82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் டுபாயில்
கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போலால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே இன்டர்போலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு அறிவிப்புகளைப் பெறுபவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒக்டோபரில் மாதம் பாதாள உலகில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை விரைவாக நாடு கடத்த டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். எனினும் லலித் கன்னங்கரா டுபாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு முடியும் வரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வழக்கு முடிவடைய குறைந்தது 04 மாதங்கள் வரை செல்லலாம். சந்தேக நபர் சார்பாக இலங்கையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் டுபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.
``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். அமைச்சர் கீதாஜீவன் தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர். உண்மைநிலை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக சென்னையும் அதற்கு அடுத்தபடியாக கோவையும் உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. பெண்கள் அதிகமாக வேலை செய்யும் இடம், பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை அனைத்தும் கொடுக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். இரண்டு காரணங்களால்தான்.. இந்த காலத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் நடக்கும் தவறுகள்கூட வெளிச்சத்துக்கு வருகின்றன. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன்வருகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் பாலியல் விவகாரங்கள் அதிகமாக நடப்பது போன்று தெரிகிறது. நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறைகூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கூற தயங்கும் பழைய நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதிக அளவில் புகார் அளிக்க முன்வருகிறார்கள். பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம். அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம் என்றார். பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார் கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்
வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்க வாய்ப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடல்
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துவதது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. எல்லை மீள் நிர்ணயத்தை இறுதி செய்தல், இழப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான நிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. முக்கியமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துக்களை மீண்டும் பயன்படுத்தவதை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் சமமான செயல்முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?
Doctor Vikatan: என் குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அது உடல்நலத்துக்கு கெடுதல் ஆனதா?... போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சின்ன கடைகள் தொடங்கி, பெரிய கடைகள் வரை போலி பனீர் பயன்பாடு அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது. காரணம், பனீரின் விலைதான். 'அனலாக் பனீர்' (Analogue Paneer) என அழைக்கப்படும் இந்த பனீர், செயற்கையானது, விலை மலிவானது. இத்தகைய போலி பனீரை, பாம் ஆயில், ஹைட்ரஜனேட்டடு வெஜிடபுள் ஆயில், ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து, பாலில் இருந்து பெறப்படும் திடப்பொருள், எண்ணெயையும் தண்ணீரையும் சேர்க்கும்போது அவை இரண்டும் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகச் சேர்வதற்கான எமல்சிஃபையர் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கிறார்கள். பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். பனீர் அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். அதைவிட அடிமட்ட விலைக்கு பனீர் கிடைக்கிறது என்றால் அது அசல்தானா என்று செக் செய்ய வேண்டும். அசல் பனீர், உதிர்த்தால் உதிரும்படியும் மென்மையாகவும் இருக்கும். போலி பனீர் என்றால், ரப்பர் தன்மையுடன் கடினமாக இருக்கும். சிறிதளவு பனீரில் சில துளிகள் அயோடின் திரவத்தை விட்டால், போலி பனீராக இருந்தால், அது நீலநிறமாக மாறும். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து. அசல் பனீர் என்றால் நிறம் மாறாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுவது, உணவைத் தவிர்ப்பது, உடல்நலமில்லாத போது எப்படி இருப்பது சரி?
கிளிநொச்சியில் விசேட தேடுதல் நடவடிக்கை - வீடொன்றில் இருந்து கஞ்சா மீட்பு
கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே வீடொன்றில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த அரசாங்க முடக்கத்தை (Government Shutdown) முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முக்கியச்
தமிழ்நாட்டில் SIR பணிகளின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 78.09 சதவீதம் பேருக்கு இதுவரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
NZ vs WI: ‘48/5 என இருந்த மே.இ.தீவுகள்’.. அதன்பிறகு அதிரடி கம்பேக் கொடுத்து அசத்தல்.. ஸ்கோர் விபரம்!
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், துவக்கத்தில் அதிக விக்கெட்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. இதனால், நல்ல ஸ்கோரை எட்டினார்கள்.
கோத்தகிரி: தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலம்; வனத்துறை விசாரணை
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனக்குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் துயரமான இறப்புகள் நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன. புலி இந்த நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள் புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துயரம் குறித்து தெரிவித்திருந்த வனத்துறையினர், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கடசோலை பகுதி. ரங்கசாமி மலைக்குச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அஞ்சனகிரி என்கிற தனியார் தேயிலை தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளனர். சுமார் 20 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து இந்த வழியாக சென்ற மக்கள் சிலர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். நாங்கள் ஆய்வு மேற்கொண்டு அழுகிய நிலையில் புலியின் சடலத்தை மீட்டோம். Tiger death இந்த பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்த புலியின் பாலினம், வயது மற்றும் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட டீ எஸ்டேட் நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?
அமெரிக்கர்களிடம் உயர்திறன் இல்லை.. வெளிநாட்டு திறமையும் அவசியம்! –டிரம்ப் யு டர்ன்
உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான சில சிறப்புத் திறன்கள் அமெரிக்கப் பணியாளர்களிடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையொப்பமிட்டார். இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமர்த்தும் […]
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 342 குண்டுவெடிப்பு மிரட்டல் மின்னஞ்சல்கள்!
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 342 குண்டுவெடிப்பு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் தெரிவித்து உள்ளார்.
மகளிர் அணி கேப்டன் ஹர்மன்: சென்னையில் பிரம்மாண்ட பிக்கில் பால் விழாவில் பங்கேற்பு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்து நாட்டிற்கே பெருமை சேர்த்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்,
``அவள் மத நம்பிக்கையற்றவள், தாராளவாதக் கொள்கை - டெல்லியில் கைதான பெண் மருத்துவரின் முன்னாள் கணவர்
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, கைதுசெய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. ஷாஹீன் ஷாஹித் இந்த நிலையில், ஷாஹீன் சயீத்தின் முன்னாள் கணவர் டாக்டர் ஹயாத் ஜாபரை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது டாக்டர் ஹயாத் ஜாபர், ``எனக்கு ஷாஹீன் ஷாஹித்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் அவளுடன் எந்த நெருங்கிய உறவையும் பகிர்ந்து கொள்ளவில்லை. நாங்கள் 2012-ல் பிரிந்துவிட்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஷாஹீன் ஷாஹித்துக்கு எப்போதும் மத நம்பிக்கை இருந்ததே இல்லை. தாராளவாத மனப்பான்மை கொண்டவள். குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ குடியேற வேண்டும் என விரும்பினாள். ஆனால், அதிலிருந்து எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். NIA ஷாஹீனின் தந்தை அகமது அன்சாரி, என் மகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மற்ற குழந்தைகள் யாருடனும் அவள் பேசுவதில்லை. நான் கடைசியாக ஷாஹீனுடன் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், ஆனால் நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஜாஃபருடன் பேசுகிறேன். ஷாஹீனின் கைது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். `மருத்துவர் டு தீவிரவாத தொடர்பு' - ஷாஹீன் ஷாஹித் யார்? விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
இலங்கையில் ஆச்சரியம் ; வைத்தியர்களை வியப்பில் ஆழ்த்திய இரட்டை குழந்தைகள்
காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன. ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் எனவும், மொத்தமாக இரண்டு குழந்தைகளும் 4 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டார். சத்திரசிகிச்சை வயிற்றுப் பகுதியால் ஒன்றிணைந்துள்ள இந்தக் குழந்தைகளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவர் […]
சாவகச்சேரியில் கைது செய்ய சென்ற பொலிசாரை வாளை காட்டி மிரட்டிய இளைஞன் கைது
சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவரது உடைமையில் இருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் உள்ள இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக அறிந்து கொண்ட பொலிஸார் […]
வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல
வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்திற்குட்பட வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் தாதியர்களின் 24 மணி நேர பகிஸ்கரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 55 பிரதேச வைத்தியசாலைகளிலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 20க்குஉட்பட்டதாக இருக்கின்றது. ஆரம்ப மருத்துவ சுகாதாரப் […]
மதுரை மக்களுக்கு குட் நியூஸ்: திறப்பு விழாவுக்கு தயாரான இரு மேம்பாலங்கள்!
