SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

பகிடிவதை புரிந்த யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று மீண்டும் […]

அதிரடி 13 Dec 2025 9:30 pm

சாண்ட்விச் , இறைச்சி, பால் பொருட்களுடன் பிரிட்டன் செல்லத் தடை

ஐக்கிய இராச்சியம், ஏப்ரல் 12 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை பிரிட்டன் நாட்டிற்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தடை சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள், பக்கேஜ் செய்யப்பட்டவையாகவோ அல்லது டியூட்டி பிறியில் (duty free) வாங்கப்பட்டவையாக இருந்தாலும் கூட பிரிட்டன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் […]

அதிரடி 13 Dec 2025 9:30 pm

அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்!

சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு… The post அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 9:03 pm

பேஸ்புக் களியாட்டம் –போதைப்பொருள் பாவனை – NPP முக்கியஸ்தரின் மகள் கைது?

விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் சட்டவிரோத ‘பேஸ்புக் களியாட்டம்’ ஒன்றில் ஈடுபட்ட 26 பேர் தெல்தெனியப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.… The post பேஸ்புக் களியாட்டம் – போதைப்பொருள் பாவனை – NPP முக்கியஸ்தரின் மகள் கைது? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 8:48 pm

ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் ; டிரம்ப் எச்சரிக்கை

தொடர்ந்து இடம்பெறும் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3-ம் உலக போரை ஏற்படுத்தி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில […]

அதிரடி 13 Dec 2025 8:30 pm

கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album

காலை 08:20 போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 08:45 பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் காலை 09:00 - மூன்று ஆண் யானைகளையும் காண கூடிய மக்கள் காலை 10:00 - நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் மாலை 04:00 - கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் ஊருக்கும் யானைகள் மாலை 05:00 - அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்து கண்காணிக்கும் வனத்துறையினர் மாலை 06:00 - வனத்துறையின் Elephant Trackers யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர் மாலை 06:30 - வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள் மாலை 06:40 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் மாலை 07:30 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தன அதிகாலை 05:00 - சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என சாலை பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் மறுநாள் காலை 06:30 - அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை நுழைய வேகமாக செல்கின்றன மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை முழுவதும் வளம் வர தொடங்கின மறுநாள் மதியம் 02:00 - அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல் மறுநாளும் மாலை 04:00 வனத்திற்கு செல்ல தைல மாற காட்டைவிட்டு வெளியேற முயற்சி மாலை 06:00 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - தெலுங்குபாளையம் மாலை 06:30 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - காட்டம்பட்டி மாலை 07:00 - தென்னை தோப்புகளிருந்து வெளியேறி அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள் இரவு 08:45 - கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர் இரவு 10:30 - யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் - ஒன்னிப்பாளையம்

விகடன் 13 Dec 2025 8:18 pm

பிரான்சில் கால்நடை அம்மை நோய்.. தீவிர தடுப்பூசி நடவடிக்கை.. இல்லையெனில் என்னாகும் தெரியுமா?

பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை அழிக்கும் பழைய கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், இனி தடுப்பூசி மூலம் நோயை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமயம் 13 Dec 2025 8:00 pm

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் தடுமாற்றம்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சமயம் 13 Dec 2025 7:53 pm

சிவாஜிக்கு உடல்நல சீரின்மை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த 15 அக்டோபர் 5 அன்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக கடந்த மாதம் 28 ஆம் திகதி தெரிவாகியிருந்தார்.

பதிவு 13 Dec 2025 7:51 pm

Kamal Haasan: சினிமா தேஞ்சுகிட்டே இருக்கிறதா ஒரு பயம் - ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் பேச்சு!

நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி, வேல்ஸ் தியேட்டர் ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அங்கே தனது திரைப் பயணம் குறித்தும் திரைத்துறை முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். inauguration of the Vels Trade & Convention Centre, Vels Film City, and Vels Theatres Kamal Haasan பேச்சு நான் சினிமாவின் குழந்தை அவர், கமலஹாசனுக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நான் நடிச்சதில்ல, ராஜ்கமலும் அவரும் சேர்ந்து ஒரு படமும் பண்ணதில்ல. ஆனால் என்னையும் அவரையும் சேர்த்து பிணைக்கும் பெயர் எம்ஜிஆர். எம்ஜிஆர்தான் எங்களை நண்பர்களாக சகோதரர்களாக மாற்றினார் என்றால் அது மிகையாகாது. நான் சினிமாவின் குழந்தை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அது பண்ணிட்டே இருக்கும்போது கத்துக்கிட்டது தான் எல்லாமும். என் மொழியும், என் கல்வியும் இப்பொழுது நான் பெற்றிருக்கும் பட்டங்களும் எல்லாமே எனக்கு சினிமா கொடுத்ததுதான். அப்படிப்பட்ட சினிமா ஏதோ தேஞ்சுகிட்டே இருக்கிற மாதிரி ஒரு 20-25 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பயம். 17 ஃப்ளோர்களுடன் கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்று இருந்தது. அதைப் பார்த்து நான் எதிர் ஸ்டுடியோல இருந்து பொறாமைப்பட்டுருக்கேன். சின்ன பையனா இருக்கும்போது சரவணன் சார்கிட்ட போய் 'ஏன் சார் நம்ம ஒரு 20 ஃப்ளோர் வச்சோம்னா ஆயாசியாவிலயே பெரிய ஸ்டுடியோ நம்ம ஸ்டுடியோ ஆயிடுமே' அப்படின்னு சொல்லிருக்கேன். 'சரி நீ பார்த்துப்பியா அந்த பத்து ஃப்ளோர'ன்னு கேட்டாரு. நான் பயந்து முடியாதுன்னு சொல்லிட்டேன்... Isari Ganesh - Kamal Haasan - Sushmitha இந்த ஃபிலிம் சிட்டியை பார்த்துக்கொள்ளப்போகும் சுஷ்மிதா அமெரிக்காவில் உள்ள ஸ்டோடியோக்களைப் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை இங்கு கொண்டுவர வேண்டும். எனப் பேசினார். மேலும், இந்த பான் இந்தியா மூவி என்பதை துவங்கியதே சென்னைதான். பான் இந்தியா ஃபிலிம் மேக்கிங் ஹப் என்றால் அது சென்னைதான். உலகத்திலேயே அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் இந்த நாட்டில், இப்படி ஒரு இடம் (வேல்ஸ் ஃபிலிம் சிட்டி) இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதர் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது... இங்கே சினிமா பயிலும் ஒரு அரங்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். கவர்மெண்ட் இல்ல; இண்டஸ்ட்ரி அதை செய்ய வேண்டும்! என்றும் கூறினார். கமல்ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

விகடன் 13 Dec 2025 7:39 pm

சொல்லல்ல செயல்!

யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக அமையம் மற்றும் யாழ் ஊடக அமையம் ஆகியன இணைந்து ஒரு தொகை நிதியை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி முரசுமோட்டையில் உள்ள ஊடகவியலாளரின் இல்லத்துக்கு சென்ற யாழ் ஊடக அமைய பிரதிநிதிகள் குறித்த நிதியுதவியை நேரடியாக வழங்கி வைத்தனர். இவர் ஈழநாதம் பத்திரிகையில் 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளராகவும், இறுதி யுத்த காலப்பகுதிகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு 13 Dec 2025 7:39 pm

மன்னாரில் அனுர!

பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். 'பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும், உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்'எனத் தெரிவித்தார். இதன்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அவர், மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தரத் திருத்த மதிப்பீடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், மன்னார் மாவட்டத்தின் வெள்ள நீர் கடலைச் சென்றடைவதற்கான வடிகால் வாய்க்காலின் அளவு போதாமையாக உள்ளமை குறித்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார். மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் நிலவும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும், தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அதிகாரிகளிடம் வினவினார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பெரும்போகத்துக்கான நீர் விநியோகம், மீள்விதைப்புக்கான ஆயத்தங்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். நிவாரணக் கொடுப்பனவுகள் மக்களைச் சென்றடைவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மரக்கறி மற்றும் தானியச் செய்கை அழிவுகள் தொடர்பிலும், குறிப்பாக வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களின் இழப்புகளுக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி வினவினார். இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், அடுத்த ஆண்டு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும், குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும், பதிவு செய்யப்படாதவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமித்து நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்தார். மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்'என உறுதியாகத் தெரிவித்தார். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 25,000 ரூபா கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் கறாராக உத்தரவிட்டார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் அழிவடைந்துள்ளமை குறித்துக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அது தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தினார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள், அபாய வலயங்களில் வசிப்போரை மீள்குடியேற்றுதல் மற்றும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிப்பு குறித்தும் ஜனாதிபதி தெளிவான வழிகாட்டல்களை வழங்கினார். இறுதியாகச் சுகாதாரத் துறை குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையிலான முன்னாயத்தக் கூட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் காரணமாகப் பேரிடரால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்தன எனவும் அவர் தெரிவித்தார். வெள்ள அனர்த்த வேளைகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விசேட உயரமான அம்புலன்ஸ் வண்டி மற்றும் அம்புலன்ஸ் படகுத் தேவையை அவர் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, உடனடித் தீர்வுகள் குறித்தும், எதிர்கால நீண்டகாலத் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்என வடமாகாண ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 13 Dec 2025 7:33 pm

Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்‌ஷன்? - பரபரக்கும் வீக்எண்டு!

விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். வியானா முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இவர்களில் பிரஜின் சென்ற வாரம் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டார். சென்ற வாரமே பிரஜினுடன் எஃப் ஜே,வும் வெளியில் வருகிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் ஆதிரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததால் எஃப்.ஜே – ஆதிரை – வியானா என முக்கோண ரிலேசன்ஷிப்பில் கன்டென்ட் கிடைக்கும் என எதிர்பார்த்ததால் கடைசி நிமிடத்தில் அந்த முடிவை கை விட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டது. எஃப் ஜே இந்நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷனுக்கான ஷூட் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நாமினேஷன் பட்டியலில் ரம்யா, சாண்ட்ரா, வியானா, எஃப்.ஜே உள்ளிட்டோர் இருந்த நிலையில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேறலாம் என்ற ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அதன்படி எஃப்.ஜே. ரம்யா, வியானா மூன்று பேருமே இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் இன்றைய எபிசோடிலேயே கூட அனுப்பப் பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். மூன்று பேரும் வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்‌ஷன் எனச் சொல்லலாம்.!

விகடன் 13 Dec 2025 7:24 pm

முறிந்த வாழைகளின் கதை?

யாழில் கமநல சேவைகள் திணைக்களம் வாழை மற்றும் சிறு பயிர்களுக்கான அழிவுக்கான விண்ணப்ப படிவத்தை இன்று சனிக்கிழமை 13 திகதி கோப்பாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். அனேகமான வாழை விவசாயிகள் தங்கள் தோட்டங்களை துப்பரவு செய்து முடித்துள்ள நிலையில் படிவம் வந்துள்ளது. இதனிடையே புயலின் போது முறிந்த வாழைகளது புகைப்படங்களை கோரும் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்;துள்ளது. வெள்ள அனர்த்தம் நடைபெற்று ஒரு 15நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது முறிந்த மரங்களது புகைப்படங்களை தந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 13 Dec 2025 7:08 pm

Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium

Buddhi Clinic, which has firmly established Chennai as a global hub for neuropsychiatry innovation through its pioneering interventional and integrative

சென்னைஓன்லைனி 13 Dec 2025 6:59 pm

நயினார் நாகேந்திரன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு.. டெல்லியில் பேசிக் கொண்டது என்ன? சூடுபிடிக்கும் அரசியல் களம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமயம் 13 Dec 2025 6:49 pm

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]

அதிரடி 13 Dec 2025 6:30 pm

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]

அதிரடி 13 Dec 2025 6:30 pm

354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் அரசுடமையாக்க நடவடிக்கை

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். நேற்றையதினம் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை […]

அதிரடி 13 Dec 2025 6:25 pm

யாழில் கிணற்றில் வீழ்ந்த பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சுப்பையா நளினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை நாட்டில் தொடரும் அசாதாரண காலநிலையைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களைச் சந்தித்து வரும் […]

அதிரடி 13 Dec 2025 6:23 pm

சென்னை மாதிரி லக்னோ பதிரனாவை குறிவைக்கும்! சஞ்சய் பங்கர் ஸ்பீச்!

சென்னை :IPL 2026 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 4 சீசன்களாக அணியில் இருந்த ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை விடுவித்துள்ளது. இதனால் ஏலத்தில் பல அணிகள் அவரை குறிவைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரரும் RCB பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பதிரனாவை இலக்காகக் கொள்ளலாம் என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தெரிவித்தார். […]

டினேசுவடு 13 Dec 2025 6:01 pm

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்பு: எகிறும் நாமக்கல் முட்டை விலை- புதிய உச்சத்தால் அச்சம்

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.

சமயம் 13 Dec 2025 5:56 pm

மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் ஈசனின் வேக வடிவங்களில் முதன்மையானது ஸ்ரீருத்ர வடிவம். ருத்ர பகவான் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாக இருப்பதால் ஸ்ரீருத்ரனை வணங்குபவர்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும் அவர்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும் எனப்படுகிறது. அதிலும் வேதத்தின் சிறப்பான மந்திரமான ஸ்ரீருத்ரத்தை பலமுறைகள் உச்சரித்து செய்யப்படும் மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ரிஷிகளாலும் முழுமையாக விவரிக்க முடியாத இந்த மகாருத்ர ஹோமத்தின் பலன்களையும் சிறப்புகளையும் இங்கே காண்போம். மார்கழி என்றாலே ஈசனைக் கொண்டாடும் புண்ணிய மாதம். அதிலும் ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்குரிய 6 அபிஷேக நாள்களில் ஒன்றான ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் திருவாதிரை திருநாளும் ஆருத்ரா தரிசனமும் கிடைக்கும் மாதம் மார்கழி. மார்கழியில் இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சக்தி விகடன் இதழும் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் திருக்கோயிலும் இணைந்து நடத்த விரும்பினோம். அதன்படி வரும் 2026 ஜனவரி 2-ம் தேதி காலை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று சொல்லப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் சிவனடியாரான சிவஸ்ரீ செந்தில்குமார், அருளார்கள் காட்டியருளிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே `அண்டவாணர் அருட்துறை’ என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இந்த ஆலயம் எந்தவித பேதமும் இன்றி எல்லா மக்களாலும் வழிபடப்படும் அதிசய ஆலயம். இங்கு இலவசமாகவே எல்லா வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு அருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர் களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவாரங்களையும் முறையாகப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார் சிவஸ்ரீ செந்தில்குமார். மகாருத்ர ஹோமம் இந்த அண்டவாணப் பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மேலும் ஒருவர் தனது ஆயுளில் ஒருமுறையாவது மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் ஆன்மிக அறிவுரை. இந்த ஹோமத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று 8 விதமான பரிகார பலன்களையும் சொல்லியுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். 1. ருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி உண்டாகும். கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். மகாருத்ர ஹோமம் 2. ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் யாவும் அளிக்கும் ஹோமம் இது. 3. வீரத்தின் அடையாளமான ருத்ர பகவானை திருப்தியாக்கும் வழிபாடு என்பதால் இந்த ஹோமத்தால் தோஷங்களும் பாவங்களும் நீங்கி உங்கள் வாழ்வே புதிய உற்சாகத்தில் மீண்டு எழும். 4. தீர்க்க முடியாத நோய்களும் தரித்திரமும் விலகும். குறிப்பாக மலையளவு கடனும் நீங்கி செல்வசௌபாக்கியம் பெருகும். 5. மங்கல காரியங்கள் யாவும் மளமளவென நடைபெறும். நீங்கள் தொடங்கும் சகல காரியங்களும் சுபமாக முடியும். வழக்குகள் தீரும். 6. கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, எதிர்மறை சிந்தனைகள் தீரும். வீட்டில் சுபீட்சம் உண்டாகும். 7. குடும்ப பிரச்னைகள் தீரும். குறிப்பாக தம்பதி ஒற்றுமை உண்டாகும். தீய சகவாசம், பழக்கங்கள் கொண்டவர் மனம் திருந்தி நல்ல வழியில் நடப்பர். 8. ருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தவர் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று உயர்ந்த பதவியை அடைவர். அவர்களை யாரும் வெல்ல முடியாது என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் சத்திய சாட்சி. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த மகாருத்ர ஹோமத்தில் இன்றே சங்கல்பித்துக் கொள்ளுங்கள். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில்  சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும

விகடன் 13 Dec 2025 5:37 pm

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை!

பிரபல யூடியூபரும், விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று (13.12.25) அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து… The post பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 5:36 pm

வதோதரா–மும்பை விரைவுச் சாலை திட்டம்.. ரூ.100 கோடி செலவில் JNPA இணைப்பு.. NHAI உருவாக்கும் மாற்றுப் பாதை!

டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

சமயம் 13 Dec 2025 5:14 pm

இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவலை கொடுத்த டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்!

சென்னை : வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவுஅதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16 முதல் 18 செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8 கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் […]

டினேசுவடு 13 Dec 2025 5:14 pm

`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த்திக் சிதம்பரம் தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. savukku shankar தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார்.  கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும். என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்

விகடன் 13 Dec 2025 5:12 pm

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 2026ல் திமுக-காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம்

மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2026ல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனா்.

சமயம் 13 Dec 2025 5:10 pm

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (13) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிரடி 13 Dec 2025 4:59 pm

இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தத்திற்காக நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். அடுத்த வாரம் பட்ஜெட் விவாதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இத்தாலியின் CGIL தொழிற்சங்கம், அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களில் சுமார் 61% பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது.

பதிவு 13 Dec 2025 4:58 pm

உக்ரைன் 600 தடவை இரசாயணத் தாக்குதல்களை நடத்தியது: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

ரஷ்யா - உக்ரைன் மோதலில் உக்ரைன் இரசாயன ஆயுதங்ளை பயன்படுத்தி உள்ளது என ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. குளோரோபிக்ரின், சி.எஸ். வாயு, பிரஸ்சிக் அமிலம் உள்பட பல்வேறு ரசாயன பொருட்களை கொண்டு 600-க்கும் மேற்பட்ட முறை உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. படுகொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளன என அந்நாட்டின் உயரதிகாரியான அலெக்சி டிஸ்சேவ் செய்தியாளர்களிடம் கூறினார். உக்ரைனில் உள்ள இரசாயன மற்றும் அணு ஆயுத அமைப்புகளுக்கும் கூட அச்சுறுத்தல்கள் உள்ளன என குறிப்பிட்ட அவர், அவை தீங்கு விளைவிக்கும் ஆபத்துகளும் உள்ளன என கூறினார். இரசாயன ஆயுத தாக்குதலுக்காக ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களையும் உக்ரைன் பயன்படுத்தியது. தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார். எனினும், இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

பதிவு 13 Dec 2025 4:54 pm

மீண்டும் கொழும்பில் குடியேறும் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைகள் பெறுவதற்கு இலகுவாக இருப்பதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக கொழும்பில் குடிபெயர உள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சத்திர சிகிச்சை மேற்கள்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 13 Dec 2025 4:51 pm

வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்து

கால்வாயில் கவிழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (13) பிற்பகல் 11.00 மணியளவில் பொலன்னறுவை ZD பிரதான இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது வேனில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 13 Dec 2025 4:49 pm

துருக்கியலிருந்து உக்ரைனுக்குச் சென்ற கப்பல் பற்றி எரிகிறது

உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷியா நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் அதனுள் போருக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் இருந்தாகக் கூறப்படுகிறது. துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பதிவு 13 Dec 2025 4:45 pm

லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வருகை.. வன்முறையில் ஈடுப்பட்ட ரசிகர்கள் - நடந்தது என்ன?

