SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

31    C
...

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய'ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில். பிற நாடுகளின் தேர்தல்களில் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. ஆனால், வட கொரியாவில் 'இவர்' தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தல் நடக்கிறது அல்லது நடத்தப்படுகிறது. அவ்வளவு தான். வட கொரியாவின் நாடாளுமன்றத்தின் பெயர் 'சுப்ரீம் மக்கள் சட்டமன்றம்'. இந்தச் மன்றத்திற்கான 15-வது தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது. கிம் ஜாங் உன் ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா வாக்குகள்: வெற்றியும், தோல்வியும்! அந்தத் தேர்தலில் இப்போது வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 99.93 சதவிகித வாக்குகளில். மீதம் உள்ள வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளிநாடு சென்றதாலும், கடலில் பணி செய்துகொண்டிருந்ததாலும் வாக்களிக்கவில்லை. இன்னும் சில சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. மேலும், 99.93 சதவிகித வாக்குகள் கிம் ஜாங் உன் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வாக்களிக்கப்பட்டுள்ளது. மீதம் பதிவாகி உள்ள வாக்குகளில் 0.07 சதவிகிதம் எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. 0.07 சதவிகிதம் எதிரான வாக்குகள் என்பது வட கொரியாவைப் பொறுத்தவரை மிக மிக அதிசயமானது. காரணம், தேர்தலில் வாக்களித்த அனைவரும் கிம் ஜாங் உன்னிற்கே வாக்களிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம். 'ஒரே' வேட்பாளர் தான் இந்தத் தேர்தலில் சுப்ரீம் மக்கள் சட்டமன்றத்திற்கு 687 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் 687 தொகுதிகள் அல்லது பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. கிம் ஜாங் உன் Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்? ஆனால், இதில் என்ன ஹைலைட் என்றால், 687 தொகுதிகள் அல்லது பகுதிகளிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை தவிர யாருக்குமே வாக்களிக்க முடியாது. இப்படியிருக்கையில், வட கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1957-ம் ஆண்டு முதல் இதுவே 0.07 சதவிகித எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆண்டுகளுக்கு வட கொரியாவின் அதிபராக இருந்த கிம் ஜாங் உன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர உள்ளார். வாழ்த்துக்கள் கிம் ஜாங் உன்! 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 12:25 pm

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே'களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார். ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? அமெரிக்காவின் சம்பவம் இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ? Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

விகடன் 18 Mar 2026 11:09 am

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி லரிஜானி. இவர் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஆவார். ட்ரம்ப் மிரட்டலும், லரிஜானியின் பதிலடிகளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால், அதுவரையிலான தாக்குதலை விட 20 மடங்கு அதிக தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். அலி லரிஜானி LPG தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை 'இப்படி' புக் செய்யாதீர்கள்; இது பக்கா மோசடி இதற்கு லரிஜானி, 'உங்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்திருந்தார். அடுத்ததாக, ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் அரை மணிநேரத்திற்குள் இருளில் தள்ளப்படும் என்று சாடி இருந்தார். இப்படி லரிஜானி தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், ட்ரம்போ தனக்கு லரிஜானி யாரென்றே தெரியாது... அவருடைய அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பது போல டீல் செய்து வந்தார். லரிஜானி கொலை இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் லரிஜானி உயிரிழந்துள்ளார். இதை ஈரான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. ஈரானை ஆளும் குண்டர் கும்பலான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைவர் என்று லரிஜானியை முன்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் காணப்படுவதில்லை. அவருக்குப் பதிலாக இதுவரை லரிஜானி தான் ஈரானின் குரலாக இருந்து வந்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொடுக்கும் ஆணைகளை நிறைவேற்றும் நபராகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 9:43 am

'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?'ட்ரம்பின் 'டாப்'அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட். இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவிற்கு இவர் சொன்ன காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கே நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். அப்படி அவர் சொன்ன காரணம் என்ன? ஈரான் நமது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தாலும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த லாபியாலும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னால் மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது என்று தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் போர் Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்! அதிருப்தி..? ஏற்கெனவே ட்ரம்ப் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஈரான் போரில் உடன்பாடில்லை என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஆனால், ஒரு அதிகாரி நேரடியாக இந்தக் காரணத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை. இதில் இவர் தனது பதவியை ராஜினாமா வேறு செய்துள்ளார். ஆக, இது ட்ரம்ப் அரசாங்கத்திற்குள்ளேயே ஈரான் போர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதா என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது. மேலும், ட்ரம்ப் இப்போதைக்கு இந்தப் போரை முடிப்பதாகவும் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

