நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 - 27ஆம் திகதி வரையில் கனமழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில், புதிய காற்றுச் சுழற்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் எதிர்வரும் 19ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது புயலாக மாறி தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத் தாழமுக்கத்தின் விருத்தி, கரையைக் கடக்கும் இடம் என்பனவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும். ஆனாலும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டுக்கான வடகீழ்ப் பருவமழை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அதிகரிப்பதோடு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 27 ஆம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும். கடந்த பல வருடங்களாக நவம்பர் 25,26,27ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கன மழையைப் பெறுவதுண்டு. இவ்வருடமும் அது தொடரும். இவ்வாறான காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும் என மேலும் தெரிவித்தார்
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வெளிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த வருமானம் கடந்த ஆண்டின் […]
கடவுள் நம்பிக்கையை மிக ஆழமாக சொன்ன வித்யாசமான படம்- எனக்கு மிக பிடித்த படம்
தமிழ் சினிமாவில் ஏபி நாகராஜன் காலத்தில் இருந்து எண்ணற்ற படங்கள் பக்திபடங்களாக வந்துள்ளன, பிறகு வந்த ராம நாராயணன், இறையருள் இயக்குனர் சங்கர் வரை பல்வேறுவிதமான பக்திப்பட இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளார்கள், இவர்களின் படங்களில் இவர்கள் பக்தியை சொன்ன விதம்… The post கடவுள் நம்பிக்கையை மிக ஆழமாக சொன்ன வித்யாசமான படம்- எனக்கு மிக பிடித்த படம் appeared first on Tamilnadu Flash News .
நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி
அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உகாண்டாவில் பிறந்து, இந்தியாவில் வேரூன்றி, குயின்ஸ் மாகாணத்தின் அஸ்டோரியாவில் எளிய வாடகை குடியிருப்பில் வாழ்ந்த இந்த 34 வயது ஜனநாயக சோசலிசவாதி, நகரத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மற்றும் முதல் தெற்காசிய மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார். ஜோஹ்ரான் மம்தானி சாதாரண மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்னைகளான வாடகை உயர்வு, வாழ்வாதாரச் செலவு மற்றும் சுகாதாரச் சிக்கல்களை மையமாகக் கொண்ட அவரது தேர்தல் பிரசாரம், அடித்தள மக்களின் நம்பிக்கையை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி, அரசியல் ஆளுமைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி, உழைக்கும் வர்க்க மக்களின் குரல் மேலோங்குவதை உறுதி செய்துள்ளது. நியூயார்க் நகருக்கு `இந்திய வம்சாவளி’ மேயர்... கடும் விரக்தியில் ட்ரம்ப் - யார் இந்த ஸோரான் மம்தானி? மம்தானியின் தற்போதைய வாழ்க்கைச் சூழல், அவர் அடுத்து செல்லவிருக்கும் இடத்துடன் முற்றிலும் வேறுபட்டது. அவரும் அவரது மனைவி ரமா துவாஜியும் தற்போது அஸ்டோரியாவில் சுமார் 800 சதுர அடி கொண்ட ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்பில் ஒருநாள் காலை குளியலறை ஒழுகியதால், தரையெங்கும் துண்டுகளைப் பரப்பிய அனுபவத்தை அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டார். இந்த எளிய பின்னணியில், நியூயார்க் மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான, 226 ஆண்டுகள் பழமையான மற்றும் 11,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கிரேசி மாளிகைக்கு (Gracie Mansion) அவர் மாறவுள்ளார். ஜோஹ்ரான் மம்தானி ஈஸ்ட் நதி காட்சியுடன், ஃபயர்ப்ளேஸ், பிரமாண்டத் தோட்டம், நிரந்தர சமையல்காரர் போன்ற வசதிகளைக் கொண்ட இந்த மாளிகையில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான மேயர்கள் இங்கு குடியேறுவதே வழக்கம். எனினும், தான் எங்கு வசிக்கப் போகிறேன் என்பதை மம்தானி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஜோஹ்ரான் மம்தானி மம்தானியின் தேர்தல் பிரசாரம், சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய அடித்தள மக்கள் இயக்கத்தின் (grassroots movement) மூலமாகத் திரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களால் பலப்படுத்தப்பட்டது. அவரது செய்தி, இந்தி, அரபு மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, நியூயார்க்கின் பன்முக சமூகங்களிடையே ஆழமாக வேரூன்றியது. ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம் தனது இஸ்லாமிய அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டபோதும், உழைக்கும் வர்க்க மக்களுக்காகப் போராடுவதன் மூலம், அவர் நியூயார்க் வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவரது வெற்றி, நியூயார்க் நகரத்தில் அரசியல் சித்தாந்தம் மற்றும் அதிகார மையங்கள் மாறுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
அரச ஊழியர்களின் தகுதி! வெளியான பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சீரழிக்கப்பட்ட அரச சேவை மேலும், இந்த நாட்டில் அரச துறையானது கடந்த காலங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு சீரழிக்கப்பட்ட அரச சேவை பின்னர் பயனற்ற ஒரு சேவையாக […]
வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் யாழ்.வாசி கைது
கொழும்பில் கைத்துப்பாக்கியுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது , கைத்துப்பாக்கியை தான் பிறிதொரு நபருக்கு வழங்க எடுத்து சென்றதாக கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை பெற இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த காரினை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர். அதன்போது சாரதி , காரினை நிறுத்தாது பொலிஸாரின் கட்டளையை மீறி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பொலிஸார் காரினை துரத்தி சென்று , வழிமறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது, காரின் சாரதியின் இருக்கையின் கீழிருந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். அதனை அடுத்து , சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் , கைத்துப்பாக்கியை வத்தளையை சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்க வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் , சாரதி குறிப்பிட்ட நபரையும் வத்தளை பகுதியில் வைத்து , பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பத்திரிகை தொடர்பின் (PR) உண்மையான சக்தி: வெளிப்பாட்டை விட நம்பகத்தன்மையே முக்கியம்!
நாம் அனைவரும் நினைக்கிறோம், பத்திரிகை தொடர்பு (Public Relations – PR) என்பது ஊடகங்களில் இடம்பெறுவது அல்லது வண்ணமயமான செய்தி
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’திரைப்படம் 2025 டிசம்பர் 18 அன்று உலகமெங்கும் வெளியீடு!
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது பிரம்மாண்ட படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள “ரெட்ட
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து துஷார் வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வெளியேற்றியிருக்கிறார்கள். அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ ரம்யாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் காந்தி கண்டனம் |வீடியோ
மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு பரிமாறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில்... நான் இன்று மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறேன். பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு செய்தித்தாள்களில் பரிமாறப்பட்ட செய்தியைப் பார்த்த போதிலிருந்து என் இதயம் உடைந்துவிட்டது. இந்த அப்பாவி குழந்தைகளின் கனவுகளில்தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஒரு தட்டு கண்ணியம் கூட கிடைக்கவில்லை. நியூஸ் பேப்பரில் மதிய உணவு கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம் 20 ஆண்டுகால பாஜக ஆட்சியில், அவர்கள் குழந்தைகளின் தட்டைக் கூடத் திருடியிருக்கின்றனர். 'வளர்ச்சி' என்பது வெறும் மாயை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'சிஸ்டம்'. இந்தியாவின் எதிர்காலங்களுக்கு, இப்படியான பரிதாபகரமான நிலையில், உணவு பரிமாறுவது குறித்து இத்தகைய முதலமைச்சரும், பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த உங்களுடைய கருத்துகளை கமெண்ட் செய்யுங்க மக்களே.. आज मध्य प्रदेश जा रहा हूं। और जब से ये खबर देखी है कि वहां बच्चों को मिड-डे मील अख़बार पर परोसा जा रहा है, दिल टूट सा गया है। ये वही मासूम बच्चे हैं जिनके सपनों पर देश का भविष्य टिका है, और उन्हें इज़्ज़त की थाली तक नसीब नहीं। 20 साल से ज्यादा की BJP सरकार, और बच्चों की थाली… pic.twitter.com/ShQ2YttnIs — Rahul Gandhi (@RahulGandhi) November 8, 2025 ஹரியானா: 25 லட்சம் போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார் - ராகுல் காந்தி
பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்த 9 வயது பள்ளி சிறுமி: வெளிவரும் பகீர் உண்மைகள்
ராஜஸ்தானில் 9 வயது பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொண்ட 9 வயது சிறுமி கடந்த நவம்பர் 1ம் திகதி அமய்ரா என்ற 9 வயது சிறுமி ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுமி அமய்ராவின் தாய் ஷிவானி தன்னுடைய மகள் பள்ளியில் […]
️ ஆதார் –வாக்காளர் அட்டை இணைப்பு: அரசியல் கபடமும் ஜனநாயகத்தின் கேள்வியும்!
