SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

நடிகர் விஜய்யுடன் ஒரு படம் பண்ண இருந்தது, ஆனால் –பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய […] The post நடிகர் விஜய்யுடன் ஒரு படம் பண்ண இருந்தது, ஆனால் – பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 6:44 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்தில் யார்... யார்?!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029ஆண்டிற்கான) தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று நடக்கிறது. இம்முறை இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. சங்கத்திற்கான தேர்தல் குறித்து இராம.நாராயணன் அணியின் சார்பில் போட்டியிடும் தயாரிப்பாளரும், மக்கள் தொடர்பாளருமான விஜயமுரளியிடம் பேசினோம். விஜயமுரளி ''எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி என பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். இதில் முரளி என்.ராமசாமி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இப்போது ஓட்டுரிமை உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 1540 ஆகும். இந்த தேர்தலில் இராம.நாராயணன் அணியில் தலைவர் வேட்பாளராக முரளி என்.ராமசாமி, செயலாளராக டி.டி.ராஜா, சௌந்தரபாண்டியன், துணைத்தலைவர்களாக என்.விஜயமுரளி, மதியழகன் பொருளாளராக சி.வி.குமார், ஜாய், இணைச் செயலாளருக்கு தயா.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்களாக 26 பேர் போட்டியிடுகிறார்கள். முரளி மற்றொரு அணியான நலம் காக்கும் அணியின் தலைவர் வேட்பாளராக தமிழ்க்குமரன், செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணை தலைவருக்கு கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமார் என போட்டியிடுகிறார்கள். இந்த அணியிலும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். மேற்கண்ட இரண்டு அணிகள் தவிர, சுயேட்சை வேட்பாளராகவும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு டி.மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கதிரேசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், உதயா என பலரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். 26 செயற்குழு உறுப்பினர்களுக்கு 68 பேர் போட்டி போடுகின்றனர். நடிகர் விஷால் இப்போது தலைவராக இருக்கும் முரளி என்.ராமசாமியின் சாதனைகளாக பல்வேறு சாதனைகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த சாதனயாக , இராம நாராயணன் பதவியில் இருந்த காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக்கொள்ள மகாபலிபுரம் அருகே பையனூரில் பத்தரை ஏக்கர் நிலம் பெற்று தந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த நிலத்தை பதிவு செய்யாமல் இருந்தததை கவனித்து மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரிடமும் பேசி துணை முதல்வரின் ஆணைக்கிணங்க புதுப்பித்து மீண்டும் பதிவு செய்துள்ளோம். தாணு கியூப் கட்டணம் வாரத்திற்கு ரூபாய் முன்பு ரூ.12,500 என்று இருந்ததை சிறு முதலீட்டு திரைப்படங்களுக்காக 50 திரையரங்குகள் வரை ரிலீஸுக்கு கியூப் கட்டணத்தை ரூ.3600 ஆக நிர்ணயிக்க வைத்தோம். இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த 20 வருடங்களாக பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுறாமல் வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை, முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கும் கொண்டு சென்று, புதுப்பித்தோம். இது கடந்த 2022 ம் ஆண்டு வரை பதிவு செய்து வைத்திருக்கிறோம். இது போன்ற பல்வேறு சாதனைகளை எடுத்துரைக்கிறோம்.'' என்கிறார் விஜயமுரளி. அனைத்து வேட்பாளர்களும் இப்போது மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விகடன் 19 Jan 2026 6:16 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்தில் யார்... யார்?!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029ஆண்டிற்கான) தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று நடக்கிறது. இம்முறை இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. சங்கத்திற்கான தேர்தல் குறித்து இராம.நாராயணன் அணியின் சார்பில் போட்டியிடும் தயாரிப்பாளரும், மக்கள் தொடர்பாளருமான விஜயமுரளியிடம் பேசினோம். விஜயமுரளி ''எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி என பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். இதில் முரளி என்.ராமசாமி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இப்போது ஓட்டுரிமை உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 1540 ஆகும். இந்த தேர்தலில் இராம.நாராயணன் அணியில் தலைவர் வேட்பாளராக முரளி என்.ராமசாமி, செயலாளராக டி.டி.ராஜா, சௌந்தரபாண்டியன், துணைத்தலைவர்களாக என்.விஜயமுரளி, மதியழகன் பொருளாளராக சி.வி.குமார், ஜாய், இணைச் செயலாளருக்கு தயா.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்களாக 26 பேர் போட்டியிடுகிறார்கள். முரளி மற்றொரு அணியான நலம் காக்கும் அணியின் தலைவர் வேட்பாளராக தமிழ்க்குமரன், செயலாளராக ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், துணை தலைவருக்கு கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளராக சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமார் என போட்டியிடுகிறார்கள். இந்த அணியிலும் 26 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். மேற்கண்ட இரண்டு அணிகள் தவிர, சுயேட்சை வேட்பாளராகவும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு டி.மன்னன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கதிரேசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், உதயா என பலரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். 26 செயற்குழு உறுப்பினர்களுக்கு 68 பேர் போட்டி போடுகின்றனர். நடிகர் விஷால் இப்போது தலைவராக இருக்கும் முரளி என்.ராமசாமியின் சாதனைகளாக பல்வேறு சாதனைகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த சாதனயாக , இராம நாராயணன் பதவியில் இருந்த காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக்கொள்ள மகாபலிபுரம் அருகே பையனூரில் பத்தரை ஏக்கர் நிலம் பெற்று தந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த நிலத்தை பதிவு செய்யாமல் இருந்தததை கவனித்து மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரிடமும் பேசி துணை முதல்வரின் ஆணைக்கிணங்க புதுப்பித்து மீண்டும் பதிவு செய்துள்ளோம். தாணு கியூப் கட்டணம் வாரத்திற்கு ரூபாய் முன்பு ரூ.12,500 என்று இருந்ததை சிறு முதலீட்டு திரைப்படங்களுக்காக 50 திரையரங்குகள் வரை ரிலீஸுக்கு கியூப் கட்டணத்தை ரூ.3600 ஆக நிர்ணயிக்க வைத்தோம். இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த 20 வருடங்களாக பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுறாமல் வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை, முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கும் கொண்டு சென்று, புதுப்பித்தோம். இது கடந்த 2022 ம் ஆண்டு வரை பதிவு செய்து வைத்திருக்கிறோம். இது போன்ற பல்வேறு சாதனைகளை எடுத்துரைக்கிறோம்.'' என்கிறார் விஜயமுரளி. அனைத்து வேட்பாளர்களும் இப்போது மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விகடன் 19 Jan 2026 6:16 pm

மனோஜுக்கு பைனான்சியர் வைத்த செக், விஜயா எடுத்த விபரீத முடிவு –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, உன்னுடைய அவசர புத்தியால்தான் மனோஜின் வாழ்க்கை இப்படி நடந்தது. எதுவாக இருந்தாலும் நிதானமாக செய்யணும். அமைதியாக இரு என்றார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலையின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார். கோபத்தில் அண்ணாமலை சண்டை போட்டார். பின் முருகன்-வித்யா இருவரும் மீனாவை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அப்போது முத்து, வித்யா- மீனா செய்த வேலையை பற்றி திட்டிக் கொண்டிருந்தார். வித்யா, மீனா […] The post மனோஜுக்கு பைனான்சியர் வைத்த செக், விஜயா எடுத்த விபரீத முடிவு – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 6:08 pm

தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.!!

நட்சத்திர நடிகர் செய்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சர்க்கார், பீஸ்ட்,கூலி போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த...

தஸ்தர் 19 Jan 2026 5:46 pm

பெரியாரை எனக்குள் ஆழமாக கொண்டு வந்தது என்னோட மனைவி தான்.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில்...

தஸ்தர் 19 Jan 2026 5:36 pm

Serial Update: டைட்டில் மாறி, வெளிவரும் ரியாலிட்டி ஷோ டு மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஹீமா பிந்து!

அதே டெய்லர் அதே வாடகை! ஜீ தமிழ் சேனலில் 'மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிஸ்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானதே நினைவிருக்கிறதா? ஐந்தாறு ஆண்டுகளுக்கு்முன் அடுத்தடுத்து ஒளிபரப்பான இரண்டே இரண்டு சீசன்களுக்குப் பிறகு நிகழ்ச்சியைக் காணவில்லை. இத்தனைக்கும் ரியாலிட்டி ஷோ ஏரியாவில் சேனலுக்கு நல்ல ரேட்டிங் வாங்கிக் கொடுத்தது நிகழ்ச்சி இது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது 'அதே டெய்லர் அதே வாடகை' என்பது போல மீண்டும் அந்த நிகழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது தலைப்பை மட்டும் 'கில்லாடி ஜோடிஸ்' என மாற்றி இருக்கிறார்கள். 'அந்த ஷோ ஆரம்பிச்சப்ப நிஜ கணவன் மனைவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்னு சொன்னாங்க. ரச்சிதா - தினேஷ், படவா கோபி அவருடைய மனைவி, கணவருடன் ஆனந்தி, 'மைனா' நந்தினி அவருடைய கணவர் கார்த்திக்னு பலர் கலந்துகிட்டாங்க. தண்ணீருக்குள் சாகஸம், மலையேற்றம்னு நிறைய த்ரில்லிங் இருந்ததால நிகழ்ச்சி நல்ல பேசப்பட்டுச்சு. ரேட்டிங்கும் கிடைச்சதா சொன்னாங்க. மைனா நந்தினி கணவர் யோகேஷுடன் இந்தமுறை ரியல் ஜோடிகளுக்குப் பஞ்சமா தெரியலை, 'மிஸ்டர் அன்ட் மிசஸ்'ங்கிற அந்த டைட்டிலையே மாத்திட்டாங்க. அல்லது ஒருவேளை சமீபத்துல ட்ரெட்ன்ட் ஆன கூமாப்பட்டி தங்கப்ப்பாண்டி, சாந்தினி ஜோடியை நிகழ்சிக்குள் கொண்டு வர டைட்டிலை மாத்தினாங்களா தெரியல. இந்த ஜோடி தவிர இன்னும் சில ஜோடிகளுடன் முன்பு இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'மைனா' நந்தினியும் தன் கணவர் யோகேஷுடன் கலந்து கொண்டுள்ளார். அடுத்த வாரத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது நிகழ்ச்சி. மீண்டும் சீரியலுக்குத் திரும்பிய பிந்து! கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'இதயத்தைத் திருடாதே' சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஹீமா பிந்து. பிறகு அங்கிருந்து சன் டிவிக்கு வந்து 'இலக்கியா' தொடரில் நடித்தார். அதில் நடித்துக் கொண்டிருந்த போதே திடீரென தொடரிலிருந்து வெளியேறினார். சினிமா வாய்ப்பு வந்ததாகக் கூறினார்கள். நடிகர் ராகவா லாரன்ஸின் படத்தில் நடித்து வருவதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சன் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார். 'இரு மலர்கள்' எனப் பெயரிடப் பட்டிருக்கும் பகல் நேர சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஹீமா பிந்து 'சினிமா பக்கம் போனவுடன் இனி சீரியல் பண்ணுகிற ஐடியா இல்லை எனச் சொன்னதாக வெளியான தகவல் குறித்து கேட்டால், 'நான் அப்படி எதுவும் சொல்லலயே, தவிர, நான் பண்ணுகிற சீரியலும் பண்ணுகிற படமும் ஒரே தயாரிப்பு நிறுவனமா இருந்தா கால்ஷீட் சிக்கல் ஏதும் இருக்காதில்லையா, அதனால கமிட் ஆகிட்டேன்' எனச் சமாளிக்கிறாராம்.!

விகடன் 19 Jan 2026 5:08 pm

விவாகரத்து கேஸ் : சோழன் சொன்ன வார்த்தையால் ஷாக் ஆன நிலா –பரபரப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் படுத்திருப்பதால் அவருக்கு உடம்பு முடியாமல் போகிறது. பின் நிலா, அவரைத் திட்டி உள்ளே தூங்க வைத்தார். நடேசன், நிலா மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததால் தான் வீடு வீடாகவே இருக்கிறது. சோழன் ஒழுங்காக நிலாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழியை பார்க்க சொல் என்று சேரனிடம் அறிவுரை சொன்னார். மறுநாள் காலையில் பாண்டியன் கடை திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள […] The post விவாகரத்து கேஸ் : சோழன் சொன்ன வார்த்தையால் ஷாக் ஆன நிலா – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 5:03 pm

`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த வாரம் அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், அனைவருக்கும் வீடு, 125 நாள்கள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துதல், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற தனியார் உணவகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் கஞ்சா கருப்பு, உணவகத்தைத் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் கஞ்சா கருப்பு கூறுகையில், வேங்கை படத்தில் வரும் நகைச்சுவை காட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விட்டதுபோல `குடித்து விட்டு வரும் ஆண்களுக்கும் இலவசமாக பேருந்துகள் விடணும், நாங்க பாட்டுக்கு குடிச்சிட்டு அந்த பேருந்துல ஏறி வீட்டுக்கு போயிடுவோம்' எனப் பேசி நடித்திருப்பேன். கஞ்சா கருப்பு நான் சொன்னதைத்தான் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்துள்ளார். அதேபோல வீடுகள் கட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனக்கு தான் வீடு இல்லை. எனக்கு முதலில் கொடுங்கள் எனக் கேட்டுள்ளேன். நான் படமெடுத்து நிறைய கஷ்டபட்டு விட்டேன் அடுத்த பிறவியில் நான் பாம்பாக பிறந்தாலும் படமெடுக்க மாட்டேன் என்றார்.

விகடன் 19 Jan 2026 4:28 pm

`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த வாரம் அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், அனைவருக்கும் வீடு, 125 நாள்கள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துதல், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற தனியார் உணவகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் கஞ்சா கருப்பு, உணவகத்தைத் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் கஞ்சா கருப்பு கூறுகையில், வேங்கை படத்தில் வரும் நகைச்சுவை காட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விட்டதுபோல `குடித்து விட்டு வரும் ஆண்களுக்கும் இலவசமாக பேருந்துகள் விடணும், நாங்க பாட்டுக்கு குடிச்சிட்டு அந்த பேருந்துல ஏறி வீட்டுக்கு போயிடுவோம்' எனப் பேசி நடித்திருப்பேன். கஞ்சா கருப்பு நான் சொன்னதைத்தான் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்துள்ளார். அதேபோல வீடுகள் கட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனக்கு தான் வீடு இல்லை. எனக்கு முதலில் கொடுங்கள் எனக் கேட்டுள்ளேன். நான் படமெடுத்து நிறைய கஷ்டபட்டு விட்டேன் அடுத்த பிறவியில் நான் பாம்பாக பிறந்தாலும் படமெடுக்க மாட்டேன் என்றார்.

விகடன் 19 Jan 2026 4:28 pm

அந்த விருதை தொட எனக்குத் தகுதியில்லையா? –பிக் பாஸ் மேடையில் திவ்யா கணேஷ் உருக்கம்

விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி […] The post அந்த விருதை தொட எனக்குத் தகுதியில்லையா? – பிக் பாஸ் மேடையில் திவ்யா கணேஷ் உருக்கம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 3:55 pm

எதிரெதிராய் நிற்கும் சூர்யா அன்பு.. ஆனந்தி சொன்ன விஷயம், மூன்று முடிச்சு சிங்கப் பெண்ணை மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் ஆ அன்பு ராஜா சுரேஷ் பிரபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு...

தஸ்தர் 19 Jan 2026 3:53 pm

விஜயா எடுத்த முடிவு.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாட்டிக்கு உண்மை தெரிந்து குடும்பத்தினரிடம் வந்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வந்து மீனா மற்றும் ஸ்ருதி இடம் உதவி கேட்க அவர்கள் செய்ய மறுக்கின்றனர் உடனே நீங்களும் உங்க புருஷனோட சந்தோசமா வாழ்ந்துருவீங்களா காலம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது கண்டிப்பா மாறும் நீங்களும் வந்து என்கிட்ட இது மாதிரி கேட்கிற நிலைமை...

