Keerthy Suresh: அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு... - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எடிட்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயம். ஆனா, அது இன்னைக்கு நம்மையே மீறி எங்கையோ போகிற மாதிரி இருக்கு. சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும்போது, நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு என்னையே யோசிக்க வைக்கிற அளவுக்கு ரியலாக இருக்கு. சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தைப் பார்த்தேன். நான் அப்படியான ஒரு போஸ் கொடுக்கவே இல்லை. இது எங்க போயிட்டு இருக்குனு தெரியல. அதனால அவங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கு. Keerthy Suresh - Revolver Rita ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. ஒவ்வொரு விஷயம் வளரும்போது, பாதிப்புகளும் வளர்ந்துட்டு இருக்கு. எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அதில் சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் அதை ஏ.ஐனு கண்டுபிடிச்சிடுவார். அப்புறம், கமெண்ட்ஸ்ல பார்க்கும்போதுதான் அது ஏ.ஐனு எனக்கு தெரிய வருது.” எனக் கூறினார்.
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண் - ஸ்ரேயா போட்டோ ஆல்பம்
நடிகர் பிரேம்ஜி-இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக இவர் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் […] The post நடிகர் பிரேம்ஜி-இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.
என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.
தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!
நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் , எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? லிஸ்ட் இதோ
தமிழ் சேனலில் 2025 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் , எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.
Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்றார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொன்னார். இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால் முத்துவேல் […] The post பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த 'வல்லமை' படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜி - இந்து நடிகர் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளதாக இயக்குநர் கருப்பையா முருகன் தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்களில் #Premgi, #BabyGirl போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் இது தான் –பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 45 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் இது தான் – பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.
''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.
மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.
ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.
BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
தாமரை விரித்த வலையில் வசமாக சிக்கிய போஸ், கோபத்தில் கொந்தளிக்கும் காவியா –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுக்கவில்லை என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. பின் இதைப்பற்றி சேது தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அண்ணன், வீட்டில் உண்மையை சொல்லலாம் என்றார். அதற்கு சேது, அப்பா நம்ப மாட்டார். ஆதாரத்துடன் அப்பாவிடம் சொல்லணும் இல்லையென்றால் சித்தியே பழைய பகையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனை எழுப்புவார்கள் என்றார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் அண்ணன் மகள், தங்கை மகன் இருவருமே போஸ் திருமணத்திற்காக வந்திருந்தார்கள். […] The post தாமரை விரித்த வலையில் வசமாக சிக்கிய போஸ், கோபத்தில் கொந்தளிக்கும் காவியா – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
Shriya Saran: ``யார் இந்த முட்டாள்? - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். View this post on Instagram இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்
Shriya Saran: ``யார் இந்த முட்டாள்? - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். View this post on Instagram இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்
முத்துமலர் மகன் கொடுத்த கோர்ட் ஆர்டர், ஷாக்கில் உறைந்த காவிரி குடும்பம் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை விட்டு தர முடியாது என்று சொன்னார்கள். இதை கேட்ட சாரதா, கோபப்பட்டு முத்து மலரிடம் சண்டை போட்டார். பின் எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். முத்து மலர், நம்ம பிரச்சனை செய்ய வேண்டாம். ஆனால், நம்முடைய உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார். விஜய், அவர்கள் குளிரில் வெளியே கஷ்டப்பட்டார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்கிறார். சாரதா கோபப்பட்டார். விஜய், சாரதாவிடம் […] The post முத்துமலர் மகன் கொடுத்த கோர்ட் ஆர்டர், ஷாக்கில் உறைந்த காவிரி குடும்பம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?
நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார். Actress Tulasi தமிழில் இவர் நடித்த பல அம்மா கேரக்டர்கள் பெரிதளவில் கவனம் பெற்றிருக்கின்றன. தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார் நடிகை துளசி. ஓய்வு பெற்றப் பிறகு தன்னுடைய வாழ்க்கையை சாய் பாபாவிற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். முதலில் சாய் பாபாவின் பாதங்களை புகைப்படமெடுத்து பதிவிட்ட அவர், என்னையும் என் மகனையும் காத்து வழிகாட்டுங்கள் சாய் நாதா எனக் குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார். Actress Tulasi இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், இந்த டிசம்பர் 31-ல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன். இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன். வாழ்க்கையைக் கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி சாய்ராம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். நடிகை துளசியின் இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கிறது. ஆனால், ரிடையர்மெண்ட் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த பதிவை இப்போது அவர் நீக்கி இருக்கிறார்.
மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க. அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம். அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு. அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள். என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும். இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும் என பேசியிருக்கிறார். `உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க. அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம். அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு. அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள். என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும். இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும் என பேசியிருக்கிறார். `உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
BB Tamil 9: ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல- அழுது புலம்பும் ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை கூறினார். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொன்னார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்ல ரம்யா அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், விக்ரம் என்டர்டெயின்மென்ட் பண்ணி நான் பார்க்கவே இல்ல. நான் கடினமா உழைச்சிருக்கேன். என்னால முடியல. நான் ரொம்ப உடைஞ்சிட்டேன். BB Tamil 9 என்னால இதுக்கு அப்புறம் இங்க சர்வைவ் பண்ண முடியாது. ஒவ்வொருத்தரும் அவுங்க வார்த்தையால குத்துறாங்க. அதுக்கு அவுங்க சொல்ற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல என ரம்யா அழுது புலம்புகிறார்.
பண்டிகைகளுக்கு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த சீரியல் நடிகை ஹிமா பிந்து.!!
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை ஏறி இறங்கியவுடன் உடனே இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. அதேபோல், ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களும் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் எளிதாக அடைய முடியும். இதனால் ஸ்டோருக்கு அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது....
BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள். அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா. நாள் 44 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘சோறு - சோப்பு - மாப்பு - இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்? மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள். BB TAMIL 9: DAY 44 சாம்பார் அணியில் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா என்று பெண்கள் ராஜ்ஜியம். எனவே அங்கே ஹியூமருக்கு இடம் இருக்குமா? கிச்சன் அணியில் அடுப்போடு பொறாமையும் கூடவே புகைந்து கொண்டிருந்தது. மாப் அணியில் சுபிக்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின். விக்ரம் தந்த ஐடியாக்களின் வழியாக இந்த அணிதான் ஓரளவிற்காவது இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தியது. ஃபிளஷ் அணியில் சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா. இவர்களின் பங்களிப்பும் ஓகே. ‘தல’ எஃப்ஜே, பிளஷ் அணியில் சேருவதாக முடிவு செய்தார். காணாமல் போன நகைச்சுவை ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ ஒருவருக்கு தேவையான சாப்பாட்டை விரும்பும் போதெல்லாம் சாம்பார் அணி செய்து தர வேண்டும். போலவே சுத்தம் செய்யும் அணிகளும் ரெட் கார்ப்பெட் போட்டு பாத்ரூமிற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து அணியும் தங்களின் பணிகளை சுவாரசியமாக நிகழ்த்த வேண்டும். ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ என்று அமர்க்களமாக தலைப்பிட்டு ‘பெயரைக் காப்பாத்துங்க செல்லங்களா’ என்று களத்தில் இறக்கி விட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியும் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் செய்த காமெடி நன்றாக இருந்தது. ‘எங்க கிட்ட வாங்க.. சந்தோஷமா இருந்துட்டுப் போங்க’ என்று பாத்ரூம் ஏரியாவை வைத்து காமெடி செய்தார்கள். “ஓப்பனிங்கே அசத்தலா இருக்கு. இப்படியே கொண்டு போங்க தங்கங்களா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் பிக் பாஸ். பாத்ரூம் செல்ல விரும்பிய பாருவிற்கு ரெட் கார்ப்பரேட் வரவேற்பு நடந்தது. ‘அவள் உலக அழகியே..பாட்டு பாடுங்க’ என்று பாரு அநியாயமாக வற்புறுத்த, பாடல் வரிகளை மாற்றி பாடி வெறுப்பேற்றினார் வினோத். BB TAMIL 9: DAY 44 கம்ரூதினுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அரோரா மீது கடுமையான காண்டில் இருக்கிறார் பாரு. எனவே ஜோசியம் பார்க்கிறேன் போ்வழி என்று அரோரா மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார். “உனக்கு மூணு கல்யாணம் நடக்கும். இன்னொரு குடும்பத்தை பிரிப்பே” என்றெல்லாம் காமெடி என்கிற பெயரில் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். அரோராவின் முகம் மாறினாலும் சிரித்து சமாளித்தார். பாருவை நோக்கி வில்லங்கமாக கேள்வி கேட்ட கம்ரூதீன் பாருவின் இந்த வினை அவருக்கே திரும்பி வந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்தார் பாரு. அங்கு அரோரா வர, “என் புருஷனை பிரிச்சிடாத” என்று காமெடி என்கிற பெயரில் பாரு வக்கிரத்தைக் கொட்ட, அங்கு கிராஸ் ஆன கம்ரூதீன் “உனக்கு எத்தனை புருஷன்?” என்று துடுக்காக கேட்டு விட்டார். ஒரு பெண்ணை நோக்கி இப்படி கேட்டது மிக மிக தவறு. கம்ரூதீனின் அநியாயமான குறும்பு கண்டிக்கப்பட வேண்டியது. பாரு இதற்காக மிகவும் கோபித்துக் கொண்டு ‘இப்படியாடா கேட்பே. பொதுவெளியில ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவே?” என்றெல்லாம் கோபித்துக் கொள்ள “எனக்கு மட்டும் மூணு கல்யாணம்ன்னு சொன்னீங்க.. நான் அதுக்கு கோபிச்சுக்கலையே” என்று சரியாக கேட்டார் அரோரா. “எனக்கும் மூணு பொண்டாட்டிங்கன்னு சொன்னியே?” என்றார் கம்ரூதீன். ஆனால் பாரு அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி, தனக்கு என்றால் மட்டும் ரத்தம் என்கிற பாலிசியில் புலம்பினார். ஒரு கட்டத்தில் ‘கிச்சன் மூடப்பட்டது’ என்று அந்த டீம் அறிவிக்க “அதை வெச்சுதான் டாஸ்க்கே.. ஏன் இப்படி பண்றீங்க.. அப்படின்னா நாங்களும் பாத்ரூமை மெயின்டெயின்ஸ்ன்னு மூடுவோம்.. அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் சண்டைக்கு இறங்கினார்கள். அதுவரை இருந்த என்டர்டெயின்மென்ட் கூட காணாமல் போய் மீண்டும் சண்டை போடுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. BB TAMIL 9: DAY 44 “டாஸ்க் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. இதுக்குள்ள யார் எப்படி ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத வெச்சு உங்க டீம் லீடரை முடிவு பண்ணுங்க” என்றார் பிக் பாஸ். சாம்பார் அணிக்கு