அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு
நியூயார்க் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 19.9 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பெரிங் கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க […]
ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து; பயணம் செய்த 7 பேரின் நிலை என்ன?
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு மாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டது. அதற்காக ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்கிராஃப்ட் சி90' (Beechcraft C90) ரக விமானம், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து இன்று இரவு 7.11 மணிக்கு டெல்லி நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில், நோயாளியுடன் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர், ஒரு துணை மருத்துவப் பணியாளர் மற்றும் நோயாளியின் உதவியாளர்கள் இருவர் என மொத்தம் 7 பேர் பயணித்தனர். Air Ambulance விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இரவு 7.34 மணியளவில் கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம், வாரணாசிக்கு தென்கிழக்கே விபத்துக்குள்ளானதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஏஏஐபி (AAIB) குழு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் விமானத்தில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் விமான விபத்து: `உள்நோக்கத்துடன் சுவிட்ச்சை ஆஃப் செய்த விமானி?' - அதிர்ச்சி தகவலின் பின்னணி
‘மெகா வெற்றியைப் பெற்ற மே.இ.தீவுகள்’.. இனி இந்தியா அரையிறுதிக்கு போக 2 வாய்ப்புகள்தான் இருக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து, இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
'படிக்காத மேதை படைத்த பள்ளிக்கூடம்' - பழ வியாபாரியின் பத்மஸ்ரீ பயணம் தெரியுமா?
ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழுந்து வேலைக்குச் செல்லும்போது, நமக்கு இன்னும் வசதிகள் இருந்திருக்கலாமோ என்றோ அல்லது நம்மால் இவ்வளவுதான் முடியும் என்றோ பல நேரங்களில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், எதுவுமே இல்லாத மனிதர் ஒருவர் நினைத்தால் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதற்கு வாழும் உதாரணம், கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகளா ஹஜப்பா (Harekala Hajabba). ஆரஞ்சு பழங்களைச் சுமந்து, தனியாளாக விற்று, ஒரு பள்ளிக்கூடத்தையே உருவாக்கிய இந்தச் சாதாரண மனிதரின் கதை, உங்களின் இன்றைய தினத்தைச் சிறப்பாகத் தொடங்க ஒரு மிகச்சிறந்த உந்துதலாக இருக்கும். Hajabba கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள `நியூபடுப்பு' (Newpadupu) என்ற குக்கிராமம்தான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்றே கிடையாது. வறுமையின் காரணமாக ஹஜப்பாவும் பள்ளிக்கூடத்துப் பக்கம் சென்றதில்லை. மங்களூர் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களைச் சுமந்து சென்று விற்பதுதான் அவருடைய தினசரி பிழைப்பு. ஒரு நாளைக்குச் சுமார் 150 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். ஒருநாள், வெளிநாட்டவர் இருவர் ஹஜப்பாவின் கூடையிலிருந்த பழங்களைப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் அதற்கான விலையைக் கேட்டனர். ஹஜப்பாவிற்கு ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் ஹஜப்பா திருதிருவென முழிக்க, அந்த வெளிநாட்டவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி... மகள் டாக்டர்... மகன் ரயில்வே ஊழியர்... விதியை வென்ற கல்வி! அந்தச் சம்பவம் ஹஜப்பாவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எனக்குப் படிக்கத் தெரியாததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது? என் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் நான் படித்திருப்பேனே. எனக்கு நேர்ந்த இந்த நிலைமை என் ஊரில் உள்ள எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது, என்று அந்த நிமிடத்தில் ஒரு சபதம் எடுத்தார். ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவரால் பள்ளிக்கூடம் கட்டுவது என்பது சாதாரண கனவு அல்ல. இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் பலரும் அந்தப் பேச்சை காதுகொடுத்துக் கூட கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஹஜப்பாவின் வைராக்கியம் பெரிதாக இருந்தது. Hajabba அன்றிலிருந்து தான் சம்பாதிக்கும் அந்தச் சிறிய தொகையிலிருந்து ஒரு பகுதியைத் தன் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகச் சேமிக்கத் தொடங்கினார். பல வருடங்கள் அந்தச் சேமிப்பு தொடர்ந்தது. ஆரம்பத்தில் தன் ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியின் நிர்வாகிகளிடம் பேசி, அங்குள்ள ஒரு சிறிய அறையில் 28 குழந்தைகளுடன் ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். அதன்பிறகு, ஊர் மக்களின் சிறு உதவிகளோடும், தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொண்டும் தன் கிராமத்திலேயே ஒரு நிலத்தை வாங்கி, 2004-ஆம் ஆண்டு `தட்சிண கன்னடா ஜில்லா பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி' என்ற அரசாங்கப் பள்ளியைக் கட்டி முடித்தார். பள்ளிக்கூடம் கட்டியதோடு ஹஜப்பா நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தப் பள்ளிக்குச் சென்று, வகுப்பறைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து, பள்ளியின் பராமரிப்பு வேலைகளையும் அவரே தன் கைகளால் செவ்வனே செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அவரை `அட்சர சந்த்' (எழுத்துச் சித்தர் / Saint of Letters) என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். அவரது இந்த தன்னலமற்ற மாபெரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ` பத்மஸ்ரீ ' விருதை அறிவித்தது. ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது - முதல்வர் ஸ்டாலின் Hajabba விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கூடியிருந்த அந்த மாபெரும் சபையில், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்து, காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலோடு நடந்து சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார் ஹஜப்பா. அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. நமக்குத் தேவையான வளங்கள் இல்லை, பின்புலம் இல்லை, நேரம் இல்லை என்று பல காரணங்களை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எதைக் கண்டும் சோர்வடையாமல் தன்னிடம் இருந்ததை மட்டுமே வைத்து ஒரு மாபெரும் கல்விப் புரட்சியைச் செய்துள்ளார் ஒரு பழ வியாபாரி. எந்த ஒரு பெரிய மாற்றமும், ஒரு தனி மனிதனின் சிறிய முடிவில் இருந்தே தொடங்குகிறது என்பதற்கு ஹஜப்பா ஓர் உதாரணம். Hajabba உங்களின் இன்றைய நாள், ஹஜப்பாவைப் போல ஒரு சிறிய, ஆனால் உறுதியான முன்னெடுப்போடு தொடங்கட்டும்! 'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!
முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். நம் வினைகளைத் தீர்க்கும். அப்படி ஒரு தலம்தான் தாண்டிக்குடி. பழநி முருகனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்கள் தாண்டிக்குடி முருகனையும் வழிபட வேண்டும் என்பார்கள் அந்தப் பகுதி மக்கள். அந்த அளவுக்குச் சாந்நித்தியம் வாய்ந்த இந்தத் திருத்தலத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம். தாண்டிக்குடி பாலமுருகன் திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். கற்பக மகா முனிவர் என்னும் முனிவர், முருகக்கடவுளை எண்ணித் தவம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் முருகன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்! ஒருமுறை இந்தப் பகுதிக்கு பன்றி மலை சாமியார் என்ற மகான் எழுந்தருளினார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார். மக்கள் அவர் சொல்லை மதித்து, அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. இதைக் கண்டதும் மக்கள் உற்சாகம் அடைந்தனர். அதன்பின் அந்த இடத்தின் புராணத்தைத் தேடியபோது கற்பக மகா முனிவரைப் பற்றியும் முருகப்பெருமான் அவருக்காக எழுந்தருளியது குறித்தும் தெரியவர பூரித்துப் போயினர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்த ஊரில் உள்ள மலை குறித்த தல வரலாறும் சுவாரஸ்யமானது. அகத்திய முனிவரின் ஆணை படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான் இடும்பன். அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போது பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்! கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். தற்போதுள்ள மூலவர் விக்ரகம் உருவாக்கிய சிற்பியின் கனவில் முருகப்பெருமானே தோன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறி அருளினார் என்கிறார்கள். மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டால் நோய் தீரும் என்கிறார்கள். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானைத் தரிசனம் செய்வார்கள். அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் இயற்கை எழில்கொஞ்சும் இந்த மலைத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுங்கள். வாழ்வில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும். தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்
ஜப்பானில் தண்ணீர் குழாயை சரி செய்ய 31 கிலோ தங்கம் வழங்கிய நபர்
ஜப்பானில், தண்ணீர் குழாயை சரி செய்ய மர்ம நபர் ஒருவர் 31 கிலோ தங்கத்தை தானமாக வழங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் கன்சாய் பகுதியில் அமைந்துள்ள ஒசாகா(Osaka) நகரத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இது ஜப்பானின் 3வது பெரிய நகரமாகவும், வணிக மையமாகவும் உள்ளது. ஜப்பானில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் குழாய்கள், 40 ஆண்டுகாலமாக மாற்றப்படாமலே உள்ளது. பெயர் வெளியிட விரும்பாத நபர் 2024 ஆம் ஆண்டில், ஒசாகா நகரின் […]
IDFC – AU Bank Fraud: முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பா? | SBG Bond | IPS Finance - 444
சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி!
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில்,இன்று திங்கட்கிழமை மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாடியில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண […]
இந்த வார ராசிபலன் பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன்
கோவை மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க ட்ரோன் வசதி!