விகடன் 18 Mar 2026 9:05 am

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகள் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இக்கோரிக்கைக்கு எந்த நாடும் சாதகமாக பதில் கொடுக்கவில்லை. இதற்கிடையே இப்போரில் ஈரானின் புதிய மத உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு இதனால்தான் அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு இத்தாக்குதலில் காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இப்போது படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் ஜனாதிபதி மசூத்திடம் போனில் பேசியபோது தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தால் மொஜ்தபாவிற்கு ஈரானில் சிகிச்சை கொடுக்க சரியாக இருக்காது என்று கருதி, அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஈரான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவர் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் ரஷ்ய ராணுவ விமானத்தில் ரஷ்யாவிற்கு அனுப்பி அவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவில் புதின் வீட்டு வளாகத்திற்குள் இருக்கும் மருத்துவமனையில் மொஜ்தபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் அல் ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மத உச்ச தலைவர் மொஜ்தபாவை இஸ்ரேல் குறிவைக்கும் அபாயம் இருக்கிறது. அதோடு அவர் ஈரானில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் யாராவது அவர் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. மற்றொருபுறம் மொஜ்தபா ஈரானில்தான் சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மொஜ்தாபா கமேனி ஈரானுக்குள் சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜாபர்காண்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திப்படி, புதிய உச்ச தலைவரின் ஒன்று அல்லது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது கல்லீரல் அல்லது வயிற்றிலும் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோமா நிலையில் இருப்பதாகத் அச்செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கமேனிக்கு அருகில் கட்டடக் கழிவுகள் விழுந்ததால் அவரது உடலின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ''மொஜ்தபா உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை யாரும் உயிருடன் காட்டவில்லை. அவர் உயிரோடு இல்லை என்றுதான் எனக்கு செய்திகள் வருகிறது'' என்றார். இதே போன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர் சமீபத்தில் காபி குடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார். அதுவும் உண்மையானதா அல்லது ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வழக்கமாக கைவிரலில் மோதிரம் அணிந்து இருப்பார். சமீபத்தில் வெளியான வீடியோவில் மோதிரம் இல்லை. அதோடு அவரது மகன் தினமும் எக்ஸ் தளத்தில் குறைந்தது 20 பதிவுகளையாவது வெளியிடுவார். ஆனால் அவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனால் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

விகடன் 17 Mar 2026 6:17 pm

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று'நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களை ஒரே தாக்குதலில் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை உயிரோடு பிடித்துச் சென்றது போன்று அலி கமேனியைப் பிடிக்க முடியாது என்பதாலும், ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்துவது முடியாத காரியம் என்பதாலும் அவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்து அழித்துவிட வேண்டும் என்று நினைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இத்தாக்குதலை நடத்தின. ஆனால் இத்தாக்குதலில் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பேசப்பட்ட ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. டெலிகிராப் இதழுக்குக் கிடைத்த ஆடியோவின் படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சில வேலைகளுக்காக அவர் தங்கி இருந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததால் உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் ராணுவத் தலைவர் உடல் சிதறி, வெறும் சில கிலோ சதைத்துண்டுகளே கிடைத்தது. அவர் உடல் உறுப்புகள் பல மீட்டர் தூரத்திற்கு சென்றுவிழுந்தது. அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி 28ம் தேதி அன்று நடந்த அந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அலி கமேனியின் அலுவலகத்தில் நெறிமுறைத் தலைவராக பணியாற்றும் மஸாஹர் ஹொசைனி சமீபத்தில் டெஹ்ரானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த ஆடியோ படி, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு கமேனியின் குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது. கமேனி குடும்பத்தினரையும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக திட்டமிடப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹா, துபாய், அபுதாபியில் இத்தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 56 வயதான மொஜ்தபா கமேனி, தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வெளியில் வந்து அங்குள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். தோட்டத்தில் இருந்து மீண்டும் வீட்டிற்குச் செல்ல கட்டடத்தின் படிக்கட்டில் ஏறியபோதுதான் அக்கட்டடத்தில் குண்டு விழுந்தது. இந்தத் தாக்குதலில் அவரது காலில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது மனைவி ஜஹ்ரா மற்றும் மகன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அலி கமேனியின் மற்றொரு மகனான முஸ்தபா கமேனி தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தார். இருப்பினும், அவரும் அவர் மனைவியும் காயமின்றி உயிர் தப்பினர்.

