திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும்?
திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் எப்போது நிறைவடையும்? என்றும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்… The post தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் தனியாரின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய புத்தர்… The post தையிட்டி விகாரையில் புதிய புத்தர் சிலை: பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! முறுக்கிக்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்கள். appeared first on Global Tamil News .
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்: கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு!
நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் 370 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கு கட்டுமானப் பணிகளுக்கான இடைக்காலத் தடையுத்தரவை… The post ️ யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம்: விளையாட்டரங்கு பணிகள் துரிதமடைய வாய்ப்பு – தடையுத்தரவை நீடிக்க நீதிமன்றம் மறுப்பு! appeared first on Global Tamil News .
டிசம்பர் 26 முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு… இந்திய ரயில்வே அறிவிப்பு!
இந்திய ரயில்வே இன்னும் 5 நாட்களில் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை.
மன்னார் மூர்வீதியில் உள்ள உணவகம் ஒன்றில், கொத்து தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரொட்டிகள் யூரியா (Urea) உரம் பொதியிடும் பைகளில்… The post உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை. appeared first on Global Tamil News .
கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?
மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று முன்தினம் (டிச. 19) இரவு ரஷிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக, ஒடெசா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ரஷிய ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ராணுவத்தின் போக்குவரத்து […]
பரீட்சையில் குறைந்த புள்ளி ; ஆசிரியரான பல்கலை மாணவன் O/L மாணவிக்கு செய்த மோசமான செயல்
கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவிக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். பல்கலை மாணவன் அதில் அந்த மாணவி எதிர்பார்த்ததை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். […]
காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் , வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் , சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தையிட்டியில் பதற்றம் –போராட்டம் நடத்திய வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பேர் கைது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வலி.வடக்கு
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது புதிதாக ஒரு ஸ்டேஷனில் நின்று செல்ல அனுமதி கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பகிர்ந்துள்ள தகவல்களை காணலாம்.
காதல் கணவனால் புதுபெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வரதட்சணையால் கசந்த காதல்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாரபாத் சாயாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய காதலனை 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வரதட்சணை கணவனின் வீட்டிற்கு வந்தது முதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க துவங்கினர். அவர்களுடன் சேர்ந்து கணவனும் வரதட்சணை கேட்டு […]
கடைசி நேரத்தில் கிடைக்கும் ரயில் டிக்கெட்.. இப்படியொரு ஆப்ஷன் இருக்கு தெரியுமா?
ரயில் பயணிகள் கடைசி நேரத்தில் கூட குறைந்த செலவில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். சூப்பரான வசதி இருக்கு.
மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் தன் திருமணம் நடந்த விதம் பற்றி தெரிவித்தது குறித்து தற்போது பேசப்படுகிறது. சீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது.
விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அறுவடைக்குத் தயாரான நெல் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை அறுவடை காலத்திலும் தாங்கள் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், முன்கூட்டியே அதிகாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடைக்குத் தயாரான நெல் மேலும், வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு அறுவடை காலத்திலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுவதால், நிரந்தரத் தீர்வாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அரசு விரைவில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்று உள்ளனர். இந்நிலையில் போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட வேளை , விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு , போராட்டக்காரர்களுடன் முரண்பட்டமையால் , அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தினார். குறித்த போராட்டம் ஒரு அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வேலன் சுவாமிகள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் , போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை! எங்கனு தெரியுமா?
தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழிச்சாலை. எங்கனு தெரியுமா? இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023-ல் கைது செய்யப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் பரிதாப மரணம்
அரலங்கவில – கண்டேகம பகுதியில் தந்தையோடு முகம் கழுவச் சென்ற இரண்டு வயது சிறுவன் நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(20.12.2025) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகில கிருஷன் கவிந்த என்ற இரண்டு வயது சிறுவனே இவ்வாறு நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸார் விசாரணை l நேற்றையதினம் காலை வீட்டிற்கு வெளியே இருந்த தந்தையுடன் முகம் கழுவச் செல்வதாக இந்த சிறுவன் சொல்லிச் சென்றுள்ளார். இதனையடுத்து, […]
தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொருபுத்தர் சிலையை நிறுவப்போவதாகவும், அதற்காகமுப்படைகள் மற்றும் பொலிசார்பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதன் பிரதிகள் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி துருத்து போயாதினத்தன்று தையிட்டி விகாரையில், தெற்கில் இருந்துபுகையிரதத்தில் எடுத்து வரப்படும் புத்தர் சிலையை , புகையிரத நிலையத்தில் இருந்து சமய அனுஷ்டனங்களுடன் , விகாரைக்கு எடுத்து சென்று , அங்கு நிறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் புகையிரத நிலையத்தில் இருந்து , விகாரைக்கு புத்தர் சிலையை எடுத்து செல்லும் போது முப்படையினர் மற்றும் பொலிஸார் சமய ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை , தனியாரின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரைக்காககையகப்படுத்திய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறுகோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்குவிகாரைக்கு முன்பாகபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் ஜனவரி 03ஆம் திகதி புத்தர் சிலை நிறுவப்படவுள்ளபௌர்ணமி தினத்தன்றும்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை , தையிட்டி சட்ட விரோதமானது என்றும், விகாரை அமைந்துள்ள காணிகளில் எதிர்காலத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும்முன்னெடுக்க வேண்டாம் என வலி. வடக்கு பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தையிட்டி விகாரை சட்டவிரோத கட்டுமானம்என மும்மொழிகளில் விகாரைக்கு முன்பாகஅறிவித்தல் பலகை நாட்டுவது என வலி. வடக்கு பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்: FJ, ஆதிரையை வெளியேத்திட்டாராம் பிக் பாஸ், அந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா?
