SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

முனிஷ்காந்த்-விஜயலட்சுமி காம்போவில் வந்த ‘மிடில் கிளாஸ்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நடுத்தர குடும்பம் தொடர்பான படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் படம் மிடில் கிளாஸ். இந்த படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி, குரேஷி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கிஷோர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் கணவன்- மனைவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். அன்றாட […] The post முனிஷ்காந்த்-விஜயலட்சுமி காம்போவில் வந்த ‘மிடில் கிளாஸ்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 4:35 pm

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பாதாம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பாதாம் மில்க் ஷேக் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதுமட்டும் இல்லாமல் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும்...

தஸ்தர் 21 Nov 2025 4:27 pm

BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விக்கல்ஸ் விக்ரமிற்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன். நானும் சாண்ட்ராவும் கணவன் மனைவினு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களை வார்ன் பண்றேன். அவுங்க பூண்டு போட்டாங்கன்னா நீங்க ஏன் என் கிட்ட மட்டும் கேக்குறீங்க. எல்லார் கிட்டையும் கேளுங்க. BB Tamil 9 உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லுங்க பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் டைம் வாங்கி டோர் ஓப்பன் பண்ணி வைக்க சொல்றேன். நீங்க வீட்டுக்குப் போய் உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க. பின்னால நின்னு முதுகில குத்துன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது என்று பிரஜின் கோபப்பட்டு விக்கல்ஸ் விக்ரமிடம் காட்டமாகப் பேசுகிறார். நான் உங்க முன்னாடி நின்னு தான் பேசுறேன் என விக்கல்ஸ் விக்ரம் கூலாகப் பதில் சொல்கிறார்.

விகடன் 21 Nov 2025 4:12 pm

BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விக்கல்ஸ் விக்ரமிற்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன். நானும் சாண்ட்ராவும் கணவன் மனைவினு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களை வார்ன் பண்றேன். அவுங்க பூண்டு போட்டாங்கன்னா நீங்க ஏன் என் கிட்ட மட்டும் கேக்குறீங்க. எல்லார் கிட்டையும் கேளுங்க. BB Tamil 9 உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லுங்க பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் டைம் வாங்கி டோர் ஓப்பன் பண்ணி வைக்க சொல்றேன். நீங்க வீட்டுக்குப் போய் உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க. பின்னால நின்னு முதுகில குத்துன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது என்று பிரஜின் கோபப்பட்டு விக்கல்ஸ் விக்ரமிடம் காட்டமாகப் பேசுகிறார். நான் உங்க முன்னாடி நின்னு தான் பேசுறேன் என விக்கல்ஸ் விக்ரம் கூலாகப் பதில் சொல்கிறார்.

விகடன் 21 Nov 2025 4:12 pm

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ'. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? ஒரு பயணக் கதையின் தூரத்தைக் கடக்கும் போக்கில் இயல்பான நடிப்பைக் கொடுக்கிறார் பூர்ணிமா ரவி. குறிப்பாக, இறுதி அத்தியாயத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைபவ் முருகேசன் ஆரம்பத்தில் சற்றே செயற்கையான உடல்மொழியுடன் தெரிந்தாலும், போகப் போக அதைச் சரிசெய்து இயல்புக்கு வந்துவிடுகிறார். இருவரையும் மையமாகக் கொண்ட கதை என்பதால், அவர்களுக்கிடையிலான உறவின் நுணுக்கங்களையும் உணர்வலைகளையும் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ரசிக்கும்படியும் எழுதியிருக்கலாம். ஒரே ஒரு காட்சி என்றாலும் படத்தின் ஆன்மாவையே நடிப்பில் கடத்தி அசத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். அனுபவம் பேசியிருக்கிறது! Yellow Review | எல்லோ விமர்சனம் சிறியதொரு கதாபாத்திரத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பில் ஜென் Z வைப்! லீலா சாம்சன் தொடங்கி, பயணங்களில் தட்டுப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் சற்றே செயற்கைத்தனம் கூடியே வலம் வருகின்றன. அதிலும் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதாக வரும் கதாபாத்திரம் நகைச்சுவை என்கிற பெயரில் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை. ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது. தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஆனால் அதன்பிறகு வைக்கப்பட்ட காட்சிகள் சற்றே செயற்கைத்தனமான வசனங்கள், மைண்ட் வாய்ஸ்கள் போன்றவை வந்த ஆர்வத்தை கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்றிவிடுகின்றன. அதிலும் கிளைக் கதையாக வருகிற ரயில் கதை சிறப்பாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பிக்க, இரவில் ரவுடிகள் வம்பிழுக்கும் இடம் சற்றே சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த உணர்வுகளைப் பதிவு செய்யும் அழுத்தமான வசனங்களோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் ஒரு டிராவல் வ்லாக் போலவே காட்சிகள் நகர்வது ஏமாற்றம்! Yellow Review | எல்லோ விமர்சனம் அதோடு காட்சிக்குக் காட்சி பயணங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருப்பது அயர்ச்சி! உடைந்த மனது, பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்களால் தன்னைத்தானே சரி செய்கிறது என்பதைப் பேசும் இந்த ‘எல்லோ’, திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் க்ரீன் சிக்னல் பெற்றிருக்கும். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 21 Nov 2025 3:55 pm

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ'. Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்? ஒரு பயணக் கதையின் தூரத்தைக் கடக்கும் போக்கில் இயல்பான நடிப்பைக் கொடுக்கிறார் பூர்ணிமா ரவி. குறிப்பாக, இறுதி அத்தியாயத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைபவ் முருகேசன் ஆரம்பத்தில் சற்றே செயற்கையான உடல்மொழியுடன் தெரிந்தாலும், போகப் போக அதைச் சரிசெய்து இயல்புக்கு வந்துவிடுகிறார். இருவரையும் மையமாகக் கொண்ட கதை என்பதால், அவர்களுக்கிடையிலான உறவின் நுணுக்கங்களையும் உணர்வலைகளையும் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ரசிக்கும்படியும் எழுதியிருக்கலாம். ஒரே ஒரு காட்சி என்றாலும் படத்தின் ஆன்மாவையே நடிப்பில் கடத்தி அசத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். அனுபவம் பேசியிருக்கிறது! Yellow Review | எல்லோ விமர்சனம் சிறியதொரு கதாபாத்திரத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பில் ஜென் Z வைப்! லீலா சாம்சன் தொடங்கி, பயணங்களில் தட்டுப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் சற்றே செயற்கைத்தனம் கூடியே வலம் வருகின்றன. அதிலும் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதாக வரும் கதாபாத்திரம் நகைச்சுவை என்கிற பெயரில் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்? அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. Yellow Review | எல்லோ விமர்சனம் கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை. ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது. தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன.  Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! ஆனால் அதன்பிறகு வைக்கப்பட்ட காட்சிகள் சற்றே செயற்கைத்தனமான வசனங்கள், மைண்ட் வாய்ஸ்கள் போன்றவை வந்த ஆர்வத்தை கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்றிவிடுகின்றன. அதிலும் கிளைக் கதையாக வருகிற ரயில் கதை சிறப்பாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பிக்க, இரவில் ரவுடிகள் வம்பிழுக்கும் இடம் சற்றே சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த உணர்வுகளைப் பதிவு செய்யும் அழுத்தமான வசனங்களோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் ஒரு டிராவல் வ்லாக் போலவே காட்சிகள் நகர்வது ஏமாற்றம்! Yellow Review | எல்லோ விமர்சனம் அதோடு காட்சிக்குக் காட்சி பயணங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருப்பது அயர்ச்சி! உடைந்த மனது, பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்களால் தன்னைத்தானே சரி செய்கிறது என்பதைப் பேசும் இந்த ‘எல்லோ’, திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் க்ரீன் சிக்னல் பெற்றிருக்கும். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 21 Nov 2025 3:55 pm

போஸை காப்பாற்ற ஈஸ்வரி-சித்ரா போடும் சதி திட்டம், சேதுவின் நிலைமை என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா ரூமிற்குள் வந்துவிட்டார். போசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, பயத்தில் உளறினார். கோபத்தில் காவியா, போஸை அடித்துவிட்டு இவ்வளவு கேளாமகேவலமானவனா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து தாமரை-சாவித்ரி இருவருக்குமே சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய குழந்தைக்காக தான் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து வருத்தப்பட்டார். பார்லர் போய்விட்டு ஈஸ்வரி, சித்ரா எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது சாவித்திரி, உன் மகன் […] The post போஸை காப்பாற்ற ஈஸ்வரி-சித்ரா போடும் சதி திட்டம், சேதுவின் நிலைமை என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 3:34 pm

குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன், அதனால் தான்- 'காந்தா'குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ்

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் படம் 'காந்தா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் குமாரி கதாபாத்திரத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். Kaantha இவர் இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இந்நிலையில் 'IANS' ஊடகத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். நான் 'காந்தா' படத்தில் நடித்த குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன். ஒரு கட்டத்தில் எல்லோரும் 'யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து நாங்கள் பார்க்கவில்லை' என்று சொன்னார்கள். Bhagyashri Borse - Kaantha என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும் தளமும் கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான், படம் வெளியான பிறகு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்தது. கடின உழைப்பு நம்மை நல்ல இடங்களுக்கு தான் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