விகடன் 17 Mar 2026 2:29 pm

RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும், இதனால் இந்தியாவின் R&AW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவை, 'கவலைக்குரிய நாடு' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ரந்தீர் ஜெய்ஸ்வால் 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்... அமெரிக்காவின் USCIRF-ன் அறிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியாவை உள்நோக்கத்துடனும், பாரபட்சத்துடனும் சித்தரிப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியலை வைத்து USCIRF இந்தியாவை ஒருதலைப்பட்சமாகவும், தவறாகவும் சித்தரித்து வருகிறது. இப்படித் தொடர்ந்து தவறாகச் சித்தரிப்பது அந்த ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறி ஆக்குகிறது. இந்தியாவை இப்படி விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த ஆணையம் அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் கவனம் செலுத்தலாம். மேலும், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் அச்சுறுத்தல்களில் தீவிர கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

விகடன் 17 Mar 2026 10:18 am

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. USCIRF மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார். ஆர்.எஸ்.எஸ் தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதத்துக்கும் மேலாக வந்தே மாதரம்? ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி அரசின் உள்நோக்கம் என்ன?

விகடன் 16 Mar 2026 7:16 pm

Battle of Galwan `டு'மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமிபத்தில் அனுமதித்தது. இந்நிலையில் பேடில் ஆஃப் கல்வான் படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்திற்கு 'மாத்ருபூமி May War Rest in Peace' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும் என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது திரைக்கு வரும் தேதியை சுதந்திர தினத்திற்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகீறது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் பட்சத்தில் சன்னி தியோல் நடிக்கும் லாகூர் 1947 படத்துடன் இப்படம் மோதிக்கொள்ளும். ஆகஸ்ட் 13ம் தேதி லாகூர் 1947 படம் வெளி வருகிறது. கல்வான் மோதல் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சமீப ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த மிக முக்கியமான ராணுவ மோதல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இக்கதை நிஜ நிகழ்வுகளையும், இப்பிராந்திய அரசியல் பதற்றங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது விவாதங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது. இந்த ராணுவ மோதலோடு தொடர்புடைய விஷயம் என்பதாலும், மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெயரை மாற்றிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.

விகடன் 16 Mar 2026 5:22 pm

ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது. ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது. பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்... ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு? > ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது... இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது. உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம். > எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள். இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது... கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் மேலே சொன்னதுதான் - இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது. இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும். அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா... இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

விகடன் 16 Mar 2026 4:16 pm

Trump: ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும் - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார். ட்ரம்ப் ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும். எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம். அமெரிக்கா Vs சீனா ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பொதுவாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மௌனம் ஏன்? பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி! அமெரிக்கா - ஈரான் போரில் ஒரு ட்விஸ்ட்!

விகடன் 16 Mar 2026 1:50 pm

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான். அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில் ட்ரம்ப் பதிவு இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும். ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது. அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை. ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

விகடன் 16 Mar 2026 1:10 pm

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான். போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்த ஒரு விஷயமும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது. இந்தச் சூழலில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான் ஜெய்சங்கர் பேச்சு இது குறித்து 'ஃபைனான்சியல் டைம்ஸ்'-க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது... ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னுடைய பேச்சுவார்த்தைக்கு சில நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இன்னமும் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டினால், அது தொடரும். ஈரான் இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இன்னும் நிறைய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. இந்தியா எல்.பி.ஜி சிக்கலால் கடுமையாக திண்டாடி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்களில் சில இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜியைக் கொண்டு வருகிறது. ஆக, இந்தக் கப்பல்கள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டால், இந்தத் தட்டுப்பாடுகளை ஓரளவு நிச்சயம் குறைக்க முடியும். Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

