SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

ஈரான் அரசுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் முழு ஆதரவு!

ஈரானில் நிலவி வரும் தற்போதைய சூழலில், அந்த நாட்டின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு துருக்கி தனது முழுமையான ஆதரவை… The post ஈரான் அரசுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் முழு ஆதரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 2:03 am

இந்தியா –ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்!

“எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (@MohamedBinZayed)… The post இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 1:50 am

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத்தேர்தலை அறிவித்தார் பிரதமர் சனாயே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே தகைச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து,… The post ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத்தேர்தலை அறிவித்தார் பிரதமர் சனாயே தகைச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 1:35 am

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் ; 50 ஆண்டுகளுக்குப் பின் நாசாவின் சாதனைப் பயணம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral) ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றி 10 நாட்கள் பயணம் செய்யவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ‘ஆர்டெமிஸ் 2’ என்ற இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, இறுதி ஆய்வுகள், சரிபார்ப்புகள் மற்றும் ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த […]

அதிரடி 20 Jan 2026 1:30 am

ட்ரம்ப் ஒரு கோழை ; ட்ரம்பின் மீது கடும் கோபத்தில் ஈரானியர்கள்

ட்ரம்ப் கோழையாக உள்ளார் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட்டாள் ஆக்கிவிட்டார் ” என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரானில் கமேனியின் தலைமைக்கு எதிராகவும்,விலைவாசி உயர்வு,பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ன்முறையாளர்கள் எனக்கூறி ஈரான் அரசு ஒடுக்கி வருகிறது. இந்த மோதலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் […]

அதிரடி 20 Jan 2026 12:30 am

பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளையை சேர்ந்த 43 வயதுடைய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. தனது வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை […]

அதிரடி 20 Jan 2026 12:30 am

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி இன்று திங்கட்கிழமை (19) காலை 11.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதுடன், இதுவரை எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும், தொடர்புடைய பகுதியில் […]

அதிரடி 19 Jan 2026 11:30 pm

கிழக்கு மாகாணத்தில் வெறிச்சோடிய மருத்துவமனைகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரிதொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் பணிகஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் […]

அதிரடி 19 Jan 2026 11:30 pm

⚠️ அம்புலுவாவ  மலை அடிவாரத்தில் வசிக்கும்23 குடும்பங்களை வெளியேற்றுமாறு உத்தரவு!

டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை… The post ⚠️ அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும்23 குடும்பங்களை வெளியேற்றுமாறு உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 11:12 pm

கலஹாவில்  நிலச்சரிவில் சிக்கி வெளிவந்த நீல நிறப் பாறை

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக பெய்த கடும் மழையினால், கண்டி – கலஹா, கல்லந்தென்னா… The post கலஹாவில் நிலச்சரிவில் சிக்கி வெளிவந்த நீல நிறப் பாறை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 10:59 pm

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் –வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது… The post செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 10:44 pm

அமெரிக்கா: குடியேற்றத் துறை ஆதரவு –எதிா்ப்புக் குழுக்கள் மோதல்!

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிா்த்தும் போராட்டம் நடத்திய இரண்டு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. தொடா் போராட்டச் சூழலைக் கையாள மாகாண காவல்துறைக்குத் துணையாக, தேசியப் பாதுகாப்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மினசோட்டா மாகாண ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மினசோட்டாவிற்கு 2,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) அதிகாரிகள் […]

அதிரடி 19 Jan 2026 10:30 pm

விலகியது வடகிழக்கு பருவமழை.. தமிழ்நாட்டின் நிலை இதுதான் -வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமயம் 19 Jan 2026 10:09 pm

அனுர தரப்பு பேசாமலிருக்கட்டும்:சீ.வீ.கே!

தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான சிவஞானம் சிறீதரன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழரசு உள்வீட்டு விவகாரத்தில் அநுர தரப்பு குத்திமுறிய தேவையில்லை எனவும் மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினரோ அல்லது ஜே.வி.பி கட்சியினரோ மட்டுமே நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அனுர அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்“ எனவும் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இதனிடையே எம்.ஏ.சுமந்திரனோ தமது கட்சி தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண கூட்டங்களை புறக்கணித்திருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 19 Jan 2026 9:50 pm

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் - வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் , அன்றைய தினம் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு 19 Jan 2026 9:37 pm

கெளதமாலா சிறைகளில் கலவரம்: 46 காவலா்களை ‘சிறைப்பிடித்த’ கைதிகள்!

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் உள்ள மூன்று முக்கியமான சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக்காவலா்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் சமூகவிரோத கும்பல் தலைவா்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சில சிறப்புச் சலுகைகளை சிறை நிா்வாகம் அண்மையில் ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தங்களை வேறு சிறைகளுக்கு மாற்ற வலியுறுத்தியும் கைதிகள் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா். தற்போது கைதிகளின் […]

அதிரடி 19 Jan 2026 9:30 pm

இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் பலாங்கொடை, இறக்குவானை , சூரியகந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதலான பனி பொழிவு காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி 19 Jan 2026 9:30 pm

இந்தியாவின் முதல் 24×7 டிஜிட்டல் மருத்துவப் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் சிம்ஸ் (SIMS) மருத்துவமனை

கிராமப்புற சமூக மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், சிறந்த நோக்கத்தோடு இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த்

சென்னைஓன்லைனி 19 Jan 2026 9:23 pm

SIMS Hospital Unveils India’s First 24×7 Digital Medical Bus for Rural Communities

SIMS Hospital has unveiled SIMS Hello Doctor Health on Wheels, India’s first medical bus designed to deliver essential and comprehensive

சென்னைஓன்லைனி 19 Jan 2026 9:20 pm

EscrowTech India Rebrands as EscrowNXT, Marking Its Foray into AI-Focused Escrow Capabilities and Global Expansion

EscrowTech India, the country’s only pure-play software escrow services provider and the market leader, has officially rebranded as EscrowNXT to

சென்னைஓன்லைனி 19 Jan 2026 9:18 pm

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை, மற்ற அனைத்து கலைஞர்களை விடவும் அவருடைய ஊதியம் மிக அதிகம். அநேகமாக அவர்தான் பணக்கார இசையமைப்பாளராக இருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் ஆனால், தான் ஒரு முஸ்லிம் என்பதால் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர் புகார் கூறுகிறார். ஷாருக் கான் இன்னும் பாலிவுட்டின் பாட்ஷாவாகவே இருக்கிறார்; சல்மான் கான், ஆமீர் கான், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி என இவர்களெல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார்களாகவே வலம் வருகிறார்கள். புகழ் பெற்றவர்களும், பணக்காரர்களும் எந்தச் சூழலிலும் சிரமங்களை எதிர்கொள்வதில்லை. அவர்கள் எந்த மதம், எந்தச் சாதி அல்லது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன. நான் ஒரு தீவிர நாத்திகனாக இருந்தபோதிலும், எனது பெயரைக் காரணம்காட்டி நான் ஒரு முஸ்லிம் என்றே கருதப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களுக்கு, ஒருவன் நாத்திகனா அல்லது இறை நம்பிக்கையாளனா என்பது ஒரு பொருட்டே அல்ல. எனக்கு யாரும் வாடகைக்கு வீடு தர முன்வருவதில்லை. நான் மருத்துவமனைக்குச் சென்றால், என்னை ஏமாற்றி என் காலையே துண்டித்து விடுகிறார்கள். ஹைதராபாத்தில் நாத்திகனாக இருப்பதற்காகவே நான் அடிபடுகிறேன்; ஔரங்காபாத்தில் என்னால் காலடி எடுத்து வைக்க முடியவில்லை; மேற்கு வங்கத்திலிருந்து நான் வெளியேற்றப்படுகிறேன். தஸ்லிமா நஸ்ரீன் இந்தத் துயரங்கள் ஏ. ஆர். ரஹ்மானின் வாழ்க்கை எல்லைக்குள்ளோ அல்லது பாலிவுட்டில் இருக்கும் முஸ்லிம் நட்சத்திரங்களின் வாழ்க்கைக்கோ அருகில்கூட வருவதில்லை. நான் இந்த நாட்டின் குடிமகள் அல்ல. இந்தியாவில் பிறந்த பலரை விடவும், நான் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். எனக்கு ஓட்டுரிமை இல்லாவிட்டாலும், என் கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டு இந்த மண்ணிலேயே வாழ்கிறேன். இஸ்லாத்தின் வெற்றுச் சடங்குகளையும் மூர்க்கத்தனத்தையும் கிழித்தெறிந்த பிறகு நான் நாடு கடத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் மக்கள் என்னிடம் வந்து, நீங்கள் பிறை பார்த்து ஈகைத் திருநாளைக் கொண்டாடுகிறீர்கள் என்றோ அல்லது உங்களிடையே பலதார மணம் நடைமுறையில் உள்ளது என்றோ கூறுகிறார்கள். இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு நாத்திகத்தைப் பற்றியோ, அதன் அடிப்படையில் அமைந்த மனிதநேயத்தைப் பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவில்லை. என்னால் உண்மையில் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மண்ணின் மனிதர்களும் பெண்களும் என் சொந்தங்களே. இந்த மண்ணின் கலாசாரமே எனது கலாசாரமும் கூட. இதை விட்டுவிட்டு என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? ஏ.ஆர் ரஹ்மான் ஏ. ஆர். ரஹ்மானை இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் என அனைவரும் மதிக்கிறார்கள். அவர் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராகக் காட்டிக் கொள்வது அவருக்குப் பொருத்தமானதல்ல. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகதான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம் எனத் தெரிவித்திருந்தார். ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்! - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

விகடன் 19 Jan 2026 9:17 pm

போட்டியின்றி தேர்வாகும் நிதின் நபின்.. இனி பாஜக தேசிய தலைவர் இவர்தான்!

பாஜக தேசிய தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில் ஒரே ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் போட்டியின்றி தேர்வாகிறார்.

சமயம் 19 Jan 2026 8:55 pm

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள்  உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர்,  கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர். பேச்சியம்மாள்- கைது செய்யப்பட்ட இருவர் இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அதே கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பேச்சியம்மாளின் கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டப்பட்டும், உடலில் கல் கட்டப்பட்டவாறும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.  இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் காடல்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்களால் பேச்சியம்மாளின் உடல் மீட்கப்பட்டது. நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டரா அல்லது  அவரின் கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  அதே நேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, பேச்சியம்மாளின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை  மேற்கொண்டனர். அதில், மூதாட்டியின் மூத்த மகனான சக்திவேல்,  முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த  போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.  அதில், தனது தாயை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். காடல்குடி காவல் நிலையம் மேலும்,  அவரிடம் நடத்திய விசாரணையில், “ குடும்ப சொத்தை பிரித்து தரும்படி தாய் பேச்சியம்மாளிடம் அடிக்கடி கேட்டு வந்தேன். இப்போது தனியாக பிரித்து கொடுக்க முடியாது. 6 பேரையும் மொத்தமாக வைத்துதான் பிரித்து தருவேன் எனக் கூறினார். எனக்கு கடன் பிரச்னை உள்ளது அதனால் என்னுடைய பங்கினை பிரித்துத் தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை.  இதனால் ஆத்திரத்தில் ஆடுமேய்க்கும் எனது நண்பரான உச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருடன் மது அருந்தி விட்டு, கடந்த 3-ம் தேதி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம்,  மீண்டும் சொத்தில் பங்கினை பிரித்து தரும்படி கேட்டேன். ஆனால், வழக்கம்போல  சொத்தை இப்போது தன்னால் பிரித்து  கொடுக்க முடியாது என்று கூறினார். காடல்குடி காவல் நிலையம் இதனால், ஆத்திரத்தில் வெயிலுக்காக தலையில் கட்டியிருந்த துண்டை பிடுங்கி கழுத்தில் இறுக்கி கொலை செய்தேன். பின்னர், நண்பர் முருகனின் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றில் கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டி , உடலில் கல்லை கட்டி போட்டுவிட்டோம்.  பின்னர் எனது உறவினர்களுடன்  தாயை தேடுவது போல தேடினேன் எனக் கூறி அதிரவைத்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 19 Jan 2026 8:46 pm

``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி'பேச்சுக்கே இடமில்லை– வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!

டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை. இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது. நேட்டோ நேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது. ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth

விகடன் 19 Jan 2026 8:36 pm

கிரீன்லாந்து ஆக்கிரமிப்பை எதிா்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரி: டிரம்ப் எச்சரிக்கை!

கிரீன்லாந்தை அமெரிக்க கைப்பற்ற எதிா்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஆா்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து உள்ளது. டென்மாா்க் நாட்டுக்குச் சொந்தமான அந்தத் தீவு பகுதியளவு சுயாட்சி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. 8-ஆவது இடத்தில் கிரீன்லாந்து: அமெரிக்க புவியியல் ஆய்வு முகமையின் தகவல்படி, கிரீன்லாந்தில் எண்ணெய், எரிவாயு, நிக்கல், கோபால்ட் உலோகங்களுடன் […]

அதிரடி 19 Jan 2026 8:30 pm

கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; தந்தை கைது

களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி கெயாஷா என்ற குழந்தையே, லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை ஏந்தியபடி நடந்து கொண்டிருக்கையில் தூக்கம் சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். இரவு வேலை முடித்து […]

அதிரடி 19 Jan 2026 8:30 pm

புத்தர் விடயத்தில் சட்டம் இரண்டு?

கந்தரோடை விகாரைஎன நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமைக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ள இலங்கை காவல்துறை திஸ்ஸ விகாரை சட்டவிரோத கட்டட பெயர்பலகையினை நாட்ட அனுமதி மறுத்துவருகின்றது. கந்தரோடை பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்என அடையாளப்படுத்த பிரதேச சபை தீர்மானித்திருந்த நிலையில் ஏற்கனவே நாட்டப்பட்ட பெயர்பலகை அகற்றப்பட்டிருந்தது.அவ்வாறு பெயர் பலகை அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேசசபையினால் அனுமதியற்ற கட்டடம் என பெயர் பலகை நாட்ட மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சி இலங்கை காவல்துறையால் நிராகரிக்கப்பட்டது.

பதிவு 19 Jan 2026 8:28 pm

ட்ரம்பின் வரிவிதிப்பால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராதாம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத பழிவாங்கும் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு வராது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்லாமியக் குடியரசிடம் இருந்து சிறிலங்கா இனி எரிபொருளை வாங்காது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டு விட்டது. தற்போது,

புதினப்பலகை 19 Jan 2026 8:05 pm

ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட்.. நீதிமன்றத்தில் நாளை விசாரணை.. விஜய்யின் மாஸ்டர் ப்ளான் இதுதானா!

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு சென்சார் வழங்காதது தொடர்பான வழக்கில் நாளை (ஜனவரி 20 ஆம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

சமயம் 19 Jan 2026 7:57 pm

கிரீன்லாந்து வரி அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் சரிந்தன

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சாத்தியமான பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பற்றி யோசித்து வருகின்றனர் - பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள பாரம்பரிய நட்பு நாடுகளுடன் வர்த்தகப் போரை மீண்டும் தூண்டியதால், ஐரோப்பிய சந்தைகள் திங்களன்று சரிவுடன் தொடங்கின. காலை 10 மணியளவில் CET இல், பிரான்சின் CAC 40 1.28% சரிந்தது, ஜெர்மனியின் DAX 1.02% சரிந்தது, மற்றும் UK இன் FTSE 100 0.27% சரிந்தது. ஸ்பெயினின் IBEX 35 0.59% சரிந்தது, இத்தாலியின் FTSE MIB 1.43% சரிந்தது. இதற்கிடையில், பரந்த STOXX 600 0.87% சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு சிறப்பாக பதிலளிப்பது என்பதை முடிவு செய்ய ஐரோப்பிய தலைவர்கள் இந்த வாரம் கூடுவார்கள். கிரீன்லாந்தை வாங்குவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை ஆதரிக்காவிட்டால், பிப்ரவரி 1 முதல் எட்டு ஐரோப்பிய நாடுகள் தங்கள் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 10% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று வாஷிங்டன் சனிக்கிழமை அறிவித்தது. எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் ஜூன் மாதத்தில் இந்த விகிதம் 25% ஆக உயரும். குறிப்பாக, அச்சுறுத்தல் டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவற்றை குறிவைக்கிறது. கிரீன்லாந்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் டென்மார்க்கின் இறையாண்மைக்கு ஆதரவாக உறுதியாக நிற்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், தங்கள் விருப்பங்களை எடைபோடுகின்றன. €93 பில்லியன் அமெரிக்கப் பொருட்களுக்கு பழிவாங்கும் வரிகளைப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமாகும், இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு வாஷிங்டனுடனான முந்தைய வர்த்தக மோதலின் போது கைவிடப்பட்டது. மற்றொரு திட்டத்தில், கொள்கை மாற்றத்தை கட்டாயப்படுத்த முயலும் ஒரு நாட்டின் மீது தண்டனைக்குரிய பொருளாதார நடவடிக்கைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதிக்கும் ஒரு வற்புறுத்தல் எதிர்ப்பு கருவியை செயல்படுத்துவதும் அடங்கும். ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களின் பங்குகள் திங்கட்கிழமை காலை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன, STOXX Europe 600 ஆட்டோமொபைல்ஸ் & பாகங்கள் குறியீடு 2% க்கும் அதிகமாக சரிந்து 52 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. காலை 10 மணிக்கு CETக்குப் பிறகு BMW பங்குகள் 4.10% சரிந்தன, அதே நேரத்தில் Volvo மற்றும் Volkswagen பங்குகள் முறையே 2.21% மற்றும் 3.43% சரிந்தன. ஐரோப்பாவின் ஆடம்பரப் பொருட்கள் துறையும் சரிவுடன் தொடங்கியது, STOXX Europe Luxury 10 கிட்டத்தட்ட 3% சரிந்தது.

பதிவு 19 Jan 2026 7:57 pm

நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்” –திருகோணமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“அன்று பிர*பாகரனிடம் இருந்து புத்தர் சிலைகளை பாதுகாத்தோம், இன்று நவீன பிர*பாகரன்களாக உருவெடுத்துள்ள அரச தரப்பினரிடம் இருந்து சிலைகளை… The post நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்” – திருகோணமலையில் சரத் வீரசேகர ஆவேசம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 7:51 pm

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது   வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம்

பொங்கல் 2026 கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் 6… The post ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 7:48 pm

T20 World Cup: ‘இந்திய அணியில்’.. இந்த குறை இருக்கு: இத இனி சரி பண்ணவும் முடியாது: தினேஷ் கார்த்திக் பளிச்!

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணியில் ஒரு பெரிய குறைபாடு இருப்பதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்த குறையை இனி சரி செய்ய வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமயம் 19 Jan 2026 7:41 pm

️ காசா அமைதி வாரியத்தில் இணையுமா ரஷ்யா? ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை உறுதி செய்தது கிரெம்ளின்!

உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ (Board of Peace) இணையுமாறு, ரஷ்ய… The post ️ காசா அமைதி வாரியத்தில் இணையுமா ரஷ்யா? ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை உறுதி செய்தது கிரெம்ளின்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 7:36 pm

காபூலில் வெடிகுண்டு தாக்குதல்.. பாதுகாப்பு பகுதியிலேயே நிகழ்ந்த அசம்பாவிதம்!

காபூல் நகரின் ஷஹர்-இ-நவ் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக உள்ளதாக கூறப்படும் இடத்தில் இவ்வாறான தாக்குதல் நிகழ்ந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 19 Jan 2026 7:36 pm

சிரியா மீது தாக்குதல்! அல்-காய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி: அமெரிக்கா

சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், சிரியாவின் பால்மைரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் என மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புகொண்ட அல்-காய்தாவின் முக்கிய தலைவர் எனக் கூறப்படும் பிலால் […]

அதிரடி 19 Jan 2026 7:30 pm

RCB Women Aim Fifth Straight Win

GG vs RCB LIVE SCORE, WPL 2026 Match Today: Royal Challengers Bengaluru (RCB) women are full of confidence after winning

சென்னைஓன்லைனி 19 Jan 2026 7:25 pm

ஏமாறாதீர்கள்; 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் “2000” என்ற இலக்கம் தெளிவாகத் தெரியும். கள்ள நோட்டுகளைத் தவிர்க்க… பணத்தாளின் முன்பக்கமும் பின்பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றிணைந்து முழுமையான படமாகக் காட்சியளிக்கும். பணத்தாளைச் சற்றே சரிக்கும்போது, அதன் பாதுகாப்பு நூல் நீல […]

அதிரடி 19 Jan 2026 7:20 pm

போர்க்கால சொத்து மீட்பு நோர்வே அறிவுறுத்துகிறது

போர் ஏற்பட்டால் தங்கள் வீடுகள், வாகனங்கள், படகுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கும் கடிதங்களை ஆயிரக்கணக்கான நோர்வேஜியர்கள் திங்கட்கிழமை இராணுவத்திடமிருந்து பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்க்கால சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான வளங்களை ஆயுதப் படைகள் அணுகுவதை உறுதி செய்வதே இந்த கோரிக்கைகளின் நோக்கம்என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கு சுமார் 13,500 ஆயத்த கோரிக்கைகள் வழங்கப்படும். மோதல் ஏற்பட்டால் இராணுவம் தங்கள் பொருட்களைக் கைப்பற்றக்கூடும் என்பதை உரிமையாளர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர, அமைதிக் காலத்தில் இந்தக் கடிதங்கள் எந்த நடைமுறை தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவு 19 Jan 2026 7:18 pm

Afghanistan Face West Indies in 1st T20I

AFG vs WI 1st T20I LIVE Score: With the T20 World Cup 2026 just three weeks away, Afghanistan and West

சென்னைஓன்லைனி 19 Jan 2026 7:15 pm

இன்று முதல் வடக்கு புகையிரத வழிகள் நிறுத்தம்

புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ – அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும். மஹவ […]

அதிரடி 19 Jan 2026 7:15 pm

TEPCO Delays Nuclear Plant Restart After Alarm Issue

Tokyo Electric Power Company (TEPCO) has postponed the restart of its Kashiwazaki-Kariwa nuclear power plant by a few days. The

சென்னைஓன்லைனி 19 Jan 2026 7:08 pm

ஜனநாயகத்தின் உயிர் இதுதான்.. மக்கள் குரல் ஒலிக்க வேண்டும்.. ராகுல் காந்தி அறிவுரை!

மௌனத்தின் அடிப்படையில் எந்த மகத்தான நாடும் உருவாகாது என்றும், கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தி, அவற்றுக்காக போராடும் போது தான் சமூகமும் நாடும் முன்னேறும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

சமயம் 19 Jan 2026 7:06 pm

பணி முடிந்ததா? வரி விரித்ததா? யேர்மனிப் படைகள் பின்வாங்கியது!

