‘குக் வித் கோமாளி’புகழ் சிவாங்கியின் காதலர் இவர் தானா? வெளியான புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. […] The post ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கியின் காதலர் இவர் தானா? வெளியான புகைப்படம் appeared first on Tamil Behind Talkies .
அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ
தமிழ் சேனலில் 2026 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வைரல் ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி...
With Love Review: பள்ளிக் காதலைத் தேடும் கலகல பயணம் - லப் டப்புகிறதா இந்த வித் லவ்?
சென்னையில் டிசைனராக இருக்கும் சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்), அவருடைய அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். அவ்வகையில், அவரைச் சந்திக்க வரும் பெண்தான் மோனிஷா (அனஸ்வரா ராஜன்). முதல் முறையாக இருவரும் பேசும்போதுதான், அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு, இருவரும், அவர்களின் முதல் காதல் கதையைப் பேசத் தொடங்குகிறார்கள். இருவரின் முதல் காதலும் வெளிப்படுத்தாமலே முடிவை எட்டியிருக்கிறது என்பதை அறிபவர்கள், தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்தித்து 'நாம் அவர்களைக் காதலித்தோம்' என்பதை மட்டும் தெரியப்படுத்திவிட்டு வந்துவிடலாம் எனத் திட்டம் போடுகிறார்கள். With Love Review |வித் லவ் விமர்சனம் இந்தப் பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயமென்ன, அவர்களுடைய முன்னாள் காதலர்களைச் சந்தித்துப் பேசினார்களா, சத்யா - மோனிஷாவின் உறவு என்னவானது என்பதை காமெடி, காதல் ததும்பச் சொல்கிறது அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' திரைப்படம். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்! பள்ளி மாணவராகத் துறுதுறு முகம் காட்டும் இடம், இளைஞனான பிறகு ஏகாந்தமாகச் சுற்றித் திரியும் இடம் எனச் சமகால இளைஞராக அறிமுகப் படத்திற்குக் கச்சிதமான பங்கைக் கொடுத்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். ஆனால், போதையில் உளறும் காட்சிகளிலும், அதற்குப் பிறகு வரும் காட்சிகளிலும் வரும் செயற்கைத்தனமான மிகை நடிப்பிற்குக் கண்டிப்புடன் நோ சொல்லியிருக்கலாம். சேட்டை மிகுந்த பெண்ணாகவும், வாழ்க்கையைப் பற்றி சத்யாவுக்குப் பலவற்றை உணரச் செய்யும் பொறுப்பான பார்ட்னராகவும் நடிப்பில் தடம் பதித்து, தமிழ் சினிமாவிலும் க்ரீன் சிக்னல் பெறுகிறார் அனஸ்வரா ராஜன். சத்யாவின் முதல் காதலியாக வரும் காவ்யாவுக்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாதி காட்சிகளில் நிறைந்த முகபாவனைகளால் நம்மைக் கவர்கிறார். With Love Review |வித் லவ் விமர்சனம் இவர்களைத் தாண்டி பள்ளி நண்பர்களாக வரும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் ஒரே சமயத்தில் சிரிப்பொலி எபிசோடுகளுக்கும், எமோஷனல் பக்கத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள். அக்காவாக வரும் ஆர்.ஜே. ஆனந்தி, ஆசிரியராக வரும் சரவணன் ஆகியோர் அவரவர் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ் பள்ளிக் கால 'நாஸ்டால்ஜியா' காதல், இளைஞனான பிறகு மலரும் மாடர்ன் காதல் என்று நகரும் இந்தக் காதல் படைப்பைப் புத்துணர்ச்சியுடன் கொண்டு சென்றிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா. முதல் பாதி காமெடிக்கான களம், இரண்டாம் பாதி எமோஷனுக்கான களம் என நேர்த்தியாகப் பிரித்து கத்தரி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார். டஸ்டர், ஸ்லாம் புக், 1100 மொபைல், ஹீரோ சைக்கிள் எனக் கலை இயக்குநரின் சின்னச் சின்ன வேலைப்பாடுகளும் நம் முன் அழகிய நினைவுகளை மலரச் செய்கின்றன. ஷான் ரோல்டன் இசையில், பாடல்களில் 'ஐயோ காதலே' பாடல் நம்மைத் துள்ளலோடு ரசிக்க வைக்க, யுவன் சங்கர் ராஜா குரலில் 'எதுக்குத்தான் இந்தக் காதல்', ஆதித்யா ஆர்.