SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்!

இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள்… The post இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 5:57 pm

யார் இந்த நிதின் நபின்? பீகார் எம்எல்ஏ டூ பாஜக தேசிய தலைவர்... முழு தகவல் இதோ

ஜேபி நட்டா பதவி காலம் முடிவை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்று காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:55 pm

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்.. ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நிறைவு!

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 5:35 pm

தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் காவா என்று சொல்லக்கூடிய கடல் புறாக்கள் குவிந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் கூட்டமாக […]

அதிரடி 14 Dec 2025 5:30 pm

நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும்! இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தது

திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிகிறது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:04 pm

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.. தாக்குதலுக்கான காரணம் என்ன?

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சமயம் 14 Dec 2025 4:59 pm

மன்னாரில் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் வழங்கிய சிறுமி

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் நினைவு சின்னம் வழங்கியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு சனிக்கிழமை (13) மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். குறித்த கலந்துரையாடலின் நிறைவில் சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.

அதிரடி 14 Dec 2025 4:52 pm

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு!

இலங்கையைப் புரட்டிப்போட்ட டித்வா புயலுக்குப் பிறகு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு உலகம் முழுவதும்… The post இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:48 pm

பாக்., ஈரானில் இருந்து 2 நாள்களில் 10,000 ஆப்கன் மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2 நாள்களில் மட்டும் 10,000 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில், அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து கடந்த வியாழன் (டிச.11) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

அதிரடி 14 Dec 2025 4:30 pm

சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதி இன்று (14.12.25) துப்பாக்கிச் சூட்டுக் களமாக… The post சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:29 pm

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை – வங்களாவடி பொது நினைவு… The post யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:16 pm

சென்னை MTC பஸ் கண்காட்சி: தி நகர் பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்...

சென்னை எம்டிசி பஸ் கண்காட்சி இன்று தி நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பழமையான பேருந்தை காண மக்கள் பலரும் தி நகரில் குவிந்து வருகின்றனா்

சமயம் 14 Dec 2025 4:10 pm

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடுவழியில் தீப்பிடித்த சிற்றூந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (14) பயணித்த சிற்றூந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 14 Dec 2025 4:07 pm

FJ-ஐ விளாசிய விஜய் சேதுபதி: இந்த கோபத்த பாரு மேல காட்டியிருக்கணும் எனும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்.ஜே. செய்த விஷயம் குறித்து பேசி அவரிடம் கோபப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதை பார்த்தவர்களோ, எங்க காட்ட வேண்டிய கோபத்தை எங்க காட்டுறீங்க என கேட்டிருக்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 4:00 pm

ஈரோட்டில் தவெக கூட்டத்துக்கு அனுமதி.. ஆனால் ஒரு கன்டிஷன்.. செக் வைத்த எஸ்.பி.!

ஈரோட்டில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கி உள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:49 pm

புயலுக்குப் பின் – நிலாந்தன்.

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது.… The post புயலுக்குப் பின் – நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 3:47 pm

’’நேரம் வந்தால் வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய்அறிவிப்பார்..’’ – தவெக அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:45 pm

IND vs PAK : ‘குட்டி ஹர்திக் பாண்டியா காட்டடி’.. வைபவ் சூர்யவன்ஷி சொதப்பல்: பாகிஸ்தான் சிறந்த பந்துவீச்சு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபாரமாக பந்துவீசியது. இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மட்டுமே அபாரமாக விளையாடினார்.

சமயம் 14 Dec 2025 3:35 pm

அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் இன்று இரவு சந்திப்பு! அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை?

இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார். தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

சமயம் 14 Dec 2025 3:34 pm

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 42 பேர் மீட்பு

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள 12 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் அதிகாலை 5:45 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தனர். உடனே கட்டடத்திலிருந்து 42 பேரை தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்தில் 18 தீயணைப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி அன்வாருல் […]

அதிரடி 14 Dec 2025 3:30 pm

சவுக்கு சங்கர் கைது… குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவின் அராஜகம்- மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு ஊழல் கறைபடிந்து காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:18 pm

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

பதிவு 14 Dec 2025 3:17 pm

அன்புமணி பணமோசடி செய்தாரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் பரபரப்பு புகார்!

அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:00 pm

ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்

பெங்களூர், பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார்( வயது 32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என திட்டமிட்டுள்ளார். கிளி இருந்த இடத்தின் அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது […]

அதிரடி 14 Dec 2025 2:30 pm

சென்னை வானில் விண்கல் மழை… இன்று இரவு ரெடியாருங்க- தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

தமிழக மக்கள் இன்று இரவு வானில் விண்கல் மழையை கண்டு ரசிக்கலாம் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார். இது முக்கியமான வானியல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமயம் 14 Dec 2025 2:07 pm

``வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் - அன்புமணி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் போன்ற ஒன்றை அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Liquor - மது இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. அண்மைக்காலமாகவே பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொலிகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வேகமாக பரவியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி 11-ம் வகுப்பு மாணவிகள் சிலர் மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்ததும், கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் குடித்து விட்டு போதையில் சாலையில் தகராறு செய்ததும் செய்திகளாகின. பாமக அன்புமணி அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், 9-ஆம் வகுப்பு மாணவிகளே வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியிருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை திமுக ஆட்சியாளர்கள் எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற அச்சமும், கவலையும் தான் ஏற்படுகின்றன. சில தலைமுறைகளுக்கு முந்தைய தமிழக இளைஞர்களுக்கு மது என்றால் என்ன? என்பதே தெரியாமல் இருந்தது. பின்னர் அந்த நிலை மாறி தமிழகத்தில் மது அருந்துபவர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆக குறைந்தது. இப்போது 10 அல்லது 11 வயது சிறுவர்கள் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் தான் 9-ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மது சார்ந்த அனைத்து சீரழிவுகளுக்கும் திமுக தான் காரணமாக இருந்திருக்கிறது. மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. டாஸ்மாக் கடை இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்து விடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும். மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும். இது தான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை திமுக அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 2:00 pm

️ மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்யும் முதற்கட்டப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)… The post ️ மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:57 pm

வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு:

“Never Give Up” (ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே) என்ற தாரக மந்திரத்தின் நாயகனும், ’90ஸ் கிட்ஸின்’ ஹீரோவுமான WWE ஜாம்பவான்… The post வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:49 pm

துப்பாக்கி வெடித்ததில் நொடிப்பொழுதில் மாறிய குடும்பஸ்தரின் வாழ்க்கை

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை பம்பஹின்ன , வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்தே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து சமனல வேவ […]

அதிரடி 14 Dec 2025 1:47 pm

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்ட வர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. […]

அதிரடி 14 Dec 2025 1:44 pm

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. […]

அதிரடி 14 Dec 2025 1:41 pm

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும்… The post அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:35 pm

அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் வான் வழி தாக்குதல் – 2 பேர் பலி!

அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் சரமாரி வான் வழி தாக்குதல்களைத் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 12) நள்ளிரவில் ரஷியாவிலிருந்து உக்ரைனில் மின்சார உற்பத்தி உள்பட ஆற்றல் துறைக்கான உள்கட்டமைப்புகளையும் துறைமுகங்களையும் குறிவைத்து ட்ரோன்களாலும் ஏவுகணைகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உக்ரைனில் சில பகுதிகள் மின்சார விநியோகம் தடைபட்டு அப்பகுதிகளைச் சேர்ந்தோர் இருளில் தவித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களை விவரித்துப் பேசிய உக்ரைன் அதிபர் […]

அதிரடி 14 Dec 2025 1:30 pm

   மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு!

சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அகில் விஸ்வநாதன் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள… The post மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:26 pm

⛈️ ‘டித்வா’புயல் துயரிலும் ஈழத்து சபரிமலையில்  பிரார்த்தனை !

