பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்
வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன. அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும் பற்கள் இழப்பு, ஈறு நோய்களுக்கான ரிஸ்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போருக்கு, வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், முறையான பல் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதிலும் நடைமுறை சவால்கள் இருப்பதால், அவர்கள் வாய் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட முதியோர்களுக்கு பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கலாம். அவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது கருவிகளைக் கண்டு பயப்படலாம். அவர்களுக்கு வலி குறைந்த எளிய சிகிச்சைகள் (Minimally Invasive Treatments) மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை உணர்த்தியுள்ளது. நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். சோர்வு, மறதி, மன அழுத்தம், தசைப்பிடிப்பு... வைட்டமின் பி12 குறைபாடு -அறிகுறிகள் முதல் தீர்வுகள் வரை இந்த ஆய்வறிக்கை சொல்வது உண்மைதானா... வாய் சுகாதாரத்துக்கும் அல்சைமர் நோய்க்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம். ''வாய் சுகாதாரம் மற்றும் அல்சைமர் நோய்க்கு இடையிலான தொடர்பு சற்றே சிக்கலானது. இது ஒரு சுழற்சி போன்றது... ஒன்றினால் மற்றொன்று பாதிக்கும். மூளை செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அமிலாய்டு (Amyloid) மற்றும் டாவ் (Tau) எனப்படும் புரதங்கள் நச்சுப் படிமங்களாகப் படிந்து, செல்களைச் சாகடிக்கின்றன. இந்த நச்சுகளால் மூளை செல்கள் அழிவதால், காலப்போக்கில் மூளையின் அளவு சுருங்குகிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்குப் பொறுப்பு வகிக்கும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சைமர் நோய் ஒருவரின் மூளையைப் பாதிப்பதால், அவர் சுய பராமரிப்பை (Self-care) மறந்து விடுகிறார். சிறுவயதில் கற்றுக்கொண்ட அடிப்படைப் பழக்கங்கள் மறந்து போவதால், அவர்களின் வாய் சுகாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சுய பராமரிப்பு என்பது நாம் வளரும்போது சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம். இந்தத் திறன் இழக்கப்படும்போது, அந்த நபரின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதில் இயல்பாகவே வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் அடங்கும். எனவே, அல்சைமர் நோயாளிகளுக்கு வாய் சுகாதாரமின்மையைக் காண்பது அசாதாரணமானது அல்ல. சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். Alzheimer's Disease: நினைவுகள் நழுவும் நிஜ உலகம்... அதிகரிக்கும் அல்சைமர் பாதிப்பு... இன்னொரு புறம், சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். இந்தத் தொற்றுகள் உடலில் ஒருவித அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் மூளைக்குச் செல்லும்போது, அங்கும் பாதிப்பை (Neuroinflammation) ஏற்படுத்துகிறது. இதுதான் அல்சைமர் நோயில் மூளையில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. மூளையில் நச்சுப் படிமங்கள் (Plaques and Tangles) உருவாகக் காரணமாகிறது. இதுவே அல்சைமர் நோய் தீவிரமடைய வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து கேட்பதற்குச் சரியாக இருப்பது போல தோன்றினாலும், இது இன்னும் அறிவியல்ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும், தரவுகளும் வந்த பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார் டாக்டர் மீனாட்சி சுந்தரம். Sudden Death Syndrome: அச்சுறுத்தும் இளவயது திடீர் மரணங்கள்! - அலர்ட் ஆகவேண்டிய தருணம் இது...
Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?
Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள். கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்' என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல முக்கியப் பிரச்னைகளுக்கு கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது. முருங்கைக்கீரை பெண் உடல், உணர்வு, உணவு - 13: தொடர்ந்து மாறும் பீரியட்ஸ் சுழற்சி; மருந்துகள் இல்லாமலே சரி செய்யலாம்! கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும். கல்யாண முருங்கைக்கீரை மதுரையில் மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து 'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை' செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா? கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது. இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில் தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால் அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை. வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என் தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? -Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination). நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை. உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை. உடல் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்! தற்போது நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?
