நிழல் உலகை, பாதாளத்தை அதிர வைத்த, ADK + NPP யின் வரலாற்று சாதனை –
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்கி, அவற்றை அரசுடமையாக்குவதற்கான… The post நிழல் உலகை, பாதாளத்தை அதிர வைத்த, ADK + NPP யின் வரலாற்று சாதனை – appeared first on Global Tamil News .
திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார். திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த பகுதியில் நேற்று முன் தினம் (10) இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் உத்தியோத்தர் பத்பநாதன் யதர்ஷன் (வயது-31) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். பிரதேச வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேக கட்டு பட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து […]
பெண் ஊடகவியலாளருக்கு கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர்; பெரும் அதிர்வலை
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அதேநேரத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். விமர்சனப் பதிவுகள் இதையடுத்து அகமது ஷெரீப்பிற்கு இணையத்திற்கு விமர்சனப் பதிவுகள் கொட்டத் தொடங்கின. ’அவர் ஒரு தொழில்முறை சிப்பாய் அல்ல’, ’இது அவர்களின் இராணுவம் […]
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதியை ஈரான் கைது செய்தது
ஈரானிய பாதுகாப்புப் படையினர் நோபல் அமைதி பரிசு பெற்ற நர்கஸ் முகமதியை நினைவு நிகழ்வில் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சமீபத்தில் இறந்து கிடந்த மனித உரிமை வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் நினைவஞ்சலி நிகழ்வில் முகமதி கைது செய்யப்பட்டார். பாரிஸை தளமாகக் கொண்ட அவரது கணவர் தகி ரஹ்மானி, மஷாத் நகரில் கைது நடந்ததாக எக்ஸ் பதிவில் தெரிவித்தார். மஷாத்தில் உள்ள ஆளுநர் பின்னர் தடுப்புக்காவலை உறுதிப்படுத்தியதாக கோரசான் ஆன்லைன் போர்டல் தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்ட தற்காலிக தடுப்புக்காவல்கள்பற்றி அவர் பேசினார். சமூக ஒழுங்கை மீறும் கோஷங்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.
குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவுதள பணிகள் என்ன ஆச்சு? மத்திய அரசு கொடுத்த விளக்கம்
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளப்பணிகள் எப்போது தயாராகும் என்பது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி
ஐதராபாத், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். தனியார் பஸ்சில் சீதாராமராஜு மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
விமானங்களில் பிரேக்கிங் சிஸ்டம் எப்படி செயல்டுகிறது? எப்பவாச்சும் யோசிச்சு பாத்துருக்கீங்களா?
விமானப் பயணத்தில் பாதுகாப்பான தரையிறக்கம் ரொம்ப முக்கியம். விமானத்தின் பிரேக்கிங் சிஸ்டம், சக்கர பிரேக்குகள், என்ஜின் திசை திருப்பிகள், ஸ்பாய்லர்கள் என பல நுட்பமான பாகங்களால் ஆனது.
தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album
தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம்
CPI, SIAM Data: இனி பங்குச்சந்தை ஏற்றம் தான்? | Silver | FDI | IPS Finance - 384
பாதியிலேயே Heartbeat Seriesல இருந்து போறப்ப! - Padine & Guru Shares | Heartiley Battery | Pair
படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே தியேட்டர்ல இருந்து எடுக்கச் சொல்லிட்டோம்! - Avinash Prakash | Naangal
Vijay-யுடன் என்ன பிரச்னை? | DMK- விடம் விலை போய்விட்டேனா? | PT Selvakumar Interview
SIR தேதி நீட்டிப்பு: போன உயிர்களுக்கு யார் பொறுப்பு? | TVK Vijay | Modi Rajini DMK | IPS
தமிழர்களுக்காக துரை வைகோ வைத்த 4 கோரிக்கைகள்! ஜெய்சங்கர் சொன்ன ஒற்றை வார்த்தை என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் தொடர்பாக துரை வைகோ மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் தவறான வரலாறு சொல்லப்படுகிறதா? | Seriously! | Episode - 4 | Vikatan | History
EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains
SIR latest updates: புதிதாக பெயர்களை சேர்ப்பது எப்படி? | Decode
``மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும் - `வெல்லும் தமிழ் பெண்கள்'நிகழ்ச்சியில் உறுதியளித்த ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசில் மகளிருக்கான திட்டங்களால் பயனடைந்த, சாதனை படைத்த பெண்களை ஒருங்கிணைத்து `வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது தமிழக அரசு. சென்னையில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும் என்றும், வரலாற்று ஆசிரியர்கள் மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது என்று எழுதுவார்கள் என்றும் பெருமிதம் கொண்டார். ஸ்டாலின் - கிருஷ்ணம்மாள் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இங்கு பேசிய எல்லோருடைய பேச்சையும் கேட்டு நெகிழ்ந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருக்கிறோம். ஒருவர் கிருஷ்ணம்மாள், நூறு வயதில் நிறை வாழ்க்கை வாழ்ந்து பொது வாழ்வில் வெற்றி பெற்றவர். இன்னொருவர் இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன். சிறப்பாகப் பேசினார், விளையாட்டுத்துறை மட்டுமல்லாது அரசியலுக்கு வந்தாலும் இவர்தான் நம்பர் 1-ஆக இருப்பார். இந்த வயதில் எல்லா சவால்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்தச் சமூகம் சாதி, மத, இன, மொழி, பாலின பாகுபாடு என்றில்லாமல், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம். மகளிர் உரிமைத்தொகை: `கணவர் சாப்பிட்டா என் வயிறு நிரம்புமா?' - முதல்வரிடம் கேள்வி எழுப்பிய பெண்! நம் லட்சியப் பயணத்தில் வரலாற்றைத் திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். திட்டங்கள் என்பது கொள்கைகளின் செயல் வடிவம். ஒரு திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதை பொதுமக்கள் எந்த அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகிறது. புதுமைப்பெண். தமிழ் புதல்வன் திட்டங்களில் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதனால், ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது. `வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி இப்படித் திராவிட மாடலின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்தியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் வெற்றியாக இதைத்தான் நான் பார்க்கிறேன். பெண்களுக்கு கையில் காசு இருப்பதால் கூடுதல் சமூக மதிப்பு. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், சுய உதவிக் குழுக்கள், வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் என நம் திராவிட மாடல் அரசின் எண்ணற்றத் திட்டங்களால் பயனடைந்த, வெல்லும் தமிழ் பெண்களாக இங்கே தங்களின் வெற்றிகளைச் சொல்லும்போது திராவிட இயக்கத்தின் தொண்டனாக எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது. ‘மந்தமான மகளிரணி’ கண்டுகொள்ளாத கனிமொழி! - தி.மு.க-வில் கேள்விக்குறியாகும் பெண்கள் பிரதிநிதித்துவம்! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்பது அண்டை மாநிலங்களில்கூட இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகிறவர்கள்கூட அவர்களுடைய மாநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள். மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் எனப் பத்து மாநிலங்களில் உரிமைத்தொகை. மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது. `வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி இந்த ஆயிரம் ரூபாய் என்பது வெறும் தொடக்க மட்டும் தான். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 13,75,492 சகோதரிகளுக்கு மாதந்தோறும் இதுவரை 28,000 ரூபாய் வழங்கியிருக்கிறோம். எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மக்களிடம் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தேன். இன்று காலை 16,94,339 பேருக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் போட்டு விட்டோம். இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கின்ற 1,30,69,839 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கிடைக்கும். `வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்த நடை போட நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும். எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது என்றுதான் எழுதுவார்கள் என்று உறுதியாக சொல்கிறேன். இந்த உரிமைத்தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல உங்களின் பிள்ளைகள் கல்விக்கும் பயன்படும். கல்விதான் சிறந்த முதலீடு யாராலும் அழிக்க முடியாத சொத்து. தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் அவசியம். நீங்கள் முன்னேறி வந்து சிறகடித்து பறக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும். அதற்கு உங்களின் சகோதரனாக, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன் என்று கூறினார். டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது!
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின்உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வைமுடித்துக்கொண்டமைபலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது.… The post யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது! appeared first on Global Tamil News .
