SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

சீனாவில் வசந்த காலத்தை ஏர் பூட்டி வரவேற்ற மக்கள்

பெய்ஜிங், சீனாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குகிறது. இதனை, அந்நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை போற்றும் வித மாக நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஏர் பூட்டி நிலத்தை உழுவது போன்ற சடங்குகளைச் செய்து வசந்த காலத்தை முறைப்படி வரவேற்றனர். சீன கலாசாரத்தில் ‘வசந்த காலம்’ என்பது புதிய தொடக்கத்தையும், நல்ல விளைச்சலையும் குறிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதையொட்டி பல இடங்களில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும், […]

அதிரடி 8 Feb 2026 7:30 pm

கொக்கேய்ன் போதைப் பொருள்:உதயராசா கைது!

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பதிவு 8 Feb 2026 7:26 pm

கர்நாடகாவில் விமான விபத்து.. விமானத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? டிஜிசிஏ விசாரணை!

கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் காயம் அடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டிஜிசிஏ விசாரணை நடத்தி வருகிறது.

சமயம் 8 Feb 2026 7:12 pm

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS)!

CGSS Scheme: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 8 Feb 2026 7:06 pm

விஜய் பெயர் எடுத்ததும் வெடித்த பரபரப்பு..கலவரமாக மாறிய நாதக கூட்டம்- சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?

தேனியில் நாதக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூச்சலித்ததால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 7:05 pm

மைக்கேலேஞ்சலோவின் ஓவியம் 27.2 மில்லியன் டாலர்கள் ஏலத்தில் சாதனை படைத்தது

மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு சிறிய, நீண்ட அறியப்படாத ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் சாதனை விலையை எட்டியுள்ளது. சிஸ்டைன் சேப்பலுக்கான ஓவியம் 27.2 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டியின் ஏலத்தில் மைக்கேலேஞ்சலோவால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓவியம் 27.2 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 23 மில்லியன் யூரோக்கள்) விற்கப்பட்டுள்ளது. இது ஒரு அடி வரையப்பட்ட ஓவியம், சில சென்டிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது. இது சிஸ்டைன் சேப்பலின் கூரையில் லிபிய சிபிலின் சித்தரிப்புக்கான தயாரிப்பாகக் கருதப்படுகிறது. இந்த விலை மைக்கேலேஞ்சலோவின் ஏல சாதனையாகும். மேலும் மதிப்பீட்டை விட சுமார் 20 மடங்கு அதிகமாகும். ஏலம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அசல் மதிப்பீடு 1.5 முதல் 2 மில்லியன் டாலர்கள் வரை இருந்தது. சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையை தனியார் உரிமையில் மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரே அறியப்பட்ட ஆய்வு இதுவாகும். கூரை ஓவியம் அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். வாங்குபவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கலைஞரால் எஞ்சியிருக்கும் 600 வரைபடங்களில், சுமார் 50 மட்டுமே வத்திக்கானில் உள்ள ஃப்ரெஸ்கோ சுழற்சியுடன் தொடர்புடையவை. மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு ஓவியத்திற்கான முந்தைய சாதனை 24.3 மில்லியன் டாலர்கள் ஆகும் இது ஏலத்தில் எட்டப்பட்டது.

பதிவு 8 Feb 2026 6:47 pm

NEP vs ENG: 'கடைசி பந்துவரை ட்விஸ்ட்'.. சாம் கரண் சம்பவத்தால், இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், மோசமாக பந்துவீசிய இங்கிலாந்து அணி, கடைசிவரை போராடி, கடைசி பந்தில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், வென்று சூப்பர் 8 வாய்ப்பை நேபாள் அணி பிரகாசமாக வைத்துள்ளது.

சமயம் 8 Feb 2026 6:40 pm

பிரான்சிலிருந்து ஒன்றரை வருட நடை பயணம்: சீனாவை வந்தடைந்த பிரஞ்சுக்காரர்கள்!

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக 16 நாடுகளை கிட்டத்தட்ட முழுவதுமாக கால்நடையாகக் கடந்து வந்த இரண்டு பிரெஞ்சு சாகசக்காரர்கள், சனிக்கிழமை பிரான்சிலிருந்து ஷாங்காய் வரை ஒரு காவிய நடைப்பயணத்தின் முடிவை அடைந்தனர். லூயிக் வோய்சோட்டும் பெஞ்சமின் ஹம்ப்லாட்டும் பண்ட் ஆகிய இருவரும் சீனாவில் ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதையில் நிற்கிறார்கள். இவர்கள் இருவரும் 2024 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் பிரான்சிலிருந்து புறப்பட்டனர். 518 நாட்கள் நடையாக நடந்து சீனாவுக்குச் சென்றுள்ளனர். இருவரும் சீனாவுக்குச் செல்ல விரும்பினர. ஆனால் விமானப் பயணம் இல்லாமல், அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்காமல் செல்ல விரும்பினர். அதனால் அவர்கள் நடத்து செல்வதைத் தேர்தவாக எடுத்தனர். நடையாகப் புறப்படுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போரின்போது மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்யாவின் ஒரு பகுதியைத் தவிர, 518 நாட்கள் சுமார் 12,850 கிலோமீட்டர்கள் நடந்தனர். வழியில் பொதுமக்கள் அவர்களை வரவேற்றனர். அத்துடன் சீனாவில் ஷங்காயில் இருக்கும் பிரஞ்சுக் குடிமக்களும் இணைந்து வரவேற்றனர். உங்கள் கனவுகள் பைத்தியக்காரத்தனமாக இருந்தால், அதை படிப்படியாக எடுத்து வையுங்கள், சில நேரங்களில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள், ஆனால் சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வோய்சோட் கூறினார். நடைப்பயணம் முடிந்த பின்னர் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் நிறையத் தூங்குவோம் என்று அவர் நகைச்சுவையாகச் சொன்னார்.