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி வேரூன்றியுள்ள நிலையில், ஆதார் அட்டை என்பது அரசின் அனைத்து சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திடீர் ஆலோசனை!
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.
Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?
Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்தம் பொதுவாக 120/80 இருக்கும். இது 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே இருந்தால் அதை நாம் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) என்று சொல்கிறோம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே குறையும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து முக்கியமான உறுப்புகளுக்கு, குறிப்பாக, மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் போன்றவற்றுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்வது குறைகிறது. இதன் விளைவாக சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. மூளைக்கு ரத்தம் குறையும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் வரலாம். சில நேரங்களில் நினைவில்லாமல் கீழே விழவும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே ரத்த அழுத்தம் குறையும்போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். கண் பார்வை மங்கலாகத் தெரியும். சிலருக்கு மனக் குழப்பமும் மறதியும் ஏற்படும். தொட்டுப் பார்த்தால் ஜில்லென்று இருக்கும். மற்றும் சிலருக்கு வியர்வை இருக்கும். சில நேரங்களில் மயக்கமாகி கீழே விழுவதும் வாய்ப்பாக இருக்கிறது. தலைச்சுற்றல் Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? நீண்ட காலமாகக் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். இதயத்திற்கு ரத்தம் குறைவதால், இதயத்துடிப்பு சீரற்றதாகவும் அசாதாரணமானதாகவும் மாறலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மார்பில் வலி, படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். ரத்தம் வடிகட்டப்படுவது குறைவதால், சிறுநீரில் அசுத்தமான பொருள்கள் வெளியேறுவது குறையும். ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கலாம், உடலில் தண்ணீர் தேங்கி, வீக்கங்கள் ஏற்படலாம். சில நேரங்களில், ரத்தம் அழுத்தம் அதிகமாகக் குறைந்து தொடர்ந்து நீடித்தால், ஷாக் (Shock) என்று சொல்லக்கூடிய உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது மிகவும் குறைந்த ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. சிலருக்கு இயற்கையாகவே குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். குறிப்பாக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இந்த மாதிரி இயற்கையாகவே ரத்த அழுத்தம் சற்று குறைந்த நிலையில் இருந்து, அவர்களுக்கு நீரிழப்பு இல்லாமல், வேறு பிரச்னைகளோ அல்லது வேறு நோய்களோ இல்லாமல் இருந்தால், அவர்கள் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. வாந்தி, பேதி அல்லது அதிக அளவில் வியர்வை வெளியேறுதல் போன்றவற்றால் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு ஏற்படும். நீரிழப்பு உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்? நீண்ட நேரம் பசியுடன் சாப்பிடாமல் இருந்தாலும் ரத்த அழுத்தம் குறையலாம். அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உட்கொள்ளும் மருந்துகளின் (உதாரணமாக, பீட்டா-பிளாக்கர்கள் அல்லது டையூரிடிக்ஸ், ஆல்ஃபா பிளாக்கர்கள்) தாக்கம் அதிகமாக இருக்கும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம். மனச்சோர்வுக்கான மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டால், இதயத்துடிப்பு சீரற்று மாறினால் அல்லது இதயச் செயலிழப்பு அதாவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறைவதாலும் ரத்த அழுத்தம் குறையலாம். இது போன்ற நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism) போன்ற அல்லது அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டுக் குறைவு போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு அதிகம். விபத்துகளில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது திடீர் ரத்த இழப்புக்கு மிக முக்கியமான காரணம். விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் Golden Hour என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்த அழுத்தத்தை, ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்து, உடனடியாகச் சரிசெய்தால், 95 சதவிகிதம் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு அதிகம். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் இழப்பு ஏற்பட்டால், அதற்கான ரத்த மாற்று (Blood Transfusion) செய்து உடனடியாகச் சரிசெய்ய முடியும். ஆபத்தான கிருமித்தொற்று அதிகரித்து, செப்சிஸ் அல்லது செப்டிக் ஷாக் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறையலாம். செப்டிக் ஷாக்கிற்கு உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள் கொடுத்து, ரத்த அழுத்தத்தை உடனடியாகச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இதயம், மூளை, குறிப்பாக.. சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். ரத்தம் குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்; வெறும் வயிறாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். பலவீனமாக இருப்பவர்கள், நீரிழப்பு உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் திடீரென எழுவதைத் தவிர்க்க வேண்டும். படுத்து எழுந்தவுடன், மெதுவாக உட்கார்ந்து 30 முதல் 40 நொடிகள் இருக்கவும். பிறகு நின்று 20 நொடிகள் கழித்து நடக்கவும். இரவு தூக்கத்தில் BP குறைவாக இருக்கும். திடீரென எழுவது மேலும் குறையச் செய்து மயக்கம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருந்தால், உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சையை எடுக்கவும். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சரிசெய்ய நல்ல மருந்துகள் உள்ளன. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா?
ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் ரமேஷுக்கு உதவுவது போல் நடித்து தங்களது ஏ.டி.எம் கார்டை முதியவரிடம் கொடுத்துவிட்டு முதியவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் திருடியதுடன், அதே ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 75 ஆயிரம் ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கி அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைத் திருடியுள்ளனர். கைதானவர்கள் இதை அறிந்த முதியவர் ரமேஷ், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சிய திக் திக் சம்பவம் ஏ.டி.எம் மையத்திலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், நூதன திருட்டில் ஈடுபட்ட இருவரும் வேலூர் மாவட்டம் பொய்கைநாவிதம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான கார்த்திக் 27, பார்த்திபன் 24, என்பது தெரியவந்தது. ராஜபாளையம் SBI ATM இதையடுத்து வேலூருக்குச் சென்று சகோதரர்களைக் கைது செய்த போலீசார் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்குப் பயன்படுத்திவந்த சொகுசுக் காரையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். “கஞ்சா போதை, வழிப்பறி, திருட்டு, கொலை...” - ‘15 வயதிலிருந்தே குற்றச் செயல்கள்... 11 வழக்குகள்...’
வாகன இறக்குமதி தொடர்பிலான ரகசியத்தை உடைத்த ஹர்ஷ டி சில்வா
நாட்டின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மைக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் இத்தகைய எண்ணிக்கையிலான வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதுவே அரசாங்கத்திற்கு வருமானத்தைத் தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்களும் இதனை எதிர்பார்க்கவில்லை, எங்களுடைய கணிப்பு தவறாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என ஹர்ஷ டி சில்வா […]
நீரிழிவு ,உடல் பருமன் இருந்தால் அமெரிக்கா விசா கிடைக்காது!
அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் எந அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அனுப்பியுள்ள இந்த வழிகாட்டுதல்களின்படி, இத்தகைய மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்கள் அமெரிக்காவின் வளங்களுக்கு சுமையாக மாறக்கூடும் என்பதால், அவர்களின் விசா விண்ணப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதய நோய்கள், புற்றுநோய்கள், சுவாச நோய்கள் இதய நோய்கள், புற்றுநோய்கள், சுவாச […]
ஒரு வருட விசாரணையின் பின்னர் கழிவறை குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்
கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் இன்று (08) மீட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலை கடந்த 2024.09.08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் போனமை குறித்து உயிரிழந்தவரின் சகோதரரால் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் ஒரு வருட […]
தமிழக ஊடக உலகம்: அறம் தவறிய நாடக மேடை!
