SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிரடி ஊழியர் கைது

நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில், எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் புகார் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையிலுள்ள கௌடான பகுதியைச் சேர்ந்தவர், சுமார் 37 வயதுடையவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிருகக்காட்சிசாலைத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த நபர் என்று […]

அதிரடி 15 Dec 2025 8:29 am

IND vs SA 3rd T20: ‘எப்படி வென்றது இந்திய அணி’.. தென்னாப்பிரிக்கா செய்த மூன்று முக்கிய தவறுகள்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியிலும், ஷுப்மன் கில்லால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சமயம் 15 Dec 2025 8:00 am

டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 - 1 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. அதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் இன்று (டிசம்பர் 14) இரவு 7 மணியளவில் தர்மசாலாவில் மூன்றாவது போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைக் குவித்து வந்தாலும், அவரின் பேட்டிங் மற்றும் அணியில் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்படுவது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 20 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை. தான் ஆடிய கடைசி 17 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 தொடரில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சனின் ஓப்பனிங் ஸ்லாட்டில் துணைக் கேப்டனாக களமிறக்கப்படும் சுப்மன் கில், கடந்த 17 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அடுத்து, பேட்டிங் ஆர்டரில் திடீரென அக்சர் படேல் ஒன்டவுனில் களமிறக்கப்படுகிறார், ஷிவம் துபே 8-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார், சூர்யகுமார் யாதவ் ஒன்டவுன், நம்பர் 4 என நினைத்த இடத்தில் இறங்குகிறார். சுப்மன் கில் - சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் ஜோடியைத் தவிர மற்ற யார் எந்த இடத்தில் இறங்குவார்கள் என ஓரளவுக்கு நிலையான பட்டியலே இல்லை. இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளாருமான ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமாரின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்மை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத் தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ``நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல. முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை. கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள். ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து சந்தேகம் உள்ளது என்றோ அல்லது அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக அவர் இருக்க மாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. அதை நான் பரிந்துரைக்கவுமில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். 3-வது அல்லது 4-வது இடத்தில் இறங்கி ரன் அடிக்கவில்லை என்றால், அதுவும் தொடர்ச்சியாக ரன் அடிக்கவில்லை என்றால், உலகக் கோப்பை தொடங்கும் போது அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க மாட்டீர்கள். எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரன் அடிப்பது முற்றிலும் அவசியம் என்று கூறியிருக்கிறார். `கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

விகடன் 15 Dec 2025 7:54 am

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து, விஜய் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்தித்து தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தமிழ்நாட்டில் நடத்தும் முதல் மக்கள் சந்திப்பு இது. இதற்கிடையில் SIR, திருப்பரங்குன்ற விவகாரம் என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிட்டன. திமுகவை அரசியல் எதிரி என தொடர்ந்து விமர்சிக்கும் விஜய், பாஜக பற்றி ஏதும் பேசாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் 2026 மே மாதம் முதல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன் இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக எனக் கூறிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலும் கொள்கை எதிரியைப் பற்றி குறிப்பிடவில்லை. கரூருக்கு முன், கரூருக்கு பின் என கொள்கை எதிரி யார் என்பதில் விஜயின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து கரூர் சம்பவத்தின்போதே கருத்துத் தெரிவித்திருந்த பெ. சண்முகம், கரூர் விவகாரத்தை பயன்படுத்தி, நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக கூறியிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மேலும், செங்கோட்டையன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வாச்சாத்தி கொடூரம் நடந்தபோது, அன்றைய வனத்துறை அமைச்சரான செங்கோட்டையன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்திலே பொய் பேசினார். அதிமுக அரசின் அட்டூழியங்களை நாங்கள்தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம். அப்போதுதான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. விபத்து ஏற்படுத்தி, பெ. சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் கதையை முடித்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது செங்கோட்டையன் தான். இமயமலையை இலைச் சேரத்தில் மறைக்க முடியாது என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்

விகடன் 15 Dec 2025 7:44 am

நள்ளிரவில் பெண்களுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் ; பொலிஸாரின் பிடியில் இளைஞர்கள்

மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில் பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். சில இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் இளம் பெண்களை பின்னால் ஏற்றிச் செல்லும் போட்டியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரகசிய தகவல் சந்தேகத்திற்குரிய இளைஞர்களுடன் 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு, மஹரகம பொலிஸ் […]

அதிரடி 15 Dec 2025 7:38 am

தமிழர் பகுதியொன்றில் அதீத வேகத்தால் நேர்ந்த விபத்து

புத்தளம் – சிலாபம், பங்கதெனிய ஓட்டுத் தொழிற்சாலை சந்தியில் கார் ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை குறித்த கார் சாலையை விட்டு விலகி பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் கார் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 15 Dec 2025 7:35 am

மண்சரிவில் புதைந்து பல நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது மாணவி ; காட்டிக்கொடுத்த நாய்

நவம்பர் 27 ஆம் திகதி யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் உடல் நேற்று (14) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, ​​அருகில் ஒரு நாய் நிற்பதைக் கவனித்த குழுவினர், சோதனை செய்த போது கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலைக் கண்டுள்ளனர் மற்றவர்களின் உடல்கள் சடலம் […]

அதிரடி 15 Dec 2025 7:30 am

தாயின் தவறான முடிவால் பலியான குழந்தைகள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மல்வத்து ஓயாவில் சில தினங்களுக்கு முன்பு தாயாரால் தள்ளிவிடப்பட்ட உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும், குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்குமாறு அநுராதபுர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மீட்கப்பட்டனர். நீதவானின் உத்தரவு இதன் போது கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தாயார் இந்த மாதம் […]

அதிரடி 15 Dec 2025 7:28 am

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார். பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட். அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை. Campbellia aurantiaca மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர். எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர். 175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விகடன் 15 Dec 2025 7:04 am

மத்திய கைலாஷ் மேம்பாலம்… அக்டோபர் டூ பிப்ரவரி- திறப்பு விழா மீண்டும் தள்ளி போனது ஏன்?

தலைநகர் சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா மீண்டும் தள்ளி போயிருக்கிறது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்த்து விடலாம்.

சமயம் 15 Dec 2025 7:01 am

Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?

நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. இந்த கலோரி அளவுதான், உடல் எடையைக் கூட்டுவது மற்றும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கும் கலோரிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துப் பேசுகிறார். Calorie கலோரிக்கு ஏன் அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது? தண்ணீரில் மட்டும் கலோரிகள் கிடையாது. மற்றபடி, சமைத்த மற்றும் சமைக்காத எல்லா விதமான திட மற்றும் திரவ உணவுகள் மூலமாகவும் கலோரிகள் கிடைக்கின்றன. அதற்காக, பிடித்த உணவுகளையும், ஆசைப்பட்ட தின்பண்டங்களையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பக் கூடாது. உடலில் ஆற்றல் (கலோரி) குறையும்போதுதான், சோர்வு, மயக்கம் ஏற்படும். எனவே, தொடர் ஓட்டத்துக்கான ஆற்றல் உடலுக்கு எப்போதும் தேவை. அதற்கு, உரிய இடைவெளியில் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். பின்னர், உட்கொண்ட உணவுகள் எரிக்கப்பட (Burn) போதிய உடலுழைப்பு கொடுக்க வேண்டும். Calorie யாருக்கு, எத்தனை கலோரிகள் தேவை? ஒவ்வொருவருமே அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும். நம் எடையில் (Ideal Body Weight) ஒவ்வொரு கிலோவுக்கும் தலா 30 கலோரிகள் வீதம் தினமும் தேவை. எனவே, இந்த அளவுக்கேற்ப நாம் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஒருவர் 60 கிலோ எடையில் (Ideal Body Weight) இருக்கிறார் எனில், அவருக்குத் தினமும் 1,800 கலோரிகள் (60 X 30) தேவை. இந்தக் கணக்கீடு, 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் பொருந்தும். குறைவான எடையில் இருப்பவர்கள்... உரிய எடையைவிட (Ideal Body Weight) அதிக எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 25 கலோரிகள் வீதம் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவே, உரிய எடையைவிட (Ideal Body Weight) குறைவான எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 35 கலோரிகள் கிடைக்கும் வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து, மருத்துவர் அல்லது உணவு ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. Calorie நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னாகும்? அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிலிருந்து தலா 100 - 200 கலோரிகள் அதிகமாக அல்லது குறைவாக எப்போதாவது உணவைச் சாப்பிடலாம். தவறில்லை. இதுவே, தேவையைவிட அதிகமான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் பருமன் ஏற்படும். தேவையைவிட மிகக் குறைவான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் எடை குறையும். 500 கலோரிகள் காலை உணவில் 4 இட்லி, பருப்பு சாம்பார், ஒரு முட்டை, சிறிதளவு தானியங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் அல்லது பழத்துண்டுகள் சிறிதளவு சாப்பிட்டாலே சராசரியாக 500 கலோரிகள் கிடைத்துவிடும். மதியத்தில், சாதம், பருப்பு சாம்பார் அல்லது தானியங்களில் செய்த குழம்பு, பொரியல், தயிர் எடுத்துக்கொண்டாலேயே 500 கலோரிகளுக்கு மேல் கிடைத்துவிடும். இரவில், 3 - 4 இட்லி அல்லது 3 - 4 சப்பாத்தி அல்லது ஒரு கப் கிச்சடியுடன், பருப்பு சாம்பார் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் 400 - 500 கலோரிகள் கிடைக்கும். Calorie தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில், டீ அல்லது காபி அல்லது ஜூஸ் அல்லது மோர் மற்றும் குறைவான அளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் 200 - 300 கலோரிகள் கிடைக்கும். இந்த வகையில் தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் கிடைக்கும். எடை குறைவானவர்கள், இந்த உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதைவிடச் சற்று அதிகமாகவும், எடை அதிகமுள்ளவர்கள் கொஞ்சம் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் போதுமானது. கலோரி விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்! தினமும் ஒரு மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி செய்வதால், நம் உடலில் 150 - 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுபோலத்தான், ஜிம்மில் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கேற்ப கலோரிகள் கரைகின்றன. கலோரிகளைக் கரைப்பது கடினம். இதுவே, கலோரிகளைக் கூட்டுவது மிக எளிது. எப்படி என்கிறீர்களா? Calorie ஒரு வடை 75 - 100 கலோரிகள் ஒரு டம்ளர் டீ குடிப்பதால், சர்க்கரையின் அளவைப் பொறுத்து, நம் உடலில் 30 - 50 கலோரிகள் கூடும். ஒரு கப் காபி குடித்தால் 75 கலோரிகள் கூடும். ஒரு வடை சாப்பிட்டாலேயே 75 - 100 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு பப்ஸ் சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. சிறிய அளவிலான டார்க் சாக்லேட்டில் 80 கலோரிகள் கிடைக்கின்றன. அரை கப் கேசரி சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? 50 கிராம் மைசூர்பா சாப்பிடுவதால் 120 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு ஜாங்கிரி சாப்பிட்டால் 200 கலோரிகள் கிடைக்கின்றன. மீடியம் அளவிலான பீட்ஸா ஒரு துண்டு சாப்பிட்டாலே 400 - 600 கலோரிகள் கிடைக்கின்றன. சில துண்டுகள் பீட்ஸா சாப்பிட்டால், ஒருநாளைக்குத் தேவையான மற்றும் அதைவிட அதிக கலோரிகள் கிடைத்துவிடுகின்றன. பீட்ஸாவுடன் சேர்த்து குளிர்பானம் குடித்தால், கலோரிகளின் அளவு எக்கச்சக்கமாக எகிறும். Calorie Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! பீட்ஸா சாப்பிட்ட நேரம் தவிர்த்து, மற்ற இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிடுவோம். அப்போது, ஒருநாளைக்குக் கிடைக்க வேண்டிய அளவைவிட அதிகமான கலோரிகள் நமக்குக் கிடைக்கும். இது ஏதாவது ஒருநாள் என்றால் பாதிப்பில்லை. அடிக்கடி பீட்ஸா மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் கொழுப்புச்சத்து கூடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். அதுமட்டும்தானா? Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? உணவுப் பொருள்களின் தன்மைக்கேற்ப அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளின் அளவு மாறுபடும். உதாரணத்துக்கு, தலா ஒரு கிராம் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளிலிருந்து, தலா 4 கலோரிகள் உடலுக்குக் கிடைக்கின்றன. இதுவே, தலா ஒரு கிராம் கொழுப்புச்சத்திலிருந்து 9 கலோரிகள் நமக்குக் கிடைக்கின்றன. கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிட்டால், வயிறு நிறையும். அந்த உணவுகள் மூலம், கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கின்றன. மற்ற அடிப்படை சத்துகள் கிடைக்காமல் போவதால், ஊட்டச்சத்துக் குறைபாடு (Nutrient Deficiency) ஏற்படும்’’ என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

