72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து கென்ய காலநிலை ஆர்வலர் சாதனை
கென்ய காலநிலை ஆர்வலர் ட்ருபெனா முத்தோனி தொடர்ச்சியாக 72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் . முத்தோனியின் முன்னைய சாதனை 48 மணிநேரம் ஆகும். இந்த சவாலுக்காக, அவர் நியேரி நகரில் உள்ள அரசு வளாகத்தில் உள்ள ஒரு பூர்வீக மரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு கட்டத்தில், அவள் கிட்டத்தட்ட தூங்கிவிட்டாள். ஆனால் அவளுடைய ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டாள் அவர்களில் சிலர் கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ பார்வையாளர்களுக்கான கட்டணத்தை செலுத்த முன்வந்தனர். […]
விரக்தியின் உச்சத்தில் ட்ரம்ப் ; அர்த்தமற்று போகும் அமைதி ஒப்பந்தம்
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை அடைந்ததால், ”நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதேநேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் […]
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைவு
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் […]
அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்
மொஹமட் பாதுஷா நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை காலமும் இலங்கை சந்தித்திராத விதத்தில், மலைநாடு, கரையோரம் என நாடு தழுவிய அழிவொன்றை இயற்கை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. மரணங்களையும், அழிவுகளையும் இன்று வரை சரியாக இற்றைப்படுத்த முடியாதபடி இழப்புக்களின் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவு வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ) யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் சார்பில் லண்டனில் வதியும், அவரது மகனான தோழர்.நகுலன் வழங்கிய நிதி பங்களிப்பில் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் […]
லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்
கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண முடியாததால் ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள், வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து லேக் டவுனில் அமைக்கப்பட்டுள்ள […]
உலகின் அதிகம் மகிழ்ச்சியற்ற நாடு இதுவா? வெளியான சர்வதேச லிஸ்ட்
உலகில் அதிகம் மகிழ்ச்சி அற்ற நாடு என்ன என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது என்று காண்போம்.
2025-ல் அதிகம் வைரலான விசயங்கள் எவை தெரியுமா? எதனால் வைரலானது எனத் தெரியுமா?
2025-ல் சமூக வலைதளங்களில் விமானப் பணிப்பெண்ணுக்கு நடுவானில் கிடைத்த ஓவிய பரிசு, தாயின் கனவை நிறைவேற்றிய மகள், தம்பியின் முதல் விமானப் பயணம் என நெகிழ்ச்சியான தருணங்கள் வைரலாகின.
Messi Tour of India: நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை - இந்திய கால்பந்து கூட்டமைப்பு
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள்ளது. Messi Tour of India மெஸ்ஸியைக் காண நுழைவுச்சீட்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை கட்டணம் செலுத்தி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவிந்த சுமார் 50,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் கள்ளச்சந்தையில் ரூ.20,000 வரைக்கூட கொடுத்து வாங்கியிருந்தனர். Kolkata, West Bengal: Angry fans vandalise the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible event. He came for just 10 minutes. All the leaders and ministers surrounded him. We couldn't see… pic.twitter.com/a3RsbEFmTi — ANI (@ANI) December 13, 2025 ஆனால் மைதானத்தில் அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் (VVIPs), பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மெஸ்ஸியைச் சுற்றிக் கூடி நின்று, அவசர அவசரமாக செல்ஃபிகள் எடுத்ததால் அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமார்ந்தனர். AIFF விளக்கம் இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) வெளியிட்ட அறிக்கையில், உலகக் கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட விவேகானந்தா யூபா பாரதி கிரிங்கன் மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. Kolkata Salt Lake Stadium chaos: Fans angry over Messi’s 10-minute appearance, poor event management, and unmet promises, say emotions, time, and money wasted. pic.twitter.com/2V477aKnWn — Ihtisham Ul Haq (@iihtishamm) December 13, 2025 மேலும், இது ஒரு தனியார் பி.ஆர். ஏஜென்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வின் அமைப்பு, திட்டமிடல் அல்லது செயலாக்கம் என எந்தவொரு செயலிலும் AIFF ஈடுபடவில்லை. மேலும், நிகழ்வு பற்றிய விவரங்கள் AIFF-க்குத் தெரிவிக்கப்படவில்லை. கூட்டமைப்பிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் AIFF மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மைதானத்தை நாசமாக்கிய ரசிகர்கள் மெஸ்ஸியை காண முடியாததால் ஆவேசமடைந்த ரசிகர்கள், விளையாட்டு மைதானங்களுக்குள் பாட்டில்களை வீச ஆரம்பித்தபோதுதான் குழப்பம் தொடங்கியது. மைதானத்துக்குள் உணவுப் பொட்டலங்கள் உட்பட இதுபோன்ற பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறிது நேரத்திலேயே, ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். மைதானத்தின் தரைப்பகுதி மற்றும் செயற்கை ஓடுபாதையில் ஃபைபர் கிளாஸ் இருக்கைகள் உடைந்து கிடந்தன. மெஸ்ஸிக்காகவும், முதலமைச்சர் பிரிவுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பந்தல்களும் கிழித்து எறியப்பட்டன. போலீசார் தலையிடுவதற்கு முன்பு, அவற்றின் சில பகுதிகளில் தீ வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல நுழைவு வாயில்கள் சேதப்படுத்தப்பட்டன. வீரர்கள் சுரங்கப்பாதையின் கூரை தாக்கப்பட்டது. சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டன. Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்
டிரம்பின் வலது கையில் பேண்டேஜ் ; கரோலின் லீவிட் விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்பின் கையில் பேண்டேஜ் போடப்பட்டிருப்பது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார். டிரம்பின் வலது கையின் மேல்பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டு இருந்தது. காயத்திற்கு போடப்படும் இந்த பேண்டேஜ் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பின. டிரம்பின் உடல்நல பாதிப்பு பற்றி பல வாரங்களாக யூகங்கள் பரவி வந்த நிலையில், இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிரம்ப், அவருடைய கையில் போடப்பட்ட பேண்டேஜ் வெளியே தெரியாத வகையில், அவருடைய […]
கொழும்பு கொலன்னாவை பகுதியில் 8,000 தொன் குப்பைகள்
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கத்தால் கொலன்னாவை பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், சுமார் 2 நாட்களில் அதை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா போன்ற பகுதிகளில் சுமார் 10,000 முதல் 12,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளன. மேலும், தற்போது, மேல் மாகாண […]
பகிடிவதை புரிந்த யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று மீண்டும் […]
சாண்ட்விச் , இறைச்சி, பால் பொருட்களுடன் பிரிட்டன் செல்லத் தடை
ஐக்கிய இராச்சியம், ஏப்ரல் 12 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை பிரிட்டன் நாட்டிற்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தடை சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள், பக்கேஜ் செய்யப்பட்டவையாகவோ அல்லது டியூட்டி பிறியில் (duty free) வாங்கப்பட்டவையாக இருந்தாலும் கூட பிரிட்டன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் […]
சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு… The post அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! appeared first on Global Tamil News .
ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் ; டிரம்ப் எச்சரிக்கை
தொடர்ந்து இடம்பெறும் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3-ம் உலக போரை ஏற்படுத்தி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில […]
கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album
காலை 08:20 போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 08:45 பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 09:00 - மூன்று ஆண் யானைகளையும் காண கூடிய மக்கள் காலை 10:00 - நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் மாலை 04:00 - கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் ஊருக்கும் யானைகள் மாலை 05:00 - அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்து கண்காணிக்கும் வனத்துறையினர் மாலை 06:00 - வனத்துறையின் Elephant Trackers யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர் மாலை 06:30 - வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள் மாலை 06:40 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் மாலை 07:30 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தன அதிகாலை 05:00 - சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என சாலை பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் மறுநாள் காலை 06:30 - அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை நுழைய வேகமாக செல்கின்றன மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை முழுவதும் வளம் வர தொடங்கின மறுநாள் மதியம் 02:00 - அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல் மறுநாளும் மாலை 04:00 வனத்திற்கு செல்ல தைல மாற காட்டைவிட்டு வெளியேற முயற்சி மாலை 06:00 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - தெலுங்குபாளையம் மாலை 06:30 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - காட்டம்பட்டி மாலை 07:00 - தென்னை தோப்புகளிருந்து வெளியேறி அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள் இரவு 08:45 - கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர் இரவு 10:30 - யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் - ஒன்னிப்பாளையம்
மன்னார் அனர்த்த பாதிப்பு: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைந்து மீட்டெடுக்கவும், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று… The post மன்னார் அனர்த்த பாதிப்பு: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
பிரான்சில் கால்நடை அம்மை நோய்.. தீவிர தடுப்பூசி நடவடிக்கை.. இல்லையெனில் என்னாகும் தெரியுமா?
பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை அழிக்கும் பழைய கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், இனி தடுப்பூசி மூலம் நோயை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் தடுமாற்றம்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த 15 அக்டோபர் 5 அன்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக கடந்த மாதம் 28 ஆம் திகதி தெரிவாகியிருந்தார்.
Kamal Haasan: சினிமா தேஞ்சுகிட்டே இருக்கிறதா ஒரு பயம் - ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் பேச்சு!
நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி, வேல்ஸ் தியேட்டர் ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அங்கே தனது திரைப் பயணம் குறித்தும் திரைத்துறை முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். inauguration of the Vels Trade & Convention Centre, Vels Film City, and Vels Theatres Kamal Haasan பேச்சு நான் சினிமாவின் குழந்தை அவர், கமலஹாசனுக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நான் நடிச்சதில்ல, ராஜ்கமலும் அவரும் சேர்ந்து ஒரு படமும் பண்ணதில்ல. ஆனால் என்னையும் அவரையும் சேர்த்து பிணைக்கும் பெயர் எம்ஜிஆர். எம்ஜிஆர்தான் எங்களை நண்பர்களாக சகோதரர்களாக மாற்றினார் என்றால் அது மிகையாகாது. நான் சினிமாவின் குழந்தை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அது பண்ணிட்டே இருக்கும்போது கத்துக்கிட்டது தான் எல்லாமும். என் மொழியும், என் கல்வியும் இப்பொழுது நான் பெற்றிருக்கும் பட்டங்களும் எல்லாமே எனக்கு சினிமா கொடுத்ததுதான். அப்படிப்பட்ட சினிமா ஏதோ தேஞ்சுகிட்டே இருக்கிற மாதிரி ஒரு 20-25 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பயம். 17 ஃப்ளோர்களுடன் கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்று இருந்தது. அதைப் பார்த்து நான் எதிர் ஸ்டுடியோல இருந்து பொறாமைப்பட்டுருக்கேன். சின்ன பையனா இருக்கும்போது சரவணன் சார்கிட்ட போய் 'ஏன் சார் நம்ம ஒரு 20 ஃப்ளோர் வச்சோம்னா ஆயாசியாவிலயே பெரிய ஸ்டுடியோ நம்ம ஸ்டுடியோ ஆயிடுமே' அப்படின்னு சொல்லிருக்கேன். 'சரி நீ பார்த்துப்பியா அந்த பத்து ஃப்ளோர'ன்னு கேட்டாரு. நான் பயந்து முடியாதுன்னு சொல்லிட்டேன்... Isari Ganesh - Kamal Haasan - Sushmitha இந்த ஃபிலிம் சிட்டியை பார்த்துக்கொள்ளப்போகும் சுஷ்மிதா அமெரிக்காவில் உள்ள ஸ்டோடியோக்களைப் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை இங்கு கொண்டுவர வேண்டும். எனப் பேசினார். மேலும், இந்த பான் இந்தியா மூவி என்பதை துவங்கியதே சென்னைதான். பான் இந்தியா ஃபிலிம் மேக்கிங் ஹப் என்றால் அது சென்னைதான். உலகத்திலேயே அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் இந்த நாட்டில், இப்படி ஒரு இடம் (வேல்ஸ் ஃபிலிம் சிட்டி) இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதர் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது... இங்கே சினிமா பயிலும் ஒரு அரங்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். கவர்மெண்ட் இல்ல; இண்டஸ்ட்ரி அதை செய்ய வேண்டும்! என்றும் கூறினார். கமல்ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி முரசுமோட்டையில் உள்ள ஊடகவியலாளரின் இல்லத்துக்கு சென்ற யாழ் ஊடக அமைய பிரதிநிதிகள் குறித்த நிதியுதவியை நேரடியாக வழங்கி வைத்தனர். இவர் ஈழநாதம் பத்திரிகையில் 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளராகவும், இறுதி யுத்த காலப்பகுதிகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன்? - பரபரக்கும் வீக்எண்டு!
விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். வியானா முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இவர்களில் பிரஜின் சென்ற வாரம் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டார். சென்ற வாரமே பிரஜினுடன் எஃப் ஜே,வும் வெளியில் வருகிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் ஆதிரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததால் எஃப்.ஜே – ஆதிரை – வியானா என முக்கோண ரிலேசன்ஷிப்பில் கன்டென்ட் கிடைக்கும் என எதிர்பார்த்ததால் கடைசி நிமிடத்தில் அந்த முடிவை கை விட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டது. எஃப் ஜே இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நாமினேஷன் பட்டியலில் ரம்யா, சாண்ட்ரா, வியானா, எஃப்.ஜே உள்ளிட்டோர் இருந்த நிலையில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேறலாம் என்ற ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அதன்படி எஃப்.ஜே. ரம்யா, வியானா மூன்று பேருமே இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் இன்றைய எபிசோடிலேயே கூட அனுப்பப் பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். மூன்று பேரும் வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன் எனச் சொல்லலாம்.!
யாழில் கமநல சேவைகள் திணைக்களம் வாழை மற்றும் சிறு பயிர்களுக்கான அழிவுக்கான விண்ணப்ப படிவத்தை இன்று சனிக்கிழமை 13 திகதி கோப்பாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். அனேகமான வாழை விவசாயிகள் தங்கள் தோட்டங்களை துப்பரவு செய்து முடித்துள்ள நிலையில் படிவம் வந்துள்ளது. இதனிடையே புயலின் போது முறிந்த வாழைகளது புகைப்படங்களை கோரும் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்;துள்ளது. வெள்ள அனர்த்தம் நடைபெற்று ஒரு 15நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது முறிந்த மரங்களது புகைப்படங்களை தந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வாக்குறுதி.. பணி நிரந்தரம் எப்போது? எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கேள்வி!
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium
Buddhi Clinic, which has firmly established Chennai as a global hub for neuropsychiatry innovation through its pioneering interventional and integrative
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]
354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் அரசுடமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். நேற்றையதினம் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை […]
சென்னை மாதிரி லக்னோ பதிரனாவை குறிவைக்கும்! சஞ்சய் பங்கர் ஸ்பீச்!
சென்னை :IPL 2026 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 4 சீசன்களாக அணியில் இருந்த ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை விடுவித்துள்ளது. இதனால் ஏலத்தில் பல அணிகள் அவரை குறிவைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரரும் RCB பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பதிரனாவை இலக்காகக் கொள்ளலாம் என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தெரிவித்தார். […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்பு: எகிறும் நாமக்கல் முட்டை விலை- புதிய உச்சத்தால் அச்சம்
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.
சென்னை சென்ட்ரலில் சோலார் பேனல் சிஸ்டம்.. இதன் மூலம் இத்தனை கோடி சேமிப்பா?
தெற்கு ரயில்வே 2030-க்குள் முழு மின்மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. டீசல் செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, சோலார் மின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது.
மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!
மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் ஈசனின் வேக வடிவங்களில் முதன்மையானது ஸ்ரீருத்ர வடிவம். ருத்ர பகவான் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாக இருப்பதால் ஸ்ரீருத்ரனை வணங்குபவர்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும் அவர்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும் எனப்படுகிறது. அதிலும் வேதத்தின் சிறப்பான மந்திரமான ஸ்ரீருத்ரத்தை பலமுறைகள் உச்சரித்து செய்யப்படும் மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ரிஷிகளாலும் முழுமையாக விவரிக்க முடியாத இந்த மகாருத்ர ஹோமத்தின் பலன்களையும் சிறப்புகளையும் இங்கே காண்போம். மார்கழி என்றாலே ஈசனைக் கொண்டாடும் புண்ணிய மாதம். அதிலும் ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்குரிய 6 அபிஷேக நாள்களில் ஒன்றான ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் திருவாதிரை திருநாளும் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும் மாதம் மார்கழி. மார்கழியில் இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சக்தி விகடன் இதழும் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் திருக்கோயிலும் இணைந்து நடத்த விரும்பினோம். அதன்படி வரும் 2026 ஜனவரி 2-ம் தேதி காலை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று சொல்லப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் சிவனடியாரான சிவஸ்ரீ செந்தில்குமார், அருளார்கள் காட்டியருளிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே `அண்டவாணர் அருட்துறை’ என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இந்த ஆலயம் எந்தவித பேதமும் இன்றி எல்லா மக்களாலும் வழிபடப்படும் அதிசய ஆலயம். இங்கு இலவசமாகவே எல்லா வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு அருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர் களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவாரங்களையும் முறையாகப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார் சிவஸ்ரீ செந்தில்குமார். மகாருத்ர ஹோமம் இந்த அண்டவாணப் பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மேலும் ஒருவர் தனது ஆயுளில் ஒருமுறையாவது மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் ஆன்மிக அறிவுரை. இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று 8 விதமான பரிகார பலன்களையும் சொல்லியுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். 1. ருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி உண்டாகும். கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். மகாருத்ர ஹோமம் 2. ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் யாவும் அளிக்கும் ஹோமம் இது. 3. வீரத்தின் அடையாளமான ருத்ர பகவானை திருப்தியாக்கும் வழிபாடு என்பதால் இந்த ஹோமத்தால் தோஷங்களும் பாவங்களும் நீங்கி உங்கள் வாழ்வே புதிய உற்சாகத்தில் மீண்டு எழும். 4. தீர்க்க முடியாத நோய்களும் தரித்திரமும் விலகும். குறிப்பாக மலையளவு கடனும் நீங்கி செல்வசௌபாக்கியம் பெருகும். 5. மங்கல காரியங்கள் யாவும் மளமளவென நடைபெறும். நீங்கள் தொடங்கும் சகல காரியங்களும் சுபமாக முடியும். வழக்குகள் தீரும். 6. கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, எதிர்மறை சிந்தனைகள் தீரும். வீட்டில் சுபீட்சம் உண்டாகும். 7. குடும்ப பிரச்னைகள் தீரும். குறிப்பாக தம்பதி ஒற்றுமை உண்டாகும். தீய சகவாசம், பழக்கங்கள் கொண்டவர் மனம் திருந்தி நல்ல வழியில் நடப்பர். 8. ருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தவர் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று உயர்ந்த பதவியை அடைவர். அவர்களை யாரும் வெல்ல முடியாது என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் சத்திய சாட்சி. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த மகாருத்ர ஹோமத்தில் இன்றே சங்கல்பித்துக் கொள்ளுங்கள். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை!
பிரபல யூடியூபரும், விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று (13.12.25) அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து… The post பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை! appeared first on Global Tamil News .
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவலை கொடுத்த டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்!
சென்னை : வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவுஅதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16 முதல் 18 செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8 கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் […]
`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!
யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த்திக் சிதம்பரம் தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. savukku shankar தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார். கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும். என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்
நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (13) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தத்திற்காக நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். அடுத்த வாரம் பட்ஜெட் விவாதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இத்தாலியின் CGIL தொழிற்சங்கம், அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களில் சுமார் 61% பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது.
Suriya: ஸ்டீபன், பேச்சி - இளம் நடிகர்களைப் பாராட்டிய சூர்யா!
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்டீபன் மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த பேச்சி திரைப்படங்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா. Stephen ஸ்டீபன் திரைப்படத்தில் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோமதி சங்கரை குறிப்பிட்டு பாராட்டினார். நன்கு சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கதையில் சவாலான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் அதன் தன்மை மாறாமல் பதைபதைப்பு குறையாமல் பயணித்துள்ளது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் சூர்யா. ஸ்டீபன் படத்தில் ஒன்பது இளம்பெண்களைக் காணவில்லை. அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ என சரண்டர் ஆகிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, ஸ்டீபனை விசாரிப்பது படமாக விரிகிறது. சட்சட்டென மாறும் முகபாவங்கள், கணிக்க முடியாத செயல்கள் என உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை நம்பகமாகத் திரையில் வார்த்திருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர். Pechi ஸ்டீபனுடன் ராஜமுத்து நடித்த 'பேச்சி' என்ற குறும்படத்தையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூர்யா. ராஜமுத்துவின் நடிப்பை, மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான நடிப்பு எனப் பாராட்டியுள்ளார். யூடியூபில் வெளியாகியிருக்கும் பேச்சி குறும்படம், ஒரு மேய்ப்பன், தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகு, மீண்டும் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கும் கதை. சாதி பாகுப்பாட்டையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் காட்டியிருக்கிறது. Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி
உக்ரைன் 600 தடவை இரசாயணத் தாக்குதல்களை நடத்தியது: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு
ரஷ்யா - உக்ரைன் மோதலில் உக்ரைன் இரசாயன ஆயுதங்ளை பயன்படுத்தி உள்ளது என ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. குளோரோபிக்ரின், சி.எஸ். வாயு, பிரஸ்சிக் அமிலம் உள்பட பல்வேறு ரசாயன பொருட்களை கொண்டு 600-க்கும் மேற்பட்ட முறை உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. படுகொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளன என அந்நாட்டின் உயரதிகாரியான அலெக்சி டிஸ்சேவ் செய்தியாளர்களிடம் கூறினார். உக்ரைனில் உள்ள இரசாயன மற்றும் அணு ஆயுத அமைப்புகளுக்கும் கூட அச்சுறுத்தல்கள் உள்ளன என குறிப்பிட்ட அவர், அவை தீங்கு விளைவிக்கும் ஆபத்துகளும் உள்ளன என கூறினார். இரசாயன ஆயுத தாக்குதலுக்காக ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களையும் உக்ரைன் பயன்படுத்தியது. தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார். எனினும், இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மீண்டும் கொழும்பில் குடியேறும் மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைகள் பெறுவதற்கு இலகுவாக இருப்பதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக கொழும்பில் குடிபெயர உள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சத்திர சிகிச்சை மேற்கள்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்து
கால்வாயில் கவிழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (13) பிற்பகல் 11.00 மணியளவில் பொலன்னறுவை ZD பிரதான இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது வேனில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கியலிருந்து உக்ரைனுக்குச் சென்ற கப்பல் பற்றி எரிகிறது
உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷியா நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் அதனுள் போருக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் இருந்தாகக் கூறப்படுகிறது. துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வருகை.. வன்முறையில் ஈடுப்பட்ட ரசிகர்கள் - நடந்தது என்ன?