தூக்கம் வரலையா... அதுக்கொரு கம்மீஸ்... முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்... ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gummies ). மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவை இனிப்பாக, மிட்டாய் மாதிரி, குறிப்பாக, ஜெல்லி மிட்டாய் போன்று விதம்விதமான சுவைகளில் கிடைப்பதால், பலரிடமும் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல், அதைச் சிரமமாக உணரும் பெரியவர்கள் வரை பலரும் கம்மீஸை மறுப்பு சொல்லாமல் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது. கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உண்மையில் கம்மீஸ் என்பவை ஆரோக்கியமானவைதானா... அவற்றை எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... பக்க விளைவுகள் இருக்குமா...? விரிவாகப் பேசுகிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். ''கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், 'Yellow 5', 'B1' போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன. மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ், முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என மார்க்கெட்டில் பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில் மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம். தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free) குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும். மாத்திரை விழுங்க சிரமப்படுபவர்கள், குறிப்பாக, பெரிய அளவு மாத்திரைகளை விழுங்க முடியாதவர்களுக்கு கம்மீஸ் (Gummies) சிறந்த மாற்றாகத் தெரியலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விழுங்குவது எளிது என்பதால் கம்மீஸ் எடுத்துக்கொள்ள விரும்பலாம். எனினும் இவர்களுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் (Pediatrician) ஆலோசனையைப் பெறுவது அவசியம். சர்க்கரைநோய், பிசிஓஎஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கம்மீஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தில் பலரும் அதற்கான ஹேர் கம்மீஸ் (Hair Gummies) பயன்படுத்துகிறார்கள். ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் C இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா? சரியான உணவை (கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ்) உட்கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின், வைட்டமின் டி, பி12 அல்லது புரதச்சத்து குறைவாக இருந்தால், வெறும் கம்மீஸ் எடுத்துக்கொள்வதால் மட்டும் பெரிய மாற்றம் ஏற்படாது. கம்மீஸ் வாங்கும் போது, அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவு, ஊட்டச்சத்தின் அளவு, எடுத்துக்கொள்ள வேண்டிய டோசேஜ், சைவம் அல்லது அசைவம் என எதிலிருந்து தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி (Expiry date) போன்றவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம். அதிக சர்க்கரை உள்ள கம்மீஸ் பற்சிதைவை (Cavity) உண்டாக்கும். எனவே, அவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.
Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?
Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல. வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் 'குகுர்பிடேசின்' (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம், சில சமயம் வாந்தியில் ரத்தம் வரும் அளவிற்கு (Blood vomiting) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த ' குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. Doctor Vikatan: வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..? கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த 'குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன், அவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு, ஒரு சிறிய துண்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, கசப்புத்தன்மை இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துவது சிறந்தது. கசப்பாக இருந்தால் கண்டிப்பாகச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! - அமைச்சர் சொல்வதென்ன?
மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது. இது தொடர்பாக மேகாலயா சட்டப்பேரவையில் பேசியிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா, 2026 ஜனவரி 26 கணக்குப்படி மேகாலயாவில் 10,293 நபர்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹெச்.ஐ.வி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் 749 இறந்துள்ளனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது அதிகபட்சமாக கிழக்கு காசி மலை பகுதியில் 435 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேகாலயாவில் ஹெச்.ஐ.வி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஹெச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து விவாதிக்க பிரத்யேக சட்டமன்ற மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா ஹெச்.ஐ.வி என்பது இனி மரணத்தண்டனை அல்ல. முறையான சிகிச்சை மூலம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறியிருக்கிறார்.
Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?
Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா... வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை கேப்னோசைட்டோபேகா என்பது ஒரு சாதாரண பாக்டீரியா வகை. இது பலருடைய உமிழ்நீரில் (saliva) காணப்படக்கூடியது. இதில் Capnocytophaga canimorsus என்ற வகை பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்கும். பொதுவாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த பாக்டீரியா அதிக அளவில் ரத்தத்தில் கலந்தால் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் வளர்க்கும் மிருகங்களாக இருந்தாலும், அவை கடித்த காயம் பெரியதாக இருக்கும்போது, வழக்கமான சிகிச்சையுடன் குறிப்பிட்ட இந்தக் கிருமிக்கான சிறப்பு மருத்துவ கவனிப்பும் (atypical coverage) தேவைப்படும். இது போன்ற சூழல்களில் கேப்னோசைட்டோபேகா மட்டுமன்றி Bartonella, Pasteurella போன்ற இதர பாக்டீரியாக்களும் தொற்றை உண்டாக்கலாம். வளர்ப்புப் பிராணிகள் வெறுமனே நக்குவதால் மட்டும் இது பரவாது. மாறாக, நம் உடலின் சவ்வுப் படலம் (mucosal surface) உள்ள பகுதிகளில் நக்கினாலோ அல்லது வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ மட்டுமே இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நாய் அல்லது பூனை கடித்த காயம் மிகவும் ஆழமாக (deep bite) இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்தப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா? காயமும் ஆழமாக இருந்து, ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் நிலையில், மேற்கூறிய காரணங்களால் தொற்று ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை (major infection) உண்டாக்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில் இது தானாகவே சரியாகிவிடும். இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்ற கிருமிகள் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதும், இந்தப் பெண்ணுக்கு நடந்த விஷயமும் அரிதினும் அரிதான நிகழ்வு என்பதால் இதற்காகப் பயப்படத் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!
வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவேன்' என ஸ்டிரிக் ஆபிசராக மாறி டயட்டை கடைப்பிடிப்பார்கள். சில நாள்களிலேயே டயட்டை பின்பற்ற முடியாமல் மீண்டும் பழைய பழக்கத்துக்கே சென்றுவிடுவார்கள். வெயிட் லாஸ் டயட் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நமது மூளையின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எடை இழப்புக்கான டயட்டை கைவிடுவதற்குப் பின்னால் ஒரு வலுவான நரம்பியல் காரணம் உள்ளது என்பது உண்மையே. ஒரு புதிய டயட்டை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, சில நாள்களிலேயே அதைக் கைவிடுவது என்பது பலரும் அனுபவிக்கும் பொதுவான சவால் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். இது பற்றி மேலும் விளக்குகையில், இது வெறும் மன உறுதி (Willpower) சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதன் பின்னணியில் சிக்கலான நரம்பியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன. நமது மூளை உணவை எப்படி ஒரு வெகுமதியாகக் கருதுகிறது, சுயக்கட்டுப்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், டயட்டை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக அறிய முடியும். brain நமது மூளை உடலைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் எடை குறைய ஆரம்பித்தால் மூளை அதை ஓர் அபாயம் என்று உணரும். இதனால் மூளை ஆற்றலை சேமிக்கும் மோடுக்கு மாறும். மேலும், பசியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கும், வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் குறையும். இதனால் கிரேவிங்ஸ் அதிகரித்து, அதிகமாக சாப்பிடத் தோன்றலாம். உணவுக் கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடலாம். இதை மனவலிமைக் குறைவு என்று நினைக்க வேண்டாம். இது உயிரியல் எதிர்வினைதான் (Biological Response). நமது மூளையில் ரிவார்ட் சிஸ்டம் (Reward System) என்று ஒரு பகுதி உள்ளது. நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போது டோபமைன் ஹார்மோன் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போது இந்த ரிவார்ட் குறைகிறது. அதே போல, நம்முடைய பழைய உணவுப்பழக்கம் நமது மூளையின் நரம்பியல் பாதையில் வலுவாகப் பதிந்திருக்கும். அதை மாற்றி புதிய பழக்கங்களை உருவாக்கிப் பின்பற்ற சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். இதனால் ஆரம்ப நாள்களில் டயட்டை தொடர்ந்து சீராகப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும். diet உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற முடியாதது என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பலவீனம் அல்ல. நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும் என்று தூண்டப்படும் அதீத ஆசை’, நாள் முழுவதும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம், டயட்டில் ஏதேனும் சிறிய தவறு செய்துவிட்டால், அதை ஒரு பெரிய தோல்வியாக கருதும் உளவியல் விளைவு ஆகியவை, இந்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்குகின்றன. சிலரால் மட்டும் எப்படி முடிகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) எனும் மூளையைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். அதாவது, மூளையில் பல்வேறு நரம்பியல் இணைப்புகள் இருக்கும். டயட்டை பின்பற்றும்போது சிலர் எடுத்த உடனே கடுமையான உணவுமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மெதுவாகவும் பொறுமையாகவும் மாற்றங்களைச் செய்கிறார்கள். தொடர்ந்து ஆரோக்கியமான நடத்தைகளை கடைப்பிடிப்பதன் மூலம், மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாகின்றன. காலப்போக்கில் இந்த ஆரோக்கியமான நடத்தைகள் நிரந்தரமான பழக்கவழக்கங்களாக மாறிவிடுகின்றன. Dr. Prabash Prabhakaran டயட்டை பின்பற்ற என்ன செய்யலாம்? இந்த நரம்பியல் சார்ந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், டயட்டை பின்பற்ற சில உத்திகளைப் பின்பற்றலாம். அதாவது, பார்க்கும் இடத்தில் பழங்கள், நட்ஸ், சாலட் தயாரிக்கத் தேவையானவை போன்ற ஆரோக்கிய உணவுகளை வைத்திருக்கலாம். பிஸ்கெட், சிப்ஸ் போன்ற ஆரோக்கியத்துக்கு எதிரானவைகளை வாங்காமல் தவிர்த்துவிடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்துவிடுங்கள். வாராந்திர உணவுத் திட்டத்தை முன்பே தயாரித்து, அதற்கான பொருள்களை வாங்கி வைத்துவிடலாம். உணவு நேரம் தவிர, பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தேர்வுகள் என்ன இருக்கிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துவிடலாம். ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதுபோல கடின இலக்குகளை நிர்ணயிக்காமல், 'முதலில் ஃபிட்னஸை மேம்படுத்தலாம், அதன் பிறகு எடைக் குறைப்பைப் பற்றி தீர்மானிக்கலாம்' என்பது போல அடையக்கூடிய எதார்த்தமான, சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். weight loss diet தொடர் முயற்சி தேவை... உணவுக் கட்டுப்பாடு, வெயிட் லாஸ் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் (Consistency) முக்கியமே தவிர, 'பெர்ஃபெக்ஷன்' (Perfection) அல்ல. இன்னைக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுட்டேன். டயட் கெட்டுப்போச்சு என்று வருந்துவதைவிட, ஏழு நாள்களில் ஐந்து நாள்கள் தொடர்ந்து டயட்டை பின்பற்றுவது சிறந்தது. ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்பதற்காக, அன்றைய தினம் உடற்பயிற்சியையே சிலர் தவிர்ப்பார்கள். அதற்கு பதில் அரை மணி நேரம் உடற்பயிற்சியாவது செய்வது நல்லது. தொடர் முயற்சிகளில் ஈடுபட்டால், 'பெர்ஃபெக்ஷன்' தானாக வந்துவிடும் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது. சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் காரணங்களால்தான் மற்ற பருப்பு வகைகளைவிட சோயா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அசைவ உணவுகளான மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தைவிட, சோயாவில் மிக உயர்தரமான புரதம் (Good Quality Protein) அதிக அளவில் கிடைக்கிறது. மெனோபாஸ் (Menopause) காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டைத் தணிப்பதுடன், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரதச்சத்தை சோயா தாராளமாக வழங்குகிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm count) அதிகரிக்கவும், ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யவும் சோயா உதவுகிறது. சோயா பனீர் Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பால் அலர்ஜி... இனி வாழ்நாள் முழுவதும் பாலே குடிக்க முடியாதா? சோயா உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றாக வேகவைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் (Soya Chunks) வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், செரிமானம் ஆக சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரவில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சோயாவை ஊறவைத்து அரைத்து அதன் பாலைப் பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் டெட்ரா பேக்குகளில் (Tetra pack) சோயா