தமிழகத்தின் ஊடகப் பரப்பைப் பார்க்கும் போது, ஒரு நிதர்சனம் பளிச்சென்று தெரிகிறது. ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தம், அரசியல் விழிப்புணர்வு
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஒருவர், 40 போட்டிகளுக்கு பிறகு பந்துவீசியிருக்கிறார். இப்போட்டியில், டிவோன் கான்வே அரை சதம் அடித்தார்.
சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்: வினோத சாதனைகளின் வியத்தகு வரலாறு!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம், மனிதர்களின் திறமை, வினோத
சர்க்கரை/BP/உடல் பருமன் உள்ளதா? அமெரிக்க விசா கிடையாது!
சமீபத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை வழிகாட்டுதல்களின்படி, நாள்பட்ட மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள்
சீனாவை அடுத்து இந்தியா செல்கிறார் ரில்வின் சில்வா
ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரில்வின் சில்வா அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாகவும், அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. அண்மையில் ரில்வின் சில்வா மூன்று வாரங்கள், சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்தியப் பயணம் இடம்பெறவுள்ளது. ரில்வின் சில்வா கடந்த காலங்களில் கடுமையான இந்திய எதிர்ப்பு
⚖️ தேசிய சட்ட சேவைகள் நாள்: நீதிக்கான கதவைத் திறக்கும் ஒரு தினம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதி தேசிய சட்ட சேவைகள் நாள் (National Legal Services Day
வடக்கில் பாகிஸ்தானியர்கள்- தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை
வடக்கு மாகாணத்தில் பாகிஸ்தானியர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளமை தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்களில், கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மன்னாரில் அண்மையில் இடைநிறுத்தப்பட்ட காற்றாலைத் திட்டத்திற்காக உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்று 28 பாகிஸ்தானியர்களை கொண்டு வந்த நிலையில், இந்த கரிசனைகள் உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. காற்றாலை திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு
18 மில்லியன் டொலர் செலவில் 4 உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க அமைச்சரவை அனுமதி
சிறிலங்கா விமானப்படைக்கு அவசரமாகத் தேவைப்படும் நான்கு எம்.ஐ-17 (MI-17) உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க, 18 மில்லியன் டொலர் ஏலத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மிகக் குறைந்த மதிப்பீட்டை வழங்கிய பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் மெஸ்ஸஸ் வின்ஸ்லி டிபென்ஸ் குழுமத்தின் உள்ளூர் முகவர் மெஸ்ஸஸ் செகுராடெக் லங்கா நிறுவனத்திற்கு இந்த ஏலம் வழங்கப்பட்டுள்ளது. நான்கு உலங்குவானூர்திகளையும் பழுதுபார்ப்பது மற்றும் ஆயுட்காலத்தை நீடிப்பற்குமான முழு செலவு
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 10 முதல் 16 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் -பயணத் திட்டம் குழம்பியது
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்திக்கானுடனான சிறிலங்காவின் 50 ஆண்டுகால உறவை நினைவுகூரும் வகையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நொவம்பர் 3 ஆம் திகதி சிறிலங்கா வந்த பேராயர் கல்லாகர், அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்
இந்திய – சிறிலங்கா படைகளின் 11வது மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
இந்திய – சிறிலங்கா படைகள் ஆண்டு தோறும் இணைந்து நடத்தும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் 11 வது பயிற்சி, நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் நொவம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது. “துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பினரின் கூட்டு இராணுவ
திருவனந்தபுரத்தில் கூட்டு கட்டளைப்பீடத்தை அமைக்கிறது இந்தியா
சிறிலங்கா மற்றும் மாலைதீவில் சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலைகளை அடுத்து, திருவனந்தபுரத்தில், இந்தியா கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை ஒருங்கிணைத்து – கூட்டுப்படைக் கட்டளையகத்தை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஒருங்கிணைந்த அரங்கு கட்டளைத் தலைமையகம் அக்குளத்தில் (Akkulam) உள்ளது. கடலில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதே
ஆண்ட்ரூ குறித்து கேள்வி…இளவரசர் வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரேசில் நாட்டுக்குச் சென்றுள்ள பிரித்தானிய இளவரசரான வில்லியமுக்கு தர்மசங்கத்தை ஏற்படுத்தும் கேள்வி ஒன்றை எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர். ராஜ குடும்பத்துக்கு தொடரும் தலைக்குனிவு பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய தம்பியுமான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்தித்துவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இங்கிலாந்திலுள்ள Lichfield தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார் […]
2026 தமிழ்நாடு தேர்தல்: எடப்பாடி பழனிசாமிக்கே சீமான் டப் கொடுப்பாரா? அரசியல் கணக்கு என்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிக தொகுதிகளில் சீமான் வெல்லுவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணையும் கஜகஸ்தான் ; டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக கசகஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கசகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கசகஸ்தானும் இஸ்ரேலும் 1992 முதல் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தாலும், இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு அடையாளச் செயலாகக் கருதப்படுகிறது. இது பாதுகாப்பு, […]
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவிப்பு
உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை காலப்பகுதியில் அனர்த்த அபாயமற்ற சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி […]
வீடு புகுந்த கொள்ளையனால் பார்வையை இழந்த பெண்; அனுராதபுரத்தில் சம்பவம்
அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால்,அவர் தனது பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ள் புகுந்த கொள்ளையன் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளார். பல நாட்கள் சிகிச்சை சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண், அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக […]
தகாத உறவு ; கணவரைக் கொலை செய்து ஆற்றில் வீசிய மனைவி
இந்தியாவின் மனைவி ஒருவர் தனது கணவரைக் கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கோர சம்பவம் மகாராஷ்டிரா, தானேவில் பதிவாகியுள்ளது. தகாத உறவு ஒன்றின் காரணமாக மனைவி கணவனை கொலையைச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மனைவி வேறொருவருடன் முறைகேடான தொடர்பைக் கொண்டிருந்தமை குறித்து கணவர் விசாரித்தமையால் மனைவி இந்த கொலையைப் புரிந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் கணவனை கொன்ற பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!
காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமார் மனைவி மகேஸ்வரி. கடந்த 6 ஆம் தேதி காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை தைலமரக் காட்டுப்பகுதியில் காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தகவல் தெரிந்து குன்றக்குடி இன்ஸ்பெக்டர சுந்தரி தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததால் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அனைத்து கண்கானிப்பு கேமிரக்களை ஆய்வு செய்தும், தொடர் விசாரணையிலும் சம்பவத்தன்று காரைக்குடி லட்சுமிநகரைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு டிரைவிங் பழகிக் கொடுத்த டிரைவர் சசிகுமாரை மகேஸ்வரி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. மகேஸ்வரி தலைமறைவான சசிகுமாரை காவல்துறையினர் பிடித்து நடத்திய விசாணையில், 'கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு மகேஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டதால் டிரைவர் சசிகுமார் வேறொரு நபரிடம் பெரிய அளவில் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் நீண்ட நாட்கள் மகேஸ்வரி இழுத்தடித்துள்ளதாகவும் பணம் கொடுத்தவர் சசிகுமாரிடம் நெருக்கி வந்த நிலையில் ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டு மனையை பார்ப்பதற்கு சசிகுமாருடன் மகேஸ்வரி சென்றுள்ளார். அங்கு வைத்து கொடுத்த பணத்தை கேட்ட சசிகுமாருக்கும் மகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சசிகுமார் மகேஸ்வரி முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்குள்ள கண்மாயில் குளித்துவிட்டு அங்கு ஒரு தோட்டத்தில் காய்ந்த துணிகளை அணிந்துகொண்டு மருத்துவமனைக்கு வந்து மகேஸ்வரி இறந்தது குறித்து விசாரித்துவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்பு கால் லிஸ்ட் மூலம் ஆய்வு செய்த காவல்துறையினர் சசிகுமாரை வீட்டுக்கு சென்று கைது செய்தனர். அடகு வைத்த நகைகளையும் மீட்டுள்ளனர்' என்றனர். இந்த கொலை சம்பவத்தில் சசிகுமார் மட்டும் குற்றவாளி கிடையாது. இன்னும் சிலர் இருக்கலாம், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மகேஸ்வரியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அது மட்டுமின்றி காவல் நிலையத்துக்கு சசிகுமாரை அழைத்து வந்தபோது மகேஸ்வரியின் உறவினர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகனத்தின் சிசிடிவி ஒப்படைப்பு - ஆனந்த் கோவிலில் திடீர் வழிபாடு!
