SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

தி ராட்சை முதல் தர்பூசணி வரை எல்லாப் பழங்களுமே விதைகளின்றி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் விதைகளைக் கடித்துத் துப்பவேண்டிய அவசியம் இல்லை என்பதால் விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். சீட்லெஸ் பழங்கள் ஆரோக்கியமானவைதானா என்கிற கேள்வியை மருத்துவர்களின் முன்வைத்தோம். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிலையைக் குறைக்கிறது. சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசியபோது, “அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள், அவற்றிலுள்ள இனிப்புச் சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள். தற்போது சந்தையில் திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல் ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக் கொண்டு வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும், அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யவும்தான். ஆனால், இந்த விதையிழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம் இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும். தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம் அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள் இருந்தன. இன்றும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்பழங்களில் கடுகு வடிவிலான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். காலத்திற்கேற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே தனது தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால், மனிதன் தனது அவசரத் தேவைகளுக்காக விதையை நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது. விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? விற்கப்படுகின்றன. திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு . பன்னீர் திராட்சையை விதைகளுடன் உண்ணும்போது விதையிலுள்ள ‘ரிசர்வெட்டால்’ என்கிற பொருள் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள். வெளிநாட்டுச் சந்தையில் திராட்சையின் விதைகள் கிலோ 1200 டாலருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், உடலுக்கு நன்மை தராத சீட்லெஸ் திராட்சை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். விதைகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒரு பயன் கட்டாயம் இருக்கும். ஒரு விதை ஒரு தாவரத்தை உருவாக்க கூடிய தன்மை, தானாக மகரந்தச்சேர்க்கைக்கு உட்பட்டுக் கனியாகும் தன்மை எனப் பல சிறப்புத் தன்மைகளைப் பெற்றிருக்கும். ஒட்டுமொத்தமாக சீட்லெஸ் விதைகளையோ அல்லது பழங்களையோ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், விதைகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம்தான் கையேந்த வேண்டும். முன்பெல்லாம் விவசாயிகள் வீட்டிலேயே விதைகளைத் தேவைக்கு ஏற்ப எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம். சீட்லெஸ் பழங்களைத் தொடர்ந்து விளைவிக்கும்போது விவசாயி விதைக்கு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலைதான் ஏற்படும். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? பல உணவுத்தொழில் நுட்பங்கள், ரசாயனங்கள் இங்கே புகுத்தப்பட்டதற்கான காரணம் ‘உணவுத்தேவை’தான். அதற்காகத் தொழில்நுட்பமே வேண்டாம் எனச் சொல்லவில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடிய தொழில்நுட்பமும், அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தொழில்நுட்பங்களும்தான் இங்கு தேவை. எனவே விதையுள்ள பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது’’ என்கிறார். Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்! சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து உணவியல் நிபுணர் விமலா அவர்கள், “இயற்கையாகவே விதையுள்ள பழங்கள்தாம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை. விதையில்லா திராட்சை, பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் இன்று விதையில்லாமல் கிடைக்கின்றன. வீரிய ரக விதைகளைக் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் ஆக்சின்(auxin) என்ற ரசாயனம் கலக்கப்படும். இந்த முறைக்கு ‘பார்த்தினோ கார்பிக்’ என்று பெயர். இத்தொழில்நுட்பத்தின் மூலம், பழங்களில் விதை உருவாவதைத் தடுத்து சதைப்பகுதியை அதிகமாக்கிக் கொடுத்துவிடும். ஆனால், பழங்களின் இயற்கைத்தன்மையே விதைகளைக் கொண்டிருப்பதுதான். விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? சீட்லெஸ் பழங்களுக்கு இனிப்புச் சுவை அதிகம் உண்டு. ஆனால்... விதையில்லாப் பழங்கள் அதிகமாக வருவதற்குக் காரணம், மக்கள் பழங்களை முழுமையாக உண்டு அதன் இனிப்புச் சுவையை மட்டுமே பெற விரும்புவதுதான். மேலும், ஜூஸ் கடைகளிலும், விதையில்லாத (சீட்லெஸ்) பழங்கள் அதிகமாக வாங்கப்படுகின்றன. காரணம் விதையுள்ள பழங்களில் ஜூஸ் பிழிவதால் விதை கலந்து ஜூஸ் கசந்துபோக வாய்ப்பு உண்டு. பழக்கடைகளிலும் விதையில்லாத பழங்கள் மக்கள் அதிகமாக விரும்பிக் கேட்பதால் அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். சீட்லெஸ் பழங்களுக்கு இனிப்புச் சுவை அதிகம் உண்டு. ஆனால், ஆரோக்கியமானவை அல்ல. Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக... சீட்லெஸ் பழங்களில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்கள் பழங்களை சீக்கிரம் கெட்டுப்போக விடாது. மேலும், உடலுக்கு எந்த விதமான சத்துகளையும் கொடுக்காது. இதுதவிர, சீட்லெஸ் பழங்களால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சீட்லெஸ் பழங்கள் மட்டுமே சாப்பிடும் ஒருசில மக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தபோது அவர்களுக்குத் தொற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அலர்ஜியும் வரலாம்! இந்த சீட்லெஸ் விதைகளில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயனங்களினால் சிலருக்கு அலர்ஜியும் வரலாம். இதுதவிர சீட்லெஸ் விதைகளில் ஜீன்களின் கட்டமைப்பு மாற்றப்படுவதால், அவ்விதைகளில் உருவாகும் பழங்களை உண்பதால், உண்பவர்களின் ஜீன்களிலும் படிப்படியாக மாற்றம் நிகழலாம். நிரந்தரமாக உடலில் தங்கும் நோய்களைக்கூட இந்த சீட்லெஸ் பழங்கள் ஏற்படுத்தும். நமக்குக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆர்கானிக் வகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதேபோல, விதையுள்ள பழங்களை அதிகமாக உண்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என்றார். Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 23 Jun 2025 7:00 am

Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!

கு ழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில் எக்கச்சக்க அழகுக் குறிப்புகளும் இருக்கின்றன என்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசந்த்ரா.  ஃபேஸ் பேக் பொலிவான முகம்! வெயிலில் சென்று வந்தப் பிறகு நெற்றியும், கன்னங்களும், மூக்கும் நிறம் மாறி கறுத்துப் போயிருக்கும். உருளைக்கிழங்கை அரைத்து, சாறு எடுத்து, அதை உடனே முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலசி விட்டீர்கள் என்றால், வெயிலால் கருத்த முகத்தின் நிறம் மாறி பழைய பொலிவுக்கு வந்துவிடும்.  நேச்சுரல் ப்ளீச்! நேரம் காலம் பார்க்காமல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு, அது ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்குமே கருவளையம் கட்டாயம் இருக்கும். இவர்கள் உருளைக்கிழங்கை அரைத்து, சாறுப் பிழிந்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கிற நேச்சுரல் ப்ளீச் கருவளையத்தை படிப்படியாக சரி செய்து விடும். உருளைக்கிழங்கு ஃபேஷியல் கண்கள் பிரைட்டாக மாறும்! கருவளையம் காரணமாக பலருக்கும் கண்கள் இடுங்கியது போல இருக்கும். உருளைக்கிழங்குச் சாறு கருவளையத்தை நீக்கிய பின்பு முகம் மட்டுமல்ல கண்களும் பிரைட்டாக பளிச்சென்று தெரியும்.  சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story கண் ஓரக் கோடுகள்! கண்களின் ஓரத்தில் சிலருக்கு கோடுகள் விழுந்திருக்கும். இது அவர்களை வயதானவர் போல காட்டும். இவர்கள் தினமும் உருளைக்கிழங்குச் சாறைத் தொட்டு அந்தக் கோடுகளின் மீது வைத்து வந்தால், மெள்ள மெள்ள அது குறைய ஆரம்பிக்கும். கறுப்பான கழுத்துக்கு.. கறுத்த கழுத்துக்கு... சிலருக்கு கழுத்தில் செயின் உரசி உரசி கருப்பாக இருக்கும். அவர்களும் அடிக்கடி உருளைக்கிழங்குச் சாறை அந்த இடத்தில் தடவி வந்தால் கருமை மாறும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! உருளைக்கிழங்கு ஃபேஷியல் உருளைக்கிழங்குச் சாறு 2 டீஸ்பூன், சம அளவு காய்ச்சாதப் பால், சில துளிகள் கிளிசரின், பாதாம் எண்ணெய்  சில துளிகள், முல்தானி மட்டி போலவே இருக்கும் கயோலின் மண் (kaolin powder) சிறிதளவு... இவை ஐந்தையும் நன்கு கலந்து, வாரம் இரண்டு முறை முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு வந்தால், ஃபேஷியல் செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 22 Jun 2025 8:23 am

உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி A. KURUZ THANAMA. KURUZ THANAM

விகடன் 21 Jun 2025 8:11 pm

மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?

வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இயர்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை வரை பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒப்பனை கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தியதால் கிட்டத்தட்ட 45% காது கேட்கும் திறனை இழந்ததாக கூறியிருக்கிறார். ஆருசி என்ற பெண்ணின் பதிவின்படி, டெல்லிக்கு செல்லும்போது அவர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தனது இயர்போன்களை பயன்படுத்தி இருக்கிறார். மறுநாள் காலையில் அவரது இடது காது, கேட்கும் திறனை இழந்ததாக குறிப்பிட்டார், ஆரம்பத்தில் அதை நிராகரித்தவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவரை அணுகி பரிசோதித்திருக்கிறார். இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவரது இடது காதில் 45% காது கேளாமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். திடீரென ஏற்பட்ட காதுகேளாமையை சரி செய்ய மருத்துவரிடம் அணுகியபோது அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. காதில் ஸ்டெராய்டுகள் செலுத்தியதாகவும், ஊசி போன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கையாக ஸ்பீக்கர்களையோ அதிகமான சத்தங்கள் இருக்கும் இடங்களையோ தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இடையில் ஏற்பட்ட காதுகேளாமையை, சிகிச்சை பெற்று சரி செய்யலாம் என்று நம்பிக்கையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மீண்டும் செவித்திறன் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமையில் இருந்து மீள முடியாது என்று குறிப்பிட்டார் அந்த பெண். இதனை ஒரு விழிப்புணர்வு பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எச்சரித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்று வருகிறது. View this post on Instagram A post shared by Aarushi Oswal (@aarushimakeupartist) புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?

விகடன் 21 Jun 2025 3:11 pm

Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்

சென்னை, அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் [Tamil Nadu's first Centre of Excellence in Pediatric Orthopedics and Trauma Care] தொடங்குவதாக அறிவித்தது. குழந்தைகள் விளையாட்டில் அடையும் வழக்கமான காயங்கள் முதல் பிறக்கும் போதே இருக்கும் சிக்கலான நிலைமைகள் வரை, சிறப்பு எலும்பியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான மாநிலத்தின் முதன்மையான சிகிச்சை மையமாக இது செயல்படும். அப்போலோ மருத்துவமனையின் சென்னை வளாகத்தில் அனுபவம் வாய்ந்த குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு குழுக்களை [pediatric orthopedic surgeons, trauma specialists, rehabilitation teams] இந்த சிறப்பு சிகிச்சை மையம் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. அப்போலோ மருத்துவமனை குழந்தை மருத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்கு அடையாளமாக இந்த  குழந்தை எலும்பியல் மருத்துவம், அவசரகால சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியா முழுவதிலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை இம்மையம் பூர்த்தி செய்யும் விதமாக செயல்படும். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் எலும்பியல் தொடர்பான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையிலுள்ள குழந்தை மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் காயங்கள் முதல் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் கிளப்ஃபுட் மற்றும் இடுப்பில் ஏற்படும் ஹிப் டிஸ்ப்ளாசியா [clubfoot & hip dysplasia] போன்ற பிறவிலேயே இருக்கும் நிலைமைகள் வரையிலான பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். இதை சமாளிக்கும் வகையில் விரைவான மற்றும் பயனுள்ள குழந்தை சார்ந்த எலும்பியல் பராமரிப்புக்கான தேவையை இந்த சிறப்பு சிகிச்சை மையம் பூர்த்தி செய்கிறது. பிறவியிலேயே இருக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள், மூட்டு குறைபாடுகள், நரம்புத்தசை பிரச்சினைகள், காயங்கள், தொற்றுகள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கட்டிகள் [pediatric orthopedic conditions, including congenital and developmental disorders, limb deformities, neuromuscular issues, injuries, infections, tumors] உள்ளிட்ட குழந்தை எலும்பியல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த  சிறப்புக்குழு நிபுணத்துவம் பெற்றது. இந்த சிகிச்சைகளில் முதுகெலும்பு குறைபாடுகள் மற்றும் நடப்பதில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. அப்போலோ குழந்தைகள்மருத்துவமனையின்மூத்தஆலோசகர்குழந்தைஎலும்பியல்மற்றும்முதுகெலும்புஅறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர்ஆர். சங்கர் [Dr. R. Sankar, Sr. Consultant Pediatric Orthopedic & Spine Surgeon, Apollo Children’s Hospitals] கூறுகையில், இந்தசிறப்புசிகிச்சைமையத்தின்அறிமுகமானது, தமிழ்நாட்டில்குழந்தைதசைக்கூட்டுபராமரிப்பில் [pediatric musculoskeletal care] ஒருகுறிப்பிடத்தக்கமுன்னேற்றத்தைக்குறிக்கும்வகையில்அமைந்திருக்கிறது. காயங்கள்அல்லதுகுறைபாடுகளுக்குசிகிச்சையளிப்பதுமட்டுமல்ல, ஒவ்வொருகுழந்தையும்வழக்கமானமுழுசெயல்பாடுகளைமேற்கொள்ளசெய்வதையும், உடல்அசைவுகளிலானஇயக்கத்தைபெறுவதிலும், முழுநம்பிக்கையுடன்திரும்புவதையும்உறுதிசெய்வதேஎங்களுடையகுறிக்கோளாகஇருக்கிறது. மிகவும்மேம்பட்டநவீனஅறுவைசிகிச்சைதொழில்நுட்பங்கள்மற்றும்பன்னோக்குசிறப்புசிகிச்சைநிபுணர்களின்ஆதரவையும்பெற்றிருப்பதால், வழக்கமானவிளையாட்டுகாயங்கள்முதல்குழந்தைகளில்காணப்படும் மிகவும் சிக்கலான எலும்பியல் பிரச்சினைகள் வரை அனைத்தையும் திறம்பட கையாள நாங்கள் தயாராக உள்ளோம். என்றார். அப்போலோ  மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO - Chennai Region, Apollo Hospitals] கூறுகையில், ‘’குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது.  குழந்தைகளுக்கு ஏற்ற, அவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் முறை மற்றும் நவீன மருத்துவ பராமரிப்பை ஒருங்கிணைத்திருப்பது இந்த சிறப்பு சிகிச்சை மையம் மற்ற சிகிச்சை மையங்களிலிருந்து தனித்துவமிக்கதாக  மாற்றியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தங்கியிருக்கும் அறைகளில், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் ஈடுபடக்கூடிய அம்சங்களைக் கொண்ட  சுவர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அதே நேரம்,  உடல்ரீதியான சிகிச்சைகளுக்கான பகுதிகள், சிகிச்சை அறைகளைப் போல் இல்லாமல், குழந்தைகள் விளையாட்டைப் போல் உணரும் வகையிலான மருத்துவ உபகரணங்கள் இருப்பதால், குழந்தைகளின் மறுவாழ்வு பயிற்சிகளை எளிதில் செய்யத் தூண்டுகிறது.  15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த அனுபவமிக்க நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறை இவை இரண்டும், குழந்தை மருத்துவத்தில் வரையறைக்கான ஒரு அளவுகோலாக எங்களது மையத்தை முக்கியத்துவம் பெறச் செய்திருக்கிறது’’ என்றார். இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் குழந்தை மருத்துவ நடைமுறைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உபகரணங்கள் உள்ளன. இதில் சிறிய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் திறம்பட செயல்படும் இமேஜிங் சிஸ்டம்கள் மற்றும் குழந்தைகளின் உடற்கூறியல் அளவிற்கு ஏற்ற அளவிலான அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவையும் அடங்கும். அறுவை சிகிச்சை அரங்குகளில் மேம்பட்ட காட்சிப்படுத்தல் தொழில்நுட்பம் உள்ளது. இத்தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மென்மையான, வளரும் திசுக்களில் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறது. இந்த மையம் மாதந்தோறும் 140 மருத்துவ நடைமுறைகளைக் கையாளக் கூடிய திறன் பெற்றது. மேலும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பது பற்றி விவாதிக்கக்கூடிய ஆலோசனைகளும் அடங்கும். அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற நற்பெயரை அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த புதிய  சிறப்பு சிகிச்சை மையம், தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக, தனது முக்கியத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகிறது.. மேலும் சவாலான காலங்களில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுடன் மருத்துவ நிபுணத்துவத்தை துல்லியமாக அளிப்பதால் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனை பற்றி: 1983-ல்டாக்டர்பிரதாப்சிரெட்டிசென்னையில்இந்தியாவிலேயேமுதல்முறையாகமிகப்பெரியகார்ப்பரேட்மருத்துவமனையைத்தொடங்கியதன்மூலம்ஒருமுன்னோடிமுயற்சியைமேற்கொண்டார். அப்போதுஇந்தியாவில்அப்போலோஒருமிகப்பெரியமருத்துவப்புரட்சியைஏற்படுத்தியது. இன்றுஆசியாவிலேயேமிகவும்நம்பகமானஒருங்கிணைந்தமருத்துவநலகுழுமமாகதிகழும்அதில், உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், சுமார் 6600 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 2182 மருத்துவ பரிசோதனை மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.  ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.

விகடன் 21 Jun 2025 12:28 pm

Yoga Day: கோவையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி; மத்திய அதிவிரைவுப்படையினர் பங்கேற்பு | Photo Album

மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மனதாலும் உடலாலும் அடிக்கடி சோர்ந்துபோகிறீர்களா... உங்களுக்கான இலவச மருத்துவர் இதோ! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 21 Jun 2025 12:15 pm

Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?

Doctor Vikatan:  ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள்  அவசியமா அல்லது  கட்டுக்குள் வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் ரத்த அழுத்தத்தைப் பல வழிகளில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மிக முக்கியமாக, வாழ்க்கைமுறை மாற்றங்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு, உப்பு குறைவான உணவுப்பழக்கம், எடைக்குறைப்பு, ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, போதுமான அளவு தூங்குவது போன்றவை.. தேவைப்பட்டால் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் நீங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், பிபி (BP) மருந்துகள் எடுத்துக்கொள்வதை மெள்ள மெள்ள நிறுத்திவிடலாம். ஆனால், உங்களுக்கு மாத்திரைகளின் உதவியால்தான் ரத்த அழுத்தம்  கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற நிலையில், மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் முதல் வேலையாக, ஒரு நாளைக்கு உணவில் 2 கிராமுக்கு மேல் உப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். பர்சனல், வேலையிடம் என எல்லாவிதமான ஸ்ட்ரெஸ்ஸையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் எடையில் 8 முதல் 10 சதவிகிதத்தைக் குறைத்தாலே, ரத்த அழுத்தம் குறையும். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, மாத்திரைகளும் தேவைப்படும்.  வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒழுங்காகப் பின்பற்றுவோருக்கு மாத்திரைகள் குறைந்த அளவே தேவைப்படும்.  மாத்திரைகளின் பக்கவிளைவுகளுக்கு பயந்துகொண்டு பலரும், ரத்த அழுத்தம் அதிகமானாலும் பரவாயில்லை என அலட்சியமாக இருக்கிறார்கள். பிளட் பிரஷர் என்பது ஒருவித சைலன்ட் கில்லர். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். ரத்தக்குழாய்களின் அடர்த்தி அதிகரிக்கும் நிலையானது, நீங்கள் குறிப்பிடுகிற 'கொஞ்சூண்டு ஜாஸ்தி' என்ற கட்டத்திலேயே தொடங்கிவிடும். அந்த நேரத்தில் அறிகுறிகள்கூட இருக்காது. எனவே, தேவைப்படும் பட்சத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே, வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் பிபி அளவானது கட்டுக்குள் வந்தபிறகு, மருத்துவரே மாத்திரைகளை படிப்படியாகக் குறைக்கச் சொல்வார். தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையிருக்காது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

விகடன் 21 Jun 2025 9:00 am

Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!

இது மாம்பழம் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? மாம்பழம் கோடையில்தான் சீசன் என்பதால், 'மாம்பழம் சூடு; வெயில் காலத்துல அதைச் சாப்பிட்டா கட்டி வந்துடும்' என்கிற பேச்சு ரொம்ப காலமாகவே நமக்கு மத்தியில் இருக்கிறது. அது உண்மைதானா என, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் மருத்துவர் விஷால் அவர்களிடம் கேட்டோம். மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? ''மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வராது. மாம்பழத்தில் வைட்டமின் A, C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு நன்மைதான் அளிக்கும். இருப்பினும், சிலருக்கு மாம்பழம் உட்கொள்ளும்போது உடலில் உஷ்ணம் அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை (sebum) உற்பத்தி அதிகமாகி, கட்டி ஏற்படுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. தவிர, அறிவியல்ரீதியாக இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வருவதைவிட உணவு ஒவ்வாமை, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சரும பராமரிப்பு பழக்கங்கள், அல்லது அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதால் முகப்பரு, கட்டிகள் ஏற்படலாம். உங்களுக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு கட்டி வருவதாக உணர்ந்தால், உணவியல் நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனைப் பெறலாம். Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா? சில ஆயுர்வேத மருத்துவர்கள் மாங்காய் உஷ்ணம் என்றும், அது கட்டிகள் வரக் காரணமாகலாம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உற்பத்தியாகும்; இதனால் சில ஹார்மோன்கள் சுரப்பதால், சிலருக்கு முகப்பரு வரலாம். சில நேரங்களில் மாம்பழத்தில் இருக்கிற வேதிப்பொருள் வாய் மற்றும் முகத்தில் பட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் விஷால் `மேங்கோ குல்ஃபி' சச்சின்,`கீற்று மாங்காய்' தீபிகா... பிரபலங்களின் மாம்பழ லவ்! மற்றபடி, மாங்காய் சாப்பிடும் அனைவருக்கும் கட்டிகள் வராது. ரசாயனம் தெளித்த பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சில அழற்சிகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க, மாங்காயைச் சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு உண்ணலாம். முடிந்தவரைப் பதப்படுத்தப்பட்ட மாங்காய் உணவுகளைச் சாப்பிடக்கூடாது. முகத்தைத் தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்; மாம்பழம் பிடிக்கும் என்றாலும் அளவாகச் சாப்பிடுங்கள். கட்டி, முகப்பருவெல்லாம் வராது'' என்கிறார் மருத்துவர் விஷால். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 21 Jun 2025 8:26 am

Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?

Doctor Vikatan: நான் சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டாலும் எனக்கு வாயுத் தொல்லை வருகிறது.   துவரம் பருப்புகூட ஏற்றுக்கொள்வதில்லை. எந்தப் பருப்பு வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது... புரதச்சத்து தேவைக்கு வேறு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு நார்ச்சத்து நிறைந்தது. அது வாயுத் தொந்தரவை ஏற்படுத்தாது. மற்றபடி துவரம் பருப்பு, கடலைப்பருப்பை சற்று குறைத்துக்கொள்ளலாம். கறுப்பு உளுந்து ஓரளவு சேர்த்துக்கொள்ளலாம். பச்சைப் பயறைப் பொறுத்தவரை, தோலுடன் சேர்த்துக்கொள்ளலாம். மொச்சைக் கொட்டை போன்றவற்றைத் தவிர்க்கவும். பருப்பு என்பது புரதச்சத்து நிறைந்த உணவு. குறிப்பாக, சைவ உணவுக்காரர்களுக்கு பருப்பின் மூலம்தான் புரதச்சத்தின் தேவை பூர்த்தி செய்யப்படும். ஒவ்வொருவரும் அவரவர் உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 50 கிலோ எடை உள்ள ஒருவர், 50 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துக்காக பருப்பு வகைகளை எடுக்கும்போது நிறைய பேருக்கு வாயுத் தொல்லை வருகிறது. அப்படிப்பட்டவர்கள் மட்டும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அடை, பயறு தோசை போன்ற புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை காலை உணவுக்குச் சாப்பிடுவது சிறந்தது. இரவு உணவுக்கு அவற்றைத் தவிர்க்கவும். காலையில் சாப்பிடும்போது, அன்றைய தினம் முழுவதும் வேலை செய்வதால், உணவு முழுமையாக செரிமானமாகிவிடும். வயிற்றையும் பதம் பார்க்காது.  பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்றவற்றை ஊறவைத்து, முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, வாயுவை உற்பத்தி செய்கிற தன்மை அவற்றில் குறையும். Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? பருப்பு சேர்த்த உணவுகளைச் சமைக்கும்போது அவற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்துச் சமைப்பது செரிமானத்தை சீராக்கும். உதாரணத்துக்கு, அடை செய்யும்போதும் அந்த மாவில் கொஞ்சம் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். வாயுப் பிரச்னைகளைத் தவிர்க்க, பயறு வகைகளை முளைகட்டச் செய்து சாப்பிட வேண்டும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலை,  கொள்ளு, கறுப்பு உளுந்து போன்றவற்றை ஊறவைத்து, முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, வாயுவை உற்பத்தி செய்கிற தன்மை அவற்றில் குறையும். முளைகட்டச் செய்வதால், வைட்டமின் ஈ சத்தும் சற்று கூடுதலாகக் கிடைக்கும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும். பருப்போடு சேர்த்து எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதும் இதில் முக்கியம். பஜ்ஜி, போண்டா மாதிரியான உணவுகள்தான் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அவைதான் அசிடிட்டி பிரச்னையை ஏற்படுத்தும். கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் செரிமான கோளாறுக்கும் அதுதான் காரணம். எனவே, கூடியவரையில் எண்ணெய் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 20 Jun 2025 8:02 am

Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நீங் கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும், டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வராது என்று நம் மூளைகளை ஆசுவாசப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. தற்காலத்தில் பலரும் மூளைக்கு ஆரோக்கியம் தராத உணவுகளையே உண்டு வருகிறார்கள். அதனால்தான், இன்றைக்கு பலருடைய மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தடுக்க, நாள்தோறும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையையும் அந்த ஆய்வு விடுத்திருக்கிறது. சரி, மூளை ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர் பாலபிரசன்னா அவர்களிடம் கேட்டோம். Brain - Representational Image ''வயதாக ஆக மனித உடலில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் நம் உடலில் உள்ள நியூரான்கள் அழிந்து, புதிய நியூரான்கள் உருவாக முடியாது. விளைவு, மூளை பாதிக்கப்படுகிறது. பொதுவாக, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா, நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். இவை அனைத்தும் வயது மூப்பால் வரக்கூடியவையே. என்றாலும், ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால் இந்த நோய்களின் வீரியம் அதிகமாக இருக்கும். தினமும் ஆரோக்கியமற்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டு, மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) என்ற பிரச்னை வரலாம். இதனால், மன அழுத்தம், படிப்பில் ஆர்வமின்மை, நினைவாற்றல் குறைவு, கவனச்சிதறல், ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள். மூளை வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? பொதுவாக, நல்ல கொழுப்புள்ள உணவுகள், அதாவது ஒமேகா-3 நிறைந்த நட்ஸ், சிறுதானியங்கள் ஆகியவை உடலில் ஏற்படுகிற வீக்கங்களைக் குறைப்பதற்கும், புதிய நியூரான் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். இதன் மூலம் டிமென்ஷியா போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். நிறைய கீரை வகைகள், பெர்ரி பழங்கள், கிரீன் டீ போன்ற உணவுகளிலும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இவை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றன. தவிர, நமது மூளைக்கும் குடலுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உணவியல் நிபுணர் பாலபிரசன்னா மூளை ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்..! உங்கள் உணவில் சர்க்கரை அளவு குறைவாக இருக்க வேண்டும், டால்டா போன்ற எண்ணெய் வகைகளைத் தவிர்க்க வேண்டும், முக்கியமாக ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். மனித மூளைக்கு தினசரி ஒரே மாதிரி வேலை தரக்கூடாது. தினம் தினம் வித்தியாசமான செயல்களைச் செய்ய வேண்டும். அடிக்கடி மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களை செய்துவந்தால், உங்கள் மூளை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா. Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 20 Jun 2025 6:56 am

Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!

இ ன்று பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்னை மனப்பதற்றம். 'ஒரே ஆங்சைட்டியா இருக்கு' என்று பயத்துடன் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தி அதைச் சரிசெய்ய முயற்சிப்பார்கள்; சிலர் அதற்கான நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவார்கள்; மீதமுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இது சரியா; மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது; அறிகுறிகள்; அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன; தீர்வுகள் இருக்கின்றனவா என்பனப்பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் லட்சுமிபாய் நம்மிடம் விளக்குகிறார். Anxiety ''மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது? மனப்பதற்றம் அல்லது ஆங்சைட்டி ஏற்படுவதற்கு, மரபணுவும் ஒரு காரணம். சம்பந்தப்பட்டவரின் சூழ்நிலை இன்னொரு காரணம். சிலர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தன்னுடன் பொருத்திக்கொண்டு, 'அவங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் ஃபிளைட் ஆக்ஸிடெண்ட் நடந்திடுமோ' என்றெல்லாம் மனப்பதற்றம் அடைவார்கள். இப்படி மூளையில் ஆங்சைட்டி ஏற்படும் பகுதிக்கு யாரெல்லாம் அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்கள் பல நோய்களுக்கு வெல்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வரவேற்கிறார்கள் என்று அர்த்தம். என் மருத்துவமனைக்கு வரும் பெண்களில் பலரும், சமீபத்தில் யாருக்கோ நடந்த பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை தங்களுக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற மனப்பதற்றத்துடன் வருகிறார்கள். மனப்பதற்றத்தின் அறிகுறிகள்... மனப்பதற்றம் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், நடுக்கம், கை-கால் உதறல், வேகமான இதயத்துடிப்பு, அதிகமாக வியர்வை போன்றவை ஏற்படும். சிலருக்கு இதயம் இருக்கும் இடத்தில் லேசான வலி போன்றதொரு உணர்வும் ஏற்படும். வயிறு உப்புசம், எதுக்களித்தல், வயிற்றில் ஒருவித அசௌகரியம், எப்போதும் சிறுநீர் அல்லது மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவையும் மனப்பதற்றத்தின் அறிகுறிகள்தான். இதயத்துடிப்பு வேகமாக இதயத்துடிப்பு மற்றும் இதயத்தில் வலிப்பதுபோல உணர்பவர்கள், 'ஹார்ட் பிராப்ளமாக இருக்குமோ' என பயந்துகொண்டு ECG, Echo, Treadmill போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மனப்பதற்றம் மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லா ரிப்போர்ட்களும் இயல்பாகவே இருக்கும். மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..? அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? மனப்பதற்றம் இருப்பவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட மாட்டார்கள். எப்போதும், எந்த வேலையைச் செய்தாலும், அவர்களது மனதில் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) ஓடிக்கொண்டே இருக்கும். விளைவு, மனதில் பிரச்னை; குடும்பத்தில் பிரச்னை; அலுவலகத்தில் பிரச்னை என தவித்துப்போவார்கள். டாக்டர் லட்சுமிபாய் Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? மனப்பதற்றத்துக்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பது சரியா? மனப்பதற்றத்தைப் பொருட்படுத்தாமல, அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை (Quality of Life) தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன். இந்தப் பிரச்னையை, பாதிக்கப்பட்டவர்களால் தனியாக சமாளிக்க முடியாது. அது அவசியமும் இல்லை. ஏனென்றால், இன்றைக்கு மனப்பதற்றத்துக்கு உளவியல்ரீதியாக நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதைப் பெற்று, மனப்பதற்றம் நீங்கி நிம்மதியாக வாழுங்கள்'' என்கிறார் டாக்டர் லட்சுமிபாய். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 19 Jun 2025 1:45 pm

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Doctor Vikatan: எனக்கு வயது 50. பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதால் கர்ப்பப்பையை அகற்றிவிடும்படி சொல்கிறார் மருத்துவர். எனக்குத் தெரிந்த சிலர், கர்ப்பப்பை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட பிறகு எக்கச்சக்கமாக உடல் எடை அதிகரித்திருக்கிறார்கள். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படுவது உண்மையா... அதைத் தவிர்க்க முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் கர்ப்பப்பையை நீக்கும் 'ஹிஸ்டெரெக்டமி' (hysterectomy) அறுவை சிகிச்சையானது, ப்ளீடிங் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களுக்காகச் செய்யப்படலாம். Doctor Vikatan: பீரியட்ஸில் அளவுக்கு அதிகமாக வெளியேறும் ப்ளீடிங்... கர்ப்பப்பை நீக்கம்தான்  தீர்வா? பொதுவாகவே, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்குமோ என்ற  பயம் பலருக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.  கர்ப்பப்பையை நீக்கும்போது, சிலருக்கு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து நீக்கிவிடுவார்கள். சினைப்பைகளை நீக்கிவிட்டால், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு இருக்காது. அதன் விளைவாக கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆஸ்டியோபொரோசிஸ் (osteoporosis) எனப்படும் பாதிப்பு வரும். இதில், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாக மாறி, வலுவிழக்கும். அதனால்தான் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எல்லாப் பெண்களையும், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும்.  அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் இயக்கம் என்பது குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாகவே சிலருக்கு உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும். முன்பெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரி முறையில்தான் அதிகம் செய்தார்கள். அந்த ஆபரேஷனுக்கு பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படும். அதனாலும் அந்தப் பெண்களின் உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும்.  அப்படியானால், கர்ப்பப்பை நீக்க ஆபரேஷன் செய்துகொள்கிற எல்லோருக்குமே உடல் எடை அதிகரிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் அறிவுரைக்கேற்ப கால்சியம் சப்ளிமென்ட்டுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால், எடை கூடாது. இப்போதெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி முறையில் செய்துவிடுகிறார்கள். இந்த முறையில் ஆபரேஷன் செய்யும்போது, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     என்ன நோய்... எந்த டாக்டர்? 9 - எலும்பும், எலும்பு சார்ந்த பிரச்னைகளும்...

