SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம். புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மாட்டேன், எடையைக் குறைப்பேன் இத்யாதி இத்யாதி... சில சபதங்களை மோட்டிவேஷன் பொங்க எழுதுவோம். பிப்ரவரி 15-ல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். டைரி மூலைக்குப் போய்விடும். பழைய வாழ்க்கை தொடரும். ஏன் இப்படி? நமக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதை அடைவதற்கான சரியான 'அஸ்திவாரம்' (Foundation) இல்லை. பிரச்னை: தெளிவற்ற பயணம் உங்கள் நிதி வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். உங்களைப் போல ஒரு டிப் டாப் ஆசாமி, ரயில் நிலையத்திற்குப் போய், டிக்கெட் கவுண்டரில் நின்று எங்கேயாவது ஒரு டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பலரின் நிதி நிலைமை. பணம் வருகிறது. செலவாகிறது. இயற்கைதான் இல்லையா? சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மாதக் கடைசியில் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. பிள்ளையின் படிப்புக்கு, என் ஓய்வுக்காலத்துக்கு என்று பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம்? கடவுள் விடுற வழி என்று விட்டுவிடுகிறோம். பணவீக்கம் உங்கள் சேமிப்பைத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் அம்மா போல வெள்ளந்தியாக இருக்க கூடாது. இப்படித் திட்டமில்லாமல் போனால், 2026-ம் இன்னொரு சாதாரண வருடமாகவே கடந்து போய்விடும். பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம். (ஆனால் கொஞ்சம் பயப்படுங்கள். தவறில்லை.) Confused Person தீர்வு: ஒரு தெளிவான வரைபடம் இந்தக் குழப்பத்தை உடைக்க, உங்களுக்குத் தேவை ஒரு தெளிவான வரைபடம் (Financial Roadmap). அதை உருவாக்கவே இந்தச் சிறப்பு அமர்வு. தலைப்பு: 2026 – உங்கள் கனவுகளுக்கு அடித்தளமிடுவது எப்படி? நாள்: டிசம்பர் 28, 2025 (ஞாயிறு) நேரம்: காலை 11:00 – 12:30 IST labham workshop இந்த 90 நிமிடங்களில் நாம் மேலோட்டமாகப் பேசப் போவதில்லை. ஆழமாக, ஆனால் எளிமையாக அணுகப்போகிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: இலக்கு நிர்ணயம்: ஆசைக்கும் இலக்குக்கும் வித்தியாசம் உண்டு. நிறைய பணம் வேண்டும் என்பது ஆசை. 2030-ல் 10 லட்சம் வேண்டும் என்பது இலக்கு. 2026-க்கான உண்மையான இலக்குகளை எப்படி செட் செய்வது என்று பார்க்கப்போகிறோம். SIP எனும் மந்திரம்: மாதம் 10,000 ரூபாய் சேமிப்பது எப்படி 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும்? கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது? தவறுகள்: புத்தாண்டு உற்சாகத்தில் அவசரப்பட்டு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது, தேவையில்லாத பங்குகளை வாங்குவது போன்ற பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது? சமநிலை: இன்றைய ஆசைகளையும், நாளைய தேவைகளையும் (Savings vs Spending) எப்படிச் சமாளிப்பது? வழிகாட்டி யார்? திரு. A.R. குமார். (Chief of Content, Labham & Former Joint Editor, Nanayam Vikatan). நாணயம் விகடனில் பல ஆயிரம் கேள்விகளுக்குப் பதிலளித்து, சிக்கலான நிதி விஷயங்களை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதியவர். happy Family முடிவு: ஒரு புதிய ஆரம்பம் இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்ன நடக்கும்? தெளிவு: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. அமைதி: உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கும். செயல்: சும்மா யோசித்துக்கொண்டிருக்காமல், முதல் அடியை எடுத்து வைப்பீர்கள். செபி (SEBI) போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சரியான அறிவுடன் அணுகினால், இது உங்கள் செல்வத்தை உருவாக்கும் சிறந்த கருவி. ​ வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. 2026-ஐ உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடமாக மாற்றும் முடிவு உங்கள் கையில். இடங்கள் குறைவு. இன்றே பதிவு செய்யுங்கள்.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் - https://labham.money/webinar-dec-28-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec28_2025 சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள். - டீம் லாபம் Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