கரூர் துயரச் சம்பவத்தின் போது பிரச்சார வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிபாடு நடத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புத்தளம் மீனவர்களுக்கு இன்று அடித்த அதிஸ்டம்!
புத்தளம், உடப்பு, சின்ன கொலனி கடற்பரப்பில் இன்று காலை (8) கரைவலையில் ஒருதொகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, கரைவலைக்குச் சொந்தமான ஒருவரின் வலையில் சீலா, நெத்தலிமீன், கும்பலா, பூச்சக்கனி மற்றும் பன்னா, காரல், ராக்கை மீன்உள்ளிட்ட பல வகை மீன்கள் கூடுதலாகப் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் கலைவரையில் நிறைய மீனகள் கிடைத்ததையிட்டு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வடகொரியா
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. சீண்டப்படும் அமெரிக்கா தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா […]
Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' - புகழும் ரயில்வே - வலுக்கும் கண்டனம்!
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தின் போது, பள்ளி மாணவர்கள் குழு ஒன்று ரயிலில் பயணிக்க வைக்கப்பட்டது. Vande Bharat அந்தப் பள்ளி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோவை தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டது. மேலும்,``எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மகிழ்ச்சியின் மெல்லிசை! பள்ளி மாணவர்கள் ரயில் பெட்டிகளை தேசபக்தி பாடல்களால் நிரப்பினர். அந்த தருணத்தின் உணர்வைக் கொண்டாடினர் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்தால் அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்ற வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் வழக்கமாகப் பாடப்படும் பிரபலமான மலையாளப் பாடலை மாணவர்கள் குழு ஒன்று பாடும் வீடியோவை, தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் 'தேசபக்தி பாடல்' என்று குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. தெற்கு ரயில்வேயின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வெறுப்பு, பிரிவினை அரசியலை அடிக்கடி வெளிப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பாடலை, அரசின் அதிகாரப்பூர்வ விழாவில் கொண்டுவருவது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகும். பினராயி விஜயன் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை கூட சங் பரிவார் தனது வகுப்புவாத அரசியலைப் பரப்புவதற்குப் பயன்படுத்துகிறது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது. சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் மூலக்கல்லாகச் செயல்பட்ட ரயில்வே, இன்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.பி கே.சி. வேணுகோபால், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``அரசின் அதிகாரப்பூர்வமான அரசு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பான ஒரு பாடலைச் சேர்த்தது, ஆர்.எஸ்.எஸ் கூட்டக் காட்சியாகக் குறைத்துவிட்டது. ஒரு தேசிய நிகழ்வில் மதவெறி அடையாளங்களை புகுத்துவதற்கான இந்த வெட்கக்கேடான முயற்சி, இந்தியாவின் பொது நிறுவனங்களை ஒரு அமைப்பின் பிம்பமாக மீண்டும் எழுதும் மாபெரும் முயற்சியின் ஒரு பகுதி. இது ஒரு சாதாரணத் தவறு அல்ல. நம் தேசிய கீதம் உட்பட நமது தேசிய சின்னங்களை இழிவுபடுத்த, வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டிருக்கிறார். K.C. Venugopal இந்த விவகாரம் பெரும் விவாதமானதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) கேரளப் பிரிவு, ``பொது நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் பாடல்களை நிகழ்த்துவது மத்திய அரசின் பொது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி. ஆர்.எஸ்.எஸை குற்றமற்ற ஒரு அமைப்பாக முன்னிறுத்த மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. அதே நேரம், இந்த விவகாரம் குறித்து இதுவரை தெற்கு ரயில்வே எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' - தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?
பாஸ்போர்ட்களில் திடீர் மாற்றம்.. உச்சநீதிமன்ற அனுமதியால் வெடித்த சர்ச்சை!
அமெரிக்க பாஸ்போர்ட்களில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு, அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் முதல்முறை! ரூ.88 லட்சம் கோடி ஊதியம் பெறும் எலான் மஸ்க்!
உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 சதவிகித பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்துக்கு எலான் மஸ்க் முன்வைத்துள்ள தொழில்நுட்ப இலக்குகளை அடைவதற்கும், அவர் டெஸ்லாவில் தொடர்ந்து […]
வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
மலேசியா – கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் இலங்கையர் ஒருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்துக் நேற்று முன்தினம் (6) காலை 8.40 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 9வது மாடியில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 26 வயதுடைய ஊழியர் என்பது தெரியவந்தது. 9வது மாடியில் இருந்து விழுந்த அவர், இரண்டாவது மாடியில் உள்ள நீச்சல்குளத்தின் அருகே சடலமாக கிடந்த நிலையில் […]
நவம்பர் மாதம் சென்னை ரூட்டில் 12 முக்கிய ரயில்கள் சேவையில் மாற்றம்! தென்னக ரயில்வே அறிவிப்பு
இந்த நவம்பர் மாதம் சென்னை எழும்பூர் முதல் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் 12 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' - தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?
பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பீகாரின் சமஸ்திபூர் மாவட்ட சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியின் கல்லூரி அருகே, சாலையோரத்தில் VVPAT பேப்பர்கள் கண்டெடுக்கப்பட்டது. Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் VVPAT என்பது வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (EVM) இணைக்கப்பட்ட கருவியாகும். வாக்காளரின் வாக்கு, அவர் வாக்களித்த சின்னத்தில் பதிவாகிறதா என்பதை பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டது. அப்படியான வாக்கு VVPAT சாலையில் கிடந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், ``வாக்குப் பதிவு செயல்முறையில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. இந்த சீட்டுகள் உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவுகள். இந்தத் தவறுக்கு காரணமான உதவி தேர்தல் அதிகாரி (ARO) இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சம்ஸ்திபூர் மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். என்றார். समस्तीपुर के सरायरंजन विधानसभा क्षेत्र के KSR कॉलेज के पास सड़क पर भारी संख्या में EVM से निकलने वाली VVPAT पर्चियां फेंकी हुई मिली। कब, कैसे, क्यों किसके इशारे पर इन पर्चियों को फेंका गया? क्या चोर आयोग इसका जवाब देगा? क्या यह सब बाहर से आकर बिहार में डेरा डाले लोकतंत्र के… pic.twitter.com/SxOR6dd7Me — Rashtriya Janata Dal (@RJDforIndia) November 8, 2025 சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியை 2010 முதல் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் விஜய் குமார் சவுத்ரி தக்கவைத்துக் கொண்டு வருகிறார். அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அர்பிந்த் குமார் சஹானி மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஜன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இரண்டாம் வாக்குப்பதிவு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும். பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!
Chat GPT மீது வழக்கு ; தவறான முடிவுக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி, பயனர்கள் சிலரை தற்கொலைக்கு துாண்டிய குற்றச்சாட்டில், அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏ.ஐ., நிறுவனம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை, 2022ல் அறிமுகப்படுத்தியது. மனநல பாதிப்புகள் இதில், கேள்வி – பதில் முறையில் அனைத்து விஷயங்கள் பற்றிய தகவல்களை பெறலாம். படத்தை உருவாக்கலாம்; கோப்புகளை ஆராயலாம். இந்நிலையில், சாட்ஜிபிடி தற்கொலைக்கு துாண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அமெரிக்காவின் […]
தபால் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்தால் அதிகம் செலவாகும்.. பொதுமக்கள் கவனத்துக்கு..!