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து கம்ருதீன், பார்வதியை ஜோடியாக வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் வேறு இரண்டு பேரை வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் அதில் ஒருவராக சாண்ட்ரா இருந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம்
இலங்கைக்கு ரூ.1850 கோடி நிவாரண நிதி வழங்குவதாக சர்வதேச நாணயம் அறிவிப்பு
இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் ‘டிட்வா’ புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது. இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர்
பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும் சர்ச்சை
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. 'நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது. 'நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று 'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் சமீபத்திய சர்ச்சை இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை. அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது. 'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்
சென்னையில் இன்று 2 வது நாளாக சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெறுகிறது
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே
ஏஐ துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்படப் போவதாக பில்கேட்ஸ் தகவல்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில்
த.வெ.க சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்கிறார்
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில்
இஸ்ரோவின் ககன்யான் திட்டம் –பாராசூட் சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்திற்கான இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது. விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட பாராசூட் சோதனை
பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு - பணிகள் துரித கெதியில்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார். குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது: வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர் அமைப்பு தலைவர் உடல் அடக்கம் –வங்கதேசத்தில் நீடிக்கும் பதற்றம்
வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி
காப்பீட்டு தொகைக்காகாக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொன்று நாடகம்!
திருவள்ளூா் அருகே தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்து மரணம் என நாடகமாடியதாக 2 மகன்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தணி அடுத்த பொதட்டூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் இ.பி.கணேசன் (56). இவா் கடந்த 22.10.2025 அன்று பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது மகன் மோகன்ராஜ் (29) பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் […]
நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட முதல்வர் | Photo Album
நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் திறப்பு விழா| `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க - தமிழருவி மணியன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி. இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும். மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன். அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல. தமிழருவி மணியன் கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும். ``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன் இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது. இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார். இணைப்பு விழா 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு விஜய் காவடி எடுத்தாலும் முதல்வராக முடியாது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 சதவீதம், பாஜக 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதை இரண்டையும் சேர்த்தால் 41 சதவீதம் வாக்குகள், விஜய்யுடைய 20 சதவீத வாக்குகளைச் சேர்த்தால் 61 சதவீதமாக மாறிவிடும். இந்தக் கூட்டணி அமைந்தால் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். எப்போது விஜய் அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணிக்கு வருகிறார் என்று செய்தி வருகிறதோ அப்போதே திமுக மூட்டையைக் கட்டிவிடும். திமுக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சொன்னார்கள். தற்போது விஜய்யும் சொல்கிறார். திமுக-வை நல்ல சக்தி என்று எந்த நேர்மையாளனாவது சொல்வானா? விஜய்க்கு உண்மையில் சமூக நோக்கம் இருந்தால், திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றார். காந்தி To கோட்சே பயணமா?! - மனம் திறக்கும் தமிழருவி மணியன்
தமிழகத்தில் இன்று (டிசம்பர் 21, 2025) காய்கறி விலை… இறங்கி ஏறிய வெங்காயம், பீன்ஸ், வெண்டை!
கோயம்பேட்டில் காய்கறி விலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெங்காயம் விலை 2 ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. இதுபற்றி விரிவாக காணலாம்.
சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி'கலை இயக்குநர் ஷேரிங்ஸ்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருக்கும் 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. 1960-களில் நடந்த மொழிப்போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த 'பராசக்தி'. 1960களில் நடக்கும் கதை என்பதால், படத்திற்கு பீரியட் உணர்வைக் கொண்டு வர பெரும் சிரத்தை கொடுத்து உழைத்திருக்கிறார் படத்தின் கலை இயக்குநர் கார்த்திக் ராஜ்குமார். பராசக்தி படத்தில்... படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பராசக்தி' திரைப்படம் குறித்தான கண்காட்சியையும் படக்குழுவினர் அமைத்திருக்கிறார்கள். அதற்கான செட் அமைத்ததும் இவர்தான். அந்தக் கண்காட்சியிலேயே வைத்து கார்த்திக்கை பேட்டி கண்டோம். நம்மிடையே பேசிய அவர், வணக்கங்க! கண்காட்சியை மக்கள் ரொம்பவே என்ஜாய் பண்றாங்க. 'பராசக்தி' உலகத்தைக் கட்டமைக்கிறதுக்குப் பின்னாடி பெரிய உழைப்பு நிறைந்திருக்கு. அதை மக்கள் தெரிஞ்சுக்கணும்னுதான் இந்த செட் அமைத்தோம். மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து இடத்தை பார்த்துட்டுப் போறாங்க. சுதா மேம் இந்த ஸ்கிரிப்ட்ல ஐந்து வருஷம் பயணிச்சிருக்காங்க. பல ஆராய்ச்சிகளும் அவங்க செய்திருக்காங்க. Parasakthi Art Exhibition நான் கடைசியாகத்தான் 'பராசக்தி' டீமுக்குள்ள வந்தேன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் சாரோடவும் நான் நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். நான் இந்தப் படத்திற்கு சரியாக இருப்பேன்னு அவரும் நம்பினாரு. பிறகு, சுதா மேம் நிறைய புக்ஸ், ரெஃபரன்ஸ் எனக்கு கொடுத்தாங்க. அது என்னுடைய கலை இயக்கப்பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பயணிச்சோம். படத்தில் ஒரு சீக்குவென்ஸிற்காக எங்களுக்கு நீராவி இன்ஜீன் கொண்ட ரயில் தேவைப்பட்டது. அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும். அது இங்க கிடையாது. இலங்கையில அப்படியான ரயில் ஒண்ணு இருந்தது. அதனால அங்க போய் படப்பிடிப்பை நடத்தினோம். பிறகு, அந்த ரயிலுக்குள்ள சில ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கவேண்டியது இருந்தது. அதை டாமேஜ் செய்திடக்கூடாதுனு இங்கு முழுமையாக அந்த ரயிலை செட் போட்டோம். அந்தக் காட்சி படத்திலயும் முக்கியமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக, அந்த செட் அமைக்கிறதுக்கு நாங்க 6 மாதங்கள் கிட்ட வேலை செஞ்சோம். Parasakthi Art Director - Karthik உண்மையான நீராவி இன்ஜீன் கொண்ட ரயிலை அளவெடுத்து, அதனுடைய உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள திட்டங்களையும் கேட்டறிந்து வந்து இங்கு செட் அமைத்தோம். அந்த செட்டைப் பார்த்துட்டு சுதா கொங்கரா மேம் 'நான் இலங்கையில இருக்கேனா? இல்ல, நம்ம செட்ல இருக்கேனா?! அப்படியே அசலாக இருக்கு'னு பாராட்டு தெரிவிச்சாங்க. அதை என்னுடைய உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அதுபோல எஸ்.கே சாரும், ரவி மோகன் சாரும் 'அங்கிருந்த ரயிலை இங்க எடுத்துட்டு வந்தீங்களா'னு ஆச்சரியப்பட்டுக் கேட்டாங்க. இது மாதிரி பல உழைப்புகள் இந்தப் படத்துல நிறைஞ்சிருக்கு. என்றார் மகிழ்ச்சியுடன். தொடர்ந்து பேசியவர், இந்தப் படத்துக்காக நிறைய விஷயங்களை நாங்க ரீ கிரியேட் செஞ்சோம். ஆனா, சில பொருட்கள்ல அதனுடைய ரியாலிட்டி தேவைப்பட்டுச்சு. அதற்காக அதைத் தேடினோம். சிலர் விண்டேஜ் பொருட்களை இப்போதும் வச்சிருக்காங்க. ஆனா, அதை ஒரு பொக்கிஷமா பாதுகாப்பாக வச்சிட்டு வர்றாங்க. படத்துக்காக ஷூட்டிங் செய்யனு கேட்டால் நிச்சயமாக யோசிப்பாங்கலையா! Parasakthi Art Exhibition அப்போ இது மாதிரி சுதா மேம் படம், எஸ்.