SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

படையப்பா படத்தை முதல் முறையாக தியேட்டரில் பார்த்த ரம்யா கிருஷ்ணன்: 25 வருஷம் காத்திருந்திருக்கிறார்

படையப்பா படத்தை முதல் முறையாக தியேட்டர்களில் அதுவும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கிரீன் கிழிக்கப்பட்ட நிலையில் தற்போது விசில் பறந்திருக்கிறது.

சமயம் 22 Dec 2025 9:23 am

கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழப்பு உறுதி – அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்!

கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும் என அர்ஜுன் சம்பத் கடுமையான விமர்சித்து உள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 22 Dec 2025 9:09 am

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில்

தையிட்டி விகாரைக்கு முன்பாகபொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்பொலிஸார் காட்டு மிராண்டிதனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியநிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்நிலையில் , போராட்டகளத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்பொலிஸார் காட்டு மிராண்டிதனமாக நடந்து கொண்டமைதொடர்பிலும் , மத தலைவரானவேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ்வாகனத்தினுள்தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடையபொலிஸ்அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்

பதிவு 22 Dec 2025 9:04 am

யாழில். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீதி வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய , புத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் வினோஜன் (வயது 25) எனும் இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். குறித்த இளைஞனுடன் பயணித்த மற்றைய இளைஞனும் , எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த , தாய் - தந்தை மற்றும் அவர்களின் சிறிய மகன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 22 Dec 2025 8:55 am

நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான் - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது... சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இது எப்போது இருந்து நடந்து வருகிறது என்பது நமக்கு தெரியாது. அதனால், அதற்கும் அரசியல் சாசனத்தின் ஒப்புதல் வேண்டுமா... என்ன? இந்துஸ்தான் இந்துக்களின் தேசம். யாரெல்லாம் இந்தியாவை தங்களது தாய் நாடாக கருதுகிறார்களோ, அவர்கள் இந்தியாவின் கலாசாரத்தைப் போற்றுவார்கள். RSS நிகழ்ச்சி இந்துஸ்தான் நிலத்தில், இந்திய முன்னோர்களைப் போற்றும் கடைசி ஒருவர் இருக்கும் வரை இந்தியா இந்து தேசம் தான். இது தான் சங்கின் கொள்கை. இந்து தேசம் என்று நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஏனெனில், நாங்கள் இந்துக்கள். எங்களது தேசம் இந்து தேசம். பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல என்று கூறியுள்ளார்.

விகடன் 22 Dec 2025 8:51 am

எலான் மஸ்க்கின் சொத்துக்கள் 700 பில்லியனை கடந்தது: வரலாற்றுச் சாதனை

சர்வதேச ரீதியில் முன்னணி தொழிலதிபர்களில் ஓருவரான எலோன் மஸ்கின் மொத்த சொத்துக்கள் 700 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளன. அண்மையில் வெளியான போர்பஸ் பில்லியனேர்ஸ் குறியீட்டின் படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 749 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட $139 பில்லியன் மதிப்புள்ள Tesla பங்கு ஊக்கத்தொகை (stock options) திட்டத்தை அமெரிக்க டீல்வெயார் உச்ச நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியதன் விளைவாக, மஸ்க்கின் சொத்து மதிப்பில் இந்த பெரும் உயர்வு […]

அதிரடி 22 Dec 2025 8:30 am

CSK: ‘ஆடும் 12 வீரர்கள் பட்டியல்’.. ரவி அஸ்வின் கணிப்பு: 14.20 கோடி வீரர காணோம்.. முரட்டு டீம்மா இருக்குங்க!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஆடும் 12 வீரர்கள் பட்டியலை, ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்து வெளியிட்டுள்ளார். இதில், 14.20 கோடி வீரரை காணவில்லை என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சமயம் 22 Dec 2025 8:08 am

மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!

சைவத்தில் சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுபவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்களில் காலத்தால் மூத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மரபு மொழி. மொழிகடந்து உலக மக்கள் அனைவரையும் உருக வைக்கும் பாடல்களைப் பாடிய மாணிக்க வாசகர் அவதரித்த பூமி திருவாதவூர். எனவேதான் அவருக்கு வாதவூரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. அவர் அவதரித்த தலத்தில் அமைந்திருக்கும் திருமறைநாதர் கோயில் குறித்தும் அதன் மகிமைகள் குறித்தும் அறிந்துகொள்வோம். இத்தலத்தின் தலபுராணம் பல யுகங்களைக் கடந்து சொல்கிறது. வாயுதேவன் ஈசனை வழிபட்ட தலம். அக்னிதேவன், தனது ஆற்றலைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் ஈசனை வழிபட்ட தலம். கபில முனிவரின் தோஷம் நீங்கிய தலம் எனப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலம் மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ. தூரத்திலும், மேலூரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இங்கு ஈசனுக்குத் திருமறைநாதர் என்பது திருநாமம். அன்னைக்கு வேதநாயகி என்பது திருப்பெயர். மாணிக்கவாசகர் இங்கு தல விருட்சம் மகிழ மரம். சிவ தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. ஈசன் தம் பாதச் சிலம்பொலி எழுப்பி, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட சிலம்பொலி நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்பங்களுடன் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. `இது மாணிக்கவாசகர் கட்டியது' என்கிறார்கள். ஆவுடையார்கோயில் சிற்பங்களுக்கு இணையான மண்டபம் இது. அழகிய நுட்பமான கொடுங்கைகள் இங்கு அதிசயமாகப் பார்க்கப்படுகின்றன. ஆலய நுழைவாயிலில் கபிலர் சிலையும், ஆலயத்துள் ஒற்றைக்காலை மடக்கி அமர்ந்தபடி அபூர்வக் கோலத்தில் அருளும் சனீஸ்வரரின் சிலையும் உள்ளன. சனிபகவானுக்கு வாத நோய் நீங்கிய தலம் இது. எனவே இங்கு வந்து ஈசனையும் சனிபகவானையும் வழிபட்டால் வாதம் முதலிய நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆலயத்தில் சிந்தாமணி விநாயகர், முருகப்பெருமான், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்புற விளங்குகின்றன. ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத் தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி, பசுவின் குளம்புகள் பதிந்துள்ள சுயம்புத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பிகை, பிரம்மன் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலத் திருமேனியளாக அவதரித்தாள். அதனால் அம்பிகை இங்கு கிழக்கு நோக்கி ஆரணவல்லி, திருமறைநாயகி, வேதவல்லி என்ற திருநாமங்களோடு அழைக்கப்படுகிறாள். திருவாதவூர் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி ஆகிய ஒன்பது மாதங்களில் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத் திங்கள் கிழமைகளில் 1008 சங்குகளைக் கொண்டு ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் காணப்படும், 'புருஷாமிருகம்' (மனிதத்தலையும் மிருக உடம்பும் கொண்டது) பாண்டவர்கள் வழிபட்டது என்கிறார்கள். சிவ பக்தரான புருஷாமிருகத்தைக் கண்ணன், திருவாதவூரின் விஷ்ணுதீர்த்தத்தில் காவல் தெய்வமாக நிறுத்தினார் என்கிறது புராணம். இன்றும் இந்தப் புருஷாமிருகத்தை மழை வருவதற்காக வேண்டிக்கொள்கிறார்கள் இந்த ஊரார். ஸ்ரீபைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைத்துவிட்டார் ஈசன். இதனால் பைரவர், ஈசனிடம் தனது வாகனத்தை மீண்டும் அளிக்கும்படி வேண்டினார். ஈசனும் திருவாதவூர் சென்று வழிபட்டால் தொலைந்த வாகனம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி திருவாதவூர் வந்த பைரவர் இங்கு பைரவர் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கித் திருமறைநாதரை அபிஷேகித்து வணங்கினார். அதனால் தனது நாய் வாகனத்தையும் மீட்டார். இதனால் இங்குள்ள பைரவரைத் தொடர்ந்து எட்டு அஷ்டமி நாளில் தீபமேற்றி வணங்கி வந்தால், தொலைந்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாண்டவ்ய முனிவரின் சாபம் பெற்ற சனிபகவானின் வாதநோயை ஈசன் இங்கு தீர்த்ததால் இத்தலம் ‘வாதவூர்' எனப் பெயர் பெற்றது. இதனால் இங்கு வந்து திருமறைநாதரை வழிபட்டால் வாதக்கோளாறுகள், கை கால் முடக்கு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட எல்லா வாதநோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது. மேலும், இத்தலத்தில் உள்ள சனிபகவான், பைரவர் மற்றும் திருமறைநாதரை ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் சகலவிதமான பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை. திருவாதவூர் இங்கு மாணிக்கவாசகர் அவதரித்த இடத்தில் கோயில் உள்ளது. வியாழக்கிழமை மற்றும் மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. படிப்பு வராதவர்கள் மந்தமாக இருப்பவர்கள், பேச்சுத் திறன் குறைந்தவர்கள் இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு நெய் தீபமேற்றி வழிபட் டால், விரைவில் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து திருவாசகம் முற்றோதுதல் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பதும் நம்பிக்கை. ஆனி மாத மக நட்சத்திர நாளில் இங்கு மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இழந்த வாகனத்தைத் திரும்பப் பெறவும், வாத நோய்கள் தீரவும், குழந்தை இல்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டியும், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும் பலரும் இங்கு வந்து வேண்டி, பலன் பெற்றுச் செல்வதை இன்றும் கண்கூடாகக் காணமுடிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.