கோவை மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்க ட்ரோன் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வெளியான தகவல்!
தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஈரானை நெருங்கிவரும் போர்: குடிமக்களை வெளியேற்றும் நாடுகள்!
அமெரிக்கா - ஈரான் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து ஜெனீவாவில் மறைமுக பேச்சுவார்த்தைகளுக்கு எதிரிகள் தயாராகி வரும் வேளையில், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இரு நாடுகளிடமிருந்தும் போருக்கான ஆவேசப் பேச்சுக்கள் வெளிவந்தன. மத்திய கிழக்கில் இராணுவப் படையின் குவிப்புடன் ஈரான் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொண்டாலும், பல்கலைக்கழக மாணவர்கள் புதிய செமஸ்டரை அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடங்கியுள்ளனர். சனவரியில் உச்சத்தை எட்டிய நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களின் முழக்கங்களை மீண்டும் எழுப்பி, கொடிய ஒடுக்குமுறையை சந்தித்தனர். கடந்த வாரம், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை குறைக்கவில்லை என்றால், வரையறுக்கப்பட்ட தாக்குதலை எடைபோடுவதாக டிரம்ப் கூறினார். ஆனால் தெஹ்ரானின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று எந்தவொரு தாக்குதலும், வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், ஆக்கிரமிப்புச் செயலாகக் கருதப்படும் என்று கூறியது. எந்தவொரு நாடும் ஒரு ஆக்கிரமிப்புச் செயலுக்கு மூர்க்கமாக எதிர்வினையாற்றும், அதனால் நாங்கள் அதைத்தான் செய்வோம் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் கூறினார். ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்திற்கான வரைவு திட்டத்தை வரும் நாட்களில் மத்தியஸ்தர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. எதிர்வரம் வியாழக்கிழமை, ஒரு ஒப்பந்தத்தை எட்ட தெஹ்ரானுக்கு அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே இருப்பதாக டிரம்ப் கூறினார். ஈரான் தனது அணுசக்தி திட்டம் பொதுமக்களுக்கானது என்று வலியுறுத்துகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அது அணுகுண்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக நம்புகின்றன. ஈரான் அணுசக்தி பிரச்சினையைத் தாண்டி எதையும் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அகற்றியுள்ள நிலையில், வாஷிங்டன் தெஹ்ரானின் ஏவுகணைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள போராளிக் குழுக்களுக்கு அதன் ஆதரவு குறித்தும் விவாதிக்க விரும்புகிறது. இரு நாடுகளும் கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் ஓமானிய மத்தியஸ்தத்தின் கீழ் இரண்டாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தையை முடித்தன. பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது ஒரு புதிய வாய்ப்பு என்று ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறினார். ஆனால் தனது நாடு தாக்கப்பட்டால் பிராந்திய மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். எந்தவொரு புதுப்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் விளைவுகளும் ஒரு நாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது. மேலும் அத்தகைய நடவடிக்கைகளைத் தொடங்குபவர்கள் அல்லது ஆதரிப்பவர்களிடமே பொறுப்பு இருக்கும்என்று கரிபாபாடி கூறினார். மோதல் அபாயம் ஈரானில் அதிகரித்து வரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பிற நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தூண்டியுள்ளது. இன்று திங்கட்கிழமை இந்தியாவும் ஸ்வீடன், செர்பியா, போலந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து தனது குடிமக்களை ஈரானை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்தது. இதற்கிடையில், ஈரானுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்ற ஷியைட் போராளிக் குழு ஹெஸ்பொல்லாவின் தாயகமான லெபனானில் உள்ள அதன் தூதரகத்தை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அவசரகாலமற்ற பணியாளர்களுக்கு உத்தரவிட்டது. வார இறுதியில் ஃபாக்ஸ் நியூஸ் ஒளிபரப்பிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப், வாஷிங்டனின் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் படை நிலைநிறுத்தலுக்கு எதிராக ஈரான் ஏன் சரணடையவில்லை என்று டிரம்ப் யோசித்து வருவதாகக் கூறினார். ஈரானியர்கள் தங்கள் வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் சரணடைந்ததில்லை என்று திங்களன்று பகாய் பதிலளித்தார். புதிய மோதல்களைத் தூண்டுவதற்கு எதிராக சீனா வாஷிங்டனை எச்சரித்துள்ளது. திங்களன்று, ஜெனீவாவில் நடந்த ஆயுதக் குறைப்பு மாநாட்டில், சீனத் தூதர் ஷென் ஜியான் கூறினார்.சர்வதேச உறவுகளில் ஒருதலைப்பட்சமான கொடுமைப்படுத்துதலையும் பலத்தைப் பயன்படுத்துவதையும் நாங்கள் எதிர்க்கிறோம். பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட நாட்டில் பொருளாதார வலிகளால் டிசம்பரில் தூண்டப்பட்ட போராட்டங்கள், பல ஆண்டுகளில் அதிகாரிகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சவாலாக வளர்ந்தன. ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வன்முறை உச்சத்தை எட்டியபோது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது, பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அடக்கப்பட்டனர். அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) 7,000 க்கும் மேற்பட்ட கொலைகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கிறது. 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் வன்முறை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட பயங்கரவாத செயல்களால் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். வார இறுதியில் பல்கலைக்கழகங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. திங்களன்று AFP ஆல் புவிஇருப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், 1979 ஆம் ஆண்டு முடியாட்சியைக் கவிழ்த்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈரானியக் கொடியை தெஹ்ரானில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர்கள் எரிப்பதையும், இஸ்லாமியக் குடியரசு ஒழிகஎன்று கோஷமிடுவதையும் காட்டியது.
நெதர்லாந்தின் இளைய பிரதமராக ராப் ஜெட்டன் பதவியேற்றார்
நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை புதிய சிறுபான்மை கூட்டணி அரசாங்கத்தில்மையவாதியான ராப் ஜெட்டன் பிரதமராக பதவியேற்றார். நெதர்லாந்தில் ஜெட்டன் இளைய மற்றும் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் பிரதமரானார். அவரது கட்சியான EU-சார்பு D66, அக்டோபர் தேர்தலில் வெற்றி பெற்றது, கீர்ட் வைல்டர்ஸ் தலைமையிலான தீவிர வலதுசாரி ஜனரஞ்சக சுதந்திரக் கட்சியை (PVV) மிகக் குறுகிய வித்தியாசத்தில் தோற்கடித்தது. புதிய கூட்டணியை உருவாக்க , D66 மைய-வலது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வலதுசாரி VVD உடன் இணைந்து, கீழ் சபையில் 150 இடங்களில் 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. நெதர்லாந்து பொதுவாக பெரும்பான்மை கூட்டணிகளால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் பெரிதும் உடைந்த அரசியல் நிலப்பரப்பு ஒன்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினமாகிவிட்டது. முன்னாள் பிரதமர் டிக் ஸ்கூப்பின் அரசாங்கம் அதன் பதவிக்காலம் தொடங்கிய 11 மாதங்களிலேயே கவிழ்ந்தது. புதிய கூட்டணிக்கு செனட்டிலும் பெரும்பான்மை இல்லை, அதாவது முக்கிய சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படும். ஜெட்டன் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு D66 கட்சிக்காக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்ததற்காக அவர் ரோபோ ஜெட்டன் என்று பரவலாக அழைக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் தன்னை மிகவும் நிதானமானவராகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார், மேலும் காலப்போக்கில் பிரபலமடைந்தார். புத்திசாலித்தனமான நபர்என்ற பிரைம்-டைம் தொலைக்காட்சி வினாடி வினாவின் இறுதிச் சுற்றை கூட அடைந்தார். நெதர்லாந்தின் நீண்டகால பிரதமரும் தற்போது நேட்டோ பொதுச் செயலாளருமான மார்க் ருட்டேவின் கீழ் ஜெட்டன் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார் . 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2030 ஆம் ஆண்டில் டச்சு கார்பன் உமிழ்வை 60% குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 120 நடவடிக்கைகளுடன் கூடிய காலநிலை சட்டப் பொதியை அவர் ஆதரித்தார். அவர் தனது கூட்டாளியான நிக்கோலஸ் கீனனை மணக்க நிச்சயிக்கப்பட்டார். அவர் அர்ஜென்டினாவில் இரண்டு முறை ஒலிம்பியனும் ஹாக்கி நட்சத்திரமுமானவர்.
எப்ஸ்டீன் விசாரணை: முன்னாள் தூதர் மண்டேல்சன் கைது!
