SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

நெல்லை: சுவர் ஏறிக் குதித்து கோயிலுக்குள் புகுந்த கரடி; துணிகளைக் கடித்து ஆக்ரோஷம்;அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக கரடிகள் வனப்பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறி பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி விடுகின்றன. கரடி இரவு நேரங்களில் வீடு, கடை, கோயில்களுக்குள் புகுந்து பிடித்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷத்தில் அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், களக்காடு அருகிலுள்ள பெருமாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கரடி, அங்குள்ள அம்மன் கோயிலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து நுழைந்து உணவு தேடியுள்ளது. உணவு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்த துணி மூட்டைகளைக் கடித்து குதறியுள்ளது. பின்னர் கோயிலில் இருந்து வெளியேறி கிராமத்தின் சாலை வழியே செளகரியமாக நடந்து சென்றுள்ளது. குடியிருப்புக்குள் புகுந்த கரடி இந்தக் காட்சிகள், கோயிலின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. கரடிகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரடி மட்டுமல்லாமல் சமீப நாட்களாக யானைகள், காட்டுப்பன்றிகளும் மலையடிவார கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து மக்களை அச்சப்படுத்தி வருகின்றன. சிறுத்தைகளும் வீடுகளுக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, நாய்களைக் கடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

விகடன் 18 Dec 2025 12:49 pm

ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!

ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் 'வானவில் தீவு' என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தீவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியது. இது பார்ப்பதற்கு கடல் இரத்தமாக மாறியது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிற மாற்றத்திற்குப் பின்னால் ஒரு தெளிவான அறிவியல் காரணம் உள்ளது. ஹோர்முஸ் தீவின் மண் மற்றும் பாறைகளில் 'ஹெமடைட்' (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) தாது மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. வறண்ட காலங்களில் இந்தச் சிவப்பு மண் நிலப்பரப்பிலேயே இருக்கும். Today’s rain on Hormuz Island in southern Iran caused the seawater along the shore to turn red, creating striking scenes. pic.twitter.com/wU4xhZKKOa — Weather Monitor (@WeatherMonitors) December 16, 2025 ஆனால், பலத்த மழை பெய்யும்போது, மலையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் இந்தச் சிவப்பு மண்ணை அரித்துக்கொண்டு வேகமாக கடலை நோக்கிப் பாய்கிறது. இவ்வாறு டன் கணக்கிலான சிவப்பு மண் கடலில் கலப்பதால், கடற்கரை ஓரத்திலுள்ள நீல நிற நீர் முற்றிலும் மறைந்து இரத்தச் சிவப்பாக மாறுகிறது. இந்தத் தீவின் மண் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, இது பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மிக முக்கியமானது. இங்குள்ள சிவப்பு மண்ணை உள்ளூர் மக்கள் 'சுராக்' (Surakh) என்று அழைக்கிறார்கள். இது உலகில் உண்ணக்கூடிய ஒரே மண் வகையாகக் கருதப்படுகிறது. அவர்கள் இந்த மண்ணை ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தி ரொட்டி, ஊறுகாய்களில் சேர்க்கின்றனர். மேலும், இந்த மண்ணிலிருந்து பெறப்படும் தாதுக்கள் பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வு முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையோ அல்லது வேதிப் பொருட்களோ இல்லை என்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மழை நின்ற சில நாட்களில் இந்தத் தாதுக்கள் கடலின் அடியில் படிந்துவிடுவதால், நீர் மீண்டும் தனது இயல்பான நிறத்திற்குத் திரும்பிவிடும். இத்தகைய அபூர்வமான இயற்கை நிகழ்வைக் காண்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்குப் படையெடுக்கின்றனர். Israel vs Iran conflict : ஈரான் சறுக்கியதா சாதித்தா? | Decode

விகடன் 18 Dec 2025 11:29 am

கொடைக்கானல்: 'பனிவிழும் மலர்வனம்' - பனித்தூவலின் பரவசத்தில் கொடைக்கானலின் மலை அழகு | Photo Album

பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் பனித்தூவலில் பரவசம் கொடைக்கானல் ரீல்ஸ்ல பார்த்து, கூகுள் மேப் போட்டு, கொடைக்கானல் கிளம்புறீங்களா? - உயிரே பறி போகலாம்... உஷார்!

விகடன் 18 Dec 2025 7:20 am

சில விலங்குகள் தங்கள் குட்டிகளையே சாப்பிடுவது ஏன் தெரியுமா?

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது என்று கூறியிருக்கிறார். அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன. எனவே, இவை தங்கள் குட்டிகளை உண்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.​ ஆனால் மீன்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான முட்டைகளையோ, குட்டிகளையோ ஈனுகின்றன. இவற்றிடம் தான் இந்தப் பழக்கம் அதிகம் காணப்படுகிறது” என்கிறார். Fish சில குட்டிகளை மட்டும் ஏன் உண்கின்றன? சிலந்தி, மீன் மற்றும் பூச்சி இனங்களில் இது அதிகம் நடக்கிறது. குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைக்காத சூழலில், சில குட்டிகளைத் தாய் உண்பதன் மூலம், மீதமுள்ள குட்டிகளுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது.​ நாய், பூனை மற்றும் பன்றி போன்ற விலங்குகள், தங்கள் குட்டிகளில் எவை பலவீனமாகவோ அல்லது இறந்து பிறந்தாலோ, அவற்றை உண்டுவிடும். பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை மீண்டும் பெறத் தாய் விலங்கு இப்படிச் செய்கிறது.​ மேலும் எலி மற்றும் முயல் போன்ற சிறிய பாலூட்டிகளில் இது அதிகம் காணப்படுவதாகவும் அனீஷ் கூறுகிறார்.

விகடன் 15 Dec 2025 2:33 pm