SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

50% அதிக முகஸ்துதி: மனிதர்களை ஏமாற்றும் AI –ஸ்டான்ஃபோர்ட் ஆய்வின் திகில் தகவல்!

மனித சமுதாயம் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறதா, அல்லது தொழில்நுட்பமே நம் அடிப்படைத் தார்மீகத் தன்மையைத் தீர்மானிக்கிறதா என்ற கேள்விக்கு,

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 8:01 am

‘ஐபிஎல் டிரேடிங் மூலம்’.. வரலாறு படைத்தார் ஷர்தூல் தாகூர்: எந்த வீரரும் செய்யாத செம்ம ரெக்கார்ட்: விபரம் இதோ!

ஐபிஎல் டிரேடிங் மூலம், ஷர்தூல் தாகூர் வரலாறு படைத்துள்ளார். எந்த வீரரும் செய்யாத தனித்துவமான சாதனையை ஷர்தூல் தாகூரால் படைக்க முடிந்துள்ளது. டிரேடிங்கில், ஷர்தூலை மும்பை இந்தியன்ஸ் 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

சமயம் 15 Nov 2025 7:52 am

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை வளம் கொஞ்சும் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது இலஞ்சி. அதாவது தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒருமுறை கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய முனிவர்கள் மூவரும் திருக்குற்றால மலையில் கூடியிருந்தனர். ஞானிகள் கூடினால் அவர்களுக்குள் மெய்ஞ்ஞான விவாதமே நிகழும் அல்லவா... அதேபோன்று அவர்கள் அன்றும் சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். கபிலா், உலகம் இல் பொருளே என்றார். இந்த உலகம் என்பது மாயை என்பது அவர் கருத்து. அதைக்கேட்ட காசிபரும் துா்வாசரும் உலகம் உள் பொருளே என்று வாதிட்டனா். அதாவது உலகம் என்பது நம் கண்முன்னே இருக்கிறது என்கையில் அது எப்படி இல்லாத ஒரு பொருள் என முடியும். அது உள்ள பொருளே என்று பதில் கூறினர். இலஞ்சி முருகன் கோயில் இது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ள விவாதம். இதன் விடையை அந்த ஆதி மூலமே அறிவார். காரணம், உலகின் தோற்றம் பற்றியும் உயிர்களின் தோற்றம் பற்றியும் அவன் அல்லவா முழுமையாக அறிவார். எனவே அவரை நோக்கித் தவம் இருந்து விடை கேட்போம் என்கிறார் துர்வாசர். அதற்கு மற்றவர்களும் சம்மதிக்க துர்வாசர் முருகப்பெருமானைத் துதிக்கத் தொடங்கினார். பக்தர் குரல் கேட்டாலே ஓடிவரும் அந்த அழகன் முனிவர்கள் வேண்டினால் வராமல் போவானா என்ன? துர்வாசர் முன்பாகத் தோன்றிய அருளிய முருகன் தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள் என்பதை உணர்த்தினார். இதைக் கேட்ட பிற முனிவர்களும் புலவர்கள் தங்கள் ஐயம் நீங்கப் பெற்று முருகப்பெருமானைத் துதித்தனர். இப்படி முருகன் காட்சி தந்து அருள் செய்த தலமே இலஞ்சி. அங்குதான் இலஞ்சிக் குமாரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! இலஞ்சி தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு. இத்தலத்தில் அருளும் குமாரரை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில், 'இலஞ்சி விசாகப்பெருமாளே' எனப் போற்றுகிறார் அருணகிரியார். இந்த முருகனுக்கு வரதராஜர் என்கிற திருநாமமும் உண்டு. காரணம், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் சுவாமியாய் அருள்கிறார் முருகன். எனவேதான் சைவ நூல்கள் இவரை 'வரதராஜா்' என்றே போற்றுகின்றன. அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனி இங்கே அருள்பாலிக்கும் சிவபெருமான் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடைபெற, உலகமே அங்கு திரண்டது. அதனால் புவியின் சமநிலை தவறியது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகம் சமநிலை பெற அகத்தியர் தென் திசைக்குச் செல்லவேண்டும் எனப் பணித்தார் சிவனார். அதை ஏற்றுப் பொதிகை மலை வந்த அகத்தியர் தான் பயணிக்கும் வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தபடி வந்தார். அப்படி அவர் இலஞ்சி வந்தபோது சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா். அதனால், வெண்மணலால் ஆன அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற திருப்பெயர் ஏற்பட் டது. இத்தலத்தின் அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர். இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் வாழ்வில் குறைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. இலஞ்சி குற்றாலநாதர் சோமாஸ்கந்த மூர்த்தி சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குற்றாலநாதர் கோயிலில் `விஷு' திருவிழா நடைபெறும். அப்போது, வள்ளி, தெய்வானை தேவியருடன் இலஞ்சிக் குமாரரும் சென்று கலந்துகொள்வார். மேலும் பத்து தினங்கள் அத்தலத்திலேயே தங்கியிருந்து அருள் பாலிப்பாா். பின்னா் திருக்குற்றால அருவியில் தீா்த்தவாரி முடித்து, இலஞ்சி திருத்தலத்துக்குத் திரும்புவார். பொதுவாக சிவனும் முருகனும் அம்பிகையும் கூடியிருக்கும் திருக்கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்போம். இத்தலத்தில் ஈசன் பத்துநாள்கள் சோமாஸ்கந்தராகக் காட்சி கொடுக்கும் அழகு கண்கொளாக் காட்சி. புறப்படும்போது தன் மகனான இலஞ்சிக்குமாரருக்கு ஈசன் புதுப்பட்டாடை பரிசு தந்து வழி அனுப்பி வைப்பாராம். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பானது. இத்திருநாளின் ஆறுநாள்களிலும் முருகப்பெருமான் ஆறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பார். முதல் நாள் பிரம்மனாக, இரண்டாம் நாள் அரியாக மூன்றாம் நாள் ஈசனாக, நான்காம் நாள் மஹேஸ்வரராக, ஐந்தாம் நாள் சதாசிவ மூர்த்தியாக அருள்வாராம். ஆறாம்நாள் முருகப்பெருமானாகத்தோன்றி தானே சகலமும் என்பதை உணர்த்துவார். மேலும் இத்தலத்தின் கந்தசஷ்டி விழா குறித்து திரிகூடராசப்பக் கவிராயா் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளாா். இங்குவந்து இலஞ்சிக்குமாரரை வழிபட்டால் குறையாத செல்வமும் நிறைவான ஞானமும் உண்டாகும். நோய் நீங்கும். துன்பங்கள் எதுவும் அண்டாது என்று இத்தலத்தில் வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளிப் பட்டியல் இடுகிறார்கள் பக்தர்கள். மேலும் திருமணத்தடை உள்ளவர், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள அவர்களின் குறைகள் விலகி வேண்டுதல் கைகூடுமாம். அப்படிக் கைகூடிய பக்தர்கள் பிராா்த்தனை நிறைவேறியதும் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கை செலுத்தி அப்பம் மற்றும் வடை நிவேதனமாக படைக்கப்படுகின்றனர். இலஞ்சி முருகன் கோயில் குளுகுளு குற்றாலத்துக்குச் செல்லும் அன்பர்கள் தவறாமல் இலஞ்சிக்குமாரரையும் தரிசனம் செய்து வாருங்கள். அதன்பின் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் நிறைந்தே இருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 15 Nov 2025 7:47 am

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி – கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவாவும், 50 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. இரகசிய தகவல் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த […]

அதிரடி 15 Nov 2025 7:44 am

யாழில் பெரும் துயர சம்பவம் ; தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவருக்கு நேர்ந்த கதி

தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூச்சு திணறல் இது குறித்து மேலும் தெரியவருகையில், இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை […]

அதிரடி 15 Nov 2025 7:42 am

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் நவ்காம் காவல் நிலையத் தாக்குதல் – 7 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையம் இன்று (நவம்பர் 15, 2025) திடீரென பயங்கர சத்தத்துடன்