சாண்ட்ரா. (நல்ல ரைமிங்!) மாப் அணிக்கு விக்ரம். ஃபிளஷ் அணிக்கு ரம்யா. இந்தத் தோ்வு முடிந்ததும், “கேக்கறத சமைச்சுத் தரணும்ன்றது ரூல். ஆனா கிச்சன் டீம் அதைப் பண்றதில்லை” என்று ஆட்சேபம் தெரிவித்தார் எஃப்ஜே. வன்மத்தைக் கக்கிய பாருவும் சாண்ட்ராவும் ‘அந்த அணிக்கு பாயிண்ட் போயிடும்’ “எல்லோரும் கிளம்பிடாதீங்க. ரெண்டே நிமிஷம்.. நாங்க ஒரு ஃபொ்பார்மன்ஸ் பண்ணப் போறோம்.. பார்த்துட்டுப் போங்க” என்று தன்னுடைய அணியுடன் வந்து நின்றார் விக்ரம். ஆனால் கிச்சன் டீமில் இருந்த சாண்ட்ராவும் பாருவும் இணைந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். “டாஸ்க் நடந்துட்டு இருக்கு.. இப்ப நீங்க ஃபொ்பார்மன்ஸ் பண்ணா எப்படி?” என்பது அவர்களின் ஆட்சேபம். “ரெண்டே நிமிஷம்தான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று விக்ரம் கெஞ்ச, “டேய்.. நீ அப்படில்லாம் கெஞ்சக்கூடாது.. தப்பு” என்று ஆவேசமாக எழுந்து வந்தார் வினோத். ஒரு மேடைக்கலைஞனின் தவிப்பு, இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும். இந்த வகையில் வினோத்தின் அறச்சீற்றம் சிறப்பானது. அரைமனதாக அமர்ந்த சாண்ட்ராவும் பாருவும், பிறகு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ‘வா.. போகலாம்’ என்று எழுந்து சென்று விட்டார்கள். “எல்லோரையும் உக்கார வெச்சு ஸ்கோர் பண்ணப் பார்க்கறான். நாம உக்காந்து பாயிண்ட் கொடுக்கணுமா?” என்று சாண்ட்ரா வன்மத்துடன் கேட்க “அதானே..” என்று பின் பாட்டு பாடினார் பாரு. விக்ரம் மீது அவருக்குள்ள கோபத்தை இப்படியாக பழிதீர்த்துக் கொண்டார். BB TAMIL 9: DAY 44 இது டாஸ்க்காகவே இருக்கட்டும். எண்டர்டெயின்மெயின்ட் வேண்டும் என்பதுதானே டார்கெட். அதற்காக ஒரு அணி அழைக்கும் போது இரண்டு நிமிடம் செலவழித்துப் பார்ப்பதை விடவும் இன்னொரு அணிக்கு என்ன வேலை? ‘அவர்களுக்கு பாயிண்ட் தர வேண்டியிருக்கும்’ என்று நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து செல்வதை விடவும் அற்பத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கலைக்கு செய்யும் அவமரியாதை. இந்த நோக்கில் சாண்ட்ராவும் பாருவும் செய்தது அநியாயம். வார இறுதியில் விசே இதைக் கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். கிச்சன் டீமில் இருந்த கனியும் வியானாவும் செல்லாமல் அமர்ந்திருந்தது நல்ல விஷயம். பாருவிடம் கோபமான சபரி “உன்னை யாருக்கும் பிடிக்காது” ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று பாத்ரூம் வாசலில் பாடி கலகலப்பாக முயன்றார் எஃப்ஜே. வீக்லி டாஸ்க்கைத் தவிர, டெய்லி டாஸ்க் தனியாக நடந்தது. வாயில் கவ்வியிருக்கும் அட்டையின் மூலம் கோலமாவை எடுத்து, சக அணியில் உள்ள போட்டியாளருக்கு பாஸ் செய்ய வேண்டும். அவர் இன்னொருவருக்கு பாஸ் செய்ய மூன்றாவமர் குடுவையில் கொட்டுவார். எந்த அணி அதிக கோலமாவு சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. அமித் வினோத்திடம் பாஸ் செய்யும் போது ஊதி விட்டதில் வினோத் முகம் முழுக்க மாவு. இந்தப் போட்டியில் மாப் மாயாவிஸ் அணி வெற்றி. பாரு விளையாட வந்த போது அவரது வாயில் அட்டை இல்லாததை சபரி சுட்டிக் காட்ட, ‘எல்லாம் தெரியும்’ என்பது மாதிரி அலட்டினார் பாரு. இதை சபரி கண்டிக்க “இதனாலதான் உங்க டீமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாரு கிண்டலடிக்க “இதனாலதான் இந்த வீட்ல உன்னை யாருக்குமே பிடிக்கலை” என்று சபரியும் பதிலுக்குச் சொல்ல பாருவிற்கு கோபம். “நான் ஃபன்னாத்தான் சொன்னேன். இனிமே உன் கிட்ட தள்ளி நிக்கறேன்” என்று விலகிச் சென்றார் சபரி. இந்த நாளின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதிக பாயிண்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருந்தது மாப் மாயாவிஸ். (மாஃபியா என்று தவறாக வாசித்து சிரிப்பலையை உண்டாக்கினார் எஃப்ஜே!) BB TAMIL 9: DAY 44 “நாம தனித்தனியா எண்டர்டெயின் பண்றோம். அதான் பிரச்னை. அவங்களைப் பாரு.. டீமா பண்ணி கவனத்தை கவர்ந்துடறாங்க. இனிமே நாமளும் அப்படிப் பண்ணணும்” என்று சாம்பார் டீம் வயிற்றொிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தது. (ம்க்கும்.. சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்?!) வெற்றி பெற்ற மாப் அணிக்கு ஐஸ்கிரீம் ரிவார்டாக கிடைக்க, கம்ருதீன் அதை ஆசையாக அரோராவிற்கு ஊட்டி விட்டார். பிரஜினும் சாண்ட்ராவும் தம்பதிகளாக ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறொிந்த பாரு “ஆளாளுக்கு ஒரு ஜோடியைப் பிடிச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க.. நம்ம கிரகம்.. இப்படி தனியா இருக்கோம்” என்கிற மாதிரி அனத்தியது நல்ல காமெடி.!
BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள். அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா. நாள் 44 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘சோறு - சோப்பு - மாப்பு - இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்? மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள். BB TAMIL 9: DAY 44 சாம்பார் அணியில் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா என்று பெண்கள் ராஜ்ஜியம். எனவே அங்கே ஹியூமருக்கு இடம் இருக்குமா? கிச்சன் அணியில் அடுப்போடு பொறாமையும் கூடவே புகைந்து கொண்டிருந்தது. மாப் அணியில் சுபிக்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின். விக்ரம் தந்த ஐடியாக்களின் வழியாக இந்த அணிதான் ஓரளவிற்காவது இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தியது. ஃபிளஷ் அணியில் சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா. இவர்களின் பங்களிப்பும் ஓகே. ‘தல’ எஃப்ஜே, பிளஷ் அணியில் சேருவதாக முடிவு செய்தார். காணாமல் போன நகைச்சுவை ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ ஒருவருக்கு தேவையான சாப்பாட்டை விரும்பும் போதெல்லாம் சாம்பார் அணி செய்து தர வேண்டும். போலவே சுத்தம் செய்யும் அணிகளும் ரெட் கார்ப்பெட் போட்டு பாத்ரூமிற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து அணியும் தங்களின் பணிகளை சுவாரசியமாக நிகழ்த்த வேண்டும். ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ என்று அமர்க்களமாக தலைப்பிட்டு ‘பெயரைக் காப்பாத்துங்க செல்லங்களா’ என்று களத்தில் இறக்கி விட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியும் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் செய்த காமெடி நன்றாக இருந்தது. ‘எங்க கிட்ட வாங்க.. சந்தோஷமா இருந்துட்டுப் போங்க’ என்று பாத்ரூம் ஏரியாவை வைத்து காமெடி செய்தார்கள். “ஓப்பனிங்கே அசத்தலா இருக்கு. இப்படியே கொண்டு போங்க தங்கங்களா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் பிக் பாஸ். பாத்ரூம் செல்ல விரும்பிய பாருவிற்கு ரெட் கார்ப்பரேட் வரவேற்பு நடந்தது. ‘அவள் உலக அழகியே..பாட்டு பாடுங்க’ என்று பாரு அநியாயமாக வற்புறுத்த, பாடல் வரிகளை மாற்றி பாடி வெறுப்பேற்றினார் வினோத். BB TAMIL 9: DAY 44 கம்ரூதினுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அரோரா மீது கடுமையான காண்டில் இருக்கிறார் பாரு. எனவே ஜோசியம் பார்க்கிறேன் போ்வழி என்று அரோரா மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார். “உனக்கு மூணு கல்யாணம் நடக்கும். இன்னொரு குடும்பத்தை பிரிப்பே” என்றெல்லாம் காமெடி என்கிற பெயரில் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். அரோராவின் முகம் மாறினாலும் சிரித்து சமாளித்தார். பாருவை நோக்கி வில்லங்கமாக கேள்வி கேட்ட கம்ரூதீன் பாருவின் இந்த வினை அவருக்கே திரும்பி வந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்தார் பாரு. அங்கு அரோரா வர, “என் புருஷனை பிரிச்சிடாத” என்று காமெடி என்கிற பெயரில் பாரு வக்கிரத்தைக் கொட்ட, அங்கு கிராஸ் ஆன கம்ரூதீன் “உனக்கு எத்தனை புருஷன்?” என்று துடுக்காக கேட்டு விட்டார். ஒரு பெண்ணை நோக்கி இப்படி கேட்டது மிக மிக தவறு. கம்ரூதீனின் அநியாயமான குறும்பு கண்டிக்கப்பட வேண்டியது. பாரு இதற்காக மிகவும் கோபித்துக் கொண்டு ‘இப்படியாடா கேட்பே. பொதுவெளியில ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவே?” என்றெல்லாம் கோபித்துக் கொள்ள “எனக்கு மட்டும் மூணு கல்யாணம்ன்னு சொன்னீங்க.. நான் அதுக்கு கோபிச்சுக்கலையே” என்று சரியாக கேட்டார் அரோரா. “எனக்கும் மூணு பொண்டாட்டிங்கன்னு சொன்னியே?” என்றார் கம்ரூதீன். ஆனால் பாரு அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி, தனக்கு என்றால் மட்டும் ரத்தம் என்கிற பாலிசியில் புலம்பினார். ஒரு கட்டத்தில் ‘கிச்சன் மூடப்பட்டது’ என்று அந்த டீம் அறிவிக்க “அதை வெச்சுதான் டாஸ்க்கே.. ஏன் இப்படி பண்றீங்க.. அப்படின்னா நாங்களும் பாத்ரூமை மெயின்டெயின்ஸ்ன்னு மூடுவோம்.. அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் சண்டைக்கு இறங்கினார்கள். அதுவரை இருந்த என்டர்டெயின்மென்ட் கூட காணாமல் போய் மீண்டும் சண்டை போடுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. BB TAMIL 9: DAY 44 “டாஸ்க் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. இதுக்குள்ள யார் எப்படி ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத வெச்சு உங்க டீம் லீடரை முடிவு பண்ணுங்க” என்றார் பிக் பாஸ். சாம்பார் அணிக்கு சாண்ட்ரா. (நல்ல ரைமிங்!) மாப் அணிக்கு விக்ரம். ஃபிளஷ் அணிக்கு ரம்யா. இந்தத் தோ்வு முடிந்ததும், “கேக்கறத சமைச்சுத் தரணும்ன்றது ரூல். ஆனா கிச்சன் டீம் அதைப் பண்றதில்லை” என்று ஆட்சேபம் தெரிவித்தார் எஃப்ஜே. வன்மத்தைக் கக்கிய பாருவும் சாண்ட்ராவும் ‘அந்த அணிக்கு பாயிண்ட் போயிடும்’ “எல்லோரும் கிளம்பிடாதீங்க. ரெண்டே நிமிஷம்.. நாங்க ஒரு ஃபொ்பார்மன்ஸ் பண்ணப் போறோம்.. பார்த்துட்டுப் போங்க” என்று தன்னுடைய அணியுடன் வந்து நின்றார் விக்ரம். ஆனால் கிச்சன் டீமில் இருந்த சாண்ட்ராவும் பாருவும் இணைந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். “டாஸ்க் நடந்துட்டு இருக்கு.. இப்ப நீங்க ஃபொ்பார்மன்ஸ் பண்ணா எப்படி?” என்பது அவர்களின் ஆட்சேபம். “ரெண்டே நிமிஷம்தான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று விக்ரம் கெஞ்ச, “டேய்.. நீ அப்படில்லாம் கெஞ்சக்கூடாது.. தப்பு” என்று ஆவேசமாக எழுந்து வந்தார் வினோத். ஒரு மேடைக்கலைஞனின் தவிப்பு, இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும். இந்த வகையில் வினோத்தின் அறச்சீற்றம் சிறப்பானது. அரைமனதாக அமர்ந்த சாண்ட்ராவும் பாருவும், பிறகு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ‘வா.. போகலாம்’ என்று எழுந்து சென்று விட்டார்கள். “எல்லோரையும் உக்கார வெச்சு ஸ்கோர் பண்ணப் பார்க்கறான். நாம உக்காந்து பாயிண்ட் கொடுக்கணுமா?” என்று சாண்ட்ரா வன்மத்துடன் கேட்க “அதானே..” என்று பின் பாட்டு பாடினார் பாரு. விக்ரம் மீது அவருக்குள்ள கோபத்தை இப்படியாக பழிதீர்த்துக் கொண்டார். BB TAMIL 9: DAY 44 இது டாஸ்க்காகவே இருக்கட்டும். எண்டர்டெயின்மெயின்ட் வேண்டும் என்பதுதானே டார்கெட். அதற்காக ஒரு அணி அழைக்கும் போது இரண்டு நிமிடம் செலவழித்துப் பார்ப்பதை விடவும் இன்னொரு அணிக்கு என்ன வேலை? ‘அவர்களுக்கு பாயிண்ட் தர வேண்டியிருக்கும்’ என்று நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து செல்வதை விடவும் அற்பத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கலைக்கு செய்யும் அவமரியாதை. இந்த நோக்கில் சாண்ட்ராவும் பாருவும் செய்தது அநியாயம். வார இறுதியில் விசே இதைக் கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். கிச்சன் டீமில் இருந்த கனியும் வியானாவும் செல்லாமல் அமர்ந்திருந்தது நல்ல விஷயம். பாருவிடம் கோபமான சபரி “உன்னை யாருக்கும் பிடிக்காது” ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று