SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

Bison: `பைசன்-ல நான்தான் சீனியர்; ஆனா, 2வது நாளிலே அழுதுட்டேன்’ - ரஜிஷா விஜயன் ஷேரிங்ஸ்

மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர். பைசன் படத்தில்... `கர்ணன்' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். அவரை சந்தித்து பேசினோம்... ரஜிஷா விஜயன் பேசுகையில், `கர்ணன்' படத்திலும் எனக்கு இருந்த ப்ராசஸ் தான் `பைசன்' படத்திலும் இருந்தது. இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் சாருடன் இணைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். மற்றவர்களைவிட இந்தப் படத்தில் நான்தான் சீனியர் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இரண்டாவது நாளில் நானே அழுதுவிட்டேன் (சிரிக்கிறார்). இப்படியான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால், இதற்கு முன் நான் கர்ணனில் செய்த திரௌபதி கதாபாத்திரத்தின் தன்மை இதில் வந்துவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன். இப்படத்திற்காக நான் சைக்கிள் ஓட்டப் பழகினேன். நீருக்குள் இறங்கி நத்தை எடுத்தோம். மட்டன் வெட்டிப் பழகினோம். திரையில் அத்தனையும் அசல் வடிவத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சிகளை மேற்கொண்டோம். என்றவரிடம் தென்மாவட்டங்களில் உணவுப் பண்டங்கள் மிகவும் பேமஸ். எந்த பண்டங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தன'' எனக் கேள்வி எழுப்பினோம். அவர், ``ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எனக்குப் பிடிக்கும். அதைத் தாண்டி பசுபதி சார் வாங்கிக் கொடுத்த தூத்துக்குடி மக்ரூனும் எனக்குப் பிடித்திருந்தது. என்றார். Bison: `பைசனில் தனியாக நிற்க வேண்டும் என.!’ - அப்பா விக்ரம் குறித்து துருவ் | Exclusive

விகடன் 15 Oct 2025 10:20 am

Our marketing is not about noise; it’s about clarity: Sahil Bansal, Fitelo

Fitelo, a tailored platform for weight loss, disease management, and fitness management, recently appointed Milind Soman as its new brand ambassador as part of a rebranding initiative. This is a step in promoting wellness and long-term health. With Soman, Fitelo emphasises that 'health has no shortcuts''.With him on board, Fitelo is looking to differentiate itself from fad diets and quick fixes by focussing on sustainable, long-term results. At the age of 59, with his consistency, natural living, and perpetual energy, Milind proved that true health comes from everyday choices, not quick tips. Fitelo, which won support on Shark Tank Season four, has already impacted 1.2 crore lives in 70+ countries following the same principle, providing personalized nutrition and fitness instruction to help people form long-term habits.As a part of this collaboration, Fitelo will soon launch a series of campaigns with Soman, including 'Lose2Win', where customers who achieve the best transformation will be rewarded with 100% cashback every week. It reflects Fitelo’s belief that health is the best investment you can make, and now, it even pays you back. MediaNews4u.com caught up with Sahil Bansal Founder Fitelo Q. What is the gap in the market that led to the launch of Fitelo? India has always had two extremes: on one side, traditional wisdom about food and lifestyle; on the other, modern fads promising shortcuts. But there was very little that merged science, psychology, and cultural context into something practical. Most solutions were either unsustainable diets or expensive fitness regimens.The gap was obvious—people needed a way to get fit that respected their everyday life, their food, and their limitations. Fitelo was born to fill that gap. We don’t sell magic formulas. We build tiny, repeatable habits that add up over months and years. Health isn’t a pill you take—it’s a lifestyle you practice. Q. Fitelo is differentiating itself from fad diets and quick fixes by focusing on sustainable, long-term results. What does this entail? It means we don’t chase short-term outcomes at the cost of long-term health. Fad diets make you lose weight quickly, but they don’t teach you how to live better. At Fitelo, we help people learn balance—how to enjoy Indian food, how to navigate celebrations, how to eat with family, and still stay on track.Every client has a personal coach, but behind them sits technology—data on nutrition, stress, sleep, and activity that allows us to design personaliSed interventions. Sustainable results are simply a by-product of living better each day, not punishing yourself for a number on a scale. Q. According to data analytics, where is the whitespace for growth? Which markets are being targeted both in India and abroad? Our data shows two clear gaps. In India, Tier-2 and Tier-3 cities are underserved. People there want guidance, but they’re flooded with misinformation. Fitelo brings credible, affordable, and coach-led programs directly to their phones.Abroad, the whitespace is among NRIs and the Indian diaspora. They want fitness programmes rooted in Indian food and lifestyle, not Western templates. We already have users across 70+ countries, and the response shows that culturally relevant health solutions are the biggest untapped opportunity. Q. From a marketing perspective, what are the priorities and focus areas of Fitelo? Our marketing is not about noise; it’s about clarity. We prioritize education over gimmicks—debunking myths about carbs, protein, fasting, and supplements.We focus on building trust by sharing real customer stories, real transformations, and simple tips anyone can use. Community is a huge part of our strategy; when people see others like them succeed, they believe they can too. And finally, our founders, coaches, and now Milind Soman, are the faces of the brand—because authenticity sells better than any ad. Q. Milind Soman is now Fitelo’s Brand Ambassador. Since he is passionate about fitness, will that bring authenticity to the brand message? Absolutely. Milind is 59, and yet he lives the lifestyle most 30-year-olds aspire to. He’s proof that consistency matters more than shortcuts. When he says “health has no shortcuts,” it doesn’t sound like a tagline; it sounds like lived wisdom.That alignment makes the partnership authentic. People can see he isn’t selling a product—he’s sharing a philosophy that he himself practices. Q. Could you talk about the campaigns that are being done with him, including 'Lose2Win'? ‘Lose2Win’ is our flagship programme with Milind. Every week, people who achieve the best transformations get 100% cashback. The idea is simple: health is the best investment you can make, and now it even pays you back.Beyond that, we’re building digital films, live sessions, and challenges inspired by Milind’s lifestyle. The focus is not on glamour, but on making people see fitness as joyful, consistent, and long-lasting. Q. Is the rebranding initiative aimed at improving brand perception? It’s deeper than perception. Rebranding for us is about clarity. We’re saying openly what we’ve always believed—fitness is a lifelong journey, not a four-week challenge.Our new identity, logo, and ambassador don’t just look fresh; they reinforce our mission. The goal is not to appear different; it’s to stand firm in what makes us unique. Q. To what extent will marketing be about education and correcting misconceptions? To a very large extent. The fitness industry thrives on confusion—detox teas, crash diets, supplements. Our role is to cut through the noise and say: you don’t need extreme measures, you need simple, consistent habits.Education is the marketing. Correcting misconceptions is how we build trust. When people see value in our free advice, they naturally turn to us for deeper guidance. Q. In terms of the media mix will digital be the main focus or will traditional media like TV, print also play an important role? Digital is our foundation—it allows precision, engagement, and community-building. That’s where people track health and interact daily. But traditional media still has its place.TV and print give reach and credibility, especially in markets where families consume information together. For key campaigns and brand moments, we will use a balanced mix. Think of digital as the engine and traditional media as the amplifier. Q. Fitelo was rejected in the first two seasons of 'Shark Tank India' when their turnover was Rs 1 crore and Rs 4 crore, respectively. Now, with a projected revenue of Rs 100 crore, they returned with a stronger pitch. Could you talk about the experience? Rejection is feedback. The first time, we were passionate but unproven. The second time, we had traction but not scale. We learned, improved, and kept going.By the time we returned, we had sharper economics, stronger outcomes, and a bigger story to tell. The rejection seasons were part of our education; the acceptance was validation. Every entrepreneur should treat rejection as tuition—it’s expensive, but it teaches what no book can. Q. How has being on a show watched by millions helped boost brand awareness? It has been a catalyst. Overnight, we went from being known in digital circles to being recognised in living rooms across India.Tier-2 and Tier-3 cities especially saw a huge spike in awareness because TV still has a massive influence there. Beyond awareness, it gave credibility. When millions watch you get validated on national television, it removes doubt in people’s minds. They trust you faster. Q. Namita Thapar and Vineeta Singh have partnered with the company as investors. What do they bring to the table? We are in discussions yet, but we cannot share details at this stage. What we can say is that the conversations so far have been very encouraging, and there is strong alignment of vision around making health and wellness accessible to everyone. Q. What role is AI playing for Fitelo when it comes to product innovation? AI is like a silent partner in everything we do. It helps us personalize diet plans to cuisines, preferences, and even medical conditions. It predicts when someone might relapse and nudges them back on track.It gives our coaches insights so they spend less time crunching data and more time motivating clients. But AI doesn’t replace the human—it amplifies the human. Our coaches bring empathy; AI brings intelligence. Together, they make the experience seamless.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Oct 2025 10:19 am

இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடுகள்: இளம் வயதினருக்குப் பாதுகாப்பானச் சூழலை உருவாக்கும் மெட்டா!

சமூக ஊடக உலகில் இளம் வயதினரின் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய கேள்வியாக நீடிக்கும் நிலையில், மெட்டா நிறுவனம் (Meta),

ஆந்தைரேபோர்ட்டர் 15 Oct 2025 10:12 am

Bison: `` உன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை என மாரி செல்வராஜ் சார் சொன்னார்! - அனுபாமா பேட்டி

மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர். பைசன் படத்தில்... `கர்ணன்' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். படத்தின் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனை சந்தித்து பேசினோம். அனுபமா பரமேஸ்வரன் நம்மிடம் பேசுகையில், ``இது என்னுடைய கரியரில் முக்கியமான ஒரு திரைப்படம். இதுவரை நான் பண்ணிய படங்களில் இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்தப் படத்தின் மூலமாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சவால்களும் இருந்தன. மாரி செல்வராஜ் நேர்த்தியான நடிப்பை எதிர்பார்ப்பார். ஆனால், இப்படியான கடின சூழல்களில் என்னுடன் துருவும், ரஜிஷாவும் இருந்தார்கள். தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் ரஜிஷாவும் ஒரு ஷாட்டில் 52 டேக் எடுத்தோம். நான் மாரி செல்வராஜ் சாரின் படங்களின் மிகப்பெரிய ரசிகை. Bison - Anupama அவருடைய படத்தில் நாம் ரசித்துப் பார்த்த அவுட்புட்டைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது புரிந்தது. ஆனால், இந்த விஷயங்கள் ஒரு முழுமையான திருப்தி உணர்வையும் தந்தன என்று சொல்லலாம். அவர் டேக் ஓகே சொன்னாலே எங்களுக்கு விருது கிடைத்த மாதிரியான உணர்வு வரும். படத்தின் எடிட் நடந்து கொண்டிருக்கும்போது மாரி சார் `உனக்கு ஏன் இப்படியான படங்கள் வரவில்லை? உன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை' என்று சொன்னது மிகப்பெரிய பாராட்டு. நான் இதுவரை இது மாதிரியான படங்களில் நடித்தது கிடையாது. ஷூட்டிங்கில் இப்படியான ஒரு வார்த்தையை மாரி செல்வராஜ் சார் சொன்னது மிகப்பெரிய விஷயம். என்று முடித்துக் கொண்டார். Bison: `பைசனில் தனியாக நிற்க வேண்டும் என.!’ - அப்பா விக்ரம் குறித்து துருவ் | Exclusive

விகடன் 15 Oct 2025 10:09 am

பிக் பாஸுக்கு வந்த 3வது நாளே என்னை பார்த்து அந்த கேள்விய கேட்டான் துஷார்: அரோரா

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அரோரா தன் நெருங்கிய நண்பரான துஷார் பற்றி ஆதிரையிடம் சொன்ன விஷயம் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் சிலரோ இதற்கு எதற்காக ஷாக் ஆக வேண்டும் என்கிறார்கள்.

