நேபாள மக்களவை சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றி தேர்வு
காத்மண்டு நேபாள நாட்டின் ராஷ்டீரிய சுதந்திரா கட்சியின் துணை தலைவரான டோல் பிரசாத் ஆரியால் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் ரபி லமிசானே ஆதரவு தெரிவித்ததுடன், மந்திரிகள் ஸ்வர்னிம் வாகலே, சோபிதா கவுதம் மற்றும் சுனில் லம்சால் ஆகியோரும் ஆதரவளித்திருந்தனர். நடப்பு ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காத்மண்டு-9 தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கீழவையின் 10-வது சபாநாயகராகி […]
‘ஆண்கள் பிறநாடுகள் செல்ல இனி அனுமதி கட்டாயம்’ –ஜெர்மனி அதிரடி உத்தரவு
பெர்லின், ஜெர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் இனி அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விதி 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. முன்னர் போர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இது நிரந்தர சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளதாக […]
போருக்கு மத்தியிலும் கொடூரம்; ஈரானில் இருவருக்கு மரணதண்டனை
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப் 05) மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. “கிளர்ச்சியாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது. கடந்த வாரம் இதே […]
வாஷிங்டன் தென்மேற்கு ஈரானில் உள்ள கோஹ்கிலுயே மற்றும் போயர் – அஹமத் மாகாணத்தில் பறந்த அமெரிக்காவின் எப்.15 இ ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. 2 இருக்கைகள் கொண்ட அந்த எப்-15 ஸ்ட்ரைக் ஈகில் ரக விமானத்தில் இருந்த 2 விமானிகளும் அவசர பொத்தானை பயன்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேறினர். இதில் ஒரு விமானியை அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படைகள் பத்திரமாக மீட்டன. மற்றொரு விமானி மாயமானார். அவரை மீட்க அமெரிக்க படைகள் தேடும் […]
இலங்கை மாற்றம் பெற வேண்டும்: அதிகாரப் பகிர்வின் மூலம் 2030 பொருளாதார நிஜ நிலை மதிப்பீடு
இலங்கை இன்று தனது பொருளாதார பயணத்தில் மிகவும் நுட்பமான மற்றும் தீர்மானிக்கும் தருணத்தில் நிற்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடிகளில் ஒன்றிலிருந்து மீண்டு வருவதற்காக கடன் மறுசீரமைப்பு, நிதி கட்டுப்பாடு மற்றும் மெதுவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உடனடி சவால்களைத் தாண்டி ஒரு ஆழமான கட்டமைப்பு கேள்வி எழுகிறது. 2030க்குள் நிலையான வளர்ச்சியை அடைய இலங்கை எந்த பொருளாதார மாதிரியைத் தேர்ந்தெடுக்கும்? அதே நேரத்தில், பால்க் நீரிணையை அண்டியுள்ள தமிழ்நாடு தெற்காசியாவில் […]
யாழில். ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு –இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்ஊழியர்கள் புதிய இணைப்புக்களைவழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டுதாக்குதலைமேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக […]
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு!
தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் எதிரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் காரியாலயத்தைத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி
எழும்பூர் வர வேண்டிய முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம்!
சென்னை எழும்பூர் வர வேண்டிய சில முக்கிய ரயில்களின் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய
மும்பை மாநகராட்சியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்!
