Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அதை சரிசெய்ய முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்ணில் ரத்தக் கசிவு (Vitreous Hemorrhage) ஏற்படுவதற்குப் பொதுவாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension/பிபி), மற்றொன்று நீரிழிவு நோய் (Diabetes). நீரிழிவு நோயில், கண்ணில் ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) ஏற்படுகிறது. இதனால், கண்ணில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன. இந்த இயல்புக்கு மாறான புதிய ரத்தக் குழாய்கள் (Abnormal Blood Vessels) தொடர்ந்து ரத்தம் கசியும் (Bleeding Tendency) தன்மையுடன் இருப்பதால், இதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத்தக் குழாய்கள் வெடித்து, அங்கேயும் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன. இந்த இரண்டு நிலைமைகளுக்கும் அளிக்கப்படும் முக்கியச் சிகிச்சைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. கண்களுக்குள் ரத்தக்கசிவு... காரணம் என்ன? முதலில் லேசர் சிகிச்சை (Laser Treatment), விழித்திரையின் அனைத்துப் பகுதிகளுக்கும் லேசர் சிகிச்சை (Pan-Retinal Photocoagulation - PRP) அளிக்கப்படுகிறது. அடுத்தது, ஊசி சிகிச்சை (Injections) , விழித்திரையின் மையப்பகுதி (Macula) பாதிக்கப்பட்டு இருந்தால், கண்ணுக்குள் நேரடியாக ஊசி போடும் சிகிச்சை (Anti-VEGF Treatment) அளிக்கப்பட வேண்டும். கடைசியாக, அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை விலகல் (Tractional Retinal Detachment) போன்ற கடைசிநிலை பாதிப்புகள் இருந்தால், அதற்குரிய அறுவை சிகிச்சை (Retinal Detachment Surgery) செய்யப்பட வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் கண் மருத்துவரை அணுகி, லேசர் வேண்டுமா அல்லது ஊசி சிகிச்சை வேண்டுமா என்பதை முடிவு செய்து சிகிச்சை பெறுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?
செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்பற்றிய செய்திகள் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதோ, இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தொண்டைக்குழியில் வாழைப்பழம் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறான். மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது! Choking First Aid இதில், குழந்தைகளுக்கு எதிர்பாராவிதமாக நடந்தது என்றால், பெரியவர்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடும்போதுதான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது வலிப்பு வந்திருக்கிறது. விளைவு, தொண்டைக்குழியில் சிக்கி மரணம். பரோட்டா தொண்டையில் சிக்கி பலியானவர், மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தொண்டையில் ஏதோவொரு உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க டாக்டர் ஃபரூக் அப்துல்லா ''நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும். உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை 'சோக்கிங்' (Choking) என்போம். இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். இருமலும், முதுகுத்தட்டலும் இருமலும், முதுகுத்தட்டலும்... இருமும்போது சுவாசப்பாதையில் அடைத்துக்கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களால் முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம். ஒருவேளை அவர்களால் இருமவோ, பேசவோ, கத்தவோ முடியவில்லையென்றால், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டு, அவருடைய நெஞ்சுப்பகுதியை கைகளில் தாங்கிக்கொண்டு, அவரை இடுப்புப்பகுதி வரை குனிய வைக்க வேண்டும். பிறகு, அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம். ஹெம்லிச் (Heimlich) Heimlich டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? மேலே சொன்ன முதலுதவி பயன்கொடுக்கவில்லை என்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்றுகொண்டு, அவரது இடுப்பை, பின்புறத்தில் இருந்து ஒரு கையால் அணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இன்னொரு கையின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவதுபோல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இணைத்த இந்தக் கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப்பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும். இந்தக் கையை அணைத்துள்ள கை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப்பகுதியை அழுத்தியபடி, வேகமாக உங்கள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். இப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்டவரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இருக்கும். இதைத் தொடர்ந்து 5 முறை வேக வேகமாக செய்ய வேண்டும். நான் மேலே சொன்ன, இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் தட்டுவதையும், ஹெம்லிச் செய்முறையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். மூர்ச்சை நிலைக்கு சென்றால் சிபிஆர் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..! ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூர்ச்சை நிலைக்கு சென்றுவிட்டால், அவரின் முதுகுப்பகுதி தரையில் இருக்குமாறு படுக்க வைத்து, அவருடைய வாயை கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலை ஏற்படுத்திய பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், அதை லாகவமாக எடுத்துவிடலாம். கண்ணுக்குத் தெரியாத பொருளை எடுக்க வாய்க்குள் விரலைவிட்டால், அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் இன்னும் உள்ளே சென்று பிரச்னையை அதிகமாக்கி விடலாம். மூர்ச்சை நிலை தொடர்ந்தால், சிபிஆர் எனும் உயிர்காக்கும் முதலுதவியை செய்ய வேண்டும். நமக்கு நாமே எப்படி செய்துகொள்வது..? Choking ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால், நம் கைகளை இணைத்து வயிற்றுப்பகுதியில் வைத்து, நாற்காலி அல்லது மேஜை போன்ற கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். குழந்தைகளுக்காக சில டிப்ஸ்..! பொதுவாக குழந்தைகள் கண்ணில்படுகிற சின்னச்சின்னப் பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ போட்டுக்கொள்வார்கள் என்பதால், அப்படிப்பட்டப் பொருள்கள் வீட்டில் இல்லாமலோ அல்லது குழந்தைகள் கைக்கு எட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பட்டன் பேட்டரி, உடைந்த கிரையான்ஸ் துண்டுகள், உடைந்த பொம்மையின் பாகங்கள் போன்றவை குழந்தைகளின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா போன்ற சுண்டல் வகைகளை குழந்தைகள் உங்கள் கண்முன்னால் சாப்பிட வையுங்கள். இவைகூட சிறு குழந்தைகளின் தொண்டையில் சிக்கலாம், கவனம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?
Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம். அரசு சித்த மருத்துவர் ராஜம் சிக்கன் கறி, சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்று இன்று பெரும்பாலோரின் பிடித்தமான, மிகவும் பிரியமான உணவாக விளங்குவது சிக்கன். பலரும் பல விதங்களில், பலவிதமான செய்முறைகளில் தங்களது விருப்ப உணவாக இதைச் சாப்பிடுகிறார்கள். உணவாகப் பயன்படும் சிக்கனை, மருந்தாகவும் பயன்படுத்தலாம். தாது, தாவர, ஜீவப் பொருள்களை மருந்துகளாகவும் தன்னுள் உள்ளடக்கியதுதான் சித்த மருத்துவம். அந்த வகையில் உடும்பு, நத்தை, ஆமை, கோழி, ஓணான் எனப் பல்வேறு உயிரினங்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. குக்குடம், குருகு, காலாயுதம், வாரணம், ஆண்டலைப்புள் என்று பல பெயர்களில் வழங்கப்படும் கோழியும் மருத்துவப் பயன்களை உடையது தான். கோழிக்கறி, கோழி முட்டை, முட்டை ஓடு என அனைத்துமே மருத்துவ குணங்களை உடையவை. கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி என 4 வகைகளாகக் கோழிகள் வகைப்படுத்தப்படுகின்றன. செட்டிநாடு சிக்கன் பிரியாணி எந்த டயட், நல்ல டயட்... பிஸ்கட் முதல் பிரியாணி வரை... சந்தேகங்கள்... நிபுணர்களின் விளக்கங்கள்! கோழிக்கறியினால் சுவாசம் அதாவது கபம் (சளி, இருமல்) நீங்கும். கருங்கோழிக் கறியினால் உடலுக்கு வன்மை கிடைக்கும். கருங்கோழி சூரணத்தினாலும் சளி, இருமல் தீரும். கானாங்கோழிக்கறியும் கப நோய்களைப் போக்கும். இவ்வாறெல்லாம் சித்த மருத்துவத்தில் சளி, இருமலைப் போக்கும் மருந்தாகக் கோழிக்கறி கூறப்பட்டுள்ளது. கோழிக்கறி மட்டுமல்ல, கோழி, அதன் முட்டை இவற்றைக் கொண்டு, அண்டத் தைலம், சிற்றண்ட மெழுகு, அண்ட எருக்கஞ் செய்நீர், கருங்கோழிச் சூரணம் போன்ற மருத்துவப் பலன்களை உடைய பல செய்மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன் சூப்பினால் இருமல் குறையும் என்பதும் உண்மைதான். கோழிக்கறியில் இருக்கும் அமினோ அமிலம், சளியைக் குறைக்கவல்லது என்று தான் நவீன மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன. Jewish Penicillin என்று அழைக்கப்படும் சிக்கன் சூப்பை, பலரும் பல விதங்களில் தயாரிக்கிறார்கள். சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் அனைத்துமே இருமலைப் போக்கக்கூடியவையாகவும், உடலின் வன்மையைப் பெருக்கக் கூடியவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. எனவே, சிக்கன் சூப் குடித்தால் இருமல் தணியும். ஆனால், இருமலைத் தணிக்க சிக்கன் சூப் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா? இப்படி சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் மூலிகைகள் இருமலைப் போக்கக்கூடிய தன்மை உடையவையாக இருக்கும்போது, அந்த மூலிகைகளையே நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், கோழிக்கறி உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, நோயாளிகள் குறிப்பாக, சரும நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது. தவிர, பறவைகளின் மூலம் அதிலும் கோழிகளின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, உயிரினங்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இருமலுக்கு சிக்கன் சூப் தான் மருந்து என்று இல்லாமல், மகத்தான பயனுள்ள, அருமையான மூலிகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, பலன் பெறலாம். ‘மூலிகைகளால் முதல் மருத்துவம்’ என்பதுதான் சித்தர்களின் கோட்பாடு. அதை உணர்ந்து பின்பற்றுவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Dopamine toxicity: செயற்கையான மகிழ்ச்சியோட இருந்தீங்கன்னா என்னப் பிரச்னை வரும் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் வழிமுறைகளையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. Dopamine toxicity காலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கால்களை கீழே வைப்பதற்குள், நம் அனைவருடைய கைகளும் முதலில் செல்போனைத்தான் தேடும். இப்படி செல்போனை பார்க்கும்போது மூளையில் ’டோபமைன்’ என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இது ஒரு மகிழ்ச்சி தரும் ஹார்மோன். ’ஒரு நிமிடம்’ என்று போனை பார்க்க ஆரம்பித்தால், நம்மை மறந்து மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி இருக்க, செல்போன் பார்க்க ஆரம்பிக்கையில் உற்பத்தியாக ஆரம்பிக்கிற இந்த டோபமைன்தான் முக்கிய காரணம். மசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்... லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்! உண்மையில், டோபமைன் நல்ல ஹார்மோன் தான். நம்மை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். அந்தக் காலத்தில் கஷ்டப்பட்டு படித்து மதிப்பெண் பெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவது போன்றவற்றை ஒரு பரிசாகப் பார்த்தது நமது மூளை. ஆனால், இப்போது இருக்கும் தொழில்நுட்பம் ஒரு ரீல்ஸ் மூலமே இந்த டோபமைன் உற்பத்தியைத் தூண்டி விட்டு விடுகிறது. நாம் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்க, மகிழ்ச்சி தரும் டோபமைன் ஹார்மோனும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்க, நாளடைவில் இதுவே ‘டோபமைன் நச்சுத்தன்மை’யை ஏற்படுத்தி விடும். விளைவு, தேவைப்படும்போது டோபமைன் பற்றாக்குறையாகிவிடும். Dopamine toxicity Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..! நாளடைவில் நம் மூளைக்கு உண்மையான சந்தோஷம் என்னவென்றே தெரியாமல் போகலாம். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிலிருந்து கவனம் மாறி வேறொரு வேலையை செய்வது; சின்ன வேலையைக்கூட சரியாக கவனம் செலுத்தி செய்ய முடியாமல் மூளை தடுமாறுவது போன்ற அறிகுறிகள் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பிக்கும். அதாவது, ரீல்ஸ் பார்த்துப் பார்த்து இப்போது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு பின்னாட்களில் மன அழுத்தத்தில் தள்ளப்படுவோம். டோபமைன் நச்சுத்தன்மையை குறைக்க * காலையில் எழுந்ததும் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, புத்தகம் அல்லது நியூஸ் பேப்பர் வாசிக்கலாம். நடைப்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவற்றை செய்யலாம். * மற்ற நேரங்களில் ஓய்வுக்கிடைத்தால், நண்பர்களுடன் நேரம் செலவு செய்வது, சந்தோஷமான நிகழ்வுகளை நினைவுபடுத்துவது போன்றவற்றை செய்யலாம். டோபமைன் நச்சுத்தன்மையைக் குறைக்கும் மூச்சுப்பயிற்சிகள் பற்றிய வீடியோ இதோ.. * காலையில் மூச்சுப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். இது ஸ்டிரெஸ் ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைத்து, ஹேப்பி ஹார்மோனான டோபமைனை தேவையான நேரத்தில் விடுவிக்கும். * நல்ல சத்தான உணவுப்பொருட்கள், தானியம் மற்றும் விதை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் மனதுக்குள் இருக்கிற குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் யோ. தீபா.
தேவயானி பொண்ணுங்கிறதால இனியாவைப் பத்தி தப்பா பேசாதீங்க - Actress Devayani Family Exclusive பேட்டி
உள்ளாடை முதல் பைக் சீட் வரை; ஆண்களுக்கு சில அலர்ட் டிப்ஸ் - காமத்துக்கு மரியாதை 268
இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! லேப்டாப்..! லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதால், ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய பாதிப்பு வராது என்றாலும், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மடியில் லேப்டாப் வைத்து வேலைபார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். செல்போன்..! செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால், அதிலிருந்து வெளிப்படுகிற ரேடியேஷன் விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு வராது. இதுவரை குழந்தைப் பெறாதவர்கள், குழந்தையின்மை பிரச்னையுடன் இருப்பவர்கள், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பதே நல்லது. ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! ஜீன்ஸ் பேன்ட்..! இந்தியா போன்ற வெப்பம் அதிகமான நாடுகளில், வெப்பத்தை அதிகரிக்கிற மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் இருக்கிற உடைகளை அணிந்தால் விந்துப்பைகளின் வெப்பநிலைக்கு அதிகரித்துவிடும். விளைவு, விந்தணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264 உள்ளாடைகள்கூட விந்துப்பைகளை நசுக்காமல், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும்வண்ணம் இருப்பதே நல்லது. ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267 சைக்கிளும் பைக்கும்..! நீண்ட தூரம் பைக் ஓட்டாதவர்கள் இன்றைக்கு இருக்கவே முடியாது. அதுவும் வேலை காரணமாக தொடர்ந்து பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆணுறுப்பைச்சுற்றி மரத்துப்போகும். இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால், ஆண்மைக்குறைவும் வரும்; விந்தணுக்கள் குறைவும் ஏற்படும். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இது பொருந்தும். குழந்தையில்லாதவர்கள் இவற்றை தவிர்ப்பதே நல்லது.
முகவாதம்; வராமல் இருக்க, வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கம்ப்ளீட் கைடன்ஸ்!
குளிர் காலங்களில், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் ’முகவாதம்’ (Facial Palsy) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. முகவாதம் என்றால் என்ன; முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா; இது ஏன் ஏற்படுகிறது; வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்வது என விளக்கமாக சொல்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா. Facial Palsy முகவாதம் என்றால் என்ன? முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வுகளைத் தரும் முக நரம்புகளில், (Facial Nerves) உள் காயம் ஏற்பட்டாலோ, வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ முகவாதம் வரலாம். முகவாதம் வந்தவர்களால், வாயைக் குவிக்க முடியாது, உதடு ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும், ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழி எச்சில் வடியும், சரியாக பேச இயலாமல் குழறும். அதென்ன ஃபேஷியல் நரம்புகள் (Facial Nerves)? முகத்திற்கு உணர்வளிக்கும் ஃபேஷியல் நரம்பில் ஐந்து முக்கிய கிளைகள் இருக்கின்றன. டெம்போரல் கிளை (temporal) : நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்த கிளை பாதிக்கப்படுவதால் நெற்றியை சுருக்க இயலாமல் போகும். சைகோமேட்டிக் கிளை (Zygomatic) : இது கண்கள் மற்றும் கன்னப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் கண்களை மூட இயலாமல் போகும். சிரிக்க இயலாமல் போகும். முகவாதம் I சித்திரிப்புப் படம் பக்கல் கிளை (Buccal) : இது பாதிக்கப்பட்டால், கன்னப்பகுதி உணர்வற்றுப் போகும். உணவை சரிவர மெல்ல இயலாது. மார்ஜினல் மாண்டிபுலர் கிளை (Marginal mandibular): இது கீழ் உதடு மற்றும் தாடை தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளையாகும். இது பாதிக்கப்பட்டால், கீழ்வாய் தொங்கிப்போகும். கீழ் உதட்டில் இருந்து எச்சில் வடிந்தோடும். செர்விக்கல் கிளை (Cervical ): இந்த கிளை கழுத்தில் இருக்கும் ப்ளாடிஸ்மா தசைக்கு உணர்வூட்டுகிறது. முகவாதம் வராமல் இருக்க * தரையில் பாய், பெட்ஷீட் போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும். * தலையணை வைக்காமல் நேரடியாக டைல்ஸ்/ மார்பிள்/ கிரானைட் தரைகளில் தலையை வைத்துப் படுத்தால், முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஜாக்கிரதை. * கார், பேருந்து, ரயில் பயணங்களின்போது, குளிர்ந்த வாடைக் காற்று தொடர்ந்து காது மற்றும் கன்னப்பகுதியில் பட்டுக்கொண்டே இருந்தால், முகவாதம் ஏற்படலாம். பயணங்களின்போது... * வீட்டிலும், உறங்கும்போது ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்தக் காற்று நேரடியாக முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது. * ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது. * எப்போதும் மிகக்கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது. முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா? கிடையாது. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக்கசிவால் ஏற்படும். ஆனால், முகவாதம் வந்தவர்களுக்கு மூளையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முகத்துக்கு உணர்வுகளைத் தரும் நரம்பில் அழுத்தம் அல்லது அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஆகியவை தான் முகவாதம் வருவதற்கு காரணம். stroke Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்! முகவாதம் எவ்வளவு நாட்களில் சரியாகும்? இந்தப் பிரச்னையில், முக நரம்புகளில் உள்காயம் எற்பட்டு, வீக்கமடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக இதுபோன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்! முகவாதம் ஏற்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை * உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். * கண்கள் திறந்தே இருக்கும் என்பதால் வறண்டுவிடாமல் இருக்க, மருத்துவரின் பரிந்துரையைக் கேட்டு சொட்டு மருந்து அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். தவிர, கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும், இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்துக்கொள்ளலாம். டாக்டர் ஃபரூக் அப்துல்லா * மென்று உண்பது கடினம் என்பதால், உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. தவிர, எளிதாக மென்று விழுங்கக்கூடிய அளவில் சிறு சிறு கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிட நினைத்தால் புரையேறும். இருமல் வரும். * வாய் வறண்டு இருக்கும் என்பதால், உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலந்துக்கொள்ளலாம். * உணவு உண்ணும்போதும், நீர் பருகும்போதும் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் அவற்றில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். * நீரை பாட்டிலில் ஊற்றி பருகுவதை தவிர்த்துவிட்டு, சிறிய கப்பில் ஊற்றிப் பருகுவது நல்லது. * பாதிக்கப்பட்டப் பகுதியில் வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்ய வேண்டும். கூடவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிசியோதெரபி சிகிச்சையும் எடுக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
Doctor Vikatan: `அடிக்கடி முடியை வெட்டிவிட்டால்தான், தலைமுடி ஆரோக்கியமாக வளரும்'என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழி, மாதம் ஒருமுறை தானாகவே தன் முடியின் நுனிகளை வெட்டிவிடுவாள். அப்படி வெட்டினால்தான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை. வெட்ட, வெட்ட முடி வளர்ச்சி அதிகரிக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கீதா அஷோக் முடியை அடிக்கடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, குறைந்தபட்சம் அரை அங்குலம் அளவுக்காவது முடியின் நுனியை ட்ரிம் (Trim) செய்வது நல்லது. பொதுவாக, முடியின் நுனிப் பகுதி அல்லது அடிப்பாகம் பலவீனமாக இருக்கும். தலையில் உள்ள முடி அடர்த்தி நுனியில் இருக்காது. நுனிப்பகுதியில் பிளவுபட்ட முடிகள் (Split Ends), முடி வளைதல் மற்றும் அடர்த்திக் குறைவு ஆகியவை இருக்கும். நான்கு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனியை மட்டும் ட்ரிம் செய்யலாம். எப்போதுமே, மேலிருந்து, அதாவது வேரிலிருந்துதான் முடி வளரும். அது கீழிருந்து வளர்வதில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். நுனிகள் பலவீனமாக, உடைந்த பிளவுகளுடன் இருப்பதை 'புரோக்கன் எண்ட்ஸ்' (Broken Ends) என்று சொல்வோம். அப்படி பிளவுபட்டு, உடைந்து போனால், அதை மறுபடி சரிசெய்ய முடியாது. மண்டைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, கூந்தல் நுனிகளை அவ்வப்போது லேசாக வெட்டிவிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சிலருடைய முடி அமைப்பைப் பார்த்தால், தலையில் அடர்த்தி அதிகமாக இருக்கும். கீழே உள்ள முடியானது குச்சிபோல மெலிந்து இருக்கும். முடியின் நுனிகள் பிளவுபட்டு பாதிக்கப்படுவதுதான் காரணம். ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை சலூன் சென்று முடியை வெட்டிக்கொள்வதால், அவர்களுக்கு முடியின் நுனிகள் வெடிப்பது 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது. மிக அரிதாக, அளவுக்கதிகமாக முடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். எனவே, முடியை வெட்டுவதைவிட, நுனியை மட்டும் ட்ரிம் செய்வது ஆரோக்கியமானது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா?
பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?
உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? வீடுகளில் நாம் பயன்படுத்திவிட்டு வைக்கும் டூத் பிரஷ்களை கழிவறைகளிலோ அல்லது அதன் பக்கவாட்டு சுவர்களில் வைப்பதோ சுகாதாரமற்றது என்கிறது அறிவியல் முடிவுகள். மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டுக்குப் பிறகு மூடியை மூடாது, கழிவுகளை அகற்ற அதிக அழுத்தத்தில் வெளிவரும் நீரால், கழிப்பறை உள்ளிருந்து கண்களுக்கே தெரியாத மேகம் போல் எழும் நுண்ணிய கிருமிகள் மற்றும் மனித மலத்திலிருந்து வெளியேறும் கிருமிகள் இணைந்து நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த கண்களுக்கு புலப்படாத பாக்டீரியாக்கள், அந்த கழிப்பறையில் உள்ள மற்ற பொருட்களின் மீது நீண்ட நேரம் தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த பாக்டீரியாக்கள் கழிப்பறை வெளியேயும் காற்றில் பரவி மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் படிகின்றன. குறிப்பாக கழிப்பறையில் வைக்கப்படும் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, டூத் பிரஷ்களில் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? 2 பாக்டீரியாக்கள் க்ளோஸ்ட்ரிடியம் (Clostridium), எசரிக்கியா கோலை (Escherichia coli) எனப்படும் பாக்டீரியாக்கள், மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டின்போது மூடியை மூடாமல் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற்றப்படும் போது வெளியேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்களில் அதிகளவில் படியும்போது, அதிலுள்ள முட்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதை கண்டுணராமல் அப்படியே பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல் சுத்தத்திற்கு மட்டுமின்றி இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையே தாக்குகிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களிடம் இன்னும் சில விளைவுகளை இது உண்டாக்கும். இது கிட்டத்தட்ட இந்திய கழிப்பறைகளுக்கும் பொருந்தும். இந்திய கழிப்பறை மூடி இல்லாமல் இருப்பதால், இதில் மலம் கழித்த பிறகு அதற்கென உள்ள சுகாதார வேதி திரவத்தால் சுத்தம் செய்து பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். பல் மருத்துவர் ஹேமா மாலதி மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க! பாக்டீரியாக்களிடமிருந்து பல் தூரிகைகளை ( டூத் பிரஷ்) எவ்வாறு காப்பது? இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பல் மருத்துவர் ஹேமா மாலதி கூறியதாவது... ’’இந்தியாவில் பெரும்பாலும் கழிப்பறையும், குளியலறையும் ஒன்றாக இருப்பதால் சுவரின் பக்கவாட்டில் குடும்ப உறுப்பினர்கள் டூத் பிரஷ்களை ஒன்றோடொன்று தொடும் படி வைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவும், காற்றோட்டம் இல்லாததால் ஏற்படும் நீடிக்கும் ஈரப்பதம், கழிவறைகளில் பரவும் பாக்டீரியாக்கள் பல் தூரிகைகளில் படர்ந்து பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு காரணமாகிறது. டூத் பிரஷ்களின் ஆயுட்காலம் 3 மாதங்கள் மட்டுமே. எப்போது டூத் பிரஷ்களின் முட்கள் விரிவடைகிறதோ, அப்போதே அது பயனற்று போகிறது. டூத் பிரஷ்களை காற்றோட்டமான நிலையில், நிமிர்ந்த நேரான நிலையில் பிற பொருட்களோடு மோதாத வகையில் வைக்க வேண்டும். புற ஊதா கதிர்கள் மூலம் டூத் பிரஷ்களை சுத்தம் (UV sanitisation ) செய்தல் சாத்தியமற்றது. பல் துலக்குவதற்கு முன்பு குழாயிலிருந்து வரும் அதிக விசையுடன் கூடிய நீரில் கழுவிவிட்டு அதன் பிறகே பற்பசையை தடவ வேண்டும்’’ என்கிறார் பல் மருத்துவர் ஹேமா மாலதி. காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்! அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குழு அறிவுத்துவது என்ன? கழிப்பறை மற்றும் குளியலறையில் டூத் பிரஷ்களை வைக்காமல் உலர்ந்த காற்றோட்டமான பகுதிகளில் வைப்பதுதான் பாதுகாப்பான ஒன்று. மேற்கத்திய கழிப்பறையில் கழிவுகளை அகற்ற அதீத அழுத்த நீர் வெளியேற்றத்திற்கு முன்பு கழிப்பறை மூடியை மூடினால் அதிலிருந்து வெளிவரும் கிருமிகளை ஓரளவு கட்டுபடுத்த முடியும். பல வீடுகளுக்குள் கழிப்பறைகள் அளவு சிறிய அளவில் இருப்பதால் டூத் பிரஷ்களை வேறு காற்றோட்டமான அறைகளில் வைப்பதே சுகாதாரம்.
ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர்!
``அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில் சிலர், வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர். அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் என்றும் தெரியவில்லை. சாதாரண காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கூட நாள்கணக்கில் நீடித்தன... விளைவு, அந்தக் குழுவினரில் சிலர் மரணம் அடைந்தனர். அதாவது, அவர்களுடைய உடம்பில் மேலே சொன்ன சிறு சிறு பிரச்னைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகூட இல்லை. எய்ட்ஸ் புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது! என்னதான் பிரச்னை என்று ரத்த பரிசோதனை செய்துபார்க்க ஒரு புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ஹெச்.ஐ.வி என்றெல்லாம் இந்த உலகத்துக்கு தெரியாது. அதனால், ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைபாடு என்று பொருள்படும் (Gay-Related Immune Deficiency - GRID) என்று அழைக்கப்பட்டது’’ என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதன் பின்னர் என்ன நடந்தது, சென்னையில் எப்போது எய்ட்ஸ் கண்டறியப்பட்டது; எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இன்றைய மருத்துவ வளர்ச்சி உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசுகிறார். நோய்க்கு AIDS எனப் பெயரிட்டார்கள். புதிதாக கண்டறியப்பட்ட அந்த ’’பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை வைத்து, ’Acquired immuno deficiency syndrome’ என்று அதைக் குறிப்பிட்டார்கள். Acquired என்றால், பிறக்கும் போதே வருகிற நோய் அல்ல; இது திடீரென்று வருகிற நோய் என்று அர்த்தம். immuno deficiency என்றால், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிற பிரச்னை என்று அர்த்தம். syndrome என்றால் அறிகுறிகள் என்று அர்த்தம். இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து, புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு AIDS பெயரிட்டார்கள். HIV இருக்கலாம் என்று கருதினார்கள்! குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி பிறகு, அந்த நோய்க்குக் காரணமான வைரஸுக்கு, Human immunodeficiency virus ( HIV) என்று பெயரிட்டார்கள். மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்று இதற்கு அர்த்தம். ஆரம்பத்தில் குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதினார்கள். இந்தியாவில் எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிற தேசம். அதனால் இங்கிருப்பவர்களுக்கு எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது இந்தியாவுக்குள் வருவதற்கு முன்னரே அமெரிக்காவில் அதற்கான மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், 1986 வரை இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை. HIV ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எய்ட்ஸ் விஷயத்தில் பதறிக் கொண்டிருந்தன. காரணம், அங்கு வி வி ஐ பி அந்தஸ்த்தில் இருந்த பல முக்கியஸ்தர்களும் இந்த வைரஸால் மடிந்துக் கொண்டிருந்தார்கள். இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது! சென்னையிலும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவிலும் எய்ட்ஸ் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுனிதி சாலமன் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். இவர் பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவருடைய கணவர் விக்டர் சாலமன் அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர். டாக்டர் சுனிதி சாலமன் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் தன் பாலின உறவுக்காரர்களிடமிருந்து 200 ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில் சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது. பிறகு, ஒரு பிரஸ் மீட் வைத்து அதை வெளிப்படுத்தவும் செய்தார் டாக்டர் சுனிதி சாலமன். அப்போதுதான் ஹெச்.ஐ.வி வைரஸ் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது’’ என்றவர், தொடர்ந்தார். HIV 'பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். ’’வருடத்துக்கு 10 எய்ட்ஸ் நோயாளிகளையாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பாலியல் தொழில் செய்பவர்களால் அந்த அளவுக்கு பணம் கொடுத்து பெண்களுக்கான காண்டம் வாங்க முடிவதில்லை. ’எய்ட்ஸ் வரலாம்; இதை விட்டுவிடுங்கள்’ என்றாலும் ’இன்றைக்கு பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து பத்து வருடம் கழித்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். இது அவர்களுடைய துக்ககரமான நிலைமை. பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, ரத்த தானம், கணவரிடமிருந்து மனைவிக்கு, தாயிடமிருந்து குழந்தைக்கு என எய்ட்ஸ் பரவுகிறது. தவிர, போதை பழக்கத்தில் இருப்பவர்கள் ஒருவர் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தும்போது எய்ட்ஸ் பரவும்; எய்ட்ஸ் வந்தவருக்கு பயன்படுத்திய ஊசியை அடுத்தவருக்கு பயன்படுத்தும்போது அவரும் பாதிக்கப்படுவார். HIV இப்படி Sex வெச்சுக்கிட்டா பால்வினை நோய்கள் வராதா..? | காமத்துக்கு மரியாதை - 189 நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும்! எய்ட்ஸை பொறுத்தவரை பெரிய அளவுக்கு அறிகுறிகளே காட்டாது. ஒரு வாரத்துக்கு லேசான தொண்டை கமறல், விடாத காய்ச்சல் என்று ஆரம்பிக்கலாம். திடீரென்று 5 முதல் 10 கிலோ வரைகூட உடல் எடை குறையும். வயிற்றுப்போக்கு வந்தால் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பாதிக்கப்பட்டவர் பலருக்கும் பரப்பி இருப்பார். டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம்! எயிட்ஸுக்கான மருந்துகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு 100 வயது வரைகூட வாழலாம். சொல்லப்போனால் டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம். அந்த அளவுக்கு மருந்துகள் தற்போது இருக்கின்றன என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். ஒருவேளை திருமணம் தாண்டி ஒரு நபரிடம் உறவு கொண்டீர்கள் என்றால் 72 மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், எய்ட்ஸ் வராமல் தடுத்து விடலாம். மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும்! தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் ஹெச்ஐவி வைரஸ் ரத்தத்திலிருந்து போய்விடும். ஆனால், நம்முடைய செல்களுக்குள் இருக்கிற மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். ரத்தப்பரிசோதனையில் ஹெச்ஐவி இல்லை என்று காட்டும். அதை நம்பி மருந்துகளை நிறுத்தி விட்டால் ஆறு மாதம் கழித்து மறுபடியும் எய்ட்ஸ் வரும். இப்படி செல்களுக்குள் ஒளிந்து கொள்கிற வைரஸை கண்டுபிடிக்கவும் இப்போது ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான மருந்துகளும் இன்னும் ஐந்தாவது வருடத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று எய்ட்ஸுக்கு எதிரான நம்பிக்கைக் கொடுத்து பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?
Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான வேலைகளைச் செய்தாலும் பிரச்னை தீவிரமாகும். இந்நிலையில், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாக்கிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது சரியா, ஜிம் செல்லலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் நீங்கள் உடற்பயிற்சி செய்வதென முடிவெடுத்தால், அதற்கு முன் ஒரு மருத்துவரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அவர் உங்களின் ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை எப்படி என்று பார்த்து, அதற்குப் பிறகு அதற்கேற்ப எந்த அளவு தீவிரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது என்று சொல்வார். உண்மையில், உடற்பயிற்சி செய்வது, அதாவது நீங்கள் நடைப்பயிற்சிஅல்லது பிரிஸ்க் வாக்கிங் (Brisk Walking) செய்வது (சாதாரண நடையை விட சற்று வேகமாக நடப்பது) உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த நுரையீரல் திறனுக்கும் (Lung Capacity) மிகவும் நல்லது. உடற்பயிற்சி Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்? ஆனால், அதை ஒரு மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டுச் செய்வது நல்லது. எனது அனுபவத்தில், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆஸ்துமா பாதிப்புள்ள அவர் உடற்பயிற்சி செய்வதற்கு முன், தனது இன்ஹேலரை வைத்து ஒரு பஃப் (Puff) எடுத்துக்கொள்வார். அதை உபயோகித்த பிறகுதான் அவர் உடற்பயிற்சியைத் தொடங்குவார். அவர் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரையிலும் நலமாகவே இருப்பார். அந்தப் பெண்ணுக்கு இது உதவியது என்பதற்காக எல்லோரும் அப்படியே செய்வது சரியல்ல. மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகுதான் நீங்கள் தொடங்க வேண்டும். எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், எதையும் அவரவர் உடல்நலத்தின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும். உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அசௌகர்யம் ஏற்பட்டது என்றால், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை, எது ஆஸ்துமாவைத் தூண்டுகிறது (Trigger) என்பதை நீங்கள் கண்டறிந்து, அதற்கேற்ப செய்ய வேண்டும். Doctor ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய உங்கள் மருத்துவர் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் முக்கியமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதாவது, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க வேண்டும். தூசு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது. மிக மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு இன்ஹேலர் பயன்படுத்திவிட்டும் தொடங்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?
Doctor Vikatan: அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
Doctor Vikatan: என் நண்பனுக்கு சமீபத்தில் ஓர் அறுவைசிகிச்சை நடந்தது. உடலளவில் ரொம்பவும் சோர்வாக இருக்கிறான். அதனால் அவனை அசைவ உணவுகள் சாப்பிடச் சொல்லி அட்வைஸ் செய்தேன். ஆனால், அவனோ, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடக்கூடாது என யாரோ சொன்னதாகச் சொல்கிறான். அது எந்த அளவுக்கு உண்மை? எத்தனை நாள்கள் கழித்து அசைவ உணவுகள் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி அறுவை சிகிச்சை காயங்களுக்கும், அசைவத்திற்கும் முதலில் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த வகையான அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அந்தக் காயம் இருக்கும். பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்தவுடன், இப்போது இருக்கிற நவீன விஞ்ஞான முறைப்படி, மிகவும் எளிதாக ஆறக்கூடிய, விரைவாக ஆறக்கூடிய தையல் (Sutures) போடப்படுகிறது. அதனால், அந்த மாதிரி மேம்பட்ட (Advanced) மருத்துவ முறைகளில், அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்று சொல்வது மிகப் பெரிய பிற்போக்குத்தனம் ஆகும். அதில் முக்கியமாக, அசைவத்தில் நல்ல புரோட்டீன் இருக்கிறது. புரோட்டீன்தான் அமினோ அமிலங்கள் (Amino Acids)... அமினோ அமிலங்கள்தான் பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks). அந்த பில்டிங் பிளாக்ஸ்தான், காயங்கள் ஆறுவதற்கு (Healing) இன்னும் வேகமாக நமக்கு உதவும். காயங்கள் ஆறுவதில் (Healing) வந்து, நான்கு நிலைகள் (Four Stages) உண்டு. அதில், புரொலிஃபெரேஷன் (Proliferation) என்று ஒரு நிலை, அப்புறம் ரீமாடலிங் (Remodeling) என்று ஒரு நிலை. இந்த புரொலிஃபெரேஷன் நிலையில், அங்கு இருக்கக்கூடிய நமது திசு அளவில் (Tissue Level) ஆறுதல் அப்போதுதான் நடக்கும். அதற்கு, புரோட்டீன்களின் உதவி மிகவும் முக்கியம். அதே மாதிரிதான் ரீமாடலிங்கும். அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம். Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்? ரீமாடலிங் என்றால் என்னவென்றால், வெட்டுப்பட்ட இடத்தில், அல்லது அந்த அறுவை சிகிச்சை காயம்பட்ட இடத்தில், பழையபடி அந்தக் காயம் இல்லாமல் மூடுவதுதான் ரீமாடலிங். அதற்கும் புரோட்டீன் முக்கியம். அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம் நமக்குத் தெரியும். அதுவும், ஜீரணிக்கக்கூடிய (Digestible), எளிதில் கிடைக்கக்கூடிய (Easily Available) மற்றும் முழுமையான புரோட்டீன் (Complete Protein) இருப்பது அசைவத்தில்தான். அதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடுவது காயம் ஆறாது என்று சொல்வதெல்லாம் உண்மையிலேயே மிகப் பெரிய பிற்போக்குத்தனம். அசைவம் சாப்பிடுவது உண்மையிலேயே நல்லதுதான். காயம் ஆறுவதற்கு அசைவம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது, இந்த மாதிரிப்பட்ட புரளிகளை நம்ப வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
BB Tamil: ஓவியா முதல் கம்ருதீன் வரை - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலே ஈர்ப்பும், மோதலும் வந்துவிடுமா?
இரண்டு பேர் சில நாள்கள் சேர்ந்திருந்தால், அவர்களுக்குள் ஈர்ப்போ அல்லது மோதலோ வந்து விடும் என்பார்கள். இந்த உளவியல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆரவ், ஓவியா, கவின், லாஸ்லியா, பாலாஜி, ஷிவானி, விஜே விஷால், அன்ஷிதா, கம்ருதீன், பார்வதி, FJ, வியானா என சிலரை இந்த ஈர்ப்புக்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால், மோதல் போக்கு எல்லோரிடமுமே இருந்தது. இருக்கிறது... இருக்கும்..! அறிமுகமில்லாத அல்லது ஒருவருக்கொருவர் நன்கு பழகாத ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பிக்பாஸ் போல ஒரு கூரையின் கீழ் வாழ வேண்டிய நிலை வரும்போது, ஈர்ப்பும் மோதலும் மனித இயல்பே... இந்த இயல்புக்குப் பின்னால் இருக்கிற உளவியல் காரணங்களை, சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் அவர்களிடம் கேட்டோம். ஈர்ப்பு | காதல் ''கல்லூரி, அலுவலகம், பிக்பாஸ் வீடு என ஓர் இடத்தில் பலர் சேர்ந்து இருக்கையில், ஈர்ப்பு, காதல், ஈகோ, சண்டை என எல்லா உணர்வுகளும் எழவே செய்யும். காரணம், 'அருகாமை'தான். ஆங்கிலத்தில் பிராக்ஸிமிட்டி (proximity) என்போம். இந்த உணர்வுகள் எல்லோருக்கும் வருமா என்றால், அப்படி சொல்ல முடியாது. முதலில் ஈர்ப்பை எடுத்துக்கொள்வோம். திருமணம் முடித்த பலரும் தமிழ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை அவர்கள் நட்புடன் இருந்திருக்கிறார்கள். யாரிடமும் ஈர்க்கப்பட்ட சம்பவம் நிகழவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியென்றால், திருமணமாகாதவர்களிடையே ஈர்ப்பு வந்துவிடுமா என்றால், அப்படியும் சொல்ல முடியாது. 'தனக்கான துணையை இங்குகூட சந்திக்க நேரலாம்' என்கிற மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு இது நிகழலாம். ஒரே இடத்தில் பல நாட்கள் சேர்ந்து இருக்கையில், நம்பிக்கையின் அடிப்படையில் ஈர்ப்பு வரலாம். சுஜா வருணி போல, தன்னுடைய துணை வெளியே இருக்கிறது என்பதை பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே தெளிவாக சொன்னவர்களும் இருக்கிறார்கள். அடுத்தது மோதல். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஒரு வீட்டுக்குள் சேர்ந்து வாழும்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். ஈகோ கிளறப்படலாம். 'நான் ஜெயிக்கணும்' என்கிற போட்டி மனப்பான்மையால் மோதல் வரலாம். 'இவங்க நமக்கு முன்னாடி ஓடிடுவாங்களோ' என்கிற பாதுகாப்பின்மை உணர்வால் சண்டை வரலாம். 'எனக்கென்ன வேணுமோ அதை நான் எடுத்துப்பேன்; எனக்கென்ன தோணுதோ அதை தான் செய்வேன்; சொல்வேன் ' என்கிற, அடுத்தவர் இடத்தில் இருந்து யோசிக்காத இயல்பு கொண்டவர்களாலும், சில பேர் கூடியிருக்கிற ஓர் இடத்தில் சண்டை வரலாம். CWC to Bigg Boss: ரஜினி டயலாக்; சல்மானை சிரிக்க வைத்த குறும்பு- கலக்கிக்கொண்டிருக்கும் ஸ்ருதிகா நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும். ஒன்றையொன்று உரசும் இடத்தில் சண்டை வெடிக்கலாம். ஒவ்வொருவருடைய வொர்க்கிங் ஸ்டைலும் வேறு வேறுவிதமாக இருக்கும். அவர்கள் சேர்ந்து ஒரு டாஸ்க் செய்யும்போது, ஒருவருடைய வொர்க்கிங் ஸ்டைலில் இன்னொருவரால் மாற்றம் நிகழும். இதன் காரணமாகவும் சண்டை வரலாம். Bigg Boss Tamil 8: `அதை மறந்துடாதீங்க சேது'- மக்கள் உளவியலும்,விஜய் சேதுபதி முன் நிற்கும் சவால்களும் ஒரு கூட்டத்தில் ஒருவர் ஆதிக்க மனப்பான்மையுடன் இருந்தாலே, அங்கு அமைதி கெடும். சிலர், வெளியில் அமைதியாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், பின்னால் சென்று புரளிப் பேசுபவர்களாக, அடுத்தவர்களை பின்னால் இருந்து நெகட்டிவாக இயக்குபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் அறிந்தவர்களுடன் உரசல் வரத்தான் செய்யும். இன்னும் சிலர், உண்மையிலேயே அமைதியான கேரக்டர்களாகவே இருப்பார்கள். ஆனால், தனக்கு எதிராக நிகழ்கிற சம்பவங்களை நினைத்து மனதுக்குள் குமுறுகிறவர்களாக இருப்பார்கள். இந்தக் குமுறல் வெடிக்கையில் மோதல் நிகழத்தான் செய்யும். ஒருசிலர், சண்டையோ, சமாதானமோ அதை நேரடியாகச் சொல்லி விடுவார்கள். இந்த இயல்புக்கு எதிர்வரிசையில் இருப்பவர்களுடம் நிச்சயம் முட்டத்தான் செய்யும். இவை அத்தனையும் மனித இயல்புகள்தான்'' என்கிறார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?
Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது... ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பச்சை முட்டையா, சமைத்த முட்டையா, எது சிறந்தது என்று பார்த்தால் பச்சை முட்டை நல்லதுதான். பச்சையாக இருக்கும்போது முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும், குறிப்பாக கால்சியம், வைட்டமின் டி, மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. பச்சை முட்டையில் உள்ள கோலின் (Choline) என்ற சத்து, மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும், மூளைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டது. சமைக்கும்போது இதன் மதிப்பு குறைகிறது. முட்டையில் உள்ள பயோட்டின் எனப்படும் புரதச்சத்தும் சமைக்கும்போது சற்று குறைந்துவிடும்; ஆனால், பச்சையாக இருக்கும்போது இது முழுமையாக உறிஞ்சப்படுகிறது. பச்சை முட்டையில் சால்மோனெல்லா (Salmonella) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா இருக்கக்கூடும். இந்த பாக்டீரியா சமைக்கும்போது மட்டுமே அழிக்கப்படுகிறது. சில சமயங்களில், அதிக அளவில் பச்சை முட்டை சாப்பிடும்போது இது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தலாம். பச்சை முட்டையில் கிளைக்கோடாக்ஸின் (Glycotoxin) என்ற சத்து இருக்காது. ஆனால், முட்டையைச் சமைக்கும்போது இது சற்றுகூடி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்டது. முட்டை ஊட்டச்சத்துகள் அதிகமாக உறிஞ்சப்பட வேண்டும் என நினைப்பவர்கள், குறிப்பாக, குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் 'புல்ஸ் ஐ எனப்படும் ரெசிபி பாணியில் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டையை (two-minutes boil / half-boiled) சாப்பிடலாம். இது மிகவும் நல்லது. வயதானவர்கள் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் உள்ளவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளும் (கொலஸ்ட்ரால் உள்பட) இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். முட்டை உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது புரோட்டீன் சத்தை அதிகரிக்க விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு ஐந்து முட்டைகள் வரை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். இதில், இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டை (Two Minutes Boil) மிகவும் சிறந்தது. இதய நோய், அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் (Egg White) ஒரு நாளைக்கு மூன்று வரை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிட, காலை உணவு நேரமும், மதிய உணவு நேரமும் மிகவும் ஏற்றது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?
Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?
Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பார்த்தேன். வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சரியாகும், குடல் பிரச்னைகள் குணமாகும் என்று அதை சர்வரோக நிவாரணி போல சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... யார், எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா. இயற்கை மருத்துவர் யோ. தீபா வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதிலுள்ள சத்துகள், பலவகைகளிலும் ஆரோக்கியத்துக்கு உதவுவது உண்மைதான். சமூக ஊடகங்களில் சமீபகாலமாக வெண்டைக்காய் குறித்து நிறைய தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும், பெண்களின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும், இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதற்கான ஆதாரங்கள், நிரூபணங்கள் இதுவரை இல்லை. அதற்குள் போவதற்கு முன், வெண்டைக்காய் தண்ணீர் குறித்துப் பார்ப்போம். வெண்டைக்காயை வெட்டி, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும். அது தண்ணீரை கெட்டியாக்கி, ஒருவித மணத்தையும் கொடுக்கும். ஆனால், இதில் அறிவியல்பூர்வ நன்மைகள் உள்ளனவா என்பதற்கான ஆய்வுகள் இதுவரை இல்லை. வெண்டைக்காய் ஆனாலும், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதில் தேவையான வைட்டமின்கள், (வைட்டமின் ஏ மற்றும் கே) தாதுச்சத்துகள், மக்னீசியம், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை இருப்பதால், பச்சையாக எடுத்துக்கொள்வதாலேயே அதன் பலன்கள் நமக்குக் கிடைத்துவிடும். ஆனாலும், இதை யாரெல்லாம், எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான ஆய்வுகள் தேவை. இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும், 2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன. அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும். குடல் இயக்கம் சீராகும் 2023-ல் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பதும் சிலருக்கு செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். எனவே, ஃப்ரெஷ்ஷாக சமைத்து உடனே சாப்பிடுவதற்கும், இப்படி இரவு முழுவதும் ஊறவைத்து சமைக்காமல் சாப்பிடுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் ஆக்ஸலேட் அதிகம் என்பதால் கிட்னி ஸ்டோன்ஸ் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். ஆக்ஸலேட் என்பது கால்சியத்துடன் சேர்வதால்தான் கிட்னி ஸ்டோன் உருவாகிறது. எனவே, எந்த மருத்துவத் தகவலையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவதுதான் சரியானது. சோஷியல் மீடியாவை பார்த்துப் பின்பற்றுவது ஆபத்தானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?
ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267
''ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்'' என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த விஷயங்களை இங்கே விவரிக்கிறார். 'அசூஸ்பெர்மியா' 'அசூஸ்பெர்மியா' என்கிற விந்தணுக்களே இல்லாத பிரச்னை! ''ஓர் ஆண் குழந்தை கருவில் இருக்கையில், விந்துப்பை அதன் வயிற்றில் உருவாகி, பிறக்கும்போது கீழிறிங்கி அதனிடத்தில் இருக்க வேண்டும். அப்படி வெளியே வராமல், வயிற்றுக்குள்ளேயே இருந்தாலோ அல்லது கீழிறிங்கி வரும் பாதையிலே நின்றுவிட்டாலோ விந்துப்பையும் வளராது; விந்தணுக்கள் உற்பத்தியும் ஆகாது. மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்டால், அங்கே இருக்கிற குழந்தை நல மருத்துவர், இதை பரிசோதித்துப் பார்த்துவிடுவார். ஒருவேளை பிரச்னையிருந்தால், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அக்குழந்தை வளர்ந்த பிறகு 'அசூஸ்பெர்மியா' (Azoospermia) என்கிற விந்தணுக்களே இல்லாத பிரச்னை வரும். கவனம், இந்தப் பிரச்னை இந்தியாவில் 2 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் இது. கை வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை நாட வேண்டும்! இரண்டாவது விஷயம், புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற அம்மை நோய் வந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இந்த அம்மைக்குக் காரணமான கிருமிகள், விந்துப்பையைத் தாக்கி, விந்தணுக்களை உற்பத்தி செய்கிற செல்களை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும். இதை வராமல் தடுக்கிற எம்.எம்.ஆர் தடுப்பூசியை அட்டவணைப்படி போட வேண்டும். ஒருவேளை அம்மை வந்துவிட்டால், கை வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை நாட வேண்டும். காமத்துக்கு மரியாதை உங்க `லவ் பிளே' மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265 ஆணுறுப்பில் கவசம் அணிந்து விளையாட வேண்டும்! மூன்றாவது விஷயம், பிறப்புறுப்பில் அடிபடுவது. ஆண் பிள்ளைகள் கிரிக்கெட், ஃபுட் பால் என்று விளையாடும்போது, ஆணுறுப்பில் கவசம் அணிந்து விளையாட வேண்டும். பால் வேகமாக பட்டுவிட்டால், விந்துப்பைகள் வீங்கி விடும். சில நேரம் அது அப்படியே மெள்ள மெள்ள மறைந்தும் போகலாம். அதாவது, உடம்புக்குள்ளேயே அது இழுக்கப்பட்டு விடும். Love Deposit: உங்க லவ் டெபாசிட் நிரம்பி வழியுதா? காலியா இருக்கா? காமத்துக்கு மரியாதை - 266 ஆணுறுப்பு உயிரில்லாத உறுப்பாகி விடும்! ஆண் குழந்தைகள் மரத்தில் இருந்து குதிப்பது, தாவுவது அல்லது உயரத்தில் இருந்து விழும்போது, விந்துப்பைகளில் அடிபட்டு விடும். சில நேரம், தொங்கிக்கொண்டிருக்கிற விந்துப்பைகள் திருகப்பட்டு விடும். இதனால், விந்துப்பைக்கு போகின்ற ரத்த நாளங்கள் அடைப்பட்டு விடும். இது எமர்ஜென்சி நிலை. 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் இதை சரி செய்துவிட்டால், பின்னாளில் 'அசூஸ்பெர்மியா' (Azoospermia) என்கிற விந்தணுக்களே இல்லாத நிலையைத் தவிர்த்துவிடலாம். நேரம் கடந்துவிட்டால், ரத்த ஓட்டம் நின்று, ஆணுறுப்பு உயிரில்லாத உறுப்பாகி விடும். அதை அறுவை செய்து எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை. மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வழியிருக்கிறது; வந்தப்பிறகும் தீர்விருக்கிறது. ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: `நீரிழிவு'தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப் பேற்றை பாதிக்குமா?
Doctor Vikatan: என் வயது 34. இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய் இருக்கிறது. நீரிழிவு இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சிரமமாகும், குழந்தைப் பேறு பிரச்னையாகும் என்றெல்லாம் சொல்கிறார்களே, எந்த அளவுக்கு உண்மை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சர்க்கரை நோய் என்பதை முன்பு வயதானவர்களிடம் பார்த்தோம். தற்போது இளம்வயதினரிடமே பார்க்கிறோம். அதிலும் 20, 25 வயதுள்ள ஆண்களிடமே சர்க்கரை நோய் வருவது சாதாரணமாக மாறிவிட்டது. அதனால் இப்படி ஒரு கேள்வி எழுகிறது என்று நினைக்கிறேன். சர்க்கரை நோய் ஒன்றும் தடை செய்யப்பட்ட நோயல்ல. அதனாலேயே திருமணம் செய்யக் கூடாது என்றும் அர்த்தமில்லை. நீரிழிவு என்பது நாம் கையாளக் கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. டயாபட்டீஸால் திருமணம் செய்துகொள்ளக் கூடிய பெண்ணின் நிலைமை பாதிக்கப்படும் என்றும் மேலோட்டமாகச் சொல்லக் கூடாது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் திருமணம் செய்துகொள்ளலாம். நீரிழிவு நீரிழிவு நோயாளியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்கவும் முடியும். நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல் மோசமாக வளர விட்டால்தான் அதன் பாதிப்புகள் பலவிதங்களிலும் எதிரொலிக்கும். மற்றபடி நீரிழிவைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் அவருக்கு மேற்கொண்டு எந்த பாதிப்புகளும் வராமல் தவிர்க்க முடியும். எனவே, இந்த அச்சம் தேவையில்லை. கட்டுப்பாடில்லாமல் நீரிழிவை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கும், அலட்சியப்படுத்துகிறவர்களுக்கும் அடுத்து வேறு பாதிப்பு வர சாத்தியம் மிக மிக அதிகம். எனவே, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகளிடம் அதிகம் பார்க்கக் கூடிய பிரச்னை Erectile dysfunction என்கிற விறைப்புத்தன்மை கோளாறு. நீரிழிவாளர்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை அதிகமாக இருக்கும். அதிலும் இளவயதில் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் மிக அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கவனிக்கிறோம். அந்த வகையில் இதன் அடுத்தநிலையாக குழந்தையின்மை பாதிப்பு (Infertility) உண்டாக்கலாம். அதாவது விறைப்புத்தன்மைக் கோளாறை அலட்சியப்படுத்தினால் மலட்டுத்தன்மை சாத்தியம் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் இதுபோல் உதாசீனப்படுத்தினால் அதற்கென பின்விளைவுகள் வரவே செய்யும். நீரிழிவு... இல்லற வாழ்க்கையைக் கசக்கச் செய்யுமா? நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விறைப்புத்தன்மை கோளாறும் வராது. அதன் அடுத்தகட்டமாக மலட்டுத்தன்மை சாத்தியமும் அதிகரிக்காது. இதன் பின்விளைவுகளும் கூட உடனே நிகழ்வதில்லை. பல நாள் அலட்சியத்தின் தொடர்ச்சியாகவே நிகழும். நீரீழிவு என்று இல்லை; எந்த நோயாக இருந்தாலும் அதை சரியாகக் கண்டறிந்து, சரியான மருத்துவரின் வழிகாட்டுதலுடன் இருந்தால், அந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், முறையாக அந்த நோயின் பாதிப்பைக் குறைப்பதாக இருந்தால், நோய் மேலும் மோசமாகாமல் இருந்தால், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொண்டால், பல பிரச்னைகளை வருமுன் தடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே'இருக்கிறதா?
''கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், நம் உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். வைட்டமின் கே வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 ''வைட்டமின் 'கே' இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம். தாவரங்களில் இருந்து கிடைக்கும் பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும் மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே. என்னென்ன செய்கிறது வைட்டமின் கே? உடலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது. மெனோபாஸ் வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறைய வைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது. பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா? வைட்டமின் கே உள்ள உணவுகள் பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு, முட்டை, வெண்ணெய், சீஸ், சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ், கீரைகள்... வைட்டமின் கே அதிகமானால்... தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்'' என்கிறார் ஷைனி சுரேந்திரன். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்
Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?
Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற மாட்டோம். கர்ப்பப்பையையும், சினைக்குழாய்களையும் மட்டும் நீக்கிவிடுவோம். சினைப்பைகளை பத்திரப்படுத்தவே நினைப்போம். அதையும் தாண்டி, சிலருக்கு குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையை நீக்கும்போது சினைப்பைகளையும் நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51 என்று இருக்கிறது. அந்த வயது வரை இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம். அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பவை சினைப்பைகள் என்பதால், முடிந்தவரை அவற்றை அகற்றாமல் பத்திரப்படுத்தவே முயல்வோம். குழந்தைப்பேற்றை முடித்துவிட்ட பெண்கள், கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால், அதை அகற்றத் தயங்க வேண்டியதில்லை. அப்போதும் சினைப்பைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். மருத்துவர் ஆலோசனை கர்ப்பப்பையை அகற்றும்போது, கர்ப்பப்பையின் வாயும் அகற்றப்படும். அதன் விளைவாக சில பெண்களுக்கு வெஜைனா வறண்டுபோவதால் தாம்பத்திய உறவில் சிக்கல்கள் வரலாம். இதைத் தவிர்க்க, 'சப்டோட்டல் ஹிஸ்டரெக்டமி' (subtotal hysterectomy) என்றொரு வழி இருக்கிறது. அதில் கர்ப்பப்பை வாய்ப்பகுதியைத் தக்கவைத்துவிடுவோம். எனவே, வெறும் ப்ளீடிங் தொடர்பான பிரச்னைக்காக மட்டும் கர்ப்பப்பையை நீக்குவோருக்கு, இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு மருந்தாகும் சப்பாத்திக்கள்ளி கிரேவி!
Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம். நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும். பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும். உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும். விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாலோ, அதிக காரமுள்ள உணவுகளாலோ, மது அருந்துவதாலோ வரலாம். கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும் விக்கல் வரலாம். சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம். திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும். அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். ஆண்களுக்கு பெண்களைவிட விக்கல் அடிக்கடி வரும். மன ரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும். விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்! விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் (Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும். மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?
Menstrual Masking: மாதவிடாய் ரத்தத்தை பூசினால் முகம் பொழிவாகுமா? - எச்சரிக்கும் மருத்துவர்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விசித்திரமான அழகுக்குறிப்புகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' (Menstrual Masking) என்று அழைக்கப்படும் இந்த முறையில், பெண்கள் தங்கள் மாதவிடாய் ரத்தத்தையே முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். இது சருமத்திற்கு பொலிவை தரும் என்று கருதி இதனை பயன்படுத்துகின்றனர் ஆனால், இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்து தோல் மருத்துவர் எச்சரித்துள்ளார். மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து, அதை முகத்தில் ஒரு 'பேஸ் மாஸ்க்' போல பூசிக் கொள்வதையே 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' என்கின்றனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த ரத்தத்தை முகத்தில் வைத்துவிட்டு, பின்னர் கழுவி விடுகிறார்கள். இந்த வினோத பழக்கம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் போன்ற செயலிகளில் வேகமாக பரவி வருகிறது. Menstrual Cup 'மாதவிடாய் ரத்தம் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் உதவும்' என்று இதனை பயன்படுத்துவோர் நம்புகிறார்கள். ஆனால் இந்த முறை ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிகின்ற்றனர். இது குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல் நம்மிடம் பேசுகையில், மாதவிடாய் ரத்தத்தில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றன. குறிப்பாக 'ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ்' (Staphylococcus aureus) போன்ற கிருமிகள் இதில் உள்ளன. முகத்தில் சிறிய வெட்டுக்களோ அல்லது துளைகளோ இருந்தால், இதன் மூலம் கடுமையான தொற்றுகள் ஏற்படலாம். பால்வினை நோய்த்தொற்றுகள் முகத்திற்கு பரவும் அபாயமும் இதில் உள்ளது. மருத்துவர் கோல்டா ராகுல் இப்படி மாதவிடாய் ரத்ததை முகத்தில் பூசினால் பொழிவு கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, சிலர் இந்த முறையினை 'பிஆர்பி' (PRP) சிகிச்சையுடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் பிஆர்பி சிகிச்சை சரியான அளவில் அவர்களின் ரத்ததையே எடுத்து சிகிச்சை வழங்கப்படுகிறது, அது முற்றிலும் பாதுக்காப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மாதவிடாய் ரத்தத்தை நேரடியாக முகத்தில் பூசுவது ஆபத்தானது. எந்தவொரு மருத்துவ அங்கீகாரமும் இல்லாத, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இத்தகைய ஆபத்தான முயற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள்
பீகார்: குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில் யுரேனியம் - உடல் நல பிரச்னைகள் வரும் அபாயம்?
குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அனைத்து தாய்ப்பாலிலும் கதிர்வீச்சை உண்டுபண்ணும் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடும் என்று பல நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பால் I சித்திரிப்பு படம் இது குறித்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் வர்மா கூறுகையில்,'' 40 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரியில் அனைத்திலுமே யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 70% குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குக் கீழேதான் இருந்தன. எனவே குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ககாரியா மாவட்டத்தில் சராசரியாக அதிகபட்ச யுரேனிய மாசுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் பாதிப்பால் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு மற்றும் மூளைவளர்ச்சி குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்றார். சிறுநீரக கோளாறு அபாயம் 70% குழந்தைகளுக்கு HQ அளவு 1 என்ற அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதால் ஏற்படக்கூடிய புற்றுநோய் அல்லாத உடல்நல கோளாறு அபாயங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். யுரேனியம் பாதிப்பால் குழந்தைகளுக்கு சிறுநீரக வளர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மனநலத்தில்(குறைந்த IQ மற்றும் நரம்பியல் வளர்ச்சி தாமதம் உட்பட) பாதிப்பு ஏற்படும். இருப்பினும், தாய்ப்பாலில் உள்ள யுரேனியத்தின் அளவின் அடிப்படையில் (0-5.25 ug/L), குழந்தையின் ஆரோக்கியத்தில் உண்மையான தாக்கம் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. மேலும் தாய்மார்களின் உடம்பிற்குள் செல்லும் பெரும்பாலான யுரேனியம் தாய்ப்பாலில் சேர்ந்துவிடாமல், சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே, மருத்துவ அறிகுறிகள் குறித்து எதுவும் குறிப்பிடாத பட்சத்தில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்று அவர் கூறினார். ஆய்வு அறிக்கைகள் குழந்தை மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் யுரேனியம் கலந்த தாய்ப்பாலால் புற்றுநோயற்ற சுகாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறது. கதிரியக்க தனிமமான யுரேனியம், பொதுவாக கிரானைட் மற்றும் பிற பாறைகளில் காணப்படுகிறது. தாய்ப்பாலில் ஈயம், பாதரசம் இந்த யுரேனியம் சுரங்கம், நிலக்கரி எரித்தல், அணுசக்தி வெளிப்பாடு மற்றும் பாஸ்பேட் உரங்களின் பயன்பாடு போன்ற இயற்கை செயல்முறைகள் மற்றும் மனித நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. முந்தைய ஆராய்ச்சிகளில் ஏற்கனவே தாய்ப்பாலில் ஆர்சனிக், ஈயம் மற்றும் பாதரசம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயத்தை நன்கு புரிந்துகொள்ள, தாய்ப்பாலில் உள்ள பூச்சிக்கொல்லிகள் போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகள் உட்பட நச்சு மாசுபடுத்திகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு குடிநீரில் யுரேனியத்தின் அளவு லிட்டருக்கு 30 மைக்ரோகிராம் (ug/L) என்று வரம்பை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி போன்ற சில நாடுகள் 10 ug/L என்ற கடுமையான வரம்புகளை விதித்துள்ளன. இந்தியாவில், 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் யுரேனியம் மாசுபாடு பதிவாகியுள்ளது. பீகாரில் 1.7 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள் யுரேனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் &தீர்வுகள்
“சிலர் ‘காலில் வீக்கம், எரிச்சல்... நடக்க முடியவில்லை’ என்று வருகின்றனர். இந்த கால் வீக்கத்தை உற்றுப் பார்த்தால், ஏதோ நீர் கோத்துக் கொண்டது போல இருக்கும். சப்பாத்திக் கள்ளியை காலில் கட்டி வைத்தால் எப்படி குத்துமோ, வலிக்குமோ அதே வலியை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கவுட் பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம்” என்கிற ஹோமியோபதி மருத்துவர் ராமகிருஷ்ணன், ‘கவுட்’ பற்றிய டவுட்களைக் களைகிறார். கவுட் என்றால் என்ன? gout கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 6-7 மி.லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்? பெருவிரலில் வீக்கம், நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர். ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். யாருக்கு கவுட் வரலாம்? பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு கவுட் பிரச்னை வரலாம். குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். மற்றபடி மரபியல், உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் கவுட் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்! தீர்வு என்ன? கவுட் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். ஆறு மாதங்களாக கவுட் பிரச்னை இருக்கிறது என்றால், நோய் குணமாக 3-4 மாதங்களாவது தேவைப்படும். ஐந்து ஆண்டுகளாக கவுட் பிரச்னை பாதித்திருந்தால், குணமாக குறைந்தது ஒர் ஆண்டு பிடிக்கும். இது அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. ரத்தத்தில் யூரிக் அமிலம் கலந்திருந்தால், இதற்கு மட்டும் மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. இப்படி செய்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. உடல் முழுவதற்கும் தேவைப்படுகிற ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு திறனை கூட்டி யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சிகிச்சை செய்வதே சரியான முறை. இந்த பிரச்னைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. தகுதியான மருத்துவரைச் சந்திந்து, சிகிச்சை பெறுவதன் மூலம் நிரந்தரத் தீர்வை காணலாம். கவுட் தவிர்க்க... * குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும். * பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. * கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். காலை உணவில் அவசியம் புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும். * அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். குறிப்பாக ஈரல், மண்ணீரல், குடல் போன்ற உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். * உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். * இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips
Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம், பலனில்லை. என் தோழி, என் உணவுப்பழக்கத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறாள். உணவுப்பழக்கத்துக்கும் கருத்தரித்தலுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? கருத்தரிக்க விரும்புவோர், எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளுக்கும் கருத்தரித்தல் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக நினைக்கலாம், ஆனால், சில உணவுகளும், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் உங்கள் ஹார்மோன்களைக் குலைத்து, உடலில் அழற்சியை (Inflammation) ஏற்படுத்தி, முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை நாளடைவில் சேதப்படுத்தலாம். கருத்தரிக்கும் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உணவு விஷயத்தில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பேக்கரி பொருள்கள், சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இன்சுலின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்து, இன்சுலின் எதிர்ப்புக்கு (Insulin Resistance) வழிவகுக்கும். இது பிசிஓஎஸ் (PCOS), கருமுட்டை வெளியேறுவதில் குறைபாடு மற்றும் விந்தணுவின் இயக்கக் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தலாம். இவற்றுக்குப் பதிலாக, பழங்கள், பேரீச்சம்பழம், பனை வெல்லம் (அளவோடு), மற்றும் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் உணவு பொரித்த உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், வனஸ்பதி (Margarine) மற்றும் துரித உணவுகளில் டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு காணப்படும். அது கருப்பையை பாதித்து, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி, கருத்தரிக்கும் திறனையும் பாதிக்கும். எனவே, அத்தகைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது மிக நல்லது. சிலருக்கு, பால் பொருள்கள் அழற்சியை அதிகரிக்கலாம். பால் ஒவ்வாமை இருக்கலாம். பால் குடித்த பிறகு வயிறு உப்புசம், சோர்வு அல்லது முகப்பரு ஏற்பட்டால் பால் உணவுகளைத் தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக, பாதாம் பால், தேங்காய்ப் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம். குளூட்டன் அதிகமுள்ள கோதுமை, மைதா, பார்லி ஆகியவை சிலருக்கு குடலில் அழற்சியை உண்டாக்கி ஹார்மோன் சமநிலையின்மையைத் தூண்டும். அவர்கள், சிறுதானியங்கள், சிவப்பு அரிசி, கினோவா, மற்றும் பயறு வகைகளைப் பயன்படுத்தலாம். மதுப் பழக்கமும் அதிக காபி குடிக்கும் பழக்கமும் ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தை அதிகரிக்கும். விந்தணுவின் தரத்தையும் குறைக்கலாம். பாக்கெட் உணவு ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றில் Xenoestrogens எனப்படும் ரசாயனங்கள் இருக்கும். இவை ஈஸ்ட்ரோஜெனைப் போலச் செயல்பட்டு, உங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்பை (Endocrine System) சீர்குலைக்கும். எனவே, எப்போதும் வீட்டில் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதே சிறந்தது. சமைத்த உணவுகளை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னர்களில் வைத்திருப்பது சிறந்தது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய ஆபத்தில்லாதவை போலத் தெரியலாம். நீண்டகாலம் இவற்றுக்கு உட்படும்போது அவை நிச்சயம் உங்கள் கருத்தரித்தல் திறனை பாதிக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?
Doctor Vikatan: `தினமும் 3 லிட்டர் தண்ணீர்' - அனைவருக்குமான அறிவுரையா?
Doctor Vikatan: தினமும் 8 டம்ளர் அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிலர், திரவ உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது. 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது என்பது எல்லோருக்குமான பொதுவான அட்வைஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் எந்த மருத்துவப் பரிந்துரையையும் அறிவுரையையும் எல்லோருக்குமான பொதுவான விஷயமாக எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது சிலருக்கு கடுமையான தலைவலி வரும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டுபோகும். உதடுகள் வெடிக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்துப் பழகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துப் பழகுவது நல்லது. நீங்கள் குறிப்பிட்டதுபோல வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். அவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம். தண்ணீர் நீர்வறட்சி ஏற்படாமலிருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோராக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது செரிமானத்துக்கும் சிறந்தது. உடலையும் குளிர்ச்சியாக வைக்கும். சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர் வறட்சியைத் தவிர்க்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதயநோயாளிகளும் மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். எனவே, உங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டே இதில் முடிவெடுக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
`புருவம் த்ரெட்டிங் முதல் கூட்டுப்புருவம் வரை' - அழகுக்கலை நிபுணர் டிப்ஸ்
''பியூட்டி பார்லர் பக்கமெல்லாம் நான் போறதே இல்லப்பா...' என்று சொல்லும் பெண்கள்கூட, கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான். இதற்கு டீன் ஏஜ்,. மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என்று எந்த ஏஜும் விதிவிலக்கல்ல'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, இங்கே த்ரெட்டிங் தொடர்பான டிப்ஸ் வழங்குகிறார். புருவம் த்ரெட்டிங் ’’டீன் ஏஜ் காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசுபுசுவென காடு போல் முடி வளர்வது இயற்கையே. ஆனால், 'அழகாக இல்லையே' என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் - குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். அந்த வயதில், இயற்கைக்கு முரணாக உடம்பில் நாம் செய்யும் மாற்றங்கள் பூமராங் ஆகி, வேறுவிதமான சிக்கல்களுக்கு நிரந்தர விதை போட்டுவிடும்! புருவம் த்ரெட்டிங் அழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..! #BeautyTip 'த்ரெட்டிங்' என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பி போல் திக்காக வளர ஆரம்பித்து விடும். அதுமட்டுமல்ல... ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்... புருவங்களிலிருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி... நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுறுத்தும். 'எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாம இருக்க முடியலையே...!' என்பவர்களுக்கு... இதோ சில டிப்ஸ்கள்! புருவம் த்ரெட்டிங் Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்... புருவம் வில் போல் அழகான வடிவத்துக்கு மாறிவிடும். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு... த்ரெட்டிங் செய்து கொள்ளும்போது தசையெல்லாம் சுருங்கக்கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும், வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஒரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களையும் அழகாகக் காட்டும். கூட்டுப் புருவ முடிகளை அகற்ற சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடி சேர்ந்து 'கூட்டுப் புருவம்' என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற... கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகிய வற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்டாக்குங்கள். இதை மூக்கின் நுனி பகுதியில் இருந்து புருவம் வரை ‘திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென பிரகாசமாக தெரியும்’’ என்கிறார் ராஜம் முரளி.
