புதுசா கார் வாங்கப் போறீங்களா? புத்தாண்டில் எகிறும் கார் விலை.. ரினால்ட் அறிவிப்பு!
ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி கார் வாங்கும் மக்களுக்கு அதிகம் செலவாகும்.
பாட்டால் அதிரவைத்த பால் டப்பா; பா.ரஞ்சித்தின் ஆட்டம் | மார்கழியில் மக்களிசை 2-ம் நாள் | Album
``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும் - உ.பி கிராமங்களின் முடிவு!
ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட 'சீரான சமூக ஒழுக்கத்தை' மையமாகக் கொண்டது என விளக்கமளித்தனர். Smart phone இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது. பெரியவர்கள்கூட ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். கைபேசி சாதனங்களை தேவையற்ற முறையில் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்தையும் சமூக சமநிலையையும் பராமரிக்க, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகளைக் குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும். சமூகப் பிணைப்புகளைப் பாதுகாப்பதற்காகத் திருமண விழாக்கள் வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எளிதில் முறிந்துவிடுகின்றன. பாரம்பரிய சமூகப் பிணைப்புகளையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்கள் செல்லுபடியாகும். திருமணம் இந்த முடிவுகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒரு பரந்த சமூகப் பிரசாரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். மற்ற பஞ்சாயத்துகளையும் இதில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!
இது திராவிடர்கள் vs தமிழர்கள் சண்டை: ஆவேசமான சீமான்- திருமாவிற்கும், எனக்கும் என்ன பிரச்சினை!
விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட சீமான், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து சரமாரியாக பதிலளித்தார். மேலும் திருமாவளவனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
உதவியாளரின் தூக்கம் கெட்டுடக் கூடாதுனு சுவர் ஏறிக் குதித்த தங்க மனசுக்காரர் கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் நினைவுநாளான இன்று அவரின் சமாதிக்கு சென்று பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ்...கடும் அதிருப்தியில் திமுக?
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாயிற்காக விமானி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்.. அதிகம் பகிரப்படும் காணொளி
விமானப் பயணத்தின் போது தனது தாய்க்கு இளம் விமானி ஒருவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. விமானப் பயணம் என்பது பலருக்கு ஒரு சிறப்பு அனுபவம், அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது எனலாம். அஸ்வத் புஷ்பா என்ற விமானி, தனது தாயை விமானத்தில் முதல் முறையாக அழைத்து சென்ற விதமானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல் பயணம் அஸ்வத் புஷ்பா, […]
அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!
அரசப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள சிற்றுண்டிகளையே அதிகம் சாப்பிட விரும்புவதாக தெரியவந்துள்ளது. நிறுவனம் ஒன்று, இலங்கையில் நகர்ப்புற இளம் பருவத்தினரிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குத் தேவையான உணவு நுகர்வு முறைகள், விருப்பங்கள், தடைகள் மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை சேர்ந்த 463 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் […]
அமித் வெளியேற்றம்: டைட்டில் வின்னர் ஆவார் என நம்பப்பட்ட பெண்ணும் வெளியேற்றம்
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து கனி அக்கா மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதையடுத்து கனியின் ஆதரவாளர்கள் பிக் பாஸை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கண்முன் கணவன் செய்த கொடூர செயல் –துடிதுடித்த மனைவி
மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் தெலங்கானா, ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் – திரிவேணி தம்பதி. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். எனவே வறுமையால் மனைவி ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை […]
டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி –நிராகரித்த அமைச்சர்
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை 90 நாள்கள் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியிருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவே 450 மில்லியன் டொலர் நிதியை கையாளும்
பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக் குழுவிடமே ஒப்படைக்கப்படும் என்று சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின்
யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், குறித்த பெண்ணை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். அதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு குருபூஜை… கேப்டன் இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆனது. இதையொட்டி பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை...என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை. இதற்காக என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும்-அதிகாரிகள் தகவல்!
மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பிணக் குவியலிலிருந்து மீட்கப்பட்ட தாய்க்குப் பிறந்தவரா விளாதிமீர் புதின்? வைரலாகும் கதை!