கே குரலில் 'மறந்து போச்சு' ஆகிய பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன. காதல் மலரும் தருணம், மோதல், ஃபெயிலியர் எனக் காதலின் 360 டிகிரி கோணத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன். மழித்த முகம், ஒட்டு வைத்த தாடி எனச் செயற்கையாகத் தெரியும் பள்ளி நண்பர்களுக்கான ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். With Love Review |வித் லவ் விமர்சனம் சத்யா - மோனிஷாவின் கதாபாத்திர விவரிப்பு, இருவரும் இணைந்து புரட்டும் அழகிய நினைவுகள் நிறைந்த முதல் காதல் கதை என்பதாகக் கலகலப்புடன் தொடங்குகிறது படம். ஸ்லாம் புக், ஃப்ளேம்ஸ் பார்ப்பது, முதிர்ச்சியின்றி பதின் வயதில் காதலுக்காகச் செய்யும் சேட்டைகள் போன்ற விஷயங்களை ஏற்கனவே பல காதல் படங்களில் பார்த்துப் பழகியிருந்தாலும், அவற்றில் ஆங்காங்கே சில ஒன்லைன் காமெடிகளையும், எமோஷனையும் சேர்த்து ரசிக்க வைத்தபடியே நகர்கிறது திரைக்கதை. 'பாலாஜி' பெயர் கலாட்டாக்களும் சுவாரஸ்ய ரகளை! மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! - 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம் இப்படியான ஃபீல்குட் வழித்தடத்தில் நம்மைக் கூட்டிச் செல்லும் திரைக்கதை, திடீரென இரண்டாம் பாதியில் மையக்கதையிலிருந்து விலகி சில தேவையில்லாத எமோஷனல் காட்சிகளில் சுழல ஆரம்பிப்பதோடு, அதீத செயற்கைத்தனமும் எட்டிப் பார்க்கிறது. இந்த வழக்கமான மோதல் - காதல் ரூட்டை விடுத்து வேறு ஐடியா பிடித்திருக்கலாமே பாஸ்?! 'அவள் வருவாளா' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிசோடும் படம் அதுவரை இருக்கும் தன்மையிலிருந்து விலகிப் போவது ஏமாற்றமே! மெசேஜைப் படிப்பது, வளராத 90ஸ் கிட்ஸாகவே திரிவது என நாயகன் பாத்திரமே 'ரெட் ஃப்ளேகாகவே' வெளிப்படுகிறது. முன்னாள் காதலி எபிசோடு மட்டுமே உரைநடைக்கு இடையே நிற்கும் கவிதையாக வசீகரிக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் கேமியோ, களத்திற்கு அந்நியமாக இருந்தாலும் நம்மை சர்ப்ரைஸ் செய்வது ஆறுதல்! பெண்களின் நிதர்சன காதல் பக்கத்தையும், அவர்களின் மனவோட்டங்களையும் இயல்பான வகையில் பதிவு செய்யும் இடத்திற்குப் பாராட்டுகள். காதல் மீது கட்டமைக்கப்படும் வழமையான புனிதங்களை மையக்கதை உடைப்பதும் நச்! அதேபோல யூகிக்கும்படியான, அரதப்பழசான இறுதிக்காட்சிதான் என்றாலும், அதற்கு முந்தைய காட்சிகளில் வரும் ரகளைகள் அதை ரசிக்க வைக்கின்றன. With Love Review |வித் லவ் விமர்சனம் முதல் பாதியில் நம்மைச் சிரிக்க வைத்து, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நெகிழ வைத்தாலும், பழைமையான காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கொஞ்சம் தூசி தட்டியிருந்தால் இந்த 'ஸ்லாம்புக்' இன்னுமே நெகிழ்ச்சி அளித்திருக்கும். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தான் ட்வீட் செய்தேன்..சிம்பு பேச்சு.!!
எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த...
என் வாயில் நெருப்பு புகைந்தால் என் வீட்டில் அடுப்பு புகையாது.. டி ஆர் ராஜேந்தர் பேச்சு.!!
நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது...