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 7:42 am

``தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரைப் போல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' - நயினார் நாகேந்திரன்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற தலைப்பில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் அவர் மக்களை சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி பீகாரில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் 200 இடங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்களோ அதே மாதிரி தமிழகத்திலும் 2026-ல் பெருவாரியான இடங்களை பெறும். நயினார் நாகேந்திரன் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக சில அதிகாரிகளே செயல்படுகிறார்கள் என்று இ.பி.எஸ் குற்றஞ்சாட்டியுள்ளாரே? என்ற கேள்விக்கு, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியே கலந்து கொள்ளவில்லை. இதற்கு முன் இதேபோன்று எஸ்.ஐ.ஆர் தீவிர திருத்தம் செய்துள்ளனர். எதைச் செய்தாலும் மாநில முதலமைச்சர் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும்போதும் இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.ஐ.ஆருக்காக நீதிமன்றம் சென்றனர். இதை நிறுத்த முடியாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி வருகின்றனர் இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. இதற்காக நீதிமன்றம் செல்ல அவர் தயாராக இல்லை”. 'சாதியப் பிரச்னைகளை படமாக எடுக்கக் கூடாது' - நயினார் நாகேந்திரன் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக த.வெ.க ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனரே? என்ற கேள்விக்கு, அவரவர் மனநிலையை பொறுத்தது. மக்களுக்கு தேவையான விஷயங்கள், நாட்டிற்கு தேவையான விஷயங்களை சொல்றதுதான் நல்ல தலைவர்களுக்கு அழகு. எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய விஷயமா எல்லாரும் கேட்டுக்கிட்டே இருக்கறீங்க. இதுல என்ன இருக்கு இறந்தவர்கள் வாக்கை நீக்க வேண்டும். வெளியூருக்கு போனவங்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் இதுதான் SIR, அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப சிறையில் இருக்காரு, இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு. நயினார் நாகேந்திரன் SIR இதுக்கு முன்னாடி பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் இதற்கு முன்னாடி பீகாரில் நீக்கியது போல் 60 லட்சம் பேரை நீக்கவில்லையே? அத்தனை பேரும் போலி வாக்காளர்களா? இறந்து போனவர்களா? என்ற கேள்விக்கு, “வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்காளத்தில் வழியாக ஊடுருவி திருப்பூர் வரைக்கும் வருகிறார்கள். கடைசில விசாரித்து பார்த்தார்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் நம்ம ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். பீகாரில் நீக்கப்பட்ட 62 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இறந்து விட்டனர். நம்முடைய முதலமைச்சர் தொகுதி கொளத்தூரில் 9,000 வாக்கு அதிகமாக உள்ளது”. பொதுக்கூட்டத்தில் பேசும்போது மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துப்போனால் தான் நிதிகள் கிடைக்கும் என்று பேசினீர்கள்? தமிழ்நாடு அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறதா? அதனால்தான் தரவில்லை என்று சொல்கிறீர்களா? “பி.எம் ஸ்ரீ கல்வி திட்டத்தில் மத்திய அரசு சில நார்ம்ஸ்களை கொடுக்கிறது. அதை வேண்டாம் என்கிறார். ஆனால் இவர்கள் கூட்டணியில் உள்ள கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் அவரே உடன்பட்டு கையெழுத்து போட்டு அதை வாங்கிவிட்டார். அவருடைய மக்கள் மேல் அவருக்கு அக்கறை இருக்கிறது”. நயினார் நாகேந்திரன் அவர்கள் ஏற்கவில்லை. விதிகளை மறுவரையறை செய்ய கோரியுள்ளார்” என்ற கேள்விக்கு, “இன்று இரண்டாம் வகுப்பு ஏன்? எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் கையில் செல்போன் வைத்து விளையாடுகிறது. நாலேட்ஜ் வளர்ந்து அப்டேட் ஆக வேண்டும். கேரளாவில் 10,000 கோடி ரூபாய் வாங்கி போயிருக்கிறார் பினராய் விஜயன். நீங்க என்ன வாங்கி வந்தீர்கள்? புரட்சி தலைவர் என்ன சொன்னார்? உரிமைக்கு குரல் கொடுப்போம்” சொன்னாரா இல்லையா? அவையெல்லாம் செய்ய வேண்டும். மாநில அரசு மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டும். கஞ்சா எவ்வளவு விற்கப்படுகிறது? ஜாபர் சாதிக் யார்? எவ்வளவு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது? எங்க கட்சிய விட்டுவிடுங்கள். ஒவ்வொரு குக்கிராமத்திலும் கஞ்சா டீலர் இருக்கிறார்.” குஜராத்தில் கஞ்சா சிக்கவில்லையா என்ற கேள்விக்கு, பிடிபட்ட தமிழ்நாட்டைப் பற்றி முதல்ல பேசுங்கள். நீங்க குஜராத் ஏன் போகிறீர்கள்? இட்லி தோசையை முதலில் சாப்பிடுங்கள். இரண்டாவது சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றார். ``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

விகடன் 15 Nov 2025 7:35 am

ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டின் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்புடையதாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது. அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிப்பை மேம்படுத்தும் ஈரானுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், […]

அதிரடி 15 Nov 2025 7:31 am

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிட நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர். அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.  இதில், ரூ.4,26,22,507 ரொக்கப் பணமும், 1.279 கிலோ தங்கமும், 30.857 கிலோ வெள்ளியும், 46.312 கிலோ பித்தளையும், 7.77 கிலோ செம்பும், 8.91 கிலோ தகரமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. அத்துடன் 1,421 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன. இதில், காணிக்கைகளுக்கு நடுவே 54 வெள்ளிக்காசுகள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த வெள்ளி மாலை, இரண்டு அடுக்காக உள்ளது. அதில் ஒரு புறத்தில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் விநாயகர் உருவமும், மறுபுறம் முருகனின் அட்சரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள், திருக்கோயில் அதிகாரிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். சரஸ்வதி- லெட்சுமி- விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுமாலை தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளிக்காசுகள் கொண்ட மாலை கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா - சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album

விகடன் 15 Nov 2025 6:45 am

இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி –பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு

பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு வரும்

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:35 am

உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்

தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். `மொத்தமாக திரிச்சா மணம் மட்டும் அல்ல; கூடவே நல்ல பலன்களும் போய்விடும்’ என்பது அவர்களின் எளிய கூற்று. அது தாவர மருத்துவக்கூறுப்படி உண்மையும்கூட. மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், அன்னாசிப் பூ, கிராம்பு, வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பெருங்காயம்... என நாம் அன்றாடம் சேர்க்கும் அனைத்துமே மணமூட்டிகள் மட்டும் அல்ல, மூலிகைகளும்கூட. அவற்றின் மணத்தையும் மகத்துவத்தையும் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தாளிப்பது ஏன்? உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்ததும் தாளிப்பது நம் வழக்கம். இதற்குப் பின்னால் ஒரு மருத்துவப் பின்னணி உண்டு. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் `டிரெஸ்ஸிங்’ என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, `தாளிப்பு’ கிடையாது. சமைக்கும்போது, சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அதன் மூலப் பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களால், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாக நல்ல நிலையில் வைத்திருக்கும் பொருள்) எனும் எட்டு வகை கார, நறுமணப் பொருட்களைக் கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்தனர். இப்போது உள்ள தாளிக்கும் முறைக்கும் அந்தக்கால முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போதுபோல, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அப்போது தாளிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன. சமைத்த பிறகு உணவில் இவை சேர்க்கப்படும்போது, சுவையைப் பெருக்கும்; ஜீரணத்தைச் சீராக்கும். உணவால் உடலுக்கும் எந்தக் கெடுதலும் நேராமல் பார்த்துக்கொள்ளும். இனிப்பும் ஏலமும்... இனிப்பும் ஏலமும்... * எந்த இனிப்புச் செய்தாலும், அதில் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால், இனிப்பால் அஜீரணம் ஏற்படாது; சளி சேராது. இனிப்பு, உடலில் வேகமாகச் சேராமல் இருக்கவும் ஏலக்காயில் இருக்கும் விதை உதவிடும். மிளகும், சுக்கும்... மிளகு, ஒரு நச்சு நீக்கி. எந்த அசைவ உணவைச் சமைத்தாலும், பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை அவசியம் அதில் சேர்க்க வேண்டும். மிளகு, ஒரு நச்சு நீக்கி. ஒவ்வாமை ஏற்படாமலும், மூக்குப் பகுதியில் சளி சேராமலும் பாதுகாக்கும். மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) எனும் அல்கலாய்டு மிகச் சிறந்த ஜீரண நோய் எதிர்ப்புச்சக்தி தரும் பொருள் (Immune Modulator). பூண்டு, இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதை நாம் பயன்படுத்திவருகிறோம். உணவை எளிதில் ஜீரணிக்க சுக்கு உதவும்; உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராமல் இருக்கவும் உதவும். பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! உங்கள் ரத்தக்கொழுப்பை சீராக வைத்துக்கொள்ளவும் இதயம் சீராக இயங்கவும் இவை இரண்டும் கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் சிறுபூண்டு, சின்ன வெங்காயம்தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பூண்டில் இருக்கும் அல்லிசின் (Allicin) எனும் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணுயிரியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தூள் பெருங்காயம் வாழைக்காய் பொரியல், உருளைப் பிரட்டல், சுண்டல் வகைகள் செய்யும்போது, முடிவில் பெருங்காயத் தூள் சேர்க்க மறக்கவே கூடாது. பெருங்காயம், மணமூட்டி மட்டும் அல்ல; உடலில் வாய்வு சேராமலும் அஜீரணம் ஆகாமலும் காக்கும். குடல் புண்களையும் ஆற்றும். சீரகமும் லவங்கப்பட்டையும்... `சீரகம் அகத்தைச் சீர்செய்வதால், `சீரகம்’ என்று பெயர். மந்தம் ஏற்படுத்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களைச் செய்யும்போது, பொன் வறுவலாக வறுத்த சீரகத்தைச் சேர்க்க வேண்டும். குடல் புண்களை ஏற்படுத்தும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் நுண்ணுயிரியைக் குடலில் வளரவிடாமல் செய்ய உதவுபவை, சீரகமும் லவங்கப்பட்டையும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். இது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது. வெந்தயம் நல்ல மருந்து வெந்தயம் Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து நமக்குத் தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, சப்பாத்தி என அத்தனை உணவுகளிலும் வெந்தயத்தைச் சேர்க்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய முக்கியமான மூன்று பிரச்னைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. தலைச்சிறந்த மணமூட்டி Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? மணமூட்டிகள் வகைகளிலேயே தலைச்சிறந்தது மஞ்சள். இதை ஏதோ ஒருவிதத்தில் உணவில் நாம் சேர்த்துவருவதால்தான், பல நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கின்றன. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி இயற்கை நுண்ணுயிர்க்கொல்லி (Natural Antibiotic). புற்றுநோய் செல்களை அழிக்கும் சிறந்த மருந்து. கார உணவுகளில், காய்ந்த மிளகாயின் கார்சினோஜெனிக் (Carcinogenic) இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். அதனால்தான் மிளகாய் சேர்க்கும்போது, மஞ்சளும் சேர்க்கப்படுகிறது. எல்லா வகைப் பொரியல்களிலும், கூட்டுகளிலும் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்குச் சேர்த்தால் மருத்துவச் செலவும் கண்டிப்பாகக் குறையும். மணமூட்டிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்க, இந்த மணமூட்டிகள் அஞ்சறைப் பெட்டியில் அவசியம் இருக்க வேண்டும்.

விகடன் 15 Nov 2025 6:34 am

பீகார் சட்டசபை தேர்தல் – 5 இடங்களில் வெற்றி பெற்ற அசாதுதீன் ஓவைசி கட்சி

பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:34 am

பீகார் தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது –ராகுல் காந்தி கருத்து

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. தேர்தலுக்குப் பிந்தைய

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:32 am

பீகார் சட்டசபை தேர்தல் இறுதி முடிவு –தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி

பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம்

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:31 am

ராகுல்: ஓர் அரசியல் தலைவனல்ல, மீட்சிப் பயண பிரதிநிதி!

ராகுல் காந்தியின் பயணத்தில் இன்று திரளும் கூட்டம், வெறும் நடிகரையோ அல்லது பிரபல முகத்தையோ பின் தொடரும் ஆரவாரமல்ல. இது,

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 6:18 am

சென்னையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மாநகராட்சி சார்பில் அமைக்க ஏற்பாடு!

சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையங்கள் அனைத்தும் அடுத்த மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 15 Nov 2025 5:47 am

25 வயதில் எம் எல் ஏ... பீகார் தேர்தலில் கவனம் ஈர்க்கப்பட்ட இளம் பெண்! யார் இந்த மைதிலி தாக்கூர்?

25 வயதில் எம் எல் ஏ... பீகார் தேர்தலில் கவனம் ஈர்க்கப்பட்ட இளம் பெண்! யார் இந்த மைதிலி தாக்கூர்? இது தொடர்பாக விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 15 Nov 2025 5:42 am

சிக்கிய டைரியில் தேதி, மாதம், குறியீட்டு வார்த்தைகள்…டெல்லி கார் வெடிப்பில் தீவிரமடையும் விசாரணை

பரீதாபாத், டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை […]

அதிரடி 15 Nov 2025 3:30 am

வேலை நிறுத்தத்தில் குதித்த ஸ்டார்பக்ஸின் ஊழியர்கள்

உலகளவில் சிறந்த வர்த்தக நாமமான ஸ்டார்பக்ஸின் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிறந்த ஊதியம் மற்றும் போதுமான ஊழியர்களை பணியமர்த்த கோரி, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட 65 ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைகளில் உள்ள பணியாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் குறித்து ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறுகையில், வேலைநிறுத்தம் அதன் ஆயிரக்கணக்கான கடைகளில் 1% க்கும் குறைவாகவே பாதிக்கும் என்றும், மேலும் பெரும்பாலான கடைகளில் சேவை […]

அதிரடி 15 Nov 2025 1:30 am

24 ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி!

வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 15 Nov 2025 12:30 am

மூன்று செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுகிறது ஈரான்

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘பயா, ஜாபர், கோவ்சர்’ ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. விண்வெளி திட்டம் இது குறித்து, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரியே கூறியதாவது, பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் […]

அதிரடி 15 Nov 2025 12:30 am

புனேவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து…நடுவில் சிக்கிய கார் – 8 பேர் உயிரிழப்பு

மும்பை, மராட்டிய மாநிலம் புனேவின் நவாலே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 லாரிகள் மற்றும் ஒரு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த 2 லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்டது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் […]

அதிரடி 14 Nov 2025 11:30 pm

Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!

பீகாரில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் வென்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் மொத்தமாக 6 இடங்களில் வென்றிருக்கின்றன. நிதிஷ் குமார் (JDU), மோடி (BJP) கட்சி வாரியாக அதிக இடங்கள் வென்ற கட்சிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணி (202): * பாஜக - 101 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி. * ஐக்கிய ஜனதா தளம் - 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி. * லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி. * இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி. * ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி. Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்? மகாபந்தன் கூட்டணி (35): * ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி. * காங்கிரஸ் - 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி. * இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 20 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி. * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 4 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. * இந்திய இன்க்ளூஸிவ் பார்ட்டி (IIP) - 3 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. தேஜஸ்வி யாதவ் (RJD) - ராகுல் காந்தி (Congress) Grand Democratic Alliance (5): * அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) - 25 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வெற்றி. இதர: * பகுஜன் சமாஜ் கட்சி - 130 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. * 238 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் சன சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை 2020 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை: * ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 75 * பாஜக - 74 * ஐக்கிய ஜனதா தளம் - 43 * காங்கிரஸ் - 19 * இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 12 தேஜஸ்வி யாதவ் (RJD) * AIMIM - 5 * இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 4 * விகாஷீல் இன்சான் பார்ட்டி (VIP) - 4 * இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2 * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) - 2 * பகுஜன் சமாஜ் கட்சி - 1 * லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) - 1 * சுயேச்சை - 1 Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்

விகடன் 14 Nov 2025 10:58 pm

எலான் மஸ்குக்கு இந்த கதியா? இந்த விசயத்துக்காக இவ்வளவு அபராதமா!

