SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
...

முத்துவிற்காக அண்ணாமலை எடுத்த முடிவால் ஆடிப்போன மனோஜ், கொந்தளிக்கும் விஜயா –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீல், அருண்- முத்து இருவரையும் சமாதானம் செய்தார்கள். பின் அருண், 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். முத்து, முடியாது என்றார். பின் 15 லட்சம் என்று அருண் சொன்னார். பின் முத்து, டிரைவர் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இதனால் அருண், ஐந்து லட்சத்திற்கு கீழ் குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்வதால் முத்து ஒத்து கொண்டார். பின் அருண், அதை ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் […] The post முத்துவிற்காக அண்ணாமலை எடுத்த முடிவால் ஆடிப்போன மனோஜ், கொந்தளிக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 9:04 pm

ஒரே நேரத்தில் மூன்று மாநில விருதுகள், நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் –நெகிழ்ச்சியில் நயன்தாரா பதிவு

சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல ஆண்டுகளாக வழங்காமல் இருந்த விருதுகள் கடந்த 13ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ரகுமான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கி இருந்தார்கள். அந்த […] The post ஒரே நேரத்தில் மூன்று மாநில விருதுகள், நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் – நெகிழ்ச்சியில் நயன்தாரா பதிவு appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 7:30 pm

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் சம்மரில் வெளியாகும் என்ற இந்த படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி அப்டேட் கொடுத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை நாக வம்சி...

தஸ்தர் 17 Feb 2026 7:16 pm

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP...

தஸ்தர் 17 Feb 2026 7:14 pm

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சரிகம நிறுவனம் அவர்களின் கைவசத்தில் உள்ள 134 பாடல்களை இளையராஜா பயன்படுத்த சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது அப்போது 1976...

தஸ்தர் 17 Feb 2026 7:02 pm

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது இந்த படம்...

தஸ்தர் 17 Feb 2026 6:51 pm

Aadiney Irupen Video Song

தஸ்தர் 17 Feb 2026 5:36 pm

பள்ளியில் விஜய்-காவிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வார்களா? எதிர்பார்ப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார். விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக […] The post பள்ளியில் விஜய்-காவிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வார்களா? எதிர்பார்ப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 5:18 pm

`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.

விகடன் 17 Feb 2026 4:32 pm

`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.

விகடன் 17 Feb 2026 4:32 pm

`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.

விகடன் 17 Feb 2026 4:32 pm

உயிலை மீட்க போராடும் நிலா, ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே குதித்த சோழன் –பரபரப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தினர் என்ன செய்வது, எங்கு போவது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, எங்கு போய் தங்குவது? என்று யோசிக்காமல் அந்த வீட்டை நம்முடையது எப்படி ஆக்குவது என்று யோசியுங்கள். அந்த வீட்டிற்க்கான பத்திரம் இருக்கிறதா? யாருடைய பெயரில் இருக்கிறது என்றெல்லாம் கேட்டார். சோழன், எல்லாமே அந்த ஆளுக்கு தான் தெரியும். அவரிடம் கேளுங்கள் என்றார். அதற்குப்பின் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை பற்றி […] The post உயிலை மீட்க போராடும் நிலா, ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே குதித்த சோழன் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 4:29 pm

Anirudh: 'இது என்னுடைய மிக முக்கிய மைல்கல்!'- புதிய இசை லேபிளைத் தொடங்கிய அனிருத்

இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருப்பவர் அனிருத். கடைசியாக ‘கூலி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் ‘எல்.ஐ.கே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புவின் ‘அரசரன்’, லோகேஷ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் -2’, ஷாருக் கானின் ‘கிங்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இந்நிலையில் அனிருத் 'Albuquerque Records' என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அனிருத், “ ‘Albuquerque Records’ மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன். இது என்னுடைய படைப்பாக்கத்திலும் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக சுயாதீன பாடல்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்.  இந்த நிறுவனம் என்னுடைய சினிமா மற்றும் தனியிசைப் பாடல்களில் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த உதவியாக இருக்குமென நம்புகிறேன். அனிருத் வளமான குரல்களையும் நம்முடைய கலாசார இசையையும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். என்னுடைய எல்லா பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளுடன் இந்த நிறுவனத்தை இப்போது ஆரம்பிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

விகடன் 17 Feb 2026 4:22 pm

Anirudh: 'இது என்னுடைய மிக முக்கிய மைல்கல்!'- புதிய இசை லேபிளைத் தொடங்கிய அனிருத்

இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருப்பவர் அனிருத். கடைசியாக ‘கூலி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் ‘எல்.ஐ.கே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புவின் ‘அரசரன்’, லோகேஷ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் -2’, ஷாருக் கானின் ‘கிங்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இந்நிலையில் அனிருத் 'Albuquerque Records' என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அனிருத், “ ‘Albuquerque Records’ மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன். இது என்னுடைய படைப்பாக்கத்திலும் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக சுயாதீன பாடல்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்.  இந்த நிறுவனம் என்னுடைய சினிமா மற்றும் தனியிசைப் பாடல்களில் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த உதவியாக இருக்குமென நம்புகிறேன். அனிருத் வளமான குரல்களையும் நம்முடைய கலாசார இசையையும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். என்னுடைய எல்லா பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளுடன் இந்த நிறுவனத்தை இப்போது ஆரம்பிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

