கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட பாரிய செலவு!
போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிரான விசாரணையில் சாறுகளாக செயல்படும் 2000… The post கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட பாரிய செலவு! appeared first on Global Tamil News .
ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனதற்கு காரணம் நான் தான் என கே.எல்.ராகுல் பேசியுள்ளார். மேலும், அந்த பந்திற்கு முன், ரிஷப் பந்திடம் சொன்ன வார்த்தை குறித்தும் ராகுல் பேசியிருக்கிறார்.
யாழ்.பொது நூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது, திட்ட முன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் […]
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து –உதவி எண்கள் அறிவிப்பு.!
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 27,000 லிட்டர் டீசலுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் ரயில் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணியில் 50 பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர். 52 பெட்டிகள் கொண்ட ரயிலில் 18 டேங்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியது. மதியம் […]
திருச்சியில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் பஸ்களில் படிகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
Thalaivan Thalaivi: “மறக்க முடியாத அனுபவமா இருந்துச்சு; இதுவரை நான் பண்ணாத கதாபாத்திரம்...” -ரோஷினி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தலைவன் தலைவி'. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. 'தலைவன் தலைவி' இதில் கலந்துகொண்டு பேசிய 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ரோஷினி, 'தலைவன் தலைவி' படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ராகவர்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் தங்கச்சி கதாபாத்திரம் தான். இந்தப் படத்தில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இதுவரைக்கும் நான் நடிக்காத கதாபாத்திரமாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
TVK: ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே - ஆதவ் அர்ஜுனா
சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தவெக ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா , ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின்போது அன்றைய முதல்வர் சிபிஐக்கு வழக்கை மாற்றியபோது ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடியைப் பதவி விலகச் சொன்னார். இப்போது ஏன் நீங்கள் சிபிஐக்கு வழக்கை மாற்றினீர்கள். அஜித்குமாரின் அம்மாவிடன் Sorry எனச் சொன்னது தேர்தல் நேர டிராமா. காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எங்களின் தலைவரைச் சந்தித்தபோது இரத்தக் கண்ணீர் வடித்தனர். ஜெய்பீம் படத்தைப் பார்த்து அழுதீர்கள் என்றீர்கள். உண்மையைப் பார்த்துதான் நீங்கள் அழுவதில்லையே. தவெக ஆர்ப்பாட்டம் 17 வயது பையன் லாக்கப் டெத்தால் இறந்தபோது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தீர்கள். அதன் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை. காவல்துறையை நிர்வகிக்கும் முதல்வர் மக்களுக்குப் பதில் சொல்லவில்லையெனில், தலைவர் தமிழகம் முழுவதும் சென்று போராடுவார்' என்று பேசியுள்ளார். Vijay: விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
IND vs ENG : ‘கடைசி ஓவரில்’.. கில், க்ரோலி இடையே வார்த்தை போர்: என்ன நடந்தது? முழு ஓவர் வீடியோ இதோ!
மூன்றாவது நாள் கடைசி ஓவரின்போது, ஷுப்மன் கில் மற்றும் ஜாக் க்ரோலி இடையே வார்த்தை போர் நடைபெற்றது. அப்போது என்ன நடந்தது? முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’மாடல் ஆட்சியாக மாறிவிட்டது”–கடுமையாகச் சாடிய விஜய்.!
சென்னை :தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands Justice என்ற பேரணி நடத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் முதல் முறையாக விஜய் களமிறங்குவதால் ஆயிரக்கணக்கான தவெகவினர் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில், ஆர்ப்பாட்ட மேடையில் கருப்பு சட்டை அணிந்து விஜய் மற்றும் காவல் நிலையங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் மேடை ஏறினார். குறிப்பாக, விஜய் ‘Sorry வேண்டாம் நீதி வேண்டும்’ என்ற வாசகம் பொறித்த பதாகையை ஏந்தி […]
ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி
ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷெயின்பாம் பாா்டோவுக்கு எழுதி, தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள கடிதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது உரிய ஆவணங்கள் இல்லாமல் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு வருபவா்களைத் தடுப்பது, ஃபென்டானில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுப்பதில் ஆகியவற்றில் அந்த நாடு அமெரிக்காவுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், […]
ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி
ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷெயின்பாம் பாா்டோவுக்கு எழுதி, தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள கடிதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது உரிய ஆவணங்கள் இல்லாமல் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு வருபவா்களைத் தடுப்பது, ஃபென்டானில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுப்பதில் ஆகியவற்றில் அந்த நாடு அமெரிக்காவுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்
நிகழ்ந்த அல்லது நடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறது. தற்போது […]
வவுனியாவில் வீரமக்கள் தினம் ஆரம்ப நிகழ்வு அனுஸ்டிப்பு!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36 வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ஆரம்பிக்கப்படும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கழகத்தின் (புளொட்) வவுனியா மாவட்ட பொறுப்பாளர் க.சந்திரகுலசிங்கம் […]
நெடுந்தீவில் 07 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினர்… The post நெடுந்தீவில் 07 தமிழக மீனவர்கள் கைது appeared first on Global Tamil News .
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம்… The post பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் appeared first on Global Tamil News .
சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கடலூரை சேர்ந்த தாவுக்கா தொண்டர் செல்வகுமார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜய் தலைமையில் போராட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி தவெக பெண் தொண்டர்கள் மயக்கம்.!