விகடன் 26 Dec 2025 7:18 am

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24.04.2013-ம் தேதி ஆறுமுகராஜா தனது தாயார் ருக்மணி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசி மற்றும் அவரின் உறவினர்களான இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து உள்ளிட்ட 7 பேர் ஆறுமுகராஜாவைத் தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதில், ஆறுமுகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெறக் கோரி, 5 பேர் ஆறுமுகராஜாவைத் தொடர்ந்து மிரட்டி வந்தனராம். ஆனால், ஆறுமுகராஜா வழக்கினை வாபஸ் பெற மறுத்துவிட்டாராம். இந்த நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து மற்றும் ஒரு இளம் சிறார் ஆகியோர் ஆறுமுகராஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி: கணவர் கண் முன்னே மனைவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது கடந்த 02.04.2015 அன்று இரவில், ஆறுமுகராஜா, அவரது நண்பரான குருமூர்த்தி என்பவருடன் சேர்ந்து புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா பெருமாள் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இசக்கிமுத்து உள்ளிட்ட 6 பேர் ஆறுமுகராஜாவைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி வன்கொடுமைத் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம் சிறார் குறித்த வழக்கு, தனியாகப் பிரிக்கப்பட்டு இளம் சிறார் நீதிக்குழுமத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு, நடந்து வந்த போது துரைமுத்து உயிரிழந்தார். மற்றவர்கள் மீதான விசாரணை நடந்து வந்தது. வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள் இந்நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் மூன்று ஆயுள் தண்டனை, தலா ரூ.13,000 அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.7,000 அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி வஷித்குமார் நேற்று (24-ம் தேதி) உத்தரவிட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூரில் சுமார் 5 ஏக்கரில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலையில் ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக அவரது சகோதரர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது. தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி! இதையடுத்து தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வாழைகளை தீ வைத்து கொளுத்துவதற்காக இரண்டு தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து கொளுத்த முயன்றுள்ளனர். ஆனால், பச்சை வாழைகள் என்பதால் தீப்பிடிக்கவில்லை. ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வாழைகளை வெட்டிச் சாய்த்துள்ளது தெரியவந்தது. கொலை சம்பவத்திற்குப் பிறகு ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வாழை விவசாயத்தைக் கவனித்து வந்துள்ளனர். போலீஸார் பாதுகாப்பு இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தத் தீர்ப்பு வந்ததையடுத்து குற்றவாளிகளின் உறவினர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், தங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆறுமுகராஜாவின் சகோதரர் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெள்ளூர் மற்றும் நவ்வலடியூர் கிராமங்களில் பதற்றம் நிலவி வருவதால், இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கிராமங்களுக்குள் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

விகடன் 26 Dec 2025 7:00 am

சென்னையில் மாதவரம், மணலி ஏரிகளில் விரைவில் படகு சவாரி!

சென்னையில் மாதவரம், மணலி ஏரிகளில் விரைவில் படகு சவாரி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Dec 2025 6:35 am

திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி...ரன்வேயில் பொருத்தப்பட்ட விளக்குகள்!

திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி...ரன்வேயில் பொருத்தப்பட்ட விளக்குகளால் விமானிகள் விமான நிலையத்தின் ரன்வேக்களை தெளிவாக பார்க்க முடியும்.

சமயம் 26 Dec 2025 6:35 am

சொகுசு பஸ் தீப்பிடித்து கோர விபத்து – 20 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் சொகுசு பேருந்தில் லொறி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக பேருந்து விபத்து கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று, நேற்று அதிகாலையில் கோகர்ணா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சித்ரதுர்கா(Chitradurga) மாவட்டம் ஜவனகொண்டனஹள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லொறி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீ பற்றியதில், உடல் கருகி 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]

அதிரடி 26 Dec 2025 6:28 am

சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!

இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் என்பது, பலரின் வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர், கடனை வசதியான வாழ்க்கைக்கான தீர்வாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். ‘வேலைக்குச் சேர்ந்ததுமே தனிநபர் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான கடன்கள் வாழ்க்கைமுறை செலவுகளுக்காகவே வாங்கப்படுகின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் போக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொபைல், லேப்டாப், பயணம் மற்றும் ஷாப்பிங் என எல்லாவற்றிற்கும் இளைஞர்கள் நாடுவது... இ.எம்.ஐ அல்லது கிரெடிட் கார்டு. ‘இப்போது அனுபவிப்போம்... பிறகு, பார்த்துக்கொள்ளலாம்‘ என்ற மனநிலை யிலேயே பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதில்தான் பிரச்னையே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ‘‘இளைஞர்கள் அதிகம் கடன் வாங்க, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் உளவியலாளர்கள். ‘‘பிறரால் பகிரப்படும் போஸ்ட்களால், அவர்கள் வாழ்க்கையோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வீடு, கார் போன்றவற்றை வாங்குவதில்தான் மற்றவர்களோடு போட்டி போடுவார்கள். இன்றோ, சினிமா, ஹோட்டல், டூர் என எல்லா விஷயங்களிலும் போட்டி விரிந்துள்ளது. இதனால், தேவையற்ற செலவுகளும் கடன்களுமே அதிகரிக்கின்றன. பகட்டான ‘ஷோ ஆஃப்’ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கடன் சுமை பற்றி, இளைஞர்கள் யோசிப்பதில்லை. குறுகியகால மகிழ்ச்சியை நாடுகிறார்களே தவிர, நீண்டகால நிலையான மகிழ்ச்சியைப் பற்றி நினைப்பதில்லை. சுற்றுலா அனுபவம் சில நாள்களில் முடிந்துவிடும்; அதற்கு வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ, பல மாதங்கள் தொடரும். கல்வி, வீடு, தொழில் தேவைகளுக்காக வாங்கும் கடன்கள், எதிர்காலத்தில் பயன்தரக் கூடியவை. ஆனால், வாழ்க்கை முறைச் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள், இப்போதைய வருமானத்தை அழிப்பதோடு, எதிர்கால வாழ்க்கையையும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதே நிதர்சனம்’’ என்று எச்சரிக்கிறார்கள், உளவியலாளர்கள். ‘வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாதா?’ என்று கேட்டால், நிச்சயமாக அனுபவிக்கலாம். ஆனால், அந்தக் கொண்டாட்டங்கள் கடனில் நடப்பவையாக இருக்கக் கூடாது. கடன், எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே அழித்துவிடும். சேமிப்பும் முதலீடும்தான் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதுதான் பல்லாண்டு அனுபவங்கள். இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களே... இப்போதுகூட விழித்துக்கொள்ள அவகாசம் இருக்கிறது. கடனில் சிக்கித்தவிக்கும் இம்சை வாழ்க்கையா... சேமிப்பு மற்றும் முதலீடுகளால் உருவாகும் இனிமையான வாழ்க்கையா... எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?! - ஆசிரியர்

விகடன் 26 Dec 2025 5:13 am

பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்! இந்தோனேசியாவில் ஆச்சரியம்

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. மாறும் மனித முகம் இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர். உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர். 12 வயது ஏற்பட்ட விசித்திர மாற்றம் இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா […]

அதிரடி 26 Dec 2025 3:30 am

கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி! ⛰️

ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ மலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த… The post கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி! ⛰️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 3:08 am

லண்டனில் 13 வயது சிறுவன் மாயம்: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல் போன சிறுவன் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 13 வயது அப்துல்(Adbul) என்ற சிறுவன் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் மெட் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 13ம் திகதி இஸ்லிங்டன்(Islington) பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே சென்ற அப்துல்(Abdul) அதன் பிறகு வீடு […]

அதிரடி 26 Dec 2025 1:30 am

டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம்: முக்கிய விவரங்களை வெளியிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் குறித்த முக்கிய தகவலை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதி முயற்சி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குழு 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைகளும் கைகூடாத நிலையில், டிரம்பின் இந்த முன்முயற்சி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக […]

அதிரடி 26 Dec 2025 12:30 am

வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை!

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்… The post வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 12:23 am

17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம் ஆகியோரின் தலைமையின் கீழ்,… The post 17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 12:11 am

ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்… The post ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 11:58 pm

⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும், இந்தியத் துணைத்தூதுவருக்கும்… The post ⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 11:51 pm

இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி […]

அதிரடி 25 Dec 2025 11:30 pm

10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வளர்ச்சியா? ஆச்சர்யப்படுத்தும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை!