விகடன் 15 Dec 2025 6:31 am

சிட்னியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காவல்துறையினரின் […]

அதிரடி 15 Dec 2025 6:15 am

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு வெப்பநிலை… 6 டிகிரிக்கு கீழ்- தமிழ்நாடு வெதர்மேன் செம ஜில் அப்டேட்!

தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் மிகவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

சமயம் 15 Dec 2025 5:53 am

``வானவில் அழகானது, மக்கள் கூடுவார்கள், ஆனா நிரந்தரம் கிடையாது; உதயசூரியன் மட்டும்தான்.! - உதயநிதி

திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக் கணக்கை சுக்குநூறாக உடைக்கின்ற கூட்டம், இங்கு வந்து இருக்கின்ற இளைஞரணி கூட்டம்; கொள்கை கூட்டம். பொதுவாக, `இளைஞர்கள் அதிகமாக கூடினால், அவர்களை கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்பாடு இருக்காது. காட்டாற்று வெள்ளம் மாதிரி போய்கொண்டே இருப்பார்கள். யாருடைய கன்ட்ரோலிலும் இருக்க மாட்டார்கள்' என்கிற பிம்பம், இப்போது வந்திருக்கிறது. ஆனால், நம்முடைய கழக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு, இங்கு கூடியிருக்கின்ற கூட்டமே உதாரணம். கட்டுப்பாடு இல்லாமல், ஒரு லட்சம் இல்லை, ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும், அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் - திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ, ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும்; பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. இது, தமிழ்நாட்டு மக்களை, தமிழினத்தை காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். மிசா எனும் நெருப்பாற்றை நீந்தி வந்த இயக்கம். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து, குஜராத்தில் உட்கார்ந்துகொண்டு மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில்கூட நடக்காது. கடைசி `உடன்பிறப்பு' இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுகூடப் பார்க்க முடியாது. பீகாரில் வெற்றிபெற்றிருக்கலாம். உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என்று வடநாட்டில் வெற்றிபெற்றிருக்கலாம். தமிழ்நாட்டிலும் ஈசியாக நுழைந்துவிடலாம் என்று தப்பு கணக்குப் போடுகிறார்கள். அது நிச்சயம் நடக்காது. ஏனெனில், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. பா.ஜ.க என்பது மதம் பிடித்து ஓடுகின்ற `யானை' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த யானையை அடக்குகின்ற `அங்குசம்' இங்கு இருக்கின்ற நம் தலைவரின் கைகளில் இருக்கிறது. இது மோடிக்கும் தெரியும். அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என்பதால், பழைய அடிமைகளையும், புதிய அடிமைகளையும் கூட்டிக்கொண்டு, நம்மோடு மோதப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் என இப்படி எல்லோரிடமும் கூட்டணி வைத்து, பாசிச பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் நுழைய பார்க்கிறது. இப்படிப்பட்ட பா.ஜ.க-வை நம்பிதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அப்படியில்லை. நாம் தொடர்ந்து மக்களோடு இருக்கிறோம். மக்களும் தொடர்ந்து நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலின் - திருவண்ணாமலை கடந்த 4 நாள்களுக்கு முன்பு, சென்னையில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது. அதில், `2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம்' என்று அடிமைகள் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பொதுவாக, காரில் பேட்டரி டவுன் ஆனால், நான்குபேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் என்ஜினே இல்லை என்றால், எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. `என்ஜின் இல்லாத கார்' தான் இங்கு இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது, பா.ஜ.க என்ற லாரி, என்ஜின் இல்லாத அந்த காரை எப்படியாவது கட்டியிழுத்துச் செல்ல பார்க்கிறது. `நீதித்துறையை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்' என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவர் காப்பாற்ற வேண்டியது, பா.ஜ.க-விடம் இருந்து அ.தி.மு.க-வைத்தான். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வது தான் முக்கியம். அதேபோல, யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும்; போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டாம். வானவில், ரொம்ப அழகாக இருக்கும். கலர் கலராக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம் என்றார் உதயநிதி.

விகடன் 15 Dec 2025 5:52 am

ஓசூர் விமான நிலையம்:12 கிராமங்களில் 2,900 ஏக்கர் நிலம் ரெடி- சிக்கலில் நீடிக்கும் பெங்களூரு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமயம் 15 Dec 2025 5:16 am

அட்டைப்படம்

விகடன் 15 Dec 2025 4:56 am

ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவ திட்டமிடும் ஈரான் –இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரான், ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை மிக வேகமாக மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேல் தாக்குதலால் பல உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், தற்போது ஈரான் “24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலைகள்” மூலம் தனது திறனை மீட்டெடுத்துவருகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரக் குழுவில் நடைபெற்ற […]

அதிரடி 15 Dec 2025 3:30 am

நடிகர் திலீப் விடுதலை: குமுறும் நீதிக்கான குரல்!

கேரள மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை… The post நடிகர் திலீப் விடுதலை: குமுறும் நீதிக்கான குரல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Dec 2025 2:15 am

     திமுக நிர்வாகி  மீது  சீமான் தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கும் இடையே… The post திமுக நிர்வாகி மீதுசீமான் தாக்குதல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Dec 2025 1:59 am

சைபர் தாக்குதல், தேர்தல் தலையீடு., ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு

ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஜேர்மன் வான்வழி பாதுகாப்பு அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தலையிட்டதாகவும் ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த தாக்குதலை APT28 (Fancy Bear) எனப்படும் ஹேக்கர் குழுவுடன் நேரடியாக இணைக்க முடிகிறது. இது ரஷ்ய இராணுவ உளவுத்துறையான GRU-வுடன் தொடர்புடையது” எனக் கூறியுள்ளார். இந்த […]

அதிரடி 15 Dec 2025 1:30 am

❤️ தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது!

இலங்கைக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் இந்தியா, இன்று (14) மற்றொரு பாரிய மனிதாபிமான உதவியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது!… The post ❤️ தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Dec 2025 12:09 am

கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கன மழை கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர […]

அதிரடி 14 Dec 2025 11:38 pm

திடீர் திருப்பம்: சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபட்ட சபாத் குழு உறுப்பினர் சிட்னி துப்பாக்கிச் சூட்டில் பலி!