இரண்டாம் உலகப் போரின் போது பிணக் குவியலிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவர்தான் தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் என்று ஒரு கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. இது கடந்த ஒரு சில ஆண்டுகளாக அவ்வப்போது வைரலாவதும், பிறகு மறந்து போவதுமாக உள்ளது. இந்தக் கதையின் உண்மை நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் எழுதியிருக்கும் நூலில், புதின் பற்றிய ஒரு […]
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தன்னிச்சையாக முடிவு எடுத்து மூன்று ஸ்டார் வீரர்களை நீக்கியிருப்பது, பிசிசிஐ மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்களாம்.
இலங்கையின் மேலைத்தேய இசையை அலங்கரித்த மெக்சி ரொசைரோ காலமானார்
5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் மேலைத்தேய இசைத்துறையை தனது தனித்துவமான குரலால் அலங்கரித்த மூத்த கலைஞர் மெக்சி ரொசைரோ (Maxi Rozairo), தனது 77ஆவது வயதில் காலமானார். ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக இசைத்துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். அவரது தனித்துவமான பாடும் பாணி மற்றும் மேடை ஆற்றுகை காரணமாக அவர் இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். இலங்கையில் மேலைத்தேய இசைக்கலையை வளர்ப்பதிலும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதிலும் அவர் ஒரு […]
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்-வலுக்கும் கோரிக்கை!
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம்
அம்பலாங்கொடை வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து இக்கொலையைத் திட்டமிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடு கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொட நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றின் முகாமையாளர் வர்த்தக நிலையத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் […]
மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கன மழை ; மக்களுக்கு விடுத்துள்ள அவசர முன்னெச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் […]
Doctor Vikatan: தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி! - காரணமும் தீர்வுகளும் என்ன?
Doctor Vikatan: என் வயது 28. சமீபத்தில்தான் திருமணமானது. எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு, அது கசப்பான அனுபவங்களையே கொடுத்திருக்கிறது. தாம்பத்திய உறவின்போது எனக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது. அது தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிறது. என்னால் உடலளவில் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை நான் இதில் விருப்பமின்றி, என் கணவரைத் தவிர்க்க இப்படிச் செய்கிறேனோ என அவருக்கு ஓர் எண்ணம் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட வலிக்கு என்ன காரணம்... இதற்குத் தீர்வுகள், சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கு, 'டிஸ்பெரூனியா' (Dyspareunia ) என்று பெயர். அதாவது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏற்படுகிற ஒருவித வலி. இந்த வலியின் பின்னணியில் உளவியல் மற்றும் உடலியல் காரணங்கள் எதுவும் இருக்கலாம். தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம். குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம். அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம். தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். அதேபோல மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் வெஜைனாவில் வறட்சி ஏற்படுவது சகஜம். எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். ஹார்மோனல் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்கு முக்கியமான காரணம். சில பெண்களுக்கு வெஜைனாவில் கசிவு இல்லாததாலும் வறட்சியும் தாம்பத்திய உறவின்போதான வலியும் இருக்கும். வெஜைனாவில் ஏற்படுகிற தொற்று, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படுகிற தொற்று போன்றவை இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவின்போது வலி இருக்கும். எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதையே 'எண்டோமெட்ரியோசிஸ்' என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது அடுத்தது வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு. முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் கணவரின் ஒத்துழைப்பும், அவர் தன் மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம். 'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது, தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சம்பந்தப்பட்ட பெண் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். தவிர, ஃபைப்ராய்டு, சினைப்பை கட்டிகள் உள்ள நிலையில், மிகவும் தீவிரமான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம். மன அழுத்தமும் முக்கிய காரணம். Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா? இவை எல்லாவற்றுக்குமே தீர்வுகள் உண்டு. வெஜைனா வறட்சிக்கு, லூப்ரிகேஷன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். மெனோபாஸ் காலத்து வறட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு, ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். வெஜைனிஸ்மஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. இதற்கெல்லாம் முன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். தாம்பத்திய உறவின் போது வலியை உணர்வதாகச் சொன்னால், அந்தப் பெண்கள் பொய் சொல்வதாக நினைக்கக்கூடாது. அதற்கு கவனம் கொடுத்து மருத்துவரை அணுகினால், சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்தது: ஐரோப்பிய ஒன்றியம் சோமாலியாவை ஆதரிக்கிறது!
