அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தமிழக மாணவி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
வாஷிங்டன், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவி சவீதா சண்முகசுந்தரம் என்பவரும் அடங்குவார். இவர் டெக்சாஸ் பல்கலைக்கழலகத்தில் பொருளாதாரம், நிர்வாகம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்ட படிப்பு படித்து வந்தார். அவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை […]
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீட்டர் பெட்ரோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் , இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
'இறங்கிட்டான்யா'தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 ஆகவும், பவுனுக்கு ரூ.2,160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக தங்கம் பவுனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது. Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,200 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,21,600 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
மாளவிகா மேனனின் அதிரடி போட்டோஷூட்: இணையத்தை அதிரவிடும் கலர்புல் கிளிக்ஸ்!
கலர்புல் உடையில் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள கிளிக்ஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர். டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செல்வபெருந்தகை நிலையானவர் கிடையாது.. ஒரு பச்சோந்தி மாதிரி - செல்லூர் ராஜு விமர்சனம்!
செல்வபெருந்தகை நிலையானவர் கிடையாது. அவர் ஒரு பச்சோந்தி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யாருக்கெல்லாம் வாக்களிக்க மாட்டேன்? - என் பார்வையில் தேர்தல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அரசியல், தேர்தல், வாக்குப்பதிவு என்ற சொற்களை பள்ளிக்கூடம் சென்று படிக்கும் முன்பு 5 வயதிலேயே அறிமுகப் படலம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது எனக்கு. என் மூத்த சகோதரி, சகோதரர்கள் மற்றும் அவர்களின் அக்கம் பக்கத் தோழர்களின் பேச்சை வாய்ப்பிளந்து கதைகளாகக் கேட்டுக் கொண்டிருந்த என் வீட்டில் ரஷ்ய நாட்டின் லெனின், காரல் மார்க்ஸ் போட்டோ இருந்தது. காரணம் என் வீட்டினருகில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்ததே! எம்.ஜி.ஆர் அப்பாவோ எம்.ஜி.ஆரின் பரமபக்தர். தீவிர விசிறி என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர் மறைந்த பின்பும் இரட்டை இலையை அவர் மறக்கவில்லை. தேர்தல் சமயத்தில் செய்தித்தாள்களில் வரும் அனைத்து கட்சிகளின் பெயர் மற்றும் சின்னங்களைப் படிக்கும் போது தலைசுற்றும். இத்தனை கட்சிகள் உண்டா என. குட்டி யானை என்று அழைக்கப்படும் டெம்போவில், பிளஷர் கார் என்று அழைக்கப்படும் அம்பாசிடரில் ஓட்டு போட வீதி மக்கள், வீட்டினர் சென்று வந்ததை வேடிக்கைப் பார்த்த எனக்கு ஏக்கம் வரும் எப்பொழுது என் விரலில் மை பூசப்படும் என.. முதல் ஓட்டு முதல் வாக்காளர் அட்டை திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு கிடைத்தது. முடிவாக என் விரலிலும் தேர்தல் மை பூசிக்கொண்டு ரசித்தபடி வெளிவந்தேன். நாங்கள் வசித்தது விருத்தாச்சலத்தின் அருகில் வேறு ஊரில். விஜயகாந்தின் கட்சித் தொண்டர்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என ரகசியமாக கேட்டனர். சிரித்துக்கொண்டே நகர்ந்தேன். (அந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் அந்த பகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார்). பிறகு இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் வாய்ப்பு வந்ததில்லை கணவரின் தனியார் வேலை நிமித்தமாக பல மாநிலங்களில் மாறி மாறி வசித்து வருவதால் ஊருக்கு வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனாலும் ஊர் திருவிழா போல் தேர்தல் விழா வரும்போதும் அரசியல் கட்சிகளின் ஆரவாரம், பேச்சுக்கள், கூட்டங்கள், சண்டைகள், வசவுகள்,வெற்றி பெற்றவரின் ஓட்டு எண்ணிக்கை என எதையும் விடுவதில்லை. தேர்தல் நமது இந்திய அரசாங்கம் புது சட்டம் கொண்டு வரலாம் தேர்தல் பணி செல்லும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு இருப்பது போல