ஸ்ருதி சொன்ன விஷயத்தால் ஷாக்கான மீனா, விஜயா செய்த வேலை –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது. கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் […] The post ஸ்ருதி சொன்ன விஷயத்தால் ஷாக்கான மீனா, விஜயா செய்த வேலை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாணம் சூர்யாவை எழுப்பி கீழே கால பைரவர் வச்சு பூஜை எல்லாம் பண்றாங்க என்று சொல்லி அழைத்து...
அரசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் அரசன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே அரசன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் சமீபமாகவே விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றால்...
ராஜாங்கம் எடுத்த முடிவால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, காமேஷ் நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, தாமரையை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக ரூமிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். காமேஷ் போன் சுவிட்ச் ஆப்பாக இருப்பதால் தாமரை ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். அப்போது வந்த தமிழ், தாமரையை மேடைக்கு அழைத்தார்கள் என்றார். இதனால் தாமரை-சாவித்ரி பதறுகிறார்கள். தாமரை மணமேடைக்கு சென்று புடவை வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து விட்டார். காமேஷ் பிச்சை ஃபோன் […] The post ராஜாங்கம் எடுத்த முடிவால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, காமேஷ் நிலைமை என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Mutha Mazhai Song இன்றைய பகுதிக்கு, சமீபத்தில் நம் செவிகளில் ஓயாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த 'முத்தமழை' பாடல் பற்றி உரையாடப் பாடலாசிரியர் சிவா அனந்தை சந்தித்தோம். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் இப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். நம்மை இன்முகத்துடன் வரவேற்றவர் 'முத்தமழை' பாடல் பற்றிய சுவாரஸ்யங்களை விவரிக்கத் தொடங்கினார். தக் லைஃப் முத்தமழை 'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்! இந்தப் பாடலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி ஃபேவரிட்டாக இருக்கும். எனக்கு இதில் 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ' வரிதான் மிகவும் நெருக்கமானது. இந்த வரி பெண்களை மட்டுமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படும். Mutha Mazhai Lyricist - Siva Ananth ஆனால், இது அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்னை. காதல் வந்தாலும் போனாலும் நம் கட்டுப்பாட்டில் எதுவுமிருக்காது. இப்பாடல் கவ்வாலி இசை வடிவத்தில் இருக்கும் பாடல் என்பதால், தாளத்திற்கேற்ப இதனை எழுதியதும் மகிழ்ச்சி! என்னுடைய பாடல்களில் கவித்துவமும் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போதுதான் அது காலத்தாலும் அழியாத பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. என இடைவெளி தந்தவர், கண்ணதாசன் எழுதிய 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' பாடலின் எமோஷன் இதிலும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். முதலில் ரஹ்மான் சார் இந்தப் பாடலின் டியூனைத் தரும்போது, இதனுடைய டெம்போ வேறொன்றாக இருந்தது. இப்போது இந்தப் பாடலில் இருக்கும் வேகம் முதலில் கொடுக்கப்பட்ட டியூனில் இல்லை. அதனால் மிகவும் மெதுவாக நகரும் அந்த டியூனுக்கேற்ப நான் முதலில் சோகமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வரிகளை எழுதியிருந்தேன். பிறகு மணி சார், 'இது கவ்வாலி பாடலாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னார். இதைக் கேட்டதும் உடனே ரஹ்மான் சாரும் 'நீங்கள் சொல்வது சரிதான்' எனச் சொல்லிவிட்டு டியூனை மாற்றினார். அந்தப் புதிய டியூனே முத்தமழை என்ற வார்த்தையை ஒலிப்பது போலத் தெரிந்தது. Mutha Mazhai Song அந்த ஒலியையே பாடலின் தொடக்கமாகவும் கொண்டு வந்துவிட்டேன். இந்தப் பாடலை முழுமையாகவும் சந்தோஷமான உணர்விலேயே கொண்டு போய்விட முடியாது. ஒரு பெண்ணின் சோகப் பார்வையும் இதிலிருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படியான தருணத்தில் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல்தான் என்னிடத்தில் சிறந்த ரெஃபரென்ஸாக இருந்தது. அட்டகாசமான பாடலது! காலத்தால் அழியாத ஒன்று அது. அந்தப் பாடலை எனக்குள் நினைத்துக் கொண்டுதான் இந்த 'முத்தமழை' பாடலை எழுதினேன். அதனையடுத்து, இசைக்கேற்ப அனைத்து வார்த்தைகள் வந்துவிட்டன. எனப் புன்னகைத்தார். நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01 இந்தப் பாடல் வந்த பிறகு என்னை பலரும் பாடலெழுதுவதற்கு அழைக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அமைதியாக நான் முழு நேரப் பாடலாசிரியர் இல்லை என்பதைச் சொல்லிவிடுவேன். மற்றவர்களுக்குப் பாடலெழுதினால், அவர்கள் சொல்லும் சூழலுக்குப் பாடல் எழுத வேண்டியதாக இருக்கும். ஆனால், இப்பாடல் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்காக எழுதினேன். எங்களுடைய படமென்பதால், எழுத வேண்டிய நேரம் வரும்போது எழுதிவிடுகிறேன். Mutha Mazhai Lyricist - Siva Ananth இந்தப் பாடல் பெண் பார்வையைப் பிரதிபலிக்கிறது. நான் இப்பாடலுக்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'அலைக்கடல்' பாடலில் ஒரு பெண்ணின் பார்வையை கொண்டு வந்திருந்தேன். அதனால், 'முத்தமழை' பாடலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். தமிழில் பெண்ணின் பார்வையிலிருந்து பல அருமையான பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதியாரும் பெண்ணின் பார்வையைக் கொண்டு வந்து எழுதியிருக்கிறார். அவருடைய 'கண்ணன் என் காதலன்' தொகுப்பில் பெண்ணின் பார்வையிலிருந்துதான் பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு ஆண், பெண் பார்வையில் பாடல் எழுதுவது சகஜம்தான். நீலோத்தி: நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்! - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2 ஜானகி அம்மா பாடியிருக்கும் 'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்' பாடல் போல, அவர் பாடிய பல பாடல்கள் ஓர் ஆண் பாடலாசிரியர் எழுதிய பாடலாகத்தான் இருக்கும். ஆனால், அதில் அழகான பெண்மை வெளிப்பட்டிருக்கும். 'முத்தமழை' பாடலுக்கு பல பெண்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். 'எங்கள் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்' எனவும் பல பெண்கள் சொன்னார்கள். இதைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த முழு வெற்றியாகப் பார்க்கிறேன். என்றார். Mutha Mazhai Song சமீபத்தில், ட்விட்டரில் ஒரு காணொளியைப் பார்த்திருந்தேன். இரண்டு பார்வைச் சவால் கொண்ட குழந்தைகள் 'முத்தமழை' பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் காணொளி என்னை நெகிழ வைத்தது. அதுபோல, சில பள்ளிக் குழந்தைகள் பள்ளியில் ஒருசேர இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் காணொளியையும் பார்த்திருந்தேன். இப்படியான பல விஷயங்களைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த உரிய பாராட்டாகவும் பார்க்கிறேன். எனச் சிரித்தவாறே முடித்துக் கொண்டார். தொடரும்...
`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Mutha Mazhai Song இன்றைய பகுதிக்கு, சமீபத்தில் நம் செவிகளில் ஓயாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த 'முத்தமழை' பாடல் பற்றி உரையாடப் பாடலாசிரியர் சிவா அனந்தை சந்தித்தோம். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் இப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். நம்மை இன்முகத்துடன் வரவேற்றவர் 'முத்தமழை' பாடல் பற்றிய சுவாரஸ்யங்களை விவரிக்கத் தொடங்கினார். தக் லைஃப் முத்தமழை 'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்! இந்தப் பாடலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி ஃபேவரிட்டாக இருக்கும். எனக்கு இதில் 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ' வரிதான் மிகவும் நெருக்கமானது. இந்த வரி பெண்களை மட்டுமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படும். Mutha Mazhai Lyricist - Siva Ananth ஆனால், இது அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்னை. காதல் வந்தாலும் போனாலும் நம் கட்டுப்பாட்டில் எதுவுமிருக்காது. இப்பாடல் கவ்வாலி இசை வடிவத்தில் இருக்கும் பாடல் என்பதால், தாளத்திற்கேற்ப இதனை எழுதியதும் மகிழ்ச்சி! என்னுடைய பாடல்களில் கவித்துவமும் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போதுதான் அது காலத்தாலும் அழியாத பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. என இடைவெளி தந்தவர், கண்ணதாசன் எழுதிய 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' பாடலின் எமோஷன் இதிலும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். முதலில் ரஹ்மான் சார் இந்தப் பாடலின் டியூனைத் தரும்போது, இதனுடைய டெம்போ வேறொன்றாக இருந்தது. இப்போது இந்தப் பாடலில் இருக்கும் வேகம் முதலில் கொடுக்கப்பட்ட டியூனில் இல்லை. அதனால் மிகவும் மெதுவாக நகரும் அந்த டியூனுக்கேற்ப நான் முதலில் சோகமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வரிகளை எழுதியிருந்தேன். பிறகு மணி சார், 'இது கவ்வாலி பாடலாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது' எனச் சொன்னார். இதைக் கேட்டதும் உடனே ரஹ்மான் சாரும் 'நீங்கள் சொல்வது சரிதான்' எனச் சொல்லிவிட்டு டியூனை மாற்றினார். அந்தப் புதிய டியூனே முத்தமழை என்ற வார்த்தையை ஒலிப்பது போலத் தெரிந்தது. Mutha Mazhai Song அந்த ஒலியையே பாடலின் தொடக்கமாகவும் கொண்டு வந்துவிட்டேன். இந்தப் பாடலை முழுமையாகவும் சந்தோஷமான உணர்விலேயே கொண்டு போய்விட முடியாது. ஒரு பெண்ணின் சோகப் பார்வையும் இதிலிருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படியான தருணத்தில் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல்தான் என்னிடத்தில் சிறந்த ரெஃபரென்ஸாக இருந்தது. அட்டகாசமான பாடலது! காலத்தால் அழியாத ஒன்று அது. அந்தப் பாடலை எனக்குள் நினைத்துக் கொண்டுதான் இந்த 'முத்தமழை' பாடலை எழுதினேன். அதனையடுத்து, இசைக்கேற்ப அனைத்து வார்த்தைகள் வந்துவிட்டன. எனப் புன்னகைத்தார். நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01 இந்தப் பாடல் வந்த பிறகு என்னை பலரும் பாடலெழுதுவதற்கு அழைக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அமைதியாக நான் முழு நேரப் பாடலாசிரியர் இல்லை என்பதைச் சொல்லிவிடுவேன். மற்றவர்களுக்குப் பாடலெழுதினால், அவர்கள் சொல்லும் சூழலுக்குப் பாடல் எழுத வேண்டியதாக இருக்கும். ஆனால், இப்பாடல் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்காக எழுதினேன். எங்களுடைய படமென்பதால், எழுத வேண்டிய நேரம் வரும்போது எழுதிவிடுகிறேன். Mutha Mazhai Lyricist - Siva Ananth இந்தப் பாடல் பெண் பார்வையைப் பிரதிபலிக்கிறது. நான் இப்பாடலுக்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'அலைக்கடல்' பாடலில் ஒரு பெண்ணின் பார்வையை கொண்டு வந்திருந்தேன். அதனால், 'முத்தமழை' பாடலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். தமிழில் பெண்ணின் பார்வையிலிருந்து பல அருமையான பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதியாரும் பெண்ணின் பார்வையைக் கொண்டு வந்து எழுதியிருக்கிறார். அவருடைய 'கண்ணன் என் காதலன்' தொகுப்பில் பெண்ணின் பார்வையிலிருந்துதான் பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு ஆண், பெண் பார்வையில் பாடல் எழுதுவது சகஜம்தான். நீலோத்தி: நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்! - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2 ஜானகி அம்மா பாடியிருக்கும் 'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்' பாடல் போல, அவர் பாடிய பல பாடல்கள் ஓர் ஆண் பாடலாசிரியர் எழுதிய பாடலாகத்தான் இருக்கும். ஆனால், அதில் அழகான பெண்மை வெளிப்பட்டிருக்கும். 'முத்தமழை' பாடலுக்கு பல பெண்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். 'எங்கள் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்' எனவும் பல பெண்கள் சொன்னார்கள். இதைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த முழு வெற்றியாகப் பார்க்கிறேன். என்றார். Mutha Mazhai Song சமீபத்தில், ட்விட்டரில் ஒரு காணொளியைப் பார்த்திருந்தேன். இரண்டு பார்வைச் சவால் கொண்ட குழந்தைகள் 'முத்தமழை' பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் காணொளி என்னை நெகிழ வைத்தது. அதுபோல, சில பள்ளிக் குழந்தைகள் பள்ளியில் ஒருசேர இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் காணொளியையும் பார்த்திருந்தேன். இப்படியான பல விஷயங்களைத்தான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த உரிய பாராட்டாகவும் பார்க்கிறேன். எனச் சிரித்தவாறே முடித்துக் கொண்டார். தொடரும்...
