பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் ; ட்ரம்ப் எச்சரிக்கை
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நியூயோர்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரான் உடனான உறவுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த முறை பயன்படுத்தியதை விடவும் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை தற்போது […]
Punjab Kings (PBKS) and Sunrisers Hyderabad (SRH) are set to clash in an exciting match of the Indian Premier League (IPL) 2026. The teams have comple...
ஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழி வாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம் தண்டிப்போம். குற்றமிழைத்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது. இப்போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்திற்கும் இழப்பீடும், தியாகிகளுக்கு ரத்தப்பணமும், மாற்றுத் திறனாளிகளான முன்னாள் படைவீரர்களுக்கு மறுவாழ்வு நஷ்டஈட்டையும் நாங்கள் நிச்சயமாகக் கோருவோம். ஹோர்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்திற்கு நாங்கள் […]
வாகனங்களுக்கான QR முறைமை குறித்து வெளியான தகவல்
பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் இருப்பினும், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
நிலக்கரி விவகாரம்; சி.ஐ.டியில் முறைப்பாடு
2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CSK vs DC Match Preview: Chennai Aims to Turn Things Around
Chennai Super Kings (CSK) will host Delhi Capitals (DC) at MA Chidambaram Stadium on Saturday, April 12, at 7:30 PM IST. This match marks a crucial po...
வெடுக்குநாறி விவகாரம் –இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைய கூடாது
வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிக கவனம் செலுத்தி தீர்வை கொடுப்பது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரபுக்கள் பௌத்த சமயத்துக்குரியது என்றும் அந்நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்து நிலையில் தமிழ் மக்களிடையே […]
11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்
வாஷிங்டன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர். ஆய்வுகளை முடித்து கொண்டு ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் […]
லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்: ஈரான் உறுதி
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள், லெபனான் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை […]
AMMK Alleges Neglect in NDA Campaign Activities
In Chennai, the Amma Makkal Munnetra Kazhagam (AMMK) said on Friday that it has been supporting candidates of the National
Fruit Prices Rise in Chennai Markets
In Chennai, the prices of fruits like oranges and apples have increased a lot in recent weeks. Traders say this
Leaders Campaign in Heat Ahead of Elections
Despite the very high temperatures in the city, political leaders and candidates continued their election campaigns on Friday. With the
அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பலி
தெஹ்ரான், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்களுக்கு நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின. இரு தரப்புக்கும் நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் ஈரானின் முக்கிய உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகள் […]
மட்டக்குளியில் பேருந்து மோதி பாடசாலை மாணவி பலி
மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி […]
Karnataka SSLC Third Language Policy Under Scrutiny
Karnataka Governor Thaawarchand Gehlot has asked for a detailed review of concerns regarding the state government’s recent decision to assign only gra...
கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மோசமான செயல்
மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 50 வயதுடைய தொழிலதிபர் இவ்வாறான செயலை செய்துள்ளார். நீண்டகாலமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஹோரண நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் கே.பி.ஆர். லக்மினி விதானகமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார். பாலியல் சீண்டல் […]
Political Leaders Face Heat in City as Election Heats Up
Despite the extreme heat in the city, political leaders and candidates went out into neighborhoods on Friday to gather support and vote for Assembly e...
NDB வங்கி மோசடி; வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக உள்ளதா!
தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) 13.2 பில்லியன் ரூபா இடம்பெற்ற உள்ளக நிதி மோசடி தொடர்பில் தாம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி தேசிய அபிவிருத்தி வங்கி போதிய மூலதனம் மற்றும் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், அவை குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் கணக்குகளுக்கோ வைப்புக்களுக்கோ […]
மதச் சடங்கு பெயரில் குழந்தைகளுக்கு வன்முறை ; இணையத்தில் வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி
இந்தியாவில் கடவுள் நம்பிக்கை மற்றும் மதச்சடங்குகள் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளி ஒன்று காண்போரின் மனதை உலுக்கியுள்ளது. அந்த காணொளியில், பூசாரி போன்ற ஒருவர் கொதிக்கும் பாலை இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீது ஊற்றும் காட்சி பதிவாகியுள்ளது. பாலூட்டும் பருவத்தில் இருக்கும் அந்தப் பிஞ்சு குழந்தைகள், கொதிக்கும் பாலின் சூடு தாங்க முடியாமல் கதறி அழுகின்றன. இருப்பினும், கொஞ்சமும் இரக்கமின்றி […]
Assam Polling Booth Repoll Ordered Amid Clashes
The Election Commission of India (ECI) has ordered a repoll in booth number 239 at Babyland High English School in Karimganj (North) constituency, Ass...