மெஸ்ஸி திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், கோபமடைந்த ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

சமயம் 13 Dec 2025 4:39 pm

ஆஸ்திரேலியா: தடையை எதிா்த்து ரெடிட் வழக்கு

உலகிலேயே முதல்முறையாக 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை எதிா்த்து, சமூக வலைதளமான ரெடிட் வழக்கு தொடா்ந்துள்ளது. ஏற்கெனவே, ‘டிஜிடல் ஃப்ரீடம் புராஜெக்ட்’ என்ற தன்னாா்வ அமைப்பு இந்தத் தடையை எதிா்த்து கடந்த வாரம் தொடா்ந்த வழக்குக்கு அடுத்தபடியாக இந்த வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலுமே இந்தத் தடை ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதிரடி 13 Dec 2025 4:30 pm

மன்னிச்சிக்கோங்க மெஸ்ஸி..இனிமே இப்படி நடக்காது! கொல்கத்தா சம்பவத்திற்கு சாரி கேட்ட மம்தா பானர்ஜி!

கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் […]

டினேசுவடு 13 Dec 2025 4:24 pm

யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் தங்களது… The post யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 4:19 pm

BB 9: `ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் தரேன்’ - பார்வதி, கம்ருதீனிடம் காட்டமான வி.சே

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 68 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருந்தார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடைப்பெற்றது. பார்வதி, கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வாரம் முழுவதும் மைக்கை சரியாக மாட்டாதக் காரணத்திற்காக பார்வதி, கம்ருதீன் இருவரையும் விஜய் சேதுபதி கோபமாக கேள்வி கேட்கிறார். BB Tamil 9: அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க- பார்வதியை சாடிய விக்ரம் மக்கள் உங்க பேச்சக் கேட்க கூடாதுன்னு முடிவு எடுத்துட்டீங்க, அப்புறம் எதுக்கு உங்களுக்கு மைக். ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் உங்களுக்கு தரேன். விஜய் சேதுபதி மத்தவங்க கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு பிரச்னை இல்ல. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்ல. ப்ளீஸ் மைக்கை கழட்டிடுங்க என்று விஜய் சேதுபதி கோபமாக பேசுகிறார்.

விகடன் 13 Dec 2025 4:08 pm

ஈரோட்டில் 8க்கு 8… தவெக போடும் 2026 தேர்தல் கணக்கு… விஜய்க்கு செங்கோட்டையன் கான்ஃபிடன்ட்!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரிக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டை தட்டி தூக்க பல்வேறு வியூகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமயம் 13 Dec 2025 3:53 pm

தை பிறந்தால் வழி பிறக்கும்…கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற புரட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வரும் அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், ஜனவரி 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த், “அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். […]

டினேசுவடு 13 Dec 2025 3:48 pm

IPL 2026 Mock Auction: ‘கெமிரான் கிரீனை’.. 21 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே: லிவிங்ஸ்டன் தொகை எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2026 மாதிரி ஏலத்தை, ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தினார். அப்போது, இந்த மாதிரி ஏலத்தில், கெமிரான் கிரீன், லியிம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 13 Dec 2025 3:32 pm

வாஷிங்டனில் வௌ்ளம்: பல ஆயிரம் குடும்பங்கள் வௌியேற்றம்

வாஷிங்டன்னில் தொடர் கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தில் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் அடித்து செல்லப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வௌ்ளம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் வாஷிங்டன் மாகணத்தின் சியாட்டில் பாயும் […]

அதிரடி 13 Dec 2025 3:30 pm

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான…பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினி நன்றி!

சென்னை :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் […]

டினேசுவடு 13 Dec 2025 3:17 pm

'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! > பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்! தமிழ்நாடு > கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி! > 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! > நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்! > தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! > 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால்… pic.twitter.com/FPwNC9Xl0b — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 13, 2025

விகடன் 13 Dec 2025 3:11 pm

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது! வீட்டின் கதவை உடைத்து நடவடிக்கை-ஏன் தெரியுமா?

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமயம் 13 Dec 2025 3:03 pm

தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர்‌ வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது. தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 15-ம் தேதியில் தான், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் கூட்டம் நடக்கும் எனவும் அதில் இறுதி முடிவை அறிவிப்பதாக முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில், அமித் ஷா தமிழ்நாடு வருகை அறிவிப்பு வெளியானது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்கான தேதியைத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன் அடம்பிடிக்கும் கே.பழனிசாமி அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் எடுக்காத முயற்சிகளே இல்லை. பாஜக மேலிடமும் கே.பழனிசாமியிடம் பேசி பார்த்தது. ஆனால், அவர் கொஞ்சம்கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. ஒருகட்டத்தில் (கடந்த ஜூலை மாதம்) பன்னீர்செல்வம் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இருந்தாலும், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து வந்தார் அவர். கடந்த 7-ம் தேதி, கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்தும் பேசினார். இந்தநிலையில் தான் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாசிட்டிவ் சிக்னல்? தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். சில மாதங்களாக, ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இடையில் செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி.தினகரனும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன? பாஜக நகர்வுகள் இன்னொரு பக்கம், பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும்‌ முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது. 'மெகா கூட்டணி' என்கிற பெயரில் தான் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில் அந்த இரு கட்சிகளைத் தவிர வேற எந்தக் கட்சியும் இதுவரை இடம்பெறவில்லை. தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக. அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம்‌ முடிவு? இதை பாஜக செய்யும் என்று நினைத்து தான் பன்னீர்செல்வமும் தனது முடிவை ஒத்தி வைத்திருக்கிறார். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தப் பேச்சு அவர் டெல்லி சென்ற போதே எழுந்தது. தனிக்கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட திட்டமும் அவர் வசம் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இவை அனைத்தும் அமித் ஷா தமிழ்நாடு வருகைக்கு பிறகே தெரியும்.! இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

விகடன் 13 Dec 2025 2:50 pm

எம்.ஜி.ஆர், விஜய் ஒப்பீடு சரியில்லை… ஆனால் இவர் ஒரு Cult- ஐ.நா கண்ணன் அதிரடி!

தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா கண்ணன் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 13 Dec 2025 2:43 pm

'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Messi `GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச. 13)இந்தியா வந்தார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருத்திருந்தனர். பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. Kolkata அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!

விகடன் 13 Dec 2025 2:39 pm

PUN vs JHKD: ‘236 ரன்களை’.. அசால்ட்டாக சேஸ் செய்த இஷான் கிஷன் அணி: 45 பந்தில் 125 அடித்த வி.கீ.பேட்டர்!

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்த 236 ரன்கள் இலக்கை, ஜார்கண்ட் அணி துரத்தி, அபார வெற்றியைப் பெற்றது. இஷான் கிஷன், குஷக்ரா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார்கள். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.

சமயம் 13 Dec 2025 2:39 pm

ரயில் பயணிகளுக்கு தரமான உணவு.. ஃபிளைட் ரேஞ்சுக்கு இருக்கும்.. சூப்பர் திட்டம்!

ரயில்களில் விமானங்களுக்கு ஈடான தரமான உணவுகளை வழங்கும் திட்டத்த்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

சமயம் 13 Dec 2025 2:35 pm

Akhanda 2 Review: 'இது காரசார விருந்து காது; சாத விருந்துரா!' - விசில் பறக்க வைக்கிறாரா பாலையா?!

