SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவர்! யார் இவர்?

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்தப் பரிசுக்கான தோ்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் மக்களாட்சி நாடாக வெனிசுலா வளமாக இருந்தது. தற்போது அது எதேச்சதிகார நாடாக மனிதத்தன்மைக்கு எதிரான நெருக்கடியாலும், பொருளாதார சிக்கலாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் காரிருள் சூழ்ந்துவரும் வேளையில், மக்களாட்சியின் சுடரை அணையாமல் பாதுகாத்து அமைதிக்காகப் பாடுபட்டு வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு […]

அதிரடி 13 Oct 2025 2:30 am

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா வான்வழித் தாக்குதல் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,40,000 பொதுமக்கள் இந்த மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளனர். ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் சபோரிஜ்சியா பிராந்தியத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் 7 பேர் […]

அதிரடி 13 Oct 2025 12:30 am

உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது. கண்டம் பாயும் ஏவுகணை இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதித் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த […]

அதிரடி 12 Oct 2025 11:30 pm

மரண வீட்டுக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (12) மாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை ஹட்டன் பகுதியில் இருந்து வந்த பேருந்திற்கு இடம் வழங்க முற்பட்ட போதே குறித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதியில் உள்ள மரண […]

அதிரடி 12 Oct 2025 11:30 pm

Vikatan Tele Awards 2024: விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன் - திவ்யதர்ஷினியின் கேள்வி என்ன?

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2024-ம் ஆண்டின் `சிறந்த தொகுப்பாளர் விருது’ மா.பா.கா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டது. விருதை, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (DD) வழங்க, மா.கா.பா ஆனந்த் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் தனக்குப் பரிசளித்த கைக்கடிகாரத்தை மேடையிலேயே திவ்யதர்ஷினிக்குப் பரிசளித்தார் மா.கா.பா. ஆனந்த். திவ்யதர்ஷினி (DD) விஜய் சார் கிட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன் Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர் விருது விழா மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கிரிக்கெட் வீரர் தோனி, நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஆகியோரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் குறித்த ஜாலியான செஷன் திவ்யதர்ஷினியுடன் நடந்தது. ஜெயலலிதா எல்லாரும் ‘Iron lady’னு சொல்றோம். ரொம்ப கம்பீரமானவர் ஜெயலலிதா அம்மா. ஆனா அவர்கிட்ட இருக்கிற மென்மையான குணம் என்னனு கேள்வி கேட்பேன்.  கலைஞர் மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்திருக்கார் கலைஞர் அய்யா. அவர் கொண்டு வர நினைத்து, கொண்டு வர முடியாமல் போன திட்டம் என்ன என்று கேட்பேன்.  திவ்யதர்ஷினி (DD) Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர் தோனி அவருக்குப் பயங்கரமான முட்டி வலி. அப்படியிருந்தும் கடைசி ஐபிஎல் சீசனில் விளையாடினார். எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்று விமர்சனமெல்லாம் வந்தது. ஆனால் அவ்வளவு முட்டி வலியிலும் விளையாடிதினமும் மேட்சை முடிச்சிட்டு மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்வார். இவ்வளவு வலியிலும் உங்களால் எப்படிச் சிரிக்க முடிகிறது என்று கேள்வி கேட்பேன். விஜய் 'ஜனநாயகன்'தான் கடைசி படம்னு சொல்லிட்டு, அரசியல் பாதையில் பயணிக்கவிருக்கிறார் விஜய் சார். அவரது ரசிகர்கள் கடைசிப் படம் ரிலீஸாகும்போது எப்படி கண்ணீர் விட்டு கதறப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்லுவீங்கனு கேள்வி கேட்பேன் என்று கூறியுள்ளார். Vikatan Tele Awards 2024: எல்லா பெண்களும் சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க - கண்மணி

விகடன் 12 Oct 2025 11:21 pm

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நிறுவப்பட்ட இந்த பொலிஸ் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகளை பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக […]

அதிரடி 12 Oct 2025 10:30 pm

Vikatan Tele Awards 2024: கொஞ்சம் மிஸ் ஆனா Bigg Boss வீட்டுக்குள்ளயே அடிப்பாங்க - விஜய் சேதுபதி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024-ம் ஆண்டுக்கான 'Television Talk of the Year' விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகை ராதிகா வழங்கினார். Vikatan Tele Awards 2024 - விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர் விருது விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி, ``இதுக்கு முன்னாடி ‘மாஸ்டர் செஃப்’, ‘நம்ம ஊரு ஹீரோ’ பண்ணேன். இப்போ ‘பிக் பாஸ்’ பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு ஹோஸ்ட் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மட்டும் கொஞ்சம் கவனமாகக் கையாளணும். `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நானும் நல்லா பார்த்துடுவேன், `பிக் பாஸ்’ டீமும் பார்த்துடுவாங்க. எல்லாரும் கலந்து பேசி, ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு. கொஞ்சம் மிஸ்ஸானாலும் `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளேயும் அடிப்பாங்க, வெளியவும் அடிப்பாங்க. எல்லாத்தையும் கவனத்துல வெச்சு பண்ண வேண்டியிருக்கு என்று பேசியிருக்கிறார். தன் படங்கள் பற்றிப் பேசியவர், என் படத்த எனக்கே பார்க்க கூச்சமாக இருக்கும். டப்பிங்கில் பார்ப்பதோடு சரி, என் படத்த நான் இன்னும் முழுசா பார்த்ததில்லை. என் படத்த பார்க்க தியேட்டர்க்குப் போனகூட படத்த பார்க்காம ஆடியன்ஸதான் பார்ப்பேன் ’’ என்றார். Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர்

விகடன் 12 Oct 2025 9:53 pm

Vikatan Tele Awards 2024: எல்லா பெண்களும் சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க - கண்மணி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் செய்திவாசிப்பாளர் கண்மணியை 2024-ம் ஆண்டின் 'Best News Reader'ஆக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி வாசிப்பாளர் கண்மணி பெண்கள் பணத்துக்காக வேலை செய்யறதில்லை, சுயமரியாதைதான் முக்கியம் இதில் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் கண்மணி, ``இந்தச் செய்தித்துறைக்கு, செய்தி வாசிப்பாளராக வந்து எட்டு வருஷதுக்கு மேல ஆகிடுச்சு, விகடன் விருதுதான் என்னோட முதல் விருது. ரொம்ப மகிழ்ச்சியா, பெருமையா இருக்கு. வாழ்க்கையில நிறைய ஏற்ற, இறக்கங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ரொம்ப உடைஞ்சுபோய் உட்கார்ந்திருக்கேன். அப்போவெல்லாம், எங்க அப்பாதான் எனக்கு நம்பிக்கை குடுத்து ஓட வெச்சிட்டிருந்தார். நிறைய தடைகளை, சவால்களை எதிர்கொண்டிருக்கேன். Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர் என் வீட்டுக்கு ஓடி வந்து நிறைய பிள்ளைகள், மாணவர்கள் ‘உங்களை மாதிரி ஆகணும்னு ஆசை’னு சொல்லுவாங்க. அவங்களுக்காக நான் இன்னும் ஓடணும், முன்னேறணும். நான் விழுந்துட்டா, ‘கண்மணி அக்கா போய் என்ன ஆச்சு தெரியுமா?’னு சொல்லி யாரையும் இந்தத் துறைக்கே வரவிட மாட்டாங்க. அவங்களுக்காக நான் உறுதியா ஓடிக்கிட்டே இருப்பேன். செய்தி வாசிப்பாளர் கண்மணி எல்லா பெண்களும் பணத்துக்காக வேலை செய்யறதில்லை, சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியம். அவங்களுக்குக் கை கொடுக்கும் எல்லா ஆண்களும் என்னைப் பொறுத்தவரை ஆண் தேவதைகள்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். Vikatan Tele Awards 2024: ``எனக்கு ஹோஸ்ட் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு - Television Talk of the Year விஜய் சேதுபதி

விகடன் 12 Oct 2025 9:44 pm

கிட்னி திருட்டு… புரோக்கர்கள் இருவர் கைது? அடுத்து கைதாகும் முக்கியப்புள்ளி!