West Indies Championship: Hurricanes vs Red Force
The Leeward Islands Hurricanes will face the Trinidad and Tobago Red Force in an upcoming cricket series starting in Antigua. The 2026 West Indies Cha...
எல் நினோ உருவானால் செப்டெம்பர் வரை வறட்சி: வளிமண்டவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Nio) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை தீவிரமடையும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் நீண்ட வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள எச்சரிக்கை இவரது கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் […]
எரிவாயு விலை அதிகரிப்பால் பாதிக்கப்படப்போகும் 1.6 மில்லியன் மாணவர்கள்!
சமயல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் போஷணை உணவு வேலைத்திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பகல் உணவு வழங்கும் 7000 பாடசாலைகள் பாதிப்பு 1.6 மில்லியன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது சுமார் 7000 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு […]
இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். தேசிய ரீதியாகப் பார்க்கையில், பெண்களில் சராசரியாக 9.4 சதவீதம் பேர் இவ்வாறு தங்களின் துணைகளை இழந்து உள்ளனர். ஆனால், மனைவியை இழந்த ஆண்களின் விகிதம் வெறும் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் துணையை இழந்தவர்கள் […]
Superstar Rajinikanth on Jana Nayagan : விஜய் படத்திற்கு நேர்ந்த கொடுமை –கொதித்தெழுந்த ரஜினிகாந்த்!
தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?
Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். காதுகளைக் குடைவதால், உள்ளே உள்ள சருமம் பாதிக்கப்படலாம். அப்படித்தான் உங்களுக்கு செவிப்பறையில் ஓட்டை விழுந்துள்ளது. இதை 'ட்ரமாட்டிக் பெர்ஃபோரேஷன்' (Traumatic Perforation) என்று சொல்வோம். அதாவது செவிப்பறையில் ஏற்பட்ட கிழிசல். இந்தப் பிரச்னையானது 99 சதவிகிதம், தானாகவே சரியாகிவிடக்கூடியது. செவிப்பறையில் கிழிசல் ஏற்படும்போது, அங்கே ஒரு கட்டி போன்று உருவாகும். அந்தக் கட்டிதான், செவிப்பறையில் ஏற்பட்ட பாதிப்பு மெள்ள மெள்ள ஆறுவதற்கு உதவும். எனவே, இதில் தண்ணீர் படக்கூடாது. நீங்களாக சுய மருத்துவம் என்ற பெயரில் காதுகளுக்கான டிராப்ஸ் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. முதல் வேலையாக நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுப்பார். ஆன்டிபயாட்டிக் மருந்துகள், சளி பிடிக்காமலிருப்பதற்கான மருந்துகள், சில வைட்டமின்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார். 'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்துநாள்களில் ஒருமுறை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். கேட்கல... சத்தமா... திடீர் காது கேளாமை... கேட்கும் திறன் திரும்புமா? #SuddenHearingLoss 'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்து நாள்களில், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். செவிப்பறையானது முற்றிலுமாக ஆறிவிட்டதா என்பதை உறுதிசெய்யும்வரை இந்தச் சோதனை தேவைப்படும். ஏற்கெனவே சொன்னது போல, 99 சதவிகிதம் இது சரியாகிவிடும். ஒருவேளை அப்படிச் சரியாகாத பட்சத்தில், செவிப்பறையைப் பழுதுபார்க்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதின் பகுதியை வெட்ட வேண்டிய அவசியமின்றி, எண்டோஸ்கோப்பி முறையிலேயே இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். அரிதாக சிலருக்கு காதின் பின்பக்கத்தில் வெட்டி, இந்தப் பழுதுபார்க்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. ஒருவேளை அதில் சிரமங்களை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆடியோகிராம் பரிசோதனையும் செய்து, கேட்கும் திறனில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவர் செக் செய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
CSK vs DC: ‘சிஎஸ்கேவால் வெற்றியைப் பெற முடியுமா?’.. நேருக்கு நேர் வரலாறு! செம்ம பேட்டிங் லைன் அப்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பு எப்படி? இரு அணிகளின் நேருக்கு நேர் வரலாறு என்ன என்பது குறித்து பார்க்கலாம். சிஎஸ்கேவின் பேட்டிங் லைன் அப் சிறப்பாக இருக்கிறது.
கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் : தென்னக அயோத்தி... ராமாயண ஓவியங்கள்... வேண்டிய வரம் தரும் சந்நிதி!
அயோத்தி ராமபிரான் அவதரித்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம். அந்தத் தலத்துக்கு இணையான புண்ணியத்தைத் தரும் தலம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு சென்று ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தால் அயோத்தி சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அதனாலேயே அதற்குத் தென்னக அயோத்தி என்றே பெயர். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம். கும்பகோணத்தின் மத்தியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கும்பகோணம் மாநகரின் மத்தியில் பெரிய கடைவீதியின் தென்கோடியில் ஐந்து நிலை கோபுரமும் பரந்து விரிந்த பிராகாரமும் கொண்ட கோயிலாக இது விளங்கிவருகிறது. இங்கே ராமபிரான் பூலோகச் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேக கோலத்திலேயே அருள்கிறார். எனவே இவரை வழிபட்டால் பதவி யோகம், சொல்வாக்கு, அரசபோக வாழ்வு என அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள். கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் பூலோக வைகுந்தம் என்றும் இந்தத் தலம் போற்றப்படுவதால் இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை நியாயமான செல்வங்களும் நீதியும் கிடைத்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை வலம் வந்து வேலை, பதவி, சாதகமான தீர்ப்பு, மங்கல காரியங்கள் எனப் பலவும் அடைகிறார்கள் பக்தர்கள். கி.பி 1614-ம் ஆண்டு இந்த ஆலயம் தஞ்சை ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. ராமபக்தரான இவர் தினமும் ராம சரிதத்தைக் கேட்டும் படித்தும் இன்புற்று வாழ்ந்தார். பண்டிதர்கள் ராம கதையைப் படிக்கும்போதும் சொல்லும்போதும் மெய்சிலிர்த்து, அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வாராம். இதனால் `அனுவிரத ராம கதாம்ருத சேவகன்' என்ற சிறப்புப் பெயரே உண்டானதாம். இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக கருவறையில், ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தர, பரதன் குடைபிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லக்குவணன் ஸ்ரீராமரின் வில்லைத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். அனுமனோ வேறெங்கும் காண இயலாதவகையில் ஆனந்த நிலையில் அருளுகிறார். ஸ்ரீராமரையும் சீதாவையும் தரிசித்தபடி கருவறை வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் அனுமன். இவரின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் ராமநாமத்தை அவரது சந்நிதியில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்சீவியாக அனுமன் அருள் பாலிக்கிறார். இங்கே நின்று உள்ளம் உருக ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், இகபர சுகங்களை அடைவதோடு அனுமனின் பாதுகாப்பிலும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சிற்ப வடிவில் கரம் கூப்பி வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறார் கோவிந்த தீட்சிதர். இவர்தான் இந்த ஆலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட மகான். காசிக்கு நிகரான புனிதமும் அயோத்திக்கு நிகரான பெருமையும் கொண்ட இந்தக் கோயில் சிற்ப அழகிலும் தன்னிகரற்று விளங்கிவருகிறது. அதில் மிகவும் சிறப்பானவை மகாமண்டபச் சிற்பங்கள் மற்றும் பிராகார ஓவியங்கள். முக்கியமாகப் பிராகாரத்தில் உள்ள ராமாயணக் காட்சிகளைச் சித்திர வடிவில் தரிசித்தபடி ஒருமுறை வலம் வந்தால் முழுமையாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த திருப்தியும் பலனும் கிடைத்துவிடும். முன் மண்டபத்தில் உள்ள 62 தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. அதில் பெருமாளின் பல்வேறு அவதார வடிவங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் 14 கருடசேவை விழாவில் இந்த ராமசாமியும் கருடன் மீதேறி அருளுவார். அவருடன் கும்பகோணம் சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜ கோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் ஸ்ரீபட்டாபிராமர், மல்லுக தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி உள்ளிட்ட 11 பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். இங்கு ராம நவமி உற்சவம் வெகு பிரசித்தம். கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் இங்கே கோயில்கொண்டுள்ள பட்டாபிஷேக ராமரை தரிசித்தால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது உறுதி. எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்று ராமசாமி கோயிலை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.