சமயம் 15 Oct 2025 10:08 am

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துபோன வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதையொட்டி தவெக நிர்வாகிகள் சாணார்பட்டி காவல்நிலையம் முன்பு குவிந்து கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவெக நிர்வாகிகள் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் வைத்திருந்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்ட நிர்மல்குமாரை திண்டுக்கல் மாவட்ட ஜேஎம் 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி அக்டோபர் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

விகடன் 15 Oct 2025 10:06 am

நெருங்கும் தீபாவளி…தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று (அக்டோபர் 15, 2025) சென்னை சந்தையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860-ஆகவும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.280 உயர்ந்து – ரூ.94,880-ஆகவும் விற்பனையாகிறது. சவரன் விலை ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளது, இது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.1 ஏற்றம் – […]

டினேசுவடு 15 Oct 2025 10:04 am

Bison: `பைசனில் தனியாக நிற்க வேண்டும் என.!’ - அப்பா விக்ரம் குறித்து துருவ் | Exclusive

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். பைசன் படத்தில்... கதாபாத்திரத்திற்கு மொத்தமாக தன்னை தயார்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் திருநெல்வேலியிலேயே தங்கி கபடி பயிற்சி எடுத்து அசல் நெல்லைக்காரராகவே உருமாறி நிற்கிறார் துருவ். `பைசன்' படத்தின் ரிலீஸையொட்டி துருவை சந்தித்துப் பேசினோம்..! `` `பைசன்' திரைப்படத்திற்கு ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கிறீர்கள். இந்த பயணம் உங்களுக்கு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எவ்வளவு சவாலாக இருந்தது? ``இந்தப் பயணம் எனக்கு களைப்பூட்டியதாக நான் சொல்லமாட்டேன். தொடக்கத்தில் கபடி ஆட்டத்தைக் கற்றுக் கொள்ளும்போது டயர்ட் ஃபீல் வந்தது. பிறகு, இந்தப் படத்தையே என் வாழ்க்கையாக்கிவிட்டேன். மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்து படத்திற்குள் வரவேண்டியதாக இருந்தது. இதற்கு முன்பு நான் கபடி விளையாடியதே கிடையாது. சொல்லப்போனால், கபடியை நான் `கில்லி' திரைப்படத்தில்தான் பார்த்திருக்கிறேன். மூன்று வருடங்கள் முழுமையாக கபடி கற்றுக் கொண்டு படத்திற்கு வருவது மட்டும் கொஞ்சம் சவாலாக இருந்தது. அந்த நேரம், எனக்கு வாழ்க்கை குறித்தும், நடிப்பு குறித்தும் ஆழமாக சொல்லித்தந்தது. பர்சனலாகவும் அது எனக்கு தேவையான விஷயமாகப் பார்க்கிறேன். முக்கியக் கதாபாத்திரங்களைத் தாண்டி படத்தில் மாரி செல்வராஜ் சாரின் ஊர் மக்கள் அதிகமானோர் நடித்திருக்கிறார்கள். அவர்களும் சூழலை முழுமையாக உள்வாங்கி 'கன்டினியூட்டி, ஃபீல்டு க்ளியர்' என சினிமாவின் தொழில்நுட்ப விஷயங்களைச் சொன்னதெல்லாம் அவ்வளவு அழகாக இருந்தது.” பைசன் படத்தில்... ``நடிப்பிற்கு, மாரி செல்வராஜ் படத்தை தொடங்குவதற்கு முன் என்ன விஷயங்களைச் சொன்னார்? முடித்தப் பிறகு என்ன சொன்னார்?'' ``படத்தை தொடங்கும்போது `இந்தப் படத்திற்கு நிறைய கடின உழைப்பும், போராட்டமும் தேவை. கபடியை உண்மையாகவே எடுக்கப்போகிறோம். அதனால் நீ பிளேயராகவே மாறி படத்தில் நடிக்க வேண்டும்' எனச் சொன்னார். அங்கு நான் கபடி ட்ரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய விளையாடிய மற்ற அனைவரும் உண்மையான அசல் விளையாட்டு வீரர்கள். காட்சியை முடித்தப் பிறகு `டேக் ஓகே' என மாரி செல்வராஜ் சார் கூறினாலே பெரிய பாராட்டு அது. படப்பிடிப்பு முடிந்த அன்று `சூப்பர் டா' எனப் பாராட்டினார். அவருடைய நம்பிக்கையையும் நான் காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன்.” `` `பைசன்' படம் நடந்துக் கொண்டிருக்கும்போது உங்களால் வேறு படங்களை கமிட் செய்ய முடியாத சூழல் உருவாகிவிட்டது. முடியை வெட்டி முழுக்க முழுக்க உங்களுடைய கவனம் 'பைசன்' படத்தின் மீது மட்டுமே இருந்திருக்கும். கமிட்மென்ட்களையும் பூர்த்தி செய்ய முடியாது. அப்படியான வேளையில் உங்களின் மனநிலை எப்படி இருந்தது? ``இப்படத்தை என்னுடைய வாழ்க்கையாக நான் மாற்றிவிட்டேன். ஃபேமிலி, ரிலேஷன்ஷிப், நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் இதுவரை செய்த படங்கள் என அனைத்தையும் மறந்து நான் திருநெல்வேலியில் தங்கி படத்திற்கு தயாராகினேன். அங்கிருக்கும் மக்கள் தந்த அன்பு, அங்கிருக்கும் நண்பர்களுடன் கபடி விளையாடி நேரம் செலவழித்தது அழகான அனுபவமாக இருந்தது. கபடி விளையாடி முடித்துவிட்டு நீச்சல் பயிற்சி செய்வோம். பிறகு நண்பர்கள் அனைவரும் இணைந்து தொட்டியில் குளிப்போம். மழை வந்தால் ஸ்பீக்கரில் பாடல் போட்டு அனைவரும் நடனமாடுவோம். பிறகு மீண்டும் கபடி பயிற்சி முடித்துவிட்டு மாலை வேளையில் பரோட்டாவும் அல்வாவும் சாப்பிடுவோம். இப்படியான ஒரு அழகான அனுபவம் கிடைத்ததை எண்ணி நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மாரி சார் என்னை நம்பி `போய் கற்றுக் கொள்' என அனுப்பியதற்கும் நன்றி!” Bison - Dhruv Vikram ``படத்திற்காக என்னென்ன விஷயங்கள் புதிதாகப் பழகினீர்கள்?'' ``நிறைய வொர்க் செய்தோம். ஆனால், அதற்கான காட்சிகள் படத்தில் இருக்காது. நாங்கள் செய்த விஷயங்கள் படத்திற்குத் தேவைப்படும் அந்த உடல் மொழியைக் கொண்டு வந்தது. வயலில் இறங்கி வேலைப் பார்த்ததும் என்னுடைய கபடி விளையாட்டை இன்னும் இயல்பாக மாற்றியது. `வயலில் இறங்கி, மாடுகளுடன் நீ பழகும்போதுதான் உன்னுடைய கபடி விளையாட்டு மெருகேறும்' என மாரி சார் சொன்னார். அவர் சொன்னதுபோலவே, நான் மற்ற விஷயங்களைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு என்னுடைய விளையாட்டுக்கு அது பெரிதும் உதவியது.” ``நடிகர் பசுபதியின் கதாபாத்திரம் `பைசன்' படத்தின் எமோஷனுக்கு மிக முக்கியமானது எனச் சொல்கிறார்களே...'' ``ஆம், பசுபதி சாரின் கதாபாத்திரம் `பைசன்' படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். அவருடைய கேரக்டரில் பெரிய எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி அவரொரு லெஜென்ட். என்னுடைய தந்தையுடன் அவர் அதிகமாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடன் பணியாற்றும்போது நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். படப்பிடிப்பில் தினந்தோறும் அவருடன் அமர்ந்து நடிப்பு தொடர்பாகப் பலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் என்னுடைய தந்தையுடன் மிக நெருக்கமென்பதால் எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்.” Bison - Dhruv Vikram ``அவருடைய கதாபாத்திரத்திற்கு உங்களுடைய தந்தை விக்ரமையும் நடிக்க வைப்பதற்கு கேட்டதாக மாரி செல்வராஜ் சொல்லியிருந்தாரே, நீங்கள் முக்கியமெனக் கருதும் இப்படத்தில் அப்பாவும் உடனிருக்க வேண்டும் என எண்ணினீர்களா?'' ``நான் ஏற்கெனவே அப்பாவுடன் இணைந்து `மகான்' படத்தில் நடித்துவிட்டேன். `ஆதித்ய வர்மா' படத்தைக் கிட்டத்தட்ட அவர்தான் டைரக்ட் செய்தார். ஆம், அந்தக் கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கும்தான். நான் இந்தப் படத்தில் தனியாக நிற்கவேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். என்றைக்கோ, அப்பாவைவிட்டு தனியாக நான் நகர வேண்டும். அப்படித்தான் இந்த `பைசன்' பயணத்தைப் பார்க்கிறேன்.”

விகடன் 15 Oct 2025 9:58 am

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது - சீனாவுக்காக உளவு பார்த்தாரா?

``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. carnegie endowment ஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs). `கார்னகி அறக்கட்டளை' உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும். தடை செய்யப்பட்ட அரசு சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான ஃபெடரல் விசாரணையில் 64 வயதாகும் டெல்லிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருப்பதையோ அல்லது தக்கவைத்துக்கொள்வதையோ தடைசெய்யும் 18 USC § 793(e) ஐ டெல்லிஸ் மீறியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். National Security Council குற்றம் நிரூபிக்கப்படும்வரை டெல்லிஸ் நிரபராதியாகக் கருதப்படுவார். மேலும் இதுவரையில் அவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் டெல்லிஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதுடன் $250,000 (ரூ.2,21,50,080) அபராதமும் விதிக்கப்படும். யார் இந்த ஆஷ்லே ஜே டெல்லிஸ்? டெல்லிஸ் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-இந்தியா உறவுகளின் முன்னணி நிபுணராவார். இவர் அமெரிக்க அரசின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியபோது, அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். American foreign policy expert Tellis தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அரசாங்கப் பணிக்கு முன், டெல்லிஸ் RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia, Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

விகடன் 15 Oct 2025 9:57 am

Nicky Singh joins Vianaar as Associate Director – Marketing

New Delhi: Vianaar, a leading luxury real estate brand known for its design-led and sustainable developments across Goa, Kasauli, and Sri Lanka, has announced the appointment of Nicky Singh as Associate Director – Marketing.A seasoned communication strategist and luxury lifestyle specialist, Nicky brings over two decades of experience in brand storytelling, integrated marketing, and strategic communications. She joins Vianaar after an illustrious stint at Mullen Lowe Lintas Group’s digital-first, creative-led PR agency – Lintas Live, where she spent nearly a decade as part of the leadership team.At Lintas Live, Nicky served as Senior Vice President, spearheading integrated communications, events, and marketing mandates for marquee brands including Cinepolis, Valvoline Cummins, Vadilal International, Turkish Airlines, Porsche, and H&M, among others. She also led the agency’s northern operations and played a pivotal role in business growth and strategy. Prior to this, she was responsible for driving the marketing and communication mandate for DLF Luxury Malls.Nicky’s appointment at Vianaar marks a strategic return to her core expertise in the luxury segment. She will lead the brand’s communication strategy and creative marketing efforts, with a focus on customer engagement, high-value experience curation, and enhancing brand distinctiveness. “Vianaar is a brand I have long admired for its strong design ethos, seamless ownership experience, and commitment to sustainable living,” said Nicky Singh . “I’m excited to contribute to its evolution as a global luxury lifestyle brand, building narratives that speak to a discerning, experience-driven audience.” Nicky is widely recognized for her work in the luxury lifestyle, real estate, hospitality, travel, aviation, automobile, education, and destination marketing sectors. Her expertise lies in crafting B2C curations for HNIs, UHNIs, and C-suite audiences, creating bespoke, high-touch brand experiences. Her strengths include content strategy, relationship management, and integrated campaign execution.[caption id=attachment_2477146 align=alignleft width=153] Varun Nagpal [/caption]Welcoming her to the leadership team, Varun Napal, Founder of Vianaar, said, “We are delighted to welcome Nicky into the Vianaar family. Her strategic mindset, creativity, and in-depth understanding of the luxury consumer make her a valuable addition to our leadership team. As we grow across geographies, her vision will play a vital role in shaping how the world experiences both Vianaar and The Blue Kite brand.”

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Oct 2025 9:52 am

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை :தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 15 ) முதல் 21 வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை […]

டினேசுவடு 15 Oct 2025 9:43 am

`நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்

கரூர் சம்பவம் சம்பந்தமாக தமிழக அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கு விசாரணையையும் சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து டாக்டர் சரணவனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தனக்குத்தானே பெருமையாக பேசிக் கொள்கிறார். Udhayanidhi ஆனால், நிர்வாக சீர்கேட்டால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றஙகள் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், அதிக குட்டுகளையும் பெற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறார். டாக்டர் சரவணன் ஏற்கனவே சனாதனத்தைப் பற்றி விமர்சித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு திமுக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது, இப்படி பல சம்பவங்கள். அதுமட்டுமின்றி, கடன் வாங்கும் மாநிலங்களில் நாட்டிலேயே முதலிடம், லாக்கப் மரணங்களில் முதலிடம், போதைபொருள் நடமாட்டத்தில் முதலிடம், காங்கிரஸ்-திமுக கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்களின் தற்கொலையில் முதலிடம் பெற்று தமிழகம் உள்ளது என்றார்.