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி பெண் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சமயம் 12 Oct 2025 9:32 pm

Vikatan Tele Awards 2024: 'சிறகடிக்க ஆசை'-ல் அடுத்து இந்த கேரக்டரோட ரிவீல்தான் - இயக்குநர் குமரன்

2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சின்னத்திரை விருது விழாவில், `சிறகடிக்க ஆசை’ இயக்குநர் குமரனுக்குச் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. விருதை திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் வழங்க, குமரன் அதைப் பெற்றுக்கொண்டார். `சிறகடிக்க ஆசை' இயக்குநர் குமரன் அப்போது பேசிய இயக்குநர் ராஜு முருகன், ``சீரியல் மேல எப்போதும் கொஞ்சம் குறைவான மதிப்பீடு இருக்கும். அப்படியான என்னுடைய மதிப்பீடுகளை மாற்றியது திருமுருகன் சார். அவருடன் கொஞ்ச நாள் வொர்க் பண்ணியிருக்கேன். அப்போதான் சீரியலுக்குப் பின்னாடி இருக்குற கடின உழைப்பு எனக்குத் தெரிஞ்சுது. அது எனக்குப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்திச்சு. இதுல மிகப்பெரிய ஆளுமையாக குமரனைப் பார்க்கிறேன் என்றார். Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர் அவரைத் தொடர்ந்து பேசிய குமரன், சின்னத்திரையில் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் திருமுருகன் சார். சிங்கிள் ஷாட், யதார்த்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை முதலில் செய்தது அவர்தான். திருச்செல்வம் சார் அதைப் பிரமாண்டமாக்கினார். அவர்களுடைய வழித்தோன்றல்தான் நான். சமூக அக்கறை கொண்ட சாரிடமிருந்து (ராஜூ முருகன்) இந்த விருதை வாங்குவது கூடுதல் மகிழ்ச்சி. குமரன் விகடன் என்னுடைய வீடு. இங்கு 20 வருடங்களாக நான் இருக்கிறேன். விகடனில் வேலை செய்வது சந்தோஷம். அதில் விருது வாங்குவது கூடுதல் சந்தோஷம். நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... டி.ஆர்.பி-யை நான் எப்பவும் கேட்கவே மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து, ``சிறகடிக்க ஆசை’யில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அடுத்து ரோகிணி கேரக்டர் எப்போது ரிவீல் ஆகப்போகிறது என்பதை நோக்கித்தான் கதை சென்றுகொண்டிருக்கிறது என்று இயக்குநர் குமரன் தெரிவித்தார். Vikatan Tele Awards 2024: ``எனக்கு ஹோஸ்ட் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு - Television Talk of the Year விஜய் சேதுபதி

விகடன் 12 Oct 2025 9:31 pm

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி

கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 29.09.2025 அன்று தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் அங்கங்கள் சிதைந்து […]

அதிரடி 12 Oct 2025 9:30 pm

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 53 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்எஸ்எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 14 சிறுவா்கள், 15 பெண்கள் அடங்குவா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஐந்து சிறுவா்கள், […]

அதிரடி 12 Oct 2025 9:30 pm

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 12 Oct 2025 9:08 pm

கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. குறித்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கேதீஸ்வரன் (வயது 50) என்பவரேசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பதிவு 12 Oct 2025 9:05 pm

Vikatan Tele Awards 2024: Jailer 2ல நான் இருக்கேனான்னு நெல்சன் சார்ட்ட கேட்டதுக்கு - வசந்த் ரவி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 'Heart Beat' தொடருக்கு 'Most Celebrated Series' விருது வழங்கப்பட்டது. 'தரமணி', 'ஜெயிலர்' நடிகர் வசந்த் ரவி இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். 2024-ம் ஆண்டின் Most Celebrated Series - Heart Beat! ஜெயிலர் 2 அப்டேட் கிடைக்குமா? விருது விழா மேடையில் 'ஜெயிலர் 2' குறித்துப் பேசிய வசந்த்ரவி, தரமணி’ படத்துக்காக முதன்முதலில் நான் வாங்கிய விருது விகடன் சினிமா விருதுதான். ‘ஜெயிலர் 2’-ல் நான் இருக்கிறேனா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. நெல்சன் சார்கிட்ட, ` `ஜெயிலர் 2’-வில் நான் இருக்கிறேனா... பத்திரிகையாளர்கள் கேட்டால் என்ன சொல்றது?’ என்று கேட்டேன். அதற்கு நெல்சன், ‘படம் வரும்போது பாருங்கள்’ என்று சொல்ல சொன்னார். பயோ பிக் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. நிறைய முறை அதற்காகப் பேசியிருக்கிறேன். ஆனால் இன்னும் சரியாகக் கதை கிடைக்கவில்லை. டாக்டர்கள் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கு. நல்ல கதை இருந்தால் சொல்லுங்க, பண்ணலாம் என்று பேசியிருக்கிறார். Vikatan Tele Awards 2024: காந்தி, அண்ணா, MGR போல தலைவனாக உருவாக நினைக்கும் விஜய் - SA சந்திரசேகர்

விகடன் 12 Oct 2025 8:35 pm

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

video link- https://fromsmash.com/nV8oA~rOqr-dt கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் குறிப்பிட்டுள்ளார். கல்முனை மாநகர பொதுச் சந்தையில் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மத்தியில் பட்டப்பகலில் கட்டாக்காலி மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பிரதான வீதியில் […]

அதிரடி 12 Oct 2025 8:30 pm

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் காவலா் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 காவலா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இது குறித்து ராணுவம் கூறுகையில், ‘தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 7 முதல் 8 பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினா். அதற்கு முன்னதாக வெடிபொருள் நிரப்பட்ட லாரியை பயிற்சி மையத்தின் நுழைவாயில் […]

அதிரடி 12 Oct 2025 8:30 pm

மடகாஸ்கர் ஜனாதிபதி ராஜோலினாவை எதிர்க்கும் உயரடுக்கு இராணுவப் பிரிவு!

மடகாஸ்கரின் தலைநகரில் ஒரு உயரடுக்கு CAPSAT பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்த பின்னர் வீரர்கள் முழு இராணுவத்தையும் கட்டுப்படுத்துவதாகக் கூறினர். சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா கூறினார். மடகாஸ்கரின் செல்வாக்கு மிக்க CAPSAT இராணுவப் பிரிவு, நாட்டின் முழு இராணுவத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. இனிவரும் நாட்களில் மலகாசி இராணுவத்தின் அனைத்து உத்தரவுகளும் தரைவழியாகவோ, வான்வழியாகவோ அல்லது இராணுவமாகவோ CAPSAT இன் தலைமையகத்திலிருந்து வரும் என்று படைப்பிரிவின் அதிகாரிகள் அதன் வீடியோ அறிக்கையில் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டு ரஜோலினாவை ஆட்சிக்குக் கொண்டு வந்த எழுச்சியின் போது அதே பிரிவு கலகம் செய்தது. மடகாஸ்காரில் என்ன நடக்கிறது? சனிக்கிழமையன்று, தலைநகரில் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஜெனரல்-இசட்போராட்டக்காரர்களுடன் CAPSAT படையினரின் பிரிவு இணைந்தது . காவல்துறையின் மிருகத்தனம் மற்றும் மின்சாரம் மற்றும் நீர் பற்றாக்குறை மீதான கோபத்தால் போராட்டங்கள் தூண்டப்பட்டாலும், அதிகரித்து வரும் அமைதியின்மை பின்னர் அரசியல் மாற்றத்திற்கான பரந்த கோரிக்கையாக உருவெடுத்துள்ளது. செப்டம்பர் 25 அன்று ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகும். அன்டனனரிவோவின் தெற்கு புறநகரில் உள்ள சோனியரானா மாவட்டத்தில் அமைந்துள்ள CAPSAT பிரிவைச் சேர்ந்த வீரர்கள், தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி, பாதுகாப்புப் படையினரை சுட உத்தரவுகளை மறுக்க அழைப்பு விடுத்தனர்.மற்றும் சமீபத்திய போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்தனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை 12 பேர் மட்டுமே இறந்ததனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் மற்றும் நாசகாரர்கள் என்றும் ஜனாதிபதி கூறினார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் மறுத்தார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக, சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி தற்போது நடந்து வருகிறது என்பதை நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்க குடியரசுத் தலைவர் விரும்புகிறார் என்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ரஜோலினா தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரூபின் ஜாஃபிசம்போ சனிக்கிழமை மாலை அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் இளைஞர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இராணுவம் உட்பட அனைத்து சக்திகளுக்கும் ஒத்துழைக்கவும் கேட்கவும் தயாராக உள்ளதுஎன்றும் கூறினார். குடிமக்களிடையே இந்தப் பிரிவினை தொடர்ந்தால் மடகாஸ்கர் மற்றொரு நெருக்கடியைத் தாங்காதுஎன்று அவர் எச்சரித்தார். ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா நாட்டிலேயே இருக்கிறார் என்றும் தேசிய விவகாரங்களை தொடர்ந்து நிர்வகிப்பார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர், 1960 இல் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசியல் எழுச்சிகள் மற்றும் மக்கள் எழுச்சிகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அப்போதைய ஜனாதிபதி மார்க் ரவலோமனாவை அதிகாரத்திலிருந்து நீக்கியது, இது இராணுவம் தனது முதல் பதவிக்காலத்திற்கு ரஜோலினாவை நியமிக்க வழிவகுத்தது . பின்னர் அவர் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். எனினும் வாக்கு முறைகேடுகளால் அவர் வெற்றிபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

பதிவு 12 Oct 2025 8:27 pm

'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்'... நயினார் நாகேந்திரனின் பிரச்சாரப் பயணம் தொடக்கம்!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரப் பயணம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் மதுரையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. இதில் பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

சமயம் 12 Oct 2025 7:58 pm

யானை-மொட்டு கூட்டு இனியில்லை!