நாட்டில் சமீபத்தில் ‘டித்வா’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள ஈழத்து சபரிமலை… The post ⛈️ ‘டித்வா’ புயல் துயரிலும் ஈழத்து சபரிமலையில் பிரார்த்தனை ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:08 pm

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் ராகுல் காந்திக்கும் அமித் ஷாவுக்கும் இடையே வாக்கு திருட்டு தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அமித் ஷா ராகுல் காந்தியின் உரையில், வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் உட்பட, சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு அமித் ஷாவிடம் சவால் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக சாடினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமடைந்த அமிஷ் ஷா, ``நாடாளுமன்றம் ராகுல் காந்தியின் விருப்பப்படி செயல்படாது. எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் ஆணையம் பாராட்டப்படுகிறது தோல்வியடைந்தால் விமர்சிக்கப்படுகிறது. என்றார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி 'வாக்கு திருட்டு'க்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்துக்கு தயாராகுல் ராம்லீலா மைதனாம் இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல், ``எங்கள் கட்சி ராம்லீலா மைதானத்தில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான போரை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்றார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ்,``ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தப் போராட்டத்துக்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஜார்க்கண்ட் முழுவதிலும் இருந்து கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரதிநிதிகள் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டெல்லிக்கு வந்துவிட்டனர். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்த அறிவிப்புக்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், ``தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் நடுநிலையான நடுவர் இல்லை. இது உண்மையில் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நாங்கள் முழுமையாக ஒரு பிரசாரம் மற்றும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம். ராகுல் காந்தி - மல்லிகர்ஜுன கார்கே ஐந்து கோடி கையெழுத்துகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாங்கள் சந்திப்பிற்கு நேரம் கேட்டுள்ளோம்... நாடாளுமன்றத்திலும் இந்த வாக்குத் திருட்டுப் பிரச்னை குறித்து விவாதித்தோம். எங்கள் தலைவர் நேரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விமர்சிப்பது மட்டுமல்லாமல், நாங்கள் தெளிவான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நிறைய புகார்கள் உள்ளன. என்றார். தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

விகடன் 14 Dec 2025 12:57 pm

சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஒரு வரலாற்றுத் துயரத்தின் குறியீடு. 1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப்… The post சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 12:57 pm

பிக் பாஸ் ஆரம்பிச்சு 70 நாளாகியும் இன்னும் உங்களுக்கு தான் புரியல மிஸ்டர் விஜய் சேதுபதி: பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ விஜய் சேதுபதிக்கு தான் இன்னும் எதுவுமே புரியாமல் இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 14 Dec 2025 12:47 pm

இந்தோனேசியா வெள்ளம்! 1000-ஐ கடந்த உயிர்ப் பலிகள்; 218 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சும்தரா தீவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள 3 மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில், அங்குள்ள கட்டுமானங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் அதிகமான மக்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 218 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக […]

அதிரடி 14 Dec 2025 12:30 pm

CUET PG 2026 விண்ணப்பம் தொடக்கம்; மார்ச் மாதம் தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க லிங்க் இதோ

முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான முதுகலை க்யூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Dec 2025 12:19 pm

6 மாசத்துல வரும்னு செல்வராகவன் சொன்னது விவாகரத்தை தானா?: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆர்யன் பட பேட்டியில் செல்வராகவன் பேசிய வீடியோவை பலரும் ஷேர் செய்து விவாகரத்து குறித்து தான் அக்டோபர் மாதமே பேசியிருக்கிறாரா இயக்குநர் செல்வராகவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 14 Dec 2025 11:54 am

தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு - பிரேமலதா கொடுத்த அப்டேட்

தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை. விஜய பிரபாகரன் மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம். ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம். கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம். பிரேமலதா விஜயகாந்த் எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம். எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான். காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம். என்றார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 11:49 am

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகார் இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி 14 வயது மாணவன் ஒருவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 4 மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். சிகரெட் புகைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த மாணவர்களின் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதில் கடும் மன உளைச்சளுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவன், தன் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகாரளித்தனர். இதன் பேரில், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள்மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதுடன், நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சீர்திருத்த பள்ளியில் நான்கு மாணவர்களும் அடைக்கப்பட்டனர்.

விகடன் 14 Dec 2025 11:42 am

மக்கள் சக்தியால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் - செங்கோட்டையன் பேச்சு!

