ஆஹா ஹாப்பி அண்ணாச்சி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!
சென்னை : இன்று (நவம்பர் 14, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.11,840-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 13) சவரன் ரூ.94,400-ஆக இருந்த நிலையில், இன்றைய குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. இதேபோல் 18 காரட் தங்கமும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.9,770-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.78,160-க்கும் விற்பனையாகிறது.நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் […]
Harini Muralidharan Takes Charge as Dentsu’s Chief People Officer for South Asia
Mumbai: Dentsu, the global advertising, marketing, and technology leader headquartered in Tokyo, has strengthened its South Asia leadership by elevating Harini Muralidharan as the Chief People Officer (CPO) for South Asia. The move marks a significant leadership transition within the network and underscores Dentsu’s continued commitment to building a future-ready, people-first organisation in one of its fastest-growing regions.Muralidharan, who has been with Dentsu for over three years, steps into the CPO role after holding multiple senior HR leadership positions across the organisation. Her progression reflects the company’s investment in leadership excellence and its strategic focus on talent transformation across markets.Before being named CPO, Harini most recently served as Cluster HR Director – India, Financial Services & India Business Platforms, overseeing operations across India and Sri Lanka. In this mandate, she was responsible for driving commercial growth, stewarding global finance services, and leading cross-functional initiatives to ensure alignment, efficiency, and strategic impact across various business units.In her earlier role at Dentsu, Harini shaped HR strategy for Global Financial Services and Transformation teams, playing a pivotal role in strengthening leadership pipelines, enabling organisational effectiveness, and supporting transformation programmes that enhanced workforce performance and engagement.With more than two decades of strategic HR experience, Harini brings deep expertise in people operations, business partnering, culture transformation, and workforce strategy—skills honed through leadership roles at Tesco, Juniper Networks, Ericsson, NetApp, Infosys, and earlier-career stints at EY, Hewlett Packard, and two tech startups. Notably, during her tenure at Tesco, she led the People Business Partnering function and contributed significantly to the company’s rise in the Great Place to Work rankings.In her new CPO role, Harini is expected to further accelerate Dentsu’s people strategy for South Asia, enhance organisational agility, deepen synergies between business platforms and finance services, and champion a culture of inclusion and innovation across the region.With around 68,000 employees operating in nearly 120 countries, Dentsu’s latest leadership elevation reinforces its ambition to drive sustainable growth powered by strong people capabilities and transformative leadership.
மிக அழகான இளைஞனாக நாம் அமராவதியில் பார்த்த அஜீத் இன்று உச்ச நடிகர் . கோடானு கோடி ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நடிகர். எந்தவித ஆள் பலமும் இன்றி தனியாளாக சுயம்புவாக வந்து சினிமாவில் ஜெயித்தவர் அஜீத். விஜய் அறிமுகமான பிறகுதான்… The post அஜீத் அறிமுகமான அமராவதி கதை appeared first on Tamilnadu Flash News .
மொத்தமாக வரும் 4000 ரூபாய்.. பிஎம் கிசான் விவசாயிகளுக்கு முக்கியமான அப்டேட்!
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இரண்டு தவணைகள் சேர்த்து மொத்தமாக 4000 ரூபாய் கிடைக்கவிருக்கிறது.
பீகார் தேர்தல் முடிவுகள் –காலை 9.30 மணி முன்னிலை நிலவரம்!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. காலை 9:30 மணி நிலவரப்படி, என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி 155 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி (ஆர்ஜேடி-காங்கிரஸ்) 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஜன் சுராஜ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, மற்றவை […]
redBus rolls out new Marathi campaign ‘Majhi bus, manjhe redBus’
Mumbai: redBus, an online bus ticketing platform, has launched a new Maharashtra-focused advertising campaign titled Majhi bus, manjhe redBus, celebrating the state’s deep-rooted bus travel culture. As Maharashtra remains the largest state for bus travel on redBus, the campaign spotlights the brand’s widespread connectivity, affordability, and strong understanding of regional travel preferences.The campaign captures Maharashtra’s lively travel spirit through humorous, slice-of-life storytelling. The ad showcases redBus’ core strengths—wide route connectivity and affordable ticketing—while addressing the diverse needs of Maharashtrian travellers, from discounts to robust network coverage across the state.At the heart of the Majhi bus, manjhe redBus campaign are everyday characters like Shinde Kaku and Aaba, who humorously deliver a deeper message: redBus is the ultimate travel app for all Maharashtrians. Through these witty narratives, the films highlight how redBus makes exploring destinations from Wai to Wani and Mumbai to Malvan simple, reliable, and cost-effective.With this initiative, redBus strengthens its commitment to region-led storytelling, using culturally rooted humour and local insights to communicate product features that matter most—affordability, convenience, and reach. The films are being promoted across YouTube, Meta platforms, JioHotstar, Spotify, and leading Marathi television channels including Star Pravah, Zee Marathi, Sony Marathi, and Lokmat 18 News. In addition, auto branding activations will bring these relatable travel stories into everyday public spaces across the state. A redBus spokesperson commented, “Maharashtra is one of the largest states for bus travel in the country and a key state in our overall strategy. redBus has a deep understanding of the needs of Maharashtrian bus travellers and through Majhi bus, manjhe redBus, we wanted to speak directly to audiences in their own lingo, their own idioms. The campaign is a step forward in redBus’ ongoing regionification journey, using humour and local insights to connect more deeply with travellers. This ad campaign underlines how redBus’ affordability, simple booking experience, and extensive network make it the preferred travel partner across the state.” The Majhi bus, manjhe redBus campaign will continue to roll out with additional ad films featuring new characters and narratives celebrating Maharashtra’s unique travel culture.The ad series captures the humour and warmth of everyday Maharashtra through relatable Marathi moments. In “Wide Connectivity,” a casual roadside chat turns into a playful nod to redBus’ far-reaching presence, reinforcing the message: “Majhi bus, manjhe redBus.” In “Affordable Buses,” a humorous misunderstanding—where friends mishear “Aaba gele” as “Father went travelling”—highlights redBus’s swasta ani masta (affordable and fun) travel promise. Each film uses local humour to position redBus as an integral part of the state’s travel ecosystem, connecting people, places, and stories while remaining accessible and proudly local.https://youtu.be/GVpXIcvd08chttps://www.youtube.com/watch?v=u06gETOJDQc
சறுக்கிய பெங்களூரு, டாப் கியரை போட்ட சென்னை… வேற லெவலில் மாறிய இண்டர்நேஷனல் கார்கோ!
சர்வதேச சரக்கு விமான சேவையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி சென்னை ஒருபடி முன்னேறியிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. எனவே இதன் விரிவாக்க திட்டங்களை முடுக்கி விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,840 ஆகும். வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,720 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180 ஆக விற்பனை ஆகி வருகிறது. US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!
