SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
...

வசதியற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார். இதில் பாடசாலை அதிபர் எம்.வீ.எம்.சபீர், பிரதி அதிபர் எம்.எல்.எம்.யாக்கூப், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் முகம்மட் தம்பி, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் […]

அதிரடி 28 Feb 2026 6:24 am

தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுகோள்

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வை வழங்கும் நோக்கில், ஏப்ரல் 01ஆம் திகதி வரை அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, தனியார் […]

அதிரடி 28 Feb 2026 6:17 am

மரத்தில் மோதிய கார் -காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று அம்பாறை மாவட்டம் மகா ஓயா வீதி பக்கிஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீதி வளைவில் இடம்பெற்றுள்ளது. பின்னர் விபத்திற்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்டு செனரத்புர பிராந்திய மருத்துவமனையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது மருத்துவமனையிலும் அப்பகுதி மக்கள் அனுமதித்தனர். மேலும் காரில் பயணித்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் என போலீசாரின் ஆரம்ப […]

அதிரடி 28 Feb 2026 6:16 am

Oxygen தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி…கல்முனை பிராந்தியத்துக்கான Oxygen Plant அமைக்க நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த Oxygen தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில், புதிய Oxygen உற்பத்தி நிலையம் (Oxygen Plant) ஒன்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்குத் தேவையான Oxygen Cylinder அநுராதபுரம் மற்றும் மகாஓயா போன்ற தொலைதூரப் பிரதேசங்களிலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இதனால் போக்குவரத்து மற்றும் கொள்வனவுக்காக பெருமளவிலான அரச நிதி செலவிடப்படுவதுடன், அவசரத் தேவைகளின் போது தூர இடங்களிலிருந்து […]

அதிரடி 28 Feb 2026 6:14 am

அடுத்த கைது கோட்டா தான்- அடித்துச் சொல்கிறார் வீரவன்ச

அடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அரச புலனாய்வுச் சேவை தலைவர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்சவும் கைது செய்யப்படவுள்ளதாக அவர் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். “சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைக் கொண்டு, அவர்களின் அடுத்த

புதினப்பலகை 28 Feb 2026 6:06 am

சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த 25ஆம் திகதி காலை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார். அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து

புதினப்பலகை 28 Feb 2026 5:56 am

பில் கேட்ஸை வம்பிழுத்த எலான் மஸ்க் ; எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன. அண்மையில் வெளியான […]

அதிரடி 28 Feb 2026 3:30 am

கர்ப்பிணி மனைவி, 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர் –அதிர்ச்சி சம்பவம்

புதுடெல்லி, தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியின் பிரேம் சந்த் பார்க் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அனிதா (27 வயது). இவர்களுக்கு ஐந்து, நான்கு மற்றும் மூன்று வயதில் 3 பெண் குழந்தைகள் இருந்தனர். […]

அதிரடி 28 Feb 2026 1:30 am

ஐந்து மாதக் குழந்தையை குலுக்கி கொன்ற தாயின் காதலன்; ஆயுட்கால சிறைத்தண்டனை

2024 மார்ச் மாதம் லண்டன் வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee) தனது காதலன் தோமஸ் மோர்கனிடம் (Thomas Morgan) ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதன்போது கோபத்தில் குழந்தையை மோர்கன் மிகக் கொடூரமாகக் குலுக்கியதில், மூளை, முதுகுத்தண்டு மற்றும் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மோர்கன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது குழந்தையின் காயங்களை ஆய்வு செய்த மருத்துவ […]

அதிரடி 28 Feb 2026 12:30 am

பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையத்தில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. அத்துடன் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்தததுடன் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்பட்டிருக்கவிலை கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளது. மேலும் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு […]

அதிரடி 28 Feb 2026 12:30 am

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! - ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமம், அம்பாத்துரையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் கல்விப் பயணம் தொடங்கியது. ஒரு மழைக் காலத்தில், ஆலமரத்தின் கிளையைத் தேடி வரும் பறவைகளைப் போல, நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றிணைந்தோம். ஆரம்பக்கால நாட்கள் புதிய சூழல், வீட்டைப் பிரிந்த ஏக்கம் என ஆரம்பத்தில் எங்களில் பலருக்குக் கண்கள் கலங்கின. விடுதியில் அறைகள் பிரிக்கப்படாததால், நாங்கள் அனைவரும் பிரார்த்தனை கூடத்திலேயே ஒன்றாகத் தங்கினோம். அங்கே நிலவிய கடுமையான விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் ஆரம்பத்தில் எங்களுக்கு அச்சத்தைத் தந்தன. தூக்கமில்லாத இரவுகளையும், தனிமை உணர்வையும் கடந்த எங்களுக்கு, சீனியர் மாணவர்களின் வழிகாட்டுதல்களும், பழனியம்மாள் - சீனியம்மாள் ஆகியோரின் கைப்பக்குவத்தில் கிடைத்த உணவும் பெரும் ஆறுதலாக இருந்தன. வகுப்புத் தோழிகளும் அவர்களின் தனித்துவமும் சரளா அக்காவின் வருகைப் பதிவேட்டோடு தொடங்கிய எங்கள் வகுப்பறையில் மொத்தம் 33 தோழிகள் இருந்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. அமராவதியின் விடாத சிரிப்பும், கை - கண் அசைவுகளும் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தும். நீலா எல்லார் மடியிலும் குழந்தையாய் தவழும் குணம் கொண்டவள். மெட்டில்டாவின் மென்மையான பேச்சும், அகத்தியலட்சுமியின் தாயுள்ளமும், பாரதாதேவியின் கம்பீரமான பார்வையும் எங்களை வழிநடத்தின. பிருந்தாவின் அழகான தோற்றமும், சுந்தரத் தெலுங்குப் பேச்சும், இந்திராணியின் படிப்பின் மீதான ஆர்வமும் இன்றும் நினைவில் நிற்கின்றன. இன்று எங்களுடன் இல்லாத ஜெயக்குமாரி, கார்த்தி, மணிமேகலை மற்றும் ஜெயா ஆகியோரின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனதை வாட்டுகின்றன. அவர்களின் குடும்பப் பாசமும், பகிர்ந்து கொண்ட தருணங்களும் ஆயுசுக்கும் மறக்க முடியாதவை. மல்லிகாவின் துறுதுறுப்பு, மதியின் ஆணித்தரமான பேச்சு, நாகராணியின் சிரிப்பு, பஞ்சாவின் நடனம் என எங்கள் குழு ஒரு கதம்ப மாலையாக இருந்தது. ராஜி என்பவள் உணவைப் பகிர்ந்து கொள்வதில் சிறந்தவள். ரேவதி, ரோஸி, சாந்தி, நிர்மலா என அனைவரும் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்ட அவிழா முடிச்சுகளாக மாறினோம். காலத்தின் ஓட்டம் நாங்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தாலும், காந்திகிராமம் என்ற நூலில் அழகிய பூக்களாக இணைந்தோம். 46 ஆண்டுகள் மிக வேகமாக உருண்டோடிவிட்டன. இன்று நாங்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்று, பல்வேறு திசைகளில் பறவைகளாகச் சிறகடித்து வாழ்ந்து வருகிறோம். மீண்டும் ஒரு சந்திப்பு படிப்பும் பணியும் முடிந்துவிட்டன, ஆனால் நட்பு இன்னும் முடியவில்லை என்பதே உண்மை. திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும் நாம், மீண்டும் ஒருமுறை அந்த ஆலமரத்தடியில் எப்போது கைகோர்ப்போம் என்ற ஏக்கத்துடனேயே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. தோழிகளே, அந்த பொற்கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நேரில் பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் கூடும் நாள் எது? விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 27 Feb 2026 11:35 pm

வழக்கில் சிக்கும் விஜய்.. ஏப்.20ம் தேதி விசாரணை - நீதிமன்றத்தில் சங்கீதாவின் முக்கிய பாயிண்ட்!

சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு வரும் ஏப்.20ம் தேதி விசாரணை வரவுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 27 Feb 2026 11:12 pm

‘பாகிஸ்தான் அரையிறுதிக்கு போக’.. இலங்கைக்கு எதிராக எத்தனை ரன் வித்தியாசத்தில் வெற்றிபெறணும்?

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, மிகவும் கடினமாக மாறியுள்ளது. இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், பாகிஸ்தான் அணி இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 27 Feb 2026 11:03 pm

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை ; தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா கவலை

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. […]

அதிரடி 27 Feb 2026 10:30 pm

தென்கொரியாவை அழித்துவிடுவோம்: வடகொரியா எச்சரிக்கை

பியாங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு […]

அதிரடி 27 Feb 2026 9:30 pm

வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது –இளங்குமரன் எம்.பி

வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை வழங்கவுள்ளது என மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தி வரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

அதிரடி 27 Feb 2026 9:30 pm

அநுரவின் ‘அரசியல் பொறி’: ஆட்டம் காணும் நிழல் உலகமும், அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்களும்!  

“அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் படகு கவிழ்ந்துவிடும்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்று எச்சரித்திருந்தார். ஆனால்,… The post அநுரவின் ‘அரசியல் பொறி’: ஆட்டம் காணும் நிழல் உலகமும், அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்களும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Feb 2026 9:20 pm

Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்கும் வரை, வார இறுதி நாட்கள் ஓய்வு நாட்களாக இல்லாமல், வெறும் ஸ்க்ரோலிங் நாட்களாகவே முடிகின்றன. இதிலிருந்து விடுபட சில வழிகள்: * உங்கள் கவனத்தை சிதைக்கும் சமூக வலைதள நோட்டிபிகேஷன்களை வெள்ளிக்கிழமை இரவே அணைத்து விடுங்கள். அவசரம் என்றால் அவர்கள் அழைக்கட்டும். Mobile Addiction * போனை ஹாலிலேயே சார்ஜ் போடுங்கள். தூக்கத்திற்கு முன் நீல ஒளி (Blue light) உங்கள் கண்களைச் சென்றடையாமல் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். * நீண்ட நாட்களாக படிக்காத புத்தகம், ஒரு சின்ன நடைப்பயணம் அல்லது நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்றவை உங்கள் மூளைக்கு உண்மையான புத்துணர்ச்சியைத் தரும். * அந்த உணவையோ அல்லது அந்த சூரிய அஸ்தமனத்தையோ கேமரா வழியே பார்க்காமல், உங்கள் கண்கள் வழியே ரசியுங்கள். வெயிட்... கொஞ்சம் பொறுங்கள் இவ்வளவு சீரியஸாக நான் எழுதியதை நீங்கள் எதில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மொபைல்போனில் தானே... இந்தக் கட்டுரையை இப்போது நீங்கள் படித்து முடித்ததும், ஆஹா! சூப்பர் பாயிண்ட்ஸ் என்று நினைத்துவிட்டு என்ன செய்வீர்கள் தெரியுமா? மெதுவாகக் கீழே ஸ்க்ரோல் செய்து இதற்கு யாராவது கமெண்ட் பண்ணியிருக்காங்களா என்று பார்ப்பீர்கள். Smartphone அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கம் போய், நான் இன்னைக்கு போன் யூஸ் பண்ண மாட்டேன் என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, அதற்கு எத்தனை 'லைக்' வருகிறது என்று ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் செக் பண்ணுவீர்கள். போன் அடிக்‌ஷன் மிகவும் மோசம் என்று ஒரு யூடியூப் வீடியோவை 2 மணிநேரம் பார்த்துவிட்டு, கடைசியில் போன் சார்ஜ் தீர்ந்ததும், சார்ஜரைத் தேடி ஓடும்போதுதான் உங்களுக்குத் தெரியும்... ஞாயிற்றுக்கிழமை இரவு என்று... நாம் போனுக்கு அடிமையில்லை என்று நிரூபிக்க, இந்த போனைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே கிளம்பலாம் என்று நினைப்போம். ஆனால், வெளியே போக 'ரூட்' பார்க்க Google Maps வேண்டுமே? பசி எடுத்தால் சாப்பாடு ஆர்டர் செய்ய Zomato வேண்டுமே? கடைசியில் ஞாயிறு இரவு டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) பற்றி ஒரு பதிவு எழுதிவிட்டு, காலை வரை அதற்கு வரும் ரீச்-ஐப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போவோம். Smartphone உண்மையில் நாம் போனை விட்டாலும், இந்த போன் தான் நம்மைப் பிடித்துக்கொண்டு விடாது போலிருக்கிறது! இந்தக் கட்டுரையை வாசித்து முடித்த கையோடு, நம் போனை அணைத்துவிட்டு 10 நிமிடம் சும்மா இருக்க முயற்சி செய்யலாமா? (முடியாதுன்னு எனக்கும் தெரியும். இதிலிருந்து விடுபட உண்மையில் வேறு ஏதாவது வழிகள் இருந்தால் கமென்ட்டில் தெரிவிக்கவும். மற்றவர்களுக்கு உதவும்). ஆக வழக்கம்போல் இந்த வீக் எண்டையும் என்ஜாய் செய்யுங்கள்!

விகடன் 27 Feb 2026 9:05 pm

பிரித்தானிய விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்

ஐக்கிய இராச்சியத்தின் (UK) குடிவரவுத் துறையில் மிகப்பெரிய மாற்றமாக, விசா ஸ்டிக்கர் (Vignette) வழங்கும் முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2026 பெப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இனி டிஜிட்டல் முறையிலான ‘eVisa’ மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் டிஜிட்டல் விசா முறையைப் பின்பற்றி, பிரித்தானியாவும் முழுமையான டிஜிட்டல் குடிவரவு முறைக்கு மாறியுள்ளது. இதற்கு முன்னர் விசா அனுமதிக்கப்பட்டதும், உங்களது கடவுச்சீட்டில் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதற்காக விண்ணப்பதாரர்கள் தமது கடவுச்சீட்டை விசா விண்ணப்ப […]

அதிரடி 27 Feb 2026 8:30 pm

தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்

வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியுமே நடைபெறவுள்ள இந்த போராட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இடம்பெற்றன. இதில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் செ.மயூரன், கு.தினேஸ், பொதுமக்கள், வர்த்தகர்கள் […]

அதிரடி 27 Feb 2026 8:00 pm

தபால் அட்டைகள் மூலம் மக்கள் கருத்துப் பதிவு: யாழ். பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக விசேட நடவடிக்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி […]

அதிரடி 27 Feb 2026 7:58 pm

விஜய் வழக்கு திமுக காரணமா? சமூக வலைத்தளங்களில் நெட்சன்களின் பதிவு!

விஜய் வழக்கு திமுக காரணமா? சமூக வலைத்தளங்களில் நெட்சன்களின் பதிவு செய்து வருகின்றனர்.

சமயம் 27 Feb 2026 7:52 pm

Hema Malini Smiles Publicly After Dharmendra’s Death

Actress and politician Hema Malini has recently been seen smiling in public for the first time since the death of

சென்னைஓன்லைனி 27 Feb 2026 7:33 pm

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் சைலேந்திர பாபு

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. நீங்களும் ஆகலாம் IAS என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய டாக்டர். சி. சைலேந்திர பாபு, IAS,IPS,IFS இந்தப் பொறுப்புகள் நிறைய பேருக்கு கனவாக இருக்கிறது. இந்த பதவிகளுக்கு வருவதற்கு நாம் என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் படிக்கலாம்? ஒரு பட்டப்படிப்பு முடிந்தப் பிறகு எந்த மாதிரி நம்மை தயார்படுத்திக் கொள்ளவது போன்ற எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் ஆனந்த விகடனும், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமியும் இணைந்து நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு நீங்கள் வாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பல சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் மாணவர்கள் பல்வேறு பதவிகளில் இருக்கிறார்கள். நிறைய பேர் வெளிநாடுகளில் தூதுவர்களாக இருக்கிறார்கள். அதேபோல IAS,IPS,IFS அதிகாரிகளாக நீங்களும் ஆக முடியும். வாருங்கள் விவாதிப்போம் என்றார். UPSC / TNPSC ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். Loading…

விகடன் 27 Feb 2026 7:32 pm

ஈரான் ஏவுகணைத் திட்டம் ; அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் எச்சரிக்கை

ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு மறுப்பது பெரிய சிக்கலாக அமையும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரான் தற்போது தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்கி வரும் நிலையில், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளை டெஹ்ரான் (Tehran) உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரானின் ஏவுகணைத் திட்டம் […]

அதிரடி 27 Feb 2026 7:30 pm

Sensex, Nifty Fall Sharply Amid Global Weakness

The Indian stock market ended February on a weak note as both the Sensex and Nifty fell sharply amid negative

சென்னைஓன்லைனி 27 Feb 2026 7:24 pm

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. சிபிஎம் வைத்துள்ள முக்கியமான கோரிக்கை.. திமுக அளித்த பதில்

திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தோழமை கட்சிகளுக்கு அழைத்து விடுத்து பேசி வருகிறது. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

சமயம் 27 Feb 2026 7:21 pm

Tilak Varma Sends Video Message to Fan

After India’s T20 World Cup 2026 match against Zimbabwe on February 26, Indian batter Tilak Varma had a sweet moment

சென்னைஓன்லைனி 27 Feb 2026 7:20 pm

Matt Henry Granted Parental Leave During T20 World Cup

New Zealand’s fast bowler Matt Henry will be on parental leave after the team’s final Super 8 match against England

சென்னைஓன்லைனி 27 Feb 2026 7:14 pm

டிரம்ப் ஈரானிய ஏவுகணை கூற்றை அமெரிக்க உளவுத்துறை ஆதரிக்கவில்லை

ஈரான் விரைவில் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணையை வைத்திருக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளால் ஆதரிக்கப்படவில்லை, மேலும் இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது, அறிக்கைகளை நன்கு அறிந்த மூன்று ஆதாரங்களின்படி, இஸ்லாமிய குடியரசின் மீதான சாத்தியமான தாக்குதலுக்கான அவரது வழக்கின் ஒரு பகுதியை சந்தேகிக்கின்றனர். செவ்வாயன்று காங்கிரஸில் தனது யூனியன் உரையில், டிரம்ப் அமெரிக்க மக்களிடம் தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்கினார். தெஹ்ரான் விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளில் பணியாற்றி வருகிறது என்று கூறினார். ஆனால், ஈரான் அதன் தற்போதைய செயற்கைக்கோள்-தூக்கும் விண்வெளி-ஏவுகணை வாகனங்களிலிருந்து (SLV) இராணுவ ரீதியாக சாத்தியமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்க 2035 வரை ஆகலாம் என்ற வகைப்படுத்தப்படாத 2025 அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் மதிப்பீட்டில் எந்த மாற்றங்களும் இல்லை என்று இரண்டு ஆதாரங்கள் தெரிவித்தன. அமெரிக்காவிற்கு மரணம் என்று கோஷமிடும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் ஒரு நாடான ஈரான் முன்வைக்கும் கடுமையான கவலையை ஜனாதிபதி டிரம்ப் முன்னிலைப்படுத்துவது முற்றிலும் சரியானது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறினார். ஈரானுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் சீனா அல்லது வட கொரியா தொழில்நுட்ப உதவியை வழங்கினாலும், ஈரான் உண்மையில் ஐசிபிஎம் நிலை மற்றும் செயல்பாட்டுக்குரிய ஒன்றை உருவாக்க எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஒரு வட்டாரம் கூறியது. முக்கியமான உளவுத்துறையைப் பற்றி விவாதிக்க பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய வட்டாரங்கள், ஈரான் விரைவில் அமெரிக்க தாயகத்தைத் தாக்கக்கூடிய ஒரு ஏவுகணையை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் அவர்கள் அறியாத புதிய உளவுத்துறை அறிக்கையின் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்றும் கூறினர். ஈரான் பல ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் நம்புவதாக நியூயார்க் டைம்ஸ் முதலில் செய்தி வெளியிட்டது. ஈரானின் ஏவுகணைத் திறன் குறித்த டிரம்பின் கூற்று, அமெரிக்கா மற்றும் ஈரானின் பிரதிநிதிகள் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வந்தது, பிராந்தியத்தில் பாரிய இராணுவக் கட்டமைப்பின் மத்தியில் சாத்தியமான அமெரிக்கத் தாக்குதல்களைத் தடுக்கக்கூடிய ஒரு திருப்புமுனைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அதன் மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அமெரிக்காவை அவர் ஏன் வழிநடத்துகிறார் என்பதை அமெரிக்க ஜனாதிபதி பகிரங்கமாக விளக்கவில்லை. செவ்வாயன்று தனது உரையில், போராளிக் குழுக்களுக்கு தெஹ்ரானின் ஆதரவு, போராட்டக்காரர்களைக் கொல்வது மற்றும் நாட்டின் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்கள் ஆகியவை பிராந்தியத்திற்கும் அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தல்களாக இருப்பதாக டிரம்ப் சுட்டிக்காட்டினார். ஆதாரங்களை வழங்காமல், யுரேனியம் செறிவூட்டலுடன் தொடர்புடைய மூன்று முக்கிய தளங்கள் மீது கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாக அவர் கூறிய அணுசக்தி திட்டத்தை தெஹ்ரான் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவதாக டிரம்ப் கூறினார். ஈரான் தனது ஏவுகணை திறன்களை விரிவுபடுத்துகிறது என்பதை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மறுத்தார். நாங்கள் நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கவில்லை. வேண்டுமென்றே 2000 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு வரம்பை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார். இது ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள மட்டுமே எங்களிடம் (அவை) உள்ளன. எங்கள் ஏவுகணைகள் தடுப்பை உருவாக்குகின்றன.

