RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?
சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணத்தை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது முதலீடு செய்யலாமா? இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சந்தையின் ஆரம்பத்தில் இருந்தே டாலர்களை விற்று வந்தது. அப்படி 5 பில்லியன் டாலர்களை விற்றது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சந்தையில் வலுவானது. ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ரூபாய் மதிப்பு வலுவினால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு நேற்று வந்தது மிக முக்கிய நிகழ்வாகும். டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாள்களைக் கடந்துவிட்டோம். ஆனால், நேற்று தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பெரியளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நேற்று கிட்டத்தட்ட ரூ.1,171 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போது ஒப்பந்தம், உலக அளவிலான அறிக்கை என உலகளவில் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு வந்த காரணம், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் என்பதனால் தான். NPS-ல் 'சூப்பர் 10' மாற்றங்கள் - இனி முதலீடு டு பணம் எடுப்பது.. எல்லாமே ஈசி! | தேசிய பென்சன் திட்டம் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show
ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!
ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் 'வானவில் தீவு' என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தீவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியது. இது பார்ப்பதற்கு கடல் இரத்தமாக மாறியது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிற மாற்றத்திற்குப் பின்னால் ஒரு தெளிவான அறிவியல் காரணம் உள்ளது. ஹோர்முஸ் தீவின் மண் மற்றும் பாறைகளில் 'ஹெமடைட்' (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) தாது மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. வறண்ட காலங்களில் இந்தச் சிவப்பு மண் நிலப்பரப்பிலேயே இருக்கும். Today’s rain on Hormuz Island in southern Iran caused the seawater along the shore to turn red, creating striking scenes. pic.twitter.com/wU4xhZKKOa — Weather Monitor (@WeatherMonitors) December 16, 2025 ஆனால், பலத்த மழை பெய்யும்போது, மலையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் இந்தச் சிவப்பு மண்ணை அரித்துக்கொண்டு வேகமாக கடலை நோக்கிப் பாய்கிறது. இவ்வாறு டன் கணக்கிலான சிவப்பு மண் கடலில் கலப்பதால், கடற்கரை ஓரத்திலுள்ள நீல நிற நீர் முற்றிலும் மறைந்து இரத்தச் சிவப்பாக மாறுகிறது. இந்தத் தீவின் மண் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, இது பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மிக முக்கியமானது. இங்குள்ள சிவப்பு மண்ணை உள்ளூர் மக்கள் 'சுராக்' (Surakh) என்று அழைக்கிறார்கள். இது உலகில் உண்ணக்கூடிய ஒரே மண் வகையாகக் கருதப்படுகிறது. அவர்கள் இந்த மண்ணை ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தி ரொட்டி, ஊறுகாய்களில் சேர்க்கின்றனர். மேலும், இந்த மண்ணிலிருந்து பெறப்படும் தாதுக்கள் பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வு முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையோ அல்லது வேதிப் பொருட்களோ இல்லை என்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மழை நின்ற சில நாட்களில் இந்தத் தாதுக்கள் கடலின் அடியில் படிந்துவிடுவதால், நீர் மீண்டும் தனது இயல்பான நிறத்திற்குத் திரும்பிவிடும். இத்தகைய அபூர்வமான இயற்கை நிகழ்வைக் காண்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்குப் படையெடுக்கின்றனர். Israel vs Iran conflict : ஈரான் சறுக்கியதா சாதித்தா? | Decode
'பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை' - ட்ரம்ப் அரசு அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார். முன்பு... ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்கா. புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடுமையான விதிமுறைகளை விதித்தது அமெரிக்க அரசு. பயணத் தடை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? - 6 காரணங்கள் | Quick Points நேற்று... நேற்று மீண்டும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. பாலஸ்தீனிய ஆணையம் என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? பாலஸ்தீனை இன்னும் ஒரு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இதனால், பாலஸ்தீனிய மக்களை பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்திருக்கிறது. 'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம்

29 C