`முதல்வர் கலந்துகிடுவார்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை பெரிசா பண்ணியிருப்பேன்!' - நடிகர் டெலிபோன் ராஜ்
சென்னையில் நேற்று நடந்த நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தன் திருமணத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்வாதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் மண வீட்டார் தரப்பிலிருந்து மணமக்களை நேரில் முதல்வரிடம் அழைத்துப் போய் ஆசி வாங்குவதென முடிவெடுக்கப் பட்டதால் முதல்வர் கலந்து கொள்லவில்லை என்கிறார்கள். ராஜிடம் பேசினோம், ``பையனுக்கு திவ்யாங்கிற பொண்ணோட திருமணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. நடிகர் கிங்ஸ்லி, அப்புக்குட்டி உள்ளிட்ட சினிமா நண்பர்கள், டிவியில இருந்து என் நண்பர்கள் பட்டாளம், எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி குடும்பம்னு நிறையப் பேர் கலந்துகிட்டாங்க. கூப்பிட மறந்த சில நண்பர்களே கேள்விப்பட்டு வந்து கலந்துகிட்டாங்க. எல்லாரையும் கூப்பிட்டு இன்னும் பெரிசா நடத்தியிருக்கலாம். ஆன என் வசதின்னு ஒரு விஷயம் இருக்கில்லையா, என்னால முடிஞ்ச அளவுல சின்னதா ஒரு இடத்துல வச்சேன். அதனாலேயே வர்றேன்னு சொன்ன முதலமைச்சரை வரவேண்டாம்னு சொல்ல வேண்டிய நிலை உருவாகிடுச்சு. சி.எம். ஆபீஸ்ல இருந்து வர்றதாச் சொல்லி தகவல் வந்தது. எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு பயம். ஏன்னா, கல்யாணம் நடந்த இடம் ரொம்பச் சின்ன இடம். முதல்வர் கலந்துகிடுவார்னு உறுதியா தெரிஞ்சிருந்தா கல்யாணத்தைப் பெரிசா பண்ணியிருப்பேன். அதனாலேயே, பூச்சி முருகன் அண்ணன்கிட்டச் சொல்லி மணமக்களை கலயாணம் முடிஞ்சதும் முதல்வர் கிட்டக் கூட்டிட்டுப் போய் ஆசி வாங்கிடலாமானு கேட்டேன். சாதாரண ஒரு காமெடி நடிகனான என் வீட்டு விசேஷத்துக்கு முதல்வர் வர்றதுன்னா அது என்ன வாழ்நாள் சாதனை. அப்படியொரு வாய்ப்பு எனக்கு வந்து திரும்பிடுச்சு. அவர் வரத் தயாரா இருந்து அதைத் தவறவிட்டதை நினைச்சு வருந்தறதா அல்லது என் வீட்டுக்கும் வர்றேனு சொன்னாரே அதை நினைச்சு சந்தோஷப் பட்டுகிடறதானு தெரியாத ஒரு சூழல்ல தவிச்சேன். poochi murugan சூழலைப் புரிஞ்சுகிட்ட அவர் சரின்னு சொல்ல, சி.எம். ஆபிஸ்க்கு அந்த தகவலைச் சொன்னோம். பிறகு பூச்சி முருகன் அண்ணனே தாலி எடுத்துக் கொடுக்க கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. சீக்கிரத்துலயே மணமக்களை முதல்வர் கிட்டக் கூட்டிட்டுப் போகணும்'' என்றவரிடம், திருமணம், காதல் திருமணமா அல்லது நீங்கள் பார்த்து உறுதி செய்த பெண்னா எனக் கேட்டோம். ''ரெண்டும்தான். திவ்யாவை ஸ்கூல் நாள்லயே காதலிக்கத் தொடங்கியிருக்கான் சித்தார்த். ரெண்டு பேரும் ஒண்ணாதான் காலேஜும் படிச்சாங்க. தொடர்ந்து அவன் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திலேயே அந்தப் பொண்ணுக்கும் வேலை வாங்கித் தந்திருக்கான். கடைசியில ரெண்டு பேரும் காதலை வீட்டுல சொன்னாங்க. எனக்கு பிரச்னையில்லனு சொல்லிட்டேன். சாதி, மதம்னு எந்த விஷயத்தையும் நான் பார்க்குறதில்லை. ஆனா அவங்க அம்மாவுக்கு சம்மதமில்லை. நான் 'உன் அம்மாவைச் சமாதானப்படுத்தி முடிக்கப் பாரு'னு தெளிவா சொல்லிட்டேன் கெஞ்சி, அடம்பிடிச்சு அஞ்சாறு வருஷம் போராடியிருப்பான். ஒருவழியா கடைசியில அவங்க அம்மா சம்மதம் கிடைக்க, இப்ப சந்தோஷமா கல்யாணத்தை முடிச்சிட்டோம். இதுக்கு முன்னாடி என் மகளுக்கும் லவ் மேரேஜ்தான் நடந்தது. பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம்னு நாங்க நினைக்க, நாங்க இல்லாம கல்யாணம் செய்துக்கக் கூடாதுங்கிறதுல அவங்க உறுதியா இருந்தாங்க'' என நெகிழ்கிறார் ராஜ். ‘‘கடன் வாங்காமல் கல்யாணம்... அம்மா சொல்லித்தந்த தங்க மந்திரம்தான் எனக்கு கைகொடுத்தது!’’
சந்தோசமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சேரன் குடும்பம், வானதி அப்பா முடிவு –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் குடும்பம் சந்தோஷமாக வீட்டிற்குள் சென்றார்கள். இனிமேல் வீட்டில் எல்லா வேலையும் செய்யலாம் என்று நடேசன் குடும்பத்தில் பேசிக்கொண்டார்கள். எல்லோரும் ரொம்ப சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். இதை ஒளிந்து நின்று தன் அண்ணன் பார்ப்பதை நடேசன் பார்த்து விட்டு அவரை வேண்டும் என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். நடேசன் அண்ணனை நடுவில் நிற்க வைத்து எல்லோரும் டான்ஸ் ஆடினார்கள். அய்யனார் வீட்டில் எல்லோருமே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாரானார்கள். […] The post சந்தோசமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சேரன் குடும்பம், வானதி அப்பா முடிவு – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
KH x RK Update: விரைவில் ஒரு Glimpse Video; நெல்சன் க்ளிக் ஆக இதான் காரணம்! ஷூட்டிங் எப்போது?
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் 'KH x RK' படத்தின் புரொமோ வீடியோ இன்று வைரலாகியுள்ளது. நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது வெளியான கிளிம்ஸ் வீடியோ சின்ன சாம்பிள்தான் என்றும், அதன் தொடர்ச்சி வீடியோவைச் சில வார இடைவேளைக்குப் பின் வெளியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வருகின்றன. பிரமிக்க வைக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து விசாரித்தோம். KH x RK கமல் - ரஜினி இருவருக்குமே இப்போது கைவசம் கமிட்மென்ட்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் வருவதால் கமல் பிரசாரத்திற்குச் செல்லவிருக்கிறார். அதன் பின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும், அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கும் செல்கிறார். அதைப்போல ரஜினியைப் பொறுத்தவரை 'ஜெயிலர்2'வை முடித்து கொடுத்துள்ளார். இப்போது அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருக்கின்றன. பேட்ச் ஒர்க்கில் ரஜினியின் போர்ஷன் எப்போது தேவைப்பட்டாலும் நடித்துக் கொடுக்க ரெடியாக இருக்கிறார் ரஜினி. `கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். 'வேட்டையன்' சமயத்தில்தான் 'கூலி'யின் அப்டேட் வெளியானது. அதைப்போல 'ஜெயிலர் 2'வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது. ஏப்ரலில் 'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி. இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அனிருத், நெல்சன் ரஜினி - நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள். ஆனால் ஒரே இயக்குநருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பது நெல்சனுக்குதான் என்கிறார்கள். இப்போது ரஜினியின் காம்பினேஷனில் ஹாட் ரிக் அடித்திருக்கிறார் நெல்சன். எப்போதும் போல எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி மகிழும் நெல்சன், படப்பிடிப்பில் அதே கலகலப்புடன், கோபம் கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக எல்லோரிடமும் இன்முகத்துடன் வேலை வாங்கும் ஸ்டைலும், சூப்பர் ஸ்டாரை அவர் ரொம்பவே சௌகரியமாக வைத்திருப்பதும்தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கான காரணம் என்கிறது ரஜினி வட்டாரம். Nelson | நெல்சன் கமல் - ரஜினியின் இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் மட்டுமே இப்போது முடிவாகியிருக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு, நிர்மல் எடிட்டிங், பல்லவிசிங், அம்ரிதா ராம் காஸ்ட்யூம்ஸ், சவுண்ட் டிசைனர்கள் எனச் சிலர் உறுதியாகியிருக்கிறார்கள். படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இணைந்திருந்தாலும், நெல்சனின் ஸ்டைலில் இதுவும் மல்டி ஸ்டார் படமாக ரெடியாகும் என்கிறார்கள். Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்
KH x RK Update: விரைவில் ஒரு Glimpse Video; நெல்சன் க்ளிக் ஆக இதான் காரணம்! ஷூட்டிங் எப்போது?
