7வது படிக்கும் போதே ரகுமான் சாருக்கு கம்போஸ் பண்ணி அனுப்புவேன், ஆனால் –சாய் அபயங்கர் ஆதங்கம்
சுயாதீனப் பாடல்கள் மூலம் தன்னுடைய மியூசிக் கேரியரைத் தொடங்கி இன்று பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் சாய் அபயங்கர். இவர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கட்சி சேர, ஆசை கூட போன்ற பாடல்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ‘ஜென் சி’ என்ற மோடில் அமைந்த இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. 2k தலைமுறையினரின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் இவருக்கு சினிமாவில் […] The post 7வது படிக்கும் போதே ரகுமான் சாருக்கு கம்போஸ் பண்ணி அனுப்புவேன், ஆனால் – சாய் அபயங்கர் ஆதங்கம் appeared first on Tamil Behind Talkies .
நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில்...
ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது...
Battle of Galwan `டு'மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!
நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமிபத்தில் அனுமதித்தது. இந்நிலையில் பேடில் ஆஃப் கல்வான் படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர். புதிய படத்திற்கு 'மாத்ருபூமி May War Rest in Peace' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும் என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது. இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது திரைக்கு வரும் தேதியை சுதந்திர தினத்திற்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகீறது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் பட்சத்தில் சன்னி தியோல் நடிக்கும் லாகூர் 1947 படத்துடன் இப்படம் மோதிக்கொள்ளும். ஆகஸ்ட் 13ம் தேதி லாகூர் 1947 படம் வெளி வருகிறது. கல்வான் மோதல் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சமீப ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த மிக முக்கியமான ராணுவ மோதல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இக்கதை நிஜ நிகழ்வுகளையும், இப்பிராந்திய அரசியல் பதற்றங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது விவாதங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது. இந்த ராணுவ மோதலோடு தொடர்புடைய விஷயம் என்பதாலும், மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெயரை மாற்றிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.
ராஜாங்கத்தின் சேரில் அமர ஆசைப்படும் தமிழ், சேது செய்த காரியம் –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ், தாமரை- சாவித்திரியின் புகைப்படத்தை வைத்து பிச்சை எடுப்பதை ஒருவர் தாமரிடம் சொல்லி விட்டார். இதை அறிந்த தாமரை கோபத்தில் கொந்தளித்து காமேஷிடம் சண்டைக்கு போனார். பின் கோயில் என்று கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே தாமரை, காமேஷை புரட்டி எடுக்கிறார். இன்னொரு பக்கம் கிச்சனில் ராஜாங்கம், சேது, கருப்பு எல்லா ஆண்களுமே சமைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து வீட்டில் உள்ள எல்லா பெண்களும் சந்தோஷப்பட்டார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் […] The post ராஜாங்கத்தின் சேரில் அமர ஆசைப்படும் தமிழ், சேது செய்த காரியம் – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
மீனா சொன்ன விஷயத்தால் ஷாக்கான ஸ்ருதி-ரவி, அவமானப்பட்ட விஜயா –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, ரேகாவிடம் தன்னுடைய காதலை சொல்லி விட்டார். ரேகா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி போன் செய்து ரேகாவிடம் பேசி இருந்தார். பின் ரேகா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எனக்கு நீ துணையாக இருக்க வேண்டும். என் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நீ தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்றார். பின் கோயிலில் ஸ்ருதி-மீனா பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜயா, […] The post மீனா சொன்ன விஷயத்தால் ஷாக்கான ஸ்ருதி-ரவி, அவமானப்பட்ட விஜயா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Vishwanath and Sons TEASER (Tamil)
``இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன் - மனம் திறந்து பேசிய ஸ்ரேயா கோஷல்
இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தன் பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதில், ``எனக்குப் பின்னணிப் பாடகராக இருப்பதை விட மேடையில் பாடுவதே மிகவும் பிடிக்கும். நேரடி மேடை நிகழ்ச்சியில் அதன் இயல்புதன்மை மாறாமல் இருப்பது முக்கியம். அப்போதுதான் அந்தக் கலைஞர் அந்த மேடையில் மையமாகத் திகழ்வார். ஸ்ரேயா கோஷல் மேடையில் பாடும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு ஏற்ப உதடுகளை மட்டும் அசைக்கும் 'லிப்-சிங்கிங்' (lip-syncing) முறையை, நான் ஒருபோதும் சார்ந்திருக்க விரும்பமாட்டேன். அப்படி செய்வது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை நான் அப்படிச் செய்ய வேண்டிய சூழல் வந்தால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். எனது குரல் வளம் எனக்குத் துணையாக இருக்கும் வரை தொடர்ந்து இசைப் பயிற்சியில் ஈடுபட்டு, மேடையில் நின்று பார்வையாளர்களுக்காக நேரடியாகப் பாடுவதையே விரும்புகிறேன். அரிஜித் சிங் இசையிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள எடுத்த முடிவு மிகவும் துணிச்சலான முடிவு. எனக்கும் சில சமயங்களில் இசையிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னால் அப்படி முடிவெடுக்க முடியவில்லை. அரிஜித் இசையோடு ஆழமான பிணைப்பைக் கொண்ட நபர். அவர் இதயபூர்வமாக இசையை நேசிக்கும் ஒரு கலைஞர். தான் ஏன் இசையமைக்கிறோம் அல்லது அதன் மூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திப்பதில்லை. அவருக்கு எதைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதை மட்டுமே அவர் செய்கிறார். அரிஜித்தின் இசையின் மீதான அந்த நேர்மைதான், பார்வையாளர்கள் அவருடன் இவ்வளவு ஆழமாக ஒன்றிணைந்து உணர்வதற்கு ஒரு முக்கியக் காரணம். ஸ்ரேயா கோஷல் அவரைப் பொறுத்தவரை, இசைதான் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரியது. அதனால்தான் மக்கள் அவரை இவ்வளவு அதிகமாக நேசிக்கிறார்கள். பாலிவுட் திரையுலகை அரிஜித் சிங் பல 'ஹிட்' பாடல்களால் அலங்கரித்திருக்கிறார். பொழுதுபோக்கு கலைஞர்களாக, நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் விஷயங்களை மேடையில் காட்டக் கூடாது. மக்கள் இசைக்காகவும், ரசனைக்காகவும் வருகிறார்கள். இசை அவர்களை குணப்படுத்துகிறது. அவர்களின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க உதவுகிறது. பார்வையாளர்களிடமிருந்து பெறும் அன்பு என்னை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தூண்டுகிறது. உங்கள் இதயம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆற்றல் தானாகவே வரும். என்றார். Arijit Singh: ``இதோடு நான் விடைபெறுகிறேன் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாடகர் அரிஜித் சிங்
வானதியின் ஆசையை நிறைவேற்றும் பாண்டியன், பதறி போகும் சோழன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இவளுடன் பேசினால் பைத்தியம் தான் பிடிக்கும். உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக சொன்னாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறாள். இவளுடன் வாழ்வதெல்லாம் பெரிய கஷ்டமான விஷயம் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சோழனால் வானதி, பாண்டியன் இடையே சண்டை ஏற்பட்டது. சோழன், இதுதான் சந்தர்ப்பம் அவளை விட்டுவிடு என்றார். பாண்டியனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்கிறார். அதற்குப்பின் நடேசன், […] The post வானதியின் ஆசையை நிறைவேற்றும் பாண்டியன், பதறி போகும் சோழன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Tanushree Dutta: சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள்- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா
பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவுகளுடன் வரும் இளம்பெண்கள் பாலிவுட்டில் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார். “புதிதாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், பெரிய கதாநாயகியாக வருவீர்கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள். தனுஸ்ரீ தத்தா உங்கள் திறமையைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்கள், இவரைச் சந்தியுங்கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்புவார்கள். இதுதான் பாலிவுட்டில் நடக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள் சாக்லேட் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சிறுவயதில் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள். இங்கே கொடுக்கப்படுவது உண்மையான சாக்லேட் அல்ல, அது உங்கள் லட்சியங்களையும், ஆசைகளையும் முதலீடாகக் கொண்டு வீசப்படும் வலை. ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள். தனுஸ்ரீ தத்தா அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் மனரீதியாக உடைந்து, சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள் என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார். ``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta: சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள்- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா
பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவுகளுடன் வரும் இளம்பெண்கள் பாலிவுட்டில் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார். “புதிதாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், பெரிய கதாநாயகியாக வருவீர்கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள். தனுஸ்ரீ தத்தா உங்கள் திறமையைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்கள், இவரைச் சந்தியுங்கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்புவார்கள். இதுதான் பாலிவுட்டில் நடக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள் சாக்லேட் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சிறுவயதில் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள். இங்கே கொடுக்கப்படுவது உண்மையான சாக்லேட் அல்ல, அது உங்கள் லட்சியங்களையும், ஆசைகளையும் முதலீடாகக் கொண்டு வீசப்படும் வலை. ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள். தனுஸ்ரீ தத்தா அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் மனரீதியாக உடைந்து, சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள் என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார். ``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
98th Oscars: ஆஸ்கர் விருதுகள் வென்ற வெற்றியாளர்கள் யார்? - முழு விவரம்! |Photo Album
98th Oscars: ஆஸ்கர் விருதுகள் வென்ற வெற்றியாளர்கள் யார்? - முழு விவரம்! |Photo Album
எதிர்நீச்சல் தொடரில் ஸ்ரீஜா! கனிகா வெளியேறி 8 மாதம் கழித்து புதிய ஈஸ்வரி! தாமதத்துக்கு காரணம் என்ன?