விகடன் 17 Feb 2026 4:22 pm

Nayanthara:``மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.! - நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான 'அறம்' படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. View this post on Instagram A post shared by N A Y A N T H A R A (@nayanthara) மேலும், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' மற்றும் 'கூழாங்கல்' படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், நடிகை நயன்தாரா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், மொத்தம் 3 விருதுகள் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு தனது நன்றியையும் அந்த படங்களுக்காக உழைத்த தனது படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை நயன்தாராவின் சமூக வலைதளப் பக்கத்தில், `` ' அறம்' படத்திற்காக எனக்கு மாநில விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மேலும், எங்களது தயாரிப்பு நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' (@therowdypictures) சார்பாக 'நெற்றிக்கண்' (NETRIKANN) மற்றும் 'கூழாங்கல்' (KOOZHANGAL) ஆகிய படங்களுக்கும் மாநில விருதுகள் கிடைத்ததற்கும் நன்றிகள். மூன்று மாநில விருதுகள்... உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை - த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்

விகடன் 17 Feb 2026 3:26 pm

தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே வெடித்த கலவரம், மீனா அப்பா சொன்ன விஷயம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். அவரை பார்த்துவிட்டு அரசி பயந்து போய் கத்தினார். அரசி சத்தத்தை கேட்டு அப்பத்தா, குமார் இருவரும் வந்தார்கள். பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை குமார் துரத்திவிட்டு அரசியை சமாதானம் செய்தார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி […] The post தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே வெடித்த கலவரம், மீனா அப்பா சொன்ன விஷயம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 2:21 pm

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!

பா.ரஞ்சித்தின் 'காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் 'காந்தா'வில்கூட இவரது ஆர்ட் டைரக்ஷன் பேசப்பட்டது. அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான ராமலிங்கம், அதன் பின் ஓவிய கல்லூரியில் பயின்றவர். இப்போது அரை டஜன் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷனை கவனித்து வருகிறார். அவர் படம் இயக்குவது உண்மைதானா? ஹீரோவாக சாண்டி நடிக்கிறாரா என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி... சாண்டி தமிழ் சினிமாவில் 'பீரியட் ஃபிலிமா? கூப்பிடுங்க ராமலிங்கத்தை' என பெயரெடுத்தவர் கலை இயக்குநர் ராமலிங்கம். 'கேப்டன் மில்லர்' படத்தில்கூட பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். அடுத்து பாண்டிராஜின் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்து வரும் பெயரிடப்படாத படம், கௌதம் ராம் கார்த்திக், லீனா மணிமேகலை இயக்கத்தில் ஒரு படம் எனப் பல ப்ராஜெக்ட்களைக் கையில் வைத்துள்ளார். கலை இயக்குநர் ராமலிங்கம் சரி விஷயத்திற்கு வருவோம். அவர் இயக்குநர் ஆவது உண்மைதான். டான்ஸ் மாஸ்டர் கம் நடிகரான சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 'லியோ', 'லோகா' படங்களின் வெற்றிக்குப் பின் சாண்டி பல படங்களில் நடித்தும், நடன இயக்குநராகவும் இயங்கி வருகிறார். ராமலிங்கம் உருவாக்கியிருக்கும் கதைக்கு சாண்டி பொருத்தமானவராகத் தோன்றவே, சாண்டியிடம் பேசியிருக்கிறார் ராமலிங்கம். சாண்டி முழுக்கதையையும் கேட்டுவிட்டு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அப்பா - மகன் இருவருக்குமிடையேயான ஒரு எமோஷனலான கதை இது என்றும், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்றும் சொல்கிறார்கள். கலை இயக்கப் பணிகளுக்கிடையே தன் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் இன்னொரு பக்கம் தீவிரமாக எழுதி வருகிறார் ராமலிங்கம்.

விகடன் 17 Feb 2026 2:09 pm

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!

பா.ரஞ்சித்தின் 'காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் 'காந்தா'வில்கூட இவரது ஆர்ட் டைரக்ஷன் பேசப்பட்டது. அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான ராமலிங்கம், அதன் பின் ஓவிய கல்லூரியில் பயின்றவர். இப்போது அரை டஜன் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷனை கவனித்து வருகிறார். அவர் படம் இயக்குவது உண்மைதானா? ஹீரோவாக சாண்டி நடிக்கிறாரா என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி... சாண்டி தமிழ் சினிமாவில் 'பீரியட் ஃபிலிமா? கூப்பிடுங்க ராமலிங்கத்தை' என பெயரெடுத்தவர் கலை இயக்குநர் ராமலிங்கம். 'கேப்டன் மில்லர்' படத்தில்கூட பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். அடுத்து பாண்டிராஜின் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்து வரும் பெயரிடப்படாத படம், கௌதம் ராம் கார்த்திக், லீனா மணிமேகலை இயக்கத்தில் ஒரு படம் எனப் பல ப்ராஜெக்ட்களைக் கையில் வைத்துள்ளார். கலை இயக்குநர் ராமலிங்கம் சரி விஷயத்திற்கு வருவோம். அவர் இயக்குநர் ஆவது உண்மைதான். டான்ஸ் மாஸ்டர் கம் நடிகரான சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 'லியோ', 'லோகா' படங்களின் வெற்றிக்குப் பின் சாண்டி பல படங்களில் நடித்தும், நடன இயக்குநராகவும் இயங்கி வருகிறார். ராமலிங்கம் உருவாக்கியிருக்கும் கதைக்கு சாண்டி பொருத்தமானவராகத் தோன்றவே, சாண்டியிடம் பேசியிருக்கிறார் ராமலிங்கம். சாண்டி முழுக்கதையையும் கேட்டுவிட்டு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அப்பா - மகன் இருவருக்குமிடையேயான ஒரு எமோஷனலான கதை இது என்றும், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்றும் சொல்கிறார்கள். கலை இயக்கப் பணிகளுக்கிடையே தன் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் இன்னொரு பக்கம் தீவிரமாக எழுதி வருகிறார் ராமலிங்கம்.

