்தது.   இந்தக் கூட்டணி அமைத்து , இதன் மூலம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணிக்கும், பிற சுன்னி நாடுகளுக்கும் ஈரான் தொல்லை தந்து கொண்டிருந்தது என்பதுதான் இஸ்ரேலிய அரசின் தொடர்ச்சியான வாதம். ஈரானுக்கு எதிராக தற்போது இஸ்ரேலின் தாக்குதல்கள் இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்படவேண்டும்.   ஈரான் தன்னுடைய இருத்தலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.  குறிப்பாக ஈரானின் “முல்லாக்கள் அரசு”  அகற்றப்படவேண்டும் என்பதை இப்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏறக்குறைய வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். நெதன்யாகு, அலி கொமேனி ஈரானின் அணு சக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்திவந்த இந்த காலகட்டத்தில்,  அதுவும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி ஒமானில் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருந்த சூழலில் ,  கடந்த ஆண்டு ஜூன் 13ம் நாள் ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது, அந்தப் பேச்சுவார்த்தைகளில்  ஈரான் கலந்து கொள்வதையே தடுத்தது.   பேச்சுவார்த்தை போன்ற ராஜீய வழிமுறைகள் மூலம் தனது அணு சக்தி திட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டு , ஈரான் ரகசியமாக அணு ஆற்றல் பெற்றுவிடும் என்ற இஸ்ரேலின் அச்சமே இதற்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள்  கூறுகிறார்கள்.  ஈரானில் ஆட்சிமாற்றம் மூலம் அதன் அணு சக்தி திட்டத்தை நிர்மூலமாக்கலாம், மத்தியக்கிழக்கு பகுதியில் தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் கருதுகிறது.  இது பலிக்குமா என்பதை இந்த சுற்று போரின் முடிவுதான் தீர்மானிக்கும்.  ஈரான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஈரானின் அணு வல்லமையை தகர்க்குமா, அல்லது மேலும் கூடுதலாக  ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா ,  ஈரானின் “எதிர்ப்புக்கான அச்சாணி” அமைப்புகள் பலவீனமடைந்துள்ள சூழலில் அவை மீண்டும் பலம் பெறுமா என்பதெல்லாம் முக்கிய கேள்விகள்.!

விகடன் 28 Feb 2026 4:22 pm

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணமாக இரு நாடுகளும் கூறுவது... > ஈரானின் அணு ஆயுதங்கள் > ஈரான் இரு நாட்டு மக்களுக்கும், அந்த அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது போன்றவை தான். ஈரான்‌ மீதான தாக்குதல் தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையும், அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பும் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலின் போது, காமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா என்கிற தகவல் இன்னும் தெரியவில்லை. கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் ஈரான் மீதான தாக்குதலை முதலில் தொடங்கியது இஸ்ரேல். அதன் பின், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆனால், இன்றோ, அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் ஒன்றாக ஒரே நேரத்தில் களத்தில் இறங்கி ஈரானை தாக்கி வருகிறது. இவர்கள் நோக்கம் ஒன்று தான் - ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும். ட்ரம்ப் பேச்சு இந்தத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பேசும்போது... தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் உலகின் நம்பர் ஒன் நாடு ஈரான். கடந்த 47 ஆண்டுகளாக, ஈரான் 'அமெரிக்காவிற்கான மரணத்திற்காக கோஷமிட்டு வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரானின் பிராக்ஸிக்கள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போர் கூட ஈரானுடையது தான். ஹமாஸ் ஈரானின் பிராக்ஸிகள். அந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்று கடுமையாக பேசியுள்ளார். ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

விகடன் 28 Feb 2026 2:23 pm

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெரிக்காவிற்கு ஈரான், கியூபா போன்ற நாடுகளுடன் இருக்கும் பிணக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமெரிக்காவின் கைகளுக்கு செல்கிறதா கியூபா? . இந்தக் கேள்விக்கு ட்ரம்ப், கியூபா அரசு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெரிய பிரச்னையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ட்ரம்ப் அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களிடம் இப்போது ஒன்றுமே கிடையாது. அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒருவேளை, தோழமை ரீதியில் கூட, நாம் கியூபாவைக் கைப்பற்றலாம். அவர்களிடம் இப்போது பணம் இல்லை, எண்ணெய் இல்லை, உணவு இல்லை. அதனால், அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது. அமெரிக்க வெளியுறவு செயலர்‌ மார்கோ ரூபியோ இந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறார் என்று பதிலளித்துள்ளார். கியூபா... கியூபா என்றால் கம்யூனிஸம் என்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட்‌ கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. கியூபாவில் பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. வெனிசுலா அதிபரை ட்ரம்ப் சிறைபிடித்ததில் இருந்து கியூபாவிற்கு கிடைக்கும் நிதி உதவி சுணங்கி உள்ளது... அவர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த மானிய விலையிலான எண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கியூபா 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு இந்தச் சூழலை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஏற்கெனவே, கடந்த இரண்டு மாதங்களாக கியூபாவில் ஆட்சி மாற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்‌ தான். தனது அண்டை நாடான கியூபா தனக்கு எதிராகவும், தன் போட்டி நாடுகளுக்கு தோழராகவும் இருப்பது அமெரிக்காவிற்கு சிக்கல் தான். அதனால், கியூபாவைக் கைப்பற்ற பார்க்கலாம் ட்ரம்ப். ஆக, கியூபா அமெரிக்காவின்‌ 51-வது நாடாக மாறுமா‌‌ என்பதற்கு விரைவில் காலம்‌ பதில் சொல்லுமோ? தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold

விகடன் 28 Feb 2026 12:08 pm