தவெகவில் விருப்பமனு வாங்குவது எப்பொழுது?என்பது குறித்த தகவலை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 11:41 am

ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள […]

அதிரடி 14 Dec 2025 11:30 am

இன்ஸ்டாவில் இருந்து செல்வராகவன் போட்டோக்களை நீக்கிய மனைவி: கஸ்தூரி ராஜா வீட்டில் 3வது விவாகரத்தானு ரசிகர்கள் கவலை

கீதாஞ்சலி செல்வராகவன் தன் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருப்பது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா என்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 10:52 am

ஹெச்-1பி விசா விவகாரம்! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக 20 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகக் கட்டணம் விதித்துள்ளதை எதிர்த்து கலிபோர்னியா உள்பட 20 அமெரிக்க மாகாணங்களின் அரசுகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் பணிபுரிய புதியதாக விண்ணப்பிக்கப்படும் ஹெச்-1பி விசாக்களுக்கு ரூ.91 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக விதித்து கடந்த செப்.19 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிபர் […]

அதிரடி 14 Dec 2025 10:30 am

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார். அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

பதிவு 14 Dec 2025 10:28 am

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ரசிகர்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக மெஸ்ஸி நேற்று (13-ம் தேதி) ஹைதராபாத் வந்தடைந்தார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பல புகைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு கால்பந்து விளையாடினார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களையும் சந்தித்தார். View this post on Instagram இந்த நிகழ்வில் லியோனல் மெஸ்ஸி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு 'GOATED 10' என்ற எண் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் உரையாற்றினர் கொல்கத்தாவைப் போல இந்த மைதானத்திலும் மெஸ்ஸியை ரசிகர்களால் அருகில் பார்க்கமுடியாத சூழலே நிலவியது. அதனால், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து மெஸ்ஸியைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

விகடன் 14 Dec 2025 10:20 am

இலங்கையர்களுடன் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்திய ஈரான்

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பலை ஈரான் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கடத்தல்கள் குறித்த கப்பலில் இலங்கையர்களைத் தவிர இந்திய மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை, தப்பிச் செல்ல முயற்சித்தமை […]

அதிரடி 14 Dec 2025 10:18 am

`மூச்சுத் திணறல்' - நல்லகண்ணு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறியது. இதையடுத்து, அக்டோபர் 10, 2025 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தோழர் நல்லகண்ணு ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலமில்லாமல் போனது. அப்போதும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இந்த நிலையில், நல்லகண்ணுவிற்கு இப்போது மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அவர் விரைவில் உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

விகடன் 14 Dec 2025 10:08 am

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 14 Dec 2025 10:08 am

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இணையச் சேவைகள் ஸ்டார்லிங்க் (Starlink) என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு செயற்கைக்கோள் இணையச் சேவையாகும். இந்நிலையில், இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் […]

அதிரடி 14 Dec 2025 10:06 am

திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு.. பிரமாண்டம் காட்டும் திமுக!

திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சமயம் 14 Dec 2025 10:04 am

Vijay : திருச்செங்கோட்டில் போட்டியிடும் அருண் ராஜ்; முதல் வேட்பாளரை அறிவிக்கும் தவெக! - விவரம் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னமும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், தவெக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று முதல் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஈரோட்டின் திருச்செங்கோட்டில் இன்று ஒரு நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. TVK Arun Raj நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த கட்சியின் வேட்பாளர்களை வேக வேகமாக அறிவித்து வருகிறார். காங்கிரஸ் 234 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. இந்த வரிசையில் தவெகவும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பாக பனையூரில் தவெகவின் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழுவினரின் கூட்டம் நடந்திருந்தது. அதில், வியூக வகுப்பு குழுவினர் லேட்டஸ்ட்டாக எடுத்திருந்த ஒரு சர்வேயும் பவர்பாய்ண்டாக போட்டுக் காட்டப்பட்டிருந்தது. அதன்படி 160 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தவெக தலைமை நம்புகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று முதல் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் போட்டிப் போடப்போகும் தொகுதியை வரிசையாக அறிவிக்கவிருக்கின்றனர். TVK - Arun Raj விஜய்யுடனான நட்பால் ஐ.ஆர்.எஸ் பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்து கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பை வாங்கிய அருண் ராஜ் திருச்செங்கோட்டில் வேட்பாளராக நிற்கவிருக்கிறார். இதற்காக அவரின் குழு கடந்த சில வாரங்களாக தொகுதியில் இறங்கி பல்ஸ் பார்த்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோட்டில் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்தும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருண் ராஜை நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தி, அவரின் வெற்றிக்கு அத்தனை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேசவிருக்கின்றனர்.