மில்க் கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சோயாவிலிருந்து பெறப்படும் பனீரான டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். டெம்பே (Tempeh) என்பது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்பட்ட (Fermented) உணவுப் பொருள். இது முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பண்புகளைக் கொண்டது. குறிப்பாக, பாடி பில்டர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். சோயாவை எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஷாலோ ஃப்ரை (Shallow fry) செய்து சாப்பிடலாம். சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்து அடை செய்யலாம் அல்லது சுண்டல் போலவும் செய்து சாப்பிடலாம். சிலருக்கு சோயா சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இது மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே ஏற்படும். சோயாவில் நல்ல தரமான புரதம் இருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை விட இதில் கொழுப்புச்சத்து (சுமார் 9 கிராம்) சற்றே அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துவிட்டு, சோயாவையும் நார்ச்சத்துள்ள (Fiber) உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சோயா பால் Doctor Vikatan: பனீர் சாப்பிட்டால் எடை கூடுமா... தினமும் சாப்பிடலாமா...? மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Highly processed) சோயா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், சாதாரணமாகச் சமைக்கப்படும் சோயா சுண்டல் போன்ற உணவுகளை உண்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு குறைவது போன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி சோயா உணவுகளால் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி (Breast development) அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. சோயாவுக்கும் மார்பக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: மூளைச்சாவு என்பது என்ன? மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானம் செய்யலாமா?
Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன? - மல்லிகா அன்பழகன். சென்னை பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு. மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும். இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம் தொடர்ந்து துடிக்கும், சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும். அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன. Alzheimer's Disease: நினைவுகள் நழுவும் நிஜ உலகம்... அதிகரிக்கும் அல்சைமர் பாதிப்பு... அவரது மூளை, மீளமுடியாத அளவிற்குச் சேதமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதால் (அதாவது அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ அல்லது மருத்துவ ஆதரவு இன்றி உயிர்வாழவோ வாய்ப்பில்லை என்பதால்), அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன. உயிர் பிரிந்தபிறகு, மண்ணில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் உடல் உறுப்புகள், இப்படி ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேலான நபர்களுக்குப் புதிய வாழ்வை வழங்கப் பயன்படுத்தப்படுவது மிக நல்ல விஷயம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
வேலைப்பளுவும் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமானதால் கேன்சர்... உண்மைச் சம்பவமும் மருத்துவ எச்சரிக்கையும்!
பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின்பற்றும் வழக்கம் கொண்டவராம் அந்தப் பெண். இத்தனையையும் தாண்டி, அவருக்கு கேன்சர் பாதிக்கக் காரணம் என்ன தெரியுமா? அதிகப்படியான பணிச்சுமை Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா? அலுவலகத்தில் நிலவும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் டார்கெட்டை அடைய வேண்டிய அழுத்தம்... இவற்றால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமே கேன்சருக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்வது, இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, தாமதமாகவும் மிகக் குறைவாகவும் தூங்குவது போன்றவையும் காரணங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய அந்தப் பெண், மன ஆரோக்கியத்தை (Mental Health) கவனிக்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வெறும் உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து காக்காது. மன அழுத்தம் (Stress) என்பது உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சிதைத்து, புற்றுநோய் செல்கள் வளர வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுவலக வேலைக்கும் பர்சனல் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (Work-life balance) பேணுவது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் என்பது அமைதியான மனதில்தான் தொடங்குகிறது என்ற அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும் நிலையில், அதீத வேலைச்சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம் எல்லாம் புற்றுநோய்க்குக் காரணமாகுமா....? புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம். ''ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தாலும், அவை ஒருவருக்கு முழுமையான நோய் எதிர்ப்பாற்றலை (Immunity) உறுதி செய்வதில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம்...'' என்று எச்சரித்து ஆரம்பிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார். மன அழுத்தத்துக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்தும் விளக்குகிறார் அவர். ''நீண்ட கால மன அழுத்தம், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், இது உடலில் தேவையற்ற அழற்சியை (Inflammation) உண்டாக்கி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. நம் உடலில் உருவாகும் அசாதாரணமான அல்லது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. ஆனால், மன அழுத்தத்தால் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், இந்தச் செல்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் தடையின்றி பெருகத் தொடங்குகின்றன. தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் (Metastasis) மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது. Doctor Vikatan: குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் - முன்கூட்டியே தடுக்க முடியுமா? தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது. எந்தப் புற்றுநோயையும் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான நபர்கள் 45 வயதிலிருந்தும், குடும்பப் பின்னணியில் புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், 20 அல்லது 30 வயதிலிருந்தும் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அக்கறையை, மனநலனுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமுறை, வொர்க்-லைஃப் பேலன்ஸைப் பழகுவது போன்றவற்றை இனியாவது சீரியஸாகப் பின்பற்றுங்கள்....'' -மீண்டும் எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார்.