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவுகள் தொடர்பான தவறான நடத்தை விசாரணையில், அமெரிக்காவிற்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனை பிரிட்டிஷ் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 72 வயது முதியவரான பீட்டர் மண்டேல்சனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் விசாரணைக்காக லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த அறிக்கையில் முன்னாள் தூதரின் பெயரை போலீசார் குறிப்பிடவில்லை, ஆனால் சந்தேக நபர் மண்டேல்சன் என முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தார், அவர் லண்டன் வீட்டிலிருந்து ஒரு அடையாளம் தெரியாத காருக்கு போலீஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவது படமாக்கப்பட்டது. முன்னாள் தொழிலாளர் கட்சி பிரதமர் கோர்டன் பிரவுனின் கீழ் 2008 முதல் 2010 வரை வணிகச் செயலாளராகப் பணியாற்றியபோது, எப்ஸ்டீனுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாக மண்டேல்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒரு மைனர் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்காக எப்ஸ்டீன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். மண்டேல்சன் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அமெரிக்காவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் தூதராகப் பணியாற்றினார். அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகள்என்று அழைக்கப்படும் ஒரு தொகுதி ஆவணங்களில் மறைந்த நிதியாளருடனான அவரது தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 1990 களில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியை புதிய தொழிலாளர்என்று மறுபெயரிடுவதற்குப் பின்னால் மண்டேல்சன் ஒரு முக்கிய நபராகக் கருதப்பட்டார் மற்றும் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் கீழ் பல்வேறு மந்திரி பதவிகளில் பணியாற்றினார். நவீன அரசியல் தகவல்தொடர்புகளில் அவர் பெற்ற தேர்ச்சியால் பிரிட்டிஷ் அரசியல் வட்டாரங்களில் அவருக்கு இருளின் இளவரசர்என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அவருக்கு வாழ்நாள் துணைப் பதவி வழங்கப்பட்டது, இது பரம்பரை அல்லாத பட்டமாகும், இது அவர் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இல்லாவிட்டாலும் பிரபுக்கள் சபையில் அமர்ந்து அமைச்சர் பதவியை ஏற்க அனுமதித்தது. பொது அலுவலகத்தில் தவறான நடத்தை என்ற சந்தேகத்தின் பேரில் மண்டேல்சன் கைது செய்யப்பட்டுள்ளார். இது முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைப் போலவே சந்தேகிக்கப்படும் குற்றமாகும். அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டாகக் கருதப்படும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தைஎன்பது, விசாரணை செய்வதற்கும், குற்றம் சாட்டுவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும், தண்டனை வழங்குவதற்கும் மிகவும் கடினமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு சந்தேக நபர், ஒரு பொதுப் பதவியை வகித்திருக்க வேண்டும், வேண்டுமென்றே தவறான நடத்தையில் ஈடுபட்டார், அது பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் நியாயமான சாக்குப்போக்கு அல்லது நியாயப்படுத்தல் இல்லாமல் செயல்பட்டார் என்றும் வழக்கறிஞர்கள் நிரூபிக்க வேண்டும். மண்டேல்சன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
சிங்கள உயரடுக்கு கட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி புதைக்கப்படுகிறதா? பனங்காட்டான்
தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழரசை அழித்துவிடுமோ என்ற அச்சம் தாயகத்தைவிட புலம்பெயர் மண்ணில்; கவலை தோய்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் தீவிரமாக அலசப்படும் விடயம் இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரம் அல்லது அதன் எதிர்காலம் பற்றியது. இதன் மையமாக அமைந்திருப்பது சுமந்திரனுக்கும் சிவஞானம் சிறீதரனுக்குமிடையான மோதல் என்றும் சொல்லலாம். எப்பாடுபட்டாவது சிறீதரனை கட்சியிலிருந்து படிப்படியாக அப்புறப்படுத்தி விடவேண்டும். முடியாவிட்டால் இப்போதைக்கு தமிழ்த் தேச விரோதியாக அடையாளம் காட்டி ஓரங்கட்டியாவது விடவேண்டும் என்பதில் சுமந்திரன் தீவிரமாக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் நீண்டகால ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. கட்சியின் மிகமிக மூத்த உறுப்பினரான சி.வி.கே.சிவஞானம் பதில் தலைவராக இருக்கும்வேளையில் பதில் செயலாளராகவுள்ள சுமந்திரன் தம் விருப்பப்படி காரியங்களை ஆற்றுவதாக உள்ளேயும் வெளியேயும் பலர் கருதுகிறார்கள். சில விடயங்களை சிவஞானம் அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக அவ்வாறில்லையென்று கூறுகிறார். சிறீதரன் மீது சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாது இருப்பதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவரும் சிவஞானம் அவர்கள், தாம் தலைமைப் பொறுப்பில் இருக்கும்வரை சிறீதரனை கட்சியிலிருந்து நீக்க அனுமதிக்கப் போவதில்லையென்றும், தம்மை மீறி இதனை எவராவது செயற்படுத்த முனைந்தால் தமது ஆளுமையை அப்போது தெரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்து வருவதாகவும் நம்பகமான வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கட்சியைச் சேர்ந்த சிலரை அறுவான், குறுக்கால போவான் என்று இவர் கூறியதையும் இப்போது சிலர் நினைவூட்டுகிறார்கள். அதேசமயம், ஒரு காலத்தில் சுமந்திரனும் சிறீதரனும் நெருக்கமான கூட்டாளிகளாக இருந்தபோது சிவஞானத்துக்கு எதிராக இவர்கள் செயற்பட்டதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. எனினும், கடந்த பொதுத்தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலில் சிறீதரனின் பெயர் தவிர்க்கப்பட்டிருந்த வேளையில், அவரது பெயரை தீர்மானமாக மொழிந்து இடம்பெறச் செய்தவர் சிவஞானமே என்ற தகவலும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. பதில் செயலாளர் சுமந்திரனின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் திரு. சிவஞானம் அவர்கள் தலையாட்டியாக இருந்து வருவதான கருத்து இது தொடர்பான பல வட்டாரங்களில் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் பரவலாக உள்ளது. தமிழர்களால் நடத்தப்படும் அமெரிக்க ஐரோப்பிய வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சிகளில் அண்மைக் காலங்களில் இதனை வெளிப்படையாக அவதானிக்க முடிகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அரசியலமைப்புப் பேரவையில் லஞ்ச ஒழிப்புத் திணைக்களத்துக்கு ஒருவரை தெரிவு செய்யும் விடயத்தில் சிவஞானம் சிறீதரன் அநுர குமர அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து எட்டு சந்தர்ப்பங்களில் அவ்வாறே நடந்து கொண்டதாகவும் தமிழரசுக் கட்சி அவர்மீது குற்றஞ்சாட்டியுள்ளது. சிறீதரன் மேற்படி பேரவைக்கு சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதியாகச் செயற்பட்டாரே தவிர தமிழரசுக் கட்சியினால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இவர் மீதான குற்றச்சாட்டை சிங்கள மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டது போலவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்றத்தில் ஆக்ரோசமாகக் குரல் கொடுத்தவர் தயாசிறி ஜெயசேகர.. இவர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர். முன்னைய பல அரசாங்கங்களில் கட்சி விட்டு கட்சி மாறி எப்போதும் அமைச்சராகவேயிருந்த ஜி.எல்.பீரிஸின் சட்டக்கல்லாரி மாணவர் இவர். தமது குருவைப் போலவே தயாசிறியும் பல கட்சிகளில் குந்தி எழும்பியவர். இவர் சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சுமத்திய குற்றச்சாட்டுகளை வரிக்கு வரி சொல்லிக் கொடுத்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பகிரங்கமாகியுள்ளது. இவ்வாறான ஒரு கேவல நிலைக்கு தமி;ழரசுச் கட்சியின் நிகழ்காலம் மாறியுள்ளது. சுமந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருநாகல் மாவட்ட எம்.பியான தயாசிறியை நாடியுள்ளார் என்றால், எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் அரசு என்ற பெயரில் தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று இந்தத் தடத்தில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்தக் குறுநாடகத்தை நிரூபிப்பது போன்று சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்று ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க்கை தளமாகக் கொண்ட ''தமிழ் டயஸ்பரா நியூஸ்''இதனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியை காலத்தின் தேவை கருதி இன்றைய பத்தியில் இணைப்பதை அவசியமெனக் கருதுகிறேன். அது பின்வருமாறு உள்ளது: 'இலங்கைத் தமிழரசுக் கட்சி வேண்டுமென்றே ஆபத்தான உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது - தற்செயலாக அல்ல, மாறாக திட்டமிடப்பட்டு. தமிழ் மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைகள், சிங்கள உயரடுக்கின் அரசியல் நலன்களுக்கு சேவையாற்றும் வகையில், தெளிவாக இலக்கு வைத்துள்ளது. சுமந்திரனுக்கு தமிழ் மக்களிடமிருந்து ஜனநாயக ஆணை கிடையாது. பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் நிராகரிக்கப்பட்டார். தலைமைத்துவப் போட்டிகளில் கட்சி உறுப்பினர்களால் நீக்கப்பட்டார். மேலும் உள்சூழ்ச்சியின் மூலமாக மட்டுமே அரசியல் ரீதியாக உயிர் பிழைத்தார். ஆயினும்கூட, இன்று, அவர் தமிழரசுக் கட்சி மீது சர்வாதிகார கட்டுப்பாட்டைப் பயன்படுத்த முயல்கிறார். தமிழரசுக் கட்சி சாதாரண கட்சி அல்ல. இது தமிழ்த் தேசியத்தின் வரலாற்று அரசியல் குரல். தமிழ் அரசியல் ஓரங்கட்டலுக்கு ஒரு ஜனநாயக தீர்வாக கூட்டாட்சியைக் கோரிய முதல் கட்சி இதுவாகும். 