2025-ல் இந்தியர்களின் கனவுப் பயண இடமாக காஷ்மீர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கூகிள் தேடலில் 5வது இடம் பெற்ற இது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்ற குளிர்கால சொர்க்கமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி , அவர்களுக்கு வழங்க முடியும் என பிரதேச செயலர் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் தனது குடும்பத்திற்கு 25ஆயிரம் ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தான். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , 25ஆயிரம் ரூபாய் நிதி தனி நபருக்காக ,அல்லது வீட்டிற்கா என்பது தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் , பிரதேச செயலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் Rs .25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்
காங்கிரஸ் கட்சிக்குள் 'ராகுல் அணி' மற்றும் 'பிரியங்கா அணி' இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி! ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம். அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். #WATCH | Odisha: Cuttack Congress MLA Mohammed Moquim says, "... I have written a letter to Sonia Gandhi stating that the party is going through a difficult phase and needs her advice and new leadership... Age is not on AICC President Mallikarjun Kharge's side... We should bring… pic.twitter.com/AcFPMEwpvG — ANI (@ANI) December 11, 2025 இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, எக்ஸ் சமூக வலைதளத்தில், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் அம்பலமாகியுள்ளது! பிரியங்கா அணிக்கும், ராகுல் அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒடிசாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்: 'கார்கேவை நீக்குங்கள், பிரியங்காவைக் கொண்டு வாருங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்; மாநில மற்றும் மத்தியத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். 83 வயதான மல்லிகார்ஜுன கார்கேயின் தலைமையின் கீழ், காங்கிரஸ் இந்திய இளைஞர்களுடன் இணைய முடியாமல் போனதால், காங்கிரஸ் தலைமைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு 'ஆழமான மற்றும் வளர்ந்து வரும் துண்டிப்பு' நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார். முன்னதாக, ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், கட்சி ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகிறது. அதற்கு பிரியங்காவின் ஆலோசனையும் புதிய தலைமையும் தேவை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது சாதகமாக இல்லை. நாம் இளம் தலைவர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். சோனியாஜியும் காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர்களும் இதைப் பற்றி நிச்சயம் விவாதிப்பார்கள் என்று எனக்குத் தெரியும் என்று தெரிவித்திருந்தார். சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் காங்கிரஸின் நிலை 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்தி பதவி விலகியதால், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்குப் பின் மூத்த அரசியல்வாதியான கார்கே, 2022 அக்டோபரில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைத் தோற்கடித்துக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். மறுபுறம், பிரியங்கா காந்தி வதேரா ஜனவரி 2019-ல்தான் முறையாக அரசியலில் நுழைந்தார். தற்போது அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ராகுல் காந்தி வாகனம் நிறுத்தம்: பாஜக-வின் அரசியல் பயங்கரவாதம் - செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஏழை முட்டாளே, தொலைந்து போ; முன்னாள் ஜனாதிபதிக்கு திருப்பிக்கொடுத்த பெண்கள்
பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் புத்தகம் கையொப்பமிடும் நிகழ்வை இரண்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள் குலைத்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிகழ்வு புதன்கிழமை பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் நடைபெற்றுள்ளது. நிக்கோலா சார்கோசி கேலி அதேவேளை 2008 பிப்ரவரியில் விவசாய கண்காட்சியில் ஒரு பார்வையாளரிடம் நிக்கோலா சார்கோசி தானே பயன்படுத்திய அந்த கேலிச் சொற்றொடரைக் குறிப்பிட்டு, “casse toi pauv’ con […]
யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார். அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர். அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி.. மேட்டூர் உபரி நீர் முதல் சுங்கச் சாவடிச் சிக்கல் வரை!
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், திமுக ஆட்சியின் பல நல்ல திட்டங்கள் இருந்தாலும், சில இடங்களில் ஏற்பட்டு வரும் தாமதங்களை வைத்து முழு முயற்சியில் களத்தில் ஈடுபட வேண்டி இருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு யோகி ஆதித்யா, பாஜக தலைவர்கள் வருகை? தமிழக தேர்தலை முன்னிட்டு திட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தி தீவிரம் அடையும் நிலையில், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!
ஒரு நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறுமனே எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்கு அல்ல. எத்தனைக் குடும்பங்கள் வறுமையில் இருக்கின்றன, எத்தனை சதவிகித இளைஞர்கள் இருக்கின்றனர், ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன, குழந்தை பிறப்பு விகிதம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பலவற்றை மக்கள்தொகை கணக்கெடுப்பில் கண்டறிந்து, வறுமையில் இருப்போரை மீட்டெடுக்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொண்டு சேர்க்க, குழந்தை பிறப்பு விகிதத்தை சீரான விகிதத்தில் பராமரிக்கத் தேவையான கொள்கைத் திட்டங்களை உருவாக்க அரசுக்கு இது உதவிகரமாக இருக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான இத்தகைய காரணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா அதற்கடுத்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 2027-ல் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த நிலையில், 2027-ல் நடத்தப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். `2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?
``ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' - நேரு துறை குறித்து அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கோயம்புத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை (ED) சுட்டிக்காட்டியது போல, 88 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைப் பொறுப்பாக DGP அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் 150 விஷயங்களைத் துல்லியமாக பாயிண்ட் அவுட் செய்து முழு விவரத்துடன் கொடுத்துள்ளனர். கே.என்.நேரு அதேபோல், கே.என். நேரு இருக்கக்கூடிய துறையில், இன்ஜினியர் அதிகாரி பதவிக்கான எழுத்துத் தேர்வில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் உள்ளது. இதுவரை போலீஸ் ஒரு வழக்கு கூட தொடங்கி நடவடிக்கை எடுக்கவில்லை. இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். இப்போ மறுபடியும், டிசம்பர் 3-ம் தேதி அமலாக்கத்துறை பொறுப்பு DGP-க்கு 258 பக்கம் கொண்ட ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மட்டும் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை இணைத்துக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, அந்தத் துறையிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் (contractors) ஒப்பந்தத் தொகையிலிருந்து 7.5% முதல் 10% வரை லஞ்சமாக கே.என். நேருவோடு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியிருப்பதாக, முழு விவரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆதாரங்களையும் பொறுப்பு DGP-க்கு கொடுத்தும், போலீஸ் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் இன்றைய திமுக ஆட்சியின் நிலைமை. `258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம் இப்போ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர் ஆட்சேர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. எழுத்துத் தேர்வு முடிந்துவிட்டு, நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. நேற்று (டிசம்பர் 11) மற்றும் இன்று (டிசம்பர் 12) நேர்முகத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று SMS மூலம் “நேர்முகத் தேர்வு ரத்து” என்று அறிவித்தனர். இன்று (12.12.2025), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளப் பக்கத்தில் பார்த்தால், நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்தனர் என்பது தெரியவில்லை. அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு கோயம்புத்தூர், கரூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதியை விட தேர்வு செய்யப்படாதவர்களின் தகுதி கூட அதிகமாக இருக்கிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெற வேண்டுமெனில், அதற்காக ரொம்ப கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார் வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, எஸ்.ஐ.ஆர். படிவம் (SIR Form) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, 77 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 12.5% வாக்காளர்கள் தற்போது இல்லாமல் உள்ளனர். இறந்தவர்கள், தற்போதைய இடத்தில் இல்லாதவர்கள், காணாமல் போனவர்கள், கண்டுபிடிக்கப்படாதவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதே இந்த 77 லட்சம் என்று அவர் விளக்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இந்த ஆண்டு தேர்தலுக்கு ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பாஜக தேசிய தலைவர்கள் அதை முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் தலைமை தாங்கும் இ.பி.எஸ், நயினார் ஆகியோர் அறிவிப்பார்கள் என்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகையைப் பற்றிய கேள்விக்கு, `அதைப் பாஜகவின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் உறுதிப்படுத்துவார்' என்று அண்ணாமலை பதிலளித்தார். அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்
ஐக்கிய அரபு அமீரக யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி, 433 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி காட்டடி அடித்து ரன்மழை பொழிந்தார். சூர்யவன்ஷி மட்டும் 14 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.
இலங்கை ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வேலை!
