SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

ஜப்பான் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றி! –கருத்துக்கணிப்பு முடிவுகள்

டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தலில் ஆளுங்கட்சி அமோக முன்னிலை பெற்று பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜப்பானில் இப்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவிய போதும், வாக்காளர்கள் ஆர்வமுடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர். இந்த நிலையில் கருத்துக்கணிப்புகளின்படி, ஜப்பான் பிரதமராக கடந்த அக்டோபரில் பொறுப்பேற்று அந்நாட்டின் முதல் பெண் […]

அதிரடி 9 Feb 2026 8:30 am

T20 World Cup: ‘இந்தியாவில் கைதாகி’.. அமெரிக்க அணிக்காக விளையாடும் ஹர்மீட் சிங்: எப்படி இது நடந்தது?

இந்தியாவில் கைதான ஹர்மீட் சிங் எனும் வீரர், தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் விக்கெட்களை எடுத்தார்.

சமயம் 9 Feb 2026 8:15 am

யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் நாட்டை விட்டு படகுகள் மூலம் இந்தியாவிற்கு தப்பி சென்று இருந்தனர். இந்தியாவில் கைது. அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தேவா , பிரகாஷ் மற்றும் டானியல் ஆகிய மூவர் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடிய குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளில் தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் தேடப்படும் நபர்கள் என தெரியவந்தது. அவர்களுடன் கைதான டானியல் என்பவர் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்படவில்லை. கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து , திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். யாழில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் கொலை குற்றத்தில் தேடப்படும் நபர்களை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் இலங்கை கோரி வந்தது. கொட்டாஞ்சேனை கொலைக்கு பங்களித்த யாழ். வாசிகள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி கொழும்பு கொட்டாச்சேனை பகுதியில் வைத்து பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த புகுடு கண்ணா என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை குற்றவாளிகள் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியா தப்பி செல்ல திட்டமிட்டுள்ளமை தெரிய வந்ததை அடுத்து , யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலையில் , கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொலை சந்தேகநபர்கள் மானிப்பாய் பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்ததை தடயறி கருவி (GPS) ஊடாக கண்காணித்து காரை மடக்கி அதில் பயணித்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவர்களுக்கு உதவியுள்ளமை தெரியவந்துள்ளது. உதவி புரிந்தவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , நவம்பர் 11ஆம் திகதி குறித்த நபர் கார் ஒன்றில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளை கடத்தி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். குறித்த காரின் இலக்க தகடு போலி என்பதும் தெரியவந்தது. வத்தளை நபருக்கு துப்பாக்கி கையளித்த யாழ். வாசி. அதேவேளை நவம்பர் மாதம் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் காரில் துப்பாக்கி ஒன்றினை எடுத்து சென்று வத்தளையில் உள்ள நபரிடம் கையளிக்க முயன்ற வேளை வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சிறப்பு முகாமில் வளர்ந்த நட்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் உள்ள நபர்களும் இடையிலான தொடர்புகள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , கொழும்பில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்ற நிலையில் , தமிழகத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , திருச்சி முகாமில் ஏற்பட்ட நட்பு ஊடாகவே யாழ்ப்பாணம் - கொழும்புக்கு வன்முறை கும்பல்களுக்கு தொடர்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. நாடு கடத்தல் அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிய நிலையில் , இருவரும் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பிரான்ஸ்க்கு தப்பிய சன்னா அதேவேளை குறித்த நபர்களுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய சன்னா என அழைக்கப்படும் நாகலிங்கம் பிரசன்னா என்பவர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பாரீஸ் நகருக்கு அண்மித்த பகுதியில் பாலகிருஷ்ணன் அபிராமன் எனும் இளைஞனை படுகொலை செய்த குற்றத்தில் பிரான்ஸ் பொலிஸாரினால் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். யாழ்ப்பாணத்தில் 2021ஆம் ஆண்டு சிவகுமாரன் ஜீவரத்னா என்பவரை கொலை செய்தமை தொடர்பிலான குற்றத்தில் தேடப்பட்ட நிலையிலையே நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார். கனடாவில் கைதான சன்னா அந்நிலையில் , கனடா நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரின் கைரேகைகளை கனேடியன் பொலிஸார் பெற்று சோதனையிட்ட வேளை அவரது குற்ற பின்னணிகள் தெரிய வந்ததுடன், சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபர் என்பதனையும் கண்டறிந்து , அவர் தொடர்பில் பிரான்ஸ்க்கு அறிவித்து, குறித்த நபரை பிரான்சிடம் கனடா ஒப்படைத்தது. சன்னாவையும் நாடு கடத்த கோரும் இலங்கை குறித்த நபரையும் இலங்கையில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக இலங்கைக்கு நாடு கடத்த இலங்கையும் கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 9 Feb 2026 7:59 am

இலங்கை தேயிலை மீண்டும் ஆதிக்கம் ; ஈரானுடன் மீண்டும் இணைந்த இலங்கை வர்த்தகம்

ஈரானில் நிலவிய அமைதியற்ற சூழல் மற்றும் தகவல் தொடர்புத்தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் முன்னேற்றமடைந்து வருவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் நிலவிய பிராந்திய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் காரணமாக, ஈரானுக்கான தேயிலை கப்பல் போக்குவரத்து சுமார் ஒரு வார காலம் முற்றாக ஸ்தம்பித்திருந்தது. எனினும், தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் டுபாய் வழியாக மீண்டும் தேயிலை […]

அதிரடி 9 Feb 2026 7:48 am

மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடைக் கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது நியாயமாகப்படவில்லை. காரணம் என்னவென்றால் நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். எனது அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யாக சச்சிதானந்தம் இருக்கிறார். எனக்கும், என்னுடன் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-க்கும் கட்சிக் கட்டுப்பாடு உள்ளது. நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் மாணிக்கம் தாகூர் எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்குப் பதில் சொல்லலாம். `பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!' - கொதிக்கும் மாணிக்கம் தாகூர் | Exclusive ஏற்கனவே இருந்த அதிமுக அரசு ஐந்தரை லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றது. அதற்கு ஓராண்டிற்கு வட்டி தோராயமாக 36,000 லிருந்து 40,000 கோடி ரூபாய் வரும். புள்ளி விபரம் என்னிடம் இல்லை. மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை, எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவதும் அவசியம். அமைச்சர் ஐ. பெரியசாமி முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் பத்தாயிரம் நபர்களுக்குக் கொடுத்துள்ளோம். திமுக ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். ஒன்பது லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அதிமுக-வைச் சேரும். தற்போது அதனைச் சரி செய்து, ஒரு லட்சத்து பத்தாயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம். திருமாவளவன் - ராமதாஸ் பேசுவது பற்றிச் சொல்லியிருப்பது செல்வப்பெருந்தகையின் கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. சேர்வது நல்லதுதான். யாருக்கு ஆட்சேபனை இருக்கிறது? திருமாவளவன், ராமதாஸ். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர்க்கட்சிகளையும் சேர்த்து தேர்தலைச் சந்தித்துள்ளோம். 2006 இல் அப்படிதான் தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லாக் கட்சியும் நம்முடன் உள்ளன. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை. வந்தால் நிச்சயமாக முதலமைச்சர் அது குறித்து முடிவு செய்வார் என்றார் மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்

விகடன் 9 Feb 2026 7:46 am

பிரித்தானியாவில் AIயால் பரவும் புதிய மோசடி ; புலம்பெயர் தமிழர்களுக்கான எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய மோசடி யுக்தியை கையாண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குறுகிய வீடியோக்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ்களை பயன்படுத்தி, வெறும் சில நொடிகளில் ஒருவரின் குரலை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் குரலில் பேசிச் “நான் விபத்தில் சிக்கியுள்ளேன்” அல்லது “அவசரமாக பணம் தேவை” எனக் கூறி உறவினர்களிடமிருந்து […]

அதிரடி 9 Feb 2026 7:46 am

சுவிஸ் தமிழர்களின் நகைக்கடைகளில் திடீர் சோதனை ; 10 விதி மீறல் கண்டுபிடிப்பு

சுவிஸ்லாந்து சூரிச் நகரில் 14 தங்க வியாபார நிலையங்களில் பொலிஸாரின் திடீர் சோதனையில் 10 வியாபாரிகள் விதிகளை பின்பற்றவில்லை எனக் கண்டறியப்பட்டதுடன் இதில் ஒரு நகைக்கடை தமிழர்கள் சொந்தமானது என பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட சட்ட மீறல்கள் அளவீடு செய்யப்படாத தராசுகள் ஆவணத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பாடு விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்க அனுமதி இல்லாமை இதனிடையே, தேவையான பொறுப்புக்குறி (Responsibility mark) அல்லது நேர்த்தியின் அறிகுறி இல்லாத ஒரு தொழிற்சாலையில், தோராயமாக 200 கிராம் […]