தஸ்தர் 19 Jan 2026 3:43 pm

கோமதி செய்த வேலையால் உடைந்து போய் தவிக்கும் தங்கமயில், ராஜி எடுத்த விபரீத முடிவு –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் இடம் பாக்கியம், நகை போட்டது உண்மைதான் என்று சொல். இல்லை என்றால் நாம் தான் மாட்டிக் கொள்வோம் என்றார். பின் தங்கமயில், 80 பவுன் நகை போட்டு வந்தது உண்மைதான் என்றார். மீனா-ராஜி இருவரும் மாற்றி மாற்றி தங்கமயிலை கேள்வி கேட்டார்கள். ஆனால், தங்கமயில் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட ராஜி, உங்களுக்கு மாமா மீது உண்மையான பாசம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் […] The post கோமதி செய்த வேலையால் உடைந்து போய் தவிக்கும் தங்கமயில், ராஜி எடுத்த விபரீத முடிவு – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 3:00 pm

அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார்! - இயக்குநர் இரா. சரவணன்

தணிக்கை சான்றிதழ் சிக்கல் தடையைத் தாண்டி கடந்த 10-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 25வது திரைப்படம். ரிலீஸுக்கு முந்தைய நாளின் பரபரப்பிலும் தந்தையை இழந்த ஒரு பெண்ணின் கல்விச் செலவிற்காக உதவியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இது குறித்து இயக்குநர் இரா. சரவணன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். Parasakthi - SK அந்தப் பதிவில் அவர், தம்பி சிவகார்த்திகேயனை எத்தனையோ முறை பார்த்தாலும், பேசியிருந்தாலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. இந்த முறை எடுக்கத் தோன்றியது. அதற்குக் காரணம் இருந்தது. 'சங்காரம்’ நாவல் குறித்து அறிந்திருந்த சிவா, “எனக்கும் அறிவு இருக்குண்ணே… நாங்களும் புக் படிப்போம்” எனக் குறுந்தகவல் அனுப்பி என்னைச் சீண்டியிருந்தார். நேற்று ஒரு தனித்திரையிடல் நிகழ்விற்கு சிவா வருவதாகச் சொல்ல, சந்திக்கப் போயிருந்தேன். 'பராசக்தி' ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர். “செமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார். ஆனால், ‘பராசக்தி’ ரிலீஸ் நேரமாயிற்றே, வேறு ஆட்களை அணுகலாம் எனப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு போன் பண்ணியும் பலனில்லை. தம்பி சிவாவிற்கே குறுந்தகவல் அனுப்பினேன். மின்னலென தம்பி நவனீதன் தொடர்புக்கு வந்தார். “நாளைக்கு படம் ரிலீஸ்ணே… இப்போ சொல்றீங்களே” என்றவர் அந்த மாணவியின் எண் வாங்கி, பேசி, டி.டி எடுத்து கல்லூரிக்கு அனுப்பி இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் பண்ணினார். தம்பி சிவகார்த்திகேயனை எத்தனையோ முறை பார்த்தாலும், பேசி இருந்தாலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. இந்த முறை எடுக்கத் தோன்றியது. அதற்குக் காரணம் இருந்தது. ‘சங்காரம்’ நாவல் குறித்து அறிந்திருந்த சிவா, “எனக்கும் அறிவு இருக்குண்ணே… நாங்களும் புக் படிப்போம்”… pic.twitter.com/Wo1fYU7Xla — இரா.சரவணன் (@erasaravanan) January 19, 2026 உதவி கேட்ட நானே தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில் நவனீதன் அழைத்து ஃபீஸ் கட்டிவிட்ட விவரத்தைச் சொன்னார். “நன்றி அண்ணா…” என ஃபீஸ் கட்டப்பட்ட விவரத்துடன் அந்த மாணவி அனுப்பிய குறுந்தகவலும் வந்திருந்தது. மிக நெருக்கடியான நேரத்தில் சட்டென உதவிய சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். “அண்ணே…” என என் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டார் சிவா. அவர் கைகளின் வழியே அந்தக் குடும்பத்தின் ஆத்மார்த்த நன்றியைக் கடத்தினேன். நெகிழ்ந்திருந்த சிவாவிடம், ‘சங்காரம்’ நாவல் கொடுக்க விரும்பாமல், நிறைவோடு கிளம்பினேன். சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல. ஆனால், அடுத்த நாள் பட ரிலீஸை வைத்துக்கொண்டு ஒருவரின் கவலை குறித்துக் கேட்கிற மனம் நிச்சயமாகக் கோடிக்குச் சமம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 19 Jan 2026 2:49 pm

ரீ-ரிலீஸில் மோதும் அஜித் –விஜய் படங்கள்.. ரசிகர்களே எதிர்பாரா அறிவிப்பு

ரீ-ரிலீஸில் மோதும் அஜித் – விஜய் படங்கள்.. ரசிகர்களே எதிர்பாரா அறிவிப்பு பொங்கல் பண்டிகையில் விஜய்-அஜித் படங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக இதோ ரசிகர்களுக்காக உற்சாக நிகழ்வு.. விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’. அட்லி இயக்கி வெற்றி பெற்ற இப்படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ‘ஜனநாயகன்’ வெளியாகாத...

தஸ்தர் 19 Jan 2026 2:18 pm

“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை”–விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை. வேலை என்​னைத்...

தஸ்தர் 19 Jan 2026 2:12 pm

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு. கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறைத் தேரிவிளையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: 1972-ம் ஆண்டு அதிமுகவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்து 1977-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவர் இருக்கும்வரை முதலமைச்சராக இருந்து மறைந்தார். தமிழகத்தில் திமுகவும்,...

தஸ்தர் 19 Jan 2026 2:05 pm

டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம்!

படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், ஜானர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரவி மோகன், இந்தாண்டும் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கிறார். இப்போது நடிப்போடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் கூடுதல் புரொமோஷனாக இயக்குநராகவும் ஸ்கோர் செய்ய ரெடியாகி வருகிறார். ரவி மோகன் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் வில்லனாக அசத்தியதில், வரவேற்பை அள்ளிய மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவி. அடுத்து 'கராத்தே பாபு', 'ஜீனி' கார்த்திக் யோகியின் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என அடுத்தடுத்து லைன் அப்களை வைத்துள்ளார். அதில் 'கராத்தே பாபு'வின் படத்தை 'டாடா' கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். அரசியல் ஜானர் இது. ரவியின் ஜோடியாக புதுமுகம் தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், கே.எஸ்.ரவிக்குமார் என பலரும் நடித்து வருகிறார்கள். கணேஷ் கே.பாபுவுடன் இணைந்து வசனங்களை இயக்குநர் ரத்னகுமார், பாக்யம் சங்கர் ஆகியோரும் சேர்ந்து எழுதியுள்ளனர். படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போது படத்திற்கான சட்டசபை செட் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதாக பாராட்டை பெற்றது. அதன் பிறகு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வரவில்லை. 'பராசக்தி' வெளியாகி விட்டதால் ரவிக்கு அடுத்து திரைக்கு வரும் படமாக 'கராத்தே பாபு' உள்ளது. இதன் டீசரை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார் ரவி. 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கி கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோ கோடு' என்ற படத்தை தயாரித்து நடிப்பதாக அறிவித்தார். ஜன நாயகன்: இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா; ஒரு சகோதரனாக உங்களோடு... - ரவி மோகன் உருக்கம் இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் சிக்கலில் இருப்பதால், இப்போது வேறு டைட்டிலை பரிசீலீத்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் கிளம்புகிறார்கள். 'கில்லர்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு பின் ஓய்வில் இருந்து வரும் எஸ்.ஜே.சூர்யா, உடல்நலன் சரியானது இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் சொல்கிறார்கள். ஜீனி படப்பிடிப்பில்.. அதைப் போல ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தீவிரமாக எழுதி வருகிறார் ரவி மோகன். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'கோமாளி' படத்தில் ரவியும், யோகி பாபுவும் இணைந்து நடித்த சமயத்திலேயே இந்த படத்திற்கான கதையை சொல்லி விட்டார். யோகிபாபுவும் அதைக் கேட்டுவிட்டு நெகிழ்ந்ததுடன் 'எப்போ ஷூட்னாலும் உடனே தேதிகள் தர்றேன்' என வாக்குறுதி கொடுத்துவிட்டார். இப்போது 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிற்கிடையே யோகி பாபுவின் படப்பிடிப்பையும் தொடங்கி விட திட்டமிட்டு வருகிறார் ரவி. இதற்கிடையே 'ஜீனி' என்ற ஃபேன்டஸி படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். மிஷ்கினின் சீடர் அர்ஜூனன் இயக்கி வருகிறார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிகா கபி என பலரும் இதில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து 'மிருதன்' படத்தின் பார்ட் 2வில் நடிப்பார் என்ற பேச்சும் இருக்கிறது.! இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' - 'பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான்

விகடன் 19 Jan 2026 1:59 pm

டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம்!

படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், ஜானர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரவி மோகன், இந்தாண்டும் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கிறார். இப்போது நடிப்போடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் கூடுதல் புரொமோஷனாக இயக்குநராகவும் ஸ்கோர் செய்ய ரெடியாகி வருகிறார். ரவி மோகன் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் வில்லனாக அசத்தியதில், வரவேற்பை அள்ளிய மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவி. அடுத்து 'கராத்தே பாபு', 'ஜீனி' கார்த்திக் யோகியின் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என அடுத்தடுத்து லைன் அப்களை வைத்துள்ளார். அதில் 'கராத்தே பாபு'வின் படத்தை 'டாடா' கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். அரசியல் ஜானர் இது. ரவியின் ஜோடியாக புதுமுகம் தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், கே.எஸ்.ரவிக்குமார் என பலரும் நடித்து வருகிறார்கள். கணேஷ் கே.பாபுவுடன் இணைந்து வசனங்களை இயக்குநர் ரத்னகுமார், பாக்யம் சங்கர் ஆகியோரும் சேர்ந்து எழுதியுள்ளனர். படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போது படத்திற்கான சட்டசபை செட் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதாக பாராட்டை பெற்றது. அதன் பிறகு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வரவில்லை. 'பராசக்தி' வெளியாகி விட்டதால் ரவிக்கு அடுத்து திரைக்கு வரும் படமாக 'கராத்தே பாபு' உள்ளது. இதன் டீசரை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார் ரவி. 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கி கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோ கோடு' என்ற படத்தை தயாரித்து நடிப்பதாக அறிவித்தார். ஜன நாயகன்: இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா; ஒரு சகோதரனாக உங்களோடு... - ரவி மோகன் உருக்கம் இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் சிக்கலில் இருப்பதால், இப்போது வேறு டைட்டிலை பரிசீலீத்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் கிளம்புகிறார்கள். 'கில்லர்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு பின் ஓய்வில் இருந்து வரும் எஸ்.ஜே.சூர்யா, உடல்நலன் சரியானது இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் சொல்கிறார்கள். ஜீனி படப்பிடிப்பில்.. அதைப் போல ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தீவிரமாக எழுதி வருகிறார் ரவி மோகன். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'கோமாளி' படத்தில் ரவியும், யோகி பாபுவும் இணைந்து நடித்த சமயத்திலேயே இந்த படத்திற்கான கதையை சொல்லி விட்டார். யோகிபாபுவும் அதைக் கேட்டுவிட்டு நெகிழ்ந்ததுடன் 'எப்போ ஷூட்னாலும் உடனே தேதிகள் தர்றேன்' என வாக்குறுதி கொடுத்துவிட்டார். இப்போது 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிற்கிடையே யோகி பாபுவின் படப்பிடிப்பையும் தொடங்கி விட திட்டமிட்டு வருகிறார் ரவி. இதற்கிடையே 'ஜீனி' என்ற ஃபேன்டஸி படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். மிஷ்கினின் சீடர் அர்ஜூனன் இயக்கி வருகிறார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிகா கபி என பலரும் இதில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து 'மிருதன்' படத்தின் பார்ட் 2வில் நடிப்பார் என்ற பேச்சும் இருக்கிறது.! இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' - 'பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான்

விகடன் 19 Jan 2026 1:59 pm

தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’!

தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’! தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில்...

தஸ்தர் 19 Jan 2026 1:57 pm

ஈஸ்வரி, சாவித்ரியை வெளுத்து வாங்கும் ராஜாங்கம், வேதனையில் தமிழ்செல்வி –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனித்தார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொன்னார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்தார்கள். நடன கலைஞர்களை வீட்டிற்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டம் என்று ராஜாங்கம் வீடு களைகட்டி இருக்கிறது. அப்போது கருப்பன், தமிழ் மனதில் காதல் இருக்கிறதா? என்பதை […] The post ஈஸ்வரி, சாவித்ரியை வெளுத்து வாங்கும் ராஜாங்கம், வேதனையில் தமிழ்செல்வி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 1:07 pm

இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' - 'பராசக்தி'படத்தைப் பாராட்டிய சீமான்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பராசக்தி' படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், 'பராசக்தி'யை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது. பராசக்தி இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது. மொழிப்போர் பின்புலத்தை அந்த உணர்வை எடுத்துக்கொண்டு சுவைக்காக திரைக்கதையை அதற்கேற்றார் போல மாற்றியுள்ளனர். படத்தில் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் பங்களிப்பு, எதிர் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன் பங்களிப்பு, தம்பி அதர்வா பங்களிப்பு நேர்த்தியாக இருந்தது. அதிலும் என் தம்பி சிவா, இறுதியில் ’தமிழ் வாழ்க’ என கையை உயர்த்திச் சொல்லும்போது நானே சொல்வதுபோல்தான் இருந்தது. இந்த சீமான் தான் அந்த செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review 'பராசக்தி' ஒரு நல்ல படம். மொழிப்போரை அப்படியே காட்டவில்லை, அதேநேரம் மொழி உணர்வை சிதைக்கவில்லை என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார்.