கே சார், ரவி மோகன் சார், அதர்வா சார் நடிக்கிற படம்னு சொல்லி அந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்தினோம். பீரியட் காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறதுக்கு நிறைய வேலைகள் நாங்க செஞ்சோம். ஒரு தெருவுல படப்பிடிப்பை நடத்தினால் சுவர்களில் விளம்பரம், அரசியல் பிரசார ஓவியங்களை வரையணும். ஆனா, அது அவங்களை ட்ரோல் செய்வது மாதிரி ஆகிடக்கூடாது. அதே சமயம், வரலாற்றையும் மாத்திச் சொல்லிடக்கூடாது. அதுல மிகவும் கவனமாகச் செயல்பட்டோம். சுதா கொங்கரா மேம் லைவ் லொகேஷன்களைத்தான் விரும்புவாங்க. அப்படி கதைக்கான கச்சிதமான இடம் அமைந்தாலும், அங்கெல்லாம் பீரியட் தன்மையைக் கொண்டு வர்றது பெரிய சேலஞ்ச்! பல வீடுகள்ல கேட், ஓடுகள்னு இப்போ மாற்றப்பட்டிருக்கு. முறையாக அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கி மாற்றியமைச்சு படம்பிடித்தோம். என்றவர், இந்தப் படத்துக்கு நிறைய விண்டேஜ் கார்கள் தேவைப்பட்டன. Parasakthi Art Exhibition இலங்கையில இப்போதும் பலர் விண்டேஜ் கார்களை நல்ல கண்டிஷன்ல வச்சிருக்காங்க. பல இடங்கள்ல இருந்து அந்த கார்களை கலெக்ட் பண்ணினோம். அந்த கார்களை வச்சு எடுக்கிற முதல் ஷாட்ல சுதா மேம் எஸ்.கே சாரைத் தேடினாங்க. ஆனா, அவர் இந்த விண்டேஜ் கார்களை ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்துட்டே இருந்தாரு. அதுபோல, இந்தப் படத்துல மெயில் சர்வீஸும், நேஷனல் ரேடியோ செட்டும் முக்கியமாகப் பேசப்படும். இன்னும் நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. பொறுத்திருந்து பாருங்க! என உற்சாகத்துடன் பேசினார்.
நெல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர் பங்கேற்பு | Photo Album
திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா.! GSDP 16% வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்தான் தமிழ்நாடு பெற்றுள்ளது - தங்கம் தென்னரசு
2026-ம் ஆண்டும் தங்கம் விலை உயரும்; அதற்கு 'இந்த' 3 விஷயங்கள் தான் காரணம்!
இந்த ஆண்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையுமே மிக மிக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் 1-ம் தேதி, சென்னையில் 1 பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனையானது. சமீபத்தில், இது ரூ.1 லட்சத்தைக் கூட தாண்டியது. இந்த ஆண்டின் தொடக்க நாளில் ரூ.98 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, தற்போது ரூ.226. அடுத்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை இப்படியே தொடருமா... என்ன ஆகும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் 2026-ம் ஆண்டும் தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற உலோகங்களின் விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த உலோகங்களுக்கு தொழிற்சாலைகளில் தொடர்ந்து டிமாண்ட் இருந்து வருகிறது. இரண்டாவது, உலோகங்களை முதலீட்டாளர்கள், டிரேடர்கள், ஏற்றுமதியாளர்கள் பதுக்கி வருகிறார்கள். மூன்றாவது, மக்கள் ஃபியட் நாணயங்களின் மீது நம்பிக்கை இழந்து உலோக முதலீடுகள் பக்கம் திரும்பியுள்ளனர். சரிவு இருக்காதா? தற்போது நாம் கமாடிட்டி சூப்பர் சைக்கிளில் இருக்கிறோம். இடை இடையே கரெக்ஷன், பிராஃபிட் டேக்கிங்குகள் நடக்கும் தான். ஆனால், இவை பெரியளவில் சரிவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. அதனால், 2026-ல் உலோகங்களில் தாராளமாக கவனம் செலுத்தலாம். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
ஆஷஸ் வரலாற்றில், முதல் முறையாக விக்கெட் கீப்பர் பேட்டர்கள், மெகா சம்பவம் செய்துள்ளனர். இத்தனை வருட ஆஷஸ் தொடரில், தற்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
கனவு இல்லம் திட்டம்: பயனாளிகள் கையில் ரூ.3.5 லட்சம்.. ரெடியாகும் 74,000 புதிய வீடுகள்!
