Mahindra’s Suspension Secrets Revealed | Mr. Velusamy (President – Automotive, M&M) | XUV 7XO
'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. Chinese “எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. Chinese “எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கைக்கு முரணான பிளாஸ்டிக் ஸ்ட்ராவினைத் தவிர்த்து, இயற்கையான முறையில் பப்பாளி தண்டுகளை பயன்படுத்தி புதிய இயற்கையான ஸ்ட்ராவினை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து இயற்கை ஆர்வலர் செந்தில் கூறுகையில், நான் காலேஜ் படிக்கும்போதே அப்பாகூட சேர்ந்து இளநீர் விக்க ஆரம்பிச்சேன். காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் நெறைய தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன், ஒன்னும் செட் ஆகலன்னு ஊருகே திரும்ப வந்துட்டேன். அதுக்கு அப்பறம் தான் அப்பா பண்ண இளநீர் வியாபாரத்தையே நாமும் பண்ணலான்னு பண்ண ஆரம்பிச்சேன். இப்ப நான் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சி 12 வருசம் ஆச்சி. இதுல கடந்த ஏழு வருசமா பப்பாளி தண்டுலதான் ஸ்ட்ரா செஞ்சி வாடிக்கையாளருக்குக் கொடுக்குறேன். இயற்கையான முறையில இளநீர்ல கொடுக்குறோம். இயற்கையான முறையிலயே ஸ்ட்ராவும் கொடுக்கணும்னு யோசிச்சா என்ன? பிளாஸ்டிக் ஸ்ட்ரால்ல கண்ணுக்குத் தெரியாத கெமிக்கல்கள் இருக்கும். இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரா தயாரிக்கிறத்துக்கு முக்கியமா பாலிப்ரொப்லீன் பயன்படுத்துறாங்க. இதுனால மக்கள் இந்த ஸ்ட்ராவ்ல குடிக்கும்போது அவங்க குடிக்கிற பானத்துல பாலீத்தின் கலந்து, அவங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்துறது மட்டுமல்லாம... சுற்றுச்சூழலையும் ரொம்பவே பாதிக்குது. அதனால இயற்கையா பண்ணனும்னு முதல்ல பேப்பர் ஸ்ட்ராவ பயன்படுத்தி பார்த்தேன். அதுல ரெண்டு இழு இழுத்தாலே பேப்பரும் கரைஞ்சு போயிடுது. இது கதைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சி... அடுத்து என்ன பண்ணலான்னு யோச்சப்ப தான் கொட்டமுத்து இலைய ட்ரை பண்ணி பார்த்தேன். அதுல குழல் இருந்துச்சி. ஆனா, நீட்னஸ் இல்ல. அப்பறம் அல்லி தண்ட ட்ரை பண்ணலாம்னு பண்ணேன்... அதுல ஓட்டையே இல்ல. அப்படி ட்ரை பண்ணும் போது பசங்க பப்பாளி இலைய வச்சி விளையாடிட்டு இருந்தத பார்த்தேன். பப்பாளி இலை தண்டுல குழலும் இருந்துச்சி. அதோட ஒரு முன இலையோடையும், மறு முன பப்பாளி தண்டோடையும் ஜாயின்ட் ஆகி இருந்துச்சி. தண்டுலேந்து குழல் எடுத்து பார்த்தா ரெண்டு சைடும் லாக் ஆகி இருக்குறதுனால வண்டு, பூச்சி, தூசிலா இல்லாமா ரொம்ப ஃபிரஷ்ஸா இருந்துச்சி. முதல்ல ஸ்ட்ரா செஞ்சி வீட்ல பயன்படுத்தி பார்த்தோம். நல்லா இருந்துச்சி திரும்ப கடையிலையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அந்த குழல் ரெண்டு நாள் தான் ஃபிரஸ்ஸா இருக்குமே. ரெண்டு நாளுக்கு அப்பறம் புதுசா குழல் செய்யனும். ஆரம்பத்தில் எல்லாரும் காச மிச்சம் பண்ண இப்படி செய்யுறதா அப்படி இப்படின்னுல்லாம் பேசுனாங்க. மக்களுமே ஆரம்பத்துல விரும்பல. நான் சொல்லி புரியவச்சேன். இப்ப மக்களும் பாராட்டுறாங்க. முன்னாடி எல்லாம் நாளு பேரு இளநீர் குடிக்க வந்தா ரெண்டு பேரு என்ன ஸ்ட்ரான்னு கேட்குறது வழக்கம். ஆனா, இப்போலாம் வர நாளு பேருமே இப்படி பண்றது ரொம்ப நல்ல விஷயம்னு பாராட்டுறாங்க. அப்ப காச மிச்சம் பண்ணுறதா சொன்னவங்க எல்லாரும் பரவல்லப்பா இத்தன வருசமா தொடர்ந்து செய்யுறியேன்னு ஆச்சர்யபடுறாங்க. நா பண்ணுனத பார்த்துட்டே மாயரத்துலே நெறைய பேர் பண்ணாங்க. ஆனால், யாரும் தொடர்ந்து பண்ணல. இயற்கை சார்ந்து நம்மளால முடிஞ்சதை கண்டிப்பா செய்யணும். அப்படி பண்ணலன்னா கூட இயற்கைக்கு முரணா எதுவும் பண்ணாம இருந்தாகூட போதும். முப்பது சதவீத மக்கள் மட்டும்தான் இயற்கையான கரும்பு ஜூஸ், இளநீர்லாம் குடிக்கிறாங்ளே! ஒடம்பு முடியலன்னு டாக்டர்ட்ட போனா அங்க டாக்டர் சொல்லுவாரு, இளநீர் குடிங்கன்னு. அப்பதான் இளநீயோட அருமையே தெரியும். இப்டி மக்கள் எல்லாரும் டாக்டர் சொல்றப்ப மட்டும் இல்லாமா இயற்கைக்கு உகந்த குளிர்பானங்கள எப்போதும் குடிங்க என்று கூறினார்.
