Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால் அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை. வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என் தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? -Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination). நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை. உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை. உடல் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்! தற்போது நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?
தூக்கம் வரலையா... அதுக்கொரு கம்மீஸ்... முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்... ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gummies ). மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவை இனிப்பாக, மிட்டாய் மாதிரி, குறிப்பாக, ஜெல்லி மிட்டாய் போன்று விதம்விதமான சுவைகளில் கிடைப்பதால், பலரிடமும் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல், அதைச் சிரமமாக உணரும் பெரியவர்கள் வரை பலரும் கம்மீஸை மறுப்பு சொல்லாமல் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது. கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உண்மையில் கம்மீஸ் என்பவை ஆரோக்கியமானவைதானா... அவற்றை எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... பக்க விளைவுகள் இருக்குமா...? விரிவாகப் பேசுகிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். ''கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், 'Yellow 5', 'B1' போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன. மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ், முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என மார்க்கெட்டில் பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில் மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம். தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free) குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும். மாத்திரை விழுங்க சிரமப்படுபவர்கள், குறிப்பாக, பெரிய அளவு மாத்திரைகளை விழுங்க முடியாதவர்களுக்கு கம்மீஸ் (Gummies) சிறந்த மாற்றாகத் தெரியலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விழுங்குவது எளிது என்பதால் கம்மீஸ் எடுத்துக்கொள்ள விரும்பலாம். எனினும் இவர்களுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் (Pediatrician) ஆலோசனையைப் பெறுவது அவசியம். சர்க்கரைநோய், பிசிஓஎஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கம்மீஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தில் பலரும் அதற்கான ஹேர் கம்மீஸ் (Hair Gummies) பயன்படுத்துகிறார்கள். ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் C இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது. Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா? சரியான உணவை (கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ்) உட்கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின், வைட்டமின் டி, பி12 அல்லது புரதச்சத்து குறைவாக இருந்தால், வெறும் கம்மீஸ் எடுத்துக்கொள்வதால் மட்டும் பெரிய மாற்றம் ஏற்படாது. கம்மீஸ் வாங்கும் போது, அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவு, ஊட்டச்சத்தின் அளவு, எடுத்துக்கொள்ள வேண்டிய டோசேஜ், சைவம் அல்லது அசைவம் என எதிலிருந்து தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி (Expiry date) போன்றவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம். அதிக சர்க்கரை உள்ள கம்மீஸ் பற்சிதைவை (Cavity) உண்டாக்கும். எனவே, அவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.
இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?
வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் முதுகு வலி பிரச்னை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் முதுகு வலி அதற்கான காரணங்கள் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன். back pain! பொதுவாகவே முதுகுவலிப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். குறிப்பாக, 18 முதல் 38 வயது வரையிலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. 2020 முதல் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்றின் தாக்கம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பை பயன்படுத்துவது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது போன்றவையும் ஆகியவை இளைஞர்களுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். இளைஞர்களுக்கு ஏற்படும் தசை மற்றும் மூட்டுப் பிரச்னைகளில், 76 சதவிகிதம் முதுகு வலிதான் உள்ளது. முதுகு வலி கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பின் கீழ் பகுதி வரையுள்ள முதுகெலும்பில் ஏற்படும் அசௌகரியம்தான் முதுகு வலி. தசை நார் சுளுக்கு, முதுகெலும்பு பிரச்னை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகவும் முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கு படுத்து ஓய்வெடுப்பது சிறந்த தீர்வாகும் என்று நம்பப்படுகிறது. நீண்ட நேரம் படுத்த நிலையில் இருப்பது தசைகளைப் பலவீனப்படுத்தும், மூட்டுகளை விரைப்பாக்கும். இதனால் வலி அதிகரித்து, குணமடைவதையும் தாமதப்படுத்தும். எடை தூக்கினால் முதுகு வலி வருமா? அதேபோல உடற்பயிற்சி செய்தால் முதுகு வலி தீவிரமாகும் என்றும் நம்பப்படுகிறது. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சியை, நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி செய்தால், முதுகுவலி குணமாக வாய்ப்புள்ளது. ஆலோசனையின்றி சுயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். அதிக எடையைத் தூக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. முறையற்ற முறையில் தூக்குவது முதுகுவலியை உண்டாக்கலாம். எடை அதிகமான பொருள்களை சரியான முறையில் தூக்குவதன் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை தசை இறுக்கத்தைப் போக்க ஸ்ட்ரெச்சஸ் செய்யலாம். சரிவிகித உணவு, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவையும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும்போது, சரியான உயரத்தில் மேஜை, நாற்காலி இருக்க வேண்டும். செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது கழுத்தை நீண்டநேரம் முன்னோக்கி வளைப்பதையும், குனிந்த நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண் மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். உறங்குவதற்கு மிகவும் மென்மையான மற்றும் மிகவும் கடினமான மெத்தைகளைத் தவிர்க்க வேண்டும். தலையணை மீது தலை வைக்கும்போது, கழுத்தை அதிக உயரத்தில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தசை இறுக்கத்துக்கு வழிவகுக்கும். முதுகு வலியையும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தமின்றிப் பணிபுரிய வேண்டும். Stressed woman at workplace (Representational image) அதேபோல, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்யலாம். இவை உடல் திறனை மேம்படுத்துவதுடன், முகுதுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். நான்கு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான முதுகு வலி, வலி பரவும் உணர்வு, உணர்வே இல்லாமல் போவது, நிற்பது, நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் மருத்துவர் சசிதரன்.
Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?
Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல. வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் 'குகுர்பிடேசின்' (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம், சில சமயம் வாந்தியில் ரத்தம் வரும் அளவிற்கு (Blood vomiting) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த ' குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. Doctor Vikatan: வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..? கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த 'குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன், அவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு, ஒரு சிறிய துண்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, கசப்புத்தன்மை இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துவது சிறந்தது. கசப்பாக இருந்தால் கண்டிப்பாகச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?
Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா... வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை கேப்னோசைட்டோபேகா என்பது ஒரு சாதாரண பாக்டீரியா வகை. இது பலருடைய உமிழ்நீரில் (saliva) காணப்படக்கூடியது. இதில் Capnocytophaga canimorsus என்ற வகை பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்கும். பொதுவாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த பாக்டீரியா அதிக அளவில் ரத்தத்தில் கலந்தால் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் வளர்க்கும் மிருகங்களாக இருந்தாலும், அவை கடித்த காயம் பெரியதாக இருக்கும்போது, வழக்கமான சிகிச்சையுடன் குறிப்பிட்ட இந்தக் கிருமிக்கான சிறப்பு மருத்துவ கவனிப்பும் (atypical coverage) தேவைப்படும். இது போன்ற சூழல்களில் கேப்னோசைட்டோபேகா மட்டுமன்றி Bartonella, Pasteurella போன்ற இதர பாக்டீரியாக்களும் தொற்றை உண்டாக்கலாம். வளர்ப்புப் பிராணிகள் வெறுமனே நக்குவதால் மட்டும் இது பரவாது. மாறாக, நம் உடலின் சவ்வுப் படலம் (mucosal surface) உள்ள பகுதிகளில் நக்கினாலோ அல்லது வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ மட்டுமே இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நாய் அல்லது பூனை கடித்த காயம் மிகவும் ஆழமாக (deep bite) இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்தப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா? காயமும் ஆழமாக இருந்து, ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் நிலையில், மேற்கூறிய காரணங்களால் தொற்று ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை (major infection) உண்டாக்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில் இது தானாகவே சரியாகிவிடும். இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்ற கிருமிகள் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதும், இந்தப் பெண்ணுக்கு நடந்த விஷயமும் அரிதினும் அரிதான நிகழ்வு என்பதால் இதற்காகப் பயப்படத் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!
வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவேன்' என ஸ்டிரிக் ஆபிசராக மாறி டயட்டை கடைப்பிடிப்பார்கள். சில நாள்களிலேயே டயட்டை பின்பற்ற முடியாமல் மீண்டும் பழைய பழக்கத்துக்கே சென்றுவிடுவார்கள். வெயிட் லாஸ் டயட் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நமது மூளையின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எடை இழப்புக்கான டயட்டை கைவிடுவதற்குப் பின்னால் ஒரு வலுவான நரம்பியல் காரணம் உள்ளது என்பது உண்மையே. ஒரு புதிய டயட்டை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, சில நாள்களிலேயே அதைக் கைவிடுவது என்பது பலரும் அனுபவிக்கும் பொதுவான சவால் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். இது பற்றி மேலும் விளக்குகையில், இது வெறும் மன உறுதி (Willpower) சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதன் பின்னணியில் சிக்கலான நரம்பியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன. நமது மூளை உணவை எப்படி ஒரு வெகுமதியாகக் கருதுகிறது, சுயக்கட்டுப்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், டயட்டை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக அறிய முடியும். brain நமது மூளை உடலைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் எடை குறைய ஆரம்பித்தால் மூளை அதை ஓர் அபாயம் என்று உணரும். இதனால் மூளை ஆற்றலை சேமிக்கும் மோடுக்கு மாறும். மேலும், பசியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கும், வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் குறையும். இதனால் கிரேவிங்ஸ் அதிகரித்து, அதிகமாக சாப்பிடத் தோன்றலாம். உணவுக் கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடலாம். இதை மனவலிமைக் குறைவு என்று நினைக்க வேண்டாம். இது உயிரியல் எதிர்வினைதான் (Biological Response). நமது மூளையில் ரிவார்ட் சிஸ்டம் (Reward System) என்று ஒரு பகுதி உள்ளது. நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போது டோபமைன் ஹார்மோன் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போது இந்த ரிவார்ட் குறைகிறது. அதே போல, நம்முடைய பழைய உணவுப்பழக்கம் நமது மூளையின் நரம்பியல் பாதையில் வலுவாகப் பதிந்திருக்கும். அதை மாற்றி புதிய பழக்கங்களை உருவாக்கிப் பின்பற்ற சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். இதனால் ஆரம்ப நாள்களில் டயட்டை தொடர்ந்து சீராகப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும். diet உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற முடியாதது என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பலவீனம் அல்ல. நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும் என்று தூண்டப்படும் அதீத ஆசை’, நாள் முழுவதும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம், டயட்டில் ஏதேனும் சிறிய தவறு செய்துவிட்டால், அதை ஒரு பெரிய தோல்வியாக கருதும் உளவியல் விளைவு ஆகியவை, இந்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்குகின்றன. சிலரால் மட்டும் எப்படி முடிகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) எனும் மூளையைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். அதாவது, மூளையில் பல்வேறு நரம்பியல் இணைப்புகள் இருக்கும். டயட்டை பின்பற்றும்போது சிலர் எடுத்த உடனே கடுமையான உணவுமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மெதுவாகவும் பொறுமையாகவும் மாற்றங்களைச் செய்கிறார்கள். தொடர்ந்து ஆரோக்கியமான நடத்தைகளை கடைப்பிடிப்பதன் மூலம், மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாகின்றன. காலப்போக்கில் இந்த ஆரோக்கியமான நடத்தைகள் நிரந்தரமான பழக்கவழக்கங்களாக மாறிவிடுகின்றன. Dr. Prabash Prabhakaran டயட்டை பின்பற்ற என்ன செய்யலாம்? இந்த நரம்பியல் சார்ந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், டயட்டை பின்பற்ற சில உத்திகளைப் பின்பற்றலாம். அதாவது, பார்க்கும் இடத்தில் பழங்கள், நட்ஸ், சாலட் தயாரிக்கத் தேவையானவை போன்ற ஆரோக்கிய உணவுகளை வைத்திருக்கலாம். பிஸ்கெட், சிப்ஸ் போன்ற ஆரோக்கியத்துக்கு எதிரானவைகளை வாங்காமல் தவிர்த்துவிடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்துவிடுங்கள். வாராந்திர உணவுத் திட்டத்தை முன்பே தயாரித்து, அதற்கான பொருள்களை வாங்கி வைத்துவிடலாம். உணவு நேரம் தவிர, பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தேர்வுகள் என்ன இருக்கிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துவிடலாம். ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதுபோல கடின இலக்குகளை நிர்ணயிக்காமல், 'முதலில் ஃபிட்னஸை மேம்படுத்தலாம், அதன் பிறகு எடைக் குறைப்பைப் பற்றி தீர்மானிக்கலாம்' என்பது போல அடையக்கூடிய எதார்த்தமான, சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். weight loss diet தொடர் முயற்சி தேவை... உணவுக் கட்டுப்பாடு, வெயிட் லாஸ் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் (Consistency) முக்கியமே தவிர, 'பெர்ஃபெக்ஷன்' (Perfection) அல்ல. இன்னைக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுட்டேன். டயட் கெட்டுப்போச்சு என்று வருந்துவதைவிட, ஏழு நாள்களில் ஐந்து நாள்கள் தொடர்ந்து டயட்டை பின்பற்றுவது சிறந்தது. ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்பதற்காக, அன்றைய தினம் உடற்பயிற்சியையே சிலர் தவிர்ப்பார்கள். அதற்கு பதில் அரை மணி நேரம் உடற்பயிற்சியாவது செய்வது நல்லது. தொடர் முயற்சிகளில் ஈடுபட்டால், 'பெர்ஃபெக்ஷன்' தானாக வந்துவிடும் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது. சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் காரணங்களால்தான் மற்ற பருப்பு வகைகளைவிட சோயா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அசைவ உணவுகளான மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தைவிட, சோயாவில் மிக உயர்தரமான புரதம் (Good Quality Protein) அதிக அளவில் கிடைக்கிறது. மெனோபாஸ் (Menopause) காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டைத் தணிப்பதுடன், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரதச்சத்தை சோயா தாராளமாக வழங்குகிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm count) அதிகரிக்கவும், ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யவும் சோயா உதவுகிறது. சோயா பனீர் Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பால் அலர்ஜி... இனி வாழ்நாள் முழுவதும் பாலே குடிக்க முடியாதா? சோயா உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றாக வேகவைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் (Soya Chunks) வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், செரிமானம் ஆக சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரவில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சோயாவை ஊறவைத்து அரைத்து அதன் பாலைப் பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் டெட்ரா பேக்குகளில் (Tetra pack) சோயா மில்க் கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சோயாவிலிருந்து பெறப்படும் பனீரான டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். டெம்பே (Tempeh) என்பது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்பட்ட (Fermented) உணவுப் பொருள். இது முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பண்புகளைக் கொண்டது. குறிப்பாக, பாடி பில்டர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். சோயாவை எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஷாலோ ஃப்ரை (Shallow fry) செய்து சாப்பிடலாம். சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்து அடை செய்யலாம் அல்லது சுண்டல் போலவும் செய்து சாப்பிடலாம். சிலருக்கு சோயா சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இது மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே ஏற்படும். சோயாவில் நல்ல தரமான புரதம் இருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை விட இதில் கொழுப்புச்சத்து (சுமார் 9 கிராம்) சற்றே அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துவிட்டு, சோயாவையும் நார்ச்சத்துள்ள (Fiber) உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சோயா பால் Doctor Vikatan: பனீர் சாப்பிட்டால் எடை கூடுமா... தினமும் சாப்பிடலாமா...? மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Highly processed) சோயா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், சாதாரணமாகச் சமைக்கப்படும் சோயா சுண்டல் போன்ற உணவுகளை உண்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு குறைவது போன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி சோயா உணவுகளால் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி (Breast development) அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. சோயாவுக்கும் மார்பக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: மூளைச்சாவு என்பது என்ன? மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானம் செய்யலாமா?
Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன? - மல்லிகா அன்பழகன். சென்னை பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு. மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும். இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம் தொடர்ந்து துடிக்கும், சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும். அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன. Alzheimer's Disease: நினைவுகள் நழுவும் நிஜ உலகம்... அதிகரிக்கும் அல்சைமர் பாதிப்பு... அவரது மூளை, மீளமுடியாத அளவிற்குச் சேதமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதால் (அதாவது அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ அல்லது மருத்துவ ஆதரவு இன்றி உயிர்வாழவோ வாய்ப்பில்லை என்பதால்), அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன. உயிர் பிரிந்தபிறகு, மண்ணில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் உடல் உறுப்புகள், இப்படி ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேலான நபர்களுக்குப் புதிய வாழ்வை வழங்கப் பயன்படுத்தப்படுவது மிக நல்ல விஷயம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
வேலைப்பளுவும் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமானதால் கேன்சர்... உண்மைச் சம்பவமும் மருத்துவ எச்சரிக்கையும்!
பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின்பற்றும் வழக்கம் கொண்டவராம் அந்தப் பெண். இத்தனையையும் தாண்டி, அவருக்கு கேன்சர் பாதிக்கக் காரணம் என்ன தெரியுமா? அதிகப்படியான பணிச்சுமை Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா? அலுவலகத்தில் நிலவும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் டார்கெட்டை அடைய வேண்டிய அழுத்தம்... இவற்றால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமே கேன்சருக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்வது, இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, தாமதமாகவும் மிகக் குறைவாகவும் தூங்குவது போன்றவையும் காரணங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய அந்தப் பெண், மன ஆரோக்கியத்தை (Mental Health) கவனிக்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வெறும் உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து காக்காது. மன அழுத்தம் (Stress) என்பது உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சிதைத்து, புற்றுநோய் செல்கள் வளர வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுவலக வேலைக்கும் பர்சனல் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (Work-life balance) பேணுவது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் என்பது அமைதியான மனதில்தான் தொடங்குகிறது என்ற அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும் நிலையில், அதீத வேலைச்சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம் எல்லாம் புற்றுநோய்க்குக் காரணமாகுமா....? புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம். ''ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தாலும், அவை ஒருவருக்கு முழுமையான நோய் எதிர்ப்பாற்றலை (Immunity) உறுதி செய்வதில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம்...'' என்று எச்சரித்து ஆரம்பிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார். மன அழுத்தத்துக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்தும் விளக்குகிறார் அவர். ''நீண்ட கால மன அழுத்தம், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், இது உடலில் தேவையற்ற அழற்சியை (Inflammation) உண்டாக்கி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. நம் உடலில் உருவாகும் அசாதாரணமான அல்லது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. ஆனால், மன அழுத்தத்தால் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், இந்தச் செல்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் தடையின்றி பெருகத் தொடங்குகின்றன. தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் (Metastasis) மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது. Doctor Vikatan: குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் - முன்கூட்டியே தடுக்க முடியுமா? தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது. எந்தப் புற்றுநோயையும் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான நபர்கள் 45 வயதிலிருந்தும், குடும்பப் பின்னணியில் புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், 20 அல்லது 30 வயதிலிருந்தும் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அக்கறையை, மனநலனுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமுறை, வொர்க்-லைஃப் பேலன்ஸைப் பழகுவது போன்றவற்றை இனியாவது சீரியஸாகப் பின்பற்றுங்கள்....'' -மீண்டும் எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார்.
Doctor Vikatan: இடது காலில் வலி மற்றும் பலவீனம்... இதய நோய் இருக்கலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது. இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? இதயம் இடது பக்கம் இருப்பதுதான் காரணம், இதயத்துக்கான டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயமானது, கால்களுக்கு மட்டுமன்றி, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீராக வழங்கக்கூடியது. எனவே, இடதுகால் வலிக்கும் இதயத்திற்கும் நேரடியாக உடலமைப்பு ரீதியான (Anatomical) தொடர்பு இல்லை. ஆனால், அதற்காக இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுக வேண்டியதில்லை. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம். தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கால் வலி வரலாம். அதாவது தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகள். குறிப்பாக, சியாட்டிகா (Sciatica) அல்லது டிஸ்க் பல்ஜ் (Disk Bulge) போன்ற எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த (Orthopedic) பிரச்னைகளாலும் வலி ஏற்படலாம். இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம். Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா? சில நேரங்களில் நரம்பு மற்றும் ரத்த நாளப் பிரச்னைகளும் கால் வலிக்குக் காரணமாகலாம். சர்க்கரை நோய் (Diabetes) அல்லது நரம்புகளில் உள்ள வால்வுகளில் ஏற்படும் பிரச்னைகள் (Chronic Venous Insufficiency) காரணமாகவும் வலி உண்டாகலாம். எனவே, நீங்கள் முதலில் பொது மருத்துவரை (General Physician) அணுகி, இந்த வலி, ரத்தநாளம் சம்பந்தப்பட்ட பிரச்னையா, நரம்புப் பிரச்னையா அல்லது எலும்பு சார்ந்த பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொள்வது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Hair Transplant Scam: முடிக்காக உயிரை பணையம் வைக்காதீங்க! - Dr Sivakumar shocking interview
Doctor Vikatan: ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமா?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்த அனைவருக்கும் வழக்கமான சோதனையாக (Routine) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் அது அவசியமாகிறது. அதாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டாலோ, நடக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலியுடன் இடது கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடை வலி இருந்தாலோ, இசிஜி (ECG) அல்லது எக்கோ (Echo) சோதனையில் இதயத்தின் பம்ப் செய்யும் திறன் குறைந்திருப்பது தெரிந்தாலோ, டிரெட்மில் டெஸ்ட் (TMT) அல்லது ஸ்ட்ரெஸ் எக்கோ (Stress Echo) சோதனையில் இதய ரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் இருப்பது உறுதியானாலோ, ட்ரோப்போனின் ஐ (Troponin I) என்ற ரத்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தாலோ, ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை வரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளும்போது, பழைய எக்கோவைவிட புதிதாக எடுக்கப்பட்டதில் பம்ப்பிங் திறன் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். ECG டெஸ்ட் பைபாஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரத்தக் குழாய்கள் (Grafts) இரண்டு வகைப்படும். ஆர்ட்டீரியல் கிராஃப்ட் (Arterial Graft - LIMA): மார்புப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தமனியில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதில் அடைப்பு வரலாம். வீனஸ் கிராஃப்ட் (Venous Graft - Saphenous Vein): காலில் இருந்து எடுக்கப்படும் இந்த நாளத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கும், 10 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை தவிர, சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். நோயாளிக்கு எவ்வித நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ அல்லது மற்ற உடல் உபாதைகளோ இல்லாமல், இசிஜி மற்றும் எக்கோ சோதனைகள் சீராக இருந்தால், டிரெட்மில் டெஸ்ட் நார்மலாக இருந்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யத் தேவையில்லை. பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதய நோயை முழுமையாகக் குணப்படுத்தும் (Permanent Cure) சிகிச்சை முறை கிடையாது. இது செய்யப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இதயநோயாளிகளுக்கு ‘ஸ்டென்ட்’சிகிச்சை, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களா பணத்தாசை பிடித்த மருத்துவர்கள்? பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல. இது இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தற்காலிகமாகச் சரிசெய்து (Palliative), நோயாளியின் நிலையைத் ஓரளவு முன்னேற்றுவதற்கான (Stabilize) அவசர கால உதவி மட்டுமே. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் மீண்டும் பிரச்னை வராமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். ரத்த அழுத்தம் (BP), சர்க்கரைநோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்த உறைவைத் தடுப்பதற்கான மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். முறையான மற்றும் அளவான உடற்பயிற்சி அவசியம். மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?
Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா.... இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத் மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் 'போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்' (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை 'மேஜர் டிப்ரெஷன்' (Major Depression) என்று அழைக்கிறோம். அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது. பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே 'தைரியமா இரு', 'மனசை அமைதியா வெச்சுக்கோ, 'யோகா பண்ணு, தியானம் செய்' என்று எளிதாகக் கூறிவிடுவார்கள். குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம். Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா? ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன் (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது. மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும். உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. குழந்தையின்மை, போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் - வலிகளை வென்ற மாலிகா ரவிகுமார் மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை 'ஸ்ட்ரெஸ்' என்ற பெயரில் கடந்து போகிறோம். மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?
Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டை அதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண்ணும் ஆகாது....' என்கிறார். இந்த அணுகுமுறை சரியா... உடல் எடை குறைவான குழந்தையை எப்படித் தேற்றுவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தையின் எடை குறித்துக் கவலைப்படுவதற்கு முன், முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்ட இடங்களில் விளையாடுவார்கள். கை கழுவாமல் சாப்பிடுவார்கள். அதனால் ஏராளமான கிருமிகள் அவர்களது உடலுக்குள் போகும். எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் புழு நீக்கம் மிக முக்கியம். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் என்றால் இந்த டீவேர்மிங் விஷயத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அதில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என எல்லாம் இருக்கும்படி, ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு வெறும் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல், வேகவைத்த நேந்திரம் பழம், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் போன்றவற்றைக் கொடுக்கலாம். முதலில் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கிவிட்டு, போகப் போக அளவை அதிகரிக்கலாம். உணவு இடைவேளைகளுக்கு இடையில் வெற்று கலோரிகள் கொண்ட சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. சிலர் குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் வயிறு நிறைந்துவிடும். ஆனால், மறுபடி கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது என்பார்கள். எனவே, மூன்று வேளை உணவை நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, சப்பாத்தி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுள் முட்டை வைத்து 'எக் ரோல்' ஆகக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்திக்குள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறிக் கலவையை ஸ்டஃப் செய்து கொடுக்கலாம். பனீர் ஸ்டஃப் செய்தும் கொடுக்கலாம். சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் என சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். அவள் பதில்கள் 63: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பிஸ்கட் தரலாமா? சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் எனச் சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், காய்கறிகள், பனீர் சேர்த்து கட்லட்டாகச் செய்து கொடுக்கலாம். குழிப்பணியாரத்தில் கொத்துக்கறி சேர்த்துச் செய்து கொடுக்கலாம். முட்டை தோசை குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவற்றை மஃபின்ஸ் வடிவில் செய்து கொடுக்கலாம். மஃபின், கப் கேக் எல்லாம் இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரமாகவும் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படி பார்த்துக்கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழிகளில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். மிக முக்கியமாக, குழந்தைகளை இரவு 7.30 - 8 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும். தாமதமான தூக்கம் அவர்களது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
புற்றுநோய் இருளில் தவிக்கும் ஏழைப் பெண்களுக்கு புதுவிடியல்: வாழ்நாள் சேமிப்பை அர்ப்பணித்த மருத்துவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 5/12/2025 அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார். தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார். 1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார். மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. பால்டிமோரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். இதற்கென அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான உதரத்துட்காட்டி (லேப்ராஸ்கோபிக்) அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற மருத்துவர் லட்சுமிபாய் பிரிட்டனில் பயிற்சி பெற்றார். இந்தியாவில் இந்த பயிற்சி பெற்ற முதல் மருத்துவர் இவர்தான், இதற்காக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மருத்துவர்.லட்சுமிபாய் கௌரவிக்கப்பட்டார். இந்த விரிவான கல்வி அவருக்கு உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்கியது, உலகளாவிய கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்.லட்சுமிபாய் தன்னுடைய மருத்துவ நிபுணத்துவத்தை ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தினார். 1950 ஆம் ஆண்டு ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.லட்சுமிபாய் தான் பணிபுரிந்த காலத்தில் எண்ணற்ற தாய்மார்கள் பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவச மருத்துவ பராமரிப்பை வழங்கிய இந்த மருத்துவர் தனது நூறாவது வயதில் பெர்ஹாம்பூர் பாபா நகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். பிரசவம் பார்க்கும் மருத்துவராக மட்டுமல்லாமல் நம்பிக்கை அளிக்கும் தாயாக பலரின் அச்சத்தையும் உயிர் பயத்தையும் போக்கியுள்ளார். வறுமை, பயம், மூடநம்பிக்கை, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கிடையே வாழ்ந்த ஒடிசா மாநிலத்தின் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற மீனவ குடும்பப் பெண் 1962 ஆம் ஆண்டு ஒரு புயல் சூழ்ந்த மாலையில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தை பிறப்பு தாமதமான நிலையில் அச்சமும் பதற்றமும் கலந்து “கடவுள்கள் எங்களை சபித்துவிட்டார்கள்” என்று மூச்சிரைக்க கூறினாள். அந்த நெருக்கடியான நேரத்தில், மருத்துவர்.லட்சுமிபாய் “சீதா, நீ புயலை விட வலிமையானவள்; என்னுடன் சேர்ந்து சுவாசி போன்ற மென்மையான தைரியம் அளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய அணுகுமுறையால் சீதாவின் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை உருவாக்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தபோது, சீதா அம்மா நீங்கள் எங்களை காப்பாற்றுவது மட்டுமல்ல என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்ப வைத்தீர்கள் என உணர்வுபூர்வமாக நன்றி கூறினாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தங்களை குணப்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த சக்தி இருப்பதாகவும் அதனை வெளிக்கொணர்வதும் மகப்பேறு மருத்துவத்தின் ஒரு அங்கம் என்றும் பல்வேறு இடங்களில் கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாயின் வார்த்தைகளுக்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த உதாரணம். இது நன்கொடை அல்ல, என் மரணத்திற்கு பின்பும் என் மருத்துவப் பணி தொடர்கிறது என்பதன் அடையாளம் என்று கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய் இந்த நிதி பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உலகு போற்றும் கொடையுடன் கூடுதலாக இளம் பெண்களிடையே புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டங்களுக்காக பெர்ஹாம்பூர் மகப்பேறியல், மகளிர் மருத்துவ சங்கத்திற்கு மருத்துவர்.லட்சுமி பாய் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். உங்கள் சேமிப்பு முழுவதையும் ஏன் மருத்துவ துறைக்கு கொடுத்து விட்டீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, நான் சம்பாதித்த அனைத்தும் மக்களிடமிருந்து வந்தது. அது அவர்களிடம், குறிப்பாக வெளியில் சொல்ல இயலாமல் அமைதியாக துன்பப்படும் பெண்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று கூறினார். திருமணம் செய்துகொள்ளாமல், அரசுப் பணியில் தன்னை அர்ப்பணித்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய், தான் சிகிச்சையளித்த ஆயிரக்கணக்கான நோயாளிகளையும், தான் வழிகாட்டிய மருத்துவ மாணவமாணவிகளையும் தனது உண்மையான, உயிருள்ள சொத்துக்களாகவும், தனது குடும்பமாகவும் கருதுகிறார். ஆண்டுதோறும் புற்றுநோயால் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் மருத்துவ வசதி கள் குறைவாக இருப்பதால் இந்த நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் 50%-க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான நோயறிதல், போதிய மருத்துவ வளங்கள் இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கொடையினை மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கினார். இந்த கொடைக்கான நிதியை காசோலையாக உறையில் வைத்து மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் இது தொண்டு அல்ல உறையில் அடைக்கப்பட்ட புரட்சி என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மருத்துவர் லட்சுமிபாய் “உறைக்குள் இருக்கும் இந்தப் புரட்சியின் பலன் இருளில் வலியை பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லாத பெண்களை சென்றடைய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேர்தல்
'ஜிம்'ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!
இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் ஒருவர் தொடர்ந்து ஜிம்மிலேயே கிடக்கிறார் என்றால் அதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். Fitness ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் வைத்திருந்தாலும், தான் மெலிந்து இருப்பதாகவும், கை, கால்களில் தசைகள் 'பல்க்' ஆகத் தெரியவில்லை என்று சிலர் நினைப்பார்கள். இது 'பிகோரெக்ஸியா' (Bigorexia) எனப்படும் மனநலக் குறைாடாக இது இருக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுனில் குமார். இதுபற்றி மேலும் பேசினார். உடல் மசில்ஸில் (தசைகள்) போதுமான அளவு வளர்ச்சி இருந்தாலும், தான் பலவீனமாக இருப்பதாக மனதில் ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். இன்னும் அதிகமாக தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஜிம்மிலேயே நேரத்தை செலவழிப்பார்கள். 'நான் ரொம்ப உயரமா இருக்கேன்', 'உயரம் குறைவா இருக்கேன்', என்பது போல உடல் சார்ந்த குறைந்த சுய மதிப்பீடு (Low Self-Esteem) உள்ளவர்கள், உருவ கேலிக்கு ஆளானவர்கள், ஏற்கெனவே மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பிகோரெக்ஸியா' குறைபாடு ஏற்படலாம். பெரும்பாலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் காணப்படுகிறது. டீன் ஏஜ்ஜிலியேயே இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தென்படலாம். உடலை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் காலகட்டம் அதுதான். Low Self-Esteem பெண்களுக்கும்... ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் தங்கள் உடல் திரட்சியாக (Bulky) இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பெண்களைப் பொறுத்தவரை கட்டுக்கோப்பான உருவமாகவோ, மெலிந்த உருவமாகவோ இருக்க விரும்புவாவர்கள். இப்போதைய ஃபிட்னஸ் கலாசாரத்துக்குள் சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள், உடலின் தசைகள் மீது அதீத ஆர்வமும், அது பற்றியே தொடர்ந்து சிந்தித்து, அதைச் சார்ந்தே வாழ முயற்சிக்கிறார்கள். சோஷியல் மீடியா தாக்கம்... சோஷியல் மீடியாவில் கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு இருப்பது மாதிரியான போட்டோ, வீடியோக்களை அதிகம் காண முடியும். அதன் மூலம் அப்படியான உடல் அமைப்புதான் 'பெர்ஃபெக்ட்' என்று நிறுவப்படுகிறது. இதை ஒப்பிட்டு பார்த்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகும். இதுதவிர, ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகைப்படுத்தி போடும் கன்டென்டுகள், சில நேரங்களில் ஓர் இயல்பான உடலைக்கூட வெறுக்கத்தக்கதாக மாற்றவும் செய்கின்றன. சோஷியல் மீடியா தாக்கம் அறிகுறிகள் 'பிகோரெக்ஸியா' பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநாள் ஜிம்முக்கு செல்லவில்லை என்றாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் டென்ஷனாகவே இருப்பார்கள். உடற்பயிற்சி, ஜிம், அதுபற்றிய வீடியோக்கள் பார்ப்பது என அதைச்சுற்றியே மனமும், நடத்தையும் இருக்கும். இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உடற்பயிற்சி ஆரோக்கியத்தை சிதைக்கும். சிலர் எப்போதும் கண்ணாடியில் உடலைப் பார்த்து சோதனையிட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் கண்ணாடியைப் பார்க்கிறதையே வெறுப்பார்கள், பயப்படுவார்கள். இன்னும் சிலர் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து காயமோ, தசையில் காயமோ ஏற்பட்டால்கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வார்கள். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல், ஆர்வம் காட்டாமல் ஜிம்மிலேயே கிடப்பார்கள், புரோட்டீன் மட்டும்தான் சாப்பிடுவேன் என்பார்கள், சிலர் தசைகளை அதிகரிக்க ஸ்டீராய்டு கூட பயன்படுத்துவார்கள். psychologist Sunil Kumar கவனிக்காவிட்டால்... இதுபோன்ற சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மருத்துவர்கள் அல்லது ஆலோசகர்களை அணுக வேண்டும். அவர்களுக்கு காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி, புரிதலை மேம்படுத்தும் ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால், உடற்பயிற்சி சார்ந்த தீவிரமான காயங்கள் ஏற்படலாம், ஸ்டீராய்டு தொடர்ந்து எடுப்பதால் இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படலாம். உடலிலுள்ள ஹார்மோன்கள் சமநிலையை இழக்கலாம். மனரீதியாகப் பார்த்தால் மனச்சோர்வு ஏற்படலாம், குடும்பம், சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடலாம், இன்னும் சிலர் தவறான முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது. Bigorexia (Representational Image) உடற்பயிற்சி எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமே தவிர, சுமையாக அழுத்தமாக பதற்றமாக மாறினால், அது மனரீதியான பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்கிறார் சுனில் குமார்.
Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?
Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார். சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். Doctor Vikatan: அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்ஷன்... கிட்னியை பாதிக்க வாய்ப்பு உண்டா? வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது. உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?
Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கனவுகள் நிஜத்தில் நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, கனவுகள் நிஜமாகிவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஒரு கனவு மீண்டும் மீண்டும் வருகிறது என்றால், அதை உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பார்க்கலாம். சிக்மண்ட் ஃப்ராய்டின் 'ட்ரீம் அனாலிசிஸ்' பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம். கனவுகள் வருவதை கீழ்க்காணும் விதங்களில் புரிந்துகொள்ளலாம். கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம். அதாவது உங்கள் மனதில் இருக்கும் ஏதோ ஒரு கவலை, பயம் அல்லது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு கனவாக வெளிப்படலாம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கனவுகளின் மூலமே விடை கண்டுள்ளன. எனவே, உங்கள் குழப்பங்களுக்கு கனவுகள் ஒரு புதிய கோணத்தைக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கனவு உங்களுக்குத் தொடர் கவலையைத் தந்தால், அது உங்கள் உடல்நலத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலத்திலோ கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம். Doctor Vikatan: தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கான மாத்திரைகள்... தொடர்ந்து எடுக்க வேண்டுமா? நமது மூளையில் சிந்திப்பதற்கான பகுதி இருப்பதைப்போல, உணர்வுகளுக்கான ஒரு பகுதியும் உள்ளது. பொதுவாக பாம்பு துரத்துவது, உயரத்தில் இருந்து கீழே விழுவது, ஓடிக்கொண்டே இருப்பது அல்லது ஆபத்தில் சிக்கிக்கொள்வது போன்ற கனவுகள் பலருக்கும் பொதுவானவை. இவை அனைத்தும் நம் ஆழ்மனதில் இருக்கும் உணர்வுகளின் தூண்டுதலால் ஏற்படுபவை. நாம் தூங்க ஆரம்பித்த 90-வது நிமிடத்தில் ஏற்படும் Rapid Eye Movement (REM) எனப்படும் தூக்க நிலையில்தான் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், நமது மனம் மிகவும் சுறுசுறுப்பாக (Active) இருக்கும். கனவில் நாம் ஓடுவது போலவோ அல்லது செயல்படுவது போலவோ உணர்வோம். ஆனால், உடல் தசைகள் தற்காலிகமாக அசைவற்றுப் போகும். இது கனவில் காண்பதை நிஜத்தில் செய்து நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இயற்கை நமக்களித்த பாதுகாப்பு வசதி. அறிவியல் பார்வையில், கனவுகள் குறித்துப் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கனவுகளை எதிர்மறையாகப் பார்க்காமல், பாசிட்டிவ் மனப்பான்மையோடு அணுகக் கற்றுக்கொள்ளுங்கள். அவை உங்களை இன்னும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்கச் சொல்லும் ஒரு குறியீடாக மட்டுமே கருதுங்கள். பாசிட்டிவ் சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
AC: ஏசிக்கு பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?