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான […]
Thalaivan Thalaivi: என்னோட ரொம்ப நாள் கனவு நடந்துருச்சு - `பொட்டல மிட்டாயே'சாங் பாடகி சுப்லாஷினி
விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவன் தலைவி'. இப்படத்தில், காளி வெங்கட், சரவணன், ரோஷினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மேலும், இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi - தலைவன் தலைவி இத்திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசினர். பாடகி சுப்லாஷினி - சந்தோஷ் நாராயணன் அப்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி திரைப்படத்தின் `பொட்டல மிட்டாயே' பாடலின் பாடகி சுப்லாஷினி, இந்தப் படத்தோட வருகைக்காக ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன். சந்தோஷ் நாராயணன் சாரோட ஒர்க் பண்ணனும் இன்றது என்னோட ரொம்ப நாள் கனவு. அது நடந்திருக்கு. விஜய் சேதுபதி, நித்யா மேனன் படத்துல நான் பாடுனது ரொம்ப பெருமையா இருக்கு. என்று கூறினார். Thalaivan Thalaivi: கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி... - விஜய் சேதுபதி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பாஜக: தமிழகம் வர அமித்ஷா விமானம் ஏறினாலே திமுக-விற்கு நடுக்கம் ஏற்படுகிறது - நயினார் நாகேந்திரன்
மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசியில்லாதது, எங்களுக்கு ராசியானது, தமிழகத்தில் மீனாட்சியம்மன் ஆட்சியை உருவாக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து, மதுரை மாவட்ட பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நயினார் நாகேந்திரன் பேசும்போது, மதுரையில் ஒரு கூட்டணியை ஆரம்பித்து, மாநாடு போலக் கூட்டத்தையும் நடத்தினாரோ அப்போதிருந்து அமித் ஷா டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் ஏறினாலே திமுகவிற்கு நடுக்கம் ஏற்படுகிறது. பாஜக ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருக்கப்போகிற தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் அமித்ஷா முன்கூட்டியே கூறியிருக்கிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கிறார்கள், முதலமைச்சருக்கு வேற வேலையே இல்லை, ஏனென்றால், ஓரணியில் காவல் நிலையங்களில் லாக்கப் டெத், ஓரணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் ரூபாய், சாதாரணமாக இறந்தால் மூன்று லட்ச ரூபாய். தமிழ்நாட்டில் நடக்கிற எந்தத் தவறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர வேறு யாரும் தட்டிக் கேட்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் வேங்கை வயல் குறித்துப் பேசுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி பரவாயில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவதைப் பாராட்டுகிறேன். ``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதே நேரத்தில் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்ற யாருக்குமே தெரியவில்லை. எந்த விஷயம் பற்றியும் அவர்கள் பேசுவதில்லை. மதுரையிலிருந்து சொல்கிறேன், 2026 தேர்தலில் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் அதற்கான அச்சாரம்தான் இந்த ஆர்ப்பாட்டம். மதுரை எப்போதும் ராசியான நகரம், அமித் ஷாவிற்குக் கூட்டம் அமோகமாக வந்தது. முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் நடத்துவது தான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என்று, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை அறநிலையத்துறை அமைச்சர் குறை சொன்னார். அதனால் 2026 தேர்தலையும் முருகன் பார்த்துக்கொள்வார். மதுரை எங்களுக்குத்தான் ராசி, திமுகவுக்கு ராசி கிடையாது. 1967-ல் திமுக பொதுக்குழு இங்கு நடந்தது. 22 வருடம் ஆட்சிக்கே வர முடியவில்லை. நயினார் நாகேந்திரன் மதுரை மாநகராட்சியில் 150 கோடி, 200 கோடி முறைகேடு என்கிறார்கள். கடவுளுக்குத்தான் வெளிச்சம். கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் பாஸ்வேர்டை பயன்படுத்தி முறைகேடு செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஊழல். இதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மண்டலத்தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? துணை மேயர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி உள்ளார் எனச் சொல்கிறார்கள். அந்த நடைபாதை இடத்தை மீட்க முடியவில்லை. இப்படியாக எங்கும் ஊழல், எதிலும் ஊழல். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மாநகராட்சி மண்டலத் தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கியிருக்கிறார், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இது கண்ணகிக்கு நீதி கிடைத்த மண், இந்த மண்ணில் நாங்கள் நீதி கேட்கிறோம் ஆட்சி மாற்றம் வேண்டும், ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஓர் அணி என்ற பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிற திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார். அதிமுகவிற்கு பாஜக சுமையா? - சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
குழந்தைகளுக்கெல்லாம் ஏஐ வகுப்பு தேவையே இல்லை!
அண்மைகாலமாக “குழந்தைகளுக்கு AI” (AI for Kids) என்ற பெயரில் பல்வேறு குழுக்களும், தளங்களும் உருவாகி வருகின்றன. இது ஒருபுறம்
5 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரயில்.., தற்போதைய நிலவரம் என்ன?
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்கள் (கச்சா எண்ணெய்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் எரிபொருள் கசிந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ மளமளவென பரவி, எட்டு பெட்டிகளுக்கு பரவியதால், திருவள்ளூர் ஏகாட்டூர் பகுதியைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு கரும்புகை பரவியது, இதனால் அருகே […]
ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து
அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், எரிபொருள் சுவிட்ச் நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா். இதுகுறித்து இந்திய விமானிகள் கூட்டமைப்புன் தலைவா் மற்றும் ஏா் இந்திய முன்னாள் விமானியுமான சி.எஸ்.ரந்தவா கூறியதாவது: விமான என்ஜின் எரிபொருள் சுவிட்ச் […]
தொடரும் சோகங்கள்: விமான மற்றும் ரயில் விபத்துகள் –ஓர் அலசல்!