வெளிமாநிலங்களில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு ஏதேனும் வழிகள் செய்யலாம். தேர்தல் அன்று மட்டுமே விடுமுறை கிடைக்கும். ஆனால் பயணங்கள் ஒரு நாளில் முடிந்து விடுவதில்லை. கணவன், மனைவி இருவரும் ஓட்டுக்காக வருவதெனில் பிள்ளைகள்?? அவர்களையும் அழைத்து வந்தால் செலவு?? இவற்றையெல்லாம் சமாளிப்பது மிக கடினம். JEE, NEET, UPSC போன்ற பல தேர்வுகள் எப்படி எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்கிறார்களோ அல்லது ஆன்லைன் எக்ஸாம் போல ஆன்லைன் ஓட்டும் ஆரம்பிக்கப்பட்டால் எல்லோருக்கும் ஓட்டு போட வாய்ப்பு கிடைக்கலாம். இன்றைய டிஜிட்டல் வேல்டில் எதுவும் சாத்தியமே! என் பார்வையில் தேர்தல் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை விட யாருக்கு போடக்கூடாது என்பதில் கவனம் வேண்டும் . மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்காதவர்களுக்கு NO VOTE அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துபவர்களே உண்மையான மக்கள் தொண்டன். பொதுக் கழிப்பறையை சரியாக பராமரிக்காத ஊரில் அதன் பொறுப்பை கவுன்சிலர் எம்.எல்.ஏ, எம்.பி என அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மீன் சமைத்துக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்த உதவி. இலவச அறிவிப்பை நிராகரிக்க வேண்டும். மேடை நாகரிகம் அறியாமல் இரட்டை அர்த்த வசனம், கெட்ட வார்த்தைகள் பேசுபவருக்கு - NO VOTE என் ஜாதி, என் மதம் என சொல்லி இந்தியர்கள் என்பதை மறக்க செய்யும் நபர்களுக்கு - NO VOTE பெண்கள், குழந்தைகளை சீரழிக்கும் நபர்கள் அல்லது கொலை, கொள்ளை என ஈடுபடுபவர்கள் இருக்கும் கட்சி அல்லது அவர்களை ஆதரிக்கும் நபர்களுக்கு - NO VOTE அடிப்படைக் கல்வி மற்றும் நாகரீகம் இல்லாத வேட்பாளருக்கு - NO VOTE விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சங்கீதாவை கல்யாணம் பண்ணிகிறியானு அப்பா கேட்டதை எதிர்பார்க்கல, ஷாக் ஆகிட்டேன்: விஜய்
சங்கீதா சொர்ணலிங்கத்தை திருமணம் செய்து கொண்டது எப்படி என்று பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தெரிவித்திருந்தார். அவர் பேசியது பற்றி தற்போது சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள்.
ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போர் சூழலுக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்
ஈரானில் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து பாரிய வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானில் நிலநடுக்கம் இந்நிலையில், ஈரானின் கெராஷ்(Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே ஈரான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் 40க்கும் அதிகமான […]
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முரண்பட்டு வந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தற்போது கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதை பார்த்தால், கூட்டணிக்கு கிரீன் சிக்னல் வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச 11 குறித்து தற்போது பார்க்கலாம். பந்துவீச்சு படையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பினிஷர் இடங்களில், இரண்டு இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
விசில் பாடல் முதல் மதன் கௌரி இண்டர்வியூ வரை- தவெக விஜய் போடும் அடுத்தடுத்த பிளான்!
தவெக தலைவர் விஜய் இன்று தஞ்சையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், அடுத்தகட்ட திட்டங்கள் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும் வகையில் மதன் கௌரி இண்டர்வியூ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Virtual Hug: வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா? மொத இதைப் படியுங்கள்!