அதிரடி 9 Feb 2026 7:35 am

‘இந்திய அணிக்கு எதிராக ஆட தயார்’.. ஆனா.. 3 கோரிக்கைகளை பிசிசிஐ ஏத்துக்கணும்! பாகிஸ்தான் நிபந்தனை!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்திய அணிக்கு எதிராக ஆட தயார். ஆனால், மூன்று நிபந்தனைகளை பிசிசிஐ ஏற்றுக் கொண்டால் மட்டுமே விளையாடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சமயம் 9 Feb 2026 7:30 am

மெர்சல் படம் உதவியை மறக்கலாமா? விஜய் அதிமுகவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்- கடம்பூர் ராஜு

மெர்சல் படப் பிரச்சனையில் அதிமுக உதவியை பெற்ற விஜய், கட்சிக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என கடம்பூர் ராஜு கூறியிருப்பது அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது

சமயம் 9 Feb 2026 7:13 am

‘இந்திய டி20 அணி.. 100 ரன்னுக்கு அவுட் ஆகியிருந்தா’.. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டி குறித்து சேவாக் பேட்டி!

அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய டி20 அணி 100 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தால், வரலாற்றில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 9 Feb 2026 6:53 am

வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயல் அதிகாரியும் ராஜிநாமா!

அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது விளையாட்டு, புத்தக விமர்சனப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு அதாவது 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கடந்த வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்தது. மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் […]

அதிரடி 9 Feb 2026 6:20 am

ஒரே டி.என்.ஏ கொண்ட இரட்டைச் சகோதரர்களால் பிரான்ஸ் கொலை வழக்கு விசாரணை சிக்கலானது

பிரான்சில் கொலைக் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ள இரண்டு ஒத்த இரட்டையர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களில் யார் கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் குழப்பமடைந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 33 வயதான சகோதரர்கள் பாரிஸ் அருகே விசாரணையில் உள்ள ஐந்து பிரதிவாதிகளில் அடங்குவர். அவர்கள் மீது 2020 ஆம் ஆண்டில் இரட்டைக் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து பல கொலை முயற்சிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரட்டைக் கொலையைத் திட்டமிட இருவரும் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் பின்னர் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட தாக்குதல் துப்பாக்கியில் உள்ள டிஎன்ஏ ஒரு இரட்டையரிடமிருந்து மட்டுமே இருக்க முடியும் என்றும் அது தெரிவிக்கிறது. எந்த சகோதரர்கள் மீது உறுதியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை தடயவியல் நிபுணர்களால் கூற முடியவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர்களுடைய தாயால் மட்டுமே அவர்களைப் பிரித்தறிய முடியும் என்று ஒரு புலனாய்வாளர் பிரெஞ்சு தலைநகரின் வடக்கே உள்ள பாபிக்னி நீதிமன்றத்தில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் பதட்டமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, இரண்டு இரட்டையர்களும் எழுந்து நிற்க மறுத்ததால் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் அடையாளங்களை மறைப்பதற்காக அவர்கள் தங்கள் ஒற்றுமையைப் பயன்படுத்திக் கொண்டதாக போலீசார் நம்புகின்றனர். இந்த ஜோடி அடிக்கடி உடைகள், தொலைபேசிகள் மற்றும் அடையாள ஆவணங்களை பரிமாறிக் கொண்டதாக லு பாரிசியன் மேற்கோள் காட்டிய ஒரு மூத்த அதிகாரி கூறினார். கர்ப்ப காலத்தில் பிரியும் ஒரு கருவுற்ற முட்டையிலிருந்து ஒரே மாதிரியான இரட்டையர்கள் உருவாகிறார்கள். அவை ஒரே முட்டை மற்றும் விந்தணுவிலிருந்து உருவாகின்றன என்பதால், அவை ஒரே மாதிரியான டி.என்.ஏவைப் பகிர்ந்து கொள்கின்றன, இதனால் தடயவியல் அடையாளம் காண்பது மிகவும் கடினம். மரபணு தரவுகளால் அவற்றுக்கிடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாததால், புலனாய்வாளர்கள் தொலைபேசி பதிவுகள், கண்காணிப்பு காட்சிகள், வயர்டேப்புகள் மற்றும் அவர்களின் இருப்பிடம் மற்றும் இயக்கங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளை நம்பியிருந்தனர் என்று லு பாரிசியன் தெரிவித்துள்ளது. ஆனால் மீட்கப்பட்ட ஆயுதத்தை யார் சுட்டார்கள் என்ற முக்கியமான கேள்வி இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. விசாரணை தொடர்கிறது, பிப்ரவரி மாத இறுதியில் நீதிமன்றம் ஒரு முடிவை எட்ட உள்ளது.

பதிவு 9 Feb 2026 5:15 am

ஜப்பான் தேர்தல்: தகைச்சி பெரும்பாண்மை பெறுவார்: கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பானின் தேசியவாத ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் பிரதமர் சானே தகைச்சிக்கு வலுவான புதிய ஆட்சிக் காலம் கிடைத்துள்ளது . தகைச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சுமார் 300 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பான்மைக்கு தேவையான 233 இடங்களை விட மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான ஜப்பான் புதுமைக் கட்சி (JIP) உடன் சேர்ந்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) 310 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேசிய ஒளிப்பாளரான (NHK) தெரிவித்துள்ளது. பிரதமர் சானே தகைச்சியின் பொறுப்பான, முன்னெச்சரிக்கை நிதிக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றோம். என்று LDP பொதுச் செயலாளர் ஷுனிச்சி சுசுகி ஊடகங்களுக்கு தெரிவித்தார். தகைச்சி, குறிப்பாக இளைய வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாலும், கடந்த ஏழு தசாப்தங்களில் பெரும்பாலான காலமாக நாட்டை ஆண்ட அவரது பழமைவாத எல்.டி.பி, ஊழல்களால் பாதிக்கப்பட்டு , ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை எதிர்கொண்டது என்பது நினைவூட்டத்தக்கது.

பதிவு 9 Feb 2026 4:48 am

90 கிட்ஸ்களை விட அறிவாற்றலில் பின் தங்கும் ஜென்சிக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட ஜென்சி (Gen-Z) தலைமுறையினர் குறைவான ஐகியூ அளவையே பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் ஐகியூ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளால், ஆழமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றல் குறைந்துள்ளதே ஜென் சி தலைமுறையின் […]

அதிரடி 9 Feb 2026 3:30 am

மீந்துபோன உணவைக் கழுவி மீண்டும் விற்பனை ; அதிர்ச்சி காணொளி வைரல்

மலேசியாவின் சிரம்பான் (Seremban) பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், எஞ்சிய உணவுகளைக் கழுவி மீண்டும் விற்பனைக்குத் தயார் செய்த அதிர்ச்சி காணொளி வெளியானதையடுத்து, அந்த உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் சமைக்கப்பட்ட இறைச்சி, ஆட்டுக்கறி மற்றும் டோபு (Bean curd) போன்ற எஞ்சிய உணவுகளைத் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்ததை வழிப்போக்கர் ஒருவர் கவனித்துள்ளார். அவர் அதனைத் தனது கைபேசியில் காணொளியாக பதிவு […]

அதிரடி 9 Feb 2026 12:30 am

⚖️அமைதிக்கான நோபல் பரிசு நர்கெஸ் முகமதிக்கு  மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதிக்கு (Narges Mohammadi) அந்நாட்டு நீதிமன்றம்… The post ⚖️அமைதிக்கான நோபல் பரிசு நர்கெஸ் முகமதிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Feb 2026 12:10 am

ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகள் வாங்க இந்தியா முடிவு.. பிரான்ஸ் உடன் போடப்பட்ட முக்கிய ஒப்பந்தம்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய விமானப் படை தனது ரஃபேல் போர் விமானங்களில் இருந்து ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகளையும், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவியது.

சமயம் 8 Feb 2026 11:56 pm

“அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் பொற்காலம்!”– பிளாக்ராக் CEO லாரி ஃபிங்க் அதிரடி!

