பாகிஸ்தானின் 1000 ஏக்கர் நிலத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கிக்கு பரிசாக கொடுக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான போரில் உதவியதால் இந்த கைமாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் நிபுணர் –ஒரு பெயருக்கு இத்தனை லட்சம் கட்டணமா?
குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் நிபுணர் இதற்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார். பெயர் தேர்வு செய்யும் நிபுணர் சில தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது முன்னோர் பெயரையோ, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயரையோ அல்லது கடவுள் பெயரையோ சூட்டுவார்கள். தற்போது சில பெற்றோர்கள் ஜாதகப்படி பெயர் சூட்டுகின்றனர். ஒரு சில பெற்றோர்களோ கார்த்திக், சுரேஷ், ஸ்வாதி,பிரியா என்ற பொதுவான பெயர்களை சூட்டுகின்றனர். ஆனால், அமெரிக்காவில் இதற்கென்றே பெயர் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், பெயரை […]
சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!
அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இதனால், அமெரிக்காவில் சோயா பீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், “பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயா பீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து, விவசாயிகளுக்கு உதவுவோம். நான் விவசாயிகளை எப்போதும் […]
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1970இல் ஆட்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கையளித்தபோது, கடனையும் சேர்த்தே கையளித்தது. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முனைந்த அரசாங்கம் தவிர்க்கவியலாமல் மேலும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. உள்நாட்டில் இந்த அதிக கடன் வாங்கியதன் விளைவாக, 1969இல் ரூ.5,513 மில்லியனாக இருந்த உள்நாட்டு பொதுக் கடன் 1973இல் ரூ.8,586 மில்லியனாக உயர்ந்தது. உள்நாட்டு பொதுக் கடனுக்கான […]
இலங்கையில் எகிறும் தேசிக்காய் விலை
தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ தேசிக்காய் ரூ.1700 முதல் 1800 வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிக்காய் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாததால் அதன் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை ரூ.30 முதல் 60 வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார் . ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.230, ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50 முதல் 60 […]
உத்தர பிரதேசம்: பதிவு திருமணம் செய்ய காத்திருந்த வாலிபர் கோர்ட்டு வாசலில் கழுத்தறுத்துக் கொலை
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்த வாலிபர் நாயிப். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாயிப், தனது உறவுக்கார பெண்ணை பதிவு திருமணம் செய்வதற்காக மாவட்ட கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோர்ட்டுக்கு வெளியே உள்ள ஸ்டூடியோவில் போட்டோ எடுப்பதற்காக அவர்கள் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியால் நாயிப்பை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் […]
15 ஆண்டுகளில் 21 கூட்ட நெரிசல்கள், 741 பேர் பலி.. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? விவரம் இதோ!
கடந்த 15 ஆண்டுகளில், ஜனவரி 1, 2010 முதல் செப்டம்பர் 29, 2025 வரை, 21 நெரிசல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் விபத்துகளில் 746 பேர் உயிரிழந்தனர்.
தி நகர் பாலம் திறக்கப்பட்டதால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!
தி நகர் பாலம் திறக்கப்பட்டு உள்ளது. பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தியை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை இணைந்து கொடுத்து உள்ளது.
கொங்கோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை
கொங்கோவின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக துரோகம் இழைத்தார் எனவும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் எனவும் கபிலா மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் கபிலாவிற்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது. கபிலா, தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நகரில் கடைசியாகக் காணப்பட்ட அவர், தற்போது எங்கு […]
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக ஆனந்த விஜேபால நாடாளுமன்றிலும் தெரிவித்துள்ளார். ஊயிர்த்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அதைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே கோத்தபாய ராஜபக்சவை கைவிட்டு பிள்ளையான் கருணா போன்றவர்கள் மீது ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்படுவதாக தமிழ் தரப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் அனுப்பிவைக்கப்பட்ட போதும் நிதி ஒதுக்கப்படாமையால் அகழ்வுகள் கைவிடப்பட்டுள்ளது.
தொடரும் மகிந்த குடும்ப வேட்டை!
மகிந்த ராஜபக்ச தரப்பினை இலக்கு வைத்து அனுர அரசின் கைதுகள் தொடர்கின்றது.அவ்வகையில் லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னி ஆராச்சியை அக்டோபர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டிருந்தார். 28 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத சொத்துக்களை குவித்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதனிடையே நியாயமான காரணங்கள் இன்றி, 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி அடிப்படை உரிமைகள் மனுவை ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்திருந்தார்.
‘காந்தாரா –அத்தியாயம் 1’ -விமர்சனம்!
மூன்றாண்டுகளுக்கு முன் ரிலீஸான வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இது இன்னிங்ஸ் வெற்றியாக இருக்குமா என்பதுதான் கேள்வியாக, தற்போது இருக்கிறது.
கரூரில் நடந்ததைப் போல இனியும் நடக்கக் கூடாது என்று கலை, இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்தச் சுரங்கத்தில், நேற்று முன்தினம் (செப். 30) வழக்கம்போல் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளிகளை மீட்டு […]
ஈரோடு-போத்தனூர் ரூட்டில் இனி ஆட்டோமெட்டிக் சிக்னல்- பச்சை கொடி காட்டிய ரயில்வே அமைச்சகம்
தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டலத்தின் கீழ் உள்ள முக்கியமான ஈரோடு – போத்தனூர் (107 கிலோமீட்டர்) பிரிவில் ஆட்டோமெட்டிக் சிக்னல் அமைப்பை நிறுவுவதற்கான திட்டம் ரயில்வே அமைச்சகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதற்கான மொத்த செலவுத்தொகை ரூ.144.96 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இத்திட்டம் தெற்கு ரயில்வேயின் ஒரு பெரிய சிக்னல் மேம்பாட்டு திட்டத்தின் துணைத் திட்டமாக அமைகிறது. ரயில் இயக்க திறனை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் இந்த சிக்னல் அப்கிரேடு அவசியம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெரிசல் அதிகரிக்கும் பிரிவு ஈரோடு – போத்தனூர் ரயில் பாதை “பி பிரிவு” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வடக்கு மற்றும் தெற்கு கேரளாவை சென்னை வழியாக இணைக்கும் முக்கியமான வழித்தடமாக செயல்படுகிறது. தற்போது இந்த பிரிவில் ரயில் போக்குவரத்து மிகுந்த நெரிசலுடன் நடைபெற்று வருகிறது. வரும் 2026–27 ஆண்டுகளுக்குள் இப்பாதையில் போக்குவரத்து 125 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோமெட்டிக் சிக்னல் அமைப்பை உருவாக்குவது அவசியமாகிறது.ஆட்டோமெட்டிக் சிக்னல் அமைப்பை நிறுவிய பிறகு, ஒரே பாதையில் அதிகமான ரயில்களை குறுகிய இடைவெளியில் இயக்கும் வசதி உருவாகும். இதனால், பாதை திறன் அதிகரித்து, பயணிகளுக்கும் சரக்கு ரயில்களுக்கும் விரைவான சேவையை வழங்க முடியும். மேலும், இயக்கத்தில் தாமதம் குறைந்து, ரயில் சேவையின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும்.சுற்றுலா மற்றும் யாத்திரை மையங்களுக்கு இணைப்புஇந்த ரயில் பிரிவு, புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் பாதைக்கு முக்கிய பாதையாக செயல்படுகிறது. உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயில் வழியாக ஊட்டி, கூடநாடு, குன்னூர் போன்ற சுற்றுலா மையங்கள் அணுகப்படுகின்றன. அதேசமயம், கோயம்புத்தூர், வால்பாறை போன்ற யாத்திரை மற்றும் சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பயணிகளும் இப்பாதையை பயன்படுத்துகிறார்கள். எனவே, சிக்னல் மேம்பாடு பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுலா வளர்ச்சிக்கும் துணைபுரியும்.இந்த திட்டத்துக்கு மத்திய ரயில்வே, தகவல் & ஒளிபரப்பு, மின்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ள திரு. அங்கீகாரம் அளித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் சேவைத் தரத்தை மேம்படுத்தி, எதிர்கால போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொருளாதார மற்றும் சமூக தாக்கம் சிக்னல் மேம்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சரக்கு ரயில் போக்குவரத்தும் எளிதாக நடைபெறும். குறிப்பாக, தொழில்துறை மையமான ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்லும் வசதி அதிகரிக்கும். இதனால் தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.ஈரோடு – போத்தனூர் பிரிவில் ஆட்டோமெட்டிக் சிக்னல் அமைப்பை நிறுவும் திட்டம், எதிர்கால போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே எடுத்துள்ள முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. ரூ.144.96 கோடி செலவில் உருவாகும் இந்த திட்டம், பயணிகள் சேவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா, தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் நடந்த ஜாலியன் வாலாபாக்: சிபிஐ விசாரணை கேட்கும் கே.பி.ராமலிங்கம்
கரூர் துயரச் சம்பவத்தை ஜாலியன் வாலாபாக் நிகழ்வுடன் ஒப்பிட்டு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசினார்.