இந்தியாவில் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வாகனப் பெருக்கத்தால் கிராமப்புறங்களிலும் பங்க் அதிகரித்துள்ளன. அரசு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.

சமயம் 25 Dec 2025 10:58 pm

துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்

இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் […]

அதிரடி 25 Dec 2025 10:30 pm

துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்

இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் […]

அதிரடி 25 Dec 2025 10:30 pm

தொழிலதிபர் டூ ராபிடோ டிரைவர்! சொல்ல முடியாத வேதனை கதை- வைரலாகும் எக்ஸ் பதிவு

கொரோனாவால் வாழ்க்கையை இழந்த தொழிலதிபர் ராபிடோ ஓட்டி பிழைக்கும் வேதனை சம்பவம் தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாக பரவி வருகிறது.

சமயம் 25 Dec 2025 9:55 pm

டி.டி.வி. தினகரன் போடும் மாஸ்டர் ப்ளான்.. அமமுகவின் நிலைப்பாடு இதுதான்.. பலே ஐடியா!

2026 தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் விஜய்யின் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவிக்க, அமமுகவும் அதே கூட்டணியில் இணையுமா என்ற பேச்சு அடிபடுகிறது.

சமயம் 25 Dec 2025 9:55 pm

பிரெஞ்சு காலனித்துவத்தை 'அரச குற்றம்'என்று அறிவிக்கும் சட்டத்தை அல்ஜீரியா நிறைவேற்றுகிறது

அல்ஜீரியாவின் பாராளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, பிரான்ஸ் நாட்டை காலனித்துவப்படுத்துவதை ஒரு அரசு குற்றமாக அறிவித்து பிரான்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது. அல்ஜீரியாவில் அதன் காலனித்துவ கடந்த காலத்திற்கும் அது ஏற்படுத்திய துயரங்களுக்கும் பிரான்ஸ் சட்டப்பூர்வ பொறுப்பைக் கொண்டுள்ளது என்று கூறும் மசோதாவை அங்கீகரித்தபோது, ​​தேசிய வண்ணங்களில் ஸ்கார்ஃப்களை அணிந்த சட்டமியற்றுபவர்கள் அல்ஜீரியா நீடூழி வாழ்கஎன்று கோஷமிட்டனர். 27 பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை அது குற்றம் சாட்டும் குற்றங்களை பட்டியலிடுகிறது, அவற்றில் அணு ஆயுத சோதனை, நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகள், உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மற்றும் வளங்களை முறையாகக் கொள்ளையடித்தல் ஆகியவை அடங்கும். பிரெஞ்சு காலனித்துவத்தால் ஏற்படும் அனைத்து பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கும் முழுமையான மற்றும் நியாயமான இழப்பீடு அல்ஜீரிய அரசு மற்றும் மக்களின் பிரிக்க முடியாத உரிமை என்றும் அது கூறுகிறது. அல்ஜீரியாவின் தேசிய நினைவகம் அழிக்கப்படவோ அல்லது பேரம் பேசவோ முடியாததுஎன்ற தெளிவான செய்தியை இந்த சட்டம் உள்நாட்டிலும் வெளிப்புறத்திலும் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் இப்ராஹிம் பௌகாலி கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது, ​​காலனித்துவத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்என்று வர்ணித்திருந்தார், ஆனால் முறையான மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 2023 ஆம் ஆண்டில், மன்னிப்பு கேட்பது என் வேலை இல்லைஎன்று கூறிய அவர், சமரசத்தை நோக்கிச் செயல்படுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பதிவு 25 Dec 2025 9:41 pm

கிளிமஞ்சாரோ மலையில் உலங்கு வானூர்தி விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பராஃபு முகாமுக்கும் கிபோ சம்மிட்டிற்கும் இடையில் 4,000 மீட்டர் உயரத்தில் நிகழ்ந்தது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்புப் பணியின் போது, ​​பிரபலமான மலையேற்றப் பாதையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் இரண்டு வெளிநாட்டினர், ஒரு உள்ளூர் மருத்துவர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர். விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு 25 Dec 2025 9:28 pm

யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.