பதிவு 8 Feb 2026 6:30 pm

ரஷியா: பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 இந்திய மாணவர்கள் காயம்

மாஸ்கோ, ரஷியாவின் பர்கோஷ்தான் குடியரசில் உள்ள உபா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினான். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய சிறுவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். […]

அதிரடி 8 Feb 2026 6:30 pm

விளம்பர மாடல் யாருக்காக இயங்குகிறது? திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை.. தவெக விஜய் ஆவேசம்!

வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி என்று விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

சமயம் 8 Feb 2026 6:23 pm

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி : திமுக–அதிமுக கோட்டையை உடைக்குமா தவெக?- அருண்ராஜ் வியூகம்!

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், தவெக அருண்ராஜ் களபணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 6:22 pm

ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை வர்த்தமானியில் அநீதி ; சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பாரிய அநீதி இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள […]

அதிரடி 8 Feb 2026 6:20 pm

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்

2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை சபாநாயருக்கு எழுத்து மூலம் அறிவித்தது முறையானதா என்ற கேள்வி சட்டவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கையை கடைசியாகக் கட்டியாண்ட பிரித்தானியர்கள், இந்தத் தீவின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு தந்திரமாக சுதந்திரத்தை வழங்கிச் சென்ற எழுபத்தெட்டாவது ஆண்டு கடந்த நான்காம் திகதி. இந்த நாள் நெருங்கி வரும்போதெல்லாம் இலங்கை இரு தேசம் என்பதை அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் காட்டிக் கொண்டிருக்கும். சிங்கள பிரதேசங்களில் வாள் ஏந்திய சிங்கக்கொடி பறக்க தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்படும். இதனால் தமிழரின் தேசியக்கொடி கறுப்பு என்பதாகவே காட்சி கொடுக்கும். தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அன்றொரு நாள் இயற்றிய - நீங்க வேறு நாடைய்யா, நாங்க வேறு நாடு - என்ற பாடலின் அர்த்தம் பெப்ரவரி நாளில் பொழிப்பாக காதுகளில் விழும்போது நன்றாகப் புரியும். அநுர குமர அரசின் இரண்டாவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வு வழக்கம்போல கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. சேனநாயக்கக்களிலிருந்து இறுதியாக ரணில் வரை தங்களின் எழுப்பம் காட்டும் படைத்துறையினரின் சாகசங்களையே இந்நாளில் முக்கியத்துவப்படுத்துவது வழக்கம். ஆனால் அநுர குமர அரசு இதனைச் சற்று கீழிறக்கி படைத்துறையினரின் அணிவகுப்புகளோடும் பலவின மாணவர்களின் நிகழ்வுகளோடும் மாற்றிக் கொண்டது சிங்கள இனவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கும் (தமிழர்கள்) அநுர குமர அரசு அடிபணிந்து படைத்துறையினரின் வீரதீரங்களை காட்டவில்லையென முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர கூச்சல் போடுகிறார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ராஜபக்சக்கள் ஒழித்துக் கட்டிய வீரத்தை அநுர குமர அரசு மூடிமறைத்துவிட்டது என்று நாமல் பேபி ஒப்பாரி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, காணாமலாக்கப்பட்டது, சிறையிலடைக்கப்பட்டது எவ்வகையானது என்பதை அநுர குமரவின் ஜே.வி.பி.யினரும் அனுபவத்தில் கண்டவர்கள் என்பதை நாமல் பேபி அறிந்திருக்கவில்லை போலும். எங்கு அடிபட்டாலும் நாய் காலைத் தூக்கிக் கொண்டு ஊளையிடுவதுபோல இந்த இனவாதிகளின் வாழ்க்கை இப்படித்தான் கக்கிக் கொண்டிருக்கும். ஒருவகையில் பார்க்கின் இவர்களுக்கு இன்னமும் புலிப்பயம் இருப்பதுபோல தெரிகிறது. ஆண்டாண்டுதோறும் இவர்கள் இனவாதத்தையே தங்களுக்கான ஆயுதமாக காவித்திரியப் போவது தெரிகிறது. இது ஒருபுறமிருக்க தற்போது நாற்றமெடுத்து வரும் தமிழர் தாயக அரசியலை கவனிக்க வேண்டியது அவசியமானது. முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்ததால் வடமாகாண சபை தமிழரசின் உட்கட்சி மோதலில் முடக்கம் கண்டதுபோல, கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இன்னொருவரான சுமந்திரனால் தமிழரசுக் கட்சி சரிவு நிலையில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை எதிரணியினர் மட்டுமன்றி வீடுக்குள் வசிப்பவர்களும் காண்கின்றனர். சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் இதற்கான சான்றாக அமைந்துள்ளன. தமது எம்.பி. பதவியை பறிப்பதை இலக்காகக்கொண்டு காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை சிவஞானம் சிறீதரனே அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். தனது சகாவான சாணக்கியனை தமிழரசின் முக்கிய புள்ளியாக உயர்த்தும் முனைப்பில் சுமந்திரன் தீவிரமாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சாடிக்கு ஏற்றதாக ஒரு மூடி அரசியலிலும் தேவைப்படுகிறது போலும். கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவராக சாணக்கியனை நியமித்திருப்பதாக சுமந்திரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் பல குழுக்களில் எந்தக் குழுவுக்கு இந்த நியமன அதிகாரம் உள்ளது என்று கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. மட்டக்களப்பில் சிறீநேசன் எம்.பி. பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்து இதனை நிரூபிக்கிறது. சிறீதரனை இப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கால அவகாசம் வழங்குவதென்றும், அதன் பின்னர் சாணக்கியனை தற்காலிகமாக இப்பதவிக்கு நியமிக்கலாமெனவும் சிலர் கண்ட கனவு நடைமுறைக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். சாணக்கியனை கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமித்திருப்பதாக சுமந்திரனே அறிவித்திருந்தார். அடுத்த சில மணித்தியாலங்களில் சுமந்திரனின் வடமராட்சித் தொகுதியில் தமி;ழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் பெதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடனடியாக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒர் அறிக்கையை கட்சியின் பல மட்டங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பியிருந்தார். 