ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகவீனம் - வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சோதனை
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் திடீர் சுகமும் காரணமாக கடந்த இரு தினங்களாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அம் மாணவர்கள் பலர் ஒரே வகையில் திடீர் சுகயீனம் அடைந்தமைக்கான காரணங்களை அறியும் பொருட்டு தேசிய கல்வியற் கல்லுாரியில் பொது சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட ஆசிரிய மாணவர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்தது இதன்போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி குடிநீரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் உணவின் தரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படும் பகுதிகளை சீர் செய்வதற்கும் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பசுமைப் புரட்சிக்குத் தயாராகும் ரயில்வே: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் முன்னோட்டம்!
இந்தியா, பசுமைப் போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது! நாட்டின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை தூய்மையான மற்றும்
திருமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை பொலிஸார் அகற்றினர்
திருகோணமலை கடற்கரை பகுதியில், சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது. திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஆரம்பிக்கப்பட்டன. நேற்று காலை இது தொடர்பில் அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிலையில் அங்கு பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. பின்னர் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் பணித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாது நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்விடத்துக்கு வந்த பொலிசார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது அதில் பிக்கு ஒருவர் பொலிசாரின் கன்னத்தில் அறைந்ததை தொடர்ந்து, அவ்விடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன் பதட்ட நிலமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம்
ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானாலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளோ நல்ல சம்பளங்களோ வந்து குவிந்து விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறினார் ரஜினி. அவரை திரையுலகத்தில் நன்கு நிலை நிறுத்தியது பாரதிராஜாவின் பரட்டை கதாபாத்திரம் அப்போதெல்லாம் ரஜினி… The post ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம் appeared first on Tamilnadu Flash News .
பீஹாரில் புதிய ஆட்சி.. NDA கூட்டணி எம்.எல்.ஏக்கள் இன்று ஆலோசனை!
பீஹாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!
சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல, அவை ஆவணப் பெட்டகங்கள். தங்கள் ஆட்சிக்காலத்தில் எவை எப்படி நிகழ்ந்தன ஏன் நிகழ்ந்தன என்பன குறித்த தகவல்கள் கல்வெட்டுகளாகப் பதியவைத்தனர். இதன்மூலம் இவை காலத்தில் நிலைத்து நிற்கும் வரலாற்றுப் பேரேடுகளாகவும் அமைந்துள்ளன. அப்படி ஓர் ஆலயம்தான் எசாலம் என்ற ஊரில் நிலைத்துநிற்கிறது. திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊரைக் கடந்து சென்றால் எசாலம் செல்லலாம். இங்குதான் அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இந்த ஈசனை விராமீஸ்வரமுடைய மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பல்வேறு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. குறிப்பாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை ஏன் அமைத்தான் என்பது குறித்த வரலாற்றுத் தகவலும் அடக்கம். மேலும் முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் மூலம், இந்த மன்னர்களின் காலத்தில் இங்கு வெகுசிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்த ஊர், ஸ்ரீராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் ஸ்ரீராமநாதேஸ்வரா் இந்தத் திருக்கோயிலை அமைத்தவர் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதா் ஆவார். ராஜேந்திரன் தனது 15-ம் ஆட்சியாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் நன்னாடு, ஏா்ப்பாக்க மான விக்கிரசோழநல்லூா் ஆகிய ஊர்களை இந்தக் கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தி தெரியவருகிறது. இக்கோயிலின் கருவறை விமானம் முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தள விமானமாக வட்ட வடிவில் திகழும் விமானத்தின் கற்சிற்பங்கள் மிக அழகு. விமானத்தின் மேல்பாகம் இதழ் விரித்த தாமரை போல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் தூங்கா விளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் லிங்க மூர்த்தியான ஸ்ரீராமநாதேஸ்வரா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்மச்சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் இந்த சுவாமிக்குப் பாலும் எண்ணெயும் கொண்டு அபிஷேகம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அரசியலில் வெற்றி, பதவி யோகம் வேண்டுபவர்கள் மேலும் உயர் பதவிகள் அடைய விரும்புபவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் நிச்சயம் வேண்டும் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் கோயில் அம்பிகை ஸ்ரீதிரிபுரசுந்தரி கோயில் மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவாரச் சாளரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் அன்று சூரியக் கதிர்கள் இந்தச் சாளரத்தின் வழியே உள்நுழைந்து ஸ்வாமியின் மீது விழுந்து வணங்கும்படி நிர்மாணித்துள்ளார்கள். சாளரத்தின் மேலேயுள்ள மூன்று துவாரங்களுக்கு அருகில் கூப்பிய கரத்துடன் சிற்பம் ஒன்று திகழ்கிறது. இக்கோயிலை நிர்மாணித்த சர்வசிவ பண்டிதராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சுவாமி சந்நிதி பலிபீடமும் சிற்ப நுட்பத்துடன் திகழ்வது சிறப்பு. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்பிகையைக் கேதாரி அம்மன் என்றும் வணங்குகின்றனா். சதுர்புஜங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியும் அருள்கிறாள் அம்பிகை. இவளின் விழிகளில் தவழும் அன்பும் கருணையும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. சுமாா் 1,000 ஆண்டுகள் புராதனப் பெருமையுடன் திகழும் இக்கோயிலுக்கு பாண்டியர், விஜயநகர மன்னர்கள், செஞ்சி நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் ஆகியோர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்புறத்தில் சாலையில் ஒரு சிலை காணப்படுகிறது. உருவத்தில் ஐயனாரைப் போன்று திகழும் அந்த மூர்த்தியை `கல்வராயன் சிலை’ என்கிறார்கள் மக்கள். ஒருமுறை எசாலம் ஊரிலுள்ள கால்நடைகளை இனம் காண இயலாத நோய் தாக்கியதாம். எவ்வித மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில், ஊரில் ஒருவருக்கு அருள் வந்தது. `கோயிலுக்கு வெளியிலுள்ள சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அபிஷேக நீரைக் கால்நடைகளுக்கு அருந்தக் கொடுத்தால் நோய் நீங்கும்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னார். மக்களும் அப்படியே செய்து அபிஷேக தீர்த்தத்தைக் கால்நடைகளுக்கு அளிக்க, நோய் குணமானது. அதுமுதல் இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து கல்வராயனை அபிஷேகித்துத் தீர்த்தம் கொண்டு சென்று கால்நடைகளுக்குத் தருவது வழக்கமாகிவிட்டது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை எசாலம் சென்று அருள்மிகு திரிபுரசுந்தரியையும் அருள்மிகு ராமநாதேஸ்வரரையும் வணங்கி வரம்பெற்று வாருங்கள். மேலும் சோழர்கால வரலாற்றுச் சிறப்புகளையும் தொல்பொருள் சிறப்புகளையும் அறியலாம். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
தேர்தல் கூட்டணியில் பாமக புதிய முடிவு.. ராமதாஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!
பாமக எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதை மிக விரைவில் அறிவிப்பதாக கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி நடப்பதுதான் பலன் தரும் என்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 10,000 அடிகள் நடப்பது என்பது 8 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குச் சமமானது. தினமும் அவ்வளவு தூரம் நடப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே, அதைப் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால், அதற்காக பத்தாயிரம் அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்கும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கும்போது இதயத்தின் செயல் மேம்படும். அதை எப்படி நடக்கிறோம் என்பதும் இதில் முக்கியம். மிகவும் பொறுமையாக, நீண்ட நேரம் நடப்பது என்பது சிறந்த உடற்பயிற்சியாக இருக்காது. அதை உடலியக்கமாக மட்டுமே கருத முடியும். நீங்கள் 10,000 அடிகளை மிக மெதுவாக, நீண்ட நேரம் நடக்கிறீர்கள், பேசிக்கொண்டே நடக்கிறீர்கள் என்றால் அதன் பலன் முன்னதை விட குறைவாகவே இருக்கும். சிலரால் 5,000 அடிகள்தான் நடக்க முடியும். ஆனால், அதை வேகமாக நடப்பார்கள். பத்தாயிரம் அடிகளை மெதுவாக நடப்பதை விடவும் இது மிகவும் சிறந்தது. walking குறைவான தூரம் நடந்தாலும் வேகமாக நடக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயத்தை கண்டிஷன் செய்ய இது நல்ல பயிற்சியாக அமையும். உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு நிமிடம் மிக வேகமாகவும் அடுத்த ஒரு நிமிடம் மெதுவாகவும் நடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்நிலையில் உங்கள் இதயத் துடிப்பானது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறிக்கொண்டே இருக்கும். அது உங்கள் இதயத்தை கண்டிஷன் செய்ய உதவியாக இருக்கும். இதில் உங்களால் 10,000 அடிகளை நடக்க முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனாலும், இந்த நடை உங்கள் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தியிருக்கும். எனவே, எண்களை முக்கியமாக நினைக்காமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சிறிது தூரம், சிறிது நேரம் நடப்பது என்பதை மட்டும் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷிய போா்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க தீவிரமாக முயற்சிப்பதாகவும், இதன்மூலம் 1,200 உக்ரைன் வீரா்களை விடுவித்து தாயகம் அழைத்து வர முடியும் என்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். முன்னதாக, இதுதொடா்பான பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலா் ருஸ்டெம் உமெரோவ் சனிக்கிழமை கூறியிருந்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில், கைதிகள் பரிமாற்றத்தை […]
மத்திய அரசின் கனவுப் பணி: கேந்திரிய வித்யாலயாவில் 9,126 காலியிடங்கள்! (2025-26)
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (KVS – Kendriya Vidyalaya Sangathan) என்பது இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் முதன்மைப்
கொங்கோவில் சுரங்கப் பாலம் இடிந்து விழுந்தது: 32 பேர் பலி!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ( DRC ) தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். லுவாலாபா மாகாணத்தின் முலோண்டோவில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் உள்ள பாலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக மாகாண உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக அந்த இடத்தை அணுகுவதற்கு கடுமையான தடை இருந்தபோதிலும், சட்டவிரோதமாக தோண்டுபவர்கள் குவாரிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர் என்று மயோண்டே கூறினார். பாலத்திற்கு விரைந்த சுரங்கத் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பாலம் சரிந்து விழுந்ததில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன. மயோண்டே இறப்பு எண்ணிக்கையை குறைந்தது 32 என்று கூறியிருந்தாலும், குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த சுரங்கம் நீண்ட காலமாக காட்டுப்பூனை (wildcat) சுரங்கத் தொழிலாளர்களுக்கும், செயல்பாடுகளை ஒழுங்கமைக்க உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுறவு நிறுவனத்திற்கும், தளத்தின் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் இடையிலான சர்ச்சையின் மையமாக இருந்து வருகிறது என்று அறிக்கை மேலும் கூறியது. மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கனிமமான கோபால்ட்டை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக கொங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் உற்பத்தியில் 80% சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் சுரங்கத் தொழிலை நீண்ட காலமாகப் பாதித்து வருகின்றன. கனிம வளம் மிக்க கிழக்கு கொங்கோ குடியரசு, பல தசாப்தங்களாக அரசாங்கப் படைகள் மற்றும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் வன்முறையால் பிளவுபட்டுள்ளது. இதில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 உட்பட, அதன் சமீபத்திய மோதலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடுமையான மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கியுள்ளது. # Democratic Republic of Congo
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய வீரர் தாவி சமரவீர
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார். குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக, தற்போது அவர் சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ளார். இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்துத் தொடரில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து, ஸ்லோவாக்கியா […]
நாட்டில் தேங்காய் விலையின் அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்
நாட்டில் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 175 முதல் 185 ரூபாயாகவும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 160 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக புதிய செயலி அறிமுகம்
வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போது, இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 06 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் […]
நள்ளிரவில் திருக்கோணமலையில் பதற்ற நிலை ; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறித்த குரல் பதிவில், “8 மணியளவிலே அடாவடியாக சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது. இதன்போது 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” […]
உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்: ஒவ்வொரு நொடியும் ஒரு போராட்டம்!
