SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

டிரம்பை சந்திக்க அமெரிக்க செல்லும் ஜெலென்ஸ்கி: சுற்று பயணத்தின் நோக்கம் இதுதான்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். டிரம்ப் – ஜெலென்ஸ்கி சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவலை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய X தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது உக்ரைனின் முக்கிய பிரதிநிதிகள் குழுவும் ட்ரம்புடனான சந்திப்பிற்காக அமெரிக்காவுக்கு பயணம் […]

அதிரடி 15 Oct 2025 12:30 am

8 போா்களை நிறுத்திவிட்டேன்; ஆப்கன்- பாக். மோதலையும் நிறுத்துவேன்: டிரம்ப் உறுதி

இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன்; இப்போது புதிதாக எழுந்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலையும் நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தில் போா்களை நிறுத்தும் பணியைச் செய்யவில்லை என்றும் அவா் கூறினாா். அமெரிக்க அதிபரின் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: இஸ்ரேல்-காஸா மோதலை நிறுத்தியதன் மூலம் இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன். இதில் […]

அதிரடி 14 Oct 2025 11:30 pm

மாணவர்களை இலக்குவைத்து மதனமோதக வில்லை விற்பனை

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்கள் ரகசியமாக ஒருவகை மாத்திரையை வாங்கி கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

அதிரடி 14 Oct 2025 11:30 pm

கோல்ட்ஃபிரிப் இருமல் சிரப் : 22 குழந்தைகள் மரணம் -காவல்துறை விசாரணை அறிக்கை அதிர்ச்சி!

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

சமயம் 14 Oct 2025 11:27 pm

மன்னாரில் படகு –இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர் 

மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த… The post மன்னாரில் படகு – இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 11:23 pm

தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. மதியழகன், பவுன்ராஜ் காவல் நீட்டிப்பு - நாளை ஆஜராக உத்தரவு!

தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஒரு நாள் காவல் நீட்டிப்பு நாளை ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Oct 2025 11:00 pm

40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் கொள்ளை; வட்டிக்கு விடுபவரிடம் கைவரிசை காட்டிய பொலிஸார்!

பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் 40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கத்தி முனையில் மிரட்டி கொள்ளை வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இது தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். வீட்டின் உரிமையாளர் […]

அதிரடி 14 Oct 2025 10:30 pm

மேற்கு வங்கம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் வாக்குமூலம்!

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை சிகிச்சையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “அவர்களின் வாகனத்திலிருந்து எங்களை நோக்கி வருவதை நானும் என் நண்பரும் கண்டோம். நாங்கள் காட்டை நோக்கி ஓடினோம். எங்களைத் துரத்திய மூன்று பேர், என்னைப் பிடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் என் மொபைல் போனை பறித்ததுடன், என் நண்பரையும் […]

அதிரடி 14 Oct 2025 10:30 pm

`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்!

துபாயில் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. லீக், சூப்பர் 4, இறுதிப்போட்டி என இந்தியா - பாகிஸ்தான் மோதிய மூன்று போட்டிகளிலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்தனர். India VS Pakistan அதற்கு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி (PCB தலைவர்) கரங்களால் கோப்பை வாங்க மறுக்கவே, அவரோ கோப்பையை கொண்டுசென்றுவிட்டார். இந்திய அணி கோப்பை இல்லாமலே நாடு திரும்பியது. அதன் நீட்சியாக, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர். இவ்வாறு, விளையாட்டிலும் இருநாட்டுக்கிடையிலான அரசியல் புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹாக்கி போட்டியொன்றில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் High-Five செய்து கொண்ட செயல் வைரலாகி வருகிறது. INDIA AND PAKISTAN HOCKY TEAMS HAND SHAKE ❤️❤️❤️❤️ #indiavspakistan #sports pic.twitter.com/puKxuvqhq9 — Sheihryaaar 1 (@Sheihryar1) October 14, 2025 மலேசியாவில் நடைபெற்றுவரும் 21 வயத்துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில், ஜோகூர் பாருவில் (Johor Bahru) இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. போட்டி ஆரம்பிக்கும்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் Hi-Fi செய்து கொண்டனர். பின்னர், இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 3 கோல் அடிக்கவே போட்டி சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, இரு அணி வீரர்களும் களத்தில் Hi-Fi கொடுத்துக் கொண்டனர். இருநாட்டு வீரர்களின் இந்த முதிர்ச்சியான செயல், வேண்டுமென்றே இருநாடுகளுக்கிடையே சிலர் பரப்பும் வெறுப்பு அரசியலை வென்றுவிட்டதாக பலரும் நெகிழ்கின்றனர். Asia Cup: கோப்பையைப் பெற சூர்யகுமாருக்கு கண்டிஷன் - பாகிஸ்தான் அமைச்சர் சொன்னதென்ன?

விகடன் 14 Oct 2025 10:21 pm

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த போர் முடிவுக்கு வர நான்தான் காரணம், இது நான் நிறுத்திய 8-வது போர் ( இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட) என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழக்கம்போல் சுய புகழ்ச்சி பேசிக் கொண்டிருக்கிறார். இஸ்ரேலும், பாகிஸ்தானும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என தங்கள் விஸ்வாசத்தை காட்டி வருகின்றன. ஆனால், உண்மையில் ட்ரம்ப் ஒருவரால்தான் இந்த போர் முடிவுக்கு வந்ததா? ட்ரம்ப் மட்டுமே இதற்கு உரிமை கோர முடியுமா? அமெரிக்காவைத் தாண்டி இந்த போர் முடிவுக்கு வருவதற்கு மிக முக்கியப் பங்காற்றிய நாடுகள் எவை என்பதை விரிவாக பார்க்கலாம்! 1. கத்தார்: இஸ்ரேல் - காஸா போர் தொடங்கிய காலத்திலிருந்தே சமரசத்துக்கான முயற்சியில் ஒரு சார்பற்ற நாடாக ஈடுபட்டது கத்தார். ஹமாஸ் - இஸ்ரேல் படைகள் பேச்சு வார்த்தைக்கு தங்கள் நாட்டில் இடமளித்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் கத்தாரின் செயல்பாட்டை காந்தியின் சத்தியா கிரகத்தோடு ஒப்பிடலாம். ஏனெனில், செப்டம்பர் மாதம் ஹமாஸ் தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக கத்தார் சென்றிருந்தனர். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும் நோக்கில், ஹமாஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அந்த தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால், அப்போதே ஹமாஸ், கத்தார் கொடுத்த அழுத்தத்தின்படி அமெரிக்கா கூறும் விதிகளை ஏற்று அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருக்கும். கத்தாரின் பேச்சுக்கு ஹமாஸ் அவ்வளவு மதிப்பளித்தது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலால், அமைதிக்கான வாய்ப்பு தகர்ந்தது.  தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்ததே தவிர, தங்கள் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திய காரணத்துக்காக எந்த பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் மீது கத்தார் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருந்தால், மத்திய கிழக்கில் இன்னும் மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதை பக்குவமாக கையாண்டது கத்தார். அரபு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி, இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. அதன் விளைவு, ஐநா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டத்தின்போது, அரபு நாடுகள் ட்ரம்ப்பை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் தெரிவித்தன. அமெரிக்காவுக்கு மிக முக்கிய முதலீடுகளைக் கொடுக்கும், அரபு நாடுகளின் பேச்சை ட்ரம்ப்பால் உதாசீனப்படுத்த முடியாது என்பதாலேயே, அவர் அமைதித் திட்டத்தை உருவாக்க நேர்ந்தது.  இதற்கு முன்பு ஜனவரி 2025-ல், ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திலும், கத்தார் முக்கியப் பங்காற்றியது. எனவே கத்தாருக்கு இந்த போர் முடிவுக்கு வந்ததில் மிக முக்கியப் பங்கு இருக்கிறது. 2. பிரான்ஸ்: ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.  ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத்  தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல என வெளிப்படையாக பேசினார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்ததை அவர் கண்டித்தார். சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமை மீறலை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது தடைகள் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். எவ்வளவு சொல்லியும் இஸ்ரேல் கேட்காததால், 2 முக்கிய விஷயங்களைச் செய்தார் மேக்ரான். 1) நியூயார்க் தீர்மானம் (The Newyork Declaration) - சவுதி அரேபியாவுடன் இணைந்து ஐநா சபையில், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது பிரான்ஸ். அதில், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தில் இரட்டை அரசாங்க முறை அமல்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 142 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கொடுக்கப்பட்ட முதல் அழுத்தம். 2) பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்: ஹமாஸ் நடத்தியது கொடூரத் தாக்குதல்தான். அது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பதை எந்த காரணத்தை சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என ஐநா வருடாந்திர சிறப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் பேசினார் மேக்ரான். போரை நிறுத்துவதற்கும், நீடித்த அமைதி திரும்புவதற்கும் ஏதுவாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மேக்ரான் அறிவித்தார். இது இரண்டாவது அழுத்தம். பிரான்ஸுக்கு முன்பே பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்திருந்தாலும், அதில் பிரான்ஸ் உருவாக்கிய கருத்தின் தாக்கம் இருக்கிறது. மற்றொரு புறம் இதைத்தாண்டி பெரிய அழுத்தத்தையோ, பங்களிப்பையோ பிரிட்டன் கொடுக்கவில்லை.  அந்த வகையில், திக்கற்று இருந்த இந்த போரை முடிவை நோக்கி திசை திருப்பியதில், பிரான்ஸின் பங்கு மிக முக்கியமானது.  3. எகிப்து காஸா போருக்கான இறுதி அமைதி பேச்சுவார்த்தை எகிப்தில்தான் நடந்து முடிந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற உலக நாடுகள் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் எகிப்தில்தான். மார்ச் 2025-ல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஸா மக்களை வெளியேற்றிவிட்டு அதை ஒரு தொழில் நகரமாக உருவாக்குவோம் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு மட்டும் தெரிவிக்காமல் செயலிலும் இறங்கியது எகிப்து. காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்கான பிளானை, ப்ளூபிரிண்டாகவே உருவாக்கி அரபு, இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சமர்ப்பித்த முதல் நாடு எகிப்து. காஸாவினுடைய போர், எல்லை நாடான எகிப்துக்கும் பரவிவிடக் கூடாது என்பதிலும், காஸாவிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு எகிப்தில் இடம் கொடுக்க முடியாது என்ற தன்னலமும் எகிப்தை இந்த முடிவெடுக்க வைத்தது. ராபா எல்லை வழியாக காஸாவுக்கு உணவு மற்றும் உதவிகளையும் எகிப்து வழங்கியது. ஒட்டுமொத்தமாக, தன்னலம் இருந்தாலும் அதில் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற பொது நலமும், காஸா போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்தி பங்காற்ற வைத்திருக்கிறது.  4. துருக்கி இந்த அமைதிப் பேச்சு வார்த்தையின் கடைசி மற்றும் முக்கியமான கட்டம் நிறைவேறியதற்கு துருக்கிதான் முழு முதற் காரணம். துருக்கி அதிபர் எர்டோகன், செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அப்போது, ட்ரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். துருக்கியின் பேச்சுக்கு ஹமாஸ் மதிப்பளிக்கும் என்பதால், ஹமாஸை போர் நிறுத்தத்துக்கு, ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்றார் ட்ரம்ப். இதை எர்டோகன் ஏற்று, ஹமாஸிடம் பேசி அவர்களை போர் நிறுத்தத்துக்காக ட்ரம்ப் போட்ட அமைதித் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்ததில் முக்கிய பங்கு எர்டோகனுக்கு இருக்கிறது.  இதை செய்வதால் அவருக்கு என்ன லாபம். 2019-க்கு பிறகு அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு விரிசலைடந்தது. அதை சரி செய்யும் வகையில் 5 ஆண்டுகளுக்கு பிறக்கு துருக்கி அதிபர் எர்டேகான் அமெரிக்காவுக்கு சென்றார். அது உள்நாட்டில் அவரது இமேஜை தக்க வைக்க உதவியது. மேலும், மத்திய கிழக்கில் துருக்கிக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கவும், ஹமாஸின் ஒப்புதல் உதவும். இதைத் தாண்டி காஸாவில் உயிரிழப்புகளை நிறுத்த வேண்டும் என்ற அக்கறையும் இருக்கிறது. இதெல்லாம்தான், எர்டேகானை, ஹமாஸிடம் பேச வைக்கிறது. இன்னும் பல நாடுகள் சின்னச் சின்ன பங்காற்றியிருக்கின்றன. இப்படி பல்வேறு நாடுகளின் பங்களிப்பால்தான், காஸாவில் போர் முடிவுக்கு வந்தது. ட்ரம்ப்பால் மட்டும் இந்த அமைதியை கொண்டு வந்திருக்க முடியாது. ஒருபுறம் இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து, குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட காரணமாக இருந்த ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு கேட்பதுதான் இந்த யுகத்தின் மிகப்பெரிய ஜோக்!  Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?