சோமாலிலாந்தின் பிரிந்து சென்ற பகுதியை சுதந்திர நாடாக முறையாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் ஆனதை அடுத்து, சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் சனிக்கிழமை அழைப்பு விடுத்தது. ஒரு நாள் முன்னதாக இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளானது, பல ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சோமாலியாவின் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக மாற்ற முடியாது என்று வலியுறுத்தின. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனௌவர் எல் அனௌனி கூறுகையில், சோமாலியா கூட்டாட்சி குடியரசின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டமைப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறதுஎன்றார். இது முழு ஆப்பிரிக்காவின் கொம்பு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதுஎன்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார் . நீண்டகால வேறுபாடுகளைத் தீர்க்க சோமாலிலாந்துக்கும் சோமாலியாவின் கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் இடையே அர்த்தமுள்ள உரையாடலை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கிறதுஎன்று எல் அனௌனி மேலும் கூறினார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சோமாலியா அரசாங்கம் கடுமையாக கண்டித்தது. இது அதன் இறையாண்மையின் மீதான நேரடித் தாக்குதல் என்று வர்ணித்தது. பிரிவினையை நியாயப்படுத்தும் சட்டவிரோதமான மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சியை எதிர்கொள்ள இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடரப்போவதாக மொகடிஷுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச விதிமுறைகளை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது, சோமாலிலாந்து சோமாலியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது என்று வலியுறுத்தினார்.
100 குழந்தைகள் போதாது! பெண்களுக்கு டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிவிப்பு
விந்துணுவை தானம் பெற்று, ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றால், தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் இளம் பெண்களுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். விந்தணுவை தானமாகப் பெற்று ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருவுற்றால் சிகிச்சை செலவையும் தானே ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ரூ.1.52 லட்சம் கோடி சொத்தில், பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாக பங்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் 41 வயது பாவெல் அறிவித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு, […]
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு!
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்க இடம் ஒதுக்கீடு!
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
2027-ல் IHRA தலைமை பொறுப்பை ஏற்கும் பிரான்ஸ்
உலகளாவிய அளவில் பெரும் இன அழிப்பு நினைவுகளைப் பாதுகாக்கும் International Holocaust Remembrance Alliance (IHRA) அமைப்பின் 2027 ஆண்டுக்கான தலைமை பொறுப்பை பிரான்ஸ் ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் IHRA அமைப்பின் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றபோது, பிரான்ஸ் ஒருமனதாக தலைமைப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டது. இதன் மூலம், பிரான்ஸ், தற்போதைய தலைவர் அர்ஜென்டினாவை தொடர்ந்து, 2027-இல் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், “கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிகரித்துவரும் […]
தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
டொடோமா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த மலைக்கு சுற்றுலா சென்ற பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த சுற்றுலா பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் மருத்துவமனைகு […]
முனைவர் பாலசாண்டில்யன் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப் படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது […]
Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர் 'யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க. Vijay - Jana Nayagan Audio Launch அதுக்கு அந்த பெரியவர் 'நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது'னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க'னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு. அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'னு யோசிச்சுட்டு இருக்காரு. அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்! என்றார்.
மத்தல ராஜபக்க்ஷ விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேசமயம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்தல விமான நிலையத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கான […]
Jana Nayagan Audio Launch: அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்! - விஜய்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். விஜய் பேசுகையில், இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனா, என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன். எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். Jana Nayagan - Vijay அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன். மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடிச்ச 'பில்லா' படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய 'காவலன்', 'குருவி' படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு 'MDS'னு பட்டம் கொடுக்கிறேன். அது 'மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்'. உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும். என்றவர், மமிதா பைஜூ 'க்யூட்' மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க. எப்போதுமே, ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலதான் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனா, 'கில்லி' படத்துல இருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கு. என்றார். மேலும் பேசிய விஜய், நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும். 'விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரா'னு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். Jana Nayagan Audio Launch - Vijay 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே! இப்போ அணிங்கிறதை விளக்கமாகச் சொல்லமாட்டேங்குறார்னு தோணும். சஸ்பென்ஸ்னு ஒண்ணு இருந்தால்தானே கிக் இருக்கும். இதை மக்களுக்காகப் பேசுறேன். இதைவிட முக்கியம், செய்யுறதைதான் சொல்லணும். 2026, History Repeat Itself! எனப் பேசினார்.