நவம்பர் 17 – உலக வரைபடத்தில் அன்றாட நிகழ்வுகளில் அதிகம் பேசப்படாத, ஆனால் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட
50 ஆண்டுகள் இல்லாத தண்ணீர்ப் பிரச்சினை: ஈரானில் வறண்டு காணப்படும் நீர் நிலைகள்!
கடுமையான நீர் நெருக்கடியை சமாளிக்க, ஈரானிய அதிகாரிகள் மழைப்பொழிவைத் தூண்டுவதற்காக மேக விதைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மழைப்பொழிவு நீண்ட கால சராசரியுடன் ஒப்பிடும்போது சுமார் 89% குறைந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் அனுபவித்த மிக வறண்ட இலையுதிர் காலமாகும். நாட்டின் வடமேற்கில் உள்ள உர்மியா ஏரிப் படுகையில், மேக விதைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட விமானம் மூலம் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இது ஈரானில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். இதில் மழையாக ஈரப்பதத்தை வெளியிடுவதற்கு இரசாயனங்கள் மேகங்களில் வானில் வீசப்படுகின்றன. ஈரான் இதுவரை கண்டிராத மோசமான வறட்சியை சந்தித்து வரும் வேளையில், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வறட்சியை சந்தித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது. மழைப்பொழிவு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்து வருவதால் முக்கிய நீர்த்தேக்கங்கள் சுருங்கி வருகின்றன. மேலும் அதிகாரிகள் நீர் பயன்பாட்டைக் குறைக்க போராடி வருகின்றனர். மேலும் பேரழிவைத் தவிர்க்க குடியிருப்பாளர்கள் அதைச் சேமிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். ஜூன் 1, 2025 அன்று ஈரானின் வடக்கு அல்போர்ஸ் மலைத்தொடரில் உள்ள கராஜ் ஆற்றின் குறுக்கே உள்ள அமீர் கபீர் அணை அல்லது கராஜ் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவு மற்றும் கோடையின் தொடக்கத்தால் தெஹ்ரான் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நகரம் சில வாரங்களுக்குள் வறண்டு போகக்கூடும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, உர்மியா ஏரி மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஏரியாக இருந்தது. மேலும் அதன் உள்ளூர் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களால் செழித்தது. இப்போது, படகுகள் துருப்பிடித்து வேகமாக உப்பு சமவெளியாக மாறி வரும் நிலத்தில் அசையாமல் நிற்கின்றன. ஏற்கனவே கடுமையான சூழ்நிலையை காலநிலை மாற்றம் கணிசமாக மோசமாக்குகிறது. கடுமையான தண்ணீர் நெருக்கடி தலைநகரம் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் குடிநீர் விநியோகம் குறித்த எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது என்று ஈரானின் அரசு நடத்தும் பிரஸ் டிவி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேக விதைப்பு நடவடிக்கைகள் மே மாத நடுப்பகுதி வரை தொடரும் என்று தேசிய மேக விதைப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முகமது மெஹ்தி ஜவாடியன்-சாதே, கூறினார். மேக விதைப்புகள் விமானம் அல்லது ட்ரோன் மூலமாகவோ வீசப்படுகின்றன. நமது நாடு வறண்ட பகுதிகளில் அமைந்துள்ளது என்பதையும், புதுப்பிக்கத்தக்க நீர் வளங்களுக்கான அவசரத் தேவையையும் கருத்தில் கொண்டு, பல்வேறு நீர்ப்பிடிப்புப் படுகைகளில் மழைப்பொழிவை அதிகரிக்க மட்டுமே மேக விதைப்பு செய்யப்படுகிறது என்று ஜாவியன்-சாதே மேலும் கூறினார். # Iranian water crisis
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை… மிக கனமழை எச்சரிக்கை!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து, நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள் மீது கவனம் குவிந்துள்ளது.
நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!
உணவுக்குழாய்க்கு வருகிறது! இரைப்பையில் இருக்க வேண்டியவை '' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே 'அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது. gut health எப்போதாவது பிரச்னை வந்தால் பாதிப்பு இருக்காது! எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால் வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் பாசுமணி. சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர் அதற்கான காரணத்தை விளக்கினார். 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் இருக்க வேண்டாம்! - மருத்துவர்கள் எச்சரிக்கை! ஏன் தெரியுமா? குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது! ''நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த்தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும். அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்! மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்'’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி. Health: சாப்பிட்டப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..!
வெனிசுலாப் போர்ப் பதற்றம்: கரீபியன் கடலுக்கு வந்தது போர்க் கப்பல்!
வெனிசுலா - அமெரிக்கா இடையேயான பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் கரீபியன் கடலுக்குள் நுழைந்தன. அமெரிக்க கடற்படை தனது மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பல் கரீபியன் கடலில் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது. வெனிசுலாவுக்கு எதிராக வெள்ளை மாளிகை தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில் , அமெரிக்க கடற்படை ஞாயிற்றுக்கிழமை அதன் மிகவும் மேம்பட்ட போர் கப்பல்கள் கரீபியன் கடலுக்கு வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தியது. யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மற்றும் அதனுடன் இணைந்த கேரியர் தாக்குதல் கப்பல்களும் வந்தடைந்தன. இதில் போர் விமானங்கள், இரண்டு வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பாண்கள் மற்றும் பிற துணை கப்பல்கள் மற்றும் விமானங்கள் அடங்கும். ஆபரேஷன் சதர்ன் ஸ்பியரின் ஒரு பகுதியாக கரீபியனில் ஏற்கனவே பல அமெரிக்க போர்க்கப்பல்களுடன் இணைந்ததாகத் அமொிக்கக் கடற்படையின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஒரு டஜன் கடற்படைக் கப்பல்களும், சுமார் 12,000 மாலுமிகளும், கடற்படையினரும் தற்போது கரீபியனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள், எங்கள் பிராந்தியத்தை சீர்குலைக்க முயலும் நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளன என்று கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவை மேற்பார்வையிடும் அமெரிக்க தெற்கு கட்டளைத் தளபதி ( SOUTHCOM ) அட்மிரல் ஆல்வின் ஹோல்சி ஒரு அறிக்கையில் கூறினார். # US warships Caribbean Sea # Venezuela tension # USS Gerald R. Ford
நவம்பர் 17, 2025 – வங்காளதேசம் மீண்டும் ஒருமுறை அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மாணவர்களின் பெரும்
பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி படுமோசமாக சொதப்பி, தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, இந்திய ஏ அணி ஸ்டார் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர்.
சர்வதேச மாணவர்கள் தினம்: எதிர்காலத்தின் சிற்பிகள்!
சர்வதேச மாணவர்கள் தினம் (International Students’ Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள
நாம் ஏன் குண்டாகிறோம்? தொப்பைக்குக் காரணமான ‘கார்போஹைட்ரேட்’சாம்ராஜ்யம்!
“நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ ஸ்லிம்மா இருந்தேன் தெரியுமா?” – இந்த வாக்கியத்தை நம் வாழ்வில் ஒரு முறையாவது
தமிழகத்தில் இன்று காலை மிதமான மழை… சென்னை முதல் கன்னியாகுமரி வரை; IMD வெளியிட்ட லிஸ்ட்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பது தெரிகிறது. இதுபற்றி விரிவாக இங்கே பார்த்து விடலாம்.