விகடன் 21 Nov 2025 3:28 pm

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டாமல் போவதோடு, பிரச்னைகளையும் சேர்த்து இழுத்து வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன, அதை கார்ல் மார்க்ஸின் குடும்பம் கைப்பற்றியதா, இறுதியில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மாறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! குடும்பத்திற்காக ஓடுவது, மனைவியிடம் அவமானப்பட்டு உடைவது, எல்லை மீறாத கோவம், அப்பாவித்தனத்தைக் காட்டி சிரிக்க வைப்பது எனக் குடும்பத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த படத்திற்காகவும் ஓடியோடி உழைத்து, அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் முனீஸ் காந்த். விஜய் லட்சுமியின் 'ஹை பிட்ச்' நடிப்பு காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், ஏனைய தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது. வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆட்டோ ஓட்டுநராக குரேஷி, துப்பறியும் நிபுணராக ராதாரவி, தந்தையாக வேல ராமமூர்த்தி, மனோதத்துவ மருத்துவராக மாளவிகா அவிநாஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் நேர்த்தியான ஒளியமைப்பாலும், ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகளாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். குறிப்பாக, துப்பறியும் காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. ஆனால் நீளும்ம்ம்ம்ம் க்ளைமாக்ஸ் ஆவ்வ்வ்! பிரணவ் முனிராஜ் இசையில் 'தேன்கூடே' பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன. பின்னணி இசையாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பிரணவ் முனிராஜ். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! நடுத்தர வர்க்க குடும்பம், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தைப் பாதிப்பது, அவற்றோடு அவர்கள் போராடுவது எனக் கதைக்கருவைத் தொடக்கத்திலேயே தொட்டுவிடுகிறது படம். விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன. Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் மீண்டும் கதைக்குள் வரும் படம், எமோஷன் - காமெடி என இரண்டையும் மாற்றி மாற்றி உரசியபடியே நகர்கிறது. ஆனாலும், ஜாக்பாட் கன்ட்டென்ட்டைத் தொட்ட பிறகு, இறுதிக்காட்சி வரைக்கும் யூகிக்கும்படியான பாதையிலேயே போவது பெரிய மைனஸ். மொத்தமாகவே முதற்பாதி, சில காமெடிகள், சில எமோஷன்கள், யூகிக்கும்படியான ஒரு ட்விஸ்ட் எனப் பாஸ் ஆகிறது. Paal Dabba & Mysskin: Ilaiyaraaja Class-ல பாதியில் வந்துட்டேன் - Vikatan Digital Awards 2025 UNCUT இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை. பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்! மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்! Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன. மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த 'மிடில் கிளாஸ்'. ``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்! - முனீஸ்காந்த் #LetsRelieveStress

விகடன் 21 Nov 2025 3:21 pm

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டாமல் போவதோடு, பிரச்னைகளையும் சேர்த்து இழுத்து வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன, அதை கார்ல் மார்க்ஸின் குடும்பம் கைப்பற்றியதா, இறுதியில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மாறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! குடும்பத்திற்காக ஓடுவது, மனைவியிடம் அவமானப்பட்டு உடைவது, எல்லை மீறாத கோவம், அப்பாவித்தனத்தைக் காட்டி சிரிக்க வைப்பது எனக் குடும்பத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த படத்திற்காகவும் ஓடியோடி உழைத்து, அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் முனீஸ் காந்த். விஜய் லட்சுமியின் 'ஹை பிட்ச்' நடிப்பு காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், ஏனைய தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது. வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆட்டோ ஓட்டுநராக குரேஷி, துப்பறியும் நிபுணராக ராதாரவி, தந்தையாக வேல ராமமூர்த்தி, மனோதத்துவ மருத்துவராக மாளவிகா அவிநாஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் நேர்த்தியான ஒளியமைப்பாலும், ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகளாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். குறிப்பாக, துப்பறியும் காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. ஆனால் நீளும்ம்ம்ம்ம் க்ளைமாக்ஸ் ஆவ்வ்வ்! பிரணவ் முனிராஜ் இசையில் 'தேன்கூடே' பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன. பின்னணி இசையாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பிரணவ் முனிராஜ். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! நடுத்தர வர்க்க குடும்பம், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தைப் பாதிப்பது, அவற்றோடு அவர்கள் போராடுவது எனக் கதைக்கருவைத் தொடக்கத்திலேயே தொட்டுவிடுகிறது படம். விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன. Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் மீண்டும் கதைக்குள் வரும் படம், எமோஷன் - காமெடி என இரண்டையும் மாற்றி மாற்றி உரசியபடியே நகர்கிறது. ஆனாலும், ஜாக்பாட் கன்ட்டென்ட்டைத் தொட்ட பிறகு, இறுதிக்காட்சி வரைக்கும் யூகிக்கும்படியான பாதையிலேயே போவது பெரிய மைனஸ். மொத்தமாகவே முதற்பாதி, சில காமெடிகள், சில எமோஷன்கள், யூகிக்கும்படியான ஒரு ட்விஸ்ட் எனப் பாஸ் ஆகிறது. Paal Dabba & Mysskin: Ilaiyaraaja Class-ல பாதியில் வந்துட்டேன் - Vikatan Digital Awards 2025 UNCUT இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை. பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்! மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்! Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன. மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த 'மிடில் கிளாஸ்'. ``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்! - முனீஸ்காந்த் #LetsRelieveStress

விகடன் 21 Nov 2025 3:21 pm

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள் என்பதோடு, அந்தக் கொள்ளையை நடத்தியது யார் என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் 'மாஸ்க்' திரைப்படம். Mask Review | மாஸ்க் விமர்சனம் கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, சேட்டைக்கார குணம் எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், எமோஷன் காட்சிகளையும் பொறுப்பாக அணுகி, அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறார். நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆக்ரோஷம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாகப் பவன். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! தன் அப்புராணித்தனத்தால் ருஹானி ஷர்மா முதல் பாதியில் கவர, தன் எதார்த்தமான நடிப்பால் சார்லி இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார். எக்கச்சக்க துணை நடிகர்கள் பட்டாளத்தில் வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். படம் முழுவதும் பேச்சுத்துணைக்கு நெல்சன் திலீப்குமாரின் நையாண்டி கலந்த வாய்ஸ் ஓவர்! Mask Review | மாஸ்க் விமர்சனம் பழங்கால ஹோட்டல், ஹைடெக் ஸ்டூடியோ, பூமியின் ரகசிய அறைகள் போன்றவற்றை முடிந்தளவுக்கு ஓவர்டோஸ் ஆகாமல், பலம் ஆக்கியிருக்கிறது ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக் கூட்டணி. இவற்றில் நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். அந்த மொட்டை மாடி க்ரீன்மேட் ஷாட் மட்டும் அநாவசியம் சாரே! பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், 'கண்ணுமுழி' பாடல் காதலைக் கசியவிட, 'வெற்றி வீரனே' பாடல் கதைக்கருவைப் பேசுகிறது. லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என எல்லா சக்கரத்திற்கும் தீனி போட்டு, சுழலவிட்டிருக்கிறது ஜி.வி-யின் பின்னணி இசை. Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின் கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம். கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது. நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, 'நான்கு ஒலிச்சாலை'யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! இரண்டாம் பாதியிலும் ஆக்சிலேட்டரை விடாமல் அழுத்திக்கொண்டே ஓடுகிறது திரைக்கதை. இந்த ஓட்டத்தில் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக எட்டிப்பார்த்தாலும், அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகளும், சில ஐடியாக்களும் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே ஓடுகின்றன. மூன்று கதாபாத்திரங்களின் கதையை அக்கொள்ளையோடு தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், எமோஷன் பாதைக்கு இண்டிகேட்டர் போடும் திரைக்கதையில் நிதானம் மிஸ் ஆவதால், போதுமான எமோஷனும் மிஸ் ஆகிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் அதோடு, பயங்கரமான ட்விஸ்ட்களும் வரிசைக்கட்டுவது சிறிது அயற்சியைக் கொடுத்தாலும், நடிகர்களின் பங்களிப்பால் பாஸ் ஆகின்றன. கதையாக, ஐடியாக்களாக, கதாபாத்திரங்களாகவும் கவர்ந்தாலும், அவற்றை நேர்த்தியான திரைக்கதையில் மாட்டிவிடத் தவறுவதால், இந்த 'மாஸ்க்' பாதி முகத்தையே மறைக்கிறது. Mask: ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல் - கவின்

விகடன் 21 Nov 2025 2:27 pm

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள் என்பதோடு, அந்தக் கொள்ளையை நடத்தியது யார் என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் 'மாஸ்க்' திரைப்படம். Mask Review | மாஸ்க் விமர்சனம் கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, சேட்டைக்கார குணம் எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், எமோஷன் காட்சிகளையும் பொறுப்பாக அணுகி, அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறார். நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆக்ரோஷம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாகப் பவன். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! தன் அப்புராணித்தனத்தால் ருஹானி ஷர்மா முதல் பாதியில் கவர, தன் எதார்த்தமான நடிப்பால் சார்லி இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார். எக்கச்சக்க துணை நடிகர்கள் பட்டாளத்தில் வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். படம் முழுவதும் பேச்சுத்துணைக்கு நெல்சன் திலீப்குமாரின் நையாண்டி கலந்த வாய்ஸ் ஓவர்! Mask Review | மாஸ்க் விமர்சனம் பழங்கால ஹோட்டல், ஹைடெக் ஸ்டூடியோ, பூமியின் ரகசிய அறைகள் போன்றவற்றை முடிந்தளவுக்கு ஓவர்டோஸ் ஆகாமல், பலம் ஆக்கியிருக்கிறது ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக் கூட்டணி. இவற்றில் நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். அந்த மொட்டை மாடி க்ரீன்மேட் ஷாட் மட்டும் அநாவசியம் சாரே! பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், 'கண்ணுமுழி' பாடல் காதலைக் கசியவிட, 'வெற்றி வீரனே' பாடல் கதைக்கருவைப் பேசுகிறது. லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என எல்லா சக்கரத்திற்கும் தீனி போட்டு, சுழலவிட்டிருக்கிறது ஜி.வி-யின் பின்னணி இசை. Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின் கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம். கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது. நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, 'நான்கு ஒலிச்சாலை'யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன. பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! இரண்டாம் பாதியிலும் ஆக்சிலேட்டரை விடாமல் அழுத்திக்கொண்டே ஓடுகிறது திரைக்கதை. இந்த ஓட்டத்தில் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக எட்டிப்பார்த்தாலும், அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகளும், சில ஐடியாக்களும் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே ஓடுகின்றன. மூன்று கதாபாத்திரங்களின் கதையை அக்கொள்ளையோடு தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், எமோஷன் பாதைக்கு இண்டிகேட்டர் போடும் திரைக்கதையில் நிதானம் மிஸ் ஆவதால், போதுமான எமோஷனும் மிஸ் ஆகிறது. Mask Review | மாஸ்க் விமர்சனம் அதோடு, பயங்கரமான ட்விஸ்ட்களும் வரிசைக்கட்டுவது சிறிது அயற்சியைக் கொடுத்தாலும், நடிகர்களின் பங்களிப்பால் பாஸ் ஆகின்றன. கதையாக, ஐடியாக்களாக, கதாபாத்திரங்களாகவும் கவர்ந்தாலும், அவற்றை நேர்த்தியான திரைக்கதையில் மாட்டிவிடத் தவறுவதால், இந்த 'மாஸ்க்' பாதி முகத்தையே மறைக்கிறது. Mask: ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல் - கவின்