விகடன் 19 Jan 2026 1:04 pm

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’...  திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!   எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் அக்மார்க் அல்வாவை மறுபடியும் தந்திருக்கிறதா பிக் பாஸ் டீம்? BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நடந்தது என்ன?    விளம்பரங்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதி நாள் நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான மற்றும் சுவாரசியமான ஹைலைட்ஸ்களை மட்டும் பார்ப்போம்.  ரெட்கார்டு தரப்பட்டிருந்த கம்ருதீனையும் பார்வதியையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்று, `மன்னிக்கறதுதானே பெரிய மனுஷத்தன்மை' என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது என்பதை சமூகவலைத்தள உரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது. அது சாத்தியமானதில் மகிழ்ச்சி.  அப்படியே நந்தினியையும் அழைத்திருக்கலாம். சில நாட்கள்தான் என்றாலும் அவரும் இந்த சீசனின் போட்டியாளர் தானே.  தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் போது அது சார்ந்த குற்றவுணர்ச்சியும் மனமாற்றமும் ஒருவருக்கு இருக்க வேண்டும். ‘பத்தியா.. பாரு இல்லாம ஃபினாலே நிகழ்ச்சிக்கு டிஆர்பி இருக்காது’ என்று அவரது ரசிகர்கள் விடாமல் முட்டுக் கொடுப்பது முறையானதல்ல. ஆயிரம் சாென்னாலும் பாருவும் கம்முவும் செய்தது குற்றம். இதை அவர்கள் மேடையில் பிரதிபலித்தது நன்று. சான்ட்ராவிடம் பாரு மன்னிப்பு கோரியதும் அவர் வந்து கட்டியணைத்துக் கொண்டதும் - ஒருவேளை பாவனையாக இருந்தாலும் - சிறந்த காட்சி.  வியானா சொன்னது உண்மை பாரு is a Born Gamer வியானா அழுத்தம் திருத்தமாக சொன்னபடி, இந்த சீசனின் நகர்வுகளுக்கு பாருவின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் அது நோ்மறையாக அமைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மாறாக நெகட்டிவிட்டி நிறைந்திருந்ததால் பாருவின் செயல்களை ரசிக்க முடியாது. “அவங்க கிட்ட நிறைய அறிவு இருக்கு. அதை சரியா பயன்படுத்தினா உயரத்துக்கு போவாங்க” என்று விஜய்சேதுபதி சொல்வதும் இதைத்தான்.  பாருவையும் கம்முவையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்ததின் மூலம் அவர்கள் மீதுள்ள களங்கமும் கறையும் மட்டுப்பட்டிருக்கிறது. இது அவர்களின் வருங்கால பயணத்திற்கு துணை நிற்கும்.  ‘பிக் பாஸ் உங்களுக்கு தந்த அனுபவம் என்ன?’ என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட போது கனி மட்டுமே ஒரு மாதிரி சிறந்த பதிலைச் சொன்னார். மற்றவர்களிடம் போதுமான பதில்கள் இல்லை. பிரவீன்காந்தியும் திவாகரும் எதையோ சொல்லி சிரித்தார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு சரியாக இருந்ததா? இந்த சீசனின் அடிப்படை பிழைகளுள் ஒன்று, போட்டியாளர்களின் தேர்வு. இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை போட்டியாளர்களாக அழைத்து வந்தது, இந்த சீசனுக்கு பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. எந்தவொரு விசாரணையிலும் யாராலும் கோர்வையாகவோ தெளிவாகவோ நகைச்சுவையாகவோ பேச முடியவில்லை. விசே என்கிற கண்டிப்பான வாத்தியார் முன்னால் வாய் பொத்தி அமர்ந்திருக்கும் மாணவர்கள் போலவே தென்பட்டார்கள்.  BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல் முத்துக்குமரன், மஞ்சரி, விக்ரமன், அஸீம் போன்று தங்களின் தரப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் இந்த சீசனில் இல்லாமல் போனது சோர்வை ஏற்படுத்தியது. “வேற ஏதாவது கருத்து இருக்கா.. ஏதாவது சொல்லணுமா?” என்று விசே வாய்ப்பு தந்தாலும் கூட இவர்களால் சரியாகப் பேச முடியவில்லை.  “வீட்டுக்குள்ள இருக்கற நாலு பேரையும் பார்க்கலாமா?” என்று கேட்க விசே, அதற்காக தந்த குறிப்பிலேயே ‘யார் வெற்றியாளர்?’ என்பது மறைமுகமாக அம்பலமானது. ‘வில்லனா ஆனாலும் பரவாயில்லைன்னு ஒருத்தர், மனுஷனா இருக்கறதுதான் முக்கியம்ன்னு ஒருத்தர், பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய ஒருத்தர், பாதில கேம் ஆரம்பிச்ச ஒருத்தர்’ என்று முறையே விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டார் விசே. ‘துதியைக் கவனித்தீரா?’ என்று இம்சை அரசனில் வரும் வசனத்தைப் போல, ‘பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய’ போட்டியாளருக்கு கடைசியில் கோப்பை அளிக்கப்பட்டு விட்டது.  BB TAMIL 9 GRAND FINALE இசைக் கச்சேரி ஃபினாலே நிகழ்ச்சியின் ஹைலைட் “பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒருத்தரோட உண்மையான காரெக்டர் அம்பலமாகி விடும். நீண்ட நாட்களுக்கு நடிக்க முடியாது. அது தெரிஞ்சும் ஆட வந்த போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டறேன்” என்று விசே பாராட்டியது சிறப்பு. போட்டியாளர்களை வெளியில் நின்று குற்றம் சொல்கிற நாம் கூட, ஒருவேளை உள்ளே சென்றால் அவற்றை விடவும் அதிகமாக அம்பலப்படக்கூடும்.  போட்டியாளர்களை மகிழ்விக்க நடந்த இசைக்கச்சோி இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஹைலைட்களில் ஒன்று. ராஜாவும் ரஹ்மானும் தமிழ் ரசனையில் எத்தனை ஆழமாக ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கான சாட்சியம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என்று முதலில் பாடப்பட்ட பாடலே அத்தனை அற்புதம். (இதன் மலையாள வொ்ஷன் இதை விடவும் அற்புதமாக இருக்கும்!) erotic வார்த்தைகளை ஹஸ்கியான குரலில் சரண்ராஜா பாட ‘என்னடா நடக்குது இங்க?’ என்கிற மாதிரி போட்டியாளர்கள் விழித்தது சுவாரசியமான காட்சி.  வீட்டிற்குள் அரோ அடிக்கடி பாடும் ‘எனக்கு புடிச்சவனே’ என்கிற ஒரிஜினல் பாடலும் பாடப்பட்டது. கூட்டத்தில் நின்று பாடும் போது தடுமாறிய அரோ, தனியாக பாடிய போது அசத்தினார். Who is the hero என்கிற ஆண்ட்ரியாவின் ரகளையான பாடலும் சிறந்த முறையில் பாடப்பட்டது.  கோவிந்த் வசந்தாவின் ‘போறேன்…’ நெகிழ வைத்தது.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸின் மந்திரக்குரலும் போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான வாக்குமூலமும் இறுதிப் போட்டியாளர்கள் அனைவரும் ‘என்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸ் சண்டை மாதிரி, கண்ணாடிகள் சூழ்ந்திருக்கிற அறையில் நிற்கப்பட்டு மனசோடு பேச வைக்கப்பட்டார்கள். எந்த இடத்தில் தன்னுடன் பேசுகிறோம், எந்த இடத்தில் பிக் பாஸ் பேசுகிறார் என்பது தெரியாமல் குழம்பியது சுவாரசியம். ‘அது அழுகையோ, கோபமோ.. உங்களை அப்படியே ஏத்துக்கங்க.. உங்களை நீங்க முதல்ல லவ் பண்ணுங்க” என்பது பிக் பாஸ் சொன்னதின் சாரமாக இருந்தது. பிக் பாஸ் குரலில் வழக்கம் போல் சிறந்த மாடுலேஷனும் ஆன்மாவைத் தொடும் ஈர்ப்பும் இருந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் சிறந்த ரிப்போர்ட் தந்து நெகிழ வைத்தார். (நாம் பார்க்கத் தவறிய காட்சிகளையும் பிக் பாஸ் டீம் முழுமையாகப் பார்ப்பதால் ஒவ்வொருவரையும் சரியான அனலைஸ் செய்திருப்பார்கள்).  வீட்டுக்குள் சென்ற விசே, நீங்கள் வெளிப்படுத்திய மூன்று உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று போட்டியாளர்களிடம் கேட்டார். ‘கார் டாஸ்க்கில் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டதை பகிர்ந்து கொண்டார் திவ்யா. தன்னுள் ஒளிந்திருந்த வீரம் TTF டாஸ்க்கில் வெளிப்பட்டதை சொன்னார் அரோ. பாருவை தள்ளி விட்ட தருணத்திற்காக வருந்தினார் சபரி. House Tour-ல் ‘பிக் பாஸ் பேச்சை கேட்காம அவரை சுத்த விட்டீங்க’ என்று விசே கிண்டலடிக்க, அதை வழிமொழிந்தார் பிக் பாஸ்.  மேடையில் நடந்த கலை நிகழ்ச்சிகள் தனியாக பதிவாக்கப்பட்டு, பிறகு இணைக்கப்பட்டிருந்தது நன்றாக தெரிந்தது. இந்த சீசனை ரகளையாக கிண்டலடித்து வினோத் பாடிய பாடல் வரிகள் அருமை. ‘எல்லாமே பைத்தியம்’ மாதிரியான வரிகளை மட்டும் அடக்கி வாசித்திருக்கலாம். தொழில்நுட்ப மாயமாலங்களை பயன்படுத்தி திவாகர் டான்ஸ் ஆடுவது போல காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE சபரிக்கு கிடைத்த சாக்லேட் அரோரா முதல் எவிக்ஷன் ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன். கிஃப்ட் பாக்ஸில் வெளியே செல்பவரின் பெயர் ஒளிந்திருக்கும். சில பெட்டிகளில் இருந்த லாலிபப்களை ஆசையாக எடுத்துக் கொண்டார் சபரி. பாவம் அவருக்கு கடைசியில் அதுதான் மிஞ்சியது. ‘சபரி குழந்தை மாதிரி’ என்று விசே இறுதியில் சொன்னதும் இதைத்தான் போல.  பரிசுப் பெட்டியில் அரோவின் பெயர் இருந்தது. ‘அய்யோ’ என்று சிணுங்கிய அரோ, பிறகு ‘சரி.. எப்பவோ போயிருக்க வேண்டியது’ என்று ஏற்றுக் கொண்டார். ‘என் படிப்பைத் தொடரணும்.’ என்று மேடையில் அவர் அறிவித்தது சிறப்பு.  மீதமிருந்த மூன்று போட்டியாளர்களிடம் கோப்பையை அறிமுகப்படுத்திய பிக் பாஸ், “யார் கப் கிட்ட சிறப்பா பேசறாங்களோ, அவங்களுக்குத்தான் கிடைக்கும்’ என்று ஆசை காட்டினார். ‘இதுவரைக்கும் நான் அவார்டே வாங்கியதில்லை’ என்கிற அதே பல்லவியை பாடினார் திவ்யா. (மேடையிலும் இதே பாட்டுதான்!) ‘நீ கிடைக்கணும்ன்னு நான் ஆசைப்படல. அதுக்காக நான் வரலை. ஆனா அதெல்லாம் நடந்துடுமோன்னு ஆசையா இருக்கு’ என்று வழக்கம் போல் தலையைச் சுற்ற வைத்தார் விக்ரம்.  BB TAMIL 9 GRAND FINALE தன் மீதான விமர்சனங்களுக்கு விசே சொன்ன பதில் “வாரா வாரம் நான் உங்களை கேள்வி கேட்டேன். நீங்க ஏதாவது கேக்க விரும்பறீங்களா?” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் விசே. “நீங்க பாரபட்சம் இல்லாமத்தான் நடக்கறீங்க. ஆனாலும் எதிர்மறையான விமர்சனங்கள் வருதே” என்று திவாகர் கேட்க, “அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். என் வேலையை நான் பார்க்கறேன்” என்று விசே சொன்னது சரியானதுதான்.  நாம் செய்யும் ஒரு சாதாரண வேலையிலேயே குற்றம் சொல்ல நான்கு பேர் இருப்பார்கள். பிக் பாஸ் போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியின் முடிவுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான சோஷியல் மீடியாவுமே நெகட்டிவிட்டியைத்தான் தீனியாக வைக்கின்றன. அதுதான் நல்ல வியாபாரமும் ஆகிறது. இந்த நோக்கில் விசே சொன்னது சரிதான் என்றாலும், தன் மீதும் ஷோவின் மீதும் வைக்கப்படுகின்ற நியாயமான விமர்சனங்களையும்  உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தக்கூடாது. பாரு பத்தி ஏதாவது சொல்லுங்க என்று கம்மு கேட்டதற்கு ‘அறிவை சரியா முதலீடு பண்ணணும்’ என்று விசே சொன்னது சிறப்பு. “இந்த நிகழ்ச்சியை எந்தவகையிலும் பர்சனலா எடுத்துச் செல்ல மாட்டேன், அப்படிப் பார்த்தால் அது ஷோவை பாதிக்கும் என்று விசே சொல்வதை நம்புவோம்.  BB TAMIL 9 GRAND FINALE விவாத மேடையில் சிறப்பாகப் பேசிய முத்துவும் மஞ்சரியும் “இந்த சீசனின் மீதான விமர்சனங்கள் பற்றி ஒரு விவாத மேடை நடைபெறவிருக்கிறது’ என்று விசே அறிவித்தது நன்று. இதைப் பற்றிய நிபுணர்கள் வருவார்கள் என்று பார்த்தால் மா.கா.ப நடுவராக இருந்து ஜனரஞ்சகமாக போனது. ராஜூ நகைச்சுவையாக பேசினார். தீபக் சுமார். முத்துக்குமரனும் மஞ்சரியும் எதிரெதிர் தலைப்பில் சுவாரசியமாக பேசினார்கள்.  பிக் பாஸ் போட்டியில் ஒருவர் நல்லவராக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா என்கிற தலைப்பு. இன்னமும் ஆழமாக பேசப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் முத்துவும் மஞ்சரியும் பேசியதில் இருந்தே நல்ல பாயிண்ட்கள் கிடைத்தன. (பட்டிமன்ற பேச்சாளர்களிடம் என்ன பிரச்சினை என்றால், தான் சார்ந்திருக்கும் அணிக்காக, அந்தக் கருத்துக்களின் மீது நம்பிக்கையில்லா விட்டாலும் மல்லுக்கட்டுவார்கள். இருக்கையை மாற்றி அமர வைத்தால் பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள்).  ஒருவர் சிறந்த பிக் பாஸ் ஆட்டக்காரராக திகழ்வதற்கு நல்லவராக இருந்தால் மட்டுமே போதாது. ‘நல்லவர்’ என்கிற பெயரில் ஒருவர் சும்மா அமர்ந்திருந்தால் அதில் என்ன சுவாரசியம்? நல்லவராக இருப்பதோடு வல்லவராக இருப்பதும் அவசியம். நெருக்கடியான சமயங்களில் சமநிலை இழக்காமல் இருத்தல், சகிப்புத்தன்மையோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றல், அவற்றின் மூளையாக இருந்து திட்டமிடல், பார்வையாளர்களின் சக போட்டியாளர்களின் மதிப்பை சம்பாதித்தல் போன்றவை அவசியம். (கடந்த சீசனில் முத்துக்குமரனிடம் இந்தத் திறமைகள் இருந்தன).  BB TAMIL 9 GRAND FINALE சான்ட்ராவிடம் மன்னிப்பு  பாரு என்ட்ரி போட்டியாளர்கள் மூவரையும் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்த பிக் பாஸ், “இந்த வெளிச்சத்தை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள்’ என்று அறிவுரை தந்தது நன்று.  “பாரு வரலை.. ஏதோ பிசியா இருக்காங்க’ என்று முதலில் அறிவித்தாலும் ‘ஒரு சர்ப்ரஸ்’ என்று விசே அறிவிக்க பாரு என்ட்ரி. முகம் பூசினாற் போல் இருந்த பாரு, “இந்த வீட்டில் நிறைய எமோஷன்ஸ் இருந்தது. கதவுக்கு பக்கத்துல நின்னது யாராவது வருவாங்கன்னு இல்ல. வீட்டை கொஞ்ச நேரம் பார்த்தேன்’ என்று ‘கெத்து’ விடாமல் பேசினார். சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டது சிறப்பு.  திவ்யாவின் அப்பா, மூச்சு விடாமல் பேசினார். (குடும்ப பழக்கம் போல!). ‘என் பொண்ணு அமைதியானவ’ என்று அவர் சொல்ல “ஓ..இதுதான் அமைதியா?’ என்று கிண்டலடித்தார் விசே.  விக்ரமின் எவிக்ஷன் ஓவியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. விக்ரமின் முகத்தில் சிறிது ஏமாற்றம் தெரிந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியேறினார். சபரியும் திவ்யாவும் எஞ்சினார்கள். சபரிக்கு கிடைக்கக்கூடும் என்று கூட பலர் நம்பியிருக்கலாம்.  சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் சபரி.  அர்ச்சனாவைத் தொடர்ந்து, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் கோப்பையை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் திவ்யா.  BB TAMIL 9 GRAND FINALE இறுதிப் போட்டியாளர்களின் பலமும் பலவீனமும்! இந்த வெற்றிக்கு திவ்யா தகுதியானவரா, PR டீமிற்கு கிடைத்த வெற்றியா என்று பல விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் இதுதான் முடிவு. இது மக்கள் அளித்த வாக்குகளின் படி நிகழ்ந்ததா அல்லது பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  என்னுடைய தனிப்பட்ட நோக்கில், விக்ரம் அல்லது சபரிக்கு கோப்பை அளிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பேன்.  ரொமான்ஸிலும் சண்டைகளிலும் வீழ்ந்திருந்த அரோ, ஒரு கட்டத்தில்தான் விழித்துக் கொண்டார். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை.  முதல் வாரத்தில் பிரகாசித்த சபரி, பின்பு செட் பிராப்பர்ட்டி போல ஆகிப் போனார். பாருவுடன் மோதி குறும்படம் மூலம் அச்சப்பட்டு அப்படியே பின்தங்கிப் போனார். ‘கார் டாஸ்க் தியாகத்தின்’ மூலம் மீண்டெழுந்தாலும் கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் சபரியிடம் ஒரு consistency இருந்தது. யாரிடமும் அநாவசியமான சண்டைக்குச் செல்லவில்லை. ஏற்படுகிற சண்டைகளையும் தீர்ப்பவராக இருந்தார். (ஆனால் நல்லதுக்குத்தான் காலமே இல்லையே!) விக்ரம் இந்த சீசனின் சிறந்த ஆட்டக்காரர். பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றோடு பல டாஸ்க்குகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். சான்ட்ராவும் திவ்யாவும் இவருக்கு தந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொண்டவர். கனி, சுபிக்ஷா என்று ஒரு வட்டத்தில் சிக்கியது இவருக்கு பின்னடைவைத் தந்திருக்கலாம். திவ்யாவுடன் சண்டை, வியானாவின் அவதூறு போன்றவற்றால் உடைந்து போனார். “எனக்கு கோப்பை மீது ஆசையே கிடையாது” என்று இவரே அடிக்கடி சொன்னதும் பலவீனம்.  வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த திவ்யா, ஆரம்பத்தில் சான்ட்ராவோடு இணைந்து பல அட்ராசிட்டிகளைச் செய்து வெறுப்பை சம்பாதித்தார். பிறகு அங்கிருந்து விலகியது இவருக்கு தனியான கவனத்தைத் தந்தது. பிக் பாஸ் வீட்டில் யார் அவமதிக்கப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை ஏற்படும் போது துணிச்சலாக குரல் தந்தது சிறப்பு.  ஆனால் திவ்யாவின் பலவீனம் என்னவென்றால் எளிதில் கோபப்படுவது, எதிர் தரப்பை பேச அனுமதிக்காமல் இருப்பது, தன் தரப்பையே மூச்சு விடாமல் தொடர்ந்து முன் வைப்பது, “வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்ற விக்ரமை மூர்க்கத்தனமாக மறுத்தது போன்றவை. மற்றவர்களோடு ஒப்பிடும் போது சகிப்புத்தன்மை குறைவாக இருந்த திவ்யா, வெற்றியாளராக ஆனதின் சூட்சுமம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்களின் பலவீனமே இவரது பலமாக மாறியதோ என்னமோ.  BB TAMIL 9 GRAND FINALE பார்வையாளர்கள் பெறப் போகிற வெற்றி என்ன? போட்டியாளர்களின் பலம், பலவீனம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். சுயபரிசீலனைதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை பாடம். வம்பு பேசி மகிழ்வதல்ல.  வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருந்த நேரத்தைப் பற்றி சொல்லும் போது மணி, நிமிடம், நொடி என்று கால்குலேட்டரில் கணக்குப் போட்டு சொன்னார் பிக் பாஸ். அதையே பார்வையாளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவழித்த நேரத்தினால் நமக்கு கிடைத்த பலன் என்ன?  போட்டியாளர்களிடம் வெளிப்பட்ட குணக்கேடுகள் நம்மிடமும் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். நல்ல விஷயங்கள் நம்மை பாதித்திருக்கும். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்றுவது முக்கியம். சற்று யோசித்துப் பாருங்கள். கோபம், வன்மம், பழிவாங்கல் என்கிற மிருகங்களிடம் கார் டாஸ்க்கில் தங்களை ஒப்படைக்காவிடில் பாருவும் கம்முவும் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி இருக்கக்கூடும். ஒரு நொடி கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக்கூடியது.  ‘விமர்சனம் சொல்பவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்றார் விசே. இந்தக் கட்டுரைத் தொகுதியை எழுதும் என்னுடைய நிலைப்பாடும் அதுவேதான்.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் போன்று பரவலாக கவனிக்கப்படுகிற, மனிதர்களின் உணர்ச்சிகளை முதலீடாக வைத்து ஆடப்படும் சூதாட்டமான பிக் பாஸ் போன்ற சென்சிட்டிவ்வான நிகழ்ச்சியில் பல்வேறு அபிப்பராயங்கள் நிச்சயம் வெளிப்படும். தனக்குப் பிடித்த போட்டியாளருக்கு ஆதரவு தருவதற்காக கண்மூடித்தனமான ரசிகர்கள் உருவாகியே தீர்வார்கள்.  வழக்கம் போல் இந்தக் கட்டுரைத் தொடரை எவ்வித மனச்சாய்வும் எந்தப் போட்டியாளருக்கும் சார்புநிலை  எடுக்காமல் மனச்சாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக எழுதியுள்ளேன். என்றாலும் எதிர்க்கருத்துக்கள் வருவதை தடுக்க முடியாது. அதுதான் ஜனநாயகம்.  முதல் சீசனில் இருந்து இந்த சீசன் வரைக்கும், இந்த ஷோ பற்றி எழுதுவற்கு தொடர் வாய்ப்பும் எவ்வித தலையீடும் அற்ற பரிபூர்ண சுதந்திரமும் அளித்துக் கொண்டிருக்கும் விகடன்.காமிற்கும் சார்ந்துள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம் நண்பர்களே.!