விகடன் 17 Feb 2026 2:09 pm

வீட்டை விட்டு ஒடி போகும் தாமரை, கையும் களவுமாக பிடித்த ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், ஜெனி அப்பா- அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம். ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். அதற்குப்பின் தமிழ், சேது இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டார்கள். அங்கு சக்தி, தமிழை சந்தித்து ஜெனியை பற்றி விசாரித்தார். தமிழ், ஜெனிக்கு நடக்கும் திருமணம் ஏற்படுகளைப் பற்றி சொன்னார். சக்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரையின் திருமணத்திற்காக ராஜாங்கம் நகை, புடவை எல்லாம் வாங்கி தந்தார். தாமரை தன் காதலைப் பற்றி […] The post வீட்டை விட்டு ஒடி போகும் தாமரை, கையும் களவுமாக பிடித்த ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 1:29 pm

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் &பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’படப்பிடிப்பு நிறைவு –விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது! Avni Movies & Benzz Media Announce Wrap of Romantic Fantasy ‘Double Occupancy’, Now Gearing Up for Release Avni Movies, in collaboration with Benzz Media, proudly announced that filming for their upcoming romantic-fantasy drama Double...

தஸ்தர் 17 Feb 2026 12:46 pm

முத்து மீனாவிற்கு மனோஜ் ரூமை கொடுத்த அண்ணாமலை.. கடுப்பான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு உடம்பு முடியாமல் இருப்பதால் தூக்கத்தில் முத்து அவர்கள் மீனா ஆன்ட்டி என் எப்ப பாப்பா வருவீங்க என்று புலம்பிக்கொண்டே இருக்க உடனே ரோகினி அம்மா அவன் முத்துமீனாவ தான் தேடுறான் அவன் வந்து பார்த்தாங்கன்னா அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக வாய்ப்பு இருக்கு என்று சொல்ல உனக்கு எதுக்கு...

தஸ்தர் 17 Feb 2026 12:25 pm

நந்தினி பற்றி பேசிய கெஸ்ட்.. கோபப்பட்ட சூர்யா..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் என் பொண்ணுக்கு என்ன மாதிரி பையனும் பாக்கணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு ரோட்ல...

தஸ்தர் 17 Feb 2026 12:06 pm

Dashamakan – #Rap Battle Lyrical video

Dashamakan – #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael , Idaa

தஸ்தர் 17 Feb 2026 11:41 am

தன் குழந்தையை சந்தித்த காவிரி, விஜய்க்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, எனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு பெரிய பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னார். இதைக் கேட்டு யமுனா, சாரதா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். காவிரி, நாம் காஞ்சிபுரத்திற்கு சென்று விடலாம் என்று சொன்னார். முதலில் தயங்கினாலும் எல்லோரும் சொன்னதால் சாரதா ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் விஜயின் மகள், எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும். அழைத்து கொண்டு போகிறீர்களா என்றார். விஜய்யால் எதுவுமே பேச முடியவில்லை எமோஷனலாக கண் கலங்குகிறார். விஜய், […] The post தன் குழந்தையை சந்தித்த காவிரி, விஜய்க்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 11:22 am

மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் ஒன்று சேர்ந்த சூர்யா –அமீர் நட்பு –எக்ஸ்குளுசிவ் தகவல்

சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிக அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது திரிஷா- சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா […] The post மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் ஒன்று சேர்ந்த சூர்யா – அமீர் நட்பு – எக்ஸ்குளுசிவ் தகவல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 17 Feb 2026 9:51 am

பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார். பாக்கெட் நாவல் இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். Gandhi Talks: ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!- விஜய் சேதுபதி

விகடன் 16 Feb 2026 8:51 pm

பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார். பாக்கெட் நாவல் இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். Gandhi Talks: ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!- விஜய் சேதுபதி