1977ல் தெளிவான மக்கள் ஆணையுடன் தமிழீழத்தை ஆதரித்தது. இந்த மரபை உள்நாசவேலைகளால் அழிக்கவோ, கடத்தவோ அல்லது அகற்றவோ முடியாது. தமிழரசுக் கட்சியை எளிதில் அழிக்க முடியாது - வரலாறு இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. வெகுஜன ஆதரவைப் பெறமுடியாத சுமந்திரன் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். அவரது மூலோபாயம் தெளிவாக உள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியை உடைத்து, அதன் அடித்தளத்தை வீழ்த்தி, வெளிப்புற சிங்கள பெரும்பான்மை சக்திகள் - குறிப்பாக அநுர குமர திஸ்ஸநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் ரீதியாக ஆதாயம் அடைய முடியும். இது சீர்திருத்தம் அல்ல. இது அரசியல் சிதைவு. சிவஞானம் சிறிதரனை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இந்த நிகழ்ச்சி நிரலை சந்தேகத்திற்கு இடமின்றி அம்பலப்படுத்துகிறது. சிறீதரன் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவால் ஒருமனதாக நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்பு சபையில் அவரது பதவி இலங்கைத் தமிழரசுக் கட்சியால் மட்டும் வழங்கப்படவில்லை, மாறாக, பாராளுமன்றத்தின் சிறுபான்மை கட்சிகளால் வழங்கப்பட்டது. எனவே, அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்த கட்சிக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை. இந்த நடவடிக்கை தனிப்பட்ட பழிவாங்கல், அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு கீழ்ப்படிதல் என்பதைத் தவிர வேறொன்றையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. சுமந்திரன் கொழும்பில் இருந்து செயற்படுகின்றார். தமிழர் தாயகத்தின் யதார்த்தத்தில் அவர் வாழவில்லை. இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, கண்காணிப்பு அல்லது கட்டமைப்பு பாகுபாட்டை அவர் எதிர்கொள்ளவில்லை. ஆயினும்கூட, தனக்கு இனி அதிகாரம் இல்லாத மக்களின் அரசியல் எதிர்காலத்தை ஆணையிட அவர் கருதுகிறார். அவரது நடவடிக்கைகள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு பொறுப்புக்கூறல் அன்றி, சிங்கள உயரடுக்கின் அதிகார கட்டமைப்புகளுடன் இணைந்திருப்பதை பிரதிபலிக்கின்றனஎன்று இந்த அறிக்கையின் முக்கிய பகுதி தெரிவித்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் புலன் பெயராமலேயே இருக்கிறார்கள் என்பதற்கு ''தமிழ் டயஸ்பரா நியூஸ்''நல்லதொரு சான்று. முன்னர் பல தடவை வெளிநாடுகளுக்குச் சென்றபோது அங்கு வாழும் புலன் பெயராத் தமிழர்களால் எந்த வகையில் தாம் வரவேற்கப்பட்டார் என்பதையும், சில நாடுகளில் குசினிக் கூட்டங்களில் மட்டும் பங்குபற்ற நேர்ந்தது பற்றியும் அனுபவம் பெற்ற சுமந்திரனை தமிழரசுக் கட்சி எங்கு வைக்க வேண்டுமென்பதை சிந்திக்க வேண்டிய காலம் இதுவென்பதை ஷதமிழ் டயஸ்பரா நியூஸ்| புரியும் வகையில் தெரியத் தந்துள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டினுடனான நட்பு – அதிகார துஸ்பிரயோகம் –பீட்டர் மண்டல்சன் கைது!
முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், முக்கிய அரசியல் பிரமுகருமான பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) லண்டனில் உள்ள அவரது இல்லத்தில்… The post ஜெப்ரி எப்ஸ்டினுடனான நட்பு – அதிகார துஸ்பிரயோகம் – பீட்டர் மண்டல்சன் கைது! appeared first on Global Tamil News .
பெய்ரூட் தூதரக பணியாளர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா!
அமெரிக்கா, லெபனானின் தலைநகரான Beirut நகரிலுள்ள தனது தூதரகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பு… The post பெய்ரூட் தூதரக பணியாளர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா! appeared first on Global Tamil News .
பெய்ரூட் தூதரக பணியாளர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா!
அமெரிக்கா, லெபனானின் தலைநகரான Beirut நகரிலுள்ள தனது தூதரகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பு… The post பெய்ரூட் தூதரக பணியாளர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கா! appeared first on Global Tamil News .
டிரம்ப் வீட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 20 இளைஞன் சுட்டுக்கொலை
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி கூறுகையில், டிரம்ப் வீட்டிற்குள் ஆயுதத்துடன் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைய முயன்ற நபரை ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு 20 […]
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை!
சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை… The post சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை! appeared first on Global Tamil News .
கொலம்பியா ரசியலில் டிஜிட்டல் புரட்சி ; தேர்தலில் AI குறித்து கடும் விவாதம்
கொலம்பியா பார்லிமென்ட் தேர்தலில், ‘கைத்தானா’ எனும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அடுத்த மாதம் 8ம் திகதி பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அந்நாட்டு பூர்வீக குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒன்றில், ஏ.ஐ., வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கைத்தானா எனும் ஏ.ஐ., வேட்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கருவிகள் வாயிலாக, பூர்வீக குடிமக்களின் குரல்களை […]
வைரலாகும் குரங்குக் குட்டி! தனிமையில் வாடுவதற்கு மனிதர்களே காரணம்?
ஜப்பான் விலங்கியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட குரங்குக் குட்டி, பொம்மையை அரவணைத்தபடி இருக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பூங்காவில் மற்ற குரங்குகள் குட்டிக் குரங்கை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், பூங்கா நிர்வாகி பொம்மையைக் கொடுத்துள்ளார். அந்த குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பைத் தேடியவாறு, அதனுடன் குட்டிக் குரங்கு விளையாடி வருகிறது. பலரால் கைவிடப்பட்ட தனிமையின் வலி மிகவும் கொடூரமானது என இந்த விடியோ உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஜப்பானின் இச்சிகாவா நகரத்திலுள்ள பூங்காவில், […]
இலங்கை சுங்க அதிகாரிகளின் எச்சரிக்கை!
6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு, 6 வருடங்களாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இந்தத் […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபாரமாக செயல்பட்டு மெகா வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால், இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
விஜய் வடசென்னையை குறிவைப்பது ஏன்? திமுக சிம்மாசனத்தை சாய்க்க தவெக முயற்சி -அரசியல் கணக்கு!
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என தவெகவின் முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் வடசென்னை விஜய் குறி வைப்பது ஏன் திமுகவின் கோட்டையை கைப்பற்ற விஜய் திட்டமிட்டுள்ளார? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மெக்சிகோவில் பெரும் பதற்றம் நிலை ; போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் மரணமா?
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்தத் தகவலைத் தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் […]
மருத்துவக் கல்வி பெற பாகிஸ்தான் பறந்த இலங்கை மாணவர்கள் !
பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்கள் அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது. மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் லியாகுத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) ஆகியவற்றில் தமது […]
அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில்
ஆடம்பரங்களை இல்லாதொழிக்கப்போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய அனுர அரசு யாழில நடாத்திய அனுர வருகை நிகழ்வகளிற்கு சுமார் இரண்டு மில்லியனிற்கு மேல் அரச நிதியை அள்ளிவீசியுள்ளது. அனுர பங்கெடுத்த முழுநாடு ஒன்றாக நிகழ்வுக்கு மக்களை ஏற்றி இறக்க மட்டும் 23 இலட்சத்து 43 ஆயிரம் அரச நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தென்மராட்சியின் மீசாலையில் நடைபெற்ற வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 11 தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தியவகையில் 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நிகழ்வில் பங்கெடுக்கவென அழைத்து வரப்பட்டவர்களிற்கென சிற்றுண்டி வழங்க , குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி வழங்க யாழ்.மாவட்ட செயலகம் ஊடாக மில்லியன் கணக்கில் நிதி அள்ளிவீசப்பட்டுள்ளது. இதனிடையே ஜனாதிபதி அனுர பங்கெடுக்கும் நிகழ்வில் மக்கள் அணிதிரள்வதான காண்பிக்க தென்னிலங்கையில் இருந்து மக்களை வருவிக்கவென பேரூந்துகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மண்டைதீவு மைதான வேலை இடைநிறுத்தம்!
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் அனுர அரசினால் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை'ஒன்றை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
YBE Nails Lashes Brows, a specialised salon concept focused exclusively on nail, lash and brow services, is launched by Tip
விஜய் என்ன தகுதி இருக்கு.. காமராஜர், அண்ணா ஆட்சி பற்றி பேச - தவெகவுக்கு சவால் விட்ட வைஷ்ணவி!
வேலூரில் நடத தவெக பொதுக்கூட்டத்தில் முதல்வரை விமர்சித்து பேசியிருதற்கு திமுக ஆதரவாளர் வைஷ்ணவி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடு கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு ; பலர் மாயம், ஐவர் பலி
கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான இந்த படகு பயணத்தில் ஆபத்தும் உள்ளது. இந்த நிலையில், கிரீட் தீவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடலில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 அகதிகள் பலியானார்கள். 20 பேர் காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின்போது, படகில் இருந்து வர்த்தக கப்பல் ஒன்றில் ஏணி வழியே அகதிகள் ஏற […]
குளத்தில் குளிக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு
பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்தார். யானை தாக்குதலினால் நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் குளிப்பதற்காக பானம குளத்திற்குச் சென்றுவிட்டு, தனது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாடிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]
WI vs ZIM: ‘காட்டடி பேட்டிங்’.. இந்தியா சாதனையை சமன் செய்த மே.இ.தீவுகள் அணி: 254 ரன்கள் குவிப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அபாரமாக செயல்பட்டு ரன் மழை பொழிந்தது. இறுதியில், 200+ ரன்களை குவித்து, இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம்.