விகடன் 19 Jun 2025 9:00 am

கணவனுக்கும் மனைவிக்கும் இது தெரிந்தால் விவாகரத்து நிகழாது - காமத்துக்கு மரியாதை - 245

ஒ ரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தாம்பத்திய உறவு எப்படி இருக்க வேண்டும்; திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா..? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ''இன்றைக்கு இளம் வயதில் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு வருபவர்களில் பலரும், தாம்பத்திய வாழ்க்கையில் சரியான இன்பத்தை அனுபவிக்காதவர்களாக இருக்கிறார்கள். அஃப்கோர்ஸ் இந்தப் பிரச்னை காரணமாகத்தான், அவர்கள் விவாகரத்தையே நாடுகிறார்கள். ஒரு திருமணத்தில் கணவனும் சரி, மனைவியும் சரி, ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக தெரிந்துகொண்டுதான் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பேன் நான். தன் மனைவியை எப்படி திருப்திப்படுத்துவது என்று கணவனுக்கும், உறவின்போது கணவனை எப்படித்தூண்ட வேண்டும் என மனைவிக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்களின் வீடியோக்களைப் பார்த்து அல்லது செக்ஸாலஜிஸ்ட்டின் ஆலோசனைப் பெற்று இதைத் தெரிந்துகொள்ளலாம். காமசூத்ரா எழுதிய மண்ணில் இந்த நிலைமை வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதுதான் இன்றைய யதார்த்தம். தாம்பத்தியம் `என்னோட தாழ்வு மனப்பான்மை போக ஜீவிதாதான் காரணம்!'' - நடிகர் டாக்டர் ராஜசேகர் #AangalaiPurindhuKolvom விந்து வெளியேற்றினாலே ஆண் ஆர்கசம் அடைந்து விடுவான். ஆனால், பெண் நிலைமை அப்படிக் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். பெண்கள் ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரை ஆகும். அதுவரை எந்தெந்த உடல் பாகங்களைத்தொட்டால் அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப்பகுதிகளைக் கணவன் தூண்ட வேண்டும். இதையே தான் மனைவியும் கணவனுக்கு செய்ய வேண்டும். தாம்பத்திய உறவு என்பது 'நீ பாதி நான் பாதி' ஷேரிங் தான். அதனால், 'நான் ஏதாவது செய்தால் கணவர் தப்பாக நினைத்துக்கொள்வாரோ' என்று எண்ணாமல் செக்ஸை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு செல்லவேண்டும் என மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஆண்களும் மார்பைத்தொட்டால் உணர்வெழுச்சி அடைவார்கள்'' என்றவர் தொடர்ந்தார். ``ஆண் மனது கலப்படத்துடன்தான் இருக்கிறது! - ஆண்களின் காதல் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர் திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்றால், 'அது பாதுகாப்பானது' என்றே சொல்வேன் நான். இன்றைக்கு செக்ஸ் டூரிசம் அதிகமாகி விட்டது. எங்கே போனாலும் மசாஜ் பார்லர், அங்கே ஹேப்பி எண்டிங் என உறவுகொள்கிற வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. இந்த வாய்ப்புகளை அனுபவித்தவர்கள், திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். டாக்டர் காமராஜ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 18 Jun 2025 6:00 pm

Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?

Doctor Vikatan: இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் விரல்கள் இயல்புக்கு வந்துவிடுகின்றன. இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரச்னையை  'நைட் கிராம்ப்ஸ்' (night cramps) என்று சொல்வோம். இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். வெயில் அதிகமுள்ள நாள்களிலும் சரி, குளிர்ச்சியான நாள்களிலும் சரி, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக முக்கியம்.  தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, போதுமான அளவு உப்புச்சத்து எடுக்காமல் விட்டாலும் பிரச்னைதான். அதாவது வெயில் காலத்தில், வியர்வையின் மூலம் வெளியேறும் உப்புச்சத்தை ரீப்ளேஸ் செய்ய வேண்டும். மழை நாள்களிலும், குளிர் நாள்களிலும் தாகம் அதிகமிருக்காது. ஆனாலும், அப்போதும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். அடுத்து உங்கள் உடலில் நுண்ணூட்டச் சத்துகள் குறையும்போதும் இந்தப் பிரச்னை வரலாம். வைட்டமின் குறைபாடு இருந்தாலும் இப்படி வரலாம். அடுத்த காரணம், அதிக நேரம் உழைப்பது அல்லது அளவுக்கதிகமாக ஓய்வெடுப்பது. அதாவது நீண்டநேரம் நின்றதன் விளைவாகவும் விரல்கள் இழுத்துப் பிடிப்பது போல இருக்கலாம். அல்லது கொஞ்சம்கூட உழைப்பே இல்லாமல் ஓய்விலேயே இருந்திருந்தாலும் அதன் விளைவாக இப்படி ஏற்படலாம். உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். நீர்வறட்சி ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓஆர்எஸ் பவுடரை பரிந்துரைப்பார். தவிர, காலையில் தூங்கி எழுந்ததும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கற்றுத் தருவார். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்களுடைய பிரச்னையிலிருந்து மீள்வீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

விகடன் 18 Jun 2025 9:00 am

Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் நாவல் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும் என்று சொல்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை? சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நாவல்பழத்திலும் சர்க்கரைச்சத்து இருக்கும். ஆனால், அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்துச் சாப்பிடலாம். கசப்புத்தன்மையும் நார்ச்சத்தும் உள்ள எல்லா உணவுகளுக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கும். சர்க்கரை அளவைக் குறைக்கும், சர்க்கரை நோயே இல்லாமல் செய்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் நாவல் பழ சீசனில் அதை கிலோ கிலோவாக வாங்கிச் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். உண்மையில், அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தானதே... பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் அதைச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்திலும், சீரகத்திலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் சர்க்கரைநோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் இவை மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாமே 20 சதவிகிதம் வரை சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்காக ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொள்வதால் தலா 20 சதவிகிதம் சர்க்கரை குறையும் என அர்த்தமில்லை.  தனித்தனியாக எடுத்துக்கொண்டாலும், சேர்த்து எடுத்துக்கொண்டாலும் 20 சதவிகிதம் வரை மட்டுமே சர்க்கரை அளவு குறையும். ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். Doctor Vikatan: ப்ரீ டயாபட்டீஸ் நிலை, டயாபட்டீஸாக மாறுமா... எப்படி ரிவர்ஸ் செய்வது? இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே  சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை  சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 17 Jun 2025 9:00 am

Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?

2020 - 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றால் அந்த கொரோனா ஒருவழியாக அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்னாளில் தூக்கக்கோளாறு sleep disruption, மூளை மூடுபனி (Brain fog) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்கள். கொரோனா தொற்று தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன; அவற்றை எப்படி சரிசெய்வது போன்றவற்றை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபாஷ் பிரபாகரன். அதென்ன Brain fog? ''Brain fog என்ற சொல் மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுவதில்லை. அது நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை குறிப்பிடுவதற்கு மக்களிடையே இருக்கும் ஓரு சொல்லாடல். Brain fog என்ற பிரச்னை இருப்பதாக வருபவர்களிடம் முதலில் அவர்களுக்கு நினைவில் குழப்பம், தெளிவில்லாமை, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமை, ஞாபகமறதி போன்றவற்றில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்வோம். Brain fog தூக்கக்கோளாறு என்றால் என்ன? தூக்கம் சார்ந்த பிரச்னை என்பது பல வகைகளாக இருக்கும். சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல் இருப்பது, தூங்கினாலும் இடையில் விழித்துக்கொள்வது, நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருப்பது, காலை எழுந்தாலும் சரியாக தூங்காதது போன்ற உணர்வு ஏற்படுவது, எந்நேரமும் தூக்கக்கலக்கத்துடனே இருப்பது போன்ற பிரச்னைகளை தூக்கக்கோளாறு என குறிப்பிடலாம். கொரோனாவிற்குப் பிறகு இந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? நிறைய பேர் கொரோனாவிற்கு பிறகுதான் தங்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வந்திருப்பதாக கூறி சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணம் கொரோனா காலங்களில் ஏற்பட்ட தூக்க மாற்றமாகக்கூட இருக்கலாம். கொரோனா காலங்களில் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்திருப்போம். பொழுதுபோக்கிற்காக நீண்ட நேரம் போன், டிவி என ஸ்கிரீன்களை பயன்படுத்தி இருப்போம். இவற்றால் நம்முடைய தூக்க நேரங்கள் மாறி இருக்கலாம். அதனால்கூட, இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதுவொரு காரணம். கொரோனா அடுத்தக் காரணம், கொரோனாவால் அதிகம்பேர் பாதித்தபோது, நாம் உயிர்ப்பிழைப்போமா அல்லது இறந்துவிடுவோமா என்கிற பயம் நம் எல்லோருடைய மனங்களிலும் இருந்திருக்கும். சிலர், ஐ.சி.யூ. வரைகூட சென்று மீண்டு வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்ட மன அழுத்தம், பயம் போன்றவற்றால் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது குறைவுபட்ட நோயெதிர்ப்பு சக்தி காரணமாக, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதனால்கூட இந்த பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக (Hypoxia) இருந்தாலும்கூட தூக்கக்கோளாறும், Brain fog-ம் வர வாய்ப்பு உண்டு. Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth சரிசெய்வது எப்படி? சீரான தூக்கமும், தினமும் உடற்பயிற்சி செய்வதும்தான் இவற்றுக்கான தீர்வே. தற்போது பலருக்கும் படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு 'இன்னும் தூக்கம் வரலையே' என்று அதைப்பற்றி சிந்தித்து அதையொரு கவலையாக்கிக்கொண்டு இருப்பார்கள். படுக்க சென்றவுடன் இந்த சிந்தனையை மறந்துவிட வேண்டும். எதையும் யோசிக்காமல் இருந்தாலே, படுத்தவுடன் நல்ல தூக்கம் வரும். தவிர, தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே உணவு உட்கொள்ள வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இருட்டான அறையில் தூங்க வேண்டும். இப்படி சீரான தூக்கமும் தினமும் உடற்பயிற்சியும் இருந்தாலே போதுமானது. இந்த இரண்டு பிரச்னைகளில் இருந்து மீண்டு விடலாம்'' என்று தைரியம் தருகிறார் டாக்டர் பிரபாஷ். டாக்டர். பிரபாஷ் பிரபாகரன். சென்னை: பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி... மிக்ஸட் வைரஸ் பரவல்? மருத்துவர் சொல்வதென்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 17 Jun 2025 7:00 am

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. குடல் தொடர்பாக இப்படி எந்தப் பிரச்னையுமே வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதேனும் உண்டா?? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி மருத்துவர் பாசுமணி குடல் ஆரோக்கியம் என்பதே அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நம்பியே உள்ளது. அதிலுள்ள 100 டிரில்லியன்  பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான அளவு நார்ச்சத்து, வெரைட்டியான நார்ச்சத்து, சீசனல் உணவுகள் அவசியம். கோலா பானங்கள், மது போன்றவை கூடாது.  ஒருநாள் தூக்கம் இல்லாவிட்டால் மறுநாள் சேர்த்துவைத்துத் தூங்குவதைப் போல,  ஒருவேளை  நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்தவேளை  அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள். அந்தக் கடனை சேர்க்காதீர்கள். அன்றன்று பேலன்ஸை காலி செய்விட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லது. உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் செரிமானம் பாதிக்கப்படும். இது தவிர்த்து தினமும் 150 முதல் 200 மில்லி நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். மோரில் உள்ள புரோபயாடிக்ஸ், குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கெட்டியாக இல்லாமல் நிறைய தண்ணீர் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்த மோர் குடலுக்கு ஆகச்சிறந்த பானம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கம்புக்கு பெரும்பங்கு உண்டு.  காலை உணவுக்கு இட்லி, தோசைக்கு பதில் மோர் சேர்த்த கம்பங்கூழ் குடிப்பது வயிற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும். ஒருவேளை நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்த வேளை அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள். இரவு உணவை சீக்கிரமே சாப்பிடுபவர்களுக்கு  வயிறு தொடர்பான உபாதைகள் வருவதில்லை. அதிகபட்சம் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து சிறிது நடப்பது செரிமானத்தை சீராக்கும். வெயில் காலத்தில் பலருக்கும் பசி எடுக்காது. திரவ உணவாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதற்காக கோலா பானங்கள், கார்பனேட்டடு பானங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையும் கலோரியும்  காற்றும் அதிகம் என்பதால் செரிமானத்தை நிச்சயம் பாதிக்கும். அதற்கு பதில் ஃப்ரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.  தினமும் குறைந்தது அரை மணி நேரம் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதற்காக ஜிம்மில் சேர்ந்து ஹெவியான வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என உங்களுக்கு எது சாத்தியமோ அதைச் செய்யலாம். வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?

விகடன் 16 Jun 2025 9:00 am

Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!

நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக்கியமான நுரையீரலுக்கு சில வழிகாட்டல்களை இங்கே தருகிறார். மூச்சுப்பயிற்சி ஆழமான மூச்சு, ஆயுள் கூடிப்போச்சு! நாம் ஓய்வில் இருக்கும்போது சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 12 - 15 முறை மூச்சுவிடுகிறோம். நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கு மூச்சை நன்றாக இழுத்து, பொறுமையாகவிட வேண்டும். இதனால், நம் நெஞ்சுக்கூடு நன்றாக விரிவடைவதோடு, நுரையீரல் ஆக்சிஜனை மற்ற பாகங்களுக்கு முழுமையாகக் கடத்த முடியும். அதேபோல், தேவையற்ற கார்பன் டை ஆக்ஸைடையும் முழுமையாக வெளியேற்ற இது உதவுகிறது. பொதுவாகவே, மூச்சை ஆழமாக இழுத்து, விடப் பழகிக்கொள்வது நல்லது. தினமும் காலை எழுந்ததும், இரவு படுப்பதற்கு முன்னரும்... சில நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக இழுத்து விடும் பயற்சிசெய்வது நுரையீரலையும் உங்கள் மனதையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நுரைதள்ளும் நீச்சல், நுரையீரலுக்குப் புதுப் பாய்ச்சல்! நுரைபொங்கப் பாய்ந்துவரும் கடலானாலும் சரி, நீச்சல்குளமானாலும் சரி... நீச்சல் பயிற்சி எப்போதுமே நுரையீரலுக்கு நல்லது. மூக்கின் வழி மூச்சை நன்றாக இழுத்து, வாய் வழியாக விடும்போது ஒளிந்து கிடக்கும் கார்பன் டை ஆக்ஸைடு முழுவதும் வெளியேறும். நீச்சல் தெரியாதவர்களும்கூட நீரில் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரலைப் பலப்படுத்த முடியும். கழுத்து மூழ்கும் வரையிலான நீரில் நின்றுகொண்டு சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் வெயிட் லிஃப்ட்டிங் பயிற்சிகளையும் செய்யலாம். டம்பிள்ஸ் அல்லது மெடிசின் பால் போன்ற கனமான ஒரு பொருளை நீரிலிருந்து மேலும், கீழுமாகத் தூக்கி பயிற்சி செய்யும்போது, நெஞ்சுக்கூட்டில் ரத்தம் நிரம்பி, காற்று குறையும். அந்த அழுத்தத்தில் நுரையீரல் தன் முழுத்திறனோடு செயல்படும். நீரில் செய்வதற்கென சில ஹைட்ரோ தெரப்பிகளும் (Hydro Therapy) இருக்கின்றன. இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால், நம்முடைய சுவாச மண்டலம் சிறப்பாகச் செயல்படும். நடைப்பயிற்சி நடை, தடைகளை உடை! போரில் வெற்றிபெற தளபதி மட்டும் வலுவாக இருந்தால் போதாது. அவனைச் சுற்றி இருக்கும் வீரர்களும் வலிமையானவர்களாக இருத்தல் அவசியம். அதுபோலத்தான், நுரையீரலின் வலிமை, அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலிமையைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 நிமிட நடை என்பது, இதற்கான எளிமையான தீர்வாக இருக்க முடியும். நல்ல ஓட்டம், நுரையீரலுக்கான உயிரோட்டம்! “கொஞ்ச தூரம்கூட ஓடவே முடியலை, மூச்சு இப்படி வாங்குது... என்னோட லங்ஸ்ல ஏதோ பெரிய பிரச்னை இருக்கு...” என்று சமயங்களில் நமக்கு நாமே டாக்டர்கள் ஆகிவிடுவோம். ஆனால், இப்படி ஆவதற்கான காரணம் கை, கால்களின் தசைகள் உறுதியாக இல்லாததே. வீண் பழியோ நுரையீரல் மீது. திடீரென ஒருநாள் உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி எனச் செய்யும் போது தசைகள் அதிகப்படியான சுமையைத் தாங்குகின்றன. உடலில் குளூக்கோஸை எனர்ஜியாக மாற்றத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால், அந்தத் தசைகள் லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த லாக்டிக் அமிலம், `உடலுக்குக் காற்று போதவில்லை’ என்ற அபாய மணியை ஒலிக்கச்செய்கிறது. அதன் காரணமாகவே `தஸ்...புஸ்...’ என்று மூச்சு வாங்குகிறது. தொடர் பயிற்சிகளின் மூலம் தசைகளை வலிமைப்படுத்தி, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தினால், நுரையீரலுக்கு மட்டுமல்ல... உடலின் அனைத்து பாகங்களுக்குமே அது வரமாக இருக்கும். வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்! வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்! நம் வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவதன் மூலம் நுரையீரலை வலுப்படுத்த முடியும். ஏனெனில், வயிற்றுக்கு சற்று மேல் பகுதியில்தான் `உதரவிதானம்’ எனப்படும் டையஃப்ரம் (Diaphragm) இருக்கிறது. இது மூச்சை இழுத்துவிட உதவிசெய்யும் முக்கியத் தசை. தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒரு கையை வயிற்றிலும், ஒரு கையை நெஞ்சின் மீதும் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஆழமாக இழுத்து, வாய் வழியாக விட வேண்டும். இப்படி செய்யும்போது வயிற்றின் மீதிருக்கும் உங்கள் கை, மார்பின் மீதிருக்கும் கையைவிடவும் உயரமாகச் செல்ல வேண்டும். மூச்சை இழுத்து, சில விநாடிகள் மூச்சைப் பிடித்து நிறுத்துவதும் நல்ல பயிற்சியாக இருக்கும். Vikatan Explainer : உங்கள் இதயத்துக்கு ஆயுள் நூறு - இதய நலன் ஆதி முதல் அந்தம் வரை உட்காரும் விதத்தைக் கவனியுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது, சிறிது நேரத்திலேயே ஆற்றல் இழந்தவர்களைப்போல உணர்வோம். இதற்கு, நாம் எப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உடலை வளைத்து உட்காரும்போது, அது நுரையீரலையும் அழுத்தி, காற்றை இழுக்கும் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் இல்லாததால், சோர்வுநிலை ஏற்படுகிறது. கால்களைத் தரையில் ஊன்றி, 90 டிகிரியில் முதுகை வைத்தபடி, நிமிர்ந்து சரியான பொசிஷனில் உட்கார்ந்து பாருங்கள்... உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் அளவு கிடைப்பதால், புத்துணர்வாக உணர்வீர்கள். உட்காரும் விதம் நல்ல இசை வாசிப்பு, நுரையீரலுக்கான சுவாசிப்பு! ட்ரம்பெட், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற காற்றை அடிப்படையாகக்கொண்ட கருவிகளை வாசிப்பது நுரையீரலை வலுப்படுத்துவதற்கான நல்ல பயிற்சி. பாடல்கள் பாடுவதும் நுரையீரலை வலுப்படுத்தும் ஒரு பயிற்சியே. நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 16 Jun 2025 7:18 am

Doctor Vikatan: குழந்தைக்கு அதிகம் சுரக்கும் உமிழ்நீர்; நார்மல் தானா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என்  10 வயதுக் குழந்தைக்கு  சமீபகாலமாக உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது. காரணம் என்ன... அது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... அப்படியே விடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபி உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னையை மருத்துவத்தில் 'ஹைப்பர்சலைவேஷன்' (Hypersalivation) அல்லது 'சயலோரியா' (Sialorrhea) என்று சொல்வோம். பொதுவாக, குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்துவரும் நேரத்தில்  இப்படி உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அது நார்மலானதுதான். மற்றபடி, குழந்தைகளுக்கு கட்டுப்பாடின்றி உமிழ்நீர் சுரந்து வழிகிறது என்றால், அது செரிப்ரல் பால்சி (Cerebral palsy) அல்லது மனநலம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். உமிழ்நீர் சுரப்பிகளில் (Salivary glands) ஏதேனும் இன்ஃபெக் ஷனோ, இன்ஃப்ளமேஷன் எனப்படும் வீக்கமோ இருந்தாலும், ஹைப்பர்சலைவேஷன் என்கிற அதிக உமிழ்நீர் சுரப்பு பிரச்னை இருக்கலாம். வயதானவர்களில் சிலருக்கும் இதுபோல உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னை இருக்கலாம். அதற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் இருந்தாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். வாய்ப்பகுதியில் உள்ள தசைகளில் தளர்வும் சோர்வும் இருக்கும். அதுபோன்ற நிலைகளில் உமிழ்நீர் சுரப்பும் அதிகமிருக்கும். அது வெளியே வழிவதும் அதிகமாக இருக்கும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் உமிழ்நீர் அதிகம் சுரக்கலாம். உதாரணத்துக்கு, ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia), மனநல பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம். எனவே, உங்கள் குழந்தைக்கு எந்தக் காரணத்தால் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

விகடன் 15 Jun 2025 9:00 am

Beauty: இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?

தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது. இதோ கலப்படமில்லாத தேனின் சில அழகு பலன்கள்..! தேனின் சில அழகுக்குறிப்புகள். முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும். வடுக்கள்: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேன் தடவும்போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும். ஈரப்பதம்: தேனை முகத்தில் தடவி ஊறவைத்து ஃபேஷியல் செய்யும்போது, முகத்தின் வறட்சியை நீக்கி, பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை உண்டாக்கும். மூப்படையாமல் இருக்க: இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ஊறவைத்து, முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தேனின் சில அழகுக்குறிப்புகள் உதடு: சர்க்கரையும் தேன்துளிகளும் கலந்த எலுமிச்சைச் சாற்றை உதட்டில் தடவி, 5 நிமிடங்கள் ஊறவைத்தால், வறண்ட உதட்டுப் பகுதி மென்மை அடையும். நக கண்டிஷனர்: தலா ஒரு டீஸ்பூன் தேன், வினிகர் எடுத்து கலந்து, நகம் மற்றும் நக இடுக்குகளிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவிவந்தால், நகங்கள் வலிமையும் மென்மையும் பெறும். உணவு 360 டிகிரி - 6 - அல்சர் முதல் புற்றுநோய் வரை... அருமருந்தாகும் தேன்! ஷேவிங்: ஷேவிங் செய்த பின்பு, முகத்தில் தோன்றும் புடைப்புகள் மற்றும் கொப்புளங்களிலிருந்து தப்பிக்க, தேன் தடவலாம். அவை எளிதில் சரியாகும். தேனின் சில அழகுக்குறிப்புகள் கருவளையம்: கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தைச் சரிசெய்ய, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு டீஸ்பூன் தேனைக் கண்களைச்சுற்றி தடவி, 20 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால் போதும். படை: உடலில் தோன்றும் படையையும் , நாள்பட்ட தோல் ஒவ்வாமையையும் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சில நாட்களில் சரியாகிவிடும். Health: மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன், கொசுவந்தேன்... ஆரோக்கியமான 15 தகவல்கள்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Jun 2025 7:00 am

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை  அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத் தேவைப்படும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மிகவும் எளிமையான டெஸ்ட் என்பதால் பலரும்  இசிஜி (ECG) பரிசோதனையைச் செய்து பார்க்கிறார்கள். இதில் சில விஷயங்கள் தெரியும், சிலது தெரியாது.  ‘வருடம் தவறாமல் நான் இசிஜி டெஸ்ட் செய்து பார்த்துவிடுகிறேன். என் இதயம் நன்றாக இருக்கிறது’ என அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது சரியானதல்ல. அதே மாதிரிதான் எக்கோ (echocardiogram) டெஸ்ட்டும். அதைச் செய்கிறபோது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படியிருக்கிறது என்று தெரியும். ஆனால், ரத்தக் குழாய்கள் எப்படியிருக்கின்றன என்பது எக்கோ டெஸ்ட்டில் தெரியாது.  இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவர் டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்வார். எனவே, யாருக்கு, எந்த டெஸ்ட் என்பதை மருத்துவரிடம் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்யப்படும். ஹார்ட் அட்டாக்  ஏற்பட்டது  இசிஜியில்  உறுதிசெய்யப்பட்டால், உடனே ஆஞ்சியோகிராம் வழியே அடைப்பைத் திறக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மற்றும் டிரெட்மில் டெஸ்ட்டுகளில் அப்நார்மல் என வந்தாலும் உடனே ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். மாரடைப்புக்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரியும்போது, மருத்துவர் உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ய அறிவுறுத்துவார். ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் எல்லோருமே 40 ப்ளஸ்ஸில் ஆஞ்சியோகிராம் செய்துபார்க்கலாமா என சிலர் கேட்பதுண்டு. ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. துல்லியமான அறிகுறிகள் இருக்கும்போது இதைச் செய்தால் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். 30 சதவிகித அடைப்பு இருப்பது தெரிந்தால், வருடா வருடம் அந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் செய்து பார்க்க வேண்டியதில்லை.   30 சதவிகித அடைப்பு இருந்தால் அது மேலும் அதிகமாவதை எப்படித் தவிர்க்கலாம் என்றுதான் மருத்துவர் யோசிப்பார். ரத்தச் சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் வேகமான நடைப்பயிற்சி செய்கிற ஒரு நபருக்கு ஆஞ்சியோகிராம் அவசியமில்லை. அதுவே, திடீரென அவர், ‘என்னால முன்ன மாதிரி நடக்க முடியல... மூச்சு வாங்குது’ என்று சொன்னால் அவருக்கு பரிசோதனை அவசியம்.   உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     திடீர்னு குப்புனு வேர்க்குதா? ஹார்ட் அட்டாக் முதல் புற்றுநோய் பாதிப்புவரை: கவனம்! #SuddenSweat

விகடன் 14 Jun 2025 9:00 am

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

ம ருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இருக்கின்றன. ஆனால், அதை ஏதோ களைச்செடி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவம் இன்றளவும், இந்த மூலிகைச்செடிகளை மருந்தாக்கி மக்களின் நோய்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நமக்குத் தெரிந்த செடிகள், அதன் தெரியாத மருத்துவ பயன்கள் பற்றி சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் அவர்களிடம் பேசினோம். குப்பைமேனி குப்பைமேனி இதுதான் தோல் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரிப்பு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு குப்பை மேனி உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து தடவி வர குணமாகும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். கீழாநெல்லி கீழாநெல்லி பித்தம், அதாவது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும். வெயில் காலங்களில் மோருடன் சிறிது கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து பருகலாம். இது தொற்று நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மணத்தக்காளி மணத்தக்காளி கீரை, பழம் என இரண்டும் வாய்ப்புண், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். செரிமான கோளாறுகளை சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலை சரி செய்யும். இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து நெய் சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். காய்ச்சல் வந்து சுவை தெரியாதவர்கள், அந்த நேரத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்து சாப்பிடலாம். இது, நாக்கில் சுவை அரும்புகளைத் தூண்டி சுவையை உணரச் செய்யும். துத்தி இலை துத்தி இலை மூலத்திற்கான சிறந்த மருந்து. பருப்புடன் சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மஞ்சள் நிற பூக்கள் கொண்ட துத்திச்செடியை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். கண்டங்கத்திரி கண்டங்கத்திரி கண்டத்தில், அதாவது தொண்டையில் வரக்கூடிய நோய்களை கத்தரிக்கும் இயல்பு கொண்டது இது. ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் கண்டங்கத்தரி லேகியம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மருதாணி மருதாணி இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்வதும், கைகளில் வைத்துக் கொள்வதும், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். கண் எரிச்சல் குறைக்கும் அருமருந்து. மருதாணி இலையுடன் சிறிது தேயிலைத்தூள் மற்றும் அவுரி இலையை கலந்து அரைத்து, தலையில் தேய்த்து வர இளநரை குறையும். பாலின பாகுபாடு இன்றி அனைவரும் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. கற்றாழை கற்றாழை குமரி கற்றாழை என்று அழைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து 6 முதல் 7 முறை கழுவிவிட்டு மோர், உப்பு சேர்த்து அரைத்து ஜூஸ் போல குடித்து வர வாய்ப்புண், அல்சர் சரியாகும். உலகளவில் கற்றாழை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை சாறுடன் பால் கலந்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். தும்பை தும்பை தும்பை இலை அல்லது பூவை குளிக்கும் நீரில் போட்டு குளித்துவந்தால் உடல் சோர்வு நீங்கும். தும்பைப் பூவை பிழிந்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை நாசியில் விடுவதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் குணமாகும். மேலும், பூவை கசக்கி முகப்பரு, கட்டிகள் மீது வைத்தால் அவை சரி ஆகும். ஆவாரம் பூ ஆவாரம்பூ நாம் உணவில் சேர்க்க மறக்கிற சுவையான துவர்ப்பு சுவையைக் கொண்டது இது. ஆவாரம் பூ கிடைக்கக்கூடிய காலங்களில் அனைவருமே அதை பறித்து சாப்பிடலாம். பூவை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போலவும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வது இன்சுலின் அளவை நெறிப்படுத்தும் என்கின்றன ஆய்வுகள். இவை எல்லாம் காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்றாலும், மருந்தாக உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்பெறுதல் அவசியம்.