பதிவு 25 Dec 2025 9:17 pm

வரலாற்றில் முதல் தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்ட சாவகச்சேரி நகரம்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மின்னொளி அலங்காரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். நகராட்சி மன்ற தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர் ஆகியோரின் எண்ணக்கருவுக்கு அமைய நகரப்பகுதி மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி நகரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிரடி 25 Dec 2025 9:13 pm

டிசம்பரில் பரபரப்பாக இருந்த டாப் 10 விமான நிலையங்கள்.. டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

OAG எனும் உலகளாவிய விமான தரவுகள் பகுப்பாய்வு நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் விமான நிலையங்களின் பரபரப்பை நிர்ணயிக்க, இருக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சமயம் 25 Dec 2025 9:04 pm

உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன் - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப் சிங் செங்கரால் இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியின் சித்திகள் உயிரிழந்தனர். நீதிமன்றப் பாதுகாப்பு வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது தடுக்கப்பட்டது. இத்தனை துயரத்தையும் கடந்து போராடி உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதந்தார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்த ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தாயும் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை பிடிவாதமாக அங்கிருந்து அகற்றியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்டப் பெண் அதில், ``பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் செங்கரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரண ஓசை போன்றது. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நீதிபதி முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போது குல்தீப் சிங் செங்கர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால், எனக்கு சிறையில்தான் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னைத் துன்புறுத்தியவரின் சிறைத் தண்டனையை நானே அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உதவி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பெண் என்பதால், எனது வலியைப் புரிந்துகொள்வார் என்பதால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கக் அனுமதி கோரினேன். ஆனால் இருவரும் எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை, இந்த பிணை முடிவு மரணத்திற்குச் சமமானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள் என்றார். பாதிக்கப்பட்டப் பெண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி, ``நாடு ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறி வருகிறது. குல்தீப் சிங் செங்கருக்கு பிணை வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயமாகும். இந்த நாள்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான நீதி? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

விகடன் 25 Dec 2025 8:50 pm

ரஷ்ய அதிபர் புதினின் கனவு திட்டம்! நிலவில் அணுமின் நிலையம் சாத்தியமா? வெளியான அறிவிப்பு பின்னணி?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கனவு திட்டமான நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 8:50 pm

️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️

சிரியாவின் பால்மைரா (Palmyra) பகுதியில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஐஎஸ் (ISIS) பயங்கரவாதத் தாக்குதலில்… The post ️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 8:39 pm

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. […]

அதிரடி 25 Dec 2025 8:30 pm

அஸ்கிரிய பீடத்தில் காலில் வீழ்ந்த அருச்சுனா?

யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வீதி ஒழுக்க நெறிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதான அருச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி; பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். “சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறிது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை. அனுர அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும்இ உங்களை போன்று உண்மை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர். ஆனால் மக்கள் அனுர அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும்“ என்று அருச்சுனா தெரிவித்துள்ளார்.

பதிவு 25 Dec 2025 8:15 pm

வீழ்ந்துவரும் தேசிய மக்கள் சக்தி!

தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது. வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இழக்கின்றது. ஏற்கனவே பெரும்பிரச்சாரங்களுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்த கொழும்பு மாநகரசபையினை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Dec 2025 8:13 pm

வெள்ள நிவாரணம் இல்லையாம்?

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர். அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருந்தனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் போலியான தகவல்களை வழங்கியதாக மாவட்ட செயலர் கொழும்பு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் யாழ்.மாவட்டத்திற்கான வெள்ள பாதிப்பிற்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதிவு 25 Dec 2025 8:12 pm

அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டித்வா’ (Dithwa) புயலால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் காரணமாக, கண்டி… The post அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 8:09 pm

New Escalators Coming to Taramani, MEPZ, Chromepet

Good news for pedestrians: foot overbridges (FOBs) at Taramani, MEPZ, and Chromepet will soon have new escalators. The Highways Department

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:58 pm

Neelam Centre Celebrates People’s Music and Cultural Arts

For the past five years, Tamil film director Pa Ranjith’s Neelam Cultural Centre has hosted Margazhiyil Makkal Isai, a celebration