டட்லி சிரிசேன விமல் வீரவங்ச -“சகோதரரை விட அனுரவே நெருக்கம்!”–டட்லி மீது பாயும் விமல்!
முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு மற்றும் NPP அரசாங்கத்துடனான அவரது நெருக்கம் குறித்து… The post டட்லி சிரிசேன விமல் வீரவங்ச -“சகோதரரை விட அனுரவே நெருக்கம்!” – டட்லி மீது பாயும் விமல்! appeared first on Global Tamil News .
முட்டாள்கள், வளர்ப்பு நாய்கள் ; அமெரிக்க நீதிபதிகளை திட்டித் தீர்த்த ட்ரம்ப்
கனடா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார். வளர்ப்பு நாய்கள் இது தொடர்பில் ட்ரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், […]
நெடுந்தாரகையில் மதுபான ரின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்
நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில்இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த “நெடுந்தாரகை” படகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களைஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர். படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்தகடற்படையினரும் பெருமளவான மதுபானரின்களைபடகில் ஏற்றி சென்றுள்ளனர். பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபானரின்களைஏற்றி சென்றமை தொடர்பில் பொலிஸாரும்நடவடிக்கை எடுக்கவில்லை […]
Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!
பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா.... வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித். முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். சார்பட்டா 2 கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையேற்க சென்ற வேளை பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.
`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' - பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது. சேகர் பாபு மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார். நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது. இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன். தங்கம் தென்னரசு அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற... மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் 1 கிலோ கிராம் 750 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில்பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து ஒரு கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்: திரைத்துறை வாய்ப்புகளைக் குறிவைக்கும் புதிய ஸ்டில்கள்
திரைத்துறையில் இரண்டு தசாப்தங்களைக் கடந்துள்ள நடிகை காஜல் அகர்வால், தனது புதிய திரைப்படத் திட்டங்களுக்காகச் சமீபத்தில் நடத்திய புகைப்படத் தொகுப்புகளை (Photoshoot) வெளியிட்டுள்ளார். இது அவரது அடுத்தகட்ட மார்க்கெட் நகர்வை உறுதிப்படுத்துகிறது.
காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்: திரைத்துறை வாய்ப்புகளைக் குறிவைக்கும் புதிய ஸ்டில்கள்
திரைத்துறையில் இரண்டு தசாப்தங்களைக் கடந்துள்ள நடிகை காஜல் அகர்வால், தனது புதிய திரைப்படத் திட்டங்களுக்காகச் சமீபத்தில் நடத்திய புகைப்படத் தொகுப்புகளை (Photoshoot) வெளியிட்டுள்ளார். இது அவரது அடுத்தகட்ட மார்க்கெட் நகர்வை உறுதிப்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா ; 3 பேர் பலி
பசிபிக் பெருங்கடல் வழியே போதைப்பொருள் கடத்தி சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடல் வழியே சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அமெரிக்க ராணுவம் கப்பல் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிழக்கு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
KH – RK Movie Glimpse Video Stills
Kamal Hassan Watch Thai Kizhavi Movie and Wish Team Stills
யாழில் ஜனாதிபதி நிகழ்வுகள்: மக்களை அழைத்து வர 25 இலட்சம் ரூபாய் செலவு!
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண… The post யாழில் ஜனாதிபதி நிகழ்வுகள்: மக்களை அழைத்து வர 25 இலட்சம் ரூபாய் செலவு! appeared first on Global Tamil News .
Anthony Movie Audio Launch Stills
RJ Balaji Confirms Suriya Leads Karuppu Film
RJ Balaji has officially addressed and cleared up all rumours about his highly anticipated film Karuppu, which stars Suriya and
நெடுந்தாரகையில் மதுபான ரின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்
நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த நெடுந்தாரகைபடகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை ஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர். படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்த கடற்படையினரும் பெருமளவான மதுபான ரின்களை படகில் ஏற்றி சென்றுள்ளனர். பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபான ரின்களை ஏற்றி சென்றமை தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
Suresh Agarwal appointed as MD & CEO designate of life insurance JV between Mahindra and Manulife
Mumbai: Mahindra & Mahindra Ltd. (M&M) and Manulife have announced the appointment of Suresh Agarwal as the Managing Director & CEO designate of their proposed 50:50 life insurance joint venture, subject to regulatory approvals. The agreement to establish the life insurance JV was first announced in November last year, signalling both companies’ intent to strengthen financial security offerings in one of the world’s fastest-growing life insurance markets.Suresh brings nearly three decades of experience across life and general insurance, corporate and retail lending. Over his career, he has driven growth, led transformative strategies and built high-margin, multi-channel business models. He played a pivotal role in establishing and expanding Kotak’s life insurance business and later led the transition of Kotak General Insurance into a joint venture with Zurich Insurance. He is widely recognised for his strategic foresight in multi-channel distribution, operational efficiency, governance and execution excellence.Currently serving as MD & CEO of Mahindra Insurance Brokers Limited since September 2025, Suresh will step down from this role on April 30, 2026, and assume his new responsibilities from May 1, 2026, subject to regulatory clearances.The proposed joint venture aims to offer long-term savings and protection solutions tailored to the evolving needs of India’s population, aligned with the national vision of “Insurance for All” by 2047. The partnership seeks to combine Mahindra’s strong brand equity and extensive rural and semi-urban distribution reach with Manulife’s global expertise in agency development, product innovation and underwriting capabilities, particularly in urban markets. The JV will focus on customer-centricity and leverage technology to build sustainable, long-term value.Speaking on the appointment, Puneet Renjhen, Executive Vice President and Member of Group Executive Board, Mahindra Group said, “Life insurance is a critical pillar in India’s journey towards deeper financial security and inclusion. We are excited to introduce life insurance as a logical extension to Mahindra’s existing financial services offerings. Mahindra’s trusted brand, strong governance, and extensive rural and semi-urban distribution network, together with Manulife’s global insurance expertise, positions us uniquely to build a high-quality, customer-focused life insurance franchise. Suresh brings proven leadership and deep industry knowledge to the joint venture. With today’s leadership appointment, we’re confident that this business will scale with ambition, discipline, and long-term value creation at its core.” Harshal Shah, Chief Marketing Officer, Asia, Manulife, who also serves as the Manulife Principal Officer of the insurance JV, said, “India represents one of the most compelling long-term opportunities in global life insurance, and we’ve been intentional in choosing the right moment—and the right partner—for our entry. Together with Mahindra, we aim to become the number one choice for customers by being digital-first, focused on their needs, and tailoring solutions to diverse protection priorities. With today’s leadership appointment, we’re excited to build a business that brings meaningful protection and savings to millions.”
`பள்ளி மாணவர் மீது ஜாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே?' - இபிஎஸ் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த வாரம் (பிப்.19) 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். crime அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா? எடப்பாடி பழனிசாமி தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்? மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக! என்று பதிவிட்டிருக்கிறார்.
சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி
சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்… The post சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி appeared first on Global Tamil News .
Fast & Furious Movies Leaving Netflix India Soon
Eight films from the Fast & Furious franchise will be removed from Netflix India on March 1, 2026. This means
CUET PG 2026 அட்மிட் கார்டு வெளியீடு எப்போது? மார்ச் 6 முதல் தொடங்கும் தேர்வு
மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற நடத்தப்படும் முதுகலை க்யூட் 2026 தேர்வு மார்ச் 6 முதல் 27 வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அட்மிட் கார்டு விரைவில் வெளியாகவுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவா் கைது
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு ,… The post நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவா் கைது appeared first on Global Tamil News .
Akshay Kumar Shares Emotional Story About Nimrat Kaur
Bollywood actor Akshay Kumar is known for his fun and friendly nature, both on-screen and off-screen. He shares a good
‘கில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது சினிமா பயணம் வேறுபட்ட திசையில் நகரும் என்று நடிகர்–இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த கால நினைவுகள், எதிர்கால இலக்குகள் மற்றும் ‘கில்லர்’ படத்தின் நிலை குறித்து அவர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.
‘கில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது சினிமா பயணம் வேறுபட்ட திசையில் நகரும் என்று நடிகர்–இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த கால நினைவுகள், எதிர்கால இலக்குகள் மற்றும் ‘கில்லர்’ படத்தின் நிலை குறித்து அவர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.
டிராக்டரில் இருந்து பேட்டரி திருட முயன்றதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற கிராமத்தினர்
ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் முர்மா கிராமத்தை சேர்ந்த இளைஞர் பவன் ராம் (வயது 22). இவர் நேற்று இரவு பக்கத்து கிராமமான டெலியாகி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருட பவன் ராம் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பவன் ராமை பிடித்துள்ளனர். பின்னர் அவரை ஊர் மத்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக […]
'பழைய பென்ஷன்'இல்லையென்ற கவலையா? மாதம் ₹20,000 'இணை பென்ஷன்'வேண்டுமா? அரசு ஊழியர்களுக்காக!
