மதுராவுடன் பேசத் தயார்: நானும் டிரம்புடன் பேசத் தயார்!
டொனால்ட் டிரம்ப் நிக்கோலஸ் மதுரோவுடன் பேசத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் வெனிசுலாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவதை அவர் நிராகரிக்கவில்லை என்றார். டிரம்ப் பேசிய சிறிது நேரத்திலேயே வெனிசுலா அதிபர் மதுரோ நேருக்கு நேர் உரையாடலுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் பேசத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் வெனிசுலாவில் அமெரிக்கப் படைகளை நிறுத்துவதை அவர் நிராகரிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நான் அவருடன் பேசுவேன் என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க இராணுவத்தை வெனிசுலாவிற்கு அனுப்புவதை நிராகரிப்பீர்களா என்று கேட்டபோது, டிரம்ப் கூறினார். இல்லை, நான் அதை நிராகரிக்கவில்லை, எதையும் நான் நிராகரிக்கவில்லை என்றார். நாங்கள் வெனிசுலாவை கவனித்துக் கொள்ள வேண்டும்என்று அவர் மேலும் கூறினார்.
தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்
அம்பாந்தோட்டை தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட… The post போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது appeared first on Global Tamil News .
போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் .இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் ,… The post போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான் appeared first on Global Tamil News .
பேருந்தில் வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு –முறைப்பாட்டை ஏற்காது அலைக்கழித்த காவல்துறை
யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை பேருந்தில்… The post பேருந்தில் வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு – முறைப்பாட்டை ஏற்காது அலைக்கழித்த காவல்துறை appeared first on Global Tamil News .
திருகோணமலைக்கு ஞானசார தேரர் விஜயம்; பொலிஸார் மீது பாச்சல்
பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, அவர் திருகோணமலைக்கு சென்றுள்ளார். ஊடகவியளாளர்களிடம் ஞானசார தேரர் பேசுகையில், பொலிசாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தார். பொலிஸ் அதிகாரிகள் பௌத்த சமூகம் மற்றும் விகாரையின் நடவடிக்கைகளுக்கு மரியாதைக்குறைவான முறையில் நடந்துகொண்டதாகவும் அ தேரர் குற்றம் சுமத்தினார்.
மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே விடுதலைப்புலிகள் போராளிகளை நினைவு கூர முடியாதென அரசு அறிவித்துள்ள நிலையில் மற்றொரு அமைச்சர் சந்திரசேகரன் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் அனைவரும் நினைவுகூரலாம் என்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. கார்த்திகை வீரர்கள் என நினைவுகூரச் சென்ற அடிமைத் தமிழ் நாடாளுமன்ற ஜேவிபி தோழர்களை கார்த்திகை வீரர்கள் என்று இதே மாதம் நினைவுகூரும் உங்களுக்கு அந்த உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்பது தெரியாதா?எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி!
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது, மேலும் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அக்கடமியை நிறுவுவதற்கு ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 வுகு-57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு இரண்டு ஊ-130 விமானங்களை பரிசாக வழங்கும். அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே பீச் கிராஃப்ட் விமானங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேவாலயங்களை காப்பாற்ற கோரும் பிக்கு!
திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், நீதிமன்ற படியேறியுள்ளார். திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க கடலோரப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். தேவாலயத்தை நிர்மாணிக்க திருகோணமலை நகர சபை, அனுமதி அளித்திருந்தாலும், கடலோரப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், விஹாரையில் இரண்டு தேவாலயங்களைக் கட்டுவது அங்கீகரிக்கப்படாதது என்று தெரிவித்துள்ளார். அவற்றை அகற்ற வேண்டும் என்றும் ஜூன் 28 ஆம் திகதி, ஒரு கடிதத்தில் தங்களுக்குத் தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது என்றும் அந்த ரிட் மனுவில் தேரர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்த இந்த மனுவில், கடலோரப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
புத்தர் சிலை வைப்புடன் முடிந்தது:அனுர!
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலை புத்தர் சிலை பிரதிஸ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் அதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்;. திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. திருகோணமலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக மோதல் காவல்துறைக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். அதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ்,முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் எனவும் அனுர தெரிவித்துள்ளார்.
Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?
இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து வருகிறது. பரவலான '500 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன', கிளவுட்ஃப்ளேர் டேஷ்போர்டு மற்றும் API ஆகியவையும் வீழ்ந்துள்ளன. முழு தாக்கத்தையும் புரிந்துகொண்டு இந்தச் சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் கூடுதல் அப்டேட்கள் வரும் எனக் கூறியுள்ளனர். X, Spotify, OpenAI, Amazon Web Services, Canva, Letterboxd, Sage, PayPal உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெப்சைட்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Cloudflare என்பது என்ன? கிளவுட்ஃப்ளேர் என்பது ஒரு மிகப் பெரிய இணையதள இயக்க நிறுவனம். பல நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தை வேகமாக வைத்திருக்கவும், வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதனைச் சார்ந்துள்ளன. வலைத்தளங்களுக்கும் அவற்றை அணுக முயற்சிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு நடுத்தர அடுக்காக இந்தத் தளம் செயல்படுகிறது. Cloudflare இந்த நிறுவனம் பல இணையதளங்களுக்குச் சேவை வழங்குவதால் இதில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இணையத்திலும் கணிசமானதாக இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதத்தில் மட்டும், மைக்ரோசாப்ட் அஸூர் மற்றும் அமேசான் வலை சேவைகள் (AWS) ஆகியவற்றில், இரண்டு பெரிய செயலிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பல வலைத்தளங்கள் முடங்கின. பின்னர் சரிசெய்யப்பட்டன. அதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கூகிள் கிளவுட் செயலிழந்ததால் கூகிள் மீட், டிஸ்கார்ட் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற பிரபலமான பயன்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிளவுட்ஃபேர் செயலிழப்பு ஏற்பட நெட்வர்க் பிழைகள் (Bugs), சர்வரில் அதீத சுமை, கட்டமைப்பு பிழைகள் அல்லது சைபர் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?
42 இந்தியர்களை பலிகொண்ட கோர விபத்து ; ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்
சவுதி அரேபியாவில்பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் இந்தவிபத்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்தநிலையில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 […]
மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. Metro rail 'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?
மஹிந்தவுக்கு பிறந்தாநாள் வாழ்த்து கூறிய இந்திய உயர்ஸ்தானிகர்
இன்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு , இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் இன்று (18) காலை, தங்காலையில் ‘கால்டன்’ இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதற்காகவே கொன்சியுலர் நாயகம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தி இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்தப் பதிவில் […]
மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில்… The post மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் appeared first on Global Tamil News .
இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
ஊசி போதைப்பொருள் விற்ற கும்பல் சிக்கியது
ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு […]
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 04.00 மணி முதல் நாளை (19) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பதுளை – பண்டாரவளை, ஹப்புத்தளை, ஊவா பரணகம, கந்தகெட்டிய கொழும்பு – பாதுக்கை காலி – எல்பிட்டிய களுத்துறை – […]
வலையில் சிக்கிய 112 கிலோ ‘மெகா சைஸ்’மீன்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ… The post வலையில் சிக்கிய 112 கிலோ ‘மெகா சைஸ்’ மீன் appeared first on Global Tamil News .
தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை
மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ்… The post தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை appeared first on Global Tamil News .
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது. வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்! பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார். மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் ட்வீட் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989 பாகல்பூர் மதக் கலவரம்! மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அத்வானி ரத யாத்திரை ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது. 1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன. People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது. கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்! அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின. 1989 Bhagalpur violence இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன. EP04 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ரதயாத்திரையும் பாபர் மசூதி தகர்ப்பும் - அத்வானி ஏன் பிரதமர் ஆகவில்லை? முஸ்லிம்கள் உடல்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர் செடிகள்! லோகெய்ன் படுகொலை! இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன. PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன. மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். மதக் கலவரம் (சித்தரிப்புப் படம்) பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம். முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை! பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார் என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார். ஹிமந்த பிஸ்வா, கௌரவ் கோகோய் அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை. ``சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான் - ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது.
எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் அடாத்தாக புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தமிழ் மக்கள் கூட்டணி தமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளதாக தெரிவித்து கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில், பௌத்த பிக்குகளின் அடாவடித்தனம் மூலம் புத்த […]
திருகோணமலை புத்தர் சிலை: பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்!
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது. இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும். பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது. மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது. 5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும். ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம். இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை. பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார்.
SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. S.I.R - வாக்காளர் உதவி மையம் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார். மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர். ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம். சங்கரன் நாயர் SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! 'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க. 75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம். அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க. சங்கரன் நாயர் இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார். உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர். '2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் குமார் நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா? என்றார் ஆதங்கத்தோடு. உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது. கணினி வசதி - மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா? மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம் என்கின்றனர். S.I.R உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள். குமரகுருபரன் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன். ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!
சென்னையில் திநகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை! வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துள்ளனா்.
‘ஆஷஸ் 2025 தொடர்’.. யாருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்? மாண்டி பனேசர் புள்ளி விபரம் கணிப்பு!