கடந்த வெள்ளிக்கிழமை கிரீன்லாந்தை வந்தடைந்த யேர்மன் உளவுப் பிரிவு திட்டமிட்டபடி டென்மார்க் பிரதேசத்தை விட்டு வெளியேறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பதினைந்து வீரர்கள் ஆர்க்டிக் தீவிலிருந்து கோபன்ஹேகனுக்கு ஒரு சிவிலியன் விமானத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் படையெடுப்பு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டு, டென்மார்க்கின் வேண்டுகோளின் பேரில் வந்தது. நேட்டோ பயிற்சிகளுக்கான நிலைமைகளை மதிப்பிடுவதற்காக இந்தக் குழு திட்டமிடப்பட்டது. கட்டளை கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை பணி நிறைவடைந்ததாகக் கூறினார். உளவுப் பணியின் முடிவுகள் வரும் நாட்களில் பகுப்பாய்வு செய்யப்படும். இந்த பணியில் ஈடுபட்டுள்ள எட்டு நாடுகள் மீது புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த வரி பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவிற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துகிறார். ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகள் அந்தக் கருத்தை நிராகரிக்கின்றன கூட்டணி ஆர்க்டிக்கை கூட்டாகப் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றன.

பதிவு 19 Jan 2026 7:04 pm

Ultra Play and Ultra Jhakaas Launch Khotachi Wadi – Ek Shaapit Vastu in a Simultaneous Multi-Language Drop

Mumbai: Ultra Media Sets a new benchmark in regional ott with a multi-language horror original with Khotachi Wadi – Ek Shaapit Vastu, premiering January 23 simultaneously on Ultra Jhakaas (Marathi) and Ultra Play (Hindi). The release is probably first time in India when a multi-platform, multi-language distribution model where a single original story drops across language-first OTT platforms at the same time. The exciting trailer for the web series is out now.Directed by Rajesh Chavan, the supernatural thriller is set in the haunting Konkan region and follows Sanika, a young woman drawn into the dark secrets of an ancient mansion haunted by Dharmasen, a spirit bound to the mortal world by his obsession with hidden treasure. As the past resurfaces, the series unfolds into a chilling tale of fear and survival.The series stars Suhas Joshi in a powerful lead role, alongside Sania Chaudhary, Abhinay Sawant, Roshan Vichare, Kashyap Parulekar and Nayan Jadhav.[caption id=attachment_2486198 align=alignleft width=200] Sushilkumar Agrawal [/caption]Commenting on the launch, Sushilkumar Agrawal, CEO, Ultra Media & Entertainment, said, “With Khotachi Wadi – Ek Shaapit Vastu, we are enabling one story to reach multiple audiences simultaneously, reinforcing our vision of a language-first yet pan-Indian OTT ecosystem.” With Ultra Play catering to Hindi audiences and Ultra Jhakaas strengthening its leadership in Marathi content, the launch signals Ultra Media’s next phase of growth, driven by regional originals, digital expansion and cross-language storytelling.Ultra Play, Ultra Media’s Hindi-language OTT platform, offers 5,000+ hours of curated entertainment across 1,800+ titles, spanning Hindi cinema from 1943 to today’s blockbusters, web series and South Indian films dubbed in Hindi, guided by its ‘Har Pal Filmy’ philosophy.Ultra Jhakaas continues to strengthen its position as India’s biggest Marathi OTT platform, with 2,000+ Marathi titles across films, originals, theatre content, television shows and culturally rooted programming, serving audiences in Maharashtra and the global Marathi diaspora.-Based on Press Releasehttps://www.youtube.com/watch?v=t47R4-DpTCQ

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 6:56 pm

Karachi Mall Fire Death Toll Rises to 14

The death toll from a major fire at a shopping mall in Karachi, Pakistan, has increased to 14 after rescue

சென்னைஓன்லைனி 19 Jan 2026 6:55 pm

At Davos, NDTV Unveils ‘Davos Sprint’, an Innovative Editorial Approach to Global Conversations

Mumbai: At the world’s most influential gathering of global leadership and ideas - the World Economic Forum's Annual Meeting at Davos, the NDTV Network is redefining how India participates in the conversations that imagine collective futures.This year, NDTV Ignite introduces Davos Sprint, a first-of-its-kind editorial initiative on Indian television, anchored in short, focused conversations.In an environment where global dialogue is often expansive and shaped by protocol, Davos Sprint adopts a different approach. Each session is tightly curated and designed to distil complex conversations into simple takeaways and highlight what truly matters for a discerning audience.Davos Sprint conversations feature a distinguished set of global and Indian voices, including Kinjaraapu Ram Mohan Naidu, Minister of Civil Aviation, Government of India; Jimmy Wales, Co-Founder of Wikipedia; Parag Khanna, Founder and CEO of AlphaGeo; and Munjal Shah, Co-Founder and CEO of Hippocratic AI.Covering themes from India’s aviation and infrastructure ambitions to the evolution of knowledge systems, geopolitics, artificial intelligence, and healthcare, each conversation will explore not just what is changing, but why it matters in contemporary business and geopolitics - and how those changes will inform policy, leadership, and strategic choices over time.The sessions will be anchored by NDTV’s senior editorial leadership. Vishnu Som, Senior Managing Editor, Ayush Ailawadi, NDTV’s Tech Editor, and Rahul Kanwal, CEO and Editor-in-Chief, will lead these high-impact conversations, bringing editorial sharpness to every sprint.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] ‘At Davos, the challenge is not access to ideas, but discernment. Davos Sprint is built around that principle - focused conversations that bring depth, judgement, and relevance in a rapidly shifting world,’ said Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV. With this initiative, the NDTV Network is crafting a confident presence at Davos - one that reflects the evolving nature of global discourse and the need for insight that is both immediate and meaningful.Davos Sprint@NDTV Ignite will be showcased on NDTV 24x7 and NDTV Profit, reflecting NDTV’s consistent endeavour to be India’s global voice.Davos Sprint will go live from Davos on January 20, 2026, 10.55 PM (IST) onwards.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 6:49 pm

கறிக்கோழி விலை உயர்வுக்கு என்ன காரணம்? முடிவுக்கு வருமா வியாபாரிகள் போராட்டம்?

தமிழகத்தில் கூலி உயர்வு தொடர்பான பிரச்சினை காரணமாக, கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.380 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், அன்றாட உணவில் கறிக் கோழியை நம்பியிருந்த பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சமயம் 19 Jan 2026 6:49 pm

