IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?
நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது. உலகளவில் நூறு வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற ஐந்து நீல மண்டலங்களில், ஜப்பானில் இருக்கிற 'ஒகினாவா' தீவும் ஒன்று. அதென்ன நீல மண்டலம்..? உலகளவில், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் மக்கள் அடங்கிய பகுதி 'நீல மண்டலங்கள்' என குறிப்பிடப்படுகிறது. Japanese' 100 years secret கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்! ஜப்பானில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது திங்கட்கிழமையன்று 'முதியோர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட முதியோர் கணக்கெடுப்பின்படி, ஒகினாவா தீவில் 99,763 பேர் நூறு வயதை கடந்து வாழ்வதாக 'தி வயர்' பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த முதியவர்கள், தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி. அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai) சரி, அப்படி என்னென்ன செய்து இந்தத் தீவைச் சேர்ந்தவர்கள் நூறு வயதைக் கடந்தும், ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள்..? இதே கேள்வி ஹெக்டர் கார்சியா (Hector Garcia) மற்றும் பிரான்செஸ்கோ மிராலஸ் (Francesc Miralles) என்கிற இரண்டு எழுத்தாளர்களும் எழுந்தது. அந்தத் தீவில் தங்கி, அங்கிருக்கும் மூத்த குடிமக்களுடன் பேசி, அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கேட்கிறார்கள். அவர்களும் அதை வெளிப்படுத்துகிறார்கள். அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai). ஜப்பானிய மொழியில் 'iki' என்றால் வாழ்தல். 'gai' என்றால் அர்த்தம். அதாவது, ஒகினாவா தீவு வாழ் மக்கள் வாழ்வதற்கான அர்த்தம் தெரிந்து வாழ்வதுதான், அவர்களுடைய இந்த நீண்ட ஆயுளின் ரகசியம் என்பது தெரிந்திருக்கிறது. அந்த 'இகிகை' வாழ்க்கை முறையை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்கள். அதன் பெயர் 'The Japanese secret to a long and happy life.' The Japanese secret to a long and happy life அந்த ரகசியம் * நீங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இதுதான் 'இகிகை'யின் அடிப்படை. * உங்கள் தட்டில் இருக்கிற உணவில் 80 சதவிகிதம் மட்டுமே உண்ணுங்கள். அதாவது, நீங்கள் சாப்பிட விரும்புவதில் 80 சதவிகிதம் மட்டும் உண்ணுங்கள். வயிற்றை நிரப்பாதீர்கள். பதற்றமில்லாமல் வாழுங்கள்..! * எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். வயது அதிகமானவர்கள், பெரும்பாலும் சுறுசுறுப்பாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவர்களுடைய சுறுசுறுப்பே அவர்களுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம். * உங்கள் வாழ்க்கையை பதற்றமில்லாமல் நிதானமாக கையாளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மீது உங்களுக்கே நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். அது உங்கள் வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தைச் சேர்க்கும். முதல் பாயிண்ட்டில் சொன்னதுபோல, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இனிகை வாழ்க்கை முறையில் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. Japanese' 100 years secret Radio Taiso என்கிற உடற்பயிற்சி * இதுவோர் உடற்பயிற்சி. பெயர் Radio Taiso. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு ரேடியோ உடற்பயிற்சி நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதால்தான் இதற்கு இந்தப் பெயர். 'Taiso' என்றால் ஜப்பானிய மொழியில் உடற்பயிற்சி என்று அர்த்தம். 1928-ம் வருடம் ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த உடற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம் இந்த உடற்பயிற்சி உடலின் அனைத்து முக்கியமான தசைகளுக்கும் வலுவை அளிக்குமாம். ஒகினாவா தீவில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஜப்பானில் இருக்கிற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தினமும் இந்த உடற்பயிற்சியை செய்கிறார்கள். வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே செய்யப்படுகிற இந்த உடற்பயிற்சியும் ஒகினாவா மூத்தவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். Radio Taiso என்று டைப் செய்தால், யூ டியூபில் வீடியோக்கள் கொட்டுகின்றன. Japanese' 100 years secret 102 வயதில் மலையேற்றம்; Guinness World Record-ஐ சாத்தியப்படுத்திய ஜப்பான் நாட்டு முதியவர்! நண்பர்கள் சூழ் வாழ்வு * நல்ல நண்பர்கள் சூழ இருப்பதும் நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது ஒகினாவா மக்களின் வாழ்க்கை. தங்கள் கிராமங்களில் இருக்கிற நண்பர்களுடன் ஓய்வு நேரத்தை பேசியும், விளையாடியும் கழிப்பார்களாம். இந்த வகை மகிழ்ச்சி நீண்ட ஆயுளைத்தரும் என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி ஒன்றும் உறுதிபடுத்தியிருக்கிறது. * சிரியுங்கள்... மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியானவற்றையும் உங்களுக்குத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். * இறந்த காலத்தைக் குறித்து வருத்தப்படாமல், எதிர்காலத்தைக் குறித்து அச்சம்கொள்ளாமல் நிகழ்காலத்தைக் கொண்டாடி வாழுங்கள். நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..? இவையனைத்துமே நம் வீட்டுப் பெரியவர்களும் சொன்னவைதானே..! நம் பாட்டனும், பாட்டியும்கூட இப்படித்தானே வாழ்ந்தார்கள் என்று தோன்றுகிறதல்லவா..? ஆம், இவைதான் ஜப்பானியர்களின் 100 வயதைக் கடந்த ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியம். இன்றைக்கு அவற்றையெல்லாம் மறுபடியும் 'இகிகை' என்ற ஜப்பானிய வார்த்தையில் காலம் நமக்கு நினைவூட்டுகிறது. அவற்றை முடிந்தவரை பின்பற்றி, வாழ்வியல் நோய்கள் அண்டாமல், நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: கழுத்தில் படிந்திருக்கும் கருமை, நீரிழிவின் அறிகுறியாக இருக்குமா?
Doctor Vikatan: என் வயது 26. கடந்த சில வருடங்களாக எனக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருக்கிறது. நான் அது சருமம் தொடர்பான பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா, கழுத்தில் ஏற்பட்ட கருமைக்கு என்ன காரணமாக இருக்கும், என்ன தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா கழுத்தில் கரும்படலம் ஏற்படும் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படுவதாகவும், அழுக்கு என்றும் நினைத்துக்கொண்டு மிகவும் ஆக்ரோஷமாகத் தேய்த்துக கழுவுவதையெல்லாம் செய்கிறார்கள். சிலருக்கு கழுத்து மட்டுமன்றி, முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், முகம், நெற்றி போன்ற இடங்களிலும் கரும்படலம் வரலாம். கழுத்தில் ஏற்படும் இந்தக் கருமை பிரச்னைக்கான காரணம், அழுக்கோ, சங்கிலி அணிவதோ இல்லை. சருமம் தடித்துப் போவதுதான் காரணம். இதை 'அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' (Acanthosis nigricans) என்று சொல்வோம். சருமம் தடிமன் ஆவதால் அந்தப் பகுதியில் நிறமும் மாறுகிறது. சிலருக்கு இது 'ப்ரீ டயாபட்டீஸ்' எனப்படும் நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, நீங்கள் சர்க்கரைநோய்க்கான பரிசோதனையைச் செய்துபார்த்து இதை உறுதிசெய்துகொள்ளலாம். அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம். கழுத்தில் படிந்திருக்கும் கருமை... நீரிழிவின் அறிகுறியா? Doctor Vikatan: விடாமல் தொடரும் அரிப்பு... ப்ரீ டயாபடீஸ்தான் காரணமா? புறத்தோற்றம் சம்பந்தப்பட்டது என்பதால், சரும மருத்துவரை அணுகி, இதற்கான க்ரீம் மற்றும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும்படி பலரும் கேட்பதுண்டு. ஆனால், அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடும்போதும், அதிகப்படியான எடையைக் குறைக்கும்போதும் இந்த பாதிப்பு குறைவதையும் கழுத்தின் நிறம் மாறுவதையும் பார்க்கலாம். பெரியவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற எதுவும் காரணமில்லை என்ற பட்சத்தில், சரும மருத்துவர், இந்தப் பிரச்னைக்கு வேறு சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
சீரகத்தண்ணீர் &தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!
சோஷியல் மீடியாவில் 'டீடாக்ஸ் வாட்டர்' என்றாலே, வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்து அழகான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குடிப்பதுதான் ட்ரெண்டிங். இதையே தயாரிப்பதுபோல வீடியோ போட்டால் லைக்ஸ் பிச்சுக்கும். சரி, அன்றாட வாழ்க்கையில் எல்லா நாளும் இந்த டீடாக்ஸ் வாட்டரை தயாரிக்க முடியுமா என்றால், வாய்ப்புக் குறைவு. இதற்கு என்ன தீர்வென்று திருவாரூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ் அவர்களிடம் கேட்டோம். சீரகத்தண்ணீர் ''உங்க சமையலறையிலேயே சீரகம், கொத்தமல்லி (தனியா)ன்னு ரெண்டு மருத்துவரை வெச்சுக்கிட்டு, ஏன் மருந்தைத் தேடி அலையுறீங்க..? சீரகத் தண்ணி, கொத்தமல்லித் தண்ணி குடிச்சாலே பாதி பிரச்னைகள் பறந்து போயிருமே. சீரகமும், கொத்தமல்லியும் வாத, பித்த, கப தோஷத்திலிருந்து உடலைச் சமநிலையில் வைப்பதற்கு உதவி செய்யும் இரண்டு சமனிகள் என்று சொல்லலாம். வயது வரம்பு இல்லாமல் பெரியவர்களிலிருந்து இருந்து சிறியவர்கள் வரைக்கும், கர்ப்பிணிப் பெண்கள் எல்லாருமே சீரகத் தண்ணீர், கொத்தமல்லி அருந்தலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துறது, உடல் சூட்டைக் குறைக்கிறது, வயிறு பிரச்னைகளைச் சரி செய்யுறதுன்னு இந்த ரெண்டு தண்ணியும் செய்யாத வேலையே இல்லை. இதுமட்டுமில்லாம, வாயில் வர்ற புண்கள், துர்நாற்றம் இரண்டுக்குமே இது ஒரு சரியான தீர்வு. கொத்தமல்லித்தண்ணீர் சிறுநீரகப் பிரச்னை இருக்கிறவங்க மருத்துவரை கேட்டுவிட்டு கொத்தமல்லி தண்ணீர் குடியுங்க. சீரகத் தண்ணீர் இதுக்கும் ஒரு படி மேல..! எல்லாருமே எடுத்துக்கலாம். எந்த மருந்தா இருந்தாலுமே தொடர்ந்து 48 நாள் எடுத்துக்கணும், பிறகு 30 நாள் இடைவேளை விட்டு திருப்பி எடுத்துக்கணும். `குளிர்காலத்திலும் இருவேளை குளியல் அவசியம்... ஏன் தெரியுமா?' - விளக்கும் இயற்கை மருத்துவர்! எப்படி தயாரிப்பது..? சீரகத் தண்ணியையும், கொத்தமல்லித் தண்ணியையும் ரெண்டு முறையில குடிக்கலாம். ஒண்ணு, கஷாயமா காய்ச்சிக் குடிக்கிற முறை. இன்னொண்ணு மருத்துவ பயன்பாட்டுக்கு. மருத்துவ பயன்பாட்டுக்கு: 15 கிராம் சீரகம் அல்லது 15 கிராம் கொத்தமல்லி எடுத்து அதுல 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது 2 டம்ளர் அளவுக்கு வற்றி வரும் வரை காய்ச்சி குடிக்கலாம். 3 வயசுல இருந்து 5 வயது வரைக்கும் இருக்கிற குழந்தைகள், 15 முதல் 30 மில்லி வரைக்கும் அருந்தலாம். 5 வயசுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு 50 முதல் 100 மில்லி வரை கொடுக்கலாம். இதற்கு ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனை ரொம்ப முக்கியம். சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ். சீரகத்தில் இத்தனை நன்மைகளா? அல்சர் முதல் மைக்ரேன் வரை... `சீரகம்' சீர் செய்யும் 9 பிரச்னைகள் கஷாயத்துக்கு... 10 கிராம் சீரகம் அல்லது கொத்தமல்லியை ஒரு லிட்டர் தண்ணீர்ல போட்டு 100 மில்லி மட்டும் ஆவியானதும் குடிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாதது என்றாலும், ஏற்கெனவே இவற்றை குடிச்சி பழகினவங்க அப்படியே ஃபாலோ பண்ணலாம். முதல்முறை குடிக்கவிருக்கிறவங்க, ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனையைக் கேட்டு குடிக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, அதிகபட்சமாக எத்தனை ஸ்டென்ட்வரை பொருத்தலாம்?
Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், அதிகபட்சம் எத்தனை ஸ்டென்ட் வரை பொருத்திக் கொள்ளலாம். ஸ்டென்ட் பொருத்திக் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஆபத்து இல்லை என அர்த்தமா, அவர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது, சில அடைப்புகளை ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்டிங் சிகிச்சைகள் மூலம் சரிசெய்ய முடியும். ரத்தக்குழாய்களின் அளவு மற்றும் அவற்றில் ஏற்பட்ட அடைப்பின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து ஸ்டென்ட் பொருத்தப்படும். பொதுவாக ஒன்று முதல் அதிகபட்சம் நான்கு ஸ்டென்ட் வரை பொருத்துவதுதான் சகஜம். ஆனால், சில நபர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள மாட்டோம் என்ற மனநிலையில் உறுதியாக இருப்பார்கள். அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஸ்டென்ட் பொருத்தப்பட வேண்டி வரலாம். ஒரே சமயத்தில் இல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களையும் பார்க்கலாம். எனக்குத் தெரிந்து ஒரு நபருக்கு 12 ஸ்டென்ட் வரை பொருத்தப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். ரத்தக்குழாயில் அடைப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும் பிரச்னை. ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம், அந்த நபருக்கு ரத்தக்குழாயில் அடைப்போ, மாரடைப்போ வராது என்று சொல்லவே முடியாது. இதயநலம் அந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது என்பது நம் கையில்தான் உள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, உறக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதயநலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். அதன் மூலம் ரிஸ்க்கை ஓரளவு குறைக்க முடியும். மற்றபடி, இதற்கான நிரந்தர தீர்வு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, வாழ்வியலில் அக்கறை செலுத்துவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா?
Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம்
தினமும் 10 ஆயிரம் அடி நடந்தால் ஆரோக்கியமாக இருப்போம் என்று நாமெல்லாரும் நம்பிக் கொண்டிருக்க, ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் 'Interval Walking போங்க. நல்லாயிருப்பீங்க' என்கிறார்கள். அதென்ன Interval Walking? ஈரோடைச் சேர்ந்த விளையாட்டு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத் விளக்குகிறார். Japanese Walking ''ஒரு நாளில் 10,000 அடிகள் நடப்பதற்கு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். ஜப்பானிய Interval Walking-ஐ சிரமமின்றி குறைந்த நேரத்தில் செய்யலாம். பலனை எடுத்துக்கொண்டால், அதே அல்லது அதற்கும் மேல் கிடைக்கும். Interval Walking என்றால் என்ன? இடைவெளி நடைப்பயிற்சி என்பதுதான் இதன் அர்த்தம். இந்த நடைப்பயிற்சியில் 3 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். அடுத்த 3 நிமிடம் சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி 5 முறை நடக்க வேண்டும். அதாவது, ஒரு முறைக்கு முதல் 3 நிமிடம் வேகமாகவும், அடுத்த 3 நிமிடம் சாதாரணமாகவும் நடக்க வேண்டும். இதுபோல 5 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு மொத்தம் 30 நிமிடம் ஆகும். ஒரு வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். முதன் முதலில் ஆரம்பிக்கும்போது, 2 முறை (12 நிமிடம்) மட்டும் செய்யலாம். உடல் பழகிய பிறகு மெதுவாக 5 முறை வரை கூட்டிக்கொள்ளலாம். Interval Walking பலன்கள் என்னென்ன..? 'இடைவெளி நடைப்பயிற்சி' தொடர்பாக ஜப்பானில் நடைபெற்ற ஆராய்ச்சிகள், இது தரும் நன்மைகளை பட்டியலிட்டிருக்கின்றன. * உடல் எடை குறைதல் * ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு * தசை வலிமை * வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரித்தல் * இதய ஆரோக்கியம் மேம்படல் * நினைவாற்றல், கவனிக்கும் திறன் அதிகரித்தல் * நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதல் * நல்ல மனநலம் மற்றும் நல்ல தூக்கம் ஜப்பானிய 'இடைவெளி நடைப்பயிற்சி' யாருக்கெல்லாம் ஏற்றது? * இளைஞர்கள் முழுமையாக 5 முறை செய்யலாம். * நடுத்தர வயதில் இருப்பவர்கள், முதியவர்கள் ஒருநாளைக்கு 2 அல்லது 3 முறை செய்ய தொடங்கலாம். * சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப் பயனுள்ள நடைப்பயிற்சி இது. ஆனால்,லோ சுகர் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. * கர்ப்பிணிப்பெண்கள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும். Interval Walking கவனிக்க வேண்டியவை... * திடீரென அதிக வேகத்தில் தொடங்கக்கூடாது. முதலில் வார்ம் அப் அவசியம். * இந்த நடைப்பயிற்சியை செய்கையில் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால் உடனே நிறுத்த வேண்டும். * உடலில் தண்ணீர்ச்சத்து அவசியம். நடைப்பயிற்சியின்போது நீர்ச்சத்து குறைந்தால் மயக்கம் வரலாம், கவனம். பிஸியான வாழ்க்கையிலும் செய்யலாம் ! 'எனக்கு 30 நிமிடம் நடக்க நேரம் கிடைப்பதில்லை' என்பவர்கள், காலை 15 நிமிடம், மாலை 15 நிமிடம் என பிரித்தும் செய்யலாம். அப்படி செய்தாலும் பலன் ஒரே மாதிரிதான் கிடைக்கும். காலையில் செய்யும் போது நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும். மாலையில் செய்யும் போது மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் வரும். டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத் Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! உணவில் கவனம்! நடைப்பயிற்சி செய்பவர்கள், புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான மாவுச்சத்து மற்றும் காய்கறிகள் அவசியம். அதிக எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள் தவிர்க்கவும். நடைப்பயிற்சிக்கு முன்பும் பின்பும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா? நீண்ட கால பலன்கள்! * 3 முதல் 6 மாதங்களில் எடை குறைவது தெளிவாக தெரியும். * ஒரு வருடத்தில் இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆனால், தொடர்ச்சியாக நடந்தால் மட்டுமே பலன் தரும். அதுதான் உடல் நலனுக்கு உண்மையான சாவி'' என்கிறார் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர்
சென்னை இராயப்பேட்டையில் கடந்த ஜூலை மாதம் நஸ்ருதின் என்பவரை ஒரு நாய் கடித்திருக்கிறது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றவருக்கு ரேபிஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். நாய் கடித்த உடனேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழந்திருக்கிறார் எனும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நஸ்ருதின் இதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள அவசரக்கால சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். இதுதொடர்பாகப் பேசிய அவர், நாய்கடியில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று இருக்கிறது. இரத்தம் வராமல் நாயின் பல் மட்டும் பட்டிருந்தால் அதனைக் கிரேட் 1 என்று சொல்வார்கள். இரத்தம் வந்தால் அதனைக் கிரேட் 2 என்று சொல்வார்கள். நாயின் பல் பதிந்து கொஞ்சம் தசையை மட்டும் கடித்திருந்தால் கிரேட் 3 என்று அர்த்தம். பாதித் தசையைக் கடித்து எடுத்திருந்தால் அதனைக் கிரேட் 4 என்று சொல்வர்கள். நாய் கடித்தால் முதலில் சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கிரேட் 1, கிரேட் 2 -வாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் தடுப்பூசி மட்டும் போடுவார்கள். ஒரு மாதத்தில் 5, 6 டோஸ் தடுப்பூசிகள் போட வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய் கடித்திருந்தால் 2 டோஸ் போட வேண்டும். தெரு நாய் எதாவது கடித்திருந்தால் 5 முதல் 6 டோஸ் தடுப்பூசிகளை முழுவதுமாகப் போட்டிருக்க வேண்டும். அவசரக்கால சிகிச்சை நிபுநர் சாய் சுரேந்தர் தடுப்பூசிகளைப் போட்டப்பிறகு எல்லாம் சரியாகி விட்டதென்றால் ரேபிஸ் டெஸ்ட்டையும் ஒருமுறை எடுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் சிலர் தடுப்பூசிகளையே சரியாகப் போடுவதில்லை. 2 டோஸ் எடுத்துக்கொண்டு அஜாக்கிரதையாக விட்டுவிடுகிறார்கள். யாரும் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. கிரேட் 3, கிரேட் 4 வகை என்றால் முதலில் எல்லாம் தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்கள். ஆனால் இப்போது ‘Immunoglobulin’ என்ற விலையுயர்ந்த ஒரு ஊசி இருக்கிறது. அதனைத்தான் போடுவார்கள். அதனைப் போட்டால் நோய் தொற்று பரவாமல் இருக்கும். இதனை அந்த நபர் (நஸ்ருதின்) போடாமல் இருந்திருக்கலாம். அதனால் கூட அவர் உயிர் இறந்திருக்கலாம். ரேபிஸ் வந்துவிட்டது என்றால், எதைப் பார்த்தாலும் பயப்படுவார்கள். தண்ணீரைப் பார்த்தால் கூட பயப்படுவார்கள். நாய் செய்யக்கூடிய செயல்களைச் எல்லாம் செய்வார்கள். Represental Images நாய் கடித்தவர்கள் சில நாட்களுக்கு அசைவ உணவுகள், காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வீட்டு சாப்பாடை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்தது என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நாய்கள் அதிகமாக இருக்கும் இடங்களைப் பார்த்தால் கார்பரேஷனிற்கு தகவல் கொடுக்க வேண்டும். முதலில் நாய்க்கு எல்லோரும் சாப்பாடு போடுவார்கள். இப்போது உணவு சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் நாய்கள் வெறியாகி விடுகின்றன. சில கால சூழல் மாற்றங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன” என்று தெறிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
எங்கோ ஒருசிலருக்கு இருந்த பிசிஓஎஸ் இப்போது பல இளம் பெண்களுக்கும் இருக்கிறது. உடல் பருமனில் ஆரம்பித்து குழந்தையின்மை வரைக்கும் பிசிஓஎஸ்ஸினால் வருகிற பிரச்னைகள் எக்கச்சக்கம். இதற்கு ஒரே வழி பிசிஓஎஸ்ஸை கட்டுக்குள் வைப்பதுதான். அதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சீனியர் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். PCOS தினையும் கம்பும்... ’’பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியைக் குறைத்துவிட்டு சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பிசிஓஎஸ் இருப்பவர்கள் தினை, கம்பு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், இந்த சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் பார்லிகூட சாப்பிடலாம். கேழ்வரகை தவிர்த்து விடலாம். சிலர் கேழ்வரகு சாப்பிடுவார்கள். ஆனால், கேழ்வரகு மாவில் தோசை, கஞ்சி ஆகியவை செய்து சாப்பிடும்போது அதிலும் மாவுச்சத்து அதிகமாக இருக்கும். அதனால், கேழ்வரகை தவிர்த்து விடலாம். பிசிஒஎஸ் இருப்பவர்கள் தினை அல்லது கம்பு சாப்பிடுவதற்கு முன்னால் அவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அரைத்து பயன்படுத்தலாம். அல்லது ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து பயன்படுத்தலாம். அல்லது முளைக்கட்டி பயன்படுத்தலாம். pcos மாவுச்சத்து கட்டுப்பாடு தேவை இந்த சிறுதானியங்களில் புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் குறைந்த அளவுதான் சாப்பிட முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் மாவுச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்ள முடியாது. நீரிழிவு போலவே பிசிஓஎஸ் பிரச்னைக்கும் மாவுச்சத்து கட்டுப்பாடு தேவை என்பதால், நான் மேலே சொன்ன முறையில் சிறுதானியங்களை சாப்பிடவும். தினமும் தேங்காய் சட்னி தவிர்த்து விட்டு... தினை அல்லது கம்பை ஊற வைத்து இட்லி, தோசைக்கு செய்வது போலவே உளுந்தையும் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து தோசையாக சுட்டு காலை வேளைகளில் சாப்பிடலாம். உடன் தினமும் தேங்காய் சட்னி தவிர்த்து விட்டு புதினா சட்னி, தக்காளி சட்னி, கறிவேப்பிலை சட்னி என்று சாப்பிடலாம். சிறுதானிய தோசை ரவை அல்லது சேமியா சாப்பிடக்கூடாது. பிசிஒஎஸ் இருப்பவர்கள் சம்பா கோதுமை ரவையை தாராளமாக சாப்பிடலாம். ஆனால், வழக்கமான ரவை அல்லது சேமியாவை சாப்பிடக்கூடாது. சம்பா கோதுமை ரவையுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது மாவுச்சத்து குறைந்து நார்ச்சத்து அதிகரிக்கும். இது பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு உடல் எடை கூடாமல் தடுக்கும். சிகப்பு அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி முற்பகல் 11 மணிக்கு மோர் குடிக்கலாம். பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை சாப்பிடலாம். மதிய நேரத்தில் சிகப்பு அரிசி அல்லது கறுப்பரிசி அல்லது கைக்குத்தல் அரிசி மூன்றில் ஏதோ ஒன்று உங்கள் தட்டில் கால் பாகம் இருக்க வேண்டும். அடுத்த கால் பாகம் பருப்பு, சாம்பார், சுண்டல், சிக்கன், முட்டை, மீன் போன்ற புரத உணவுகள் இருக்க வேண்டும். மீதமுள்ள பாதி தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். அசைவம் சமைக்கையில் பொரித்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட வேண்டும். கிரேவியிலும் எண்ணெய் குறைவாக இருப்பது நல்லது. green vegetables பெண்களை