விகடன் 14 Jun 2025 7:00 am

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் விடாமல் தொடரும் வறட்டு இருமல்.. கருவை பாதிக்குமா?

Doctor Vikatan: என் தங்கைக்கு 30 வயதாகிறது. 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவளுக்கு தீவிரமான இருமல் ஏற்பட்டது. வறட்டு இருமல்தான்... ஆனால், ஒருநாள் முழுவதும் இருந்தது. இருமும்போது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்துகொண்டே இருந்தாள்.  இருமல் மருந்து குடிக்கவும் மறுத்துவிட்டாள்.  இப்படிப்பட்ட இருமலுக்கு என்ன காரணம்... அடிவயிற்றிலிருந்து இருமும்போது கரு கலைய வாய்ப்புள்ளதா... இன்னொரு முறை இப்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஐந்து மாத கர்ப்பத்தில் வறட்டு இருமல் ஏற்பட வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். உங்கள் தங்கைக்கு ஏற்கெனவே அலர்ஜி பிரச்னை இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, செல்லப் பிராணிகளால் அலர்ஜி, தூசு அலர்ஜி போன்ற ஏதாவது இருந்தாலும் ஜலதோஷம், தும்மல், இருமல் வரலாம். கர்ப்பிணிகளுக்கு உணவு எதுக்களித்தல் (Acid reflux) பிரச்னை சகஜமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் சரியாகச் சாப்பிட முடியாது. வாந்தி உணர்வு இருப்பதால் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்? கர்ப்ப காலத்தில் செரிமானம் மந்தமாவதால் உணவு எதுக்களித்துக் கொண்டு வரலாம். சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கக்கூடும். அதாவது ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்தால், கர்ப்ப காலத்தில் அதன் தீவிரம் அதிகமாகலாம். அதன் காரணமாகவும் இருமல் வரலாம். சிலருக்கு படுத்த நிலையில் இருமல் வரும். எழுந்து உட்கார்ந்தால் சரியாகிவிடும். இதை 'போஸ்ட் நேசல் டிரிப்' (Post-nasal drip) என்று சொல்வோம். ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். வீட்டில் யாராவது புகை பிடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால் அதனாலும் இருமல் வரலாம். கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. சுற்றுப்புறத்தில் தூசு, புகை அதிகமிருந்தாலோ, டூ வீலர் ஓட்டுபவர் என்றால் வாகனப் புகையாலோ இருமல் வரலாம். நீங்கள் பயப்படுகிற மாதிரி இருமலால் கரு கலைய வாய்ப்பில்லை. ஏனென்றால், கருவிலுள்ள குழந்தையானது கர்ப்பப்பைக்குள் மிகப் பாதுகாப்பாக, பத்திரமாகவே இருக்கும். அதே சமயம், இருமல் நிற்கவில்லை, தீவிரமாக இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன என பார்க்க வேண்டியது அவசியம். நிமோனியா, டிபி போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனைகள் அவசியம். நீண்ட நாள்களாக இருமல் தொடரும் நிலையில், அந்த நபருக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையலாம். டிபி நோயாளிகளைப் பார்த்தால் அவர்கள் தொடர் இருமலின் காரணமாக உடல் மெலிந்து, களைப்பாக காணப்படுவார்கள். எனவே, கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Myths and Facts: கர்ப்பிணிகள் டூ வீலர் ஓட்டலாமா?

விகடன் 13 Jun 2025 9:00 am

அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244

''மு தலிரவுக்குப் பின்னர் ஆயிரம் ஆயிரம் இரவுகள் இருக்கின்றன. அதனால், முதல் இரவிலேயே முழு தாம்பத்திய உறவும் நடந்துவிட வேண்டும் என்கிற அவசரம் தேவையில்லை என்று, புதிதாக திருமணமானவர்களுக்கு சொல்கிறோம். அந்த ஆயிரம் ஆயிரம் இரவுகளில், ஒரு கணவனுடைய தாம்பத்திய வேகம் எப்படி இருக்க வேண்டும்; அது எப்படி இருந்தால் மனைவிக்குப் பிடிக்கும் என்று சொல்லித் தந்திருக்கிறோமா என்றால், கிட்டத்தட்ட இல்லை. ஆனால், காமசூத்ரா சொல்லிக் கொடுத்திருக்கிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுபற்றி விவரித்தார். உறவு ''தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறவியிலேயே ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆண், மனசுக்குப் பிடித்த மனைவியைப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்படுவான். அடுத்து, ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு விடும். உறவு கொண்டு விந்து வெளியேறவுடன் உணர்ச்சி அடங்கி நார்மலாகி விடுவான். ஆணின் இந்த நிலையை ஸ்விட்ச் போட்டவுடனே எரிகிற பல்புக்கு ஒப்பாக சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். மெதுவாகத்தான் தாம்பத்திய உறவுக்கும் தயாராவார்கள். உறவுகொண்டு உச்சக்கட்டம் அடைந்த பிறகும் அந்த உணர்வு சிறிது நேரம் இருக்கும். ஆண்களைப்போல சட்டென்று பல்ப் ஆஃப் ஆகாது பெண்களுக்கு. இதனால்தான், நான் பெண்களின் செக்ஸ் உணர்வை அயர்ன் பாக்ஸுக்கு ஒப்பிடுவேன். தாம்பத்திய உறவு ஆண்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்தவுடன் அதை சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு. இதிலும், விந்து முந்துதல் பிரச்னை இருக்கிற ஆண்கள், 'ரொம்ப நேரம்தான் செய்ய முடியலை; நிறைய முறையாவது செய்யலாம்' என்று மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நார்மல் ஆண்களைவிட இன்னும் வேக வேகமாக உறவை முடிக்க பார்ப்பார்கள். இது இன்னும் பிரச்னையை அதிகப்படுத்தவே செய்யும். இதனால், ஒரு நிமிடத்திலேயே வெளியேறி விடுகிற விந்து இன்னும் சீக்கிரமாக முந்தி விடும். இது இன்னும் சிக்கலை ஏற்படுத்தி விடும். அந்த நேரத்தில் ஆண்களின் மனநிலைமையை விளக்குவது மிக மிக கடினம். `3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235 இந்த இடத்தில்தான் நான் இப்போது சொல்லப்போகிற பாயிண்ட் எல்லா ஆண்களுக்குமே உதவியாக இருக்கும். பெண்களுக்கு, தாம்பத்திய உறவை ரொம்ப நிதானமாக, ஜென்டிலாக கொண்டு போகிற ஆணைத்தான் மிகவும் பிடிக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பெண்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். கணவன் இப்படி நிதானமாக உறவு மேற்கொள்கையில், எண்டார்பின், ஆக்சிடோசின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் அவர்களுடைய உடலில் வெளிப்படும். இதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இதய நலமும் மேம்படும். பெண்களுக்கு ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரைக்கும் தேவைப்படும். ஆனால், ஆண்களால் அவ்வளவு விந்து வெளியேறாமல் உறவுகொள்ள முடியாது. இப்படி நிதானமாக உறவுகொள்ளும்போது, கணவனைப்போல மனைவியும் ஆர்கசம் அடைவார். சில நேரம், ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகூட அவர் ஆர்கசம் அடையலாம். படுக்கையறை ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது. அங்கு வெற்றி, தோல்வியும் கிடையாது. அதனால், தாம்பத்திய உறவில் நிதானமாகவே ஈடுபடுங்கள் கணவர்களே... அதுதான் உங்கள் வாழ்க்கைத்துணைக்குப் பிடிக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். Sexologist Kamaraj `காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 12 Jun 2025 6:00 pm

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது... என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி முதலில் கொட்டாவி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது வாய்வழியே ஆழ்ந்து சுவாசிப்பது போன்றது. அதாவது  வாய்வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு, ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் நிகழ்வு அது. அறிவியில்ரீதியாகப் பார்த்தால், நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு சராசரியைவிடக் குறையும்போது, அதை உணர்த்தும் செயலாக கொட்டாவி வரும். இது இயற்கையான நிகழ்வு. கொட்டாவிக்கான முக்கிய காரணம், தூக்கமின்மை. இரவில் போதுமான அளவு தூங்காதவர்கள், நைட் ஷிஃப்ட் காரணமாக தூக்கத்தைத் தவிர்ப்பவர்களுக்கு கொட்டாவி பிரச்னை அதிகமிருக்கும். இவை தவிர, ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பவர்களுக்கும், பார்க்கும் வேலையில் சுவாரஸ்யமில்லாமல், சலித்துப் போகும்போதும் வேலை பார்க்கும்போது கொட்டாவி வரலாம்.  இது போன்ற தருணங்களில் மூளையில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அப்போது கொட்டாவி வந்து அதை சமநிலைப்படுத்த முயலும். ஸ்ட்ரெஸ், வேலையில் சலிப்பு இருந்தால் கொட்டாவி வரலாம். நரம்பியல் மற்றும் மூளை சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் அடிக்கடி கொட்டாவி வரலாம். உதாரணத்துக்கு, வலிப்பு நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple Sclerosis), நார்கோலெப்சி (Narcolepsy)  போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக கொட்டாவி வரும் நிலை இருக்கலாம். அதேபோல இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் தொடர் கொட்டாவி வரலாம். உங்கள் விஷயத்தில் உங்கள் வயது, ஏதேனும் உடல்நல பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா, குறிப்பாக, மனப்பதற்றம் இருந்து அதற்கான 'செலக்டிவ் செரோடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்ஸ்' (Selective Serotonin Reuptake Inhibitors) மருந்துகள் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதெல்லாம் பார்க்கப்பட வேண்டும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் உங்களுக்குத் தொடர்ச்சியாக கொட்டாவி வருகிறது என்றால், மூளைக்கு  ஈஈஜி (EEG) எனப்படும் எலக்ட்ரோ என்செபலோகிராம் (Electroencephalogram)  டெஸ்ட்  செய்து பார்த்துவிட்டு பிறகு சிகிச்சைகளை யோசிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts:6 - பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வருமா?

விகடன் 12 Jun 2025 9:00 am

Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா?

நம் உடலில் உள்ள எலும்புகளின் இயக்கத்திற்கும், தசைகள் சீராக இயங்குவதற்கும் தேவைப்படும் முக்கியமான மினரல் மெக்னீஷியம். உடலில் மெக்னீஷியம் குறைபாடு ஏற்படுவது பல்வேறு அறிகுறிகள் மூலம் வெளிப்படும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைப் போல, மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் அது உங்கள் முகத்திலேயே தெரிந்துவிடும்' என்கிற உணவியல் நிபுணர் பாலபிரசன்னா, மெக்னீஷியம் நிறைந்த உணவுகள், குறைந்தால் வரக்கூடிய அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசினார். மெக்னீஷியம் குறைபாடு ''பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண் இமைகள் தன்னிச்சையாக துடிக்கும். இது மெக்னீஷியம் குறைபாட்டினால் ஏற்படுவதுதான். கண்களுக்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. கண்கள் எரிச்சலாகவும், மிகவும் வறண்டும் இருக்கும். மெக்னீஷியம் இருந்தால் மட்டுமே கண் தசைகள் சரியாக இயங்கும். மெக்னீஷியம் உடலின் திரவ நிலையைச் சீராக்கப் பயன்படுகிறது. இது குறையும்போது உடலின் திரவத்தன்மை அதிகரித்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படும். கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது தூக்கமின்மை மற்றும் சோர்வினால் மட்டுமல்ல, மெக்னீஷியம் குறைபாட்டினாலும் ஏற்படும். மெக்னீஷியம் நரம்பு தூண்டுதலுக்கு உதவுவதோடு, மனநிலையைச் சீராக வைப்பதற்கும், இதயத்தைச் சீராக இயங்க வைப்பதற்கும் உதவுகிறது. மெக்னீஷியம் நிறைந்த உணவுகள் மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் முகத்தில் தோல் சுருக்கம், பொலிவின்மை ஏற்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படும். உடலில் போதுமான அளவு மெக்னீஷியம் இருந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், முகப்பரு, எக்ஸிமா போன்றவை வராமல் தடுக்கும். அரிப்பு மற்றும் சிவப்புத்திட்டுகளும் ஏற்படாது. Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! முடி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது மெக்னீஷியம். இது குறைந்தால் புருவங்களில்கூட முடி கொட்டும். மெக்னீஷியம் குறைந்தால் உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படுவதோடு, தாடை இறுக்கமாக இருப்பது போன்ற பிரச்னைகளும் வரும். உணவியல் நிபுணர் பாலபிரசன்னா இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து, மெக்னீஷியம் குறைபாடு இருப்பதை உறுதி செய்துகொண்டு, தினமும் 200 முதல் 400 மில்லிகிராம் வரை மெக்னீஷியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். கூடவே, போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், நட்ஸ், அவகாடோ, பயறு மற்றும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துகொள்ள வேண்டும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா. Food Supplement: சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 12 Jun 2025 7:06 am

செயற்கை கருத்தரிப்பு: `சூப்பர் ஓவுலேஷன் சிகிச்சை'என்றால் என்ன?; யாருக்கு தேவைப்படும்?

சூப்பர்..! இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை அர்த்தங்களை, எத்தனை நம்பிக்கைகளை எவ்வளவு நிறைவை, எவ்வளவு மனமகிழ்வைத் தருகிறது.! இதே வார்த்தையை, அதிக அர்த்தம் நிறைந்த, அத்துடன் நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கும் குழந்தைப்பேற்றிலும் கருத்தரிப்பு சிகிச்சையின்போது பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள். ஆம்.! குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியே 'சூப்பர் ஓவுலேஷன்'.. குறிப்பாக (Controlled Ovarian Hyperstimulation - COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் தான் என்கின்றனர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர்கள்.  செயற்கை கருத்தரிப்பு சூப்பர் ஓவுலேஷன் அது என்ன 'சூப்பர் ஓவுலேஷன்'... அது, ஏன், எதற்கு, எப்படி, யாருக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.! பெண்ணின் இரு சினைப்பைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சினைமுட்டைகளில் ஏதேனும் ஒருபக்க சினைப்பையிலிருந்து ஒரு சினைமுட்டை மட்டும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, முதிர்வடைந்து வெளியேறி இனப்பெருக்கத்திற்கு அப்பெண்ணை தயார்படுத்துவதுதான் இயல்பு. பிறந்தது முதல் ஒரு பெண்ணின் இரு சினைப்பைகளிலும் மில்லியன்கள் கணக்கில் உயிரணுக்களான சினைமுட்டைகள் கையிருப்பில் இருந்தாலும், reproductive age எனும் இனப்பெருக்க வாழ்நாள் முழுவதும் மொத்தம் 400 சினைமுட்டைகள் மட்டுமே வளர்ந்து, முதிர்வடைந்து அண்டவிடுப்பாகி கருத்தரிப்புக்குத் தயாராகின்றன என்பது இயற்கை நியதி. கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் இதில், ஒவ்வொரு மாதமும் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சுரக்கும் GnRH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பியின் FSH மற்றும் LH ஹார்மோன்களைத் தூண்டி, அவை முறையே சினைப்பையின் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களை சுரக்கச்செய்து, கருமுட்டை வளர்ச்சி, முட்டை முதிர்வாக்கம், அண்டவிடுப்பு எனும் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன் இறுதியில் கருத்தரிப்பு அல்லது மாதவிடாய் உதிரப்போக்காக சுழற்சியை முறைமைப் படுத்துகின்றன. என்றாலும், ஒரே சுழற்சியின்போது ஒன்றுக்கு மேலான கருமுட்டைகள் அண்டவிடுப்பாவதும், சமயங்களில் கருமுட்டைகள் முற்றிலும் வளராமலோ அல்லது வளர்ந்தபின் வெளியேறாமலோ இருப்பதும் இயல்பாக நிகழக்கூடும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள்; இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள்... | பூப்பு முதல் மூப்பு வரை யாருக்கு இந்தச் சிகிச்சை? பொதுவாக, இந்தக் கருமுட்டை வளராமல் அல்லது வெளியேறாமல் இருக்கும் நிலைகளில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தான், ஓவுலேஷன் இண்டக்‌ஷன் (Ovulation Induction Drugs) எனும் சினைப்பைத் தூண்டல் மருந்துகள் என அழைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றுள்  உட்கொள்ளப்படும் மாத்திரைகளான Clomiphene citrate அல்லது Letrozole, மற்றும் போடப்படும் ஊசியான Low dose Gonadotropins ஆகிய ஓவுலேஷன் இண்டக்‌ஷன் மருந்துகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு சினைமுட்டைகளை மட்டுமே தூண்டும் என்பதால் பிசிஓடி, உடல் பருமன் போன்ற நிலைகளிலும், ஆரம்பகட்ட குழந்தைப்பேறின்மை சிகிச்சையிலும் இவை பெரிதும் பயனளிக்கின்றன. ஆனால், செயற்கை கருத்தரிப்பின் ஐவிஎஃப், இக்ஸி போன்ற சிறப்புச் சிகிச்சைகளில், குறைந்தது எட்டு முதல் பத்து வரையிலான தரமான, முதிர்வடைந்த கருமுட்டைகள் ஒரே மாதவிடாய் சுழற்சியில் கிடைப்பது அவசியம் என்பதால், இதில் பிரத்யேக ஊசி மருந்துகள் சற்று கூடுதல் டோஸேஜில் வழங்கப்படுவதுடன், ஸ்கேனிங் மூலமாக அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கண்காணிக்கப்பட்டு, தக்க சமயத்தில் அண்டவிடுப்பு தூண்டப்பட்டு, செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டத்திற்காக அவை சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பிரத்யேக சினைமுட்டைத் தூண்டலைத் தான் 'சூப்பர் ஓவுலேஷன்' என அழைக்கின்றனர் மருத்துவர்கள்.   சூப்பர் ஓவுலேஷன் சரி.. அதிலேயே என்ன COH எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்ற கேள்வி எழுகிறதல்லவா? செயற்கை கருத்தரிப்பு கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல்   பொதுவாக, ஐ.வி.எஃப் மற்றும் இக்ஸி சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இந்த சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள், மூளையின் ஹைபோ-தலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகளே என்பதுடன், அவற்றின் செயல்பாடுகளும் பொதுவாக, இயற்கை நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில்தான், ஆனால், சற்று கூடுதலாகச் செயல்படுகின்றன. என்றாலும், பெண்ணின் அதிகரிக்கும் வயது, அதிக உடல் எடை, பிசிஓடி சினைப்பை நீர்க்கட்டிகள், தைராய்டு பாதிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள், முந்தைய அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்று ஆகியன, சினைமுட்டை தூண்டலை பெருமளவு பாதிக்கக் கூடும் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.  மாதவிடாய் சுகாதாரம்... அவசரம், அவசியம் தேவைப்படுவது இதுதான்! | பூப்பு முதல் மூப்பு வரை -24 மருந்துகள் பலனளிக்காத நிலையில்... பொதுவாக, சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள் முற்றிலும் பயனளிக்காத பெண்ணை Poor responder எனவும், தேவைப்படும் சினைமுட்டைகள் கிடைக்கப்பெறும் பெண்ணை Normal responder எனவும், மிக அதிகமான சினைமுட்டைகள் உருவாக்கிடும் பெண்ணை Hyper responder எனவும் மருத்துவர்கள் வகைப்படுத்துவார்கள். இதில் முதலாவது நிலை என்பது, மனதளவில் செயற்கை கருத்தரிப்புக்குத் தயாரான ஒரு பெண்ணுக்கு, அதற்கான தூண்டல் மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், முட்டைகள் கைகூடாததால், சிகிச்சையைக் கைவிடும் நிலை என்றால், மூன்றாவது நிலையில் மிக அதிகப்படியான சினைமுட்டைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் சிகிச்சையைக் கைவிடும் நிலை என்பது நமக்கு விளங்குகிறது. இந்த முதலாவது மற்றும் மூன்றாவது நிலைகள் நிகழாமல், நார்மல் ரெஸ்பாண்டராக இருக்கப் பரிந்துரைக்கப்படுவதுதான், Controlled Ovarian Stimulation (COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் சிகிச்சை. செயற்கை கருத்தரிப்பு இதில், கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட உள்ள பெண்ணில், மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாள்களில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாக சினைப்பை நுண்ணறைகளில் உள்ள முதிர்வடையாத கருமுட்டைகளின் எண்ணிக்கை (antral follicular count) கணக்கில் கொள்ளப்படுவதுடன், ஒவேரியன் ரிசர்வ் எனும் சினைப்பை இருப்பைக் குறிக்கும் ஏ.எம்.ஹெச் அளவுகளும் (AMH) பரிசோதிக்கப்படுகின்றன. அத்துடன், முந்தைய சினைமுட்டை தூண்டலின்போது ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது குறைகள் குறித்த தகவல்களும் பெறப்படுகின்றன. அதற்குப்பின், மேற்சொன்ன GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகள், குறிப்பாக மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்ணின் சிறுநீரிலிருந்து பெறப்படும் Human Menopausal Gonadotropin (HMG) அல்லது மீள்சேர்க்கை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Recombinant FSH போன்ற சிறப்பு ஊசிமருந்துகள், கூடுதல் அளவில் தினமும் வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, கருமுட்டை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருபக்க சினைப்பையில் போதுமான ஃபாலிக்கிள்களும், அவற்றின் போதுமான வளர்ச்சியும் (20mm) கிட்டியபின்,  அண்டவிடுப்பைத் தூண்டும் ஹெச்சிஜி (HCG Human Chorionic Gonadotropin) ஊசிமருந்து வழங்கப்பட்டு, அதற்குப்பின் இந்தக் கருமுட்டைகள்  சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் கருத்தரிப்புக்குத் தயார்செய்யப்படுகின்றன. ஆக.. குழந்தைப்பேறின்மையில், எல்லாம் சூப்பர்டா.. என அந்தப் பெண்ணை தட்டிக்கொடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது இந்த சூப்பர் ஓவுலேஷன் மற்றும் Controlled Ovarian Hyperstimulation எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்பதே உண்மை..! ஆனால். சூப்பர் கூட சில சிக்கல்களைத் தரக்கூடுமாம். அதுகுறித்தான தகவல்களுடன் பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது. டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை!

விகடன் 11 Jun 2025 11:39 am

மேகாலயா தேனிலவு கொலை: கணவரைக் கொல்ல உடந்தையான மனைவியின் உளவியல் சிக்கல்!

'மே காலயா தேனிலவு கொலை' தான் எங்கெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த செய்திகளின் மற்றும் வீடியோக்களின் பின்னூட்டங்களில், 2006-ல் நடந்த 'மூணாறு தேனிலவு கொலையும் இப்படித்தான் நிகழ்ந்தது' என்றும் 'தேனிலவு சென்ற இடத்தில் கணவர் கொலை செய்யப்பட்டால் அதற்கு மனைவிதான் காரணமாக இருப்பார்' என்றும் எக்கச்சக்க கருத்துகள். இந்தக் கருத்துக்களில் இருக்கிற முன்முடிவுகள் 'வருங்காலத்தில் ஏதோ ஓர் அப்பாவி மனைவிக்கு எதிராக அமைந்துவிடலாமோ' என்கிற அச்சம் ஒருபக்கம் எழுகிறது. மறுபக்கமோ, 'மேகாலயா தேனிலவு கொலை'யில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி மனைவி சோனம்தான், கணவர் ராஜா ரகுவன்ஷி கொலைக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது தெரிகிறது. honeymoon murder மேகாலயா தேனிலவு கொலை அது என்ன மேகாலயா தேனிலவு கொலை என்பவர்களுக்கு, அந்த சம்பவம் தொடர்பான சிறு அறிமுகம். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும், அவருடைய மனைவி சோனமும் தேனிலவுக் கொண்டாட மேகாலயா சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் காணாமல் (மே 23) போனதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர், ஜூன் 2-ம் தேதி 150 அடி ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உடல் ராஜா ரகுவன்ஷியினுடையது என்று அடையாளம் காணப்பட்டது. அடுத்து, காணாமல் போன சோனத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ரகுவன்ஷி கொலைத்தொடர்பாக அவருடைய மனைவி உள்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது, தன் காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவரை கொல்வதற்கு ஏற்பாடு செய்ததே சோனம் தான் என்பது தெரிய வந்திருக்கிறது. 2006-ல் நடந்த மூணாறு தேனிலவு கொலை வழக்கிலும் சரி, தற்போதைய மேகாலயா தேனிலவு கொலை வழக்கிலும் சரி, திருமணத்துக்கு முந்தைய காதல்; விருப்பமில்லாத திருமணம்; காதலுடன் சேர்ந்து கணவனை திட்டுமிட்டுக் கொலை செய்தல் என பல சம்பவங்கள் ஒத்துப்போகின்றன. இரண்டு கொலை வழக்கிலுமே, பெற்றோர் திருமணம் செய்துவைத்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்றதைத் தவிர வேறு எதுவும் அறியாத அந்த ஆண்களின் மரண நிமிடங்களை நினைத்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விருப்பமில்லாத திருமணத்தைத் தவிர்ப்பது அல்லது நிறுத்துவதை விடுத்து, ஓர் உயிரை எடுக்கிற அளவுக்கு எது இந்தப் பெண்களை இயக்குகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மனநல மருத்துவர் ராமானுஜம் அவர்களிடம் பேசினோம். மனநல மருத்துவர் ராமானுஜம் தற்கொலை போல தான் கொலையும்! ''ஒருவகையில் தற்கொலை போல தான் கொலையும். தற்கொலை செய்துகொண்டால், எப்படி அதற்கடுத்து தங்களுக்கு வாழ்க்கை இல்லையோ, அதேபோல கொலை செய்தாலும் வாழ்க்கையில்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், 'ஒருவேளை தப்பித்துக்கொண்டால்' என்கிற ஆப்ஷனை நம்பி இப்படியொரு செயலுக்குத் துணிகிறார்கள். இந்த விஷயத்தில், திருமண முடிவு பெண்களுடைய கையில் இல்லாததுதான் முக்கியமான காரணம். கல்யாணத்துக்கு முன்னால் பெண்களுடைய விருப்பத்தைக் கேட்பதில்லை. அதையும் மீறி பெண்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னாலும் கட்டாயப்படுத்தி தாங்கள் பார்த்த ஆணுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர் பக்கத்து தவறு. பெண் பக்கத்து தவறு என்று பார்த்தால், 'இந்த ஆணுடன் எனக்கு திருமணம் வேண்டாம்' என்பதில் பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும். திருமணம் தன்னுடைய நலம் மட்டுமே... பெற்றோர்களை கன்வின்ஸ் செய்ய முடியாமலும், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறாமலும், திருமணம் செய்துகொண்டு கணவனைக் கொல்வதும் கோழைத்தனம்தான். காலங்காலமாக பல பெண்கள், மனதுக்குப் பிடிக்காத திருமணமே நிகழ்ந்தாலும், தங்களை வருத்திக்கொண்டு வாழத்தான் செய்தார்கள். அது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததோ, அதைப்போன்றதே எங்கோ ஒருசிலர் இப்படி கணவனைக் கொல்வதும். இவர்களுக்கு தன்னுடைய நலம் மட்டுமே பெரிதாக தெரியும். அடுத்தவர்களின் வலியை உணர்ந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும். பிடிக்காத திருமணம் இதில் இன்னொரு கோணம், அந்தக் காதலன் சம்பந்தப்பட்டப் பெண்ணை கொலை செய்யத்தூண்டும் அளவுக்கு மூளைச்சலவை செய்திருக்கலாம். மேலே சொன்ன அத்தனைக் காரணங்களும் சேர்ந்துதான், ஓர் அப்பாவி ஆணின் உயிரைப்பறித்திருக்கிறது'' என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 11 Jun 2025 9:20 am

Doctor Vikatan: குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தால் டான்சில்ஸ் பிரச்னை வருமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் சாக்லேட்டும் எப்போதாவது ஐஸ்கிரீமும் சாப்பிடுவான். அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, சளி பிடித்துக்கொள்கிறது. அவனுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வீக்கம் இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். சாக்லேட்டும் ஐஸ்க்ரீமும் கொடுத்தால் டான்சில்ஸ் பாதிப்பு அதிகமாகும் என நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை சாக்லேட்டுக்கும் இன்ஃபெக்ஷனுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் குழந்தைகள் அளவுக்கதிகமாக சாக்லேட் சாப்பிடும்போது வேறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். சாக்லேட்டில் கெமிக்கல் சேர்ப்பு மிக அதிகம் என்பதால் அளவு குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாக்லேட்டிலும் அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளதால் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இன்று பல  குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருப்பதைப் பார்க்கிறோம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம். இனிப்பு உள்பட வீட்டில் தயாரிக்கப்படும்  உணவுகளால் இப்படி எந்தப் பிரச்னையும் வருவதில்லை. வெளியிடங்களில் வாங்கும்போது அவை எந்த அளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகின்றன, கையாளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகிறது. தொற்று ஏற்பட அதுதான் காரணம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம். ஐஸ்க்ரீமும் அதே போலத்தான். சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு, உடனே சாப்பிடுகிற போது ஐஸ்க்ரீமால் பிரச்னை வருவதில்லை. தயாரிக்கப்பட்டு பல நாள்கள் ஆகி, இடையில் குளிர்பதனப் பெட்டி இயங்காமல் உருகி, அதில் தொற்று ஏற்பட்டு அந்த ஐஸ்க்ரீமை சாப்பிடும்போதுதான் பிரச்னை வருகிறது.  ரொம்பவும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீமை சாப்பிடும்போது தொண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைகிறது. அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக ஐஸ்க்ரீமே சாப்பிடக்கூடாது என அர்த்தமில்லை. அடிக்கடி குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதைத் தவிர்ப்பது சிறந்தது.  சுத்தமாகத் தயாரிக்கப்ட்ட உணவுகளைச் சாப்பிடும்போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சிலருக்கு மட்டும் மழைநாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் சளி பிடிக்காதது ஏன்?