விகடன் 14 Oct 2025 10:15 pm

பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் :முறைப்பாட்டை பதிய முடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதிக்குள் நுழைந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முத்துப்பிள்ளை வேந்தன் என்பவரின் பசு மாட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு குறித்த மாட்டினை இறைச்சிக்காக கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து முறைப்பாடு பதியச் சென்ற பண்ணையாளர்களை பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாக கூறி முறைப்பாட்டை பதிய முடியாது என திருப்பி அனுப்பி உள்ளனர். இன் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்ட குழுவினர் மயிலத்தமடு மாதவனை பகுதியில் உள்ள பொலீஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து மேய்ச்சல் தரை நிலங்களில் அத்து மீறி காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறிய சில நாட்களிலேயே அங்குள்ள பண்ணையாளரின் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.

பதிவு 14 Oct 2025 10:11 pm

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது! * `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன? * `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப் * மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான் * ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! - பிரதமர் மோடி * ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து! * பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யார்? * தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை? * ஹரியானா: ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மறுத்துப் போராடும் மனைவி! * சட்டமன்றத்தில் நடந்தது என்ன? * சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குக! - பாமக எம்.எல்.ஏக்கள் தர்ணா * உச்ச நீதிமன்ற உத்தரவு படி 3 முறை டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு? * முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்! * `என் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் அடிப்பேன்!' - சீமான் * சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! * போக்சோ வழக்கில் இந்து மகா சபைத் தலைவர் கைது? * டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! * இருமல் மருந்து விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை! * அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்? * முதல்கட்டப் பார்வையில் இடைக்கால உத்தரவு... உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன? * `நீதி வெல்லும்!' - த.வெ.க தலைவர் விஜய் பதிவு * சிபிஐ விசாரணை கோரி வழக்கு போட்டவர்களை மிரட்டும் திமுக! - அதிமுக குற்றச்சாட்டு * கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்! - பெ.சண்முகம் * ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்க கூட்டணிக்கு வருவாங்க! - வானதி * வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை! - உயர் நீதிமன்றம்! * திமுக - அதிமுக அண்டர்கிரவுண்ட் டீலிங்! - அறப்போர் ஜெயராமன்

விகடன் 14 Oct 2025 9:58 pm

தெற்கு பாதாள கும்பலின் புகலிடம் யாழ்ப்பாணமா?

இலங்கை நீதிமன்றில் பாதாள உலக கும்பலை சேர்ந்த நபர் ஒருவரை படுகொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்திருந்த செவ்வந்தி எனும் பெண் நேபாளத்தில் கைதாகியுள்ளார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் செவ்வந்திக்கு உதவிய “ஜே.கே.பாய்” என்பவரும் நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புhதாள உலக கும்பலைச்சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையின் பின்னர் செவ்வந்தி நான்கு நாட்கள் மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று அங்கு மூன்று கிழமைகள் தங்கியபின் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்காக செவ்வந்திக்கு ஜே.கே.பாய் என்பவர் உதவி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நேபாளத்தில் இருந்து செவ்வந்தியை ஜரோப்பிய நாடான்றிற்கு தப்பிக்க வைக்க முற்பட்டமையும் அம்பலமாகியுள்ளது.

பதிவு 14 Oct 2025 9:57 pm

உள்ளே: வெளியே - தெற்கில் சாதாரணம்!

தமிழ் இளைஞர்கள் கடத்திப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்ருந்தார். கடத்தல் விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியைத் தவிர, முன்னாள் புலனாய்வுத் தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹோட்டி உட்பட மேலும் மூவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன 11வது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்படடுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு 14 Oct 2025 9:51 pm

தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance -336

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் மற்றும் சந்தை நுணுக்கங்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

விகடன் 14 Oct 2025 9:50 pm

நிதி பிரச்சினை தீர்ந்து வெள்ளம்?

நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வந்த செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகள் தற்போது வடக்கில் மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் தாமதமடையலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதனால் யாழ்ப்பாணம் - செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. சிந்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் செம்மணிக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்ருந்தார். அதன்போது செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதி மழை காரணமாக சதுப்பு நிலமாக மாறியுள்ளதை நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இந்நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி அகழ்வுப்பணிகள் தாமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Oct 2025 9:49 pm

தவெக - பாஜக கூட்டணி வாய்ப்பு எப்படி? சரத்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்!

நடிகர் சரத்குமார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். விஜயகாந்த் மகனுடன் நடித்த அனுபவம், 2026 தேர்தல், விஜய் வழக்கு, பிக் பாஸ், இருமல் மருந்து விவகாரம் என பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தெரிவித்தார்.