நந்தமுரி பாலகிருஷ்ணா - போயப்பாட்டி ஶ்ரீனு கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'அகண்டா' படத்தின் சீக்குவல் பாகமான 'அகண்டா 2: தாண்டவம்' இப்போது திரைக்கு வந்திருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் (பாலகிருஷ்ணன்) மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இந்தப் பாகத்தில் வளர்ந்து விஞ்ஞானியாக இருக்கிறார். ஜனனிக்கு ஒரு பிரச்னையென்றால் மீண்டும் வருவேன் என முதல் பாகத்தில் வாக்குக் கொடுத்த அகண்டா (பாலகிருஷ்ணன்) இந்தப் பாகத்தின் தொடக்கத்திலேயே தவம் செய்யத் தொடங்குகிறார். சிறு வயதிலேயே பெரிய, பெரிய சாதனைகளை நிகழ்த்தும் ஜனனி நோய்களைத் தடுக்கும் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கிறார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருக்கிறார் மற்றொரு விஞ்ஞானி அர்ச்சனா (சம்யுக்தா). Akhanda 2: Thaandavam Review இந்திய ராணுவம் தனது மகனைக் கொன்றுவிட்டதால் இந்தியா மீது பகை கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் சீன தளபதி, மகா கும்ப மேளா நிகழ்வில் வைரஸ் ஒன்றைப் பரப்பி பயோ போர் தொடுக்க முயற்சிக்கிறார். அந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அர்ச்சனா, ஜனனி உட்பட சில விஞ்ஞானிகள் தடுப்பூசி ஒன்றையும் கண்டுபிடிக்கிறார்கள். சீனாவின் செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசியல்வாதி அஜித் தாக்கூர் (கபீர் துகன் சிங்) தடுப்பூசியுடன் விஞ்ஞானிகள் குழுவையும் சேர்த்து அழிக்க முயற்சிக்கிறார். அகண்டா தவத்திலிருந்து எழுந்து வந்து ஜனனியையும், இந்தியாவையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு ஆக்ஷன் தாண்டவமாடி இதில் சொல்லியிருக்கிறார். பாலையாவின் `அகண்டா' விமர்சனம்: சும்மாவே ஃபைட்டர்ஸ் பறப்பாங்க... இதுல ஃபேன்டஸினா கேட்கவா வேணும்? பாலமுரளி கிருஷ்ணா, அகண்டா என இரட்டை வேடங்களுக்கு ஆக்ஷன், பன்ச் வசனம் உள்ளிட்ட தனது டிரேட்மார்க் விஷயங்களால், கதாபாத்திரத்தின் மசாலா தன்மையைக் கூட்டி 'ஐ எம் தி பவர்ஃபுல்' என நிரூபிக்கிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. ஒவ்வொரு பன்ச் வசனங்களுக்குப் பிறகும் பேசும் ஆங்கிலம், மிகை எக்ஸ்பிரஷன்கள் ஆகியவற்றால் திரையரங்கத்தை பிளாஸ்ட் மோடுக்கும் கொண்டுசென்றிருக்கிறார். ரெளடிகளை அடித்துப் பறக்கவிடும் பாலமுரளி கிருஷ்ணா 1000 வாலா பட்டாசு என்றால், ராணுவ வீரர்கள், ரோபோட்களை அடித்துத் தூளாக்கும் அகண்டா 10000 வாலா! Akhanda 2: Thaandavam Review ஒரு பாடல், சொற்ப காட்சிகளில் மட்டுமே வந்து போகும் சம்யுக்தாவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. சிறிது நேரம் வந்தாலும் தனது உடல்மொழி, முகபாவனைகளால் கவர்கிறார் ஆதி பினிஷெட்டி. ஆனால், வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் இவரின் கதாபாத்திரம் ஆதியின் நடிப்பை வீணடித்திருக்கிறது. படத்தின் முக்கிய எமோஷனைத் தாங்கிப் பிடிக்கும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா தனது கதாபாத்திரம் கோரும் அழுத்தமான நடிப்பை எட்டிப் பிடிக்காதது ஏனோ! டெம்ப்ளேட் அரசியல்வாதி, வெளிநாட்டு வில்லன் கதாபாத்திரங்களில் கபீர் துகன் சிங், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் டீசண்ட் ரக நடிப்பை வழங்கிச் செல்கிறார்கள். Bhagavanth Kesari: `ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டரு; பாலையா அன்டே தண்டரு!' - படம் எப்படி?  பெரும்பாலான பகுதிகள் க்ரீன் மேட்டில் படம் பிடிக்கப்பட்டாலும் பாலையாவின் மாஸ் உடல்மொழிக்குத் தனது ஃப்ரேம்களால் பவர் கூட்டியதோடு, லைட்டிங்கில் கலர்ஃபுல் தீபங்களையும் ஏற்றி ஆரத்தி எடுக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ராம் பிரசாத், சந்தோஷ் டீடேக். மராத்தான் ரக வேகத்தில் நகர வேண்டிய திரைக்கதையை இத்தனை பொறுமையாக படத்தொகுப்பாளர் தம்மிராஜு கோத்திருப்பது, நம்மைத் தாலாட்டு விஷயம்ரா! கதையிலிருந்து 'வர்டா டூர்ர்...' என ஓடி, களத்திற்குத் தொடர்பில்லாத விஷயங்களை ஓவர்டோஸில் பேசுவதையாவது அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். தமன் இசையில் பாடல்கள் திரையரங்கை திருவிழாக் கோலமாக மாற்றினாலும், அந்தப் பாடல்களையெல்லாம் எங்கோ கேட்டிருக்கிறோமோ என உணர்வையே தருகின்றன. ஆக்‌ஷன் காட்சிகளை முடித்துவிட்டு களைப்பின்றி மாஸ் நடைபோடும் அகண்டாவுக்குப் பின்னணி இசையால் பூஸ்ட் கொடுக்கத் தவறியிருக்கிறார் தமன். Akhanda 2: Thaandavam Review டெம்ப்ளேட் ரக மெட்டுகளை மட்டுமே தனது லைப்ரரியிலிருந்து கொடுத்திருக்கும் தமன், இம்முறை விருந்து படைக்காதது பெரும் ஏமாற்றம். பெரும்பாலான இடங்களில் கச்சிதமான வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ், பனி படர்ந்த இந்திய எல்லைப் பகுதி நிலங்களின் உணர்வைக் நமக்கு கடத்துகிறது. ஆனால், பொம்மைகளாக விரிந்து நிற்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளைக் கண்டும் காணாமல் சென்றிருப்பது மைனஸ்! உப்பு, காரம் என இந்த டோலிவுட் சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பல்வகை சேர்மானங்களைச் சேர்த்து படையல் வைக்க முயன்றிருக்கிறார்கள் ஆக்ஷன் இயக்குநர்கள் ராம் லக்ஷ்மண். ஆனால், அதன் ருசி சுமார்தான்! பாலய்யா வஸ்தாவய்யா - 13: `ஸ்ரீதேவியை அம்மா ஸ்தானத்தில் பார்க்கிறேன்' - பாலய்யா சொன்ன பகீர் காரணம் ஆக்ஷன், பன்ச், எமோஷன் என பாலையா 'வுட்' சினிமாவின் அத்தனை விஷயங்களையும் கலந்துகட்டி கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு. நிதானமாக கதைக்குள் நகரத் தொடங்கினாலும், பாலையாவின் மாஸ் இன்ட்ரோ நம்மைத் தட்டியெழுப்பி டஜன் எனர்ஜிகளைக் கொடுத்து விசில் பறக்கவைக்கிறது. அதிலும் எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் ரெஃபரென்ஸ், ஜெய் பாலையா பாடல் ரெஃபரன்ஸ் ஆகியவை ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட்! ஆனால், அங்கிருந்து 'ஐ அம் தி ட்ரபிள்' எனக் கதை தானாகவே சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களில் சிக்கிச் சறுக்கல் பாதைக்கு டூர் அடிக்கிறது. Akhanda 2: Thaandavam Review லாஜிக் எதிர்பார்க்காமல் கடந்துசென்றாலும் அழுத்தமில்லாத பின் கதைகள் 'ஜெய் பாலையா' எனக் கோஷம் போட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்களை 'பை பை' சொல்ல வைக்கின்றன. இப்படியான வழக்கொழிந்த எழுத்தால், இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகளும் ஃப்யூஸ் போய்விடுகின்றன. அத்தோடு படத்தின் கதைக்குத் துளியும் சம்மந்தமில்லாமல் மெசேஜ்களைத் திணிக்கும் வகையில் க்ளாஸ் எடுப்பது யாருக்காக, எதற்காக?! மாஸ் சினிமாவில் சில ஆன்மீக டச். ஆனால், திடீரென வலதுசாரி பிரசார சினிமா ரூட்டைப் பிடித்து வெறுப்பரசியலைத் தூண்டுவது தவறான செயல். ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒரே கோட்டில் இணைத்துச் சொல்லும் விஷயத்தில் முழுமையும், தெளிவும் இல்லை. வழக்கமான பாலையா சினிமாவுக்கான விஷயங்கள் இதில் இருந்தாலும் வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் எழுத்தாலும், தவறான அரசியல் பேசியதனாலும் வழி தவறி மலையேற முடியாமல் சறுக்கி இருக்கிறார் இந்த அகண்டா 2! பாலய்யா வஸ்தாவய்யா 10: அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க..! - பாலய்யாவையே பதற வைத்த நடிகை

விகடன் 13 Dec 2025 2:33 pm

குஜராத்தில் பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது: 5 பேர் காயம்!

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கட்டுமானத்திலிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரஞ்ச் நதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியைச் சமன் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்துவிழுந்தது. இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. பாலத்தின் இடிந்துவிழுந்த பகுதியில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஐந்து பேரும் நிலையாக இருப்பதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் […]

அதிரடி 13 Dec 2025 2:30 pm

   கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி!  

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியாவின் கொல்கத்தாவில் காத்திருந்த அனுபவம், ஒரு கசப்பான வரலாறாக… The post கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 2:16 pm

⚖️ முன்னாள் சபாநாயகர்   பிணையில் விடுதலை  

இலங்கையின் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருந்த ஒரு வழக்கில், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வால (Ashoka Ranwala) நீதிமன்றத்தால் பிணையில்… The post ⚖️ முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுதலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 1:58 pm

பாதியில் கிளம்பிய மெஸ்ஸி …டென்ஷனாகி பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்!

கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட […]

டினேசுவடு 13 Dec 2025 1:51 pm

ஐஸ்வர்யா ராய்: பொறுத்துக்கொள்ள முடியாது - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது. அபிஷேக் பச்சன் எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும். நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம். அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை. அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். பீகார்: ரயிலில் யாசகம் எடுத்தப் பெண்ணை விரும்பி மணந்த இளைஞர் - நெகிழ்ச்சி கதை

விகடன் 13 Dec 2025 1:45 pm

⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! –மனோ கணேசன்

சமீபத்தில் மலையகத்தில் ஏற்பட்ட பேரவலத்திற்குப் பிறகு, அங்குள்ள மக்களின் பிரதானமான கோரிக்கையாக “பாதுகாப்பான வதிவிடக் காணி” என்ற உரிமை… The post ⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! – மனோ கணேசன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 1:44 pm

2026 புத்தாண்டுக்கு IRCTCயின் சுற்றுலா பேக்கேஜ்: பெங்களூரு டூ காசி–கயா–அயோத்தி பயணம்- முழு தகவல் இதோ

2026 புத்தாண்டை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூருவில் இருந்து காசி, கயா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல் வெளியாகி இருக்கிறது.

