91 வயதிலும் தளராத உறுதி: `உழைப்புக்கு வயது தடையல்ல'- முதியவர் குறித்து நெகிழ்ந்த மாதவன்
'வயது என்பது வெறும் ஓர் எண்ணே' என்ற பொதுவான கூற்றுக்குச் சிங்கப்பூரில் வாழும் 91 வயது முதியவர் ஒருவர் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். தான் ஓய்வெடுக்க வேண்டிய இந்த முதுமைக் காலத்திலும், நாள் ஒன்றுக்குத் தொடர்ந்து 12 மணி நேரம் உழைத்து வருகிறார் எனும் செய்தி தற்போது உலகளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிகாலையில் தொடங்கி, இரவு 7 மணி வரை அவர் சற்றும் சோர்வடையாமல், ஒரு உணவக வளாகத்தில் சுகாதாரப் பணியாளராகத் தன் கடமையைச் செய்து வருகிறார். இந்த முதியவரின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் உழைக்கும் ஊக்கத்தைப் பற்றிய காணொளியே தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பல லட்சக்கணக்கானோருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயணரும், சமூக ஊடக ஆளுமையுமான ஜேடன் லெய்ங் என்பவர் அந்தப் பொது ஓய்வறையில் பணியாற்றும் முதியவரைச் சந்தித்தபோது, அவரது வயதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இத்தனை வயதிலும், அவர் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, அதாவது தினந்தோறும் 12 மணி நேரம் வேலை செய்வதைத் தெரிந்துகொண்டபோது, லெய்ங் மிகுந்த ஆச்சரியமடைந்தார். இந்தச் சந்திப்பின்போது, முதியவர் சற்றும் சோர்வோ, மன அழுத்தமோ இல்லாமல் அமைதியுடனும் புன்னகையுடனும் காணப்பட்டார். இந்த வயது முதிர்ந்த காலத்திலும் அவர் தன் வேலையை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவருகிறார். அவரது ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கான ரகசியம் குறித்து லெய்ங் கேட்டபோது, முதியவர் அளித்த பதில் அனைவரும் எதிர்பாராதது. அவர் எந்தவிதமான சிறப்பு டயட்டையும், யோகா அல்லது ஜிம் பயிற்சிகளையும் பின்பற்றுவதில்லை. மாறாக, அவர் 'சாதாரண உணவு' மட்டுமே உட்கொள்வதாகவும், 'ஒருபோதும் உடற்பயிற்சி செய்ததில்லை' என்றும் எளிமையாகப் பதிலளித்தார். தனது அன்றாட வழக்கம், வேலைக்குச் செல்வது, பிறகு வீடு திரும்புவது, உறங்குவது இது மட்டுமே எனத் தெளிவுபடுத்தினார். எவ்விதக் குறைகளுமின்றி, தான் செய்யும் வேலையில் மனநிறைவுடன் இருப்பதே அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக உள்ளது என்று பலரும் உணர்ந்தனர். இந்த முதியவரின் கடின உழைப்பைக் கண்டு மனமுருகிய லெய்ங், அவருக்கு அன்பளிப்பாக ஒரு கணிசமான தொகையை வழங்கினார். View this post on Instagram A post shared by Jaden Laing (@jadentysonlaing) இந்த நெகிழ்ச்சியான காணொளி உலகெங்கும் வைரலான நிலையில், பிரபல நடிகர் ஆர். மாதவன் அதைப் பகிர்ந்து, இந்த முதியவரை உண்மையான ஒரு போர் வீரன் (A Soldier) என்று புகழ்ந்தார். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தனக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாகவும், இந்தச் சம்பவம் தன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததாகவும் மாதவன் குறிப்பிட்டிருந்தார். 91 வயதில், ஓய்வு என்பதைப் பற்றி யோசிக்காமல், தன் கடமையைச் செய்யும் இந்தச் முதியவர்யின் கதை, கடின உழைப்பு, மனநிறைவு மற்றும் எளிய வாழ்வு ஆகியவற்றின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. எந்தவொரு சவாலான காலத்திலும் தளராத மன உறுதியுடன் செயல்பட்டால், வயதோ, நேரமோ ஒரு தடையில்லை என்பதை இந்த முதியவர் தனது வாழ்க்கையின் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக, நேற்று (15.11.2025) வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அதனால் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆட்சியர் குலோத்துங்கன் அத்துடன், மணிக்கு 55 கி. மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவசியத் தேவைகள் இருந்தால் தவிர, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், இப்படியான பேரிடர் காலங்களில் அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதுடன், தேவையற்ற வதந்திகளை நம்பாமல் அரசு வெளியிடும் செய்திகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களுக்கு 1077, 1070, 112 என்கிற இலவச எண்களிலும், 9488981070 என்கிற வாட்ஸ்-அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். புதுச்சேரியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை... பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
Kaantha: என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார் - 'காந்தா'நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்
துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காந்தா | Kaantha படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். விரிந்த கண்கள், ஆக்ஷன் - கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ். 'தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க தம்பி!' என பாராட்டுகளைப் பெற்று வரும் பிஜேஷுக்கு வாழ்த்துகள் சொல்லி நாமும் பேசினோம். 'காந்தா' பட அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்த நடிகர் பிஜேஷ் நாகேஷ், எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்கணும்ங்கிறதுதான் ஒவ்வொரு நடிகனுடைய விருப்பமாக இருக்கும். அப்படியான எண்ணத்தோடுதான் நானும் 'காந்தா' படத்துக்குள்ள வந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கதாபாத்திரத்திற்கு நானாகதான் போனேன். ஆடிஷன்கள் பல செய்திட்டுதான் படத்துக்குள்ள வந்தேன். நான் நடிச்சிருக்கிற பாபு கதாபாத்திரத்துல நாகேஷ் தாத்தாவுடைய சாயல் தெரியும். அதனால என்னை நடிக்க வைக்கலாம்னு யாரும் திட்டமிடலங்கிறதுதான் உண்மை. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் என்னுடைய பாபு கதாபாத்திரத்தைப் பற்றி ரொம்ப தெளிவான விஷயங்களை எனக்கு எடுத்துச் சொல்லிட்டார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? காந்தா படத்தில் - துல்கர் என்னுடைய கதாபாத்திரத்துல 70 சதவிகிதம் பாபு தெரியணும். 30 சதவிகிதம்தான் அதுல நாகேஷ் சார் தெரியணும்னு சொல்லிட்டார். அவர் சொன்ன விஷயங்களை நான் அப்படியே பாபு கேரக்டருக்கு செய்திருக்கேன்னு சொல்லலாம். 'காந்தா' படத்துக்கு ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப முக்கியமானதுன்னு துல்கர் அண்ணாவும், ராணா அண்ணாவும் விரும்பினாங்க. பிறகு எனக்கே இந்த கேரக்டர் வந்திடுச்சு. இந்தப் படத்துக்குள்ள நான் வந்தப்போ இரண்டு பொறுப்புகள் என் கண் முன் இருந்ததுனு சொல்லலாம். முதலாவதாக, தாத்தா பெயரைக் காப்பாற்றணும்னு எண்ணம் எனக்குள்ள இருந்தது. ஏன்னா, பெரிய லெகசி இருக்கு. அவருடைய பெயரை எந்தச் சூழலிலும் கெடுத்திடக்கூடாதுன்னு நான் ரொம்ப கவனமாக இருந்தேன். மற்றொரு பக்கம், பிஜேஷ்ங்கிற பெயரையும் மக்களுக்கு பரிச்சயமாக்கணும்னு எண்ணினேன். நான் இப்போதான் சில படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். சில விமர்சனங்கள்ல என் பெயருக்கு பதிலாக என் தம்பியுடைய பெயரைப் போட்டிருக்காங்க. அது அவங்க தப்பு கிடையாது. என்னை பரிச்சயப்படுத்திக்கிற மாதிரியான விஷயங்களை நான் செய்தாகணும். என்றவர், இந்தப் படத்துக்கு நான் கமிட்டான பிறகு தாத்தாவுடைய படங்கள் நான் எதுவும் பார்க்கல. வேணும்னே நான் தாத்தா படங்கள் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். நாகேஷ் இந்தப் படத்துக்கான கேரக்டருக்கு தயாராகிற முறைக்கு நான் தாத்தா படங்களைப் பார்த்தால் அவரைப்போல நடிக்கத் தொடங்கிடுவேன். என்னுடைய பாபு கதாபாத்திரத்திற்குள்ள தாத்தா வந்துவிடுவார். அவருடைய விஷயங்களை நான் காபி பண்ணிடுவேன். அதனாலதான், இது போன்ற முடிவை நான் எடுத்தேன். தாத்தா இல்லாமல் நான் இன்னைக்கு இங்க இல்ல. அதுதான் உண்மை. சொல்லப்போனால், நான் நாகேஷ் தாத்தாவுடைய பேரன்னு தெரியாமல் பலரும் என் நடிப்பைப் பார்த்துட்டு அவங்களாகவே 'இவர் நடிக்கிறது நாகேஷ் மாதிரியே இருக்கு'னு சொல்லியிருக்காங்க. அந்த சமயத்துல நம்மை யாரும் அடையாளப்படுத்தல, நம்ம நடிப்பைப் பற்றி யாரும் பேசலன்னு கொஞ்சம் வருத்தம் இருக்கும். ஆனா, மக்கள் சொல்ற வார்த்தைகள், என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்னு மகிழ்ச்சியான உணர்வையும் தரும். படத்தை ராணா அண்ணனுடைய ஸ்டுடியோவுலதான் ஷூட் செய்தோம். தாத்தாவும் தெலுங்குல சில முக்கியமான படங்கள் செய்திருக்காரு. அங்க வேலை பார்த்த தெலுங்கு மக்களும் படப்பிடிப்பு சமயத்துல என்னுடைய நடிப்புல தாத்தா சாயல் இருக்குன்னு அடையாளப்படுத்தி பேசினாங்க. என்றார். நாகேஷ் பாபு கேரக்டருக்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் முதல்ல சில விஷயங்களைச் சொல்லிட்டாரு. நானுமே அந்தக் கேரக்டர்ல சில விஷயங்கள் வொர்க் பண்ணி 'இதை இப்படி பண்ணலாமா? அதை அப்படி பண்ணலாமா'னு அனுமதிக் கேட்பேன். அந்தக் கேரக்டருக்கு சரியாகப் பொருந்திப் போகக்கூடிய விஷயங்களுக்கு இயக்குநர் ஓகே சொல்லிட்டாரு. இந்த பாபு கேரக்டர் சில காமெடிகள் செய்யும் கதாபாத்திரம். ஆனா, முழுமையாக காமெடி மட்டுமே செய்யும் கேரக்டர் கிடையாது. ஐயா, டி.