'இது ஆர்வக்கோளாறு என்றாலும் கட்சியின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் குந்தகமானது. இவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். கட்சியின் தலைமை நிலைக்கு இது முரணானதும்கூடஎன்று திரு.சி.வி.கே.சிவஞானத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையின் இறுதிப் பகுதியில், தலைமை நிலைக்கு இது முரணானதும்கூட என்று குறிப்பிடப்பட்ட வரிகள் ஆழமான அர்த்தம் கொண்டவை. சாணக்கியன் கட்சியின் தலைமையால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமிக்கப்படவில்லையோ என்ற சந்கேதத்தையும் இது ஏற்படுத்துகின்றது. சிறீதரன் எம்.பி. தலைவர் பதவியிலிருந்து தாமாகவே வெளியேறினால் சாணக்கியனை தற்காலிகமாக அப்பதவிக்கு நியமிக்கலாமென கட்சி தற்காலிகமாக முடிவெடுத்ததாகவம் ஒரு தகவல் உண்டு. ஆனால், அது மறைக்கப்பட்டு, சாணக்கியனை அப்பதவிக்கு நியமித்து விட்டதாக சுமந்திரன் அறிவித்ததால்தான் இவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு கொழுத்தியும் மகிழ்ச்சி தெரிவிக்கும் நிலைமை உருவாகியது. சுமந்திரன் தன்னிச்சையாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகள் கட்சித் தலைமைக்குள்ளேயே அபிப்பிராய பேதங்களை உருவாக்கி வருகிறது. கட்சியின் மூத்த உறுப்பினர் ;ஒருவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் பாம்புக்கு பால் வார்க்க வேண்டாமென்று நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். மற்றொரு விடயம் விசம்போல பரவி வருகிறது. மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன எம்.பி.யான தயாசிறி ஜெயசேகர நாடாளுமன்றத்தில் சிறீதரன் மீது வசைபாடிய வரலாறு பிரசித்தமானது. இதற்குத் தேவையான விடயதானங்களை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே வழங்கியிருந்தாரென கடந்த வாரம் இப்பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றொரு அரசியல் விமர்சகர் தாம் எழுதும் வாரப்பத்தியில் அந்த எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். குறிப்பிட்ட தமிழரசு எம்.பி. முன்னர் ராஜபக்சக்களின் அரசியல் அணியில் ஒருவராகச் செயற்பட்டவர் என்றும், இப்போது அதே ராஜபக்ச அணியைச் சேர்ந்த தயாசிறி ஜெயசேகரவுடன் இவர் வைத்திருக்கும் தொடர்பின் வெளிப்பாடாகவே சிறீதரன் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிகிறது. எனவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் அந்த எம்.பி.மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் கிழக்கு மாகாணத்திலிருந்தே வந்துள்ளது. இறுதியாக இன்னொரு முக்கிய விடயம். ஜனவரி மாதம் 30ம் திகதியிட்ட கடிதம் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் சுமந்திரனும் ஒப்பமிட்டு அனுப்பியிருந்தனர். கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரனை நீக்க தங்கள் கட்சி முடிவெடுத்துள்ளதாக இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டதே தவிர பதவி நீக்கப்பட்டதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. 2024 நவம்பர் பொதுத்தேர்தலையடுத்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி தங்களின் தலைவராக சிவஞானம் சிறீதரனை தெரிவு செய்தனர். அவ்வேளையில் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் சிவஞானம் சிறீதரனின் நியமனம் தொடர்பாக சபாநாயகருக்கு எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. சிறீதரனின் பதவி நியமனம் நாடாளுமன்ற குழுவுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அது தொடர்பாகக் கடிதம் எழுதும் தேவை கட்சியின் தலைமைப்பீடத்துக்கு இருக்கவில்லை அல்லது பொருந்தாதது என்பதே இதன் கருத்து. அப்படியானால் சிறீதரனின் பதவி நீக்க முடிவை நாடாளுமன்றக் குழுவே எடுத்திருக்க வேண்டும். இதன்படி பார்க்கின், சிறீதரனை பதவி நீக்கம் செய்த கடிதத்தை சபாநாயகருக்கு தமி;ழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தினர் எழுத்து மூலம் அறிவித்திருப்பது முன்னுக்குப்பின் முரணானது. சட்டச் சிக்கலுக்குள் இது இழுத்துச் சென்றிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சட்டவாளர்கள் சிலர் இதனை பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனைக்கும் அடி சறுக்குமாம்!

பதிவு 8 Feb 2026 6:18 pm

காலி வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிரடி 8 Feb 2026 6:15 pm

சேலத்தில் தவெக கூட்டத்துக்கு 51 நிபந்தனைகள்.. இது மக்கள் சந்திப்பு இல்லை.. தவெக மா.செ. அதிர்ச்சித் தகவல்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய், கழக நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த கூட்டமானது வரும் 13 ஆம் தேதி சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது.

சமயம் 8 Feb 2026 6:03 pm

பூமிகா சாவ்லா உருக்கம்: ஹைதராபாத்தில் நடந்த ‘யூபோரியா’பட விளம்பர நிகழ்ச்சியில் கண்ணீர்

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'யூபோரியா' பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகை பூமிகா சாவ்லா தனது கதாபாத்திரத்தின் பாதிப்பு குறித்துப் பேசி மேடையிலேயே கண்ணீர் விட்டார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வளர்ப்பு முறை குறித்த இப்படத்தின் முக்கியத்துவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 6:00 pm

டீன் ஏஜ் பெண்ணின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4 மாதங்கள் ஆகிறது. சட்டவிரோதமாக பிறக்கும் இந்த குழந்தையை பெற்றெடுக்க, டீன் ஏஜ் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை. இதனால் கருவை கலைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

அதிரடி 8 Feb 2026 5:30 pm

விஜயகாந்துக்காக மட்டுமே செய்தேன்: இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் உருக்கம்!