சமயம் 13 Dec 2025 1:37 pm

லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் ; இலங்கை இளைஞர் மீது குற்றசாட்டு !

அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையின் குடியேறி ஒருவர்,மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . எனினும்,சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை, குறித்த இலங்கையர் மறுத்துள்ளார் 20 வயதான யாஷின் ஹிமாசார என்ற அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். தாம் குற்றமற்றவர் இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த ஹிமாசார, கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு மற்றும் உள்ளிட்ட ஏழு […]

அதிரடி 13 Dec 2025 1:36 pm

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன் என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்து பதற்றமடைந்தார். சாலை மறியல் உடனடியாக அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அருணின் மனைவி இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்தார். உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் - காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்!

விகடன் 13 Dec 2025 1:31 pm

தொழிலதிபரை ஏமாற்றிய விகாராதிபதிக்கு பிடியாணை!

தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி உவதென்ன சுமன தேரர் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா தேங்காய் எண்ணெய்க்காக மோசடியான காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபரான பிக்கு காவலில் வைக்கப்பட்டு […]

அதிரடி 13 Dec 2025 1:31 pm

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி தகவல்!

சென்னை :தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) காரணமாக சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். “தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் திமுக ஈடுபடும். டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியான பிறகு SIR பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்” என்று அவர் கூறினார். அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கையை உயர்த்தியது எப்படி என்றும் கேள்வி […]

டினேசுவடு 13 Dec 2025 1:23 pm

முல்லைத்தீவு விபத்தில் காயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு

கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது. பிரபல உதைபந்தாட்ட வீரர் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். […]

அதிரடி 13 Dec 2025 1:22 pm

பகிடிவதை குற்றச்சாட்டு –யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை […]

அதிரடி 13 Dec 2025 1:18 pm

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை!

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை ஈரானியப்… The post அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 1:14 pm

ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் (RGAY)!

Rajiv Awas Yojana (RAY) Housing Scheme: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதோடு, பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 13 Dec 2025 1:11 pm

கை மாறியது பிக்பாஸ் வீடு இருக்கும் EVP வளாகம் - வேல்ஸ் ஃபிலிம் சிட்டி உதயம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டான `பிக்பாஸ் வீடு' சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கத்தில் இருந்த ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள். இந்த ஈவிபி வளாகத்தை தற்போது ஐசரி கணேஷின் வேல்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. அதில் புதிதாக அமைக்கப்பட்ட வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் தியேட்டர்ஸ் மற்றும் வேல்ஸ்  ஃபிலிம் சிட்டி ஆகியவற்றை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐசரி கணேஷ் பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆரம்பத்தில் பொழுது போக்கு தீம் பார்க்காக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து ஒன்றின் தொடர்ச்சியாக தீம் பார்க் செயல்பட தடை விதிக்கப்பட்டது. எனவே சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வந்தனர். எனவே ஈவிபி ஃபிலிம் சிட்டி என அழைக்கப் பட்டு வந்தது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலிருந்தே இங்குதான் நடைபெற்று வருகிறது. தவிர சீரியல் மற்றும் சினிமா ஷூட்டிங்குகள் இங்கு நடந்து வந்தன. ’காலா’ படத்தின் தாராவி செட் உள்ளிட்ட பல படங்களுக்கு இங்கு செட் போடப்பட்டு படமாக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வளாகத்தை மொத்தமாக சந்தோஷ் ரெட்டியிடமிருந்து வேல்ஸ் குழுமம் வாங்கியது. வாங்கியதும் சில மறுசீரமைப்பு வேலைகளைச் செய்து தற்போது வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என பெயரை மாற்றியுள்ளனர். இந்த வளாகத்தை இன்று சென்னையில் திறந்து வைத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வளாகம் கை மாறினாலும் வழக்கம் போல் சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங் நடைபெறுவது தொடரும் என்கிறார்கள்.!

விகடன் 13 Dec 2025 1:04 pm

கேரளாவை அச்சுத்துறுத்தும் எலிக்காய்ச்சல்.. 209 பேர் உயிரிழப்பு - மத்திய அமைச்சர் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 13 Dec 2025 1:03 pm

யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை (Ragging) குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட 19 சிரேஷ்ட மாணவர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி… The post யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Dec 2025 1:01 pm

Beyond Vanity Metrics: Why 2025 Became the Year of Meaningful Influence

For years, influencer marketing in India grew on a foundation of shallow indicators—follower counts, likes, and impressions. These vanity metrics shaped budgets and brand decisions despite offering little clarity on true impact. But as India’s creator economy matured, 2025 became the year the industry decisively shifted from superficial numbers to meaningful, measurable influence. This transformation was driven by market realities, long-overlooked inefficiencies, and the growing need for data-backed deployment and the first few to rise agilely to the occasion were the Founder led D2C brands who had no option but to make it work. The Hidden Market That Changed Everything One of the biggest triggers for this shift was the realisation that the influencer marketing industry had been massively undercounted. While traditional estimates placed the sector at ₹3,000–4,000 crore, KlugKlug’s data revealed that India’s actual influencer marketing economy had already crossed ₹10,000 crore. Nearly 75% of all spending was happening outside the typical larger Brands or agency channels—through direct brand-creator engagements, founder-driven D2C Brand campaigns, and long-tail micro-influencer collaborations. These hidden investments exposed how outdated measurement models were, forcing brands to rethink how they quantify influence.As spending grew, so did inefficiencies. KlugKlug’s analysis showed that for larger conventional brands, only 50–60% of brand budgets reached creators, And another 30–50% was lost to audience fraud, mismatched influencer selection, demographic misalignment, and poor hygiene checks. A creator with 500,000 followers meant nothing if 40% of that audience was inactive or irrelevant. Brands realised that vanity metrics inflated perceptions but not outcomes. Audience authenticity, relevance, and measurable engagement became the new currency of influence. The Rise of Value-Based Influence To counter inefficiencies, brands began adopting advanced measurement models like KlugKlug’s K-EMV and other associated Deep Interaction Ratios, which revealed the true earned media value of influencer campaigns. Beauty brands consistently delivered 1.8–2.5X earned value, while categories like home and kitchen recorded 5–7X multipliers—far beyond what vanity metrics suggested.The Big Consumer Reality - GenZ: 43% of India’s shoppers now Gen Z,who have extremely defined media consumption (Social media ie YouTube and Instagram, Gaming, OTTs), traditional advertising can no longer compete. Content and Influencer Marketing is not just another media in the mix, its where discovery, trust and purchase decisions are being made, not just amplifiers its the most trusted and frequently accessed touchpoint in the consumer journey of 43% of a very powerful audience. One only needs to add Millenials to the mix and the market would not have much else left. Attribution Became Non-Negotiable 2025 also marked a breakthrough in how brands measured conversions. Earlier attribution models captured only 8–12% of true impact which was myopically (and expectedly) through link clicks and swipe-ups, leaving the majority of influence unaccounted for. The smarter marketers in the industry began shifting to holistic attribution—connecting awareness, engagement, intent, and commerce. And what was this: a Delta in Sales everything else being equal, and things like Purchase Intent KPIs on Ecommerce platforms much like our Unaided recall in the brand track days. This evolution allowed marketers to measure influence across every stage of the funnel, not just the last-click metrics that had dominated for years. Deployment 2.0 Redefined ROI With better hoslistic measurement came smarter deployment strategies. Brands adopted precision-driven frameworks that evaluated creators based on audience behaviour, interest clusters, geography, engagement hygiene, and category relevance. These scientific models improved Spend: EMV efficiency by 30–100%, proving that influence wasn’t about working with the biggest creators—it was about working with the right ones. The industry moved from “posting content” to engineering influence. A Permanent Shift Toward Authenticity By the end of 2025, the old playbook of influencer marketing has become obsolete for businesses and the larger brands have much catching up to do and its happening. Brands no longer caring about Views or topline Engagement or follower vanity of deployed an X number of ‘Mega” Influencers who are fatigued and pretty much the lowest ROI in the ecosystem. The demand for audience transparency, validated impact, and honest attribution beyond clicks. Creators, too, evolved—focusing on community building, credibility, and delivering commerce-linked results. Meaningful influence became the new benchmark, reshaping partnerships, budgets, and content formats across the ecosystem. Wrapping it up 2025 will be remembered as the year when the Indian influencer industry transitioned from hype-driven metrics to outcome-driven credibility. With more accurate market valuation, stronger measurement tools, and data-first frameworks, influence is now defined not by visibility but by verifiable impact. This shift has unlocked a more transparent, efficient, and trustworthy creator economy—ushering in an era where influence finally means something.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Dec 2025 12:49 pm

Asian Paints launches Apex Ultima Protek campaign featuring Chess Grandmasters Anand and Gukesh