அநுரவின் காட்சி அரசியலும் இலங்கையின் மாயாஜாலமும்! பனங்காட்டான்

தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் அந்நாட்டின் தூதுவர் ஜுலி சங்இ இலங்கையில் உண்மையில் மாயாஜாலம் உள்ளதென்று கூறியுள்ளார். இது யாரைக் குறிக்கிறது? தமிழ் நாட்காட்டியில் தை மாதம் பிறக்கும்போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்வது வழக்கம். இதனை வாழ்த்தாகவும் கூறிக்கொள்வர். பெரும்புயல் சீற்றத்தில் பேரழிவைக் கண்ட தீவு அதிலிருந்து மீள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுத்து வருகிறது. சர்வதேசம் தாராளமாக அள்ளிக்கொடுக்கிறது. தைப்பொங்கல் தமிழருக்கான பெருநாள் என்பதை முன்வைத்து வடபகுதிக்கு தமது விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமர இங்கு அம்மண்ணின் மைந்தனாகத் தம்மை காட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். ஆனால்இ தை பிறந்தும் தையிட்டி மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை. மக்களுக்காக போராடிய மக்கள் சிலர் நீதிமன்ற படிகளில் ஏற்றப்பட்டுள்ளனர். அநுர குமரவின் வடபகுதி விஜயத்தின் எதிர்பார்ப்புகள்இ வாக்குறுதிகள்இ மக்கள் வழங்கிய வரவேற்பு ஆகியவைகளுக்குள் செல்வதற்கு முன்னர் இவர் தலைமையிலான ஆட்சியின் அரசியற் செயற்பாடுகளை கவனிக்க வேண்டும். இவர்களது பிரதமர் ஹரிணி அமரசூரியவை மையப்படுத்தி விரிக்கப்பட்டுள்ள வலை சற்று தொய்ந்து காணப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருந்த புதிய கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த எதிரணியினர்இ பாடப்புத்தகத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பாலியல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆட்சியை அலுப்புத்தட்ட வைக்க அங்கலாய்க்கின்றனர். ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட விமல் வீரவன்சஇ உதய கம்மன்பில போன்றவர்கள் தங்களை மீண்டும் மேடையேற்ற இதனை வாய்ப்பாக்குகின்றனர். ஆசிரிய சங்கங்கள் போர்க்கொடி தூக்கி நிற்கின்றன. பௌத்த பிக்குகளும் இதற்குள் இழுத்து விடப்பட்டுள்ளனர். மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் போக்கில் புதிய பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதை அரசு ஒரு வருடத்துக்கு பின்போட்டுள்ளது. எனினும் இதற்குப் பொறுப்பாகவுள்ள கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை எதிரணியினர் கைவிடவில்லை. இதே கோரிக்கையுடன் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த விமல் வீரவன்ச தம்மால்தான் பாடத்திட்டம் பின்போடப்பட்டதாகக் கூறி சத்தியாக்கிரகத்தை (இப்படிக் கூறுவதே பொருத்தமாகத் தெரியவில்லை) கைவிட்டார். நீதிமன்ற வழக்கொன்றுக்கு அன்று செல்லாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படுமென்ற அச்சத்தினாலேயே இவர் சத்தியாக்கிரகத்தை கைவிட்டதாக ஆட்சித்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். ஹரிணி அமரசூரிய மீதான நம்பிக்கையீன பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் ஹரிணி எந்தப் பதவியிலிருந்தும் நீக்கப்பட மாட்டாரென்றும்இ அமைச்சரவை மாற்றமெதுவும் கிடையாதென்றும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடும் நிலையில் எதிரணிகள் இல்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் கட்சிகளும் ஹரிணிக்கு ஆதரவாக நிற்கின்றன. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதைப் போன்று அலரிமாளிகையில் பல்வேறு மதத்தலைவர்களையும் அழைத்து பொங்கல் விழாவை ஹரிணி அமரசூரிய கோலாகலமாக செய்து காட்டியுள்ளார். அண்மைய நாட்களில் இவரைப் போன்று ஊடகங்களில் இன்னொரு முக்கிய பெண்மணி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நான்கு வருடங்கள் இலங்கையில் அமெரிக்காவின் தூதுவராகக் கடமையாற்றிவிட்டு கடந்த 16ம் திகதி தமது நாட்டுக்குத் திரும்பியிருக்கும் ஜுலி சங்இ தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புவதற்கு முன்னர் சில முன்னாள் ஜனாதிபதிகள்இ தற்போதைய ஜனாதிபதி உட்பட பல முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற்ற பின்னர் தமது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் தங்கள் புருவத்தை உயர்த்தும் வகையில் இவரது வாசகம் அமைந்துள்ளது. இலங்கையில் உண்மையிலேயே மாயாஜாலம் உள்ளது என்பது இந்த வாசகம். வுhநசந ளை ளழஅநவாiபெ வசரடல அயபiஉயட யடிழரவ ளுசi டுயமெய என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிறுத்தாதுஇ இனி என்ன நடக்கப்போகிறது என்பதில் நம்பிக்கை கொள்கிறேன் என்றும் புரிந்துகொள்ள முடியாத நடையில் பதிவிட்டுள்ளார். மாயாஜாலம் உள்ளது என்று இவர் குறிப்பிட்டது எதுவாக இருக்கலாம் என்பது அவரவர் கற்பனைக்கும் சர்ச்சைக்கும் உரியது. காலிமுகத்திடலில் இடம்பெற்ற அறகலைய போராட்டத்தின் இயக்குனராக இவரே இயங்கியதாக அப்போது பெருமளவில் பேசப்பட்டது. அறகலைய போராட்டக்காரர்களுக்கு காலிமுகத்திடலுக்கு அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து இரவு பகலாக சுவையான உணவுகள் விநியோகிக்கப்பட்டதற்கும் இவரே ஏற்பாடு செய்ததாக சில ஊடகங்களில் எழுதப்பட்டும் இருந்தது. அப்படியென்றால்இ கோதபாய நாட்டைவிட்டு தப்பியோடி பதவி துறந்ததுஇ மகிந்த ராஜபக்ச பதவி இறக்கப்பட்டு இரவோடிரவாக ஹெலியில் கொழும்பை விட்டுப் பறந்ததுஇ ராஜபச்சக்கள் கூண்டோடு அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டதுஇ ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியானதுஇ ஜே.வி.பி.யின் அடையாளமான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றியைப் பெற்று ஜனாதிபதியாகவும்இ நாடாளுமன்றமாகவும்இ உள்ளாட்சிச்; சபைகளைக் கைப்பற்றியதும் என்று எதனை இவர் மாயாஜாலம் எனக்குறிப்பிட்டார் என்பது இதுவரை எவருக்கும் புரியவில்லை. அந்தகன் யானையைத் தடவிய கதையாக மாயாஜாலக் கதை நீண்டகாலத்துக்கு தொடரும் சாத்தியமுண்டு. அநுர குமரவின் வடபகுதிக்கான விஜயம் சற்று நோக்கப்பட வேண்டியது. கடந்த மூன்று தேர்தல் காலத்திலும் தமிழ் பகுதிகளுக்கு இவர் மேற்கொண்ட விஜயங்களுக்கும் இந்த விஜயத்துக்கும் வேறுபாடு காணப்படவில்லை. மழையோ வெய்யிலோ புகமுடியாத அலங்காரக் கூடாரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆசனங்களில் அமர்த்திருந்தனர். வேலணை ஆலயம் ஒன்றின் முன்றலில் பொங்கல் பானையில் இவரே அரிசியிட்டு தைப்பொங்கலை ஆரம்பித்து வைத்தார். மூத்தோர்இ இளையோர் என ஆண் பெண் இருபாலாரும் திரண்டிருந்தனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி அநுர குமர வரவேற்கப்பட்டார். நடன நங்கைகள் மலர்ந்த முகத்துடன் அவரது கரத்தை இறுக்கிப்பிடித்த ஒளிப்படங்கள் இணையங்களில் பரவிக்கிடக்கின்றன. செல்பி எடுத்தவர்கள் இன்னொரு தொகையினர். யாழ்ப்பாண நாகவிகாராதிபதியும்இ நயினாதீவு விகாராதிபதியும் இவரது கைகளில் மந்திரிக்கப்பட்ட நூல்களை கட்டி வாழ்த்தினர். மறந்தும்கூட தமிழர் பிரச்சனை தீர்வு பற்றி எதுவும் கூறவில்லை. தமது அரசின் சில செயற்திட்டங்களை வழமையான பாணியில் எடுத்துக்கூறி கைதட்டலை பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை - மக்களே எனது கவசம் என்பதைக் காட்டுவதைப்போல பொதுவீதியொன்றில் அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்த காட்சி பிரபலமாகியுள்ளது. இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சீருடையில் இவர் அருகில் செல்வதாகக் காட்டப்பட்டது. இன்னொரு ஒளிப்படம் இவர் உணவருந்துவது. தரையில் தடுக்கொன்றில் சப்பாணி கட்டி வேட்டியுடன் அமர்ந்தவாறு தலைவாழையிலையில் வைக்கப்பட்டிருந்த மூங்கில் குழல் பிட்டை குழம்புக் கறியுடன் கைகளால் பிசைந்து அவர் சாப்பிடும் காட்சி இந்த விஜயத்தின் கிளைமாக்ஸ். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சிம்பிளாக வந்து எம்மவரில் ஒருவராக காட்சி கொடுத்து பிரபல்யமானதுபோல அநுர குமரவின் இம்முறை விஜயம் நன்கு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதனை இவரது காட்சி அரசியல் என்று குறிப்பிட்டால் தவறிருக்காது. இதன் அறுவடையைப் பொறுத்தே வெற்றியைக்காண சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சாவகச்சேரி தொகுதியிலுள்ள மீசாலை என்ற இடத்தில் அமைந்துள்ள பாடசாலை வளவில் குடும்ப வீடமைப்புத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனின் தொகுதி இதுவென்று சொல்லப்படுகிறது. தமிழரசுக் கட்சி சுமந்திரனின் வலது கரமான சயந்தனின் தொகுதியும் இதுதான். அதனால்தான் இந்த இடத்தை அநுர தரப்பினர் தெரிவு செய்திருக்கலாம் என்று வதந்தியும் உண்டு. இத்தொகுதியிலுள்ள நாவற்குழி என்ற இடத்தில் 1980களில் பிரதமராகவிருந்த பிரேமதாச (சஜித்தின் தந்தை)இ கம்உதாவ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவு வீடுகளை நிர்மாணித்தார். 1983 யூலை இனஅழிப்பின் பின்னர் ராணுவத்தினரின் குடியிருப்பாக இது மாற்றமடைந்தது. இப்போது பௌத்த விகாரையுடன் சிங்கள மக்களின் குடியேற்றத்திட்டமாகியுள்ளது. மீசாலை வீடமைப்புத் திட்டமும் அவ்வாறு மாற்றம் பெறாதிருக்கப் பார்த்துக் கொள்வது தமிழ்த் தேசிய கட்சியினர் என்று கூறிக்கொள்பவர்களின் பாரிய கடமை. அநுர குமரவின் வடபகுதி விஜயத்தை தமிழரசுக் கட்சி புறக்கணித்தது. இது கட்சியின் முடிவு என சுமந்திரன் முதலில் அறிவித்திருந்தார். கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையெனவும் தவிசாளர்களுக்கு மட்டும் அழைப்பு வந்ததாகவும் அதனை அவர்கள் பகிஸ்கரித்துவிடடதாகவும் பின்னர் சொன்னார். இவரை பதில் செயலாளராக்குவதற்காக தமது பதவியை இராஜினாமா செய்த சத்தியலிங்கம் வேறொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஜனாதிபதியின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும்இ முன்னையவர்கள்போல இவரிடம் கொடூர முகம் இல்லையெனவும்இ இவரது வருகை பற்றி தாங்கள் அறிந்திருந்ததாகவும்இ ஆனாhல் தங்களுக்கு அழைப்பு வரவில்லையென்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அழைப்பு வந்திருந்தால் தாங்கள் போயிருப்போம் என்பது போன்றுள்ளது சத்தியலிங்கத்தின் கூற்று. அநுரவின் வடபகுதி விஜயத்தையும் தமிழரசுக் கட்சியின் கருத்துகளையும் பார்க்கும்போது இவ்விடயத்தில் இவர்கள் குழம்பியிருப்பதுபோல தெரிகிறது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்குமோ தெரியாது.

பதிவு 19 Jan 2026 6:47 pm

ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'என்னென்ன? |In Depth

டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த 'சம்பவ'ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’. வெளியேற்றம் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! “அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார். இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர். ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது. காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது. மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது. ட்ரம்ப் - பரஸ்பர வரி ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன? அடுத்தது, அமெரிக்காவின் 'சுதந்திர தினம்'. இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான். அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன் அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார். ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025. இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான். பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது. இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது. இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது. பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை. ட்ரம்ப் - நோபல் பரிசு ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்? அடுத்த முக்கியமான சம்பவம் - அது 'நோபல் பரிசு ஆசை'. ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும். அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. இதில் ட்ரம்பிற்கு 'வருத்தம் தாம்பா'. தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது. மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு 'ஃபிஃபா அமைதி பரிசை' வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான். ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், 'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்' இருந்தது. 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை. புதின் - ட்ரம்ப் அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained இப்போது ட்ரம்பின் 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த' முயற்சிகள். ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள் என்பது உலகம் அறிந்தது. இதனால், ட்ரம்ப் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார். ஆனால், 'நட்பு வேறு... அரசியல் வேறு' என ட்ரம்பிற்குக் காட்டிவிட்டார் புதின். ஜெலன்ஸ்கியை அழைத்துப் பேசுவது... புதினை அழைத்துப் பேசுவது என பல முயற்சிகளைச் செய்தார் ட்ரம்ப். அது இன்னமும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் புதினை 'சாஃப்ட்டாக' கையாண்டாலும், இப்போது வரியைக் காட்டி பயமுறுத்தத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். இருந்தும் புதின் வழிக்கு வருவதாக இல்லை. புதினை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்று தான், 'இந்தியா மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது'. கூடுதல் 25 சதவிகித வரி என்பது இந்தியா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்துடன் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரைப் பார்த்துவிடுவோம். ட்ரம்ப் பேசிக்கொண்டு மட்டுமில்லை... சில போர்களை நிறுத்தியும் இருக்கிறார். அதில் ஒன்று தான், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் தரப்பு இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டன. இப்போது காசா அமைதி அமைப்பிற்காக ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார் என்பதை நேற்றிலிருந்து காண முடிகிறது. மேலே சொன்ன போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டன தான் இரு தரப்பும். ஆனால், இப்போதும் அவ்வப்போது பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். 'இது இஸ்ரேலின் தற்காப்பு தாக்குதல்' என்று இதற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார். கம்போடியா - தாய்லாந்து, எகிப்து - எத்தியோப்பியா, செர்பியா - கொசாவோ போன்ற பல நாடுகளின் போர்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எனவே ட்ரம்ப் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ட்ரம்ப் - நெதன்யாகு - காமேனி வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இந்தப் போர் வரிசையில், ஈரானை விட்டுவிட முடியாது. 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' என ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க கிளம்பியது இஸ்ரேல். இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளின் மீது குண்டு வீசியது. இது அமெரிக்காவிற்கு வெற்றிகர தாக்குதலே. இப்போது ஈரானில் நடக்கும் உள்நாட்டு பிரச்னையிலும் தலையிட்டு வருகிறார் ட்ரம்ப். காசு... பணம்... துட்டு... Money... Money... அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார் ட்ரம்ப். இவர்களின் வருகை அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறது என்றும் கருதுகிறார் ட்ரம்ப். இதனால், ஹெச்-1பி விசாவிற்கு கடும் நெருக்கடிகளை விதித்திருக்கிறார். ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தினார். இந்த விலை உயர்வு இந்தியா, சீனாவை அதிகம் பாதித்தது. ஏனெனில், 67 சதவிகித இந்தியர்களும், 10 சதவிகித சீனர்களும் தான் இந்த விசாவைப் பெற்று அமெரிக்கா சென்றுவந்தனர். அடுத்ததாக, தனிநபர்களுக்கு ட்ரம்ப் கோல்டு கார்டு பெற 1 மில்லியன் டாலர் என அறிவித்தார். இந்தக் கோல்டு கார்டு அமெரிக்காவின் நிதிக்காகவே வழங்கப்பட்டது. ஹெச்-1பி விசாவிற்கு மட்டுமல்ல... அனைத்து விசாக்களுக்குமே கெடுபிடிகளை அதிகரித்து வருகிறது ட்ரம்ப் அரசு. அவர்களுக்குத் தேவையெல்லாம், அரசிற்கு பிரச்னை ஏற்படுத்ததாத மக்கள். ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? ட்ரம்பின் சமீபத்திய அத்துமீறல் 'நிக்கோலஸ் மதுரோ கைது'. வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ. அவர் அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல் செய்கிறார் என்று அவரது இருப்பிடத்திற்கே சென்று, இரவில் அவரது படுக்கையறையிலேயே கைது செய்தது ட்ரம்ப் அரசு. இப்போது அவர் நியூயார்க் சிறையில் இருக்கிறார். ஒரு நாட்டிற்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபரைக் கைது செய்துள்ளது பல தரப்பினரிடம் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. 'போதைப்பொருள் கடத்தல்' என்று சொன்னாலும், 'வெனிசுலாவின் எண்ணெய் வளம்' தான் மதுரோவின் கைதிற்கு பின்னணியில் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதுபோலவே, மதுரோவின் கைதிற்குப் பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முழுதாக ஃபோக்கஸ் செய்து வருகிறார் ட்ரம்ப். ட்ரம்பின் லேட்டஸ்ட் குறி, 'கிரீன்லேண்ட்'. டென்மார்க்கின் கீழ் உள்ளது கிரீன்லேண்ட். பாதுகாப்புக் காரணங்களுக்காக வேண்டும் என்று, அதை வாங்கவோ, அபகரிக்கவோ திட்டமிடுகிறார் ட்ரம்ப். இதை ஒத்துக்கொள்ளாத நேட்டோ, அமெரிக்க நாடுகளுக்கு தற்போது 10 சதவிகித வரியை விதித்துள்ளார் ட்ரம்ப். மேலே, கூறியிருப்பவை எல்லாமே, ஒரு சில தான். ட்ரம்ப் செய்த சம்பவங்களோ நிறைய நிறைய. அதில் முக்கியமானவை மட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில், 'Make America Great Again' என்ற ட்ரம்பின் நோக்கத்துக்காகத்தான்! ஓராண்டிற்கே இந்த நிலை என்றால், இன்னும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறதோ? Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?