விகடன் 16 Feb 2026 8:51 pm

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சினிமாவின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, புதிய உறுப்பினர்களை வாழ்த்தினார்கள். புது நிர்வாகிகள் புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவராக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, ஏ.வெங்கடேஷ், எஸ்.ரவிமரியா உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து இணை செயலாளரான இயக்குநர் சரணிடம் பேசினோம். சரண் ''அனைத்து திரைப்பட சங்கங்கள் ஒரே சமயத்தில் தேர்ந்தலை நடத்திடணும்னு பேசியிருக்கோம். இந்த முறையும் ஜனநாயக முறைப்படி சங்க தேர்தலை நடத்த விரும்பினோம். வழக்கமாக இருந்ததை மாற்றி இப்போது மூணு வருஷமாக கொண்டு வந்துருக்கோம். இனிமே மூணு வருஷத்துக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். போனமுறை பொருளாளராக நான் இருந்தேன். தலைவராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசுவும், கௌரவ தலைவராக செல்வமணியும் இருந்தாங்க. சென்ற முறை உள்ள அத்தனை பேரும் சிறப்பாக பொறுப்பு வகிச்சதால இந்த முறையும் தேர்வாகியுள்ளனர். பலரும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் எதிர்த்து போட்டியிட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்னிக்கு காலையில 10 மணிக்கு கமலா திரையரங்கில் பதவியேற்பு விழா நடந்தது. சென்ற முறை எங்களோட சாதனைகளாக பல விஷயங்களை சொல்லலாம். எல்லாமே கூட்டு முயற்சிதான். இரவு பகல் பாராமல் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார் ஆர்.வி.உதயகுமார் சார். நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அமைஞ்சது. ஐசரி கணேஷ் சார் உட்பட பலரின் முக்கியமான கல்லூரிகள்ல இலவசமாக சீட் வாங்கி கொடுத்தோம். பண்டிகை காலங்கள்ல வேட்டி- சட்டை, பட்டுப்புடவை வரை கொடுத்தோம். பதவியேற்பு இந்த முறை தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்.கே.செல்வமணி முக்கியமான ஓர் அஜென்டாவோடு வந்திருக்கார். உதவி இயக்குநர்களின் ஊதியங்களை சங்கத்தின் வழியாக கொடுப்பதற்கான விஷயங்களை முன்னேடுத்துள்ளார். ஏன்னா, டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன்கள்ல அவங்களோட சம்பளத்தை அவங்கவங்க சங்கங்களுக்கு அனுப்பி வச்சிடுவாங்க. அந்த சங்கங்களும் சின்னதாக ஒரு சர்வீஸ் கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை வைத்து பெரியளவுல அந்த உறுப்பினர்களுக்கு நன்மைகளை செய்வாங்க. இந்த முறை உதவி இயக்குநர்களின் சம்பளத்தை சங்கம் வழியாக கொடுக்கும் போது, பெரியளவுல உதவி செய்ய முடியும் என்பதுல புது தலைவர் உறுதியாக இருக்கார். சீக்கிரமே இது நடைமுறைக்கு வந்துடும். ஏன்னா, இப்படி வசதி இல்லாத ஒரே யூனியன் எங்க யூனியன் தான். படப்பிடிப்பில் போதியளவு ஊதியம் பெறாத ஆட்கள், உதவி இயக்குநர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பக்கம் ஒரு உதவி இயக்குநர் அவனோட கன்வேயன்ஸுக்காக சில நூறு ரூபாய்காக போராட்டிக்கிட்டு இருப்பார். அந்தப் பக்கம் ஒரு நடிகர் நடிகையோட டச்சப் பாய் 10 ஆயிரம், 15 ஆயிரம்னு வாங்கிட்டு இருப்பாங்க. இந்த ஏற்றத்தாழ்வு இனி இருக்கக் கூடாதுனு உதவி இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கோம். சங்கம் வழியாக சம்பளம் போடும் முறையை கொண்டு வரும் போது உதவி இயக்குநர்களுக்கு தங்கு தடையில்லாமல் அவங்களோட வங்கி கணக்குகள்ல ஆர்.வி.உதயகுமார் போய்ச்சேர்ந்துடும். தவிர படப்பிடிப்பில் பயோமெட்ரிக் சிஸ்டமும் கொண்டு வரப்போறோம். பெப்சியில் ஏற்கெனவே இருக்கற நடைமுறைதான். படப்பிடிப்புல வேலை செய்யுறவங்க யூனியன்ல உள்ள ஆட்களாக இருக்கணும் என்பதற்காக இந்த முறையை கொண்டு வர்றோம். சில யூனியன்ல இதை இம்ளீமென்ட்டும் செய்துட்டாங்க. ஆர்.கே.செல்வமணி சார் பெப்சியிலும் பொறுப்பில் இருக்கறதால இதை ஒரு பாதுகாப்பானதாகவும் கருதுறோம்.'' என்கிறார் இயக்குநர் சரண். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!

விகடன் 16 Feb 2026 8:40 pm

நயினார் நாகேந்திரனின் சர்ச்சை கருத்து , கொந்தளித்து நடிகை த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி –பின்னணி இது தான்

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்து அரசியலில் களம் இறங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய அரசியல் வருகை பல கட்சிகளுக்கு பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இதனால் பல கட்சிகள் விஜயை விமர்சித்தும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் மற்றும் திரிஷாவை தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய […] The post நயினார் நாகேந்திரனின் சர்ச்சை கருத்து , கொந்தளித்து நடிகை த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி – பின்னணி இது தான் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 8:40 pm