80-களில் 'கூலிக்காரன்' படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்ததன் பின்னணியில் இருந்த கேப்டன் விஜயகாந்தின் அன்புக் கட்டளை மற்றும் அவர்களது ஆழமான நட்பு குறித்த உருக்கமான தகவல்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 5:00 pm

ENG vs NEP: ‘வரலாறு படைத்தார் ஜாஸ் பட்லர்’.. அதிக ரன்களை குவித்து அசத்தல்: இங்கிலாந்து அணி 184 ரன்கள்!

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 184/7 ரன்களை அடித்தது. இப்போட்டியில், ஜாஸ் பட்லர், 13 ரன்களை எடுத்திருந்தபோது மெகா வரலாற்று சாதனையை படைத்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 4:56 pm

இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகரம்

2வது இளம் சமையல்கலைஞர் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூமிரா பியாசிறி இன்று (08) காலை நாட்டை வந்தடைந்தார். கடந்த மாதம் 1 முதல் 6 ஆம் திகதி வரை இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த சமையல்கலைஞர் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இந்தியாவின் சர்வதேச ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் சமையல்கலைஞர்களுக்கான உலகின் மிகப்பெரிய உலகளாவிய சமையல் போட்டி […]

அதிரடி 8 Feb 2026 4:55 pm

பிரான்ஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு இந்தியர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும், ஒருவரை தாக்கியக்குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது, வெளிநாட்டவர் கைது திஸ்ஸமஹாராமாவின் மஹசென்புர பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு ஒரு பிரான்ஸ் பெண் மசாஜ் செய்யச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மசாஜ் மையத்தின் உரிமையாளராக கடமையாற்றிய பெண்ணின் கணவன், தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தனது இந்திய நண்பரிடம் பிரெஞ்சு பெண் கூறியுள்ளார். இந்த விஷயம் குறித்து விசாரிக்க […]

அதிரடி 8 Feb 2026 4:48 pm

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் மாரியப்பனின் தாயார் 80 வயதான மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு சுமார் 11 மணியளவில் பர்தா உடை அணிந்த மர்மநபர் ஒருவர், மாரியம்மாளை தாக்கிவிட்டு பீரோவின் மேலே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து பீரோவில் உள்ள 26 சவரன் தங்கநகை மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடையநல்லூர் கொள்ளையன் தாக்கியதில் மயக்கமடைந்த மாரியம்மாள் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர், மாரியப்பனுக்கு தகவல் கூறினர். மாரியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பீரோ இருக்கும் இடம், பீரோவின் சாவி வைக்கும் இடம் தெரிந்த நபரே பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நகை, பணத்தை தவிர வேறெந்த பொருளும் திருடுபோகவில்லை எனவே, மாரியப்பனுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபர் யாரோ ஒருவர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர். அவரது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர், மாரியப்பனின் வீட்டின் முன்பு ஒரு சாக்குமூட்டை கிடப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் கூறினார். கடையநல்லூர் அந்த சாக்குமூட்டையை மாரியப்பன் பிரித்துப் பார்த்தபோது அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளது. இருப்பினும், சி.சி.டி.வி காட்சிப்பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அந்த பர்தா கொள்ளையன் யார்? நகைகள், பணத்தை மீண்டும் மாரியப்பனின் வீட்டின் முன்பு சாக்கு மூட்டையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விகடன் 8 Feb 2026 4:31 pm

குழந்தைக்கு கண் மை: அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மைகள் மற்றும் எச்சரிக்கை!

குழந்தைக்கு கண் மை இடுவது என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் ஒரு பாரம்பரியப் பழக்கமாகும். குழந்தையின் கண்கள் பெரிதாகத் தெரிய வேண்டும், கண்பார்வை மேம்பட வேண்டும்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 4:00 pm

விஜய் போட்டியிட விரும்பும் 2 தொகுதிகள்.. பரிசீலனையில் இருந்த அந்த 4 தொகுதிகள் எவை?

தவெக தலைவர் விஜய் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 4 தொகுதிகள் பரிசீலனையில் இருந்ததாகவும் 2 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.

சமயம் 8 Feb 2026 3:58 pm

ராமதாஸ், திருமாவளவன் கைகோர்ப்பதில் என்ன சிக்கல்? பின்னணியில் தகிக்கும் ஆழமான அரசியல்!

திமுக கூட்டணியில் விசிக இருக்கும் போது ராமதாஸ் உள்ளே வருவாரா, ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுப்பாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

சமயம் 8 Feb 2026 3:52 pm

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்குத் தடை.. தவெக சின்னம் ஏற்படுத்திய அரசியல் அதிர்வா?

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 3:51 pm

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு ; இரண்டு சந்தேகநபர்கள் கைது

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கக் கட்டிகள் நாவலப்பிட்டிய – கெட்டபுலவ விகாரையிலுள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து கலசங்களை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு பேர் திருடிச் சென்றதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார், விகாரையில் பொருத்தப்பட்ட […]

அதிரடி 8 Feb 2026 3:51 pm

மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் –நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய… The post மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 3:46 pm

பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம்

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, பொலத்து மோதர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் மாவெல்லைப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சென்றிருந்த நிலையில், கடலில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்காலை தலைமையக பொலிஸார் மேலதிக […]

அதிரடி 8 Feb 2026 3:40 pm

NZ vs AFG: ‘ஆப்கானிஸ்தான் மெகா தோல்வி’.. இனி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற என்ன செய்யணும்? விபரம் இதோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக, ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

சமயம் 8 Feb 2026 3:39 pm

குறுகிய கால இடைவெளிக்குள்  நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் –நிலாந்தன்!