பாத்ரூம் வாசலில் பாடி கலகலப்பாக முயன்றார் எஃப்ஜே. வீக்லி டாஸ்க்கைத் தவிர, டெய்லி டாஸ்க் தனியாக நடந்தது. வாயில் கவ்வியிருக்கும் அட்டையின் மூலம் கோலமாவை எடுத்து, சக அணியில் உள்ள போட்டியாளருக்கு பாஸ் செய்ய வேண்டும். அவர் இன்னொருவருக்கு பாஸ் செய்ய மூன்றாவமர் குடுவையில் கொட்டுவார். எந்த அணி அதிக கோலமாவு சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. அமித் வினோத்திடம் பாஸ் செய்யும் போது ஊதி விட்டதில் வினோத் முகம் முழுக்க மாவு. இந்தப் போட்டியில் மாப் மாயாவிஸ் அணி வெற்றி. பாரு விளையாட வந்த போது அவரது வாயில் அட்டை இல்லாததை சபரி சுட்டிக் காட்ட, ‘எல்லாம் தெரியும்’ என்பது மாதிரி அலட்டினார் பாரு. இதை சபரி கண்டிக்க “இதனாலதான் உங்க டீமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாரு கிண்டலடிக்க “இதனாலதான் இந்த வீட்ல உன்னை யாருக்குமே பிடிக்கலை” என்று சபரியும் பதிலுக்குச் சொல்ல பாருவிற்கு கோபம். “நான் ஃபன்னாத்தான் சொன்னேன். இனிமே உன் கிட்ட தள்ளி நிக்கறேன்” என்று விலகிச் சென்றார் சபரி. இந்த நாளின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதிக பாயிண்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருந்தது மாப் மாயாவிஸ். (மாஃபியா என்று தவறாக வாசித்து சிரிப்பலையை உண்டாக்கினார் எஃப்ஜே!) BB TAMIL 9: DAY 44 “நாம தனித்தனியா எண்டர்டெயின் பண்றோம். அதான் பிரச்னை. அவங்களைப் பாரு.. டீமா பண்ணி கவனத்தை கவர்ந்துடறாங்க. இனிமே நாமளும் அப்படிப் பண்ணணும்” என்று சாம்பார் டீம் வயிற்றொிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தது. (ம்க்கும்.. சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்?!) வெற்றி பெற்ற மாப் அணிக்கு ஐஸ்கிரீம் ரிவார்டாக கிடைக்க, கம்ருதீன் அதை ஆசையாக அரோராவிற்கு ஊட்டி விட்டார். பிரஜினும் சாண்ட்ராவும் தம்பதிகளாக ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறொிந்த பாரு “ஆளாளுக்கு ஒரு ஜோடியைப் பிடிச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க.. நம்ம கிரகம்.. இப்படி தனியா இருக்கோம்” என்கிற மாதிரி அனத்தியது நல்ல காமெடி.!
சேரனின் நிலைமையை நினைத்து நிலா சொன்ன வார்த்தை, சோழன் எடுத்த முடிவு –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், எனக்கு கல்யாணம் நடந்தால் தான் பாண்டி கல்யாணம் செய்து கொள்வான் என்று வானதியிடம் சொல்லி இருக்கான். அதனால் தான் இந்த ஏற்பாடு செய்தேன் என்றார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் பாண்டியன் கேட்டார். அதற்கு வானதி, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதனால் கோபத்தில் பாண்டியன், வானதியை திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன், என் அண்ணனுக்கு திருமணம் நடக்கும் […] The post சேரனின் நிலைமையை நினைத்து நிலா சொன்ன வார்த்தை, சோழன் எடுத்த முடிவு – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்திருக்கிறார். தற்போது கவினுடன் இணைந்து 'ஹாய்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரோல்ஸ் ராய்ஸ் இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் black badge spectre காரை பரிசாக வழங்கியிருக்கிறார். View this post on Instagram இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, ஆழமாக நேசிக்கிறேன். வாழ்கையில் சிறந்த தருணங்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்திருக்கிறார். தற்போது கவினுடன் இணைந்து 'ஹாய்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரோல்ஸ் ராய்ஸ் இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் black badge spectre காரை பரிசாக வழங்கியிருக்கிறார். View this post on Instagram இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, ஆழமாக நேசிக்கிறேன். வாழ்கையில் சிறந்த தருணங்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
வா வாத்தியாரே படத்துக்கு வந்த சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!
கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் சமீபத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார் கீர்த்தி...
என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான். கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன் இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து அந்த நண்பர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இது என்னுடைய முதல் கார்... என் நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்ல. View this post on Instagram நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம். இந்த அழகான நினைவைக் கொடுத்து, எப்போதும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. லவ் யூ அண்ணா! என பதிவிட்டிருக்கிறார்.
Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்'திவாகர்
`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம். திவாகர் இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்! எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார். பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல. திவாகர் கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்! என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம். திவாகர் அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது! என்றவர் தொடர்ந்து பேசினார். நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு! என்றார். திவாகர் இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்'திவாகர்
`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம். திவாகர் இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்! எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார். பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல. திவாகர் கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்! என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம். திவாகர் அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது! என்றவர் தொடர்ந்து பேசினார். நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு! என்றார். திவாகர் இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
BB Tamil 9: வொஸ்ட் பெர்ஃபாமர் அவுங்க தான் - அழுத ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாஃபு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை சொல்கின்றனர். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொல்கிறார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்கிறார். தொடர்ந்து ரம்யா அழுவதால புரோமோ முடிகிறது.
BB Tamil 9: வொஸ்ட் பெர்ஃபாமர் அவுங்க தான் - அழுத ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாஃபு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை சொல்கின்றனர். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொல்கிறார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்கிறார். தொடர்ந்து ரம்யா அழுவதால புரோமோ முடிகிறது.