பதிவு 27 Feb 2026 7:13 pm

பிரதமர் ஸ்டார்மருக்கு தேர்தலில் விழுந்த அடி: பசுமைக்கட்சி வெற்றி பெற்றது!

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கான நம்பிக்கை சோதனையாகக் கருதப்படும் இடைத்தேர்தலில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சி மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. பசுமைக் கட்சி அந்த இடத்தை வென்றது, அதைத் தொடர்ந்து வலதுசாரி ஜனரஞ்சக சீர்திருத்தக் கட்சியும் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், நெருக்கமாகப் பார்க்கப்பட்ட நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பிரிட்டனின் மத்திய-இடது தொழிலாளர் கட்சி, மான்செஸ்டரில் பாரம்பரியமாக பாதுகாப்பான இடத்தை பசுமைக் கட்சியிடம் இழந்தது. குறைந்து வரும் ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும் மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய புதுப்பிக்கப்பட்ட அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த முடிவு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பசுமைக் கட்சி வேட்பாளர் ஹன்னா ஸ்பென்சர் கோர்டன் மற்றும் டென்டன் தொகுதியில் கிட்டத்தட்ட 15,000 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் சீர்திருத்த UK க்கும் அடுத்தபடியாக தொழிற்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 34 வயதான பிளம்பர் மற்றும் பயிற்சி பிளாஸ்டரிங்கரான ஸ்பென்சர், தனது கட்சியின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை ஓரளவு பிரச்சாரம் செய்தார். தொகுதியின் மக்கள் தொகையில் சுமார் 28% ஆக இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களை ஈர்த்தார். அவரது வெற்றி நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் மொத்த பிரதிநிதித்துவத்தை ஐந்து இடங்களாக உயர்த்துகிறது. வலதுசாரி ஜனரஞ்சக சீர்திருத்த UK வேட்பாளர் மாட் குட்வின் சுமார் 10,500 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் தொழிற்கட்சியின் உள்ளூர் கவுன்சிலர் ஏஞ்சலிகி ஸ்டோகியா 9,300 க்கும் சற்று அதிகமாகப் பெற்றார். தொழிற்கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 13,000 பெரும்பான்மையுடன் அந்த இடத்தை வென்றது. நவீன பிரிட்டனில் பாரம்பரியமாக அரசாங்கத்தின் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றான கன்சர்வேடிவ் கட்சி, வெறும் 706 வாக்குகளை மட்டுமே பெற்றது. ஸ்டார்மருக்கு உள் போட்டியாளராக பரவலாகக் கருதப்படும் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாமின் சாத்தியமான வேட்புமனுவை தொழிற்கட்சித் தலைமை தடுத்தது. அந்தப் பகுதிக்கான முந்தைய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கோர்டன் மற்றும் டென்டன் தொகுதி, புவியியல் ரீதியாகவும் மக்கள்தொகை ரீதியாகவும் இது நகராட்சி எல்லைகளைக் கடந்து, மாணவர், முஸ்லிம் மற்றும் வெள்ளையர் தொழிலாள வர்க்கம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு வாக்காளர் தொகுதியைக் கொண்டுள்ளது. எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் கடந்தகால தொடர்புகள் இருந்தபோதிலும், அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக முக்கிய தொழிலாளர் கட்சி பிரமுகர் பீட்டர் மண்டேல்சனை நியமித்தது தொடர்பான அரசியல் சர்ச்சைகள் மற்றும் குறைந்து வரும் ஒப்புதல் மதிப்பீடுகளுக்கு மத்தியில் இந்த முடிவு ஸ்டார்மருக்கு அழுத்தத்தை சேர்க்கிறது . ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொண்டார், இருப்பினும் அவர் பதவியில் நீடிக்க விரும்புவதாகக் கூறினார். தொழிலாளர் கட்சித் தலைவி அன்னா டர்லி இந்த முடிவை தெளிவாக ஏமாற்றமளிக்கிறதுஎன்று அழைத்தார். வாக்குப்பதிவு சிறப்பாக இல்லாததால், மே மாதம் ஸ்காட்லாந்து , வேல்ஸ் மற்றும் லண்டனில் நடைபெற உள்ள உள்ளூர் தேர்தல்களில் தொழிற்கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது ஸ்டார்மருக்கு ஒரு முக்கிய சோதனையாக இருக்கும். இங்கிலாந்தின் அடுத்த பொதுத் தேர்தல் 2029 வரை எதிர்பார்க்கப்படவில்லை.

பதிவு 27 Feb 2026 7:03 pm

மின் கட்டணத்துக்கு முடிவு... ரூ.25,000 முன்பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்... எப்படி?

வேலை இன்மை, வருமானம் குறைவு போன்ற சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் மக்களின் ஒவ்வொரு ரூபாயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருமானம் இல்லாவிட்டாலும் சில செலவுகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அவற்றில் ஒன்றுதான் மின் கட்டணம். நம்மில் பெரும்பாலானோருக்கு சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்கள் வரையிலும் மின் கட்டணம் வருகிறது. இத்தகைய மின் கட்டணம் பலருடைய நிதிநிலைக்குப் பெரும் சுமையாக மாறுவதும் உண்டு. காரணம், எலெக்ட்ரிசிட்டி பில் வந்துவிட்டால் கட்ட வேண்டிய தேதியில் கட்ட வேண்டும். நமக்கு என்ன முக்கியமான செலவுகள் இருந்தாலும், மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நம்முடைய மின்சார பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம். இலவச மின்சாரம் இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன. இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும். உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே. இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்கு சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம். சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம். இலவச மின்சாரம் சேலத்தில் வரும் மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை நாணயம் விகடன், டார்லிங் சோலார் இணைந்து சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet நிகழ்ச்சி விவரங்கள்: Date: மார்ச் 7, 2026 Time: மாலை 6.00 - 8.00 இன்றைய முதலீடு, வாழ்நாளுக்குமான சேமிப்பு' சோலார் அமைப்பது எப்படி? அரசு மானியம் பெறுவது எப்படி? அனைத்தும் தெளிவாக... முகவரி: GRAND ESTANCIA Address: 349/3 Bangalore, Bypass Rd, Narasothipatti, Salem, Tamil Nadu 636004 பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet இலவச மின்சாரம் நம்முடைய சொந்த வீட்டில் சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் நம்முடைய மின் கட்டண செலவை குறைத்து, நாட்டின் பசுமை புரட்சியிலும் பங்கெடுக்கலாம். பதிவு செய்ய: https://bit.ly/solarawarenessmeet

விகடன் 27 Feb 2026 7:02 pm

“25 ஆண்டுகால பந்தம் முடிகிறதா?”–நடிகர் விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து மனு

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு எழுந்துள்ள இந்தச் சட்ட நடவடிக்கை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Feb 2026 7:00 pm

ஜீவனாம்சம் கேட்கும் சங்கீதா… கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்.. பரபரப்பை கிளப்பிய விவாகரத்து வழக்கு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 1998-ல் லண்டனில் பதிவுத் திருமணமும், 1999-ல் சென்னையில் இந்து முறைப்படி சடங்குகளுடனும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

சமயம் 27 Feb 2026 6:56 pm

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்கீதா விவாகரத்து - காரணம் என்ன? அமைதி காக்கும் விஜய்!

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா மனுதாக்கல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 27 Feb 2026 6:56 pm

நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கு- வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜின் கமெண்ட்... என்னனு தெரியுமா?

நடிகர் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமெண்ட் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

சமயம் 27 Feb 2026 6:55 pm

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல்கள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது , பாதுகாப்பு அமைச்சர் அண்டை நாடுகளுக்கு இடையே வெளிப்படையான போர்பற்றிப் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களின் படங்களை வெளியிட்டது. இந்த நடவடிக்கையில் தலிபான் இலக்குகள் மீதான தரைவழித் தாக்குதல்களும் உள்ளடங்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இரு தரப்பினரும் தாக்குதல்களை நடத்தி அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளனர். கைபர் பக்துன்க்வா எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல் என்று பாகிஸ்தான் விவரித்ததைத் தொடர்ந்து சமீபத்திய மோதல் வெடித்தது. எல்லைப் பகுதியில் நீண்ட காலமாக பதட்டங்கள் அதிகமாக உள்ளன, பாகிஸ்தான் தனது எல்லைக்குள் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக குற்றம் சாட்டுகிறது.