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில்.அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல்… The post குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் – நிலாந்தன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 3:23 pm

அரசின் நிர்வாகத் தோல்வி.. உங்கள் அரசு மீண்டும் அமையப் போவதில்லை.. தவெக அருண்ராஜ் கருத்து!

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், ஹால் டிக்கெட் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

சமயம் 8 Feb 2026 3:18 pm

கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி: அந்தத் தன்னம்பிக்கையின் ரகசியம் இதுதான்!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார், தான் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்றும், அந்தத் தைரியமே தன்னை பெரிய தயாரிப்பாளர்களுடன் எளிதாகப் பழக வைத்தது என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 3:10 pm

சேலம் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி..- காவல்துறை போட்ட 40 நிபந்தனைகள் என்ன?

சேலத்தில் தவெக விஜய் 13 ஆம் தேதி பரப்புரை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 8 Feb 2026 3:00 pm

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை, தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி-நாஞ்சில் சம்பத்!

அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியே இருக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சமயம் 8 Feb 2026 2:53 pm

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தென் மண்டல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், “ விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக் கண் திறந்த காமராசர்தான். காமராசர் என்று சொன்னால் மதிய உணவு திட்டம்போல் திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவு திட்டம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்கவிடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக நினைக்கிறது. தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அதை போராடி தடுத்துள்ளோம். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலைதான் முதலில் இருந்தது. வாய்ப்புகளை மறுத்த அநீதியை சமூக நீதியால் வென்றோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பதை இந்தியாவில் முதலில் நிகழ்த்திக் காட்டியது திமுகதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தை பெற்று தந்துள்ளோம். மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்பட்டு வருகிறது; பாஜகவினால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.  இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது சொன்னார் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று. அவர் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கிறார். ஒன்றை சொல்கிறேன் என்னுடன் இளைஞரணியில் இருந்தவர்களில் தற்போது 10 பேர் அமைச்சர்கள், 24 எம்.எல்.ஏ-க்கள், 4 எம்.பி-க்கள் என எல்லோரும் பதவியில் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது இளைஞரணியை பற்றி நான் மறப்பேனா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். நானும் ரெளடி தான் என்பது போல நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பட்ஜெட்டில் மத்திய அரசு நமக்கு கொடுத்தது ஜீரோ. நாமும் அதை சட்டமன்ற தேர்தலில் திருப்பி கொடுப்போம் ”என்றார்

விகடன் 8 Feb 2026 2:37 pm

⚖️ கம்பஹா பிரதேச சபை  NPP   உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

கம்பஹா பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய ஊழல்… The post ⚖️ கம்பஹா பிரதேச சபை NPP உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:34 pm

சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு –  உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026) நிகழ்ந்த பயங்கர… The post சீனாவில் பயோடெக் தொழிற்சாலை வெடிப்பு – உயிாிழப்பு 8 ஆக அதிகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 2:22 pm

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா தரம் – 01 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் அதிபர் . சி. சிவநேந்திரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் திரு. எஸ்.கே சண்முகலிங்கம், சூழகம் அமைப்பின் செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் மற்றும் ஆலய குருக்கள், ஓய்வுநிலை கல்விசார் அதிகாரிகள், இலங்கை வங்கி ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் […]

அதிரடி 8 Feb 2026 2:20 pm

ரெஜினா காசாண்ட்ரா புதிய படம்: மேர் ஆஃப் ஈஸ்டவுன் பாணியில் உருவாகும் கிரைம் த்ரில்லர்

அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் ரெஜினா காசாண்ட்ரா, இந்த முறை ஒரு தீவிரமான கிரைம் த்ரில்லர் தொடரில் மாறுபட்ட பரிமாணத்தில் தோன்றுகிறார். மேர் ஆஃப் ஈஸ்டவுன் பாணியில் உருவாகும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 2:10 pm

⛈️ பசறையில் மண்சரிவு அபாயம்:  

பசறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் குறித்து… The post ⛈️ பசறையில் மண்சரிவு அபாயம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:57 pm

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைப்பு!

திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சமயம் 8 Feb 2026 1:42 pm

 ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை

பிரித்தானியாவின் ஆகப்பெரிய பறவை இனமான வெள்ளை வால் கழுகு (White-tailed Eagle) மீண்டும் கடலோரப் பகுதிகளுக்குத் திரும்புவது குறித்து… The post ஆகப்பெரிய பறவை இனமான கழுகுகளின் மீள்வருகை குறித்து மீனவர்கள் கவலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:39 pm

NEET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்; மே 3-ம் தேதி தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியது. மே 3-ம் தேதி தேசிய அளவில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 8 Feb 2026 1:39 pm

ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டம் (SISFS)!

Start-up India Seed Fund Scheme (SISFS): ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் வரை மானியமும், ரூ.50 லட்சம் வரை கடனுதவியும் வழங்கும் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 8 Feb 2026 1:35 pm

யாழில்.  ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன்  கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இருவர் கைது… The post யாழில். ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:24 pm

அஜித் குமார் கார் பந்தயம்: அபுதாபியில் உணர்வுபூர்வ சந்திப்பு

அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 1:10 pm

பொலிஸாருக்கு இடையில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில் மற்றையவர் சிறையில்

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணியை இடைநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், ஒரு உத்தியோகத்தர் மற்றவரைத் தங்கியிருந்த இடத்திலேயே கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதிவு 8 Feb 2026 1:10 pm

❄️  வடகிழக்கு அமெரிக்கா   கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் (Northeast US) தற்போது ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து வீசும் கடும் குளிர்காற்றினால் (Arctic… The post ❄️ வடகிழக்கு அமெரிக்கா கடும் குளிர்காற்றினால் உறைந்து போயுள்ளது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Feb 2026 1:08 pm

Bharat Taxi: ஓலா, ஊபருக்கு போட்டியாக களமிறங்கும் மத்திய அரசின் ஆப்; இதில் நமக்கு என்ன பயன்?

ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று 'பாரத் டாக்ஸி'. இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம். இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி, குஜராத் போன்ற பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த ஆப் செயல்பாட்டிற்கு வர‌வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. Bharat Taxi 2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? மற்ற ஆப்களைக்‌ காட்டிலும் இதில் என்ன ஸ்பெஷல்? பிற ஆப்களில் டிரைவர்கள் ஒவ்வொரு ரைடிற்கும் 20 - 30 சதவிகிதம் கமிஷன்‌ கட்ட வேண்டும். ஆனால், இந்த ஆப்பில் அப்படி எந்தக் கமிஷனும் கட்ட வேண்டியதில்லை. இதனால், டிரைவர்களுக்கும் லாபம்... கமிஷன் குறைவதால் பயணிகளுக்குக் கட்டணம் குறையும். இது பயணிகளுக்கும் லாபம். பிற ஆப்களில், பீக் நேரங்கள், மழையின் போது கட்டணங்கள் அதிகரிக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த ஆப்பில் கட்டணங்கள் நடைமுறைகளுக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படும். பாரத் டாக்ஸியைப் பொறுத்தவரை, டிரைவர்கள் பார்ட்னர்கள். இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

விகடன் 8 Feb 2026 1:02 pm

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. பந்துல பிரசன்ன என்பவரை குறி வைத்தே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 8 Feb 2026 1:01 pm

'பரியேறும் பெருமாள்'பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானப்போது நானும் H.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு. எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு. இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டி தான். மாரி செல்வராஜ் எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது. மாரி மேடையில் 'மை லார்ட்' பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது என பேசியிருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 12:58 pm

AFG vs NZ: ‘இதுலதான் நாங்க ஸ்பெஷலிஸ்டே’.. நியூசிலாந்தை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்: அதிரடி கம்பேக்!

நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு அசத்தியது. துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்து ரன்களை குவித்தது.

சமயம் 8 Feb 2026 12:55 pm

கோவை வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கப் பணிகள் -உயர்நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாக வாய்ப்பு!

கோவை வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

சமயம் 8 Feb 2026 12:42 pm

மேரி கோம் பட நடிகர் மாரடைப்பால் மரணம்: என் அப்பா இறந்தப்போ நீங்க தான் ஆறுதல்னு ப்ரியங்கா சோப்ரா உருக்கம்

தனக்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்த சுனில் தாபா இறந்த செய்தி அறிந்த ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். மேலும் சிக்கிம் மாநில முதல்வரும் சுனில் தாபா பற்றி போஸ்ட் போட்டுள்ளார்.

சமயம் 8 Feb 2026 12:41 pm

பி.எல்.சந்தோஷ் சென்னை விசிட்… ரூட்டை திருப்பும் பாஜக தலைகள்- வழிக்கு கொண்டு வரும் டெல்லி!

தமிழகம் வரவுள்ள பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகியது கவனிக்கத்தக்கது.

சமயம் 8 Feb 2026 12:35 pm

சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

கெய்ரோ : சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மத்திய சூடானின் வடக்கு கோர்டோஃபேன் மாகாணத்தில் ரஹாத் நகரையொட்டி, துணை ராணுவப்படையின் கிளர்ச்சியாளர் பிரிவால் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் மீதான தாக்குதல்களில் 2 கைக்குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகள் உள்பட 24 […]

அதிரடி 8 Feb 2026 12:30 pm

சஜித் தரப்பு அரசியல்வாதி மீது நள்ளிரவில் கொலை முயற்சி

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார். இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் […]

அதிரடி 8 Feb 2026 12:15 pm

விஜய் டிவி ராமர் காமெடி: “அவருக்கு தமிழ் தெரியாது!”மேடையில் நடந்த கலாட்டா!

விஜய் டிவி ராமர் காமெடி என்றாலே அதற்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாகத் தனது ‘தங்கிலீஷ்’ (Thanglish) பேச்சால் பலரையும் சிரிக்க வைக்கும் ராமர், சமீப

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 12:02 pm

NZ vs AFG: ‘ஒரே ஆள், அப்படியே சிங்கம் மாதிரி’.. பெர்குஷன் செஞ்ச மேஜிங்: பவர் பிளேவிலேயே ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லாக்கி பெர்குஷனின் மேஜிக் தொடர்கிறது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணிக்கு, லாக்கி பெர்குஷன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

சமயம் 8 Feb 2026 11:59 am

My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் பேசிய இயக்குநர் பாலா, மணிரத்னம் சாரை பிடித்திருந்தால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும். அப்படித்தான் எனக்கு சசிகுமாரும்... அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம். ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவரது முதல் படத்திற்கு 'குக்கூ', என்று பெயர் வைத்திருந்தார். இரண்டாவது படத்திற்கு 'ஜோக்கர்' என வைத்திருந்தார். தற்போது 'மை லார்ட்' என்று வைத்திருந்திக்கிறார். 'மை லார்ட்' என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும். இயக்குநர் பாலா நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார். தனிமையில் இருக்காதீர்கள், நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:54 am

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது. அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன பேசினார்? 2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ. இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அணு ஆயுத சோதனை அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது. இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. 'இந்த' விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன? சீனாவின் மறுப்பு அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

விகடன் 8 Feb 2026 11:49 am

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாள் எனத் தெரிவித்தும் ஐக்கிய ராச்சிய வேணாம் எனத் தெரிவித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்தனர். இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது பேரணியும் […]

அதிரடி 8 Feb 2026 11:49 am

'VIP' அம்மா வீட்டு விசேஷத்தில் தனுஷ்: நடிப்பு ராட்சசன் பற்றி காவ்யா சொன்னது 100/100 உண்மை

சரண்யா பொன்வண்ணன் மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது காவ்யா ஸ்ரீராம் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

சமயம் 8 Feb 2026 11:42 am

‘அந்நியனாக இருந்த இந்திய அணியை’.. அம்பியாக மாற்றிய அமெரிக்க அணி: பெரிய அபாய எச்சரிக்கை!