எதிர்வரும் தேர்தலில் ரணிலை பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது. ரணிலை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கோ, வரவிருக்கும் தேர்தல்களில் அவரை வழிநடத்துவதற்கோ அல்லது ஆதரவளிக்கவோ எந்த எண்ணமும் இல்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். UNP யின் கொள்கைகளுக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் இடையிலான இணக்கமின்மையே இதற்கு காரணம். முன்னதாக ரணிலை ஜனாதிபதியாக்க ஆதரவளித்திருந்த நிலையில், பின்னர் கொள்கைகளில் வேறுபாடு காணப்பட்டது. இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயல்படும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பதிவு 12 Oct 2025 7:48 pm

இந்தியாவில் 2025–2029 வரையிலான முக்கிய தேர்தல்கள் – முழு விவரம்!

இந்தியாவில் 2025, 2026 முதல் 2029 வரை நடைபெறவிருக்கும் தேர்தல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 12 Oct 2025 7:47 pm

காசாவில் குவிக்கப்படும் 7000 ஹமாஸ் போராளிகள்: மீண்டும் அதிகரிக்கும் குழப்பம்

ஹமாஸ் அமைப்பினர் சுமார் 7000 போராளிகளை திரும்ப அழைத்துள்ளது. காசாவில் மீண்டும் ஹமாஸ் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நேற்று நடைமுறைக்கு வந்த நிலையில் இரண்டாவது நாளாக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர். ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும் வரை காசாவை விட்டு முழுமையாக இஸ்ரேலிய படைகள் வெளியேறாது என இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் காசாவில் ஹமாஸின், போராளிகள் […]

அதிரடி 12 Oct 2025 7:30 pm

வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது!

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் திட்டமிட்ட படுகொலை நிகழ்வு என சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன யாழில் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை யார் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாட்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் சுமார் 40 வருடங்கள் காத்திருந்து 2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாண தீயிடல் என்ற நூலை சிங்கள மொழியில் புலனாய்வு அறிக்கையிடல் மூலம் எழுதினேன். இதை ஏன் நான் சிங்கள மொழியில் எழுதினேன் என்றால் யாழ்ப்பாண பொது நூலகம் ஏன் எரிக்கப்பட்டது யாரால் எரிக்கப்பட்டது என்ற உண்மை நான் புத்தகம் எழுதும் வரை பலருக்கு தெரியாது. யாழ்ப்பாண தீயிடல் என்ற நூல் ஒரு மாதத்தில் பத்தாயிரம் பிரதிகள் சிங்கள மக்களிடம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்னும் குறித்த நூலுக்கான சிங்கள வாசகர்கள் அதிகமாக கேட்கின்ற நிலையில் எங்களால் உடனடியாக அச்சிட்டு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. தற்போது கறுப்பு ஜூலையில் ஏழு நாட்கள் என்ற நூலை யாழ்ப்பாணத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன். இந்த நூலில் கறுப்பு ஜூலையில் சூத்திரதாரிகள் யார் யாருக்காக தமிழ் மக்களை கொன்றொழித்தார்கள் உண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடா கலவரத்தின் பின்னணி , வெலிக்கடை சிறைச்சாலைக்கு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்கள் போன்ற பல புலனாய்வு தகவல்களை ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். அனேகமானவர்கள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு தான் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு காரணம் என. உண்மை அது அல்ல நான் அக்காலப் பகுதியில் சிறைச்சாலையின் பிரதம சிறை காவலரை நேரடியாக வாக்குமூலம் பெற்றேன். 1983 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பூத உடலை கொழும்புக்கு எடுத்துச் சென்று கலவரத்திற்கான திட்டத்தை ஜே ஆர் வகுத்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாக நன்கு திட்டமிட்ட கொலை முயற்சி. 1981 அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதூங்கவை ஜேஆர் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கிறார் ஒரு வாரத்துக்குள் பயங்கரவாதத்தை அழித்து வரும் படி. ஆனால் வீர துங்கவினால் அழிக்க முடியவில்லை . ஆகவே இனியாவது இந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரிய வேண்டும் எனற நோக்கத்திற்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த நூலை இரு மொழிகளிலும் வெளியிட்டு வைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதிவு 12 Oct 2025 7:29 pm

பாதுகாப்பு மீண்டும் தேவை : மகிந்த?

பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் மீட்டெடுக்க விரும்பினால், அதை மறுக்க தனக்கு விருப்பமில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை என்று எந்தவொரு குழந்தையும் கூட உணரும் என்றும், அந்தப் பாதுகாப்பை நீக்கி மீண்டும் நிலைநிறுத்துவது குறித்து தான் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறினார். மேலும், “எங்களுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால், எங்கள் பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது? அதுவும் எங்களுக்கு ஒரு பிரச்சனை. மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டால், நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு 12 Oct 2025 7:18 pm

இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி

இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கபூர். ஆரம்பத்தில் ஜி.எம் குமார் உள்ளிட்டோரிடம்… The post இயக்குனர் ராஜ்கபூர் இளையராஜா கூட்டணி appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Oct 2025 7:17 pm

ஈரோடு: நெருங்கும் தீபாவளி பண்டிகை; கடைவீதி பகுதியில் அலைகடலெனத் திரண்ட மக்கள் | Photo Album

திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் திரண்ட மக்கள் கூட்டம் தீபாவளி டைம்: தாறுமாறாகக் குறைந்த கார் விலை; BMW டு சுசூகி எவ்வளவு குறைந்துள்ளது?|பக்கா கணக்கு இதோ!

விகடன் 12 Oct 2025 7:07 pm

யாழ். வலய கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் தமக்கு அறிக்கை தர வேண்டும் என எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, ஒரு பொது அதிகாரசபை ஒன்று தன் அதிகாரத்திற்கு வெளியே செயற்பட்டு அத்தகைய செயல் அதிகார வரம்பு மீறிய […]

அதிரடி 12 Oct 2025 7:07 pm

தவெக நிர்மல் குமார் கைது… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர்… சாணார்பட்டியில் பரபரப்பு!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். அதனை கண்டித்து தவெகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சமயம் 12 Oct 2025 7:01 pm

Vikatan Tele Awards 2024: படப்பிடிப்பில்தான் பால் டப்பா யார் என்று தெரிந்தது - விஜய் மில்டன்

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 'கயல்' தொடரில் நடித்துவரும் 'வழக்கு எண் 18/9' முத்துராமனுக்கு 2024-ம் ஆண்டின் 'Best Actor - Negative Role' என்ற விருதை 'கோலி சோடா', 'மழைப்பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் கொடுத்துச் சிறப்பித்தார். விஜய் மில்டன் முத்துராமன் 'வழக்கு எண் 18/9’ படத்துல விஜய் மில்டன் சார்தான் கேமராமேன். அந்தப் படத்துல நடிச்சதுக்காக `சிறந்த வில்லனுக்கான விகடன் சினிமா விருதை’ பெற்றேன். இப்போது சின்னத்திரையில் `சிறந்த வில்லனுக்கான விகடன் விருதை’ வாங்கியிருக்கிறேன். என் வாழ்க்கையில் விகடன் சிறந்த தருணங்களைக் கொடுத்திருக்கிறது, அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டார். விருதை வழங்கிய இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, `வழக்கு எண் 18/9’ படத்துக்காக நல்ல வில்லன் நடிகரை ரொம்பத் தேடி அலைந்தோம். இவர்தான் வில்லன் என்று கண்டுபிடித்துவிடக் கூடாத வில்லன் கதாபாத்திரம் அது. அதற்குச் சரியான ஆள் முத்துராமன் சார்தான் என்று கடைசியில்தான் தெரிந்தது. அவர் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் நண்பரும்கூட. அவரது கதாபாத்திரம் இவ்வளவு பாராட்டுகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணம் பாலாஜி சக்திவேல் சார்’’ என்றார். விஜய் மில்டன் பால் டப்பாவை நான் புக் பண்ணும்போது அவர் யாருன்னே தெரியாது. ரேப் இசை பாடகர் பால் டப்பா விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இது குறித்துப் பேசிய விஜய் மில்டன், ``பால் டப்பாவை என் படத்தில் நடிக்கிறார். நான் புக் பண்ணும்போது அவர் யாருன்னே தெரியாது. அவர் பாடல் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. ஷூட்டிங்கில் அவருடன் வேலை செய்யும்போதுதான் அவர்கிட்ட நிறைய திறமை இருக்குன்னு தெரிஞ்சுது. இப்போ ‘DUDE’ படத்தில் ‘Oorum Blood’ பாடல் பெரிய ஹிட் அடிச்சிருக்கு. இன்னும் பல உயரங்களுக்குப் போவார் பால் டப்பா’’ என்றார். Vikatan Digital Awards 2025: `அதிரடி ஹீரோ' - பால் டப்பா | Viral Star Of The Year 2025 - Paal Dappa

விகடன் 12 Oct 2025 6:44 pm

சற்றுமுன் NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது! பீகார் தேர்தலில் யாருக்கு, எத்தனை சு தெரியுமா?

