இராக்: சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு!
பாக்தாத் : இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் கடந்த 1979களில் அதிபராக சன்னி பிரிவு தலைவரான சதாம் ஹுசைன் இருந்தபோது, பாதுகாப்புப்பிரிவில் ‘மேஜர் ஜெனரல்’ உயர் பதவியில் இருந்தவர்களுள் முக்கிய நபரான சாதௌன் சப்ரி அல்-ஃகைசி மீது, மனித உரிமைகளுக்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படிருந்த நிலையில், அவர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். சதாம் ஹுசைனுக்கெதிராக நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்களுள் இராக்கின் ஷிட் […]
களுத்துறையில் 23 விமான குண்டுகள் மீட்பு
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றில் அத்திவாரம் வெட்டும் பணியின் போதே இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் மண்வெட்டியில் சிக்கி 3 மோட்டார் குண்டுகள் முதலில் மீட்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், அங்கு மேலும் குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சேற்று நீரினால் நிறைந்திருந்த குழிகளை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர். இதன்போது மேலும் 20 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை கட்டுக்குருந்த விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு - சிறுவன் உயிரிழப்பு ; இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை அவ்வீதியூடாக சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றினை வழிமறித்துள்ளனர். குறித்த வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த போது , வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்ட போது , வாகனத்தினுள் இருந்த சிறுவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவனை உடனடியாக மீட்டு , பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். அதேவேளை வாகனத்தினுள் இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் என்ன நோக்கத்திற்காக அதிகாலை வேளை ஊர்காவற்துறை நோக்கி பயணித்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு குற்ற பின்னணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையானது திங்கட்கிழமை(9) இரவு கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் […]
கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்!
தமிழக மலைத்தலங்கள் சித்தர்கள் வாழும் பூமி. பெரும்பாலும் அதில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பார். சித்தர்கள் அந்த முருகனை வழிபடுவதோடு மக்களுக்கும் தங்களால் ஆன மருத்துவச் சிகிச்சைகளை வழங்கிவந்தனர். அப்படி சித்தர் ஒருவர் அபூர்வ மூலிகை கொண்டு சர்வரோக நிவாரணி தயாரித்து வழங்கிய மலைதான் ஊதி மலை. ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது `பொன்னூதி’ எனும் ஊதி மலை. இங்கே மலைக்குக் கீழே பழைமையான சிவாலயம் அமைந்திருக்க, மலைக்கு மேலே உத்தண்ட வேலாயுத ஸ்வாமியாக முருகன் கோயில் கொண்டிருக்கிறார். கொங்கணவர் சித்தர் சந்நிதி அந்தக் காலத்தில் காங்கேயத்துக்கு அருகில் இருந்த சுந்தரபுரி எனும் தேசத்தின் இளவரசன் சிவபாலன். ஒருமுறை இவன் ஊதி மலைக் காட்டுப்பகுதியில் வேட்டையை முடித்துக்கொண்டு, உச்சியில் இருந்த சுனையில் தன் உடைவாளைக் கழுவினான். யதேச்சையாக அந்த நீரானது, அருகில் கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகளின் மீது பட, அவை உயிர்ப்பெற்று எழுந்தன. `சிவோ ஹம்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’ என்று வணங்கிக் கூவியபடி, காட்டுக்குள் ஓடி மறைந்தன. சிவபாலன் வியந்தான். யார் அந்தச் சித்தன் என்று தேட முயன்றான். விளைவு போகரின் தரிசனம் கிடைத்தது. `நீயே அந்தச் சித்தன்; உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்’ என்று உரைத்தார் போகர். சிவபாலன் அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அதன் மூலம் அவருக்குப் பல ஸித்திகள் கைவரப் பெற்றன. விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்! அதோமட்டுமல்லாமல் சொர்ணாகர்ஷண பைரவரின் அருளால், தொட்டது யாவும் தங்கமாகும் எனும் வரமும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த வரம் கொண்டு ஏழைகளுக்குப் பொன்னைக் கொடுத்து மகிழ்ந்தான் சிவபாலன். இதனால் அவருக்கு சிறு கர்வம் உண்டானது. ஆனால் அதையும் ஈசன் போக்கினார். அவருக்கு கொங்கணர் என்கிற பெயரும் உண்டானது. தங்கம் வரவழைக்கும் மந்திரத்தை உபயோகிப்பதில்லை என்று முடிவெடுத்தார். மீண்டும் ஊதி மலை சென்று தவமியற்றினார். 800 ஆண்டுகள் கழிந்தன. பெரும் பஞ்சம் தோன்ற மக்கள் தவித்தார்கள். வேறு வழியின்றி இந்த முறை மூலிகைகளைக் கொண்டு ரசவாதம் செய்து, சாதாரண உலோகங்களைத் தங்கம் ஆக்கி அளித்தார். போகர் தோன்றி தடுத்தும் கொங்கணவர் கேட்கவில்லை. அவர், மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால், அந்த மலை பொன்னூதி மலையானது. ஊதி மலை சொர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி மக்கள் அதிகம் பொன் வேண்டும் என்று அவரைத் தேடி வர கொங்கணர் அந்த இடத்தை விட்டு அகன்றார். ஒரு கட்டத்தில் `போதும் இந்தப் பிறவி’ என்று எண்ணிய கொங்கணவர், மீண்டும் ஊதி மலைக்குச் சென்று தவமியற்றினார். போகர் பழநியில் பிரஷ்டை செய்த நவபாஷாணச் சிலையைப்போல தானும் மூலிகைகளால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையை மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார். பிறகு, ஈசனின் கட்டளைப்படி திருமலை திருப்பதிக்குச் சென்று சமாதிநிலை கொண்டார் கொங்கணவர். இன்றைக்கும் ஊதி மலையில் தாம் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் கொங்கணவர் சுயம்புவாகக் காட்சியளிப்பதைத் தரிசிக்கலாம். அவர் அருள்பாலிக்கும் கொங்கணவ குகை அபூர்வமானது. உள்ளே நுழைந்தால் 50 பேர் அமர்ந்து தியானிக்கும் அளவு இடம் உள்ளது. இந்தக் குகையிலிருந்து பழநி, அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்ததாம். கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டன. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டதாம். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்ப்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலிலிருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலுக்கு இடப்புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப் பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். உச்சியில் கொங்கணவர் கோயிலில், கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சித்தர்பெருமான். கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை’ உள்ளது. ஊதி மலை சித்தர் வழிபட்ட பாறை சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி ஆகிய நாள்கள் சித்தரைத் தரிசிக்க விசேஷமானவை. பௌர்ணமி நாள்களில் 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். இனிப்பைத் தவிர ஐந்து வகை ருசியுடன் திகழும் இந்தத் தீர்த்தம் அற்புத மருந்து; இது, முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானது, தற்போது அந்த அளவுக்கு மூலிகைகள் கிடைப்ப தில்லை என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகினாலும் ஒட்டுமொத்தகளைப்பும் நீங்கிவிடுமாம். பக்தர்களுக்குப் பசியாற பச்சைப்பயிறு சாதம் வழங்கப்படுகிறது. இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். தைப்பூச நன்னாளில் இந்த மலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது விசேஷம். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை ஊதிமலை சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். முருகன் அருளும் கொங்கணவரின் குருவருளும் கைகூடி, மலை போல் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!
பரிதாபமாக உயிரிழந்த தாய் –மகள் தொடர்பில் வெளியான தகவல்
கம்பளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகள் பற்றிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கலஹா, கிரிபோகஹைன்னவை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 13 வயது மகளும் தங்கள் தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர். ஜே.கே.எம். சாந்தி குமாரி என்ற தாய் மற்றும் உதயங்கனியே நிசான்சா என்ற மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். டித்வா சூறாவளியின் போது அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்சார சபை இரண்டு மாதங்களுக்கும் மேலாக […]
இலத்திரனியல் விசா விவகாரம் ; மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தீர்மானம்
இலத்திரனியல் – விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணைகள் இன்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் […]
எண்ணூரில் வரும் நீர் விளையாட்டுகள்-சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!