விகடன் 15 Oct 2025 9:43 am

WPP and Google expand partnership to transform global marketing through AI

Mumbai: WPP and Google have announced a five-year expansion of their partnership, focused on advancing cloud and AI technologies and developing the critical skills required to transform modern marketing. The collaboration aims to redefine how brands create and deliver hyper-relevant campaigns — compressing production timelines from months to days — while driving measurable growth across the integrated marketing and commerce journey.The partnership includes a $400 million investment commitment from WPP for Google technologies, reinforcing WPP’s market-leading efforts to infuse AI into its services via WPP Open, the company’s AI platform for marketing. The agreement was formalised in Mountain View during a meeting between WPP CEO Cindy Rose, Google Cloud CEO Thomas Kurian, and senior leadership from both companies.[caption id=attachment_2477139 align=alignleft width=200] Cindy Rose OBE [/caption] Cindy Rose, CEO of WPP, said, “I'm incredibly excited about how our new and evolved partnership with Google will redefine what's possible for our clients. By delivering bespoke AI solutions and enabling hyper-relevant campaigns with unprecedented scale and speed, we're accelerating innovation across every facet of marketing to drive unparalleled growth and impact.” [caption id=attachment_2477140 align=alignright width=200] Thomas Kurian [/caption] Thomas Kurian, CEO of Google Cloud, said, “Our expanded partnership with WPP is built on a shared vision to harness the power of generative and agentic AI to transform business outcomes. By enabling WPP to innovate on our AI-optimised technology stack, we are helping create the future of marketing technology for brands today.” [caption id=attachment_2477142 align=alignleft width=200] Lorraine Twohill, [/caption] Lorraine Twohill, SVP, Global Marketing, Google, added, “As an important partner to Google Marketing, WPP has been working closely with us on a number of AI tools and innovations built with Gemini — all focused on driving brand love and real business growth through truly helpful experiences that resonate with our billions of users around the world. I'm excited to continue exploring what marketing and storytelling looks like in this new era, together.” The expanded collaboration will empower WPP’s global client base with advanced AI solutions built on Google’s technology stack, transforming the way brands connect with audiences and achieve growth. Key initiatives include: Custom AI development with Gemini: WPP will co-develop tailored AI models to solve specific client challenges, blending Google’s AI capabilities with WPP’s creative expertise. AKQA’s “The Generative Store”, for example, personalises retail experiences by dynamically adapting product visuals and messaging for each consumer using Google Cloud’s Vertex AI. AI-driven media intelligence: Google Cloud’s AI products, powered by Google DeepMind models, fuel WPP Media’s new data solution, Open Intelligence, enabling rapid creation and deployment of bespoke audience models with measurable impact. Privacy-first data collaboration: Through InfoSum’s Bunkers on Google Marketplace, integrated into WPP Open, brands can access deeper AI-driven insights without moving data — ensuring both privacy and security. Revolutionising creative production: With early access to Google’s latest AI models including Veo and Imagen, WPP can now create campaign-ready assets in days, not weeks, achieving up to 70% efficiency gains and a 2.5x boost in asset utilisation. Next-generation AI talent development: WPP’s Creative Technology Apprenticeship Programme will expand globally with Google as the primary curriculum partner. The initiative will train over 1,000 creative technologists by 2030, equipping them with expertise in creative coding, generative AI, and robotics through real-world projects for clients like L’Oral and Unilever. Enhanced internal operations: Google AI will also transform WPP’s internal processes — from data analysis to resource allocation — enabling faster, smarter client service and accelerating the development of AI-driven marketing solutions globally. Under the new model, innovations are co-developed, tested, and validated within Google’s own marketing operations before deployment to WPP clients. This ensures that solutions are proven in real-world scenarios, giving WPP clients a first-mover advantage in the rapidly evolving AI marketing landscape.The partnership underscores WPP and Google’s shared mission to push the boundaries of creativity and technology — setting a new global benchmark for AI-enabled marketing transformation.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Oct 2025 9:35 am

மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. போராட்டத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க […]

அதிரடி 15 Oct 2025 9:30 am

Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?

Doctor Vikatan: ஆஸ்துமா (Asthma) மற்றும் மூச்சுத்திணறல் (Shortness of Breath) உள்ளவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்   தாளிசாதி மாத்திரையோ, சூரணமோ தினமும் எடுத்துக்கொண்டாலே பிரச்னை சரியாகும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா, இதனால்  உடனடி நிவாரணம் கிடைக்குமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஆஸ்துமாவின் தீவிரத்தைப் பொறுத்துதான் அதற்கான சித்த மருந்தை முடிவு செய்ய வேண்டும். ஆஸ்துமா பாதிப்புக்கு தாளிசாதி சூரணம் மிகவும் நல்ல மருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்துமா பாதித்தவர்கள், வளர்ந்த, பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில், தாளிசாதி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துக் கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மூச்சுத்திணறல் என்பது எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். வீஸிங் காரணத்தால் ஏற்பட்டதா, இதயத்தில்  ஏதேனும் பிரச்னைகள் இருப்பதால்  மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என்பதை எல்லாம் பார்த்துதான் அதற்கான சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும்.  அதாவது, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப்பாதை தொடர்பான பிரச்னைகளுக்கு தாளிசாதி சூரணம் நன்கு வேலை செய்யும். வேறு காரணங்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தாளிசாதி வேலை செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையோடு, தாளிசாதி சூரணம் சாப்பிடலாம். வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேனில் கலந்து சாப்பிடும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும். தாளிசாதி சூரணம் தாளிசாதியின் காரத்தன்மையை, தேனின் இனிப்பு குறைத்து, கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதே காரணம்.  தொண்டைக் கமறல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் என்ற மாத்திரை இருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பி சாப்பிடலாம். பயணம் செல்லும்போது ஏற்படும் தொண்டை பிரச்னைகளுக்கு  மாத்திரைகளைத் தேடி ஓடாமல், தாளிசாதி வடக மாத்திரைகள் இரண்டை சப்பி சாப்பிட்டாலே பிரச்னை உடனே குறைவதைப் பார்க்க முடியும்.  இதே தாளிசாதி வடகத்தை இடித்து, வாய்க் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். தொண்டை எரிச்சலின் ஆரம்பநிலையிலேயே இதையெல்லாம் செய்தால், பாதிப்பு தீவிரமாகாமல் சரியாவதைப் பார்க்க முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      அருமருந்தான திரிபலா சூரணம்; யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?

விகடன் 15 Oct 2025 9:00 am

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட பேருந்தில் 57 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பேருந்திலிருந்து புகை வர ஆரம்பித்திருக்கிறது. ஓட்டுநர் சுதாரித்து ஓரம் கட்டியபோது சில வினாடிகளில் மொத்த பேருந்தும் பற்றி எரியும் அளவுக்கு நெருப்பு பரவியிருக்கிறது. जैसलमेर जोधपुर(राजस्थान )हाईवे पर बस में आग लगने से 10-12 लोगों की मौत आग की लपटों से इतनी गर्मी हो गई कि लोगों को निकलना मुश्किल हो गया बेहद दुखद #jaisalmer #fire #bus #जैसलमेर #Jodhpur pic.twitter.com/WUb93prBWP — tarun moodh (@moodh4141) October 14, 2025 சாலையில் சென்றவர்களும் உள்ளூர்வாசிகளும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்ததுடன், மீட்புப் பணிகளிலும் உதவியிருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்து 5 நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த அக்டோபர் 14ஆம் தேதியே ராஜஸ்தான் முதலமைச்சர் ஜெய்சல்மார் விரைந்துள்ளார். அதிகாரிகள் சேதமடைந்த பேருந்தை பார்வையிட்டு வருகின்றனர். Om Shanti Deeply saddened to hear about the tragic accident where a sleeper bus traveling from Jaisalmer to Jaipur caught fire, claiming 19 innocent lives. Prayers for the departed souls and strength to their families. #Jaisalmer pic.twitter.com/kGq6T7aoiY — Nikhil saini (@iNikhilsaini) October 14, 2025 விபத்து ஏற்பட்டவுடன் வந்த 3 ஆம்புலன்ஸ்களில் ஜெய்சல்மாரில் இருக்கும் ஜவஹர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிலர் ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 15 பயணிகள் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். சிலருக்கு 70 விழுக்காடுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டிருக்கிறது. மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவை அமைத்து 8 ஆம்புலன்ஸ்கள் போய்வர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் தெரியாத அளவு எரிந்து சிதைந்துள்ளனர். டி.என்.ஏ மற்றும் தடயவியல் வல்லுநர்கள் அடையாளம் காணும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத் விமான விபத்தைப் போலவே டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50,000-உம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். UP: 10 குழந்தைகளை பலி கொண்ட தீ விபத்து... ஜன்னலை உடைத்து காப்பாற்றிய இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!

விகடன் 15 Oct 2025 8:35 am

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக […]

அதிரடி 15 Oct 2025 8:30 am

`மிகப்பெரிய வீழ்ச்சி வரும்!'எச்சரிக்கும் Rich Dad Poor Dad எழுத்தாளர் பரிந்துரைப்பது என்ன தெரியுமா?

பணக்கார தந்தை, ஏழை தந்தை (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் வெள்ளி குறித்து தனது வலுவான கணிப்பைக் கூறினார். வெள்ளி விலையானது இரு மடங்கு அல்லது பல மடங்காக அதிகரிக்கும் எனக் கணித்திருந்தார். ஒரு அவுன்ஸ் வெள்ளி விலையானது 75 டாலர் வரையில் கூட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணம் ஒரு வருடத்தில் 400% வரை அதிகரிக்கலாம் என்றும், அதாவது 100 டாலர் முதலீடானது 500 டாலராக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். கியோசாகி தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக வெள்ளி சிறந்த முதலீடாக இருக்கும். வெள்ளி விலையானது செயற்கையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இது வெடிக்கப்போகிறது. ராபர்ட் கியோசாகி | வெள்ளி வெள்ளியானது தற்போது வரையில் அனைவரும் வாங்கும் விலையில்தான் உள்ளது. ஆனால் விரைவில் அதுவும் ஏற்றம் கண்டு விடும். இது விலை உயர்ந்த மதிப்புமிக்க ஆபரணமாக மட்டும் அல்லாது, தொழில் துறையில் பயன்படுத்தப்படும் உலோகமாக உள்ளது. ஆக, அதன் எதிர்கால தேவை அதிகரிக்கலாம். இது விலை தொடர்ந்து உச்சம் தொடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தார். எது பெஸ்ட்? உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி வரவிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு சரியலாம். இதிலிருந்து முதலீட்டாளர்கள் தப்பிக்கக் காகித சொத்துகளைத் தவிர்த்து, தங்கம் வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது குறைந்த விலையில் இருக்கும் வெள்ளியில் அதிக கவனம் செலுத்தலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான லாபத்தைப் பெறலாம் என்றும் கணித்துள்ளார். ஆக வெள்ளி விலையானது குறையும் போதெல்லாம் வாங்கி போடலாம். இது எதிர்காலத்தில் சிறந்த லாபம் பார்க்க உதவிகரமாக இருக்கலாம். வெள்ளி சமூக வலைதளத்தில் என்ன அப்டேட்? சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பல முக்கிய அப்டேட்களை கொடுத்து வரும் ராபர்ட் கியோசாகி, முன்னதாக, உலக வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி ஒன்று வரப்போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தில் கணித்திருந்தேன். அந்த வீழ்ச்சி நடப்பு ஆண்டில் இருக்கலாம். இதனால் ஓய்வூதியங்கள் அழிக்கப்படலாம். பலர் வீடுகளை இழந்தும் அல்லது குழந்தைகளுடன் அடித்தளத்தில் வசிப்பவர்களாக இருக்கலாம். இது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தேன். மேலும் காகிதங்களில் அச்சிடப்பட்ட சொத்துகளில் சேமிக்க வேண்டாம் என்று எச்சரித்து வருகிறேன். உண்மையான சொத்துகளில் முதலீடு செய்யுங்கள். பணத்தை மட்டுமே சேமிப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் எனக் கூறி வருகிறேன். ஏனெனில் பணத்தை வெறுமனே சேமிப்பவர்கள் பணத்தின் மதிப்பை இழப்பார்கள். ஏனெனில் பணவீக்கம் என்பது அவர்களின் சேமிப்பின் மதிப்பைக் குறைத்து விடும். மேலும் இந்த ஆண்டுக்குள் உலகப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் ஆகியவற்றைச் சேமிக்கக் கூறி வருகிறேன். வீட்டு வாடகை - பணம் சமீபத்திய அப்டேட் ஒன்றில், இன்றளவில் வெள்ளி மற்றும் எத்தேரியம் சிறந்த முதலீடாக இருக்கலாம் என நம்புகிறேன். ஏனெனில் அவை மதிப்பு மிக்கவை. அவை தொழில் துறையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் விலை குறைவாகவே காணப்படுகின்றன. ஆக, வெள்ளி மற்றும் எத்தேரியத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றித் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். அதன் விலை ஏற்றத்தின் பலனையும் பெறுங்கள். இது குறிப்பாகப் பணமதிப்பிழப்பு காலங்களில் பக்க பலமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.   ஜிம் ரோஜர்ஸ் கணிப்பு என்ன? இது ஒரு புறம் என்றால் மறுபுறம் கமாடிட்டி குருவான ஜிம் ரோஜர்ஸ், தன் வசம் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே இருப்பதாகவும், ஆனால் அவை இரண்டையும் விற்பனை செய்யும் திட்டம் தன்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் அது தன் குழந்தைகளுக்கு தேவை என்றும் கூறியுள்ளார். அந்தளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி மீது நீண்ட கால அடிப்படையில் நம்பிக்கை வைத்துள்ளது இதன் மூலம் தெரிகிறது.  ஆங்கில செய்தித் தளத்திற்கு இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், சந்தையை ஒரு போதும் நேரப்படி கணக்கிட முயலவில்லை, தற்போதைய சூழலில் எந்த ஒரு சொத்து மலிவாக இருக்கிறதோ, அதை வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பேன். நான் அவ்வளவு புத்திசாலி அல்ல, ஒரு பொருள் விலை குறைந்தால் அதை வாங்குவது புத்திசாலித்தனம். ஒரு பொருள் புதிய உச்சத்திலிருந்தால் அதை வாங்குவது சரியான ஒன்றல்ல. தற்போது தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில், அவற்றில் முதலீடுகளைச் சேர்க்கத் திட்டம் இல்லை எனக் கூறும் ரோஜர், சமீபத்தில் முரண்பாடாக இருந்தாலும் வெள்ளியை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் தங்கம் தொடர்ந்து பல வருடங்களாக உச்சத்தை எட்டி வருகிறது. ஆனால் வெள்ளி அப்படி இல்லை. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை இன்னும் மலிவாகக் காணப்படுகிறது. ஆக, வெள்ளிக்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதனால்தான் தான் வெள்ளியை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.  தங்கம், வெள்ளி வெள்ளி விலையானது சமீபத்தில் வலுவான ஏற்றம் கண்டது. ஏனெனில் அது அந்தளவுக்குச் சரிவையும் கண்டிருந்தது. அதேசமயம் தங்கம் விலை ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே வரலாறு காணாத உச்சத்தில் காணப்பட்டது. தற்போதும் உச்சத்தில் காணப்படுகிறது. ஆக, இது பெரிதாக ஏற்றம் காண வாய்ப்பில்லை என்பதையே மறைமுகமாக கூறியுள்ளார்.  ஏன் தங்கம், வெள்ளி முக்கியம்? பொருளாதார வளர்ச்சி குறித்து தனது அறிக்கையில் கூறியுள்ள ரோஜர்ஸ் அதிகப் பணம் அச்சிடுதல் மற்றும் கடன் மிகப்பெரிய கவலையளிக்கும் ஒரு காரணிகளான உள்ளன. உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள், குறிப்பாக அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கடன் பிரச்சனையில் உள்ளது. தொடர்ந்து அவை பணத்தை அச்சிட்டு வருகின்றன. பணத்தை அதிக அளவில் அச்சிடும் போது, புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு குறைகிறது. இது பணவீக்கத்திற்கும் வழிவகுக்கிறது. மக்களின் சேமிப்பையும் நசுக்குகிறது. இந்த சூழலிலிருந்து முதலீட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தைப் பார்க்க வேண்டும்.  gold - silver | தங்கம் - வெள்ளி நிபுணர்கள் பலரும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது நேரத்தை வீணப்படிப்பது எனக் கூறுவார்கள். அவர்கள் என்ன கூறினாலும் கவலையில்லை. நவீன அறிவுரைகளைப் புறக்கணிக்கும் அவர், உலகெங்கிலும் உள்ள அரசுகள் கரன்சிகளின் மதிப்பைச் சிதைக்கும் போது, மக்கள் தங்கள் பணத்தை நிலையான மதிப்பில் வைத்திருக்கவே நினைப்பார்கள் எனக் கூறுகின்றார். ஆக தங்கம், வெள்ளிக்கு மவுசு குறைவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.  ஏமாற்றிய டாடா கேபிட்டல் IPO - இனியாவது இந்தப் பங்கை வாங்கலாமா? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. General Disclaimer and Terms & Conditions of the research report INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