Doctor Vikatan: ஃபேஸ் வாஷ், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்; யாருக்கு, எது பொருந்தும்?
Doctor Vikatan: முகத்துக்கு சோப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், ஃபேஸ்வாஷிலேயே ஏகப்பட்ட வெரைட்டி இருக்கின்றன. யாருக்கு, எது சரியாக இருக்கும், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது அடிப்படையாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில், முதலில், வயது மற்றும் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும். அதாவது டீன் ஏஜ் மற்றும் டீன் ஏஜுக்கு முந்தைய வயதில் இருப்பவர்களுக்கு சருமத்தில் பொதுவாக அதிக எண்ணெய்ப் பசை இருக்கும். அவர்களும், சாதாரண சருமம் கொண்டவர்களும் காலையில் ஜெல் அடிப்படையிலான கிளென்சர் (Gel-based cleanser) பயன்படுத்தலாம். ஜெல் கிளென்சர் லேசாக நுரைத்து, சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்கும். ஜெல் வடிவ க்ளென்சர் பிடிக்காதவர்கள், மைல்டான க்ரீமி கிளென்சரையும் (Creamy cleanser) பயன்படுத்தலாம். பருக்கள் பாதிப்பு உள்ளவர்கள், நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷை (Foaming Face Wash) பயன்படுத்த வேண்டும். இதில், கிளைகாலிக் ஆசிட் (Glycolic Acid), அஸிலிக் ஆசிட் (Azelaic Acid), அல்லது சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) போன்ற ஏதேனும் ஆக்டிவ் பொருள் (Active) இருக்க வேண்டும். ஃபேஸ் வாஷ் இந்த வகை கிளென்சர்கள், எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் கரும்புள்ளிகள் (Blackheads) சேராமல் தடுக்கவும் உதவும். அதுவே, முதிர்ந்த சருமம், வறண்ட சருமம் அல்லது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், கிரீம் வடிவிலான, நுரைக்காத, சோப் ஃப்ரீ கிளென்சர் பயன்படுத்துவது சிறந்தது. ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷைத் தவிர்க்கவும். சில ஃபேஸ் வாஷ்களில் குளுட்டோதயோன் போன்ற ஆக்டிவ்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும். ஃபேஸ்வாஷ் என்பதை அதிகபட்சம் 20 நொடிகள் மட்டுமே சருமத்தில் பயன்படுத்தப் போகிறோம். எனவே, அதில் சேர்க்கப்படுகிற ஆக்டிவ்ஸ் பெரிதாக எந்தப் பலனையும் தராது என்பதால் ஆக்டிவ்ஸ் உள்ள ஃபேஸ்வாஷ் தேவையில்லை. உதாரணத்துக்கு, சிக்கன் நல்லது என்றாலும், அதை சருமத்தின் மேல் பூச்சாக உபயோகிப்பதால் பலன் கிடைக்காது. உள்ளுக்குச் சாப்பிட்டால்தான் பலன் தெரியும். அப்படித்தான் இதுவும். சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் மற்றும் சருமத்தின் தடுப்பு அரணைப் பாதிக்காத விதத்தில் வாங்கினால் போதும். சிறு சிறு துகள்கள் சேர்க்கப்பட்ட ஸ்கிரப் வடிவிலான ஃபேஸ்வாஷும் தேவையில்லை. மாய்ஸ்ச்சரைசர் சீதோஷ்ண நிலைக்கேற்பவும் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும். கோடைக்காலத்தில், இயற்கையாகவே சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருப்பதால், நுரைக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகாமல் இருக்க, சோப் இல்லாத, கிரீமியான கிளென்சர்களை பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் 2 முறை முகத்தைக் கழுவ வேண்டும். ஃபேஸ் வாஷ் செய்த பிறகு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். பகல் வேளைகளில் மாய்ஸ்ச்சரைசருடன் சேர்த்து சன் ஸ்கிரீனும் பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் கட்டாயமாக முகத்தைக் கழுவ வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? - மன நல மருத்துவர் ஆலோசனை
கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர் கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? கோபம் ஏற்படுத்துகிற நபர் பேசுகையில் ''உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அவரது குரலை ஒரு காமெடி நடிகர் அல்லது நடிகையின் குரலாகக் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள். அந்த நபர் பேசும் விஷயங்களை காமெடி நடிகர் குரலோடு பொருத்திப்பார்த்து அதன்மூலம் சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். இது பலராலும் முயன்று வெற்றிபெற்ற ஒரு வழிமுறை. இதன்மூலம் கோபம் என்ற மனநிலையில் இருந்து நீங்கள் விடுபட முடியும். கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? உங்கள் சுவாசம் அசாதாரணம் ஆகும்! நீங்கள் கோபமாக இருக்கும்போது, கோபத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் நீங்கள் உங்கள் சுவாசம் அசாதாரணமாவதை நீங்கள் உணரலாம். நீங்கள் கோபமாக உணரத் தொடங்கும்போது, ஆழ்ந்த சுவாசம், நேர்மறையான சுயபேச்சு அல்லது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த முயலவும். உங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! `நிதானமாக' அல்லது `எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்' போன்ற பாசிட்டிவ் வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் குறையும்வரை ஆழமாக சுவாசிக்கும்போது அதை நீங்களே செய்யவும். கோபத்தை வெளிப்படுத்துவது அதை அடக்குவதைவிட சிறந்தது என்றாலும், அதைச் செய்ய சரியான வழி இருக்கிறது. உங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? 3 டெக்னிக்ஸ் ஆங்கிலத்தில் CAR என்ற ஒரு பதம் இருக்கிறது. அதாவது, Change the Changeable, Accept the unchangeable and remove yourself from the unacceptable என்பார்கள். `உங்களால் மாற்ற முடிவதை மாற்றுங்கள், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அதேபோல், மாற்றவே முடியாத சூழலில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள்' என்பார்கள். இந்த எளிய வழியைப் பின்பற்றினால் எந்தச் சூழலையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்'' என்றார்.
பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கருத்து; பின்னணி என்ன?
அப்போலோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தியும், அதே மருத்துவமனையின் CSR (Corporate Social Responsibility) துறையின் துணைத் தலைவரும், தொழில்முனைவோரும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா கொனிடேலா இந்த வார தொடக்கத்தில் இளம் பெண்களுக்கு தெரிவித்த கருத்து ஒன்று இணையதளத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. கடந்த திங்களன்று (நவம்பர் 17) ஹைதராபாத் ஐ.ஐ.டி-யில் கரியர் கவுன்சிலிங் செக்ஷனில் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய உபாசனா, ``பெண்களுக்கு மிகப்பெரிய இன்சூரன்ஸ், கரு முட்டைகளை சேமித்து வைப்பது. ஏனெனில், பொருளாதார ரீதியாக நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது உங்களின் விருப்பப்படி எப்போது திருமணம் செய்ய வேண்டும், எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். உபாசனா - ராம் சரண் இன்று எனது சொந்தக் காலில் நான் நிற்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நான் சம்பாதிக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமாக இருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வைக்கிறது. 30 வயதைத் தொடுவதற்குள் உங்களின் இலக்குகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கரியருக்கான பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கப்போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். வாழ்வில் உங்களின் ரோல் என்ன, இலக்கு என்ன, தொலைநோக்குப் பார்வை என்ன என்பதை தெரிந்துகொண்டால் யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். தன்னுடைய இந்த உரையை உபாசனா தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, ``ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர்களுடன் ஒரு அற்புதமான உரையாடல். `உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்' என மாணவர்களிடத்தில் கேட்டபோது, பெண்களை விட நிறைய ஆண்கள் கைகளை உயர்த்தினர். அப்போது, பெண்கள் தங்களின் கரியர் மீது அதிக கவனம் செலுத்துவதாகத் தோன்றியது. இது புதிய முற்போக்கு இந்தியா என்று பதிவிட்டிருந்தார். I advise young entrepreneurs I meet, both men and women, to marry and have kids in their 20s and not keep postponing it. I tell them they have to do their demographic duty to society and their own ancestors. I know these notions may sound quaint or old-fashioned but I am sure… https://t.co/5GaEzkMcbQ — Sridhar Vembu (@svembu) November 19, 2025 இதில், பெண்கள் தங்களின் கரு முட்டைகளை சேமித்து வைக்க வேண்டும் என்று உபாசனா கூறியது பெரும் விவாதப்பொருளானது. இதை மேலும் பெரிதாக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு ஒரு கருத்தைத் தெரிவித்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் சமூக வலைத்தளப் பதிவைக் குறிப்பிட்டு ஶ்ரீதர் வேம்பு , ``ஆண்கள், பெண்கள் என நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்களிடம் திருமணம் செய்துகொண்டு 20 களில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், தள்ளிப்போடாதீர்கள் என்று கூறுவேன். மேலும் அவர்களிடம், தங்கள் சமூகத்துக்கும், மூதாதையர்களுக்கும் தங்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம். ஆனால் இவை மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன். என்று பதிவிட்டார். தொடர்ந்து இந்த விவாதத்தில், மகப்பேறு மருத்துவரும், மகளிர் மருத்துவ நிபுணருமான ராஜேஷ் பாரிக், ``உங்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும்போது கரு முட்டை சேமிப்பது பற்றி ஆலோசனை வழங்குவது மிகவும் எளிதானது. IVF-ல் (In Vitro Fertilization) ஒரு சுழற்சிக்கு லட்சங்களில் செலவாகும். கரு முட்டை சேமிக்க லட்ச ரூபாய் ஆகும். கூடவே, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உண்டு. உங்கள் (உபாசனா) பேச்சைக் கேட்கும் பெரும்பாலான இளம் பெண்களால் ஒரு சுழற்சியைக் கூட செய்ய முடியாது என்று கரு முட்டை சேமிப்பதில் பொருளாதார ரீதியாக உள்ள சிக்கலை எடுத்துரைத்தார். I would politely disagree. 1) Upasana is 36 years old now ( born 1989) Ram Charan is 40 years old (born 1985) . They were best friends since college and they married in 2012. So, Upasana was 23 years when she got married and he was 27 years old. They married young. And she is… https://t.co/bnhaFFYJvs — Sunita Sayammagaru (@drsunita02) November 18, 2025 அதேபோல் ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் சுனிதா சாயம்மகரு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் பதிவைக் குறிப்பிட்டு, ``ஒரு பெண் தனது முட்டையை சேமித்து வைத்தாலும் அது வெற்றிகரமான கருவுறுதலுக்கும், கர்ப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று வயதான பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சுட்டிக்காட்டினார். அதோடு ராஜேஷ் பாரிக், ``ராம்சரணை மணந்தபோது 23 வயது பெண்ணாக இருந்த அவருக்கு என்ன கரியர் இருந்தது? திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கரியரை உருவாக்கினார். அவர் சராசரி பெண் அல்ல. சராசரி பெண்கள் இந்தப் பணக்காரர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. கரியர் இலக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவொரு கானல் நீர் போன்றது. ஒரு இலக்கை அடைந்தவுடன் மற்றொரு இலக்கு தோன்றும். தனது கரியருக்காக தன் பெர்சனல் ரிலேஷன்ஷிப்பை நிறுத்திவைக்கக் கூடாது. கரியரில் முன்னேறுவதற்கு முழு வாழ்க்கையும் இருக்கிறது. ஆனால், உறவுகளைக் கண்டடைவதற்கும், தாய்மையை அனுபவிப்பதற்கும் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார். இவ்வாறு பல தரப்பிலிருந்தும் பல்வேறு கேள்விகளும், கருத்துக்களும் உபாசனா கருத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன்னுடைய கருத்துக்கெதிரான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் உபாசனா தனது ட்வீட் மூலம் விளக்கத்தையும், கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். உபாசனா தனது பதிவில், ``ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் எனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு 4 கேள்விகளை முன்வைத்தார். I’m happy to have sparked a healthy debate & thank your for your respectful responses. Stay tuned as I voice my opinions on the pleasures/pressures of privilege - that u all have been talking about. Don’t forget to check out my images ! It has very important facts that will… pic.twitter.com/rE8mkbnUPW — Upasana Konidela (@upasanakonidela) November 19, 2025 அதில், ``ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதில், காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா? தனக்குச் சரியான துணையைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண் காத்திருப்பது தவறா? தன் சூழ்நிலைகளைப் பொறுத்து தான் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவது தவறா? ஒரு பெண் தனக்கான இலக்குகளை நிர்ணயித்து, திருமணம் மற்றும் குழந்தைப் பெற்றுக்கொள்வது பற்றி மட்டும் சிந்திக்காமல் தனது கரியரில் கவனம் செலுத்துவது தவறா? என்ற கேள்விகளை உபாசனா முன்வைத்தார். ராம் சரண் - உபாசனா மேலும், ``என்னுடைய 29 வயதில் என் தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கரு முட்டையை சேமிக்க முடிவு செய்தேன். 36 வயதில் எனது முதல் குழந்தையைப் பெற்றேன். இப்போது 39 வயதில் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறேன். எனக்குத் திருமண வாழ்க்கையும், கரியரும் போட்டி அல்ல, வாழ்வின் நிறைவான அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால், எப்போது எனும் டைம்லைனை நான்தான் முடிவு செய்கிறேன். அது என் சலுகை அல்ல, என் உரிமை என்று தன் மீதான தனிப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்தார். உபாசனாவின் கருமுட்டை சேமித்தல் கருத்து மற்றும் அதைத்தொடர்ந்து எழுந்த பதில் கருத்துக்களுக்கு அவர் முன்வைத்த கேள்விகள் மீதான உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். இரண்டு கருப்பைகள், இரண்டிலும் கரு... மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்!
Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?
Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால் அதையேதான் தொடர வேண்டுமா,மீண்டும் மாத்திரைக்கு மாற வாய்ப்பே இல்லையா? நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. இன்சுலினில் பல வகைகள் உள்ளன. புதிய வகையான இன்சுலின்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, இன்சுலின் மூன்று வகையான நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முதல் வகை: டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டுமே பிரதானமானது. இதற்குக் காரணம், இவர்களது கணையத்தில் (Pancreas) இன்சுலினைச் சுரக்கக்கூடிய பீட்டா செல்கள் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலினுக்கு பதில் மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியாது. இரண்டாம் வகை: டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இவர்கள் சாதாரணமாகப் பரவலாகக் காணப்படும் நீரிழிவு நோயாளிகள். இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) காரணமாக இவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. இவர்களுக்கு மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் (Oral Hypoglycemic Agent Failure), ரத்தச் சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் (Euglycemia) கொண்டு வர முடியாத நிலையிலும், வேறு ஏதாவது சிக்கல்கள் (Complications) வரும்போதும் இன்சுலின் தான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால், இவர்களுக்கு இன்சுலின் அளவைக் குறைத்து, தேவைப்பட்டால் நிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் மூன்றாம் வகை: டைப் 3 நீரிழிவு நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் (Emergencies). இவர்களுக்கு சிகிச்சை அல்லது அவசரத் தேவைகளுக்காக இன்சுலின் பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு, அறுவை சிகிச்சை (Surgery), இதயப் பிரச்னைகள் (Heart problem), சிறுநீரகப் பிரச்னைகள் (Kidney problem), விபத்து (Accident), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract) போன்றவற்றின் போது இன்சுலின் தேவைப்படும். இத்தகைய சூழல்களில், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர இன்சுலின் போடப்படுகிறது. இந்த அவசர நிலை (Crisis) சரியானதும், மாத்திரைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். Doctor Vikatan: 20 வருடங்களாக சுகர் மாத்திரை, சுகர் குறைய இனி இன்சுலின் போட வேண்டுமா? நீரிழிவு நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று இன்சுலின் தான். இன்சுலின் போடுவது என்பது மோசமான நிலைக்கான அடையாளம் கிடையாது. அப்படி நினைப்பது மிகப்பெரிய மனத்தடை. இன்சுலின் சிகிச்சை என்பது, நீரிழிவு நோய் மீள்தன்மைக்கு (Diabetes Reversal) பெரிதும் உதவும். மேற்கொண்டு சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும். இன்சுலின் செலுத்திக் கொள்ளும் பெண் (சித்தரிப்பு படம்) நீரிழிவு நோயாளிகள் அனைவரும் டைப் 1 நோயாளிகளைப் போல நிரந்தரமாக இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எந்த வகையான இன்சுலின், யாருக்கு, எந்த நேரத்தில் போடப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுடைய சர்க்கரை நோய் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?
Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?
Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியை உணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்களே. அது எந்த அளவுக்கு உண்மை, அது என்ன செய்யும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டர் (period pain simulator) என்பது பீரியட்ஸின் போது ஏற்படும் அசௌகர்யத்தையும் வலியையும் உணரச் செய்கிற ஒரு கருவி. அதாவது, பீரியட்ஸ் என்பது எப்படியிருக்கும் என்ற அனுபவம் இல்லாத ஒரு நபருக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்கச் செய்வதுதான் இதன் வேலை. ஆண்களுக்கு பீரியட்ஸ் வராது என்பதால், பீரியட்ஸ் வலி எப்படியிருக்கும் என்று அவர்களை உணரச் செய்ய இந்தக் கருவி உதவுகிறது. இந்த பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டரில் எலக்ட்ரிகல் ஸ்டிமுலேஷன் பேட்ஸ் ( electrical stimulation pads) இருக்கும். அதை அடிவயிற்றிலோ அல்லது முதுகுப் பகுதியிலோ வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எலக்ட்ரிக்கல் பல்ஸ் அனுப்பப்படும். அதன் மூலம் பீரியட்ஸ் வலி உணரவைக்கப்படும். அதன் தீவிரத்தன்மையை குறைந்த அளவிலிருந்து, அதிகபட்சம்வரை நீங்கள் அதிகரித்துக்கொள்ளலாம். பீரியட்ஸ் இந்தக் கருவியை உபயோகிக்கும்போது ஆண்களின் முகத்தில் ஏற்படுகிற மாறுதல்கள் கண்காணிக்கப்படும். இதில் இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். இந்தக் கருவியை உபயோகிக்கும்போது உணரப்படுகிற வலியானது, பீரியட்ஸ் அசௌகர்யங்களில் ஒரு பகுதி மட்டுமே. மற்றபடி, இது அந்த நாள்களில் ஏற்படுகிற களைப்பு, நீர்கோத்தல், உடல் உப்புசம், மனநிலை மாற்றங்கள், வாந்தி என ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிற அசௌகர்யங்களை உணரச் செய்யாது. அவற்யை எல்லாம் எந்தக் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாது. பீரியட்ஸ் நாள்களில் பெண்கள் எப்படிப்பட்ட வலிகளை, அவதியை அனுபவிக்கிறார்கள் என்று ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தக் கருவியின் நோக்கம். அந்த வலியும், அவதியும் அவர்களது அன்றாட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இதன் மூலம் ஆண்கள் உணரலாம். Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! இள வயதில், ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு பீரியட்ஸ் வலி உள்ளிட்ட பிரச்னைகள் வருகின்றன. அதுவே, அவர்கள் 50 வயதைக் கடந்ததும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அறவே இல்லாமல் போவதால் வேறு வகையான அசௌகர்யங்கள் ஏற்படும். உடல் சூடாவது, வெஜைனா வறண்டு போவது, மனநிலையில் தடுமாற்றங்கள் என பலவித பிரச்னைகள் வரும். அதற்கும் ஹார்மோன்களே காரணம். அந்த வகையில் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்களின் மாற்றங்களால் எல்லா வயதிலும் ஏதோ பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. பெண்களின் உடலமைப்பே அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி. அதை ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பீரியட்ஸ் வலி கடந்த 50 ஆண்டுகளாகத்தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம். நம் முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்காத பல உரிமைகள், வாய்ப்புகள் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்கின்றன. அவற்றை அனுபவிக்காமல், மாதவிலக்கு வலியையும், அசௌகர்யங்களையும் காரணம் காட்டி, முன்னேறிச் செல்வதிலிருந்து விலகக்கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்
நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம் பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா? ‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் சமூகம் ஏளனப்படுத்தும் சொல் நமக்குத் நினைவிருக்கும். பெருங்காயம் அப்படியான சமாச்சாரம் அல்ல. அதன் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர் ஒருகாலத்தில் அதைப் ‘பிசாசு மலம்’ என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. இப்போது நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப் போல, ஸ்பானிஷ் ஃப்ளூ 1910-களில் பல்லாயிரம் பேரை கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராக செயல்பட்டதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்துப் போல அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன் பின் அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள். பன்றிக் காய்ச்சல் தடுக்கும்! பன்றிக் காய்ச்சல் தடுக்கும் பெருங்காயம் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்த பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயனாகும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக்கொண்டது எனக் கண்டறிந்தனர். தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபாசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டக்கூடும். பெருங்காயம் கலப்படப் பெருங்காயம்? நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே, கருத்திருந்தால் வாங்க வேண்டாம். பெருங்காயத்தில் நடக்கும் கலப்படங்கள் ஏராளம். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்த்துப் பெருங்காயம் சந்தையில் உலாவுவதால், மூக்கைத் துளைக்கும் வாசம் தந்தாலும், கண்ணை விரித்துப்பார்த்துதான் காயம் வாங்க வேண்டும். அதே போல், அதன் மணம் எளிதில் போய்விடுமாதலால், நல்ல காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருப்பது, அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கும். பெண்களைக் காக்கும் பெருங்காயம்! பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும். பெருங்காயம் குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். அஜீரணம் போக்கும் அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது, துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். மருத்துவர் சிவராமன் Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? வாயு வலி நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும். அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits சாப்பிட்டவுடன் கழிச்சல் இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும். புற்றுநோய் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்! ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும்கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கேரளாவில் மூளை தின்னும் அமீபா : சபரிமலை செல்பவர்களின் கவனத்துக்கு.! - விளக்கும் மருத்துவர்
கேரளாவின் 'மூளை தின்னும் அமீபா' குறித்த செய்திகள் கடந்த 2 வருடங்களாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் (2024) இந்த அமீபாவால் 9 பேர் மரணமடைந்தனர். 2025 வருடம் செப்டம்பர் மாதத்திலோ உயிரிழப்பு மற்றும் பாதிப்பின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. இந்த நிலையில், தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து இந்தியாவெங்கும் இருக்கிற ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பிப்பார்கள். Brain Eating Amoeba பக்தர்களை எச்சரிக்கும் அரசாங்கங்கள்..! மூளை தின்னும் அமீபா குறித்த அச்சம் கேரளாவில் இன்னும் தீராத நிலையில், 'சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கின் உள்ளே நீர் செல்லாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. தவிர, தமிழக சுகாதாரத்துறையும் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள ஆறு, குளம் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கினுள் நீர் செல்லாதபடிக்கு கவனமாக இருங்கள். நீரை கொதிக்க வைத்து அருந்துங்கள். மூளை தின்னும் அமீபா, கொரோனா தொற்றுபோல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்பதால், அச்சப்பட தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மூளை தின்னும் அமீபா முதன் முதலில் கண்டறியப்பட்ட வருடத்தில் இருந்து, அதனால் பாதிக்கப்பட்டால் வரக்கூடிய அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பன உள்ளிட்ட தகவல்களை பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். Brain Eating Amoeba எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. Brain Eating Amoeba அறிகுறிகள்..! இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். அமீபா தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி, உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?
Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு. தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் சில வகை ரத்த அழுத்த மாத்திரைகள், தாம்பத்ய வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அல்லது அனைத்து மாத்திரைகளுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சில பிபி மாத்திரைகள் உடலின் ரத்த ஓட்டத்தையும் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு (ED - Erectile Dysfunction) அல்லது பாலியல் ஆர்வம் குறைவு ஏற்படலாம். பெண்களுக்கு பாலியல் உந்துதல் குறைவு அல்லது பெண் உறுப்பில் வறட்சி (Dryness) ஏற்படலாம். சிலருக்கு மாத்திரைகளால் மனச்சோர்வு, மன அழுத்தம், அல்லது படபடப்பு காரணமாகவும் மறைமுகமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீண்ட காலமாகப் பயன்படுத்தும் பிபி மருந்துகள், பொதுவாகப் பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம். நவீன மருத்துவ முன்னேற்றத்தில் கிடைக்கும் புதிய வகை பிபி மருந்துகள் பாலியல் ஆர்வத்தையோ, செயல்பாட்டையோ பாதிக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் கிடைக்கின்றன. ஒருவேளை, பிபி மாத்திரைகளால் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிப்பது மிக முக்கியம். மாத்திரைகள் நீங்களாகவே மருந்துகளை நிறுத்தவோ அல்லது கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடவோ கூடாது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, வேறு மருந்துகளைப் பரிந்துரைப்பார். தவிர, சிலருக்கு பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் சில சிறப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மருந்துகளால் அல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் பாலியல் ஆர்வத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், நட்ஸ், சியா மற்றும் பூசணி விதைகள், கொழுப்புள்ள மீன் (Fatty Fish), முட்டை, இறைச்சி, கடல் உணவுகள், காளான்கள், கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள், டார்க் சாக்லேட், மாதுளை, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, துத்தநாகம் (Zinc) சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பேக்கரி உணவுகள், அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, சோடியம் (உப்பு) மற்றும் எண்ணெய் நிறைந்த வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மன அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். பிடித்த வேலைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும். மன அழுத்தம் வொர்க் - லைஃப் பேலன்ஸ் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போதுமான அளவு தூக்கம், குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை அவசியம். புகை மற்றும் மதுப் பழக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நாள்பட்ட நோய்கள், ஆண் உறுப்பில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இதற்குச் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்
மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் அழவே, பள்ளிக்கூடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட மாணவியின் அம்மா, மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்துவிட்டாள். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். புத்தக மூட்டை புத்தக மூட்டை ‘’முதலில் இந்தக் கால பள்ளிக்கூட புத்தக பைகளின் எடையை குறைக்க வேண்டும். சில பள்ளிக்கூடங்கள் இதில் கவனமாக இருந்து, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா பள்ளிக்கூடங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபுல் பாடி செக்கப் இரண்டாவது விஷயம். பள்ளி படிக்கும் மாணவர்களில் எங்கோ ஒருவருக்கு, சிறு வயதில் இருந்தே இதயம் அல்லது நுரையீரலில் சின்னதாக பிரச்னை இருக்கலாம். அது சிறிய அளவிலான துளையாகவும் இருக்கலாம். அது தெரியாமலே இருந்திருக்கலாம். ஏதோ ஒருகட்டத்தில், பிரச்னை பெரிதாகும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும். இதை வருடத்துக்கு முறை பள்ளிக்கூடங்களில் ஃபுல் பாடி செக்கப் செய்வதன் மூலம் கண்டறியலாம். பல பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறை இல்லை. இதை செய்திருந்தால், எந்த மாணவருக்கு என்னப் பிரச்னை, அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்காக, ஹெல்தியான குழந்தைகளை இப்படி புத்தக மூட்டையுடன் 100 சிட்-அப் எடுக்க வைக்கலாம் என்று அர்த்தமில்லை. காற்று மாசுபாடு காற்று மாசுபாடு மூன்றாவது விஷயம். காற்று மாசுபாட்டின் இடையே தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுவும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு காற்று மாசுபாட்டினால் அதிகரித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல், 12 வயது குழந்தையை 100 முறை உட்கார்ந்து எழ வைத்தது மிகப் பெரிய தவறு. மாணவியை திருத்த நினைத்திருந்தால், 10 முறை சிட் அப் செய்ய வைத்திருக்கலாம். ஸ்கேலால் கையில் ஓர் அடி கூட வைத்திருக்கலாம். ஆனால், அந்த ஆசிரியர் செய்திருப்பது மகா பாவம். எங்கேயோ இருந்த கோபத்தை, அந்தக் குழந்தையின் மீது காட்டியிருக்கிறார். Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால்... அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், முதல் 20 சிட்-அப் போடும்போதே மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும். 100 சிட்-அப் எடுத்தவுடனே மாணவிக்கு நெஞ்சு வலியும், கூடவே மூச்சுத்திணறலும் சேர்ந்து வந்திருக்கும். அதன் காரணமாகத்தான், அந்த மாணவி இறந்திருப்பார். அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர் வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? ஆசிரியர்கள் கொடுக்கும் தவறான மற்றும் தாங்க முடியாத தண்டனைகளால் மாணவர்கள் இறக்கும்போது, சமூகத்தில் இரண்டு தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கின்றன: ஒன்று அதன்பிறகு நல்ல ஆசிரியர் பெருமக்களால்கூட, தங்கள் மாணவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காக சிறுசிறு தண்டனைகளும் கொடுக்க முடியாமல் போகும். இரண்டாவது, அப்படி திருத்தப்படாத மாணவர்கள் வளரும்போது, அது சமூகத்துக்கு கெடுதலாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், சிட் அப் தொடர்பான சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். 5 சிட் அப் அல்லது 10 சிட் அப் வரை எடுக்கலாம். ‘’காது நுனியை பிடித்தபடி சிட்-அப் எடுத்தால், கவனத்திறன் கூர்மையாகும்; நினைவுத்திறன் அதிகரிக்கும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் 5 சிட்-அப் அல்லது 10 சிட்-அப் வரை எடுக்கலாம். வளர்ந்த குழந்தைகள் என்றால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 சிட்-அப் எடுக்கலாம். அதுவும், ஆரோக்கியமாக இருந்தால்... சிட்-அப் எடுப்பதற்கான ஸ்டாமினா எனப்படும் தாங்கும் திறன் நபருக்கு நபர், குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதுபற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் ஓர் ஆசிரியர் அந்த 12 வயது குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறார்’’ என்கிறார் வருத்தமுடன், அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தர்.
Marburg Virus: எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார அமைப்பு விளக்கம்
தெற்கு எத்தியோப்பியாவில் 'மார்பர்க்' என்ற கொடிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ் கொடியது என்பதால், இது ஒரு புதிய பெருந்தொற்றுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 9 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எத்தியோப்பிய அரசுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மனிதர்களுக்கு 'மார்பர்க் வைரஸ் நோயை' ஏற்படுத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Fever நோய்த்தொற்று அறிகுறிகள் மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்ட 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் திடீரெனத் தோன்றும் என நோய் கட்டுப்பாட்டு மையம்தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் மலேரியா அல்லது டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருப்பதால், அதைக் கண்டறிவது கடினம் என்கின்றனர். முக்கிய அறிகுறிகள் திடீரென தொடங்கும் அதிக காய்ச்சல் தாங்க முடியாத தலைவலி மற்றும் தசை வலி மூன்றாவது நாளில் தொடங்கும் கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி ஈறுகள், மூக்கு மற்றும் கண்களில் இருந்து ரத்தக்கசிவு உடலில் அரிப்பு இல்லாத தடிப்புகள் தோன்றுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது. Marburg is a highly infectious & often fatal disease in humans. Here's how to protect yourself from the virus: ▶️Avoid close physical contact with #MVD patients ▶️Wear gloves & PPEs when caring for an #MVD patient or suspected case ▶️Follow guidance on safe & dignified burials pic.twitter.com/kpL88hJDdx — WHO Ethiopia (@WHOEthiopia) November 15, 2025 பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உமிழ்நீர், சிறுநீர், மலம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதாகவும், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய படுக்கை, உடைகள் போன்ற பொருட்களைத் தொடுவதாலும் இது பரவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்று மூலம் பரவாது என்றாலும், நேரடித் தொடர்பு மூலம் எளிதில் தொற்றும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் பரவல் அரிதானது என்றாலும், அதன் இறப்பு விகிதம் 50% வரை இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி நடப்பதுதான் பலன் தரும் என்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 10,000 அடிகள் நடப்பது என்பது 8 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குச் சமமானது. தினமும் அவ்வளவு தூரம் நடப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே, அதைப் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால், அதற்காக பத்தாயிரம் அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்கும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கும்போது இதயத்தின் செயல் மேம்படும். அதை எப்படி நடக்கிறோம் என்பதும் இதில் முக்கியம். மிகவும் பொறுமையாக, நீண்ட நேரம் நடப்பது என்பது சிறந்த உடற்பயிற்சியாக இருக்காது. அதை உடலியக்கமாக மட்டுமே கருத முடியும். நீங்கள் 10,000 அடிகளை மிக மெதுவாக, நீண்ட நேரம் நடக்கிறீர்கள், பேசிக்கொண்டே நடக்கிறீர்கள் என்றால் அதன் பலன் முன்னதை விட குறைவாகவே இருக்கும். சிலரால் 5,000 அடிகள்தான் நடக்க முடியும். ஆனால், அதை வேகமாக நடப்பார்கள். பத்தாயிரம் அடிகளை மெதுவாக நடப்பதை விடவும் இது மிகவும் சிறந்தது. walking குறைவான தூரம் நடந்தாலும் வேகமாக நடக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயத்தை கண்டிஷன் செய்ய இது நல்ல பயிற்சியாக அமையும். உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு நிமிடம் மிக வேகமாகவும் அடுத்த ஒரு நிமிடம் மெதுவாகவும் நடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்நிலையில் உங்கள் இதயத் துடிப்பானது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறிக்கொண்டே இருக்கும். அது உங்கள் இதயத்தை கண்டிஷன் செய்ய உதவியாக இருக்கும். இதில் உங்களால் 10,000 அடிகளை நடக்க முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனாலும், இந்த நடை உங்கள் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தியிருக்கும். எனவே, எண்களை முக்கியமாக நினைக்காமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சிறிது தூரம், சிறிது நேரம் நடப்பது என்பதை மட்டும் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?
நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!
உணவுக்குழாய்க்கு வருகிறது! இரைப்பையில் இருக்க வேண்டியவை '' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே 'அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது. gut health எப்போதாவது பிரச்னை வந்தால் பாதிப்பு இருக்காது! எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால் வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் பாசுமணி. சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர் அதற்கான காரணத்தை விளக்கினார். 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் இருக்க வேண்டாம்! - மருத்துவர்கள் எச்சரிக்கை! ஏன் தெரியுமா? குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது! ''நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த்தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும். அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்! மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்'’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி. Health: சாப்பிட்டப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..!
சருமம் முதல் தாடி, மீசை பராமரிப்பு வரை; டீன் ஏஜ் பாய்ஸ்க்கு பியூட்டி டிப்ஸ்!
டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி. உணவு டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும். இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஃப்ரூட் சாலட், கிரீன் டீ என ஆரோக்கியம் தரும் உணவுகளைச் சாப்பிடவும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். இது சருமத்தையும் புத்துணர்வாக வைத்திருக்கும். உடற்பயிற்சி டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் நடைப்பயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே உடலில் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பை பெறமுடியும். உங்களுக்குப் பிடித்த, ஆர்வத்தைத் தூண்டும் உடற்பயிற்சி ஆப்பை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஹேர் கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் வாரம் மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது எண்ணெய்க் குளியலாக இருந்தால் சிறப்பு. முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். எண்ணெய் வைத்ததும் நன்கு மசாஜ் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைக்குக் குளிக்கவும். தினசரி இருமுறை பெரிய பல்லுள்ள சீப்பால் தலையை அழுந்த வாரவும். இது தலைப்பகுதியில் ரத்தஓட்டம் சீராகப் பாய உதவும். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும். ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடவும். அந்த வெப்பக்காற்றால் கேசம் வறண்டு போகும். தலையையும் கேசத்தையும் சுத்தமாகப் பராமரித்தாலே பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஸ்கின் கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் டீன் ஏஜ் சருமத் தொல்லைகளில் முக்கியமானது முகப்பரு. தினமும் முகத்தை தரமான ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். எண்ணெய்ப் பசை சருமத்தினருக்குத்தான் முகப்பரு தொல்லை அதிகம். இவர்கள் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவித் துடைத்தால், சரும துவாரங்கள் அடைபடுவதைத் தவிர்க்கலாம். அந்தத் துவாரங்கள் அடைபடுவதுதான் முகப்பரு வருவதற்கான முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முகத்தில் மூக்கு மற்றும் தாடைப் பகுதியில் தங்கும் அழுக்கால் பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் தொல்லை ஏற்படும். அதனால் அப்பகுதிகளில் அழுக்குத் தங்காமல் சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு எளிமையான வழி, தோசை மாவு. இதில் சிறிதளவு எடுத்து மூக்கு மற்றும் தாடையின் மீது பூசி, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்து கழுவினால் பலனளிக்கும். கண்கள் பளிச்சிட டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் செல்போன், லேப்டாப் என்று பார்த்துக்கொண்டே இருப்பதால், கண்கள் கட்டாயம் சோர்வடையும். பயன்படுத்திய சாதாரண டீ அல்லது கிரீன் டீ பேக்கை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போது, கண்களை மூடி படுத்தபடி அந்தக் குளிர்ந்த டீ பேக்ஸை கண்கள் மேல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். அதிகமாக மெனக்கெடாமல், இதேபோல் உருளைக்கிழங்குத் துருவல், வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் போன்றவற்றையும் கண்களில் வைக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் கண்கள் பிரகாசிக்கும். வெள்ளரிக்காய்த் துண்டுகளை சாப்பிடவும் செய்யலாம். தாடி மற்றும் மீசை தாடி மற்றும் மீசை Health & Beauty: காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..! அரும்பு மீசை வளரும் இந்த வயதில், தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க் கலவையை மீசை மற்றும் தாடியில் பூசி மசாஜ் கொடுக்கவும். தினசரி 5 நிமிடங்கள் கொடுத்தால் போதுமானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடிகள் இடைவெளியில்லாமல் அடர்ந்து வளரவும் உதவும். இதுவரை மொழுமொழுவென அமுல் பேபியாக இருந்த முகத்தில் அரும்பு மீசை, தாடி வளரும் இந்தப் பருவத்தில் வழக்கமான ஃபேஸ் வாஷ் போதுமா..? தாடி, மீசை மற்றும் கிருதா பகுதிகளில் கூடுதல் அழுக்குகள், இறந்த செல்கள் தங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் குளிக்கச் செல்வதற்கு முன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பேபி டூத் பிரஷ்ஷை சிறிதளவு பாலில் தொட்டு தொட்டு மீசை, தாடி மற்றும் கிருதா பகுதிகளில் மிருதுவாகத் தேய்க்கவும். இதை வாரம் இருமுறை செய்தாலே போதும், முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் பூஞ்சை மற்றும் பொடுகு ஏற்படாமல் தவிர்க்கலாம். பாடி கேர் டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ் Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்! ஒரு மடங்கு எண்ணெய்க்கு (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில்) அரை மடங்கு சர்க்கரை சேர்த்து (உங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவு) நன்கு கலந்துகொள்ளவும். குளிக்கும் முன் உடல் முழுவதும் 10 நிமிடங்கள் பூசி மசாஜ் செய்யவும். பிறகு, பாடி வாஷ் பயன்படுத்தி குளித்துவிடுங்கள். சருமத்தின் இறந்த செல்கள் மூற்றிலுமாக நீங்கி சருமம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். பொலிவான கால்களுக்கு அரிசி மாவு அல்லது தோசை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பாதங்களின் மேற்பகுதியில் பூசி, நன்கு அழுத்தமாகத் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அப்படியே காயவிட்டு, காய்ந்த பிறகு கழுவவும். பாதங்களின் கருமை, மற்றும் படிந்துள்ள அழுக்குகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பாதங்கள் பளிச் சுத்தமாகும்.
Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?
Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஒருவரது உயரம் என்பது மரபியல் ரீதியாகவும் தீர்மானிக்கப்படுவது. அம்மாவிடமிருந்தோ, அப்பாவிடமிருந்தோ அல்லது இருவரின் மரபு வழியிலிருந்தோ வருவதுதான் நம் உயரம். பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை 14-15 வயதில் பூப்பெய்துவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு உயரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி நின்றுவிடும். ஆண் குழந்தைகளுக்கு 15-16 வயது வரை வளர்ச்சி இருக்கும். உடலியல்ரீதியாக இப்படித்தான் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, இந்த வயதைத் தாண்டி அவர்களுடைய எலும்புகள் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. அப்படிப் பார்க்கும்போது பூப்பெய்தியதிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதன் பிறகு நின்றுவிடும். எனவே, சப்ளிமென்ட் எடுப்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ ஒருவரது உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியாது. அது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது அவர்களுடைய எலும்புகளை உறுதியாக வளரச் செய்யும். ஓடியாடி விளையாடுவதால் உயரம் அதிகரிக்காது என்றாலும் உடல் உறுதியாகும். மார்க்கெட்டில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ் போன்றவையும் உயரத்தை அதிகரிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவும். உங்களுடைய பெண் குழந்தைக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா, ஹார்மோன் கோளாறுகள் உள்ளனவா என்பதையெல்லாம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று தெரிந்துகொள்வதும் அவசியம். உயரத்தை அதிகரிக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுக்கும் மருந்துகள், சிகிச்சைகள் போன்றவற்றை நம்பாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சதைப்பிடிப்பில்லாத உடல்வாகு, அடிக்கடி மயக்கம்... டீன் ஏஜ் மகனுக்கு சிகிச்சை அவசியமா?
உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்
தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். `மொத்தமாக திரிச்சா மணம் மட்டும் அல்ல; கூடவே நல்ல பலன்களும் போய்விடும்’ என்பது அவர்களின் எளிய கூற்று. அது தாவர மருத்துவக்கூறுப்படி உண்மையும்கூட. மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், அன்னாசிப் பூ, கிராம்பு, வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பெருங்காயம்... என நாம் அன்றாடம் சேர்க்கும் அனைத்துமே மணமூட்டிகள் மட்டும் அல்ல, மூலிகைகளும்கூட. அவற்றின் மணத்தையும் மகத்துவத்தையும் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தாளிப்பது ஏன்? உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்ததும் தாளிப்பது நம் வழக்கம். இதற்குப் பின்னால் ஒரு மருத்துவப் பின்னணி உண்டு. வெளிநாட்டு உணவுக் கலாசாரத்தில் `டிரெஸ்ஸிங்’ என்கிற அலங்கரிக்கும் முறை உண்டே தவிர, `தாளிப்பு’ கிடையாது. சமைக்கும்போது, சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அதன் மூலப் பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களால், நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாக நல்ல நிலையில் வைத்திருக்கும் பொருள்) எனும் எட்டு வகை கார, நறுமணப் பொருட்களைக் கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர் வழக்கமாக்கி வைத்திருந்தனர். இப்போது உள்ள தாளிக்கும் முறைக்கும் அந்தக்கால முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போதுபோல, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அப்போது தாளிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக, மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன. சமைத்த பிறகு உணவில் இவை சேர்க்கப்படும்போது, சுவையைப் பெருக்கும்; ஜீரணத்தைச் சீராக்கும். உணவால் உடலுக்கும் எந்தக் கெடுதலும் நேராமல் பார்த்துக்கொள்ளும். இனிப்பும் ஏலமும்... இனிப்பும் ஏலமும்... * எந்த இனிப்புச் செய்தாலும், அதில் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால், இனிப்பால் அஜீரணம் ஏற்படாது; சளி சேராது. இனிப்பு, உடலில் வேகமாகச் சேராமல் இருக்கவும் ஏலக்காயில் இருக்கும் விதை உதவிடும். மிளகும், சுக்கும்... மிளகு, ஒரு நச்சு நீக்கி. எந்த அசைவ உணவைச் சமைத்தாலும், பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை அவசியம் அதில் சேர்க்க வேண்டும். மிளகு, ஒரு நச்சு நீக்கி. ஒவ்வாமை ஏற்படாமலும், மூக்குப் பகுதியில் சளி சேராமலும் பாதுகாக்கும். மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) எனும் அல்கலாய்டு மிகச் சிறந்த ஜீரண நோய் எதிர்ப்புச்சக்தி தரும் பொருள் (Immune Modulator). பூண்டு, இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதை நாம் பயன்படுத்திவருகிறோம். உணவை எளிதில் ஜீரணிக்க சுக்கு உதவும்; உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராமல் இருக்கவும் உதவும். பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோர்கள் கவனத்துக்கு..! உங்கள் ரத்தக்கொழுப்பை சீராக வைத்துக்கொள்ளவும் இதயம் சீராக இயங்கவும் இவை இரண்டும் கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் சிறுபூண்டு, சின்ன வெங்காயம்தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பூண்டில் இருக்கும் அல்லிசின் (Allicin) எனும் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணுயிரியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தூள் பெருங்காயம் வாழைக்காய் பொரியல், உருளைப் பிரட்டல், சுண்டல் வகைகள் செய்யும்போது, முடிவில் பெருங்காயத் தூள் சேர்க்க மறக்கவே கூடாது. பெருங்காயம், மணமூட்டி மட்டும் அல்ல; உடலில் வாய்வு சேராமலும் அஜீரணம் ஆகாமலும் காக்கும். குடல் புண்களையும் ஆற்றும். சீரகமும் லவங்கப்பட்டையும்... `சீரகம் அகத்தைச் சீர்செய்வதால், `சீரகம்’ என்று பெயர். மந்தம் ஏற்படுத்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களைச் செய்யும்போது, பொன் வறுவலாக வறுத்த சீரகத்தைச் சேர்க்க வேண்டும். குடல் புண்களை ஏற்படுத்தும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் நுண்ணுயிரியைக் குடலில் வளரவிடாமல் செய்ய உதவுபவை, சீரகமும் லவங்கப்பட்டையும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். இது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது. வெந்தயம் நல்ல மருந்து வெந்தயம் Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ச்சத்து நமக்குத் தேவை. வெந்தயம், சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, சப்பாத்தி என அத்தனை உணவுகளிலும் வெந்தயத்தைச் சேர்க்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய முக்கியமான மூன்று பிரச்னைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. தலைச்சிறந்த மணமூட்டி Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? மணமூட்டிகள் வகைகளிலேயே தலைச்சிறந்தது மஞ்சள். இதை ஏதோ ஒருவிதத்தில் உணவில் நாம் சேர்த்துவருவதால்தான், பல நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கின்றன. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி இயற்கை நுண்ணுயிர்க்கொல்லி (Natural Antibiotic). புற்றுநோய் செல்களை அழிக்கும் சிறந்த மருந்து. கார உணவுகளில், காய்ந்த மிளகாயின் கார்சினோஜெனிக் (Carcinogenic) இயல்பை, மஞ்சள் மாற்றிவிடும். அதனால்தான் மிளகாய் சேர்க்கும்போது, மஞ்சளும் சேர்க்கப்படுகிறது. எல்லா வகைப் பொரியல்களிலும், கூட்டுகளிலும் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்குச் சேர்த்தால் மருத்துவச் செலவும் கண்டிப்பாகக் குறையும். மணமூட்டிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்க, இந்த மணமூட்டிகள் அஞ்சறைப் பெட்டியில் அவசியம் இருக்க வேண்டும்.