விகடன் 19 Jan 2026 6:35 pm

கடன் தொல்லையால் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை…அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் பவிசங்கர்(வயது 33). இவர், எர்ணாகுளம் மாவட்டம் எளமக்கரா அருகே போனேக்கரா அடுத்த பானாவள்ளி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தார். தொடர்ந்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி ஸ்னாஷா(28), மகள் வாசுகி(6). 1-ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்னாஷா எடப்பள்ளி அருகே உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஒரு […]

அதிரடி 19 Jan 2026 6:30 pm

Myntra names Ritesh Mishra as Senior Vice President & Head of Category and Revenue

Bengaluru: Myntra has strengthened its senior leadership team with the appointment of Ritesh Mishra as Senior Vice President & Head of Category and Revenue. In his new role, Mishra will lead Myntra’s category and revenue strategy, reinforcing the platform’s core fashion and lifestyle businesses, while driving the next phase of growth. He will also be part of Myntra’s Senior Leadership Team.A seasoned business leader with over 25 years of experience, Mishra brings deep expertise across buying and merchandising, supply chain, business development, and P&L management, spanning both offline and online retail.Prior to joining Myntra, Mishra served as Deputy CEO at Lifestyle India Pvt. Ltd. (Landmark Group) and has held senior leadership positions at leading organisations including Marks & Spencer India, where he led large-scale retail operations and growth initiatives.At Myntra, Mishra will work closely with cross-functional teams to sharpen the company’s value proposition, build enduring brand partnerships, and continue delivering differentiated selection and experiences for consumers across fashion, beauty, and lifestyle.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 6:29 pm

Raymond Lifestyle appoints Satyaki Ghosh as Chief Executive Officer

New Delhi: Raymond Lifestyle Ltd. has announced the appointment of Satyaki Ghosh as its new Chief Executive Officer, as part of the company’s ongoing transformation initiatives aimed at strengthening the organisation for its next phase of growth.Satyaki Ghosh brings over 25 years of experience across FMCG, textiles, retail, and consumer businesses, with deep expertise in both B2B and B2C environments. He joins Raymond Lifestyle from the Aditya Birla Group, where he most recently served as CEO – Cellulosic Fashion Yarn, Grasim Industries, overseeing a large manufacturing-intensive business focused on operational excellence, sustainability, and profitable growth.Prior to this, Ghosh held leadership roles as CEO – Domestic Textiles at the Aditya Birla Group and led the Thai Acrylic Fibre business, managing multi-country operations and complex global manufacturing footprints. Early in his career, he spent over seven years at L’Oral India, serving as Director – Consumer Products Division, managing renowned global brands including L’Oral Paris, Garnier, and Maybelline.[caption id=attachment_2488550 align=alignleft width=239] Gautam Hari Singhania [/caption]Commenting on the appointment, Gautam Hari Singhania, Chairman, Raymond Group, said, “Satyaki is joining Raymond Lifestyle at a crucial inflection point wherein the business is poised for growth and transformation with a plethora of opportunities across the sector. With domestic consumption in India rising rapidly and the evolving geopolitical developments opening up new horizons in international markets, our Lifestyle business is poised for growth in long term. Satyaki’s on-boarding will unleash fresh energy and passion across the business and its stakeholders.” Speaking on his new role, Satyaki Ghosh, CEO, Raymond Lifestyle , said, “I am delighted to be joining an iconic Indian brand with a rich legacy of over a century which has been integral to the Indian identity and promises new avenues for growth. With a focus on consumer centricity along with innovation and sharpening the offerings, we would contribute meaningfully to larger value creation.” As part of its leadership expansion, Raymond Lifestyle recently on-boarded E.C. Prasad, who is set to assume the CFO position in the ensuing Board Meeting.With Ghosh at the helm, Raymond Lifestyle aims to leverage its century-long legacy, innovate its product offerings, and strengthen consumer-centric growth strategies to consolidate its position in India’s evolving lifestyle and fashion market.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 6:21 pm

மாதம் ரூ.65,000 சம்பளம், அனுபவம் தேவையில்லை - சர்வதேச வணிக வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணி

இந்தியாவின் சர்வதேச வணிகத்தை ஊக்குவிக்கும் இறக்குமதி- ஏற்றுமதி வங்கியில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 40 காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. இப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.

சமயம் 19 Jan 2026 6:09 pm

Putin Invited to Trump’s Global Peace Board

Russian President Vladimir Putin has been invited to join U.S. President Donald Trump’s “Board of Peace”, a new initiative aimed

சென்னைஓன்லைனி 19 Jan 2026 6:08 pm

TVK Vijay: ``கிளி ஜோசியம்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள் - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 போ்பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரித்து வருகின்றது. கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். தவெக விஜய் அதன் அடிப்படையில், த.வெ.க நிர்வாகிகளைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் கடந்த 12-ம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும், தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``இன்றுடன் எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்மன் முடிந்தது. எங்களின் நிகழ்ச்சி நிரல்களையும், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறோம். இன்றுடன் எங்கள் தலைவருக்கு விசாரணை முடிந்தது. ஆனால் காலையிலிருந்து திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய் கைது என்றும், அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது என்றும் கிளி ஜோசியம் சொல்வதைப்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. தவெக விஜய் அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது, அவர் முன்னாலேயே பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `கரூர் மரணத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம்' என வெளிப்படையாகப் பேசினார். ஆனால் அது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை. செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் சம்மன் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் தவறான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள். சிபிஐ விசாரணை தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். எனத் தெரிவித்திருக்கிறார். CBI சம்மன்: Vijay -க்கு 2 Options கொடுக்கும் BJP? | ADMK வாக்குறுதிகள் | DMK TVK | IPS | Vikatan TV

விகடன் 19 Jan 2026 6:06 pm

Strong Q3 FY26 performance with 21% revenue growth, 33% rise in PAT: TIPS Music

Mumbai: TIPS Music Ltd. (formerly Tips Industries Ltd.), one of India’s leading music labels, has reported a robust financial performance for the quarter ended December 31, 2025 (Q3 FY26), delivering strong growth across revenue, profitability and digital reach.For Q3 FY26, the company’s revenue from operations stood at ₹94.3 crore, registering a 21% year-on-year growth compared to ₹77.7 crore in Q3 FY25. Operating EBITDA rose sharply to ₹74.5 crore, marking a 34% y-o-y increase, while Profit After Tax (PAT) came in at ₹58.7 crore, up 33% from ₹44.2 crore in the corresponding quarter last year. PAT margin for the quarter improved to 62.2%.On a quarter-on-quarter basis, revenue grew 6% from ₹89.2 crore in Q2 FY26, while PAT increased 10% from ₹53.2 crore. For the nine months ended FY26, revenue from operations reached ₹271.6 crore, reflecting a 17% y-o-y growth, while PAT rose 16% to ₹157.7 crore.Operationally, TIPS Music released 108 songs during the quarter, including 70 film tracks and 38 non-film tracks. Among the notable releases were “Sheher Ghumawa” and “Halki Halki Nami”. The company’s cumulative YouTube subscriber base expanded to 145.3 million, underscoring its continued digital momentum. On Instagram, the catalogue delivered strong engagement, with “Soldier Soldier Meethi Baatien” generating 2.7 billion views and “Tere Liye” reaching 2.1 billion views during the quarter.As part of its shareholder returns, the company announced an interim dividend of ₹5 per share for Q3 FY26, amounting to ₹63.91 crore. This brings the total dividend payout for 9MFY26 to ₹166.18 crore.[caption id=attachment_2488541 align=alignleft width=133] Kumar Taurani [/caption]Commenting on the results, Kumar Taurani – Chairman & Managing Director, said, “I am pleased to announce that in Q3 FY26, revenue reached ₹94.3 crore, reflecting 21% y-o-y growth, while PAT stood at ₹58.7 crore, up 33% compared to Q3FY25. To reward our shareholders, the Board has approved a dividend of ₹5 per share, which brings total payout to ₹166.18 crore for 9MFY26. With this, the company has fulfilled its commitment to return 100% of last year’s PAT to shareholders.” Highlighting content and platform traction, he added, “During the quarter, 108 songs were released, including 70 film tracks and 38 non-film tracks. The cumulative YouTube channels subscriber base has grown significantly to 145.3 million. Our catalogue maintained significant momentum on Instagram; ‘Soldier Soldier Meethi Baatien’ generated 2.7 billion views, while ‘Tere Liye’ song reached 2.1 billion during the quarter. ‘Meri Kahani’ song became the personal anthem for many to express their young version versus today, it was used by our CMD Kumar Taurani, Virat Kohli, Ajay Devgan etc on Instagram. We are happy to announce our partnership with B4U TV as our broadcast partner, enabling wider reach for our rich catalog among television audiences globally.”

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 6:05 pm

India Invited to U.S.-Led Gaza Peace Board

India has been invited by U.S. President Donald Trump to join the Board of Peace for Gaza, according to sources

சென்னைஓன்லைனி 19 Jan 2026 6:03 pm

வாட்ஸ் ஆப்பிலேயே வரும் ஆதார் கார்டு.. இனி எங்கும் அலையத் தேவையில்லை.. சூப்பர் வசதி இருக்கே!

வாட்ஸ் ஆப் மூலமாக ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்யும் வசதி வந்துள்ளது. அதை எப்படி எடுப்பது என்று இங்கே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சமயம் 19 Jan 2026 6:00 pm

மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?