பதிவு 27 Feb 2026 6:48 pm

‘ஜிம்பாப்வேவுக்கு எதிராக சொதப்பிய வீரரை’.. திட்டித்தீர்த்த கம்பீர்? ஓய்வு அறையில் நடைபெற்ற சம்பவம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில், ஒரேயொரு இந்திய வீரர் படுமோசமாக சொதப்பினார். அவரால், இந்திய அணியின் நெட் ரன்ரேட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சமயம் 27 Feb 2026 6:47 pm

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், 'திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அது யாருன்னு எல்லோரும் கேட்குறீங்க. ஆனால் நான் அது யாருன்னு சொன்னா யூடியூப் சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லனும்'னு நான் அதை சொல்றது இல்ல. சிவகார்த்திகேயன் இந்த மாதிரியான விஷயங்களைத் தாண்டி தான் வரோம் என்கிறதை தான் சொல்றோம். ராதிகா மேம் கிட்டத்தட்ட 48 வருஷமாகத் திரைத்துறையில இருக்காங்க. அவுங்களும் இதை அனுபவிச்சு இருப்பாங்க. கம்பிளைன் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்ல-ல. இந்த மாதிரியான சூழல்களைக் கடந்துதான் படங்களைப் பண்றோம்'னு சொல்றேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 27 Feb 2026 6:12 pm

ஜிதின் லால் இயக்கத்தில் சியான் விக்ரம்: ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்த புதிய புராஜெக்ட்

நடிகர் விக்ரம் மற்றும் 'ஏஆர்எம்' (ARM) புகழ் மலையாள இயக்குநர் ஜிதின் லால் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சியான் விக்ரம் சமீபத்தில் அறிவித்த நான்கு புதிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Feb 2026 6:07 pm

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கி ருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த சூர்யா (28) என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கீழ்பென்னாத்தூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கருத்து-வேறுபாடு காரணமாக பிரின்சி அவரைப் பிரிந்து குழந்தையுடன் தனது தாய் வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்றுவிட்டார். சூர்யாவும், அவ்வபோது சென்று தனது குழந்தையை பார்த்துவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11-ம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி பிரின்சி அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த சூர்யா, தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். `சந்தேக மரணம்’ என போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். தி.மு.க பிரமுகர் பெரியநாயகம் இந்த நிலையில், குழந்தை இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த பிரின்சிக்கும், ஜேசுராஜபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவருக்கும் திருமணத்தை மீறி தகாத தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பெரியநாயகம், தி.மு.க-வில் இளைஞரணி கிளைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பிரின்சி இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் பெரியநாயகத்தை கைது செய்த போலீஸார், அவர் மீது `போக்சோ’ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளைச் சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.

விகடன் 27 Feb 2026 6:07 pm

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்

விகடன் 27 Feb 2026 6:07 pm

Britannia 50-50 revives ‘Na Re Naa Naa’ jingle with Rishabh Pant and Jemimah Rodrigues

MUMBAI: There are two kinds of snack lovers. The ones who go all in for the crunch. And the ones who wait for the melt. To celebrate this snack debate, Britannia 50-50 has launched the Cheeze Dipped Crunchy Layered Sandwich, a premium new format that brings both experiences together in one bite.For three decades, Britannia 50-50 has been built on a simple idea of duality, bringing two distinct flavours together in one cracker. With Cheeze Dipped, the idea is to bring alive a 50 percent crunchy and 50 percent melty experience.The Britannia 50-50 Cheeze Dipped carries forward the brand’s signature idea of duality in a new format. Crafted with 22 baked layers that create a structured crunch and enrobed with cheese, the product delivers contrast through texture. By bringing crunch and melt together in a single, defined bite, it offers a complete and satisfying snack on its own.Bringing this contrast to life and building on 50-50’s long-standing association with cricket, the brand has rolled out a TVC featuring Rishabh Pant and Jemimah Rodrigues. Conceptualised by Mullen Lowe Lintas, the film turns the Crunch versus Melt debate into a fun on-screen exchange, with Rishabh and Jemimah representing two distinct snack personalities. It captures the light-hearted banter between them as each defends their side before the product resolves the debate in one bite. Adding to the nostalgia, the iconic “Na Re Naa Naa” jingle makes a comeback in a refreshed avatar, reinforcing the brand’s legacy of celebrating contrast for a new generation of snackers.Rolled out a TVC featuring Rishabh Pant and Jemimah Rodrigues. Conceptualised by Mullen Lowe Lintas, the film turns the Crunch versus Melt debate into a fun on-screen exchange, with Rishabh and Jemimah representing two distinct snack personalities. It captures the light-hearted banter between them as each defends their side before the product resolves the debate in one bite. Adding to the nostalgia, the iconic “Na Re Naa Naa” jingle makes a comeback in a refreshed avatar, reinforcing the brand’s legacy of celebrating contrast for a new generation of snackers.[caption id=attachment_2481698 align=alignleft width=200] Siddharth Gupta [/caption]Speaking about the launch, Siddharth Gupta, Vice-President - Marketing, Britannia, said, “From the early ‘Na Re Naa Naa’ days to the many cricket moments we have created over the years, 50-50 has always celebrated contrast. With Cheeze Dipped, we have taken that idea beyond flavour and brought it alive through texture. Bringing both male and female cricketing icons together for the first time under 50-50 felt like a natural extension of this thought. Rishabh and Jemimah represent two distinct energies that come together seamlessly, just like crunch and melt.” Jemimah Rodrigues said, “The idea behind this campaign connected with me instantly. The banter segment with Rishabh, adds a lively and entertaining spark to the film and captures the Crunchy vs Melty snack lovers debate so well. The film reflects how different styles can come together, which is what this association with Britannia 50-50 is all about.” Rishabh Pant said, “I think the Crunchy versus Melty campaign is an interesting concept and will connect with the audience instantly. We all have our own Crunchy and Melty days, which makes each day very different and exciting. So, I’m sure everyone will love and resonate with this film. It was fun shooting this campaign, added by the banter with Jemimah.” [caption id=attachment_2388294 align=alignright width=200] Sarvesh Raikar [/caption]Elaborating on the campaign, Sarvesh Raikar, President - Creative, Mullen Lowe Lintas Group said, “Britannia 50-50 is one of India’s much-loved biscuits. With Cheeze-dipped we had to find a new expression of duality. The unique pair of Rishabh and Jemimah provided the perfect contrast – crunchy and melty – to launch this all-new variant! The films bring out the delectable conversation in a playful way and reintroduce the iconic signature of Na-re-na-na 50-50. Britannia 50-50 Cheeze Dipped Crunchy Layered Sandwich is currently available across select cities at leading retail outlets and Q-commerce platforms.Link to the TVC -https://www.youtube.com/watch?v=TlHPM2b8xpU

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 5:56 pm

விஜய்: 'நடிகையுடன் திருமணம் மீறிய உறவு; பெயரை சொல்லும் உரிமை உண்டு, ஆனா.!' - சங்கீதா மனுவின் விவரம்

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 'கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார். விஜய் அதற்கு எதிர்ப்போ ஆமோதிப்போ தெரிவிக்கவே இல்லை. என்னை மனரீதியாக புண்படுத்தி வீட்டிலேயே தனிமைப்படுத்தினார். இந்த விவகாரத்தை கவுன்சலிங் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பினேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பதை ஒத்திவைத்தேன். விஜய்யின் அந்த திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்தது எங்களின் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை குலைத்தது. செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கவுன்சலிங் மூலமாக இந்த விவகாரத்தை பேசி தீர்வு காண நினைத்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கு அனைத்து தரப்பினருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு இப்போது வரை நடிகையின் பெயரை வெளியில் கூறவில்லை. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியோடு அவரின் பெயரையும் மனுவில் சேர்க்கும் உரிமை உண்டு. விஜய் - சங்கீதா எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன். இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் திருமண பந்தம் தொடர்கிறது. மீண்டும் இணைய முடியாத அளவுக்கு எங்களின் பந்தம் உடைந்துவிட்டது. பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கவுன்சலிங் மூலம் சுமுகமான தீர்வை எட்ட முயன்றேன். ஆனால், விஜய் தீர்வை எட்ட முயற்சிக்காமல் அவரின் மனைவி என்ற முறையில் நான் அனுபவித்து வரும் பொருளாதார அம்சங்களின் மீது கட்டுப்பாடை விதிக்க ஆரம்பித்தார். கடைசியாக 9.11.2025 அன்று கூட பரஸ்பர ஒப்புதலோடு இந்த பந்தத்திலிருந்து விலகவும் அதற்கான உரிமை விவகாரங்கள் சார்ந்து பேசவும் முற்பட்டேன். பொதுவெளியில் அவருக்கு இருக்கும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என நினைத்தேன். ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாமல் போகவே விஜய்தான் என்னை நீதிமன்றம் நோக்கி தள்ளியுள்ளார். மன உளைச்சலையும் அவமதிப்பையும் கொடுக்கும் இந்த திருமண பந்தத்தில் இனியும் தொடர முடியாது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 27 Feb 2026 5:48 pm

Reema Jain Rejoins Unilever as Chief Information Officer

Mumbai: Unilever has appointed Reema Jain as Chief Information Officer (CIO), marking her return to the FMCG major after a previous leadership stint. Jain announced the development in a LinkedIn update, describing the move as an opportunity to accelerate the role of artificial intelligence and technology in shaping the business.An experienced IT and digital transformation leader with over two decades of experience, Jain has led large-scale transformation programmes across global capability centres and country operations. Her areas of expertise span cloud computing, artificial intelligence, analytics and DevOps.Jain was previously with Unilever from May 2016 to May 2021. Prior to rejoining the company in May 2025, she served for more than three years as Chief Information and Digital Officer at Hero MotoCorp. Her earlier career includes senior leadership roles at Vodafone and General Electric.Beyond executive roles, Jain has also held governance positions. She served on the board of Hero MotoCorp Magneti Marelli Auto Limited, a joint venture between Hero MotoCorp and Marelli, and was a board observer at Ather Energy.Her appointment comes as enterprises deepen investments in AI-led transformation and digital capability building, with CIO roles increasingly central to business strategy and innovation.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 5:48 pm

Thomas Cook India appoints Subodh Bhave as Brand Ambassador for Maharashtra, launches Marathi Special Holidays

Mumbai: Thomas Cook (India) Limited, an omnichannel travel services company, has announced the launch of its Marathi Special Holidays portfolio and appointed acclaimed Marathi actor Subodh Bhave as its Goodwill Brand Ambassador for the Maharashtra market. The initiative debuts with specially curated Marathi Europe group tours, underscoring the company’s strategic focus on regional personalisation and cultural connect.The move comes as Maharashtra continues to emerge as one of India’s fastest-growing source markets for outbound travel, driven by rising disposable incomes, global aspirations and a strong appetite for experiential holidays. Maharashtrian travellers are known to be discerning and research-driven, with preferences centred around thoughtfully planned itineraries, quality accommodation, culinary familiarity and seamless travel experiences.Backed by a robust omnichannel network of 29 retail outlets across Mumbai, Pune, Navi Mumbai, Nashik, Ahmednagar and Kolhapur, Thomas Cook India is well positioned to serve this expanding market at scale, while delivering tailored travel solutions.The Marathi Special Europe Holidays are group tours designed to blend international travel aspirations with regional comfort. Key highlights include Marathi-speaking tour experts, curated Maharashtrian cuisine inclusions, and the camaraderie of travelling with like-minded Maharashtrian guests. The tours are aimed at multi-generational families, couples and groups of friends, offering immersive experiences across leading European destinations such as Switzerland, France, Italy and Austria.Commenting on the launch, Rajeev Kale, President & Country Head – Holidays, MICE, Visa, Thomas Cook (India) Limited, said, “Maharashtra is a key source market for us, and we saw this as a significant opportunity to deepen our engagement with the Marathi traveller segment. With our strong omnichannel presence and extensive retail footprint across the state, we are well-positioned to serve this market with both scale and personalised service. Our Marathi Special Europe Holidays have been introduced with a clear strategic intent — to cater specifically to the preferences of Maharashtrian travellers by combining global experiences with regional familiarity, from Marathi-speaking tour managers to curated Maharashtrian cuisine inclusions. As part of this focused approach, we are delighted to have acclaimed actor Subodh Bhave on board as our Goodwill Brand Ambassador, strengthening our connect with Maharashtrian travellers across the state.”