சிறுவர் தினத்தில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 04 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். பின்னர் இந்த சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார். […]
வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260
வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார். ரேபிஸ் வைரஸுக்கும் ஆணுறுப்புக்கும் என்னத் தொடர்பு? பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். ’’வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசிப்போட வேண்டுமென்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி போடாதவர்கள் மரணமடையும் முன்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் கடுமையான விறைப்புத்தன்மை இருக்கும். இதற்கு பிரையாப்பிசம் (Priapism) என்று பெயர். பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். இவருடைய ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருக்கும் என்பதால், அவருடைய பெயரால் இந்தப் பிரச்னை அழைக்கப்படுகிறது. ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி நாய் கடித்திருக்கும். வளர்ப்பு நாய்தானே என்றோ அல்லது நாய்க்கு ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருக்கிறதே என்றோ, அலட்சியமாக விட்டிருப்பார்கள். இவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி, ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருப்பதுதான். ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக்கு மரியாதை - 259 ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, ரோட்டில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரையும் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. அந்தக் காலத்தில் நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும். தினமும் மொத்தக் குடும்பத்தினரும் ஊசிப் போட்டுக்கொள்ள வருவார்கள். ஆனால், அந்த குடும்பத்தலைவன் மட்டும் ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். விசாரித்ததில் வேலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். கடைசியில் அவர் மட்டும் அந்த குடும்பத்தில் இறந்துபோனார். இப்படி ரேபிஸ் வந்து இறப்பவர்களுக்கு, முதலில் ஆணுறுப்பில் தொடர்ந்து விறைப்புத்தன்மை இருக்கும். வளர்ப்பு நாயோ அல்லது தெரு நாயோ, எது கடித்தாலும் காலதாமதம் செய்யாமலும் அலட்சியம் செய்யாமலும், உடனே தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
ஐஸ்வர்யா மேனன் ஸ்பெஷல் ஆல்பம்!
பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் நேற்று (அக். 1) அறிவித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் – இ – தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கைகள் மேற்கொண்டது. அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், கெச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில், […]
யாழ்தேவி தொடர்பில் விசேட அறிவிப்பு
யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை குறித்த ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் […]
விஜய் பேச்சு எப்படி இருந்தது? - சீமான் விளக்கம்
விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ”ஆந்திராவில் செம்மரக்கட்டையை கடத்த வந்ததாக 20 தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள் அன்றைக்கு உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை. 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற போது யார் சுட்டுக் கொள்ள அதிகாரம் கொடுத்தது என யாருமே கேள்வி எழுப்பவில்லை. தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. மத்தியில் இருந்து வந்த குழு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இவ்வளவு பேர் செத்துக் கிடக்கும் போது குஷி படம் மறு வெளியீட்டிற்கு பெண்களும், ஆண்களும் ஆட்டம் போடுவதை நினைக்கும் போது சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது என்ற பதற்றம் வருகிறது. சீமான் விஜய் காணொளியை பார்க்கும்போது, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார். கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார். விஜய் பேசிய போது வலியைக் கடத்தியிருக்க வேண்டும். திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் போல் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தன் மீது நடவடிக்கை எடுங்கள் தன்னை நம்பி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜய் கூறி இருக்கவேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி தொடுவதாக இருந்தால் என்னைத் தொடுங்கள் எனப் பேசியது திரைப்பட வசனம் போல் இருக்கிறது என விமர்சித்தார். சி.எம் சார் எனக் கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிக்கு அழைப்பதுபோல் இருக்கிறது. அவர் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி பெருந்தலைவர்கள் ஓமந்தூரார் ராமசாமி, குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் இருந்த இடம். சி.எம் சார் என்றெல்லாம் பேசக்கூடாது. பார்த்து பேச வேண்டும், அது தன்மையான பதிவாக இருக்காது. சீமான் இதையெல்லாம் பார்க்கும் போது கரூரில் நிகழ்ந்த இறப்பைவிட வேதனையைக் கொடுக்கிறது. கரூரில் நடந்த சம்பவத்தில் கத்தியால் குத்தினார்கள், தாக்கினார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் மருத்துவமனையில் சென்று பார்த்த போது அப்படி யாரும் காயமடையவில்லை. இனிவரும் காலங்களில் தெருத்தெருவாக வாக்கு கேட்பது ஊர் ஊராக கூட்டம் போடுவது போன்ற முறைகளை மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளை போல் தேர்தல் பரப்புரைகளை மாற்ற வேண்டும் இந்த பரப்புரை முறைகளை தகர்க்க வேண்டும்” என்றார்.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 2 முதல் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னைக்கும் மழை வாய்ப்பு உள்ளது.
நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனையொட்டியே சகல மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளது. அதோடு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வோரை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Ooty: பராமரிப்பு இல்லை, ஆக்கிரமிப்பு - எங்க சார் நடக்குறது? | Photo Album
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதை சாமுண்டி ஜங்ஷனில் நடைபாதையில் அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டு புதர்மண்டி கிடக்கும் ஏ.டி.சி., நடைபாதை ஏ.டி.சி., நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது ஏ.டி.சி., நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது பராமரிப்பு இல்லாத மார்க்கெட் நடைபாதை. வாகன நிறுத்தமான காபி ஹவுஸ் நடைபாதை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காபி ஹவுஸ் நடைபாதை. பராமரிப்பு இல்லாத மார்க்கெட் நடைபாதை பராமரிப்பு இல்லாத ஸ்டேட் பேங்க் நடைபாதை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை
மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு : எவ்ளோ கன அடி தெரியுமா?
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.
̀̀``இனி நான் சாம்ஸ் இல்ல, என் பெயர் ஜாவா சுந்தரேசன்'' - பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சாம்ஸ்
200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சாம்ஸ். சாம்ஸ் என்பதைத் தாண்டி ̀அறை எண் 305-ல் கடவுள்' படத்தின் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரப் பெயரைச் சொன்னால்தான் இவரின் முகம் சட்டென பலருக்கு நினைவுக்கு வரும். அந்தளவிற்கு அந்தக் கதாபாத்திரம் இவரை மக்களிடம் பரிச்சயமாக்கியது. இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் சாம்ஸ் என்ற பெயருடன் நடித்தவர் தற்போது தனது பெயரையே ஜாவா சுந்தரேசன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ̀அறை எண் 305-ல் கடவுள்' படத்தின் இயக்குநர் சிம்புதேவனையும் நேரில் சந்தித்து அந்தப் பெயரையே தான் வைத்துக் கொள்ளப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார். இது குறித்து அவர், அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கும் இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்தி... என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை 'சாம்ஸ்' (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். 'சாம்ஸ்' என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குநர் சிம்புதேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று, அந்தப் பெயரைச் சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும், அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. Java Sundaresan Character எங்கே சென்றாலும் என்னைப் பார்க்கும் ரசிகர்கள் 'ஜாவா சுந்தரேசன்' என்று அழைப்பதோடு, தங்கள் சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை 'நாங்கள் ஜாவா சுந்தரேசன் என்றுதான் அழைப்போம்' என்று சொல்லி, அந்தக் காட்சியில் நான் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அலப்பறை செய்தேன் என்று சிலாகித்து பாராட்டி மகிழ்கின்றனர். எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று, இன்று முதல் (02.10.2025) எனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்தப் பெயருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் 'ஜாவா சுந்தரேசன்' என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களே. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் 'ஜாவா சுந்தரேசன்' ஆக எனது திரைப்பயணத்தைத் தொடர்கிறேன். நடிகர் சாம்ஸ் இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களை எனக்குத் தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சினிமாத் துறையைச் சார்ந்த மற்ற நண்பர்களுக்கும், உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து, இனி என்னை 'ஜாவா சுந்தரேசன்' என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் இடிந்துவிழும் அதிர்ச்சிக் காட்சிகள்
நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டை நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் ஒன்று இடிந்துவிழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.50 மணியளவில், மத்திய பிலிப்பைன்சை ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பில் சுமார் 69 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள். இந்த நிலநடுக்கத்தின்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க Shrine of Santa Rosa de […]
கரூர் கூட்டநெரிசல் குறித்து ஹேம மாலினி தலைமையிலான என்டிஏ எம்.பி.க்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இது தேவையில்லாத ஒன்று என துரை வைகோ எம்.பி. விமர்சித்துள்ளார்.
Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன! - காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்படத்தில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். Kantara Chapter 1 ராஜசேகரா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் அவ்வளவு நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது இப்படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் ஜெயராம். அந்தப் பதிவில் அவர், `காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் அளவற்ற அன்பு, விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளுக்கு ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வார்த்தைகள் எனக்கு விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன. மேலும் இந்தப் படம் உங்களுடன் இவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. இந்த அழகிய செய்தி இன்று ஆயுத பூஜை என்ற புனிதமான நாளில் என்னை வந்தடைந்திருப்பது இந்தத் தருணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. View this post on Instagram A post shared by Jayaram (@actorjayaram_official) இது கடின உழைப்பு மற்றும் ஆசிர்வாதங்களைக் கொண்டாடும் ஒரு நாள். இதைவிட சிறந்த பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவே இல்லை. மேலும், இந்தப் பயணத்தில் என்னை நம்பியதற்காக ரிஷப் ஷெட்டிக்கு என் மனமார்ந்த நன்றி! இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்த முழு குழுவினருக்கும் என் முழு அன்பு தருகிறேன். அவர்கள்தான் எங்களை மிளிர வைத்தார்கள். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி. இந்த அன்பு என்றென்றும் என்னுடன் இருக்கும். எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நிராகரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீயிட்டு எரித்தனர். போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு, மனுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். - செ. கிரிசாந்
காந்தி சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பதா? பாஜகவுக்கு வைகோ கண்டனம்
மதுரையில் காந்தி சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி நிறுவனம் vs சென்னை சுங்கத்துறை –‘ஊழல்’குற்றச்சாட்டு குறித்த, சமூக ஊடகப் போர்!
சென்னை சுங்கத்துறை மற்றும் ஒரு இறக்குமதி நிறுவனத்திற்கு இடையே நடந்து வரும் ‘ஊழல்’ குற்றச்சாட்டுகள் மற்றும் அதைத் தொடர்ந்த சமூக
எனக்கு 63; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?
ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்துகொண்டு இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கூறுகின்றனர். டாம் க்ரூஸ், ஏற்கெனவே 3 […]
மஹிந்தவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கைது!
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை… The post மஹிந்தவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கைது! appeared first on Global Tamil News .
பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; விகடன் புகாரால் அதிரடி கைது! | முழு விவரம்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதால் பெற்றோர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்க்கும் உரிமையைப் பெற்றோர்களுக்கு வழங்கவேண்டும்” எனப் பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடிக்கொண்டு பேசி வீடியோ வெளியிட்டது, சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்தன. விகடன் புகாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் தீபன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிவது, பெண் குழந்தையாக இருந்தால் அதைக் கலைக்கும் கருக்கொலைகள் ஆகியவற்றைத் தடுக்க, எம்.டி.பி ஆக்ட் எனப்படும் கருக்கலைப்பு சட்டம் (Medical Termination of Pregnancy Act) உள்ளது. இச்சட்டத்தின்படி, பாலினத்தைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. டாக்டர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் சிறைத் தண்டனையோடு அவர்கள் மருத்துவத் தொழிலையே தொடரமுடியாத அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட, கடுமையான சட்டங்கள் இருந்துகொண்டிருக்கும் சூழலில், விகடன் கடந்தவாரம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்தைத் தொடர்புகொண்டு, நேர்குரிப்பிட்ட வீடியோவையும் அனுப்பி சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது. இந்த நிலையில், அந்த முகமூடி யூடியூபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பெயர் தீபன் என்றும், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி அரவிந்த் நம்மிடம் பேசும்போது, உங்களைப் போலவே, யூடியூபரின் வீடியோக்களை சிலர் அனுப்பினார்கள். பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசிய யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அவரைத்தொடர்ந்து, தென்காசி சைபர் க்ரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசரிடம் பேசினோம். அவர், “பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராகப் பேசிய யூடியூபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். மேலும், வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தென்காசி மாவட்டத்தில் இனிமேல் யார் இப்படி பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசினாலும் கடுமையாகத் தண்டிக்கப்பக்கடுவார்கள்” என்றார். அவரைத்தொடந்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சாமிநாதனிடம், இப்படி வீடியோ வெளியிடுவது எப்படிப்பட்ட குற்றம்?” என்று கேட்டோம். அதற்கு,“கடந்த 15 வருடங்களாகத் தருமபுரி, கடலூர், அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் ஸ்கேன் மையங்களைக் கண்டுபிடித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண் சிசுக்கொலைகளை ஆதரிப்பதும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் செய்து பார்ப்பதும் சட்டப்படி குற்றச்செயல். இந்தக் குற்றத்தைச் செய்பவர்களைவிட, இதைச் செய்யத் தூண்டுவதே மிகப்பெரிய குற்றமாகும். அதனால், அந்த இளைஞன் வீடியோவில் கூறியது சமூகத்திற்கு எதிரான குற்றம். மருத்துவர் அதேபோல், ஆண்களின் பிறப்பு விகிதம் குறைகிறது என அவர் சுட்டிக்காட்டிய தகவலும் பொய்யானது. உண்மையில், புள்ளிவிவர அடிப்படையில் கணக்கிட்டால் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைவிட, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்தான் குறைந்துகொண்டே வருகிறது தரவுகளுடன் பட்டியலிட்ட டாக்டர் சாமிநாதன். தருமபுரி: பாலினம் கண்டறியும் குழுவுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சத்துணவு சமையலர்; சிக்கியது எப்படி? மேலும் தொடர்ந்து பேசிய டாக்டர் சாமிநாதன், ஏழையோ, பணக்காரரோ கருவில் இருக்கும் பாலினத்தைத் தெரிந்துகொண்டு யார் அழிக்க முயற்சித்தாலும், அதைத் தூண்டினாலும், அதற்குத் துணைபோனாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உண்டு. அவர்களைக் கைது செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு. 1994-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலின தேர்வு தடை சட்டத்தின்படி, கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம். 1990-களில், சிசுவிற்கு இதயக்கோளாறு, இன்னபிற பிரச்னைகளைக் கண்டறிய மட்டுமே கொண்டுவரப்பட்ட ஸ்கேன் தொழில்நுட்பத்தை, பாலினத்தைக் கண்டறிய தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். சிசு - சித்திரிப்பு படம் சமூகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் எனப் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, அந்த இளைஞர் இப்படிப் பேசியிருப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. பாலின தேர்வுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாட்டில்தான் மிகச்சிறப்பாகச் செயல்படுத்துகிறார்கள். அதாவது, சிசுக்கொலை செய்கிறவர்கள், அதற்குத் துணைபோகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தமிழ்நாட்டில்தான் எடுக்கப்பட்டுவருகிறது. சிசுக்கொலை எங்கு நடந்தாலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் மகப்பேறு மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் உட்பட குழுவாக இயங்கக்கூடிய அட்வைஸரி கமிட்டி உள்ளது. அந்தக் குழுவிடம் நாம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும். ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து அறிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். 30 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கே சவால் விட்டிருக்கிறது, அந்த இளைஞனின் வீடியோ. சிசு - சித்திரிப்பு படம் பெண்கள் முழுமையான சுதந்திரத்துடன், முன்னேறினால்தான் இந்த சமுதாயம் முன்னேற்றத்தை அடையும். சமூகமும் மாறும்போது இந்தச் சட்டம் தேவைப்படாது. ஆனால், இன்றைய சூழலுக்கு இந்த சட்டம் அவசியமானது. என்னதான், பாலின தேர்வு குறித்துத் தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் அந்த நாட்டின் சட்டத்தை மதிக்கவேண்டும். இப்படி, பிரபலம் ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டு போகிற போக்கில் சமூகத்துக்கு எதிரான விஷம கருத்துக்களைப் பரப்பக்கூடாது” எனக் கடுமையாக எச்சரித்தார். Doctor Vikatan: கர்ப்பிணிக்கு எந்த மாதம் வயிறு தெரியும்; வயிற்றைப் பார்த்து பாலினம் சொல்ல முடியுமா?
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதின!
மொத்தம் 93 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு டெல்டா ஏர் லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானங்கள் இரவு 9:58 மணிக்கு (வியாழக்கிழமை GMT 0158) ஒன்று தரையிறங்கும் போதும், மற்றொன்று புறப்படவிருந்த போதும் மோதிக்கொண்டன என நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது. ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றும், ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறைந்த வேக மோதல் என்று விவரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்றுவோம் என்று டெல்டா கூறியது. இந்த மோதலால் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று டெல்டா தெரிவித்துள்ளது. மோதலில் சிக்கிய டெல்டா கனெக்ஷன் விமானம் எண்டெவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
கரூர் பிரசாரத்தில் விஜய்மீது செருப்பு, தேங்காய் வீச்சு.. அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு!
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காட்சிகளும், அப்போது அவர்மீது செருப்புகள் மற்றும் தேங்காய்கள் வீசப்பட்ட தருணங்களும் தற்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மொராக்கோவில் ஜெனரல் இசட் போராட்டங்கள் வன்முறையாக மாறியது
மொராக்கோவில் பொது சேவைகளின் மோசமான நிலைக்கு எதிராக புதன்கிழமை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியது. கடலோர நகரமான அகாடிருக்கு அருகிலுள்ள லெக்லியாவில் ஒரு காவல் நிலையைத் தாக்க முயன்ற ஒரு குழு மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய அந்தக் குழு, பாதுகாப்புப் படையினரின் ஒரு வசதிக்குள் நுழைந்து தீ வைத்தது. இதனால் பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக நீதி சீர்திருத்தங்களுக்காக ஆரம்பத்தில் திரண்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் இது ஒரு கொடிய திருப்பத்தைக் குறிக்கிறது. பேரணிகளின் போது இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா உதவி கப்பலை இஸ்ரேல் இடைமறித்தது!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உணவுப் பொருட்களைச் எடுத்துச் சென்ற13 படகுகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. மேலும் 30 படகுகள் இன்னும் காசா நோக்கி பயணித்து வருவதாக புளோட்டிலா அமைப்பாளர்கள் தங்கள் சமீபத்திய புதுப்பிப்பில் டெலிகிராமில் எழுதினர். அந்தக் கப்பல்கள் காசாவில் இருந்து 46 கடல் மைல் தொலைவில் இருந்ததாக அவர்கள் கூறினர். இடைமறிக்கப்பட்ட படகுகளில் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், பங்கேற்பாளர்கள் மற்றும் குழுவினரின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லைஎன்றும் அவர்கள் கூறினர். கிரேட்டாவும் அவரது நண்பர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர்என்று ஆறு மணி நேரத்திற்கு முன்பு கூறியதிலிருந்து, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் நிறுத்தப்பட்ட படகுகளின் பயணிகள் குறித்த புதுப்பிப்பை வெளியிடவில்லை.