ஜனவரி 23 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா? ஆனால் அன்புமணியின் பாமக-வும், G.K வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் மட்டும்தான் தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரனும், பிரேமலதாவும் கூட்டணி பிரசார மேடையில் ஏறுவார்களா? அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா? அவர்களின் திட்டம் நிறைவேறுமா? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். கோபித்துக் கொண்ட அமித் ஷா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்(என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா சொல்ல, நாங்கள் தனித்துதான் ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. அவர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் எழுந்தன. அமித் ஷா திருச்சி வந்தபோதுகூட கூட்டணியில் இன்னும் யாரையும் சேர்க்காமல் இருக்கிறீர்கள்? என்று எடப்பாடியிடம் கோபித்துக் கொண்டார். ப்ரியன் கூட்டணியில் அன்புமணி அமித் ஷா கொடுத்த அழுத்தத்தினால்தான் அன்புமணியை அழைத்து பாமக-வுடனான கூட்டணியை அறிவித்தார்கள். அதிலும் இன்னும் தொகுதிகள் குறித்தும், ராஜ்ய சபா சீட் குறித்தும் அன்புமணிக்கு உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால் 23-ம் தேதி அன்புமணி மேடையில் இருப்பாரா? என்றால் அவர் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம் தேமுதிக இருக்குமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். ராஜ்ய சபா சீட்டில் இருக்கும் சிக்கல் ஏனென்றால் தேமுதிக அதிமுக-வுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. திமுக-வுடனும் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக, அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்கு கொடுத்திருந்தால் அதில் நமக்கு சிக்கல் இருக்குமா? என்று தேமுதிக யோசிக்கிறது. ஏனென்றால் அன்புமணிக்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்து, தேமுதிக-விற்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்தால் அதிமுக-வில் இருப்பவர்கள் குரல் எழுப்புவார்கள். பிரேமலதா யோசனையில் தேமுதிக தம்பிதுரை எல்லாம் 10-வது முறையாக எம்.பி ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இடையில் ஜி.கே வாசனும் எனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் ராஜ்ய சபா சீட் தங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று வாக்குறுதி தந்தால் தான் தேமுதிக, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் வருவார்கள் என்பது என்னுடைய கருத்து. டிடிவி-க்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக பாஜக அழுத்தம் கொடுக்கிறது. மத்திய அரசின் அழுத்தம் என்பது சாதாரணமானது கிடையாது. தவெக-வுடன் டிடிவி தினகரன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை டெல்லிக்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்தார்கள். வெளியில் பேசும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தான் சொல்கிறார். பிறகு ஏன் அவர் அமித் ஷாவை சந்தித்தார். டிடிவி தினகரன் கேள்வி எழுப்பும் அமமுக கட்சியினர் தற்போது தேர்தலில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்கக் கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடியை எதிர்த்து பேசிவிட்டு இப்போது அவர் இருக்கும் கூட்டணிக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று டிடிவி கட்சியினர் நினைக்கின்றனர். அப்படி எடப்பாடி இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நம் ஜனங்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். மேலும் நம்முடைய ஓட்டை எல்லாம் வாங்கி எடப்பாடி தானே பலமடைவார். அவரை ஏன் அரசியலில் நாம் பலப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்? அதனால் டிடிவி தினகரனும் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார். வெளியே வந்துவிடலாமா?- டிடிவி கடைசி நேரத்தில் 20 இடங்களைக் கேட்டு அவர்கள் கொடுக்க மறுத்து விட்டால் நாம் வெளியே வந்துவிடலாமா? என்ற யோசனையில் டிடிவி தினகரன் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தற்போது டிடிவியுடன் தொகுதி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் 23-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை முடிந்தால் அதிமுக - பாஜக கூட்டணி பிரசார மேடைக்கு டிடிவி தினகரன் வருவார். அதேபோல ஜான் பாண்டியன் 5 இடங்கள் கேட்கிறார். ஆனால் இவர்கள் 2 இடங்கள் தான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் பிரசார மேடை ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம், அன்புமணி போன்றோர் மேடையில் இருப்பார்கள். பிரேமலதாவையும், தினகரனையும் மேடையில் அமர வைத்தார்கள் என்றால் நிச்சயமாக அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணியாகப் பார்க்கப்படும். ஆனால் அதில் நான் முன்பே சொன்ன மாதிரியான சிக்கல்களும் இருக்கின்றன என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

விகடன் 19 Jan 2026 5:57 pm

JioHotstar introduces monthly plans across tiers, expands choice for viewers

Mumbai: JioHotstar has announced an updated subscription proposition for new subscribers, effective January 28, 2026. As part of the move, the platform is introducing monthly plans across all tiers—Mobile, Super and Premium—starting at ₹79 per month, aimed at making premium entertainment more accessible while reflecting evolving viewing habits.The new pricing structure brings added flexibility, with monthly plans now available alongside existing quarterly and annual options across tiers. This change is designed to cater both to individuals who primarily consume content on smartphones and to families seeking high-quality entertainment on Connected TVs. JioHotstar has witnessed explosive growth in large-screen consumption over the past 11 months since launch, and the revised pricing aims to enhance the viewing experience across devices.For new subscribers, Hollywood entertainment will be included within the Super and Premium tiers. Mobile-tier users will continue to have access to Hollywood content through a flexible add-on, allowing viewers to customise their subscription based on preferences. To ensure continuity, there will be no change in price or benefits for existing subscribers, provided auto-renewals remain active.The announcement comes at a significant milestone in JioHotstar’s growth journey. The platform has crossed 1 billion downloads on Google Play and now serves over 450 million monthly active users across 100% of India’s pin-codes, placing it among a small group of platforms globally operating at this scale. With a library of more than 300,000 hours of content spanning languages and genres, the updated subscription framework is aimed at supporting deeper connected-TV experiences, mobile-led discovery, and continued investments in content and technology.[caption id=attachment_2488536 align=alignleft width=133] Sushant Sreeram [/caption]Commenting on the update, Sushant Sreeram, Head – SVOD Business & Chief Marketing Officer, JioStar, said, “As we continue building India’s most expansive and inclusive entertainment ecosystem it’s important that our subscription choices keep pace with how audience want to watch. We are privileged to serve the most dynamic and diverse entertainment audience in the world, and we are constantly investing and inventing to ensure we provide viewers not just the world’s best entertainment but also the world’s best viewing and access experience. This update brings greater flexibility and choice across subscription needs, while supporting long-term investments in premium storytelling, the best of live-sports, and a high-quality streaming experience at scale for our audiences.” Under the new plans for new subscribers, the Mobile tier starts at ₹79 per month with access on one mobile device at a time and ad-supported viewing, excluding Hollywood content unless added on. The Super tier, starting at ₹149 per month, allows access on up to two devices and includes Hollywood content with ads. The Premium tier, starting at ₹299 per month, offers access on up to four devices with an ad-free experience, except for live sports and live shows.In less than a year since launch, JioHotstar has built a comprehensive entertainment ecosystem encompassing major sporting IPs, programming from over 100 network channels, creator-led content through Sparks, live cultural events, flagship originals, blockbuster films, a large kids and family library, a dedicated anime hub, and an expansive international catalogue spanning Hollywood and beyond.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 5:53 pm

பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது!

பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல… The post பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 5:50 pm

SIR பணிகள்.. உச்சநீதிமன்றத்தை நாடிய தவெக.. விஜய்யின் மனுவில் இருப்பது என்ன?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெயர் சேர்க்க வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறி, தமிழ்நாடு வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சமயம் 19 Jan 2026 5:46 pm

டித்வா புயல்; இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ளவுள்ளனர். இதனை கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுற்றறிக்கையில் குறைபாடுகள் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் […]

அதிரடி 19 Jan 2026 5:42 pm

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான… The post திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 5:39 pm

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு சோதனை நடத்தி குடிநீர் கேன்களுடன் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதாவை (35) மயிலாப்பூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். வனிதா சென்னைக்கு எங்கிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுகிறது என அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அடையாறு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட வனிதா, அவரின் கணவர் அப்துல்லா ஆகியோரின் பின்னணியை விசாரித்தோம். இவர்கள் மீது ஏற்கெனவே கள்ளச்சந்தையில் மது விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது வனிதாவை இந்த வழக்கில் வசமாக ஒரு டீம் சிக்க வைத்திருக்கும் ரகசிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர் கேன்களுடன் வைத்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து பார்த்திபனைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர், வனிதாவை சிக்கவைக்க கள்ளச்சாராய கேனை அங்கு வைத்ததாகக் கூறினார். அதோடு பாத்திபன், மயிலாப்பூர் துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த 3 காவலர்கள் கூறியதால்தான் அப்படிச் செய்தேன் எனவும் உளறினார். உடனே இந்தத் தகவலை மயிலாப்பூர் துணை கமிஷனர், உயரதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்த குற்றத்துக்காக பார்த்திபனைக் கைதுசெய்துள்ளோம் என்றனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``சட்ட விரோத மது விற்பனை வழக்கில் தொடர்புடைய வனிதா, சில மாதங்களாக தண்ணீர்கேன் பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் ஸ்பெஷல் டீமில் உள்ள 3 காவலர்கள் வனிதாவிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. ஏற்கெனவே கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபனுக்கும் வனிதாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. வனிதா மாமூல் கொடுக்காத ஆத்திரலிருந்த ஸ்பெஷ் டீம் போலீஸார், கள்ளச்சாராய வியாபாரி பார்த்திபன் மூலம் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்கள். இதற்காக பார்த்திபனை ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயத்தை 20 லிட்டர் தண்ணீர்கேனில் அடைத்து சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார் பார்த்திபன். பின்னர் வனிதாவின் தண்ணீர்கேன்களோடு கள்ளச்சாராய கேனையும் பார்த்திபன் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஸ்பெஷல் டீம் போலீஸார், கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி வனிதாவைப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்களும் வனிதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தோம். தறபோது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றனர். போலீஸ் காவலர்களைக் காட்டிக் கொடுத்த புது சிம் கார்டு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டை அடுத்து ஸ்பெஷல் டீமில் உள்ள போலீஸாரை ரகசியமாக கண்காணித்தோம். அப்போது அவர்கள் சமீபகாலமாக குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பருக்கு அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. அந்த சிம்கார்டு விவரங்களை சேகரித்தபோது அதை பார்த்திபன் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. பின்னர் வனிதா கைதானதும் பார்த்திபனிடமிருந்து அந்த புது சிம் கார்டை ஸ்பெஷல் டீம் போலீஸார் திரும்ப வாங்கியிருக்கிறார்கள். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விகடன் 19 Jan 2026 5:38 pm

Contract Advertising India bags Integrated Communications mandate for BMW India

Mumbai: Contract Advertising India has been awarded the integrated creative mandate for BMW India, following a highly competitive pitch involving some of the country’s leading agencies. The agency will be responsible for managing both mainline and digital communications for the prestigious German luxury automotive brand in India.Under this mandate, Contract Advertising India will develop and execute integrated brand communications across multiple platforms, encompassing creative strategy, campaign development, and digital storytelling, all tailored to the unique preferences of the Indian luxury automotive market. Rohit Srivastava, Chief Strategy Officer, Contract Advertising India said, “We are delighted to welcome BMW India to our portfolio. BMW is not just an iconic brand but a global benchmark for excellence in design, performance, and innovation. Securing this mandate is a matter of immense pride for us, and we look forward to creating distinctive, future-facing brand communication that accelerates BMW’s journey in the luxury automotive space and builds deeper connections with Indian consumers.” [caption id=attachment_2488527 align=alignleft width=200] Vitesh Barar [/caption] Vitesh Barar, Director, Marketing, BMW India said, “At BMW India, we continuously evolve to ensure our brand resonates with consumers. Contract Advertising India demonstrated a deep understanding of our brand values, long-term business ambitions, and the expectations of today’s luxury consumer. Their strategic insight and creative vision stood out, and we are confident that this partnership will elevate BMW India’s brand communications to new heights.” BMW India stands as one of the country’s foremost luxury automotive brands, renowned for its excellence in performance, innovation, and driving experience. With this new partnership, we aim to further strengthen our position in the Indian luxury automotive segment and engage more meaningfully with a new generation of digitally savvy consumers, ensuring our brand remains relevant and aspirational in a rapidly evolving market, Mr. Barar added.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 5:36 pm

