SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு...

தஸ்தர் 23 Nov 2025 7:27 pm

சுந்தரவல்லி போட்ட திட்டம், சதியில் சிக்கிய விஜி விவேக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சொந்தத் தம்பி என்று கூட பார்க்காமல் இப்படி பண்ணாங்க ஆனா சுந்தரவல்லி அம்மா அவங்க கிட்ட எதுவுமே...

தஸ்தர் 23 Nov 2025 7:10 pm

''நிறைய பேர் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்பாங்க; சிவப்பதிகாரம் ஷூட்டிங்ல ஒரு பெண்..- விஷால் ஷேரிங்ஸ்

நடிகர் விஷால் தற்போது 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு முதலில் இப்படத்தை இயக்கி வந்த நிலையில் இப்போது விஷால்தான் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளிவந்த பேட்டியில் அவருடைய கரியரின் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். Vishal - Magudam தற்போது அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. அதிலும் சில சுவாரஸ்யமான தகவல்களை விஷால் பகிர்ந்திருக்கிறார். நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன். அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் அதிகமாகப் பேசிட்டு இருப்பான்” என்றவர், “ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் வந்து 'உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு' சொல்வாங்க. 'எதை வச்சு அதை முடிவு பண்ணினீங்க. திரையில பார்க்கிற விஷால் வேற'னு சொல்லிடுவேன். ஒரு பெண் என்னுடைய முகத்தை இரத்தத்துல வரைந்து எடுத்திட்டு வந்திருக்காங்க. ‘சிவபாதிகாரம்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண் திடீரென எனக்கு முத்தம் கொடுத்திட்டாங்க. நான் உடனே அவரிடம் ‘இப்படிச் செய்யாதீங்க’னு சொல்லிட்டேன். Vishal என்னுடைய புகழை யூஸ் பண்ணி எந்தப் பெண்ணையும் நான் தவறாகப் பயன்படுத்தினது கிடையாது. என்னைப் பற்றின வதந்திகளுக்கு நானே முற்றுப்புள்ளி வச்சிடுவேன். ‘மார்க் ஆண்டனி’ படத்துடைய கிளைமாக்ஸ்ல என்னை விமர்சித்த மாதிரி நான் விமர்சிப்பேன். அதுபோல எப்பவும் என்னையே நான் விமர்சிப்பேன். ஒரு முறை நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை வேண்டிக்கிட்ட விஷயத்திற்காக என்னை ட்ரோல் பண்ணினாங்க. அதனால அதையும் இப்போ நிறுத்திட்டேன்” எனக் கூறினார்.

விகடன் 23 Nov 2025 6:17 pm

போஸின் முகத்திரையை கிழிக்க வரும் சேது, திருமணத்திற்கு தயாரான காவியா –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, உன் மகன் செய்த வேலையைப் பற்றி போய் கேள். இந்த கல்யாணம் நடக்குமானே தெரியவில்லை என்று நக்கலாக பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, போஸ் இடம் விசாரித்தார். அப்போது போஸ் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி, போஸை அடிக்கிறார். பின் ஈஸ்வரி, காவியாவிற்கு ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அதற்கு காவியா, இவ்வளவு கேவலமான மகனை பெற்றுவிட்டு நீங்கள் […] The post போஸின் முகத்திரையை கிழிக்க வரும் சேது, திருமணத்திற்கு தயாரான காவியா – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Nov 2025 5:21 pm

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி வெளியில் இரண்டு கார் வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நிற்கும் அதில் எளிமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களான...

தஸ்தர் 23 Nov 2025 4:06 pm

Dhanush: எனக்கு லவ் ஃபெயிலர் முகம் இருக்கிறதா! - நிகழ்வில் தனுஷின் ஜாலி டாக்!

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை 'ராஞ்சனா', 'அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq Mein ரிலீஸையொட்டி படக்குழுவினர் ப்ரோமோஷனில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்திய ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தன்னை இப்படியான காதல் தோல்வி கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்வது குறித்து ஜாலியாக பேசியிருக்கிறார் தனுஷ். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் தனுஷ், “நான் என் இயக்குநரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் ‘உங்களுக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார். அன்று நான் என் வீட்டிற்குச் சென்றதும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். இயக்குநர் சொன்னதை நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால், அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது சவாலான விஷயம். தனுஷ் ‘ராஞ்சனா’ தொடங்கி இப்படம் வரை அந்த சவாலான விஷயம் இருந்தது. ‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி கிடையாது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமானது. கொஞ்சம் தவறினாலும் உங்களுக்கு குந்தன் கதாபாத்திரம் பிடிக்காமல் போய்விடும். அதுபோல, இப்படத்தின் ஷங்கர் கதாபாத்திரத்திற்கும் சில சவால்கள் இருந்தன. படம் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் பற்றி உங்களுக்கு தெரியவரும்.” என்றார்.

விகடன் 23 Nov 2025 3:16 pm

AR Rahman: எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது பிரச்சனை! - ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq Mein - Dhanush இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் இப்போது ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். யூடியூபர் நிகில் காமத்துக்கு அளித்த பேட்டியில் அவர் அனைத்து மதங்களையும் மதிப்பது குறித்தும், சூஃபி மதம் குறித்தும் பேசியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். 23 வயதில் அவர் மதம் மாறிய பிறகுதான் ஏ.ஆர். ரஹ்மான் எனப் பெயரை மாற்றிக் கொண்டார் என்ற தகவல் பலரும் அறிந்ததே. அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்கு செய்வது மட்டும் பிரச்னை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும். நான் மேடையில் நின்று பாடும்போது அது ஒரு கோவில் போன்ற உணர்வை எனக்குத் தரும். அங்கே பல மதத்தவரும், பல மொழிகளில் பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள்” என்றவர் சூஃபிசம் குறித்து, “நம்முள் உள்ள ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் மறைந்து போக வேண்டும். AR Rahman அப்போதுதான் அகங்காரம் அழிந்து, கடவுள் போல ஒரு தெளிவான நிலைக்கு நாம் வர முடியும். நாமெல்லாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அந்த நம்பிக்கையின் உண்மையான நேர்மையே முக்கியம். அதுதான் மனிதர்களை நல்ல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது” எனப் பேசியிருக்கிறார்.

விகடன் 23 Nov 2025 2:24 pm

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி.  மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது.  BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா.  ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள்.  “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள்.  நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை.  “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார்.  தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம்.  “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார்.  BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார்.  தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா.  பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள்.  எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார்.  திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே.  பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே.  திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே.  அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு.  “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே.  BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா.  படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே.  “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின்.  BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும்.  மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச்  சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும்.  BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி  - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார்.  விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா.  அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத  வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு.  BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது.  ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே.  அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க..  BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.  ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள்.  தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே.  தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது.  திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி.  “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே.  “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார்.  “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.  விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே.  “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா?  BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது  புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு.  இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம். 

விகடன் 23 Nov 2025 1:50 pm

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி.  மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது.  BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா.  ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள்.  “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள்.  நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை.  “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார்.  தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம்.  “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார்.  BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார்.  தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா.  பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள்.  எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார்.  திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே.  பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே.  திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே.  அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு.  “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே.  BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா.  படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே.  “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின்.  BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும்.  மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச்  சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும்.  BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி  - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார்.  விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா.  அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத  வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு.  BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது.  ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே.  அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க..  BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.  ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள்.  தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே.  தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது.  திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி.  “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே.  “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார்.  “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.  விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே.  “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா?  BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது  புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு.  இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம். 

விகடன் 23 Nov 2025 1:50 pm

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

விகடன் 23 Nov 2025 1:40 pm

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

விகடன் 23 Nov 2025 1:40 pm

கதிரை அடித்து வெளியே துரத்திய குமார், எரிமலையாய் வெடிக்கும் ராஜி –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தார். ஆனால், யாருமே கேட்கவில்லை. பாண்டியன், கோமதி, சரவணன் என்று வீட்டில் உள்ள எல்லோருமே மாற்றி மாற்றி பழனியை திட்டிக் கொண்டிருந்தார்கள். கோபத்தின் உச்சத்தில் சென்ற கோமதி, நீ இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. வீட்டை விட்டு வெளியே போ என்றார். பாண்டியனுமே வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் பழனி ரொம்பவே மனமடைந்து விட்டார். கதிர், பழனிக்காக […] The post கதிரை அடித்து வெளியே துரத்திய குமார், எரிமலையாய் வெடிக்கும் ராஜி – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Nov 2025 12:16 pm

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, சபரி சொன்ன பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் யாரு யார் பேச்சைக் கேட்டு நாமினேஷன் செய்றாங்க என்று கேட்க சக போட்டியாளர்களும்...

தஸ்தர் 23 Nov 2025 12:14 pm

மாஸ்க் ; 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...

தஸ்தர் 23 Nov 2025 11:53 am

Friends: 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்... - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!

நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் காலம் கடந்தும் மீம் டெம்ப்லேட்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா இவ்வளவு நகைச்சுவை கதையாடலுக்கு மத்தியில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதுவும் விஜய்-சூர்யா என்று இருவருக்கும் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கிச் சுமப்பது எளிதான காரியமல்ல. அதை கணக்கச்சிதமாக செய்தவர் நடிகர் ஶ்ரீமன். ரீ-ரிலீஸையொட்டி அவரிடம் பேசினோம். விஜய் - சூர்யா என்னை பரிந்துரைத்தார்கள்! நம்மிடையே பேசிய அவர், “என்னுடைய கெளதம் கதாபாத்திரத்தை வேறொரு புகழ்பெற்ற நடிகர் மூன்று நாட்கள் நடித்துள்ளார். ஆனால் இயக்குநர் சித்திக் திருப்தி அடையவில்லையாம். அந்தச் சூழலில் இயக்குநரிடம் விஜய்யும் சூர்யாவும் என்னைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சேது வெளியான தருணம் அது. நான் பிஸியாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு, ‘சேது திரைப்படம் பார்த்தோம். உங்களால் ஒரு பத்து நாள் ஷூட்டுக்கு வர முடியுமா’ என்று கேட்டனர். அப்போது நான் ஹைதராபாத்தில் ‘சேது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தேன். Sriman with Vadivelu இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெலுங்குப் படக்குழுவினரிடம் நான் கூறியபோது பட ஷூட்டிங்கை விட்டுக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தனர். அன்றே விமானம் ஏறி சென்னை வந்து நேராக பழனியில் நடைபெற்ற ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். இயக்குநர் சித்திக் என்னைப் பார்த்துவிட்டு ‘மேக்கப் போட முடியுமா?’ என்றார். போட்டுவிட்டுச் சென்றேன். முதல் ஷாட் நான் வீட்டுக்குள் என்டர் ஆகும் காட்சி. அந்தக் காட்சியை ஷூட் செய்துவிட்டு இயக்குநர் சித்திக் விஜய்யிடம், ‘சார் பர்ஃபெக்ட்டான சாய்ஸ்’ என்று கூறினார்.” என்றார் உற்சாகத்துடன். என்னை அவர் ஆட வைத்தார்! இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன். அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும். அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக் என்றார். Sriman விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார். அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன். கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார். நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார். “படத்தில் சார்லி சாரின் போஷன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வடிவேல் சாருக்கும் அந்தத் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. வடிவேல் சாருக்கு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் அதற்கு நேர்மறையாக சார்லி சாரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அது சிறப்பானதொரு காம்போவாக அமைந்தது. சூர்யாவுக்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இளையராஜா படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யாவும் விஜயும் என்னுடன் சண்டையிடும்படி அமைந்திருக்கும். நாங்கள் மூவருமே ஸ்டண்ட் பயிற்சி செய்தவர்கள். மேலும், அப்போது நாங்கள் மூவருமே 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். அதனால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய ஷூட் இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது.” என்று கூறி மகிழ்ந்தார். Vijay with Sriman இறுதியாக, “குடும்ப நட்பு உறவுகள் சார்ந்த திரைப்படம் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலுக்கேற்ப மாறிவருகிறது. அந்த காலங்களில் நாங்கள் நட்பாகவும் குடும்பமாகவும் எப்படி இருந்தோம் என்பதைப் பேசுவதில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் இத்திரைப்படம். என் வாழ்க்கையின் மறக்க முடியாத படங்களில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும் ஒன்று.” என நெகிழ்ச்சியாகப் பேசினார். -ரொ.கோகுலசரண்

விகடன் 23 Nov 2025 11:05 am

Friends: 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்... - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!

நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் காலம் கடந்தும் மீம் டெம்ப்லேட்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா இவ்வளவு நகைச்சுவை கதையாடலுக்கு மத்தியில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதுவும் விஜய்-சூர்யா என்று இருவருக்கும் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கிச் சுமப்பது எளிதான காரியமல்ல. அதை கணக்கச்சிதமாக செய்தவர் நடிகர் ஶ்ரீமன். ரீ-ரிலீஸையொட்டி அவரிடம் பேசினோம். விஜய் - சூர்யா என்னை பரிந்துரைத்தார்கள்! நம்மிடையே பேசிய அவர், “என்னுடைய கெளதம் கதாபாத்திரத்தை வேறொரு புகழ்பெற்ற நடிகர் மூன்று நாட்கள் நடித்துள்ளார். ஆனால் இயக்குநர் சித்திக் திருப்தி அடையவில்லையாம். அந்தச் சூழலில் இயக்குநரிடம் விஜய்யும் சூர்யாவும் என்னைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சேது வெளியான தருணம் அது. நான் பிஸியாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு, ‘சேது திரைப்படம் பார்த்தோம். உங்களால் ஒரு பத்து நாள் ஷூட்டுக்கு வர முடியுமா’ என்று கேட்டனர். அப்போது நான் ஹைதராபாத்தில் ‘சேது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தேன். Sriman with Vadivelu இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெலுங்குப் படக்குழுவினரிடம் நான் கூறியபோது பட ஷூட்டிங்கை விட்டுக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தனர். அன்றே விமானம் ஏறி சென்னை வந்து நேராக பழனியில் நடைபெற்ற ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். இயக்குநர் சித்திக் என்னைப் பார்த்துவிட்டு ‘மேக்கப் போட முடியுமா?’ என்றார். போட்டுவிட்டுச் சென்றேன். முதல் ஷாட் நான் வீட்டுக்குள் என்டர் ஆகும் காட்சி. அந்தக் காட்சியை ஷூட் செய்துவிட்டு இயக்குநர் சித்திக் விஜய்யிடம், ‘சார் பர்ஃபெக்ட்டான சாய்ஸ்’ என்று கூறினார்.” என்றார் உற்சாகத்துடன். என்னை அவர் ஆட வைத்தார்! இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன். அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும். அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக் என்றார். Sriman விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார். அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன். கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார். நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார். “படத்தில் சார்லி சாரின் போஷன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வடிவேல் சாருக்கும் அந்தத் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. வடிவேல் சாருக்கு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் அதற்கு நேர்மறையாக சார்லி சாரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அது சிறப்பானதொரு காம்போவாக அமைந்தது. சூர்யாவுக்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இளையராஜா படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யாவும் விஜயும் என்னுடன் சண்டையிடும்படி அமைந்திருக்கும். நாங்கள் மூவருமே ஸ்டண்ட் பயிற்சி செய்தவர்கள். மேலும், அப்போது நாங்கள் மூவருமே 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். அதனால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய ஷூட் இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது.” என்று கூறி மகிழ்ந்தார். Vijay with Sriman இறுதியாக, “குடும்ப நட்பு உறவுகள் சார்ந்த திரைப்படம் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலுக்கேற்ப மாறிவருகிறது. அந்த காலங்களில் நாங்கள் நட்பாகவும் குடும்பமாகவும் எப்படி இருந்தோம் என்பதைப் பேசுவதில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் இத்திரைப்படம். என் வாழ்க்கையின் மறக்க முடியாத படங்களில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும் ஒன்று.” என நெகிழ்ச்சியாகப் பேசினார். -ரொ.கோகுலசரண்

விகடன் 23 Nov 2025 11:05 am

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த டிக்கெட்டெல்லாம் அம்பது நாள் எப்படி தங்கச்சி என்று சொல்லக்கூடிய போட்டியாளர்கள் யார்...