சமீப காலமாக நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் விமான மற்றும் ரயில் விபத்துகள், நாட்டின் போக்குவரத்துத் துறையில் நிலவும் கவலைக்கிடமான நிலையை
Vijay: ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தவெக தொண்டர்களைக் கைது செய்கிறதா போலீஸ்? கொதிக்கும் நிர்வாகிகள்!
சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் இன்று, சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. 10 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து கிளம்பிய தொண்டர்களை ஆங்காங்கே காவல்துறையினர் மறித்து வைத்திருப்பதாக நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர். ஆர்ப்பாட்டம் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தைப் பிரமாண்டமாக நடத்த தவெகவினர் திட்டமிட்டிருந்தனர். குறைந்தபட்சமாக 20,000 நிர்வாகிகளைத் திரட்ட தவெக சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கட்சி ரீதியாக உள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டங்களிலிருந்து நேற்று மாலையே நிர்வாகிகள் கிளம்பிவிட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக நிர்வாகிகள் புகார் சொல்கின்றனர். ஆனந்த் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ ஜாகீர் உசேன் நம்மிடம் பேசுகையில், '2 பஸ்களில் வந்தோம். வாகனத்தில் கொடி கட்டியிருப்பதைப் பார்த்து சென்னைக்குள் நுழையும்போதே காவலர்கள் தடுத்துவிட்டார்கள். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகுதான் எங்களை அனுமதித்தார்கள்.' என்றார்கள். கோவையைச் சேர்ந்த பாபு என்ற மா.செ பேசுகையில், 'குமாரபாளையத்திலேயே எங்களை மறித்தார்கள். வேனிலிருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் அனுமதித்தார்கள்.' என்றார். தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக தொண்டர்களை ஒழுங்குபடுத்த மேடையேறிய பொதுச்செயலாளர் ஆனந்த், 'நம்முடைய தொண்டர்களை ஆங்காங்கே கைது செய்து வைத்திருக்கிறார்கள்' எனக் கூறினார். காஞ்சிபுரம், விழுப்புரம், ரெட் ஹில்ஸ் போன்ற பகுதிகளிலும் தவெகவினரின் வாகனத்தை காவல்துறை மறிப்பதாகப் புகார் சொல்கின்றனர் TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பளிச் பேட்டி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன ? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம் .
Thalaivan Thalaivi: எளிமையாக பழகுவதில் ரஜினிக்குப் பிறகு விஜய் சேதுபதி! - பகிர்கிறார் சரவணன்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். Thalaivan Thalaivi: கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி... - விஜய் சேதுபதி நடிகர் சரவணன் பேசுகையில், சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிற படத்துல நான் நடிச்சிருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்துல நான் கடைசியா 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்துல நடிச்சிருந்தேன். இது அவர் இயக்கத்துல நான் நடிக்கிற இரண்டாவது திரைப்படம். விஜய் சேதுபதி சார்கூட இப்போதான் முதல் முறையா இணைந்து நடிக்கிறேன். Thalaivan Thalaivi ரொம்பவே எளிமையா பழகக்கூடிய ஹீரோவா ரஜினி சாருக்குப் பிறகு நான் விஜய் சேதுபதி சாரைத்தான் சொல்லுவேன். இந்தத் திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய குடும்பக் காதல் திரைப்படம். குடும்பமான பிறகு காதலிக்கிறது, அதன் பிறகு வரக்கூடிய சின்னச் சின்ன சண்டைகள்னு ரொம்ப நேர்த்தியா இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருக்கார். என்றார். இவரைத் தொடர்ந்து வந்து பேசிய மைனா நந்தினி, என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தியதே இயக்குநர் பாண்டிராஜ் சார்தான். சார் இயக்கத்துல நடிக்கிற படம்னு சொன்னா, நான் எதையும் கேட்கமாட்டேன். உடனடியா வந்து நடிச்சிடுவேன். குடும்பத்தை விரும்பக்கூடிய அனைவருக்கும் பாண்டிராஜ் சாரின் படங்கள் பிடிக்கும், என்றார்.
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஜூலை 7-ஆம் தேதி வரை நதிக்கரைப் பகுதிகளை மூழ்கடித்தது. இதில் கொ்வில், மேசன் ஆகிய நகரங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதுமட்டுமின்றி, […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறது. தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்படதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்பட்டு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்புள்ளன. இது மிகப்பெரும் மனித உயிர் சார்ந்த விடையமாகும். எமது ஒன்றியம் கடந்த காலம் முதற் கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுதுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு என்ற ரீதியில் தற்போதைய பேசுபொதுளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொடு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்படு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார்.
Doctor Vikatan: முளைகட்டிய பயறு, வேகவைத்தது... எது பெஸ்ட்? எப்படி சாப்பிடணும்?