Tata Punch Command Max: அட்டகாச லுக்; ஸ்மார்ட் இன்டீரியர்! | Launch Photo Album
Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.. எம்பூட்டு ஹைலைட்ஸ்!
‛ஜனநாயகன்’ படத்தைவிட கார் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கார் XUV7XO. ‛ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிடுச்சு; ஆனால், மஹிந்திராவின் புது ரிலீஸ் புக்கிங்கில் அள்ளிடுச்சு! ஆம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறதாம் XUV7XO காருக்கு! அப்போ XUV7OO என்னாச்சு? என்று பலர் கேட்கிறார்கள். இரண்டுமே ஒரே கார்தான். அதாவது, XUV7OO-வின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் XUV7XO. ஆனால், பார்ப்பதற்கு XUV3XO-வின் அண்ணன் போன்று இருக்கும் இந்த 7 சீட்டர் காரை, ரூ.13.66 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. இதன் டாப் மாடல் 24.92 லட்சம் வரைக்கும் போகிறது. அதாவது - ஆன்ரோடு விலை சுமார் 15.90 லட்சத்தில் இருந்து 29.55 லட்சம் வரைக்கும் இந்தக் காரை வாங்க முடியும். XUV7XO XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்! AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO. ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது. இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன. 6 and 7 Seater 540 degree camera அந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இந்த XUV7XO காரிலும் தொடர்கிறது. இது ஒரு ப்ராக்ஸிமிட்டி சென்சார் அடிப்படையில் பாப்-அவுட் ஆகும் விதம் அழகாக இருக்கும். ஹைவேஸிலும் ஸ்டெபிலிட்டி கிடைக்க உதவும். இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். ஸ்டீயரிங்கும் XEV 9S காரில் இருக்கும் அதே செட்அப்தான். ரீச் மற்றும் ரேக் என எல்லா ஆப்ஷன்களும் உண்டு. உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் எல்லோருக்குமே இந்தக் கார் ஓட்டுவதற்குப் பக்காவாக இருக்கும். பொதுவாக, கார்களில் 360 டிகிரி கேமராதானே இருக்கும்; இதில் 540 டிகிரி கேமரா இருக்கும் என்கிறது மஹிந்திரா. டாப் வியூவையும் சேர்த்துச் சொல்கிறார்கள். இது 6 மற்றும் 7 சீட்டர் வேரியன்ட்டில் வருகிறது. பாட்டுக் கேட்க Dolby Atmos சரவுண்ட் சிஸ்டம், ஏதோ தியேட்டர் எஃபெக்ட்டில் இருக்கிறது. டாப் 2 ட்ரிம்களில் இருக்கும் கேப்டன் சீட்களின் சொகுசு வேற லெவலில் இருக்கும். அட, இதுவும் வென்ட்டிலேட்டட்தான். குளுகுளுவென்று பயணிக்கலாம். நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் என சொகுசு. என்ன, பின் பக்கம் 3-வது வரிசைதான் பேருக்கு இருக்கிறது. இதில் 3 பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். டாப் வேரியன்ட்டான AX7-ல் Boss Mode என்றொன்று உண்டு. முன் பக்கப் பயணியின் சம்மதம் இல்லாமலே பின்னால் உட்கார்ந்து கொண்டு முன் சீட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வது. Stylish Interior இதில் சஸ்பென்ஷன்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதிலுள்ள Davinci Damping எனும் தொழில்நுட்பம், ஓட்டுதலில் இந்தக் காரை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம். ஏற்கெனவே தார் ராக்ஸில் இருக்கும் Frequency Selective Dampers (FSD) எனும் கிட்டத்தட்ட அதே டெக்னாலஜிதான். இதன் சப்ளையர் Tenneco call DaVinci dampers. டெரெய்னுக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் ஃபோர்ஸ் அட்ஜஸ்ட் ஆகும் விதம் அருமையாக இருக்கும். மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. 203hp பவர் மற்றும் 380Nm டார்க் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்; 185hp பவர் மற்றும் 450Nm டார்க் தரும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின். இதில் Zip, Zap மற்றும் Zoom என 3 டிரைவிங் மோடுகள் உண்டு. இந்த டீசல்தான் பலரது சாய்ஸாக இருக்கிறது. 75% டீசல்தான் விற்கிறதாம். ஆனால், டீசலுக்கு எப்படியும் 1.25 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும். என்னது, சிஎன்ஜியா? அது மஹிந்திராகிட்டதான் கேட்கணும்? இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் செம ஸ்மூத்தாக இருக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் 13 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் 15 கி.மீ. இதுவே டீசல் காரின் அராய் 17 கிமீ - 16.57 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. XUV7XO இது மஹிந்திரா சொல்லும் மைலேஜ்! நீங்கள் யாராவது XUV7XO வாங்கினால், எம்புட்டு மைலேஜ் கிடைக்குதுனு சொல்லுங்களேன்! இன்னொரு விஷயம் - இனி XUV700-வின் 5 சீட்டர் கிடையாது!