நெல் கொள்முதல்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அக்டோபர் 2ஆம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் ஆர்.என். ரவி பாஜகவின் ஊதுகுழல்- திமுகவை விமர்சித்ததற்கு வைகோ கண்டனம்
திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய நிலையில், அவரை பாஜகவின் ஊதுகுழல் என வைகோ விமர்சித்து உள்ளார்.
இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி
சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்கிற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் […]
ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய பிரதமர் மோடி... காங்கிரஸ் கட்சி விமர்சனம்!
ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில், அந்த அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .
ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து நேற்று (01) வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், பிலியந்தலையைச் சேர்ந்த 66 வயதுடையவரே உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
பனையூர் தவெக அலுவலகத்தில் கொண்டாட்டம்… என்னங்க விஜய் நியாயமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரேதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், புதன்கிழமை(01) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வரியின்றி, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட, 44400 (217 பெட்டிகள்) சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராய்ச்சி கைது
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராய்ச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், இவர் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
லடாக் வன்முறை...பாஜக அலுவலகம் தீ வைப்பு சம்பவம்... கவர்னர் முக்கிய உத்தரவு!
லடாக் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அந்த மாநில கவர்னர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் படி, லடாக் வன்முறை சம்பவம் தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும்.
வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்
வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம், வன பாதுகாப்பு இடங்களாக சுமார் 30 இடங்களை அடையாளம் கண்டு அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சனை காணப்பட்டது. இதன் காரணமாக குறித்த திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே ஒரு இலட்சத்து 1,762.75 காணிகளை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம். அதிலே வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் காணியும் மன்னார் மாவட்டத்தில் 178,82.8 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48,532.6 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கப்பட இருக்கின்றது. ஆனால் இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சனைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம். எனவே அதனையும் தீர்க்கும் முகமாக அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம். அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி, வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்களாக ஒரு விசேடமான குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம். வனவளதிணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
டிரம்புக்கு பாகிஸ்தான் கனிமம் பரிசு: அசிம் முனீர் ஒரு சேல்ஸ்மேன்- கழுவி ஊத்தும் சொந்த நாட்டு மக்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கனிம வளங்களை பரிசாக கொடுத்தார். இதற்கு அவரை சேல்ஸ்மேன் என பாகிஸ்தான் மக்கள் விமர்சித்துள்ளனா்.
இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு!
சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச் சபைக் கூட்டம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இதனடிப்படையில் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு த.ரெபேர்ட் […]
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி
நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று முன்தினம் (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, நடுவழியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 26 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், பலியானவர்களில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மழைக்காலங்களில் நைஜீரியா […]
கோவை நஞ்சுண்டாபுரம் சாலை சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கும்-அதிகாரிகள் தகவல்!
கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம் சாலை சீரமைப்பு பணிகள் விடுமுறை முடிந்த பின்பு உடனடியாக தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும் இடங்களாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிக்கின்றார். மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் செம்மணி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எண்ணூர் விபத்து: கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்- பெ.சண்முகம் வலியுறுத்தல்
எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானத்தின்போது விபத்து ஏற்பட்டு பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்க பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா - சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்
திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா! சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்.!
`இதுதான் கெத்தா?'பெண்களை ஆபாசமாக பேசும் உரிமையை யார் கொடுத்தது உங்களுக்கு? ஓர் ஆதங்கப் பதிவு