Doctor Vikatan: முளைகட்டிய பயறு.... வேகவைத்த பயறு... இரண்டில் எதில் சத்துகள் அதிகம்.... முளைகட்டிய பயறு சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வருமா... எந்தெந்தப் பயறுகளை முளைகட்டிச் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் வேகவைத்த பயறு வகைகளைவிட, ஊறவைத்து, முளைகட்டிய பயறு வகைகளே சிறந்தவை. முளைகட்டும்போது அவற்றில் ஈஸ்ட்ரோஜென் என்கிற என்ஸைம் அதிகரிக்கிறது. பயறுக்கே உரித்தான வாயுவை உண்டாக்கும் தன்மையும் முளைகட்டுவதால் நீங்கிவிடும். பயறு வகைகளை முளைகட்டச் செய்வதால் அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துகள் சற்று அதிகமாகக் கிடைக்கும். முளைகட்டிய பயறில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் செரிமானமாகிவிடும். பயறை சாதாரணமாகச் சாப்பிடும்போது செரிமான பிரச்னையை எதிர்கொள்வோருக்குக்கூட, அவற்றை முளைகட்டச் செய்து சாப்பிடும்போது செரிமான பிரச்னை வருவதில்லை. எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு முளைகட்டிய பயறு வகைகள் சிறந்த சாய்ஸ். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். விளையாட்டில் ஈடுபடுவோர், உடற்பயிற்சி செய்வோர், ஜிம் செல்வோரெல்லாம் கொண்டைக்கடலையை ஊறவைத்து, காலையில் சாப்பிடுவதைப் பார்க்கலாம். அது தசை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். அதையே முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, அதன் பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். முளைகட்டச் செய்வதால் அவற்றிலுள்ள புரதச்சத்து இன்னும் மேம்படுகிறது. பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்யலாம். முடிந்தவரை எல்லா பயறு வகைகளையும் முளைகட்டச் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்யலாம். முடிந்தவரை எல்லா பயறு வகைகளையும் முளைகட்டச் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. பச்சைப்பயறு போன்றவற்றை முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் நீரைவடித்து, சுத்தமான துணியில் மூட்டைகட்டி வைத்தால், அடுத்தநாளே முளைவிடும். மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஊறவைத்த பயறை நீரை வடித்துவிட்டு, ஹாட் பாக்ஸில் போட்டு, மூடிவைத்துவிட்டால், அன்று மாலையே முளை வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால், ராஜ்மா, வெள்ளை கொண்டைக்கடலை போன்ற சில வகைகள் முளைகட்ட நேரமெடுக்கும். ஆனாலும் முளைவரும். பெரிய அளவில் முளை வர வேண்டும் என அவசியமில்லை. சின்னதாக வந்தாலே அதன் ஆரோக்கிய பலன்கள் கூடும் என்பதால் அதையும் முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஸ்ரீரங்கம் தொகுயில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நான்கே ஆண்டுகளில் தி மு க அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்து உள்ளார்.
வடகிழக்கு தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து குழந்தை உள்பட 6 போ் பலி; 8 போ் காயம்!
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் சனிக்கிழமை காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 6 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா். இடிபாடுகளில் இருந்து கட்டடத்தின் உரிமையாளா்,அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மற்ற 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும், இடிபாடுகளில் சிக்கிய எட்டு போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இடிபாடுகளில் சிக்கிய மற்றவா்களை மீட்கும் […]
வீட்டு உரிமையாளரைத் தாக்கி பெறுமதியான பொருட்கள் கொள்ளை; நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்
வீட்டு உரிமையாளரைத் தாக்கி பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் அநுராதபுரம் – திறப்பனை நகரத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் குறித்த பகுதியிலுள்ள உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் இருவர் வீட்டு உரிமையாளரை பொல்லால் தாக்கி காயப்படுத்திவிட்டு பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வீட்டின் உரிமையாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் […]
யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ; 9A எடுத்த மகள், அடுத்தநாளே விபத்தில் பலியான தந்தை
பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]
முச்சக்கர வண்டி கொள்ளையில் சிக்கிய 8 சந்தேக நபர்கள் ; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
கொட்டஹேன, சங்கராஜ மாவத்தை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கர வண்டியைக் கொள்ளையடித்த எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டஹேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 14, ஸ்டேட்ஸ் வீதி பகுதியில் வசிக்கும் 28 முதல் 53 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்தாரர் வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டியை ஓட்டி வந்ததாகவும், சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டி உரிமையாளரின் வசம் இருந்தபோதே அதைக் கடத்திச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் நடத்திய விசாரணைகளைத் […]
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார். கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்ற 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார். பாடசாலையில் சிறந்த பெறுபேறு இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவன், ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்று நீர்தேக்கதில் விழுந்ததுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் […]
விம்பிள்டன் 2025: இகா ஸ்வியாடெக் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்!