ஆஷஸ் 2025 தொடரில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மாண்டி பனேசர் பேசியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவில் கோல்ப் விளையாடுவதும் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் இரண்டு சிறந்த ஐகான்கள். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இருந்த பகைமை இவர்களுக்கு இடையிலும் இருந்தது. எனினும் தற்போது இருவரும் நட்புறவுடன் பழகி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இருவரும் ஒரே ஃபார்மட்டில் விளையாடாததால் இனி அவர்கள் இணைந்து விளையாடுவதைப் பார்க்க முடியாது. Steve Smith களத்தில் Virat Kohli - Steve Smith உறவு முதன்முதலாக இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய 2014 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அடித்துக்கொள்ளாத குறைக்குச் சண்டையிட்டதை ரசிகர்கள் மறக்க முடியாது. அது விராட்டும் ஸ்டீவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டைக் காட்டிக்கொண்டிருந்த காலம். ‘Goat Recognises Goat' என்ற பதத்துக்குப் பொருத்தமான இவர்கள், ஒருவர் மற்றொருவருக்கு மதிப்பளிக்கும் விதம் வியக்க வைக்கும். 2019ம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு களத்துக்கு வந்த ஸ்மித்தை ரசிகர்கள் கூச்சலிட்டு விமர்சித்தனர். அப்போது ரசிகர்களை ஸ்மித்துக்காக ஊக்கப்படுத்தச் செய்தார் விராட்! கடைசியாக ஸ்மித் மற்றும் விராட் இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸில் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார், இந்தப் போட்டியில் அணியை வழிநடத்தினார். மறுபுறம், விராட் கோலி 84 ரன்கள் எடுத்து POTM விருதையும் வென்றார். அந்த தோல்விக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து வெளியேறினார் ஸ்டீவ் ஸ்மித். அவரது ஓய்வுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் விராட். விராட்டைப் புகழ்ந்த ஸ்மித் விராட் கோலியின் ஆட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர்தான் சிறந்த க்ளட்ச் பிளேயர். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசர வைக்கும் வகையில் இருக்கும். அவர் மிக மிகச் சிறப்பானவர் எனக் கூறியுள்ளார். க்ளட்ச் பிளேயர் என்றால் அழுத்தம் நிறைந்த சூழலில் ரன்கள் சேர்த்துக்கொடுக்கும் வீரர் என்று பொருள். MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?
பிஎஃப் பென்சன் திட்டத்தில் முக்கிய அப்டேட்.. ரெடியாகும் பாக்கி தொகை.. அரசு முக்கிய முடிவு!
EPS-95 திட்டத்தின் பென்சன் பணத்தை படிப்படியாக வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவுன் செய்துள்ளது.
தமிழ்நாட்டு மகள் மீது மார்க்கண்டேய கட்ஜூவின் பாசம்... 21 ஆண்டுகளாக செய்து வரும் உதவி
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது வளர்ப்பு மகள் கலாவதியை சந்தித்தது மன்றும் தற்போதுவதை அவருக்கு செய்து வரும் உதவிகளை நினைவு கூர்ந்துள்ளார். அதனை விரிவாக காண்போம்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம் - நிர்வாகிகள் உற்சாகம்!
திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் மற்றும் பூத் கமிட்டி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
வீடு கட்ட கடன் வாங்கப் போறீங்களா? மாசம் எவ்வளவு EMI கட்டணும் தெரியுமா?
60 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால் அதற்கு ஒவ்வொரு மாதமும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?
இளங்குமரன் எம்.பி க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள சுமந்திரன்
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இளங்குமரன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்திருந்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்ததர். பின்னர் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சின்னையா சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்த போதிலும் நீதிவான் சின்னையா சிறிலோகநாதனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அந்நிலையில் மறுநாள், இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் பிறிதொரு சட்டத்தரணி மூலம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணை விண்ணம் செய்த போது, அதனை மன்று ஏற்று, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இளங்குமரன் எம்.பி.உள்ளிட்டவர்கள் சுமந்தினை மையப்படுத்தி சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு சுமந்திரன் காரணம் என்ற சாரப்படத் கருத்துக்களை தெரிவித்தார் என்றே, சுமந்திரன் இளங்குமரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
IND vs SA Test: ‘தோல்விக்கு காரணம்’.. கம்பீர் கூறிய கருத்தை ஏற்க மறுத்த புஜாரா: விபரம் இதோ!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு கௌதம் கம்பீர் கொடுத்த பேட்டியை, சேத்தேஷ்வர் ஆதரிக்கவில்லை. கம்பீர் கூறிய கருத்து தவறு என்றார்.
Shahid Kapoor joins Fittr’s journey as the brand expands into preventive healthcare
Mumbai: Fittr today announced their partnership with Shahid Kapoor marking a pivotal step in Fittr’s transformation from a fitness company into a comprehensive preventive healthcare ecosystem.Fittr says that over the years has enabled millions of Indians to achieve their fitness goals through structured coaching, science-based nutrition, and a strong digital community. With its expanded offerings - accurate health tracking through Fittr Hart smart ring, AI-driven personalization, coaching and consultations with doctors, Fittr is now building a full-stack solution that helps individuals take charge of their health before problems arise. Why Shahid Kapoor? Shahid Kapoor embodies the very essence of preventive health: consistency, longevity, and mindful living. His commitment to maintaining peak fitness well into his 40s aligns seamlessly with Fittr’s philosophy that “Health is Freedom.” As someone who balances disciplined training, nutrition, and recovery, Shahid brings authenticity and aspirational credibility to Fittr’s next chapter. Shahid is not just a symbol of fitness, he represents the future of proactive, preventive healthcare, He's amongst the very few people who walk the talk. As we scale our ecosystem, his influence and lifestyle make him the perfect partner to inspire India to choose health every day, said Jitendra Chouksey (JC), founder, CEO Fittr,. A Partnership for India’s Healthier Future Together, Fittr and Kapoor aim to drive a nationwide movement encouraging Indians to shift from reactive treatment to everyday preventive action. The association will be highlighted through integrated campaigns showcasing Fittr’s ecosystem and its mission to make preventive healthcare accurate, accessible, and a part of daily living.
Shahid Kapoor joins Fittr’s journey as the brand expands into preventive healthcare
Mumbai: Fittr today announced their partnership with Shahid Kapoor marking a pivotal step in Fittr’s transformation from a fitness company into a comprehensive preventive healthcare ecosystem.Fittr says that over the years has enabled millions of Indians to achieve their fitness goals through structured coaching, science-based nutrition, and a strong digital community. With its expanded offerings - accurate health tracking through Fittr Hart smart ring, AI-driven personalization, coaching and consultations with doctors, Fittr is now building a full-stack solution that helps individuals take charge of their health before problems arise. Why Shahid Kapoor? Shahid Kapoor embodies the very essence of preventive health: consistency, longevity, and mindful living. His commitment to maintaining peak fitness well into his 40s aligns seamlessly with Fittr’s philosophy that “Health is Freedom.” As someone who balances disciplined training, nutrition, and recovery, Shahid brings authenticity and aspirational credibility to Fittr’s next chapter. Shahid is not just a symbol of fitness, he represents the future of proactive, preventive healthcare, He's amongst the very few people who walk the talk. As we scale our ecosystem, his influence and lifestyle make him the perfect partner to inspire India to choose health every day, said Jitendra Chouksey (JC), founder, CEO Fittr,. A Partnership for India’s Healthier Future Together, Fittr and Kapoor aim to drive a nationwide movement encouraging Indians to shift from reactive treatment to everyday preventive action. The association will be highlighted through integrated campaigns showcasing Fittr’s ecosystem and its mission to make preventive healthcare accurate, accessible, and a part of daily living.
HUL appoints Bobby Parikh as Independent Director
Mumbai: Hindustan Unilever Limited (HUL) has announced the appointment of Bobby Parikh as an Independent Director on its Board, effective 1st December 2025, for a tenure of five years.Parikh is a highly regarded advisor with vast experience helping businesses navigate strategic and transformational shifts. He currently serves as a strategic advisor to several major corporations and holds board positions at Infosys, Biocon, and Indostar Capital. Over the years, he has guided both Indian and multinational companies through India’s evolving regulatory and policy environment. His expertise extends across private equity funds, institutional investors, and business owners, delivering solutions aligned with financial and commercial objectives.Parikh co-founded BMR Advisors, previously served as CEO of Ernst & Young India, and held senior leadership roles including Country Managing Partner at Arthur Andersen. He holds a Commerce degree from the University of Mumbai and is a qualified Chartered Accountant.Welcoming the appointment, Nitin Paranjpe, Non-Executive Chairman, HUL, said, “We are delighted to welcome Bobby to the HUL Board as an Independent Director. His experience, combined with expertise in financial strategy and regulatory frameworks, has helped organisations steer complex transformative business changes. We look forward to his insights and contributions in the Company’s next phase of growth.” On joining the Board, Bobby Parikh said, “It is an honour to join the Board of Hindustan Unilever Limited, a company that has set benchmarks in corporate governance and responsible business. I look forward to working with my fellow Board members and the leadership team to help steer HUL through new opportunities and challenges.”
