SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ஊட்டி: உறைபனியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள் | Photo Album

போக்குவரத்து நெரிசல் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை

விகடன் 23 Dec 2025 9:20 am

ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பணப்பயிர்களான தேயிலை, காபி தோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் தொடங்கி தற்போதைய வளர்ச்சிப் பணிகள் வரை யானைகளின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றன. ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு இதன் துயர்விளைவுகளை அப்பாவி யானைகளும் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொண்டு வருகின்றனர். உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் போராடி வருகின்றன. ஊருக்குள் நுழையும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுகிறோம் என வனத்துறை மேற்கொண்டு வரும் பழங்கால கும்கி யானைகள் யுக்தி முதல் நவீன நைட் விஷன் தெர்மல் டிரோன் கேமராக்கள் வரை எதுவுமே பெரிய அளவில் எடுபட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் யானை - மனித எதிர்கொள்ளல்களை மட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவை நாடியிருக்கிறது வனத்துறை. ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன? ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு நீலகிரி எம்‌.பி ஆ. ராசா, வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம் குறித்து வனத்துறையினர், நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command-and-Control Centre) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் 46 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 34 செயற்கை நுண்ணறிவு மற்றும் 12 அதிநவீன செயற்கை நுண்ணறிவு என மொத்தம் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்கு நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதால், அவற்றின் நடமாட்டம் மற்றும் மனித- எதிர்கொள்ளல்களுக்கான அபாயம் குறித்து உடனடியாக எச்சரிக்கைகள் உருவாக்கப்படும். இந்த எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகள் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வனப்பணியாளர்களுக்கும், வனப்பகுதியினை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 எச்சரிக்கை ஒலிபெருக்கிகள், குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்படும். ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு தடையில்லா தகவல் தொடர்பிற்காக கூடலூர் வனக்கோட்டத்தில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு வலையமைப்பும் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. யானை- மனித எதிர்கொள்ளல் மேலாண்மையில் இந்த செயற்கை நுண்ணறிவு மையம் புதிய மைல்கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி

விகடன் 23 Dec 2025 8:00 am

உச்ச நீதிமன்றத்தின் வரையறையால் ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

இந்தியாவின் 'பச்சைக் கவசம்' என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். என்ன பிரச்னை? 'குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மேல் உள்ள நிலபரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும்' - இந்த வரையறையைக் கடந்த நவம்பர் 20-ம் தேதி, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இது தான் தற்போதைய கொந்தளிப்பிற்குக் காரணம். இந்த வரையறை 90 சதவிகித ஆரவல்லி மலைத்தொடரை பாதிக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க தோண்டல்கள், ஆக்கிரமிப்புகள் நிகழலாம். இதனால், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், பல்லுயிர்தன்மை பெரிதும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். ஆரவல்லி மலைத்தொடர் பெருநிறுவனங்கள் பாஜகவிற்கு வழங்கிய ரூ.3,112 கோடி; யார் கொடுத்தார்கள்? காங்கிரஸிற்கு எவ்வளவு? ஆரவல்லி மலைத்தொடர் பற்றி... இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான ஒன்று, 'ஆரவல்லி மலைத்தொடர்'. இது சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடம். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் படர்ந்திருக்கும் இந்த மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள் தார் பாலைவனமாக மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். இந்த மலைத்தொடர் அந்தப் பகுதியில், 'இயற்கை சுவராக' இருந்து வருகிறது. 2 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த மலைத்தொடர் பல லட்சம் மக்களுக்கு சுத்தமான நீர் மற்றும் காற்றை வழங்கி வருகிறது. மேலும், மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட் ஆகியவற்றுக்கும், ஈயம், துத்தநாகம், தாமிரம், தங்கம், டங்ஸ்டன் ஆகியவற்றுக்கும் இருப்பிடம். தொடரும் சட்டப்போராட்டம் இந்த மலைத்தொடரில் சட்டத்திற்குப் புறம்பான சுரங்க வேலைகள் நடக்கிறது என்றும், மலைத்தொடருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு, நீண்ட காலமாக நடந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த கமிட்டி வழங்கிய மேற்கூறிய வரையறையை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நீங்கள் அரசியல் சாசனத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான் - மோகன் பகவத் ஆரவல்லி மலைத்தொடரைப் பொறுத்தவரை, 90 சதவிகித மலைத்தொடரின் குன்றுகள் 100 மீட்டருக்கு உயரம் குறைவானதுதான். உதாரணத்திற்கு ராஜஸ்தானில் இருக்கும் இந்த மலைத்தொடரின் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 மட்டும் தான் தற்போதைய வரையறையைப் பூர்த்தி செய்யும். இந்தக் குன்றுகள் மலைத்தொடரில் இருந்து நீக்கப்படும்போது, சுரங்க வேலைகள் தொடங்கப்படலாம்... கட்டடங்களுக்காக ஆக்கிரமிக்கப்படலாம் என்பது தான் தற்போதைய அச்சம். அமைச்சர் பதில் இந்த அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரையறையில் 90 சதவிகித ஆரவல்லி மலைத்தொடர் அடங்கும். அதனால், அச்சம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்த அச்சம் சுற்றுச்சுழல் ஆர்வலர்களை விட்டு நீங்கவில்லை. அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

விகடன் 22 Dec 2025 3:43 pm

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ... 1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். ஆதார் அட்டை Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to 2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள். 3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார். 4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும். 5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது. Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

விகடன் 21 Dec 2025 1:33 pm

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ... 1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். ஆதார் அட்டை Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to 2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள். 3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார். 4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும். 5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது. Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

விகடன் 21 Dec 2025 1:33 pm

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே சட்டரீதியாக ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஆரவல்லி பகுதியாக கருதப்பட்ட சிறிய மலைகள், அடிவார நிலங்கள் மற்றும் இணை நிலப்பரப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் இந்த தீர்ப்பால் ஆரவல்லி நிலப்பரப்பின் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நேரடி போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த தீர்ப்பு ஆரவல்லி பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப்பணிகள், கட்டுமான வளர்ச்சி மற்றும் வன அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர். ஆரவல்லி ஆரவல்லி மலைத் தொடரின் அழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைதல், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு தீவிரமாதல் மற்றும் பாலைவனமாக்கல் வேகமடைவது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும், வருங்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆரவல்லி மொத்தத்தில், ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட வரையறை மாற்றம் அல்ல; நீர், காற்று, உயிரியல் பல்வகைமை மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. அதனால், ஆரவல்லியின் பாதுகாப்பு குறித்த போராட்டம் இன்று வட இந்தியா முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

விகடன் 20 Dec 2025 6:00 pm