விகடன் 14 Dec 2025 9:35 am

திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு-மேயர் சொன்ன குட்நியூஸ்!

திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேயர் சொன்னதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.

சமயம் 14 Dec 2025 9:31 am

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: மன்னிப்பு கேட்ட மம்தா –நடந்தது என்ன?

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக […]

அதிரடி 14 Dec 2025 9:30 am

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர். அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக் இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள். எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம். என்றார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்றார். Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378

விகடன் 14 Dec 2025 9:05 am

2026 தேர்தல் தவெக வேட்பாளர்கள் பட்டியல்… திருச்செங்கோட்டில் இன்று முதல்கட்ட அறிவிப்பு!

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

சமயம் 14 Dec 2025 9:03 am

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், பார்வைத்திறன் மேம்படும், உடலுக்கும் குளிர்ச்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் முன்பெல்லாம், வீட்டுப் பெரியவர்கள் விளக்கெண்ணெயை (Castor Oil), டிரை ஐஸ் எனப்படும் கண் வறட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது  கண் மருத்துவர்கள், கண்ணுக்குள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியே அறிவுறுத்துகிறோம். ஏனென்றால், விளக்கெண்ணெய் போடுவதால் கண்ணில் தொற்று (Infection), எரிச்சல் (Irritation) போன்ற பிரச்னைகள் வரலாம். இருப்பினும், சிலர் இன்னும் கண் வறட்சிக்கு  விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி, கண்களைப் பிரகாசமாக வைக்கும் என்றெல்லாம் அதற்கு காரணங்களும் சொல்வதைப் பார்க்கிறோம். கண்களுக்கு வெளியே தடவிக்கொண்டால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுக்குள் சொட்டு மருந்து போல, விளக்கெண்ணெய் விட்டுக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காலங்காலமாகப் பின்பற்றும் விஷயம்தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறோம். விளக்கெண்ணெய் கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடுவதைத் தவிர்க்கச் சொல்வதற்கு முக்கியமான  இரண்டு  காரணங்கள் உண்டு. விளக்கெண்ணெய் என்றாலும், அது கண்களில் தொற்று (Infection in the eyes) ஏற்படக் காரணமாகலாம். கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையில் ஒருவர் பயன்படுத்தும் விளக்கெண்ணெயின் தரம் எப்படிப்பட்டது என்பது மிக முக்கியம். அது சுத்திகரிக்கப்படாததாக இருக்கும்பட்சத்தில், இன்னும் ஆபத்தானது. எனவே, கண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

விகடன் 14 Dec 2025 9:00 am

வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை-மாநகராட்சி ஆணையர்!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 8:44 am

Midlife Crisis: நடுத்தர வயதில் வருகின்ற பயம்; கடப்பது எப்படி? - வழிகாட்டும் நிபுணர்!

நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்' என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம். இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது' எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது' எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான். இது தற்காலிகமானதும்கூட. குறிப்பாக, நடுத்தர வயதில் இந்த மனநிலை மாற்றங்கள் அதிகம் நிகழும். இதுதான் மிட்லைஃப் க்ரைசிஸ். இது குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம். காரணம் மற்றும் மிட்லைஃப் க்ரைசிஸ் தடுக்க... Midlife Crisis ''மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான். 30களின் இறுதியிலேயோ 40களின் தொடக்கத்திலேயோகூட ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடலாம் என்பதால், முப்பதை தாண்டிய உடனே மனநலனில் கவனமாக இருக்கத் தொடங்க வேண்டும். இங்கு, 30களைத் தாண்டிய பின்னர் நம் வாழ்க்கை அலுவலகம், வேலை, குடும்பம் என ஏதோவொன்றின் பின்னே பின்னப்பட்டுவிடுகிறது. அதற்கிடையில், நமக்காகவும் நாம் இயங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் பிரச்னை. அனைத்து வயதினருமே, தங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, மனநிறைவான வாழ்க்கையை முன்னெடுத்தால் மட்டுமே மிட்லைஃப் க்ரைசிஸை முழுமையாக வரும் முன் தடுக்கமுடியும். வந்த பிறகு என்ன செய்வது..? Midlife Crisis Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? `என்னால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மனநலப் பிரச்னைகள் அனைத்துமே, முறையான ஆலோசனை மூலம் சரிசெய்ய முடிபவைதான் என்பதால், பிரச்னை குறித்த பயம் அறவே வேண்டாம். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான் என்ற உத்வேகத்துடன் இருக்கப் பழகுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைச் செய்து வாருங்கள். திட்டமிடுங்கள்! Midlife Crisis Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! 40 வயதென்பது, ஒருவர் புரொஃபஷனலாகத் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துவிட்டு சற்றே பெருமூச்சுவிடத் தொடங்கும் தருணம் என்பதால், வேலையைச் சற்று சோர்வுடனோ அலட்சியத்துடனோ அணுகும் மனநிலை இருக்கும். அப்படியான நேரத்தில் மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னையும் ஏற்பட்டால், வருங்காலம் குறித்த பயம் ஏற்படத் தொடங்கும். இப்படியான சிக்கல்களையெல்லாம் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்தான். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான்! வாழ்வில் எதன் மீதெல்லாம் உங்களுக்கு பயம் இருக்கிறதோ, அவற்றில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைச் செய்து வாருங்கள். முன்பே சொன்னதுபோல, ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான். தினமும் போகின்ற போக்கில் வாழாமல், வாழ்க்கையை நேர்த்தியான திட்டமிடலோடு வாழ்ந்து வாருங்கள். முக்கியமாகப் பொருளாதார தேவைகள் குறித்து தகுந்த நபரோடு ஆலோசித்து சரியாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்கிறார் மனநல மருத்துவர் வசந்த்.

விகடன் 14 Dec 2025 8:31 am

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே காலக்கெடுவை நீட்டித்த நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது . விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 8:07 am

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ``மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் சிக்கிவிடக் கூடாது - பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவதற்கான தேர்தல் இது. மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 50 வார்டுகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி. கேரள மாநில சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. 2020 உள்ளாட்சி தேர்தலில் 53 சீட்டுகளை பெற்ற சி.பி.எம் கூட்டணி இப்போது 29 சீட்டுகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தேர்தல் முடிவு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம். கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்பார்த்தபடி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்படும், தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னேறிச் செல்லும். மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் மக்கள் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தத் தேர்தல் முடிவு உள்ளது. இது மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனத் தெரிவித்திருக்கிறார். நன்றி திருவனந்தபுரம்- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

விகடன் 14 Dec 2025 7:52 am

யாழ் சிறைசாலையின் நெகிழ்ச்சி செயல் ; அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதிகள்

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து […]

அதிரடி 14 Dec 2025 7:52 am

அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளி சிறிலங்கா

சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்பாக, அவர் விளக்கமளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் பாதையில், சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம், சுதந்திரமான மற்றும் திறந்த

புதினப்பலகை 14 Dec 2025 7:50 am

மன்னாரில் ஜனாதிபதி அநுர ; வடக்கு அதிகாரிகளுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் […]

அதிரடி 14 Dec 2025 7:49 am

அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை

வரும் 18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது. டிட்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டியுள்ளார். இது தொடர்பான அரசிதழ்

புதினப்பலகை 14 Dec 2025 7:47 am

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெள்ளத்தினால் சேதம் வெள்ளத்தினால் சேதமடைந்த கல்நேவ பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களை மீண்டும் பயிரிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத் […]

அதிரடி 14 Dec 2025 7:46 am

நடு வீதியில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

கண்டி, ஹரகம வீதியில் குருதெனிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (13) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஹாரகமவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் எதிர் திசையில் திரும்பியபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் […]

அதிரடி 14 Dec 2025 7:43 am

கடும் தண்டனைகளுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் வகையில், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு, “வேண்டுமென்றோ அல்லது