விகடன் 11 Jun 2025 8:12 am

Health: நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? - எச்சரிக்கும் மருத்துவர்

உ ங்களுக்கு சாலையோரம் விற்கப்படும் பஜ்ஜி மற்றும் போண்டாவை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அங்கே பயன்படுத்திய செய்தித்தாளில் உணவு பொருள்களை வைத்து கொடுப்பார்கள். வேறு வழி இல்லை என்று நாமும் சிறிது நேரத்திற்கு அந்த உணவுகளை செய்தித்தாளில் வைத்து சாப்பிட்டு இருப்போம். சிறிது நேரம் தானே அப்படி அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து சாப்பிடுகிறோம், இதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதில் தான் பிரச்னையே... சமீபத்தில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'உணவு வணிகர்கள் இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவுப்பொருட்களை விநியோகிக்கக்கூடாது’ என்றிருக்கிறது. நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? மேலும், ‘அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருட்கள் நேரடியாக படும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது. குறிப்பாக, உணவுப்பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது; உணவகங்களில் உணவு பரிமாற வாழையிலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. அச்சிடப்பட்ட செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட்டால் என்னவிதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். “சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப்பொருள்களை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது பழைய நியூஸ் பேப்பரில் வைத்து கொடுக்கிறார்கள். இவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நாம் உட்கொள்வதினால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, அந்த நியூஸ் பேப்பர் பிரிண்ட் செய்வதற்காக மையை பயன்படுத்துவார்கள். அந்த மையில் 2-நாப்தைலமைன் மற்றும் 4-அமினோபிஃபீனைல் (2-naphthylamine and 4-aminobiphenyl) போன்ற ரசாயனங்கள் இருக்கும். இவ்வாறு ரசாயனங்கள் அடங்கிய நியூஸ் பேப்பரில் நாம் சூடான பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் கலந்த உணவு பொருள்களை வைத்து சாப்பிடும்போது, அந்த உணவில் இந்த ரசாயனங்கள் எளிதாக கலந்து விடும். இவ்வாறாக தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், உணவு பாதுகாப்புத்துறை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது நியூஸ் பேப்பர்களில் உள்ள ரசாயனம் உணவில் கலந்து உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா இரண்டாவது விஷயம் என்னவென்றால், முறையான பேக்கிங் எதுவும் இல்லாமல் உணவுப்பொருட்களை கொடுப்பதினால் எளிதாக வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று அந்த உணவில் கடத்தப்படும். இந்தியா போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்பு, உணவை சுத்தமான முறையில் பரிமாறுவது, உணவைப் பரிமாறும் போது கைகளை சுத்தமாக கழுதல் என்பது மிக மிக குறைவு. உணவை பரிமாறவும், பேக்கேஜிங் செய்யவும் இலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி குடுவைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக பிளாஸ்டிக், நியூஸ் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதாக கிருமித்தொற்றுகள் கடத்தப்படும். மேலும் உடல் நலத்திற்கும் அது தீங்கும் விளைவிக்கக்கூடும். உணவு பாதுகாப்புத்துறை சொல்வது போல உணவுகளை நியூஸ் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்டவற்றில் வைத்து சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். சிந்தித்து அதற்கான மாற்று வழியை பயன்படுத்துவோம்” என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 11 Jun 2025 6:54 am

Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமனாருக்கு இதுவரை ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரியவில்லை. அவர் எந்த அசௌகர்யத்தையும் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் இப்படிச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒருவருக்கு அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மாரடைப்பின் அறிகுறி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு அறிகுறிகள் எதையும் காட்டாமல் வரலாம். சிலருக்கு அது வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டலாம். உதாரணத்துக்கு,  நெஞ்செரிச்சல், முதுகுவலி, கைகளில் மட்டும் குடைச்சல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளாகவும் வெளிப்படலாம். அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி என்பதை உணராமலேயே சிலர் அதிலிருந்து மீண்டிருப்பார்கள். இது போன்ற அறிகுறிகள் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரலாம்.  உங்கள் மாமனாருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். மாரடைப்பு என்றதுமே தாங்க முடியாத நெஞ்சுவலி, வலது தோள்பட்டையில் வலி, அது கைகளுக்குப் பரவுதல் போன்ற பிரதான அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. ஆனால், ரத்தக்குழாய் மூடியிருக்கும். வேறொரு சந்தர்ப்பத்தில் இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பகுதி சரியாகச் செயல்படாமலேயோ, இசிஜியில் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாறுதல்கள் இருப்பதோ தெரியவரும். இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். எனவே, உங்கள் மாமனாருக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்திருப்பதால் இனி நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். மாமனாருக்கு எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என பரிசோதனை செய்து பார்க்கவும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார்.  அதன்படி தேவையான டெஸ்ட்டுகளை செய்துபார்த்து மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளைப் பின்பற்றச் சொல்லுங்கள். மீண்டும் இதே பாதிப்பு வராமல் தடுப்பதற்கான விஷயங்களைப் பின்பற்ற அறிவுறுத்துங்கள். அதை 'செகண்டரி ப்ரிவென்ஷன்' (Secondary prevention) என்று சொல்வோம். உணவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரை கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே உணர முடியுமா?

விகடன் 10 Jun 2025 9:00 am

Fiber: நார்ச்சத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. ஏன் தெரியுமா?

நா ர்ச்சத்து... நாம் உட்கொள்ளும் இயற்கை உணவில் நிறைந்து இருக்கும், ஆனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் அளிக்காத ஒரு பொருள். இதுமட்டும் இல்லை என்றால், நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். அந்த அளவுக்கு அத்தியாவசியமான பொருள். நாம் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வழியே பயணித்து வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியாகப் பயணிக்கும்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளும். நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொள்ளும்போது அது உணவின் செரிமான மண்டலப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முத்து கிருஷ்ணன். நார்ச்சத்து உணவுகள் ''விலங்குகளில், சைவம், அசைவ உணவு சாப்பிடுபவை எனப் பிரித்து அதன் வாழ்க்கை முறையைக் கவனித்தோம் என்றால், நார்ச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். யானை, மான், மாடு போன்ற சைவ விலங்குகள், உடல் கழிவை பெரிய அளவில் அதேநேரத்தில் எந்தவிதச் சிரமமும் இன்றி வெளியேற்றும். இதுவே அசைவம் உண்ணும் சிங்கம், புலி தொடங்கி நம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகளின் கழிவுகள் கெட்டியாக, வெளியேற்றவே சிரமப்படுவதைக் காணலாம். இதே உதாரணம், மனிதர்களுக்கு கிட்டத்தட்டப் பொருந்தும். இதற்கு, சைவ உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதும், அசைவ உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதுமே முக்கியக் காரணம். Food Supplement: சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? நார்ச்சத்து என்றால் என்ன? நார்ச்சத்து என்பது ஒருவகையான கார்போஹைட்ரேட் சத்து. ஆனால், இதை நம்முடைய உடலால் செரிமானம் செய்ய முடியாது. மற்ற கார்போஹைட்ரேட் எல்லாம் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடல் பயன்படுத்தும். ஆனால், இந்த நார்ச்சத்து மட்டும் குளுக்கோஸாக மாற்றப்படுவது இல்லை. ஆனால், செரிமானம் ஆகாமல், கழிவாக வெளியேறுகிறது. குடலில், உணவு பயணிக்கும்போது, எங்கேயும் சிக்கிவிடாமல், வெளியேற சங்கிலித் தொடர்போல செயல்பட்டு உதவுகிறது. தவிர, நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும்போது, சிறிது சாப்பிட்டாலும், வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சர்க்கரை அளவை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கச் செய்யும், இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தை நீரில் கரையக்கூடியது, கரையாதது என்று இரண்டாகப் பிரிக்கலாம். செரிமானம் Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்! நார்ச்சத்து ஏன் முக்கியம்? நார்ச்சத்து அதிலும் குறிப்பாக, கரையா நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்குகிறது. கழிவின் எடையை அதிகரிக்கச் செய்து, செரிமான மண்டலத்தில் பயணிக்கும் கால அளவைக் (Colonic transit time) குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால்தான் குடலின் இயக்கம், செரிக்கும் தன்மை எளிதாக நடக்கும். கழிவுகள் முழுமையாக வெளியேறும். நார்ச்சத்து குறைந்த உணவு உட்கொள்ளும்போது, உணவு பயணிக்கும் நேரம் அதிகமாகும். மலக்குடலிலே அதிக நேரம் கழிவு தங்கும். இந்தநிலையில், கழிவில் இருந்து நைட்ரஜன் உருவாகி, மலக்குடல் செல்களைப் பாதிக்கும். இவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுவே நார்ச்சத்து உள்ள உணவாக இருந்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியா, நார்ச்சத்தை புளிக்கச் செய்கிறது. இப்படி புளிக்கச் செய்வதால் கிடைக்கும் பொருளே, பெருங்குடல் செல்களுக்கு தேவையான ஆற்றலாக மாறிவிடுகிறது. இதனால், பெருங்குடல் மற்றும் மலக்குடல் தொடர்பான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவு உட்கொள்பவர்களுக்கு சர்க்கரைநோய் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவையும் கட்டுக்குள் வைக்க இது உதவும். குடல் ஆரோக்கியம் எதில் அதிக நார்ச்சத்து? ப ச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், இலைகள் கொண்ட காய்கறிகள் அதாவது முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல், வெங்காயத் தாள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மற்ற காய்கறிகளில் மிதமான அளவில் உள்ளது. எ ல்லா பழங்களிலும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழங்களை அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து உடலுக்குள் சேரும். ஜூஸாகத் தயாரிக்கும்போது, நார்ச்சத்து சிதைந்துவிடும். வெறும் வைட்டமின், தாதுஉப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மட்டுமே கிடைக்கும். வா ழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தோலை நாம் தவிர்த்தாலும், மெல்லிய இழை போன்ற தோலில் ஒட்டியிருக்கும் படிமத்தை எடுத்துச் சாப்பிட்டு வர, நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். ப ருப்பு, பயறு, நட்ஸ் ஆகியவற்றிலும் நார்ச்சத்து இருக்கிறது. கை க்குத்தல் அரிசி, சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. அரிசியை பாலீஷ் செய்யும்போது நார்ச்சத்தும் சேர்ந்து வெளியேற்றப்படுகிறது. அரிசி அசைவப் பிரியர்கள் கவனிக்க... அசைவ உணவுகளில் நார்ச்சத்து இல்லை. அசைவ உணவு உட்கொள்ளும்போது, அதற்கு இணையாக கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சாலட் எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து தப்பலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நார்ச்சத்து தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு சராசரியாக 10-15 கிராம் நார்ச்சத்து தேவை. தினமும் உணவு வழக்கத்தில், ஒரு வேளையாவது காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்'' என்கிறார் டாக்டர் முத்து கிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 10 Jun 2025 6:55 am

Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்கிறாள் என் தோழி. வெளிநாட்டில் வசிக்கிற அவள், கருத்தரிப்பதைத் தவிர்க்க, அங்கெல்லாம் இந்த முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள்  குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும். 21 நாள்கள் சுழற்சியில்  ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள், இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில்,  அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கருத்தரிக்க வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம்.  முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.   6வது, 7வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கருத்தரிக்க வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம். கருமுட்டையானது ரிலீஸ் ஆனதும், ஒரே ஒரு நாள் மட்டுமே அது இனப்பெருக்க மண்டலத்தில் உயிருடன் இருக்கும். அதுவே, உயிரணுவானது, 3 நாள்கள்வரை உயிருடன் இருக்கும். எனவே,  அண்டவிடுப்புக்குப் பிறகு உடனடியாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டாலோ அல்லது  3 நாள்களுக்கு முன்னரே தாம்பத்திய உறவில் ஈடுபட்டாலோ, அந்தப் பெண்ணின் உடலில் உயிரணு உயிர்ப்புடன் இருக்கும்வரை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருப்பது சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

விகடன் 9 Jun 2025 9:00 am

24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.  இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 1 - ல் (1-10-2024) இதேபோல் 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்று அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பாராட்டுகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த ஆண்டும் இந்த சிறப்பான சாதனையைச் செய்துள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நல பெட்டகம் அளிக்கப்பட்டு மேலும் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கி மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் வழிகாட்டுதலின்படி, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்கிற இலக்கோடு அனைத்து சுகப்பிரசவங்களும் பாதுகாப்பாகவும் மருத்துவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இததகைய சாதனையை இரண்டாவது முறையாக செய்துள்ளனர். மருத்துவர் குழுவுடன் இதுபற்றி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறும்போது, காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் மேற்பார்வையில் சுகப்பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதர நேரங்களில் வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுடைய பிரசவத்தின் தன்மையை பொறுத்து காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை வளையப்பட்டி, அரசு ராணியார் மருத்துவமனை புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதன் மூலம், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் இதன் மூலம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் நம்முடைய புதுக்கோட்டையில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்னும் இலக்கினை அடைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் எண்டார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்களும், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

விகடன் 8 Jun 2025 6:30 pm

24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.  இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 1 - ல் (1-10-2024) இதேபோல் 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்று அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பாராட்டுகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த ஆண்டும் இந்த சிறப்பான சாதனையைச் செய்துள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நல பெட்டகம் அளிக்கப்பட்டு மேலும் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கி மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் வழிகாட்டுதலின்படி, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்கிற இலக்கோடு அனைத்து சுகப்பிரசவங்களும் பாதுகாப்பாகவும் மருத்துவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இததகைய சாதனையை இரண்டாவது முறையாக செய்துள்ளனர். மருத்துவர் குழுவுடன் இதுபற்றி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறும்போது, காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் மேற்பார்வையில் சுகப்பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதர நேரங்களில் வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுடைய பிரசவத்தின் தன்மையை பொறுத்து காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை வளையப்பட்டி, அரசு ராணியார் மருத்துவமனை புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதன் மூலம், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் இதன் மூலம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் நம்முடைய புதுக்கோட்டையில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்னும் இலக்கினை அடைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் எண்டார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்களும், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

விகடன் 8 Jun 2025 6:30 pm

Mental Health: டீன் ஏஜில் வரக்கூடிய ஸ்ட்ரெஸ்; காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்..!

ப ரீட்சை பயம், பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையை எப்படிப் பூர்த்திசெய்வது என்ற பயம் எனப் பள்ளி, கல்லூரி செல்லும் டீன் ஏஜினர் மத்தியில் தற்போது மனஅழுத்தம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, தூக்கம் எனப் பல பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ, ஒன்றிரண்டு பேருக்கு அல்ல... அதிகப்படியானவர்கள் இந்த மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டீன் ஏஜ் ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சேல்விழி சுப்பிரமணியன். Teen Age Stress படிப்பால் ஏற்படும் மனஅழுத்தம் டீன் ஸ்ட்ரெஸ் காரணங்கள்... பெரும்பாலான இளவயதினரின் மனஅழுத்தத்துக்கு அவர்களின் படிப்பே காரணமாக இருக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் அவர்களின் நாள் காலை 4 மணியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. 6 மணிக்கு கணக்கு டியூஷன், 7 மணிக்கு கெமிஸ்ட்ரி டியூஷன் முடித்துப் பள்ளிக்குச் சென்றால்... இரவு வரை வகுப்புகள், செயல்முறை வகுப்புகள், தேர்வுகள்... அவற்றை முடித்து வீட்டுக்கு வந்தால், ரெக்கார்டு ரைட்டிங், மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் எனத் தொடர்ந்து அவர்களின் தினசரி நாட்கள் மனஅழுத்தத்திலேயே கழிகிறது. இதில், நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று, விளையாட்டு உள்பட பொழுதுபோக்குகளுக்குத் தடை வேறு. ‘நான் சென்ட்டம் எடுத்தேன், என் மகன் நீ, கண்டிப்பாக என்னைவிட அதிகமாகத்தான் எடுக்க வேண்டும். அதுதான் எனக்குப் பெருமை’ என்றும், ‘பக்கத்து வீட்டு ப்ரியாவைவிட நீ நிறைய மதிப்பெண் எடுத்தால்தான் எனக்கு கெளரவம்’ என்றும் சொல்லும்போது, அது மனஅழுத்தத்தை அதிகரித்துவிடுகிறது. சமூகம் உறவுகளில் ஏற்படும் விரிசல், நட்பில் பிரிவு, பெற்றோரிடம் சண்டை போன்றவற்றைக் கடக்க முடியாமல் தடுமாறும் பருவம் இது. சமூகத்தில் பல ஜீரணிக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அதனைச் சகித்துக்கொள்வதற்கு மனம் பக்குவப்படாமல் இருக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். பல வருடங்களாக ஒரே வீட்டில் இருந்துவிட்டு புதிதாக வேறு வீடு மாறும்போதும், நண்பர்களை விட்டு புதிதாக வேறு பள்ளிக்குச் செல்லும்போதும் புதிய சூழல் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த எண்ணம் யாரோடும் சீக்கிரத்தில் சேரவிடாமல் தனித்தே இருக்கச்செய்யும். Teen Age Stress குறைந்த சுய மதிப்பீடு சக மாணவனைவிட உயரம் குறைவாக இருக்கிறோம், நண்பனைவிட கறுப்பாக இருக்கிறேன், அவன் நன்றாகப் படிக்கிறான், என்னால் படிக்க முடியவில்லை, அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால், என்னிடம் யாரும் பேசுவதுகூட இல்லை என்பதைப் போன்ற தாழ்வு மனப்பான்மையும் மனஅழுத்தத்துக்கு க் காரணம். குடும்பப் பிரச்னைகள் அடிக்கடி குடும்பத்தில் பெற்றோர்களிடையே சண்டை, வாக்குவாதம், உடன்பிறப்புகளோடு சண்டை, பெற்றோர்கள் காட்டும் பேதம், முக்கியத்துவம் போன்றவையும் மனஉளைச்சலுக்குக் காரணமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்காமல், வேலையில் மூழ்கி இருத்தல், அவர்கள் மேல் அக்கறையும், கவனமும் செலுத்தாமல் இருப்பது, அவர்களின் எண்ணங்களைப் பொறுமையாகக் கேட்காமல் கோபப்படுவது, வெறுப்பைக் காட்டுவது என இருந்தால், குழந்தைகளுக்கு நிறைய எதிர்மறை எண்ணங்கள் வருவதோடு, மனஅழுத்தமும் ஏற்படும். Family Health: பருவமடையும் ஆண் குழந்தைகளின் உடலில் நிகழும் 8 மாற்றங்கள்! காதல் மற்றும் உறவுகள் பருவம் அடைந்த பிறகு இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஏற்படும் ஈர்ப்பு, காதலாக மாறும். அந்த உறவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரியாமல் மனதில் எப்போதும் எதையாவது நினைத்து வருந்திக்கொண்டே இருப்பார்கள். இந்த வயதில்தான் காதல் தோல்வி என்று தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையையே கெடுத்துக்கொள்வார்கள். `டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?’ - ஆய்வு முடிவும், மாணவர்களின் பதிலும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் அறிகுறிகள்... எப்போதும் கவலையாக, நம்பிக்கையற்ற நிலையிலேயே இருப்பார்கள். மந்தமாகவோ விபரீதமாகவோ நடந்துகொள்வார்கள். வழக்கத்துக்கு மாறாகக் கோபப்படுதல், எதுவும் சரியாக நடப்பது இல்லை என்ற எண்ணம், நாம் எதற்கும் தகுதி இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை மேலோங்கி இருக்கும். இவ்வாறு, உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாக இருக்கும். Teen Age Stress நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பதற்றம் அதிகமாக இருக்கும். படபடப்போடு இருப்பார்கள். நட்பு வட்டத்தில் இருந்தும், கூட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பார்கள். போதைப் பொருள்கள் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக உறங்குவது, அழுவது, பள்ளி, கல்லூரி செல்ல மறுப்பது, குறைவாகச் சாப்பிடுவது, உடம்பில் சத்து இல்லாதது போல் உணர்வது, எப்போதும் உணர்ச்சி நிலையில் ஏற்ற இறக்கத்தோடு இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் நடந்துகொள்வது, தன் தோற்றத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பது, எல்லா நேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் காணப்படும். Sexual Wellness: `ச்சீ, என் பிள்ள சுயஇன்பம் செய்யுறானே'ன்னு கோபப்படறீங்களா?| காமத்துக்கு மரியாதை 153 எண்ணங்களில் மாற்றம் எதையும் நினைவில் வைக்க முடியாமல் சிரமப்படுவர். சரியான, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம், எதைப் பற்றியாவது யோசனை அல்லது பேச்சுக்களில் மூழ்கிப்போதல், கவனச்சிதறல், பகுத்தறியும் ஆற்றல் குறைந்து, தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, திட்டமிடுதலில் பிரச்னை போன்றவை தோன்றும். Teen age உடல் மாற்றங்கள் பசியின்மை அல்லது அதீதப் பசி, உடல் நிலை சரி இல்லாமல் இருப்பது, உடல் எடை திடீரென அதிகரித்தல் அல்லது குறைதல், மயக்கம், சுவாசப் பிரச்னை, அச்சவுணர்வு, அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல், அடிக்கடி சளிப் பிடித்தல், மாதவிடாயில் மாற்றம் உடலியல் மாற்றங்கள் ஏற்படும். எப்படி மீட்டு எடுப்பது? பெ ற்றோர்கள் தங்கள் வேலைகளைத் தாண்டி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கையைக் குறித்த லட்சியங்கள், அவர்களின் பிரச்னைகள், உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்துப் பொறுமையாகக் கேட்டு ஆலோசனை கூற வேண்டும். “உ ன்னிடம் திறமை உள்ளது; உன்னால் முடியும், நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும். அ ன்பாக, நட்பாகப் பழக வேண்டும். கோபப்படாமல், திட்டாமல், அடிக்காமல் ஆறுதலாகப் பேசும்போது பிள்ளைகளுக்கு எதையும் மறைக்காமல் சொல்லும் எண்ணம் வரும். மறைக்காமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லும்போது பிரச்னைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள். இதனால், மன அழுத்தம் வருவதை முன்கூட்டியே தவிர்க்க முடியும். teen age ஒ ழுங்கற்ற உணவுப்பழக்கம்கூட உடலிலும் மனதிலும் சோர்வை ஏற்படுத்தும் என்பதால், சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும். ம னஅமைதியைத் தரக்கூடிய பொழுதுபோக்குகளான ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது போன்றவற்றை செய்ய பிள்ளைகளுக்கு தடைபோடக் கூடாது. பி ள்ளைகள் அவசியம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாகத் தூங்கி எழுந்தாலே அவர்கள் உடலும் மனமும் நன்கு செயல்படும். கு ழந்தைகளுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது. பிடித்தவற்றைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்காமல், உற்சாகம் கொடுக்க வேண்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 8 Jun 2025 6:00 pm

Doctor Vikatan: குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். என்னால் அதை உணர முடியவில்லை. குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை எல்லாம் கிடையாது என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை இருக்கிறதா, இதிலிருந்து நிரந்தரமாக மீள முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.   பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் குறட்டை பல காரணங்களால் வரலாம். தொண்டைக்கு மேல், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை  ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதே போல  தொண்டைக்குக் கீழ், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை  ஏற்பட்டாலும் குறட்டை வரும். உடல் பருமன் காரணமாகவும் குறட்டை வரலாம். மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாகச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை 'டீவியேட்டடு நேசல் செப்டம்' (deviated  nasal septum) என்று சொல்வோம். இதனாலும் குறட்டை வரலாம். டான்சில்ஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம்.  அசிடிட்டி பிரச்னையின் காரணமாகவோ, அதிகம் மது அருந்துவதாலோ சிலருக்கு குரல் நாண் ( Vocal Cord) வீங்கியிருக்கும். இவர்களுக்கு குரல் மாறும், குறட்டை அதிகமிருக்கும். உடல்பருமனால் வரும் குறட்டை சற்றே சீரியஸானது. அதாவது வயிற்றுக்குள் கொழுப்பு அதிகமிருக்கும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை  சுருக்க ஆரம்பிக்கும். நுரையீரலின் கொள்ளவு குறையும்போது, நம்மை அறியாமல் வாயைத் திறந்து மூச்சு விட ஆரம்பிப்போம். அப்போது நாக்கு உள்வாங்கி, தொண்டையை அடைக்கும். மூச்சுக் காற்றானது அதைத்  தாண்டி, மேலும் கீழும் போகும்போது குறட்டையாக வெளியே வரும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக மாட்டார்கள். அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள்.  மூளைக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். மறுநாள் அதிக களைப்புடன் உணர்வார்கள். உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவார்கள். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, 'ஸ்லீப் ஸ்டடி' (sleep study) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற பாதிப்பு இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால் நுரையீரல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். எடை அதிகமிருந்தால் எடையைக் குறைக்க அறிவுறுத்துவார்கள். மூக்கில் சதை வளர்ந்திருந்தால் இ.என்.டி மருத்துவரை அணுகச் சொல்வார்கள். குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம்.  சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் குறட்டை பிரச்னையை 100 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

விகடன் 8 Jun 2025 9:00 am

Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

“ஜி ம்முக்குப் போறேன், டயட் ஃபாலோ பண்றேன்... ஆயில் ஃபுட்ஸை விட்டுட்டேன். ஆனாலும், வெயிட் குறைஞ்சபாடில்லை” என்று இன்றைக்கும் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், எவையெல்லாம் உடல் எடையை அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டாலே, உடல் ஃபிட்டாக மாறி விடும். அவை என்னென்ன என்று பட்டியலிடுகிறார் பொதுநல மருத்துவர் முருகேஷ். Obesity உ டல் பருமனுக்கு உணவை மட்டுமே குறை சொல்ல முடியாது. எதைச் சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். கிடைத்த கலோரியைச் செலவழித்தோமா என்பதையும் கவனிக்க வேண்டும். செலவாகாத கலோரிதான் கொழுப்பாக மாறும். இது உடலில் சேகரிக்கப்படும். தொடர்ந்து சேகரிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படும். இந்தச் சுழற்சியைப் புரிந்துகொண்டாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம். Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? - டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை ஏ ன் கொழுப்பை உடல் சேகரிக்கிறது என்று சந்தேகம் எழலாம். உடல் ஆரோக்கியமாக இயங்க ஆற்றல் தேவை. தினசரி, போதுமான ஆற்றல் கிடைத்தாலும் எதிர்காலத் தேவையை உடல் கவனத்தில்கொள்ளும். எனவே, தேவையான அளவு பயன்படுத்திக்கொண்டு, மீதம் உள்ள கலோரியை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதுபோல, உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கும். கலோரியை எரிக்க, கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, நடைப்பயிற்சி போன்ற எளிய விஷயங்களைச் செய்தாலேபோதும், கலோரிகள் எரிக்கப்படும். Obesity உ ணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து என நான்கு முக்கிய சத்துக்கள் இருக்கின்றன. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்‌ஸிடன்ட்கள் உள்ளன. இதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மூன்றும் கலோரிகளாக மாற்றப்படும். இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்டால், உடல் எடையைத் தவிர்க்க முடியும். தே வையான நேரத்தில் உணவு உள்ளே செல்லும்போது, செரிமானம் சீராக நடக்கும். காலை உணவை 11 மணிக்கு சாப்பிட்டால், பாதி உணவு செரிமானம் ஆகாமல் கழிவாகவும் மாறாமல் கொழுப்பாக மாறிவிடும். Obesity இ ரவு நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது, நான்கு பேருடன் பேசும்போது சும்மா நொறுக்குத்தீனிகளைக் கொறிப்பது, ‘இந்தக் கடையில் ஸ்வீட் சூப்பர்’, ‘இந்த கலர்...செம’, ‘இந்த உணவு டேஸ்ட்டி’ எனத் தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் எடை கூடுவதற்கான முக்கியக் காரணங்கள். Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்? நே ரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் வாயு சேரும். சில வகை உணவுகளாலும் வாயு சேரும். இப்படி, பல வகையில் வாயு சேர்ந்தால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும். கா ர்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்டு உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும். gastric problem Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! டி. வி பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, சுவாரஸ்யம் காரணமாகப் போதுமான அளவைவிட சற்றுக் கூடுதலாகச் சாப்பிட நேரும். ஏ. சியிலேயே இருப்பவர்கள், வியர்க்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உடல் உழைப்பு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதிகளில் சதை போடத்தான் செய்யும். ம லச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்குக் கழிவுகள் உடலில் தேங்கி நிற்கும். உடல் எடை கூட வாய்ப்பாக அமைந்துவிடும். Good Food ஹா ர்மோன் பிரச்னைகளும்கூட பருமனுக்குக் காரணம் ஆகலாம். ஹைப்போதை ராய்டிசம், தைராய்டு, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும். வா ழ்க்கை முறையிலும், உணவிலும் தவறான பழக்கங்களைச் சரி செய்தால், உடல் எடை தானாக குறைந்துவிடும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 8 Jun 2025 7:06 am

காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்கும் மருத்துவர்

சிறுவயதில் காயம் ஏற்பட்டால் கசியும் ரத்தத்ததை உடனே வாயில் வைப்போம். வளர்ந்த பிறகும்கூட பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இது சரியா; இதனால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.பி.சந்திரசேகரன். காயம் ''காயங்களில் இருந்து கசியும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சுவது உடலுக்கு ஒருபோதும் நல்லதல்ல. வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சினால், அது மீண்டும் ரத்தத்தில் கலந்துவிடும் என்பதெல்லாம் பொய்யான புரளி. மாறாக நாம் உறிஞ்சக்கூடிய ரத்தமானது இரைப்பைக்குச் சென்று அங்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் வயிற்றுவலி, வாந்தி போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ரத்தத்தை உறிஞ்ச முற்படும்போது... நாம் ஒரு நாளைக்கு பலவித உணவுப்பொருள்களை உட்கொள்கிறோம். அந்த உணவுப்பொருள்களில் உள்ள பாக்டீரியாக்கள் நமது வாயிலோ, பல்லிலோ தங்கியிருக்கும். நாம், காயத்தின் மீது வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்ச முற்படும்போது பாக்டீரியாக்கள் காயங்களில் ஒட்டிக்கொள்ளும். இந்த பாக்டீரியாக்கள் விரைவில் குணமடையக் கூடிய காயத்தைக்கூட, ஆற விடாமல் பெரிய காயங்களாக, பாக்டீரியா தொற்றாக மாற்றிவிடும். அதனால், காயத்தில் கசியும் ரத்தத்தை உறிஞ்ச வேண்டாம். டெட்டனஸ் ஊசி காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் கழுவி, காயத்தில் ஆன்டிசெப்டிக் மருந்து போட்டுவிட்டாலே போதுமானது. காயம் பெரியது என்றால், அதற்கேற்ப தையல்போடுவதோ, கட்டுப் போட்டுக்கொள்வதோ செய்யலாம். சிறிய காயம் என்றால் காற்றோட்டமாக விட்டாலே சரியாகிவிடும். தேவைப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளோ, வலிநிவாரண மாத்திரைகளோ, டெட்டனஸ் ஊசியோ எடுத்துக்கொள்ள வேண்டும். Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன? இரத்தம் நிற்காமல் கசிந்துக் கொண்டே இருந்தால் ஈரத்துணியால் காயத்தைக் கட்டி அடிப்பட்ட இடத்தை மேல்நோக்கி தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தக் கசிவை கட்டுப்படுத்தும். அதன்பிறகு கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்ட இடத்தில் எலும்போ, நரம்புகளோ, தசை மண்டலமோ உள்காயமாக பாதிக்கப்பட்டிருந்தால் அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். இரத்த கசிவு நிற்காவிடில் மூல காரணம் என்ன என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஹீமோஃபிலியா, ரத்தத்தட்டு குறைபாடுகள் போன்ற நோய் பாதிப்புடையவர்கள் மற்றும் ரத்த உறைவை தடுக்கக்கூடிய மருந்துகளை உட்கொள்பவர்களும் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் சந்திரசேகரன். கைகளிலோ, காலிலோ அல்லது விரல்களிளோ காயம் ஏற்பட்டால் அவற்றில் அணிந்திருக்கக் கூடிய வளையல், மோதிரம், கொலுசு போன்றவற்றை அகற்ற வேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்டால், கை, கால்களில் வீக்கம் ஏற்படும். அந்த நேரத்தில் இந்த அணிகலன்கள் அழுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்துவிடும். இதனால், பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் அவை அழுகிப்போகும் நிலைகூட ஏற்படலாம். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், ரத்த தமணி அடைப்புள்ளவர்களுக்கு காயம் ஆறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, 'சிறிய காயம்தானே' என்று கண்டுக்கொள்ளாமல் இருந்து விடாதீர்கள், காயத்திற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு'' என்கிறார் மருத்துவர் சந்திரசேகரன். Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 7 Jun 2025 6:46 am

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..'என்பது சாத்தியமா?