ரோகினி சொன்ன பிளாஸ்பேக், மீனா எடுத்த முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, பாட்டி எல்லோருமே அவர்களை வரவேற்றார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது மனோஜ், முட்டையை சோத்தில் மறைத்து வைத்துவிட்டு எனக்கு முட்டை வைக்கவில்லை என்றார். உடனே, கிரிஷ் உண்மையை சொன்னார். இதனால் அண்ணாமலை, பாட்டி திட்டிக் கொண்டிருந்தார்கள். முத்து, இந்த வீட்டிலேயே பொய் சொல்லி மறைப்பது மனோஜ் தான் என்றார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி உள்ளுக்குள்ளே ரொம்பவே பதறிக் கொண்டு இருந்தார். […] The post ரோகினி சொன்ன பிளாஸ்பேக், மீனா எடுத்த முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஆதாரம் காட்டுங்க நான் ஒத்துக்கிறேன்! - `Bigg Boss' Diwakar Interview | Watermelon Star | Cinema
ஆதாரம் காட்டுங்க நான் ஒத்துக்கிறேன்! - `Bigg Boss' Diwakar Interview | Watermelon Star | Cinema
Thalavara Climax First Take -லயே Ok ஆகிடுச்சு! | Arjun Ashokan, Akhil Anilkumar | Cinema Vikatan
சூர்யா கேட்ட கேள்வி, மாதவி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி கேட்ட கேள்விக்கு சுந்தரவல்லி கடுப்பாகி திட்டுகிறார். அவ இந்த வீட்டுக்கு மருமகளாய் இருக்க எந்த...
SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்து கடவுள் ஹனுமான் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். SS Rajamouli - Varanasi மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் வாரணாசி. இதன் டீசர் வெளியீட்டு விழா ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள், சினிமாதுறையினர் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். SS Rajamouli பேசியது என்ன? கடவுள்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் கடவுளை நம்புவதில்லை. என் அப்பா வந்து, 'ஆஞ்சநேயர் உனக்கான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று சொன்னார். ஆனால் பிரச்னை ஏற்பட்டபோது, அவரிடம் (தந்தையிடம்) குரலை உயர்த்தி, 'இப்படித்தானா என்னை வழிநடத்துகிறார்?' என்று கேட்டேன். Varanasi Movie என் மனைவி ஆஞ்சநேயரின் பெரிய பக்தை. அவரை தன் நண்பர் போல நினைத்து, அவரிடம் பேசுவார். 'இப்படித்தான் அவர் காரியங்களைச் செய்வாரா?' என்று அவரிடமும் என் கோபத்தை வெளிப்படுத்தினேன். எனப் பேசியிருந்தார் ராஜமௌலி. Varanasi: மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது... - ராஜமெளலி ஷேரிங்ஸ் ராஜமௌலியின் கருத்துகள் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், திரைப்படத் துறையில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் ராஷ்ட்ரிய வானரசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வானரசேனாவுடன் கௌ ரக்ஷக் சங்கமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. புகாரில் 'மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன்' அவர் பேசியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ரூ.1000 கோடி வசூலைத் தாண்டிய 7 இந்தியப் படங்கள் எவை தெரியுமா?
Roja: 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்! - பர்சனல் பகிரும் ரோஜா!
90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார். கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம். Lenin Pandiyan நம்மிடையே பேசிய நடிகை ரோஜா, “ரீ-என்ட்ரிக்கு ‘லெனின் பாண்டியன்’ படம் சரியாக இருக்கும்னு நினைச்சு செய்திருக்கேன். பஞ்சு அருணாச்சலம் சாரோட பையன் சுப்பு இந்தப் படத்துல இந்த கதாபாத்திரத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். எனக்கும் கொஞ்ச நாட்கள் இடைவெளி ஆகிடுச்சு. பிறகு, இந்தக் கதையைக் கேட்டதுமே நான்தான் நடிக்கணும்னு தீர்க்கமாக முடிவு பண்ணிட்டேன். இந்தப் படத்துல கங்கை அமரன் சாரும் முக்கியமானதொரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இதுக்கு முன்னாடி நானும் அவரும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்துல சின்ன சீன்ல இணைந்து நடிச்சிருப்போம். இப்போ இந்தப் படத்துல முழுவதும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.” என்றார். “இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, “ஒரே குடும்பத்துல இருக்கிற அண்ணன்-தங்கைக்கு ஒரே மாதிரியான நடைமுறை இருக்காது. அவர்களுக்கு இடையில விட்டுக் கொடுத்து போகிற விஷயங்களும் சில சமயங்கள்ல மாறுபடும். அப்படியான நேரத்துல இன்னொரு வீட்டுல இருந்து வருகிற பெண் நம்ம நினைச்ச மாதிரிதான் இருக்கணும்னு கிடையாது. லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ளஸ் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, மைனஸ் விஷயங்களையும் அப்படியே எடுத்துக்கணும். Actress Roja அந்த மைனஸ் விஷயம் ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக வந்தா, அதை திருத்திக்கிட்டு போகிறது நல்லது. என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர். அவர் அனைத்தையும் முதிர்ச்சியோடு அணுகுவாரு. நான்தான் அதிகமாக சண்டை போடுவேன். அப்படியான நேரங்கள்ல அவர்தான் என்னை சமாதானப்படுத்துவாரு. இன்றைய தலைமுறையினர்கிட்ட நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும்னு ஈகோ இருக்கு. ரிலேஷன்ஷிப்புக்கு விட்டுக் கொடுத்துப் போகிறது ரொம்பவே முக்கியம்!” என்றவர், அவருடைய மகன் குறித்து பேசுகையில், “நான்னா அவனுக்கு உயிர். போட்டோ எடுக்கும்போது அவன் என்னை எப்போதும் கட்டிப் பிடிச்சுதான் போஸ் கொடுப்பான். அவன் கருவில இருக்கும்போது ஐந்தாவது மாசத்துல நான் ஒரு கோவில் கும்பாபிஷேகம் நிகழ்விற்காக வெளியூருக்குப் போயிருந்தேன். அந்த நேரத்துல அங்க இருந்த கூட்ட நெரிசலினால் எனக்கு திரும்ப வரும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டிருச்சு. சென்னை வந்ததும் உடனடியாக நான் மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டேன். பிறகு இரண்டு மாசத்துக்கு முழுமையாகவே பெட் ரெஸ்ட்தான். 7 மாசத்திலேயே டெலிவரிக்கான சூழல் வந்திடுச்சு. அப்போ டாக்டர்கிட்ட ‘என் பையனை காப்பாத்துங்க’னு சொல்லிட்டே இருந்தேன். அவனைப் பத்தி எனக்கு பயம் அதிகமாக இருந்தது. Actress Roja ஆனா, இன்னைக்கு வளர்ந்து நிற்கிறார்! என் மகளை நினைச்சும் நான் பெருமையா உணர்றேன். அவங்க இப்போ அவார்ட்ஸ்லாம் வாங்கிட்டு இருக்காங்க. அவங்க படிக்கணும்னு நினைக்கிற விஷயங்களுக்கு நாங்க என்னைக்கும் சப்போர்ட்டாக இருக்கணும்னு நினைக்கிறோம். சின்ன கிராமத்துல இருந்து வந்த நான் இன்னைக்கு இங்க இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய கடின உழைப்புதான். நான் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, இங்க வந்ததும் படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்கிட்டேன். ஆனா, என் பொண்ணு படிப்புல நம்பர் 1.” என்றபடி முடித்துக் கொண்டார்.