விகடன் 22 Dec 2025 8:05 am

முன்னாள் அதிபர்களை நிதி திரட்டலில் ஈடுபடுத்த அரசாங்கம் மறுப்பு

பேரிடர் நிவாரண நிதி திரட்டும் முயற்சிகளில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அதிபர்களை அரசாங்கம் ஈடுபடுத்தாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அனைத்துலக உதவிக்கான கோரிக்கை முயற்சிகளில், முன்னாள் அதிபர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய நிர்வாகத்தின் மீது பொதுமக்களும் சர்வதேச சமூகமும் வைத்திருக்கும்

புதினப்பலகை 22 Dec 2025 7:55 am

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மோசமானது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத

புதினப்பலகை 22 Dec 2025 7:47 am

தமிழர் பகுதியில் குடும்ப பெண் கொலை ; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதன்போது கணவனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா […]

அதிரடி 22 Dec 2025 7:38 am

தையிட்டி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுக்காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், மற்றும் பிரதேச சபைகளின் 4 உறுப்பினர்களைக்

புதினப்பலகை 22 Dec 2025 7:36 am

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப பலி

வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார். குறித்த இளைஞர் உட்பட சிலர் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் […]

அதிரடி 22 Dec 2025 7:36 am

இலங்கையை நோக்கி புதிய காற்றுச் சுழற்சி ; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் அதிர்ச்சி தகவல்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை, நாளை (22.12.2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே […]

அதிரடி 22 Dec 2025 7:33 am

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

வங்கதேசத்தில் வன்முறைக் கலவரத்தில் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதில் 7 வயது சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், சனிக்கிழமையில் ஏற்பட்ட வன்முறையின்போது, லட்சுமிபூர் சதார் பகுதியில் உள்ள தேசியவாதக் கட்சித் தலைவர் பெலால் ஹொசைனின் வீட்டை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, வன்முறைக் கும்பல் தீவைத்தனர். வீடு தீப்பற்றி எரியும் நிலையில், வீட்டின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்ததால், பெலாலும் அவரின் 3 மகள்களும் […]

அதிரடி 22 Dec 2025 6:42 am

மோடியை நோக்கி வீடு நகர்கிறது: தமிழ்நாட்டில் சைக்கிள் ஓடுகிறது: நீயா நானா போட்டி தொடர்கிறது - பனங்காட்டான்