பீகார் தேர்தல் 2026 : என்டிஏ கூட்டணியில் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. மிகப் பெரிய திருப்பமாக, பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப நிலவரப்படி, என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜக தனியாக 55 […]
டெல்லி கார் வெடிப்பு! கைதானவர்கள் பற்றி பல்கலை. விளக்கம்
ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுக்குப் பிறகு முதல் முறையாக, அந்த மருத்துவர்கள் பணியாற்றி வந்த அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது. அல் – ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் பெயரில் துணைவேந்தர் பேராசிரியர் பூபேந்தர் கௌர் ஆனந்த் கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. நடந்து சம்பவங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் அல் – ஃபலாஹ் பல்கலை இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நடந்து […]
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸ், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11. முதல் போட்டிக்கான பிட்ச், முதல் இரண்டு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
பீகார் தேர்தல் முடிவுகள்: தேஜஸ்வி யாதவ் தோற்றால்... ராகுல் காந்தி தான் காரணமா? ஏன் அப்படி?
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தோற்றால் அதற்கு ராகுல் காந்தி தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதான் பிரச்னையாக இருக்கும். என் நண்பனுக்கோ, நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதுதான் பிரச்னையே... திருமணமான சில நாள்களிலேயே இதனால் அவனுக்கும் அவனின் மனைவிக்கும் பிரச்னை வந்துள்ளது. நண்பனுடைய பிரச்னை இயல்பானதா... அதற்கு சிகிச்சை ஏதும் தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த , காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன். சுனிதா மேனன் 'ஆண்களின் பாலியல் பிரச்னைகளில் 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' (Male orgasmic disorder) என ஒன்று இருக்கிறது. டிலேடு இஜாகுலேஷன் (Delayed ejaculation) என்றும் இதைக் குறிப்பிடலாம். அதாவது, பாலியல் உறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுவதில் அல்லது விந்து வெளியேற்றுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறிக்கும் பிரச்னை இது. எவ்வளவு நேர தாமதம் இயல்பானது என்பதுதான் இங்கே கேள்வியே. சில ஆண்களுக்கு நீண்டநேரம் உறவில் ஈடுபடுவது என்பது ஒருவித 'கெத்து' ஃபீலிங்கை, திருப்தியைத் தரும். அதுவே. சில ஆண்களுக்கு முடிந்தும் முடியாமல் தொடரும் செக்ஸ் உறவு ஒருவித விரக்தியை, மன அழுத்தத்தைக் கொடுக்கும். செக்ஸ் உறவு செக்ஸ் உறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதை வைத்து, சம்பந்தப்பட்ட ஆணுக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பாதிப்பு இருப்பதாக முடிவுக்கு வந்துவிட முடியாது. விந்தை வெளியேற்ற முடியாத நிலையும், அது தரும் விரக்தியும், அந்த ஆணை மனத்தளவிலும் பாதிக்கும்போது அவருக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பிரச்னை இருக்கலாமோ என சந்தேகிக்கலாம். மக்கள்தொகையில் 8 சதவிகித ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்கின்றன புள்ளிவிவரங்கள். டிலேடு இஜாகுலேஷன் பிரச்னையோடு வரும் ஆண்களுக்கு முதலில் மருத்துவ ரீதியான பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு, முதுகுத்தண்டில் அடிபட்டதன் விளைவு என ஏதேனும் இருக்கிறதா என்று மருத்துவர்கள் கேட்டறிவார்கள். அப்படி எந்தப் பிரச்னை இல்லாதபட்சத்தில் அந்த ஆணை, செக்ஸ் தெரபிஸ்ட்டை சந்திக்க அனுப்புவார்கள். மன அழுத்தத்தைக் கையாளவும் கற்றுத் தரப்படும். தாம்பத்திய வாழ்க்கை (Representational Image) செக்ஸ் தெரபிஸ்ட்டை அணுகும்போது, சம்பந்தப்பட்ட ஆணின் உளவியல் பிரச்னைகள் கேட்டறியப்படும். உறவு வைத்துக்கொள்ளும் நிலை, இடம் போன்றவை கேட்கப்படும். மனைவியின் மனநிலையும் உடல்வலியும் புரியவைக்கப்படும். தொடர் கவுன்சலிங் மூலம் அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, உங்கள் நண்பரை பாலியல் மருத்துவரையோ, செக்ஸ் தெரபிஸ்ட்டையோ அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `தாம்பத்திய உறவு முடிஞ்சதுமே கணவர்கள் தூங்குறதுக்கு இதுதான் காரணம்!' | காமத்துக்கு மரியாதை - S3 E41
நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?
கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை மிஷின் டிரைவர். அபிஷேக்கின் நண்பர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரவின் (19). இவரும் தப்பாட்ட கலைஞர். அபிஷேக் 17 வயது நர்சிங் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட பாலாஜி இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவியை திருமணம் செய்வதற்காக அபிஷேக் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றனர். இறுதியாக, பாலாஜியின் வீட்டில் தங்குவதற்கு சென்றுள்ளனர். அவரும் அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது பாலாஜி வீட்டில் இருப்பது தெரிந்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அபிஷேக்கின் தம்பியுடன் சென்று சமாதானம் செய்து மகளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். அபிஷேக் தனது செல்போனை பாலாஜியிடம் கொடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அபிஷேக், பிரவின், பாலாஜி மூவரும் சேர்ந்து டுவீலரில் மது குடிக்க சென்றுள்ளனர். அசூர் அருகே உள்ள சாத்தங்குடி சாரதி நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அபிஷேக், காதலியுடன் நான் உன் வீட்டில் இருந்ததை ஏன் அவர் பெற்றோரிடம் சொன்னாய் என கேட்டு பாலாஜியிடம் கேட்டு தகராறு செய்ய அதற்கு பாலாஜி நான் சொல்லவில்லை என மறுத்திருக்கிறார். மது அப்போது நான் கொடுத்த என்னுடைய செல்போனை திருப்பி கொடு என கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி செல்போன் என்னிடம் இல்லை, முன்பே திருப்பி கொடுத்துவிட்டேன் என்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது. பாலாஜி கத்தியால் அபிஷேக்கை குத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, அபிஷேக், பிரவின் இருவரும் சேர்ந்து பாலாஜி கையில் இருந்த கத்தியை பிடிங்கி விட்டனர். மேலும் அருகில் கிடந்த கட்டைகள் மற்றும் மது பாட்டில்களால் பாலாஜியை தாக்கியுள்ளார். மேலும் கத்தியால் குத்தியதோடு பாலாஜியை வாய்க்காலில் தள்ளி சேற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். murder இதற்கிடையே இரவில் வெளியில் சென்ற கணவர் வீட்டிற்கு வராததால், பாலாஜியின் மனைவி சர்மிளா சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது அசூர் அருகே சாத்தங்குடியில் பாலாஜி கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கும்பகோணம் தாலுகா போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அபிஷேக், பிரவின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி
உங்க வண்டியில் ஃபாஸ்டாக் வேலை செய்யலயா? அப்போ இனி அதிகம் பணம் கொடுக்கணும்!