Doctor Vikatan: இடது காலில் வலி மற்றும் பலவீனம்... இதய நோய் இருக்கலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது. இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? இதயம் இடது பக்கம் இருப்பதுதான் காரணம், இதயத்துக்கான டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயமானது, கால்களுக்கு மட்டுமன்றி, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீராக வழங்கக்கூடியது. எனவே, இடதுகால் வலிக்கும் இதயத்திற்கும் நேரடியாக உடலமைப்பு ரீதியான (Anatomical) தொடர்பு இல்லை. ஆனால், அதற்காக இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுக வேண்டியதில்லை. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம். தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கால் வலி வரலாம். அதாவது தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகள். குறிப்பாக, சியாட்டிகா (Sciatica) அல்லது டிஸ்க் பல்ஜ் (Disk Bulge) போன்ற எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த (Orthopedic) பிரச்னைகளாலும் வலி ஏற்படலாம். இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம். Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா? சில நேரங்களில் நரம்பு மற்றும் ரத்த நாளப் பிரச்னைகளும் கால் வலிக்குக் காரணமாகலாம். சர்க்கரை நோய் (Diabetes) அல்லது நரம்புகளில் உள்ள வால்வுகளில் ஏற்படும் பிரச்னைகள் (Chronic Venous Insufficiency) காரணமாகவும் வலி உண்டாகலாம். எனவே, நீங்கள் முதலில் பொது மருத்துவரை (General Physician) அணுகி, இந்த வலி, ரத்தநாளம் சம்பந்தப்பட்ட பிரச்னையா, நரம்புப் பிரச்னையா அல்லது எலும்பு சார்ந்த பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொள்வது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமா?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்த அனைவருக்கும் வழக்கமான சோதனையாக (Routine) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் அது அவசியமாகிறது. அதாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டாலோ, நடக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலியுடன் இடது கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடை வலி இருந்தாலோ, இசிஜி (ECG) அல்லது எக்கோ (Echo) சோதனையில் இதயத்தின் பம்ப் செய்யும் திறன் குறைந்திருப்பது தெரிந்தாலோ, டிரெட்மில் டெஸ்ட் (TMT) அல்லது ஸ்ட்ரெஸ் எக்கோ (Stress Echo) சோதனையில் இதய ரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் இருப்பது உறுதியானாலோ, ட்ரோப்போனின் ஐ (Troponin I) என்ற ரத்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தாலோ, ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை வரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளும்போது, பழைய எக்கோவைவிட புதிதாக எடுக்கப்பட்டதில் பம்ப்பிங் திறன் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். ECG டெஸ்ட் பைபாஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரத்தக் குழாய்கள் (Grafts) இரண்டு வகைப்படும். ஆர்ட்டீரியல் கிராஃப்ட் (Arterial Graft - LIMA): மார்புப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தமனியில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதில் அடைப்பு வரலாம். வீனஸ் கிராஃப்ட் (Venous Graft - Saphenous Vein): காலில் இருந்து எடுக்கப்படும் இந்த நாளத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கும், 10 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை தவிர, சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். நோயாளிக்கு எவ்வித நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ அல்லது மற்ற உடல் உபாதைகளோ இல்லாமல், இசிஜி மற்றும் எக்கோ சோதனைகள் சீராக இருந்தால், டிரெட்மில் டெஸ்ட் நார்மலாக இருந்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யத் தேவையில்லை. பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதய நோயை முழுமையாகக் குணப்படுத்தும் (Permanent Cure) சிகிச்சை முறை கிடையாது. இது செய்யப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இதயநோயாளிகளுக்கு ‘ஸ்டென்ட்’சிகிச்சை, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களா பணத்தாசை பிடித்த மருத்துவர்கள்? பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இது இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தற்காலிகமாகச் சரிசெய்து (Palliative), நோயாளியின் நிலையைத் ஓரளவு முன்னேற்றுவதற்கான (Stabilize) அவசர கால உதவி மட்டுமே. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் மீண்டும் பிரச்னை வராமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். ரத்த அழுத்தம் (BP), சர்க்கரைநோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்த உறைவைத் தடுப்பதற்கான மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். முறையான மற்றும் அளவான உடற்பயிற்சி அவசியம். மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா?