Mumbai: Asian Paints has unveiled its latest campaign for Apex Ultima Protek, showcasing Graphene-powered exterior protection designed to withstand Southern India’s harsh weather conditions. The campaign features chess legends Viswanathan Anand and Gukesh Dommaraju, blending science, strategy, and storytelling to position the product as the “Grandmaster of Tough Protection.”The film presents Anand and Gukesh in a playful duel of wits, drawing a parallel between strategic brilliance in chess and intelligent defense for homes. Apex Ultima Protek’s advanced Graphene technology reinforces its lamination system, offering superior resistance against rain, heat, humidity, and dust, and comes with a 12-year performance warranty.Speaking on the launch, Amit Syngle, MD & CEO, Asian Paints , said, “Innovation drives everything we create at Asian Paints, and the move towards Graphene-powered protection marks a major leap forward in the exteriors category. Southern India’s coastal weather deserves solutions rooted in advanced science, and Graphene enables a level of toughness and durability never seen before in exterior paints. Apex Ultima Protek powered with Graphene embodies this breakthrough. Featuring Viswanathan Anand and Gukesh Dommaraju, we have conceptualised this campaign to bring alive the idea of strategic, intelligent defence from the chess board to the exterior walls of your home. This communication brings together all the 3 grandmasters crafting the perfect move.” B. Ramanathan, Chief Client Officer, Ogilvy India, added, “This campaign features Vishy and Gukesh emphasizing the importance of defence — in the game and for homes. Their chemistry lands the power of Graphene in a simple, engaging manner, positioning Asian Paints Apex Ultima Protek as the true Grandmaster of Home Protection.” Through this campaign, Asian Paints reinforces its commitment to innovation, combining cutting-edge technology with culturally resonant storytelling to deliver unmatched exterior wall protection for homes in Southern India.https://www.youtube.com/watch?v=BTcwQzBpH7ohttps://www.youtube.com/watch?v=NeCQGbtVyCohttps://www.youtube.com/watch?v=69r1kGyNcuM

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Dec 2025 12:44 pm

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; முற்பணம் வழங்குவது குறித்து வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரச ஊழியருக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை […]

அதிரடி 13 Dec 2025 12:39 pm

Chennai Hosts Asia’s Largest Interventional Complications Course in Cardiology

Asia Interventional Complications Course (AICC 2.0), in association with Promed Hospital, was held in Chennai as a two-day advanced academic

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:36 pm

Xiaomi India launches REDMI 15C 5G with sleek design, immersive display and dependable performance

Xiaomi India today announced the launch of the REDMI 15C 5G, a smartphone designed to deliver a sleek aesthetic, a

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:34 pm

15 ஆம் தேதி நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:31 pm

தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு!

பாங்காக், டிச. 12: கம்போடியாவுடன் நடைபெறும் தீவிர மோதலுக்கிடையே தாய்லாந்தின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. விரைவான புதிய தோ்தலுக்கு வழிவகுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘மக்களிடம் அதிகாரத்தை திரும்ப அளிப்பதற்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’ என்றாா். ஏற்கெனவே மன்னா் மஹா வஜ்ரலங்காரனின் அங்கீகாரத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த கலைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிய தோ்தலை இன்னும் 45 முதல் […]

அதிரடி 13 Dec 2025 12:30 pm

கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:29 pm

15 ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:23 pm

கேரளா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது –நகராட்சி, மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:21 pm

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:19 pm

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம்

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:17 pm

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். மேலும் நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:15 pm

Cricket, Culture, Nostalgia, and Viral Moments kept the nation scrolling: Instagram India 2025 Year-in-Review

Mumbai: Instagram has released its 2025 Year-in-Review for India, highlighting the trends, cultural moments, and personalities that dominated the platform over the year. The report underscores how Indian culture went global, cricket continued to captivate audiences, nostalgia shaped feeds, and viral micro-moments kept users engaged throughout the year.Cricket reaffirmed its central role in Indian pop culture, driving major conversations on Instagram. Key highlights included India’s Champions Trophy win, RCB’s viral chant “Ee Sala Cup Namdu,” Virat Kohli’s emotional retirement from Test cricket, and the Indian women’s cricket team’s World Cup victory.The report also reflected India’s cultural crossover with the world. Highlights included Hanumankind’s performance at Coachella, Shah Rukh Khan, Kiara Advani, and Diljit Dosanjh attending the Met Gala, the global embrace of Indian Kolhapuri chappals, and A.R. Rahman’s tracks featured on international runways. Conversely, global moments resonated strongly with Indians, from Ed Sheeran’s India tour and Taylor Swift’s engagement to Cristiano Ronaldo’s updates, generating massive engagement.Nostalgia and aesthetics continued to shape feeds, with fandoms growing around films like Wake Up Sid, characters such as Bunny from Yeh Jawaani Hai Deewani, and songs like “Nadaan Parinde” and “Shehar Mein” from Rockstar. The lo-fi digi-cam aesthetic also gained traction across reels and carousels, especially among Gen Z and young adults.Instagram also spotlighted individuals who captured the platform’s imagination, including a girl resembling the Mona Lisa at Mahakumbh, Ayush, who mispronounced “croissant” as “Prashant,” Sonali, the mehendi artist recreating Rihanna’s wedding makeup look, and Sudhanshu Shukla, the first Indian in 40 years to travel to the International Space Station. Popular personalities such as Samay Raina and the show India’s Got Latent kept conversations buzzing all year.Micro-moments also drove engagement, with viral trends including actor Veer Pahariya’s ‘langdi’ hook step, debates over the 90-hour work week, snippets from Shark Tank India 4, the Coldplay concert viral moment, fake wedding parties, the Labubus fascination, the glowing turmeric trend, Parineeti Chopra’s “meri body main sensations” dialogue from Hasee Toh Phasee, the “Vishal Mega Mart” meme, and the popularity of 51201080 ultra-wide thin reels.Instagram’s 2025 Year-in-Review shows a year defined by global cultural exchange, continuous engagement, and the diverse micro-moments that kept India scrolling and sharing throughout 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Dec 2025 12:14 pm

ஜனவரி மாதம் வேட்பாளர்களுக்கான தேர்வு நேர்காணலை நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல்

சென்னைஓன்லைனி 13 Dec 2025 12:13 pm

WazirX launches ‘ZERO’ campaign to eliminate crypto trading fees in India

Mumbai: WazirX, a cryptocurrency trading platform, has unveiled its latest initiative, “ZERO”, aimed at removing trading fees and making crypto participation more accessible for all investors. The campaign seeks to empower high-frequency traders, regular investors, and non-trading participants by removing a key barrier to entry and delivering tangible financial benefits to India’s growing crypto community.Indian investors currently spend thousands of crores annually on trading fees across platforms. By eliminating fees entirely, WazirX hopes to reduce this burden and encourage broader engagement with digital assets.[caption id=attachment_2484635 align=alignleft width=220] Nischal Shetty [/caption]Speaking on the initiative, Nischal Shetty, founder of WazirX, said, “Our user-centric approach is what made us India’s largest exchange. The belief that the customer is king is reflected on our platform, and this feature aims to reinforce that. We take customer feedback seriously and always work in their best interest.” The campaign was rolled out in phases, beginning with a teaser film across social media and in-app channels to build anticipation. This was followed by the official announcement through a detailed blog, an in-app pop-up, an announcement video, and informative emailers to users.To amplify the message, WazirX executed a full-page newspaper advertisement, which sparked renewed conversation online as users shared images of the spread across social media. The campaign concluded with an interactive social media task, encouraging users to spot and share instances of ‘ZERO’ in their surroundings. Creative submissions ranged from zero balance bank accounts to makeup palettes, engaging millions of users nationwide.Since its launch, the integrated WazirX ZERO campaign has successfully reached millions of users, highlighting the platform’s commitment to removing barriers and redefining crypto trading in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Dec 2025 12:13 pm

நாடாளுமன்ற தாக்குலின் நினைவு தினம் : டிச.13 அன்று நடந்தது என்ன? நாட்டையே உலுக்கிய சம்பவம்!

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சமயம் 13 Dec 2025 12:11 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 காலிப்பணியிடங்கள்; சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடைக்கும் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? தேசிய நலவாழ்வு குழும திட்டம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஆகியவற்றில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 79 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 13 Dec 2025 12:08 pm

Charlotte Tilbury launches “Rulebook for Brides” campaign in India starring Sobhita Dhulipala

Mumbai: Charlotte Tilbury, the globally acclaimed luxury beauty brand founded by Charlotte Tilbury MBE, has unveiled its latest campaign, Rulebook for Brides, in partnership with Nykaa. The five-part content series brings expert wedding makeup guidance to brides across India, starring India’s beauty muse, Sobhita Dhulipala.The campaign celebrates the spirit of Indian weddings – bold, beautiful, and exuberant – through Charlotte Tilbury’s signature artistry. Throughout Rulebook for Brides, Sobhita shares her tips, tricks, and secrets to achieving a flawless, confident, and radiant bridal look for every magical moment. Charlotte Tilbury highlighted the campaign, saying, “Darlings, I am so excited to reveal that the stunning, sensational Sobhita Dhulipala is the face of my NEW! Rulebook for Brides series, in partnership with Nykaa! Sobhita perfectly embodies the modern bride – RADIANT, REAL and READY to make her DREAMS COME TRUE! EVERY BRIDE deserves to feel like the most BEAUTIFUL, CONFIDENT, GLOWING version of themselves. That is why, with Rulebook for Brides, I have shared the BEAUTY SECRETS that last through every EMOTION, CELEBRATION and UNFORGETTABLE MOMENT!” The campaign emphasizes Charlotte’s golden rules for bridal beauty, including: Hug-Proof Radiance: Airbrush Flawless Foundation and Airbrush Flawless Finish powder for a transfer-proof, sweat-proof complexion. Glow for Every Photo: Hollywood Flawless Filter and Unreal Blush Healthy Glow Sticks to ensure a radiant, photogenic look. Mesmerizing Eyes: Luxury Palette and Rock ‘N’ Kohl eyeliner for captivating eyes. Perfect Lips: Matte Revolution lipstick in Pillow Talk Medium, a universally flattering shade. Long-Lasting Finish: Airbrush Flawless Setting Spray to keep makeup flawless for up to 16 hours. Rulebook for Brides is now live exclusively on Nykaa’s digital platforms. Fans and brides-to-be can follow @mynykaa to explore Sobhita Dhulipala’s hand-picked favourites and gain insights into creating their dream bridal look. View this post on Instagram A post shared by Nykaa (@mynykaa)

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Dec 2025 12:02 pm

BB Tamil Day 67: பாருவுக்கு சார்பாக அமித்; அடங்காத பாரு - கம்மு ஜோடி; 68வது நாளின் ஹைலைட்ஸ்!