மெஸ்ஸி திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், கோபமடைந்த ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
மன்னிச்சிக்கோங்க மெஸ்ஸி..இனிமே இப்படி நடக்காது! கொல்கத்தா சம்பவத்திற்கு சாரி கேட்ட மம்தா பானர்ஜி!
கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் […]
யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் தங்களது… The post யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி! appeared first on Global Tamil News .
டெல்லி மெட்ரோ கோல்டன் லைன்.. லஜ்பத் நகர் முதல் சாகெட் ஜி பிளாக் வரை.. இவ்வளவு நன்மைகளா?
மெட்ரோ ரயில் பயணத்தை விரிவாக்கும் முயற்சியில், டெல்லி மெட்ரோவும் நான்காம் கட்ட விரிவாக்கப் பணிகளை துவங்கியுள்ளது. லஜ்பத் நகர் - சாகெட் ஜி பிளாக் வழித்தடத்தில், எட்டு புதிய நிலையங்கள் இணைக்கப்படுகின்றன.
BB 9: `ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் தரேன்’ - பார்வதி, கம்ருதீனிடம் காட்டமான வி.சே
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 68 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருந்தார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடைப்பெற்றது. பார்வதி, கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வாரம் முழுவதும் மைக்கை சரியாக மாட்டாதக் காரணத்திற்காக பார்வதி, கம்ருதீன் இருவரையும் விஜய் சேதுபதி கோபமாக கேள்வி கேட்கிறார். BB Tamil 9: அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க- பார்வதியை சாடிய விக்ரம் மக்கள் உங்க பேச்சக் கேட்க கூடாதுன்னு முடிவு எடுத்துட்டீங்க, அப்புறம் எதுக்கு உங்களுக்கு மைக். ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் உங்களுக்கு தரேன். விஜய் சேதுபதி மத்தவங்க கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு பிரச்னை இல்ல. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்ல. ப்ளீஸ் மைக்கை கழட்டிடுங்க என்று விஜய் சேதுபதி கோபமாக பேசுகிறார்.
ஈரோட்டில் 8க்கு 8… தவெக போடும் 2026 தேர்தல் கணக்கு… விஜய்க்கு செங்கோட்டையன் கான்ஃபிடன்ட்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரிக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டை தட்டி தூக்க பல்வேறு வியூகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தை பிறந்தால் வழி பிறக்கும்…கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை :தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற புரட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வரும் அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், ஜனவரி 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த், “அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். […]
ஐபிஎல் 2026 மாதிரி ஏலத்தை, ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தினார். அப்போது, இந்த மாதிரி ஏலத்தில், கெமிரான் கிரீன், லியிம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
வாஷிங்டனில் வௌ்ளம்: பல ஆயிரம் குடும்பங்கள் வௌியேற்றம்
வாஷிங்டன்னில் தொடர் கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தில் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் அடித்து செல்லப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வௌ்ளம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் வாஷிங்டன் மாகணத்தின் சியாட்டில் பாயும் […]
'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! > பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்! தமிழ்நாடு > கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி! > 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! > நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்! > தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! > 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால்… pic.twitter.com/FPwNC9Xl0b — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 13, 2025
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது! வீட்டின் கதவை உடைத்து நடவடிக்கை-ஏன் தெரியுமா?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா: கர்ப்ப பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்படும் மாணவிகள்; அரசு பழங்குடி விடுதிகளில் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் தானே, நாசிக், கட்சிரோலி, புனே உட்பட சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக பழங்குடியின நலத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆசிரம பள்ளிகள் என்று அழைக்கப்படுகிறது. சில இடங்களில் விடுதியுடன் கூடிய பள்ளிகளும் இருக்கிறது. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வரும்போது அவர்களுக்கு விடுதி நிர்வாகம் கொடுக்கும் இன்னல்களை கண்டு மாணவிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கின்றனர். பருவம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இது போன்ற மாணவிகள் விடுமுறை முடிந்து விடுதிக்கு வரும்போது அவர்களிடம் கர்ப்ப பரிசோதனை அறிக்கை கொடுக்கும்படி விடுதி நிர்வாகம் கேட்கிறது. அதாவது மாணவிகளிடம் கர்ப்ப பரிசோதனை கிட் வாங்கி அதனை சிறுநீரகத்தில் சோதித்து உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள டாக்டரிடம் காட்டி, தான் கர்ப்பம் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வரச்சொல்கிறார்களாம். இதனால் மாணவிகள் தேவையில்லாமல் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மாணவிகள் தங்களது சொந்த பணம் ரூ.150 முதல் 200 ருபாய் செலவு செய்து கர்ப்ப பரிசோதனை கிட்களை வாங்கி இச்சோதனையை செய்ய வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இது போன்ற சோதனைகளை செய்ய சொல்லி மாணவிகளை தேவையில்லாமல் அலையவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் திருமணமாகாத மாணவிகளிடம் இது போன்ற ஒரு சோதனையை செய்து கொள்ளும்படி கூறுவது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். புனேயில் ஒரு பழங்குடியின மாணவிகள் விடுதியில் இது போன்ற சோதனைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொதித்து எழுந்துள்ளனர். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில்,''நாங்கள் விடுமுறை முடிந்து உற்சாகமாக விடுதி திரும்பினோம். ஆனால் எங்களை குற்றவாளிகளைப்போல் நடத்துகின்றனர்''என்று குறைபட்டுக்கொண்டார். இது குறித்து நாசிக் ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை கூறுகையில்,''விடுதியின் செயலால் எனது மகள் உடைந்துவிட்டாள். உங்கள் அமைப்பு ஆரோக்கியமற்றது என்பதற்காக அவர்களை ஏன் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சியால் தண்டிக்க வேண்டும்?