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `எதிர்நீச்சல்'. முதல் சீசன் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் 10 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா. இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாகப்போய்க் கொண்டிருந்த சூழலில் கனிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின. அப்போதே நாம் இது தொடர்பாக விசாரித்து 'எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து வெளியேறினார் கனிகா - பின்னணியில் நடந்தது என்ன?' என்கிற டைட்டிலில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டோம். பர்சனல் காரணங்களால் வெளியேறியதாகச் சிலரும், வெளிநாட்டில் செட்டில் ஆகப் போவதால் விலகினார் எனச் சிலரும் சொன்னார்கள். தொடரில் ஆதி குணசேகரன் கேரக்டருக்குத் தரப்படும் அளவுக்கு தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படாததாலேயே வெளியேறினார் என்றும் சில தகவல்கள் றெக்கை கட்டின. Actress Kanika with her son அவர் சீரியலில் இருந்து வெளியேறி விட்ட போதும், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது போலவே சுமார் எட்டு மாதங்கள் வரை காட்டி வந்தார்கள். ஆனால் கனிகாவே இந்த சீரியலில் இருந்து வெளியேறிய சூட்டோடு வேறொரு சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக போய் அமர்ந்து விட்டார். இது குறித்து நாம் கேட்டதற்கு அவரிடம் சமாதானம் பேசி திரும்பவும் அவரை சீரியலுக்குள் கொண்டுவரும் முயற்சி நடப்பதாகவவும் அதனாலேயே இப்படி காட்டப்பட்டு வருவதாகவும் சீரியலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. sreeja அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லையா எனத் தெரியவில்ல, தற்போது கனிகாவின் கேரக்டருக்கு புதிய ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆகி விட்டதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பொம்மலாட்டம்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரிஜா கனிகாவுக்குப் பதில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளத் தொடங்கி விட்டாராம். எனவே ஸ்ரிஜாவை புதிய ஈஸ்வரியாக அடுத்த சில தினங்களிலிருந்து பார்க்கலாம் என்கிறார்கள்.!
காந்திமதி செய்த வேலையால் பாண்டியனிடம் சண்டைக்கு போகும் கதிர்-செந்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, அரசி இடம் குமாரை திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசி இருந்தார். பயந்துபோன அரசி, இது என் அப்பாவிற்கு தெரிந்தால் கொன்னு போட்டு விடுவார். குமாரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத விஷயம் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா-செந்தில் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டார்கள். அந்த சமயம் பார்த்து தங்கமயில் போன் செய்தார். செந்திலுக்கு தெரியாமல் மீனா போன் பேசி இருந்தார். அப்போது […] The post காந்திமதி செய்த வேலையால் பாண்டியனிடம் சண்டைக்கு போகும் கதிர்-செந்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Oscar: உலக சினிமா நட்சத்திரங்களின் அணிவகுப்பு! - ஆஸ்கர் விழாவின் கண்கவர் புகைப்படத்தொகுப்பு
98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் - ஆஸ்கர் மேடையில் 'சின்னர்ஸ்'செய்த சம்பவங்கள்!
98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள். Sinners Team - 98th Oscars பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக பங்கேற்றிருந்தார். 98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு! தட்டிச் சென்ற சின்னர்ஸ் திரைப்படம் 16 நாமினேஷனில் 4 விருதுகள் 98வது ஆஸ்கர் விருது விழாவில் 'சின்னர்ஸ்' திரைப்படம் அதிகமான விருதுகளைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ் (Autumn Durald Arkapaw) என்பவர் பெற்றிருக்கிறார். Autumn Durald Arkapaw - Sinners Cinematographer இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். மார்வெல் ஸ்டுடியோஸின் 'லோகி', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' உள்ளிட்ட சில படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதுமட்டுமல்ல, IMAX ஃபிலிம் கேமராவின் உயர்ரக வகையைப் பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற பிறகு மேடையில் பேசிய ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ், இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம். இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்காகவும், வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகளுக்காகவும் இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன். என்றார் நெகிழ்ச்சியுடன். Sinners Team - 98th Oscars இத்திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரையன் கூக்லர் (Ryan Coogler). 'ப்ளாக் பேந்தர்', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' போன்ற படங்களின் இயக்குநரும் இவர்தான். இப்போது, 'சின்னர்ஸ்' திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர் என்கிற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். HOMEBOUND Oscars: ``இந்தப் படைப்பு உலகமெங்கும் பல இதயங்களில் இடம்பிடிக்கும்'' - நெகிழும் படக்குழு
98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் - ஆஸ்கர் மேடையில் 'சின்னர்ஸ்'செய்த சம்பவங்கள்!
98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள். Sinners Team - 98th Oscars பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக பங்கேற்றிருந்தார். 98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு! தட்டிச் சென்ற சின்னர்ஸ் திரைப்படம் 16 நாமினேஷனில் 4 விருதுகள் 98வது ஆஸ்கர் விருது விழாவில் 'சின்னர்ஸ்' திரைப்படம் அதிகமான விருதுகளைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ் (Autumn Durald Arkapaw) என்பவர் பெற்றிருக்கிறார். Autumn Durald Arkapaw - Sinners Cinematographer இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். மார்வெல் ஸ்டுடியோஸின் 'லோகி', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' உள்ளிட்ட சில படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதுமட்டுமல்ல, IMAX ஃபிலிம் கேமராவின் உயர்ரக வகையைப் பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற பிறகு மேடையில் பேசிய ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ், இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம். இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்காகவும், வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகளுக்காகவும் இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன். என்றார் நெகிழ்ச்சியுடன். Sinners Team - 98th Oscars இத்திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரையன் கூக்லர் (Ryan Coogler). 'ப்ளாக் பேந்தர்', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' போன்ற படங்களின் இயக்குநரும் இவர்தான். இப்போது, 'சின்னர்ஸ்' திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர் என்கிற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். HOMEBOUND Oscars: ``இந்தப் படைப்பு உலகமெங்கும் பல இதயங்களில் இடம்பிடிக்கும்'' - நெகிழும் படக்குழு
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ஹரிதா நந்தினி கூப்பிட்டு நான் உன்னை அடிச்சத சூர்யா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க நான்...
98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு!