உங்க `லவ் பிளே'மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265
'லவ் பிளே' எப்படியெல்லாம் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இங்கே விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். 1. நோ பதற்றம் காமத்துக்கு மரியாதை எக்காலத்திலும் பதற்றமாக செக்ஸ் செய்யாதீர்கள். இதனால், விந்து சீக்கிரமாக வெளி வந்துவிடும். இதனால், ஆண் ஆர்கசம் அடைந்தாலும், மனைவியால் அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். 2. ஆழ்ந்து மூச்செடுங்கள் காமத்துக்கு மரியாதை தொடர்ந்து உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருக்கிறதென்றால், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் செய்யுங்கள். இவை உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து, ஆர்கசம் கிடைக்க உதவி செய்யும் என கண்டறிந்திருக்கிறார்கள். 3. ஆரோக்கியம் ஆர்கசத்துக்கு முக்கியம் காமத்துக்கு மரியாதை நல்ல செக்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதே நேரம், உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல செக்ஸும், ஆர்கசமும் கிடைக்கும். தவிர, உடல்பருமன் பிரச்னை இருந்தாலும், உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 4. உடல் மீதான தாழ்வு மனப்பான்மை வேண்டாம் காமத்துக்கு மரியாதை தன் உடல் மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தன் உடலில் குறை இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 5. கிண்டல் வேண்டாம் காமத்துக்கு மரியாதை கணவனும் மனைவியும் ஒருவரையொருவர், உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யவே கூடாது. வாயளவில் இதை அவர்கள் சிரித்து கடந்தாலும், மனதளவில் காயப்பட்டு விடுவார்கள். உறவின்போது இந்தக் கிண்டல்கள் நினைவுக்கு வந்துவிட்டால், முழுமனதாக உறவில் ஈடுபடவே மாட்டார்கள். 6. கூச்சப்படாதீர்கள். காமத்துக்கு மரியாதை தாம்பத்திய உறவில் கூச்சமே கொள்ளாதீர்கள். முன்விளையாட்டுகள், ரொமாண்டிக்காக பேசுதல், உறவின்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை துணையிடம் சொல்வது, உறவுக்கு ஏற்றபடி டிரெஸ் செய்வது என செக்ஸை அழகாக்குவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அம்மாவை ஏமாத்தலாம்... டாக்டரை ஏமாத்த முடியாது..! - காமத்துக்கு மரியாதை - 191 7. நிதானம் பிடிக்கும் காமத்துக்கு மரியாதை நிதானமாக உறவுகொள்வது பெண்களுக்குப் பிடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல கிடுகிடுவென முடித்துவிட்டு தூங்கி விடாதீர்கள். இந்த பாயிண்ட் ஆண்களுக்கானது. விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை 8. ஒரே மாதிரி... வேண்டவே வேண்டாம் தினமுமோ அல்லது அடிக்கடியோ ஒரே மாதிரி பொசிஷனில் ஈடுபடாதீர்கள். தொடர்ந்து ஒரே அறையிலும் உறவு கொள்ளாதீர்கள். பொசிஷனையும் அறைகளையும் மாற்றுங்கள். இவற்றையெல்லாம் பின்பற்றினால், கணவன் மனைவிக்குள்ளேயே செக்ஸில் த்ரில் கொண்டு வர முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதான் பிரச்னையாக இருக்கும். என் நண்பனுக்கோ, நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதுதான் பிரச்னையே... திருமணமான சில நாள்களிலேயே இதனால் அவனுக்கும் அவனின் மனைவிக்கும் பிரச்னை வந்துள்ளது. நண்பனுடைய பிரச்னை இயல்பானதா... அதற்கு சிகிச்சை ஏதும் தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த , காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன். சுனிதா மேனன் 'ஆண்களின் பாலியல் பிரச்னைகளில் 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' (Male orgasmic disorder) என ஒன்று இருக்கிறது. டிலேடு இஜாகுலேஷன் (Delayed ejaculation) என்றும் இதைக் குறிப்பிடலாம். அதாவது, பாலியல் உறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுவதில் அல்லது விந்து வெளியேற்றுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறிக்கும் பிரச்னை இது. எவ்வளவு நேர தாமதம் இயல்பானது என்பதுதான் இங்கே கேள்வியே. சில ஆண்களுக்கு நீண்டநேரம் உறவில் ஈடுபடுவது என்பது ஒருவித 'கெத்து' ஃபீலிங்கை, திருப்தியைத் தரும். அதுவே. சில ஆண்களுக்கு முடிந்தும் முடியாமல் தொடரும் செக்ஸ் உறவு ஒருவித விரக்தியை, மன அழுத்தத்தைக் கொடுக்கும். செக்ஸ் உறவு செக்ஸ் உறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதை வைத்து, சம்பந்தப்பட்ட ஆணுக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பாதிப்பு இருப்பதாக முடிவுக்கு வந்துவிட முடியாது. விந்தை வெளியேற்ற முடியாத நிலையும், அது தரும் விரக்தியும், அந்த ஆணை மனத்தளவிலும் பாதிக்கும்போது அவருக்கு 'மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்' பிரச்னை இருக்கலாமோ என சந்தேகிக்கலாம். மக்கள்தொகையில் 8 சதவிகித ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்கின்றன புள்ளிவிவரங்கள். டிலேடு இஜாகுலேஷன் பிரச்னையோடு வரும் ஆண்களுக்கு முதலில் மருத்துவ ரீதியான பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு, முதுகுத்தண்டில் அடிபட்டதன் விளைவு என ஏதேனும் இருக்கிறதா என்று மருத்துவர்கள் கேட்டறிவார்கள். அப்படி எந்தப் பிரச்னை இல்லாதபட்சத்தில் அந்த ஆணை, செக்ஸ் தெரபிஸ்ட்டை சந்திக்க அனுப்புவார்கள். மன அழுத்தத்தைக் கையாளவும் கற்றுத் தரப்படும். தாம்பத்திய வாழ்க்கை (Representational Image) செக்ஸ் தெரபிஸ்ட்டை அணுகும்போது, சம்பந்தப்பட்ட ஆணின் உளவியல் பிரச்னைகள் கேட்டறியப்படும். உறவு வைத்துக்கொள்ளும் நிலை, இடம் போன்றவை கேட்கப்படும். மனைவியின் மனநிலையும் உடல்வலியும் புரியவைக்கப்படும். தொடர் கவுன்சலிங் மூலம் அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, உங்கள் நண்பரை பாலியல் மருத்துவரையோ, செக்ஸ் தெரபிஸ்ட்டையோ அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `தாம்பத்திய உறவு முடிஞ்சதுமே கணவர்கள் தூங்குறதுக்கு இதுதான் காரணம்!' | காமத்துக்கு மரியாதை - S3 E41
Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?
Doctor Vikatan: என் குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அது உடல்நலத்துக்கு கெடுதல் ஆனதா?... போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சின்ன கடைகள் தொடங்கி, பெரிய கடைகள் வரை போலி பனீர் பயன்பாடு அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது. காரணம், பனீரின் விலைதான். 'அனலாக் பனீர்' (Analogue Paneer) என அழைக்கப்படும் இந்த பனீர், செயற்கையானது, விலை மலிவானது. இத்தகைய போலி பனீரை, பாம் ஆயில், ஹைட்ரஜனேட்டடு வெஜிடபுள் ஆயில், ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து, பாலில் இருந்து பெறப்படும் திடப்பொருள், எண்ணெயையும் தண்ணீரையும் சேர்க்கும்போது அவை இரண்டும் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகச் சேர்வதற்கான எமல்சிஃபையர் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கிறார்கள். பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். பனீர் அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். அதைவிட அடிமட்ட விலைக்கு பனீர் கிடைக்கிறது என்றால் அது அசல்தானா என்று செக் செய்ய வேண்டும். அசல் பனீர், உதிர்த்தால் உதிரும்படியும் மென்மையாகவும் இருக்கும். போலி பனீர் என்றால், ரப்பர் தன்மையுடன் கடினமாக இருக்கும். சிறிதளவு பனீரில் சில துளிகள் அயோடின் திரவத்தை விட்டால், போலி பனீராக இருந்தால், அது நீலநிறமாக மாறும். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து. அசல் பனீர் என்றால் நிறம் மாறாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுவது, உணவைத் தவிர்ப்பது, உடல்நலமில்லாத போது எப்படி இருப்பது சரி?
Doctor Vikatan: பொதுவாக உடல்நலமில்லாத போது பெரும்பாலும் பசி இருக்காது. ஆனால், “சாப்பிட்டால்தான் மருந்து வேலை செய்யும்; நன்றாகச் சாப்பிட வேண்டும்” என்பார்கள் சிலர். இன்னும் சிலரோ, “உடல்நலமில்லாத போது உணவைத் தவிர்ப்பதுதான் சரியானது” என்கிறார்கள். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் யோ. தீபா. இயற்கை மருத்துவர் யோ. தீபா உடல்நலமில்லாத போது பட்டினி இருப்பது என்பது மிகச் சிறந்த மருத்துவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “பட்டினி கிடப்பது” என்பதைக் நல்ல உடல்நிலையில் இருக்கும்போது, பசியோடு இருக்கும்போது உணவைத் தவிர்ப்பது எனப் புரிந்துகொள்ள வேண்டாம். இதை விரதம் அல்லது உபவாசம் என்று புரிந்துகொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க, பல வகையான நோய்களின் வீரியத்தைக் குறைக்க... என விரதம் என்பது மிகவும் உபயோகமானது. விரதம் என்பது இன்று, நேற்று வந்ததல்ல; காலங்காலமாக வழக்கத்தில் உள்ளதுதான். அதன் பலன்களை நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால்தான், மதநம்பிக்கையோடு இணைத்துச் சொன்னார்கள். நம் உடலில் ஏதேனும் இன்ஃபெக்ஷனோ அல்லது இன்ஃப்ளமேஷன் எனப்படும் வீக்கமோ ஏற்பட்டால், அது பல காலமாக நம் உடலில் நீடித்தாலோ, குறிப்பிட்ட காலத்தில் நோயாகப் பிரதிபலிக்கும். விரதமிருப்பதன் மூலம் இந்த இன்ஃபெக்ஷன் மற்றும் இன்ஃப்ளமேஷன் ரிஸ்க்கை குறைக்க முடியும் என்றும், பெரிய நோய்பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. விரதம் விரதம் நல்லதுதான் என்றாலும், உபவாசம் இருக்கும் தினத்தில் எதையுமே சாப்பிடாமல் இருப்பது கூடாது. விரதம் இருக்கும்போது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் இருக்கும்போது நிறைய தண்ணீர், ஜூஸ், இயற்கை உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்!' - சொல்கிறார் மருத்துவர் கு.சிவராமன்
பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும் குறைவான, ஆரோக்கியமான உடல்வாகைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 65 சதவிகிதம் பெண்கள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் என பல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். கூடவே தனிமை உணர்வு, மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனதுக்கும் நிம்மதியின்மையைத் தந்துவிடும். இந்த காலகட்டத்தை இதமாக கடப்பதற்கான வழிகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான் எலும்புகளின் கால்சியம் அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் கால்சியம் குறையும். சாதாரணமாக தினமும் 1,000 மி.கி கால்சியம் தேவைப்பட்டால், மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியம். மாதவிடாய் முடியும் நேரத்தில் கால்சியம் மட்டும் போதாது; அதை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் * உடற்பயிற்சி மிக அவசியம் இதுவரை நடைப்பயிற்சி செய்யாதவர்கள்கூட இனி அவசியம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பவை. Menopause - Walking must பிராணாயாமம் * மனப்பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு பிராணாயாமம் மற்றும் ‘சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். சூரிய வணக்கம் செய்வது உடலின் ஆறு சக்கரங்களை வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும். * பாலில் கால்சியம் கிடைக்கும். அதைவிட மோரே சிறந்தது. ஒரு குவளை மோரில் 250 மி.கி கால்சியம் கிடைக்கும். * சில வகை கீரைகள், வெண்டைக்காய், சோயாபீன்ஸ், தோலுடன்கூடிய உருளைக்கிழங்கு, அத்திப்பழம், பாதாம் பருப்பு, இவற்றில் கால்சியம் உண்டு. * சூரிய ஒளியில் வளரும் காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உண்டு. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! மெனோபாஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை! * உணவில் 30 சதவிகிதம் பழங்களாக இருக்கட்டும். சிவந்த நிறமுள்ள மாதுளை, கொய்யா, பப்பாளி ஆகியவை கர்ப்பப்பை புற்றுநோயையும் மார்பகப் புற்றுநோயையும் தடுப்பவை. * ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தோலுள்ள உளுந்து, நவதானியக் கஞ்சி, `டோஃபு’ எனப்படும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பு, கால்சியம் நிறைந்த கேழ்வரகு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். `` ``மெனோபாஸ் மன அழுத்தம் என்னைத் தற்கொலைவரை கொண்டு சென்றது!'' - நடிகை நளினி * பால் சேர்க்காத தேநீர், அதிலும் கிரீன் டீ அருந்துவது நல்லது. தேநீரைக் கஷாயம் போடுவதுபோல் காய்ச்சி எடுக்கக் கூடாது. அது தேநீர் தரும் பலன்களைக் குறைத்துவிடும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4 - 5 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்! மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில் உள்ள பெண்களுக்கான தினசரி உணவுப் பட்டியல் * காலை - நீராகாரம் அல்லது தேநீர். முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு இரண்டு. * காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் இரண்டு, ஒரு வாழைப்பழம். * மதிய உணவு - கருங்குறுவை அல்லது மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி அல்லது வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை / பசலைக் கீரை, சுரைக்காய் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு. * மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டலுடன் தேநீர். * இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் பால் சேர்த்துக்கொள்ளலாம்). இவற்றை மட்டும் தினமும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும்.
Doctor Vikatan: ஃபேஷனுக்காக சைடு காது குத்திக்கொண்டால் இன்ஃபெக்ஷன் வருமா? தவிர்க்க என்ன வழி?
Doctor Vikatan: என் மகளுக்கு 14 வயதாகிறது. ஏற்கெனவே காது குத்தியிருக்கிறோம். இப்போது ஃபேஷனுக்காக காதின் பக்கவாட்டில், இன்னும் இரண்டு துளைகள் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அப்படிக் குத்தினால் ஏதேனும் இன்ஃபெக்ஷன் வருமோ என பயமாக இருக்கிறது. அதைத் தவிர்க்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் காதுகளின் பக்கவாட்டில் சைடு பியர்சிங் (இரண்டாவது துவாரம் போட்டுக்கொள்வது) செய்து கொள்ள முடிவெடுத்தால், முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் எங்கே குத்தப் போகிறீர்கள் என்பதில் முதலில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் முதல் துளை, இரண்டாவது துளை என இரண்டையும் குத்தத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், முதல் துளை குத்தி, அது முழுமையாக ஆறிய பிறகுதான் அடுத்ததைக் குத்த வேண்டும். ஒரே நேரத்தில் வேலை முடிந்துவிடும் என அவசரப்பட்டு இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம். இயர்லோப் எனப்படும் காதின் அடிப்பகுதியில் (வழக்கமாக துளையிட்டு, தோடு அணிகிற இடம்) ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் என்பதால், அங்கே துளையிட்டால் சீக்கிரம் காயம் ஆறிவிடும். அதுவே, காதின் மேற்புறத்தில் உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்பு பகுதியில் துளையிடும்போது, அது அவ்வளவு சீக்கிரம் ஆறாது. இந்த இடத்தில் ரத்த ஓட்டம் சிறிது குறைவாக இருப்பதுதான் காரணம். ஃபேஷனுக்காக காது குத்தினால் இன்ஃபெக்ஷன் வருமா? சுகாதாரமான இடத்தில், முறைப்படி பயிற்சிபெற்ற நபரிடம் மட்டுமே காது குத்திக் கொள்ள வேண்டும். காது குத்திய பிறகான பராமரிப்பும் மிக முக்கியம். காது குத்திய பிறகு ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட்டை சில இடங்களில் பரிந்துரைப்பார்கள். அதை உபயோகிப்பதும் நல்லதுதான். சில இடங்களில் கன் (gun) போன்ற கருவியை வைத்துத் துளையிடுகிறார்கள். ஆனால், அதைவிடவும் 'ஹாலோபோர் ஊசி' ( hollow bore needle ) தான் சிறந்தது. இவை எல்லாவற்றையும்விட முக்கியம், துளையிட்ட பிறகு நீங்கள் உபயோகிக்கப்போகிற நகை. கவரிங், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன ஆபரணங்கள், காது குத்திய இடத்தில் ஒவ்வாமையை உருவாக்கலாம். அந்த இடத்தில் அரிப்பு, சீழ் கோப்பது போன்றவற்றுக்குக் காரணமாகலாம். எனவே, இந்த எல்லா எச்சரிக்கை நடிவடிக்கைகளையும் மனதில் கொண்டு, காது குத்தும் முடிவை மேற்கொள்வதுதான் பாதுகாப்பானது. Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?
``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அவள் விகடன் நடத்திய ‘ஹெல்த் கான்க்ளேவ் 2025’ சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக மக்கள் சென்றுகொண்டிருந்த நிலை மாறி, இன்று 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக மக்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். தமிழ்நாடு ‘மெடிக்கல் ஹப்’ (Medical Hub) ஆக மாறி வருகிறது” என்றார். இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டவர்களில் 25%, அதாவது ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். “ மக்களைத் தேடி மருத்துவம் , நம்மை காக்கும் 48 , இதயம் பாதுகாப்போம் , சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் , பாதம் பாதுகாப்போம் , நடப்போம் நலம் பெறுவோம் , மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் , தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் ” என்று ஏராளமான மேம்பாட்டு திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. அவள் விகடன் ஹெல்த் கான்கிளேவ் ‘ மக்களைத் தேடி மருத்துவம் ’ திட்டம் இரண்டரை கோடி பயனாளர்களை நெருங்கியுள்ளதை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 2024-ல் விருது வழங்கி சிறப்பித்தது. மாநில அரசின் ஒரு துறைக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாது. 500-க்கும் மேற்பட்ட அத்தகைய கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் சேர்த்துள்ளோம். மேலும், பெண்களுக்கென்று பிரத்யேகமாக “Women’s Wellness on Wheels” என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். நாம் நலமுடன் வாழ நல்ல உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம். அதிலும் நடைப்பயிற்சி மிகவும் முக்கியம். நான் தினமும் 14 முதல் 15 கிமீ நடப்பேன். 2004-ல் நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு மருத்துவர்கள் “என்னால் நடக்கவே முடியாது” என்றார்கள். இன்று நடப்பது மட்டுமல்லாமல் சிரசாசனம் வரை செய்கிறேன். 165 மாரத்தான்களில் ஓடியுள்ளேன். இரண்டு ஆண்டுகளில் 25 மாரத்தான்கள் ஓடி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் , மூன்று ஆண்டுகளில் 50 மாரத்தான்கள் ஓடி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் , நான்கு ஆண்டுகளில் 75 மாரத்தான்கள் ஓடி உலக சாதனையிலும் இடம் பெற்றுள்ளேன், என்று தனது உடல்நல அக்கறையைப் பகிர்ந்துகொண்டார். அவள் விகடன் ஹெல்த் கான்கிளேவ் வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், பாத நலன் குறித்து நீரிழிவு பாத சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் கேசவன் , சிறுநீரக நோய்கள் குறித்து சிறுநீரக மருத்துவர் வெங்கட் சுப்ரமணியம் , மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து புற்றுநோய் மருத்துவர்கள் கிரண் குமார் மற்றும் நவீன் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று, பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். ``மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர் விருப்பம்” - மா.சுப்பிரமணியன்
Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி செய்யப்படுகிறது?