மாதரவத்தை தொடர்ந்து எண்ணூரிலும் நீர் விளையாட்டு வசதிகளுடன் புதிய பொழுது போக்கு இடத்தை அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசக விவசாயிகளே! விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருள்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும். சம்பந்தப்பட்ட நபருக்குப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு முன் பொருள் இருப்பையும் நபரின் முகவரியையும் உறுதி செய்துகொண்டு பணம் செலுத்துவது நல்லது. உங்கள் தகவல்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி, ‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும். விற்க விரும்புகிறேன்
மறுபடியும் அந்த சேனல்ல உன்னால நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க; ஆனா! - Actor Bharath Kumar | Annam
`கேள்வி கேட்கக்கூடாது' - PM அலுவலகத்திலிருந்து பறந்த கடிதம்? | தேர்தல் தேதி Hint கொடுத்த BJP தலைவர்
டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் ஐசிசி குட்நியூஸ் சொல்லியது.
Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள். இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப், ஸைலிட்டால் (Xylitol) அல்லது செயற்கை இனிப்பூட்டிகள், நிறமிகள், மணமூட்டிகள், ஃபில்லர்ஸ் (fillers) போன்றவைச் சேர்க்கப்படும். எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை, அதிகப்படியான நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த சூயிங்கம்களை மெல்வதைத் தவிர்க்க வேண்டும். சூயிங்கமில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள்களால் வயிற்றுப்போக்கு (laxative effect) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. தொடர்ந்து அல்லது அதிக நேரம் மெல்வதால் சிலருக்குத் தாடை வலியும் அதன் விளைவாக ஒற்றைத் தலைவலியும் ஏற்படலாம். மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வருவது போல் உணர்ந்தால், சூயிங்கம் மெல்வதன் மூலம் சிறிது நேரத்திற்குத் தங்களைப் புத்துணர்ச்சியாகவும் விழிப்பாகவும் வைத்துக்கொள்ளவும் முடியும். சூயிங்கம் மெல்வதால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கிறது. இது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், பற்சிதைவைத் தடுக்கவும் உதவுவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூயிங்கம் மெல்லுவது சிலருக்குப் பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவலாம். சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது. Doctor Vikatan: ஜெல் டூத்பேஸ்ட் ஆரோக்கியமானதா: இனிப்பான டூத்பேஸ்ட் சர்க்கரையை அதிகரிக்குமா? சூயிங்கமை மென்று துப்பிவிட வேண்டும் என்றாலும், தற்செயலாக சிலர் அதை விழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. அப்படி விழுங்கிவிட்டாலும் அது குறித்து பயப்படத் தேவையில்லை. சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது. ஆனாலும், உடலுக்குள் செல்கிற அந்நியப் பொருள்கள், மலம் வழியே வெளியேறுவது போல 40 மணி நேரத்துக்குள் சூயிங்கத்தின் மிச்சமும் வெளியேறிவிடும். எனவே, அது குறித்துக் கவலை வேண்டாம். சரியான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது சைலிட்டால் (Xylitol) கலந்த சூயிங்கம்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எப்போதும் அளவோடு பயன்படுத்துங்கள். சூயிங்கம் மெல்வது என்பது சிலருக்கு ஒரு வழக்கமாக மாறக்கூடும். ஆனால், அது அடிக்ஷனாக மாற வாய்ப்பில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பட்ஜெட்டில் கனிம வழித்தடங்கள் அறிவிப்பு... இயற்கை வளங்களை சுரண்டி கார்ப்பரேட்களுக்கு விற்பதற்கா?
அனைவருக்கும் பசுமை வணக்கம்! மத்திய பட்ஜெட் 2026-ல் வேளாண்மை மற்றும் சூழல் சார்ந்த பல அறிவிப்புகள் வெளிவரும் என்று விவசாயிகளும், சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிப்பது, தடுப்பது, பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவை குறித்த முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லாததுடன், மேற்கொண்டு, இந்தியாவின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் சுரண்டிக்கொள்ளப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அணுக்கனிமங்கள், அரியவகை முக்கியக் கனிமங்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுப்பதற்கான உரிமை தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளது. இக்கனிமங்கள் கிடைப்பதாகக் கண்டறியப்படும் நிலங்களை ஏலமிடும் உரிமை மத்திய அரசிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுத்தல், பிரித்தெடுத் தல், ஆய்வுகள் செய்தல், உற்பத்தி செய்தல் போன்ற பணிகளுக்காக... தாது வளம் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்துப் பல இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால், எதிர்காலத்தில் தமிழகத்துக்குப் பேராபத்து நேர வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுவே நிலைமை. இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் எதிராக இருப்பதோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறக்கூடிய வகையில் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடந்த தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைத்து, ‘இயற்கை விவசாயத்தால்தான் சுற்றுச்சூழல் மேம்படும், பூமித்தாய் ஆரோக்கியமாக இருப்பாள்’ என்றெல்லாம் சுற்றுச்சூழல் காவலரைப்போல் பேசிய பிரதமர் அவர்களே... மூன்றே மாதங் களில் அதிகாரபூர்வமாகவே பூமித்தாயை காவு கொடுப்பது நியாயமா? வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கா விடில்கூட பரவாயில்லை... நாசப்படுத்தாமலாவது இருங்கள் ஆட்சியாளர்களே! - ஆசிரியர்
‘நல்ல பார்மில் இருக்கும்’.. இஷான் கிஷன், சர்பரஸ் கானுக்கு தடை விதித்த பிசிசிஐ: காரணம் என்ன தெரியுமா?
நல்ல பார்மில் இருக்கும் இஷான் கிஷன், சர்பரஸ் கான் ஆகியோரை பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் நீக்கினார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
ஹாங்காங்: தேசியப் பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!
தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது. எனினும், ஜனநாயக […]
தவெகவா? திமுகவா? ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை!
தவெகவா? திமுகவா? ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த வார ராசிபலன் பிப்ரவரி 10 முதல் 15 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி, சிறுமிகளுக்கு நாப்கின் வழங்கவோ சட்டப் போராட்டம்!
குடும்ப அமைப்பு முதல் வாகன அமைப்பு வரை, இந்த உலகம் எல்லா வகையிலும் ஆண்களின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டது. இங்கு, பெண்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே பெற வேண்டியுள்ளது. ‘அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்களை வழங்க வேண்டும்’ என்று தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அப்படி ஒரு வரலாற்றுத் தருணம். 2019 -2021 தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 15 - 24 வயதுக்குட்பட்ட கிராமப்புறப் பெண்களில் 64% பேர்தான் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துபவர்கள். 15 வயதுக்குள் இருக்கும் பருவமடைந்த பெண்கள், 24 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆகியோரிடையே சர்வேகூட எடுக்கப்படவில்லை. அவ்வளவுதான், இங்கு பெண்களுக்கும் அவர்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கும் அரசு கொடுக்கும் முக்கியத்துவம். நாட்டில் கிட்டத்தட்ட 50% பெண்கள் இன்னும் துணி உள்ளிட்டவற்றைத்தான் மாதவிடாய் நாள்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது துயரம். எளிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் ஆடம்பரமாக இருப்பதால், அவற்றிலிருந்து விலகி நிற்கும் அக்குழந்தைகள் எதிர் கொள்ளும் சிரமங்கள் சொல்லி மாளாது. இந்தச் சூழலில்தான், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இப்போது விடியல் பிறந்திருக்கிறது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு, ‘அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு மட்கும் தன்மை கொண்ட நாப்கின் வழங்கப்பட வேண்டும், தண்ணீர், சோப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான அமைப்பு உள்ளிட்ட மாதவிடாய் நல மேலாண்மை கட்டாயம்’ என்று உத்தரவிட்டுள்ளது. மாதவிடாயை சுகாதாரமற்ற வகையில் எதிர்கொள்ள நேர்வதால் சிறுநீர்ப்பாதை தொற்று, இனப்பெருக்கப்பாதை தொற்று, பாக்டீரியா தொற்று, சருமப் பிரச்னை எனப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல. வளர்ந்த பெண்களுக்கே வாதையான மாதவிடாய் நாள்களில், சிறுமிகளின் நிலையைச் சொல்லத் தேவையில்லை. கடந்த ஆறு ஆண்டுக்காலத்தில், டாப் தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நாட்டில், கிராமப்புற, ஏழைச் சிறுமிகளின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்புப் பெற வேண்டியிருப்பது அவமானம். இத்தீர்ப்பை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அக்கறையுடன் அமல்படுத்த வைப்பதில் இருக்கிறது அடுத்த போராட்டம். அதற்கும் தயாராவோம். மாதவிடாய் சுகாதாரம் சிறுமிகள் மட்டுமல்லாது, அனைத்துப் பெண்களுக்கும் அடிப்படை உரிமையாகும் நாளை நோக்கி நகர்வோம்! உரிமையுடன், ஸ்ரீ ஆசிரியர்
அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்
ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை மஸ்கட் தலைநகா் ஓமனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓமன் வெளியுறவு அமைச்சருடன் தனித்தனியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி பங்கேற்றிருந்தாா். இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசுகையில் அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை. ஆனால், […]
உக்ரைனில் குளிர் காலத்தை ஆயுதமாக்கி அழுத்தம் தரும் ரஷியா! மீண்டும் வான் வழி தாக்குதல்: ஒருவர் பலி!