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா....? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்... வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் அடல்ட் எனப்படும் வளர்ந்த ஒருவரின் இரைப்பையின் கொள்ளளவு 1.5 முதல் 2 லிட்டர் வரை இருக்கும். இது அதிகபட்சமாக 4 லிட்டர் வரை விரிவடைய வாய்ப்பு உண்டு. ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்படும். நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும். சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். ஒரே கல், பல மாங்காய்கள்! பருமனைக் குறைக்கும் மருந்துகள் கேன்சரைத் தடுக்குமா? | Long Read இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும். இந்த உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. தவிர, உடல் பருமனைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். எனவே, இதில் வயிறு 1.5 லிட்டரைவிட குறைவாகச் சுருங்கவோ, 4 லிட்டரைவிட அதிகமாக விரியவோ மாற வாய்ப்பில்லை. அவரவர் உடல் எடை, ரத்தச் சர்க்கரை அளவு, ஹார்மோன்கள் சுரக்கும் அளவு போன்றவற்றைப் பொறுத்து இது மாறும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 6 Jun 2025 9:00 am

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? - டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெ யில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை... தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள். கரும்பு ஜூஸ் *பொங்கல் நேரத்தில் வரும் ஊதா நிற கரும்பில் நீர்ச்சத்து குறைவு. வெள்ளைக்கரும்பில் சக்கைக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். வெள்ளை கரும்பு ஜூஸை அனைவரும் தாராளமாகக் குடிக்கலாம். எந்த ஜூஸையும் உணவு சாப்பிடும்போது குடிக்கக்கூடாது. இது கரும்பு ஜூஸுக்கும் பொருந்தும். Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர் * கோடைக்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதால், உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதற்குக் கரும்பு ஜூஸ் ஒரு நல்ல பானம். காலை உணவு சாப்பிட்ட பிறகு 11 மணி அளவில் இதை அருந்தலாம். அல்லது மதிய நேரத்தில் 3 முதல் 4 மணி அளவில் டீ அல்லது காபிக்குப் பதிலாக இதைக் குடிக்கலாம். * ஒரு நாளைக்கு 200 மி.லி. குடித்தால் போதும்; அதுவே உடலுக்குப் போதுமானது. கரும்பு ஜூஸ் * கரும்பு ஜூஸில் இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்துத் தருவார்கள். இவையும் பல நன்மைகளை நம் உடலுக்கு அளிப்பவையே. * பலர் கரும்பு ஜூஸை பார்சல் செய்து, வீட்டுக்கு எடுத்துப்போய் ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கிறார்கள். அப்படிச் செய்தால், ஒரு நாளுக்குள் குடித்துவிட வேண்டும்; இல்லையெனில் அது புளித்துவிடும். எந்த ஜூஸாக இருந்தாலும் உடனடியாகக் குடிப்பதே நல்லது. கரும்பு ஜூஸில் பொட்டாசியம், கால்சியம் நிறைய உள்ளன. ஃப்ரிட்ஜில் வைத்து அதை வீணாக்க வேண்டாம். Health: 'செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஏன் கலர் கலராக இருக்கு?' - சித்த மருத்துவர் சொல்லும் விளக்கம் * கரும்பு ஜூஸில் வெயிலுக்கு இதமாக ஐஸ் கட்டிகள் சேர்ப்பார்கள். சுத்தமான ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். * எந்த இடத்தில் கரும்பு ஜூஸ் தயாரிக்கப்படுகிறதோ, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். கரும்புச்சக்கை ஒரே இடத்தில் சேர்வதால், அதிலிருந்து வரும் ஈக்கள் கோடைக்காலத்தில் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை எளிதாக ஏற்படுத்தி விடும். ஆனால், ஏற்கெனவே மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு சாப்பிட முடியாமல் இருக்கும்போது, சுத்தமாகத் தயாரிக்கப்படுகிற கரும்பு ஜூஸை அருந்தினால் எனர்ஜியாக உணர்வார்கள். கரும்பு ஜூஸ் ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits * பெரும்பாலான ரோட்டோரக் கடைகளில் டம்ளர்களைச் சரியாகக் கழுவுவதில்லை. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. அதனால், பேப்பர் கப்பில் வாங்கிக் குடிக்கலாம். * சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு ஜூஸைக் குடிக்கவே கூடாது. Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 6 Jun 2025 7:51 am

Doctor Vikatan: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் detox  சிகிச்சைகள் குடலை சுத்தம் செய்ய உதவுமா?

Doctor Vikatan: என் வயது 36. என்னுடைய வேலையின் தன்மை காரணமாக என்னால் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட முடியாது. பெரும்பாலும் வேலை நிமித்தம் வெளியே செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவேன். அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுவோர், குடலை எளிதாகச் சுத்தம் செய்யும் வழிகள் என இன்ஸ்டாவில் நிறைய ரீல்ஸ் பார்க்கிறேன். அவை எல்லாம் உதவுமா... வெளியிடங்களில் சாப்பிடும்போது சில நேரங்களில் உடனே வயிறு கலக்குகிறது. அதற்கு எளிமையான தீர்வு ஏதும் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி ஹாஸ்டலில் தங்கியிருப்போர், வெளியே அலையும் வேலையில் இருப்போருக்கெல்லாம் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது. தினமும் மூன்று வேளைகளுமே வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறோம். வெளி உணவுகளால் குடலில் சேரும் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்ற மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என எதுவும் கிடையாது. இன்ஸ்டா ரீல்ஸில் நீங்கள் பார்க்கிற விஷயங்களை எல்லாம் அப்படியே நம்பி பின்பற்றுவது ஆபத்தானது. வாரத்தில் ஒரு நாள் நீங்கள் பின்பற்றக்கூடிய எளிய சித்த மருத்துவம் ஒன்று உள்ளது. சித்த மருந்துக் கடைகளில் சுண்டைவற்றல் சூரணம் என கிடைக்கும். மார்க்கெட்டிங் வேலையில் இருப்போர், வெளியே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போரெல்லாம் இந்தச் சூரணத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் அல்லது நீர்மோரில்  கலந்து குடித்தால் வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.  சுண்டை வற்றல் சுண்டை வற்றலை பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. உண்மையில், குடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் சுண்டை வற்றலுக்கு நிகரே இல்லை எனலாம். சுண்டை வற்றல் இருந்தால் கையில் தங்கம் இருப்பதற்குச் சமம்.  உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கெட்ட பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்கும் தன்மை சுண்டை வற்றலுக்கு உண்டு. கிராமங்களில் வாரம் முழுக்க சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என சாப்பிட்டாலும், வார இறுதியில் சுண்டை வற்றலைச் சேர்த்துக் குழம்பாகச் செய்து சாப்பிடுவார்கள். அப்பளம் பொரிப்பது போல சுண்டை வற்றலைப் பொரித்து, பொடித்து, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து வாரம் ஒருநாள் சாப்பிட்டால்கூட குடல் சுத்தமாகிவிடும். குடலை உணவுகள் மூலம்தான் சுத்தப்படுத்த முடியும். டீடாக்ஸ் சிகிச்சைகள் எல்லாம் தேவையே இல்லை. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய உணர்வு வரும். அந்தப் பிரச்னைக்கும் சுண்டைவற்றல் சூரணம் சூப்பர் மருந்தாகச் செயல்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: `பித்தப்பை கற்கள்' அறுவை சிகிச்சையைத் தவிர்க்க சித்த மருந்துகள் உதவுமா?

விகடன் 5 Jun 2025 9:00 am

Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?

’’க ர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அந்த இடத்தைச் சுற்றி நரம்புகள் சுருண்டு விடும். இதையே வெரிகோஸ் வெயின்ஸ் என்கிறோம். இது, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வந்தால், நாளடைவில் அந்த இடமே பச்சை நிறத்தில் மாறி நரம்புகள் சுருண்டு, அந்த இடம் முழுவதுமே புண்ணாகிவிடும். ஆரம்ப காலத்திலேயே இதைச் சரி செய்ய வேண்டும்; இல்லையென்றால் கஷ்டமாகிவிடும்.சில இயற்கை மருத்துவ முறைகளைப் பயன்படுத்தினால், இதைச் சரி செய்துவிடலாம்’’ என்கிற இயற்கை மருத்துவர் யோ.தீபா, அந்த முறைகள்பற்றி விளக்குகிறார். உடல் எடை கோல்டு லெக் பேக் ஒரு காட்டன் துணியை மூன்று மீட்டர் வரை நீளவாக்கில் கிழித்து, அதை நீரில் நனைத்து, நரம்பு சுருண்டிருக்கும் இடத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும். பிறகு அதன் மேல் உலர்ந்த துணியால் மூடி, 45 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இந்த கோல்டு லெக் பேக்கை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதை தினசரி செய்து வந்தால், ரத்தநாளங்களில் ரத்தம் எங்கும் தடைபடாமல் செல்ல ஆரம்பிக்கும். இதனால், சுருண்ட நரம்புகள் படிப்படியாக சரியாகும். சாப்பிட்ட உடனே இதை செய்யக்கூடாது; சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இதைச் செய்யலாம் அல்லது சாப்பிடுவதற்கு முன்னால் செய்யலாம். மண் சிகிச்சை முறை மண்ணை உடல் முழுவதும் பூசிக்கொண்டு வெயிலில் உட்கார வேண்டும். இந்த மண் சிகிச்சை முறையைச் செய்தால், பிற்காலத்தில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படாமல் வெரிகோஸ் வெயின் சரியாகலாம். தவிர,அக்குபஞ்சர் சிகிச்சையைச் செய்தால் அது ரத்த அடைப்புகளைச் சரி செய்யும்; இதனால், வெரிகோஸ் வெயின் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கலாம். மசாஜ் மசாஜ் சிகிச்சை லாவண்டர் எண்ணெய், லெமன் கிராஸ் எண்ணெய் வைத்து அந்தப் பகுதியில் மசாஜ் செய்தால், எளிதில் தளர்ந்த நரம்புகளை சரி செய்யலாம். இயற்கை மருத்துவத்தில் செய்யப்படுகிற ஸ்வீடிஷ் மசாஜை தினசரி 15 நிமிடங்கள் செய்து வந்தால், சுருண்ட ரத்தநாளங்கள் மெள்ள மெள்ள பழைய நிலைக்குத் திரும்பும். Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்! வெரிகோஸ் வெயினுக்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி? 50 கிராம் நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 பிரண்டைத் துண்டுகள் போட்டு, கூடவே10 கிராம் இஞ்சியை இடித்துச் சேர்த்து, மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு, அதை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் சிறிதளவு எடுத்து லேசாக சூடு செய்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு உள்ள இடத்தில் பூசிக்கொள்ளலாம். இதனால், நாளடைவில் வலி மற்றும் நரம்பு சுருள் குறையும். யோகா யோகா முறையிலும் சரி செய்யலாம்? உத்தான பாதாசனம் மற்றும் சலபாசனம் போன்ற யோகா முறைகளைப் பயன்படுத்தி, வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம். ஆனால், நான் இங்கே சொல்லியுள்ள குறிப்புகளை ஓர் இயற்கை மருத்துவரின் நேரடி ஆலோசனைப் பெற்று செய்துவந்தால், சீக்கிரம் குணமடைய வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் டாக்டர் தீபா. Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

விகடன் 5 Jun 2025 7:05 am

தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243

தா ம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் ஓகே தானா..? கிட்டத்தட்ட எல்லா கணவன் மனைவி இடையிலும் இருக்கிற சந்தேகம் இது. விளக்கம் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்திய உறவு ஒரு சுலபமான வழி திருப்தியான தாம்பத்திய உறவுக்கு ’’ஓரல் செக்ஸ் இல்லையென்றால் பெண்கள் ஆர்கசம் அடைவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனென்றால், பெண்கள் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதற்கு 14 நிமிடங்கள் ஆகும். அதுவரை விந்து வெளியேற்றாமல் ஆண்களால் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது மிக மிக கடினம். அதனால், ஓரல் செக்ஸ் மூலம் உங்கள் மனைவியை முதலில் ஆர்கசம் அடைய செய்துவிடுவதே, திருப்தியான தாம்பத்திய உறவுக்கு ஒரு சுலபமான வழி. ஓரல் செக்ஸ் ஆனால், பழமையான மனப்பான்மை கொண்ட கணவர்களாலும் மனைவிகளாலும் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏன் நான் கணவர், மனைவி என இருவரையும் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஓரல் செக்ஸ் அசிங்கம் என்கிற எண்ணம் இருக்கும். இன்னொரு குடும்பத்திலோ மனைவிக்கு இந்த எண்ணம் இருக்கும். இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் பல தம்பதிகளின் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது தவிர்க்கப்பட வேண்டியதாக புரிந்து கொள்ளப்படுகிறது’’ என்றவர், ஓரல் செக்ஸ் தொடர்பான தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.  தாம்பத்திய உறவில் 550 பொசிஷன்கள் ’’ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஓரல் செக்ஸ் பற்றி காமசூத்ரா மிக விரிவாக பேசியிருக்கிறது. தாம்பத்திய உறவில் 550 பொசிஷன்கள் அதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஸோ, தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் பற்றி இந்தியர்களுக்கு சரியான புரிதல் இருந்திருக்கிறது. அதனால்தான், நம்முடைய கோயில்களில் தாம்பத்திய உறவு தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தான், செக்ஸில் குழந்தைப் பிறப்பதற்கான பொசிஷனை தவிர்த்து மற்ற பொசிஷன்களை இயற்கைக்கு மாறான உறவு என்று  குறிப்பிட்டனர்.   அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239 தொடர்பான முழுமையான நாலேட்ஜ் இருந்தது நம்முடைய சமூகத்தில் தாம்பத்திய உறவு ஆனால், இப்போது அவர்களே தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸும் ஒன்றுதான். இப்படிப்பட்ட பல்வேறு நிலைகளை உள்ளடக்கியதுதான் சிறப்பான தாம்பத்திய உறவு என்பதையும் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், பெண் உறுப்பில் இருக்கிற ஜி ஸ்பாட் தான் ஆர்கசம் அடைகிற இடம் என்று வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகள் செய்து இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.  ஆக, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நம்முடைய சமூகத்தில் தாம்பத்திய உறவு தொடர்பான முழுமையான நாலேட்ஜ் இருந்தது. தாம்பத்திய உறவு மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242 'தொண்டையில புற்றுநோய் வந்துடும்னு சொல்றாங்களே டாக்டர்’ ஆபாசப்படங்கள் வர ஆரம்பித்ததில் இருந்துதான், இதில் சிக்கல் வர ஆரம்பித்தது. ஆபாசப் படங்களையும், பாலியல் கல்வியும் ஒன்றுதான் என குழப்பிக் கொண்டதால்தான், தாம்பத்திய உறவின் ஒருநிலையான ஓரல் செக்ஸை அசிங்கம், தவறு, ஆபாசம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுத்தமும் விருப்பமும்தான் முக்கியம்.  ’ஓரல் செக்ஸ் செய்ய ஆசைதான். ஆனா, தொண்டையில புற்றுநோய் வந்துடும்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பவர்களுக்கு ஒரு வார்த்தை. கணவன் மனைவிக்கு இடையே, அவர்கள் தங்கள் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொண்டு ஓரல் செக்ஸ் செய்யும் போது தொண்டை புற்று நோயை முற்றிலும் தவிர்க்க முடியும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். 

விகடன் 4 Jun 2025 4:37 pm

Doctor Vikatan: 17 வயதில் 33 கிலோ; நன்றாகச் சாப்பிட்டும் அதிகரிக்காத எடை.. என்னதான் பிரச்னை?

Doctor Vikatan: என் மகளுக்கு வயது 17.  அவள் மிகவும் மெலிந்து காணப்படுகிறாள் .160 செ.மீ உயரம் இருக்கிறார். அவரது உடல் எடை 33 அல்லது 34-க்கு மேல் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை.  பீரியட்ஸ் நாள்களில் மிகவும் பலவீனமாக காணப்படுகிறாள். நன்றாகச் சாப்பிடுகிறாள். ஆனாலும், அவள் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லை. டாக்டரிடம் சென்று பரிசோதித்தால் ஒரு பிரச்னையும் இல்லை என்கிறார். அவரது உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டுமா? இந்தப் பிரச்னைக்கு வேறு என்னதான் தீர்வுகள்? - SATHYAN, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி     மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ஒருவரது பி.எம்.ஐ (BMI) அளவீட்டை வைத்துதான் அவரது உடல்எடை சாதாரணமாக இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும்.  பிஎம்ஐ அளவீடானது 18.5-க்கும் குறைவாக இருந்தால் அந்த நபர் அண்டர்வெயிட்டில் (under weight) இருக்கிறார் என்று சொல்வோம். உங்களுடைய மகளின் பிஎம்ஐ அளவீடு, 18.5-க்கும் குறைவாக இருப்பதால் அவர் அண்டர்வெயிட் பிரிவில்தான் வருவார்.  உங்கள் மகளின் உயரத்துக்கு, அவர் 45- 50 கிலோவரை எடை இருக்க வேண்டும். ஆனால், அவர் 33 கிலோதான் இருக்கிறார் என்பதை மிகக்குறைவான உடல் எடையாகத்தான் கணக்கிட வேண்டும்.  உடல் எடை குறைவாக இருப்பதால் உடலளவில் நிறைய பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு, எலும்புத் தேய்மானம், ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு, சருமம் மற்றும் கூந்தலில் பாதிப்பு, பற்களில் பிரச்னை போன்றவை வரலாம். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எனர்ஜி குறைவாக இருக்கும். அதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வரலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். எப்போதும் களைப்பாக உணரலாம்.  பீரியட்ஸ் சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். திருமணத்துக்குப் பிறகு கருத்தரித்தால், குறைமாதப் பிரசவம் ஏற்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எனர்ஜி குறைவாக இருக்கும். உங்கள் மகள் எடை குறைவாக இருக்க என்ன காரணம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.  பொதுவாக ஒருவர் எடை குறைவாக இருக்க, அவரது குடும்பப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் அனைவரும் எடை குறைவாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படி இருக்கலாம். சிலருக்கு மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றச் செயல்பாடு மிக அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் எடை கூடாது.  ஒருவர் உடல்ரீதியான இயக்கத்தில் அதிகம் ஈடுபடுபவராக இருந்து, அதற்கேற்ப சாப்பிடாமல் இருந்தாலும் எடை குறைவாக இருக்கலாம். உதாரணத்துக்கு, விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுபவராக இருக்கலாம்... குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில் அவருக்கு உடல் எடை ஏறாது. ஏதேனும் தீவிர உடல்நலப் பிரச்னை இருந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடல் எடை ஏறாது. தைராய்டு பிரச்னை, நீரிழிவு, குடல் சார்ந்த பிரச்னை, உணவு ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேராமல், எடை குறையலாம். புற்றுநோய் பாதிப்புக்கும், உடல் எடை குறைவது மிக முக்கியமான ஓர் அறிகுறி. உங்கள் மகள் விஷயத்தில் அவர் நன்றாகச் சாப்பிடுவதாகச் சொல்லியிருப்பதால், அந்த ரிஸ்க் இருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் இருந்தால் பசி எடுக்காது. டிப்ரெஷன், மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்னைகள், அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உண்ணுதல் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் எடை குறைவாக இருக்கலாம். டிப்ரெஷன், மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்னைகள், அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உண்ணுதல் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் எடை குறைவாக இருக்கலாம். Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா? எனவே, உங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு அளவு போன்றவற்றைப் பரிசோதியுங்கள்.  சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவை தேவைப்படலாம். ஹார்மோன் பிரச்னைகள் இருந்தால், எண்டோகிரைனாலஜிஸ்ட் எனப்படும் நாளமில்லா சுரப்பியியல் சிகிச்சை மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம். அதிக புரதச்சத்தும், முழுத்தானியங்களால் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவுகளை எடுக்கும்போது உடல் எடை அதிரிக்கும். உதாரணத்துக்கு, பீநட் பட்டர், புரோட்டீன் பார் போன்றவை. அசைவம் சாப்பிடுவோர், நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் சிறு இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். தினம் கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடலாம். கலோரி அடர்த்தியான உணவுகளைச் சாப்பிடலாம்.  இத்தனை நாள்கள் உடல் எடை சரியாக இருந்து, திடீரென குறையத் தொடங்கினாலோ, மற்றவர் முன்னிலையில் சாப்பிடாமல் மறைந்து மறைந்து சாப்பிட்டாலோ, களைப்பாக உணர்ந்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டும். டெஸ்ட்டுகள் செய்து நார்மலாக இருக்கும்பட்சத்தில், உணவியல் ஆலோசரின் உதவியோடு, எடையை அதிகரிக்கச் செய்கிற உணவுகளைச் சாப்பிட வைக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 4 Jun 2025 9:00 am

Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

அ ழகு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முகம் மட்டுமே. அந்த முகத்தை அழகாகவும் பொலிவுடனும் காண்பிப்பதற்கு ஏராளமான கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது. அந்த வேதிப்பொருள் சிலருக்கு முகத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக கிடைக்கும் சில மூலிகைகளைப் பயன்படுத்தி முகத்தை அழகுடனும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். இவையனைத்தையும் விடுத்து, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஓர் ஆயுர்வேத அழகுக்குறிப்பை சொல்வதோடு, அதை தயாரிக்கும் முறையையும் சொல்லித்தருகிறார் தேனியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா. ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்: காய்ச்சாத பால், நவரா அரிசி மாவு, லாக்ஷா என்கிற கோல் அரக்கு, மஞ்சட்டி தூள் ((Manjistha), ஒரிஜினல் கஸ்தூரி மஞ்சள் தூள், பாலில் கலந்த குங்குமப்பூ. செய்முறை: நவரா அரிசி மாவு 2 ஸ்பூன், லாக்ஷா தூள் சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் தூள் (எரிச்சல் ஏற்படலாம், அதனால் சிறிதளவு மட்டும் போதும்) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சுத்தமான வெள்ளைத்துணியில் பொட்டலமாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பசும்பால் எடுத்து நன்கு காய்ச்சி, அதில் கட்டி வைத்த பொட்டலத்தைப் போட்டு பாலைக் காய்ச்சிக்கொண்டே இருக்க வேண்டும். பொட்டலத்தில் உள்ள தூளின் நிறம் பாலில் இறங்கி, பாலின் நிறம் மாறும் அளவிற்கும், பால் சுண்டும் அளவிற்கும் நன்கு காய்ச்ச வேண்டும். தேவையென்றால், பாலில் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். சூடு தணிந்த பிறகு, பாலில் ஊறிய பொட்டலத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்படும் விழுதை (கிரீம்) முகத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் முகத்தை நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். beauty பிழிந்து எடுக்கப்பட்ட விழுதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாள்தோறும் பயன்படுத்தலாம். இந்தக் கிரீம் முகத்திற்கு மட்டுமல்ல, உடலிலும் பூசிக்கொள்ளலாம். முகத்தை, உடலை மாசுமருவில்லாமல் கண்ணாடிப்போல மாற்றும் ஆயுர்வேத அழகுக்குறிப்பு இது. மசாஜ் செய்யும்போதும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். Beauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்! இந்த செய்முறை கடினமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், விரைவில் செய்துகொள்ள எளிமையான இந்த ஆயுர்வேத அழகுக் குறிப்பைப் பின்பற்றலாம். மஞ்சட்டியை மஞ்சள் உரசும் கருங்கல்லின் மீது உரசி எடுக்க வேண்டும். அதனுடன் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் களிம்பை முகத்தில் பூசி, நன்கு காயவைக்க வேண்டும். பின்னர், முகத்தை நீரில் அலசிக்கொள்ளலாம். முகம் பொலிவுடன் காணப்படும். இந்த அழகுக் குறிப்புகளை நாள்தோறும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித பக்கவிளைவுகளும் வராது'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா. இந்தக் கட்டுரையில் உள்ள செய்முறை வீடியோவை மேலே காணலாம்.

விகடன் 4 Jun 2025 6:43 am

Doctor Vikatan: சிசேரியனுக்குப் பிறகு மலச்சிக்கல், வாயு பிரச்னை.. காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த   சில நாள்களுக்கு முன்புதான் சிசேரியன் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. அதிலிருந்து அவளுக்கு மலச்சிக்கல் பிரச்னையும், அதிகப்படியான வாயு வெளியேறும் பிரச்னையும் ஆரம்பித்திருக்கின்றன. அடிக்கடி வயிற்று உப்புசம், வயிற்றுவலியும் வருவதை உணர்வதாகக் சொல்கிறாள். இதற்கெல்லாம் என்ன காரணம்... இதிலிருந்து மீளவே முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்    மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் உங்கள் தங்கைக்கு சமீபத்தில்தான்  சிசேரியன் பிரசவம் ஆனதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அறுவை சிகிச்சை முடிந்ததும் பொதுவாகவே வயிற்றுவலி இருக்கலாம். மயக்க மருந்தின் வீரியம் குறையாதவரை அந்த வலி தெரியாமலிருக்கும். மருந்தின்  வீரியம் குறையத் தொடங்கியதும் வலியை உணர ஆரம்பிப்பார்கள். மருத்துவர் பரிசோதனைக்கு வரும்போது வயிற்றில் கை வைத்தாலே தாங்க முடியாத வலியை உணர்வார்கள். அந்த வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.  அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான காற்றானது சிறுகுடலுக்குள் சேர்ந்திருக்கும். அதனால் வயிற்று உப்புசமும் வயிற்றுவலியும் இருக்கலாம். பிரசவத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனஸ்தீசியா, பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகும் கொடுக்கப்பட்ட மருந்துகளின் பக்க விளைவாகவும் வயிற்றுவலி வரும். சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை! அறுவை சிகிச்சைக்குப் பிறகு செரிமான இயக்கமானது மந்தமாகியிருக்கும். குடல்பகுதி ஓய்வில் இருப்பதாலும்  வயிற்றுவலி இருக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு, குறிப்பாக சிசேரியனுக்கு பிறகு பல பெண்களும் மலச்சிக்கல் பிரச்னையை எதிர்கொள்வதுண்டு. அதற்கு காரணம், உடலில் ஏற்படுகிற நீரிழப்பு. சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. டிரிப்ஸ் போடப்பட்டிருக்கும். டியூப் வழியே திரவம் உடலுக்குள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் செரிமானம் மந்தமாகவே இருக்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை வந்திருக்கும். வயிற்று வலியும் இருக்கும். சிசேரியன் ஆனதிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்தில் எழுந்து நடமாடலாம். அவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட முடியவில்லை என்றால், குறைந்தது 12 மணி நேரத்துக்குள்ளாவது நடக்க வேண்டும். பிரசவமான பெண்களுக்கு, குறிப்பாக சிசேரியன் செய்யப்பட்ட பெண்களுக்கு முதல் சில நாள்களுக்கு மலம் கழிப்பதில் பயம் இருக்கும். மலம் கழித்தால் தையல் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில் மலம் கழிப்பதையே தவிர்ப்பார்கள். அதனாலும் வயிற்றுவலியும், மலச்சிக்கலும் வரும். சிசேரியன் செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் இயக்கம் வெகுவாகக் குறைந்திருக்கும். அதனாலும் மலச்சிக்கலும் வயிற்றுவலியும்  இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் சொல்லும் நேரம்வரை ஓய்வெடுத்தால் போதுமானது.  சிசேரியன் செய்யப்பட்டிருந்தால் சிறுநீர் வெளியேறுவதற்காக  கதீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அதை அகற்ற 12 மணி நேரம் ஆகும். ஆனால், சிசேரியன் செய்துகொண்டவர்கள், அனஸ்தீசியாவின் வீரியம் குறையத் தொடங்கியதுமே எழுந்து நடமாட ஆரம்பிப்பதுதான் சரியானது. அதாவது கதீட்டரை அகற்றும்வரை காத்திருக்காமல், சிசேரியன் ஆனதிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்தில் எழுந்து நடமாடலாம். அவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட முடியவில்லை என்றால், குறைந்தது 12 மணி நேரத்துக்குள்ளாவது நடக்க வேண்டும். உடலியக்கம் இருந்தால், உடலில் சேர்ந்த வாயு வெளியேறும். வாயு வெளியேறிவிட்டாலே, குடல் இயக்கம் சீராகிவிட்டதாக அர்த்தம். மருத்துவரும் வயிற்றைத் தொட்டுப் பார்த்து குடல் இயக்கம் தொடங்கிவிட்டதை உறுதிசெய்வார். சிசேரியன் சிசேரியன் செய்யப்பட்டதும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் சாப்பிடாமல், சிறு இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும். டாக்டர் சொன்னதும் நிறைய தண்ணீர் குடிக்கத் தொடங்க வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதையெல்லாம் உங்கள் தங்கைக்கு எடுத்துச் சொல்லுங்கள். உணவு, உடலியக்கம் போன்றவற்றில் கவனமாக இருந்தாலே இந்தப் பிரச்னைகள் மெள்ள மெள்ள சரியாகும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான டிப்ரெஷன்... முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?

விகடன் 2 Jun 2025 9:00 am

Health: உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா? சாதக, பாதகம் விளக்கும் நிபுணர்!