“Affordable Morocco Holidays with Jet2: Flights & Hotels”
Jet2holidays and Jet2CityBreaks make exploring Morocco easier than ever. They offer great-value packages that include a 22kg checked bag and
மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Prequate Advisory appoints Vejay Anand and Uday Shetty in leadership roles
Bengaluru: Prequate Advisory, a Bengaluru-based strategic consulting firm known for its data-led growth, efficiency solutions, and hyper-tailored transaction advisory, has expanded its leadership team with two significant appointments as it prepares for its next phase of growth.Prequate has appointed Vejay Anand as Senior Advisor, bringing with him over 30 years of experience in building and scaling major consumer brands. He has previously held leadership roles at Caf Coffee Day, Universal Sportsbiz (Wrogn), Future Group, and Intel. At Prequate, he will guide the firm and its key clients on market positioning, retail expansion, operational scaling, and long-term growth acceleration.Speaking on his appointment, Vejay Anand said, “Prequate sits at a fascinating intersection where deep financial acumen & a rich India context strategy meet brand imagination. Volatile markets and strong consumption markets require strong roots and a clear vision to thrive. This will include a merger of insight with execution that is relevant and timely. I’m looking forward to helping Prequate and our clients build strategies that aren’t just ambitious, but battle-tested and market-ready.” The firm has also named Uday Shetty as Disruptor-in-Chief, a newly created role aimed at driving innovation, intellectual leadership, and progressive thinking across the organisation. A seasoned brand strategist known for challenging industry norms, Shetty will focus on reimagining consulting frameworks, strengthening brand positioning, and shaping future-ready business models.Commenting on his new role, Uday Shetty said, “Disruption today isn’t about chaos but about clarity. It’s about challenging the centre of strategy, how decisions are made and using blue-sky thinking to unlock new possibilities. Prequate’s appetite for being highly adaptable makes it the perfect platform to shape what execution-first strategy consulting looks like in the next decade.” Welcoming the new leaders, Pradyumna Nag, Founder, Prequate Advisory, stated, “At Prequate, our strength lies in our ability to connect dots others don’t see and help drive institutional excellence using it. With Vejay’s on-ground operating knowledge and Uday’s crossing the chasm lens, we’re strengthening our ability to deliver transformative outcomes for our clients that even they were not aware of. This leadership infusion signals our intent to build the future of consulting over the next decade. One that leads with actionable insight, not just hindsight.”
மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலின் மௌனம் ஏன்? ஆர்.பி.உதயகுமார் கொடுக்கும் ஐடியா!
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்கிறார். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலின் தனது சகோதரர் ராகுல் காந்தி மூலம் சித்தராமையாவிடம் பேசி அணை கட்ட வேண்டாம் என கூற வேண்டும் என வலியுறுத்துகிறார். இது தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா எப்படி T20 நம்பர் 1 பேட்டர் ஆனார்? இர்ஃபான் பதான் உடைத்த சீக்ரெட்!
டெல்லி : இந்தியாவின் இளம் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா, ICC T20I பேட்டிங் ரேங்கிங்ஸில் உலகின் நம்பர் ஒன்று பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். அமிர்த்சரில் ஒரு சிறிய வீட்டில், 4 வயது சிறுவனாக பேட்டை கையில் வைத்து கிரிக்கெட்டில் மூழ்கிய அவர், இப்போது 931 ரேட்டிங் பாயிண்ட்ஸுடன் உலகின் உச்சத்தில் நிற்கிறார். இது ஒரு கிரிக்கெட் கதை போன்ற பயணம் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஆசியா […]
அது என்னப்பா ஒன் கிராம் கோல்டு? அது உண்மையிலேயே ஒரு கிராம் தங்கமா?
கடைகளில் ஒன் கிராம் கோல்டு என்று விற்பனை செய்யப்படும் நகைகளில் ஒரு கிராம் தங்கம் இருகிறதா? அதன் விலை ஏன் குறைவாக இருக்கிறது?
ting reimagines WiseLife’s brand identity after Shark Tank Spotlight
MUMBAI: Ad agency ting has re-imagined WiseLife’s brand identity. Following its pitch on the busines based reality show 'Shark Tank India Season 3', WiseLife a yoga apparel and accessories brand, has undergone a transformation.ting has worked closely with WiseLife to translate its philosophy of balance, self-discovery, and conscious living into a brand system that feels both purposeful and premium. From the logo and packaging to the brand’s digital presence, every touchpoint has been designed to capture the balance between form and flow, guiding individuals toward self-discovery.The new identity has been crafted after the WiseLife’s feature on Shark Tank India and the team incorporated feedback from the Sharks, redefining the brand experience to strengthen trust, widen appeal, and set the stage for the brand's next chapter. “Working on an identity refresh is always exciting. The business and the brand have been on a journey and come with a lot of learnings. Our role was to ensure WiseLife evolves while staying grounded in its purpose, resonating with audiences both existing and new, and ultimately benefiting the business. This partnership went beyond a cosmetic refresh”, said Shruti Dhadda, Chief Creative Officer & Partner at ting. “At WiseLife, we’ve always believed in building a brand that truly reflects our values and connects deeply with our community. Partnering with ting was all about streamlining our identity with clear guidelines. This revamp is not just about design; it’s about creating consistency, clarity, and a stronger foundation for the brand as we grow, said Prateek Kedia, founder, WiseLife This refresh invites every individual to move with meaning, live with intention, and carry the essence of yoga into their lives. When you step onto the mat, you step into the WiseLife. That is the brand's message.
Smartworks names Anshul Popli as Head – Product & Execution
Mumbai: Smartworks has named Anshul Popli as Head – Product & Execution, strengthening its leadership team as the company expands its pan-India managed campus portfolio.In his new role, Anshul will lead Procurement and Projects across MEP, QS, and Execution, with a focus on elevating delivery excellence and operational efficiency across Smartworks’ fast-growing network of campuses.Anshul brings a strong combination of entrepreneurial experience and hands-on execution expertise. Before joining Smartworks, he founded Modern Intrno, an interior fit-out firm where he led client acquisition and end-to-end project delivery, ensuring seamless alignment with design intent, quality benchmarks, and project timelines.He holds a Master’s degree in Business Administration and Management from the University of Nottingham.
விஜய் - காங்கிரஸ் கனெக்ஷன் என்ன? பிளாஷ் பேக் போன ஜோதிமணி
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, நடிகர் விஜய் காங்கிரஸுக்குப் புதியவர் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
CavinKare expands Cavin’s range with 90s-inspired milkshakes for Children’s Day
Chennai: CavinKare has expanded its Cavin’s beverages portfolio with the launch of two nostalgia-driven variants — Orange Cream Biscuit Milkshake and Premium Malt Milkshake — timed with Children’s Day celebrations. Drawing inspiration from iconic 90s flavours and powered by modern dairy innovation, the new offerings reinforce the brand’s promise of delivering the “Taste of Childhood” in an indulgent, contemporary format.As part of the rollout, the company has unveiled its Children’s Day campaign, ‘Indulge the Child in You,’ which engaged more than 2,500 college students through immersive 90s-themed installations and playful photo experiences. Students recreated fun “adult vs. childlike” moments, sipping the new milkshakes as their photos were instantly printed and gifted as keepsakes. Social media saw active participation, with students tagging @CavinsMilkshake and using #IndulgeTheChildInYou, turning the initiative into a nostalgia-fueled digital celebration.Speaking on the launch, K.G. Mallikeswaran, Business Head – Beverages at CavinKare Private Limited , said, “As the Indian beverage segment continues to evolve, the demand for products that blend emotional resonance with innovation is stronger than ever. At Cavin’s, we believe that taste is a powerful storyteller, and with our Orange Cream Biscuit and Premium Malt milkshakes, we are bringing back flavours deeply rooted in Indian childhood nostalgia. The ‘Indulge the Child in You’ is an initiative in the same direction, where we want to tap into the collective memory of generations and deliver the milkshakes in a convenient, contemporary format. Through this expansion, we are committed to leading the category with differentiated offerings.” The Orange Cream Biscuit Milkshake evokes memories of the beloved cream-filled biscuits once tucked into school lunchboxes, offering a zesty twist reminiscent of childhood snack time. Meanwhile, the Premium Malt Milkshake brings the wholesome richness of classic malt drinks, infused with roasted notes and a subtly sweet finish for consumers seeking a comforting yet modern flavour.The new milkshakes are available in 170ml and 180ml tetra packs, priced at ₹37 and ₹42 respectively. They will be distributed across general trade outlets, modern retail chains, and major e-commerce platforms to ensure widespread availability.
கோவை இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடியை வரவேற்க தயாரான எல்.முருகன்
கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பீகார் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி இயற்கை விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கி வைக்க வருவதாகத் தெரிவித்தார். விவசாயிகளுக்குப் பல திட்டங்கள், குறிப்பாக கிசான் சம்மான் நிதியின் 21வது தவணை விடுவிக்கப்பட உள்ளது. போலி வாக்காளர் விவகாரம் குறித்தும் பேசிய அவர், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உறுதியளித்தார்.
சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம் (CGTMSE)!
MSME Credit Guarantee Scheme: சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்யும் மத்திய அரசின் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
Vaa Vaathiyaar Release Date Shifted to December 12
Karthi’s upcoming action-packed movie Vaa Vaathiyaar is reportedly changing its release date. Originally set for December 5, it may now
சிபில் அதிகமா இருக்கு.. ஆனாலும் கடன் கிடைக்கல.. காரணம் என்ன தெரியுமா?
சிபில் மதிப்பெண் 750க்கு மேல் இருந்தாலும் உங்களுக்கு கடன் கிடைக்கவில்லையா? அதற்கான காரணம் இதுதான்.
பெனிட்டோ முசோலினி முதல் ஷேக் ஹசீனா வரை - மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 உலகத் தலைவர்கள்!