என்றார். இது போன்ற நடைமுறை மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் ஆசிரம பள்ளியில் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த நடைமுறை குறித்து பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தாங்கள் அது போன்ற எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டனர். இது தொடர்பாக அத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,'' இது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அத்தகைய அங்கீகரிக்கப்படாத கர்ப்ப பரிசோதனையை ஒரு போதும் அனுமதிப்பதும் இல்லை. இது போன்ற செயலில் ஈடுபடும். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்று தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதமே இது தொடர்பாக குற்றச்சாட்டு வந்தது. ஆனால் அப்போது அரசு பெண்கள் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. இப்போது மீண்டும் அதே பிரச்னை தலைதூக்கி இருக்கிறது. பெண்கள் நல உரிமையாளர்கள் இது குறித்து கூறுகையில்,''இது ஆணாதிக்க அத்துமீறல்களுக்கு சிறந்த உதாரணம். இந்த நடைமுறைகள் பழங்குடியினப் பெண்களை மேம்படுத்துவதற்கு உள்ள அரசு விடுதிகளின் நோக்கத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக இருக்கிறது''என்று தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?
அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர் வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது. தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 15-ம் தேதியில் தான், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் கூட்டம் நடக்கும் எனவும் அதில் இறுதி முடிவை அறிவிப்பதாக முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில், அமித் ஷா தமிழ்நாடு வருகை அறிவிப்பு வெளியானது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்கான தேதியைத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன் அடம்பிடிக்கும் கே.பழனிசாமி அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் எடுக்காத முயற்சிகளே இல்லை. பாஜக மேலிடமும் கே.பழனிசாமியிடம் பேசி பார்த்தது. ஆனால், அவர் கொஞ்சம்கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. ஒருகட்டத்தில் (கடந்த ஜூலை மாதம்) பன்னீர்செல்வம் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இருந்தாலும், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து வந்தார் அவர். கடந்த 7-ம் தேதி, கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்தும் பேசினார். இந்தநிலையில் தான் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாசிட்டிவ் சிக்னல்? தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். சில மாதங்களாக, ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இடையில் செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி.தினகரனும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன? பாஜக நகர்வுகள் இன்னொரு பக்கம், பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது. 'மெகா கூட்டணி' என்கிற பெயரில் தான் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில் அந்த இரு கட்சிகளைத் தவிர வேற எந்தக் கட்சியும் இதுவரை இடம்பெறவில்லை. தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக. அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் முடிவு? இதை பாஜக செய்யும் என்று நினைத்து தான் பன்னீர்செல்வமும் தனது முடிவை ஒத்தி வைத்திருக்கிறார். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தப் பேச்சு அவர் டெல்லி சென்ற போதே எழுந்தது. தனிக்கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட திட்டமும் அவர் வசம் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இவை அனைத்தும் அமித் ஷா தமிழ்நாடு வருகைக்கு பிறகே தெரியும்.! இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?
எம்.ஜி.ஆர், விஜய் ஒப்பீடு சரியில்லை… ஆனால் இவர் ஒரு Cult- ஐ.நா கண்ணன் அதிரடி!
தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா கண்ணன் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Messi `GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச. 13)இந்தியா வந்தார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருத்திருந்தனர். பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. Kolkata அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்த 236 ரன்கள் இலக்கை, ஜார்கண்ட் அணி துரத்தி, அபார வெற்றியைப் பெற்றது. இஷான் கிஷன், குஷக்ரா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார்கள். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.
ரயில் பயணிகளுக்கு தரமான உணவு.. ஃபிளைட் ரேஞ்சுக்கு இருக்கும்.. சூப்பர் திட்டம்!
ரயில்களில் விமானங்களுக்கு ஈடான தரமான உணவுகளை வழங்கும் திட்டத்த்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
குஜராத்தில் பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது: 5 பேர் காயம்!
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கட்டுமானத்திலிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரஞ்ச் நதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியைச் சமன் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்துவிழுந்தது. இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. பாலத்தின் இடிந்துவிழுந்த பகுதியில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஐந்து பேரும் நிலையாக இருப்பதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் […]
கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியாவின் கொல்கத்தாவில் காத்திருந்த அனுபவம், ஒரு கசப்பான வரலாறாக… The post கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி! appeared first on Global Tamil News .
இண்டிகோ நிறுவனத்துக்கு கடும் அபராதம்.. அடுத்தடுத்து வரும் பிரச்சினைகளால் அவதி!
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
⚖️ முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுதலை
இலங்கையின் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருந்த ஒரு வழக்கில், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வால (Ashoka Ranwala) நீதிமன்றத்தால் பிணையில்… The post ⚖️ முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுதலை appeared first on Global Tamil News .