Roja: 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்! - பர்சனல் பகிரும் ரோஜா!
90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார். கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம். Lenin Pandiyan நம்மிடையே பேசிய நடிகை ரோஜா, “ரீ-என்ட்ரிக்கு ‘லெனின் பாண்டியன்’ படம் சரியாக இருக்கும்னு நினைச்சு செய்திருக்கேன். பஞ்சு அருணாச்சலம் சாரோட பையன் சுப்பு இந்தப் படத்துல இந்த கதாபாத்திரத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். எனக்கும் கொஞ்ச நாட்கள் இடைவெளி ஆகிடுச்சு. பிறகு, இந்தக் கதையைக் கேட்டதுமே நான்தான் நடிக்கணும்னு தீர்க்கமாக முடிவு பண்ணிட்டேன். இந்தப் படத்துல கங்கை அமரன் சாரும் முக்கியமானதொரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இதுக்கு முன்னாடி நானும் அவரும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்துல சின்ன சீன்ல இணைந்து நடிச்சிருப்போம். இப்போ இந்தப் படத்துல முழுவதும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.” என்றார். “இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, “ஒரே குடும்பத்துல இருக்கிற அண்ணன்-தங்கைக்கு ஒரே மாதிரியான நடைமுறை இருக்காது. அவர்களுக்கு இடையில விட்டுக் கொடுத்து போகிற விஷயங்களும் சில சமயங்கள்ல மாறுபடும். அப்படியான நேரத்துல இன்னொரு வீட்டுல இருந்து வருகிற பெண் நம்ம நினைச்ச மாதிரிதான் இருக்கணும்னு கிடையாது. லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ளஸ் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, மைனஸ் விஷயங்களையும் அப்படியே எடுத்துக்கணும். Actress Roja அந்த மைனஸ் விஷயம் ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக வந்தா, அதை திருத்திக்கிட்டு போகிறது நல்லது. என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர். அவர் அனைத்தையும் முதிர்ச்சியோடு அணுகுவாரு. நான்தான் அதிகமாக சண்டை போடுவேன். அப்படியான நேரங்கள்ல அவர்தான் என்னை சமாதானப்படுத்துவாரு. இன்றைய தலைமுறையினர்கிட்ட நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும்னு ஈகோ இருக்கு. ரிலேஷன்ஷிப்புக்கு விட்டுக் கொடுத்துப் போகிறது ரொம்பவே முக்கியம்!” என்றவர், அவருடைய மகன் குறித்து பேசுகையில், “நான்னா அவனுக்கு உயிர். போட்டோ எடுக்கும்போது அவன் என்னை எப்போதும் கட்டிப் பிடிச்சுதான் போஸ் கொடுப்பான். அவன் கருவில இருக்கும்போது ஐந்தாவது மாசத்துல நான் ஒரு கோவில் கும்பாபிஷேகம் நிகழ்விற்காக வெளியூருக்குப் போயிருந்தேன். அந்த நேரத்துல அங்க இருந்த கூட்ட நெரிசலினால் எனக்கு திரும்ப வரும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டிருச்சு. சென்னை வந்ததும் உடனடியாக நான் மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டேன். பிறகு இரண்டு மாசத்துக்கு முழுமையாகவே பெட் ரெஸ்ட்தான். 7 மாசத்திலேயே டெலிவரிக்கான சூழல் வந்திடுச்சு. அப்போ டாக்டர்கிட்ட ‘என் பையனை காப்பாத்துங்க’னு சொல்லிட்டே இருந்தேன். அவனைப் பத்தி எனக்கு பயம் அதிகமாக இருந்தது. Actress Roja ஆனா, இன்னைக்கு வளர்ந்து நிற்கிறார்! என் மகளை நினைச்சும் நான் பெருமையா உணர்றேன். அவங்க இப்போ அவார்ட்ஸ்லாம் வாங்கிட்டு இருக்காங்க. அவங்க படிக்கணும்னு நினைக்கிற விஷயங்களுக்கு நாங்க என்னைக்கும் சப்போர்ட்டாக இருக்கணும்னு நினைக்கிறோம். சின்ன கிராமத்துல இருந்து வந்த நான் இன்னைக்கு இங்க இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய கடின உழைப்புதான். நான் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, இங்க வந்ததும் படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்கிட்டேன். ஆனா, என் பொண்ணு படிப்புல நம்பர் 1.” என்றபடி முடித்துக் கொண்டார்.
ரோகினி சொன்ன வார்த்தை, மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா குழப்பத்தில் இருக்க முத்துவிடம் ரோகிணி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அவரது வாழ்க்கையில் நடந்த கடந்த கால அனுபவத்தையும் மனோஜ் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் மீனாவிடம் சொல்லுகிறார் நீ உண்மையை மறைக்கறதுக்கு ஆயிரம் காரணம் உன்னுடைய பக்கம் இருக்கலாம் ஆனா என்னோட மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்றது இந்த...
Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?
இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி. அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதிலும் இப்போது சில சிக்கல்களில் எழுந்திருக்கிறது. Nivin Pauly தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை', 'பென்ஸ்' ஆகியப் படங்களும், மலையாளத்தில் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்', 'டால்பி தினேஷன்', 'பேபி கேர்ள்', 'சர்வம் மாயா', 'பெதெல்கம் குடும்ப யூனிட்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்', 'பார்மா (வெப் சீரிஸ்) ஆகிய படைப்புகளை கமிட் செய்திருந்தார் நிவின் பாலி. இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி தமிழில் அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கிறது. அதிரடி வில்லனாக அப்படத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார். மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. Dear Students - Nivin Pauly அஜு வர்கீஸுடன் நிவின் பாலி நடித்திருக்கும் 'சர்வம் மாயா' திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதை தாண்டி அவர் நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்கிறார்கள். மேலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'பார்மா' என்கிற வெப் சீரிஸிலும் நிவின் பாலி நடித்து வருகிறார். 'ப்ரேமலு' வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கும் 'பெதெல்கம் குடும்ப யூனிட்' படத்தின் நிவின் பாலி நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இருந்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் கமிட் செய்து வைத்திருந்த 'டால்பி தினேஷன்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியத் திரைப்படங்களின் அறிவிப்பு போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கி இருக்கிறார். அந்தப் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் எதுவும் வெளிவராத காரணத்தினாலும், போஸ்டர்களை நிவின் பாலி நீக்கியதனாலும் அப்படங்கள் டிராப் ஆகிவிட்டன எனப் பேச்சுகள் இப்போது எழுந்திருக்கின்றன. Gangster Of Mundanmala - Nivin Pauly 'ஒரே சமயத்தில் இத்தனை படங்களின் போஸ்டர்களை அவர் நீக்கியிருப்பது எதனால்' என்கிற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. 'நரிவேட்டா' படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர்தான் 'சேகர வர்மா ராஜாவு' படத்தை இயக்கவிருந்தார். வரலாற்று கதைகளத்தில் ப்ரீயட் படமாக அது உருவாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆகவில்லை எனவும், தற்சமயம் அப்படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் இயக்குநர் 'ஓடிடி ப்ளே' ஊடகத்திடம் நேற்று தெரிவித்திருக்கிறார். 'டால்பி தினேஷன்' பட இயக்குநர், அந்தப் படத்தை இப்போது நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப் பட கதையின் ஐடியாவை மையமாக வைத்து மற்றொரு படத்திற்காக நான் வேலைகள் செய்து வருகிறேன். எனக் கூறியிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமாக, அந்தப் படம் குறித்தான அப்டேட்களை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுடன் எதற்காக 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியப் படங்களின் போஸ்டர்களை நீக்கினார் என்பதற்கு எந்தவொரு விளக்கத்தையும், தகவலையும் நிவின் பாலியின் குழுவினர் தரவில்லை.
விக்ரம் சொன்ன வார்த்தை, கடுப்பான ரம்யா, வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் ஸ்டார் பிளேயர் ஒஸ்ட் பிளேயர் என இரண்டு பெயரை தேர்வு செய்ய...
Pei Kuthu Video Song , Rajini Gaang ,Rajini Kiishen , Dwiwika ,Antony Daasan |, M.S. Jones Rupert
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சேரன் மனதில் பறக்கும் காதல் பட்டாம்பூச்சி, வேதனையில் அழும் வானதி –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு மரியாதையே இல்லையா? வாசலில் நின்று வரவேற்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டார். அப்போது ஜெயந்தியின் அப்பா, நாங்கள் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தரகர் உங்களிடம் சொல்லவில்லையா? என்றார். இதை கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். நடேசன், இது தரகரிடம் சொல்ல வேண்டிய விஷயமா? என்றார். அப்போது ஜெயந்தி அம்மா, மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். […] The post சேரன் மனதில் பறக்கும் காதல் பட்டாம்பூச்சி, வேதனையில் அழும் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், இது என்னுடைய கார்டே இல்லை என்று பொய் சொன்னார். கோபத்தில் சரவணன், இன்னும் எவ்வளவுதான் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவாய். மொத்த குடும்பமே இப்படித்தான் ஏமாற்றுக்காரர்களா? இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று பயங்கரமாக கத்தினார். பயந்து போன தங்க மயில் கெஞ்சி கதறி அழுதார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. இன்னியோடு உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். வீட்டில் எல்லோரிடமும் […] The post கடை இருக்கும் இடம் தெரியாமல் குழம்பி போகும் பழனி, முத்துவேல் செய்யும் சர்ப்ரைஸ் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6
‘த தின்மேன்’தொடரின் ஐந்தாவது படைப்பு ‘த தின் மேன் கோஸ் ஹோம்- 1944’. ஓய்வெடுக்கச் சென்றவர் ஓவிய(னின் மரண)த்தில் ஒளிந்திருக்கும் ஒற்று ரகசியத்தை கண்டறிவதே ஒருவரிக் கதை.
பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா.
த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6
‘த தின்மேன்’தொடரின் ஐந்தாவது படைப்பு ‘த தின் மேன் கோஸ் ஹோம்- 1944’. ஓய்வெடுக்கச் சென்றவர் ஓவிய(னின் மரண)த்தில் ஒளிந்திருக்கும் ஒற்று ரகசியத்தை கண்டறிவதே ஒருவரிக் கதை.
பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா.
பிரபாஸை இயக்கும் ‘நாட்டு நாட்டு’ நடன இயக்குநர்
பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித். ’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.
ரஜினியை தனுஷ் இயக்குகிறாரா? - வெளியான லேட்டஸ்ட் தகவல்!
ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை சுந்தர்.சி இயக்க, கமல் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6
‘த தின்மேன்’தொடரின் ஐந்தாவது படைப்பு ‘த தின் மேன் கோஸ் ஹோம்- 1944’. ஓய்வெடுக்கச் சென்றவர் ஓவிய(னின் மரண)த்தில் ஒளிந்திருக்கும் ஒற்று ரகசியத்தை கண்டறிவதே ஒருவரிக் கதை.
பிரபாஸை இயக்கும் ‘நாட்டு நாட்டு’ நடன இயக்குநர்
பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித். ’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.
பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா.
விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர்
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர்.
விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர்
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர்.
ஓடிடியில் நவ.21-ல் வெளியாகிறது ‘பைசன்’
ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’.
திட்டமிட்டப்படி வெளியாகுமா ‘வா வாத்தியார்’?
டிச.5-ம் தேதி திட்டமிட்டப்படி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் எழுந்திருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’.
திட்டமிட்டப்படி வெளியாகுமா ‘வா வாத்தியார்’?
டிச.5-ம் தேதி திட்டமிட்டப்படி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் எழுந்திருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’.
ஓடிடியில் நவ.21-ல் வெளியாகிறது ‘பைசன்’
ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’.
விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர்
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர்.

24 C