அதிகம் பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்... எப்படி எதிர்கொள்வது? #PCOSAwarenessMonth பச்சை நிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளைப் பொறுத்தவரை நாட்டு காய்கறிகள், பச்சை நிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பிசிஓஎஸ் உடன் தைராய்டும் இருந்தால் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புராக்கோலி ஆகியவற்றை எப்போதாவது சாப்பிடலாம். கேரட்டை தவிர பூமிக்கு கீழே விளைகிற மற்ற கிழங்கு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. Health: சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் `குமரிப்பக்குவம்’ - வீட்டிலேயே செய்யலாம்! | pcod நாட்டு சர்க்கரையைக்கூட தவிர்க்க வேண்டும். இவர்களும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, நாட்டு சர்க்கரையைக்கூட தவிர்க்க வேண்டும். டீ, காபி குடிக்கும்போது சற்றுக் கூடுதலாக பால் விட்டு அருந்தினால் சர்க்கரை போடாவிட்டாலும் சுவையாக இருக்கும். இந்த உணவுமுறையை பின்பற்றி வந்தால், உடல் பருமன் இருந்தால் குறையும். உடல் உறுப்புகளில் இருக்கிற வீக்கமும் குறையும். கூடவே, பிசிஓ எஸ்-ஸும் கட்டுக்குள் வரும்’’ என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: 50+ தாண்டியும் பீரியட்ஸ், மெனோபாஸ் தள்ளிப்போவது பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் சித்திக்கு 50 வயதாகிறது. என் அம்மாவின் தங்கை அவர். என் அம்மாவுக்கு 50 வயதில் பீரியட்ஸ் நின்று மெனோபாஸ் வந்துவிட்டது. சித்திக்கு இன்னும் தொடர்கிறது. ஆனால், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கான சராசரி வயது 51. ஆனால், இதை பல விஷயங்கள் பாதிக்கலாம். சில பெண்களுக்கு சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு இப்படி சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். மெனோபாஸுக்கு முந்தைய நிலையை 'பெரிமெனோபாஸ்' என்று சொல்வோம். சிலருக்கு இது 40 வயதில் ஆரம்பிக்கலாம். இன்னும் சிலருக்கு 30 வயதின் இறுதியில் கூட ஆரம்பிக்கலாம். மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும். அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். மெனோபாஸ் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்? இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன் ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம். உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்று மெனோபாஸுக்கான அறிகுறிகள், பெரிமெனோபாஸ் காலத்திலேயே சிலருக்கு ஆரம்பிக்கும். 12 மாதங்களுக்கு தொடர்ந்து பீரியட்ஸே வரவில்லை என்றால் ஒரு பெண் மெனோபாஸை அடைந்துவிட்டார் என எடுத்துக்கொள்ளலாம். முறைதவறிய மாதவிலக்கானது 7 நாள்கள் இடைவெளியில் வந்தால் ஒருவர் பெரிமெனோபாஸின் ஆரம்பநிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். அதுவே அந்த இடைவெளியானது 60 நாள்கள் என நீடித்தால் அந்தப் பெண் மெனோபாஸ் நிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். மெனோபாஸுக்கான அறிகுறிகளுடன் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, எலும்புத் தேய்மானம் போன்றவையும் வரலாம். கேன்சர் சிகிச்சையில் இருந்தாலோ, கர்ப்பப்பையை அகற்றிவிட்டு சினைப்பைகள் மட்டும் இருக்கும் நிலையிலோகூட சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். கர்ப்பப்பையை அகற்றியதால் மாதவிடாய் நின்று போயிருக்கும். ஆனால், சினைப்பையில் உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் அவர்களுக்கு சப்போர்ட்டை கொடுத்துக் கொண்டிருக்கும். இவர்களுக்கு சராசரி வயது வரை சினைப்பைகள் இயங்காது என்பதால் வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே மெனோபாஸ் ஆகலாம். மாதவிடாய் குடும்ப பின்னணியில் எல்லோருக்கும் இள வயதிலேயே மெனோபாஸ் வந்திருந்தால் உங்கள் சித்திக்கும் அப்படி வர வாய்ப்புகள் உண்டு. பெரி மெனோபாஸ் காலத்தில் உங்கள் சித்திக்கு அதிக ப்ளீடிங் இருந்தால், அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்க அதிகமாக இருந்தாலோ, 7 நாள்களுக்கு மேல் ப்ளீடிங் தொடர்ந்தாலோ, இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங் இருந்தாலோ, 21 நாள்களுக்கு முன்பாக பீரியட்ஸ் வந்தாலோ, அடிவயிற்றில வலி இருந்தாலோ மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் சரியாக இருக்கும். மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் சித்தியும் மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கவலை வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
ஒவ்வாமை ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஒன்று, அடுக்குத்தும்மல். அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்; ஒவ்வாமையைத் தவிர்ப்பது எப்படி..? விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாலகுமார். தூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம் வைப்பர் பொருத்திய ஹெல்மெட் 1. காற்று மாசுபாடு, போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், வைப்பர் பொருத்திய ஹெல்மெட்டுகளைப் (Wiper Helmet) பயன்படுத்தலாம். போர்வைகளை வெந்நீரில் அலசலாம். 2. படுக்கை விரிப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாய்ப்பிருந்தால், போர்வைகளை வெந்நீரில் அலசலாம். வாரம் ஒரு முறை படுக்கைகளையும் திரைச்சீலைகளையும் கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும். Sneezing தலைமுடி, நீங்கள் அணிந்த செருப்பு அல்லது ஷூவில்... 3. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது உங்கள் துணி, தலைமுடி, நீங்கள் அணிந்த செருப்பு அல்லது ஷூவில் ஒளிந்திருக்கும் ஒவ்வாமையைத் தூண்டும் ஒட்டுண்ணிகள் உங்களுக்குப் பிரச்னையைத் தரலாம். எனவே, வீடு திரும்பியதும் வியர்வை அடங்கும்வரை ஓய்வெடுக்க வேண்டும். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும். Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் - எது பெஸ்ட்? அழுக்குத்துணிகள்! 4. அறைகளில் அழுக்குத்துணிகளைச் சேமித்து வைப்பது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்பதால், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. செருப்பு, ஷுக்களை வீட்டின் உள்ளே கொண்டுவரக் கூடாது. Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா? `மாஸ்க்’ அணிந்துசெல்வது நல்லது. 5. வீட்டைவிட்டு வெளியே செல்லும் நேரங்களில், `மாஸ்க்’ அணிந்துசெல்வது நல்லது. இவை தவிர, எத்தகைய சூழல் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி, தொடர்ச்சியான தும்மலைத் தருகிறது என்பதைக் கண்டறிந்து, முடிந்தவரை அதைத் தவிர்க்க வேண்டும். தேவையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னரே, மருத்துவரின் ஆலோசனையுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்வது நல்லது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR ைன
Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலி; என்ன கரணம், தீர்வு உண்டா?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி ஒரு வருடமாகிறது. கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலியை உணர்கிறேன். சிறிது நேரத்தில் அது சரியாகிறது என்றாலும், இந்த வலியை நினைத்தால் தாம்பத்திய உறவே பயத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய தலைவலிக்கு என்ன காரணம், தீர்வுகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிடும் இந்தத் தலைவலி எல்லோருக்கும் வருவதில்லை. அதே சமயம், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பிரச்னைக்குரிய ஒன்றும் இல்லை. இந்த வகை தலைவலியானது, சிலருக்கு தாம்பத்திய உறவுக்கு முன்பும் வரலாம், சிலருக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வரலாம். இன்னும் சிலருக்கு உறவின் போதான உச்சக்கட்டத்தின் போதும் வரலாம். இதற்கு 'ஆர்கஸம் ஹெட்டேக்' (Orgasm headache) என இன்னொரு பெயரும் உண்டு. இந்தத் தலைவலி, சில நிமிடங்கள் தொடங்கி, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். தாம்பத்திய உறவின் போது கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் வழக்கத்தைவிட அதிக டென்ஷனுக்கு உள்ளாவதுதான் இந்த வகை தலைவலிக்கு பிரதான காரணம். தாம்பத்திய உறவின் போது இயல்பாகவே ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கலாம். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏற்கெனவே மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளதா என்று தெரியவில்லை. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் தாம்பத்திய உறவின்போது, தலைவலி தூண்டப்படலாம். உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உறவின் நடுவில் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டால், உடனடியாக தாம்பத்திய உறவை நிறுத்த வேண்டும். உறவை நிறுத்தியதும் தலைவலி குறையும் வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி இப்படி தலைவலி வருகிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெறவும். மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை உறவுக்கு முன்பே எடுத்துக்கொள்ளலாம். தாம்பத்திய உறவு என்பது கிட்டத்தட்ட உடற்பயிற்சி போன்றதுதான் என்பதால், அந்த நேரத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதன் காரணமாகவும் தலைவலி வரும். எனவே, உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இவற்றை எல்லாம் கடந்து, தலைவலியோடு வாந்தி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொண்டால், உடனே மருத்துவரை அணுகுவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?
பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?
செல்போனை எந்த நேரத்தில் ஓப்பன் செய்தாலும், வைட்டமின் பி 12 குறைபாடு, அதன் அறிகுறிகள், தீர்வுகள் என ரீல்ஸாக கொட்டுகிறது. பி 12 வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அப்படியென்றால், பி 12 நிறைந்த பாலில் தண்ணீர் கலந்தாலோ, ஆட்டு ஈரலை நீரில் அலசினாலோ அவற்றில் இருக்கிற வைட்டமின் கரைந்து போய்விடாதா? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நோய் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். B Vitamins கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை... ’’வைட்டமின் ஏ.டி.ஈ. மற்றும் கே ஆகிய நான்கும் கொழுப்பில் கரையக்கூடியவை. நம் உடலின் செல்களில், செல்களின் சுவர்களில் கொழுப்பு இருக்கிறது. இதனால், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை நம்முடைய உடம்பு அதிகமாகச் சேர்த்து வைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவாக, உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி மூளையில் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை பாதிக்கப்படலாம்; தோல் வறண்டு போகலாம். பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் உடலுக்கு அதிமுக்கியமான வைட்டமின்கள்கூட அளவுக்கு மீறினால் பிரச்னை தருவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதனால்தான், இந்த வகை வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று சாப்பிட வேண்டும் என்கிறோம். ஆனால், பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கி விஷத்தன்மையை ஏற்படுத்தாது. Mutton Liver Recipe ஒவ்வொரு செல்களுக்கும் பொதிந்திருக்கிறது. பாலில் அதிகமாகத் தண்ணீர் சேர்ப்பதாலோ அல்லது ஈரலை நீரில் சுத்தம் செய்வதாலோ பி 12 வீணாகாது. ஏனென்றால், இந்த வைட்டமின் பால் மற்றும் ஈரலின் ஒவ்வொரு செல்களிலும் பொதிந்திருக்கிறது. அதனால், பி 12 எப்படியும் நம் உடலுக்குள் சென்றுவிடும். நம்முடைய உடல்தான், அது அதிகமாகும்போது உடலில் இருக்கிற நீரில் கரைத்து வெளியேற்றிவிடும். Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள்.. நீங்கள் பி 12 ஊசி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால், அதன் வீரியம் உங்கள் உடலில் எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்துக்கு ஓர் ஊசியோ அல்லது மூன்று மாதத்துக்கு ஓர் ஊசியோ போட்டுக்கொள்ளலாம். பி 12-ஐ மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது மல்ட்டி வைட்டமின் மாத்திரையிலோ அல்லது பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையிலோ கலந்துதான் வரும். அதனால், பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டுக்கொண்டாலே போதும். ஊசியாகப் போட்டுக்கொள்ளும்போது, பி 12 நிச்சயம் உடலில் சேர்ந்துவிடும். மாத்திரையாகப் போடும்போதும் உடலில் சேர்ந்துவிடும் என்றாலும், பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், ஒருமுறை இதற்கான இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். பி12 வைட்டமினை ஊசியாக எடுத்துக்கொண்டாலும் சரி, மாத்திரையாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை. உடல் அது தேவைக்கு உறிஞ்சியதுபோக, மீதத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: 15 வயது மகளுக்கு தைராய்டு, கவனச் சிதறலை ஏற்படுத்தும் உடல்பருமன்; எடை குறையுமா?
