SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

இந்த வாரத்தில் மூன்று நாள்கள் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் (ஜனவரி 5) இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவியது. மழை இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது நேற்று (ஜனவரி 6), காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். பின், அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நகரலாம். எந்தெந்த தேதிகளில் எங்கே மழை? இதனால், நாளை மறுநாள் ( ஜனவரி 9 ), மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம். செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம். மழை வரும் ஜனவரி 10 -ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யலாம். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். வரும் ஜனவரி 11 -ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம். pic.twitter.com/8zNxu9ADru — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 6, 2026

விகடன் 7 Jan 2026 10:13 am

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்‌. உயிரிழந்த இளம் ஆண் புலி அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன் வேட்டைத் திறனை இழந்து நடமாட முடியாமல் தவிப்பதையும் கண்டறிந்தனர். 5 நாள்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று காலை அந்த புலி இறந்ததையும் உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்த புலியின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அதே இடத்தில் வைத்து அந்த புலியின் உடலை எரித்து சாம்பலாக்கியிருக்கிறார்கள். காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள அல்லது புதிய எல்லைகளைப் கைப்பற்ற ஆண் புலிகளுக்கு இடையே மோதல்கள் நடப்பது இயல்பான ஒன்று. அந்த மோதலில் வலிமை வாய்ந்த புலி வெல்லும்... மற்ற புலி இறக்கும் அல்லது கடுமையான காயங்களுடன் உயிர் பிழைக்கும். அப்படி உயிர் பிழைக்கும் புலி அந்த எல்லையை விட்டு வெளியேறும். காயங்களுடன் அப்படி வெளியேறும் புலிக்கு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது இயற்கைக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 6 வயதான இந்த இளம் ஆண் புலியும் எல்லை மோதலில் ஏற்பட்ட தோல்வியால் படுகாயங்களுடன் வனத்தை விட்டு வெளியேறியிருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி அதைப் பிடித்து சிகிச்சை அளிப்பது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும். அதன் காரணமாகவே இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். கடுமையான காயங்கள் காரணமாகவே அந்தப் புலி உயிரிழந்தது என்றனர்.

விகடன் 6 Jan 2026 6:48 pm

சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் பொருத்தப்பட்ட டிவைஸ்; வைரலான புகைப்படம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்

உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது. தீபிந்தர் கோயல் சில மாதங்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் 'Gravity Aging Hypothesis' என்ற புதிய கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அதாவது மனித வாழ்நாளில் ஈர்ப்பு விசை (gravity) காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையலாம். அதுவே முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். தீபிந்தர் கோயல் இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிந்தர் கோயல், தனது வலது நெற்றிப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய டிவைஸ் ஒன்றைப் பொருத்தியிருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கின்றன. டெம்பிள் (Temple) டிவைஸ் இந்த டிவைஸின் பெயர் டெம்பிள் (Temple). இது மூளையின் ரத்த ஓட்டத்தைத் துல்லியமாக அளவிட உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இதை நான் பயன்படுத்தி வருகிறேன். விரைவில் இந்த டிவைஸை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் இந்த டிவைஸ்க்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீபிந்தர் கோயல் எச்சரிக்கும் மருத்துவர் அந்த வகையில் இது குறித்து பேசியிருக்கும் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும் ரேடியாலஜிஸ்டுமான டாக்டர் சுவரங்கர் தத்தா, 'Temple’ என்று அழைக்கப்படும் இந்த டிவைஸைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. இது பணத்தை வீணடிக்க நினைக்கும் கோடீஸ்வரர்களுக்கான 'fancy toy' மட்டுமே. அதேபோல முதுமைக்கு ஈர்ப்பு விசையும் ஒரு காரணம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர் விளக்கமளித்துள்ளார். AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

விகடன் 6 Jan 2026 2:53 pm

சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் பொருத்தப்பட்ட டிவைஸ்; வைரலான புகைப்படம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்

உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது. தீபிந்தர் கோயல் சில மாதங்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் 'Gravity Aging Hypothesis' என்ற புதிய கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அதாவது மனித வாழ்நாளில் ஈர்ப்பு விசை (gravity) காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையலாம். அதுவே முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். தீபிந்தர் கோயல் இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிந்தர் கோயல், தனது வலது நெற்றிப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய டிவைஸ் ஒன்றைப் பொருத்தியிருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கின்றன. டெம்பிள் (Temple) டிவைஸ் இந்த டிவைஸின் பெயர் டெம்பிள் (Temple). இது மூளையின் ரத்த ஓட்டத்தைத் துல்லியமாக அளவிட உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இதை நான் பயன்படுத்தி வருகிறேன். விரைவில் இந்த டிவைஸை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் இந்த டிவைஸ்க்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீபிந்தர் கோயல் எச்சரிக்கும் மருத்துவர் அந்த வகையில் இது குறித்து பேசியிருக்கும் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும் ரேடியாலஜிஸ்டுமான டாக்டர் சுவரங்கர் தத்தா, 'Temple’ என்று அழைக்கப்படும் இந்த டிவைஸைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. இது பணத்தை வீணடிக்க நினைக்கும் கோடீஸ்வரர்களுக்கான 'fancy toy' மட்டுமே. அதேபோல முதுமைக்கு ஈர்ப்பு விசையும் ஒரு காரணம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர் விளக்கமளித்துள்ளார். AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

விகடன் 6 Jan 2026 2:53 pm