Doctor Vikatan: திருமணம் தாண்டிய உறவுகளிலும், திருமணமாகியிருந்த நிலையிலும்கூட, இருவருக்குப் பிறக்கும் குழந்தையை தனதல்ல என அந்த ஆண் மறுக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். அப்போதெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் பற்றியும் பேசுகிறார்கள். அதென்ன டிஎன்ஏ டெஸ்ட்... அது எப்படிச் செய்யப்படுகிறது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் டிஎன்ஏ டெஸ்ட்டிங் அல்லது பெட்டர்னிட்டி டெஸ்ட்டிங் என்பது அறிவியல்ரீதியான ஒரு பரிசோதனை முறை. இந்தப் பரிசோதனையின் மூலம் ஓர் ஆண், அவருக்குப் பிறந்ததாகச் சொல்லப்படுகிற குழந்தைக்கு மரபியல் ரீதியான தந்தை என்பதை உறுதி செய்யலாம். டிஎன்ஏ பரிசோதனையில், குழந்தையின் டிஎன்ஏவை, அப்பாவின் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். சில நேரங்களில், தேவைக்கேற்ப அம்மாவின் டிஎன்ஏ உடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். டிஎன்ஏ பரிசோதனையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், டிஎன்ஏ என்பது என்ன என்ற தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது. டிஎன்ஏ என்பது மரபணு வரைபடம் (ப்ளூப்ரின்ட்) போன்றது. அது நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. பிறக்கும் குழந்தையானது தாயிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் தந்தையிடமிருந்து 50 சதவிகித டிஎன்ஏவையும் கொண்டிருக்கும். அந்த அடிப்படையில், டிஎன்ஏவில் குறிப்பிட்ட சில விஷயங்களை குழந்தை மற்றும் தந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆண்தான், குழந்தைக்கு மரபியல்ரீதியான தந்தையா என்பது உறுதிசெய்யப்படும். ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்படும். பக்கல் ஸ்வாப் (Buccal Swab) எனப்படும் கன்னங்களின் உள்பகுதியிலிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும். சில நேரங்களில் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்படும். ஆனால், Buccal Swab என்பது வலியற்ற, எளிய முறை என்பதால் பெரும்பாலும் அதுவே மேற்கொள்ளப்படும். குழந்தை மற்றும் தந்தையிடமிருந்து இப்படி மாதிரிகள் பெறப்படும். பரிசோதனையின் துல்லியத்தை உறுதிசெய்ய, சில நேரங்களில் அம்மாவிடமிருந்தும் மாதிரி பெறப்பட்டு பரிசோதிக்கப்படும். குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட மரபணு (Gene) அல்லது மரபியல் குறிப்பான் (Genetic Marker) அமைந்துள்ள துல்லியமான இடம் அல்லது நிலையை லோக்கஸ் என்கிறோம். இது குழந்தைக்கும் தந்தைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். டிஎன்ஏ முழுவதும் மேட்ச் ஆகிவிட்டால், அந்த ஆண்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதியாகும். மேட்ச் ஆகாத பட்சத்தில், அவர் அந்தக் குழந்தையின் தந்தையில்லை என்ற முடிவுக்கு வருவார்கள். கோர்ட் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற டெஸ்ட் அவசியமாகிறது. சட்டத்துக்குப் புறம்பான உறவுகள், அதன் காரணமாகப் பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதில் எழுந்த சிக்கல் போன்றவற்றைக் கண்டறியவே இந்த டெஸ்ட் வலியுறுத்தப்படும். கோர்ட் ஆர்டர் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட் செய்யப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் சட்டப்படி மதிப்புக்குரியது. அரசு அங்கீகரித்த பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். தனியார் பரிசோதனைக்கூடங்களில் செய்யப்படுகிற டெஸ்ட், சட்டரீதியான விஷயங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன்; ஆனால் -மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லும் விளக்கம்
'அதிபருக்கே நடக்குமென்றால், சாமானியப் பெண்ணின் நிலை?' - பாலின சமத்துவமும் அரசின் கடமையும் #Hersafety
பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல் நடக்க, ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் கோவையில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு மீண்டும் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடலைத் துவக்கி இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதி கோவையில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் காலியான சாலையோரத்தில் காரில் இருந்தபோது மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர். அவர்களைத் தடுக்கமுயன்ற ஆண் நண்பரை அடித்து போட்டு அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, தூக்கி வீசிவிட்டு சென்றிருக்கின்றனர். 2012ம் ஆண்டு டெல்லியில், ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில்செல்கிறார். ஓட்டுநர், ஒரு மைனர் உட்பட பேருந்தில் இருந்த ஆறு ஆண்கள், அந்த ஆண் நண்பரை அடித்து போட்டு பெண்ணைக் கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி இருவரையும் சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவத்தை எவராலும் மறந்துவிட முடியாது. நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பெண் வாடிக்கையாளர் மீது பாலியல் சீண்டல்; வைரல் வீடியோவால் பரபரப்பு நிர்பயா வழக்கு குறித்த ஆவணப்படத்தில், தான் செய்த பாலியல் வல்லுறவு அந்தப் பெண்ணுக்கும் அவரது ஆண் நபருக்கும் புகட்டப்பட்ட பாடம் என்றும், இரவு நேரத்தில் தனியாக பெண்கள் வெளியில் வந்தால் அவர்களுக்கு இதுதான் நடக்கும் என்றும் குற்றவாளி முகேஷ் சிங் பேசியிருந்தார். 2013-ல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு மேஜர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2020-ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கியபோது, மெக்ஸிகோ நாட்டின் 60 வயது பெண் அதிபர் கிளவுடியா ஷெயின்பம், மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் போது, மதுபோதையில் ஒருவர் அவர் உடல் மீது தகாத முறையில் கைவைக்க முயற்சி செய்த செய்தி வந்துசேர்ந்தது. சம்பவத்திற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் கிளவுடியா அந்த நபர் மீதுதான் புகாரைப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இது போன்ற ஒரு சம்பவம், ஒரு அதிபருக்கே நடக்கும் என்றால், நாட்டில் உள்ள சாமானிய பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை வைத்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 6 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. நிர்பயா மீது தொடுக்கப்பட்ட வன்முறை ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வந்தது. முகேஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், ஒரு பெண்ணின் இடம் சமயலறையில். ஒரு பெண் என்றும் ஒரு ஆணுக்குச் சமமானவள் அல்ல அதிபர் கிளவுடியாவுக்கு நேர்ந்த சம்பவம், அதிகாரம் கொண்டிருக்கும் பெண்ணுமே கூட ஆணுக்குச் சமமல்ல என்கிற சிந்தனையில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். பெண் எத்தனை உயர்வான இடத்துக்குச் சென்றாலும், அவளைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தாலும், தன்னால் அவளின் உடல் மீது கை வைக்க முடியும் என நினைக்கும் ஆண் மைய அதிகார சிந்தனையிலிருந்து விளைந்த சம்பவம்! நிர்பயா வழக்கை கிடப்பில் போட்டுவிட்டார்கள்; வருந்தும் தாய் நிர்பயா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பிறகுதான் அரியலூர் நந்தினி கூட்டுப் பாலியல் வல்லுறவு, பொள்ளாச்சி சம்பவம், ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வல்லுறவு, தற்போது கோவை கூட்டுப் பாலியல் வல்லுறவு எனப் பல சம்பவங்கள் நேர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை நாம் இன்றும் தொடர்ந்து பார்க்கிறோம். தூக்குத் தண்டனை வரை கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நிகழும் வன்முறை உலகளவில் மிகவும் பரவலாகவும் இடைவிடாமலும் காணப்படும் மனித உரிமை மீறல்களில் முக்கியமான ஒன்று. உலகளவில், மூன்று பெண்களில் கிட்டத்தட்ட ஒருவராவது தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு, நெருங்கிய துணையாலோ அல்லது துணையல்லாதவர்களின் மூலமாகவோ அல்லது இரண்டு தரப்பினாலுமோ ஏதோ ஒரு கட்டத்தில் ஆளாக்கப்படுகிறார். கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety 2023 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறை காரணமாகக் குறைந்தபட்சம் 51,100 பெண்கள், தங்களின் துணைவர் அல்லது குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்கிறது ஐநா பெண்கள் அமைப்பு. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு. எனினும் மக்கள்தொகையில் தனக்குச் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கும் பாலினத்தை இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு காலங்காலமாக நிலவி வருகிறது. இந்த ஆணாதிக்க போக்கு பெண்களைத் தங்களுக்குக் கீழாகவும், தங்களின் இச்சைகளைப் போக்கும் போகப்பொருளாகவும் பார்க்க வைக்கிறது. உலகளவில் இந்தப் போக்கு இருந்தாலும், இந்தியா போன்ற சாதிய, மத, நவதாரளாதவாத நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கதன்மையுடன் இருக்கும் ஆண்களின் மனநிலை, இந்தியப் பெண்களை இனப்பெருக்கம் செய்யும் கருவிகளாக மட்டுமே பார்க்கிறது. குடும்பம் என்னும் நிறுவனம், பண்பாடு என்கிற போர்வையில் இந்தச் சிந்தனைப்போக்கை போதித்து வளர்த்தெடுக்கும் பயிற்சி மையமாகத் திகழ்கிறது. பாலியல் வன்கொடுமை கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார் பணிவிடை செய்து, இனப்பெருக்கம் செய்து, சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதியில்லாத, பலவீனமானவர்களாக பெண்களைப் பார்க்க குடும்பங்கள் கற்றுக்கொடுக்கிறது. விளைவாக, பெண்களை உடல்ரீதியிலான போக இச்சை பொருட்களாகவும், தங்களுடைய உடைமைகளாகவும், அதிகாரம் செலுத்தப்படக் கூடிய அடிமைகளாகவும் பார்க்கும் வழக்கமே தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது. பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வை, பாலியல் இச்சைகளாக பெண்களை அவதானிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஆதிக்கம், அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆண்களின் சிந்தனை அடித்தளத்தில் வேரூன்றி இருக்கிறது. இதனால் அவர்கள் பெண்ணின் உடலை தங்கள் பாலியல் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாக நினைக்கின்றனர். இந்தச் சிந்தனைதான், ஆண்கள் செய்யும் பாலியல் குற்றத்தை நியாயப்படுத்தும் இடத்திற்கு அவர்களை எடுத்து செல்கிறது. பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடும்தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமும் இதுதான். `மகள்களுக்கு’ எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பது எப்போது? | #HerSafety “ஒரு பெண் ஏன் இரவு நேரத்தில் வெளியே வருகிறார்?” என முகேஷ் சிங் கூறியதுபோலவும், “ஏன் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவில் செல்கிறார்?” என கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிர்வினையாகப் பலர் எழுதிவருவது போலவும் ஆண்களின் மனநிலை இருப்பதற்கு காரணம், அந்தச் சிந்தனை ஆண்களின் அதிகார உணர்வில் இருந்து வருகிறது என்பதுதான். இவர்களுக்கு தண்டனைகள் எந்த அச்சத்தையும் கொடுப்பதில்லை. மாறாக மேலும் பெண்கள் மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கும் போக்குத்தான் தொடர்கிறது. சாதியும் மதமும் போதிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை குடும்பக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தி சமூகத்திலும் அரச நிறுவனங்களிலும் புகுத்துகிறது. இதனால் சமூகப்படிநிலையில் உள்ள அனைத்து மட்டங்களிலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாகப் பார்க்கும் போக்கு தொடர வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால், பெண்கள் மீதான வன்முறைக்கும், சுரண்டலுக்குமான வழிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. பாலியல் தொல்லை தினசரி வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனைப் போக்கிலிருந்து பாலின சமத்துவத்தை நோக்கிய மன மாற்றத்தைக் கொண்டுவர அரசுகள் முதலில் பாலின சமத்துவ அரசுகளாக இருக்க வேண்டும். எப்படி ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பில் தனது சிந்தனையைக் கொண்டு வருகிறார்களோ, எப்படி லட்சக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் 'app' -களை வடிவமைக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர் தனது சிந்தனையை அந்தச் செயலிகளுக்குள் கொண்டு வருகிறாரோ, அது போல கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் தலைமையும் பாலின சமத்துவம், பெண்கள் விடுதலை, பெண் உரிமை, பெண் பாதுகாப்பு முதலிய பார்வைகளைத் தனது நிர்வாகத்தில் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஆபத்தைத் தடுப்பது என்பதாக மட்டும் கருதப்படாமல், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் இடங்களிலும் வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் பெண்கள் வாழ்வதுதான் எனக் கருதப்படும் சிந்தனை மாற்றம் ஏற்படவேண்டும். Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety பெண்களுக்கான வாழ்க்கை, கல்வி மற்றும் உறவுக்கான தேர்வுகளில் தங்களுக்கான விருப்பத்துடன் வாழ்வதும் பொருளாதார சுதந்திரத்துடன் பெண்கள் வாழ்வதற்கான வழிகளை உறுதிப்படுத்துவதும்தான். உண்மையான பெண் பாதுகாப்பு ஆகும். அதுவே, பெண் விடுதலையை நோக்கி செல்வதற்கான உண்மையான வழியாகவும் இருக்க முடியும்! பாலியல் வன்கொடுமை வரலாறு நெடுக அரசுகள் போலியோ, காலரா, எய்ட்ஸ் போன்ற பல உயிர்க் கொல்லி நோய்களை அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றன. சமீபமாகப் பரவிய கொரோனா நோய்த்தொற்றைக் கூட எதிர்ப்பு மருந்துகள் மூலம் கையாளமுடிந்திருக்கிறது. ஆனால் அதே கொரோனா காலத்தில் கொரோனோ போலவே அதிகரித்து, Shadow Pandemic என ஐநாவால் அழைக்கப்பட்ட குடும்ப வன்முறைக்கு இன்றுவரை தீர்வு இல்லை என்பதே யதார்த்தம். ஏனெனில் அதிகாரம் ஏறும் அரசுகளுக்கு, உழைப்பு சக்தியாகப் பயன்பட மக்கள் வேண்டும், அவ்வளவுதான். அந்த மக்கள் மத்தியில் நிலவும் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைந்து, பாலின சமத்துவம் கொண்டு வர வேண்டிய தேவையை அரசுகள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில் அதிகாரக் கட்டமைப்பு ஆணாதிக்கத்துக்கு ஏதுவாகச் செயல்பட மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. - கவிதா ராஜேந்திரன் `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety
Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?
Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்தம் பொதுவாக 120/80 இருக்கும். இது 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே இருந்தால் அதை நாம் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) என்று சொல்கிறோம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே குறையும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து முக்கியமான உறுப்புகளுக்கு, குறிப்பாக, மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் போன்றவற்றுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்வது குறைகிறது. இதன் விளைவாக சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. மூளைக்கு ரத்தம் குறையும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் வரலாம். சில நேரங்களில் நினைவில்லாமல் கீழே விழவும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே ரத்த அழுத்தம் குறையும்போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். கண் பார்வை மங்கலாகத் தெரியும். சிலருக்கு மனக் குழப்பமும் மறதியும் ஏற்படும். தொட்டுப் பார்த்தால் ஜில்லென்று இருக்கும். மற்றும் சிலருக்கு வியர்வை இருக்கும். சில நேரங்களில் மயக்கமாகி கீழே விழுவதும் வாய்ப்பாக இருக்கிறது. தலைச்சுற்றல் Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? நீண்ட காலமாகக் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். இதயத்திற்கு ரத்தம் குறைவதால், இதயத்துடிப்பு சீரற்றதாகவும் அசாதாரணமானதாகவும் மாறலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மார்பில் வலி, படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். ரத்தம் வடிகட்டப்படுவது குறைவதால், சிறுநீரில் அசுத்தமான பொருள்கள் வெளியேறுவது குறையும். ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கலாம், உடலில் தண்ணீர் தேங்கி, வீக்கங்கள் ஏற்படலாம். சில நேரங்களில், ரத்தம் அழுத்தம் அதிகமாகக் குறைந்து தொடர்ந்து நீடித்தால், ஷாக் (Shock) என்று சொல்லக்கூடிய உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது மிகவும் குறைந்த ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. சிலருக்கு இயற்கையாகவே குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். குறிப்பாக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இந்த மாதிரி இயற்கையாகவே ரத்த அழுத்தம் சற்று குறைந்த நிலையில் இருந்து, அவர்களுக்கு நீரிழப்பு இல்லாமல், வேறு பிரச்னைகளோ அல்லது வேறு நோய்களோ இல்லாமல் இருந்தால், அவர்கள் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. வாந்தி, பேதி அல்லது அதிக அளவில் வியர்வை வெளியேறுதல் போன்றவற்றால் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு ஏற்படும். நீரிழப்பு உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்? நீண்ட நேரம் பசியுடன் சாப்பிடாமல் இருந்தாலும் ரத்த அழுத்தம் குறையலாம். அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உட்கொள்ளும் மருந்துகளின் (உதாரணமாக, பீட்டா-பிளாக்கர்கள் அல்லது டையூரிடிக்ஸ், ஆல்ஃபா பிளாக்கர்கள்) தாக்கம் அதிகமாக இருக்கும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம். மனச்சோர்வுக்கான மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டால், இதயத்துடிப்பு சீரற்று மாறினால் அல்லது இதயச் செயலிழப்பு அதாவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறைவதாலும் ரத்த அழுத்தம் குறையலாம். இது போன்ற நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism) போன்ற அல்லது அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டுக் குறைவு போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு அதிகம். விபத்துகளில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது திடீர் ரத்த இழப்புக்கு மிக முக்கியமான காரணம். விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் Golden Hour என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்த அழுத்தத்தை, ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்து, உடனடியாகச் சரிசெய்தால், 95 சதவிகிதம் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு அதிகம். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் இழப்பு ஏற்பட்டால், அதற்கான ரத்த மாற்று (Blood Transfusion) செய்து உடனடியாகச் சரிசெய்ய முடியும். ஆபத்தான கிருமித்தொற்று அதிகரித்து, செப்சிஸ் அல்லது செப்டிக் ஷாக் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறையலாம். செப்டிக் ஷாக்கிற்கு உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள் கொடுத்து, ரத்த அழுத்தத்தை உடனடியாகச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இதயம், மூளை, குறிப்பாக.. சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். ரத்தம் குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்; வெறும் வயிறாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். பலவீனமாக இருப்பவர்கள், நீரிழப்பு உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் திடீரென எழுவதைத் தவிர்க்க வேண்டும். படுத்து எழுந்தவுடன், மெதுவாக உட்கார்ந்து 30 முதல் 40 நொடிகள் இருக்கவும். பிறகு நின்று 20 நொடிகள் கழித்து நடக்கவும். இரவு தூக்கத்தில் BP குறைவாக இருக்கும். திடீரென எழுவது மேலும் குறையச் செய்து மயக்கம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருந்தால், உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சையை எடுக்கவும். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சரிசெய்ய நல்ல மருந்துகள் உள்ளன. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா?
மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் - மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!
தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே... பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..! இது மைக்ரேன் கஷாயம்! ’தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது' என்றால், அது ஒற்றைத்தலைவலி. மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத்தாலேதான் வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, செல்போனை அழுத்திக்கிட்டே இருக்கிறது, தலைக்குக் குளிக்காம 'தண்ணி’ காட்டறது, எதற்கெடுத்தாலும் டென்ஷன், இதெல்லாம்தான் பித்தத் தலைவலிக்கு முக்கியக் காரணங்கள். இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100 மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும். இது சைனசைடிஸ் தலைவலிக்கு மூக்கு ஒழுகி, தும்மலோடு வர்றது சைனசைடிஸ் தலைவலி. இதுக்கு, இஞ்சியைப், பொடிசா நறுக்கி நெய் சேர்த்து பொன் நிறமா நீர் வத்தற வரைக்கும் வறுத்துக்கணும். இதே அளவுக்குச் சீரகத்தையும் வறுத்து எடுத்துக்கணும். இரண்டையும் சேர்த்த அளவுக்கு வெல்லத்தை எடுத்து உதிர்த்துக்கணும். எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பாட்டுக்கு பின்னால, அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தா, சைனசைடிஸ் தலைவலி போறதோட திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்காது. தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..! தலைவலியோட சளி, இருமலும் சேர்ந்து இருந்தா தலைவலியோட சளி, இருமலும் சேர்ந்து இருந்தா, ஒரு டம்ளர் பசும்பாலில் 5 கிராம் அதிமதுரம், 5 கிராம் பெருஞ்சீரகம், 10 கிராம் பனங்கல்கண்டு... இல்லேன்னா, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடா தினமும் குடிச்சிட்டு வந்தா, மூணு பிரச்னையும் சரியாகும். ’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா...’’ - இது மதுரை மனிதாபிமானம்! தலைவலிப் போக்கும் தைலங்கள்! தலைவலிக்குன்னே சுக்குத் தைலம், கொம்பரக்குத் தைலம், குறட்டப்பழத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம்னு சித்த வைத்தியத்துல நிறையத் தைலங்கள் இருக்கு. இதுல ஏதாவது ஒண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு வந்தா தலைவலி பறந்திடும். ஆனா, எல்லாருக்கும் தைலக்குளியல் சரியா வரும்னு சொல்ல முடியாது. நாடி பிடிச்சு சொல்ற மருத்துவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். இப்பல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூடத் தலைவலி வருது. பார்வைத்திறன் குறைவுகூடக் காரணமாயிருக்கலாம். இதுக்கு, கண் மருத்துவரைத்தான் பார்க்கணும். பி.பி தலைவலிக்கு என்னத் தீர்வு? பி.பி கட்டுக்குள் இல்லைன்னா, தலைவலிதான் முதல் அறிகுறி. அதுவும் குறிப்பா காலையில் எழுந்ததும் தலை வலிச்சா, முதல்ல ரத்த அழுத்தத்தை 'செக்’ பண்ணிக்கணும். அதுவும் உட்கார்ந்து, படுத்து, நின்னு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சாதான், பிரச்னையை சரியா கண்டுபிடிக்கலாம். அந்தக்கால டாக்டரெல்லாம் அப்படித்தான் பார்ப்பாங்க. சரியான மருந்தை மருத்துவர் பரிந்துரையோட சாப்பிடுவது முக்கியம். அதோடு, முருங்கைக் கீரை சூப், வெள்ளைத்தாமரை பூ இதழ் உலர்த்திய பொடி அரை ஸ்பூன் தினசரி எடுத்துக்கலாம். கூடவே, 1 லிட்டர் நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் சீரகம் போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தேய்ச்சு வாரம் இருமுறை குளிக்கணும். ராத்திரி எந்தத் தடையுமில்லாம, 6 மணி நேரம் தூங்கணும். தினசரி பிராணாயாமப் பயிற்சி. அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்க, சீதளி பிராணாயாமம் செய்தா, தலைவலி காணாமலேயே போகும். Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!
Heart Attack வருமான்னு முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம் | Calcium Scoring Test | Vikatan
Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும் இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தலைச்சுற்றலுக்கு இ.என்.டி மருத்துவர் ஏன்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா வெர்ட்டிகோ பிரச்னைக்கு எந்த மருத்துவரைச் சந்திப்பது என்ற குழப்பம் பலரிடமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு ஆலோசனை பெற காது, மூக்கு, தொண்டை மருத்துவர் (இ.என்.டி) அல்லது நரம்பியல் மருத்துவர் அல்லது பொது மருத்துவர், இவர்களில் யாரை வேண்டுமானாலும் அணுகலாம். சில நேரங்களில் இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை கொடுக்க ஒரு குழுவே சேர்ந்து இயங்க வேண்டியிருக்கலாம். வெர்ட்டிகோ பிரச்னை ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். காது தொடர்பான பிரச்னையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். நரம்பியல் பாதிப்புகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். பொதுவான காரணங்களால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வெர்ட்டிகோ (Vertigo) முதலில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்ப்பது அவசியம். உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதை முழுமையாகப் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகு, தேவையின் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைச் சந்திப்பதுதான் சரியானதாக இருக்கும். இந்தப் பிரச்னைக்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபரின் முழுமையான ஆரோக்கிய தகவல்கள் கேட்கப்படும். வெர்ட்டிகோ தொடர்பான முதல் அறிகுறி எப்போது ஏற்பட்டது, எப்படிப்பட்ட அறிகுறி என்பது மிக முக்கியமாகக் கேட்கப்படும். அந்த முதல் அறிகுறிதான் அந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது, எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படும் என்று முடிவுசெய்வதற்கான க்ளூவாக இருக்கும். Vertigo: குனிஞ்சு நிமிர்ந்தால் கிறுகிறுன்னு வருதா..? தீர்வு சொல்லும் இயற்கை மருத்துவர் பெரும்பாலான நபர்களுக்கும் இந்த முதல் அறிகுறி நினைவில் இருப்பதைப் பார்க்கலாம். தேவையான தகவல்களைத் திரட்டியதும், இ.என்.டி தொடர்பான மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதாவது, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து பிரத்யேகமான இ.என்.டி பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவப் பரிசோதனைகள் கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியோகிராம் சோதனை செய்யப்படும். கூடவே, காதின் உள்ளே உள்ள அழுத்தமும் அளவிடப்படும். அதற்கு 'இம்பீடன்ஸ்' என்று பெயர். அதையடுத்து உள்காது எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான டெஸ்ட் செய்யப்படும். இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு பரிசோதனையுமே இந்தப் பிரச்னையை அணுகவும், சிகிச்சையைத் தொடரவும் முக்கியமானது. எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிகிச்சை குறித்த முடிவுக்கு மருத்துவர் வருவார். அதற்கேற்ப, பிரச்னைக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். விரட்ட முடியாத வியாதி அல்ல 'வெர்ட்டிகோ'!
Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டிகள் வருகின்றன. அதற்கு குளிர்ச்சியாக ஏதேனும் கொடுத்தால், மறுபடி சளி பிடித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? அவனுக்கு சித்த மருத்துவம் உதவுமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக சந்தேகப்படலாம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டியது முக்கியம். வெந்நீர் குடிப்பதால் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்பில்லை. வெந்நீர் குடிக்கும்போது, உடலின் வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும். குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். சளி பிடித்திருக்கும் போது வெந்நீர் குடிப்பது தான் நல்லது. இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவும் போது சிக்கன் சூப் கொடுக்கலாம். ஒருவேளை உடலில் கொப்புளங்கள் வந்தாலோ, உடல் சூடாவதாக உணர்ந்தாலோ, இரண்டு நாள்களுக்கொரு முறை மட்டும் குடிக்கலாம். தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். பித்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதைக் கொண்டு, கொப்புளங்கள் வந்திருக்கலாம் அல்லது நாக்கில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இவை அனைத்தும் அதிக காரமான உணவுகளை உண்ணும் போதுதான் ஏற்படும். தொண்டை கம்மல் சளிப் பிரச்னையை சரிப்படுத்திக்கொள்ள வீட்டில் உள்ள மருந்துகளைப் பயன்படுத்தலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால், வெறும் உப்பைப் போட்டு வாய் கொப்பளித்தாலே தொண்டை கம்மல் (குரல் கம்மல்) குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் நீங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான மருந்துகள் உள்ளன. தாளிசாதிச் சூரணத்தை அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா? அடுத்து அதிமதுரச் சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதை மாத்திரைகளாகவே வாங்கி, சப்பி சாப்பிட்டாலும் சளி குறையும். இது கோழையை (கபத்தை) வெளியேற்றும் 'எக்ஸ்பெக்டோரன்ட்' (கோழை அகற்றும் செய்கை) குணத்தைக் கொண்டது. நெஞ்சில் கட்டியிருக்கும் கபத்தை வெளியேற்ற உதவும். ஆடாதோடை மணப்பாகு என்பது இது வீட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மருந்து. இதை 10 மில்லி அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்துக்கொள்ளலாம். நுரையீரல் இந்த மூன்று மருந்துகளும் ஓரளவுக்கு வெப்பம் மிகுந்த மருந்துகள்தான். ஆனால், சளிப் பிரச்னை இருக்கும்போது ஐந்து முதல் ஏழு நாள்கள் பயன்படுத்தினால் எந்தச் சிக்கலும் இருக்காது. உங்கள் மகனின் உடல்நலம் ஓரளவு சரியான பிறகு, ஒரு சித்த மருத்துவரை அணுகி நாடி பார்த்து, அவரது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அவருக்கு டான்சில்ஸ் தொந்தரவு இருக்கிறதா அல்லது சைனஸ் போன்ற பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ற நல்ல சித்த மருந்துகளையும் உணவு முறைகளையும் கொடுத்தால், கண்டிப்பான மாற்றத்தைக் காணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டும் கொடுங்கள். முடிந்த அளவுக்கு வீட்டு உணவுகளையே எடுத்துக்கொண்டு, மூன்று வேளையும் இயற்கையோடு இயைந்த உணவுமுறையைப் பின்பற்றினால் மிகவும் நல்லது. பாலில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொடுக்கும் கோல்டன் மில்க் (Golden Milk) முறையையும் தொடர்ந்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சளி இல்லாத நேரங்களில், நெல்லிக்காய் லேகியத்தை அரை டீஸ்பூன் சப்பிச் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்கச் சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?
ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். சர்க்கரை நோய் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?' 'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.' 'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?' 'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.' டயாபட்டீஸ் 'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?' 'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.' குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ்: ’சுகர் போர்ட்’ எச்சரிக்கை; பெற்றோர்களுக்கு நிபுணர் அட்வைஸ்! 'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?' ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஆனால். அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'
Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?
ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது. ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்! ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்? ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்: ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது) Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்! காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்) Apple Cider Vinegar ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்து இளம்பெண் எமோஷனல்
யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களின் உயரிய இலகுக்காக, பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். சவால்கள் நிறைந்த இந்தப் பாதையில், ஒரு தேர்வரின் மனமும் வாழ்க்கையும் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை, மான்வி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் பெண்ணின் உணர்வுப்பூர்வமான காணொளி சமீபத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஒரு மகத்தான லட்சியத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எழும் ஒரு கேள்வியாகவே அவருடைய ஆதங்கம் இன்று பார்க்கப்படுகிறது! யு.பி.எஸ்.சி தேர்வைத் தன் இலக்காகக் கொண்ட அவர், அந்தப் பயணத்தில் தான் சந்தித்த சிரமங்களைப் பதிவு செய்துள்ளார். எனது 20-களை இதற்காகவே நான் கொடுத்துவிட்டேன். பிறந்தநாள், நண்பர்கள், உறவுகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மான்வி கூறுகிறார். தேர்வு இந்தக் கடுமையான ஒழுக்கமும், வெளி உலகத்துடனான தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துக் கொண்ட தனிமையும், ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையின் மீதே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கை அடைவதற்காகத் தன்னை வருத்திக்கொண்டபோது, அவர் படிப்படியாகத் தன்னுடைய இயல்பான மகிழ்ச்சி மற்றும் அடையாளத்தையே இழந்துவிட்டதாகச் சொல்கிறார். தேர்வுப் பாதை முடிவுக்கு வந்தபோதுதான், மான்வி ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தார். எல்லாம் முடிந்த பிறகு, நான் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. யு.பி.எஸ்.சியைத் துரத்துவதற்கும், தூக்கத்தை இழந்ததற்கும் இடையில், நான் எப்போதோ என்னையே தொலைத்துவிட்டேன் என்று அவர் மன வேதனையுடன் பேசுகிறார். அவருடைய லேப்டாப் திரையில் தன் ரெஸ்யூமை எழுத முற்படும்போது, அது தோல்விகளைப் பற்றி மட்டுமே அறிந்த ஒருவருடையதைப் போல் தோன்றுவதாகவும், 'வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்' என்று தெரியாதவராக உணருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தன்னுடைய இந்தக் கடுமையான அனுபவத்திலிருந்து, மான்வி மற்ற தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைக்கிறார். தான் அனுபவித்த தனிமையின் வலியைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்ற தேர்வர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். View this post on Instagram A post shared by Manvi Srivastava (@discipline.over.motivation.now) நீங்கள் உங்கள் கனவுகளுக்காகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், தயவுசெய்து உங்களைத் தொலைத்து விடாதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு, உங்களுக்கு நீங்களே தேவைப்படுவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்பதே அவருடைய அழுத்தமான செய்தியாகும். இலக்கை அடைவதற்கான பாதையில், மனத் தெளிவுக்கும், சுயமகிழ்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.
Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா?
Doctor Vikatan: நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக இரவில் தூக்கமே இல்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே கனவாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும், மீண்டும் தூக்கத்துக்குள் போக முடியாமல், விடிய விடிய விழித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன் இப்படி இருந்ததில்லை. இந்தப் பிரச்னை சரியாகிவிடுமா அல்லது இனி இதுவே தொடர்கதையாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் நீண்டகால தூக்கமின்மை என்பது சிகிச்சை தேவைப்படுகிற விஷயம். ஆனால், தற்காலிக தூக்கமின்மை அப்படியல்ல. சின்னச் சின்ன டெக்னிக்ஸை பின்பற்றினாலே இதிலிருந்து வெளியே வரலாம். திடீரென ஒருநாள், இரண்டு நாள் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு தூக்கமின்மை ஏற்படுவதை 'ஷார்ட் டேர்ம் இன்சோம்னியா' (Short-term insomnia) என்கிறோம். மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தூக்கமில்லாமல் இருக்கும் பிரச்னையைப் போன்றதல்ல இது. தற்காலிக தூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இரவு நேரத்தில் ஸ்ட்ரெஸ் இருந்தால் தூக்கம் வராது. உடலும் உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், அடுத்தடுத்த நாள்களில் அட்டெண்ட் செய்யவிருக்கிற இன்டர்வியூ, தேர்வு, போட்டிகள், சுற்றுலா போன்றவற்றை பற்றி இரவு நேரங்களில் யோசிப்பார்கள். மனது பரபரப்பாக எதையேனும் யோசிக்கும்போதும், சிந்தனைகள் (பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ) ஓடிக்கொண்டிருக்கும்போதும் தூக்கம் பாதிக்கப்படலாம். இரவு தூக்கம் வழக்கமாகத் தூங்கும் அறையை, இடத்தை மாற்றிவிட்டு, வேறோர் இடத்தில் தூங்க முயற்சிசெய்யும்போதும் உடல் அந்தச் சூழலுக்குப் பழகாததால் தூக்கம் தடைப்படலாம். பெண்களுக்கு மெனோபாஸ், ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ், ஹைப்பர் தைராய்டிசம், கர்ப்பகாலம் உள்ளிட்ட நிலைகளில் உடலில் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இவையும் தற்காலிக தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். மாலை 3-4 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதாலும் ஆல்கஹால் கலந்த பானங்களைக் குடிப்பதாலும் தூக்கம் தடைப்படலாம். என்றோ ஒருநாள் வழக்கத்தைவிட அதிக அளவில் காபி, டீ குடிக்க வேண்டியிருக்கலாம். அந்த நாள்களிலும் தூக்கம் தடைப்படும். Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா? மிதமான உடற்பயிற்சி என்பது உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது தூக்கத்தை பாதிக்கும். இரவு நேரத்தில் பரபரப்பான கேம்ஸ் விளையாடுவது, திகில் காட்சிகள் நிறைந்த டி.வி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்ப்பதும் அன்றைய நாளின் தூக்கத்தைக் கெடுக்கும். அடுத்த இரண்டு நாள்களுக்குக்கூட அந்த பாதிப்பு தொடரலாம். பகல் மற்றும் இரவு ஷிஃப்ட்டில் மாற்றி மாற்றி வேலை பார்ப்பவர்களுக்கு, ஷிஃப்ட் மாறும் நாள்களில் தூக்கம் பாதிக்கப்படலாம். 'ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்' ( Restless legs syndrome ) என்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, இரவு முழுவதும் கால்களில் ஒருவித குடைச்சலும் வலியும் அசௌகர்யமும் இருக்கும். கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களது தூக்கத்தை பாதிக்கும். படுக்கையிலேயே புரண்டு தூக்கம் தற்காலிகத் தூக்கமின்மை குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. தூக்கமில்லையே என்று கவலைப்பட ஆரம்பித்தால், அது 'க்ரானிக் இன்சோம்னியா' (Chronic Insomnia) எனப்படும் தீவிர தூக்கமின்மை பாதிப்புக்கு காரணமாகலாம். தூக்கமில்லாத இரவுகளில், அது பற்றியே யோசித்துக்கொண்டு, படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். பெட்ரூமிலிருந்து வெளியே வந்து விடுங்கள். செய்யாமல் விடப்பட்ட சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். காலையில் சூரிய உதயத்தின்போது அந்த வெயில் உடலில்படும்படி சில நிமிடங்கள் இருக்கலாம். அதேபோல மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்தின் போதான வெளிச்சமும் உடலில் படட்டும். கண்கள் மூலம் சூரிய ஒளியானது மூளையை எட்ட அனுமதிக்கும்போது, பகல் வேளையில் உடலும் மூளையும் எனர்ஜியோடு இருக்கும். மாலை வேளைக்குப் பிறகு உடலும், மனதும் அமைதியடையும். இரவில் ஆழ்ந்த உறக்கம் உங்களைத் தழுவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வது எப்படி?
பிரண்டைக்கீரை முதல் பசலைக்கீரை வரை - மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் தகவல்கள்!
''கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தருகிற டானிக்'' என்கிற சித்த மருத்துவர் கு. சிவராமன், இங்கே சில கீரைகள் நமக்கு தருகிற ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறார். கீரைகளின் மருத்துவ பலன்கள்! தூதுவளை வீசிங் இருக்கிறவங்களுக்கான கீரை இது. இதை பருப்புக் கடைசலாக, ரசமாக, துவையலாக எப்படி வேணாலும் சாப்பிடலாம். முள்ளை நீக்கிட்டு எல்லாக் கீரையும் மாதிரி சமைக்க வேண்டியதுதான். கரிசலாங்கண்ணி நெஞ்சுல சளி ரொம்ப அதிகமா இருந்து, 'கள் கள்’ சத்தத்தோட இருமலும் சேர்ந்து வந்தா, கரிசலாங்கண்ணிக் கீரையை சாறு எடுத்து, சம பங்கா நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, நீர் வத்திப்போறவரைக்கும் விட்டு எடுத்துக்கணும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு ரெண்டு வேளை, இந்தக் கீரைத்தைலத்தை ஒரு ஸ்பூன் கொடுத்தாலே, சளி போயிடும். முடி கறுப்பா வளர உதவுறதும், கல்லீரலைப் பாதுகாக்கிறதும் இந்தக் கீரைதான். பிரண்டைக்கீரை பிரண்டைக்கீரை பிரண்டைக் கீரையை உப்பு, புளி, வர மிளகாய் சேர்த்துத் துவையலா அரைச்சு சாப்பிட்டா, எலும்பு நல்ல உறுதியா இருக்கும். வயித்துல வர்ற குடற்புண்ணை ஆத்திடும். பிள்ளைகளுக்கு வயிறு மந்தமா இருந்தா, இந்த கீரை சமைச்சுக் குடுக்கலாம். நல்லா பசியைத் தூண்ட வைக்கும். பசலைக்கீரை 'புள்ளத்தாச்சிக்குன்னே இருக்கு பசலைக் கீரை. லேசா கால் வீக்கம் இருந்தா, பருப்பு சேர்த்து சமைச்சுக் குடுக்கலாம். வீக்கம் போயிடும். பசலை மாதிரியே, சிறுநீரகக் கல்லைப் போக்க, காசினிக் கீரை இருக்கு. இந்தக் கீரையை சமைச்சு சாப்பிட்டா, சிறுநீரகக் கல்லும் படிப்படியா கரைஞ்சிடும். பசலைக்கீரை அகத்திக்கீரை அகத்திக் கீரையை மாசத்துக்கு ரெண்டு முறை சாப்பிடுறது அக உறுப்புகளுக்கு நல்லது. அகச் சூட்டை குறைக்கிறதாலதான், இதுக்கு ’அகத்தி’னு பேர் வந்ததாம். ஆனா, சித்த மருந்து எடுக்கறப்ப, இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.' குப்பைக் கீரை கடைஞ்சா ஆசையா சாப்பிடும்! - மனோரமா பற்றி பார்வதி சிகப்பு பொன்னாங்கண்ணி இந்தக் கீரையை சாப்பிடறவங்க உடம்பு தகதகனு பொன் மாதிரி மின்னும். 'போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணியால’னு ஒரு வழக்கு மொழியும் இருக்கு. முருங்கைக் கீரை Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது... ஏன் தெரியுமா? வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி கீரை, ஆரோக்கியமில்லாத, மந்தமான பிள்ளைக்கு முருங்கைக் கீரை, உடல்சூடுக்கு தண்டுக்கீரை, அஜீரணத்துக்கு கொத்துமல்லி/புதினா கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான், சர்க்கரை நோய்க்கு வெந்தயக் கீரைனு எல்லாக் கீரையுமே உணவுக்கு பக்கபலமாவும், நோய் வராமல் தடுக்கிற மருந்தாவும் இருக்கு. குழந்தைகளுக்கு எப்படித் தருவது? ரெண்டு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு நார் உள்ள கீரைகளைக் கொடுக்க கூடாது. செரிமானத்துக்கு நல்லது இல்லை. சிறு கீரை, அரைக்கீரையை நல்லா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு குடுக்கலாம். கீரைகளை பொரியைல் செய்றதை விட, கடைசல், பாசிப்பருப்பு போட்ட கூட்டு செஞ்சு சாப்பிடறது நல்லது. அகத்திக் கீரையை நல்லா வேக வைக்கணும். ஆனா, முருங்கைக் கீரையை குழைவா வேக வைக்கக் கூடாது. கீரையை நோய் வந்தவங்களும் சாப்பிடலாமா? சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறவங்க மட்டும், கீரையை நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைச்சு, வடிச்சு அந்த தண்ணீரைக் கொட்டிட்டு, அதுக்கப்புறம் அந்தக் கீரையை சமைச்சு சாப்பிடலாம். அதுல இருக்கிற உப்புக்கள் போயிடும். கீரையோட தயிர் சேர்த்தோ, மீன் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. ராத்திரியில் கட்டாயம் கீரை சாப்பிடக் கூடாதுனு உணவு விதியே இருக்கு.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety
கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சமூக அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண, அரசின் நடவடிக்கை மட்டும் போதாது; ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை மாற்றமும் அவசியம். இந்தச் சூழலில், விகடன் அதன் வாசகர்களின் குரலை ஆவணப்படுத்தவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வுகளை நோக்கி நகர்த்தவும் முடிவு செய்துள்ளது. HerSafety உங்களின் பார்வை என்ன? வாசகர்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உங்கள் ஆழமான பார்வையைப் பதிவு செய்யலாம். உங்கள் கட்டுரைகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் அமையலாம்: சமூகப் பார்வை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? சட்டம் மற்றும் சமூக நீதி அமைப்புகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? தீர்வு: இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி, குடும்பம் மற்றும் அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் என்னென்ன? தனிப்பட்ட அனுபவம் (பெயர் வெளியிடாமல்): உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு குறித்த அனுபவங்கள் (பெயர், இடம் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்படும்). எதிர்ப்புக் குரல்: ஆண்களின் மனநிலையில் வர வேண்டிய மாற்றங்கள், பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்துக்கள். நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவே இருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாக இருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி வயதானவர்களுக்கு கால்களில் ஏற்படும் திடீர் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கால்களில் ஏற்படும் வீக்கம் இரண்டு வகையாகப் பார்க்கப்படும். ஒன்று வலியோடு கூடிய வீக்கம், இன்னொன்று வலியில்லாத வீக்கம். திடீரென அடிபடுதல், காயம் ஏற்படுதல், தசை நார் கிழிதல் போன்ற காரணங்களால் ஏற்படும் வீக்கத்தில் வலியும் இருக்கும். இதுபோன்ற வலி மற்றும் வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அதிலும், வயதானவர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். லேசாக கால் பிரண்டால்கூட சவ்வு கிழியலாம். எலும்புகளில் லேசான விரிசல்கூட ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படாத பட்சத்தில், அது பெரிய பிரச்னையாக மாறக்கூடும். அடுத்தது வலியில்லாத வீக்கம். இதிலும் இரண்டு வகை உண்டு. ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் பலவீனமாவதால், அந்த இடத்தில் ரத்தம் தேங்கிவிடும். ரத்தமானது பம்ப் செய்யப்பட்டு, கால்களிலிருந்து இதயத்துக்கு வர வேண்டும். அந்த வால்வு பலவீனமாகியிருந்தால், அசுத்தமான ரத்தமும் நீரும் கால்களில் கோத்துக்கொள்ளும். இந்தப் பிரச்னை பல நாள்களாகத் தொடர்ந்தால், சருமம் பாதிக்கப்படலாம். அந்தப் பகுதி கருமையாக மாறலாம். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். நாள்கள் செல்லச் செல்ல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதற்கும் சிகிச்சை மிக அவசியம். கால்களில் வீக்கம் | Swelling in the legs வலியில்லாத வீக்கத்துக்கு இன்னொரு காரணம், இதயம் அல்லது சிறுநீரகங்களில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். ஏற்கெனவே, இதய பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இதயநலனை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம். அதேபோல சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி வலியில்லாத வீக்கம் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பின் காரணமாக நீரை வெளியேற்ற முடியாமல், கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். இந்த வீக்கமானது கால்களில்தான் வர வேண்டும் என்றில்லை, வயிற்றைச் சுற்றியோ, கண்களைச் சுற்றியோகூட வரலாம். இதுவும் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியது. எனவே, கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
Visualisation: உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஒரு டெக்னிக் இது!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதுக்கு இதுவும் ஒரு காரணம் என, கிரிக்கெட் வீராங்கனைகளே குறிப்பிட்ட அந்த விஷூவலைசேஷன் (Visualisation) பற்றி உங்களுக்குத் தெரியுமா? விஷூவலைசேஷன் (Visualisation) மனதுக்குள் கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு விஷயத்தை சாதிக்க ஆசைப்பட்டிருப்பீர்கள். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் வேலைபார்க்க ஆசைப்பட்டிருப்பீர்கள். எத்தனையோ நாள்கள் அந்த ஆசையை மனதுக்குள் ஓட்டியபடி இருந்திருப்பீர்கள். 'அந்த கம்பெனியில மட்டும் எனக்கு வேலை கிடைச்சிட்டா எப்படியெல்லாம் வேலைபார்ப்பேன் தெரியுமா' என்கிற கற்பனையை எத்தனையோ தூக்கம் வராத இரவுகளில் மனதுக்குள் ரீவைண்ட் செய்து செய்து பார்த்திருப்பீர்கள். ஒருநாள் நீங்கள் ஆசைப்பட்ட அந்த கம்பெனியிலேயே வேலை கிடைக்கிறது. வேலைபார்க்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போது, சில வேலைகளை செய்யும்போது, 'இதை ஏற்கெனவே இங்கே செய்ததுபோலவே இருக்கிறதே' என்று சில நேரங்களில் தோன்றும். ஆனால், அது என்னவென்று புரியாமல் அதை அப்படியே கடந்துசென்றிருப்பீர்கள். அதற்கு காரணம், அந்த கம்பெனியில் நீங்கள் ஏற்கெனவே வேலைபார்ப்பதுபோல மனதுக்குள் கற்பனை செய்து பார்த்ததுதான். அப்படி கற்பனை செய்துபார்ப்பதன் பெயர்தான் விஷூவலைசேஷன் (Visualisation). உலகக்கோப்பையை வென்றதுக்கு இந்த டெக்னிக்கும் ஒரு காரணம்! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதில் இருந்து இந்த விஷூவலைசேஷன் என்கிற வார்த்தை பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா பேசுகையில், 'போட்டிக்கு முந்தைய நாளில் மைதானத்தில் 45 நிமிடங்கள் அமர்ந்து நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரமாக ஓட்டி பார்த்துக்கொண்டோம். அந்த 'Visualisation' பயிற்சி எங்களின் வெற்றிக்கு பெரியளவில் உதவியது' என்றார். உலகக்கோப்பையை வென்றதுக்கு இந்த டெக்னிக்கும் ஒரு காரணம்! நிபுணர் என்ன சொல்கிறார்? இன்னொரு வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், 'நேற்று ஒரு 'Visualisation' செஷனில் கலந்துகொண்டோம். நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரத்தை ஓடவிட்டுக் கொண்டோம். அது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது' என்றார். நாம் சாதிக்க ஆசைப்படுகிற ஒரு விஷயத்தை மனதுக்குள்ளே ஒரு படம்போல அசைபோட்டுக்கொண்டே இருந்தால், அதில் வெற்றிபெறுவதற்கான உத்வேகத்தை 'Visualisation' நமக்கு தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இதுபற்றி தெளிவாக தெரிந்துகொள்ள மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் அவர்களிடம் பேசினோம். மனித மூளை நெகட்டிவாக அதிகம் யோசிக்குமா? ''பொதுவாகவே, மனித மூளையானது 'பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; இன்டர்வியூவில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; கூட்டத்தில் பேசும்போது எல்லோர் முன்னாலும் திக்கிவிட்டால் என்ன செய்வது' என நெகட்டிவாக அதிகம் யோசிக்கும். இதனால், 'தோத்துப்போயிடுவோமோ... தோத்துப்போயிடுவோமோ...' என நினைத்து நினைத்தே, அது அப்படியே நிகழ்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் மனதுக்குள் எப்படி கற்பனை செய்துபார்க்க வேண்டும்? மனதுக்குள் கற்பனை செய்துபார்த்தல் அல்லது மனதுக்குள் காட்சிப்படுத்தல் என்கிற (Visualisation) டெக்னிக்கின் அடிப்படை என்னவென்றால், நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை தத்ரூபமாக மனதுக்குள் கற்பனை செய்துபார்ப்பதோடு, அதை ஏற்கெனவே சாதித்துவிட்டதைப் போலவும் நினைத்துப்பார்க்க வேண்டும். எப்படியென்றால், இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றத்தில் உங்கள் உடல் இறுக்கமாக இருக்கும். ஆனால், இப்படி மனதுக்குள் விஷூவலைசேஷன் (Visualisation) செய்துபார்க்கையில், கண்களை மூடி, ஆழமாக சுவாசித்து, உடல் இறுக்கமில்லாமல் இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். இப்படியே செய்துகொண்டிருக்கும் ஒரு நபர், நிஜத்தில் இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றமில்லாமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! உலகக்கோப்பை விஷயத்தில் இந்த டெக்னிக்கை எப்படி பயன்படுத்தியிருப்பார்கள்? உலகக்கோப்பை வென்ற விஷயத்தில் இந்த விஷூவலைசேஷன் (Visualisation) எப்படி நடந்திருக்கும் என்றால் , 'சூப்பராக விளையாடுகிறோம்', 'நிறைய ரன் எடுக்கிறோம்', 'கடைசி நேரத்தில் ஒரு விக்கெட்டை எடுக்கிறோம்', 'உலகக்கோப்பையை வென்று அதை கைகளில் ஏந்துகிறோம்', 'அதை புகைப்படம் எடுக்கிறார்கள்', 'அந்த நேரத்தில் எங்களுடைய உடம்பு புல்லரிக்கிறது', 'எங்கள் வெற்றியைக் கொண்டாட வெடிக்கிற பட்டாசுகளின் ஒலி கேட்கிறது', 'ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்', 'நாங்கள் வெற்றிபெற்றதற்கான இசை ஒலிக்கிறது', 'பட்டாசு வாசனை எங்கள் நாசியில் நுழைகிறது' என, உலகக்கோப்பை தொடர்பான பல பாசிட்டிவான விஷயங்களை கண்களை மூடி கற்பனை செய்ய சொல்லியிருப்பார்கள். இதனால், அந்த வீராங்கனைகளில் உடலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை உணர வைத்திருக்கும் இந்த விஷூவலைசேஷன் டெக்னிக். Road Sociology: தரமற்ற சாலைகள் மக்களின் வாழ்வையும் மனநிலையையும் பாதிக்கிறதா? - ஆய்வு சொல்வதென்ன? கற்பனையில் கண்ட வெற்றியை நிஜத்திலும் பெற்றுவிட்டார்கள்! இந்தப் பயிற்சியை அடிக்கடி செய்கையில், 'நம்மால் முடியும்; நம்மால் இந்தப் போட்டியில் ஜெயிக்க முடியும்' என்கிற நம்பிக்கை வந்துவிடும். நான் மட்டும் கடினமாக உழைத்தால், இந்தக் கனவை என்னால் நிஜமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் வரும். பயிற்சியின் முடிவில் அவர்களை மெள்ள மெள்ள நிஜ உலகுக்கு வரவழைத்து, இதே உணர்வுடன் போட்டியில் விளையாடுங்கள் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். இதன் விளைவாக, வீராங்கனைகள் பயமும் பதற்றமுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் எதிரணியை எதிர்கொண்டிருப்பார்கள். பயிற்சியின்போது கற்பனையில் கண்ட வெற்றியை நிஜத்திலும் பெற்றுவிட்டார்கள். இந்த டெக்னிக்கை, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அப்ளை செய்யலாம். ஓர் உளவியல் ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் முறைப்படி இந்த டெக்னிக்கை எப்படி செய்வது, பயிற்சி முடிந்ததும் படிப்படியாக எப்படி நிஜ உலகத்துக்கு வருவது என கற்றுக்கொண்டு, செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் கனவுகளும் நனவாகும்'' என்கிறார் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

28 C