நாளை முதல் சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஃபாஸ்டாக் வேலை செய்யுதானு செக் பண்ணுங்க.
புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்
புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு காரை லாரி சிறிது தூரம் இழுத்துச்சென்றது. அந்நேரம் எதிர்திசையில் இருந்து வந்த மற்றொரு லாரி மீது காரை இழுத்து வந்த லாரி மோதிக்கொண்டது. இதில் இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கிக்கொண்டு அப்பளம் போன்று ஆனது. இதனால் காரில் இருந்து சி.என்.ஜி காஸ் டேங்க் உடைந்து தீப்பிடித்துக்கொண்டது. காரில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் இருந்தனர். அவர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனரும் இந்த தீயில் கருகி இறந்தனர். அவர்கள் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தவிர கண்டாலாவை சேர்ந்த ரோஹித் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இது தவிர 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் கூறுகையில், ''லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. இதில் கார் சாண்ட்விட்ச் போன்று இரு லாரிகளிடையே சிக்கிக்கொண்டு தீப்பிடித்துக்கொண்டது. விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ.சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த வாகனத்தில் இருந்து உடல்களை அப்புறப்படுத்த இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இச்சம்பவத்தால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டது''என்றார். விபத்தை ஏற்படுத்திய டிரைலர் லாரி இரும்பை ஏற்றிக்கொண்டு மும்பை வந்து கொண்டிருந்தது. பும்கர் மேம்பாலத்தில் செல்பி பாயிண்ட் அருகில் வந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். விபத்தில் மினி பஸ் உட்பட 13 வாகனங்கள் சேதம் அடைந்தன.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண விவசாயம் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழு இணைத்தலைவருமான எஸ். சிவசிறீ ஆகியோரின் இணைத் தலைமையிலும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (13.12.2025) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர உப […]
Autograph: அதற்காக சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்! - 'திருப்பாச்சி'பெஞ்சமின் பேட்டி
தமிழ் சினிமா ஆக்ஷன் காமெடி என்று பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களையும் உறவுச் சிக்கல்களையும் படம் முழுக்க உரையாடி வணிக வெற்றியை ஈட்டித்தருவதெல்லாம் அசாதாரணமான விஷயம். சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் அதைச் செய்தது. நவம்பர் 14-ம் தேதி இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ஆட்டோகிராப் `என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம்’ ரீ-ரிலீஸையொட்டி இத்திரைப்படம் தொடர்பாக 'ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்திருந்த பெஞ்சமினிடம் பேசினோம். கலகலப்பாக பேசத் தொடங்கியவர், என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம் 'ஆட்டோகிராஃப்'. எனக்கு மட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பலருக்கும் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அது. ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சேரன் சார் என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சென்னையில் இருக்கும்போது தினமும் மதிய நேரத்தில் சேரன் சாரின் அலுவலகத்திற்கு செல்வதுண்டு. எங்களை பசியோடு இருக்கவிட மாட்டார். ஏழை கலைஞர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார். அதற்கு பிறகு 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி வாய்ப்பளித்தார். இரண்டரை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய படம் ஏழு மாதத்திற்கு இழுத்துவிட்டது. 'ஆட்டோகிராஃப்' அனுபவம் கதையில் செந்திலும் நானும் செந்திலின் பள்ளிப் பருவத் தோழி கமலாவை பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சி 5 டேக்குகளுக்கு மேல் சென்றது. அப்போதெல்லாம் பிலிம் ரோல் என்பதால் ரோலுடன் பணமும் கரைந்துகொண்டே போனது. சேரன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஆறாவது டேக்கில் என்னிடம் சொல்லாமல் சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று நான் பார்க்க சேரன் 'கட்' என்று சொல்லிவிட்டு 'இந்த ரியாக்ஷன்தான் வேணும் பெஞ்சமின். இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் பாடுபட்டேன்' என்றார். அவருக்கு துளியும் கோபமில்லை. ஆனால், ஷாட் சரியாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சேரன் சார் மனதில் இடம் பிடிப்பது மிகவும் சிரமம். ஈடுபாட்டுடன் நடித்தார் மல்லிகா படப்பிடிப்பின் போது உதயம் லாட்ஜில் தங்கி இருந்தோம். ஷூட் இல்லாத நேரத்தில் லாட்ஜின் மாடியில் வாக்கிங் போவோம். ஒருமுறை அப்படி போகும்போது ஏதோ ஒரு உருவம் கத்திக்கொண்டிருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தபோதுதான் நடிகை மல்லிகா கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போதே அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தார். அப்போது அவர் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அப்போதே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார் மல்லிகா. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஒருமுறை மதிய உணவை முடித்துவிட்டு தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். தென்னை மரங்களை பார்த்ததும் இளநீர் குடிக்கத்தோன்றியது, யாருக்காவது மரம் ஏறத்தெரியுமா என்று விசாரித்தபோது அருகில் வந்த மல்லிகா படபடவென்று மரத்தில் ஏறி இளநீரை வாயில் கடித்துக்கொண்டு கீழே இறங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மல்லிகா அவர் ஊரில் தென்னந்தோப்பு இருப்பதாகவும் பெண்கள் அங்கு மரம் ஏறுவதுண்டு என்றும் கூறினார், அந்த வயதில் மல்லிகா அப்படி இருந்ததைப் பார்த்து நான் மிரண்டு போனேன். படப்பிடிப்பில் சிரமங்கள் மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது. படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம். அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும். சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார். நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. 'கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க' என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. முக்கியமாக அன்று சேரன் சாரின் அப்பா அம்மா படப்பிடிப்பிற்கு வந்திருந்தார்கள். சேரன் மண்டபத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, மேனேஜர் ஒரு பக்கம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். சேரனின் அப்பா சமாதானம் செய்ய முயற்சித்தபோது, மேனேஜர் அவரையும் கத்தியிருக்கிறார். நான் வெளியில் வரும்போது சேரனின் அப்பா படியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அருகில் விசாரிக்கச் சென்றபோது அழுதுகொண்டிருந்தார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் விசாரிக்கையில் 'கரண்டு பில் கட்டச் சொல்றாங்க. நானும் கையில இருந்ததையெல்லாம் கொடுத்துட்டேன். என்கிட்ட இதுதான் இருக்கு' என்று சில்லறையாக கொஞ்சம் பணத்தைக் காட்டினார். எட்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருந்தது. சேரனின் அப்பா ஒரு தியேட்டர் ஆபரேட்டர், 'இந்தப் படம் ஓடினால்தான் அவனுக்கு லைஃப், எங்களுக்கும் அப்படித்தான், ஓடுமா தம்பி' என்று அழுதுகொண்டே எங்களிடம் கேட்டார். சேரனின் தன்னம்பிக்கைக்கு இந்த படம் நூறு நாள் ஓடும் என்று ஆறுதல் கூறினோம். மாறாக, படம் 175 நாட்கள் ஓடியது. ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் வெற்றி படம் ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு மிகவும் சிரமப்பட்டார் சேரன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் பின்தான் புது தயாரிப்பாளர் ஒருவர் சேரன் மீது நம்பிக்கை வைத்து படத்தை விநியோகம் செய்ய முன்வந்தார். படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமான பின் எங்கள் அனைவருக்குமான சம்பள பாக்கியை நான்கு மடங்காக போட்டுக்கொடுத்தார் சேரன். ஆட்டோகிராஃப் - பெஞ்சமின் பிறகு சேரனின் தந்தை ஆபரேடராக வேலை செய்த தியேட்டரையே விலைக்கு வாங்கி, அவரின் அப்பா ஆபரேட் செய்த புரொஜெக்டரை எடுத்து வந்து சென்னையில் இருந்த அலுவலகத்தில் வைத்துவிட்டார். அதற்கு தினமும் பூஜையும் செய்தார்.” என புன்னகையோடு முடித்துக் கொண்டார். - கோகுல்
அமெரிக்காவில் அரச முடக்கம் முடிவுக்கு வந்தது; கையெழுத்திட்டார் டிரம்ப்
அமெரிக்காவில் 43 நாட்கள் அரச முடக்கம், ஜனாதிபதி டிரம்ப் மசோதாவில் கையெழுத்து இட்டதை தொடர்ந்து அரச முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். பல துறைகள், சேவைகள் முடங்கின அப்படி பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் கான்டிராக்ட்-க்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரையில் அனைத்தும் பாதிக்கும். இப்படி இந்த ஆண்டு […]
பீகார் தேர்தல் முடிவுகள்: ராக்கெட் வேகத்தில் செல்லும் பாஜக கூட்டணி! தேஜஸ்வி யாதவ் நிலை என்ன?