அபிஷன் நடிப்பில் காதல் கலாட்டாவாக வந்த ‘வித் லவ்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி […] The post அபிஷன் நடிப்பில் காதல் கலாட்டாவாக வந்த ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' - பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கன்டென்ட் தருபவர்களாக கேம் ஆடி நிகழ்ச்சி முடிவடைய சில தினங்கள் இருந்த சூழலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கமருதீன் பார்வதியும்கூட ஃபேன் மீட்டெல்லாம் வரத் தொடங்கி விட்டனர். சில போட்டியாளர்கள் சகாக்களுடன் சேர்ந்து குரூப் குரூப்பாக ஈவென்ட், டூர் என ரவுண்டு அடித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மட்டும் இன்னும்கூட அந்த வீட்டுக்குள் இருந்தது போலவே, சண்டைக் கோழிகளாகவே இருக்கிறார்களோ என நினைக்கத் தோணுகிறது. பிரஜின், சாண்ட்ரா இரு தினங்களுக்கு முன் ரம்யா ஜோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரஜின் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றைப் பதிவிட்டு, பிறகு என்ன நினைத்தாரோ அதை டெலீட் செய்துள்ளார். அந்த வாய்ஸ் நோட்டில், 'சாண்ட்ராவிடம் பணத்தை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே நான் சொன்னதைச் சொல்ல வேண்டாம். எதுவுவே சொல்ல வேண்டாம், அவங்களா அவங்க கேமை பார்த்துக்கட்டும்' எனப் பேசியிருந்தார். அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த ரம்யா ஜோ, மீண்டும் அந்த வீட்டுக்குள் போவதற்கு முன் பிரஜின் அவரிடம் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. அது பணப்பெட்டி டாஸ்க் நேரம் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்ட்ராவிடம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடச் சொல்லி ரம்யாவிடம் பிரஜின் ஏற்கெனவே சொல்லியிருப்பது இந்த வாய்ஸ் நோட் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சாண்ட்ரா பணப்பெட்டி டாஸ்க்கைப் பொறுத்தவரை, 'விரும்பும் போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடலாம்' என்பதுதான் விதிமுறை. ஆனால் சில சீசன்களில் பெட்டியை எடுக்கும் முடிவில் சில சமரசங்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. பெட்டியை எடுத்துக் கொண்டால் அந்த வாரம் நாமினேட் ஆகி விட்டதாக அர்த்தம். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதால் டைட்டில் வெல்லும் நம்பிக்கை இருப்பவர்கள் பெட்டி பக்கம் திரும்ப மாட்டார்கள். கொஞ்சம் அவநம்பிக்கையிலும் ஊசலான மனநிலையிலும் இருப்பவர்களுக்கு பெட்டி மீது ஒரு கண் இருக்கும். போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து எவ்வித அட்வைஸும் இது தொடர்பாக சென்றுவிடக் கூடாது என்பதில் சேனலும் கவனமாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் முதலில் எவிக்ட் ஆகி வந்து விட்ட பிரஜின் சாண்ட்ராவிடம் பணப் பெட்டியை எடுத்து வரச் சொல்லியிருந்தால், அதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. ஆனால் முதலில் அப்படி சொன்னவர் பிறகு ஏன் பின் வாங்கினார் எனத் தெரியவைல்லை. ஒருவேளை ரம்யா ஜோ அந்த தகவலைப் பாஸ் செய்யும் போது ஏதாவது சிக்கல் உண்டாகி, அது சாண்ட்ராவுக்கு எதிராக அமைந்து விடலாமென நினைத்துப் பின்வாங்கினாரா தெரியவில்லை. இந்த வாய்ஸ் நோட் குறித்து பிரஜினிடம் கேட்டோம். Bigg Boss 9 'பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மாசம் முடியப் போகுது. இப்ப எனது அடுத்த படமான 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' படத்துக்கு பூஜை போட்டுட்டோம். இனியும் அந்த நிகழ்ச்சியில நடந்து பஞ்சாயத்துகளைப் பேசிட்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளைப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பலை. நிறைய நேரம் இருக்கிறவங்க இந்த மாதிரி ஏதாவது செய்திட்டிருப்பாங்க. அதனால இதைக் கடந்து... அதாவது கண்டுக்காமப் போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' - பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கன்டென்ட் தருபவர்களாக கேம் ஆடி நிகழ்ச்சி முடிவடைய சில தினங்கள் இருந்த சூழலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கமருதீன் பார்வதியும்கூட ஃபேன் மீட்டெல்லாம் வரத் தொடங்கி விட்டனர். சில போட்டியாளர்கள் சகாக்களுடன் சேர்ந்து குரூப் குரூப்பாக ஈவென்ட், டூர் என ரவுண்டு அடித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மட்டும் இன்னும்கூட அந்த வீட்டுக்குள் இருந்தது போலவே, சண்டைக் கோழிகளாகவே இருக்கிறார்களோ என நினைக்கத் தோணுகிறது. பிரஜின், சாண்ட்ரா இரு தினங்களுக்கு முன் ரம்யா ஜோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரஜின் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றைப் பதிவிட்டு, பிறகு என்ன நினைத்தாரோ அதை டெலீட் செய்துள்ளார். அந்த வாய்ஸ் நோட்டில், 'சாண்ட்ராவிடம் பணத்தை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே நான் சொன்னதைச் சொல்ல வேண்டாம். எதுவுவே சொல்ல வேண்டாம், அவங்களா அவங்க கேமை பார்த்துக்கட்டும்' எனப் பேசியிருந்தார். அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த ரம்யா