விகடன் 19 Jan 2026 12:52 pm

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’...  திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!   எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் அக்மார்க் அல்வாவை மறுபடியும் தந்திருக்கிறதா பிக் பாஸ் டீம்? BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நடந்தது என்ன?    விளம்பரங்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதி நாள் நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான மற்றும் சுவாரசியமான ஹைலைட்ஸ்களை மட்டும் பார்ப்போம்.  ரெட்கார்டு தரப்பட்டிருந்த கம்ருதீனையும் பார்வதியையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்று, `மன்னிக்கறதுதானே பெரிய மனுஷத்தன்மை' என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது என்பதை சமூகவலைத்தள உரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது. அது சாத்தியமானதில் மகிழ்ச்சி.  அப்படியே நந்தினியையும் அழைத்திருக்கலாம். சில நாட்கள்தான் என்றாலும் அவரும் இந்த சீசனின் போட்டியாளர் தானே.  தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் போது அது சார்ந்த குற்றவுணர்ச்சியும் மனமாற்றமும் ஒருவருக்கு இருக்க வேண்டும். ‘பத்தியா.. பாரு இல்லாம ஃபினாலே நிகழ்ச்சிக்கு டிஆர்பி இருக்காது’ என்று அவரது ரசிகர்கள் விடாமல் முட்டுக் கொடுப்பது முறையானதல்ல. ஆயிரம் சாென்னாலும் பாருவும் கம்முவும் செய்தது குற்றம். இதை அவர்கள் மேடையில் பிரதிபலித்தது நன்று. சான்ட்ராவிடம் பாரு மன்னிப்பு கோரியதும் அவர் வந்து கட்டியணைத்துக் கொண்டதும் - ஒருவேளை பாவனையாக இருந்தாலும் - சிறந்த காட்சி.  வியானா சொன்னது உண்மை பாரு is a Born Gamer வியானா அழுத்தம் திருத்தமாக சொன்னபடி, இந்த சீசனின் நகர்வுகளுக்கு பாருவின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் அது நோ்மறையாக அமைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மாறாக நெகட்டிவிட்டி நிறைந்திருந்ததால் பாருவின் செயல்களை ரசிக்க முடியாது. “அவங்க கிட்ட நிறைய அறிவு இருக்கு. அதை சரியா பயன்படுத்தினா உயரத்துக்கு போவாங்க” என்று விஜய்சேதுபதி சொல்வதும் இதைத்தான்.  பாருவையும் கம்முவையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்ததின் மூலம் அவர்கள் மீதுள்ள களங்கமும் கறையும் மட்டுப்பட்டிருக்கிறது. இது அவர்களின் வருங்கால பயணத்திற்கு துணை நிற்கும்.  ‘பிக் பாஸ் உங்களுக்கு தந்த அனுபவம் என்ன?’ என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட போது கனி மட்டுமே ஒரு மாதிரி சிறந்த பதிலைச் சொன்னார். மற்றவர்களிடம் போதுமான பதில்கள் இல்லை. பிரவீன்காந்தியும் திவாகரும் எதையோ சொல்லி சிரித்தார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு சரியாக இருந்ததா? இந்த சீசனின் அடிப்படை பிழைகளுள் ஒன்று, போட்டியாளர்களின் தேர்வு. இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை போட்டியாளர்களாக அழைத்து வந்தது, இந்த சீசனுக்கு பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. எந்தவொரு விசாரணையிலும் யாராலும் கோர்வையாகவோ தெளிவாகவோ நகைச்சுவையாகவோ பேச முடியவில்லை. விசே என்கிற கண்டிப்பான வாத்தியார் முன்னால் வாய் பொத்தி அமர்ந்திருக்கும் மாணவர்கள் போலவே தென்பட்டார்கள்.  BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல் முத்துக்குமரன், மஞ்சரி, விக்ரமன், அஸீம் போன்று தங்களின் தரப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் இந்த சீசனில் இல்லாமல் போனது சோர்வை ஏற்படுத்தியது. “வேற ஏதாவது கருத்து இருக்கா.. ஏதாவது சொல்லணுமா?” என்று விசே வாய்ப்பு தந்தாலும் கூட இவர்களால் சரியாகப் பேச முடியவில்லை.  “வீட்டுக்குள்ள இருக்கற நாலு பேரையும் பார்க்கலாமா?” என்று கேட்க விசே, அதற்காக தந்த குறிப்பிலேயே ‘யார் வெற்றியாளர்?’ என்பது மறைமுகமாக அம்பலமானது. ‘வில்லனா ஆனாலும் பரவாயில்லைன்னு ஒருத்தர், மனுஷனா இருக்கறதுதான் முக்கியம்ன்னு ஒருத்தர், பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய ஒருத்தர், பாதில கேம் ஆரம்பிச்ச ஒருத்தர்’ என்று முறையே விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டார் விசே. ‘துதியைக் கவனித்தீரா?’ என்று இம்சை அரசனில் வரும் வசனத்தைப் போல, ‘பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய’ போட்டியாளருக்கு கடைசியில் கோப்பை அளிக்கப்பட்டு விட்டது.  BB TAMIL 9 GRAND FINALE இசைக் கச்சேரி ஃபினாலே நிகழ்ச்சியின் ஹைலைட் “பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒருத்தரோட உண்மையான காரெக்டர் அம்பலமாகி விடும். நீண்ட நாட்களுக்கு நடிக்க முடியாது. அது தெரிஞ்சும் ஆட வந்த போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டறேன்” என்று விசே பாராட்டியது சிறப்பு. போட்டியாளர்களை வெளியில் நின்று குற்றம் சொல்கிற நாம் கூட, ஒருவேளை உள்ளே சென்றால் அவற்றை விடவும் அதிகமாக அம்பலப்படக்கூடும்.  போட்டியாளர்களை மகிழ்விக்க நடந்த இசைக்கச்சோி இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஹைலைட்களில் ஒன்று. ராஜாவும் ரஹ்மானும் தமிழ் ரசனையில் எத்தனை ஆழமாக ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கான சாட்சியம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என்று முதலில் பாடப்பட்ட பாடலே அத்தனை அற்புதம். (இதன் மலையாள வொ்ஷன் இதை விடவும் அற்புதமாக இருக்கும்!) erotic வார்த்தைகளை ஹஸ்கியான குரலில் சரண்ராஜா பாட ‘என்னடா நடக்குது இங்க?’ என்கிற மாதிரி போட்டியாளர்கள் விழித்தது சுவாரசியமான காட்சி.  வீட்டிற்குள் அரோ அடிக்கடி பாடும் ‘எனக்கு புடிச்சவனே’ என்கிற ஒரிஜினல் பாடலும் பாடப்பட்டது. கூட்டத்தில் நின்று பாடும் போது தடுமாறிய அரோ, தனியாக பாடிய போது அசத்தினார். Who is the hero என்கிற ஆண்ட்ரியாவின் ரகளையான பாடலும் சிறந்த முறையில் பாடப்பட்டது.  கோவிந்த் வசந்தாவின் ‘போறேன்…’ நெகிழ வைத்தது.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸின் மந்திரக்குரலும் போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான வாக்குமூலமும் இறுதிப் போட்டியாளர்கள் அனைவரும் ‘என்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸ் சண்டை மாதிரி, கண்ணாடிகள் சூழ்ந்திருக்கிற அறையில் நிற்கப்பட்டு மனசோடு பேச வைக்கப்பட்டார்கள். எந்த இடத்தில் தன்னுடன் பேசுகிறோம், எந்த இடத்தில் பிக் பாஸ் பேசுகிறார் என்பது தெரியாமல் குழம்பியது சுவாரசியம். ‘அது அழுகையோ, கோபமோ.. உங்களை அப்படியே ஏத்துக்கங்க.. உங்களை நீங்க முதல்ல லவ் பண்ணுங்க” என்பது பிக் பாஸ் சொன்னதின் சாரமாக இருந்தது. பிக் பாஸ் குரலில் வழக்கம் போல் சிறந்த மாடுலேஷனும் ஆன்மாவைத் தொடும் ஈர்ப்பும் இருந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் சிறந்த ரிப்போர்ட் தந்து நெகிழ வைத்தார். (நாம் பார்க்கத் தவறிய காட்சிகளையும் பிக் பாஸ் டீம் முழுமையாகப் பார்ப்பதால் ஒவ்வொருவரையும் சரியான அனலைஸ் செய்திருப்பார்கள்).  வீட்டுக்குள் சென்ற விசே, நீங்கள் வெளிப்படுத்திய மூன்று உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று போட்டியாளர்களிடம் கேட்டார். ‘கார் டாஸ்க்கில் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டதை பகிர்ந்து கொண்டார் திவ்யா. தன்னுள் ஒளிந்திருந்த வீரம் TTF டாஸ்க்கில் வெளிப்பட்டதை சொன்னார் அரோ. பாருவை தள்ளி விட்ட தருணத்திற்காக வருந்தினார் சபரி. House Tour-ல் ‘பிக் பாஸ் பேச்சை கேட்காம அவரை சுத்த விட்டீங்க’ என்று விசே கிண்டலடிக்க, அதை வழிமொழிந்தார் பிக் பாஸ்.  மேடையில் நடந்த கலை நிகழ்ச்சிகள் தனியாக பதிவாக்கப்பட்டு, பிறகு இணைக்கப்பட்டிருந்தது நன்றாக தெரிந்தது. இந்த சீசனை ரகளையாக கிண்டலடித்து வினோத் பாடிய பாடல் வரிகள் அருமை. ‘எல்லாமே பைத்தியம்’ மாதிரியான வரிகளை மட்டும் அடக்கி வாசித்திருக்கலாம். தொழில்நுட்ப மாயமாலங்களை பயன்படுத்தி திவாகர் டான்ஸ் ஆடுவது போல காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE சபரிக்கு கிடைத்த சாக்லேட் அரோரா முதல் எவிக்ஷன் ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன். கிஃப்ட் பாக்ஸில் வெளியே செல்பவரின் பெயர் ஒளிந்திருக்கும். சில பெட்டிகளில் இருந்த லாலிபப்களை ஆசையாக எடுத்துக் கொண்டார் சபரி. பாவம் அவருக்கு கடைசியில் அதுதான் மிஞ்சியது. ‘சபரி குழந்தை மாதிரி’ என்று விசே இறுதியில் சொன்னதும் இதைத்தான் போல.  பரிசுப் பெட்டியில் அரோவின் பெயர் இருந்தது. ‘அய்யோ’ என்று சிணுங்கிய அரோ, பிறகு ‘சரி.. எப்பவோ போயிருக்க வேண்டியது’ என்று ஏற்றுக் கொண்டார். ‘என் படிப்பைத் தொடரணும்.’ என்று மேடையில் அவர் அறிவித்தது சிறப்பு.  மீதமிருந்த மூன்று போட்டியாளர்களிடம் கோப்பையை அறிமுகப்படுத்திய பிக் பாஸ், “யார் கப் கிட்ட சிறப்பா பேசறாங்களோ, அவங்களுக்குத்தான் கிடைக்கும்’ என்று ஆசை காட்டினார். ‘இதுவரைக்கும் நான் அவார்டே வாங்கியதில்லை’ என்கிற அதே பல்லவியை பாடினார் திவ்யா. (மேடையிலும் இதே பாட்டுதான்!) ‘நீ கிடைக்கணும்ன்னு நான் ஆசைப்படல. அதுக்காக நான் வரலை. ஆனா அதெல்லாம் நடந்துடுமோன்னு ஆசையா இருக்கு’ என்று வழக்கம் போல் தலையைச் சுற்ற வைத்தார் விக்ரம்.  BB TAMIL 9 GRAND FINALE தன் மீதான விமர்சனங்களுக்கு விசே சொன்ன பதில் “வாரா வாரம் நான் உங்களை கேள்வி கேட்டேன். நீங்க ஏதாவது கேக்க விரும்பறீங்களா?” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் விசே. “நீங்க பாரபட்சம் இல்லாமத்தான் நடக்கறீங்க. ஆனாலும் எதிர்மறையான விமர்சனங்கள் வருதே” என்று திவாகர் கேட்க, “அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். என் வேலையை நான் பார்க்கறேன்” என்று விசே சொன்னது சரியானதுதான்.  நாம் செய்யும் ஒரு சாதாரண வேலையிலேயே குற்றம் சொல்ல நான்கு பேர் இருப்பார்கள். பிக் பாஸ் போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியின் முடிவுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான சோஷியல் மீடியாவுமே நெகட்டிவிட்டியைத்தான் தீனியாக வைக்கின்றன. அதுதான் நல்ல வியாபாரமும் ஆகிறது. இந்த நோக்கில் விசே சொன்னது சரிதான் என்றாலும், தன் மீதும் ஷோவின் மீதும் வைக்கப்படுகின்ற நியாயமான விமர்சனங்களையும்  உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தக்கூடாது. பாரு பத்தி ஏதாவது சொல்லுங்க என்று கம்மு கேட்டதற்கு ‘அறிவை சரியா முதலீடு பண்ணணும்’ என்று விசே சொன்னது சிறப்பு. “இந்த நிகழ்ச்சியை எந்தவகையிலும் பர்சனலா எடுத்துச் செல்ல மாட்டேன், அப்படிப் பார்த்தால் அது ஷோவை பாதிக்கும் என்று விசே சொல்வதை நம்புவோம்.  BB TAMIL 9 GRAND FINALE விவாத மேடையில் சிறப்பாகப் பேசிய முத்துவும் மஞ்சரியும் “இந்த சீசனின் மீதான விமர்சனங்கள் பற்றி ஒரு விவாத மேடை நடைபெறவிருக்கிறது’ என்று விசே அறிவித்தது நன்று. இதைப் பற்றிய நிபுணர்கள் வருவார்கள் என்று பார்த்தால் மா.கா.ப நடுவராக இருந்து ஜனரஞ்சகமாக போனது. ராஜூ நகைச்சுவையாக பேசினார். தீபக் சுமார். முத்துக்குமரனும் மஞ்சரியும் எதிரெதிர் தலைப்பில் சுவாரசியமாக பேசினார்கள்.  பிக் பாஸ் போட்டியில் ஒருவர் நல்லவராக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா என்கிற தலைப்பு. இன்னமும் ஆழமாக பேசப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் முத்துவும் மஞ்சரியும் பேசியதில் இருந்தே நல்ல பாயிண்ட்கள் கிடைத்தன. (பட்டிமன்ற பேச்சாளர்களிடம் என்ன பிரச்சினை என்றால், தான் சார்ந்திருக்கும் அணிக்காக, அந்தக் கருத்துக்களின் மீது நம்பிக்கையில்லா விட்டாலும் மல்லுக்கட்டுவார்கள். இருக்கையை மாற்றி அமர வைத்தால் பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள்).  ஒருவர் சிறந்த பிக் பாஸ் ஆட்டக்காரராக திகழ்வதற்கு நல்லவராக இருந்தால் மட்டுமே போதாது. ‘நல்லவர்’ என்கிற பெயரில் ஒருவர் சும்மா அமர்ந்திருந்தால் அதில் என்ன சுவாரசியம்? நல்லவராக இருப்பதோடு வல்லவராக இருப்பதும் அவசியம். நெருக்கடியான சமயங்களில் சமநிலை இழக்காமல் இருத்தல், சகிப்புத்தன்மையோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றல், அவற்றின் மூளையாக இருந்து திட்டமிடல், பார்வையாளர்களின் சக போட்டியாளர்களின் மதிப்பை சம்பாதித்தல் போன்றவை அவசியம். (கடந்த சீசனில் முத்துக்குமரனிடம் இந்தத் திறமைகள் இருந்தன).  BB TAMIL 9 GRAND FINALE சான்ட்ராவிடம் மன்னிப்பு  பாரு என்ட்ரி போட்டியாளர்கள் மூவரையும் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்த பிக் பாஸ், “இந்த வெளிச்சத்தை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள்’ என்று அறிவுரை தந்தது நன்று.  “பாரு வரலை.. ஏதோ பிசியா இருக்காங்க’ என்று முதலில் அறிவித்தாலும் ‘ஒரு சர்ப்ரஸ்’ என்று விசே அறிவிக்க பாரு என்ட்ரி. முகம் பூசினாற் போல் இருந்த பாரு, “இந்த வீட்டில் நிறைய எமோஷன்ஸ் இருந்தது. கதவுக்கு பக்கத்துல நின்னது யாராவது வருவாங்கன்னு இல்ல. வீட்டை கொஞ்ச நேரம் பார்த்தேன்’ என்று ‘கெத்து’ விடாமல் பேசினார். சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டது சிறப்பு.  திவ்யாவின் அப்பா, மூச்சு விடாமல் பேசினார். (குடும்ப பழக்கம் போல!). ‘என் பொண்ணு அமைதியானவ’ என்று அவர் சொல்ல “ஓ..இதுதான் அமைதியா?’ என்று கிண்டலடித்தார் விசே.  விக்ரமின் எவிக்ஷன் ஓவியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. விக்ரமின் முகத்தில் சிறிது ஏமாற்றம் தெரிந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியேறினார். சபரியும் திவ்யாவும் எஞ்சினார்கள். சபரிக்கு கிடைக்கக்கூடும் என்று கூட பலர் நம்பியிருக்கலாம்.  சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் சபரி.  அர்ச்சனாவைத் தொடர்ந்து, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் கோப்பையை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் திவ்யா.  BB TAMIL 9 GRAND FINALE இறுதிப் போட்டியாளர்களின் பலமும் பலவீனமும்! இந்த வெற்றிக்கு திவ்யா தகுதியானவரா, PR டீமிற்கு கிடைத்த வெற்றியா என்று பல விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் இதுதான் முடிவு. இது மக்கள் அளித்த வாக்குகளின் படி நிகழ்ந்ததா அல்லது பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  என்னுடைய தனிப்பட்ட நோக்கில், விக்ரம் அல்லது சபரிக்கு கோப்பை அளிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பேன்.  ரொமான்ஸிலும் சண்டைகளிலும் வீழ்ந்திருந்த அரோ, ஒரு கட்டத்தில்தான் விழித்துக் கொண்டார். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை.  முதல் வாரத்தில் பிரகாசித்த சபரி, பின்பு செட் பிராப்பர்ட்டி போல ஆகிப் போனார். பாருவுடன் மோதி குறும்படம் மூலம் அச்சப்பட்டு அப்படியே பின்தங்கிப் போனார். ‘கார் டாஸ்க் தியாகத்தின்’ மூலம் மீண்டெழுந்தாலும் கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் சபரியிடம் ஒரு consistency இருந்தது. யாரிடமும் அநாவசியமான சண்டைக்குச் செல்லவில்லை. ஏற்படுகிற சண்டைகளையும் தீர்ப்பவராக இருந்தார். (ஆனால் நல்லதுக்குத்தான் காலமே இல்லையே!) விக்ரம் இந்த சீசனின் சிறந்த ஆட்டக்காரர். பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றோடு பல டாஸ்க்குகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். சான்ட்ராவும் திவ்யாவும் இவருக்கு தந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொண்டவர். கனி, சுபிக்ஷா என்று ஒரு வட்டத்தில் சிக்கியது இவருக்கு பின்னடைவைத் தந்திருக்கலாம். திவ்யாவுடன் சண்டை, வியானாவின் அவதூறு போன்றவற்றால் உடைந்து போனார். “எனக்கு கோப்பை மீது ஆசையே கிடையாது” என்று இவரே அடிக்கடி சொன்னதும் பலவீனம்.  வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த திவ்யா, ஆரம்பத்தில் சான்ட்ராவோடு இணைந்து பல அட்ராசிட்டிகளைச் செய்து வெறுப்பை சம்பாதித்தார். பிறகு அங்கிருந்து விலகியது இவருக்கு தனியான கவனத்தைத் தந்தது. பிக் பாஸ் வீட்டில் யார் அவமதிக்கப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை ஏற்படும் போது துணிச்சலாக குரல் தந்தது சிறப்பு.  ஆனால் திவ்யாவின் பலவீனம் என்னவென்றால் எளிதில் கோபப்படுவது, எதிர் தரப்பை பேச அனுமதிக்காமல் இருப்பது, தன் தரப்பையே மூச்சு விடாமல் தொடர்ந்து முன் வைப்பது, “வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்ற விக்ரமை மூர்க்கத்தனமாக மறுத்தது போன்றவை. மற்றவர்களோடு ஒப்பிடும் போது சகிப்புத்தன்மை குறைவாக இருந்த திவ்யா, வெற்றியாளராக ஆனதின் சூட்சுமம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்களின் பலவீனமே இவரது பலமாக மாறியதோ என்னமோ.  BB TAMIL 9 GRAND FINALE பார்வையாளர்கள் பெறப் போகிற வெற்றி என்ன? போட்டியாளர்களின் பலம், பலவீனம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். சுயபரிசீலனைதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை பாடம். வம்பு பேசி மகிழ்வதல்ல.  வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருந்த நேரத்தைப் பற்றி சொல்லும் போது மணி, நிமிடம், நொடி என்று கால்குலேட்டரில் கணக்குப் போட்டு சொன்னார் பிக் பாஸ். அதையே பார்வையாளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவழித்த நேரத்தினால் நமக்கு கிடைத்த பலன் என்ன?  போட்டியாளர்களிடம் வெளிப்பட்ட குணக்கேடுகள் நம்மிடமும் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். நல்ல விஷயங்கள் நம்மை பாதித்திருக்கும். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்றுவது முக்கியம். சற்று யோசித்துப் பாருங்கள். கோபம், வன்மம், பழிவாங்கல் என்கிற மிருகங்களிடம் கார் டாஸ்க்கில் தங்களை ஒப்படைக்காவிடில் பாருவும் கம்முவும் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி இருக்கக்கூடும். ஒரு நொடி கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக்கூடியது.  ‘விமர்சனம் சொல்பவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்றார் விசே. இந்தக் கட்டுரைத் தொகுதியை எழுதும் என்னுடைய நிலைப்பாடும் அதுவேதான்.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் போன்று பரவலாக கவனிக்கப்படுகிற, மனிதர்களின் உணர்ச்சிகளை முதலீடாக வைத்து ஆடப்படும் சூதாட்டமான பிக் பாஸ் போன்ற சென்சிட்டிவ்வான நிகழ்ச்சியில் பல்வேறு அபிப்பராயங்கள் நிச்சயம் வெளிப்படும். தனக்குப் பிடித்த போட்டியாளருக்கு ஆதரவு தருவதற்காக கண்மூடித்தனமான ரசிகர்கள் உருவாகியே தீர்வார்கள்.  வழக்கம் போல் இந்தக் கட்டுரைத் தொடரை எவ்வித மனச்சாய்வும் எந்தப் போட்டியாளருக்கும் சார்புநிலை  எடுக்காமல் மனச்சாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக எழுதியுள்ளேன். என்றாலும் எதிர்க்கருத்துக்கள் வருவதை தடுக்க முடியாது. அதுதான் ஜனநாயகம்.  முதல் சீசனில் இருந்து இந்த சீசன் வரைக்கும், இந்த ஷோ பற்றி எழுதுவற்கு தொடர் வாய்ப்பும் எவ்வித தலையீடும் அற்ற பரிபூர்ண சுதந்திரமும் அளித்துக் கொண்டிருக்கும் விகடன்.காமிற்கும் சார்ந்துள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம் நண்பர்களே.!