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இது அடுத்த இரண்டு மாதங்களில் மக்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
அனுராதபுர தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை இவ்வாறு உயிரிழந்தவர் மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நேற்று (19) இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றுக்கு அருகில் இருந்தபோதே, அங்கு வந்த காட்டு […]
யாழில் வேலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்து, நேற்றையதினம் குருநகர் – பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார். இதன்போது மற்றைய சுவர் அவர்மீது […]
அசோக ரன்வல தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அண்மையில் வாகன விபத்துச் சம்பவமொன்றுடன் ரன்வல தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளின் போது அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 11ம் திகதி சபுகஸ்கந்த பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியிருந்தது. மேலும், அசோக ரன்வல […]
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த பேரதிர்ச்சி ; மதில் சுவர் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை, ஹிந்தகொட பகுதியில் மதில் சுவருடன் கூடிய மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் சிக்கிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதில் சுவருடன் கூடிய மண் திட்டு திடீரென சரிந்து வீழ்ந்ததில், அங்கிருந்த இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் […]
சீனாவின் மூன்றாவது உயர்மட்டத் தலைவர் சாவோ லெஜி சிறிலங்கா வருகிறார்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமையே சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்கவுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங்கிற்குப் பின்னர், சீன அரசாங்கத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள, சாவோ லெஜியின் இந்தப் பயணம்
பாமக தலைவர் ராமதாசுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு
தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர்பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். திண்டிவனம் தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்,ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம் குறித்தும்,
பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 22.12.25 முதல் 28.12.25 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?
சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கட்டமைப்புகள், தளவாடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக, இன்று (டிச. 20) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இந்த ராணுவ நடவடிக்கைக்கு, “ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார். முன்னதாக, சிரியாவின் […]
அடுத்த 10 ஆண்டுகளில் பங்குச்சந்தை: கணிக்கும் Economist Nagappan | IPS Finance - 391
Sudha Kongara Live Locations தான் விரும்புவாங்க! - Parasakthi Art Director Karthik |Sivakarthikeyan
Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்குப் பிறகு வெஜைனாவை சுத்தப்படுத்த வேண்டுமா?
Doctor Vikatan: பொதுவாக வெஜைனா பகுதியை தனியே சுத்தம் செய்ய வேண்டாம் என்றே பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகும் இது பொருந்துமா அல்லது உறவு முடிந்ததும் வெஜைனாவை சுத்தம் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவே அந்தப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்தப் பகுதியை தனியே சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில பெண்கள், அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெஜைனா பகுதியை கழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பைக் கழுவுவது, தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. வெஜைனாவின் உள்புறத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அப்படிக் கழுவ சாதாரண தண்ணீர் போதுமானது. சோப், ஹைஜீன் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, வாசனை சேர்த்த சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சோப் அல்லது வெஜைனல் வாஷில் உள்ள கெமிக்கல்கள், வெஜைனா பகுதியின் பிஹெச் அளவை பாதிப்பதால், எளிதில் கிருமித்தொற்று பாதிக்கும். கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் இருப்பவர்கள், தாம்பத்திய உறவுக்குப் பிறகு உடனே எழுந்து சென்று பிறப்புறுப்பைக் கழுவாமல், சற்றுநேரம் ஓய்வெடுத்த பிறகே கழுவ வேண்டும். வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா? சிலர், தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பை வேகமாகக் கழுவுவதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதாக நினைத்துக்கொண்டும் இப்படிச் செய்கிறார்கள். இது மிகவும் தவறானது. குழாயிலிருந்து வெளியேறும் வேகமான தண்ணீர், வெஜைனாவின் மென்மையான திசுக்களை சேதப்படுத்துவதோடு, அங்குள்ள நல்ல பாக்டீரியாவையும் அழித்துவிடும். அதனால் அடிக்கடி தொற்று பாதிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
2025 கிறிஸ்துமஸ் ; புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட இளவரசர் வில்லியம்–கேதரின் தம்பதி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேதரின் ஆகியோர் தங்களின் 2025 கிறிஸ்துமஸ் அட்டைக்காக புதிய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது நோர்ஃபோக்கில் ஏப்ரல் மாதம் புகைப்படக் கலைஞர் ஜோஷ் ஷின்னர் எடுத்த இந்த படத்தில், வில்லியம்–கேதரின் தம்பதியும், அவர்களின் குழந்தைகள் ஜோர்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோர் இயற்கை சூழலில் இணைந்து அமர்ந்துள்ளனர். இந்த இயல்பான, அன்பான புகைப்படம் அரச குடும்பத்தின் நவீன மற்றும் எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்கிறது. புற்றுநோய் மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு […]
ரஷிய சொத்துகளைப் பயன்படுத்தாமல் உக்ரைனுக்கு கடனுதவி: ஐரோப்பிய யூனியன் முடிவு
ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்தாமலேயே, உக்ரைனுக்கு 9,000 கோடி யூரோ (சுமாா் ரூ.9.5 லட்சம் கோடி) வட்டியில்லா கடனுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனுக்கு 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான செலவுகளுக்காக 9,000 கோடி யூரோ கடனுதவி அளிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன உறுதியளித்தோமோ, அதை நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா். இருந்தாலும், இந்தக் கடன் தொகை ஏற்கெனவே […]
மொஹமட் பாதுஷா 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பிறகு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், அந்த மக்களை ஆசுவாசப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு தேவையை இயற்கை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சுனாமி பேரலையால் பறிபோன உயிர்களை விட எண்ணிக்கையில் குறைவு என்றாலும், நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதாலும், பௌதீக அழிவுகள் பரதூரமானவை […]
காஸாவில் உணவுப் பற்றாக்குறை ; 1 லட்சம் பேருக்கு ‘பேரழிவு’
காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், […]
‘டித்வா’புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றவும், வீடுகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் குறித்த முக்கிய தகவல்களை… The post ‘டித்வா’ புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு! appeared first on Global Tamil News .
‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள்… The post ‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
நாளை காத்திருக்கும் கனமழை ; பொதுமக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை (21) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. முன்னெச்சரிக்கை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் […]
Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPS
Vijay-ன் அடுத்த திட்டம், சுதாரிக்கும் எடப்பாடி! | Elangovan Explains | ADMK | DMK | TVK | Vikatan
Bangladesh Riots: இளைஞர்களின் தலைவர் Osman Hadi கொலையும் அரசியல் சதியும் | Decode
யுக்ரைனுக்கு நிபந்தனை இடும் ரஷ்யா ; போரில் புதிய திருப்பமா?
யுக்ரைன் உடனான மோதலை, அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாராக உள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இதற்கு யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் யுக்ரைன் படைகள் விலக வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா புதிய வெற்றிகளைக் காணும் என தான் உறுதியாக நம்புவதாகவு புட்டின் […]
தேனி புத்தக திருவிழா நாளை தொடக்கம்: எங்கு? எத்தனை நாட்கள் தெரியுமா? முழு தகவல் இதோ
தேனி மாவட்டத்தில் நாளை 4வது புத்தக திருவிழா தொடங்குகிறது. வருகிற 28ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.… The post அதிரடி செய்தி: இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பில் ஊடுருவல்! appeared first on Global Tamil News .
ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
எம்.பிக்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்கள் அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்று முன் தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது. அதனையடுத்து, ஜனவரி 06 ஆம் திகதி […]
இனவெறி குற்றச்சாட்டில் மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே , ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் தனது கண்களை இழுத்துப் பிடித்துக் காட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் பகிர்ந்த படத்திற்கு கீழே “சீனருடன் உணவு உண்ணுதல்”என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது ஆசியர்களை இழிவுபடுத்தும் இனவெறிச் செயல் எனப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இது […]
இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) இலங்கைக்கு அரசுமுறைப்… The post இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு! appeared first on Global Tamil News .
நெல்லை மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மது போதையில் மிதந்த சாரதியால் நேர்ந்த அனர்த்தம் ; நால்வர் படுகாயம்
மெய்யன் பன்விலை நகரில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக மொத்தம் நால்வர் காயமடைந்ததாகவும். மேலதிக விசாரணை மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த வர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி மாவட்ட ஆதார […]
சிட்னி தாக்குதலை தடுத்தவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து நிதியும்…பாராட்டும்
அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டின் போது, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் நிதி உதவியும் குவிந்து வருகின்றதாக கூறப்படுகின்றது. சிட்னி பொன்டாய் கடற்கரையின் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தின் போது 2 துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர். ‘GoFundMe’ நிதி சேகரிப்பு இதன்போது அஹ்மட்,ஒரு துப்பாக்கிதாரியைத் தாக்கி அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். இந்த மோதலின் […]
மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்கள் இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக சிவில் உடையில் […]
கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்!
வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின் செயற்பாடுகளை உடன்ஆரம்பிப்பதற்கு ஏதுவாகவும்; அடிபணிய வேண்டிய தேவையில்லாதவிடத்தும் வவுனியா மாநகரின் நலனுக்காக மாத்திரம் தனது பதவியில் இருந்து தானாகவே இராஜினாமா செய்துள்ளார்.
இடமாற்றதிற்கு பத்து இலட்சம்:நாறும் வடக்கு!
வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார். வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்துள்ளதால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எமது வட மாகாணமானது கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்லுகின்றது. உதாரணமாக சொல்லப் போனால் 2021 ஆம் ஆண்டு எமது வடக்கு மாகாணமானது இலங்கையில் காணப்படுகின்ற ஒன்பது மாகாணங்களில் ஏழாம் இடத்தில் இருந்தது. 2022 ஆம் ஆண்டும் அதே ஏழாம் இடத்தில் இருந்தது. 2023 ஆம் ஆண்டு எட்டாவது நிலைக்கு தள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒன்பதாவது நிலைக்கு தள்ளப்பட்டது. இதுக்கு பல்வேறுபட்ட காரணங்களை அரச அதிகாரிகள் சாட்டுக்களாக சொல்லி தப்பித்துக் கொள்கின்றார்கள். ஆனால் அதனுடைய உண்மையான காரணத்தை மாணவ செல்வங்களினுடைய பெற்றோர்களோ, புத்திஜீவிகளோ அறிந்து கொள்ளவில்லை. ஒரு எழுத்தறிவை கற்பிக்கின்ற கற்கின்ற ஒரு சமுதாயத்தில் ஊழல் என்பது எந்த விதத்திலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். வடக்கு மாகாணத்திலே வாழுகின்ற மக்களின் எஞ்சியுள்ள ஒரே ஒரு சொத்து கல்வியாக காணப்படுகின்றது. நாங்கள் கல்வியை வளர்க்காவிட்டால் எமது சமுதாயத்தில் மிஞ்சி இருக்க அதாவது எஞ்சி இருக்க ஒன்று கூட இல்லை. ஆகவே இந்த வடக்கு மாகாண கல்வி சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல் தொடர்பாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒரு ஏழைத் தாய் என்னை மறித்து சொன்னார். தனது மகள் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த பாடசாலையில் புதிய வகுப்புக்கு உயர்தரம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவர் சொன்னார் உயர்தர பரீட்சையானது ஒரு போட்டி பரீட்சையாகும். சாதாரண ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம் பாடசாலையாகும். அந்த பாடசாலையில் திறமையான ஏழை மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றார்கள். அவர்கள் அந்த போட்டி பரீட்சையில் சித்தி அடையாமல் செய்வதற்காக சில வசதி படைத்த பெற்றோர் பணம் கொடுத்துள்ளார்கள். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதாவது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 லட்சம் கொடுத்திருக்கின்றார் ஒரு மாணவியினுடைய தந்தை. ஆகவே முதலாம் தவணைக்கு ஒரு போதும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் வரமாட்டார் என்று. அப்போது தான் நான் சிந்தித்தேன். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக இந்த பாடசாலையில் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதற்கு ஒரு மாற்றினையும் நான் தெரிவித்திருந்தேன். செட்டிக்குளத்தில் இருக்கின்ற அல்ஹாமியா என்னும் பாடசாலையில் ஒரே ஒரு மாணவர் தான் இருக்கின்றார். அங்கே ஒரு இரசாயனவியல் ஆசிரியர் இருக்கின்றார் . ஆனால் இந்த பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 75 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அந்த பாடசாலைக்கு ஆசிரியரை நியமிக்காதற்குரிய காரணம் அந்த ஏழைத் தாய் சொல்லிய அதே காரணத்தை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. அது தொடர்பாக அந்த ஏழைத் தாய் கேட்டதற்கு இணங்க வவுனியா வலய கல்வி பணிப்பாளரிடம் நான் தொலைபேசியில் கேட்டபோது, அவர் சொன்னார் கல்வி அமைச்சின் செயலாளர் தான் அதை நியமிப்பது. அது அவருடைய கடமை என்றும் மிக விரைவில் அந்த வெற்றிடம் நிரப்பப்படும் என்றும். ஆனால் நான் ஊகித்துக் கொண்டேன். முதலாவது தவணை மிக விரைவில் அதாவது முடிவடைந்து விட்டது. நான் நினைக்கின்றேன் இரண்டாவது தவணைக்கும் அந்த வசதி படைத்த மாணவியின் தந்தை ஒரு மில்லியன் ரூபாய் வழங்கினால் இரண்டாவது தவணைக்கும் அங்கே ஆசிரியர் நியமிக்கப்பட மாட்டாது. ஆகவே அதிகாரிகளே சிந்தியுங்கள். ஏழைகளின் செல்வம் கல்வி. பெண்களுக்கு பாதுகாப்பு கல்வி. வசதி படைத்தோரின் அணிகலன் தான் கல்வி. ஆகவே ஏழைகளின் செல்வத்தில் விளையாடாதீர்கள். எமது அரசாங்கத்தில் தற்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இங்கே இருக்கின்ற அரச அதிகாரிகளை விட திறமையான அறிவுள்ளவர்கள் தான் இருக்கின்றார்கள். ஆகவே எமது ஜனாதிபதியின் உடைய எண்ணக் கருவை செயற்படுத்துவதற்கு ஒரு போதும் நாங்கள் தயங்க மாட்டோம். ஏழை மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். உண்மையிலேயே நான் பார்த்தபோது அதாவது உயர்தரம் உயிரியல் கணித பிரிவுகளில் கற்கின்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு பாட ஆசிரியரை திட்டமிட்டு வழங்காமல் விடுவதனால் உயர்தர பரீட்சையில் கடந்த காலங்களில் மூன்று பாடத்தில் ஒரு பாடம் அவர்கள் சித்தியடையாமல் இருப்பார்கள். அதாவது பரீட்சையில் சித்தி அடையாமல் இருக்கின்றார்கள். இதனால் அந்த மாணவர்கள் எதிர்வரும் காலத்தில் எந்த ஒரு போட்டி பரீட்சையிலோ அல்லது அரச உத்தியோகத்திலோ இணைவதற்கு வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன. ஆகவே அன்பான அரச உத்தியோகத்தர்களே நீங்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருக்கலாம். நிதியிலே ஆசைப்பட்டிருக்கலாம். நீங்கள் வேறு எங்கே இருந்தாலும் தவறு செய்யுங்கள். ஆனால் கல்வியில் தவறு செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு காலம் நீங்கள் தவறு செய்திருந்தால் இன்றில் இருந்தாவது நீங்கள் திருந்தி இந்த நாட்டுக்கும் எங்களுடைய சமுதாயத்திற்கும் ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெற்றுக் கொள்கின்ற சம்பளத்திற்கும் நேர்மையாக கடமையாற்றுங்கள் என்று நான் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல்… The post ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்து தமிழகத் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய சந்திப்புகள்! appeared first on Global Tamil News .