கடைசி மூச்சு இருக்கும் வரை.. கட்சி எப்படி முன்னேறும்? ராமதாஸ் வெளியிட்ட திடீர் வீடியோ!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பதவியே சட்ட சிக்கலில் இருப்பது, கட்சியின் அஸ்திவாரத்தில் சந்தேகம் எழுந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தை உலுக்கும் மரணக் காப்பகம் ; 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்பு
அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டின் இருண்ட வரலாற்றை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளோ அல்லது கல்லறை அடையாளங்களோ செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின் […]
இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவுப் பற்றாக்குறை; ஐ.நா கவலை
இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் வறுமை காரணமாக பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற சூழ்நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிகாட்டியுள்ளது.
தலைநகரை மூடிய புகைமூட்டம்.. டெல்லி காற்று மாசு எச்சரிக்கை.. டெல்லி அரசு கடும் நடவடிக்கை!
காற்றுத் தர மேலாண்மை ஆணையம், படிப்படியான பதிலடி செயல் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கட்டுமான பணிகள் மற்றும் சில தொழிற்சாலை செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
JanaNayagan Audio Launch: 'ஜனநாயகன்'சம்பவமா இருக்கும்! - மேடையில் இசையமைப்பாளர் அனிருத்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். அனிருத் பேசுகையில், எனக்கு 21 வயதிருக்கும்போது நான் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன். அப்போது என்னை நம்பி விஜய் சார் 'கத்தி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்போதே அவர் பெரிய நடிகராக இருந்தார். அந்த வாய்ப்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். 'கத்தி', 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'லியோ' என நாம் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துப் படங்களின் பாடல்களும் ஹிட் அடித்திருக்கின்றன. Anirudh - JanaNayagan Audio Launch இப்போது 'ஜனநாயகன்' ஆல்பமும் ஹிட்டாகும். நான் பல கான்சர்ட்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், இது போல் ஒரு எனர்ஜி எங்கும் பார்த்ததில்லை. தளபதி ஒருவருக்காக மட்டுமே அது! என்றவர், ஜனநாயகன் சம்பவமாக இருக்கும்! எனப் பேசினார்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி.. 2026 தேர்தலுக்காக சூடு பிடித்த கள நிலவரம்.. போட்டி எப்படி இருக்கு?
2026 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதி திமுக – அதிமுக இடையிலான பாரம்பரிய மோதலுடன், தவெக உருவாக்கும் புதிய அரசியல் சமநிலையால் மிகவும் சிக்கலான, கணிக்க முடியாத போட்டியாக மாறக் கூடும்.
தொழுகையில் ஈடுபட்டவர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், வீதியில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பலஸ்தீனியர் மீது இஸ்ரேலிய இராணுவத்தின் தயார்நிலை வீரர் ஒருவர் தனது வாகனத்தை ஏற்றித் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காணொளி காட்சிகளில், வழிபாட்டில் ஈடுபட்டவர் தரையில் வீழ்ந்ததும், சாதாரண உடையில் இருந்த அந்த வீரர் அவரை நோக்கிச் சத்தமிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்வது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பலஸ்தீனியர் […]
பெக்கோ சமன் விளக்கமறியலில் இருந்து விடுவிப்பு!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” மனைவி ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் […]
இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி?
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் பல உண்மைகள் காவற்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இந்த கொலையை… The post இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி? appeared first on Global Tamil News .
திருப்பூரில் கண் கலங்கிய செங்கோட்டையன்! விஜய் பற்றி சொன்ன ஒற்றை வார்த்தை
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் குறித்து கண் கலங்கியபடி பேசி உள்ளார். அவர் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
காவல்துறை அதிபர் விட்டில் பதுங்கிய கொலையாளிகள்
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தொழிலதிபரின் கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த வீடு முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கரந்தெனிய சுத்தாவால் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி, அம்பிட்டிய பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கரந்தெனிய சுத்தா மூலம் தனது மனைவியின் பெயரில் ஹசலக பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தென் மாகாணத்தில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகை காரணமாக கோசல டி சில்வா கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தொழிலதிபர் கோசல மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்றதற்காக கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று கூர்மையான ஆயுதங்களால் அடித்து மற்றொரு நபரைக் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் !
பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே அரசாங்கம் ஆரம்பகட்ட நிதி உதவியை வழங்கியிருந்தது. ஒரு இலட்சத்து இருபதினாயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீடுகள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு ஒரு வருடமேனும் செல்லும். இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சரியான நேரத்தில் உதவியை உறுதி செய்வதற்காக மதிப்பீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து இலட்சம் ரூபா வீதம் நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம்
குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் (Inter-American Highway) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலை… The post குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம் appeared first on Global Tamil News .