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை […]
பறை இசைக் கலைஞருடன் ஆனந்தமாக பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album
பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பறைவாசித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா
பிரதமர் மோடி, ஓமன் செல்ல இதுதான் காரணமா? எப்பொழுது ஓமன் பயணம்? திட்டங்கள் என்ன?
வரும் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகிலுள்ள தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். அதே நேரத்தில், பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர். இதுதொடர்பான விவாதங்கள் மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகின்றன. பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம் அவ்வகையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசிய பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் தடுத்தது? அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நாம் நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்று பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இதுதொடர்பாக பேசியிருக்கும் திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எங்களின் திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத் துறைக்குப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை 3,925 இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்குச் சொந்தமான 8,024 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பழமையான 352 கோவில்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்ய சுமார் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொன்மையான 76 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்த் திருவிழாவும் இப்போது நடத்தப்பட்டு வருகிறது. திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுமார் 3 கோடியே 65 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்காக இப்படிப் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தமிழ்க் கடவுள் முருகரை எவ்வாறு வழிப்பட வேண்டும் என தமிழராகிய எங்களுக்கு யாரும் கற்றுத் தர வேண்டாம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அமைதியான சூழலில் சில மதவாத சக்திகள் பொய்யான தகவல்களைப் பரப்பி, அமைதிப் பூங்காவாக இருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகர் சிரித்தால், அதன் எதிரொலி இந்த டெல்லியிலும் கேட்கும். மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும், என்று மக்களவையில் பேசியுள்ளார்.
தையிட்டி விகாரை:சுயநல அரசியலாம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம், வுனியா, கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள். தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தையிட்டி காணிக்குரிய மக்கள் பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறிய நிலையில் மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொணடுள்ளார். ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு காவல்துறையினர் தற்போது இருக்கிறார்கள். தங்களுடைய காணியை மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை காவல்துறையினர் விரட்டுகிறார்கள். இந்நிலையில்; இராமநாதன் அர்ச்சுனா தையிட்டி அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள் அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார். அரசாங்கத்தினதும் காவல்துறையினரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள் தள்ளப்படும்“ என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழிலிலுள்ள இந்திய தூதரக்தை விரட்டுவோம்?
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை ஜந்தாயிரம் பேரை திரட்டி இல்லாமல் செய்வோம். சீனா அல்லது அமெரிக்காவிற்கும் இடம் கொடுத்து யாழில் தூதரகத்தை அமைக்க விடுவோமென தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதானால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல் வளமும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளுர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அரசியல் வாதிகள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மீனவர்களை கோரி உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை வெளியேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கரையோர கடற்றொழிலாளர்களின் தொடர்பாடல் அமைப்பாளர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பிரகாஸ் ஆகியோர் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு!
இன்று (டிசம்பர் 12) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் அரசாங்கம் 100… The post மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு! appeared first on Global Tamil News .
கேரளா: நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வழக்கில் நடிகையின் கார் டிரைவரான பல்சர் சுனி என்கிற சுனில் குமார் கைது செய்யப்பட்டார். பல்சர் சுனியை ஏவியது நடிகர் திலீப் என கூறப்பட்டிருந்தது. மொத்தம் 10 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சுனில்குமார் என்ற பல்சர் சுனி குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் முதலில் பல்சர் சுனியின் பெயரும், எட்டாவதாக நடிகர் திலீப்பின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கு விசாரணை சுமார் எட்டரை ஆண்டுகளாக நடைபெற்றது. இதற்கிடையில் நடிகர் திலீப் சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். பாலியல் வன்கொடுமை நடிகை பலாத்கார வழக்கில் எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட் கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் பல்சர் சுனி என்கிற சுனில் குமார், மார்ட்டின், ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய குற்றவாளிகள் பட்டியலில் முதல் 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 6 பேரும் நடிகை பாலியல் வழக்கில் நேரடியாக தொடர்புடையவர்கள். மேலும், நடிகர் திலீப் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு வரும் 12-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஹனி எம். வர்க்கீஸ், குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று மாலை அறிவித்தார். அதில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு நிச்சயதார்த்தத்தின் போது போடப்பட்ட மோதிரம், விசாரணையின் ஒருபகுதியாக கோர்ட் கஸ்டடியில் இருந்தது. அந்த மோதிரத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நடிகையின் மோதிரம் தெளிவாகத் தெரியும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. பாலியல் வழக்கில் குற்றவாளிகள் வீடியோவை பகிர்ந்ததற்காக ஐ.டி. ஆக்ட் படி பல்சர் சுனிக்கு கூடுதலாக 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் சேர்த்தே இந்த 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றம் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதே பல்சர் சுனி கைது செய்யப்பட்டு ஏழரை ஆண்டுகளும் 29 நாட்களும் சிறையில் இருந்தார். எனவே, பல்சர் சுனி இனி மேலும் 12 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு
நேற்று கைது:இன்று பிணை:தேசிய மக்கள் சக்தி!
சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டிருந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.எனினும் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுமிருந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மோசடியான முறையில் கல்வித்தகமைகளை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களில் தனது சபாநாயகர் பதவியை துறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .
ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். எனினும் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்ததுடன் தீ விபத்தில் […]
New Delhi: In a leadership realignment at CNN-News18, the network has announced changes to its top editorial positions, according to an internal mail communication circulated within Network18.CNN-News18, which has held its position as India’s No. 1 English news channel for nearly four years, is undergoing a transition that reflects both its growth trajectory and evolving editorial priorities. The channel credited its sustained leadership to the values of fairness, accuracy and integrity that have shaped its journalism.Zakka Jacob, who has been at the helm as Managing Editor and is widely acknowledged for shaping the channel’s balanced editorial identity, is stepping back from managerial responsibilities to refocus on his core journalistic work. As per the internal communication, he will take on the role of Senior Anchor and Group Foreign Affairs Editor, continuing in the Managing Editor grade. In this capacity, Jacob will anchor programmes across multiple platforms beyond CNN-News18.The internal note also announced that Rahul Shivshankar, the veteran journalist and host of the 9 pm prime-time show The Hard Facts, will assume leadership of CNN-News18’s newsroom operations as Editorial Affairs Director. Shivshankar, known for his energy, curiosity and editorial experience, has previously led several major television newsrooms. All key teams — including input, output, production and off-platform units — will now report to him.Both Jacob and Shivshankar will begin their new roles starting Monday, the communication stated.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முதல்வர் தொடங்கி வைத்தார்.. எத்தனை கோடி பயனாளிகள் தெரியுமா?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்று வரும் விழாவில் 2 ஆம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். எனினும் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்ததுடன் தீ விபத்தில் […]
காசா பகுதியின் 40% நீரில் மூழ்கியுள்ளது!
கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக காசா பகுதியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் வெள்ள அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கான 760க்கும் மேற்பட்ட முகாம்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக்கின் கூற்றுப்படி, கனமழையால் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் உடைமைகள் நனைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு கடுமையான குளிர் மற்றும் கழிவுநீர் பெருக்கெடுப்பதால் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட சுகாதார அபாயங்களை அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான போரில் தப்பியவர்கள் வாழ்ந்த கூடாரங்கள் நீர் தேங்கி, படுக்கை, உடை மற்றும் உணவுப் பொருட்கள் நனைந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (என்ஜிஓ) இணைந்து வெள்ள எச்சரிக்கைகளுக்கான விரைவான ஒருங்கிணைந்த மறுமொழி அமைப்பை அமைத்துள்ளதாக ஐ.நா. கூறுகிறது. வியாழக்கிழமை காலை முதல் இந்த அமைப்பு 160க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஐ.நா. கூட்டாளிகள் காலி மாவு சாக்குகளை மணல் மூட்டைகளாகப் பயன்படுத்தி, சில பகுதிகளில் கருவிகள் மற்றும் மணலை விநியோகிப்பதன் மூலம் குடும்பங்களுக்கு வெள்ளத்திற்குத் தயாராக உதவுகிறார்கள். கூடாரங்கள், தார்பாய்கள், சூடான ஆடைகள் மற்றும் போர்வை பெட்டிகளும் விநியோகிக்கப்படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது நீக்குவது அவசியம் என்று ஐ.நா. கூறுகிறது. காசா பகுதிக்குள் பரந்த அளவிலான நிவாரணப் பொருட்களை கொண்டு வருவதற்கு கூடுதல் பாதைகளைத் திறக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இரண்டு வருட இஸ்ரேலிய தாக்குதல்கள் காசா பகுதியின் உள்கட்டமைப்பை அழித்துவிட்டன. எனவே, அடிப்படை தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுமார் 300,000 கூடாரங்கள் மற்றும் ஆயத்த வீடுகள் தேவை என்று மதிப்பிடப்பட்டது. காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு தோராயமாக $70 பில்லியன் இருக்கும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது மற்றும் 171,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தாக்குதல் முடிவுக்கு வந்தது.
மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு: பிரான்சில் விவசாயிகளை விடுவித்தது காவல்துறை
பிரான்சின் தெற்கு காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களை ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்று, கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களின் கூட்டத்தை படுகொலை செய்ததாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஏஎவ்பி தெரிவித்துள்ளது. அரிஜ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பண்ணையில் பசுக்களைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு சமீபத்திய நாட்களில் எதிர்ப்புகள் கிளம்பின. முடிச்சு தோல் அழற்சி, பொதுவாக கட்டி தோல் நோய் என்று குறிப்பிடப்படும் 200க்கும் மேற்பட்ட பசுக்களைப் பாதுகாக்க விவசாயிகள் முயன்றனர். இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் விதிகளை கடுமையாக்குகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த கால்நடைகளை வெட்டுதல், தடுப்பூசி பிரச்சாரங்கள் மற்றும் கால்நடை நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் அவசியம் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உளவியல் ஆதரவு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்டில் எலஸ்டெல்லார் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு, பாலங்கள், ரயில்வே என பலவற்றிற்கான முக்கிய பாகங்கள் இங்கு தயாரிக்கப்படும்.
ஆஸ்திரியா பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை
புதிய சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா போன்ற பாரம்பரிய முஸ்லிம் தலையை மூடி அணிவதைத் தடை செய்கிறது. தடையை மீறும் மாணவர்கள் பள்ளி அதிகாரிகள் மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களுடன் பல விவாதங்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் மீண்டும் மீண்டும் மீறப்பட்டால் குழந்தைகள் மற்றும் இளைஞர் நல நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். கடைசி முயற்சியாக, குடும்பங்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு 800 யூரோக்கள் (700) வரை அபராதம் விதிக்கப்படலாம். அதிகாரிகள் இந்தச் சட்டத்தை பாலின சமத்துவத்திற்கான தெளிவான உறுதிப்பாடாகக் கூறுகின்றனர். இந்தத் தடை சுமார் 12,000 குழந்தைகளைப் பாதிக்கும் என்று லிபரல் நியோஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜானிக் ஷெட்டி கூறுகிறார். எதிர்க்கட்சியான பசுமைக் கட்சி புதிய சட்டம் தெளிவாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறுகிறது. ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வ இஸ்லாமிய சமூகம் (IGG) இந்தத் தடை அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதாகவும் கூறியது. 2020 ஆம் ஆண்டில், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான இதேபோன்ற தலைக்கவசத் தடை அரசியலமைப்பு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. ஏனெனில் அது குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்தது என்பதை IGG நினைவுபடுத்துகிறது. இருப்பினும், இந்த முறை இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க முயற்சித்ததாக அரசாங்கம் கூறுகிறது. சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நியோஸ் கட்சி, புதிய சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசாரணை காலம் பிப்ரவரி 2026 இல் தொடங்கும், மேலும் முழு தடை அடுத்த செப்டம்பரில் (புதிய பள்ளி பருவத்தின் தொடக்கத்தில்) நடைமுறைக்கு வர உள்ளது. தடைக்கு ஆதரவாக வாக்களித்த தீவிர வலதுசாரி எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி (FP), சட்டம் போதாது என்று கூறியது. பள்ளிகளில் தலைக்கவசங்களுக்கு பொதுவான தடை இருக்க வேண்டும் என்றும், அனைத்து மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களையும் உள்ளடக்கியதாக அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் FP வாதிடுகிறது.
ஒட்டுசுட்டானில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் வைத்து வியாழக்கிழமை (11) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள சிசிரிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. குறித்த முறைப்பாட்டுக்கமைய காணாமல் போன சிறுவன் கொழும்பில் வைத்து உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளான். இதனை தொடர்ந்து, உறவுகளால் சிறுவன் அழைத்து வரப்பட்டு நேற்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சிறுவனை யாரும் கடத்தவில்லை எனவும் சிறுவன் வேலை தேடி சென்றதாகவும் சிறுவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் Mass + Motivational பாடல்கள்! | Photo Album
பொதுவாக எம்மனசு தங்கம் - முரட்டு காளை (1980) ராமன் ஆண்டாளும் - முள்ளும் மலரும் (1981) வேலை இல்லாதவன்தான் - வேலைக்காரன் (1987) ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (1995) வெற்றி நிச்சயம் - அண்ணாமலை (1992) ரா ரா ராமையா - பாட்ஷா (1995) வெற்றிக் கொடி கட்டு - படையப்பா (1999) சக்தி கொடு - பாபா (2002) தேவுடா தேவுடா - சந்திரமுகி (2005) மாற்றம் ஒன்றுதான்... - கோச்சடையான் (2014) உலகம் ஒருவனுக்கா - கபாலி (2016) உல்லாலா - பேட்ட (2019)
திருகோணமலை குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!
திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார். இவர் வியாழக்கிழமை (11) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்
மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்டும் களத்துக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். வினேஷ் போகத் பதிவு இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், பாரீஸ் ஒலிம்பிக்தான் முடிவா என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். வினேஷ் போகத் நீண்ட நாள்களாகவே என்னிடம் அதற்கு பதில் எதுவும் இல்லை. நான் மீண்டு வருவதற்காக நான் போட்டிக் களத்தில் இருந்து மட்டுமல்ல, மன அழுத்தம், எதிர்பார்ப்புகள், சுய விருப்பங்களில் இருந்து கூட விலகி இருக்க வேண்டிய சூழல் இருந்தது. உலகம் இதுவரை கண்டிராத எனது பயணத்தின் உயரத்தையும், தோல்விகளையும், தியாங்களையும் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் ஆகியுள்ளது. அதில், என்னைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் களத்துக்கு திரும்பி போட்டியிட விரும்புகிறேன். என்னுள் இருக்கும் நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் எவ்வளவு தூரம் சென்றாலும் என்னில் ஒரு பாதி களத்திலேயே தான் இருக்கிறது. வினேஷ் போகத் பதிவு மீண்டும் 2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி பயமின்றி முன்னேறுகிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லபோவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர் லீடராக இணைந்துள்ளான் எனக் குறிப்பிட்டுள்ளார். வினேஷ் போகத் கடந்துவந்த பாதை மல்யுத்த சம்மேளனத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடிய வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கி ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கௌரவித்தார். போட்டியில் இருந்து வெளியேறிய மன வேதனையில், மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற அவர், பின்னர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பிறகு ஹரியாணா தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கடந்த ஜூலை மாதத்தில் வினேஷ் போகத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில்தான், 31 வயதான வினேஷ் போகத், தான் மீண்டும் களத்துக்குத் திரும்பவிருப்பதாகவும், தன்னை உற்சாகப்படுத்த தன்னுடன் குட்டி சியர் லீடர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Vinesh Phogat: வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை டு காங்கிரஸ் வேட்பாளர்!