98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள். Golden - First K Pop Song Won Oscars பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக வந்திருந்தார். ஆஸ்கர் வென்ற முதல் கே-பாப் பாடல்: சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' (KPop Demon Hunters) திரைப்படம் வென்றிருக்கிறது. விருதை இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான மேகி காங் (Maggie Kang) பெற்றிருக்கிறார். இந்த விருதைப் பெறும் தென் கொரியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். விருது பெற்றதும் மேடையில், என்னைப்போலவே தோற்றம் கொண்டவர்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கொரியா மக்களுக்காகவும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். Golden - First K Pop Song Won Oscars இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோல்டன்' என்கிற பாடலுக்கும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் கே-பாப் என்ற பெருமையும் இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது. கே பாப் பாடல்கள், ஆஸ்கர் விருதுகளை வெல்வதற்கு இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகியிருப்பதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு தகுதி பெறுவதற்கு பாடல்கள் திரைப்படங்களுக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கே-பாப் பாடல்கள் சுயாதீன பாடல்களாகவே வெளியாகியிருக்கின்றன. 2020-ம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்கர் வரலாற்றில் கொரியன் திரைப்படங்கள் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினாலும், இசையைப் பொறுத்தமட்டில் வெஸ்டர்ன் இசைக்கே ஆஸ்கர் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஆனால், 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் நடுவர்கள் புறக்கணித்துவிட முடியாத இடத்தையும் இத்திரைப்படம் பெற்று, இப்போது விருதையும் தட்டிச் சென்றிருக்கிறது. Golden - First K Pop Song Won Oscars சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற பிறகு இப்பாடலை எழுதியவர், பாடியவர் என இப்பாடலுக்காக வேலை பார்த்த அனைவரும் மேடையேறினார்கள். இந்தப் பாடலின் இணை பாடலாசிரியர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆர்கெஸ்ட்ரா ஒலியை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். மேடையிலிருந்து மின் விளக்குகளும் சரியாக வேலை செய்யாதபடி செய்திருக்கிறார்கள். இப்படியான சில சலசலப்புகள் இவர்கள் பேசும்போது நடந்திருக்கிறது. மற்றவர்கள் பேசுவதற்கு அதிக அளவில் நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வரலாற்று தருணத்தில் 'கோல்டன்' பாடல் குழுவிற்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என கே-பாப் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு!
98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள். Golden - First K Pop Song Won Oscars பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக வந்திருந்தார். ஆஸ்கர் வென்ற முதல் கே-பாப் பாடல்: சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' (KPop Demon Hunters) திரைப்படம் வென்றிருக்கிறது. விருதை இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான மேகி காங் (Maggie Kang) பெற்றிருக்கிறார். இந்த விருதைப் பெறும் தென் கொரியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். விருது பெற்றதும் மேடையில், என்னைப்போலவே தோற்றம் கொண்டவர்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கொரியா மக்களுக்காகவும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். Golden - First K Pop Song Won Oscars இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோல்டன்' என்கிற பாடலுக்கும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் கே-பாப் என்ற பெருமையும் இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது. கே பாப் பாடல்கள், ஆஸ்கர் விருதுகளை வெல்வதற்கு இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகியிருப்பதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு தகுதி பெறுவதற்கு பாடல்கள் திரைப்படங்களுக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கே-பாப் பாடல்கள் சுயாதீன பாடல்களாகவே வெளியாகியிருக்கின்றன. 2020-ம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்கர் வரலாற்றில் கொரியன் திரைப்படங்கள் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினாலும், இசையைப் பொறுத்தமட்டில் வெஸ்டர்ன் இசைக்கே ஆஸ்கர் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஆனால், 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் நடுவர்கள் புறக்கணித்துவிட முடியாத இடத்தையும் இத்திரைப்படம் பெற்று, இப்போது விருதையும் தட்டிச் சென்றிருக்கிறது. Golden - First K Pop Song Won Oscars சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற பிறகு இப்பாடலை எழுதியவர், பாடியவர் என இப்பாடலுக்காக வேலை பார்த்த அனைவரும் மேடையேறினார்கள். இந்தப் பாடலின் இணை பாடலாசிரியர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆர்கெஸ்ட்ரா ஒலியை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். மேடையிலிருந்து மின் விளக்குகளும் சரியாக வேலை செய்யாதபடி செய்திருக்கிறார்கள். இப்படியான சில சலசலப்புகள் இவர்கள் பேசும்போது நடந்திருக்கிறது. மற்றவர்கள் பேசுவதற்கு அதிக அளவில் நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வரலாற்று தருணத்தில் 'கோல்டன்' பாடல் குழுவிற்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என கே-பாப் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
சிறையில் இருந்து வெளிவந்த ராகவ், விஜய்-காவிரி வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் விஜயின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்றார். தாத்தா, காவிரி இருந்தால் தான் விஜய் சந்தோஷமாக இருப்பான். அவன் விருப்பப்படி நடக்கட்டும். எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். அதற்குப்பின் சாரதா- காவிரி இருவரும் விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் விஜய் தன்னுடைய தாத்தா சித்தி, சித்தப்பாவை எல்லாம் காவிரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். […] The post சிறையில் இருந்து வெளிவந்த ராகவ், விஜய்-காவிரி வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்
98-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆஸ்கர் விருதைப் பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ... சிறந்த நடிகர் விருது: 'Sinners' திரைப்படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான். சிறந்த துணை நடிகர் விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக சீன் பென். சிறந்த நடிகை விருது: 'Hamnet' திரைப்படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி. சிறந்த துணை நடிகை விருது: 'Weapons' திரைப்படத்திற்காக எமி மதிகன். சிறந்த அனிமேட்டட் திரைப்படம் விருது: 'KPop Demon Hunters' திரைப்படத்திற்காக மேகி காங், கிறிஸ் அப்பெல்ஹான்ஸ் மற்றும் மிஷெல் எல்.எம். வோங்கிற்கு விருது. Jessie Buckley | Oscar Awards சிறந்த அனிமேட்டட் குறும்படம் விருது: 'The Girl Who Cried Pearls' குறும்படத்திற்காக கிறிஸ் லாவிஸ், மசீக் ஸ்செர்போவ்ஸ்கி ஆகியோருக்கு விருது. சிறந்த காஸ்டிங் விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸிற்கு விருது. சிறந்த ஒளிப்பதிவு விருது: 'Sinners' திரைப்படத்திற்காக ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் சிறந்த ஆடை வடிவமைப்பு விருது: 'Frankenstein' திரைப்படத்திற்காக கேட் ஹாவ்லி. சிறந்த இயக்குநர் விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன். சிறந்த ஆவணப்படம் விருது: 'Mr. Nobody against Putin' திரைப்படத்திற்காக டேவிட் போரன்ஸ்டீன், பாவெல் தலங்கின், ஹெல்லே ஃபேபர் மற்றும் அல்ஸ்பேட்டா கராஸ்கோவா. சிறந்த ஆவண குறும்படம் விருது: 'All the Empty Rooms' குறும்படத்திற்காக ஜோசுவா செஃப்டெல் மற்றும் கோனால் ஜோன்ஸ். சிறந்த படத்தொகுப்பு விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக ஆண்டி ஜூர்கென்சன். சிறந்த சர்வதேச பட விருது: 'சென்டிமென்டல் வேல்யூ' திரைப்படத்திற்காக நார்வே. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் விருது: 'The Singers' திரைப்படத்திற்காக சாம் ஏ. டேவிஸ் மற்றும் ஜாக் பியாட். சிறந்த மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் விருது: 'Frankenstein' திரைப்படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி. One Battle After Another | Oscar Awards சிறந்த இசை விருது: 'Sinners' திரைப்படத்திற்காக லுட்விக் கோரன்சன். சிறந்த பாடல் விருது: Golden சிறந்த திரைப்படம் விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக ஆடம் சோம்னர், சாரா மர்பி மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு விருது. சிறந்த வடிவமைப்பு விருது: 'Frankenstein' திரைப்படத்திற்காக தமரா டெவெரெல், ஷேன் வியூ. சிறந்த சவுன்ட் விருது: 'F1' திரைப்படத்திற்காக கேரத் ஜான், அல் நெல்சன், க்வென்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிஸோ மற்றும் ஜுவான் பெரால்டா. சிறந்த விஷவல் எஃபெக்ட்ஸ் விருது: 'Avatar: Fire and Ash' திரைப்படத்திற்காக ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் சிறந்த எழுத்து (Adapted) விருது: 'One Battle after Another' திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன். சிறந்த எழுத்து (ஒரிஜினல்) விருது: 'Sinners' திரைப்படத்திற்காக ரியான் கூக்லர்.
ஃபேக்டரி போல குழந்தை பெத்துக்குவாங்க, நான் உதவி செய்யணுமா? நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டம்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. தற்போது வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த படம் எஸ். சரஸ்வதி. இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் ப்ரியாமணி, பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை வரலட்சுமி, பொருளாதார ரீதியாக நிலையற்ற தன்மையில் இருக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ள […] The post ஃபேக்டரி போல குழந்தை பெத்துக்குவாங்க, நான் உதவி செய்யணுமா? நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டம் appeared first on Tamil Behind Talkies .
Akshay Kumar: சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா? - அக்ஷய் குமாரின் பதில் என்ன?