மும்பை மாநகராட்சிக் (BMC) கட்டுப்பாட்டில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரீட் பகுதியில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘பிங்க் டாய்லெட்’ (Pink Toilet) எனப்படும் நடமாடும் கழிப்பறைப் பேருந்து, சட்டவிரோதமாக உணவகமாக
மலையேற்றத்தில் ஈடுபட்டு மாயமான கேரள பெண் 4 நாட்களுக்குப் பிறகு பத்திரமக மீட்கப்பட்டார்!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தடியண்டமோல் (Tadiandamol) மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது மாயமான கேரளாவைச் சேர்ந்த 36 வயது மென்பொறியாளர் சரண்யா, அடர்ந்த காட்டில் நான்கு நாட்களுக்குப்
கோவையில் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 06), திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கோவை
அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 06), மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அவிநாசி (தனி) தொகுதியில் பாரதிய
வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து இணையதளத்தில் அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே இருக்கும் லபாயெட் பூங்காவில் இரவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக தகவல் கிடைத்தது. அந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. அந்தப் பூங்காவை சுற்றி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் […]
Fielding Errors Gift KKR Four Easy Runs
Xavier Bartlett bowled a length ball on middle and off stump to Angkrish Raghuvanshi, who gently played it towards mid-off.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்; புத்தாண்டில் அறிமுகமாகும் QR
புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து விளக்கம் அளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பாரிய பொறுப்புசமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் […]
யாழ்ப்பாணத்துக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தித்வா’ சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தன. ஆரம்பத்தில் தற்காலிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கொழும்பு கோட்டை முதல் யாழ்ப்பாணத்திற்கிடையில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. வடக்கு ரயில் பாதை வழமைக்குத் திரும்பவுள்ளது பின்னர், குறித்த 14 இடங்களிலும் நிரந்தர புனரமைப்பு பணிகளுக்காக கடந்த […]
சுழலும் சக்கரங்கள் துள்ளும் உள்ளங்கள்: ஜப்பானியர்களின் நாற்காலி பந்தயம்
டோக்கியோ, 2010-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கடை வீதியில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. இந்த விளையாட்டை உள்ளூர் வணிகத்தை மேம்படுத்தவும், அன்றாட அலுவலக சோர்வில் இருந்து மக்களை உற்சாகப்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த பந்தயம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. ஜப்பானில் உள்ள அலுவலக ஊழியர்கள் வேலையில் பயன்படுத்தும் நாற்காலிகளை வைத்து நடத்தும் போட்டி இதுவாகும். இந்த போட்டியின் ஒரு அணியில் மூன்று நபர் இருப்பார்கள். நகர வீதிகளில் அமைக்கப்பட்ட […]
Artemis II Moon Flyby Today: Join Us Live
Hello, readers! Today marks a historic moment as humanity returns to the Moon for the first time since the Apollo missions ended in 1972. Four astrona...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; மருத்துவ தம்பதி செய்த செயல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்ப , விபத்து ஏற்பட்டபோது வீதியால் சென்ற மருத்துவ தம்பதிகள் உதவி புரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மீட்புப் […]
IPL 2026: KKR Hopes Rise for Pathirana as Hasaranga’s Future Looms Uncertain
Sri Lanka spinner Wanindu Hasaranga has yet to join the Lucknow Super Giants (LSG) squad for IPL 2026. Reports suggest he hasn’t passed a mandatory fi...
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உட்புற நிதி மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகை […]
ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்; டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் […]
அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை ரத்து !
நாட்டில் எரிபொருள் நெருக்கடியால் அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார நாட்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டததி அடுத்து அரச அலுவல்கங்களுக்கு புதன் கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
IPL 2026: Jamieson Stays Calm Amid Delhi Capitals Rivalry
Kyle Jamieson, a New Zealand cricketer, was recently added to the Delhi Capitals team for ₹2 crore during the IPL 2026 mini-auction. However, he is no...
Savannah Guthrie Back on Today Show
Savannah Guthrie returned to the Today show on Monday, marking her official comeback. She took her usual seat next to co-anchor Craig Melvin at 7 a.m....
ஈரானிடம் இருந்து அமெரிக்க விமானியை மீட்டதற்காக டிரம்புக்கு நெதன்யாகு பாராட்டு
டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், அமெரிக்காவின் அதிக திறன் படைத்த எப்-15 ரக விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்று தகவல் வெளியானது. ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானத்தில் இருந்த வீரரை மீட்ட, அதிக ஆபத்து நிறைந்த பணியை செய்ததற்காக அமெரிக்காவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அமெரிக்காவின் துணிச்சலான […]
IPL 2026: Punjab Kings’ Strong Start
Kolkata (West Bengal), April 6 (ANI): After finishing as runners-up last season, Punjab Kings have started IPL 2026 with two consecutive wins. Their s...
April Thunderstorms Cool Down Chennai’s Searing Heat
A sudden burst of thunderstorms hit Chennai and nearby areas on Monday morning (April 6, 2026). This brought much-needed relief from the extremely hot...
Ashwin Quits IPL After Painful CSK Season
Former Chennai Super Kings (CSK) all-rounder Ravichandran Ashwin shared his tough experience during his second spell with the team in IPL 2025. Despit...