10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருமானம், 186.1 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரி-ஒக்டோபர் காலகட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த மொத்த வருமானம், 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு
திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை பௌத்த பிக்குகள் குழுவொன்று, திருகோணமலை கடற்கரைக்கு வந்து, வழிபாடுகளை மேற்கொண்டதுடன், புதிதாக விகாரை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சிறி சம்புத்த ஜயந்தி போதிவர்த்தன பௌத்த ஆலயம் என்ற பெயரில் பாரிய பெயர்ப்பலகையும் அந்த இடத்தில் நாட்டப்பட்டிருந்தது. அனுமதியின்றி கட்டப்படும் விகாரை தொடர்பாக,
சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முந்தைய அரசாங்கத்தின் மூலம் மதுபான உரிமங்களைப் பெற்று, ஆடம்பர பல்பொருள் அங்காடிகளை தொடங்கியதாக, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக சிவில் சமூக ஆர்வலர் சஞ்சய மஹாவத்த என்பவர், லஞ்சம் அல்லது ஊழல்
சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கு உதவ 37 ஆலோசகர்கள்
சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் ஏழு அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 37 ஆலோசகர்களை நியமித்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் அனுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்திற்கு 10 ஆலோசகர்களையும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 14 ஆலோசகர்களையும் நியமித்துள்ளார். அதிபர் மற்றும் பிரதமருக்கான
ஓர் உயிர் எச்சரிக்கை! தேசிய வலிப்பு நோய் தினம்: நாம் அறியாத அபாயங்கள் என்னென்ன?
நவம்பர் 17 – இந்நாள், தேசிய வலிப்பு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வலிப்பு நோய் (Epilepsy) குறித்த தவறான புரிதல்களை
இரத்தக் குழாய்க்கு உள்ளேயே சென்று சிகிச்சையளிக்க உதவும் கடுகு விதையளவு ரோபோ: சுவிஸ் கண்டுபிடிப்பு
நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். கடுகு விதையளவு ரோபோ சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலுள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த மைக்ரோ ரோபோட்டை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு மில்லிமீற்றர் அகலமே கொண்ட இந்த ரோபோக்களை வெளியிலிருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த ரோபோக்கள், நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து, தேவையான மருந்துகளை பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்துக்கே கொண்டு சென்று சிகிச்சையளிக்க உதவும். அதாவது, பக்கவாதம், புற்றுநோய் போன்ற […]
எதியோப்பியா கொடிய மார்பர்க் வைரஸ் பரவுவதை உறுதி செய்தது
ஆப்பிரிக்கா நோயத் தடுப்ப மையங்களின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் ஜீன் கசேயா எதியோப்பியா நாட்டில் மார்பர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது எபோலா போன்று கொடிய நோய்க் கிருமிகளில் ஒன்றாகும். இந்த நோய்த் தொற்று கடுமையான இரத்தப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்துகிறது. இந்நோயின் தாக்கம் 21 நாட்கள் வரை நீண்டு செல்கிறது. 25 முதல் 80 விழுக்காடு வரை இறப்பைக் கொண்டுள்ளது. எதியோப்பியாவின் தெற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. மார்பர்க் வைரஸ் நோய் (MVD) தேசிய குறிப்பு ஆய்வகத்தால் (எத்தியோப்பியாவில்) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் (The Africa Centres for Disease Control) தெரிவித்துள்ளது. மேலும் தொற்றுநோயியல் விசாரணைகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வுகள் நடந்து வருகின்றன, மேலும் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு கிழக்கு ஆப்பிரிக்காவில் முன்னர் அடையாளம் காணப்பட்டவற்றுடன் ஒற்றுமையைக் காட்டுகிறது என ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது. எதியோப்பியாவின் ஜிங்கா பகுதியில் இந்த நோயின் பரவல் உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் எத்தியோப்பிய சுகாதார அதிகாரிகள் விரைவாக செயல்பட்டதாக ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்புத் தெரிவித்தது. கிழக்கு ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளுக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும், பயனுள்ள பதிலை உறுதி செய்வதற்கும் எத்தியோப்பியாவுடன் இணைந்து செயல்படும் என்று ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்பு மேலும் கூறியது. Marburg virus
‘காஸாவில் சா்வதேச சட்டங்களை மீறுகிறது இஸ்ரேல்’
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதைத் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் துணைப் பொதுச் செயலா் நடாலி பூக்ளி தெரிவித்துள்ளாா். இது குறித்து, பிரஸ்ஸெல்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா் அங்கு ஊடகங்களிடம் கூறியதாவது: காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் தடையின்றி செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். அதற்காக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். யுஎன்ஆா்டபிள்யுஏ-விடம் […]
முருகானந்தம் தவம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியாகிப் பெரு வெற்றிபெற்ற திரைப்படம் ‘திருவிளையாடல்’ .அந்தப்படத்தில் கூத்தனாக வரும் சிவாஜிகணேசனாவுக்கும் தருமியாக வரும் நாகேஷுக்குமிடையில் கேள்வி பதில் வடிவில் இடம்பெறும் காட்சி இன்றுவரை மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாதது. அந்தளவுக்கு அந்தக்காட்சி வரவேற்பை பெற்றிருந்தது . அந்தக்காட்சியில் தருமியாக வரும் நாகேஷ் எழுப்பும் கேள்விகளும் கூத்தனாக சிவாஜி கணேசன் அளிக்கும் பதில்களும் தற்போதைய இலங்கை அரசியலுக்கும் கட்டுப்படுத்தமுடியாதிருக்கும் பாதாள உலக குழுக்களின் நடவடிக்கைகளும் மிக இலகுவாகப் பொருந்தக் […]
திருகோணமலையில் வீட்டுக்குள் நடத்தப்பட்ட தீடிர் சோதனையால் சிக்கிய குடும்பஸ்தர்
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை சிறைச்சாலையில் 53 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் 2025 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டார். இருந்த […]
Gen Z தலைமுறை.. முதல்முறை வாக்காளர்கள்.. தேர்தலில் சந்திக்கும் இன்னல்கள்!
2026 தேர்தலில் முதல்முறை வாக்களிக்கும் Gen Z இளைஞர்கள், அரசியல் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இயங்கும் இவர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் புதிய படிவ நடைமுறைகள் வாக்களிப்பதில் சந்தேகத்தை எழுப்புகின்றன.
ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பஸ் ; 3 பேர் பலி
ஐரோப்பாவில் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பஸ் ஒன்று அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீதே இந்த பஸ் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் […]
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை
பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை என்பவற்றுக்கு வருகை தருவது வழக்கம். மக்கள் கோரிக்கை எனினும், இன்றைய தினம் (16) மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கி […]
தமிழகப் பள்ளிகளின் அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை 2025 –முழு விபரம்!
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான (Half-Yearly
தமிழ்நாட்டில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாளை 17ந் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சற்று முன் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் குழந்தை கொலையாளி லூசி லெட்பி வழக்கு – பிரிட்டிஷ் செவிலியர்கள் எழுப்பும் அதிர்ச்சிக்குரல்!
இங்கிலாந்தில், மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளைக் கொலை செய்ததாகச் செவிலியர் லூசி லெட்பி (Lucy Letby) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு,
ஆண்ட்ரூ மனைவியின் பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது…புதிய தகவல்
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியான சாராவின் நிலை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது. சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ பிரித்தானிய இளவரசரும் மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் […]
நம்மை ஸ்கிரீன் அடிமைகள் ஆக்கிவிட்ட இணையம் : வரமா? சாபமா?
நாம் அனைவரும் இன்று, கையில் உள்ள சிறிய திரைக்குள் உலகையே அடைத்துவிட்டோம். உணவு உண்பது முதல் உறங்குவது வரை, நிமிடத்திற்கு
மகிந்த நாயும் ஹெலியில் பறந்தது!
மஹிந்த நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவீனங்களை அநுரகுமார திஸாநாயக்க குறைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 124 மில்லியன் ரூபாய் செலவழித்துள்ளார். அதே மாதிரி 2025 ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை தோழர் அநுரகுமார திஸாநாயக்க 79.9 மில்லியன் ரூபாய் செலவழித்து உள்ளார். இங்கு 44.1 மில்லியன் ரூபாய் மீதம் படுத்தப்பட்டு மக்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு வரும் போது இரண்டு உலங்கு வானூர்திகளில் வருவார்.. அவர் வடக்கில் பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் கொழும்பில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. மக்கள் பணம் வீண்விரயம் செய்யப்பட்டது. ஆனால் எமது ஜனாதிபதி இலங்கையின் எந்தப்பாகம் சென்றாலும் இரண்டு வாகனங்களுடன் சென்று மக்கள் பணம் வீண் விரயம் செய்வதை குறைத்துள்ளார். வெளிநாட்டு பயணங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதிமார் அதிக செலவீனங்களை செய்துள்ளனர். 2010-2014 வரை மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி அவர்கள் 3572 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். 2017 -2019 வரை மைத்திரிபால சிறிசேன அவர்கள் 384 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார். 2020-2022 வரை கோட்டபாய ராஜபக்ச அவர்கள் 126 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். ஆனால் 2024-2025 பெப்ரவரி வரை எங்களுடைய ஜனாதிபதி வெறுமனே 1.8 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். இதை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக தெரிகிறது. இதற்கு மேலாக மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 2013 ஆம் ஆண்டு 1144 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்துள்ளார். இது யாருடைய பணம். இது தான் இந்த நிலைக்கு காரணம். எங்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயலுங்கள். மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது முழுக் குடும்பத்திற்கும் அரச நிதியை செலவு செய்தார். நாயை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்தி உள்ளார். மஹிந்தவின் மகன் யோசித ராஜபக்ச. யப்பான் செல்ல வெளிவிவகார அமைசரின் மூலம் 20 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அவரது மகன் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று 21 மாதம் அங்கு இருந்தார். அதற்காக வெளிவிவகார அமைச்சின் பணம் செலவிடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஐ.நாவில் உரையாற்றுகின்ற போது அதனை தொகுத்து வழங்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார். இவ்வாறு தான் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட து. ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. முன்னுதாரணமாக நடந்து காட்டுகின்றனறோம்.