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் 'KH x RK' படத்தின் புரொமோ வீடியோ இன்று வைரலாகியுள்ளது. நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது வெளியான கிளிம்ஸ் வீடியோ சின்ன சாம்பிள்தான் என்றும், அதன் தொடர்ச்சி வீடியோவைச் சில வார இடைவேளைக்குப் பின் வெளியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வருகின்றன. பிரமிக்க வைக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து விசாரித்தோம். KH x RK கமல் - ரஜினி இருவருக்குமே இப்போது கைவசம் கமிட்மென்ட்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் வருவதால் கமல் பிரசாரத்திற்குச் செல்லவிருக்கிறார். அதன் பின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும், அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கும் செல்கிறார். அதைப்போல ரஜினியைப் பொறுத்தவரை 'ஜெயிலர்2'வை முடித்து கொடுத்துள்ளார். இப்போது அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருக்கின்றன. பேட்ச் ஒர்க்கில் ரஜினியின் போர்ஷன் எப்போது தேவைப்பட்டாலும் நடித்துக் கொடுக்க ரெடியாக இருக்கிறார் ரஜினி. `கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். 'வேட்டையன்' சமயத்தில்தான் 'கூலி'யின் அப்டேட் வெளியானது. அதைப்போல 'ஜெயிலர் 2'வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது. ஏப்ரலில் 'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி. இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அனிருத், நெல்சன் ரஜினி - நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள். ஆனால் ஒரே இயக்குநருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பது நெல்சனுக்குதான் என்கிறார்கள். இப்போது ரஜினியின் காம்பினேஷனில் ஹாட் ரிக் அடித்திருக்கிறார் நெல்சன். எப்போதும் போல எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி மகிழும் நெல்சன், படப்பிடிப்பில் அதே கலகலப்புடன், கோபம் கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக எல்லோரிடமும் இன்முகத்துடன் வேலை வாங்கும் ஸ்டைலும், சூப்பர் ஸ்டாரை அவர் ரொம்பவே சௌகரியமாக வைத்திருப்பதும்தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கான காரணம் என்கிறது ரஜினி வட்டாரம். Nelson | நெல்சன் கமல் - ரஜினியின் இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் மட்டுமே இப்போது முடிவாகியிருக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு, நிர்மல் எடிட்டிங், பல்லவிசிங், அம்ரிதா ராம் காஸ்ட்யூம்ஸ், சவுண்ட் டிசைனர்கள் எனச் சிலர் உறுதியாகியிருக்கிறார்கள். படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இணைந்திருந்தாலும், நெல்சனின் ஸ்டைலில் இதுவும் மல்டி ஸ்டார் படமாக ரெடியாகும் என்கிறார்கள். Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்
Chiyaan Vikram: சில நேரங்களில் மௌனம்... - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து விக்ரம் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். View this post on Instagram A post shared by Vikram (@the_real_chiyaan) இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அன்புடன், சீயான் எனப் பகிர்ந்திருக்கிறார். ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் சில சிக்கல்களால் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இயக்குநர் போடி ராஜ்குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 4 இயக்குநர்களுடன் ஒப்பந்தமாகியிருப்பதாக நடிகர் விக்ரம் அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். Sarvam Maya:``உங்களின் இந்த அன்பான செயலுக்கு - சூர்யா ஜோதிகாவின் அன்பளிப்பு; நெகிழ்ந்த நிவின் பாலி!
Chiyaan Vikram: சில நேரங்களில் மௌனம்... - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து விக்ரம் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். View this post on Instagram A post shared by Vikram (@the_real_chiyaan) இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அன்புடன், சீயான் எனப் பகிர்ந்திருக்கிறார். ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் சில சிக்கல்களால் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இயக்குநர் போடி ராஜ்குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 4 இயக்குநர்களுடன் ஒப்பந்தமாகியிருப்பதாக நடிகர் விக்ரம் அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். Sarvam Maya:``உங்களின் இந்த அன்பான செயலுக்கு - சூர்யா ஜோதிகாவின் அன்பளிப்பு; நெகிழ்ந்த நிவின் பாலி!
`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். 47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியும் கமலும் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தனர். ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK அப்படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த காம்போ இணைகிறது. இப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பலரின் பெயர் பேசப்பட்டது. இறுதியில் நெல்சனை லாக் செய்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோ 3.54 நிமிடங்கள் கால அளவில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். நெல்சனின் வழக்கமான புரோமோ ஸ்டைலில் இந்த முன்னோட்ட காணொளியும் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் கமலும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தயாராகும் வகையில் க்யூட்டான விஷயங்களையும் இந்த ப்ரோமோவில் சேர்த்திருக்கிறார்கள். ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK 'ரெட்ரோ' வடிவிலான ஃபாண்ட் வடிவம், கார்கள் இருப்பதனால் இப்படத்தின் கதையும் ப்ரீயட் கதையாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். 47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியும் கமலும் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தனர். ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK அப்படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த காம்போ இணைகிறது. இப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பலரின் பெயர் பேசப்பட்டது. இறுதியில் நெல்சனை லாக் செய்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோ 3.54 நிமிடங்கள் கால அளவில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். நெல்சனின் வழக்கமான புரோமோ ஸ்டைலில் இந்த முன்னோட்ட காணொளியும் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் கமலும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தயாராகும் வகையில் க்யூட்டான விஷயங்களையும் இந்த ப்ரோமோவில் சேர்த்திருக்கிறார்கள். ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK 'ரெட்ரோ' வடிவிலான ஃபாண்ட் வடிவம், கார்கள் இருப்பதனால் இப்படத்தின் கதையும் ப்ரீயட் கதையாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு அருண் மாப்பிள பண்றது சரி இல்ல இந்த பணம் இருந்தா மட்டும் உங்க அம்மாவோட இழப்பு சரி ஆயிடுமா நான் வேணா வந்து பேசட்டுமா என்று கேட்க சீதா அதெல்லாம் வேண்டாமா என்று சொல்லுகிறார் இப்பதான் அவரோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டு இருக்கு எதுவும் பேச வேண்டாம்...
KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' - ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த நடிகர் ரஜினியும் - நடிகர் கமலும் தவிர்க்கமுடியாதவர்கள். கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ரஜினி - கமல் இன்று 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வரலாறு எப்போதும் திரும்புவதில்லை... ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது! இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும். நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும். ரஜினி - கமல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம் 'ராக்ஸ்டார்' அனிருத் தனது இசையால் மேலும் பலம்சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி. எனக் குறிப்பிட்டிருக்கிறது. KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!
KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' - ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த நடிகர் ரஜினியும் - நடிகர் கமலும் தவிர்க்கமுடியாதவர்கள். கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ரஜினி - கமல் இன்று 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வரலாறு எப்போதும் திரும்புவதில்லை... ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது! இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும். நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும். ரஜினி - கமல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம் 'ராக்ஸ்டார்' அனிருத் தனது இசையால் மேலும் பலம்சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி. எனக் குறிப்பிட்டிருக்கிறது. KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!
Sarvam Maya:``உங்களின் இந்த அன்பான செயலுக்கு - சூர்யா ஜோதிகாவின் அன்பளிப்பு; நெகிழ்ந்த நிவின் பாலி!
பேய் படமென்றாலே அச்சமூட்டும் ஜம்ப் ஸ்கார், பழிவாங்கல் கதை, க்ளைமாக்ஸில் தெய்வ சக்தி உதவியுடன் தீய சக்தியை ஒழிப்பது என்பது போன்ற பார்முலா வரையறைக்குள்தான் கதை நகரும். ஆனால், இவை அத்தனையையும் தவிர்த்து புன்முறுவலோடு ரசிக்க வைக்கும் ஃபீல் குட் பேய்ப்படமாக உருவானதுதான் ‘சர்வம் மாயா’. ஃபகத் ஃபாசிலின் ‘பாச்சுவும் அத்புத விளக்கும்’ படத்தை இயக்கிய அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திகாடின் மகன். இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருந்தார். View this post on Instagram A post shared by Nivin Pauly (@nivinpaulyactor) ஒரு காலத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நிவின் பாலி, தொடர் சறுக்கல்களுக்குப் பிறகு தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் திரைப்படம் இது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரியா ஷிபு படத்தின் மற்றொரு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், சரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரும் பக்கத்துணையாக இருந்தன. மல்லுவுட்டில் பெரும் வசூலை அள்ளிய சர்வம் மாயா தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் - நடிகை ஜோதிகாவும் நடிகர் நிவின் பாலிக்கு பரிசுகளையும், வாழ்த்துகளையும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் வாழ்த்தில், ``அன்புள்ள நிவின், 'சர்வமயா' படத்தின் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது. மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதேபோல் இன்னும் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களிலும், மைல்கற்களையும் நீங்கள் எட்ட வாழ்த்துகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தனர். சூர்யா - ஜோதிகா சூர்யா - ஜோதிகா தம்பதி அனுப்பிய பரிசை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிவின் பாலி உங்கள் இருவரின் இந்த அன்பான செயலுக்கு மிக்க நன்றி சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடம்... என நெகிழ்ந்திருக்கிறார். இதற்கு முன்பு, சூர்யா - ஜோதிகா தம்பதி இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரமான ரியா ஷிபுவுக்கும் பரிசுகளை அனுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. Sarvam Maya: `சர்வம் மாயா' டைட்டிலை சஜஸ்ட் பண்ணினது நிவின் பாலிதான்! - இயக்குநர் அகில் சத்யன்
‘மை லார்ட்’படம் எடுக்க துணிச்சல் வேண்டும், காரணம் –இயக்குனர் ராம் வெளியிட்ட வீடியோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் […] The post ‘மை லார்ட்’ படம் எடுக்க துணிச்சல் வேண்டும், காரணம் – இயக்குனர் ராம் வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .
Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!
2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்'. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியதும் இந்தப் படம் தான். இவ்வளவு வருடங்கள் கழித்து 'சூது கவ்வும்' ரீரிலீஸ் ஆகிறது. அதை அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மறுபடியும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள். சூது கவ்வும் வெவ்வேறு திசைகளில் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர்கள் ஒன்று கூடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதியோடு அந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த் இவர்களோடு இயக்குநர் நலன் குமாரசாமியும் கலந்து கொண்டார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் 'சூது கவ்வும்' அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிரிப்பும், களிப்பும், சந்தோஷமுமாக அவர்கள் சந்திப்பு நடந்து முடிந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பாரதியாரின் வரிகளில் வரும் புகழ்பெற்ற சொற்றொடர் தான் இது. இறுதியில் தர்மம் வெல்லும் என்பதுதான் இதன் அடிப்படை. நாளைய இயக்குநர் என்ற தொலைக்காட்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமிக்கு இந்தப் படம் பெரும் அறிமுகத்தை பெற்று தந்தது. அடுத்து வெளிவந்த 'காதலும் கடந்து போகும்' இன்றும் வலைத்தளங்களில் கொண்டாடப்படும் படமாக இருக்கும். சூது கவ்வும் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'சூது கவ்வும்' பெரும் வசூலை அள்ளிக் குவித்தது. அடுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருக்கு காதலும் கடந்து போகும் வாய்ப்பை கொடுத்தார். இன்றைய தலைமுறைக்கு சூது கவ்வும் பொருந்தி போகும். பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த படம் ரீரிலீஸ் ஆகிறது. தயாரிப்பாளர் சி.வி.குமார் இதை நடிகரும் தயாரிப்பாளரும் ஆன அருண்பாண்டியனுக்கு இந்தப் படத்தை விற்று விட்டார். அருண்பாண்டியன் தான் 'சூது கவ்வும்' படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் பாண்டியனின் மாப்பிள்ளை அசோக் செல்வனும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!
2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்'. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியதும் இந்தப் படம் தான். இவ்வளவு வருடங்கள் கழித்து 'சூது கவ்வும்' ரீரிலீஸ் ஆகிறது. அதை அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மறுபடியும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள். சூது கவ்வும் வெவ்வேறு திசைகளில் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர்கள் ஒன்று கூடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதியோடு அந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த் இவர்களோடு இயக்குநர் நலன் குமாரசாமியும் கலந்து கொண்டார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் 'சூது கவ்வும்' அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிரிப்பும், களிப்பும், சந்தோஷமுமாக அவர்கள் சந்திப்பு நடந்து முடிந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பாரதியாரின் வரிகளில் வரும் புகழ்பெற்ற சொற்றொடர் தான் இது. இறுதியில் தர்மம் வெல்லும் என்பதுதான் இதன் அடிப்படை. நாளைய இயக்குநர் என்ற தொலைக்காட்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமிக்கு இந்தப் படம் பெரும் அறிமுகத்தை பெற்று தந்தது. அடுத்து வெளிவந்த 'காதலும் கடந்து போகும்' இன்றும் வலைத்தளங்களில் கொண்டாடப்படும் படமாக இருக்கும். சூது கவ்வும் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'சூது கவ்வும்' பெரும் வசூலை அள்ளிக் குவித்தது. அடுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருக்கு காதலும் கடந்து போகும் வாய்ப்பை கொடுத்தார். இன்றைய தலைமுறைக்கு சூது கவ்வும் பொருந்தி போகும். பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த படம் ரீரிலீஸ் ஆகிறது. தயாரிப்பாளர் சி.வி.குமார் இதை நடிகரும் தயாரிப்பாளரும் ஆன அருண்பாண்டியனுக்கு இந்தப் படத்தை விற்று விட்டார். அருண்பாண்டியன் தான் 'சூது கவ்வும்' படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் பாண்டியனின் மாப்பிள்ளை அசோக் செல்வனும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டாமுத்தூர் மக்களுக்கு ஈஷா சார்பில் வழங்கப்பட்ட இலவச தகன சேவை
ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை.இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியுடன் இணைந்து செயல்படுத்துகிறது. கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‘இலவச தகன சேவை’ தொடங்கப்பட்டு உள்ளது. ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் […] The post தொண்டாமுத்தூர் மக்களுக்கு ஈஷா சார்பில் வழங்கப்பட்ட இலவச தகன சேவை appeared first on Tamil Behind Talkies .