பாரு எப்படியும் டாப்-5-ல் வருவார். ஏனெனில் அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கிங். ஆனால் அவரது திறமை முழுக்க நெகட்டிவிட்டியாகத்தான் இருக்கிறதே ஒழிய, துளி கூட கிரியேட்டிவிட்டி இல்லை. காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் இருக்கின்றன.  BB Tamil Day 68 பாரு கம்மு ரொமான்ஸ் அலப்பறைகளை பிக் பாஸும் விசேவும் கண்டிப்பது போல் பாவனை மட்டுமே செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அப்போதுதான் ‘ச்சே.. என்னப்பா இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணுது..’ என்கிற எரிச்சலில் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்ப்பார்கள். ‘bad publicity is better than no publicity’ என்றொரு பழமொழி இருக்கிறது.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 68 இன்னமும் மீதமிருக்கிற 9 வழக்குகளில் ஒரு வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். அதில் பெரிய கேஸ் என்று பார்த்தால், பாரு -கம்மு ரொமான்ஸ் காரணமாக வீட்டார் தண்டனை அனுபவிப்பது. மற்றதெல்லாம் சில்லறை கேஸ்கள்.  எனவே அனைவருமே கோரஸாக இந்த வழக்கைத்தான் விசாரிக்க வேண்டும் என்று முட்டையை இழந்த எரிச்சலில் கத்தினார்கள். ‘ஏன் இந்த வன்மம் குழந்தைகளா?’ என்று சிணுங்கினார் பாரு. BB Tamil Day 68 ‘புரோட்டின் இல்லாம நான் கஷ்டப்படறேன்’ என்று சான்ட்ரா சொல்ல ‘அடிப்பாவி.. நான் கூட பிரஜின் இல்லாமத்தான் கஷ்டப்படறேன்னு நெனச்சேன்’ என்று டைமிங்கில் ஜோக் அடித்தார் சபரி. மனிதருக்கு ரொமான்ஸ்தான் வரவில்லையே தவிர, எப்போதாவது ஜோக் அடிக்க வருகிறது.  சுபிக்ஷா, திவ்யா, சான்ட்ரா, ரம்யா ஆகியோர் இணைந்து தொடுத்த இந்தப் பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையெல்லாம் விசாரிக்க வேண்டாம். பாரு - கம்முவிற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. பிக் பாஸ் எத்தனையோ முறை கண்டித்தும் கூட இன்னமும் தேனிலவு தம்பதியினர் போலத்தான் சுற்றுகிறார்கள். அரோரா சொன்னது போல இது கண்றாவியான காதல் என்பதாகவே எரிச்சலைக் கிளப்புகிறது.  பாருவிற்கு சார்பாக மல்லுக்கட்டிய வக்கீல் அமித் ஏறத்தாழ ஒட்டு மொத்த வீடும் பாரு-கம்முவிற்கு எதிராக இருக்கும் இந்த வழக்கில் அவர்களுக்குச் சார்பாக வாதிடுவது சிரமம். ஆனால் அமித் இதைச் சிறப்பாக எதிர்கொண்டார். ‘இது வேடிக்கையான வழக்கு. அவர்கள் செய்த தவறுக்கு வீட்டார் இணைந்து ஏற்கெனவே தண்டனை கொடுத்து அவர்களும் அந்தப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். பிறகு ஏன் இதை பொதுவில் வர வேண்டும்? அவர்களை அவமானப்படுத்துவதான் நோக்கமா?” என்று சிறப்பான பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் அமித்.  ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பாருவை வேலை செய்ய வைக்க தலையால் தண்ணீர் குடிப்பவரே அமித்தான். அந்த அளவிற்கு பாரு டபாய்க்கிறார். ஆனால் வக்கீல் என்பதால் பாருவிற்குச் சார்பாகப் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அமித்திற்கு. பாவம்.  BB Tamil Day 68 தட்டில இருந்த பாதி முட்டையைக் கூட பிடுங்கிட்டாங்க” என்று சுபிக்ஷா கண்கலங்க, “அப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது?” என்று நீயா நானா கோபிநாத் போல வாயைக் கிளறினார் சபரி.  அமித் திறமையாக பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் அதை ரப்பர் போட்டு அழிக்க வேண்டும் என்கிற அளவிற்குப் பிறகே அவரே சொதப்பினார். “ஏம்மா.. சுபிக்ஷா… ரவா கஞ்சி மட்டும் சாப்பிட்டு உங்களால இருக்க முடிஞ்சுதுல்ல. அப்புறம் பால் இல்லாம இருக்க முடியாதா?” என்று கேட்டது அபத்தம். “அது டாஸ்க்கிற்காக செஞ்சது. பிக் பாஸிற்காக செய்யலாம். பாருவின் ரொமான்ஸிற்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அமித்தை நோஸ் கட் செய்தார் சுபிக்ஷா. ‘மைக் மறைச்சுட்டு பைனான்ஸ் விஷயம் பேசினோம்’ - பாருவின் அந்தர்பல்டி “என்னால காஃபி இல்லாம இருக்கவே முடியாது” என்று ரம்யா சிணுங்க, “ஏம்மா.. நீங்க இன்னமும் வாழ்ந்துட்டுதானே இருக்கீங்க?” என்று சொதப்பினார் அமித். “அப்ப அவங்களைச் சாகச் சொல்றீங்களா?” என்று டைமிங்கில் உள்ளே வந்தார் வினோத்.  மைக்கை மூடி வெச்சுட்டு அப்படி என்னதாம்மா பேசுவீங்க?” என்று கேட்கப்பட்டதற்கு, பாரு சொன்னார் பாருங்கள் ஒரு விளக்கம். “நான் பர்சனல் மேட்டர்.. பணம் சம்பந்தப்பட்ட விஷயம்லாம் பேசுவேன்” என்று அப்பட்டமாகப் புளுகினார் பாரு. “பிக் பாஸ் உள்ளே வரும்போது ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருப்பீங்கள்ல.. இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு?” என்று நீதிபதி வியானா பாருவை மடக்க, சபையில் பலத்த கைத்தட்டல் கேட்டது.  BB Tamil Day 68 “என்னால மத்தவங்களுக்கு தண்டனைன்னு தெரிஞ்சப்ப கண்ணீர் முட்டிக்கிச்சு. வீட்டார் கொடுத்த தண்டனையையும் ஏத்துக்கிட்டோம். ஆனா க்ரூப்பிஸம் பண்ணி நிறைய வேலை வாங்கறாங்க” என்று ஆகாசப் புளுகு புளுகினார் பாரு. (யப்பா... உலக நடிப்புடா சாமி!).  பாரு பொதுவில் இப்படி மழுப்பி பொய் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும், பாரு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று. எனில் ‘மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களே. அவர்களுக்குத் தெரியுமே.. இருந்தும் நாம் இப்படி அபாண்டமாகப் புளுகுகிறாேமே’ என்கிற பதட்டமோ குற்றவுணர்ச்சியோ பாருவிடம் துளி கூட இல்லை.  அது மட்டுமில்லை. இந்த வழக்கே பாருவும் கம்முவும் இணைந்து செய்த ரொமான்ஸ் சேட்டைகளின் மூலம் கிடைத்த தண்டனைக்காகத்தான். ஆனால் கோர்ட்டில் கூட இந்த ஜோடி ஒன்றாகவே அமர்ந்து நெருக்கமாக உரசிக் கொண்டு தொடர்ந்து ரகசியம் பேசிக் கொண்டிருந்த கொடுமையை என்னவென்று சொல்வது? பிக் பாஸின் தண்டனை, வீட்டார் கண்டனம் - எதற்கும் அடங்காத பாரு - கம்மு ஜோடி “இவங்க பேசிக்கிட்டே இருக்காங்க” என்று மற்றவர்கள் புகார் செய்த போது ‘தனியா வந்து உக்காருங்க பாரு’ என்று நீதிபதி சொன்னால் கூட பாரு அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எங்களை யாரும் பிரிக்க முடியாது’ என்கிற மாதிரி அழிச்சாட்டியமாக அமர்ந்திருந்தார்.  “மத்தவங்க யாராவது இப்படி மைக்கை மறைச்சு பேசறதைப் பார்த்திருக்கீங்களா?” என்கிற கேள்வியை எழுப்புவதின் மூலம் பாருவிற்கு சப்போர்ட் செய்ய முயன்றார் அமித். “ஆமாம். அரோரா, துஷார் கிட்ட அப்படி பேசியிருக்கா” என்று பாரு சொல்ல, “அதனால்தான் துஷாரோட தல பதவி பறிக்கப்பட்டது என்கிற பாயிண்டை சிறப்பாக ஞாபகப்படுத்தினார் வியானா.  கோர்ட்டிலேயே பாருவிற்கும் FJ-விற்கும் இடையில் அவ்வப்போது முட்டிக் கொண்டது. அவங்கதான் பேசிட்டே இருக்காங்க” என்று ஸ்கூல் பிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டார்கள். “குடும்பத்துல பேருக்கு மட்டும்தான் லாயர் போல” என்று முணுமுணுப்பாக கமெண்ட் அடித்தார் FJ. இதனால் கோபம் கொண்ட பாரு அதை ஆட்சேபிக்க, கோர்ட்டில் சலசலப்பு.  