தபால் நிலைய ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பவர்களுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என ஸ்டாலின் ஒப்பாரி வைப்பது ஏன் ? ஆர்.பி.உதயகுமார்!
திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என ஸ்டாலின் ஒப்பாரி வைப்பது ஏன் ?போலி வாக்காளர்கள் ,இரட்டை வாக்காளர்கள் வைத்து தான் திமுக பூச்சாண்டி காட்டி வந்தது என்று ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு நியமனம்
முற்றிலும் சிங்கள இனத்தவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது. புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர ஹினிதும சுனில் செனவி, புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொலன்னறுவை சோலோஸ்மஸ்தான ராஜமஹா விஹாரையின் தலைமை பீடமான மகா விஹாரவன்ஷிக ஷ்யாமோபலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விஹாரப் பிரிவின்
இயக்கம்: அபின் ஹரிஹரன் புதுமையான கதைக்கருவும் முதிர்ச்சியற்ற அணுகுமுறையும் தற்போதுள்ள காலகட்டத்தில் தம்பதியினரிடையே குழந்தையின்மைப் பிரச்சனை அதிகரித்து வருவதால்,
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை பச்சை கொடி காட்டி உள்ளது. இந்த திட்டம் குறித்து விரிவாக காண்போம்.
பதவியை பறித்தாலும் பயமில்லை:சிறீதரன்!
நான் சொத்துக்கள் குவித்து வைத்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் என்மீது சட்டநடவடிக்கை எடுத்து எனது பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன் என சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களது பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாகக் கேட்கிறேன். எனது பெயரிலோ, எனது சிபாரிசிலோ கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏதும் பெற்றிருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். உடனடி விசாரைணை நடத்தி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பட்சத்தில் என்மீது சட்ட நடவடிக்கை எடுத்து என் பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதம் தெரிவிப்பதுடன் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்தார்.
RED ZONE-ல் நாட்டின் தலைநகர்.. டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்!
டெல்லி நகரின் பல பகுதியில் காற்றின் தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகி, கடுமையான பிரிவில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தலைநகரில் முக்கியமான பகுதிகள் Red Zone-ல் இடம்பெற்றது.
இயக்குநர்: சரங் தியாகு தலைப்பின் பொருள் மற்றும் அடிப்படை நோக்கம் ‘ஆரோமலே’ என்ற மலையாளச் சொல்லுக்கு, ‘என் அன்புக்குரிய…’
முகநூல் வழி தன் மீது போலிக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாக அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். இந்த படம் எடிட் செய்யப்பட்டு பொய்யாக காட்டப்பட்டுள்ளது. உங்கள் முகநூலில் அல்லது பிற சமூக ஊடகங்களில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பகிரும் முன் எது உண்மையென உறுதிசெய்கவென கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன். இத்தகைய தவறான தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிலர் போலித் தகவல்கள் பயன்படுத்தி பல போலி ஐடிகளை உருவாக்கி குடும்பச் சம்பந்தமான விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றனர் — இதுபற்றி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள உள்ளேன். தயவு செய்து இதனை பகிராதீர்கள் மற்றும் போலி கணக்குகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் நிரூபணங்களுடன் எனக்கு தகவல் அனுப்புமாறும் ரஜீவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் இன்று சனிக்கிழமை மாலை (08.11.2025) நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவித்ததாவது, உங்கள் பாடசாலை இப்பிரதேசத்தில் நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சிறப்புப் பெற்ற கல்வி நிலையமாக திகழ்கின்றது. நான் பல இடங்களில் வலியுறுத்தும் செய்தி ஒன்றே — எந்த நிறுவனத்தின் எழுச்சியோ, வீழ்ச்சியோ அதன் தலைமைத்துவத்தைச் சார்ந்தே அமைகின்றது. இப்பாடசாலையின் தற்போதைய அதிபர் சிறந்த தலைமைத்துவத்துடன் பாடசாலை நிர்வாகத்தை முன்னெடுத்து வருகிறார் என்பதை, இந்தப் பாடசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பே தெளிவாகச் சான்றாக காட்டுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்;. ஆனால் தலைமைத்துவம் உறுதியானதாக இல்லாவிட்டால் அந்தச் சூழல் சிறக்காது. மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. நாளைய சமூகத்திலும் அரசியல், நிர்வாக, கல்வி மற்றும் பிற துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கப் போவது நீங்கள் தான். ஆனால் இன்று பல இடங்களில் தலைமைத்துவ குறைபாடு காரணமாக மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன. செய்யத்தக்க ஒன்றைச் செய்யாமல் காரணம் கூறுவோர் அதிகம். நேர்மையான சிந்தனை, பிறருக்கு உதவுதல், பொறுப்பு உணர்வு போன்ற பண்புகள் பல இடங்களில் குறைவாகத் தெரிவதைக் காண்கிறோம். ஆகையால், கல்வியில் முன்னேறுவதோடு சேர்த்து உயர்ந்த மனிதப்பண்புகள் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நீங்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக திகழ்வீர்கள். உங்களின் வளமான எதிர்காலத்துக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரும், நிறுவுநர் குடும்ப உறுப்பினருமான சி.வசீகரன் அவர்கள் கலந்துகொண்டார். அத்துடன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார்.
ட்ரம்ப்பின் அருகே திடீரென மயங்கி விழுந்த நிர்வாகி ; வெள்ளை மாளிகையில் பரபரப்பு
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அருகே இருந்த நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. திடீர் மயக்கம் இந்த ஒப்பந்தத்தின்போது, மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மருந்து விலைக் குறைப்பு குறித்து டிரம்ப் அறிவிக்கும்போது, அவரின் பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகியான கார்டன் ஃபிண்ட்லே […]
கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள்களை, அவர்களின் முகவரிக்கு அனுப்பும் பணியும் அங்கு நடந்து வருகிறது. ஃபிளிப்கார்ட் இந்நிலையில் அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய 7 கிலோ வாஷிங் பவுடர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே நிறுவனத்தினர் சந்தேகமடைந்து பார்சல் செய்த பொருள்களை எல்லாம் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஆர்டர் செய்த பொருள்கள் இல்லாமல், அதற்கு பதிலாக லேப்டாப் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் பேக்கிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், மோசடி தங்களின் முகவரிக்கு சோப்பு, கிளினிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு, பார்சல் செய்யும்போது அதில் ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்களை வைத்து அனுப்பி வந்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஃபிளிப்கார்ட் நிறுவனம் செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் விக்னேஷ், கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஷா, முகமது அலி, அஞ்சலி ஆகிய 8 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அஞ்சலி தலைமறைவாக, மற்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டவர் அவர்களிடம் ஐ போன், விவோ, சாம்சங், நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஏர் பட்ஸ், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட ரூ.11.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவான அஞ்சலியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கொட்டும் பணம்.. 444 நாட்களில் எவ்வளவு கிடைக்கும்?
இந்த வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் செய்பவர்கள் 444 நாட்கள் திட்டத்துக்கு எவ்வளவு வருமானம் பெறுவார்கள் என்ற கணக்கீடு இதோ..!
Deepika Padukone: தாயான பிறகு இதெல்லாம் என்னிடம் மாறியிருக்கிறது! - தீபிகா படுகோன்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி ‘கிங்’ படத்தில் தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார். தீபிகா படுகோன் மற்றொரு பக்கம் அட்லி - அல்லு அர்ஜூன் இயக்கும் படத்திலும் முக்கியமானதொரு கதாபாத்திரத்திற்கு கமிட்டாகியிருக்கிறார் தீபிகா படுகோன். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் தீபிகா படுகோன். அவர், “தாயான பிறகு பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. என்னிடம் பொறுமையும் அதிகமாகியிருக்கிறது எனச் சொல்லலாம். தாய்மை என்னை கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளி, சமூகமயமான நபராக மாற்றுகிறது. Deepika Padukone நான் ஒருபோதும் சமூகமயமான நபராக இருந்ததில்லை. இப்போது ப்ளே ஸ்கூலில் மற்ற பெற்றோர்களுடன் பேசுகிறேன். தாய்மை உங்களை நல்ல விதத்தில் உங்கள் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளுகிறது. நான் எப்போதும் தாயாக விரும்பினேன். இப்போது, நான் தாயாக என் சிறந்த பாத்திரத்தை செய்து வருகிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.
