பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்
வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன. அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும் பற்கள் இழப்பு, ஈறு நோய்களுக்கான ரிஸ்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போருக்கு, வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், முறையான பல் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதிலும் நடைமுறை சவால்கள் இருப்பதால், அவர்கள் வாய் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட முதியோர்களுக்கு பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கலாம். அவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது கருவிகளைக் கண்டு பயப்படலாம். அவர்களுக்கு வலி குறைந்த எளிய சிகிச்சைகள் (Minimally Invasive Treatments) மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை உணர்த்தியுள்ளது. நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். சோர்வு, மறதி, மன அழுத்தம், தசைப்பிடிப்பு... வைட்டமின் பி12 குறைபாடு -அறிகுறிகள் முதல் தீர்வுகள் வரை இந்த ஆய்வறிக்கை சொல்வது உண்மைதானா... வாய் சுகாதாரத்துக்கும் அல்சைமர் நோய்க்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம். ''வாய் சுகாதாரம் மற்றும் அல்சைமர் நோய்க்கு இடையிலான தொடர்பு சற்றே சிக்கலானது. இது ஒரு சுழற்சி போன்றது... ஒன்றினால் மற்றொன்று பாதிக்கும். மூளை செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அமிலாய்டு (Amyloid) மற்றும் டாவ் (Tau) எனப்படும் புரதங்கள் நச்சுப் படிமங்களாகப் படிந்து, செல்களைச் சாகடிக்கின்றன. இந்த நச்சுகளால் மூளை செல்கள் அழிவதால், காலப்போக்கில் மூளையின் அளவு சுருங்குகிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்குப் பொறுப்பு வகிக்கும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சைமர் நோய் ஒருவரின் மூளையைப் பாதிப்பதால், அவர் சுய பராமரிப்பை (Self-care) மறந்து விடுகிறார். சிறுவயதில் கற்றுக்கொண்ட அடிப்படைப் பழக்கங்கள் மறந்து போவதால், அவர்களின் வாய் சுகாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சுய பராமரிப்பு என்பது நாம் வளரும்போது சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம். இந்தத் திறன் இழக்கப்படும்போது, அந்த நபரின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதில் இயல்பாகவே வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் அடங்கும். எனவே, அல்சைமர் நோயாளிகளுக்கு வாய் சுகாதாரமின்மையைக் காண்பது அசாதாரணமானது அல்ல. சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். Alzheimer's Disease: நினைவுகள் நழுவும் நிஜ உலகம்... அதிகரிக்கும் அல்சைமர் பாதிப்பு... இன்னொரு புறம், சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். இந்தத் தொற்றுகள் உடலில் ஒருவித அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் மூளைக்குச் செல்லும்போது, அங்கும் பாதிப்பை (Neuroinflammation) ஏற்படுத்துகிறது. இதுதான் அல்சைமர் நோயில் மூளையில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. மூளையில் நச்சுப் படிமங்கள் (Plaques and Tangles) உருவாகக் காரணமாகிறது. இதுவே அல்சைமர் நோய் தீவிரமடைய வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து கேட்பதற்குச் சரியாக இருப்பது போல தோன்றினாலும், இது இன்னும் அறிவியல்ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும், தரவுகளும் வந்த பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார் டாக்டர் மீனாட்சி சுந்தரம். Sudden Death Syndrome: அச்சுறுத்தும் இளவயது திடீர் மரணங்கள்! - அலர்ட் ஆகவேண்டிய தருணம் இது...
Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?
Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள். கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்' என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல முக்கியப் பிரச்னைகளுக்கு கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது. முருங்கைக்கீரை பெண் உடல், உணர்வு, உணவு - 13: தொடர்ந்து மாறும் பீரியட்ஸ் சுழற்சி; மருந்துகள் இல்லாமலே சரி செய்யலாம்! கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும். கல்யாண முருங்கைக்கீரை மதுரையில் மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து 'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை' செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா? கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது. இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில் தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால் அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை. வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என் தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? -Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination). நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை. உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை. உடல் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்! தற்போது நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?