எக்ஸ் தளத்தில் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தியதன் காரணமாக தொழிலதிபர் எலான் மஸ்குக்கு 5 மில்லியன் யூரோ அபராதம் விதித்து உள்ளது ஸ்பெயின் நாட்டின் சந்தை ஒழுங்கு முறை ஆணையம்.

சமயம் 14 Nov 2025 10:55 pm

சுவீடனில் பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: மேலும் பலர் காயம்!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று வெள்ளிக்கிழமை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கமான ஒரு கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நாத்யா நார்டன் தெரிவித்தார். விமானத்தில் பயணிகள் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பாலினம் அல்லது வயது குறித்து தற்போது எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்தது. பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் நாத்யா நார்டன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பதிவு 14 Nov 2025 10:36 pm

‘கார்த்திகை வாசம்’மலர்க்கண்காட்சி ஆரம்பம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர்… The post ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி ஆரம்பம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Nov 2025 10:34 pm

பெரு: சாலை விபத்தில் 37 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு பேருந்து, கராவெலி மாகாணம், சாலா நகரில் இருந்து பெருவின் இரண்டாவது பெரிய நகரான அரேகுய்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் குழந்தைகள், முதியவா்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பெருவை சிலி நாட்டுடன் இணைக்கும் பான்அமெரிக்கானா நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து […]

அதிரடி 14 Nov 2025 10:30 pm

பெரு: சாலை விபத்தில் 37 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு பேருந்து, கராவெலி மாகாணம், சாலா நகரில் இருந்து பெருவின் இரண்டாவது பெரிய நகரான அரேகுய்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் குழந்தைகள், முதியவா்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பெருவை சிலி நாட்டுடன் இணைக்கும் பான்அமெரிக்கானா நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து […]

அதிரடி 14 Nov 2025 10:30 pm

புதிய தேர்தல் ஆணையர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். 2019 ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 34 ஆண்டுகளாக அரச அதிகாரியாகப் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி 14 Nov 2025 10:30 pm

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: மாநில அரசை குற்றம் சாட்டும் நயினார் நாகேந்திரன்

விருதுநகரில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் ஒத்துப்போனால் தான் திட்டங்கள் கிடைக்கும் என்றும், தமிழக அரசு ஒத்துப்போக மறுப்பதால் கஞ்சா, போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

சமயம் 14 Nov 2025 10:14 pm

கோவை செம்மொழி பூங்கா: திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி அப்டேட்!

கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு விழா குறித்த அப்டேட்டை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

சமயம் 14 Nov 2025 10:01 pm

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கைகள்: தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் 8 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 14 Nov 2025 9:49 pm

ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS'என பெயர் வைப்போம் - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன?

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொண்டுவரவும் ஆந்திரா, தெலங்கனா மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீட்டில் கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தெலங்கானா அரசும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. தெலங்கானா அவ்வகையில் இன்று டெல்லியில் அமெரிக்கா - இந்தியாவிற்கு இடையேயான முதலீடுகள், தொழில்நுட்ப - பொருளாதாரா வளர்ச்சி சார்ந்த கொள்கை முடிவுகள், ஒப்பந்தங்களை தீர்மானிக்கும் 'USISPF' மாநாடு நடைபெற்றது. இதில் தெலங்கானா அரசு, 2034 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர்களாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 3 டிரில்லியன் டாலர்களாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக உறுதி எடுத்திருக்கிறது. டிசம்பர் 8-9 தேதிகளில் ஹைதராபாத்தில் மாநில அரசு, தெலங்கானா எழுச்சிக்கான உலகளாவிய உச்சி மாநாடு நடத்துவதையும் உறுதி செய்திருக்கிறது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூகுள், மெட்டா, டிசிஎஸ்; ஹைதராபாத் சாலைகளுக்கு கார்பரேட் நிறுவனங்களின் பெயர் இந்த 'USISPF' மாநாட்டில் பேசியிருக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட 'பாரத் ஃபியூச்சர் சிட்டி' ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது. அது இந்தியாவிலேயே மேம்பட்ட நகரமாக இருக்கும். இந்தியாவில் இருக்கும் சாலைகளுக்குப் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பெயர்களே வைக்கப்படுகின்றன. அந்த வழக்கத்தை மாற்றியமைத்து, ஹைதராபாத் சாலைகளுக்கு கூகுள், மெட்டா, டிசிஎஸ் (TCS) என போன்ற நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்படும். இது ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிறுவனங்களை கெளரவிக்கும் செயலாகும் என்று கூறியிருக்கிறார். ஹைதராபாத் சாலைகளுக்கு கார்பரேட் நிறுவனங்களின் பெயர் வைக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த பெயர் மாற்ற திட்டம் பற்றிய உங்களின் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.

விகடன் 14 Nov 2025 9:45 pm

செகந்திராபாத் ரயில் நிலையம் நவீன மயமாக்கல்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

செகந்திராபாத் ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 50 சதவீத பணிகளை முடித்து உள்ள செகந்திராபாத் ரயில் நிலையம், இன்னும் 13 மாதங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.

சமயம் 14 Nov 2025 9:40 pm

யாழில். 'கார்த்திகை வாசம்'மலர்க்கண்காட்சி ஆரம்பம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்'மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது இன்றைய தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துனைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கொண்டார். மேலும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக் கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Nov 2025 9:31 pm

எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை; தொழிலதிபர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்

ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் எச்.ஐ.வி. எனப்படும் வைரஸ் தொற்று பாதித்து எய்ட்ஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய் பரிசோதனை இதனையடுத்து, அவரது மனைவியும், அவருடைய பிள்ளைகளும் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் […]

அதிரடி 14 Nov 2025 9:30 pm

பீகாரில் மெகா வெற்றியை பெற்ற NDA: அடுத்த இலக்கை குறி வைத்த மோடி

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேற்கு வங்க வெற்றிக்கு இது ஒரு முன்னோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமயம் 14 Nov 2025 9:12 pm

9 மாத அலைச்சல்…ஒரே ஒரு ChatGPT அப்டேட்…ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்!

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி வரும் புரட்சிக்கு ஒரு நேரடி உதாரணம் இதோ! வேலை தேடி அலுத்துப்போன