தஸ்தர் 23 Nov 2025 10:17 am

அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன் -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன். நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும் என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

விகடன் 23 Nov 2025 9:35 am

அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன் -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன். நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும் என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

விகடன் 23 Nov 2025 9:35 am

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. பிக் பாஸ் சீசன் 9-ல் வி.ஜே. பார்வதி, பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், கனி, கெமி என மொத்தமாக 20 போட்டியாளர்கள் முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். BB TAMIL 9 சோசியல் மீடியா பிரபலங்களே பிக் பாஸ் நிறைந்திருப்பதால் இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது என்கிற பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பரபரப்பாகவே நகரத் தொடங்கியது. இந்த வார எவிக்ஷனுக்கான டிஸ்கஷன் வழக்கம் போல நடந்திருக்கிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்திருந்தது. அமித் பார்கவ், அரோரா, திவ்யா கணேஷ், கனி, கெமி, பிரஜின், ரம்யா ஜோ, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், வியானா, வி.ஜே. பார்வதி என 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் வெளியேறுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. BB Tamil 9 பார்வையாளர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரம் கெமி வெளியேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் என 7 பேர் எவிக்ட் ஆகியிருக்கிறார்கள். பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் நந்தினி முதல் வாரத்தில் அவராகவே வெளியேறினார். ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாக்குகளைப் பெற்ற கெமி இந்த வாரம் எவிக்ட் ஆகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விகடன் 23 Nov 2025 8:10 am

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா... MASK மாஸ்க்: அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த 'மாஸ்க்' படத்தின் கதை. இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த 'மாஸ்க்' ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க: எழுத்தாளராக இருப்பவரின் கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரியான மகுடபதி (அர்ஜூன்) களத்தில் இறங்குகிறார். எழுத்தாளர் எழுதி வைத்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை கொலைக் காரணங்களாகக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் இவர். உண்மையான கொலையாளி யார், எதற்காக கொலை செய்தார் என்பதைச் சொல்கிறது இந்த 'தீயவர் குலை நடுங்க'. கணிக்கக்கூடிய திருப்பங்கள், டெம்ப்ளேட் திரைக்கதையாலும் பார்வையாளரை இப்படம் சோர்வடையச் செய்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review எல்லோ: தந்தையின் உடல்நிலை பிரச்னைகளால் குடும்பப் பொறுப்புகள் ஆதிரையை (பூர்ணிமா ரவி) சூழ்ந்துவிடுகின்றன. தந்தையின் பழைய ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இவரை கேரளத்துக்கு பயணப்பட வைக்கிறது. பயணத்தின் போது சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் இவருடைய ஆசைகளுக்கு உதவுகிறார். இவர்களின் பயணம் எங்கெல்லாம் இவர்களை அழைத்துச் செல்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபீல் குட் டிராமாவாக நகரும் இந்த 'எல்லோ' திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமிருந்திருந்தால் பலருக்கும் பேவரிட்டாகியிருக்கும். படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். மிடில் க்ளாஸ்: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரல் மார்க்ஸ், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதே இந்த மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவரின் கனவாக இருக்கிறது. அப்படியான வேளையில், இவருடைய தந்தையால் இவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், அது கைகளுக்கு கிடைக்காமல் சில பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது. இறுதியில் அந்த ஜாக்பாட் இவர்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பதுதான் இதன் கதை. காமெடி, எமோஷனல் என குழம்பும் திரைக்கதையால் இந்த 'மிடில் க்ளாஸ்' ஓகே மட்டுமே சொல்ல வைக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் சிசு ரோட் டு ரிவெஞ்ச் (SISU - Road To Revenge): கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'சிசு' படத்தின் சீக்வெல்தான் இத்திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் இறுதியில் இறந்துப் போன தனது குடும்பத்தின் நினைவாக கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய வீட்டை தகர்த்துவிட்டு அதை வைத்து வேறொரு இடத்தில் வீடு கட்ட திட்டமிடுகிறார். கட்டைகளை எடுத்துச் செல்லும் வேளையில் அடாமி கார்பிக்கு (ஜால்மரி டாமிலா) பழைய எதிரிகளால் பல தடைகளும், பிரச்னைகளும் வருகின்றன. அதை கடந்து எப்படி மற்றொரு பகுதிக்கு சென்று வீட்டை எழுப்பினார் என்பதுதான் இதன் கதை. வழக்கமான ஆக்‌ஷன் படங்களின் கதை சொல்லலை தவிர்த்து புதிய திரைமொழிக் கொண்டு சொல்லும் இடத்தில் இந்த 'சிசு' தனித்து நிற்கிறது படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விகடன் 23 Nov 2025 7:17 am

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா... MASK மாஸ்க்: அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த 'மாஸ்க்' படத்தின் கதை. இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த 'மாஸ்க்' ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க: எழுத்தாளராக இருப்பவரின் கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரியான மகுடபதி (அர்ஜூன்) களத்தில் இறங்குகிறார். எழுத்தாளர் எழுதி வைத்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை கொலைக் காரணங்களாகக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் இவர். உண்மையான கொலையாளி யார், எதற்காக கொலை செய்தார் என்பதைச் சொல்கிறது இந்த 'தீயவர் குலை நடுங்க'. கணிக்கக்கூடிய திருப்பங்கள், டெம்ப்ளேட் திரைக்கதையாலும் பார்வையாளரை இப்படம் சோர்வடையச் செய்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review எல்லோ: தந்தையின் உடல்நிலை பிரச்னைகளால் குடும்பப் பொறுப்புகள் ஆதிரையை (பூர்ணிமா ரவி) சூழ்ந்துவிடுகின்றன. தந்தையின் பழைய ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இவரை கேரளத்துக்கு பயணப்பட வைக்கிறது. பயணத்தின் போது சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் இவருடைய ஆசைகளுக்கு உதவுகிறார். இவர்களின் பயணம் எங்கெல்லாம் இவர்களை அழைத்துச் செல்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபீல் குட் டிராமாவாக நகரும் இந்த 'எல்லோ' திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமிருந்திருந்தால் பலருக்கும் பேவரிட்டாகியிருக்கும். படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். மிடில் க்ளாஸ்: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரல் மார்க்ஸ், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதே இந்த மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவரின் கனவாக இருக்கிறது. அப்படியான வேளையில், இவருடைய தந்தையால் இவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், அது கைகளுக்கு கிடைக்காமல் சில பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது. இறுதியில் அந்த ஜாக்பாட் இவர்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பதுதான் இதன் கதை. காமெடி, எமோஷனல் என குழம்பும் திரைக்கதையால் இந்த 'மிடில் க்ளாஸ்' ஓகே மட்டுமே சொல்ல வைக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் சிசு ரோட் டு ரிவெஞ்ச் (SISU - Road To Revenge): கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'சிசு' படத்தின் சீக்வெல்தான் இத்திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் இறுதியில் இறந்துப் போன தனது குடும்பத்தின் நினைவாக கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய வீட்டை தகர்த்துவிட்டு அதை வைத்து வேறொரு இடத்தில் வீடு கட்ட திட்டமிடுகிறார். கட்டைகளை எடுத்துச் செல்லும் வேளையில் அடாமி கார்பிக்கு (ஜால்மரி டாமிலா) பழைய எதிரிகளால் பல தடைகளும், பிரச்னைகளும் வருகின்றன. அதை கடந்து எப்படி மற்றொரு பகுதிக்கு சென்று வீட்டை எழுப்பினார் என்பதுதான் இதன் கதை. வழக்கமான ஆக்‌ஷன் படங்களின் கதை சொல்லலை தவிர்த்து புதிய திரைமொழிக் கொண்டு சொல்லும் இடத்தில் இந்த 'சிசு' தனித்து நிற்கிறது படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விகடன் 23 Nov 2025 7:17 am

கவினின் ‘மாஸ்க்’படம் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்ததா? முதல் நாளே இத்தனை கோடியா

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தையும் தயாரிப்பாளர் சொக்கலிங்கம் உடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை […] The post கவினின் ‘மாஸ்க்’ படம் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்ததா? முதல் நாளே இத்தனை கோடியா appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 9:00 pm

‘வேற லெவல் லுக்’–கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா

தமிழில் மங்காத்தா, கோவா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஹத். சமீப காலமாக இவரை எந்த படத்திலும் காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் தனது கம்பேக் குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த சில மாதங்களாக நான் […] The post ‘வேற லெவல் லுக்’ – கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 8:28 pm

வேலவன் ஸ்டோரில் ஆஃபர்களை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய விஜய் டிவி தங்கதுரை.!!

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எந்த சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதியும், ரயில்–பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் உள்ளதால், ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கிறிஸ்துமஸ், நியூ இயர்...

தஸ்தர் 22 Nov 2025 7:33 pm

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே போவது யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 48 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே போவது யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 6:01 pm

மாஸ்க் திரைவிமர்சனம்

நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார்....

தஸ்தர் 22 Nov 2025 5:54 pm

மிடில் கிளாஸ் திரை விமர்சனம்..!

சென்னையில் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் முனிஷ்காந்த். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு வெவ்வேறு கனவுகளும் இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முனிஷ்காந்த் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால், முனிஷ்காந்திற்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என்பது கனவு. ஆனால், விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்தமாக வீடு வாங்கி இங்கேயே செட்டில் ஆக வேண்டும்...

தஸ்தர் 22 Nov 2025 5:39 pm

யெல்லோ திரை விமர்சனம்..!

நாயகி பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது. இதன் காரணமாக, பூர்ணிமா தன்னுடைய சிறு வயதில் பழகிய நபர்களை தேடிச் செல்கிறார். இறுதியில் அவர்களை சந்தித்தாரா? பூர்ணிமா ரவியின் வாழ்க்கை...

தஸ்தர் 22 Nov 2025 5:27 pm

இளையராஜாவின் பாடல் சர்ச்சை, அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு –நடிகர் கவின் சொன்ன விஷயம்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தையும் தயாரிப்பாளர் சொக்கலிங்கம் உடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை […] The post இளையராஜாவின் பாடல் சர்ச்சை, அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு – நடிகர் கவின் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 4:52 pm

Where to watch on OTT/Theater: 'Mask, பைசன், Sisu, Eko, டீசல்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே... தமிழ்த் திரைப்படங்கள் மாஸ்க் நடிகர்கள் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா ஆகியோரின் நடிப்பில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்க் . ஹெய்ஸ்ட் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிடில் க்ளாஸ் நடிகர்கள் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில், நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மிடில் க்ளாஸ் . இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாஸ்க் - மிடில் க்ளாஸ் - தீயவர் குலை நடுங்க - எல்லோ தீயவர் குலை நடுங்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எல்லோ நடிகை பூர்ணிமா ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அட்வென்சர் திரைப்படமான இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? தெலுங்கு திரைப்படங்கள் 12A Railway Colony ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இதில் நடிகர் அல்லரி நரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Paanch Minar நடிகர்கள் ராஜ் தருண் மற்றும் ராஷி சிங் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமான இது, நேற்று நவம்பர் 21 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Premante காமெடி திரைப்படமான இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரியதர்ஷி மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12A Railway Colony - eko மலையாளத் திரைப்படங்கள் Eko மலையாள நடிகர் சந்தீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் எக்கோ. இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Vilayath Budha GR இன்டுகொப்பன் என்பவர் எழுதிய Vilayath Budha என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆக்ஷன் திரைப்படம் இது. நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாறன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? கன்னட திரைப்படங்கள் Bank of Bhagyalakshmi ஆக்ஷன் த்ரில்லர் கதை கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிருந்தா ஆச்சாரியா நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Radheyaa நடிகர்கள் அஜய் ராவ், சோனல், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Full Meals லிக்கித் ஷெட்டி , குஷி ரவி, தேஜஸ்வினி ஷர்மா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம், இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Maarutha துனியா விஜய், ஷ்ரேயாஸ் மஞ்சு, ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Bank of Bhagyalakshmi - 120 Bahadur இந்தி திரைப்படங்கள் 120 Bahadur நடிகர்கள் ஃபாரான் அக்தர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 120 பகதூர். மிலிட்டரி பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Haunted-Ghosts of the Past 3D காமெடி ஹாரர் திரைப்படமான இதில் நடிகர்கள் கௌரவ் பாஜ்பாய், மஹாக்ஷய் சக்ரபோர்ட்டி, ஷ்ருதி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Mastiii 4 மஸ்தி திரைப்படங்கள் வரிசையில் உருவாகியுள்ள மற்றுமொரு திரைப்படமான இதில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய், அஃப்தப் ஷிவ்தாஸ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! ஆங்கில திரைப்படங்கள் Wicked For Good 2024-ம் ஆண்டு வெளிவந்த விக்கட் திரைப்படத்தின் அடுத்த பாகமான இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . Sisu : Road to Revenge 2022-ம் ஆண்டு வெளிவந்த சிசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இதில் நடிகர்கள் ஜோர்மா டொம்மிலா மற்றும் ஸ்டீஃபன் லாங் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Wicked For Good - Sisu : Road to Revenge ஓடிடி படங்கள்: * பைசன் - Netflix-November 21 * டீசல் - Prime Video -November 21 * Usiru(கன்னடம்) - Sun Nxt-November 21 * Homebound (இந்தி) - Netflix -November 21 * The Bengal Files(இந்தி)-Zee5- November 21 பைசன் காளமாடன் * Champagne Problems (ஆங்கிலம்) - Netflix-November 19 * The Son Of Thousand Men(ஆங்கிலம்) - Netflix-November 19 * Night Swim (ஆங்கிலம்) - JioHotstar - November 20 * Train Dreams (ஆங்கிலம்) - Netflix - November 21 * After the Hunt (ஆங்கிலம்) - Prime Video - November 20 * The Roses (ஆங்கிலம்) - JioHotstar - November 20 Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஓடிடி தொடர்கள்: * நடு சென்டர் - Jio Hotstar- November 20 * Shades of Life (மலையாளம்)-Manorama Max-November 21 * The Family Man Season 3(இந்தி)-Prime Video- November 21 * Ziddi Ishq(இந்தி)-Jio Hotstar-November 21 * Dining With Kapoors (இந்தி)-Netflix-November 21 OTT * The Death Of Bunny Munro(ஆங்கிலம்)-Jio Hotstar-November 21 * A Man on the Inside Season 2 (ஆங்கிலம்)-Netflix-November 20 * One Shot With Ed Sheeran(ஆங்கிலம்) Documentary -Netflix-November 21 * Envious (ஸ்பானிஷ்)-Netflix-November 19 * Jurassic World:Chaos Theory (ஆங்கிலம்)-Netflix-November 20 Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!