விகடன் 21 Nov 2025 2:27 pm

சாரதா எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன குடும்பம், விஜய் சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே […] The post சாரதா எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன குடும்பம், விஜய் சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 2:10 pm

எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.! - நெகிழும் தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொண்ட வாட்ச் எது? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த தனுஷ், நான் காதல் கொண்ட ஒரு வாட்ச் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்த அந்த வாட்ச் தான். தனுஷ் ஸ்கூல் படிக்கும்போது அந்த வாட்ச்சை அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார். அது டாலரின் விலையை விட குறைவானது தான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் வாட்ச். அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் தான். அந்த பேட்டரி முடிந்துவிட்டால் வாட்ச் வேலை செய்யாது. அந்த வாட்ச்சில் நிறைய கலர்கள் இருக்கும். நானும் எனது அக்காக்களும் ஊதா, மஞ்சள் என மாறி மாறி கட்டிக்கொள்வோம். பேட்ரி முடிந்து டைம் காமிக்காதப்போதும், அந்த வாட்ச்சை நான் கட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வேன். அந்தளவிற்கு எனக்கு அந்த வாட்ச் பிடிக்கும். தனுஷ் இன்னும் அந்த வாட்ச்சை நான் பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன். இப்போது வரைக்கும் எனக்கு பிடித்த, மறக்க முடியாத ஒரு வாட்ச் என்றால் அதுதான் என்று தனுஷ் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். ``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

விகடன் 21 Nov 2025 1:22 pm

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி'குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகில் மூத்த மொழிகளில் ஒன்று என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மேலும் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து அந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த தனுஷ், '3' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம். ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம். ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது. அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஒர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை முழு பாடலாக உருவாக்கினோம். தனுஷ் ’ஒய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் இந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது. நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

விகடன் 21 Nov 2025 12:42 pm

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி'குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகில் மூத்த மொழிகளில் ஒன்று என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மேலும் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து அந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த தனுஷ், '3' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம். ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம். ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது. அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஒர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை முழு பாடலாக உருவாக்கினோம். தனுஷ் ’ஒய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் இந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது. நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

விகடன் 21 Nov 2025 12:42 pm

விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு காரணம் இதுதான் –உண்மையை உடைத்த ஹார்ட் பீட் நடிகர்

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வெப் தொடரில் ஒன்று தான் ஹார்ட் பீட். இந்த தொடர் இரண்டு சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. மூன்றாவது சீசனும் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த தொடரில் ரவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குரு லக்ஷ்மணன். அதற்கு முன்பே இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு […] The post விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு காரணம் இதுதான் – உண்மையை உடைத்த ஹார்ட் பீட் நடிகர் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 21 Nov 2025 12:38 pm

ஜனநாயகன் படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி...

தஸ்தர் 21 Nov 2025 11:48 am

இந்த வாரம் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ள டாப் 5 சீரியல் குறித்து பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு – 10.18 2. சிங்கப் பெண்ணே –...

தஸ்தர் 21 Nov 2025 11:25 am

விஜயா பேசிய பேச்சு.. மீனாவுக்கு ஆதரவாக பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வீட்டுக்கு வந்தவுடன் உன்னை நான் ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு தெரிஞ்சிருச்சு என்று சொல்ல மீனாவும் ரோகிணிக்கும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே என்ன விஷயம் என்று கேட்க அது அவளே சொல்லட்டும் என்று சொல்லுகிறார் உடனே மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லங்க நான்...

தஸ்தர் 21 Nov 2025 10:58 am

BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர் இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில், இந்த வாரம் நடைபெற்ற எல்லாவற்றிலும் சிறப்பாக பங்கு கொள்ளாத நபர் யார் என்று பிக் பாஸ் கேட்க ரம்யா, வினோத், திவ்யாவை ஒரு சிலர் சொன்னாலும் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் சாண்ட்ராவை சொல்கின்றனர். BB Tamil 9 நிறைய டேலன்ட் இருந்த ஒரு டீம் வெளியே தெரியாம போயிருச்சோ என சாண்டரா தலைமை தாங்கிய கிட்சன் டீமை விக்கல்ஸ் விக்ரம் சொல்கிறார். வொர்ஸ்ட் டீம் என்ற பேஜ்ஜை கிட்சன் டீம் தாங்கிட்டு இருக்குன்னா அதற்கு காரணம் சாண்ட்ரா தான் என கனி சாடுகிறார்.

விகடன் 21 Nov 2025 10:44 am

BB Tamil 9: எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம் - சாண்ட்ராவை சாடிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது. BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர் இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில், இந்த வாரம் நடைபெற்ற எல்லாவற்றிலும் சிறப்பாக பங்கு கொள்ளாத நபர் யார் என்று பிக் பாஸ் கேட்க ரம்யா, வினோத், திவ்யாவை ஒரு சிலர் சொன்னாலும் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் சாண்ட்ராவை சொல்கின்றனர். BB Tamil 9 நிறைய டேலன்ட் இருந்த ஒரு டீம் வெளியே தெரியாம போயிருச்சோ என சாண்டரா தலைமை தாங்கிய கிட்சன் டீமை விக்கல்ஸ் விக்ரம் சொல்கிறார். வொர்ஸ்ட் டீம் என்ற பேஜ்ஜை கிட்சன் டீம் தாங்கிட்டு இருக்குன்னா அதற்கு காரணம் சாண்ட்ரா தான் என கனி சாடுகிறார்.

விகடன் 21 Nov 2025 10:44 am

பிக் பாஸ் கிட்ட கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இதுவரை விளையாடிய விளையாட்டுகளில் சிறப்பாக பங்கேற்காத இரண்டு போட்டியாளர்கள் குறித்து சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் பெரும்பாலானோர்...

தஸ்தர் 21 Nov 2025 10:23 am

நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகனுக்கு பாலை கொடுக்க முடியாமல் கல்யாணம் வந்து விடுகிறார். நந்தினி இப்ப என்ன பண்றது என்று கேட்க...

தஸ்தர் 21 Nov 2025 10:03 am

Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன?

'3', 'புதுப்பேட்டை', 'கில்லி' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் என்கிற புதிய டிரெண்டை உருவாக்கியது. அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் முன்பு கொண்டாடிய பல கல்ட் க்ளாசிக் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்தார்கள். ஆனால், அதில் சில படங்கள் நினைத்ததுபோல பெரிதளவில் திரையரங்குகளில் சோபிக்கவில்லை. ஒரு படத்தை ரீ ரிலீஸுக்கு தயார் செய்யும் விநியோகஸ்தர், அப்படத்தைத் தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்ற (ரீ மாஸ்டரிங்) அதற்கென குறிப்பிட்ட தொகையை செலவழிப்பார்கள். ஆனால், அதற்கு செலவழித்த பணத்தைக் கூட வசூலில் எடுக்க முடியவில்லை என்கிற பேச்சும் இப்போது எழுந்திருக்கின்றது. ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் இந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக நான்கு படங்களை ரீ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் 'நாயகன்', 'ஆட்டோகிராப்' படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகின. இன்று விஜயின் 'ப்ரெண்ட்ஸ்' ரீ ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படமும் ரீ எடிட் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதுமட்டுமல்ல, அஜித்தின் 'அமர்களம்', 'அட்டகாசம்' போன்ற படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் தற்போதைய ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்தும், முன்பு போல ரீ ரிலீஸில் படங்கள் பெரிதளவில் வரவேற்பு பெறாதது குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டறிந்தோம். நம்மிடையே பேசிய தனஞ்செயன், இந்த மாசம் மொத்தமாக நான்கு படங்கள் ரீ ரிலீஸ் ஆகுது. ரீ ரிலீஸ் என்பது தங்க முட்டை போடும் வாத்து மாதிரிதான்! ஒண்ணுதான் எடுக்கணும். மொத்தமாக எடுக்கணும்னு நினைச்சா முழுமையாகவே அது போயிடும். கல்ட் க்ளாசிக் படங்களை எப்போதாவது ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கண்டிப்பா அதை விரும்பிப் பார்ப்பாங்க. ஆனா, ஒரே சமயத்துல மொத்தமாகப் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகினா, மக்கள் எப்படிப் பார்ப்பாங்க? இப்போ புதுப் படங்களும் அடுத்தடுத்து வந்துட்டே இருக்கு. இங்க பெரிதளவுல புது படங்கள் ரிலீஸ் இல்லாத சமயத்துலதான் ரீ ரிலீஸ் செய்யணும். Dhananjeyan புது ரிலீஸ் எதுவுமில்லாமல் ஒரு இடைவெளி இருக்கிற சமயத்துலதான் ரீ ரிலீஸ் பண்ணனும். அப்போ மக்கள்கிட்ட எதிர்பார்க்கிற வரவேற்பும் கிடைக்கும். ஒரு சில புது படங்கள் வர்ற சமயத்துல ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது மக்கள் விரும்பிப் பார்ப்பாங்க. ஒரே மாசத்துல இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகினால், மக்களுக்கு அதனுடைய எக்சைட்மெண்ட் போயிடும். 'இத்தனை புது படங்கள் வந்திருக்கு, அதுல நான் எதைப் பார்க்கிறது'னு மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு. அப்படியான வேளையில, ரீ ரிலீஸ் படங்கள் கொண்டு வந்தால், அதுக்கு பெரிதளவுல வரவேற்பு இருக்காது. இந்த வாரம் ஏழு புதிய படங்கள் வந்திருக்கும்போது, எப்படி மக்கள் ரீ ரிலீஸ் படங்களைப் போய்ப் பார்ப்பாங்க. அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வத்தோட இருக்கிற குறைவான மக்கள்தான் போய் பார்ப்பாங்க. ரீ ரிலீஸுக்கு பெரியளவுல மக்கள் வரவேற்பு கிடைக்கணும்னா, ரிலீஸ்ல ஒரு இடைவெளி இருக்கணும். ரீ ரிலீஸுக்கான உரிமத்தை வாங்குற விநியோகஸ்தர்கள், அதனை சரியான நேரத்துல வெளியிடுறதுக்கு திட்டமிடணும். ஒவ்வொரு வகையான படங்களுக்கும், ஒவ்வொரு வகையிலான ஆடியன்ஸ் இருப்பாங்க. ஆனா, அதுக்கு சரியான ரிலீஸ் தேதியும் முக்கியமானது. என்றவரிடம் ரீ ரிலீஸ் படங்களின் வெளியீட்டில், ரீ மாஸ்டரிங்கிற்கு செலவழித்த பணத்தைகூட எடுக்க முடியவில்லை என்கிற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதே! எனக் கேட்டோம். Anjaan Re Release பதில் தந்தவர், ரீ மாஸ்டரிங் செய்வதற்கு செலவு பண்றாங்க. ஆனா, மக்கள் கூட்டம் பெரிதளவுல வரணும்னா ரிலீஸ்ல சரியான திட்டமிடல் இருக்கணும். அதனால இப்போ ரீ ரிலீஸ் டிரெண்ட் குறைஞ்சிடுச்சுனு சொல்ல முடியாது. மக்களும் ரீ ரிலீஸ் படங்களைப் பார்க்க நிச்சயம் திரையரங்குகளுக்கு வருவாங்க. முதல் ரிலீஸ் சமயத்துல தியேட்டர்ல பார்க்காமல் மிஸ் பண்ணின ஆடியன்ஸ் நிச்சயமாக ரீ ரிலீஸை எதிர்பார்த்து வருவாங்க. புதிய படங்களுக்கு ரிலீஸ் தேதி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, ரீ ரிலீஸ் படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி முக்கியம். வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் இந்தப் ப்ளான்ல கவனமாக செயல்படணும். என்றார்.