கேரளா மாநிலத்தில் 2017ல் நடந்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஆறு பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சிப்புளி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு பயணிகள் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் முன் பாய்ந்த டூவீலர் இந்த படிக்கட்டின் அருகிலேயே, படி ஏறிச் செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தரைத்தள பாதை உள்ளது. அந்தப் பாதையின் வழியாக டூவீலரில் வந்த ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கன்னியாகுமரி விரைவு ரயில் வேகமாக வந்தது. இதனை எதிர்பார்க்காத அந்த வாலிபர், ரயிலில் அடிபடாமல் இருக்க டூவீலரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், ரயிலின் குறுக்கே டூவீலரை போட்டுவிட்டு தப்பிய நபர் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். ரயில் மோதியதில் டூவீலரின் நம்பர் பிளேட் நொறுங்கியதால், அதன் மூலம் டூவீலரின் உரிமையாளரை கண்டறிய முடியவில்லை. ரயில் எஞ்சினில் சிக்கிய டூவீலர் இதையடுத்து, போலீஸார் டூவீலரின் எஞ்சின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், டூவீலரை ஓட்டி வந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை அடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் மது வாங்க தண்டவாளம் வழியாக வேகமாக செல்ல முயன்றதாக கலைச்செல்வன் கூறியுள்ளார். பின்னர், கலைச்செல்வன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி
காதலனுடன் உல்லாசம்; திடீரென வந்த மனைவி – 10வது மாடி பால்கனியில் தொங்கிய காதலி
பெண் ஒருவர் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்கிய வீடியோ வைரலானது. சிக்கிய காதலி சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் திருமணமான நபர் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கள்ளக்காதலன் வீட்டுக்கே சென்று அந்த பெண் பேசியிருக்கிறார். அப்போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர், தன்னுடைய கள்ளக்காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளும்படி கூறியுள்ளார். வைரல் புகைப்படங்கள் […]
India Today Group Leadership Rings Ceremonial Bell at NSE to Mark 50 Years of Excellence
Mumbai: The India Today Group (ITG) marked a historic milestone in its golden jubilee year with a prestigious honour at the National Stock Exchange (NSE), where the Group’s leadership performed the iconic Ceremonial Bell Ringing at the Exchange’s Atrium on Friday, 12 December. The treasured ritual celebrated the Group’s 50-year journey.India Today Group Chairman Aroon Purie, Vice Chairperson & Managing Director Kalli Purie, Group CEO Dinesh Bhatia, and NSE Managing Director & CEO Ashish Kumar Chauhan jointly rang the ceremonial bell, marking a landmark moment in the Group’s five-decade legacy.The honour carried a special meaning. As the chairman emphasised, “A nation’s health depends upon its financial strength, and this strength has to be institutionalised. Institutions like the NSE build that strength and Institutions like India Today safeguard it with truth, transparency and trust” “Today’s bell ringing is symbolic in many ways for us, From the very first edition in Dec’75, our mission was clear, to hold up a mirror to the nation, to pursue truth with courage and to document India as it was, as it is and as it aspires to be. 50 years later that mission has not endured but has thrived. Today journalism at India Today group is digitally empowered, where story telling transcends platforms, where credibility and Candid constructive conversations, not clicks and TRPs, become the most valuable currency. We carry forward the same promise that defined us in 1975, to always ask the difficult questions, to always stand tall in the face of power, to always serve the people of India with integrity and courage” For 50 years, India Today has been a front-row witness to the making of modern India- Fifty years, Eleven Prime Ministers, Fifteen Governments and Three hundred and fifty Elections. Over these decades, the Group has documented India’s defining moments, reporting through political upheavals and national transitions, exposing corruption and chronicling twenty-five major scams, and insurgencies from the frontlines. It has captured India’s evolution from a nation in transition to a rising global power. The Group’s recent global interview with President Vladimir Putin reaffirmed a fundamental belief: institutions remain relevant only when they evolve, and leaders make impact only when they stay committed to purpose.To commemorate its 50-year journey, the India Today Group announced the release of five commemorative films, each reflecting a decade of its evolution. A special teaser and brand film celebrating the Group’s legacy were screened at the event, accompanied by the unveiling of a 50-year commemorative logo.The ceremony concluded on a resonant and celebratory note, marking not only the beginning of India Today Group’s golden jubilee year but also reaffirming its continued commitment to shaping informed public discourse.-Based on Press Release
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று (11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த 5 வீரர்களை குறி வைக்கும் கொல்கத்தா! வெளியான சீக்ரெட் தகவல்!
டெல்லி :IPL 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, கடந்த 2024 சீசனில் 3-ஆவது டைட்டில் வென்ற பிறகு 2025-ல் 8-ஆவது இடத்தில் முடிந்தது. இதற்குக் காரணம், ஸ்ரேயாஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், ஃபில் சால்ட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்தது. வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு வாங்கியது தோல்வியடைந்ததால் அவரையும் விடுவித்தனர். அண்ட்ரே ரஸ்ஸெல் ஓய்வு பெற்றதால், KKR-க்கு இப்போது ரூ.64.3 […]
மேகதாது அணை கட்ட 30 பேர் குழு! கர்நாடக அரசுக்கு லாலி பாடும் திமுக- எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக 30 பேர் கொண்ட குழுவை உருவாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo Album
ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா
இண்டிகோ பாதிப்புக்கு உண்மையான காரணம் என்ன? கண்டறியும் குழு நியமனம்.. யார் தலைமை தெரியுமா?
இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
மதுரை டூ கோவா சுற்றுலா ரயில்… 2026 புத்தாண்டு ஸ்பெஷல்- IRCTC 9 நாட்கள் டூர் பேக்கேஜ் அறிவிப்பு!
விரைவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து, சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் 44வது CADOFEST விழா... 2,500க்கும் மேற்பட்ட என்.சி.சி கேடட்கள் பங்கேற்பு
சென்னை அரும்பாக்கத்தில் செயல்படும் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் 44வது CADOFEST நிகழ்வு இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினையடுத்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி […]
சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த – தெனிமுல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி, 25 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மகிழுந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகிழுந்தில் இருந்த
Mumbai: Snapchat India hosted the second edition of its flagship creator event, Snap with Stars, turning it into an exclusive Christmas-themed celebration for top Mumbai-based creators. Adding star power to the evening, actors Kartik Aaryan and Ananya Panday attended the event to meet creators and spotlight their upcoming release, Tu Meri Main Tera Main Tera Tu Meri.The intimate gathering brought creators and celebrities together through interactive games, AR-powered activities, and speed-dating style sessions designed to encourage genuine connection and collaboration. Guests also explored Snapchat’s signature AR Lenses and immersive experiences set up across the venue.A standout moment came with Ananya Panday’s official debut on Snapchat, where she launched her Public Profile using a custom Lens, promising her audience a stream of fun, candid, and authentic Snaps.Designed as a closed-door, high-engagement initiative, Snap with Stars gives select creators the opportunity to interact closely with leading personalities from entertainment and culture—reflecting Snapchat’s core focus on real, close connections and co-creation.Sharing his experience, Kartik Aaryan said, “I’ve always had a simple approach to life – be real, have fun, make people smile and never take yourself too seriously. What I like about Snapchat is how easy, quick and in-the-moment it feels, capturing raw moments. Meeting creators today, trying out some fun lenses and celebrating Christmas together genuinely felt like hanging out with friends. I’m looking forward to sharing more of these fun, everyday moments with my community on Snapchat in a way that feels relaxed and completely me.” On joining Snapchat, Ananya Panday said, “I’ve always tried to stay true to who I am… This is why Snapchat feels so right for me. It is a space where I can share moments as they are, without overthinking, and stay connected to my community in the most genuine and effortless way. Trying out lenses, connecting with creators and celebrating Christmas together really made the day special. I cannot wait to share BTS & my unfiltered side through Snaps with everyone!” [caption id=attachment_2479147 align=alignleft width=225] Saket Jha Saurabh [/caption]Reflecting on the success of the festive edition, Saket Jha Saurabh, Director – Content & AR Partnerships, Snap Inc India, said, “The X’mas edition of Snap With Stars truly captured the spirit of what Snapchat stands for—authenticity, creativity, and meaningful connection. Seeing Ananya and Kartik engage so organically with creators was a highlight. These moments show how powerful creator–celebrity interactions can be when rooted in real expression. We’re excited to keep building spaces where culture, community, and creativity come alive.”
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு:
முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ்… The post ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு: appeared first on Global Tamil News .