சமயம் 14 Oct 2025 9:47 pm

AK Racing: ஆர்வமும் அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் - அஜித்தின் ரேஸிங் அனுபவம்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது. சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans Series)  தொடருக்குத் தயாராகி வருகிறார் அஜித்குமார். அஜித் புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்! மறக்க முடியாத முதல் சீசன்! இந்நிலையில் இதுவரை பங்கேற்ற போட்டிகளும், அதன் சாதனைகளும் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அஜித்; பயிற்சியிலிருந்து பேரறிவுக்குப் பயணம் 2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன், அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு வெறும் போட்டியல்ல - அது ஒரு கற்றல் பயணம். ஒவ்வொரு சுற்றிலும் சவால்கள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்திய அணியின் ஆற்றலை உலக ரேசிங் மேடையில் வெளிப்படுத்திய ஆண்டு இது. துபாயின் வெப்பமான பாலைவனத்திலிருந்து வட ஐரோப்பாவின் பனி மூட்டம் சூழ்ந்த காலையில்வரை ஒவ்வொரு ரேஸும் இந்த அணியை புதிதாக வடிவமைத்தது. 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் தொடங்கிய ரேஸிங் பயணம் 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் நடைபெற்ற 'Porsche Cup' சோதனைகளுடன் தொடங்கிய பயணம், சரியாக பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே சுற்றுப்பாதையில் நிறைவடைந்தது. ஆர்வம் மற்றும் அடக்க மனப்பாங்கு இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்த சீசன் இது. புதிய அணி என்ற வகையில் 'Ajith Kumar Racin'g சவால்களை எதிர்கொண்டது. சக்திவாய்ந்ததும் சிக்கலானதுமான 'Porsche 992 GT3 Cup' காரை ஓட்டுவது வெறும் வேகத்தால் மட்டுமல்ல அதற்கேற்ப மரியாதை, துல்லியம், அனுபவம் ஆகியவற்றையும் தேவைப்படுத்தியது. முகெல்லோ, ஸ்பா, பால் ரிக்கார்ட், மிசானோ போன்ற ஒவ்வொரு சர்வதேச சுற்றுப்பாதையும் குழுவுக்கே ஒரு புதிய பாடமாக அமைந்தது. அஜித் Ajith: என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே - குடும்பத்துடன் அஜித் | Photo Album Ajith Kumar Racing அணியின் போட்டிகள் மற்றும் சாதனைகள் அஜித் குமார் ரேசிங் அணி 2025 ஆம் ஆண்டில் பின்வரும் முக்கிய சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றது: 24H Middle East Trophy – Porsche Cup 24H European Series – Porsche Cup: மொத்தப் போட்டியில் பட்டியலில் மூன்றாம் இடம் Porsche Sprint Challenge Southern Europe – Porsche Cup GT4 European Series முக்கிய முடிவுகள்: துபாய் (ஜனவரி 2025) – மூன்றாம் இடம் முகெல்லோ (மார்ச் 2025) - மூன்றாம் இடம் ஸ்பா-ப்ராங்கோர்சாம்ப் (ஏப்ரல் 2025) – இரண்டாம் இடம் போர்டிமாவ், எஸ்டோரில், வாலென்சியா, பார்சிலோனா, மிசானோ, பால் ரிக்கார்ட் போன்ற சுற்றுகளில் சிறந்த செயல்திறன். GT4 European Series – Porsche GT4 பால் ரிக்கார்ட் (ஏப்ரல் 2025) சாண்ட்வூர்ட் (மே 2025) ஸ்பா (ஜூன் 2025) மிசானோ (ஜூலை 2025) நூர்புர்க்ரிங் (ஆகஸ்ட் 2025) பார்சிலோனா (அக்டோபர் 2025) இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று, ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேஸிங் அனுபவத்தைப் பெற்றுள்ளது அஜித் குமார் ரேஸிங். ரேஸிங்கின் மனிதப் பக்கம் ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணி நேர உழைப்பு, பொறுமை, சோர்வற்ற மனநிலை இருந்தது. மெக்கானிக்குகள், இன்ஜினீயர்கள் இரவெங்கும் இயந்திரங்களை சரிசெய்தனர். ஓட்டுநர்கள் மழை, குளிர், வெப்பம் அனைத்திலும் தங்களின் எல்லைகளைத் தாண்டினர். தோல்விகளும், தொழில்நுட்ப கோளாறுகளும், தவறிய வாய்ப்புகளும் இருந்தன. ஆனால், ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய பாடமாக மாறியது. ஒவ்வொரு சுற்றும் - வெற்றி அல்லது தோல்வி - அணியின் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் அடித்தளமாக அமைந்தது. அஜித் அணி Ajith kumar Racing: போர்ஷே 911 GT3 RS கார், தமிழ்நாடு SDAT லோகோ; ரேஸுக்கு கார் ரெடி, அசத்தும் அஜித் “இந்த ஆண்டில் நடந்த அனைத்தையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் வேண்டும்; ஆனால் முக்கியமானது, ஒவ்வொரு சுற்றிலும் நாங்கள் வலுவாகி வந்தோம். இது தொடக்கம் மட்டுமே.” — அஜித் குமார் மற்றும் Ajith Kumar Racing அணி இந்த சீசன், போட்டிகளைத் தவிர மனித உறவுகளையும் கட்டியெழுப்பியது. பல சர்வதேச அணிகளும், அமைப்புகளும், ஒரே ஆர்வம் கொண்ட நபர்களும் AKR அணியுடன் இணைந்தனர். மைல்கற்களும் நன்றியும் பல சர்வதேச தொடர்ச்சியான ரேஸிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி, சர்வதேச போடியம் வெற்றி, மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம். இந்தப் பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவிக்கிறது: Series Organisers: Creventic, Prospeed, SRO சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக. Partner Teams: Redant Racing, AV Racing – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக. Team Members: புதியவர்களும் பழையவர்களும் — உழைப்புக்காக. Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு பதிவிலும் அன்பு, ஊக்கம், நம்பிக்கை வழங்கியதற்காக. Support Staff: பின்னணியில் உழைத்து ஒவ்வொரு ரேஸையும் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப பணியாளர்கள். Ajith Kumar Racing புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்! அடுத்த கட்ட நோக்கம் முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் ரேஸிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது. 'Porsche Cup' மற்றும் 'GT4' போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல், மற்றும் சர்வதேச ரேஸிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம். என்று கூறியிருக்கிறார் அஜித் குமார் மற்றும் 'Ajith Kumar Racing' அணி

விகடன் 14 Oct 2025 9:44 pm

கழிவறை சுத்தமில்லைன்னா ‘கிளிக்’பண்ணுங்க! –ரூ.1000 ஃபாஸ்டேக் இலவசம்!

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குவதுடன், கோடிக்கணக்கான மக்களின் தினசரி

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 9:37 pm

திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காரை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தையில் பூசம், பங்குனியில் உத்திரம், வைகாசியில் விசாகம், தவிர சூரசம்ஹாரம் ஆகியவை இந்த தலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் படி அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது சுமார் 11 ஆண்டுகள் அறங்காவலர் குழுக்களே அமைக்கப்படவில்லை. S M A Gandhimathinathan அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளரும் தவெக-வில் சில மாதங்கள் இயங்கியவருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வந்த தீர்ப்பையடுத்து அருள்முருகன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவிக்காலம் முடிந்தும் அவரே பதவியில் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் காந்திமதிநாதன். அந்த வழக்கில்தான் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை விசாரித்தது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி. இது குறித்து காந்திமதிநாதனிடம் பேசினோம். arul murugan with kanimozhi ''அறங்காலவர் குழு தலைவர் பதவிக்காலம் முடிஞ்சுடுச்சுன்னா புதிய குழுவை நியமிக்க வேண்டியதுதான் அறநிலையத்துறையின் கடமை. அதைச் செய்யாம தக்கார் பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் அருள் முருகனைத் தொடரச் செய்தாங்க. இது சட்டப்படி சரியானது இல்லைனுதான் வழக்கு போட்டேன். வழக்கு மாண்புமிகு தலைமை நீதிபதி முன் இன்னைக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தக்கார் பதவியில் நியமிக்கப்பட்டவரை உடனடியாப் பதவி நீக்கம் செய்துவிட்டு நான்கு மாதத்துக்குள் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை அப்படி நியமிக்கவில்லை என்றால் நீதிமன்றமே தலையிட்டு அறங்காவலர் குழுவை நியமிக்கும்னு அறிவிச்சிருக்காங்க நீதியரசர்'' என்றார் அவர்.

விகடன் 14 Oct 2025 9:34 pm

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதி இதுவா? பீகார் தேர்தல் களம் விறுவிறுப்பு...

பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 14 Oct 2025 9:11 pm

சர்வதேச பார்சல் அழிப்பு: யு.பி.எஸ்-ஸை விட்டு ஃபெடெக்ஸ்-க்கு ஓடும் வணிகர்கள்!

உலகெங்கிலும் உள்ள யு.பி.எஸ் (United Parcel Service) வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், நிறுவனத்தின் பன்னாட்டு சரக்குக் கண்காணிப்புப் பக்கத்தில்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 8:50 pm

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு

ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தங்களின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அவ்வாறு எந்தவொரு முதலீடு செய்யவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என்றும், தி.மு.க அரசு மோசடி செய்வதாகவும் பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்திருக்கிறார். ஸ்டாலின் - ஃபாக்ஸ்கான் (Foxconn) பிரதிநிதி இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தி.மு.க அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு ஆகும். தி.மு.க அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கிவிட்டன. இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழக முதலமைச்சரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்துப் பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின்போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், தி.மு.க அரசின் புளுகு அரை நாளில் அம்பலமாகியிருக்கிறது. அன்புமணி ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டும்தான் என்று இல்லை. தொழில் முதலீடுகள் குறித்த தி.மு.க அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய் மூட்டைகள்தான். அதனால்தான் தி.மு.க ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதைச் செய்ய தி.மு.க அரசு மறுக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கூகுள் நிறுவன உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும், அதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டை திரும்பிக் கூட பார்க்காத கூகுள் நிறுவனம் ரூ. 1.20 லட்சம் கோடியில் செயற்கை அறிவுத்திறன் மையத்தை ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க-வின் லட்சணம் இது தான். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை தி.மு.க அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது. தி.மு.க அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பா.ம.க விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆனால், அன்புமணியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ``ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டித் தீர்க்கிறார். நேற்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத உண்மையான செய்தி என்று ட்வீட் செய்திருக்கிறார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு! த.வெ.க தப்பிக்குமா? தி.மு.க-வுக்கு நெருக்கடியா?

விகடன் 14 Oct 2025 8:42 pm

ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா – எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து , சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம மற்றும் துடெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் கைதுசெய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இருவரும் 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 9 பேரும் […]

அதிரடி 14 Oct 2025 8:30 pm

ஸ்லோவாக்கியாவில் நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பலர் காயம்

ஸ்லோவாக்கியாவின் கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர். இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு இயந்திரமும் சில பெட்டிகளும் தடம் புரண்டதாக ஸ்லோவாக்கியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, இரு ரயில்களிலும் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளார்கள். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 14 Oct 2025 8:30 pm

சர்ச்சைக்குரிய AI ஸ்டார்ட்அப் “Friend”: -ஒரு விமர்சன ஆய்வு!

“உங்களுக்கு ஒரு AI நண்பன் மட்டுமே தேவை” என்ற தத்துவத்துடன் ‘Friend’ (நண்பன்) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 8:21 pm

தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு சர்ச்சை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 7:50 pm

அஜித் குமார் ரேசிங் –மறக்க முடியாத முதல் சீசன்!