China restricts coastal airspace for 40 days without explanation
China has imposed restrictions on its coastal airspace for 40 days, from March 27 to May 6. These measures, known as Notice to Air Missions (NOTAMs)...
சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் முயற்சி ; வான் பாதுகாப்புப் படையினர் அதிரடி முறியடிப்பு
சவுதி அரேபியாவின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குரூஸ் ஏவுகணை (Cruise Missile) ஒன்றை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று (ஏப்ரல் 5, 2026) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. இன்று காலை சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையை, அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் (Air Defense) அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் நடுவானிலேயே சிதறடித்தனர். இந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதன் காரணமாக எவ்வித உயிரிழப்புகளோ அல்லது கட்டமைப்புச் சேதங்களோ ஏற்படவில்லை என முதற்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. […]
Pயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்குதனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரைமோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான […]
ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்ட அமெரிக்கா
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E Strike Eagle போர் விமானத்தில் பயணித்த அமெரிக்க விமானிகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவரை உடனடியாக அமெரிக்கா மீட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது விமானியை மீட்கும் முயற்சியில், அமெரிக்க பாதுகாப்புப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது. அமெரிக்க அதிபர் Donald Trump தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலின் படி, இரண்டாவது வீரர் லேசான காயமுடன் மீட்கப்பட்டு நல்ல உடல் நலத்தில் உள்ளார். […]
ICC Announces Women’s Player of the Month Nominees for March
The International Cricket Council (ICC) has revealed the nominees for the Women's Player of the Month award for March 2026. Three outstanding players—...
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலைகள் இதோ!
மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (5)அறிவித்தன. அதன்படி நேற்று நள்ளிரவு (05) முதல் எரிவாயு விலைத்திருத்தம் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 5 […]
சென்னையில் இலங்கை நடிகை விபரீத முடிவு!
சென்னையில் இலங்கையை பின்புலமாக கொண்ட பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. கணவருடன் ஏற்பட்ட தகராறு இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இலங்கையை பின்புலமாக கொண்ட நடிகை சுபாஷினி பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி […]
யாழில். சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை ஆரம்பித்து வைக்க வருகை தந்த தருமை ஆதீனம்
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு தர்மபுர ஆதீன அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகை தந்தவரை , சர்வதேச […]
வரலாற்றில் மிக நீண்ட இணைய தடை ; வெளி உலகத்துடன் தொடர்பு இழந்த ஈரானியர்கள்
இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸின் (NetBlocks) கூற்றுப்படி, ஈரான் முழுவதும் ஏற்பட்டுள்ள இணைய முடக்கம், இதுவரை எந்தவொரு நாட்டிலும் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட தேசிய அளவிலான இணைய முடக்கமாக மாறியுள்ளது. இது, இதற்கு முந்தைய அனைத்து உலகளாவிய இணைய முடக்கங்களையும் விஞ்சியுள்ளது. நெட்பிளாக்ஸின் கூற்றுப்படி, இந்த இணைய முடக்கம் தற்போது 37-வது நாளில் உள்ளது, மேலும் இது 864 மணிநேரம் நீடித்துள்ளது. இந்த நிலைமையால், ஈரானியர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனை, காஸா பாதுகாப்புத் துறை மற்றும் அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன. காஸா நகரின் கிழக்கில் உள்ள நகரப் பகுதியில் இந்த டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 பேர் பலியான நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டம் பற்றிய […]
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் நிலையில் , சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு
ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. பாதுக்க மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள நீர் விநியோகத் தடை இன்று காலை 8:00 மணிக்கு முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது. நீர் விநியோகத் தடை அதன்படி, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி […]
எரிபொருள் விநியோகம்: QR குறியீடு மற்றும் ஒற்றை –இரட்டை இலக்க முறை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை – இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று (05.04.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தை சீராக […]
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புகள் மீது ஈரான் குறிவைத்து தாக்கி வருகின்றது. அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அண்டை நாடுகள் உதவி புரிவதால் […]
நாளை மறுதினம் திறக்கப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்
புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படையின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த பேருந்து நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!