சற்று முன் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட முதல் 15 நிமிடங்களில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் சீசன்: கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு- மொத்தமாக மாறும் 82 சாலைகள்... என்னென்ன?
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனை முன்னிட்டு கேரளாவில் உள்ள 82 முக்கிய சாலைகளை ரூ.380 கோடி செலவில் சீரமைப்பு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், முதல் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட வேளை அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் , மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஸ்பின்னர்களை வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இருவரும் ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர்கள். இவர்கள் குறித்துப் பார்க்கலாம்.
பான் கார்டு வச்சிருக்கீங்களா? டிசம்பர் 31 கடைசி நாள்.. இதைச் செய்யலனா பான் கார்டே இருக்காது!
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் கார்டுடன் இணைத்தே ஆக வேண்டும். அரசு வழங்கியுள்ள கடைசி வாய்ப்பு இதுதான்.
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு […]
தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!
பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அப்படிப்பட்ட அற்புதமான தலம் தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம் ஆறுமுகமங்கலம் ஆயிரத் தெண் விநாயகர் கோயில். தலபுராணம் முன்னொரு காலத்தில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு, 'கோமார வல்லபன்' எனும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். பக்தியில் சிறந்த அந்த மன்னன் 1008 அந்தணர்களைக் கொண்டு பிரமாண்ட யாகம் செய்யத் திட்டமிட்டான். அந்தணர்கள் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர். யாகம் தொடங்கும் வேளையில்தான் அந்தணர்கள் எண்ணிக்கையில் ஒருவர் குறைவது தெரிந்தது. மன்னர் கலங்கினார். திடுமென அந்தணர் ஒருவரை எப்படி அழைத்து வருவது என்று திகைத்தார். தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார். ஆயிரத்தெண் விநாயகர் கோயில் சிவன் சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக வந்த புதிய அந்தணர் மன்னனிடம் வந்திருப்பது யாரென்று உனக்குப் புலப்படவில்லையா... என்னை நன்றாகப் பார்’’ என்றார். மன்னன் திகைத்துப்போய் பார்க்க அங்கே விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார். மன்னனும் மகிழ்ந்து விநாயகப்பெருமானுக்கு அற்புதமாக ஆலயம் எழுப்பினார். 1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார். நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம். ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா... அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தெண் விநாயகர் மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி - செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம். சித்திரை 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும். சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! இதுவே இத்தனை விசேஷம் என்றால் விநாயகர் சதுர்த்தி பற்றிக் கேட்கவும் வேண்டுமா... `விநாயகர் சதுர்த்தி’ நாளன்று காலையில் கணபதி ஹோமமும் 21 வகையான அபிஷேகமும் விசேச அலங்கார தீபாராதணையும் நடைபெறும். மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும். ஆயிரத்தெண் விநாயகர் பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ விநாயகர் பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக, ’பிரதோச விநாயகமூர்த்தி’ கிரிவலம் வருவார். இத்தலத்தில் விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு இலைகளால் அர்ச்சனை செய்துவழிபட வழிபடுவோருக்கு திருமணத்தடை, வழக்கில் இழுபறி, நிலப்பிரச்னை, கணவன் மனைவி பிரச்னை, கடன்பிரச்னை, கல்விமந்தம் என அனைத்து விதமான தடைகளும் விரைவில் நீங்கும் என்கிறார்கள். பிராகாரத்தை 7 முறை சுற்றி வந்து வழிபட்டு இரண்டு தேங்காயை ’பிரார்த்தனைத் தேங்காய்’ எனச் சொல்லி விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இப்படிப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும் தேங்காய்கள், மறுநாள் கன்னி விநாயகர் சந்நிதியில் கன்னிவிநாயகரைச் சுற்றி அடுக்கி வைக்கப்படுகின்றன. இவை சங்கடஹரசதுர்த்தி நாளன்று காலையில் நடைபெறும் ’மஹா ஹோம’த்திற்குள் போடப்படுகின்றன. ஹோமத்திற்குள் போடப்படும் தேங்காய்கள் ஒன்றுகூட வெடிப்பதில்லையாம். அப்படியே சாம்பலாகி விடுவதுதான் ஆச்சர்யம் என மெய்சிலிர்க்க சொல்கிறார்கள் பக்தர்கள். இப்படி வேண்டிக்கொண்ட காரியம் 90 நாள்களில் பூர்த்தியாகும் என்கிறார்கள். இப்படிக் கேட்கும் வரங்களை வாரிவழங்கும ஆயிரத் தெண் விநாயகரை ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்வில் தடைகள் விலகி வெற்றிகள் கைகூடும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
யாழில். பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த […]
2025-ன் அதிர்ச்சித் தகவல்: அமெரிக்கக் கல்லூரி மாணவர்களிடையே அடிப்படை கணிதத்தின் வீழ்ச்சி!