ஜோ, மீண்டும் அந்த வீட்டுக்குள் போவதற்கு முன் பிரஜின் அவரிடம் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. அது பணப்பெட்டி டாஸ்க் நேரம் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்ட்ராவிடம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடச் சொல்லி ரம்யாவிடம் பிரஜின் ஏற்கெனவே சொல்லியிருப்பது இந்த வாய்ஸ் நோட் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சாண்ட்ரா பணப்பெட்டி டாஸ்க்கைப் பொறுத்தவரை, 'விரும்பும் போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடலாம்' என்பதுதான் விதிமுறை. ஆனால் சில சீசன்களில் பெட்டியை எடுக்கும் முடிவில் சில சமரசங்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. பெட்டியை எடுத்துக் கொண்டால் அந்த வாரம் நாமினேட் ஆகி விட்டதாக அர்த்தம். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதால் டைட்டில் வெல்லும் நம்பிக்கை இருப்பவர்கள் பெட்டி பக்கம் திரும்ப மாட்டார்கள். கொஞ்சம் அவநம்பிக்கையிலும் ஊசலான மனநிலையிலும் இருப்பவர்களுக்கு பெட்டி மீது ஒரு கண் இருக்கும். போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து எவ்வித அட்வைஸும் இது தொடர்பாக சென்றுவிடக் கூடாது என்பதில் சேனலும் கவனமாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் முதலில் எவிக்ட் ஆகி வந்து விட்ட பிரஜின் சாண்ட்ராவிடம் பணப் பெட்டியை எடுத்து வரச் சொல்லியிருந்தால், அதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. ஆனால் முதலில் அப்படி சொன்னவர் பிறகு ஏன் பின் வாங்கினார் எனத் தெரியவைல்லை. ஒருவேளை ரம்யா ஜோ அந்த தகவலைப் பாஸ் செய்யும் போது ஏதாவது சிக்கல் உண்டாகி, அது சாண்ட்ராவுக்கு எதிராக அமைந்து விடலாமென நினைத்துப் பின்வாங்கினாரா தெரியவில்லை. இந்த வாய்ஸ் நோட் குறித்து பிரஜினிடம் கேட்டோம். Bigg Boss 9 'பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மாசம் முடியப் போகுது. இப்ப எனது அடுத்த படமான 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' படத்துக்கு பூஜை போட்டுட்டோம். இனியும் அந்த நிகழ்ச்சியில நடந்து பஞ்சாயத்துகளைப் பேசிட்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளைப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பலை. நிறைய நேரம் இருக்கிறவங்க இந்த மாதிரி ஏதாவது செய்திட்டிருப்பாங்க. அதனால இதைக் கடந்து... அதாவது கண்டுக்காமப் போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.
தமிழ்செல்வியை தேடி அலையும் சேது குடும்பம், ஈஸ்வரியின் திட்டம் பலித்ததா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி தமிழை பழிவாங்க வேண்டும் என்றுதனக்குத் தெரிந்த உறவினருக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, தமிழின் வளைகாப்பிற்காக ராஜாங்கம் வைர வேலை முருகருக்கு கொடுப்பதற்காக போக இருந்தார்கள். நீ அந்த வேலை திருடி விடு. உனக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்றார். அந்த நபரும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சேது அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது […] The post தமிழ்செல்வியை தேடி அலையும் சேது குடும்பம், ஈஸ்வரியின் திட்டம் பலித்ததா? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
பாண்டியன்-வானதி காதலுக்கு வந்த ட்விஸ்ட், ராகவ் எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா விஷயத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் நிலா விசாரித்தார். அப்போது சோழன், நீங்கள் ராகவ் உடைய ஆளாம். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள் என்றார். ஃபோனில் ஸ்டேட்டஸில் கிஸ், ஹார்ட்டு சிம்பல் எல்லாம் வைத்திருக்கிறார் என்று கோபமாக பேசி இருந்தார். இருந்தாலும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று திட்டினார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து சேரனுக்கு […] The post பாண்டியன்-வானதி காதலுக்கு வந்த ட்விஸ்ட், ராகவ் எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
ஹைக்கூ கவிதைப் போட்டி: விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன் - லிங்குசாமி
கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5ம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். ''கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஜூனியர் விகடன்ல எழுதின கவிதை தொடரான 'மின்மினிகள்' படிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஹைக்கூ மீதான ஆர்வம் வந்துச்சு. சுஜாதாவின் கவிதைகளும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அப்துல் ரகுமான் ஐயாவைச் சந்திக்கும்போது, 'உங்க பெயரில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் போறேன்'னு சொன்னேன். 