விகடன் 21 Nov 2025 9:43 am

Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன?

'3', 'புதுப்பேட்டை', 'கில்லி' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் என்கிற புதிய டிரெண்டை உருவாக்கியது. அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் முன்பு கொண்டாடிய பல கல்ட் க்ளாசிக் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்தார்கள். ஆனால், அதில் சில படங்கள் நினைத்ததுபோல பெரிதளவில் திரையரங்குகளில் சோபிக்கவில்லை. ஒரு படத்தை ரீ ரிலீஸுக்கு தயார் செய்யும் விநியோகஸ்தர், அப்படத்தைத் தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்ற (ரீ மாஸ்டரிங்) அதற்கென குறிப்பிட்ட தொகையை செலவழிப்பார்கள். ஆனால், அதற்கு செலவழித்த பணத்தைக் கூட வசூலில் எடுக்க முடியவில்லை என்கிற பேச்சும் இப்போது எழுந்திருக்கின்றது. ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் இந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக நான்கு படங்களை ரீ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் 'நாயகன்', 'ஆட்டோகிராப்' படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகின. இன்று விஜயின் 'ப்ரெண்ட்ஸ்' ரீ ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படமும் ரீ எடிட் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதுமட்டுமல்ல, அஜித்தின் 'அமர்களம்', 'அட்டகாசம்' போன்ற படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் தற்போதைய ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்தும், முன்பு போல ரீ ரிலீஸில் படங்கள் பெரிதளவில் வரவேற்பு பெறாதது குறித்தும் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டறிந்தோம். நம்மிடையே பேசிய தனஞ்செயன், இந்த மாசம் மொத்தமாக நான்கு படங்கள் ரீ ரிலீஸ் ஆகுது. ரீ ரிலீஸ் என்பது தங்க முட்டை போடும் வாத்து மாதிரிதான்! ஒண்ணுதான் எடுக்கணும். மொத்தமாக எடுக்கணும்னு நினைச்சா முழுமையாகவே அது போயிடும். கல்ட் க்ளாசிக் படங்களை எப்போதாவது ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கண்டிப்பா அதை விரும்பிப் பார்ப்பாங்க. ஆனா, ஒரே சமயத்துல மொத்தமாகப் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகினா, மக்கள் எப்படிப் பார்ப்பாங்க? இப்போ புதுப் படங்களும் அடுத்தடுத்து வந்துட்டே இருக்கு. இங்க பெரிதளவுல புது படங்கள் ரிலீஸ் இல்லாத சமயத்துலதான் ரீ ரிலீஸ் செய்யணும். Dhananjeyan புது ரிலீஸ் எதுவுமில்லாமல் ஒரு இடைவெளி இருக்கிற சமயத்துலதான் ரீ ரிலீஸ் பண்ணனும். அப்போ மக்கள்கிட்ட எதிர்பார்க்கிற வரவேற்பும் கிடைக்கும். ஒரு சில புது படங்கள் வர்ற சமயத்துல ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது மக்கள் விரும்பிப் பார்ப்பாங்க. ஒரே மாசத்துல இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகினால், மக்களுக்கு அதனுடைய எக்சைட்மெண்ட் போயிடும். 'இத்தனை புது படங்கள் வந்திருக்கு, அதுல நான் எதைப் பார்க்கிறது'னு மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கு. அப்படியான வேளையில, ரீ ரிலீஸ் படங்கள் கொண்டு வந்தால், அதுக்கு பெரிதளவுல வரவேற்பு இருக்காது. இந்த வாரம் ஏழு புதிய படங்கள் வந்திருக்கும்போது, எப்படி மக்கள் ரீ ரிலீஸ் படங்களைப் போய்ப் பார்ப்பாங்க. அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வத்தோட இருக்கிற குறைவான மக்கள்தான் போய் பார்ப்பாங்க. ரீ ரிலீஸுக்கு பெரியளவுல மக்கள் வரவேற்பு கிடைக்கணும்னா, ரிலீஸ்ல ஒரு இடைவெளி இருக்கணும். ரீ ரிலீஸுக்கான உரிமத்தை வாங்குற விநியோகஸ்தர்கள், அதனை சரியான நேரத்துல வெளியிடுறதுக்கு திட்டமிடணும். ஒவ்வொரு வகையான படங்களுக்கும், ஒவ்வொரு வகையிலான ஆடியன்ஸ் இருப்பாங்க. ஆனா, அதுக்கு சரியான ரிலீஸ் தேதியும் முக்கியமானது. என்றவரிடம் ரீ ரிலீஸ் படங்களின் வெளியீட்டில், ரீ மாஸ்டரிங்கிற்கு செலவழித்த பணத்தைகூட எடுக்க முடியவில்லை என்கிற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதே! எனக் கேட்டோம். Anjaan Re Release பதில் தந்தவர், ரீ மாஸ்டரிங் செய்வதற்கு செலவு பண்றாங்க. ஆனா, மக்கள் கூட்டம் பெரிதளவுல வரணும்னா ரிலீஸ்ல சரியான திட்டமிடல் இருக்கணும். அதனால இப்போ ரீ ரிலீஸ் டிரெண்ட் குறைஞ்சிடுச்சுனு சொல்ல முடியாது. மக்களும் ரீ ரிலீஸ் படங்களைப் பார்க்க நிச்சயம் திரையரங்குகளுக்கு வருவாங்க. முதல் ரிலீஸ் சமயத்துல தியேட்டர்ல பார்க்காமல் மிஸ் பண்ணின ஆடியன்ஸ் நிச்சயமாக ரீ ரிலீஸை எதிர்பார்த்து வருவாங்க. புதிய படங்களுக்கு ரிலீஸ் தேதி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, ரீ ரிலீஸ் படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி முக்கியம். வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் இந்தப் ப்ளான்ல கவனமாக செயல்படணும். என்றார்.

விகடன் 21 Nov 2025 9:43 am

AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி

விகடன் 20 Nov 2025 9:52 pm

AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி

விகடன் 20 Nov 2025 9:52 pm

காந்தாரா பட மாதிரி வரும் கருப்பசாமி காட்சி, உண்மையை கண்டுபிடிப்பாரா சேது? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சாவித்திரி சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து என்னமோ நடக்கப் போகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழ் நடந்து கொண்டதை பற்றி ஜெனி கேட்டார். அதற்கு தமிழ், என் எங்கு பார்த்தாலும் என் கணவர் ஞாபகமாக இருக்கிறது என்றார். அதற்கு ஜெனி, இதுக்கு பெயர்தான் காதல் என்று தமிழை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவியா, சேதுவின் வீட்டிற்கு வந்து விட்டார். இதை […] The post காந்தாரா பட மாதிரி வரும் கருப்பசாமி காட்சி, உண்மையை கண்டுபிடிப்பாரா சேது? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 8:54 pm

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக நண்டு உடலுக்கு நான் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நண்டு சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அறிவாற்றலை மேம்படுத்தவும் இதை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை...

தஸ்தர் 20 Nov 2025 8:04 pm

பழனியை மோசமாக பேசும் பாண்டியன் குடும்பம், இனி நடக்கபோவது என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வீட்டில் கடை எங்கே? இருக்கிறது என்று விசாரித்தார்கள். பழனிக்கு கடை இருக்கும் இடம் தெரியவில்லை. பின் இதைப்பற்றி கேட்பதற்காக பழனி தன்னுடைய அண்ணன்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவருடைய அண்ணன்கள் எதுவுமே சொல்லாமல் சர்ப்ரைஸ் என்று சொன்னார்கள். பின் பழனி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார். பின் அந்த கடை இருக்கும் இடம் பற்றி சொல்ல சொல்கிறார்கள். இதற்கு பழனி, எதற்கு அங்கு வைத்தீர்கள் என்றார். […] The post பழனியை மோசமாக பேசும் பாண்டியன் குடும்பம், இனி நடக்கபோவது என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 7:20 pm

Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்

கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க. kiss movie press meet - kavin இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.

விகடன் 20 Nov 2025 6:51 pm

Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்

கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க. kiss movie press meet - kavin இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.