Career Guidance: +2-க்கு பிறகு என்ன படிப்பது? குழப்பத்துக்கு தீர்வு தரும் வழிகாட்டல் நிகழ்ச்சி!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 +2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அடுத்து என்ன படிப்பது? எங்கே படிப்பது? என்ற பதற்றமும் பரிதவிப்பும் மாணவர்களையும் பெற்றோரையும் துரத்துகிறது. தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. தவிர, மத்திய அரசு நடத்தும் IIT, NIT, IIITs போன்ற உயராய்வு மையங்களில் ஏராளமான இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தத்துறையில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது?, எந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம்? என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தக் காலக்கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரரெல்லாம், இந்த காலேஜ் போ, அந்தப்படிப்பைப் படி என்று அட்வைஸ் செய்வார்கள். வெளியூரிலிருக்கிற உறவுக்காரர், அவரது அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரையை வழங்குவார். உடன் படித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என எல்லோரும் ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லிக் குழப்புவார்கள். போதாக்குறைக்கு பிளஸ்டூ மாணவர்களின் பெற்றோருக்கு தினமும் 10 அழைப்பாவது அலைபேசியில் வந்துவிடுகிறது, எங்கள் கல்லூரிக்கு வாருங்கள் என்று. இன்னும் இரண்டாம் நிலை நகரங்களில் போலி கல்வியாளர்கள் தலையெடுத்து அட்வைஸ் செய்து ஒன்றுக்கும் ஆகாத கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்டு போய் சிக்க வைத்து விடுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த க்யூஆர் கோடை கிளிக் செய்யவும் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில்தான் பெற்றோரும் மாணவர்களும் அடுத்த கட்டத்துக்கான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டும். இந்தச்சூழலில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் உங்களுக்குப் பொருத்தமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய உதவும் வகையில், கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. கல்வி விகடன் ஈவெண்ட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பெற்றோரும் மாணவர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்! இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதன்மையான கல்வியாளர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், 'உலகளாவிய கல்வி வாய்ப்புகள்' குறித்து உரையாட உள்ளார். தா.நெடுஞ்செழியன், கல்வி தொடர்பாக ஏராளமான தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதள நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்றவர். அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து 5 நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களை ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய அரசின் பல உயராய்வு மையங்களுக்கு அனுப்பியவர். நிகழ்வில் மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்க உள்ளார். கல்வியாளர் நெடுஞ்செழியன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கிவரும் கல்வியாளர் ரமேஷ் பிரபா, 'பொருத்தமான படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் வழிகாட்டுதல் வழங்கவிருக்கிறார். ஊடகத் துறையில் மூத்த ஆளுமையான ரமேஷ் பிரபா, சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிரபல இதழ்களில் பல தொடர்களையும், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். கலை, அறிவியல், பொறியியல், வணிகவியல், மருத்துவம் உள்பட அனைத்துத் துறைகள் குறித்தும் நிபுணத்துவம் கொண்ட ரமேஷ் பிரபாவிடம் மாணவர்கள் இந்த நிகழ்வில் தெளிவு பெறலாம். கல்வியாளர் ரமேஷ் பிரபா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 கவனமே பெறாத, சிறப்பான எதிர்காலம்மிக்க பல படிப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் தமிழக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பெற்றுத்தந்து வரும் இளம் கல்வியாளர் கலைமணி, இந்த நிகழ்வில் 'பொறியியலில் எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?' என்ற தலைப்பில் கருத்துப் பகிர்வு செய்யவிருக்கிறார். மரைன் இன்ஜினியரிங் முடித்து Merchant Navy Officer-ஆகப் பணியாற்றிய கலைமணி, கடந்த 6 ஆண்டுகளாக முழுநேர கல்வி வழிகாட்டுநராக பணியாற்றுகிறார். அதிகப் பொருள்செலவின்றி படிக்க வாய்ப்புள்ள சிறந்த எதிர்காலமுள்ள கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வருபவர். பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய கலைமணியோடு இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் உரையாடலாம். கல்வியாளர் கலைமணி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்க https://forms.gle/mkX53JaTLuszofAt8 எப்போதும் எளிய குடும்பத்து மாணவர்களுக்கு IIT, NIT போன்ற கல்வி நிறுவனங்கள் மீது ஏக்கப்பார்வை உண்டு. ஆனால் சற்று மெனக்கிட்டால் அந்தக் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவது எளிது. பொறியியலிலும் தொழில்நுட்பத்திலும் இளநிலை, முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி, ஆசிரியர் படிப்புகளைக்கூட இந்த நிறுவனங்களில் படிக்க முடியும். இந்த நிகழ்வில் பங்கேற்று அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வருகிறார், பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன். ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளித்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவராக உள்ள விக்னேஷ் முத்து விஜயன், ஏராளமான மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி IIT, NIT, IIIT போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர வழிகாட்டியவர். இந்த நிகழ்விலும் அதுகுறித்து விரிவாக உரையாற்ற இருக்கிறார். கல்வி விகடன் ஈவெண்ட் இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/mkX53JaTLuszofAt8 என்ற லிங்கை கிளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். அல்லது, 044 66802980 / 044 66802907 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு மிஸ்டு கால் செய்யலாம். அல்லது கீழேயிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைத் தரலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த க்யூஆர் கோடை கிளிக் செய்யவும் தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள் உங்களை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை வழங்கவுள்ளார்கள். இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்..!
“பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய்தான் இஸ்ரேல்..” என பாகிஸ்தான் விமர்சனம் –நெதன்யாகு பதிலடி
டெல் அவிவ், லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது. அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது. ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக […]
14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவா? அமேசான் விளக்கம்
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால் பல்வேறு துறைகளிலும் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களும் சமீப காலமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஐடி, இ-காமர்ஸ் என பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்கனவே எடுத்திருந்தது. இந்த நிலையில், மேலும் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இது […]
குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்ற நிலையில், தன் குழந்தையின் கண் முன்னாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மனைவியைத் தேடிச் சென்ற கணவர் தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் காந்தி. காந்தியின் மனைவி ராசாத்தி. தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் ராசாத்தி தன் கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு நரசிம்முலு என்னும் நபருடன் வாழ ஆந்திராவுக்குச் சென்றுவிட்டாராம். இந்த […]
வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் (ஐசிடி) தீா்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 3 முன்னாள் போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்பட 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தண்டனை விதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் தற்போது தலைமறைவாகவுள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ஏற்கெனவே […]
நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் ஜாமீனில் வியாழக்கிழமை (ஏப். 9) விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்தாண்டு (2025) செப்.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ஜென் ஸி இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அப்போதைய […]
பொலிஸ் வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு; குவிந்துள்ள விண்ணப்பங்கள்!
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் கடந்த 07-ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த மாதம் 18-ஆம் திகதி வரை, பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தின் டொபிகின் விளையாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 7,500 புதிய […]
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு
பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்த “தீய” நடவடிக்கையை முறியடிக்கப் பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டன. ரஷ்யாவின் இந்த உளவு முயற்சியை நேரடியாகச் சாடிய ஹீலி, “நாங்கள் […]
ஊர் திருவிழாவை நடத்துங்க: உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி
மதுரையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் அருண், இவருக்கும் செல்லூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர். அருண் ஆட்டோ டிரைவராக இருக்கிறார், பிரியா சிம்மக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன் அருண் விபத்தொன்றில் சிக்க கால் எலும்பு […]
‘கிளஸ்டர் பாம்’பொருத்தப்பட்ட நவீன ஏவுகணை சோதனை –அதிரடி காட்டும் வடகொரியா
பியாங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் நவீன போர்முறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஆயுதங்களை வரிசையாக சோதனை […]
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். அந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான (1997-2005) அவர் ஈரானின் […]
லெபனான் முழுவதும் 100 இடங்களில் தாக்குதல் ; டிரம்ப் விளக்கம்; ஆத்திரத்தில் ஈரான்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல் ஈரானுடன் அமைதி நிலவினாலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை ஒரு “தனிச் சண்டை” (Separate Skirmish) என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதனால், லெபனான் மீது இஸ்ரேல் […]
நான் கையூட்டுப் பெற்றேனா; சபையில் சாணக்கியனை விளாசிய அமைச்சர் சந்திரசேகர்!