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 5:38 pm

சட்டமன்றத்தில் கணவன்- மனைவி! முதலமைச்சரை கேள்வி கேட்ட பெண் MLA

மேகாலயா சட்டமன்றத்தில் முதலமைச்சரை எம்எல்ஏவாக உள்ள அவரது மனைவியே சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்த வீடியோ வைரலாகி வருகிறது. சட்டமன்ற உறுப்பினரான மெஹ்தாப் சந்தீ சங்மா, முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பினார். நிலுவையில் உள்ள கால்நடை கல்வித் திட்டங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் பிற முன்மொழியப்பட்ட நிறுவனங்களின் நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினார். கால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்களில் ஆட்பற்றாக்குறை ஏன் இருக்கிறது? […]

அதிரடி 27 Feb 2026 5:30 pm

Nikita Kandhari expands role to lead Hindi Content Marketing at Prime Video & Amazon MGM Studios

Mumbai: Nikita Kandhari has taken on an expanded role, leading Content Marketing for the Hindi slate at Prime Video & Amazon MGM Studios, while continuing in her position as Principal – Content Marketing.Announcing the expanded responsibility on LinkedIn, Kandhari said , “I’m excited to share that I’m stepping into an expanded role, leading Content Marketing for the Hindi slate, spanning Original Series, Movies , and Licensed titles at Prime Video & Amazon MGM Studios. The past year has been an intense period of learning — across building new IPs, shaping campaigns, and working more closely than ever with cross-functional teams. I’m grateful for the trust, mentorship, and collaboration that made that growth possible. I’m looking forward to continuing to build thoughtful, audience-first campaigns for the stories we truly believe in.” In her expanded role, Kandhari will focus on shaping integrated, audience-first marketing strategies for Prime Video and Amazon MGM Studios’ Hindi content portfolio, strengthening the platforms’ engagement with India’s rapidly growing streaming audience.Prior to joining Amazon, Kandhari has worked across leading global and Indian organisations including Netflix, Hotstar, Unilever, Ogilvy & Mather and The Nielsen Company. She began her professional journey in 2008 as a Research Analyst at The Nielsen Company.With extensive experience across media, FMCG and advertising, Kandhari brings strong expertise in digital strategy, brand management, market research and digital performance marketing. She holds an MBA in Marketing and Strategy/Leadership from Indian School of Business.Her expanded leadership role comes as Prime Video and Amazon MGM Studios continue to scale their Hindi content slate, investing in compelling storytelling and high-impact marketing to deepen their presence in India’s competitive streaming landscape

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 5:28 pm

காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு: ஏன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானுடன் “திறந்த போர்” (open war) நடத்துவதாக அறிவித்துள்ளார். இது பிப்ரவரி 27, 2026 அன்று நடந்த பெரிய அதிர்ச்சி நிகழ்வு. பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பல இடங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. என்ன நடந்தது? வியாழன் இரவு (பிப்ரவரி 26 இரவு) ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைகள் டுரண்ட் லைன் (Durand Line) எல்லையில் பாகிஸ்தான் இராணுவ இடங்களை பெரிய […]

டினேசுவடு 27 Feb 2026 5:25 pm

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற சந்தர்ப்பத்தில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டன. கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

அதிரடி 27 Feb 2026 5:24 pm

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோரை ஒரு மணிக்கு முன் குறிகாட்டுவான் வருமாறு அறிவித்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை […]

அதிரடி 27 Feb 2026 5:21 pm

“நமீதா கம் பேக்!”–விஜி சித்துவின் ‘டயங்கரம்’படத்தில் கௌரவத் தோற்றம்: படப்பிடிப்பு தள அப்டேட்

பிரபல யூடியூபர் விஜி சித்து (VJ Siddhu) இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' (Dayangaram) திரைப்படத்தில் நடிகை நமீதா கௌரவத் தோற்றத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் திரையில் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Feb 2026 5:07 pm

Jeetendra brings nostalgia and humour to Myntra’s birthday blast campaign

Bengaluru: Fashion, beauty and lifestyle platform Myntra has unveiled a new social media film featuring yesteryear Bollywood superstar Jeetendra as part of its Myntra Birthday Blast campaign, marking the platform’s 19th anniversary with a nostalgic yet contemporary twist.The upcoming edition of Myntra Birthday Blast brings together an expansive selection of over 6 million styles from 20,000-plus brands, while also introducing “return gifts” for shoppers as part of the birthday celebrations. Positioned as both a cultural moment and a marquee shopping event, the campaign blends humour, emotion and scale to set the tone for Myntra’s biggest birthday yet.The film opens at a birthday party in full swing, where friends gather around the birthday boy to sing the customary birthday song. In a playful turn, Jeetendra — fondly known as Jeetu Ji and long associated with India’s most iconic birthday anthem — cuts in with his trademark enthusiasm, belting out a heartfelt birthday wish to “Sunita,” only to realise moments later that the birthday boy’s name is Balaji. What follows is a series of humorous attempts by his team to steer him away from nostalgia, culminating in a birthday wish he gets perfectly right — Myntra’s. The film closes with the line, “Myntra ka birthday toh… sabko pata hai. Jeetu Ji ko bhi.”[caption id=attachment_2493099 align=alignleft width=200] Neha Gulati [/caption]Speaking about the campaign, Neha Gulati, Senior Director – Brand Marketing, Myntra, s aid, “At Myntra, our Birthday Blast is a cultural moment as much as a shopping event. With Jeetendra, we found the perfect protagonist, someone whose connection to birthday celebrations runs so deep that it invokes both nostalgia and humour. His natural charisma and impeccable comic timing let us tell a story that feels fresh, and we think audiences are going to love it.” Veteran actor Jeetendra added, “It has been wonderful to be part of Myntra’s Birthday Blast campaign. The concept beautifully blends nostalgia with humour, creating something that feels both familiar and contemporary. It was exciting to collaborate on a film that celebrates Myntra’s journey while bringing a light-hearted and entertaining experience to audiences. I hope viewers enjoy watching it as much as we enjoyed creating it.” The creative collaboration was led by Talented Agency, with creatives Vaibhav Pachisia and Sanket Audhi sharing, “ Birthdays and Jeetendra ji celebrating them is an image that cuts across generations. To write lines for him, watch him bring them to life on set, and witness that energy up close was pure creative joy. It helped that Myntra were absolute champion as partners, and Lemonade Creatives and Ranjey Jha were rock solid in bringing the vision to life.” Myntra Birthday Blast remains the platform’s flagship fashion, beauty and lifestyle event, strategically timed ahead of the summer wardrobe season. Early access for Myntra Insiders begins on 27 February, with the sale opening to all shoppers from 28 February, promising a mix of scale, celebration and nostalgia-led storytelling.https://www.youtube.com/watch?v=4KAQzN6XylgConcept By: Talented AgencyProduction House: Lemonade CreativesDirector: Ranjey JhaDOP: Anant JainProducer: Yash Arora

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 4:48 pm

Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்...' - விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். TVK Vijay - தவெக விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading…

விகடன் 27 Feb 2026 4:46 pm

ஓபிஎஸ் பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார்.. ஆனால் இன்று அவரின் முடிவு.. விசிக தலைவர் திருமாவளவன்

திமுகவில் ஓபிஎஸ் இணைந்துள்ளது மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. அவருடைய இந்த முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிட பாசறையில் ஓபிஎஸ் தன்னை இணைத்து கொண்டதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமயம் 27 Feb 2026 4:41 pm

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி: நீதி அமைச்சை நோக்கிப் பாயும் மக்கள் கோரிக்கைகள்!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, […]

அதிரடி 27 Feb 2026 4:35 pm

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!

விகடன் 27 Feb 2026 4:30 pm

காலநிலை மாற்றத்தினால் அழியும் நிலையில் பென்குயின்கள்

பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகுவதால், அங்குள்ள எம்பரர் பென்குயின்கள் (Emperor penguins) பேரழிவைச் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்தாட்டிக்காவில் பென்குயின்கள் ஆண்டுதோறும் பழைய இறகுகளை உதிர்த்து புதிய இறகுகளை வளர்க்கும் (Catastrophic moult) திறன் கொண்டவையாக காணப்படுகின்றன. 40 நாட்கள் நீரில் நீந்த முடியாது புதிய இறகுகள் வளர்வதனால் பென்குயின்களால் 40 நாட்கள் நீரில் நீந்த முடியாது என்பதுடன் அவை பனிக்கட்டிகள் மீதே தங்கியிருக்க வேண்டும் இதனால் குறித்த பென்குயின்கள் பேரழிவைச் […]

அதிரடி 27 Feb 2026 4:30 pm

Hombale Films enters overseas distribution to take Indian cinema global

Mumbai: Leading Indian production house Hombale Films has announced its official entry into the overseas distribution space, marking a significant strategic expansion aimed at taking Indian cinema to a wider global audience.Known for redefining scale and storytelling in Indian cinema with landmark blockbusters such as KGF: Chapter 1, KGF: Chapter 2, Kantara, Kantara: Chapter 1, Salaar: Part 1 – Ceasefire and Mahavatar Narasimha, Hombale Films’ move into international distribution signals a new chapter in its growth journey.The expansion is driven by the studio’s vision to build a structured and focused global distribution network, enabling Indian films to reach audiences across geographies and cultures. Importantly, the overseas distribution arm will not be restricted to Hombale Films’ own productions. The company plans to collaborate with filmmakers and production houses across India, helping a diverse range of Indian stories travel beyond domestic markets.Over the years, Hombale Films has emerged as one of the country’s most influential studios, delivering not just commercial blockbusters but also culturally resonant cinema that transcends regional boundaries. From early successes like Ninnindale and Masterpiece to redefining Kannada cinema’s national footprint with Raajakumara and KGF: Chapter 1, the studio has consistently raised the bar with record-breaking theatrical performances.In 2025 alone, Hombale Films produced Kantara: Chapter 1, one of the highest-grossing Indian films of the year, and presented Mahavatar Narasimha. Both titles received formal listings in the Academy Awards’ General Entry List, placing them among the approximately 200-plus films worldwide eligible for Oscar consideration across categories such as Best Picture and Best Animated Feature.Looking ahead, the production house has a strong pipeline of marquee projects, including Salaar 2, KGF 3, and a major upcoming film featuring Hrithik Roshan, further strengthening its presence across languages and markets.By stepping into overseas distribution, Hombale Films reinforces its long-term commitment to expanding the global footprint of Indian cinema, ensuring that homegrown stories find audiences in every corner of the world. View this post on Instagram A post shared by Hombale Group (@hombalegroup)