பாதியில் கிளம்பிய மெஸ்ஸி …டென்ஷனாகி பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்!
கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட […]
ஐஸ்வர்யா ராய்: பொறுத்துக்கொள்ள முடியாது - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி
நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது. அபிஷேக் பச்சன் எங்கள் இருவருக்கும் உண்மை என்னவென்று தெரியும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அதனால் இதுபோன்ற வதந்திகள் எங்களைப் பாதிப்பதில்லை. அதேநேரம் என்னையும் என் குடும்பம் பற்றியும் பொய்யான, முட்டாள்தனமான விஷயங்களைப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். பீகார்: ரயிலில் யாசகம் எடுத்தப் பெண்ணை விரும்பி மணந்த இளைஞர் - நெகிழ்ச்சி கதை
⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! –மனோ கணேசன்
சமீபத்தில் மலையகத்தில் ஏற்பட்ட பேரவலத்திற்குப் பிறகு, அங்குள்ள மக்களின் பிரதானமான கோரிக்கையாக “பாதுகாப்பான வதிவிடக் காணி” என்ற உரிமை… The post ⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! – மனோ கணேசன் appeared first on Global Tamil News .
2026 புத்தாண்டுக்கு IRCTCயின் சுற்றுலா பேக்கேஜ்: பெங்களூரு டூ காசி–கயா–அயோத்தி பயணம்- முழு தகவல் இதோ
2026 புத்தாண்டை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூருவில் இருந்து காசி, கயா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல் வெளியாகி இருக்கிறது.
சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன் என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்து பதற்றமடைந்தார். சாலை மறியல் உடனடியாக அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அருணின் மனைவி இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்தார். உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் - காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்!
தொழிலதிபரை ஏமாற்றிய விகாராதிபதிக்கு பிடியாணை!
தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி உவதென்ன சுமன தேரர் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா தேங்காய் எண்ணெய்க்காக மோசடியான காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபரான பிக்கு காவலில் வைக்கப்பட்டு […]
சீனா்களுக்கான தொழில்முறை நுழைவு இசைவு அனுமதியை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவு: சீனா வரவேற்பு
இந்தியா வரும் சீன தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவை சீனா வெள்ளிக்கிழமை வரவேற்றது. இதுகுறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் கூறியதாவது: தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்க இந்தியா எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. நோ்மறையான நடவடிக்கை. நாடுகளுக்கி இடையேயான பணயத்தை எளிதாக்குவது அனத்து தரப்பினரின் பொது நலனுக்கு நன்மையை […]
தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி தகவல்!
சென்னை :தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) காரணமாக சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். “தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் திமுக ஈடுபடும். டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியான பிறகு SIR பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்” என்று அவர் கூறினார். அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கையை உயர்த்தியது எப்படி என்றும் கேள்வி […]
முல்லைத்தீவு விபத்தில் காயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு
கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது. பிரபல உதைபந்தாட்ட வீரர் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். […]
பகிடிவதை குற்றச்சாட்டு –யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை […]
அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை!
2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை ஈரானியப்… The post அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை! appeared first on Global Tamil News .
ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் (RGAY)!
Rajiv Awas Yojana (RAY) Housing Scheme: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதோடு, பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை (Ragging) குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட 19 சிரேஷ்ட மாணவர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி… The post யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️ appeared first on Global Tamil News .
தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? ஆர்.எஸ்.பாரதி கருத்தும், தராசு ஷ்யாம் ரியாக்ஷனும்!
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 85 லட்சம் பேர் நீக்கப்பட்டு விடுவர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இந்த சிக்கல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
Beyond Vanity Metrics: Why 2025 Became the Year of Meaningful Influence
For years, influencer marketing in India grew on a foundation of shallow indicators—follower counts, likes, and impressions. These vanity metrics shaped budgets and brand decisions despite offering little clarity on true impact. But as India’s creator economy matured, 2025 became the year the industry decisively shifted from superficial numbers to meaningful, measurable influence. This transformation was driven by market realities, long-overlooked inefficiencies, and the growing need for data-backed deployment and the first few to rise agilely to the occasion were the Founder led D2C brands who had no option but to make it work. The Hidden Market That Changed Everything One of the biggest triggers for this shift was the realisation that the influencer marketing industry had been massively undercounted. While traditional estimates placed the sector at ₹3,000–4,000 crore, KlugKlug’s data revealed that India’s actual influencer marketing economy had already crossed ₹10,000 crore. Nearly 75% of all spending was happening outside the typical larger Brands or agency channels—through direct brand-creator engagements, founder-driven D2C Brand campaigns, and long-tail micro-influencer collaborations. These hidden investments exposed how outdated measurement models were, forcing brands to rethink how they quantify influence.As spending grew, so did inefficiencies. KlugKlug’s analysis showed that for larger conventional brands, only 50–60% of brand budgets reached creators, And another 30–50% was lost to audience fraud, mismatched influencer selection, demographic misalignment, and poor hygiene checks. A creator with 500,000 followers meant nothing if 40% of that audience was inactive or irrelevant. Brands realised that vanity metrics inflated perceptions but not outcomes. Audience authenticity, relevance, and measurable engagement became the new currency of influence. The Rise of Value-Based Influence To counter inefficiencies, brands began adopting advanced measurement models like KlugKlug’s K-EMV and other associated Deep Interaction Ratios, which revealed the true earned media value of influencer campaigns. Beauty brands consistently delivered 1.8–2.5X earned value, while categories like home and kitchen recorded 5–7X multipliers—far beyond what vanity