என்னங்க, ஒரே எந்திரத்தனமா, என்னடா வாழ்க்கை இது? அப்படின்னு தோணுதா? எப்பவும் ஒரே மாதிரி வேலை, படிப்பு, வீடு, டிராஃபிக் அப்படின்னு ஓடிட்டே இருக்கும்போது இந்தச் சலிப்பு வர்றது ரொம்ப சகஜம்தான். நீங்க மட்டும் இப்படி ஃபீல் பண்ணல, நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு கட்டத்துல இப்படி தோணும். இப்போ நமக்கு ஒரு சின்ன ஆசுவாசம் தேவை. ரொம்ப சோர்வா இருக்கிற ஒரு நண்பனோட தோள்ல கை போட்டு ஒரு ஆறுதல் சொல்லுவோம் இல்லையா? இந்தக் கட்டுரை ஒரு `வெர்ச்சுவல் ஹக்' (Virtual Hug) அப்படின்னே வெச்சுக்கோங்க. smile சின்னச் சின்ன விஷயங்கள்ல ஒளிஞ்சிருக்குது மேஜிக்! பெரிய பெரிய வெற்றிகள், நிறைய பணம், பயணங்கள்... இதுல மட்டும்தான் சந்தோஷம் இருக்குதா? உண்மை என்ன தெரியுமா? நம்ம அன்றாட வாழ்க்கையில நம்மைக் கடந்து போற சின்னச் சின்ன விஷயங்கள்லயும் சந்தோசம் ஒளிஞ்சிருக்கு. அதையெல்லாம் நாம கவனிக்காம விடுறதால கூட வாழ்க்கை போர் அடிக்கிற மாதிரி தோணும். கொஞ்சம் இதையெல்லாம் யோசனை பண்ணிப் பாருங்க: காலையில எழுந்ததும் கிச்சன்ல இருந்து வர்ற அந்த ஃபில்டர் காபி அல்லது இஞ்சி டீ வாசம்... அதை முதல் மடக்கு சிப் பண்ணும்போது உடம்புல ஒரு சுறுசுறுப்பு பரவும்ல... பஸ்ஸிலோ, ஆட்டோவிலோ சலிப்போட போகும்போது, தற்செயலா எப்.எம்-ல நமக்குப் பிடிச்ச ஆல்-டைம் ஃபேவரிட் பாட்டு ஒலிக்கிறப்போ, மனசுக்குள்ள ஒரு சின்ன பட்டாம்பூச்சி பறக்கும் இல்லையா? ரொம்ப நாள் கழிச்சு அலமாரியைச் சுத்தம் செய்யும்போது கிடைக்கிற பழைய ஸ்கூல் குரூப் போட்டோவையோ, நமக்கு யாராவது குடுத்த ஒரு வாழ்த்து அட்டையையோ பார்க்கும்போது முகம் தானா சிரிக்கும். smile (Represtation Image) ரோட்ல போயிட்டு இருக்கும்போது, சம்பந்தமே இல்லாத ஒரு குட்டிப் பாப்பா நம்மளப் பார்த்து தேவதையாட்டம் சிரிக்கும்... அந்த ஒரு செகண்ட் கவலை எல்லாம் பஞ்சா பறந்துடும். எப்பவோ பழகுன ஒரு நண்பன் திடீர்னு, டேய் எப்படிடா இருக்க? அப்படின்னு ஒரு மெசேஜ் பண்ணும்போது கிடைக்கிற அந்த ஃபீல் ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப டயர்டா வீட்டுக்கு வரும்போது, நம்ம பார்த்த சந்தோஷத்துல செல்லப்பிராணி ஓடி வந்து உங்க மேல ஏறி முகம் உரசும்போது கிடைக்கிற அந்த நிம்மதிக்கு அளவே கிடையாது. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? எப்போதாவது ராத்திரி நேரத்துல மாடிக்குப் போய் அந்த நிலாவையும், நட்சத்திரங்களையும் அமைதியா பாத்துருக்கீங்களா? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம வீசுற காத்து சில்லுனு நம்ம முகத்துல பட்டுட்டுப் போறப்போ, பரவாயில்லப்பா, எல்லாம் சரி ஆயிடும் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு தைரியம் வரும். இயற்கை எப்பவுமே நமக்கு ஒரு சிறந்த ஆறுதல் குடுக்கும் நண்பன் தான். Friends கடைசியா ஒன்னு... வாழ்க்கைங்குறது ஏதோ பெரிய பெரிய இலக்குகளை அடைஞ்சு, ரேஸ்ல ஜெயிக்கிறது மட்டுமல்ல. இந்த மாதிரி சின்னச் சின்ன, அழகான, அன்பான தருணங்களைச் சேர்த்து வைக்கிற ஒரு அழகான ஆல்பமும்தான் வாழ்க்கை. இன்னைக்கு நடந்த ஏதோ ஒன்னு நம்மைச் சோர்வாக்கியிருக்கலாம். ஆனா நாளைக்கு நமக்காக ஒரு சூப்பரான சின்ன சந்தோஷம் காத்துட்டு இருக்கும். அதனால, சலிப்பைத் தூக்கிப் போட்டுட்டு, நம்மளைச் சுத்தி நடக்கிற குட்டிக் குட்டி சந்தோஷங்களை என்ஜாய் பண்ண ஆரம்பிக்கலாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்! மீண்டும் ஒரு பெரிய, அன்பான ஸ்பெஷல் ஹக்! உங்களைச் சமீபத்துல புன்னகைக்க வெச்ச ஒரு `சின்ன சந்தோஷம்' பத்தி கமென்ட்ல ஷேர் பண்ணுங்க... Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்!
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கும் முடிவை முன்வைத்திருந்தது. ஆனால் இந்த பங்கீடு போதுமானதல்ல என காங்கிரஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும்! ட்ரம்ப் பகிரங்கம்
“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் செல்லும் கடல் பாதை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கடந்து செல்கிறது. வளைகுடா […]
யாழில் ஈழத்தமிழர் மகளிர் – சிறுவர் உரிமைக்காக புதிய அமைப்பு
சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதியன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தாம் கடந்த 9 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டபோதும், தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களை ஒருங்கிணைத்து செயற்ப முடியாத அளவுக்கு […]
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்.. முட்டை விலை சரிய வாய்ப்பு.. நாமக்கல்லில் 1 கோடி முட்டைகள் தேக்கம்!
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிப்பால் நாமக்கல்லில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்து உள்ளன.
பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் குறித்து விசாரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற இலங்கைக்குள் 1979 என்ற சிறப்பு இலக்கத்தின் ஊடாகவும் +94 11 777 1979 என்ற தொலைபேசி எண்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழைப்புகளுக்கு, வட்ஸ்அப் வழியாக மட்டுமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக +94 74 444 1979 என்ற […]
யாழ். கச்சதீவில் அந்தோனியார் திருவிழாவில் பதற்ற நிலை ; தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, திருவிழாவிற்காக கச்சதீவிற்குள் நுழைந்தபோது அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயல்பட்டதாக கூறினார். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் தன்னுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணா அவர்களுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொலைபேசி ஊடாக நேற்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார். இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று (04.03.2026) பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார். அரசாங்க […]
Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?
Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் வராது. கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, அந்த நாளைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன. இவற்றை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு களியாகச் செய்தோ எடுத்துக் கொள்ளலாம். கேழ்வரகை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகை அடையாகச் செய்து சாப்பிடும்போது, அது ரத்தத்தில் கலந்து சர்க்கரையாக மாறும் நேரம் சற்று தாமதமாகும். களியாக எடுத்துக்கொள்ளும்போது, அதைவிட சற்று விரைவாக சர்க்கரையாக மாறும். கூழாக எடுத்துக்கொள்ளும்போது மிக விரைவாக சர்க்கரையாக மாறும். இதன் அடிப்படையில்தான் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகள் கூழாகக் குடிக்கும்போது, தொட்டுக்கொள்ள காய்கறிகள் சேர்த்துக்கொண்டால் பாதிப்பில்லை. கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது சிக்கன் சூப்பும் நண்டு ரசமும் குடிப்பது சரியானதா? கம்பு, கேழ்வரகு உணவுகளை தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு இரவில் கீரை அல்லது பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் தன்மை இருக்கும். அவர்கள் இரவு நேரங்களில் கூழ் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுப்பதால் கோடைக்கேற்ற சிறந்த உணவுகளாகப் பார்க்கப்படுகின்றன. அதுவே குளிர்காலம் என்றால் இவற்றை அடையாகவோ, களியாகவோ எடுத்துக்கொள்ளலாம். நம் பாரம்பர்ய பானங்களான கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் மட்டுமல்ல, பானகம் போன்றவற்றையும் தொடர்ந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி
அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஈரான் முழுவதும் 153 நகரங்கள் பாதிப்பு சமீபத்திய தாக்குதல்களால் ஈரான் முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை […]
கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்கிற ஆட்டோ ஓட்டுநர் அடிக்கடி அவர்களின் ஹோட்டலுக்குச் சென்று வந்துள்ளார். திலீபன் பிரேமுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்களாகியுள்ளன. இந்நிலையில் அவர் எஸ்தரை நான்காவது திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி! இதற்கு எஸ்தர் மறுத்துள்ளார். மேலும் அவர் உரிமையாளர் திலீபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் பிரேம் கோபமடைந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவர் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தார். எஸ்தர் இதுதொடர்பாக சூலூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். 17 நாட்கள் சிறையில் இருந்த பிரேம், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டுக்குச் சென்று கதவு தட்டியுள்ளார் பிரேம். கதவு திறக்கப்பட்டபோது அங்கு திலீபன் இருப்பதைப் பார்த்து பிரேம் ஆனந்த் கடும் கோபமடைந்துள்ளார். கத்தியால் திலீபனைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். மேலும், வீட்டின் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயற்சித்தார். பிரேம் ஆனந்த் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பிரேமைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் பிரேமைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; அவர் ஒரு சூப்பர் ஸ்டார் - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?
சோழ தேசத்தில் விஜய்.. படைகளை பலப்படுத்தும் தவெக.. இன்றைய கூட்டத்தில் என்ன பேசப் போகிறார் விஜய்?
தஞ்சாவூரில் நடைபெறும் இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைவர் விஜய் நேரில் பங்கேற்கும் இந்த கூட்டம் கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
நான்கு நாடுகளுக்கு மாணவர் விசா வழங்குவதை இங்கிலாந்து நிறுத்துகிறது
ஆப்கானிஸ்தான், கேமரூன் , மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு திறமையான வேலை விசாக்களை நிறுத்தி வைக்கும். சட்டப்பூர்வ வழிகளில் இருந்து புகலிடம் கோரும் கோரிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நான்கு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசாக்களில் அவசரகால தடை முதல் முறையாக விதிக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து உள்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 முதல், கிட்டத்தட்ட 135,000 பேர் சட்டப்பூர்வமாக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து பின்னர் புகலிடக் கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2025 க்கு இடையில் ஆப்கானிஸ்தான், கேமரூன், சூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 470% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது. எங்கள் தாராள மனப்பான்மையை சுரண்ட முயலும் நாட்டினருக்கு விசாக்களை மறுக்கும் முன்னோடியில்லாத முடிவை எடுப்பதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறினார்.
ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு!
துபை: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயா்ந்தது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது. சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய […]
டெஹ்ரானில் காந்தி மருத்துவமனையில் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனையை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை குண்டுவீச்சை நடத்தியது. அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கையில், ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை மட்டுமே தாக்கி வருவதாக கூறி வந்த நிலையில், பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மீதான இத்தாக்குதல் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் அமைதிக் கொள்கை மீது கொண்ட ஈா்ப்பால், […]
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து!
இலங்கையில் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்தாலோசனையின் பின்னரே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கட்டணமில்லா விசா நீடிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், […]
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுக…அமெரிக்கா உத்தரவு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு […]
இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:
மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில்… The post இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்: appeared first on Global Tamil News .
Strengthening their position as Centres of Excellence in Precision Oncology in the city, MGM Cancer Institute and MGM Healthcare Malar,
அதிமுக –பா.ஜ.க கூட்டணியில் ராமதாஸ் இணைய 3 கட்டுப்பாடுகள் விதித்த அன்புமணி!
சட்டமன்ற தேர்தலை சந்திக்க பெரும்பாலான முன்னணி கட்சிகள் ஒவ்வொரு அணியில் சென்று இடம் பிடித்து விட்டன. ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த பக்கம் செல்வது
காமேனி கொலைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது
தமிழ்நாட்டுக்கு ஆதரவு அளித்த கர்நாடகா –சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வின் முதல்
ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் அணுசக்தி நாடாகிவிட்டால், அது கடும் ஆபத்தாகிவிடும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஈரானுக்கு
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் –சீமான் வலியுறுத்தல்
தி கேரளா ஸ்டோரி 2 படத்தின் ரிலீஸுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்க்கு கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அதிகப்படியான தொகுதி கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. இன்றைக்குள் முடிவு செய்ய திமுக
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர்
ஜேட்டா, துபாய்க்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் ஏர் இந்தியா
மத்திய கிழக்கு பகுதி மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை அழைத்து
துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் தங்களது சிறப்பான நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனை ஆகியவை ‘CAR-T
ஈரான் மீது தரைவழி தாக்குதலுக்கும் நாங்க ரெடி; டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேல் – ஈரான் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேவைப்பட்டால் அமெரிக்கத் தரைப்படையை (Boots on the ground) ஈரானுக்குள் அனுப்பத் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஈரானில் , அமெரிக்கா தற்போது வான்வழித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், அது ஒரு ‘பெரிய அலையாக’ (Big wave) அமையும் […]
வலிகாமம் கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு: சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றை இடித்து அழிக்கும் செயற்பாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக […]
2026 தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் அழுத்தத்துக்கு எதிராக திமுக நிர்வாகிகள், சீட் பங்கீட்டில் தலைமைக்கு நிபந்தனை விடுத்துள்ளனர்.
உச்ச தலைவர் உட்பட ஈரானின் 49 உயர்மட்ட தலைவர்கள் உயிரிழப்பு –வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி. ஈரான் மீதான தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் உட்பட 49 உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஜனாதிபதி டிரம்ப், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு அதன் தெளிவான நோக்கங்களை முன்வைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நான் அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஈரானின் ஏவுகணை திறன்களை முற்றிலும் அழித்து, அதன் ஏவுகணை தொழில்துறையை தரைமட்டமாக்குவது. அந்த நாட்டின் […]
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (03.03.2026) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது தொடர்பாக, குறிப்பாக அரிசி விலையினை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசாங்க அதிபரால் கலந்துரையப்பட்டது. மேலும் வர்த்தக சங்கங்களின் கருத்துக்களை அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன், பொதுமக்கள் பாதிக்காதவகையில் செயற்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார். […]
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை(video/photoes)
video link- https://fromsmash.com/FR7Df4L8z6-dt அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன பங்குபற்றலுடன் அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் […]
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் எனும அமைப்பு தெரிவித்துள்ளது. “1950களிலிருந்து ஈரானில் நடந்துவருவதாக கூறப்படும் அரசியல் அடக்குமுறைகள், 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையிலும் நடைபெற்று வருகின்றன. காலனித்துவத்திற்கு முன் எங்களிடம் இருந்த அரசியல் உரிமைகள் மற்றும் இறையாண்மை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தாய்மார்கள் “காணாமல் போனோர் அலுவலகம்” (OMP) போன்ற உள்ளூர் ஆணையங்களை பயனற்றவை என நிராகரித்துள்ளனர். ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் உண்மையை அறியாமல் உயிரிழந்துள்ளனர். இவ்வழைப்பு, தமிழ் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசர கோரிக்கையாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.என்றார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கட்டுப்படுத்த, அமைதியான உலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எந்தவொரு போரும் எந்த சமூகத்திற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், மிகப் பெரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் உலகிற்கு அது எவ்வளவு அழிவுகரமானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.