கோலிவுட்டின் எவர் ஸ்டார் அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு 2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன் வெறும் போட்டியல்ல, அது

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 7:37 pm

இஸ்ரேல் நாடாளுமன்றில் ட்ரம்பிற்கு நடந்த சம்பவம்

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகிற்கு அதிக ட்ரம்ப்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

அதிரடி 14 Oct 2025 7:30 pm

காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம்… The post காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 7:09 pm

ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இத தகவலை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அதன்படி 2025 ஆம் ஆண்டு வரை 73 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் […]

அதிரடி 14 Oct 2025 7:08 pm

ட்ரம்பை சமாதானத் தூதர் என புகழ்ந்த பாகிஸ்தான் அதிபர்... ரியாக்ஷன் கொடுத்த இத்தாலி பிரதமர்!

எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.

சமயம் 14 Oct 2025 7:00 pm

ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது- செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 7:00 pm

'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். புஸ்ஸி ஆனந்த் கரூர் சம்பவத்துக்குப் பிறகு கட்சி மொத்தமாக ஷட் டவுன் ஆகிவிட்டது. சென்னையை சேர்ந்த மா.செக்கள் ஒன்று கூடி காந்தி ஜெயந்திக்கு எங்கே மாலை போடலாம் என ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தனர். விஷயம் தலைமைக்கு தெரிந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட மா.செக்களை தொடர்புகொண்டு தலைமையின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக்கூடாது எனக் கறாராக கூறிவிட்டனர். சில மாவட்டங்களில் கரூர் சம்பவத்துக்காக இரங்கல் போஸ்டர் அடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருந்தனர். அதையும் தலைமையிலிருந்து கூப்பிட்டு தடுத்து நிறுத்தினர். இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம் நீதிமன்ற தரப்பிலிருந்து பாசிட்டிவான முடிவு வரும் வரை காத்திருங்கள். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை கூறுவோம் என்றே மா.செக்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. இடையில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் சிலர் தவெக கொடியோடு கலந்துகொண்ட நிகழ்வும் நடந்திருந்தது. அதற்கும் தவெக பொறுப்பேற்கவில்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட செயல்பாட்டை நாங்கள் தொடங்கவே இல்லை. அதற்குள் அதிமுக - தவெக கூட்டணி என பேசப்படுவதில் அர்த்தமே இல்லை என்று பனையூர் வட்டாரத்தினர் மறுத்தனர். விஜய் TVK Vijay விஜய் மற்றும் தலைமறைவாக இருந்த ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேருமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காகத்தான் காத்திருந்தனர். விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் திட்டம் இருந்தது. அதற்காக முதலில் 13 ஆம் தேதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார்கள். அந்த தேதி மாற்றப்பட்டதற்கும் நீதிமன்ற தீர்ப்பு அந்த நாளில் வரக்கூடும் என தகவல் கிடைக்கப்பெற்றதே காரணம் என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள். தவெக தரப்பில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தீர்ப்பு நேற்று வெளியானது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு பிறகுதான் தவெக தரப்பு கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கிறது. விஜய்யும் 'நீதி வெல்லும்!' என தொண்டர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார் CTR Nirrmal Kumar - TVK இதன்பிறகுதான் தலைமறைவாக இருந்த ஆனந்தும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் நீலாங்கரை வீட்டில் விஜய்யை சந்தித்திருக்கின்றனர். திருச்சி, சேலம், புதுச்சேரி என மாறி மாறி தங்கியிருந்த ஆனந்த் நேற்றிரவு 9:15 மணிக்கு விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்திருக்கிறார். 10:30 மணிக்கு சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலம் விசாரிப்புகளை தாண்டியும் சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. 'நம் கூட்டத்துக்கு வந்து அத்தனை பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நம்முடைய கையால் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தால்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை முதலில் பாருங்கள்.' என விஜய் ஆனந்திடம் கூறியதாக விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர். TVK Vijay கரூர் குடும்பங்களை சந்திக்க செல்ல ஏற்பாடுகளை செய்ய ஒரு குழு அமைப்பதைப் பற்றியும் ஆனந்த்தும் விஜய்யும் பேசியிருக்கிறார்கள். 'கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ரொம்பவே உடைந்துவிட்டார். முதலில் அந்த குடும்பங்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே எண்ணமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் தாமதமானதால்தான் முதலில் வீடியோ காலில் பேசிவிடுவோம் என அந்த குடும்பங்களிடம் பேசினார். அதன்பிறகுதான் விஜய் கொஞ்சம் தேறினார். இப்படியே உடைந்து போய் இருந்துவிடக்கூடாது என்றுதான் தினசரி நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு கிளம்பி வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தால் மட்டுமே அவர் முழுமையாக நிம்மதியடைவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர். TVK Vijay | த.வெ.க - விஜய் 13 ஆம் தேதி கரூர் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 17 ஆம் தேதி கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறது விஜய் தரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரே இடத்தில் அழைத்து வைத்து சந்திக்க திட்டமிடுகிறது தவெக தரப்பு. ஆனால், அப்படி ஒரு இடம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் இடத்தை இன்னும் லாக் செய்யாமல் இருக்கின்றனர் என்கின்றனர் லோக்கல் தவெக நிர்வாகிகள்.

விகடன் 14 Oct 2025 6:55 pm

‘என்ன வேணும்னே புறக்கணிக்கிறாங்க’.. இதுக்கு மேல யாராலும் பார்ம நிரூபிக்க முடியாது: இந்திய பௌலர் அதிருப்தி!

தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுடன் பேசினார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 14 Oct 2025 6:49 pm

கல்வி உரிமை சட்ட இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு!

கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 6:32 pm

ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா? - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி... பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. ‘’பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’’ எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துதானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்? பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை நடிகை குஷ்பு கொஞ்ச நாட்கள் முன்பு இழிவுபடுத்தினார். பாமகவின் சவுமியா அன்புமணி, ‘’உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?’’ எனக் கேவலமாகப் பேசினார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார். வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று சொன்னார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து திமுகவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ’பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்... பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

விகடன் 14 Oct 2025 6:12 pm

Dude: இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம் - சாய் அபயங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `டூட்' படம் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் பேசிய சாய் அபயங்கர், ``'கட்சி சேரா', 'சித்தர புத்திரி', 'ஆசைக் கூட' என ஒரு மூணு பாட்டு நான் இன்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிருந்தேன். அதைப் பார்த்துதான் படங்கள்-ல வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நம்ம கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சுருக்கு, பாட்டை நல்ல டெலிவர் பண்ணிருவோம்னு நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வராங்க. அதை நானும் கரெக்ட்டா பண்ணிருக்கேனு நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சாய் அபயங்கர் அதற்கு பதிலளித்த அவர், நான் ட்விட்டர்லையும், இன்ஸ்டாலையும் பெருசா இல்ல. அப்படி அதுல இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம். நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன். எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது. மியூசிக் பண்ணத்தான் புடிக்கும். எனக்கு புடிச்ச மியூசிக்க பண்றேன். மக்களும் அதற்கு சப்போர்ட் பண்றாங்க என்று கூறியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 6:08 pm

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம்; புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மை அமைத்து மக்களும் இலங்கை நாட்டின் குடிகள் என இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. வழமையாக ஆட்சிக்கு […]

அதிரடி 14 Oct 2025 6:06 pm

ரோஹித், கோலி விளையாட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…சுப்மன் கில் பேச்சு!

டெல்லி : இந்தியாவின் புதிய ODI கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் வார இறுதியில் தொடங்கும் ODI தொடரில் தங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கோலிவுட் வெற்றிக்கு வழிநடத்தினார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூடில்ஹியில் அரைசதம் அடித்த கில், […]

டினேசுவடு 14 Oct 2025 6:05 pm

Festive spending turns smart as Indians celebrate with caution and financial discipline: Consumr.ai’s TwinSights Festive Report 2025