வெறும் 2 டொலரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட்; அமெரிக்க லொத்தர் வரலாற்றில் அதிஸ்டம்!
அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 2 டொலருக்கு வாங்கிய ‘பவர்போல்’ லொத்தரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்துள்ளது. கிருஸ்துமஸ் நாளில் குறித்த நபருக்கு அதிஸ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டியுள்ளது. அமெரிக்காவின் பிரபல ‘பவர்போல்’ லொத்தரின் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) குலுக்கலில், ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்க லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை வெறும் 2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில், […]
துணை இராணுவ குழுவாக செயற்பட்ட ஈபிடிபியின் பெரும்பாலானவர்களை இலங்கை புலனாய்வு துறை பயன்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்திடமிருந்து துப்பாக்கிகளை பொறுப்பு எடுத்தவர்கள் பலர் இறந்து விட்டார்கள் பலர் வெளிநாடு சென்று விட்டார்கள் அவை எங்கே இருக்கின்றன என்பது எனக்குத்தெரியாதென டக்ளஸ் குற்றப்புலனாய்வு பிரிவிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை டக்;ளசுக்கு 2000 ஆம் ஆண்டில் இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலில் ரி -56 துப்பாக்கிகள் 13 மற்றும் 9மிமி கைத்துப்பாக்கிகள் 6 பற்றிய பதிவுகளே காணப்படுகின்றன. அவற்றை தனது சொந்த பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் வேறு பயங்கரவாத மற்றும் கொலை கொள்ளை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கையொப்பமிட்டு இவற்றை டக்ளஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு தனது சொந்த பொறுப்பில் இருக்க வேண்டிய தனது பாதுகாப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆயுதங்கள் தற்போது எங்கே இருக்கின்றன என்பதை தான் அறியவில்லை என தற்போது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் அவர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்கள் சில நாட்டின் பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாளத்திற்கு சென்று இருப்பது அவர் இந்த விடயத்தில் இருந்து தற்போது தப்புவது கடினம் என்ற விடயம் ஊடக பரப்பில் பரவலாக பேசப்படுகிறது இதனிடையே கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதுசிடம்'நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.
Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல. Nelson | நெல்சன் இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! என்றார்.
Jana Nayagan Audio Launch: கடைசி படம்னு சொன்னதுனால கொஞ்சம் வருத்தமா இருக்கு! - லோகேஷ் கனகராஜ்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், \ 'ஜனநாயகன்' அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள். Vijay with Lokesh Kanagaraj எனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, 'லியோ -2' படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் 'ப்ளடி ஸ்வீட்' என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள். என்றார்.
“கிளீன்சூட்” NPP யிடம் சிக்குமா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக அரச… The post “கிளீன்சூட்” NPP யிடம் சிக்குமா? appeared first on Global Tamil News .
JanaNayagan Audio Launch: அவரே ஒரு Elevation தான்! - பாடலாசிரியர் விவேக்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், நான் 'ஜனநாயகன்' படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன். அனைத்து பாடல்களையும் நான் அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது எழுதினேன். Lyricist Vivek - JanaNayagan Audio Launch என்னுடைய வேலையைப் புரிந்துக் கொண்டு இரண்டு படங்களிலும் வேலை பார்க்க இடம் கொடுத்ததற்கு நன்றி. நான் பாடல்கள் மூலம் அவரை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்! இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் மற்றுமொரு Elevation பாடலும் வரவிருக்கிறது. என்றார்.
BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?
வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?” எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம். பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை. BB TAMIL 9 -DAY 82 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 82 ‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… / ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!) பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி. ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை. இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம். பாருவிடம் தான் உடன்படும் மற்றும் முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி. பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா? “ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும் ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார். BB TAMIL 9 -DAY 82 விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம். 'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’ ‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா? ‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?! BB TAMIL 9 -DAY 82 இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார். “மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி. விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம். BB TAMIL 9 -DAY 82 தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம். ‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச். “அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார். BB TAMIL 9 -DAY 82 விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா? பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது. “விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு. வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா? கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா. “நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம். BB TAMIL 9 -DAY 82 “பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல். “நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான். “நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை. சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு. BB TAMIL 9 -DAY 82 ‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’ கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல. “நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது. பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார். “என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. BB TAMIL 9 -DAY 82 “ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல். இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும்.