தூக்கம் வரலையா... அதுக்கொரு கம்மீஸ்... முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்... ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gummies ). மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவை இனிப்பாக, மிட்டாய் மாதிரி, குறிப்பாக, ஜெல்லி மிட்டாய் போன்று விதம்விதமான சுவைகளில் கிடைப்பதால், பலரிடமும் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல், அதைச் சிரமமாக உணரும் பெரியவர்கள் வரை பலரும் கம்மீஸை மறுப்பு சொல்லாமல் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது. கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உண்மையில் கம்மீஸ் என்பவை ஆரோக்கியமானவைதானா... அவற்றை எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... பக்க விளைவுகள் இருக்குமா...? விரிவாகப் பேசுகிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். ''கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், 'Yellow 5', 'B1' போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன. மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ், முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என மார்க்கெட்டில் பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில் மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம். தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free) குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும். மாத்திரை விழுங்க சிரமப்படுபவர்கள், குறிப்பாக, பெரிய அளவு மாத்திரைகளை விழுங்க முடியாதவர்களுக்கு கம்மீஸ் (Gummies) சிறந்த மாற்றாகத் தெரியலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விழுங்குவது எளிது என்பதால் கம்மீஸ் எடுத்துக்கொள்ள விரும்பலாம். எனினும் இவர்களுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் (Pediatrician) ஆலோசனையைப் பெறுவது அவசியம். சர்க்கரைநோய், பிசிஓஎஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கம்மீஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தில் பலரும் அதற்கான ஹேர் கம்மீஸ் (Hair Gummies) பயன்படுத்துகிறார்கள். ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் C இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா? சரியான உணவை (கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ்) உட்கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின், வைட்டமின் டி, பி12 அல்லது புரதச்சத்து குறைவாக இருந்தால், வெறும் கம்மீஸ் எடுத்துக்கொள்வதால் மட்டும் பெரிய மாற்றம் ஏற்படாது. கம்மீஸ் வாங்கும் போது, அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவு, ஊட்டச்சத்தின் அளவு, எடுத்துக்கொள்ள வேண்டிய டோசேஜ், சைவம் அல்லது அசைவம் என எதிலிருந்து தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி (Expiry date) போன்றவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம். அதிக சர்க்கரை உள்ள கம்மீஸ் பற்சிதைவை (Cavity) உண்டாக்கும். எனவே, அவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.
Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?
Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல. வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் 'குகுர்பிடேசின்' (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம், சில சமயம் வாந்தியில் ரத்தம் வரும் அளவிற்கு (Blood vomiting) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த ' குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. Doctor Vikatan: வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..? கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த 'குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன், அவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு, ஒரு சிறிய துண்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, கசப்புத்தன்மை இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துவது சிறந்தது. கசப்பாக இருந்தால் கண்டிப்பாகச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! - அமைச்சர் சொல்வதென்ன?
மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது. இது தொடர்பாக மேகாலயா சட்டப்பேரவையில் பேசியிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா, 2026 ஜனவரி 26 கணக்குப்படி மேகாலயாவில் 10,293 நபர்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹெச்.ஐ.வி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் 749 இறந்துள்ளனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது அதிகபட்சமாக கிழக்கு காசி மலை பகுதியில் 435 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேகாலயாவில் ஹெச்.ஐ.வி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஹெச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து விவாதிக்க பிரத்யேக சட்டமன்ற மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா ஹெச்.ஐ.வி என்பது இனி மரணத்தண்டனை அல்ல. முறையான சிகிச்சை மூலம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறியிருக்கிறார்.
Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?
Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா... வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை கேப்னோசைட்டோபேகா என்பது ஒரு சாதாரண பாக்டீரியா வகை. இது பலருடைய உமிழ்நீரில் (saliva) காணப்படக்கூடியது. இதில் Capnocytophaga canimorsus என்ற வகை பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்கும். பொதுவாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த பாக்டீரியா அதிக அளவில் ரத்தத்தில் கலந்தால் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் வளர்க்கும் மிருகங்களாக இருந்தாலும், அவை கடித்த காயம் பெரியதாக இருக்கும்போது, வழக்கமான சிகிச்சையுடன் குறிப்பிட்ட இந்தக் கிருமிக்கான சிறப்பு மருத்துவ கவனிப்பும் (atypical coverage) தேவைப்படும். இது போன்ற சூழல்களில் கேப்னோசைட்டோபேகா மட்டுமன்றி Bartonella, Pasteurella போன்ற இதர பாக்டீரியாக்களும் தொற்றை உண்டாக்கலாம். வளர்ப்புப் பிராணிகள் வெறுமனே நக்குவதால் மட்டும் இது பரவாது. மாறாக, நம் உடலின் சவ்வுப் படலம் (mucosal surface) உள்ள பகுதிகளில் நக்கினாலோ அல்லது வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ மட்டுமே இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நாய் அல்லது பூனை கடித்த காயம் மிகவும் ஆழமாக (deep bite) இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்தப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா? காயமும் ஆழமாக இருந்து, ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் நிலையில், மேற்கூறிய காரணங்களால் தொற்று ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை (major infection) உண்டாக்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில் இது தானாகவே சரியாகிவிடும். இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்ற கிருமிகள் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதும், இந்தப் பெண்ணுக்கு நடந்த விஷயமும் அரிதினும் அரிதான நிகழ்வு என்பதால் இதற்காகப் பயப்படத் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!
வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவேன்' என ஸ்டிரிக் ஆபிசராக மாறி டயட்டை கடைப்பிடிப்பார்கள். சில நாள்களிலேயே டயட்டை பின்பற்ற முடியாமல் மீண்டும் பழைய பழக்கத்துக்கே சென்றுவிடுவார்கள். வெயிட் லாஸ் டயட் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நமது மூளையின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எடை இழப்புக்கான டயட்டை கைவிடுவதற்குப் பின்னால் ஒரு வலுவான நரம்பியல் காரணம் உள்ளது என்பது உண்மையே. ஒரு புதிய டயட்டை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, சில நாள்களிலேயே அதைக் கைவிடுவது என்பது பலரும் அனுபவிக்கும் பொதுவான சவால் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். இது பற்றி மேலும் விளக்குகையில், இது வெறும் மன உறுதி (Willpower) சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதன் பின்னணியில் சிக்கலான நரம்பியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன. நமது மூளை உணவை எப்படி ஒரு வெகுமதியாகக் கருதுகிறது, சுயக்கட்டுப்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், டயட்டை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக அறிய முடியும். brain நமது மூளை உடலைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் எடை குறைய ஆரம்பித்தால் மூளை அதை ஓர் அபாயம் என்று உணரும். இதனால் மூளை ஆற்றலை சேமிக்கும் மோடுக்கு மாறும். மேலும், பசியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கும், வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் குறையும். இதனால் கிரேவிங்ஸ் அதிகரித்து, அதிகமாக சாப்பிடத் தோன்றலாம். உணவுக் கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடலாம். இதை மனவலிமைக் குறைவு என்று நினைக்க வேண்டாம். இது உயிரியல் எதிர்வினைதான் (Biological Response). நமது மூளையில் ரிவார்ட் சிஸ்டம் (Reward System) என்று ஒரு பகுதி உள்ளது. நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போது டோபமைன் ஹார்மோன் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போது இந்த ரிவார்ட் குறைகிறது. அதே போல, நம்முடைய பழைய உணவுப்பழக்கம் நமது மூளையின் நரம்பியல் பாதையில் வலுவாகப் பதிந்திருக்கும். அதை மாற்றி புதிய பழக்கங்களை உருவாக்கிப் பின்பற்ற சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். இதனால் ஆரம்ப நாள்களில் டயட்டை தொடர்ந்து சீராகப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும். diet உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற முடியாதது என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பலவீனம் அல்ல. நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும் என்று தூண்டப்படும் அதீத ஆசை’, நாள் முழுவதும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம், டயட்டில் ஏதேனும் சிறிய தவறு செய்துவிட்டால், அதை ஒரு பெரிய தோல்வியாக கருதும் உளவியல் விளைவு ஆகியவை, இந்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்குகின்றன. சிலரால் மட்டும் எப்படி முடிகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) எனும் மூளையைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். அதாவது, மூளையில் பல்வேறு நரம்பியல் இணைப்புகள் இருக்கும். டயட்டை பின்பற்றும்போது சிலர் எடுத்த உடனே கடுமையான உணவுமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மெதுவாகவும் பொறுமையாகவும் மாற்றங்களைச் செய்கிறார்கள். தொடர்ந்து ஆரோக்கியமான நடத்தைகளை கடைப்பிடிப்பதன் மூலம், மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாகின்றன. காலப்போக்கில் இந்த ஆரோக்கியமான நடத்தைகள் நிரந்தரமான பழக்கவழக்கங்களாக மாறிவிடுகின்றன. Dr. Prabash Prabhakaran டயட்டை பின்பற்ற என்ன செய்யலாம்? இந்த நரம்பியல் சார்ந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், டயட்டை பின்பற்ற சில உத்திகளைப் பின்பற்றலாம். அதாவது, பார்க்கும் இடத்தில் பழங்கள், நட்ஸ், சாலட் தயாரிக்கத் தேவையானவை போன்ற ஆரோக்கிய உணவுகளை வைத்திருக்கலாம். பிஸ்கெட், சிப்ஸ் போன்ற ஆரோக்கியத்துக்கு எதிரானவைகளை வாங்காமல் தவிர்த்துவிடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்துவிடுங்கள். வாராந்திர உணவுத் திட்டத்தை முன்பே தயாரித்து, அதற்கான பொருள்களை வாங்கி வைத்துவிடலாம். உணவு நேரம் தவிர, பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தேர்வுகள் என்ன இருக்கிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துவிடலாம். ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதுபோல கடின இலக்குகளை நிர்ணயிக்காமல், 'முதலில் ஃபிட்னஸை மேம்படுத்தலாம், அதன் பிறகு எடைக் குறைப்பைப் பற்றி தீர்மானிக்கலாம்' என்பது போல அடையக்கூடிய எதார்த்தமான, சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். weight loss diet தொடர் முயற்சி தேவை... உணவுக் கட்டுப்பாடு, வெயிட் லாஸ் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் (Consistency) முக்கியமே தவிர, 'பெர்ஃபெக்ஷன்' (Perfection) அல்ல. இன்னைக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுட்டேன். டயட் கெட்டுப்போச்சு என்று வருந்துவதைவிட, ஏழு நாள்களில் ஐந்து நாள்கள் தொடர்ந்து டயட்டை பின்பற்றுவது சிறந்தது. ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்பதற்காக, அன்றைய தினம் உடற்பயிற்சியையே சிலர் தவிர்ப்பார்கள். அதற்கு பதில் அரை மணி நேரம் உடற்பயிற்சியாவது செய்வது நல்லது. தொடர் முயற்சிகளில் ஈடுபட்டால், 'பெர்ஃபெக்ஷன்' தானாக வந்துவிடும் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது. சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் காரணங்களால்தான் மற்ற பருப்பு வகைகளைவிட சோயா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அசைவ உணவுகளான மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தைவிட, சோயாவில் மிக உயர்தரமான புரதம் (Good Quality Protein) அதிக அளவில் கிடைக்கிறது. மெனோபாஸ் (Menopause) காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டைத் தணிப்பதுடன், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரதச்சத்தை சோயா தாராளமாக வழங்குகிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm count) அதிகரிக்கவும், ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யவும் சோயா உதவுகிறது. சோயா பனீர் Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பால் அலர்ஜி... இனி வாழ்நாள் முழுவதும் பாலே குடிக்க முடியாதா? சோயா உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றாக வேகவைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் (Soya Chunks) வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், செரிமானம் ஆக சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரவில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சோயாவை ஊறவைத்து அரைத்து அதன் பாலைப் பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் டெட்ரா பேக்குகளில் (Tetra pack) சோயா மில்க் கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சோயாவிலிருந்து பெறப்படும் பனீரான டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். டெம்பே (Tempeh) என்பது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்பட்ட (Fermented) உணவுப் பொருள். இது முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பண்புகளைக் கொண்டது. குறிப்பாக, பாடி பில்டர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். சோயாவை எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஷாலோ ஃப்ரை (Shallow fry) செய்து சாப்பிடலாம். சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்து அடை செய்யலாம் அல்லது சுண்டல் போலவும் செய்து சாப்பிடலாம். சிலருக்கு சோயா சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இது மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே ஏற்படும். சோயாவில் நல்ல தரமான புரதம் இருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை விட இதில் கொழுப்புச்சத்து (சுமார் 9 கிராம்) சற்றே அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துவிட்டு, சோயாவையும் நார்ச்சத்துள்ள (Fiber) உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சோயா பால் Doctor Vikatan: பனீர் சாப்பிட்டால் எடை கூடுமா... தினமும் சாப்பிடலாமா...? மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Highly processed) சோயா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், சாதாரணமாகச் சமைக்கப்படும் சோயா சுண்டல் போன்ற உணவுகளை உண்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு குறைவது போன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி சோயா உணவுகளால் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி (Breast development) அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. சோயாவுக்கும் மார்பக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

28 C