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 4:28 pm

India Keep Semifinal Hopes Alive in Chennai

In front of the press box, fans were singing songs and chanting the names of their favourite Indian players. They

சென்னைஓன்லைனி 27 Feb 2026 4:19 pm

‘Duologue with Barun Das’ returns with Season 4, it is a blockbuster lineup featuring legends

Noida: The fourth season of the much-awaited ‘Duologue with Barun Das’, presented by Radico, returns on Saturday, February 28, 2026. It is an unrivalled lineup that reimagines the idea of cerebral conversations.Building on the acclaim of the earlier three seasons, the Duologue series has been able to transcend from a routine talk show to a platform of ideation built on conversations that speak to our times.All episodes of the upcoming Season, like the ones in the preceding seasons, promise conversations with global stalwarts that are truly unmissable. They raise questions pertinent to our times in an attempt to gauge the zeitgeist, by those who inhabit it and are trying to mould it for the better.Duologue with Barun Das: Empathetic, eclectic and exclusiveConversations between TV9 Network’s MD & CEO Barun Das and a host of personalities from fields as diverse as sports to spirituality, have created a space of free engagement at an elevated level of intellectuality seldom seen in today’s world of oversaturated content. My ‘Duologue’ with legends has, season-after-season, only enriched me and possibly brought these outstanding leaders personally closer to their audiences in India and abroad,” Das himself says of the experience and impact of the Duologues series.The upcoming Season four of the Duologue series promises to follow in the show’s legacy of such conversations, which are not just intellectually stimulating but also engaging and enriching.The lineup of the guests too is similarly eclectic and fascinating. “Duologue Season 4, presented by Radico, showcases five legends who have excelled in their chosen fields at the highest level in the global arena, Barun Das, TV9 Network CEO & MD says of what the upcoming season promises.An exemplary ensembleJust like the preceding three seasons of Duologue with Barun Das, the upcoming fourth season promises to be one built on the foundations of unbridled curiosity and charisma. The guests featured this season exemplify this commitment.The season opens on February 28, 2026, with the perennial youth icon of India, the captain always fostering a winning attitude, cricketing legend Sourav Ganguly.This is followed by the second episode on March 1, 2026, featuring Vijay Amritraj, tennis legend who made acting his second calling.The third episode of this exciting season sees Das in conversation with Lothar Matthus, football legend who captained West Germany to a victory in the 1990 FIFA World Cup.This is followed by an unmissable sit down with Bianca Balti on March 8, 2026. A global fashion icon who converted adversity to opportunity, a story that resonates well with the Duologue spirit.The last episode, but in no way the least, drops on March 4, 2026. It features one of India’s biggest modern legends, actor Aamir Khan. The ‘perfectionist’ of Indian cinema, Khan, epitomises articulation and varied self-expression, qualities that match and complement the ethos of the 'Duologue with Barun Das' series.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 4:14 pm

“மார்ச் மாதம் ஷூட்டிங்!”–அரசன் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி மோதல் உறுதி

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'அரசன்' படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நீடிக்கிறார் என்பதைத் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Feb 2026 4:07 pm

Vivek Raina moves on from Excitel Broadband

Mumbai: Excitel Broadband Co-Founder Vivek Raina has stepped down from his role at the company, marking the end of an over decade-long association that began in 2015.Announcing the decision on LinkedIn, Raina said, “I have decided to leave Excitel Broadband , the company I co-founded and have led for the past 11 years. It has been an incredible journey building Excitel, from the ground up. Over the past decade, we have expanded our fibre network to serve nearly one million users, collaborated with thousands of local and regional partners, and built a strong presence across 50+ cities. I believe this is the right time for a leadership transition, and I am confident that the Founders’ vision and operational expertise of the younger management will take Excitel Broadband to even greater heights. I will continue to support Excitel as a shareholder. As for me, after a short break, i will keep on doing what i think i know best i.e building new businesses/businesses lines from scratch while fostering youngsters who are involved in building new businesses through initiatives like Launchpad Kashmir.” During his tenure, Raina played a key role in scaling Excitel’s fibre broadband footprint, helping the company establish itself as a prominent player in India’s fixed-line internet services space.Alongside his exit from Excitel, Raina continues to serve as Co-Founder and Mentor at Launchpad Kashmir, where he focuses on fostering entrepreneurship and supporting young founders in building new ventures.Prior to co-founding Excitel, Raina held leadership roles across several major telecom and cable distribution companies, including Digicable Network India Pvt Ltd, Hathway, and Reliance Communications. He began his career as Officer – Business Development at Hathway in 2001.With decades of experience, Raina brings deep expertise across broadband, telecommunications, channel management, business development, strategic planning and business strategy.The leadership transition comes at a time of change at Excitel Broadband. The company recently appointed Varun Pasricha as Chief Executive Officer, as it continues to focus on growth and operational strengthening across markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 4:07 pm

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது... செபியின் லெட்டர்பேடைப் பயன்படுத்தி, நிதி சட்டம் 2004-ன் கீழ், நிலுவையில் உள்ள STT (Securities Transaction Tax)-ஐ கட்டுமாறு மோசடி பேர்வழிகள் நோட்டீஸ் அனுப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. அது செபியின் நோட்டீஸ் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இந்த மாதிரியான எந்த நடவடிக்கைகளிலும் செபி இணைந்து செயல்படவில்லை. STT வரி பங்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்பட்டு, புரோக்கர்களால் வாங்கப்பட்டு விடுகிறது. SEBI - செபி மேலும், செபி அதிகாரி என்று கூறியும், செபி மெயில் ஐடி போன்ற ஐடியில் இருந்து மெசேஜ் அனுப்புவதும் நடந்து வருகிறது. இதனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்து, இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க சில வழிகளையும் சொல்லியுள்ளது செபி... 1. செபியால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் செபி வலைதளத்தில் உள்ளது. இதை Sebi > Enforcement-ல் செக் செய்யவும். 2. ஆன்லைன் உத்தரவுகள், செட்டில்மென்டுகள், மீட்பு கட்டணம் போன்றவை siportal.sebi.gov.in-ல் தான் செய்யப்படும். 3. Home > About > SEBI Directory - இப்படி செபி அதிகாரியின் தொடர்பு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். 4. செபியில் இருந்து வரும் மெயில்கள் '@sebi.gov.in' - இந்த டொமைன் முகவரியில் இருந்து தான் வரும். 5. செபியின் ஆபீஸ்களின் முகவரி Home > About > Addresses of Offices of SEBI'-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

விகடன் 27 Feb 2026 4:04 pm

`அழுகை; சிரிப்பு.!'சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்

இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவி கே. கவிதா உள்ளிட்ட 23 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. Aravind Kejriwal வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை! 2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன. டெல்லி அரசு எந்த ஒரு கொள்கை முடிவை எடுத்தாலும் அதற்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி ஆம் ஆத்மி கொண்டு வந்திருந்த மதுபான கொள்கைக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருந்தார். ஆனால் அவர் இந்த விவகாரத்தில் எங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யும் படலத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்தது. இந்த வழக்கின் அடிப்படையில்: பிப்ரவரி 2023: மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மார்ச் 2024: டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அவரது இல்லத்திலேயே வைத்து கைது செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதே விவகாரத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பஞ்சாப் உத்தர பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருந்தனர் கவிதா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும், சிபிஐ-க்கு கண்டனமும் இந்த விவகாரத்தில் விசாரணையானது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்: ஆதாரமின்மை : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நேரடி பணப் பரிமாற்றமோ அல்லது சதித் திட்டமோ நிரூபிக்கப்படவில்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாகக் கருத முடியாது. சிபிஐ-க்கு கண்டனம்: விசாரணை அமைப்பான சிபிஐ, வழக்கில் உள்ள ஓட்டைகளை மறைக்க 'அப்ரூவர்' மட்டுமே நம்பியிருந்தது கவலையளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று நீதிபதி கடுமையாகச் சாடினார். விடுதலை: போதிய முகாந்திரம் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரையும் நீதிமன்றம் 'டிஸ்சார்ஜ்' செய்து உத்தரவிட்டது. நடவடிக்கை : இந்த விவகாரத்தில் சிபிஐயின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட கெஜ்ரிவால் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட 'ஊழல்வாதி' என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் வடித்தார். இக்காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஊழல்வாதி அல்ல பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். ``இரண்டு ஆண்டுகளாக என்னையும் எனது குடும்பத்தையும் சிதைக்கப் பார்த்தார்கள். நான் ஒரு ஊழல்வாதி என்று நாட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதிமன்றம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. எனது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி இது. சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன, உண்மை வெளிவந்தது. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கான வெற்றி என உணர்ச்சி பெருக்குடன் பேசினார் தொடர்ந்து பேச முடியாமல் அவர் வெடித்து அழுதார், பழிவாங்கும் அரசியலுக்குப் பலியாகி நான் சிறையில் இருந்தபோது, டெல்லி மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையே என்னை இன்று விடுவித்துள்ளது, என்றார். கெஜ்ரிவால் மனைவி சுனிதா சுனிதா கெஜ்ரிவாலின் உருக்கமான பதிவு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், சத்தியமே வெல்லும் (Satyamev Jayate). இந்த உலகில் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், சிவ சக்திக்கு மேல் யாரும் கிடையாது, என்று பதிவிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் கொண்டாட்டங்கள் தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கினர்.டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, நமது சிங்கம் மீண்டும் வந்துவிட்டது என்ற முழக்கங்கள் கேட்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் கிளைகளில் இனிப்புகள் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின. அரசியல் முக்கியத்துவம் இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய புத்துயிரைத் தந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டது கெஜ்ரிவாலுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீதான 'ஊழல்' கறை நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உண்மை ஒருபோதும் தோற்காது என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.! Loading…

விகடன் 27 Feb 2026 4:02 pm

வந்தாச்சு புதிய விதி! WhatsApp Web பயனர்களுக்கு அதிர்ச்சி!