தமிழகம் சென்றுள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை மாகாண சபையை புறந்தள்ளும் தங்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் தெரிவித்து அதனை செயற்படுத்துமாறு தமிழக அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைமையிலான அணி இந்திய பிரதமரிடம் கையளிக்குமாறு இந்திய உயர் ஸ்தானிகரிடம் யைளிக்கும் ஆவணத்தில் மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்த உதவுமாறு கேட்டுள்ளது. இதில் எதனை மோடி தெரிந்தெடுக்கப் போகிறார்? டித்வா புயல் ஏற்படுத்திய பேரிடர் இலங்கையை சர்வதேச உதவி வட்டத்துள் புகுத்தியுள்ளது. எவ்வளவு நிதி கிடைத்துள்ளது, அதில் நிவாரணம் எவ்வளவு, கடன் எவ்வளவு என்ற விபரம் பூரணமாகத் தெரியவில்லை. பேரிடர் நிவாரணத் தேவைக்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறியுள்ளது. ஆனால், பொதுவெளியில் எதிர்க்கட்சிகள் அரசின் நிதிப் பங்களிப்பை விமர்சித்து வருகின்றன. மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி பேதமின்றி சமத்துவமாக மதிக்காது ஆட்சித் தரப்பின் அரசியல் தலைமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பேரிடர் நிவாரணம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டு. சர்வதேசம் தாராளமாக வழங்கும் நிவாரண உதவி ஜே.வி.பி.யின் உதவி என்ற தோற்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடு முழுவதும் அபிப்பிராயம் பரப்பப்படுகிறது. இதில் உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால், அநுர குமர அரசு இதனையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்சிக் கதிரையில் ஏற அறுபது ஆண்டு காலத்தில் இரு தடவை முயற்சித்து தோல்வியையும் இழப்புகளையும் கண்டவர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தைத் தக்கவைத்து ஆட்சியில் நீட்சி காண விரும்புவதாக இதனைப் பார்க்கலாம். முன்னைய ஆட்சியாளர்கள் ஊழலும் மோசடிகளும் செய்தவர்கள் என்பதாலும், இன்றைய அரசு அதனை முற்றாக அழித்து ஊழலற்ற ஆட்சியை நடத்துவதாலும் சர்வதேசம் வரையாது வழங்குகிறது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச உதவிகளை வெளிநாடுகளிலிருந்து பெறுவதில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்டுவரும் எதிர்கட்சிகளின் வேண்டுகோள்களையும் பிரதமர் நிராகரித்துள்ளார். ஊழல்வாதிகளான முன்னைய ஜனாதிபதிகளையும் நாம் இணைத்துச் செயற்பட்டால் சர்வதேசம் எமக்கு உதவ முன்வராது என்று இவர் சுட்டியிருப்பது அனைத்துப் பிரதான சிங்களக் கட்சிகளையும் ஒரு கூடைக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஏற்கனவே இப்பத்தியில் சொன்னதுபோல அடுத்த சில வருடங்களில் அல்லது நீண்ட காலத்துக்கு இடம்பெற வேண்டிய பல்வேறு தேர்தல்களையும், தற்போதைய பேரிடரிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதாகக் காரணம் கூறி பின்போடுவதற்கும் ஆட்சியிலிருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இலங்கை அரசியல் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க தமிழர் தாயக அரசியல் வேறொரு அரசியல் நோக்கி நடைபயில்கிறது. இதனை முன்வைத்து எழுத ஆரம்பிக்கும்பொழுது என் மனசு ஒரு சினிமாப் பாடலை முணுமுணுக்கிறது. பலே பாண்டியா திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும், சிவாஜி கணேசனும் பாடுவதாக இடம்பெற்ற நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற பாடல்தான் இது. இப்பாடல் காட்டும் நீயா நானா என்ற தோரணையில் தமிழர் தாயக அரசியல் இன்று போட்டி போடுகிறது. தமிழர்களின் அரசியல் தலைமை என்று தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் முன்னணியில் உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் என்ற எண்ணி;க்கையை தவிர்த்து, மூத்த அரசியல் கட்சிகள், சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக தமிழர்களோடு இணைந்தவர்கள், அமைச்சர் பதவிகளை வகித்த கட்சிகள், அவ்வப்போது அரசுடனும் வெளிநாடுகளுடனும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேசி வருபவர்கள் என்று இவர்களை மதிப்பதற்கு இடமுண்டு. ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலுக்குள் வந்த ரெலோ, ஈ.பி,ஆர்.எல்.எவ். என்பவை ஒருபோதும் தனித்து இயங்கும் வல்லமை கொண்டவர்களாக இருக்கவில்லை. அரசியலில் சாதனை புரிந்தவர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பால் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றோடு இவை மூன்றும் இணைக்கப்பட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. 2019ன் பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தக் கூ(ட்)டு ஒவ்வாமையாலும், வசதி கருதியும் பிரிந்தது. இப்போது தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழர் தேசிய பேரவை இயங்குகிறது. தமிழரசு கட்சி முன்னர் பிரிந்து போன மூன்று குழுக்களையும் அதன் சுயதேவை கருதி தம்முடன் இணைக்கும் பேச்சுவார்த்தையில் முதற்படி தாண்டியுள்ளது. இந்த இணைப்பில் சமத்துவ கட்சியும் ஜனநாயக போராளிகள் அணியும் சேர்ந்துள்ளன. மாகாண சபைத்தேர்தலை இலக்கு வைத்து தமிழரசு கட்சி தனது காய்களை நகர்த்துகிறது. அதே விருப்புடன் முன்னைய மூன்று அணிகளும் மற்றைய இரண்டும் தமிழரசு கட்சியுடன் இணையும் சாத்தியம் காணப்படுகிறது. ஒற்றை ஆட்சியின்றி சம~;டி முறையைக் கோரும் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய பேரவையும் தமக்குள் ஓர் அணியை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் மாவீரர் நினைவேந்தல் காலத்தில் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். பசுமை இயக்க பொ.ஐங்கரநேசனின் அழைப்பில் இவரது வருகை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் ஒரு கல்லை தமிழ்த் தேசிய குளத்துக்குள் வீசி ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த அலையின் ஊடாக அரசியலை எடுத்துச் செல்ல கஜேந்திரகுமார் அணி கால் பதித்துள்ளது. இவரது தலைமையில் ஐங்கரநேசன் உட்பட ஆறு பேர் கொண்ட குழு தமிழகம் சென்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பேசி, தங்களின் கோரிக்கை ஆவணத்தையும் அவரிடம் கையளித்தது. அதனை பிரதமர் மோடியிடம் எடுத்துச் செல்லுமாறு கோரியுள்ளனர். இச்சந்திப்பில் திருமாவளவனும் பங்குபற்றினார். அடுத்து, சீமானையும், அதிமுக பிரமுகர் எடப்பாடியையும் இக்குழு சந்தித்துள்ளது. இதன் பலாபலன்களை அறிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டி வரலாம். தமிழரசு கட்சி தலைமையிலான அணி இந்த மாதம் 23ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அணியில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகளின் பிரதிநிதிகள், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இச்சந்திப்பில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏதோ ஒரு வகையில் இச்சந்திப்பில் இணைந்து கொள்வாரென்று உறுதிபட கூறலாம். மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென இக்கட்சிகள் தயாரித்த ஆவணம் இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்சொன்ன இரண்டு தரப்பு சந்திப்புகளிலும் பங்குபற்றுபவர்கள் ஈழத்தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு பற்றியே அக்கறை கொள்பவர்கள். அதனை வைத்தே அரசியல் செய்பவர்களும். ஆனால், இரண்டினதும் கோரிக்கைகள் வெவ்வேறானவை. அதேசமயம், இரண்டு கோரிக்கைகளும் இந்திய அரசை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் சென்றுள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை மாகாண சபையை புறந்தள்ளும் தங்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் தெரிவித்து அதனை செயற்படுத்துமாறு தமிழக அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைமையிலான அணி இந்திய பிரதமரிடம் கையளிக்குமாறு வழங்கவுள்ள ஆவணத்தில் மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளது. இரு தரப்பினரும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை முன்வைத்து நகர்கிறார்கள். ஆதலால் இ;ப்போது இதனை விமர்சிக்காது தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் மறந்துவிட்ட இரண்டு விடயங்களை இங்கு நினைவூட்டுவது காலத்தின் தேவையாகிறது. • கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன் தம்மைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் என்ன சொன்னார்? தமிழ்நாடு கொந்தளித்தாலும் ஈழத்தமிழருக்கு விடிவில்லை என்றுதானே சொன்னார். தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வலுவாக எதிர்த்து வரும் பா.ஜ.கவின் தலைவர் மோடி ஈழத்தமிழருக்கான தமிழகத்தின் குரலை செவிமடுப்பாரா? • சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ;ஜெய்சங்கரை தமிழ்க் கட்சி பிரமுகர்கள் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுச் சொன்னது என்ன? உங்கள் பிரச்சனைத் தீர்வை நீங்கள் அனைவரும் ஒரே குரலில் ஒன்றாக கொண்டு வாருங்கள் என்று சொன்னாரல்லவா? இது எதனையுமே புரிந்து கொள்ளாமல் வெவ்வேறு கூட்டுகளாக ஒரே இடத்துக்கு இரு பாதையால் செல்வதில் என்ன கிடைக்கப் போகிறது? சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தனித்தனி வழியே செல்லப்போகின்றன?