Gurugram: Festive purchase decisions are being seeded weeks before they appear in traditional search, sales, or survey data, and brands that rely on lagging indicators are acting too late, according to Consumr.ai’s latest insights report — TwinSights Festive Report 2025: Decoding India’s Festive Shopper Through AI Twins.The report marks a first-of-its-kind intelligence study built entirely on Consumr.ai’s proprietary martech tool, AI Twins, which creates digital mirrors of real consumers, based on observed behavior rather than stated claims. The TwinSights Festive Report 2025 offers an in-depth look at how India’s festive shoppers discover, decide, and celebrate — revealing invisible behavioral patterns that shape purchase intent long before the first click or conversion.The AI Twins simulations uncovered how aspiration collides with caution, how rituals evolve into routines, and how purchase triggers emerge in the everyday flow of life. Based on real-time behavioral simulations, the report offers a proactive playbook for brands to capture India’s most critical shopping season.Key Cross-Sector Insights for Festive 2025Powered by AI Twins, digital mirrors of real consumers built from observed behavior, the report identifies five defining trends across CPG, Durables, Beauty, Wellness, and BFSI sectors: Personalization Trumps Price: Meaningful, relevant gifts and curated experiences create higher memory value than deep, generic discounts. Utility is the New Premium: Shoppers are prioritizing functional upgrades and efficiency (e.g., “Cuts power bills by Rs.400/month”) over novelty. Stock Visibility Drives Trust: Transparent inventory signals and guaranteed delivery windows reduce buyer anxiety and cart abandonment. Mindful Spending is Mainstream: Consumers like the Strategic Gamer and Mindful Minimalist demand authenticity, ingredient transparency, and sustainable packaging. Excitement Must Be Earned: Generic hampers and repetitive offers are failing. Surprise mechanics, exclusivity, and gamification are key to restoring “festive magic.” Commenting on the report, Vivek Bhargava, Co-Founder, Consumr.ai, said, “AI Twins allow us to observe consumers in their walk of life, not through what they claim, but through what they actually do. Festive intent today is not triggered by a sale banner. It’s seeded much earlier in a reel, a ritual, or a conversation. Brands that can simulate and anticipate this behavior will own the season before it begins.” This simulation-first framework enables brands to identify early signals of festive behavior — uncovering what triggers discovery, when conversion peaks, and how regional, cultural, or emotional cues influence decision-making. “TwinSights moves beyond recall-based research to reveal how consumers truly behave in the flow of life. Built on our proprietary AI Twin methodology, the report draws from four intelligence layers: Behavioral, Intent, Conversational, and Market, to surface insights that are deterministic, not modeled,” Bhargava added.Sector-Specific Playbooks from AI Twin SimulationsCPG: From Boxes to Bonds Insight: Packaging is as decisive as the product. Custom messages and curated mixes (e.g., modular hampers) drive disproportionate recall. Recommendation: Scale customization at speed. Offer shoppers instant previews of mix-and-match assortments to reduce decision fatigue and drive shareability. Consumer Durables & Tech Gadgets: Utility is the New Luxury Insight: Shoppers like the Savvy Celebrator use spreadsheets and price alerts. Gadgets compete less on flash, and more on proof of utility and service (warranty, installation). Recommendation: Publish promo calendars to allow Twins to plan purchases. Lead with data-driven proof (e.g., energy savings) over slogans. Cosmetics & Beauty: From Excess to Everyday Insight: Authenticity and ingredient legibility drive trust more than elaborate packaging or influencer hype. Ritual-based kits resonate higher than generic hampers. Recommendation: Enable ritual builders. Curate functional sets (e.g., “night routine kit”) and partner with educators rather than relying solely on glam edits. BFSI: Finance as Festive Infrastructure Insight: Caution is part of the celebration. Finance has shifted from indulgence to responsibility, with pride resting in control (Pragmatic Planner). Speed (instant approval) often beats lower APR. Recommendation: Embed finance in celebration, not just checkout. Be discoverable at the moment of intent-seeding — in social feeds and e-commerce pages — not just during payment. In an age where consumer intent evolves by the hour, timing is everything. It’s no longer about volume of messaging but precision of foresight. Consumr.ai’s AI Twins turn reactive analysis into real-time intelligence by simulating consumer behavior across feeds, forums, and marketplaces.With this simulation-first approach, brands can design journeys, test creatives, and refine product-market fit long before their campaigns go live — because in the new consumer economy, advantage belongs to those who don’t wait for intent to appear, they simulate it.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 6:05 pm

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் புதிய முதலீடு செய்யவில்லையா? அரசை விமர்சிக்கும்ம் அன்புமணி ராமதாஸ்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சமயம் 14 Oct 2025 6:05 pm

கோழி இறைச்சியில் புளுக்கள்; வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புளுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். உண்பதற்கு ஒவ்வாத கோழி இறைச்சி அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது […]

அதிரடி 14 Oct 2025 6:02 pm

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் நாளை கையளிப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான […]

அதிரடி 14 Oct 2025 6:00 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சதிஷ், சிவா, ஹரிஹரனுக்கு ஜாமீன் - நீதிமன்றம் சொன்ன காரணம்!

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Oct 2025 5:59 pm

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்த கூட்டம் அரசு கட்டடமான ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அங்கேயே செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கே.வி தங்கபாலு இது குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏ அலுவலகம்‌ என்பது குறிப்பிட்ட அந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ - வைச் சந்தித்து தங்களின் குறைகளையும்‌ கோரிக்கைகளையும் முறையிடும் இடமாகும். அந்த நோக்கத்திற்காக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ - விற்கும் தொகுதி மக்களுக்குமான பொதுவான இந்த அரசு கட்டடத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம். கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும் என்றனர். கே.வி தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை என முடித்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே‌.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விகடன் 14 Oct 2025 5:56 pm

எல்லை பாதுகாப்பு படையில் 391 காலிப்பணியிடங்கள்; கான்ஸ்டபிள் பதவி, ரூ.69 வரை சம்பளம் - தகுதிகள் என்னென்ன?

எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Oct 2025 5:53 pm

நானும், என் மாஜி கணவரும் மீண்டும் சேர்ந்துட்டோமா?: பிரபல டிவி சீரியல் நடிகை விளக்கம்

டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று தெரிவித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 5:49 pm

Parle-G celebrates the spirit of Chhath with a touching story of family and care

Mumbai: Parle Products, a manufacturer of biscuits and confectionery, has launched a touching new campaign for Chhath Puja, capturing the brand’s enduring message that “G Maane Genius” — a genius found in simple, thoughtful gestures that bring joy to others.For decades, Parle-G has been more than just a biscuit; it has been an integral part of India’s family moments, everyday rituals, and festive celebrations. The new campaign beautifully reflects this legacy through a moving story that celebrates care, thoughtfulness, and togetherness.The film follows a young boy who learns that his pregnant aunt will be unable to perform the traditional Chhath rituals due to medical advice. Moved by her disappointment, the boy quietly decides to bring the festival to her. Gathering mud, flowers, sugarcane, and water, he recreates the ghat at home, allowing her to experience the rituals she loves. In doing so, he transforms a moment of sadness into one of joy, underlining Parle-G’s belief that the smallest gestures often have the biggest emotional impact.[caption id=attachment_2477117 align=alignleft width=200] Mayank Pravinchandra Shah [/caption]Speaking about the campaign, Mayank Shah, Vice President, Parle Products, said, “Parle-G has always been part of India’s festivals and family traditions, not just as a biscuit, but as a companion to the moments that truly matter. This Chhath Puja, our campaign celebrates empathy, thoughtfulness, and the small gestures that bring immense joy to loved ones. Every festival, Parle-G aims to inspire families to celebrate love, care, and togetherness, reflecting our vision that true genius lies in spreading happiness and creating meaningful moments that strengthen bonds. ‘G Maane Genius’ is about cherishing these simple yet powerful acts that make life and festivals truly memorable.” Through this new campaign, Parle-G once again reinforces its position as a brand that celebrates love, care, and shared happiness. By spotlighting the magic of simple human connections, Parle-G reminds audiences that the true spirit of every festival lies not in grandeur, but in the moments of warmth and togetherness we create with those who matter most.https://www.youtube.com/watch?v=R6tTFgvwZI0Campaign Credits:Client – Parle Products Private LimitedBrand – Parle-GVP Marketing – Mayank Pravinchandra ShahSenior Product Manager: Megha ThakareDeputy Brand Manager – Anshuman Bharat SharmaCreative Agency – Thought Blurb CommunicationsChief Creative Officer: Vinod KunjNational Creative Director: Renu Somani Karwa

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:47 pm

Without®’s ‘Made Without’ film rewrites the rules of green storytelling

Mumbai: Without, India’s first impact material science enterprise, has launched a hard-hitting new brand campaign titled “Made Without,” a cinematic and emotionally charged film that flips the script on how sustainability is portrayed. Following its breakthrough moment on Shark Tank India Season 3, the brand enters the content marketing arena with a film that’s raw, witty, and powerfully human — one that challenges greenwashed narratives and puts authenticity at the forefront.At the heart of the campaign lies a provocative question: “When things say they’re recycled, why do they only take the best stuff? What happens to the worst?” The answer, as the film declares, is simple: Without takes it all.From soiled underwear and chip packets to chocolate wrappers and textile scraps, Without’s 1,030 sq. meter demonstration plant in Pune processes waste often deemed “unrecyclable.” Using its patented homegrown technology, the company transforms these materials into high-quality lifestyle products such as sunglasses, coasters, keychains, and mini planters — proving that the worst waste can create the best outcomes.Set against the rugged backdrop of its industrial facility, the film captures how 16 informal waste workers have transitioned into trained plant operators, now earning twice their previous income, with access to health insurance, paid leave, and dignity at work. With clean design, sharp copy, and cinematic visuals, the film dismantles the sanitized version of sustainability often seen in mainstream advertising.[caption id=attachment_2477113 align=alignleft width=200] Anurag Ramgopal [/caption] Anurag Ramgopal, Creative Head and Co-Founder, Let’s Make Better Productions, said, “When Anish spoke to me about the film, what really stood out was his passion for honesty, authenticity and a hopeful vision for the world. We wanted to capture that energy. The idea was to use real-world motifs, like the VHS tape, to show that Without works in the real physical realm with real people. Everyone you see in the film is genuinely part of Without — no actors, no faking it. It had to feel like a music video meets documentary.” [caption id=attachment_2477131 align=alignright width=235] Anish Malpani [/caption] Anish Malpani, Founder and Director of Without and a 2026 Emerging Climate Fellow at Yale’s International Leadership Center, said, “This is not just about recycling waste, this is about rebuilding systems — fair, full and future-ready. We’re not just innovating in materials science, we’re proving that climate action can be inclusive, traceable and scalable. Waste-picking shouldn’t be a job that exists, and those doing it should be graduated out of it into better occupations. It’s time we radically reimagine what climate solutions can look like and who gets to be part of them.” [caption id=attachment_2477129 align=alignleft width=200] Rani Adsul [/caption] Rani Adsul, a former waste worker now part of the Without team, shared, “This campaign is special because I love what Without has done for me. I used to work on a garbage truck. There was no respect, no fair pay, and people didn’t see the value in what we did. At Without, people treat me with respect. I’m learning new things every day, and it amazes me to see how waste can turn into something so beautiful and useful. The biggest change is that I can now pay my children’s school fees regularly, without borrowing money. For the first time, I feel seen and proud of the work I do every day,” In a country where less than 1% of flexible plastics are recycled, Without directly confronts this “green gap” — where ethics often end with aesthetics — by creating tech and systems that are transparent, fair, and functional.This campaign isn’t a glossy sustainability ad — it’s a climate siren. It cuts through noise with raw honesty, spotlighting the people, systems, and science that make circularity real.https://youtube.com/shorts/leM194Nmong?si=GiA5sL8akq5lfARi

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:37 pm

கோப்பாய் பொலிஸாரை பொலிஸ் நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிசார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை. இந்த நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார். அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Oct 2025 5:36 pm

1000 ரூபாய் ஃபாஸ்டாக் இலவசம்.. உங்களுக்கும் வேணுமா? ஒரே ஒரு போட்டோ எடுத்து அனுப்புனா போதும்!