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் குமார் பேசியிருக்கிறார். Dhurandhar Movie டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' நிகழ்வில் (India Today Conclave) இது குறித்து பேசியிருக்கிறார். அவர், 'துரந்தர்' படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம். படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைகள் நிறைந்துள்ளன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கிறார்கள். ரன்வீர் சிங் ஒரு 'ஆங்கிரி யங் மேன்' பிம்பத்தைச் சரியாக அந்தப் படத்தில் திரைக்குக் கொண்டு வந்திருந்தார். இயக்குநர் ஆதித்யா தர் என்னை அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நினைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்ஷய் குமார் பலமுறை நான் ரன்வீரை சந்திக்கும்போது, அவர் என்னிடம் 'அது எவ்வளவு சிறந்த படம், நான் அதில் நடித்திருக்க வேண்டும்' என்று என்னிடம் கூறுவார். இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்புதான். சில படங்கள் அவர் செய்திருக்கலாம் என நினைக்கிறார். சிலவற்றை நான் செய்ய நினைக்கிறேன். நாங்கள் சுமார் 15-20 நடிகர்கள் இருக்கிறோம். இந்தியாவில் 180 படங்கள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. ஒரு சிறந்த படத்தில் நாம் நடித்திருக்கலாமே என்ற வருத்தம் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் மீது பொறாமை ஏற்படுவதில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Akshay Kumar: சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா? - அக்ஷய் குமாரின் பதில் என்ன?
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் குமார் பேசியிருக்கிறார். Dhurandhar Movie டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' நிகழ்வில் (India Today Conclave) இது குறித்து பேசியிருக்கிறார். அவர், 'துரந்தர்' படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம். படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைகள் நிறைந்துள்ளன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கிறார்கள். ரன்வீர் சிங் ஒரு 'ஆங்கிரி யங் மேன்' பிம்பத்தைச் சரியாக அந்தப் படத்தில் திரைக்குக் கொண்டு வந்திருந்தார். இயக்குநர் ஆதித்யா தர் என்னை அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நினைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்ஷய் குமார் பலமுறை நான் ரன்வீரை சந்திக்கும்போது, அவர் என்னிடம் 'அது எவ்வளவு சிறந்த படம், நான் அதில் நடித்திருக்க வேண்டும்' என்று என்னிடம் கூறுவார். இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்புதான். சில படங்கள் அவர் செய்திருக்கலாம் என நினைக்கிறார். சிலவற்றை நான் செய்ய நினைக்கிறேன். நாங்கள் சுமார் 15-20 நடிகர்கள் இருக்கிறோம். இந்தியாவில் 180 படங்கள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. ஒரு சிறந்த படத்தில் நாம் நடித்திருக்கலாமே என்ற வருத்தம் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் மீது பொறாமை ஏற்படுவதில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.
சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது நேற்றைய எபிசோடில் நந்தினி சாம்பிராணி புகையை போட ஹரிதா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்து எதுக்காக இப்படி புகை போட்டுக்கிட்டு...
Sai Abhyankkar: ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன் - சாய் அபயங்கர்
'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இன்று குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சாய் அபயங்கர் சமீபத்தில் அவருடைய 5-வது சுயாதீனப் பாடலான 'பவழமல்லி' பாடல் வெளியாகியிருந்தது. அப்பாடலின் ப்ரோமோஷனுக்காக மெர்சி ஜான் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ரீல்ஸ் கண்டெண்டிற்காக பாடல்கள் செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். ரஜினி - எஸ்.ஜே சூர்யா கலகல... அஜித் படத்தில் எஸ்.கே கேமியோ... மமிதா பைஜுவுக்கு ஜோடி சாய் அபயங்கர்?! அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் பேசுகையில், நான் பாடல் வரும் சமயத்தில்தான் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பேன். நான் அந்தப் பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எப்படியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என யோசிப்பேன். அதைத் தாண்டி, ரீல்ஸ் கண்டெண்டிற்காக ஒரு பாடல் செய்ய வேண்டும் என நினைத்ததே கிடையாது. ஆனால் உங்களுடைய பாடல்களில் ஹூக் இருக்கிறதே எனக் கேட்டால், அது கண்டிப்பாக பாடல்களில் இருக்க வேண்டும். அந்தப் பகுதி மிகவும் பிரஷாக இருக்க வேண்டும் என முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன் எனக் கூறியிருக்கிறார். சாய் அபயங்கர் இதனைத் தொடர்ந்து அவர், நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது, தொடர்ந்து நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்துக் கொண்டே இருந்தேன். அவர் அதைப் பார்த்திருப்பாரா என்று கூடத் தெரியவில்லை. 8-ம் வகுப்பு முடித்த பிறகு, என் பேஷன் மியூசிக்தான், அதனால் என் படிப்புக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டேன் எனப் பகிர்ந்திருக்கிறார். பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' - சாய் அபயங்கர்
Sai Abhyankkar: ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன் - சாய் அபயங்கர்
'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இன்று குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சாய் அபயங்கர் சமீபத்தில் அவருடைய 5-வது சுயாதீனப் பாடலான 'பவழமல்லி' பாடல் வெளியாகியிருந்தது. அப்பாடலின் ப்ரோமோஷனுக்காக மெர்சி ஜான் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ரீல்ஸ் கண்டெண்டிற்காக பாடல்கள் செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். ரஜினி - எஸ்.ஜே சூர்யா கலகல... அஜித் படத்தில் எஸ்.கே கேமியோ... மமிதா பைஜுவுக்கு ஜோடி சாய் அபயங்கர்?! அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் பேசுகையில், நான் பாடல் வரும் சமயத்தில்தான் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பேன். நான் அந்தப் பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எப்படியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என யோசிப்பேன். அதைத் தாண்டி, ரீல்ஸ் கண்டெண்டிற்காக ஒரு பாடல் செய்ய வேண்டும் என நினைத்ததே கிடையாது. ஆனால் உங்களுடைய பாடல்களில் ஹூக் இருக்கிறதே எனக் கேட்டால், அது கண்டிப்பாக பாடல்களில் இருக்க வேண்டும். அந்தப் பகுதி மிகவும் பிரஷாக இருக்க வேண்டும் என முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன் எனக் கூறியிருக்கிறார். சாய் அபயங்கர் இதனைத் தொடர்ந்து அவர், நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது, தொடர்ந்து நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்துக் கொண்டே இருந்தேன். அவர் அதைப் பார்த்திருப்பாரா என்று கூடத் தெரியவில்லை. 8-ம் வகுப்பு முடித்த பிறகு, என் பேஷன் மியூசிக்தான், அதனால் என் படிப்புக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டேன் எனப் பகிர்ந்திருக்கிறார். பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' - சாய் அபயங்கர்
ராஜாங்கம் கொடுத்த எச்சரிக்கை, தமிழ்செல்வியை சிக்க வைக்க ஈஸ்வரி செய்யும் சதி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, நான் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து பெண்கள்தான் சமைக்கிறார்கள். இன்று ஒரு நாளைக்கு பெண்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். ஆண்கள் தான் சமைக்க வேண்டும் என்றார். இதை கேட்டவுடன் ஈஸ்வரி திட்டினார். ராஜாங்கமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சேது, பிரச்சனை ஏதாவது வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். உடனே ராஜாங்கம், இது தான் உன்னுடைய ஆசை. […] The post ராஜாங்கம் கொடுத்த எச்சரிக்கை, தமிழ்செல்வியை சிக்க வைக்க ஈஸ்வரி செய்யும் சதி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மற்றும் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்த திரைப்படத்தில் அனிஷ்மா அணில் குமார்,தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, மீனாட்சி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்...
வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியது இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் வடசென்னை கதை களத்தில் கேங்ஸ்டர் திரைப்படம் ஆக...
காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், கங்கா சொன்ன விஷயம் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, விஜயின் வீட்டிற்கு போவதால் நிறைய பலகாரம் செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து காவிரிக்கு கடுப்பாகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் விஜய், காவேரி வீட்டிற்கு வருவதால் யாரையும் சமைக்க விடாமல் தன் கையாலே விதவிதமாக சமைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்து தாத்தாவிற்கு சந்தோசம். சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் […] The post காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், கங்கா சொன்ன விஷயம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன் - 'ஆரண்ய காண்டம்'கொடுக்காப்புளி பேட்டி
தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். 'ஆரண்ய காண்டம்' ரீரிலீஸை ஒட்டி, படத்தில் கொடுக்காப்புளி கேரக்டரில் நடித்திருந்த வசந்த்தைத் தேடிக் கண்டுபிடித்து பேட்டி கண்டோம். ஆரண்ய காண்டம் அவரை நாம் 'வெயில்', 'பூவரசம் பீப்பீ' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருப்போம். இப்போது வளர்ந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பணியோடு, சினிமாவுக்கான முயற்சியிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம். நம்மிடையே பேசிய வசந்த், நான் மலையாளத்துல 'ராகு கேது'ங்கிற ஒரு குறும்படத்துல நடிச்சிருந்தேன். அந்தக் குறும்படத்தை எடுத்தவர் இயக்குநர் பிஜாய் நம்பியார். அவர்கூட அந்தக் குறும்படத்துல சுதா கொங்கரா மேம் வொர்க் பண்ணினாங்க. சுதா மேமும் குமாரராஜா சாரும் ப்ரண்ட்ஸ். அப்படி சுதா மேம் என்னைப் பத்தி குமாரராஜா சார்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்படித்தான் இயக்குநர் என்னை 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு தேர்வு பண்ணினார். 'ஆரண்ய காண்டம்' படத்துல நடிக்கும்போது நான் 6வதுதான் படிச்சிட்டிருந்தேன். எல்லாமே எனக்கு அப்போ புதுசாகத்தான் இருந்துச்சு. ஷூட் தொடங்குறதுக்கு முன்னாடி கூத்துப்பட்டறையில என்னை ட்ரெயினிங் எடுக்கச் சொன்னாங்க. Aaranya Kaandam - Vasanth குரு சோமசுந்தரம் சார் கூட நானும் கூத்துப்பட்டறைக்குப் போய் அவங்களைப் பார்த்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஆனா, குமாரராஜா சார் கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸி கிடையாது. கொடுக்காப்புளி கேரக்டரை அவர்தான் உருவாக்கினார். அவர் எனக்கு செய்து காட்டினதை நான் ரிப்பீட் பண்ணினேன். அவ்வளவுதான். குமாரராஜா சார் கூட வேலை பார்க்கிறது கஷ்டம்னு ஏன் சொல்றேனா... அவர் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக இருக்கணும்னு நினைப்பார். ஒரு சீன்லலாம் பயங்கரமா அவர்கிட்ட திட்டு வாங்கின அனுபவமும் இருக்கு என ஹஸ்கி குரலில் சிரித்தவர், ஒரு சீன்ல ஃப்ரேமுக்கு வெளில நிக்கணும். Aaranya Kaandam : 'சப்பை' கேரக்டருக்கும் ஆடிஷன் கொடுத்தேன்; ஆனால் - குரு சோமசுந்தரம் எக்ஸ்க்ளூசிவ் அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி 'எவ்வளவு லாஸ் ஆகுது பாரு'னு திட்டினாரு. நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு. ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே வரும். குரு சோமசுந்தரம் சார் அவருக்கு ஷாட் இல்லைனு, அப்போ உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன்கிட்ட ஜூஸ் குடிச்சிட்டு பேசிட்டிருந்தார். அதுவும் கேமராவுல பதிவாகிடுச்சு. இதெல்லாம் ஃபன்னி மொமண்ட்ஸ்! Aaranya Kaandam - Vasanth ஷூட்டிங் நடக்கும்போது, நான் சின்ன பையன்கிறதுனால ஜாக்கி ஷெரஃப் சார், பி.எஸ். வினோத் சார் எவ்வளவு பெரிய ஆட்கள்னு எனக்கு தெரியாது. அவங்ககிட்டலாம் பாராட்டும் வாங்கியிருக்கேன். இதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு என்றவர், 'ஆரண்ய காண்டம்' மூலமாகத்தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. இதுக்குப் பிறகுதான் ஹலீதா ஷமீம் மேமோட 'பூவரசம் பீப்பீ' படத்துல நடிச்சேன். இயக்குநர் வசந்த் சாரும் என்னைப் பாராட்டி அவருடைய 'மூன்று பேர் மூன்று காதல்' படத்துல நடிக்க வச்சாரு என்றார். “முதலில் ‘ஆரண்ய காண்டம்’ கதை பிடிக்கலை!” 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு குமாரராஜா சாரை மீட் பண்ண சான்ஸ் கிடைக்கல. சில வருஷங்கள் கழிச்சு ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். ஆனா, அந்தப் படத்தோட உதவி இயக்குநர்கள்கிட்ட நான் இப்போவரைக்கும் டச்லதான் இருக்கேன். ஒரு விஷயம், 'ஆரண்ய காண்டம்'ல நடிச்சவங்க எல்லோரும் ஒரு லைம்லைட்ல இருக்காங்க. நான் மட்டும் கொஞ்சம் மறைஞ்சுட்டேன். 'பூவரசம் பீப்பீ' படத்துக்கு நான் அவார்ட்லாம் வாங்கினேன். அதன் பிறகு, 'ஆரண்ய காண்டம்'ல நடிச்ச சிறுவன்தான் நான் என யாருக்கும் தெரியல. Aaranya Kaandam - Vasanth இப்போ என் முக அடையாளமே வேற மாதிரி மாறிடுச்சு எனத் தொடர்ந்தவர், எனக்கு சொந்த ஊர் மதுரை. 'ஆரண்ய காண்டம்' ரிலீஸ் ஆன சமயத்துல மதுரை தியேட்டர்ல பத்து பேர் கூட இல்ல. ஆனா, இன்னைக்கு க்ளாசிக் படமாக அதை கொண்டாடுறாங்க. அப்போ பெரியளவுல படத்தை வரவேற்காதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு. இப்போதும் நடிப்பின் மீது ஆர்வமாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இப்போ ஒரு வெப் சீரிஸிலும் நடிச்சு முடிச்சிருக்கேன். சினிமாவைத் தாண்டி நான் இப்போ ஐடி-ல வொர்க் பண்ணிட்டும் இருக்கேன். வேலையோட சினிமாவையும் இப்போ பேலன்ஸ் செய்றேன் என்றார். ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மின் பேட்டி
நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன் - 'ஆரண்ய காண்டம்'கொடுக்காப்புளி பேட்டி
தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். 'ஆரண்ய காண்டம்' ரீரிலீஸை ஒட்டி, படத்தில் கொடுக்காப்புளி கேரக்டரில் நடித்திருந்த வசந்த்தைத் தேடிக் கண்டுபிடித்து பேட்டி கண்டோம். ஆரண்ய காண்டம் அவரை நாம் 'வெயில்', 'பூவரசம் பீப்பீ' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருப்போம். இப்போது வளர்ந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பணியோடு, சினிமாவுக்கான முயற்சியிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம். நம்மிடையே பேசிய வசந்த், நான் மலையாளத்துல 'ராகு கேது'ங்கிற ஒரு குறும்படத்துல நடிச்சிருந்தேன். அந்தக் குறும்படத்தை எடுத்தவர் இயக்குநர் பிஜாய் நம்பியார். அவர்கூட அந்தக் குறும்படத்துல சுதா கொங்கரா மேம் வொர்க் பண்ணினாங்க. சுதா மேமும் குமாரராஜா சாரும் ப்ரண்ட்ஸ். அப்படி சுதா மேம் என்னைப் பத்தி குமாரராஜா சார்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்படித்தான் இயக்குநர் என்னை 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு தேர்வு பண்ணினார். 