அண்மையில் வெளியான டானர் நௌ (Tanner Nau) அறிக்கையின்படி, கல்லூரி அளவில் மாணவர்களின் அடிப்படை கணிதத் திறன்கள் வியத்தகு முறையில்
What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் &சீரிஸ் எவை?
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே! காந்தா: இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல் என 1950களில் நடக்கும் கதைதான் இந்த காந்தா. நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கும்கி 2: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் கும்கி 2. அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காந்தா மெட்ராஸ் மாஃபியா கம்பெனி: நடிகர்கள் ஆனந்த் ராஜ், முனீஸ் காந்த், தீபா, சம்யுக்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிணறு: சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் கண்ணோட்டத்தில் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காந்தா: ``இந்தக் கதை என்னைவிட்டு போயிடுமோனு பயமா இருந்துச்சு - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி தாவுத்: நடிகர்கள் லிங்கா தீனதயாளன், திலீபன், ஷா ரா, ராதாரவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆட்டோகிராஃப் (Re Release): சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ல் வெளியான 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது. Athibheekara Kaamukan (மலையாளம்): நடிகர்கள் லுக்மான், த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Autograph Re Release Amos Alexander (மலையாளம்): த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜாஃபர் இடுக்கி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Nidhiyum Bhoothavum (மலையாளம்): காமெடி த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரமோத் வெலியனாத், அஸ்வத் லால் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆட்டோகிராஃப் ரிரிலீஸ்: லத்திகா கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஃபேவரைட்'' - நடிகை கோபிகா ஷேரிங் Santhana Prapthirasthu (தெலுங்கு): நடிகர்கள் விக்ராந்த் ரெட்டி, சாந்தினி சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Gatha Vaibhava (கன்னடம்): நடிகர்கள் துஷ்யந்த், ஆஷிகா ரங்கநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Da De Pyaar De 2 Love OTP (கன்னடம்): நடிகர்கள் அனிஷ் தேஜேஸ்வர், ஸ்வரூபினி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. De De Pyaar De 2 (இந்தி): நடிகர்கள் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The Running Man (ஆங்கிலம்): க்ளென் பவல் நடிப்பில், எட்கர் ரைட் இயக்கத்தில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Now You See Me : Now You Don't (ஆங்கிலம்): பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபன் ஃப்ளெய்ச்சர் இயக்கத்தில், நடிகர்கள் டேவ் ஃப்ராங்கோ, ஜஸ்டிஸ் ஸ்மித் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The Spiderman (Re-release): சாம் ரெய்மி இயக்கத்தில், டோபி மாகுவைர் நடிப்பில் உருவாகி, வெளிவந்து இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்பைடர்மேனாக இருப்பது தான் தி ஸ்பைடர்மேன் வரிசை திரைப்படங்கள். இந்த வரிசையில் வெளிவந்த 3 திரைப்படங்களும் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Dude Movie தியேட்டர் டூ ஓடிடி: டியூட் - Netflix - 14 November Avihitham - JioHotstar - 14 November (மலையாளம்) Telusu Kada - Netflix - 14 November (தெலுங்கு) K-Ramp - Aha Video - 15 November (தெலுங்கு) Nishaanchi - Prime Video - 14 November (இந்தி) Jolly LLB - JioHotstar & Netflix - 14 November (இந்தி) Jurassic Park: Rebirth - JioHotstar - November 14 (ஆங்கிலம்) ஓடிடி தொடர்கள்: Delhi Crime Season 3 - Netflix - 13 November (இந்தி)
பணவீக்கத்தைக் குறைத்த ஜி.எஸ்.டி 2.0... மக்களின் சேமிப்பை அதிகரிக்கப் பயன்படட்டும்!
கடந்த வாரத்தில் வெளியான பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள், நல் ஓலையாகவே வந்திருக்கிறது. பணவீக்கம் குறைவில் ஒரு வரலாற்று தருணம் சாத்தியப்பட்டுள்ளது! கொரோனா காலத்துக்குப் பிறகு வேலையிழப்பு, வருமானக் குறைவு போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்த மக்களுக்கு, விலைவாசி ஏற்றம் பெரும் சுமையாக இருந்துவந்தது. இதனால், வருமானம் முழுவதையும் செலவு செய்துவிட்டு, கூடுதலாகக் கடன் வாங்கும் நிலைக்கும் ஆளானார்கள். இப்போது, இந்தியாவின் சில்லறை விற்பனை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 0.25% ஆகக் குறைந்துள்ளது. 2013-க்குப் பிறகான பணவீக்கத் தொடரில், இதுவே மிகக் குறைந்த அளவு என்பது சிறப்புச் செய்தி. நுகர்வோர் பணவீக்கம், 2024-ம் ஆண்டு ஜனவரியில் 5.1% ஆக இருந்து, 2025 அக்டோபரில் 0.3% ஆகக் குறைந்துள்ளது. நுகர்வோர் உணவுப் பொருள்களின் பணவீக்கம், 2024 ஜனவரியில் 8.3% ஆக இருந்து, தற்போது மைனஸ் 5.0% ஆகக் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததே, பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம். இதற்குப் பின்னணியில் இருப்பது, சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கடந்த செப்டம்பர் மாத இறுதியில், இந்தியா மீது அமெரிக்கா அறிவித்த 50% வரிகளுக்குப் பிறகு, பொருளாதாரத்திலும், சந்தையிலும் பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் உருவாகின. அவற்றை சமாளிக்கவும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதைத் தக்கவைக்கவும் மத்திய அரசு ஜி.எஸ்.டி விகிதங்களைக் குறைத்தது. அதன் பலனாக, பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. மக்கள், பணத்தை இறுக்கிப் பிடிக்காமல் தேவைகளுக்குச் செலவு களைச் செய்ய வழி பிறந்தது. பணவீக்கமும் குறைந்தது. அக்டோபர் மாதத்தில் வசூலான ரூ.1.7 லட்சம் கோடி நிகர ஜி.எஸ்.டியே அதற்குச் சான்று. ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள் நுகர்வை அதிகரிப்பார்கள், அரசுக்கும் வருவாய் குறைவு ஏற்படாது என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவந்தது, நிரூபணமாகியிருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பது, அடுத்தகட்டமாக வட்டி விகிதக் குறைப்புக்கும் வழிவகுக்கலாம். அப்படிக் குறைக்கப்பட்டால், கடன் வாங்கியிருப்பவர்கள் முதல் புதிதாகக் கடன் வாங்கப் போகிறவர்கள் வரை பலன் அடைவார்கள். பொருளாதாரத்திலும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உருவாகும். ஆனால், மிச்சமாகும் பணத்தில் மக்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்யாமல், சேமிப்பையும் முதலீட்டையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். இப்படியாக நாடும், நாட்டு மக்களும் பொருளாதாரப் பலனடைவது தொடர்ந்தால், 2027-க்குள் நிச்சயம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா எட்டிவிடலாம். அது, நம் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது.