Yamaha: யமஹாவுக்கு தமிழ்நாடு ஏன் முக்கியம்?
யமஹாவின் தொழிற்சாலை தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில்தான் செயல்பட்டு வருகிறது. அதனாலோ என்னவோ அதன் கவனம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் மீது பதிந்து இருக்கிறது. இது பற்றி தெரிந்துகொள்ள யமஹாவின் மூத்த துணை தலைவர் ரவிந்தர் சிங்கிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். பொங்கல் திருவிழா கலை கட்டும் இந்த நேரத்தில் இறங்கி அடித்து யமஹா விளையாடுவது ஏன்? தமிழ்நாடு சந்தையில் யமஹாவின் தற்போதைய மார்கெட் ஷேர்தான் என்ன? குறிப்பாக சென்னை விற்பனை நிலவரம் எப்படி உள்ளது? ரவிந்தர் சிங் ``2025-ஆம் ஆண்டில் யமஹாவின் மொத்த இந்திய விற்பனையில் சுமார் 25% பங்களிப்பை தமிழ்நாடு வழங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், தமிழ்நாட்டை மட்டும் எடுத்துப் பார்த்தால், அதில் சென்னை நகரம் மட்டும் 27% விற்பனையைத் தந்துள்ளது. யமஹாவுக்குத் தமிழ்நாடு என்பது எப்போதுமே ஒரு பிரீமியம் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் சந்தை. ``தமிழ்நாட்டில் யமஹாவிற்கு போதுமான அளவு விற்பனை மையங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இருக்கிறதா? ``தமிழ்நாடு முழுவதும் தற்போது சுமார் 100 ‘Blue Square’ எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த Blue Square ஷோரூம்கள் என்பது வெறும் விற்பனை மையங்கள் மட்டுமல்ல; யமஹாவின் முன்னணி பைக்குகள், ஸ்கூட்டர்கள், அசல் உதிரிபாகங்கள் அப்பேரல்ஸ் விற்பனை, சர்வீஸ், கம்யூனிட்டி அனுபவம் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் ஆல்-இன்-ஒன் டெஸ்டினேஷன் அது. மேலும், Blue Streaks ரைடர்களுக்கான கம்யூனிட்டி மையங்களாகவும் இவை செயல்படுகின்றன. ரைட்ஸ், இவென்ட்ஸ் மூலம் யமஹா ரசிகர்கள் ஒன்றிணையும் இடமாக இந்த ஷோரூம்கள் மாறியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் Tier-2, Tier-3 நகரங்களில் Blue Square நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ‘Call of the Blue’ என்ற எங்கள் முழக்கத்தின் நோக்கமே, எங்கு யமஹா வாடிக்கையாளர் இருந்தாலும், அங்கு ஒரே மாதிரியான பிரீமியம் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அனைத்து யமஹா அவுட்லெட்களையும் Blue Square-ஆக மாற்றுவதுதான் எங்கள் குறிக்கோள். அதேப் போல Blue Streaks ரைடிங் கம்யூனிட்டியை விரிவுபடுத்துவது, Track Days, COTB Weekends, கம்யூனிட்டி ஈவென்ட்ஸ் போன்ற ரைடர்-சென்ட்ரிக் செயல்பாடுகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், Yamaha Training Academy மூலம் முன்கள ஊழியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி அளித்து, அனைத்து டச் பாயின்ட்களிலும் ஒரே மாதிரியான உயர்தர சேவையை உறுதி செய்கிறோம். என்கிறார்,
ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள் - பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!
குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. பனி மூட்டம் அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அடர்த்தியான பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேற்று கோத்தகிரியைச் சூழ்ந்த அடர்த்தியான பனி மூட்டத்தால் போக்குவரத்து முடங்கியது. வாகனங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடுமையான குளிர் நிலவியதால் தொழிலாளர்கள் தங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்கள் பகல் பொழுதிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அடர்த்தியான பனி மூட்டம் நேற்றைய நாள் முழுவதும் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பனி மூட்டம் கோத்தகிரி அருகில் உள்ள புதூர் பகுதியில் சாலையில் விழுந்த அந்நிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் மூலம் அந்த மரம் அகற்றப்பட்டு பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 39 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை முதல் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.!
Mahindra XUV 7XO Review | Pros, Cons, Mileage & Real-World Verdict | Full Analysis in Tamil
Rain: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்துவிட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 12 முதல் ஜன. 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜன. 11,12 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 C