அவர் வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால்.!- தனுஷ் குறித்து மிருணாள் தாகூர்
நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் சமீபத்தில் 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த மிருணாள் தாகூர், யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். மிருணாள் தாகூர் - தனுஷ் இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், தனுஷ் சாரின் 'ராயன்', 'மாரி', 'ராஞ்சனா', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களை பார்த்த பின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன். குறிப்பாக 'அசுரன்' படத்தை பல முறை கூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. மேலும், அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல விஷயங்களை செய்கிறார். 'Tere Ishk Mein' படப்பிடிப்பில் அவரை சந்தித்த போது நான் தயங்கியபடி 'சார் Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்து கொள்ள முடியுமா' என்று கேட்டேன். மிருணாள் தாகூர் அவர் வருவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் தன்மையானவர். அவருடன் என்றாவது இணைந்து நடிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
``'சூது கவ்வும்'வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப.. - சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ்
தமிழ் சினிமாவில் 'சூது கவ்வும்' படத்திற்கு தனி இடமுண்டு. அதற்கு முன் டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாக்கி மனதை கொள்ளை கொண்ட பெருமை 'சூது கவ்வும்’ படத்திற்கு உண்டு. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான இப்படத்தின் வசனங்கள் காமெடி அதகளம் செய்திருக்கின்றன.. ''சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!'', ''இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!'' போன்ற டயலாக்குகள் இப்போதும் மீம்ஸ்களில் உலா வருகின்றன. சூது கவ்வும் படத்தில் இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் 'சூது கவ்வும்' படத்தின் நாயகியான சஞ்சிதா ஷெட்டியிடம் பேசினோம். இந்த படத்தில் ஹீரோவை 'மாமா... மாமா...’ என்று கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரித்தவர் சஞ்சிதா ஷெட்டி. ''தமிழ்ல என்னோட மூணாவது படமாக 'சூது கவ்வும்' வந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துல இருந்து இயக்குநர் நலன் சார்கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. என்னோட ரோல் பத்தி சொன்னாங்க. ஆடிஷனுக்காக நான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தேன். லுக் டெஸ்ட்லேயே நான் தேர்வாகிட்டேன். அவரால தான் இந்தப்படம் எனக்கு கிடைச்சது. இன்னிக்கு நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். இப்ப உள்ள ஜென் z கிட்ஸ் ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க. பாபிசிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக்னு படத்துல நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அத்தனை பேருக்குமே நலன் சார் கதாபாத்திரத்துல முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஒவ்வொருத்தரின் கேரக்டருமே தனித்துவமா இருக்கும். ஏன்னா, ஹீரோ, ஹீரோயின்கள் எப்பவுமே ஹைலைட் ஆகிடுவாங்க. மத்த சக நடிகர்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவமான கதாபாத்திரம் ஒரு படத்துல அமையறது மேஜிக் தான். அது 'சூது கவ்வும்'ல இயல்பாகவே அமைஞ்சிடுச்சு. சஞ்சிதா ஷெட்டி நேத்து இந்த படத்தோட ரீயூனியன் நடந்தது. நலன் சார், விஜய்சேதுபதி, கருணாகரன், அசோக்செல்வன், பாபிசிம்ஹா, ரமேஷ்திலக்னு பலரும் இருந்தாங்க. காலேஜ் படிச்சிட்டு அதன் பிறகு 10 வருஷத்துக்கு பிறகு ரீ யூனியன் ஆனா, எப்படி ஒரு ஃபீல் இருக்குமோ அப்படி எல்லோரும் உணர்ந்தோம். 'சஞ்சிதா எப்பவும் ஃபிட் தான். இப்பவும் அப்படியே இருக்கீங்க'னு எல்லோரும் சொன்னது சந்தோஷமா இருந்தது. ரொம்ப வருஷத்துக்கு பிறகு எல்லோரும் சந்திச்சதால நிறைய பேசினோம். அசோக் செல்வனுடன் 'பீட்சா2'விலும் நடிச்சிருக்கேன். அருண் பாண்டியன் சாருடன் சேர்த்து அசோக்கையும் சந்திச்சது சந்தோஷம் சஞ்சிதா ஷெட்டி இன்னிக்கு விஜய் சாரோட 'கில்லி' படமும் ரீ ரிலீஸ் ஆகியிருக்குது. ஒரு டைம்ல ஹிட் ஆன படங்கள் இப்ப மறுபடியும் ரீ ரிலீஸ் ஆகுறது நல்ல விஷயம் தான். இப்ப ஓடிடி வந்த பிறகு ஒரு சிலர் வீடுகள்ல ஹோம் தியேட்டர்ல படங்களை பார்க்குறாங்க. இந்த தலைமுறையினர் மொபைல் போன்ல பார்க்குறாங்க. ஆனாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை அவங்க மிஸ் பண்ணலாம். இன்னிக்கு நான் 'சூது கவ்வும்' படத்தை தியேட்டர்ல பார்க்கும் போது தியேட்டர் ஹவுஸ் ஃபுல்லா இருந்தது. ஜனங்களோடு சேர்ந்து படம் பார்க்கும் போது அந்த உற்சாகமே தனிதான். ரீரிலீஸ் படங்களைப் பொறுத்தவரையில் அந்தப் படம் வெளியான வருஷத்துல பெரிய டிரெண்ட் ஆகியிருக்கும். சூப்பர் ஹிட் , வசூல் எல்லாம் கிடைச்சிருக்கும். அதுல நடிச்சவங்க இப்ப ஸ்டார்கள் ஆகியிருப்பாங்க. பெயரும், புகழும் அமைஞ்சிருக்கும். அப்படி படங்களை இப்ப ரீரிலிஸ் பண்றதன் ஒரே நோக்கம், இந்த தலைமுறையினர் பார்த்து ரசிக்கணும் என்பதற்காகத்தான். பத்து வருஷத்துக்கு முன்னர் வெளியான படங்களை இப்ப மறுபடியும் பார்க்கும் போது ஃப்ரெஷ்ஷான ஒரு புதுப்படத்தை பார்க்கும் உணர்வை நமக்கும் கொடுக்கும். இப்படி ஒரு கலகலப்பான ஒரு ஜானரும் அவங்களையும் கவர்ந்திழுக்கும்.'' என்கிற சஞ்சிதா ஷெட்டி, இப்போது அமீர், சத்யா (ஆர்யா தம்பி) நடிக்கும் 'மாயவலை' மற்றும் பிரபுதேவாவுடன் ஒரு அனிமேஷன் படம் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
``'சூது கவ்வும்'வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப.. - சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ்
தமிழ் சினிமாவில் 'சூது கவ்வும்' படத்திற்கு தனி இடமுண்டு. அதற்கு முன் டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாக்கி மனதை கொள்ளை கொண்ட பெருமை 'சூது கவ்வும்’ படத்திற்கு உண்டு. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான இப்படத்தின் வசனங்கள் காமெடி அதகளம் செய்திருக்கின்றன.. ''சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!'', ''இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!'' போன்ற டயலாக்குகள் இப்போதும் மீம்ஸ்களில் உலா வருகின்றன. சூது கவ்வும் படத்தில் இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் 'சூது கவ்வும்' படத்தின் நாயகியான சஞ்சிதா ஷெட்டியிடம் பேசினோம். இந்த படத்தில் ஹீரோவை 'மாமா... மாமா...’ என்று கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரித்தவர் சஞ்சிதா ஷெட்டி. ''தமிழ்ல என்னோட மூணாவது படமாக 'சூது கவ்வும்' வந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துல இருந்து இயக்குநர் நலன் சார்கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. என்னோட ரோல் பத்தி சொன்னாங்க. ஆடிஷனுக்காக நான் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தேன். லுக் டெஸ்ட்லேயே நான் தேர்வாகிட்டேன். அவரால தான் இந்தப்படம் எனக்கு கிடைச்சது. இன்னிக்கு நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். இப்ப உள்ள ஜென் z கிட்ஸ் ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க. பாபிசிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக்னு படத்துல நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அத்தனை பேருக்குமே நலன் சார் கதாபாத்திரத்துல முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஒவ்வொருத்தரின் கேரக்டருமே தனித்துவமா இருக்கும். ஏன்னா, ஹீரோ, ஹீரோயின்கள் எப்பவுமே ஹைலைட் ஆகிடுவாங்க. மத்த சக நடிகர்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவமான கதாபாத்திரம் ஒரு படத்துல அமையறது மேஜிக் தான். அது 'சூது கவ்வும்'ல இயல்பாகவே அமைஞ்சிடுச்சு. சஞ்சிதா ஷெட்டி நேத்து இந்த படத்தோட ரீயூனியன் நடந்தது. நலன் சார், விஜய்சேதுபதி, கருணாகரன், அசோக்செல்வன், பாபிசிம்ஹா, ரமேஷ்திலக்னு பலரும் இருந்தாங்க. காலேஜ் படிச்சிட்டு அதன் பிறகு 10 வருஷத்துக்கு பிறகு ரீ யூனியன் ஆனா, எப்படி ஒரு ஃபீல் இருக்குமோ அப்படி எல்லோரும் உணர்ந்தோம். 'சஞ்சிதா எப்பவும் ஃபிட் தான். இப்பவும் அப்படியே இருக்கீங்க'னு எல்லோரும் சொன்னது சந்தோஷமா இருந்தது. ரொம்ப வருஷத்துக்கு பிறகு எல்லோரும் சந்திச்சதால நிறைய பேசினோம். அசோக் செல்வனுடன் 'பீட்சா2'விலும் நடிச்சிருக்கேன். அருண் பாண்டியன் சாருடன் சேர்த்து அசோக்கையும் சந்திச்சது சந்தோஷம் சஞ்சிதா ஷெட்டி இன்னிக்கு விஜய் சாரோட 'கில்லி' படமும் ரீ ரிலீஸ் ஆகியிருக்குது. ஒரு டைம்ல ஹிட் ஆன படங்கள் இப்ப மறுபடியும் ரீ ரிலீஸ் ஆகுறது நல்ல விஷயம் தான். இப்ப ஓடிடி வந்த பிறகு ஒரு சிலர் வீடுகள்ல ஹோம் தியேட்டர்ல படங்களை பார்க்குறாங்க. இந்த தலைமுறையினர் மொபைல் போன்ல பார்க்குறாங்க. ஆனாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை அவங்க மிஸ் பண்ணலாம். இன்னிக்கு நான் 'சூது கவ்வும்' படத்தை தியேட்டர்ல பார்க்கும் போது தியேட்டர் ஹவுஸ் ஃபுல்லா இருந்தது. ஜனங்களோடு சேர்ந்து படம் பார்க்கும் போது அந்த உற்சாகமே தனிதான். ரீரிலீஸ் படங்களைப் பொறுத்தவரையில் அந்தப் படம் வெளியான வருஷத்துல பெரிய டிரெண்ட் ஆகியிருக்கும். சூப்பர் ஹிட் , வசூல் எல்லாம் கிடைச்சிருக்கும். அதுல நடிச்சவங்க இப்ப ஸ்டார்கள் ஆகியிருப்பாங்க. பெயரும், புகழும் அமைஞ்சிருக்கும். அப்படி படங்களை இப்ப ரீரிலிஸ் பண்றதன் ஒரே நோக்கம், இந்த தலைமுறையினர் பார்த்து ரசிக்கணும் என்பதற்காகத்தான். பத்து வருஷத்துக்கு முன்னர் வெளியான படங்களை இப்ப மறுபடியும் பார்க்கும் போது ஃப்ரெஷ்ஷான ஒரு புதுப்படத்தை பார்க்கும் உணர்வை நமக்கும் கொடுக்கும். இப்படி ஒரு கலகலப்பான ஒரு ஜானரும் அவங்களையும் கவர்ந்திழுக்கும்.'' என்கிற சஞ்சிதா ஷெட்டி, இப்போது அமீர், சத்யா (ஆர்யா தம்பி) நடிக்கும் 'மாயவலை' மற்றும் பிரபுதேவாவுடன் ஒரு அனிமேஷன் படம் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!