விகடன் 20 Nov 2025 6:51 pm

மீனா மறைத்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயலும் முத்து, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, வீட்டில் உண்மையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனசாட்சி, ரோகிணி பொய் சொல்லி நடமாடினார். நீ எல்லோரிடமும் சொல்லு உண்மை தெரிந்தால் உன்னையும் தான் தப்பாக நினைப்பார்கள் என்று அவருடைய உண்மையை சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்பவே குழம்பிப் போயிருந்தார். இன்னொரு பக்கம் தங்களுடைய புதிய ஆர்டர் வாங்குவதற்காக ரோகிணி- மனோஜ் இருவருமே […] The post மீனா மறைத்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயலும் முத்து, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 5:51 pm

'அக்கவுன்ட்டில இருந்து 25,000 ரூபாயை எடுத்துகிட்டாங்க, அந்த சமயத்துல என் மனைவி.!'- பிளாக் பாண்டி

'பேய் இருக்க பயமேன்' படத்தை இயக்கிய சீ.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியாக இருக்கும் திரைப்படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல'. இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ,20)நடைபெற்றது. 'நிர்வாகம் பொறுப்பல்ல' இதில் கலந்துகொண்டு பேசிய பிளாக் பாண்டி, என்னுடைய மனைவியும், நானும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் மருத்துவமனை சென்றிருந்தோம். மருத்துவமனையில் பணம் கட்டுவதற்காக 27,000 வைத்திருந்தேன். நான் போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மனைவி பேங்கில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது என்கிறார். ஆதார் கார்ட் வெரிஃபிக்கேஷன் கேட்கிறது என்றார். நான் வெயிட் பண்ணு என்று சொன்னேன். ஆனால் அந்த இடைவெளியில் எனது மனைவி அந்த ஃபைலை ஒப்பன் செய்துவிட்டார். அந்த ஃபைலை ஓப்பன் செய்த அடுத்த நொடியில் என்னுடைய பேங்க் அக்கவுன்ட்டில் இருந்து 25,000 ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். அதனால் எனக்கும், மனைவிக்கும் சண்டை வந்து மன உளைச்சல் ஆகிவிட்டது. பணம் போய்விட்டதே என்று என் மனைவி கதறி அழுதார். பணம் காணாமல் போனதை நினைத்து கவலைப்படுவதா? இல்லை மனைவிக்கு ஆறுதல் சொல்லுவதா? என்றே தெரியவில்லை. பிளாக் பாண்டி போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தான் தெரியும். வாட்ஸ் அப்பில் 'APK FILE' என ஒன்று வருகிறது. அப்படி வந்தால் அதனை க்ளிக் செய்யாதீர்கள். பணம், புகைப்படங்களைப் பொறுத்தவரை எல்லாரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இந்தப் படத்தில் ஏமாற்றும் கும்பல் பற்றி கார்த்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்

விகடன் 20 Nov 2025 5:21 pm

BB Tamil 9: அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், சாண்ட்ரா தான் வொர்ஸ்ட் பெர்பாமர். ரொம்ப வொர்ஸ்ட்டா பண்றாங்க என ரம்யா சொல்ல அவுங்க ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்குறாங்க என வினோத் சொல்கிறார். தொடர்ந்து வினோத், ரம்யா, சபரி, எல்லாரும் கனி தான் கிட்சன் டீம்மின் பெஸ்ட் பெர்பாமர் என்று கூறுகின்றனர். இந்த டாஸ்க்கில பார்வதியோட உண்மையான முகம் இப்போ தான் வெளியே வருது. அதை வெளியே வரவிடுங்க என ஹவுஸ்மேட்ஸிடம் FJ சொல்கிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்

விகடன் 20 Nov 2025 5:00 pm

ஈஸ்வரி தலையில் இடியை போட்ட போஸ், உண்மையை கண்டுபிடிக்க போராடும் சேது –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்பட்டார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்றார்.அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போனார். தாமரை, போன் செய்து போஸை […] The post ஈஸ்வரி தலையில் இடியை போட்ட போஸ், உண்மையை கண்டுபிடிக்க போராடும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 4:46 pm

சேரனை பாதுகாக்க சோழன் செய்த அட்ராசிட்டி, உண்மையை சொன்னாரா அனிஷ்? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவுக்கும் தன்மீது விருப்பம் இருப்பதை தெரிந்த சேரனுக்குமே சந்தோசமாக இருக்கிறது. பின் சேரன், சந்தா தன்னுடன் பேசியது நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டு வீட்டிற்கு வந்தார். இன்னொரு பக்கம் சேரன், எங்கு சென்றிருப்பார்? என்று வீட்டில் உள்ள எல்லோரும் புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சேரன், சந்தோஷமாக சிரித்துக்கொண்டே வருவதைப் பார்த்து யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. சேரன், சந்தா மிதுள்ள காதலால் சிரித்துக்கொண்டே இருந்தார். இதையெல்லாம் பார்த்து […] The post சேரனை பாதுகாக்க சோழன் செய்த அட்ராசிட்டி, உண்மையை சொன்னாரா அனிஷ்? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 3:41 pm

கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்'- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பாராட்டுகளையும், வசூலையும் குவித்திருந்தது. 'அமரன்' இதைத் தொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக 'அமரன்' திரையிடப்படுகின்றது. Amaran - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து 3 திரைப்படங்கள் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க திரைப்படமாக (opening) தேர்வாகியிருக்கிறது. மகிழ்ச்சியாகவும், கெளரவமாகவும் இதை நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி என்று பேசியிருக்கிறார்.

விகடன் 20 Nov 2025 3:27 pm

நான் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் போடவே இல்லை, ஆனால் சோசியல் மீடியாவில் –கீர்த்தி சுரேஷ் உருக்கம்

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து […] The post நான் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் போடவே இல்லை, ஆனால் சோசியல் மீடியாவில் – கீர்த்தி சுரேஷ் உருக்கம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 2:32 pm

அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

விகடன் 20 Nov 2025 2:31 pm

அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

விகடன் 20 Nov 2025 2:31 pm

அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

விகடன் 20 Nov 2025 2:31 pm

BB Tamil 9: என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல - கட்டமான கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டாஸ்க்கில கேட்டா பண்ணி தரணும் அதுதான் கேம் என கிட்சன் டீமில் இருக்கும் கனி திரு கத்த தான் ரொம்ப நியாமான சமையல்காரவுங்க'னு காமிச்சுக்குறாங்க என விஜே பார்வதி சாண்ட்ராவிடம் சொல்கிறார். என்னோட கேம் கேவலமான கேம்..ஓகே... நான் இனி இந்த கிட்சன் டீமில இல்ல என்று கனி கோபப்படுகிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்

விகடன் 20 Nov 2025 1:05 pm

Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கும்பலங்கி நைட்ஸ் ' என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'ரோர்ஷாச்', 'தமாஷா','அப்பன்' போன்று பல படங்களில் நடித்திருக்கிறார். கிரேஸ் ஆண்டனி தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை - 2' நடித்திருந்தார். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கிரேஸ் ஆண்டனி உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவில், 8 மாதங்களில் 15 கிலோ குறைத்திருக்கிறேன். அதாவது 80 கிலோவில் இருந்து 65 கிலோ குறைத்திருக்கிறேன். உடல் எடையை குறைத்த இந்த பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. போராட்டமாக இருந்தது. நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நிறைய சந்தேகங்கள் வந்தன. என்னால் இதனை பண்ண முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் வந்தன. ஆனால் அந்தப் போராட்டங்களில் என்னுடைய வலிமையை நான் அறிந்தேன். View this post on Instagram எவ்வளவு சோர்வடைந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. என்னை சரியாக வழிநடத்திய பயிற்சியாளருக்கு நன்றி. இந்த மாற்றம் ஒரு புகைப்படம் மட்டும் அல்ல. நீங்களும் முயற்சி செய்கிறீர்கள் என்றால் தொடர்ந்து செய்யுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு கண்ணீர்க்கும், ஒவ்வொரு சந்தேகத்துக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும், மதிப்புண்டு என்று உங்களுக்கே தெரியும் என்று பதிவிட்டிருக்கிறார். தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்

விகடன் 20 Nov 2025 12:48 pm

காவிரி குடும்பத்தை அசிங்கப்படுத்தும் பாட்டி, கோபத்தில் விஜய் சொன்ன வார்த்தை –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, நீங்களும் ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் மகனும் ஏமாந்து விட்டார்கள். சிந்து- கிருஷ்ணா என்று நதிகள் பெயரையே வைத்திருக்கிறார் என்றார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோபம் அதிகமானது. பின் காவிரி, தன்னுடைய தந்தை செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது விஜய், இந்த நேரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணலாமா? இவர்கள் செய்ய விடுவார்களா? என்று கேட்டார். அதற்கு காவிரி, என்ன ஆனாலும் பண்ணி தான் ஆகணும் என்றார். […] The post காவிரி குடும்பத்தை அசிங்கப்படுத்தும் பாட்டி, கோபத்தில் விஜய் சொன்ன வார்த்தை – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 12:45 pm

பாட்டு பாடிய விக்ரம், சான்ட்ரா சொன்ன பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் சான்றா சாக்கெட் போடாததால் போட சொல்லி சொல்ல நீங்க யார் கேட்பதற்கு என்று கேட்க பிக்...

தஸ்தர் 20 Nov 2025 12:32 pm

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா வைத்து வேண்டுகோள்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின்...

தஸ்தர் 20 Nov 2025 12:05 pm

சக்திவேல் சூழ்ச்சியால் பாண்டியன் குடும்பத்தை விட்டு பிரிந்த பழனி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், உன்னுடைய சுயரூபம் பற்றி வீட்டில் சொல்ல வரும்போதுமெல்லாம் ஏதாவது வேறு ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. நீயும் தப்பித்து விடுகிறாய். சித்தப்பா நல்லபடியாக மாமா நல்லபடியாக கடையை திறக்கட்டும். நீ மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இரு. உன்னை பற்றி சொல்வது உறுதி தான் என்றெல்லாம் சொன்னார். தங்கமயில், என்ன நடக்குமோ என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜி, தூங்கிக் கொண்டே இருக்கும் போது […] The post சக்திவேல் சூழ்ச்சியால் பாண்டியன் குடும்பத்தை விட்டு பிரிந்த பழனி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 12:02 pm

மாதவி போட்ட திட்டம், என்ன செய்யப் போகிறார் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம்...