பதிவு 22 Dec 2025 3:32 am

சர்வதேச பயணங்களைத் தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்திய கூகிள்: வெளியான காரணம்

தூதரகங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அமெரிக்க விசா வைத்திருக்கும் சில ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்தியுள்ளது. வெளியேற வேண்டாம் இது தொடர்பில் ஊழியர்களுக்கு கூகிள் அனுப்பியுள்ள மின்னஞ்சலை மேற்கோள் காட்டியுள்ளனர். குறித்த மின்னஞ்சலில், அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்கு விசா முத்திரை தேவைப்படும் ஊழியர்கள், விசா செயலாக்க நேரம் நீடித்துள்ளதால் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். சில அமெரிக்கத் தூதரகங்களிலும் துணைத் தூதரகங்களிலும் விசா சந்திப்புகளுக்கு 12 மாதங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. […]

அதிரடி 22 Dec 2025 3:30 am

விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு

ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும் பெற்றுள்ளது பாரசூட்டிலிருந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனையாகவே இது இடம்பெற்றுள்ளது என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

அதிரடி 22 Dec 2025 1:30 am

ஐந்து மீனவர்களுடன் மாயமான பலநாள் மீன்பிடிப் படகு

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்த படகிலிருந்த ஐந்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அன்று முதல் […]

அதிரடி 22 Dec 2025 12:30 am

மீண்டும் ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா…இறுகும் போர் பதற்றம்

சர்வதேச கடல் பகுதியில் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பாக வெனிசுலாவிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தற்போது இன்னொரு கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக இன்று காலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

அதிரடி 22 Dec 2025 12:30 am

ரயிலில் இதெல்லாம் நடக்குமா? ஒரு நாளும் கவனிச்சது இல்லையே.. ரயில் ஹாரன் சிக்னல்களும் அதன் அர்த்தங்களும்!

ரயில்களில் சிக்னல் கோளாறு, தொழில்நுட்பப் பிரச்சினை, அவசர நிலை, புறப்பாடு என எல்லாவற்றையும் ஹாரன் ஒலிகள் மூலம் தெரிவிக்க முடிகிறது. அது லோகோபைலட் மற்றும் கார்டு ஆகியோருக்கிடையிலான முக்கியமான தொடர்பு மொழி.

சமயம் 21 Dec 2025 11:36 pm

பரபரப்பு –கான்ஸ்டபிளை தாக்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மீதுபுகார்!

NPP முக்கியஸ்த்தர்கள் நெறி தவறுகிறார்களா? தீவிரமடையும் விசாரணை. இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்… The post பரபரப்பு – கான்ஸ்டபிளை தாக்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மீதுபுகார்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 11:04 pm

தேநீர் குடிக்க இறங்கியவர்களுக்கு எமனான லொறி ; இருவரும் பலி

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லிந்துலை கௌலினா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் மற்றும் பெய்திலியை சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது டயகம பிரதேசத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பேருந்திலிருந்து இறங்கி சென்ற […]

அதிரடி 21 Dec 2025 10:30 pm

சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் தலைமை இடங்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்‘ என்ற பெயரில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-15, எஃப்-16 போா் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன. துல்லியமாக […]

அதிரடி 21 Dec 2025 10:30 pm

தமிழ்நாடு ரூட்டில் பெங்களூரு-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்! மலையாளிகளுக்கு பறந்த குட் நியூஸ்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- கொல்லம் இடையே தமிழ்நாடு வழியாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சமயம் 21 Dec 2025 10:15 pm

கிளிநொச்சியில் பிரதமர் ஹரினி அமரசூரிய: இரணைமடு குளம் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நேரில் ஆய்வு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 21, 2025) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இரணைமடு… The post கிளிநொச்சியில் பிரதமர் ஹரினி அமரசூரிய: இரணைமடு குளம் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நேரில் ஆய்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 10:09 pm

இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கா? இந்த மாதிரியான பாஸ்போர்ட் விதிமுறைகள் நிறைய இருக்கு!

எங்கேயாவது பயணம் தொடங்குவதற்கு முன் பாஸ்போர்ட்டை ஒருமுறை கவனமாகச் சரிபார்ப்பது உங்கள் விடுமுறையை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வல்லமை கொண்டது.

சமயம் 21 Dec 2025 10:07 pm

பரிசளிப்பு விழா மேடையில் அதிபருக்கு மாணவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; வைரலாகும் காணொளி

கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விமர்சனம் குறித்த மாணவி பாடசாலை சார்பில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளிலும் குறித்த மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் இதன்போது குறிப்பிட்டார். பரிசளிப்பு […]

அதிரடி 21 Dec 2025 9:56 pm

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப UNICEF ஆதரவு!

சமீபத்திய சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட கல்வித்துறையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பாக, யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் குழுவிற்கும்… The post இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப UNICEF ஆதரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 9:53 pm

அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை –ஜப்பான் திட்டவட்டம்

டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரை சீனா, […]

அதிரடி 21 Dec 2025 9:30 pm

உலகில் அதிக பொதுவிடுமுறை நாட்கள் கொண்ட நாடு எது தெரியுமா? வெளியான முழு லிஸ்ட்

உலகில் எந்த நாட்டில் அதிக அரசு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 21 Dec 2025 8:50 pm

ரஷ்ய ஜனாதிபதி முன்னிலையில் திருமண ஆசையை வெளிப்படுத்திய நிருபர் ; கைதட்டி மகிழ்ந்த புதின்

ரஷ்ய ஜனாதிபதி புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் – போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கைதட்டி மகிழ்ந்த புதின் அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது […]

அதிரடி 21 Dec 2025 8:30 pm

அனுர அரசு தவறணைகளிற்கு ஆப்பு!