'ஆரண்ய காண்டம்' படத்துல நடிக்கும்போது நான் 6வதுதான் படிச்சிட்டிருந்தேன். எல்லாமே எனக்கு அப்போ புதுசாகத்தான் இருந்துச்சு. ஷூட் தொடங்குறதுக்கு முன்னாடி கூத்துப்பட்டறையில என்னை ட்ரெயினிங் எடுக்கச் சொன்னாங்க. Aaranya Kaandam - Vasanth குரு சோமசுந்தரம் சார் கூட நானும் கூத்துப்பட்டறைக்குப் போய் அவங்களைப் பார்த்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஆனா, குமாரராஜா சார் கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸி கிடையாது. கொடுக்காப்புளி கேரக்டரை அவர்தான் உருவாக்கினார். அவர் எனக்கு செய்து காட்டினதை நான் ரிப்பீட் பண்ணினேன். அவ்வளவுதான். குமாரராஜா சார் கூட வேலை பார்க்கிறது கஷ்டம்னு ஏன் சொல்றேனா... அவர் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக இருக்கணும்னு நினைப்பார். ஒரு சீன்லலாம் பயங்கரமா அவர்கிட்ட திட்டு வாங்கின அனுபவமும் இருக்கு என ஹஸ்கி குரலில் சிரித்தவர், ஒரு சீன்ல ஃப்ரேமுக்கு வெளில நிக்கணும். Aaranya Kaandam : 'சப்பை' கேரக்டருக்கும் ஆடிஷன் கொடுத்தேன்; ஆனால் - குரு சோமசுந்தரம் எக்ஸ்க்ளூசிவ் அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி 'எவ்வளவு லாஸ் ஆகுது பாரு'னு திட்டினாரு. நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு. ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே வரும். குரு சோமசுந்தரம் சார் அவருக்கு ஷாட் இல்லைனு, அப்போ உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன்கிட்ட ஜூஸ் குடிச்சிட்டு பேசிட்டிருந்தார். அதுவும் கேமராவுல பதிவாகிடுச்சு. இதெல்லாம் ஃபன்னி மொமண்ட்ஸ்! Aaranya Kaandam - Vasanth ஷூட்டிங் நடக்கும்போது, நான் சின்ன பையன்கிறதுனால ஜாக்கி ஷெரஃப் சார், பி.எஸ். வினோத் சார் எவ்வளவு பெரிய ஆட்கள்னு எனக்கு தெரியாது. அவங்ககிட்டலாம் பாராட்டும் வாங்கியிருக்கேன். இதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு என்றவர், 'ஆரண்ய காண்டம்' மூலமாகத்தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. இதுக்குப் பிறகுதான் ஹலீதா ஷமீம் மேமோட 'பூவரசம் பீப்பீ' படத்துல நடிச்சேன். இயக்குநர் வசந்த் சாரும் என்னைப் பாராட்டி அவருடைய 'மூன்று பேர் மூன்று காதல்' படத்துல நடிக்க வச்சாரு என்றார். “முதலில் ‘ஆரண்ய காண்டம்’ கதை பிடிக்கலை!” 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு குமாரராஜா சாரை மீட் பண்ண சான்ஸ் கிடைக்கல. சில வருஷங்கள் கழிச்சு ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். ஆனா, அந்தப் படத்தோட உதவி இயக்குநர்கள்கிட்ட நான் இப்போவரைக்கும் டச்லதான் இருக்கேன். ஒரு விஷயம், 'ஆரண்ய காண்டம்'ல நடிச்சவங்க எல்லோரும் ஒரு லைம்லைட்ல இருக்காங்க. நான் மட்டும் கொஞ்சம் மறைஞ்சுட்டேன். 'பூவரசம் பீப்பீ' படத்துக்கு நான் அவார்ட்லாம் வாங்கினேன். அதன் பிறகு, 'ஆரண்ய காண்டம்'ல நடிச்ச சிறுவன்தான் நான் என யாருக்கும் தெரியல. Aaranya Kaandam - Vasanth இப்போ என் முக அடையாளமே வேற மாதிரி மாறிடுச்சு எனத் தொடர்ந்தவர், எனக்கு சொந்த ஊர் மதுரை. 'ஆரண்ய காண்டம்' ரிலீஸ் ஆன சமயத்துல மதுரை தியேட்டர்ல பத்து பேர் கூட இல்ல. ஆனா, இன்னைக்கு க்ளாசிக் படமாக அதை கொண்டாடுறாங்க. அப்போ பெரியளவுல படத்தை வரவேற்காதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு. இப்போதும் நடிப்பின் மீது ஆர்வமாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இப்போ ஒரு வெப் சீரிஸிலும் நடிச்சு முடிச்சிருக்கேன். சினிமாவைத் தாண்டி நான் இப்போ ஐடி-ல வொர்க் பண்ணிட்டும் இருக்கேன். வேலையோட சினிமாவையும் இப்போ பேலன்ஸ் செய்றேன் என்றார். ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மின் பேட்டி
அடியே... (பேச்சுலர்) : இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்! - ஜிகேபி | வரித்துணையே 9
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. 'அடியே' பாடல் இன்றைய பகுதிக்கு, பாடலாசிரியர் ஜிகேபி எழுதிய 'அடியே' பாடல் பற்றி பேசுவதற்கு அவரைச் சந்தித்தோம். 'அடியே' பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.' என கலகலப்புடன் வரிகள் பற்றி அவர் பேசத் தொடங்கினார். அடியே (பேச்சுலர்) இந்தப் பாடல் தொடங்கும்போதே சிலருக்கு சந்தேகங்கள் வந்திருக்கும். தேன் எப்படி போதையாகும் என்பது பலரின் கேள்வியாக இருந்திருக்கும். ஆனால், வண்டுகளுக்கு அந்தத் தேன்தான் போதை. இந்தப் பாடலில் வண்டுதான் கதாநாயகன். இந்த மொத்தப் பாடலையும் கிட்டத்தட்ட 3 நாட்கள் எழுதினேன். ஆனால், இடைப்பட்ட பகுதிகளில் வரும், 'இரவுகள் நீள, இமைகளும் மூட, இடைவெளி ஏனோ கண்மணியே, யுகங்களைத் தாண்டி, விரல்களைப் பூட்டி, முத்தங்களைத் தின்போம் அடியே' என்கிற வரிகளுக்கு மட்டும் ஒரு நாள் முழுவதுமாக செலவழித்தேன். ஏனெனில், திபு நினன் தாமஸ் வரிகள் கச்சிதமாக டியூனுக்குள் அமர வேண்டும் என நினைப்பார். பாடலாசிரியர் ஜிகேபி அதற்காகவே இந்த வரிகளுக்கு சிரத்தை கொடுத்து எழுதினேன். நான் என்னுடைய கரியர் தொடக்கம் முதல் பாசப் பாடல்களாகவே எழுதி வந்தேன். நான் எழுதியதிலேயே முழுமையான ரொமான்டிக் பாடலென்றால் அது 'அடியே'தான். 'நீ கவிதைகளா' பாடல் லைட்டான ரொமான்டிக் பாடல்தான். அதே சமயம், இந்த பாடல் எழுதும்போது ரொமான்ஸ் என்கிற பெயரில் அபத்தமாகவும் வரிகளை எழுதிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். பாடல் எழுதி முடித்ததும், மீண்டுமொரு முறை வரிகளைப் படித்துப் பார்க்கும்போது 'செம்ம. நீ ஏதோ இந்தப் பாடலுக்கு செய்திருக்கிறாய்' என்ற திருப்தியான உணர்வு என்னிடம் இருந்தது. எப்போதும் பாடல் எழுதும்போது டியூனை மட்டும்தான் கேட்டு எழுதுவேன். ஆனால், 'பேச்சுலர்' படத்தின் இயக்குநர் எனக்கு இப்பாடலுக்காக ஷூட் செய்த மான்டேஜ்களையும் காட்டினார். அந்த மான்டேஜ்களும் இந்தப் பாடல் எழுதுவதற்கு எனக்கு உதவின. முக்கியமாக, இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம். 'அடியே' பாடல் தொடர்ந்து அவர்கள் எனக்கு மெசேஜ் செய்து இந்தப் பாடல் பற்றி உரையாடியிருக்கிறார்கள். இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் எனவும் பலர் கேட்டார்கள். நான் இங்கேயேதான் இருக்கிறேன், இப்போதுதான் சரியான வாய்ப்பு வந்திருக்கிறது எனப் பதில் சொல்லி கடந்துவிடுவேன். காதலன், காதலியை அன்புடனும் காதலுடனும் அழைக்க வேண்டும். அதுதான் இந்தப் பாடலின் தொடக்கம் எனவும் முடிவு செய்துவிட்டோம். ஆனால், காதலில் எப்போதும் பயன்படுத்தப்படும் வழக்கமான வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் திபு நினன் தாமஸ், 'அடியே', 'போதை தேனே' வரிகளை எனக்கு எடுத்துத் தந்தார். சினிமாவுக்குள் வரும்போதே பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட பாடல்களை நான் எழுதக் கூடாது என முடிவுடன்தான் வந்தேன். அதனை இன்று வரைக்கும் சரியாகப் பின்பற்றியும் வருகிறேன். ஒரு முறை மட்டும் என்னுடைய சூழல் அப்படிச் செய்ய வைத்துவிட்டது. ஆனால், இனி நான் அப்படி எழுதவே மாட்டேன். என்றவர் மீண்டும் 'அடியே' பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார். 'அடியே பாடலை டீகோட் செய்து படித்தவர்களுக்கு அது அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். பாடலாசிரியர் ஜிகேபி எப்போதுமே அவரவர் பார்வையிலிருந்து பாடல்களை அணுகும்போது, அது ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும். இந்தப் பாடலுக்குள் பூடகமாக சில வரிகளை நான் அமைத்திருக்கிறேன். அதையும் பலர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் நிகழும்போதுதான் ஒரு பாடலாசிரியருக்கு முழுமையான திருப்தி உண்டாகும்.' என்றார் உற்சாகத்துடன்.