விகடன் 15 Oct 2025 8:00 am

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை இந்திய வானிலை மையம் அறிக்கை கடந்த வாரம், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை படி, தமிழ்நாட்டில் பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, அக்டோபர் 16-18 தேதிகளில், பருவமழை இந்தியப் பகுதிகளில் விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக் காற்று வீசலாம். அந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் தொடங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இது கூட, இன்றைய மழைக்கான காரணமாக இருக்கலாம். Moderate rain with Thunderstorm and Lightning is very likely. At isolated places over Thiruvallur, Chennai, Chengalpattu, Kanchipuram, Villupuram, Cuddalore, Ranipet, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur, Thanjavur and Pudukkottai districts Puducherry and Karaikal pic.twitter.com/ZHEqIo6VfU — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 14, 2025

விகடன் 15 Oct 2025 7:59 am

யாழ். செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு ; 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, திங்கட்கிழமை (13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் […]

அதிரடி 15 Oct 2025 7:59 am

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு ; இலங்கையில் இருந்து பறந்த 100 இளம் பெண்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. இவர்களில் 100 இளம் பெண்களும் அடங்குவதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும் (Manufacturing), 680 பேர் கடற்றொழில் துறையிலும் (Fisheries), 23 பேர் கட்டுமானத் துறையிலும் (Construction), இருவர் விவசாயத் துறையிலும் (Agriculture) வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள மேலும் 200இற்கு மேற்பட்ட […]

அதிரடி 15 Oct 2025 7:57 am

சிறிலங்காவுடன் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார் சீன அதிபர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளார். இதன் போது அவர், இரு நாடுகளுக்கும் இடையே சட்ட அடுலாக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்காவுடன் உயர்மட்ட பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை கூட்டாக ஊக்குவிக்கவும், துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம்

புதினப்பலகை 15 Oct 2025 7:57 am

முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்''விவசாயிகள் கண்டனம்

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் ‘கேரள அரசின் சதி’ என்று பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் கூறியதோடு அதற்கு கண்டனம் தெரிவித்து, கம்பத்தில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதி யாரும் நுழைய முடியாத புலிகள் காப்பகப் பகுதி. இந்தப் பகுதிக்குள் எவ்வாறு வெடிகுண்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று சிந்திக்காமல் கேரள அரசு அணையைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்காகவே இவ்வாறு புரளியைக் கிளப்பி உள்ளது. இது முழுக்க முழுக்க கேரள அரசின் சதி செயல். தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைக் குடிக்கும் 5 மாவட்டங்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முல்லைப் பெரியாறு அணைக்காக நாடாளுமன்றத்தில் பேசியதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்படுகிறது. முல்லை பெரியாறு அணை முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 ஆம் தேதி கம்பத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்” என்று அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார். தேனி: முல்லை பெரியாறு அணையைப் பலப்படுத்துவதற்கு திமுக ஏதாவது செய்திருக்கிறதா? - இபிஎஸ் கேள்வி

விகடன் 15 Oct 2025 7:48 am

சென்னையில் மழை… அடுத்த 3 மணி நேரம், 13 மாவட்டங்கள் லிஸ்ட்- IMD வானிலை அலர்ட்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது.

சமயம் 15 Oct 2025 7:45 am

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!

கோட்டை மாரியம்மன் கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம். ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் மாரியம்மன்களுக்கு இந்தத் திருநாமம் பொதுவானது. அந்த வகையில் திருப்பூரில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்திபெற்றது. மேலும் இந்த ஆலயத்தில் பல முக்கிய சிறப்புகளும் உண்டு. வாருங்கள், அந்த அற்புதமான ஆலயத்தை தரிசிப்போம். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையை உடைய இந்த ஆலயம் விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது தலபுராணம். என்றாலும் இங்கு கோயில்கொண்டுள்ள அம்மனின் சந்நிதியோ புராண காலத்துக்கும் முற்பட்டத்து என்கிறார்கள் பக்தர்கள். திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் முப்பெரும் தேவியரும் அருள் தரும் ஆலயம் இங்கே கருவறையில் விசேஷமாக துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் இணைந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி தருகிறாள் கோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையின் அம்சமாகவும் அம்பிகை திகழ்வதை தரிசிப்பது கண்கொளாக் காட்சியாகும். இந்த அம்பிகையின் சந்நிதியின் நின்று வேண்டிக்கொண்டால் சகலவிதமான தோஷங்களும் தீரும். செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் ஆகியன கிடைக்கும் என்கிறார்கள். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்! இங்கே இந்த அம்மன் கோயில்கொண்ட திருக்கதை அற்புதமானது. விவசாயி ஒருவர் நிறைய பசுக்களை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்குச் சென்றுவரும் பசுக்களிடம் பால் கறந்து பயன்படுத்துவார். ஆனால் ஒரு பசுவின் மடி மட்டும் பால் இன்றி வற்றி இருக்கும். பாலை யாரோ திருடுகிறார்கள் என்று நினைத்து ஒருநாள் பசுவைப் பின் தொடர்ந்து சென்றார் விவசாயி. ஆனால் பசுவோ ஓர் இடத்தில் நின்று தானே பாலைப் பொழிந்தது. அந்த இடத்துக்கு அருகில் அவர் சென்றபோது, ​​அங்கே ஒரு விளக்கைக் கண்டார். யாருமற்ற இடத்திலிருந்த விளக்கைக் கண்டதும் அச்சம் தோன்ற வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய தேவி, தானே அங்கு தோன்றியிருப்பதாகவும் தன்னைக் கண்டு எடுத்துக் கோயில் அமைக்குமாறும் கட்டளையிட்டாள். இதைக் கேட்டதும் விழித்தெழுந்த விவசாயி விடிந்ததும் இந்தச் செய்தியை ஊர் மக்களிடம் கூறினார். மக்கள் அனைவரும் கூடிவந்து அங்கே இருந்த பகுதியில் தோண்டிப் பார்க்க அம்மனின் சிலை வெளிப்பட்டது. அதையே மூலவராகக் கொண்டு இன்றளவும் வழிபாடு செய்துவருகிறார்கள் பக்தர்கள். இத்தலத்தில் புலி சுட்டுப்பட்டான் கல் என்று ஒன்று உள்ளது. ஒருகாலத்தில், இந்த ஊருக்குள் புலி புகுந்து, மக்களை பயத்தில் கிடுகிடுக்கச் செய்தது. அந்தப் புலியுடன் சண்டையிட்டுக் கொன்று, அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரன் ஒருவனின் நினைவாக இங்கு ஒரு நடுகல் வைக்கப்பட்டதாம். அந்த வீரனே காவல் தெய்வமாக இருப்பதாக ஐதிகம். இங்கு நின்று வேண்டிக்கொண்டால் மன பயம் விலகும் என்கிறார்கள். பிரார்த்தனை சிறப்புகள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை என எதுவாக இருந்தாலும் விரைவில் விலகி நலம் பிறக்கும். செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாள்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும்; தொழிலில் லாபம் மேலோங்கும். சுற்றியிருக்கும் கிராமத்து மக்கள் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் இந்த அம்மனிடம் பூ வாக்குக் கேட்டே செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தொடங்கும் காரியங்கள் சுபிட்சமாக முடியும் என்பது நம்பிக்கை. திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் பரிவார தெய்வங்கள்: கோயிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றனர் பக்தர்கள். வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். தவிர, இங்கே உள்ள நவகிரகங்கள், தம்பதி சமேதராக அமைந்திருப்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

விகடன் 15 Oct 2025 7:45 am

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயண எச்சரிக்கை

சிறிலங்காவுக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பித்துள்ளது. உள்நாட்டு அமைதியின்மை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சாத்தியங்கள் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் இருப்பதால் தமது குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க பயண எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையுடன் தொடர்புடைய போராட்டங்கள் எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம் மற்றும் வன்முறையாக மாறக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத்

புதினப்பலகை 15 Oct 2025 7:40 am

அட்மிரல் உலுகத்தென்னவுக்கு பிணை –சிஐடி பணிப்பாளருக்கு நீதிபதி கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், கியூபாவுக்கான முன்னாள் தூதுவருமான அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை பிணையில் விடுவித்துள்ள குருநாகல மேல்நீதிமன்றம், இந்த கைது விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது. அளவ்வவில் இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக – அப்போது கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு

புதினப்பலகை 15 Oct 2025 7:36 am

பொருளாதார நெருக்கடி ; நோர்வே, ஆஸ்திரேலியா தூதரகங்களை மூடிய வெனிசுலா!