பீகார் மாநில தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று விரிவாக காண்போம்

சமயம் 12 Oct 2025 6:36 pm

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்-ஆஃப் மதிப்பெண்கள் எப்படி அமையும்? கல்வியாளர் பகிர்ந்த தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்கள் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் தீபாவளி பரிசாக குரூப் 4 தேர்வு முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்-ஆஃப் மதிப்பெண்கள் எப்படி அமைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர் பகிர்ந்த தகவலை பார்க்கலாம்.

சமயம் 12 Oct 2025 6:33 pm

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம்: 8 இந்தியா்கள், 40 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம் மேற்கொண்டுவரும் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சகம் இத் தடையை விதித்துள்ளது. இந்தத் தடை நடவடிக்கைக்கு உள்ளான நபா்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்பதோடு, தடை நடவடிக்கைக்கு உள்ளான தொழில் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தக உறவு மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் தொடா் அச்சுறுத்தல் மற்றும் இஸ்ரேலின் தீவிர […]

அதிரடி 12 Oct 2025 6:30 pm

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் அரசு திறனாய்வு போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் அந்த 11 ஆம் வகுப்பு மாணவி தேர்வு எழுத சென்றுள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கண்டக்டர் தேர்வு முடித்துவிட்டு மீண்டும் மதியம் வீட்டிற்குச் செல்வதற்காக பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாடு சென்ற அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார் அம்மாணவி. பாபநாசம் தாலுகா நரியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவர் அந்தப் பேருந்தின் நடத்துநர். மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே இருந்து கொண்டு சுதாகர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி, 'ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கிட்ட இப்படி நடக்கலாமா' என்று கேட்டதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் சுதாகர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றதும் தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து அழுதபடி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கண்டக்டர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து போக்சோ வழக்கில் போலீஸார் அவரைக் கைது செய்தனர். கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

விகடன் 12 Oct 2025 6:30 pm

5 ஆண்டுகளாக இலங்கையில் தாயை தேடி திரியும் டென்மார்க் குடிமகன்

ஐரோப்பிய நாடான டென்மார்கில் வசித்து வரும் குடும்பஸ்தர் ஒருவர், இலங்கையில் தனது தாயை 5 ஆண்டுகளாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட 40 வயதான டோர்டன் மேயர் என்பவரே தனது உயிரியல் பெற்றோரை தேடி வருகின்றார். டென்மார்க் பெற்றோர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தாயை தேடி வருவதாகவும், எனினும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என குறித்த நபர் குறிப்பிட்டார். இந்தியாவை பூர்விமாக கொண்ட முகமது சாலி மரிக்கார் சித்தி ஜெசிமா என்ற […]

அதிரடி 12 Oct 2025 6:29 pm

மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா என அழைக்கப்படும் வீரசிங்க சரத் குறித்த வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி 12 Oct 2025 6:28 pm

நிதி மாயை உடைந்தது: 90% முதலீடுகள் ஏன் தோல்வியடைகின்றன? – சந்தையின் மறைக்கப்பட்ட இரகசியம்!

வரலாற்று ரீதியான தரவுகளைப் பார்க்கும்போது ஒரு அதிர்ச்சியான உண்மை புலப்படுகிறது: பங்குச் சந்தை, பத்திரங்கள் (Bonds) மற்றும் ரியல் எஸ்டேட்

ஆந்தைரேபோர்ட்டர் 12 Oct 2025 6:22 pm

தீபாவளி: `வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த 2000 ரூபாய் நோட்டுகள்' - என்ன செய்யலாம்?

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் போது, இரண்டு லட்சம் மதிப்பிலான பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டு இந்த சமயத்தில் பல ஆண்டுகளாக காணாமல் போன பொருள்கள் கிடைக்கும். அந்த வகையில் ரெட்டிட் தளத்தில் ராகுல் குமார் என்பவர் தீபாவளியை முன்னிட்டு வீடு சுத்தம் செய்யும் போது, இரண்டு லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்டிட் பதிவின்படி, ”தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது என் அம்மா பழைய டிடிஎச் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புழக்கத்தில் இல்லாத பழைய 2000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்திருக்கிறார். 2000 ரூபாய் நோட்டு பண இழப்பு காலத்தில் என் அப்பா இதை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இந்த விஷயம் குறித்த இன்னும் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார் ராகுல் குமார். அதனுடன் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. இதை அடுத்து இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டுகளை தற்போதும் மாற்ற முடியுமா? கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 2023 ஆம் ஆண்டில் புழக்கத்திலிருந்து திருப்பி பெறப்பட்டன. 2023 அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு சாதாரண வங்கிக் கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாது. ஆனால் பொதுமக்களிடம் மீதமுள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து வாய்ப்பளிக்கிறது. தற்போது, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்பினால், பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம். RBI ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் (Issue Offices) 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாகச் சென்று மாற்றிக்கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ₹20,000 வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு 2023 அக்டோபர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றுவதற்கு இதுவரை எந்த இறுதி காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ``2000 ரூபாய் கள்ள நோட்டுகள்... - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு! https://www.reddit.com/r/indiasocial/comments/1o3maiy/biggest_diwali_safai_of_2025/?utm_source=share&utm_medium=web3x&utm_name=web3xcss&utm_term=1&utm_content=share_button

விகடன் 12 Oct 2025 6:10 pm

இலங்கை மக்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள வலியுறுத்தல்

இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால்,வைத்தியரிடம் சிகிச்சை பெற தாமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உள்ள […]

அதிரடி 12 Oct 2025 6:03 pm

கரூர் சம்பவம்… மலிவான அரசியல் ஆதாயம்… ஆர்.எஸ். பாரதி காட்டம்

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக உச்சநீதிமன்றத்தை நாடியதை விமர்சித்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தனது சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டு உள்ளார்.

சமயம் 12 Oct 2025 5:54 pm

கரூர் வழக்கு: புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு சர்ச்சை! டிஎஸ்எஸ் மணி சொல்வது என்ன?

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் கைதுக்கு பயந்து, தவெக புஸ்ஸி ஆனந்த், முன்ஜாமீன் கோரியபோது மனுவை படிக்காமல் கையெழுத்து போட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 12 Oct 2025 5:47 pm

தந்தேராஸ் பண்டிகைக்கு நகை வாங்கலாமா? விலை எப்படி இருக்கும்?

தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்க நல்ல நேரம் வருது.

சமயம் 12 Oct 2025 5:46 pm

சபாநாயகர் அப்பாவு மகனுவுக்கு புதிய பொறுப்பு..திமுக தலைமை அதிரடி - காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டப்பேரை தலைவர் சபாநயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 12 Oct 2025 5:45 pm

பெங்களூரு டூ ஓசூர்… அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனை அமோகம்- டோல்கேட் அருகே குவியும் வண்டிகள்!

தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓசூர் எல்லை பகுதியில் பெங்களூருவில் பலரும் படையெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சமயம் 12 Oct 2025 5:34 pm

பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள் –தமிழ்நாட்டின் இடம் என்ன?

பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணியிட விருப்பங்கள் குறித்து Wheebox என்ற அமைப்பு, “இந்திய திறன் அறிக்கை 2025” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் வேலைக்கு தகுதியான பெண்கள் 45.6 சதவீதமாக இருந்தது, தற்போது 47.53 சதவீதமாக உள்ளது. இதே போல், பெண்கள் எந்த மாநிலத்தில் பணி செய்ய விரும்புகின்றனர் என்பது […]

அதிரடி 12 Oct 2025 5:30 pm

அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு? செக் பண்றது எப்படி? PF ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!

உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்துகொள்ள நிறைய வழிகள் உள்ளன. அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 12 Oct 2025 5:15 pm

``முதலில் மோசடி கால் என நினைத்தேன், ஆனால் - லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் உண்மை என அறிந்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தில் உள்ள வெஸ்ட்லாந்து பகுதியை சேர்ந்தவர் வாலரி வில்லியம்ஸ். 65 வயதான இவர் லாட்டரி செயலியை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்திருக்கிறார். தனக்கு பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது. அதை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் வில்லியம்ஸ்க்கு லாட்டரி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. Lottery (representative) அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வென்றதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் முதலில் இதனை மோசடி அழைப்பு என்று அவர் நினைத்துப் புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் லாட்டரி அதிகாரிகளிடம் அது குறித்து அவர் கேட்டு தகவலை உறுதிப்படுத்திய பிறகு உண்மையை அறிந்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “லாட்டரி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தபோது அது ஒரு மோசடி அழைப்பு என நினைத்துப் பதில் அளிக்கத் தயங்கினேன். ஆனாலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கத்தான் அழைப்பை ஏற்றேன். அதன் பிறகு பரிசுத்தொகை பற்றி எனக்குக் கூறிய பிறகு நம்பவில்லை. அதிகாரிகளிடம் விசாரித்தபின் உண்மை என அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தேன்” என்று கூறுகிறார் வில்லியம்ஸ். கேரளா: வேலையை விடும் திட்டமில்லை - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

விகடன் 12 Oct 2025 5:05 pm

தமிழகத்தின் சாபக்கேடு… கண் துடைப்பு நடவடிக்கை… விளாசிய அண்ணாலை!

மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இருமல் மருந்து, திருமாவளவன் குறித்து விமர்சித்து கருத்து கூறினார்.

சமயம் 12 Oct 2025 5:04 pm

பெங்களூரு வாழ் தமிழர்களுக்கு குட் நியூஸ்! மதுரை ரூட்டில் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு தூத்துக்குடி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 12 Oct 2025 4:58 pm

மம்தாவின் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா? மேற்கு வங்க முன்னாள் எம்.பி ஆவேசம்

மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 12 Oct 2025 4:55 pm

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கான் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. Taliban press conferences இந்தக் குற்றச்சாட்டுகளை தாலிபான் தரப்பும் மறுத்துள்ளது. பெண் பத்திரிகையாளர்களை வேண்டுமென்றே ஒதுக்கவில்லை என்றும், இது கவனக்குறைவாக நடந்த செயல் என்றும் தாலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவர் சுஹைல் ஷஹீன் கூறியுள்ளார். இதுகுறித்து சுஹைல் ஷஹீன் பேசுகையில், பெண் பத்திரிகையாளர்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. இது திட்டமிடாமல் கவனக்குறைவாக நடந்தது. ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் வருகிறார்கள். அமைச்சர் முட்டாக்கி காபூலில் உள்ள தனது அலுவலகத்தில் பெண் பத்திரிகையாளர்களையும், பிரதிநிதிகளையும் தவறாமல் சந்திக்கிறார். அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து விளக்கம் அளித்தார். “ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அதற்கு தடையும் விதிக்கப்படவில்லை. தற்போது நாடு முழுவதும் 1 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் 28 லட்சம் பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர். சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெண்களின் கல்வி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். தாலிபான்: மோடி, ஜெய்சங்கர் இந்திய பெண்களின் கண்ணியத்தை காக்க முடியாதா? - எதிர்க்கட்சிகள் கண்டனம்!

விகடன் 12 Oct 2025 4:50 pm

கேரளாவில் பரவி வரும் அமீபா நோய் தொற்று...23 பேர் உயிரிழப்பு!

கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் அமீபா நோய் தொற்றால் இது வரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமயம் 12 Oct 2025 4:42 pm

வாழ்வின் இரு துருவங்கள்: நிச்சயமற்றமையும், விலைமதிப்பற்ற தன்மையும்!

மனித வாழ்க்கை என்பது இரு துருவங்களுக்கு இடையில் பின்னப்பட்ட ஒரு சாகசப் பயணம்: ஒன்று “precarious” (நிச்சயமற்ற/நிலைத்தன்மையற்ற) தன்மை, மற்றொன்று

ஆந்தைரேபோர்ட்டர் 12 Oct 2025 4:39 pm

`நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது

தமிழக வெற்றி கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தவெக தலைவர் விஜய் அப்போது “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது. அரசு அமைதியாக இருக்கக் கூடாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். என்ன மாதிரியான கட்சி இது. கட்சியின் தலைவருக்கு தலைமைத்துவப் பண்பே இல்லை” என்று தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருந்தார் நீதிபதி செந்தில்குமார். இதனையடுத்து, தவெகவினர் சமூக வலைத்தளங்களில் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டுவந்தனர். நீதிபதியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றும் இந்த வழக்கு குறித்து யாராவது அவதூறு பதிவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவர் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் முதல்வர் மற்றும் நீதிபதியை பற்றி அவதூறாக பதிவிட்டுள்ளதாகக் கூறி சாணார்பட்டி காவல்துறையினர் நிர்மல்குமாரை கைது செய்தனர். கரூர்: முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு - பாஜக நிர்வாகி கைது

விகடன் 12 Oct 2025 4:33 pm

Gold: தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிற காகிதத்தில் வைத்து கொடுக்கக் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் அனைத்து நகைக்கடைகளிலும் பொதுவாக தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்றும் பெரும்பாலான மக்கள் அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம், செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாகக் கருதப்படுகின்றன. நகைகள் வாங்கும்போது, அதன் ஒளி, பிரகாசம் மற்றும் காட்சி மிக முக்கியம் ஆகும். இதற்காகவே நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் மடித்து வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றனர். Gold ரோஸ் நிறம், வெள்ளி நகைகளுக்கு ஒரு சிறப்புப் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளை நிறத்துடன் ஒத்த வெள்ளி நகைகள் மேலும் பிரகாசமாகத் தெரிய பிங்க் நிறக் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்க நகைகளின் மஞ்சள் நிறத்தைக் கூட இந்தப் பிங்க் நிற காகிதம் அழகாகப் பிரதிபலிக்கிறது. இதனால் நகைகள் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை உயர்தரமானவையாகவும், அதிக விலையுடையவையாகவும் உணர்வதற்கு வழி வகுக்கிறது. வணிக அனுபவத்தின் அடிப்படையில் இந்த ரோஜா நிறக் காகிதம் வணிகத்திற்கும் ஆதாயம் அளிப்பதை உறுதி செய்துள்ளனர். வேறு நிறங்களில் இதுபோல் விளைவுகள் இல்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்கள் வெள்ளி மற்றும் தங்க நகைகளின் பிரகாசத்தைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றனர். உச்சத்தில் தங்கம் விலை - முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

விகடன் 12 Oct 2025 4:06 pm

தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டி ; தங்க பதக்கம் வென்ற மாணவன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.​ அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ​ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கில்டன் தங்கப் பதக்கத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளார்.

அதிரடி 12 Oct 2025 4:06 pm

கொழும்பில் மின்சாரம் தாக்கி 55 வயது குடும்பஸ்தர் பலி

கொழும்பு வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள மின் கம்பி அமைப்பினால் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிரடி 12 Oct 2025 4:04 pm

யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 12 Oct 2025 4:03 pm

Aipasi 2025 Rasi Palan | ஐப்பசி 2025 ராசி பலன்கள் | மேஷம் முதல் மீனம் வரை | #astrology

In this video, we share the complete aippasi Month Astrology Predictions (Rasi Palangal) for all zodiac signs. Watch this video till the end to know your Purattasi 2025 horoscope, lucky days, and important remedies. இந்த வீடியோவில், அனைத்து ராசிக்காரர்களுக்குமான ஐப்பசி மாத ராசிபலன்களை விரிவாக பார்க்கலாம்.

விகடன் 12 Oct 2025 4:00 pm

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தது.

அதிரடி 12 Oct 2025 3:59 pm

நண்டு தெரியும்; தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு?

தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு? இந்த நண்டுகள் எங்கு வசிக்கும்? இவற்றுக்கு ஏன் தில்லை நண்டுகள் என்று பெயர் வந்தது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பொதுவாக ’பத்துக்காலி’களான நண்டுகளைப் பற்றிய சில தகவல்களை காட்டுயிர் ஆர்வலரும், சூழலியல் எழுத்தாளருமான கோவை சதாசிவம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோமா? நண்டு நண்டுகள் வரைந்து வைத்த ஓவியங்கள்... ''நம் எல்லோருக்குமே கடல் பார்க்கப் பிடிக்கும். அதற்காக கடற்கரை செல்லவும் பிடிக்கும். கண் எதிரே இருக்கிற பிரம்மாண்டமான கடலைப் பார்க்கிற நாம், எப்போதாவது நம் கால்களின் கீழே இருக்கிற மணலில் நண்டுகளின் காலடித் தடங்களைப் பார்த்திருக்கிறோமா..? அந்தச் சின்னஞ்சிறிய கோடுகள் எல்லாம் கடற்கரை மணலில் நண்டுகள் வரைந்து வைத்த ஓவியங்கள்... கடற்கரை மணலுக்குள் ஒளிந்து விளையாடும் சிறு சிறு நண்டுகளில் ஆரம்பித்து வெவ்வேறு அளவுகளில், கடல் நண்டு, சதுப்பு நில நண்டு, வயல் நண்டு என உப்புக்கடலில் ஆரம்பித்து நன்னீர் வரைக்கும் உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான நண்டுகள் வாழ்கின்றன. நீரிலும் நிலத்திலும் சுவாசிக்க முடிந்த நுரையீரல்களைக்கொண்டவை நண்டுகள். கிட்டத்தட்ட10 ஆயிரம் அடி ஆழத்தில்கூட... கடலில், கிட்டத்தட்ட10 ஆயிரம் அடி ஆழத்தில்கூட, நண்டுகள் வாழ்கின்றன என்பது ஒரு வியப்பான தகவல். சரி, அத்தனை அடி ஆழத்தில் நண்டுகள் என்ன செய்கின்றன; இந்த உயிர்ச்சூழலில் நண்டுகளின் பங்கு என்னவென்று பார்த்தால், கடல் வாழ் நண்டுகள் கடல் நீரின் துப்புரவாளர்களாக இருக்கின்றன. பெரிய மீன்கள் உண்ட மிச்சம் மீதி தசைத்துணுக்குகளை நண்டுகள் சாப்பிட்டு கடலைத் தூய்மையாக வைத்துக்கொள்கின்றன. உப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கிற இந்த நிலத்தில் வாழ்கிற தன்மைகொண்ட சுரபுன்னை, கண்டல் எனச் சில தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தில்லை மரங்கள். ஸ்பெஷல் கெஸ்ட் தில்லை நண்டுகள் கடலின் ஆழத்தில் பவழப்பாறைகள் இருக்கும். அதிலிருந்து உருவாகும் பாசிகளால், கடலுக்குள் இருக்கிற நீர்த்தாவரங்கள் சுவாசிக்க முடியாமல் போகும். அந்தப் பாசிகளை நண்டுகள் உண்டு விடும். கடற்கரை மணலில் இருக்கிற நண்டுகள் மணலில் இருக்கிற கரிமப்பொருள்களை உண்ணும். மீன்களுக்கு அடுத்தபடியாக நண்டுகளையே உலகெங்கும் பலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அந்த நண்டுகள் சாப்பிடுபவை இவைதான். இனி, இந்தக் கட்டுரையின் ஸ்பெஷல் கெஸ்ட் தில்லை நண்டுகள் பற்றிப் பார்ப்போம்’’ எனத் தகவல்களைத் தொடர்ந்தார் கோவை சதாசிவம். தில்லை மரங்கள் ’’தில்லை நண்டுகள், சதுப்பு நிலங்களில் வாழ்பவை. சதுப்பு நிலத்தை, சேற்று நிலம் அல்லது ஈர நிலம் என்றும் சொல்வர். ஆறுகளின் ஓட்டத்தால் மலைகளில் இருந்து வந்து சேர்கிற வண்டல் மண்ணையும், கடல் மண்ணையும் ஒன்று சேர்த்து, சதுப்பு நிலமாக மாற்றி வைத்திருக்கிறது இயற்கை. உப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கிற இந்த நிலத்தில் வாழ்கிற தன்மைகொண்ட சுரபுன்னை, கண்டல் எனச் சில தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தில்லை மரங்கள். கோவை சதாசிவம் தில்லை மரத்தின் பால் நம் கண்களில் பட்டுவிட்டால்... இந்தத் தில்லை மரத்தின் வேர்களுக்கு இடையேதான் மூன்றடி வரைக்கும் வளைகள் தோண்டி வாழும் இந்த நண்டுகள். எதற்குத் தெரியுமா? அந்த மரத்தின் வேர்களில் பால் போன்ற திரவம் கசியும். இதை உண்டு வாழ்வதாலேயே இந்த நண்டுக்கு இந்தப் பெயர். தில்லை மரத்தின் பால் நம் கண்களில் பட்டுவிட்டால் கண் பார்வையே போய்விடுமாம். ஆனால், அந்தப் பால்தான் சதுப்பு நில நண்டுகளுக்கு உணவாகிறது. சரி, சதுப்பு நில தாவரங்களின் வளர்ச்சிக்கு இந்த நண்டுகள் எப்படி உதவி செய்கின்றன? மண்புழுபோல மூன்றடிக்குச் சேற்றைக் கீழ், மேலாகப் புரட்டிப்போடுவது தில்லை நண்டுகள்தான். இதனால், அந்த மரங்களின் வேர்களுக்கு ஈரப்பதமும் காற்றோட்டமும் கிடைக்கிறது. தில்லை நண்டு முழுக்கையையும் குழிக்குள் விட்டால்தான்... தில்லை நண்டுகளை மூட்டுவலி, சளி மற்றும் காய்ச்சலுக்கு நல்லது என ரசம் வைத்து உண்பார்கள். ஆனால், இவற்றைப் பிடிப்பதற்குத் தனி திறமை வேண்டும். கூடவே, நிறைய தைரியமும் வேண்டும். தில்லை நண்டுகள் மூன்று அடி ஆழத்துக்கு வளைகள் தோண்டி வாழும் என்றேன் இல்லையா..? ஒவ்வொரு வளையிலும் 3 முதல் 5 நண்டுகள் வரை வாழும். இந்த வளைகளிலேயே இனப்பெருக்கமும் செய்யும். இந்த நண்டை வெறும் கையால்தான் பிடிக்க முடியும். மரங்களின் வேர்களுக்கிடையே குழி தோண்டி, மண்ணில் படுத்து, முழுக்கையையும் குழிக்குள் விட்டால்தான் தில்லை நண்டைப் பிடிக்க முடியும். நண்டுகள் குஞ்சுப்பொரித்த பிறகு, காலி செய்த வளைகளில் கடல் பாம்புகள் குடியேறி விடும். அந்த வளைகளுக்குள் அனுபவமில்லாதவர்கள் நண்டு பிடிக்க கையைவிட்டால், பாம்பு கடித்துவிடும். அப்படிப்பட்ட சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவார்கள். உயிர்வேலி: முன்னொரு காலத்தில் அந்த வேலியில் எத்தனையெத்தனை உயிர்கள் வாழ்ந்தன தெரியுமா? இரண்டு சிக்கல்கள் வந்திருக்கின்றன. தில்லை நண்டுகளுக்கு இப்போது இரண்டு சிக்கல்கள் வந்திருக்கின்றன. புவி வெப்பம் உயர்ந்ததால் கடலின் இயல்பான வெப்பமும் மாறுபட்டிருக்கிறது. இதனால், கடலின் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. இதனால், தில்லை நண்டுகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. `ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இப்போது புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புயல்களின் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. பருவ மழைகள் இயல்பாக இல்லாமல் புயல் மழையாக மாறத் தொடங்கிவிட்டப் பிறகு, புயல்கள் கடற்கரையையும் அதையொட்டி இருக்கிற சதுப்பு நிலங்களையும், அங்கு வாழ்கிற தில்லை நண்டுகளின் வாழ்க்கையையும் அதிகம் பாதித்துக்கொண்டிருக்கின்றன’’ என்கிறார் கோவை சதாசிவம்.

விகடன் 12 Oct 2025 3:53 pm

தீபாவளி ஷாப்பிங் முடிஞ்சுதா? இப்போவே கூட்டம் அள்ளுது… களைகட்டிய விற்பனை!

தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், வார விடுமுறை தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்

சமயம் 12 Oct 2025 3:50 pm

பிக் பாஸ் 9: கமல் போய் விஜய் சேதுபதி வந்து 2 சீசனாச்சு, ஆனால் அந்த ஒரு விஷயம் மட்டும் இன்னும் மாறலயே

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்று வெளியான மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு இது மட்டும் எப்பொழுதுமே மாறவே மாறாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமயம் 12 Oct 2025 3:37 pm

அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயமாகினா்; அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டென்னசியின் கிராமப்புறத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் ஆலையில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலை தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தால் ஆலையின் கட்டடம் மற்றும் பிற பொருள்களின் சிதறல்கள் 800 மீட்டவரை வரை பரவியது. 24.1 கி.மீ தொலைவில் உள்ளவா்கள் அதிா்வை உணா்ந்ததனா். விபத்து நேரிட்டபோது ஆலையில் எத்தனை […]

அதிரடி 12 Oct 2025 3:30 pm

மதுரைக்கு வந்த இயற்கை அங்காடி...200-க்கும் மேற்பட்ட கடைகள்!

மதுரையில் இயற்கை அங்காடியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் பண்டிகை கால ஷாப்பிங் நடைபெற்று வருகிறது. இது மதுரை மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பொருட்கள் இருப்பதால் மக்கள் வாங்கி சென்றனர்.