அடியே... (பேச்சுலர்) : இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்! - ஜிகேபி | வரித்துணையே 9
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. 'அடியே' பாடல் இன்றைய பகுதிக்கு, பாடலாசிரியர் ஜிகேபி எழுதிய 'அடியே' பாடல் பற்றி பேசுவதற்கு அவரைச் சந்தித்தோம். 'அடியே' பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.' என கலகலப்புடன் வரிகள் பற்றி அவர் பேசத் தொடங்கினார். அடியே (பேச்சுலர்) இந்தப் பாடல் தொடங்கும்போதே சிலருக்கு சந்தேகங்கள் வந்திருக்கும். தேன் எப்படி போதையாகும் என்பது பலரின் கேள்வியாக இருந்திருக்கும். ஆனால், வண்டுகளுக்கு அந்தத் தேன்தான் போதை. இந்தப் பாடலில் வண்டுதான் கதாநாயகன். இந்த மொத்தப் பாடலையும் கிட்டத்தட்ட 3 நாட்கள் எழுதினேன். ஆனால், இடைப்பட்ட பகுதிகளில் வரும், 'இரவுகள் நீள, இமைகளும் மூட, இடைவெளி ஏனோ கண்மணியே, யுகங்களைத் தாண்டி, விரல்களைப் பூட்டி, முத்தங்களைத் தின்போம் அடியே' என்கிற வரிகளுக்கு மட்டும் ஒரு நாள் முழுவதுமாக செலவழித்தேன். ஏனெனில், திபு நினன் தாமஸ் வரிகள் கச்சிதமாக டியூனுக்குள் அமர வேண்டும் என நினைப்பார். பாடலாசிரியர் ஜிகேபி அதற்காகவே இந்த வரிகளுக்கு சிரத்தை கொடுத்து எழுதினேன். நான் என்னுடைய கரியர் தொடக்கம் முதல் பாசப் பாடல்களாகவே எழுதி வந்தேன். நான் எழுதியதிலேயே முழுமையான ரொமான்டிக் பாடலென்றால் அது 'அடியே'தான். 'நீ கவிதைகளா' பாடல் லைட்டான ரொமான்டிக் பாடல்தான். அதே சமயம், இந்த பாடல் எழுதும்போது ரொமான்ஸ் என்கிற பெயரில் அபத்தமாகவும் வரிகளை எழுதிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். பாடல் எழுதி முடித்ததும், மீண்டுமொரு முறை வரிகளைப் படித்துப் பார்க்கும்போது 'செம்ம. நீ ஏதோ இந்தப் பாடலுக்கு செய்திருக்கிறாய்' என்ற திருப்தியான உணர்வு என்னிடம் இருந்தது. எப்போதும் பாடல் எழுதும்போது டியூனை மட்டும்தான் கேட்டு எழுதுவேன். ஆனால், 'பேச்சுலர்' படத்தின் இயக்குநர் எனக்கு இப்பாடலுக்காக ஷூட் செய்த மான்டேஜ்களையும் காட்டினார். அந்த மான்டேஜ்களும் இந்தப் பாடல் எழுதுவதற்கு எனக்கு உதவின. முக்கியமாக, இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம். 'அடியே' பாடல் தொடர்ந்து அவர்கள் எனக்கு மெசேஜ் செய்து இந்தப் பாடல் பற்றி உரையாடியிருக்கிறார்கள். இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் எனவும் பலர் கேட்டார்கள். நான் இங்கேயேதான் இருக்கிறேன், இப்போதுதான் சரியான வாய்ப்பு வந்திருக்கிறது எனப் பதில் சொல்லி கடந்துவிடுவேன். காதலன், காதலியை அன்புடனும் காதலுடனும் அழைக்க வேண்டும். அதுதான் இந்தப் பாடலின் தொடக்கம் எனவும் முடிவு செய்துவிட்டோம். ஆனால், காதலில் எப்போதும் பயன்படுத்தப்படும் வழக்கமான வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் திபு நினன் தாமஸ், 'அடியே', 'போதை தேனே' வரிகளை எனக்கு எடுத்துத் தந்தார். சினிமாவுக்குள் வரும்போதே பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட பாடல்களை நான் எழுதக் கூடாது என முடிவுடன்தான் வந்தேன். அதனை இன்று வரைக்கும் சரியாகப் பின்பற்றியும் வருகிறேன். ஒரு முறை மட்டும் என்னுடைய சூழல் அப்படிச் செய்ய வைத்துவிட்டது. ஆனால், இனி நான் அப்படி எழுதவே மாட்டேன். என்றவர் மீண்டும் 'அடியே' பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார். 'அடியே பாடலை டீகோட் செய்து படித்தவர்களுக்கு அது அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். பாடலாசிரியர் ஜிகேபி எப்போதுமே அவரவர் பார்வையிலிருந்து பாடல்களை அணுகும்போது, அது ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும். இந்தப் பாடலுக்குள் பூடகமாக சில வரிகளை நான் அமைத்திருக்கிறேன். அதையும் பலர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் நிகழும்போதுதான் ஒரு பாடலாசிரியருக்கு முழுமையான திருப்தி உண்டாகும்.' என்றார் உற்சாகத்துடன்.
Aamir Khan: 'ஆமிர் பாய்க்கு...' - 61வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய ஆமீர் கான்!
பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின் தற்போதைய காதலி கௌரி ஸ்ப்ராட், அவரது முதல் மனைவி ரீனா தத்தா, அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் மற்றும் அவரது பிள்ளைகள் ஜுனைத் கான், இரா கான் மற்றும் ஆசாத் ராவ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இர்ஃபான் பதான் பதிவிட்ட காணொலியில், ஆமிர் கான் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதையும், அங்கு கூடியிருந்தவர்கள் அவரை உற்சாகப்படுத்துவதையும் காணலாம். பின்னர் ஆமிர் கான் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் கேக் துண்டுகளை ஊட்டினார். முதல் துண்டை தனது மகன் ஆசாத்துக்கும், அதைத் தொடர்ந்து அவரது மகள் இராவுக்கும், பின்னர் கௌரி ஸ்ப்ராட்டுக்கும் ஊட்டுகிறார். காணொலியைப் பகிர்ந்து கொண்ட இர்ஃபான் பதான், மனநலத் துறையில் இரா கானின் பணியைப் பாராட்டி எழுதி இருக்கிறார். அதில், “ஆமிர் பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஈரா கான் அகட்சு அறக்கட்டளை மூலம் மனநலம் குறித்த விழிப்புணர்வையும் ஆதரவையும் பரப்பி, மேலும் பல பயனுள்ள பணிகளைச் செய்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்தநாள் விழாவில் நடிகர் விக்கி கெளஷல், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா, தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி உட்பட பலரும் கலந்து கொண்டனர். பிறந்த நாளையொட்டி ஆமிர் கானும் கௌரி ஸ்ப்ராட்டும் ஒன்றாக வெளியே வந்தபோது புகைப்படக் கலைஞர்கள் அவர்களை போஸ் கொடுக்கச் சொன்னபோது, இருவரும் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்காகச் சிறிது நேரம் நிற்கிறார்கள். இம்முறை பிறந்தநாளை ஆமீர்கான் எளிமையாகக் கொண்டாடியதால் சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. தற்போது ஆமீர் கான் தனது மகன் ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தீன் படத்தை மே ஒன்றாம் தேதி திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கோமதியால் வெடித்த கலவரம், செந்தில்-கதிருக்கு பாண்டியன் கொடுத்த கெடு –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோயிலில் பாக்கியம், கோமதிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த கோமதி, மீனாவையும் திட்டிவிட்டு சென்றார். ஒரு கட்டத்தில் தங்கமயில், யாரும் எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். தயவுசெய்து நீ அமைதியாக இரு அம்மா. பிரச்சனையை இன்னும் பெரிதாக்காதே என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் காந்திமதி, கோமதியிடம் பேச சொல்லி பாண்டியனுக்கு அறிவுரை சொன்னார். ஆனால், பாண்டியன் […] The post கோமதியால் வெடித்த கலவரம், செந்தில்-கதிருக்கு பாண்டியன் கொடுத்த கெடு – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
அவமானப்பட்ட நிலாவிற்காக சோழன் செய்த வேலை, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இவளுடன் பேசினால் பைத்தியம் தான் பிடிக்கும். உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக சொன்னாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறாள். இவளுடன் வாழ்வதெல்லாம் பெரிய கஷ்டமான விஷயம் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சோழனால் வானதி, பாண்டியன் இடையே சண்டை ஏற்பட்டது. சோழன், இதுதான் சந்தர்ப்பம் அவளை விட்டுவிடு என்றார். பாண்டியனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்கிறார். அதற்குப்பின் நடேசன், […] The post அவமானப்பட்ட நிலாவிற்காக சோழன் செய்த வேலை, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
‘அல்லாஹ்வின் பரிசு’குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகை பூர்ணா கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கடந்த 2023 ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்திருந்தார். பின் பூர்ணாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் பூர்ணா மீண்டும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீப காலமாக பெரும்பாலும் குணச்சித்திர இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக […] The post ‘அல்லாஹ்வின் பரிசு’ குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகை பூர்ணா கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு appeared first on Tamil Behind Talkies .