எனவே, இலங்கை என்ற வகையில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான உறுதிமொழிகளையும் வழிகாட்டுதல்களையும் விரைவில் விடுக்க வேண்டும். போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இலங்கை மட்டும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. போரினால் பாதிக்கப்படும் பல முக்கிய துறைகள் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு நேரடியாகப் பாதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். பணம் அனுப்புவதும் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கூறினார். போர் சூழ்நிலையால் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலத்தின் விரும்பத்தகாத அனுபவங்களால் சூழ்நிலையில் மக்கள் பதட்டமடைவது இயல்பானது என்றும் கூறினார். தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இதேபோன்ற பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் முந்தைய சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை என்றும் கூறிய ஜனாதிபதி, தற்போதைய போர் நிலைமையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் கூறினார். ஒரு அரசாங்கமாக, இந்த நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மத்திய வங்கி தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்து, இன்று அல்லது நாளை மாலைக்குள் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த அறிக்கையை வழங்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரவுக்கு இருந்த தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நாட்டை விட்டுச் செல்லும் போது எடுத்து சென்றுவிட்டாராவென கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் . ஈரானை முழுமையாக அழிப்பதற்கும், மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் டிரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலிய நிர்வாகமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அவர்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளனர். இதனால் இன்று உலகம் முழுவதும் அச்சமடைந்துள்ளது. ஒரு நாடாக இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எமது நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்னவென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து அறிவிப்பார் என்று நாம் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாரா என்று தெரியவில்லைஎன முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை… The post மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார் appeared first on Global Tamil News .
இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்கு எது? தகவல் வெளியீடு
டெல் அவிவ் மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ […]
119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி 6ம்,7ம் திகதி என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது. வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர்களால் குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு […]
Rare Selenelion: Moon And Sun Visible Together
Imagine looking at the sky and seeing a bright red Moon setting in the West while the Sun rises in
அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; அவர் ஒரு சூப்பர் ஸ்டார் - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?
நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார். சவிதா ஷானை 'சூப்பர் ஸ்டார் மாணவர்' என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது. சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Engineers Key To Samsung Smartphone Integration
JB Park, President and CEO of Samsung Southwest Asia, explained how important India is for making Samsung smartphones. He said
Dhaba Raan Recipe – Tender Spiced Mutton Delight
This dish comes from royal camp food and is perfect for mutton lovers. A lamb leg is cooked, skewered on
How To Reduce Trapped Pores At Home
Trapped pores occur when oil, dead skin cells, dirt, pollution, or makeup collects on your skin. This buildup can cause
நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?
காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது... திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன... மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா ஸ்டோரி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம். வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும். இதைப் பொறுத்துக்கொள்ளவோ முடியாது. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.
வேலூரைத் தொடர்ந்து தஞ்சையில் தவெக கூட்டம்... திமுகவிற்கு செக் வைப்பாரா விஜய்? என்ன பேசுவார்?
நாளை தஞ்சையில் நடைபெறும் கூட்டத்தில் விஜய் பேசும் முக்கிய பிரச்சினைகளை இந்த கட்டுரையில் காணலாம்
Immunity Boosters: Myths Versus Scientific Facts
If you search for “immunity boosters” online, you will find many tips, from traditional home remedies to vitamin supplements and
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
Anirudh Ravichander Confirms Focus Solely On Music
Anirudh Ravichander, the popular music composer and singer, has clarified that he has no plans to act as a hero
RJ Balaji Oversees Karuppu, Engages College Audiences
RJ Balaji, the director of the upcoming film Karuppu, starring Suriya, is closely overseeing the production of the movie. He
A Knight of Seven Kingdoms Wins Fan Praise
The debut season of HBO’s A Knight of the Seven Kingdoms has been met with mostly positive reactions from fans.
Aamir Khan Celebrates 60th Birthday With Humor
Last year, Aamir Khan, the actor celebrated for blockbuster films like Qayamat Se Qayamat Tak and Lagaan, marked his 60th
IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?
உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா? சென்னை வந்த தோனி அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார். அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும். ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும். ருத்துராஜ் கெய்க்வாட் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது. தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர். `தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி ஷூட்டிங் சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள். நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர். தோனி இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங் ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான். சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஷ்வின் புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?