``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார். இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம்: மற்ற நடிகர்களைப் பற்றியோ நடிகைகளைப் பற்றியோ அநாவசியமாக `கமென்ட்' அடிக்க மாட்டார். ஏன், வாயையே திறக்க மாட்டார். ஒரு முறை பில்லா' ஷூட்டிங்கின் போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வேண்டுமென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன். ஊம்! மூச்..! என் பேச்சை லாகவமாக இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம் சிரித்துக் கொண்டே வேறு எதைப் பற்றியோ எனக்கு சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார். rajini kamal சில நடிகர்கள் நடிக்க செட்டுக்குள் வந்துவிட்டால் பேசுவதற்கு அல்லது பக்கத்து செட்டுக்கு என்று வெளியே போய் விடுவார்கள். ஆனால் ரஜினி அப்படியல்ல! நீங்கள் போகலாம் என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் நகருகிறார். நாம் முன்பு எப்படி இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எந்த முடிவு எடுப்பதானாலும் நிதானமாக - நன்கு யோசித்துத் தான் முடிவெடுப்பார்... கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கத் தன் சொந்தக் காரியங்களைச் செய்யமாட்டார். விகடன் 7.12.1980 இதழில் நிருபர் பாலா என்பவர் ரஜினி குறித்து இதை எழுதியிருக்கிறார். சூப்பர் ஸ்டார்-ன் ரகசியம் என்றும் மாறாத குணம் அன்று அவர் எழுதிய வரிகள், 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே பொருந்துவதுதான் சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் ரகசியம். அன்று 'பில்லா' ரஜினியாக இருந்தவர், இன்று 'வேட்டையன்' தாண்டி 'கூலி' வரை வந்துவிட்டாலும், சில குணங்கள் மாறவே இல்லை. அன்று செட்டில் வம்பு பேச மறுத்த அதே ரஜினிதான் இன்றும். சமகாலப் போட்டியாளராகக் கருதப்படும் கமல்ஹாசனைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையாகப் பேசியதில்லை. மாறாக, ஒவ்வொரு மேடையிலும் எனது அருமை நண்பர் கமல் என்றே தொடங்குவார். ரஜினி - கமல் KHxRK: ரஜினி - கமல் இணைந்து நடித்த படங்கள்! | Photo Album அன்று இருந்த அதே 'லாகவம்', இன்றும் அரசியல் அல்லது சினிமா சர்ச்சைகளின்போது ரஜினியிடம் வெளிப்படுகிறது. எதை உள்வாங்க வேண்டும், எதை அப்படியே விடவேண்டும் என்பதில் அவர் இன்னும் 'பக்கா'வாகவே இருக்கிறார். நீங்கள் போகலாம் என்று இயக்குநர் சொல்லும் வரை காத்திருக்கும் அந்த ஒழுக்கம்தான், இன்று லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்கள் வரை ரஜினியை வியந்து பாராட்ட வைக்கிறது. கமல் ஒரு 'சகலகலா வல்லவர்' என்பதால் படத்தின் ஒவ்வொரு துறையிலும் தன் பங்களிப்பை வழங்குவார். ஆனால் ரஜினி, தன்னை ஒரு 'இயக்குநரின் நடிகராக' (Director's Actor) இன்றும் நிலைநிறுத்திக்கொள்கிறார். எப்போது படம் பண்ண வேண்டும், யாரிடம் பண்ண வேண்டும் என்பதில் இன்றும் அவர் காட்டும் நிதானமே, நான்கு தலைமுறைகளைக் கடந்தும் அவரை முதலிடத்தில் வைத்திருக்கிறது. 1980-களில் ரஜினி - கமல் இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவெடுத்தபோது இருந்த அதே தெளிவு, இன்று மீண்டும் இணைய முடிவெடுக்கும் போதும் இருக்கிறது. அன்று மற்ற நடிகர்களைப் பற்றிப் பேசாத அதே பண்புதான், இன்று கமல் தயாரிப்பிலோ அல்லது கமல் Full-length ரோலில் வரும் படத்திலோ ரஜினி தயக்கமின்றி நடிக்கக் காரணமாக இருக்கிறது. rajini kamal கமல் தொழில்நுட்ப ரீதியாகப் படத்தைச் செதுக்கினால், ரஜினி அந்தப் படத்திற்குத் தேவையான 'மாஸ்' மற்றும் 'நிதானமான' நடிப்பை வழங்கி சமன் செய்வார். தன் பலம் என்ன, தன் நண்பனின் பலம் என்ன என்பதை உணர்ந்த இரண்டு மேதைகள் இணைவது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய அப்டேட்! KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!
செல்வத்திற்காக முத்து செய்த விஷயம், சீதாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் அருண் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, ரோகினியின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். உடனே சிந்தாமணி ஒளிந்து கொண்டார். அப்போது சத்யா, அக்கா- மாமா இருவரும் கிரிஷிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வீடியோ காலில் காண்பிக்க வந்தேன் என்றார். பின் வீடியோக்களில் முத்து-மீனா இருவரும் கிரிஷிடம் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு காண்கிறார். ரோகினின் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் கோபத்தில் விஜயா, மனோஜை […] The post செல்வத்திற்காக முத்து செய்த விஷயம், சீதாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் அருண் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
24 வருஷமா K. Balachander சாரோட பையனா..! - T. V. Varadarajan Interview | News Reader| Serial | Drama
24 வருஷமா K. Balachander சாரோட பையனா..! - T. V. Varadarajan Interview | News Reader| Serial | Drama
வெளிவந்த காமேஷ் பிச்சையின் சுயரூபம், அதிர்ச்சியில் உறைந்த தாமரை –பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, தாமரையை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக ரூமிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். காமேஷ் போன் சுவிட்ச் ஆப்பாக இருப்பதால் தாமரை ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். அப்போது வந்த தமிழ், தாமரையை மேடைக்கு அழைத்தார்கள் என்றார். இதனால் தாமரை-சாவித்ரி பதறுகிறார்கள். தாமரை மணமேடைக்கு சென்று புடவை வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து விட்டார். காமேஷ் பிச்சை ஃபோன் […] The post வெளிவந்த காமேஷ் பிச்சையின் சுயரூபம், அதிர்ச்சியில் உறைந்த தாமரை – பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
சரவணன் செய்த வேலையை பார்த்து ஷாக் ஆனா மீனா, தங்கமயிலுக்கு கிடைத்த வேலை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, தங்கமயிலுக்கு தைரியம் கொடுத்துவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், ராஜிக்கு பீஸ் கட்டி கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமாருக்கு நான் நல்ல பெண் பார்த்துவிட்டேன். நல்ல சம்மந்தம். சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அதுக்கு பின் செந்திலை சந்தித்த மீனா நடந்ததை எல்லாம் சொன்னார். இருந்தாலும் செந்தில், தங்கமயில் விஷயத்தில் தலையிடாதே […] The post சரவணன் செய்த வேலையை பார்த்து ஷாக் ஆனா மீனா, தங்கமயிலுக்கு கிடைத்த வேலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, அன்புடன், அன்புள்ள ரஜினிகாந்த், ஆளுக்கு ஒரு ஆசை, ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, உளவுத்துறை, என் ராசாவின் மனசினிலே, எஜமான் ,ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர்...
நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இவதான் என்ன பழிவாங்க அப்பாவுக்கு விஷத்தை குடுத்துருப்பா என்று சொல்ல, என் மேல பழி போடாதீங்க கருப்பசாமி...
KH x RK: ரஜினி கமலின் `12-07'சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அறுபது வயதில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று முதல்வரானார். நடிகர் திலகம் சிவாஜி, அறுபது வயதுக்குப் பிறகு சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்போது 75 வயது. இப்போதும் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்துகொண்டு மிரட்டுகிறார். மறுபக்கம், உலக நாயகன் கமல் தனித்தன்மை இழக்காமல் தனி ரூட்டில் கலக்குகிறார். தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா, ஏன் இந்திய சினிமாவின் இரு துருவங்கள் இணையும் திரைப்படம் குறித்து தான் இப்போது எங்கும் பேச்சு. அந்தப்படத்தின் அதிரடி ப்ரமோ நாளை வெளிவர இருக்கிறது. ரஜினி - கமல் கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த ப்ரமோவை, இதுவரை எதிலும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் நெல்சன். நாளை 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களின் இதயங்கள் இறக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. அது சரி, அதென்ன 12:07 மணிக்கு வெளியீடு? ரஜினி பிறந்த 12-ஆம் தேதியையும், கமல் பிறந்த 7ஆம் தேதியையும் சென்டிமென்டாகச் சேர்த்திருக்கின்றனர். ஒரு நிமிடத்துக்குள் ஓடும் ப்ரமோவில் முதலில் நெல்சனும் அனிருத்தும் பேசுகிறார்கள். அடுத்து ரஜினியின் டயலாக், அதன்பிறகு வாய்ஸ் ஓவரில் கமல் வருகிறார். ரஜினி - கமல் வழக்கமாக ரஜினி படங்கள் பிற மொழிகளிலும் வெளியாகும். அப்போது தெலுங்கு மொழியில் பாடகர் மனோ பின்னணிக் குரல் கொடுப்பார். அதுபோல இந்தி மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பது வழக்கம். இந்த ப்ரமோவிலும் தமிழில் ரஜினி வசனம் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். தெலுங்கு, இந்திக்கு பிறர் குரல் கொடுத்திருந்தனர். இடையில் ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மறுநாள் திடீரென்று டப்பிங் தியேட்டரில் இருந்த நெல்சனுக்கு, இப்போ நான் அங்க வர்றேன் என்று போன் செய்திருக்கிறார். என்னவோ ஏதோ என்று பதட்டத்தில் இருந்த நெல்சனின் தோள்மேல் கை போட்டு, கூலாக்கியிருக்கிறார். அதன்பிறகு, 21ஆம் தேதி 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவில், தானே சொந்தக் குரலில் தெலுங்கு, இந்தி மொழிகளில் பேசி அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினி, கமல் போட்டிக்குப் பிறகு விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன், ஒரு பக்கம் டி. ராஜேந்தர், மறுபக்கம் கே. பாக்யராஜ், ராஜ்கிரண், பிரசாந்த், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விஜய சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன், கவின் என்று ஏகப்பட்ட தலைமுறைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டனர். கடந்த 50 ஆண்டுகளைத் தாண்டியும் ரஜினி, கமல் படங்களுக்கான மாஸ் என்பது மரண மாஸ்தான் என்று நிரூபித்துக்காட்ட இருவரும் தயாராகிவிட்டனர்.