கீவ் : சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ள நிலையில், ரஷிய படைகளின் வான் வழி தாக்குதல்கள் தொடர்ந்தன. ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) அதிகாலையில் டொனெட்ஸ்க் பகுதியில் க்ராமடார்ஸ்க் நகரில், குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படைகள் நடத்திய வான் வழி தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், 9 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் […]
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை..!
தெஹ்ரான் : ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஈரானில் ஹிஜாப் அணியாததால் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்துக்கு சிறையில் இருந்தே ஆதரவு திரட்டியதையடுத்து, நா்கீஸ் […]
போதைப்பொருளுக்கு அடிமையானவர் குற்றவாளி அல்ல ; சிகிச்சை பெற வேண்டிய நோயாளி!
(ஸ்டெப்னி கொட்பிறி) போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் மனிதர்களே. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தனிமைப்படுத்துவது அல்ல; புனர்வாழ்வின் பின்னர் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து வாழ வழிவகுப்பதே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாகும். இதனைச் செய்யத் தவறும்போது, புனர்வாழ்வு பெற்றவர்களே மீண்டும் போதைப்பொருள் வலையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (National Dangerous Drugs Control Board) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளரும், ஜனாதிபதியின் “முழு நாடுமே ஒன்றாக” […]
“இது வெறும் நகைச்சுவை!”– எப்ஸ்டீன் மீதான உளவுத்துறை புகாரை நிராகரித்த ரஷ்யா!
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், ரஷ்ய உளவுத்துறையான KGB அல்லது FSB-இன் கைக்கூலியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள்… The post “இது வெறும் நகைச்சுவை!” – எப்ஸ்டீன் மீதான உளவுத்துறை புகாரை நிராகரித்த ரஷ்யா! appeared first on Global Tamil News .
உதகை மக்கள் போர்க்குரல்.. பூங்கா வேண்டாம்.. பார்க்கிங் வேண்டும் என கோரிக்கை!
உதகை நகரில் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பெரிய பூங்காக்கள் உள்ளன.
103 குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு:
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 103 குற்றவாளிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு அறிவிப்புகள்… The post 103 குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு: appeared first on Global Tamil News .
மீனவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன்பெற திமுக அரசு உழைக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன் புகழாரம்
மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் திமுக அரசு மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருவதாக தெரிவித்திருந்தார்.
US–India Trade Deal Report | Investors தெரிஞ்சுக்க வேண்டியது | IPS Finance - 432
இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் வைப்பிட வேண்டாம் ; முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் அண்மையில் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் […]
மதுரையில் 10 தொகுதிகளிலும் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? பழனிவேல் தியாகராஜன் கொடுத்த டிப்ஸ்!
வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற சிறப்பாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் ரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து; 8 பேர் பலி
பீஜிங், சீனாவில் ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திடீரென இதில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தவிர வேறொரு பகுதியில் […]
லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்
பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. எரிவாயுவின் விலை அதன்படி, இம் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690ரூபா ஆகவும், 5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபா ஆகவும், 2.3 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் […]
ஆண் வேடமணிந்து இளம்பெண் செய்த சம்பவம் ; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி
ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். போதைப்பொருட்கள் சந்தேக நபரான பெண்ணிடமிருந்து சுமார் 150 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட பெண், தனது தலை முடியை வெட்டி ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் […]
கௌதம புத்தரும் – அநுர – மோடி பிணைப்பும், இலங்கை இந்திய உறவும் –ஒரு வரலாற்றுத் திருப்பம்!
கௌதம புத்தரும் – அநுர – மோடி பிணைப்பும், இலங்கை இந்திய உறவும் – ஒரு வரலாற்றுத் திருப்பம்!… The post கௌதம புத்தரும் – அநுர – மோடி பிணைப்பும், இலங்கை இந்திய உறவும் – ஒரு வரலாற்றுத் திருப்பம்! appeared first on Global Tamil News .
சிறீதரன் சவால்:கோத்தா விசாரணைக்கு!
கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, கட்சியால் எடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு சி.சிறீதரன் பதிலளித்துள்ளார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு சிஐடி அழைத்துள்ளதாக தெரியவருகின்றது. கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு தொகுதியில் பல வீடுகளை பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வழங்கியமை குறத்தே வாக்குமூலம் பெறவே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது அத்தகைய சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி - சித்துப்பாத்தி மன்னிதப் புதைகுழி 3ம் கட்ட அகழ்வுப்பணிக்கான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் தலைமையில் இன்று(09) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை இன்று அறிவித்துள்ளது. வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்,இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிடடுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்;.
டிரோன் உதவியுடன் ஆயுதங்கள் கடத்தல்; முயற்சியை முறியடித்த இஸ்ரேல்
டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வரும் சூழலில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐ.டி.எப்.) வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேலின் கிழக்கு எல்லை பகுதி வழியே டிரோன் ஒன்று ஊடுருவி வடக்கு பிராந்தியத்திற்கு இரவு நேரத்தில் செல்ல முயன்றது. எனினும், வான் கட்டுப்பாட்டு சாதனம் அதனை உடனடியாக கண்டறிந்தது. […]
சென்னை மெட்ரோவின் இன்பச் செய்தி.. மயிலாப்பூர், பனகல் பார்க் மெட்ரோ திட்டத்தின் புதிய அப்டேட்!
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் கழுகு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. மேலும் பெலிகன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவிலிருந்து போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
SA vs CAN: ‘மீண்டும் சொதப்பிய டி காக்’.. ஆசிய மண்ணில் தொடரும் கண்டம்: தென்னாப்பிரிக்கா 213 ரன்கள்!
கனடா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டிற்கு பிறகு பவர் பிளேவில் பெரிய ஸ்கோரை அடித்து அசத்தினார்கள்.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், கொடைக்கானலில் மலைப்பகுதி போக்குவரத்து அமைப்புகள் மற்றும் மாமல்லபுரத்தில் கயிறு வழி போக்குவரத்து அமைப்பிற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனைப் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?
19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே ceo காசிவிஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ருதுராஜ் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார்? என்பதை எல்லாம் கேப்டன் ருதுராஜ் முடிவு செய்வார். அணியில் யார் யாருக்கு என்ன ரோல் என்பதை எல்லாம் ருதுராஜ் மற்றும் பிளெமிங் முடிவு செய்வார்கள். நாங்கள் ஏலத்தில் எடுத்த இளம் வீரர்கள் எல்லாம் நன்றாக விளையாடக் கூடியவர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காசிவிஸ்வநாதன், அதைப் பற்றி நான் இப்போது பேச முடியாது என்று தெரிவித்திருக்கிறார். தோனி தவிர தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு, ஓய்வு குறித்து தோனி யாரிடமும் பேச மாட்டார். எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு குறித்து பேசுவார் என்று பதிலளித்திருக்கிறார்.
அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் ; பாகிஸ்தானுக்கு பேரிடி
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் […]
டிகிரி அவசியமில்லை, தேர்வும் கிடையாது - தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் சிகிச்சை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 11-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.
திமுகவில் ராமதாஸ் தரப்பு பாமக இணையுமா? செல்வப்பெருந்தகை சொன்ன பதில்..
தமிழக தேர்தல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் காரசாரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக வலிமையான கூட்டணி கருதப்படும் திமுகவில் சில நாட்களாக காங்கிரஸ் சில சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு தற்போது திமுகவும் அதற்கு எதிர்வினை ஆற்றத்தொடங்கியுள்ளது.
திமுகவின் செயல் வெட்கக்கேடானது.. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தி.. டிடிவி தினகரன் கண்டனம்!
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் விவகாரத்தில் திமுக அரசுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!
விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த 'மைக்ரோவேவ் ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் எந்தவிதமான குப்பைகளையும் (Space Debris) உருவாக்காமல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அவற்றின் மின்னணு பாகங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டது. சீனாவின் வடமேற்கு அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தைச் (NINT) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய மைக்ரோவேவ் டிரைவர் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். TPG1000Cs என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் சுமார் நான்கு மீட்டர் நீளமும், ஐந்து டன் எடையும் கொண்டது. இது நிலத்திலிருந்து 20 ஜிகாவாட் அளவுள்ள மின் துடிப்புகளை விண்வெளியை நோக்கிப் பாய்ச்சும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு செயற்கைக்கோளைச் செயலிழக்கச் செய்ய 1 ஜிகாவாட் சக்தியே போதுமானது எனும் நிலையில், சீனாவின் இந்த ஆயுதம் அதன் தேவையை விடப் பல மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த ஆயுதத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது ஒரு நிமிடம் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட பல மைக்ரோவேவ் ஆயுதங்கள் சில நொடிகள் மட்டுமே செயல்படும் திறன் கொண்டிருந்தன. AI - Generated image 'மிடல் 7131' (Midel 7131) என்ற சிறப்பு திரவ மின்சுற்றுப் பொருளைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ஆயுதத்தின் அளவைக் குறைத்து அதன் சக்தியை அதிகரிக்க முடிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போர்க்களத்தில் வாகனங்களில் ஏற்றிச் சென்று பயன்படுத்தும் அளவிற்கு எளிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆற்றிய முக்கியப் பங்கு, இத்தகைய பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்புகளைச் சிதைப்பதற்கான ஆயுதங்களை உருவாக்கச் சீனாவைத் தூண்டியுள்ளது. AI - Generated image விண்வெளியில் ஏவுகணைகளை ஏவிச் செயற்கைக்கோள்களைத் தகர்த்தால், அது விண்வெளிக் குப்பைகளை உருவாக்கி மற்ற செயற்கைக்கோள்களையும் பாதிக்கும். ஆனால், இந்த மைக்ரோவேவ் ஆயுதம் எவ்விதக் குப்பையையும் உருவாக்காமல் மின்னணுப் போர் முறையில் இலக்கை மட்டும் அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Haryana MBBS Students Seek Clarity on Bond Policy
MBBS students in Haryana’s government medical colleges are facing confusion over the state’s “Service Incentive Bond” policy. They have requested
பதற்றத்தில் மத்திய கிழக்கு! ஈரான் அணுசக்தி மையங்களில் வெடிக்காத அமெரிக்க குண்டுகள்?
2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ராட்சத குண்டுகள் இன்னும்… The post பதற்றத்தில் மத்திய கிழக்கு! ஈரான் அணுசக்தி மையங்களில் வெடிக்காத அமெரிக்க குண்டுகள்? appeared first on Global Tamil News .
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் நீக்கம்.. அண்ணாமலைதான் காரணமா?
பாஜகவின் முக்கிய பொறுப்பாக கருதப்படும் அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொலைசெய்துள்ளார். அங்குள்ள தர்ன் தரன் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரின்ஸ் ராஜ். இதே கல்லூரியில் படித்து வந்தவர் சந்தீப் கவுர். இரண்டு பேரும் ஒரே வகுப்பில்தான் படித்து வந்தனர். இன்று ராஜ் தான் படிக்கும் வகுப்பிற்குள் நுழைந்தபோது கவுர் எதோ சொல்லி இருக்கிறார். அந்நேரம் ராஜ் அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் கவுர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார். அவரை பின் தொடர்ந்து ராஜ் சென்றார். உடனே மற்றொரு மாணவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று சமாதானப்படுத்த முயன்றார். அதோடு அவர் ராஜ் மற்றும் கவுரை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்து வந்தார். கவுர் பின்னால் இருந்த இருக்கைக்கு சென்றார். ஆனால் ராஜ் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்நேரம் கவுர் தனது இருக்கையில் எழுந்து நின்றார். உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்த ராஜ், தனது பேக்கில் இருந்த துப்பாக்கியை எடுத்து கவுரை நோக்கி சுட்டார். அதோடு கவுர் கீழே விழுந்தவுடன் சில அடிகள் பின்னால் வந்து தனது தலையிலும் ராஜ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனை நேரில் பார்த்த சகமாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து வெளியில் ஓடினர். இருவரையும் போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது கவுர் இறந்திருந்தார். ராஜ்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களுக்கு இது புதுசு கிடையாது.. காங்கிரஸ் கட்சி இப்படித்தான் பேசும்.. ஆர்.எஸ். பாரதி ஓபன் டாக்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை சம்பந்தமான குழுவை நியமிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டணி தொடர்பான தேவையற்ற கருத்துக்கள் பரவுவதை தவிர்த்திட குழு அமைக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் நிலவும் குழப்பம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
`கூட்டணி ஆட்சியா தமிழகத்தில்?' - 'ஷாக்'கொடுத்த சந்தோஷ் - பாஜக கூட்டத்தில் நடந்தது என்ன?
