SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

தமிழ்நாடு: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 நாள்கள் தொடர் மழை! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். அதன் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறலாம். இதனால், அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும். மழை - கோப்புப் படம் வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23, 2025) தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வரும் 24-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. இங்கு கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். 'பிசினஸ் தொடங்கப் போறீங்களா?' - இந்த 10 கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ்!

விகடன் 21 Nov 2025 8:20 am

நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி' - குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவாரப் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. அத்துடன், அவ்வப்போது மலையடிவாரப் பகுதிகளில் உள்ள பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், அருணாச்சலபுரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன. கோயிலுக்குள் புகுந்த கரடி பகல் நேரங்களில் புதர்களில் மண்டியிருக்கும் கரடிகள், மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. வீடுகள், டீக்கடைகள், உணவகங்களில் புகுந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால், ஆத்திரத்தில் அங்கிருக்கும் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் செல்கிறது. ஒற்றை கரடியாக நடமாடிய நிலையில், சமீப காலமாக கரடிகள் கூட்டம், கூட்டமாக உலா வருகிறது. உணவு தேடி அலைவதால், ஆக்ரோஷத்தில் தனியாகச் செல்வோரை தாக்கி வருவதால், வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவோர் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான கணபதி என்பவர், வழக்கம் போல் டீ குடிப்பதற்காக ஆம்பூர் மெயின் ரோட்டில் இருந்து தாட்டன்பட்டிக்கு மாலை சுமார் 5 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள டீக்கடை பின்புறம் பதுங்கியிருந்த இரண்டு கரடிகளில் ஒரு கரடி, கணபதி மீது பாய்ந்து நகங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், சுதாரித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதில் இரண்டு கரடிகளும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. இதனையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். குடியிருப்புக்குள் புகுந்த கரடி இது குறித்து, கரடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கணபதியிடம் பேசினோம். “தினமும் மாலையில் டீ குடிப்பதற்காக அந்த டீக்கடைக்கு செல்வேன். ஆனால், அன்று டீக்கடை பூட்டியிருந்தது. இதனால், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தேன். என்னைப் பார்த்த கரடிகள் உறுமல் சத்தம் எழுப்பியது. நான் ஓடுவதற்குள் என்னை தாக்கியது. கரடியால் எனக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது” என்றார். தன்னந்தனியாக உலா வந்த கரடிகள், தற்போது கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை

விகடன் 21 Nov 2025 7:09 am

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 8:58 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 8:31 pm

RollsRoyce: முதல்ல அட்லி; இப்போ நயன்தாரா! 10 கோடி ரூபாய்க்கு இந்தக் காரில் என்ன இருக்கு?

ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் CEO ஆன Chris Brownridge இப்படிச் சொல்லியிருந்தார். ‛‛எங்கள் காரைப் போக்குவரத்துக்காக மட்டும் வாங்கமாட்டார்கள் விஐபிக்கள். அதைத் தாண்டி எங்கள் கார் ஒரு Work of Art. ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்!’’ என்றார்.  ‛‛ரோல்ஸ்ராய்ஸ் காரை ஆன் செய்யும்போது பானெட்டில் இருந்து வெளிவரும் இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலையைப் பார்த்தாலே கூஸ்பம்ப் ஆகிறது!’’ என்றார், ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கிய ஒரு பிரபல நடிகை.  நிஜம்தான்; ரோல்ஸ்ராய்ஸ் ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பலாகத்தான் இருந்து வருகிறது. இந்திய விஐபிக்களில் அமிதாப் பச்சன், அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா.. நம் ஊரில் ஷங்கர், விஜய், தனுஷ் என்று ஏகப்பட்ட செலிபிரிட்டிகள் ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகைகளில் முதன் முறையாக நயன்தாராவும், இளம் இயக்குநர்களில் முதன்முறையாக அட்லியும் சேர்ந்துள்ளார்கள். ‛முதன் முறையாக’ என்று அடைமொழி சொல்வது இவர்கள் வாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக! ஆம், இந்தியாவின் காஸ்ட்லி எலெக்ட்ரிக் லிமோசின் காரான ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எனும் மாடலை வாங்கியிருக்கிறார்கள் இருவரும்! Nayanthara with Rolls Royce Spectre இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் பிறந்த தினமான நவம்பர் 18 அன்று, இந்த எலெக்ட்ரிக் காரைப் பரிசளித்திருக்கிறார் தனது காதல் மனைவிக்கு. இந்த மாதத் தொடக்கத்தில் அட்லியும் இதை வாங்கியிருந்தார். கறுப்பு நிற ஸ்பெக்டரில் அட்லி விமான நிலையத்தில் இறங்குவது போல உள்ள வீடியோவும், நீல நிற Black Badge ஸ்பெக்டர் காரின் முன்பு நயன்தாரா தனது குடும்பத்துடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களும் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.  Atlee 2023-ல் ஏற்கெனவே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் மேபேக் (Mercedes Maybach) காரையும், 2024-ல் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் GLS600 காரையும் பரிசளித்து இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த வரிசையில் தற்போது ரோல்ஸ்ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரும் இணைந்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.5 கோடி ரூபாயில் ஆரம்பிக்கிறது. ஆன்ரோடு விலைக்கு வரும்போது இது சுமார் 10 கோடியைத் தொட்டிருக்கும். 10 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது?  ரோல்ஸ்ராய்ஸ், ஒரு பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம். பொதுவாக, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை ஒரு ஹாரர் நிறுவனம் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. தனது கார்கள் எல்லாவற்றுக்குமே பேய்களின் பெயராக வைத்து அதகளம் பண்ணுவதுதான் ரோல்ஸ்ராய்ஸின் ஸ்டைல். அந்த நிறுவனத்தின் கார்களின் பெயர்களைப் பாருங்கள். ‘கோஸ்ட்’, ‘பேந்தம்’ – இப்படிப் பேய்ப் பெயரை வைப்பதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.  Rolls Royce Spectre ஸ்பெக்டர் என்பதை வேறு மாதிரி அர்த்தங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான ஒளிரும் தன்மை, நிழல் - இப்படியும் சொல்லலாம். புரியுறது மாதிரி சொல்லணும்னா, சட்டென அமானுஷ்யமான உருவம் ஒன்று வெளிச்சக் கீற்றுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்பெக்டர்.  பெயருக்கு ஏற்றபடி எங்கே பார்த்தாலும் இல்லுமினேட் ஆகும் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர். பக்கத்தில் போய் நின்றால், நம் உருவமே அப்படி மின்னுகிறது. இதன் கிரில் க்ரோம் வேலைப்பாடு அப்படி! இந்த எல்இடி ட்ரிப்பிள் ஸ்டேஜ் ஹெட்லைட்கள், பேன்ட்டம் காரில் இருப்பவை. இதுவும் இல்லுமினேஷனுக்குப் பெயர் பெற்றதுதான். இரவு நேரங்களில் கிட்டத்தட்ட 500 மீட்டர் வரை வெளிச்சம் பீய்ச்சியடிக்கும். அங்கேயும் ரோல்ஸ்ராய்ஸின் RR லோகோ ஒரு மாதிரி இல்லுமினேட் ஆகிறது.  ஸ்பெக்டர், பெரிய ஆலப்புழா படகுபோல் இருக்கும்.5.5 மீட்டர் இதன் நீளம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 5,475 மிமீ. இதன் அகலமே 2 மீட்டருக்கு மேல்!  ஸ்பெக்டரின் மிகப் பெரிய கவர்ச்சியே, Spirit of Ecstasy என்று சொல்லக்கூடிய, இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலைதான். காரை ஆன் செய்தால் பானெட்டில் இருந்து பாப்-அப் ஆகும் அந்தச் சிலையின் அழகு நிஜமாகவே கூஸ்பம்ப் மொமென்ட்தான்! இதில் பென்ஸ் ஆஃப்ரோடு காரைவிடப் பெரிய அலாய் வீல்கள் இருக்கின்றன. 23 இன்ச். வேறெதிலும் இத்தனை பெரிய வீல்கள் இல்லை. அதுவும் 3D எஃபெக்ட்டில் மின்னுகின்றன. இதுவும் இல்லுமினேட்டட்தான்.  