தம்மீது நாடாளுமன்றில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கையூட்டு பெறுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமத்திரனுக்கு வக்காலத்து…. இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், முக்கியமாக நான் இந்த சாணக்கியன் எம்பிக்கு (MP) சொல்ல வேண்டும். இன்று வடக்கை எடுத்துக்கொண்டால், சாணக்கியன் […]
புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார். எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இடம்பெறும் மதுவரி குற்றங்கள் மற்றும் புகையிலை தொடர்பான […]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் தொடர்பாக இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என […]
போர்நிறுத்தமா அல்லது இஸ்ரேலின் அராஜகமா…அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வாயிலாகப் போரைத் தொடர்வது என ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார். சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான்-அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை: அமெரிக்கா போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வழியாகத் தொடரும் போர் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது. லெபனானில் நடைபெறும் படுகொலைகளை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பந்து […]
பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம்
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய் மாதாந்த தவணைக்கட்டணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் உரிய திகதி லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நடைமுறையைத் திறம்படச்செய்ய முடிந்ததால், மார்ச் மாதத்திற்குரிய தவணைக்கட்டணத்தைப் புலமைப்பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய திகதிக்கு முன்னதாகவே […]
கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூர தாய்
புனே, மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தாய்-மகனை தேடிவந்தனர், இதில் கடந்த 5-ந்தேதி ஜம்புட் கிராமத்தில் அந்தப்பெண் மட்டும் தனியாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் குழந்தையை பற்றி கேட்டபோது, “குழந்தை தவறி கீழே விழுந்து இறந்துவிட்டது. பயத்தில் உடலை […]
Vaishali Leads Women’s Candidates, Eyes Title
With R Praggnanandhaa no longer in the race, attention has now turned to his sister R Vaishali at the Women’s
Kharge Warns of Severe Impact from Government’s Redistricting Plan
Congress President Mallikarjun Kharge expressed strong concerns during a party meeting about the government's plan to redraw electoral boundaries as p...
விடுமுறை கிடையாது ; தொழிலாளர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, அதிவிசேட […]
BJP Criticizes Congress Over National Anthem Disrespect
The BJP has criticized the Congress party for allegedly showing disrespect towards the national song Vande Mataram. The BJP claims that the Congress...
கொளுத்தும் வெயிலில் வெள்ளரி பழம் விற்பனை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான வெப்பமான வானிலை நிலவி வருவதால் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் நன்மையடந்து வருவதுடன் தற்போது வெள்ளரிபழ அறுவடை ஆரம்பித்துள்ளது. கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக வெப்பமான காலங்களில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை அதிகமாக பானமாக அருந்தி வருகின்றனர். புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ,தாழங்குடா விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கை உடல் சூட்டை தணிப்பதில் இப்பழங்கள் பாரிய பங்களிப்பு செய்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளனர் .சுமார் 50 ஏக்கரில் […]
லெபனானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அறிவிப்பு
லெபனானுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சற்று தணிய தொடங்கியுள்ளன, ஈரான் – அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சண்டையை நிறுத்துவதற்கான நேரடி பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு […]
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரம்; 83% மரணங்கள்
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம் தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம் இடம்பெறுகின்றன. அவற்றில் 13 சதவீதம் அகால மரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய […]
BJP Promises Aid, Jobs in Bengal Polls
The Bharatiya Janata Party has shared its plans for the upcoming West Bengal Assembly elections. The party said that if
Pakistani Forces Ambushed in Balochistan
Pakistani forces were ambushed in Turbat, Balochistan, resulting in many casualties. The attack occurred after a Baloch armed group blocked a road nea...