மதுபான விற்பனை நிலையங்களை ஊக்குவித்து கள்ளுத் தவறணைகளையும் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலைகளையும் தற்போதைய அரசு மூடுவிழாச் செய்கிறதென அனுர அரசின் மீது வடக்கிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் ஒருவரது முறைப்பாடு இது. தென்பகுதியில் கித்துள் மரத்திலிருந்து கள் இறக்கிக் அதனைக் காய்ச்சி கித்துள் கட்டி செய்வோருக்கு வரி இல்லை. நிதி அமைச்சு அண்மையில் தவறணை ஒன்றுக்கான வரியை 5 இலட்ச ரூபாவாக அதிகரித்துள்ளது. போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் தலா 25 இலட்ச ரூபா வரி கட்ட வேண்டுமென அறிவித்துள்ளது. இதன் மூலமாக கள் இறக்கும் தொழில்துறை அழிவைச் சந்திக்கப் போகிறது. பனை,தென்னை ஆகியவற்றிலிருந்து கள் இறக்கும் தொழிலை நம்பிப் பல ஆயிரம் குடும்பங்கள் இன்றும் உள்ளன. அரசாங்கம் வரி வருவாயைக் கூட்டுவதற்காக நியாயமற்று இத்தகைய வரியை அதிகரிக்கின்றது. கள்ளுக் குடித்தால் எங்களுடைய காசு எங்களிடம் நிற்கும். சாராயம் குடித்தால் எங்களுடைய காசு வெளியேறும் எனச் சொல்வார்கள். ஆகவே சுதேசிய பொருளாதார விருத்திக்குக் கள் இறக்கும் தொழில் பெரிதும் கைகொடுக்கின்றது. 1972 ஆம் ஆண்டில் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்க அமைப்பு உருவாகியது. வீடுகளில் கள் விற்கக் கூடாது. தவறணைகளில் மட்டும் தான் விற்க வேண்டுமென்ற நடைமுறை உருவாகியது. இதன் மூலமாகக் கூட்டுறவுத்துறை வடக்கு மாகாணத்தில் வலுப் பெற்றது. அப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர்கள் தமக்கும் இது போன்ற கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள். எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக அரச நிர்வாக முறையை மாற்றியமைக்கவில்லை. அங்கு கள்ளுத் தவறணைகள் ஏலம் போட்டுப் பணம் கொழுத்த முதலாளிகள் ஏலம் போட்டுத் தவறணைகளைப் பெற்றார்கள். பணம் ஈட்டினார்கள். இன்று 53 வருடங்களைக் கடந்தும் கிழக்கில் இக் கோரிக்கை கவனிக்கப்படாமலே உள்ளது. வரி வருமானம் மூலமாக அரச நிதிக் கருவூலத்தை நிரப்ப முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு ஏழைத் தொழிலாளர்களது வயிற்றில் அடிக்காமல் இருக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு 21 Dec 2025 7:50 pm

கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா!

வட மாகாணத்தில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் விசேட பாராட்டு… The post கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 7:45 pm

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் |Photo Album

நெல்லை: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் |பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா|அரசு விழா|ரோடு ஷோ.!

விகடன் 21 Dec 2025 7:40 pm

கோலப் போட்டி... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 21 Dec 2025 7:38 pm

கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எஸ்பி வேலுமணி! அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மெட்ரோ...

2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சமயம் 21 Dec 2025 7:38 pm

Parasakthi: 'பராசக்தி'ரிலீஸ் எப்போது? - அப்டேட் தந்த இயக்குநர்

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவர் இசையமைக்கும் 100-வது படம். பராசக்தி படத்தில்... சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பயணிக்கும் களத்தை மையமாக வைத்துக் கண்காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் தயார் செய்திருக்கிறார்கள். அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இங்கு வருகை தந்திருந்த இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு. இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான் Sudha Kongara நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும். 25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.

விகடன் 21 Dec 2025 7:37 pm

நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.. எந்தெந்த நாளில் தெரியுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டு வருகிறது.

சமயம் 21 Dec 2025 7:34 pm

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அப்போதுமுதல் அந்நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) என்பவா் மதநிந்தனையில் […]

அதிரடி 21 Dec 2025 7:30 pm

வெனிசுலாவிலிருந்து மற்றொரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியது

பென்டகனின் ஆதரவுடன் அமெரிக்க கடலோர காவல்படை, வெனிசுலா கடற்கரையில் மற்றொரு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். வெனிசுலாவிலிருந்து ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது இது இரண்டாவது முறையாகும் . அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களையும் அமெரிக்க கப்பல்கள் கைப்பற்றும் ஒரு முற்றுகைக்கு உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் டேங்கர் பறிமுதல் தொடர்பாக நிக்கோலஸ் மதுரோவின் கீழ் உள்ள வெனிசுலா அரசாங்கம் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. வெனிசுலா கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் ஒரு தனியார் கப்பலை அமெரிக்கா திருடி கடத்தியதாக வெனிசுலா கூறியது. இந்தச் செயல்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்று வெனிசுலா அரசாங்கம் கூறியதுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிப்பது உட்பட கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தது. இந்த பறிமுதல் சர்வதேச கடற்கொள்ளையரின் கடுமையான செயல் என்று வெனிசுலா விவரித்தது. மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக வெனிசுலாவுடன் ஒரு சாத்தியமான போரை டிரம்ப் நிராகரிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க இராணுவம் நிலத் தாக்குதல்களை நடத்தும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். பிரேசிலின் இடதுசாரி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா சனிக்கிழமை மெர்கோசூர் உச்சிமாநாட்டில், வெனிசுலாவில் ஒரு அமெரிக்க இராணுவ நடவடிக்கை அரைக்கோளத்திற்கு ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டக்கூடும், மேலும் உலகிற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்று எச்சரித்தார். லத்தீன் அமெரிக்காவில் ஒரு சாத்தியமான அமெரிக்க இராணுவத் தலையீடு அப்பகுதியில் பழைய காயங்களைத் திறக்கும், ஏனெனில் வாஷிங்டன் முன்பு பிரேசில் உட்பட பனிப்போரின் போது இப்பகுதியில் ஏராளமான ஆட்சிக் கவிழ்ப்புகளை ஆதரித்திருந்தது. மேலும், வெனிசுலாவுடனான அமெரிக்க மோதல் பிரேசில் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அண்டை நாடுகளுக்கு வெனிசுலா அகதிகளின் ஓட்டத்தை அதிகரிக்கக்கூடும். In a pre-dawn action early this morning on Dec. 20, the US Coast Guard with the support of the Department of War apprehended an oil tanker that was last docked in Venezuela. The United States will continue to pursue the illicit movement of sanctioned oil that is used to fund… pic.twitter.com/nSZ4mi6axc — Secretary Kristi Noem (@Sec_Noem) December 20, 2025

பதிவு 21 Dec 2025 7:28 pm

ஆளுநரின் புதிய வெளியீடு!

வடமாகாண ஆளுநர் தன்னை சுற்றி ஒரு ஆமாம் சாமி கும்பலை தயார்படுத்திக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வலுக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் ஆமாம் சாமி கும்பலை தவிர்த்து ஏனையோரை திட்டுவது தற்போது பிரசித்தமாகிவிட்டது. அவ்வகையில் தனது புதிய பேச்சில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார். 'கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன். நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?'என ஆளுநர் கேள்வி எழுப்பினார். மேலும், 'எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்'எனவும் அவர் வலியுறுத்தினார்.