Doctor Vikatan: என் மகளுக்கு 15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்கு தைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது. அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளது உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உண்டா... எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை... உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பதின்ம வயதில் உடல் பருமன் கூடுகிறது என்றால், உடனே அவர்களுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்க நினைப்பதைவிட, கலோரி கணக்கீட்டில் கவனம் செலுத்துவது முக்கியம். அதாவது எந்தெந்த உணவுகளில் சத்துகள் அதிகம், எவற்றில் குறைவு, அவற்றின் மூலம் கிடைக்கும் கலோரிகள் எத்தனை என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு உடற்பயிற்சியைக் கட்டாயமாக்குங்கள். வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் அவரை தீவிரமாக ஈடுபடுத்தலாம். தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கூட கற்றுத் தரலாம். ஷட்டில் காக், பேட்மின்ட்டன் போன்றவற்றை விளையாட ஊக்கப்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் குடும்பத்தாரும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடலாம். சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களின் அளவைக் கூட்டலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள், பழங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸும் இடம் பெற வேண்டும். வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தலாம் இப்படி உணவுப்பழக்கத்தை முறைப்படுத்திய பிறகு மாதந்தோறும் உடல் எடையை செக் செய்து கொண்டே வர வேண்டும். எடையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எந்த உணவையும் வேண்டாம் என சொல்லிக் குழந்தையைக் கட்டுப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது. அவரவருக்குப் பிடித்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட அனுமதிப்பதுதான் சரியே தவிர, அறவே கூடாது என்று சொல்லத் தேவையில்லை. பொதுவாக இனிப்புகள், சாக்லேட், கேக் போன்ற உணவுகளால்தான் உடல் எடை அதிகரிக்கும். அவற்றின் அளவைக் குறைத்து, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றுடன், தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா?
Lotus: தாமரைத்தண்டு இத்தனை ஆரோக்கியம் நிறைந்ததா? டயட்டீஷியன் விளக்கம்!
தாமரை விதையைப் போலவே அதன் தண்டையும் சமைத்து உண்ணலாம். அதன் ஆரோக்கியப் பலன்கள் குறித்து சொல்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். ‘’கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் சத்துகளும், வைட்டமின் பி, ஈ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. தாமரைத்தண்டு மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு உதவும். உடலின் ரத்த ஓட்டத்தை இது சீராக்கும். ரத்தச்சோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை தாமரைத்தண்டு சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணி பெண் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து தேவைப்படும். அவர்களுக்கு தாமரைத்தண்டை உலரவைத்து வற்றல் செய்து கொடுப்பது வழக்கம். வாழைத்தண்டு கூட்டு செய்வதுபோல, தாமரைத்தண்டையும் கூட்டு செய்து சாப்பிடலாம். ஆனால், துவர்ப்புச் சுவை காரணமாகப் பலர் இதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் தாமரைத்தண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். பஜ்ஜி வடிவில் உட்கொண்டாலும், தாமரைத்தண்டிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்தில் எந்தக் குறையும் இருக்காது. தாமரைத் தண்டை மெலிதாகச் சீவி, பஜ்ஜி செய்து பரிமாறினால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். தாமரை பஜ்ஜி சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள், மலச்சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. தாமரைத்தண்டில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, `ஷாலோ ஃப்ரை’ (Shallow Fry) எனப்படும் குறைந்த அளவு எண்ணெயில் பொரித்துக் கொடுக்கலாம். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! தாமரைத்தண்டு பஜ்ஜி எப்படிச் செய்வது? தேவையானவை: தாமரைத்தண்டு : ஒன்று (ஃப்ரெஷ்) கடலை மாவு : 50 கிராம் அரிசி மாவு : 50 கிராம் மைதா : ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு : தேவையான அளவு பெருங்காயத்தூள் : சிறிதளவு எண்ணெய் : 50 கிராம் மஞ்சள்தூள் : சிறிது தாமரைத்தண்டு பஜ்ஜி ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits செய்முறை முதலில் தாமரைத்தண்டை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைக்கவும். இப்படிச் செய்வதால் தண்டிலுள்ள துவர்ப்புத் தன்மை நீங்கிவிடும். அரிசி மாவு, மைதா, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு மாவுக் கலவையில் தாமரைத்தண்டை முக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், பஜ்ஜி தயார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சூப்பர் சென்னை 'Icon of the month'விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்
இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. இது, சென்னையை உலகின் மிக வாழத் தகுந்த நகரமாக மாறும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மருத்துவத் துறையை மாற்றியமைத்த தலைவர் : மருத்துவத் தொழில்முனைவோர், நிறுவனர், சிந்தனைத் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் விளங்கும் டாக்டர் சந்திரகுமார், இந்தியாவில் நவீன மருத்துவ சேவையை மாற்றியமைத்த முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். அவரின் தலைமையில் காவேரி மருத்துவமனைகள் குழுமம், முன்னோட்டமான மருத்துவ அறிவியலை நோயாளி மையக் கண்ணோட்டத்துடன் இணைத்து, நாட்டின் மிகவும் மதிக்கப்படுகிற மருத்துவ வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவருடைய தொலைநோக்கு பார்வை, தரமான சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு, சென்னை நகரை “சுகாதாரச் சிறப்பின் மையம்” என வலியுறுத்தி, அதன் உலகளாவிய மதிப்பையும் உயர்த்தியுள்ளது. இந்த விருதைப் பெற்றதையொட்டி டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறியதாவது: “இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமும் பணிவும் அளிக்கிறது. மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல – அது கருணை, அணுகல்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகத் தரத்திலான மருத்துவத்தை ஒவ்வொரு நோயாளிக்கும் கொண்டு சேர்க்க தினமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான காவேரி மருத்துவமனையின் சக ஊழியர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். நாட்டின் மருத்துவத் தலைநகரமாக சென்னையின் ஊக்கமூட்டும் முன்னணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். சென்னை உலகின் மிக வாழத்தக்க நகரமாக மாறும் கனவுக்குப் பங்களிப்பதில் நான் மகிழ்கிறேன்.” சூப்பர் சென்னை – நகர மாற்றத்தின் தூண் : இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சீத் ரதோட் கூறியதாவது: “சூப்பர் சென்னை என்பது நம் நகரத்தை வலுவானதாகவும், பெருமைப்படத்தக்கதாகவும், வாழத் தகுந்ததாகவும் மாற்றிப் பார்ப்பதற்கான முயற்சி. எங்கள் ‘Icon of the Month’ நிகழ்வு, இத்தகைய மாற்றத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் நபர்களை கௌரவிக்கிறது. டாக்டர் சந்திரகுமாரை கௌரவிப்பதன் மூலம், நாங்கள் நவீன மருத்துவ முன்னோடியை மட்டுமல்ல, தினமும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தி, சென்னையின் உலகளாவிய மரியாதையை உயர்த்தும் மாற்றத்தின் முன்னோடியையும் அங்கீகரிக்கிறோம்.” சூப்பர் சென்னை-யின் ‘Icon of the Month’ முயற்சி, தொழில்முனைவோர், புதுமையாளர்கள், மாற்றத்தின் முன்னோடிகளை முன்னிறுத்துகிறது. முன்னதாக, இவ்விருது பெண்கள் தொழில்முனைவில் செய்த பங்களிப்புக்காக நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் சி.கே. குமாரவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா'வரை உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
ஒருகாலத்தில் புகையும் மதுவும் மெதுவான விஷம் என்று சொன்னோம். இப்போது அந்தப் பட்டியலில் மொபைல் போனும் சேர்ந்துவிட்டது. மெதுவான விஷம் என்பதற்கு காரணம், அவை உடனே கொல்லாது. ஆனால், மனதையும் உடலையும் மெள்ள மெள்ள ஆட்டிப்படைக்கும்'' என்று எச்சரிக்கிற சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர். நித்யா ராகவி, அதுபற்றி விரிவாகப் பேசினார். Smart phone usage ''மொபைல் நம் தோழமையா; எதிரியா? மொபைல் போன் நம் காலத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அது நம்மையும், தொலைவில் உள்ள நம் அன்புக்குரியவர்களையும் உடனடியாக வீடியோ அழைப்பு மூலம் இணைக்கிறது. ஆனால், எந்தவொரு சக்திவாய்ந்த கருவியையும் போலவே, அதன் தாக்கமும், நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. வாழ்க்கையை எளிதாக்கும் அதே சாதனம், அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். உண்மை என்னவென்றால், மொபைல் முற்றிலும் நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. அது இருபுறமும் கூர்மையான முனைகள் கொண்ட வாள் போன்றது. கவனத்துடன் பயன்படுத்தும்போது, அது நமக்கு அதிகாரம் அளிக்கிறது. கட்டுப்பாட்டை இழக்கும்போதோ, நம் நல்வாழ்வை கெடுக்கிறது. ஹார்மோனில் ஏற்படும் மாற்றம்..! மொபைல் போனில் வரும் ஒவ்வொரு அறிவிப்பும் மூளையில் உள்ள டோபமைன் (dopamine) எனும் ஹார்மோனை தூண்டுகிறது. காலப்போக்கில், மூளை இந்தத் தூண்டுதலுக்காக ஏங்கத் தொடங்குகிறது. அதனால், தேவையில்லாமல்கூட செல்போனை எடுத்து நம்மை சரிபார்க்கத் தூண்டுகிறது. இதனால், நாம் நம் வேலைகளில் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்க முடியாமல் போகிறது. Hormones இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருந்து மொபைலை பயன்படுத்துவதால் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால் தூக்கம் கெட்டு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது. 'நோமோபோபியா' வரலாம்! மொபைல் பயன்பாடு கட்டாயமாக மாறும்போது, அது நடத்தைச் சார்ந்த போதைப்பழக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது எனலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மொபைல் இல்லையென்றால் அமைதியின்மை, பயம், பதட்டம் அல்லது எரிச்சலை உணர்வார்கள். இது 'நோமோபோபியா' (Nomophobia) எனும் நோய் நிலை ஆகும். Smart phone அதிகம் பாதிக்கக்கூடியவர்கள்..! தற்போதுள்ள கல்வி முறை பெரும்பாலும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற மின்சாதனப் பொருள்களைச் சார்ந்ததாகவே உள்ளது. இதனால், மாணவர்கள் தங்கள் கல்விக்கும், பல புதிய செய்திகளை அறியவும் மொபைல் போனையே அதிகம் நம்பியிருக்கிறார்கள். தவிர, இரவு நேர மொபைல் போன் பயன்பாடு காரணமாக தூக்கமின்மை, அதன் விளைவாக பள்ளிக்கூடத்தில் கவனமின்மை ஏற்படுகிறது. இதனால் கல்வியில் நினைவாற்றலும், செயல்திறனும் குறைந்து மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடு காரணமாக, சமூகத்துடன் இணைந்து பழகுதல், உரையாடல், நட்பு என வாழ்வின் உன்னதமான பல விஷயங்களை அவர்கள் இழந்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம்..! மொபைல் போனிலேயே அதிக நேரத்தைச் செலவிடும்போது, குடும்பத்தினருடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் பேசுவது குறைகிறது. பேச்சுக் குறையக் குறையப் புரிந்துணர்வும் இணக்கமும் குறையும். குறிப்பாகத் தம்பதியர் நடுவில் செல்போன் ஏற்படுத்துகிற பிரச்னை அதிகமாக இருக்கிறது. மனநல மருத்துவர் டாக்டர். நித்யா ராகவி. சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன..? 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு, உலகளவில் கிட்டத்தட்ட 25 சதவிகித இளம் பருவத்தினர் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில், கல்லூரி மாணவர்களில் சுமார் 35-40 % பேருக்கு, அதிகமான மொபைல் பயன்பாடு காரணமாக படிப்பு மற்றும் மனநிலை பாதிக்கும் அளவுக்கு நிலைமை கடுமையாக உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைத் தவிர, இரவு நேரத் தொலைபேசி பயன்பாடு உள்ளவர்களுக்கு மோசமான தூக்கத்தரம், அதிக மனச்சோர்வு, பதற்றம் இருப்பதை அதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து கண்டறிந்து தெரிவித்து வருகின்றன. Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்! சர்க்கரைப் போன்றது செல்போன்..! உடலில் சர்க்கரையின் அளவு மிதமாக இருந்தால் ஆரோக்கியம். அதிக அளவில் சென்றால் தீங்கு. அது போலவே செல்போனை மிதமான அளவில் பயன்படுத்தி செய்திகளை அறிந்துகொள்ளும்போது நன்மை அளிக்கிறது. அதுவே, அதிக அளவில் பயன்படுத்தும்போது அடிமைத்தனத்தை உண்டு பண்ணுகிறது. Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும் இந்த தாக்கத்திலிருந்து எப்படி வெளிவருவது..? சமூக ஊடகங்கள் அல்லது பொழுதுபோக்கு பயன்பாடுகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல். சாப்பாட்டு மேசை, படுக்கையறை மற்றும் படிக்கும் இடத்திலிருந்து மொபைலை தள்ளி வைத்தல். தூக்கத்திலிருந்து எழுவதற்கு மொபைலுக்கு பதிலாக அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துதல். தேவையற்ற செயலிகளின் (Apps) அறிவிப்புகளை (Notifications) நிறுத்தி வைத்தல். செயலிகளின் (Apps) டைமர்களைப் பயன்படுத்தி அதிக நேரம் மொபைலில் செலவிடுவதைத் தவிர்த்தல். புத்தகங்களை வாசித்தல், பாடல்களைக் கேட்டல், விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயல்களால் நாம் மெதுவாக இத்தாக்கத்திலிருந்து வெளிவரலாம்'' என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் நித்யா ராகவி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
`ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே'மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257
'' இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள். ஹெச்.ஐ.வி தொற்று தவிர்க்கப்பட வேண்டுமென்றால், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் '' என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார். தாம்பத்தியம் ஃபோர் பிளே ''ஒரு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே ஆகிய மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியம். தாம்பத்திய உறவுக்கு முந்தைய ஃபோர் பிளே எரிச்சல், வலி இல்லாத தாம்பத்திய உறவு நிகழ்வதற்கு உதவும். 'ஃபோர் பிளே'வில் கணவன், மனைவி இருவருமே பங்கு பெற வேண்டுமா என்றால், ஆமாம். இதைக் கற்றுக்கொண்டுதான் செய்ய வேண்டும். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing பிளே அடுத்தது பிளே . அதாவது, தாம்பத்திய உறவு. இதில் இருவரும் உச்சக்கட்டம் அடைவதுதான் முக்கியம். பெண்ணைத் திருப்திப்படுத்துவது தொடர்பாக ஆணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கணவனை எப்படித் தூண்டுவது என்பது மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள் மோட்டார் ஸ்விட்ச் போடுவதுபோல உச்சக்கட்டம் அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண் அடையும் உச்சக்கட்டம் என்பது விமானத்தில் இருக்கிற ஸ்விட்ச்களைப் போன்றது. அவர்களின் உடலில் உச்சக்கட்டம் அடைவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றைத் தூண்டாமல் பெரும்பாலான பெண்களால் வெறும் செக்ஸ் மூலமாக மட்டுமே உச்சக்கட்டம் அடைய முடியாது. இதுதான் உண்மை. யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 ஆஃப்டர் பிளே. மூன்றாவதாக, ஆஃப்டர் பிளே. இருவருமே உச்சக்கட்டம் அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை அது நிகழவில்லை என்றால் ஆஃப்டர் பிளே கட்டாயம். ஃபோர் பிளே தெரிந்த அளவுக்கு பலருக்கும் ஆஃப்டர் பிளே பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சொல்கிறேன். இந்த நேரத்தில் ரொமாண்டிக்காகப் பேசுதல், கூந்தலை வருடுதல், அணைத்தல், தழுவுதல் போன்று செய்யலாம். காமசூத்ரா கொடுத்த நாட்டில், முறையான செக்ஸைப்பற்றி தெரியவில்லையென்றால், அது விவாகரத்தில் முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தவிர, தம்பதியரிடையே உறவு சரியாக இருந்தால், மூன்றாவது நபர் குறுக்கீட்டால் எதுவுமே செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: தினசரி தலைக்குக் குளிக்க வேண்டுமா, வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா?
Doctor Vikatan: ஆண்கள் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள். பெண்களும் தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா... வெறும் தண்ணீரில் குளித்தால் போதுமா... ஷாம்பூ தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா தினமும் தலைக்குக் குளிப்பது என்பது நிச்சயமாக நல்ல விஷயம்தான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். தினமும் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு போகும், முடி உதிரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே, வாரத்தில் மூன்று முறையாவது தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம். சிலர் தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்குக் குளித்தால் பிரச்னை என்ற எண்ணத்தில் வெறுமனே தலைக்குக் குளிப்பார்கள். அது தவறு. இன்னும் சொல்லப் போனால் ஷாம்பூ இல்லாமல் தலைக்குக் குளிக்காதீர்கள். அதே சமயம், மைல்டான ஷாம்பூ உபயோகித்து அது முடியிலிருந்து முழுமையாக நீங்கும்படி நன்றாக அலசிக் குளித்துவிட வேண்டும். வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. வெறும் தண்ணீரில் அலசும்போது, தண்ணீர், தலையில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் எல்லாம் சேர்ந்து, முடியில் பிசுபிசுப்பு ஏற்படும். மண்டைப்பகுதியின் பிஹெச் அளவை மாற்றி, கூந்தலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். எனவே, மைல்டான ஷாம்பூ உபயோகிப்பதுதான் சரியானது. வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. Doctor Vikatan: தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா... எந்த ஷாம்பூ நல்ல ஷாம்பூ? ஹெல்மெட் பயன்பாடு, வாகனம் ஓட்டுவது, வெளியே அலைகிற வேலை, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற காரணங்களால் ஆண்களுக்கு தலைமுடி சீக்கிரமே அழுக்காகும். அவர்களுக்கு தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது. அதுவே, கூந்தலின் நீளம் கருதி, தினசரி தலைக்குக் குளிப்பது பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதால், வாரத்தில் மூன்று நாள்களாகக் குறைத்துக்கொள்ளலாம். அவர்களும் தினமும் தலைக்குக் குளிக்க முடியும் என்று நினைத்தால் அதைச் செய்வது சிறப்பானதுதான். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
அடிக்கடி நெட்டி முறித்தால் கை விரல்கள் பலவீனமாகுமா?
வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்களில் 'நெட்டி முறிக்கும்’ வழக்கம் பலருக்கும் இருக்கும். சிலர் இதை ‘சொடக்கு எடுத்தல்' என்றும் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, எழும் சத்தம் தான் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி கிடைத்த உணர்வை ஏற்படுத்துகிறது. அடிக்கடி நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்கிற எலும்பியல் மருத்துவர் ஆசிக் அமீன், அதுபற்றி விவரிக்கிறார். நெட்டி முறித்தல் நெட்டி முறிக்கும்போது அந்த சத்தம் எப்படி வருகிறது? விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது. நெட்டி முறித்தல் தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது. நெட்டி முறித்தல் அடிக்கடி சொடக்கு எடுத்தால் அல்லது நெட்டி முறித்தால் என்ன ஆகும்? சைனோவியல்தான் நம் கை மற்றும் கால் விரல் இணைப்புகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் ஒத்திசைவாகச் செயல்பட உயவு திரவமாகச் செயல்படுகிறது. அடிக்கடி நெட்டி முறிக்கும்போது இந்தத் திரவம் குறைகிறது. மேலும், கை விரல்களில் டென்டன், லிகமென்ட், கேப்ஸ்யூல் என மூன்று அமைப்புகள் உள்ளன. அடிக்கடி ஒருவர் நெட்டி முறிக்கும்போது இவை மூன்றும் வலுவிழந்து விரல்கள் பலவீனமடையக்கூடும். Health: வலி போக்கும் 6 எண்ணெய்கள்..! ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி கை விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே இருந்தால், கைகளில் பிடி வலிமையின்றிப் போவது, முழங்கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சொடக்கு எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம். நெட்டி முறிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், கைகளுக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? நெட்டி முறிப்பதற்கு பதில் ஓய்வு எடுக்கலாம். தொடர்ந்து டைப் செய்வது போன்று ஒரே மாதிரியான வேலையைக் கைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் விரல்களில் நெட்டி முறிப்பதற்கு பதில், விரல்களுக்கு அவ்வப்போது இரண்டு நிமிடம் ஓய்வு எடுக்கலாம். தவிர, எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், எள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால், நீண்ட நேரம் வேலை செய்தாலும் கை விரல்கள் வலிக்காது. நமக்கும் விரல்களில் நெட்டி முறிக்கவோ அல்லது சொடக்கு போடவோ தோன்றாது'' என்கிறார் டாக்டர் ஆசிக் அமீன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: விபத்துக்குப் போட்ட TT ஊசி; நாய்க்கடிக்கும் அதுவே போதுமா?
Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள். டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே, நாய் கடிக்கும் போது போதுமானதா? பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி டிடி என்பது டெட்டனஸ் டாக்ஸாயிடு (Tetanus Toxoid) என்பதன் சுருக்கம். டெட்டனஸ் என ஒரு நோய் உண்டு. தமிழில் அதை 'ரண ஜன்னி' என்று சொல்வார்கள். சற்றே மோசமான அந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை வரவிடாமல் தடுப்பதுதான் டிடி ஊசியின் வேலை. இந்தக் கிருமிகள், துருப்பிடித்த ஸ்டீல், கரடுமுரடான மேற்பரப்புகள், மண் தரையிலுள்ள தூசு போன்றவற்றில் அதிகமிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் துருப்பிடித்த இடங்களில் பட்டு அடிபட்டால் உடனே டிடி ஊசி போடச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அப்படித் தடுப்பூசி போடுவது உண்மையிலேயே பாதுகாப்பானது. விபத்து ஏற்பட்டு விழுந்ததும் டிடி ஊசி போட்டுக்கொண்டதாகச் சொல்கிறீர்கள், அதில் தவறில்லை. பொதுவாக மருத்துவர்கள், 2 வருடங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்றே சொல்வோம். அதுவே, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றோருக்கெல்லாம் ஆறு மாதங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொள்ளச் சொல்வோம். அதாவது எங்கேயாவது அடிபட்ட நிலையில், அதற்கு முன் டிடி ஊசி போட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டால், மறுபடி ஒரு டோஸ் டிடி ஊசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துவோம். நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine) தான் போட வேண்டும். Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா? நாய்க்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine) தான் போட வேண்டும். சமீபகாலமாக பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் நாய்க்கடி பிரச்னைக்கு, எந்த மருத்துவமனையிலாவது டிடி ஊசி போட்டால், அது வேண்டாம் என்று சொல்லி ஆன்டி ரேபிஸ் தடுப்பூசி போடும்படி கேளுங்கள். இது எல்லா அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படும். நாய்க்கடிக்கான தடுப்பூசியைப் போடத் தவறினால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ரேபிஸ் நோய் வராமல் தடுக்க ஏஆர்வியும், ஒருவேளை கடி மிகவும் மோசமாக இருந்தால், இம்யூனே குளோபுலின் ஊசியும் போட வேண்டியிருக்கும். பல பேர், இது போல நாய்க்கடிக்கு வெறும் டிடி ஊசியை மட்டும் போட்டுக்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். எனவே, கவனமாக இருக்கவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா?