Doctor Vikatan: நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களிடம் இருவித கருத்துகளைக் கேட்கிறோம். சிலர், அவற்றால் ஆஸ்துமா, வீஸிங் உள்ளிட்ட அலர்ஜி வருவதாகச் சொல்கிறார்கள். வேறு சிலரோ, காலப்போக்கில் அவற்றால் தங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது உண்மை.... செல்லப் பிராணிகளை வளர்ப்பதால், ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை என்பது அனைவருக்கும் ஏற்படுவது கிடையாது. மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது காணப்படுகிறது. குறிப்பாக, பூனைகளின் உடலில் இருந்து உதிரும் செதில்கள் (Cat Dander) அதிகப்படியான அலர்ஜியை உண்டாக்கும். இதுவும்கூட 10 முதல் 20 சதவிகித மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலங்குகளுடன் இருக்கும்போது உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால் மட்டுமே, அவற்றை வளர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்பிணிகளிடம், செல்லப்பிராணிகளின் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்படுமே தவிர, செல்லப்பிராணிகளை வளர்க்கவே கூடாது என்று எந்த மருத்துவரும் பொதுவாகச் சொல்வதில்லை. மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நாம் வளர்ப்புப் பிராணிகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அதையும் தாண்டி, அலர்ஜிக்கு உள்ளாகிறவர்கள், அவற்றிடம் இருந்து விலகித்தான் இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளில், பரவலாகப் பலருக்கும், பூனை வளர்ப்பதால் அலர்ஜி ஏற்படும். அந்நிலையில் அவர்கள், பூனைகளை வளர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும். மற்றோர் முக்கிய உதாரணம், புறாக்களால் ஏற்படும் நுரையீரல் நோய் (Pigeon Allergy/Lung Disease). இத்தகைய தீவிர அலர்ஜி இருப்பவர்கள், அந்தப் பறவைகளிடமிருந்து விலகி இருப்பது மட்டுமே தீர்வாகும். மற்றபடி, வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் தாராளமாக நாய், பூனை போன்றவற்றை வளர்க்கலாம். செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். Doctor Vikatan: வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் கடித்தாலும் தடுப்பூசி போட வேண்டுமா? செல்லப் பிராணிகள் வளர்ப்போர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எப்போதும் வலியுறுத்துவோம். அதன்படி செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அவற்றை படுக்கையில் அனுமதிக்காதீர்கள். அவற்றிடமிருந்து உங்களுக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளது. உங்கள் செல்லப்பிராணிகளைத் தவறாமல் குளிப்பாட்டி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எப்படி உங்களைச் சுத்தமாக வைத்திருக்கிறீர்களோ, அதேபோல உங்கள் செல்லப்பிராணிகளையும் பராமரிக்க வேண்டும். வீட்டில் யாருக்காவது அலர்ஜி அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசித்து, அது செல்லப்பிராணியால் தான் ஏற்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை ஒரு பொதுவான விதியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து இது மாறுபடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?
Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா.... இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத் மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் 'போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்' (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை 'மேஜர் டிப்ரெஷன்' (Major Depression) என்று அழைக்கிறோம். அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது. பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே 'தைரியமா இரு', 'மனசை அமைதியா வெச்சுக்கோ, 'யோகா பண்ணு, தியானம் செய்' என்று எளிதாகக் கூறிவிடுவார்கள். குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம். Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா? ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன் (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது. மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும். உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. குழந்தையின்மை, போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் - வலிகளை வென்ற மாலிகா ரவிகுமார் மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை 'ஸ்ட்ரெஸ்' என்ற பெயரில் கடந்து போகிறோம். மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?
Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டை அதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண்ணும் ஆகாது....' என்கிறார். இந்த அணுகுமுறை சரியா... உடல் எடை குறைவான குழந்தையை எப்படித் தேற்றுவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தையின் எடை குறித்துக் கவலைப்படுவதற்கு முன், முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்ட இடங்களில் விளையாடுவார்கள். கை கழுவாமல் சாப்பிடுவார்கள். அதனால் ஏராளமான கிருமிகள் அவர்களது உடலுக்குள் போகும். எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் புழு நீக்கம் மிக முக்கியம். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் என்றால் இந்த டீவேர்மிங் விஷயத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அதில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என எல்லாம் இருக்கும்படி, ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு வெறும் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல், வேகவைத்த நேந்திரம் பழம், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் போன்றவற்றைக் கொடுக்கலாம். முதலில் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கிவிட்டு, போகப் போக அளவை அதிகரிக்கலாம். உணவு இடைவேளைகளுக்கு இடையில் வெற்று கலோரிகள் கொண்ட சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. சிலர் குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் வயிறு நிறைந்துவிடும். ஆனால், மறுபடி கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது என்பார்கள். எனவே, மூன்று வேளை உணவை நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, சப்பாத்தி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுள் முட்டை வைத்து 'எக் ரோல்' ஆகக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்திக்குள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறிக் கலவையை ஸ்டஃப் செய்து கொடுக்கலாம். பனீர் ஸ்டஃப் செய்தும் கொடுக்கலாம். சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் என சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். அவள் பதில்கள் 63: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பிஸ்கட் தரலாமா? சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் எனச் சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், காய்கறிகள், பனீர் சேர்த்து கட்லட்டாகச் செய்து கொடுக்கலாம். குழிப்பணியாரத்தில் கொத்துக்கறி சேர்த்துச் செய்து கொடுக்கலாம். முட்டை தோசை குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவற்றை மஃபின்ஸ் வடிவில் செய்து கொடுக்கலாம். மஃபின், கப் கேக் எல்லாம் இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரமாகவும் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படி பார்த்துக்கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழிகளில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். மிக முக்கியமாக, குழந்தைகளை இரவு 7.30 - 8 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும். தாமதமான தூக்கம் அவர்களது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
புற்றுநோய் இருளில் தவிக்கும் ஏழைப் பெண்களுக்கு புதுவிடியல்: வாழ்நாள் சேமிப்பை அர்ப்பணித்த மருத்துவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 5/12/2025 அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார். தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார். 1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார். மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. பால்டிமோரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். இதற்கென அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான உதரத்துட்காட்டி (லேப்ராஸ்கோபிக்) அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற மருத்துவர் லட்சுமிபாய் பிரிட்டனில் பயிற்சி பெற்றார். இந்தியாவில் இந்த பயிற்சி பெற்ற முதல் மருத்துவர் இவர்தான், இதற்காக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மருத்துவர்.லட்சுமிபாய் கௌரவிக்கப்பட்டார். இந்த விரிவான கல்வி அவருக்கு உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்கியது, உலகளாவிய கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்.லட்சுமிபாய் தன்னுடைய மருத்துவ நிபுணத்துவத்தை ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தினார். 1950 ஆம் ஆண்டு ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.லட்சுமிபாய் தான் பணிபுரிந்த காலத்தில் எண்ணற்ற தாய்மார்கள் பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவச மருத்துவ பராமரிப்பை வழங்கிய இந்த மருத்துவர் தனது நூறாவது வயதில் பெர்ஹாம்பூர் பாபா நகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். பிரசவம் பார்க்கும் மருத்துவராக மட்டுமல்லாமல் நம்பிக்கை அளிக்கும் தாயாக பலரின் அச்சத்தையும் உயிர் பயத்தையும் போக்கியுள்ளார். வறுமை, பயம், மூடநம்பிக்கை, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கிடையே வாழ்ந்த ஒடிசா மாநிலத்தின் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற மீனவ குடும்பப் பெண் 1962 ஆம் ஆண்டு ஒரு புயல் சூழ்ந்த மாலையில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தை பிறப்பு தாமதமான நிலையில் அச்சமும் பதற்றமும் கலந்து “கடவுள்கள் எங்களை சபித்துவிட்டார்கள்” என்று மூச்சிரைக்க கூறினாள். அந்த நெருக்கடியான நேரத்தில், மருத்துவர்.லட்சுமிபாய் “சீதா, நீ புயலை விட வலிமையானவள்; என்னுடன் சேர்ந்து சுவாசி போன்ற மென்மையான தைரியம் அளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய அணுகுமுறையால் சீதாவின் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை உருவாக்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தபோது, சீதா அம்மா நீங்கள் எங்களை காப்பாற்றுவது மட்டுமல்ல என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்ப வைத்தீர்கள் என உணர்வுபூர்வமாக நன்றி கூறினாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தங்களை குணப்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த சக்தி இருப்பதாகவும் அதனை வெளிக்கொணர்வதும் மகப்பேறு மருத்துவத்தின் ஒரு அங்கம் என்றும் பல்வேறு இடங்களில் கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாயின் வார்த்தைகளுக்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த உதாரணம். இது நன்கொடை அல்ல, என் மரணத்திற்கு பின்பும் என் மருத்துவப் பணி தொடர்கிறது என்பதன் அடையாளம் என்று கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய் இந்த நிதி பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உலகு போற்றும் கொடையுடன் கூடுதலாக இளம் பெண்களிடையே புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டங்களுக்காக பெர்ஹாம்பூர் மகப்பேறியல், மகளிர் மருத்துவ சங்கத்திற்கு மருத்துவர்.லட்சுமி பாய் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். உங்கள் சேமிப்பு முழுவதையும் ஏன் மருத்துவ துறைக்கு கொடுத்து விட்டீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, நான் சம்பாதித்த அனைத்தும் மக்களிடமிருந்து வந்தது. அது அவர்களிடம், குறிப்பாக வெளியில் சொல்ல இயலாமல் அமைதியாக துன்பப்படும் பெண்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று கூறினார். திருமணம் செய்துகொள்ளாமல், அரசுப் பணியில் தன்னை அர்ப்பணித்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய், தான் சிகிச்சையளித்த ஆயிரக்கணக்கான நோயாளிகளையும், தான் வழிகாட்டிய மருத்துவ மாணவமாணவிகளையும் தனது உண்மையான, உயிருள்ள சொத்துக்களாகவும், தனது குடும்பமாகவும் கருதுகிறார். ஆண்டுதோறும் புற்றுநோயால் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் மருத்துவ வசதி கள் குறைவாக இருப்பதால் இந்த நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் 50%-க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான நோயறிதல், போதிய மருத்துவ வளங்கள் இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கொடையினை மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கினார். இந்த கொடைக்கான நிதியை காசோலையாக உறையில் வைத்து மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் இது தொண்டு அல்ல உறையில் அடைக்கப்பட்ட புரட்சி என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மருத்துவர் லட்சுமிபாய் “உறைக்குள் இருக்கும் இந்தப் புரட்சியின் பலன் இருளில் வலியை பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லாத பெண்களை சென்றடைய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேர்தல்
'ஜிம்'ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!
இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் ஒருவர் தொடர்ந்து ஜிம்மிலேயே கிடக்கிறார் என்றால் அதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். Fitness ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் வைத்திருந்தாலும், தான் மெலிந்து இருப்பதாகவும், கை, கால்களில் தசைகள் 'பல்க்' ஆகத் தெரியவில்லை என்று சிலர் நினைப்பார்கள். இது 'பிகோரெக்ஸியா' (Bigorexia) எனப்படும் மனநலக் குறைாடாக இது இருக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுனில் குமார். இதுபற்றி மேலும் பேசினார். உடல் மசில்ஸில் (தசைகள்) போதுமான அளவு வளர்ச்சி இருந்தாலும், தான் பலவீனமாக இருப்பதாக மனதில் ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். இன்னும் அதிகமாக தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஜிம்மிலேயே நேரத்தை செலவழிப்பார்கள். 'நான் ரொம்ப உயரமா இருக்கேன்', 'உயரம் குறைவா இருக்கேன்', என்பது போல உடல் சார்ந்த குறைந்த சுய மதிப்பீடு (Low Self-Esteem) உள்ளவர்கள், உருவ கேலிக்கு ஆளானவர்கள், ஏற்கெனவே மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பிகோரெக்ஸியா' குறைபாடு ஏற்படலாம். பெரும்பாலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் காணப்படுகிறது. டீன் ஏஜ்ஜிலியேயே இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தென்படலாம். உடலை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் காலகட்டம் அதுதான். Low Self-Esteem பெண்களுக்கும்... ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் தங்கள் உடல் திரட்சியாக (Bulky) இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பெண்களைப் பொறுத்தவரை கட்டுக்கோப்பான உருவமாகவோ, மெலிந்த உருவமாகவோ இருக்க விரும்புவாவர்கள். இப்போதைய ஃபிட்னஸ் கலாசாரத்துக்குள் சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள், உடலின் தசைகள் மீது அதீத ஆர்வமும், அது பற்றியே தொடர்ந்து சிந்தித்து, அதைச் சார்ந்தே வாழ முயற்சிக்கிறார்கள். சோஷியல் மீடியா தாக்கம்... சோஷியல் மீடியாவில் கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு இருப்பது மாதிரியான போட்டோ, வீடியோக்களை அதிகம் காண முடியும். அதன் மூலம் அப்படியான உடல் அமைப்புதான் 'பெர்ஃபெக்ட்' என்று நிறுவப்படுகிறது. இதை ஒப்பிட்டு பார்த்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகும். இதுதவிர, ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகைப்படுத்தி போடும் கன்டென்டுகள், சில நேரங்களில் ஓர் இயல்பான உடலைக்கூட வெறுக்கத்தக்கதாக மாற்றவும் செய்கின்றன. சோஷியல் மீடியா தாக்கம் அறிகுறிகள் 'பிகோரெக்ஸியா' பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநாள் ஜிம்முக்கு செல்லவில்லை என்றாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் டென்ஷனாகவே இருப்பார்கள். உடற்பயிற்சி, ஜிம், அதுபற்றிய வீடியோக்கள் பார்ப்பது என அதைச்சுற்றியே மனமும், நடத்தையும் இருக்கும். இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உடற்பயிற்சி ஆரோக்கியத்தை சிதைக்கும். சிலர் எப்போதும் கண்ணாடியில் உடலைப் பார்த்து சோதனையிட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் கண்ணாடியைப் பார்க்கிறதையே வெறுப்பார்கள், பயப்படுவார்கள். இன்னும் சிலர் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து காயமோ, தசையில் காயமோ ஏற்பட்டால்கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வார்கள். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல், ஆர்வம் காட்டாமல் ஜிம்மிலேயே கிடப்பார்கள், புரோட்டீன் மட்டும்தான் சாப்பிடுவேன் என்பார்கள், சிலர் தசைகளை அதிகரிக்க ஸ்டீராய்டு கூட பயன்படுத்துவார்கள். psychologist Sunil Kumar கவனிக்காவிட்டால்... இதுபோன்ற சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மருத்துவர்கள் அல்லது ஆலோசகர்களை அணுக வேண்டும். அவர்களுக்கு காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி, புரிதலை மேம்படுத்தும் ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால், உடற்பயிற்சி சார்ந்த தீவிரமான காயங்கள் ஏற்படலாம், ஸ்டீராய்டு தொடர்ந்து எடுப்பதால் இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படலாம். உடலிலுள்ள ஹார்மோன்கள் சமநிலையை இழக்கலாம். மனரீதியாகப் பார்த்தால் மனச்சோர்வு ஏற்படலாம், குடும்பம், சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடலாம், இன்னும் சிலர் தவறான முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது. Bigorexia (Representational Image) உடற்பயிற்சி எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமே தவிர, சுமையாக அழுத்தமாக பதற்றமாக மாறினால், அது மனரீதியான பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்கிறார் சுனில் குமார்.
Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?
Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார். சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். Doctor Vikatan: அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்ஷன்... கிட்னியை பாதிக்க வாய்ப்பு உண்டா? வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது. உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

31 C