போட்டோ எடுத்து அனுப்பினாலே உங்களுக்கு 1000 ரூபாய் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 14 Oct 2025 5:32 pm

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்திற்கு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, அதன் உச்சியில் நிற்கின்றனர். கேத்தி கருப்பு நிற […]

அதிரடி 14 Oct 2025 5:30 pm

SGA PR expands North India leadership team with appointments of Divyata Kalhans and Nehha Gupta

Mumbai: Integrated communications firm SGA PR has announced key senior leadership appointments to bolster its North India operations. Divyata Kalhans joins as Senior Vice President & Head – North, while Nehha Gupta takes on the role of Vice President – Client Delight.The appointments reinforce SGA PR’s commitment to working closely with founders and CXOs through a strategic and business-led communications approach. The firm aims to further scale its presence in emerging sectors such as fintech, deeptech, traveltech, and travel & tourism by crafting bespoke narratives that drive brand reputation and business growth.With over 18 years of experience in strategic communications, Divyata Kalhans brings deep expertise in brand storytelling and reputation management. She spent a decade at Adfactors PR, leading mandates for prominent fintech, edtech, and technology brands. Her professional journey also includes stints at Edelman, Ogilvy PR, and Hindustan Times. At SGA PR, Divyata will head North India operations and spearhead the firm’s expansion, with a focus on strengthening its work with fintech and new economy brands.Nehha Gupta, also a seasoned communications professional with nearly 18 years of experience, joins from Value 360 Communications. She has led high-impact campaigns for consumer, travel, VC, and technology brands, with prior roles at Weber Shandwick, IKEA India, and Citi. At SGA PR, Nehha will focus on client strategy, delivery excellence, and strengthening stakeholder engagement across the North region.[caption id=attachment_2477103 align=alignleft width=200] Rahul Jain [/caption]Commenting on the appointments, Rahul Jain, Partner and Joint CEO at SGA PR, said, “SGA PR is growing significantly owing to its consultative thought process and bespoke, business-led approach. Today SGA PR partners with over 60 clients across fintech, BFSI, technology, chemicals, pharma, real estate, auto-ancillary PE/VC and new-age sectors. The firm has delivered industry-first narratives for its clients. Divyata and Nehha bring the right mix of experience and sector expertise to help clients navigate complex business challenges through problem-solving communication strategies. Their leadership will be key to scaling SGA PR’s operations in North India.” With an expanding client base and the addition of senior talent, SGA PR continues to evolve as a next-generation communications consultancy — combining strategic insight, sector expertise, and creativity to deliver measurable business impact across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:24 pm

PR 24×7 ushers in ‘2.0 Era’ with Golden Pillars recognition and pan-India growth plan

Indore: PR 24x7, a public relations agency, has entered a new chapter by honoring its “Golden Pillars” — employees who have been integral to the agency’s journey for over a decade. The recognition marks the beginning of “PR 24x7 2.0,” a renewed phase focused on national expansion and strengthening digital and influencer marketing capabilities.At a special ceremony, PR 24x7 celebrated its long-serving team members — Ujjain Singh Chauhan, Vikas Rajora, Parineeta Nagarkar Khele, Sansriti Mishra, Neha Gour, Deepak Chadha, Meena Bisen, and Vineet Bhatt — acknowledging their enduring contributions and entrusting them with new strategic responsibilities as the company prepares for its next phase of growth.On this significant occasion, Founder Dr. Atul Malikram expressed heartfelt gratitude, saying, “These Golden Pillars are the very foundation of our company. Their unwavering dedication and expertise have firmly established PR 24x7 as India's most trusted regional PR agency.” He further added, “These Golden Pillars are more than just employees; they are family members who have supported us through every challenge over the past decade. Their commitment is propelling us towards PR 24x7 2.0, where we aim to expand across India by enhancing our digital and influencer marketing strategies. This honor symbolizes their steadfast loyalty, which will undoubtedly help us achieve new heights.” Over the years, PR 24x7 has built a strong legacy of purpose-driven communications. During the COVID-19 pandemic, the company’s initiatives stood out — from offering free PR support to startups to expertly managing communications for clients in the metal, mining, and consumer sectors, reinforcing its reputation for credibility and compassion.Headquartered in Indore, PR 24x7 has been a trusted communications partner for over 200 clients, with a footprint across 68 cities, 500+ regional media connections, and a 75-member team offering 24x7 media monitoring and strategic counsel. Known for its deep understanding of India’s tier-2 and tier-3 markets, the agency has consistently amplified voices from the Hindi heartland and emerging regions, bridging the gap between regional and national narratives.As PR 24x7 embarks on its next phase of growth, “PR 24x7 2.0” symbolizes not just expansion, but the evolution of a people-first organization — one built on loyalty, local insight, and lasting impact.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:23 pm

Amit Dhawan launches a self-help book exploring the power of perspective,The Flip Life

Mumbai: Entrepreneur, writer, and marketing leader Amit Dhawan has unveiled his debut book, The Flip Life, a self-help title that delves into how a shift in perspective can transform the way we see and live our lives.Published by Nuvoice and exclusively distributed by Penguin Random House, The Flip Life brings together Dhawan’s original reflections, one-liners, and insights on themes such as purpose, resilience, clarity, and self-awareness. Written for readers navigating an increasingly fast-paced world, the book encourages them to slow down, reflect, and rediscover meaning in everyday moments.Known for his thoughtful musings on LinkedIn and Instagram, Amit’s writing has long resonated with audiences seeking balance and authenticity. With The Flip Life, those ideas evolve into a more structured and intimate format — a reflective companion designed to inspire perspective, not prescribe success.The book includes striking, thought-provoking lines that capture Dhawan’s philosophy: “The definition of a tough day changes with every tough day.” “Don’t try to solve everything in one day but do (try to) solve it one day.” “You know the answer in your gut. You always do.” “Sometimes we don’t push a rock out of our way thinking it might not move. But if we don’t push it, it will not move. “This book isn’t about motivation or milestones,” says Amit Dhawan. “It’s about the small flips that bring us back to ourselves. Sometimes perspective changes before life does, and that’s enough to begin again.” Structured across five sections — Perspective, The Inner Game, Work & Worth, People & Pain, and The Chaos of Clarity — The Flip Life blends brevity with depth, inviting readers to pause, reframe, and find clarity in their own journeys.Amit Dhawan, an IIM Ahmedabad alumnus, is an entrepreneur, writer, and marketing leader. Over the past decade, he has led award-winning agencies such as Schbang Delhi, Sociowash, and Art-E, guiding both global brands and high-growth startups — including unicorns — through critical inflection points. The Flip Life marks his debut as an author.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:17 pm

Hoopr unveils India’s largest festive music catalogue with 500+ curated tracks for brands & creators

Mumbai: In a major boost for India’s growing creator economy and festive marketing landscape, Hoopr, the country’s first music licensing platform, has announced the launch of its most expansive festive music collection to date. With over 500+ curated tracks, the collection now represents India’s largest instantly licensable festive music catalogue, available on Hoopr’s flagship licensing product, Hoopr Smash.Designed to help brands and content creators tap into India’s culturally rich festive calendar, the collection includes songs for Navratri, Karwa Chauth, Diwali, Bhaidooj, Chhath Puja, Shivratri, Janmashtami, and Eid, among others. The catalogue features music from both celebrated artists such as Shreya Ghoshal, Arijit Singh, Salim–Sulaiman, and emerging independent talent including Pawandeep Rajan, Rajeshwarie Raj, Sudhanshu Shome, and Nupoor Khedkar.Each track is tagged across moods, genres, and campaign types, making it easier for users to match the right soundtrack with their content. From devotional and traditional to festive pop and dance numbers, the catalogue supports more than 30 content categories spanning fashion, F&B, travel, beauty, wellness, health, and more.Enabling Campaigns That PerformThe announcement comes at a critical time for the Indian content ecosystem. As per Hoopr’s internal research, which analyzed over 25,000 short-form videos from 170+ brands, music significantly enhances performance metrics: Content using music gets 4.3x more visibility Influencer-led campaigns with music show 5.3x more engagement Content that combines festive music + influencers can deliver a staggering 17x boost in engagement Between September and February, India sees its most active content window, driven by festivals such as Navratri, Durga Puja, Diwali, Christmas, New Year, Sankranti, Republic Day, and Valentine’s Day. This catalogue is designed to help brands and creators seamlessly access relevant music for timely, impactful storytelling during this high-engagement period.Addressing Industry Gaps[caption id=attachment_2477095 align=alignleft width=200] Gaurav Dagaonkar[/caption] Gaurav Dagaonkar, Co-Founder of Hoopr, commented on the launch, saying, “While India’s creator economy continues to evolve at a fast pace, creators and brands find it very challenging to identify and use the right festive music due to copyright concerns, insufficient regional choices, and excessive licensing fees. This curated catalogue addresses these challenges by allowing creators to create compelling content and brands to develop culturally relevant campaigns in a seamless manner. By providing easy access to the right music, we hope to strengthen the creator ecosystem in India, while enabling brands to connect with their audiences more effectively.” [caption id=attachment_2477094 align=alignright width=167] Meghna Mittal [/caption] Meghna Mittal, Co-Founder of Hoopr, added, “Festive music is likely to become a crucial growth driver for licensing in India. Hoopr’s platform technology, data-driven recommendations and comprehensive catalogue allow users to instantly access culturally relevant, copyright-safe tracks. This means that creators and brands can continue to build high-quality content at scale, stay ahead of trends, and significantly engage audiences during reflective periods such as key festivals.” Powering India’s Content-Led Festive EconomyWith the festive season becoming a content battleground, brands, influencers, and agencies are looking for safe, scalable, and relevant music options that don’t compromise on cultural nuance or legal safety. Hoopr’s new festive catalogue is set to address this gap — offering a comprehensive, easy-to-license alternative that unlocks creativity while mitigating copyright risk.As India’s creator and digital advertising ecosystem matures, platforms like Hoopr are becoming key enablers for campaign success — combining technology, legal assurance, and cultural insight into one seamless music licensing solution.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:12 pm

இந்தியாவின் நலன் பாதுகாப்பான கைகளில் உள்ளது... உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தேசிய பாதுகாப்பு படையினரி ன் கைகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் .