ஐதராபாத் ரகசியச் சந்திப்பால் தமிழக காங்கிரஸில் கலகம் வெடித்து, 13 எம்.எல்.ஏ-க்கள் தலைமையை எதிர்த்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை
திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
14 நாட்கள் கால அவகாசம் –இலங்கையிலிருந்து வெளியேற முடியாது சிக்கியுள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு
இலங்கையை விட்டு வெளியேற முடியாத பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு பெற 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின் படி, தேவையான நிபந்தனைகளை சரிபார்த்த பிறகு, விசாக்கள் ஒவ்வொரு வழக்கு அடிப்படையில் வழங்கப்படும். விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்கும் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாங்கள் […]
சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால […]
கமல் –ரஜினி இணையும் KH x RK படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: அனிருத் ரவிச்சந்தர் தகவல்
நடிகர் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் KH x RK படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோ மற்றும் தயாரிப்பு நிலை குறித்த விவரங்கள் இதோ.
மத்திய கிழக்கின் போர் நிலைமை ; கடும் சிக்கலுக்குள் வெளிநாடுகளுக்கான தபால் சேவை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச தபால் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொருட்களை இதுவரை அனுப்ப முடியவில்லை என குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை அனுப்புவதில் தடங்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார். […]
TVK - Congress கூட்டணி? DMK மீது கோபம் ஏன்? - மனம் திறக்கும் ஆதவ் அர்ஜுனா | விகடன் மேடை Teaser #1
Middle East Tensions Hit India’s Airlines Hard
Escalating tensions in the Middle East are creating problems for India’s aviation sector, with flight cancellations and rising fuel costs
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் –ஈரானில் 150 மாணவிகள் உள்பட 555 பேர் உயிரிழப்பு
ஜெருசலேம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் […]
RCB Returns to Chinnaswamy Stadium for 2026
Defending champions Royal Challengers Bengaluru (RCB) will play five of their seven home matches in the 2026 Indian Premier League
McCann India’s Dheeraj Sinha, Grab’s Cheryl Goh to Head Effie APAC 2026 Jury
Mumbai: Effie Asia Pacific has appointed Cheryl Goh, Group Head of Marketing, Sustainability, Loyalty and Support at Grab, and Dheeraj Sinha, CEO of McCann India, as its first-ever pair of Heads of Jury for the 2026 Awards Competition.The duo will lead the Judging Committee in evaluating and celebrating the most effective marketing work across the Asia Pacific region. The move signals Effie APAC’s continued emphasis on business impact, measurable outcomes and the convergence of creativity, data and technology. A Marketer with Operational Depth A member of Grab’s early founding team, Cheryl Goh has played a pivotal role in building one of Southeast Asia’s most recognised technology brands. In her current role, she oversees Grab’s entire marketing ecosystem — spanning product marketing, communications and growth — while also leading sustainability initiatives and customer experience operations across the region.Notably, Goh manages the full business P&L of Grab’s loyalty programmes, positioning her among a rare group of global CMOs who combine brand stewardship with direct commercial accountability. A long-time advocate of marketing effectiveness, she has also served on the APAC Effie jury for several years.On her appointment, Goh said the Effies represent “what matters most in our craft – creativity that creates real impact.” She added that in an era defined by AI, platforms and rapidly evolving consumer touchpoints, balancing imagination with measurable results has never been more critical. A Champion of Modern Brand Growth Dheeraj Sinha brings a strong track record in consumer insight-driven brand transformation. Over his career, he has worked with leading brands including PepsiCo, Uber, Spotify, Amazon, Tata AIG and ITC Aashirwad, translating culture and creativity into measurable business growth.Beyond his executive responsibilities, Sinha is an author, podcast host and current President of the Advertising Club of India, contributing to industry conversations around creativity, effectiveness and talent development. He has also been a speaker at global platforms such as Cannes Lions and a frequent jury member at major award shows, including the APAC Effies.Commenting on his appointment, Sinha described the Effies as the “gold standard for effectiveness,” noting that the convergence of creativity, data and technology is unlocking new dimensions of growth for brands across the region. Raising the Bar for Effectiveness The APAC Effie Awards are widely regarded as a benchmark for marketing effectiveness, recognising work that delivers tangible business results. The rigorous judging process has cemented Effie’s global reputation for celebrating campaigns that work — not just those that win creative acclaim.With the 2026 entry season nearing its close, the final deadline for submissions is 9 March. Marketers and agencies across the region are expected to participate in what remains one of the most competitive effectiveness platforms in the industry.By appointing leaders who bridge brand building and commercial accountability, Effie Asia Pacific appears poised to reinforce its commitment to recognising creativity that demonstrably drives growth.