மீண்டும் எண்ணெய் விலையில் மாற்றமா? சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் குழாய்களை இலக்கு வைத்து அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், அந்த நாட்டின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறன் நாளாந்தம் சுமார் 600,000 பீப்பாய்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், உலகச் சந்தைக்கு எண்ணெய் விநியோகிக்கும் பிரதான பாதையான கிழக்கு – மேற்கு குழாய் வழியிலான விநியோகம் சுமார் 700,000 பீப்பாய்களால் குறைவடைந்துள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் சவுதி எரிசக்தி நிறுவனத்தைச் சேர்ந்த […]
Stalin Hits Back at Palaniswami Remarks
In Chennai, Chief Minister M. K. Stalin strongly responded to comments made by Edappadi K. Palaniswami for the second day
Britain and Norway Monitor Russian Submarines in North Atlantic
Britain and Norway have led a month-long operation to track Russian submarines near important undersea cables and pipelines in the North Atlantic. Bri...
Can Bengaluru Survived Sooryavanshi Storm? RR vs RCB Match 16 Preview
Rajasthan Royals (RR) host Royal Challengers Bangalore (RCB) at Barsapara Cricket Stadium in Guwahati on Friday, April 11, at 7:30 PM IST. This is Raj...
India Finalizes Oil and Gas Deal with Mauritius
External Affairs Minister S Jaishankar has announced that India is nearing the finalization of an agreement to supply oil and gas to Mauritius. This m...
Nepal Kicks Off New Year with Bisket Jatra in Bhaktapur
The Bhaktapur district of Kathmandu Valley has started early celebrations to welcome the Nepali New Year with music and festivities. April 14 marks Ba...
BJP West Bengal Manifesto Promises Crackdown on Infiltration, Aid for Women, Youth
The BJP has released its election manifesto for the West Bengal Assembly polls, promising a strong stance against infiltration, monthly financial aid ...
நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி ; கடும் போக்குவரத்து நெரிசல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு நெரிசல் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் […]
குமார் சங்கக்காரவின் பெயரில் பாரிய மோசடி ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. fact crescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், குறித்த காணொளி மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் ஒரு திட்டமிடப்பட்ட இணைய மோசடியின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. போலித் தகவல்கள் உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு […]
கீரீன்லாந்து பக்கம் திரும்பிய ட்ரம்ப் ; வெளியான பதிவால் புதிய சர்ச்சை
ஈரான் போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக நேட்டோவை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள். பனி படர்ந்த அந்த நாடு, மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீதான போரில் அமெரிக்காவிற்குப் போதிய ஆதரவு அளிக்காததால், நேட்டோ (NATO) நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். […]
Yuvraj Singh Defends Stuart Broad After Discarding Signed Jersey
It has been 20 years since Yuvraj Singh hit six sixes in the first T20 World Cup, making him a legend alongside cricketing greats like Sir Garfield So...
சபையிலிருந்து வெளியேற்றுவேன்; சாணக்கியன் மீது சீறி விழுந்த சபாநாயகர்; சபையில் அமளி துமளி!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘அஸ்வெசும’ நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், அங்கு மீன்பிடித்துறை அமைச்சரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தும் சாணக்கியன் எம்.பி. இதன்போது கருத்து வெளியிட்டார். மீன்பிடித்துறை அமைச்சர் இவர்தான், இருவர் இல்லை அதனைத் தொடர்ந்து, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுந்து விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த […]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி
டெல் அவிவ் லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர் பலியாகி உள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவர். அவர், காசிமின் நெருங்கிய உதவியாளர் மற்றும் தனி ஆலோசகராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு […]
Rovman Powell Keeps Hope After KKR’s Third Loss in IPL 2026
Kolkata, April 10 (ANI): Rovman Powell stayed positive despite Kolkata Knight Riders' third loss in the IPL 2026. He believes the team can still impro...
இந்தியாவின் முதல் நீர் விமான சோதனை வெற்றி!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கா தடுப்பனை அமைந்துள்ள பசுலோக் பகுதியில், டி ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஓட்டர் ரக நீழ்மூழ்கி விமானம் வெற்றிகரமாக சோதனை ஒட்டத்தை
கோவை –ஜெய்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்!