மும்பையில் நடைபெற்ற JioBlackRock நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியுடன் கலந்துரையாடிய லாரி ஃபிங்க், இந்தியாவின் பொருளாதார… The post “அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் பொற்காலம்!” – பிளாக்ராக் CEO லாரி ஃபிங்க் அதிரடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 11:43 pm

மருத்துவ உலகில் ஒரு புரட்சி: ஒரே வினாடியில் இரத்தப்போக்கை நிறுத்தும் மேஜிக் ஸ்ப்ரே!

தென்கொரிய விஞ்ஞானிகள், உயிர்காக்கும் ஒரு புதிய வகை “ஹீமோஸ்டேடிக் ஸ்ப்ரே” (Hemostatic Spray)-ஐ உருவாக்கியுள்ளனர். இது உடலில் ஏற்படும்… The post மருத்துவ உலகில் ஒரு புரட்சி: ஒரே வினாடியில் இரத்தப்போக்கை நிறுத்தும் மேஜிக் ஸ்ப்ரே! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 11:41 pm

கிழக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத்தளத்தை ஆட்டிப்படைக்கும் நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள்

கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பெரும் அச்சுறுத்தல் இவ்வாறான நிலையில், காத்தான்குடி […]

அதிரடி 8 Feb 2026 11:30 pm

சிறுவர்களுக்கு வன்முறை வீடியோ கேம்கள் தடையா? பிரான்ஸ் அதிரடி!

சிறுவர்களுக்கு வன்முறை வீடியோ கேம்கள் தடையா? பிரான்ஸின் முக்கிய நகர்வு! சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூகத்தில் வன்முறை எண்ணங்கள்… The post சிறுவர்களுக்கு வன்முறை வீடியோ கேம்கள் தடையா? பிரான்ஸ் அதிரடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 11:23 pm

கரூர் சம்பவம் திமுகவின் சூழ்ச்சி.. அதிமுகவில் நிர்வாகம் சரியில்லை.. தவெக ஆதவ் அர்ஜுனா பேச்சு!

எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகம் சரியில்லை என்று தானே 2021-ல் திமுக வந்தது. மக்கள் சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்தது அதற்கு தானே என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்து உள்ளார்.

சமயம் 8 Feb 2026 11:01 pm

“ஐரோப்பா மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்”– அதிபர் புடின் நம்பிக்கை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் காலப்போக்கில் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பும் என்று தனது… The post “ஐரோப்பா மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்” – அதிபர் புடின் நம்பிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 10:15 pm

தவெக நிர்வாகிகள் கைது.. தேனி நாதக கூட்டத்தில் என்ன நடந்தது? முக்கிய நிர்வாகி தலைமறைவு!

தேனியில் நாதக கூட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 8 Feb 2026 10:00 pm

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம்!

உலக சுகாதார அமைப்பில் (World Health Organization – WHO) இருந்து அமெரிக்கா இன்று (ஜனவரி 22, 2026)… The post உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 9:58 pm

இலங்கை முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான வழக்குகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை தேசிய சிறுவர் பாதுகாப்பு… The post இலங்கை முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 9:44 pm

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 36 பேர் பலியான நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை […]

அதிரடி 8 Feb 2026 9:30 pm

யாழ்ப்பாணம் –மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நூதன சப்ததள பஞ்சகுண்டசகித இராஜகோபுர மகா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நூதன சப்ததள பஞ்சகுண்டசகித இராஜகோபுர மகா கும்பாபிஷேகம் இன்று(08) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அதிரடி 8 Feb 2026 9:30 pm

விருதுநகர்: ஸ்டாலின் ரேம்ப் வாக்; திரண்ட பெருங்கூட்டம்... திமுக இளைஞர் அணி மாநாடு க்ளிக்ஸ்!

விருதுநகர்: பிரமாண்டமாக நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாடு.!

விகடன் 8 Feb 2026 9:09 pm

ஐஜேகே மாநாட்டில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நயினார்.. கரூர் சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு!

கடலூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் 4 ஆவது மாநாட்டில் கரூர் சம்பவம் குறித்து பேசி, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற விவாதத்தை நயினார் நாகேந்திரன் ஏற்படுத்தி இருக்கிறார்.

சமயம் 8 Feb 2026 9:05 pm

நேபாளம்: மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயம்

நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே சனிக்கிழமை 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். சிறுவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தம்பர் பகதூர் பூரி கூறுகையில், வனப்பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் போன்ற ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் […]

அதிரடி 8 Feb 2026 8:30 pm

இங்கிலாந்தில் அழிந்து வரும் சிவப்பு அணில்

இங்கிலாந்தின் சிவப்பு அணில் எண்ணிக்கை அரிதாகவே காணப்படுகிறது. பெரும்பாலம் சாம்பல்நிற அணில்களை இங்கிலாந்தின் மூலை முடக்கிலும் காணலாம். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் 3.4 மில்லியன் சிவப்பு (செம்பட்டை நிறம்_ அணில்கள் இருந்தன. அவற்றின் பளபளப்பான செம்பட்டை ரோமம், பெரிய தடிமனான காதுகள் கொண்டிருக்கும் இந்த அணில் அழிந்து வருகிறது. 1876 ​​ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பூர்வீகமற்ற சாம்பல் நிற அணில்கள். சிவப்பு 287,000 அணில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 75% ஸ்காட்லாந்தில் காணப்படுகின்றன. இங்கிலாந்தில் அவற்றின் எண்ணிக்கை 38,900 வரை குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பின்னணி இங்கிலாந்துக்கான அரசாங்கத்தின் புதிய அணில் செயல் திட்டத்தை இன்னும் முக்கியமானதாக ஆக்குகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தத் திட்டத்தில், வனப்பகுதி வாழ்விடத்தை அதிகரிப்பதற்கும், சிவப்பு அணில்கள் இன்னும் வாழும் பகுதிகளில் இருந்து சாம்பல் அணில்களை அகற்றுவதற்கும் ஏற்பாடுகள் உள்ளன. பூர்வீகமற்ற சாம்பல் நிற அணில்கள் நமது மரங்களுக்கும் பூர்வீக வனவிலங்குகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அழிந்து வரும் நமது சின்னமான சிவப்பு அணில்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவற்றின் அச்சுறுத்தலைச் சமாளிக்க நடவடிக்கையை நாங்கள் முடுக்கிவிடுகிறோம். சாம்பல் நிற அணில் எண்ணிக்கையை சிறப்பாக நிர்வகிக்க நில உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். மேலும் கருவுறுதல் கட்டுப்பாடு குறித்த நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளர். சாம்பல் நிற அணில்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க புதிய கருத்தடை தடுப்பூசிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்திலிருந்து சாம்பல் நிற அணில்களை அகற்றி வனப்பகுதிகளை உருவாக்க ஊக்குவித்தல் ஆகியவை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முறைகளில் அடங்கும்.

பதிவு 8 Feb 2026 7:58 pm

புதுச்சேரி: ஆளி விதை களி, கேழ்வரகு லாமிங்டன் கேக்… ருசியில் மிரட்டி முந்திய மூன்று அரசிகள்

'உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!' என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போட்டியில் வில்லியனூர், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், பாகூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதேபோல விழுப்புரத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவர்களும், கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் சுற்றில், போட்டியாளர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவை காட்சிப்படுத்துவார்கள். போட்டியின் நடுவர் பிரபல யூடியூபர் மற்றும் சமையல்கலை வல்லுநரான செஃப் தீனா, அவர்களில் சிறப்பாக பங்காற்றியவர்களை தேர்வு செய்வார். அவர்கள் அங்கேயே நடைபெறும் 'லைவ் கிச்சன் சமையல்' பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். அதில் தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவள் விகடனுடன் கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், சௌபாக்யா, RKG நெய், மெரிபா பனீர், லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் விதவிதமான உணவுகளை சமைத்து வந்து அசத்தினர். உளுந்து கஞ்சி, சீராளம் அலங்காரி, ராகி உப்பு உருண்டை, சைவ ஈரல் மசாலா, முசுமுசுக்கை இலை அடை,முடக்கத்தான் கீரை சூப், கேழ்வரகு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட், கருப்பு கவுனி அரிசி பணியாரம், குதிரைவாலி தினை அரிசி ஃபிரைடு ரைஸ்,கொய்யா டெசர்ட், சம்பா கோதுமை மொமோஸ், சென்னாகுன்னி கத்தரிக்காய் தொக்கு, முருங்கை கீரை கூட்டாஞ்சோறு, சுரைக்காய் முருங்கைக்கீரை அடை, கதம்ப சட்னி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி, வெஜ் ஆம்லெட், குக்கும்பர் இட்லி, கேழ்வரகு லாமிங்டன் கேக், மிக்ஸ்டு பருப்பு புட்டு, நெய்வேத்தியம், மிச்சம் அமிர்தம், பலாக்கொட்டை லட்டு, வரகு அரிசி சோயா பிரியாணி, கருப்பு கவுனி அல்வா, தினை இடியாப்பம், கடலைக்கறி, ராகி களி என சைவம், உளுந்து கஞ்சி, ராகி உருண்டை, சோயா கைமா, சோயா உருண்டை, கேரட் அல்வா, இறால் பிராக்கோலி வறுவல், இறால் குழம்பு, அசைவம் உணவுகளை செய்து அசத்தியிருந்தனர். டாப் 10 ஆக தேர்வாகியவர்கள் அதேபோல இனிப்பு அவல், பூரணம் கொழுக்கட்டை, வரகு சாம்பார் சாதம், சுரைக்காய் சட்னி, கிரேப் பாசி ப்ரான், சைய்யோ, மீன் வடை, கிரேப் ஆம்லெட், சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ், பனங்கிழங்கு பாயாசம்,ஆளி விதை களி, இஞ்சி சாறு, கலத்தப்பம்,கவுனி அரிசி கேசரி, பிரண்டை சட்னி, கருப்பு கவுனி அடை தோசை, வெஜ் லாலிபப், சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம், புரோட்டின் லட்டு, பாசிப்பயறு தோசை, சுரைக்காய் சட்னி, புதினா காரமுறுக்கு, முருங்கை கீரை பொரிவிளங்காய் உருண்டை, கல்யாணமுருங்கை கீரை அடை, சாலியா விதை லட்டு, ரவை தேங்காய்ப்பால் குழி பணியாரம் என பாரம்பர்ய உணவுகளையும் மணக்க மணக்க செய்திருந்தனர். அவற்றை சாப்பிட்டுப் பார்த்த செஃப் தீனா, அதன் ரெசிப்பிக்களை கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் முசுமுசுக்கை இலை அடை, முடக்கத்தான் கீரை சூப், கருப்பு கவுனி அரிசி பணியாரம், குதிரைவாலி தினை அரிசி ஃபிரைடு ரைஸ், சம்பா கோதுமை மொமோஸ், குக்கும்பர் இட்லி, கேழ்வரகு லாமிங்டன் கேக், பலாக்கொட்டை லட்டு, தினை இடியாப்பம், இறால் பிராக்கோலி வறுவல், கிரேப் பாஸி ப்ரான், லெமன் பை, சைய்யோ, பனங்கிழங்கு பாயாசம், ஆளி விதை களி,கலத்தப்பம், கவுனி அரிசி கேசரி, சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம், புதினா காரமுறுக்கு, முருங்கை கீரை பொரிவிளங்காய் உருண்டை, சாலியா விதை லட்டு, நவதானிய குழம்பு, மரவள்ளி கிழங்கு கேக்,சுண்டைக்காய் சட்னி, வெற்றிலை பொங்கல், நத்தை பிரியாணி, குடை மிளகாய் சிக்கன் ஸ்டஃப்டு, நெல்லிக்காய் ஃரைடு ரைஸ், தாமரை விதை லட்டு போன்றவற்றின்  சுவையும், மணமும் அரங்கைக் கட்டிப்போட்டன. `நாகா சுவை சாம்ப்' வெற்றியாளர் பிரேமா இனியன் அதையடுத்து ஆளி விதை களி, முருங்கை கீரை பொரிவிளங்காய் உருண்டை, கருவேப்பிலை சிக்கன் வறுவல், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்த ஜெனிஃபர், பலாப்பழ பாயாசம், முருங்கை கீரை கூட்டாஞ்சோறு செய்த சங்கர கோமதி, சாலியா விதை லட்டு, கருவாட்டு  குழம்பு செய்த கோகிலா, கருப்பு கவுனி அல்வா சுண்டைக்காய், சட்னி செய்த ரோஜா, ராகி சிமிலி, பச்சைப்பயிறு லட்டு, உளுந்து கஞ்சி செய்த மகேஸ்வரி, காரம் மற்றும் இனிப்பு பச்சை பயறு புட்டு செய்த கோமதி, கார்டன் பார்லி பவுல், ராகி பிஸ்கட், இளநீர் அல்வா செய்த இன்பஜோதி, கேழ்வரகு லாமிங்டன் கேக் செய்த பெஃலிசியா, சங்குப்பூ சாதம், பசுமஞ்சள் பிரட்டல் செய்த பிரேமா இனியன் ஆகியவர்களை முதல் சுற்றில் டாப் 10 தேர்வாளர்களாக அறிவித்தார் தீனா. அவள் விகடனுடன் சக்தி மசாலா, கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், RKG நெய், மெரிபா பனீர், சௌபாக்யா, லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நாகா ரவையில் உண்ணிப்பூ பாயாசம், நாகா சம்பா ரவாவில் அக்கார அடிசல் மற்றும் நாகா கோதுமை, சர்க்கரைவள்ளி கிழங்கு கார குழிப்பனியாரம் செய்த பிரேமா இனியன் `நாகா சுவை சாம்ப்' வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி சமையல் டேபிளில் அந்த 10 பேரும் சமையல் செய்தனர். அவர்களில் வீட் பட்டர் குக்கீஸ் செய்த இன்பஜோதி, கோதுமை அடை செய்த மகேஸ்வரி, சர்க்கரைவள்ளி கிழங்கு பனீர் கட்லெட் செய்த பிரேமா இனியன் மூவரையும் சென்னையில் நடக்கும் இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சக்தி மசாலா, கோல்டு வின்னர், சத்யா, நாகா ரவா, எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டி பிப்ரவரி 14-ம் தேதி வேலூரில் 109, புதிய புறவழிச்சாலை, ஜி.ஆர்.டி ரீஜன்சி அருகில், தோட்டப்பாளையத்தில் இருக்கும் சாந்தி மஹாலிலும், மறுநாள் 15-ம் தேதி சேலத்தில் கொண்டலாம்பட்டியில் இருக்கும் சௌடேஸ்வரி மகளிர் கல்லூரியிலும் நடைபெற இருக்கிறது.

விகடன் 8 Feb 2026 7:43 pm

உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழியை சீனா தொடங்கியுள்ளது

உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழியை சீனா தொடங்கியுள்ளது. இதன் திறன் 20 மெகாவாட் ஆகும். புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த காற்றாலை விசையாழி, ஏற்கனவே நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் 40 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விசையாழி, ஒரு இறக்கை 14 மீட்டர் நீளமும், ஒட்டுமொத்த உயரம் 174 மீட்டர் ஆகும்.

பதிவு 8 Feb 2026 7:42 pm

யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!

தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட இலங்கையின் முதன்மையான வான்வழி நுழைவாயிலாக இது தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்த விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2023 காலப்பகுதியின் வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட 2025 ஆண்டில் சுமார் 33,431 வருகையாளர் அதிகமாகும். தினசரி 7 விமானங்கள் செயல்பாட்டு சாதனை படைத்துள்ளது. இது 2026 ஜனவரியில் எட்டப்பட்டது இதில் 2 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்கள் உள்ளடங்கும். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இந்த வளர்ச்சி, 2025 இல் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் 19.06 பில்லியன் ரூபா இலாபத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம், 2026 ஆம் ஆண்டளவில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இது நேரடியாக உதவுகிறது.

பதிவு 8 Feb 2026 7:40 pm

மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!

மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசு மருத்துவ அதிகாரிகள்சங்கம் தற்போதைய அரசாங்கத்தை விரும்பவில்லை ,அவர்களின் விசுவாசம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச விவசாயத்திற்கான பகுத்தறிவற்ற கரிம உரக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது, ​​முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவளித்ததாகவும், அது இறுதியில் அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார். மருத்துவமனை அமைப்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உயர் பதவிகளை வகிப்பதால், வேறு யாரும் அந்த வாய்ப்புகளை அணுக முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு 8 Feb 2026 7:34 pm

கல்வியில் 2-வது மாநிலம் தமிழ்நாடு.. ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவான ஜாக்டோ ஜியா சார்பில் நடத்தப்பட்டது. அதில் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

சமயம் 8 Feb 2026 7:32 pm

சீனாவில் வசந்த காலத்தை ஏர் பூட்டி வரவேற்ற மக்கள்

பெய்ஜிங், சீனாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குகிறது. இதனை, அந்நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை போற்றும் வித மாக நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஏர் பூட்டி நிலத்தை உழுவது போன்ற சடங்குகளைச் செய்து வசந்த காலத்தை முறைப்படி வரவேற்றனர். சீன கலாசாரத்தில் ‘வசந்த காலம்’ என்பது புதிய தொடக்கத்தையும், நல்ல விளைச்சலையும் குறிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதையொட்டி பல இடங்களில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், […]

அதிரடி 8 Feb 2026 7:30 pm

கர்நாடகாவில் விமான விபத்து.. விமானத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? டிஜிசிஏ விசாரணை!

கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் காயம் அடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டிஜிசிஏ விசாரணை நடத்தி வருகிறது.

சமயம் 8 Feb 2026 7:12 pm

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS)!

CGSS Scheme: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 8 Feb 2026 7:06 pm

விஜய் பெயர் எடுத்ததும் வெடித்த பரபரப்பு..கலவரமாக மாறிய நாதக கூட்டம்- சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?

தேனியில் நாதக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூச்சலித்ததால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 7:05 pm

மைக்கேலேஞ்சலோவின் ஓவியம் 27.2 மில்லியன் டாலர்கள் ஏலத்தில் சாதனை படைத்தது

மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு சிறிய, நீண்ட அறியப்படாத ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் சாதனை விலையை எட்டியுள்ளது. சிஸ்டைன் சேப்பலுக்கான ஓவியம் 27.2 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டியின் ஏலத்தில் மைக்கேலேஞ்சலோவால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓவியம் 27.2 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 23 மில்லியன் யூரோக்கள்) விற்கப்பட்டுள்ளது. இது ஒரு அடி வரையப்பட்ட ஓவியம், சில சென்டிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது. இது சிஸ்டைன் சேப்பலின் கூரையில் லிபிய சிபிலின் சித்தரிப்புக்கான தயாரிப்பாகக் கருதப்படுகிறது. இந்த விலை மைக்கேலேஞ்சலோவின் ஏல சாதனையாகும். மேலும் மதிப்பீட்டை விட சுமார் 20 மடங்கு அதிகமாகும். ஏலம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அசல் மதிப்பீடு 1.5 முதல் 2 மில்லியன் டாலர்கள் வரை இருந்தது. சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையை தனியார் உரிமையில் மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரே அறியப்பட்ட ஆய்வு இதுவாகும். கூரை ஓவியம் அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். வாங்குபவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கலைஞரால் எஞ்சியிருக்கும் 600 வரைபடங்களில், சுமார் 50 மட்டுமே வத்திக்கானில் உள்ள ஃப்ரெஸ்கோ சுழற்சியுடன் தொடர்புடையவை. மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு ஓவியத்திற்கான முந்தைய சாதனை 24.3 மில்லியன் டாலர்கள் ஆகும் இது ஏலத்தில் எட்டப்பட்டது.

பதிவு 8 Feb 2026 6:47 pm

பாகிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் பட்டத் விழா

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு பிரபலமான பட்டம் விடும் விழா மீண்டும் தொடங்கியுள்ளது. பசந்த்என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, தெற்காசிய நாட்டின் கிழக்கே உள்ள கலாச்சார பெருநகரமான லாகூரில் 2007 இல் தடைசெய்யப்பட்டதிலிருந்து முதல் முறையாக மீண்டும் நடத்தப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த பாரம்பரியம் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, ஆனால் கடந்த காலங்களில் துயர மரணங்களால் இது மறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் காற்றாடிகளை கூரைகளிலிருந்து பறக்கவிட்டதால், லாகூர் வானம் வண்ணமயமான மொசைக் ஓவியமாக மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்ததால், வியாழக்கிழமை முதல் தெருக்கள் சிறிய சமையலறைகள் மற்றும் சந்தைக் கடைகளால் பரபரப்பாக உள்ளன. விழாவின் தொடக்கத்தை, தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் நடந்த தற்கொலைத் தாக்குதலால் இச்செய்தி மறக்கப்பட்டது. தெற்காசியாவில் பட்டம் விடுவது பரவலாக உள்ளது மற்றும் பெரும்பாலும் போட்டித்தன்மை கொண்டது. இது பல குழந்தைகளுக்கு பிரபலமான பொழுதுபோக்காகவும் உள்ளது. பட்டங்களை குறிப்பாக வலுவாக மாற்ற கூர்மையான கம்பி கயிறுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. கவனக்குறைவு கவனிக்கப்படாவிட்டால் இது கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்தது.

பதிவு 8 Feb 2026 6:41 pm

NEP vs ENG: 'கடைசி பந்துவரை ட்விஸ்ட்'.. சாம் கரண் சம்பவத்தால், இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், மோசமாக பந்துவீசிய இங்கிலாந்து அணி, கடைசிவரை போராடி, கடைசி பந்தில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், வென்று சூப்பர் 8 வாய்ப்பை நேபாள் அணி பிரகாசமாக வைத்துள்ளது.

சமயம் 8 Feb 2026 6:40 pm

பிரான்சிலிருந்து ஒன்றரை வருட நடை பயணம்: சீனாவை வந்தடைந்த பிரஞ்சுக்காரர்கள்!

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக 16 நாடுகளை கிட்டத்தட்ட முழுவதுமாக கால்நடையாகக் கடந்து வந்த இரண்டு பிரெஞ்சு சாகசக்காரர்கள், சனிக்கிழமை பிரான்சிலிருந்து ஷாங்காய் வரை ஒரு காவிய நடைப்பயணத்தின் முடிவை அடைந்தனர். லூயிக் வோய்சோட்டும் பெஞ்சமின் ஹம்ப்லாட்டும் பண்ட் ஆகிய இருவரும் சீனாவில் ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதையில் நிற்கிறார்கள். இவர்கள் இருவரும் 2024 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் பிரான்சிலிருந்து புறப்பட்டனர். 518 நாட்கள் நடையாக நடந்து சீனாவுக்குச் சென்றுள்ளனர். இருவரும் சீனாவுக்குச் செல்ல விரும்பினர. ஆனால் விமானப் பயணம் இல்லாமல், அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்காமல் செல்ல விரும்பினர். அதனால் அவர்கள் நடத்து செல்வதைத் தேர்தவாக எடுத்தனர். நடையாகப் புறப்படுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போரின்போது மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் ஒரு பகுதியைத் தவிர, 518 நாட்கள் சுமார் 12,850 கிலோமீட்டர்கள் நடந்தனர். வழியில் பொதுமக்கள் அவர்களை வரவேற்றனர். அத்துடன் சீனாவில் ஷங்காயில் இருக்கும் பிரஞ்சுக் குடிமக்களும் இணைந்து வரவேற்றனர். உங்கள் கனவுகள் பைத்தியக்காரத்தனமாக இருந்தால், அதை படிப்படியாக எடுத்து வையுங்கள், சில நேரங்களில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள், ஆனால் சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வோய்சோட் கூறினார். நடைப்பயணம் முடிந்த பின்னர் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் நிறையத் தூங்குவோம் என்று அவர் நகைச்சுவையாகச் சொன்னார்.

பதிவு 8 Feb 2026 6:30 pm

ரஷியா: பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 இந்திய மாணவர்கள் காயம்

மாஸ்கோ, ரஷியாவின் பர்கோஷ்தான் குடியரசில் உள்ள உபா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினான். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய சிறுவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். […]

அதிரடி 8 Feb 2026 6:30 pm

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி : திமுக–அதிமுக கோட்டையை உடைக்குமா தவெக?- அருண்ராஜ் வியூகம்!