தமிழர் பிரச்சனையை ஆட்சியாளர் தரப்பில் யாருடன் பேசலாம்?நம்பகமானவர் யார்? பனங்காட்டான்
ஜனாதிபதி அநுர குமர விரைவில் தங்களுடன் பேச்சு நடத்தவிருப்பதால் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை தமிழரசுக் கட்சி தவிர்த்தது நல்லெண்ண அறிகுறியா அல்லது அதன் பலவீனமா? இன்றைய அரசியல் சுவாத்தியத்தில் தமிழர் தரப்பு பேச்சு நடத்த நம்பகமான பொருத்தப்பாடுடையவர் ஜனாதிபதி அநுரவா? அல்லது ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவா? அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு (பாதீடு) திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்பார்த்ததுபோல 160 வாக்குகளைப் பெற்று 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. 42 வாக்குகள் மட்டுமே எதிராகக் கிடைத்தன. எதிரணியிலிருந்துவரும் மலையக மக்களின் பிரதிநிதிகளான மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வரவு செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டமைக்கான நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. இவர்கள் நால்வரும் முன்னைய ஆட்சிகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இரண்டாம் வாசிப்பின் மீதான சகல விவாதங்களிலும்; இதனை எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கூறப்படாமை, பாதுகாப்புத்துறைக்கு அதீத ஒதுக்கீடு ஆகியவைகளை கண்டித்து உரையாற்றியது. ஆனால், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதி விரைவில் தங்கள் வேண்டுகோளை ஏற்று தங்களுடன் பேசவிருப்பதால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வார் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையால் இதனை எதிர்த்து வாசக்களிப்பதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் வாக்களிப்பிலிருந்து விலகுவதாக இவர்கள் அறிவித்தனர். இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அரசு தரப்பு தமிழர் விவகாரத்தில் செய்யத் தவறியவைகளை சுட்டிக்காட்டி தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த தமிழரசு கட்சி எம்.பிக்கள், ஜனாதிபதி அநுரவை கோபப்பட வைக்கக்கூடாதென கருதியே வாக்களிப்பில் பங்குபற்றுவதை விலக்கிக் கொண்டனராம். அதாவது, அவரை கோபப்பட வைத்தால் எதிர்பார்க்கப்படும் அவருடனான சந்திப்பில் பலன் கிடையாது என்பது இதற்கு அர்த்தம். கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டாரநாயக்கவிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வரையான அனைத்து ஆட்சித் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தமிழினம் (ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வார்த்தையில் இது தமிழ்ச்சாதி) இதற்கு முன்னர்; ஒருபோதும் ஆட்சிக் கதிரையில் ஏறாத ஜே.வி.பி.யில் (தேசிய மக்கள் சக்தி) நம்பிக்கை வைத்துள்ளது. இதனால், அந்த நம்பிக்கை வீணாகக்கூடாது என்ற அச்சத்தில் அரசை எதிர்த்து வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போதெல்லாம் சில நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. எனினும், வாக்களிப்பு நிறைவேறிவிடும். ஆனால், இலங்கை அரசு எப்போதும் வாக்களிக்காத நாடுகளின் எண்ணிக்கையை இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து அறிவிப்பதுண்டு. இந்த வரிசையில், தமிழரசுக் கட்சி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததை தமக்கு ஆதரவான வாக்குகளாக அநுர தரப்பு சேர்த்துக்கூற முடியும். அல்லது தமி;ழரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லையென்று கூறுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சின் மீதும் தனித்தனியாக விவாதம் இடம்பெறும். தமிழினப் பிரச்சனை தீர்வு, மகாவலி திட்ட சிங்கள குடியேற்றம், தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகள் நிறுவுதல், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, பாதுகாப்பு அதிக நிதி ஒதுக்கீடு என்று ஒவ்வொரு விடயத்திலும் தமிழரசு எம்.பிக்கள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள். டிசம்பர் ஐந்துக்கு முன்னர் அநுர குமர இவர்களைச் சந்தித்து ஏதாவது உறுதியளித்தால் மூன்றாவது வாசிப்பின்போது மௌனமாகி விடுவார்களா அல்லது இதிலும் வாக்களிக்காது தவிர்த்துக் கொள்வார்களா? அநுர குமர தந்திரமான அரசியல்வாதி. வசீகரமான தோற்றத்தோடு நம்பிக்கை ஊட்டும் வகையில் நைசாகப் பேசக்கூடியவர். மாகாண சபைத்தேர்தல் நடக்கும் என்பார் - ஆனால் எப்போது என்று சொல்ல மாட்டார். புதிய அரசியலமைப்பில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்பார் - அதுவும் எப்போது என்று சொல்ல மாட்டார். தமிழரசுக் கட்சியின் எட்டு எம்.பிக்களுடன் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் அநுரவை சந்தித்து உரையாட ஆவலோடு காத்துள்ளனர். இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு காத்திருந்து ஏமாந்த நிலைமை வராது என நம்புகின்றனர். தேசிய மக்கள் அரசு தமிழர் பிரச்சனை விவகாரங்களில் எவ்வாறு செயற்படப் போகிறது என்பதை அறிய வேண்டுமானால் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியை உணர்ந்து கேட்க வேண்டியது அவசியம். என்.பி.பி. என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரிவதாகச் சொல்லப்பட்டாலும் இதனை ரிமோட்டில் இயக்குவது ஜே.வி.பி. 1971லும், 1987 - 1989லும் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிய சேகுவேரா என்பது இதன் முன்னைய பெயர். றோஹண விஜேவீர உட்பட ஆயிரமாயிரம் தோழர்களை அரச ஆயுதங்களுக்கு பலி கொடுத்தவர்கள் இவர்கள். இறுதியில், ஜனநாயக ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. ரஷ்யா, சீனா, கியுபா என்று பரவலாக அறியப்படும் நாடுகளின் சித்தாந்தத்தில் பிறப்பெடுத்த அமைப்பு இது. சீனாவே இவர்களின் நட்பார்ந்த தோழமை நாடு. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அநுர குமர, பிரதமர் ஹரிணி அமரசேகர, மூத்த அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் பிமல் ரத்னநாயக்க உட்பட பலர் சீன விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தமது தோழர் பட்டாளத்துடன் சீனா சென்று முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார். நாடு திரும்பிய இவர் முதலாவதாகத் தெரிவித்த முக்கிய விடயம், ஒரு அரசாங்கம் தனது திட்டங்களை முழுமையாக செயற்படுத்த 15 - 20 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டுமென்பது. சீனத் தலைவர்கள் தம்மிடம் இதனைத் தெரிவித்ததாக இவர் கூறியிருந்தார். டான் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த செவ்வியில், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்போது மாகாண சபை முறைமை நீக்கப்படும் என்ற கருத்தை ஒளிவு மறைவின்றி கூறியிருந்தார். அதேசமயம், புதிய வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை 2026ம் ஆண்டில் நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். எனினும், புதிய எல்லை நிர்ணயம் முடிவடைந்த பின்னரே இத்தேர்தல் நடைபெறுமென்றும் இவர் குறிப்பிட்டிருந்தார். புதிய எல்லை நிர்ணயத்துக்கு மூன்று ஆண்டுகள் செல்லலாமென்ற விடயமும் ஆட்சித் தரப்பால் சொல்லப்படுகிறது. அப்படியானால் இது முடிவடையும்போது இந்த அரசின் பதவிக்காலம் நான்காவது ஆண்டைத் தாண்டிவிடும். அப்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவைகளுக்கான வேலைகள் மும்முரமாக இருக்கும். இவ்வேளையில் மாகாண சபைத் தேர்தல் பற்றி யாருமே பேச மாட்டார்கள். அது காணாமலே போய்விடும்.. புதிய அரசியலமைப்பு என்பதும் கானல் நீராகவே மாறலாம். இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்தபோது டொனமூர் அரசியலமைப்பும் சோல்பரி அரசியலமைப்பும் இருந்தன. 1972ல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க சிறீலங்கா சோசலிச குடியரசு என்ற பெயருடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தினார். சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவிருந்த ஒரேயொரு அம்சமான 29(2)ம் பிரிவு இதனால் பறிக்கப்பட்டது, 1977ம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978ல் அதிமேதகு ஜனாதிபதி என்ற பதவியுடனான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றினார். அடுத்த பத்தாண்டுக்குள் இந்த அரசியலமைப்புக்கு 14 திருத்தங்களைக் கொண்டு வந்த சாதனைமிகு தர்மி~;டர் இவர். தங்கள் பிறப்புரிமையைக் கேட்ட தம்pழரருடன் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று ராணுவ துப்பாக்கிகளை தூக்கிக் காட்டியவரும் இவரே. 47 ஆண்டுகளின் பின்னர் புதிய அரசியலமைப்பினூடாக சகலரின் பிரச்சனைகளும் தீர்க்கப்படுமென்று ரில்வின் சில்வா கூறுகிறார். அந்த புதிய அரசியலமைப்பில் ராஜிவ் - ஜே.ஆர். ஒப்பந்தத்தால் பிறந்த மாகாண சபை முறைமை நீக்கப்படுமென்றும் கூறியுள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சித்தரப்பில் யாருடன் நம்பிப் பேச முடியும்? அதற்கான நம்பகத்தன்மை உள்ளவர் யார்? ஜே.வி.பி.யின் அலங்கார தேசிய மக்கள் ஆட்சியின் முகமாக அநுர குமர நிறுத்தப்பட்டுள்ளார். இதன் நாடியும் நாளமுமாக இருப்பவர் ரில்வின் சில்வா. அப்படியானால் தமி;ழர் தரப்பு யாருடன் பேச்சு நடத்த வேண்டும்? அநுர குமர திஸ்ஸநாயக்கவுடனா அல்லது ரில்வின் சில்வாவுடனா?