எனக்கு வேலையிடத்தில் ஏசியில் இருந்து பழகிவிட்டது. அதன் காரணமாக வீட்டிலும் அதே குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது. குளிர்காலத்திலும் ஏ.சி அறையில் உறங்குவது நல்லதா... ஏ.சி இல்லாமல் உறக்கம் வருவதில்லை. என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் ஏ.சி செய்யப்பட்ட சூழல்களால் சில பிரச்னைகள் வரக்கூடும். அதாவது, ஏ.சி-யானது அந்தச் சூழலை வறட்சியாக்கி, ஈரப்பதமின்றி மாற்றிவிடும். அதன் விளைவாக நம் உடலிலும் நீர்வறட்சி ஏற்படும். ஏ.சி-யின் ஃபில்டர்களை குறிப்பிட்ட இடைவெளியில் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அலர்ஜி பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. ஃபில்டரில் படியும் தூசு மற்றும் கிருமிகள் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு காரணமாகலாம். ஏ.சி செய்யப்பட்ட அறைகளுக்குள் இருக்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வெளிச்சமோ, காற்றோட்டமோ உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். வீடோ, பணியிடமோ... மூடப்பட்ட சூழலில், ஏ.சி-யும் இயங்கும்போது பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கமும் பரவலும் அதிகரிக்கும் ஆபத்துகளும் உண்டு. ஜலதோஷம் இந்தக் கிருமிகள் ஏ.சி-யின் ஃபில்டர்களில் போய் உட்கார்வது மட்டுமன்றி, அந்தச் சூழலில் இருப்போருக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி, அவை மற்றவர்களுக்கும் பரவக் காரணமாகும். வீட்டில் ஒருவர் உடல்நலமின்றி இருக்கும் நிலையில் ஏ.சி அறையில் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு பரவும் வாய்ப்புகள் அதிகம். மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும் நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும். அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏ.சி-யால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. முன்னரே குறிப்பிட்டபடி, ஏ.சி-யின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல் ஏ.சி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி, அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் தன்மை கொண்டவர்களுக்கு சளி பிடிக்கலாம். வெப்பநிலையில் திடீர் மாற்றம் காரணமாக சிலருக்கு சளி பிடிக்கலாம். இது ஏ.சி அறைக்குள் இருப்பதால் மட்டுமன்றி, வானிலை மாற்றத்தாலும் நிகழலாம். அதனால்தான் வானிலை மாறும்போது சிலருக்கு சளி பிடிப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கிறோம். இது சளியாகக் கருதப்பட வேண்டியதல்ல... தற்காலிகமானதுதான். சில நாள்களில் சரியாகிவிடும். ஆனால், மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அடிக்கடி வரும்பட்சத்தில், அவை சளி பாதிப்பின் அறிகுறிகளா, அலர்ஜியா, தற்காலிக பாதிப்பா என்பதையெல்லாம் மருத்துவ ஆலோசனையில் தெரிந்து கொண்டு சிகிச்சை எடுக்கலாம். கதவுகள் எனவே, குளிர்காலத்திலும் ஏ.சி வேண்டும் என்போர், ஏசி பயன் படுத்தாத நேரத்தில் அறைகளின் கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளே பரவ அனுமதிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், வெளிக்காற்றை உள்ளே இழுக்கக்கூடிய வசதிகள் கொண்ட ஏசியை பொருத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை முறையாக சுத்தம் செய்வது, சர்வீஸ் செய்வது போன்றவற்றைச் செய்யத் தவறாதீர்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் வறண்டு போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு குறைவான நேரத்துக்கு மட்டுமே ஏ.சி-யை பயன்படுத்தவும். தண்ணீர் ஏ.சி-யின் குளிர்நிலையைக் குறைவாக வைத்துக் கொள்வதுதான் சரியானது. ரொம்பவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போதுதான் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் அதிகமாகும். ஓரளவு குளிர்ச்சியோடு வைத்துக்கொள்ளும்போது, தூக்கத்தில் பிரச்னைகள் இன்றி இருக்கும்.
டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறிய ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி மற்றும் வெறும் வயிற்றுச் சர்க்கரை பரிசோதனையை (Fasting) மட்டும் நம்பியிருப்பது, ஒருவருக்கு நோய் இருப்பதைக் கண்டறிவதில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை தாமதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹெச்பிஏ1சி பரிசோதனை மூலம் கிட்டத்தட்ட 50 சதவிகித சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகிறது. இந்தியர்களின் உடல்வாகு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் தன்மை (Postprandial spikes) அதிகம் இருப்பதால், வெறும் ஹெச்பிஏ1சி பரிசோதனை மூலம் கிட்டத்தட்ட 50 சதவிகித சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகிறது. எனவே, குளுக்கோஸ் கரைசல் குடித்த 2 மணி நேரம் கழித்து எடுக்கப்படும் OGTT (Oral Glucose Tolerance Test) பரிசோதனை மட்டுமே இந்தியர்களுக்கச் சர்க்கரைநோயைத் துல்லியமாகவும் ஆரம்ப காலத்திலும் கண்டறிய உதவும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் தொடங்கி, சர்க்கரைநோய்க்கு முந்தைய ப்ரீடயாபட்டீஸ் நிலையில் இருக்கிறோமா, சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என சகலத்தையும் கண்டறிய பலரும் பல வருடங்களாகப் பின்பற்றுவது ஹெச்பிஏ1சி ( HbA1c ) என்ற சோதனையைத்தான். இந்நிலையில், ஹெச்பிஏ1சி சோதனையானது, சர்க்கரைநோயைக் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது... சர்க்கரைநோயை வேறு எப்படித்தான் உறுதிசெய்வது.... எதை நம்புவது, எதை விடுப்பது.... எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை அதென்ன ஹெச்பிஏ1சி (HbA1c)? ''சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதில் மிக முக்கியமான டெஸ்ட் ஹெச்பிஏ1சி என்பது. ஆர்பிசி (RBC) எனப்படும் ரத்தச் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அணுக்கள் இருக்கும். அதில் சர்க்கரையானது எந்த அளவுக்கு செரிமானமாகியிருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட் இது. அதாவது ஹீமோகுளோபினில் சர்க்கரை எவ்வளவு படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட். இப்படி சர்க்கரை படிவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகும். அதனால்தான் இதை 3 மாதங்களுக்கொரு முறை செய்து பார்க்கிறோம். ஹீமோகுளோபினின் சராசரி ஆயுட்காலம் 120 நாள்கள். அதன் பிறகு அவை அழிந்துவிடும். ஒருவேளை இந்த ஆயுட்காலமானது 120 நாள்களைத் தாண்டிப் போனால், ஹீமோகுளோபினில் சர்க்கரை படிவதும் அதிகரிக்கும். அதனால் ஹெச்பிஏ1சி அளவானது சற்று அதிகமாகக் காட்டலாம். அதுவே ஹீமோகுளோபின் 120 நாள்களுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டால், ஹெச்பிஏ1சி அளவானது சற்று குறைவாகக் காட்டலாம். ஹீமோகுளோபின் 120 நாள்களுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டால், ஹெச்பிஏ1சி அளவானது சற்று குறைவாகக் காட்டலாம். Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா... சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா? தொழுநோய் போன்ற சில நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிற மருந்துகளும் ஹீமோகுளோபினில் சர்க்கரை படியும் விகிதத்தை மாற்றும். அதனாலும் ஹெச்பிஏ1சி அளவு குறைவாகக் காட்டலாம். ஹீமோகுளோபின் அளவுக்கான வரையறையே நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் மாறும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ஹெச்பிஏ1சி... எது நார்மல்? ஹெச்பிஏ1சி அளவானது 5.6 என்ற அளவில் இருப்பதுதான் நார்மல். 6.5-க்கு மேல் போனால் நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படும். 40 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்து நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், அவர்கள், ஹெச்பிஏ1சி அளவை 6.5 என்ற அளவிலேயே கட்டுப்பாடாக வைத்துக்கொண்டால், பின்னாளில் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். அதுவே 60 வயதுக்கு மேலானவர்கள், இதய பாதிப்பும் இருக்கிறது என்றால், ஹெச்பிஏ1சி அளவை 7-க்கு மேல் போகாமல் வைத்துக்கொள்ளலாம். 70 ப்ளஸ் வயதினர் என்றால், அவர்களுக்கு வாழ்நாளை விட, வாழும் நாள்களின் தரமே முக்கியம் என்பதால், 7.5 என்ற அளவில் வைத்துக்கொண்டாலே போதுமானது. எனவே, ஹெச்பிஏ1சி டெஸ்ட்டானது சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமன்றி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிக முக்கியமான ஒரு டெஸ்ட். ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகவும் சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். ஸ்ட்ரெஸ்ஸாலும் கூடலாம்! ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் பாதித்து சிலர், எமர்ஜென்சியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுவதுண்டு. அந்நிலையில அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமிருப்பது தெரியவரலாம். அவர்களுக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, மருத்துவமனையில் அட்மிட் ஆனநிலையில் அது அதிகரித்திருக்கிறதா அல்லது ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் காரணமாக எகிறியிருக்கிறதா என்பதை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் தெரிந்துகொள்ளலாம். அதாவது ஹெச்பிஏ1சியில் அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, கண்டுபிடிக்காமல் விட்டிருக்கிறார் என தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் நார்மலாக இருந்தால், தற்போதைய மருத்துவநிலை, அதன் ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகரித்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். தற்போதைய மருத்துவநிலை குணமானதும், சர்க்கரை அளவும் நார்மலுக்கு வந்துவிடும். ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகவும் சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். அதற்கு 'ஸ்ட்ரெஸ் ஹைப்பர்கிளைசீமியா' (Stress hyperglycemia ) என்று பெயர். அவர்களை நீரிழிவாளர்கள் என்று சொல்ல மாட்டோம். ஹெச்பிஏ1சி... இதற்கும் முக்கியம்! ஹெச்பிஏ1சி என்பது 24 மணி நேரமும் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதைக் கண்காணிக்கும். சிலர், மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேதிக்கு ஒரு வாரம், பத்து நாள்கள் முன்பிலிருந்து உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கட்டுப்பாடாக இருப்பார்கள். ஃபாஸ்டிங், பிபி டெஸ்ட்டுகளை மட்டும் நம்பாமல், ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யும்போது அவர்களது உண்மையான நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும். சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும். Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்? சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும். அன்றைய தினம் அவர்கள் இனிப்பு சாப்பிட்டிருக்கலாம் அல்லது திடீரென ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். எனவே, ஹெச்பிஏ1சி அளவை வைத்து, சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். சர்க்கரைநோயைக் கண்டறிய எதுதான் சரியான டெஸ்ட்? சர்க்கரைநோயை பல விதமாக டெஸ்ட் செய்யலாம். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் ஹெச்பிஏ1சி டெஸ்ட் துல்லியமாக இருக்காது என்கிறது மேற்குறிப்பிட்ட அறிக்கை. பொதுவாக மருத்துவர்கள், ஒருவருக்கு டயாபட்டீஸ் இருப்பதைக் கண்டறியவும், கண்டுபிடிக்கப்பட்ட பின் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யச் சொல்வார்கள். எந்தக் காரணத்துக்காக இருந்தாலும், இன்னொரு பக்கம் மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளியின் ஹீமோகுளோபின் அளவையும் கருத்தில் கொண்டே, சிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதே சமயம், ஒரே ஒரு டெஸ்ட்டை மட்டும் வைத்து சர்க்கரை நோயைக் கண்டறிவதை மருத்துவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ராண்டம் டெஸ்ட்டில் ஒருவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், அவருக்கு ஹெச்பிஏ1சி டெஸ்ட் எடுத்து அதை உறுதிபடுத்துவோம். Doctor Vikatan: `நீரிழிவு' தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப் பேற்றை பாதிக்குமா? ஒருவருக்கு நீரிழிவு உறுதியானால் அவர் வாழ்நாள் முழுவதும் நீரிழிவாளராகவே கருதப்படுவார். அந்த உண்மை, சம்பந்தப்பட்ட நபருக்கு அதிர்ச்சியை, மன உளைச்சலைக் கொடுக்கலாம். எனவே, ராண்டமாக (Random) எடுத்துப் பார்க்கும் சுகர் டெஸ்ட், 'ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' (Oral Glucose Tolerance Test ) போன்றவற்றையும் எடுக்கச் சொல்வோம். இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் ஒருமுறை டெஸ்ட், பிறகு 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச் சொல்லி 2 மணி நேரம் கழித்து ஒரு முறை (Oral Glucose Tolerance Test ) என இரண்டு டெஸ்ட் எடுப்போம். வெறும் வயிற்றில் 126-க்கு மேல் இருந்தாலோ, குளுக்கோஸ் குடித்து 2 மணி நேரத்துக்குப் பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ நீரிழிவு உறுதிசெய்யப்படும். சர்வதேச அளவில் 'ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' என்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சோதனையும்கூட. ஒருவேளை ராண்டம் டெஸ்ட்டில் ஒருவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், அவருக்கு ஹெச்பிஏ1சி டெஸ்ட் எடுத்து அதை உறுதிபடுத்துவோம். உங்களுக்கு சர்க்கரைநோய் 'ஆன் த வே'யில் இருக்கிறதா? சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டீஸை உறுதிசெய்ய அமெரிக்கன் டயாபட்டிக் அசோசியேஷன், ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையே பரிந்துரைக்கிறார்கள். 5.7 முதல் 6.4 வரை இருந்தால் ப்ரீடாயபட்டிக் என்றும், 5.7-க்கு கீழ் இருந்தால் சர்க்கரைநோய் இல்லை என உறுதிசெய்கிறார்கள். ஆனால், ப்ரீடயாபட்டீஸை உறுதிசெய்ய 'ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' தான் சிறந்தது. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டீஸை உறுதிசெய்ய அமெரிக்கன் டயாபட்டிக் அசோசியேஷன், ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையே பரிந்துரைக்கிறார்கள். ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது? ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், ஹெச்பிஏ1சி டெஸ்ட் காட்டும் அளவை அப்படியே நம்ப முடியாது. அவர்கள் முதலில் ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது என பார்க்க வேண்டும். ஹீமோகுளோபின் தொடர்பான நோய்களை ஹீமோகுளோபினோபதீஸ் (Hemoglobinopathies ) என்று சொல்வோம். இதில் சில பிரச்னைகளில் ஹெச்பிஏ1சி அதிகரிக்கும், சிலவற்றில் குறையும். ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலமே அதை உறுதிசெய்ய முடியும். எனவே, சர்க்கரைநோய் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள முதல்முறை டெஸ்ட் எடுப்பவர்கள், ஹெச்பிஏ1சி டெஸ்ட்டை மட்டுமே நம்பி முடிவுக்கு வர வேண்டியதில்லை...'' என்கிறார் டாக்டர் சண்முகம்.