விகடன் 16 Mar 2026 12:36 pm

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் எல்.பி.ஜி உள்ளிட்ட பல எரிசக்தி பிரச்னைகளை உலகம் சந்தித்து வருகிறது. நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியுள்ளனர். அவர்கள், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டால், வரும் வாரங்களில் உலக எரிசக்தி சந்தைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளனர். அப்பாஸ் அரக்சி கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான் தயாராக இல்லாத ஈரான் தற்போதைய சூழலில், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். ஆனால், ஈரான் அதற்கு தயாராக இல்லை. பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது, நாங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு தான் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

விகடன் 16 Mar 2026 11:11 am

Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses). உலகமே இவரை அன்பாக `கிராண்ட்மா மோசஸ்' (Grandma Moses) என்று அழைத்தது. Grandma Moses 1860, செப்டம்பர் 7-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தார் அன்னா மேரி ராபர்ட்சன். வறுமையான குடும்பம், பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய வீடு. இதனால், அன்னாவுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது வாழ்நாளில் அவர் சில மாதங்கள் மட்டுமே ஒரு சிறிய பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். பன்னிரண்டு வயதிலேயே, குடும்ப வறுமையைப் போக்க பக்கத்து வீடுகளில் வேலைக்குச் சேர்ந்தார். தையல், சமையல், விவசாய வேலைகள் என அவர் இளமைக்காலம் முழுவதும் கடுமையான உழைப்பிலேயே கழிந்தது. கலை, ஓவியம் என்பதெல்லாம் அவர் கற்பனையிலும் எட்டாத ஆடம்பரங்களாக இருந்தன. Grandma Moses 1887-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் தாமஸ் சால்மன் மோசஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை எளிதாகிவிடவில்லை. இருவரும் இணைந்து விவசாயம் செய்தனர். அன்னா மொத்தம் 10 குழந்தைகளுக்குத் தாயானார்; ஆனால், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், 5 குழந்தைகளைப் பறிகொடுத்தார். Motivation Story: `உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை வேணும் பாஸ்!’ - மாணவன் உணர்த்திய நம்பிக்கைப் பாடம் எத்தனையோ வலிகள், இழப்புகள், வறுமை இருந்தும், அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. 1927-ஆம் ஆண்டு, தனது கணவர் தாமஸையும் மாரடைப்பால் இழந்தார். அப்போது அன்னாவுக்கு வயது 67. கணவரின் மறைவிற்குப் பிறகு, அன்னாவால் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, ஓய்வு நேரத்தைக் கழிக்க கம்பளி நூல்களைக் கொண்டு எம்ப்ராய்டரி தையல் வேலைப்பாடுகளில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. அவருக்குக் கடுமையான `கீல்வாதம்' (Arthritis) நோய் வந்து, விரல்கள் வளைந்து, ஊசியைக்கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். Grandma Moses அப்போது அவருடைய தங்கை, நீ ஏன் எம்ப்ராய்டரிக்குப் பதிலாக, தூரிகையை (Brush) வைத்து ஓவியம் வரையக் கூடாது? என்று யோசனை கூறினார். வலியில் தவித்த அந்த மூதாட்டி, தனது 78-வது வயதில், எவ்வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் முதல்முறையாக தூரிகையைக் கையில் எடுத்தார். அன்னா தனது கிராமத்து நினைவுகளை, விவசாய வாழ்க்கையை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார். 1938-ஆம் ஆண்டு, அவர் வசித்த ஹூசிக் ஃபால்ஸ் (Hoosick Falls) என்ற ஊரில் இருந்த ஒரு மருந்துக் கடையின் கண்ணாடியில், தனது ஓவியங்களை விற்பனைக்காக வைத்தார். ஒரு ஓவியத்தின் விலை வெறும் 3 முதல் 5 டாலர்கள் மட்டுமே. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! அந்த வழியாக வந்த லூயிஸ் கேல்டார் (Louis J. Caldor) என்ற கலைப்பொருள் சேகரிப்பாளர், இந்த ஓவியங்களைப் பார்த்தார். அதிலிருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் அவரை ஈர்த்தன. உடனே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் வாங்கிய அவர், அன்னாவைத் தேடிச் சென்று அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். Grandma Moses ஓவியம் ஒரு சாதாரண விவசாய மூதாட்டியின் ஓவியங்கள் நியூயார்க் நகரப் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. 1940, அவரது 80-வது வயதில் `ஒரு விவசாய மனைவியின் ஓவியங்கள்’ (What a Farm Wife Painted) என்ற பெயரில் அவரது முதல் தனிக் கண்காட்சி நடந்தது. 1949ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அன்னாவின் கலையைப் பாராட்டி தேசிய விருதினை வழங்கினார். 1953ல் உலகப் புகழ் பெற்ற 'டைம்' (TIME) பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் வெளியாகி வரலாற்றில் இடம்பிடித்தது. அவர் தனது 78 வயதிற்குப் பிறகு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது ஓவியங்கள் பல லட்சங்களுக்கு ஏலம் போயின. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார். அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார். Grandma Moses ஓவியம் தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை. எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை'. நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! 