``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்
பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது. Oxford Union Society நவம்பர் 13-ம் தேதி ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் இந்தத் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) உள்ளிட்டோரும், ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) உள்ளிட்டோரும் எதிரெதிர் பக்கத்தில் இருந்தனர். தீர்மானத்தை ஆதரித்து பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே தனது உரையில், ``இஸ்ரேல் காலனித்துவ சக்திகளால் நிறுவப்பட்ட ஒரு காலனித்துவ நாடு. சட்டத்துக்கு அப்பாற்பட்ட நாடாக இஸ்ரேல் செயல்படுகிறது, ஐ.நா தீர்மானங்களை மதிப்பதேயில்லை. இஸ்ரேல் அரசானது அணு ஆயுதம் ஏந்தியதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்ட காலனித்துவ ஆட்சியின் மையமாகவும் உள்ளது. இங்கே மிருகத்தனமான ஆக்கிரமிப்பு, குற்றங்கள், இனப்படுகொலை நடக்கிறது. இஸ்ரேல் இப்பகுதியை (பாலஸ்தீனம்) மீண்டும் மீண்டும் மோதல்களுக்குள் இழுத்து வருகிறது. இஸ்ரேல் ஒரு தீய நாடு, அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, காலனித்துவ மனநிலையில் உள்ளது. பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேல்தான் மிகப்பெரிய காரணம் என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும் என்று கூறினார். பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அவரைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிய ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர், ``இஸ்ரேல் ஈரானைவிட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து தவறானது மட்டுமல்லாமல், யதார்த்தத்தில் தலைகீழானது. பிராந்திய ஸ்திரத்தன்மையானது, போர்களை யார் தொடங்குகிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறதே தவிர, யார் அவற்றை நிறுத்துகிறார்கள் என்பதன் மூலம் அல்ல. ஐந்து அரபு நாடுகளில் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதில்லை. ஆனால், ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதைச் செய்கிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளும் இதனை அறியும். Gaza: Trump கூறிய பிறகும் தாக்குதலை தொடரும் Israel - அமைதி திரும்புமா? | Decode அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன. ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும். தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன. ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது. அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது என்றார். இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது. மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?
எலான் மஸ்க் கண் இமைத்தால் ரூ. 2.6 லட்சம் சம்பளம்!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பு உலகையே அசரவைக்கும் அளவுக்கு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் நிறுவனரும் எக்ஸ் (டிவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடமிருந்து ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பைப் பெற்றுள்ளார். உலக நாடுகளில் 170 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியே ஒரு டிரில்லியன் டாலரைவிட குறைவுதான். ஒரு டிரில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 88.6 லட்சம் கோடி. […]
6 அங்குல துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது
சுமார் 6 அங்குல நீளமுள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைத்துப்பாக்கி பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரௌனிங் ரகத்தைச் சேர்ந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் விசாரணை நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் விசாரணை பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் […]
மலையகமும் தேசிய மக்கள் சக்தி வசம்!
பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தினை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானம் செய்துள்ளது. எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 200 ரூபா கொடுப்பனவு சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்கலை தடுக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர் . இதற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் நடைபெற்றது .இதன் போது பொகவந்தலாவ நகரில், தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சவப்பெட்டியினை ஏந்தி ஊர்வலமாக சுற்றி வந்து எதிர்கட்சியினர் சிலரின் புகைப்படத்தினையும் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்! காஷ்மீர் கூட்டாளி கைது- NIA பகீர் தகவல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும் இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஜித் அலி என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
ஒரு காலத்தில் பக்தி பட பாடல் என வியந்த பாடல்- ஸ்ரீகிருஷ்ணகானம்
ஒரு காலத்தில் கோவில் திருவிழாக்களில் இருந்து அனைத்து பக்தி சார்ந்த நிகழ்வுகளிலும் இந்த பாடல்களை கேட்டு இருப்பீர்கள். மார்கழி மாத காலை பஜனையில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை எங்கோ ஒரு கோவிலில் காற்றலைகளில் தவழ்ந்து வருவதை கேட்டு இருப்பிங்க. அதே… The post ஒரு காலத்தில் பக்தி பட பாடல் என வியந்த பாடல்- ஸ்ரீகிருஷ்ணகானம் appeared first on Tamilnadu Flash News .
மெட்ரோ நிலையங்களில் இப்படியொரு மாற்றமா? பயணிகளுக்கு சாதகமா.. பாதகமா?
டெல்லியில் மூன்று ரயில் நிலையங்களின் பெயர்கள் மீண்டும் மாற்றப்பட்டது. பிதம்பூரா, பிரசாந்த் விகார் மற்றும் ஹைதர்பூர் பத்லி மோர் ஆகியவை இப்போது புதிய முறையில் அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இளஞ்செழியன்:சுமாவுக்கு எதிரான சதியா?-மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்!
முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் பிரவேசிப்பது, தமிழ் அரசியல் சாக்கடையைப் பூக்கடை ஆக்குவேன்என்ற அறிவிப்பு, தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும் முதல் முறையாகத் தென் பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளையும், பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருப்பது தமிழ் தேசிய கட்சிகளுக்குப் பாதகமான சூழலை அதிகரித்துள்ளது. இந்த அபாயகரமான சூழ்நிலையில் எதிர்காலத்தில் தமிழர்களின் நியாயமான உரிமைகளை பெறும் நோக்குடன் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பின்னடைவு வடக்கு மாகாணத்தில் உள்ள தேர்தல் மாவட்டங்களின் ஆகப்பிந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதைக் காட்டுகிறது. தமிழ் கட்சிகளின் தோல்விக்கான காரணங்கள் தமிழ் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்கள் காரணமாகவே அவை தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தன. இந்த எதிர்மறையான காரணிகளில் 2024 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த ஏமாற்றங்களுக்கு பின்வரும் காரணங்களை கூற முடியும். 1. அதிகாரப் பரவலாக்கம், போர்க் குற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்படாத நிலை. பல தசாப்தங்களாகக் தமிழ் தேசியக் கட்சிகள் வெறும் வாய் கிழியக் கத்துவதோடு ஜெனிவாவுக்கு ஓசிக்காசில்போய் பக்க அமர்வுகளில் பங்கெடுப்பதுடன் நிறுத்திக்கொள்வது. 2. உட்கட்சி மற்றும் கட்சிகளின் மோதல்: கொள்கை ரீதியான பிரசாரங்களைத் தவிர்த்து, தனிநபர் மீது சேறு பூசுவதற்கே முக்கியத்துவம் அளித்தல். தமிழர்களின் உரிமைகளை மறுத்த சிங்கள பௌத்த கட்சிகளுடன் மோத வேண்டிய வாட்கள் தமிழ் தேசிய உறையினுள் தமக்குள் தாமே மோதிக்கொண்டது. 3. வெற்றுச் சொல்லாக தமிழ் தேசியம்: தமிழ் தேசியக் கட்சிகள் எவற்றுக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஈழத்தில் தமிழினத்தைத் தக்க வைப்பது, ஏழைகள் மற்றும் ஊறுபடும் நிலையில் இருப்போரைப் பாதுகாக்கும் எந்தவொரு செயல்திட்டமும் இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குரிய காரணங்கள் வடக்கு மாகாணத்திலும் நாட்டிலும் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றதற்குக் கீழ்க்கண்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1. ஊழலுக்கு எதிரான நம்பிக்கை: நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் 75 வருட காலமாக புரையோடிப்போய் உள்ள ஊழலே காரணம் என்றும், “அதை NPPயாலேயே ஒழிக்க முடியும்” என்ற மக்களின் நம்பிக்கை பெரும் அலையாக உருவானது. 