விகடன் 22 Nov 2025 2:30 pm

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா  கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. அத்தனை வன்மம்.  விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா? நாள் 47 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? “நான் யாரு.. எங்க இருக்கேன்.. ஒண்ணும் புரியலையே” என்று விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமித். “நான் இந்த ஆட்டத்திற்கு பொருத்தமானவன் இல்லன்னு தோணுது. என்ன பண்றேன். நான் செய்யறது தெரியுதா.. ஒண்ணும் வௌங்கலை” என்றெல்லாம் புலம்பிய அமித்திடம் “நீங்க உங்க ஸ்டைல்ல ஆடுங்க ப்ரோ” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  வீக்லி டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல சமயங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் வியானாவிற்குள்ளும் ஒரு சிறிய விஷ பாட்டில் இருக்கிறது. தன்னை அழ வைத்த விக்ரமை அவர் தேர்வு செய்ய, சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த பிக் பாஸ் ‘விக்ரம் பெயரை சொல்ல முடியாது. அவர் தல போட்டியில் இருக்கிறார்’ என்று நிராகரித்தார். எனவே சாண்ட்ராவின் பெயரை வியானா சொன்னது சிறப்பான தோ்வு.  BB TAMIL 9: DAY 47 பிறகு வந்த பலருமே சாண்ட்ரா மற்றும் திவ்யாவின் பெயரை சொன்னார்கள். பாருவை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. மாப் மாயாவிஸ் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு அந்த அணியில் உள்ள அனைவருமே தல போட்டியில் இருப்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல முடியாது. இல்லையென்றால் சாம்பார் அணியில் இருந்தவர்கள் விக்ரமை டார்கெட் செய்திருப்பார்கள். பிரஜின் கூட சாண்ட்ராவின் பெயரைச் சொல்லி நியாயவான் போல காட்டிக் கொண்டார்.  இறுதியில் 'worst performer'-களாக சாண்ட்ராவும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் சிறைக்கு செல்லும் தண்டனையோடு கூடுதலாக ஒன்றையும் தந்தார் பிக் பாஸ். ‘அடுத்த சீசன்ல கண்ணை மூடிக்கங்க’ என்று பிக் பாஸிற்கே அட்வைஸ் செய்த சாண்ட்ராவிற்கு செக்மேட்.  சாண்ட்ராவிற்கு செக்மேட் வைத்த பிக் பாஸ் ‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ இதைத் தவிர திவ்யாவும் ஏதோ வாயை விட்டிருப்பார் போலிருக்கிறது. “இவர்களின் ஆசைக்கு இணங்க சிறைத்தண்டனை. என் ஆசைக்கு இணங்க இந்த நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் இந்த இருவர் மட்டுமே செய்ய வேண்டும். இதை விக்ரம் வழிநடத்தி மேற்பார்வையிட வேண்டும்’ என்று சொன்னது சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவகையில் poetic justice.  மேற்பார்வை என்னும் சொல்லும் போதே ‘விக்ரம்’ என்று திவ்யா முனக, “ஹௌ பிரில்லியண்ட் திவ்யா?” என்று சர்காஸமாக பாராட்டினார் பிக் பாஸ். “நான் நல்லா செய்வேன்” என்று திவ்யா சொன்னதும் “என்னையா?” என்று கேட்டது நல்ல நகைச்சுவை.  கார்டன் ஏரியாவில் விக்ரம் அழுது கொண்டிருந்தார். ஆனந்தக் கண்ணீர். “எவ்ளோலாம் பேசினாங்க தெரியுமா.. என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் வெளியல எப்படி தெரியும்ன்னு புரியல. ஒரு மாதிரி பயம் வரும்தானே.. ஆனா ‘நான் இருக்கண்டா.. எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்ற மாதிரி பிக் பாஸ் சப்போர்ட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஃபீலிங்க்ஸ் ஆன விக்ரமை சுபிக்ஷாவும் எஃப்ஜேவும் தேற்றினார்கள்.  கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘எங்கே அந்த ரெண்டு பேரு?’ என்று ஜாலியாக கிளம்பினார் விக்ரம். தண்டனை என்னமோ சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு என்றாலும் உண்மையில் விக்ரமிற்குத்தான் தண்டனை கிடைத்தது எனலாம். சண்டி மாடுகளை வைத்துக் கொண்டு வேலை வாங்குவது மிகவும் கடினம்.  விக்ரமை மிரட்டிய பிரஜின் ‘காலி பண்ணிடுவேன்’ ஆரம்பத்திலேயே சாண்ட்ராவைக் காணவில்லை. கிராஸ் ஆன திவ்யாவிடம் “குளிச்சுட்டு வேலையை ஆரம்பிப்பீங்களா?” என்று விக்ரம் கேட்க “குளிச்சுட்டும் வருவேன். குளிக்காமயும் வருவேன். என் இஷ்டம்’ என்கிற மாதிரி அலட்டினார். ‘ரைட்டு.. இன்னிக்கும் சோத்துக்கு அலைய விடுவாங்க போல’ என்று மனதிற்குள் அலறிய விக்ரம் “இந்தப் பப்பாளியையாவது பங்கு போட்டுக் கொடுங்க.. மக்களுக்கு பசிக்கும்” என்று சொல்ல அதையும் ஸ்லோமோஷனில் எதிர்கொண்டார் திவ்யா.  திவ்யா செய்யும் அலப்பறையை வெளியில் வந்து சொன்ன விக்ரம் “நான் இங்க யாரையும் ஹர்ட் பண்ண வரலை. என் திறமையைக் காட்டத்தான் வந்தேன்” என்று பிரஜினிடம் உருக்கமாகச் சொன்னார். “கரெக்ட்டுதான். நீங்க உங்க வேலையைத்தான் பண்றீங்க. பி்க் பாஸிற்கு பதில் சொல்லணும்ல” என்று அப்போது நியாயமாகத்தான் பேசினார் பிரஜின்.  ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. “விக்ரமிற்கு நான் வார்னிங் தரேன். சாண்ட்ராவும் நானும் தம்பதிகள். ஆனா தனித்தனியாகத்தான் ஆடறோம். ஆனா இவரு என்னை நோண்டிட்டே இருக்காரு. வேணுமின்னா பிக் பாஸ் கிட்ட சொல்லி 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க வொய்ஃபையும் கூட்டிட்டு வாங்க” என்று அதிகாரமான குரலில் பிரஜின் சொன்னது முழுக்க அபத்தம். அநியாயமும் கூட.  சாண்ட்ராவும் பிரஜினும் டாஸ்க் சமயத்தில் கூட தம்பதிகளாக செயல்படுவது ஊர் அறிந்த ரகசியம். இதை விக்ரம் மட்டும் சொல்லவில்லை. நாமினேஷன் சமயத்தில் பலரும் சொன்னார்கள். கனியும் அழுத்தமாகச் சொன்னார். பெஸ்ட் ஃபர்பார்மராக, ஒன்றுமே செய்யாத கணவரை தேர்ந்தெடுத்தார் சாண்ட்ரா. தனது கணவர் இருக்கும் அணிக்கு பாயிண்ட்டுகளை அள்ளித் தந்தார். இப்படி அவர்கள் தம்பதியராக ஆடுவதற்கு பல நிரூபணங்கள் இருக்கின்றன.  ‘பிக் பாஸ் கிட்ட சொல்லி கதவை திறக்கச் சொல்றேன். சேது கிட்ட பேசறேன்’ என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு பிரஜின் அதிகாரம் படைத்தவரா? ‘என் கிட்ட வெச்சிக்கிட்டா காலி பண்ணிடுவேன்’ என்றெல்லாம் பிரஜின் மிரட்டியது கண்டிக்கப்பட வேண்டியது. வில்லங்கமாக சமிக்ஞை செய்த சாண்ட்ரா “நாங்க கப்புள்ளா எந்த கேம்ல ஆடினோம்?” என்று சாண்ட்ரா விசாரிக்க “எல்லாம்தான்” என்றார் விக்ரம். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இவரிடம் விவாதிக்க முடியாது என்றோ, என்னமோ “எனக்கு வாய் சரியில்ல” என்று விக்ரம் சொல்ல “வாய் மட்டுமா சரியில்ல’ என்று சாண்ட்ரா ஆடிக் காட்டியது விரசம். “எனக்கு பயமா இருந்தது. அப்படியே பயந்துட்டேன்” என்று வந்த புதிதில் பாவனை செய்த சாண்டரா, உண்மையில் சைலண்ட்டாக வயலன்ட் செய்யும் நபர் மாதிரி இருக்கிறார்.  ஒருவழியாக சமையல் செய்ய இறங்கிய சாண்ட்ராவை நோக்கி “சிங்கம் களம் இறங்கிடுச்சு” என்று பாராட்டினார் பாரு. (ஒரு காலத்தில் புகழ்பெற்ற ரவுடியாக இருந்தவன், அவனை விடவும் பெரிய ரவுடி வந்தவுடன் பம்மி ஒட்டிக் கொள்வது போல மாறி விட்டார் பாரு) பாடல் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கவின். ‘மாஸ்க்’ திரைப்படத்திற்கான பிரமோஷன். அனைவரும் நலம் விசாரித்து கை கொடுக்க “விக்ரம்.. இவர்ட்ட பேசலாமா?” என்பது மாதிரி அனுமதி கேட்டார் திவ்யா. அதாவது விக்ரமின் மேற்பார்வையில் எல்லாவற்றையும் அனுமதி கேட்டுத்தான் செய்கிறாராம். கவினுக்கு அது உடனே புரிந்திருக்க வேண்டும். பூர்ணிமா மாதிரி அப்பாவியாக சீன் போடவில்லை. அவரும் முன்னாள் போட்டியாளர்தானே? கிச்சன் ஏரியா டேஞ்சர் என்று தெரியாதா? எனவே “தப்பான நேரத்துல உள்ளே வந்துட்டனா?” என்று சிரித்தார்.  படத்தின் டிரைய்லர் முடிந்ததும் “இந்தப் படத்துல வர்ற யாரும் நல்லவங்க கிடையாது. கெட்டவங்கள்லேயே நல்லவன் யாருன்னுதான் தேடணும்” என்று கவின் சொன்ன விளக்கம், பிக் பாஸ் சீசனுக்கும் பொருந்தும்.  பயந்து அலறிய பாரு கவின் செய்த PRANK “ஓகே.. நான் கௌம்பறேன். ஆனா அதுக்கு முன்னாடி இதைப் பண்ணித்தான் ஆகணும். தல உத்தரவு. ஒரு கவர் வெச்சிட்டு போறேன். நான் போனப்புறம் பாருங்க” என்று எவிக்ஷன் கவரை வைத்து விட்டுச் சென்றார் கவின். அவரை வழியனுப்பி வைத்து விட்டு மக்கள் ஆவலாக வந்து பார்க்க, நாம் யூகித்தபடியே ‘Prank’ என்று இருந்தது. “P -ன்ற லெட்டரை பார்த்தவுடனே நான்தான்னு பயந்துட்டேன்” என்று திகைப்பு மகிழ்ச்சியான டோனில் கூவினார் பாரு. (நாங்களும்தான் எதிர்பார்க்கறோம்!) “என் ஹார்ட்டே வெளியே வந்துடுச்சு.. என்னதிது பிக் பாஸ்?” என்று பாரு சிணுங்க “நீங்க பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு கூடத்தான் வெளிய வருது. நான் சொல்லிக்கிட்டா இருக்கேன்” என்று ஊமைக்குத்தாக குத்தினார் பிக் பாஸ்.  “திவ்யா.. யூனிபார்ம்” என்று பிக் பாஸ் நினைவுப்படுத்த “விக்ரம் போடச் சொல்லலை’ என்று அழும்பு செய்தார் திவ்யா. அடுத்து ‘மைக் பாட்டரியை மாத்துங்க’ என்று சொல்ல “யாராவது மாத்துங்களேம்பா.. எனக்கு ரெண்டு கைதான் இருக்கு” என்று எரிச்சலானார் திவ்யா. அந்த டென்ஷனிலேயே நெய் ஸ்பூனை மற்றவர்களின் தட்டில் லொட்டென்று போட, வியானா அதற்கு புண்பட்டு கண்கலங்க அதுவும் ஒரு பஞ்சாயத்தாக போனது. “ஸ்பூனை சிங்க்லதானே தூக்கிப் போட்டேன். இவங்க மண்டைலயா போட்டேன்” என்று எரிச்சலானார் திவ்யா. சாண்டராவுடன் பழகிப் பழகி இவரும் ஒரு மினி சாண்ட்ராவாக மாறி வருகிறார் போல.  சாண்ட்ராவும் திவ்யாவும் வேலை செய்யாமல் டபாய்ப்பதால் ‘சூப்பர்வைசரான’ விக்ரம் அருகிலேயே அமர்ந்து பாடிக் கொண்டிருக்க ‘தள்ளிப் போய் பாடுங்க.. தலை வலிக்குது’ என்று எரிச்சலானார் திவ்யா. அதற்கு பின்பாட்டு பாடினார் பாரு.  வீக்கெண்ட் பஞ்சாயத்தில் ரகளை செய்வாரா விசே? வென்ற அணிக்கு ஐஸ்கிரீம் பரிசாக வந்தது. அதை நேரில் சென்று வாங்க வெட்கப்பட்டு “பிரஜின் அண்ணா.. உங்க பங்கை வாங்கித் தாங்க” என்று கேட்டு சாப்பிட்டார் திவ்யா “நீயும் சாப்பிடு. நான் ஜெயிச்சு வாங்கினது” என்று பெருமிதமாக சாண்ட்ராவிடம் பிரஜின் சொல்ல “நீ மட்டும்தான் வாங்கினது இல்ல. கப்புள்ளா ஆடி வாங்கினது” என்று சர்காஸம் செய்தார் சாண்ட்ரா.  “யாருக்கெல்லாம் பர்கர் வேணும்?” என்று பாசமுள்ள அப்பா மாதிரி கேட்டார் பிக் பாஸ். அது வேண்டுமென்றால் அவர் மனது குளிரும்படி செய்ய வேண்டுமாம். அனைவரும் ‘ப்ளீஸ்.. சார். ப்ளீஸ் சார்’  என்று பாய்ஸ் படத்தின் பாடலை கோரஸாக பாடினார்கள். (இந்த SIR என்பது வெளியில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. படிவத்தை நிரப்புவதற்குள் முந்தைய ஜென்மத்து தலையெழுத்தையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது!) “எங்களை எல்லாம் மறந்துட்டாங்க. நாங்க வர மாட்டோம்” என்று கார்டன் ஏரியாவில் பிடிவாதம் பிடித்தனர், சாண்ட்ராவும் திவ்யாவும். “அவங்க வரலைன்னா.. நானும் வர மாட்டேன். சாப்பிட மாட்டேன்” என்று மிகையான பாசத்தைக் கொட்டினார் பாரு. (பார்றா! கூட்டணியை!).. பிக் பாஸ் கூப்பிட்டவுடன் இவர்கள் உள்ளே வந்தவுடன் அனைவருக்கும் பர்கர் வழங்கப்பட சாப்பிட்டு்க் கொண்டிருந்தார். “விக்ரம்.. திவ்யாவும் சாண்ட்ராவும் எல்லா வேலையும் செஞ்சு முடிச்ச பின்னாடி.. தல கிட்ட சொல்லி ஜெயில்ல போடுங்க” என்றார் பிக் பாஸ். “ஓகே. பாஸ். ஆனா.. இவங்க ரொம்ப நல்லா வேலை செய்யறாங்க” என்று நொந்தபடி சொன்னார் விக்ரம்.  பிறகு கிச்சனுக்கு சென்ற விக்ரம் “நல்ல வேளை சோத்துக்கு அலைய வெச்சிடுவாங்கன்னு நெனச்சேன். அது நல்ல படியா போச்சு. இன்னிக்கு இவங்களை வேலை செய்ய வைக்காம தூங்கப் போறதில்லை” என்று சபதம் ஏற்றார் விக்ரம். (விக்கி.. அவங்க உங்க கிட்ட மாட்டலை. நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டிருக்கீங்க..!)  இந்த வாரம் விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சாம்பார் அணியின் அலப்பறைகள், சாண்ட்ராவின் வன்மங்கள், பிரஜினின் மிரட்டல் போன்று பல அயிட்டங்கள். விசே இவற்றையெல்லாம் முறையாக விசாரிப்பாரா என்று பொறுத்திருத்து பார்ப்போம்.!