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் வேன் ஒன்று முன்னால் பயணித்த லொறி மீது மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வேனில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 19 Jan 2026 5:36 pm

“கந்தரோடை விகாரை ”என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் –தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழப்பாணத்தில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் – […]

அதிரடி 19 Jan 2026 5:32 pm

மகாமேளா: திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் புனித நீராடல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடங்கியது. இந்த மகாமேளா பிப்ரவரி 15-ந்தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மவுனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி […]

அதிரடி 19 Jan 2026 5:30 pm

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த    இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

video link- https://wetransfer.com/downloads/2664a025702280b1d692537326fce43b20260119020500/bc9965?t_exp=1769047500&t_lsid=cdf480bb-bad9-4c46-8f19-6e6501bfecbb&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMDY4NTg0NjA3MDA5OTg5OTQ0MjM=&t_s=download_link&t_ts=1768788327&utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு களவாடப்பட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் கடந்த சனிக்கிழமை (17) மாலை சந்தேகத்திற்கிடமாக சொகுசு கார் ஒன்று நடமாடுவதாக […]

அதிரடி 19 Jan 2026 5:24 pm

தேசிய அலுமினிய நிறுவனத்தில் மேனேஜர் வேலை; பொறியியல் டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.22 லட்சம் வரை சம்பளம் - 48 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (NALCO) மேனேஜர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சமயம் 19 Jan 2026 5:18 pm

T20 World Cup: ‘வெளியேறும் வங்கதேசம் அணி?’.. புது அணியை தேர்வு செய்த ஐசிசி: கடைசி நேரத்தில் ட்விஸ்ட்!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்து வங்கதேசம் அணி விலகும் பட்சத்தில், மாற்றாக எந்த அணியை சேர்ப்பார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த அணியை தயார் நிலையில் இருக்க சொல்லி ஐசிசி அறிவுறுத்தியுள்ளதாம்.

சமயம் 19 Jan 2026 5:07 pm

SW Network bags creative and digital mandate for MINI

Delhi: SW Network, an integrated creative and digital agency, has been awarded the complete digital and creative mandate for MINI India, the iconic automotive brand globally celebrated for its distinctive design, go-kart driving experience and bold personality.Under the mandate, SW Network will spearhead MINI India’s creative strategy and deliver end-to-end digital and creative services aimed at strengthening the brand’s digital presence and expanding its community across platforms. The account will be serviced by SW Network’s Delhi team.As part of the engagement, the agency will shape MINI India’s digital ecosystem through bold creative thinking, culture-first storytelling and performance-driven innovation. From high-impact brand campaigns and product narratives to lifestyle-led content and platform-native ideas, the focus will be on translating MINI’s iconic global personality into locally resonant digital experiences that drive conversations and deepen community engagement.[caption id=attachment_2482172 align=alignleft width=200] Pranav Agarwal [/caption]Commenting on the win, Pranav Agarwal, Co-Founder, SW Network, said, “Partnering with MINI India is a milestone moment for us. MINI is not just a car brand; it’s a global cultural icon, a lifestyle, and a statement in design. Building on this emotional connection and bringing it alive digitally is an exciting responsibility. Our aim is to craft a distinct, witty, and premium digital voice for MINI India while strengthening its creative performance. We are thrilled to collaborate with a brand that thrives on originality and look forward to creating work that moves both the brand and its audience.” [caption id=attachment_2488515 align=alignright width=200] Abhinandan Gopalsetty [/caption]Sharing his perspective on the partnership, Abhinandan Gopalsetty, Director, MINI India , said, “MINI has always stood for innovation, individuality, and creative expression. As our digital touchpoints continue to expand, we were looking for a partner who understands the brand’s unique spirit and can translate it seamlessly across platforms. SW Network’s strategic depth, creative agility, and strong digital capabilities made it the ideal choice. We are excited to work together on elevating MINI India’s digital footprint and engaging our community in fresh, meaningful ways.”

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 5:05 pm

கந்தரோடை விகாரை என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் - தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழப்பாணத்தில் கந்தரோடை விகாரை என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் கந்தரோடை விகாரைஎன நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்

பதிவு 19 Jan 2026 5:05 pm

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதிவு 19 Jan 2026 5:04 pm

️ கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம் –தவிசாளரிடம் விசாரணை

யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை… The post ️ கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம் – தவிசாளரிடம் விசாரணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 5:01 pm

Budweiser 0.0 unveils ‘In the Hands of Fans’ campaign to celebrate ICC Men’s T20 World Cup 2026

Mumbai: Budweiser 0.0 has kicked off its partnership with the International Cricket Council (ICC) with the launch of ‘In the Hands of Fans’, a culture-first campaign that marks the first chapter of the brand’s association with the ICC Men’s T20 World Cup 2026. The campaign celebrates cricket through a fan-first lens, spotlighting the moments that define the game and the people who bring those moments to life.Rooted in the belief that cricket truly belongs to its fans, ‘In the Hands of Fans’ shines a light on the passion, belief and shared celebrations that transform every match into a memory. The campaign sets the tone for a season of youth-led, culture-driven experiences across India, positioning fans at the very heart of the cricketing narrative.[caption id=attachment_2463373 align=alignleft width=200] Vineet Sharma [/caption]Commenting on the launch, Vineet Sharma, Vice President – Marketing & Trade Marketing, AB InBev India , said, “Cricket in India is fueled by its fans, in stadiums, in homes, in pubs and in all the places where the game is watched together. With ‘In the Hands of Fans’, we’re celebrating the iconic moments that define the game of cricket and the people who bring those moments to life. As we begin our association with Cricket, Budweiser 0.0 is bringing alive culture-first experiences across multiple cities of India, creating a fresh fan-first outlook that is set to make this campaign an international trendsetter.” Rolling out as a pan-India, youth-focused initiative, the campaign will be driven by a robust 360-degree activation plan. This includes nationwide media takeovers, limited-edition packaging, fan-first screening experiences, immersive cultural partnerships and on-ground activations designed to bring Budweiser 0.0’s ICC journey to life across homes, social spaces and digital platforms.Built around the iconic moments of the game, the campaign aims to deepen fan participation by creating shared, collective experiences rooted in youth culture and contemporary fandom, bringing audiences even closer to the sport they love.Over the last two decades, Budweiser has emerged as India’s leading premium beer brand, making the country its third-largest market globally outside the US. Backed by AB InBev’s brewing heritage and focus on high-quality offerings, the brand continues to tap into India’s growing demand for premium and sessionable beverages.With ‘In the Hands of Fans’, Budweiser 0.0 reinforces its position at the intersection of sports, youth culture and modern celebrations—premium, inclusive and always centred on the fans who make the game legendary.https://www.youtube.com/watch?v=GYB1C6H-dKc

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 5:00 pm

Culture secures ₹2 crore seed funding from Acuvest Infra

Hyderabad: Culture, a human-first social networking platform centred on shared interests and real-time conversations, has raised ₹2 crore in seed funding from Acuvest Infra. The funding has been raised by ART Pvt Ltd., the parent company of Culture, and will be utilised to accelerate product development, expand community initiatives, and strengthen the platform’s safety-focused infrastructure.Founded with the aim of moving social networking away from performative engagement and toward meaningful interaction, Culture is building a platform where conversations are driven by interests rather than follower counts or algorithms.[caption id=attachment_2488506 align=alignleft width=356] Anurag Rangineni, [/caption] “Social media today rewards attention, not connection,” said Anurag Rangineni, Founder and CEO of Culture. “We are building Culture to solve that. The future of social networking lies in meaningful conversations built around shared interests, not follower counts or endless scrolling. Culture is designed to help people feel heard, not performed.” Rangineni emphasised that trust and safety are central to the platform’s design philosophy. “Trust is the biggest deficit in today’s digital communities,” Rangineni added. “Culture is built from the ground up with safety and intent as core principles. We believe real communities can only grow when people feel secure enough to be themselves.” The newly raised capital will also support the rollout of creator-led ‘Spaces’, a key new feature on the platform. Spaces will enable creators and community leaders to host live discussions, events, and hybrid online-offline experiences. The feature forms an important part of Culture’s monetisation strategy, opening up opportunities for ticketed events, targeted event promotion, and long-term partnerships with offline venues such as cafs, clubs, and cultural spaces.Commenting on the investment, Acuvest Infra highlighted Culture’s differentiated approach to building sustainable digital communities. “Users are increasingly moving away from noisy, performative platforms toward smaller, safer, and more meaningful communities,” said a spokesperson from Acuvest Infra . “Culture’s focus on explicit interests, verified users, and community-driven engagement positions it well for the next phase of social networking.” Currently in its early growth phase, Culture is expanding through college activations, caf and brewery partnerships, creator collaborations, and organic community-building initiatives. The company plans to scale across major Indian cities before expanding to global markets. Its longer-term roadmap includes premium subscriptions, creator monetisation tools, and native advertising aligned with user interests.With its seed funding in place, Culture aims to build a global social networking platform where human connection comes before algorithms, and digital spaces feel less like feeds and more like conversations.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 4:58 pm

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதோடு தான் தொழிலதிபர் என்றும், தனக்கு ரூ.715 கோடி அளவுக்குச் சொத்து இருப்பதாகவும், வி.ஜி.ஆர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், கிரஸ்ஸர், லாரி, நிலம், ஏராளமான வீடுகள் இருப்பதாகவும் நவ்யாவிடம் தெரிவித்தார். மேலும் ரூ.715 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவு கைது செய்ததையும், ஜாமீன் வழங்கியதற்கான ஆவணங்களையும் நவ்யா குடும்பத்திடம் காட்டினார். இதை நவ்யா குடும்பத்தினர் நம்பினர். கடந்த ஏப்ரல் மாதம் நவ்யாவிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினார். அதனைத் தொடர்ந்து தொழிலை இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று கூறி, நவ்யாவிடம் வங்கி மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொடுக்கும்படி கூறினார். நவ்யாவும் அதே போன்று செய்தார். சித்திரிப்புப் படம் நவ்யாவை தனது ஊருக்கு அழைத்துச் சென்று தனது தந்தை கிருஷ்ணப்பா, தாயார் நேத்ராவதி, சகோதரி சுஷிதீபா ஆகியோரிடம் அறிமுகம் செய்தார். விஜயின் தந்தை கிருஷ்ணப்பா தான் ஓய்வு பெற்ற தாசில்தார் என்று தெரிவித்தார். விஜய்யின் கம்பெனியில் நவ்யாவின் நண்பர்கள் ரூ.66 மற்றும் 23 லட்சத்தை முதலீடு செய்ய வைத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது கோர்ட் தனது வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருப்பதாக விஜய் தெரிவித்தார். அதோடு விஜய் கோர்ட் உத்தரவை நவ்யாவின் பெற்றோரிடம் காட்டி அவர்களது நம்பிக்கையைப் பெற்றார். மேலும் அவர்களிடமிருந்தும் ரூ.30 லட்சத்தை வாங்கிவிட்டார். விஜய் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காததால் விஜய் வீட்டிற்கு நவ்யா சென்றபோது அங்கு விஜய் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிய வந்தது. விஜய்யின் சகோதரி என்று முன்னர் சொன்னவர், விஜய்யின் மனைவி என்று தெரியவந்தது. விஜய்யும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நவ்யாவையும், அவரது தோழிகளையும், பெற்றோரையும் ஏமாற்றி இருந்தனர். பணத்தை திரும்பக் கொடுக்கும்படி கேட்டதற்கு, நவ்யாவையும், அவரது தோழிகளையும் மிரட்டினார் விஜய். மொத்தம் ரூ.1.75 கோடியை விஜய் வாங்கி இருந்தார். அதில் 22.50 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்திருந்தார். நவ்யா கொடுத்த புகாரின் பேரில் விஜய் மற்றும் இரண்டு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