Spirit of Ecstasy ஏரோடைனமிக் வேலைப்பாட்டில் பென்ஸ், பிஎம்டபிள்யூவே பட்டையைக் கிளப்புகின்றன. ரோல்ஸ்ராய்ஸ் ஏனோதானோ என்றா இருக்கும்? இதன் ஏரோடைனமிக் Co-Efficient Drag Force –ன் அளவு வெறும் 0.25cdதான். காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் ஒரு காருக்கு, அதன் டிராக் ஃபோர்ஸ்தான் மிக முக்கியம். Star Effect Interior 5,475 மிமீ நீளம் இந்த அளவை Co-Efficient Drag என்பார்கள். இந்த அளவு குறையக் குறையத்தான் ஸ்டெபிலிட்டி கிடைக்கும். அதற்கு காரின் டைனமிக்ஸில் நல்ல வேலை பார்ப்பார்கள் கார் டிசைனர்கள். 0.30cd–க்கு உள்ளே இருக்கும் எந்தக் காருமே நிலைத்தன்மையில் பெஸ்ட்டாக இருக்கும். அதனால் ஸ்பெக்டர் ஓடாது; ஆடாமல் பறக்கும்!  இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் எத்தனை என்று தெரியவில்லை. ஆனால், தரையில் கிட்டத்தட்ட ஒட்டிப் போய்த்தான் இருக்கிறது. ஸ்பெக்டரின் அடிப்பாகம். இங்கேதான் 102kWh சக்தி கொண்ட பெரிய பேட்டரியைப் பொருத்தியிருக்கிறார்கள். இதன் பின் பக்கம் ரோல்ஸ்ராய்ஸின் இன்னொரு காரான Wraith கார் போலவே இருக்கும்.  நகை வடிவ கடிகாரம் இன்டீரியரைப் பொறுத்தவரை உள்ளே நுழைந்ததும், வைரம் போன்று ஒரு கடிகாரம் க்ளாஸிக் ஸ்டைலில் கலக்கும். இந்த ஸ்பெக்டரில் பல கூலான ஃப்யூச்சர்கள் உள்ளன. முக்கியமாக, Star Light எஃபெக்ட். கதவுகள், ரூஃப் என்று காரைச் சுற்றிலும் வதவதவென நட்சத்திரங்கள் மினுக்குகின்றன. சட்டென்று ஒரு இரவு நேர பப்புக்குள் நுழைந்ததுபோல் வசீகரமாக இருக்கும் இதன் இன்டீரியர். ஒரு மிகப் பெரிய ஸ்பெஷல் - இந்தப் பாகங்கள் எல்லாம் கைகளாலேயே நெய்யப்பட்டவை. எல்லாமே Handmade Craftsmanship.  உள்ளே மர வேலைப்பாடுகள்தான் அதிகமாகத் தெரிந்தன. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், Hold பட்டன், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் எல்லாமே வலதுபக்கம் கிளஸ்ட்டருக்குக் கீழே ஒரு அரை வட்ட வடிவ பேனல்… Massage Seats அதற்கும் கீழே இருப்பது ஸ்டைலாக இருக்கும். ஆல் அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் எனும் கட்டுமானத்தில், எடைக் குறைப்புக்காக அதிக ஃபைபர், ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் என்று பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறார்கள் டிசைனர்கள். அப்படியும் இதன் எடை 2,890 கிலோ.  hand made seats இது ஒரு 2 டோர் கூபே. அதனால், 2 கதவுகள்தான் இருக்கும். டிக்கியோடு சேர்த்து 3. உள்ளே 4 பேர் வேண்டுமானால் தாராளமாகப் போகலாம். பின் பக்கம் செல்பவர்களுக்குக் கதவு கிடையாதே.. அதனால், முன் சீட்டை மடித்துத்தான் உள்ளே போக வேண்டும்.  ஸ்பெக்டரில் இரண்டு Separately Excited Synchronous Motor (SSM) மோட்டார்கள் உள்ளன. இதன் பவர் 593bhp மற்றும் டார்க் 900Nm டார்க். இது கிட்டத்தட்ட இனோவா காரின் பவருக்கு 3 மடங்கு அதிகம். 0–100 கிமீ–யை வெறும் 4.5 விநாடிகளில் தொடும் இந்த ஸ்பெக்டர். இதில் சாதாரண 22kW ஹோம் சார்ஜரில் சார்ஜ் செய்தால், சுமார் 5.30 மணி நேரங்களில் 100% ஆக்கிவிட்டுப் பயணத்தைத் தொடரலாம். இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு. 50kW (DC) ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால், 10-80% சார்ஜிங்கை 95 நிமிடங்களில் ஏற்றிவிடலாம். 34 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் 195kW (DC) அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கும் உண்டு.  இது சிங்கிள் சார்ஜுக்கு (WLTP)படி 530 கிமீ போகும் என்கிறது ரோல்ஸ்ராய்ஸ். ஆனால், ரியல் டைமில் ஒரு தடவை சார்ஜ் போட்டுவிட்டு சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போய்விட்டு ரிட்டர்ன் வரலாம்; இல்லையென்றால் பெங்களூர் போகலாம்! நயன்தாரா, அட்லி என்று விஐபிக்கள் ஸ்பெக்டரை வாங்கினாலும் - சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் பில்டர் உரிமையாளர் யுவராஜ் என்பவர்தான் இந்தக் காரின் முதல் வாடிக்கையாளர்.  2 கோடி ரூபாய் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் காரில் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள், பெரிய 108.2kWh பேட்டரி பேக், சிங்கிள் டச்சில் மடியும் சீட்கள் எனப் பல விஷயங்கள் இருந்தாலும்…. செலிபிரிட்டிகள், 5 மடங்கு விலை அதிகமாக இருக்கும் ரோல்ஸ்ராய்ஸுக்குப் போவதற்குக் காரணம் ஏன்?  அந்த ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்தான்! 