சமயம் 12 Oct 2025 3:05 pm

Google-க்கு செக் வைக்கும் ZOHO-வின் `Ulaa browser' - என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் வாட்ஸப்பிற்கு மாற்றாக 'ZOHO' நிறுவனம் 'அரட்டை' ஆப்பை வெளியிட்டு செக் வைத்திருக்கிறது. இதையடுத்து கூகுள் குரோம் பிரவுசருக்கு செக் வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வெப் பிரவுசர்களான 'Google, Chrome, Safari' க்கு சவால் விடும்படியாக இந்திய நிறுவனமான ZOHO நிறுவனத்தின், 'Ulaa'என்ற பிரவுசரை வெளியிட்டு இருக்கிறது.  இது ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. ' 'Ulaa (உலா)' என்றால் சுற்றுலா, உலவுதல், பயணம் போன்றவற்றை குறிக்கக்கூடிய தமிழ் சொல்லையே இந்த பிரவுசருக்கு பெயராக வைத்துள்ளனர். உலாவின் லோகோ கிட்டத்தட்ட குரோமை போலவே  வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  ZOHO வின் 'Ulaa' பிரவுசர் Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்? 2023-லேயே மினிமம் டிசைனில் கொண்டுவரப்பட்டது இந்த பிரவுசர். ஆனால் சரியான பார்ட்னர்ஷிப் இல்லை, மார்க்கெட்டிங் இல்லை எனப் போன்ற பல காரணங்களினாலும் அப்பொழுது இந்த பிரவுசர் மக்களை அதிகமாக சென்றடையவில்லை. இப்பொழுது ZOHO-வின் அரட்டை ஆப், ZOHO Mail-ஐ மத்திய அமைச்சர்கள், அமித் ஷா உள்ளிட்டோர் 'Made in India நம் நாட்டு பொருட்களை பயன்படுத்தலாம், தொழில்நுட்பத்தில் தன்னிறைவைப் பெற வேண்டும்' என ஆதரவளித்து பிரபலப்படுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து ZOHOவின் இந்த 'Ulaa' பிரவுசரும் ட்ரெண்டாகி வருகிறது. ZOHO என்னதான் சொல்றாங்க? டேட்டா ட்ரான்ஸாக்ஷன், டேட்டா பிரைவசி போன்றவற்றை வைத்து ஒரு உலகப் போரே கூட வரலாம் என்று கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது நமது தரவுகளை பாதுகாக்கக்கூடிய 'data privacy'. ஆனால், இந்த பிரைவசி இப்பொழுது எந்த பிரவுசரிலும் கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். உதாரணமாக நாம் ஒரு ப்ராடக்டைப் பிரவுஸ் பார்க்கிறோம் என்று தெரிந்தால் அதே பிராடக்டையோ அல்லது நாம் பிரவுசரில் தேடியது சம்பந்தமான விளம்பரங்களாக வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி நம் தரவுகளுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் ஒரு கேள்வி குறிதான். ஆனால் 'Ulaa (உலா)' பிரவுசரில் டேட்டா பிரைவசி 100% இருக்கின்றது என்று 'ZOHO' நிறுவனம் கூறுகிறது. அதாவது நீங்கள் பிரவுஸ் செய்வதையோ உங்களது தரவுகளையோ மூன்றாவது நபராக (Third Parties) யாருமே பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறது. உலா பிரவுசரை 'A first privacy browser' என்றும் மார்க்கெட் செய்கிறார்கள். ZOHO வின் 'Ulaa' பிரவுசர் WhatsApp-க்குப் போட்டியாக களமிறங்கிய இந்தியாவின் 'Arattai App' - NO.1 இடம்பிடித்த சாதனை கதை! விதவிதமான பிரவுஸிங் வசதிகள் 'Google, Chrome' போன்றவற்றில் நாம் தேடும் விஷயங்களை இதிலும் தேடலாம். இதுபோக என்ன ஸ்பெஷலான வசதிகள் இதில் இருக்கின்றன என்று கேட்டால், நான்கு விதமான பயன்முறைகளை இதில் கொடுக்கின்றனர். பர்சனல் மோட் (Personal Mode), டெவலப்மென்ட் மோட் (Development Mode), கிட்ஸ் மோட் (Kids mode), ஓபன் சீசன் மோட் (Open Season Mode) பர்சனல் மோடில் உங்களுக்கு பர்சனல் ஆக எது வேண்டுமானாலும் நீங்கள் பிரவுஸ் செய்து கொள்ளலாம். டெவெலப்மென்டல் மோடில் நீங்கள் எந்தவிதமான வேலை பார்க்கிறீர்களோ அது தொடர்பாக அல்லது திறன் மேம்பாட்டு சம்பந்தமாகவும் பார்த்துக் கொள்ளலாம் . கிட்ஸ் மோடு என்பது பெற்றோரின் கட்டுப்பாட்டோடு (Parental control) இயங்கக்கூடிய மோடாகும். உங்களின் குழந்தையின் வயதுக்கு மீறிய கன்டன்டுகளை எல்லாம் தவிர்த்து ஃபில்டர் செய்து கொடுக்கிறது. ஓபன் சீசன் மோடு என்றால் எந்தவித தடைகளும் இல்லாமல்(No restrictions) எதை வேண்டுமானாலும் பிரவுஸ் செய்து கொள்ளலாம்.  Data privacy எங்கே..? டிஜிட்டல் இறையாண்மையை மேம்படுத்தி இந்திய அரசு நடத்திய போட்டியில் டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பதில் 'உலா' வெற்றி பெற்றிருக்கிறது. இருந்தாலும் இந்த 'உலா' பிரவுசர் கண்ட்ரோலர் ஆஃப் செர்டிபையிங் அத்தாரிட்டிஸ் (Controller Of Certifying Authorities -CCA ) கீழ்தான் இயங்க வேண்டியது இருக்கின்றது. அதாவது பயனர்களின் தரவை மாற்றி அமைக்க உலாவில் உள்ள இணைய நெறிமுறைகளை CCA வால் கையாள முடியும் என்கின்ற பட்சத்தில் டேட்டா பிரைவசி என்பது எங்கே இருக்கின்றது என்று பலரும் கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 'google,chrome' போன்ற வெப் பிரவுசரில் ஏதேனும் சிக்கல் வரும் என்றால் தகுந்த எச்சரிக்கைகளை கொடுக்கும். ஆனால் 'உலா' பிரவுசரில் இது போன்ற எச்சரிக்கைகள் என்பது எந்த அளவிற்குத் துல்லியமாக நம்மை வந்து சேரும் என்பது ஒரு சந்தேகம்தான். ZOHO வின் 'Ulaa' பிரவுசர் Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்? Google vs Ulaa 'உலா' பிரவுசர் இந்திய நாட்டைச் சார்ந்தது என்பதால் அதை பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்று இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பலர் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் 'உலா பிரவுசரை யூஸ் பண்ணுவது பாதுகாப்பானது தானா?' என்பதையே கூகுளில் தான் தட்டிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 'google, chrome' என்று ஜெயண்ட் ஃபீச்சர்ஸைக் கொண்ட வெப்சைட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்திப் பழகி இருக்கிறோம் என்பதால் திடீரென்று உலாவிற்கு மாறுவதற்கும், உலா பிரவுசர் மக்களை சென்று அடைவதற்கும் கொஞ்சம் கஷ்டம் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். அப்படியே ZOHO கூறுவது போல் உலாவில் பிரைவசி இருந்தாலும் வெறும் பிரைவசி, ப்ராடக்ட்டிவிட்டி என்கின்ற இரண்டு ஃபீச்சர்ஸை மட்டுமே மையமாக வைத்து அதிகப்படியான ஆடியன்ஸைக் கவர் பண்ண முடியுமா என்பது சந்தேகம்தான். நம் சென்னை ஆப், 'Made in India' என்பதற்காக பலரும் இதை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். டெக் ஆப்களில் தமிழ் பெயர்களைப் பார்ப்பதும் அவ்வளவு அழகாக இருக்கிறது. சென்னை பையனான அரவிந்த் சீனிவாசனின் 'Comet', கூகுளின் 'Gemini', என 'AI' பிரவுஸிங் ஆப்கள் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் இந்த ட்ரெண்டில், ZOHOவின் இந்த 'உலா' பிரவுசர்' ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 12 Oct 2025 2:57 pm

பாகிஸ்தானுக்கு எமனாக மாறிய ஆப்கானிஸ்தான்...58 ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி!

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கியதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். இதில், 30- க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

சமயம் 12 Oct 2025 2:51 pm

தமுக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிழற்கூரைகள் அகற்றம்-மக்கள் கடும் அவதி!

தமுக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது . இதற்காக பேருந்து நிலைய நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் வெயிலில் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

சமயம் 12 Oct 2025 2:48 pm

தீபாவளி வருது.. வீடு வாங்க நல்ல நேரம்.. இப்போது வாங்கினால் ஏன் நல்லது தெரியுமா?

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் ஏன் அதிகமாக சொந்த வீடு வாங்குகின்றனர். அதற்கான காரணம் என்ன? வீட்டின் விலையைத் தாண்டி வேற என்ன காரணம்?

சமயம் 12 Oct 2025 2:47 pm

`கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு'தமிழக அரசின் அரசாணைக்கு தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. பதிவுத்துறை சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கோயில்களுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் கோயில் சொத்துகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழக வருவாய்த்துறை, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலாளர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ``முறைகேடுகளைத் தடுக்க, கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு'' - தமிழக அரசு விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு

விகடன் 12 Oct 2025 2:44 pm

திருச்சி மாவட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-தீர்வு என்ன? அதிகாரிகள் கூறிய தகவல்!