KH x RK: ரஜினி கமலின் `12-07'சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அறுபது வயதில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று முதல்வரானார். நடிகர் திலகம் சிவாஜி, அறுபது வயதுக்குப் பிறகு சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்போது 75 வயது. இப்போதும் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்துகொண்டு மிரட்டுகிறார். மறுபக்கம், உலக நாயகன் கமல் தனித்தன்மை இழக்காமல் தனி ரூட்டில் கலக்குகிறார். தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா, ஏன் இந்திய சினிமாவின் இரு துருவங்கள் இணையும் திரைப்படம் குறித்து தான் இப்போது எங்கும் பேச்சு. அந்தப்படத்தின் அதிரடி ப்ரமோ நாளை வெளிவர இருக்கிறது. ரஜினி - கமல் கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த ப்ரமோவை, இதுவரை எதிலும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் நெல்சன். நாளை 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களின் இதயங்கள் இறக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. அது சரி, அதென்ன 12:07 மணிக்கு வெளியீடு? ரஜினி பிறந்த 12-ஆம் தேதியையும், கமல் பிறந்த 7ஆம் தேதியையும் சென்டிமென்டாகச் சேர்த்திருக்கின்றனர். ஒரு நிமிடத்துக்குள் ஓடும் ப்ரமோவில் முதலில் நெல்சனும் அனிருத்தும் பேசுகிறார்கள். அடுத்து ரஜினியின் டயலாக், அதன்பிறகு வாய்ஸ் ஓவரில் கமல் வருகிறார். ரஜினி - கமல் வழக்கமாக ரஜினி படங்கள் பிற மொழிகளிலும் வெளியாகும். அப்போது தெலுங்கு மொழியில் பாடகர் மனோ பின்னணிக் குரல் கொடுப்பார். அதுபோல இந்தி மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பது வழக்கம். இந்த ப்ரமோவிலும் தமிழில் ரஜினி வசனம் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். தெலுங்கு, இந்திக்கு பிறர் குரல் கொடுத்திருந்தனர். இடையில் ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மறுநாள் திடீரென்று டப்பிங் தியேட்டரில் இருந்த நெல்சனுக்கு, இப்போ நான் அங்க வர்றேன் என்று போன் செய்திருக்கிறார். என்னவோ ஏதோ என்று பதட்டத்தில் இருந்த நெல்சனின் தோள்மேல் கை போட்டு, கூலாக்கியிருக்கிறார். அதன்பிறகு, 21ஆம் தேதி 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவில், தானே சொந்தக் குரலில் தெலுங்கு, இந்தி மொழிகளில் பேசி அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினி, கமல் போட்டிக்குப் பிறகு விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன், ஒரு பக்கம் டி. ராஜேந்தர், மறுபக்கம் கே. பாக்யராஜ், ராஜ்கிரண், பிரசாந்த், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விஜய சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன், கவின் என்று ஏகப்பட்ட தலைமுறைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டனர். கடந்த 50 ஆண்டுகளைத் தாண்டியும் ரஜினி, கமல் படங்களுக்கான மாஸ் என்பது மரண மாஸ்தான் என்று நிரூபித்துக்காட்ட இருவரும் தயாராகிவிட்டனர்.
Second Case of Seetharam Trailer [Tamil]
விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’செய்தி –விரைவில் ‘ஜனநாயகன்’ரிலீஸ்..?
விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த சென்சார் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கான சென்சார் வழக்கை ஜனநாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக...
கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!
கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அரசன் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அரசன் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறாரார் சிம்பு. அதாவது ஏ.ஐ. குறித்து படிக்கச் சென்றிருக்கிறார். தன்னை அப்டேட் செய்து கொள்ள சிம்பு அமெரிக்காவுக்கு சென்றது பற்றி அவர்...
“அஜித் படத்தில் இணையும் மோகன்லால்”
“அஜித் படத்தில் இணையும் மோகன்லால்” அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத்...
தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி
தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ், தெலுங்கில் உருவான ‘தோழா’ படத்தில் நடித்துள்ள அவருக்குத் தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில் ‘ஹிட் 4’ என்ற படத்தை...
தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி
தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ், தெலுங்கில் உருவான ‘தோழா’ படத்தில் நடித்துள்ள அவருக்குத் தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில் ‘ஹிட் 4’ என்ற படத்தை...
பாண்டியன் விஷயத்தில் வானதி பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அய்யனார் வீட்டை வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நடேசன் அண்ணன் பார்த்தார். அதற்குள் நிலா- சோழன் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். நடேசன் அண்ணன் கிளம்பியுடன் நிலா-சோழன் அங்கிருந்து எப்படியோ வந்து விட்டார்கள். பின் ஹோட்டலுக்கு வந்த நிலா, உயில் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். பின் எல்லோரும் தூங்கி இருப்பதால் நிலா- சோழன் இருவரும் ஒரே ரூமில் தங்கிக் கொண்டார்கள். நிலா-சோழன் இருவரும் தாங்கள் […] The post பாண்டியன் விஷயத்தில் வானதி பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி...
நடிகர் தனுஷ் குறித்து மனம் திறந்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார் தற்போது தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் சாரை Threishkmein படப்பிடிப்பிலிருந்தபோது, சர்தார் 2...
Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind Creations
ரோட்டில் சாரதாவை பார்த்த அன்பரசு, விஜய்யின் தாத்தா எடுத்த முடிவு –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் தன்னுடைய மகளை பள்ளியில் விட்டு சென்று விட்டார். அம்மு அழுது கொண்டே இருந்தார். அப்போது வந்த காவேரி, அம்முவிற்கு ஆறுதல் சொல்லி நான்தான் உனக்கு கிளாஸ் டீச்சர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இன்னொரு பக்கம் விஜய், தன் மகள் எப்படி இருப்பாள் என்று கவலையில் இருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த காவிரி, அம்முவுடன் பேசியதை பற்றி எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். விஜய் […] The post ரோட்டில் சாரதாவை பார்த்த அன்பரசு, விஜய்யின் தாத்தா எடுத்த முடிவு – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
My Lord: அயோத்தி-க்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில்.!- பாராட்டிய இயக்குநர் ராம்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது. 'மை லார்ட்' அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் 'மை லார்ட்'. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது. சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்தப் படம் பேசுகிறது. அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகுமார் அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது. மை லார்ட்' படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும், அதில் நடித்த சசிகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
My Lord: அயோத்தி-க்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில்.!- பாராட்டிய இயக்குநர் ராம்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது. 'மை லார்ட்' அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் 'மை லார்ட்'. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது. சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்தப் படம் பேசுகிறது. அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகுமார் அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது. மை லார்ட்' படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும், அதில் நடித்த சசிகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
விஜய் இத பண்ணட்டும் நான் கேள்வி கேட்பதை நிறுத்துகிறேன் –நடிகை வினோதினி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வினோதினி வைத்தியநாதன். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் காமெடி ரோல் மட்டுமில்லாமல் வில்லியை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த ஆண்டு தான் இவர் […] The post விஜய் இத பண்ணட்டும் நான் கேள்வி கேட்பதை நிறுத்துகிறேன் – நடிகை வினோதினி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
Rajini - Kamal Movie அன்றே சொன்ன ரஜினி! | Cinema Vikatan | Award Videos
என் தங்கச்சி Judge-ஆ இருந்த Showல என்னை Insult பண்ற மாதிரி பேசுனாங்க! - Actress Ambika | RedCarpet
என் தங்கச்சி Judge-ஆ இருந்த Showல என்னை Insult பண்ற மாதிரி பேசுனாங்க! - Actress Ambika | RedCarpet
முதல் நாள் கலெக்ஷனை மட்டும் பார்க்க கூடாது, ஆனால் –மை லார்ட் சக்ஸஸ் மீட்டில் சசிகுமார் சொன்னது
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் […] The post முதல் நாள் கலெக்ஷனை மட்டும் பார்க்க கூடாது, ஆனால் – மை லார்ட் சக்ஸஸ் மீட்டில் சசிகுமார் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
என் பொண்ணு உடலை எரிச்சதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு - Actress Prathyusha Mother Breaking பேட்டி?
Naslen: தமிழ் அறிமுகம்; சூர்யா, மம்மூட்டி, ஃபகத் பாசிலுடன் கைகோக்கும் நஸ்லென் - அதிரடி லைன் அப்!