வாசகர்களே, வாங்க... கலக்கலாம்!
டெல்லியில் குப்பைகளுக்கு இனி குட்பை! மாஸ்டர் பிளானுடன் களம் இறங்கிய மாநகராட்சி... தேர்வான 4 இடங்கள்
டெல்லியில் திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 4 முக்கிய இடங்களில் ஆலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
பீர்க்கங்காய் அடை முதல் வெங்காய துவையல் வரை; மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகள்!
ஆரோக்கியம் நம் உணவுப்பழக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. நாம் மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகளை, செய்முறையுடன் நினைவூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் பத்மா. இஞ்சி, பருப்பு துவையல் இஞ்சி, பருப்பு துவையல் தேவையானவை: இஞ்சி - 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கி வதக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். குறிப்பு: நீராகாரமும் (பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தது), இஞ்சி - பருப்பு துவையலும் சூப்பர் காம்பினேஷன் பீர்க்கங்காய் அடை பீர்க்கங்காய் அடை தேவையானவை: சிறிய பீர்க்கங்காய் - ஒன்று, இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து - தலா 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து தக்காளி, தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்க்கவும். அரிசியை தனியாகவும், பருப்பை தனியாகவும் அரைத்து மாவுகளை ஒன்று சேர்த்துக் கலக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: இதே முறையில் கீரை, கோஸ் ஆகியவற்றிலும் அடை தயாரிக்கலாம். வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாழைத்தண்டு மோர்க்கூட்டு தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளிப்பு இல்லாத தயிர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும். குறிப்பு: பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும். நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால், வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம். முடக்கத்தான் கீரை பக்கோடா முடக்கத்தான் கீரை பக்கோடா தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன்... வெங் காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரையைப் போட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வரும்வரை வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: முடக்கத்தான் கீரை கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்தக் கீரையை துவையல், சட்னி, தோசை, அடை ஆகியவற்றி லும் சேர்க்கலாம். கலவை கீரை வடை கலவை கீரை வடை தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை - தலா ஒரு கப், மிளகு - 10, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிக்கவும். இதனுடன் தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரைகளைக் கழுவி, வடிகட்டி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: முள்ளங்கி இலை, நூல்கோல் இலை, கோஸ் துருவல் சேர்த்தும் வடை தயாரிக்கலாம். வெங்காய துவையல் வெங்காய துவையல் Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன். கருப்பட்டி கோதுமை தோசை கருப்பட்டி கோதுமை தோசை தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கோதுமை - 200 கிராம், அரிசி - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 100 மில்லி. செய்முறை: கோதுமை, அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். கருப்பட்டியை பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: இதற்கு, வெண்ணெய் சிறந்த காம்பினேஷன் கோதுமைக்கு பதில் கம்பு, கேழ்வரகு மாவு பயன்படுத்தியும் இதே முறையில் தோசை தயாரிக்கலாம். Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!
ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் குடும்பங்கள் ; ஐ.நா. அறிக்கை அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் 10 இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன எனவும் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் அதிக அளவில் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் இவ்வாறு நாடு திரும்பி உள்ளனர். இவ்வாறு நாடு […]
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் மகிந்த சமரசிங்க சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் மொறிசனும் கலந்து கொண்டிருந்தார்.
கொழும்பில் பிரமாண்டமாக நடந்த ஜேவிபியின் 36வது மகாவிரு நிகழ்வு
ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஜேவிபி கிளர்ச்சியில் உயிரிழந்த, காணாமல் போன உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 36வது மகாவிரு நிகழ்வு என்ற பெயரில் இந்த நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இடம்பெற்றது. ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான
பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக காலை 8 மணிக்கு தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கை கையளிப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுஆய்வு செய்து ரத்துச் செய்வதற்கான பரிந்துரைக்களை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சமர்ப்பித்துள்ளது. அதிபர் சட்டவாளர் ரியன்சி அர்செகுலரத்ன தலைமையிலான இந்தக் குழு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து, பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழியும் பணியை மேற்கொண்டது. விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய
குழந்தைகள் தினமின்று: “அன்பின் பிணைப்பு”- நேருவும் இந்தியாவின் குழந்தைகளும்!
நவம்பர் மாதம் என்றதுமே இந்தியர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நவம்பர் 14 – ஆம் நாள், நாட்டின் முதல் பிரதமர்
5 நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நற்சான்றுகளை கையளிப்பு
கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர். அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த நிகழ்வில் 5 நாடுகளின் சார்பில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள், தமது கடமைகளை பொறுப்பேற்பதற்கான அடையாளமாக நற்சான்றுப் பத்திரங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தனர். கனடிய தூதுவர் இசபெல் மேரி கத்தரின் மார்ட்டின், நெதர்லாந்து தூதுவர், வைப் ஜேக்கப் டி
நீரிழிவுப் பிடியில்: தமிழ்நாடு &இந்தியா –ஓர் உலகச் சுகாதாரப் பேரழிவு.
நவீன வாழ்க்கைமுறை, துரித உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம் நிறைந்த ஓட்டம் என நாளுக்கு நாள் மாறிவரும் நம் சமூகச் சூழலில்,
டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது பிபிசி: இழப்பீடு வழங்க மறுக்கிறது!