BB Tamil Day 68 பாருவின் தந்தை வழக்கறிஞர் போல. இதைச் சுட்டிக் காட்டி FJ கிண்டலடித்ததால் பாருவிற்குக் கோபம் வந்தது நியாயம். “என் ஃபேமிலியையெல்லாம் இழுக்காத” என்று பிறகும் தனியாக வந்து ஆட்சேபித்தார் பாரு. ஆனால் ‘குடும்பத்திற்கே பால் ஊத்துவான் போல’ என்று FJவின் குடும்பம் பற்றி மிக மோசமாக பிரஜன் கமெண்ட் அடித்ததை வீக்கெண்ட் ஷோவில் அறிந்த FJ ஆத்திரப்பட்ட போது ‘ரொம்ப துள்றான் சார்’ என்று சொன்னவரும் இதே பாருதான்.  அதாவது தன் குடும்பம் பற்றி யாராவது சும்மா தொட்டு பேசினாலே ஆத்திரம் கொள்ளும் பாரு, FJ வின் குடும்பத்தினரின் இறப்பு அளவிற்கு ஒருவர் பேசும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி? அதேதான். தனக்கு வந்தால் ரத்தம்.  பாரு-கம்மு வழக்கு வரும் போதெல்லாம் இடைவேளை விட்டு விடுகிறார் பிக் பாஸ். இதன் மூலம் அவர்கள் இன்னமும் சுதாரித்துக் கொள்ள அவகாசம் தருகிறாரா என்று சந்தேகம் வருகிறது.  BB Tamil Day 68 ‘நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி' -  FJ - கம்மு சண்டை இந்த பிரேக்கில் FJ-விற்கும் கம்ருதீனுக்கும் இடையில் பயங்கரமான சண்டை ஏற்பட்டது. “நீயும்தான் வியானா கூட மைக்கை மறைச்சு வெச்சு பேசியிருக்க. வாரா வாரம் ஒரு பொண்ணு கூட சுத்தறே” என்று கம்மு சொல்ல, “நான் எதையும் மறைச்சுப் பேசலை. ஓப்பனாத்தான் பேசறேன்” என்று FJ மல்லுக்கட்ட, “அதான் ஆதிரை கேஸ்ல தோத்து அசிங்கப்பட்டியே?” என்று கம்மு டிரிக்கர் செய்ய, “நான் ஜென்டில்மேனா மன்னிப்பு கேட்டேன். உங்களை மாதிரி தப்பு செஞ்சுட்டு ஒப்பேத்தலை” என்று FJ விடாமல் சண்டைக்கு வர, இருவரும் முட்டிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது.  ஒரு கட்டத்தில் பாரு உள்ளே வர, அவரைப் போன்ற உடல்மொழியில், ‘ஸாரி.. ஸாரி’ என்று ஒழுங்கு காட்டிக் கொண்டே விலகிச் சென்றார் FJ. பாருவின் வாயில் இருந்து ஓர் ஆபாச வசவு வெளிப்பட்டது.  வழக்கு மீண்டும் தொடர்ந்தது. “எங்க ரெண்டு பேரையும் பேசக்கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது. கம்யூனிகேஷனை கட் பண்ண உரிமை இல்லைன்னு பாரு சொன்னாங்க. ஆனா ஆடியன்ஸ் கூட கம்யூனிகேஷனை கட் பண்ண அவங்களுக்கும் உரிமை கிடையாது” என்று சரியான பாயிண்ட்டை வைத்தார் சபரி.  “அவங்க மனப்பூர்வமாக தங்களின் தவறை உணர்ந்து தண்டனையையும் ஏத்துக்கிட்டாங்க. வேலையை ஒழுங்கா செய்வாங்க.. அதுக்கு நான் கியாரண்டி” என்று தானாக வந்து தலையைக் கொடுத்தார் அமித். கோர்ட்டின் வெளியே பாருவை வேலை செய்ய வைக்க முடியாமல் அல்லாடப் போகிறவரும் அவர்தான்.  BB Tamil Day 68 “ஒருத்தவன் நல்லவனா. கெட்டவனான்னு கண்டுபிடிக்கத்தான் இந்த கேம். இதுக்குப் பின்னாடி நூறு பேருக்கும் மேல வேலை செய்யறாங்க.. அதையெல்லாம் கெடுக்கறா மாதிரி ரெண்டு பேரும் நடந்திருக்காங்க. அதனால இந்த கேஸ் நால்வர் அணி சார்பா தீர்ப்பாகுது” என்று பாருவிற்கு எதிராக தீர்ப்பு கூறி வழக்கை முடித்து வைத்தார் வினோத்.  கோர்ட் வாசலில் ரொமான்ஸ் செய்த பாரு கம்ருதீன் - அடங்க மறு .. அத்து மீறு அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவை விட்டு வெளியே வரும் வரை காத்திருந்த பாரு, கம்முவை தனிப்பிரதேசத்திற்கு அழைத்து எதையோ செய்து கொண்டிருக்க, “ரெண்டு பேரும் வெளியே வாங்க” என்று பிக் பாஸ் எச்சரிக்க வேண்டியிருந்தது. (‘நாங்கள்லாம் கோாட்டிற்குள்ளேயே கொலை செய்வோம் மோமெண்ட்!). இத்துடன் கோர்ட் டாஸ்க் முடிந்தது.  பெஸ்ட் ஃபொ்பார்மர் தோ்வு இல்லாமல் நேரடியாக வொர்ஸ்ட் கேட்டகிரிக்கு சென்றார் பிக் பாஸ். (வீக்கெண்ட்டிற்காக இதை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் போல!) பெரும்பாலோனோர் ரம்யா பக்கம் கை காட்டினார்கள். “கேட்டையே தொறந்து வெச்சிட்டாங்க” என்று பாரு ஆரம்பிக்க, “அதை சொல்லாத. வேற எதையாச்சும் சொல்லு” என்று ஆத்திரமானார் ரம்யா.  BB Tamil Day 68 இந்த வரிசையில் சான்ட்ராவின் பெயரை திவ்யா சொன்ன போதே தெரிந்து போயிற்று, சான்ட்ரா இது பற்றி அழுது புறணி பேசுவார் என்று. பிறகு அப்படியே நடந்தது. பாருவை அருகில் அமர்த்திக் கொண்டு சான்ட்ரா ஆத்திரத்துடன் புலம்பி மூக்கைச் சிந்த, ‘ஆமாக்கா.. இந்த திவ்யா இப்படித்தான். ஆளு எப்படின்னு இப்ப கரெக்ட்டா தெரிஞ்சுடுச்சு” என்று பின்பாட்டு பாடினார் பாரு.  உள்ளே வருவதற்கு முன்னால் பாருவின் அலப்பறைகள் பற்றி சான்ட்ராவிற்கு நன்றாகவே தெரியும். என்னடி... இது வெளியிலிருந்து பார்க்கறத விட உள்ளே கொடூரமா இருக்கா?” என்று பாருவைப் பற்றி கமெண்ட் செய்ததும் இதே சான்ட்ராதான். ஆனால் இப்போது சான்ட்ராவின் நெருங்கிய தோழி யார் என்று பார்த்தால் அது பாரு. (என்ன கொடுமை பிரஜன்!). திவ்யா - கம்ருதின்  - போடா போடி - உக்கிரமான சண்டை கார்டன் ஏரியாவில் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பெஸ்ட் ஃபர்பார்மர் ஏன் கேக்கலை?’ என்று பேச்சு ஆரம்பிக்க “திவ்யா மாதிரி தலயா யாராவது வந்து டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி” என்று கம்மு கமெண்ட் அடித்தார். தூரத்தில் இருந்து இதைக் கேட்டு விட்ட திவ்யா ஆவேசத்துடன் வந்து “ஒருத்தரை பத்தி ஒருத்தர் பேச வேணாம்ன்னு இருந்தோம்ல. ஏன் என் பெயரை இழுத்தீங்க” என்று கேட்க பதிலுக்கு கோபத்துடன் மல்லுக்கட்டிய கம்மு, ஒரு கட்டத்தில் ஸ்கூல் பையன் போல சேட்டைகள் செய்தார்.  கம்ருதீன் பேசிய பழைய வசவுகளையெல்லாம் நினைவுப்படுத்திய திவ்யா, ‘எப்படிப் பேசறாரு. பாருங்க. இதுதான் இவரோட அசல் முகம். யாருமே இதைக் கேட்க மாட்டீங்களா?” என்று அமித்தை இழுக்க ‘அய்யோ எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குது” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் அமித். பேச்சுவாக்கில் ‘போடி’ என்று கம்மு சொல்ல, திவ்யாவின் உக்கிரம் அதிகமானது.  BB Tamil Day 68 அமித் வந்து சமாதானம் பேச “அவனை வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க” என்றார் திவ்யா. வினோத் கம்முவை அழைத்து வர, மீண்டும் திவ்யா கத்த சமாதானத்திற்குப் பதில் சண்டை அதிகமானது. மீண்டும் போடா போடி வார்த்தைகள் விழுந்தன.  இந்தச் சண்டையின் போது திவ்யா அவமதிக்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சான்ட்ரா. அதனாலும் கூட திவ்யாவிற்கு கோபம் அதிகமாகியிருக்கலாம்.  ஆரம்பத்தில் சில்லறை ரவுடி போல நடந்து கொண்ட கம்ருதீன், விசேவின் திட்டுகளுக்குப் பிறகு சற்று அடங்கி நடந்தார். அப்போது அரேரா கூட சகவாசம் இருந்தது. பிறகு பாருவின் பக்கம் ரொமான்ஸ் ‘ஓவர் ப்ளோ’ ஆகி சாய்ந்த பிறகு மீண்டும் ரவுடி அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். சகவாச தோஷம்.  BB Tamil Day 68 திவ்யா மூச்சு விடாமல் கத்துவது ஒரு பக்கம் என்றால் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்கிற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பொறுக்கித்தனமாக நடந்து கொள்கிற கம்ருதீனுக்கு இந்த வாரமாவது பலத்த கண்டனமோ அல்லது ரெட் கார்டோ கிடைக்குமா?

விகடன் 13 Dec 2025 12:00 pm