விகடன் 19 Jan 2026 12:52 pm

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’...  திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!   எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் அக்மார்க் அல்வாவை மறுபடியும் தந்திருக்கிறதா பிக் பாஸ் டீம்? BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நடந்தது என்ன?    விளம்பரங்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதி நாள் நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான மற்றும் சுவாரசியமான ஹைலைட்ஸ்களை மட்டும் பார்ப்போம்.  ரெட்கார்டு தரப்பட்டிருந்த கம்ருதீனையும் பார்வதியையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்று, `மன்னிக்கறதுதானே பெரிய மனுஷத்தன்மை' என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது என்பதை சமூகவலைத்தள உரையாடல்களின் மூலம் அறிய முடிந்தது. அது சாத்தியமானதில் மகிழ்ச்சி.  அப்படியே நந்தினியையும் அழைத்திருக்கலாம். சில நாட்கள்தான் என்றாலும் அவரும் இந்த சீசனின் போட்டியாளர் தானே.  தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் போது அது சார்ந்த குற்றவுணர்ச்சியும் மனமாற்றமும் ஒருவருக்கு இருக்க வேண்டும். ‘பத்தியா.. பாரு இல்லாம ஃபினாலே நிகழ்ச்சிக்கு டிஆர்பி இருக்காது’ என்று அவரது ரசிகர்கள் விடாமல் முட்டுக் கொடுப்பது முறையானதல்ல. ஆயிரம் சாென்னாலும் பாருவும் கம்முவும் செய்தது குற்றம். இதை அவர்கள் மேடையில் பிரதிபலித்தது நன்று. சான்ட்ராவிடம் பாரு மன்னிப்பு கோரியதும் அவர் வந்து கட்டியணைத்துக் கொண்டதும் - ஒருவேளை பாவனையாக இருந்தாலும் - சிறந்த காட்சி.  வியானா சொன்னது உண்மை பாரு is a Born Gamer வியானா அழுத்தம் திருத்தமாக சொன்னபடி, இந்த சீசனின் நகர்வுகளுக்கு பாருவின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் அது நோ்மறையாக அமைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மாறாக நெகட்டிவிட்டி நிறைந்திருந்ததால் பாருவின் செயல்களை ரசிக்க முடியாது. “அவங்க கிட்ட நிறைய அறிவு இருக்கு. அதை சரியா பயன்படுத்தினா உயரத்துக்கு போவாங்க” என்று விஜய்சேதுபதி சொல்வதும் இதைத்தான்.  பாருவையும் கம்முவையும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்ததின் மூலம் அவர்கள் மீதுள்ள களங்கமும் கறையும் மட்டுப்பட்டிருக்கிறது. இது அவர்களின் வருங்கால பயணத்திற்கு துணை நிற்கும்.  ‘பிக் பாஸ் உங்களுக்கு தந்த அனுபவம் என்ன?’ என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட போது கனி மட்டுமே ஒரு மாதிரி சிறந்த பதிலைச் சொன்னார். மற்றவர்களிடம் போதுமான பதில்கள் இல்லை. பிரவீன்காந்தியும் திவாகரும் எதையோ சொல்லி சிரித்தார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு சரியாக இருந்ததா? இந்த சீசனின் அடிப்படை பிழைகளுள் ஒன்று, போட்டியாளர்களின் தேர்வு. இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை போட்டியாளர்களாக அழைத்து வந்தது, இந்த சீசனுக்கு பெரிய பின்னடைவை தந்திருக்கிறது. எந்தவொரு விசாரணையிலும் யாராலும் கோர்வையாகவோ தெளிவாகவோ நகைச்சுவையாகவோ பேச முடியவில்லை. விசே என்கிற கண்டிப்பான வாத்தியார் முன்னால் வாய் பொத்தி அமர்ந்திருக்கும் மாணவர்கள் போலவே தென்பட்டார்கள்.  BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல் முத்துக்குமரன், மஞ்சரி, விக்ரமன், அஸீம் போன்று தங்களின் தரப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் இந்த சீசனில் இல்லாமல் போனது சோர்வை ஏற்படுத்தியது. “வேற ஏதாவது கருத்து இருக்கா.. ஏதாவது சொல்லணுமா?” என்று விசே வாய்ப்பு தந்தாலும் கூட இவர்களால் சரியாகப் பேச முடியவில்லை.  “வீட்டுக்குள்ள இருக்கற நாலு பேரையும் பார்க்கலாமா?” என்று கேட்க விசே, அதற்காக தந்த குறிப்பிலேயே ‘யார் வெற்றியாளர்?’ என்பது மறைமுகமாக அம்பலமானது. ‘வில்லனா ஆனாலும் பரவாயில்லைன்னு ஒருத்தர், மனுஷனா இருக்கறதுதான் முக்கியம்ன்னு ஒருத்தர், பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய ஒருத்தர், பாதில கேம் ஆரம்பிச்ச ஒருத்தர்’ என்று முறையே விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டார் விசே. ‘துதியைக் கவனித்தீரா?’ என்று இம்சை அரசனில் வரும் வசனத்தைப் போல, ‘பாதில வந்தாலும் அடிச்சு ஆடிய’ போட்டியாளருக்கு கடைசியில் கோப்பை அளிக்கப்பட்டு விட்டது.  BB TAMIL 9 GRAND FINALE இசைக் கச்சேரி ஃபினாலே நிகழ்ச்சியின் ஹைலைட் “பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒருத்தரோட உண்மையான காரெக்டர் அம்பலமாகி விடும். நீண்ட நாட்களுக்கு நடிக்க முடியாது. அது தெரிஞ்சும் ஆட வந்த போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டறேன்” என்று விசே பாராட்டியது சிறப்பு. போட்டியாளர்களை வெளியில் நின்று குற்றம் சொல்கிற நாம் கூட, ஒருவேளை உள்ளே சென்றால் அவற்றை விடவும் அதிகமாக அம்பலப்படக்கூடும்.  போட்டியாளர்களை மகிழ்விக்க நடந்த இசைக்கச்சோி இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஹைலைட்களில் ஒன்று. ராஜாவும் ரஹ்மானும் தமிழ் ரசனையில் எத்தனை ஆழமாக ஊடுருவியுள்ளார்கள் என்பதற்கான சாட்சியம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ என்று முதலில் பாடப்பட்ட பாடலே அத்தனை அற்புதம். (இதன் மலையாள வொ்ஷன் இதை விடவும் அற்புதமாக இருக்கும்!) erotic வார்த்தைகளை ஹஸ்கியான குரலில் சரண்ராஜா பாட ‘என்னடா நடக்குது இங்க?’ என்கிற மாதிரி போட்டியாளர்கள் விழித்தது சுவாரசியமான காட்சி.  வீட்டிற்குள் அரோ அடிக்கடி பாடும் ‘எனக்கு புடிச்சவனே’ என்கிற ஒரிஜினல் பாடலும் பாடப்பட்டது. கூட்டத்தில் நின்று பாடும் போது தடுமாறிய அரோ, தனியாக பாடிய போது அசத்தினார். Who is the hero என்கிற ஆண்ட்ரியாவின் ரகளையான பாடலும் சிறந்த முறையில் பாடப்பட்டது.  கோவிந்த் வசந்தாவின் ‘போறேன்…’ நெகிழ வைத்தது.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸின் மந்திரக்குரலும் போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான வாக்குமூலமும் இறுதிப் போட்டியாளர்கள் அனைவரும் ‘என்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸ் சண்டை மாதிரி, கண்ணாடிகள் சூழ்ந்திருக்கிற அறையில் நிற்கப்பட்டு மனசோடு பேச வைக்கப்பட்டார்கள். எந்த இடத்தில் தன்னுடன் பேசுகிறோம், எந்த இடத்தில் பிக் பாஸ் பேசுகிறார் என்பது தெரியாமல் குழம்பியது சுவாரசியம். ‘அது அழுகையோ, கோபமோ.. உங்களை அப்படியே ஏத்துக்கங்க.. உங்களை நீங்க முதல்ல லவ் பண்ணுங்க” என்பது பிக் பாஸ் சொன்னதின் சாரமாக இருந்தது. பிக் பாஸ் குரலில் வழக்கம் போல் சிறந்த மாடுலேஷனும் ஆன்மாவைத் தொடும் ஈர்ப்பும் இருந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் சிறந்த ரிப்போர்ட் தந்து நெகிழ வைத்தார். (நாம் பார்க்கத் தவறிய காட்சிகளையும் பிக் பாஸ் டீம் முழுமையாகப் பார்ப்பதால் ஒவ்வொருவரையும் சரியான அனலைஸ் செய்திருப்பார்கள்).  வீட்டுக்குள் சென்ற விசே, நீங்கள் வெளிப்படுத்திய மூன்று உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று போட்டியாளர்களிடம் கேட்டார். ‘கார் டாஸ்க்கில் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டதை பகிர்ந்து கொண்டார் திவ்யா. தன்னுள் ஒளிந்திருந்த வீரம் TTF டாஸ்க்கில் வெளிப்பட்டதை சொன்னார் அரோ. பாருவை தள்ளி விட்ட தருணத்திற்காக வருந்தினார் சபரி. House Tour-ல் ‘பிக் பாஸ் பேச்சை கேட்காம அவரை சுத்த விட்டீங்க’ என்று விசே கிண்டலடிக்க, அதை வழிமொழிந்தார் பிக் பாஸ்.  மேடையில் நடந்த கலை நிகழ்ச்சிகள் தனியாக பதிவாக்கப்பட்டு, பிறகு இணைக்கப்பட்டிருந்தது நன்றாக தெரிந்தது. இந்த சீசனை ரகளையாக கிண்டலடித்து வினோத் பாடிய பாடல் வரிகள் அருமை. ‘எல்லாமே பைத்தியம்’ மாதிரியான வரிகளை மட்டும் அடக்கி வாசித்திருக்கலாம். தொழில்நுட்ப மாயமாலங்களை பயன்படுத்தி திவாகர் டான்ஸ் ஆடுவது போல காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.  BB TAMIL 9 GRAND FINALE சபரிக்கு கிடைத்த சாக்லேட் அரோரா முதல் எவிக்ஷன் ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன். கிஃப்ட் பாக்ஸில் வெளியே செல்பவரின் பெயர் ஒளிந்திருக்கும். சில பெட்டிகளில் இருந்த லாலிபப்களை ஆசையாக எடுத்துக் கொண்டார் சபரி. பாவம் அவருக்கு கடைசியில் அதுதான் மிஞ்சியது. ‘சபரி குழந்தை மாதிரி’ என்று விசே இறுதியில் சொன்னதும் இதைத்தான் போல.  பரிசுப் பெட்டியில் அரோவின் பெயர் இருந்தது. ‘அய்யோ’ என்று சிணுங்கிய அரோ, பிறகு ‘சரி.. எப்பவோ போயிருக்க வேண்டியது’ என்று ஏற்றுக் கொண்டார். ‘என் படிப்பைத் தொடரணும்.’ என்று மேடையில் அவர் அறிவித்தது சிறப்பு.  மீதமிருந்த மூன்று போட்டியாளர்களிடம் கோப்பையை அறிமுகப்படுத்திய பிக் பாஸ், “யார் கப் கிட்ட சிறப்பா பேசறாங்களோ, அவங்களுக்குத்தான் கிடைக்கும்’ என்று ஆசை காட்டினார். ‘இதுவரைக்கும் நான் அவார்டே வாங்கியதில்லை’ என்கிற அதே பல்லவியை பாடினார் திவ்யா. (மேடையிலும் இதே பாட்டுதான்!) ‘நீ கிடைக்கணும்ன்னு நான் ஆசைப்படல. அதுக்காக நான் வரலை. ஆனா அதெல்லாம் நடந்துடுமோன்னு ஆசையா இருக்கு’ என்று வழக்கம் போல் தலையைச் சுற்ற வைத்தார் விக்ரம்.  BB TAMIL 9 GRAND FINALE தன் மீதான விமர்சனங்களுக்கு விசே சொன்ன பதில் “வாரா வாரம் நான் உங்களை கேள்வி கேட்டேன். நீங்க ஏதாவது கேக்க விரும்பறீங்களா?” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் விசே. “நீங்க பாரபட்சம் இல்லாமத்தான் நடக்கறீங்க. ஆனாலும் எதிர்மறையான விமர்சனங்கள் வருதே” என்று திவாகர் கேட்க, “அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். என் வேலையை நான் பார்க்கறேன்” என்று விசே சொன்னது சரியானதுதான்.  நாம் செய்யும் ஒரு சாதாரண வேலையிலேயே குற்றம் சொல்ல நான்கு பேர் இருப்பார்கள். பிக் பாஸ் போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியின் முடிவுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலான சோஷியல் மீடியாவுமே நெகட்டிவிட்டியைத்தான் தீனியாக வைக்கின்றன. அதுதான் நல்ல வியாபாரமும் ஆகிறது. இந்த நோக்கில் விசே சொன்னது சரிதான் என்றாலும், தன் மீதும் ஷோவின் மீதும் வைக்கப்படுகின்ற நியாயமான விமர்சனங்களையும்  உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தக்கூடாது. பாரு பத்தி ஏதாவது சொல்லுங்க என்று கம்மு கேட்டதற்கு ‘அறிவை சரியா முதலீடு பண்ணணும்’ என்று விசே சொன்னது சிறப்பு. “இந்த நிகழ்ச்சியை எந்தவகையிலும் பர்சனலா எடுத்துச் செல்ல மாட்டேன், அப்படிப் பார்த்தால் அது ஷோவை பாதிக்கும் என்று விசே சொல்வதை நம்புவோம்.  BB TAMIL 9 GRAND FINALE விவாத மேடையில் சிறப்பாகப் பேசிய முத்துவும் மஞ்சரியும் “இந்த சீசனின் மீதான விமர்சனங்கள் பற்றி ஒரு விவாத மேடை நடைபெறவிருக்கிறது’ என்று விசே அறிவித்தது நன்று. இதைப் பற்றிய நிபுணர்கள் வருவார்கள் என்று பார்த்தால் மா.கா.ப நடுவராக இருந்து ஜனரஞ்சகமாக போனது. ராஜூ நகைச்சுவையாக பேசினார். தீபக் சுமார். முத்துக்குமரனும் மஞ்சரியும் எதிரெதிர் தலைப்பில் சுவாரசியமாக பேசினார்கள்.  பிக் பாஸ் போட்டியில் ஒருவர் நல்லவராக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா என்கிற தலைப்பு. இன்னமும் ஆழமாக பேசப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் முத்துவும் மஞ்சரியும் பேசியதில் இருந்தே நல்ல பாயிண்ட்கள் கிடைத்தன. (பட்டிமன்ற பேச்சாளர்களிடம் என்ன பிரச்சினை என்றால், தான் சார்ந்திருக்கும் அணிக்காக, அந்தக் கருத்துக்களின் மீது நம்பிக்கையில்லா விட்டாலும் மல்லுக்கட்டுவார்கள். இருக்கையை மாற்றி அமர வைத்தால் பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள்).  ஒருவர் சிறந்த பிக் பாஸ் ஆட்டக்காரராக திகழ்வதற்கு நல்லவராக இருந்தால் மட்டுமே போதாது. ‘நல்லவர்’ என்கிற பெயரில் ஒருவர் சும்மா அமர்ந்திருந்தால் அதில் என்ன சுவாரசியம்? நல்லவராக இருப்பதோடு வல்லவராக இருப்பதும் அவசியம். நெருக்கடியான சமயங்களில் சமநிலை இழக்காமல் இருத்தல், சகிப்புத்தன்மையோடு பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றல், அவற்றின் மூளையாக இருந்து திட்டமிடல், பார்வையாளர்களின் சக போட்டியாளர்களின் மதிப்பை சம்பாதித்தல் போன்றவை அவசியம். (கடந்த சீசனில் முத்துக்குமரனிடம் இந்தத் திறமைகள் இருந்தன).  BB TAMIL 9 GRAND FINALE சான்ட்ராவிடம் மன்னிப்பு  பாரு என்ட்ரி போட்டியாளர்கள் மூவரையும் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்த பிக் பாஸ், “இந்த வெளிச்சத்தை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள்’ என்று அறிவுரை தந்தது நன்று.  “பாரு வரலை.. ஏதோ பிசியா இருக்காங்க’ என்று முதலில் அறிவித்தாலும் ‘ஒரு சர்ப்ரஸ்’ என்று விசே அறிவிக்க பாரு என்ட்ரி. முகம் பூசினாற் போல் இருந்த பாரு, “இந்த வீட்டில் நிறைய எமோஷன்ஸ் இருந்தது. கதவுக்கு பக்கத்துல நின்னது யாராவது வருவாங்கன்னு இல்ல. வீட்டை கொஞ்ச நேரம் பார்த்தேன்’ என்று ‘கெத்து’ விடாமல் பேசினார். சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டது சிறப்பு.  திவ்யாவின் அப்பா, மூச்சு விடாமல் பேசினார். (குடும்ப பழக்கம் போல!). ‘என் பொண்ணு அமைதியானவ’ என்று அவர் சொல்ல “ஓ..இதுதான் அமைதியா?’ என்று கிண்டலடித்தார் விசே.  விக்ரமின் எவிக்ஷன் ஓவியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. விக்ரமின் முகத்தில் சிறிது ஏமாற்றம் தெரிந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியேறினார். சபரியும் திவ்யாவும் எஞ்சினார்கள். சபரிக்கு கிடைக்கக்கூடும் என்று கூட பலர் நம்பியிருக்கலாம்.  சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் சபரி.  அர்ச்சனாவைத் தொடர்ந்து, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் கோப்பையை வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் திவ்யா.  BB TAMIL 9 GRAND FINALE இறுதிப் போட்டியாளர்களின் பலமும் பலவீனமும்! இந்த வெற்றிக்கு திவ்யா தகுதியானவரா, PR டீமிற்கு கிடைத்த வெற்றியா என்று பல விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் இதுதான் முடிவு. இது மக்கள் அளித்த வாக்குகளின் படி நிகழ்ந்ததா அல்லது பிக் பாஸ் ஸ்ட்ராட்டஜியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  என்னுடைய தனிப்பட்ட நோக்கில், விக்ரம் அல்லது சபரிக்கு கோப்பை அளிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பேன்.  ரொமான்ஸிலும் சண்டைகளிலும் வீழ்ந்திருந்த அரோ, ஒரு கட்டத்தில்தான் விழித்துக் கொண்டார். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை.  முதல் வாரத்தில் பிரகாசித்த சபரி, பின்பு செட் பிராப்பர்ட்டி போல ஆகிப் போனார். பாருவுடன் மோதி குறும்படம் மூலம் அச்சப்பட்டு அப்படியே பின்தங்கிப் போனார். ‘கார் டாஸ்க் தியாகத்தின்’ மூலம் மீண்டெழுந்தாலும் கோப்பை கிடைக்கவில்லை. ஆனால் சபரியிடம் ஒரு consistency இருந்தது. யாரிடமும் அநாவசியமான சண்டைக்குச் செல்லவில்லை. ஏற்படுகிற சண்டைகளையும் தீர்ப்பவராக இருந்தார். (ஆனால் நல்லதுக்குத்தான் காலமே இல்லையே!) விக்ரம் இந்த சீசனின் சிறந்த ஆட்டக்காரர். பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றோடு பல டாஸ்க்குகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். சான்ட்ராவும் திவ்யாவும் இவருக்கு தந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொண்டவர். கனி, சுபிக்ஷா என்று ஒரு வட்டத்தில் சிக்கியது இவருக்கு பின்னடைவைத் தந்திருக்கலாம். திவ்யாவுடன் சண்டை, வியானாவின் அவதூறு போன்றவற்றால் உடைந்து போனார். “எனக்கு கோப்பை மீது ஆசையே கிடையாது” என்று இவரே அடிக்கடி சொன்னதும் பலவீனம்.  வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த திவ்யா, ஆரம்பத்தில் சான்ட்ராவோடு இணைந்து பல அட்ராசிட்டிகளைச் செய்து வெறுப்பை சம்பாதித்தார். பிறகு அங்கிருந்து விலகியது இவருக்கு தனியான கவனத்தைத் தந்தது. பிக் பாஸ் வீட்டில் யார் அவமதிக்கப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை ஏற்படும் போது துணிச்சலாக குரல் தந்தது சிறப்பு.  ஆனால் திவ்யாவின் பலவீனம் என்னவென்றால் எளிதில் கோபப்படுவது, எதிர் தரப்பை பேச அனுமதிக்காமல் இருப்பது, தன் தரப்பையே மூச்சு விடாமல் தொடர்ந்து முன் வைப்பது, “வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்ற விக்ரமை மூர்க்கத்தனமாக மறுத்தது போன்றவை. மற்றவர்களோடு ஒப்பிடும் போது சகிப்புத்தன்மை குறைவாக இருந்த திவ்யா, வெற்றியாளராக ஆனதின் சூட்சுமம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்களின் பலவீனமே இவரது பலமாக மாறியதோ என்னமோ.  BB TAMIL 9 GRAND FINALE பார்வையாளர்கள் பெறப் போகிற வெற்றி என்ன? போட்டியாளர்களின் பலம், பலவீனம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். சுயபரிசீலனைதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை பாடம். வம்பு பேசி மகிழ்வதல்ல.  வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருந்த நேரத்தைப் பற்றி சொல்லும் போது மணி, நிமிடம், நொடி என்று கால்குலேட்டரில் கணக்குப் போட்டு சொன்னார் பிக் பாஸ். அதையே பார்வையாளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவழித்த நேரத்தினால் நமக்கு கிடைத்த பலன் என்ன?  போட்டியாளர்களிடம் வெளிப்பட்ட குணக்கேடுகள் நம்மிடமும் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். நல்ல விஷயங்கள் நம்மை பாதித்திருக்கும். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்றுவது முக்கியம். சற்று யோசித்துப் பாருங்கள். கோபம், வன்மம், பழிவாங்கல் என்கிற மிருகங்களிடம் கார் டாஸ்க்கில் தங்களை ஒப்படைக்காவிடில் பாருவும் கம்முவும் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி இருக்கக்கூடும். ஒரு நொடி கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக்கூடியது.  ‘விமர்சனம் சொல்பவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்றார் விசே. இந்தக் கட்டுரைத் தொகுதியை எழுதும் என்னுடைய நிலைப்பாடும் அதுவேதான்.  BB TAMIL 9 GRAND FINALE பிக் பாஸ் போன்று பரவலாக கவனிக்கப்படுகிற, மனிதர்களின் உணர்ச்சிகளை முதலீடாக வைத்து ஆடப்படும் சூதாட்டமான பிக் பாஸ் போன்ற சென்சிட்டிவ்வான நிகழ்ச்சியில் பல்வேறு அபிப்பராயங்கள் நிச்சயம் வெளிப்படும். தனக்குப் பிடித்த போட்டியாளருக்கு ஆதரவு தருவதற்காக கண்மூடித்தனமான ரசிகர்கள் உருவாகியே தீர்வார்கள்.  வழக்கம் போல் இந்தக் கட்டுரைத் தொடரை எவ்வித மனச்சாய்வும் எந்தப் போட்டியாளருக்கும் சார்புநிலை  எடுக்காமல் மனச்சாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக எழுதியுள்ளேன். என்றாலும் எதிர்க்கருத்துக்கள் வருவதை தடுக்க முடியாது. அதுதான் ஜனநாயகம்.  முதல் சீசனில் இருந்து இந்த சீசன் வரைக்கும், இந்த ஷோ பற்றி எழுதுவற்கு தொடர் வாய்ப்பும் எவ்வித தலையீடும் அற்ற பரிபூர்ண சுதந்திரமும் அளித்துக் கொண்டிருக்கும் விகடன்.காமிற்கும் சார்ந்துள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம் நண்பர்களே.!