விகடன் 22 Nov 2025 1:48 pm

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா  கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. அத்தனை வன்மம்.  விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா? நாள் 47 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? “நான் யாரு.. எங்க இருக்கேன்.. ஒண்ணும் புரியலையே” என்று விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமித். “நான் இந்த ஆட்டத்திற்கு பொருத்தமானவன் இல்லன்னு தோணுது. என்ன பண்றேன். நான் செய்யறது தெரியுதா.. ஒண்ணும் வௌங்கலை” என்றெல்லாம் புலம்பிய அமித்திடம் “நீங்க உங்க ஸ்டைல்ல ஆடுங்க ப்ரோ” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  வீக்லி டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல சமயங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் வியானாவிற்குள்ளும் ஒரு சிறிய விஷ பாட்டில் இருக்கிறது. தன்னை அழ வைத்த விக்ரமை அவர் தேர்வு செய்ய, சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த பிக் பாஸ் ‘விக்ரம் பெயரை சொல்ல முடியாது. அவர் தல போட்டியில் இருக்கிறார்’ என்று நிராகரித்தார். எனவே சாண்ட்ராவின் பெயரை வியானா சொன்னது சிறப்பான தோ்வு.  BB TAMIL 9: DAY 47 பிறகு வந்த பலருமே சாண்ட்ரா மற்றும் திவ்யாவின் பெயரை சொன்னார்கள். பாருவை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. மாப் மாயாவிஸ் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு அந்த அணியில் உள்ள அனைவருமே தல போட்டியில் இருப்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல முடியாது. இல்லையென்றால் சாம்பார் அணியில் இருந்தவர்கள் விக்ரமை டார்கெட் செய்திருப்பார்கள். பிரஜின் கூட சாண்ட்ராவின் பெயரைச் சொல்லி நியாயவான் போல காட்டிக் கொண்டார்.  இறுதியில் 'worst performer'-களாக சாண்ட்ராவும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் சிறைக்கு செல்லும் தண்டனையோடு கூடுதலாக ஒன்றையும் தந்தார் பிக் பாஸ். ‘அடுத்த சீசன்ல கண்ணை மூடிக்கங்க’ என்று பிக் பாஸிற்கே அட்வைஸ் செய்த சாண்ட்ராவிற்கு செக்மேட்.  சாண்ட்ராவிற்கு செக்மேட் வைத்த பிக் பாஸ் ‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ இதைத் தவிர திவ்யாவும் ஏதோ வாயை விட்டிருப்பார் போலிருக்கிறது. “இவர்களின் ஆசைக்கு இணங்க சிறைத்தண்டனை. என் ஆசைக்கு இணங்க இந்த நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் இந்த இருவர் மட்டுமே செய்ய வேண்டும். இதை விக்ரம் வழிநடத்தி மேற்பார்வையிட வேண்டும்’ என்று சொன்னது சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவகையில் poetic justice.  மேற்பார்வை என்னும் சொல்லும் போதே ‘விக்ரம்’ என்று திவ்யா முனக, “ஹௌ பிரில்லியண்ட் திவ்யா?” என்று சர்காஸமாக பாராட்டினார் பிக் பாஸ். “நான் நல்லா செய்வேன்” என்று திவ்யா சொன்னதும் “என்னையா?” என்று கேட்டது நல்ல நகைச்சுவை.  கார்டன் ஏரியாவில் விக்ரம் அழுது கொண்டிருந்தார். ஆனந்தக் கண்ணீர். “எவ்ளோலாம் பேசினாங்க தெரியுமா.. என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் வெளியல எப்படி தெரியும்ன்னு புரியல. ஒரு மாதிரி பயம் வரும்தானே.. ஆனா ‘நான் இருக்கண்டா.. எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்ற மாதிரி பிக் பாஸ் சப்போர்ட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஃபீலிங்க்ஸ் ஆன விக்ரமை சுபிக்ஷாவும் எஃப்ஜேவும் தேற்றினார்கள்.  கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘எங்கே அந்த ரெண்டு பேரு?’ என்று ஜாலியாக கிளம்பினார் விக்ரம். தண்டனை என்னமோ சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்கு என்றாலும் உண்மையில் விக்ரமிற்குத்தான் தண்டனை கிடைத்தது எனலாம். சண்டி மாடுகளை வைத்துக் கொண்டு வேலை வாங்குவது மிகவும் கடினம்.  விக்ரமை மிரட்டிய பிரஜின் ‘காலி பண்ணிடுவேன்’ ஆரம்பத்திலேயே சாண்ட்ராவைக் காணவில்லை. கிராஸ் ஆன திவ்யாவிடம் “குளிச்சுட்டு வேலையை ஆரம்பிப்பீங்களா?” என்று விக்ரம் கேட்க “குளிச்சுட்டும் வருவேன். குளிக்காமயும் வருவேன். என் இஷ்டம்’ என்கிற மாதிரி அலட்டினார். ‘ரைட்டு.. இன்னிக்கும் சோத்துக்கு அலைய விடுவாங்க போல’ என்று மனதிற்குள் அலறிய விக்ரம் “இந்தப் பப்பாளியையாவது பங்கு போட்டுக் கொடுங்க.. மக்களுக்கு பசிக்கும்” என்று சொல்ல அதையும் ஸ்லோமோஷனில் எதிர்கொண்டார் திவ்யா.  திவ்யா செய்யும் அலப்பறையை வெளியில் வந்து சொன்ன விக்ரம் “நான் இங்க யாரையும் ஹர்ட் பண்ண வரலை. என் திறமையைக் காட்டத்தான் வந்தேன்” என்று பிரஜினிடம் உருக்கமாகச் சொன்னார். “கரெக்ட்டுதான். நீங்க உங்க வேலையைத்தான் பண்றீங்க. பி்க் பாஸிற்கு பதில் சொல்லணும்ல” என்று அப்போது நியாயமாகத்தான் பேசினார் பிரஜின்.  ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. “விக்ரமிற்கு நான் வார்னிங் தரேன். சாண்ட்ராவும் நானும் தம்பதிகள். ஆனா தனித்தனியாகத்தான் ஆடறோம். ஆனா இவரு என்னை நோண்டிட்டே இருக்காரு. வேணுமின்னா பிக் பாஸ் கிட்ட சொல்லி 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க வொய்ஃபையும் கூட்டிட்டு வாங்க” என்று அதிகாரமான குரலில் பிரஜின் சொன்னது முழுக்க அபத்தம். அநியாயமும் கூட.  சாண்ட்ராவும் பிரஜினும் டாஸ்க் சமயத்தில் கூட தம்பதிகளாக செயல்படுவது ஊர் அறிந்த ரகசியம். இதை விக்ரம் மட்டும் சொல்லவில்லை. நாமினேஷன் சமயத்தில் பலரும் சொன்னார்கள். கனியும் அழுத்தமாகச் சொன்னார். பெஸ்ட் ஃபர்பார்மராக, ஒன்றுமே செய்யாத கணவரை தேர்ந்தெடுத்தார் சாண்ட்ரா. தனது கணவர் இருக்கும் அணிக்கு பாயிண்ட்டுகளை அள்ளித் தந்தார். இப்படி அவர்கள் தம்பதியராக ஆடுவதற்கு பல நிரூபணங்கள் இருக்கின்றன.  ‘பிக் பாஸ் கிட்ட சொல்லி கதவை திறக்கச் சொல்றேன். சேது கிட்ட பேசறேன்’ என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு பிரஜின் அதிகாரம் படைத்தவரா? ‘என் கிட்ட வெச்சிக்கிட்டா காலி பண்ணிடுவேன்’ என்றெல்லாம் பிரஜின் மிரட்டியது கண்டிக்கப்பட வேண்டியது. வில்லங்கமாக சமிக்ஞை செய்த சாண்ட்ரா “நாங்க கப்புள்ளா எந்த கேம்ல ஆடினோம்?” என்று சாண்ட்ரா விசாரிக்க “எல்லாம்தான்” என்றார் விக்ரம். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் இவரிடம் விவாதிக்க முடியாது என்றோ, என்னமோ “எனக்கு வாய் சரியில்ல” என்று விக்ரம் சொல்ல “வாய் மட்டுமா சரியில்ல’ என்று சாண்ட்ரா ஆடிக் காட்டியது விரசம். “எனக்கு பயமா இருந்தது. அப்படியே பயந்துட்டேன்” என்று வந்த புதிதில் பாவனை செய்த சாண்டரா, உண்மையில் சைலண்ட்டாக வயலன்ட் செய்யும் நபர் மாதிரி இருக்கிறார்.  ஒருவழியாக சமையல் செய்ய இறங்கிய சாண்ட்ராவை நோக்கி “சிங்கம் களம் இறங்கிடுச்சு” என்று பாராட்டினார் பாரு. (ஒரு காலத்தில் புகழ்பெற்ற ரவுடியாக இருந்தவன், அவனை விடவும் பெரிய ரவுடி வந்தவுடன் பம்மி ஒட்டிக் கொள்வது போல மாறி விட்டார் பாரு) பாடல் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கவின். ‘மாஸ்க்’ திரைப்படத்திற்கான பிரமோஷன். அனைவரும் நலம் விசாரித்து கை கொடுக்க “விக்ரம்.. இவர்ட்ட பேசலாமா?” என்பது மாதிரி அனுமதி கேட்டார் திவ்யா. அதாவது விக்ரமின் மேற்பார்வையில் எல்லாவற்றையும் அனுமதி கேட்டுத்தான் செய்கிறாராம். கவினுக்கு அது உடனே புரிந்திருக்க வேண்டும். பூர்ணிமா மாதிரி அப்பாவியாக சீன் போடவில்லை. அவரும் முன்னாள் போட்டியாளர்தானே? கிச்சன் ஏரியா டேஞ்சர் என்று தெரியாதா? எனவே “தப்பான நேரத்துல உள்ளே வந்துட்டனா?” என்று சிரித்தார்.  படத்தின் டிரைய்லர் முடிந்ததும் “இந்தப் படத்துல வர்ற யாரும் நல்லவங்க கிடையாது. கெட்டவங்கள்லேயே நல்லவன் யாருன்னுதான் தேடணும்” என்று கவின் சொன்ன விளக்கம், பிக் பாஸ் சீசனுக்கும் பொருந்தும்.  பயந்து அலறிய பாரு கவின் செய்த PRANK “ஓகே.. நான் கௌம்பறேன். ஆனா அதுக்கு முன்னாடி இதைப் பண்ணித்தான் ஆகணும். தல உத்தரவு. ஒரு கவர் வெச்சிட்டு போறேன். நான் போனப்புறம் பாருங்க” என்று எவிக்ஷன் கவரை வைத்து விட்டுச் சென்றார் கவின். அவரை வழியனுப்பி வைத்து விட்டு மக்கள் ஆவலாக வந்து பார்க்க, நாம் யூகித்தபடியே ‘Prank’ என்று இருந்தது. “P -ன்ற லெட்டரை பார்த்தவுடனே நான்தான்னு பயந்துட்டேன்” என்று திகைப்பு மகிழ்ச்சியான டோனில் கூவினார் பாரு. (நாங்களும்தான் எதிர்பார்க்கறோம்!) “என் ஹார்ட்டே வெளியே வந்துடுச்சு.. என்னதிது பிக் பாஸ்?” என்று பாரு சிணுங்க “நீங்க பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு கூடத்தான் வெளிய வருது. நான் சொல்லிக்கிட்டா இருக்கேன்” என்று ஊமைக்குத்தாக குத்தினார் பிக் பாஸ்.  “திவ்யா.. யூனிபார்ம்” என்று பிக் பாஸ் நினைவுப்படுத்த “விக்ரம் போடச் சொல்லலை’ என்று அழும்பு செய்தார் திவ்யா. அடுத்து ‘மைக் பாட்டரியை மாத்துங்க’ என்று சொல்ல “யாராவது மாத்துங்களேம்பா.. எனக்கு ரெண்டு கைதான் இருக்கு” என்று எரிச்சலானார் திவ்யா. அந்த டென்ஷனிலேயே நெய் ஸ்பூனை மற்றவர்களின் தட்டில் லொட்டென்று போட, வியானா அதற்கு புண்பட்டு கண்கலங்க அதுவும் ஒரு பஞ்சாயத்தாக போனது. “ஸ்பூனை சிங்க்லதானே தூக்கிப் போட்டேன். இவங்க மண்டைலயா போட்டேன்” என்று எரிச்சலானார் திவ்யா. சாண்டராவுடன் பழகிப் பழகி இவரும் ஒரு மினி சாண்ட்ராவாக மாறி வருகிறார் போல.  சாண்ட்ராவும் திவ்யாவும் வேலை செய்யாமல் டபாய்ப்பதால் ‘சூப்பர்வைசரான’ விக்ரம் அருகிலேயே அமர்ந்து பாடிக் கொண்டிருக்க ‘தள்ளிப் போய் பாடுங்க.. தலை வலிக்குது’ என்று எரிச்சலானார் திவ்யா. அதற்கு பின்பாட்டு பாடினார் பாரு.  வீக்கெண்ட் பஞ்சாயத்தில் ரகளை செய்வாரா விசே? வென்ற அணிக்கு ஐஸ்கிரீம் பரிசாக வந்தது. அதை நேரில் சென்று வாங்க வெட்கப்பட்டு “பிரஜின் அண்ணா.. உங்க பங்கை வாங்கித் தாங்க” என்று கேட்டு சாப்பிட்டார் திவ்யா “நீயும் சாப்பிடு. நான் ஜெயிச்சு வாங்கினது” என்று பெருமிதமாக சாண்ட்ராவிடம் பிரஜின் சொல்ல “நீ மட்டும்தான் வாங்கினது இல்ல. கப்புள்ளா ஆடி வாங்கினது” என்று சர்காஸம் செய்தார் சாண்ட்ரா.  “யாருக்கெல்லாம் பர்கர் வேணும்?” என்று பாசமுள்ள அப்பா மாதிரி கேட்டார் பிக் பாஸ். அது வேண்டுமென்றால் அவர் மனது குளிரும்படி செய்ய வேண்டுமாம். அனைவரும் ‘ப்ளீஸ்.. சார். ப்ளீஸ் சார்’  என்று பாய்ஸ் படத்தின் பாடலை கோரஸாக பாடினார்கள். (இந்த SIR என்பது வெளியில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. படிவத்தை நிரப்புவதற்குள் முந்தைய ஜென்மத்து தலையெழுத்தையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது!) “எங்களை எல்லாம் மறந்துட்டாங்க. நாங்க வர மாட்டோம்” என்று கார்டன் ஏரியாவில் பிடிவாதம் பிடித்தனர், சாண்ட்ராவும் திவ்யாவும். “அவங்க வரலைன்னா.. நானும் வர மாட்டேன். சாப்பிட மாட்டேன்” என்று மிகையான பாசத்தைக் கொட்டினார் பாரு. (பார்றா! கூட்டணியை!).. பிக் பாஸ் கூப்பிட்டவுடன் இவர்கள் உள்ளே வந்தவுடன் அனைவருக்கும் பர்கர் வழங்கப்பட சாப்பிட்டு்க் கொண்டிருந்தார். “விக்ரம்.. திவ்யாவும் சாண்ட்ராவும் எல்லா வேலையும் செஞ்சு முடிச்ச பின்னாடி.. தல கிட்ட சொல்லி ஜெயில்ல போடுங்க” என்றார் பிக் பாஸ். “ஓகே. பாஸ். ஆனா.. இவங்க ரொம்ப நல்லா வேலை செய்யறாங்க” என்று நொந்தபடி சொன்னார் விக்ரம்.  பிறகு கிச்சனுக்கு சென்ற விக்ரம் “நல்ல வேளை சோத்துக்கு அலைய வெச்சிடுவாங்கன்னு நெனச்சேன். அது நல்ல படியா போச்சு. இன்னிக்கு இவங்களை வேலை செய்ய வைக்காம தூங்கப் போறதில்லை” என்று சபதம் ஏற்றார் விக்ரம். (விக்கி.. அவங்க உங்க கிட்ட மாட்டலை. நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டிருக்கீங்க..!)  இந்த வாரம் விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சாம்பார் அணியின் அலப்பறைகள், சாண்ட்ராவின் வன்மங்கள், பிரஜினின் மிரட்டல் போன்று பல அயிட்டங்கள். விசே இவற்றையெல்லாம் முறையாக விசாரிப்பாரா என்று பொறுத்திருத்து பார்ப்போம்.!