டி20 பார்மெட்டில், தொடர்ச்சியாக மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்திய அணியை, அமெரிக்க அணி அசைத்து பார்த்துவிட்டது. ஒரு கட்டத்தில், 98/6 என இருந்தபோது, இந்திய அணி மீது நம்பிக்கை இழக்கும் நிலைமை இருந்தது.

சமயம் 8 Feb 2026 11:35 am

IND vs USA: எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன். அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 8 Feb 2026 11:32 am

திருமாவளவன் மீதான எமது மக்களின் மதிப்பு சுக்குநூறாகியுள்ளது –மூத்த போராளி காக்கா

தமிழீழ தேசியத் தலைவரின்திருமணம், தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கள், இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என மூத்த போராளி காக்கா (மனோகர்) தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசியத் தலைவர் தனது திருமணம் தொடர்பான விடயத்தில், 14 பேரை தான் சுட்டுக் கொன்றதாக

புதினப்பலகை 8 Feb 2026 11:12 am

பூஜை செய்யும் திசை: வீட்டில் செல்வம் பெருக எங்கு அமர வேண்டும்? –முக்கிய வாஸ்து குறிப்புகள்!

பூஜை செய்யும் திசை (Direction to sit for Pooja) என்பது இந்து மத மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 11:00 am

அமுல் செல்லும் ரில்வின் சில்வா –ரத்து செய்த உடன்பாட்டை புதுப்பிக்க திட்டமா?

இந்தியாவின் அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் ஏற்பாட்டில் ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்தியாவின் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கும் பயணம் செய்யவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கும் சிறிலஙகாவின் தேசிய

புதினப்பலகை 8 Feb 2026 10:58 am

முக்கிய வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க உயர்மட்டக் குழு

முக்கியமான மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, ஆலோசனை வழங்குவதற்காக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவொன்றை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நியமித்துள்ளார். காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பிரியந்த பண்டார, மூத்த அரசு சட்டவாளர் ஜெயந்தி வேகொடபொல மற்றும்

புதினப்பலகை 8 Feb 2026 10:54 am

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது - இருவருக்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் , மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக நீதிமன்றங்களில் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு 8 Feb 2026 10:54 am

TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்'ஒத்திவைப்பு - காரணம் என்ன?

இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது. ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, அந்தத் தேர்வு மையங்களில் பல தேர்வர்களின் பதிவு எண் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இன்று நடக்கவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர்‌ அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'இந்த' விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?

விகடன் 8 Feb 2026 10:52 am

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் –சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார். இந்தவார தொடக்கத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார். அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கும் என்ற அச்சத்தில் ஈரானுக்கான ஏற்றுமதியை சிறிலங்கா நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில்

புதினப்பலகை 8 Feb 2026 10:51 am

உலக வங்கி, அனைத்துலக நாணய நிதிய உயர் மட்டக்குழுக்கள் சிறிலங்கா வருகின்றன

2022-23 பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து, உலக வங்கி பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது. அடுத்த மாதம் உலக வங்கி பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதே இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தடைபட்டுள்ள கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவற்றை முடிப்பது குறித்தும் உலக

புதினப்பலகை 8 Feb 2026 10:45 am

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சிராஜ் இல்லை. பும்ரா ஆட முடியாத காரணத்தால் கடைசி நிமிடத்தில்தான் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி சிராஜ் பேசியிருந்தார். சிராஜ் சிராஜ் பேசியதாவது, 'இந்த T20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக T20 போட்டிகளில் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை. அதனாலேயே, ‘இந்த வருஷம் நான் இல்ல’ன்னு மனசுக்குள்ளேயே ஏற்றுக்கிட்டேன், 15-ஆம் தேதி ரியல் மாட்ரிட் போட்டி இருந்தது. அதை நேரில் பார்க்க பிளான் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் ரமலான் வருது… அதுக்கும் சில விஷயங்களை திட்டமிட்டிருந்தேன். ஆனால், கடவுள் எழுதியதை யாரால் மாற்ற முடியும்? “நான் வீட்டில குடும்பத்தோடு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ பிட்னெஸ் கோச் அட்ரியன் மெசேஜ் அனுப்பினார். அடுத்த சில நாட்களுக்கான உங்களின் பிளான் என்னவென கேட்டார். நானும் ‘இப்போ ரெஸ்ட் தான்’ன்னு சொன்னேன். அடுத்த நிமிஷமே சூர்யா பாய் கால் பண்ணினார். ‘மியான்… ரெடி ஆகு… பேக்கை எடுத்துக்கிட்டு உடனே வா’ன்னு சொன்னார். முதல்ல ஜோக் தான்னு நினைச்சேன். ஆனா உடனே தேர்வாளர் ஓஜா பாயிடமிருந்தும் கால் வந்தது. அப்போதான் உண்மை புரிஞ்சது. Siraj உலகக்கோப்பை அணியுடன் இணைய விமானத்தில் உட்கார்ந்திருந்தபோதுகூட அது கனவு மாதிரி தான் இருந்தது. ‘நான் உண்மையிலேயே உலகக்கோப்பை விளையாடப் போறேனா?’ன்னு தோணிச்சு. கடந்த ஒரு வருடமாக நடந்ததை நினைச்சா, இது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், கடவுள் என் விதியை மாற்றிவிட்டார்' என்றார்.