கோடைக்காலத்தை முன்னிட்டு கோவை – ஜெய்பூர் இடையே சிறப்பு ரெயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடைக்காலத்தை முன்னிட்டு
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயிலில் மக்களோடு மக்களாக பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை செண்ட்ரல் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர்
விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது –எம்.பி மாணிக்கம் தாக்கூர்
விருதுநகரில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததால் கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில்
234 தொகுதிகளில் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் 89.20 சதவீத வாக்குப்பதிவுடன் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை!
அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக அளவிலான
அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் இன்று காரைக்குடியில் பிரச்சாரட்தில் ஈடுபடுகிறார்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) வெற்றி
சென்னையின் 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டி!
தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 419 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக மீண்டும் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நியமனம்!
மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் (ஏப்ரல் 9, 2026) நிறைவடைந்ததை அடுத்து, காலியான அந்த இடத்திற்கு அவரையே மீண்டும் நியமித்துக்
இந்தியாவின் முதல் கடல் விமானம் –வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக, ரிஷிகேஷில் அமைந்துள்ள கங்கா தடுப்பணையில் நாட்டின் முதல் வணிகரீதியான கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் முதல் கடல் விமான சேவை நிறுவனமாக SkyHope Aviation நிறுவனம் அறியப்படுகின்றது. Spicejet நிறுவனர் அஜய் சிங்கின் மகள் அவனி சிங், இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்நிலையில், ஏப்ரல் 6 அன்று இந்தியாவின் முதல் கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. […]
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் –பல்கலைக்கழக மாணவர் பலி
ஹோமாகம – மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள விடுதியில், தனியார் பல்கலைக்கழக மாணவர் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெல்லவாவை சேர்ந்த 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அந்த விடுதியில் இரு மாணவர் குழுக்களும் விருந்து நடத்தியிருந்தன. மேலதிக விசாரணை அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக […]
யாழில் கரைவலை எதிர்ப்பு செய்தி சேகரிக்க சென்றவர்களுக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கரைவலை தொழிலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரைவலை சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று வடமராட்சி கிழக்கு தாழையடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் […]
நான்கு மாணவர்கள் மது அருந்தியதாக சந்தேகம் ; ஒருவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றம்
பதுளை, ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவருடன் மேலும் மூவரும் மது அருந்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய நான்கு மாணவர்களும் மது அருந்தியிருந்ததாகக் கூறப்பட்டாலும் மருத்துவ பரிசோதனை இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், அவர்களில் ஒரு மாணவரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மூவரும் ஹல்துமுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, […]
கொழும்பை அதிரவைத்த ஜாக்பாட் ; ஒரே லொத்தர் சீட்டில் 62.9 கோடி ரூபாய்
இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய். அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2026, பெப்ரவரி 19 அன்று இந்த […]
அதிகரிக்கும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேல் காரணமா..?
டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக […]
லெபனானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் –ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு
லெபனான், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஈரானுக்கு எதிராக 2 வார காலம் தாக்குதல்களை நிறுத்துவது என்ற டிரம்ப் அரசின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்து உள்ளது. டிரம்ப்பின் போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை நெதன்யாகு அலுவலகம் வரவேற்றுள்ளது. […]
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வான்சன் பகுதியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அதிகாலையிலும் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் […]
வியத்நாம் புதிய அதிபா் பதவியேற்பு
வியத்நாமின் புதிய அதிபராக, அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டோ லாம் (68) பதவியேற்றுள்ளாா். புதிய அதிபா் தோ்வுக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 495 உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம், கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் நாட்டின் உயரிய அரசுப் பதவி ஆகிய இரண்டையும் வகிக்கும் மிக வலிமையான தலைவராக டோ லாம் உருவெடுத்துள்ளாா். வளா்ச்சிக்கு உறுதி: அதிபரான பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், வியத்நாமை ஒரு புதிய […]
லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?
அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே, லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 89 போ் கொல்லப்பட்டனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினா் வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை முன்னெடுத்ததற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடா்ந்தால் தாங்கள் போா்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து […]

31 C