விகடன் 19 Jan 2026 4:56 pm

சுவைக்கத் தூண்டும் சாட் : `சைனீஸ் பேல்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சைனீஸ் பேல் தேவையானவை: ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) குடமிளகாய் – ஒன்று முட்டைகோஸ் – கால் கிலோ வெங்காயத்தாள் - ஒரு கட்டு பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள் செஷ்வான் சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் வினிகர் - அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவைகேற்ப்ப சைனீஸ் பேல் செய்முறை: குடமிளகாய், முட்டைகோஸை மெலிதாக, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதிலுள்ள பச்சை பகுதியில் சிறிதளவை மட்டும் அலங்கரிப்பதற்காக தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலக்கவும். இதில் நூடுல்ஸைச் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். பிறகு தண்ணீர் வடிக்கப்பட்ட நூடுல்ஸை சாதா தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும். பிறகு நூடுல்ஸை ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு விரவி விடவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வேகவைத்த நூடுல்ஸை அதில் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு நிறம் மாறியதும், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும். பிறகு இத்துடன் நூடுல்ஸ் தவிர மீதமுள்ள மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கலந்து இறக்கவும். கடைசியாக பொரித்த நூடுல்ஸை உடைத்து இக்கலவையுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

விகடன் 19 Jan 2026 4:56 pm

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் &ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் திரட்டு' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் திரட்டு தேவையானவை : தேங்காய்ப்பால் – ஒரு கப் அரிசி மாவு – 100 கிராம் பொடித்த கருப்பட்டி – 400 கிராம் உப்பு – ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தண்ணீர் – 350 மில்லி தேங்காய்ப்பால் திரட்டு செய்முறை: பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை குலாப்ஜாமுன் சிரப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இக்கலவையைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும். கலவையானது அல்வா பதத்துக்கு வந்தவுடன் மீதமிருக்கும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் கருப்பட்டி சிரப், ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். உடலின் உள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... சரும ஆரோக்கியத் துக்கும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உறுதி அளிக்கும் சிறப்பு தேங்காய்ப் பாலுக்கு உண்டு.

விகடன் 19 Jan 2026 4:54 pm

பொய் சொல்லிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின்.. வாக்குறுதிகள் என்னாச்சு? அண்ணாமலை தாக்கு!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார்.

சமயம் 19 Jan 2026 4:53 pm

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதுமான ஒரு வரலாற்றுப் பயணம்! ♿

வவுனியாவைச் சேர்ந்த சாதனை இளைஞன் மக்கின் முகமது அலி (வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணித் தலைவர்),… The post சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதுமான ஒரு வரலாற்றுப் பயணம்! ♿ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 4:53 pm

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் &ஸ்நாக்ஸ்: `ஹாட் சில்லி பிரெட்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

ஹாட் சில்லி பிரெட் தேவையானவை: சாண்ட்விச் பிரெட் – 5 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் சிறிய சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் – ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் – அலங்கரிக்க உப்பு, எண்ணெய் – தேவையான அளவு ஹாட் சில்லி பிரெட் செய்முறை: பிரெட்டைச் சிறிய சிறிய சதுரங்களாக நறுக்கி ஒரு ஃப்ரை செய்யும் பானில் உலர் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள், சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இதில் உலர் டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

விகடன் 19 Jan 2026 4:51 pm

சுவைக்கத் தூண்டும் சாட் : `சோளே குல்ச்சா' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சோளே குல்ச்சா சோளே மசாலா செய்ய தேவையானவை: வெள்ளைப்பட்டாணி - ஒரு கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது) தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது) சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் குல்ச்சா செய்ய தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் கோதுமை மாவு - ஒரு கப் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் ஈஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - ஒரு துண்டு கொத்தமல்லி – சிறிதளவு சோளே குல்ச்சா சோளே மசாலா செய்முறை: ஊறவைத்த வெள்ளைப் பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சாட் மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி விடவும். பிறகு இத்துடன் வேகவைத்த பட்டாணியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். பின்னர் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து விடவும். குல்ச்சா செய்முறை: மிதமான வெந்நீரில் சர்க்கரையைச் சேர்த்துக்கரைக்கவும். இத்துடன் ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். ஈஸ்ட் நுரைத்துவந்ததும், அதனுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய ஈரத் துணியில் இதைச் சுற்றி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து அதன் மீது லேசாக மைதா தூவி உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக வேண்டிய வடிவில் திரட்டிக்கொள்ளவும். பிறகு திரட்டிய சப்பாத்திகளை மீண்டும் ஈரத் துணியால் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் இந்தச் சப்பாத்திக்களை வெளியே எடுத்து அவற்றின் மீது கொத்தமல்லி தூவவும். சூடான தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய்விட்டு அதில் இந்தச் சப்பாத்திகளை இருபக்கமும் சுட்டெடுக்கவும். குல்ச்சா தயார். இந்த டேஸ்ட்டி குல்சாவைத் தயாரித்து வைத்துள்ள சோளேவுடன் பரிமாறவும். உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் பட்டாணி ஓர் ஓராண்டு தாவரம். ஒரு பட்டாணி விதையின் எடை சுமார் 0.1 முதல் 0.36 கிராம் வரை இருக்கும்.

விகடன் 19 Jan 2026 4:49 pm

Mamta Kalia and Arambam Ongbi Memchoubi to receive Amar Ujala’s Akashdeep Honour

New Delhi: Amar Ujala has announced the recipients of its highest literary honour, the ‘Akashdeep’ Award, under the Amar Ujala Shabd Samman 2025. Eminent Hindi short-story writer Mamta Kalia will be honoured in the Hindi category, while renowned Manipuri author Arambam Ongbi Memchoubi will receive the award in the non-Hindi Indian languages category, recognising their lifelong contributions to Indian literature.The conferment carries special significance as it coincides with the Golden Jubilee year of the United Nations’ International Women’s Year (1975), while 2026 has also been dedicated by the UN to women’s contributions to agriculture. Honouring two distinguished women writers in this context lends added distinction to the award.The Akashdeep honour includes a cash prize of ₹5,00,000 each, a citation, and a Ganga sculpture as a symbol of cultural continuity.Arambam Ongbi Memchoubi, born as Dr. Thounaojam Chanu Ibemhal on January 1, 1957, is celebrated for her prolific contribution to Manipuri literature, particularly her engagement with postcolonial thought, women’s identity, and Meitei myths. She is regarded as one of the most influential voices in contemporary Manipuri writing.Mamta Kalia, born on November 2, 1940, is among the most respected figures in modern Hindi literature. Writing during the early waves of feminism in India, she has authored over a dozen notable works and is known for articulating the complexities of middle-class life and the struggle for women’s identity with clarity and depth.Under the Akashdeep Award, languages such as Hindi, Kannada, Marathi, Bengali, Odia, Malayalam and Gujarati have been honoured in previous years, with Manipuri being selected this year. Past recipients include Girish Karnad, Bhalchandra Nemade, Shankha Ghosh, Pratibha Ray, M.T. Vasudevan Nair and Sitanshu Yashaschandra in non-Hindi languages, and Namvar Singh, Gyanranjan, Vishwanath Tripathi, Shekhar Joshi, Vinod Kumar Shukla and Govind Mishra in Hindi.Yashwant Vyas, Group Advisor at Amar Ujala and Convener of the Shabd Samman, stated that the Amar Ujala Foundation launched the Shabd Samman in 2018 with the collective dream of strengthening Indian languages. He noted that the supreme Akashdeep honour is conferred each year on one distinguished litterateur from Hindi and one from another Indian language, alongside awards for the best literary works of the year, including the Bhasha-Bandhu Translation Award.In addition to the Akashdeep honours, Amar Ujala has announced the Best Work Awards for outstanding Hindi works published in 2024. In the ‘Chhap’ (Poetry) category, Savita Singh’s collection “Vaasna Ek Nadi Ka Naam Hai” has been selected. Naish Hasan’s “Mutah” has been chosen in the Non-Fiction category, while Shahadat’s short-story collection “Curfew Ki Raat” will receive the Best Work Award in Fiction.The Bhasha-Bandhu Translation Award will be conferred on Sujata Shiven for her Hindi translation of “Charu Chivar aur Charya”, originally written in Odia by Pradeep Dash. The ‘Thaap’ Award for a debut author will be presented to Manish Yadav for “Sudhaargrih Ki Malikainen”. Each of these honours carries a cash prize of ₹1,00,000, a citation, and a Ganga sculpture.The works were evaluated by a high-level jury comprising poet Varsha Das, noted writer Vibhuti Narayan Rai, acclaimed storyteller Dhirendra Asthana, renowned writer-translator Damodar Khadse, and well-known short-story writer Balram.The Amar Ujala Shabd Samman 2025 will be presented at a formal ceremony to be held shortly.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Jan 2026 4:48 pm

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் &ஸ்நாக்ஸ்: `டோஸ்டு பொட்டேட்டோஸ்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

டோஸ்டு பொட்டேட்டோஸ் தேவையானவை: உருளைக்கிழங்கு – 3 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் – ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் வெங்காயத்தாள் – அலங்கரிக்க உப்பு, எண்ணெய்– தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்து தோல் சீவி விரல் வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, தேவையான உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இந்த உருளைக்கிழங்குத் துண்டுகளுடன் தயாரித்து வைத்துள்ள சோள மாவு - மைதா மாவு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை மீதமிருக்கும் சோள மாவில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், வினிகர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையைப் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். ஒரு டீஸ்பூன் சோள மாவை தனியாக எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து அதைக் கொதிக்கும் இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறவும். பின்னர் பொரித்து வைத்துள்ள உருளை துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும். உலகின் பஞ்சத்தைப்போக்கும் உணவுப்பொருள்களில் உருளைக் கிழங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

விகடன் 19 Jan 2026 4:47 pm

விதவிதமான இட்லி ரெசி: `ராமசேரி இட்லி'செய்வது எப்படி?

ராமசேரி இட்லி தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் இட்லி அரிசி - ஒரு கப் உளுத்தம்பருப்பு - கால் கப் வெந்தயம் - சிறிதளவு சாதம் - அரை கப் உப்பு - தேவையான அளவு ராமசேரி இட்லி செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் சாதத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்துவைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின்பு மறுநாள் இட்லிகளாக ஊற்றவும். இட்லி தயாரிக்கும் முறை: வாய் அகன்ற சிறிய மண்பானை ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில் பாதியளவு நீர் நிரப்பி, பானையின் வாயில் ஈரப்படுத்திய இட்லி துணியைக் கட்டவும். பின்பு அதில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தியால் இட்லியை லேசாகக் குத்திப்பார்க்கவும். மாவு கத்தியில் ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது லேசாக நீர் தெளித்து துணியில் இருக்கும் இட்லியை எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

விகடன் 19 Jan 2026 4:45 pm

பட்ஜெட் இப்படித்தான் இருக்க வேண்டும்.. உற்பத்தித் துறையினர் பெரும் எதிர்பார்ப்பு!

MSME உள்ளிட்ட உற்பத்தி துறையினர் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிறைய முன்னேற்றங்களையும் அறிவிப்புகளையும் எதிர்பார்க்கின்றனர்.

சமயம் 19 Jan 2026 4:43 pm