Doctor Vikatan: என் தோழி இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். திடீரென மார்பகங்களில் கட்டி மாதிரி உருள்வதாகச் சொல்கிறாள். அதே சமயம், கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான டெஸ்ட் எடுப்பதே ஆபத்து என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்வது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எஸ்.பி. ராஜ்குமார் கர்ப்பகாலத்திலும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் முக்கியமான சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய பாதுகாப்பான புற்றுநோய்ப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மார்பக மருத்துவ பரிசோதனை (Clinical Breast Exam) மார்பக மருத்துவ பரிசோதனை, இதில் மருத்துவர், மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வார். பெண்களும் தாங்களாகவே சுய மார்புப் பரிசோதனை (Self-Breast Exam) செய்து, கட்டிகள் உள்ளனவா என கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் பாதுகாப்பானவை. அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) அடுத்தது மார்புப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) சோதனை. இது கட்டிகளை மதிப்பீடு செய்யவதற்கான பரிசோதனை. ஒலியலைகளைப் பயன்படுத்துகிறது என்பதால், இந்தச் சோதனை பாதுகாப்பானது. இதில் கதிர்வீச்சு இல்லை. Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா? மேமோகிராம் (Mammogram) மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) சோதனை. கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமென்றால் மட்டும் மேற்கொள்ளப்படும். இதில் கதிர்வீச்சு இருக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் 'லெட் ஷீல்டு' (lead shield) எனப்படும் கடினமான உலோக ஷீல்டை வைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். மிகமிக அவசியம் என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிற இந்தச் சோதனை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கப்படுகிறது. கடைசியாக பயாப்சி (Biopsy) பரிசோதனை. கட்டிகள் இருந்தால் பயாப்சி சோதனை செய்யப்படும். இதுவும் பாதுகாப்பானதுதான். CT scan, PET scan கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சோதனைகள்: அதிக கதிர்வீச்சு உள்ளதால் சிடி ஸ்கேன் (CT scan) மற்றும் பெட் ஸ்கேன் (PET scan) ஆகியவை கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்படுகின்றன. மிக மிக அவசர நிலைமையில் மட்டுமே செய்யப்படும். கர்ப்பத்தில் மார்பகங்கள் இயற்கையாகவே மாற்றமடையும் என்பதால், அந்தக் காலத்தில் கட்டிகளைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். சி.டி ஸ்கேன் எப்படி இருப்பினும், மார்பகங்களில் கட்டி, வலி, வடிவம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கர்ப்பத்துடன் தொடர்பில்லாத எந்தப் பரிசோதனைக்குச் சென்றாலும், முதலில் மருத்துவரிடம் நீங்கள் கர்ப்பமாக உள்ளதைச் சொல்ல மறக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள மருத்துவர் ஆலோசனை!
'திடீர் காய்ச்சல்; உடல் அனலாய் கொதிக்கிறதே' என பக்கத்தில் இருக்கிற கிளினிக் போனால், காய்ச்சல் வந்தவர்களால் கிளினிக் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவுகளில் 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு செல்வதையும் பார்க்க முடிகிறது. மழையும் வெயிலும் மாறி மாறி வந்தால் காய்ச்சலும் வந்துவிடும். வருடத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதும் ஊரெங்கும் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை என ஆரம்பித்துவிடும். தற்போதும் காய்ச்சல் காலம் ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன; வராமல் எப்படித் தடுப்பது; அறிகுறிகள்; தீர்வுகள் என்ன என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். Seasonal Fever என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன? ''தமிழ்நாட்டில் பருவநிலை மாறும்போது வைரஸ் தொற்றுப்பரவும். விளைவாக காய்ச்சலும் வரும். தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ் (Respiratory syncytial virus), கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், மம்ப்ஸ் எனப்படும் கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழி எளிதாகப் பரவுகின்றன. கூடவே, ஆங்காங்கு பன்றிக்காய்ச்சலும், டெங்குவும்கூட இருக்கிறது. இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ்..! இதில் இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சலடிக்கும். இதனுடன் தசைவலி, கடுமையான உடல் சோர்வு, சுவாசத்தொற்றுகளான தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல் வருவது, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளும் வரும். Seasonal Fever இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள்! இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம், கவனம். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதீத காய்ச்சலுடன் தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டால், அது நிம்மோனியா. பொதுவாக மூச்சு விடும்போது வயிற்றுப்பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால், நிம்மோனியா வந்த குழந்தைகளுக்கு நெஞ்சுப்பகுதி தசைகள் சோர்வடைந்துவிடுவதால், வயிற்றுப்பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும். இதனால், குழந்தை குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும். இழுத்து இழுத்து மூச்சு விடும். இந்த நிலையில், குழந்தையின் மேல் சட்டையை நீக்கி, ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 40 முறைக்கு மேல் மூச்சு விடுகிறதா என கவனியுங்கள். அப்படியிருந்தால் குழந்தைக்கு 'நிம்மோனியா தொற்று இருக்கிறது; மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கிறது' என்று அர்த்தம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மம்ப்ஸ் இந்த வைரஸும் இருமல், தும்மல் வழியாகவே பரவும். இந்தத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படுகிறது. Seasonal Fever மீசில்ஸ் எனும் தட்டம்மை இது மிக மிக எளிதாக சுவாசப்பாதை வழியாக பரவும். இந்தத் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி, சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும், வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போல வரும். இந்த நோய் வராமல் தடுப்பதற்காகத்தான் 9 மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட வேண்டும் என்கிறோம். பன்றிக் காய்ச்சல்! இந்த நேரத்தில் பன்றிக்காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சற்று தீவிரத்துடன் வரலாம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதை போட்டுக்கொள்ளலாம். காய்ச்சல் டெங்கு காய்ச்சல்! பருவமழை பொழியும் காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். விளைவு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கடும் உடல்வலி, சோர்வு, சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, கண்களுக்குள் வலி, மூட்டுகளில் வலி ஆகியன இருக்கும். காலதாமதம் செய்யாதீர்கள்! டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருந்து சரியாகும். அதன்பிறகுதான் சோர்வு, தூக்கம், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் குளிர்ந்துபோதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். உடனே மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தட்டணுக்கள் குறைந்து உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், பல் ஈறுகளில் ரத்தம் வருதல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் என உயிராபத்து வரை ஏற்படலாம். இவையெல்லாம் என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால், டெங்கு காய்ச்சல் விஷயத்தில் சற்று காலதாமதம் செய்யாதீர்கள். டெங்கு டெங்கு வராமல் தடுக்க இது வராமல் தடுக்க, வீட்டைச்சுற்றி நன்னீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைங்களுக்கு உடல் முழுக்க மறைக்கிறபடி ஆடை அணிவியுங்கள். கொசுவலைக்குள் தூங்க வையுங்கள். பெரியவர்களும் இதையே ஃபாலோ செய்யுங்கள். டெங்குவும் சுவாசப்பாதைத் தொற்றும் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, சுவாசப்பாதை வழியாக பரவுகிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் தீவிரமான காய்ச்சல் ஏற்படும். இவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். Protein வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி..? இந்த சீசனில் பரவும் வைரஸ் தொற்றுகள் இருமுவது மற்றும் தும்முவது மூலமே பரவுகின்றன. அதனால், தொற்று ஏற்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். அப்படியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கொரோனா வுக்கு செய்ததைப்போலவே இந்த நேரத்திலும் கைகளை சோப் அல்லது சானிட்டைஸர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வருகிற மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வுகளும்! என்ன சாப்பிட வேண்டும்? பருவ மழை பொழிய ஆரம்பித்தவுடனே புரதச்சத்து நிரம்பிய முட்டை, மாமிசம், மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை நமக்குத் தரும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! கட்டாயம் இதை பின்பற்றுங்கள் பொதுவாக சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை இருந்து, பின்னர் தானாக குறையும். பெரும்பாலும் உயிர் ஆபத்து ஏற்படாது. அதற்காக, எந்த காய்ச்சலாக இருந்தாலும் கைவைத்தியம் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை நாடுங்கள். காய்ச்சல் வந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையும் என்பதால் நிறைய நீர் அருந்துங்கள். தேவையென்றால், கொதிக்க வைத்து ஆறிய நீரில் ஓ.ஆர்.எஸ் கலந்து அருந்துங்கள். முக்கியமாக ஓய்வெடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. டேக் கேர் மக்களே..! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
செயற்கை இனிப்பு கொண்ட பானங்களை குடிப்பதால் மூளைக்கு வயதாகிறதா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பானங்களை உட்கொள்வது மூளையின் நினைவாற்றல் திறனை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் செயற்கையான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படி சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருள்களை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவு கூறும் திறன்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூராலஜி இதழில் வெளியாகியுள்ளது. beverages குறைந்த கலோரி சர்க்கரை ஒரு மாற்று வழியாக தற்போது பிரபலம் அடைந்தாலும், வழக்கமாக இதனை பயன்படுத்தும் போது ஆரோக்கியக் கேடுகள் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆய்வின்படி அதிக அளவில் இதுபோன்று செயற்கையான இனிப்பூட்டிகள் உட்கொள்பவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு வேகமாக நினைவாற்றல் திறன் குறைவதாகவும், இது மூளையின் வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு சமம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் சுமார் 13,000 பேர் கொண்ட குழுவிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவல் வெளியாகியுள்ளது. டயட் சோடா தவிர செயற்கை இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு குறிக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
Doctor Vikatan: தினமும் 3 லிட்டர் தண்ணீர் பரிந்துரை; குடித்தால் வாந்தி உணர்வு - தீர்வு என்ன?
Doctor Vikatan: ஒவ்வொருவரும் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சிலர், காலையில் எழுந்ததுமே சொம்பு நிறைய தண்ணீர் குடிப்பதைப் பார்க்கிறோம். ஆனால், சிலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்தாலோ வாந்தி உணர்வு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்வது... தண்ணீர் தேவையை எப்படி பேலன்ஸ் செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது தண்ணீர். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சியால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம். நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோர் ஆக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதும் செரிமானத்திற்கு நல்லது. உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம். சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர்வறட்சியைத் தவிர்க்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும், மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி, குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். தண்ணீர் குடிப்பதை நினைவில் வைத்துக்கொண்டு , குறிப்பிட்ட இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: வெள்ளரி- இஞ்சி- புதினா ஊறவைத்த நீர்... உடலை detox செய்யுமா?
Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
பிறந்தநாள் விழா, திருமணம், அலுவலகக் கொண்டாட்டம் என கிட்டத்தட்ட எல்லா நிகழ்விலும் கேக், பிஸ்கட், சாக்லேட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் தவறாமல் இடம்பெயர்கின்றன. அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிரம்பியிருப்பதால், பேக்கரி ஐட்டம்ஸை அடிக்கடி உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்குமா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். Bakery Foods பேக்கரி உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிட்டால் நீரிழிவு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், நீரிழிவு என்றால் என்ன, இன்சுலின் என்றால் என்ன என்பதை சிம்பிளாக சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் பேக்கரி உணவுகளை ஏன் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு புரியும். நீரிழிவு நோய் என்றால் என்ன? இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு போதுமான அளவு குளுக்கோஸ் செல்களுக்கு கடத்தப்படாமல் இருக்கும் நிலையே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்கு கடத்துவதற்கு இன்சுலின் தேவை. இன்சுலின் குறைந்தாலோ, அல்லது இன்சுலின் செல்களில் சென்று சேர்க்கக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்களின் அளவு குறைந்தாலோ, அல்லது அவை வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு ஏற்படும். diabetes இன்சுலின் என்றால் என்ன? நாம் உணவு உண்ணும்போது அதில் உள்ள மாவுச்சத்து செரிமானமடைந்து குளுக்கோஸாக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து, உடலின் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. இன்சுலினின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதுதான். நீரிழிவின் வகைகள்..! இரத்தத்தில் இன்சுலின் அளவு குறையும்போது, செல்களுக்கு குளுக்கோஸ் கடத்தப்படாமல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது டைப் 1 நீரிழிவு. சிலருக்கு இன்சுலின் சரிவர சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும், இன்சுலின் செல்களில் சென்று வேலை செய்யக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்கள் (Insulin receptors) சரிவர இயங்காமல் இருந்தால், ஏற்படுவது டைப் 2 நீரிழிவு. Bakery Items பேக்கரி உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால்... நாம் சாதாரணமாக உட்கொள்ளும் உணவில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அவை செரிமானமாகி, உடலுக்கு அத்தியாவசியமான குளுக்கோஸாக குடலில் உறிஞ்சப்படுகின்றன. நாம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, அவை உடலுக்கு தேவையான குளுக்கோஸாக மாற சிறிது நேரம் எடுக்கின்றன. அப்போது உடலில் நிலையான குளுக்கோஸ் உறிஞ்சப்படும்; அதற்கேற்றபடி உடலில் இன்சுலின் உற்பத்தியாகும். இவை அனைத்தும் சாதாரணமாக நம் உடலில் நடைபெறும் இயல்பான செயல்கள். எப்போதாவது என்றால் பிரச்னை இல்லை! மாறாக, நாம் பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது, அவற்றில் உள்ள டைசாக்கரைடுகள் (Disaccharides) மற்றும் மோனோசாக்கரைடுகள் (Monosaccharides) எனப்படும் சிம்பிள் சுகர் வேகமாக செரிமானமாகி, இரத்தத்தில் உடனடியாக கலந்துவிடும். இதனால் இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அந்த அதிகமான குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதற்கு இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது ஒருவேளை நடந்தால் பிரச்னையில்லை; ஆனால் தொடர்ந்து பேக்கரி உணவுகளை சாப்பிட்டால், இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரித்து, அதனால் இன்சுலின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், குளுக்கோஸ் வழக்கமான அளவு மட்டுமே செல்களுக்குள் செல்லும். இதுவே நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். டாக்டர் ராஜேஷ். `டிப்ரெஷன்தான் வில்லன்!' நீரிழிவு நோயாளிகளை டிப்ரெஷன் எப்படி பாதிக்கிறது? தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டால்... தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும், உடல் உழைப்புக்கான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதாரண வளர்சிதை மாற்றம் மூலமாகவே எனர்ஜி எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இவற்றை எதையும் செய்யாமல் இருப்பவர்களுக்கும், சில மரபுவழி காரணங்களாலும், அதிக உடல் எடை அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதேபோல், எண்ணெய் மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? பேக்கரி உணவுகளுக்குப் பதில் வேறு என்னென்ன சாப்பிடலாம்? பேக்கரி உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழங்கள், சாலட், ஃபைபர் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிக இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் சிஸ்டம் ஒர்க் செய்பவர்கள், பேக்கரி உணவுகளைச் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் நல்லது. பேக்கரி உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது உடலுக்கு கேடு செய்யாது; நீரிழிவு நோயும் வராது,'' என்கிறார் டாக்டர் ராஜேஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256
''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? 'ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா' என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்... இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை போரடித்துவிட்டதால், வெளியிடங்களில், புதுநபருடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இது எந்தளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை அறியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், வெளியிடங்களில், புதுநபர்களுடன் யாரெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது; ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை விளக்கினார். இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும்! ''ஒரே அறைக்குள்ளே ஒரே மாதிரி செக்ஸ் செய்தால், தம்பதியருக்குள் எத்தனை காதல் இருந்தாலும் போரடித்துவிடும். அதனால், ஒருநாள் பெட்ரூமில், இன்னொரு நாள் ஹாலில், இன்னொரு நாள் பாத்ரூம் ஷவருக்கு கீழே என இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அல்லது புது இடங்களில், ஹோட்டல் அறைகளில் செக்ஸ் செய்யும்போது தம்பதியருக்கு த்ரில்லாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். த்ரில்லுக்காக, மாற்றத்துக்காக புது நபர்களுடன் செக்ஸ் கொள்வது பாதுகாப்பு கிடையாது. தாம்பத்தியம் அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக... நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள் அல்லது ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் புது இடங்களில், புது நபர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக மனப்பதற்றமும், இதயத்துடிப்பு அதிகரிப்பும் ஏற்படலாம். இதனால், முதல்முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ அல்லது ஏற்கெனவே வந்தவர்களுக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ வாய்ப்பிருக்கிறது. வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254 முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக... ஒருசிலர், இப்படி வெளியிடங்களில் புது நபருடன் உறவுகொள்வதில் எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது; அந்த அனுபவத்தை முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக, வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். இது சிலருக்கு பிரச்னையாகி என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing சிலருக்கு அரிதிலும் அரிதாக... தவிர, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக எங்கோ ஒருசிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது அவர்களுக்கு உடனே டாய்லெட் செல்கிற அளவுக்கு அசெளகர்யத்தைக் கொடுக்கும். சிலருக்கு அரிதிலும் அரிதாக ஹார்ட் அட்டாக்கும் வரலாம். அதனால், வெளியிடங்களில், புதுநபர்களுடன் செக்ஸை தவிர்ப்பதே நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: 10 வயது குழந்தைக்கு மலச்சிக்கல்; காரணமும் தீர்வுகளும் என்ன?
Doctor Vikatan: என்னுடைய 10 வயதுக் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உணவுப்பழக்கம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது மிகவும் சகஜமாகப் பார்க்கிற விஷயமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களது உணவுப்பழக்கம். நார்ச்சத்து அறவே இல்லாத அல்லது நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பாதிப்பு வரும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவை குழந்தைகளின் தினசரி உணவுப்பட்டியலில் இல்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பால், தண்ணீர் குடிக்கும் அளவு பொதுவாகவே குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிறைய பால் கொடுப்பது வழக்கம். அதாவது தினமும் 300 முதல் 400 மில்லி பால் கொடுக்கிறார்கள். அதைவிட அளவு தாண்டும்போது, அதுவும் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு காரணமாகலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்கும். தண்ணீர் தவிர்த்து, சூப், ஜூஸ் போன்றவற்றையும் அதிகம் குடிக்க மாட்டார்கள். உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். Doctor Vikatan: நீண்ட நாள்களாகத் தொடரும் மலச்சிக்கல்.. மூலநோயாக மாறுமா, தீர்வு என்ன? குழந்தைகளுக்கு கொடுக்கும் சப்ளிமென்ட்டுகளும் சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு டாய்லெட் டிரெய்னிங் மிக முக்கியம். பள்ளிக்கூடங்களில் கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். இயற்கை உபாதையை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். எனவே, குழந்தைகளின் உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா போன்று தோலுடன் சில பழங்களைக் கொடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக்க வேண்டும். ஏசி அறையில் இருந்தாலோ, குளிர் காலத்திலோ தாகம் எடுக்காது. அந்தத் தருணங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுத்து, அதை காலி செய்யப் பழக்கலாம். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் மருத்துவர்
பள்ளிக்கூடத்தில் அமீபா என்கிற ஒரு செல் உயிரியைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். அதன்பிறகு உயிரியல் மாணவர்கள் அதைப்பற்றி விளக்கமாகப் படித்திருப்பார்கள். அதற்கு மேல் அமீபா பற்றி நாம் யாருமே யோசித்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் கேரளாவில் தொடர்கிற 'மூளை தின்னும் அமீபா' பற்றிய செய்திகளாகவே இருக்கிறது. சென்ற வருடம் 9 பேர் இந்த அமீபா தொற்று காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்கள். இந்த வருடம் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. Brain Eating Amoeba ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. Brain Eating Amoeba மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? மூளைத் தின்னும் அமீபா மனிதர்களுக்குள் எவ்வாறு நுழைகிறது? அது நுழைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. அறிகுறிகள்..! இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். Brain Eating Amoeba கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . அமீபா சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பூச்சிக் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? - அவசர கால மருத்துவர் ஆலோசனை
வெயிலும் மழையும் மாறி மாறி வரும் சீசனில் பாம்புக்கடிகளைப் போலவே பூச்சிக்கடிகளும் அதிகரித்து விட்டது. இதனால் சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்த 19 வயது சர்மிளா, சில மணி நேரத்துக்கு முன்னால் பூச்சிக் கடித்து இறந்திருக்கிறார். எந்த பூச்சி அல்லது எந்த வண்டு விஷமற்றது, லேசான விஷமுள்ளது, கதண்டுபோல உயிர் ஆபத்தையே ஏற்படுத்தக் கூடியது என்பது இன்றைக்கு பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாகவே பூச்சிக்கடி ஒவ்வாமை காரணமாக சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அது பூச்சியோ அல்லது வண்டோ அல்லது கதண்டு என்கிற குளவியோ எது கடித்தாலும் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என அவசரகால மருத்துவர் சாய் சுரேந்தர் விளக்கமாக சொல்கிறார். பூச்சிக் கடி முதலிடத்தில் இருக்கும் பூச்சி! மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற காலகட்டத்தில் பூச்சிக்கடிகளை விட அதிகப்படியாக நான் உங்களை எச்சரிக்க விரும்புவது கொசுக்கடிகளைப்பற்றி தான். இந்த காலகட்டத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய் கிடக்கின்றன. அவற்றில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மக்களை அதிகமாக கடிக்கின்றன. விளைவு டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்துவிட்டது. மனிதர்களைக் கொல்வதில் மற்ற எல்லா உயிர்களையும்விட பூச்சியினத்தைச் சேர்ந்த கொசுக்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. அதனால் கொசுக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இனி பூச்சிக்கடிகளைப் பற்றி சொல்கிறேன். சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள்! பூச்சி மற்றும் வண்டுகளை பொறுத்தவரை எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்; எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது; யாருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்கிற விஷயங்கள் எல்லாம் பிரச்னை வரும் வரையில் நமக்கு தெரிவதில்லை. அதனால், ஒரு பூச்சியோ அல்லது வண்டோ கடித்து விட்டால் அந்த இடத்தை உடனே சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். டாக்டர் சாய் சுரேந்தர் ஒவ்வாமை ஏற்படலாம்! பூச்சி அல்லது வண்டு கடித்த இடத்தில் நடுவில் ஒரு புள்ளி அல்லது சிறு கொப்புளம் அதை சுற்றி சிவப்பானத் திட்டுக்கள் இருந்தால், உடனே அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்று விடுங்கள். முடிந்தால் எமர்ஜென்சி மருத்துவரைக்கூட பார்த்து விடுங்கள். அங்கே உங்களுக்கு உடனே ஒவ்வாமை வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியைப் போட்டு விடுவார்கள். சிலருக்கு உடல் முழுக்க வீக்கங்கள் வரலாம். சிலருக்கு அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனக் கூடிய உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஏற்பட்டு விடலாம். இதை மருத்துவர்கள் நாங்கள் கண்டறிந்து உடனே அதை தடுப்பதற்கான ஊசியை போட்டு விடுவோம். கடிபட்ட இடத்தில் மஞ்சள் அல்லது சுண்ணாம்பைத் தடவிக்கொண்டு, இன்னுயிரை இழக்காதீர்கள். கானாக்கடிக்கான சிகிச்சையை வழங்குவோம்! தேள், கதண்டு போன்ற விஷப்பூச்சிகளை நம்மால் அடையாளம் காண முடியும். அப்படிப்பட்டவை கடித்தால் அதற்கான சிகிச்சையை அளிப்போம். ஒருவேளை என்னப் பூச்சி கடித்தது என்பது தெரியவில்லை என்றால் கானாக்கடிக்கான சிகிச்சையை வழங்குவோம். வீட்டுத்தோட்டம் Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! வீட்டுத் தோட்டத்தில் புதுவகை பூச்சியா? மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் தோட்டம் போடுவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறோம். அப்படி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதை சுத்தமாக வைத்திருங்கள். குறிப்பாக, மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற இந்த சீசனில் தோட்டத்தில் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பூச்சிகள், வண்டுகள் ஏன் பாம்பு, தேள்கூட வந்து ஒளிவதற்கான இடமாக இருக்கிறது. தோட்டத்தில் நீங்கள் நடப்பதற்கு சிமென்ட்டில் பாதை போட்டு வையுங்கள். வெறும் காலில் நடக்காதீர்கள். ஒருவேளை ஏதாவது புது வகையான பூச்சி அல்லது வண்டை வீட்டுத் தோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், அதை போட்டோ எடுத்து கூகுளிடம் கேட்டால், அது விஷம் உள்ளதா அல்லது விஷமற்றதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை அது விஷம் உள்ளதாக இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுங்கள். பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | InDepth கை வைத்தியம் செய்யலாமா? சில வண்டுகள் காதுக்குள் சென்று விட்டால் காது கேளாமையைகூட ஏற்படுத்தி விடும் என்பதால், இப்படியொரு பிரச்னை வந்தது என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவரை நாடுங்கள். மருத்துவர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் அல்லது மருத்துவமனை வெகு தூரத்திலிருந்த காலகட்டத்தில் கை வைத்தியங்களை நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள். அதில் சில உதவியும் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு தெருவுக்கு ஒரு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதனால், கை வைத்தியம் செய்து கொள்கிறேன் என உங்கள் உயிருக்கோ அல்லது உங்கள் குழந்தைகளின் உயிருக்கோ அவசியமற்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்’’ என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: ஆசிரியர் வேலை, சாக்பீஸ் பயன்பாட்டால் தொண்டை எரிச்சல், வறட்டு இருமல்; தீர்வு என்ன?