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த நேர்காணலில், ``உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா? என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, `எனக்கு இன்னும் இந்த நாட்டில் வாழ வேண்டும்' என்றார். அந்த பதில், கிண்டலாகவும் அதேசமயம் அரசியல் பதிலாகவும் இருந்தது. Taapsee Pannu மற்றொரு வீடியோ க்ளிப்பில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்களைக் காண்பித்து, 'இவர்களில் யார் மகாத்மா என நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மகாத்மா காந்தியைத் தேர்வுசெய்து, 'நான் படித்தவரையில் மகாத்மா என்றால், காந்திதான்' எனக் குறிப்பிட்டார். இந்த வீடியோ க்ளிப்கள் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், இது வெறும் கருத்து மட்டுமல்ல, இன்றைய காலத்தின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அதே நேர்காணலில் மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார். Taapsee Pannu: ``அவரை முதன் முதலில்..! - காதலனை சந்தித்தது குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி

விகடன் 16 Feb 2026 8:29 pm

‘பாரதி கண்ணம்மா’ரோஷினியின் திடீர் கல்யாணம், மாப்பிளை சினிமா பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் ரோஷினி தான். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. மேலும், இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். […] The post ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் திடீர் கல்யாணம், மாப்பிளை சினிமா பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 8:16 pm

வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும் தாமரை, காமேஷ் கொடுத்த ஐடியா –விறுவிறுப்பில் சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, சாவித்திரி இருவரும் கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டி நிறுத்துவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சித்ரா, காமேஸ் உடன் தாமரை பேசியிருந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டினார். தாமரை ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் ஈஸ்வரி, கல்யாணம் நடக்கப்போகிறது, ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது ஜெனியின் அம்மா, போனை பிடுங்கிக் […] The post வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும் தாமரை, காமேஷ் கொடுத்த ஐடியா – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 6:58 pm

இசை ராணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்கிறாரா? வெளியான சூப்பர் அப்டேட்

இந்திய சினிமாவின் இசை உலகில் அடையாளமாக இருந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவர் புகழ்பெற்ற கர்நாடக பாடகி ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி கொண்ட பல மொழிகளில் பாடி அசத்தியிருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டு தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியும் இருக்கிறார். அதோடு ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே சேரும். இவரை இசையரசி, இசைப் பேரரசி, […] The post இசை ராணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்கிறாரா? வெளியான சூப்பர் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 6:14 pm

கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல'கலைத் திருவிழா

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்', தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம் ஹாலில் நடைபெற்ற இந்த விழா கலை, புகைப்படம், நாடகம், இலக்கியம், விவாதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது. 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிந்தனை மன்றம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சமூகப் பிரச்னைகள், முக்கிய நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் மேடையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் கலைத் திருவிழா, மாணவர்களின் பன்முகத் திறன்களைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. மாணவி ஐஸ்வர்யா விழாவின் நுழைவிடத்தில் வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் விருப்பத்தின்பேரில், ஃபேஸ் பெயின்ட்டிங் செய்யப்பட்டது. ஹால் முழுவதும் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முனைவர் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி ஐஸ்வர்யாவின் அழகிய வரைபடங்கள் தனியாக ஒரு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. முதல் நாள் (பிப்ரவரி 12) காலை அமர்வில், புகைப்படக் கலைஞர் பாலாஜி மகேஸ்வர் சிறப்புரை ஆற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்னர், புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் போட்டோகிராபராக மாறிய அவர், உலகின் முதல் புகைப்படம், முதல் மனித உருவப் புகைப்படம், ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார். ரெசிசீவ் மூவ்மென்ட் போன்ற நுட்பங்களைப் பற்றி பகிர்ந்த அவர், “புகைப்படங்கள் எடுப்பதற்கு பல்வேறு ஸ்டைல்கள் இருந்தாலும், அவை நினைவுகளாக என்றும் நம்முடன் தொடர்ந்து வரும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். மதிய வேளையில், ஆதி அத்தி என்ற தலைப்பில் சோழப் பெருவளத்தான் மகள் ஆதியும் சேர மன்னன் அத்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம், கரிகாலன் குழுவால் தெருக்கூத்து வடிவில் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் தெருக்கூத்து மாணவர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள், “இது எங்களுக்கு இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்களிடம் தெருக்கூத்தைக் கொண்டு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தனர். மாணவி ஐஸ்வர்யாவின் படைப்புகள் இரண்டாம் நாள் (பிப்ரவரி 13) காலையில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “கலை மற்றும் காதல்” என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான விவாத அமர்வு நடைபெற்றது. விழாவின் இறுதியில், எழுத்தாளர் முருகவேல் சிறப்புரை ஆற்றினார். கொங்கு இலக்கியங்களின் வரலாற்றை எவ்வாறு எழுத வேண்டும், எழுதக் கூடாது என்பதை விளக்கிய அவர், இலக்கியம் உணர்வு சார்ந்ததாக மட்டுமன்றி அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது குப்பைக்காரன் கதை மூலம் நகைச்சுவையாக விளக்கி, மாணவர்களை ஈர்த்தார். விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில்,குட்டி ஆகாயம், ஆம்னி புக் ஹவுஸ், பரிசல் பதிப்பகம்' உள்ளிட்ட பதிப்பகங்கள் இரு நாள்களும் புத்தகக் கண்காட்சி நடத்தின. மேலும், Buy a Book - Gift a Book மற்றும் Buy a Photo - Gift a Photo மூலம் புத்தகங்களையும் புகைப்படங்களையும் பகிரும் அன்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்தக் கலைத் திருவிழா, மாணவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதோடு, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. வருடம் தவறாமல் கலைத் திருவிழா நடத்தும் சிந்தனை மன்றத்தின் இத்தகைய முயற்சிகள் கல்லூரி வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.