கடும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா (Venezuela) , செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நோர்வே (Norway) மற்றும் ஆஸ்திரேலியாவில் (Australia) உள்ள தனது தூதரகங்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. வெனிசுலா இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா அரசு அதன் வெளிநாட்டுத் தூதரகங்களின் எண்ணிக்கை மற்றும் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் முயற்சி வெனிசுலா பல ஆண்டுகளாக நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தள்ளாடுகிறது. வெளிநாடுகளில் […]

அதிரடி 15 Oct 2025 7:30 am

பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள்

பாவா லட்சுமணன் ஆர் பி சவுத்ரி படங்களில் மேனேஜராக பணியாற்றியவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் அதில் முக்கியமான திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்.இந்த திரைப்படத்தில் தான் இவர் முதன் முதலாக நடித்தார். ஆர் பி சவுத்ரி தயாரித்த படங்களின்… The post பாவா லட்சுமணன் சொன்ன ஆனந்தம் பட சுவாரசியங்கள் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 15 Oct 2025 7:17 am

தெற்கு கடற்கரையில் மிதந்து வந்த 51 பொதிகள்

தெற்கு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளிலும் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இதன்படி குறித்த பொதிகளில் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine), ஹஷிஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள் தொகுதி ‘உணக்குருவே சாந்தா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினரின் கூற்றுப்படி, 3 பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருக்கலாம் எனவும், மிகுதி 48 பொதிகளில் ‘ஐஸ்’ போதைப்பொருள் […]

அதிரடி 15 Oct 2025 7:14 am

``அப்பாவின் அந்த ஆசையை நிறைவேத்த முடியாமப் போயிடுச்சு!'' - தந்தையை இழந்து வாடும் ஆர்த்தி கணேஷ்கர்

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை ரவீந்தரன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83. சன் டிவி ஆரம்பித்த புதிதில் அதில் டாப் டென் காமெடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பிரபலமானவர் ஆர்த்தி. பிறகு சினிமாப் பக்கம் வந்தவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் புகழடைந்தார். பிறகு சக நகைச்சுவை நடிகரான கணேஷ்கரைத் திருமணம் செய்து கொண்டார். மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி கணேஷ்கர் அப்பாவுடன் ஆர்த்தியின் தந்தை ரவீந்தரன் தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தனிச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆர்த்தியின் அம்மா 2006ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார்.ஆர்த்திக்கு ஒரேயொரு அக்கா. அவர் சீனாவில் வசித்துவருகிறார். ஓய்வுக் காலத்தை சொந்த ஊரான கோயம்புத்தூரில் கழித்துவந்த ரவீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலன் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் ஆர்த்தி தந்தையை அருகில் வைத்துக் கவனித்துவந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ரவீந்திரனுக்கு ஸ்ட்ரோக் வர, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். ஆர்த்தி கணேஷ்கருடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. ஆர்த்தியிடம் பேசியபோது, ரெண்டு பொண்ணுகளையும் பையன்கள் போல வளர்த்தார் அப்பா. அம்மா மறைவுக்குப் பிறகும் தன் சோகத்தை வெளியில் காட்டிக்காமல் உற்சாகமாகவே இருந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே வேலை பார்த்ததால் என்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார், அவருடைய அந்த ஒரு ஆசையைத்தான் என்னால் நிறைவேற்ற முடியாமல் போயிடுச்சு என்றார். தந்தையின் இழப்பால் வாடும் ஆர்த்திக்கு சினிமா நடிகர் நடிகைகள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ரவீந்திரனின் உடல் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்படுகிறது.

விகடன் 15 Oct 2025 7:10 am

SL W vs NZ W : ‘மழையால் ரத்தான போட்டி’.. இந்திய மகளிர் அணிக்கு பின்னடைவு? புள்ளிப் பட்டியலில் ட்விஸ்ட்!

இலங்கை மகளிர், நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்தானது. இதனால், புள்ளிப் பட்டியலில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அணிக்கு பிரச்சினை இருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 15 Oct 2025 6:42 am

கிராமப்புற பெண்கள் தினம்: உலக வளர்ச்சிக்கு முதுகெலும்பாக நிற்கும், அதிகம் பேசப்படாத நாயகிகள்!

அம்மா, மனைவி, தோழி, மகள், சகோதரி என்று பெண்கள் என்றாலே கொண்டாடும் நாம், இந்திய கிராமங்களின் ஆணிவேராக இருக்கும் கோடிக்கணக்கான

ஆந்தைரேபோர்ட்டர் 15 Oct 2025 6:33 am

கைகழுவுதல்: உயிர்காக்கும் எளிய மந்திரம்! -உலகக் கைகழுவும் நாள் சிறப்புக்கட்டுரை!

கொரோனா பெருந்தொற்று (COVID-19 Pandemic) உலகைத் தாக்குவதற்கு முன், ‘கைகளைச் சுத்தமாகக் கழுவுவதன் மூலம் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்’

ஆந்தைரேபோர்ட்டர் 15 Oct 2025 6:12 am

மடகாஸ்கரில் தீவிரமடையும் ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம்! நாடாளுமன்றம் கலைப்பு!

மடகாஸ்கரில் ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதுடன் அதிபரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தீவு நாடான மடகாஸ்கரில் மின்தடை மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்னைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக கடந்த செப்டம்பரின் பிற்பாதியில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்து, ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிரானதாக பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தலைநகர் ஆண்டனாநரிவோவில் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக […]

அதிரடி 15 Oct 2025 6:00 am

இந்தியாவில் அதிர்ச்சியளிக்கும் சைபர் மோசடி புள்ளிவிவரங்கள்- எச்சரிக்கை ரிப்போர்ட்!

இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டம், சாதாரண குடிமகனின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கி, பொருளாதாரத்தை விரைவாக முன்னேற்றி வருகிறது. ஒரு தெருவோர

ஆந்தைரேபோர்ட்டர் 15 Oct 2025 5:55 am

தி நகருக்கு ஷாப்பிங் போறீங்களா...3 மணி நேரம் கார் பார்க்கிங் இலவசம்! எங்கனு தெரியுமா?

சென்னையில் திநகருக்கு ஷாப்பிங் வருபவர்களுக்கு நல்ல செய்தியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. மேலும் இலவசமாக நிறுத்திக்கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்துள்ளது.

சமயம் 15 Oct 2025 5:44 am

மாஸ்கோ வரை பாயும் Tomahawk ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன் ; ரஷ்யாவை மிரட்டும் ட்ரம்ப்

உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார். ட்ரம்ப் எச்சரிக்கை டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷ்ய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் […]

அதிரடி 15 Oct 2025 2:30 am

8 போா்களை நிறுத்திவிட்டேன்; ஆப்கன்- பாக். மோதலையும் நிறுத்துவேன்: டிரம்ப் உறுதி

இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன்; இப்போது புதிதாக எழுந்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலையும் நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தில் போா்களை நிறுத்தும் பணியைச் செய்யவில்லை என்றும் அவா் கூறினாா். அமெரிக்க அதிபரின் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: இஸ்ரேல்-காஸா மோதலை நிறுத்தியதன் மூலம் இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன். இதில் […]

அதிரடி 14 Oct 2025 11:30 pm

மாணவர்களை இலக்குவைத்து மதனமோதக வில்லை விற்பனை

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்கள் ரகசியமாக ஒருவகை மாத்திரையை வாங்கி கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

அதிரடி 14 Oct 2025 11:30 pm

கோல்ட்ஃபிரிப் இருமல் சிரப் : 22 குழந்தைகள் மரணம் -காவல்துறை விசாரணை அறிக்கை அதிர்ச்சி!

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

சமயம் 14 Oct 2025 11:27 pm

மன்னாரில் படகு –இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர் 

மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த… The post மன்னாரில் படகு – இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 11:23 pm

தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. மதியழகன், பவுன்ராஜ் காவல் நீட்டிப்பு - நாளை ஆஜராக உத்தரவு!

தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஒரு நாள் காவல் நீட்டிப்பு நாளை ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Oct 2025 11:00 pm

இஸ்ரேல் ஹமாஸ் போர்: காசா நகரின் போருக்கு முந்தைய-பிந்தைய புகைப்படங்கள் வைரல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காசாவின் போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமயம் 14 Oct 2025 10:45 pm

40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் கொள்ளை; வட்டிக்கு விடுபவரிடம் கைவரிசை காட்டிய பொலிஸார்!

பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் 40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கத்தி முனையில் மிரட்டி கொள்ளை வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இது தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். வீட்டின் உரிமையாளர் […]

அதிரடி 14 Oct 2025 10:30 pm

மேற்கு வங்கம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் வாக்குமூலம்!

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை சிகிச்சையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “அவர்களின் வாகனத்திலிருந்து எங்களை நோக்கி வருவதை நானும் என் நண்பரும் கண்டோம். நாங்கள் காட்டை நோக்கி ஓடினோம். எங்களைத் துரத்திய மூன்று பேர், என்னைப் பிடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் என் மொபைல் போனை பறித்ததுடன், என் நண்பரையும் […]

அதிரடி 14 Oct 2025 10:30 pm

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த போர் முடிவுக்கு வர நான்தான் காரணம், இது நான் நிறுத்திய 8-வது போர் ( இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட) என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழக்கம்போல் சுய புகழ்ச்சி பேசிக் கொண்டிருக்கிறார். இஸ்ரேலும், பாகிஸ்தானும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என தங்கள் விஸ்வாசத்தை காட்டி வருகின்றன. ஆனால், உண்மையில் ட்ரம்ப் ஒருவரால்தான் இந்த போர் முடிவுக்கு வந்ததா? ட்ரம்ப் மட்டுமே இதற்கு உரிமை கோர முடியுமா? அமெரிக்காவைத் தாண்டி இந்த போர் முடிவுக்கு வருவதற்கு மிக முக்கியப் பங்காற்றிய நாடுகள் எவை என்பதை விரிவாக பார்க்கலாம்! 1. கத்தார்: இஸ்ரேல் - காஸா போர் தொடங்கிய காலத்திலிருந்தே சமரசத்துக்கான முயற்சியில் ஒரு சார்பற்ற நாடாக ஈடுபட்டது கத்தார். ஹமாஸ் - இஸ்ரேல் படைகள் பேச்சு வார்த்தைக்கு தங்கள் நாட்டில் இடமளித்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் கத்தாரின் செயல்பாட்டை காந்தியின் சத்தியா கிரகத்தோடு ஒப்பிடலாம். ஏனெனில், செப்டம்பர் மாதம் ஹமாஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக கத்தார் சென்றிருந்தனர். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும் நோக்கில், ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அந்த தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால், அப்போதே ஹமாஸ், கத்தார் கொடுத்த அழுத்தத்தின்படி அமெரிக்கா கூறும் விதிகளை ஏற்று அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருக்கும். கத்தாரின் பேச்சுக்கு ஹமாஸ் அவ்வளவு மதிப்பளித்தது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலால், அமைதிக்கான வாய்ப்பு தகர்ந்தது.  தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்ததே தவிர, தங்கள் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திய காரணத்துக்காக எந்த பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் மீது கத்தார் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருந்தால், மத்திய கிழக்கில் இன்னும் மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதை பக்குவமாக கையாண்டது கத்தார். அரபு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. அதன் விளைவு, ஐநா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டத்தின்போது, அரபு நாடுகள் ட்ரம்ப்பை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் தெரிவித்தன. அமெரிக்காவுக்கு மிக முக்கிய முதலீடுகளைக் கொடுக்கும், அரபு நாடுகளின் பேச்சை ட்ரம்ப்பால் உதாசீனப்படுத்த முடியாது என்பதாலேயே, அவர் அமைதித் திட்டத்தை உருவாக்க நேர்ந்தது.  இதற்கு முன்பு ஜனவரி 2025-ல், ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திலும், கத்தார் முக்கியப் பங்காற்றியது. எனவே கத்தாருக்கு இந்த போர் முடிவுக்கு வந்ததில் மிக முக்கியப் பங்கு இருக்கிறது. 2. பிரான்ஸ்: ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.  ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத்  தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல என வெளிப்படையாக பேசினார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்ததை அவர் கண்டித்தார். சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமை மீறலை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது தடைகள் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். எவ்வளவு சொல்லியும் இஸ்ரேல் கேட்காததால், 2 முக்கிய விஷயங்களைச் செய்தார் மேக்ரான். 1) நியூயார்க் தீர்மானம் (The Newyork Declaration) - சவுதி அரேபியாவுடன் இணைந்து ஐநா சபையில், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது பிரான்ஸ். அதில், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தில் இரட்டை அரசாங்க முறை அமல்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 142 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கொடுக்கப்பட்ட முதல் அழுத்தம். 2) பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்: ஹமாஸ் நடத்தியது கொடூரத் தாக்குதல்தான். அது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பதை எந்த காரணத்தை சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என ஐநா வருடாந்திர சிறப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் பேசினார் மேக்ரான். போரை நிறுத்துவதற்கும், நீடித்த அமைதி திரும்புவதற்கும் ஏதுவாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மேக்ரான் அறிவித்தார். இது இரண்டாவது அழுத்தம். பிரான்ஸுக்கு முன்பே பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்திருந்தாலும், அதில் பிரான்ஸ் உருவாக்கிய கருத்தின் தாக்கம் இருக்கிறது. மற்றொரு புறம் இதைத்தாண்டி பெரிய அழுத்தத்தையோ, பங்களிப்பையோ பிரிட்டன் கொடுக்கவில்லை.  அந்த வகையில், திக்கற்று இருந்த இந்த போரை முடிவை நோக்கி திசை திருப்பியதில், பிரான்ஸின் பங்கு மிக முக்கியமானது.  3. எகிப்து காஸா போருக்கான இறுதி அமைதி பேச்சுவார்த்தை எகிப்தில்தான் நடந்து முடிந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற உலக நாடுகள் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் எகிப்தில்தான். மார்ச் 2025-ல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஸா மக்களை வெளியேற்றிவிட்டு அதை ஒரு தொழில் நகரமாக உருவாக்குவோம் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு மட்டும் தெரிவிக்காமல் செயலிலும் இறங்கியது எகிப்து. காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்கான பிளானை, ப்ளூபிரிண்டாகவே உருவாக்கி அரபு, இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சமர்ப்பித்த முதல் நாடு எகிப்து. காஸாவினுடைய போர், எல்லை நாடான எகிப்துக்கும் பரவிவிடக் கூடாது என்பதிலும், காஸாவிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு எகிப்தில் இடம் கொடுக்க முடியாது என்ற தன்னலமும் எகிப்தை இந்த முடிவெடுக்க வைத்தது. ராபா எல்லை வழியாக காஸாவுக்கு உணவு மற்றும் உதவிகளையும் எகிப்து வழங்கியது. ஒட்டுமொத்தமாக, தன்னலம் இருந்தாலும் அதில் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற பொது நலமும், காஸா போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்தி பங்காற்ற வைத்திருக்கிறது.  4. துருக்கி இந்த அமைதிப் பேச்சு வார்த்தையின் கடைசி மற்றும் முக்கியமான கட்டம் நிறைவேறியதற்கு துருக்கிதான் முழு முதற் காரணம். துருக்கி அதிபர் எர்டோகன், செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அப்போது, ட்ரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். துருக்கியின் பேச்சுக்கு ஹமாஸ் மதிப்பளிக்கும் என்பதால், ஹமாஸை போர் நிறுத்தத்துக்கு, ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்றார் ட்ரம்ப். இதை எர்டோகன் ஏற்று, ஹமாஸிடம் பேசி அவர்களை போர் நிறுத்தத்துக்காக ட்ரம்ப் போட்ட அமைதித் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்ததில் முக்கிய பங்கு எர்டோகனுக்கு இருக்கிறது.  இதை செய்வதால் அவருக்கு என்ன லாபம். 2019-க்கு பிறகு அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு விரிசலைடந்தது. அதை சரி செய்யும் வகையில் 5 ஆண்டுகளுக்கு பிறக்கு துருக்கி அதிபர் எர்டேகான் அமெரிக்காவுக்கு சென்றார். அது உள்நாட்டில் அவரது இமேஜை தக்க வைக்க உதவியது. மேலும், மத்திய கிழக்கில் துருக்கிக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கவும், ஹமாஸின் ஒப்புதல் உதவும். இதைத் தாண்டி காஸாவில் உயிரிழப்புகளை நிறுத்த வேண்டும் என்ற அக்கறையும் இருக்கிறது. இதெல்லாம்தான், எர்டேகானை, ஹமாஸிடம் பேச வைக்கிறது. இன்னும் பல நாடுகள் சின்னச் சின்ன பங்காற்றியிருக்கின்றன. இப்படி பல்வேறு நாடுகளின் பங்களிப்பால்தான், காஸாவில் போர் முடிவுக்கு வந்தது. ட்ரம்ப்பால் மட்டும் இந்த அமைதியை கொண்டு வந்திருக்க முடியாது. ஒருபுறம் இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து, குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட காரணமாக இருந்த ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு கேட்பதுதான் இந்த யுகத்தின் மிகப்பெரிய ஜோக்!  Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?