கெட்ட வார்த்தை பேசுவது அதிகமாகிவிட்டது. அதிலும் பெண்களை நோக்கி கெட்ட வார்த்தை பேசுவது முன் எப்போதையும்விட இப்போது அதிகமாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஏதோவொரு வகையில் சமூக வலைதளங்களில் புழங்குகிற பெண்களையும், திடீரென சமூக வலைதள டிரெண்டிங்குக்குள் சிக்கிக் கொள்கிற பெண்களையும், 'ஆயிரம் பீப் சவுண்ட் போடலாம்' என்கிற அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் கமென்ட் செய்கிறார்கள். ஓர் ஆதங்க(த்திர) பதிவு! எல்லா பெண்களையும்... அந்தப் பெண்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கிற அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, ஒரு கும்மிப்பாட்டில் பிரபலமான பெண்ணாக இருந்தாலும் சரி, விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் குழந்தையை பறிகொடுத்த பெண்ணாக இருந்தாலும் சரி... நீங்கள் பெண்ணாக இருப்பது மட்டுமே, நாங்கள் ஆபாசமாக பேசுவதற்கு போதுமான காரணம் என்று முடிவெடுத்து விட்டார்கள்போல... வார்த்தைகளாலேயே வன்கொடுமை ’எனக்கு இன்று பிறந்த நாள்; ஐம்பதைத் தொட்டுவிட்டேன்’ என்கிற பெண்ணின் போஸ்ட்டில் ‘நீ கிழவியா டி’ என்று ஆரம்பித்து ஓர் ஆபாச வார்த்தையுடன் பின்னூட்டம் இடுகிறார்கள். மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் புகைப்படத்தின் கீழ், வயது வித்தியாசமில்லாமல் வார்த்தைகளாலேயே பாலியல் வன்முறை செய்கிறார்கள். ஓர் ஆதங்க(த்திர) பதிவு! மட்டும் நன்றாகத் தெரிகிறது... எதுவும் தெரியாத அவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் தமிழகத்தின் மூத்த மகப்பேறு மருத்துவர் ஒருவருடைய வீடியோவின் பின்னூட்டத்தில் ’போடி தே... மு...’ என்று கமென்ட் செய்கிறார் ஒருவர். இவருடைய இந்த கமென்ட்டுக்கு இன்னொருவர் ’ஏன்டா மாப்பிள்ளை இப்படி கமென்ட் போட்டு இருக்க’ என்று விசாரிக்க ’சும்மா தான்டா’ என்று அதற்கு ரிப்ளை செய்கிறார். தன் நேரத்தை செலவழித்து இந்த ஆண்களுடைய வீட்டுப் பெண்களுக்கும் விழிப்புணர்வு தந்துகொண்டிருந்த அந்தப்பெண் மருத்துவரின் தரம் என்ன, தகுதி என்ன, அவர் அனுபவம் என்ன, அவர் இதுவரை எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என எதுவும் தெரியாத அவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் நன்றாகத் தெரிகிறது. வார்த்தைகளாலேயே இழுத்துச் செல்கிறார்கள்! கரூர் பரப்புரைக்கு குழந்தைகளுடன் சென்ற பெண்களை, பரப்புரை செய்ய வந்தவரின் படுக்கையறை வரைக்கும் வார்த்தைகளாலேயே இழுத்துச் செல்கிறார்கள் பலர். அந்தப் பெண்களுக்காக வாதாடுகிறோம் என, இவர்களுடைய அம்மாக்களையும், அக்கா, தங்கைகளையும் பின்னூட்டங்கள் வழியே தங்களுடைய படுக்கையறை வரைக்கும் இழுத்து செல்கிறார்கள் இன்னும் பலர். கெட்ட வார்த்தை பேசுவதை கெத்து என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் உண்டு. எங்கோ ஒருசிலரிடம் இருந்த அந்த துர்இயல்பு இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் இருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் அசூயையும் ஏற்படுத்துகிறது. அதுவும் சமூக வலைதளங்களில் அது எந்தவித தயக்கமுமின்றி வீசப்படுகிறது ’யாரடி நீ’ என ஒருமையில் ஆரம்பிக்கிறார்கள்..! கரூர் துயரத்தையடுத்து களத்துக்குச் சென்று விசாரணை நடத்திவிட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார் மரியாதைக்குரிய பெண்மணி ஒருவர். அந்த வீடியோவின் பின்னூட்டத்தில் ’யாரடி நீ’ என ஒருமையில் ஆரம்பித்து தங்களுக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மரியாதைக்குரிய பெண்மணி ஒரு முன்னாள் நீதியரசர் என்பது தெரியாதவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அவருக்கு பணித்த வேலையை அவர் செய்கிறார் என்பதும் தெரியாதவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் நன்கு தெரிகிறது. பக்குவப்பட்டிருக்கிறீர்களா..? இது புரிபடும் அளவுக்கு நீங்கள் எங்களுக்குப் பிடித்த நடிகருக்கு நாங்கள் பால் அபிஷேகம் செய்வோம்; பீர் அபிஷேகம் செய்வோம். ஆனால், ஒரு பெண் பொதுவெளியில் அந்த நடிகரின் ரசிகை நான் என்று பேசி வைத்தால், அவளுடைய ஒழுக்கத்தையும் உடலையும் பின்னூட்டங்களில் விமர்சனம் செய்தே தீருவோம் என்று முன்முடிவுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் உங்கள் சுயமரியாதைக்கு தருகிற முக்கியத்துவத்தைவிட பால் அபிஷேகத்துக்கு தருகிற அதே முக்கியத்துவத்தைத்தான் அந்தப் பெண்களும் தந்து கொண்டிருக்கிறார்கள். இது புரிந்தால், உங்கள் குற்றம் சாட்டுகிற கரங்களின் நான்கு விரல்கள் உங்களை நோக்கி இருப்பது புரியும். ஆனால், இது புரிபடும் அளவுக்கு நீங்கள் பக்குவப்பட்டிருக்கிறீர்களா என்பதுதான் இன்றைக்கு இருக்கிற அச்சத்துக்குரிய கேள்வி..? Representational Image சிகரெட், மது போல கெட்ட வார்த்தை சிகரெட், மது போல கெட்ட வார்த்தை பேசுவதும் தவறு என்கிற காலம் ஒன்றும் நம் சமூகத்தில் இருந்தது. பெண்களையும், வயதில் மூத்தவர்களையும் கண்டால் கையில் இருக்கிற புகையை மறைப்பதுபோல இவர்கள் முன்னால் கெட்டவார்த்தை பேசுவதும் தவறு என்கிற காலமும் இருந்தது. தாங்கமுடியாத உடல் உபாதை காரணமாகவோ அல்லது மன வேதனை காரணமாகவோ, அதன் வெளிப்பாடாக சிலர் கெட்ட வார்த்தைகள் பேசுவதுண்டு. இவர்களிலும் பலர் அதிகபட்சமாக ரோமத்தை குறிக்கும் வார்த்தையுடன் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். ஒரு சிலர் ஆபாசமாக கெட்ட வார்த்தைகள் பேசினாலும், அவர்களை அதட்டவும் அடக்கவும் அவரைச் சேர்ந்தவர்களே சிலர் இருப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளமெங்கும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. Mothers of India: `தாயால்கூட மன்னிக்க முடியாது' - இவர்கள் மூவரும் இந்தியாவின் அம்மாக்கள் இது கெத்து அல்ல... கெட்ட வார்த்தை பேசுவதை கெத்து என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் உண்டு. எங்கோ ஒருசிலரிடம் இருந்த அந்த துர்இயல்பு இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் இருப்பது தாங்கமுடியாத அதிர்ச்சியையும் அசூயையும் ஏற்படுத்துகிறது. ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சி என்பது, சக மனிதனுக்கு தன்னிடமிருந்து தர ஒவ்வாத அசிங்கங்களை ஒவ்வொன்றாக உதிர்ப்பதுதானே... அதைவிடுத்து முந்தைய தலைமுறையைவிட இளம் தலைமுறையினர் ஆபாச வார்த்தைகளை அதிகம் பேசுவதென்பது, அவர்கள் நாகரீகத்தில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது. `வாஷ் ரூம் கேமராவுக்கு பயந்துக்கிட்டிருக்கும் என் பேத்திக்கு...' - ஒரு பாட்டியின் வாட்ஸ்அப் மெசேஜ் அடுத்தவர் உருவாக்கிக் கொடுத்த டெக்னாலஜியில் மட்டும்தானா? இரு ஆண்களுக்கிடையே பிரச்னை என்றால், எதிர்தரப்பு ஆணுடைய குடும்பத்துப் பெண்களை வார்த்தைகளால் மானபங்கபடுத்துகிற வழக்கம், இன்றைய சோஷியல் மீடியாக்களிலும் தொடர்கிறது என்றால், உங்கள் வளர்ச்சி அடுத்தவர் உருவாக்கிக் கொடுத்த டெக்னாலஜியில் மட்டும்தான்; உங்கள் சொந்த மூளையில் அல்ல என்று எடுத்துக்கொள்ளலாமா..? இது ஜனநாயக நாடுதான். அனைவருக்கும் பேச்சுரிமை உண்டுதான். ஆனால், அடுத்தவரை ஆபாசமாக பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. ’பேசுவேன்; அது என் உரிமை’ என்பவர்கள் உங்கள் ஆபாச குப்பைகளை உங்கள் வீட்டுக்குள்ளேயே கொட்டிவிட்டு பொதுவெளிக்கோ, சமூக வலைதளங்களுக்கோ வாருங்கள். இன்னும், ’யாருங்கடி நீங்க... தே.... மு....களா’ என்பீர்களென்றால், சட்டம் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரைக்கும் சிறைத்தண்டனை தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.
மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்திருந்தால் போலீஸாரும், உள்ளாட்சி அமைப்பினரும் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு செயல்படும் கடைகள், சூப்பர் மார்க்கெட், மால்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையடுத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி கொடுப்பது தொடர்பாக சமீபத்தில் அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. அதில் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து இதர வர்த்தக நிறுவனங்கள் எந்த வித நேரக்கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாதிரி படம் இதற்கு முன்பு 2017ம் ஆண்டு பெர்மிட் ரூம்கள், பீர் பார்கள், டான்ஸ் பார்கள், ஹூக்கா பார்லர்கள், டிஸ்கோ கிளப்கள் மற்றும் ஒயின் ஷாப்கள் போன்ற மதுபானம் வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் நேரத்தை நிர்ணயித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் சினிமா தியேட்டர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால் அவை செயல்படும் நேரம் 2020ம் ஆண்டு தனி அறிவிப்பு மூலம் திருத்தி அமைக்கப்பட்டது. புதிய அறிவிப்பின் படி மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மதுபானக் கடைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திறந்து மூடவேண்டும். மால்கள், கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் உட்பட மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த உத்தரவில் தொழிலாளர்களின் உரிமைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு ஊழியரும் வாரம் ஒரு முறை தொடர்ச்சியான 24 மணிநேரம் விடுமுறை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் விருப்பமான நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் அதேநேரத்தில் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேர வணிக நாள் நள்ளிரவில் தொடங்கி சுழற்சியாக வரக்கூடியது என்று அதில் குறிப்பிடுகிறது. இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவின் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக மும்பை, புனே மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில், இரவு நேர ஷாப்பிங், சேவைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு இம்முடிவு எடுத்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஷாப்பிங் மால் மேலும் இனி போலீஸாரின் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான திட்டம் அமைச்சரவையின் பரிசீலனையில் இருப்பதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகாஷ் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு பெண்களும் இரவு நேரத்தில் பணியாற்ற முடியும் என்றும் ஆகாஷ் தெரிவித்தார். தீபாவளி நேரத்தில் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை போன்ற நகரங்களில் மக்கள் இரவு
யாழில். 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள்
மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது! சைலேந்திர சிங் கொடுத்த அப்டேட்
சென்னை புறநகர் மாவட்டத்தில் செயல்படும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து உயர் அதிகாரி முக்கிய தகவல் கொடுத்துள்ளார்.
ரஜினிக்கு மோகம் இல்லை… ஆனால் விஜய்க்கு வெறி… திருமாவளவன் காட்டம்!
கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்ட காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? விஜய்யுடன் திமுக மறைமுக கூட்டணியில் இருக்கிறதா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு எண்டு கார்டு... கே.பாலகிருஷ்ணன் ஒரே போடு!
பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால், அதோடு விஜயின் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்று மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - அன்புமணி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2023-ல் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குலசை தசரா திருவிழா: காளி வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்! | Photo Album
தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர்: மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர். திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார். ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி ஒரு திருமணம் வேண்டாம் […]
மதுரையில் காந்தி சிலைக்கு காவித்துண்டு..பரபரப்பை கிளப்பிய பாஜக பிரமுகர்கள் -நடந்தது என்ன ?
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணம்... பாஜக மூத்த தலைவர் தமிழசை சொன்ன காரணம்!
தமிழ வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணத்துக்கான காரணத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழக்குமரன் நியமனம் -ராமதாஸ் சொன்ன ஒரே வார்த்தை!
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழக்குமரன் நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார்,
`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்
கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்து நெரிசல்ல சிக்கி உயிரை விட்டிருக்காங்க. அந்தத் துயரம் குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட விஜய் சார்க்கு நாலு நாள் ஆகுது. இந்த தாமதமே ரொம்ப தப்பு. கரூர் துயரம் ஒரு பிரச்னைனு வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டு அது பத்திப் பேசவே நாள் கணக்குல அவகாசம் எடுத்துக்கிற நீங்க கனவு காண்கிற படி ஒரு வேளை முதல்வர் ஆகிட்டா எந்தவொரு விஷயத்தையும் எப்படி ஹேண்டில் செய்வீங்க? உங்களுடைய இந்த மாதிரியான நடவடிக்கை திரையில் மட்டுந்தான் நீங்க ஹீரோவானு கேக்க வைக்குது. அதேபோல் ரஜினி, கமல் சாரைத் தாண்டி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிச்சோ அல்லது கண்டனம் தெரிவிச்சோ இன்னைகு உச்ச நட்சத்திரங்களா இருக்கிற ஒருத்தர் கூட வீடியோவோ ட்வீட்டோ போடலை அது ஏன்னு புரியலை. 'பிக் பாஸ்' அசீம் சீமானுடன் தங்களுடைய படங்கள் ரிலீசாகுறப்ப தங்களுடைய ரசிகர்களைத் தாண்டி விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க போல. அந்தப் பயத்துலதான் யாரும் கருத்து சொல்லலைனு நான் நினைக்கிறேன். இதுவும் ரொம்பவே ஜீரணிக்க முடியலைங்க. நானுமே இப்ப படம் நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என் படமும் ரிலீசாகும். என்ன ஆனாலும் ஆகிட்டுப் போகட்டும். ஆனா நடந்த சம்பவம் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே இப்படியொரு வீடியோ போடணும்னு நினைச்சேன். தவெக தலைவர் விஜய் வழக்கம் போல கமெண்ட்ல வந்து திட்டறவங்க திட்டத்தான் போறாங்க. அவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. போற்றுவார் போற்றட்டும்னு நினைச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என ரொம்பவே கொதிப்புடன் பேசியிருக்கிறார். அசீம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளரெனச் சொல்லப்பட்டது. பிறகு சீமானுடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது அரசியல் களத்தில் கனன்று கொண்டிருக்கும் கரூர் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறையில் இருந்து கொண்டு மதியழகன், பவுன்ராஜ் செய்த காரியம்… அதிருப்தியை ஏற்படுத்திய விஜய்!
கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி
காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது நேற்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல் – ஃபலா பள்ளிக்கூடத்தில், தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளிக்கூடத்தின் மீது இன்று அதிகாலை, இஸ்ரேல் ராணுவம் 2 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, காஸாவின் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீருக்காகத் திரண்டிருந்த பாலஸ்தீனர்கள் […]
மதுரையில் இரு வேறு தீ விபத்துகள்: பாதிப்பு, சேதம் எவ்வளவு?
மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்குப் பிறகு, விளக்கை அணைக்காமல் சென்றதால், செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அடுத்தடுத்த கடைகளுக்கும் மளமளவென பரவி, பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை நாசமாக்கியது. அதேபோல், சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்றிலும் திடீரென தீப்பிடித்து எரிந்து, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது. இந்த இரண்டு தீ விபத்துகளும் மதுரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
குழந்தை பெற்ற 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. திருமணமாகாத காதல் ஜோடி குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். […]
இலங்கையில் விசர்நாய் கடியை முற்றாக ஒழித்த முதல் மாவட்டம்
இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித் நாணயக்கார இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக […]
யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 156வது ஜெயந்தி கொண்டாட்டம்: இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு
மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக […]
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே!