சிட்னியில் உள்ள பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14.12.25) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 10… The post திடீர் திருப்பம்: சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபட்ட சபாத் குழு உறுப்பினர் சிட்னி துப்பாக்கிச் சூட்டில் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 11:00 pm

கனிமவள கொள்ளை: கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலினை டிரான்ஸ்பர் செய்க- அழுத்தம் கொடுக்கும் அரசியல்வாதிகள்

கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மாவட்ட எஸ்பி ஸ்டாலினை டிரான்ஸ்பர் செய்ய முக்கிய அரசியல் நிர்வாகிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமயம் 14 Dec 2025 10:55 pm

அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்.. சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சமயம் 14 Dec 2025 9:34 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

மார்கழி என்றாலே உற்சாகம்தான். மார்கழி மாதத்தின் விடியற்காலைகள் பாசுரங்களாலும், வண்ண வண்ணக் கோலங்களாலும் எழில் கூடும். மனதில் மகிழ்ச்சி பெருகும். அப்படி நீங்கள் போடும் கோலத்திற்கு பரிசும் கிடைக்கும் என்றால், கூடுதல் மகிழ்ச்சிதானே?! அதற்கு... உங்களுடன் இணையவிருக்கிறது சென்னையிலிருக்கும் கீதம் உணவகம்! கோலம் போட்டி கீதம் உணவகம் நடத்தும் மாபெரும் நிகழ்வு.. ‘மார்கழி வண்ணக் கோலம் போட்டி’! இதில் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளன அவள் விகடன் இதழ் மற்றும் தினமலர் நாளிதழ். இப்போட்டியில் பங்கு பெற சென்னையில் உள்ள கீதம் உணவகங்களில் நீங்கள் கோலம் போட வேண்டும். டிசம்பர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தினமும் காலையில் 4 மணி முதல் 7 மணி வரை போட்டியாளர்கள் கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள். இந்த 16 நாள்களில் போடப்பட்ட கோலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கோலங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. முதலிடம் ரூ.25,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், இரண்டாமிடம் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், மூன்றாமிடம் ரூ.5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் வழங்கும் ரூ.500 மதிப்பிலான பரிசுக் கூப்பனும், கீதம் உணவகம் சார்பாக 250 மதிப்பிலான பரிசுக் கூப்பனும் வழங்கப்படும். கூடவே, போட்டியாளர்கள் அனைவருக்கும் கீதம் உணவகத்தில் காலை உணவு வழங்கப்படும். தினமும் 50 கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு விகடன் இணையதளத்தில் வெளியிடப்படும். கோலம் - கோப்புப்படம் போட்டியில் பங்கு பெற விதிமுறைகள்... * போட்டியில் அனைத்து பாலினத்தவரும், அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். * அண்ணா சாலை, தி. நகர், அண்ணா நகர், வேளச்சேரி, பல்லாவரம், அசோக் நகர், போரூர், மேடவாக்கம். துரைப்பாக்கம், நாவலூர், ஈ.சி.ஆர், ஊரப்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கீதம் உணவகங்களில் கோலம் போடப்பட வேண்டும். * காலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோலம் போட அனுமதி வழங்கப்படும். https://docs.google.com/forms/d/1U4Anfb-zmZv1lGueay9GBxt36BFeepfFkwqRrRv6HLo/edit?usp=drivesdk என்ற இணைப்பு மூலமோ; 73972 22111 என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்தோ, நேரடியாக கீதம் கிளைகளுக்குச் சென்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கிளையிலும் ஒரு நாளைக்கு 10 பேர் மட்டுமே கோலம் போட அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. * ஒரு நபர் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம். * கோலம் போடத் தேவையான பொருள்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும். * வெற்றியாளர்களை முடிவு செய்வதில் தேர்வுக்குழுவின் தீர்ப்பே இறுதியானது.

விகடன் 14 Dec 2025 9:33 pm

காசாவில் பைரன் புயல் தாக்கத்தால் 14 பேர் உயிரிழப்பு

காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை […]

அதிரடி 14 Dec 2025 9:30 pm

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவர் சி.வேந்தன் ஈகை சுடர் ஏறினதை தொடர்ந்து, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

பதிவு 14 Dec 2025 8:59 pm

இன்ஜின் இல்லாத கார் தான் அதிமுக.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருந்து வசதியாக வாழ்வதை விட சுயமரியாதையுடன் தனித்து வாழ வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 8:49 pm

சீன வானில் அதிசயத்தை நிகழ்த்திய பறவைக்கூட்டம்

சீனாவில் லட்சக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து நடனமாடுவது போல வானில் ஜாலம் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெப்ப மண்டல பசுபிக் தீவுகள் ஆகியவற்றை தாயகமாகக் கொண்டு உள்ளவை தான் ஸ்டாலிங் பறவைகள். எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதுமே கூட்டமாகவே மட்டும் வாழும். அதேபோல் வானில் பறக்கும்பொழுது ஒன்றொடொன்று இணைந்து கூட்டமாகவே பறக்கும். இந்தப் பறவைகளின் குரல் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. மனிதர்கள் பேசுவது போன்ற […]

அதிரடி 14 Dec 2025 8:30 pm

திராவிட மாடல் ஆட்சி 2.O.. திமுக இளைஞரணி மாநாடு.. மு.க. ஸ்டாலின் பேசியது இது தான்!

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாட்டை மாற்றியமைத்த திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு இளைஞரணியினர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமயம் 14 Dec 2025 8:04 pm

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, 'பயங்கரவாத சம்பவம்'என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு குற்றவாளியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளி ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.

பதிவு 14 Dec 2025 8:01 pm

பின்வாங்கியது காவல்துறை

யாழ் சிறைச்சாலையில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் சிவராமலிங்கம் தர்சனின் சகோதரி , அவரது அண்ணன் தாக்கப்பட்டதற்கான போதிய சந்தேகங்கள் இருப்பதாக தனது ஆதங்கத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் மேல் யாழ் சிறைச்சாலை அதிகாரி பொலீசில் முறைப்பாடு செய்தார். அதன் பின்னர் இன்று சிறைச்சாலை சார்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. இது மிக மோசமான அடக்குமுறை ,நீதியான விசாரணை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் மனிதவுரிமை ஆணையகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பதிவு 14 Dec 2025 7:55 pm

கலைஞர் பேரன் டூ திமுகவின் எதிர்காலம்! உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை...

கலைஞரின் பேரன் முதல் திமுக கழகத்தின் எதிர்காலமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலின் குறித்த பின்னணியை விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 7:54 pm

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசுக்கு வழங்கிய நற்சான்றுஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டி! பனங்காட்டான்

வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி முயற்சி. பேபி நாமல் அரசியலில் இன்னமும் புட்டிப்பால் குடிக்கிறார். மழை விட்டும் தூவானம் போகவில்லையென்பது ஒரு வாழ்மொழி. மழை நிலத்தை நனைக்கும் வெறும் தண்ணீர் அல்ல. மனிதனின் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமானது. ஆனால்இ மழை காற்றுடன் இணையும்பொழுது அதன் வீச்சு வேறாகிறது. மழை தூறுகிறதுஇ மழை பெய்கிறதுஇ மழை பொழிகிறது என்ற சொல்லாடல்கள் ஊடாக தென்றலுக்கும் புயலுக்கும்இ சூறாவளிக்குமிடையிலான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். சூறாவழியால் ஏற்பட்ட அனர்த்தத்தை இலங்கை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசமும் இதனை உணர்ந்து உதவிக் கரங்களை நீளமாக நீட்டுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசு அநுர குமர தலைமையில் கண்களை மூடிக்கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு ஏதுவாக உலகம் தாராளமாக உதவுகிறது. அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்க்கும்போது நாடு வழமைக்குத் திரும்ப பல மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். இலங்கை எல்லோருக்கும் பொதுவானது என்பதை எடுத்துக்காட்ட (இதுவும் ஒருவகை அரசியல்தான்) கடந்த 12ம் 13ம் திகதிகளில் இடம்பெறவிருந்த இலங்கையர் தினம் என்னும் தேசிய நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார். சிறுவர் முதல் முதியோர் வரையானவர்களை அணைத்து ஆறுதல் கூறுகிறார். குடும்ப உறவுகளை இறந்தவர்களுக்கு தேறுதல் கூறி உடனடி நிவாரணத்துக்கு உத்தரவாதம் வழங்குகிறார். மத்திய மாகாணத்தின் பெரும்பகுதிகளே பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. மண் சரிவுகளில் அகப்பட்டு காணாமல் போயுள்ள சுமார் 200க்கும் அதிகமானவர்களுக்கு இறப்புப் பதிவு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பெறுபவர்களுக்கு தாமதமின்றி அதற்கான நிவாரணம் கிடைக்குமாம். வீடுகளை சுத்தப்படுத்த 25இ000 ரூபாஇ மேலதிக செலவுகளுக்கு 50இ000 ரூபாஇ உயிரிழப்புகளுக்கும்இ வீடழிப்புகளுக்கும் நிறைவான நிவாரணம். ஜனாதிபதி உத்தரவில் அரச இயந்திரம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கும் என்ற ஆராய்ச்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் இன்னமும் தங்கள் தொகுதிகள் பக்கமே போகவில்லை. தங்கள் வாக்குகளால் எம்.பியானவர்களைத் தேடி தொகுதி மக்கள் நெடுமூச்சு விடுகின்றனர். எந்தவொரு நாடாளுமன்ற எம்.பியாவது தங்களின் ஒரு மாதச் சம்பளத்தைக்கூட நிவாரண நிதிக்கு வழங்கியதாக இதுவரை தெரியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் தமது பங்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அவ்வப்போது எங்காவது சென்றுவிட்டு ஊடகங்களில் செய்தி போடுகின்றனர். ஒரு நாள் மழைக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய எம்.பிக்களின் காலம் முன்னர் இருந்தது. 1978ம் ஆண்டு சூறாவளியின்போது எம்.பிக்களின் தாராள நிதி உதவியை நேரில் தரிசித்த சாட்சி இந்தப் பத்தி எழுத்தாளர். ஆனால்இ இன்று நிலைமை அப்படிக் காணப்படவில்லை. உலக நாடுகள் முன்னர் வழங்கிய உதவி போதாது என்று மேலும் மேலும் வழங்கி வருகின்றன. சில நாடுகள் இரண்டாம் முறையாகவும் வழங்குகின்றன. மேலும் உதவிக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. இலங்கையின் மீட்பு முயற்சிக்கு இலங்கைப் பணத்தில் ஆயிரம் கோடி ரூபாவை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை இணங்கியுள்ளதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே கூறியுள்ளார். அதேசமயம் இனி வரக்கூடிய காலநிலை மாற்ற பேரிடர்களை எதிர்கொள்ள முதலீடுகள் தேவையென்று அநுர அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். பேரிடரிலிருந்து இலங்கை மீள்வதற்கு அரசு கேட்ட 200 மில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் பாரிய கடமை. தொல்பொருள்இ வனபரிபாலன திணைக்களங்கள் இவ்வாறான நிதிகளில் தங்கள் கைங்கரியங்களை நிறைவேற்றக்கூடிய அபாயம் உண்டு. இதற்கு கடந்த காலஇ நிகழ்கால அனுபவங்கள் பல உள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் ஒன்றிணைந்து தங்கள் சொந்தப் பணத்தில் 3.6 மில்லியன் ரூபாவை நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது முற்றிலும் முன்மாதிரியான ஒரு செயற்பாடு. அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலாளர் அலிசன் கூக்கர் இப்போது இலங்கையில் நிற்கிறார். அமெரிக்காவின் சி-130 உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் இவரது வருகை அதனுடன் சேர்ந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமரவை நேரில் சந்தித்து உரையாடிய இவர்இ இலங்கையின் மீள் எழுச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க தயார் என்று உறுதியளித்துள்ளார். ஆங்கிலத்தில் பிளாங் செக் என ஒன்றுண்டு. ஒரு தொகையுமே குறிப்பிடாது வழங்கப்படும் காசோலை என்பது இதன் அர்த்தம். அதாவதுஇ காசோலையின் பெறுனர் தமக்குத் தேவையான தொகையை இதில் எழுதலாம். அவ்வாறான உத்தரவாதம் அலிசன் உடையது. இது தவிரஇ இலங்கை மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் தீர்வை வரியை ரத்தாக்குவது அல்லது குறைப்பது பற்றியும் அமெரிக்கா ஆலோசிப்பதாக கூறியுள்ளார். இந்தியாஇ சீனா போன்ற நாடுகள் வழங்கும் உதவிகளுக்கு நிகராக அல்லது அதனிலும் மேலாக அமெரிக்க உதவி கிடைக்கலாம்போலத் தெரிகிறது. ஏற்கனவே சி-130 நடவடிக்கைகள் மீது பலரும் ஐயம் வெளியிட்டு வரும் வேளையில் அமெரிக்காவின் அளவு கடந்த உதவிகள் மேலும் அச்சமூட்டுவதாக அமையலாம். முதலாளித்துவ மேலாண்மை கொள்கைகளைக் கொண்ட நாடுகளை எதிர்த்து வந்த ஜே.வி.பி.யின் பினாமி ஆட்சிக்கு அமெரிக்கா உதவுவது என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. உதவி எங்கிருந்து வந்தாலும் அதை தட்டிக்கழிக்க முடியாத நிலை இலங்கையினுடையது. இதனால் அரசியல் சித்தாந்தங்களை வெளிப்படுத்தி கிடைக்கும் உதவிகளை வெட்டுவதற்கு சிலர் முயற்சிப்பது கண்கூடு. கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல் புரிந்துஇ கொள்ளையடித்து பொத்தி வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியைக்கூட நிவாரணத்துக்கு வழங்க உள்நாட்டு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. ஆனால்இ இவர்கள் வெளியிட்டுவரும் கருத்துகளும் அபிப்பிராயங்களும் அரசாங்கத்தைச் சாடுவதாகமும் மக்கள் மத்தியில் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க நினைவு நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் அவசியமற்ற தப்பபிப்பிராயங்களை பரப்ப வேண்டாமெனவும் வேண்டியுள்ளார். மகிந்த ராஜபக்ச திடீர் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார். இவரது பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் பேரிடர் உயிர்ச் சேதங்களுக்கு ஆளும் தரப்பே முழுப்பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு பேரிடர் விடயத்தில் தாமதமானது என்பது உண்மை. அதனை ஆட்சித்தரப்பே ஒருவகையில் ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே பேரிடர் எச்சரிக்கை வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது சகல எதிர்க்கட்சியினரதும் குற்றச்சாட்டு. எச்சரிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டதென்றால் இது விடயத்தில் அரசாங்கத்தைச் சுட்டி நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றம் எதிர்க்கட்சிகள் மீதும் விழுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவின் பின் பாதிக்கப்பட்டவர்களை ராஜபக்ச அரசு மீளக்குடியேற்றியது என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்சஇ அநுர அரசு இப்போது ஏன் அவ்வாறு செயற்படவில்லை என்று கேட்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுககள் இத்தனை ஆண்டுகளாக வீதிகளில் நிற்பதை இவர் அறியவில்லைப் போலும். பேபி நாமல் பாவம்! இன்னமும் அரசியலில் புட்டிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தூதுவர்களைச் சந்திப்பதில் மினக்கெடுகிறார். இவர்களை சந்திப்பதை ஊடகங்கள் ஊடாக படம் காட்டுகிறார். எல்லாவற்றிலுமே குறை காண்பவராக மல்லுக்கட்டுகிறார். இவரது கட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக எங்கும் காணப்படவில்லை. எல்லாவற்றிலும் மேலானது தமிழர் தரப்பில் இடம்பெறும் அதிரடிகள். நிவாரணப் பணிகளைவிட இவர்களின் அறிவார்ந்த நிலைப்பாடு நிச்சயம் சொல்ல முடியாத மாகாணசபை தேர்தல். முன்னைய உள்ளாட்சித் தேர்தலின்போது வெளியேறியவர்களை (வெளியேற்றப்பட்டவர்கள்) மீண்டும் தமிழரசுடன் இணைப்பதற்கான முதற் கூட்டம் முடிவடைந்துள்ளது. இது ஒரு தொடர்கதையாகுமாம். இச்சந்திப்பின் பிறையோரிட்டி தமிழரசின் சுமந்திரனை மாகாணசபை தலைவராக்குவது. இதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் தமிழரசு இறங்கியுள்ளது. பேரழிவின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அநுர அரசின் நிகழ்ச்சிப் பட்டியலில் இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லையென்று பெலவத்தை வட்டாரங்கள் சொல்லுகின்றன. இவ்வேளையில் மல்வத்தஇ அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசின் துரித நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ் இந்த ஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டியாகத் தெரிகிறது.

பதிவு 14 Dec 2025 7:54 pm

மாமனிதர் தராகிக்கு விருது!

தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும் இலங்கையில் நடந்தேறும் அரச ஒடுக்குமுறையை உலகுக்கு அம்பலப்படுத்திய செயற்பாட்டுக்குமாக வரதகுமார் நினைவு விருது இலண்டனில் 2025 டிசம்பர் 13 ஆம் நாள் சனியன்று வழங்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முதலில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டும் பின்னர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டும் ஈழத்தமிழர் அரசியல், மரபியல், மனித உரிமை ஆகிய விடயதானங்களை தரவுப்படுத்துவதில் தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre, TIC) என்ற அமைப்பு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத்தமிழரிடையே சுதந்திரன் என்ற பத்திரிகை இயங்கியதற்குச் சமாந்தரமாக, ஆனால் கட்சிசார்பற்ற சுயாதீன ஆங்கில வாராந்தப் பத்திரிகையாக சற்றர்டே றிவியூ இயங்கிவந்தபோது அதன் ஆசிரியராக மறைந்த மூத்த பத்திரிகையாசிரியான எஸ். சிவநாயகம் பணியாற்றியிருந்தார். அவர் தமிழ் தகவல் நடுவத்தில் இணைந்து பிற்காலத்தில் காத்திரமான தரவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரோடு நெருக்கமாகப் பணியாற்றிய வைரமுத்து வரதகுமார் (1949-2019) நடுவத்தின் பணிகளை அதன் முழுநேரச் செயற்பாட்டாளராகவும் வாழ்நாட் செயற்பாட்டளராகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். அத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழ் தகவல் நடுவத்தால் ஆண்டுதோறும் மனித உரிமை நாளை ஒட்டி வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது. பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரான போல் ஹெரன் என்பவருக்கும் இரண்டாம் தலை முறை ஈழத்தமிழர் வழக்கறிஞையான சாந்தி சிவகுமாரனுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது வழங்கப்பட்டது. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கைத் தூதரலாயத்தில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கெதிரான சட்ட நடவடிக்கை உள்ளடங்கலாக பல சட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான அங்கீகாரமாக மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டன. மாமனிதர் சிவராமுக்கான சிறப்பு விருதை அவரின் மனைவி பிள்ளைகளிடம் சேர்க்கும் முகமாக தமிழ்நெட் ஆங்கில ஊடகத்தின் நிறுவக ஆசிரியரும் சிவராமின் நெருங்கிய ஊடக நண்பருமான ஜெயா கோபிநாத் (நோர்வே) பெற்றுக்கொண்டு சுருக்கமான நினைவுரை ஒன்றையும் நிகழ்வில் வழங்கியிருந்தார். தனது உரையின் போது மாமனிதர் சிவராமின் துணைவியாரும் அவர்களது மகனும் இரு மகள்மாரும் இந்த விருது வழங்கிய நிகழ்வைக் காணும் போது தமிழினம் மாமனிதர் சிவராமின் மீது நன்றியறிதலோடு இருப்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார். சிவராம் தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கையில் இனி எந்த அங்கீகாரமும் ஒரு விடயத்தை விட பெரிதாக அமையாது என்று தனக்குக் கூறியிருந்ததாகத் தெரிவித்த ஜெயா, அந்தச் சம்பவத்தையும் அங்கு விவரித்தார். 2004 நவம்பர் மாவீரர் நாளை ஒட்டிய நாட்களில் தேசியத்தலைவர் சிவராமை அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களோடும் சந்தித்தபோது தலைவர் பிரபா சிவராமின் கைகளைத் தனது இரண்டு கைகளாலும் இறுகப்பற்றி கொழும்பில் இருக்கவேண்டாம் என்றும் தற்காலிகமாக ஆதல் வெளிநாட்டில் தங்கியிருக்குமாறும் கண்கள் பனிக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதைவிடத் தனக்குப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை என்று சிவராம் தனக்குப் பெருமையோடு தெரிவித்திருந்ததாகவும் ஜெயா அங்கு குறிப்பிட்டு, சிவராமின் குடும்பத்தினர் சார்பாக அந்த விருதுக்கான ஏற்புரையை வழங்கினார். மாமனிதர் சிவராமை காப்பாற்றுவதற்கு ஏற்ற நிதிப்பலம் தமிழ்நெற்றுக்கு இருக்கவில்லையென்றும் நிதிப்பலத்தைக் கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் அவருக்கேற்ற சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தும் சூழலைப் புலம்பெயர் சூழலில் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் தனது ஏற்புரையில் வெளிப்படுத்தினார். சிவராமின் குடும்பத்தினர் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் கனடாவில் யாழ். ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25 ஆவது ஆண்டு நினைவுநாள் பல ஊடகத்துறையினரின் பங்கேற்போடு நடந்தேறியபோது அந்த நிகழ்வில் சிவராம் அவர்களின் பாரியார் பவானியும் அவரின் பிள்ளைகளும் நிமலராஜனின் குடும்பத்தினரோடும் பிள்ளைகளோடும் இணைந்து கலந்துகொண்டதையும் தனது உரையில் ஜெயா குறிப்பிட்டார்.