விகடன் 16 Feb 2026 6:10 pm

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான சினிமாவில் ‘ஆரம்பம்’ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சுஜேஷ் ஈப்பன் இயக்குகிறார். அவந்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரிதா. இந்த படத்தின் பூஜை கேரளாவில் நடந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திரைப் பயணம் துவங்கியதை சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார் அவந்திகா. ‘ஆரம்பம்’ படத்தில்...

தஸ்தர் 16 Feb 2026 5:57 pm

“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!”–மாளவிகா மோகனன்

“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன் பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளி​யானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில்...

தஸ்தர் 16 Feb 2026 5:51 pm

ஜனநாயகன்படத்தால் மற்ற படங்களுக்கும் பிரச்சனை.. விநியோகிஸ்தர் ஸ்ரீதர் ஓபன் டாக்.!!

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்தப் பட ரிலீஸ் ஆகாதது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பிரபல திரைப்பட...

தஸ்தர் 16 Feb 2026 5:45 pm

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார்....

தஸ்தர் 16 Feb 2026 5:45 pm

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’மூவி ஸாங் வைரல்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலாதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரகுமான் இசையமைத்​துள்​ளார். பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்.ரகுமான் பாடி​யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் பிரபுதேவா கடின​மான...

தஸ்தர் 16 Feb 2026 5:40 pm

எப்போதும் ‘பவுன்சர்கள்’சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..!

எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும்...

தஸ்தர் 16 Feb 2026 5:34 pm

சேயோன்: மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; 'தாய் கிழவி'இயக்குநருடன் இணைந்த எஸ்.கே !

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'பராசக்தி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன. மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ரஜினி படத்தை டைரக்டர் செய்வதற்கு ஆயத்தமாகிவிட்டார். SK 26 - Seyon இந்நிலையில், அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என இணையத்தில் பேசப்பட்டது. எஸ்.கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'தாய் கிழவி' படத்தை இயக்கி இருப்பவர் இந்த சிவக்குமார் முருகேசன். அப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வெளிவந்த 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் கதாசிரியரும் இவர்தான். தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. படத்திற்கு 'சேயோன்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. 'அமரன்' பட வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தை தயாரிப்பதாக முடிவெடுத்திருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். Amaran இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முதல் முறையாக எஸ்.கே நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். இயக்குநரின் முதல் பட ரிலீஸுக்கு முன்பே அவருடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நாளை காலை வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

விகடன் 16 Feb 2026 5:27 pm

விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு! - ATM இயக்குநர் பரதன் பேட்டி

இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம். அழகிய தமிழ் மகன் நம்மிடையே பேசியவர், படத்தின் டைட்டில் கார்டில் 'இனிய தளபதி', 'இதய தளபதி', 'இளைய தளபதி' எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா ! விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு. சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம். இதை நானே அவர்கிட்ட 'யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. என்றவர், 'கில்லி' படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க. அவருக்குமே என்னுடைய கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, சூழ்நிலைகள் காரணமாக அந்தக் கதை படமாக உருவாகல. பிறகு விஜய் சார் 'மதுர' படத்துல நடிக்கும்போது என்னை வசனம் எழுதுவதற்கும் கூப்பிட்டார். இயக்குநர் எஸ்.கே. ஜீவா, விஜய் சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கார். அவர் சொன்ன இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை விஜய் சாருக்கு பிடிச்சிடுச்சு. பிறகு என்னை அந்தப் படத்தை இயக்க சொன்னாங்க. படத்தினுடைய இடைவேளை காட்சியில நான் சில மாற்றங்கள் சொன்னேன். Director Bharathan ரைட்டர்களை பொறுத்தவரையில், அவ்வளவு சீக்கிரம் கதையில மாற்றத்தைச் செய்திட மாட்டாங்க. ஆனா, ஜீவா சார் நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு கதையில மாற்றங்கள் செய்தார். ஆனா, விஜய் சாருக்காக நான் பண்ணின ஃபர்ஸ்ட் கதையை இப்போ வரைக்கும் வச்சிருக்கேன். என்றார். 'அழகிய தமிழ் மகன்' படத்துல வர்ற கவிதை காட்சியை பார்த்திபன் சார்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாரு. அப்போ, கலைஞர், பார்த்திபன் சார் எல்லாம் ஒரு நிகழ்வுக்குப் போயிருக்காங்க. அங்க திடீரென மின்சாரம் கட் ஆகிடுச்சு. எல்லோரும் 'டார்ச் லைட் எடுங்க'னு சொல்லிட்டு இருக்கும்போது பார்த்திபன் சார் 'சூரியனுக்கே டார்ச்சா'னு ஒரு கமென்ட் போட்டிருக்கார். அப்போ இந்த விஷயம் பெரும் பேசுபொருளானது. இதை விஜய் சாருமே கேள்விப்பட்டிருந்தார். பிறகு, கவிதை சொல்லப்படுகிற அந்தக் காட்சியை அவர் எழுதித் தர்றதுக்கு கேட்டோம். அப்படி அவர்தான் அந்தக் காட்சியை எழுதினார்! என்றவர், இந்தப் படத்துல வர்ற 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடலை வாலி சார் எழுதினார். அந்தப் பாடலை ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு. இந்தப் பாடலை எழுதும்போது வாலி சார், 'நான் எழுதும் வரிகள் ம, மு வரிசையில் தொடங்கி, அதை ரஹ்மான் பாடினால், நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார். இவங்க காம்போவுல வந்த 'முக்காலா முக்கபுலா', 'முஸ்தபா முஸ்தபா' போன்ற ம வரிசை பாடல்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. பிறகு 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடல் வரிகளைப் வாலி சார் எழுதினார். அழகிய தமிழ் மகன் அதை எழுதி முடிச்சதும் ரஹ்மான் சார் லண்டன் கிளம்பி போயிட்டாரு. அங்கதான் இந்தப் பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார் எனக்கு கால் பண்ணி 'வாலி சார் ம வரிசையில பாடல் தொடங்கினால், வெற்றினு சொன்னாரே...அதுனால தொகையறாவாக 'முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ங்கிற வரியை சேர்த்துக்கலாமா'னு கேட்டு சேர்த்துகிட்டாரு. பாடலுக்காக நடனங்களை கோரியோகிராஃபர்கள் அழகாக அமைத்துக் கொடுத்தாங்க. 'வளையப்பட்டி' பாடலை தினேஷ் மாஸ்டர் கோரியோ பண்ணினாரு. அந்தவொரு பாடலுக்காக, ஒட்டுமொத்த டான்சர்ஸுக்கும் மொட்டை போட்டோம். எனப் பேசினார்.