விகடன் 19 Jan 2026 12:52 pm

விஜய் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன கிருஷ்ணா, வெளிவருமா உண்மை? பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்-காவிரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. எல்லோருமே பொங்கல் வைக்க தயாராகி வந்தார்கள். பின் கிராமத்து ஸ்டைலில் பொங்கல் வைத்து எல்லோரும் பண்டிகையை கொண்டாடினார்கள். அதற்குப்பின் விஜய் போட்டி வைத்தார். முதலில் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதில் விஜய் அணி தான் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது ஆக பானை உடைக்கும் போட்டி நடக்கிறது. அதைப்பற்றி விஜய் விவரித்து கொண்டிருந்தார். உரியடிக்கும் போட்டியில் விஜய் வெற்றி பெற்று விட்டார். அதற்குப்பின் […] The post விஜய் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன கிருஷ்ணா, வெளிவருமா உண்மை? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 12:04 pm

சரவணனிடம் மன்னிப்பு கேட்கும் தங்கமயில், பாண்டியன் சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியா, மீனா சொல்வதெல்லாம் பொய். நான் 80 பவுன் நகை போட்டது தான் உண்மை என்று வாதம் செய்து கொண்டிருந்தார். சரவணன், நாங்கள் உங்களிடம் வரதட்சனை கேட்டோமா? நகை போட சொன்னோமா? எதற்காக இப்படி பொய் சொல்கிறீர்கள் என்றார். இருந்தாலும் விடாமல் பாக்கியா, உண்மையாகவே நகை போட்டது போல விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது மீனா, இவர்கள் சொல்வது பொய். அதற்கு சாட்சி நானும் என் தங்கை […] The post சரவணனிடம் மன்னிப்பு கேட்கும் தங்கமயில், பாண்டியன் சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Jan 2026 10:26 am

விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால்.! - இயக்குநர் சுதா கொங்கரா

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'பராசக்தி' படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியாகவில்லை. பராசக்தி இந்நிலையில் விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சுதா கொங்கரா, எனக்கு விஜய் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. விஜய் சாரிடம் இதனை நேரடியாகவே நான் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இசை வெளியீட்டு விழாவிலே விஜய் சாருடைய 'ஜனநாயகன்' படத்தை நான் FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக சொல்லி விட்டேன். 'ஜன நாயகன்' அந்த படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்சார் போர்டு இவ்வாறு செய்தது தவறு. எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. 'ஜனநாயகன்' படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டுமென்று நினைக்கவே இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவைப்பட்டது. அவ்வளவுதான் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 19 Jan 2026 10:11 am

விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால்.! - இயக்குநர் சுதா கொங்கரா

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'பராசக்தி' படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியாகவில்லை. பராசக்தி இந்நிலையில் விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சுதா கொங்கரா, எனக்கு விஜய் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. விஜய் சாரிடம் இதனை நேரடியாகவே நான் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இசை வெளியீட்டு விழாவிலே விஜய் சாருடைய 'ஜனநாயகன்' படத்தை நான் FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக சொல்லி விட்டேன். 'ஜன நாயகன்' அந்த படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்சார் போர்டு இவ்வாறு செய்தது தவறு. எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. 'ஜனநாயகன்' படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டுமென்று நினைக்கவே இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவைப்பட்டது. அவ்வளவுதான் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 19 Jan 2026 10:11 am

என் மகள் கட்டாயப்படுத்தினார் - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். ஆமீர் கான், இரா கான், கிரண் ராவ், ஆஷாத் ஆகியோர் 5.9 கிலோமீட்டர் பிரிவில் ஓடினர். ஜுனைத் கான் 10 கிலோமீட்டர் பிரிவில் பங்கேற்றார். மருமகன் நுபூர் முழு மராத்தானில் பங்கேற்றார். மும்பை மராத்தான் இதில் பேசிய ஆமீர் கான், ''மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மராத்தானில் கலந்து கொண்டதைப் பார்க்கும்போது ஏற்பட்ட உற்சாகம் ஒவ்வொரு வருடமும் என்னை இங்கு வரவழைக்கிறது. மும்பை மக்களிடம் ஒரு வித வேகம் இருக்கிறது''என்றார். 'ஏன் மராத்தான் போட்டியில் பங்கேற்றீர்கள்' என்று கேட்டதற்கு, ''எனக்கு மராத்தான் போட்டியில் பங்கேற்பது குறித்து ஐடியா இல்லை. எனது மகள்தான் என்னைக் கட்டாயப்படுத்தினார். எனவேதான் இதில் நான் பங்கேற்றேன்'' என்றார். Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு! - விஷ்ணு விஷால் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதன் ரகசியம் குறித்து ஆமீர் கானிடம் கேட்டதற்கு, ''உணவுமுறை மிகவும் முக்கியமானது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். 8 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம், அதன் பிறகு உடற்பயிற்சி அவசியம்'' என்று தெரிவித்தார். ஆமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பானி பவுண்டேஷன் மற்றும் அகஸ்தியா அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக டாடா மும்பை மராத்தான் 2026 இல் பங்கேற்றனர். தாடு அபேட் டெம் அவர்கள் தங்கள் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிக்குமாறு சமூக ஊடகங்களில் மக்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். ரூ.45 லட்சம் வென்ற எதியோப்பிய வீரர் டாடா மும்பை மராத்தான் போட்டியில் எத்தியோப்பியாவின் ஓட்டப்பந்தய வீரரான தாடு அபேட் டெம், ஆடவர் பிரிவில் முதலிடம் வந்து ₹45 லட்சம் பரிசு வென்றுள்ளார். மகளிர் பிரிவில் எத்தியோப்பியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை யெஷி கலயு செகோல் முதலிடம் வந்து ரூ.45 லட்சம் பரிசை வென்றார். அதிகாலையில் மராத்தான் போட்டி நடந்ததால் மும்பையில் அதிகாலையில் போட்டியாளர்கள் வர வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த மராத்தான் போட்டியை மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகர் தொடங்கி வைத்தார். Coolie: அது இதுவரை நடக்கவில்லை - `கூலி' படத்தை விமர்சித்தாரா ஆமீர் கான்? உண்மை என்ன?

விகடன் 19 Jan 2026 7:50 am

BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேறினர். தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் பணத்தை எடுத்து சென்றார். கடைசியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான 'பிக்பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் மூன்றாம் இடத்தையும், சபரி இரண்டாம் இடத்தையும் பிடிக்க திவ்யா கணேஷ் முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார். பட்டத்தை வென்ற திவ்யா கணேஷ் மேடையில் பேசுகையில், என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்ஸ்-ல வேலை பாத்திருக்கிறேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனா விருது கிடைக்காது. BB Tamil 9 இந்த பிக் பாஸ் ஷோகுள்ள வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேணாம்'னு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து வரல. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானா இருந்ததுக்கு கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு எமோஷனலாகப் பேசினார்.

விகடன் 18 Jan 2026 11:13 pm

BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேறினர். தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் பணத்தை எடுத்து சென்றார். கடைசியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான 'பிக்பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் மூன்றாம் இடத்தையும், சபரி இரண்டாம் இடத்தையும் பிடிக்க திவ்யா கணேஷ் முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார். பட்டத்தை வென்ற திவ்யா கணேஷ் மேடையில் பேசுகையில், என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்ஸ்-ல வேலை பாத்திருக்கிறேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனா விருது கிடைக்காது. BB Tamil 9 இந்த பிக் பாஸ் ஷோகுள்ள வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேணாம்'னு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து வரல. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானா இருந்ததுக்கு கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு எமோஷனலாகப் பேசினார்.

விகடன் 18 Jan 2026 11:13 pm

ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணம் இது தான்.. அஜித் குமார் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நான் தனிப்பட்ட வகையில்...

தஸ்தர் 18 Jan 2026 9:19 pm

கோர்ட்டில் சோழன் சொன்ன வார்த்தை, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சேரன்-பாண்டியன் காதலைப் பற்றி ரொம்ப புலம்பி கொண்டிருந்தார். நிலா, நீங்களும் காதலிக்க வேண்டியது தானே என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் என்றார். அதற்கு நிலா, நான் இன்னும் யாரும் காதலிக்கவில்லை. ஆனால், சீக்கிரமாகவே காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றார். இதைக் கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது. அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் […] The post கோர்ட்டில் சோழன் சொன்ன வார்த்தை, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 9:10 pm

துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா

துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித்...

தஸ்தர் 18 Jan 2026 7:59 pm

Suriya 47 Story,சூர்யா 47 படத்தின் கதை இதுதானா

Suriya 47 Story,சூர்யா 47 படத்தின் கதை இதுதானா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் 47-வது திரைப்படம் தயாராக இருப்பதாக அறிவிப்புகள வெளியாகிவிட்டன. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட )...

தஸ்தர் 18 Jan 2026 7:41 pm

கையும் களவுமாக விஜய்யிடம் சிக்கி கொண்ட முத்துமலர் குடும்பம், வெளிவருமா உண்மை? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வந்தது. பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விட்டார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது. பின் […] The post கையும் களவுமாக விஜய்யிடம் சிக்கி கொண்ட முத்துமலர் குடும்பம், வெளிவருமா உண்மை? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 7:20 pm

என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம் - அஜித் குமார்

24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது. அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார். அஜித் குமார் 'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video அஜித் குமார் பேச்சு இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார். அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது. அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி

விகடன் 18 Jan 2026 6:15 pm

என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம் - அஜித் குமார்

24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது. அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார். அஜித் குமார் 'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video அஜித் குமார் பேச்சு இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார். அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது. அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி

விகடன் 18 Jan 2026 6:15 pm

விவகாரத்தை வாபஸ் வாங்கிய சேது, தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, தனத்திடம் பணம் வாங்கினார். இதை கவனித்த தாமரை, என்ன பந்தயம் என்று கேட்டார். கருப்பன், நாங்கள் கொடுக்கும் கரும்பை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கணும் என்றார். உடனே அந்த பந்தயத்திற்கு தாமரை, சித்ரா இருவரும் ஒத்து கொண்டு எல்லா கரும்பையும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தார்கள். பின் எரிச்சல் தாங்க முடியாமல் இருவரும் கத்தினார்கள். அங்கிருந்து கருப்பன் எஸ்கேப் ஆகி விட்டார். […] The post விவகாரத்தை வாபஸ் வாங்கிய சேது, தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 4:49 pm

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஷாருக் கானுடன் அட்லீ ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

விகடன் 18 Jan 2026 4:17 pm

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஷாருக் கானுடன் அட்லீ ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

விகடன் 18 Jan 2026 4:17 pm

நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது –சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.கங்கனா நடித்த எமர்ஜென்சி படத்தில் chhavaa பிரிவினை ஏற்படுத்தும் படம் என்றும் கூடியிருந்தார். பின் […] The post நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது – சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 3:59 pm

‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ –நடிகர் கார்த்தி

‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ – நடிகர் கார்த்தி கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விவசாயத் துறைக்​காக உழைக்​கும் மனிதர்​களை​யும், அமைப்​பு​களை​யும் கவுர​வித்து அங்​கீகரிக்​கும் உழவன் ஃபவுண்​டேஷனின் ‘உழ​வர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னை​யில் நடை​பெற்​றது. இந்த விழா​வில் நடிகரும் உழவன் ஃபவுண்​டேஷனின் நிறுவனரு​மான கார்த்தி, நடிகர் சிவகுமார்,...

தஸ்தர் 18 Jan 2026 3:06 pm

'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video

Chhaava திரைப்படம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்று சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். Chhaava Poster அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி வீடியோ அதில், அன்பு நண்பர்களே... இசை எனக்கு எப்போதுமே கலாச்சாரத்தை இணைக்கும், கொண்டாடும், மரியாதை செய்யும் பாதையாக இருந்துள்ளது. இந்தியா என்னுடைய இன்ஸ்பிரேஷன். அது என்னுடைய ஆசிரியர், வீடு. சில நேரங்களில் நாம் சொல்வது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், நான் எப்போதுமே இசை மூலம் மரியாதை செய்யவும், முன்னேற்றவும், சேவை செய்யவும் தான் நினைக்கிறேன். கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் தரும் மற்றும் பல மத கலாசாரங்களைக் கொண்டாடும் இந்தியனாக இருப்பதில் நான் என்றுமே பெருமை கொள்கிறேன். Jhaala, பிரதமர் மோடி உடன் கலந்துகொண்ட WAVES மாநாடு, ரோஹினூர், நாகா இசை கலைஞர்களுடன் பணிபுரிந்தது... ஹன்ஸ் ஸிம்மருடன் ராமாயண திரைப்படத்தில் பணியாற்றியது என என்னுடைய ஒவ்வொரு படைப்புகளும் என்னுடைய கொள்கைகளைக் கூறும். நான் இந்தத் தேசத்திற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பேசியுள்ளார். உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained View this post on Instagram A post shared by AR Rahman: Official Updates (@arrofficialupdates)

விகடன் 18 Jan 2026 2:57 pm

``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும். கங்கனா ரனாவத் கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால் அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை. பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகையும், எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும். எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. கங்கனா ரனாவத் முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர், இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Standup Comedian - A.R Rahman, Prabhudeva காம்பினேஷன்ல ஒரு படம் பண்ணியிருக்கேன்

விகடன் 18 Jan 2026 1:53 pm

``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும். கங்கனா ரனாவத் கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால் அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை. பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகையும், எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும். எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. கங்கனா ரனாவத் முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர், இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Standup Comedian - A.R Rahman, Prabhudeva காம்பினேஷன்ல ஒரு படம் பண்ணியிருக்கேன்

விகடன் 18 Jan 2026 1:53 pm

BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.  போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத்.  ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்”  என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!)  தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா?  அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார்.  அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா.  பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள்.  பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை.  மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது.  பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன்.  அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

விகடன் 18 Jan 2026 1:30 pm

BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.  போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத்.  ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்”  என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!)  தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா?  அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார்.  அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா.  பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள்.  பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை.  மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது.  பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன்.  அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