பதிவு 14 Dec 2025 7:42 pm

திமுக இளைஞரணி மாநாடு.. தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்நாக்ஸ்.. அந்தப் பையில் வேறென்ன இருந்தது தெரியுமா?

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், உணவுப் பைகள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

சமயம் 14 Dec 2025 7:36 pm

கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசு இலங்கையில்!

மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார். கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா சுற்றுலாப் பயணமாக இன்று (13.12.2025) கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

அதிரடி 14 Dec 2025 7:33 pm

மியான்மருடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி

கம்போடியாவுடன் ஐந்து நாள்களாகத் தொடரும் எல்லை மோதலில் 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கம்போடிய எல்லைப் பகுதியில் இருந்து அந்த நாட்டுப் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியதால், 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்துள்ளனா். இது ஜூலை மாத போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இருந்தாலும், தாய்லாந்து படைகள் பதிலடி கொடுத்து, கம்போடிய படைகளுக்கு பெரும் இழப்பை […]

அதிரடி 14 Dec 2025 7:30 pm

இந்தியா தற்போது நல்லம்:ஜேவிபி

சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவ சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் இன்று (14) மதியம் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர். இந்திய இராணுவ மருத்துவக் குழுவினருக்கு சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சக குழுவினர், இந்திய தூதரக குழுவினர் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மஹியங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக 85 பேர் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு நாட்டிற்கு வந்தது. மஹியங்கனை நகரத்தின் மையத்தில் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பதிவு 14 Dec 2025 7:24 pm

அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்

டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். 60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர். கடந்த 7ஆம் திகதி சிறிலங்கா வந்த அவர்கள் ,

புதினப்பலகை 14 Dec 2025 7:19 pm

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. யூதர்களின் விழாவான ஹனுக்கா-வை (Hanukkah) கொண்டாட கடற்கரையில் கூடியிருந்த சுமார் 1,000 முதல் 2,000 பேர் வரையிலான மக்கள் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர். Mass Shooting at Bondi Beach Chanukah in Sydney, Australia This guy who's hits them on the head is a fucking hero A man at Bondi Beach literally grabbed a terrorist’s gun with his bare hands and saved countless lives. That’s not bravery — that’s instinctive heroism. In a world… pic.twitter.com/8bHKGs98kf — KRoshan (@Kroshan4k) December 14, 2025 இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகவும், இன்னொரு நபர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம் இந்த சம்பவத்தில்,மர்ம நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை ஒருவர் பிடிங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ``பான்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வேதனையளிக்கிறது. காவல்துறையினரும், அவசரகாலப் பணியாளர்களும் மக்களைக் காப்பாற்ற களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். pic.twitter.com/JKCZNPOSKd — Anthony Albanese (@AlboMP) December 14, 2025 அதேவேளையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்தத் தாக்குதல் குறித்து, ``ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பான்டி கடற்கரையில் ஹனுக்காவின் மெழுகுவர்த்தியை ஏற்றச் சென்ற யூதர்கள், நமது சகோதர சகோதரிகள் இழிவான தீவிரவாதிகளால் மிகவும் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். இந்தத் தருணத்தில் இஸ்ரேலின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜெருசலேமிலிருந்து எங்களின் ஆதரவை நாங்கள் அனுப்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 14 Dec 2025 7:13 pm

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி!

முன்னாள் அமைச்சர்மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது 'வசந்தன்'தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிறப்பு அனுமதியை குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார். ஜனவரி 1, 2008 அன்று கோட்டஹேனாவில் உள்ள பொன்னம்பலவனேஸ்வரர் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார். மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது அவர்தான் தன்னைச் சுட்ட நபர் என்று அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் அவரை குற்றத்துடன் தொடர்புபடுத்தியதாகவும் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று அவர் ஒப்புக்கொண்டார், மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.மனுதாரர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பதிவு 14 Dec 2025 6:58 pm

2026 தமிழ்நாடு தேர்தல்: திமுகவில் இளைஞர்களுக்கு அதிக சீட்! முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார். இதை விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 6:52 pm

இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்!

இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள்… The post இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 5:57 pm

யார் இந்த நிதின் நபின்? பீகார் எம்எல்ஏ டூ பாஜக தேசிய தலைவர்... முழு தகவல் இதோ

ஜேபி நட்டா பதவி காலம் முடிவை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்று காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:55 pm

தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் காவா என்று சொல்லக்கூடிய கடல் புறாக்கள் குவிந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் கூட்டமாக […]

அதிரடி 14 Dec 2025 5:30 pm

நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும்! இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தது

திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிகிறது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 14 Dec 2025 5:04 pm

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.. தாக்குதலுக்கான காரணம் என்ன?

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சமயம் 14 Dec 2025 4:59 pm

இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்து

அனர்த்தத்துக்கு பின்னரான இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட முன்மொழிந்துள்ளார். அண்மையில் புது டெல்லிக்கு விஜயம் செய்த மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், 4வது இந்தியா–ஜப்பான் […]

அதிரடி 14 Dec 2025 4:57 pm

மன்னாரில் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் வழங்கிய சிறுமி

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் நினைவு சின்னம் வழங்கியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு சனிக்கிழமை (13) மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். குறித்த கலந்துரையாடலின் நிறைவில் சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.

அதிரடி 14 Dec 2025 4:52 pm

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு!

இலங்கையைப் புரட்டிப்போட்ட டித்வா புயலுக்குப் பிறகு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு உலகம் முழுவதும்… The post இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:48 pm

பாக்., ஈரானில் இருந்து 2 நாள்களில் 10,000 ஆப்கன் மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2 நாள்களில் மட்டும் 10,000 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில், அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து கடந்த வியாழன் (டிச.11) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

அதிரடி 14 Dec 2025 4:30 pm

சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதி இன்று (14.12.25) துப்பாக்கிச் சூட்டுக் களமாக… The post சிட்னியில் துப்பாக்கிச் சூடு! பொண்டி கடற்கரைப் பகுதியில் 10 பேர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 4:29 pm

சென்னை MTC பஸ் கண்காட்சி: தி நகர் பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்...

சென்னை எம்டிசி பஸ் கண்காட்சி இன்று தி நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பழமையான பேருந்தை காண மக்கள் பலரும் தி நகரில் குவிந்து வருகின்றனா்

சமயம் 14 Dec 2025 4:10 pm

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடுவழியில் தீப்பிடித்த சிற்றூந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை (14) பயணித்த சிற்றூந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 14 Dec 2025 4:07 pm

FJ-ஐ விளாசிய விஜய் சேதுபதி: இந்த கோபத்த பாரு மேல காட்டியிருக்கணும் எனும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்.ஜே. செய்த விஷயம் குறித்து பேசி அவரிடம் கோபப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதை பார்த்தவர்களோ, எங்க காட்ட வேண்டிய கோபத்தை எங்க காட்டுறீங்க என கேட்டிருக்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 4:00 pm

IPL 2026: ‘லிவிங்ஸ்டன் வேணாம்’.. 34 வயது ஆல்ரவுண்டரை டார்கெட் செய்யும் சிஎஸ்கே: EX ஆர்சிபி வீரராம்!

ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லிவிங்ஸ்டனுக்கு பதில், 34 வயது ஆல்ரவுண்டரை டார்கெட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெமிரான் கிரீனுக்காக இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.

சமயம் 14 Dec 2025 3:57 pm

ஈரோட்டில் தவெக கூட்டத்துக்கு அனுமதி.. ஆனால் ஒரு கன்டிஷன்.. செக் வைத்த எஸ்.பி.!

ஈரோட்டில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கி உள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:49 pm

புயலுக்குப் பின் – நிலாந்தன்.

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது.… The post புயலுக்குப் பின் – நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 3:47 pm

’’நேரம் வந்தால் வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய்அறிவிப்பார்..’’ – தவெக அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:45 pm

IND vs PAK : ‘குட்டி ஹர்திக் பாண்டியா காட்டடி’.. வைபவ் சூர்யவன்ஷி சொதப்பல்: பாகிஸ்தான் சிறந்த பந்துவீச்சு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபாரமாக பந்துவீசியது. இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மட்டுமே அபாரமாக விளையாடினார்.

சமயம் 14 Dec 2025 3:35 pm

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 42 பேர் மீட்பு

டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள 12 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் அதிகாலை 5:45 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தனர். உடனே கட்டடத்திலிருந்து 42 பேரை தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்தில் 18 தீயணைப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி அன்வாருல் […]

அதிரடி 14 Dec 2025 3:30 pm

சவுக்கு சங்கர் கைது… குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவின் அராஜகம்- மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு ஊழல் கறைபடிந்து காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சமயம் 14 Dec 2025 3:18 pm

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

பதிவு 14 Dec 2025 3:17 pm

MUM vs HAR: ‘எதிர்பார்க்காத ட்விஸ்ட்’.. காட்டடி அடித்த டெஸ்ட் பேட்டர்: 235-யை சேஸ் செய்த மும்பை அணி!

ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி அபாரமாக செயல்பட்டு, இறுதியில் 235 ரன்களையும் சேஸ் செய்து அசத்தியது. இப்போட்டியில், டெஸ்ட் அணி பேட்டர் அபாரமாக செயல்பட்டு ரன் மழை பொழிந்தார்.

சமயம் 14 Dec 2025 3:09 pm

அன்புமணி பணமோசடி செய்தாரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் பரபரப்பு புகார்!

அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 14 Dec 2025 3:00 pm

ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்

பெங்களூர், பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார்( வயது 32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என திட்டமிட்டுள்ளார். கிளி இருந்த இடத்தின் அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது […]

அதிரடி 14 Dec 2025 2:30 pm

சென்னை வானில் விண்கல் மழை… இன்று இரவு ரெடியாருங்க- தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

தமிழக மக்கள் இன்று இரவு வானில் விண்கல் மழையை கண்டு ரசிக்கலாம் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார். இது முக்கியமான வானியல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமயம் 14 Dec 2025 2:07 pm

``வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் - அன்புமணி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் போன்ற ஒன்றை அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Liquor - மது இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. அண்மைக்காலமாகவே பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொலிகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வேகமாக பரவியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி 11-ம் வகுப்பு மாணவிகள் சிலர் மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்ததும், கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் குடித்து விட்டு போதையில் சாலையில் தகராறு செய்ததும் செய்திகளாகின. பாமக அன்புமணி அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், 9-ஆம் வகுப்பு மாணவிகளே வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தியிருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டை திமுக ஆட்சியாளர்கள் எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற அச்சமும், கவலையும் தான் ஏற்படுகின்றன. சில தலைமுறைகளுக்கு முந்தைய தமிழக இளைஞர்களுக்கு மது என்றால் என்ன? என்பதே தெரியாமல் இருந்தது. பின்னர் அந்த நிலை மாறி தமிழகத்தில் மது அருந்துபவர்களின் குறைந்தபட்ச வயது 25 ஆக குறைந்தது. இப்போது 10 அல்லது 11 வயது சிறுவர்கள் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் தான் 9-ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மது சார்ந்த அனைத்து சீரழிவுகளுக்கும் திமுக தான் காரணமாக இருந்திருக்கிறது. மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. டாஸ்மாக் கடை இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்து விடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும். மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும். இது தான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை திமுக அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 2:00 pm

வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு:

“Never Give Up” (ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே) என்ற தாரக மந்திரத்தின் நாயகனும், ’90ஸ் கிட்ஸின்’ ஹீரோவுமான WWE ஜாம்பவான்… The post வரலாறு காணாத பிரியாவிடை! ஜான் சீனா ஓய்வு: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:49 pm

துப்பாக்கி வெடித்ததில் நொடிப்பொழுதில் மாறிய குடும்பஸ்தரின் வாழ்க்கை

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை பம்பஹின்ன , வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்தே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து சமனல வேவ […]

அதிரடி 14 Dec 2025 1:47 pm

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்ட வர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. […]