India Withdraws From 2022 Women’s Asian Cup
In 2022, India was selected to host the AFC Women’s Asian Cup for the first time since 1980. There was
Gukesh Returns Top 10 After FIDE Correction
Gukesh Dommaraju, the current world chess champion, has returned to the top 10 in the March 2026 FIDE rankings after
மத்திய கிழக்கு பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
டெல்லி :மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது முழு அளவிலான போராக மாறியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் இந்த மோதலை மேலும் கொடூரமாக்கியுள்ளது. ஈரானின் பதிலடி – ஹார்முஸ் நீரிணை மூடல் ஈரான் தனது பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை […]
எகிறும் விமானக் கட்டணம்: டெல்லி - லண்டன் டிக்கெட் ரூ. 9 லட்சம்! ஈரான்-இஸ்ரேல் போரால் பயணிகள் அவதி
ஈரான்-இஸ்ரேல் போரால் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது
எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் ஐரோப்பா
போரின் போது வளைகுடா எரிவாயு விநியோகம் தடைபட்டதால் இந்தியா, ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை சந்திக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய எரிவாயு விலைகள் 30 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், முன்னணி உலகளாவிய உற்பத்தியாளரான கத்தார் எல்என்ஜி உற்பத்தியை நிறுத்திய பின்னர், மத்திய கிழக்கிலிருந்து கடுமையான விநியோகத்தை எதிர்பார்த்து இந்திய நிறுவனங்கள் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளன. இந்த விஷயத்தை அறிந்த தொழில்துறை வட்டாரங்கள் செவ்வாயன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், முன்னணி எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், அரசுக்குச் சொந்தமான முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான கெயில் (இந்தியா) மற்றும் பிற நிறுவனங்களுக்கு குறைந்த விநியோகம் குறித்து தகவல் தெரிவித்ததாகத் தெரிவித்தன. இந்தியா உலகின் நான்காவது பெரிய திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும், அதன் இறக்குமதிக்கு மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளதாகவும் உள்ளது. தெற்காசிய நாடான இந்த தெற்காசிய நாடு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மையான திரவ இயற்கை எரிவாயு வாடிக்கையாளராகவும், கத்தார் திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும் உள்ளது.
Gavaskar Praises Bumrah Ahead T20 Semifinal
Sunil Gavaskar, the first batter to score over 10,000 runs in Test cricket, has praised Jasprit Bumrah for his exceptional
Melania Trump Presides Historic UN Security Meeting
United States First Lady Melania Trump presided over a United Nations Security Council (UNSC) meeting on children and education in
மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!
நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!
முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை
கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங்களது துணையை பிரிந்தவர்கள் ஆவர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்று வீட்டு உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சமீபத்தில் வினய் என்பவரை பிந்து சந்தித்தார். அவர்கள் இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதனால் பிந்து வினயை திருமணம் செய்ய திட்டமிட்டார். இது குறித்து பிந்து மோகன்ராவிடம் தெரிவித்தார். ஆனால் அவர்களது திருமணத்திற்கு மோகன்ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பிந்து தான் வினயை திருமணம் பிடிவாதமாக இருந்தார். காவல்துறை இதனால் வினயும், பிந்துவும் சேர்ந்து மோகன்ராவை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக வினய் தனது நண்பர் தனுஷ் என்பவரின் உதவியை நாடினார். தனுஷ் ஏற்கனவே ஹோட்டல் தொழில் ஆரம்பித்து நஷ்டப்பட்டு இருந்தார். எனவே இக்கொலைக்கு உதவி செய்தால் பணம் கொடுப்பதாக வினய் தெரிவித்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு தனுஷ் இக்கொலைக்கு உதவி செய்வதாக தெரிவித்தார். அவர்கள் மோகன்ராவிற்கு மது பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். பிந்துவும், மோகன்ராவும் வசித்து வந்த வீட்டில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாயில் டேப் ஒட்டிய நடிகை இதில் மோகன்ராவ் அளவுக்கு அதிகமாக குடித்தவுடன் வினயும், அவரது நண்பர் தனுஷும் சேர்ந்து மோகன்ராவை கத்தியால் குத்தினர். இதில் மோகன் ராவ் கத்தினார். உடனே அருகில் இருந்த பிந்து மோகன்ராவ் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டினார். கத்திக்குத்து காயம் மற்றும் மூச்சுவிட முடியாமை போன்ற காரணங்களால் மோகன்ராவ் இறந்துவிட்டார். அவரை அப்படியே போட்டுவிட்டு பிந்துவும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். கொலை நடந்து 10 நாட்களுக்கும் மேலான நிலையில் அந்த வீட்டில் இருந்து வந்த கெட்ட வாசனையை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது மோகன்ராவ் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி பிந்து, வினய், தனுஷ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் எப்படி கொலை செய்தோம் என்ற விபரத்தை பிந்து விரிவாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Oil Prices Steady Amid West Asia Tensions
Crude oil prices remained steady today after rising sharply in the previous trading session due to growing tensions in West
தென் தமிழகத்தில் விஜயின் அரசியல் ஆட்டம்... நெல்லை, தூத்துக்குடியில் சுற்றுப்பயணமா?
தென் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 C