'தாராளமாகச் செய்யுங்க'னு சொன்னார். அவர் என்னோட கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கார். என்னோட விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கார். கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி ஹைக்கூ என்பது முணு வரிகள்தான். ஆனா, அதற்குள் அவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்குது. என்னோட முதல் ஹைக்கூ விகடன்லதான் தொடங்கினது. ஒரு சமயத்தில் ஹைக்கூவையே பலரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஹைக்கூவே பொய்க்கூனு சொன்னவங்களும் இருக்காங்க. ஆனா என்னைப் பொறுத்த வரை ஹைக்கூ என்பது ஒரு அனுபவம், ஒரு தியானம்.. அது ஒரு இருப்பு.. அது ஒரு பாசிட்டிவ்.. இப்படி அதைச் சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஆர்வம்தான் போட்டி நடத்துற அளவுக்கு வந்துடுச்சு. கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஹைக்கூவைப் பற்றி சொல்லும்போது, 'உலக கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்... அழகான படிமங்களால் அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை. லிங்குசாமி பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரென திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை. எல்லாவற்றையும் விட அதன் எளிமை. இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்' என்பார். அது உண்மையும் கூட! கவிஞர்கள் அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன், மு.முருகேஷ், வண்ணதாசன், கலாப்ரியா இவங்களோட கவிதைகள் ரொம்ப பிடிக்கும். `சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம். முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுக்கள் உண்டு. தேர்வார்கும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம். 'மெல்ல அசையும் கோவில் யானை', 'கொக்கோடு பறக்கும் மீன்', 'சூரியனை சுமந்து செல்லும் பாட்டி', 'வாடியது கொக்கு' ஆகிய கவிதை நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்யறது பெரிய சிரமம்னாலும் அந்த 53 கவிதைகள்ல இருந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்யறது ரொம்ப ரொம்ப சிரமானது. 1..2.. 3.. என்பது சும்மா தேர்வு செய்யணுமே என்பதற்காகத்தான் எடுப்போம். ஆனா, இந்த 1.. 2... 3.. என்பது 53 கவிதைகளுமே 1...2.. 3.. தான்! ஏன்னா, அவ்வளவும் தரமான கவிதைகளாகத்தான் இருக்கும். இந்தக் கவிதை போட்டிக்கு கு.ஞானசம்பந்தம், நண்பர்கள் மிஷ்கின், கௌதம்மேனன், நடிகைகள் அபிராமி, ப்ரியா பவானிசங்கர்னு பலரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்காங்க. லிங்குசாமி இந்த விழா வருஷா வருஷம் அப்துல்ரகுமான் ஐயாவோட பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று நடக்கும். இந்த வருஷமும் அப்படி ஜூனில்தான் நடக்கிறது. இப்ப போட்டியை அறிவிச்சிருக்கோம். தேர்வான கவிதைகள் குறித்த போட்டி முடிவுகள் மே மாதம் அறிவிப்போம். இந்த முறை முக்கியமான நடுவர்கள் குழு பங்கேற்கிறாங்க. ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார் யாரென அறிவிப்போம். இன்னொரு முக்கியமான விஷயம் நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விபரமே யாருக்கும் தெரியாது. இந்தச் சமயத்துல நண்பர் ஆர்.சிவக்குமார் சாருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கறேன். கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளார். பரிசுத் தொகை, விழாவுக்கான செலவுகள் எல்லாமும் அவர் பொறுப்பேத்துகுவார். இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும், கவிதைகள் மீதான பிரியமும் இருக்கறதால இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்'' என்கிறார் லிங்குசாமி. `உண்மை என்ன?!'- சிறை என வெளியான செய்தி குறித்து லிங்குசாமி தன்னிலை விளக்கம்
தமிழக அரசின் திரைப்பட விருது மகிழ்ச்சியில் நயன்தாரா விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முதல்வருக்கும் தேர்வு...
சீதாவிடம் சைக்கோ போல் நடந்து கொள்ளும் அருண், ரோகினி வலையில் சிக்கிய மனோஜ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, வீட்டில் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருப்பதால் பூஜை செய்யலாம் என்றார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நீயே பார்த்து கொள் என்று சொன்னார். பின் மனோஜ்க்கு போன் செய்து ரோகினி ரொம்ப ரொமான்டிக்கா பேசி இருந்தார். மனோஜ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரோகிணி பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவிடம் மன்னிப்பு கேட்டார். முத்துவும் சமாதானம் செய்கிறார். இருந்தாலும் ரவிக்கு ரொம்ப கஷ்டமாகி […] The post சீதாவிடம் சைக்கோ போல் நடந்து கொள்ளும் அருண், ரோகினி வலையில் சிக்கிய மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Sweety Naughty Crazy Trailer Official
Sweety Naughty Crazy Trailer Official Tamil , Thrigun , Ineya , Srijita Ghosh
Pudikaley Pudikaley – Video , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K Dhanusha , Ganesh Chandra
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!
சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது. Saranya Ponvannan முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உறவின் மொழி - 25 - இந்த வாரம்: நடிகை சரண்யா பற்றி கணவர் பொன்வண்ணன்
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!
சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது. Saranya Ponvannan முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உறவின் மொழி - 25 - இந்த வாரம்: நடிகை சரண்யா பற்றி கணவர் பொன்வண்ணன்
Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
Fourth Floor – Official Trailer
Fourth Floor – Official Trailer , Aari Arujunan, Deepshika , L.R. Sundarapandi ,Dharankumar
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி அந்த கடிதத்தை கொடுத்தார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விட்டார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு சென்றார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொண்டார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். கதிர்- ராஜி இருவரும் பீச்சில் விளையாடி முடித்து விட்டு கிளம்பினார்கள். ராஜி, […] The post வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் கதிர்-ராஜி, மீனாவை புரிந்து கொள்வாரா செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
அருணை சந்தித்த மீனா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் என நடந்தது என்று உண்மையை சொல்லு சீதா என்று சொல்ல சீதா மீனா விடம் அருண் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார் வீட்டில் அருண் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிற சீதா நீங்க ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் எங்க அம்மா தான்...
விஜய்-காவேரியை பிரிக்க கல்யாணி செய்யும் சூழ்ச்சி , வேதனையில் சாரதா குடும்பம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்பட்டார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போனார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார்கள். […] The post விஜய்-காவேரியை பிரிக்க கல்யாணி செய்யும் சூழ்ச்சி , வேதனையில் சாரதா குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
எனக்கு பக்கவாதம் வந்ததுல இருந்தே வீட்டைத் தாண்டி எங்கயுமே போகாம... - நடிகர் சுதாகர் Painful பேட்டி
With Love: இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.. - அபிஷன் ஜீவிந்த் பேட்டி
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அபிஷன் ஜீவிந்தைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... நம்மிடையே பேசியவர், மதன் எனக்கு கோ-டைரக்டரா வரும்போது ப்ரொடக்ஷன் சைட்ல இருந்துதான் அவரை அனுப்பி வைத்தாங்க. 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங்கிற்காக ப்ரொடக்ஷன்ல இருந்து அனுப்பி வச்சிருக்காங்கனு கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனா 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் முடியிற சமயத்துல என்னோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல மதனும் சேர்ந்துட்டார். என் மனைவி கூட இப்போ நீ இப்பல்லாம் என்ன விட மதன்கிட்டதான் அதிகமா போன் பேசுறனு சொல்றாங்க. மதன் 'With Love' படத்தோட ஸ்கிரிப்ட்டை ரெண்டு வாரத்துல எழுதி முடிச்சிட்டார். ரெண்டு வாரத்துல இந்த மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட் எப்படி எழுதினாருன்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. மதன் ரொம்ப நல்லா நடிப்பாருன்றது எனக்கு அவரோட நரேஷன்லதான் தெரிஞ்சது. முதல்ல நான் இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு. அப்புறம் என்கூட இருந்த எல்லாரும் என்ன மோட்டிவேட் பண்ணாங்க. அப்புறம்தான் சரி, பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ் கதாநாயகனா நடிக்கிறதுல 'With Love' என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார். படத்தோட ப்ரிவ்யூ பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு மதனுக்கு கால் பண்ணி சந்தோஷப்பட்டேன். அனஸ்வரா முதல் நாள் ஷூட்டிங்ல நடிக்கிறதுக்கு சீன்ஸ் கொடுக்கல, அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி பின்னாடி இருந்த சோபால உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு முதல்ல அனஸ்வரா கிட்ட சீன்ஸ் இப்படி மாத்தலாம் அப்படி மாத்தலாம்னு பேசறதுக்குத் தயக்கமா இருந்தது. அனஸ்வரா பண்ண ஒரு குறும்புத்தனமான வேலைல சரி, இவங்களும் நம்ம மாதிரிதான் போலன்னு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் செட் ஆகிடுச்சு. வித் லவ் படத்தின் ஸ்டில்ஸ் ட்ரெய்லர்ல நாங்க எதையுமே சஸ்பென்ஸா வைக்கல, முழு கதையே ரிவீல் பண்றோம். படத்த பார்க்க வர எல்லாருமே படத்தை என்ஜாய் பண்ணணும்ங்குறதுதான் எங்க நோக்கமே. படம் பார்த்துட்டு ரஜினி சார் என்ன சொல்லுவாருன்னு நான் ரொம்ப எக்சைட்டடா இருக்கேன். ரஜினி சாருக்கு படம் பிடிக்கும்னு நம்புறேன். இந்த ப்ராஜெக்ட் நடந்ததுக்கும் நான் ஹீரோ ஆனதுக்கும் முக்கியமான காரணமே ரஜினி சார்தான். இந்தப் படம் பண்றத பத்தி டவுட்டுலதான் இருந்தேன். ஆனா அவரை மீட் பண்ணப் போகும்போது அவர்தான் நல்லா இருக்கும், பண்ணுங்கனு என்ன மோட்டிவேட் பண்ணாரு'' என்றார். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!