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், தவெக அருண்ராஜ் களபணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 6:22 pm

ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை வர்த்தமானியில் அநீதி ; சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பாரிய அநீதி இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள […]

அதிரடி 8 Feb 2026 6:20 pm

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்

2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை சபாநாயருக்கு எழுத்து மூலம் அறிவித்தது முறையானதா என்ற கேள்வி சட்டவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கையை கடைசியாகக் கட்டியாண்ட பிரித்தானியர்கள், இந்தத் தீவின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு தந்திரமாக சுதந்திரத்தை வழங்கிச் சென்ற எழுபத்தெட்டாவது ஆண்டு கடந்த நான்காம் திகதி. இந்த நாள் நெருங்கி வரும்போதெல்லாம் இலங்கை இரு தேசம் என்பதை அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் காட்டிக் கொண்டிருக்கும். சிங்கள பிரதேசங்களில் வாள் ஏந்திய சிங்கக்கொடி பறக்க தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்படும். இதனால் தமிழரின் தேசியக்கொடி கறுப்பு என்பதாகவே காட்சி கொடுக்கும். தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அன்றொரு நாள் இயற்றிய - நீங்க வேறு நாடைய்யா, நாங்க வேறு நாடு - என்ற பாடலின் அர்த்தம் பெப்ரவரி நாளில் பொழிப்பாக காதுகளில் விழும்போது நன்றாகப் புரியும். அநுர குமர அரசின் இரண்டாவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வு வழக்கம்போல கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. சேனநாயக்கக்களிலிருந்து இறுதியாக ரணில் வரை தங்களின் எழுப்பம் காட்டும் படைத்துறையினரின் சாகசங்களையே இந்நாளில் முக்கியத்துவப்படுத்துவது வழக்கம். ஆனால் அநுர குமர அரசு இதனைச் சற்று கீழிறக்கி படைத்துறையினரின் அணிவகுப்புகளோடும் பலவின மாணவர்களின் நிகழ்வுகளோடும் மாற்றிக் கொண்டது சிங்கள இனவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கும் (தமிழர்கள்) அநுர குமர அரசு அடிபணிந்து படைத்துறையினரின் வீரதீரங்களை காட்டவில்லையென முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர கூச்சல் போடுகிறார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ராஜபக்சக்கள் ஒழித்துக் கட்டிய வீரத்தை அநுர குமர அரசு மூடிமறைத்துவிட்டது என்று நாமல் பேபி ஒப்பாரி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, காணாமலாக்கப்பட்டது, சிறையிலடைக்கப்பட்டது எவ்வகையானது என்பதை அநுர குமரவின் ஜே.வி.பி.யினரும் அனுபவத்தில் கண்டவர்கள் என்பதை நாமல் பேபி அறிந்திருக்கவில்லை போலும். எங்கு அடிபட்டாலும் நாய் காலைத் தூக்கிக் கொண்டு ஊளையிடுவதுபோல இந்த இனவாதிகளின் வாழ்க்கை இப்படித்தான் கக்கிக் கொண்டிருக்கும். ஒருவகையில் பார்க்கின் இவர்களுக்கு இன்னமும் புலிப்பயம் இருப்பதுபோல தெரிகிறது. ஆண்டாண்டுதோறும் இவர்கள் இனவாதத்தையே தங்களுக்கான ஆயுதமாக காவித்திரியப் போவது தெரிகிறது. இது ஒருபுறமிருக்க தற்போது நாற்றமெடுத்து வரும் தமிழர் தாயக அரசியலை கவனிக்க வேண்டியது அவசியமானது. முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்ததால் வடமாகாண சபை தமிழரசின் உட்கட்சி மோதலில் முடக்கம் கண்டதுபோல, கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இன்னொருவரான சுமந்திரனால் தமிழரசுக் கட்சி சரிவு நிலையில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை எதிரணியினர் மட்டுமன்றி வீடுக்குள் வசிப்பவர்களும் காண்கின்றனர். சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் இதற்கான சான்றாக அமைந்துள்ளன. தமது எம்.பி. பதவியை பறிப்பதை இலக்காகக்கொண்டு காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை சிவஞானம் சிறீதரனே அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். தனது சகாவான சாணக்கியனை தமிழரசின் முக்கிய புள்ளியாக உயர்த்தும் முனைப்பில் சுமந்திரன் தீவிரமாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சாடிக்கு ஏற்றதாக ஒரு மூடி அரசியலிலும் தேவைப்படுகிறது போலும். கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவராக சாணக்கியனை நியமித்திருப்பதாக சுமந்திரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் பல குழுக்களில் எந்தக் குழுவுக்கு இந்த நியமன அதிகாரம் உள்ளது என்று கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. மட்டக்களப்பில் சிறீநேசன் எம்.பி. பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்து இதனை நிரூபிக்கிறது. சிறீதரனை இப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கால அவகாசம் வழங்குவதென்றும், அதன் பின்னர் சாணக்கியனை தற்காலிகமாக இப்பதவிக்கு நியமிக்கலாமெனவும் சிலர் கண்ட கனவு நடைமுறைக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். சாணக்கியனை கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமித்திருப்பதாக சுமந்திரனே அறிவித்திருந்தார். அடுத்த சில மணித்தியாலங்களில் சுமந்திரனின் வடமராட்சித் தொகுதியில் தமி;ழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் பெதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடனடியாக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒர் அறிக்கையை கட்சியின் பல மட்டங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பியிருந்தார். 'இது ஆர்வக்கோளாறு என்றாலும் கட்சியின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் குந்தகமானது. இவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். கட்சியின் தலைமை நிலைக்கு இது முரணானதும்கூடஎன்று திரு.சி.வி.கே.சிவஞானத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையின் இறுதிப் பகுதியில், தலைமை நிலைக்கு இது முரணானதும்கூட என்று குறிப்பிடப்பட்ட வரிகள் ஆழமான அர்த்தம் கொண்டவை. சாணக்கியன் கட்சியின் தலைமையால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமிக்கப்படவில்லையோ என்ற சந்கேதத்தையும் இது ஏற்படுத்துகின்றது. சிறீதரன் எம்.பி. தலைவர் பதவியிலிருந்து தாமாகவே வெளியேறினால் சாணக்கியனை தற்காலிகமாக அப்பதவிக்கு நியமிக்கலாமென கட்சி தற்காலிகமாக முடிவெடுத்ததாகவம் ஒரு தகவல் உண்டு. ஆனால், அது மறைக்கப்பட்டு, சாணக்கியனை அப்பதவிக்கு நியமித்து விட்டதாக சுமந்திரன் அறிவித்ததால்தான் இவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு கொழுத்தியும் மகிழ்ச்சி தெரிவிக்கும் நிலைமை உருவாகியது. சுமந்திரன் தன்னிச்சையாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகள் கட்சித் தலைமைக்குள்ளேயே அபிப்பிராய பேதங்களை உருவாக்கி வருகிறது. கட்சியின் மூத்த உறுப்பினர் ;ஒருவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் பாம்புக்கு பால் வார்க்க வேண்டாமென்று நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். மற்றொரு விடயம் விசம்போல பரவி வருகிறது. மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன எம்.பி.யான தயாசிறி ஜெயசேகர நாடாளுமன்றத்தில் சிறீதரன் மீது வசைபாடிய வரலாறு பிரசித்தமானது. இதற்குத் தேவையான விடயதானங்களை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே வழங்கியிருந்தாரென கடந்த வாரம் இப்பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றொரு அரசியல் விமர்சகர் தாம் எழுதும் வாரப்பத்தியில் அந்த எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். குறிப்பிட்ட தமிழரசு எம்.பி. முன்னர் ராஜபக்சக்களின் அரசியல் அணியில் ஒருவராகச் செயற்பட்டவர் என்றும், இப்போது அதே ராஜபக்ச அணியைச் சேர்ந்த தயாசிறி ஜெயசேகரவுடன் இவர் வைத்திருக்கும் தொடர்பின் வெளிப்பாடாகவே சிறீதரன் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிகிறது. எனவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் அந்த எம்.பி.மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் கிழக்கு மாகாணத்திலிருந்தே வந்துள்ளது. இறுதியாக இன்னொரு முக்கிய விடயம். ஜனவரி மாதம் 30ம் திகதியிட்ட கடிதம் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் சுமந்திரனும் ஒப்பமிட்டு அனுப்பியிருந்தனர். கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரனை நீக்க தங்கள் கட்சி முடிவெடுத்துள்ளதாக இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டதே தவிர பதவி நீக்கப்பட்டதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. 2024 நவம்பர் பொதுத்தேர்தலையடுத்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி தங்களின் தலைவராக சிவஞானம் சிறீதரனை தெரிவு செய்தனர். அவ்வேளையில் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் சிவஞானம் சிறீதரனின் நியமனம் தொடர்பாக சபாநாயகருக்கு எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. சிறீதரனின் பதவி நியமனம் நாடாளுமன்ற குழுவுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அது தொடர்பாகக் கடிதம் எழுதும் தேவை கட்சியின் தலைமைப்பீடத்துக்கு இருக்கவில்லை அல்லது பொருந்தாதது என்பதே இதன் கருத்து. அப்படியானால் சிறீதரனின் பதவி நீக்க முடிவை நாடாளுமன்றக் குழுவே எடுத்திருக்க வேண்டும். இதன்படி பார்க்கின், சிறீதரனை பதவி நீக்கம் செய்த கடிதத்தை சபாநாயகருக்கு தமி;ழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தினர் எழுத்து மூலம் அறிவித்திருப்பது முன்னுக்குப்பின் முரணானது. சட்டச் சிக்கலுக்குள் இது இழுத்துச் சென்றிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சட்டவாளர்கள் சிலர் இதனை பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனைக்கும் அடி சறுக்குமாம்!