கே. மகாதேவன்கூட தொடர்ந்து பயணிக்ககூடிய கேரக்டர். அதற்கேற்ப விஷயங்களைத் திட்டமிட்டோம். எனத் தொடர்ந்து பேசியவர், தொடர்ந்து நானும் வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நானாகவே நடிப்பில் முன்னேறிப் போகணும்னு ஆசைப்படுறேன். இப்போ இந்தப் படத்துல எனக்கு பிரேக் கிடைச்சிருக்கு. இனி வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனா, இந்தப் படத்துக்கு முன்பே என்னை நம்பி 'சர்வர் சுந்தரம்' படத்துல பெரியக் கேரக்டர் ஆனந்த் பால்கி சார் கொடுத்தாரு. அந்தப் படம் இப்போ வரைக்கும் வெளிவரல. ஆனா, வரும்! என்றவரிடம், தாத்தா, அப்பாவைத் தவிர்த்து, உங்களுடைய சினிமா வாழ்க்கையில் நீங்கள் ஐயாவாக, ஆசான் இடத்தில் வைத்துப் பார்க்கும் நபர் யார்?'' எனக் கேட்டோம். Bijesh Nagesh பதில் தந்த பிஜேஷ், அதாவது தாத்தாவை கமல் சார் ஐயாவாகப் பார்ப்பாரு. நான் கமல் சாரை ஐயாவாகப் பார்க்கிறேங்க! ஆனா, இன்னைக்கு வரைக்கும் அவரைச் சந்திக்கிறதுக்கு சூழல் அமையல. தள்ளிப் போய்கிட்டே இருக்கு. அவரை நான் இதுவரைக்கும் ஒரு முறைதான் நேர்ல பார்த்திருக்கேன். ஆமாங்க, என் தாத்தா இறந்த அன்னைக்குதான் அவரை நான் நேர்ல பார்த்தேன். அன்னைக்கு அவர்கிட்ட பேச முடியாத சூழல். கமல் சார் தமிழ் சினிமாவுக்கு அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கார்னு சொல்லலாம். அவர் பண்ணாத விஷயங்களே கிடையாதுங்க! இப்போ 'காந்தா' வந்திருக்கு. இனிமேல்தான் எங்க வீட்டுல இருக்கிற அனைவரும் படம் பார்க்கப் போறாங்க. 'என்கூட பார்க்காதீங்க, தனியாவே போய் படம் பாருங்க'னு சொல்லியிருக்கேன். சமுத்திரக்கனி சாருக்கும் தாத்தாவை ரொம்ப பிடிக்கும். எனக்காக நிறைய அட்வைஸ் அவர் சொல்வாரு. 'உன்னுடைய திறமையாலதான் இன்னைக்கு இங்க நீ வந்திருக்க. தாத்தாவுடைய ஆசீர்வாதங்கள் மூலமாக அவர் உனக்காக செய்யணும்னு நினைக்கிற பல விஷயங்கள் நிகழும். நல்லதே வரும். பாருன்னு பேசித் தெம்பூட்டுவாரு. அவர் தாத்தாவைப் பத்தி ஒரு பர்சனலான கதை இருக்கு சொல்றேன்னு படப்பிடிப்பு தளத்துல சொல்லிட்டே இருந்தாரு. Bijesh Nagesh in Kaantha ஆனா, இருவரும் சேர்ந்து ரிலாக்ஸாக அமர்ந்து பேசுறதுக்கு வாய்ப்புகள் அமையல. ஆனா, உங்களுடைய விகடன் நேர்காணல்ல, கனி சார் தாத்தாவைப் பற்றி என்கிட்ட சொல்லணும்னு நினைச்ச கதையைச் சொல்லிட்டாரு. அதையும் நான் பார்த்து அவர்கிட்ட பேசினேன். துல்கர் அண்ணாவும் பாராட்டுகள் தருவார். படம் முடிச்சதுக்குப் பிறகும் நான் அவர்கிட்ட பேசினேன். 'நம்முடைய லெகசிக்கு நியாயம் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை'னு அவர் சொன்னாரு. அது எப்போதும் என் நினைவுல இருக்கும். நம்பிக்கையுடன் பேசினார் பிஜேஷ். வாழ்த்துகள் ப்ரோ!
Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?
Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டு தூங்கினால்தான் திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால் ஏதேனும் பிரச்னைகள் வருமா... தைலம் என்ன செய்யும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் பொதுவாக இந்தத் தைலங்கள் நல்ல மணம் கொண்டவை, அந்த மணமானது இதமான உணர்வைத் தரும். ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கும், வலிகளைப் போக்கும், நெற்றிப் பகுதியில் தடவுவதன் மூலம் மூக்கின் வழியே உள்ளே போய், நெஞ்சு சளியைப் போக்கும் என்றெல்லாம் காலம் காலமாக நம்பப்படுகிறது. தைலங்களின் மணம் ஏற்படுத்தும் உணர்வை உளவியலில் 'கண்டிஷனிங்' (conditioning) என்று குறிப்பிடுவோம். பல வீடுகளிலும் பெண்கள் இப்படி தைலத்தைத் தடவிக் கொண்டதும், வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை, ஓய்வெடுக்க நினைக்கிறார் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள். வீட்டு வேலை, வெளி வேலைகளைப் பார்த்துக் களைத்துப் போன பெண்களுக்கும், இப்படி ஒரு தைலத்தைத் தடவிக் கொண்டதும் ' வேலை செய்தது போதும்...ஓய்வெடு' என உளவியல்ரீதியான ஓர் உணர்வு ஏற்படுகிறது. அந்தத் தருணங்களில் அவர்களுக்கு தலைவலியோ, ஜலதோஷமோ இருக்க வேண்டும் என்றில்லை. தைலத்தைத் தடவிக்கொண்டு படுத்ததுமே அவர்களுக்கு உடல் ரிலாக்ஸ் ஆகி, தலைவலி போவதாக உணர்கிறார்கள். தலைவலி தைலம் பெரும்பாலான பெண்களுக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் ஏற்படுத்தும் தலைவலிகளே பிரதானமானவை. அதை கவனிக்காமல் விடும்போதுதான் வலி அதிகமாகி, அடுத்தகட்டத்துக்குப் போகிறது. லேசான டென்ஷனாக உணரும்போதே இப்படி தைலத்தைத் தடவிக்கொள்வதால் டென்ஷன் விடுபடுவதாக உணர்கிறார்கள். இந்தப் பழக்கத்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு இந்தத் தைலங்களும் களிம்புகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மெள்ள இதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
தென் கொரியாவின் பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல்
தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள (E-Land Fashion) என்ற பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டாம் நிலை எச்சரிக்கை இந்த தீ பரவல் நேற்று சனிக்கிழமை (15) காலை 6:10 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ பரவல் அதிகரித்து வருவதால் (Response Level 2) என்ற இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து தீயணைப்பு பிரிவினரும் அணிதிரட்டு […]
கொழும்பில் உந்துருளி இரண்டாக உடைந்து விபத்து ; 3 பேர் மருத்துவமனையில்!
கொழும்பு ஹல்பராவ – பாதுக்க வீதியில் இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி, வீதியில் சென்ற பாதசாரி ஒருவரை மோதி, பின்னர் தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. மேலதிக விசாரணை இந்த விபத்தில் காயமடைந்த 18 வயது உந்துருளி ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த 17 வயதுடைய ஒருவரும் ஹோமாகம ஆதார மருத்துவமனையிலும், 75 வயதுடைய பாதசாரி பாதுக்க வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் தகவல்படி, 75 வயதுடைய […]
வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு
அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தலா ரூ. 100 மற்றும் 120 என வரி விதிக்கப்படுவதாகவும், தனது கட்சியைப் பராமரிக்க டபல் கெப்(Double cabs) வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார். […]
நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு
நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி போலீசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஊர்காவற்றை போலீஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று முன்தினம் (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது ஊர்காவற்றை போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சான்று பொருளாக துப்பாக்கி இன்று ஊர்காவற்றுறை போலீசாரால் ஒப்படை க்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
``நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா - மனம் திறக்கும் சூர்யவன்ஷி
இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் (58 பந்துகளில்), 14 வயதில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக இரண்டாவது சதம் (35 பந்துகளில்) என இளம் வயதிலேயே சாதனைகளைக் குவித்திருக்கிறார். Vaibhav Suryavanshi இப்போது மேலும் ஒரு சாதனையாக, கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் இந்தியா ஏ அணியில் 32 பந்துகளில் சதமடித்திருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக இப்போட்டியில் 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம், டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்தியர் வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் (2018, சையது முஷ்டாக் அலி தொடரில் 32 பந்துகளில் சதம்) சாதனையை சமன் செய்திருக்கிறார். இந்த நிலையில், தான் இரட்டைச் சதம் அடித்தால்கூட தன் தந்தை திருப்தியடைய மாட்டார் என வைபவ் சூர்யவன்ஷி கூறியிருக்கிறார். `புகழ் உச்சம் பெற்று திடீரென காணாமல் போவார்கள், அதனால்..' - சூர்யவன்ஷி குறித்து சேவாக் பி.சி.சி.ஐ ஷேர் செய்திருக்கும் வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி, ``என் தந்தை ஒருபோதும் எனது ஆட்டத்தில் திருப்தியடைந்ததில்லை. நான் இரட்டைச் சதம் அடித்தால் கூட திருப்தியடைய மாட்டார். இன்னும் பத்து ரன்கள் எடுத்திருக்கலாம் என்றுதான் கூறுவார். ஆனால் நான் சதம் அடித்தாலும் சரி, டக் அவுட் ஆனாலும் சரி, நான் பேட்டிங் செய்வதைப் பார்த்தாலே என் அம்மா மகிழ்ச்சியாக இருப்பார். தொடர்ந்து நன்றாக விளையாடு என்று மட்டுமே சொல்வார் என்று கூறினார். 42 balls 144 for 14 years old Vaibhav Suryavanshi - Vaibhav already have a 100 for Rajasthan Royals, for India A, for India U19 and now in Asia Cup - A generational talent, destroying opponents with destructive skills - What's your take pic.twitter.com/jqBQnJJlna — Richard Kettleborough (@RichKettle07) November 14, 2025 மேலும் தனது ஆட்டம் குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ``நான் எதையும் பெரிதாக முயற்சிப்பதில்லை. சிறுவயதிலிருந்து பயிற்சி செய்து வருவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கடின உழைப்பில் கவனம் செலுத்துகிறேன். அதை மைதானத்தில் என் ஆட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். நான் எதாவது வித்தியாசமாக செய்ய முயற்சித்தால் அணிக்கு அது பயன் தராது, தனிப்பட்ட முறையில் எனக்கும் அது உதவாது என்று கூறினார். Bihar: வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்... - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!
Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை
ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா! சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 'செம்பருத்தி' முதலான பல சீரியல்களில் நடித்தவர் பரதா. இவருக்கும் சீரியல்களில் கேமராவுக்குப் பின்புறம் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரத் என்பவருக்கும் காதல் மலர்ந்து 2020ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்கள் பிரேக் எடுத்தவர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். இப்போது 'அன்னம்' தொடரில் நடித்து வருகிறார். பரதா - பரத் இந்தச் சூழலில் தற்போது பரதா மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நெருங்கிய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது. இது எட்டாவது மாதம் என்பதால் டெலிவரிக்கு நெருக்கத்தில் பிரேக் எடுத்துக் கொள்ளலாமென தொடர்ந்து ஷூட்டிங் போய் வருகிறார். 'அன்னம்' தொடரின் ஷூட்டிங் கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது. அவனுக்கு இது சரிப்பட்டு வருமா? இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியது நினைவிருக்கலாம். பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் இணைந்தனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் வெளியேற, அப்சரா, பிரவீன் காந்த், ஆதிரை, துஷார், பிரவீன், ஆகியோர் அடுத்தடுத்த எவிக்ஷனில் வெளியேறினர். Bigg Boss 9 இதுவரை ஏழு பேர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று நடந்த நிலையில் அதில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேறி இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தச் சூழலில் இதுவரையிலான நாட்களில் போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸை வைத்து கடைசி வரை வருவார்கள் என்கிற நம்பிக்கையை பார்வதி, கமருதீன் உள்ளிட்ட சிலர் தருகின்றனர். திவாகரும் கன்டென்ட் தருபவராகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். ஆனால் சமீப சில தினங்களாக அவரது நடவடிக்கைகள் சர்ச்சை உண்டாக்குவது போல தெரியவே அவர் எவிக் அகி விட்டார் என்கிறார்கள். தற்போது மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்குமே டைட்டில் கனவு இருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகர் சபரியின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ''ஆஙக்ரிங் ஆர்வத்துலதான் டிவி பக்கம் வந்தார். ஆரம்பத்துல தூர்தர்ஷன்ல குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பண்ணினார். அப்படியே படிப்படியா வளர்ந்துதான் பிறகு முன்னணி சேனல்களில் சீரியல் லீட் ரோல் பண்ணற அளவுக்கு வளர்ந்தார். ரொம்ப பந்தா இல்லாதவர். பிறருக்கு உதவுகிற குணம் உண்டு. கான்ட்ரவர்சியில சிக்க விரும்பாதவர். பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது அந்த வீடு இவருக்கு எப்படி செட் ஆகும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சோம். sabari ஏன்னா, இயல்புக்கு எதிராக நடிக்கத் தெரியாத ஆளு. அப்படி இருக்கிறவங்களைத்தான் நம்ம ஆளுங்க அதிகம் ட்ரிகர் பண்ணுவாங்களே! அதனால அங்கபோய் எப்படி கேம் ஆடுவார்னு நினைச்சோம். ஆனா எப்படியோ ஒரு மாதத்தைத் தாண்டிட்டார். இவ்வளவு நாளும் எப்படி தாக்குப் பிடிச்சாரோ, அதே ரூட்ல போனாலே மிச்ச நாளையும் கடந்துடுவார்னு நினைக்கோம். டைட்டில் வாங்குவாரோ இல்லையோ கடைசி வரை அந்த வீட்டுல இருப்பார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு'' என்கின்றனர் அவர்கள்.
காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை
சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 12,500 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 5.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, 'சைக்கிள்கள் வழங்குவது பிற்பட்டோர் நலத்துறை, வாங்குவது பள்ளி கல்வித்துறை' என்று தெரிவித்தார். அதில் சிறு திருத்தம், கொடுப்பது முதல்வர் ஸ்டாலின், வாங்குவது பள்ளி மாணவர்கள். இதில், மாணவர்கள் விட 57,000 மாணவிகள் கூடுதலாக சைக்கிள்கள் பெறுகின்றனர். இதற்கு அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதுதான் காரணம். இதுதான் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி. பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின் அக்காலக்கட்டத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். படிக்க உரிமை கிடையாது. அனைத்துப் பெண்களையும் படிக்க வைத்தது திராவிட இயக்கம். நூறு ஆண்டு போராட்டம், தியாகத்துக்கு பிறகுதான் இந்த நிலையை அடைந்தோம். ஒரு குடும்பத்தின் ஏழ்மை நிலையை போக்கக்கூடியது கல்வி. பொருள், பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல கல்வி, அதோடு நம்பிக்கையையும், ஆற்றலையும் தருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே அதிக திட்டங்களை கல்வித்துறையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் சிந்தனை ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களை விட அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள் குழந்தைகள்தான். சொல்லப்போனால், பெற்றோருக்கே குழந்தைகள்தான் ஆசிரியர்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து பகுத்தறிவை வலியுறுத்தினர். பகுத்தறிவு என்றால் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால்தான் தெளிவான பதில் கிடைக்கும். அதனால்தான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. உலக நாடுகளோடு போட்டியிடக் கூடிய அளவுக்கு தமிழகத்தை உயர்த்த வேண்டும். காரைக்குடி பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின் அதற்கு மாணவர்கள் விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் ரூ 1000 பெறுகின்றனர். விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்க்கிறோம். ரீல்ஸ் வாழ்க்கை கிடையாது, அதில் வருவது எல்லாம் முக்கால்வாசி பொய்தான். ரியலாக கல்விதான் கை கொடுக்கும். கல்வியோடு சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்வியில் முன்னேறினால் குடும்ப பொருளாதாரம் முன்னேறும். அது மூலம் தமிழகமும் முன்னேறும். ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்கி மற்ற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் மற்ற பாடவேளைகளையும் உடற்கல்விக்கு கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டியில் பரிசு பெற வந்த எட்டாம் வகுப்பு மாணவியை துணை முதல்வர் முன் மீண்டும் பேசச் சொன்னபோது, மாணவர்களின் பெற்றோர்கள் மதுவிற்கு அடிமையாகி மதுபானக் கடைகளில் குடியிருக்கிறார்கள், இவர்களால் எப்படி தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளர்களாக வளர்க்க முடியும்? என்ற ரீதியில் பேசியது அங்கிருந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சங்கடப்படுத்தினாலும் துணை முதல்வர் மாணவியை பாராட்டி நூல் பரிசளித்தார். இந்தச் சம்பவம் விழாவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!
2026 தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு செம டஃப்... திமுக பிளான்- நெல்லை இல்லனா, வேற எந்த தொகுதி?
நெல்லை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியெனில் வேறு எந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
✨ முதுமையிலும் மூளையை இளமையாக வைத்திருப்பது எப்படி? ✨
மூளையைப் பற்றி நிலவும் ஒரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், அது வயதாகும்போது தவிர்க்க முடியாமல் தேய்ந்து போகும் ஒரு
Varanasi: மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது... - ராஜமெளலி ஷேரிங்ஸ்
மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு. Varanasi Movie மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். படத்தில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, என் குழந்தைப் பருவத்திலிருந்து ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு எப்படியான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும், அதை மையப்படுத்தி படமெடுப்பது என் கனவுத் திட்டம் என்பதைப் பற்றியும் பலமுறை பேசியிருக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை படமாக்குவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. SS Rajamouli - Globetrotter Event ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, நான் மிதப்பதைப் போல உணர்ந்தேன். முதல் நாள், மகேஷ் பாபு, கடவுள் ராமரின் உருவத்தில் போட்டோஷூட்டுக்கு வந்தபோது, எனக்கு உடல் சிலிர்த்தது. அந்தப் போட்டோவை என் வால்பேப்பராக வைத்தேன். பிறகு நீக்கிவிட்டேன். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் சவாலாக இருக்கிறது. வழக்கமாக, என் திரைப்படங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கதையை விவரிப்பேன். அது ஒரு பாரம்பரியமாக ஆகிவிட்டது. ஆனால் உண்மையில், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் நான் அதைச் செய்வதில்லை. ‘பாகுபலி’க்கு நான் அதை செய்யவில்லை. இந்தத் திரைப்படத்துக்கு, நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், எதிர்பார்ப்புகளை சரியாக அமைக்க ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட விரும்பினோம். அடுத்த மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. பிறகு மழை வந்தது. இப்போது, இந்த டைட்டில் காணொளியுடன் இறுதியாக வந்திருக்கிறோம். என்றவர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா குறித்து பேசுகையில், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சாரின் மகத்துவம் பற்றி முன்பு எனக்கு அதிகம் தெரியாது. நான் என்.டி.ஆரின் ரசிகனாக இருந்தேன். ராஜமௌலி ஆனால் திரைத்துறையில் நுழைந்த பிறகு, கிருஷ்ணா சாரின் பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டேன். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, பல விதிகளை உடைக்க வேண்டும். அவர் பல திரைப்படங்களுக்கு அதைச் செய்தார். இன்று, நாங்கள் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று பெருமையுடன் கூறுவேன். இந்தப் படம் ஐமாக்ஸ் கேமராவில் எடுத்து வருகிறோம். ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்றவை, உண்மையாகவே அந்த வடிவத்துக்காகப் படமாக்கப்பட்டு, மாஸ்டரிங் செய்யப்பட்டு, வி.எஃப்.எக்ஸ் முடிக்கப்பட்டவை. இந்தத் திரைப்படமும் உண்மையான அர்த்தத்தில் ஐமாக்ஸுக்காக உருவாக்கப்படுகிறது.