அரசு வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்க்கையில் கவலையே இல்லை என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் (OPS) இல்லாத இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான அரசு ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரே கேள்வி... என் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு NPS (National Pension System) மூலம் கிடைக்கும் மாத பென்ஷன், என் குடும்பத்தின் அன்றாடச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும் போதுமானதாக இருக்குமா? என்பதுதான். பிரச்னை எங்கே தொடங்குகிறது? ரமேஷுக்கு 52 வயது, ஓர் அரசு அதிகாரி. அவர் சம்பாதிக்கும் பணம் குடும்பச் செலவுக்கே சரியாகப் போய்விடுகிறது. பி.எஃப் (PF) மற்றும் NPS-ல் பணம் சேர்கிறது என்ற ஒரே நிம்மதியில் இருக்கிறார். ஆனால் நிஜம் என்னவென்றால், 60 வயதில் ஓய்வு பெறும்போது கையில் கிடைக்கும் அந்தத் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த 20-25 வருடங்களை ஓட்டுவது சாதாரண காரியமல்ல. பல அரசு ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு — ஓய்வுக்கால வருமானத்துக்காக தங்களின் NPS பணத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பது. இடையில் கிடைக்கும் நிலுவைத் தொகைகள் (Arrears), போனஸ் அல்லது வங்கியில் சும்மா தூங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்புகளை, எந்த வளர்ச்சியும் இல்லாத சாதாரணத் திட்டங்களில் விட்டுவிடுகிறார்கள். இதனால், 55 வயதில் எதிர்பாராத மருத்துவச் செலவோ, பிள்ளைகளின் திருமணமோ வந்தால், கையில் போதுமான பணமில்லாமல் தவிக்கிறார்கள். Old perrson இதற்கு என்னதான் தீர்வு? உங்கள் ஓய்வுக்காலத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற, நீங்கள் 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. அரசு தரும் பென்ஷனைத் தாண்டி, உங்களுக்கான ஒரு 'இணை பென்ஷனை' (Parallel Pension) நீங்களே இப்போதே உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்குப் பேருதவியாக இருப்பதுதான் — மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் Lumpsum (மொத்த முதலீடு) + SWP (Systematic Withdrawal Plan) ஃபார்முலா! உங்களிடம் தற்போது சும்மா இருக்கும் ஒரு மொத்தத் தொகையை (Lumpsum) பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய நல்ல ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிடுங்கள். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தொகையை SWP (Systematic Withdrawal Plan) முறையில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும்படி செட் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு மொத்தத் தொகை (Lumpsum) உள்ளது. அது 10% வருமானம் தரும் ஃபண்டில் வளர்வதாக வைத்துக்கொள்வோம். * முதல் வருடம் அதிலிருந்து 5% பணத்தை (SWP) எடுக்கிறீர்கள். * விலைவாசி உயர்வைச் சமாளிக்க, ஒவ்வோர் ஆண்டும் எடுக்கும் தொகையை 6% கூட்டிக்கொண்டே போகிறீர்கள் (Step-Up SWP). * இப்படி 25 வருடங்கள் தொடர்ந்து பணம் எடுத்தாலும், இறுதியில் காம்பவுண்டிங் (Compounding) எப்படிப் பெரிய செல்வத்தை உருவாக்குகிறது என்று பாருங்கள்: SWP Monthly Pension இதனால் என்ன லாபம்? நிம்மதி எப்படி கிடைக்கும்? இந்த SWP முறை மூலம், 60 வயதிற்கு முன்பே கூட உங்களால் ஒரு நிலையான மாத வருமானத்தை உருவாக்க முடியும்! ஒருபக்கம் உங்களின் NPS பணம் முதிர்ச்சியடைந்து பாதுகாப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கம், இந்த Lumpsum + SWP முதலீடு உங்களுக்கு மாதாமாதம் ஒரு பென்ஷன் போல அமைதியாகக் கைகொடுக்கும். பணவீக்கத்தை முறியடிக்கலாம்: நீங்கள் எடுக்கும் பணம் போக, மீதமுள்ள அசல் முதலீடு சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்துகொண்டே இருக்கும். பயமற்ற வாழ்க்கை: 58 வயதிலேயே நீங்கள் விருப்ப ஓய்வு (VRS) பெற நினைத்தால்கூட, ஐயோ, மாதாந்திரச் செலவுக்கு என்ன செய்வது? என்ற பணக்கவலையின்றி தைரியமாக முடிவெடுக்கலாம். இதுதான் ஓர் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் உண்மையான நிதிச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு! இதைச் சரியாகத் திட்டமிடுவது எப்படி? என்னிடம் உள்ள சேமிப்பை வைத்து எவ்வளவு தொகையை Lumpsum ஆக முதலீடு செய்வது? அதிலிருந்து மாதம் எவ்வளவு SWP எடுக்கலாம்? என் NPS பணத்தோடு இதை எப்படி இணைத்துத் திட்டமிடுவது? இதுபோன்ற உங்களின் அனைத்துக் குழப்பங்களுக்கும், நடைமுறை உதாரணங்களுடன் விடையளிக்க வருகிறது இந்தச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்தி உங்களின் ஓய்வுக்காலத்தை எப்படி மன அமைதியுடன் (Peaceful Retirement) வடிவமைப்பது என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சி விவரங்கள் Labham webinar for government employees on Feb 25 2026 தலைப்பு: நிம்மதியான ஓய்வுக்காலம், கேரண்டி! – அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஆன்லைன் வழிகாட்டல் (Special Online Session for Government Employees) நாள்: 25 பிப்ரவரி 2026, புதன்கிழமை பேச்சாளர்: ஏ.ஆர். குமார் (Chief of Content, Labham & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்) மெகா போனஸ்: இலவச ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்! இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் 'Free Retirement Calculator Tool' முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதைக் கொண்டு உங்கள் எதிர்காலத் தேவைகளை நீங்களே சுலபமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்! உழைத்த காலம் போதும்... இனி உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க விடுங்கள்! எந்த ஓர் அரசுத் திட்டத்தின் பரிந்துரையும் இன்றி, அக்மார்க் முதலீட்டு உத்திகளை மட்டுமே கற்றுத்தரும் இந்த நிகழ்ச்சியில் இன்றே பதிவு செய்யுங்கள். ஆன்லைன் நிகழ்ச்சியில் 75 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் இல்லை. முன்பதிவு கட்டாயம். பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-feb25-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb25_2026
Tesco Mobile turns ‘Bill Dread’ into brand power in new BBH campaign
Mumbai: Tesco Mobile is turning one of the most anxiety-inducing household moments — the arrival of an unexpected bill — into a bold creative statement in its latest campaign developed by BBH London.At a time when the UK market is bracing for Q1 Consumer Price Index (CPI) increases from major telecom operators, the brand is reinforcing its Frozen Prices proposition. The campaign transforms the visual language of debt and bureaucracy by plastering oversized envelopes and bill imagery across billboards, reframing what would normally trigger “bill dread” into reassurance for customers.Backed by research indicating that nearly a third of 30–49 year olds would struggle with an unexpected expense and are borrowing more than usual to cope, the creative insight taps into the tension associated with financial uncertainty. Rather than amplifying anxiety, Tesco Mobile positions itself as the antidote — promising price stability through its Clubcard pricing model. Laura Joseph, Chief Customer Officer said, “We wanted to make switching to Tesco Mobile the obvious choice. Thanks to our great network coverage with O2 and Clubcard Price deals, we have the perfect mix to protect customers from another Consumer Price Index (CPI) increase this winter. We’ll also promise to keep their price Frozen for the duration of their contract, thanks to Clubcard. The helpful network, when you need us.” While competitors prepare to implement price hikes, the campaign’s out-of-home (OOH) and audio executions reassure Clubcard customers that there will be no surprise increases. The creative centres around a striking, oversized envelope visual with a simple subversive message, flipping the traditional fear associated with bills into a symbol of stability. Felipe Serradourada Guimares, ECD at BBH added, OOH at its best is bold, striking and simple. And this idea is all of those. A massive envelope with a simple p.s. subversion. Chef’s kiss. To heighten impact, BBH adopted a tactile, bespoke production approach, shooting physical newspapers, stamps and envelope textures to create hyper-real artwork that retains grit and authenticity even at large-format 48-sheet scale.On social media, the brand extends the creative by shifting from “dread” to “prestige,” leveraging the awards season cultural moment. The price freeze is positioned with the fanfare of an Oscar win, framing stability as the ultimate “Best Performance” in a volatile economic environment.The integrated campaign, planned by EssenceMediaCom UK, spans OOH, press, radio and social media. It launches at a time when consumers are seeking dependable brands amid rising living costs, with Tesco Mobile positioning its frozen pricing as a point of certainty in contrast to expected CPI-linked increases across the telecom sector.