பதிவு 8 Feb 2026 6:18 pm

காலி வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிரடி 8 Feb 2026 6:15 pm

இலங்கையில் பல ஆயிரம் கோடி பணத்தை வைப்பு செய்த மர்ம நபர் ; வரலாற்றில் முதல் முறை

இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும் நிதி மோசடி இவ்வாறான அளவிலான […]

அதிரடி 8 Feb 2026 6:05 pm

சேலத்தில் தவெக கூட்டத்துக்கு 51 நிபந்தனைகள்.. இது மக்கள் சந்திப்பு இல்லை.. தவெக மா.செ. அதிர்ச்சித் தகவல்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய், கழக நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த கூட்டமானது வரும் 13 ஆம் தேதி சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது.

சமயம் 8 Feb 2026 6:03 pm

பூமிகா சாவ்லா உருக்கம்: ஹைதராபாத்தில் நடந்த ‘யூபோரியா’பட விளம்பர நிகழ்ச்சியில் கண்ணீர்

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'யூபோரியா' பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகை பூமிகா சாவ்லா தனது கதாபாத்திரத்தின் பாதிப்பு குறித்துப் பேசி மேடையிலேயே கண்ணீர் விட்டார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வளர்ப்பு முறை குறித்த இப்படத்தின் முக்கியத்துவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 6:00 pm

டீன் ஏஜ் பெண்ணின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4 மாதங்கள் ஆகிறது. சட்டவிரோதமாக பிறக்கும் இந்த குழந்தையை பெற்றெடுக்க, டீன் ஏஜ் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை. இதனால் கருவை கலைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

அதிரடி 8 Feb 2026 5:30 pm

ENG vs NEP: ‘வரலாறு படைத்தார் ஜாஸ் பட்லர்’.. அதிக ரன்களை குவித்து அசத்தல்: இங்கிலாந்து அணி 184 ரன்கள்!

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 184/7 ரன்களை அடித்தது. இப்போட்டியில், ஜாஸ் பட்லர், 13 ரன்களை எடுத்திருந்தபோது மெகா வரலாற்று சாதனையை படைத்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 4:56 pm

இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகரம்

2வது இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூமிரா பியாசிறி இன்று (08) காலை நாட்டை வந்தடைந்தார். கடந்த மாதம் 1 முதல் 6 ஆம் திகதி வரை இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த சமையல்கலைஞர் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இந்தியாவின் சர்வதேச ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் சமையல்கலைஞர்களுக்கான உலகின் மிகப்பெரிய உலகளாவிய சமையல் போட்டி […]

அதிரடி 8 Feb 2026 4:55 pm

பிரான்ஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு இந்தியர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும், ஒருவரை தாக்கியக்குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது, வெளிநாட்டவர் கைது திஸ்ஸமஹாராமாவின் மஹசென்புர பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு ஒரு பிரான்ஸ் பெண் மசாஜ் செய்யச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மசாஜ் மையத்தின் உரிமையாளராக கடமையாற்றிய பெண்ணின் கணவன், தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தனது இந்திய நண்பரிடம் பிரெஞ்சு பெண் கூறியுள்ளார். இந்த விஷயம் குறித்து விசாரிக்க […]

அதிரடி 8 Feb 2026 4:48 pm

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் மாரியப்பனின் தாயார் 80 வயதான மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு சுமார் 11 மணியளவில் பர்தா உடை அணிந்த மர்மநபர் ஒருவர், மாரியம்மாளை தாக்கிவிட்டு பீரோவின் மேலே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து பீரோவில் உள்ள 26 சவரன் தங்கநகை மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடையநல்லூர் கொள்ளையன் தாக்கியதில் மயக்கமடைந்த மாரியம்மாள் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர், மாரியப்பனுக்கு தகவல் கூறினர். மாரியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பீரோ இருக்கும் இடம், பீரோவின் சாவி வைக்கும் இடம் தெரிந்த நபரே பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நகை, பணத்தை தவிர வேறெந்த பொருளும் திருடுபோகவில்லை எனவே, மாரியப்பனுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபர் யாரோ ஒருவர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர். அவரது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர், மாரியப்பனின் வீட்டின் முன்பு ஒரு சாக்குமூட்டை கிடப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் கூறினார். கடையநல்லூர் அந்த சாக்குமூட்டையை மாரியப்பன் பிரித்துப் பார்த்தபோது அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளது. இருப்பினும், சி.சி.டி.வி காட்சிப்பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அந்த பர்தா கொள்ளையன் யார்? நகைகள், பணத்தை மீண்டும் மாரியப்பனின் வீட்டின் முன்பு சாக்கு மூட்டையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விகடன் 8 Feb 2026 4:31 pm

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ; குவியல் குவியலாக பிணங்கள் ; 4 ஆண்டுகள் வாழ்ந்த கொடூரம்!

அமெரிக்காவில் அழுகிப்போன உடல்களுடன் நான்கு ஆண்டுகள் நபர் ஒருவர் வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் சுமார் 200 உடல்களை முறைகேடாகக் கையாண்ட இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உடல்கள் குவியல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், பென்ரோஸ் பகுதியில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் இறுதிச் சடங்கு இல்லத்தை ஜோன் ஹால்போர்ட் மற்றும் அவரது முன்னாள் மனைவி கேரி […]

அதிரடி 8 Feb 2026 4:30 pm

குழந்தைக்கு கண் மை: அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மைகள் மற்றும் எச்சரிக்கை!

குழந்தைக்கு கண் மை இடுவது என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் ஒரு பாரம்பரியப் பழக்கமாகும். குழந்தையின் கண்கள் பெரிதாகத் தெரிய வேண்டும், கண்பார்வை மேம்பட வேண்டும்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 4:00 pm

விஜய் போட்டியிட விரும்பும் 2 தொகுதிகள்.. பரிசீலனையில் இருந்த அந்த 4 தொகுதிகள் எவை?

தவெக தலைவர் விஜய் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 4 தொகுதிகள் பரிசீலனையில் இருந்ததாகவும் 2 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.

சமயம் 8 Feb 2026 3:58 pm

ராமதாஸ், திருமாவளவன் கைகோர்ப்பதில் என்ன சிக்கல்? பின்னணியில் தகிக்கும் ஆழமான அரசியல்!

திமுக கூட்டணியில் விசிக இருக்கும் போது ராமதாஸ் உள்ளே வருவாரா, ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுப்பாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

சமயம் 8 Feb 2026 3:52 pm

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு ; இரண்டு சந்தேகநபர்கள் கைது

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கக் கட்டிகள் நாவலப்பிட்டிய – கெட்டபுலவ விகாரையிலுள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து கலசங்களை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு பேர் திருடிச் சென்றதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார், விகாரையில் பொருத்தப்பட்ட […]

அதிரடி 8 Feb 2026 3:51 pm

மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் –நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய… The post மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 3:46 pm

பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம்

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, பொலத்து மோதர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் மாவெல்லைப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சென்றிருந்த நிலையில், கடலில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்காலை தலைமையக பொலிஸார் மேலதிக […]

அதிரடி 8 Feb 2026 3:40 pm

NZ vs AFG: ‘ஆப்கானிஸ்தான் மெகா தோல்வி’.. இனி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற என்ன செய்யணும்? விபரம் இதோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக, ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

சமயம் 8 Feb 2026 3:39 pm

பிரான்ஸில் அழகு நிலையம் மீது குண்டு வீச்சு; 6 பேர் காயம்

பிரான்ஸில் அழகு நிலையம் ஒன்றின் மீது கிரைனைட் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் கிழக்கு நகரமான Grenoble இல் இச்சம்பவம் இன்று பெப்ரவரி 6, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்குள்ள அழகு நிலையம் ஒன்றுக்குள் திடீரென மர்ம நபர்கள் சிலரால் கிரைனைட் குண்டு வீசப்பட்டது. கடைக்குள் விழுந்த குண்டு வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தில் கடையில் இருந்த 5 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். கட்டிடம் ஒன்றின் தரை […]

அதிரடி 8 Feb 2026 3:30 pm

குறுகிய கால இடைவெளிக்குள்  நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் –நிலாந்தன்!