டெல்லி :இந்தியாவில் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளதாவது, தேசிய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1, 2026 முதல் வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் பதிப்பில் உள்நுழைந்த பயனர்கள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக் அவுட் (log out) செய்யப்படுவார்கள். இதனால், மீண்டும் பயன்படுத்த விரும்பினால் […]

டினேசுவடு 27 Feb 2026 3:58 pm

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் –வழக்கு திகதியிடப்பட்டது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , தவிசாளர்கள் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் குறித்த வழக்குகள் நேற்றையதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது , குற்றம் சாட்டப்பட்டு […]

அதிரடி 27 Feb 2026 3:56 pm

AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் என்றிருக்கிறார். தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம். சிவகார்த்திகேயன் அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 27 Feb 2026 3:51 pm

La Pink drives purpose-led branding with two-phase digital awareness campaign

Mumbai: La Pink, a beauty brand with 100% microplastic-free formulations, has concluded a bold, two-phase digital awareness campaign designed to spark nationwide conversations around online judgement, assumptions, regional bias and responsible digital behaviour.Conceptualised as a socially driven experiment, the campaign unfolded through a gripping narrative that mirrored the realities of instant content consumption. The first phase featured a short video of a young actress documenting a distressing auto ride in real time. As the auto allegedly deviated from the route shown on Google Maps, the visibly anxious protagonist questioned the driver’s intent, escalating into a tense exchange marked by fear, confusion and the threat of police intervention. Shot on a mobile phone, the raw, unfiltered video quickly went viral, triggering intense debate across social platforms.Audience reactions poured in almost instantly, with conversations spanning women’s safety, intercity mistrust, regional dynamics and public conduct. The strong and often polarised responses highlighted the campaign’s core insight — how quickly digital audiences form firm opinions based on partial information and emotionally charged moments.In the second phase, the protagonist returned to directly address the reactions, including trolling and criticism. She acknowledged the importance of raising safety concerns, while also reflecting on how unchecked assumptions and overreactions can contribute to misinformation and social division. Clarifying that the video was not intended to promote regional bias, she reframed the narrative to encourage viewers to pause, seek facts and examine their own responses before passing judgement.By shifting the tone from confrontation to introspection, La Pink steered the conversation towards mindful digital behaviour, urging audiences to focus on context and facts rather than surface-level perceptions.Integrated organically into the storyline was La Pink’s newly launched Cotton Candy’s Lip Balm, which became a point of curiosity among viewers during online discussions. The reveal in the campaign’s closing narrative highlighted the product’s zero microplastics formulation, enriched with hyaluronic acid, shea butter and vitamin E, reinforcing the brand’s commitment to clean and conscious beauty.Through this initiative, La Pink extended its philosophy of transparency beyond skincare into social behaviour. Just as the brand advocates responsible, microplastic-free formulations, the campaign encouraged responsible digital engagement — asking consumers to think deeper, respond thoughtfully and act with awareness.With this campaign, La Pink moves beyond conventional product-led marketing to position itself as a purpose-driven brand engaging with real societal conversations. The initiative not only generated widespread engagement but also demonstrated how meaningful storytelling can coexist with social responsibility in today’s fast-paced digital ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 3:46 pm

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது காவல்துறை. இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... நயினார் நாகேந்திரன் காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், திமுககாரன் எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட அறிவாலயம் ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்! என்றிருக்கிறார். காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும்… pic.twitter.com/RC2ZK4wSXk — Nainar Nagenthran (@NainarBJP) February 27, 2026

விகடன் 27 Feb 2026 3:39 pm

தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?

தூக்கம் வரலையா...  அதுக்கொரு கம்மீஸ்... முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்... ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gummies ). மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவை இனிப்பாக, மிட்டாய் மாதிரி, குறிப்பாக, ஜெல்லி மிட்டாய் போன்று விதம்விதமான சுவைகளில் கிடைப்பதால், பலரிடமும் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல், அதைச் சிரமமாக உணரும் பெரியவர்கள் வரை பலரும் கம்மீஸை மறுப்பு சொல்லாமல் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது. கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உண்மையில் கம்மீஸ் என்பவை ஆரோக்கியமானவைதானா... அவற்றை எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... பக்க விளைவுகள் இருக்குமா...? விரிவாகப் பேசுகிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். ''கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், 'Yellow 5', 'B1' போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன. மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ்,  முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என  மார்க்கெட்டில்   பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில்  மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம்.  தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free)  குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும். மாத்திரை விழுங்க சிரமப்படுபவர்கள், குறிப்பாக, பெரிய அளவு மாத்திரைகளை விழுங்க முடியாதவர்களுக்கு கம்மீஸ் (Gummies) சிறந்த மாற்றாகத் தெரியலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விழுங்குவது எளிது என்பதால் கம்மீஸ் எடுத்துக்கொள்ள விரும்பலாம். எனினும் இவர்களுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் (Pediatrician) ஆலோசனையைப் பெறுவது அவசியம். சர்க்கரைநோய், பிசிஓஎஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கம்மீஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தில் பலரும் அதற்கான ஹேர் கம்மீஸ் (Hair Gummies) பயன்படுத்துகிறார்கள். ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் C இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா? சரியான உணவை (கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ்) உட்கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின், வைட்டமின் டி, பி12 அல்லது புரதச்சத்து குறைவாக இருந்தால், வெறும் கம்மீஸ் எடுத்துக்கொள்வதால் மட்டும் பெரிய மாற்றம் ஏற்படாது. கம்மீஸ் வாங்கும் போது, அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவு, ஊட்டச்சத்தின் அளவு, எடுத்துக்கொள்ள வேண்டிய டோசேஜ், சைவம் அல்லது அசைவம் என  எதிலிருந்து தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி (Expiry date) போன்றவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.  அதிக சர்க்கரை உள்ள கம்மீஸ் பற்சிதைவை (Cavity) உண்டாக்கும். எனவே,  அவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

விகடன் 27 Feb 2026 3:34 pm

வேட்பாளர்களின் படங்கள் இடம்பெறும் –தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தகவல்!

சென்னை : தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தல் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும், நாட்டுக்கே முன்னுதாரணமாகவும் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் திருவிழாவாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பதில் எப்போதும் முன்னோடியாக உள்ளது என்று ஞானேஷ் குமார் குறிப்பிட்டார். 10ஆம் நூற்றாண்டிலேயே குடவோலை முறையில் தேர்தல் நடைமுறைகளை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்றும், 72 நாடுகள் பங்கேற்ற சர்வதேச […]

டினேசுவடு 27 Feb 2026 3:34 pm

TVS Apache marks 20 years of racing legacy with ‘The Apache DNA’ anthem

Bengaluru: Premium performance motorcycle brand TVS Apache from TVS Motor Company has released its first-ever official brand anthem, The Apache DNA, marking 20 years of racing dominance and celebrating its 6.5 million-strong global rider community.Turning the iconic exhaust note into the beat of music, the high-octane anthem channels TVS Apache’s racing DNA through sound and storytelling. Composed by acclaimed rapper and songwriter Brodha V, the anthem has been launched across digital platforms in six languages — English, Hindi, Marathi, Tamil, Telugu and Kannada — underscoring the brand’s deep cultural connect with riders in India and international markets.Music has long been a powerful motivator for motorcyclists, and with this launch, TVS Apache extends its performance-driven philosophy into youth culture. Known for embodying a fearless spirit, relentless passion and racing-bred technology, the brand today has a presence in over 60 countries, positioning the anthem as a bold expression of confidence and energy both on and off the racetrack.[caption id=attachment_2493547 align=alignleft width=200] Vimal Sumbly [/caption]Commenting on the launch, Vimal Sumbly, Business Head – Premium Segment, TVS Motor Company, said, “For 20 years, TVS Apache has been the living expression of our racing DNA, an attitude and legacy that has empowered 6.5 million riders globally. ‘The Apache DNA’ anthem is our tribute to every rider who embodies the philosophy of TVS Apache. As we continue to democratize racing-bred technology, we are also expanding TVS Apache's presence into music and youth culture, creating deeper connections with the communities that live and breathe the brand every single day.” The lyrics of The Apache DNA reflect the core ethos of the brand — speed, precision and control. With this launch, TVS Apache takes its racing legacy beyond motorcycles, strengthening its emotional connect with riders while expanding its footprint across music, digital platforms and community-led culture.As the brand continues to push the boundaries of performance motorcycling, the anthem reinforces TVS Apache’s commitment to confidence, authenticity and an unstoppable riding ethos that resonates strongly with the next generation of riders. View this post on Instagram A post shared by Brodha V (@brodhav)

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 3:30 pm

TVS Apache marks 20 years of racing legacy with ‘The Apache DNA’ anthem

Bengaluru: Premium performance motorcycle brand TVS Apache from TVS Motor Company has released its first-ever official brand anthem, The Apache DNA, marking 20 years of racing dominance and celebrating its 6.5 million-strong global rider community.Turning the iconic exhaust note into the beat of music, the high-octane anthem channels TVS Apache’s racing DNA through sound and storytelling. Composed by acclaimed rapper and songwriter Brodha V, the anthem has been launched across digital platforms in six languages — English, Hindi, Marathi, Tamil, Telugu and Kannada — underscoring the brand’s deep cultural connect with riders in India and international markets.Music has long been a powerful motivator for motorcyclists, and with this launch, TVS Apache extends its performance-driven philosophy into youth culture. Known for embodying a fearless spirit, relentless passion and racing-bred technology, the brand today has a presence in over 60 countries, positioning the anthem as a bold expression of confidence and energy both on and off the racetrack.[caption id=attachment_2493547 align=alignleft width=200] Vimal Sumbly [/caption]Commenting on the launch, Vimal Sumbly, Business Head – Premium Segment, TVS Motor Company, said, “For 20 years, TVS Apache has been the living expression of our racing DNA, an attitude and legacy that has empowered 6.5 million riders globally. ‘The Apache DNA’ anthem is our tribute to every rider who embodies the philosophy of TVS Apache. As we continue to democratize racing-bred technology, we are also expanding TVS Apache's presence into music and youth culture, creating deeper connections with the communities that live and breathe the brand every single day.” The lyrics of The Apache DNA reflect the core ethos of the brand — speed, precision and control. With this launch, TVS Apache takes its racing legacy beyond motorcycles, strengthening its emotional connect with riders while expanding its footprint across music, digital platforms and community-led culture.As the brand continues to push the boundaries of performance motorcycling, the anthem reinforces TVS Apache’s commitment to confidence, authenticity and an unstoppable riding ethos that resonates strongly with the next generation of riders. View this post on Instagram A post shared by Brodha V (@brodhav)

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Feb 2026 3:30 pm

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி.. திமுகவில் இணைந்த கையோடு அதிரடி

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் இருவரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அவர்களுடைய இந்த முடிவை அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தது பற்றி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சமயம் 27 Feb 2026 3:30 pm

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கடந்த கால தொடர்புகளை “பெரிய தவறு” என ஒப்புக்கொண்டு, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களில், மின்னஞ்சல்கள், நேர்காணல் டிரான்ஸ்கிரிப்டுகள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு பதிவுகள் அடங்கியுள்ளன. இதில் பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தொடர்புடையவர்களாக குறிப்பிட்டுள்ளனர், பில் கேட்ஸும் அவர்களில் ஒருவராக உள்ளார். டவுன் ஹால் கூட்டத்தில், கேட்ஸ் ரஷ்ய […]

அதிரடி 27 Feb 2026 3:30 pm

 வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன்… The post வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்குமாறு கோரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Feb 2026 2:59 pm

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் முதுகு வலி பிரச்னை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் முதுகு வலி அதற்கான காரணங்கள் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன். back pain! பொதுவாகவே முதுகுவலிப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். குறிப்பாக, 18 முதல் 38 வயது வரையிலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. 2020 முதல் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்றின் தாக்கம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பை பயன்படுத்துவது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது போன்றவையும் ஆகியவை இளைஞர்களுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். இளைஞர்களுக்கு ஏற்படும் தசை மற்றும் மூட்டுப் பிரச்னைகளில், 76 சதவிகிதம் முதுகு வலிதான் உள்ளது. முதுகு வலி கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பின் கீழ் பகுதி வரையுள்ள முதுகெலும்பில் ஏற்படும் அசௌகரியம்தான் முதுகு வலி. தசை நார் சுளுக்கு, முதுகெலும்பு பிரச்னை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகவும் முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கு படுத்து ஓய்வெடுப்பது சிறந்த தீர்வாகும் என்று நம்பப்படுகிறது. நீண்ட நேரம் படுத்த நிலையில் இருப்பது தசைகளைப் பலவீனப்படுத்தும், மூட்டுகளை விரைப்பாக்கும். இதனால் வலி அதிகரித்து, குணமடைவதையும் தாமதப்படுத்தும். எடை தூக்கினால் முதுகு வலி வருமா? அதேபோல உடற்பயிற்சி செய்தால் முதுகு வலி தீவிரமாகும் என்றும் நம்பப்படுகிறது. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சியை, நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி செய்தால், முதுகுவலி குணமாக வாய்ப்புள்ளது. ஆலோசனையின்றி சுயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். அதிக எடையைத் தூக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. முறையற்ற முறையில் தூக்குவது முதுகுவலியை உண்டாக்கலாம். எடை அதிகமான பொருள்களை சரியான முறையில் தூக்குவதன் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை தசை இறுக்கத்தைப் போக்க ஸ்ட்ரெச்சஸ் செய்யலாம். சரிவிகித உணவு, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவையும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும்போது, சரியான உயரத்தில் மேஜை, நாற்காலி இருக்க வேண்டும். செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது கழுத்தை நீண்டநேரம் முன்னோக்கி வளைப்பதையும், குனிந்த நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண் மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். உறங்குவதற்கு மிகவும் மென்மையான மற்றும் மிகவும் கடினமான மெத்தைகளைத் தவிர்க்க வேண்டும். தலையணை மீது தலை வைக்கும்போது, கழுத்தை அதிக உயரத்தில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தசை இறுக்கத்துக்கு வழிவகுக்கும். முதுகு வலியையும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தமின்றிப் பணிபுரிய வேண்டும். Stressed woman at workplace (Representational image) அதேபோல, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்யலாம். இவை உடல் திறனை மேம்படுத்துவதுடன், முகுதுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். நான்கு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான முதுகு வலி, வலி பரவும் உணர்வு, உணர்வே இல்லாமல் போவது, நிற்பது, நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் மருத்துவர் சசிதரன்.

விகடன் 27 Feb 2026 2:57 pm

விமான டிக்கெட் புக்கிங்.. ரீஃபண்ட் விதிமுறைகள் மாற்றம்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விமான டிக்கெட்டை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதற்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது.

சமயம் 27 Feb 2026 2:54 pm

Chandigarh Grants 20% Quota for Ex-Agniveers

Gulab Chand Kataria, who is also the Administrator of the Union Territory of Chandigarh, has approved 20 per cent horizontal

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:53 pm

மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்! - மன வருத்தத்தில் தங்க தமிழ்ச்செல்வன்? | தேனிக்குள் கடாமுடா

திமுகவில் ஓ.பி.எஸ்! அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வர், ஒரு முறை துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. பின் அனைவரும் கலந்து பேசி இருவரையும் ஒரே அணிக்குக் கொண்டு வந்து ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் போன பின் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட மன மாச்சர்யங்களால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவரை கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. தி.மு.க - ஓ.பி.எஸ் அதிமுக-வை மீட்கப் போராடுவேன் என்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார் ஓ.பி.எஸ். இந்த சூழலில் அவருடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அவருடன் இருந்த கடைசி ஆதரவாளரான உசிலம்பட்டி அய்யப்பன் முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் திமுகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் கசிந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன்? ஓ.பி.எஸ் திமுகவுக்குக் கூடுதல் பலமாகக் கருதுகிறது திமுக தலைமை. கூடுதலாக, அவரது வருகையால் தேவர் சமுதாய வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகளவில் வந்து சேரும் என்று கணக்குப் போடுகிறது திமுக. திமுக தலைமையின் எண்ணம் இப்படியிருக்க, ஓ.பி.எஸ் பகுதியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடும் வருத்தத்தில் இருப்பதாக கிசு கிசுகிறார்கள் தேனி மாவட்ட உடன் பிறப்புகள். இந்த விவகாரம் குறித்து லோக்கல் உடன் பிறப்புகள் சிலரிடம் பேசினோம். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன்பாக அமமுக-வில் இருக்கும்போது 'ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம் உண்மையான போராட்டம் அல்ல, அரசியல் நாடகம் மட்டுமே. ஓ.பி.எஸ் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகக் கட்சியைப் பயன்படுத்தினார்' என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன் இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் மறைவில் அவரது அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைந்தவர் ஓ.பி.எஸ் என்று கடுமையாகச் சாடியிருந்தார். காரணம் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்த சமயத்தில் அவரை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பி.எஸ். அந்த கடுப்பில் தான் அதிமுகவிலிருந்து அமமுக, அடுத்ததாக திமுக என்று கட்சி மாறி வந்தார். யாரை எதிர்த்து இதுவரை அரசியல் செய்துகொண்டிருந்தாரோ, இப்போது அவரே திமுகவுக்கு வந்திருப்பது தங்க தமிழ்செல்வனுக்குத் தலைவலியாக மாறும் என்கிறார்கள். காரணம், ஏற்கனவே தேனி மாவட்ட திமுகவில் அவருக்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இப்போதும் நீடிக்கிறது. சமீபத்தில் ஆண்டிபட்டி எம்.எம்.ஏ மகாராஜனும், தங்க தமிழ்ச்செல்வனும் மேடையிலேயே ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட சம்பவங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். மேடையிலேயே இந்த நிலை என்றால் திரைமறைவில் நடப்பதையெல்லாம் தனியாகச் சொல்லவேண்டிய தேவையில்லை. ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமில்லாத சூழலில் தத்தளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கு ஓர் பெரிய பவர் செண்டர் அவர் பகுதியிலிருந்து கட்சிக்குள் புதிதாக வந்திருப்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை. ஓ.பி.எஸ்-யை தாண்டி அவரது இரண்டு மகன்களின் தலையீட்டையும் கூடுதலாகச் சமாளிக்கவேண்டிய நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்-காக இருவரும் ஒன்றாக இணைந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஓ.பி.எஸ் வெவ்வேறு துருவங்களாக இருந்த இவர்கள் ஒரே கோட்டில் இணைந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அந்த இணக்கம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பதும், அவருக்கும் அவரது மகன் உட்பட ஆதரவாளர்களுக்குப் பதவி, சீட் வழங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவது ஓ.பி.எஸ்-க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பது தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் மன உளைச்சலையே கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பல கடமுடா காட்சிகளைத் தேனிக்குள் பார்க்கலாம் என்றார்கள் விரிவாக. Loading…

விகடன் 27 Feb 2026 2:51 pm

INS Tarangini Arrives in Trincomalee for Training

Sail Training Ship INS Tarangini of the Indian Navy reached Trincomalee today as part of India’s maritime outreach programme called

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:47 pm

TN Assembly Polls May Set Voting Record

Chief Election Commissioner Gyanesh Kumar has said that the upcoming Assembly elections in Tamil Nadu are expected to set a

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:35 pm

Modi Calls Budget a Long-Term Roadmap

Prime Minister Narendra Modi has said that India is moving ahead strongly on what he called the “Reform Express.” He

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:30 pm

பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை!

தமிழகத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, சிறுமிகளை அழைத்து வரும் பெற்றோர்களை ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வாருங்கள் என அனுப்பிவிட்டு, சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மானகிரி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலி ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு (51), சிவகங்கை சிறப்பு போக்சோ நீதிமன்றம், இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் ஆன்மீக நம்பிக்கை […]

அதிரடி 27 Feb 2026 2:30 pm

Rajya Sabha Polls Pose Challenge for Congress

Telangana is preparing for the Rajya Sabha elections on March 16 to fill two seats that will become vacant on

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:17 pm

Court Discharges Kejriwal in Liquor Policy Case

The Rouse Avenue Court in Delhi on Friday, February 27, discharged former Delhi Chief Minister Arvind Kejriwal, Aam Aadmi Party

சென்னைஓன்லைனி 27 Feb 2026 2:06 pm