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:54 pm

Chennai Road Accident Deaths Drop Over 10%

The Greater Chennai City Traffic Police (GCTP) said that road accident deaths dropped by over 10% in 2025 compared to

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:49 pm

Two New Dining Halls Opened for Saidapet Workers

Health and Family Welfare Minister Ma. Subramanian on Wednesday opened two new dining halls for sanitation workers in Saidapet. The

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:46 pm

How Einstein Explains Santa’s One-Night Gift Delivery

Have you ever wondered how Santa Claus delivers gifts to billions of children in just one night? A jolly man

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:33 pm

வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் –ராணுவம் குவிப்பு

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா். கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா். அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் […]

அதிரடி 25 Dec 2025 7:30 pm

Europa’s Hidden Energy Could Support Life, Scientists Suggest

NEW ORLEANS — Jupiter’s moon Europa has long fascinated scientists looking for life. Its icy surface covers a massive saltwater

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:29 pm

அதிமுக தேர்தல் அறிக்கை குழு நியமனம்.. எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சமயம் 25 Dec 2025 7:19 pm

Nvidia Buys Groq License, Hires Key Employees

Nvidia has agreed to pay $20 billion to AI chip startup Groq to license its AI inference hardware and hire

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:19 pm

Xiaomi 17 Ultra Leica Edition Features Rotary Zoom Ring

Xiaomi is known for making smartphones with some of the best cameras, and the upcoming Xiaomi 17 Ultra looks set

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:15 pm

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ […]

அதிரடி 25 Dec 2025 6:51 pm

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? தேமுதிக பொருளாளர் சுதீஷ் விளக்கம்!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

சமயம் 25 Dec 2025 6:45 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

2025ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்; எதில் தெரியுமா!

2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் பயன்பாடு மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில்,25 மாவட்டங்களில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார […]

அதிரடி 25 Dec 2025 6:22 pm

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார். மன்னாரை பின்புலமாக கொண்ட சானுக்கா மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் […]

அதிரடி 25 Dec 2025 6:19 pm

கைதி 2 படத்தில் அனிருத்? சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : ‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரை பயன்படுத்துவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இது லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தானே இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் ஹிப்ஹாப் ஆதிபதி போன்ற இசை […]

டினேசுவடு 25 Dec 2025 6:04 pm

தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அஜிதாஆக்னல் என்பவரும் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அவரை சில மீட்டர் தூரத்திற்கு முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், தனக்குப் பதவி இல்லை என்ற தகவலை அறிந்த அஜிதா ஆக்னல், விஜய்யின் காரை மறித்து முற்றுகையிட்டார். பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். அஜிதா ஆக்னல் பின்னர், கட்சி அலுவலகத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.  இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் அஜிதா ஆக்னல், சரியாக உணவு அருந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும், “ தி.மு.க வின் கைக்கூலி”  என அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருத்தத்தில் இருந்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.   இந்த நிலையில்,  இன்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதன் காரணமாக மயங்கி கீழே சரிந்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அவரது கணவர் உள்ளிட்டோர் அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜிதா ஆக்னல் தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   காரை மறித்த அஜிதா மருத்துவமனையில் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்களோ, “அஜிதா மேடம் பதவியை எதிர்பார்த்து கட்சியில் சேரவில்லை. அடிப்படையில் அவர் ஓர் ஆசிரியை. விஜய் மீதும் கட்சியின் கொள்கை மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு கட்சி தொடங்கிய நாள் முதல் மாவட்டம் முழுவதும் பம்பரமாகச் சுழன்று வந்தார். தன் சொந்த நிதியில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் முகாம்களில் மக்களைத் திரட்டி அவர்களின் பிரச்னைகளுக்காக ஆட்சியரிடம் மனுக்கள் அளிப்பதுடன், அதன் தீர்வுகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர். அதிக எண்ணிக்கையில் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்த்தவர். தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்குத்தான் பதவி என்ற நிலை உள்ளது. ஆனால், நாடார் சமூகத்திற்கு இணையான எண்ணிக்கையில் மீனவர் சமூக மக்கள் உள்ளனர். தற்போது மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமுவேல் ராஜை எத்தனை பேருக்கு தெரியும்? அஜிதா ஆக்னல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகனின் தங்கைதான். ஆனால், அவருக்கும் அஜிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், சாமுவேல்ராஜ் அமைச்சர் கீதாஜீவனுக்கு நெருங்கிய உறவினர். உழைத்தவர்களுக்கு பதவி இல்லையா? மருத்துவமனையில் குவிந்த ஆதரவாளர்கள் ஆனாலும், என் தலைவர் என் கட்சி என் கட்சி என்ற நினைப்பிலேயே உள்ளார் அஜிதா. இருப்பினும் உழைப்பிற்கு மதிப்பில்லாத கட்சி தலைமை மீது அவருக்குப் பெரும் வருத்தம் உள்ளது உண்மைதான்.” என்றனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விகடன் 25 Dec 2025 5:48 pm