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், அப்போலோ சந்திப்பு மேம்பாலம் ஆகிய இரு மேம்பாலங்கள் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர், செந்தட்டி ஐயனார் கோயில்: புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்; குழந்தைபேறு கிடைக்கும்!
தென் மாவட்டங்களில் ஐயனார் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். ஊர்தோறும் ஐயனாருக்குத் தனிக் கோயில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சுயம்புவானவை. அவ்வாறு சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவரே செந்தட்டி ஐயனார். பூரண புஷ்கலையுடன் அருள்பாலிக்கும் இந்த ஐயனாரின் ஆலயம் விருதுநகர் அருகே உள்ள வலையபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. வாருங்கள் அந்த அற்புத ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம். செந்தட்டி ஐயனார் கோயில் விநாயகர் முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் செந்தட்டி முட்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருமுறை பாண்டிய மன்னன் ஒருவன் வேட்டைக்கு வந்தபோது அவன் பயணம் தடைப்பட்டது. குதிரையில் இருந்து இறங்கியவனின் பாதங்களில் முட்கள் தைத்தன. கோபம் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் இருந்த முட்செடிகளை அகற்றுமாறு கட்டளையிட்டான். வீரர்களும் அவ்வாறு செய்ய அங்கே ஐயனார் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியிருந்த அதிசயத்தைக் கண்டனர். மன்னனும் ஓடிவந்து சுவாமியை வணங்கி வழிபட்டான். செந்தட்டி முட்புதர்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்பட்டதால் சுவாமிக்கு, ‘அருள்மிகு செந்தட்டி ஐயனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. மன்னன் இந்த சுவாமிக்கு தனிக் கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். பாண்டியர்கள் கட்டிய ஆலயம் என்பதற்கு சாட்சியாக ஆலய மண்டபங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிவகிரி ஜமீன் வசம் இந்த ஆலயப் பராமரிப்பு இருந்தது. இங்கிருந்து பிடிமண் எடுத்துப்போய்தான் தூத்துக்குடியில் ஆலயம் எழுப்பினார்கள் என்றும் சொல்கிறார்கள் ஊர்மக்கள். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்! தலபுராணம் முன்னொரு காலத்தில் முத்து வீரப்பன், பாதாளகண்டி இருவரும் இந்தப் பகுதிக்கு வந்தனர். சுவாமியின் எல்லை இது என்பதை அறிந்துகொண்டு, அந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கத் தங்களுக்கு அடைக்கலம் வேண்டும் என்று கேட்டாள் பாதாளகண்டி. கேட்பவர்க்குக் கேட்கும் வரத்தினைத் தவறாது தருபவர் அல்லவா ஐயன்... அங்கேயே தங்கித் தமக்குக் காவலாக இருக்குமாறு கட்டளையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட இருவரும் பக்தியோடு தம் பணியைச் செய்ததோடு ஐயனாருக்கு உரிய பூசைகளையும் செய்துவந்தனர். பக்தர்கள் பலரும் ஐயனின் சந்நிதிக்கு வந்து கொடுக்கும் படையல்களையே இருவரும் ஏற்று வாழ்ந்துவந்தனர். ஆனால், பாதாள கண்டியும் முத்துவீரப்பனும் அசைவப்பிரியர்கள். ஆனால் பக்தர்கள் படைப்பதோ சைவப் படையல். என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினர். ஐயனாரிடமே இதற்கு பதில் சொல்ல வேண்டினர். ஐயனார் புன்னகையோடு, எனக்கு வேண்டிய உணவு வருவது போல், என்னுடன் இருந்து காவல் காக்கும் பட்சத்தில் உங்களுக்கும் மக்கள் வேண்டியதைக் கொடுப்பார்கள்'' என்று அசரீரியாகக் கூறி அருளினார். முத்துவீரப்பனும் பாதாளகண்டியும் அங்கேயே காவல் தெய்வங்களாகக் கோயில் கொண்டனர். ஐயனாரின் உத்தரவு அது என்பதை அறிந்த பக்தர்கள் முத்துவீரப்பனுக்கும் பாதாள கண்டிக்கும் அவர்கள் விருப்பபடியே வழிபாடுகள் செய்கிறார்கள். செந்தட்டி ஐயனார் கோயில் பிரார்த்தனைச் சிறப்புகள் இந்தக் கோயிலில் அருளும் முத்துவீரப்ப சுவாமியை வழிபட்டுச் சென்றால் குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. அப்படி குழந்தை வரம் கிடைத்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு முத்தையா, முத்துவீரப்பன் எனும் பெயர்களையே சூட்டுகின்றனர். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐயனாருக்கும், பரிவார மூர்த்தங்களுக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு ஐயனாரைத் தரிசிக்க துன்பங்கள், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். மேலும், இக்கோயிலில் மகா சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இக்கோயிலுக்கு வந்து, ஐயனாரைத் தரிசித்து வழிபட்டால், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்; புதுமனை, வாகன யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்தத் திருக்கோயிலில் விநாயகர், முத்துவீரப்ப சுவாமி, பாதாளகண்டி, ராக்காயி அம்மன், பேச்சி அம்மன், வனப்பேச்சி, லாட சன்னாசி ஆகிய பரிவார தெய்வங்களும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். விருதுநகர் செல்லும் வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தவறாமல் வலையபட்டி சென்று செந்தட்டி ஐயனாரை வழிபட்டு வாருங்கள். ஐயனின் அருள் அனைவரின் வாழ்வையும் வளமாக்கும். செந்தட்டி ஐயனார் எப்படிச் செல்வது?: ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் எனும் ஊருக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண துரத்தில் அமைந்துள்ளது, வலையபட்டி. ஆலங்குளத்தில் இருந்து வலையபட்டிக்குச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!
தீவிரவாத தாக்குத்தல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஒருநாள் தொடர் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்!
பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேருந்து பின்னர் சாலையை விட்டு விலகி 200 அடி ஆழமுள்ள ஒகோனா ஆற்றின் கரையில் கவிழந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 37 பேர் இறந்ததாகவும், காயமடைந்த ஒருவர் சிகிற்சைகள் பலனின்றி இறந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்தில் சுமார் 60 பேர் இருந்தனர். பெருவின் காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அரேக்விபாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில் பேருந்து தலைகீழாகக் கிடந்ததுடன், பயணிகளின் உடைமைகள் சிதறிக் கிடந்தன. பிக்கப் டிரக்ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த 26 போில் இரண்டு எட்டு மாதக் குழந்தையும் அடங்குவர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், மக்களை மீட்பது, காயமடைந்தவர்களை வெளியேற்றுவது மற்றும் உடல்களை மீட்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் பெருவின் உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. லாரி ஓட்டுநரின் பொறுப்பை தீர்மானிக்க விசாரணை நடைபெறும் என்று உள்ளூர் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் இருந்து உயிர் பிழைத்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். விபத்தில் பலியானவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.
தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2025 - கனடா
கனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவின் மைதானமும் இடம் பெற்று உள்ளது.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 - நோர்வே
நோர்வே நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய SETC Volvo பேருந்து எப்படி இருக்கு? | Photo Album
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - யேர்மனி
யேர்மனியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - பின்லாந்து
பின்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள மாவீர நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவிஸ்
சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - சுவீடன்
சுவீடன் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - நெதர்லாந்து
தெதர்லாந்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தேனி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்; தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு | Photo Album
காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம்
ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..!
twitter.com/drkrvcvijay காலையில கோழிக்கறி வாங்கக் கடைக்குப் போனதும் அங்க அந்தக் கோழிய அடிச்சுக் கொல்றத பார்த்த உடனே கோழிக்கறி வாங்குறதுக்கு மனசே கேட்கல! சரின்னு மட்டன் அரை கிலோ வாங்கிட்டு வந்துட்டேன்! twitter.com/LAKSHMANAN_KL வரும் தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும் - டி.டி.வி தினகரன். # தனித்துப் போட்டியிட்டா அ.ம.மு.கவுக்கு அதுதான் கடைசி வாய்ப்புனு உங்களுக்குத்தான் நல்லாவே தெரியுமே?! twitter.com/Greesedabba2 இன்டர்வியூக்கு வரச் சொல்லி, அவனுக கம்பெனில உள்ள தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு எல்லாம் ஓசியிலயே சொல்யூஷன் கண்டுபுடிக்க டிரை பண்ணுறானுக..! facebook.com/Bogan Sankar ரயிலில் நமது பக்கத்து இருக்கையில் வந்து அமர்கிறவர் மீதான விரோதம் போகவே ஒன்றிரண்டு மணி நேரம் ஆகிறது. பல நேரங்களில் அவர் இறங்கும்வரை அதுபோவதே இல்லை. திருமணம் என்கிற பெயரில் நமது படுக்கையில் வந்து படுத்துக்கொள்கிறவர்கள் மீதான விரோதம் போக சில வருடங்களாவாவது ஆகாதா? twitter.com/dingudongubellu நண்பர்களிடம் கொடுத்த பணமெல்லாம் பிப்ரவரி 30-ம் தேதியில் திரும்பக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது! twitter.com/56856832 ‘‘ஒரு வருஷம் கழிச்சு மீட் பண்ணுறோம்... ஏதாவது ட்ரெண்டிங்கா பேசு!’’ ‘‘SIR ஃபார்ம் ஃபில்லப் பண்ணிக் கொடுத்துட்டியா?’’ twitter.com/saranya121289 வளர்ச்சி என்பது, ‘என்னோட நம்பர் தரேன், எப்ப வேணாலும் கால் பண்ணுங்க' என்று தொடங்கி, ‘உங்களோட நம்பர் கொடுங்க, நான் பிறகு கூப்பிடுகிறேன்' என்பதோடு முடிகிறது... twitter.com/Suyanalavaathi me: சும்மா இருக்கும் போதுதான் mobile யூஸ் பண்ணுறோம்... ஆனாலும் சார்ஜ் வேகமா குறையுதே! my mobile: தம்பி... தம்பி... நீ எப்பவுமே சும்மாதானப்பா இருக்க! facebook.com/Villavan Ramadoss அதிவேக வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் ரேஸ் ஓட்டும் கும்பல் எல்லாமே சந்தேகம் இல்லாமல் சமூக விரோதிகள்தான். இதில் பலருக்கு தான் செய்வது தவறு எனும் எண்ணமே இருப்பதில்லை. எனவே இவர்கள் அறிவுரையால் திருந்த வாய்ப்பு இல்லை. மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு அடுத்த ஒரு ஆண்டு முழுக்கவே போக்குவரத்துக் காவல்துறை இவர்களை மட்டும் இலக்கு வைத்து வேலை செய்தால்கூட இந்த கும்பலை முழுதாகக் கட்டுப்படுத்துவது சிரமம். இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் வீட்டுக்கு ஒரு விபத்தைப் பரிசளிப்பார்கள். twitter.com/asdbharathi எல்லாக் குற்றங்களுக்கும் பின்னணியில் ஒரு போதைதான் இருக்கிறது. twitter.com/basebalu செங்கல்லை இரண்டாக உடைத்தால் பிளாக் பெல்ட். கட்சியை இரண்டாக உடைத்தால் கௌரவ பிளாக் பெல்ட்! twitter.com/ak47_twitz சகமனிதனின் சந்தோஷத்தைப் பார்த்துத் தானும் மகிழ்ச்சியடையும் மனிதர்களால்தான் இப்பூமி நிரம்பியிருக்கிறது. அதை வெளிக்கொணர்வதற்குத் தேவையெல்லாம் கொஞ்சம் அன்பு மட்டும்தான்! twitter.com/sasitwittz நம்மள யாரும் எழுப்பாம நாமளே சீக்கிரம் எழுந்தால் அன்று ‘சண்டே’ என்று அறிக..! twitter.com/SelvaBsctwitz புருஷனை காமெடியனா பார்க்க வச்சு அழகு பார்க்குறதுல அப்படி இந்தப் பொண்டாட்டிகளுக்கு என்னதான் சந்தோஷமோ?! facebook.com/Shoba Sakthi பத்து வருடங்களுக்கு முன்பு நான் பாரிஸில் வீட்டில் இருந்தபோது, எனக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது: ‘‘வணக்கம் தம்பி ஷோபாசக்தி. என் பெயர் ரகுபதி சர்மா. சைவ சமய மதகுரு. எனக்கு அறுபது வயதாகிறது. நான் உங்களுடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல உண்மைகளை அச்சமில்லாமல் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு என் ஆசிகள்.’’ எனக்குக் கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது. ‘மதகுருவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவரென்ன எனக்கு ஆசி வழங்குவது!' என்று நினைத்தவாறே ஏதாவது பதில் பேச வேண்டுமே என்பதால் ‘‘நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘நான் மகஸின் சிறைச்சாலையிலிருந்து பேசுகிறேன். இங்கே தண்டனைக் கைதியாக இருக்கிறேன்.’’ நான் திடுக்குற்றுப்போய்விட்டேன். இலங்கைச் சிறையிலிருந்தா? அங்கிருந்து எப்படி அலைபேசியில் அழைக்கிறார்? நிச்சயம் இதுவொரு சட்டவிரோத அழைப்பு. அலைபேசியும் கையுமாகப் பிடிபட்டார் எனில் அவருக்கு இன்னும் சிக்கலாகிவிடுமே என்றெல்லாம் என் மனம் பதைபதைத்தது. எனினும், அவசர அவசரமாக அவருடன் உரையாடல் தொடர்ந்தது. கடகடவென அவர் தனது கதையைச் சொன்னார்: ‘‘ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மீது கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு நான் இருப்பிட வசதி வழங்கினேன் என்ற குற்றச்சாட்டில் 2000-ம் ஆண்டு நானும் என் மனைவியும் கைது செய்யப்பட்டோம். 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. என் மனைவி விடுதலை செய்யப்பட்டார். எனக்கு முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.’’ அவரோடு பேசிய பின்புதான், இலங்கையில் முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது என்ற செய்தியே எனக்குத் தெரிய வந்தது. மிகப் பெரிய அதிர்ச்சியும் துயரமும். அவர் பின்பும் சில தடவை என்னோடு அலைபேசியில் பேசினார். அவர் சிறையிலிருப்பதால் நான் அவரை அலைபேசியில் அழைக்க முடியாது. முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை என்பது என்னை அலைக்கழித்துக்கொண்டேயிருந்தது. அந்த அலைக்கழிப்பில் 2019-ல் உருவானதுதான் என்னுடைய ‘இச்சா' நாவல். அந்த நாவலின் நாயகியான தற்கொலைப் போராளி ஆலாவுக்கு முந்நூறு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். அவள் சொல்வாள்: ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் என்மீதான வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, எனக்கு முந்நூறு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மீதான கொலை முயற்சி வழக்கில் 65 வயதுப் பெரியவர் ஒருவருக்கும் இதே அளவான தண்டனை வழங்கப்பட்டது.’’ மகஸின் சிறையிலிருந்து அலைபேசி வழியாக அவசர அவசரமாக எனக்குக் கிடைத்த வார்த்தைகளே ‘இச்சா' நாவல் உருவாக தொடக்கப்புள்ளியாக இருந்தது. நாவலில், ஆலா கொழும்பில் தங்கியிருந்து தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிடுவாள். அவள் தங்குமிடம் ஒரு சைவ சமய மதகுருவின் வீடு. மதகுருவும் அவரது மனைவியும் ஆலாவைப் பாதுகாத்து உபசரிப்பார்கள். நாவல் வெளியான பின்பு எனக்குக் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. முந்நூறு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் எனது நாவலை எப்படி எதிர்கொள்வார்? சில காலங்களுக்குப் பின்பு சிறைச்சாலையிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. பேசியபோது, இச்சா நாவலில் ஆலா சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்தில் வந்தன: ‘‘சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையடைந்த யயாதிக்கு அவனின் மகன் புரு தனது இளமையைத் தானமாகக் கொடுத்ததுபோல, நான் விடுதலையாகி வரும்போது உங்களின் இளமையை எனக்குத் தானமாகத் தரப்போவது உங்களில் எவர்?’’ இச்சா நாவலின் நாயகி ஆலா 7 வருடங்கள் சிறையில் உழன்ற பின்பு, ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பால் விடுதலையானாள். அவளை நான் உருவாக்கக் காரணமாக இருந்தவர் 22 வருடங்கள் சிறையில் உழன்ற பின்பு, ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பின் கீழ் 2022-ம் ஆண்டு விடுதலையானார். யதார்த்தத்தை வளமான கற்பனையால் தோற்கடிக்க முடியும் என்பார் எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால், எப்போதாவது ஒரு தடவை கற்பனையை யதார்த்தம் தோற்கடித்தும்விடுகிறது. twitter.com/mohanramko ‘‘யாரை வேணும்னாலும் நான் கேள்வி கேட்பேன்!’’ ‘‘போலீசா நீங்க..?’’ ‘‘போலீசா... யூடியூபர்ங்க!’’ twitter.com/rosnthorns பிடிச்சவங்க இருக்கட்டும், வெறுப்பவங்க போகட்டும்... நாம் நாமாகவே இருப்போம்! twitter.com/Kozhiyaar மனைவிகிட்ட சண்டை போட்டுட்டு வெளிய சாப்பிடுறவன் மனிதன், வெளிய சாப்பிடுறதுக்காகவே மனைவிகிட்ட சண்டை போடுறவன் மாமனிதன்! facebook.com/அ.பாரி மளிகைக்கடையில் கொசுறாகக் கொடுக்கும் கறிவேப்பிலையைப் பார்த்து, ‘‘எலையே இல்லாம, வெறும் குச்சியா இருக்கு, இது யாருக்கு வேணும், வேற கொடுங்க அண்ணாச்சி’’ என்று கேட்டு, மாற்றுக் கறிவேப்பிலை வாங்கி, திரும்பும்போதும் மறக்காமல், அந்த ‘இது யாருக்கு வேணும்' கறிவேப்பிலையையும் சேர்த்து எடுத்துட்டு வரான் பாரு, அவனுக்குப் பேர்தான் நடுத்தர வர்க்கம். facebook.com/Karthik காலையில் அறிமுகமாகி, மதியம் பேச ஆரம்பித்து, மாலையில் ‘‘ஏன் யாரோ மாதிரி பேசற’’ என்று கோபித்துக்கொள்ளவில்லை என்றால் அதென்ன ஆண்-பெண் பழக்கம்! facebook.com/HariharasuthanThangavelu நியூயார்க் நகரம், இரவு நேரம். ஒரு அமெரிக்க பெண், ஆண் நண்பருடன் காரில் அமர்ந்திருக்கிறார். அங்கு வந்த போதை ஆசாமிகள் அவரை மிரட்டி, அடித்து, பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார்கள். அரசை விடுங்கள், மக்களும் மீடியாவும் இதை எப்படிக் கையாளுவார்கள். நியூயார்க் நாசமாகிறது, பாதுகாப்பு என்பதே இல்லை, பென்டலின் போதை தலைவிரித்தாடுகிறது, NYPD என்ன செய்கிறது என வெளுத்துவிடுவார்கள். அங்கு ரோட்டில் திரியும் ஒரு தெருநாய்கூட, “நீ ஏங்கண்ணு அந்த நேரத்துல கார்ல இருந்த” என மட்டித்தனமாக யோசிக்காது. கோவைச் சம்பவத்தில் இப்படிக் கேள்வி எழுப்புபவர்கள் ஒரு நாய்க்கும் குறைவான அறிவு கொண்டவர்களே! தாக்குதல் அமெரிக்காவில் நிகழ்ந்தால் சமூகம் காரணம். கோவை என்றால் மட்டும் பெண்தான் காரணமா? இப்போது சொல்லுங்கள், யார் தற்குறி? பொம்பளப் புள்ள அதிகமா படிக்கக்கூடாது, வெளிய வரக்கூடாது, பசங்ககூட பேசக்கூடாது, சத்தமா சிரிக்கக்கூடாது, கால் மேல கால் போட்டு உக்காரக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது எனப் பல பிற்போக்குத்தனங்களைக் கடந்த இருபது வருடங்களில் பெண்கள் உடைத்தி ருக்கிறார்கள். பெண்களின் சுதந்திரத்திலும் அவர்களுக்கான பாதுகாப்பிலும்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது. பெண்ணுக்கும் இந்தப் பூமி சொந்தம். பகல், இரவு, காடு, ஆறு, மலை, அருவி என ஒரு ஆணுக்கான அனைத்தும் பெண்ணுக்கும் ஆனவையே. ஆகவே பாதிக்கப்பட்டவரை விடுத்து, நிகழ்த்தியவர்களைப் பற்றிப் பேசுங்கள். அவர்களே இச்சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் செய்த கொடூரத்திற்கு காலில் மட்டும் சுட்டிருக்கக்கூடாது... twitter.com/Greesedabba2 க்ளைமாக்ஸில் வில்லன்களை போலீஸில் பிடித்துக்கொடுத்தால், கோர்ட்டும் சட்டமும் குற்றவாளிகளை தண்டித்துவிடும் என்ற நம்பிக்கையோடு 80-90’களின் திரைப்படங்கள் முடிந்தவரை, வாழ்க்கை நிம்மதியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. twitter.com/saravankavi ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்: - பிரதமர் மோடி # பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் புல்டோசரை வைத்து மிரட்டுவார்கள்னு அதையும் சொல்லிட்டுப் போங்க... twitter.com/iqkubal ‘‘ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணுனியே... என்ன கத்துக்கிட்ட?’’ ‘‘இனிமேல் ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்...’’
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - இத்தாலி
இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிழக்வுகள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - டென்மார்க்
டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - பிரித்தானியா
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
ஜப்பான் நிலையான (Sustainable) கண்டுபிடிப்பில் மீண்டும் ஒருமுறை தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளது. அந்நாட்டு விஞ்ஞானிகள், உப்புநீரையும் (Saltwater) நல்லநீரையும் (Freshwater)
சென்னை1 செயலி மூலம் இன்று முதல் 1 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்...அது எப்படி தெரியுமா?
சென்னை 1 செயலி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வழித்தடங்களில் 1 ரூபாய்க்கு பயணம் செய்யும் சிறப்பு வசதியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா
2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான, சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்குவதே சீன திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதும், விமானங்கள் பழுதுபார்ப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சி முடிவு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய இறுதி நிலைப்பாடு குறித்து, கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி,
ஞாபக மறதி ஸ்ட்ரோக்கின் அறிகுறியா? பக்கவாதத்தின் மாறுபட்ட முகங்கள்!
சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு என் கிளினிக்கில் நடந்தது: 70 வயது பாட்டி ஒருவர், தனது மகனுடன் என்னைச் சந்திக்க
போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு, முறையற்ற மருத்துவ காப்புறுதி ஒப்பந்தம் மூலம் 4.7 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க நேற்றுக்காலை கைது
சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு சேவைகள் திறம்பட செயல்படுவதாகவும், தற்போது எந்த பாதுகாப்பு கவலைகளும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சிறிலங்காவுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. சிறிலங்காவின் புலனாய்வு சேவை தீவிரமாக செயற்படுகிறது. எமது முப்படைகள் மற்றும்
சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை
சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை, அதிகாரிகள் கருணைக் கொலை செய்துள்ளனர். அந்த நாய்கள் சரியான உணவின்றி வாடி வந்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், வேறு வழியின்றி அவைகளைக் கருணைக் கொலை செய்ய நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவற்றில் பல நாய்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறும் விலங்குகள் நல ஆர்வலர்கள், அவைகளைக் கொல்லும் முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் […]
அமெரிக்கா அரசுத் துறைகள் முடக்க நீக்கம்: செனட் மசோதா நிறைவேற்றம்
செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக […]
டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக […]
போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?
காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது… தற்போது காஸாவில் மக்களின் நிலை என்ன? இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக். 7ல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக். 10 ஆம் தேதி முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. போர் […]
வாளைக் காட்டி காவல்துறையினரை மிரட்டிய இளைஞன் கைது
சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளைஉடைமையில்வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற காவல்துறையினரை வாளை காட்டி அச்சுறுத்திய நபரை… The post வாளைக் காட்டி காவல்துறையினரை மிரட்டிய இளைஞன் கைது appeared first on Global Tamil News .
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்களும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அன்று நடந்த தாக்குதல்களில், தாஜ் மஹால் […]
தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி 15 பேருக்கு நேர்ந்த கதி
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் டிப்பர் லொறியும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து மஹல்வெவ சென்ற தனியார் பேருந்தும் ஹம்பாந்தோட்டையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த 15க்கும் அதிகமானோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் […]
பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டு சேர்க்க முயற்சி ?
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமைய அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்கு கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தேவை என கருதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஓர் பூர்வாங்க கலந்துரையாடலை நடாத்துவற்கு உத்தேசித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0-க்குப் பின்! - குறுங்கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அன்று மாலை, பூங்கா ஒன்றில் பரமன் அடைந்த அமைதி அலாதியானது. மரங்களின் அசைவில் காற்றில் மிதந்து வந்த அமைதி அது. சற்று நேரத்திற்கு முன் வீட்டில் நடந்த களேபரமும், மனக்கணக்கும் அந்த அமைதியில் கரைந்து போயின. அவர் மனதில் சில மாதங்களாகவே ஒரு பெரும் சுமை கனத்தது. கொஞ்சம் யோசிச்சுப் பாரு பார்வதி! நிர்மலா அம்மா ஜிஎஸ்டி-யைக் குறைச்சதுல வீட்டுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? அவரது குரலில் ஒரு வித வருத்தம் தெரிந்தது. போன வருஷம் தான், ஒரு பதினைந்து வருஷப் பழமையான, லொடக்கு ஸ்கூட்டரை மாத்திட்டு, பையன் காலேஜ் போகலைன்னு போர்க்கொடி தூக்கினதால், லட்ச ரூபாய் கொடுத்து ஒரு பைக் வாங்கி குடுத்தேன். தசரா சமயம் பழைய ஃபிரிட்ஜை எக்ஸ்சேன்ஜ் செஞ்சு புதுசு வாங்கினேன். இப்போ குறைச்ச ஜிஎஸ்டி பலனை நம்மால் அடைய முடியலையே! எவ்வளவு நஷ்டம்னு நீயே கணக்குப் போட்டுப் பாரு! நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பரமன், 'ஜிஎஸ்டி பலனை மிஸ் செய்து விட்டோம்' என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார். ஆனாலும், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி காலத்தில் எதையாவது வாங்கிப் போட்டால் தான் மனசு திருப்தி அடையும்னு வீட்டில் நச்சரிப்பு. GST திரும்ப ஜாஸ்தி பண்றதுக்குள்ள கண்டிப்பா வாங்கணும். வீட்டிற்கு வெளியே எங்கே சென்றாலும், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும், 'கிஸ்தி கம்மியாச்சே! என்ன வாங்கினீங்க?' என்று பயங்கர விசாரிப்பு. 'வாங்கினால் பார்ட்டி ஸ்வீட்' என்று வேறு ஆரம்பிப்பார்கள். இந்த மாதிரியான விசாரணைகள் தான் அவரை ரொம்பவே இம்சித்தன. ஒருநாள், அவர் அந்த இம்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தார். வீட்டில் மனைவி பார்வதி, பையன் மற்றும் மகள் அமர்ந்திருந்த நேரத்தில், நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் குரலில் ஒருவிதமான கிளர்ச்சி இருந்தது. பார்வதி, கீர்த்தி, கீர்த்தனா. எல்லாரும் சந்தோஷப்படுங்க. கடைசியில, ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட இந்தக் காலக்கட்டத்தில் நம்ம பழையது ஒண்ணு எக்ஸ்சேஞ்ச் செஞ்சு ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்! அவ்வளவு தான்! எல்லோருடைய முகத்திலும் ஒரு மின்னல் வெட்டியது போல பயங்கர சந்தோஷம். அப்பா! நிஜமாவா ?. எப்போ வருது ? SUV தானே? ஹைபிரிட் இல்ல எலெக்ட்ரிக்கா? புது மாடலா ? என்று மகன் உற்சாகமாகக் கேட்டான். கார் வாங்கினா மொதல்ல ஊட்டி போகணும் என்று மகள் துள்ளினாள். பார்வதி ஆர்வத்துடன் கணவரை நிமிர்ந்து பார்த்தார். என்ன வித்து என்ன வாங்கினீங்க ? எதுக்கு எக்ஸ்சேஞ்ச் பண்ணீங்க ?. லோன் கீன் எதுவும் போட்டு வாங்காதீங்க. . நியாமான கவலையை அவள் வெளிப்படுத்தினாள். ஆமாம்! வீட்டில் எக்ஸ்சேஞ்ச் பண்ணி வாங்க என்ன இருக்கு? பைக் போன வருஷம் தான் வாங்கினோம். அது விக்க வேண்டாமே என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அவர் தான் சஸ்பென்ஸை விடுவிக்க வேண்டும். அவர் ஒரு புன்முறுவலுடன், ஒரு ரகசியத்தை உடைப்பது போலப் பேச ஆரம்பித்தார். என் அப்பா காலத்துல இருந்த ஒரு சைக்கிள், கராஜில் துருப்பிடித்துக் கிடக்குதில்லையா? நல்ல வெயிட் அது... அதை ஒரு 500 ரூபாய்க்கு வித்தேன். அந்தப் பணத்தோடு மிச்சத்தை போட்டு ஒரு புது ஹெர்குலஸ் சைக்கிள் வாங்கிட்டேன். GST முன்னாடி 12 பர்சண்ட் . இப்போ 5 பர்சன்ட். ! வீடே ஒரு கணம் மயான அமைதியானது. மாடல் பேரு 'ஹேவாக்'. கலர் ஆர்மி கிரீன் . சூப்பரா இருக்கு. அக்கம் பக்கம் காய்கறி, பால்னு எது வாங்கப் போனாலும், அது ரொம்ப வசதியா இருக்கும். முக்கியமா, எக்ஸைஸ் பண்ணின மாதிரியும் ஆச்சுமில்லையா? என்று அவர் பெருமிதத்துடன் பேசி முடித்தார். அவர் பேசி முடித்ததும், எல்லோருக்கும் கொஞ்ச நேரம் மூச்சு உள்ளே போகவில்லை, வெளியே வரவில்லை. மொத்தக் குடும்பமும் ஆழமான மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. ஜிஎஸ்டி சலுகையில் விலையுயர்ந்த கார் வரும் என்று கனவு கண்டிருந்த அவர்கள் முகத்தில் ஏமாற்றமா, அதிர்ச்சியா, அல்லது ஆச்சரியமா என்று எதுவும் தெரியவில்லை. அவர் மெதுவாக எழுந்து, சாவியை எடுத்து சைக்கிள் நிற்கும் கராஜை நோக்கிச் சென்றார். அவர் முகத்தில் இப்போது ஒரு திருப்தி. 'தேவையற்ற ஒன்றை விற்று, ஆரோக்கியம் தரும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்து விட்டோம்' என்ற நிம்மதி அது. விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
SIR விவகாரம்: BLO யார்? விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகமா?