``அ.தி.மு.க தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் ஆட்சியே நடக்கும்.” என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.எல்.சந்தோஷ். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் வேகம் எடுத்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க, தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் வேலையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நிர்வாகிகளுடன் கலந்துரையாடவும் பி.எல்.சந்தோஷ் சென்னை வருகை தந்துள்ளார். இன்று கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் நிர்வாகிகளிடமும் கள நிலவரங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் கேட்டறிந்துள்ளார். பா.ஜ.க இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் நம்மிடம் பேசியபோது, “நிர்வாக ரீதியாக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அண்ணாமலை பதவி விலகியது குறித்து ஒரு சிலர் கருத்து கூற முற்பட்டார்கள். அவர்களிடம் அண்ணாமலை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று ஆஃப் செய்துவிட்டார். அதன்பிறகு அவர் பேசும்போது, `இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான். அ.தி.மு.க தலைமையிலான அணியாக அதை பார்க்க வேண்டாம். இந்த முறை நாம் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கூட கிடைக்கலாம். துணை முதல்வர் பதவி கூட இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுதியான அளவில் சீட் சேரிங் நடக்கும். குறிப்பாக பா.ஜ.க விற்கு நாற்பது இடங்களை உறுதியாக கேட்டுபெறுவோம். நம்முடன் இன்னும் கூட்டணிக்கு சில கட்சிகள் வர உள்ளது. அவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக தேர்தலை சந்திப்பார்கள்' என்றார். தமிழக தேர்தல் தேதி குறித்த பேச்சும் அப்போது எழுந்தது. பி.எல்.சந்தோஷ் கூற்றுப்படி பார்த்தால் தமிழகத்தில் ஏப்ரல் 10-ம் தேதிக்கு முன்பாக தேர்தல் முடிந்து விடும் என தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பதால் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது” என்றார்கள். பி.எல்.சந்தோஷ் கூறியபடி இருபது சதவிகித இடங்களில் பா.ஜ.க போட்டியிடும் என்றால் குறைந்தபட்சம் நாற்பது தொகுதிகளில் பா.ஜ.க களம் இறங்க வேண்டும். அந்த எண்ணிக்கையை அ.தி.மு.க ஒப்புக்கொள்ளுமா? என்கிற கேள்வியும் உள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே பிரதமர் தலைமையில் நடந்த மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என பிரதமர் பேசியிருந்தார். அப்போதே அ.தி.மு.கவினர் எடப்பாடியை முதல்வராக முன்மொழியாமல் தே.ஜ.கூட்டணியின் முதல்வர் என்றே பிரதமர் சொல்கிறார் என்று புலம்பினார்கள். இப்போது அதே பாணியில் பி.எல்.சந்தோஷ் தனது நிர்வாகிகளிடம் பேசியிருப்பது அ.தி.மு.க விற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Contaminated Almond Kit Syrup Sparks Safety Concern
The Tamil Nadu Directorate of Drug Control recently issued a public notice warning against a specific batch of Almond Kit
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள் இலங்கை சட்ட மாணவர் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 06.02.2026 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட் ) உரிமைச் சட்டம் & கொண்டோமினியம் மேலாண்மை ஆணையச் சட்டம் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சட்ட விதிகளை தெளிவாக அணுகக்கூடியதாகவும், தமிழ் பேசும் சமூகங்களை உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம […]
India Allocates ₹13,416 Crore for Space Research
India’s research community has received a boost from the 2026-27 budget, especially those working in astronomy and space science. The
Apple iPhone 17e: Affordable Upgrade Coming Soon
Apple’s iPhone 16e was considered the best “budget” iPhone last year. While some may have different opinions, it’s true that
திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கஸ்ஸப தேரரே நீங்கள் பௌத்த மத கடவுள் என சிங்கள பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல் திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் […]
Gujarat Signs LoI with Starlink for Internet
The Gujarat government on Monday (February 9, 2026) signed a Letter of Intent (LoI) with Starlink to work together on
Oriya Fried Fish in Mustard Garlic Tomato Sauce
Enjoy the traditional Oriya dish Machcha Besarou, a flavorful fried fish cooked in mustard, garlic, and tomatoes. This dish goes
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைக் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
Planetary Parade: சூரிய குடும்பத்தின் மகா சங்கமம்: வானில் அணிவகுக்கும் 6 கோள்களின் அபூர்வக் காட்சி!
வானில் ஒரு மாயாஜாலக் காட்சி பிரபஞ்சத்தின் முடிவில்லா ரகசியங்களில் ஒன்றாக, வரும் 2026 பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று வானில் ஒரு மாயாஜாலக் காட்சி அரங்கேறப் போகிறது. விண்வெளி என்பது வெறும் இருள் சூழ்ந்த வெற்றிடமல்ல, அது ஒரு பிரமாண்டமான மேடை என்பதை நிரூபிக்கும் வகையில், சூரிய குடும்பத்தின் ஆறு கோள்கள் அணிவகுத்து நிற்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் வானம், இந்தச் சில நாள்களில் மட்டும் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களை ஒரே நேர்க்கோட்டில் கோத்து, ஓர் அபூர்வ விண்வெளி மாலையாக நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது. புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இந்த அணிவகுப்பில் புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒன்றுடன் ஒன்று கைகோக்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இரவு வானத்தின் ராணியாகக் கருதப்படும் 'வெள்ளி' கோள், மற்ற கோள்களை விட அதிக பிரகாசத்துடன் ஒரு வைரத் துகள் போல மின்னும். AI - Generated அதே சமயம், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான 'வியாழன்', வானின் உச்சியில் இருந்து கம்பீரமாக இந்த அணிவகுப்பை வழிநடத்தும். சூரியன் மறைந்த பிறகு வரும் அந்திப் பொழுதில், மேற்குத் திசையில் அடிவானத்திற்குச் சற்று மேலே பார்த்தால், இந்த கிரகங்களின் ஊர்வலத்தை நீங்கள் பார்க்கலாம். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தக் கோள்கள் உண்மையில் விண்வெளியில் ஒரே வரிசையில் நிற்பதில்லை. அவை ஒவ்வொன்றும் சூரியனை வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆனால், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு தற்செயலான நிகழ்வாக, பூமியில் இருக்கும் நமக்குப் பார்க்கும்போது இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்த அணிவகுப்பின் போது முழு நிலவும் இவர்களுடன் இணைந்து கொள்வது, இருண்ட வானில் ஒரு தங்கப் பதக்கம் போல காட்சியளிக்கும். வானியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இத்தகைய 'ஆறு கோள்களின் சந்திப்பு' என்பது அடிக்கடி நிகழ்வது அல்ல. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கட்டடங்களின் மறைவு இல்லாத திறந்தவெளிப் பகுதிகளுக்குச் சென்றால் இந்த அழகை இன்னும் ரசிக்கலாம். எப்படிப் பார்ப்பது? வெறும் கண்களால் பார்ப்பதை விட, ஒரு சிறிய பைனாகுலர் மூலம் பார்க்கும்போது, சனிக் கோளின் வளையங்களையோ அல்லது வியாழனின் நிலவுகளையோ கூட காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. இயற்கை நமக்கு வழங்கும் இந்த இலவசத் திருவிழாவைத் தவறவிடாமல் காண்பது, பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக நாம் இருப்பதைக் கொண்டாடும் ஒரு சிறந்த வழியாகும்.
கனடாவில் வீடியோ பதிவு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது
கனடாவின் ரொறொன்றோ (Toronto) பகுதியில் அனுமதியின்றி நபர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைத் துன்புறுத்தும் வகையில் வீடியோ காட்சிகளைப் பதிவு… The post கனடாவில் வீடியோ பதிவு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது appeared first on Global Tamil News .
ZIM vs OMAN: ‘ஜிம்பாப்வே மெகா வெற்றி!’.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு! புள்ளி விபரம்!
ஓமன் அணிக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றடது. 13.3 ஓவர்களிலேயே வென்று, நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தியுள்ளது. இந்த அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
சீப்பை ஒளிச்சு வைத்தாலும் கல்யாணம் நடக்கும்.. ஒரே போடாக போட்ட தவெக நாஞ்சில் சம்பத்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் பிரபல பேச்சாளரான நாஞ்சித் சம்பத், தவெகவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக பேசி வருகிறார். விஜய் முன்னிலையில் பரப்புரைச் செயலாளராக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இவர், தவெக விசில் சின்னம் பற்றி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
`இதையெல்லாம் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருந்தால்...'- TNPSC நிர்வாகக் குளறுபடி குறித்து கல்வியாளர்!
தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். பிரின்ஸ் கஜேந்திர பாபு - கல்வியாளர் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் ஏற்படும் குளறுபடிகள் இது முதன் முறை அல்ல. தேர்வு அட்டவணை அறிவிப்பு, ஹால் டிக்கெட் வெளியீடு, முடிவுகள் வெளியீடு, மதிப்பீடு ஆகியவற்றில் தொடர்ச்சியானத் தாமதங்கள், தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தால் ஏற்படும் குளறுபடிகள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசியபோது, அதிகாரிகள் ஒவ்வொரு நிலையிலும் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி, விரிவாக நம்மிடம் பேசத் தொடங்கினார். கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் நீட் குளறுபடிகள் இந்த மாதிரி தேர்வு நேரத்தில் எழக்கூடிய குளறுபடிகள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நிர்வாகத்தில் மட்டும் இல்லை. கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் அளவுக்கு நீட் மாதிரியான தேர்வுகளை நடத்தும் நிர்வாகத்திலும் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து பேசும் தலைவர்கள் இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள். நேற்று நடந்த சம்பவத்தில் நிர்வாகத் தவறும் இருக்கிறது, தனிமனித தவறும் இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி அலுவலகம் அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்? ஒவ்வொரு நிலையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டிருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்க முடியும். எதெல்லாம் தேர்வு மையம்? அந்தத் தேர்வு மையத்தை முன்கூட்டியே பார்வையிடுபவர்கள் யார்? உண்மையிலேயே அந்தத் தேர்வு மையத்தைப் பார்வையிட்டார்களா? எந்தெந்தத் தேர்வு மையங்களுக்கு எந்தெந்தக் கேள்வித்தாள்களை அனுப்ப வேண்டும்? அதற்கு யார் பொறுப்பு? அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்? என தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கண்காணித்திருக்க வேண்டும். உளவியல் தாக்கம் சில நூறு காலிப்பணியிடங்களுக்காக பல லட்சம் பேர் எழுதக்கூடிய தேர்வு இது. தேர்வு நடக்கவில்லை என்றால் தேர்வர்களுக்கு உளவியல் ரீதியானத் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நிச்சயம் தேர்வையும் பாதிக்கும். தேர்வு மையத்திற்குள் வருபவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எழுதுவதற்கு இலகுவான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். அந்தப் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்த நிர்வாக அணுகுமுறையை குறைசொல்ல முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும்... நிர்வாகத்தைப் பொறுத்தவரை இயக்குநர், இணை இயக்குநர், உதவியாளர்கள் என ஒவ்வொருவர் கீழும் ஒருவர் இருப்பார். ஆக ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு மையத்தில் எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள். எழுதுபவர்களுக்கு எந்த மாதிரியான கேள்வித் தாள் கொடுக்க வேண்டும்? அது சரியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும். பாதிக்கப்படும் தேர்வர்கள் ஒரு குளறுபடி நடந்தால் தேர்வர்களின் எதிர்பார்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இதையெல்லாம் தாண்டி அவர்கள் எல்லோரும் தேர்வாணையத்திற்குப் பணம் கட்டியிருப்பார்கள். தேர்வர்களின் பணம், அவர்களின் உழைப்பு எல்லாம் இந்தக் குளறுபடிகளால் பாதிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) தீர்வு என்ன? இதற்குத் தீர்வு என்னவென்றால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் ஆய்வு மேம்பாட்டுப் பிரிவு (Research Development Wing) ஒன்றை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முறைத் தவறுகள் நடக்கும் போது, அந்தத் தவறுகள் எதனால் நடந்தது? என்பதை பதிவு செய்து, அந்தத் தவறுகள் இனி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி வேறு எந்த மாதிரியானத் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை அந்த ஆய்வு மேம்பாட்டு பிரிவு மூலம் பதிவுசெய்து தீர்வு காண வேண்டும். பணி மாற்றம் செய்வது தீர்வு அல்ல! நடந்த தவறுகளில் இருந்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் என்ன படிப்பினையைக் கற்றது என்பதுதான் முக்கியம். அதைவிடுத்து, தவறு நடக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்வதோ, பணி மாற்றம் செய்வதோ தீர்வு அல்ல. தவிர யார் இந்த அமைப்பில் உயர்பதவியில் இருக்கிறார்களோ... அவர்கள் தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கூட்டுப் பொறுப்பு அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்குரியவர்கள், திறமையானவர்கள், தகுதியானவர்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் எல்லோரும் ஒரு கூட்டுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. TNPSC: 'தேர்வுக்கு ஹால் ஒதுக்க எக்செல் ஷீட் போதுமே?' - டிஎன்பிஎஸ்சி தேர்வும் அரசின் குளறுபடியும்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி!
ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி! ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை… The post ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி! appeared first on Global Tamil News .
Spicy Grilled Chicken with Broccoli and Mango Salsa
Enjoy a delicious, flavorful meal with this spicy grilled chicken, served with sauted broccoli and mango salsa. The combination of
சாம்சங் கேலக்ஸி F70e 5G இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் 6,000mAh பேட்டரி மற்றும் 5G வசதியுடன் கேலக்ஸி F70e 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் கேலக்ஸி F70e 5G இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் 6,000mAh பேட்டரி மற்றும் 5G வசதியுடன் கேலக்ஸி F70e 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் வெளியாகியுள்ளன.
Rosemary and Tea Tree Oils: Hair Benefits Explained
If you’ve ever explored “natural hair care” on Instagram or YouTube, you’ve probably noticed rosemary oil and tea tree oil
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து –இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொருஇளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய இளைஞன்படுகாயங்களுடன் மீட்கப்பட்டுயாழ். […]
ஜனநாயகன் பட வழக்கு வாபஸ்…பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்!
சென்னை :உயர் நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தொடரப்பட்ட ரிட் மனு தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN சார்பில், வழக்கை திரும்பப் பெறுவதற்கான கடிதம் நீதிமன்ற பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் மூலம் அளிக்கப்பட்ட இந்தக் கடிதத்தில், “தற்போது மேல்முறையீடு தொடர விருப்பமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவை (Revising Committee) அணுகியுள்ளது. சென்சார் போர்டு […]
ஊராட்சித்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு; வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்ப்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டார ஒங்கிணைப்பாளர் பதவிக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
Cars24 refreshes brand identity ahead of IPO push
Gurugram: Cars24 has unveiled a refreshed brand identity, marking a significant milestone in its evolution as it prepares for its next phase of growth ahead of a potential IPO. The rebrand reflects the company’s transition from a fast-scaling transaction-led platform into a long-term car ownership ecosystem focused on trust, continuity and deeper customer relationships.Founded in 2015, Cars24 entered a fragmented and opaque market with an assertive, all-caps identity—CARS24—designed to break through resistance and drive early adoption. As the platform matured, customer engagement shifted from one-time transactions to repeat interactions across life stages, prompting a need for a brand expression that better reflected this evolving role. “When we started, being loud helped,” said Vikram Chopra, Founder & CEO, Cars24. “But as the company and the team grew up, the work started speaking for itself. This change is about reflecting who we are today, calmer, more human and focused on earning trust over time.” The refreshed identity transitions the brand from CARS24 to Cars24, adopting sentence case to signal maturity, confidence and approachability. At its core is a new open circular logo, designed to represent continuity rather than completion, mirroring the evolving nature of car ownership where vehicles change hands, needs evolve and value flows across different life phases. The open form underscores flexibility, movement and ongoing relationships.Cars24 has also introduced a new brand colour, moving from its familiar blue to a brighter, clearer “younger blue.” According to the company, the updated palette reflects its intent to appear more present, attentive and human, reinforcing the belief that trust can feel warm and accessible, even at scale.Developed over more than 1,200 hours of design and iteration, the refreshed identity is built around simplicity, longevity and adaptability. While the company’s products and services will continue to evolve, the new visual language is intended to remain relevant as Cars24 enters a more mature phase of growth.The rebrand also strengthens Cars24’s long-term vision of Better Drives, Better Lives, reaffirming its commitment to helping customers make smarter decisions around buying, selling and owning cars, while building systems that remain useful as needs change over time.