விகடன் 22 Nov 2025 1:48 pm

சூரியவம்சம் படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்.!!

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம்.இதில் தேவயானி,ராதிகா சரத்குமார், மணிவண்ணன்,ஆனந்த்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்துள்ள மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில்...

தஸ்தர் 22 Nov 2025 1:36 pm

ரோகினி பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிய மீனா, கோபத்தில் முத்து சொன்ன வார்த்தை –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, கோவிலில் சாமியாடி சொன்ன வார்த்தையால் தான் மீனா இப்படி இருப்பாரோ? என்ற கேள்வி முத்துவுக்குள் எழுகிறது. இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய புதிய கம்பெனிக்கு பிஏவை எடுக்க வேண்டும் என்று சில பேரை இன்டர்வியூ எடுத்தார். அப்போது ஜீவா என்று தன்னுடைய முன்னாள் காதலியின் பெயர் வைத்திருக்கும் பெண்ணை செலக்ட் செய்தார். பின் மனோஜ், நிறைய கனவுகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ரோகினி, உள்ளுக்குள் மீனா உண்மை […] The post ரோகினி பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிய மீனா, கோபத்தில் முத்து சொன்ன வார்த்தை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 1:06 pm

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார். ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Andrea|ஆண்ட்ரியா எனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கவின், ``நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தைத் தொடங்கினோம். எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம் என்றார். Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

விகடன் 22 Nov 2025 12:15 pm

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார். ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Andrea|ஆண்ட்ரியா எனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கவின், ``நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தைத் தொடங்கினோம். எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம் என்றார். Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

விகடன் 22 Nov 2025 12:15 pm

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review இந்நிலையில் அந்தப் புத்தகத்தின் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு, அங்குச் சென்று தன் விசாரணையைத் தொடங்குகிறார். எழுத்தாளரின் கொலைக்குக் காரணம் என்ன, யார் கொலை செய்தார்கள் என்பதற்கான விடையைத் தேடுவதே ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதை. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? தனக்கே உரித்தான வசன உச்சரிப்பும் உடல்மொழியும் கொண்டு அர்ஜுன் கவர்ந்திழுக்கிறார் என்றாலும், அவரது ஆக்ஷன் திறனுக்கு இப்படத்தில் போதிய தீனி இல்லை என்பதே உண்மை. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியப் பாத்திரத்தில் தோன்றி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். ஆயினும் அதிரடித் தருணங்களிலும் ஆரம்பக்கட்ட காதல் காட்சிகளிலும் அவரது உடல்மொழி சற்று ஒத்துவரவில்லை. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review ஆட்டிசம் பாதிக்கப்பட்டவராக வரும் சிறுமியும் வேல ராமமூர்த்தியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார்கள். ரொமான்ஸ் காட்சிகளில் பிரவீன் ராஜா அப்பட்டமாகத் தோல்வியடைந்திருக்கிறார். உடல்மொழியும் வசன உச்சரிப்பும் வைத்தே காமெடியைச் சித்திரவதை செய்திருக்கிறார் அவரின் நண்பராக வரும் ராகுல். Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? பல காட்சிகளை க்ளோஸ்-அப்புகளிலேயே வைத்துள்ள ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, காட்சிக் கோணங்களில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை. பாரத் ஆசீவகனின் பின்னணி இசை, சில இடங்களில் பதற்றத்தை ஏற்றினாலும், சைலன்ஸ் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கிவிட்டதைப் போல, சாதாரண காட்சிகளுக்குக்கூட ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தேர்ந்த காட்சிகளுக்கான வறட்சியைப் போக்க முடியாமல் திணறியிருக்கிறார். அதேபோல டெம்ப்ளேட் காதல் காட்சிகளுக்கு இவ்வளவு கருணை காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை; இன்னும் சுருக்கமாக அமைந்திருந்தால் களைப்பு சற்று குறைந்திருக்கும். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு கொலையோடு வலுவான ஆரம்பத்தைத் தந்தாலும், பிறகு மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன. பழகிப்போன, எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்களோடு இடைவேளை வருகிறது.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! விசாரணைக் காட்சிகள் அனைத்தும் மிக மோசமாகவும், எந்தச் சுவாரசியமுமின்றி தட்டையாகவும் இருக்கின்றன. பழங்கால படங்களை நினைவூட்டும் பழிவாங்கும் கதைக்கு திரைக்கதையும் அதே பாணியிலேயே எழுதப்பட்டிருப்பது சோதனை. பாலியல் குற்றங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரானவை பற்றிய கதைகளில், பாதிக்கப்பட்டவரின் வலியை மீண்டும் உணரவைக்கும் அளவுக்குக் கடுமையான காட்சிகள் இடம்பெறாமல் கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சமநிலையை இப்படம் பல இடங்களில் தவறவிட்டிருக்கிறது. அதிலும் குழந்தை வன்முறை, சிறப்புக் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் விதம் போன்றவற்றில் கூடுதல் பொறுப்பு அவசியம் இயக்குநரே! தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review மொத்தத்தில், மோசமான திரையாக்கமும் யூகிக்கக்கூடிய பழைய திரைக்கதையும் கொண்டு நம்முடைய நேரத்தைத்தான் ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்த ‘தீயவர் குலை நடுங்க’! பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 22 Nov 2025 11:08 am

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review இந்நிலையில் அந்தப் புத்தகத்தின் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு, அங்குச் சென்று தன் விசாரணையைத் தொடங்குகிறார். எழுத்தாளரின் கொலைக்குக் காரணம் என்ன, யார் கொலை செய்தார்கள் என்பதற்கான விடையைத் தேடுவதே ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதை. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? தனக்கே உரித்தான வசன உச்சரிப்பும் உடல்மொழியும் கொண்டு அர்ஜுன் கவர்ந்திழுக்கிறார் என்றாலும், அவரது ஆக்ஷன் திறனுக்கு இப்படத்தில் போதிய தீனி இல்லை என்பதே உண்மை. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியப் பாத்திரத்தில் தோன்றி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். ஆயினும் அதிரடித் தருணங்களிலும் ஆரம்பக்கட்ட காதல் காட்சிகளிலும் அவரது உடல்மொழி சற்று ஒத்துவரவில்லை. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review ஆட்டிசம் பாதிக்கப்பட்டவராக வரும் சிறுமியும் வேல ராமமூர்த்தியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார்கள். ரொமான்ஸ் காட்சிகளில் பிரவீன் ராஜா அப்பட்டமாகத் தோல்வியடைந்திருக்கிறார். உடல்மொழியும் வசன உச்சரிப்பும் வைத்தே காமெடியைச் சித்திரவதை செய்திருக்கிறார் அவரின் நண்பராக வரும் ராகுல். Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? பல காட்சிகளை க்ளோஸ்-அப்புகளிலேயே வைத்துள்ள ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, காட்சிக் கோணங்களில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை. பாரத் ஆசீவகனின் பின்னணி இசை, சில இடங்களில் பதற்றத்தை ஏற்றினாலும், சைலன்ஸ் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கிவிட்டதைப் போல, சாதாரண காட்சிகளுக்குக்கூட ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தேர்ந்த காட்சிகளுக்கான வறட்சியைப் போக்க முடியாமல் திணறியிருக்கிறார். அதேபோல டெம்ப்ளேட் காதல் காட்சிகளுக்கு இவ்வளவு கருணை காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை; இன்னும் சுருக்கமாக அமைந்திருந்தால் களைப்பு சற்று குறைந்திருக்கும். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு கொலையோடு வலுவான ஆரம்பத்தைத் தந்தாலும், பிறகு மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன. பழகிப்போன, எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்களோடு இடைவேளை வருகிறது.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! விசாரணைக் காட்சிகள் அனைத்தும் மிக மோசமாகவும், எந்தச் சுவாரசியமுமின்றி தட்டையாகவும் இருக்கின்றன. பழங்கால படங்களை நினைவூட்டும் பழிவாங்கும் கதைக்கு திரைக்கதையும் அதே பாணியிலேயே எழுதப்பட்டிருப்பது சோதனை. பாலியல் குற்றங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரானவை பற்றிய கதைகளில், பாதிக்கப்பட்டவரின் வலியை மீண்டும் உணரவைக்கும் அளவுக்குக் கடுமையான காட்சிகள் இடம்பெறாமல் கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சமநிலையை இப்படம் பல இடங்களில் தவறவிட்டிருக்கிறது. அதிலும் குழந்தை வன்முறை, சிறப்புக் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் விதம் போன்றவற்றில் கூடுதல் பொறுப்பு அவசியம் இயக்குநரே! தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review மொத்தத்தில், மோசமான திரையாக்கமும் யூகிக்கக்கூடிய பழைய திரைக்கதையும் கொண்டு நம்முடைய நேரத்தைத்தான் ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்த ‘தீயவர் குலை நடுங்க’! பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 22 Nov 2025 11:08 am

அய்யனார் துணை சீரியல் மதுமிதா வெளியிட்ட வீடியோ.. குவியும் வாழ்த்து.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. தற்போது அந்த சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்தத் தொடரிலிருந்து வெளியேறிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் அவருக்கு நடந்த டபுள் சந்தோஷத்தை கேக்...

தஸ்தர் 22 Nov 2025 10:53 am

பாண்டியன் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிய பழனி, மீனா சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நம்முடைய கடைக்கு போட்டியாக தான் கடையை ஆரம்பித்திருக்கிறான் என்றெல்லாம் உண்மை தெரியாமல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது கோமதி, இப்படியா நீ நடந்து கொள்வது? நடிக்காதே, இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா? உனக்கும் அண்ணன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றெல்லாம் கோபமாக பேசி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பழனிக்கு எதிராக பேசி இருந்தார்கள். அவர் தரப்பு […] The post பாண்டியன் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிய பழனி, மீனா சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Nov 2025 10:40 am

பராசக்தி படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதர்வா,ஸ்ரீ லீலா, ரவிமோகன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம்...

தஸ்தர் 22 Nov 2025 10:40 am

மீனா எடுத்த முடிவு, கோபத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்வது போலவும் உடனே முத்து கோபப்பட்டு அண்ணாமலை இடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு கோபப்பட உடனே அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருவது போலவும் உடனே ரோகிணி மற்றும் மனோஜ் வர முத்து எங்கப்பா இப்படி ஆனதுக்கு நீதான காரணம் என்று சொல்லி...

தஸ்தர் 22 Nov 2025 10:23 am

`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ - 100வது அகவையில் 'வண்ணக்கிளி'பி.எஸ்.சரோஜா

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக் கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும் சிவாஜிக்கு காதலியாகவும் நடித்தவர். இவரைக் குறிப்பிட இந்த ஒரு அறிமுகமே போதுமென்றாலும், எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்துக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் உச்ச நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர், கருப்பு வெள்ளை காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். நடிப்புக்காக விருதுகளை வாங்கிக் குவித்தவர் என மேலும் பல ஹைலைட்டுகள் அணி வகுக்கின்றன. நூறாண்டு காணும் நாயகி குறித்துப் பார்க்கலாமா? கூண்டுக்கிளி சரோஜாவின் பூர்வீகம் சேலம். ஆனால் இவர் பிறக்கும் போது இவரின் பெற்றோர் வசித்தது திருவனந்தபுரம். பதினைந்து வயதில் குரூப் டான்சராக சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டார். ஜெமினி, ஜூபிடர் உள்ளிட்ட பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்தவர், அடுத்த சில வருடங்களிலேயே இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் பார்வையில் பட்டார். அவர் 'விகட யோகி' படத்தின் கதாநாயகி ஆக்கினார் இவரை. அப்போது முதல் சரோஜாவின் திரைப் பயணத்தில் ஏறுமுகம்தான். தொடர்ந்து கே.சுப்ரமணியம் இயக்கிய 'விசித்திர வனிதா', 'கீத காந்தி' ஆகிய படங்களிலும் நடிக்க ஒருகட்டத்தில் அவரது ஆஸ்தான கதாநாயகி என்றே அப்போது அழைக்கத் தொடங்கினர் 'கீத காந்தி'யில் நடித்த போது அதே படத்தில் பணிபுரிந்த நடனக் கலைஞர் போலோநாத் ஷர்மாவுடன் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே விதி விளையாட, விபத்து ஒன்றில் சிக்கினர் இருவரும். காயங்களுடன் சரோஜா உயிர் பிழைக்க போலோநாத் மரணமடைந்தார். அன்புக் கணவரின் மறைவால் மனமுடைந்து போன சரோஜா சில காலம் நடிப்பிலும் ஆர்வம் காட்டாதவரகவே இருந்தார். b s saroja இந்தச் சமயத்தில் இவருக்கு ஆறுதல் வார்த்தைகள் தந்து மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும்படி வலியுறுத்தினார், கே.சுப்ரமணியத்தின் படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றியவரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரருமான டி.ஆர். ராமண்ணா. ராமண்ணாவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விரைவில் துயரத்திலிருந்து மீண்ட சரோஜா அதன்பிறகு மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார் மலையாள சினிமாவின் அன்றைய சூப்பர் ஸ்டார் திக்குறிச்சி சுகுமாரன் நாயருடன் இவர் நடித்த 'ஜீவித நவுகா பெரும் வெற்றி பெற்றுப் பின் 'பிச்சைக்காரி' என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. பின்னர் தான் மீண்டும் சினிமாப் பக்கம் திரும்பக் காரணமாக இருந்த ராமண்ணாவையே மறுமணமும் செய்து கொண்டார். பிறகு அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் 'ஓர் இரவு', , எம்.கே.டி தியாகராஜ பாகவதருடன் 'அமரகவி' என மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய பின் தியாகராஜ பாகவதருடன் நடிக்க அப்போதைய கதாநாயகிகள் பலரும் தயங்க துணிந்து நடிக்க முன் வந்தார் சரோஜா. சரோஜாவின் கரியரில் ஹைலைட் என்றால் 'கூண்டுக் கிளி'தான். ராமண்ணாவே இயக்க எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்தார் சரோஜா. தொடர்ந்து கணவர் இயக்கத்தில் கலைஞரின் வசனத்தில் 'புதுமைப்பித்த'னிலும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இன்னொருபுறம் கணவருடன் தயாரித்த படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். 'பெரிய இடத்துப் பெண்’, பாசம், புதுமைப்பெண், அருணகிரிநாதன் உள்ளிட்ட சில படங்கள் கணவனும் மனைவியுமாக இவர்கள் தயாரித்த படங்களே. தியாகராஜ பாகவதர் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.எஸ்.பாலையா, எம்.ரா. ராதா,, ஆர்.எஸ். மனோகர் என அந்தக் கால முக்கிய நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டடார். மனோகருடன் இவர் நடித்த வண்ணக்கிளி பெரிய ஹிட்.. 'அடிக்கிற கைதான் அணைக்கும்', `சின்னப் பாப்பா எங்கள் செல்ல பாப்பா’ பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பிடித்தவையே. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்ற சரோஜா தற்போது சென்னையில் மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார். Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன? வண்ணக்கிளி கடந்த வாரம் 100 வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் சரோஜாவின் மகன் கணேஷிடம் பேசினோம். ''அம்மா ஆரம்பத்துல இருந்தே தீவிரமான சாய் பாபா பக்தை. பாபா ஆசிர்வாதத்துடன் நூறாவது வயது தொடங்குது. அங்களுடைய இப்போதை பொழுது முக்கால்வாசி நேரம் சாய் பாபா கீர்த்தனைகளைக் கேட்கறதுலதான் கழியுது. மத்தபடி நல்ல ஆரோக்கியத்துடனேயே இருக்காங்க. நடிப்பை நிறுத்தின பிறகு சில ஆண்டுகள் சினிமா பத்தி விசாரிச்சாங்க. இப்பெல்லாம் எதுவும் கேக்கறதில்ல. நாங்களுமே அவங்களை அவங்க இஷ்டப்படியே இருக்க விட்டுட்டோம்' என்கிறார் இவர். Suresh Gopi: அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது! - சுரேஷ் கோபி