விகடன் 8 Feb 2026 10:40 am

சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க முடிவு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான, முறைப்பாடு குறித்த விசாரணையைத் தொடங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார். அதேவேளை சமிந்த குலரத்ன நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நடைமுறை தவறானது என்றும், அவர் ஊழல் குற்றத்தைச் செய்ததாக

புதினப்பலகை 8 Feb 2026 10:39 am

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தம்பதியினரை அவமதித்து காணொளி; ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒபாமா தம்பதியினரின் முகங்கள் குரங்குகளின் உருவங்களுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு இந்தக் காணொளி பகிரப்பட்ட சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு […]

அதிரடி 8 Feb 2026 10:30 am

'இந்த'விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?

இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்கு சலுகைகள்... வரிக் குறைப்பு... வரி விலக்கு எதுவும் இல்லை. இது விவசாயிகளின் நலனைக் காக்க‌‌ என்றும், இதனால், இந்தியாவின் சிறு, குறு விவசாயிகளின்‌ வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் காக்கப்பட்ட உற்பத்திகளின் பட்டியல் இதோ... > அரிசி > கோதுமை > மக்காச்சோளம் > சோயா > பால் பொருள்கள் அரிசி இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! இந்த உற்பத்திகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், இவைகளுக்கு எந்த வரியும் இல்லை... > மாம்பழம் > வாழைப்பழம் > கொய்யா > அவகேடோ > கிவி > பப்பாளி > அன்னாசிப் பழம் > காளான் > மசாலாப் பொருள்கள் > டீ > காபி > தேங்காய் > முந்திரி > கசகசா > எள் இதுவும் விவசாயிகளின்‌ நலன் சார்ந்து எடுக்கப்பட்ட‌‌ முடிவு என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained ஒப்பந்தத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கு என்ன லாபம்? பாதாம், வால்நட், காலநடைகளுக்கு தீவனமாக வழங்கும் சிவுப்பு சோளம்‌ போன்று அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்படும். காரணம், இவை இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த மரபணு மாற்று உற்பத்திகளுக்கும் எந்த வரிச் சலுகையும் இல்லை. Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?

விகடன் 8 Feb 2026 10:03 am

பெர்பெக்ட் டேஸ் திரைவிமர்சனம்: கழிப்பறை சுத்தம் செய்யும் மனிதனிடம் ஒளிந்திருக்கும் ரகசியம்!

பெர்பெக்ட் டேஸ் திரைவிமர்சனம் என்பது ஒரு சாதாரண மனிதனின் தினசரி அட்டவணையைப் பற்றியது மட்டுமல்ல; அது ஒரு மனிதன் தன்னுள் கண்டடைந்த பேரமைதியைப் பற்றிய ரகசியம். இன்றைய

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 10:00 am

குரைக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஏ.ஆர். ரஹ்மான் வாய்ப்பு கேட்டு பிச்சை எடுக்கல: கங்கனாவை விளாசிய பிரகாஷ்ராஜ்

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானை விமர்சித்த நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை விளாசியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் பேசியதை கேட்ட தமிழ் ரசிகர்கள் சூப்பர் சார் என்று பாராட்டியிருக்கிறார்கள்.

சமயம் 8 Feb 2026 9:59 am

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொருட்கள் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி –அரசாங்கத்தின் புதிய திட்டம்

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அநுராதபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆயுள் காப்புறுதி அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை […]

அதிரடி 8 Feb 2026 9:48 am

மட்டக்களப்பில் 11 வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 11 வெதுப்பக முச்சக்கர வண்டிகள் தனிநபர் சுகாதாரம், மருத்துவ சான்றிதழ் இன்றிப் பயணித்ததால் பொதுச் சுகாதாரர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் இடம்பெற்று, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறியதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 8 Feb 2026 9:42 am

அண்ணாமலை ஓரங்கப்பட்டது ஏன்? டெல்லி பாஜக தலைமை வியூகம் இதுதான்!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியிருக்கும் நிலையில், என்.டி.ஏவிற்கு பின்னடைவு ஏற்படும் எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் டெல்லியின் அரசியல் கணக்கு என்னவென்று விரிவாக அலசலாம்.

சமயம் 8 Feb 2026 9:40 am

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் புதிய அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான பொதுத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது. ஜப்பானின் முதல் பெண் பிரதமா் சனே தகாய்ச்சியின் செல்வாக்கைத் தீா்மானிக்கும் தோ்தலாகவும், தாய்லாந்தில் புதிய அரசமைப்புச் சட்டத்துக்கான பொது வாக்கெடுப்புடன் கூடிய தோ்தலாகவும் இவை அமைந்திருப்பதால், உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் ஆளும் விடுதலை […]

அதிரடி 8 Feb 2026 9:30 am

IND vs USA: ‘கம்பீர் கொடுத்த அந்த ஒரு ஐடியாதான்’.. வெற்றிக்கு முக்கிய காரணமே: சூர்யகுமார் யாதவ் பேட்டி!

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி துவக்கத்தில் தடுமாறி பிறகு அதிரடி காட்டி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிகொடுத்தார்.

சமயம் 8 Feb 2026 9:04 am

பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே: காதலை வெளிப்படுத்த இதுவே ஒரு முக்கிய தருணம்!

பிப்ரவரி 8 ப்ரோபோஸ் டே என்பது காதலர் வாரத்தின் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான நாளாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி 7-ஆம் தேதி ரோஜா தினத்துடன் (Rose Day)

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 8 Feb 2026 9:00 am

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்-சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சமயம் 8 Feb 2026 8:57 am