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் திங்கட் கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aditi Rao Hydari Shares Five Kitchen Beauty Secrets
Every time Aditi Rao Hydari appears on screen, she captivates audiences with her enchanting, almost magical presence. Known for her
யாழில். குழு மோதல் –இருவர் காயம்
யாழ்ப்பாணம் , இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு நிலவி வந்த நிலையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் ஆதரவாக இரு கும்பல்கள் மோதிக்கொண்டன. பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இரு குழுக்கள் மோதி கொள்வதாகபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைஅடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை […]
Mumbai: Titan Watches today announced Grandmaster Gukesh Dommaraju as the ‘Titan of the Year 2026’, recognising his extraordinary journey and historic achievement as the youngest World Chess Champion. The announcement also marks the launch of a limited-edition automatic timepiece inspired by Gukesh’s mastery, precision and composure, translating the spirit of chess into thoughtful design and fine craftsmanship.An extension of Titan’s philosophy of shaping India’s relationship with time through design, innovation and trust, Titan of the Year is a platform that honours individuals whose achievements redefine excellence and elevate India’s global stature. Following the inaugural edition that paid tribute to Wing Commander Rakesh Sharma, the second edition celebrates Gukesh’s fearless strategy, calm precision and sustained excellence at the highest level of international chess.The limited-edition timepiece interprets the idea of a ‘Master Move’ through balance and restraint, drawing from the measured structure of the game itself. At its centre is an intricate marquetry dial crafted in tiger eye and black agate, with geometry that echoes the chessboard and the quiet intelligence behind Gukesh’s play. Custom indices mirror the hierarchy and movement of chess pieces, while the rotor features the Grandmaster Knight motif along with the inscription ‘Youngest World Chess Champion at 18’. A Grandmaster Knight counterpoise and lume-filled hands further highlight strategic excellence and composure.Protected by a sapphire crystal, the watch is housed in a rose-gold finished 316 stainless steel case and bezel, and powered by Titan’s in-house automatic movement. Limited to 500 individually numbered pieces, the timepiece is paired with a deep black Italian leather strap, balancing contemporary elegance with enduring appeal.Commenting on the announcement, Rahul Shukla, Vice President and Chief Sales and Marketing Officer, Watches Division at Titan Company Limited, said, “Since its very inception, Titan has been a part of India’s zeitgeist reflecting our nation's evolving identity, shared aspirations and steadfast resolve. ‘Titan of the Year’ is a tangible extension of this legacy, celebrating individual excellence and collective national pride. With this platform, our vision is to create a permanent horological gallery, that chronicles Indian brilliance through time. We recognise individuals whose contributions extend beyond the horizon, strengthening the country’s presence on the world stage. Each creation aims to enable consumers to wear a living chapter from this archive expressed through premium watchmaking of global calibre. With extraordinary achievements and an inspiring journey in the world of chess, Gukesh was the natural choice for this honour. His exemplary accomplishments at such a young age capture the spirit, perseverance, ambition and confidence of a new India.” Sharing his thoughts, Grandmaster Gukesh Dommaraju said, “Being recognised as the ‘Titan of the Year’ is a meaningful moment for me, echoing India’s growing presence on the global chess stage. My path has been shaped by constant preparation, discipline and the role of time, patience and precision, values embodied thoughtfully in this timepiece. I hope this recognition inspires youngsters across the country, showing them what is possible with commitment and belief. To be associated with Titan, a brand known for trust, craftsmanship and quiet excellence at this stage of my journey is something I value deeply and will always look back on with gratitude.” The Gukesh x Grandmaster limited-edition timepiece is presented in specially designed packaging featuring a personalised note from Gukesh himself. Priced at ₹69,995, the collector’s piece is available at select Titan World stores, large-format retail destinations, premium watch retailers, and online at www.titan.co.in.
'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா
TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார். ஆதவ் அவர் பேசியதாவது, 'திமுகவின் தேர்தல் வாக்குறுதி 187 இல் ஐந்தரை லட்சம் அரசுப்பணிகளை உருவாக்குவோம் என்றனர். அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் 28 லட்சம் அரசுப்பணிகளை உருவாக்கியிருக்க வேண்டும். தமிழகத்தில் மது விற்பனையை விட கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா மட்டுமே 60-70 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது. கஞ்சாவை பயன்படுத்தும் நடிகர்களை கைது செய்கிறார்கள். ஆனால், கஞ்சா நெட்வொர்க்கை தொடுவதில்லை. தெருத்தெருவாக விற்கப்படும் கஞ்சா நெட்வொர்க்கை பற்றி திமுக நிர்வாகிகளுக்கு தெரியாதா? கஞ்சா விற்பனை மூலம் வரும் பணத்தை திமுக தேர்தலுக்காக பயன்படுத்தப் போகிறது. ஒன்றிய அரசின் ஏஜென்சிகள் இதை விசாரிக்க வேண்டும். ஆதவ் அரசுப்பணி குறித்து நிதியமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு கருத்தை சொல்கிறார். முதல்வர் ஒரு கருத்தை சொல்கிறார். சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெறுமென விண்ணப்பங்கள் பெறும் அலுவலகங்களாக மட்டுமே உள்ளன. 30 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். அதில் 17 லட்சம் பேர் பெண்கள். தன்னுடைய பையனை துணை முதல்வராக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்களின் வலியெல்லாம் தெரியாது. TNPSC தேர்வை கூட முறையாக நடத்த முடியாத நிர்வாக திறனற்ற அரசுதான் இது. தேர்வு எழுத வந்தவர்கள் அத்தனை பேருக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் துண்டு சீட்டை கொடுத்து முதல்வரை பேச வைக்கிறார்கள். ஒரு ரோபோ முதல்வரைத்தான் நம் மாநிலம் கொண்டிருக்கிறது. 2021 இல் அதிமுக ஆட்சியிலிருந்து போன போது நான்கரை லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. இப்போது தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா? கடன் மாடலா? கேள்வி கேட்டால் பத்திரிகையாளர்களை அடிக்கிறார்கள். ஆதவ் நேற்று ரத்தான தேர்வுக்கும் கே.என்.நேரு மீது பதியப்பட்ட வழக்குதான் காரணமா? யாருமே பதில் சொல்லவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொண்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். கிரிஷ் சோடங்கர் என்கிற சுயமரியாதைமிக்க தலைவரை காங்கிரஸ் கூட்டணி பேச அனுப்பியிருக்கிறது. தவெகவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதும் திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருப்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அதிக சீட்களை கேட்கிறார். ஆனால், திமுக பேச்சுவார்த்தை குழுவை அமைக்காமல் அறிவாலய கதவை திறக்காமலேயே தாமதப்படுத்துகிறது. எங்கள் தலைவர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்க தயாராக இருக்கிறார். தினமும் மக்களோடு மக்களாக நடக்க தயாராக இருக்கிறார். ஆனால், பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற ஒன்றை வெளியிட்ட திமுகவும் காவல்துறையும் எங்கள் தலைவரை முடக்குகிறது' என்றார்.
Nippon Paint India appoints Jenender Anand as Vice President – Automotive Refinish (NPIAR) Business
New Delhi: Accelerating its ‘India-first’ vision, Nippon Paint India, part of the NIPSEA Group—Asia Pacific’s No. 1 paint and coatings manufacturer—today announced the appointment of Jenender Anand as Vice President of its Automotive Refinish business. In this role, Anand will lead the Nippon Paint India Automotive Refinish (NPIAR) portfolio, including operations across Nippon Paint Nepal and the Nippon Paint IndoKote business, providing overall strategic direction, governance, and leadership oversight.The appointment comes as Nippon Paint India continues to strengthen its leadership structure in line with its India-focused growth strategy and the unified operating model announced earlier this year. Mr. Anand will report to Mr. Sharad Malhotra, Managing Director, Nippon Paint (India) Group.Commenting on the appointment, Sharad Malhotra, Managing Director, Nippon Paint (India) Group , said, “Jenender’s appointment strengthens our leadership depth at a critical phase of our India journey. His extensive experience across automotive and industrial ecosystems, combined with his ability to build and integrate high-performing teams, will be valuable as we scale our Indian Automotive Refinish, Nepal and IndoKote businesses under a unified and disciplined operating framework.” With over 32 years of experience, Mr. Anand is a seasoned business leader with a proven track record across marketing, business development, operations, and stakeholder management in Asia-Pacific and global markets. He brings deep expertise across both B2B and B2C segments, with particular strength in working with leading OEMs across passenger vehicles, commercial vehicles, and two-wheelers.Speaking on his appointment, Jenender Anand, Vice President, Nippon Paint India Automotive Refinish, said, “I view this as a strong platform to drive meaningful impact by leveraging my experience in OEM engagement and strategic market expansion. With a structured approach, I am confident we can unlock new value through operational excellence and stronger customer alignment. I look forward to contributing to the broader organisational vision and driving sustainable revenue growth.” Prior to joining Nippon Paint India, Anand served as President of the Automotive and Power Cable Vertical at Svarn Group. Over the course of his career, he has held senior leadership roles with marquee organisations including Exxon Mobil Lubricants India, Goodyear India Ltd., MRF Tyres, Shriram Pistons & Rings, and Revolt Motors.This leadership appointment aligns with Nippon Paint India’s broader strategy of ‘Expanding Possibilities’ and building a strong, India-first organisation. Anchored in manufacturing excellence, governance, and long-term value creation, the move reinforces the spirit of ‘OneNess’—synergising capabilities across the group to deliver superior value to customers and stakeholders.