சருமம் முதல் தாடி, மீசை பராமரிப்பு வரை; டீன் ஏஜ் பாய்ஸ்க்கு பியூட்டி டிப்ஸ்!
டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி. உணவு டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும். இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஃப்ரூட் சாலட், கிரீன் டீ என ஆரோக்கியம் தரும் உணவுகளைச் சாப்பிடவும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். இது சருமத்தையும் புத்துணர்வாக வைத்திருக்கும். உடற்பயிற்சி டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் நடைப்பயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே உடலில் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பை பெறமுடியும். உங்களுக்குப் பிடித்த, ஆர்வத்தைத் தூண்டும் உடற்பயிற்சி ஆப்பை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஹேர் கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் வாரம் மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது எண்ணெய்க் குளியலாக இருந்தால் சிறப்பு. முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். எண்ணெய் வைத்ததும் நன்கு மசாஜ் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைக்குக் குளிக்கவும். தினசரி இருமுறை பெரிய பல்லுள்ள சீப்பால் தலையை அழுந்த வாரவும். இது தலைப்பகுதியில் ரத்தஓட்டம் சீராகப் பாய உதவும். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும். ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடவும். அந்த வெப்பக்காற்றால் கேசம் வறண்டு போகும். தலையையும் கேசத்தையும் சுத்தமாகப் பராமரித்தாலே பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஸ்கின் கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் டீன் ஏஜ் சருமத் தொல்லைகளில் முக்கியமானது முகப்பரு. தினமும் முகத்தை தரமான ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். எண்ணெய்ப் பசை சருமத்தினருக்குத்தான் முகப்பரு தொல்லை அதிகம். இவர்கள் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவித் துடைத்தால், சரும துவாரங்கள் அடைபடுவதைத் தவிர்க்கலாம். அந்தத் துவாரங்கள் அடைபடுவதுதான் முகப்பரு வருவதற்கான முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முகத்தில் மூக்கு மற்றும் தாடைப் பகுதியில் தங்கும் அழுக்கால் பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் தொல்லை ஏற்படும். அதனால் அப்பகுதிகளில் அழுக்குத் தங்காமல் சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு எளிமையான வழி, தோசை மாவு. இதில் சிறிதளவு எடுத்து மூக்கு மற்றும் தாடையின் மீது பூசி, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்து கழுவினால் பலனளிக்கும். கண்கள் பளிச்சிட டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் செல்போன், லேப்டாப் என்று பார்த்துக்கொண்டே இருப்பதால், கண்கள் கட்டாயம் சோர்வடையும். பயன்படுத்திய சாதாரண டீ அல்லது கிரீன் டீ பேக்கை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போது, கண்களை மூடி படுத்தபடி அந்தக் குளிர்ந்த டீ பேக்ஸை கண்கள் மேல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். அதிகமாக மெனக்கெடாமல், இதேபோல் உருளைக்கிழங்குத் துருவல், வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் போன்றவற்றையும் கண்களில் வைக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் கண்கள் பிரகாசிக்கும். வெள்ளரிக்காய்த் துண்டுகளை சாப்பிடவும் செய்யலாம். தாடி மற்றும் மீசை தாடி மற்றும் மீசை Health & Beauty: காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..! அரும்பு மீசை வளரும் இந்த வயதில், தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க் கலவையை மீசை மற்றும் தாடியில் பூசி மசாஜ் கொடுக்கவும். தினசரி 5 நிமிடங்கள் கொடுத்தால் போதுமானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடிகள் இடைவெளியில்லாமல் அடர்ந்து வளரவும் உதவும். இதுவரை மொழுமொழுவென அமுல் பேபியாக இருந்த முகத்தில் அரும்பு மீசை, தாடி வளரும் இந்தப் பருவத்தில் வழக்கமான ஃபேஸ் வாஷ் போதுமா..? தாடி, மீசை மற்றும் கிருதா பகுதிகளில் கூடுதல் அழுக்குகள், இறந்த செல்கள் தங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் குளிக்கச் செல்வதற்கு முன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பேபி டூத் பிரஷ்ஷை சிறிதளவு பாலில் தொட்டு தொட்டு மீசை, தாடி மற்றும் கிருதா பகுதிகளில் மிருதுவாகத் தேய்க்கவும். இதை வாரம் இருமுறை செய்தாலே போதும், முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் பூஞ்சை மற்றும் பொடுகு ஏற்படாமல் தவிர்க்கலாம். பாடி கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்! ஒரு மடங்கு எண்ணெய்க்கு (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில்) அரை மடங்கு சர்க்கரை சேர்த்து (உங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவு) நன்கு கலந்துகொள்ளவும். குளிக்கும் முன் உடல் முழுவதும் 10 நிமிடங்கள் பூசி மசாஜ் செய்யவும். பிறகு, பாடி வாஷ் பயன்படுத்தி குளித்துவிடுங்கள். சருமத்தின் இறந்த செல்கள் மூற்றிலுமாக நீங்கி சருமம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். பொலிவான கால்களுக்கு அரிசி மாவு அல்லது தோசை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பாதங்களின் மேற்பகுதியில் பூசி, நன்கு அழுத்தமாகத் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அப்படியே காயவிட்டு, காய்ந்த பிறகு கழுவவும். பாதங்களின் கருமை, மற்றும் படிந்துள்ள அழுக்குகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பாதங்கள் பளிச் சுத்தமாகும்.
``நாட்டுக்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு சிறப்புரையாற்றினார். ராஜேந்திர பாலாஜி அப்போது பேசிய அவர், “பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது என தெரிவித்தார். இன்றைக்கு இருப்பது காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து உழைத்த காங்கிரஸ் கிடையாது. நேதாஜி இருந்த காங்கிரஸ் கிடையாது. இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக்கொடுக்கிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நாட்டில் என்னமோ நடக்கிறது ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கிடையாது. வீணாப்போன காங்கிரஸ் கட்சியை தி.மு.க தான் தூக்கி பிடித்திக் கொண்டிருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் நிலவும். 220-ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார். ஆலமரத்திற்கு எப்படி வேர் முக்கியமோ அதுபோல அ.தி.மு.க- விற்கு வாக்குச்சாவடி முகவர்கள் முக்கியம். ராஜேந்திர பாலாஜி தி.மு.க தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும் காலம் வந்துவிட்டது. அ.தி.மு.க வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கிச் செல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்குள் பல பிளவுகள் உள்ளன. அந்தக் கூட்டணியில் உள்ள 10 கட்சியும் பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுங்கள் என பல பிரிவினை ஓடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கூட்டணி வலுவாகிக் கொண்டிருக்கிறது.
தாம்பரம் ரயில் நிலையம்: பயணிகளுக்கான வசதிகளில் இத்தனை சிக்கல்… இதுல எழும்பூர் டைவர்ஷன் வேற!
சென்னையை ஒட்டி அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
தேசிய பத்திரிகை தினம் –ஸ்பெஷல் ரிப்போர்ட்!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினம் (National Press Day) இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது பத்திரிகை
ஆப்கன் வானில் அத்துமீறி பறக்கும் அமெரிக்க ட்ரோன்கள்! தலிபான்கள் குற்றச்சாட்டு!
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து அனுமதியின்றி பறந்து வருவதாக, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தான் வானில் அமெரிக்க ட்ரோன்கள் பறப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனக் கூறியதுடன், அமெரிக்கா ஆப்கன் வான்வழியை அத்துமீறி பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், எந்த நாட்டின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தான் […]
பஞ்சாப் அண்டு சிந்து வங்கி: MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலைவாய்ப்பு!
பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டு உள்ள, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 17 முதல் 23 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
️உலக சகிப்புத்தன்மை தினம்: மானுடத்தின் மேன்மைக்கான அடித்தளம்!
சகிப்புத்தன்மை (Tolerance) என்பது வெறுமனே எதிர்ப்பைத் தவிர்ப்பதல்ல; அது ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தையும், தனிமனிதனின் மன முதிர்ச்சியையும் அளக்கும் ஒரு
வடக்கின் 4 மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்
வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் கீழ் உள்ள மொத்தம் 7 மருத்துவமனைகளை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தயாராக உள்ளதாக, அவர் அறிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள
அனுரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 மில்லியன் ரூபா செலவு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதம் நேற்று ஆரம்பமானது. சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கான செலவினங்கள் தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நடந்த போது, சிறிலங்கா அதிபர் கடந்த 2024 டிசெம்பர் தொடக்கம்
வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு
சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து , தனியாக பொது வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதற்கு, சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் ஒருமனதாக, தீர்மானித்ததுள்ளது. நேற்று நடந்த சங்கத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்கத்தின் செயலாளர் மிஹிரி டி அல்விஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் குற்றவியல் நீதி செயல்முறையை விரைவுபடுத்தவும்,
ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் பெறப்படாமல் அல்லது சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்படாமல் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவின் பிரித்தானிய வருகை குறித்து
ஜேர்மனியில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ்
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போலியோ வைரஸின் 2ஆவது ரகம் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஹம்பர்க்கில் முதல் ரக போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.ட இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்ற போதிலும், முறையான தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிரியா: ஸ்வேய்தாவில் மீண்டும் மோதல்
சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அரசுப் படையினருக்கும் துரூஸ் இன ஆயுதக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது: ஸ்வேய்தா மாகாணத்தில் அரசுப் படை மற்றும் துரூஸ் ஆயுதக் குழு இடையே கடந்த ஜூலை மாதம் நடந்த மோதலுக்குப் பிறகு அங்கு போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வியாழக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்ததாகக் […]
ஸ்வீடன்: பேருந்து மோதி பலா் உயிரிழப்பு
ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது பேருந்து மோதியதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். வால்ஹாலாவேகன் தெருவில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.23 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தில், இரண்டு அடுக்கு பேருந்து (படம்) முதலில் தூண் ஒன்றின் மீது மோதியது. பின்னா் அது பேருந்து நிறுத்தத்துக்குள் புகுந்தது. பேருந்தில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை காவல்துறை […]
லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த தரமற்ற லஞ்ச் சீட்டுகள் மீள்சுழற்சி செய்ய முடியாத பொலிதீன் என்பதால், அவற்றின் உற்பத்தியும், பயன்பாடும் நாடு முழுவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட நிலையில், இவை இரகசியமாக இயங்குவதால் பல பிரச்சனைகள் உருவாகி வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பத் தடை அரசாங்கம் ஒரு சிறப்பு வகை உரம் தயாரிக்கக்கூடிய, […]
பீகார் தேர்தலில் தோல்வி.. தவெக விஜய்யுடன் இணைவரா பிரசாந்த் கிஷோர்?