மலையாளத்தில் இப்போது இளம் பட்டாளங்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நஸ்லென், மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன், மேத்யூ தாமஸ், சந்தீப் எனப் பலரை இந்தப் பட்டியலில் குறிப்பிடலாம். நஸ்லென் கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். அப்படத்திற்கான வேலைகளில்தான் இப்போது அவர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். Naslen - Lineup Movies 'ப்ரேமலு' திரைப்படம் அவருக்கு நீண்ட பயணத்திற்கான கதவுகளையும் திறந்து வைத்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது மலையாள சினிமாவின் அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் கைகோத்து நடித்துக் கொண்டிருக்கிறார் நஸ்லென். அவருடைய லைன் அப்பில் என்னென்ன படங்களை வைத்திருக்கிறார் எனப் பார்ப்போமா... அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மாலிவுட் டைம்ஸ்' திரைப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தை இயக்குநர் அபிநவ் சுந்தர் நாயக் இயக்கியிருக்கிறார். 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இவர். மலையாள சினிமாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக இத்திரைப்படம் இருக்கும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிஃப் அலி, வமிக்கா கேபி ஆகியோருடன் நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடிக்கும் 'டிகி டக்' திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை மல்லுவுட் இயக்குநர் ரோஹித் வி.எஸ்.இயக்கி வருகிறார். 'சௌதி வெள்ளக்கா', 'துடரும்' படங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பதித்தவர் இயக்குநர் தருண் மூர்த்தி. 'துடரும்' படத்தை முடித்தக் கையோடு அவருடைய அடுத்தத் திரைப்படத்திற்கான வேலைகளில் அவர் இறங்கிவிட்டார். Naslen தற்போது ஃபகத் பாசில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 'டார்பிடோ (Torpedo)' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நஸ்லெனும் முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும், 'ஆவேஷம்' இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் தமிழ், மலையாளம் என பைலிங்குவல் படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பைலிங்குவல் திரைப்படம் என்பது உறுதியால், இப்படம்தான் நஸ்லென் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம். இவையனைத்தையும் தொடர்ந்து, 'தள்ளுமாலா', 'ஆலப்புழா ஜிம்கானா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்திலும் நஸ்லென் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post சன் டிவியை ஓரம் கட்டி டாப் கியரில் செல்லும் விஜய் டிவி சீரியல்கள் – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
அவரின் கதைகளை டைரக்ட் செய்ய விரும்புறேன்! - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா
'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர். 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர். suresh sangaiah 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா. `` என்னோட கல்யாணத்துல இருந்து தொடங்குறேன். கல்யாணத்துக்காக என்னை அவர் (சுரேஷ் சங்கையா) பெண் பார்க்க வந்திருந்தார். எங்களது அரேஞ்சுடு மேரேஜ். எங்க அண்ணன் சினிமாவில் நடிக்கணும் விரும்பினார். நிறைய கதைகள் எழுதி வச்சிருந்தார். அதனால எனக்கும் சினிமாவுல பணிபுரியும் ஆர்வம் இருந்தது. இதை அவர்கிட்ட சொன்னதும் 'புத்தகங்கள் நிறைய படி. நாம பார்க்கற கிராமங்கள் வேற.. வாசிப்பில் உள்ள உலகம் வேறு..'னு சொல்லி புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவரும் புத்தகங்கள் நிறைய படிக்கிறவர். எங்க வீட்டுல அவ்வளவு புக்ஸ் இருக்குது. சுரேஷ் சார் (கணவர்) அவரோட படங்களின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் பார்க்க போகும் போது கூடவே என்னையும் அழைச்சிட்டு போவார். அவரோட கதை விவாதங்கள்ல என்னையும் கலந்துக்க வைப்பார். என் கருத்துக்களையும் அலசுவார். அவர் ஸ்கிர்ப்டை என்கிட்ட விவாதிப்பார். அந்த கதைகளை எல்லாம் நான் டைப்பிங் செய்வேன். இப்படி அவரோட பயணிச்சதுல 'சத்திய சோதனை' படத்துல இருந்து என்னை அவர் உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டார். படப்பிடிப்பு அனுபவமும் தெரிஞ்சுக்க வச்சார். கெணத்த காணோம் 'கெணத்த காணோம்' கதையை மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர் ரெடி பண்ணிட்டார். ஆனா, உடனடியாக தயாரிப்பாளர் கிடைக்கல. அதன் பிறகே தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு சார், ஜெகன் சார் வந்தாங்க. பொதுவாகவே அவர் பெரிய ஹீரோக்களை அணுக மாட்டார். தன்னோட கதைக்கு யார் பொருத்தமாக இருப்பாங்களோ அவங்களதான் தேர்வு செய்வார். மத்த கேரக்டர்களுக்கும் அந்த கதை மாந்தர்களுக்கான முகச்சாயல் கொண்டவங்களை தான் பயன்படுத்துவார். ஸ்கிரிப்ட்ல லாஜிக் இல்லைனு சொல்லிடக்கூடாது. கிராமத்து மனிதர்களோட வாழ்வு எப்படி இருக்குமோ அப்படிதான் காட்சிகளும் இருக்கணும் என்பதுல உறுதியா இருப்பார். சுரேஷ் சங்கையா ஃபேமிலி இந்த கதைக்கு யோகிபாபு சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவரை நடிக்க வைக்க விரும்பினோம். ஆனா, ஒரு வருஷத்துக்கு அவரோட கால்ஷீட் ஃபுல்னால, அவருக்காக டைரக்டரும் காத்திருந்தார். சுரேஷ் சார், 'காக்கா முட்டை' படத்துல உதவி இயக்குநராக இருந்த போதிலிருந்து யோகி பாபு சாரை தெரியும்ங்கறதல ரெண்டு பேருமே படத்தை சிறப்பா கொண்டு வர்றதுல உறுதியா இருந்தாங்க. அருப்புக்கோட்டை பக்கம் உள்ள கிராமங்கள்ல தான் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்ஸிற்காக ரொம்ப மெனக்கிட்டிருக்காங்க. கிராமத்துல குடிக்க தண்ணீர் வசதி இல்லைனா, அந்த கிராமத்து மக்கள் எப்படி பாதிப்படையறாங்க. கிராமத்துக்கு தண்ணி வசதி வந்ததா..? இப்படி சமூக அக்கறையோடு இந்த கதையை எழுதியிருக்காங்க. இந்த படம் முடியற தருவாயில் தான் அவருக்கு உடல்நலமில்லாமல் போச்சு. அவர் இறப்பிலிருந்து ரொம்பவே சிரமப்பட்டுத்தான் நான் மீண்டிருக்கேன். அதனால போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது என்னால இருக்க முடியல. இப்ப படம் நல்ல முறையில் வந்திருக்கறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நான் விவசாயத்துல டிகிரி படிச்சிருக்கேன். அவர் எங்கே போனாலும் என்னையும் கூடவே அழைச்சிட்டு போவார். நிறைய கதைகள் எழுதி வச்சிருக்கார். அதையெல்லாம் யார்கிட்டேயும் கொடுக்காமல், நானே இயக்கணும்னு விரும்புறேன். அவரோட கதையை நான் டைரக்ட் பண்ணும் போது என்கூட அவரும் இருக்கறா உணர்வேன். மகள் ஆதிரா ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறார். மகன் ஆருத்ராவுக்கு ஒரு வயசு ஆகுது. அடுத்த வருஷம் நான் பெரிய இயக்குநர்கள்கிட்ட ஒரு படம் பணியாற்றிவிட்டு, கணவரோட கதைகளை படமாக்குறதுல கவனம் செலுத்தப் போறேன். 'மண்டேலா' படத்துல யோகிபாபு சாருக்கு ஒரு பெரிய பெயர் கிடைச்சது மாதிரி 'கெணத்த காணோம்'ல அவருக்கு நல்ல பெயர் அமையும்னு நம்புறேன்'' என்கிறார் தனிஷ் பாத்திமா.
அவரின் கதைகளை டைரக்ட் செய்ய விரும்புறேன்! - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா
'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர். 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர். suresh sangaiah 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா. `` என்னோட கல்யாணத்துல இருந்து தொடங்குறேன். கல்யாணத்துக்காக என்னை அவர் (சுரேஷ் சங்கையா) பெண் பார்க்க வந்திருந்தார். எங்களது அரேஞ்சுடு மேரேஜ். எங்க அண்ணன் சினிமாவில் நடிக்கணும் விரும்பினார். நிறைய கதைகள் எழுதி வச்சிருந்தார். அதனால எனக்கும் சினிமாவுல பணிபுரியும் ஆர்வம் இருந்தது. இதை அவர்கிட்ட சொன்னதும் 'புத்தகங்கள் நிறைய படி. நாம பார்க்கற கிராமங்கள் வேற.. வாசிப்பில் உள்ள உலகம் வேறு..'னு சொல்லி புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவரும் புத்தகங்கள் நிறைய படிக்கிறவர். எங்க வீட்டுல அவ்வளவு புக்ஸ் இருக்குது. சுரேஷ் சார் (கணவர்) அவரோட படங்களின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் பார்க்க போகும் போது கூடவே என்னையும் அழைச்சிட்டு போவார். அவரோட கதை விவாதங்கள்ல என்னையும் கலந்துக்க வைப்பார். என் கருத்துக்களையும் அலசுவார். அவர் ஸ்கிர்ப்டை என்கிட்ட விவாதிப்பார். அந்த கதைகளை எல்லாம் நான் டைப்பிங் செய்வேன். இப்படி அவரோட பயணிச்சதுல 'சத்திய சோதனை' படத்துல இருந்து என்னை அவர் உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டார். படப்பிடிப்பு அனுபவமும் தெரிஞ்சுக்க வச்சார். கெணத்த காணோம் 'கெணத்த காணோம்' கதையை மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர் ரெடி பண்ணிட்டார். ஆனா, உடனடியாக தயாரிப்பாளர் கிடைக்கல. அதன் பிறகே தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு சார், ஜெகன் சார் வந்தாங்க. பொதுவாகவே அவர் பெரிய ஹீரோக்களை அணுக மாட்டார். தன்னோட கதைக்கு யார் பொருத்தமாக இருப்பாங்களோ அவங்களதான் தேர்வு செய்வார். மத்த கேரக்டர்களுக்கும் அந்த கதை மாந்தர்களுக்கான முகச்சாயல் கொண்டவங்களை தான் பயன்படுத்துவார். ஸ்கிரிப்ட்ல லாஜிக் இல்லைனு சொல்லிடக்கூடாது. கிராமத்து மனிதர்களோட வாழ்வு எப்படி இருக்குமோ அப்படிதான் காட்சிகளும் இருக்கணும் என்பதுல உறுதியா இருப்பார். சுரேஷ் சங்கையா ஃபேமிலி இந்த கதைக்கு யோகிபாபு சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவரை நடிக்க வைக்க விரும்பினோம். ஆனா, ஒரு வருஷத்துக்கு அவரோட கால்ஷீட் ஃபுல்னால, அவருக்காக டைரக்டரும் காத்திருந்தார். சுரேஷ் சார், 'காக்கா முட்டை' படத்துல உதவி இயக்குநராக இருந்த போதிலிருந்து யோகி பாபு சாரை தெரியும்ங்கறதல ரெண்டு பேருமே படத்தை சிறப்பா கொண்டு வர்றதுல உறுதியா இருந்தாங்க. அருப்புக்கோட்டை பக்கம் உள்ள கிராமங்கள்ல தான் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்ஸிற்காக ரொம்ப மெனக்கிட்டிருக்காங்க. கிராமத்துல குடிக்க தண்ணீர் வசதி இல்லைனா, அந்த கிராமத்து மக்கள் எப்படி பாதிப்படையறாங்க. கிராமத்துக்கு தண்ணி வசதி வந்ததா..? இப்படி சமூக அக்கறையோடு இந்த கதையை எழுதியிருக்காங்க. இந்த படம் முடியற தருவாயில் தான் அவருக்கு உடல்நலமில்லாமல் போச்சு. அவர் இறப்பிலிருந்து ரொம்பவே சிரமப்பட்டுத்தான் நான் மீண்டிருக்கேன். அதனால போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது என்னால இருக்க முடியல. இப்ப படம் நல்ல முறையில் வந்திருக்கறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நான் விவசாயத்துல டிகிரி படிச்சிருக்கேன். அவர் எங்கே போனாலும் என்னையும் கூடவே அழைச்சிட்டு போவார். நிறைய கதைகள் எழுதி வச்சிருக்கார். அதையெல்லாம் யார்கிட்டேயும் கொடுக்காமல், நானே இயக்கணும்னு விரும்புறேன். அவரோட கதையை நான் டைரக்ட் பண்ணும் போது என்கூட அவரும் இருக்கறா உணர்வேன். மகள் ஆதிரா ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறார். மகன் ஆருத்ராவுக்கு ஒரு வயசு ஆகுது. அடுத்த வருஷம் நான் பெரிய இயக்குநர்கள்கிட்ட ஒரு படம் பணியாற்றிவிட்டு, கணவரோட கதைகளை படமாக்குறதுல கவனம் செலுத்தப் போறேன். 'மண்டேலா' படத்துல யோகிபாபு சாருக்கு ஒரு பெரிய பெயர் கிடைச்சது மாதிரி 'கெணத்த காணோம்'ல அவருக்கு நல்ல பெயர் அமையும்னு நம்புறேன்'' என்கிறார் தனிஷ் பாத்திமா.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN
நிலாவை வீட்டை விட்டு போக சொல்லும் வானதி, பாண்டியன் எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் வீடு முழுக்க தேடினார். ஆனால், உயில் கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் நிலா, நன்றாக தேடுங்கள் என்று கத்துகிறாள். பின் ஒரு வழியாக ஓரிடத்தில் இருந்த பையைத் திறந்து சோழன் பார்த்தார். உயில் கிடைத்து விட்டது. இதை சோழன் சொன்னவுடன் நிலா சந்தோஷப்பட்டார். பின் சோழன் வெளியே வந்து விட்டார். இருவரும் வீட்டின் கீழே இறங்குகிறார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணன் அங்கு வந்தார். வீட்டை வீட்டை […] The post நிலாவை வீட்டை விட்டு போக சொல்லும் வானதி, பாண்டியன் எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
தாமரை கழுத்தில் தாலி கட்டியது யாரு? காமேஷ் பிச்சை செய்த வேலை –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்- சேது இருவரும் சந்தோஷமாக தாமரையை பற்றியும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.அதற்குப்பின் தாமரை வீட்டில் நடந்ததை பற்றி காமேஷிடம் சொன்னார். அதற்கு காமேஷ், நீ தயாராக இரு. நான் நல்ல ஒரு ஐடியா யோசிச்சிட்டு உன்னிடம் சொல்கிறேன் என்றார். அதற்கு பின் தாமரை பின் வாசல் வழியாக கிளம்பப் பார்த்தார். அங்கேயும் ஈஸ்வரி வந்து தடுத்து விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் தாமரை குழப்பத்தில் […] The post தாமரை கழுத்தில் தாலி கட்டியது யாரு? காமேஷ் பிச்சை செய்த வேலை – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
நடிகை ரெஜினா சினிமா பயணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்..!