With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அனஸ்வராவைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... மலையாளம் கலந்த தமிழில் நம்மிடையே பேசியவர், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் 'வித் லவ்' டீம் கூட இருக்கும்போது ஹோம் மாதிரி ஃபீல் ஆகும். மதன் அண்ணா இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னபோது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். மதன் அண்ணா கதையைச் சொல்லும்போது நிறைய விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமான வகையில சொன்னாரு. டைரக்டர் என்கிட்ட கதை சொல்லி அடுத்த நாளே நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இவ்ளோ சீக்கிரமா நான் ஓகே சொன்ன முதல் படம் இதுதான். With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு என்றவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க. அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது. அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன் என மெல்ல சிரித்தவர், இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது. அனஸ்வரா ராஜன் தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல. ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு என்றவர், மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர். ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன் என்றார் உற்சாகத்துடன்.
With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அனஸ்வராவைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... மலையாளம் கலந்த தமிழில் நம்மிடையே பேசியவர், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் 'வித் லவ்' டீம் கூட இருக்கும்போது ஹோம் மாதிரி ஃபீல் ஆகும். மதன் அண்ணா இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னபோது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். மதன் அண்ணா கதையைச் சொல்லும்போது நிறைய விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமான வகையில சொன்னாரு. டைரக்டர் என்கிட்ட கதை சொல்லி அடுத்த நாளே நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இவ்ளோ சீக்கிரமா நான் ஓகே சொன்ன முதல் படம் இதுதான். With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு என்றவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க. அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது. அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன் என மெல்ல சிரித்தவர், இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது. அனஸ்வரா ராஜன் தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல. ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு என்றவர், மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர். ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன் என்றார் உற்சாகத்துடன்.
Super Singer: ஒரு தடவையாச்சும் டிவியில் என் முகம் தெரிஞ்சிடாதான்னு - Thavaseeli Family Interview
அந்த அவமானத்தால் நான் ஒரு வாரம் வெளியே போகவில்லை –சாய் தன்ஷிகா ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தன்ஷிகா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மேடையில் தன்ஷிகாவை, டி.ராஜேந்திரன் அழ வைத்து கஷ்டப்பட வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன்ஷிகா நடித்த விழித்திரு படத்தினுடைய விழாவில் டி ராஜேந்திரன் அவர்கள் கலந்து இருந்தார். அப்போது […] The post அந்த அவமானத்தால் நான் ஒரு வாரம் வெளியே போகவில்லை – சாய் தன்ஷிகா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
தூய்மைப் பணியாளர் பத்மா காலை தொட்டு பூஜை செய்த நடிகர் பார்த்திபன் –வைரலாகும் வீடியோ
சென்னையில் தியாகராய நகர் பகுதியில் முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் பத்மா தூய்மை பணியில் கடந்த மாதம் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு பையை பத்மா கையில் எடுத்திருக்கிறார். அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை பார்த்த பத்மா, தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். பத்மா ஒப்படைத்த பையில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் நகைகள் இருந்தது […] The post தூய்மைப் பணியாளர் பத்மா காலை தொட்டு பூஜை செய்த நடிகர் பார்த்திபன் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கு, ஆனால் –நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய […] The post பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கு, ஆனால் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
என்னது காவிரிக்கு மெமரி லாஸா? விஜய்யின் பாட்டி போட்ட மாஸ்டர் பிளான் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள். விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் […] The post என்னது காவிரிக்கு மெமரி லாஸா? விஜய்யின் பாட்டி போட்ட மாஸ்டர் பிளான் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது.. நடிகர் கிஷோர் ஓபன் டாக்.!!
நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது என்று கிஷோர் கூறியுள்ளார். பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரணை ,முத்திரை ,கபடி, பொற்காலம், ஆடுகளம் ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிஷோர் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாழ்க்கையில்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டு நிறைவு பெற்றிருப்பதால் திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் முடிந்து பத்திரிக்கையாளர்களை...
ஏகேவை சந்திக்க வேண்டும் என நீண்ட நாள் திட்டம் இருந்தது.. சிம்பு போட்ட பதிவு.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, கிஷோர் போன்ற...
பரமு சதியில் சிக்கிய சூர்யா..வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது நேற்றையே எபிசோடில் நந்தினி பாத்ரூமுக்குள்...
பரமு சதியில் சிக்கிய சூர்யா..வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது நேற்றையே எபிசோடில் நந்தினி பாத்ரூமுக்குள்...