சமயம் 14 Oct 2025 5:03 pm

வருமான வரி ரீஃபண்ட் சரிவு.. வரி வசூல் உயர்வு.. காரணம் என்ன?

இந்த ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும் ரீஃபண்ட் தொகை குறைந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 5:01 pm

மரங்களுக்கும் வரியை விதித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய மரம் மற்றும் தளபாடங்கள் மீதான புதிய வரிகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன, இது அமெரிக்காவில் வீடு கட்டுவதை இன்னும் அதிக விலை கொண்டதாக மாற்றும். அமெரிக்க தொழில்களை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் இந்த வரிகள் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவிற்கு மென்மரக் கட்டைகளை இறக்குமதி செய்வதற்கு 10% வரி விதிக்கப்படும், மேலும் சில மெத்தை மரச்சாமான்கள் மற்றும் சமையலறை அலமாரிகள் 25% வரி விதிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சில கட்டணங்கள் உயரும், அப்போது அப்ஹோல்ஸ்டர்டு மரச்சாமான்கள் இறக்குமதி மீதான வரி 30% ஆகவும், சமையலறை அலமாரிகள் மற்றும் வேனிட்டிகளுக்கான வரி 50% ஆகவும் உயரும். இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட சில வர்த்தக பங்காளிகள், இரண்டாவது உயர்வால் மோசமாக பாதிக்கப்பட மாட்டார்கள். இதனால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரப் பொருட்கள் 10% க்கும் அதிகமான வரிகளை எதிர்கொள்ளாது, மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரப் பொருட்களுக்கு 15% உச்சவரம்பு உள்ளது.

பதிவு 14 Oct 2025 4:46 pm

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் தாமதம் ஏன்? தலைவர் நியமனம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது சட்டப்படி தவறு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 4:43 pm

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

எலோன் மஸ்க்கின் மம்மோத் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் திங்களன்று டெக்சாஸ் ஏவுதல் தளத்திலிருந்து தனது 11 வது சோதனை முடித்தது. ஸ்பேஸ்எக்ஸ் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக பணிகளுக்கான கூடுதல் அம்சங்களைக் கொண்ட மாபெரும் ராக்கெட்டின் புதிய பதிப்பை சோதிக்கத் தொடங்குவதற்கு முன்பு இது கடைசி சோதனையாகும். உள்ளூர் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (2325 யுடிசி) ஸ்பேஸ்எக்ஸின் தெற்கு டெக்சாஸ் வெளியீட்டு வசதிகளிலிருந்து ஸ்டார்ஷிப் திங்களன்று தொடங்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஸ்டார்ஷிப் மேல் நிலை அதன் சூப்பர் ஹெவி பூஸ்டரின் மேல் அடுக்கி வைக்கப்பட்டது. ஸ்டார்ஷிப் கட்டத்தை விண்வெளியின் விளிம்பிற்கு அனுப்பிய பிறகு, புறப்பட்ட 7 நிமிடங்களுக்குப் பிறகு மெக்ஸிகோ வளைகுடாவில் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுக்காக சூப்பர் ஹெவி திரும்பினார். அதன் விமானத்திற்குப் பின்னர், மேல் நிலை இந்திய பெருங்கடலில் திட்டமிட்டபடி தெறித்தது. நாசா NASAநிர்வாகி சீன் டஃபி X இல், இந்த பணி சந்திரனின் தென் துருவத்தில் அமெரிக்கர்களை தரையிறக்குவதற்கான மற்றொரு முக்கிய படி என்று கூறினார்.

பதிவு 14 Oct 2025 4:42 pm

ஏடிஜிபி தற்கொலை விவகாரம்: டிஜிபி விடுமுறையில் அனுப்பி வைப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சமயம் 14 Oct 2025 4:36 pm

Dude: ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `டூட்' படம் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் சாய் அபயங்கரின் பெற்றோரும், பிரபல பாடகர்களுமான திப்பு - ஹரிணி இருவரும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது சாய் அபயங்கர் குறித்து மேடையில் பேசிய திப்பு, “சாய் அபயங்கருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவான் என்று எங்களுக்குத் தெரியாது. அன்றைக்குத்தான் ‘Think Music’ஓட ‘கட்சி சேரா’ பாடல் வெளியானது. இன்றைக்கு அவன் இப்படி ஒரு இடத்திற்கு வருவதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும் தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி” என்று கூறியிருக்கிறார். சாய் அபயங்கரின் பெற்றோர் தொடர்ந்து பேசிய ஹரிணி, “என் பையனுக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்குக் கிடைத்த மாதிரி இருக்கிறது. அவனுடைய கடின உழைப்பிற்காகவே மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவார். எங்களுக்கே அது வியப்பாகத்தான் இருக்கும். சாய்க்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 4:33 pm

வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி! அரியாலையைச் சேர்ந்தவர் கைது!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பதிவு 14 Oct 2025 4:31 pm

திருமணமான ஒன்றரை ஆண்டில் காதல் மனைவி மரணம்! அம்பலமான உண்மை..கேரளாவில் அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான இளைஞர், காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவரும் தீக்ஷித் என்பவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.malappuram man kill wife இந்த நிலையில் வைஷ்ணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக் கூறி தீக்ஷித் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மயங்கிய நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட வைஷ்ணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் […]

அதிரடி 14 Oct 2025 4:30 pm

பீகார் தேர்தல் 2025 : பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பீகார் : மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 243 தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியில், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் மீண்டும் CM பதவியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், […]

டினேசுவடு 14 Oct 2025 4:30 pm

பீகார் தேர்தல் 2025 : பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பீகார் : மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 243 தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியில், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் மீண்டும் CM பதவியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், […]

டினேசுவடு 14 Oct 2025 4:30 pm

இந்தியாவின் மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம்… ரூ.1.3 லட்சம் கோடியில் ஆந்திராவிற்கு அடிச்ச ஜாக்பாட்!

ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள கருத்துகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.

சமயம் 14 Oct 2025 4:15 pm

விஜயின் கரூர் பயண ஏற்பாடு..ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு? - வெளியான தகவல்!

கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 16 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியேவந்தார்

சமயம் 14 Oct 2025 4:11 pm

Kult names Rishi Patnaik as Chief Business Officer

New Delhi: In a strategic move to strengthen its leadership team, Kult has announced the appointment of Rishi Patnaik as its Chief Business Officer (CBO). In this role, Rishi will spearhead Kult’s business growth, brand strategy, and market expansion as the company continues to scale its presence in India’s fast-growing beauty and personal care sector.With over two decades of experience spanning online and offline retail, Rishi Patnaik has been a key figure in shaping India’s retail evolution. His career combines grassroots operational expertise with strategic foresight, having played a pivotal role in introducing and expanding modern retail formats across the country.Before joining Kult, Rishi held leadership positions at Nykaa Fashion, Jabong, Noon, and Landmark (Lifestyle). In his previous role as Senior Vice President at Nykaa Fashion, he was instrumental in building the platform’s e-commerce strategy and brand portfolio. Notably, he facilitated the launch of the Revolve store (the Gen US Fashion & Beauty retailer) in India through a B2B2C model with international fulfilment, and led the introduction of Footlocker.in and Footlocker Exclusive online. He also drove the acquisition and onboarding of fast-fashion brand Cider for India, further diversifying the platform’s offerings.Speaking about his appointment, Rishi Patnaik said, “KULT is not merely a brand, it's a fresh 'Cult' within the beauty and personal care space. It's where innovation and technology meet and intersect with an in-depth knowledge of what consumers truly desire today. I think the Indian beauty e-commerce market is poised for change, and KULT's AI-driven app is driving that change, making beauty discovery intelligent, personalized, and intuitive like never before. Through smart curation, recommendation based on data, and an easy-to-use interface, KULT is revolutionizing the way humans interact with beauty. This dedication, coupled with the team's enthusiasm and accuracy, will assist KULT in forging a niche of its own. I feel very privileged to be a part of this amazing journey guided by our inspirational CEO, Karishma.” Welcoming him to the leadership team, Karishma Singh, CEO, Kult E-commerce, said, “I’m thrilled to welcome Rishi to Kult. He can zoom out on vision and zoom in on the details that ship. With a record of building consumer-loved businesses and the operational rigor to scale them, he will turn a great product into a category-defining company.” Before his tenure at Nykaa, Rishi played pivotal roles at Noon and Jabong, driving large-scale business transformations and building category leadership in competitive markets. At Noon, he led the team that grew the contribution of softlines by 25% and doubled its BPC & Fragrance business within 18 months. He also built strong partnerships with global brands such as Adidas, PVH, Mango, Bestseller, Coty, L'Oral, Clinique, and Puma, while forging alliances with Flipkart, Myntra, and Trendyol for Noon’s private labels.At Jabong, Rishi was instrumental in helping the platform achieve market leadership in the fashion category within 18 months of launch. He introduced several global brands — including Topshop, River Island, Under Armour, New Balance, and The North Face — to India’s online retail landscape and launched the NBA Store on Jabong.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 4:10 pm

தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிரடி 14 Oct 2025 4:08 pm

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண் அறிவிப்பு!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 14 Oct 2025 4:08 pm

சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.