விகடன் 14 Oct 2025 10:15 pm

பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் :முறைப்பாட்டை பதிய முடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதிக்குள் நுழைந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முத்துப்பிள்ளை வேந்தன் என்பவரின் பசு மாட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு குறித்த மாட்டினை இறைச்சிக்காக கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து முறைப்பாடு பதியச் சென்ற பண்ணையாளர்களை பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாக கூறி முறைப்பாட்டை பதிய முடியாது என திருப்பி அனுப்பி உள்ளனர். இன் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்ட குழுவினர் மயிலத்தமடு மாதவனை பகுதியில் உள்ள பொலீஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து மேய்ச்சல் தரை நிலங்களில் அத்து மீறி காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறிய சில நாட்களிலேயே அங்குள்ள பண்ணையாளரின் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.

பதிவு 14 Oct 2025 10:11 pm

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது! * `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன? * `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப் * மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான் * ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! - பிரதமர் மோடி * ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து! * பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யார்? * தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை? * ஹரியானா: ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மறுத்துப் போராடும் மனைவி! * சட்டமன்றத்தில் நடந்தது என்ன? * சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குக! - பாமக எம்.எல்.ஏக்கள் தர்ணா * உச்ச நீதிமன்ற உத்தரவு படி 3 முறை டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு? * முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்! * `என் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் அடிப்பேன்!' - சீமான் * சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! * போக்சோ வழக்கில் இந்து மகா சபைத் தலைவர் கைது? * டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! * இருமல் மருந்து விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை! * அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்? * முதல்கட்டப் பார்வையில் இடைக்கால உத்தரவு... உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன? * `நீதி வெல்லும்!' - த.வெ.க தலைவர் விஜய் பதிவு * சிபிஐ விசாரணை கோரி வழக்கு போட்டவர்களை மிரட்டும் திமுக! - அதிமுக குற்றச்சாட்டு * கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்! - பெ.சண்முகம் * ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்க கூட்டணிக்கு வருவாங்க! - வானதி * வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை! - உயர் நீதிமன்றம்! * திமுக - அதிமுக அண்டர்கிரவுண்ட் டீலிங்! - அறப்போர் ஜெயராமன்

விகடன் 14 Oct 2025 9:58 pm

தெற்கு பாதாள கும்பலின் புகலிடம் யாழ்ப்பாணமா?

இலங்கை நீதிமன்றில் பாதாள உலக கும்பலை சேர்ந்த நபர் ஒருவரை படுகொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்திருந்த செவ்வந்தி எனும் பெண் நேபாளத்தில் கைதாகியுள்ளார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் செவ்வந்திக்கு உதவிய “ஜே.கே.பாய்” என்பவரும் நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புhதாள உலக கும்பலைச்சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையின் பின்னர் செவ்வந்தி நான்கு நாட்கள் மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று அங்கு மூன்று கிழமைகள் தங்கியபின் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்காக செவ்வந்திக்கு ஜே.கே.பாய் என்பவர் உதவி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நேபாளத்தில் இருந்து செவ்வந்தியை ஜரோப்பிய நாடான்றிற்கு தப்பிக்க வைக்க முற்பட்டமையும் அம்பலமாகியுள்ளது.

பதிவு 14 Oct 2025 9:57 pm

உள்ளே: வெளியே - தெற்கில் சாதாரணம்!

தமிழ் இளைஞர்கள் கடத்திப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்ருந்தார். கடத்தல் விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியைத் தவிர, முன்னாள் புலனாய்வுத் தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹோட்டி உட்பட மேலும் மூவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன 11வது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்படடுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு 14 Oct 2025 9:51 pm

நிதி பிரச்சினை தீர்ந்து வெள்ளம்?

நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வந்த செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகள் தற்போது வடக்கில் மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் தாமதமடையலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதனால் யாழ்ப்பாணம் - செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. சிந்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் செம்மணிக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்ருந்தார். அதன்போது செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதி மழை காரணமாக சதுப்பு நிலமாக மாறியுள்ளதை நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இந்நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி அகழ்வுப்பணிகள் தாமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Oct 2025 9:49 pm

தவெக - பாஜக கூட்டணி வாய்ப்பு எப்படி? சரத்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்!

நடிகர் சரத்குமார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். விஜயகாந்த் மகனுடன் நடித்த அனுபவம், 2026 தேர்தல், விஜய் வழக்கு, பிக் பாஸ், இருமல் மருந்து விவகாரம் என பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தெரிவித்தார்.

சமயம் 14 Oct 2025 9:47 pm

AK Racing: ஆர்வமும் அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் - அஜித்தின் ரேஸிங் அனுபவம்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது. சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans Series)  தொடருக்குத் தயாராகி வருகிறார் அஜித்குமார். அஜித் புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்! மறக்க முடியாத முதல் சீசன்! இந்நிலையில் இதுவரை பங்கேற்ற போட்டிகளும், அதன் சாதனைகளும் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அஜித்; பயிற்சியிலிருந்து பேரறிவுக்குப் பயணம் 2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன், அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு வெறும் போட்டியல்ல - அது ஒரு கற்றல் பயணம். ஒவ்வொரு சுற்றிலும் சவால்கள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்திய அணியின் ஆற்றலை உலக ரேசிங் மேடையில் வெளிப்படுத்திய ஆண்டு இது. துபாயின் வெப்பமான பாலைவனத்திலிருந்து வட ஐரோப்பாவின் பனி மூட்டம் சூழ்ந்த காலையில்வரை ஒவ்வொரு ரேஸும் இந்த அணியை புதிதாக வடிவமைத்தது. 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் தொடங்கிய ரேஸிங் பயணம் 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் நடைபெற்ற 'Porsche Cup' சோதனைகளுடன் தொடங்கிய பயணம், சரியாக பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே சுற்றுப்பாதையில் நிறைவடைந்தது. ஆர்வம் மற்றும் அடக்க மனப்பாங்கு இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்த சீசன் இது. புதிய அணி என்ற வகையில் 'Ajith Kumar Racin'g சவால்களை எதிர்கொண்டது. சக்திவாய்ந்ததும் சிக்கலானதுமான 'Porsche 992 GT3 Cup' காரை ஓட்டுவது வெறும் வேகத்தால் மட்டுமல்ல அதற்கேற்ப மரியாதை, துல்லியம், அனுபவம் ஆகியவற்றையும் தேவைப்படுத்தியது. முகெல்லோ, ஸ்பா, பால் ரிக்கார்ட், மிசானோ போன்ற ஒவ்வொரு சர்வதேச சுற்றுப்பாதையும் குழுவுக்கே ஒரு புதிய பாடமாக அமைந்தது. அஜித் Ajith: என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே - குடும்பத்துடன் அஜித் | Photo Album Ajith Kumar Racing அணியின் போட்டிகள் மற்றும் சாதனைகள் அஜித் குமார் ரேசிங் அணி 2025 ஆம் ஆண்டில் பின்வரும் முக்கிய சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றது: 24H Middle East Trophy – Porsche Cup 24H European Series – Porsche Cup: மொத்தப் போட்டியில் பட்டியலில் மூன்றாம் இடம் Porsche Sprint Challenge Southern Europe – Porsche Cup GT4 European Series முக்கிய முடிவுகள்: துபாய் (ஜனவரி 2025) – மூன்றாம் இடம் முகெல்லோ (மார்ச் 2025) - மூன்றாம் இடம் ஸ்பா-ப்ராங்கோர்சாம்ப் (ஏப்ரல் 2025) – இரண்டாம் இடம் போர்டிமாவ், எஸ்டோரில், வாலென்சியா, பார்சிலோனா, மிசானோ, பால் ரிக்கார்ட் போன்ற சுற்றுகளில் சிறந்த செயல்திறன். GT4 European Series – Porsche GT4 பால் ரிக்கார்ட் (ஏப்ரல் 2025) சாண்ட்வூர்ட் (மே 2025) ஸ்பா (ஜூன் 2025) மிசானோ (ஜூலை 2025) நூர்புர்க்ரிங் (ஆகஸ்ட் 2025) பார்சிலோனா (அக்டோபர் 2025) இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று, ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேஸிங் அனுபவத்தைப் பெற்றுள்ளது அஜித் குமார் ரேஸிங். ரேஸிங்கின் மனிதப் பக்கம் ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணி நேர உழைப்பு, பொறுமை, சோர்வற்ற மனநிலை இருந்தது. மெக்கானிக்குகள், இன்ஜினீயர்கள் இரவெங்கும் இயந்திரங்களை சரிசெய்தனர். ஓட்டுநர்கள் மழை, குளிர், வெப்பம் அனைத்திலும் தங்களின் எல்லைகளைத் தாண்டினர். தோல்விகளும், தொழில்நுட்ப கோளாறுகளும், தவறிய வாய்ப்புகளும் இருந்தன. ஆனால், ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய பாடமாக மாறியது. ஒவ்வொரு சுற்றும் - வெற்றி அல்லது தோல்வி - அணியின் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் அடித்தளமாக அமைந்தது. அஜித் அணி Ajith kumar Racing: போர்ஷே 911 GT3 RS கார், தமிழ்நாடு SDAT லோகோ; ரேஸுக்கு கார் ரெடி, அசத்தும் அஜித் “இந்த ஆண்டில் நடந்த அனைத்தையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் வேண்டும்; ஆனால் முக்கியமானது, ஒவ்வொரு சுற்றிலும் நாங்கள் வலுவாகி வந்தோம். இது தொடக்கம் மட்டுமே.” — அஜித் குமார் மற்றும் Ajith Kumar Racing அணி இந்த சீசன், போட்டிகளைத் தவிர மனித உறவுகளையும் கட்டியெழுப்பியது. பல சர்வதேச அணிகளும், அமைப்புகளும், ஒரே ஆர்வம் கொண்ட நபர்களும் AKR அணியுடன் இணைந்தனர். மைல்கற்களும் நன்றியும் பல சர்வதேச தொடர்ச்சியான ரேஸிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி, சர்வதேச போடியம் வெற்றி, மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம். இந்தப் பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவிக்கிறது: Series Organisers: Creventic, Prospeed, SRO சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக. Partner Teams: Redant Racing, AV Racing – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக. Team Members: புதியவர்களும் பழையவர்களும் — உழைப்புக்காக. Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு பதிவிலும் அன்பு, ஊக்கம், நம்பிக்கை வழங்கியதற்காக. Support Staff: பின்னணியில் உழைத்து ஒவ்வொரு ரேஸையும் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப பணியாளர்கள். Ajith Kumar Racing புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்! அடுத்த கட்ட நோக்கம் முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் ரேஸிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது. 'Porsche Cup' மற்றும் 'GT4' போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல், மற்றும் சர்வதேச ரேஸிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம். என்று கூறியிருக்கிறார் அஜித் குமார் மற்றும் 'Ajith Kumar Racing' அணி

விகடன் 14 Oct 2025 9:44 pm

கழிவறை சுத்தமில்லைன்னா ‘கிளிக்’பண்ணுங்க! –ரூ.1000 ஃபாஸ்டேக் இலவசம்!