ஆந்தைரேபோர்ட்டர் 14 Nov 2025 8:59 pm

Modi: காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது - மோடி

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத சூழலில் NDA 200+ தொகுதிகளைக் கைப்பற்றுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்த மிகப் பெரிய வெற்றியைத் கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள பாஜக அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் தனது துண்டை தூக்கி சுழற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தினார் மோடி. முஸ்லீம் மற்றும் யாதவ் - MY சூத்திரம் அழிக்கப்பட்டது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து உரையாற்றிய மோடி, ஜெய் சாத்தி மையா (வட இந்திய கடவுளை வாழ்த்தும் முழக்கம்) இது ஒரு மிகப்பெரிய வெற்றி, மகத்தான நம்பிக்கை, பீகார் மக்கள் தங்கள் தரத்தை முழுமையாக உயர்த்தியுள்ளனர்... எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். மோடி தொடர்ந்து, ...நாங்கள் மக்களின் ஊழியர்கள். எங்கள் கடின உழைப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறோம், மக்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறோம். அதனால்தான் முழு பீகாரும் 'பிர் ஏக் பார் என்டிஏ சர்க்கார்' (மீண்டும் ஒருமுறை NDA அரசு) என்று கூறியுள்ளது... எனப் பேசினார். எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியவர், பீகார் தேர்தல்களில் நான் ஜங்கிள் ராஜ் மற்றும் கட்டா சர்க்கார் (லல்லு பிரசாத் யாதவ்வின் ஆட்சியை விமர்சிக்கும் சொற்கள்) பற்றிப் பேசியபோது, ​​ஆர்ஜேடி கட்சி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸ் மக்களை காயப்படுத்தியது. இன்று, கட்டா சர்க்கார் ஒருபோதும் பீகாருக்குத் திரும்பாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்... பீகார் மக்கள் விக்ஸித் பீகாருக்கு (வளர்ச்சியடைந்த பீகார்) வாக்களித்துள்ளனர்... என்றார். தொடர்ந்து, பீகாரில் உள்ள சில கட்சிகள் MY (முஸ்லீம் மற்றும் யாதவ்) என்ற சமாதான சூத்திரத்தை உருவாக்கியிருந்தன. ஆனால் இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான MY சூத்திரத்தை வழங்கியுள்ளது, அதுதான் மகிளா (பெண்கள்) மற்றும் யூத் (இளைஞர்கள்). இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும், இதில் ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்களும் அடங்குவர். அவர்களின் ஆசை, அவர்களின் அபிலாஷை மற்றும் அவர்களின் கனவுகள் காட்டு ராஜ் மக்களின் (எதிர்க்கட்சிகளைக் குறிப்பிடுகிறார்) பழைய வகுப்புவாத MY சூத்திரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டன... என்றார். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது - Modi பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றது குறித்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபாடா மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியை அவர்கள் உறுதி செய்துள்ளனர். நிதிஷ் குமார், மோடி இன்றைய வெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்தது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்தத் தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வாக்குப்பதிவு அதிகரித்து வருவது, தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்படும் மக்கள் வாக்களிப்பது அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். எனப் பேசினார். மேலும் அவர், ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அதே பீகார் இது. நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடையும். ஆனால் இந்த தேர்தலில், பீகாரில் உள்ள மக்கள் பயமின்றி, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாக்களித்துள்ளனர். காட்டு ராஜ்ஜியத்தின் போது பீகாரில் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாக்குச் சாவடிகளில் வன்முறை வெளிப்படையாக நடந்தது. வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டன. இன்று, அதே பீகார் வாக்குப்பதிவில் சாதனை காண்கிறது. அனைவரின் வாக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்களித்துள்ளனர்... அவர்கள் பீகார் மக்களை மதிக்கவில்லை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியை தாக்கியவர், பீகார் மக்கள் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால் பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் எப்போதும் பீகார் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கினர், பீகாரை அவதூறு செய்தனர். அவர்கள் பீகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தையோ, அதன் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தையோ, அதன் மக்களையோ மதிக்கவில்லை... மோடி பீகார் இந்தியாவிற்கு ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமையை அளித்த பூமி... பொய்கள் தோற்கின்றன, மக்களின் நம்பிக்கை வெல்லும் என்பதை பீகார் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. ஜாமீனில் வெளியே வருபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை பீகார் தெளிவுபடுத்தியுள்ளது. ...கடந்த ஆண்டு, நாட்டு மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக NDA-க்கு தங்கள் ஆணையை வழங்கினர். இது நாட்டின் நம்பிக்கை மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம்... ஹரியானா, தொடர்ந்து மூன்றாவது முறையாக சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கரின் புனித பூமியான மகாராஷ்டிராவில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றோம். மகாராஷ்டிரா எங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். இன்று, கிராமப்புறங்களில் பெரிய மக்கள்தொகை கொண்ட பீகாரில், நாங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். என்றார். காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது தொடர்ந்து, முன்னதாக, பீகாரில் மறுவாக்குப்பதிவு நடைபெறாத தேர்தல் எதுவும் இல்லை. உதாரணமாக, 2005 க்கு முன்பு, நூற்றுக்கணக்கான இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்தது. 1995 ஆம் ஆண்டில், 1500 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் காட்டு ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தவுடன், நிலைமை மேம்படத் தொடங்கியது, மேலும் இந்தத் தேர்தலின் இரண்டு கட்டங்களிலும், எங்கும் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த முறை, வாக்குப்பதிவு அமைதியாக இருந்தது... என்றார். காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், இன்று, காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது, இப்போது காங்கிரஸின் முழு நிகழ்ச்சி நிரலும் இதைச் சுற்றியே உள்ளது, எனவே, காங்கிரஸுக்குள்ளும், இந்த எதிர்மறை அரசியலால் சங்கடப்படும் ஒரு தனி பிரிவு உருவாகி வருகிறது... காங்கிரஸில் மற்றொரு பெரிய பிளவு ஏற்படக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்... ராகுல் காந்தி காங்கிரஸ் தனது எதிர்மறை அரசியலில் அனைவரையும் மூழ்கடித்து வருவதை அதன் கூட்டணி கட்சிகள் கூட புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. அதனால்தான், பீகார் தேர்தலின் போது, ​​காங்கிரசின் 'நாம்தார்' (குடும்ப பெயரால் அறியப்படுபவர் - ராகுல் காந்தியைக் குறிப்பிடுகிறார்.) பீகார் தேர்தலில் குளத்தில் குளிப்பதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் மூழ்கடிக்கப் பழகி வருவதாகக் கூறினேன்... இந்த மேடையிலிருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை நான் எச்சரித்துள்ளேன். காங்கிரஸ் ஒரு சுமை என்று நான் சொன்னேன். காங்கிரஸ் என்பது அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியை விழுங்கி மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு ஒட்டுண்ணி... என்றார். 2026 மேற்கு வங்க தேர்தல் பற்றி பேசியவர், கங்கை பீகார் வழியாகப் பாய்ந்து வங்காளத்தை அடைகிறது. வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் வழி வகுத்துள்ளது. வங்காள சகோதர சகோதரிகளையும் நான் வாழ்த்துகிறேன். இப்போது, ​​உங்களுடன் சேர்ந்து, மேற்கு வங்காளத்திலிருந்தும் காட்டு ராஜ்ஜியத்தை பாஜக வேரோடு பிடுங்கி எறியும். நான் மீண்டும் பீகாரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் நன்றி கூறுகிறேன். எனப் பேசினார். பிரதமர் பேச்சை முடிக்கும்போது அவரது ஆதரவாளர்கள் வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை முழங்கினர். பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்

விகடன் 14 Nov 2025 8:51 pm

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி: யாருக்கு வரவேற்பு அதிகம்?

கும்பகோணம் தொகுதி தமிழக அரசியல் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. இதன் வரலாற்றுப் போக்குகளும், அரசியல் செல்வாக்கும் கலந்து அடுத்த தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கும்.

சமயம் 14 Nov 2025 8:50 pm

நல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹார உற்சவம்

நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(14.11.2025) மாலை இயமசம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய நிகழ்ச்சி உற்சவமாக நடாத்தப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

அதிரடி 14 Nov 2025 8:44 pm

வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

சிறிலங்கா அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 42 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வி. ராதாகிருஷ்ணன், பி.

புதினப்பலகை 14 Nov 2025 8:36 pm

இஸ்ரேலில் இலங்கையா் ஒருவா் கொலை

இஸ்ரேலில் நேற்றிரவு இலங்கையா் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. டெல் அவிவ் நகரின்… The post இஸ்ரேலில் இலங்கையா் ஒருவா் கொலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Nov 2025 8:31 pm

கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் […]

அதிரடி 14 Nov 2025 8:30 pm

தமிழரசுக்கு முதுகெலும்பு உண்டா?

இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் நடுநிலமை வகிப்பதென்பது முதுகெலும்பற்ற செயல் என்ற எம்.ஏ.சுமந்திரனின் விமர்சனங்கள் மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் வாக்களிப்பில் பங்கெடுக்காது நடுநிலமை வகிக்க தமிழரசுக்கட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது இலங்கை தமிழ் அரசுக் கட்சி விலகியிருந்தது. முன்னதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என கட்சி முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படடிருந்தது. இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.

பதிவு 14 Nov 2025 8:05 pm

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை!

சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம். . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசின் உதவியுடன) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும். மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்நிலையில் , கோத்தாபாய் அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி, அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம். இப்போது அந்தத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதிவு 14 Nov 2025 8:03 pm

கோத்தா போலி முகவரியிலா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போலி முகவரிகளை வழங்கி இலங்கையில் வாழ்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “அரகலய” போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த பின்னர் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மனு பரிசீலிக்கப்பட்ட போது போலி முகவரிகளுடன் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டு முகவரிகளை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Nov 2025 8:01 pm

உங்க `லவ் பிளே'மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265

'லவ் பிளே' எப்படியெல்லாம் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இங்கே விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். 1. நோ பதற்றம் காமத்துக்கு மரியாதை எக்காலத்திலும் பதற்றமாக செக்ஸ் செய்யாதீர்கள். இதனால், விந்து சீக்கிரமாக வெளி வந்துவிடும். இதனால், ஆண் ஆர்கசம் அடைந்தாலும், மனைவியால் அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். 2. ஆழ்ந்து மூச்செடுங்கள் காமத்துக்கு மரியாதை தொடர்ந்து உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருக்கிறதென்றால், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் செய்யுங்கள். இவை உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து, ஆர்கசம் கிடைக்க உதவி செய்யும் என கண்டறிந்திருக்கிறார்கள். 3. ஆரோக்கியம் ஆர்கசத்துக்கு முக்கியம் காமத்துக்கு மரியாதை நல்ல செக்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதே நேரம், உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல செக்ஸும், ஆர்கசமும் கிடைக்கும். தவிர, உடல்பருமன் பிரச்னை இருந்தாலும், உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 4. உடல் மீதான தாழ்வு மனப்பான்மை வேண்டாம் காமத்துக்கு மரியாதை தன் உடல் மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தன் உடலில் குறை இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 5. கிண்டல் வேண்டாம் காமத்துக்கு மரியாதை கணவனும் மனைவியும் ஒருவரையொருவர், உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யவே கூடாது. வாயளவில் இதை அவர்கள் சிரித்து கடந்தாலும், மனதளவில் காயப்பட்டு விடுவார்கள். உறவின்போது இந்தக் கிண்டல்கள் நினைவுக்கு வந்துவிட்டால், முழுமனதாக உறவில் ஈடுபடவே மாட்டார்கள். 6. கூச்சப்படாதீர்கள். காமத்துக்கு மரியாதை தாம்பத்திய உறவில் கூச்சமே கொள்ளாதீர்கள். முன்விளையாட்டுகள், ரொமாண்டிக்காக பேசுதல், உறவின்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை துணையிடம் சொல்வது, உறவுக்கு ஏற்றபடி டிரெஸ் செய்வது என செக்ஸை அழகாக்குவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அம்மாவை ஏமாத்தலாம்... டாக்டரை ஏமாத்த முடியாது..! - காமத்துக்கு மரியாதை - 191 7. நிதானம் பிடிக்கும் காமத்துக்கு மரியாதை நிதானமாக உறவுகொள்வது பெண்களுக்குப் பிடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல கிடுகிடுவென முடித்துவிட்டு தூங்கி விடாதீர்கள். இந்த பாயிண்ட் ஆண்களுக்கானது. விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை 8. ஒரே மாதிரி... வேண்டவே வேண்டாம் தினமுமோ அல்லது அடிக்கடியோ ஒரே மாதிரி பொசிஷனில் ஈடுபடாதீர்கள். தொடர்ந்து ஒரே அறையிலும் உறவு கொள்ளாதீர்கள். பொசிஷனையும் அறைகளையும் மாற்றுங்கள். இவற்றையெல்லாம் பின்பற்றினால், கணவன் மனைவிக்குள்ளேயே செக்ஸில் த்ரில் கொண்டு வர முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 14 Nov 2025 8:00 pm

597 EMRS Students Clear Top Entrance Exams

A total of 597 students from Eklavya Model Residential Schools (EMRS) have passed India’s toughest entrance exams — JEE Main,

சென்னைஓன்லைனி 14 Nov 2025 7:49 pm

வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை! பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு!

பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அவர்களுக்கு வரலாற்று ரீதியான அமோக வெற்றியைத் தந்துள்ளது. 243 தொகுதிகளில் NDA 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று, பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட நூற்றுக்கணக்கான இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தனியாக 91 தொகுதிகளில் வென்றுள்ளது, ஜனதா தள ஐக்கியம் (JDU) 83 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020 தேர்தலில் 125 இடங்களைப் […]

டினேசுவடு 14 Nov 2025 7:41 pm

CISCE Announces 2026 Board Exam Dates

CISCE Class 10, 12 Board Exam Timetable 2026: The Council for the Indian School Certificate Examinations (CISCE) announced the ICSE

சென்னைஓன்லைனி 14 Nov 2025 7:33 pm

விநாயகர் பற்றி குரோக் –எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

இந்து மக்களால் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகர் பற்றி, குரோக் உடன் எலான் மஸ்க் நடத்திய உரையாடலை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர, அது இந்தியர்களால் வைரலாக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தை தொழில்நுட்பம் சந்தித்த போது என்ற பொருள்படும் தலைப்பில், விநாயகர் படத்தை இணைத்து, குரோக் ஏஐ உடனான எலான் மஸ்க்கின் உரையாடல் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் – குரோக்குடனான […]

அதிரடி 14 Nov 2025 7:30 pm

Ancient Origins of Dog Diversity Revealed

Dogs come in many shapes and sizes — from tiny Pomeranians to huge Saint Bernards. People often think this variety

சென்னைஓன்லைனி 14 Nov 2025 7:21 pm

Bihar Election 2025 : ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி!

பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்த நிலையில், தேஜஸ்வி 1,18,597 வாக்குகளுடன், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 1,04,065 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால், 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். இது அவரது குடும்பத்தின் அரசியல் கோட்டையான ரகோபூரை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் வெற்றியாக அமைந்துள்ளது. காலை 8 மணி முதல் தொடங்கிய […]

டினேசுவடு 14 Nov 2025 7:16 pm

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பட இயக்குனர் வி.சேகர் காலமானார்!

சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வி.சேகர் இன்று (நவம்பர் 14, 2025) சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை அடைக்காலம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர், நீண்ட கால நோய் தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர் குடும்ப நலனை மையமாகக் கொண்டு பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர்.வி.சேகர் திரையுலகில் 1990-களில் நுழைந்து, குடும்ப நாடகங்கள் மற்றும் சமூக […]

டினேசுவடு 14 Nov 2025 7:03 pm

Deep-Sea Mining Threatens Ocean Food Chains

Mining the seafloor for valuable metals could harm ocean food chains. Tiny plankton, which are the base of the food

சென்னைஓன்லைனி 14 Nov 2025 7:02 pm

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்.. நாளை பிரதமர் மோடி ஆய்வு!

பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வருகை, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த திட்டம் இந்தியாவின் அதிவேக ரயில்வே துறையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

சமயம் 14 Nov 2025 7:02 pm

போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா

போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா சதர்ன் ஸ்பியர்என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இன்று, நான் ஆபரேஷன் சதர்ன் ஸ்பியரை அறிவிக்கிறேன் என்று பென்டகன் தலைவர் நேற்றுவியாழக்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் அறிவித்தார். ஜோயிண்ட் டாஸ்க் ஃபோர்ஸ் சதர்ன் ஸ்பியர் மற்றும் தெற்குக் கட்டளைப் பீடம் தலைமையிலான இந்த நடவடிக்கை எமது தாயகத்தைப் பாதுகாக்கிறது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை அகற்றுகிறது என்றார். தெற்கு கட்டளைப் பிரிவு (SOUTHCOM) என்பது அமெரிக்க இராணுவத்தின் பதினொரு ஒருங்கிணைந்த போர் கட்டளைப் பிரிவுகளில் ஒன்றாகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியனில் உள்ள 31 நாடுகளுக்கான தற்செயல் திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கையாளும் பணியை மேற்கொள்கிறது. கடந்த வாரம், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு, கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவின் கடல் பகுதியை வந்தடைந்தது , இது அப்பகுதியில் ஏற்கனவே மிகப்பெரிய கடற்படைக் கட்டமைப்பைச் சேர்த்தது. அமெரிக்காவை சட்டவிரோத போதைப்பொருட்களிலிருந்து பாதுகாக்க, நாடுகடந்த குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதே இந்தப் பகுதியில் அதன் இராணுவப் பிரசன்னத்தின் நோக்கமாகும் என்று வாஷிங்டன் கூறியது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள பல கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை நடத்தியது , அவை போதைப்பொருள் படகுகள் என்று கூறி. இந்த தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவின் நடவடிக்கை, குறிப்பாக வெனிசுலாவுடன் , பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரித்துள்ளது . கடத்தல்காரர்களுக்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்பு இருப்பதாக வாஷிங்டன் கூறுகிறது. மதுரோ குற்றச்சாட்டுகளை மறுத்தார், மேலும், அமெரிக்கா ஒரு புதிய போரை இட்டுக்கட்டுகிறது என்று கூறுகிறார். அமெரிக்க இராணுவக் குவிப்பு தன்னை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்காகவே என்று அவர் குற்றம் சாட்டுகிறார். மதுரோவின் கூற்றுப்படி, இந்தப் பகுதியில் அமெரிக்க கடற்படை நிலைநிறுத்தம் கடந்த 100 ஆண்டுகளில் நமது கண்டம் எதிர்கொண்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்று மதுரா கூறினார்.