Compass Communications bags PR Mandate for Genovation
Mumbai: Compass Communications has secured the public relations mandate for Genovation Technological Solutions, a rapidly emerging deep-tech company leading advancements in artificial intelligence and machine learning.Founded in 2021, Genovation is known for Mentis, the subcontinent’s first cost-effective, Made-in-India Agentic AI platform designed to enhance enterprise decision-making with precision, explainability, and affordability. The company’s solutions are currently deployed across Manufacturing, Aerospace, Retail, Healthcare, and Finance, reflecting its wide industry relevance.Under the new mandate, Compass Communications will spearhead Genovation’s strategic communications, thought leadership efforts, and media relations. The focus will be on amplifying the company’s original IP, R&D capabilities, and its leadership in developing pioneering, privacy-first agentic AI technologies for enterprises.[caption id=attachment_2484527 align=alignleft width=200] Anurita Das [/caption]Speaking on the partnership, Anurita Das, Founder & CEO, Genovation, said, “At Genovation, we are developing AI models that are not only intelligent but also cost-effective, secure, and positively impact the businesses of our clients. Our belief is that AI, when built responsibly and deployed intelligently, has the power to reshape the way the world operates. We are very excited to partner with Compass Communications and their expertise and attention to detail stood out for us from the start. Their industry knowledge will be critical as we amplify our unique story and showcase our products.” [caption id=attachment_2484533 align=alignright width=215] Rohan Srinivasan [/caption]Adding to this, Rohan Srinivasan, Co-Founder, Compass Communications, said, “In a market where intelligent, autonomous systems are redefining efficiency and innovation, agentic AI stands at the forefront of this transformation. We are incredibly excited to partner with Genovation, a company that is at the cutting edge of innovation and who are building the future of autonomous AI.” Compass Communications currently manages a diverse portfolio of national and international clients across BFSI, Automotive, Technology, Education, Executive Search, Luxury, Consumer Tech, Real Estate, and Healthcare. The agency operates across major metros including Delhi NCR, Bengaluru, Kolkata, and Chennai.
யாழில் இடர் நிவாரண முறைகேடு சர்ச்சை –பாதிக்கப்பட்டோர் பெயர்ப்பட்டியல் பார்வைக்கு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் வழங்கப்பட்ட இடர் நிவாரண உதவித் தொகையில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உதவிக்குத்… The post யாழில் இடர் நிவாரண முறைகேடு சர்ச்சை – பாதிக்கப்பட்டோர் பெயர்ப்பட்டியல் பார்வைக்கு! appeared first on Global Tamil News .
இந்தியாவில் ரயில் விபத்துகள் குறைப்பு.. வரலாறு காணாத மைல்கல்.. ரயில்வே அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் வரலாறு காணாத அளவில் நடப்பு நிதி ஆண்டில் ரயில் விபத்துகள் குறைந்து உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராய்கட்டில் ஹோட்டல்கள் நடத்தி வருபவர் தீபக் தண்டன். இவருக்கும் போலீஸ் அதிகாரி கல்பனா சர்மாவுக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகம் ஏற்பட்டது. திருமணமானவரான தீபக் தண்டனுடன் கல்பனாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. தீபக் தண்டனுடன் கல்பனா இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தீபக்கை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.2 கோடி பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் யுனோவா காரை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக தீபக் குற்றச்சாட்டுச் செய்துள்ளார். அதோடு, ராய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலை தனது சகோதரர் பெயருக்கு மாற்றிக்கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் ரூ.30 லட்சம் செலவு செய்து அந்த ஹோட்டலை கல்பனா வர்மா பெயருக்கு எழுத்துப்பூர்வமாக மாற்றிக்கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “தான் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கில் சிக்க வைத்துவிடுவேன்” என்று தன்னை மிரட்டுவதாக தீபக் போலீசில் புகார் செய்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு சாட்சியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இரு தரப்பிலும் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். ஆனாலும், இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. கல்பனாவின் தந்தை ஹேமந்த் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீபக் தொழில் விஷயமாக அவரது மனைவி வங்கி கணக்கில் இருந்து கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு இப்போது கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கல்பனா தன் மீதான குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார். சாட்டிங் தனது தந்தைக்கும் தீபக்கிற்கும் இடையிலான தொழில் பிரச்னையில் தேவையில்லாமல் தனது பெயர் இழுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இது போன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். `3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இதுபோன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். தீபக் கார் கொடுத்ததாக கூறப்படுவது குறித்து கல்பனா கூறுகையில், தீபக் மனைவியிடமிருந்து முறைப்படி அந்த கார் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தீபக் தான் கூறும் குற்றச்சாட்டுக்கு சாட்சியங்களை தாக்கல் செய்ய முடியுமா? கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் புகார் செய்யவில்லை? காசோலை மோசடி வழக்கில் அவரது மனைவிக்கு நேரடி தொடர்பு இருந்தும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. தீபக்கின் புகார் அனைத்தும் கட்டுக்கதையாகும். சட்டச்சிக்கலில் இருந்து தப்பிக்க இதுபோன்று செய்துள்ளார். கல்பனா வர்மா எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று தீபக் செய்கிறார் எனத் தெரிவித்தார். இது குறித்து இருவரின் புகார்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப கேட்டதால்தான் பிரச்சனை உருவானதாகத் தெரிகிறது. தீபக்கும் கல்பனாவும் ஹோட்டலில் பல மணி நேரம் அமர்ந்து பேசியதாகவும், அடிக்கடி வீடியோ காலில் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி சத்தீஷ்கர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ``என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' - மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்
திருப்பரங்குன்றம் விவகாரம் : வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் எந்தத் தூணில் ஏற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, வழக்கை டிசம்பர் 15 (திங்கட்கிழமை) வரை ஒத்திவைத்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை அன்று கேட்க முடிவு செய்யப்பட்டது.கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மேலேயே […]
Britannia Milk Bikis launches Special Edition Superstar biscuit for an elevated Adengappa experience
Mumbai: Building on the strong consumer response to Adengappa Kadhaigal 2.0, Britannia Milk Bikis has introduced a Special Edition Superstar biscuit across its packs, bringing a fresh layer of excitement to its storytelling-led engagement with families in Tamil Nadu. The launch strengthens the brand’s long-standing cultural connection with the state by turning its iconic biscuit into a collectible inspired by Tamil Nadu’s love for symbols, stories, and superstar flair.The new biscuit features embedded superstar-style sunglasses within the classic Milk Bikis waffle design, offering a fun moment of discovery for children and parents. By scanning the on-pack QR code and logging onto the Adengappa platform, consumers can scan the superstar biscuit to unlock a special story. Families can narrate these stories together and submit recordings for a chance to win weekly rewards or a trip to Hong Kong*.Conceptualised by Talented, the launch enhances the imagination-driven world of Adengappa Kadhaigal 2.0, which uses GenAI to turn household objects into creative storytelling sparks. The special biscuit elevates this experience, adding surprise, play, and participation to everyday snacking moments.To boost visibility, Britannia Milk Bikis has unveiled high-impact OOH billboards across Chennai landmarks such as Royapettah, Koyambedu Flyover, and Express Mall, supported by a campaign film that showcases the delight of discovering the limited-edition biscuit and entering the Adengappa universe.[caption id=attachment_2481698 align=alignleft width=200] Siddharth Gupta [/caption] Siddharth Gupta, General Manager, Marketing, Britannia, said, “Britannia Milk Bikis has always had a special place in the hearts of Tamil Nadu’s families. Our journey in the state has been shaped by its culture, its icons and its love for storytelling. With this Special Edition biscuit, we wanted to create a fun experience that surprises the people of the state. Adengappa Kadhaigal 2.0 has shown us how simple objects can spark powerful stories, and this biscuit extends that idea beautifully, turning discovery into imagination and imagination into family moments. This launch is a celebration of the bond we share with Tamil Nadu.” Through this new edition, Britannia Milk Bikis continues its legacy of culturally resonant campaigns—from A Bite on TN to Anaivarukkum and Flashback Pack—combining tradition, technology, and imagination to create deeper family experiences.Steps to generate your stories: Scan the QR code on the Britannia Milk Bikis pack Scan the special superstar biscuit to generate stories Submit your narration and stand a chance to win exciting prizes every week or a trip to Hong Kong* https://www.youtube.com/watch?v=k9uhdnloSFo
எயார் பிரான்ஸ் ; 55 வயதில் ஓய்வூதியம் வேண்டாம் !