பதிவு 21 Dec 2025 7:27 pm

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது காற்றின் மாசடைவு மட்டம் 150 முதல் 200 வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமற்ற நிலை மேலும் இது ஆரோக்கியமற்ற நிலையை குறிப்பதாகவும் அவர் கூறினார். எல்லை தாண்டிய வளிமாசு நகர்வு மற்றும் தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் தாக்கமே […]

அதிரடி 21 Dec 2025 7:15 pm

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து! இருவர் பலி: மேலும் சிலர் வைத்தியசாலையில்

அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ( 21) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றுமொரு விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் இதன்போது கல்கமுவ வைத்தியசாலை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் […]

அதிரடி 21 Dec 2025 7:13 pm

துப்பாகி சூடு:இரகசியமாக வைத்தியசாலையில்

திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 19 ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்திருந்த போதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதானது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் போலீசார் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் காயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பிலே எது விது கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் ரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் போலீசார் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்திருக்கின்ற நிலையிலே பல கேள்வி வலுத்திருக்கிறது. குறித்த இளைஞரை எந்த அடிப்படையில், எந்த சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்ய போலீசார் சென்றார்கள்? ஏன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? அதுவும் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளும் எழும் நிலையில் இந்த விடையம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மனிதர் உரிமை பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில் நீதிமன்ற அனுமதியோ அல்லது கட்டளையோ இல்லாமல் ஒரு நபரை எந்த அடிப்படையில் கைது செய்யச் சென்றார்கள்? அவ்வாறு செல்லுகிற போது இயங்கு நிலையில் துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார்கள்? இவ்வாறு இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரின் உடலை பாய்ந்தது? ஏன் இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை? என்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இதன் பின்னணியில் இருப்பதாகக் கருதி நாளைய தினம் மனித உரிமை ஆணையகத்திலே முறைப்பாடு ஒன்றை கையளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலே தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்

பதிவு 21 Dec 2025 7:08 pm

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசித்தது இதுதானா.. மு.க. ஸ்டாலின் கூறியது என்ன?

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் காணொலியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

சமயம் 21 Dec 2025 7:05 pm

கிளிநொச்சியில் சந்திரகுமார், சிவஞானம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

தமிழரசு கட்சியின் தலைவர் சி.விகே. சிவஞானம் மற்றும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துளள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன், கட்சியின் செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்ரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பதிவு 21 Dec 2025 6:59 pm

வெருகில் பகுதியில் வெள்ளநீர் 3 வீடுகளுக்கு புகுந்தது

திருகோணமலை - வெருகல் பகுதியில் இன்று (21) அதிகாலை வெள்ளநீர் உட்புகுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. அண்மையில் மலைநாட்டில் பதிவாகிய அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக கடந்த வியாழக்கிழமை (18) மாலை உயர்வடையத் தொடங்கிய மன்னப்பிட்டியின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4.99 மீற்றர் வரை உயர்வடைந்து பின்னர் குறைவடையத் தொடங்கியது இதன்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்ட குறித்த நீரானது இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (21) வெருகல், கங்குவேலி படுகாட்டுப் பகுதியில் பரவி வருகின்றது. இதனால் வெருகல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை கிராமத்தில் 3 வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் பலருடைய வளவுகளுக்குள்ளும் வெள்ளநீர் பரவியுள்ளது. இதன் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கங்குவேலி படுகாடு மற்றும் கருக்குவயல்பகுதியில் வரம்புகளை மூடி வெள்ளநீர் பரவி வருகின்றது. எனினும் ஊருக்குள் வெள்ளநீர் உட்புகுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மன்னம்பிட்டியில் நீர்மட்டம் உயர்வரைந்து பின்னர் தொடர்ச்சியாக குறைவடைந்து வந்ததன் காரணமாக பாரிய வெள்ள ஆபத்து இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பதிவு 21 Dec 2025 6:48 pm

இளம் மருத்துவ ஆராய்ச்சியில் பாசல் பல்கலை சாதனை

சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலை மருத்துவமனை, இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கான தேசிய அளவிலான மானியங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சுவிஸ் மருத்துவ அறிவியல் அகாடமி (SAMW) மற்றும் Bangerter-Rhyner அறக்கட்டளை இணைந்து வழங்கும் Young Talents in Clinical Research மானியங்களில், இந்த ஆண்டு வழங்கப்பட்ட 15 மானியங்களில் 8 மானியங்களை பாசல் பல்கலை மருத்துவமனை பெற்றுள்ளது. இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன. […]

அதிரடி 21 Dec 2025 6:30 pm

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடந்தது என்ன? ஞாயிற்றுக்கிழமை… The post தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 6:01 pm

Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதியம்; வெளியான தகவல்கள்

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி உள்ளிட்ட பல குழப்பங்கள் அங்கு எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான சதாத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர். Lionel Messi கைதுக்குப் பிறகான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த நிகழ்வின் பல விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இந்திய வருகைக்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சதாத்ரு தத்தா கூறியிருக்கிறார். இதில் 11 கோடி ரூபாயை வரியாக இந்திய அரசுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். இதற்கான 30 சதவிகிதப் பணத்தை ஸ்பான்சர்களிடமிருந்து அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தை டிக்கெட் விற்பனை மூலமாகப் பெற்றிருக்கிறார்கள். மெஸ்ஸியைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியைச் சுற்றி அதிகமானோர் கூடிவிட்டதால், கேலரியிலிருந்து அவரைப் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து ஸ்டேடியத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி விசாரணை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பாளர் சதாத்ரு தத்தா கூறுகையில், முதலில், மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்வுக்கு வெறும் 150 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வாக்கு மிகுந்த ஒருவர் ஸ்டேடியத்திற்கு வந்து ஆதிக்கம் செலுத்தியப் பிறகு மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது. அந்த செல்வாக்கு மிகுந்த நபரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமயம் ரசிகர்கள் தன்னை தொடுவதையும் மெஸ்ஸி விரும்பவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 21 Dec 2025 5:56 pm

அதிர்ச்சிச் செய்தி: திருக்கோவிலில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! காவல்துறையின் அத்துமீறலா?

அம்பாறை, திருக்கோவில் – விநாயகபுரம் பகுதியில் 26 வயதுடைய ஜெயசுதாசன் தனுஷன் என்ற இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்… The post அதிர்ச்சிச் செய்தி: திருக்கோவிலில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! காவல்துறையின் அத்துமீறலா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 5:54 pm

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு; 61 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன?

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல்/தொழில்நுப்ட பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 61 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சமயம் 21 Dec 2025 5:51 pm

கோவை பூ மார்க்கெட்டில் சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு!

கோவை பூ மார்க்கெட்டில் சாலை ஓரம் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சமயம் 21 Dec 2025 5:38 pm

2 வருஷமா ரூமை விட்டு வராத இளைஞர் –சுத்தம் செய்ய சென்ற பெண் ஷாக்!

சீனாவில் சில ஹோட்டல்கள் ஆன்லைன் கேம் விளையாடுவோருக்காகவே பிரத்யேகமான சேவைகளை வழங்கி வருகின்றன. இ-ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் ஹோட்டல் அறைகளை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம்களை விளையாடலாம். அதன்படி அறையை வாடிக்கையாளர் ஒருவர் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம் விளையாடி உள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகே ஹோட்டல் அறையை காலி செய்துள்ளார். கழிவறை, கேமிங் அறை, ஹால் என அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மீட்டர் உயரத்துக்கு சாப்பிட்டு போட்ட உணவு பொட்டலங்கள், […]

அதிரடி 21 Dec 2025 5:30 pm

திருப்பூர் குப்பை கழிவு பிரச்சினைக்கு திமுக தான் காரணம்! தவெக அருண்ராஜ் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குப்பை கழிவு பிரச்சினைக்கு திமுக தான் காரணம் என தவெக அருண்ராஜ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

சமயம் 21 Dec 2025 5:15 pm

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய: மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் இரணைமடு குளத்தின் நிலைமைகள் குறித்து ஆய்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் […]

அதிரடி 21 Dec 2025 5:09 pm

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் –கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை.