உ டல் சார்ந்த விஷயம் என்றால் அனைவருக்கும் ஒரு தனி கவனம்தான். இருந்தும் பலர் உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மற்றவர்களைபோல பிடித்த உடையை அணிய‌ முடியாது; பிறரை போல் நாம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை; சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என பல பிரச்னைகள் வரிசைக்கட்டும். இதனால் அவர்களும் உடற்பயிற்சி, கட்டுப்பாடுடன் கூடிய உணவு முறைகள் என பலவற்றை மேற்க் கொள்வார்கள். இவற்றால் பலன் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது ஜிம். Obesity 'மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி' இதில், இன்னொரு முக்கியமான விஷயம் 'என் உடல் எடையை நான் இப்படித்தான் குறைத்தேன்' என பிரபலங்கள் சொல்லிவிட்டால், ஏன் எதற்கு என கேள்வி எழுப்பாமல் அதை அப்படியே பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு சென்று வைரலான திருநங்கை அனுஶ்ரீ, யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் 'உடல் எடையைக் குறைக்க பல லட்சங்கள் செலவு செய்து மாத்திரைகள், உடற்பயிற்சிகள் என அடுத்தவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். ஆனால், அவை எதுவும் எனக்கு பலன் தரவில்லை. பிறகு 'மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி' செய்த பிறகுதான் என் உடல் எடை இவ்வளவு குறைந்ததாக கூறியிருந்தார். அந்த வீடியோவில் பலரும் அந்த அறுவை சிகிச்சையை நாங்களும் செய்துகொள்ளலாமா என்று கேட்டிருந்தனர். மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன; இந்த சிகிச்சை முறை எப்படி உடல் எடையை குறைக்கிறது? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் அவர்களிடம் பேசினோம். உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா? பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை ' 'உடல் எடையைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைகளை மருத்துவ உலகில் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்று சொல்வோம். வயிற்று பைபாஸ் அறுவை சிகிச்சை (Roux-en-Y Gastric Bypass), வயிற்றுப்பட்டை அறுவை சிகிச்சை (Gastric Banding), ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி (Sleeve gastrectomy) என பல வகைகள் இந்த பேரியாட்ரிக் சிகிச்சையில் உள்ளது. அதில் ஒன்றுதான் மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை. யாருக்கு எந்த வகை பேட்ரியாட்ரிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை, அவர்களது BMI அளவீட்டை‌ பொறுத்து மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..! முதலில் டயட்டும் உடற்பயிற்சியும்தான்... BMI அளவீடு 35-க்கு மேல் உள்ளவர்களை morbid obesity உள்ளவர்கள் என குறிப்பிடுவோம். இவர்கள் அதிக உடல் எடையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். BMI 35 அளவீடு இருந்து, உடன் சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்தாலோ... BMI 40 அளவீடு இருக்கிறது; ஆனால் எந்த நோயும் இல்லை என்றாலோ... அவர்களுக்கு முதலில் டயட், உடற்பயிற்சி போன்றவற்றை சில மாதங்களுக்கு பரிந்துரை செய்வோம். அதில் போதிய அளவு மாற்றம் இல்லையெனில் அடுத்தக்கட்டமாக தான் இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் ஒன்றை மேற்கொள்வோம். மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை இந்த சிகிச்சையால் எப்படி உடல் எடை குறையும்? மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன? மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை, சிறு துளை அறுவை சிகிச்சை ( Laparoscopic), மற்றும் ரோபாடிக் அறுவை சிகிச்சை (Robotic ) மூலம் செய்யப்படும். இந்த மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையில் இரண்டு முறை உள்ளது. ஒன்று சாப்பிடும் சாப்பாட்டின் அளவைக் குறைப்பது. மற்றொன்று இரைப்பையில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சும் அளவினைக் குறைப்பது. Health: அரிசிக்கு பதில் காலிஃப்ளவர் ரைஸ்; எடை குறைய உதவுமா? ஸ்டேப்பிளிங் தொழில்நுட்பம்! சாதரணமாக மனித இரைப்பை 2 லிட்டர் அளவிலான உணவுப்பொருட்களை தக்கவைக்க கூடிய அளவில் இருக்கும். அதனை அறுவை சிகிச்சை‌யின்போது ஸ்டேப்பிளிங் தொழில்நுட்பம் மூலம் 50 முதல் 150 லிட்டர் அளவை மட்டுமே தக்கவைக்க கூடிய சிறிய அளவாக குறைப்பதுதான் கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை. இதனால் அதிக உணவு உட்கொள்ள முடியாமல் கொஞ்ச உணவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விட்டது போல் தோன்றும். உடலுக்கு செல்லும் கலோரிகளின் அளவு தானகவே குறைவதால் எந்தவொரு மாத்திரையும், உடற்பயிற்சியும் இல்லாமலேயே உடல் எடை சில ஆண்டுகளிலேயே கணிசமான அளவு குறைந்துவிடும். இது சாப்பிடும் அளவினை குறைக்கும் முறை. உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா? இதனாலும் உடல் எடை குறையும்‌! மற்றொன்று ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் தன்மையை குறைப்பது. நமது உடலில் அதிக அளவு ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது நிகழ்வது சிறுங்குடலின் முன்பகுதியில்தான். மனித சிறுகுடலின் அளவு பொதுவாக ஏழு முதல் எட்டு அடி வரை இருக்கும். இதில் சிறுகுடலின் முன்பகுதியில் நான்கு அடி வரை இரைப்பையுடன் பைபாஸ் செய்து விடுவார்கள். இதனால் இரைப்பையில் இருந்து வெளியேறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு நேராக சிறுகுடலின் பின் பகுதியை சென்றடையும். அங்கு குறைந்த அளவிலான ஊட்டச்சத்து உறிஞ்சுவது நிகழும் என்பதால் உடலுக்கு தேவையான அளவை தவிர்த்து அதிகமான அளவை அவை உறிஞ்சாது. இதனால் உடல் எடை இழப்பு நிகழும்‌. Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்? எவ்வளவு நாளில் உடல் எடை குறையும்? இந்த அறுவை சிகிச்சை செய்த முதல் ஆறு மாதங்களில் குறிப்பிட்ட அளவிலான எடை இழப்பு நிகழும்‌. அடுத்த ஒராண்டுகளில் இன்னும் சற்று உடல் எடை குறையும். இரண்டாண்டுகளுக்கு மேல் அவர்கள் உண்ணும் உணவின் அளவிற்கு ஏற்றாற்போல் உடல் எடை மாறிவிடும். அதன் பிறகு சிகிச்சை காரணமாக எடை இழப்பு நிகழாது. எவ்வளவு நாட்களில் உடல் எடை குறையும்? இந்த சிகிச்சை முறையில் ஏதேனும் நன்மைகள் இருக்கிறதா? இந்த சிகிச்சை முறை என்பது ஒரு மீட்டமைக்கக்கூடிய சிகிச்சை முறை. எனக்கு மறுபடியும் பழைய உடலமைப்பே வேண்டும் என்றால் மீண்டும்‌‌ ஒரு அறுவை சிகிச்சை செய்து ஸ்டேப்பிளிங் செய்ததை நீக்கிவிட்டால் மீண்டும் அவரது உணவு முறை பழைய நிலைக்கு மாறிவிடும். இதில் எந்தப் பகுதியும வெட்டி நீக்காததால் இந்த முறை மிக எளிதாக நடைபெறுகிறது‌. இந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் குணப்படுத்த‌ முடியாத சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகூட பலருக்கு குணமாகி இருக்கிறது. தீமைகள் என்னென்ன? என்னதான் நன்மைகள் இருக்கக்கூடிய முறையாக இது இருந்தாலும், இதுவொரு அறுவை சிகிச்சை. ஆபரேஷனுக்குப் பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் இந்த சிகிச்சை முறையிலும் ஏற்படும். அனஸ்தீஷியா கொடுப்பதில் தொடங்கி, ரத்தம் உறையாமை, இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரைப்பை மற்றும் சிறுகுடலில் கசிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. டாக்டர் தினேஷ். ஊட்டச்சத்துகள் அதிகம் உறிஞ்சப்படாததால் வழக்கத்தைவிட அதிகமாக கழிவு வெளியேறுவது, வாயு பிரச்னை, அதிக எடை இழப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம் உடல் எடையைக் குறைக்க இது எளிமையான வழி என்பதால், இளைஞர்கள்கூட இந்த சிகிச்சையை‌ மேற்கொள்ள வருகிறார்கள். ஆனால், உடல் பருமனால் ஏதேனும் உடல் உபாதையால் அவதிப்படுபவர்கள் மட்டும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பது என் கருத்து'' என்கிறார் டாக்டர் தினேஷ். Health: பிடித்த சுவை சொல்லி விடும் உங்கள் உடலில் இருக்கிற சத்துக்குறைபாட்டை..!

விகடன் 2 Jun 2025 7:00 am

Doctor Vikatan: மண்டையில் வெள்ளைப் படலம், பொடுகா, சொரியாசிஸா.. எப்படித் தெரிந்துகொள்வது?

Doctor Vikatan: எனக்குத் தலையில் பொடுகு அதிகமிருக்கிறது.  தலை முழுவதும் வெள்ளையாகப் படிந்திருக்கிறது.  சில இடங்களில் உப்புக்கல்  மாதிரி இருக்கிறது.  அதைக் கீறிக் கீறி  அகற்றிவிட்டுதான் தலைக்குக்  குளிக்கிறேன். ஆனாலும்,  மீண்டும் மீண்டும் வருகிறது.  முடியும் அதிகமாகக்  கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம்... தீர்வு என்ன? -Milo Kiru, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா தலையில் வெள்ளைநிறத்தில் காணப்படும் படலம் பொடுகுதானா என்பதை நீங்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். பொடுகு என்பது பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கிற பிரச்னையாக இருக்கிறது. வெயில் காலத்தில் அது அதிகரிக்கும்.  சென்னை போன்ற வெப்ப பகுதிகளில் அது இயல்பாகவே எப்போதும் பாதிக்கும். வெப்பம் அதிகமான பகுதிகளில் வசிப்போருக்கு வியர்வை அதிகமிருக்கும். அதனால் சருமத் துவாரங்களில் எண்ணெய்ச் சுரப்பும் அதிகரிக்கும். அதனால் பொடுகுப் பிரச்னை தீவிரமாகும். பொடுகுப் பிரச்னை பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் தலையில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கும்போது அது அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அந்த எண்ணெயைச் சாப்பிட வரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கிருமிகளால் பொடுகுத்தொல்லை வருகிறது. பொடுகு வந்தால் முகத்தில் பருக்கள், முதுகில் பொரிப்பொரியாக வருவது போன்றவை எல்லாம் சகஜமாக வரும். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு வந்திருப்பது சொரியாசிஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதைக் கீறிக் கீறியெல்லாம் அகற்ற முடியாது. இது ஒருவகையான செதில் நோய் பாதிப்பு. பலரும் சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியை பொடுகு என்றே நினைத்துக்கொண்டு, பொடுகு நீக்கும் ஷாம்பூ உபயோகிப்பது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அது தவறு. சொரியாசிஸ் பாதிப்பாக இருந்தால், அதற்கான காரணம் கண்டுபிடித்து, சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். பலரும் சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியை பொடுகு என்றே நினைத்துக்கொண்டு, பொடுகு நீக்கும் ஷாம்பூ உபயோகிப்பது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அது தவறு. Doctor Vikatan: சொரியாசிஸ் பாதிப்பை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா? சொரியாசிஸ் பாதிப்புக்கு இன்று நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. பிரத்யேக ஷாம்பூக்கள்,  தலையில் தடவக்கூடிய சொல்யூஷன்கள் என எத்தனையோ உள்ளன.  உங்களுடைய பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்துதான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.  இதுபோன்ற பிரச்னைகளை சருமநல மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று அணுகுவதுதான் சரியாக இருக்கும். பொதுவான அறிவுரைகளோ, தீர்வுகளோ உதவாது. தவிர, பொடுகா, சொரியாசிஸ் பாதிப்பா என்பதையும் சருமநல மருத்துவரால்தான் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். எனவே, தாமதிக்காமல் உடனே சருமநல மருத்துவரை அணுகுங்கள்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

விகடன் 1 Jun 2025 9:00 am

Health: இனி ஹெல்தியா ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்! - செய்முறையும் பலன்களும்..!

நொ றுக்குத்தீனி என்றாலே, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, உருளைக்கிழங்கு சிப்ஸ், கார்ன், சாட் உணவுகள்தான் என்றாகிப்போன காலம் இது. அதிக அளவு கொழுப்பு மற்றும் ரசாயனங்கள் நிறைந்த செயற்கையான ஸ்நாக்ஸ்களைத் தொடர்ந்து உண்டுவந்தால், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் என வரிசைகட்டி வந்து விடும். நொறுக்குத்தீனிதானே என்று அலட்சியம் செய்யாமல், என்ன சாப்பிடுகிறோம் என்று கவனமாக இருந்தாலே பாதி நோய்களுக்கு டாட்டா சொல்லிவிடலாம் என்கிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி. ராகி குழிப் பணியாரம் ராகி குழிப் பணியாரம் தேவையானவை:  ராகி மாவு, இட்லி மாவு - தலா 1 கப், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, இஞ்சி - சிறு துண்டு, கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை:  ராகி மாவை தண்ணீர், உப்பு சேர்த்து தளரப் பிசையவும். அதில் இட்லி மாவைச் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை, மாவில் கொட்டி கொத்தமல்லி சேர்த்துக் கலந்து, பணியாரக் கல்லில் சுட்டு எடுக்கவும். பலன்கள்:  ராகியில் புரதச்சத்து அதிகம். அரிசி மாவில் கார்போஹைட்ரேட் அதிகம். இவை இரண்டும் சேரும்போது உடல் வலுவாகிறது. வெங்காயம், பச்சைமிளகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது. இஞ்சி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. கடுகில் உள்ள இரும்புச்சத்து, ரத்தத்தை மேம்படுத்துகிறது. உளுந்து, எலும்புகளை வலுவாக்குகிறது. அவல் நட்ஸ் பார் அவல் நட்ஸ் பார் தேவையானவை:  சிவப்பு அவல் - 1/2 கப், அத்திப்பழம் - 5, உலர் திராட்சை - 1/4 கப், பாதாம் - 10, முந்திரி - 6, வால்நட் - 5, வெல்லம் - 1/4 கப், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன். செய்முறை:  வாணலியில் அவலைப் போட்டு நன்கு பொரியும் வரை வறுக்கவும், அத்திப்பழம், பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் கால் கப் தண்ணீர் விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டுக் கரைத்து, வடிகட்டவும். மீண்டும் அதைக் கொதிக்கவைத்து மிட்டாய் பதம் வரும்போது, எல்லா பொருட்களையும் சேர்த்து, நன்கு கலந்து, உடனே பார் மோல்டில் அழுத்திவைத்து, ஆறியவுடன் டப்பாவில் சேமித்துவைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உண்ணலாம். பலன்கள்:  உடலுக்கு அதிக எனர்ஜியைத் தரும் ரெசிப்பி இது. சிவப்பு அவலில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்துள்ளன. நட்ஸ்களில் `மூஃபா’ எனப்படும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி, இதயத்தைப் பாதுகாக்கும். உடலை வலுவாக்கும். ஏலக்காய், செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரைவள்ளி-மேத்தி கட்லெட் சர்க்கரைவள்ளி-மேத்தி கட்லெட் தேவையானவை:  சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ, வெந்தயக்கீரை - 1/2 கப், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், அரிசி மாவு - 1/4 கப், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:  சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, அதில் இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும். அதில், வெந்தயக் கீரையைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கலந்து, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சேர்க்கவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து, கட்லெட் வடிவத்தில் செய்து, அரிசி மாவில் புரட்டி எடுத்து வைக்கவும். தோசைக்கல்லில், லேசாக எண்ணெய் தேய்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும். பலன்கள்:  சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து அதிகம். உடலுக்கு உடனடி எனர்ஜியைத் தரும். வெந்தயக் கீரை உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கும். மஞ்சள், கிருமிநாசினியாகச் செயல்பட்டு ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பொட்டுக்கடலை, செரிமானத்தை மேம்படுத்தும். கம்பு-முருங்கை தட்டு வடை கம்பு-முருங்கை தட்டு வடை தேவையானவை:  கம்பு மாவு - 1 கப், முருங்கை இலை - 1/2 கப், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப், பச்சைமிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, கடலை மாவு - 2 டீஸ்பூன், தயிர் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை:  தயிரில் உப்பு சேர்த்து நன்கு அடித்து, அதில் கம்பு மாவு, கடலை மாவு, முருங்கை இலை, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். சூடான தோசைக்கல்லில், எலுமிச்சை அளவு மாவை எடுத்துத் தட்டி, மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். பலன்கள்:  கம்பில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. கம்பிலும் முருங்கை இலையிலும் உள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்கும். ரத்த உற்பத்திக்கு உதவும். நிறைவாக உள்ள இரும்புச்சத்து, ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தும். நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரைவள்ளி சிப்ஸ் சர்க்கரைவள்ளி சிப்ஸ் தேவையானவை:  சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ, அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை:  சர்க்கரைவள்ளிக் கிழங்கை சிப்ஸ் போலத் துருவி, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசறி, பேக்கிங் டிரேயில் அடுக்கி, 180 டிகிரி சூடான மைக்ரோவேவ் அவனில் 10-15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பலன்கள்:  அரிசி மாவு, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. உடனடி எனர்ஜி கிடைக்கும். கிழங்கில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. கோதுமை ராகி மஃபின் கோதுமை ராகி மஃபின் தேவையானவை:  கோதுமை மாவு - 1/2 கப், ராகி மாவு - 1/2 கப், நாட்டுச்சர்க்கரை - 1 கப், முட்டை - 2, பால் - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை. செய்முறை:  பாலில் நாட்டுச்சர்க்கரையைப் போட்டுக் கரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். முட்டையை நன்கு அடித்து, அதோடு சர்க்கரை சேர்த்த பாலைச் சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், உப்பு, ராகி மாவு, கோதுமை மாவு ஆகியவற்றைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். மாவை மஃபின் கிண்ணங்களில் ஊற்றி, அவனில் வைத்து 180 டிகிரியில் 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பலன்கள்:  கோதுமையில் கார்போஹைட்ரேட்டும் ராகியில் புரதச் சத்தும் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு எனர்ஜியைத் தந்து வலுவாக்கும். முட்டையில் உள்ள நல்ல கொழுப்பு, தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஏலக்காய், செரிமானத்தை மேம்படுத்தும். பீநட்-ஆப்பிள் ரிங்ஸ் பீநட்-ஆப்பிள் ரிங்ஸ் தேவையானவை:  ஆப்பிள் - 2, வேர்க்கடலை - 1/2 கப், வெல்லம் - 1/4 கப், பால் - 2 டீஸ்பூன், பொடித்த வேர்க்கடலை, முந்திரி, கேரட் சீவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு, பட்டைத் தூள் - 1 சிட்டிகை. செய்முறை:  வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து, அதில் வெல்லம் சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால் பால் சேர்த்து அரைக்கவும். ஆப்பிளை வட்டமான துண்டுகளாக நறுக்கிவைக்கவும். பரிமாறும்போது, ஆப்பிள் துண்டின்மீது பட்டைத் தூளைத் தூவி, வேர்க்கடலை விழுதைத் தடவி, கேரட் சீவல், பொடித்த வேர்க்கடலை, முந்திரி தூவிப் பரிமாறவும். பலன்கள்:  வேர்க்கடலை, முந்திரியில் புரதச்சத்து உள்ளது. முந்திரியில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது, கெட்ட கொழுப்பை அகற்றி உடலை வலுவாக்கும். பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். புற்றுநோயில் இருந்து காக்கும். வைட்டமின் சி, ஏ நிறைந்த உணவு இது. தேங்காய்ப் பால் புட்டிங் தேங்காய்ப் பால் புட்டிங் தேவையானவை:  தேங்காய்ப் பால் - 1 கப், கடல் பாசி (சைனா கிராஸ்) - 2 டீஸ்பூன், கருப்பட்டி - 1/4 கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு. செய்முறை:  கருப்பட்டியை கால் கப் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்கவும். கருப்பட்டி கரைந்ததும், அதில் அகர் அகரைப் போட்டு, கரையும் வரை கொதிக்கவைத்து வடிகட்டவும். அத்துடன் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கலந்து,  பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துக் குளிர்வித்துப் பரிமாறவும். பலன்கள்:   தேங்காயில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றுகிறது. சைனா கிராஸ் நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தும். கருப்பட்டி, உடலுக்கு உடனடி எனர்ஜி தரும். இரும்புச்சத்து நிறைந்தது.

விகடன் 1 Jun 2025 7:50 am

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி (RIRS) எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயது பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப்பட்டாலும் இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.  இந்நோயாளிக்கு இதயநோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2x1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார்.  இன்றைய நிலையில் இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான  அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது. நாட்டில் RIRS செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களைக் கொண்டிருக்கும் பெருமைமிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று.  மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர்  மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும்.  இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்குச் செலுத்தப்படுகிறது. Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா? அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம்  சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர். இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும் அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்தச் சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார்.  மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார். சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்குச் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.  இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். D. பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் திரு.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.  Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 9:45 pm

No Tobacco Day: `உயிர் கொல்லும் புகையிலைக்கு நோ சொல்வோம்' - உலக புகையிலை ஒழிப்பு தினம் 2025

'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்' இந்த வசனத்தை கேட்காத யாரும் இங்கே இல்லை. இருந்தும் இந்த வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறியாத பலரும் இன்னும் இந்த புகையிலையை பயன்படுத்த தான் செய்கின்றனர். காணும் அனைத்திலும் நவீனத்தை புகுத்து மனிதர்கள் புகைப்பழக்கத்திலும் சிகரெட்டிலிருந்து குட்கா , பான் மசாலா, ஈ சிகரெட் என நவீன முறையில் தன் ஆயுள் காலத்தை விலை கொடுத்து குறைக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2000ம் ஆண்டு உலகம் முழுவதும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33.3% இல் இருந்து 2018 ஆம் ஆண்டு 23.6% ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை புகையிலை பயன்பாட்டில் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. புகையிலை ஒழிப்பு தினம் நிக்கோட்டினா டபாகம்(nicotina tabacum) என்னும் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் புகையிலையில் நிக்கோட்டின் என்னும் மூலக்கூறு உள்ளது. இந்த நிக்கோர்டினா பயன்படுத்துவோரை அடிமைப்படுத்துகிறது. ஒரு சிகரெட்டில் சுமார் 10 -14 mg நிக்கோட்டின் உள்ளது. இதில் 1- 1.5mg புகை பிடிப்பதன் மூலமாக உடலை பாதிக்கிறது. மேலும் புகையில்லா புகையிலை பயன்படுத்துவதால் பாதிப்பு குறைவு என்று எண்ணி பயன்படுத்தப்படும் புகையிலை பொடி, குட்கா, ஜர்தா ,கைனி போன்றவை சிகரெட்டை காட்டிலும் அதிக ஆபத்தானவை. ஒரு நாளைக்கு 8-10 முறை பயன்படுத்தும் புகையில்லா புகையிலை உடலில் ஏற்படுத்தும் நிகோட்டின் அளவு 30-40 சிகரெட்டை ஒரு நாளில் பயன்படுத்துவதற்கு சமம். மேலும் புகை பிடிப்பவர்களை காட்டிலும் அவர்களை சுற்றியுள்ள நபர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் (passive smoker) அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை ஒழிப்பு தினம் புகைப்பிடிப்பதால் வாய் புற்றுநோய் வாய் மியுக்கோசில் புண்கள், ஈறு நோய்கள் ,உமிழ்நீர் சுரப்பிகள் செயலிழப்பு மற்றும் பல் சொத்தை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாய் புற்றுநோயில் மூன்றில் ஒரு பங்கு புகையிலை பழக்கத்தினால் ஏற்படுகிறது. புகையிலையில் உள்ள கார்சினோஜென்களே இதற்கு காரணம். புற்றுநோயின் முன்னிலைகளான லுகோபிளாக்கியா, எரித்ரோபிளாக்யா ,நிக்கோட்டின் ஸ்டொமாடிடிஸ் போன்றவை தொடரும் புகையிலை பழக்கத்தினால் புற்றுநோயாக உருமாறும். புகைப் பழக்கத்தால் உமிழ்நீர் சுரப்பிகள் சேதம் அடைந்து பல் சொத்தை, வாய் துர்நாற்றம், பற்கறைகள் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்பட்டு பயன்படுத்துவோரை பல தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக்குகிறது. புகையிலையை எந்தவிதத்தில் உட்கொண்டாலும் ஏற்படும் பாதிப்பு ஒன்றுதான். புகையிலை ஒழிப்பு தினம் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த இயலாது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகையிலை பயன்பாட்டை நிறுத்தி வாழ்வை மேம்படுத்தும் வழிகள் பல உள்ளன. புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது மனதை திசை திருப்ப வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு உடல் பயிற்சி, சத்தான உணவு பழக்கம் போன்றவை மேலும் புகையிலை பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி இருந்து, புகையிலை நிறுத்தும் மையங்கள் மூலமாக ஆலோசனை பெற்று புகையிலை பழக்கத்தை நிறுத்தலாம். - ம. நந்தினி தேவி 3year-BDS சி. எஸ். ஐ பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை

விகடன் 31 May 2025 3:37 pm

Health: ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்! - ஏன் நமக்கு அவசியம்?

''உ டலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். புற்றுநோய், மனஅழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது'' என்கிற பொதுநல மருத்துவர் கு.கணேசன், அதன் பலன்கள் பற்றி விவரிக்கிறார். ஒமேகா 3 ''டிரைகிளிசரைட் அளவைக் குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் - எது பெஸ்ட்? ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது. தினமும் 0.3-0.5 கிராம் இ.பி.ஏ (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) வகையும், 0.8-1.1 கிராம் ஏ.எல்.ஏ (Alpha-Linolenic acid) வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. மீன் புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன? மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும். வால்நட் போன்ற கொட்டைகளில் இருந்து கிடைக்கும் ஏ.எல்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடல், இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலமாக மாற்றித்தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் திறன் சிலருக்கு குறைவாக இருக்கும். அவர்கள், டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

விகடன் 31 May 2025 9:07 am

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக  நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்த கொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம் சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டார்கள். உயிரிழப்புகள் குறித்தும் கேள்விப்படுகிறோம்.  இப்போது பரவும் கொரோனா வீரியம் மிக்கதாக மாறுமா... மீண்டும் லாக்டௌன் அறிவிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானதாக மாறுமா? பதில் சொல்கிறார் ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும்,  தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒரே நேரத்தில் பல வைரஸ் வகைகள் (variants) பரவுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. உதாரணத்துக்கு, ஃப்ளூ வைரஸையே சொல்லலாம். அது பல வைரஸ் வேரியன்ட்டுகளின் கலவையாகவும், ஒவ்வோர் ஆண்டும் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். வைரஸ் கிருமி ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். ஆனால், பொதுவாக நீண்டகாலமாக மனிதர்களுடன் இருக்கும் வைரஸ்கள், காலப்போக்கில் தம் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இதை உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நோய்ப்பரவலுக்கும் எளிதில் இலக்காகிறவர்கள் முதியவர்கள்தாம். அந்த வகையில், இப்போது பரவும் கொரோனாவிலும் அந்த ரிஸ்க் இருக்கிறது. கூடியவரையில் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத தருணங்களில், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும்போதும், பேருந்து, ரயில் பயணங்களின் போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியம். இது அவர்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுகிற அட்வைஸ் அல்ல. ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும் பழக்கமாக இருக்கிறது. ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும்  வழக்கமாக இருக்கிறது. இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றவர்கள் மீதான அக்கறையினாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, இப்போது பரவும் கொரோனா குறித்து அச்சம் கொள்வதற்கு பதில், எச்சரிக்கையுடன் இருப்பதுதான் சரியானது. வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்கள் (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை) உள்ளவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த செய்திகள், ஆதாரமற்றவை. தடுப்பூசி பாதுகாப்பளிக்குமே தவிர, ஆபத்தை ஏற்படுத்தாது. இப்போது பரவும் வைரஸ், ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகத் தெரிகிறது. எனவே, லாக்டௌன் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படாது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். மீண்டும் பரவும் கொரோனா; மும்பை, பெங்களூரில் பாதிப்பு.. பரிசோதனையை தொடங்கிய கர்நாடகம்

விகடன் 31 May 2025 9:00 am

Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan:  நடிகர் ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக செய்திகளில் கேள்விப்படுகிறோம். குறைந்த ரத்த அழுத்தம் என்பது உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தான பிரச்னையா... எந்த அளவு வரை குறைந்தால் எச்சரிக்கையாக வேண்டும்... அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்... குறைந்த ரத்த அழுத்தம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்     மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் நடிகர் ராஜேஷின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும். யூகங்களின் அடிப்படையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பொதுவாக, 90/60 mm Hg -க்கும் குறைவாக ரத்த அழுத்தம் இருந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று கருதப்படுகிறது.  மருத்துவ மொழியில் இதை 'ஹைப்போடென்ஷன்'  (Hypotension ) என்று குறிப்பிடுகிறோம். சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ஆனால், 90/60 mm Hg-க்கும் குறைவாகப் போகும்போது அந்த நபருக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பது, நெஞ்சுலி, குழப்பம், அதீத களைப்பு,  இதயத்துடிப்பில் அடிக்கடி பிரச்னை (Arrhythmias) போன்றவை ஏற்படலாம். குறை ரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதயம் தொடர்பான பிரச்னைகளோ, கிட்னி பிரச்னைகளோட இருந்தால் குறை ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ரத்தச்சோகை எனப்படும் அனீமியா பாதிப்பிலும் இப்படி வரலாம். தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும் சாதாரண காரணத்தாலும் ஏற்படலாம். உடற்பயிற்சி செய்துவிட்டு நிறைய  வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறையலாம். நரம்பு மண்டலச் செயல்பாட்டில் ஏற்படுகிற பிரச்னை (Autonomic dysfunction)  காரணமாகவும் சிலருக்கு ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையலாம். ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும் சில ரிசப்டார்ஸ் (Receptors) சரியாக வேலை செய்யாததாலும் ரத்த அழுத்தம் குறையலாம். ஏதேனும் பிரச்னைகளுக்காக எடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவாலும் குறையலாம். எனவே, பொதுவாக ஒரு நபர் லோ பிளட் பிரஷர் பிரச்னையோடு வந்தால், முதலில் அவர்களது பிபி அளவை சரிபார்ப்போம். அறிகுறிகளைக் கேட்போம். அவற்றை வைத்து ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ என தேவைப்படும் டெஸ்ட்டுகளை பரிந்துரைப்போம். Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா? ஹைப்போடென்ஷனில் 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன்' (Orthostatic hypotension) என்றொரு வகை இருக்கிறது. இதில் படுத்திருந்த நிலையில் இருந்து உட்காரும்போதும், உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்கும்போதும் ரத்த அழுத்தம் குறையும். பிபி அளவைக் குறிப்பிடும்போது மேலுள்ள எண்ணை சிஸ்டாலிக் பிளட் பிரஷர் (Systolic blood pressure) என்றும், கீழுள்ள எண்ணை டயஸ்டாலிக் பிளட் பிரஷர் (Diastolic blood pressure) என்றும் சொல்வோம். இதில் சிஸ்டாலிக் பிளட் பிரஷரானது 20 பாயின்ட்டுகளாகவும், கீழுள்ள டயஸ்டாலிக் பிளட் பிரஷரானது  10 பாயின்ட்டுகளாகவும் குறைந்திருந்தால், அதை  ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன் என்று சொல்வோம். டீஹைட்ரேஷன், இதயநல பாதிப்பு, கர்ப்பம், மருந்துகளின் பின் விளைவு என பல காரணங்களால் வரும். சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இதையும் மருத்துவர்கள் செக் செய்வார்கள். பிபி அளவு 90/60 mm Hg க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பொதுவாக வயதானவர்களிடம் இந்தப் பிரச்னை வரும்போது சற்று எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இளவயதினரிடம், குறிப்பாக பெண்களில் சிலருக்கு லோ பிளட் பிரஷர் இருக்கலாம். அவர்கள் ஆக்டிவ்வாக இருக்கும்போது அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களும் பிபி அளவு 90/60 mm Hg -க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் இல்லாதவரை, இளவயதினருக்கு மருத்துவர்கள் எந்தச் சிகிச்சையையும் பரிந்துரைக்க மாட்டோம். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்துவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: BP நார்மல்... ஆனாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது... என்ன பிரச்னையாக இருக்கும்?