தஸ்தர் 20 Nov 2025 11:54 am

BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா

டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 45 “ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா? ‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ்.  BB Tamil 9 Day 45 நாள் 45. ஆதிரை விலகிய பிறகு வியானாவுடன் நெருக்கமாக எஃப்ஜே முயல்கிறார் போலிருக்கிறது. என்னதான் ‘அண்ணா’ என்று அழைத்து இந்த உறவை பாவனையாக துண்டிக்க முயன்றாலும் வியானாவிற்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருப்பதை க்ளோசப் காட்சிகள் மூலம் காமிராக்கள் தெரிவிக்கின்றன. (புது லவ் கன்டென்ட் ஆக இது மாறுமா?!) ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “அவங்க என்ன டிரை பண்றாங்க.. ‘உனக்கு எத்தனை புருஷன்னு’ கம்மு கேட்டு எரிச்சல் பண்றான். வேற யாராவது கேட்டிருந்தா கூட ஹர்ட் ஆகியிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் பாரு உருகிக் கொண்டிருக்க, “நீ காண்டாகிறேன்னு தெரிஞ்சா ஓவரா பண்ணுவான். அடக்கி வாசி.. அவாய்ட் பண்ணு” என்று அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா.  கணவர் பிரஜின் வெற்றி பெறுவதற்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா டாஸ்க்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மரை தேர்ந்தெடுக்க வேண்டும். அணித்தலைவர்கள் கூடிப் பேசி இதை முடிவு செய்ய வேண்டும். விக்ரமும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக அமித்தையும் வொர்ஸ்ட் ஆக ரம்யாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.  இதைப் போலவே ரம்யாவும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக பிரஜினையும் வொர்ஸ்ட் ஆக விக்ரமையும் தேர்ந்தெடுத்தார்கள். தன் கணவர் பிரஜினை இத்தனை வெளிப்படையாக சப்போர்ட் செய்கிறோம் என்கிற கூச்சம் சாண்ட்ராவிடம் துளி கூட இல்லை. பிரஜினை பெஸ்ட் ஆக தேர்வு செய்தது சாண்ட்ராவின் சுயநலம் என்றால், விக்ரமை வொர்ஸ்ட் என்று சொன்னதற்கு ரம்யாவின் பழிவாங்கல்தான் காரணமாக இருக்கவேண்டும். நாம் பார்த்தவரை விக்ரம் சிறப்பாகவே செயல்பட்டார்.  BB Tamil 9 Day 45 சாம்பார் அணிக்காக விக்ரமும் ரம்யாவும் கலந்தாலோசித்து பெஸ்ட் ஆக கனியையும் வொர்ஸ்ட் ஆக சாண்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார்கள். “ஆக.. வொர்ஸ்ட் ஆக வந்திருப்பது மூணு டீம் கேப்டனுமா?” என்று பிக் பாஸ் கேட்க “அட.. ஆமால்ல..’ என்று மக்கள் வியந்தார்கள்.  சாம்பார் அணியில் நெகட்டிவிட்டிதான் இருக்கிறது, கிரியேட்டிவிட்டி இல்லை என்கிற புகார் தொடர்ந்து வருகிறது. (பாருவும் சாண்ட்ராவும் அங்கு இருக்கும் வரை வேறு என்ன வரும்?!). எனவே ‘சரக்கு வெச்சிருக்கேன்.. இறக்கி வெச்சிருக்கேன்’ என்பது மாதிரி பாடல் பாடி டீம் ஃபொ்பார்மன்ஸ் செய்தார்கள். “எல்லாம் வாயிலதான் வடை சுடுவாங்க. கண்ல காட்ட மாட்டாங்க” என்று கிண்டலடித்தார் வினோத்.  பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’ வியானாவிற்கு ஆப்பிள் ஊட்டி சகல திசைகளிலும் கோல் போட முயல்கிறார் கம்மு. இதனால் பாருவின் வயிற்றெரிச்சல் கூடி “ஏன் புள்ள.. இப்படி இருக்கச் சொல்லியா உங்க வீட்ல கத்துக் குடுத்தாங்க..  தாடிக்காரப் பயல நம்பாத” என்று ஜாலியான பாவனையில் கடுப்பாகிக் கொண்டிருந்தார்.  டாஸ்க்கில் தன்னை வொர்ஸ்ட் என்று விக்ரம் சொல்லிவிட்டதால் ‘கோ’வென்று அழுது கொண்டிருந்தார் ரம்யா. “நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். வார்த்தையால குத்தறாங்க. காரணம் சொல்றாங்க பார்த்தியா.. அதுதான் தாங்கலை. நான் எவ்வளவு வேலை பண்ணேன் தெரியுமா..” என்று சாண்ட்ராவிடம் அவர் புலம்ப “விக்ரமும் நிறைய வேலை செஞ்சான்” என்று அங்கு வந்த கம்மு சொல்ல “நான் பண்ணத அவர் பார்க்கலைல்ல.. அது போலத்தான். அவர் பண்ணத நான் பார்க்கல..” என்று விதாண்டாவாதம் செய்தார் ரம்யா.  BB Tamil 9 Day 45 சாம்பார் டீம் விதியை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு சமைத்து வைப்பதால், மற்றவர்களைக் கேட்டு என்ன மெனு என்பதை போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் சாம்பார்களான பாருவும் சாண்ட்ராவும் ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே’ என்று அலுத்துக் கொண்டார்கள்.  வினோத் தனக்கான உணவாக ‘கத்தரிக்காய் பொறியல்’ காரமாக செய்யச் சொல்லியிருந்தார். அது அவருக்கு ஓகே. ஆனால் மற்றவர்களுக்கு மிகவும் காரமாக இருந்ததால் கிச்சன் டீம் அதை எடுத்து கீழே ஒளித்துவிட்டது. “காரமா இருந்தாலும் பரவாயில்ல. கொஞ்சம் வைங்க” என்று அரோரா வந்து நிற்க, வேறு சிலரும் அதைப் பின்பற்றினார்கள். “ரொம்ப காரமா இருக்கு. அப்புறம் புகார் பண்ணாதீங்க” என்கிற எச்சரிக்கையுடன் எடுத்துத் தந்தார் திவ்யா.  கத்தரிக்காய் பொறியலை வைத்து நிகழ்ந்த காரமான சண்டை தயிர் சாதத்துடன் வந்த கெமி “எனக்கும் வைங்க” என்று சொல்ல “ஏம்மா.. நீ நேத்தே சாப்பாடு காரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தே.. இது ரொம்ப காரமா இருக்கு. வினோத்திற்காக செஞ்சது’ என்று திவ்யா எச்சரித்தும் ‘பரவாயில்ல. வையி.. காரக்குழம்பிலேயே நீச்சல் அடிக்கறவ நானு’ என்கிற மாதிரி வாங்கிச் சென்ற கெமி “அய்யோ.. பயங்கர காரம்.. ஏன்.. இதை பொதுவா சாப்பிடற சமைக்கக்கூடாதா?” என்று கேட்க அதைத் தொடர்ந்து மோதல் உருவானது.  BB Tamil 9 Day 45 “யப்பா.. சாமி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சாப்பாட்டுத் தட்டை தூக்கிச் சென்றார் கெமி. எங்கே குப்பையில் போட்டு வீக்கெண்டில் வாங்கிக் கட்டிக் கொள்வாரோ என்று பார்த்தால்.. இல்லை. கார்டன் ஏரியாவிற்கு தூக்கிச் சென்று வைத்து விட்டு தனிமையில் ‘கோ’வென்று அழுது தீர்த்தார். அங்கு வந்த ரம்யா சமாதானம் செய்தார். இந்த விஷயத்தில் கெமி செய்வது அநாவசியமான சீன் என்றுதான் தோன்றுகிறது.  ‘வீக்லி டாஸ்க்லதான் சொதப்பறீங்க.. டெய்லி டாஸ்க்கையாவது சுவாரசியமா செய்ங்க’ என்பது மாதிரி பாடலை வைத்து பிராப்பர்டியை கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் சுவாரசியமாக சென்றது.  ‘வந்தேண்டா பால்காரன்’ பாடலின் prelude ஒலிக்க, வினோத் சரியாக ஓடிச் சென்று பால் கேனை எடுத்துக் கொண்டார். ஆனால் கம்ருதீனோ சைக்கிளை நோக்கி ஓடியது தவறு. இன்னொரு பிராப்பர்ட்டியை சரியாக கண்டுபிடித்த அரோரா மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட “யம்மாடி.. இத்தனை நாள் வாங்கின பேமெண்ட்டுக்கு இன்னிக்குத்தான் வேலை செஞ்சே. குட்.. கீப் இட் அப்” என்று பாராட்டினார் பிக் பாஸ்.  கம்முவின் காட்டில் ரொமான்ஸ் மழை  ‘கண்கள் இரண்டால்’ பாடல் ஒலிக்க, சரியாக சைக்கிளை தேடிச் சென்று எடுத்து ஓட்டிய கம்ருதீனைப் பார்த்து அரோரா புன்னகை பூக்க “உங்களுக்குன்னு வந்து பாட்டு அமையுது பாருங்க கம்ரு’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். பாருவின் வயிற்றெரிச்சல் கூடியது. போலவே செல்ஃபி புள்ள பாடலுக்கும் கம்முவும் அம்முவும் இணைந்து பாட காண்டாகி பார்த்துக் கொண்டிருந்தார் பாரு.  ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி எஃப்ஜேவும் களத்தில் குதித்தார். ‘கூட மேல கூட வெச்சு’ பாடலுக்கு சரியான பிராப்பர்ட்டியை கண்டுபிடித்து ஆட, அவரைப் பார்த்து வெட்கப்பட்ட வியானாவிற்கு க்ளோசப் காட்சிகள் பறந்தன. ‘சொட்டச் சொட்ட நனையுது’ பாடலுக்கு தாஜ்மஹால் பொம்மையை எடுத்து கம்மு ஆட இந்த முறை முந்திக் கொண்டு வம்படியாக அவருடன் இணைந்து ஆடினார் பாரு.  BB Tamil 9 Day 45 அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, வேகமாகச் சென்ற கனியை முந்திக் கொண்டு ஓடினார் வினோத். இதன் விளைவாக கனி கீழே விழ, பிராப்பர்டியை எடுத்துக் கொண்டார் வினோத். கனிக்கு ஆதரவாக பாரு களத்தில் இறங்கி ‘தள்ளி விட்டுட்டாங்க.. தள்ளி விட்டுட்டாங்க” என்று கூப்பாடு போட “நான் தள்ளி விடலை. வேணுமின்னு செஞ்சா மாதிரி டிவிஸ்ட் பண்ற” என்று பாருவை நோக்கி சத்தம் போட்டார் வினோத். “குறும்படம் போடுவாங்க.. அப்ப தெரியும் சேதி” என்று பாருவும் மல்லுக்கட்டினார். கனிக்கு பாரு ஆதரவா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. சாம்பார் டீமிற்கு பாயிண்ட் போச்சே என்பதுதான் பாருவின் கவலை.  இறுதியில் மாப் மாயாவிஸ் இந்த டாஸ்க்கில் வென்றது. ‘வாயை மூடு’ என்கிற மாதிரி பாரு தன்னை நோக்கி கையை காட்டியதால் கோபம் அடங்காத வினோத் பஞ்சாயத்தில் அதை சுட்டிக் காட்ட “அப்படித்தான் பண்ணுவோம். நான் எந்த டோன்ல சொல்லணும்னு நீ முடிவு பண்ணக்கூடாது”  என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு.  “அவ இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவா. நீ ஃப்ரீயா விடு” என்று வினோத்திற்கு சமாதானம் சொன்னார் கம்மு.  பாயிண்ட்ஸ்களை அள்ளிக் கொடுத்த சாண்ட்ரா பாயிண்ட் தரும் நேரம். மாப் மாயாவிஸ் அணிக்கு நான்கு காயின்களை லம்ப்பாக தூக்கிக் கொடுத்தார் சாண்ட்ரா. அந்த டீமில் பிரஜின் இருப்பதுதான் காரணம். வெல்கிற அணியில் உள்ள அனைவரும் வீட்டு தல டாஸ்க்கில் பங்கேற்க முடியும் என்பதால் தன் கணவரை தலைவராக்கிப் பார்க்க மற்றவர்களின் உழைப்பை விரயமாக்குகிறார் சாண்ட்ரா. “இத்தனை காயின் கொடுக்கத் தேவையில்ல’ என்று கனி ஆட்சேபித்தும் உபயோகமில்லை. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் இது விசாரணைக்கு வரலாம்.  BB Tamil 9 Day 45 வென்ற அணிக்கு ரிவார்டாக பிரியாணி வந்தது. “எல்லோரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று விக்ரம் சொல்ல “நாம அதை வாங்கவே கூடாது” என்று பாருவும் சாண்ட்ராவும் முடிவு செய்தார்கள். ‘வாங்க. சாப்பிடலாம்’ என்று கெஞ்சியும் வரவில்லை.  பாருவின் அலப்பறையை கண்டித்தபடியே வீட்டுக்குள் வைல்ட் கார்டாக வந்த சாண்ட்ரா, இப்போது பாருவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. 