metrics suggested.The Big Consumer Reality - GenZ: 43% of India’s shoppers now Gen Z,who have extremely defined media consumption (Social media ie YouTube and Instagram, Gaming, OTTs), traditional advertising can no longer compete. Content and Influencer Marketing is not just another media in the mix, its where discovery, trust and purchase decisions are being made, not just amplifiers its the most trusted and frequently accessed touchpoint in the consumer journey of 43% of a very powerful audience. One only needs to add Millenials to the mix and the market would not have much else left. Attribution Became Non-Negotiable 2025 also marked a breakthrough in how brands measured conversions. Earlier attribution models captured only 8–12% of true impact which was myopically (and expectedly) through link clicks and swipe-ups, leaving the majority of influence unaccounted for. The smarter marketers in the industry began shifting to holistic attribution—connecting awareness, engagement, intent, and commerce. And what was this: a Delta in Sales everything else being equal, and things like Purchase Intent KPIs on Ecommerce platforms much like our Unaided recall in the brand track days. This evolution allowed marketers to measure influence across every stage of the funnel, not just the last-click metrics that had dominated for years. Deployment 2.0 Redefined ROI With better hoslistic measurement came smarter deployment strategies. Brands adopted precision-driven frameworks that evaluated creators based on audience behaviour, interest clusters, geography, engagement hygiene, and category relevance. These scientific models improved Spend: EMV efficiency by 30–100%, proving that influence wasn’t about working with the biggest creators—it was about working with the right ones. The industry moved from “posting content” to engineering influence. A Permanent Shift Toward Authenticity By the end of 2025, the old playbook of influencer marketing has become obsolete for businesses and the larger brands have much catching up to do and its happening. Brands no longer caring about Views or topline Engagement or follower vanity of deployed an X number of ‘Mega” Influencers who are fatigued and pretty much the lowest ROI in the ecosystem. The demand for audience transparency, validated impact, and honest attribution beyond clicks. Creators, too, evolved—focusing on community building, credibility, and delivering commerce-linked results. Meaningful influence became the new benchmark, reshaping partnerships, budgets, and content formats across the ecosystem. Wrapping it up 2025 will be remembered as the year when the Indian influencer industry transitioned from hype-driven metrics to outcome-driven credibility. With more accurate market valuation, stronger measurement tools, and data-first frameworks, influence is now defined not by visibility but by verifiable impact. This shift has unlocked a more transparent, efficient, and trustworthy creator economy—ushering in an era where influence finally means something.(Views are personal)
Asian Paints launches Apex Ultima Protek campaign featuring Chess Grandmasters Anand and Gukesh
Mumbai: Asian Paints has unveiled its latest campaign for Apex Ultima Protek, showcasing Graphene-powered exterior protection designed to withstand Southern India’s harsh weather conditions. The campaign features chess legends Viswanathan Anand and Gukesh Dommaraju, blending science, strategy, and storytelling to position the product as the “Grandmaster of Tough Protection.”The film presents Anand and Gukesh in a playful duel of wits, drawing a parallel between strategic brilliance in chess and intelligent defense for homes. Apex Ultima Protek’s advanced Graphene technology reinforces its lamination system, offering superior resistance against rain, heat, humidity, and dust, and comes with a 12-year performance warranty.Speaking on the launch, Amit Syngle, MD & CEO, Asian Paints , said, “Innovation drives everything we create at Asian Paints, and the move towards Graphene-powered protection marks a major leap forward in the exteriors category. Southern India’s coastal weather deserves solutions rooted in advanced science, and Graphene enables a level of toughness and durability never seen before in exterior paints. Apex Ultima Protek powered with Graphene embodies this breakthrough. Featuring Viswanathan Anand and Gukesh Dommaraju, we have conceptualised this campaign to bring alive the idea of strategic, intelligent defence from the chess board to the exterior walls of your home. This communication brings together all the 3 grandmasters crafting the perfect move.” B. Ramanathan, Chief Client Officer, Ogilvy India, added, “This campaign features Vishy and Gukesh emphasizing the importance of defence — in the game and for homes. Their chemistry lands the power of Graphene in a simple, engaging manner, positioning Asian Paints Apex Ultima Protek as the true Grandmaster of Home Protection.” Through this campaign, Asian Paints reinforces its commitment to innovation, combining cutting-edge technology with culturally resonant storytelling to deliver unmatched exterior wall protection for homes in Southern India.https://www.youtube.com/watch?v=BTcwQzBpH7ohttps://www.youtube.com/watch?v=NeCQGbtVyCohttps://www.youtube.com/watch?v=69r1kGyNcuM
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; முற்பணம் வழங்குவது குறித்து வெளியான சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரச ஊழியருக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை […]
Chennai Hosts Asia’s Largest Interventional Complications Course in Cardiology
Asia Interventional Complications Course (AICC 2.0), in association with Promed Hospital, was held in Chennai as a two-day advanced academic
Xiaomi India launches REDMI 15C 5G with sleek design, immersive display and dependable performance
Xiaomi India today announced the launch of the REDMI 15C 5G, a smartphone designed to deliver a sleek aesthetic, a
15 ஆம் தேதி நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு!
பாங்காக், டிச. 12: கம்போடியாவுடன் நடைபெறும் தீவிர மோதலுக்கிடையே தாய்லாந்தின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. விரைவான புதிய தோ்தலுக்கு வழிவகுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘மக்களிடம் அதிகாரத்தை திரும்ப அளிப்பதற்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’ என்றாா். ஏற்கெனவே மன்னா் மஹா வஜ்ரலங்காரனின் அங்கீகாரத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த கலைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிய தோ்தலை இன்னும் 45 முதல் […]
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட
எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு

22 C