அதிரடி 14 Dec 2025 1:44 pm

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்டைகளை போதுமான அளவிற்கு வளரவிட்டு வார நாட்களில் கன்டென்ட் தேற்றுவது. பிறகு வீக்கெண்ட் ஷோவில் இவர்களே அதை ஹோஸ்ட் மூலமாகக் கண்டிப்பது. ‘செம சூப்பரா கேட்டாருப்பா’ என்று பார்வையாளர்களை பரவசப்படுத்துவது. இதுவொரு வணிக தந்திரம். பிக் பாஸ், ஹோஸ்ட், சக போட்டியாளர்கள் என்று எவரையும் மதிக்காத பாரு மற்றும் கம்முவை உடனே வெளியே அனுப்பவேண்டும். செய்வார்களா? செய்யமாட்டார்கள். TRP இறங்கிவிடும். நெகட்டிவ் கன்டென்ட்டிற்குத்தான் இன்றைய தேதியில் வணிக மதிப்பு இருக்கிறது. வேறு திறமையான போட்டியாளர்களை உள்ளே இறக்கினால் இதை சமன் செய்யமுடியும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 69 “நான் ரொம்ப போல்டான பொண்ணு’ன்னு சொல்லிட்டு உள்ளே போனவங்கள்லாம் மைக்ல பேச பயப்படறாங்க. அவங்க பண்ண தப்புக்கு வீடே தண்டனை அனுபவிக்குது. ஆனா இவங்களுக்கு அந்த கில்ட்டே இல்ல. வாங்க விசாரிப்போம்” என்று ஃபயர் மோடில் உள்ளே சென்றார் விசே. “எல்லோரும் டீ காஃபி குடிக்காம நல்லாயிருக்கீங்களா?” என்று சர்காஸமாக விசாரித்துவிட்டு நேரடியாக பாரு -கம்முவிடம் வந்தார். “பிக் பாஸிற்கும் மத்தவங்களுக்கும் உங்க பிரைவஸியை மதிக்கத் தெரியல. அதனால உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும். அந்த பிரைவஸியை நான் தரேன். ரெண்டு பேரும் மைக்கை கழட்டி வெச்சிடுங்க” என்றார் விசே. BB Tamil 9 Day 69 சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தைபோல இந்த எபிசோடு முழுக்க முகத்தை வைத்துக்கொண்டிருந்த பாரு, ‘ஸாரி சார்’ என்று உருக்கமாக நடிக்க முயன்றார். ஆனால் நடிப்பு வரவில்லை. பாருவாவது பரவாயில்லை. ஆனால் கம்முவோ நெஞ்சழுத்தக்காரன்போல, பிரேக்கில் எல்லாம் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார். “மத்தவங்க சொல்லுங்க... நீங்க அவங்களுக்கு ஒரு தண்டனை கொடுத்தீங்க. அவங்க அதுக்கு கில்ட்டா ஃபீல் பண்ணாங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். முதலில் எழுப்பியது வினோத்தை. “அது வந்து சார்.. அவங்க அப்ப குற்றவுணர்ச்சியா இருந்தாங்க” என்று மழுப்பலான பாணியில் வினோத் பதில்சொல்ல விசேவிற்கு சரியான கோபம் வந்தது. “ஓ.. நீங்க கம்முவோட நெருங்கிய நண்பர்.. இல்லையா.. உக்காருங்க” என்று அமர வைத்தார். பாரு -கம்மு - வினோத் - அமித் - நால்வரையும் ரோஸ்ட் செய்த விசே வினோத்திற்கு ஊமைக்குத்தாக விழுந்ததால் மற்ற அனைவருமே பாரு கம்மு ஜோடியின் சேட்டைகளை எரிச்சலுடன் சொன்னார்கள். சான்ட்ராகூட பாருவிற்கு எதிராக சாட்சியம் சொன்னார். மாற்றிச்சொன்னால் விசே பின்னி விடுவார் என்கிற பயம். விக்ரம் எழுந்தபோது கைத்தட்டல். “பிக் பாஸை மதிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சது. ஆனா அவங்களோ நாங்க எக்ஸ்ட்ரா வேலைகொடுக்கற மாதிரி ஃபீல் பண்ணாங்க” என்றார் விக்ரம். அனைவரின் சாட்சியங்களையும் கேட்ட விசே “ஏம்மா பாரு. கெமிகூட கேம் ஆடினப்பகூட நீங்க மைக்கை கழட்டி வெக்கலை. ஆனா ஜாக்கிங் போகும்போது மட்டும் மைக் தொந்தரவா இருக்கா? உங்களுக்கு குற்றவுணர்ச்சி கொஞ்சம்கூட இல்ல. ‘கஞ்சி குடிச்சு வாழ்ந்தவங்கதானேன்னு எகத்தாளமா பேசியிருக்கீங்க.. இதே விஷயம் உங்களுக்கு நடந்தா சும்மா இருப்பீங்களா..?” என்று வெடிக்க முகத்தை பாவமாக வைத்துக்கொண்டார் பாரு. BB Tamil 9 Day 69 “கோர்ட் ரூம்லகூட நாங்க எல்லாம் வந்துட்டோம். இவங்க வெளிய வரல. பிக் பாஸ் அறிவிப்பு வந்தப்ப எங்களுக்கு பகீர்ன்னு ஆயிடுச்சு” என்றார் சபரி. “ரெண்டு பேர் சேர்ந்து ஒட்டுமொத்த வீட்டையே வெறுப்பேத்தி இருக்காங்க.. நீங்க எல்லாம் என்னதான் பண்ணீங்க.. நாளைக்கு சோறும் கட் பண்ணாதான் கேள்வி கேப்பீங்களா.. ?” என்று காட்டமாக கேட்ட விசே “பாரு.. உங்களுக்கு சொல்ல ஏதாச்சும் கருத்து இருக்கா.. சொன்னா மட்டும் என்ன ஆகப் போவுது.. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க.. இருந்தாலும் சொல்லுங்களேன்.. கேப்போம்” என்றார். ‘கேக்கல.. சத்தமா.. கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே மைக் இல்லாமல் பாரு பேசியது சரியாக கேட்கவில்லை. அப்படியே மெலிதாக கேட்டாலும் “சத்தமா பேசுங்க பாரு.. சரியா கேக்கலை.. மக்களே உங்களுக்கு கேட்குதா.. எங்களுக்கும் கேக்கலை. பாரு பேசறது சரியா கேக்கலைன்றதால ஒரு பிரேக்” என்று சர்காஸமாக சொல்லி விட்டு சிரிப்புடன் அகன்றார் விசே. கூட்டம் வெடித்துச் சிரித்தது. பிரேக்கில் அனுமதி பெறாமல் மைக்கை எடுத்து மாட்டிய கம்மு, “ஏண்டா.. டேய்.. இவ்வளவு நேரம் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டுப் போனாரே.. அப்பக்கூட திருந்த மாட்டியா?” என்கிற மாதிரி மற்றவர்கள் ஆட்சேபிக்க, அரை மனதாக மைக்கை கழட்டி வைத்தார். அடுத்த தலைப்பு திவ்யா பிரச்சினை. “என்னம்மா நடந்தது. சொல்லுங்க?” என்று ஆரம்பித்தார் விசே. கம்ருதீன் பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை நடந்த சம்பவத்துடன் பட்டியலிட்டார் திவ்யா. BB Tamil 9 Day 69 “அந்தச் சமயத்துல கூட யார்லாம் இருந்தது?” என்று விசே கேட்க அமித், சான்ட்ரா, வினோத், ரம்யா (ஜெயில்) என்று பதில் வந்தது. அமித்தை எழுப்பிய விசே “நீங்கதானே வீட்டு தல. இத்தனை பெரிய பிரச்சினை போயிட்டு இருந்தது. நீங்க பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டுட்டு உக்காந்து இருக்கீங்க” என்று கேட்க “சார்.. நான் கேட்டேன் சார்..” என்று பலவீனமாக ஆரம்பித்தார் அமித். “நாங்களும் வீடியோவை பார்த்துட்டுதான் வந்திருக்கோம். அதனாலதான் திவ்யால இருந்து ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஆர்டர் மறக்காது. வியானா உங்க பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. அவங்களுக்கு இப்படி நடந்தாலும் வேடிக்கை பார்ப்பீங்களா.. அநியாயத்தை யார் வேணா கேக்கலாம். இந்தப் பிரச்சினைல வார்த்தைகள் எல்லை மீறிப் போச்சு” என்றார். பிரச்சினையை வேடிக்கை பார்த்தவர்களுக்கு விழுந்த ஊமைக்குத்து அடுத்ததாக ரம்யா பக்கம் நகர்ந்த விசே “போன வாரம் கம்ருதீன் உங்களை வாடி போடின்னு சொன்னப்ப.. திவ்யாதானே.. உங்களுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாங்க. ஒரு பொண்ணுக்கு நடக்கறத உங்களால கேக்க முடியாதா?” என்று மடக்கிய விசே, அடுத்ததாக சான்ட்ராவை எழுப்பினார். ‘அய்யோ.. பாவம்.. எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்கிற மோடில் எழுந்தார் சான்ட்ரா. “பிரஜினுக்கு இப்படியொரு விஷயம் நடந்தா, நீங்க வேடிக்கை பார்ப்பீங்களா.. திவ்யா இடத்துல உங்களுக்கு நடந்திருந்தா ?” என்று கேட்க சான்ட்ராவிடம் பதில் இல்லை. அடுத்ததாக வினோத். “நான் எவ்வளவோ சொன்னேன் சார். மன்னிப்பு கேட்க நான்தான் கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் சொல்ல, உருக்கமாக கண்ணீர் விடுவது போல் பாவனை செய்தார் விசே. “நாங்கதான் பார்த்தமே.. மன்னிப்பு கேட்க வந்துட்டு.. ரெண்டு பேரும் சிரிக்கறீங்க. BB Tamil 9 Day 69 உங்க நண்பர் கம்ருதீன்.. உங்களையே அவமதிக்கறாரு.. அது கூட உங்களுக்குப் புரியல.. கோர்ட்ல உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மட்டும் எப்படில்லாம் குதிச்சீங்க.. அந்தக் கோபம் இப்ப எங்க போச்சு?” என்று விசே கேள்விகளால் மடக்க வினோத்திடம் பதில் இல்லை. கம்ருதீன் கையைத் தூக்க “நீங்கதானே இந்த முடிவை எடுத்தீங்க.. செஞ்ச தவறுக்கு வருந்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.. இந்த ஷோவிற்கு எதுக்கு வந்தீங்க.. அந்த வேலையைப் பார்க்கலையே.. நாங்க என்ன உங்க வீட்லயா வந்து எட்டிப் பார்த்தோம்.. போன வாரம்தானே உங்களைப் பாராட்டினேன். நீங்க பண்ற செயல்களால நீங்களேதான் உங்க மதிப்பை இழக்கறீங்க.. திவ்யாவை என்ன வார்த்தைகள்லாம் பேசினீங்க. கலாயக்கறதுக்கு அவங்க உங்க பிரெண்ட் கிடையாது. போடி வாடின்னுல்லாம் பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று எரிச்சலுடன் கூறி விட்டு பிரேக்கில் சென்றார் விசே. மைக்கை திரும்பவும் மாட்டி அட்ராசிட்டி செய்த கம்ருதீன் தனக்கு எதிராக சாட்சியம் சொன்ன அரோவிடம் “ஓ.. இப்ப நல்லவங்களா ஆயிட்டிங்களா?” என்று மீண்டும் மைக்கை மாட்டி அட்ராசிட்டி செய்தார் கம்மு. பிரேக் முடிந்து திரும்பிய விசே “கம்மு.. கம்முன்னு இருக்க வேண்டியதுதானே.. ஏன் மைக்கை எடுத்தீங்க… பதில் சொல்லுங்க” என்று கேட்க, மைக் இல்லாமல் கம்ரு பேசியது கேட்கவில்லை. ‘கேக்கலை. சத்தமா..’ என்கிற விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தார் விசே. அடுத்தது கேப்டன்ஸி பற்றிய விசாரணை. ‘வீட்டு தல எப்படியிருந்தாரு?’ என்று கேட்க வழக்கம் போல அனைவரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். “நான் கேட்டப்போ.. நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்க’ என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்தார் அமித். ‘அது நல்லா பண்ணுதுக்கு.. இது நல்லா பண்ணாததுக்கு. ரெண்டும் வேற வேற..” என்று எரிச்சலானார் விசே. BB Tamil 9 Day 69 “பாருவும் கம்முவும் கொடுத்த தண்டனையை ஒழுங்கா செஞ்சாங்களா?” என்று விசாரிக்க “சில விஷயங்கள் பண்ணாங்க” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார் அமித். மற்றவர்களை விசாரிக்கும்போது இருவரும் ஏறத்தாழ ஒன்றுமே செய்யவில்லை என்பது தெரிந்தது. செய்த சிறிய வேலைகளைக் கூட அரைமனதாகவும் அரைகுறையாகவும் மற்றவர்களை கரித்துக்கொட்டிக் கொண்டே செய்தார்கள் என்பதும் தெரிய வந்தது. “ஓ.. அப்படின்னா அமித் சொல்லும்போது மட்டும் செஞ்சாங்களா.. மத்தவங்க சொல்றது பொய்யா..” என்று அமித் மீது மிகையாக கோபத்தைக் காட்டினார் விசே. ‘பதில் சொன்னாலும் பிரச்சினை.. சொல்லா விட்டாலும் பிரச்சினை’ என்கிற மாதிரி தவிப்புடன் நின்றிருந்தார் அமித். வீட்டு தல போஸ்ட்- இந்த சீசனில் நல்ல பெயரை எவருமே வாங்கவில்லை ‘வீட்டு தல’ பொறுப்பை ஓரளவிற்கு சிறப்பாகவே செய்ய முயன்றார் அமித். கம்முவிற்கும் பாருவிற்கும் தண்டனை அளிக்க முயன்றார். அவர்கள் செய்ய முரண்டு பிடிக்கும்போது அஹிம்சை முறையில் சிலுவையை சுமக்க முயன்றார். இயன்ற போதெல்லாம் ‘கம்மு.. இதைச் செய்யுங்க. பாரு அதைச் செய்யுங்க’ என்று வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் அமித் போன்ற பலவீனமான தலயால் சண்டி மாடுகளை வைத்து வண்டி ஓட்ட முடியாது. பிக் பாஸையே மதிக்காத பாருவும் கம்முவும் அமித்தையா மதிக்கப் போகிறார்கள்? திவ்யா பிரச்சினையில் ஆரம்பத்தில் அமித் அமைதியாக வேடிக்கை பார்த்தது தவறு. ஆனால் திவ்யா இதை ஆத்திரத்துடன் சுட்டிக் காட்டியவுடன் “நான் பேசறேன்.. நீங்க அமைதியா இருங்க” என்று தன்னாலான முயற்சிகளைச் செய்தார். ஆனால் இதையெல்லாம் தலைமைப்பண்புடன் ஸ்ட்ராங்காக செய்தாரா என்றால் இல்லை. BB Tamil 9 Day 69 “நீங்க biased-ஆ இருந்திருக்கீங்க அமித். தண்டனையை ஏத்துக்கலாமா, வேண்டாமான்னு அவங்கதான் முடிவு எடுப்பாங்களா, அதையும் ஒழுங்கா பண்ண மாட்டாங்களா.. நீங்க அடுத்தக் கட்டம் போயிருக்க வேண்டியதுதானே.. ‘சொல்லிப் பார்த்தேன். செய்யலைன்னு பிக் பாஸ் கிட்ட போயிருக்க வேண்டியதுதானே..” என்று அமித்திடம் கோபத்தைக் காட்டினார் விசே. ஒருவேளை அமித் பிக் பாஸிடம் சென்றிருந்தால் “சார்.. இந்த கேமை நீங்கதானே ஆடணும்.. ஒவ்வொண்ணுத்துக்கும் பிக் பாஸ் ஸ்கிரிப்ட் தர முடியுமா?” என்றும் விசே மடக்கியிருக்கலாம். தண்டனையை செய்யாமல் டபாய்த்த பாரு -கம்முவிடம் வேறு மாதிரியான தந்திரத்தை பயன்படுத்தி டிராமாவை அதிகப்படுத்தி ஷோவை சுவாரசியமாக ஆக்கியிருக்கலாம் என்பதுதான் விசே சொல்ல வருவதாகத் தோன்றுகிறது. ‘நீங்க செய்ய மாட்டீங்களா. அப்ப நான் செஞ்சிடறேன்’ என்பதில் சுயவதைதான் இருக்கிறதே ஒழிய, சுவாரசியம் இல்லை. BB Tamil 9 Day 69 ‘காமிரா பார்க்காத வேலை என்னதான் செஞ்சீங்க?’ -பாருவை பங்கமாக கலாய்த்த விசே “நிறைய பாத்திரங்கள் போட்டுட்டாங்க.. நாங்க வேலை செஞ்சோம்.. இதையெல்லாம் மத்தவங்க கவனிச்சிங்களான்னு தெரியல. காமிரால பதிவாச்சான்னு தெரியல” என்று பாரு வாயை விட்டு விட “காமிரால பதிவாகாத மாதிரி நீங்க என்ன வேலைதான் பண்ணீங்க?’ என்று டபுள் மீனிங்கில் விசே கலாய்த்தது சுவாரசியமான காட்சி. இத்தனை காமிராக்கள் இருக்கும் போது பாரு வேலை செய்வதை மட்டும் அவை பதிவாக்காமல் விட்டு விடுமா? இந்த சீசனில் நல்ல பெயர் வாங்கிய எந்த ‘தல’யும் இல்லை. அனைவருக்குமே கெட்ட பெயர். ஒருவேளை பாரு வீட்டு ‘தல’யானால் இந்த அவப்பெயரை நீக்குவார் என்று தோன்றுகிறது. (சும்மா. லுலுவாய்க்கு!) ரம்யாவிற்கு காஃபி தந்து வழியனுப்பிய விசே பிரேக் முடிந்து திரும்பி வந்த விசே ‘சரி.. அடுத்த விஷயத்திற்கு போகலாமா?” என்று எவிக்சன் சமாச்சாரத்திற்கு வந்தார். சொல்லி வைத்தாற்போல் மெஜாரிட்டியாக ரம்யாவின் பெயரைச் சொன்னார். பாரு எஃப்ஜேவின் பெயரைச்சொல்ல, திவ்யாவோ கம்முவின் பெயரைச் சொன்னார். எவிக்ஷன் கார்டில் ரம்யாவின் பெயரைப்பார்த்ததும் பெரிய அழுகையொலி கேட்டது. அது ரம்யா அல்ல. சான்ட்ரா. “அய்யோ.. இனிமே நான் தனியா இங்க பண்ணுவேன்’ என்று எல்கேஜி குழந்தை மாதிரி அழ ஆரம்பித்தார். இவர் யாரை நம்பி இந்த ஷோவிற்கு வந்தார் என்றே தெரியவில்லை. BB Tamil 9 Day 69 தன்னை யாராவது pamper செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் இவர் கண்ணை கசக்கிக் கொண்டேயிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேடைக்கு வந்த ரம்யா வீடியோவைப் பார்த்துவிட்டு “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா அழுகையாவும் வருது.. என் மேலயே கோபமா வருது” என்று கலவையான ஃபீலீங்கைச் சொன்னார். “இத்தனை தெளிவா பேசற ரம்யாவை வீட்டுக்குள்ள பார்க்கவே முடியலையே?’ என்றார் விசே காஃபி குடிக்காமல் பைத்தியம்போல் இருந்த ரம்யாவிற்கு ‘யாராவது காஃபி கொடுங்கப்பா” என்று விசே கேட்க, உண்மையிலேயே மேடைக்கு காஃபி வந்தது. “நான் மைக்கை பிடிச்சுக்கறேன்.. நீங்க குடிச்சிட்டே பேசுங்க.. சர்க்கரை சரியா இருக்கா.. டிகாக்ஷன் ஓகேவா?” என்று கலாய்த்தார் விசே. திக்குத்திசை தெரியாமல் பயணிக்கும் சீசன் 9 ரம்யாவை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்த விசே, பாருவையும் கம்முவையும் மைக் மாட்ட அனுமதி தந்தார். “நீங்க மக்கள்கிட்ட இருந்து உங்களை துண்டிச்சிக்கிட்டா, அப்புறம் அவங்க உங்களை துண்டிச்சிடுவாங்க..” என்று வார்னிங் தந்துவிட்டு விசே கிளம்பினார். “இப்பத்தான் ரிலீஃப்பா இருக்கு” என்று மைக் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தார் பாரு. ரொமான்ஸ் சமயத்தில் பாரமாக தெரிந்த அதே மைக், இப்போது இன்பகரமாக இருக்கிறதாம். என்னவொரு மாற்றம்?! BB Tamil 9 Day 69 பாருவும் கம்முவும் மறுபடி ரகசியம் பேசினார்கள். ‘கேம் முடியற வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம்” என்று பாரு சொல்ல “டக்குன்னு முடிவெடுக்காத. ஒரு வாரம் இருந்து பார்ப்போம்” என்று கம்மு உருக்கத்துடன் சொல்ல, காதல் பறவைகள் இரண்டும் ஒவ்வொரு திசை நோக்கி பறந்தன. கம்மு உருக்கமாக பார்க்க, பாரு சோகத்தோடு ‘சூப் சாங்’ பாடுவதோடு எபிசோட் நிறைந்தது. முந்தைய சீசன்களில் உடலை வருத்தும் கடுமையான டாஸ்குகள் இருந்தன. இந்த சீசனில் அப்படியொன்றும் இல்லை. அதற்கே இவர்கள் இப்படி ஆடுகிறார்கள். போதாதற்கு நிறைய விதிமீறல்கள். நிகழ்ச்சியிலும் பெரிதாக சுவாரசியம் இல்லை. சண்டை மட்டும்தான். தட்டுத் தடுமாறி திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் கப்பல் மாதிரி தத்தளிக்கிறது சீசன் 9.