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையின் சில பகுதிகளை வெட்டி ஒன்றாக்கி ஒளிபரப்பியது. இச்செயல் னாதிபதி டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஊழலின் விளைவு பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவி விலக வழிவகுத்தது. தற்போது இந்த நடவடிக்கைக்கு பிபிசி அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது. ஆனால் அவரால் கோரப்படும் இழப்பீட்டுக் கோரிக்கையை பிபிசி மறுத்துள்ளது. பிபிசி நிறுவனம் தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்டு, அவருக்கு இழப்பீடு வழங்காவிட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் பிபிசி மீது 1 பில்லியன் டாலர் (759 மில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்போவதாகக் கூறினார். ஜனவரி 6, 2021 அன்று ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்ற திருத்தத்திற்கு அவரும் நிறுவனமும் வருந்துவதாக ஜனாதிபதி டிரம்பிற்கு தெளிவுபடுத்தும் வகையில் பிபிசி தலைவர் சமீர் ஷா வெள்ளை மாளிகைக்கு தனித்தனியாக ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் வழக்கறிஞர்களிடமிருந்து பிபிசிக்கு இந்தக் கடிதம் கிடைத்தது. ஆவணப்படத்தை முழுமையான மற்றும் நியாயமான முறையில் திரும்பப் பெற வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பிபிசி ஏற்பட்ட தீங்கிற்கு ஜனாதிபதி டிரம்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அது கோருகிறது. வெள்ளிக்கிழமை 22:00 GMT (17:00 EST)க்குள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்திருந்தது. டிரம்பின் சட்டக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், பிபிசி பதிலளிக்க வேண்டிய வழக்கு இல்லை என்று நினைப்பதற்கான ஐந்து முக்கிய வாதங்களை முன்வைக்கிறது. முதலாவதாக, பிபிசிக்கு அதன் அமெரிக்க சேனல்களில் பனோரமா எபிசோடை விநியோகிக்கும் உரிமை இல்லை என்றும், அதை விநியோகிக்கவும் இல்லை என்றும் அது கூறுகிறது. இந்த ஆவணப்படம் பிபிசி ஐபிளேயரில் கிடைத்தபோது, அது புவியியல் ரீதியாக இங்கிலாந்தில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்த ஆவணப்படம் அவருக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை என்று அது கூறுகிறது. மூன்றாவதாக, அந்த வீடியோ கிளிப் தவறாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை, மாறாக ஒரு நீண்ட உரையைச் சுருக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்தத் திருத்தம் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும் அது கூறுகிறது. நான்காவதாக, அந்த வீடியோ கிளிப்பை ஒருபோதும் தனியாகப் பார்க்க விரும்பவில்லை என்று அது கூறுகிறது. மாறாக, அது ஒரு மணி நேர நிகழ்ச்சி நிரலுக்குள் 12 வினாடிகள் கொண்டது, அதில் டிரம்பிற்கு ஆதரவாக ஏராளமான குரல்களும் இருந்தன. ஐந்தாவதாக பொது அக்கறை மற்றும் அரசியல் பேச்சு தொடர்பான ஒரு விடயத்தில் ஒரு கருத்து அமெரிக்காவில் அவதூறு சட்டங்களின் கீழ் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது என்ற ஐந்து விடயங்களை முன்வைத்ததுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பால் அமெரிக்காவில் 4.2 கோடி மக்களுக்கு ஏற்படடுள்ள பாதிப்பு
அமெரிக்க அரசாங்க வரலாற்றில் இல்லாத அளவு 40 நாட்களுக்கும் மேலாக நிதி முடக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஊதியம் கிடைக்காததால், ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். ஆள் பற்றாக்குறை காரணமாக முக்கிய துறைகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க மக்களுக்கு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியுதவியை முற்றிலும் நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள 4.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு முன்னர் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் சில […]
‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தக் கருத்தின் மூலம், அமெரிக்காவில் வேலை வழங்குவதில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அந்நாட்டில் அதிக அளவில் வெளிநாட்டவா்கள் குடியேறுவதற்கு எதிராகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த டிரம்ப், தனது நிலைப்பாட்டை சற்று தளா்த்தியுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டவா் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி விசா வழிவகை செய்கிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் ஏராளமான இந்தியா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனா். […]
ஜமைக்காவுக்கு உதவபோய் உயிரிழந்த தந்தை மகள்!
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை கடந்த 28ம் தேதி மெலிசா புயல் தாக்கியது. இந்த புயலால் ஜமைக்கா பெரும் பாதிப்பை சந்தித்தது. புயலால் பாதிக்கப்பட்ட பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. விமானம் தரையில் விழுந்து விபத்து அந்த வகையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 53), அவரது மகள் செரினா (வயது 22) இருவரும் ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வந்தனர். அதன்படி, பல்வேறு நிவாரண […]
தில்லி மட்டுமல்ல, 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்…
தில்லி மட்டுமல்ல, மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவினர், இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதும், 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காரின் வெடிகுண்டு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது […]
இலங்கையில் பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம் –வெளியான தகவல்
குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படுமென அரச நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் விநியோகத்தை நெறிப்படுத்தும் நோக்கில் அஞ்சல் துறையுடன் இணைந்து தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறை அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் அந்த […]
ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains
Gangai Amaran, SK + Venkat Prabhu படம் Shooting ஆரம்பிக்க போகுது | Ilaiyaraaja| Vikatan Interview
Trade War தீர்வு வந்தால் Nifty, Sensex நிலை எப்படியிருக்கும்? | IPO | Q2 Results |IPS Finance - 359
DMK அரசுக்கு எதிராக Vaiko நடைபயணம்? - தொடங்கி வைக்கும் CM STALIN | Delhi Blast BJP | Imperfect Show
Jayalalitha மேல MGR-க்கு affection-னும் இருந்தது வருத்தமும் இருந்தது!- Chandralekha I.A.S Exclusive
19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது –வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில்
இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி
பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த ’சீக் பவுண்டேஷன்’!
சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Foundation)கோத்தகிரி மற்றும் கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு 50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.இது
காவல்துறையினரை வாளைக் காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில்
போதைப்பொருளை மீட்க சென்ற காவல்துறையினரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில்… The post காவல்துறையினரை வாளைக் காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில் appeared first on Global Tamil News .
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு உள்ளக மோதல்களை சந்தித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, புதிய சமரசங்களை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்குக் கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவை எனக் கருதி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஒரு பூர்வாங்கக் கலந்துரையாடலை நடத்துவற்கு உத்தேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர், கூட்டணிக்குள் ஆராய்ந்து விரைவாகப் பதிலளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் திருமதி ஹர்மன் ப்ரீத் கவுருக்கு
குருநகர் புனித யாகப்பர் ஆலய படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்… The post குருநகர் புனித யாகப்பர் ஆலய படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் appeared first on Global Tamil News .
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை குவித்த வீரா் கௌரவிப்பு
23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் தங்கம் மற்றும் 02 வெள்ளிப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்த… The post ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை குவித்த வீரா் கௌரவிப்பு appeared first on Global Tamil News .
நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக 11.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மோட்டார் ரேசிங் தொடர், JK டயர் FMSCI நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப், வரும் நவம்பர் 15–16 அன்று கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில்
தொல். திருமாவளவன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்த தொல் திருமாவளவன் அவர்களை முல்லைத்தீவை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரவழைத்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு வழங்கி இருந்தனர் அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்த அவர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்
யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய… The post யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது appeared first on Global Tamil News .
தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்ததனால் நீரில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக் கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில்… The post தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்ததனால் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Global Tamil News .
This year, PROD, the software engineering olympiad for high schoolers, is going international and inviting English-speaking students in years 8
யாழில். பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிசாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
ICL Fincorp’s New NCD Issue Opens on 17th NOVEMBER 2025, Offering Effective Yield up to 12.62%
ICL Fincorp is proud to announce the launch of its latest public issue of Secured Redeemable Non-Convertible Debentures (NCDs), opening
குருநகர் புனித யாகப்பர் ஆலய படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவிப் பங்குத்தந்தை அருட்பணி றொகான் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் சுப்பர் சொனிக்விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் , 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். பழமை வாய்ந்த தேவாலயமும் பகுதிகளவில் கடும் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது. குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
IPVS & ICPE 2025 to Drive Innovation and Collaboration in India’s Industrial Equipment Market
Orbit Exhibitions announces the launch of IPVS + ICPE 2025, a combined mega edition of two highly specialized exhibitions —
உலகின் உயரமான துபாய் மெரினா ஓட்டல்! ஒரு நாள் வாடகை இவ்வளவா?