பீகார் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிரசாந்த் கிஷோர், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக மாறுவாரா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது.
நெடுந்தீவில் துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது.நெடுந்தீவு 09ஆம் வட்டாரம்… The post நெடுந்தீவில் துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு appeared first on Global Tamil News .
உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை –ட்ரோன் தாக்குதல்
உக்ரைனில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில், தலைநகா் கீவில் ஆறு பேரும், தெற்கு நகரமான சோா்னோமோா்ஸ்கில் இருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது: உக்ரைன் மீது 430 ட்ரோன்கள், 18 ஏவுகணைகளை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரம் இதுவரை கண்ட மிகப் பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. ரஷியாவுக்குள் நீண்ட தூரம் தாக்குதல் நடத்துவதன் […]
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக புத்திக்க சிறிவர்தன நியமனம்
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் […]
நெடுந்தீவில் காணி ஒன்றுக்குள் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு 09ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாவனையற்று பற்றைக்காடாக காணப்படும் காணி ஒன்றில் துப்பாக்கி ஒன்று மகசீனுடன் காணப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசீன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் துப்பாக்கியை நீதிமன்றில் பாரப்படுத்தி , நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்… The post கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது appeared first on Global Tamil News .
கைநிறைய காசு இல்லாமல் கில்லாடி முதலீடு: ‘ரீட்ஸ்’மூலம் ரியல் எஸ்டேட்டில் ரிட்டன் பார்ப்பது எப்படி?
வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்பு எனப் பேசவே வாயைத் திறக்க முடியாத அளவுக்கு லட்சங்கள், கோடிகள் என்று மிரட்டும் ரியல்
70 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் பொிய தங்க படிம இருப்புக் கண்டுபிடிப்பு
சீனா 1949 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய தங்க படிம இருப்பைக் கண்டுபிடித்துள்ளது. சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள தாடோங்கு தங்கச் சுரங்கத்தில் கண்டு பிடிக்க்பபட்ட தக்கத்தின் மொத்த இருப்பு 1,444.49 தொன்கள் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் படிமம் ஒரு பெரிய அளவிலான, திறந்தவெளி சுரங்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 720 மீட்டர் (2,362 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 2.586 பில்லியன் தொன் தாது இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். china gold
தவெக வேட்பாளர்கள் செலவுக்கு ஜனநாயகன் பட வசூல்? விஜய் போடும் கணக்கு இதுவா?
ஜனநாயகன் பட வசூலை தவெக வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு வழங்கும் திட்டத்தில் விஜய் உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பார்ப்போம்.
தங்க முதலீடு vs. செபி எச்சரிக்கை: டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பற்றதா? சாமானியர்கள் என்ன செய்வது?
கடந்த ஓராண்டில் 50% மேல் விலையேற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி, ஒரு மாதத்திற்கும் மேலாகத் தாறுமாறான ஏற்ற இறக்கங்களில்
மன்னார் போராட்டமும் முடங்கியது?
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடையே கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறைவு செய்கிறோம். எமது போராட்டம் எந்த கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம். எதிர்வரும் காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்வதற்காக மக்களை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
டெல்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து மீண்டும் குண்டு வெடிப்பு.. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!
ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களை, அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வெடித்துச் சிதறியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
ஐ.எம்.எவ் விரும்பும் பாதீட்டுக்கே நிதி?
2026 வரவுசெலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின்; நிதி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பட்ஜெட் ஆவணங்களை சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் மதிப்பாய்வு செய்து வருவதாக நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் தெரிவித்தார். இந்த மதிப்பீடு ஐந்தாவது மதிப்பாய்வின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என கூறினார். வரும் வாரங்களில் சர்வதேச நாணயத்தின் நிர்வாகக் குழு இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்கும் என்று ஐந்தாவது மதிப்பாய்வை நிர்வாகக் குழு அங்கீகரித்த பிறகு, இலங்கைக்கு ஆறாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்று அவர் கூறினார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி திறனை மேம்படுத்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம் என்று அவர் கூறினார். தொடர்ச்சியான சீர்திருத்தம் தேவைப்படும் பல பகுதிகளை சர்வதேச நாணயத்தின் நிர்வாகக் குழு அடையாளம் கண்டுள்ளதாக கோசக் கூறினார். வர்த்தக வசதி தொடர்பான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதிலும், நாட்டிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான விதிமுறைகளை மேம்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் கூறினார்.
விமானத்தில் 12 மணி நேரம் பரிதவித்த பயணிகள் ; நடுவானில் அரங்கேறிய அவலம்
150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது. தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது. இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை […]
யாழில் காலாவதியான பொருட்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்
யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும் , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால் , மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். காலாவதியான பொருட்களை விற்பனை இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை , உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் […]
பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் மாயம்.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
குரு நானக் தேவின் 555 ஆவது பிரகாஷ் பர்வ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் குழுவுடன் சென்ற இந்திய பெண் மாயமானதை அடுத்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
விண்வெளியில் 14 நாள் பயணம்: பூமி திரும்பிய 4 சீன எலிகள்! எந்த வகை ஆராய்ச்சி தெரியுமா?
விண்வெளிக்கு சீனா 4 எலிகளை அனுப்பியது. அந்த எலிகள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளன. இந்த ஆராய்ச்சின் முழு விவரத்தை காண்போம்.
’பாய்’திரைப்பட விமர்சனம்: தீவிரவாதம் vs. மனிதம் –ஒரு பரபர ஆக்ஷன் திரில்லர்!
அம்சம் விவரம் நடிகர்கள் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா, தீரஜ் கெர், ஓபிலி என். கிருஷ்ணா, சீமான் அப்பாஸ், மற்றும் பலர்
ஆர்ஜென்ரினா தொழில்த் துறை வளாகத்தில் வெடி விபத்து: 15 பேர் காயம்!
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆர்ஜென்ரினாவில் பியூனஸ் அயர்ஸுக்கு வெளியே உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். இதன் விளைவாக குறைந்தது 15 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர்.ள வெடிப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளால் ஏற்பட்ட புகை, அந்தப் பகுதியில் பார்வையைப் பாதித்தது. அர்ஜென்டினாவின் முக்கிய சர்வதேச நுழைவாயிலான மினிஸ்ட்ரோ பிஸ்டாரினி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட பல விமானங்கள், பார்வைக் குறைபாடு காரணமாக தாமதமாகின அல்லது திருப்பி விடப்பட்டன. Argentina
தென்கொரிவின் முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் கைது
தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரை நேற்று முன்தினம் (13) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயல்பட்டதாக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த […]
பிபிசியிடம் 5 பில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரவுள்ளேன் - டிரம்ப்
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மறுத்தது. இதனையடுத்து பிபிசி மீது ஒரு பில்லியன் அமெரிகக டொலர் தொடக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பீடு வழங்க வழக்குத் தொடரவுள்ளதாக டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார். அத்துடன் வழக்கை அடுத்த வாரம் தொடுக்கவுள்ளதாகவும் டிரம்ப் ஏர் போஸ்ட் வன் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதே அவர் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் பிபிசி பிரச்சினையை எழுப்பப் போவதாக டிரம்ப் கூறினார். நான் இந்த வார இறுதியல் அவருடன் பேசப்போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் அவர் எனக்கு தொலைபேசி அழைப்பைச் செய்தார். பிபிசியின் செயலால் அவர் மிகவும் வெட்கப்படுகிறார் என்று டிரம் கூறினார்.
‘ஆண்பாவம் பொல்லாதது’படக்குழுவினர் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி!
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’
204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
சீனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த வீரர்கள் சீனாவால் சொந்த முயற்சியில் கட்டப்பட்ட டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் விண்வெளிக்கு சென்ற அதே விண்கலத்திலேயே பூமிக்கு வர திட்டமிட்டனர். ஆனால், அந்த விண்கலத்தில் விண்வெளி குப்பை மோதியதால் சிறு விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்களை பூமிக்கு கொண்டுவர மற்றொரு விண்கலமான ஷென்சோ 21 ஜ விண்வெளிக்கு சீனா ஏவியது. அந்த விண்கலம் சர்வதேச விண்கலத்தை அடைந்ததையடுத்து அதில் 3 வீரர்களும் ஏறி பூமி திரும்பினர். இந்நிலையில், 214 நாட்கள் விண்வெளியில் தங்கிய 3 சீன வீரர்களும் நேற்று பூமி திரும்பினர். மங்கோலியாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் விண்கலம் தரையிறங்கியது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Chinese Astronauts
தமிழ்நாட்டில் SIR: விஜய் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாநிலம் முழுவதும் போராட்டம்...
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக தவெகவினர் சார்பில் நவம்பர் 16ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனைஇந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ… The post திருமாவளவனை சந்தித்த முன்னணி appeared first on Global Tamil News .
IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்
2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறுதிநாள் இன்று (நவம்பர் 15). இந்த நிலையில், 10 அணிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டிருக்கிறது. IPL (இந்தியன் பிரீமியர் லீக்) 1. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): தக்கவைக்கப்பட்டவர்கள் - ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமாத், எய்டன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், எம். சித்தார்த், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங். வெளியே விடப்பட்டவர்கள் - ஆர்யன் ஜூயல், டேவிட் மில்லர், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய். ட்ரேட் செய்யப்பட்டவர்கள் - முகமது ஷமி, அர்ஜுன் டெண்டுல்கர் ட்ரேடில் விடப்பட்டவர் - ஷர்துல் தாக்கூர் மீத கையிருப்புத் தொகை - ரூ. 22.95 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 6 LSG - GT 2. குஜராத் டைட்டன்ஸ் (GT): தக்கவைக்கப்பட்டவர்கள் - சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, குர்னூர் சிங் ப்ரார், ரஷித் கான், மானவ் சுதர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ். வெளியே விடப்பட்டவர்கள் - தசுன் ஷானகா, மஹிபால் லோம்ரோர், கரீம் ஜனத், ஜெரால்ட் கோட்ஸி, குல்வந்த் கெஜ்ரோலியா. ட்ரேடில் விடப்பட்டவர் - ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மீத கையிருப்புத் தொகை - ரூ. 12.90 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 5 3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): தக்கவைக்கப்பட்டவர்கள் - டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, ஆர் ஸ்மரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்சே, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி. வெளியே விடப்பட்டவர்கள் - அபினவ் மனோகர், அதர்வா டைட், சச்சின் பேபி, வியான் முல்டர், சிமர்ஜீத் சிங், ராகுல் சாஹர், ஆடம் ஜாம்பா. ட்ரேடில் விடப்பட்டவர் - முகமது ஷமி மீத கையிருப்புத் தொகை - ரூ. 25.5 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 10 SRH - KKR 4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): தக்கவைக்கப்பட்டவர்கள் - ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மன் பவல், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), மணீஷ் பாண்டே, சுனில் நரைன், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, உம்ரான் மாலிக். வெளியே விடப்பட்டவர்கள் - ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், மொயின் அலி, குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், லவ்னித் சிசோடியா, சேத்தன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன். ட்ரேடில் விடப்பட்டவர் - மயங்க் மார்கண்டே மீத கையிருப்புத் தொகை - ரூ. 64.3 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 13 5. பஞ்சாப் கிங்ஸ் (PBKS): தக்கவைக்கப்பட்டவர்கள் - ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, பிரியன்ஸ் ஆர்யா, ஷஷாங்க் சிங், பைலா அவினாஷ், ஹர்னூர் பண்ணு, முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், விஷ்ணு வினோத், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மிட்செல் ஓவன், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்கூர், சேவியர் பார்ட்லெட், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் ப்ரார். வெளியே விடப்பட்டவர்கள் - ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, க்ளென் மேக்ஸ்வெல், குல்தீப் சென், பிரவீன் துபே. மீத கையிருப்புத் தொகை - ரூ. 11.5 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 4 PBKS - RR 6. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): தக்கவைக்கப்பட்டவர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மயர், வைபவ் சூர்யவன்ஷி, ஷுபம் துபே, லுவான் டிரே-பிரிட்டோரியஸ், துருவ் ஜூரல், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, யுத்வீர் சிங், குவென் மபாகா, நந்த்ரே பர்கர். வெளியே விடப்பட்டவர்கள் - குணால் சிங் ரத்தோர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஆகாஷ் மத்வால், அசோக் ஷர்மா, குமார் கார்த்திகேயா. ட்ரேட் செய்யப்பட்டவர்கள் - ரவீந்திர ஜடேஜா, டோனோவன் ஃபெரீரா, சாம் கரண். ட்ரேடில் விடப்பட்டவர்கள் - நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன். மீத கையிருப்புத் தொகை - ரூ. 16.05 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 9 7. டெல்லி கேபிட்டல்ஸ் (DC): தக்கவைக்கப்பட்டவர்கள் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, கருண் நாயர், கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, திரிபுரானா விஜய், அஜய் மண்டல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா. வெளியே விடப்பட்டவர்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், செடிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோஹித் ஷர்மா, தர்ஷன் நல்கண்டே. ட்ரேட் செய்யப்பட்டவர் - நிதிஷ் ராணா ட்ரேடில் விடப்பட்டவர் - டோனோவன் ஃபெரேரா மீத கையிருப்புத் தொகை - ரூ. 21.8 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 8 DC - MI 8. மும்பை இந்தியன்ஸ் (MI): தக்கவைக்கப்பட்டவர்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ராபின் மின்ஸ், ரியான் ரிக்கல்டன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ், கார்பின் போஷ், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், அஷ்வனி குமார், ரகு ஷர்மா, ஏ.எம். கசன்பர். வெளியே விடப்பட்டவர்கள் - எஸ். ராஜு, ரீஸி டாப்லி, கே.எல். ஸ்ரீஜித், கரண் ஷர்மா, பி. ஜேக்கப், எம். ரஹ்மான், எல். வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர். ட்ரேட் செய்யப்பட்டவர்கள் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மயங்க் மார்கண்டே, ஷர்துல் தாக்கூர். ட்ரேடில் விடப்பட்டவர் - அர்ஜுன் டெண்டுல்கர் மீத கையிருப்புத் தொகை - ரூ. 2.75 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 5 9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): தக்கவைக்கப்பட்டவர்கள் - ரஜத் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சலாம், அபிநந்தன் சிங், சுயாஷ் சர்மா. வெளியே விடப்பட்டவர்கள் - லியாம் லிவிங்ஸ்டன், ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், டிம் சீஃபர்ட், மனோஜ் பந்தேஜ், லுங்கி இங்கிடி, பிளஸ்ஸிங் முசரபானி, மோஹித் ரதி. மீத கையிருப்புத் தொகை - ரூ. 16.4 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 8 RCB - CSK 10. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): தக்கவைக்கப்பட்டவர்கள் - ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரேவிஸ், தோனி, உர்வில் படேல், சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி. வெளியே விடப்பட்டவர்கள் - பத்திரானா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி. ட்ரேட் செய்யப்பட்டவர் - சஞ்சு சாம்சன் ட்ரேடில் விடப்பட்டவர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரண். மீத கையிருப்புத் தொகை - ரூ. 43.4 கோடி அணியில் காலியாக இருக்கும் இடங்கள் - 9 IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!
காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு வந்தது.
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான இன்றைய தினம்… The post காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு வந்தது. appeared first on Global Tamil News .
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (நவம்பர் 16 ஆம் தேதி) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
Jadeja Destroys South Africa at Eden Gardens
Facing Ravindra Jadeja on the spinning Eden Gardens pitch turned into a nightmare for the South African batters. By the
சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயது காஸா சிறுமி உயிருடன் மீட்பு
காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள அவரது வீடு இஸ்ரேலியத் தாக்குதலில் குண்டுவீசித் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் ராகத்தின் இரண்டு சகோதரிகள் உட்படச் சிலர் உயிரிழந்தனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சி ராகத் அல்-அஸார் (Raghad al-Assar) பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய […]
RCB Criticised for Retaining Yash Dayal
Royal Challengers Bengaluru (RCB) have upset many fans by keeping fast bowler Yash Dayal for the IPL 2026 season. Even
குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் இருந்தே சறுக்கலை சந்தித்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இப்போது தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தோல்வியை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹினி ஆசாரியா புதிய குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,''நான் அரசியலையும், குடும்பத்தையும் துறக்கிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டதால் இதை செய்கிறேன். அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்''என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் யாதவ் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அனைத்து தவறுகளுக்கும் தான் பொறுப்பு ஏற்பதாக ரோஹினி குறிப்பிடுவது பீகார் சட்டமன்ற தேர்தலைப்பற்றியதா என்று தெரியவில்லை. ஆனால் மறைமுகமாக அதைத்தான் குறிப்பிடுவது போல் தெரிகிறது. 2022ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போது அவருக்கு ரோஹினிதான் தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தனது தந்தையை காப்பாற்றினார். தற்போது முடிந்துள்ள தேர்தல் லாலு பிரசாத் குடும்பத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தேஜ் பிரதாப் குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்டது ரோஹினிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரோஹினி தனது குடும்பத்தினரிடமும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதோடு கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சமூக வலைத்தள பக்கத்தில் பாலோ செய்வதில் இருந்து ரோஹினி வெளியில் வந்தார். மேலும் தன்னை பற்றி தவறான தகவல் தகவல்கள் பகிரப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ``நான் எனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்ததற்காக எனக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ யாரிடமாவது ஏதேனும் கோரிக்கை விடுத்தேன் என்பதை யாராவது நிரூபிக்க முடிந்தால், நான் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவேன் என்று அவர் எக்ஸ் தள பக்கத்தில் எழுதியிருந்தார்.
ஐபிஎல் 2026: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் –அணிகளின் ‘மினி ஏல’வியூகம்!
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் இறுதிப்
’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர் நம் நாட்டில் எத்தனையோ விமான நிலையங்கள் இருந்தும், இன்னும் எளிய மக்களுக்கு விமானத்தில் பயணம் செய்கிற வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதில்லை. பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்யாமலேயே விமானம் குறித்த பாடங்களைக் கற்கின்றனர். விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் நெல்சன் பொன்ராஜ். தன்னுடைய மாணவர்களின் பாடப்புத்தகத்தில் விமானம் பற்றி இடம்பெற்றிருந்தும், அவர்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததே இல்லை என்பதால், அவர்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்திருக்கிறார். இவர் நல்லாசிரியர் விருதுப்பெற்றவர். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர் ''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை நெல்சன் பொன்ராஜ் அவர்களிடம் பேசியபோது, ‘’என்னுடைய மாணவர்களின் பாடத்திட்டத்தில் தரைவழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து சார்ந்த பாடம் இடம்பெற்றிருந்தது. அதை நான் நடத்திக் கொண்டிருந்தபோது, ’விமானத்தை நாங்கள் அருகில் இருந்து பார்க்க ஆசைப்படுகிறோம்; எங்களை அழைத்துச் செல்வீர்களா சார்’ என்று மாணவர்கள் கேட்டார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. இரவெல்லாம் சிந்தித்தேன். மறுநாளே விமான நிலையம் சென்று மாணவர்கள் செல்வதற்கான தொகை அனைத்தையும் கணக்கு பார்த்தேன். ஒன்றரை லட்சம் தேவைப்பட்டது. பிறகு என் சொந்த செலவில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற 11 மாணவர்கள், சென்ற ஆண்டு என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் 6 பேர், என்னுடன் சேர்த்து 3 ஆசிரியர்கள் என 20 பேர் விமானத்தில் பயணம் செய்தோம். Human Story: ''அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ'' - மதுரையில் ஒரு மர நேசன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது. நாங்கள் விமானப்பயணம் செய்ய விரும்பியதை அறிந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாணவர்களைச் சந்தித்து அவர்களது எதிர்கால கனவுகள் குறித்துப் பேசினார். எங்களை வழி அனுப்ப பல அரசு அதிகாரிகளும் வந்திருந்தார்கள். நாங்கள் சென்னை வந்து இறங்கிய போது சென்னை வாழ் வக்கீல் சங்கத்திலிருந்து வந்து குழந்தைகளுக்கு காலை உணவு தந்தனர். தூத்துக்குடியின் முன்னாள் ஆட்சியர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் அவர்கள்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர் ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை, முன்னாள் முதலமைச்சர்களின் சமாதிகள் என மாணவர்களுக்கு சென்னையைச் சுற்றி காண்பித்தோம். கன்னிமாரா நூலகம், அருங்காட்சியகம் எனப் பல இடங்களுக்குச் சென்றோம். அருங்காட்சியகத்திற்குச் செல்கையில் அருங்காட்சியக காப்பாளர்கள் எங்களை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். தெரியாத இடத்தில் பலரும் எங்களை வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்றார். கடந்த மார்ச் மாதமும், இவர் இதேபோல சில மாணவர்களின் விமானப்பயண கனவையும், சென்னையைப் பார்க்கும் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறார். விமானத்தில் பயணம் செய்த எட்டாம் வகுப்பு மாணவி த. ரீனாவிடமும், ஐந்தாம் வகுப்பு மாணவி தி. கெசிதாவிடமும் பேசினோம். “சார் எங்க எல்லார் கிட்டேயும் செல்லமா இருப்பார். அவர் கிட்ட விமானத்துல எங்களை கூட்டிக்கிட்டுப் போறீங்களா; நாங்க சென்னையைப் பார்க்கணும்னு கேட்டோம். ஒரு டிக்கெட் 7,100 ரூபாயாம். நாங்க ஒரு ரூபா செலவு செய்யல. சாரே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார். நாங்க வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம். நாங்க விமானத்துல போறப்போ மேல இருந்து பூமியை பார்த்தோம். மேகத்தையும் பார்த்தோம். சந்தோஷமா இருந்துச்சு. நாங்க இதுவரை மெட்ரோ ரயில்ல போனதே இல்ல. அதுலேயும் போனோம்” என்று உற்சாகமாகப் பேசினார்கள்.