விகடன் 22 Nov 2025 10:12 am

`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ - 100வது அகவையில் 'வண்ணக்கிளி'பி.எஸ்.சரோஜா

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக் கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும் சிவாஜிக்கு காதலியாகவும் நடித்தவர். இவரைக் குறிப்பிட இந்த ஒரு அறிமுகமே போதுமென்றாலும், எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்துக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் உச்ச நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர், கருப்பு வெள்ளை காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். நடிப்புக்காக விருதுகளை வாங்கிக் குவித்தவர் என மேலும் பல ஹைலைட்டுகள் அணி வகுக்கின்றன. நூறாண்டு காணும் நாயகி குறித்துப் பார்க்கலாமா? கூண்டுக்கிளி சரோஜாவின் பூர்வீகம் சேலம். ஆனால் இவர் பிறக்கும் போது இவரின் பெற்றோர் வசித்தது திருவனந்தபுரம். பதினைந்து வயதில் குரூப் டான்சராக சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டார். ஜெமினி, ஜூபிடர் உள்ளிட்ட பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்தவர், அடுத்த சில வருடங்களிலேயே இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் பார்வையில் பட்டார். அவர் 'விகட யோகி' படத்தின் கதாநாயகி ஆக்கினார் இவரை. அப்போது முதல் சரோஜாவின் திரைப் பயணத்தில் ஏறுமுகம்தான். தொடர்ந்து கே.சுப்ரமணியம் இயக்கிய 'விசித்திர வனிதா', 'கீத காந்தி' ஆகிய படங்களிலும் நடிக்க ஒருகட்டத்தில் அவரது ஆஸ்தான கதாநாயகி என்றே அப்போது அழைக்கத் தொடங்கினர் 'கீத காந்தி'யில் நடித்த போது அதே படத்தில் பணிபுரிந்த நடனக் கலைஞர் போலோநாத் ஷர்மாவுடன் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே விதி விளையாட, விபத்து ஒன்றில் சிக்கினர் இருவரும். காயங்களுடன் சரோஜா உயிர் பிழைக்க போலோநாத் மரணமடைந்தார். அன்புக் கணவரின் மறைவால் மனமுடைந்து போன சரோஜா சில காலம் நடிப்பிலும் ஆர்வம் காட்டாதவரகவே இருந்தார். b s saroja இந்தச் சமயத்தில் இவருக்கு ஆறுதல் வார்த்தைகள் தந்து மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும்படி வலியுறுத்தினார், கே.சுப்ரமணியத்தின் படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றியவரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரருமான டி.ஆர். ராமண்ணா. ராமண்ணாவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விரைவில் துயரத்திலிருந்து மீண்ட சரோஜா அதன்பிறகு மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார் மலையாள சினிமாவின் அன்றைய சூப்பர் ஸ்டார் திக்குறிச்சி சுகுமாரன் நாயருடன் இவர் நடித்த 'ஜீவித நவுகா பெரும் வெற்றி பெற்றுப் பின் 'பிச்சைக்காரி' என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. பின்னர் தான் மீண்டும் சினிமாப் பக்கம் திரும்பக் காரணமாக இருந்த ராமண்ணாவையே மறுமணமும் செய்து கொண்டார். பிறகு அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் 'ஓர் இரவு', , எம்.கே.டி தியாகராஜ பாகவதருடன் 'அமரகவி' என மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய பின் தியாகராஜ பாகவதருடன் நடிக்க அப்போதைய கதாநாயகிகள் பலரும் தயங்க துணிந்து நடிக்க முன் வந்தார் சரோஜா. சரோஜாவின் கரியரில் ஹைலைட் என்றால் 'கூண்டுக் கிளி'தான். ராமண்ணாவே இயக்க எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்தார் சரோஜா. தொடர்ந்து கணவர் இயக்கத்தில் கலைஞரின் வசனத்தில் 'புதுமைப்பித்த'னிலும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இன்னொருபுறம் கணவருடன் தயாரித்த படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். 'பெரிய இடத்துப் பெண்’, பாசம், புதுமைப்பெண், அருணகிரிநாதன் உள்ளிட்ட சில படங்கள் கணவனும் மனைவியுமாக இவர்கள் தயாரித்த படங்களே. தியாகராஜ பாகவதர் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.எஸ்.பாலையா, எம்.ரா. ராதா,, ஆர்.எஸ். மனோகர் என அந்தக் கால முக்கிய நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டடார். மனோகருடன் இவர் நடித்த வண்ணக்கிளி பெரிய ஹிட்.. 'அடிக்கிற கைதான் அணைக்கும்', `சின்னப் பாப்பா எங்கள் செல்ல பாப்பா’ பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பிடித்தவையே. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்ற சரோஜா தற்போது சென்னையில் மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார். Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன? வண்ணக்கிளி கடந்த வாரம் 100 வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் சரோஜாவின் மகன் கணேஷிடம் பேசினோம். ''அம்மா ஆரம்பத்துல இருந்தே தீவிரமான சாய் பாபா பக்தை. பாபா ஆசிர்வாதத்துடன் நூறாவது வயது தொடங்குது. அங்களுடைய இப்போதை பொழுது முக்கால்வாசி நேரம் சாய் பாபா கீர்த்தனைகளைக் கேட்கறதுலதான் கழியுது. மத்தபடி நல்ல ஆரோக்கியத்துடனேயே இருக்காங்க. நடிப்பை நிறுத்தின பிறகு சில ஆண்டுகள் சினிமா பத்தி விசாரிச்சாங்க. இப்பெல்லாம் எதுவும் கேக்கறதில்ல. நாங்களுமே அவங்களை அவங்க இஷ்டப்படியே இருக்க விட்டுட்டோம்' என்கிறார் இவர். Suresh Gopi: அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது! - சுரேஷ் கோபி

விகடன் 22 Nov 2025 10:12 am

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி பேசிய பேச்சு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவை சந்தோஷமாக நந்தினி பார்க்க வர சுந்தரவள்ளியை பார்த்து பின்னாலே வந்து விடுகிறார். எனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா...

தஸ்தர் 22 Nov 2025 10:00 am

பழனியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பாண்டியன், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, நீங்கள் இங்கு பிரச்சனை செய்தால் நான் கிளம்பி போய் விடுவேன் என்றெல்லாம் வழக்கம்போல சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பேசி புரிய வைத்தார்கள். ஆனால், பழனிக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அண்ணன்கள் கட்டாயத்தினால் கடைக்குள் செல்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன், சரவணன் வந்தார்கள். அப்போது பழனி, தனக்கு போட்டியாக கடை திறந்து இருக்கிறார் என்று பாண்டியன் தவறாக புரிந்து கொண்டார். […] The post பழனியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பாண்டியன், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 10:06 pm

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு' (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்துவிடுகிறார் ஃபின்லாந்தைச் சேர்ந்த முன்னாள் கமாண்டோ அடாமி கார்பி (ஜால்மரி டாமிலா). தனது குடும்பத்தின் நினைவாக, மரக்கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய இல்லத்தை முழுமையாக தகர்த்துவிட்டு, மற்றொரு அமைதியான இடத்தில் அந்தக் கட்டைகளை வைத்து புதிய வீட்டை எழுப்பத் திட்டமிடுகிறார். அதற்காக அத்தனை மரக்கட்டைகளையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். SISU Road To Revenge Review ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் ஃபின்லாந்து எல்லை பகுதிக்கு அடாமி வந்திருப்பதை அறியும் ரஷ்ய ராணுவம், அவரை அழிக்க அவருடைய பழைய எதிரியை அனுப்புகிறார்கள். அவர்கள் அடாமி கார்பியை அழிக்க எப்படியான முயற்சிகளை கையிலெடுக்கிறார்கள், மரணத்தை நெருங்காமல் மீண்டும் மீண்டும் எப்படி அவர் எழுந்து வருகிறார், இறுதியில், நினைத்தபடி மற்றொரு பகுதியில் வீட்டைக் கட்டினாரா என்பதுதான் இந்த சீக்குவலின் கதை. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? மரணம் என்ற சொல்லை தனது அகராதியிலிருந்து மொத்தமாக அழித்து, எதிரிகளின் பிடியிலிருந்து லாகவமாகத் தப்பிக்கும் இடம், குடும்பத்தை எண்ணி கண்கலங்கும் இடம் எனப் படத்தை முழுமையாகத் தோள்களில் சுமந்திருக்கிறார் ஜால்மரி டாமிலா. குருதி சொட்டும் வேளையிலும், 'ஆடின்னே இருப்பேன்' எனத் துறுத் துறுவென ஓடும் பகுதிகளிலும் சர்ப்ரைஸ் செய்கிறார் இந்த யங் மேன்! SISU Road To Revenge Review ஒப்பனைகள் இவருடைய முகத்தை மறைக்கும் காட்சிகளிலும் கண்களால் உணர்வைக் கடத்துகிறார். வெவ்வேறு வழிகளில் அடாமியைக் கொல்லத் துடிக்கும் இடம், பிறகு அவருக்கே பயந்து ஓடும் இடம் என ஸ்டீபன் லாங், நடிப்பில் வெவ்வேறு முகங்களைக் காட்டி மிளிர்கிறார். கூல் மோடில் அவர் செய்யும் சின்னச் சின்ன ஸ்டைல்களும் ரசிக்க வைக்கின்றன. Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா? குருதி தெறிக்கும் களத்தில் தோட்டாக்களின் வேகத்திற்கு இணையாகப் பறந்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிகா ஒரசமா. அடாமியின் மனவோட்டத்தை நமக்குக் கடத்துவதற்கு இவர் கையாண்டிருக்கும் யுக்திக்கும் பாராட்டுகள். சாப்டர்களாகப் பிரித்து ஆக்‌ஷன் காட்சிகளை அடுக்கிய படத்தொகுப்பாளர் ஜூகோ விரோலைனன், இந்தப் படம் கோரும் நிதானத்தையும் கொடுத்திருக்கிறார். SISU Road To Revenge Review 1950-களின் உடைகள், அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ரயில்கள், டேங்கர்கள் என இந்தப் பீரியட் டிராமாவுக்கு ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் எனத் தொழில்நுட்பக் குழுவினர் நியாயம் சேர்த்திருக்கிறார்கள். வாவ் சொல்ல வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கும் ஆக்ஷன் இயக்குநர்களுக்கு தங்க மெடல்களைக் கொடுக்கலாம். ஆர்ப்பாட்டமில்லாமல் ஹம்மிங்கில் மிரட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கும் ஜூரி செப்பா, டுமாஸ் வெயினோலா கூட்டணி எமோஷனல் காட்சிகளிலும் மனமுருக வைத்திருக்கிறார்கள். Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? முதல் பாகத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்திலேயே நின்று கதை சொல்லிய இயக்குநர் ஜால்மரி ஹெலண்டர், இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் சென்டிமெண்ட் டச் வைத்துக் கதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் இல்லாமல் அடாமியின் நடவடிக்கைகள் மூலமாகவே அவருக்கு மாஸ் கூட்டிய ஐடியா, இந்த ஆக்‌ஷன் டிராமாவைத் தனித்து நிற்கச் செய்திருக்கிறது. பரபர வேகம் இல்லாமல் நிதானமாக நகரும் இந்த 'சிசு', சோர்வாகும் சமயங்களில் சில சுவாரஸ்யமான விஷயங்களால் நம்மை சர்ப்ரைஸ் செய்கிறது. SISU Road To Revenge Review அடாமிக்கு மரணம் என்பதே கிடையாது என்பதெல்லாம் முதல் பாகத்திலேயே தெரிந்த விஷயம்தான்! அதற்கென அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் மரணத்திற்கு அருகில் அவரைக் கொண்டுசெல்வது, மீள்வது போன்றவை அடாமியுடன் பார்வையாளர்களையும் சேர்த்தே சோதிக்கின்றன. அதேபோல, ட்விஸ்ட்கள் பெரிதளவில் இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் பழிவாங்கும் கதை, சற்றே திரைக்கதையை 'டல்'லாக வைத்து க்ளைமாக்ஸ் காட்சியையும் முன்பே கணிக்க வைத்துவிடுகிறது. நம்பக்கூடிய ஆக்‌ஷன் விஷயங்கள் இருப்பதெல்லாம் ஓகே, ஆனால், பல டன் எடையுள்ள டேங்கர் எப்படிப் பாஸ் அவ்வளவு சாதாரணமாகப் சம்மர்சால்ட் அடிக்கும்? இப்படியான சில குறைகள் இருந்தாலும், முதல் பாகத்தைப் போல இதிலும் புதிய இலக்கணம் கொண்டு இந்த ஆக்‌ஷன் கதையைச் சொன்ன விதம் பாராட்ட வைக்கிறது.