உலகின் உயரமான சியால் ஓட்டல் துபாயில் நவம்பர் 15ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய ஏ அணி கடைசிவரை போராடி வென்றது. இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.
SETC-ல் luxury bus VOLVO 9600 vlog ? | இந்த bus-ல் இவ்வளவு features-ஆ? ? | Full details
இலங்கையில் மனைவியை கொல்ல முயன்ற ஐரோப்பிய கணவன்; பொலிஸில் சரணடைந்த பெண்
இலங்கையில் மனைவியை காரால் ஏற்றி கொல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இலங்கை பெண்ணின் கணவனான இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது வாகன ஓட்டுநரும் ர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்பதியரிடையே கருத்து மோதல் சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப் கேள்வியால் திகைத்த சிரிய ஜனாதிபதி
வெள்ளை மாளிக்கைக்கு வருகை தந்த சிரிய ஜனாதிபதியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என கேட்ட சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் நகைத்துள்ளனர். சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து பேசினார். சிரிய ஜனாதிபதி ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தது இதுவே முதல்முறையாகும். வெள்ளை மாளிகையில் இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பானது நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, சிரிய ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியத்தை ஜனாதிபதி […]
உக்ரைன் நீதித்துறை அமைச்சர் பணியிடைநீக்கம்
உக்ரைன் அரசின் நீதித்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்சென்கோ, அரசின் அணுக்கரு ஆற்றல் நிறுவனம் எனர்கோஅட்டோம் (Energoatom) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கலுஷ்சென்கோவின் கடமைகள் தற்காலிகமாக ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பிரிவு துணை நீதித்துறை அமைச்சர் லியுட்மிலா சுகக்கினால் (Lyudmyla Sugak) மேற்கொள்ளப்படும் என பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். கலுஷ்சென்கோ, கடந்த ஜூலை மாதம் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும்முன் நான்கு ஆண்டுகள் சக்திவள அமைச்சராக பணியாற்றியவர். அவர், எனர்கோஅட்டோம் நிறுவனத்தின் மூலம் பணம் […]
பீகார் தேர்தல் முடிவுகள்: பிரசாந்த் கிஷோர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்? வெளியான தகவல்
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று விரிவாக காண்போம்.
பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய மூன்று படைகளின் தலைவராக அசீம் முனீருக்கு பதவி உயா்வு வழங்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடும் அமளிக்கிடையே எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு, 59 உட்பிரிவுகள் அடங்கிய அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவா் அயாஸ் சித்திக் கூறியதாவது: அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது மீது புதன்கிழமை […]
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இல் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!
மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் விமான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை ஆட்சேர்ப்பு அமர்வில் பங்கேற்க தகுதி பெற ஒன்லைனில் விண்ணப்பிக்குமாறு விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆட்சேர்ப்பு அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி காலை 09.00 மணி முதல் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட வேளை அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் , மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த மால்கள் எந்த இடம் என்பது குறித்து காண்போம்.
BB Tamil 9: ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம் - மனம் திறக்கும் துஷார்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து டபுள் எலிமினேஷனில் எலிமினேட்டானர் துஷார். 34 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர், அரோராவுடன் சேர்ந்து அவர் ஆட்டத்தை ஆடாமல் விட்டுவிட்டதால்தான் இந்த எலிமினேஷன் நடந்ததாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் 'டெலி விகடன்' சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கும் துஷாருடன் பிக்பாஸ் அனுபவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் குறிப்பாக, 'அரோரா' பற்றிய கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கிறார், பிக்பாஸ் துஷார். அரோரா, துஷார் BB Tamil 9: கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும் - மனம் திறக்கும் பிக் பாஸ் பிரவீன் அரோராவுடன் சேர்ந்ததுதான் உங்கள் எலிமினேஷனுக்குக் காரணமா? துஷார்: இல்லை. அப்படியெல்லாம் நான் நினைக்கல. நிறையபேர் நிறைய விதமாகப் பேசுறாங்க. நாங்க ரொம்ப நேர்மையாக நட்பாகப் பழகினோம். பிக்பாஸ் வீட்டில் மனம்விட்டுப் பேச எனக்குக் கிடைத்த நல்ல நட்புதான் அரோரா. அதைத் தாண்டி எங்களுக்கிடையில் ஏதுமில்லை. அவரால் நான் எவிக்ஷானாகவில்லை. வெளியில் நம்மள வேறமாதிரி பார்ப்பாங்கனு நாங்க இரண்டுபேரும் கொஞ்ச நாளில் தனித்தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டோம். விஜய் சேதுபதி சார்கூட நிறைய ஹிண்ட் கொடுத்தார். ஆனால், ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம். நான் எவிக்ஷனாகி வெளியில் வந்ததும் எங்கவீட்டுல அரோரா பற்றி பேசவேயில்லை. 'நீ ஏன் உன்னோட திறமைய காட்டல'னுதான் எங்க வீட்டுல சொன்னாங்க. எனக்கு நல்ல டான்ஸ் ஆட தெரியும். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனதும் அதெல்லாம் எனக்கு ஞாபகமேயில்லை. என்னோட திறமைய காட்டமால் விட்டதுதான் நான் எவிக்ட்டாக காரணம் என்று பேசியிருக்கிறார் துஷார். வீடியோவைக் காண: Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema
கட்டணமற்ற டிஜிட்டல் தியாகத்தின் ஜாம்பவான் – VLC-ஐக் காத்த ஜீன்-பாப்டிஸ்ட் கெம்ப்ஃப்!
இன்றைய உலகில் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மற்றும் முடிவில்லாத விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒரு பிரெஞ்சு டெவலப்பரின்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை… The post யாழ் சென்றடைத்த திருமாவளவன் appeared first on Global Tamil News .
China Denies Visa to Indian Tennis Player
India’s top men’s tennis player, Sumit Nagal, has said that China refused to give him a visa just weeks before
திருமண வாழ்க்கையை சிதைத்த பெண்ணுக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர், திருமணமான ஆணுடன் உறவு வைத்ததால் ஒரு தம்பதியரின் திருமண வாழ்க்கை சிதைந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் 1.75 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டர்ஹாம் (Durham) கவுண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ப்ரெனே கெனார்ட் (Brenay Kennard) எனும் டிக்டாக் (TikTok) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலமான பெண், தன்னுடைய முகாமையாளருடன் டிம் மொன்டாக்யூ (Tim Montague) […]
Shubman Gill Trains Hard to Tackle Spin
Indian cricketer Shubman Gill is known as one of the most talented batters in world cricket today, especially in Test

30 C