பீகார் தேர்தல் முடிவுகள்.. SIR மூலம் கிடைத்த வெற்றி.. நெல்லை முபாரக் விமர்சனம்!
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளரான நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை
“அறிவுதான் அழியாத செல்வம் என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலையோ, 'கோயிலைச் சுற்றியும் தண்ணீர், கருவறைக்குள்ளும் தண்ணீர்' என்பது போல அவலத்தின் உச்சமாக காட்சியளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் என பலரின் அறிவுப் பசிக்குத் தீனி போட வேண்டிய இந்த நூலகம், இன்று தனக்கே அடிப்படை வசதிகள் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பர்கூர் கிளை நூலகம் இந்த நூலகக் கட்டிடத்தில் சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடத்தின் உள்ளேயே தண்ணீர் கசிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாகும் பேராபத்தில் உள்ளன. அறிவை வளர்க்க வந்த இடத்தில், புத்தகங்கள் நீரில் நனைந்து கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது என்று கண்ணீர் வடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கழிவறை, குடிநீர் - அடிப்படை வசதிகளுக்கே அவதி! பர்கூர் நூலகத்தில் அடிப்படைத் தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதி கூட இல்லாமல், வாசகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடுக்கடுக்கான அவலங்கள்: நூலகத்தின் அவல நிலை இத்துடன் முடியவில்லை. கட்டிடத்தின் மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. நூலகத்தைச் சுற்றி புதர்கள் மண்டி, சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காட்சியளிக்கின்றன. கட்டிடத்திற்கு வண்ணம் பூசப்படாததால், ஒரு பாழடைந்த கட்டிடம் போல பொலிவிழந்து நிற்கிறது. நூலகத்தின் முன்பகுதி சுத்தம் செய்யப்படாமலும், தரை போடப்படாமலும் கரடுமுரடாக உள்ளது. நூலகத்தின் முதல் தளம் இருந்தும், அது செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. அங்கு குழந்தைகளுக்கான பிரிவில் உள்ள பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சிதைந்து வருகின்றன. பராமரிக்கப்படாமல், பயன்படுத்த முடியாமல் உள்ள கழிவறை மாணவர்களின் கனவில் விழும் இடி! இன்றைய போட்டி மிகுந்த உலகில், அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம் இந்த நூலகங்கள் தான். ஆனால், இங்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களே இல்லை என்பது வேதனையின் உச்சம். மேலும், இந்த நூலகம் பகுதி நேரமாக மட்டுமே இயங்குகிறது. நிரந்தரப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், சந்தாதாரர்களை அதிகரிக்கவோ, நூலகத்தை முறையாக நிர்வகிக்கவோ வழியில்லாமல் முடங்கிக் கிடக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நூலகத்தின் நிலையே இப்படி என்றால், எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது? என்று பர்கூர் தொகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர். ``வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றி விடும் - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி - 20 அறிவை வளர்க்கும் இந்த நூலகத்தை இனியும் தாமதிக்காமல், போர்க்கால அடிப்படையில் முழுமையாகச் சீரமைக்க வேண்டும். நிரந்தரப் பணியாளர்களை நியமித்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். சுகாதரமற்ற நிலையில் பர்கூர் கிளை நூலகம் பள்ளி, கல்லூரி மாணவர்களும், போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களும் முழுமையாகப் பயனடையும் வகையில், நூலகத்தை முழு நேரமும் இயக்கவும், தேவையான அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி நிரப்பவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், பர்கூர் நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பர்கூர் மக்களின் கோரிக்கையாகும். இது குறித்து நாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, இப்படி ஒரு விவகாரம் தன் கவனத்திற்கு வரவில்லை என்றும், நிச்சயமாக நூலகத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு
வீட்டில் கதிரையில் எரிந்த நிலையில் சடலம்; பொலிசார் சந்தேகம்
களுத்துறையில் அளுத்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் கருகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை உயிரிழந்தவர் அளுத்கமை, களுவாமோதர பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய முதியவர் ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த முதியவரின் மகன், அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பதில் எதுவும் […]
பீகார் போல் தமிழ்நாட்டில்! நம்ப முடியாத டுவிஸ்ட்...பாண்டே உடைக்கும் அரசியல் Secret என்ன?
பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், காங்கிரஸுக்கு சீட் கொடுத்தால் பாஜகவுக்கே எம்எல்ஏ கொடுத்தது போன்று என பாண்டே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
‘Gen Z’-இன் புதிய ட்ரெண்ட்: கார்ப்பரேட்டை உதறி, கோடீஸ்வரர்களுக்குப் பணிவிடை!
உலகெங்கிலும் வெள்ளைக் காலர் வேலைகளில் (White-collar jobs) ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அச்சுறுத்தி வரும் நிலையில், புதிய தலைமுறையான ‘Gen Z’
கடந்த பிக்பாஸில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். டபுள் எவிக்சனில் துஷார், பிரவீன் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வார எவிக்சனில் யார் வெளியேற போவது என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்ததுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று (14) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது தாத்தாவுடன் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமாவளவனை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் […]
தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம், குடியிருப்பு வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நாம் என்ன தான் சத்துணவு, டயட், உடற்பயிற்சி என்று இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை தான். சென்னை மாநகரம் வெள்ளம், புயல் போன்ற எந்த பேரிடரையும் எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டுவர தூய்மைப் பணியாளர்களின் பணி தான் மிகவும் முக்கியமான ஒன்று. சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு இது தான் சமூகநீதி தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும், வாழ்க்கை தரம் உயர்ந்து, நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இது தான் சமூகநீதி. இந்த சமூக நீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து அவர்களின் பசியை போக்குவதற்காகத்தான் இந்த முதலமைச்சர் உணவு திட்டத்தை தொடங்கியுள்ளோம். நீங்கள் செய்வது வேலை அல்ல சேவை உடல் பரிசோதனை, மாற்று வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்கும் வகையில், ரூ.50 கோடிக்கு அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வளவு செய்தாலும் உங்களுக்கான தேவை இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும். போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும் - சீமான், கி.வீரமணி ஆதரவு நீங்கள் செய்வது வேலை அல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். உங்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பார்த்து நான் மட்டுமல்ல இந்த மாநாகரமே நன்றியுடன் உங்களை வணங்குகிறது என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
நாய்களால் தொல்லை; மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர் கூறுகையில், தெருநாய்களுக்கு விதவிதமான உணவு ‘திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு […]
நாய்களால் தொல்லை; மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர் கூறுகையில், தெருநாய்களுக்கு விதவிதமான உணவு ‘திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு […]
AI-Newton Learns Physics Laws on Its Own
Most artificial intelligence (AI) models can find patterns in data and make predictions, but they have trouble using that data
ஹெச்-1பி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டம்.. எம்.பி. கிரீன் அறிவிப்பு!
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் ஹெச்-1பி திட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வருவதாக கிரீன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் கடற்படைக் கவசம்: MP-AUV மூலம் கண்ணிவெடி வேட்டையில் புதிய புரட்சி!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கும், கடல்வழித் தூய்மையை உறுதி செய்வதற்கும் இந்தியக் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜடேஜா, சாம்கரணை விடுவித்தது கடினமான முடிவு! சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் வேதனை!