விகடன் 30 May 2025 9:00 am

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா என யோசியுங்கள். ‘ஆ பீஸுக்கு இன்னைக்கு என்ன டிரெஸ் போடலாம்?’ என யோசித்துக்கொண்டே செல்போனை பாத்ரூமில் மறந்து வைத்திருப்போம். எ தையோ எடுக்க ஒரு ரூமுக்குப் போய், `இப்ப எதுக்கு இங்க வந்தோம்?’ என யோசித்துக் கொண்டிருப்போம். ஞாபக மறதியா அல்லது வியாதியா? த லையிலேயே சீப்பை வைத்துவிட்டு, சீப்பு எங்கே எனத் தேடிக்கொண்டு இருப்போம். பா க்கெட்டில் வைத்துக்கொண்டே பர்ஸை தேடிக்கொண்டிருப்போம். அ டுத்தவர் சொல்வதை ‘உம்’ கொட்டியபடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியாது. `ஸாரி... என்ன சொன்னீங்க?’ எனக் கேட்டு அசடுவழிவோம். ` வீ ட்டுக் கதவை நன்றாகப் பூட்டினோமா?’ என, வரும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வருவோம். இவை வழக்கமாக நடக்கும் விஷயங்கள். இதுபோன்ற மறதி, கவனக் குறைவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இது ஏதும் பிரச்னையா? இதைத் தடுப்பது எப்படி? சொல்கிறார் மனநல மருத்துவர் அசோகன். மூளை ''பொதுவாக, மறதி என்பது நல்ல விஷயம். எதையுமே மறக்கவில்லை என்றால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இவற்றில் மூளை தனக்குத் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது. மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தை மறக்கிறோம் என்றால், அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். ஒரு தகவல் நம் மனதில் பதிவாகும்போது, வேறு ஏதாவது கவனச்சிதறல் இருந்தால், அது நம் மூளையில் பதிவது இல்லை. மனஅழுத்தம், மனச்சோர்வு, சூழல் நெருக்கடி, தூக்கமின்மை, மது, சிகரெட் பழக்கம் என கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் காரணமாக மறதி ஏற்படுகிறது. நினைவுத்திறன் நினைவுத்திறன் (மெமரி) நினைவுத் திறன் என்பது ரிமோட், ரீசன்ட், இம்மீடியட் என மூன்று வகைப்படும். ரிமோட் - இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை நினைவுகூர்வது. ரீசன்ட் - நேற்று அல்லது கடந்த வாரம் நடந்ததை நினைவில் கொள்வது. இம்மீடியட் - கடந்த நிமிடம் நடந்தது, இப்போது செய்யப்போவது போன்றவற்றை உடனுக்குடன் நினைவில்கொள்வது. இதில் ‘இம்மீடியட் மெமரி’ என்பது, செய்யும் செயலில் முழுக்கவனமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம் மனதில் பதியும். கவனச்சிதறல் இருக்கும்போது, பதிவாகாது. Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்... எ ந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள். செ ய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும். நி னைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும். எ வ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ப ழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம். ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்... க ணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும். ஷா ப்பிங்குக்காக வெளியே செல்லும்போது, லிஸ்ட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நீங்களாக ஞாபகப்படுத்தி பொருள்களை வாங்குங்கள். இறுதியாக செக் செய்யுங்கள். கு றைந்தது ஐந்து பேரின் எண்களாவது நினைவில் இருக்கட்டும். இது, உங்களுக்கு ஞாபகசக்தியைக் கொடுப்பதோடு, அவசரத்தில் கை கொடுக்கும். க வனச்சிதறலைக் கட்டுப்படுத்த, ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். தி யானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும். ஸ் போர்ட்ஸ், நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். ஞாபகமறதி வியாதி கிடையாது'' என்று முடிக்கிறார் மனநல மருத்துவர் அசோகன். Health: மஞ்சள் பூசணி விதையில இத்தனை மருத்துவ குணங்களா?

விகடன் 30 May 2025 6:55 am

Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?

Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும் அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமா... தவறுதலாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, எல்லோருக்கும் உயிரிழப்பு ஏற்படுமா... ரத்தப் பிரிவு மாற்றம் குறித்து சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்... பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெவ்வேறு வகையான ரத்தப் பிரிவுகள் இருப்பதையும், அவை மனிதருக்கு மனிதர் வேறுபடுவதையும் நாம் அறிவோம். யாருக்கு, எந்த ரத்தப் பிரிவு இருக்கிறதோ, அது எந்த ரத்தப் பிரிவுடன் பொருந்தும் என்பதற்கேற்பதான் அவருக்கு ரத்தம் ஏற்றுவதோ, அவரிடமிருந்து ரத்த தானம் பெறுவதோ முடிவு செய்யப்படும். இவற்றில் ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் 'யுனிவர்சல் டோனர்' (universal donor) என்று சொல்கிறோம். எல்லோருக்கும் எல்லாவகை ரத்தப் பிரிவுகளும் ஏற்றுக்கொள்ளாது. அதை   இன்காம்பாட்டிபிலிட்டி (Incompatibility) என்று சொல்கிறோம். பெரும்பாலும் இந்தப் பிரச்னை ரத்தம் ஏற்றும்போது வரும்.  பொதுவாக அறுவைசிகிச்சை செய்யும்போதோ, டெலிவரி, விபத்து போன்ற எமர்ஜென்சி சிகிச்சையின்போதோ ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது தவிர, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பில்கூட சிலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது போன்ற தருணங்களில் 'இம்யூன் ஹீமோலைட்டிக்  ரியாக்ஷன்' ( Immune Hemolytic Reaction) என்ற பிரச்னை வரலாம்.  அதாவது ஒரு நபருக்கு ரத்தம் ஏற்றும்போது, அது தானம் செய்பவரின் ரத்த செல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். அதனால் 'ஹீமோலைசிஸ்' ( Hemolysis) என்ற பிரச்னை வரலாம்.  அதாவது ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இதை 'அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (acute hemolytic reaction) என்று சொல்வோம். ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன் பாதிப்பானது ரத்தம் ஏற்றிய 24 மணி நேரத்துக்குள் ஏற்படும். சிலருக்கு 6 முதல் 12 மணி நேரத்துக்குள்ளும் வரும். 'டிலேடு ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (delayed hemolytic reaction ) என இன்னொரு வகை இருக்கிறது. இது 24 மணி நேரத்துக்குப் பிறகு 72 மணி நேரத்துக்குள் வரக்கூடியது. எந்த ரத்தப் பிரிவு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியாமல் ஒவ்வாத ரத்தப் பிரிவை  ஏற்றும்போது இத்தகைய பிரச்னைகள் வரலாம். இந்த இணக்கமின்மை பாதிப்பானது  சருமத்தில் தடிப்புகள், சுவாசக் கோளாறு, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது என பலவித அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். சில அறிகுறிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிரே போகும் அபாயம் உண்டு.  இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான் இன்று ரத்த மாற்று சிகிச்சை என்பது மருத்துவத்தில் தனிப்பிரிவாகவே இயங்குகிறது. அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள்தான் இதைப் பார்த்துக்கொள்வார்கள். இணக்கமில்லாத ரத்தப்பிரிவு என்றில்லை, இணக்கமுள்ள ரத்தப்பிரிவை ஏற்றும்போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் கேள்விப்பட்ட செய்தியில் குறிப்பிட்டபடி, அது உயிரிழப்புவரை கொண்டுசெல்லும் அபாயமும் உண்டு. எனவே, ரத்தம் ஏற்றுவதை முறையாக, மிக மிக ஜாக்கிரதையாகச் செய்யாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: இதய நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

விகடன் 29 May 2025 9:00 am

Healthy Food: 5 கலர்ஸ் சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

‘ஒரு நபர் தினமும் 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த காய்கறி, பழங்களையும் குறைந்தது 2 நிறங்களில் இருந்து அதிகபட்சமாக 5 நிறங்களில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஶ்ரீமதி. அவை என்னென்ன நிறங்கள், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அவரே விளக்குகிறார். சிவப்பு 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிட்டின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin). பலன்கள்: ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உள்பொருள்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதயநோய், புராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை செல்களை எதிர்க்கும். பர்ப்பிள் 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: ஃபிளவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin). பலன்கள்: இதயம், மூளை, எலும்புகள், ரத்த நாளங்கள், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோயை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும். பச்சை 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: சல்ஃபோரஃபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இ்ண்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones). பலன்கள்: கண்கள், ஈறுகள், ரத்த நாளம், நுரையீரல், கல்லீரல், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தன்மையைத் தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும். வெள்ளை 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: அலிசின், குவர்சிடின், இ்ண்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate). பலன்கள்: எலும்புகள், ரத்த ஓட்டம், ரத்தநாளங்கள் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளை நிற காய், கனிகள் உணவுகள் உதவும். மஞ்சள் 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: ஜிஸாந்தின் (Zeaxanthin), ஆல்பாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின். பலன்கள்: பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்துக்கு நல்லது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 29 May 2025 7:00 am

Apollo: உலக அவசர மருத்துவ தினம்; 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அப்போலோ

சென்னை அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals], [World Emergency Medicine Day] கொண்டாடும் வகையில், 'ஃப்ளீட் ஆஃப் ஹோப்' [Fleet of Hope] என்ற மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. உயிர்களைக் காப்பாற்றுவதிலும், அவசர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் 1066 அவசர ஆம்புலன்ஸ் சேவைகளின் (1066 Emergency Services] முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கு அவசர மருத்துவ சிசிச்சை தேவைப்படும் தருணங்களில் அவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதற்கு தங்களது வாகனங்களில் செல்வதை விட, பொதுமக்கள் 1066 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு அழைப்பதை அப்போலோ மருத்துவமனைகள் வலியுறுத்துகிறது. உங்கள் வீட்டு வாசலிலேயே அவசர மருத்துவ சிகிச்சையைத் தொடங்க முடியும் என்னும் போது, நீங்கள் பதட்டத்துடன் ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்? என்ற விழிப்புணர்வை உருவாக்குவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். ஆம்புலன்ஸ் என்பது அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவரை அழைத்துச் செல்லும் ஒரு போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல நோயாளியின் வீட்டு வாசலுக்கு வந்தவுடன். உடனடியாக மருத்துவச் சிகிச்சையைத் தொடங்கும் ஒரு சிகிச்சை நடைமுறையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பக்கவாதம், மாரடைப்பு அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், மருத்துவ. உதவி இல்லாமல் தாமதம் ஏற்படுவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் இதனால் ஆம்புலனஸ் சேவை என்பது உயிரைக் காக்க உதவும் சேவை என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை.கள் இந்த முன்முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. பொதுமக்களிடையே விழிப்புணாவை ஏற்படுத்தும் முன்முயற்சியாக, சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனை ஆம்புலனஸ் அணிவகுப்பான ஃப்ளீட் ஆஃப் ஹோப் (let of Hoped கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தை திரு. சொக்கையா, திருவல்லிக்கேணி உதவி ஆணையர் (போக்குவரத்து) அவர்கள் ஆம்புலன்ஸ்களுக்கு கொடியசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services, Apollo Hospitals], ரோகிணி ஸ்ரீதர் மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO-Chennal Region, Apollo Hospitals) மற்றும் அப்போலோ மருத்துவமனைகளின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் மருத்துவமனை பிரிவின் தலைவர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services-Hospital Division, Apollo Hospitals] கூறுகையில், உலக அவசர மருத்துவ தினம், மருத்துவ அவசர நிலையில் நாம் ஒவ்வொரு நொடியும் மிக விரைவாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியமானது. இன்று, 'நம்பிக்கையின் அணிவகுப்பான' 'Fleet of Hope'-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது மருத்துவ நெருக்கடி ஏற்படும் தருணத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய தருணம் உயிருக்கு ஆதரவு அளிக்கும் மேம்பட்ட லைஃப் சப்போர்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் மூலம். நோயாளியின் இருக்குமிடத்திற்கு வந்தடையும் தருணத்திலேயே அவசியமான மருத்துவ பராமரிப்பைத் தொடங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம் நோயாளியின் நிலை குறித்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மருத்துவமனையை சென்றடையும் நேரத்தில் மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது கதிரியக்கவியல், கேத் லேப் மற்றும் இன்னும் பிற முக்கியமான பரிசோதனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ நடைமுறைகளை முன்கூட்டியே தயார்நிலையில் வைத்து செயல்படுத்தவும் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் குழுவிற்கு உதவுகிறது. என்றார். அப்போலோ மருத்துவமனையின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி. ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] கூறுகையில், மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் வெறும் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்ல அவை எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் நடமாடும் பராமரிப்பு தளங்கள். மேம்பட்ட நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவர்களுடன் தங்கு தடையில்லா தகவல்தொடர்பு வசதிகள் மூலம் நோயாளி மருத்துவமனையை அடைவதற்கு முன்பே உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடங்க ஆம்புலன்ஸ்கள் உதவுகின்றன. நோயாளி எங்கிருந்தாலும், அவர்கள் எளிதில் பெறக்கூடிய, மருத்துவ சூழலுக்கேற்ற வகையில் சிகிச்சையை மேற்கொள்ளும், தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் அவசர மருத்து சேவையை நேரடியாக வழங்குவதே ஆம்புலன்ஸ்களின் நோக்கமாகும். இதன் மூலம் அவசரகால சிகிச்சையை மேம்பட்டதாக மறுவரையறை செய்வதே எங்கள் குறிக்கோள். என்றார். சென்னை அப்போலோ மருத்துவமனை, அவசர மருத்துவ சிகிச்சைக்கான கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 1066 ஹெல்ப்லைன் மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் மிகப்பெரும் மொபைல் தொடர்பு நெட்வொர்க் மூலம், சரியான நேரத்தில், உயிர்காக்கும் பராமரிப்பை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனை பற்றி 1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 73 மருத்துவமனைகள், 6000-க்கும் அதிகமான மருந்தகங்கள், 2500-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் டயக்னோஸ்டிக் மையங்கள், 500-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 200,000-க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு லட்சம் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.

விகடன் 28 May 2025 3:31 pm

பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!

ச மீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர்‌ மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்புகூட‌ திண்டுக்கல் மாவட்டத்தில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது. பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுனர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழ, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுகிறது. சுதாரித்துக்கொண்ட நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் நடக்கவிருந்த விபத்து தடுக்கப்பட்டது. ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிற செய்திகளை அடிக்கடி காண நேர்வதால், ஓட்டுநர் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்வதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா; வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம். Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு... ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியுமா? ''அரசு பேருந்து ஓட்டுநர்களோ, தனியார் பேருந்து ஓட்டுநர்களோ அல்லது கார் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டவர்களோ, இந்த வேலையில் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போதுமான தூக்கமில்லாமல் நீண்ட நேரம் வண்டி ஓட்டுவதுதான். ஓட்டுநர்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடும் சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படி தொடர்ந்து வெளியே சாப்பிடுவதும், அவை உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்துகிற உணவுகளாக இருப்பதும் இதயத்துக்கு நல்லதல்ல. ஹார்ட் அட்டாக் பீடி, சிகரெட், ஆல்கஹால் போன்ற பழக்கம் இருப்பவர்களுக்கு பொதுவாகவே ஹார்ட் அட்டாக் வருகிற வாய்ப்பு அதிகம். இதில், சரியான தூக்கமில்லாதது, ஆரோக்கியமற்ற உணவுகள் என்கிற வாழ்கிற ஓட்டுநர்களுக்கு மேலே சொன்ன பழக்கமும் இருந்துவிட்டால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். பீடி, சிகரெட், ஆல்கஹால் பழக்கம் இருப்பவர்கள் அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது, அவர்களை வருமுன் காக்கும். இவற்றைத்தவிர, மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களான உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற‌ வாழ்வியல் நோய்கள் ஓட்டுநர்களுக்கு இருந்தால், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே உணர முடியுமா? என்ன முதலுதவி செய்ய வேண்டும்? வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் யாருக்கு, எங்கு மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டால் உடனே 108 ஆம்புலன்ஸை உதவிக்கு அழைக்க வேண்டும். உடன் CPR (Cardiopulmonary resuscitation ) என்கிற முதலுதவியை செய்ய வேண்டும். CPR என்பது இதயதுடிப்பு மற்றும் மூச்சுத் தடைப்பட்ட நபர்களுக்கு கையால் நுரையீரலை அழுத்தி, வாய் வழியாக ஆக்சிஜன் அளித்து உயிர்க்காப்பதற்கான ஒரு முதலுதவி செயல் ஆகும். இந்த முதலுதவி நடத்துனர்களுக்குத் தெரிந்திருந்தால், மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் களைக் காப்பாற்றியிருக்கலாம். முதலுதவி உடனே செய்ய வேண்டியதும்... ஓட்டுநர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகளும் இதயத்தில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே அறிகுறிகள் வெளிப்படும். பொதுவாக அதிகமாக வியர்த்தல், படப்படத்தல், உடல் வெப்பநிலை குறைவது, இதயம் மற்றும் மார்பு பகுதியில் வலி ஏற்படுவது, மூச்சுவிட சிரமப்படுவது போன்றவை மாரடைப்பு ஏற்படப் போவதற்கான அறிகுறிகள். சில சமயம் வாந்தி, மயக்கம், காதில் வலிகூட ஏற்படலாம். இந்த அறிகுறிகளை உணர்ந்தால், ஓட்டுநர்கள் உடனே நடத்துனர்களிடம் விஷயத்தைச் சொல்லி 108-க்கு போன் செய்ய சொல்ல வேண்டும். அல்லது உடனே வேறொரு வண்டியில் ஏறி அருகில் உள்ள‌ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வலியைப் பொறுத்துக்கொண்டு பேருந்தை ஓட்டக்கூடாது. Gym: ஜிம் மரணங்கள் தொடர்வது ஏன்? - ``நிச்சயம் தவிர்க்க முடியும் மருத்துவர்கள் விளக்கம்! அறிகுறிகள் இல்லாத மாரடைப்பு என்றால்... மேலே சொன்ன மாதிரியான அறிகுறிகள் இல்லாமலேகூட மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால், அவர்களுக்கு வலி உணர்வு திறன் குறைவாக இருக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் மாரடைப்பால் ஏற்படும் வலியை அவர்கள் முன்கூட்டியே உணர முடியாமல் இருப்பார்கள். சிலர் இந்த வலியை அஜீரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டு, அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் அதற்கான மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சுய மருத்துவம் தவறு. அதுவும் இதயம் தொடர்பான பிரச்னைகளில் சுய மருத்துவம் மிக மிக தவறு. சர்க்கரை நோயாளிகள், அதுவும் ஓட்டுநர் பணி செய்பவர்கள் என்றால், மருத்துவர் ஆலோசனைபடி இதயம் தொடர்பான பரிசோதனைகளை அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி Vikatan Explainer : உங்கள் இதயத்துக்கு ஆயுள் நூறு - இதய நலன் ஆதி முதல் அந்தம் வரை முதல்முறை மாரடைப்பு ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படுமா? மாரடைப்பைப்பற்றி ஒரு புரளி ஓடிக்கொண்டே இருக்கிறது. முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டால் காப்பாற்றிவிடலாம். மூன்றாவது முறை மாரடைப்பு ஏற்பட்டால்தான் உயிரிழப்பார்கள்‌ என்று. ஆனால், அது தவறான‌ கருத்து. முதல் முறை மாரடைப்பு வந்து உயிரிழப்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை மாரடைப்பு வந்து உயிர் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அது மாரடைப்பு எந்த இடத்தில் ஏற்படுகிறது, எந்த அளவில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் 90% அடைப்பு ஏற்ப்பட்டால்தான் உயிரிழப்பு நிகழும்'' என்கிறார் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி. நடத்துனர்கள் என்ன சொல்கிறார்கள்? ஓட்டுனருக்கு மாரடைப்புப் போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் நடத்துனர்களுக்கு பேருந்தை எப்படிக் கையாள வேண்டும்; எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் போன்ற பயிற்சிகளை வழங்குகிறார்களா என்பது குறித்து தெரிந்துகொள்ள, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக, நடத்துனராக பணிபுரிகிற சிலரிடம் விசாரித்தோம். நடத்துனர்கள் பேசுகையில், இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை பயிற்சியையும் தந்ததில்லை. அப்போ அப்போ யோகா பயிற்சி மட்டும் தருவாங்க. டிரைவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பஸ்ஸை எப்படி நிறுத்தணும்னு யாரும் சொல்லித் தந்ததில்ல. டிரைவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துபோற அந்த வீடியோவை டிவி நியூஸ்ல பார்த்தோம். அதுல அந்த கண்டக்டருக்கு பஸ்சை எப்படி நிறுத்தணும்னு தெரிஞ்சதுனால பஸ்ல இருந்த அத்தன உசுரையும் காப்பாத்திட்டாரு. இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'' என்கிறார்கள் பதற்றத்துடன். போக்குவரத்துத்துறை தமிழக அரசு கவனத்திற்கு..! இனிவரும் காலங்களிலாவது தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் முதலுதவி அளிப்பது, அவசர காலங்களில் பேருந்தை எப்படிக் கையாள்வது போன்றவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு போதுமான இடைவெளியில் இலவச‌ முழு உடல் பரிசோதனையும் செய்தால் எதிர்காலத்தில் பெரிய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடியும். தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் இதில் தனி கவனம் செலுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

விகடன் 28 May 2025 2:49 pm

Prostate cancer: ஜோ பைடனை பாதித்த புற்றுநோய்; வயதான எல்லா ஆண்களுக்குமே வருமா?!

அ மெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு சமீபத்தில் புராஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 82 வயதான அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், பராக் ஒபாமா என பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தனர். இப்படி வயதான ஆண்களை பாதிக்கும்‌ புராஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய் ஏற்பட்டால் குணப்படுத்த முடியுமா என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன். Prostate cancer ''புராஸ்டேட் என்பது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும், இனப்பெருக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துணை பால் சுரப்பி. இந்த புராஸ்டேட் சுரப்பிதான் விந்தணுக்களை உற்பத்தி செய்து அதற்கு உயிரூட்டமும் அளிக்கிறது. இந்த சுரப்பி அமைந்துள்ள இடத்தில் புற்றுநோய் மூலக்கூறுகள் வளர்ச்சி அடைவதைத்தான் புராஸ்டேட் புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய், தற்போது உலகளவில் ஆண்களை அதிகளவு பாதிக்கக்கூடிய புற்றுநோய் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் வயது. வயது அதிகமாக அதிகமாக அவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதற்கு நம்முடைய உணவுமுறை, பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது மரபியல் முறை. தாத்தாவிற்கோ, தந்தைக்கோ, புராஸ்டேட் புற்றுநோய் இருந்திருந்தால் மரபியல் காரணங்களால் அடுத்த தலைமுறைக்கும் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். புராஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்னென்ன? புராஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் அடைவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் தானாக வெளியேறுவது, சிறுநீர் தடைபடுவது, சிறுநீருடன் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுவது போன்றவை பொதுவான அறிகுறிகள். இதே அறிகுறிகள் பொதுவாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் ஏற்படும். ஆனால், அது புற்றுநோயால் ஏற்படும் அறிகுறிகள் இல்லை. வயது முதிர்வால் ஏற்படுவது. இந்த அறிகுறிகளை தவிர புற்றுநோய் பிரச்னை தீவிரமடையும்போது பாதிப்படைந்தவர்களுக்கு பசியின்மை, எடையிழப்பு போன்றவை ஏற்படலாம். இந்த புற்றுநோய் பல்வேறு உறுப்புகளுக்கும் பரவும்போது, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கலாம். `குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?' காமத்துக்கு மரியாதை - 241 புராஸ்டேட் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியதா? அனைத்துவித புற்றுநோயும் ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். இந்த புராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். மூன்று மற்றும் நான்காம் நிலையில் கண்டறிந்தால், புற்றுநோய் பரவலை பிற உறுப்புகளுக்கு பரவாமல், பாதிப்பு அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், குணப்படுத்த முடியாது. டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன். மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242 உடலுறவு கொள்வதிலோ ஏதேனும் பாதிப்பு இருக்குமா? புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விந்து வெளியேற்றுவதிலோ, புராஸ்டேட் புற்றுநோய் என்பது விந்தணு உற்பத்தியுடன் தொடர்பில் இருப்பதால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். விந்தணு வெளியேற்றத்தின்போது வலி, விந்துவுடன் ரத்தம் அல்லது சீழ் போன்ற திரவங்கள் கலந்து வெளியேறுவது, உடலுறவின்போதும் வலி ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். அறுபது வயது கடந்த ஆண்களோ அல்லது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் ஆண்களோ, புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர். ஸ்ரீவத்சன். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

விகடன் 28 May 2025 2:35 pm

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை.  சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உணவுப்பழக்கம் உதவுமா... எப்படிப்பட்ட உணவுகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மங்கு எனப்படுகிற பிக்மென்ட்டேஷன் பிரச்னை இப்போது பலரையும் பரவலாக பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், கருந்திட்டுகளைப் போக்க, வைட்டமின் ஏ, சி, ஈ என மூன்று வைட்டமின்கள் மிக முக்கியம். இவற்றை நீங்கள் சப்ளிமென்ட் வடிவிலும் எடுக்கலாம். இவற்றில் வைட்டமின் ஏ சப்ளிமென்ட்டை நீண்டகாலத்துக்கு எடுக்கக்கூடாது. மருத்துவப் பரிந்துரை முக்கியம். உணவுகளின் மூலம் மங்கு பாதிப்பிலிருந்து மீளலாம். அதாவது கருந்திட்டுகளைப் போக்க உதவும் மேற்குறிப்பிட்ட வைட்டமின்களை உணவுகளின் மூலமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ சத்துள்ள பப்பாளி, கேரட், பீட்ரூட், கீரை போன்றவற்றையும், வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, கொய்யா, கிவி, நெல்லிக்காய் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஈ சத்துக்காக பாதாம் சாப்பிடலாம். முதல்நாள் இரவு பத்து பாதாம் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிச் சாப்பிடலாம். சருமத்தில் கருமையை ஏற்படுத்தும் மங்கு சருமத்தின் கருந்திட்டுகளைப் போக்குவதில் மாதுளம்பழம் மிகச் சிறப்பாக வேலை செய்யும். ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடலாம். பீட்ரூட், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் சாப்பிடலாம். ப்ளூ பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னைக்கு மிகச் சிறந்தவை. வெண்டைக்காய், கீரை, பீன்ஸ் என பச்சைக் காய்கறிகள் எல்லாமே இந்தப் பிரச்னைக்கு ஏற்றவைதான். பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து  தினமும் 150 மில்லி அளவுக்கு, 15 நாள்களுக்குக் குடித்துவந்தால், நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம்.  Doctor Vikatan: எலுமிச்சை, புதினா, மூலிகைகள் சேர்த்த டீடாக்ஸ் ஜூஸ் உடல் எடையைக் குறைக்குமா? புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். கண்களைச் சுற்றி கறுப்பாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கலாம். அவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டீஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரும் மிகச் சிறந்தது. புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, சருமத்தின் கருந்திட்டுகள் மாறுவதை உணர்வீர்கள். இந்த எல்லாமே உள்ளுக்குச் சாப்பிடுபவை. இவற்றில் எதையும் சருமத்தில் தடவ முயல வேண்டாம். எந்தப் பொருள், யாருக்கு, எப்படிப்பட்ட அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. எனவே, சருமத்துக்கு வெளிப்பூச்சு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே எதையும் பின்பற்றவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 28 May 2025 9:00 am

டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

கோ வை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் காட்டில் இருக்கும் பாம்பு, பூரான் என விஷ ஜந்துக்களெல்லாம் முன்னெச்சரிக்கையாக இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிடும். அல்லது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக், கார் போன்றவற்றிலும் நுழைந்து விடும். அதனை கவனிக்காமல் ஓட்டிச் சென்றால் ஆபத்து நமக்குத்தான். பாம்பு பைக்கில் விஷப்பாம்புகள்! சமீபத்தில் ஆவடியிலும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. டூ வீலரில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்து 20 வயது இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில், பைக்கில் மறைந்திருந்த பாம்பைப் பார்த்து, பைக்கை ஓட்டியவர் ஹேண்டில்பாரில் இருந்து கையை எடுத்துவிட்டார். வண்டி கீழே சாய்ந்துவிடக்கூடாது என பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞர் ஹேண்டில்பாரை பிடிக்க, பாம்பு கடித்துவிட்டது. இதனால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு காரணம் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வண்டியை எடுக்கும்போது அதில் ஏதும் விஷப்பூச்சிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்க தவறிவிடுவதே ஆகும். டூ வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள் வண்டியை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்? வீடுகளில் வாகனங்களை நிறுத்துகிறோம். மறுநாள் அவசர அவசரமாக அதில் ஏறி உட்கார்ந்து கிளம்பி விடுகிறோம். அப்படி செய்யாமல் ஒரு சில நிமிடங்கள் நிதானித்து அந்த வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை இரண்டு, மூன்று முறை முறுக்கினாலே, உள்ளே ஏதேனும் உயிரினங்கள் பதுங்கி இருந்தால் அவை வெளியே வந்துவிடும். நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதைவிட நமது உயிர் முக்கியமல்லவா..? அதனால், கொஞ்ச நேரத்தை ஒதுக்கி வண்டிக்குள் ஏதேனும் விஷப்பூச்சிகள் இருக்கின்றனவா என்பதை பார்ப்பது நல்லது. அப்படியே‌ பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிறார் அவசர‌ மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். வி.பி.சந்திரசேகரன். குளவி பதற்றப்பட்டால் விஷம் வெகு விரைவில் உடலில் பரவும்! ஒருசில பாம்புக்கடிகளே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். பாம்பு கடித்துவிட்டால், முதலில் நாம்‌ பதற்றப்படக்கூடாது. கூடவே ஓடுவது, நடப்பது போன்ற வேகமான செயல்களை செய்யவே கூடாது. காரணம் நாம் பதற்றப்படும்போதும், வேகமான அசைவுகளை செய்யும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வெகு விரைவில் உடலில் பரவக்கூடும். பாம்பு கடித்தால் உடனே செய்ய வேண்டியது! அருகில் இருக்கும் யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும். உடனே பாம்பு கடித்த இடத்தில் இருந்து ஆறு இன்ச் தொலைவிற்கு சற்று மேல் பகுதியில் ரிப்பனாலோ, கயிற்றாலோ லேசாக இறுக்கிக்கட்ட வேண்டும். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமோ, தாங்களாகவோ அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விஷத்தன்மைக்கு ஏற்ப விஷமுறிவு மருந்தைக் கொடுப்பார்கள். சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. பாம்பு கடித்தால் செய்யக்கூடாதது! பாம்பு கடித்தால் விஷத்தை எடுக்கிறேன் என வாய் வைத்து உறிஞ்சுவது போன்றெல்லாம் சிலர் செய்கிறார்கள். அப்படியெல்லாம்‌ செய்யவே கூடாது. அது பிரச்னையை இன்னும் அதிகமாக்கும். பாம்பினை அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம். எந்த பாம்பு கடித்தாலும் சரி, எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்கிறோமோ அவ்வளவு நல்லது. காலதாமதம் தான் ஆபத்தானது. சிறு சிறு கிராமங்களில்கூட தமிழக அரசு சிறப்பான முறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்தி வருகிறது. அங்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்துகள் எப்போதும் இருக்கும். Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சுண்ணாம்பு வைக்க வேண்டாம்! குளவி, தேனீ போன்ற பூச்சிகள் கொட்டிவிட்டால் அந்த இடத்தில் சுண்ணாம்பு வைக்க வேண்டாம். குளவி கொட்டினால் அதன் கொடுக்கு உடலில் மாட்டிக்கொள்ளும். அதனை கையால் எடுக்கிறேன் என அழுத்தினால் நஞ்சு உடலுக்குள் சென்றுவிடும். அப்படி செய்யாமல் ஸ்கேல் போன்ற ஒன்றை எடுத்து அதனை மெதுவாக முன்னும் பின்னும் அசைத்தாலே அவை முழுவதுமாக வெளியே வந்துவிடும். டாக்டர் சந்திரசேகரன்‌ Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சுய மருத்துவம் கூடவே கூடாது! சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. ஒரு சில நேரங்களில் விஷம் ரத்தத்தில் கலந்து தீவிர ஒவ்வாமை (Anaphylaxis) ஏற்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிட சிரமப்படலாம், மயக்கமடைந்து விடலாம், அதிக வியர்வை ஏற்படலாம். அப்போது ரத்த அழுத்தம் குறைவாகும். இது உயிருக்குக்கூட ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு Adrenaline/ Epinephrine என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் குணமடையலாம். பூச்சிதானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்'' என்கிறார் டாக்டர் சந்திரசேகரன்‌.

