Karnataka: 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?
கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெரிவித்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள், புலிகள் காப்பக எல்லை பகுதிகளில் நடமாடி வரும் புலிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடலில் 16 புலிக்குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்திருக்கிறோம். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடுவித்து வருகிறோம். கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். குட்டிகளை அதன் தாயுடன் இணைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பிடித்த 3 புலிக் குட்டிகளையும் தாயுடன் இணைத்தோம். கடைசியாக பிடிக்கப்பட்ட 3 மாத குட்டியின் தாய் புலியை தேடும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. எங்களின் இந்த நடவடிக்கையால் எதிர்கொள்ளல்கள் குறையும் என்றனர். அதேவேளையில் , புலிக்குட்டிகளை வனத்துறையினர் முறையாகக் கையாள்வதில்லை என சுற்றுச்சூழல் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை!
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றிச் சுற்றித் திரிந்த 35 வயதுடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தடுமாறி நடமாடி, பின்னர் ஓர் இடத்தில் படுத்துக்கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. அத்துடன், யானையின் சாணம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அந்த யானை தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் படுத்திருந்தது கண்டறியப்பட்டது. திருநெல்வேலி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஆனந்த் உத்தரவின் பேரில், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. காட்டு யானைக்கு சிகிச்சை தென்காசி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன் முன்னிலையில், திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் மற்றும் டாக்டர் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். வனப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், மருத்துவக் குழுவினர் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளித்து, அதன் உடல்நிலையைச் சீராக்கினர். யானைக்கு நீர்ச்சத்து குறைபாடு, உணவு உட்கொள்ளாமை மற்றும் பலவீனம் ஆகியவை இருந்ததால், தொடர்ச்சியான திரவ ஊசிகள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. யானையின் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. காட்டு யானைக்கு சிகிச்சை தற்போது, யானை நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தானாகவே எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளது. உணவு உட்கொள்ளவும் தொடங்கியுள்ள இந்த யானை, வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக நலம் பெற்ற பின்னர், இயற்கையான வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை மீட்க வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனித வாழ்விடங்களுக்கு அருகே இருந்த இந்த யானையை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்து மீட்டது வனத்துறையின் திறமையான பணியாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
டிட்வா: சென்னை பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் குவிந்த குப்பைகள்; அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்
'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. Update: Cloudflare global outage resolved Kite services have been restored. You can now trade normally. We regret the inconvenience caused. https://t.co/gvDqEtCtWJ — Zerodha (@zerodhaonline) December 5, 2025 இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர். Cloudflare நிறுவனம் விளக்கம் இந்நிலையில் இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம். இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன. Cloudflare என்னதான் பிரச்னை? என்னதான் பிரச்னை? கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம். இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை. நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம். அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக : ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம். Cloudflare இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும். நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும். இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு விவகாரம் இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. Update: Cloudflare global outage resolved Kite services have been restored. You can now trade normally. We regret the inconvenience caused. https://t.co/gvDqEtCtWJ — Zerodha (@zerodhaonline) December 5, 2025 இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர். Cloudflare நிறுவனம் விளக்கம் இந்நிலையில் இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம். இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன. Cloudflare என்னதான் பிரச்னை? என்னதான் பிரச்னை? கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம். இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை. நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம். அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக : ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம். Cloudflare இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும். நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும். இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு விவகாரம் இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை
உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ). அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் நிகழ்த்தி வருகின்றனர் மாணவர்கள். அவ்வகையில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் ஏஐ ரோபோட்டிக் டீச்சரை உருவாக்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். ஏஐ ரோபோட் டீச்சர் சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்; இந்தியாவில் ₹1.25 லட்சம் கோடியில் 'Google AI Hub' - என்ன ஸ்பெஷல்? கிராமப்புறங்களை நோக்கி AI தொழில்நுட்பம் உத்தரப்பிரதேச மாநிலம், புலந்துசகரை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் ஆதித்யா என்ற மாணவர் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இவர் இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ரோபோடிக்ஸ் துறையில் எந்தவிதமான பயிற்சியும், முன் அனுபவமும் கிடையாது. அவரிடம் இருந்தது எல்லாம், கிராமப்புற மாணவர்களும் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணமே. 'சோஃபி' வகுப்பில் மாணவர்கள் உற்சாகம் தினமும் பள்ளி முடித்து அனைவரும் வீட்டுக்குச் சென்ற பின்பும், ஆதித்யா மட்டும் சர்க்யூட்டும் கையுமாக இருந்து பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பெண் வடிவத்தில் ரோபோட் டீச்சரை உருவாக்கி அதற்கு 'சோஃபி' என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த ஏஐ சோஃபி டீச்சர் நடத்தும் வகுப்புகளில் மாணவ–மாணவியர்கள் உற்சாகமாக கவனித்து, பல சுவாரசியமான கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #WATCH | Bulandshahr, UP | A 17-year-old student from Shiv Charan Inter College, Aditya Kumar, has built an AI teacher robot named Sophie, equipped with an LLM chipset. The robot says, "I am an AI teacher robot. My name is Sophie, and I was invented by Aditya. I teach at… pic.twitter.com/ArJYSsf39F — ANI (@ANI) November 29, 2025 துணிக்கடை பொம்மை டு ரோபோட் டீச்சர் துணிக்கடை மேனிக்யூன் பொம்மையை ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியுடன் இணைத்து, இதை அவர் உருவாக்கியுள்ளார். சோஃபியின் முக்கிய செயல்பாடு, பெரிய ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதே வகையான LLM சிப்செட் மூலம் இயங்குகிறது. இது ரோபோவால் கேள்விகளைப் புரிந்துகொண்டு இயல்பாக பதிலளிக்க உதவுகிறது. அன்றாடப் பொருட்களான பழைய லேப்டாப் பாகங்கள், எளிய சென்சார்கள் மற்றும் ஸ்பீக்கர் மாடியூல்கள் ஆகியவற்றை பயன்படுத்தியே இதை அவர் உருவாக்கியுள்ளார். தற்போது, சோஃபியால் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இந்தி மொழியிலும், எதிர்கால புதுப்பிப்புகளில் மற்ற மொழிகளிலும் பேச முடியும். பொது அறிவு, இயற்பியல் மற்றும் அடிப்படைக் கணக்கு உட்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், மனித ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்புகள் தடைபடாமல் இருக்கவும், மாற்று ஆசிரியராகச் செயல்படவும் இது பயனுள்ளதாக இருக்கும். முதற்கட்டமாக மாதிரி ஐடியாகவே இருக்கும் இது; எதிர்காலத்தில் முழுமையான ஏஐ டீச்சர் ரோபோட்டாக உருவாக வேண்டும் என்பதே ஆதித்யாவின் கனவே இருக்கிறது. ஏஐ ரோபோட் டீச்சர் AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி 'விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும்' ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆதித்யாவின் தந்தை காம்பவுண்டர் வேலை பார்க்கிறார். ரோபோட்டை தயார் செய்து முடிக்கும் வரை ஏற்பட்ட செலவுகளை ஆதித்யாவுக்காக அவரது தந்தை கடன் வாங்கி உதவியுள்ளார். இதுகுறித்து பேசும் ஆதித்யா, “இது இந்தியாவின் இரண்டாவது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட். சில நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாணவர்களுக்கு அன்றைய வகுப்புகள் இல்லாமலே போகிறது. இந்தப் பிரச்சனையை தீர்க்கவே நான் இதை உருவாக்கியுள்ளேன். விண்வெளி ஆராய்ச்சியாளராவதே என்னுடைய லட்சியம்” என்று கூறினார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவி இளம் சயின்டிஸ்ட்களை உருவாக்க வேண்டும், மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆதித்யாவின் இந்த ஆர்வத்தை பலரும் பாராட்டி, ஊக்குவித்து வருகின்றனர்.
Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, குறைந்த அழுத்த பகுதியாக மாறியிருக்கிறது. Rain Alert - மழை திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை 05-12-2025ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. வானிலை ரிப்போர்ட் Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா இதுதவிர இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி, இன்று இடியுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும். மிதமான மழை விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதிகளில் அடுத்த மழையைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி: நகரப் பகுதியில் ஓய்வெடுக்கும் பழம்தின்னி வவ்வால்கள்! | Photo Album
மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் விழுந்ததால் வெளியேறிய வௌவால்கள்; கிராம மக்கள் சோகம்!
சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?
பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ (Dasypeltis gansi) எனும் பாம்பு தான் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் தன்மையை கொண்டவையாக உள்ளது. ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் மெலிந்த உடலமைப்பையும், சிறிய தலையையும் கொண்டவையாக உள்ளன. இந்த பாம்பு தன்னைவிட பல மடங்கு பெரிய முட்டைகளை எப்படி விழுங்குகிறது என்பதுதான் ஊர்வன ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. snake பொதுவாக வேட்டையாடும் பாம்புகளுக்கு இருக்கும் பெரிய தலை அல்லது தாடை அமைப்பு இதற்கு இல்லை. மாறாக இதன் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளதாம். ஆய்வுகளின்படி, இந்த பாம்பின் வாய் பகுதி, அதன் உடல் அளவை ஒப்பிடும்போது சாதாரண பாம்புகளைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை விரிவடையும் தன்மையுடையது. இந்த பாம்பு பறவைகளின் கூடுகளைத் தேடிச் சென்று முட்டையை விழுங்குகிறது. முட்டை தொண்டைக்குள் சென்றவுடன் பாம்பின் முதுகெலும்பில் உள்ள கூர்மையான எலும்பு அந்த முட்டையின் ஓட்டை உடைக்க உதவுகின்றன. பின்னர் முட்டையின் உள்ளே இருப்பதை மட்டும் உறிஞ்சிவிட்டு உடைந்த ஓட்டை அப்படியே வெளியே துப்பிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக பாம்புகள் தங்களை தற்காத்துக்கொள்ள விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது இரையை இறுக்கிக் கொல்லும். ஆனால், இந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ பாம்புக்கு விஷமும் கிடையாது, இரையை இறுக்கும் வலிமையும் கிடையாது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க தனது உடலில் உள்ள செதில்களை ஒன்றுடன் ஒன்று உரசி ஒருவித ஒலியை எழுப்பும். இதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

23 C