விகடன் 16 Feb 2026 5:14 pm

Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி; கறார் காட்டும் சி.இ.ஓ!

டபுள் ஹீரோவா, நோ! தங்கை, தோழி முதலான சின்னச் சின்னக் கேரக்டர்களில் வந்து டிவி ஏரியாவில் பிரபலம் ஆகி ஹீரோயின் வரை உயர்ந்தவர்கள் நிறைய. 'மைனா' நந்தினி, தற்போது 'வீரா' சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி அருள்மொழி எனப் பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த தர்ஷனா ஸ்ரீபாலும் ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இவர். 'நீயின்றி நானில்லை' என டைட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். 'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஷப்னம் உள்ளிட்ட மேலும் சில ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ ஷுட் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சன் டிவி பக்கம் வந்தால் 'ஆனந்த ராகம்' தொடர் முடிவடைந்து விட்டதால் அதில் நடித்து வந்த அனுஷா ஹெக்டேவுக்கு மீண்டும் ஒரு புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த அழகப்பனுமே மீண்டும் சன் டிவி சீரியலில் தான் கமிட் ஆகாலமெனத் தெரிகிறது. வேறொரு சேனலில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லி விட்டாராம் அவர். சன் டிவி தரப்பிலிருந்து காத்திருக்கச் சொலியிருப்பதாகத் தெரிகிறது. கறார் காட்டும் சி.இ.ஓ.! டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான‌ சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம். இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம். இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். 'எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள். 'இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்' எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ. 'கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை' என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர். இதில் ஹைலைட் என்ன தெரியுமா, 'கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்' என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.

விகடன் 16 Feb 2026 5:01 pm

Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி; கறார் காட்டும் சி.இ.ஓ!

டபுள் ஹீரோவா, நோ! தங்கை, தோழி முதலான சின்னச் சின்னக் கேரக்டர்களில் வந்து டிவி ஏரியாவில் பிரபலம் ஆகி ஹீரோயின் வரை உயர்ந்தவர்கள் நிறைய. 'மைனா' நந்தினி, தற்போது 'வீரா' சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி அருள்மொழி எனப் பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த தர்ஷனா ஸ்ரீபாலும் ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இவர். 'நீயின்றி நானில்லை' என டைட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். 'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஷப்னம் உள்ளிட்ட மேலும் சில ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ ஷுட் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சன் டிவி பக்கம் வந்தால் 'ஆனந்த ராகம்' தொடர் முடிவடைந்து விட்டதால் அதில் நடித்து வந்த அனுஷா ஹெக்டேவுக்கு மீண்டும் ஒரு புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த அழகப்பனுமே மீண்டும் சன் டிவி சீரியலில் தான் கமிட் ஆகாலமெனத் தெரிகிறது. வேறொரு சேனலில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லி விட்டாராம் அவர். சன் டிவி தரப்பிலிருந்து காத்திருக்கச் சொலியிருப்பதாகத் தெரிகிறது. கறார் காட்டும் சி.இ.ஓ.! டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான‌ சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம். இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம். இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். 'எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள். 'இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்' எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ. 'கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை' என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர். இதில் ஹைலைட் என்ன தெரியுமா, 'கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்' என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.