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், BLO அலுவலர் கொண்டு வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதில் மக்களிடத்தில் நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்து உள்ளன.
டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை? - பா. சிதம்பரம் கேள்வி
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது? டெல்லி துயரச் சம்பவம் இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள். ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன். உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன். எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும். பா. சிதம்பரம் ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Delhi Red Fort Car Blast: அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah; வெளியான SHOCK தகவல்கள்|Imperfect Show
2900 கிலோ வெடி பொருட்கள்; புல்வாமா கனெக்சன்! - Delhi Car Blast Latest Updates
இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம்
இந்தியாவில் இடம்பெற்ற 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயது வீரன் தங்க பதக்கம் ஒன்றினையும் , இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவில் கடந்த 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் நடைபெற்ற போட்டிகளில் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான செல்வராஜா ரமணன் , 50 வயது பிரிவில் பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கபதக்கமும், முப்பாச்சல் மற்றும் கோலூன்றிப்பாய்தலில் வெள்ளி பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளார் . […]
Foodies Findings,?Weight போட்டா தம்பி கலாய்ப்பான் |RJ Vigneshkanth |Vikatan Digital Awards UNCUT
‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’ –பெண் டாக்டரின் தந்தை
புதுடெல்லி, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி லக்னோவில் உள்ள ஷாஹீன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், […]
புதுசா Business பண்றவங்க Golden Triangle-ஐ கவனிங்க | Micro to mighty | EPI - 02
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema
Vijay-யிடம், Rahul டீம் டீல்? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains
TN-ல் தொடர் கொலைகள்!| Delhi Bomb Blast: 11 நாள்களாக தூங்கிய உளவுத்துறை?| DMK BJP TVK|Imperfect Show
இரட்டை வரி; கேரள, கர்நாடகாவின் அதிரடி அபராதம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சொல்வதென்ன?
கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ ‛‛தனியார் பேருந்துக் கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது!’’ இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கிறது. கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிப்பது பற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 7.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 150 ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆம்னி பேருந்துகள் தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையான இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு ( 90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00, AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 10.11.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், (11.11.2025) உயர்திரு போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார்கள். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது மற்றும் இதனால் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், இதைச்சார்ந்து 10000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் விரைவாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்றோம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து- 37 பேர் பலி
பெருவின் அரிக்கீபா பகுதியில், பேருந்து ஒன்று லொரியுடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த கோர விபத்தில் 37… The post பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து- 37 பேர் பலி appeared first on Global Tamil News .
வவுனியாபேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த் தேக்கத்தில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதைத் தொடர்ந்து அவர் இன்று (12.11) இரவு தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில, வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம், பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும், பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படும் வரை குறித்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
IPL 2026: ‘டிரேடிங்கில் வெளியேறும்’.. அர்ஜுன் டெண்டுல்கர்: இந்த அணிக்கு மெய்ண் பௌலராக செல்கிறார்?
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, டிரேடிங்கில் வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர். இனி மெய்ண் பௌலராக விளையாட உள்ளார். மாற்றாக ஷர்தூல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டு வைத்து கைது:மீண்டும் காவல்துறை களத்தில்!
கடந்த அரசுகள் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துவந்திருந்தது. எனினும் தற்போதைய அரசு அதே பாணியில் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்ததாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகளை அரங்கேற்றிவருகின்றது. இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவின் தலைவர் என குற்றஞ்சாட்டி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்றையதினம் (11) சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கைக்குண்டுகளை வைத்திருந்தாக கூறியே கைதுகள் முன்னெடுக்கப்பட்டதாக கைதானவர்களது மனைவிமார் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளனர். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒரவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதா காவல்துறை தெரிவித்துள்ளது. சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முப்படைகள்!
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டுள்ளதாக தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அனுர அரசு அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டு காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கல்வி வீழ்ச்சிக்கு போதைப்பொருள் மாhப்பியாக்கள் காரணம் என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ; வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் , அவர்களை எப்போது வெளியேற்ற போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் வழங்கிய கடற்றொழில் அமைச்சர், வடக்கில் போதைப்பொருள் கடத்தலில் கடந்த காலங்களில் காவல்துறையும், இராணுவமும் இணைந்து தொடர்புபட்டுள்ளனர். அந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.அதற்கு பின்னால் போதைப்பொருள் மாப்பியாக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பங்காளிக்கட்சிகளது; தலையீடுகளும், இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sania mirza: ``நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் - விவாகரத்து குறித்து சானியா மிர்சா!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஷோயிப் மாலிக் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்தார். அப்போதுதான் சானியா மிர்சாவுக்கும் - ஷோயிப் மாலிக்குக்கும் விவாகரத்து ஆனது வெளியே தெரியவந்தது. இந்த நிலையில், 'சர்விங் இட் அப் வித் சானியா' என்ற பாட்காஸ்டில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஃபரா கானும், சானியா மிர்சாவும் கலந்துகொண்டு உரையாடினர். sania mirza அப்போது, சானியா மிர்சா, ``இன்று எல்லோரும் ஒரு போராட்டக் கதையை விரும்புகிறார்கள். போராட்டம் இல்லாதவர்கள் கூட மிகவும் வித்தியாசமான ஒரு போராட்டக்கதையை தங்களுக்காக உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்... என் குழந்தைகளுக்கு ஒரு விஷயம் இல்லை என்றால் உங்கள் குழந்தைக்கு வேறு ஒரு விஷயம் இருக்காது. ஆகமொத்தம் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிடுவதில்லை. நிதிப் போராட்டம் என்பது மிகவும் வெளிப்படையான, மிகவும் கடினமான போராட்டம். ஏனென்றால் நீங்கள் விரும்புவதைத் செய்வதற்கான சுதந்திரம் நிதி இல்லை என்பதால் தடைபடும். அதே நேரம், அது அந்த நாளைக் கடந்து செல்வது அல்லது அந்த மாதத்தைக் கடந்து செல்வது பற்றியது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். கடந்த காலங்களில் விவாகரத்துப் பெற்றவர்களின் குழந்தைகள் பெரும் சிரமங்களைச் சந்தித்திருக்கின்றனர். அந்தக் காலங்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இப்போது குழந்தைகளின் வாழ்க்கையில் விவாகரத்து இயல்பாக்கப்பட்டிருக்கிறது. என் குழந்தை படிக்கும் பள்ளியில் இது மிகவும் இயல்பாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். sania mirza ஒரு வகுப்பில் பலக் குழந்தைகள் விவாகரத்து ஆன பெற்றோரிடமிருந்து வருகிறார்கள். அதே நேரம் நாம் இன்னொரு கோணத்திலிருந்து இதை அணுக வேண்டும். நீங்கள் இதை எவ்வளவு இயல்பாக்கினாலும், பெற்றோர் பிரிவால் நிச்சயம் குழந்தை பாதிக்கப்படும். அதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால், அந்தக் குழந்தைக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் புரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிந்ததை ஒரு சிறந்த சூழ்நிலையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு குழந்தை மகிழ்ச்சியற்ற இருவரைப் பார்க்கப் போகிறது என்றால், நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். என்றார். அபிநய் தனியாகக் குடித்துக்கொண்டிருப்பார், ஆனால் அவரின் மறுபக்கம் - விஜயலட்சுமி உருக்கமான பதிவு
அரியலூர் தொகுதி: 2026 தேர்தலில் யாருக்கு சாதகமாகும்?