விகடன் 27 May 2025 3:12 pm

அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

ந மக்கு பெரிதும் அறிமுகம் தேவைப்படாத நோய் என்றால் அது கொரோனாதான். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து இறப்பு வரை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் தொற்று இது. எண்ணிலடங்காத உயிரிழப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போனது, பின்பு அவை கொரோனா வைரஸ் என கண்டறிந்து போட்ட தடுப்பூசியே என்று கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியது. எப்படியோ கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டோம் என மன நிம்மதி அடைந்த நேரத்தில், தற்போது தென்கிழக்கு ஆசியா முழுவதும் கோவிட் வைரசின் புதிய உருமாற்றம் பரவி வருவதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. `கொரோனா' வைரஸ் அச்சம் ஒரே வாரத்தில் 4 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை! ஒரே வாரத்தில் நான்கு மடங்காக உயர்ந்த இந்த புதிய உருமாற்ற கொரோனா பாதிப்பு, தற்போது ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் பணிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். சீனா மற்றும் தாய்லாந்தில் புதிய பூஸ்டர் டோஸ் எடுக்குமாறு மக்களை அறிவுறுத்த ஆரம்பித்து விட்டார்கள். கோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்! நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம். பொதுநல மருத்துவர் ராஜேஷ் Cooking Vessels: அவை வெறும் சமையல் பாத்திரங்கள் அல்ல... நோய் தடுப்பான்கள்! - பாத்திரங்களின் பலன்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஜே1 வகையினை சார்ந்தது. இது பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சளி, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் வலி போன்ற உடல் உபாதைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பு. குறிப்பாக தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். என்றாலும், இந்தப் பிரச்னைகள் உடல் உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவற்றிற்கு தடுப்பூசி அவசியம் இல்லாதது. பெரும்பாலும் மாத்திரைகள் மூலமே அறிகுறிகளை சரி செய்துவிடலாம். இந்த கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும், தும்மல், இருமல் போன்ற செயல்களின்போது வெளிப்படுகிற உடல் சுரப்புத்துளிகளின் மூலமாகவும் எளிதாக பரவக்கூடியது. அதனால், பொது இடங்கள், கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெகு தூரம் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துக்கொள்ளுங்கள். மற்றபடி, இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் டாக்டர் ராஜேஷ். Loading…

விகடன் 27 May 2025 12:31 pm

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிப்பது வெயிட்லாஸுக்கு உதவுமா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைப்பவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிக்கிறார்கள். வேறு சிலரோ நெய்யை முழுமையாகத் தவிர்க்கிறார்கள். நெய் நல்லதா, கெட்டதா? அந்தக் காலத்தில் நெய் காய்ச்சும்போது அதில் முருங்கைக்கீரை சேர்த்து பொரித்துக் கொடுப்பார்கள். அது இந்தக் காலத்துக்கும் ஏற்றதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகளையும் 'க்ருதம்' என்ற பெயரில் நெய்யில் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். காரணம், நெய்யின் வழியே கொடுக்கும்போது அந்த மருந்தின் கிரகிப்புத்தன்மை சிறப்பாக இருக்கும். அதே சமயம், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது நெய்க்கும் பொருந்தும். நாம் உண்ணும் உணவானது எப்படி உட்கிரகிக்கப்படுகிறது, பிறகு அது எப்படி செரிக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். வைட்டமின்கள், மினரல்கள், குறிப்பாக கொழுப்பில் கரையும் மினரல்கள் போன்றவை கொழுப்புச்சத்து இருந்தால்தான் உடலுக்குள் சிறப்பாக உட்கிரகிக்கப்படும்.  ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்', அஜீரண பிரச்னை, வயிற்றுவலி உள்ளிட்ட குடல் ஆரோக்கியம் தொடர்பான  பிரச்னைகளுடன் இன்று நிறைய பேர் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.  அவர்கள் நெய்யில் சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னைகள் கட்டுப்படுவதை உணரலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போரும் நெய் எடுத்துக்கொள்ளலாம். அது கொழுப்பு என்றாலும், எடைக்குறைப்புக்கு உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 மில்லி நெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதில் வெறும் 45 கலோரிகள்தான் இருக்கும். நெய்யை முழுவதும் தவிர்ப்பது தேவையற்றது. வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். Doctor Vikatan: பிறந்த குழந்தையின் உடலில் நெய், வெண்ணெய் தடவலாமா? அந்தக் காலத்தில் வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சும்போது கடைசியாக அது நுரைத்துவரும்போது சிறிது முருங்கை இலைகளைச் சேர்ப்பார்கள். அது படபடவென வெடிக்கும்.  அதைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும். முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பவுடர், கேப்ஸ்யூல் என அது பல வடிவங்களில் வருகிறது. அதையே நெய்யோடு எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும். 8 மாதக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தினமும் சிறிது நெய் எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். அது கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கண்களுக்கு ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு பார்வை நரம்புகளை வலுப்படுத்த இது உதவும். பார்வை தொடர்பான பிரச்னைகளையும் தவிர்க்கும்.  நெய் முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய்யை தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்பவர்கள், தினமும் இதை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குழந்தையின்மை பிரச்னையையும் சரியாக்கும். அடிக்கடி களைப்பாகிறவர்கள், எனர்ஜியே இல்லாமல் உணர்கிறவர்களுக்கும் இது மிகச் சிறந்தது. சருமத்தின் பளபளப்புக்கும் உதவும். ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதால், தினமும் இதை எடுத்துக்கொள்வதால் இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும்.  'வெண்ணெய் காய்ச்சவெல்லாம் யாருக்கு இன்று நேரமிருக்கிறது... அதில் முருங்கைக்கீரை நெய் வேறா...' என்று சிலர் கேட்கலாம். முருங்கைக்கீரை இன்ஃபியூஸ்டு நெய் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. நேரமில்லாதவர்கள் தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   Doctor Vikatan: பிறந்த குழந்தையின் உடலில் நெய், வெண்ணெய் தடவலாமா?

விகடன் 27 May 2025 9:00 am

Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா?

வை ட்டமின் பி12 குறைபாடுப் பற்றிய விழிப்புணர்வு சமீப வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு மைக்ரோ சத்து இந்த பி 12. பல உடல் உபாதைகளுக்கு ஆரம்பமாக விளங்குவது வைட்டமின் பி12 குறைபாடே. இந்தக் குறைப்பாட்டை பற்றியும் அவற்றைக் கண்டறியும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு வருவதற்கான காரணங்கள் என்ன? உடலுக்குத் தேவையான வைட்டமின்களை, நாம் பெரும்பாலும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்கிறோம். இவற்றில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க ஒன்று. வைட்டமின் பி12 தானியம் சார்ந்த உணவுகள், முட்டை, மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் ஆகியவற்றில் நிரம்பி காணப்படுகிறது. பெரும்பான்மையான வைட்டமின் பி12 குறைபாடு இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பெரும் அளவில் உட்கொள்ளாமல் இருப்பதாலும், காலை உணவு தவிர்ப்பதாலுமே வருகிறது. வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலும் எந்த வயதினரைப் பாதிக்கிறது? பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் பி12 குறைபாடு அதிகம் வருகிறது. ஏனெனில் இவர்கள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள தவறுவார்கள். இவர்களது உடலில் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதால், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சப்படுவது குறைகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். வைட்டமின் பி12 குறைபாடு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சோகை ஏற்படும். மேலும் உடல் சோர்வு, கவனச்சிதைவு, பாத வலி, வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறுவது, படிப்பில் ஆர்வமின்மை, உடல் மெலிந்துக் காணப்படுவது போன்றவை வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள். Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?! ஒரு நாளுக்கு எத்தனை விட்டமின் பி12 மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்? நோய் தாக்கத்தினைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் எடுத்துக்கொண்டால், மாத்திரையில் உள்ள சத்துக்கள் சிறுநீரில் வெளியேற தொடங்கி விடும். பி 12 சத்தை ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்! வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா? வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சாக மாறிவிடும். இதைப் பார்த்து பயந்துவிட வேண்டாம். இது சாதாரணமான ஒன்றே. வைட்டமின் பி12 மருந்துகளால் பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. ரத்தப்பரிசோதனை மூலமாகவே வைட்டமின் பி12 குறைபாட்டினைக் கண்டறிந்துவிட முடியும் என்பதால், நான் மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பி 12 பரிசோதனை செய்து தீர்வை நாடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

விகடன் 27 May 2025 7:03 am

Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு 'நான் சரியான அம்மா இல்லையோ, சரியான மனைவி இல்லையோ, சரியான ஊழியர் இல்லையோ...' என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. எல்லா வேலைகளையும் முழுமையாகச் செய்கிறேனா என சந்தேகம் வருகிறது. இது எப்படிப்பட்ட மனநிலை? கோளாறு என்னிடம்தானா, இதற்கு மனநல சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் உங்களுக்கு இருப்பதைப் போன்ற மனநிலையை உளவியலில் ' சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்று சொல்கிறோம். அதாவது, சூப்பர்மேன் போல.... சூப்பர்வுமனாக இருக்க முயல்வது. சூப்பர்வுமன் சிண்ட்ரோம் உள்ள பெண்கள் அதிக வேலை செய்பவர்களாக, அதீத அர்ப்பணிப்பு உள்ளவர்களாக, அளவுக்கதிகமாக களைத்துப் போகிறவர்களாக, ஸட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். ஆறுதலான ஒரு விஷயம் என்ன தெரியுமா?  உங்களைப் போன்ற சூப்பர்வுமென்  இங்கே ஏராளம் பேர் இருக்கிறார்கள். Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா? அம்மாக்கள், வேலைக்குச் செல்கிறவர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம். இவ்வளவு ஏன்... பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்குக் கூட வரலாம் என்கின்றன ஆய்வுகள்.  ஒரு வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும்போது 'நான் சரியில்லையோ... இன்னும் அதிகம் ஓடணுமோ, உழைக்கணுமோ' என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். சுமக்கும் எல்லாப் பொறுப்புகளிலும்  'ஆகச் சிறந்தவள்' என்ற கிரீடத்துக்கு ஆசைப்பட்டு ஓடுகிற மனநிலையைத்தான் 'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்கிறது உளவியல். அப்படி ஆகச்சிறந்தவளாக தன்னை நிரூபிக்க முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதீத மன அழுத்தம் ஏற்படுவதையே இது குறிக்கிறது. 100 சதவிகிதம் பர்ஃபெக்ட் ஆக இருப்பது யாருக்கும் சாத்தியமற்றது. Imperfect is perfect too என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். 'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' எல்லாவற்றையும் தலையில் சுமக்கும் தியாகிப்பட்டம் தேவையற்றது. தேவைப்படும்போது உதவி கேளுங்கள். அடுத்தவர் உதவியோடு ஒரு வேலையைச் செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபெக்ஷன் இன்னும் அதிகரிக்கலாம். இயலாமையை வெளிப்படுத்துவதில் குற்ற உணர்வு தேவையில்லை. உங்களை அழுத்தும் விஷயங்களை, வேதனைகளை யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள்.  உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. எப்போதும் எல்லோருக்கும் 'யெஸ்' சொன்னால்தான் நீங்கள் நல்லவராக, வல்லவராக அறியப்படுவீர்கள் என்றில்லை. தேவைப்படும் இடங்களில் 'நோ' சொல்வதும்கூட உங்கள் ஆளுமையின் அழகான வெளிப்பாடுதான். இந்த மனநிலையிலிருந்து விடுபட தியானப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை உங்களுக்கு உதவலாம். உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி மன அழுத்தம் அதிகரிக்கும்போது  மனநல சிகிச்சையை நாடலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?

விகடன் 26 May 2025 9:00 am

Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர்

இ ந்திய கலாசாரத்தில் இனிப்பு என்றாலே அதில் நெய்யும் இருக்கும். சர்க்கரையுடன் நெய் சேர்த்து செய்யும் இனிப்புகள் ’ப்பா….. என்ன சுவை’ என்பதற்கு ஏற்ப வாயில் போட்டவுடன் கரைந்து விடும். இன்றைய அவசர காலத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இனிப்புகளை செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால் பலரும் தீபாவளிக்குக்கூட கடைகளில் தான் இனிப்புகளை வாங்குகிறார்கள். நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது? இனிப்புப்பண்டங்களில் ’நெய் மிதக்க’ என்ற சொல்லை நாம் கேட்பதுண்டு. ஆனால், அதில் நெய் மட்டும்தான் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்விக்குறி. பல கடைகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதியைதான் நிறைய உணவுகளில் பயன்படுத்துகிறார்கள். ’வனஸ்பதி என்பது தாவர எண்ணெய்தானே; அதில் என்ன கெடுதல் இருந்து விடப் போகிறது’ என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. வனஸ்பதி உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் குறித்து சித்த மருத்துவ டாக்டர் விக்ரம் குமார் அவர்களிடம் கேட்டறிந்தோம். வனஸ்பதி என்றால் என்ன? இந்தியாவில் வனஸ்பதி ’டால்டா’ என்ற பெயரால்தான் அறியப்படுகிறது. முழுமையாகவோ அல்லது பகுதியாகவவோ ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணையைதான் வனஸ்பதி என்கிறார்கள். ஹைட்ரஜனேற்றம் என்பது தாவர எண்ணெயில் ஹைட்ரஜனைச் சேர்க்கும்போது, அது அறை வெப்பநிலையில் திடக்கொழுப்பாகி வெண்ணெய் போன்று மாறும். நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது? வனஸ்பதி எப்படி உடலுக்கு கெடுதல் ஆகிறது? ஹைட்ரஜனேற்றம் செய்யும்போது தாவர எண்ணெயிலுள்ள மூலக்கூறுகள் மாறுபாடு அடைவதால், ட்ரான்ஸ் (trans fat) கொழுப்பு அமிலங்களாக மாறுகிறது. இதை உணவுடன் சேர்த்து நாம் எடுத்துக்கொள்ளும்போது அதிக அடர்த்திக்கொண்ட (high density lipoprotein) நல்ல கொழுப்பின் அளவைக்குறைத்து, குறைந்த அடர்த்திக்கொண்ட ( low density lipoprotein) கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. என்னென்ன உடல்நல பிரச்னைகள் வரும்? இதய நோய் – கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதால் உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. இதனால் இதயத்தில் அடைப்பு மற்றும் செயலிழப்பு போன்ற இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நீரிழிவு நீரிழிவு நோய் - உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் நபர்களின் உடலில் இந்த ட்ரான்ஸ் கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக அமைகிறது. உடல் பருமன் - தாவர எண்ணெயில் காணப்படும் அதிக கலோரி காரணமாக ட்ரான்ஸ் கொழுப்புகள் வயிற்றுப்பகுதியில் படிந்து உடல் பருமனுக்கு காரணமாகிறது. புற்றுநோய் - வனஸ்பதியின் தொடர்ச்சியான பயன்பாடு குடல் பகுதிகளில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு தூண்டுதலாக அமைகிறது. மேலும், பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். வனஸ்பதி கண்பார்வை பாதிப்பு - கண் பார்வைக்கு தேவையான லினோலினிக் அமில உற்பத்தியை, வனஸ்பதியில் இருக்கிற டிரான்ஸ் கொழுப்புகள் தடை செய்வதால், குழந்தைகளின் கண் பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்தும். நோய்கள் வராமல் தடுக்கும் பசு நெய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? அலர்ஜி மற்றும் ஒவ்வாமை - அதிகப்படியான வனஸ்பதி நுகர்வால் வாந்தி, செரிமானக்கோளாறுகள் போன்றவையும் தோல் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளையும் ஏற்படும். சித்த மருத்துவர் - விக்ரம் குமார். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: சில உற்பத்தியாளர்கள் வியாபார நோக்கில் வனஸ்பதியை அதிக அளவில் உணவுகளில் சேர்த்து தயாரிக்கின்றனர். இதைத் தடுப்பதற்கு வழிகள் இல்லை என்றாலும் தவிர்க்கலாம். பேக்கரிகளில் கிடைக்கும் பிஸ்கட், பஃப்ஸ் போன்றவையும், மார்கரின் மற்றும் திரையரங்குகளில் கிடைக்கும் பாப்கார்ன் வகைகள், காபி கிரீமர்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதே சிறந்தது. வேண்டுமென்றால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் டாக்டர் விக்ரம் குமார். Ghee: `நெய்யை டைனிங் டேபிள்ல வெச்சு சாப்பிடாதீங்க; ஏனெனில்...' Health Tips

விகடன் 26 May 2025 8:42 am

Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போது அதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால் எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்பை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அதை நீக்கிவிடுமாறும் சொல்கிறார்.  என்னுடைய தோழிகள் சிலரும் இதுபோல வேறு வேறு பிரச்னைகளுக்காக கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்கள். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை என்றாலே, கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா...? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்    மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் கர்ப்பப்பையை அகற்றுவது தீர்வாகாது. அது அவசியமும் இல்லை. எனவே, முதலில் உங்களுக்கு பீரியட்ஸின் போது அதிக ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை  கண்டறிய வேண்டும். அதற்கேற்பவே சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும். ஸ்கேன் செய்து பார்த்து ஃபைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து அடினோமயோசிஸ் பாதிப்பு இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும்.  அடினோமயோசிஸ் (Adenomyosis) என்றால் கர்ப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும்.  அதுதான் அடினோமயோசிஸ். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கர்ப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின் போது கடுமையான  வலியும் இருக்கும். பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. கர்ப்பப்பையின் லைனிங்கான எண்டோமெட்ரியம் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு டி அண்ட் சி செய்து பார்க்கலாம். மேற்கூடிய பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு  உங்கள் மருத்துவர் கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுக்கிறாரா எனப் பாருங்கள். கர்ப்பப்பையோடு  ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் இளம் வயதில் அகற்ற மாட்டோம். அந்த சினைப்பைகள்தான் பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை கொடுப்பவை. மெனோபாஸ் வயதுவரை சினைப்பைகளிலிருந்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். எனவே, சினைப்பைகளில் எந்தப்  பிரச்னையும் இல்லாதபட்சத்தில் அவற்றை விட்டுவிட்டு, கர்ப்பப்பையை மட்டும் நீக்கிக்கொள்ளலாம். கர்ப்பப்பையை அகற்றுவது அவசியமா என்பது குறித்து நீங்கள் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளுடன் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டு, பிறகு முடிவு செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     மார்பகம்... கர்ப்பப்பை... சினைப்பை... பெண்ணுறுப்பு... பெண்களை பாதிக்கும் புற்றுநோய்கள்..!

விகடன் 25 May 2025 9:00 am

Smoothy: நாம் ஏன் ஸ்மூத்தீஸ் அருந்த வேண்டும்? செய்முறையும் பலன்களும்!

`ஸ்மூத்தி' வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களுக்கும் ஏற்றது. பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட  ஸ்மூத்தியாகச் செய்து அருந்தும்போது, முழுப் பலனைப் பெறலாம். ஸ்மூத்தியில், இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள், உலர்ந்த பழங்கள், இயற்கை சுவையூட்டிகள் உள்ளதால்,  மல்ட்டி வைட்டமின் சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கடைகளில் தயாரிக்கப்படும் ஸ்மூத்தியில் சர்க்கரை, பால் சேர்க்கப்படுகிறது. இது நல்லது அல்ல. வீட்டிலேயே பால் சேர்க்காமல், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். இளநீர் - திராட்சை ஸ்மூத்தி இளநீர் - திராட்சை ஸ்மூத்தி தேவையானவை: இளநீர் - 1 கப், இளநீர் வழுக்கை - 1/4 கப், நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு, ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன், பச்சை திராட்சை - 3. செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்‌ஸியில் ஒருசுற்று சுற்ற வேண்டும். இதனுடன், சப்ஜா விதை, நறுக்கிய பச்சை திராட்சைகளைத் தூவிப் பறிமாறலாம். பலன்கள்: இளநீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துக்கள் உள்ளன. இவை வறண்ட சருமத்தைப் போக்கி, தோலைப் பளபளப்பாகும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும். நா வறட்சியைப் போக்கும்; உடல்சூட்டைத் தணிக்கும். திராட்சையில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. தாகத்தைத் தணிக்கும்; ரத்த விருத்திக்கு உதவும். பிளம்ஸ் - தக்காளி ஸ்மூத்தி பிளம்ஸ் - தக்காளி ஸ்மூத்தி தேவையானவை:  பழுத்த பிளம்ஸ் - 6, தக்காளி - 1, வெல்லப்பாகு - தேவையான அளவு, உலர் கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1/2 டீஸ்பூன். செய்முறை:  உலர் கிர்ணி விதையை நெய்யில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பிளம்ஸை நறுக்கி, கொட்டை நீக்கிக்கொள்ளவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து, மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, கிர்ணி விதைப் பொடியைத் தூவிப் பருகலாம். பலன்கள்:  பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டாகரோட்டின் உள்ளன.  பார்வைத் திறனை மேம்படுத்தும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும். இதயத்துக்கு நல்லது. உடல் புத்துணர்வு பெறும். தக்காளியில் வைட்டமின் ஏ, பி சிறிதளவும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். உடலுக்கு உறுதியளிக்கும். பலா - ஆரஞ்சு ஸ்மூத்தி பலா - ஆரஞ்சு ஸ்மூத்தி தேவையானவை:  பலாப்பழச் சுளைகள் - 3, கமலா ஆரஞ்சுச் சுளைகள் (உரித்தது) - 2, ஆப்பிள் பழம் - 2 துண்டுகள், கருப்பட்டிப் பாகு - தேவையான அளவு. செய்முறை:  பலாச் சுளைகளுடன் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் கருப்பட்டிப் பாகு கலக்க வேண்டும். மற்றொரு டம்ளரில் உரித்த ஒரு கமலா ஆரஞ்சு சுளையைப் போட்டு அதனுடன் பலாச் சாற்றை ஊற்ற வேண்டும். மேலே மீதமுள்ள கமலா ஆரஞ்சுச் சுளையைப் போட்டுப் பறிமாறலாம். பலன்கள்:  பலாப்பழத்தில், வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சிறிது உள்ளது. கண் நோய் வராமல் தடுக்கும். ஜீரண உறுப்புகளைச் சீராக்கும். இந்த ஸ்மூத்தியை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். கிவி-குல்கந்து ஸ்மூத்தி கிவி-குல்கந்து ஸ்மூத்தி தேவையானவை:  கிவிப்பழம் - 4, குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன், நீரில் ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன். செய்முறை:  தோல் சீவிய கிவிப்பழத்தை குல்கந்து சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைப் போட்டு, அரிந்த வாழைப்பழம் சேர்த்துப் பருக வேண்டும். பலன்கள்:  கிவிப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சருமம் பளபளப்பாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா ஸ்மூத்தி கொய்யா ஸ்மூத்தி தேவையானவை:  பழுத்த கொய்யாப்பழம் - 2, மாதுளை முத்துக்கள் - 1/2 கப்,  பனங்கற்கண்டு பொடித்தது - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை:   கொய்யாப்பழத்தை கழுவி, நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் மாதுளை முத்துக்களைச் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன், பனங்கற்கண்டு சேர்த்து, சில மாதுளை முத்துகளை மேலே தூவிப் பருகலாம். பலன்கள்:  கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்கு நல்ல பலன் தரும். மாதுளை விதைகளைச் சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி தேவையானவை:  தோல் மற்றும் விதை நீக்கிய பப்பாளித் துண்டுகள் - 2 கப், பழுத்த தக்காளி - 1, வெல்லப்பாகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன். செய்முறை:  பப்பாளித் துண்டுகளையும் தக்காளிப் பழத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இதில் கிர்ணி விதைகளைத் தூவிப் பரிமாறலாம். பலன்கள்:  பப்பாளி குறைவான கலோரி கொண்டது. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பார்வைத்திறன் மேம்பட, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு இந்த ஸ்மூத்தி உதவும். 100 கிராம் பப்பாளியில் மட்டும் ஒருநாளுக்கு தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. தக்காளியிலும் வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.  இதில், பயோட்டின் உள்ளதால், சருமம், முடி வளர்ச்சிக்கு உதவும். டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி தேவையானவை:  உலர்ந்த திராட்சை - 1 கப், உலர்ந்த அத்திப்பழம் - 4, பேரீச்சம்பழம் - 5, பேரீச்சம்பழ சிரப் - 2 டேபிள்ஸ்பூன், வால்நட் - 2, உலர்ந்த பாதாம் - 2, ஏலக்காய் - 1. செய்முறை:  உலர்ந்த திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், வால்நட், பாதாம், அத்திப்பழத்தை நீரில் சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து, ஊறவைத்தவற்றை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். ஆறிய பின், அதை மிக்ஸியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, இதனுடன் பேரீச்சம் சிரப் கலந்து, உலர்ந்த திராட்சையை மேலே தூவிப் பருகலாம். பலன்கள்:  இதில், புரதச்சத்து, ஒமேகா 3, வைட்டமின்கள் ஏ, பி, தாமிரம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ரத்தசோகையைப் போக்கும். உடலுக்கு வலுவைத் தரும். எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், குழந்தைகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி தேவையானவை:  மாதுளை முத்துகள் - 1 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் - 2  டேபிள்ஸ்பூன், தேன் - 1 டேபிள்ஸ்பூன். செய்முறை:  மாதுளையுடன் சிறிதளவு நீர்விட்டு, ரோஜா இதழ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன் கலந்து, சிறிது ரோஜா இதழ்களைத் தூவிப் பரிமாறலாம். பலன்கள்:  மாதுளையில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. பித்தம், குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும். பன்னீர் ரோஜா இதழ்கள் தாகம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மாதுளை விதைகள் ரத்தத்தைப் பெருக்கும். இதயத்துக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி தேவையானவை:  கிர்ணிப்பழம் சிறியது - 1, நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு - 5, வெல்லப்பாகு - தேவையான அளவு, காய்ந்த கிர்ணிப்பழ விதைகள் - 1 டீஸ்பூன். செய்முறை:  வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்லப்பாகாக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் தோலை உரித்து, நறுக்கிய கிர்ணிப்பழத்தை உடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் வெல்லப்பாகு சேர்த்துக் கலந்து, கிர்ணி விதையைத் தூவிப் பருகலாம். பலன்கள்:  கிர்ணிப்பழத்தில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். வைட்டமின் பி, சி ஓரளவு இருப்பதால், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், ரத்தசோகை, பித்தப்பைக்கல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.

விகடன் 25 May 2025 6:56 am

Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா?

இ ன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்போட்டுக்கொண்டே இருக்கிறது. முடி உதிர்வதைத் கூட நம்ப இளசுங்க சகிச்சிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அந்த நூற்றுக்கணக்கான முடியில‌ ஒரு முடி வெள்ளையா இருந்துட்டா போதும். பேரிடி தலையில விழுந்த மாதிரி புஸ்சுனு போயிடுவாங்க. உடனே அந்த வெள்ளை முடியை புடுங்கி வீசுறது, தலைக்கு சாயம் பூசுறது, விளம்பரத்துல காட்டுற ஷாம்பு எல்லாம் வாங்கி தலைக்குப் போடுறதுனு கண்ணாடி முன்னாடியே நிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டீ, காபி குடிக்குறதுனாலதான் இளநரை வருதுன்னு நம்பி அதை குடிக்குறதைக்கூட நிறுத்திடுவாங்கன்னா பார்த்துக்கோங்க. இளநரை சரி, டீ, காபி குடிச்சா இளநரை வரும்னு சொல்றது வெறும் வாய்வார்த்தையா அல்லது உண்மையா? மருத்துவ காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்று சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ அவர்களிடம் கேட்டோம். டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா? ''டீ, காபி எடுத்துக்கொள்வதற்கும் முடி நரைப்பதற்கும் நேரடித்தொடர்பு இல்லை. ஆனால், மறைமுக‌‌மானத் தொடர்பு உள்ளது. டீ. காபியில் காஃபைன் அதிகளவு இருக்கும். இதனை நாம் அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது, அது தலைமுடியின்‌ ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இளநரை ஏற்படும். ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ இளநரை ஏற்படுவதற்கான பிற‌ காரணங்கள்? ஆக்ஸ்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் (oxidative stress) காரணமாகவும் இளநரை ஏற்படும். ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் என்பது உடலில் கழிவுகள் (free radicals) அதிகளவில் உருவானதால், அவற்றை தடுக்க உடலின் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidant) திறன் போதிய அளவில் இல்லாத நிலையைக் குறிக்கும். இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தம். மனிதர்கள் சரியாக புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை கடைப்பிடித்தல் அவசியம். ஆனால், அதிகப்படியான டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது ஒருவேளை உணவைத் தவிர்ப்போம். அல்லது குறைந்த அளவு உணவு மட்டுமே எடுப்போம். இதனால், அவர்கள் உடலில் ஆக்சிஜன் அழுத்தம் உண்டாகி செல் பாதிப்பு நிகழும். இது, தலைமுடிக்கு நிறத்தை வழங்கக்கூடிய மெலனின் செல்களையும் பாதிக்கும். இதனாலும் இளநரை ஏற்படும். `CT ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வருமா? - பகீர் கிளப்பிய ஆய்வும் மருத்துவர் தரும் விளக்கமும்! மரபும் காரணமா? மிக முக்கியமான ஒன்று மரபியல் காரணம். தாத்தாவிற்கோ, பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ இளநரை பிரச்னை இருந்திருந்தால் அவர்களுடைய சந்ததியினருக்கும் இளநரை ஏற்படும். இதை பல ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. தவிர, புகைப்பழக்கம், போதைப்பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் இளநரை பிரச்னை ஏற்படும். மரபணு தீர்வுகள் என்னென்ன? இளநரைப் பிரச்னைக்கு தீர்வு நம்மிடம்தான் உள்ளது. டீ, காபி அதிகம் எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதை நாளொன்று ஒன்று அல்லது இரண்டு கப் என குறைத்துக்கொள்ள வேண்டும். கூடவே தினமும் உடற்பயிற்சி செய்வது, வயதுக்கு ஏற்ற நிம்மதியான தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது போன்றவை மிக அவசியம். கூடவே மன அழுத்தம் இருந்தால் அதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இளநரை ஏற்படுவதை தவிர்க்க முடியும்'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ. இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

விகடன் 24 May 2025 7:01 am