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துகளி உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது .

சமயம் 12 Oct 2025 2:06 pm

பென்சன் திட்டத்தில் பெரிய பிரச்சினை.. ஓய்வூதியதாரர்கள் போராட்டம்.. மத்திய அரசின் முடிவு என்ன?

பென்சன் விஷயத்தில் மத்திய அரசுக்கு ஓய்வூதியதார்கள் முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளன. 8ஆவது ஊதியக் குழு மீதான அழுத்தமும் அதிகரித்துள்ளது.

சமயம் 12 Oct 2025 2:02 pm

“மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன!”நிலாந்தன்.

மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார்.அவர் யார் என்றால், “ரிங்கோ 5”… The post “மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” நிலாந்தன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Oct 2025 2:00 pm

தவெக தலைவர் விஜயுடன் இபிஎஸ் பேச்சு? அவர் அளித்த விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் போனில் பேசியது தொடர்பாக அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார் .

சமயம் 12 Oct 2025 1:53 pm

கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை!

யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ, வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு… The post கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Oct 2025 1:47 pm

இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும்!

இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.… The post இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Oct 2025 1:45 pm

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை… The post கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Oct 2025 1:43 pm

குருட்டு அதிஷ்டத்தால் 4 ஆண்டுகள்.. விஜய் தலைமையை ஏற்க இபிஎஸ் முடிவு - டிடிவி தினகரன் விமர்சனம்!

தேர்தலில் வெல்ல முடியாது என்பதால், விஜய் தலைமையை ஏற்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சமயம் 12 Oct 2025 1:40 pm

மருத்துவ மாணவியை கூட்டாக சீரழித்த கும்பல் ; மீண்டும் அரங்கேறிய கொடூரம்

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டுள்ளார். குறித்த மருத்துவமனையில் ஒடிசா மாநிலம் ஜலேஸ்வரை சேர்ந்த மாணவி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை குறித்து மாணவி நேற்று இரவு 8.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது. அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென […]

அதிரடி 12 Oct 2025 1:30 pm

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில்… The post கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Oct 2025 1:30 pm

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தது.

பதிவு 12 Oct 2025 1:10 pm

டாப் பிராண்ட் பீர்-க்கு நேர்ந்த சோதனை...அதிர்ச்சியில் உறைந்த மது பிரியர்கள்!

இந்தியாவின் டாப் பிராண்ட் கூலஸ்ட் பீர்- க்கு ஒரு வார்த்தையால் பெரும் சோதனை நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தினரும், மது பிரியர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

சமயம் 12 Oct 2025 1:07 pm

கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை

யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது, வலி வடக்கில் ரேடார் தளம் அமைப்பதற்காக தனியார் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடல் கண்காணிப்பு மிக முக்கியமானது. அதற்கு மனித வலுக்களை மட்டும் பாவிக்க முடியாது. வளர்ந்து வரும் தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு , நாமும் எம்மை மாற்ற வேண்டும். யுத்தம் முடிந்து விட்டது. அதனால் கடல் பாதுகாப்பு தேவையில்லை என கூற முடியாது. கடத்தல்களை கட்டுப்படுத்த மாத்திரமின்றி உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்புக்கும் ரேடார்கள் மிக முக்கியமானது. ரேடார்களின் மூலமே நாம் கடல் கண்காணிப்புக்களை மேற்கொண்டு பாதுகாப்பு அளிக்க முடியும். என தெரிவித்தார்.

பதிவு 12 Oct 2025 1:07 pm

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது ஆகும் என்றும் கூறியிருந்தது. பதிலடி தாக்குதல் இதையடுத்து நேற்று இரவு பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் ஆட்சியாளர்கள். ஆப்கானிஸ்தான் ராணுவம் அறிக்கை இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மீறுவது போல செயல்பட்டது. ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் ஆயுதப் படைகள் இரவு டுராண்ட் கோட்டில் உள்ள பாகிஸ்தான் படை மையங்களின் மீது வெற்றிகரமாக பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த ஆபரேஷன் நள்ளிரவில் முடிந்தது. பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறினால், எங்களுடைய படைகள் எல்லைகளைப் பாதுகாக்க தயாராக இருக்கும் மற்றும் சரியான பதிலடியைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இதுவரை எதுவும் கூறவில்லை. Clarification The Armed Forces of the Islamic Emirate of Afghanistan, tonight conducted a successful retaliatory operation against the centers of Pakistani forces along the Durand Line in response to the repeated violations of Afghanistan's sovereignty by the Pakistani military pic.twitter.com/3mJ2rdxbvb — د ملي دفاع وزارت - وزارت دفاع ملی (@MoDAfghanistan2) October 11, 2025

விகடன் 12 Oct 2025 1:05 pm

ஆப்கானிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் கனிமொழி.. மேற்குவங்க பெண் மருத்துவருக்கு குரல் கொடுக்காதது ஏன்? தமிழிசை கேள்வி!

ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர் களுக்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், பெண் கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம் என்று செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமயம் 12 Oct 2025 12:57 pm

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும்.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும். அவர்களை கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடும் என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்தார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது. கடற்படை படகுகளுக்கான எரிபொருள் அதிகளவில் தேவைப்படும். அதனால் எரிபொருள் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம் கடற்படையினர் ஒரு டோரா படகில் போனால் , இந்திய மீனவர்கள் 50 - 100 படகுகளில் பெருமெடுப்பில் வருவார்கள். கடற்படையின் படகினை கண்டதும் இந்திய எல்லைக்குள் ஓடி விடுவாங்க. எங்களால் துரத்தி பிடிக்க முடிந்தளவு படகையும் மீனவர்களையும் கைது செய்கிறோம். எங்களால் மீனவர்களை கைது செய்ய மட்டும் தான் முடியும். கைது செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்போம். அதனை மட்டுமே கடற்படையால் செய்ய முடியும். இந்திய மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் எமக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் போன்றே , உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத செயல்களை தனியே கடற்படை மாத்திரம் தடுக்க முடியாது. அதற்கு மக்களின் சமூகத்தின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. சமூகத்தில் இருந்து தகவல்கள் கிடைக்க வேண்டும். அவ்வாறு தகவல்கள் கிடைத்தால் கடற்படையினர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோன்றே இலங்கைக்குள் போதைப்பொருள் வருவதனை கடற்படையினரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு முப்படைகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ,முடிந்தளவுக்கு கடல் வழியாக போதைப்பொருள் இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடுக்க முடிகிறது. முழுமையாக கட்டுப்படுத்த விமான படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் கடற்படைக்கு தேவை. இலங்கை கடற்படை தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் முடிவெடுக்க முடியாது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கை எடுக்க முடியும். பாதுகாப்பு அமைச்சு என்பதே அரசாங்கம். ஆகவே எமக்கான ஒத்துழைப்புக்கள் சமூக மட்டத்தில் இருந்தும் , இராணுவம் , விமானப்படை மற்றும் பொலிஸார் என சகல வழிகளிலும் கிடைக்குமாயின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்.

பதிவு 12 Oct 2025 12:52 pm

9வது சீசனில் இந்த அக்கா தான் பி.ஆர். டீம் வச்சிருக்காங்க: பத்திவிடுங்க பிக் பாஸ்னு சொல்லும் பார்வையாளர்கள்

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்கள் அந்த வீட்டில் இருப்பவர்களில் யாருக்கு வெளியே அதிக ஃபாலோயர்கள் கிடைத்திருப்பார்கள், யாருக்கு ஹேட்டர்ஸ் கிடைத்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சமயம் 12 Oct 2025 12:42 pm

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்: இந்திரா காந்தி செய்தது தவறு- ப.சிதம்பரம் பேச்சால் காங்கிரஸில் பரபரப்பு!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சியில் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோயிலில் நடத்திய ஆபரேஷன் குறித்து ப.சிதம்பரம் தற்போது பேசியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 12 Oct 2025 12:39 pm

ஹோட்டல் அறையில் இருந்த பணம் மாயம் ; வெளிநாட்டு பெண் அதிர்ச்சி!

சிகீரியாவில் ஹோட்டல் அறையில் இருந்து 950 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிகீரியா ஹோட்டலில் பணிபுரியும் 21 வயதான ஊழியரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயது நேபாள பெண் ஒருவர் சிகீரியா பொலிஸிலாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டல் ஊழியரான இளைஞன் வெளிநாட்டு பயணி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பணத்தை திருடியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். […]

அதிரடி 12 Oct 2025 12:35 pm

கொழும்பில் உணவகம் ஒன்றில் தீ விபத்து

கிருலப்பனை பகுதியிலுள்ள உணவகமொன்றில் இன்று (12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதிரடி 12 Oct 2025 12:33 pm