சென்னை :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை (டிரேட்) முடித்துள்ளது. இதில் RR-இன் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK-இல் சேர்கிறார், அதற்கு பதிலாக CSK-இன் முக்கிய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் RR-இல் செல்கின்றனர். இந்த டிரேட், IPL வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவாக அமைந்துள்ளது. CSK மேனேஜிங் டைரக்டர் கே.எஸ். விஸ்வநாதன் (காசி விஸ்வநாதன்) இதை […]
Top Cook Dupe Cook: சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சிடணும்! - டி.எஸ்.ஆர்
'அயலி' உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர் (எ) ஶ்ரீனிவாசன். சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பதிவிடும் உணவு வீடியோக்கள் பெரும் டிரெண்டிங் என்றே சொல்லலாம். சினிமாவைத் தாண்டி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்வுகளில் டி.எஸ்.ஆர் நம்மை எண்டர்டெயின் செய்து வருகிறார். TSR - Sreenivasan 'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் 12-வது வாரத்தில் எலிமினேட் ஆகியிருந்தார். டி.எஸ்.ஆரை சந்தித்துப் பேட்டிக் கண்டோம். நம்மிடையே பேசிய நடிகர் டி.எஸ்.ஆர், 'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சிக்கான வாய்ப்பு 'ஆபீஸ்' வெப் சீரிஸ் மூலமாக கிடைத்ததுனு சொல்லலாம். கே.பி.ஒய் தீனாவும், 'ஆடை' பட இயக்குநர் ரத்னகுமார் மூலமாகவும் எனக்கு கிடைத்ததுனு சொல்லலாம். எனக்கு சமையல் வேலைகள் செய்யுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, என் வாழ்க்கையில ஒரு பகுதிக்கு மேல நான் சமைக்கவே இல்லைனுதான் சொல்லணும். மனைவி வந்ததுக்குப் பிறகு சுத்தமாக சமையல் வேலைகள் செய்தது கிடையாது. அப்படியான நேரத்துலதான் எனக்கு 'டாப் குக் டூப் குக்' வாய்ப்பு கிடைத்ததுனு சொல்லலாம். நிக்கி, அதிர்ஷ்டினு பலரும் என்னை நிகழ்ச்சியில கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நான் வருத்தப்படமாட்டேன். சினிமாவுக்கு வந்துட்டாலே மானம், ரோஷம்னு அத்தனையையும் மூட்டைக் கட்டி வைத்திட்டு வந்திடணும். இங்க மற்ற போட்டியாளர்கள் என்னை கிண்டல் பண்றதை ஜாலியாகதான் பார்க்கிறேன். நம்முடைய வேலைகள்ல இப்படியான விஷயங்கள் நடக்குது அவ்வளவுதான். TSR - Sreenivasan மற்றபடி நிக்கி, அதிர்ஷ்டி, மோனிஷா, ஜி.பி.முத்து என எல்லோரையும் நான் என் குடும்பமாகதான் பார்க்கிறேன். இந்த தருணத்துல என்னுடைய மனைவிக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். நிகழ்ச்சிக்காக வீட்டுல நான் பயிற்சி எடுத்துப்பேன். அத்தனைக்கும் என்னுடைய மனைவி உறுதுணையாக இருந்திருக்காங்க. இப்போ கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சிகள்ல கவனம் செலுத்திட்டு இருக்கேன். இனிமேல் நானாகதான் போய் சினிமா வாய்ப்புகள் தேடணும். இடையில கொஞ்ச நாட்கள் எனக்கு சினிமாவுல கொஞ்சம் கடினமான பாதையாகதான் இருந்தது. மறுபடியும் என்னுடைய பழைய ஜவுளி பிசினஸுக்கு போயிடலாம்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்போதான் எனக்கு 'அயலி' வாய்ப்பு வந்தது. இன்னைக்கு அப்படியே போய்கிட்டு இருக்கு. என்றபடி முடித்துக் கொண்டார்.
A Simple Look at the Pixel Watch 4
I’m not sure when it started, but I’ve developed a strange habit of looking at people’s wrists just to see
பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் என கூறப்படுகிறது. பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் 71.6% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அதற்கு காரணம் நிதிஷ் குமார் செயல்படுத்திய பெண் வாக்காளர்களைக் கவரும் விதமான திட்டங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் இந்தியா கூட்டணித் தலைவர்களில் சிலர், `தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் அரசு ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் செலுத்திய ரூ.10,000 தான் இந்த வெற்றிக்கு காரணம்' என்றக் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்கள். mahila rojgar yojana அப்படி என்னதான் அந்த திட்டம்? எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து பார்க்கலாம். மகிளா ரோஜ்கர் யோஜனா பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் `முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா'. செப்டம்பர் 26, 2025 அன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சிறு தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவது, புலம் பெயர்வதை தடுப்பது போன்ற நோக்கங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டத்துக்கான அளவுகோல்? இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் பீகாரில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும், 18-60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஒரு சுய உதவிக்குழுவுடன் (SHG) தொடர்புடையவராகவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கையும் வைத்திருக்க வேண்டும். பிற சுயதொழில் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற்ற பெண்களின் விண்ணப்பங்கள் இதில் பரிசீலிக்கப்படாது. mahila rojgar yojana என்ன திட்டம்? ஒரு குடும்பத்தில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டும் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியைப் பெறலாம். இந்தத் திட்டம் கிராமப்புற மேம்பாட்டுத் துறை மூலமும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூலமும் செயல்படுத்தப்படுகிறது. பணம் செலுத்துவதற்கான காலக்கெடு விண்ணப்பப்படிவம் பெறப்பட்ட பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும். முதல் தவணை விண்ணப்ப தேதியிலிருந்து 7-15 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். செப்டம்பர் 2025 முதல், இதுவரை சுமார் 75 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். 15 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-க்குள் அனைத்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கும் தொகையை அனுப்பப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. நிதிஷ் குமார் - மோடி பெண்களுக்கான நலத்திட்டம்: பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய எம்.பி-களில் ஒருவர் நிதிஷ் குமார். 2005-ம் ஆண்டு அவர் பீகார் முதல்வரானபோது, முன்னாள் பீகார் முதல்வரும் சோசலிச சின்னமான கர்பூரி தாக்கூரிடமிருந்து பல விஷயங்களை எடுத்துக்கொண்டார். அதில் ஒன்று, முதல்வராக தனது முதல் பதவிக்காலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்துவதும், பின்னர் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதும் ஆகும். பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு! அதைத் தொடர்ந்து சீருடைகள், பெண் மாணவர்களுக்கு மிதிவண்டித் திட்டம், பிற கல்வி மற்றும் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தினார். தனது முதல் பதவிக்காலத்திலேயே சுயஉதவிக்குழுக்கள் (SHGs) என்ற கருத்தை முன்வைத்தார். இப்போது, ஜீவிகா தீதிகள் என்று அழைக்கப்படும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்கள், மக்களுக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கும் இடையே ஒரு பாலமாக மட்டுமல்லாமல், JD(U)-ன் அரசியல் சார்பற்ற பிரிவாகவும் மாறிவிட்டன. பீகார் சட்டமன்றத் தேர்தல் - 2025 தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு பெண்களை சுய உதவிக் குழுக்கள் அணிதிரட்டிய விதமே, தேர்தலில் பெண்களின் அதிக வாக்குப்பதிவிற்கு (71.6%) முக்கிய பங்களிப்பு. நிதிஷ் குமார் கலந்துகொண்ட கூட்டங்கள் பெண்களால் நிரம்பியிருந்தன. இப்படி பெண்களின் படையை நிதிஷ் குமார் பலமாக திரட்டியதின் ஒரு பகுதிதான், முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம் என்கிறது அரசியல் வட்டாரம். பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?
வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல - இயக்குநர் சேரன்
'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர். இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இயக்குநர் சேரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். Director V Sekhar சேகர் சாரின் மறைவு பெரும் துயரமானது. மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு அவர் ஒரு போராளியாகத் தான் தெரிவார். இயக்குநர் சங்கம் இவ்வளவு தூரம் கட்டமைத்து ஒரு சங்கமாக தனித்து இயங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் அமைத்தத்தில் சேகர் சாருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அவர் இல்லை என்றால் இயக்குநர் சங்கம் இல்லை. குடும்பப் படங்களை எடுத்திருந்தாலும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒரு நபர். முதலாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் என்ன பேச வேண்டும் என்று புரிந்துகொண்டவர். Director V Sekhar ரொம்ப வருடம் ஊதியத்தொகை பற்றிய பிரச்னையை அவர் தான் பேசியிருக்கிறார். அவருடைய இந்த இழப்பு எங்களுக்கு, எங்களின் சங்கத்திற்கு பெரிய இழப்பு. அவருடைய புகழ் எங்களுடைய இயக்குநர் சங்கம் இருக்கும் வரைக்கும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
Shay Mitchell Launches Kids’ Self-Care Skincare Line
When Pretty Little Liars actor Shay Mitchell announced Rini, a skincare brand made for children, many people online reacted with
Quick and Tasty Sticky Chicken Marinade
This sticky marinade is a real favourite. It is very quick and easy to prepare, and it gives chicken a
சுமந்திரனை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசிய நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்'மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம் தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர். திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து , அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
பீகார் தேர்தல் முடிவுகள்.. நேர்மையான வெற்றியா? கமல்ஹாசன் கருத்து!
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி, நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.
``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது, ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற முக்கியமான மூன்று விஷயங்கள் இருந்தால்தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும். காரைக்குடி விழாவில் உதயநிதி ஸ்டாலின் 75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான கொள்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அண்ணா, கலைஞர் போன்ற வலுவான தலைமை இன்றும் உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரு ஆண்டுகள் இருந்த அண்ணா யாராலும் மாற்ற முடியாத மறுக்க முடியாத மூன்று திட்டங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட்டது. இரண்டாவதாக சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தது, மூன்றாவதாக இந்திக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, இரு மொழிக் கொள்கைதான் என கொண்டு வந்தார். இந்த மூன்று திட்டத்தையும் எந்த கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது. எஸ்.ஐ.ஆர். மூலம் தி.மு.க. ஆதரவு வாக்குகளை நீக்க பார்க்கின்றனர் குறிப்பாக தி.மு.க. ஆதரவாக உள்ள சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்கிவிட்டால், கூட்டணியில் வெற்றி பெற்று விடலாம் என ஒன்றிய பாஜக திட்டமிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஆனால் ஒவ்வொரு பூத்திலும், கடைசி திமுக தொண்டர் இருக்கும் வரை ஒரு தகுதியான வாக்காளரைக்கூட நீக்கி நீங்கள் வெற்றி பெற முடியாது. எஸ்.ஐ.ஆர்-ஐ, திமுக ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதிமுக ஆதரிக்கிறது. இன்று மு.க.ஸ்டாலின் இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்றும், அதிமுகவை பாஜகவின் நம்பர் ஒன் அடிமைகள் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கேலி பேசுகிறது. பார்க்கும் கால்களில் எல்லாம் கீழே விழுந்து வணங்கும் எடப்பாடி பழனிசாமி இப்போது புதிய கால்களை தேடித் தேடி விழுந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அடிமைகளை தமிழக அரசியலில் இருந்து விரட்ட வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமை. சிங்கம்புணரி விழாவில் இன்று நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி, ஆனால் இந்தியா முழுவதற்கும் நாம்தான் சிறந்த எதிர்க்கட்சி. பாசிச பாஜகவை விரட்ட வேண்டுமென்றால் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். நேற்று மாலை காரைக்குடியில் திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த பெரியார் பெருந்தொண்டர் இராம சுப்பையாவின் 118-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார் - துரைமுருகன் பேச்சு
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், அரிதான நிகழ்வு நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இதுதான் மூன்றாவது அரிதான நிகழ்வு. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

26 C