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசட தபற, தலைவி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல்...
My Lord: முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால்.!- சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், ஒரு நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் நான் தைரியமாக இருந்தேன். My Lord ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பாக மக்களிடம் இன்னும் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது தற்போது நடந்திருக்கிறது, எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம்தான் எனக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது. அந்தப் படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில்தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்குக் கண்டிப்பாகப் போய் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும் ஒரு பெரிய வெற்றிதான். சசிகுமார் அதேபோல சூர்யா சார் படம் பார்த்து, இந்தப் படத்தை ப்ரெசென்ட் பண்ணுகிறோம் எனச் சொன்னதற்கு, அவருக்கும் அவருடைய டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி என்று தெரிவித்திருக்கிறார். ‘மை லார்ட்’ - சினிமா விமர்சனம்
My Lord: முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால்.!- சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், ஒரு நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் நான் தைரியமாக இருந்தேன். My Lord ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பாக மக்களிடம் இன்னும் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது தற்போது நடந்திருக்கிறது, எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம்தான் எனக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது. அந்தப் படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில்தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்குக் கண்டிப்பாகப் போய் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும் ஒரு பெரிய வெற்றிதான். சசிகுமார் அதேபோல சூர்யா சார் படம் பார்த்து, இந்தப் படத்தை ப்ரெசென்ட் பண்ணுகிறோம் எனச் சொன்னதற்கு, அவருக்கும் அவருடைய டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி என்று தெரிவித்திருக்கிறார். ‘மை லார்ட்’ - சினிமா விமர்சனம்
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின்...
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. இசையமைப்பாளர் அனிருத், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். தமிழில் தற்போது `ஜெயிலர் 2′ உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி அனிருத் கூறும்போது, ‘படைப்பாற்றல், உரிமை, கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை...
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்? லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள எல்ஐகே பட தகவல்கள் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. தற்போது மார்ச் 19-ந்தேதி...
கடவுள் நம்பிக்கையில் கூட நல்லது செய்தால் தான் சொர்க்கத்தில் இடம்.. மம்மூட்டி ஓபன் டாக்.!!
நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக...
தனுஷ் 55: படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!
தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்...
போலீசிடம் உயிலை காண்பித்த சேரன், நடேசன் குடும்பத்திற்கு வீடு சொந்தம் ஆகுமா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழன் இருவரும் பத்திரத்தை எடுப்பதற்காக வீட்டிற்குள் போகணும் என்று திட்டம் போட்டார்கள். பின் கேட்டின் மீது ஏறி குதித்து நிலா-சோழன் உள்ளே சென்று விட்டார்கள். அதற்குப்பின் ஓட்டை பிரித்துக் கொண்டு சோழன் வீட்டுக்குள் இறங்கினார். நிலா வீட்டின் மீது பயத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் சென்ற சோழன் எல்லா இடத்திலும் உயிலை தேடினார். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. சோழன் வீடு முழுக்க தேடினார். ஆனால், உயில் கிடைக்கவில்லை. […] The post போலீசிடம் உயிலை காண்பித்த சேரன், நடேசன் குடும்பத்திற்கு வீடு சொந்தம் ஆகுமா? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அன்று அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பது என முடிவெடுத்தார் தனுஷ். 'இட்லிக்கடை' மற்றும் 'கர' படப்பிடிப்புகளிடையே கிடைத்த இடைவெளியில் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் தனுஷ். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார் தனுஷ். ஹீரோயின்களுடன் தனுஷ் விக்கேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'D 54' படமான 'கர' வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் பரபரக்கின்றன. இந்தப் படம் ஏப்ரலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீலீலா, சாய் பல்லவி எனப் பலரும் நடிக்கின்றனர். இது தனுஷின் 55-வது படமாகும். சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் நாளை அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த ஷெட்யூலில் தனுஷ் இணைகிறார். சென்னையில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் என்றும், அதன் பிறகு திருப்பதியில் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். நாளை தொடங்கும் படப்பிடிப்பில் மம்மூட்டி போர்ஷன் இருக்காது என்றும், இனி வரும் ஷெட்யூலில்தான் அவர் பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள். ஷங்கருடன் 'D 55'க்கு முன்னதாக ரசிகர்களைச் சந்திக்கத் தீர்மானித்தார் தனுஷ். கடந்த ஞாயிறன்று அடையாரில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார். கோவை, சேலம், கோவை ( தெற்கு ), கரூர் ஆகிய இடங்களில் இருந்து ரசிகர்களும் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றதால் கிட்டத்தட்ட 3,000 ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், பெண்களுக்குப் புடவை மற்றும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் ஆகியவையும் வழங்கியிருக்கிறார். ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் அவர். அடுத்த ஞாயிறும் ரசிகர்களைச் சந்திக்கிறார். அதில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் பகுதி ரசிகர்களை அவர் சந்திப்பாரென தெரிகிறது. D55: தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா - 'D55' படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album
Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அன்று அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பது என முடிவெடுத்தார் தனுஷ். 'இட்லிக்கடை' மற்றும் 'கர' படப்பிடிப்புகளிடையே கிடைத்த இடைவெளியில் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் தனுஷ். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார் தனுஷ். ஹீரோயின்களுடன் தனுஷ் விக்கேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'D 54' படமான 'கர' வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் பரபரக்கின்றன. இந்தப் படம் ஏப்ரலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீலீலா, சாய் பல்லவி எனப் பலரும் நடிக்கின்றனர். இது தனுஷின் 55-வது படமாகும். சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் நாளை அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த ஷெட்யூலில் தனுஷ் இணைகிறார். சென்னையில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் என்றும், அதன் பிறகு திருப்பதியில் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். நாளை தொடங்கும் படப்பிடிப்பில் மம்மூட்டி போர்ஷன் இருக்காது என்றும், இனி வரும் ஷெட்யூலில்தான் அவர் பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள். ஷங்கருடன் 'D 55'க்கு முன்னதாக ரசிகர்களைச் சந்திக்கத் தீர்மானித்தார் தனுஷ். கடந்த ஞாயிறன்று அடையாரில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார். கோவை, சேலம், கோவை ( தெற்கு ), கரூர் ஆகிய இடங்களில் இருந்து ரசிகர்களும் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றதால் கிட்டத்தட்ட 3,000 ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், பெண்களுக்குப் புடவை மற்றும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் ஆகியவையும் வழங்கியிருக்கிறார். ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் அவர். அடுத்த ஞாயிறும் ரசிகர்களைச் சந்திக்கிறார். அதில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் பகுதி ரசிகர்களை அவர் சந்திப்பாரென தெரிகிறது. D55: தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா - 'D55' படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album
அஞ்சலியிடம் உண்மையை சொன்ன சரவணன், வேலை தேடி அலையும் தங்கமயில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், தன் வீட்டில் நடந்ததை எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் ராஜி படிப்பு விஷயத்தை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், செந்தில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். அப்போது மீனாவின் அம்மா போன் செய்து கண்ட மேனிக்கு திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் அப்பா, நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டாமா? லஞ்சம் வாங்குவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று […] The post அஞ்சலியிடம் உண்மையை சொன்ன சரவணன், வேலை தேடி அலையும் தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
கேரவானுக்குள்ளேயே இருந்தால் நடிக்க முடியாது; அப்படித்தான் அவரும் - விஜய் மீது வினோதினி விமர்சனம்
நடிகை வினோதினி வைத்தியநாதன் கடந்தாண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் நினைவிருக்கலாம். சில மாதங்களாக அவர் தவெக மீது விமர்சனங்களையும் வைத்திருந்தார். வினோதினி அவர் நடித்திருக்கும் 'லவ் ஷேர் சப்ஸ்கிரைப்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் சிறப்புத் திரையிடலும் நேற்றைய தினம் நடந்தன. திரையிடலுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார். அதில் செய்தியாளர் ஒருவர், தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம் வைப்பதற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வினோதினி, அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அந்த இடத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக அந்த விமர்சனம். விமர்சனம் என்பது ஆதங்கத்திலிருந்து வெளிப்படுவது. நான் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் என் மீது விமர்சனம் வைத்தால், அவர் மீது நான் கோபப்படக்கூடாது. எதற்காக அவர் என்னை விமர்சனம் செய்கிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். வினோதினி நான் கேரவானுக்குள்ளே இருந்தால் நடிக்க முடியாது. நான் படப்பிடிப்புத் தளத்திற்கு வர வேண்டும். அதுபோல, அவரும் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும். அந்த நாள் என்னுடைய விமர்சனம் நிறுத்தப்படும். ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தபோதும், அங்கிருந்து குரல் வரவில்லை. நாம்தாம் இங்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதும் நீங்கள் என்னைத்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் மீது நீங்கள் இன்னும் கேள்வி எழுப்பவில்லை எனப் பேசினார். `தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்
கேரவானுக்குள்ளேயே இருந்தால் நடிக்க முடியாது; அப்படித்தான் அவரும் - விஜய் மீது வினோதினி விமர்சனம்
நடிகை வினோதினி வைத்தியநாதன் கடந்தாண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் நினைவிருக்கலாம். சில மாதங்களாக அவர் தவெக மீது விமர்சனங்களையும் வைத்திருந்தார். வினோதினி அவர் நடித்திருக்கும் 'லவ் ஷேர் சப்ஸ்கிரைப்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் சிறப்புத் திரையிடலும் நேற்றைய தினம் நடந்தன. திரையிடலுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார். அதில் செய்தியாளர் ஒருவர், தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம் வைப்பதற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வினோதினி, அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அந்த இடத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக அந்த விமர்சனம். விமர்சனம் என்பது ஆதங்கத்திலிருந்து வெளிப்படுவது. நான் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் என் மீது விமர்சனம் வைத்தால், அவர் மீது நான் கோபப்படக்கூடாது. எதற்காக அவர் என்னை விமர்சனம் செய்கிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். வினோதினி நான் கேரவானுக்குள்ளே இருந்தால் நடிக்க முடியாது. நான் படப்பிடிப்புத் தளத்திற்கு வர வேண்டும். அதுபோல, அவரும் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும். அந்த நாள் என்னுடைய விமர்சனம் நிறுத்தப்படும். ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தபோதும், அங்கிருந்து குரல் வரவில்லை. நாம்தாம் இங்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதும் நீங்கள் என்னைத்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் மீது நீங்கள் இன்னும் கேள்வி எழுப்பவில்லை எனப் பேசினார். `தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்
பாளையத்து அம்மன் நடிக்கும் போது அசைவம் சாப்பிடவில்லை - Actress Meena | Cinema Vikatan Interview
Aavarampoo படத்துல அந்த சீன் நான் தான் டைரக்ட் பண்ணுனேன்! - Keyaar | Ilaiyaraaja| Vikatan
எனக்கு engagement ஆனது எனக்கே தெரியலைங்க! - Actress Suchitra Exclusive | Anna | Serial
விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி ரோகினியை வந்து சந்தித்து பேசுகிறார் நீ முத்துமீனாக்கு விஷயத்தை சொன்னதை விட மனோஜ்க்கு சொல்லி அவனை வர வச்சிருக்கணும் என்று சொல்ல இதைப்பற்றி நான் யோசிக்காமல் போயிட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம்...
காவிரிக்கு வந்து போகும் கடந்த கால நினைவுகள், விஜயை பற்றி அறிவாரா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விட்டார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ […] The post காவிரிக்கு வந்து போகும் கடந்த கால நினைவுகள், விஜயை பற்றி அறிவாரா? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்தார்த்தா ரெட்டி என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி இருவரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் பிரதியுஷா மரணமடைந்தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்தார். அவர்கள் அருந்திய குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தது தெரியவந்தது....
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம்
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என...

28 C