பதிவு 14 Nov 2025 7:02 pm

Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்சியமைக்கும் NDA!

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாங்கள் மீண்டும் ஆட்சியமைப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்துவிட்டது. நிதிஷ் குமார், மோடி மறுமுனையில் மகாபந்தன் கூட்டணி 9 இடங்களில் வெற்றிபெற்று, மேலும் 25 இடங்களில் முன்னிலையுடன் படுதோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். பீகார் சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதன்படி, சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா 80, 598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங், ராதா சரண் ஷாவை விட 27 வாக்குகள் குறைவாக 80,571 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில், ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் ராஜிவ் ரஞ்சன் ராஜ் 6,040 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். 2015 மற்றும் 2022-ல் பீகார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ராதா சரண் ஷா முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

விகடன் 14 Nov 2025 7:01 pm

IPL 2026: ‘டிரேடிங்கில்’.. முரட்டு வீரரை வாங்கப் போகும் மும்பை இந்தியன்ஸ்: பெரிய பிரச்சினை ஓவர்?

டிரேடிங்கில் முரட்டு வீரரை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பிரச்சினை முடிந்துவிடும். அணியும் பலமிக்கதாக மாறும் எனக் கருதப்படுகிறது.

சமயம் 14 Nov 2025 6:55 pm

IBM Unveils Powerful New Quantum Chip

IBM has revealed its most powerful quantum processor so far and says this new chip could help the company reach

சென்னைஓன்லைனி 14 Nov 2025 6:53 pm

Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை. மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக முதலில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்தவர் பின்பு பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பாக்யராஜிடமும் வி.சேகர் பணியாற்றினார். பிறகு டைரக்‌ஷன் பக்கம் வந்தவருக்கு முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. V Sekhar மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார். டைரக்‌ஷன் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் எனப் பல அவதாரங்களையும் வி.சேகர் எடுத்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விகடன் 14 Nov 2025 6:52 pm

கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் பெண்கள் உட்பட 7 பேர் வைத்தியசாலையில்

கண்டி உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹானுவர கலகெலே பிரதேசத்தில் ரொட்டிக்கடை ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், நபரொருவர் அங்கிருந்த நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (14) பகல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உடதும்பர பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 33 வயதுடைய சந்தேகநபர் பிரதேசவாசிகளின் உதவியுடன் […]

அதிரடி 14 Nov 2025 6:49 pm

அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் –நிதிஷ் குமார்!

பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி, நிதீஷ் குமாரின் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பதை உறுதிப்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவிற்கு நிதீஷ் குமார் தனிப்பட்ட நன்றியைத் […]

டினேசுவடு 14 Nov 2025 6:45 pm

மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சி ; அகில இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரி சாதனை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் அளவில் சாதனை படைத்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவர்களில் சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் சதவீதம் 85.19 எனும் அதிகூடிய அளவை பதிவு செய்துள்ளது. Merit முறையில் மாணவர்களின் சதவீதம் 85.19 நடந்து முடிந்த 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர்களின் மருத்துவ பீட விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, இலங்கை முழுவதும் […]

அதிரடி 14 Nov 2025 6:39 pm

Inflatable Capture Bag for Easier Space Mining

Asteroids have lots of useful and valuable metals. Many new companies are interested in them because mining on Earth is

சென்னைஓன்லைனி 14 Nov 2025 6:32 pm

டெல்லி சம்பவம்: கான்பூரில் மேலும் ஒரு மருத்துவர் கைது! யார் இந்த ஆரிஃப்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதுகலை படித்து வரும் ஒரு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நவ. 10 (திங்கள்கிழமை) அன்று நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் பயங்கரவாதிகளின் சதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே இதுதொடர்பான வழக்கின் விசாரணை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உமர், காரை ஓட்டி வந்துள்ளது […]

அதிரடி 14 Nov 2025 6:30 pm

Zee 24 Taas breaks Biggest Investigative revelation of the decade in Maharashtra; uncovers the controversial koregaon park land deal involving Parth Pawar

Mumbai: In a landmark investigative breakthrough, Zee 24 Taas has emerged as the first news channel to expose massive irregularities in a high-profile land transaction in Pune’s Koregaon Park, allegedly involving Parth Pawar, son of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar.According to the exclusive Zee 24 Taas investigation, the transaction centres around a prime parcel of land purchased by Amadea Company, co-owned by Parth Pawar and his cousin Digvijay Patil. The report revealed discrepancies in valuation, procedural shortcuts, and potential misuse of authority in the approval process. The investigation has drawn significant public and political attention, leading to active debate and swift administrative response from the Maharashtra Government.Following Zee 24 Taas’ investigation, the Maharashtra Government swiftly ordered a high-level probe headed by a senior IAS officer from the Revenue Department. The investigation’s findings led to the controversial transaction being declared “cancelled” by the parties involved. In a direct consequence of the revelations, the government also issued a notice to Amadea Company, directing it to pay approximately ₹42 crore in stamp duty and penalties underscoring the gravity of the violations unearthed.The expos sent shockwaves through Maharashtra’s political landscape, triggering widespread debate. Amid the growing political pressure, Pawar stated that he would “use his conscience” to decide his next steps. The investigation stands as one of the most consequential journalistic efforts in Maharashtra’s recent political history — driving real-world accountability, policy action, and renewed public dialogue on transparency in governance.Speaking about the milestone coverage, Kamlesh Sutar, Editor of Zee 24 Taas, said, “Responsible journalism demands courage to question, verify, and expose. Through this investigation, Zee 24 Taas reaffirms its commitment to fearless reportage that prioritizes truth over influence and people over power. Every story we pursue strengthens trust in news reportage.” From breaking the story first to compelling government intervention and sparking public debate, Zee 24 Taas has once again proven why it stands as Maharashtra’s most trusted and fearless news channel. By holding those in power accountable and ensuring transparency in public administration, Zee 24 Taas’ relentless journalism reaffirms the power of truth-driven storytelling in shaping a more responsible democracy.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Nov 2025 6:16 pm

ராஜஸ்தான் தெலங்கானா சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி.!

ராஜஸ்தான் : மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணி முதல் தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். ராஜஸ்தானின் அன்டா தொகுதியில் பாஜக ஆதிக்கம் இருந்த இடத்தை கைப்பற்றியது, அதேபோல் தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS) […]

டினேசுவடு 14 Nov 2025 6:08 pm

Why Chestnut Mushrooms Make Soup Better

This soup tastes rich and a little special. Chestnut mushrooms, also known as brown mushrooms, are firm and have an

சென்னைஓன்லைனி 14 Nov 2025 6:07 pm

தமிழக அரசைக் கண்டித்து விநோத போராட்டம்.. கவனம் ஈர்த்த ஊராட்சி மன்றத் தலைவர்!

அருங்குன்றம் மக்களின் முக்கிய கோரிக்கை என்பது பட்டா திருத்தத்தை உடனடியாக முடித்து குடிமக்களின் உரிமை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது தான். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் அன்பரசு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சமயம் 14 Nov 2025 6:03 pm

மதுரை உழவர் சந்தைக்கு 27 வயசு! விவசாயிகளுக்கு மரியாதை - கோலாகல கொண்டாட்டம்!

மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை 27ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சமயம் 14 Nov 2025 5:55 pm

ZEE5 unveils intriguing teaser of Tisca Chopra’s first film Saali Mohabbat

Mumbai: ZEE5 has unveiled the much-awaited teaser of Saali Mohabbat, marking Tisca Chopra’s striking directorial debut. Produced by Jio Studios and Manish Malhotra’s Stage5 Production, the direct-to-digital original film is positioned as a genre-defining how-dunnit, blending mystery, emotion, and psychological intrigue.After earning acclaim across international film festivals, Saali Mohabbat is now set to captivate Indian audiences with its layered narrative that probes the unpredictable intersections of love, betrayal, and human intent. The teaser offers a glimpse into an atmospheric world where nothing appears as it seems, setting the stage for a story driven by tension, concealed motives, and emotional depth.The film brings together a compelling ensemble cast led by Radhika Apte and Divyenndu Sharma, alongside Anurag Kashyap, Anshumaan Pushkar, Sauraseni Maitra, and Sharat Saxena. With its evocative visuals and carefully constructed mood, the film invites viewers to question how well we truly understand the people closest to us.https://youtu.be/Nyb3pYamIRs?si=9dxwLhODlsYYxLOj

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Nov 2025 5:55 pm

கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும் குழந்தைகள் சினிமா!

கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) 'தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?' என்கிற யோசனை தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார். கிணறு விமர்சனம் | Kinaru Review சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் 'கிணறு' படத்தின் கதை. கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வருகிறார் விவேக் பிரசன்னா. நடிப்பிலும் கொஞ்சம் காற்றை அதிகமாகவே அடைத்து விடுகிறார். அதேபோல பாட்டியிடமும் இயக்குநர் இன்னும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம். எழில்மிகு கிராமத்தின் அழகைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் வெங்கடேஷ். ஆனால் உரையாடல்கள் வருகிற இடத்தில் இடம்பெறும் காட்சிக்கோணங்கள், ஒவ்வொருவரும் பேச இடைவெளி விட்டும் டிராமா பாணியிலான ஸ்டேஜிங் தொக்கி நிற்கிறது. கிணறு விமர்சனம் | Kinaru Review இது படத்தின் யதார்த்த தன்மையைக் குறைக்கிறது. ஃபீல் குட் இசையைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார் புவனேஷ் செல்வநேசன். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் கௌதம் ராஜ் கே.எஸ். சுற்றலில் விடும் இறுதிக்காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! குழந்தைகள் உலகத்தையும் அவர்களுக்குள் இருக்கும் பாசாங்கற்ற தன்மையையும் ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்திருப்பவர், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறியிருக்கிறார். ஓர் எல்லைக்குமேல் படம் சுவாரஸ்யத்தை இழந்துவிடுகிறது. கிளைக்கதையாக வருகிற பஞ்சர் ஒட்டுபவரின் கதையும், மாமாவின் நில ஆசையும் மிகவும் மேலோட்டமாகவே அணுகப்பட்டிருக்கின்றன. கிணறு விமர்சனம் | Kinaru Review மேலும் இறுதிக்காட்சி எந்த விதத்திலும் தர்க்கரீதியாக எழுதப்படவில்லை. அதேபோல குழந்தைகள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகக் காட்சிப்படுத்திய விதமும் அவசியமற்றதாகவே தெரிகிறது. மொத்தத்தில் சிறுவர்களின் கியூட் நடிப்பினால் பாதி கிணற்றை நாம் தாண்டினாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மீதி கிணற்றைத் தாண்டுவது சிரமமாகிப் போகிறது. What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் எவை?

விகடன் 14 Nov 2025 5:54 pm

Western Digital highlights 24×7 security needs with new WD Purple awareness campaign

Mumbai: Western Digital has published a new awareness campaign for its WD Purple smart video HDDs, designed to meet the challenges of 24x7 video surveillance recording. At the heart of this campaign is a collaboration with television trio: Shivaji Satam, Dayanand Shetty and Narendra Gupta to raise awareness about buying authentic WD Purple HDDs to help keep your data and your property safe. Beloved for their roles in the crime show, the TV trio is known for their on-screen dedication to justice and integrity. Their presence brings authenticity and gravitas to the campaign, perfectly reflecting the core values of WD Purple: trust, reliability, performance and vigilance.The campaign taps into the entertainment of the show, while focusing on the importance of using original, purpose-built and reliable storage solutions from Western Digital. Through humour and nostalgia, the trio investigates a case, emphasizing how original, authentic WD Purple and WD Purple Pro drives can safeguard crucial footage when it matters most.Commenting on the collaboration and campaign, and how important it is to buy from authorised resellers, Owais Mohammed, Sales Director India, Middle East, and Africa, Western Digita l said, “Through this collaboration and campaign, our goal is to educate customers about the importance of buying and using purpose-built original storage solutions like WD Purple that are designed specifically for 24/7 reliability and performance essential for security systems. Partnering with the iconic TV trio allows us to convey this message in a way that is both authentic and compelling, making the importance of trusted storage clear and memorable.” Sandesh Shenoy COO Adsyndicate Services said, “We are proud to bring together WD Purple HDDs with three of India’s most iconic and trusted names—Shivaji Satam, Dayanand Shetty, and Narendra Gupta. Over the past 8 years, our association with Western Digital has been rooted in creativity and trust, and this campaign further strengthens Western Digital’s leadership in delivering reliable HDD surveillance storage to the market.” Conceptualised and executed by Adsyndicate Services Pvt. Ltd, the campaign blends nostalgia, authority and emotional connection to create a narrative that resonates with both end-users and system integrators. Additionally, featuring the trio, the campaign underscores the importance of buying genuine reliable surveillance HDDs in the present-day scenario. View this post on Instagram A post shared by Western Digital India (@wdindia_official)

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Nov 2025 5:53 pm

Simple Daily Habits for Youthful Skin

Who doesn’t want bright, youthful skin that doesn’t show your age? While anti-ageing creams and serums claim to work wonders,

சென்னைஓன்லைனி 14 Nov 2025 5:50 pm

BB Tamil 9: உனக்கு எந்த அருகதையும் இல்லை - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!

இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி. துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு. பிக் பாஸ் கனி BB Tamil 9: ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம் - மனம் திறக்கும் துஷார்! சரி, அதோடு முடிந்தது என்று பார்த்தால் இன்றைய எபிசோடில் கனியிடமும் வம்பிழுத்து வைத்திருக்கிறார். தான் பேசுவதுதான் சரி, தன்னை யாரும் மிஞ்சி விடக்கூடாது என்பதை தலையில் ஏற்றிக் கொண்டு, எதிரே யார் வந்தாலும் தனது லவுடு ஸ்பீக்காரை ஆன் செய்து விடுகிறார் விஜே பார்வதி. சமையல் வேலை செய்ய சீக்கிரம் வாருங்கள் எனக் கனி கூப்பிட்டதற்காக, நான் 5 நிமிஷம் பேசுதுதாலதான் சமையல் வேலை நின்னுடுச்சானு குதர்க்கமாக விஜே பார்வதி, கனியிடம் கத்தி, நீங்க உங்க சிறைக்குப் போங்கனு கூச்சலிடுகிறார். காண்டான கனி, இது என் வீடு என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு அருகதை இல்லை என்று பதிலுக்குப் போட்டிப் போட்டு கனி கத்த, பிக் பாஸ் வீடே இரைச்சலாகி, எரிச்சலானது. பிக் பாஸில் சண்டைகளும் சர்ச்சைகளும் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்தான். ஆனால் தேவையில்லாத சண்டைகளால் கத்திக் கொண்டு பார்வதி ஏற்படுத்தும் இரைச்சல் எபிசோடையே இரைச்சலாக்குகிறது.

விகடன் 14 Nov 2025 5:40 pm

நெல்லை கவின் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நீதிமன்றத்தின் திடீர் உத்தரவு!

நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சமயம் 14 Nov 2025 5:36 pm

வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மக்கள் கொடுத்த வெற்றி…பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

பீகார் :சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அவர்களுக்கு வரலாற்று ரீதியான பெரும் வெற்றியைத் தந்துள்ளது. 243 தொகுதிகளில் NDA 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து, பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட நூற்றுக்கணக்கான இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தனியாக 91 தொகுதிகளில் வென்றுள்ளது, ஜனதா தள ஐக்கியம் (JDU) 83 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020 தேர்தலில் 125 இடங்களைப் […]

டினேசுவடு 14 Nov 2025 5:33 pm