Aakash Educational Services appoints Alka Garg as CFO and Kanika Kumar Nijhawan as SVP – Marketing
Mumbai: Aakash Educational Services Limited (AESL), India’s largest provider of test preparation services for engineering and medical entrance examinations, has strengthened its senior leadership team with the appointment of Alka Garg as Chief Financial Officer (CFO) and Kanika Kumar Nijhawan as Senior Vice President – Marketing.The appointments are aimed at reinforcing AESL’s financial strategy and brand growth initiatives, as the company continues to professionalise its management structure to drive accelerated growth and business excellence.Ms. Alka Garg brings over 22 years of strategic and operational experience across listed enterprises and high-growth startups. She has worked closely with founders, CEOs and executive teams to drive enterprise value creation, scale profitability and enable sustainable growth. At AESL, she will lead the finance function, spearhead financial strategies, enhance operational efficiencies, strengthen governance frameworks and support the company’s long-term growth trajectory.Prior to joining AESL, Garg served as Chief Financial Officer at Yum Restaurant India Pvt Ltd, where she played a key role in shaping financial strategy for the KFC brand in India and improving overall business performance. She has also held senior leadership roles at Siemens, GreyOrange, Bharti Airtel and Deloitte.Ms. Kanika Kumar Nijhawan joins AESL with over 17 years of experience across media, retail and sports sectors, with expertise in brand development, strategic marketing, digital and performance marketing, and omnichannel engagement. She previously spent a decade at Adidas India as Director of Brand Marketing. Her earlier stints include roles at HT Media and Sony Entertainment Television.Commenting on the new appointments of Garg and Nijhawan, Chandra Sekhar Garisa Reddy, Managing Director & CEO, Aakash Educational Services Limited stated, We are thrilled to have both Alka and Kanika join the Aakash team. With Alka's outstanding financial acumen and Kanika's brand development skills, I am confident they will both be key agents in progressing our organisation while at the same time enhancing our commitment to providing high-quality education to all students in India. Alka Garg said in response to her appointment, I could not be more excited to join Aakash Educational Services Limited at this exciting time in the company's journey. I look forward to partnering with the leadership team to continue to strengthen financial discipline, support sustainable growth, and provide long-term value to all stakeholders because AESL is well-known throughout the exam preparation industry. Kanika Kumar Nijhawan said, I am very happy to be joining Aakash during this incredibly significant time of opportunity and potential and I look forward to forming a unique and powerful brand narrative, creating meaningful experiences for our students and parents, assisting in driving the youngest and fastest growing preparation segment in terms of exam preparation and continuing the company's growth and leadership in the exam preparation industry. With these senior leadership appointments, AESL aims to further expand its national footprint, strengthen academic excellence and operational efficiency, and continue supporting students across India in achieving success in competitive examinations.
Australia Beats India in FIH Pro League Shootout
The Indian men’s hockey team lost to Australia in a close match in the FIH Pro League at the Tasmania
Vijay-யை காட்டி எல்லோரும் பலனடைகிறார்கள் | பழ.கருப்பையா Interview | Vikatan
சூப்பர் 8 தோல்வி: அக்ஷர் படேல் நீக்கியது தவறு? டென்ஷனான அஸ்வின்!
டெல்லி :2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த தேர்வு முடிவுகள், குறிப்பாக துணை கேப்டன் அக்ஷர் படேலை வெளியேற்றி வாஷிங்டன் சுந்தரை களமிறக்கியது, பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த முடிவு போட்டியில் பலனளிக்கவில்லை. முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். “அக்ஷர் படேல் T20 கிரிக்கெட்டில் உங்கள் MVP (Most Valuable […]
மத்திய அரசின் எச்எல்எல் லைஃப்கேர் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவியில் உள்ள 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பொறியியல், பார்மா, மார்க்கெட்டிங், மனித வளங்கள், சமூகப் பணி, தரவு பகுப்பாய்வு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள்.
'18 வயதில் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன், ஆனால்.!'- KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
கே.ஜி.எஃப். பட இயக்குநர் பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரவி பஸ்ரூர். பிறகு கே.ஜி.எஃப் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமானார். பிரபாஸின் சலார், யஷ் நடித்திருக்கும் டாக்சிக் போன்ற படங்களுக்கும் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். K.G.F 2 | கே.ஜி.எஃப் 2 கன்னடம், தெலுங்கு தவிர்த்து மலையாளம், இந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் ரவி பஸ்ரூர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எனக்கு 18 வயது இருந்தபோது இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்காமல் இருந்தது. ஆனால் இரண்டு முறையுமே நான் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறை என்னை காப்பாற்றியவர் என் இசையைக் கேட்டு ஒரு கீபோர்டு வாங்கிக் கொடுத்தார். ரவி பஸ்ரூர் மேலும் ரூ. 35 ஆயிரம் கொடுத்தார். அன்று தான் என் பெயரை ரவி என்று மாற்றிக் கொண்டேன். என்னை காப்பாற்றி உதவி செய்தவரின் பெயர் தான் ரவி என்று பேசியிருக்கிறார்.
நாவிதன்வெளி உப தவிசாளரின் முன்மாதிரி
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும் நாவிதன்வெளி உப தவிசாளர் கு.புவனரூபன் இம்முறை தனது ஏழாவது மாத கொடுப்பனவை வீரச்சோலை பகுதியில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்தார். நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏழாவது மாதாந்த கொடுப்பனவை குறித்த குடும்பத்திற்கு வழங்கி உதவி ஏனையோருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட அவர் நாவிதன்வெளி உப தவிசாளர் பதவியில் உள்ள வரை […]
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டுமென நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மழையினால் முளைக்கும் நெல்மணிகள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்துறை இன்று பெரும் சிதைவைச் சந்தித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் […]
கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா?
இலங்கை கடற்படையின் ஒரு குழுவினால் 11 மாணவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம்… The post கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா? appeared first on Global Tamil News .
கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !
தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு பாறுக் ஷிஹான் பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர். கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்த அவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர். இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட […]
Moneycontrol tops business news ranking, more than twice the audience of Economic Times
Mumbai: Moneycontrol consolidated its leadership in India’s business and financial news space in January 2026, clocking the highest number of unique visitors in this category, as per global audience measurement agency Comscore.With a total digital population of 63.38 million unique visitors, Moneycontrol drew more than twice the audience of The Economic Times, which recorded 30.61 million.In fact, Moneycontrol attracted more unique users than its next two media rivals combined in business news.Moneycontrol's lead over ET extended to all other key digital metrics. Comscore data shows that Moneycontrol logged 249.25 million page views in January, nearly three times The Economic Times’ 97.18 million. The data points to strong user interaction across Moneycontrol’s content offerings.Comscore data on engagement, as measured by time spent by readers, told an even stronger story. Readers spent 581.29 million minutes on Moneycontrol during the month, more than five times the 111.90 million minutes recorded by The Economic Times.[caption id=attachment_2406088 align=alignleft width=400] Nalin Mehta [/caption] “The latest numbers reflect the deep trust readers have placed in the quality of our content, the depth of our coverage of the stock markets and the cutting-edge analytical tools we provide to users,” said Nalin Mehta, Managing Editor, Moneycontrol. “In an increasingly fluid global environment, readers are looking for clarity and we remain sharply focused on providing credible, accurate and timely business information. Comscore’s January rankings reaffirm Moneycontrol’s leadership in India’s financial news space once again, pointing to its sustained lead in both reach and engagement.
Fixderma launches brand film spotlighting shadow SPF 50+ sunscreen
Mumbai: Fixderma has unveiled a new brand film centred on its flagship sunscreen, Fixderma Shadow SPF 50+, reinforcing its positioning as a science-led, dermatologist-trusted daily sun protection solution.Set against the backdrop of today’s digital-first skincare landscape, the film captures a relatable moment of a young woman endlessly scrolling through sunscreen options, overwhelmed by competing claims and uncertain about what to trust. The narrative mirrors the clutter and confusion that define the modern skincare marketplace, where choice is abundant but clarity is scarce.The turning point comes with the entry of Shaily Mehrotra, Co-Founder of Fixderma and a new Shark on Shark Tank India Season 5. Positioned not merely as a brand ambassador but as an industry leader, she introduces Fixderma Shadow SPF 50+ as a solution grounded in scientific credibility and global acceptance.The film highlights key product credentials, including trust from 15,000+ dermatologists, 15 years of skincare expertise, manufacturing at Fixderma’s state-of-the-art facility in Neemrana, exports to over 40 countries, broad-spectrum protection, a non-greasy and lightweight texture, and water-resistant properties suited for daily wear.Closing with the message “Har Din Ke Liye Har Skin Ke Liye,” the campaign reinforces the idea that sunscreen is not a seasonal product but a daily essential.[caption id=attachment_2492914 align=alignleft width=133] Shaily Mehrotra [/caption]Speaking on the campaign, Shaily Mehrotra, Co-Founder, Fixderma , said “The biggest challenge today is not availability, it is clarity. Consumers are confused between marketing claims and real science. With this film, we wanted to simplify the conversation. Fixderma Shadow SPF 50+ is built on 15 years of trust, backed by 15,000+ dermatologists, manufactured in our own Neemrana facility, and exported to 40+ countries. It is not just sunscreen, it is science-led daily protection.” Adding to this, Anurag Mehrotra, Chairman, Fixderma , “This film represents our larger brand philosophy, where dermatological science meets proven efficacy. Fixderma Shadow SPF 50+ is backed by rigorous in-vivo & in-vitro testing to ensure reliable broad- spectrum protection and consistent performance. Manufactured in our facility and exported to 40+ countries, the product represents our commitment to global quality standards. As we continue to expand internationally, our focus remains on delivering clinically validated, science- led skincare that our consumer and dermatologist can trust”. https://www.youtube.com/watch?v=XJnc_O2OhKs
திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய்வது, கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையில் வரும் சட்டபேரவை தேர்தலில் கனிமொழி போட்டியிடுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக அவரே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய அரசியல் விவாதத்தில் மு.க. ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் கருத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாக அனுபவமும் அரசியல் அணுகுமுறையும் தேசிய அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு -அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சந்திப்பு
இன நல்லிணக்கம், பொதுமக்கள், தொடர்பாடல் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவிற்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறு […]
உங்க டப்பா இன்ஜின் தாக்குப்பிடிக்காது…இபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தல் பயத்தில் திமுக விடுவித்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதை மறுத்த ஸ்டாலின், “உங்கள் டெல்லி ஓனர்கள் (பாஜக) தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையை தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்” என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது பதிவில், “எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்கிறது அதிமுக. #DravidianModel சத்தமில்லாமல் நடத்திய surgical strike […]
``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! - அறநிலையத்துறை
திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ .8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan) திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் : 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். தங்க முதலீட்டுத் திட்டம் இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆன்மிகப் பயணம் 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ .335 கோடியில் ஒருகால பூசை திட்டம் ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும். நாள் முழுவதும் பிரசாதம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யுனெஸ்கோ விருது தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு கற்கோயில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணியாளர் நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
மன்னாரில் பல தொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதா ?