பெங்களூருவில் அதிகரிக்கும் காற்று மாசு: ஆக்ஷனில் இறங்கிய ஆணையம்...
பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே பெங்களூரு வளர்ச்சி ஆணையம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
Northeast US Winter Storm Causes Major Flight Disruptions
A severe winter storm has caused major travel problems in the United States, especially in the northeast, during the busy
கனடாவில் காய்ச்சல் பரவுகை தொடா்பில் வெளியான அறிவிப்பு
கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் (Flu) பரவல் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் காய்ச்சல் வைரஸ் “அதிகமாக பரவும் தன்மை கொண்டதும், கடுமையான தாக்கம் ஏற்படுத்தக் கூடியதுமானதாக” இருப்பதாக தொற்று நோய் மருத்துவர் கிறிஸ்டோபர் லேபோஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக காய்ச்சல் பரவல் பருவத்தின் பின்னர்பகுதியில் உச்சத்தை எட்டும் நிலையில், இந்த ஆண்டில் அது முன்பே தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக H3N2 […]
Keraniganj Madrasa Blast Injures Four, Bomb Materials Seized
In Bangladesh, a blast at a madrasa in Keraniganj today injured four people, including a woman and two children. Following
Delhi Customs Committee Meeting Strengthens Stakeholder Confidence
The Customs Clearance Facilitation Committee held a meeting today in New Delhi to build confidence among stakeholders. The meeting was
கலசபாக்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திருவண்ணாமலை கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Shallow Water Ice Found on Mars for Exploration
Scientists have found signs of shallow water ice on Mars in a region that could be ideal for human exploration.
CSK: ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. சிஎஸ்கே வரும் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக்: ராஜ தந்திர திட்டமுங்க சார்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக் ஆகியோர் வர உள்ளனர். இதனால்தான், ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெரிய பெரிய வீரர்களை வாங்கவில்லை எனக் கருதப்படுகிறது.
தங்கம், வைரத்தால் ஆன புதிய ராமர் சிலை; அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை
புதுடெல்லி, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில், மதிப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்ந்த ஒரு அபூர்வமான சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம் போல ஜொலிக்கும் இந்த பிரம்மாண்ட சிலை, வைரம், மரகதம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த சிலை, தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் […]
டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்; நீதிமன்றம் அதிரடி!
கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் […]
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ” மக்களின் காணி மக்களுக்கே .. […]
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது. கல்முனை […]
சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா
சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா வெள்ளிக்கிழமை ( 26 ) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம […]
Oppo Reno 15 Series Expected Soon in India
The Oppo Reno 15 series is likely to launch in India soon. The company recently teased the lineup, which currently
பாஜக எங்களை பெற்றெடுக்க பிரசவம் பார்த்த திருமாவளவன்! சீமான் முரட்டு அட்டாக்
விஜய் மற்றும் சீமான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்த நிலையில் இதற்கு சீமான் நக்கல் பதில் தெரிவித்துள்ளார்.
இரண்டே நாளில் முடிவுக்கு வந்த ஆஷஸ் போட்டி…60.6 கோடி இழப்பு?
ஆஸ்ரேலியா :ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெறும் இரண்டு நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த குறுகிய போட்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு (CA) சுமார் 5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.60.6 கோடி) நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. MCG-யில் முதல் இரு நாட்களும் ரசிகர்கள் முழு அளவில் கூடினர். மூன்றாவது நாள் டிக்கெட்டுகளும் […]
'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்'டார்கெட்
பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்... அதில், 'இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல... இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன... அசிங்கப்படுத்துகின்றன. அன்புமணி, ராமதாஸ் வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர் H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன? அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன... பொறுப்புணர்ச்சி அல்ல. உதாரணம் அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம். அன்புமணி, ராமதாஸ் கட்சி சின்னத்தை மீட்க வேண்டும்! இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன். இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்? வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க வேண்டும். பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். வயதாகிவிட்டது... இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என் கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும் போராடுவேன். இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம் என்று பேசியுள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
Quick and Easy Sausage Pasta with Tomato Sauce
Quick Sausage Pasta with Tomato Sauce Ingredients: 1 tbsp olive oil 1 red pepper, seeds removed and chopped 400g (14oz)
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைப் பேச்சை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார். அந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
Winter Red Cabbage with Apples and Spices
Ingredients: 1 tbsp sunflower oil 1 onion, chopped 450g (1lb) red cabbage, shredded 225g (8oz) cooking apples, peeled, cored, and
சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு
video link: https://fromsmash.com/xTwUnAhU8A-dt “சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியது. இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை தானம் செய்தமையை காண முடிந்தது. “ஓர் […]
மயோன் குரூப் அனுசரணையில் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், சுனாமி 21ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வின் போது, இந்த டீ-சேர்ட் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மயோன் குரூப் சார்பாக, சாய்ந்தமருது மயோன் ரவல்ஸ் அண்ட் டூவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எ.எல்.எம்.நியாஸ் அவர்கள், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் ஆதம்பாவா அவர்களிடம், றிஸ்லி முஸ்தபா […]
இந்திய ரயில்வேயின் கவச் திட்டம்.. காலக்கெடு முடிந்தது ஏன்? எதிர்பார்ப்புகளும் சவால்களும்..