நவீன உலகின் அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நிகழ்வு பலமுறை நடந்திருக்கிறது. பொதுவாக ஒரு அரசைக் கவிழ்த்தப் பிறகு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பெரிய அரசியல் எழுச்சிகளின்போது முந்தைய தலைவர்கள் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சில தண்டனைகள் நிறைவேற்றவும் பட்டிருக்கின்றன. சில நேரங்களில் தீர்ப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த கதைகள் அரசியல் அதிகாரம் எப்படி ஒருநொடியில் தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் அதிகாரப்போட்டி ஒட்டுமொத்த தேசத்தையும் எப்படி மாற்றக்கூடும் என்பதையும் நமக்குக் காட்டுகின்றன. ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனா வங்காளதேச பிரதமர்: 1996–2001 மற்றும் 2009–2024 தற்போது வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கதையும் அப்படியான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவருக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) மரண தண்டனை வழங்கியது. அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தண்டனையை கண்டித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஒரு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு சவால் விடுத்திருக்கிறார்! செல் பேயர் (Cell Bayar) துருக்கி பிரதமர்: 1937-39 | ஜனாதிபதி: 1950-60 துருக்கியில் 1960ம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, அதன் ஜனாதிபதியாக இருந்த செல் பேயர் அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவரது தண்டனை குறைக்கப்பட்டது, வயது மற்றும் உடல்நலம் காரணமாக 1964 இல் அவர் விடுவிக்கப்பட்டார். துருக்கியில் அதிகம் பேசப்படும் அரசியல் தலைவர்களுள் ஒருவர் இவர். சுல்பிகர் அலி பூட்டோ, செல் பேயர் சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் ஜனாதிபதி 1971–1973 | பிரதமர் (1973–1977) பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் என்பவர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விசாரணை பல சர்ச்சைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 4, 1979 அன்று பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கிய புள்ளியாக அந்த சம்பவம் அமைந்துள்ளது. அட்னான் மெண்டரஸ் துருக்கி பிரதமர் 1922–1943 1960ம் ஆண்டு மெண்டரஸ் அரசியலமைப்பை மீறியதாகவும், அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவரது ஆட்சி ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. துருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இவரது மரண தண்டனை நிறைவேறியது. துருக்கியின் அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக அந்த நாள் நினைவுகூறப்படுகிறது. பெனிட்டோ முசோலினி பெனிட்டோ முசோலினி இத்தாலி பிரதமர் 1922 - 43 இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலி முசோலினிக்கு எதிராக திரும்பியது. 1943 ஜூலை 25 அன்று முசோலினி பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஹிட்லரால் மீட்கப்பட்டு வடக்கு இத்தாலியில் சலோ ரிபப்ளிக் என்ற பிராந்தியத்துக்கு பொம்மை தலைவராக நியமிக்கப்பட்டார். (அதிகாரம் ஜெர்மன் ராணுவத்திடம் இருந்தது). இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழத்தொடங்கியபோது இத்தாலிய கம்யூனிஸ்ட்களால் பிடிக்கப்பட்டு ஏப்ரல் 28, 1945 அன்று அவரது காதலி கிளாரா பெட்டாச்சி உடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் மிலான் நகரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது. இம்ரே நாகி ஹங்கேரி பிரதமர் 1953–1955, 1956 இம்ரே நாகி ஹங்கேரியின் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சியாளர். 1956ம் ஆண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராக ஹங்கேரியை வழிநடத்தினார். இவரது கிளர்ச்சி தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டு, ரகசியமாக விசாரிக்கப்பட்டு, 1958 ஜூன் 16 அன்று தூக்கிலிடப்பட்டார். இவரை ஹங்கேரி தேசத்தின் வீரராக இன்றும் மரியாதை செலுத்துகின்றனர். சதாம் ஹுசேன் சதாம் ஹுசைன் ஈராக் ஜனாதிபதி 1979–2003 அமெரிக்க படைகளிடம் பிடிபட்ட சதாம் ஹுசைன், ஈராக்கிய தீர்ப்பாயத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மனித குலத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டு 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அந்த தண்டனை ஈராக் வரலாற்றில் முக்கிய சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. ஹிடேகி டோஜோ ஜப்பான் பிரதமர் 1941-1944 டோஜோ இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வழிநடத்திய தலைவராவார். தோல்விக்குப் பிறகு அவர் மீது Far East சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தால் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு டிசம்பர் 23, 1948 அன்று டோக்கியோவில் தூக்கிலிடப்பட்டார். பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் ஜனாதிபதி 2001–2008 2019 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் முஷாரஃப் ஆஜராகாமல் இருந்தபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முஷாரஃப் 2023ல் உயிரிழந்தார். Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - விரிவான தகவல்கள்!
துமகுரு மெட்ரோ ரயில் திட்டம்: 60 கி.மீ தூர BMRCL மாஸ்டர் பிளானுக்கு வந்த பெரிய சிக்கல்!
பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், துமகுரு வழித்தடத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது மிகவும் காஸ்ட்லியான திட்டம் என்றும், பெரிதாக பயன் தராது என்று கூறி வருகின்றனர்.
நீலகிரி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! - `வாவ்’ ஊட்டி
ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!
Hashtag Orange names Dr. Anirban Chaudhuri as Chief Strategy Officer
New Delhi: Hashtag Orange, an integrated marketing agency built for the modern brand–consumer dynamic, has announced the appointment of Dr. Anirban Chaudhuri as its new Chief Strategy Officer (CSO). The move underscores the agency’s commitment to strengthening its strategic leadership and accelerating innovation in a rapidly evolving marketing landscape.Dr. Chaudhuri brings over 26 years of diverse experience across brand strategy, integrated marketing communications, media investment, deep market research, and financial sector insights. His multidisciplinary background aligns seamlessly with Hashtag Orange’s ambition to deliver holistic, end-to-end growth solutions to its clients.His appointment is expected to fuel the agency’s next phase of expansion by deepening strategic foresight and sharpening competitive advantage across categories.Welcoming the new CSO , the company stated, “Having Dr. Anirban join us is truly a matter of pride. His depth of expertise is unparalleled, and we are confident that his leadership will play a pivotal role in accelerating Hashtag’s next phase of growth. This appointment is fully aligned with our long-term vision and strategic direction.” Sharing his excitement, Dr. Chaudhuri said, “Integrated marketing is not just about combining channels; it’s about anticipating market shifts and building resilient strategies. I am thrilled to bring my experience to Hashtag Orange, an organization dedicated to continuous evolution. We will focus on deepening our strategic capabilities to ensure our clients consistently possess the foresight needed to win in a dynamic, competitive environment.” With this leadership enhancement, Hashtag Orange aims to bolster its strategic offerings and set new industry benchmarks, reinforcing its position as a next-generation partner for brands navigating an increasingly complex marketing ecosystem.
Ventures Communications bags Creative and Media Mandate for Nayara Energy
Mumbai: Nayara Energy, a private fuel retailer, has appointed Ventures Communications (formerly Ventures Advertising) as its agency partner for a comprehensive national creative and media mandate. The appointment follows a competitive multi-agency pitch, underscoring Nayara Energy’s intent to strengthen brand visibility and communication effectiveness across the country.Under the mandate, Ventures Communications will handle media planning, buying, and creative development (ATL) for pan-India campaigns. As the Agency on Record, the agency will drive campaign strategy, execution, and brand storytelling across diverse consumer segments and markets.Chetan Shah, Chairman and Managing Director, Ventures Communications, said the win reflects the agency’s longstanding capability in delivering scalable, integrated communication solutions. He stated that the mandate reflects the agency’s ability to deliver integrated communication and media services that are scalable and built for reach across diverse markets, adding that Ventures’ four-decade legacy equips it to manage complex campaigns demanding innovation, regional depth, and structured execution.Commenting on the association, Vitesh Shah, Chief Executive Officer, Ventures Communications, noted the significance of partnering with a brand of national stature. He stated that the agency’s focus will be on building unified brand visibility across markets, with structured planning and creative execution aimed at expanding Nayara Energy’s public presence and connecting with wider audiences.Campaign development will be led by Mr. Rahul Sarkar, Executive Director & Chief Creative Officer, supported by dedicated art, copy, and production teams. Media planning and buying operations are headed by Ms. Vishakha Borija, Media Director, who will oversee placement strategy, platform coordination, and performance optimisation.Ventures Communications will leverage its structured internal tools for planning, monitoring, and deploying campaigns across media platforms. Campaign implementation is already underway.
`பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை
வே லூரில் இன்று, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் `ஒருமுறை வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும்’ என்று நினைத்தால், அதற்கு முழு உரிமையும், அதிகாரமும் இருக்கிறது. இதில், எந்த அவசரமும் இல்லை. பீகாரில் சிறப்பாக நடைபெற்றிருக்கிறதா? இல்லையா? `64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள்’ என்று ராகுல்காந்தி சொன்னாரே... ஒரு வாக்காளராவது வெளியே வந்து, `என் வாக்கு இல்லை. 64 லட்சத்தில் நானும் ஒருத்தர்’ என்று சொன்னாரா? சொல்லவில்லை. களத்தில் இருந்த யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியெனில், அங்குச் சரியாக நடந்திருக்கிறது என்று தானே அர்த்தம். தமிழிசை சௌந்தரராஜன் இதுதான் பட்டவர்த்தனமான உண்மை! தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அன்றைக்கு அம்மியில் அரைத்துக்கொண்டு இருந்தோம். இன்றைக்கு மிக்சியில் ஒரு நிமிடத்தில் சட்னியை அரைக்கவில்லையா? அது மாதிரி தான், தேர்தலுக்கு முன்பு 15 நாள்களே இருந்தாலும் பொய் வாக்காளர்களும், போலி வாக்காளர்களும் நீக்கப்பட வேண்டும். இங்கு, தி.மு.க-வின் தொடர் வெற்றிக்குக் காரணமே போலி வாக்காளர்கள் தான். கொளத்தூரே அதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அதனால்தான், போலி வாக்காளர்களை நீக்கும்போது, நேர்மையான வாக்காளர்களை நம்பி போட்டியிட்ட கட்சி அதை வரவேற்கிறது. போலி வாக்காளர்களை நம்பி வெற்றிப்பெற்ற கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸும் எதிர்க்கிறது. இதுதான் பட்டவர்த்தனமான உண்மை. `சார்’ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் போகிறார்கள். பெயர் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரிந்துவிடும். இறந்தவர்களெல்லாம் இனிமேல், சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனில், அவர்களைப் பிடித்துகொண்டுவந்து தி.மு.க-வினர் ஓட்டுப்போட வைத்துக்கொண்டிருந்தார்கள். தி.மு.க-வினருக்கு `சார்’ என்ற வார்த்தையே கேட்ட உடனே `கிலி’ வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். இதற்கு பீகாரே முன்னுதாரணம். வாரிசு அரசியலுக்கு பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், தம்பி உதயநிதி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும். புதியவர்களுக்கும் பீகார் ஒரு `அடி’ கொடுத்திருக்கிறது. அதனால், பிரசாந்த் கிஷோர் மாதிரியே தம்பி விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும். விஜய் `தேசிய ஜனநாயகக் கூட்டணியின் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருந்தால்தான் நமக்கு நல்லது நடக்கும்’ என்று மக்கள் வாக்களிக்கிறார்கள். இங்கேயும் அ.தி.மு.க - பா.ஜ.க வெற்றிபெற்றால் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் வரும். இந்த நேரத்தில், அண்ணன் வைகோவுக்கும் ஒரு கோரிக்கை வைக்கின்றேன். போதையை தடுப்பதற்காக அவர் நடைப்பயணம் போகிறாராம். போதையை தடுக்க அறிவாலயத்துக்குத் தான் அவர் போகவேண்டும். அங்கிருந்து தானே போதையை தடுப்பதற்கான சட்டம் வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக இருப்பதாக சீமான் எதை வைத்து கணிக்கிறார்? சீமான் என்ன பலமாகவா இருக்கிறார்? அவரே தனியாக நின்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். சீமானுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கருணாநிதியை தாண்டி கரிகாலனை நோக்கிச் சென்றுவிட்டார். சீமானின் பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நல்ல பேச்சாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்கிறார் சிரித்தபடி.
Digidarts bags Digital Performance Campaigns Mandate for Kisan Konnect
Mumbai: Digidarts, a performance marketing agency, has announced that it has secured the Digital Performance Campaigns mandate for Kisan Konnect, a rapidly expanding agro retail brand dedicated to connecting farmers directly with consumers through fresh, traceable, and sustainable produce.The partnership marks a significant milestone for Kisan Konnect as it aims to deepen its digital presence and accelerate growth through a data-driven approach powered by Digidarts’ proprietary performance marketing capabilities.With India's agritech sector witnessing rapid digitalisation, the collaboration will enable Kisan Konnect to harness precision targeting, behavioural analytics, and creative-led growth strategies to strengthen its farm-to-table value proposition. Digidarts will drive omni-channel campaigns that enhance brand visibility, improve customer engagement, and help scale Kisan Konnect’s mission of empowering farming communities while serving urban consumers with trustworthy fresh produce.Positioning itself as a rural-retail trailblazer, Kisan Konnect aims to evolve from a pure-play selling model to a more holistic brand-building approach. Supported by Digidarts’ expertise, the brand will integrate data, storytelling, and commerce to create richer consumer journeys and long-term brand equity.Commenting on the partnership, Siddhartha Vanvani, Founder & CEO, Digidarts, said, “With Digidarts steering Kisan Konnect’s digital performance campaigns, I am confident we’ll unlock new benchmarks for farmer-led brands in India. This partnership goes beyond conventional advertising, it’s about leveraging technology and creativity to empower agriculture and connect communities in the digital age.”
“Nayanthara: Breaking Boundaries in Cinema for Two Decades”
Nayanthara’s career is a mix of two sides. She is a superstar who can easily get any movie made, but
Zee TV’s new content slate delivers 3-year high market share; leads core primetime
Mumbai: Zee TV, the flagship Hindi GEC of Zee Entertainment Enterprises Ltd. (ZEEL), has reported a strong surge in viewership, driven by its refreshed fiction line-up and audience-focused content strategy. With compelling narratives, relatable characters, and powerful emotional storytelling, the channel has reached a 3-year high urban market share of 14.7% in Q2FY26 and secured leadership across all GECs (Pay & FTA) in core prime time.Zee TV has also captured a dominant 40% share of the Top 10 shows in the Pay Hindi GEC genre, with four of its newly launched fiction series making the list. These include ‘Tumm Se Tumm Tak’, ‘Vasudha’, ‘Ganga Mai Ki Betiyan’, and ‘Jaane Anjaane Hum Mile’—all of which have delivered sustained week-on-week audience growth.The channel’s renewed content philosophy focuses on uplifting stories, emotional depth and strong character-driven narratives. Shows like Vasudha and Ganga Mai Ki Betiyan have resonated deeply with audiences, reflecting modern India’s blend of values, ambition and aspiration.To build further on this momentum, Zee TV recently launched ‘Jagadhatri’ and is gearing up for the premiere of ‘Lakshmi Niwas’, reinforcing its commitment to high-quality, rooted storytelling.Speaking about the performance of the new slate, Mangesh Kulkarni, Chief Channel Officer, Zee TV, said, “The success of our new fiction line-up marks a defining moment for us at Zee TV, achieving the dual win of core prime time leadership and a 3-year high market share. The strong resonance of our stories with viewers, reflect the positive momentum of the channel and enable us to remain well-poised to achieve higher gains in the future. Our prime time line-up is backed by a sharp programming strategy focusing on quality storytelling, and we aim to strengthen our offerings across other slots as well going forward.” [caption id=attachment_2475883 align=alignleft width=200] Raghavendra Hunsur [/caption] Raghavendra Hunsur, Chief Content Officer, Zee Entertainment Enterprises Ltd., added, “Our aim is to consistently craft powerful and engaging narratives that are a true reflection of the rich stories that reside within our Nation. The success of this new content approach and our fiction shows is a firm reflection of the trust that viewers place in us. The viewers’ acceptance of characters such as Saru and Vasudha across households, further gives us the confidence in the power of quality storytelling across any platform. We remain committed to fortify this growth with more compelling fiction and non-fiction properties across the channel.” Beyond fiction, Zee TV is also strengthening its non-fiction roster. The channel recently experimented with a unique daily non-fiction model through ‘Chhoriya Chali Gaon’, delivered inspirational real-life narratives via ‘Kahani Har Ghar Ki’, and launched ‘Ideabaaz’, a platform for emerging entrepreneurs to pitch their ideas to investors.With an expanding slate across genres, Zee TV continues to reinforce its leadership in the Hindi GEC category while building deeper viewer affinity through differentiated storytelling and innovative formats.