ரஜினி சார் சொன்ன மாதிரி தான் சினிமாவில் இருக்கிறேன் –நடிகர் விக்ரம் பிரபு பகிர்ந்த விசயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் […] The post ரஜினி சார் சொன்ன மாதிரி தான் சினிமாவில் இருக்கிறேன் – நடிகர் விக்ரம் பிரபு பகிர்ந்த விசயம் appeared first on Tamil Behind Talkies .
வேறு மொழியில் சிறை படம் ஓடியிருக்குமான்னு தெரியல, ஆனால் தமிழில் –இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் […] The post வேறு மொழியில் சிறை படம் ஓடியிருக்குமான்னு தெரியல, ஆனால் தமிழில் – இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
கோமதி-பாண்டியனை சேர்த்து வைக்க காந்திமதி போட்ட மாஸ்டர் பிளான், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் தன்னுடைய அம்மாவை வெளியே நிறுத்திவிட்டு மீனாவுடன் கோயிலுக்குள் சென்றார். தங்க மயிலை பார்த்தவுடன் கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. தங்க மயிலிடம் கோமதி சண்டை போட்டார். மீனா எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. தங்கமயில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். அந்த சமயம் வந்த பாக்கியம், கோமதியின் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். இதனால் கோமதிக்கு பயங்கர கோபம் […] The post கோமதி-பாண்டியனை சேர்த்து வைக்க காந்திமதி போட்ட மாஸ்டர் பிளான், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Vaaya Ey Karasaami – Lyric video
பெண் வீட்டார் கொடுத்த ஷாக்கில் உறைந்து போன மனோஜ், விஜயா முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரேகா வாங்கி வந்த கேக்கை வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு ரேகா, இந்த நாளில் உங்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்ட முத்து, மீனா இருவரும் சத்யாவிடம் விசாரித்தார்கள். சத்யா, ரேகா தன்னை காதலிக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். முத்து, நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்டார். சத்யா, நானும் காதலை சொல்ல போகிறேன் என்றார். மீனா கோபப்பட்டு திட்டுகிறார். முத்து […] The post பெண் வீட்டார் கொடுத்த ஷாக்கில் உறைந்து போன மனோஜ், விஜயா முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
'வீரம்'படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா
தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. மேடையில் பேசிய தமன்னா, தற்போது 'புருஷன்' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். தமன்னா நான் முதன் முதலில் நடித்த 'கல்லூரி' திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருந்தது. கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய் பற்றிப் பேசிய தமன்னா, மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள் என்று கூறிருக்கிறார். வீரம் படத்தில் அஜித், தமன்னா அஜித் பற்றி சொல்லும்போது, 'வீரம்' திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன் என புகழ்ந்து பேசியிருக்கிறார்.
'வீரம்'படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா
தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. மேடையில் பேசிய தமன்னா, தற்போது 'புருஷன்' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். தமன்னா நான் முதன் முதலில் நடித்த 'கல்லூரி' திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருந்தது. கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய் பற்றிப் பேசிய தமன்னா, மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள் என்று கூறிருக்கிறார். வீரம் படத்தில் அஜித், தமன்னா அஜித் பற்றி சொல்லும்போது, 'வீரம்' திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன் என புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Gin – Uh Jimikki – Lyrical video
வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரஞ்சித் நந்தினியின் கழுத்தை துணியால் இருக்கி கொ* செய்துவிட்டு போவது போல இருக்க பிறகுதான் அது சூர்யாவின்...
விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்...
சொந்தமாக தொழில் தொடங்க நிலா ஒத்து கொண்டாரா? தோழி சொன்ன விஷயம் –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் வானதியிடம் பேசிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு வானதியை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது வானதி, நான் ஸ்டாப்பாக பேசி கொண்டே வந்தார். சோழனால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் டென்ஷன் ஆனார். இன்னொரு பக்கம் பல்லவன் ரொம்பவே வருத்தமாக இருந்தார். அப்போது நிலா, அவருக்கு தைரியப்படுத்தி ஆறுதல் சொன்னார். அதோடு காயத்ரியின் நிலைமையை பற்றியும் விசாரித்தார். அப்போது பல்லவன், நான் காயத்ரியை […] The post சொந்தமாக தொழில் தொடங்க நிலா ஒத்து கொண்டாரா? தோழி சொன்ன விஷயம் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி...
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள...
தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.! - 'சிறை'பற்றி வெற்றிமாறன்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ‘சிறை' இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி தன்னுடையதாக மாற்றும் பிராசஸ்ஸில் நிறைய சவால்கள் இருந்திருக்கும். அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியத்துக்கு உரியது. ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னடையது என குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு. 'சிறை' படத்தை தமிழ் மக்கள் பார்த்தவிதம் மிகவும் சிறப்பானது. வெற்றிமாறன் மற்ற மொழிகளில் 'சிறை' படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.! - 'சிறை'பற்றி வெற்றிமாறன்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ‘சிறை' இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி தன்னுடையதாக மாற்றும் பிராசஸ்ஸில் நிறைய சவால்கள் இருந்திருக்கும். அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியத்துக்கு உரியது. ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னடையது என குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு. 'சிறை' படத்தை தமிழ் மக்கள் பார்த்தவிதம் மிகவும் சிறப்பானது. வெற்றிமாறன் மற்ற மொழிகளில் 'சிறை' படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer
சிறை: காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!- விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘சிறை' இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விக்ரம் பிரபு, ஒவ்வொரு படமும் நடிக்கும்போதும் தாத்தாவின் (சிவாஜி) பெயரையும், அப்பாவின் (பிரபுவின்) பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன். 'கும்கி'யில் இருந்து 'சிறை' வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன். சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன். விக்ரம் பிரபு 25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன். 'நான் உனக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டேன். நீயே தான் கற்றுக்கொண்டு வர வேண்டும்' என்று அப்பா சொன்னார். அதற்கு ஏற்றமாதிரி விஷயங்களைக் கற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறேன். முதல் படத்தில் 'கும்கி' யானையை பிடித்து சென்றதுபோல, ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
சிறை: காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!- விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘சிறை' இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விக்ரம் பிரபு, ஒவ்வொரு படமும் நடிக்கும்போதும் தாத்தாவின் (சிவாஜி) பெயரையும், அப்பாவின் (பிரபுவின்) பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன். 'கும்கி'யில் இருந்து 'சிறை' வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன். சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன். விக்ரம் பிரபு 25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன். 'நான் உனக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டேன். நீயே தான் கற்றுக்கொண்டு வர வேண்டும்' என்று அப்பா சொன்னார். அதற்கு ஏற்றமாதிரி விஷயங்களைக் கற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறேன். முதல் படத்தில் 'கும்கி' யானையை பிடித்து சென்றதுபோல, ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
ராவுத்தர் இறக்குற வரைக்கும் கேப்டனை விட்டுக்கொடுக்கலை! - Kaja Mohideen | Vijayakanth | Vikatan

29 C