2026 ஆம் ஆண்டுக்குள் கவச் அமைப்பு இந்த முக்கிய வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இந்திய ரயில்வே பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Goutham Krishna Shines on World Rapid Chess Debut
Fifteen-year-old Indian chess prodigy Goutham Krishna made a remarkable impression on the opening day of the FIDE World Rapid Chess
“எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை!
தையிட்டியில் விகாரை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள்… The post “எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனத் தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டம் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மானத்தினை பெறாதது. அவ்வாறான ஓர் ஆவணத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதிக்க முடியாது. அதனை வர்த்தமாணிப்படுத்த முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எதிர்த்தமையினால் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மான அனுமதியுடன் அணுகுவது என முடிவு எட்டப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட யாழ.; குடாநாட்டின் பத்து ஆண்டுக்கான திட்டம் மாவட்ட அபிவிருத்திக் […]
இலவசம் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 27, 2025) நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் தமிழக அரசியல், ஊழல், இலவசங்கள், தமிழ் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். ஊழல் மற்றும் லஞ்சத்தை விமர்சித்த சீமான், “ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் என்றால் உண்மை, நேர்மை ஒரு பக்கம். மக்கள் எந்த பக்கம் நிற்பார்கள்?” என்று […]
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்
நைஜீரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது உத்தரவின்படி, வடமேற்கு நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த பயங்கரவாதிகள் அப்பாவி கிறிஸ்தவா்களை படுகொலை செய்தனா். அந்தப் பயங்கரவாதிகளை நான் முன்பே எச்சரித்தேன். கிறிஸ்தவா்களைக் […]
Nigerian Village Witnesses Intense U.S. Air Attack
Sanusi Madabo, a 40-year-old farmer from the small Nigerian village of Jabo, was preparing to go to bed on Thursday
மணிக்கு 700 கி.மீ. வேகமா? புதிய சாதனை படைத்த சீனா.. மேக்லேவ் ரயிலின் சிறப்பம்சங்கள் இதோ!
சீனா உருவாக்கிய புதிய மேக்லேவ் (Maglev) ரயிலானது மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் படைத்துள்ளது. இதன் மூலம் சீனா உலக சாதனை படைத்து உள்ளது.
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் மக்களின் காணி மக்களுக்கே .. என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார். அதனை அடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Hostel Students Rely on Parks for Exam Preparation
In a small hostel room in Anna Nagar, shared with three other students, Varadhan S. from Cuddalore district prepares for
நான் திரும்ப வந்துட்டேன்! காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில்!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளூர் கிரிக்கெட்டில் திரும்ப உள்ளார். விஜய் ஹசாரே டிராபி குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ள அவர், ஜனவரி 3-ஆம் தேதி , ஜனவரி 6-ஆம் தேதி கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) உறுதிப்படுத்தியுள்ளது. சுப்மன் கில் சமீபத்தில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து […]
Chennai Metrowater Installs Meters to Reduce Water Loss
Chennai Metrowater is working to reduce water loss and improve water management by installing electromagnetic flow meters at all its
டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றுமாலை கைது செய்யப்பட்டார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, பாதாள
சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது!
சீதுவை பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுவொன்றை… The post சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது! appeared first on Global Tamil News .
IND vs NZ ODI: ‘இந்திய அணியில்’.. இளம் பேட்டிங் வரிசை: சீனியர்கள் நீக்கம்: காரணம் இதுதானாம்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியில் இளம் பேட்டிங் வரிசை இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் பேட்டர்களை ஆட வைக்க திட்டமாம்.

28 C