“Stranger Things Cast Salary Boost for Final Season”
As the fifth and final season of Stranger Things is set to release on November 26, fans are excited to
New Posters Reveal Action, Villain in Avatar: Fire
Avatar: Fire and Ash is one of the most awaited films of the year. As fans get ready for the
Ranveer Singh’s Dhurandhar Trailer Creates Intense Buzz
Fans can celebrate as the trailer of Ranveer Singh’s highly awaited film Dhurandhar has finally been released. The movie is
தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை
மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றல்ல 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலீசாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது.இதன்பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர்சிலையின் பாதுகாப்பு காரணமாக தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலீசாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது. சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை அகற்றப்பட்ட பின் பாராளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது. புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார் ? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலீசாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதை காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஏன் இனப்பிரச்சினையின் முக்கிய காரணம் சிங்கள பௌத்த மயமாக்கல் தான்.யுத்தத்தின் ஆணிவேரும் இது தான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்களமயமாக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது. சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது.தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை ,வெடுக்குநாறிமலை,உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. தையிட்டி,திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.இதில் இருந்து தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விடயம் தவறாமல் நடக்கும் .அது சிங்கள பௌத்தமயமாக்கல். ஏன் என்றால் அது திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல்.தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றுவதென்பது மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களால் காலத்திற்கு காலம் நிகழ்ந்தேறிக்கொண்டே இருந்து வந்துள்ளது. சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை.நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள்.அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவது என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றிற்கு பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டு பௌத்த நிலமாக மாறுவதற்கு எதிரானவர்கள்.தமிழருடைய பூர்விகம் கேள்விக் குறியாக்கப்படுவதற்கு எதிரானவர்கள்.தமிழருடைய தொல்லியல் ரீதியான நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிரானவர்கள்.தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர்களுடைய இனவிகிதத்தை திட்டமிட்டு மாற்றுவதற்கு எதிரானவர்கள்.நாங்கள் ஏன் ஒற்றையாட்சி அரசியலைமைப்பை மறுக்கின்றோம் தெரியுமா ? இதனால் தான். சிங்கள பௌத்த பேரினவாத்ததிற்கு அடிபணிந்து கிடப்பதனால் தான். இங்கே முதலில் சுற்றுலாத்தளமான கடற்கரையில் புத்தர் சிலையை அமைப்பதற்கான அனுமதி வழங்கியது யார்? பிரதேச சபையிடமிருந்தோ இல்லாவிட்டால் நகர சபையிடமிருந்தோ அனுமதிபெறப்பட்டதா ? இல்லை.முற்றமுழுதாக புத்தபிக்குகளே இலங்கையின் நிரந்தர நிறைவேற்று ஐனாதிபதிகளாக இருந்து வந்துள்ளனர். சுருக்கமாக சொல்லுவதென்றால் நாட்டின் அரச இயந்திரம் புத்த பிக்குகளுக்கு அடிபணிந்து இருக்கின்றது.முழு சட்டங்களையும் தங்கள் பக்கம் வளைக்கும் வலது சாரிகளின் பக்கம் அரசு முழுவதுமாக திரும்பி நிற்கின்றது.தாங்கள் இடது சாரிகள், கம்யூனிச சிந்தாந்தத்தை உள்வாங்கி கொண்டு செயற்படுவதாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அரசு நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியுமென்று தெரியவில்லை.இந்தப்பிரச்சினையில் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இலங்கையின் ஐனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல். இது ஏன் இவ்வளவு காலமும் பயங்கரவாத தடைச்சட்டமும் எடுக்கப்படவில்லை அரசியல் கைதிகளும் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை.இதில் அரசாங்கம் சார்பில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் ? தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் தீர்வுக்காக இது வரை வாய் திறந்திருக்கின்றார்களா? ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் அரங்கேற்றம் நிகழுவதாகவே நாங்கள் கணிக்கின்றோம். 1.புத்தர் சிலையை வைத்துப்பார்த்து தமிழ் மக்கள் இன்னும் தமிழ் உணர்வுடன் தான் இருக்கின்றார்களா என்று பார்ப்பது.அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அகற்றுவது சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு சரியுமென்ற பின் மீண்டும் நிறுவுவது. 2.அரசாங்கத்தை பலவீனப்படுத்துகின்ற எதிர்கட்சியின் திட்டமிடலாக இருக்கலாம்.ஒன்று தமிழ் மக்களிடத்தே பலவீனப்படுத்துவது அல்லது சிங்கள மக்களிடத்தே பலவீனப்படுத்துவது 3.இறுதியில் புற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கும் பாம்புகளை ப்போல் சிலர் வெளியே வந்திருக்கின்றனர்.யாரென்று பார்த்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித்தலைவருக்கு ஆதரவளித்தவர்கள்,மாவீரர் தினத்தை யார் எடுத்து நடாத்துவது என்று தங்களுக்குள் சண்டையிட்டவர்கள்.நீங்கள் உங்களுக்குள் முழுவதுமாக ஒற்றுமை அடையாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது. இறுதியாக எந்தவொரு சிங்கள பேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை. மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழத்தேசிய அரசியல் கலாச்சாரம் வடகிழக்கில் வரவேண்டும்.அப்போது தான் வெள்ளம் வர முன் அணை கட்ட முடியும். தமிழ்மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள்.நாங்கள் ஒன்றை நம்புகின்றோம் தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும். - என்றுள்ளது.
India’s 377M Gen Z consumers are reshaping the nation’s digital retail landscape: LS Digital Report
Mumbai: A new report titled “Gen Z and the New Frontier of Online Shopping in India” reveals that India’s 377 million Gen Z consumers are driving a massive transformation in the country’s digital retail ecosystem. Their fluid, platform-agnostic behaviour is reshaping how brands approach discovery, engagement, and commerce.According to the findings, Gen Z blends social commerce and traditional e-commerce seamlessly—discovering products on social media platforms through influencers and peer-driven trends but relying on trusted marketplaces such as Amazon and Flipkart for final transactions, secure payment experiences, and reliable delivery.The report highlights three dominant forces shaping Gen Z’s online behaviour: Urgency Economy (50%) driven by instant gratification and ultra-fast delivery expectations Democratized Access (25%) as social commerce rapidly expands into Tier 2 and Tier 3 cities Logistics Primacy (25%) where frictionless delivery and easy returns make or break brand loyalty Despite their high social media engagement, Gen Z’s search and purchase intent still favour established e-commerce players, reflecting trust as a key decision driver.Gen Z typically uses five or more platforms throughout a single purchase cycle—from discovery and research to validation, checkout, and sharing. Their expectations are anchored in speed, authenticity, micro-influencer credibility, last-mile excellence, and frictionless user experiences.The report concludes that the future of online shopping in India is not a competition between social commerce and e-commerce, but a convergent, hybrid ecosystem. As Gen Z continues to dictate digital trends, brands will need to evolve with a sharper focus on trust-building, seamless delivery, and agile content-led engagement to stay relevant.
Salman Khan’s Quirky Cameo in 1996 Film
Salman Khan has acted in many popular films, not only as the main star but also in surprise cameo roles
இதை மட்டும் அவுங்க செய்யட்டும் அரசியலில் இருந்து விலகுகிறேன் –பிரசாந்த் கிஷோர் சவால்!
பீகார் :பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (JSP) படுதோல்வி அடைந்தது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை; பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். “எக்ஸ்-ஃபாக்டர்” என்று எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் முதல் எதிர்வினையாக, “இந்தத் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பு” என்று தைரியமாக ஏற்றுக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “பீகார் மக்களிடம் […]
பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை
பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்க , மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் நலிந்த ஹேவாவசம் கடந்த வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார். தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 33 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாயார் பொலிஸில் முறைப்பாடு கடந்த 2021 ஆம் ஆண்டு நான்காம் மாதம் கிரிக்கெட் விளையாடுவதற்காக […]
Mirae Asset Sharekhan names Burson as Communications Partner
Mumbai: Burson, the global communications leader purpose-built to create value for clients through reputation, has been appointed as the strategic communications partner for Mirae Asset Sharekhan, a leading Indian brokerage and financial services firm. Through this partnership, Burson will work to bolster brand visibility and reinforce Mirae Asset Sharekhan’s positioning as a full-service financial solutions provider for both established and next-generation Indian investors. “We are incredibly proud to partner with Mirae Asset Sharekhan, a truly innovative and established player in India’s financial services landscape,” said Deepshikha Dharmaraj, Chief Executive Officer, Burson Group India. “We look forward to helping the company articulate its vision, showcase its expertise, and strengthen its reputation as a trusted provider of comprehensive financial solutions.” The collaboration comes at a time when Mirae Asset Sharekhan is significantly expanding its financial services portfolio and nationwide presence. “We are delighted to partner with Burson as we continue building Mirae Asset Sharekhan’s brand and amplifying the value we deliver to our customers with our full-service offering of research, experienced advisors and our branches spread across 1100+ cities in India” said Moon Kyung Kang, Chief Executive Officer, Mirae Asset Sharekhan. “Burson’s market expertise and innovative thinking will help us deepen connections with a wider community and champion the next phase of wealth creation for everyday investors, anchoring our commitment to transparency, trust, and growth.”
Maharashtra Leads Car Sales, UP Tops Two-Wheelers
The Society of Indian Automobile Manufacturers (SIAM) shared details about vehicle sales in India. Maharashtra is the largest buyer of
HGS reappoints Vynsley Fernandes as Whole-time Director & CEO – Media Business
Mumbai: Hinduja Global Solutions Limited (HGS) has announced that its Board of Directors, at a meeting held earlier this week, has approved the re-appointment of Vynsley Fernandes as Whole-time Director of HGS and Chief Executive Officer – Media Business. His new three-year term will take effect from November 14, 2025, subject to shareholder approval.HGS continues to strengthen its leadership as it expands its capabilities across customer experience lifecycle management, digital transformation, business process management, and the digital media ecosystem. With operations across nine countries, HGS is a global leader in delivering integrated and technology-driven solutions.The company’s digital media business includes the NXTDIGITAL content distribution platforms via cable and satellite; ONEOTT iNTERTAINMENT Ltd., India’s fourth-largest internet service provider; technology services from IndusInd Media & Communications Ltd.; and content syndication through IN Entertainment Ltd.