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில்.அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல்… The post குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் – நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 3:23 pm

அரசின் நிர்வாகத் தோல்வி.. உங்கள் அரசு மீண்டும் அமையப் போவதில்லை.. தவெக அருண்ராஜ் கருத்து!

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், ஹால் டிக்கெட் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

சமயம் 8 Feb 2026 3:18 pm

கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி: அந்தத் தன்னம்பிக்கையின் ரகசியம் இதுதான்!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார், தான் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்றும், அந்தத் தைரியமே தன்னை பெரிய தயாரிப்பாளர்களுடன் எளிதாகப் பழக வைத்தது என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 3:10 pm

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை, தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி-நாஞ்சில் சம்பத்!

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியே இருக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சமயம் 8 Feb 2026 2:53 pm

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தென் மண்டல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், “ விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக் கண் திறந்த காமராசர்தான். காமராசர் என்று சொன்னால் மதிய உணவு திட்டம்போல் திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவு திட்டம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்கவிடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக நினைக்கிறது. தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அதை போராடி தடுத்துள்ளோம். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலைதான் முதலில் இருந்தது. வாய்ப்புகளை மறுத்த அநீதியை சமூக நீதியால் வென்றோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பதை இந்தியாவில் முதலில் நிகழ்த்திக் காட்டியது திமுகதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தை பெற்று தந்துள்ளோம். மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்பட்டு வருகிறது; பாஜகவினால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.  இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது சொன்னார் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று. அவர் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கிறார். ஒன்றை சொல்கிறேன் என்னுடன் இளைஞரணியில் இருந்தவர்களில் தற்போது 10 பேர் அமைச்சர்கள், 24 எம்.எல்.ஏ-க்கள், 4 எம்.பி-க்கள் என எல்லோரும் பதவியில் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது இளைஞரணியை பற்றி நான் மறப்பேனா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். நானும் ரெளடி தான் என்பது போல நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பட்ஜெட்டில் மத்திய அரசு நமக்கு கொடுத்தது ஜீரோ. நாமும் அதை சட்டமன்ற தேர்தலில் திருப்பி கொடுப்போம் ”என்றார்

விகடன் 8 Feb 2026 2:37 pm

⚖️ கம்பஹா பிரதேச சபை  NPP   உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

கம்பஹா பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல்… The post ⚖️ கம்பஹா பிரதேச சபை NPP உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:34 pm

மனைவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்தபடியே கோவிலுக்கு சென்ற கணவர்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக் தாலுகாவின் சிஞ்சோலி கிராமத்தில் மாயக்கா தேவி கோவில் உள்ளது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். இந்த வருடம் அந்த பெண்ணுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். அவருக்கு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அவரது […]

அதிரடி 8 Feb 2026 2:30 pm

சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு –  உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026) நிகழ்ந்த பயங்கர… The post சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு – உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:22 pm

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா தரம் – 01 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் அதிபர் . சி. சிவநேந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் திரு. எஸ்.கே சண்முகலிங்கம், சூழகம் அமைப்பின் செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் மற்றும் ஆலய குருக்கள், ஓய்வுநிலை கல்விசார் அதிகாரிகள், இலங்கை வங்கி ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் […]

அதிரடி 8 Feb 2026 2:20 pm

ரெஜினா காசாண்ட்ரா புதிய படம்: மேர் ஆஃப் ஈஸ்டவுன் பாணியில் உருவாகும் கிரைம் த்ரில்லர்

அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் ரெஜினா காசாண்ட்ரா, இந்த முறை ஒரு தீவிரமான கிரைம் த்ரில்லர் தொடரில் மாறுபட்ட பரிமாணத்தில் தோன்றுகிறார். மேர் ஆஃப் ஈஸ்டவுன் பாணியில் உருவாகும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 2:10 pm

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைப்பு!

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சமயம் 8 Feb 2026 1:42 pm

 ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை

பிரித்தானியாவின் ஆகப்பெரிய பறவை இனமான வெள்ளை வால் கழுகு (White-tailed Eagle) மீண்டும் கடலோரப் பகுதிகளுக்குத் திரும்புவது குறித்து… The post ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:39 pm

NEET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்; மே 3-ம் தேதி தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியது. மே 3-ம் தேதி தேசிய அளவில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 8 Feb 2026 1:39 pm

ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டம் (SISFS)!

Start-up India Seed Fund Scheme (SISFS): ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் வரை மானியமும், ரூ.50 லட்சம் வரை கடனுதவியும் வழங்கும் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 8 Feb 2026 1:35 pm

கனடாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் உருவாகியுள்ள கவலை

கனடாவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், வைரஸ் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டவர்களும் அங்கிருந்தது தெரியவந்துள்ளதால் கவலை உருவாகியுள்ளது. ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள பிராண்டன் நகரில் விவசாயம் தொடர்பிலான கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், இந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை, தங்களுக்கு மண்ணன் அல்லது மணல்வாரி அல்லது தட்டம்மை என்னும் […]

அதிரடி 8 Feb 2026 1:30 pm

யாழில்.  ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன்  கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இருவர் கைது… The post யாழில். ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:24 pm

அஜித் குமார் கார் பந்தயம்: அபுதாபியில் உணர்வுபூர்வ சந்திப்பு

அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 1:10 pm

பொலிஸாருக்கு இடையில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில் மற்றையவர் சிறையில்

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணியை இடைநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், ஒரு உத்தியோகத்தர் மற்றவரைத் தங்கியிருந்த இடத்திலேயே கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதிவு 8 Feb 2026 1:10 pm

❄️  வடகிழக்கு அமெரிக்கா   கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் (Northeast US) தற்போது ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து வீசும் கடும் குளிர்காற்றினால் (Arctic… The post ❄️ வடகிழக்கு அமெரிக்கா கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:08 pm

Bharat Taxi: ஓலா, ஊபருக்கு போட்டியாக களமிறங்கும் மத்திய அரசின் ஆப்; இதில் நமக்கு என்ன பயன்?

ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று 'பாரத் டாக்ஸி'. இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம். இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி, குஜராத் போன்ற பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த ஆப் செயல்பாட்டிற்கு வர‌வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. Bharat Taxi 2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? மற்ற ஆப்களைக்‌ காட்டிலும் இதில் என்ன ஸ்பெஷல்? பிற ஆப்களில் டிரைவர்கள் ஒவ்வொரு ரைடிற்கும் 20 - 30 சதவிகிதம் கமிஷன்‌ கட்ட வேண்டும். ஆனால், இந்த ஆப்பில் அப்படி எந்தக் கமிஷனும் கட்ட வேண்டியதில்லை. இதனால், டிரைவர்களுக்கும் லாபம்... கமிஷன் குறைவதால் பயணிகளுக்குக் கட்டணம் குறையும். இது பயணிகளுக்கும் லாபம். பிற ஆப்களில், பீக் நேரங்கள், மழையின் போது கட்டணங்கள் அதிகரிக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த ஆப்பில் கட்டணங்கள் நடைமுறைகளுக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படும். பாரத் டாக்ஸியைப் பொறுத்தவரை, டிரைவர்கள் பார்ட்னர்கள். இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

விகடன் 8 Feb 2026 1:02 pm

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. பந்துல பிரசன்ன என்பவரை குறி வைத்தே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 8 Feb 2026 1:01 pm

'பரியேறும் பெருமாள்'பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானப்போது நானும் H.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு. எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு. இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டி தான். மாரி செல்வராஜ் எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது. மாரி மேடையில் 'மை லார்ட்' பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது என பேசியிருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 12:58 pm