விகடன் 21 Nov 2025 9:11 pm

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு' (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்துவிடுகிறார் ஃபின்லாந்தைச் சேர்ந்த முன்னாள் கமாண்டோ அடாமி கார்பி (ஜால்மரி டாமிலா). தனது குடும்பத்தின் நினைவாக, மரக்கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய இல்லத்தை முழுமையாக தகர்த்துவிட்டு, மற்றொரு அமைதியான இடத்தில் அந்தக் கட்டைகளை வைத்து புதிய வீட்டை எழுப்பத் திட்டமிடுகிறார். அதற்காக அத்தனை மரக்கட்டைகளையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். SISU Road To Revenge Review ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் ஃபின்லாந்து எல்லை பகுதிக்கு அடாமி வந்திருப்பதை அறியும் ரஷ்ய ராணுவம், அவரை அழிக்க அவருடைய பழைய எதிரியை அனுப்புகிறார்கள். அவர்கள் அடாமி கார்பியை அழிக்க எப்படியான முயற்சிகளை கையிலெடுக்கிறார்கள், மரணத்தை நெருங்காமல் மீண்டும் மீண்டும் எப்படி அவர் எழுந்து வருகிறார், இறுதியில், நினைத்தபடி மற்றொரு பகுதியில் வீட்டைக் கட்டினாரா என்பதுதான் இந்த சீக்குவலின் கதை. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? மரணம் என்ற சொல்லை தனது அகராதியிலிருந்து மொத்தமாக அழித்து, எதிரிகளின் பிடியிலிருந்து லாகவமாகத் தப்பிக்கும் இடம், குடும்பத்தை எண்ணி கண்கலங்கும் இடம் எனப் படத்தை முழுமையாகத் தோள்களில் சுமந்திருக்கிறார் ஜால்மரி டாமிலா. குருதி சொட்டும் வேளையிலும், 'ஆடின்னே இருப்பேன்' எனத் துறுத் துறுவென ஓடும் பகுதிகளிலும் சர்ப்ரைஸ் செய்கிறார் இந்த யங் மேன்! SISU Road To Revenge Review ஒப்பனைகள் இவருடைய முகத்தை மறைக்கும் காட்சிகளிலும் கண்களால் உணர்வைக் கடத்துகிறார். வெவ்வேறு வழிகளில் அடாமியைக் கொல்லத் துடிக்கும் இடம், பிறகு அவருக்கே பயந்து ஓடும் இடம் என ஸ்டீபன் லாங், நடிப்பில் வெவ்வேறு முகங்களைக் காட்டி மிளிர்கிறார். கூல் மோடில் அவர் செய்யும் சின்னச் சின்ன ஸ்டைல்களும் ரசிக்க வைக்கின்றன. Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா? குருதி தெறிக்கும் களத்தில் தோட்டாக்களின் வேகத்திற்கு இணையாகப் பறந்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிகா ஒரசமா. அடாமியின் மனவோட்டத்தை நமக்குக் கடத்துவதற்கு இவர் கையாண்டிருக்கும் யுக்திக்கும் பாராட்டுகள். சாப்டர்களாகப் பிரித்து ஆக்‌ஷன் காட்சிகளை அடுக்கிய படத்தொகுப்பாளர் ஜூகோ விரோலைனன், இந்தப் படம் கோரும் நிதானத்தையும் கொடுத்திருக்கிறார். SISU Road To Revenge Review 1950-களின் உடைகள், அப்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ரயில்கள், டேங்கர்கள் என இந்தப் பீரியட் டிராமாவுக்கு ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் எனத் தொழில்நுட்பக் குழுவினர் நியாயம் சேர்த்திருக்கிறார்கள். வாவ் சொல்ல வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கும் ஆக்ஷன் இயக்குநர்களுக்கு தங்க மெடல்களைக் கொடுக்கலாம். ஆர்ப்பாட்டமில்லாமல் ஹம்மிங்கில் மிரட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கும் ஜூரி செப்பா, டுமாஸ் வெயினோலா கூட்டணி எமோஷனல் காட்சிகளிலும் மனமுருக வைத்திருக்கிறார்கள். Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? முதல் பாகத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்திலேயே நின்று கதை சொல்லிய இயக்குநர் ஜால்மரி ஹெலண்டர், இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் சென்டிமெண்ட் டச் வைத்துக் கதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் இல்லாமல் அடாமியின் நடவடிக்கைகள் மூலமாகவே அவருக்கு மாஸ் கூட்டிய ஐடியா, இந்த ஆக்‌ஷன் டிராமாவைத் தனித்து நிற்கச் செய்திருக்கிறது. பரபர வேகம் இல்லாமல் நிதானமாக நகரும் இந்த 'சிசு', சோர்வாகும் சமயங்களில் சில சுவாரஸ்யமான விஷயங்களால் நம்மை சர்ப்ரைஸ் செய்கிறது. SISU Road To Revenge Review அடாமிக்கு மரணம் என்பதே கிடையாது என்பதெல்லாம் முதல் பாகத்திலேயே தெரிந்த விஷயம்தான்! அதற்கென அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் மரணத்திற்கு அருகில் அவரைக் கொண்டுசெல்வது, மீள்வது போன்றவை அடாமியுடன் பார்வையாளர்களையும் சேர்த்தே சோதிக்கின்றன. அதேபோல, ட்விஸ்ட்கள் பெரிதளவில் இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் பழிவாங்கும் கதை, சற்றே திரைக்கதையை 'டல்'லாக வைத்து க்ளைமாக்ஸ் காட்சியையும் முன்பே கணிக்க வைத்துவிடுகிறது. நம்பக்கூடிய ஆக்‌ஷன் விஷயங்கள் இருப்பதெல்லாம் ஓகே, ஆனால், பல டன் எடையுள்ள டேங்கர் எப்படிப் பாஸ் அவ்வளவு சாதாரணமாகப் சம்மர்சால்ட் அடிக்கும்? இப்படியான சில குறைகள் இருந்தாலும், முதல் பாகத்தைப் போல இதிலும் புதிய இலக்கணம் கொண்டு இந்த ஆக்‌ஷன் கதையைச் சொன்ன விதம் பாராட்ட வைக்கிறது.

விகடன் 21 Nov 2025 9:11 pm

சேரன்-சந்தா காதலை அறிந்த சோழன் குடும்பம், கோபத்தில் புலம்பும் வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போன முறை சேரன் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டார். இந்த முறை யாரும் தூங்காமல் சேரன் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு சோழனுக்கு கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி சோழன் தன்னுடைய மற்ற இரண்டு தம்பிகளிடம் சொன்னார். அவர்களுமே தன் அண்ணனை பார்த்துக் கொள்வதற்கு சம்மதித்தார்கள். ஆனால் சேரன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். சேரன் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவாரோ என்று பயத்தில் […] The post சேரன்-சந்தா காதலை அறிந்த சோழன் குடும்பம், கோபத்தில் புலம்பும் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 8:22 pm

ரோகினி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த மீனா, அதிர்ச்சியில் உறைந்த முத்து –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, என்னானது என்று நடந்ததை விசாரித்தார். ஆனால், மீனா எதுவுமே சொல்லவில்லை. மறுநாள் காலையில் மனோஜ், ஒரு பெரிய ஆபீசர் போல கோர்ட் போட்டு அமர்க்களம் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போல ரோகினி திமிராக பேசி இருந்தார். உடனே மீனா முறைத்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். அண்ணாமலை, செய்திருக்கும் வேலையை ஒழுங்காக பண்ணு என்று அறிவுரை எல்லாம் சொன்னார். மனோஜ் சொந்தமாக கம்பெனி ஆரம்பிப்பதை பற்றி வீட்டில் பேசி இருந்தார். […] The post ரோகினி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த மீனா, அதிர்ச்சியில் உறைந்த முத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 7:32 pm

கவின்-ஆண்ட்ரியா காம்போவில் வந்த ‘மாஸ்க்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தையும் தயாரிப்பாளர் சொக்கலிங்கம் உடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? […] The post கவின்-ஆண்ட்ரியா காம்போவில் வந்த ‘மாஸ்க்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 6:14 pm

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. Mamitha Baiju About Vijay இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது. வீடியோ ஒன்றுடன் சோஷியல் மீடியா தளங்களில் மாலை 5.30 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. View this post on Instagram தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், மலேசியாவில் டிசம்பர் 27 அன்று 'ஜன நாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் விஜய்யின் கரியரில் கடைசி படம் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

விகடன் 21 Nov 2025 6:00 pm

`இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை, ஆனால்!'- ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் , நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள். ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை. அங்குள்ள நட்சத்திரங்கள் 'மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 21 Nov 2025 5:37 pm

`இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை, ஆனால்!'- ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் , நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள். ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை. அங்குள்ள நட்சத்திரங்கள் 'மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 21 Nov 2025 5:37 pm

முனிஷ்காந்த்-விஜயலட்சுமி காம்போவில் வந்த ‘மிடில் கிளாஸ்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நடுத்தர குடும்பம் தொடர்பான படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் படம் மிடில் கிளாஸ். இந்த படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி, குரேஷி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கிஷோர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் கணவன்- மனைவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். அன்றாட […] The post முனிஷ்காந்த்-விஜயலட்சுமி காம்போவில் வந்த ‘மிடில் கிளாஸ்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 4:35 pm

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பாதாம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பாதாம் மில்க் ஷேக் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதுமட்டும் இல்லாமல் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும்...

தஸ்தர் 21 Nov 2025 4:27 pm

BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விக்கல்ஸ் விக்ரமிற்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன். நானும் சாண்ட்ராவும் கணவன் மனைவினு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களை வார்ன் பண்றேன். அவுங்க பூண்டு போட்டாங்கன்னா நீங்க ஏன் என் கிட்ட மட்டும் கேக்குறீங்க. எல்லார் கிட்டையும் கேளுங்க. BB Tamil 9 உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லுங்க பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் டைம் வாங்கி டோர் ஓப்பன் பண்ணி வைக்க சொல்றேன். நீங்க வீட்டுக்குப் போய் உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க. பின்னால நின்னு முதுகில குத்துன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது என்று பிரஜின் கோபப்பட்டு விக்கல்ஸ் விக்ரமிடம் காட்டமாகப் பேசுகிறார். நான் உங்க முன்னாடி நின்னு தான் பேசுறேன் என விக்கல்ஸ் விக்ரம் கூலாகப் பதில் சொல்கிறார்.

விகடன் 21 Nov 2025 4:12 pm

BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விக்கல்ஸ் விக்ரமிற்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன். நானும் சாண்ட்ராவும் கணவன் மனைவினு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களை வார்ன் பண்றேன். அவுங்க பூண்டு போட்டாங்கன்னா நீங்க ஏன் என் கிட்ட மட்டும் கேக்குறீங்க. எல்லார் கிட்டையும் கேளுங்க. BB Tamil 9 உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லுங்க பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் டைம் வாங்கி டோர் ஓப்பன் பண்ணி வைக்க சொல்றேன். நீங்க வீட்டுக்குப் போய் உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க. பின்னால நின்னு முதுகில குத்துன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது என்று பிரஜின் கோபப்பட்டு விக்கல்ஸ் விக்ரமிடம் காட்டமாகப் பேசுகிறார். நான் உங்க முன்னாடி நின்னு தான் பேசுறேன் என விக்கல்ஸ் விக்ரம் கூலாகப் பதில் சொல்கிறார்.

விகடன் 21 Nov 2025 4:12 pm

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ'. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? ஒரு பயணக் கதையின் தூரத்தைக் கடக்கும் போக்கில் இயல்பான நடிப்பைக் கொடுக்கிறார் பூர்ணிமா ரவி. குறிப்பாக, இறுதி அத்தியாயத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைபவ் முருகேசன் ஆரம்பத்தில் சற்றே செயற்கையான உடல்மொழியுடன் தெரிந்தாலும், போகப் போக அதைச் சரிசெய்து இயல்புக்கு வந்துவிடுகிறார். இருவரையும் மையமாகக் கொண்ட கதை என்பதால், அவர்களுக்கிடையிலான உறவின் நுணுக்கங்களையும் உணர்வலைகளையும் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ரசிக்கும்படியும் எழுதியிருக்கலாம். ஒரே ஒரு காட்சி என்றாலும் படத்தின் ஆன்மாவையே நடிப்பில் கடத்தி அசத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். அனுபவம் பேசியிருக்கிறது! Yellow Review | எல்லோ விமர்சனம் சிறியதொரு கதாபாத்திரத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பில் ஜென் Z வைப்! லீலா சாம்சன் தொடங்கி, பயணங்களில் தட்டுப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் சற்றே செயற்கைத்தனம் கூடியே வலம் வருகின்றன. அதிலும் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதாக வரும் கதாபாத்திரம் நகைச்சுவை என்கிற பெயரில் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை. ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது. தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஆனால் அதன்பிறகு வைக்கப்பட்ட காட்சிகள் சற்றே செயற்கைத்தனமான வசனங்கள், மைண்ட் வாய்ஸ்கள் போன்றவை வந்த ஆர்வத்தை கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்றிவிடுகின்றன. அதிலும் கிளைக் கதையாக வருகிற ரயில் கதை சிறப்பாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பிக்க, இரவில் ரவுடிகள் வம்பிழுக்கும் இடம் சற்றே சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த உணர்வுகளைப் பதிவு செய்யும் அழுத்தமான வசனங்களோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் ஒரு டிராவல் வ்லாக் போலவே காட்சிகள் நகர்வது ஏமாற்றம்! Yellow Review | எல்லோ விமர்சனம் அதோடு காட்சிக்குக் காட்சி பயணங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருப்பது அயர்ச்சி! உடைந்த மனது, பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்களால் தன்னைத்தானே சரி செய்கிறது என்பதைப் பேசும் இந்த ‘எல்லோ’, திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் க்ரீன் சிக்னல் பெற்றிருக்கும். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 21 Nov 2025 3:55 pm

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ'. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? ஒரு பயணக் கதையின் தூரத்தைக் கடக்கும் போக்கில் இயல்பான நடிப்பைக் கொடுக்கிறார் பூர்ணிமா ரவி. குறிப்பாக, இறுதி அத்தியாயத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைபவ் முருகேசன் ஆரம்பத்தில் சற்றே செயற்கையான உடல்மொழியுடன் தெரிந்தாலும், போகப் போக அதைச் சரிசெய்து இயல்புக்கு வந்துவிடுகிறார். இருவரையும் மையமாகக் கொண்ட கதை என்பதால், அவர்களுக்கிடையிலான உறவின் நுணுக்கங்களையும் உணர்வலைகளையும் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ரசிக்கும்படியும் எழுதியிருக்கலாம். ஒரே ஒரு காட்சி என்றாலும் படத்தின் ஆன்மாவையே நடிப்பில் கடத்தி அசத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். அனுபவம் பேசியிருக்கிறது! Yellow Review | எல்லோ விமர்சனம் சிறியதொரு கதாபாத்திரத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பில் ஜென் Z வைப்! லீலா சாம்சன் தொடங்கி, பயணங்களில் தட்டுப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் சற்றே செயற்கைத்தனம் கூடியே வலம் வருகின்றன. அதிலும் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதாக வரும் கதாபாத்திரம் நகைச்சுவை என்கிற பெயரில் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை. ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது. தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஆனால் அதன்பிறகு வைக்கப்பட்ட காட்சிகள் சற்றே செயற்கைத்தனமான வசனங்கள், மைண்ட் வாய்ஸ்கள் போன்றவை வந்த ஆர்வத்தை கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்றிவிடுகின்றன. அதிலும் கிளைக் கதையாக வருகிற ரயில் கதை சிறப்பாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பிக்க, இரவில் ரவுடிகள் வம்பிழுக்கும் இடம் சற்றே சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த உணர்வுகளைப் பதிவு செய்யும் அழுத்தமான வசனங்களோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் ஒரு டிராவல் வ்லாக் போலவே காட்சிகள் நகர்வது ஏமாற்றம்! Yellow Review | எல்லோ விமர்சனம் அதோடு காட்சிக்குக் காட்சி பயணங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருப்பது அயர்ச்சி! உடைந்த மனது, பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்களால் தன்னைத்தானே சரி செய்கிறது என்பதைப் பேசும் இந்த ‘எல்லோ’, திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் க்ரீன் சிக்னல் பெற்றிருக்கும். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 21 Nov 2025 3:55 pm