2. மாற்றத்தை விரும்பிய மக்கள்: மாறி மாறி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அவற்றிலிருந்து உருவான கட்சிகளுக்கும் வாக்களித்து ஏமாற்றம் அடைந்த தமிழ் பேசும் மக்கள், ஒரு மாற்றத்தை வேண்டியிருந்தனர். மட்டக்களப்பில் NPP ஏன் தோற்றது? மட்டக்களப்பில் NPP பிரபலமற்ற, மலையகத்தை சேர்ந்த ஒருவரது ஆலோசனையை கேட்டு, உள்ளுரில் பிரபலமானவர்கள், NPP யில் போட்டியிடவந்த முன்வந்தவர்கள் மகளீர் அமைப்புகளை சேர்ந்தவர்களை புறம்தள்ளி, தமக்கு வேண்டியவர்களை, அதாவது மட்டக்களப்பான்அல்லாத பிரபலம் அற்றவர்களை நிறுத்தியது தமிழரசுக் கட்சியை இலகுவாக வெற்றி பெற வைத்தது. உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தமிழ் தேசியத்துக்கு வெற்றியா? உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் பெற்றிருந்த நிலைக்கும், மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் காரணம், NPPக்கு அடிமட்டத்தில் வேலை செய்யக்கூடிய பிரபல வேட்பாளர்கள் இல்லாமையே ஒழிய, தமிழ் தேசியக் கட்சிகள் மக்களிடம் பாவமன்னிப்பை பெறவில்லை என்பதே உண்மை. தற்போதைய கள நிலவரம் தோட்டத் தொழிலாளர் ஆதரவு: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை NPP அதிகரித்தது, அவர்களின் ஏகோபித்த ஆதரவை NPPக்கு வழங்கியுள்ளது. இது வட பகுதியில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குகளையும் எதிர்வரும் தேர்தலில் NPP பெறக்கூடிய ஏதுநிலையை உருவாக்கியுள்ளது. மன்னார் காற்றாலை மற்றும் சில பிரச்சினைகளில் NPP தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றாலும், முன்னைய ஆட்சியாளர்களை விட NPP மேலானது என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர். ________________________________________ ⚖️ இளஞ்செழியனின் அரசியல் பிரவேசத்தின் சாதக பாதக காரணிகள் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் ஈடுபடுவதற்கான சாதகமான மற்றும் பாதகமான காரணிகளை அவர் அல்லது அவரை பதவிக்கு கொண்டுவர நினைப்போர் ஆராய்வது, அவரது வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்க உதவும். ✅ சாதகமான காரணிகள் • ஊழலுக்கு அப்பாற்பட்ட பிம்பம்: அவர் முன்னாள் நீதிபதியாக இருந்தமையும், அவரது துணிகரமான தீர்ப்புகளும், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்ற அவரது பிம்பமும் தமிழ் கட்சிகளில் ஏமாற்றம் அடைந்துள்ள தமிழ் மக்களை வாக்களிக்கத் தூண்டும். • சட்ட அறிவு: சட்டத்துறையைச் சேர்ந்தவராக இருப்பதால், 13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் அவருக்குப் போதிய அறிவும் திறமையும் இருப்பதாக வாக்காளர்கள் கருதுவார்கள். ❌ பாதகமான காரணிகள் 1. கட்சி/அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவின்மை: கட்சி அல்லது அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பது முதன்மையான பின்னடைவுக்குரிய காரணியாகக் கருதலாம். தமிழரசுக் கட்சியின் தீவகப் பிரதேசவாதிகளின் ஆதரவைத் தவிர வேறு ஒரு கட்சியோ அல்லது அமைப்புகளோ அவருக்குத் துணையாக இருப்பதாகத் தெரியவில்லை. 2. தலைமைத்துவப் பின்னடைவுகள்: இளஞ்செழியன் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவராக அறியப்பட்டிருப்பதும், நிர்வாகப் பொறுப்பில் அனுபவம் இன்மையும் அவரது தலைமைத்துவத்துக்குப் பின்னடைவாக அமையக்கூடும். உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வு தரவில்லை என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்து இருப்பது அவர் மீது தமிழ் மக்களின் அனுதாபத்தை ஏற்படுத்திய போதும், அந்தப் பதவி உயர்வு கிடைத்து இருந்தால் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு இருக்கமாட்டார் என்பது அவரது அரசியல் கொள்கை மீதான மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று வாக்காளர்களை விடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் அவர் அறிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. 3. தீர்வு குறித்த திட்டமின்மை: இளஞ்செழியன் பூக்கடை - சாக்கடைகள்என்ற சொற்பதங்களுக்கு அப்பால், தமிழருக்கு எத்தகைய தீர்வைப் பெற்றுத்தர முயல்கிறார், மற்றும் தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைக்க அவரது பொருளாதார மற்றும் சமூக நலத் திட்டம் என்ன என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 4. முதல் கோணல் - இந்திய நிகழ்ச்சி நிரல்: கடந்த காலத்தில் நீதிபதியாக இருந்தபோது, அரசாங்கத்தின் அனுமதியின்றி அப்போதைய ஆளுநர் சுரேன் இராகவனுடன் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தது அவரது முதலாவது அரசியல் நகர்வாக இருந்தது. இந்தச் செயல், அவர் இந்திய நிகழ்ச்சி நிரலின் பங்காளராகச் செயல்படக் கூடியவர் என்ற பிம்பத்தினைக் கட்டமைத்துள்ளது. இதுகுறித்துப் 'பதவியில் உள்ள நீதிபதி சட்டத்தை மீறிச் செயல்படுவதாக'அக் காலப்பகுதியில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ கண்டனம் தெரிவித்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. நீதிபதிகளின் ஒழுக்கத்துக்கு புறம்பான இந்த செயலே நீதி சேவைகள் ஆணைக்குழு இவரது பதவிக் காலத்தை நீடிக்காததற்கு முக்கிய காரணம் என்று பலரும் கருதுகிறார்கள். மேலும் 'சுரேன் இராகவன் சிங்கள பௌத்தக் குடியேற்றங்களை வடக்கில் ஊக்குவித்து வந்தவர்'என்ற அபிப்பிராயம் நிலவும்போது, அவருடன் இணைந்து செயற்பட்டது மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது 5. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு: சுமந்திரனை வீழ்த்துவதற்கு இளஞ்செழியனை தீவகப் பிரதேசவாதத்துடன் பகடைக் காயாக இறக்குவது, தமிழரசுக் கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதுடன், அது மேலும் பிளவடையும் நிலையை ஏற்படுத்தலாம் எனத் தமிழரசுக் கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக இறக்குமதி செய்ததால் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சேதங்களே அவர்களைச் சூடு கண்ட பூனைகளின் நிலைக்குத் தள்ளியுள்ளது. 6. ஆயுதக் குழுக்களின் ஆதரவு: கடந்த காலங்களில் கொலைகள், கடத்தல், சித்திரவதை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு மன்னிப்பு கோராத ஆயுதக் குழுக்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பது முன்னாள் நீதிபதிக்குப் பொருத்தமான செயலாக இருக்காது. ➡️ முதலமைச்சர் ஆவதற்கு விரும்பும் இளஞ்செழியன் அல்லது வேறு எவராக இருந்தாலும் செய்ய வேண்டியவை • பரந்துபட்ட கூட்டமைப்பு: தீவகப் பிரதேசவாதம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கு அப்பால், பரந்துபட்ட தமிழ் தேசியத்துக்கு ஆதரவான பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். • தமிழ் காங்கிரசின் ஆதரவு: முக்கியமாகத் தமிழ் தேசியக் கட்சிகளில் இரண்டாம் நிலையில் உள்ள தமிழ் காங்கிரசின் ஆதரவு, ஒரு கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும். வெறும் மேடைகளில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் புகழ்ந்து தமிழ் காங்கிரசின் ஆதரவை இளஞ்செழியன் பெற முடியாது. ஏற்கெனவே விக்னேஸ்வரன் விவகாரத்தால் ஏற்பட்ட பின்னடைவுகள் புத்திசாலியான கஜேந்திரகுமாருக்கு முன்னெச்சரிக்கையை வழங்கியிருக்கும். • நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்: இந்தியா, மாகாண சபையே தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு என்று வலியுறுத்தி வரும் நிலையில், இளஞ்செழியன் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய அரசியலில் இறங்கியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஏனைய முதலமைச்சர் வேட்பாளர்களுக்கும் இனப் பிரச்சினை தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது • பொருளாதார, சமூக நலத் திட்டம்: தமிழர்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கான பொருளாதார, சமூக நலச் செயல்திட்டங்களையும் முதலமைச்சர் வேட்பாளர் வெளிப்படையாக அறிவித்தால் தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் நிலை ஏற்படும். இவற்றைச் செய்யாமல், வெறும் சுமந்திரனை விழுத்தும் சதி முயற்சியின் அங்கமாக முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை,அல்லது எவராவது சுயேச்சைக் குழுவின் தலைவரை வட மாகாண முதலமைச்சர் ஆக்குவதுடன், தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குச் சாவு மணியை அடிக்கும். அதுவே இந்தியாவின் இறுதி விருப்பமும் கூட. தமிழர்கள், முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தனது திட்டங்களை உரியகாலத்தில் அறிவிப்பார் என்றும், உரிமைப் போராட்டங்களுக்குச் சாவுமணி அடிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த மாட்டார் என்றும் நம்புகிறார்கள்
புலம்பெயர்ந்தோரை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள்
ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகள் “குடிவரவு அழுத்தத்தின் கீழ்” இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு தனது முதல் வருடாந்திர புகலிடம் மற்றும் குடிவரவு அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த நாடுகள் கடந்த ஆண்டில் விகிதாசாரமற்ற புலம்பெயர்ந்தோர் வருகையை எதிர்கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஐரோப்பிய ஆணைக்குழு முன்வைத்துள்ள மதிப்பீட்டின்படி, 2026 ஆம் ஆண்டு முதல், இந்த நான்கு நாடுகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் “பிணைப்பு (Solidarity)” உதவியைப் பெறும். இந்த […]
பிலிப்பைன்சில் ஊழலுக்கு எதிராக பெரும் போராட்டம்!
மணிலாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 550,000 பேர் கலந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இப் போராட்டம் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் ஊழல் தொடர்பாக பிலிப்பைன்ஸில் பொதுமக்களின் கோபம் அதிகரித்து வருகிற நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உயர் அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வெள்ளக் கட்டுப்பாட்டு ஊழல் ஊழலுக்குப் பொறுப்புக்கூறக் கோரி, ஞாயிற்றுக்கிழமை மணிலாவில் மூன்று நாள் பேரணிக்காக லட்சக்கணக்கான மக்கள் கூடினர். நாங்கள் அரசியலில் தலையிடுவதற்காக அல்ல, மாறாக 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் பதிலளிக்கப்படாத தவறுகளுக்குப் பின்னர் உண்மைக்காக குரல் கொடுக்கும் எங்கள் சக பிலிப்பைன்ஸ் மக்களுடன் நிற்க ஒன்று கூடுகிறோம் என்று ஏற்பாட்டாளர்கள் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தனர். இந்த அமைதியான இயக்கம் முழுமையான, நியாயமான மற்றும் அரசியலமைப்பு விசாரணையைக் கோருகிறது. ஏனெனில் ஊழல் ஒவ்வொரு பிலிப்பைன்ஸையும் பாதித்துள்ளது. ஆனால் யாரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை என்று அது மேலும் கூறியது. பல வாரங்களாக ஏற்பட்ட கொடிய வெள்ளத்தைத் தொடர்ந்து, ஜூலை மாதம் தனது வருடாந்திர நாட்டு உரையில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்த ஊழலை வெளிப்படுத்தியதிலிருந்து பிலிப்பைன்ஸில் சீற்றம் அதிகரித்து வருகிறது. Philippines Mass protest in Manila
`குடும்பஸ்தன்'பட நடிகை சான்வே மேகனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album
இங்கிலாந்தில் அகதிகளைக் குறைக்க புகலிடக் கொள்கையை மாற்றியமைக்கிறது!