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குவதுடன், கோடிக்கணக்கான மக்களின் தினசரி

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 9:37 pm

திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காரை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தையில் பூசம், பங்குனியில் உத்திரம், வைகாசியில் விசாகம், தவிர சூரசம்ஹாரம் ஆகியவை இந்த தலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் படி அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது சுமார் 11 ஆண்டுகள் அறங்காவலர் குழுக்களே அமைக்கப்படவில்லை. S M A Gandhimathinathan அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளரும் தவெக-வில் சில மாதங்கள் இயங்கியவருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வந்த தீர்ப்பையடுத்து அருள்முருகன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவிக்காலம் முடிந்தும் அவரே பதவியில் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் காந்திமதிநாதன். அந்த வழக்கில்தான் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை விசாரித்தது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி. இது குறித்து காந்திமதிநாதனிடம் பேசினோம். arul murugan with kanimozhi ''அறங்காலவர் குழு தலைவர் பதவிக்காலம் முடிஞ்சுடுச்சுன்னா புதிய குழுவை நியமிக்க வேண்டியதுதான் அறநிலையத்துறையின் கடமை. அதைச் செய்யாம தக்கார் பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் அருள் முருகனைத் தொடரச் செய்தாங்க. இது சட்டப்படி சரியானது இல்லைனுதான் வழக்கு போட்டேன். வழக்கு மாண்புமிகு தலைமை நீதிபதி முன் இன்னைக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தக்கார் பதவியில் நியமிக்கப்பட்டவரை உடனடியாப் பதவி நீக்கம் செய்துவிட்டு நான்கு மாதத்துக்குள் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை அப்படி நியமிக்கவில்லை என்றால் நீதிமன்றமே தலையிட்டு அறங்காவலர் குழுவை நியமிக்கும்னு அறிவிச்சிருக்காங்க நீதியரசர்'' என்றார் அவர்.

விகடன் 14 Oct 2025 9:34 pm

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி; காதலன் விபரீத முடிவு

ஹமாஸ் தாக்குதலில் காதலி உயிரிழந்ததை அடுத்து 30 வயதான காதலன் தன்னுயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்டோபர் 7ம் தேதி ரோயி ஷலிவ் தனது காதலி மபெல் ஆடம் மற்றும் தனது நண்பர் ஹிலி சாலமோனுடன் கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். காதலன் கண்முன்னே கொல்லப்பட்ட காதலி […]

அதிரடி 14 Oct 2025 9:30 pm

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதி இதுவா? பீகார் தேர்தல் களம் விறுவிறுப்பு...

பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 14 Oct 2025 9:11 pm

சர்வதேச பார்சல் அழிப்பு: யு.பி.எஸ்-ஸை விட்டு ஃபெடெக்ஸ்-க்கு ஓடும் வணிகர்கள்!

உலகெங்கிலும் உள்ள யு.பி.எஸ் (United Parcel Service) வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், நிறுவனத்தின் பன்னாட்டு சரக்குக் கண்காணிப்புப் பக்கத்தில்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 8:50 pm

ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா – எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து , சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம மற்றும் துடெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் கைதுசெய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இருவரும் 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 9 பேரும் […]

அதிரடி 14 Oct 2025 8:30 pm

ஸ்லோவாக்கியாவில் நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பலர் காயம்

ஸ்லோவாக்கியாவின் கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர். இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு இயந்திரமும் சில பெட்டிகளும் தடம் புரண்டதாக ஸ்லோவாக்கியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, இரு ரயில்களிலும் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளார்கள். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 14 Oct 2025 8:30 pm

சர்ச்சைக்குரிய AI ஸ்டார்ட்அப் “Friend”: -ஒரு விமர்சன ஆய்வு!

“உங்களுக்கு ஒரு AI நண்பன் மட்டுமே தேவை” என்ற தத்துவத்துடன் ‘Friend’ (நண்பன்) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 8:21 pm

தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு சர்ச்சை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 7:50 pm

அஜித் குமார் ரேசிங் –மறக்க முடியாத முதல் சீசன்!

கோலிவுட்டின் எவர் ஸ்டார் அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு 2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன் வெறும் போட்டியல்ல, அது

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 7:37 pm

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 14 நாட்களுக்கு விளக்கமறியல் அந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (13) கைது செய்தனர். கைது செய்து விசாரணைகளின் […]

அதிரடி 14 Oct 2025 7:30 pm

இஸ்ரேல் நாடாளுமன்றில் ட்ரம்பிற்கு நடந்த சம்பவம்

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகிற்கு அதிக ட்ரம்ப்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

அதிரடி 14 Oct 2025 7:30 pm

காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம்… The post காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 7:09 pm

ட்ரம்பை சமாதானத் தூதர் என புகழ்ந்த பாகிஸ்தான் அதிபர்... ரியாக்ஷன் கொடுத்த இத்தாலி பிரதமர்!

எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.

சமயம் 14 Oct 2025 7:00 pm

ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது- செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 7:00 pm

'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். புஸ்ஸி ஆனந்த் கரூர் சம்பவத்துக்குப் பிறகு கட்சி மொத்தமாக ஷட் டவுன் ஆகிவிட்டது. சென்னையை சேர்ந்த மா.செக்கள் ஒன்று கூடி காந்தி ஜெயந்திக்கு எங்கே மாலை போடலாம் என ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தனர். விஷயம் தலைமைக்கு தெரிந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட மா.செக்களை தொடர்புகொண்டு தலைமையின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக்கூடாது எனக் கறாராக கூறிவிட்டனர். சில மாவட்டங்களில் கரூர் சம்பவத்துக்காக இரங்கல் போஸ்டர் அடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருந்தனர். அதையும் தலைமையிலிருந்து கூப்பிட்டு தடுத்து நிறுத்தினர். இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம் நீதிமன்ற தரப்பிலிருந்து பாசிட்டிவான முடிவு வரும் வரை காத்திருங்கள். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை கூறுவோம் என்றே மா.செக்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. இடையில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் சிலர் தவெக கொடியோடு கலந்துகொண்ட நிகழ்வும் நடந்திருந்தது. அதற்கும் தவெக பொறுப்பேற்கவில்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட செயல்பாட்டை நாங்கள் தொடங்கவே இல்லை. அதற்குள் அதிமுக - தவெக கூட்டணி என பேசப்படுவதில் அர்த்தமே இல்லை என்று பனையூர் வட்டாரத்தினர் மறுத்தனர். விஜய் TVK Vijay விஜய் மற்றும் தலைமறைவாக இருந்த ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேருமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காகத்தான் காத்திருந்தனர். விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் திட்டம் இருந்தது. அதற்காக முதலில் 13 ஆம் தேதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார்கள். அந்த தேதி மாற்றப்பட்டதற்கும் நீதிமன்ற தீர்ப்பு அந்த நாளில் வரக்கூடும் என தகவல் கிடைக்கப்பெற்றதே காரணம் என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள். தவெக தரப்பில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தீர்ப்பு நேற்று வெளியானது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு பிறகுதான் தவெக தரப்பு கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கிறது. விஜய்யும் 'நீதி வெல்லும்!' என தொண்டர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார் CTR Nirrmal Kumar - TVK இதன்பிறகுதான் தலைமறைவாக இருந்த ஆனந்தும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் நீலாங்கரை வீட்டில் விஜய்யை சந்தித்திருக்கின்றனர். திருச்சி, சேலம், புதுச்சேரி என மாறி மாறி தங்கியிருந்த ஆனந்த் நேற்றிரவு 9:15 மணிக்கு விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்திருக்கிறார். 10:30 மணிக்கு சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலம் விசாரிப்புகளை தாண்டியும் சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. 'நம் கூட்டத்துக்கு வந்து அத்தனை பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நம்முடைய கையால் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தால்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை முதலில் பாருங்கள்.' என விஜய் ஆனந்திடம் கூறியதாக விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர். TVK Vijay கரூர் குடும்பங்களை சந்திக்க செல்ல ஏற்பாடுகளை செய்ய ஒரு குழு அமைப்பதைப் பற்றியும் ஆனந்த்தும் விஜய்யும் பேசியிருக்கிறார்கள். 'கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ரொம்பவே உடைந்துவிட்டார். முதலில் அந்த குடும்பங்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே எண்ணமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் தாமதமானதால்தான் முதலில் வீடியோ காலில் பேசிவிடுவோம் என அந்த குடும்பங்களிடம் பேசினார். அதன்பிறகுதான் விஜய் கொஞ்சம் தேறினார். இப்படியே உடைந்து போய் இருந்துவிடக்கூடாது என்றுதான் தினசரி நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு கிளம்பி வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தால் மட்டுமே அவர் முழுமையாக நிம்மதியடைவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர். TVK Vijay | த.வெ.க - விஜய் 13 ஆம் தேதி கரூர் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 17 ஆம் தேதி கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறது விஜய் தரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரே இடத்தில் அழைத்து வைத்து சந்திக்க திட்டமிடுகிறது தவெக தரப்பு. ஆனால், அப்படி ஒரு இடம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் இடத்தை இன்னும் லாக் செய்யாமல் இருக்கின்றனர் என்கின்றனர் லோக்கல் தவெக நிர்வாகிகள்.

விகடன் 14 Oct 2025 6:55 pm

‘என்ன வேணும்னே புறக்கணிக்கிறாங்க’.. இதுக்கு மேல யாராலும் பார்ம நிரூபிக்க முடியாது: இந்திய பௌலர் அதிருப்தி!

தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுடன் பேசினார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 14 Oct 2025 6:49 pm

கல்வி உரிமை சட்ட இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு!

கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 6:32 pm

ஹமாஸ்-ஆயுதக் குழு மோதல்: காஸாவில் 27 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய பிறகு காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் ஹமாஸ் படையினருக்கும், துக்முஷ் குடும்பத்தினரின் ஆயுதக்குழு உறுப்பினா்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் 27 போ் உயிரிழந்தனா். இஸ்ரேலின் மிகப் பெரிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட பிறகு காஸாவில் நடந்துள்ள மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது. இது குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறுகையில், முகமூடி அணிந்த ஹமாஸ் படையினா், காஸா சிட்டியின் ஜோா்டானிய மருத்துவமனை அருகே ஆயுதக் குழுவினருடன் துப்பாக்கிச் […]

அதிரடி 14 Oct 2025 6:30 pm

ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா? - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி... பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. ‘’பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’’ எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துதானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்? பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை நடிகை குஷ்பு கொஞ்ச நாட்கள் முன்பு இழிவுபடுத்தினார். பாமகவின் சவுமியா அன்புமணி, ‘’உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?’’ எனக் கேவலமாகப் பேசினார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார். வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று சொன்னார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து திமுகவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ’பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்... பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

விகடன் 14 Oct 2025 6:12 pm

Dude: இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம் - சாய் அபயங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `டூட்' படம் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் பேசிய சாய் அபயங்கர், ``'கட்சி சேரா', 'சித்தர புத்திரி', 'ஆசைக் கூட' என ஒரு மூணு பாட்டு நான் இன்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிருந்தேன். அதைப் பார்த்துதான் படங்கள்-ல வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நம்ம கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சுருக்கு, பாட்டை நல்ல டெலிவர் பண்ணிருவோம்னு நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வராங்க. அதை நானும் கரெக்ட்டா பண்ணிருக்கேனு நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சாய் அபயங்கர் அதற்கு பதிலளித்த அவர், நான் ட்விட்டர்லையும், இன்ஸ்டாலையும் பெருசா இல்ல. அப்படி அதுல இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம். நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன். எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது. மியூசிக் பண்ணத்தான் புடிக்கும். எனக்கு புடிச்ச மியூசிக்க பண்றேன். மக்களும் அதற்கு சப்போர்ட் பண்றாங்க என்று கூறியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 6:08 pm

ரோஹித், கோலி விளையாட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…சுப்மன் கில் பேச்சு!