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் […]

அதிரடி 21 Dec 2025 4:58 pm

தைவானில் கத்திக்குத்து தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு

தைவான் தலைநகா் தைபேயில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து மற்றும் புகை குண்டு தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 11 போ் காயமடைந்தனா். இது குறித்து தைவான் தேசிய காவல்துறை இயக்குநா் ஜாங் ஜங்-சின் கூறியதாவது: சாங் வென் (27) என்ற இளைஞா் கத்திக்குத்து உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டாா். முதலில் சாலைகளில் நின்றிருந்த காா்கள், மோட்டாா்சைக்கிள்களை தீவைத்துக் கொளுத்திய அவா், பின்னா் தைபேவின் முக்கிய மெட்ரோ நிலையத்தின் வெளியேறும் வாயில்களில் புகை குண்டுகளை வீசி, அங்கிருந்த ஒருவரை கத்தியால் […]

அதிரடி 21 Dec 2025 4:30 pm

சாரி விஜய் சேதுபதி, நீங்க செஞ்சத பார்த்து அந்த வார்த்தைய சொல்லாம இருக்க முடியல: பிக் பாஸ் பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் இருப்பதை பார்த்தவர்களோ இது அநியாயம் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த நாலு வார்த்தையை சொல்லாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள்.

சமயம் 21 Dec 2025 4:06 pm

வந்தே பாரத் ரயில் டிரைவர்கள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான சுவாரசிய தகவல்

இந்தியாவில் இயங்கும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் மாத சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது சம்பளம் எவ்வளவு என்று விரிவாக காண்போம்.

சமயம் 21 Dec 2025 3:52 pm

கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா? - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அறப்போர் இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தியிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் 'தமிழ்நாடு அரசே திமுக அரசே எங்கள் ஓட்டு இனிக்குதா? எங்களின் நலன்கள் கசக்குதா?' எனக் கோஷமிட்ட மக்கள் மேடையேறி தங்களின் குடியிருப்புகளில் நிலவும் பிரச்னைகளை அடுக்கினர். எழில் நகர் மற்றும் கண்ணகி நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேசுகையில், எங்கள் குடியிருப்புகளில் 5 நாட்களாக கரண்ட் இல்லை. தண்ணீர் தேங்கியிருப்பதால் எலக்ட்ரிசன் கூட வயரில் கை வைக்க பயப்படுகிறார்கள். மழை பெய்தாலே சுவர் அப்படியே ஒழுக ஆரம்பித்துவிடும். நாங்களே செலவு செய்து கொத்தி பூசி என்னவெல்லாமோ செய்துவிட்டோம். ஆனாலும் மழையால் சுவர் அப்படியே ஊறிப் போய்விடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வதே பிரச்னையோடுதான் வாழ்கிறோம். எங்களால் அருகிலிருக்கும் கடைக்குக்கூட செல்ல முடியவில்லை. எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை. சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள். எங்களின் பிள்ளைகளும் அப்படி ஆகிவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. அங்கே என்னென்னவோ நடக்கின்றன. வெளியே இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. ஒரு நாளைக்கு 2 பேருந்துகள்தான் வருகின்றன. அதுவும் நேரத்துக்கு வருவதில்லை. நாங்கள் ஆர்.ஏ. புரத்தில் வசித்து வந்தோம். எங்களை அப்படியே குப்பை மாதிரி எழில் நகரில் தூக்கி வீசிவிட்டார்கள். தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித் கண்ணகி நகரில் 23,000 குடியிருப்புகள் இருக்கின்றன. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லவே இல்லை . கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இருக்கிறது. அந்தப் பக்கம் இருக்கும் ஐ.டி கம்பெனிகளுக்கு கக்கூஸ் கழுவத்தான் எங்களை அங்கே குடியமர்த்தியிருக்கிறார்கள். கண்ணகி நகரில் வேலை வாய்ப்பு முகாம் போடுகிறார்கள். என்ன வேலை வாய்ப்பு எனப் பார்த்தால் கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளி கக்கூஸ் கழுவும் வேலைக்குத்தான் ஆள் எடுக்கிறார்கள். ஏன் எங்கள் பகுதிகளில் வேறு வேலை செய்ய ஆட்களே இல்லையா? எழில் நகர், கண்ணகி நகர் மக்கள் ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் நாலு மாடி ஏறி வருகிறார்கள். அதன்பிறகு யாருமே எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்றனர். அவமானங்கள், போராட்டங்கள், சவால்கள்... அத்தனையும் தாண்டிய வெற்றி! - தேசமே கொண்டாடும், `கண்ணகி நகர்’ சுனாமி நகரைச் சேர்ந்த பெண்கள் பேசுகையில், சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்துதான் சுனாமி நகரில் வைத்தார்கள். வேலைக்குச் செல்வது படிப்பது சாப்பிடுவது என எல்லாமே எங்களுக்குப் பிரச்னைதான். எங்களுக்கு 1% நம்பிக்கை கூட இல்லை. பிள்ளைகளுக்குப் படிக்க பள்ளி இல்லை. பள்ளி இருந்தால் டீச்சர் இல்லை. டீச்சர் இருந்தால் சத்துணவு இல்லை. அரிசி, முட்டை எல்லாம் யாருக்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. பிள்ளைகளை இங்கிருந்து சாந்தோமுக்கு பள்ளிக்கு அனுப்பும் சூழலில் இருக்கிறோம். 65 பேருந்துகள் ஓட வேண்டிய இடத்தில் 30 பேருந்துகள் கூட ஓடவில்லை என்றனர் வேதனையுடன். சுனாமி நகர் பெண்கள் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசுகையில், சென்னைக்குள் இருக்கும் குடியிருப்புகளில் 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் கட்டிக்கொடுத்த கட்டடங்கள் 10 ஆண்டுகள் கூட உறுதியோடு நிற்பதில்லை. கே.பி. பார்க்கில் நான்கே ஆண்டுகளில் சுவர் உடைந்து நொறுங்குகிறது. மக்களின் அடிப்படை வசதிகளே கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், இந்த அரசு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் இருக்கிறார்கள். நாங்கள் முன்பு கூட மனநிம்மதியுடன் இருந்தோம் என மக்கள் குமுறுகிறார்கள் என்றார். ``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

விகடன் 21 Dec 2025 3:45 pm

⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட… The post ⚖️ தையிட்டி போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 3:31 pm

வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் […]

அதிரடி 21 Dec 2025 3:30 pm

️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி!