அமெரிக்கா – ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் விடுத்த 48 மணிநேர காலக்கெடுவை ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) நிராகரித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு முடிவை எட்டாமல் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு […]
தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் புகுந்த கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
கம்பஹா, கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சாந்த ஜயரிசன் சில்வா என்ற 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வாக்குவாதம் சம்பவத்தன்று நள்ளிரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த […]
லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும் 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் […]
வடக்கில் இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள்அடையாளம் காணப்பபட்டுள்ளன
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன அவை தொடர்பில் இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் , உறவினர்கள் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினரிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் […]
தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க முயன்ற 23 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி
பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருடன் மற்றுமொரு நபரும் பயணித்துள்ளதுடன், இந்த விபத்தில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த […]
ஈரானில் மிகப்பெரும் தாக்குதல்: ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக கூறி இந்த தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. […]
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் இராண்டாவது விமானி மீட்பு
ஈரான் வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் இரண்டாவது விமானியையும் அமெரிக்கப் படைகள் அதிரடியாக மீட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில், எதிரிகளிடம் சிக்காமல் இரண்டு நாட்களாகத் தலைமறைவாக இருந்த ‘கர்னல்’ அந்தஸ்து கொண்ட அந்த விமானியை, பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்கச் சிறப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளன. பகல் வெளிச்சத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்ததாகவும், […]
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்
பிரித்தானியர்கள் மூன்று நாட்களுக்கான உணவு முதலான சில விடயங்களை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் இந்த வார இறுதியில் கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனமான British Gas அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலை முதல் நாளை காலை வரை பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு பனிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு பலத்த காற்றுக்கான விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், Storm Dave என்னும் […]
உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
புஷெஹர் (Bushehr) அணுமின் நிலையம் உட்பட ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அணுசக்தி தளங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் முழு பிராந்தியத்தையும் பாரிய கதிரியக்கப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது […]
40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது. Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் (Angiogram, Angioplasty) சிகிச்சை அளிக்கும் உபகரண தொகுதி. இதில் x-ray உதவி உடன் இதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகள் மற்றும் Pacemaker போன்ற […]
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடித் தளர்வு ; அத்தியாவசியக் கப்பல்களுக்கு அனுமதி
ஈரானிய அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய துறைமுகங்களுக்கு செல்கின்ற கப்பல்கள் அல்லது ஓமான் கடலில் உள்ள துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், வளைகுடா பகுதிகளை நோக்கி ஈரான் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு இராச்சியம், இந்த போரின் காரணமாக கடுமையான விளைவுகளை சந்தித்து வருகிவதாக குறிப்பிடப்படுகிறது. […]
யாழ். மாணவி வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, பெண் மருத்துவர் ஒருவரிடம் அத்துமீற முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேகலை தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார். பொலிஸார் விசாரணை இதன்போது, அவரைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென மருத்துவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். […]
உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி
உக்ரைன்-ரஷியா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பரஸ்பர ட்ரோன் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா சனிக்கிழமை அதிகாலை ஏவிய மொத்தம் 286 ட்ரோன்களில் 260 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நிக்கோபோல் நகரில் நடந்த தாக்குதலில் 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். டொனெஸ்க் பிராந்தியத்தில் ஒரு பெண் உயிரிழந்தாா். இதையொட்டி, உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தில் தம்பதி மற்றும் […]
வலிகாமம் கிழக்கின் அறிவார்ந்த மாற்றங்களைசனசமூக நிலையங்கள் வாயிலாக ஆரம்பிப்போம்- தவிசாளர் நிரோஷ்
வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜாநிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் திறமையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வைத்தீஸ்வரா அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும தெரிவிக்கையில், சனசமூக நிலையங்கள் கிராமத்தின் வரலாற்று பாரம்பரியம் மிக்க மக்கள் அமைப்புக்களாகும். வலிகாமம் கிழக்கில் நூற்றாண்டுகளை கொண்ட […]
பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்