மனைவியை காண இந்தியா சென்ற யாழ் நபர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, தமிழகம் சென்ற யாழ் குடும்பஸ்தர் இராமேஸ்வரத்தில் இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவுப் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். சட்டவிரோத பயணம் […]
Jananayagan: 'பறக்கட்டும் நம்ம கொடி'- ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்சேரி பாடல் வெளியானது
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இதுதான் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிலீஸுக்கு ரசிகர்களும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். அ.வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Thalapathy Kacheri - Jananayagan 6-வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, மமிதா பைஜு எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பொங்கல் ரிலீஸுக்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகியிருக்கிறது. துள்ளலான இசை, அதிரடி நடனம் என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ்தான்! மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை விஜய், அனிருத், அறிவு என மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ராப் பாடகர் அறிவு இப்பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜூவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். நடன இயக்குநர் சேகர் இப்பாடலுக்கு கோரியோ செய்திருக்கிறார். இப்பாடலின் ஹூக் ஸ்டெப் நடன காணொளியையும் இப்போது வெளிவந்திருக்கும் லிரிகல் வீடியோவில் இணைத்திருக்கிறார்கள். ̀பறக்கட்டும் நம்ம கொடி', ̀சாதி, மதம் லேதய்யா' போன்ற வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
சென்னை: ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) மற்றும் குட் ஷோ (Good Show) ஆகிய பட நிறுவனங்கள்
#One Last Time : ரசிகர்களுக்கு கச்சேரி வைத்த விஜய்…வெளியானது ஜனநாயகன் முதல் பாடல்!
சென்னை :நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் 2026 வெளியீடாக உறுதியாக அடுத்தாண்டு ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, எடிட்டிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர். படத்தின் முதல் பாடல் ‘தளபதி […]
பீகாரில் தேர்தலில் 160 தொகுதிகளில் NDA வெற்றி பெறும் .. அடித்து சொன்ன அமித்ஷா!
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையை ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற நடத்தியதாக விமர்சித்த அமித்ஷா, லாலுவின் ஊழல்களையும் கடுமையாக சாடினார்.
யாழில் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் தாய்; காரணம் வெளியானது
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரே தடவையில் 03 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்தமைக்கு, கிருமி தொற்று காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாயின் உடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளதாவது, சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த 45 வயதான குறித்த பெண் 21 வருடங்களின் பின்னர் குழந்தைகளை பிரசவித்துள்ளார். […]
37 ஆண்டுகளாக அரியர் வைத்தவர்களும் செமஸ்டர் தேர்வு எழுதலாம் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் படித்து, அரியர் வைத்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 37 ஆண்டுகள் வரை அரியர் வைத்தவர்களும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (08) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா'மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!
உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். SICA எனப்படும் 'தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்' சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி எடுத்த சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள், சமையல் கலையின் சர்வதேச நடுவர்களின் பாராட்டு மழையிலும் நனைந்திருக்கிறார்கள். சென்னைஸ் அமிர்தா சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கு இத்தகைய பெருமைகள் கிடைக்க அவர்களது அறிவாற்றல், கலைநுணுக்கம், புத்தாக்க சிந்தனை, கடும்உழைப்பு, நுட்பமான வேலைப்பாடு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பிரமாண்டமான அந்த போட்டிக் களத்தில் அவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு 26 தங்கப்பதக்கங்கள் வென்று, 'சென்னைஸ் அமிர்தா'வின் புகழை, சமையல் கலை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்திருக்கிறார்கள். சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் வடித்த காய்கறி, பழம், வெண்ணெய் சிற்பங்கள் உலகளாவிய ஊடகங்களிலும் வெளியாகி, சென்னைஸ் அமிர்தாவின் புகழை விண்ணுக்கு கொண்டு சென்றது. உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கம் இந்தியாவில் நடத்திய போட்டியில் 26 தங்கம் வென்ற தங்கங்களை கௌரவிக்க, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் பெருமிதத்தோடு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினார். சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில் 2025 அக்டோபர் 14-ந்தேதி இந்த நிகழ்வு விமரிசையாக நடந்தது. தங்க வேட்டையாடி பதக்கங்களை குவித்த மாணவர்கள், உலக வல்லுனர்களோடு ஒருங்கிணைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற நிகழ்வை விலாவாரியாக பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டனர். மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகொடுத்து, அவர்களை அற்புதமாக வழிநடத்தி, தங்கப்பதக்கங்களை வெல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்த 'கார்விங்' பயிற்சியாளர்கள் கரவொலிக்கு மத்தியில் கௌரவிக்கப்பட்டனர் பயிற்சியாளர் செப்' கார்த்திக்கிற்கு ரொக்கப் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் செந்திலுக்கு இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. சென்னைஸ் அமிர்தா ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த இதர பயிற்சியாளர்களும், தங்கம் வென்ற அனைத்து மாணவர்களும் ரொக்கப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த ICC போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களும் பெருமைமிகு பாராட்டினைப் பெற்றனர். வெற்றியடைந்த மாணவர்கள் உருவாக்கிய பட்டர் கார்விங், பழம் மற்றும் காய்கறி கார்விங் அங்கு வந்த விருந்தினர்களையும் ஊடகங்களையும் கவர்ந்தன. இந்த நிகழ்வில் இன்னொரு மைல்கல் சாதனையை நிகழ்த்திய மாணவி செல்வி.கீர்த்தனாவை சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் வெகுவாக பாராட்டி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். மாணவி கீர்த்தனா அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த சாதனை மாணவி என்பதும், தமிழக கவர்னரிடம் இருந்து விருதினை பெற்றவர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. சென்னைஸ் அமிர்தா சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எங்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறை நாங்கள் பதக்கங்களை வெல்லும்போதும் எங்கள் கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கி எங்களை மீண்டும் மீண்டும் சாதிக்கத் தூண்டுகிறார் அவரது வழிகாட்டுதலே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று, தங்கம் வென்ற மாணவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிர்ந்து மகிழ்ந்தனர். பெருமைமிகுந்த இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் முத்தாய்ப்பாக சில கருத்துக்களை வெளிப்படுத்தினார். “சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் சமையல் கலை உலகமே திரும்பிப் பாார்க்கும் அளவுக்கு சாதனைகளைப்
₹.1200 கோடி: இந்திய ரயில்வேயை அழிக்கும் ‘குட்கா’கறைகள்!
இந்திய ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கோடிக்கணக்கான மக்களின் பயணத்திற்கும் முதுகெலும்பாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், பயணிகள் ரயில்
போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் மினிபேருந்தை வழிமறித்த போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், பேருந்தின் கண்ணாடியில் கல்வீசித் தாக்கியதோடு, ஓட்டுநரையும் மாணவர்களையும் அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த பயங்கரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஸ்டாலின் மாடல் தி.மு.க ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது. பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் சட்டம்- ஒழுங்கு. குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது. இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்
ரூ.88 லட்சம் கோடி சம்பளம்: எலான் மஸ்க் நினைத்தால் என்னென்ன செய்யலாம் தெரியுமா?