அரியலூர் சட்டமன்றத் தொகுதி இம்முறை திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி காண வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி, திமுக முன்னிலை வகிக்கிறது என்று தொகுதி மக்களே மதிப்பிடுகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்; ராகுல் காந்தியை தொடர்புபடுத்திய பொன்னார் - கண்டித்த விஜய் வசந்த்!
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறுகையில், ``நீண்ட காலமாக எந்தவித பயங்கரவாத தாக்குதல்களும் இல்லாமல் இருந்தது. இப்போது இது நடந்துள்ளது. குண்டு வெடித்தால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். அப்படியென்றால் காங்கிரஸ் தான் திட்டமிட்டுள்ளதா? ராகுலை கைது செய்ய வேண்டுமா..வேண்டாமா? என பேசியிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். விஜய் வசந்த் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானதும், நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஆபத்தான செயல் ஆகும். டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த வேளையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை. குண்டுவெடிப்பு இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக்குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டி காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழிசுமத்திய பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார். பொன்னார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காமல் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மலேசியா: அகதிகள் படகு விபத்தில் உயிரிழப்பு 26-ஆக உயர்வு
மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, இந்த விபத்தின் மொத்த உயிரிழப்பு 26-ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 பேரது உடல்கள் மலேசியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. அவர்களில் ஒன்பது பேர் பெண்கள், நான்கு பேர் சிறுவர்கள். இது […]
வெங்காய மாலைகளுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12) சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர். அத்துடன், அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான் … விவசாயி பாழானான்… என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன்போதும், பெரிய […]
அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்!
சமீபமாக சமூகவலைதளங்களில் ஒரு சிலரை 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் தவெகவிற்கு ஆதரவாகப் பேசும்போது, அந்த ரசிகர்கள் கூட்டத்தில் பலருக்கு அரசியல் அறிவு இல்லை என்று 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், திமுக 75 அறிவு திருவிழா கருத்தரங்கில் சமூக வலைதளங்களில் 'தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். மருத்துவர் எழிலன் இது குறித்துப் பேசியிருக்கும் திமுக எம்.எல்.ஏ எழிலன், சமீபமாக 'தற்குறிகள்... தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறோம். அது தவறான அணுகுமுறை. அவர்களிடம் நாம் பேசாமல், அரசியல் விழிப்புணர்வு செய்யாமல் தவறவிட்டது நம்முறைய தவறுதான். பள்ளி, கல்லூரிகளில் அவர்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு பற்றி சொல்லித் தராமல் ஒரு இளம் தலைமுறையினரை தவறான வழியில் செல்லவிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உரையாடி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மருத்துவர் எழிலன் அந்த ரசிகர்கள் கூட்டத்தின் தலைவர்கள் சுயநல நோக்கத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்திடம் நாம் உரையாடினால், அவர்கள் விழிப்புணர்வைப் பெற்று நல்ல வழியில் செல்வார்கள். அவர்கள் ஒன்றும் சங்கிகள் கிடையாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டாமல் பகுத்தறிவை, சமூகநீதியைச் சொல்லிக் கொடுத்து உரையாட வேண்டும். அவர்களை நாம் கைப்பற்ற வேண்டும். அவர்கள் நம்ம பசங்க என்று பேசியிருக்கிறார் எழிலன்
மாநில அளவில் வேலையின்றி தவிக்கும் பெண்கள்.. தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் தெரியுமா?
இந்திய நாட்டின் நகர்ப் புறங்களில் முறையான அல்லது வழக்கமான ஊதிய வேலை வாய்ப்பின்றி பெண்கள் தவித்து வருவதால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன
வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல
வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக… The post வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல appeared first on Global Tamil News .
ராஜஸ்தான்: ஐஏஎஸ் கணவர் மீது ஐஏஎஸ் மனைவி புகார் - FIR பதிவு செய்த காவல்துறை!
2014-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் பாரதி தீட்சித் - ஆஷிஷ் மோடி இருவரும் காதலித்து அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநில அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித்தும், இவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாரதி தீட்சித் மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மோடி, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து என்னை திருமணம் செய்துகொண்டார். police அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினார். அக்டோபர் 15 ஆம் தேதி எனது கணவரும் அவரின் சில கூட்டாளிகளும் என்னை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காரில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தனர். விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள துப்பாக்கி முனையில் மிரட்டினார். என் அறையில் மறைமுகமாக ஒரு கேமராவை நிறுவியும், என் செல்போனை வேவு பார்க்கும் சாதனங்களுடன் இணைத்தும் கொடுமைபடுத்தினார். எனவே, என் கணவர் மீதும் அவரின் கூட்டாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஷிஷ் மோடி, ``என் மீதான குற்றச்சாட்டுக்கான விசாரணையில் நான் முழுமையாக ஒத்துழைப்பேன். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நவம்பர் 4, 2025 முதல் 7 வரை நான் பீகாரில் இருந்தேன். இந்த விவகாரம் தற்போது காவல்துறை விசாரணையில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். 3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025
'அழகோட வரையறை மாறிக்கிட்டேதான் இருக்கும்!' - விவசாய குடும்பத்திலிருந்து உலகை கலக்கும் மாடல் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு 'மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025' எனும் பட்டத்தை வென்றிருந்தார். ஜோதி மலர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல்-2025' என்ற ஹெரிடேஜ் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு 'கலாசார தூதர்' பட்டத்தை பெற்று இருக்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்து வெளிநாடுகளுக்கு சென்று பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி மலருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, 'சின்ன வயசுல இருந்தே சினிமான்னா ரொம்ப பிடிக்கும். அதுல ஹீரோயின்ஸ்லாம் எப்படி டிரஸ் பண்ணிட்டு வருவாங்கன்னு ரொம்ப ஆர்வமாக பார்ப்பேன். அழகோட வரையறை மாறிகிட்டே இருக்கும் நம்ம வளர வளரதான் இந்த சமூகத்துல அழக எப்படி பார்க்குறாங்கனு எனக்கு தெரிய வந்துச்சு. ஒவ்வொரு முறையும் அழகோட வரையறை மாறிகிட்டே இருக்கும். நான் சின்ன வயசுல இருக்கும்போது ரவுண்ட் முகம் இருந்தா தான் நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. இப்போ பார்த்தீங்கன்னா ஜாலைன்-ல முகம் இருந்தா தான் நல்லா இருக்கும்’னு சொல்றாங்க. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஏத்த மாதிரி அழகுங்குறது மாறிக்கிட்டே தான் இருக்கும். சென்னை வந்ததுக்கு அப்புறம்தான் மாடலிங் பத்தி தெரிஞ்சுகிட்டேன். முதல்ல முயற்சி செய்யும்போது எனக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கல. காலேஜ்லாம் முடிச்சிட்டு பெங்களூரில் மாடலிங் துறை நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. இந்தியாவை ரெப்ரசன்ட் பண்ணணும்’னு ஆசை வேலை பார்த்துக்கிட்டே மாடலிங், ஆக்டிங் ரெண்டுமே கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல வாய்ப்புகள் கிடைக்காம கஷ்டமாக தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. தொடர்ந்து மாடலிங் பண்ணேன். தொடர்ந்து போட்டிகள்ல கலந்துகிட்டு இந்தியாவை எப்படியாவது ரெப்ரசன்ட் பண்ணணும்’னுங்கிற ஆசை இருந்துச்சு. இந்தத் துறையில போட்டிகள் அதிகமா இருக்கும். எல்லோரும் நல்ல டிரஸ் பண்ணி அவுங்கள மெயின்டைன் பண்ணி வச்சுருப்பாங்க. அதெல்லாம் பார்த்தப் பிறகு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா அதை அப்படியே விட்டுடாம என்னைய நானே தயார் படுத்திக்கிட்டேன். நம்பிக்கையோடு இருக்கணும்... ஆரம்பத்துல பிராக்டிஸ்லாம் பண்ணும்போது 6 முதல் 8 மணி நேரம் ஹீல்ஸ் போட்டு நடக்கணும். அதெல்லாம் பழக்கம் இல்லாதனால ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்த துறையில இருக்கவுங்களுக்கு எந்த இடத்துல ‘No’ சொல்லனுமோ அந்த இடத்துல சொல்லத் தெரிஞ்சுருக்கணும். மாடலிங் துறையின்னு இல்ல எந்தத் துறையா இருந்தாலும் நம்பிக்கையாக பண்ணோம்னா கண்டிப்பா சக்சஸ் ஆயிடலாம். அப்பா தான் ஆசான் நான் சின்ன வயசுல இருந்தப்போ ரொம்ப நிதி நெருக்கடி இருந்துச்சு. எங்க அப்பா விவசாயி தான். ஆனா எனக்கு நிறைய சொல்லி கொடுத்து வளர்த்திருக்காரு. சிலம்பம் கத்துக்கொடுத்துருக்காரு. அப்பா என்று சொல்றதை விட அவர் எனக்கு ஆசான். என்னைய அவர் தான் செதுக்கிருக்காரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பட்டம் வின் பண்ணிருக்கேன் என்பதை தாண்டி அம்மா, அப்பாவுக்கு பெருமை சேர்த்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நம்ம தேசியக்கொடியை ஏதாவது ஒரு இடத்துல ரெப்ரஷன்ட் பண்ணணும்னு நினைச்சேன். அதைப் பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்ச்சியாகப் பேசி முடித்தார் ஜோதி மலர்.
இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு: டீன் ஏஜ் பயனர்களுக்கான புதிய தானியங்கி அம்சங்கள்!
இணையத்தில் குறிப்பாகச் சமூக ஊடகங்களில் இளம் வயதினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இன்ஸ்டாகிராம் (Instagram) தனது டீன் ஏஜ் (Teenager)
நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை நேற்று(11) முதல் முன்னெடுத்து வருகின்றது. குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும் வகையில் ஒரு பிரத்தியேக அணி உருவாக்கப்பட்டு அவர்கள் வீதியோரங்களில் காணப்படுகின்ற பாதீனியச் செடிகளினை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து வருகின்றார்கள். நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில் வீதிகளில் […]
கிருஷ்ணகிரி: திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுக கவுன்சிலர் - கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்!
கி ருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக கட்சிப்பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-10-2025 அன்று, தலைவர் ஃபரிதா நவாப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, ஆளும்கட்சிக் கவுன்சிலர்களே நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தனர். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 10-ம் தேதியான நேற்று முன்தினம், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் `வாக்குச்சீட்டு’ நடைமுறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் நாகஜோதி தீர்மானத்தை நிறைவேற்ற நகராட்சியில் மொத்தமிருக்கும் 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 26 கவுன்சிலர்கள் வாக்களிக்கத் தயாரானார்கள். அப்போதும், மேலும் ஒருக் கவுன்சிலரின் ஆதரவுத் தேவை என்பதால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரிடமும் தி.மு.க-வினர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 4 பேர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், 9-வது வார்டு கவுன்சிலரும், கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிர் அணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி என்பவர் மட்டும் சம்மதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியுடன் சேர்ந்து 27 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்குச் செலுத்தியதால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால், ஃபரிதா நவாப்பிடம் இருந்த தலைவர் பதவி உடனடியாகப் பறிபோனது. தி.மு.க-வினரின் இந்த உட்கட்சி மோதல் அரசியலுக்குள் ஒருத்தரப்புக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி செயல்பட்டது, அ.தி.மு.க-வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக, கடந்த சில நாள்களாகவே, நாகஜோதி தி.மு.க கவுன்சிலர்களின் அரவணைப்பில்தான் இருந்து வந்தார். நீக்கம் அறிவிப்பு இது குறித்து, அ.தி.மு.க தலைமைக்குப் புகார்கள் பறக்கவே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கவுன்சிலர் நாகஜோதி நீக்கப்பட்டிருக்கிறார். ``கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகஜோதி இன்று முதல் கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அவரிடம் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
சின்னச்சாமி மைதானத்தில் இருந்து வெளியேற ஆர்சிபி முடிவு செய்துள்ளது. 2018ஆம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய பிட்சில் ஆட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அஜித் குமார் ரேசிங் அணியுடன் கைகோர்த்த ரிலையன்ஸ்.. கேம்பா எனர்ஜிதான் இனி டிரெண்ட்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்: உலகத் தலைவர்கள் கண்டனம்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். உலகத் தலைவர்கள் கண்டனம் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய பிரதமரான அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகே பல […]
துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது: பயணித்த 20 பேரும் பலி!
துருக்கிய இராணுவ விமானம் விபத்தில் இருந்த எங்கள் வீரமிக்க வீரர்கள் தியாகிகளானார்கள் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒரு செய்தியை வெளியிட்டார். ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ சரக்கு விமானத்தில் இருந்த 20 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அறிவித்தார். அஜர்பைஜானில் இருந்து துருக்கிக்குச் செல்லும் வழியில் புறப்பட்ட C-130 ஹெர்குலஸ் விமானத்தில் பணியாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 11, 2025 அன்று அஜர்பைஜானில் இருந்து நமது நாட்டிற்கு புறப்பட்ட எங்கள் C-130 இராணுவ சரக்கு விமானம் ஜோர்ஜியா - அஜர்பைஜான் எல்லைக்கு அருகே விபத்துக்குள்ளானதில், எங்கள் வீரமிக்க வீரர்கள் தியாகிகளானார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேர் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்தார். ஜோர்ஜியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவை, விமானம் அதன் வான்வெளிக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாகக் கூறியது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது. துருக்கியைச் சேர்ந்த விசாரணைக் குழு இன்று புதன்கிழமை அதிகாலை விபத்து நடந்த இடத்தை அடைந்து. ஜோர்ஜிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தின் இடிபாடுகளை ஆய்வு செய்து வருவதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கியின் தனியார் ஒளிபரப்பாளரான NTV அறிக்கையின்படி, விமானத்தின் சிதைவுகள் பல இடங்களில் பரவியிருந்தன. விபத்து காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று துருக்கி கேட்டுக்கொள்கிறது. C-130 ஹெர்குலஸ் விமானம் அமெரிக்க உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்டினால் தயாரிக்கப்பட்டது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விமானப்படைகளால் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை அஜர்பைஜான் ஊடகங்களில் விமானம் விழுந்தபோது பக்கவாட்டில் சுழன்று மலைப் பகுதியில் கீழே விழுந்தது. தரையில் விழுந்து விமானம் நொருக்கி பெரிய கரும்புகை வெளியானது என்று கூறப்படும் காட்சிகள் பரப்பப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகள் எரிந்து கொண்டிருந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறிய காட்சிகளும் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை காரணம் காட்டி, விபத்தின் படங்களை வெளியிட வேண்டாம் என்று துருக்கிய இராணுவம் பத்திரிகைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் அல்லது அஸ்தி எப்போது துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Gen Z-யின் புதிய வேலை: அதிபணக்காரக் குடும்பங்களின் ‘சூப்பர்’ஆயா வேலை!
பாரம்பரிய வேலைவாய்ப்புகள் ஆட்டம் காணும் இக்காலத்தில், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையிலும், வெள்ளைச் சட்டை அணிந்து செல்லும் பெருநிறுவனங்களிலும் பேரளவு ஆட்குறைப்புகள்

28 C