புதினப்பலகை 14 Dec 2025 7:43 am

மகேஸ்வரன் படுகொலை வழக்கு –மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, ஜோன்சன் கொலின் வலண்டினோ அல்லது வசந்தன் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வசந்தன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்

புதினப்பலகை 14 Dec 2025 7:39 am

உயர்மட்டத் தலைவரை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது சீனா

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளது. பேரிடருக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்திய போதும் சீனா பின்தங்கிய நிலையில் உள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹக்கர் கடந்த 11ஆம் திகதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீனாவின் மிக முக்கியமான மூத்த கம்யூனிஸ்ட் கட்சி

புதினப்பலகை 14 Dec 2025 7:36 am

‘கில், ஹர்ஷித் ராணாவ விடுங்க’.. சொதப்பம் மற்றொரு ஸ்டார் வீரர்: டி20 அணியில் திடீர் பின்னடைவு!

இந்திய டி20 அணியில், ஷுப்மன் கில், ஹர்ஷித் ராணாவைப் போல மற்றொரு வீரரும் சொதப்புகிறார். ஆனால், அவர் குறித்து யாரும் பேசாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சொதப்புவதும் அணிக்கு பெரிய பின்னடைவுதான்.

சமயம் 14 Dec 2025 7:35 am

சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவ கனடா உறுதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கனடா உறுதியளித்துள்ளது. நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவுடன் நடத்திய சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட மீட்புத் திட்டத்தை கனடா பாராட்டுகிறது என்றும், சிறிலங்கா அதன் முறையான சேதம்

புதினப்பலகை 14 Dec 2025 7:31 am

புயல் காரணமாக பிரேசிலில் மின்சாரம் துண்டிப்பு –மக்கள் பாதிப்பு

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:32 am

இந்தியா –தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும்

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:31 am

ஈரானில் நர்கெஸ் முகமதி கைது –நோபல் பரிசு கமிட்டி கண்டனம்

ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும்

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:29 am

எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை –முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:27 am

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி –இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:21 am

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருது –பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த விராட் கோலி

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள்

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:19 am

ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசளித்த மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த்

சென்னைஓன்லைனி 14 Dec 2025 6:18 am

சென்னையில் இருந்து ஒரே நாளில் 54 இண்டிகோ விமான சேவைகள் ரத்து!

சென்னையில் இருந்து ஒரே நாளில் 54 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிருப்திக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 6:04 am

மடூரோவுக்கு எதிராக டிரம்ப் புதிய பொருளாதாரத் தடைகள்

பதவியில் இருந்து வெளியேற வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், அவரது உறவினா்கள், ஆறு எண்ணெய்க் கப்பல்கள், தொடா்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளாா். வெனிசுலாவில் இருந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்கிப்பா்’”என்ற எண்ணய்க் கப்பலை அமெரிக்க படையினா் கைப்பற்றியதைத் தொடா்ந்து இந்த புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோா்ஸின் […]

அதிரடி 14 Dec 2025 6:03 am

72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து கென்ய காலநிலை ஆர்வலர் சாதனை

கென்ய காலநிலை ஆர்வலர் ட்ருபெனா முத்தோனி தொடர்ச்சியாக 72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் . முத்தோனியின் முன்னைய சாதனை 48 மணிநேரம் ஆகும். இந்த சவாலுக்காக, அவர் நியேரி நகரில் உள்ள அரசு வளாகத்தில் உள்ள ஒரு பூர்வீக மரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு கட்டத்தில், அவள் கிட்டத்தட்ட தூங்கிவிட்டாள். ஆனால் அவளுடைய ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டாள் அவர்களில் சிலர் கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ பார்வையாளர்களுக்கான கட்டணத்தை செலுத்த முன்வந்தனர். […]

அதிரடி 14 Dec 2025 3:30 am

விரக்தியின் உச்சத்தில் ட்ரம்ப் ; அர்த்தமற்று போகும் அமைதி ஒப்பந்தம்

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை அடைந்ததால், ”நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதேநேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் […]

அதிரடி 14 Dec 2025 1:30 am