SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார். பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட். அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை. Campbellia aurantiaca மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர். எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர். 175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விகடன் 15 Dec 2025 7:04 am

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக் இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள். எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம். என்றார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்றார். Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378

விகடன் 14 Dec 2025 9:05 am

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக் இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள். எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம். என்றார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்றார். Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378

விகடன் 14 Dec 2025 9:05 am

கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album

காலை 08:20 போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 08:45 பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 09:00 - மூன்று ஆண் யானைகளையும் காண கூடிய மக்கள் காலை 10:00 - நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் மாலை 04:00 - கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் ஊருக்கும் யானைகள் மாலை 05:00 - அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்து கண்காணிக்கும் வனத்துறையினர் மாலை 06:00 - வனத்துறையின் Elephant Trackers யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர் மாலை 06:30 - வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள் மாலை 06:40 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் மாலை 07:30 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தன அதிகாலை 05:00 - சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என சாலை பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் மறுநாள் காலை 06:30 - அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை நுழைய வேகமாக செல்கின்றன மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை முழுவதும் வளம் வர தொடங்கின மறுநாள் மதியம் 02:00 - அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல் மறுநாளும் மாலை 04:00 வனத்திற்கு செல்ல தைல மாற காட்டைவிட்டு வெளியேற முயற்சி மாலை 06:00 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - தெலுங்குபாளையம் மாலை 06:30 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - காட்டம்பட்டி மாலை 07:00 - தென்னை தோப்புகளிருந்து வெளியேறி அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள் இரவு 08:45 - கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர் இரவு 10:30 - யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் - ஒன்னிப்பாளையம்

விகடன் 13 Dec 2025 8:18 pm

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! - கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் 'தானியக் களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன்ற முக்கியப் பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த செழிப்பான நிலம் மர்மமான முறையில் பாதாளத்திற்குள் மறைந்து வருகிறது. இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட ராட்சத மண்குழிவுகள் (Sinkholes) திடீரெனத் தோன்றி, விவசாய நிலங்களை விழுங்கி வருகின்றன. இந்தக் குழிகள் சில சமயங்களில் 100 அடிக்கும் மேல் அகலமாகவும், 160 அடிக்கும் மேல் ஆழமாகவும் இருப்பதுடன், வயல்களையும், சாலைகளையும் அச்சுறுத்துகின்றன. துருக்கி புதைகுழிகள் இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கான முதன்மைக் காரணம், கோன்யா சமவெளியின் தனித்துவமான புவியியல்தான். இந்தப் பகுதி சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்ற எளிதில் கரையக்கூடிய பாறைகளால் ஆன கார்ஸ்ட் நிலப்பரப்பு (Karst Terrain) ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக, நிலத்தடி நீர் இந்த பாறைகளைக் கரைத்து, பூமிக்கு அடியில் பெரிய குகைகளையும், வெற்றிடங்களையும் உருவாக்கியுள்ளது. முன்பு, இந்த நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்ந்தன. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களாக, காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளின் கலவையே இந்தச் சரிவுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் புதைகுழிகள் வேகமாகப் பெருகுவதற்கு முக்கியக் காரணம், மனிதர்களால் தூண்டப்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறைதான். கோன்யாவில் உள்ள விவசாயிகள், அதிக நீர் தேவைப்படும் சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களுக்காக, நிலத்தடி நீரை அதன் இயற்கை மறுசீரமைப்பு வீதத்தை விடப் பல மடங்கு அதிகமாக உறிஞ்சி எடுத்துள்ளனர். துருக்கி புதைகுழிகள் 1970கள் முதல், நிலத்தடி நீரின் மட்டம் சில பகுதிகளில் 60 மீட்டருக்கும் (197 அடி) அதிகமாகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 2 மீட்டர் அளவில் நீர்மட்டம் குறைவதாக கோன்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். நிலத்தடி நீர் வற்றிப்போகும் போது, குகைகளின் கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதரவு குறைகிறது. இதனால் திடீரென பூமி சரிந்து, பயங்கரமான புதைகுழிகளை உருவாக்குகிறது. சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான கிணறுகள் மூலம் தொடர்ந்து நீர் உறிஞ்சப்படுவது இந்த அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த திடீர் குழிகள் விவசாயிகளுக்கு பெரும் கவலையை அளித்துள்ளன. இரவில் தூங்கிக் காலையில் கண் விழித்தால், தங்கள் பண்ணை முழுவதும் புதிய பள்ளம் உருவாகியிருப்பதைக் கண்டு பல விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு சில புதைகுழிகள் உருவாவதற்கு முன், நிலத்தின் அடியில் இருந்து ஒரு பெரிய பாரம் தண்ணீரில் விழுவது போன்ற விசித்திரமான சத்தத்தைக் கேட்டதாக உள்ளூர் மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது நிலத்தடி குகையின் கூரை சரிவதையே குறிக்கிறது. இந்த அபாயம் காரணமாக, பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதும், குறைவான நீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாறுவதும் மட்டுமே, துருக்கியின் தானியக் களஞ்சியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

விகடன் 13 Dec 2025 1:22 pm

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான். பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது. ஆன்லைன் பேமென்ட் பவுனுக்கு ரூ.98,000-த்தை தொட்ட தங்கம் விலை; இப்போது தங்க நகை அடமானக் கடன் வாங்கலாமா?! ஆனால், அடுத்து உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்டெப்கள் இதோ... 1. எந்த நபருக்கு தவறுதலாக பணம் சென்றதோ, அந்த நபரிடம் பேசிப்பாருங்கள். அவர் உங்களைப் புரிந்துகொண்டு பணத்தை உடனடியாக அனுப்பிவிட்டால் பிரச்னை முடிந்தது... உங்களுக்கும் உங்கள் பணம் கிடைத்துவிடும். 2. ஒருவேளை, அந்த நபர் மறுத்தால், அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே 'ரிப்போர்ட்' செய்யுங்கள். 3. அடுத்ததாக, நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்களுக்கு வங்கியிடம் புகாரளியுங்கள். நேரில் செல்ல இயலவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள். 4. அப்போது பிரச்னை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளியுங்கள். NPCI லேட்டஸ்ட் சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால், அதை 5 முறை மட்டுமே பெற முடியும். இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மக்களே.! 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

விகடன் 12 Dec 2025 2:55 pm

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான். பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது. ஆன்லைன் பேமென்ட் பவுனுக்கு ரூ.98,000-த்தை தொட்ட தங்கம் விலை; இப்போது தங்க நகை அடமானக் கடன் வாங்கலாமா?! ஆனால், அடுத்து உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்டெப்கள் இதோ... 1. எந்த நபருக்கு தவறுதலாக பணம் சென்றதோ, அந்த நபரிடம் பேசிப்பாருங்கள். அவர் உங்களைப் புரிந்துகொண்டு பணத்தை உடனடியாக அனுப்பிவிட்டால் பிரச்னை முடிந்தது... உங்களுக்கும் உங்கள் பணம் கிடைத்துவிடும். 2. ஒருவேளை, அந்த நபர் மறுத்தால், அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே 'ரிப்போர்ட்' செய்யுங்கள். 3. அடுத்ததாக, நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்களுக்கு வங்கியிடம் புகாரளியுங்கள். நேரில் செல்ல இயலவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள். 4. அப்போது பிரச்னை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளியுங்கள். NPCI லேட்டஸ்ட் சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால், அதை 5 முறை மட்டுமே பெற முடியும். இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மக்களே.! 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

விகடன் 12 Dec 2025 2:55 pm