️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய… The post ️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:46 pm

அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு.. தேர்தலில் பாடம் புகட்டப்படும்.. அரசு ஊழியர்கள் உறுதி!

பழைய பென்சன் திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவதாகக் பாட்டாளி மக்கள் கட்சி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமயம் 25 Dec 2025 5:42 pm

FDA Approves Wegovy Pill, First Daily Obesity Medication

U.S. regulators on Monday (December 22, 2025) approved a pill version of the popular weight-loss drug Wegovy. This is the

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:42 pm

SIR வாக்காளர் பட்டியல்.. மீண்டும் பெயரைச் சேர்க்க கோரிக்கை.. 1.68 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

சமயம் 25 Dec 2025 5:41 pm

வீணா பொய்டாதீங்க விஜய்- தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த வார்னிங்! ஏன் தெரியுமா?

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு தேர்தலில் தனித்து நின்றால் வீண் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

சமயம் 25 Dec 2025 5:40 pm

Power Plants Miss Biomass Targets Due To Shortage

The Association of Power Producers (APP) said on Thursday that many thermal power plants were unable to meet their biomass

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:32 pm

மகளை பள்ளியில் விட்ட நபர் மாரடைப்பால் வாசலிலேயே உயிரிழப்பு –அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி, மகள் உள்ளார். இந்நிலையில், அந்த நபர் நேற்று காலை தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது, அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கூட வாசலிலேயே சரிந்து விழுந்த அவர் உயிரிழந்தார். பள்ளி வாசலில் அவர் மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]

அதிரடி 25 Dec 2025 5:30 pm

ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது!

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால்… The post ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:29 pm

Sivakarthikeyan’s ‘Parasakthi’ Set For Pongal Release

Directed by Sudha Kongara, the upcoming film Parasakthi is gaining attention after reports of certain scenes being flagged for cuts

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:20 pm

'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!

பனையூரின் தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார் விஜய்யை பார்க்காமல் நகரமாட்டேன் என கட்சி அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவிலும் ஈடுபட்டார். கட்சி மேலிடத்திலிருந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பேசி தீர்த்துக்கலாம்' என அஜிதாவுக்கு தகவல் சொல்லப்பட பனையூரிலிருந்து கலைந்து சென்றார். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்த அஜிதா இன்று தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா அஜிதாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 'உழைச்சதுக்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்கள்ல பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சுட்டாங்க. அதிகளவுல தூக்கு மாத்திரை போட்டு மயங்கிட்டாங்க. பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என விஷயத்தை உறுதிப்படுத்தினர். Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விகடன் 25 Dec 2025 5:18 pm

️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்,… The post ️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:16 pm

Vijay Sings ‘Chella Magale’ From Jana Nayagan

The announcement of the third song from actor Vijay’s latest film, Jana Nayagan, has created a lot of excitement among

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:13 pm

Zendaya Sparks Pregnancy Rumours After Family Outing

Zendaya is once again facing pregnancy rumours after a recent photo of her with fianc Tom Holland and his parents

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:08 pm

“எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!”–யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை!

நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை… The post “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:03 pm

கொழும்பில் கர்ப்பிணி மனைவியுடன் பிரபல உணவகத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார். டி.பி. ரத்னவீர என்ற நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை அடுத்த வருடம் […]

அதிரடி 25 Dec 2025 5:02 pm

Cillian Murphy Returns as Tommy Shelby in Film

Tommy Shelby is officially back! Cillian Murphy, the star of Peaky Blinders, is returning to play his famous character once

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:59 pm

முல்லைத்தீவு சிறுமி மரணம்; மாணவிகள் செய்த செயல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறுமியின் தோழிகள் ,அவரது உடலை சுமந்து சென்ற சம்பவம் மனதை கனக்க செய்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இறுதிக்கிரியைகள் பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். […]

அதிரடி 25 Dec 2025 4:58 pm

Rashmika Steals Spotlight in Funny Promotion Moment

Elimes takes a trip down memory lane to add some extra cheer to the Christmas festivities. We found a throwback

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:53 pm

கருண்யா லாட்டரி முடிவுகள் வெளியீடு! ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் இதுவா? வெளியான லிஸ்ட்

கருண்யா லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 4:51 pm

இதென்னடா இடியாப்பத்துக்கு வந்த சோதனை.. இடியாப்பம் வியாபாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான உரிமத்தினை பெற்று இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

சமயம் 25 Dec 2025 4:47 pm

பெங்களூரு பார்கிங் பிரச்சினைக்கு குட்பாய்! மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிரடி மாற்றம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்கிங் வசதி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 4:45 pm

``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்

விகடன் 25 Dec 2025 4:41 pm

இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!

இலங்கையில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம்… The post இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 4:37 pm

Yuvraj Singh Shares Festive Family Christmas Photo

This Christmas, former cricketer Yuvraj Singh, his wife Hazel Keech, and their children are celebrating the festival with full joy

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:36 pm

5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிரடி 25 Dec 2025 4:30 pm

AWS Denies Outage Reports Despite User Complaints

Amazon Web Services (AWS) on Thursday denied reports of an outage, saying its services were working normally. The company said

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:26 pm

Adani Group Completes 33 Deals Worth ₹80,000 Crore

Since January 2023, the Adani Group has completed 33 acquisitions worth around Rs 80,000 crore (USD 9.6 billion) across its

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:21 pm

ஏற்காடு 8வது கொண்டை ஊசி வளைவு… தகடூர் அதியமான் டூ தந்தை பெரியார்- வெடித்த புதிய சர்ச்சை!

ஏற்காட்டில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமயம் 25 Dec 2025 4:16 pm

Kohli, Rohit Shine as Bihar Breaks Record

In domestic cricket, star Indian batsmen Virat Kohli and Rohit Sharma scored centuries on the opening day of the Vijay

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:13 pm

Top Shuttlers Shine at Senior National Badminton

In the 87th Senior National Badminton Championships, top players Unnati Hooda, Tanvi Sharma, Rounak Chauhan, and Sanskar Saraswat won their

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:10 pm

FC Goa Out of AFC Champions League

In football, FC Goa ended their AFC Champions League Two 2025–26 campaign with a narrow 2–1 loss to Istiklol in

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:03 pm

Nagasaki Survivors Protest Calls for Nuclear Weapons

Representatives of four groups of atomic bomb survivors from Nagasaki issued a protest statement condemning comments that Japan should have

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:56 pm

எங்கள் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் இல்லை -நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை சினிமா உலகத்துடன் ஒப்பிட்டு பேசிய அவர், தவெகவுக்கு அடிப்படை கட்சி அமைப்பு இல்லை என்று சாடினார்.“திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இது ஒன்றும் சினிமா அல்ல. 234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல […]

டினேசுவடு 25 Dec 2025 3:52 pm

California Declares Emergency Ahead of Severe Storm

In the United States, California Governor Gavin Newsom has declared a state of emergency in Los Angeles County as heavy

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:48 pm

கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்!

இலங்கையின் பொது நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி நீண்டகாலமாக… The post கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:45 pm

Christmas Celebrations Return to Bethlehem

Christmas began in Bethlehem more than 2,000 years ago, and this year the city is once again seeing joyful celebrations.

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:45 pm

பெங்களூருவுக்கு அடித்த ஜாக்பாட்! சீன மாடலில் தயாராகும் அதிசயம்-குஷியில் கன்னடர்கள்...

பெங்களூரு எலகங்கா ரயில் நிலையம் சீன மாடலில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சமயம் 25 Dec 2025 3:44 pm