Indriya by Aditya Birla Jewellery launches regional bridal lines for India’s brides
Mumbai: Indriya, Aditya Birla Jewellery, has announced the launch of its exquisite regional bridal collections crafted for brides across Rajasthan, Gujarat, Andhra Pradesh, Telangana, Karnataka and Maharashtra. Designed for women who proudly carry their heritage and dream of their perfect wedding moment, the collections translate India’s artistic legacies into contemporary bridal masterpieces that embody strength, grace, and timeless tradition.The new lineup features four region-specific collections — Anantara, Padma Ranjini, Raasvi, and Rajashree — each deeply inspired by the cultural and architectural heritage of its respective geography.Anantara, created for brides in Andhra Pradesh, Telangana and Karnataka, draws from sacred Dravidian sculptures and Hoysala temple art, particularly the Chennakeshava and Keshava temples in Somanathapura. Designed in three layers, the collection tells a divine story centered around Lord Vishnu. The Garuda Haar unites classic Kaasu Maala and Jalebi Haar motifs; the Ganesha Puliguru Haar pays tribute to Lord Ganesha; and the Lakshmi Bottu Mala honours Goddess Lakshmi.Padma Ranjini, crafted for Rajasthani brides, reimagines the state’s architectural and artistic legacy into a modern heirloom set. The Padma Aad takes inspiration from the City Palace’s Padma Gate with lotus motifs and Pichwai elements; the Timaniya layer features elephants and peacocks with intricate jadai work; and the Hamel layer brings talismanic motifs such as taveez, coins and pankhi into a contemporary expression of heritage.Rajashree, designed for Maharashtra, captures the state’s royal craftsmanship. The Vajratik Haar features the iconic Chandrakor Tilak of Chhatrapati Shivaji Maharaj, the Simha Haar includes the majestic lion emblem alongside a Bor Mala, and the Saaj Haar binds the ensemble with symbolic elements reflecting dharma, destiny, and the ten avatars of Vishnu.Raasvi, created for the vibrant traditions of Gujarat, showcases the region’s artistry through three distinct layers — the Chandan Haar with architectural pendants, the Jhalar inspired by temple carvings and floral motifs, and the Jhumna Haar, which brings together traditional Kalighati work, the Pankhi motif, and ruby jadai.[caption id=attachment_2481136 align=alignleft width=200] Sandeep Kohli [/caption]Speaking on the launch, Sandeep Kohli, CEO, Indriya, said, “With these collections, we are honouring the rich heritage of our country, bringing its culture to life through jewellery inspired by its regal artistry. Our aim is to deepen Indriya’s connection with brides who cherish authenticity and craftsmanship. These collections is a step towards making Indriya the most trusted destination for bridal jewellery across India.” Shantiswarup Panda, Head of Marketing & Visual Merchandizing, Indriya, added, “The day of marriage across Indian sub-cultures remains the purest expression of one’s culture and celebration of rich heritage. Every woman cherishes a dream of being a bride of a certain kind much before the chosen man walks into her life, a bride who indulges in celebration of her heritage. These collections brings dreams to life through rich storytelling that blends heritage with individuality. With this collection, Indriya invites every bride to connect with her culture reflected in design and make it her own with endless love.” Abhishek Rastogi, Head of Design, Indriya, said, “Our vision was to capture the soul of India’s heritage through design. These collections blend traditional craftsmanship and contemporary elegance, with intricate kaarigari that showcases the skilled artistry of their regions, reflecting the emotion, symbolism, and enduring spirit of the region in every exquisite detail.” Watch the films:Padma Ranjini:https://www.youtube.com/watch?v=RjjOO23ke3IRajashree:https://www.youtube.com/watch?v=q-13vRxw4kwRaasvi:https://www.youtube.com/watch?v=NerhGgRKTtE
எஸ்ஐஆர் பணிச்சுமையால் அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி! போராட்டத்தால் குலுங்கும் கும்பகோணம்
கும்பகோணத்தில் எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாக அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவயவங்களை இழந்தவர்கள் சென்னை சென்றனா்
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனா். கனேடிய… The post அவயவங்களை இழந்தவர்கள் சென்னை சென்றனா் appeared first on Global Tamil News .
முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், முதியோர் இல்லங்களில் பராமரிப்பு நிலைமைகள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 13 முதியோர் இல்லங்கள் இயங்கிவருவதாகவும் இதில் மூன்று […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ, இல்ல எங்களுக்கு இது சத்தியமாக புரியவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு எல்லாம் நட்டு கழன்றுவிட்டதா என்று கேட்கிறார்கள்.
வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் காவல் நிலையம்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் காவல் நிலையம் வெள்ளத்தில்… The post வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் காவல் நிலையம் appeared first on Global Tamil News .
Kantara prequel drives October 2025 to year’s highest monthly box office record: Ormax Media
MUMBAI: Driven by 'Kantara - A Legend: Chapter-1', October 2025 has emerged as the highest-grossing box office month of the year at the India box office, with gross collections of Rs. 1,669 Crores. This is only the fifth instance since the pandemic that total gross collections in a month have crossed the Rs. 1,500 Crore mark.Ormax media's monthly feature The India Box Office Report tracks the performance of the various films released every month at the Indian (domestic) box office.- 'The cumulative box office for Jan-Oct releases in 2025 stands at Rs. 11,077 Crores, which is 24% higher than the same period in 2024. Based on pro rata estimation, the year is now poised to become the best-ever year at the Indian box office - a record currently held by 2023, at Rs. 12,226 Crore.- 'Kantara - A Legend: Chapter-1' emerged as the top film of the month, grossing ‚735 Cr. It is now also the top-grossing film of the year, surpassing 'Chhaava'.- Gujarati film 'Laalo: Krishna Sada Sahaayate' features among the top five films of the month, and is now the highest-grossing Gujarati film of all time at the India Box Office The film is still collecting well in theatres, and may exceed its projected collections (Rs. 92 Crore) by the end of its run.Hindi continues to lead the list of 2025’s top 10 highest-grossing films, with five films in the list. The list also includes two Telugu films, one film each in Kannada and Tamil, along with the multi-lingual animated feature Mahavatar Narsimha.Language ShareThe share of Hindi language remains steady at 38% (Jan-Oct). 'Kantara - A Legend: Chapter-1’s performance has helped increase the Kannada language’s share from 2% (Jan-Sep) to 4% (Jan-Oct), marking the best-ever share for the language since 2022. Gujarati cinema has achieved its highest-ever share at 2%, with collections surpassing Rs. 200 crore for the first time ever.
Warner Bros. Discovery and Times Network launch “Unheard Cries at GB Road”
Mumbai: Warner Bros. Discovery and Times Network have announced the release of Unheard Cries at GB Road, a powerful new documentary that amplifies the silenced voices of women living and working in Delhi’s red-light district. Premiering on discovery+ on 17 November 2025, the film presents courageous, on-record testimonies from survivors and sex workers, revealing the trauma, resilience, and systemic injustices that shape their daily lives.Produced under Times Now Studios and co-written and produced by Rohit Chadda, the documentary is built on more than 50 in-depth interviews. At a time when red-light districts are often portrayed through fiction or purely dramatic lenses, Unheard Cries at GB Road offers a grounded, non-fictional perspective rooted in firsthand accounts. Its documentation-led approach brings fresh clarity to a subject widely discussed yet rarely heard directly from those living within it. Sai Abishek, Head of Factual Entertainment, Lifestyle & Kids – South Asia, Warner Bros. Discovery, said, “Unheard Cries at GB Road is a story that demands to be seen and heard. At Warner Bros. Discovery, we believe factual storytelling carries both purpose and responsibility, and this film embodies that commitment. By giving these women the space to speak for themselves, the documentary brings rare honesty and emotional depth to a subject too often misunderstood. We’re proud to partner with Times Network to help ensure their voices reach a wider audience.” Supported by insights from members of the Delhi Police, social workers and subject-matter experts, the film situates personal stories within broader concerns of trafficking, safety and legal challenges. It also captures the internal environment of the brothels, portraying everyday conditions that shape the routines, responsibilities and constraints of the women who inhabit them. Beyond physical realities, the documentary sensitively explores the psychological and emotional burden they carry, revealing how they navigate fear, coercion and uncertainty while holding on to threads of hope. A Times Network spokesperson said, “This film has been made with deep responsibility toward the women whose lives it reflects. Earning their trust and entering a world that has stayed closed for decades enabled our team to build a narrative that is honest, sensitive and revealing. Rohit Chadda’s role in shaping the interviews and structure has been crucial to the film’s authenticity. We hope it offers audiences a meaningful window into the realities of GB Road.”
சென்னையில் அதிகரிக்கும் ரவுடீசம்! திமுக ஆட்சியின் தரைவிரித்தாடும் அவலம்- எடப்பாடி பழனிசாமி அட்டாக்
தமிழ்நாடு தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்தா.? மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ சொன்ன பதில்!
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக மல்லை சத்யா குற்றம் சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கோபத்துடன் பதிலளித்த வைகோ, “ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா” என்று கடுமையாகத் தாக்கினார். “எனது நேர்மையை உலகமே அறியும். என் அரசியல் விரோதிகள்கூட இப்படிச் சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என்று வைகோ ஆவேசமாக மறுத்தார். தனது சொத்து […]
சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?
சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம். தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மருத்துவமனையில் என்ன சிறப்பு? இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர். இந்த உயிரியல் பூங்காவில் எத்தனை உயிரினங்கள் உள்ளன? என்று வனச்சரகர் அலுவலரிடம் கேட்ட போது, 21 விலங்கு மற்றும் பறவை இனங்கள் உட்பட 307 உயிரினங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கடமான், புள்ளிமான் மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உள்ளன என்றார். மருத்துவமனையானது உயிரினங்களுக்கான மருத்துவ வசதி கொண்ட கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. `கல் மரங்கள் டு கண்ணாடி வீடு’ - புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா! மருத்துவப் பணிகள் தொடங்கி விட்டதா? ஆம். ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு விலங்கின மருத்துவர் நியமனம் செய்யப்பட்டு, அடிப்படையான அனைத்து மருத்துவப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்கான தேவை உள்ளதால், அதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவையும் எழுந்துள்ளது. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா எனவே குரும்பப்பட்டி வன உயிரினங்கள் மருத்துவமனை இன்னும் சிறப்பான முறையில் செயல்பட, சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை எதிர்நோக்கி இருப்பதாக வனசரகர் குறிப்பிடுகிறார். அது என்ன சி.எஸ்.ஆர் என்றால், நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 2% சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில், இந்த உயிரியல் பூங்கா மருத்துவமனை சி.எஸ்.ஆர் நிதியை எதிர்நோக்கி சிறப்பான பணிகளை செய்ய காத்திருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் வருவதாக ஒரு தகவல் கேள்விப்பட்டோம்! இதுகுறித்து வனசரகரிடம் கேட்ட போது, அது முன்மொழிவு நிலையில் உள்ளதாகவும், வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 படி டெல்லி மத்திய வன உயிரினங்கள் ஆணையம் அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேலும் இதுகுறித்து பேசும்போது, வன உயிரினங்கள் தத்தெடுப்பு திட்டம் இங்கு உள்ளதாகவும், அதன் படி பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலங்கினங்களை 1 நாள் முதல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உயிரியல் பூங்கா விதிமுறைகளுக்குட்பட்டு தத்தெடுத்து, அதற்கான அட்டவணையிடப்பட்ட தொகையை செலுத்தி, பூங்காவின் உள்ளேயே உயிரினங்களை பராமரிக்க தங்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் நன்கொடை தரலாமா? தாராளமாக பொதுமக்கள், பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடைகள் அல்லது ஏதேனும் ஒரு பணியையோ செய்து தரலாம் என்று வனசரகர் அழைப்பு விடுக்கிறார். மக்களின் பங்களிப்போடு பூங்கா மற்றும் மருத்துவமனை சிறந்து விளங்க நாமும் பங்களிப்போம். நீலகிரி: விரைவில் இரண்டாம் மலர் சீஸன்; தாவரவியல் பூங்கா பூத்துக் குலுங்கும் பூக்கள் | Photo Album
திமுக தேர்தல் வாக்குறுதி.. ஜாக்டோ ஜியோ போராட்டம்.. பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்பு!
பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று போராட்டம் நடக்கும் நிலையில் அதில் பகுதி நேர ஆசிரியர்களும் பங்கெடுத்துள்ளனர்.
“Nigar Sultana Responds to Allegations, Targets Harmanpreet”
In a surprising development, Bangladesh women’s cricket team captain Nigar Sultana Joty took a sharp dig at India’s World Cup-winning
கரீபியன் கடலில் அமெரிக்காவின் போர் கப்பல் ; அதிகரிக்கும் போர் பதற்றம்
அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும் உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் பிரசன்னம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபரேஷன் சதர்ன் ஸ்பியர் ஒபரேஷன் சதர்ன் ஸ்பியர்’ இன் ஒரு பகுதியாக குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெனிசுலாவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் படகுகள் மீதான […]
தூத்துக்குடி, தென்காசி மொத்தம் 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!
நேற்று (17-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (18-11-2025) காலை 0830 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து […]
Pujara Disagrees with Gambhir After Test Defeat
Former India cricketer Cheteshwar Pujara strongly disagreed with India head coach Gautam Gambhir’s comments about the team’s loss in the
Confluent names Kamal Brar and Greg Taylor in leadership roles
Mumbai: Confluent, the data streaming pioneer, has announced the appointment of Kamal Brar as Senior Vice President of Global Partners and Technology Group. Kamal will drive deeper partner collaboration, joint innovation, and expanded go-to-market reach throughout our global partner ecosystem, including cloud service providers (CSPs), system integrators (GSIs), independent software vendors (ISVs), managed service providers (MSPs) and the Confluent OEM program. Kamal previously served as the sales leader across the Asia Pacific and Japan region (APAC). Greg Taylor will take over this role as the Senior Vice President and General Manager for APAC.Kamal brings over two decades of experience driving high-value partnerships and high-impact customer success across global markets. He has led and scaled teams at some of the world’s most disruptive technology companies, including Oracle, IBM, Hewlett-Packard, MySQL, MongoDB, Talend, Hortonworks, and Rubrik. As Confluent’s APAC sales leader, Kamal helped accelerate the growth of emerging technology start-ups across the region and delivered exceptional value to customers leading digital transformation initiatives. Now, as the leader of global partnerships, he’s channeling that passion into building a strong, scalable ecosystem that fuels long-term growth and makes the Confluent’s data streaming platform accessible to even more customers worldwide. “Confluent’s partners are at the heart of how we help customers unlock the full potential of their data,” said Kamal Brar, Senior Vice President Global Partners and Technology Group at Confluent. “As data streaming becomes the foundation for intelligent, real-time businesses, our partners play a critical role in scaling innovation globally. I’m thrilled to lead this next phase as we deepen our strategic alliances, accelerate co-innovation, and expand the reach of our platform so every organization can build and operate with trusted, real-time data.” Greg Taylor has been appointed as SVP and GM for APAC at Confluent, bringing more than 25 years of experience driving revenue growth and cloud consumption across APAC. At Databricks, he substantially scaled the APJ business. He also recently served on the Board of WhiteSky Labs, acquired by Capgemini in 2020. Greg has also held senior roles at New Relic, Marketo, Software AG, and Oracle; building high-performing teams and delivering sustained commercial success. His career demonstrates a consistent record of scaling technology businesses across the region. “AI requires real-time, high fidelity data. Today, the demand for enterprises to compete at scale by underpinning their business with AI has never been more prevalent. Confluent’s Data Streaming Platform acts as the central nervous system for businesses, turning every action, transaction, and signal into instant intelligence. One of the key factors that motivated me to join Confluent was the extraordinary opportunity in the region for organisations to scale faster, serve customers smarter, and unlock entirely new possibilities.” said Greg Taylor.
'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆனந்த ராகம்'அழகப்பன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்தராகம்' சீரியல் இன்று ஆயிரமாவது எபிசோடை எட்டியுள்ளது. வாழ்த்துச் சொல்லி தொடரின் ஹீரோ அழகப்பனிடம் பேசினோம். ''காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நான் நடிக்க போறேன்னு சொன்னப்ப எங்க அம்மா 'அவன் விருப்பம்'னு சொல்லிட்டாங்க. அப்பா ரொம்பவே பயந்தார். திட்டினார். நடிக்கப் போய் தோத்தவங்கதான் நிறையனு சொல்றாங்க. பேசாம வேற நல்ல வேலை எதுவும் தேட வேண்டியதுதானே'ன்னார். பையன் எதிர்காலத்துல மேல இருந்த அக்கறை அது. நான் வாய்ப்பு தேடிட்டிருந்த நாட்கள்ல 'உன் பையன் மெட்ராஸ்ல என்னப்பா செய்யறான்'னு வம்புக்குன்னே கேட்டவர்கள் உண்டு. நடிப்பைத் தேடி சென்னை வந்து அலைஞ்சு திரிஞ்ச நாட்கள்ல சீரியல்ல சின்னச் சின்ன கேரக்டர்ல ரெண்டு நிமிஷம் வந்து போயிட மாட்டேனானு நினைச்ச நாட்கள் உண்டு. ஏன் அந்த மாதிரி கனவெல்லாம் நிறைய வந்திருக்கு. அழகப்பன் ஒருவழியா முதல் தொடர் விஜய் டிவியில 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' ஒளிபரப்பாச்சு. அப்புறம் 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட மேலும் சில தொடர்கள் வந்து முகம் தெரியத் தொடங்குச்சு. ஆனாலும் காமெடி, சப்போர்ட் கேரக்டர்கள்தான். ஆனா என்னை நடிகன்னு மக்கள் ஏத்துக்கிட்டாங்கனு நினைச்சப்ப சந்தோஷமா இருந்தது. 'என்னப்ப்பா பண்றான் உன் பையன்'னு அப்பாகிட்ட கேட்டவங்க கொஞ்சம் மாத்தி 'நல்லா பண்றாண்ப்பா உன் பையன்'னு சொல்லத் தொடங்கினாங்க. இப்படிப் போயிட்டிருந்த சூழல்லதான் 'ஆனந்த ராகம்' சீரியல் வாய்ப்பு வந்தது. என்னது சன் டிவியில் நடிக்கிறயானு கேட்டாங்க. அவங்களுக்கு அடுத்த அதிர்ச்சி நான் ஹீரோவானது. `ஏன் வேற ஹீரோ கிடைக்கலியா’, 'என்னது ஹீரோ இவனா'னு நெஞ்சுவலி வராத குறையா பதட்டமானாங்க. அழகப்பன் இப்படிக் கேள்வி மேல கேள்வி கேட்ட யாருக்கும் நான் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னாடி பட்ட கஷ்டங்கள் எதுவும் தெரியாது. அதனால இந்த மாதிரிக் கேள்விகளை நான் பெரிசா எடுத்துக்கலை. ஹீரோவா நடித்த முதல் சீரியலே ஆயிரமாவது எபிசோடை தொடுற சந்தோஷத்துல இருக்கிற இந்த நேரத்துல எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கும் சேனலுக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்க விரும்பறேன். அதேபோல கிடைச்ச வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தி உழைச்சுட்டே இருக்கணும்கிறதுதான் என் ஆசை. இவன் ஹீரோவான்னு பதறினார்களே, அவங்களுக்கே இந்த ஆயிரமாவது எபிசோடை சம்ர்ப்பிச்சிடலாம்னு நினைக்கறேன்' என்கிறார்.
NIA Arrests Key Aide in Red Fort Blast
The National Investigation Agency (NIA) has arrested Jasir Bilal Wani in Srinagar. Officials say he was an “active co-conspirator” who
WTC Final-க்கு முன்னேற.. இந்திய அணி இனி என்ன செய்யணும்? கொஞ்சம் கஷ்டம்.. புள்ளி விபரம் இதோ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனலுக்கு முன்னேற, இந்திய அணி இனி என்ன செய்ய வேண்டும்? அடுத்தடுத்த போட்டிகளில் எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? இதில் எத்தனை சதவீதம் எடுக்க வேண்டும்?

23 C