சேரன் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன ராகவ், கோபத்தில் கொந்தளித்த நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், வானதி என்னுடன் தான் இருக்கிறார் என்றார். பின் சேரன், வானதி அம்மாவிடம் உண்மையை சொன்னார். கோபத்தில் வானதியின் அம்மா பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், உன்னால் தான் என்னுடைய குடும்பம் அவமானப்பட்டு இருக்கிறது. இதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். வானதி, உனக்கு இப்பவும் உன்னுடைய குடும்பம் தான் முக்கியமா? என்று சண்டை போட்டார். பின் பாண்டியன், வானதியை அவருடைய […] The post சேரன் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன ராகவ், கோபத்தில் கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
ரோகினியின் திருவிளையாடல் ஆரம்பம், வேதனையில் புலம்பும் சகோதரர்கள் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, தன் அப்பா செய்த வேலையை எல்லாம் சென்றார். பின் வீட்டில் மீனா, சுருதியின் அப்பா செய்த கேவலமான காரியத்தை சொன்னார். இதனால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் உண்மை அறிந்த ரவி, சுருதியின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா- அம்மா இருவரிடம் சண்டை போட்டார். அது மட்டும் இல்லாமல் கடையை அடித்து நொறுக்கியதற்கும், நீத்துவின் காலை உடைத்ததற்கும் ஒன்பது லட்சம் செலவாகி இருக்கிறது. அது […] The post ரோகினியின் திருவிளையாடல் ஆரம்பம், வேதனையில் புலம்பும் சகோதரர்கள் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தாமரை சொன்ன விஷயத்தால் கொந்தளித்த ராஜாங்கம், ஈஸ்வரியின் சூழ்ச்சியில் சிக்கிய சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போசை முருகருடைய மந்திரத்தை நூறு முறை சொல்ல வேண்டும் என்று காவியா சொன்னார். போஸ் மந்திரத்தை சொல்லும்போது பாதியிலேயே நிறுத்தினார். இதனால் காவியா, மீண்டும் முதலில் இருந்து மந்திரத்தை சொல்ல சொல்லி டார்ச்சர் செய்தார். அது மட்டும் இல்லாமல் போசை மந்திரம் முழுதாக சொல்ல விடாமல் குத்துப்பாடல்கள் எல்லாம் போட்டு விட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். இரு ஒரு பக்கம் ராஜாங்கம், தாமரைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி வீட்டில் உள்ள […] The post தாமரை சொன்ன விஷயத்தால் கொந்தளித்த ராஜாங்கம், ஈஸ்வரியின் சூழ்ச்சியில் சிக்கிய சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்
'பராசக்தி' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.... இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும். சிவகார்த்திகேயன் ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ... அந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்
'பராசக்தி' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.... இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும். சிவகார்த்திகேயன் ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ... அந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
வயிற்றெரிச்சலில் ராஜியிடம் கடுமையாக நடந்து கொள்ளும் கோமதி, கதிர் சொன்ன விஷயம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதியும் சூப்பராக ஒரு லெட்டரை எழுதி முடித்து விட்டார். அதை தன் கணவரிடம் கொடுப்பதற்காக கிளம்பி இருந்தார். அப்போது வெளியில் தன் அண்ணன்களை பார்த்த கோமதி, உங்களுடன் நான் ஒன்றாக சேரனும் நினைத்தது என் தவறுதான். உங்களால் தான் என் கணவர் என்னிடம் பேசவில்லை. உங்கள் உறவே தேவையில்லை என்று சண்டை போட்டு விட்டு சென்றார். முத்துவேல் பெரிதாக எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் […] The post வயிற்றெரிச்சலில் ராஜியிடம் கடுமையாக நடந்து கொள்ளும் கோமதி, கதிர் சொன்ன விஷயம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
நான் தமிழ் சினிமாவை விட்டு விலகியதுக்கு ஒரே காரணம் இதுதான் - Actor Sudhakar Shocking Reveals
முத்து சொன்ன வார்த்தை, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
ரோகினி போடும் திட்டத்தில் மனோஜ் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவியிடம் மன்னிப்பு கேட்க அவரும் அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கல என்று சொல்லி சமாதானமாக ரவி முத்துவை கட்டிப்பிடிக்கும் போது பேக்கில் இருந்து பாட்டில் சத்தம் கேட்கிறது. உடனே ரவி மற்றும் முத்துவின் முகம்...
காவிரிக்கு குழந்தை பிறந்தாச்சு, கோபத்தில் விஜய்யின் பாட்டி செய்த வேலை –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது விஜய் கண் விழித்து காவிரியை பார்த்தார். காவிரியும் கண்விழ்த்தார். இருவரும் தங்கள் கைகளை பிடித்து தங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார்கள். பின் இருவரையும் ஐசியூவிற்கு அழைத்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் […] The post காவிரிக்கு குழந்தை பிறந்தாச்சு, கோபத்தில் விஜய்யின் பாட்டி செய்த வேலை – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

24 C