விகடன் 14 Dec 2025 1:42 pm

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் 1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. […]

அதிரடி 14 Dec 2025 1:41 pm

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும்… The post அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:35 pm

அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் வான் வழி தாக்குதல் – 2 பேர் பலி!

அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் சரமாரி வான் வழி தாக்குதல்களைத் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 12) நள்ளிரவில் ரஷியாவிலிருந்து உக்ரைனில் மின்சார உற்பத்தி உள்பட ஆற்றல் துறைக்கான உள்கட்டமைப்புகளையும் துறைமுகங்களையும் குறிவைத்து ட்ரோன்களாலும் ஏவுகணைகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உக்ரைனில் சில பகுதிகள் மின்சார விநியோகம் தடைபட்டு அப்பகுதிகளைச் சேர்ந்தோர் இருளில் தவித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களை விவரித்துப் பேசிய உக்ரைன் அதிபர் […]

அதிரடி 14 Dec 2025 1:30 pm

   மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு!

சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அகில் விஸ்வநாதன் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள… The post மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 1:26 pm

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் ராகுல் காந்திக்கும் அமித் ஷாவுக்கும் இடையே வாக்கு திருட்டு தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அமித் ஷா ராகுல் காந்தியின் உரையில், வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் உட்பட, சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு அமித் ஷாவிடம் சவால் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக சாடினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமடைந்த அமிஷ் ஷா, ``நாடாளுமன்றம் ராகுல் காந்தியின் விருப்பப்படி செயல்படாது. எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் ஆணையம் பாராட்டப்படுகிறது தோல்வியடைந்தால் விமர்சிக்கப்படுகிறது. என்றார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி 'வாக்கு திருட்டு'க்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்துக்கு தயாராகுல் ராம்லீலா மைதனாம் இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல், ``எங்கள் கட்சி ராம்லீலா மைதானத்தில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான போரை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்றார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ்,``ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தப் போராட்டத்துக்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஜார்க்கண்ட் முழுவதிலும் இருந்து கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரதிநிதிகள் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டெல்லிக்கு வந்துவிட்டனர். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்த அறிவிப்புக்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், ``தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் நடுநிலையான நடுவர் இல்லை. இது உண்மையில் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நாங்கள் முழுமையாக ஒரு பிரசாரம் மற்றும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம். ராகுல் காந்தி - மல்லிகர்ஜுன கார்கே ஐந்து கோடி கையெழுத்துகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாங்கள் சந்திப்பிற்கு நேரம் கேட்டுள்ளோம்... நாடாளுமன்றத்திலும் இந்த வாக்குத் திருட்டுப் பிரச்னை குறித்து விவாதித்தோம். எங்கள் தலைவர் நேரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விமர்சிப்பது மட்டுமல்லாமல், நாங்கள் தெளிவான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நிறைய புகார்கள் உள்ளன. என்றார். தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

விகடன் 14 Dec 2025 12:57 pm

சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஒரு வரலாற்றுத் துயரத்தின் குறியீடு. 1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப்… The post சொந்த மண்ணில் ஓர் உரிமைப் போராட்டம்! காங்கேசன்துறை மயான விடுதலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Dec 2025 12:57 pm

பிக் பாஸ் ஆரம்பிச்சு 70 நாளாகியும் இன்னும் உங்களுக்கு தான் புரியல மிஸ்டர் விஜய் சேதுபதி: பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ விஜய் சேதுபதிக்கு தான் இன்னும் எதுவுமே புரியாமல் இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 14 Dec 2025 12:47 pm

உயரும் மகளிர் உரிமைத் தொகை… ரூ.1,000 விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தர்மபுரியில் ஸ்டாலின் உறுதி!

தர்மபுரியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த தொகை உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமயம் 14 Dec 2025 12:37 pm

இந்தோனேசியா வெள்ளம்! 1000-ஐ கடந்த உயிர்ப் பலிகள்; 218 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சும்தரா தீவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள 3 மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில், அங்குள்ள கட்டுமானங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் அதிகமான மக்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 218 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக […]

அதிரடி 14 Dec 2025 12:30 pm

CUET PG 2026 விண்ணப்பம் தொடக்கம்; மார்ச் மாதம் தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க லிங்க் இதோ

முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான முதுகலை க்யூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Dec 2025 12:19 pm

6 மாசத்துல வரும்னு செல்வராகவன் சொன்னது விவாகரத்தை தானா?: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆர்யன் பட பேட்டியில் செல்வராகவன் பேசிய வீடியோவை பலரும் ஷேர் செய்து விவாகரத்து குறித்து தான் அக்டோபர் மாதமே பேசியிருக்கிறாரா இயக்குநர் செல்வராகவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 14 Dec 2025 11:54 am

தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு - பிரேமலதா கொடுத்த அப்டேட்

தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை. விஜய பிரபாகரன் மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம். ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம். கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம். பிரேமலதா விஜயகாந்த் எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம். எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான். காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம். என்றார். திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன - சொல்கிறார் செல்லூர் ராஜூ

விகடன் 14 Dec 2025 11:49 am

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகார் இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி 14 வயது மாணவன் ஒருவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 4 மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். சிகரெட் புகைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த மாணவர்களின் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதில் கடும் மன உளைச்சளுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவன், தன் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகாரளித்தனர். இதன் பேரில், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு மாணவர்கள் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள்மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதுடன், நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சீர்திருத்த பள்ளியில் நான்கு மாணவர்களும் அடைக்கப்பட்டனர்.

விகடன் 14 Dec 2025 11:42 am

மக்கள் சக்தியால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் - செங்கோட்டையன் பேச்சு!

தவெகவில் விருப்பமனு வாங்குவது எப்பொழுது?என்பது குறித்த தகவலை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

சமயம் 14 Dec 2025 11:41 am

ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள […]

அதிரடி 14 Dec 2025 11:30 am

இன்ஸ்டாவில் இருந்து செல்வராகவன் போட்டோக்களை நீக்கிய மனைவி: கஸ்தூரி ராஜா வீட்டில் 3வது விவாகரத்தானு ரசிகர்கள் கவலை

கீதாஞ்சலி செல்வராகவன் தன் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருப்பது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா என்கிறார்கள்.

சமயம் 14 Dec 2025 10:52 am