️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி! “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம்… The post ️ காங்கேசன்துறை கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 3:16 pm

பர்த்டே பேபி தமன்னாவின் சொத்துமதிப்பு ரூ. 120 கோடிப்பு: அவரிடம் என்னென்ன கார் இருக்கு தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமன்னாவின் சொத்துமதிப்பை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நல்ல நாளில் தமன்னாவுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

சமயம் 21 Dec 2025 3:08 pm

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - கைதான வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவருக்கும் பிணை

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர். இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை கைது செய்திருந்தனர் கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

பதிவு 21 Dec 2025 2:47 pm

IND vs PAK Final: ‘347 ரன் குவித்த பாகிஸ்தான்’.. சொதப்பிய குட்டி ஹர்திக் பாண்டியா: மின்காஸ் 172 ரன் சேர்ப்பு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி, அபாரமாக பேட்டிங் செய்தது. குறிப்பாக, ஓபனர் சமீர் மின்காஸ் தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 172 ரன்களை குவித்தார்.

சமயம் 21 Dec 2025 2:38 pm

மகளின் 16வது பிறந்தநாளுக்கு செக்ஸ் பொம்மை கொடுக்க நினைத்த டிவி சீரியல் நடிகை: திட்டித் தீர்த்த நெட்டிசன்ஸ்

மகளுக்கு செக்ஸ் பொம்மையை பிறந்தநாள் பரிசாக அளிப்பது பற்றி பேசிய தன்னை சமூக வலைதளங்களில் படுமோசமாக விளாசியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் பிரபல டிவி சீரியல் நடிகையான கௌதமி கபூர்.

சமயம் 21 Dec 2025 2:07 pm

AUS vs ENG 3rd Test: ‘ஆஸி மெகா வெற்றி’.. புது WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்து நிலைமை ரொம்ப மோசம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, புள்ளிப் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

சமயம் 21 Dec 2025 2:04 pm

Rashmika: அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார் - ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்

இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்'. ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. The Girlfriend சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது. அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'? அந்த நிகழ்ச்சியில் அவர், இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது. அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன். Rahul Ravindran உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன். அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார். நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார். The Girlfriend Exclusive: “ராஷ்மிகாவுக்கு எந்தப் படம் ஹிட் அடிக்கும்னு கணிக்கத் தெரியும்!”

விகடன் 21 Dec 2025 2:01 pm

BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்

விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது.  ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை  விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது.  BB Tamil 9 Day 76 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 76 சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்? பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது.  BB Tamil 9 Day 76 ‘ சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’ ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம்.  சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள்.  இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?! தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள்.  BB Tamil 9 Day 76 சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா? ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.  மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா. ஆனால்   இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது.  “நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே  மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா?  அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? BB Tamil 9 Day 76 ‘ யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா? இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது.  ‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார். டான்ஸ் டாஸ்க்  முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது.  அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா.  BB Tamil 9 Day 76 சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா? ‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார்.  கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார்.  அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து  நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும்.   BB Tamil 9 Day 76 விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா? போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா.  எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?!  சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது.  அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை.  பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள்.  BB Tamil 9 Day 76 சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை.  அடுத்தது,  ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத்.  ‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே.  ‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது.  பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார்.  BB Tamil 9 Day 76 இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!) விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம். 

விகடன் 21 Dec 2025 1:55 pm

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன. மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர். ``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும் - எச்சரித்த உத்தவ் தாக்கரே மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. உத்தவ் தாக்ரே பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார். மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?

விகடன் 21 Dec 2025 1:51 pm

சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி!

சென்னையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 21 Dec 2025 1:45 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு  17 ஆண்டுகள் சிறை!

அரசு கருவூலப் (Toshakhana) பொருட்களை முறைகேடு செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது… The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 1:35 pm

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது, ஆன்லைன் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்க செய்ய வேண்டிய 5 டிப்ஸ்கள் இதோ... 1. நீங்கள் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான OTP-ஐ யாரிடமும் பகிராதீர்கள். ஆதார் அட்டை Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to 2. ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் கார்டைப் பயன்படுத்துங்கள். 3. ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வையுங்கள். ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், உஷார். 4. ஆன்லைன் ஆப்களில் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்துவிடுங்கள். மேலே சொன்ன காரணம்தான் இதற்கும். 5. ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது. Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

விகடன் 21 Dec 2025 1:33 pm

திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும்?

திருச்சி கோட்டை ரயில் நிலையம் மேம்பாலம் எப்போது நிறைவடையும்? என்றும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

சமயம் 21 Dec 2025 1:23 pm

தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்… The post தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 1:20 pm

தையிட்டி விகாரையில் புதிய புத்தர் சிலை: பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! முறுக்கிக்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்கள்.

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் தனியாரின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய புத்தர்… The post தையிட்டி விகாரையில் புதிய புத்தர் சிலை: பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! முறுக்கிக்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்கள். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 1:07 pm

நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்: கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு!

நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் கோவையில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சமயம் 21 Dec 2025 1:03 pm

️ யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம்: விளையாட்டரங்கு பணிகள் துரிதமடைய வாய்ப்பு –தடையுத்தரவை நீடிக்க நீதிமன்றம் மறுப்பு!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் 370 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கு கட்டுமானப் பணிகளுக்கான இடைக்காலத் தடையுத்தரவை… The post ️ யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம்: விளையாட்டரங்கு பணிகள் துரிதமடைய வாய்ப்பு – தடையுத்தரவை நீடிக்க நீதிமன்றம் மறுப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 12:57 pm

டிசம்பர் 26 முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு… இந்திய ரயில்வே அறிவிப்பு!

இந்திய ரயில்வே இன்னும் 5 நாட்களில் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சமயம் 21 Dec 2025 12:55 pm

பாரு அம்மா வருவார், பெரிய சம்பவம் பண்ணுவார்னு நம்பும் பிக் பாஸ் பார்வையாளர்கள்: அப்புறம் விஜய் சேதுபதி...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் அப்போ இன்று முழுவதும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ஓட்டப் போகிறீர்கள். நல்லா இருக்கு பிக் பாஸ் உங்கள் நியாயம் என்கிறார்கள்.

சமயம் 21 Dec 2025 12:45 pm

  உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக   நடவடிக்கை.

மன்னார் மூர்வீதியில் உள்ள உணவகம் ஒன்றில், கொத்து தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரொட்டிகள் யூரியா (Urea) உரம் பொதியிடும் பைகளில்… The post உரப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டி! மன்னாரில் உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Dec 2025 12:45 pm

கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?

விகடன் 21 Dec 2025 12:32 pm

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று முன்தினம் (டிச. 19) இரவு ரஷிய ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக, ஒடெசா நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ரஷிய ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ராணுவத்தின் போக்குவரத்து […]

அதிரடி 21 Dec 2025 12:30 pm

பரீட்சையில் குறைந்த புள்ளி ; ஆசிரியரான பல்கலை மாணவன் O/L மாணவிக்கு செய்த மோசமான செயல்

கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவிக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். பல்கலை மாணவன் அதில் அந்த மாணவி எதிர்பார்த்ததை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். […]

அதிரடி 21 Dec 2025 12:14 pm

காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் , வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் , சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதிரடி 21 Dec 2025 12:08 pm