Zydus Lifesciences’ Desidustat Gets Orphan Designation
Zydus Lifesciences announced on Friday that the U.S. health regulator has granted Orphan Drug Designation to Desidustat, a new oral
பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!
தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல் தரையில் கவிதாவும் இரண்டு பெண் குழந்தைகளும் அமர்ந்துள்ளனர். சிறுது நேரத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் அந்த இடத்தில் விளையாடியுள்ளனர். அப்போது, இரண்டு பேரில் நித்யஸ்ரீ(8) என்பவரை பாம்பு கடித்தது. இதையடுத்து நித்யஸ்ரீ வலியால் துடிக்க, அதிர்ச்சியில் கவிதா பதறியுள்ளார். ராஜகண்ணனை பாராட்டிய எஸ்.பி உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பெரியகோயில் முன்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இதனால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கோயிலுக்கு எதிரே போக்குவரத்து எஸ்.ஐ ராஜகண்ணன் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சிறுமியை பாம்பு கடித்த விஷயம் அவருக்கு தெரிந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் சமயோஜிதமாக யோசித்து சட்டென தனது டூவீலரில் பாம்பு கடித்த சிறுமி நித்யஸ்ரீயை ஏற்றிக்கொண்டு சென்றவர்... தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதையடுத்து சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் தாமதிக்காமல் சிறுமியை அழைத்து வந்த ராஜகண்ணனை பாராட்டினர். இதையடுத்து கவிதா, ராஜகண்ணனை கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக நித்யஸ்ரீ தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நித்யஸ்ரீ நலமுடன் இருக்கிறார். எஸ்.ஐ ராஜகண்ணன் நித்யஸ்ரீயை டூவீலரில் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது செயலை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து இன்று எஸ்.பி.,ராஜராஜம், எஸ்.ஐ ராஜகண்ணணை நேரில் அழைத்து துரிதமாக செயல்பட்டதற்கு தட்டிக் கொடுத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதைத் தொடர்ந்து சக போலீஸாரும் அவரை பாராட்டினர். இது குறித்து எஸ்.ஐ ராஜகண்ணன் கூறுகையில், ``சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு இருந்தது. உரிய சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருக்கிறார். என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை நினைக்க பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
வருகிற இடைக்கால பட்ஜெட் சாமானிய மக்களுக்கானது - சபாநாயகர் அப்பாவு பேச்சு!
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில்தான் வருகிற 17 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கலாக உள்ளது.
Dangerous Myths Cause Harm During Seizures
Across India, many people have seen what happens during a seizure. A person may suddenly collapse, their body stiffens, limbs
ஜனநாயகன் திரைப்படம்.. மனுவை வாபஸ் பெறுவதாக கடிதம்.. ரிலீசுக்கு தயாராகும் விஜய்யின் கடைசி படம்!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக கடிதம் அனுப்பி உள்ளது.
MUMBAI: The Coca-Cola India Foundation, in partnership with the International Cricket Council (ICC), is bringing #MaidaanSaaf to the ICC Men’s T20 World Cup 2026 matches in India, reinforcing responsible waste practices in stadiums on match days.Building on its presence at previous ICC tournaments, #MaidaanSaaf is designed to support cleaner stadiums, effective waste segregation, and recyclable recovery at one of the world’s highest-footfall sporting events. The initiative works closely with stadium authorities, housekeeping teams, event partners, recyclers and local stakeholders to strengthen on-ground waste management systems during the tournament.Anandana, in collaboration with Ek Saath – The Earth Foundation and Greenmyna, will be implementing waste management across stadium venues and ensuring proper segregation and recovery of recyclables and compostables. At the five host stadiums in India and across 30+ matches, #MaidaanSaaf will focus on visible, practical interventions, including clearly marked segregation points, material recovery support, and on-ground awareness aimed at encouraging fans to dispose of waste responsibly thereby enabling efficient collection and recycling.Central to the initiative are safai saathis – the sanitation and housekeeping workforce whose efforts ensure that large sporting venues function efficiently during high-footfall events. At the stadiums, #MaidaanSaaf will support safai saathis through visible recognition, structured work processes, and better segregation infrastructure, helping them collect, sort, and channel waste responsibly during match days. The initiative also encourages fans to participate through simple actions such as using the right bins and keeping common areas litter-free.As part of the #MaidaanSaaf activation, sustainable beverage cups will also be introduced at select venues during the tournament. Designed as collectible merchandise for fans, the cups are intended to encourage mindful consumption and responsible disposal. Devyani R.L. Rana, Vice President – Public Affairs, Communications and Sustainability, Coca-Cola India and Southwest Asia , said “The ICC Men’s T20 World Cup brings together millions of fans, and with that scale comes a clear responsibility to manage waste thoughtfully. Through Maidaan Saaf, we’re integrating responsible waste disposal into the match-day experience by making segregation and collection more visible and accessible for fans. Our ongoing partnership with the ICC allows us to work closely with local partners on the ground to strengthen waste recovery systems and build awareness that extends beyond the tournament. These efforts are part of our broader focus on improving collection and recycling systems so packaging waste is recovered responsibly and put to purposeful use.” Anurag Dahiya, Chief Commercial Officer, ICC said, “Delivering a world-class tournament experience extends beyond the action on the field. Through our collaboration with Coca-Cola India and the #MaidaanSaaf initiative, we continue to support cleaner venues and responsible practices while encouraging fans to play an active role in large sporting events.” The return of #MaidaanSaaf at the ICC Men’s T20 World Cup 2026 builds on Coca-Cola India’s earlier activations across major sporting events, including the ICC Men’s Cricket World Cup 2023 and the ICC Women’s Cricket World Cup 2025. During the 2023 Men’s World Cup, Coca-Cola India also supported the creation of recycled PET country flags and ICC Unity flags, made using recycled material and later recognised by the Limca Book of Records. Together, these efforts reflect a broader focus on responsible waste practices, enabled through partnerships and on-ground systems.Aligned with Coca-Cola India’s broader packaging waste reduction strategy that includes a partnering to collect approach, #MaidaanSaaf reflects the company’s continued focus on practical, collaborative solutions that support waste recovery while highlighting the people who make these systems work on the ground.Through #MaidaanSaaf at the ICC Men’s T20 World Cup 2026, Coca-Cola India continues to integrate responsible waste practices into moments that matter most to fans.
Dhanush’s Kuberaa Set for Theatrical Japan Release
Dhanush’s upcoming high-stakes thriller, Kuberaa, is all set for a major theatrical release in Japan. The Tamil-Telugu bilingual film is
பைக்கர் திரைப்பட வெளியீடு: மோட்டோகிராஸ் பந்தய பின்னணியில் ஷர்வானந்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் விருந்து!
பைக்கர் திரைப்பட வெளியீடு வரும் ஏப்ரல் 3 அன்று நடைபெறும் என யுவி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. ஷர்வானந்த் மற்றும் ராஜசேகர் இணைந்து நடித்துள்ள இப்படம் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
பைக்கர் திரைப்பட வெளியீடு: மோட்டோகிராஸ் பந்தய பின்னணியில் ஷர்வானந்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் விருந்து!
பைக்கர் திரைப்பட வெளியீடு வரும் ஏப்ரல் 3 அன்று நடைபெறும் என யுவி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. ஷர்வானந்த் மற்றும் ராஜசேகர் இணைந்து நடித்துள்ள இப்படம் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

25 C