விம்பிள்டன் 2025 டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் (Iga
Thalaivan Thalaivi: ``இது கணவன் - மனைவி உறவைப் பேசுகிற படம்!'' - இயக்குநர் பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். பாண்டிராஜ் பேசுகையில், 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்திற்குப் பிறகு என்னுடைய படத்திற்கு நடக்கும் இசை வெளியீட்டு விழா இதுதான். ஆறு வருஷம் கழிச்சு என்னுடைய படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடக்குது. இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வைப் பார்த்து விஜய் சேதுபதி சார், 'எப்படி எல்லோரையும் புடிச்சு நடிக்க வச்சீங்க?'னு கேட்டாரு. அனைவருமே அவர்களுடைய பங்கை அற்புதமா பண்ணியிருக்காங்க. இயக்குநர் பாண்டிராஜ் சந்தோஷ் நாராயணனும் நானும் முதல் முறையா இந்தப் படத்துல இணைந்திருக்கோம். இன்னைக்கு 'தலைவன் தலைவி' படத்தின் பாடல்களை வெளியிடுறோம். இது ரொம்பவே முக்கியமான நாள். இதுக்காகத்தான் நாங்க காத்திருந்தோம். இது கணவன்-மனைவி உறவைப் பேசுற திரைப்படம். எல்லோருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயமாக கனெக்ட் ஆகும். 'A Rugged Love Story'னு டைட்டில் போட்டதுக்கு நியாயம் செய்யுற மாதிரி இந்தத் திரைப்படம் இருக்கும், என்றார். Thalaivan Thalaivi: கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி... - விஜய் சேதுபதி
இளமையான சருமம் முதல் மூட்டுகளுக்கு பலம் வரை.. எல்லாம் தரும் எலும்பு சூப்!
எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பின் மருத்துவப்பலன்கள் குறித்து சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல். சூப் எலும்பு சூப் வெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்... எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது. மூட்டுகளைப் பாதுகாக்கும் உடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்பு சூப்பில் அடங்கி உள்ளன. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக விலை உயர்ந்த மருந்துகளாக இந்த கான்ட்ராய்டின் சல்பேட், குளுக்கோசமைன் போன்றவை விற்கப்படுகின்றன. விலை உயர்ந்த இந்த மருந்துகளுக்குப் பணத்தைச் செலவழிப்பதற்குப் பதில் இந்த சூப்பைக் குடிப்பது நல்லது. மூட்டு வலி எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சூப், எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாகச் செயல்படும். சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் சுவாச அமைப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு பலம் தருகின்றன. ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகின்றன. உடல் எடை குறைக்க உதவும் எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், சூப் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதால் எடைக் குறைப்புக்கு உதவுகிறது. புரோபயாடிக்ஸ், ப்ரீபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், நம் வயிற்றில் உள்ள நன்மை பயக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் குடல் பாதையில் உள்ள செல்களின் செரிமானச் செயல்பாடுகளை அதிகரிக்கும். வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். சருமத்தைப் பாதுகாக்கும் எலும்பு சூப்பில் உள்ள கொலாஜன் ஆரோக்கியமான செல், செல் மறுசீரமைப்பு மற்றும் தோல் உறுதிப்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, இளமையான தோற்றத்தையும் தருகிறது. சூப்பில் உள்ள கொழுப்பை நீக்க விரும்பினால், சூப்பைக் குளிரவைத்து, அதன் மேல் படர்ந்திருக்கும் கொழுப்பை ஸ்பூனால் அகற்றலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் நிலைப்பாடு- கொஞ்சம் அலசல்!
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது பொருளாதார
இது கிரிக்கெட்டே கிடையாது. இங்கிலாந்து விளையாடும் விதம் தவறு. தயவுசெய்து, ஐசிசி புது விதிமுறையை கொண்டுவந்து பேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என கவாஸ்கர் பேசியுள்ளார்.
பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூலை 14 முதல் ஜூலை 20 வரை #VikatanPhotoCards
2029 தேர்தலில் மோடி இடத்தை நிரப்புவாரா யோகி? ஆர்.எஸ்.எஸ் போடும் கால் செஞ்சுரி பிளான்!
பிரதமர் மோடி 75 வயதை எட்டவுள்ள நிலையில், அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிய தலைவரை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியை நிறைவு செய்தாலும் அடுத்து வரும் தேர்தலில் புதிய முகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.
அகமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் விமானிகளின் கவனக்குறைவா?
2025 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து
நிலாந்தன் அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை… The post செம்மணிக்கு நீதி? நிலாந்தன். appeared first on Global Tamil News .
சீன- சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பில் 3ஆம் தரப்பு தலையிடக்கூடாது –வாங் யி
சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்றுமுன்தினம் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை மலேசியாவில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே, சீன – சிறிலங்கா இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, அவர் சிறிலங்கா வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும்
மரபணு கோளாறு: சோதனை முறையில் மருந்து செலுத்திய சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்!
மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 8 வயதான சிறுவன், துறுதுறுவென நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தவர், சோக்கர் வீரராகவும் இருந்தவர், மரபணு கோளாறால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்ட நிலையில்தான், ஆய்வகச் சோதனையில் இருந்த மருந்தை பரிசோதனையாக சிறுவன் எடுத்துக்கொண்டான். அதன் விளைவாக, சிறுவன் மீண்டும் […]
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியும் 387 ரன்களை அடித்து டிரா செய்தது. இப்போட்டி தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீவிபத்து… அரக்கோணம் ரூட்டில் ரயில்கள் நிறுத்தம்!
சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தீவிபத்தில் சிக்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீ மேலும் பரவுமா என்ற அச்சம் ஒருபுறம் ஏற்பட்டுள்ள நிலையில், பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்த வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட சிறப்பு நாள்!
1969 ஆம் ஆண்டு இதே ஜூலை 13 ஆம் தேதி இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.
வந்தே பாரத் சரக்கு ரயில்… ஸ்பீடா ரெடியாகும் கதி சக்தி கார்கோ எக்ஸ்பிரஸ்- சென்னை ஐ.சி.எஃப் சிக்னல்!