Kerala: மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம் - ஆலின் ஷெரினின் பெற்றோர்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜான் கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் உள்ளிட்டோர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். அதில், குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் மேல் சிகிச்சைக்காக கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் செய்ததில் மிகவும் வயது குறைந்தவர் ஆலின் ஷெரின் ஆபிரகாம் என முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். குழந்தையின் இறுதிச்சடங்கு நிறைவடைந்த நிலையில் ஒரே மகளின் பிரிவால் துயருற்ற பெற்றோர், குழந்தையின் விளையாட்டுப் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது உறவினர்களைக் கலங்க வைத்துள்ளது. குழந்தையுடன் பெற்றோர் அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜாண் இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் கூறும்போது, குழந்தையுடன் காரில் சென்று விபத்தில் சிக்கியதில் காயம் அடைந்த ஷெரின் ஆன் ஜான் வீடு திரும்பியதும், குழந்தை மூளைச்சாவு அடைந்தது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் உறுப்புகளைத் தானம் செய்வது குறித்து குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் முதலில் சிந்தித்தார். கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு இதுபற்றி குழந்தையின் அம்மா ஷெரின் ஆன் ஜானிடம் அவர்தான் தெரிவித்தார். குளமான கண்களுடன் ஷெரின் ஆன் ஜான் அதற்கு சம்மதித்தார். குழந்தையின் பெற்றோர் சம்மதித்ததைத் தொடர்ந்து கே-சோட்டோ இணையதளம் மூலம் உடல் உறுப்பு தானம் செய்ய உள்ளது குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை கேரளா காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் ஒத்துழைப்போடு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன என்றனர். குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் குழந்தையின் பெற்றோர் கூறுகையில், 2025 ஏப்ரல் மாதம் 16-ம் தேதி காலை 9.20 மணிக்கு இந்த உலகில் அடியெடுத்து வைத்த எங்கள் மகள் பத்து மாதம் மட்டும்தான் எங்களுடன் இருப்பாள் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இவ்வளவு குறுகிய கால வாழ்வில் ஐந்து குழந்தைகளின் நம்பிக்கையாக மாறியவள் எங்கள் தங்க மகள். அந்தக் குழந்தைகள் வடிவில் எங்கள் மகள் வாழ்கிறாள். இன்று எங்களைப் போன்று உலக மக்கள் அனைவரும் எங்கள் மகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு பெற்றோராக எங்களைத் தேர்வு செய்த இறைவனுக்கு நன்றி. எங்கள் மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காண நாங்கள் செல்வோம் என்றனர். கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்
கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். ஷெரின் ஆன் ஜான் ஆசிரியையாக உள்ளார். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். ஆலின் ஷெரின் ஆபிரகாம் பிறந்து 10 மாதமே ஆகிறது. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயத்துக்குச் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி காரில் வீடு திரும்பினர். அப்போது இவர்கள் பயணித்த கார் திடீரென மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. குழந்தையின் தாய் ஷெரின் ஆன் ஜான் மற்றும் குழந்தையின் தாய்வழி தாத்தா ராஜன் ஜான், பாட்டி ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். அனைவரும் திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் தாய் உள்ளிட்டோர் திருவல்லா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு இடையே கடந்த 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதைத்தொடர்ந்து 10 மாதமே ஆன குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடல் உறுப்புகளைத் தானம்செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதற்கான நடவடிக்கைகளை குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் செய்தார். குழந்தையின் உடல் உறுப்பு தானம் குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாத குழந்தைக்கு கல்லீரல் தானம் செய்யப்பட்டது. இரண்டு சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 குழந்தைகள் வாழ்வுபெறும் எனக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்த குழந்தை இதுவாகும். உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'பொன்னு மோளே நீ மரணமடையமாட்டாய், வேறு குழந்தைகளின் உடலில் வாழ்வாய்' எனக் கேரள மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரிய குழந்தையை இழந்த வேதனை இருந்தபோதிலும், ஆலினின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்தனர். ஆலின் ஷெரின் ஆபிரகாம் மூலம் 5 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும். குழந்தையிடம் பெறப்பட்ட உறுப்புகள் முதற்கட்டமாக 2 குழந்தைகளுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மகத்தான முயற்சியை வெற்றிபெறச் செய்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு தானத்தில் ஆலின் ஷெரினின் பெற்றோர் கேரள சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். அவர்களின் துயரத்திலும், இந்த ஊர் மக்களின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Doctor Vikatan: அதென்ன மேஜர் ஹார்ட் அட்டாக், மைனர் ஹார்ட் அட்டாக் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Doctor Vikatan: அதென்ன மேஜர் ஹார்ட் அட்டாக், மைனர் ஹார்ட் அட்டாக் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Doctor Vikatan: திரைப்படங்களிலும் சரி, நமக்குத் தெரிந்தவர்கள் சொல்லும்போதும் சரி, மாரடைப்பு வந்தவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, 'மேஜர் அட்டாக்' என்றோ, 'நல்லவேளை மைனர் அட்டாக்...' என்றோ சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ஹார்ட் அட்டாக் என்றால் ஒன்றுதானே... அதென்ன மேஜர் அட்டாக், மைனர் அட்டாக்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் மேஜர் ஹார்ட் அட்டாக்கில், இதயத்துக்குப் போகும் ரத்தக் குழாயில் முழுமையான அடைப்பு, அதாவது 100 சதவிகிதம் அடைப்பு இருக்கும். அதன் காரணமாக அந்த அடைப்பைத் தாண்டி ரத்தம் போகாது. மைனர் ஹார்ட் அட்டாக்கிலும் இதயத்துக்குப் போகும் ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும். ஆனால், அது 100 சதவிகிதம் இருக்காது. ரத்தம் போவதை முழுமையாக அடைத்திருக்காது. மேஜர் ஹார்ட் அட்டாக்கின்போது இசிஜி எடுத்துப் பார்த்தால், இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகத் தெரியும். நெஞ்சுவலி எனச் சொல்வோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இசிஜி எடுத்துப் பார்ப்பார்கள். அதில் தெரிகிற மாற்றங்களை வைத்து, 'இது பெரிய அட்டாக்... உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டும்' என மருத்துவர்கள் அறிவுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதுதான் மேஜர் ஹார்ட் அட்டாக். அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், இசிஜியில் தெரியும் மாற்றங்கள் மிதமாக இருக்கலாம். அதனால் அவர்களுக்கு பயோ மார்க்கர்ஸ், ரத்தப் பரிசோதனை போன்வற்றைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ECG Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா? மேஜர் ஹார்ட் அட்டாக்கில் அதன் அறிகுறிகள் 'கிளாசிக் சிம்ப்டம்ஸ்' (classic symptoms) என்று சொல்லக்கூடிய வகையில் ரொம்பவே வெளிப்படையாக இருக்கும். உதாரணத்துக்கு, நெஞ்சில் அழுத்தம், இடது கையில் வலி, அதிகமான வியர்வை போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், அறிகுறிகள் ரொம்பவே மிதமாக இருக்கலாம். அதாவது நெஞ்செரிச்சல், மூச்சு வாங்குவதில் சிரமம் போன்ற மிதமான அறிகுறிகளே இருக்கலாம். மேஜரோ, மைனரோ... எந்த வகை ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து அதை அலட்சியம் செய்யக் கூடாது. புதிதாக ஏதேனும் அறிகுறி தோன்றினாலும், அதாவது தொப்புள் முதல் நாடி வரை ஏதேனும் அசௌகர்யத்தை உணர்ந்தால், அது இதற்கு முன் வந்ததில்லை என்கிற பட்சத்தில் உடனடியாக 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: அதிகப்படியான bleeding... பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடனே நிற்குமா?
Doctor Vikatan: பொட்டுக்கடலை சாப்பிட்டால் அதீத ரத்தப்போக்கு (excessive bleeding) கட்டுப்படுமா... அதிகப்படியான ப்ளீடிங்கை குறைக்க இயற்கை வழிகள் சொல்லவும். பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், உங்களுக்கு அதிகப்படியான ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹார்மோன் குறைபாடுகள், கருப்பையில் உள்ள பிரச்னைகள் (Fibroids), அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை மற்றும் உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். உணவின் மூலமும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். பொட்டுக்கடலை அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால், அது ஒரேயடியாக ப்ளீடிங்கை நிறுத்தாது. சிலருக்கு அடிக்கடி நாப்கின் மாற்றும் அளவுக்கு ப்ளீடிங் இருக்கும். சிலருக்கு கட்டிகளாக ரத்தம் வெளியேறும். அவர்களுக்கு இது உதவும். ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அதனுடன் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து லஸ்ஸிபோல அடித்துப் பருகலாம். வேலைக்குச் செல்பவர்கள் இந்தப் பொடியைச் செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வெறும் வாயில் போட்டுச் சாப்பிட்டு வரலாம். இது அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். வாழைப்பூ அதிகப்படியான ரத்தப் போக்கை தமிழில் 'பெரும்பாடு' என்றும் சொல்வார்கள். அந்தப் பிரச்னைக்கு வாழைப்பூ மிகச் சிறந்த மருந்தாகும். அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும் களைப்பையும் இது போக்கும். வாழைப்பூவின் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் பூக்களில் உள்ள கசப்புத் தன்மையுள்ள நரம்புகளை நீக்கிவிடவும். ஒரு கைப்பிடி அளவு பூவை மிக்ஸியில் அரைத்து, சுமார் 30 மில்லி சாறு எடுக்கவும். மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இதைக் குடிக்கத் தொடங்கினால், 3 முதல் 4 நாள்களுக்குள் ரத்தப்போக்கு கட்டுப்படும். பீரியட்ஸ் நின்ற பிறகும், அடுத்த 2-3 வாரங்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைக் குடித்து வரலாம். இது கருப்பையைச் சுருங்கச் செய்ய உதவும். மெனோபாஸ் மற்றும் பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய கட்டத்தில் இருப்போருக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும். ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டுச் செம்பரத்தம் பூவும் இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருந்து. ஐந்து செம்பரத்தம் பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து (காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி), தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து கஷாயமாகத் தயாரிக்கவும். இந்த இளஞ்சிவப்பு நிற கஷாயத்தை, தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால், அதிகப்படியான ரத்தப்போக்கு முழுமையாகச் சரியாகும். பீரியட்ஸ் ரத்தம் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்? ஆடாதொடை இலைகளும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய மருந்து. 3 முதல் 5 ஆடாதொடை இலைகளை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். தினமும் 30 மில்லி சாற்றை இரண்டு வேளை வீதம் 5 நாள்களுக்கோ அல்லது ரத்தப்போக்கு நிற்கும் வரையிலோ குடிக்கலாம். சாறாக எடுக்க முடியாவிட்டால், இலைகளை விழுதாக அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: இளவயதில் அடிக்கடி ஸ்ட்ரெஸ்; பிற்காலத்தில் மறதிக்கு வழிவகுக்குமா?
Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமே ஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் குறைவது போன்றவை சீக்கிரமே பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா? மூளையை ஆக்டிவ்வாக வைத்திருக்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி ப்ரித்திகா சாரி ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தைப் பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதை 'ஸ்ட்ரெஸ்ஃபிட்' என்கிறோம். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிந்தனை தொடங்கி, செரிமானம், இதய நலன் என எல்லாமே அதனால் பாதிக்கப்படும். பிற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் அது காரணமாகலாம். மூளையின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது கொழுப்புச்சத்து. சிலர், அதீத ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பார்கள். அது மூளைக்கு நல்லதில்லை. நல்ல கொழுப்பாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதுதான் இதில் முக்கியமே. அப்படிப் பார்த்தால் மீன், பாதாம் பருப்பு, அவகாடோ பழம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு இருக்கிறது. கொழுப்பே இல்லாத உணவுப்பழக்கத்தால் மூளையில் பாதிப்புகள் ஏற்படும். மூளை 75 சதவிகிதம் நீரால் ஆனது. நம்மில் பலரும் செய்கிற தவறு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். ஆனால், பலரும் அந்த அளவுகூட குடிப்பதில்லை. அதுவும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் திறன் மேம்படும். மூளைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் உள்ள ரத்தம் போய்ச் சேரும் திடீர் மறதி... வந்தபடியே போயிடுமா.... நிரந்தரமா மாறிடுமா? #SuddenMemoryLoss# உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறன் மேம்படும். மூளைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் உள்ள ரத்தம் போய்ச் சேரும். உடற்பயிற்சி செய்யும்போது 'பிரெய்ன் டிரைவ்டு நியூரோட்ராபிக் ஃபேக்டர்' என்ற பொருள் விடுவிக்கப்படும். அது ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நரம்பு செல்களைப் பழுது பார்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் உதவும். தூக்கமின்மை என்பது மெள்ள மெள்ள மூளையின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. இளவயதில் தூக்கத்தின் அருமை தெரியாமல், அதைத் தவிர்ப்பவர்களுக்கு 60 ப்ளஸ் வயதில் அதன் விளைவு தெரியவரும். எனவே, இளவயதிலேயே இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், வயதான பிறகு மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது, பாசிட்டிவ்வான அணுகுமுறை, எதிலும் கெட்டது தவிர்த்து நல்லதைப் பார்ப்பது, நன்றியோடு இருப்பது போன்ற குணங்களின் மூலம் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டியது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்!
பலருக்கும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆர்வம் அதை செயல்படுத்துவதில் காணாமல் போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நிறைந்து வழியும் ஜிம், அடுத்தடுத்த மாதங்களில் காற்று வாங்கி காலியாகும். உடற்பயிற்சி செய்யாமல், தொடர்ந்து வேலை பார்க்கும்போது ஸ்ட்ரெஸ், பதற்றம் போன்றவை ஏற்படும். சிலருக்குப் பிரச்னைகள் தீவிரமாக மனச்சோர்வு எனும் டிப்ரஷன் கூட பாதிக்கும். gym இப்படிப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வி.மிருதுல்லா அபிராமி. இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கான எளிதான பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார். மன அழுத்தம், கவலை போன்றவை நீண்ட நாள்களாகத் தொடரும்போது உடல் பதற்றத்திலேயே இருக்கும். இதனால் அட்ரினலின், கார்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சுரந்து, அவை ரத்தத்தில் உடல் முழுவது சுற்றிக் கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் சோர்வாக, எரிச்சலாக இருப்பதோடு, உடல் ரீதியான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். இங்குதான் உடற்பயிற்சி அந்த பாதிப்பில் இருந்து நம்மை மீட்டுக் கொண்டு வர உதவும். உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க, தசைகளை வலிமையாக வைத்திருக்க, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மட்டுமல்லாமல் மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கும் இயற்கையான வழிமுறையாகும். playing with pet வலி நிவாரணி உடற்பயிற்சியானது உணர்ச்சிகளையும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும், கற்றல், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை ஆகியவற்றை நிர்வகிக்கும் மூளையின் இரண்டு பகுதிகளை பலப்படுத்தும். நாள்பட்ட மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு இந்தப் பகுதிகள் பெரும்பாலும் குறைவாகவே செயல்படும். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர உடற்பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்யும்போது மூளை எண்டோர்ஃபின், செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற இயற்கை ரசாயனங்களை வெளியிடும். எண்டோர்பின் உடலின் இயற்கையான வலி நிவாரணியாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லேசான பரவச உணர்வையும் கொடுக்கும். செரோடோனின், தூக்கம் மற்றும் பசியை ஒழுங்குபடுத்தும். மகிழ்ச்சியுடன் தொடர்புடைய டோபமைன் ஹார்மோன் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சியை முடித்த பிறகு மன நிம்மதி அடைந்த உணர்வைத் தரும். Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? பதற்றமாக இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோலை உற்பத்தியாகும். இந்த ஹார்மோன்கள் குறுகிய கால மன அழுத்தத்தை சமாளிக்க நமக்கு உதவுகின்றன, ஆனால் அவை தொடர்ந்து அதிகமாக இருந்தால், பதற்றம், அமைதியின்மை ஏற்படும். உடற்பயிற்சி செய்யும்போது, மனஅழுத்த ஹார்மோன்கள் குறையத் தொடங்குகின்றன, மேலும் உடல் மிகவும் தளர்வான நிலைக்குச் செல்கிறது. இதயத் துடிப்பு சீராகி, தசைகள் மென்மையாகின்றன, சுவாசம் இயல்பாக மாறும். உடற்பயிற்சியானது ஓவர் திங்கிங்கை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்தும். ஜிம் உடற்பயிற்சி மட்டுமல்ல ... உடற்பயிற்சி என்ற உடன், பெரும்பாலும் பலர் தீவிரமான ஜிம் உடற்பயிற்சிகள், அதிக எடையைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தல் அல்லது மாரத்தான் ஓட்டம் போன்றவற்றையே கற்பனை செய்கிறார்கள். ஆனால், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுபோன்ற தீவிரமா பயிற்சிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது பல மணி நேரம் தீவிர உடற்பயிற்சிகள் செய்வதைவிட, தினமும் இந்தப் பயிற்சிகளை தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் செய்தாலே போதுமானது. மனநல மருத்துவர் வி.மிருதுல்லா அபிராமி. • அபார்ட்மென்ட் வளாகம் அல்லது பூங்காவில் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி • வேகமாக சைக்கிள் ஓட்டுதல் • பிடித்த இசைக்கு நடனமாடுதல் • தோட்டப் பராமரிப்பு வேலைகள் • யோகா அல்லது சிறிய அளவிலான பயிற்சிகள் • குழந்தைகள் அல்லது செல்லப்பிராணியுடன் ஓடியாடி விளையாடுதல் மனச்சோர்வு, பதற்றம், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு உடற்பயிற்சி பற்றிய எண்ணம் கூட அதிக சுமையாகவும் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிப்பதாகவும் தோன்றும். ஆனால், 10 நிமிட நடைப்பயிற்சிகூட பதற்றத்தைக் குறைக்கவும், எண்ணங்களைத் தெளிவுபடுத்தவும் உதவும். அலுவலகத்திலோ, வொர்க் ஃப்ரம் ஹோமிலோ தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து ஸ்ட்ரெஸ்ஸாக வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். நடந்துகொண்டே பேசலாம். • பர்சனல் அல்லது வேலை தொடர்பான அழைப்பாக இருந்தாலும், நடந்துகொண்டே பேசலாம். • கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையிடையே கை கால்களை நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம். • லிஃப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். • செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்லலாம். • பிடித்த இசைக்கு நடனமாடலாம் • வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்யலாம். இதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 முதல் 10 நிமிடங்கள் அலுவலக வராந்தாவிலோ, போர்டிகோவிலோ, மாடியிலோ நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் வி.மிருதுல்லா அபிராமி .
'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?'தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test
சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test). வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும் ஒற்றைக்காலில் நின்று பாருங்களேன் என்பதுதான் இந்த 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'டின் அறிவுறுத்தல். ஃபிளமிங்கோ (Flamingo) என்பது நீண்ட கழுத்தையும், மிக நீண்ட மெல்லிய கால்களையும் கொண்ட நீர்வாழ் பறவை இனம். தமிழில் இதை 'பூநாரை' என்று சொல்வார்கள். இந்தப் பறவைகள் எப்போதும் ஒற்றைக் காலில் நிற்பதை வழக்கமாக வைத்திருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த டிரெண்டுக்கு 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? நிலைதடுமாறாமல் அல்லது கீழே விழாமல் ஒரு நபரால் எவ்வளவு நேரம் ஒற்றைக்காலில் நிற்க முடிகிறது என்பதைக் கண்டறியும் இந்த டெஸ்ட், ஆரம்பத்தில், விளையாட்டுத்துறையினர் மற்றும் முதியோர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளில்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. சமீபகாலமாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்துபார்க்கப்படுகிற சுய பரிசோதனையாக இது மாறிவருகிறது. நமது உடலின் பேலன்ஸ், அதாவது சமநிலையைத் தெரிந்துகொள்வதற்கான சோதனை இது. நமது உடலும் மூளையும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைக் காட்டும் அளவுகோல்தான் பேலன்ஸ் அல்லது சமநிலை. செலவே இல்லாமல் சிம்பிளாகச் செய்துபார்க்கிற இந்த 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' உண்மையிலேயே சரியானதுதானா... தேவைதானா... எப்படிச் செய்ய வேண்டும்? சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜிடம் பேசினோம். ''புதிதாக ஜிம்மில் சேர்வோருக்கு, 'சிங்கிள் லெக் ஸ்டாண்டிங்' (Single Leg standing) என்ற சோதனையைச் செய்வோம். அந்த நபரை குறிப்பிட்ட நொடிகளுக்கு ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லி, அவரது உடலின் பேலன்ஸ் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். அதுதான் இப்போது வைரலாகிவருகிற 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'. ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு, கண்களை மூடியபடி நிற்கச் சொல்லி, அந்த நபரின் எந்தப் பகுதி அதிக ஸ்ட்ராங்காக இருக்கிறது, அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். ஒருவரது உடலின் சமநிலையைத் தெரிந்துகொள்ளும் இந்த டெஸ்ட் சரியானதுதான்'' என்பவர், உடலின் பேலன்ஸ் ஏன் முக்கியம், 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்'டை மேற்கொள்வது எப்படி என்பன உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்கிறார். மனித உடல் உடலின் சமநிலை (பேலன்ஸ்) ஏன் முக்கியம்? உடல் சமநிலை என்பது வெறும் கால்களின் வலிமையை மட்டும் பொறுத்தது அல்ல. அது பல உறுப்புகளின் டீம் வொர்க் (Team Work). அதில் நான்கு முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன. தசைகள்: உடலைத் தாங்கும் தூண்கள். உள் காது: இதுதான் உடலின் 'சென்சார்'. நாம் நேராக இருக்கிறோமா இல்லையா என்று மூளைக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். கண்கள்: தரை மட்டத்தைச் சரியாகக் கணிக்கும். மூளை: இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வேலை செய்யும் மேலாளர் போன்றது. உங்களால் ஒற்றைக் காலில் சரியாக நிற்க முடியவில்லை என்றால், இந்த டீம் வொர்க்கில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். அதாவது, நீங்கள் தடுமாறி விழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். நடை மற்றும் உடல் அசைவுகள் குறையலாம். மூளைத்திறன் குறைபாடு ஏற்பட்டு, ஞாபக மறதி அல்லது சிந்திக்கும் திறன் குறையலாம். இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் பாதிக்கலாம். Flamingo balance test 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்': எப்படிச் செய்ய வேண்டும்? காலணிகள் அணியாமல் வெறும் கால்களுடன் கண்களை மூடி சமதளமான தரையில் நிற்கவும். ஒரு காலை மடக்கியபடி, மற்றொரு காலில் (ஃபிளமிங்கோ பறவை நிற்பது போல) நிற்க வேண்டும். கைகளை மேலே தூக்கியபடியோ, இடுப்பிலோ வைத்துக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு நேரம் ஒற்றைக் காலில் அசையாமல் நிற்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். பேலன்ஸ் இருக்கிறதா? (இது பொதுவான வரையறைதான். இதை வைத்து பயப்படவோ, கவலைகொள்ளவோ தேவையில்லை. ஆரோக்கியத்துக்கான அலெர்ட்டாக எடுத்துக்கொண்டால் போதும். தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின்றி இவற்றை முயற்சி செய்ய வேண்டாம்) 30 நொடிகள் அல்லது அதற்கு மேல் நிற்க முடிந்தால் உங்களுடைய பேலன்ஸ் வேறு லெவல்.... சூப்பர்! 20 முதல் 29 நிமிடங்கள் நிற்க முடிந்தால், சிறப்பு. 10 முதல் 19 நொடிகள் நிற்க முடிந்தால், உங்கள் பேலன்ஸ் சராசரிக்கும் கீழே இருப்பதாக அர்த்தம். அதை நீங்கள் மேம்படுத்த வேண்டும். 10 நொடிகளுக்கும் கீழ்தான் நிற்க முடிகிறது, நீங்கள் 40 ப்ளஸ் வயதில் இருக்கிறீர்கள் என்றால் அலெர்ட் ஆக வேண்டும். ஸ்குவாட் பேலன்ஸை எப்படி இம்ப்ரூவ் செய்வது? நாற்காலியில் அமர்ந்து எழுவது போன்ற 'ஸ்குவாட்' (Squats) பயிற்சி, கால்களுக்கு அதிக வலிமை தரும். குப்புறப்படுத்தபடி தரையில் கைகளை ஊன்றி, உடல் முழுவதையும் நேர்க்கோட்டில் அசையாமல் நிறுத்தி வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும் பிளாங்க் (Plank) பயிற்சிகள் செய்ய வேண்டும். கூன் போடாமல் நிற்க, நடக்க, உட்காரப் பழக வேண்டும்'' என விளக்குகிறார் ஷீபா தேவராஜ்.
Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?
Doctor Vikatan: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்' (glass skin) மற்றும் இளமையான தோற்றத்தைத் தரும் என்பதும் உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க் பயன்படுத்தும்போது, தற்காலிகமாக நல்ல பலனைத் தருவது போலத் தோன்றலாம். ஆனால், உரித்து எடுக்கும் தன்மை கொண்ட அத்தகைய மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினாலோ அல்லது இரவு முழுவதும் முகத்தில் அப்படியே வைத்திருந்தாலோ அது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான 'ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை' (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடையது சென்சிட்டிவ் சருமமாக (sensitive skin) இருந்தாலோ, ரோசாசியா (rosacea), எக்ஸீமா (eczema), முகப்பரு பிரச்னைகள் இருந்தாலோ, பீல்-ஆஃப் மாஸ்க்குகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. சருமம் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க, முறையான சருமப் பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். முகத்தை கிளென்ஸ் செய்வது, வாரம் ஒருமுறை, இறந்த செல்களை அகற்றும் எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் சீரம் உபயோகிப்பது, சருமத்தின் பாதுகாப்பு லேயர்களை சரிசெய்யும் செராமைடு உபயோகிப்பது போன்றவை முக்கியம். கிளாஸ் ஸ்கின்... Doctor Vikatan: கிளாஸ் ஸ்கின் (Glass skin) எனப்படும் கண்ணாடி சருமம் எல்லோருக்கும் சாத்தியமா? கிளாஸ் ஸ்கின் (Glass skin) என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான சருமம் (healthy skin) நிச்சயம் கிடைக்கும். இரவு நேரத்தில் பீல்ஆஃப் அல்லாத (non-peel), ஜெல் அல்லது க்ரீம் வடிவிலான ஸ்லீப்பிங் மாஸ்க் பயன்படுத்தவும். குறிப்பாக ஹைலுரானிக் அமிலம் (hyaluronic acid), கிளிசரின் (glycerin), செராமைடுகள் (ceramides) மற்றும் நியாசினமைடு (niacinamide) கலந்த மாஸ்க் சிறந்தது. புருவங்கள், கண் இமைப் பகுதி, முகப்பரு உள்ள இடங்கள், வெயிலினால் சிவந்த இடங்களில் எல்லாம் பீல்-ஆஃப் (peel-off) மாஸ்க் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். எந்தவொரு புதிய மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்பும், அதை உங்கள் முன்கையின் உட்பகுதியிலோ அல்லது காதுக்கு பின்னாலோ தடவி 'பேட்ச் டெஸ்ட்' (patch test) செய்து பார்த்து, எந்த அலர்ஜியும் இல்லாததை உறுதிசெய்த பிறகே பயன்படுத்தவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை மாற்றம் (Protein metabolism) போன்ற உடல் இயக்கங்களுக்கு அவசியமானவை. ஆனால், சில கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி (Density) அதிகமாகிறது. இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தாமதப்படும்போது, கை, கால் விரல்கள் மற்றும் பாதங்களில் லேசான வலி அல்லது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். பெரிய ரத்த நாளங்களின் உள்சுவர்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் மிக மோசதானது நெஞ்சுவலி. ஆன்ஜினா (Angina) எனப்படும் இந்த நெஞ்சு வலி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதாலும் வரும்... இதயத் தமனிகளில் கொழுப்பு படிவங்கள் (Plaque) உருவாவதாலும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நெஞ்சுவலி ஏற்படலாம். இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா? நீங்கள் கேட்டதுபோல, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட வலிகள் தவிர, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது என்பது வேறு சிலஅறிகுறிகளையும் காட்டலாம். உதாரணத்துக்கு, கண்களுக்குக் கீழே வெள்ளையாகப் படிதல் (Xanthelasma), தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவதால் உடல் எடை அதிகரித்தல், எப்போதும் சோர்வாக உணருதல் (Fatigue) மற்றும் சுறுசுறுப்பின்மை, மன அழுத்தம் மற்றும் மூளை சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல் போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். இதைத் தெரிந்துகொள்ள, வெறும் 'டோட்டல் கொலஸ்ட்ரால்' (Total cholesterol) பரிசோதனை மட்டும் செய்யாமல், குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் வரை உணவு உட்கொள்ளாமல் (Fasting) இருந்து 'ஃபாஸ்டிங் லிப்பிட் புரொஃபைல்' (Fasting Lipid Profile) பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளுடன் தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?
Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம் இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்தாலும் பசிக்காவிட்டாலும் காலை உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டுமா.... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். தூங்கி எழுந்த பிறகு சிறிது நேரத்தில் நீங்கள் எதையும் சாப்பிடவில்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றச் செயல்பாடு தாமதமாகும். நீங்கள் சாப்பிடும்வரை, உங்கள் உடலிலுள்ள கொழுப்பு மற்றும் ஆற்றலைப் பாதுகாக்கும்படி மூளைக்கு உடல் தகவல் அனுப்பும். ஒருநாளைக்கான மொத்த கலோரி தேவை என்பது நபருக்கு நபர் வேறுபடும். நாள் முழுவதும் கண்ட கண்ட நேரத்துக்குச் சாப்பிடுவது என்ற பழக்கம் தொடரும் பட்சத்தில் அது வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவில் பாதிக்கலாம். காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டுமா, தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. வளரும் பருவத்தில் உள்ள இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். மட்டுமன்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளை சாப்பிடலாம். Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் வெயிட்லாஸ் ஆகுமா? எனவே. காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளைச் சாப்பிடலாம். அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காக காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, அவருக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். சிலர் காலையில் நேரமில்லை என்றோ, பசியில்லை என்றோ சாப்பிடுவதைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், மதிய உணவுக்கு முன்பே, பசி எடுத்து, நொறுக்குத்தீனிகளைத் தேடிச் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்றது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்துவர் விளக்கம்
சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்தச் சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர் H5N1 வைரஸ் பறவைக்காய்ச்சல் இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் குறித்தும், அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்தும் விரிவாகப் பேசினார் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர். தற்போது பரவி வரும் ஏவியன் இன்ஃபுளுயன்சா (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சலை H5N1 என்று குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வேளச்சேரி மற்றும் அடையார் ஆகிய மண்டலங்களில் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இறந்து கிடந்தன. அவற்றைச் சேகரித்துச் சோதனை செய்தபோது, அவை H5N1 எனும் கொடிய ஏவியன் இன்ஃபுளுயன்சா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா? ஏற்கனவே நாம் H1N1 மற்றும் H2N2 போன்ற வைரஸ்களைப் பார்த்திருக்கிறோம்; தற்போது பரவுவது H5N1 எனும் வகையாகும். இது பெரும்பாலும் பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது. ஆனால், பறவைகள் அதிகளவில் இறந்து கிடக்கும்போது, மனிதர்கள் அவற்றைக் கையால் தொட்டாலோ அல்லது கையாண்டாலோ அரிதாகவே மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, உங்கள் பகுதியில் காக்கைகளோ அல்லது கோழிகளோ கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தால், உடனடியாக அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பறவைகளைச் சோதனை செய்ய வேண்டும். பறவைக் காய்ச்சல் சமைக்காமல் சாப்பிடாதீர்கள்! இறைச்சி பொதுவாக இந்த வைரஸ் பறவைகளிடையேதான் அதிகம் பரவும். மனிதர்களைப் பொறுத்தவரை, நாம் இறைச்சியை நன்கு சமைத்துச் சாப்பிடுபவர்கள். சிக்கனை அதிக வெப்பத்திலோ அல்லது 100°C கொதி நிலையிலுள்ள நீரிலோ வேகவைக்கும்போது, இந்த வைரஸ் உள்ளிட்ட அனைத்துக் கொடிய கிருமிகளும் அழிந்துவிடும். ஆனால், தற்காலத்தில் உடற்பயிற்சி (Gym) மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் (Diet) இருப்பவர்கள், சாலட் போன்ற உணவுகளில் இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது அரைகுறையாகவோ வேகவைத்துச் சாப்பிடுகிறார்கள். மிதமான சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவைத்தாலும் இந்த வைரஸ் அழியாது. போதிய வெப்பநிலையில் சமைக்காதபோதுதான் இந்த வைரஸ் அழியாமல் மனிதர்களுக்குப் பரவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஏவியன் இன்ஃபுளுயன்சா என்பது ஒரு வைரஸ் (Viral disease). இது பாக்டீரியாவால் ஏற்படுவது அல்ல. இதற்கு எனத் தனியான எதிர்ப்புச் சிகிச்சைகள் (Specific treatment) எதுவும் இல்லை என்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது. கவனம் வீட்டில் பறவைகள் இருந்தால் வீட்டில் கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பவர்கள் என்றால், சில முக்கியமான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிகள் வளர்க்கப்படும் இடத்தை பவுல்ட்ரி (Poultry) என்று கூறுவோம்; அந்த இடத்தை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமீபத்தில் நீங்கள் வெளியிலிருந்து புதிய கோழிகளை வாங்கி வந்திருந்தால், அவை சரியாக உணவு உட்கொள்கின்றனவா அல்லது சோர்வாக இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். கோழி Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா? ஒருவேளை கோழிகளுக்கு வாந்தி எடுத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை (Veterinary Doctor) அழைத்துச் காண்பிக்க வேண்டும். ஏனெனில், தற்போது பீகார் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசின் உணவுத் துறை (Food Department) இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தீவிர வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பறவைகள் வளர்ப்பவர்கள் இப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட பறவைகள் இடும் எச்சம் வழியாகவும் மற்ற பறவைகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கோழி மற்றும் இதர பறவைகளை வளர்ப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது. பறவை இறந்தால் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் ஏதேனும் பறவை இறந்து கிடந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ (Food Safety Officers) தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சிக்கு (Corporation) அழைப்பு விடுத்தால்கூட, அவர்கள் உடனடியாக வந்து அந்தப் பறவையை எடுத்துச் சென்று பரிசோதனை செய்வார்கள். காகம் 'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! அந்தப் பரிசோதனையில் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள மற்ற காக்கைகளுக்கும் பிற பறவைகளுக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது என்பதை அறிய முடியும். எனவே, உங்கள் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், தாமதிக்காமல் உடனடியாகத் தகுந்த அதிகாரிகளுக்குத் (Authorities) தெரியப்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இறைச்சி, முட்டை சாப்பிடலாமா? கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு, தற்போதைய சூழலில் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வருகின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பிரியாணி, கிரில் சிக்கன் அல்லது சில்லி சிக்கன் என எதுவாக இருந்தாலும், அதிக வெப்பத்தில் (High flame) சூடாகத் தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் பாதுகாப்பானவைதான். எவ்வளவு கொடிய வைரஸாக இருந்தாலும், அந்த வெப்பத்தில் அவை அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். கிரில்டு சிக்கன் இந்தத் தொற்று எந்த மாதிரியான சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், இறைச்சியைச் சரியாகச் சமைக்காமல், மிதமான சுடுநீரில் மட்டும் வேகவைத்துச் சலாட் (Salad) போன்ற உணவுகளில் பயன்படுத்தும் போதுதான் ஆபத்து அதிகம். அதேபோல் இறைச்சியைச் சரியாகக் கழுவிச் சுத்தம் செய்யாததும் ஒரு காரணமாக அமைகிறது. தற்போது ஒரு குறிப்பிட்ட பண்ணையில் கோழிகள் விரைவாக இறந்திருக்கலாம் என்பதால், சில இடங்களில் இறைச்சிக்கு அதிக தள்ளுபடிகள் (Offers) வழங்கப்படலாம். அவ்வாறு வழக்கத்திற்கு மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் இறைச்சிகளில் தரம் குறைந்த அல்லது பாதிக்கப்பட்ட இறைச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்... சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா? பொதுவாக இந்த வைரஸ் இன்னும் நகரத்தில் பெரிய அளவில் பரவவில்லை. இதுவரை யாருக்கும் பெரிய அறிகுறிகளோ அல்லது பெருந்தொற்று பாதிப்போ ஏற்படவில்லை என்றுதான் தகவல்கள் வருகின்றன. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்கள் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். மருத்துவமனைக்குக் காய்ச்சல், வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்குப் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு இருக்குமோ என்று மருத்துவர்கள் ஒருமுறை சிந்தித்து, அதற்கேற்பப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பறவைக் காய்ச்சல் அறிகுறி! நோய் அறிகுறி பொதுவாக, சாதாரண காய்ச்சல் என்றால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஏற்படும். ஆனால், இந்தப் பறவைக் காய்ச்சலில் (Bird Flu) காய்ச்சலுடன் சேர்த்து உடல் மூட்டுகளில் வலி (Joint pain) மிக அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் இது சாதாரண வைரஸ் தொற்று (Viral infection) போலவே தோன்றும். ஆனால், சிலருக்கு இதன் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும். குறிப்பாக, ஏற்கனவே புற்றுநோய் (Cancer) பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் (Diabetes), காசநோய் (TB) உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சிலருக்குக் காய்ச்சல் மிகத் தீவிரமான நிலைக்கு (High grade fever) செல்லக்கூடும். அத்துடன் மூச்சுத் திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் காசநோயாளிகளுக்கும் இது நுரையீரலில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். பொதுவாக அனைத்து வைரஸ் தொற்றுகளும் காய்ச்சலில் தொடங்கி, பின் உடல் வலிக்கு பரவும். அதன் பிறகு பசியின்மை மற்றும் வாந்தி போன்ற உணர்வுகள் ஏற்படும். ஆனால், பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக வயிற்றுப்போக்கும் (Loose motion) ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டு மருந்து Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா? வீட்டு மருந்து சரிவருமா? இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்களாகவே சுய மருத்துவம் (Self-medication) செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் வெளியில் சென்று சிக்கன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். இறைச்சிக் கடை, பறவைகள் கடை வைத்திருந்தால்? தற்போது கோடைக்காலம் தொடங்கி வரும் வேளையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது மிகுந்த ஆபத்தானது. தவிர்க்க முடியாத சூழலில் பறவைகளைக் கையாள வேண்டியிருந்தால், போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பது அவசியம். பறவைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் (Mask) மற்றும் கையுறைகளை (Gloves) அணிய வேண்டும். பறவைகளுடனான வேலையை முடித்த பிறகு, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளையும் உடலையும் நன்கு சுத்தம் செய்து, தனிநபர் சுகாதாரத்தைப் (Personal hygiene) பேண வேண்டும். இறைச்சிக் கடை குறிப்பாக, இறைச்சிக் கடைகளில் வேலை செய்பவர்கள் அல்லது பண்ணைகளில் இருப்பவர்கள், தங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவி, தங்களை முழுமையாகச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே (Sterilize) வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என்று கூற முடியாது. இந்தத் தொற்று 99% பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது என்றாலும், 1% மனிதர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு மனிதர்களுக்குப் பரவத் தொடங்கினால், அந்த வைரஸின் வீரியம் அதிகரித்து, அது ஒரு பெருந்தொற்றாக மாறுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள்! குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இந்தச் சூழலில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் பீட்சா, பர்கர் மற்றும் ஃபிரைடு சிக்கன் (Fried Chicken) போன்ற உணவுகளை விரும்பி உண்ணுவர். பொதுவாக, ஃபிரைடு சிக்கன் தயாரிக்கும்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. இருப்பினும், சில உணவகங்களில் இறைச்சி நேற்றையதா அல்லது இன்றையதா என்பது நமக்குத் தெரியாது. சில இடங்களில் இறைச்சியைச் சரியாகச் சமைக்காமலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பிரியாணி அல்லது ஃபிரைடு சிக்கன் போன்ற உணவுகளை கடைகளில் வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள் சிக்கன் என்பது நம் உடலுக்குத் தேவையான ஒரு சிறந்த புரதச் சத்து (Protein) என்றாலும், அது இயற்கையாகவே உடலில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது விற்கப்படும் கோழிகளில் எவை நோயுற்றவை, எவை ஆரோக்கியமானவை என்பதை நம்மால் கண்டறிய முடியாது. எனவே, பாதுகாப்பைக் கருதி இந்தச் சூழலில் கோழி இறைச்சியைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக கடல் உணவுகளுக்கு மாறுவது மிகவும் சிறந்த முடிவாக இருக்கும். தடுப்பூசி ஏதும் இருக்கிறதா? பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, பொதுவாகச் சீசனல் ஃப்ளூ (Seasonal Flu) மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கான (Swine Flu) தடுப்பூசிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது பரவி வரும் இந்தப் பறவைக் காய்ச்சலுக்கு (H5N1) என்று பிரத்யேகமாக எந்தத் தடுப்பூசியும் இன்னும் கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, Fluquadri, Influvac, Vaxiflu போன்ற இன்ஃபுளுயன்சா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 'இன்ஃப்ளூவேக்' என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசியாகும். இவை தற்போது பல இடங்களில் கிடைப்பினும், இவை பறவைக் காய்ச்சலுக்கு எந்த அளவிற்குப் பலன் அளிக்கும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. தடுப்பூசி Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா? ஏனெனில், இன்ஃபுளுயன்சா என்பது ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. அதில் H1N1 முதல் தற்போதுள்ள H5N1 வரை பல வகைகள் உள்ளன. எனவே, தற்போதைய சூழலில் நீங்களாகவே எந்தத் தடுப்பூசியையும் தேடிப் போடக்கூடாது. அதேபோல் சுய மருத்துவமும் (Self-medication) செய்துகொள்ளக்கூடாது. பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் அல்லது அறிகுறிகள் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் மிகச்சிறந்த வழிமுறை என்பது எனது அறிவுரை ஆகும். பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம்? பறவைக் காய்ச்சலைக் கண்டறிய H5N1 பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான பிரத்யேகப் பரிசோதனை மையங்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. அங்கு உங்கள் மாதிரிகளை (Samples) அனுப்பி பரிசோதித்து, ஒருவேளை தொற்று உறுதியானால், கொரோனா காலத்தில் செய்தது போலப் பாதிக்கப்பட்டவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார். (Isolation). வைரஸின் வீரியம் குறையும் வரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். இந்த நோயால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதுதான் என்றாலும், இது அதிகப்படியான காய்ச்சலையும் மூட்டு வலியையும் உண்டாக்கும் என்பதால், நீங்களாகவே வீட்டில் சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்து, முறையான மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதே பாதுகாப்பானது. மருத்துவரை அணுக வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இக்கட்டான சூழலைத் தவிர்க்க நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. உங்கள் பகுதியில் பறவைகள் இறந்து கிடந்தால், தாமதிக்காமல் உடனே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பவர்கள் இந்தச் சீசனில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதிய சுகாதாரமில்லாத மற்றும் இறைச்சியைச் சரியாக வேகவைக்காத உணவகங்களில் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலில், சில காலம் சிக்கன் உணவுகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். ஒருவேளை வீட்டில் சமைப்பதாக இருந்தால், அந்த இறைச்சி எங்கிருந்து வருகிறது, தரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 100°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் நன்கு கொதிக்க வைத்துச் சமைத்தால் எந்த வைரஸும் அதில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. எதற்கும் பாதுகாப்பு கருதி, அடுத்த இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கோழி மற்றும் வாத்து இறைச்சி உண்பதைத் தவிர்ப்பது மிகச்சிறந்த முடிவாகும் என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர். எதையும் அறிந்து கொண்டு விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. நாமும் தெரிந்து கொள்வோம், நமக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வைப்போம்.! சென்னையில் பறவைக்காய்ச்சல்: `பீதியடைய வேண்டாம்; விழிப்புணவு அவசியம்..!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுவாச நோய்களில் ஆசியாவிலேயே முதலிடம்; இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?!
ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா - இதை லான்செட் மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ், 2023' (Global Burden of Disease) என்ற உலகளாவிய சுகாதார தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது. காற்றுதான் காரணமா? இந்தியாவில் இந்த நோய்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகளில் மக்கள் தொகை, மாசு போன்றவை இருந்தாலும், இதற்கு மிக முக்கிய காரணம், 'காற்று மாசுபாடு'. இந்தக் காற்று மாசுபாடும்... > வெளியில் உள்ள துகள் மாசுக்கள், > வீடுகளில் உள்ள திட எரிபொருள்கள், அதாவது மரம், விறகு, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகைகளால் ஏற்படுகின்றன. சுவாச நோய் SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! மருத்துவ வசதிகள் குறைவு இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள தென் ஆசியப் பகுதி தான் ஆசியாவின் நாள்பட்ட நுரையீரல் நோய் மையமாக இருக்கிறது என்று லான்செட் ஆய்வு கூறுகிறது. இந்த நோய் ஒரு லட்சம் மக்களில் 3,044 பேருக்கு உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆசியாவின் பல பகுதிகளில் இந்த நோய் பரவலாக இருந்தாலும், குறிப்பாக, சுகாதாரம் குறைவாக உள்ள பகுதிகளிலும், பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் மக்கள் உள்ள பகுதிகளிலும் இந்த நோய் அதிகம் இருக்கிறதாம். இவர்களால் இந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க முடியாமல், மரணங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. நோயைக் காட்டிலும், நோயிற்கான மருத்துவம் பார்க்க முடியாமல் மக்கள் இறப்பது இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார். திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்... இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை மிகவும் பொதுவான (Classic) அறிகுறிகள். உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம். திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீர்னு குப்புனு வேர்க்குதா? ஹார்ட் அட்டாக் முதல் புற்றுநோய் பாதிப்புவரை: கவனம்! #SuddenSweat இந்த அறிகுறிகள் அனைத்தும் திடீரென ஒரு நாளில் ஏற்பட வேண்டும் என அர்த்தமல்ல. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன், முதலில் புகை வந்து, பிறகு அது வெடித்து நெருப்புக் குழம்பை உமிழ்வதுபோல, ஹார்ட் அட்டாக் அறிகுறிகளும் படிப்படியாகக் குறைவான தீவிரத்துடன் (Warning signals) வெளிப்பட்டு, திடீரென ஒரு நாள் உச்சநிலையை அடையக்கூடும். குறிப்பாக, பெண்கள் மற்றும் சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இது போன்ற மாறுபட்ட (Atypical) அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

28 C