பெருவின் தலைநகா் லிமாவில் உள்ள அலஜன்ட்ரோ வில்லனுவா கால்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 60 போ் பலத்த காயமடைந்தனா். மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவா் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மைதானத்தின் கட்டுமானத்தில் எந்த இடிபாடும் இல்லை என மைதான நிா்வாகம் கூறியுள்ளது. நெரிசலால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய நெடுங்கேணி வைத்தியசாலை
வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நெடுங்கேணி ஒலுமடுக் கிராம சேவகர் பிரிவில் 03 மற்றும் 04ம் திகதிகளில் பெய்த கடுமழைக் காரணமாக விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புகையிலைச் செய்கை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை வளாகம் திடீரென பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் விவசாயிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை கடும் மழையினால் நெடுங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் […]
மட்டக்களப்பில் இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அதிகாலை 5.00 மணியளவில் திக்கோடை ஆனந்த பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது, அவ்வீட்டில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டு […]
மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு – செங்கலடி – கறுத்தப்பாலம் பகுதியில் இன்று (05) அதிகாலை காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நெல், உரம் மூடைகள், பொருட்கள், பயிர்கள், கட்டிடங்கள் என்பவற்றை சேதமாக்கியுள்ளன. யானைகளின் அட்டகாசத்தால் செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் உட்பட பசளை மூடைகளும் வர்த்தக நிலைய கட்டிடமும் அதனுள் காணப்பட்ட பொருட்களும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளன. மேலும் வர்த்தக நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள விவசாய காணியில் காணப்படும் தென்னை […]
நாளை முதல் நாடு முழுவதும் QR கட்டண முறைமை
இலங்கையின் நிதிப் பரிமாற்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ‘தேசிய QR கட்டண முறைமை’ (National QR Payment Adoption) நாளை (06) முதல் நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்தத் தேசிய திட்டத்தின் ஆரம்ப விழா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ளது. பொருளாதார வினைத்திறனை அதிகரித்தல், நிதிச் சேவைகளை அனைவருக்குமானதாக மாற்றுதல் (Financial Inclusion) மற்றும் நிதிப் […]
இன்று இரவு முதல் 12 மணிநேர நீர்வெட்டு
பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் லபுகம மற்றும் களுதுவாவ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றின் உற்பத்தித் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த சுத்திகரிப்பு […]
வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
வங்கதேச தலைநகா் டாக்கா அருகேயுள்ள கேஸ் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். தொழிற்சாலையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் காரணமாக, தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவியது. தகவலறிந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. பின்னா், தீயணைப்பு வீரா்களின் தேடுதல் பணியில் தொழிற்சாலைக்குள் இருந்து 5 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் […]
லிட்ரோ விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, 30,000 மெற்றிக்தொன் எரிவாயு மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறினார். அத்துடன், எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு […]
மருத்துவம் –பொறியியல் உட்பட 4 துறைகளில் அம்பாறையில் தமிழ் மாணவர்கள் முதலிடம்
அண்மையில் வெளியான ஜி.சீ.ஏ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 4 தமிழ் மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை மாவட்டத்தில் முதலிடத்தை நான்கு தமிழ் மாணவர்கள் பெற்றுத் தெரிவானது சாதனையாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் சாதனை உயிரியல் விஞ்ஞானத் துறையில் செல்வன் ரமேஷ் தேட்சித் (அக்கரைப்பற்று), பௌதீக விஞ்ஞானத் துறையில் செல்வன் ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் (கல்முனை), பொறியியல் தொழில்நுட்பத் துறையில் செல்வன் பிரபாகரன் ஹரிநர்த்தனன் […]
கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை உறுதி செய்த ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை ஈரான் உறுதி செய்தது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படை உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் பெஹ்னம் ரெசாயியின் ( Behnam Rezaei) மரணத்தை உறுதி செய்துள்ளது. மார்ச் 26 அன்று ரெசாயியை இலக்காகக் கொண்டு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேலின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. பிராந்திய நாடுகள் முழுவதும் உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் […]
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: நெகிழவைத்த இறுதி தருணங்கள்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் உடல், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 26), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், மார்ச் மாதம் 14ஆம் திகதி, ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்தது. மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் என்னுமிடத்தைச் சேர்ந்த சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி […]
யாழில் 21 வயது பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!
யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு ; ஈரான் ட்ரோன் தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த தாக்குதலால் குறித்த பெரிய கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலோ இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு […]
6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு […]
18 வீத வற் வரி ஜூலை வரை ஒத்திவைப்பு
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் […]
ஈஸ்டர் பெருநாள் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது!
கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான திருவிழாவான ஈஸ்டர் பெருநாள் (உயிர்த்தெழுதல் திருநாள்) இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் மீட்பராகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து, சிலுவையில்
இந்தியாவிற்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவிற்கு மாடலாய் மாறியுள்ளது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாது. விருதுநகரில் சந்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து கூறிய எடப்பாடி பழனிசாமி, அரை சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சி திமுக-வில் இணைந்துள்ளது, என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,
இலங்கையர்களை சுட்டெரிக்கும் சூரியன் –மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல் 12:13 மணியளவில் தொட்டந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமெட்டிய, உஸ்ஸன்கொட ஆகிய பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் இந்த காலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக […]
ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்காவிட்டால்…–ஈரானுக்கு டொனால்டு டிரம்ப் கெடு
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா […]
ஊழல் மோசடி குற்றச்சாட்டு –மகிந்த குடும்பத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதற்கமைய 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ஊழல் மோசடி குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டு […]
உயிர்த்த ஞாயிறு ; நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு
இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைய, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அங்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர், […]
இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடி குறித்து எச்சரிக்கை
எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் இந்த சூழ்நிலையை நன்கு கையாண்டு வருவதாகவும், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிக்கலான சூழ்நிலை அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பாக ஒரு […]
ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
ஈரான் அணு மின் நிலையம் அருகே நேற்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே நேற்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர் பலியானதாக ஈரான் அணுசக்தி மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், முக்கிய கட்டிடங்களுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த போர்ச்சூழலில் அணு மின் நிலையத்தைக் குறிவைத்து இதுவரை 4 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. […]
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை மிக எளிதாகக் கண்டெடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வீட்டில் கொள்ளைபாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பினை வெளியில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்த உரிமையாளர், தற்போது […]
தப்பியோடிய அமெரிக்க விமானியை பிடிப்பவர்களுக்கு பரிசு! ஈரான் அறிவிப்பு
ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரான் அரசு அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தப்பியோடிய விமானியைப் பிடிப்பதற்கு உதவும் எந்தவொரு குடிமகனுக்கும் 66,100 அமெரிக்க டொலர் (2 கோடி ரூபாவிற்கும் அதிகம்) பரிசாக வழங்கப்படும் என டெஹ்ரான் அரசாங்கம் ஈரான் மக்களுக்குப் பாரிய வாக்குறுதி அளித்துள்ளது. ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் (3) நடத்திய தாக்குதலில் எஃப்-15 (F-15) ரக அமெரிக்கப் போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டது. […]
யாழில் திடீர் சோதனை ; வெதுப்பக பொருட்கள் விற்பனையில் முறைகேடு
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நான்கு வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷின் பணிப்பின் பேரில், சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் போது, உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கடைகளுக்கு கொண்டு சென்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கும், வீடுகளுக்கு விநியோகிக்க முச்சக்கர வண்டிகளில் பொருட்களை எடுத்துச் சென்ற […]
உள்நாட்டுச் சந்தையில் மரக்கறி விலையில் அதிரடி மாற்றம்!
உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட், தம்புள்ளையில் 250 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லீக்ஸ் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும் தம்புள்ளை மற்றும் கெப்பொட்டிபொலவில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நுவரெலியாவில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோவா ஒரு கிலோ தம்புள்ளையில் 100 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 90 ரூபாய்க்கும் […]
அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், அந்நாட்டு சட்டங்களின்படி 4 ஆண்டுகளுக்கு அவர் ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிப்பார் எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின் […]
யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது என இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகியதொனிப்பொருளில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் யாழ்ப்பணத்திற்குகடந்த வியாழக்கிழமை வருகை தந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டனர். […]
யாழில். 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதிகளில்நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , போதை மாத்திரைகளைவாங்குபவர்கள் போன்றுகுறித்த இளைஞனுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தொலைபேசியில் உரையாடி புறாப்பொறுக்கி பகுதிக்கு போதை மாத்திரைகளைவிற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து வந்த வேளை அங்கு காத்திருந்த பொலிஸார் இளைஞனை போதை மாத்திரைகளுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட […]

28 C