ஒழுங்கற்ற குடியேற்றத்தைக் குறைப்பதற்கும் தீவிர வலதுசாரிகளின் வளர்ந்து வரும் பிரபலத்தை எதிர்ப்பதற்கும் ஒரு முயற்சியாக, பிரிட்டிஷ் அரசாங்கம் சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் புகலிடக் கொள்கையில் நீண்டகால மாற்றங்களை அறிவித்தது . டென்மார்க்கின் கடுமையான புகலிட முறையை மாதிரியாகக் கொண்ட புதிய திட்டங்களின் கீழ் , இங்கிலாந்துக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அகதி அந்தஸ்து ஐந்து ஆண்டுகளில் இருந்து 30 மாதங்களாகக் குறைக்கப்படும். அதே நேரத்தில் புகலிடம் வழங்கப்பட்டவர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க தற்போதைய ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்புகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும்மேலும் அகதிகள் பாதுகாப்பாகக் கருதப்பட்டவுடன், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஊக்குவிக்கப்படுவார்கள். உள்துறை அலுவலகம் என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம், இந்த திட்டங்களை நவீன காலத்தில் புகலிடக் கொள்கையின் மிகப்பெரிய மாற்றம்என்று அழைத்தது. அதே நேரத்தில் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் திட்டங்களை முன்வைக்கப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான இங்கிலாந்தின் தங்கச் சீட்டை நான் முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதியளித்தார். ஜூலை 2024 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் அதிகரித்து வரும் ஒழுங்கற்ற குடியேற்றத்தை சமாளிக்க போராடி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 39,000 க்கும் மேற்பட்டோர் UK க்கு வந்துள்ளனர், பலர் வடக்கு பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சிறிய படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் - 2024 முழுவதையும் விட அதிகம் ஆனால் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கீழ் 2022 இல் நிறுவப்பட்ட சாதனையை விடக் குறைவு. பிரிட்டனில் புகலிடக் கோரிக்கைகளும் மிக அதிகமாக உள்ளன, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 வரையிலான ஆண்டில் சுமார் 111,000 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாராந்திர நிதி உதவித்தொகைகளுக்கான உத்தரவாதங்களை நீக்குவதும், குடும்ப மறு கூட்டங்கள் தொடர்பான விதிகளை கடுமையாக்குவதும், அதன் புகலிடக் கொள்கை மறுசீரமைப்பு, அந்த ஆதரவைக் குறைக்க உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது. இந்த நடவடிக்கைகள், ஒழுங்கற்ற குடியேறிகள் இங்கிலாந்துக்கு வருவதைக் குறைவான கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்றும், ஏற்கனவே நாட்டில் இருப்பவர்களை வெளியேற்றுவதை எளிதாக்கும் என்றும் உள்துறைச் செயலாளர் மஹ்மூத் கூறினார். இதற்கிடையில், பிரிட்டனின் அகதிகள் கவுன்சிலின் தலைவர் என்வர் சாலமன், இந்த நடவடிக்கைகள் பிரிட்டனை அடைய முயற்சிக்கும் மக்களை தடுக்காதுஎன்று அரசாங்கத்தை எச்சரித்தார், மேலும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினார். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதையும், தீங்கு விளைவிக்கும் செயல்திறன் கொள்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்என்று மஹ்மூத்துக்கு கடிதம் எழுதின, இதுபோன்ற நடவடிக்கைகள் இனவெறி மற்றும் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறின. இருப்பினும், அடுத்த இங்கிலாந்து பொதுத் தேர்தல் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கப்படுவதில்லை. ஏனென்றால் தொழிற்கட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பேணுகிறது.
``IZZYக்கு பிறந்த நாள்'' - கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை திரிஷா | Photo Album
IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா
பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. `இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்கு இருப்பதாகவும், இது முறைகேடான வெற்றி' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. அந்தவகையில் தேர்தல் வியூக வகுப்பாளராக அறியபடும் பிரசாத் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, `தேர்தலில் உலக வங்கியின் 14,000 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.' என்று குற்றம்சாட்டியுள்ளது. Jan Suraaj Press Meet பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு ரூ.10,000 வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தலைப் பாதித்திருப்பதாக ஜன் சுராஜ் கட்சி கூறுகிறது. இது அரசு பணத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்பும் முறைகேடான முயற்சி எனக் கூறியுள்ள ஜன் சுராஜ், இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், முக்யமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 பரிமாற்றம் செய்திருக்கிறது. இது என்.டி.ஏ-வின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். NDA Alliance Bihar தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசாங்கம், முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் இந்த நடவடிக்கை பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, NDA மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. நேற்று (நவ.15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த சிரத்தை எடுத்து பெறப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இதற்காக கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. அடிப்படையில் அரசாங்கத்தின் பணத்தை கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது. எனப் பேசியுள்ளார். நிதிஷ் குமார் (Nitish Kumar) ஜன் சுராஜ் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, மாநில கருவூலம் இப்போது தீர்ந்துபோயுள்ளதாகக் கூறியுள்ளார். பீகாரின் பொருளாதாரம் இந்த அளவு பெரிய தொகையை மீட்டெடுக்கும் நிலையில் இல்லை என்றும், இனி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த நிதி இல்லை என்றும், கூறியுள்ளார். அவர், எங்களிடம் உள்ள தகவல் தவறாகவும் இருக்கலாம், மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனக் குற்றம்சாட்டியுள்ளார் பீகார் மாநில அரசு தற்போது ரூ.4.06 லட்சம் கடனில் இருப்பதாகவும் தினசரி ரூ.63 கோடி வட்டி சுமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் வர்மா பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்
செல்லப் பிராணிகளை தனியே விட்டுச் செல்ல பயமா? உங்களுக்கான குட் நியூஸ்!
இனி உங்க செல்ல நாய்கள், பூனைகளை தனியா விட்டுட்டு போக வேண்டாம். சில விதிமுறைகளை பின்பற்றி, அவங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போகலாம்.
தமிழ்நாட்டில் வரும் நாட்கள் மழை எப்படி இருக்கும்? சாட்டிலைட் இமேஜ் வெளியிட்ட சென்னை வெதர்மேன்!
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வெதர்மேன் சாட்டிலைட் புகைப்படத்துடன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
ரயில் பயணம் செய்வர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு இந்த மாதிரி டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் போது வீண் சிரமம் ஏற்படும்.
மெக்சிக்கோ ஜெனரேஷன் இசட்போராட்டம் வன்முறையில் முடிந்தது!
மெக்சிகோ நகரில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 120 பேர் காமடைந்தனர். அவர்களில் 100 பேர் காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வன்முறை குற்றங்கள் மற்றும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று சனிக்கிழமை மெக்சிகன் தலைநகரில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். மற்ற நகரங்களிலும் நடந்த பேரணிகளுக்கு, அவரது அரசாங்கத்தை எதிர்க்கும் வலதுசாரி அரசியல்வாதிகள் நிதியளித்ததாக ஷீன்பாம் கூறினார். இந்த பேரணி ஜெனரல் இசட் இளைஞர் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது உயர்மட்ட கொலைகளுக்கு எதிராக குடிமக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றது. இதில் சில வாரங்களுக்கு முன்பு உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ படுகொலை செய்யப்பட்டார். அவர் கார்டெல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார். ஷீன்பாம் வசிக்கும் தேசிய அரண்மனையைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவரின் சில பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றினர். வளாகத்தைப் பாதுகாக்கும் காவல்துறையினர் கூட்டத்தின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். கொள்ளை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 20 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மெக்சிகோ நகர பாதுகாப்புத் தலைவர் பாப்லோ வாஸ்குவேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாம் அனைவரும் கார்லோஸ் மான்சோ உள்ளிட்ட செய்திகளைக் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அசைத்தனர். மற்றவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவ்பாய் தொப்பிகளை அணிந்தனர். Mexico Genz
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி
பதுளை – ஹாலி-எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் பயண செலவுகள் சபையில் வெளியானது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். பயணங்களின் செலவீனம் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் முதல் 2025 செப்டெம்பர் மாதம் வரை 8 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக 14.9 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]
தமிழர் பகுதியொன்றில் கரையொதுங்கிய சடலம் ; தீவிரமாகும் விசாரணை
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று (15) மாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று கிடப்பதை கண்டு மீனவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற பொலிசார் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது […]
மத்தியபிரதேசத்தில் மாயமான சிறுமி 2 மாதங்களுக்குப்பின் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு
ஜெய்ப்பூர், மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் மக்சோடங்கர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காணாமல் போன, கடத்தப்பட்ட, மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் வகையில் மாநில அரசுகளின் ஒருங்கிணப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆபரேஷன் முஸ்கன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. […]
மேகதாது அணை விவகாரம்.. டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்.. மேம்பாட்டு பணிகள் தீவிரம்.. பயன்பாட்டுக்கு எப்போது?
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சர்வதேச தரத்திற்கு இணையாக பல்வேறு வசதிகளோடு தரம் உயர்த்தப்பட உள்ளது. இது தவிர முகப்பு வாயில், புத்தம் புது பொலிவோடு சீரமைக்கப்பட உள்ளது.
சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்
இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை சுமார் 40 சதவீதம் வாங்கினாலும், அவர்களின் வாழ்க்கை முறையை சார்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களுக்கான குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. அதை போக்கும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளம் தலைமுறையினருக்கான தோல் பராமரிப்பு பிராண்டான நெக்ஸ்ட்பேஸ், இளமைப் பருவத்திலிருந்து இளம் வயதுக்கு மாறும் 'இரண்டாவது முகம்' மாற்றத்தை மேம்படுத்துவதற்காக இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் இந்த காலக்கட்டம் உடலில் மாற்றத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, அடையாளம் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றத்தை உணர்ந்த நேச்சுரல்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளம் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரான தமயந்தி குமாரவேல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸ்ட்பேஸ், புதுமை மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்தியாவின் அழகுப் புரட்சியின் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கிறது. டீன் ஏஜ் பருவத்திற்குப் பிறகு தனது சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை அனுபவித்த தமயந்தி, சுமார் இரண்டு வருடங்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, விஞ்ஞானிகளைச் சந்தித்து, ஹார்மோன்கள், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் இளம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர், பல வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைகளின் மூலம் அதிநவீன சூத்திரங்களை உருவாக்குவதில் சிறந்த அனுபவமுள்ள உலகளாவிய தலைவரான கானெல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இளம் தலைமுறையினரின் தோலுக்கு ஏற்றதாகவும், இந்திய தோல் நிறங்கள் மற்றும் காலநிலைக்கு ஏற்ற நெக்ஸ்ட்பேஸ் பிராண்ட்டை உருவாக்கினார். இது குறித்து நெக்ஸ்ட்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தமயந்தி குமாரவேல் கூறுகையில், நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று திரும்பி வந்ததும், என் பெற்றோரை சந்தித்தேன். அப்போது அழகின் எதிர்காலம் அனுபவத்தால் மட்டும் வராது என்று அவர்களிடம் சொன்னேன். அது புத்திசாலித்தனத்திலிருந்தும், இளமையை பற்றிய புரிதலிலிருந்தும் வர வேண்டும். நமது பெற்றோர் பயன்படுத்தியது நமது தலைமுறைக்குத் தேவையில்லை; நமது உருமாறும் சருமத்தைப் புரிந்துகொள்ளும் ஒன்று நமக்குத் தேவை. அதை எனது நெக்ஸ்ட்பேஸ் சரியாகச் செய்கிறது. இது பளபளப்பு அல்லது பொலிவு மட்டுமல்ல, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. நீங்கள் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது உங்கள் தோல் மற்றொரு மாற்றத்திற்கு உட்படுகிறது, அது உங்கள் இரண்டாவது முகம். எங்கள் தலைமுறை அந்தக் காலக்கட்டத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்காகவே எங்களின் புதிய நெக்ஸ்ட்பேஸ் பிராண்ட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நெக்ஸ்ட்பேஸ் இந்தியாவின் முதல் நிகழ்நேர, கேமரா மூலம் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தோல் பராமரிப்பு முறையை அறிமுகப்படுத்துகிறது, அங்கு பயனர்கள் தங்கள் திரையைப் பார்த்து உடனடியாக, தோல் சம்பந்தமான பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதோடு வாழ்க்கை முறை பரிந்துரைகளையும் பெறலாம். AI, ML மற்றும் LLM தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பதிவேற்றங்களுக்குப் பதிலாக காட்சித் தரவை பகுப்பாய்வு செய்து, சருமத்தைப் புரிந்துகொள்கிறது. நெக்ஸ்ட்பேஸ் தொழில்நுட்பம் குறித்து அவர் மேலும் கூறுகையில், எங்கள் செயற்கை நுண்ணறிவு அழகை மதிப்பிடுவதில்லை, அது உயிரியலை விளக்குகிறது. இது பயனர்கள் தங்கள் தோலை தெளிவாகப் பார்க்க உதவுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க நான் உற்சாகமாக இருக்கிறேன். இது ஒரு உயர்ந்த மனித மூளை போன்றது, இது மில்லியன் கணக்கான தரவுகளை நிமிடங்களில் பகுப்பாய்வு செய்து பாரபட்சமற்ற மற்றும் உண்மையான தகவல்களை அதனால் வழங்க முடியும். இன்றைய நுகர்வோருக்கு இது மிகவும் முக்கியமானது, அதனால்தான் செயற்கை நுண்ணறிவை எங்கள் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற முடிவு செய்தேன். எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதைப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களின் தோல் நிறம், வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மற்றும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் இளம் தலைமுறையினரின் வளர்ந்து வரும் தேவைகளைப் புரிந்துகொள்வதில் எங்களால் அதிக கவனம் செலுத்த முடிகிறது. எங்களின் நெக்ஸ்ட்பேஸ், ஆழமான ஊடுருவல் மற்றும் விரைவான உறிஞ்சுதலை செயல்படுத்த மேம்பட்ட சிறிய மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இதனால் ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் அதிகபட்ச திறனில் செயல்படுவதை உறுதி செய்கிறது. எங்கள் சூத்திரங்கள் முன்னெச்சரிக்கை, தகவமைப்பு மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை – இன்றைய நிலையில் தோலுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் வருங்காலத்திற்கு ஏற்ப அதைத் தயார்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களின் குறிப்பிட்ட தயாரிப்புகளில் எக்ஸோசோம்கள் உள்ளன, அவை சிதைந்த செல்களை சரி செய்வதோடு தோலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன. நெக்ஸ்ட்பேஸ் அடுத்த தலைமுறை தோல் பராமரிப்புக்கு ஏற்ப சிறந்த பலன்களை வழங்கும். இந்த பிராண்டில் தற்போது சீரம், சன்ஸ்கிரீன் (ஜெல், ஸ்ப்ரே மற்றும் குச்சிகள்), லிப் பாம், டே க்ரீம், ஸ்லீப்பிங் மாஸ்க் மற்றும் பேஸ் வாஷ் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதன் விலை ரூ.550 ஆகும். இவை அனைத்தும் நச்சுத்தன்மை அற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் தமயந்தி குமாரவேல் தெரிவித்தார். இது குறித்து நெக்ஸ்ட்பேஸ் விளம்பர தூதரும் நடிகருமான கயாடு லோஹர் கூறுகையில், நெக்ஸ்ட்பேஸ் நாம் அனைவரும் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை அறிந்ததால் நான் அதன் விளம்பர தூதராக அந்த பிராண்டுடன் இணைந்துள்ளேன். இது அதை மறைப்பது அல்லது அதை எதிர்த்துப் போராடுவது பற்றியது அல்ல, மாறாக அதை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது. அதுதான் தோல் பராமரிப்பை விட மேலானது. அது சுய புரிதல் என்று தெரிவித்தார். இந்த பிராண்ட் இந்தியா முழுவதும் பல்பொருள் அங்காடிகள், மருந்தக கடைகள், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் கிடைக்கும். மேலும் 800க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்கள் மூலமும் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி குண்டு வெடிப்பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து
புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோருக்கு ஐஎம்ஆர், தேசிய மருத்துவப் பதிவாளர் (என்எம்ஆர்) ஆகியோர் வழங்கிய அங்கீகாரத்தை எம்எம்சி உடனடியாக ரத்து செய்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.இந்த மருத்துவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
SIR படிவம்.. 49.73 கோடி பேருக்கு விநியோகம்.. தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா?
தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 93.67% வாக்காளர்களான 6 கோடி பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
PTR தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி? மதுரை கூட்டத்தில் முக்கிய முடிவு...
2026 சட்டமன்ற தேர்தலில் மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 10 முதல் 23-ம் வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழர் பகுதியொன்றில் கடைக்கு முன்னாள் கிடந்த சடலத்தால் பரபரப்பு
கிண்ணியா – தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை கிண்ணியா பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தராக இருக்கக்கூடும் என கிண்ணியா பொலிஸார் ஆரம்ப விசாரணையின்போது தெரிவித்தனர். தீவிர விசாரணை கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் மேற்குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், சிகப்பு […]
பல்கலைக்கழகத்திற்குள் போதைபொருள் விற்பனை ; இரகசிய தகவலால் விடுதிக்குள் சிக்கிய நபர்
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் இருந்த சந்தேக நபர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை வழங்கி வருவதாகவும் வழியில் அவருக்காக காத்திருந்த நிலையில் கைது […]
புதுசா கார் வாங்கியிருக்கீங்களா? இன்சூரன்ஸ் இப்படி இருக்கணும்.. இல்லனா செலவு அதிகம்!
புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் அதற்கான காப்பீட்டு பாலிசியை இந்த மாதிரி எடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் அதிகம் செலவாகும்.
யாழில் பெய்து வரும் மழை மூன்று நாட்களுக்கு தொடரும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் […]
கனடா தம்பதியின் நடுங்க வைக்கும் மறுபக்கம்; வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த கொடுமை
கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன. விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் […]
மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை -பெரிய நீலாவணை பொலிஸில் சம்பவம்
video link- https://fromsmash.com/H_iigUZ4Qt-dt தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸாருக்கு சனிக்கிழமை(15) மாலை […]
சென்னையில் இன்று முதல் புதிய அரசுப் பேருந்து வழித்தடம்!
சென்னையில் இன்று முதல் அடையாறில் இருந்து தாம்பரம் மேற்கு வரை புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதனை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இல்லாமல் இனி பிக் பாஸ் வீட்டில் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று அழுதிருக்கிறார் வி.ஜே. பார்வதி. மேலும் போகிற போக்கில் மக்கள் செல்வனிடம் முத்தம் வாங்கிவிட்டு சென்றிருக்கிறார் திவாகர்.
டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு, வியாபாரிகள் கொள்ளை லாபம்!
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர் . வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டும் சூழலில் அதிகாரிகள் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணியா? தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமாரின் பதில்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த வழிமுறைகளில் திமுகவினர் குறுக்கு வழியில் முற்படுவதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
புது ரேஷன் கார்டு வேண்டுமா? எங்கும் அலைய வேண்டாம்.. இந்த ஆப் மட்டும் இருந்தா போதும்!
புது ரேஷன் கார்டு வாங்குவதற்கு இனி நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இந்த ஆப் மூலமாக எளிதாக விண்ணப்பித்து வாங்கலாம்.
SIRல் புது புது உத்தரவுகள்! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக BLOக்கள் போர்க்கொடி...
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பிஎல்ஓக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதால் நாட்டில் பரபரப்பான சூழல் உருவாக உள்ளது. இதே நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி புறவட்டச்சாலை திட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன?
திருச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்க திட்ட மிடப்பட்ட புறவழிச் சாலை பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம் .
சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தின் அறிமுகமும் நம்பிக்கைகளும் – நிலாந்தன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக்… The post சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தின் அறிமுகமும் நம்பிக்கைகளும் – நிலாந்தன். appeared first on Global Tamil News .
அமெரிக்காவில் மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரி நீக்கம்
மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், குறித்த பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை ட்ரம்ப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.ண்ண குறிப்பாக மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான வரிகளே இந்த விலை ஒரு காரணம் என கூறப்பட்டது. ஈக்வடோர், குவாத்தமாலா, எல் சால்வடோர், ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளுடன் அண்மையில் ஒப்பந்தங்களை அமெரிக்கா எட்டியதைத் தொடர்ந்ண்தே ட்ரம்ப் […]
யாழில் பெய்து வரும் மழை மூன்று நாட்களுக்கு தொடரும்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது… The post யாழில் பெய்து வரும் மழை மூன்று நாட்களுக்கு தொடரும்! appeared first on Global Tamil News .

25 C