கொழுமபிலுள்ள இந்திய தூதரை தமிழ் கட்சிகள் சந்தித்து பேச முற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். இது குறித்து அமெரிக்க தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியதாவது: வெனிசுலாவுடன் போா் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன். வெனிசுலா மீது போா் தொடுப்பதும், தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது. அவா்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால், அந்தக் கப்பல்களை அமெரிக்காவின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு […]
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார், வீட்டினுள் இருந்து பெருந்தொகை கஞ்சா பொதிகளை கைப்பறியுள்ளனர். அதனை அடுத்து, 200 கிலோ கஞ்சாவுடன் வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.7 ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! உஸ்மான் ஹாதி இறுதிச்சடங்கில் பரபரப்பு- ஹை அலர்ட்டில் இந்தியா
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வங்கதேச மாணவர் சங்க தலைவர் உஸ்மான் இறுதிச்சடங்கில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி
திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவை அலங்கரிக்கப்பட்டு நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவில் கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நடைபெறும் குடை மாற்றும் நிகழ்வை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி […]
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையானது இன்று (19) மாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மினிப்பே,மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட, நில்தண்டாஹின்ன, வலப்பனை, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்குமே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி […]
யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு
தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் […]
சரியா ஆடாம இருந்திருக்கலாம்…சுப்மன் கில் நீக்கம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
டெல்லி :அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20, 2025) அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இருந்து தற்போதைய துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது அவரது ஃபார்ம் காரணமாக […]
வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!
உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே சட்டரீதியாக ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஆரவல்லி பகுதியாக கருதப்பட்ட சிறிய மலைகள், அடிவார நிலங்கள் மற்றும் இணை நிலப்பரப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் இந்த தீர்ப்பால் ஆரவல்லி நிலப்பரப்பின் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நேரடி போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த தீர்ப்பு ஆரவல்லி பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப்பணிகள், கட்டுமான வளர்ச்சி மற்றும் வன அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர். ஆரவல்லி ஆரவல்லி மலைத் தொடரின் அழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைதல், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு தீவிரமாதல் மற்றும் பாலைவனமாக்கல் வேகமடைவது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும், வருங்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆரவல்லி மொத்தத்தில், ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட வரையறை மாற்றம் அல்ல; நீர், காற்று, உயிரியல் பல்வகைமை மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. அதனால், ஆரவல்லியின் பாதுகாப்பு குறித்த போராட்டம் இன்று வட இந்தியா முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான பனி மூட்டமும், மோசமான காற்று மாசுபாடும் மக்களை வதைத்து வருகிறது. இதனால், விமானங்கள் ரத்தாகியும் ரயில்களும் தாமதமாகியும் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவகங்கள் –ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் தண்டம்
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர்ப்புறத்தில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர். அதன் போது, சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய 06 உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவு கையாளுபவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் […]
தையிட்டி விகாரைக்கு முன்பாக நாளை எதிர்ப்பு போராட்டம் –தேசிய மக்கள் சக்தியினரும் இணைகின்றனர்
தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர […]

28 C