விகடன் 16 Mar 2026 7:00 am

உயிருடன் இருந்தால் விடமாட்டோம் - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். 'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. 6 விரலுடன் நெதன்யாகு இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளது. இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

விகடன் 15 Mar 2026 1:54 pm

பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும் - திருமாவளவன் எச்சரிக்கை

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். காலியான காஸ் சிலிண்டர் குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன். அதிமுக to தவெக.., மாநிலக் கட்சிகளை விழுங்குகிறதா பாஜக? | TN Election Updates 360 | Vikatan எரிவாயு தட்டுப்பாட்டால் வீடுகள் மட்டுமன்றி, உணவகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மின்சார அடுப்புகளை நோக்கிச் செல்லும் சூழலில், மின் கட்டணச் சுமையும் அதிகரிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில், மின்சார யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விசிக வரவேற்றுப் பாராட்டுகிறது. ஈரான் அதிபர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது ஈரான் மீது நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்கோ கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் அதைக் கண்டிப்பது விந்தையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் பிரதமரின் இத்தகைய வெளியுறவுக் கொள்கை தேசப் பாதுகாப்புக்கும் மக்கள் நலனுக்கும் உகந்தது அல்ல. உலகப்போர் மூளாத வண்ணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க விசிக வலியுறுத்தும். இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்? தமிழகத்தில் மட்டும்தான் இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுவது, அவருக்கு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது. இது தேர்தலுக்கான போராட்டம் அல்ல. உலக அமைதிக்காகவும், அதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு போன்ற மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் நடத்தப்படும் போராட்டம். திருமாவளவன் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிகள் இன்னும் அமையக் கூட இல்லை. பா.ஜ.க தனது கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க நயவஞ்சகமான உத்திகளைக் கையாள்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அவர் அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அவர் அதற்கு இணங்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இடதுசாரிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது போன்ற முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பானதுதான். இதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; இறுதியில் சுமுகமான தீர்வு எட்டப்படும். எங்களின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்றார், ''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்- செல்வப்பெருந்தகை

விகடன் 15 Mar 2026 1:29 pm

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலை மிட்டாய் இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம், “சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீர்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமும், கப்பல் மூலமும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம். மத்திய கிழக்கு போர் எதிரொலி - இந்தியாவின் இந்த 30 பங்குகள் கடும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்பு! இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன. கடலை மிட்டாய் உற்பத்தி அத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பி.பி. கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவையின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. ஏற்கெனவே நிலக்கடலையின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் கடலை மிட்டாய் உற்பத்தியைப் பாதிக்கிறது” என்றார்.    நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

விகடன் 15 Mar 2026 12:00 pm

நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ? - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும். அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

விகடன் 15 Mar 2026 11:40 am

Trump: பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம் - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப் இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை. ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்டார். ஈரான் போர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!

விகடன் 15 Mar 2026 8:40 am