கதி சக்தி புதிய மாடல் சரக்கு ரயில் ஒன்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக அலசலாம்.
ஏற்காடு எப்படி இருக்கிறது? ஏழைகளின் ஊட்டி… வரலாறும், பழங்குடியிட மக்களின் நிலையும்!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள மக்கள் பல்வேறு வசதிகளுக்காக தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியை தெரிந்து கொள்ளலாம்.
One In, One Out அகதிகளை பரிமாற்றும் பிரான்ஸ் –பிரித்தானியாவின் புதிய திட்டம்
‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் திட்டம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், […]
ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஐரோப்பியப் பொருட்களுக்கு 30% வரி - டிரம்ப் அறிவிப்பு
ஆகஸ்ட் 1, 2025 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும்அமெரிக்கா 30%வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம்கட்டண விகிதம் என்னவாக இருக்கும் என்பதைக் காணத் தயாராக உள்ளது. தொழில்துறை பொருட்களுக்கு பூஜ்ஜியத்திற்கான பூஜ்ஜிய வரிகள் உட்பட ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கானஉடன்பாட்டை எட்ட27 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பும் அமெரிக்காவும் தவறிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியப் பொருட்கள் மீதான வரிகளுக்கு மேலதிகமாக, ஆகஸ்ட் 1 முதல் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% வரி விகிதத்தை அறிவித்தது. டிரம்ப் தனது தளத்திற்கு மற்றொரு கடிதத்தை வெளியிட்டார்.
நாசாவில் உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கு அபாயம்? 2000 பேர்..ட்ரம்ப் அரசின் முடிவு
அமெரிக்காவின் நாசாவில் பணிபுரியும் 2000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானதைத் தொடர்ந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்கும் வகையில் DOGE என்ற அமைப்பை உருவாக்கினார். அதற்கு தலைவராக எலோன் மஸ்கை நியமிக்க, கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மஸ்க் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த சூழலில் ட்ரம்ப் அரசு செலவினங்களை குறைக்க நாசா பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, […]
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் பலி
புதுடெல்லி, வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த10 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் 3 மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 3 பெண்கள் உட்பட 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். […]
யாழ்.பொது நூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா… The post யாழ்.பொது நூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்! appeared first on Global Tamil News .
“விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்”
தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் விடுதலையை வலியுறுத்தி, ” விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர்… The post “விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்” appeared first on Global Tamil News .
கடைசி பெஞ்ச் இல்லை..”- இனி பள்ளிகளில் 'ப'வடிவில் அமர வேண்டும்- கல்வித்துறை உத்தரவு... என்ன காரணம்?
பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்ற கருத்தே இல்லாததாகிவிடும். பள்ளிக் கல்வித்துறை வழங்கிய புதிய உத்தரவின் படி, இனி வகுப்பறைகளில் மாணவர்கள் ‘ப’ வடிவில் அமர்ந்து கல்வி பயில வேண்டிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய அமர்வு முறையின் முக்கிய நோக்கமே 'Last bench student' என்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பதாகும். எல்லா மாணவர்களும் ஆசிரியரை நேரடியாக பார்க்கக்கூடிய வகையில் அமர்ந்தால், கல்வியில் தெளிவும் கவனமும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது, ”வகுப்பறைகளில் மாணவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்குடன் புதிய அமர்வு முறை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் இதற்கு முன்பு இருந்த முதல், கடைசி என்ற பாகுபாடுகளை தவிர்க்க முடியும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்வையிடக்கூடிய வகையில், 'ப' வடிவத்தில் இருக்கைகள் அமைக்கப்படும். இந்த புதிய அமர்வு முறை, மாணவர்களின் கவனம் மற்றும் கற்றல் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளில் இந்த முறை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் பயன்கள் மற்றும் சவால்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், முழுமையாக எல்லா வகுப்பறைகளிலும் இந்த முறை பின்பற்ற வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மலையாளத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் திரைப்படத்தின் தாக்கம் கல்வித்துறை வரை எதிரொலித்துள்ளது. இத்திரைப்படத்தில் வகுப்பறைகளில் கடைசி வரிசையில் அமர்ந்த மாணவர்களின் நிலைமை குறித்து பேசப்பட்டிருக்கும். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை வகுப்பறை அமர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
பீகார் தேர்தல்: இண்டி கூட்டணி 6 மணிநேர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
பீகார் மாநிலத்தில் INDIA கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து விரிவாக பேசப்பட்டது.
பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண்ணுக்கு நடந்த துயரம்
காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் விசாரணை காலியிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று பஸ் தரிப்பிடத்திற்குள் நுழையும் போது பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிப பெண் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக […]
சற்று முன் புஸ்ஸி ஆனந்த் போட்ட பதிவு: தவெக போராட்டத்திற்கு வருவோர் கவனத்திற்கு... என்ன தெரியுமா?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார் என்ற காவலாளி காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் போராட்டம் நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு; விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய் உற்பத்தி பொருக்களின் விலையும் அதிகரித்தன. கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் சில தினங்களுக்கு முன்னர் சந்தையில் 100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் […]
வேலூர் பாரிஜாதம் தற்கொலை வழக்கு: திமுக அரசின் மெத்தன போக்கு என நயினார் நாகேந்திரன் விமர்சனம்
வேலூர் நெல்லூர்பேட்டையில் பாரிஜாதம் என்ற சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திமுக அரசின் மெத்தன போக்கு இருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பொலிஸ் ஹெலிகாப்டர் ; பதற வைக்கும் காட்சிகள்
மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை […]
கேடி தி டெவில் பட தமிழ் டீசர் வெளியிட்டு விழாச் செய்திகள்!