விகடன் 16 Feb 2026 5:01 pm

விரகத்தியில் தவறான முடிவு எடுத்த தங்கமயில், மீனா செய்த விஷயம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோர்ட்டில் நீதிபதி, இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்தார். தங்கமயில் சார்பில், சரவணன் குடும்பத்தின் மீது பொய்யான புகார்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரவணன், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எனக்கு மயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். தங்கமயில் கோர்ட்டிலேயே விவாகரத்து வேண்டாம் என்று கதறி அழுதார். உடனே நீதிபதி, இன்னொரு ஒரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து விட்டார். கோர்ட்டில் தங்கமயில், […] The post விரகத்தியில் தவறான முடிவு எடுத்த தங்கமயில், மீனா செய்த விஷயம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 4:13 pm

கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா : மனமுருகி வேண்டி நடனமாடிய பிரபலங்கள் –வைரலாகும் வீடியோ

இந்தியா முழுவதும் வருடம் வருடம் மஹா சிவாரத்திரி கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவை சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த சிவராத்திரியில் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ தூங்காமல் கண் முழித்து சிவபெருமானை சிவ பக்தர்கள் வழிபடுவார்கள். அதுமட்டுமில்லாமல் கோவில்களில் சிவராத்திரி அன்று நடை சாத்தாமல் பூஜைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈசா யோகா மையம் சிவராத்திரிக்கு பெயர் போனது. கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் […] The post கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா : மனமுருகி வேண்டி நடனமாடிய பிரபலங்கள் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 2:32 pm

அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். Trisha திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார். Trisha Notice எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடன் 16 Feb 2026 1:42 pm

அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். Trisha திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார். Trisha Notice எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடன் 16 Feb 2026 1:42 pm

அருண் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்ட முத்து, நீத்துவால் கொந்தளித்த ரவி –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, உன் மாமியார் மனோஜ்க்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏதாவது செய்து மனோஜை உன் பக்கம் கொண்டுவர பார் என்றெல்லாம் ஏத்தி விட்டார். ரோகிணியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, அருனிடம் பேசுவதற்கு செல்வம் என்னை அழைக்கிறான். நான் போய் பார்த்து பேசுகிறேன் என்றார். மீனா, பிரச்சனை பெரிசாகும் வேண்டாம் என்றார். இருந்தாலும் முத்து கேட்கவில்லை. பின் இதைப்பற்றி மீனா, சீதாவிடம் […] The post அருண் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்ட முத்து, நீத்துவால் கொந்தளித்த ரவி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 1:14 pm

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும்...

தஸ்தர் 16 Feb 2026 12:13 pm

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் முத்து இருவரையும் உட்கார வைத்து சமாதானம் பேச பணம் எவ்வளவு கேப்பிங்க என்று கிருஷ்ணா ராம் கேட்கிறார். எங்க அம்மாவ கொன்ன மாதிரி உங்க அப்பாவ ரோட்ல வந்து நிக்க சொல்லுங்க நான் இதே மாதிரி பண்ணிட்டு பணம் கொடுத்து விடலாம் சரியா போயிடுமென்று சொல்ல முத்து...

தஸ்தர் 16 Feb 2026 11:45 am

விஜய்யின் பெயரை கேட்டு காவிரி சொன்ன வார்த்தை, ஷாக்கில் சாரதா- அடுத்து என்ன? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆனதால் போஸ்டிங் கிடைத்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோவிலில் குழந்தை காவிரியின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் விஜய். அப்போது தாத்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கல்யாணி இறந்துவிட்டார். விஜய் தன் மனைவி இறந்ததால் பிசினஸை விட்டு காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எமோஷனலாக பேசி இருந்தார். காவேரி, எனக்கு […] The post விஜய்யின் பெயரை கேட்டு காவிரி சொன்ன வார்த்தை, ஷாக்கில் சாரதா- அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 11:44 am

உயிலை கண்டுபிடிக்க சோழன்-நிலா போட்ட திட்டம், நடேசன் அண்ணா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொன்னார். பின் நிலாவும் எவ்வளவோ பேசி பார்த்து இருந்தார். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மொத்த குடும்பமே தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். போலீஸ் வீட்டிற்கு சீல் வைத்து விடுகிறது. கோபத்தில் நடேசன், தன்னுடைய அண்ணனுக்கு மண்ணை தூவி சாபம் விட்டு வந்தார். அதற்குப்பின் ஹோட்டலில் ரூம் எடுத்து நடேசன் குடும்பம் தங்கி கொண்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மொத்த […] The post உயிலை கண்டுபிடிக்க சோழன்-நிலா போட்ட திட்டம், நடேசன் அண்ணா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Feb 2026 9:51 am

Roshini Haripriyan: இசையமைப்பாளரை கரம் பிடித்த 'பாரதி கண்ணம்மா'ரோஷினி ஹரிப்ரியன்!

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். அந்த மெகா தொடர் ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் ரவுண்டு வரத் தொடங்கினார். 'கருடன்' படத்தில் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருந்தார். Roshini Haripriyan கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்திலும், காளி வெங்கட் உடன் 'மெட்ராஸ் மேட்னி' படத்திலும் இவர் நடித்திருந்தார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுந்தர மூர்த்தி, 'பொம்மை நாயகி', 'ஐரா', 'தண்டட்டி', 'பிகினிங்', 'டென் ஹவர்ஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். குடும்பத்தினர், திரை நண்பர்கள் என குறுகிய வட்டமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரோஷினி ஹரிப்பிரியன் | Roshini Haripriyan திருமணம் குறித்து ரோஷினி ஹரிப்ரியன் எந்தவொரு பதிவையும் இதுவரை பகிரவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவருடைய திரைத்துறை நண்பர்கள், திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

விகடன் 16 Feb 2026 7:02 am