அதிரடி 14 Oct 2025 4:07 pm

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் […]

அதிரடி 14 Oct 2025 4:01 pm

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்...தவாக வேல்முருகன் போர்க்கொடி!

தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார் .

சமயம் 14 Oct 2025 3:59 pm

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை அளிப்பதா? அண்ணாமலை கேள்வி

திருப்பத்தூரில் ஊராட்சி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

சமயம் 14 Oct 2025 3:56 pm

சஷீந்திர ராஜபக்ஸ –முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க… The post சஷீந்திர ராஜபக்ஸ – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:53 pm

ஜெயலலிதா இருக்கும்போது பேசியிருக்க முடியுமா? –அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்!

சென்னை: தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று அவர் கூறியது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இது, அதிமுகவின் பெண்கள் மீதான வக்கிரமும் வன்மமும் வெளிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள கீதா ஜீவன் ” அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் […]

டினேசுவடு 14 Oct 2025 3:50 pm

Aviva Life Insurance India names Rajat Srivastava as Chief Distribution Officer – Proprietary Channels

New Delhi: Aviva Life Insurance India has announced the appointment of Mr. Rajat Srivastava as its Chief Distribution Officer – Proprietary Channels. In his new role, Rajat will be responsible for driving business growth by strengthening Aviva’s proprietary distribution network, with a strategic focus on expanding both the agency and direct channels.Rajat brings with him over two decades of experience in the insurance sector, having held key leadership roles at Kotak Life Insurance and ICICI Prudential Life Insurance. With a strong record in building high-performing distribution frameworks and customer-centric solutions, he is set to play a pivotal role in Aviva’s next phase of growth.Sharing his thoughts on the appointment, Rajat Srivastava said, “I am happy to join Aviva Life Insurance India at a critical juncture, where there is immense opportunity to strengthen our proprietary channels, both agency and direct, and fuel the company’s next phase of growth. By empowering our advisors, building digital-first direct journeys, and keeping customer needs at the core of everything we do, I am confident we can create meaningful impact and take Aviva closer to every household.” Welcoming him to the leadership team, Asit Rath, MD & CEO, Aviva Life Insurance India, said, “We are delighted to welcome Rajat to the Aviva family. His extensive experience across leading insurers and his strong distribution expertise will be invaluable as we scale up our proprietary channels. With sharper focus on both agency and direct, I am confident his leadership will accelerate Aviva’s growth journey in India and help us serve our customers better.”

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 3:46 pm

உச்சத்தில் தனுஷ் –‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்!

தனுஷ் நடிப்பில் அடுத்து இந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' (நவம்பர் 28) வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. தவிர, 'கர்ணன்' கூட்டணி மீண்டும் இணையும் D56 படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. The post உச்சத்தில் தனுஷ் – ‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Oct 2025 3:46 pm

'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த தடுப்பாட்டக்காரரான அபினேஷ் மோகன்தாஸ், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்திய அணிக்காக தேர்வாகியிருக்கிறார். அபினேஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத்தொடங்கினோம். “நான் 2020ல வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். சிறு வயதிலேயே எங்க அப்பா இறந்ததுனால எங்க அம்மா தான் என்ன படிக்க வைக்கிறாங்க. என் கூட பிறந்தவங்க ரெண்டு தங்கச்சி. நான்தான் எங்க வீட்டுல மூத்த பிள்ளை. எங்க ஊர் வடுவூர் ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்க மூலமா தான் எனக்கு கபடி மேல ஆசை வந்தது. எங்க அம்மாவால 3 பேரையும் படிக்க வைக்க முடியல. ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்கும்போது AMC டீம் தான் தேனியில் இருக்கிற SDAT விளையாட்டு விடுதியில் என்னை சேர்த்து விட்டாங்க. 2025 வரை அங்கதான் படிச்சு பயிற்சி பெற்றேன். அங்க எனக்கு ராஜேஷ், நாகராஜ் ங்கிற ரெண்டு கோச்சும் 5 வருஷமா எனக்கு பயிற்சி குடுத்து நான் இந்த நிலைமைக்கு வர்றதுக்கு முக்கிய காரணமா இருந்தாங்க. இப்ப நான் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதலாமாண்டு படிச்சிட்டு இருக்கேன். அங்க இருக்கிற பயிற்சி ஆசிரியர் திரு‌. புவியரசு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தாங்க. ஆசிய விளையாட்டு போட்டியில் முதன் முதலா இந்த வருஷம் கபடி விளையாட்டை சேர்த்தாங்க. அதுல கலந்து கொண்டு சேலத்தில் நடந்த கபடி விளையாட்டில் நான் செலக்ட் ஆனேன். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. அபினேஷ் மோகன்தாஸ் அதற்காக தமிழ்நாடு சார்பாக ஹரியத்துவார்ல ஜூன் 28 முதல் ஜூலை1 வரை நடந்த கபடி விளையாட்டில் விளையாடினேன். அங்க நல்லா விளையாடினேன். இந்திய அணியில் கபடி பயிற்சி முகாம் ல விளையாட 32 பேர் தேர்வானாங்க. ‘அந்த 32 பேர்ல நானும் ஒரு ஆள் தேர்வாகி இருக்கேன்னு சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு’ . 15 வருஷத்துக்கு பிறகு இந்தியாவுக்காக தமிழ்நாடு பிளேயரா நான் விளையாட போறேன். வரும் அக்டோபர் 19 முதல் 23 வரை பக்ரைனில் நடைபெற உள்ள 3வது யூத் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட போறேன். என்னை இந்த அளவுக்கு விளையாட வைத்த தமிழ்நாடு அமெச்சர் கபடி சங்கத்தின் தலைவர் சோலை எம். ராஜா மற்றும் பொதுச் செயலாளர் ஏ‌‌. சஃபில்லா இவங்க ரெண்டு பேரோட முயற்சி தான் என இந்த அளவுக்கு கொண்டு வர காரணமா இருந்தது. இந்த நேரத்துல இவங்க ரெண்டு பேருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நான் இப்போ என்னதான் இந்திய அணிக்காக விளையாட போனாலும் என்ன இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்த வடுவூர் துரை. ஆசைத்தம்பி நினைவு AMC கபடி கழகத்துக்கு தான் இந்தப் புகழ் கிடைக்கணும். எனக்கு யாருமே உறுதுணையாக இருந்ததில்லை. அபினேஷ் மோகன்தாஸ் வீட்டில் மூத்த பிள்ளை இப்படி விளையாட போறான்னெல்லாம் என்னை பேசுனாங்க. அப்போ எனக்கு ரொம்ப உறுதுணையா வந்த ஒரே ஒரு ஆள் திருவாரூர் மாவட்டம் கபடி கழக செயலாளர் திரு இராஜ. ராஜேந்திரன் தான். இவருக்குத்தான் எனக்கு கிடைத்த புகழ் எல்லாம் கிடைக்கணும். அவர் மட்டும் இல்லன்னா நான் இந்த இடத்துக்கு வர முடிஞ்சிருக்காது. அதனால ராஜேந்திரன் அய்யாவுக்கு இதன் வழியா என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். கிரிக்கெட், ஹாக்கி மட்டும் நம்ம முக்கியமான விளையாட்டு இல்ல‌. கபடி நம்ம தமிழரோட முக்கியமான விளையாட்டுல ஒன்னு. திறமை இருக்கிறவங்க பயந்து இருக்காம துணிந்து வாங்க. நானும் மத்த பசங்க மாதிரி ஆரம்பத்துல கபடியை ஒரு விளையாட்டாத்தான் பார்த்தேன். அப்போ எனக்கு தெரியல நான் இந்திய அணிக்காக விளையாட போறேன்னு. இன்று நான் வந்த மாதிரி நாளைக்கு நீங்களும் வரலாம். என்னை இந்த அளவு உயர வைத்த AMC கபடி கழகத்துக்கும் என் குடும்பத்துக்கும் தமிழ்நாடு அமைச்சர் விளையாட்டு ஆணையத்துக்கும் நன்றியை கூறுகிறேன். நான் ஒரு போதும் தமிழ்நாட்டு தலை குனிய விடமாட்டேன். என மனம் நெகிழ்கிறார். 

விகடன் 14 Oct 2025 3:40 pm

கோத்தாபய ராஜபக்ஸவின் வீடு பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு சொந்தமானதென தொிவிக்கப்படும் கதிர்காமம்- மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால்… The post கோத்தாபய ராஜபக்ஸவின் வீடு பறிமுதல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:39 pm

இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப் படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும்… The post இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:31 pm

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 42 போ் உயிரிழந்தனா். தலைநகா் ப்ரெடோரியாவுக்கு 400 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில், குறுகலான வளைவைக் கடந்தபோது அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியதாக (படம்) அதிகாரிகள் கூறினா். அந்தப் பேருந்தில் ஜிம்பாப்வே மற்றுமா மாலாவி நாட்டைச் சோ்ந்தவா்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக லிம்போபோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.

அதிரடி 14 Oct 2025 3:30 pm

வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் –மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.சண்டிலிப்பாய் வடக்கு… The post வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:27 pm

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு ! வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், […]

டினேசுவடு 14 Oct 2025 3:25 pm

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள்

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம்… The post யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:23 pm