ரூ.88 லட்சம் கோடி சம்பளம் பெறும் எலான் மஸ்கால் உலகில் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் சமூகப் பொறுப்பை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கைமாறு கருதாமல் திருப்பிக் கொடுப்பது எனும் இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஜி.ஆர்.டி.யின் பயணத்தின் இதயமாகத் திகழ்கிறது. அன்பும் நேர்மையும் கொண்ட தொடர்ச்சியான இந்த சமூக சேவை முயற்சிகளில் வெளிப்படுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் சென்னையில் மிகவும் மதிக்கப்படும் இரண்டு சுகாதார நிறுவனங்களுக்கு ரூ. 50,00,000 லட்சம் நிதி உதவியுடன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கண் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்கான கேரோட்டோமீட்டர் மருத்துவ உபகரணத்தை வாங்குவதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ. 25,00,000 வழங்கப்பட்டுள்ளது. ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் மற்றும் அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ. 25,00,000 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகளின் ஆதரவு, பராமரிப்பு மற்றும் சிகிச்சை, ஆராய்ச்சி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கல்விக்காக வழங்கப்படுகிறது. இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது, “ஜி.ஆர்.டி.யில், ஆரோக்கியமே வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். கண் பராமரிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சைத் துறைகளில் முன்னணி நிறுவனங்களை ஆதரிப்பது என்பது, எண்ணற்ற உயிர்களுக்கு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் கொண்டு வரும் பணியில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க வழிவகுக்கிறது. இந்த நிதியுதவி, மேம்பட்ட மருத்துவ சேவைகள் மிகவும் தேவையுள்ளவர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.” என்றார். இது குறித்து, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் கூறுகையில், “ஜி.ஆர்.டி.யின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்வாழ்த்துகளாலும் வடிவமைக்கப்பட்டதாகும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும் மருத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது, அந்த நம்பிக்கையை திருப்பிச் செலுத்தும் எங்கள் வழியாகும். சமூகங்கள் தங்கள் கடினமான தருணங்களில் இருக்கும் போது அவர்களுடன் துணை நிற்பதும், நலனுக்கான வழிகளை உருவாக்குவதும், ஒரு வணிகத்தை தாண்டிய சேவை என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார். ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட GRT ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. தங்கம், வைரம் பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், தலைமுறை தலைமுறையாக நம்பிக்கையின் மரபை உருவாக்கியுள்ளது. தென்னிந்தியாவில் 65 கிளைகளுடன், மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை என மொத்தம் 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், அதன் சேவை செய்கின்ற சமூகங்களுக்கான நிலையான அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி, கலைநயத்தையும் உண்மையையும் இணைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ரஷியாவில் காணாமல் போன இந்திய மாணவர்: 19 நாள்களுக்குப் பிறகு அணையில் உடல் கண்டெடுப்பு!
ரஷியாவில் காணாமல்போன இந்திய மருத்துவ மாணவரின் உடல் ரஷிய அணையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசிப்பவர் அஜித் சிங் சௌத்ரி. இவர் கடந்த 2023இல் ரஷியாவில் உள்ள பாஷ்கிர மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். அவர் ரஷியாவின் உஃபா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், அக்டோபர் 19ம் தேதியன்று அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பால் வாங்கச் செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு […]
இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) எனும் இளைஞனே கைது செய்யப்பட்டு , தற்போது புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த இளைஞனின் மனைவி மண்டபம் முகாமில் தங்கியுள்ளார். அவரை பார்ப்பதற்காக கடந்த 06ஆம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் […]
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு –யாழில். காரில் பயணித்த மூவர் கைது
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு… The post கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு – யாழில். காரில் பயணித்த மூவர் கைது appeared first on Global Tamil News .
குறுக்கே ஆஸிக்கு வில்லனாக வந்த மழை…டி20 தொடரை வென்ற இந்தியா!
பிரிஸ்பேன் :ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அபார சாதனை படைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சுப்மன் கில் தலைமையில், ஒரு நாள் தொடரில் 2-1 என தோல்வியடைந்த ஏமாற்றத்தை மறந்து, டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தியது. கடைசி மற்றும் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மழையால் கைவிடப்பட்டதால், இந்தியா தொடரைக் கைப்பற்றியது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு […]
உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது - மு.க ஸ்டாலின் பெருமிதம்
இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசி, ஒரு சில வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார். உதயநிதி கரூர் மரணங்கள்: தனிநபர் மீது பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை - முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்துப் பேசியிருக்கும் மு.க ஸ்டாலின், உதயநிதி நடத்திய இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன் என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதைவிட, நான் நினைச்சதை விட சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன். தம்பி உதயநிதியின் கொள்கை பிடிப்பு செயல்பாடுகளை பார்க்கிற பொழுது, வள்ளுவர் கூறிய குரல் தான் ஞாபகம் வருகிறது. ' மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் ' என்னும் குரலுக்கு ஏற்ப உதயநிதி செயல்பட்டு வருகிறார் என்று பெருமையோடு கூறுகிறேன். மு.க ஸ்டாலின் உதயநிதிக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்த அறிவுத் திருவிழாவை இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். நிச்சயமாக அறிவுத் திருவிழாவை பிரமாண்டமாக உதயநிதி நடத்துவார் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜஹன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஷமி தன் மனைவிக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு மாதம் ரூ.2.5 லட்சமும் பராமரிப்பு தொகையாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக குடும்ப நீதிமன்றம் குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரமும், ஜஹனுக்கு மாதம் ரூ.50 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டு இருந்தது. அதை உயர் நீதிமன்றம் அதிகரித்து உத்தரவிட்டது. ஹசின் ஜஹன் - முகமது ஷமி தற்போது ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ரூ.4 லட்சம் போதுமானதாக இல்லை என்றும், அதனை அதிகரித்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜஹன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருக்கிறார். இம்மனுவை ஜஹன் வழக்கறிஞர் ஷோபா குப்தா தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதை ஏன் தாக்கல் செய்துள்ளீர்கள்? ரூ.4 லட்சம் போதுமானதாக இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜஹன் சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா,''ஷமியின் வருமானம், நீதிமன்றம் நிர்ணயித்த பராமரிப்புத் தொகையைவிட அதிகமாக இருக்கிறது. பிரதிவாதி ஷமி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், மேலும் மனுதாரருக்கும், மைனர் மகளுக்கும் சமமான அளவு பராமரிப்பு தொகை வழங்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக வேண்டுமென்றே நீதிமன்றங்களை நாடுகிறார். உயர் நீதிமன்றத்தில் ஷமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி அவரது மாதாந்திர செலவு ₹1.08 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ₹500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திருமணமானதிலிருந்து மனைவி வேலையில்லாமல் இருப்பதாகவும், அவரது அன்றாடத் தேவைகளையும் அவரது குழந்தையின் அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்ய அவருக்கு சுயமான வருமான ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினர் இடையே மத்தியஸ்தம் செய்யவா என்று கேட்டனர். அதோடு இதுதொடர்பான விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து, ஷமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஏற்கனவே ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைபபடுத்தியதாக குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதோடு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டபோது நிலுவை தொகையாக ரூ.2.4 கோடி ஜஹனுக்கு ஷமி கொடுக்க வேண்டியிருந்தது. அந்தத் தொகையை செப்டம்பரில் இருந்து தவணை முறையில் கொடுக்கும்படி ஷமிக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
விஜய் கட்சியுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைப்பாரா? தமிழக அரசியலில் புதிய சலசலப்பு
தமிழ்நாடு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், விஜய் கட்சியுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - யாழில். காரில் பயணித்த மூவர் கைது
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரினை ஒத்த காரில் யாழ்ப்பாணத்தில் பயணித்த , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட தென்னிலங்கை வாசி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தாம் கொழும்பில் காரினை வாடகைக்கு பெற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவும் , தமக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை , கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட குழு , கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயில் ஏன் எழுத வேண்டும்? எப்போது எழுத வேண்டும்? யாரெல்லாம் எழுத வேண்டும்?
உயில் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அது தொடர்பான விளக்கங்களும் இதோ..!
சென்னையில் அப்கிரேட் ஆகும் பள்ளிகள்.. மாநகராட்சியின் சூப்பர் திட்டம்!
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வட சென்னையில் உள்ள 8 பள்ளிகள் தொழில்நுட்பத்தில் மேம்படையச் செய்ய மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?
முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்ஷித் ஷெட்டி) என்பவருடன் பூமாவுக்குக் காதல் மலர்கிறது. பூமாவின் ஆசைகள் அத்தனையையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டு தடுக்கிறார் விக்ரம். The Girlfriend Review விக்ரமின் இந்த செயல்கள், பூமாவை ஒரு கட்டத்திற்கு மேல் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கி விட்டோமோ, நம்முடைய எதிர்காலம் என்னவாகும் எனச் சிந்திக்க வைக்கிறது. காதல் வாழ்க்கையிலிருந்து பிரிந்து போக நினைக்கும் பூமாவை விக்ரம் எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார், அதிலிருந்து பூமா எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இந்த டோலிவுட் சினிமாவின் கதை. படிப்பிற்காக முதல் முறையாக வெளியூருக்கு வரும் பூமா அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துமிடத்தில் வழக்கமான ராஷ்மிகாவே தென்படுகிறார். ஆனால், குரூர எண்ணம் கொண்ட காதலனின் துன்புறுத்தலை எதிர்கொள்கையிலும், தன்னை புரிந்து கொள்ளாமல் ஆதிக்க மனப்பான்மையில் தந்தை சொல்லும் சொற்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் வெகுண்டெழும் இடங்களில் கதையின் நாயகியாக நடிப்பில் அவுட் ஆஃப் ஸ்டேடியம் சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா! டாக்சிக் லவ்வராக வரும் தீக்ஷித் ஷெட்டி, தனது மிரட்டலான நடிப்பால் வெறுப்பை வரவழைத்து விக்ரம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். The Girlfriend Review தந்தையினால் மட்டுமே வளர்க்கப்படும் மகளின் மனவோட்டங்களையும், அவள் சந்திக்கும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் தந்தையாக வரும் ராவ் ரமேஷ், தன் கதாபாத்திரம் கோரும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். துர்காவாக அனு இமானுவேல் சில இடங்களில் மட்டுமே சர்ப்ரைஸ் செய்கிறார். அவர் மனம் மாறும் இடங்களில் தேவைப்படும் யதார்த்த நடிப்பிற்குப் பெரிதளவில் மெனக்கெடாமல் கடந்து சென்றிருப்பது ஏனோ! ஆணாதிக்க சமூகத்தில் சிக்கிய பெண்ணின் உருவமாக வரும் ரோகினி, வசனம் ஏதுமின்றி தன்னுடைய முகபாவனைகளால் பூமாவை மட்டுமின்றி பலரையும் சிந்திக்க வைக்கிறார். கதாபாத்திரங்களின் எமோஷன்களை பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு பெரும்பாலான இடங்களில் மிட் க்ளோஸ் அப் ஷாட் அமைத்த ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்தின் ஐடியா சிறப்பு! முதல் பாதி டிராமாவுக்கு மென்மையான லைட்டிங், பரபரக்கும் இரண்டாம் பாதி டிராமாவுக்கு கலர் லைட்டிங் எனக் கவனிக்க வைக்கிறார். இரண்டாம் பாதி கதைக் கோரும் நிதான மீட்டரைச் சரியாக எட்டிப் பிடித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சோட்டா கே பிரசாத். ஆனால், முதல் 30 நிமிடங்களில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் சுவாரஸ்ய மீட்டரை சமன் செய்யத் தவறியிருக்கிறார். The Girlfriend Review மென்மையான பின்னணி இசையால் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி இந்தத் தெலுங்குப் படத்திற்குக் கொடுத்திருக்கும் ட்ரீட்மெண்ட் சால பாகுந்தி! இதயத் துடிப்பின் ஒலி வருமிடங்களில் பார்வையாளர்களின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்துவிடுமளவுக்குத் தாக்கம் தந்திருக்கிறார். அதே சமயம், பாடல்களில் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாகப் உணர்வுகளைக் கசியவிட்டு செவிகளுக்கு மென்மை தருகிறார். ஆணாதிக்க சமூகம் ஒரு பெண்ணின் மனவோட்டத்தை எப்படி நெருக்கடிக்குள்ளாக்குகிறது, அதிலிருந்து மீண்டு மேலே வருவதற்குக் கல்வியே எப்படி ஆயுதமாக மாறுகிறது எனச் சாட்டையைச் சுழற்றிய இயக்குநர் ராகுல் ரவீந்திரனுக்குப் பாராட்டுகள்! அனைத்து துன்பங்களையும் பொறுத்துக்கொள்ளும் நாயகிக்கு `பூமா தேவி' எனப் பெயர் வைத்ததும் கவிதையான ஐடியா! ஆணாதிக்க எண்ணம் கொண்டவனின் காதலை மறுக்கும் பெண் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார், அவரை அவமானப்படுத்தக் கொடூரச் செயல்களைச் செய்யும் காதலன் என்னவெல்லாம் செய்கிறான் எனச் சமகால நிகழ்வுகளையும் சேர்த்துப் பேசும் இடத்தில் தனித்து நிற்கிறது இந்த டோலிவுட் படைப்பு. காதலன் செய்யும் ஒடுக்குமுறைக்குள் சிக்கிவிட்டால் நம் எதிர்காலம் என்னவாகும் என பூமா சிந்திக்கும் இடத்தில் உவமைகளாக அமைத்த கற்பனை காட்சிகள் பலே ஐடியா! The Girlfriend Review ‘நீயே அதை அசிங்கமா நினைக்காதப்போ, நாம் மட்டும் அதை ஏன் அவமானமாக நினைக்கணும்’ என்பது போன்ற வசனங்களும் படத்திற்கு ஆழம் சேர்க்கின்றன. ஆனால், விக்ரம் - பூமா தேவி காதல் பற்றிய தொடக்கக் கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையையும் சுவாரஸ்யத்தையும் பூசியிருக்கலாம். கல்லூரிக்குள் இருக்கும் மகளிர் விடுதிக்குள் எப்படி ஒரு ஆண் சாதாரணமாக வந்து போகிறார், அங்கு வார்டன் என்கிற ஒருவர் இருக்கிறாரா என்பது போன்ற லாஜிக் கேள்விகளுக்கும் பதில் தராமல் ஏமாற்றுகிறாள் இந்த ‘தி கேர்ள்ப்ரண்ட்’. ராஷ்மிகாவின் அசாத்திய நடிப்பு, ஆணாதிக்க எண்ணங்களைத் தோலுரிக்கும் காட்சிகள் என மிளிரும் இந்த ‘தி கேர்ள்ப்ரண்ட்’-க்கு க்ளாப்ஸும் மெடல்களும் நிச்சயம் கொடுக்கலாம்.
பிரித்தானியாவில் சடலமாக கிடந்த சிறைக் கைதி: 3 கைதிகள் மீது கொலை வழக்குப்பதிவு
குழந்தை கொலையாளி ஒருவர் பிரித்தானிய சிறைச்சாலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட கைது பிரித்தானியாவின் HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் குழந்தை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சிறைக் கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் ஒரு மாதத்திற்குள் நடைபெறும் இரண்டாவது […]
ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது…அதிபர் டிரம்ப் முடிவு! என்ன காரணம்?
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாடு ஜோஹனஸ்பர்க்கில் இரு வாரங்களில் நடைபெற உள்ளது. “மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை அமெரிக்கா பிரதிநிதித்துவம் செய்யாது” என்று டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மாநாட்டின் கருப்பொருள் “ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை” என்று இருந்தாலும், டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு தனது ஃப்ளோரிடா […]
Heart Attack வருமான்னு முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம் | Calcium Scoring Test | Vikatan
ஆதார் கார்டு தொலைஞ்சு போச்சா? இப்படி செஞ்சா ஈசியா வாங்கலாம்!
உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டலோ ஆதார் ஆதார் எண் மறந்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். ஈசியா மீட்டெடுக்கலாம். அது எப்படி தெரியுமா?
SIRக்கு எதிராக நவம்பர் 9ல் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 9ந் தேதி (நாளை)திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

29 C