விகடன் 19 Nov 2025 7:39 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 7:31 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 pm

அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?

நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்ற தகவலோடும், குள்ள நரிக்கென தனியாக- அதுவும் நாட்டிலே முதன்முறையாக - அமைக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சரியத்தோடும் அங்கு பார்வையிட சென்றோம். அண்மையில், 17.11.2025 அன்று “வனமும் வாழ்வும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் பயிற்சி அளிக்க சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களை கொண்டு, 17.11.2025 மற்றும் 18.11.2025 ஆகிய இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தின. “வனமும் வாழ்வும்” திட்ட நோக்கம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்திற்கு 25 ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒரு ஆசிரியர் 20 மாணவர்கள் வீதம் வனம் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி 17.11.2025 அன்று அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்த திட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலரால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 20,000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு சான்றிதழ் பயிற்சியை முன்னெடுத்துள்ளது நம் தமிழ்நாடு அரசு. வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் ஏன் தேவை? சேலம் மாவட்டத்தில் நாட்டிலேயே முதன்முறையாக வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் அமைந்துள்ளது. ஏனெனில், சேலம் மாவட்டத்தில் பரவலாக காணப்படும் மற்றும் வாழப்பாடி போன்ற பகுதிகளில் துன்புறுத்தப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள வங்குநரியை பாதுகாக்கவும் , அதை பற்றி பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன? வங்குநரி ஆய்வு மையம் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தது? முக்கியமான ஆய்வு பகுதியாக, வங்குநரி இருந்தாலும், மேலும் அழிவின் விளிம்பில் உள்ள முள்ளெலி, எறும்புத்தின்னி மற்றும் அழிந்து வரும் பறவையினங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அழிவின் விளிம்பிலுள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப்புலி மற்றும் கூம்புத்தலை மஹ்சீர் மீன் ஆகிய உயிரினங்களை பாதுகாப்பதற்காக ரூ. 1 கோடி செலவில் ஒரு முன்னோடி திட்டத்தைத் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் ஆய்வு மையத்தில் என்ன சிறப்பு? வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையத்தை பார்வையிட்டோம். அங்கு நரிகளின் வகைகள், அதன் வாழ்விட அமைப்புகள், எலும்புக் கூடு அமைப்பு மற்றும் இயற்கை சூழலில் காண்பது போன்ற தத்ரூபமான மாதிரிகள் ஆகியவை உள்ளடங்கிய நவீன புரொஜெக்டர் வசதியுடன், அதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மேலும், மணக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வங்குநரி மற்றும் விலங்குகள்–தாவரங்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், சாதாரண பள்ளி வகுப்புகள் போலவே தனியாக நடத்தப்படுகின்றன என வன உயிரின ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் வனமும் வாழ்வும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பேசிய போது, இந்த பயிற்சி எங்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், 20 மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சான்றிதழ் பெற வைப்பதோடு நின்றுவிடாமல், அந்த 20 மாணவர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வை அவர்கள் மூலம் இன்னும் பல மாணவர்கள் அறியும்வண்ணம் பரப்புவோம் என்றும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வனத்துறைக்கு நன்றியையும் தெரிவித்தனர். வனத்துறை அலுவலரிடம் கேட்ட போது, இது அரசின் புதிய முயற்சி, நிச்சயம் பல மாணவர்கள் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று சமூக சமநிலைக்கான தங்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். “வன உயிரினங்கள் மனிதரின் மதிப்புகளின் ஓர் அங்கம்; ஆகவே வன உயிரினங்களை பாதுகாப்போம்.” சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

விகடன் 19 Nov 2025 2:47 pm