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும்… The post மன்னாரில் பல தொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதா ? appeared first on Global Tamil News .
Shriram Finance unveils ‘Shri Aarambh Loans’ campaign for commercial vehicles
Mumbai: Shriram Finance (SFL), the flagship company of the Shriram Group, has unveiled its new integrated campaign, ‘Shri Aarambh Loans’, reinforcing its comprehensive suite of Commercial Vehicle Loans tailored for India’s trucking and transport community.The structured proposition brings together vehicle financing along with tyre, fuel, challan, insurance and repair support under one offering, positioning Shri Aarambh as more than just a vehicle loan. The campaign highlights the everyday realities faced by truck drivers and small transport operators, presenting Shriram Finance as a financial partner that helps keep their business moving.For truck drivers and small fleet owners, a vehicle represents their primary source of livelihood. The name ‘Shri Aarambh’ reflects this sentiment — ‘Shri’ anchors the initiative to Shriram Finance’s legacy, while ‘Aarambh’ signifies an auspicious new beginning. The campaign underscores the idea that challenges on the road, whether rising fuel costs, maintenance issues or unforeseen disruptions, can become opportunities to restart when backed by the right financial support.At the heart of the initiative is a musical brand film translated into eight Indian languages — Hindi, Marathi, Gujarati, Bengali, Kannada, Malayalam, Telugu and Tamil — capturing the shared experiences of truck drivers across regions. While routes and geographies differ, the anxiety of a stalled vehicle and the determination to keep moving remain universal themes. The recurring line, ‘Ghoomega Pahiya’ (घूमेगा पहिया), symbolises resilience and continuity, reinforcing the message that with the right support, the wheel of life keeps turning.Conceptualised and executed by Leo India, the campaign has been rolled out pan-India. The media strategy focuses on digital platforms including YouTube, Meta, ShareChat-Mauj and OTT platforms such as Sun NXT, alongside ecosystem-driven platforms like TruckDekho and Paytm where the core audience actively engages. Outdoor visibility has also been deployed across select states and national highways, transport hubs and dhabhas — key touchpoints within the trucking ecosystem.Commenting on the launch, Elizabeth Venkataraman, Executive Director - Marketing, Shriram Finance, said “Truck drivers and small fleet owners form the backbone of India’s logistics ecosystem. With Shri Aarambh, we wanted to reinforce our proposition that goes beyond financing a vehicle and supports the entire business lifecycle of anyone from the trucking and transport community. The campaign reflects our commitment to standing by our customers and enabling new beginnings even during challenging moments.” The initiative aligns with Shriram Finance’s brand philosophy, ‘Judenge Udenge’, reaffirming its commitment to empowering customers and supporting their growth journeys.With Shri Aarambh Loans, Shriram Finance aims to further strengthen its position as a long-term partner to India’s trucking and transport community, ensuring that the wheels of enterprise continue to move forward.https://www.youtube.com/watch?v=jVhcgyA2A3c
பாலிவுட்டில் நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.
Swaraj Tractors renews partnership with MS Dhoni; unveils new campaign ‘Bharosa’
Mohali: Swaraj Tractors, part of the Mahindra Group, has announced the renewal of its long-standing association with former Indian cricket captain MS Dhoni as the brand’s endorser, marking the beginning of a new strategic phase in the partnership.Built on shared values of power, trust and reliability, the association has evolved into a key pillar of Swaraj’s brand journey. The relationship gained authenticity when Dhoni chose a Swaraj tractor for his own farm operations, reinforcing real-world credibility and deepening the connection between the brand and its core agricultural audience.Over the years, Dhoni’s association has enhanced Swaraj’s brand visibility and strengthened customer consideration. His grounded persona, credibility and dependable image closely mirror Swaraj’s positioning as a powerful and trustworthy partner for Indian farmers.[caption id=attachment_2492903 align=alignleft width=200] Gaganjot Singh [/caption]Commenting on the continued association, Gaganjot Singh, CEO, Swaraj Division M&M Ltd . said, “MS Dhoni reflects the ethos of Swaraj — dependable, authentic, and consistently focused on performance. This partnership has helped us strengthen our connect with customers while reinforcing the values that define the brand. As we move ahead, his association will play an important role in building greater resonance for Swaraj across markets and supporting our efforts to present the brand with contemporary outlook and energy while staying true to its legacy.” As part of the renewed collaboration, Dhoni will feature in Swaraj’s upcoming integrated campaigns across platforms and play a pivotal role in building momentum around the brand’s next major product introduction, tailored to the evolving needs of progressive Indian farmers.Marking the next chapter of the association, Swaraj Tractors has also launched a new campaign titled “Bharosa”. The campaign celebrates the shared values of unmatched power, trust and reliability — attributes embodied by both the brand and the cricketing icon. Through the new DVC, Swaraj aims to reinforce its emotional and functional connect with farmers, positioning itself as a dependable partner in their growth journey.https://youtube.com/shorts/hGkOxapE_6I?feature=share
ECO India : சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் | இயற்கையுடன் கட்டுமானம் | Eco India S2 EP-5 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…
மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்!
மெக்சிகோ நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக விளங்கும் CJNG (Jalisco New Generation Cartel) போதைப்பொருள் கடத்தல்… The post மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்! appeared first on Global Tamil News .
Hoopr.ai Raises Pre-Series A Funding Led by The Chennai Angels to Simplify Music Licensing in India
Chennai: Hoopr.ai, the music licensing and distribution platform founded by composer-entrepreneur Gaurav Dagaonkar, has secured Pre-Series A funding from early-stage investment collective The Chennai Angels (TCA), as the company looks to scale its mission of simplifying music licensing for brands, creators, and rights holders in India.The investment adds to Hoopr’s existing backers, which include Inflection Point Ventures (IPV), MeitY Startup Hub, 100Unicorns, VCats Marketing, 91 Ventures, and angel investor Amit Nanavati. Financial details of the latest round were not disclosed.Dagaonkar said the partnership with TCA goes beyond capital, citing the network and operator expertise the group brings. “From our very first conversation, it was clear they understood not just the business, but the mission,” he said in a LinkedIn announcement, describing music licensing in India as “broken for too long” and positioning Hoopr as a platform aimed at making licensing simple, transparent, and scalable.Hoopr operates at the intersection of music rights management and creator-brand collaboration, offering licensed music for commercial use while ensuring that labels and artists are compensated. The startup also runs Songfest India, a music IP and live-content initiative, positioning itself as a broader ecosystem player in music monetisation.Investors at TCA said the company is addressing a structural gap in India’s creative economy. Srinivasan B, Managing Director of Vikatan Group and an investor through The Chennai Angels, noted that Hoopr is “attempting to solve a real, existential problem for creators, brands and music labels at scale,” adding that the company’s proof of concept and minimum viable product are already established. He also pointed to industry mentorship around the startup, including media veteran Sanjay Wadhwa, as a positive signal for execution.India’s music licensing market has long been characterised by fragmented rights ownership, opaque pricing, and compliance challenges for commercial users, particularly in digital and short-form content. With the rise of influencer marketing, OTT, gaming, and branded content, demand for cleared music assets has expanded rapidly, creating opportunity for structured licensing platforms.Hoopr’s stated goal is to enable frictionless music usage across digital media while ensuring rights holders are “respected and rewarded,” aligning with broader industry moves toward transparent royalty flows and creator-centric monetisation models.The fresh capital is expected to support product development, catalogue expansion, and partnerships with labels, agencies, and platforms, as Hoopr seeks to position itself as a scalable infrastructure layer for music licensing in India and other emerging markets.

25 C