விகடன் 18 Jan 2026 1:30 pm

BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.  போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத்.  ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்”  என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!)  தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா?  அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார்.  அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா.  பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள்.  பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை.  மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது.  பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன்.  அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

விகடன் 18 Jan 2026 1:30 pm

BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.  போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத்.  ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்”  என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!)  தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா?  அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார்.  அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா.  பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள்.  பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை.  மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது.  பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன்.  அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

விகடன் 18 Jan 2026 1:30 pm

மூன்றாவது முறையாக பிக் பாஸ் பட்டத்தை வென்ற பெண் போட்டியாளர் –யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 106 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post மூன்றாவது முறையாக பிக் பாஸ் பட்டத்தை வென்ற பெண் போட்டியாளர் – யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 1:24 pm

அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி

Chhaava திரைப்படம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஸ்வாதி சதுர்வேதி பதிவு இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சி சேனலின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்து மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவரது தெய்வீக மா துஜே சலாம் வந்ததாரத்தைப் பாடவோ... குறைந்தபட்சம் முணுமுணுக்கவோ அரைமணி நேரம் கெஞ்சினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். தங்களுடைய மிகப்பெரிய ஹிட் குறித்து கலைஞர்கள் எப்போதும் இப்படி அடம்பிடிக்கமாட்டார்கள். அதனால், நான் வருத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் சின்மயி பதிவு இதற்கு மறுப்பு தெரிவித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்... நவம்பர் 23, 2025 அன்று, புனேவில் நடந்த ஆர் கே லட்சுமணன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து கோஷமிட்ட கூட்டத்தினரிடையே ஏ ஆர் ரஹ்மானும் நாங்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடினோம். Bainjal-ல் கிட்டத்தட்ட அனைத்து இசை நிகழ்ச்சியிலும் அவர் மா துஜே சலாம் பாடுகிறார் . இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது தெரியும். ஒருவேளை அவர் தனது குரல் சிறப்பாக இல்லை என்றோ... நீங்கள் அவரை நேர்காணல் செய்த அன்று அவருக்கு பாட விரும்பவில்லை என்றோ பாடாமல் இருந்திருக்கலாம் என்று பதிலளித்துள்ளார். A R Rahman and all us sang Vande Mataram to a crowd that chanted with us on November 23 2025 in Pune at the R K Laxman memorial award concert. He sings Maa Tujhe Salaam at almost every concert @bainjal - everyone who has attended the concerts knows this. Maybe he felt his voice… https://t.co/lmbnLObVlh — Chinmayi Sripaada (@Chinmayi) January 17, 2026

விகடன் 18 Jan 2026 1:01 pm

மீசையை முறுக்கு 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட ஹிப்ஹாப் ஆதி..!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசையை முறுக்கு. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இது குறித்து பேசிய அவர் மீசையை முறுக்கு படத்தின் ஒன்றாம் பாகத்தில் ஆதி ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை தற்போது...

தஸ்தர் 18 Jan 2026 12:35 pm

தலைவர் தம்பி தலைமையில் படம் குறித்து பேசிய ஜீவா.. வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்...

தஸ்தர் 18 Jan 2026 12:14 pm

கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட கோளாறால் ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்...

தஸ்தர் 18 Jan 2026 11:42 am

உங்கள மாதிரி பாரபட்சம் கொண்ட ஆள நான் பார்த்ததில்லை –கங்கனா ரனாவத் ஆவேசம்

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் தான். மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான். […] The post உங்கள மாதிரி பாரபட்சம் கொண்ட ஆள நான் பார்த்ததில்லை – கங்கனா ரனாவத் ஆவேசம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Jan 2026 11:17 am

தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!

விகடன் 18 Jan 2026 10:54 am

தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!

விகடன் 18 Jan 2026 10:54 am

''புறநானூறு டு பராசக்தி; எஸ்.கே வந்த பிறகு மாற்றியவை!? - 'பராசக்தி'திரைக்கதையாசிரியர் அர்ஜூன்

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. பராசக்தி படத்தில்... 'பராசக்தி'யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன். இவர் சுதா கொங்கராவின் சீடர். 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். 'பராசக்தி'க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம். மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்... சுதா கொங்கராவிடம் 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து திரைக்கதையும் எழுதியிருக்கிறீர்கள்! உதவி இயக்குநர் டு ரைட்டர் ப்ரோமோஷன் கிடைத்தது எப்படி? நான் இப்படியான ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. சுதா மேமுடைய டிஸ்கஷன் எப்போதும் ஜனநாயகமாக இருக்கும். நாம் சொல்லும் விஷயங்கள், அவங்களுக்கு பிடித்துப் போச்சுனா நிச்சயமாக அதை ஏற்றுப்பாங்க. ஒருவேளை அது அவங்களுக்கு வொர்க் ஆகலைனாலும் 'நோ'னு சொல்லிடுவாங்க. ஜூனியர், சீனியர்னு யார் எந்த விஷயம் சொன்னாலும், சுதா மேம் அதுக்கு இடம் கொடுப்பாங்க. 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, கொரோனா டைம்லதான் இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கினோம். அப்போது, நெருக்கடியான சூழல்கள் காரணமாகக் குறைவான ஆட்களே கலந்துரையாடல்களில் இருப்போம். அப்படியான சமயத்தில் எங்களுக்குள்ள நல்ல கம்ஃபர்ட் அமைந்திடுச்சு. அது இந்த ப்ரோமோஷனுக்கு முக்கியமானதாகவும் அமைந்திருக்கலாம். Arjun Nadesan - Parasakthi Writer படத்தின் முக்கியக் களம் பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் அதைக் கமர்ஷியல் ட்ரீட்மென்டில் சொல்லியிருக்கிறீர்கள். கமர்ஷியலாகவே இந்தப் படத்தைக் கொண்டுபோக நினைத்ததற்குக் காரணம் என்ன? படத்தைத் தொடங்கும்போதே, இதை மெயின்ஸ்ட்ரீமில் கொண்டுபோகணும்னு முடிவு செய்திட்டோம். அதே சமயத்தில், கமர்ஷியல் விஷயங்கள் கதையிலிருந்து வெளியேறிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். இந்தக் கதைக்கான ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கும்போது, இதில் அடங்கியிருக்கும் பல இருள் பக்கங்கள் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. அதை மெயின்ஸ்ட்ரீம் வழியில் பயணித்துச் சொல்லவும் முடிவு பண்ணினோம். இப்போ எடுத்துக்காட்டாக, 'டைட்டானிக்' படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது உண்மையான சம்பவம். அதை மெயின்ஸ்ட்ரீமில் சொல்லியிருக்கிறார்கள். அதுபோல 'பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தின் டோனை 'பராசக்தி'க்குக் கொண்டுவந்து மெயின்ஸ்ட்ரீம் வடிவத்தில் சொல்லத் திட்டமிட்டோம். மக்கள் அனைவரும் படம் பார்க்க வேண்டுமென்பதிலும் கவனமாக இருந்தோம். 'சின்னதுரை' கேரக்டருக்கு அதர்வா சரியாக இருப்பாரா'னு உங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்ததாக சுதா கொங்கரா சொல்லியிருந்தாரே! எதனால் அந்த சந்தேகங்கள்? (மென்மையாகச் சிரித்துக் கொண்டே...) இதற்கு முன்னாடி இந்தக் கதையை வேறு சில நடிகர்களுக்காக எழுதி வச்சிருந்தோம். அதிலிருந்து மனம் மாறுவதற்கு டைம் தேவைப்பட்டிருக்கலாம். அது அந்த சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கலாம். சொல்லப்போனால், சின்னதுரை கேரக்டரை 'மௌன ராகம்' படக் கார்த்தியின் கதாபாத்திரத்தை எண்ணத்தில் வச்சுதான் டிசைன் பண்ணினோம். புரட்சிகரமான இளைஞர், அதே சமயம் ஸ்டைலாகவும் வசீகரமான தோற்றமும் இருக்கணும். அதர்வா ப்ரதர், லுக் டெஸ்ட்லேயே எங்களுடைய நம்பிக்கைகளைச் சம்பாதிச்சுட்டார்னு சொல்லலாம். படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் லுக் டெஸ்ட் பார்க்கும்போதே, எங்களுக்குள்ள பெருமளவு நம்பிக்கை பிறந்துடுச்சுனு சொல்லலாம். பராசக்தி |Parasakthi படத்தின் இண்டர்வெல் காட்சி, 'பாட்ஷா' மொமென்டாக இருக்குமென தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொல்லியிருந்தாரே, அந்த இண்டர்வெல் காட்சிக்குப் பின்னுள்ள கதையை விவரிக்க முடியுமா? படத்தில் நீங்க பார்க்கும் முதல் ரயில் காட்சி, தொடக்கத்துல அந்த இடத்துல அமைக்கிறதாக இல்லை. முதல் பாதி முழுவதும் செழியனின் கதாபாத்திரம், மொழிப் போரிலிருந்து விலகி இருக்கிற மாதிரிதான் டிசைன் பண்ணியிருந்தோம். இரண்டாம் பாதியில்தான் செழியனின் உண்மையான அடையாளத்தை ரிவீல் செய்வது போன்ற காட்சிகள் எழுதியிருந்தோம். ஆனா, அந்த விஷயத்தை மாற்றணும்னு முடிவு செய்து முதல்ல ரயிலை எரிக்கிற காட்சியை இணைத்தோம். காட்சிகளை மாற்றினாலும், அதே தாக்கத்தை க்ளைமேக்ஸ் கொடுத்தது. இண்டர்வெல் சீனில் எஸ்.கே சார் பேட்மேன் மாதிரி மேலே நிற்பார். அந்த ஷாட்டுக்கு ஐடியா தந்தது ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் சார்தான். வேறொரு ஷாட் முன்பே எடுத்திட்டோம். பிறகுதான் இப்படியொண்ணு எடுத்தா செழியனை இன்னும் பவர்ஃபுல்லாகக் காட்டலாம்னு அவர் ஐடியா கொடுக்க, அதை சாத்தியப்படுத்திட்டோம். இந்தக் கதைக்கு பேராசிரியர் அ. இராமசாமியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது? முதலிலேயே அவருடைய புத்தகங்களைப் படிச்சிட்டோம். பிறகு அதை வச்சு முதல் கதை டிராஃப்ட் முடிச்சிட்டோம். அந்தக் கதையை எடுத்துட்டு வாங்க, நான் படிக்கிறேன்னு அவர் சொன்னதும் அதை உடனடியாக நான் மதுரைக்குக் கொண்டு போனேன். அவரொரு பேராசிரியர், அது போலவே ரெட் பேனாவில் மாணவனுக்குத் திருத்துவது போல திருத்தி, சில விஷயங்களை எங்களிடம் சொன்னார். அவருடன் பணியாற்றியதை பெருமையாக உணர்றேன். Arjun Nadesan - Parasakthi Writer சூர்யாவுக்காக செய்து வைத்த திரைக்கதை, பிறகு எஸ்.கே வந்ததும் எந்தெந்த விஷயங்கள் மாற்ற வேண்டியதாக இருந்தன? சொல்லப்போனால், பெரிதாக எதுவும் மாற்றலைங்கிறதுதான் உண்மை. எஸ்.கே சாருக்கு எப்போதும் ஒரு ஃபன்னான பக்கம் இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்ற மாதிரியான விஷயங்களைத் திரைக்கதையில் சேர்த்தோம். காதல் காட்சிகளிலும் அவருடைய வலுவான பக்கத்தையே கொண்டுவர நினைத்தோம். SK Parasakthi அறிஞர் அண்ணாவின் குரலைக் கொண்டு கச்சிதமாகக் கொண்டு வருவதற்கு ஏ.ஐ. பயன்படுத்தினீர்களா? இல்லைங்க! அதை சேத்தன் சாரே முயற்சி செய்து கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படியான குரல்ல பேசுறதுக்கு பெருமளவு முயற்சி பண்ணினாரு. பிறகு டப்பிங்ல முழுமையாக அதை கொண்டுவந்திட்டாரு. முதல்ல அந்தக் கேரக்டர்ல எஸ்.எஸ். ஸ்டான்லி சார்தான் நடிக்க வேண்டியதாக இருந்துச்சு. துரதிர்ஷ்டவசமாக, அவர் இப்போ நம்ம கூட இல்லை. பிறகு சேத்தன் சார் வந்து, அந்தக் கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு. முழுப் பேட்டியைப் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

விகடன் 18 Jan 2026 7:52 am

BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

விகடன் 18 Jan 2026 7:46 am

BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

விகடன் 18 Jan 2026 7:46 am

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.

விகடன் 17 Jan 2026 11:15 pm

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.

விகடன் 17 Jan 2026 11:15 pm

அஜித் Vs விஜய்.. எந்தெந்த திரைப்படங்களில் யாருக்கு வெற்றி? வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் – விஜய்...

தஸ்தர் 17 Jan 2026 8:11 pm

அஜித் குமாரை சந்தித்து பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா..வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது அஜித் கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி...

தஸ்தர் 17 Jan 2026 7:40 pm

‘ஜனநாயகன்’படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’ விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை...

தஸ்தர் 17 Jan 2026 6:51 pm

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா? லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக அஸ்வினும் ரஜினியிடம் பாராட்டு பெற்றனர். பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ்...

தஸ்தர் 17 Jan 2026 6:11 pm

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்?

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்? வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்...

தஸ்தர் 17 Jan 2026 6:06 pm

‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம் நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு...

தஸ்தர் 17 Jan 2026 6:02 pm

Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!

நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 4:46 pm

Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!

நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 4:46 pm

விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!

விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.

விகடன் 17 Jan 2026 3:02 pm

விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!

விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.

விகடன் 17 Jan 2026 3:02 pm

BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.  திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை.  BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது.   காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது.  பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.  ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார்.  மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.  BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள்.  ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.  மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர்.  பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி.  பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம்.  திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.  BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார்.  சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர்.  ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு.  “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு  நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம்.  இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி.  இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.! 

விகடன் 17 Jan 2026 2:49 pm

BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.  திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை.  BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது.   காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது.  பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.  ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார்.  மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.  BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள்.  ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.  மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர்.  பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி.  பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம்.  திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.  BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார்.  சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர்.  ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு.  “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு  நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம்.  இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி.  இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.! 

விகடன் 17 Jan 2026 2:49 pm

Vaa Vaathiyaar: கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - 'ஏஸ்'பட இயக்குநர் குற்றச்சாட்டு

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வா வாத்தியார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏஸ்' போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துக்ளக் தர்பார் அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று எனப் பதிவிட்டிருக்கிறார். வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!

விகடன் 17 Jan 2026 12:25 pm

Vaa Vaathiyaar: கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - 'ஏஸ்'பட இயக்குநர் குற்றச்சாட்டு

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வா வாத்தியார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏஸ்' போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துக்ளக் தர்பார் அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று எனப் பதிவிட்டிருக்கிறார். வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!

விகடன் 17 Jan 2026 12:25 pm

சென்சார் ரொம்ப முக்கியம்.. இயக்குனர் நலன் குமாரசாமி பேச்சு.!!

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் ரொம்ப முக்கியம் ஆனால்...

தஸ்தர் 17 Jan 2026 11:48 am

ஸ்ருதி மீனாவிடம் உதவி கேட்கும் ரோகினி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று...

தஸ்தர் 17 Jan 2026 11:29 am

Magenta – Official Teaser

Magenta – Official Teaser , Shanthnu , Anjali Nair ,Bharath Mohan , Brand Blitz Entertainment

தஸ்தர் 17 Jan 2026 11:28 am

மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம் - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன். பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை. இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது. 90-களில் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தால்' திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது. நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

விகடன் 17 Jan 2026 10:15 am

மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம் - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன். பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை. இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது. 90-களில் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தால்' திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது. நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

விகடன் 17 Jan 2026 10:15 am

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர். விராட் கோலி தம்பதி இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர். சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர். சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார். அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள். இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர். 34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?

விகடன் 17 Jan 2026 9:15 am

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர். விராட் கோலி தம்பதி இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர். சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர். சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார். அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள். இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர். 34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?

விகடன் 17 Jan 2026 9:15 am