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமித் ஷாவுடன் தவெக தலைவர் விஜய் பேச்சு? நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதாக கூறப்படும் தகவலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார் .
மும்பை: வித்தியாசமான தீம்களில் கொலு; விமர்சையாக தசரா கொண்டாடிய தமிழர்கள்!
மும்பையில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவை கோலாகமாக கொண்டாடுவது வழக்கம். நவராத்திரியையொட்டி மும்பையில் உள்ள மாட்டுங்கா, செம்பூர், டோம்பிவலி, வாஷி போன்ற நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்களது இல்லங்களில் கொலுவைத்து இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமான தீம்களில் கொலுவைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்களது இல்லத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து கொலுவை பார்த்து சென்றனர். ரேவதி வேணுகோபால் இல்லம் செம்பூரில் வசிக்கும் ரேவதி வேணுகோபால் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கொலு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. ரேவதி வேணுகோபால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமை மையமாக வைத்து கொலு வைப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர் முருகனின் அறுபடை வீடுகளை தனது இல்லத்தில் கொலுவாக வைத்திருந்தார். ரேவதி வேனுகோபால் வீட்டின் முன் அறை முழுக்க கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. வீட்டின் நுழைவு வாயிலை சாமி சிலைகளால் அலங்கரித்து அனைவரையும் வரவேற்கும் வகையில் இருந்தது. குர்லா சுரேந்திரன் இல்லம் வழக்கமாக அனைத்து கொலு பொம்மைகளும் வெளியில் இருந்து வாங்கப்படுவது வழக்கம். ஆனால் ரேவதி தனது வீட்டில் முருகனின் அறுபடை வீட்டை தனது கைகளால் செய்து இருக்கிறார். அதுவும் ஆறு மாதங்கள் இதற்காகவே கடுமையாக உழைத்து தனது வீட்டையே கோயில் போன்று மாற்றி இருந்தார். இதே போன்று செம்பூர் நாக்கா பகுதியில் வசிக்கும் ரேகா ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமாக யாருமே வைக்காத ஒரு தீமை பயன்படுத்தி கொலு வைத்திருந்தார். அவர் ராமரின் பதாகையை மையமாக வைத்து இக்கொலு பொம்மைகளை வடிவமைத்து இருந்தார். ரேகா ராதாகிருஷ்ணன் இல்லம் ராமரின் பதாகையை அவரது தம்பி பரதன் வாங்கிச்செல்வது போன்ற காட்சியை தத்ரூபமாக பொம்மை வடிவத்தில் கொண்டு வந்திருந்தார். இது தவிர மரப்பாச்சி பொம்மைகளும் காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொலுவை காண்பதற்காக வரும் பெண்களுக்கு வழக்கமாக கொடுக்கும் நினைவு பரிசுகளை கொடுக்காமல் பதாகை தீமை வலியுறுத்தும் விதமாக கால்களில் வரக்கூடிய வெடிப்புகளுக்கு தடவக்கூடிய மருந்துகள் அடங்கிய மினி பேக் ஒன்றை வழங்கினார். இக்கொலுவை வைக்க தனது கணவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருமகள், மகள் மிகவும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்தார். 40 ஆண்டுகளாக அவர் தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். இதே போன்று கல்யான் பகுதியில் வசிக்கும் புவனா வெங்கட் தனது மகள் மற்றும் கணவர் இந்த முறை வைத்திருந்த கொலுவில் இந்தியா முழுவதும் இருந்து வாங்கி வரப்பட்ட பொம்மைகள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து புவனா வெங்கட் கூறுகையில்,''நாங்கள் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அங்கு பிரபலமான பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம். நான் மட்டுமல்லாது எனது மகளும் இதே போன்று எங்கு சென்றாலும் பொம்மைகளை வாங்கி வருவர். புவனா வெங்கட் இல்லம் பார்வதி தேவி அனைத்திலும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவுகூறும் வகையில் கொலுவில் கடவுள்கள் மட்டுமல்லாது, விலங்குகள் உட்பட அனைத்து வகையான பொம்மைகளும் இடம் பெறுகிறது''என்று தெரிவித்தார். ஹேமா கண்ணன் இல்லம் கோவண்டி ஹேமா கண்ணன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொலுவில் மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் உள்ள அம்மன் பிரதானமாக இடம் பெற்று இருந்தது. செம்பூர் சித்ரா ராமனும் கொலு பொம்மைகளால் தனது ஒட்டுமொத்த வீட்டையும் அலங்கரித்து இருந்தார். இது தவிர சண்முகானந்தா சபா, செம்பூர் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஹால் போன்ற பகுதியிலும், தாராவியிலும் கொலுவைக்கப்பட்டு இருந்தது. தாராவியில் முருகன் பக்த சபா சார்பாக பெண்கள் கொலுவைத்திருந்தனர். மும்பையில் பல்வேறு அமைப்புகள் கொலு போட்டிகளையும் அறிவித்து இருந்தன.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்கே? 3 தனிப்படைகள் அமைப்பு - தேடுதல் வேட்டையில் போலீஸ் !
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை மெட்ரோ: கிரீன்வேஸ்-மந்தைவெளி சுரங்கப்பாதை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டம்!
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி சுரங்கப்பாதை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது மெட்ரோ ரயில் திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு
பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லுபடி ஆகாது என்று அன்புமணி தரப்பு மறுத்துவிட்டது. ஜி.கே மணியின் மகன் இந்த நிலையில், தற்போது ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார். இந்த ஆணையை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியபோது, அவருடைய மகள் காந்திமதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் முகுந்தன் பிரச்னை பாமக இளைஞரணி தலைவராக காந்திமதியின் மகன் முகுந்தன் நியமிக்கப்பட்ட போது தான், ராமதாஸ், அன்புமணிக்கு இடையே பிரச்னை வெடித்தது. முகுந்தன் கடந்த மே மாதம் இந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார். இப்போது பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு இணையான பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி எப்படி எதிர்வினையாற்ற உள்ளாரோ?
சஷீந்திர ராஜபக்சவின் சீராய்வு மனு தள்ளுபடி!
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ… The post சஷீந்திர ராஜபக்சவின் சீராய்வு மனு தள்ளுபடி! appeared first on Global Tamil News .
பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்!
தொட்டலங்க பொட்டி அக்கா’ எனப்படும் விந்தனி பிரியதர்ஷிகாவுக்கு சொந்தமான கிரேண்ட்பாஸ் பர்குயூஷன் பகுதியிலுள்ள 03 கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த… The post பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்! appeared first on Global Tamil News .
கரூர் விவகாரம்: விசாரணை ஆணையத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
கரூர் சம்பவத்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கருத்து தெரிவிப்பது, செந்தில் பாலாஜி பதற்றத்துடன் செய்தியாளர்களை சந்தித்தது ஏன் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மசோதா தோல்வி அமெரிக்காவின் செலவீனங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவீனங்களுக்கு நிதி அங்கீகரிக்கப்படும். இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையில் செலவீனங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வி அடைந்துள்ளது. […]