பிரான்ஸ் விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான துப்பரவு பணியாளர்களுக்கான பணிசெய்யும் காலத்தை குறைக்க வேண்டும் எனும் கோரிக்கையை Cour des comptes நீதிமன்றம் விமர்சித்துள்ளது. CRPN என அழைக்கப்பட்டும் விமானிகள் மற்றும் விமான விமான குழு கொண்ட பிரிவுக்கு அவர்களது பணியின் சிரமம் காரணமாக சேவைக்காலத்தைக் குறைக்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டது. பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரான்சின் உச்ச தணிக்கை நீதிமன்றம் (Cour des comptes), ஓய்வூதிய வயதெல்லை 55 […]
வெனிசுலாவுக்கு அமெரிக்கா புதிய தடைகள்!
வெனிசுலா அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா , வெனிசுலாவின் ஆறு எண்ணெய் கப்பல்கள் மீது புதிய… The post வெனிசுலாவுக்கு அமெரிக்கா புதிய தடைகள்! appeared first on Global Tamil News .
கால்நடைகளுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை!
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாரிய இழப்புகளைச் சந்தித்த பண்ணையாளர்களுக்கு உதவும்… The post கால்நடைகளுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை! appeared first on Global Tamil News .
மீண்டும் மீண்டும் ஷாக்! ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்க விலை, இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலை வர்த்தகத்தில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும், கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிற்பகல் வர்த்தக நிறைவில் மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370-க்கும் விற்பனை. ஒரே நாளில் மொத்தம் ரூ.2,560 உயர்வு பெற்றுள்ளது. […]
GlobalLogic strengthens executive team to accelerate AI-led transformation
New Delhi: GlobalLogic Inc., a Hitachi Group Company and leader in digital engineering, has announced key leadership transitions and promotions to strengthen its senior leadership team. The company has appointed Sumit Sood as Chief Synergy and Transformation Officer, Ethan Matyas as Chief Delivery Officer (CDO), Vishal Anand as Chief Operations Officer (COO), and Vikas Kaul as Chief People Officer (CPO), effective December 1, 2025.These appointments underline GlobalLogic’s commitment to scaling innovation and optimizing its global delivery model as Generative, Agentic, and Physical AI reshape opportunities for clients and industry-wide transformation.[caption id=attachment_2484504 align=alignleft width=200] Srini Shankar [/caption] “I am thrilled to congratulate Sumit Sood on his transition to the newly created role of Chief Synergy and Transformation Officer, promote Ethan Matyas and Vishal Anand to our executive leadership team, and officially welcome Vikas Kaul as our Chief People Officer, during such a pivotal time for our company,” said Srini Shankar, President and CEO of GlobalLogic. “Their collective expertise and leadership will be pivotal in helping us navigate the next inflection point in our industry and achieve our strategic goals.” In his new role, Sumit Sood will lead the Synergy Business Unit to accelerate collaboration with Hitachi and advance the “True One Hitachi” vision. He will drive integrated Agentic AI development, continue overseeing GlobalLogic VelocityAI, and maintain leadership of the CTO organization, Practices, and Data and Intelligence Engineering.As Chief Delivery Officer, Ethan Matyas will strengthen GlobalLogic’s global delivery model, unify the client experience, embed AI adoption across programs, and scale innovation and productivity.Newly appointed COO Vishal Anand will oversee Global Operations, ensuring systems, processes, and capabilities scale effectively. His responsibilities span Talent Acquisition, Learning & Development, Delivery Assurance, Global Business Operations, and P&L Governance, while continuing to lead Americas Engineering and Delivery.Vikas Kaul, the newly appointed Chief People Officer, will drive GlobalLogic’s global people strategy, focusing on high-performance culture, strategic talent development, and fostering an AI-curious workforce to support the company’s accelerated growth.
நல்லூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
நல்லூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், தவிசாளர் ப. மயூரனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு,… The post நல்லூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! appeared first on Global Tamil News .
இண்டிகோவின் ஏஐ ஆட்டோ வீடியோ வைரல்- விமான நெருக்கடிக்கு இடையே சலசலப்பு
விமான நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெயரில் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.
யாழில் மூன்று வயதுக் குழந்தைக்கு மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை; தாய் ,தந்தை தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் – பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது மனைவியின் குழந்தைக்கே இவ்வாறு சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதல் குழந்தையின் தந்தையும், தாயும் தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் மீது மிளகாய் தூள் இட்டதாகவும், மிளகாயை உண்ண கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை […]
நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்க வேளை 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது. பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் […]
இண்டிகோ ஆய்வாளர்கள் 4 பேர் நீக்கம்.. டிஜிசிஏவின் அதிரடி முடிவு.. புலம்பும் பயணிகள்!
இந்தியாவில் இண்டிகோ விமான ரத்து சர்ச்சை சூடு பிடித்துள்ளது. இதனால் 4 விமான ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். DGCA சிறப்பு குழு அமைத்து, CEO-விடம் விளக்கம் கேட்கிறது.
யாழில். கடற்தொழிலாளர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அதன் போது, யாழ் மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் […]
யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினையடுத்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு நிலமைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினைதொடர்பில் உரிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலாளர் ம.பிரதீபனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்
சேலம் விமான நிலையம் மேம்பாடு… இதுவரை உதான் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உதான் திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சேலம் விமான நிலையத்திற்கான நிதி பற்றி விரிவாக பார்க்கலாம்.
Super Chennai appoints Karthik Nagappan as CEO
Chennai: Super Chennai, the citizen-led movement dedicated to strengthening Chennai’s global identity, has announced the appointment of Karthik Nagappan as its new Chief Executive Officer. The leadership transition underscores the organisation’s renewed push towards cultural storytelling, civic participation, and positioning Chennai on the global stage.For decades, Chennai has stood as more than a city — it embodies a shared emotion rooted in resilience, creativity, and progress. As Chennai enters a new era of cultural and civic evolution, Super Chennai aims to channel collective pride into global relevance.Commenting on the development, Ranjeeth Rathod, Managing Director of Super Chennai, said, “Super Chennai was built on the idea of celebrating our people, culture, and progress. Karthik’s creative energy, strategic depth, and deep-rooted connection with Chennai align perfectly with our vision. I am confident he will spearhead new initiatives that reflect the city’s dynamism and pride.” Karthik currently serves as Vice President at Unifi Capital Pvt. Ltd., bringing robust experience across finance, media, brand building, and urban identity initiatives. His work across leading publications and campaigns has consistently spotlighted the spirit of Chennai.Sharing his thoughts on the appointment, Karthik Nagappan said, “I’ve been privileged to tell stories that unite and inspire. Joining Super Chennai is a natural extension of that journey. I look forward to amplifying the city’s voice globally and shaping its next chapter with our community.” Karthik played a pivotal role in several iconic Chennai-focused campaigns during his tenure with The Times of India and The Hindu, including the celebrated ‘Made of Chennai’ initiative and the widely popular ‘Chance-ey Illa’ campaign with composer Anirudh Ravichander.With Karthik at the helm, Super Chennai enters a defining chapter—strengthening civic involvement, creative collaborations, and a unified narrative of a Chennai that is inclusive, future-ready, and globally confident.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திடீர் மறைவு.. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி மற்றும் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜேஸ்வரி. இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரையினர் மற்றும் ரசிகர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்க வேளை 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது. பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 3 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதீட்டை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒரு பாதீடானது வருமான மூலங்களினை அதிகரித்து அவ் வருமான மூலங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களை மிகைப்படுத்தப்பட்ட நிர்வாகச் செலவுகளுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்கும் பயன்படுத்தாமல் மக்களின் நலநோன்பிற்கு மட்டும் முன்னுரிமை வழங்கி பயன்படுத்த வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு என்றுமில்லாதவாறு பல சவால்கைளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட போதும் அதையும் தாண்டி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட் பட்ட பிரதேசத்தின் உட்காட்டுமான மேம்பாடுக்காகவும் அப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை யும் இயலுமானவரை பூர்த்தி செய்யும் வகையில் இப் பாதீடு அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு சபைக்கு கிடைக்குமென எதிர்பாக்கப்படும் மொத்த வருமானமானது 450.537 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது. அதில் 363.648 மில்லியன் ரூபா சபையின் சுயவருமானம். 2025 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகும். 2026 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானத்தில் அதிக பங்களிப்புச் செய்கின்ற வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் 2026 ஆம் ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் 369.648 மில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகவும் அதில் 93.2 வீதமாகிய 250.833 மில்லியன் ரூபா 3வது காலாண்டிலேயே சபைக்கு வருமானமாக கிடைத்துள்ள நிலையிலும் 2026ஆம் ஆண்டு வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் மூலம் அதிக வருமானம் சபைக்கு கிடைக்கும் என்பதாலும் 2026 ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் என எதிர்பாக்கப்படும் 369.648மில்லியன் ரூபா சாத்தியமானதாகும். 2026 ஆம் ஆண்டுக்கான சபையின் பாதீட்டில் மொத்த செலவீனமாக 450.535 மில்லியன் ரூபா காணப்படுகின்றது கடந்த காலங்களில் எமது சபையில் பணிபுரிகின்ற அனைத்து நிரந்தப் பணியாளர்களுக்குமான கொடுப்பனவினை மத்திய அரசாங்கம் அரசிறை வருமானமாக முழுமையாக வழங்கி வந்த நிலையில் இவ்வாண்டு முதல் இப் பணியாளர்களுக்கான மொத்தக் கொடுப்பனவில் 40 வீதத்தினை நாம் செலுத்த வேண்டும் என்ற அரச சுற்றிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சபைக்கு கிடைத்த 117.79 மில்லியன் ரூபா அரசிறை மானியம் 2026 ஆம் ஆண்டு 86.77 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டடுள்ளது. அவ்வகையில் பணிபுரிகின்ற நிரந்தரப் பணியாளர்களின் கொடுப்பனவு மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தினால் உயர்த் தப்பட்ட சம்பள அதிகரிப்பு உட்பட அப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய மொத்த கொடுப்பனவுத் தொகையின் 40 வீதம் நல்லூர் பிரதேச சபையின் சுயவருமானத்திலிருந்து ஒதுக்கப் பட்டுள்ளது. குறித்த ஒதுக்கீடு எமது மக்களுக்கு சென்றடையக்கூடிய மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடுகளில் கணிசமான செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும் மக்களின் நலநோன்புக்கு முன்னுரிமை வழங்கியே இப் பாதீடு தயாரிக்கப்பட்டுள்து. அதன் பிரகாரம் வீதிகளைப் புனரமைத்தல், வடிகாலமைப்பு, வீதி மின்விளக்குகள், நகர அபிவிருத்தி, மயானங்களைப் புனரமைத்தல், வீதிகளுக்கு பெயர்பலகையிடுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல் என நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு 162 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது சபையின் சுய வருமானத்தின் 44.55 வீதமாகும். அதே போல் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுச் செயற்றிட்டங்களான சத்துணவு வழங்குதல் புலமை பரிசில் நன்கொடை விசேட தேவையுள்ளோர் நல நோன்பு தாய் சேய் பராமரிப்பு வாழ்வாதார உதவி என்பவற்றுக்காக 12 மில்லியன் ரூபாவும் முன்பள்ளி அபிவிருத்தி மற்றும் சனசமூக நிலைய நன்கொடை ஆகியவற்றுக்கு 3.4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது நல்லூர் பிரதேச சபையில் காணப்படும் 12 வட்டாரங்களின் அபிவிருத்திக்கும் 10 மில்லியன் ரூபா வீதம் 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் அவ் அவ் வட்டார உறுப்பினர்களினால் வழங்கப்படும் செயற்றிட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த வட்டார அபிவிருத்தி நிதியிலிருந்து அவ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கழிவகற்ற பொறிமுறை யினை வினைத்திறனான மாற்றும் வகையில் கழிவுப்பொருட்கள் மீள் சுழற்சி மையங்கள் மேம்படுத்தப்பட்டு அவற்றுக்கு தேவையான மீள்சுழற்சி இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலினை பாதுகாத்தல் மர நடுகை செய்தல் போதை பொருள் ஒழிப்பு போன்ற செயற்றிட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்
3ம் உலகப்போரில் தான் முடியும்…ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!
வாஷிங்டன் :உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவித்தார். “இதுபோன்ற நிகழ்வுகள் 3-ஆம் உலகப்போரை நோக்கித் தள்ளும். அமெரிக்கா அதை விரும்பவில்லை” என்று டிரம்ப் கூறினார். உக்ரைன்-ரஷ்யா போர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைன் […]
``என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' - மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்
ஊனம் ஒரு தடையில்லை என்று கருதி எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் குஜராத்தைச் சேர்ந்த, வெறும் 2 அடி உயரம் உள்ள ஒரு பெண் சாதித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் விருதானி பட்டேல் (28). குழந்தை பருவத்தில் இருந்தே படிப்பில் மிகவும் திறமைசாலியான விருதானி, உயரத்தில் மிகவும் குறைவாக இருந்தார். வெறும் 2 அடி உயரமே உள்ள விருதானி பள்ளி பருவத்தில் இருந்தே நன்றாக படித்தார். இரு சக்கர வாகனத்தில் கூட ஸ்டூலை போட்டுத்தான் ஏறி அமரும் அளவுக்கு உயரம் குறைவாக இருந்த விருதானி, தனது உயரத்தைப் பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தினார். விருதானி அவருக்கு சக மாணவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். இதனால் பி.காம் முடித்துவிட்டு, சூரத்திலேயே எம்.காம் முடித்தார். சமீபத்தில் பி.எச்.டி படிப்பை முடித்து முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதனை தொடர்ந்து குஜராத் அரசு கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரது உயரத்தை காரணமாக காட்டி அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. மூன்று முறை போராடிய பிறகு நான்காவது முறையாக அரசு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இது குறித்து விருதானி கூறுகையில், “எனக்கு 1.5 வயது இருக்கும்போதே எனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். எனது தந்தைதான் என்னை வளர்த்தார். அவரும் 3 அடி உயரம் தான் இருப்பார். நான் இந்த அளவுக்கு சாதிப்பதற்கு எனது தந்தை கொடுத்த ஊக்கம் காரணமாகும். எனவே எனது வெற்றியை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். நான் எப்போது சோர்வாக இருந்தாலும், சமுதாயத்தில் உரிமைக்காக போராட வேண்டும் என்று எனக்கு ஊக்கம் கொடுப்பார். Self-confidence எனக்கு ஆரம்பத்தில் டாக்டராக வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் எனது தந்தை என்னை காமர்ஸ் பிரிவில் படிக்க வழி நடத்தினார். எனவே, மருத்துவர் கனவை மறந்துவிட்டு, எம்.காம் படித்து முடித்தேன். அதோடு சமீபத்தில் பி.எச்.டி முடித்து, எனது கனவை நிறைவேற்றிக்கொண்டேன். எனது தந்தை டியூஷன் கிளாஸ் நடத்தி வந்தார். குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்? - வழிகாட்டும் பியூட்டி தெரப்பிஸ்ட்! நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர். நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் வேலையில் சேருவதற்காக 7 கல்லூரிகளில் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. குஜராத்தில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன். மூன்று முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நான்காவது முறையாக நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். விருதானி சமுதாயத்தில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் கூட என்னால் பேராசிரியராக வர முடியாது என்று நினைத்தனர். அதோடு குறைவான உயரம் காரணமாக மாணவர்களை சமாளிக்க முடியாது என்றும் எண்ணினர். ஆனால் என்னால் மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்போதே, அவர்களை சமாளிக்கவும் முடிந்தது. எனது உயரம் காரணமாக எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுக்க மறுத்தார்கள். நான் மூன்று ஆண்டுகள் போராடிய பிறகு, 2023ஆம் ஆண்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றேன். அதன் பின்னர் முதல் நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வேலை கிடைத்திருக்கும் அகமதாபாத் கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வருகின்றேன்” என்று தெரிவித்தார். திறமை இருந்தால் சாதிக்க உயரம் ஒரு தடை அல்ல என்பதை இப்பெண் நிரூபித்து இருக்கிறார். Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு கூட ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் இந்த வீரரை ஏன் அணியைவிட்டு தூக்க வேண்டும் என கம்பீரிடம் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

23 C