விகடன் 20 Nov 2025 11:28 am

BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா

டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 45 “ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா? ‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ்.  BB Tamil 9 Day 45 நாள் 45. ஆதிரை விலகிய பிறகு வியானாவுடன் நெருக்கமாக எஃப்ஜே முயல்கிறார் போலிருக்கிறது. என்னதான் ‘அண்ணா’ என்று அழைத்து இந்த உறவை பாவனையாக துண்டிக்க முயன்றாலும் வியானாவிற்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருப்பதை க்ளோசப் காட்சிகள் மூலம் காமிராக்கள் தெரிவிக்கின்றன. (புது லவ் கன்டென்ட் ஆக இது மாறுமா?!) ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “அவங்க என்ன டிரை பண்றாங்க.. ‘உனக்கு எத்தனை புருஷன்னு’ கம்மு கேட்டு எரிச்சல் பண்றான். வேற யாராவது கேட்டிருந்தா கூட ஹர்ட் ஆகியிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் பாரு உருகிக் கொண்டிருக்க, “நீ காண்டாகிறேன்னு தெரிஞ்சா ஓவரா பண்ணுவான். அடக்கி வாசி.. அவாய்ட் பண்ணு” என்று அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா.  கணவர் பிரஜின் வெற்றி பெறுவதற்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா டாஸ்க்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மரை தேர்ந்தெடுக்க வேண்டும். அணித்தலைவர்கள் கூடிப் பேசி இதை முடிவு செய்ய வேண்டும். விக்ரமும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக அமித்தையும் வொர்ஸ்ட் ஆக ரம்யாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.  இதைப் போலவே ரம்யாவும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக பிரஜினையும் வொர்ஸ்ட் ஆக விக்ரமையும் தேர்ந்தெடுத்தார்கள். தன் கணவர் பிரஜினை இத்தனை வெளிப்படையாக சப்போர்ட் செய்கிறோம் என்கிற கூச்சம் சாண்ட்ராவிடம் துளி கூட இல்லை. பிரஜினை பெஸ்ட் ஆக தேர்வு செய்தது சாண்ட்ராவின் சுயநலம் என்றால், விக்ரமை வொர்ஸ்ட் என்று சொன்னதற்கு ரம்யாவின் பழிவாங்கல்தான் காரணமாக இருக்கவேண்டும். நாம் பார்த்தவரை விக்ரம் சிறப்பாகவே செயல்பட்டார்.  BB Tamil 9 Day 45 சாம்பார் அணிக்காக விக்ரமும் ரம்யாவும் கலந்தாலோசித்து பெஸ்ட் ஆக கனியையும் வொர்ஸ்ட் ஆக சாண்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார்கள். “ஆக.. வொர்ஸ்ட் ஆக வந்திருப்பது மூணு டீம் கேப்டனுமா?” என்று பிக் பாஸ் கேட்க “அட.. ஆமால்ல..’ என்று மக்கள் வியந்தார்கள்.  சாம்பார் அணியில் நெகட்டிவிட்டிதான் இருக்கிறது, கிரியேட்டிவிட்டி இல்லை என்கிற புகார் தொடர்ந்து வருகிறது. (பாருவும் சாண்ட்ராவும் அங்கு இருக்கும் வரை வேறு என்ன வரும்?!). எனவே ‘சரக்கு வெச்சிருக்கேன்.. இறக்கி வெச்சிருக்கேன்’ என்பது மாதிரி பாடல் பாடி டீம் ஃபொ்பார்மன்ஸ் செய்தார்கள். “எல்லாம் வாயிலதான் வடை சுடுவாங்க. கண்ல காட்ட மாட்டாங்க” என்று கிண்டலடித்தார் வினோத்.  பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’ வியானாவிற்கு ஆப்பிள் ஊட்டி சகல திசைகளிலும் கோல் போட முயல்கிறார் கம்மு. இதனால் பாருவின் வயிற்றெரிச்சல் கூடி “ஏன் புள்ள.. இப்படி இருக்கச் சொல்லியா உங்க வீட்ல கத்துக் குடுத்தாங்க..  தாடிக்காரப் பயல நம்பாத” என்று ஜாலியான பாவனையில் கடுப்பாகிக் கொண்டிருந்தார்.  டாஸ்க்கில் தன்னை வொர்ஸ்ட் என்று விக்ரம் சொல்லிவிட்டதால் ‘கோ’வென்று அழுது கொண்டிருந்தார் ரம்யா. “நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். வார்த்தையால குத்தறாங்க. காரணம் சொல்றாங்க பார்த்தியா.. அதுதான் தாங்கலை. நான் எவ்வளவு வேலை பண்ணேன் தெரியுமா..” என்று சாண்ட்ராவிடம் அவர் புலம்ப “விக்ரமும் நிறைய வேலை செஞ்சான்” என்று அங்கு வந்த கம்மு சொல்ல “நான் பண்ணத அவர் பார்க்கலைல்ல.. அது போலத்தான். அவர் பண்ணத நான் பார்க்கல..” என்று விதாண்டாவாதம் செய்தார் ரம்யா.  BB Tamil 9 Day 45 சாம்பார் டீம் விதியை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு சமைத்து வைப்பதால், மற்றவர்களைக் கேட்டு என்ன மெனு என்பதை போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் சாம்பார்களான பாருவும் சாண்ட்ராவும் ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே’ என்று அலுத்துக் கொண்டார்கள்.  வினோத் தனக்கான உணவாக ‘கத்தரிக்காய் பொறியல்’ காரமாக செய்யச் சொல்லியிருந்தார். அது அவருக்கு ஓகே. ஆனால் மற்றவர்களுக்கு மிகவும் காரமாக இருந்ததால் கிச்சன் டீம் அதை எடுத்து கீழே ஒளித்துவிட்டது. “காரமா இருந்தாலும் பரவாயில்ல. கொஞ்சம் வைங்க” என்று அரோரா வந்து நிற்க, வேறு சிலரும் அதைப் பின்பற்றினார்கள். “ரொம்ப காரமா இருக்கு. அப்புறம் புகார் பண்ணாதீங்க” என்கிற எச்சரிக்கையுடன் எடுத்துத் தந்தார் திவ்யா.  கத்தரிக்காய் பொறியலை வைத்து நிகழ்ந்த காரமான சண்டை தயிர் சாதத்துடன் வந்த கெமி “எனக்கும் வைங்க” என்று சொல்ல “ஏம்மா.. நீ நேத்தே சாப்பாடு காரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தே.. இது ரொம்ப காரமா இருக்கு. வினோத்திற்காக செஞ்சது’ என்று திவ்யா எச்சரித்தும் ‘பரவாயில்ல. வையி.. காரக்குழம்பிலேயே நீச்சல் அடிக்கறவ நானு’ என்கிற மாதிரி வாங்கிச் சென்ற கெமி “அய்யோ.. பயங்கர காரம்.. ஏன்.. இதை பொதுவா சாப்பிடற சமைக்கக்கூடாதா?” என்று கேட்க அதைத் தொடர்ந்து மோதல் உருவானது.  BB Tamil 9 Day 45 “யப்பா.. சாமி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சாப்பாட்டுத் தட்டை தூக்கிச் சென்றார் கெமி. எங்கே குப்பையில் போட்டு வீக்கெண்டில் வாங்கிக் கட்டிக் கொள்வாரோ என்று பார்த்தால்.. இல்லை. கார்டன் ஏரியாவிற்கு தூக்கிச் சென்று வைத்து விட்டு தனிமையில் ‘கோ’வென்று அழுது தீர்த்தார். அங்கு வந்த ரம்யா சமாதானம் செய்தார். இந்த விஷயத்தில் கெமி செய்வது அநாவசியமான சீன் என்றுதான் தோன்றுகிறது.  ‘வீக்லி டாஸ்க்லதான் சொதப்பறீங்க.. டெய்லி டாஸ்க்கையாவது சுவாரசியமா செய்ங்க’ என்பது மாதிரி பாடலை வைத்து பிராப்பர்டியை கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் சுவாரசியமாக சென்றது.  ‘வந்தேண்டா பால்காரன்’ பாடலின் prelude ஒலிக்க, வினோத் சரியாக ஓடிச் சென்று பால் கேனை எடுத்துக் கொண்டார். ஆனால் கம்ருதீனோ சைக்கிளை நோக்கி ஓடியது தவறு. இன்னொரு பிராப்பர்ட்டியை சரியாக கண்டுபிடித்த அரோரா மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட “யம்மாடி.. இத்தனை நாள் வாங்கின பேமெண்ட்டுக்கு இன்னிக்குத்தான் வேலை செஞ்சே. குட்.. கீப் இட் அப்” என்று பாராட்டினார் பிக் பாஸ்.  கம்முவின் காட்டில் ரொமான்ஸ் மழை  ‘கண்கள் இரண்டால்’ பாடல் ஒலிக்க, சரியாக சைக்கிளை தேடிச் சென்று எடுத்து ஓட்டிய கம்ருதீனைப் பார்த்து அரோரா புன்னகை பூக்க “உங்களுக்குன்னு வந்து பாட்டு அமையுது பாருங்க கம்ரு’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். பாருவின் வயிற்றெரிச்சல் கூடியது. போலவே செல்ஃபி புள்ள பாடலுக்கும் கம்முவும் அம்முவும் இணைந்து பாட காண்டாகி பார்த்துக் கொண்டிருந்தார் பாரு.  ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி எஃப்ஜேவும் களத்தில் குதித்தார். ‘கூட மேல கூட வெச்சு’ பாடலுக்கு சரியான பிராப்பர்ட்டியை கண்டுபிடித்து ஆட, அவரைப் பார்த்து வெட்கப்பட்ட வியானாவிற்கு க்ளோசப் காட்சிகள் பறந்தன. ‘சொட்டச் சொட்ட நனையுது’ பாடலுக்கு தாஜ்மஹால் பொம்மையை எடுத்து கம்மு ஆட இந்த முறை முந்திக் கொண்டு வம்படியாக அவருடன் இணைந்து ஆடினார் பாரு.  BB Tamil 9 Day 45 அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, வேகமாகச் சென்ற கனியை முந்திக் கொண்டு ஓடினார் வினோத். இதன் விளைவாக கனி கீழே விழ, பிராப்பர்டியை எடுத்துக் கொண்டார் வினோத். கனிக்கு ஆதரவாக பாரு களத்தில் இறங்கி ‘தள்ளி விட்டுட்டாங்க.. தள்ளி விட்டுட்டாங்க” என்று கூப்பாடு போட “நான் தள்ளி விடலை. வேணுமின்னு செஞ்சா மாதிரி டிவிஸ்ட் பண்ற” என்று பாருவை நோக்கி சத்தம் போட்டார் வினோத். “குறும்படம் போடுவாங்க.. அப்ப தெரியும் சேதி” என்று பாருவும் மல்லுக்கட்டினார். கனிக்கு பாரு ஆதரவா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. சாம்பார் டீமிற்கு பாயிண்ட் போச்சே என்பதுதான் பாருவின் கவலை.  இறுதியில் மாப் மாயாவிஸ் இந்த டாஸ்க்கில் வென்றது. ‘வாயை மூடு’ என்கிற மாதிரி பாரு தன்னை நோக்கி கையை காட்டியதால் கோபம் அடங்காத வினோத் பஞ்சாயத்தில் அதை சுட்டிக் காட்ட “அப்படித்தான் பண்ணுவோம். நான் எந்த டோன்ல சொல்லணும்னு நீ முடிவு பண்ணக்கூடாது”  என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு.  “அவ இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவா. நீ ஃப்ரீயா விடு” என்று வினோத்திற்கு சமாதானம் சொன்னார் கம்மு.  பாயிண்ட்ஸ்களை அள்ளிக் கொடுத்த சாண்ட்ரா பாயிண்ட் தரும் நேரம். மாப் மாயாவிஸ் அணிக்கு நான்கு காயின்களை லம்ப்பாக தூக்கிக் கொடுத்தார் சாண்ட்ரா. அந்த டீமில் பிரஜின் இருப்பதுதான் காரணம். வெல்கிற அணியில் உள்ள அனைவரும் வீட்டு தல டாஸ்க்கில் பங்கேற்க முடியும் என்பதால் தன் கணவரை தலைவராக்கிப் பார்க்க மற்றவர்களின் உழைப்பை விரயமாக்குகிறார் சாண்ட்ரா. “இத்தனை காயின் கொடுக்கத் தேவையில்ல’ என்று கனி ஆட்சேபித்தும் உபயோகமில்லை. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் இது விசாரணைக்கு வரலாம்.  BB Tamil 9 Day 45 வென்ற அணிக்கு ரிவார்டாக பிரியாணி வந்தது. “எல்லோரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று விக்ரம் சொல்ல “நாம அதை வாங்கவே கூடாது” என்று பாருவும் சாண்ட்ராவும் முடிவு செய்தார்கள். ‘வாங்க. சாப்பிடலாம்’ என்று கெஞ்சியும் வரவில்லை.  பாருவின் அலப்பறையை கண்டித்தபடியே வீட்டுக்குள் வைல்ட் கார்டாக வந்த சாண்ட்ரா, இப்போது பாருவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. 