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ்
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் –இருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள்… The post சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் – இருவர் கைது! appeared first on Global Tamil News .
“உருட்டு உருட்டு”திரைப்பட இசை &டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில்,
ஒரே நாளில் தாயகம் திரும்பிய 5,000 ஆப்கன் குடும்பங்கள்!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் குடும்பங்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள், தங்களது நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் ஆப்கன் அகதிகள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டு, கடந்த சில மாதங்களாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் இருந்து நேற்று முன்தினம் (ஜூலை 10) ஒரு நாளில் மட்டும் சுமார் 4,852 ஆப்கன் குடும்பங்களும், பாகிஸ்தானில் […]
நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு விபத்தில் சிக்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த… The post நெடுந்தீவில்இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகு விபத்தில் சிக்கியது! appeared first on Global Tamil News .
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு திறப்புவிழா!
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டட திறப்புவிழா இன்றைய தினம் இடம்பெற்றது. சுகாதார அமைச்சர்… The post நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு திறப்புவிழா! appeared first on Global Tamil News .
சென்னையில் ஒருங்கிணைந்த பயணத்திற்கான “அண்ணா செயலி”சோதனை முயற்சி தொடக்கம்!
சென்னையில் பொதுமக்கள் ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்துகள் (MTC), மெட்ரோ ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்க உதவும்
யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மடக்கிய காவற்துறையினர் –சாரதி கைது!
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை காவற்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம்… The post யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மடக்கிய காவற்துறையினர் – சாரதி கைது! appeared first on Global Tamil News .
Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | Vikatan
யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின்… The post யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு! appeared first on Global Tamil News .
ஜக்கிய மக்கள் சக்தி:ஆடுகின்றது!
ஜக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் குழுவும், கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேரும் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து, நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து கட்சியுடன் இருந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களையே மாற்றவேண்டும் என கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு தேர்தல் அமைப்பாளர்களை மட்டுமே குறை கூறுவது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், கட்சியின் நிர்வாகிகள் உடனடியாக மாற்றப்படாவிட்டால், எதிர்கால தேர்தல்களில் தோல்வி தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வான அமைப்பாளர்கள் குழுவை நீக்கத் தயாராகி வந்த நேரத்தில், கட்சியின் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறி, அவர்கள் கட்சித் தலைமையிடம் இந்தக் கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும் என்றும், அந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளுடன் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்கியிருந்தால், ஒரு பெரிய வெற்றியைப் பெற வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச நாட்டைக் கையளிக்கும் ஆரம்ப கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அதனை பொறுப்பேற்றிருந்தால், அவர் செய்த பணியின் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றிருக்க முடியும் என்றும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கைப்பற்றி தனக்கென ஒரு பெயரைப் பெற விரும்பியதால் இரண்டு மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நாட்டைக் கைப்பற்ற அழைக்கப்பட்டபோது, கட்சியில் உள்ள சில பொருளாதார உயரடுக்குகள் அவரை இந்த நேரத்தில் பொறுப்பேற்க வேண்டாம் என்று கூறி ஊக்கப்படுத்தியதாக தொகுதி அமைப்பாளர்களும் கட்சி மூத்தவர்களும் கூறியுள்ளனர். கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பணியாற்றி வரும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்ட இளம் பிரதிநிதிகள் அந்தப் பதவிகளில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
`அறத்தின் நாயகன் நம் வேள்பாரி!' - Vikatan MD B.Srinivasan Full Speech | Velpari Celebration Event
Suki Sivam: தமிழர் பெருமை பரவுவதில் BJP அரசுக்கு விருப்பமில்லை | keezhadi
Suki sivam இந்த நேர்காணலில் மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதை உடைத்துப் பேசுகிறார். கடவுளுக்கு மதம் தேவையில்லை மதத்துக்குதான் கடவுள் என ஆழமான கருத்துகளை அறிவுறுத்துகிறார்.
றோகான் குணவர்த்தன -பிள்ளையானின் பினாமியா?
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையான் தொடர்புபட்டுள்ளமை பற்றி கோத்தபாயவின் எடுபிடி றோகான் குணவர்த்தன உள்ளதாக மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார். ரோஹான் குணரத்ன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக, அவர் சிறைக்குச் சென்று சேற்றில் மூழ்கி, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகந்தனை சந்தித்தார் எனவும் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பிள்ளையான் எழுதியதாகக் கூறப்படும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நூல் கோத்தபாயவின் எடுபிடி றோகான் குணவர்த்தனவினால் எழுதப்பட்டிருக்கலாம் .அத்தகைய புத்தகத்தை எழுத பிள்ளையானுக்கு போதுமான மொழி அறிவு இல்லை என்று கூறப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் பற்றி ரோஹன் குணரத்ன எழுதிய புத்தகம் பற்றிய திறந்த விவாதத்திற்கு வருமாறு வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா விடுத்த திறந்த சவாலை ஏற்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய அரசால் செய்யப்பட்டது என்று ரோஹன் குணரத்ன வாதிடுகிறார். ரோஹன் குணரக்னாவின் வாதத்தின்படி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு எந்த அரசியல் பூனை கையும் இல்லை. எனவே இனி விசாரிக்க வேண்டியதில்லைடியன தெரிவித்துள்ள நிலையிலேயே பகிரங்க விவாத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
Siddharth Sir உண்மையான Friend மாதிரி இருந்தார்! - Finally Sathish | 3BHK |Sri Ganesh|Cinema Vikatan
Ananda Vikatan Cinema Awards 2024 Part 6 | GV Prakash, Sudha Kongara | Thangalaan, Amaran, Maharaja
TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK|Imperfect Show 12.7.2025
தவெக பேரணி: 16 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி
சென்னை சிவானந்தா சாலையில் நாளை தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் பேரணிக்கு 16 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி அளித்திருக்கிறது. இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வத்தலக்குண்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மதுரை ரௌடி; கூட்டாளிகளைக் கைதுசெய்த போலீஸ்!
மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று இரவு வத்தலக்குண்டு அருகே உள்ள திருநகருக்கு வந்தபோது சிவமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த கூட்டாளிகள் காருக்குள் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்து அரை உயிராய் துடித்துக் கொண்டிருந்த சிவமணியை ஒரு குடியிருப்பு பகுதிக்குள் தூக்கிச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் ரத்த வெள்ளத்தில் பிணம் கிடப்பதாக தகவலறிந்து வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து போலீசார் சிவமணி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் கௌதம், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவமணி கூட்டாளிகளான சூர்யா, மணிகண்டன், அருண், முனியாண்டி மற்றும் கார் டிரைவர் சரத் ஆகியோர் மதுரையில் பதுங்கி இருக்கும் தகவலறிந்து அங்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கேங் லீடராக இருந்த சிவமணி கூட்டாளிகளை படாதபாடு படுத்தி வந்ததாகவும் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து சிவமணியை கூட்டாளிகள் கொலை செய்ததாகவும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வத்தலகுண்டில் மதுரை ரௌடி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலா பால் நிறுவத்தின் மேலாளர் மரணம்.. இதுதான் நடந்தது -காவல் ஆணையர் அருண் விளக்கம்!
திருமலா பால் நிறுவத்தின் மேலாளர் தற்கொலை செய்து கொண்டு உள்ளது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்; 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த […]
டிரம்ப் முடிவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகும் அபாயம்! ஐ.நா. எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச எச்ஐவி அறிவிக்கையில், நிதி ஒதுக்கப்படாவிட்டால், எச்ஐவி நோய்க்கு எதிரான போராட்டம், பல ஆண்டுகாலத்துக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்ஐவியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அந்த நோய்க்கு எதிரான போராட்டம் பல ஆண்டுகாலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்ஐவி நிவாரண அவசரகால திட்டத்தின் […]
எரிக் மேயர்-இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க செனட்டில் உறுதிப்படுத்துவதற்காகப் பரிந்துரைத்துள்ளார். எரிக் மேயர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலைத்தீவுகள் உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.
தேனி பெரியகுளம் சட்டசபை தொகுதி: திமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? களநிலவரம் இதுதான்...
தமிழ்நாடு சட்டசபைக்கு 2026ம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் களநிலவரம் எப்படி உள்ளது, யாருக்கு வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து முழுமையாக காண்போம்.
காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆா்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்த அலுவலகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீணா ஷம்தாசனி கூறியுகையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 615 போ் ஜிஹெச்எஃப் விநியோக […]
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா பயணிகளும் , படகின் பணியாளர்கள் இருவருமாக 14 பேர் குறிகாட்டுவான் நோக்கி தமது பயணத்தினை இன்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்துள்ளனர். நெடுந்தீவுக்கும் , குறிகாட்டுவானுக்கும் இடையில் கடலில் படகு திடீரென பழுந்தடைந்துள்ளது அத்துடன் படகினுள் கடல் நீரும் உட்புக தொடங்கியுள்ளது. அந்நிலையில் படகில் இருந்த பணியாளர்கள் , இருவரும் படகில் இருந்து வெள்ளைக்கொடியை அசைத்து காட்டியுள்ளனர். அதனை பிறிதொரு படகில் சென்றவர்கள் அவதானித்து , குறித்த படகினை நோக்கி விரைந்துள்ளனர். படகு நீரில் மூழ்கிய வண்ணம் காணப்பட்டதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் தமது படகுக்கு ஏற்றியுள்ளனர். அவ்வாறு ஏற்றிய போதிலும் , 12 பேர் படகில் ஏறிய நிலையில் , இருவர் படகில் ஏற முதல் பழுதடைந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்நிலையில் இருவரும் கடலில் நீந்திய பாதுகாக்க வந்த படகில் ஏறியுள்ளனர். அதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு தமது படகில் விரைந்து , மூழ்கிய படகில் இருந்து காப்பற்றப்பட்டவர்களை தமது படகில் ஏற்றி குறிகாட்டுவான் கரைக்கு கொண்டு வந்தனர். குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான கடற்பயணம் சுமார் ஒரு மணி நேரமாக காணப்படும் நிலையில் , சேவையில் ஈடுபடும் படகுகள் குறித்து கண்காணிப்புக்களும் , படகில் செல்பவர்களின் பாதுகாப்பு மற்றும் , அவர்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிவதனை உறுதிப்படுத்தவும் , சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது .