Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார். திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்... இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை மிகவும் பொதுவான (Classic) அறிகுறிகள். உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம். திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீர்னு குப்புனு வேர்க்குதா? ஹார்ட் அட்டாக் முதல் புற்றுநோய் பாதிப்புவரை: கவனம்! #SuddenSweat இந்த அறிகுறிகள் அனைத்தும் திடீரென ஒரு நாளில் ஏற்பட வேண்டும் என அர்த்தமல்ல. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன், முதலில் புகை வந்து, பிறகு அது வெடித்து நெருப்புக் குழம்பை உமிழ்வதுபோல, ஹார்ட் அட்டாக் அறிகுறிகளும் படிப்படியாகக் குறைவான தீவிரத்துடன் (Warning signals) வெளிப்பட்டு, திடீரென ஒரு நாள் உச்சநிலையை அடையக்கூடும். குறிப்பாக, பெண்கள் மற்றும் சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இது போன்ற மாறுபட்ட (Atypical) அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி?
Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, 'செபோரிக் டெர்மடைடிஸ்' (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது நம் உடல் உற்பத்தி செய்யும் ஒருவித எண்ணெய். இந்த எண்ணெய் நம் உடலில் அதிகமாகச் சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவுப் பழக்கவழக்கங்கள் (அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடியில் எண்ணெய் வைக்கும் பழக்கம் என இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதுதான் இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதன் விளைவாக முகப்பருக்கள் வருவதும் குறையும். சருமப் பராமரிப்புக்குச் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது அவசியம். சாலிசிலிக் அமிலம் (Salicylic acid), கிளைகாலிக் அமிலம் (Glycolic acid) அல்லது அசிலெயிக் அமிலம் (Azelaic acid) போன்ற அமிலங்கள் கொண்ட ஃபேஸ் வாஷ் (Face wash) பயன்படுத்துவது எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவும். பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும். Doctor Vikatan: மண்டையில் வெள்ளைப் படலம், பொடுகா, சொரியாசிஸா.. எப்படித் தெரிந்துகொள்வது? ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்ச்சரைசர் (Gel-based moisturizer) மற்றும் சன்ஸ்கிரீன் (Sunscreen) ஆகியவற்றை உங்கள் மகனின் அன்றாட சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றையும் மீறி முகப்பருக்கள் வந்தால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் கிரீம்கள் (Antibiotic creams) அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் (Oral antibiotics) தேவைப்படுகின்றனவா என்று பார்த்துப் பயன்படுத்தலாம். தலைமுடியை முறையாகப் பராமரிக்க வேண்டும். வாரத்திற்கு 3 முதல் 4 முறை தலைக்குக் குளிக்க வேண்டும். கீட்டோகோனசோல் (Ketoconazole) அல்லது லுலிகோனசோல் (Luliconazole) போன்றவை உள்ள பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் முகமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும், எண்ணெய் சுரப்பும் குறையும், முகப்பருக்கள் வருவதும் பெருமளவு குறையும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கான மாத்திரைகள்... தொடர்ந்து எடுக்க வேண்டுமா?
Doctor Vikatan: தூக்க மாத்திரைகள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் திடீரென நிறுத்தக்கூடாது, டோஸேஜைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பிறகுதான் நிறுத்த வேண்டும் எனச் சிலரும், அந்த மாத்திரைகளை ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும் எனச் சிலரும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநலம் என்பது ஒரு காலத்தில் மந்திரம், சாபம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. மனநோய் என்பதும் உடல் நோய்களைப் போலவே மாத்திரைகளால் குணப்படுத்தக்கூடியதுதான் எனப் புரியவைக்க, 1950-களில் மனநல மருத்துவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது. தற்போது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற நிலையில் உலகம் தவிக்கிறது. மனநோய்களுக்கான மாத்திரைகள் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன உடல் நோய்களுக்கான மாத்திரைகளைப் போலவே மனநல மாத்திரைகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏனென்றால், மன நோய்களுக்கான மாத்திரைகள் நோயாளிகளைவிட அவர்களைப் பராமரிப்பவர்களால் பெருமளவில் வாங்கப்படுகின்றன. மனநோய்களைக் குணப்படுத்துவதாகச் சொல்லிக் கண்டுபிடிக்கப்படுகிற மாத்திரைகள் மாறுப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன. பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் காப்புரிமையைத் தக்கவைக்கப் புதிய தலைமுறை மருந்துகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. மாத்திரையை நிறுத்தினால் நோய் மீண்டும் வரும் என்ற ஒரு வித பயம் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களிடம் விதைக்கப்படுகிறது. எந்த நோய்க்காக அந்த மருந்துகளைச் சாப்பிட்டீர்களோ, அந்த நோய்கள் குணமாகிவிட்டாலும் மாத்திரைகளை நிறுத்த வேண்டாம் என்று பெரிய மருத்துவ கம்பெனிகளே அறிவுறுத்துகின்றன. இது ஒருவகையில் மக்களைப் பயமுறுத்தும் டெக்னிக்தான். தூக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கான மாத்திரைகளின் நீண்டகால பயன்பாடு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதீத மன அழுத்தம் கொண்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் சிலது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது. சிலது, சமுதாயத்தில் மற்றவர்களால் ஏற்படுவது. மனநோய்களை குணப்படுத்துவதாகச் சொல்லிக் கண்டுபிடிக்கப்படுகிற மாத்திரைகள் மாறுப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன. திடீர்னு தூக்கமே வரலையா...? ஸ்ட்ரெஸ் முதல் கேம்ஸ் வரை... காரணங்கள் பல! #SuddenSymptoms-6 தூக்கத்திற்காகவும், பதற்றத்தைக் குறைப்பதற்காகவும் விற்கப்படும் சில மாத்திரைகள் (Sedatives/Anxiolytics) உடனடி பலன் தரும். ஆனால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினால் அதற்கு நாம் அடிமையாகும் வாய்ப்பு (Dependence) மிக அதிகம். அதேபோல், தீவிர மனநலப் பிரச்னைகளுக்காகத் தரப்படும் Anti-psychotics வகை மாத்திரைகளும் சிறிய அளவில் மனதை அமைதிப்படுத்தக்கூடியவையே. மனநலனுக்கு உதவும் வைட்டமின் மற்றும் தாது உப்புகள் போன்றவை சேர்த்த சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, இந்த மாத்திரைகளை விட்டுவிடலாம். அதிகமான மாத்திரைகளைப் பல வருடங்களாக எடுத்துக்கொள்பவர்கள், அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து எடுத்துக்கொள்வது நல்லது. மற்றவர்கள் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா?
Doctor Vikatan: வலியினால் ஒருவருக்கு தற்காலிக மயக்கம் ஏற்படுமா... சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டு வந்த என் உறவினர், வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவர் திடீரென மயக்கமாகிவிட்டார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, வலியால் ஏற்பட்ட தற்காலிக மயக்கம்தான் என்றார்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் மருத்துவ ரீதியாக இதை 'வாசோவாகல் சின்கோப்' (Vasovagal Syncope) அல்லது 'பெயின் இன்டியூஸ்டு சின்கோப்' (Pain-induced Syncope) என்று சொல்வோம். அதாவது, உடலில் ஏற்படும் அதீத வலியினால் உண்டாகும் தற்காலிக மயக்க நிலை இது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம். அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் சில நொடிகள் குறைவதால், தற்காலிக மயக்கம், பேச முடியாமை, உடல் தளர்ச்சி மற்றும் வியர்வை போன்றவை ஏற்படுகின்றன. படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். Doctor Vikatan: பல மாதங்களாகத் தொடரும் உடல்வலி... டெஸ்ட் நார்மல்... உடல் பிரச்னையா, மனநல பாதிப்பா? இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கால்களைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்து, அதன் பின்பே நிதானமாக எழுந்து நடக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த பாதுகாப்பான வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி வலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய ஓய்வும், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் அவசியம். இது தற்காலிகமான பாதிப்பு என்பதால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், இது போன்ற அறிகுறிகள் முதன்முறை ஏற்படும்போது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால், மூளைக்கான ஸ்கேன் (Brain Scan) செய்ய அறிவுறுத்துவார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?
Doctor Vikatan: என் கணவருக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இந்நிலையில் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார்களே... அது உண்மையா.... அதனால் குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு. நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன. விந்தணுக்களின் அடர்த்தி குறைவது, அவற்றிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவது, அவற்றின் நகரும் தன்மை பாதிக்கப்படுவது என பல பிரச்னைகளுக்கும் காரணம் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன. Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்? 20-25 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து, அதுவும் கட்டுப்பாடற்று இருந்து, அதற்காக வருடக் கணக்கில் மருந்துகள் எடுத்துக்கொள்வோரில் மிக மிக அரிதாக ஒன்றிரண்டு பேருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரலாமே தவிர எல்லோருக்கும் வராது. இதைத்தான் உங்கள் மனைவி குறிப்பிட்ட லேட்டஸ்ட் ஆய்வும் குறிப்பிடுகிறது. எனவே, நீரிழிவு நோய்தான் பிரச்னைக்குரியதே தவிர்த்து அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புகளைத் தராது. உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தையே பிறக்கும். கவலை வேண்டாம். உங்கள் கணவர் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மட்டும் உறுதி செய்யுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?
Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்கிறோம். இதனால் வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது. நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன. நோயைத் தடுத்துவிடும் என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மிளகும் பூண்டும் நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும். நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரம்தோறும் ஜலதோஷம்... நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி? அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம். புரோபயாடிக் இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.அதேபோல இந்த சீசனில் ஆவி பறக்ககும் வெந்நீர் குடிக்க வேண்டியதில்லை. மிதமான சூடுள்ள நீரல் போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவுக்காரர்கள் முட்டையும் சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?
Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துதானே... கர்ப்பத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் தொடர்ச்சியான கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) என்பது ஒரு பெண்ணுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு அதாவது அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு, மருத்துவர் தேவைப்பட்டால் ஹெப்பாரின் (Heparin) எனப்படும் பிளட் தின்னர் ஊசிகளைப் பரிந்துரைக்கலாம். கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. த்ரோம்போஃபிலியா (Thrombophilia) எனப்படும் பிரச்னை, அதாவது ரத்தம் எளிதில் உறையக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். இதனால் நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, குழந்தைக்கு வளர்ச்சித் தடை (IUGR) அல்லது கருவிலேயே குழந்தை இறந்துபோவது (IUD) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆன்டி-பாஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune issue) ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டால், கர்ப்ப காலம் முழுவதும் ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் லோ மாலிகுலர் வெயிட் ஹெப்பாரின் (LMWH) சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். இது ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்... ஸ்கேனில் நார்மல்.... கவலைக்குரிய விஷயமா? சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பெற்றோரிடமிருந்து த்ரோம்போஃபிலியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புரதம் C (Protein C) அல்லது புரதம் S (Protein S) குறைபாடு போன்ற மரபணு ரீதியான காரணங்களாலும் ரத்தம் உறைய வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கலாம். அந்தப் பயமே தேவையில்லை. கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. இது நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. எனவே, குழந்தைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தாயின் ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும். அதே சமயம், அனைத்து கருச்சிதைவுகளுக்கும் ஹெப்பாரின் மருந்து வழங்கப்படுவதில்லை. குரோமோசோம் பிரச்னைகள், கருப்பை பிரச்னைகள் அல்லது ஹார்மோன் குறைபாடுகள் உள்ளனவா என்று முதலில் பரிசோதிக்கப்படும். ஏபிஎஸ் டெஸ்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்தம் உறையும் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இத்தகைய சூழலில் ஹெப்பாரின் உயிர் காக்கும் மருந்தாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும் அரிதாக சிலருக்கு இப்படி வரும் என்றும் சொன்னார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் ``மருத்துவ ரீதியாக இது உண்மையான பக்கவாதம் (True Stroke) அல்ல. உடலில் ஏற்படும் அதீத வலி அல்லது அதிர்ச்சியின் காரணமாக, மூளைக்குச் செல்லும் தற்காலிகச் சமிக்ஞைகளில் ஏற்படும் மாற்றத்தால் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தோன்றுவதையே இப்படிச் சொல்கிறார்கள். இந்த அறிகுறிகளை 'ஸ்ட்ரோக் மிமிக்கர்ஸ்' என்று சொல்வோம். கடுமையான வலி (Intense pain) சில நேரங்களில் குமட்டல், வாந்தி அல்லது மயக்க நிலையைக்கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் போன்ற அறிகுறிகள் (Stroke-like symptoms) கூடத் தோன்றலாம். வலி கொஞ்சம் குறைந்தவுடன் இந்த அறிகுறிகள் சரியாகிவிடும். எனவே, இது உண்மையான பக்கவாதம் (True stroke) கிடையாது. உதாரணத்திற்கு, மிகக் கடுமையான தலைவலி அல்லது மைக்ரேன் (Migraine) பாதிப்பு இருக்கும்போது கூட, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் வரலாம். அவர்களுக்குக் கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம். கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம். Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்? இவை அனைத்தும் பக்கவாதம் போலவே தோன்றும் (Stroke mimics). ஆனால், அந்த வலி சரியான பிறகு அவர்கள் குணமடைந்து விடுவார்கள். எனவே, கடுமையான வலி இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது உண்மையான பக்கவாதம் அல்ல. உங்கள் நண்பருக்கு ஏற்பட்டது பக்கவாதம் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்றால், அவர்களின் ஆலோசனைப்படி முறையான ஓய்வு மற்றும் அவசியமான மருந்துகள் மூலம் இதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?
Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்பிலிருந்து நிவாரணம் தருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி சால்ட் தெரபி (Salt therapy) என நீங்கள் கேட்டிருப்பது உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பது பற்றியதா அல்லது வேறு ஏதேனுமா என்பது தெளிவாக இல்லை. உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் சளி, இருமல் மட்டுப்படும், சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே உப்பானது, மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்து, துப்பிவிடுவது சிறந்தது. மிக முக்கியமாக, உடலில் நீர்ச்சத்து குறையாதபடி, தொண்டைப்பகுதி வறண்டு போகாதபடி நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் திரவமாக அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கலாம். ஆஸ்துமாவுக்கு இன்றுவரை நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான். அதற்கு மாற்று என்பதே கிடையாது. Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்... அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா? ஆஸ்துமாவுக்கு இன்றுவரை நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான். அதற்கு மாற்று என்பதே கிடையாது. மருத்துவ ஆலோசனையோடு கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகளை இன்ஹேலர் வழியே எடுத்துக்கொள்வதுதான் பலன் தரும். காற்றுக்குழாய்களை விரிவடையச் செய்கிற பிராங்கோடைலேட்டர் உள்ளிட்ட மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். இதுதான் தீர்வு என்பது தெரியாமல், பலரும் தவறானதும் பலனற்றதுமான பல சிகிச்சைகளைப் பின்பற்றி, ஆஸ்துமா குணமாகாமல் போராடுகிறார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்... வலி... தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது... அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 'The Lancet' இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained அந்த இதழில் வெளியாகி உள்ள தகவல்... பாராசிட்டமாலை முறையான மதிப்பாய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு செய்ததில் கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம், மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை கடந்த ஆண்டு, ட்ரம்ப் இந்தக் கூற்றை கூறியதில் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ட்ரம்பின் கூற்றிற்கு அப்போதே மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்புகளைக் கிளப்பியது. இப்போது மக்களுக்கு இந்த ஆய்வின் மூலம் உண்மை தெளிவாகி உள்ளது. வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained
Doctor Vikatan: சங்குப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள்; உண்மையிலேயே பலன் தருமா?
Doctor Vikatan: சங்குப்பூவை வைத்து சமீப காலமாக நிறைய அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதைக் கேள்விப்படுகிறோம். சங்குப்பூ என்பது சருமத்துக்கு உண்மையிலேயே நல்லதா? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவத்தில் சங்குப்பூ உள்மருந்தாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிற முக்கிய மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பல கஷாயங்களில் சங்குப்பூ சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் பருகும் வயலட் டீ (Violet Tea) இப்போது மிகவும் பரவலாகப் பழக்கத்தில் உள்ளது. சங்குப்பூவில் தயாரிக்கப்படும் தேநீர், கபம் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. சங்குப்பூவை இஞ்சிச் சாற்றுடன் சேர்த்து (அரை டீஸ்பூன் அளவு) எடுத்துக் கொள்ளும்போது, சளி மற்றும் இருமல் குறையும். இது சிறந்த சிறுநீர் பெருக்கியாகச் (Diuretic) செயல்படுகிறது. இதனால் உடலில் தேவையற்ற நீர் கோப்பதால் ஏற்படும் வீக்கம் குறையும். Doctor Vikatan: கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பலவீனமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டா? சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் பருகும் வயலட் டீ (Violet Tea) இப்போது மிகவும் பரவலாக பழக்கத்தில் உள்ளது. சங்குப்பூச் செடியின் வேருக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, சங்குப்பூவின் வேர்கள் கழிச்சலை உண்டாக்கக் கூடிய (பேதி தூண்டும்) மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் (Liver Detoxification) செயல்முறைகளுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளிலும் இதன் வேர் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதற்கான மருந்தாகவும் இதன் வேர்கள் பயன்படுகின்றன. வேர் மருத்துவத் தன்மை அதிகம் கொண்டது என்பதால், அதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில், சங்குப்பூ இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து, கட்டிகள் மீது தடவும் வழக்கம் இன்றும் உள்ளது. சங்குப்பூவின் இதழ்களைப் பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள். சங்குப்பூ சருமத்திற்கு மென்மையைத் தருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சங்குப்பூவின் மலர்கள் பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால், அவற்றை உணவு மற்றும் அழகுப் பராமரிப்பு என உள்மருந்தாகவும் வெளிமருந்தாகவும் தாராளமாகப் பயன்படுத்தலாம். சங்குப்பூவின் இதழ்களை பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள். Doctor Vikatan: டீ, ஜூஸ் தயாரிப்பில் சங்குப்பூ... சாப்பிட உகந்ததா? மருத்துவ குணங்கள் உண்டா? ஆனாலும், சங்குப் பூக்களில் இயற்கையான நிறமிச் சத்துகள் (Pigments/Flavonoids) அதிகம் உள்ளன. அழகுப் பராமரிப்பில் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், எதில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து உபயோகிப்பது பாதுகாப்பானது. தற்போது அழகு சார்ந்த தயாரிப்புகளில் இது குறித்து, பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் வெளியான பிறகு இது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என நம்புவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?
கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும். வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் இறந்துடும் என பாஜக-வின் முக்கிய நிர்வாகி அண்ணாமலை பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு ஆதரவாககவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். cancer விரதம் இருப்பதற்கும் கேன்சர் செல்கள் அழிவதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விளக்குகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். விரதம் இருப்பதற்கும் புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பிருக்கிறா என்று மனிதர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகள் எதும் இதுவரை இல்லை. ஆனால், சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு இது ஓரளவு பயனளிக்கலாம் என்றும் இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் தேவைப்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கான மாற்றாக இதைக் கருத முடியாது. மேலும் விரதம் இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாகவும் கருத முடியாது. ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும். Fasting சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா? புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் கேன்சர் என்பது நாம் சாப்பிடும் உணவோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. மரபணு மாற்றங்களும் காரணம். ஒருவர் விரதம் இருக்கும்போது உடலில் இருக்கும் கொழுப்பு, தசை உள்ளிட்டவற்றில் இருந்தும் செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஒருநபர் விரதம் இருந்தாலும் கேன்சர் செல்கள் உடலில் இருக்கிற ஆற்றலை வைத்தே உயிர் வாழக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை முழுமையான, சம நிலையான சிகிச்சை முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். புற்றுநோய் வராமல் தடுக்குமா? விரதம் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், உடலில் கூடுதல் கலோரி சேர்வதைத் தடுப்பதற்கு விரதம் உதவக்கூடும். ஆனால், இதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அறிவியல் என்பது நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் அதை முயற்சிப்பது சரியல்ல. விரதம் புற்றுநோயாளிகளுக்கு விரதம் இருப்பது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் அவரவர் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. சுயமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார் மருத்துவர் ஜெ. கென்னி ராபர்ட்.
பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!
வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது. பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொள்வது வழக்கம். பழைய சோறு கஞ்சி செரிமானத்திற்கு எளிதானது மற்றும் நொதித்தல் முறையில் உருவாகும் பழைய சோறு கஞ்சியில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பழைய சோறு கஞ்சி நம் முன்னோரின் உணவே மருந்து என்னும் கருத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பழைய சோறு கஞ்சி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பழைய சோறு கஞ்சியின் மருத்துவ நன்மைகளை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளன. புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் பொதுவிநியோகத் திட்ட அரிசி போன்றவற்றைச் சமைத்து, மண் பானையில் 8 முதல் 14 மணி நேரம் வரை புளிக்க வைப்பதன் மூலம், உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன. இந்தப் புளிப்புச் செயல்முறையில் புரோபயாட்டிக்ஸ் மற்றும் போஸ்ட்பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாகுகின்றன. இது குறித்து டாக்டர் ஃபாரூக் அப்துல்லாவிடம் பேசினோம்... ``பழைய சோறானது நொதித்தல் முறைக்கு உள்ளாகும்போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. டாக்டர் ஃபாரூக் அப்துல்லா நீண்ட காலமாகக் குடலில் ஏற்படும் அழற்சி (inflammation) காரணமாக உருவாகும் Inflammatory Bowel Disease (IBD) நோய் மற்றும் வாய் முதல் மலவாய் வரை செரிமானப் பாதையின் எந்தப் பகுதியிலும் அழற்சி ஏற்படுத்தி உருவாகும் Crohn's Disease போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொண்டால் நல்ல பாக்டீரியாக்களின் விளைவுகளின் மூலம் நோயின் தன்மையையும் அறிகுறியையும் கட்டுப்படுத்தலாம். சாதாரணமாக அரிசியில் இருக்கும் இரும்புச்சத்தை விட நொதிக்க வைக்கும்போது அவை 20 மடங்கு அதிக இரும்புச்சத்தாக உயர்கிறது. பொருளாதார நலிவுற்ற மக்கள் மற்றும் கர்ப்பகால இரத்தக்குறைபாடு (anaemia) பிரச்சினையைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சரியான அளவு, அதாவது தினசரி 100 கிராம் அளவு எடுத்துக் கொள்வதால் இரும்புச் சத்து உயரும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கவனிக்க வேண்டியது, இதனை கூடுதலான உணவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மாத்திரைகளுக்கு மாற்றாக அல்ல. அறிந்துகொள்ள வேண்டியவை! என்னதான் பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோலவே பழைய சோற்றிலும் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்கள் அதிகமாகவே உள்ளதால், என்னதான் இரும்புச்சத்து அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நோயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். ஹீமோகுளோபின் A1c -8 க்குக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகள் பழைய சோறு கஞ்சியின் நன்மைகள் அறிந்து சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. ஹீமோகுளோபின் A1c -8 க்கும் அதிகமாக இருப்பவர்கள் அதிகமாகப் பழைய கஞ்சியை உட்கொள்ளும்போது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் குறைவான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பழைய சோறு கஞ்சியின் நன்மைகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் ஃபாரூக் அப்துல்லா தன் கருத்தைத் தெரிவிக்கிறார். Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?!
Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?
Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்கொடுத்த தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் அதற்காகக் காத்திருப்பதில் என்ன பிரச்னை... அப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக கணிக்கப்பட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்கும் பட்சத்தில், கடைசி மாதவிலக்கான நாளின் அடிப்படையில் பிரசவ தேதியைக் கணக்கிடலாம். ஒருவேளை முறைதவறிய மாதவிலக்கு சுழற்சி கொண்டவர்கள் என்றால், முதல் 3 மாத கர்ப்பதில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில் பிரசவ தேதியை கணிக்கலாம். 8 முதல் 12 வாரங்களில் செய்யப்படும் ஸ்கேனை 'டேட்டிங் ஸ்கேன்' (Dating scan) என்று சொல்வோம். 37 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அதை நிறைமாத கர்ப்பம் என்று சொல்வோம். கர்ப்பிணிகள் பொதுவாக 37 முதல் 40 வாரங்களில் குழந்தை பெற்றாக வேண்டும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவம் நிகழ்ந்துவிடும். அவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு இப்படி பிரசவ தேதியைத் தாண்டியும் பிரசவம் ஆகாமலிருக்கலாம். 40 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் சில சிக்கல்கள் ஏறட்படலாம். குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். Doctor Vikatan: ஏற்கெனவே இருமுறை சிசேரியன்... மூன்றாவது சிசேரியன் செய்வது பாதுகாப்பானதா? அதன்படி, குழந்தைக்கு.... குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்து பிரச்னைகளை ஏற்படுத்தலாம். குழந்தை தாயின் வயிற்றிலேயே மலம் கழிக்கலாம். அரிதாக சில குழந்தைகள் தாயின் கர்ப்பப்பைக்குள்ளேயே இறந்தும் போகலாம். அம்மாவுக்கு.... பெரிய குழந்தையைப் பிரசவிக்கும் முயற்சியில் தாயின் வெஜைனா மற்றும் வெஜைனாவுக்கும் ஆசனவாய்க்கும் இடையிலான பகுதிகளில் காயங்கள் ஏற்படலாம். சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். பிரசவ தேதி கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் நிலையைக் கண்காணிக்க, 'பயோபிசிகல் புரொஃபைல்' எனும் ஸ்கேன் செய்யப்படும். 40 வாரங்களில் கர்ப்பிணியின் இடுப்பெலும்புப் பகுதியை சோதனை செய்து பார்த்து, கர்ப்பப்பையின் வாயானது பிரசவிக்க ஏற்றதாக இருக்கிறதா என்று பார்ப்போம். சில மருத்துவர்கள் பிரசவ வலி வருவதற்காக 41 வாரங்கள்கூட காத்திருப்பதுண்டு. கர்ப்பப்பை வாய் பிரசவிக்கத் தயார்நிலையில் இருப்பது தெரிந்தால் செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட கர்ப்பிணிக்கு மருந்துகள் கொடுப்போம். குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா? கர்ப்பப்பை வாயானது சாதகமாக இல்லாத நிலையில் NST ( non stress test), AFI (Amniotic fluid index), BPP (biophysical profile) போன்ற டெஸ்ட்டுகளின் மூலம் குழந்தையைக் கண்காணிப்போம். இந்த டெஸ்ட் எல்லாம் நார்மல் என்ற நிலையிலோ, கர்ப்பிணிக்கு வலி வரும் பட்சத்திலோ உடனடியாக டெலிவரி பார்ப்போம். ஒருவேளை குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். எனவே, மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியில் பிரசவம் நிகழவில்லை என்றால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

27 C