போஸை காப்பாற்ற ஈஸ்வரி-சித்ரா போடும் சதி திட்டம், சேதுவின் நிலைமை என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா ரூமிற்குள் வந்துவிட்டார். போசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பயத்தில் உளறினார். கோபத்தில் காவியா, போஸை அடித்துவிட்டு இவ்வளவு கேளாமகேவலமானவனா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து தாமரை-சாவித்ரி இருவருக்குமே சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய குழந்தைக்காக தான் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து வருத்தப்பட்டார். பார்லர் போய்விட்டு ஈஸ்வரி, சித்ரா எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது சாவித்திரி, உன் மகன் […] The post போஸை காப்பாற்ற ஈஸ்வரி-சித்ரா போடும் சதி திட்டம், சேதுவின் நிலைமை என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 3:34 pm

குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன், அதனால் தான்- 'காந்தா'குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ்

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் படம் 'காந்தா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் குமாரி கதாபாத்திரத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். Kaantha இவர் இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இந்நிலையில் 'IANS' ஊடகத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். நான் 'காந்தா' படத்தில் நடித்த குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன். ஒரு கட்டத்தில் எல்லோரும் 'யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து நாங்கள் பார்க்கவில்லை' என்று சொன்னார்கள். Bhagyashri Borse - Kaantha என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும் தளமும் கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான், படம் வெளியான பிறகு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்தது. கடின உழைப்பு நம்மை நல்ல இடங்களுக்கு தான் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 21 Nov 2025 3:28 pm

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டாமல் போவதோடு, பிரச்னைகளையும் சேர்த்து இழுத்து வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன, அதை கார்ல் மார்க்ஸின் குடும்பம் கைப்பற்றியதா, இறுதியில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மாறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! குடும்பத்திற்காக ஓடுவது, மனைவியிடம் அவமானப்பட்டு உடைவது, எல்லை மீறாத கோவம், அப்பாவித்தனத்தைக் காட்டி சிரிக்க வைப்பது எனக் குடும்பத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த படத்திற்காகவும் ஓடியோடி உழைத்து, அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் முனீஸ் காந்த். விஜய் லட்சுமியின் 'ஹை பிட்ச்' நடிப்பு காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், ஏனைய தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது. வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆட்டோ ஓட்டுநராக குரேஷி, துப்பறியும் நிபுணராக ராதாரவி, தந்தையாக வேல ராமமூர்த்தி, மனோதத்துவ மருத்துவராக மாளவிகா அவிநாஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் நேர்த்தியான ஒளியமைப்பாலும், ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகளாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். குறிப்பாக, துப்பறியும் காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. ஆனால் நீளும்ம்ம்ம்ம் க்ளைமாக்ஸ் ஆவ்வ்வ்! பிரணவ் முனிராஜ் இசையில் 'தேன்கூடே' பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன. பின்னணி இசையாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பிரணவ் முனிராஜ். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! நடுத்தர வர்க்க குடும்பம், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தைப் பாதிப்பது, அவற்றோடு அவர்கள் போராடுவது எனக் கதைக்கருவைத் தொடக்கத்திலேயே தொட்டுவிடுகிறது படம். விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன. Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் மீண்டும் கதைக்குள் வரும் படம், எமோஷன் - காமெடி என இரண்டையும் மாற்றி மாற்றி உரசியபடியே நகர்கிறது. ஆனாலும், ஜாக்பாட் கன்ட்டென்ட்டைத் தொட்ட பிறகு, இறுதிக்காட்சி வரைக்கும் யூகிக்கும்படியான பாதையிலேயே போவது பெரிய மைனஸ். மொத்தமாகவே முதற்பாதி, சில காமெடிகள், சில எமோஷன்கள், யூகிக்கும்படியான ஒரு ட்விஸ்ட் எனப் பாஸ் ஆகிறது. Paal Dabba & Mysskin: Ilaiyaraaja Class-ல பாதியில் வந்துட்டேன் - Vikatan Digital Awards 2025 UNCUT இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை. பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்! மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்! Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன. மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த 'மிடில் கிளாஸ்'. ``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்! - முனீஸ்காந்த் #LetsRelieveStress

விகடன் 21 Nov 2025 3:21 pm

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டாமல் போவதோடு, பிரச்னைகளையும் சேர்த்து இழுத்து வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன, அதை கார்ல் மார்க்ஸின் குடும்பம் கைப்பற்றியதா, இறுதியில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மாறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! குடும்பத்திற்காக ஓடுவது, மனைவியிடம் அவமானப்பட்டு உடைவது, எல்லை மீறாத கோவம், அப்பாவித்தனத்தைக் காட்டி சிரிக்க வைப்பது எனக் குடும்பத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த படத்திற்காகவும் ஓடியோடி உழைத்து, அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் முனீஸ் காந்த். விஜய் லட்சுமியின் 'ஹை பிட்ச்' நடிப்பு காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், ஏனைய தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது. வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆட்டோ ஓட்டுநராக குரேஷி, துப்பறியும் நிபுணராக ராதாரவி, தந்தையாக வேல ராமமூர்த்தி, மனோதத்துவ மருத்துவராக மாளவிகா அவிநாஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் நேர்த்தியான ஒளியமைப்பாலும், ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகளாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். குறிப்பாக, துப்பறியும் காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. ஆனால் நீளும்ம்ம்ம்ம் க்ளைமாக்ஸ் ஆவ்வ்வ்! பிரணவ் முனிராஜ் இசையில் 'தேன்கூடே' பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன. பின்னணி இசையாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பிரணவ் முனிராஜ். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! நடுத்தர வர்க்க குடும்பம், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தைப் பாதிப்பது, அவற்றோடு அவர்கள் போராடுவது எனக் கதைக்கருவைத் தொடக்கத்திலேயே தொட்டுவிடுகிறது படம். விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன. Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் மீண்டும் கதைக்குள் வரும் படம், எமோஷன் - காமெடி என இரண்டையும் மாற்றி மாற்றி உரசியபடியே நகர்கிறது. ஆனாலும், ஜாக்பாட் கன்ட்டென்ட்டைத் தொட்ட பிறகு, இறுதிக்காட்சி வரைக்கும் யூகிக்கும்படியான பாதையிலேயே போவது பெரிய மைனஸ். மொத்தமாகவே முதற்பாதி, சில காமெடிகள், சில எமோஷன்கள், யூகிக்கும்படியான ஒரு ட்விஸ்ட் எனப் பாஸ் ஆகிறது. Paal Dabba & Mysskin: Ilaiyaraaja Class-ல பாதியில் வந்துட்டேன் - Vikatan Digital Awards 2025 UNCUT இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை. பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்! மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்! Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன. மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த 'மிடில் கிளாஸ்'. ``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்! - முனீஸ்காந்த் #LetsRelieveStress

விகடன் 21 Nov 2025 3:21 pm

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள் என்பதோடு, அந்தக் கொள்ளையை நடத்தியது யார் என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் 'மாஸ்க்' திரைப்படம். Mask Review | மாஸ்க் விமர்சனம் கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, சேட்டைக்கார குணம் எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், எமோஷன் காட்சிகளையும் பொறுப்பாக அணுகி, அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறார். நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆக்ரோஷம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாகப் பவன். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! தன் அப்புராணித்தனத்தால் ருஹானி ஷர்மா முதல் பாதியில் கவர, தன் எதார்த்தமான நடிப்பால் சார்லி இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார். எக்கச்சக்க துணை நடிகர்கள் பட்டாளத்தில் வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். படம் முழுவதும் பேச்சுத்துணைக்கு நெல்சன் திலீப்குமாரின் நையாண்டி கலந்த வாய்ஸ் ஓவர்! Mask Review | மாஸ்க் விமர்சனம் பழங்கால ஹோட்டல், ஹைடெக் ஸ்டூடியோ, பூமியின் ரகசிய அறைகள் போன்றவற்றை முடிந்தளவுக்கு ஓவர்டோஸ் ஆகாமல், பலம் ஆக்கியிருக்கிறது ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக் கூட்டணி. இவற்றில் நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். அந்த மொட்டை மாடி க்ரீன்மேட் ஷாட் மட்டும் அநாவசியம் சாரே! பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், 'கண்ணுமுழி' பாடல் காதலைக் கசியவிட, 'வெற்றி வீரனே' பாடல் கதைக்கருவைப் பேசுகிறது. லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என எல்லா சக்கரத்திற்கும் தீனி போட்டு, சுழலவிட்டிருக்கிறது ஜி.வி-யின் பின்னணி இசை. Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின் கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம். கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது. நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, 'நான்கு ஒலிச்சாலை'யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! இரண்டாம் பாதியிலும் ஆக்சிலேட்டரை விடாமல் அழுத்திக்கொண்டே ஓடுகிறது திரைக்கதை. இந்த ஓட்டத்தில் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக எட்டிப்பார்த்தாலும், அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகளும், சில ஐடியாக்களும் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே ஓடுகின்றன. மூன்று கதாபாத்திரங்களின் கதையை அக்கொள்ளையோடு தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், எமோஷன் பாதைக்கு இண்டிகேட்டர் போடும் திரைக்கதையில் நிதானம் மிஸ் ஆவதால், போதுமான எமோஷனும் மிஸ் ஆகிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் அதோடு, பயங்கரமான ட்விஸ்ட்களும் வரிசைக்கட்டுவது சிறிது அயற்சியைக் கொடுத்தாலும், நடிகர்களின் பங்களிப்பால் பாஸ் ஆகின்றன. கதையாக, ஐடியாக்களாக, கதாபாத்திரங்களாகவும் கவர்ந்தாலும், அவற்றை நேர்த்தியான திரைக்கதையில் மாட்டிவிடத் தவறுவதால், இந்த 'மாஸ்க்' பாதி முகத்தையே மறைக்கிறது. Mask: ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல் - கவின்

விகடன் 21 Nov 2025 2:27 pm

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள் என்பதோடு, அந்தக் கொள்ளையை நடத்தியது யார் என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் 'மாஸ்க்' திரைப்படம். Mask Review | மாஸ்க் விமர்சனம் கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, சேட்டைக்கார குணம் எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், எமோஷன் காட்சிகளையும் பொறுப்பாக அணுகி, அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறார். நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆக்ரோஷம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாகப் பவன். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! தன் அப்புராணித்தனத்தால் ருஹானி ஷர்மா முதல் பாதியில் கவர, தன் எதார்த்தமான நடிப்பால் சார்லி இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார். எக்கச்சக்க துணை நடிகர்கள் பட்டாளத்தில் வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். படம் முழுவதும் பேச்சுத்துணைக்கு நெல்சன் திலீப்குமாரின் நையாண்டி கலந்த வாய்ஸ் ஓவர்! Mask Review | மாஸ்க் விமர்சனம் பழங்கால ஹோட்டல், ஹைடெக் ஸ்டூடியோ, பூமியின் ரகசிய அறைகள் போன்றவற்றை முடிந்தளவுக்கு ஓவர்டோஸ் ஆகாமல், பலம் ஆக்கியிருக்கிறது ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக் கூட்டணி. இவற்றில் நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். அந்த மொட்டை மாடி க்ரீன்மேட் ஷாட் மட்டும் அநாவசியம் சாரே! பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், 'கண்ணுமுழி' பாடல் காதலைக் கசியவிட, 'வெற்றி வீரனே' பாடல் கதைக்கருவைப் பேசுகிறது. லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என எல்லா சக்கரத்திற்கும் தீனி போட்டு, சுழலவிட்டிருக்கிறது ஜி.வி-யின் பின்னணி இசை. Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின் கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம். கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது. நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, 'நான்கு ஒலிச்சாலை'யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! இரண்டாம் பாதியிலும் ஆக்சிலேட்டரை விடாமல் அழுத்திக்கொண்டே ஓடுகிறது திரைக்கதை. இந்த ஓட்டத்தில் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக எட்டிப்பார்த்தாலும், அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகளும், சில ஐடியாக்களும் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே ஓடுகின்றன. மூன்று கதாபாத்திரங்களின் கதையை அக்கொள்ளையோடு தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், எமோஷன் பாதைக்கு இண்டிகேட்டர் போடும் திரைக்கதையில் நிதானம் மிஸ் ஆவதால், போதுமான எமோஷனும் மிஸ் ஆகிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் அதோடு, பயங்கரமான ட்விஸ்ட்களும் வரிசைக்கட்டுவது சிறிது அயற்சியைக் கொடுத்தாலும், நடிகர்களின் பங்களிப்பால் பாஸ் ஆகின்றன. கதையாக, ஐடியாக்களாக, கதாபாத்திரங்களாகவும் கவர்ந்தாலும், அவற்றை நேர்த்தியான திரைக்கதையில் மாட்டிவிடத் தவறுவதால், இந்த 'மாஸ்க்' பாதி முகத்தையே மறைக்கிறது. Mask: ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல் - கவின்

விகடன் 21 Nov 2025 2:27 pm

சாரதா எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன குடும்பம், விஜய் சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே […] The post சாரதா எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன குடும்பம், விஜய் சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 2:10 pm

எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.! - நெகிழும் தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொண்ட வாட்ச் எது? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த தனுஷ், நான் காதல் கொண்ட ஒரு வாட்ச் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்த அந்த வாட்ச் தான். தனுஷ் ஸ்கூல் படிக்கும்போது அந்த வாட்ச்சை அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார். அது டாலரின் விலையை விட குறைவானது தான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் வாட்ச். அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் தான். அந்த பேட்டரி முடிந்துவிட்டால் வாட்ச் வேலை செய்யாது. அந்த வாட்ச்சில் நிறைய கலர்கள் இருக்கும். நானும் எனது அக்காக்களும் ஊதா, மஞ்சள் என மாறி மாறி கட்டிக்கொள்வோம். பேட்ரி முடிந்து டைம் காமிக்காதப்போதும், அந்த வாட்ச்சை நான் கட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வேன். அந்தளவிற்கு எனக்கு அந்த வாட்ச் பிடிக்கும். தனுஷ் இன்னும் அந்த வாட்ச்சை நான் பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன். இப்போது வரைக்கும் எனக்கு பிடித்த, மறக்க முடியாத ஒரு வாட்ச் என்றால் அதுதான் என்று தனுஷ் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். ``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

விகடன் 21 Nov 2025 1:22 pm

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி'குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகில் மூத்த மொழிகளில் ஒன்று என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மேலும் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து அந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த தனுஷ், '3' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம். ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம். ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது. அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஒர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை முழு பாடலாக உருவாக்கினோம். தனுஷ் ’ஒய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் இந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது. நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

விகடன் 21 Nov 2025 12:42 pm

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி'குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகில் மூத்த மொழிகளில் ஒன்று என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மேலும் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து அந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த தனுஷ், '3' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம். ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம். ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது. அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஒர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை முழு பாடலாக உருவாக்கினோம். தனுஷ் ’ஒய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் இந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது. நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

விகடன் 21 Nov 2025 12:42 pm

விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு காரணம் இதுதான் –உண்மையை உடைத்த ஹார்ட் பீட் நடிகர்

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வெப் தொடரில் ஒன்று தான் ஹார்ட் பீட். இந்த தொடர் இரண்டு சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. மூன்றாவது சீசனும் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த தொடரில் ரவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குரு லக்ஷ்மணன். அதற்கு முன்பே இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு […] The post விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு காரணம் இதுதான் – உண்மையை உடைத்த ஹார்ட் பீட் நடிகர் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 12:38 pm

ஜனநாயகன் படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி...

தஸ்தர் 21 Nov 2025 11:48 am

இந்த வாரம் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ள டாப் 5 சீரியல் குறித்து பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு – 10.18 2. சிங்கப் பெண்ணே –...

தஸ்தர் 21 Nov 2025 11:25 am