டெல்லி : இந்தியாவின் புதிய ODI கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் வார இறுதியில் தொடங்கும் ODI தொடரில் தங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கோலிவுட் வெற்றிக்கு வழிநடத்தினார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூடில்ஹியில் அரைசதம் அடித்த கில், […]

டினேசுவடு 14 Oct 2025 6:05 pm

Festive spending turns smart as Indians celebrate with caution and financial discipline: Consumr.ai’s TwinSights Festive Report 2025

Gurugram: Festive purchase decisions are being seeded weeks before they appear in traditional search, sales, or survey data, and brands that rely on lagging indicators are acting too late, according to Consumr.ai’s latest insights report — TwinSights Festive Report 2025: Decoding India’s Festive Shopper Through AI Twins.The report marks a first-of-its-kind intelligence study built entirely on Consumr.ai’s proprietary martech tool, AI Twins, which creates digital mirrors of real consumers, based on observed behavior rather than stated claims. The TwinSights Festive Report 2025 offers an in-depth look at how India’s festive shoppers discover, decide, and celebrate — revealing invisible behavioral patterns that shape purchase intent long before the first click or conversion.The AI Twins simulations uncovered how aspiration collides with caution, how rituals evolve into routines, and how purchase triggers emerge in the everyday flow of life. Based on real-time behavioral simulations, the report offers a proactive playbook for brands to capture India’s most critical shopping season.Key Cross-Sector Insights for Festive 2025Powered by AI Twins, digital mirrors of real consumers built from observed behavior, the report identifies five defining trends across CPG, Durables, Beauty, Wellness, and BFSI sectors: Personalization Trumps Price: Meaningful, relevant gifts and curated experiences create higher memory value than deep, generic discounts. Utility is the New Premium: Shoppers are prioritizing functional upgrades and efficiency (e.g., “Cuts power bills by Rs.400/month”) over novelty. Stock Visibility Drives Trust: Transparent inventory signals and guaranteed delivery windows reduce buyer anxiety and cart abandonment. Mindful Spending is Mainstream: Consumers like the Strategic Gamer and Mindful Minimalist demand authenticity, ingredient transparency, and sustainable packaging. Excitement Must Be Earned: Generic hampers and repetitive offers are failing. Surprise mechanics, exclusivity, and gamification are key to restoring “festive magic.” Commenting on the report, Vivek Bhargava, Co-Founder, Consumr.ai, said, “AI Twins allow us to observe consumers in their walk of life, not through what they claim, but through what they actually do. Festive intent today is not triggered by a sale banner. It’s seeded much earlier in a reel, a ritual, or a conversation. Brands that can simulate and anticipate this behavior will own the season before it begins.” This simulation-first framework enables brands to identify early signals of festive behavior — uncovering what triggers discovery, when conversion peaks, and how regional, cultural, or emotional cues influence decision-making. “TwinSights moves beyond recall-based research to reveal how consumers truly behave in the flow of life. Built on our proprietary AI Twin methodology, the report draws from four intelligence layers: Behavioral, Intent, Conversational, and Market, to surface insights that are deterministic, not modeled,” Bhargava added.Sector-Specific Playbooks from AI Twin SimulationsCPG: From Boxes to Bonds Insight: Packaging is as decisive as the product. Custom messages and curated mixes (e.g., modular hampers) drive disproportionate recall. Recommendation: Scale customization at speed. Offer shoppers instant previews of mix-and-match assortments to reduce decision fatigue and drive shareability. Consumer Durables & Tech Gadgets: Utility is the New Luxury Insight: Shoppers like the Savvy Celebrator use spreadsheets and price alerts. Gadgets compete less on flash, and more on proof of utility and service (warranty, installation). Recommendation: Publish promo calendars to allow Twins to plan purchases. Lead with data-driven proof (e.g., energy savings) over slogans. Cosmetics & Beauty: From Excess to Everyday Insight: Authenticity and ingredient legibility drive trust more than elaborate packaging or influencer hype. Ritual-based kits resonate higher than generic hampers. Recommendation: Enable ritual builders. Curate functional sets (e.g., “night routine kit”) and partner with educators rather than relying solely on glam edits. BFSI: Finance as Festive Infrastructure Insight: Caution is part of the celebration. Finance has shifted from indulgence to responsibility, with pride resting in control (Pragmatic Planner). Speed (instant approval) often beats lower APR. Recommendation: Embed finance in celebration, not just checkout. Be discoverable at the moment of intent-seeding — in social feeds and e-commerce pages — not just during payment. In an age where consumer intent evolves by the hour, timing is everything. It’s no longer about volume of messaging but precision of foresight. Consumr.ai’s AI Twins turn reactive analysis into real-time intelligence by simulating consumer behavior across feeds, forums, and marketplaces.With this simulation-first approach, brands can design journeys, test creatives, and refine product-market fit long before their campaigns go live — because in the new consumer economy, advantage belongs to those who don’t wait for intent to appear, they simulate it.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 6:05 pm

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் புதிய முதலீடு செய்யவில்லையா? அரசை விமர்சிக்கும்ம் அன்புமணி ராமதாஸ்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சமயம் 14 Oct 2025 6:05 pm

கோழி இறைச்சியில் புளுக்கள்; வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புளுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். உண்பதற்கு ஒவ்வாத கோழி இறைச்சி அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது […]

அதிரடி 14 Oct 2025 6:02 pm

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் நாளை கையளிப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான […]

அதிரடி 14 Oct 2025 6:00 pm

கரூரில் 41 பேர் பலியான இடம் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டதா? TN Fact Check வெளியிட்ட உண்மை இதுதான்...

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்ததாக பரவும் தகவல் பொய் என் டிஎன் பேக்ட் செக் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சமயம் 14 Oct 2025 6:00 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சதிஷ், சிவா, ஹரிஹரனுக்கு ஜாமீன் - நீதிமன்றம் சொன்ன காரணம்!

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Oct 2025 5:59 pm

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்த கூட்டம் அரசு கட்டடமான ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அங்கேயே செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கே.வி தங்கபாலு இது குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏ அலுவலகம்‌ என்பது குறிப்பிட்ட அந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ - வைச் சந்தித்து தங்களின் குறைகளையும்‌ கோரிக்கைகளையும் முறையிடும் இடமாகும். அந்த நோக்கத்திற்காக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ - விற்கும் தொகுதி மக்களுக்குமான பொதுவான இந்த அரசு கட்டடத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம். கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும் என்றனர். கே.வி தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை என முடித்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே‌.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விகடன் 14 Oct 2025 5:56 pm

எல்லை பாதுகாப்பு படையில் 391 காலிப்பணியிடங்கள்; கான்ஸ்டபிள் பதவி, ரூ.69 வரை சம்பளம் - தகுதிகள் என்னென்ன?

எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Oct 2025 5:53 pm

நானும், என் மாஜி கணவரும் மீண்டும் சேர்ந்துட்டோமா?: பிரபல டிவி சீரியல் நடிகை விளக்கம்

டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று தெரிவித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 5:49 pm

Parle-G celebrates the spirit of Chhath with a touching story of family and care

Mumbai: Parle Products, a manufacturer of biscuits and confectionery, has launched a touching new campaign for Chhath Puja, capturing the brand’s enduring message that “G Maane Genius” — a genius found in simple, thoughtful gestures that bring joy to others.For decades, Parle-G has been more than just a biscuit; it has been an integral part of India’s family moments, everyday rituals, and festive celebrations. The new campaign beautifully reflects this legacy through a moving story that celebrates care, thoughtfulness, and togetherness.The film follows a young boy who learns that his pregnant aunt will be unable to perform the traditional Chhath rituals due to medical advice. Moved by her disappointment, the boy quietly decides to bring the festival to her. Gathering mud, flowers, sugarcane, and water, he recreates the ghat at home, allowing her to experience the rituals she loves. In doing so, he transforms a moment of sadness into one of joy, underlining Parle-G’s belief that the smallest gestures often have the biggest emotional impact.[caption id=attachment_2477117 align=alignleft width=200] Mayank Pravinchandra Shah [/caption]Speaking about the campaign, Mayank Shah, Vice President, Parle Products, said, “Parle-G has always been part of India’s festivals and family traditions, not just as a biscuit, but as a companion to the moments that truly matter. This Chhath Puja, our campaign celebrates empathy, thoughtfulness, and the small gestures that bring immense joy to loved ones. Every festival, Parle-G aims to inspire families to celebrate love, care, and togetherness, reflecting our vision that true genius lies in spreading happiness and creating meaningful moments that strengthen bonds. ‘G Maane Genius’ is about cherishing these simple yet powerful acts that make life and festivals truly memorable.” Through this new campaign, Parle-G once again reinforces its position as a brand that celebrates love, care, and shared happiness. By spotlighting the magic of simple human connections, Parle-G reminds audiences that the true spirit of every festival lies not in grandeur, but in the moments of warmth and togetherness we create with those who matter most.https://www.youtube.com/watch?v=R6tTFgvwZI0Campaign Credits:Client – Parle Products Private LimitedBrand – Parle-GVP Marketing – Mayank Pravinchandra ShahSenior Product Manager: Megha ThakareDeputy Brand Manager – Anshuman Bharat SharmaCreative Agency – Thought Blurb CommunicationsChief Creative Officer: Vinod KunjNational Creative Director: Renu Somani Karwa

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:47 pm

Without®’s ‘Made Without’ film rewrites the rules of green storytelling

Mumbai: Without, India’s first impact material science enterprise, has launched a hard-hitting new brand campaign titled “Made Without,” a cinematic and emotionally charged film that flips the script on how sustainability is portrayed. Following its breakthrough moment on Shark Tank India Season 3, the brand enters the content marketing arena with a film that’s raw, witty, and powerfully human — one that challenges greenwashed narratives and puts authenticity at the forefront.At the heart of the campaign lies a provocative question: “When things say they’re recycled, why do they only take the best stuff? What happens to the worst?” The answer, as the film declares, is simple: Without takes it all.From soiled underwear and chip packets to chocolate wrappers and textile scraps, Without’s 1,030 sq. meter demonstration plant in Pune processes waste often deemed “unrecyclable.” Using its patented homegrown technology, the company transforms these materials into high-quality lifestyle products such as sunglasses, coasters, keychains, and mini planters — proving that the worst waste can create the best outcomes.Set against the rugged backdrop of its industrial facility, the film captures how 16 informal waste workers have transitioned into trained plant operators, now earning twice their previous income, with access to health insurance, paid leave, and dignity at work. With clean design, sharp copy, and cinematic visuals, the film dismantles the sanitized version of sustainability often seen in mainstream advertising.[caption id=attachment_2477113 align=alignleft width=200] Anurag Ramgopal [/caption] Anurag Ramgopal, Creative Head and Co-Founder, Let’s Make Better Productions, said, “When Anish spoke to me about the film, what really stood out was his passion for honesty, authenticity and a hopeful vision for the world. We wanted to capture that energy. The idea was to use real-world motifs, like the VHS tape, to show that Without works in the real physical realm with real people. Everyone you see in the film is genuinely part of Without — no actors, no faking it. It had to feel like a music video meets documentary.” [caption id=attachment_2477131 align=alignright width=235] Anish Malpani [/caption] Anish Malpani, Founder and Director of Without and a 2026 Emerging Climate Fellow at Yale’s International Leadership Center, said, “This is not just about recycling waste, this is about rebuilding systems — fair, full and future-ready. We’re not just innovating in materials science, we’re proving that climate action can be inclusive, traceable and scalable. Waste-picking shouldn’t be a job that exists, and those doing it should be graduated out of it into better occupations. It’s time we radically reimagine what climate solutions can look like and who gets to be part of them.” [caption id=attachment_2477129 align=alignleft width=200] Rani Adsul [/caption] Rani Adsul, a former waste worker now part of the Without team, shared, “This campaign is special because I love what Without has done for me. I used to work on a garbage truck. There was no respect, no fair pay, and people didn’t see the value in what we did. At Without, people treat me with respect. I’m learning new things every day, and it amazes me to see how waste can turn into something so beautiful and useful. The biggest change is that I can now pay my children’s school fees regularly, without borrowing money. For the first time, I feel seen and proud of the work I do every day,” In a country where less than 1% of flexible plastics are recycled, Without directly confronts this “green gap” — where ethics often end with aesthetics — by creating tech and systems that are transparent, fair, and functional.This campaign isn’t a glossy sustainability ad — it’s a climate siren. It cuts through noise with raw honesty, spotlighting the people, systems, and science that make circularity real.https://youtube.com/shorts/leM194Nmong?si=GiA5sL8akq5lfARi

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:37 pm