விகடன் 20 Nov 2025 11:28 am

முத்து சொன்ன வார்த்தை, மீனா என்ன செய்யப் போகிறார்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா குடும்பத்தினர் முன் ரோகிணியை உயர்ந்து பேசுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு இருக்கிற மருமகள்களையே ரோகினி தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் நீ மனோஜ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத அவ என்ன...

தஸ்தர் 20 Nov 2025 10:57 am

தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார். தவெக விஜய் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. தவெக விஜய் அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருக்கிறார். SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

விகடன் 20 Nov 2025 10:56 am

தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார். தவெக விஜய் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. தவெக விஜய் அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருக்கிறார். SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

விகடன் 20 Nov 2025 10:56 am

Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album

Ramya pandian: நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

விகடன் 20 Nov 2025 10:33 am

தன் கணவர் செய்த துரோகத்தால் சாரதா எடுத்த விபரீத முடிவு, அடுத்து நடக்கப்போவது என்ன? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சாரதாவிடம் பேசி முத்து மலர் குடும்பத்தை உள்ளே தங்க வைக்க சம்மதம் வாங்கி கொண்டார். அதற்குப்பின் முத்துமலர் குடும்பமும் உள்ளே வந்து தங்கிக் கொள்கிறது. விஜய் அவர்களுக்கு போர்வை எல்லாம் கொடுத்தார். இது எல்லாம் பார்த்து சாரதாவிற்கு கோபம் அதிகமானது. அதற்குப்பின் முத்து மலரின் மகளால் பாத்ரூம் கூட போக முடியாமல் கஷ்டப்பட்டார். அந்த சமயம் பார்த்து சந்தானத்தின் அம்மா வந்தார். அப்போது முத்துமலர், நானும் தான் உங்கள் […] The post தன் கணவர் செய்த துரோகத்தால் சாரதா எடுத்த விபரீத முடிவு, அடுத்து நடக்கப்போவது என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Nov 2025 9:21 am

Esa Kaaththa Video

Esa Kaaththa | My Lord | Sasikumar | Chaithra J Achar | Sean Roldan | Raju Murugan

தஸ்தர் 20 Nov 2025 8:16 am

Storm -,The Moonwalk Anthem Official Video

Storm – The Moonwalk Anthem Official Video [8K] | AR Rahman | Prabhu Deva | Manoj NS | Moonwalk

தஸ்தர் 20 Nov 2025 8:12 am

BP 180 – Official Trailer

தஸ்தர் 20 Nov 2025 8:07 am

நடிகர் பிரேம்ஜி-இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் […] The post நடிகர் பிரேம்ஜி-இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Nov 2025 9:19 pm

என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.

விகடன் 19 Nov 2025 9:03 pm

என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.

விகடன் 19 Nov 2025 9:03 pm

தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

விகடன் 19 Nov 2025 8:58 pm

தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

விகடன் 19 Nov 2025 8:58 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 8:58 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 8:31 pm

Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி

ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.

விகடன் 19 Nov 2025 7:46 pm

Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி

ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.

விகடன் 19 Nov 2025 7:46 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 7:31 pm

பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்றார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொன்னார். இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால் முத்துவேல் […] The post பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Nov 2025 6:54 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 6:31 pm

நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் –இத்தன கோடியா

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகி இருந்த டெஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் […] The post நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் – இத்தன கோடியா appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Nov 2025 5:48 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 pm

’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த 'வல்லமை' படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜி - இந்து நடிகர் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளதாக இயக்குநர் கருப்பையா முருகன் தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்களில் #Premgi, #BabyGirl போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

விகடன் 19 Nov 2025 5:09 pm

''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்

எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 19 Nov 2025 4:42 pm

''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்

எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.

விகடன் 19 Nov 2025 4:42 pm

மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

விகடன் 19 Nov 2025 4:33 pm

மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

விகடன் 19 Nov 2025 4:33 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 pm

மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மத்தி மீனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறைத்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல்...

தஸ்தர் 19 Nov 2025 4:25 pm

ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.

விகடன் 19 Nov 2025 4:04 pm

ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.

விகடன் 19 Nov 2025 4:04 pm

BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்

விகடன் 19 Nov 2025 3:46 pm

BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்

விகடன் 19 Nov 2025 3:46 pm

தாமரை விரித்த வலையில் வசமாக சிக்கிய போஸ், கோபத்தில் கொந்தளிக்கும் காவியா –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுக்கவில்லை என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. பின் இதைப்பற்றி சேது தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அண்ணன், வீட்டில் உண்மையை சொல்லலாம் என்றார். அதற்கு சேது, அப்பா நம்ப மாட்டார். ஆதாரத்துடன் அப்பாவிடம் சொல்லணும் இல்லையென்றால் சித்தியே பழைய பகையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனை எழுப்புவார்கள் என்றார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் அண்ணன் மகள், தங்கை மகன் இருவருமே போஸ் திருமணத்திற்காக வந்திருந்தார்கள். […] The post தாமரை விரித்த வலையில் வசமாக சிக்கிய போஸ், கோபத்தில் கொந்தளிக்கும் காவியா – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Nov 2025 3:36 pm

Shriya Saran: ``யார் இந்த முட்டாள்? - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். View this post on Instagram இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்

விகடன் 19 Nov 2025 3:01 pm