Doctor Vikatan: நான் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு அடிக்கடி தொண்டை எரிச்சலும் வறட்டு இருமலும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாக்பீஸ் அலர்ஜி என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? இதற்கு தீர்வு சொல்லுங்கள். பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை உங்களுடைய தொண்டை எரிச்சல் மற்றும் வறட்டு இருமல் பிரச்னைக்கு, சாக்பீஸ் அலர்ஜி நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும். மூடப்பட்ட அறை அல்லது வகுப்பறை சூழலில் தொடர்ந்து சாக்பீஸ் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் சாக்பீஸ் துகள்கள் கண்டிப்பாக தொண்டை எரிச்சலை ஏற்படுத்தலாம். அதன் விளைவாக மூக்கு சிவந்துபோவது, நீர் வடிதல் போன்றவை இருக்கலாம். சாக்பீஸ் துகள்கள் உள்ளே போகும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அதனால் ஆஸ்துமா, வீஸிங் போன்றவை வரலாம். சிலருக்கு இது தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சரியாகிவிடும். அதுவே நீண்டகாலமாக இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு, இன்டர்ஸ்ட்ஷியல் லங் டிசீஸ் (Interstitial Lung Disease) என்ற பிரச்னை வரலாம். நுரையீரலை பாதிக்கும் இந்தப் பிரச்னையிலும் மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவை வரலாம். சாக்பீஸ் உபயோகம் தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில், அந்த வகுப்பறையில் ஜன்னல்கள் இருக்க வேண்டும், அவை திறந்திருக்க வேண்டும். வகுப்பறையில் சாக்பீஸ் பயன்பாடு Doctor Vikatan: நாள்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? வகுப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான சாக்பீஸை பயன்படுத்துவதும் தீர்வாக இருக்கும். வாய்ப்பிருந்தால், சாக்பீஸ் பயன்பாடு இல்லாத போர்டு உபயோகிக்க முடியுமா என்று அதற்கான மாற்றுவழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா என்று பாருங்கள். சாக்பீஸ் பயன்பாட்டால் எல்லோருக்கும் பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மூச்சுத்திணறல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். நுரையீரல் சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் நுரையீரல் செயல்திறனுக்கான பரிசோதனையைச் செய்வார்கள். சிலருக்கு சிடி ஸ்கேன் தேவைப்படலாம். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?
’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் தவிர்க்கிறார்கள். அப்படியானவர்கள்கூட, சுவையான எள் துவையலைத் தட்டிக்கழிக்க முடியாது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன், எள் துவையலின் பலன்கள் பற்றி விவரிக்கிறார். ரெசிபி செய்முறை சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். தேவையானவை: எப்படி செய்வது? கறுப்பு எள் அல்லது வெள்ளை எள் : கால் கப் தேங்காய்க்கீற்று : 4 காய்ந்த மிளகாய் : 4 கட்டிப் பெருங்காயம் : சிறு துண்டு உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் : ஒரு டீஸ்பூன் உப்பு : தேவையான அளவு தண்ணீர் : சிறிது புளி : சிறிய கோலிக்குண்டு அளவு எள் துவையல் செய்முறை: எள்ளைச் சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் தேங்காய் துண்டுகள், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும், எள் மற்றும் தண்ணீர் (சிறிதளவு) சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுத்தால், எள் துவையல் ரெடி. ஈஸ்ட்ரோஜென் சமச்சீரின்மை உள்ள பெண்களா நீங்கள்? பலன்கள்... பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் குறைந்தால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதன் காரணமாக மாதவிடாயில் பல சிக்கல்கள் ஏற்படும். இது, ஈரல் பாதிப்புகள், இதயக் கோளாறு, ஹார்மோன் சமச்சீரின்மை எனப் பல பிரச்னைகளை உருவாக்கும். எனவே, மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்கள், முதல் நிலையிலேயே இது போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னை உள்ளவர்கள், மெனோபாஸ் கடந்தவர்கள் அனைவருக்கும்கூட இந்த உணவு உதவும். sesame seeds பீரியட்ஸ் ரத்தம் அதிகமாக வெளியேறுமா? எள் சாப்பிடுவதால், மாதவிடாயின்போது ரத்த வெளியேற்றம் அதிகமாகுமோ என்ற பயம் சிலருக்கு இருக்கும். துவையலில் சேர்க்கப்பட்டிருக்கும் தேங்காயும் உளுத்தம்பருப்பும் எள்ளின் உஷ்ணத் தன்மையைக் குறைக்கும் என்பதால், அந்தப் பயம் அவசியமில்லை. Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health வயிறு பிரச்னை சரியாகும் வயிற்றுப்புண், புளித்த ஏப்பப் பிரச்னை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு கஞ்சி வகையோடு எள் துவையலைச் சேர்த்துக்கொண்டால், அதுவும் சரியாகும். Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! எலும்பு வலுவாகும் எலும்பு மூட்டுப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும் உதவும் என்பதால், பெண்கள் மட்டுமல்ல அனைவருமே எள் துவையலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Cervical Spondylosis: யாருக்கெல்லாம் வரலாம்; அறிகுறிகளும் தீர்வுகளும்!
கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் `செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது குறித்து, எலும்பு மூட்டு மருத்துவர் நாவலடி சங்கரிடம் கேட்டோம். Cervical Spondylosis ‘செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்.’ “முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் தொய்வு காரணமாக ஏற்படுவதுதான் ‘செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்.’ பெரும்பாலும் வயதானவர்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது என்றாலும், மாறிவரும் வாழ்க்கைமுறை காரணமாக இளைய தலைமுறையைச் சேர்ந்த பலரும்கூட இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு இது நாள்பட்ட நோயாகவும், தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் நோயாகவும் இருக்கிறது. கழுத்தின் தண்டுவடம், அந்தப் பகுதியிலிருக்கும் டிஸ்க் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள், கழுத்து மூட்டுப் பகுதி தன் நெகிழ்வுத் தன்மையை இழப்பது போன்றவைதான் இதற்கான அடிப்படைக் காரணங்கள். ‘இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனரே’ டிஸ்க் மற்றும் மூட்டுகளில் தொய்வு ஏற்படவும், அந்தப் பகுதி அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கவும், வயது முதிர்வு முக்கியமான காரணம். அந்த பாதிப்பு 80 சதவிகிதம். ஆனால், ‘இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனரே’ என்று நீங்கள் கேட்கலாம். வயது வித்தியாசமின்றி ஏற்படும் இந்த செர்விகல் ஸ்பாண்டிலோசிஸுக்கான மற்ற காரணங்கள் இங்கே: Cervical Spondylosis டிஸ்க் தேய்மானம் * கழுத்துப் பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்கும்போது, அதிலிருக்கும் டிஸ்க் தேய்மானம் அடையத் தொடங்கும். அந்தத் தேய்மானம், ஸ்பாண்டிலோசிஸை ஏற்படுத்தும். சிறு வயதிலேயே அதீத உடலுழைப்புக்கான வேலையைச் செய்பவர்களுக்கு, 25 வயதைத் தாண்டும்போதே பிரச்னை தொடங்கிவிடுகிறது. தொழில் சார்ந்த பிரச்னை! * ஸ்பாண்டிலோசிஸ், ஒரு வகை தொழில் சார்ந்த பிரச்னை. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், கட்டடத் தொழில் செய்பவர்கள், பேருந்து நடத்துநர்கள், வாகன ஓட்டுநர்கள், தொலைதூரத்துக்கு இருசக்கர வாகனத்தில் அடிக்கடி செல்பவர்கள், கணினியில் அமர்ந்து பல ஆண்டுகளாக வேலை பார்ப்பவர்கள், பணி நேரத்தில் கழுத்தை அசௌகர்யமான பொசிஷனில் வைத்திருப்பவர்களுக்கு இது ஏற்படுவது இயல்பு. ஒரே பொசிஷனில், ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நிற்பதும் இதற்குக் காரணம். பணி நிமித்தமாக ஸ்பாண்டிலோசிஸ் ஏற்பட்டிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பணியைத் தொடர வேண்டாம். மீறித் தொடர்ந்தால், பிரச்னை இன்னும் அதிகமாகும். கழுத்து வலி (Representational Image) மரபியல்ரீதியாகவும் ஏற்படலாம்! * எலும்பின் வளர்ச்சி ஏதாவதோர் இடத்தில் அதிகமாக இருந்தால், அந்தப் பகுதியில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்படலாம். * மரபியல்ரீதியாகவும் ஏற்படலாம். அறிகுறிகள் பெரும்பாலும், முதல் கட்டத்தில் அறிகுறிகள் தெரியாமலிருக்கலாம். நாளாக ஆக, தீவிரமான கழுத்துவலி ஏற்படும். அதிகாலையில் கழுத்தில் வலி உணர்வு மிக அதிகமாக இருக்கும். கூடவே, அந்தப் பகுதி முழுக்க இறுக்கமான உணர்வு ஏற்படலாம். கவனிக்காமல்விடும் பட்சத்தில், தலைச்சுற்றலும் ஏற்படும். தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, சிகிச்சையைத் தொடங்கவும். தோள்பட்டை வலி பின்னோக்கித் திரும்பவேண்டிய சூழலில் * தோள்பட்டையைச் சுற்றி வலி உணர்வு ஏற்படுவது, இந்த நிலையில், தோள்பட்டையை மிக வேகமாகவோ, கனமான பொருள்களைத் தூக்குவதற்கோ பயன்படுத்துவது கடினம். * எழுந்து நிற்கும்போது, சம்மணமிட்டு உட்காரும்போது, இருமல் அல்லது தும்மல் வரும்போது கழுத்தில் வலி உணர்வு அதிகமாக இருக்கும். பின்னோக்கித் திரும்பவேண்டிய சூழலில் மிகவும் சிரமப்பட்டுத் திரும்ப நேரிடும். Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! தலையின் பின்பகுதியில் தீவிரமான வலி உணர்வு * தசைப் பகுதிகளில் பலவீனமான உணர்வு ஏற்படுவது, இந்த அறிகுறி பெரும்பாலும் ஏதேனும் சிரமமான வேலையைச் செய்யும்போதுதான் ஏற்படும். இதோடு தலையின் பின்பகுதியில் தீவிரமான வலி உணர்வு இருக்கும். தலைச்சுற்றல் கவனம்! * ஒவ்வொரு முறை உடலின் பொசிஷன் மாறும்போதும், தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். * வலி அதிகமாவதால், கழுத்தை சௌகர்யமில்லாத பொசிஷனில் வெகு நேரத்துக்கு வைத்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை. புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்! * வயிறு தொடர்பான சிக்கல் அதிகமாக இருப்பது, அடிக்கடி நிலை தடுமாறுவது போன்றவை இருந்தால், அதற்கான தீர்வை உடனடியாகக் கண்டறிய வேண்டும். * புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். * உடல்பருமனாக இருக்கும் நோயாளிகள், வெகு காலமாக மிதமான மற்றும் உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளை மட்டும் செய்து வருவது பிரச்னையின் தீவிரத் தன்மையை அதிகரிக்கும். புகைப்பழக்கம் அதை மீண்டும் செய்யாமலிருப்பது நல்லது! * எந்த வேலையைச் செய்யும்போது கழுத்தில் வலி அதிகரிக்கிறதோ, அதை மீண்டும் செய்யாமலிருப்பது நல்லது. * பின் கழுத்தில் அடிக்கடி இறுக்க உணர்வு வருவது, பின்னந்தலையில் வலி அதிகமாக இருப்பது, கை மற்றும் தோள்பட்டையில் அவ்வப்போது உணர்விழப்பது போன்ற அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது. Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்! நோயை உறுதிசெய்யும் முறை உங்கள் அன்றாட வேலைகளை- செய்யச் சொல்லி மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். நடக்கும் முறை, கழுத்தைத் திருப்பும்விதம், கைகளை உபயோகப்படுத்தும் முறை போன்றவை கண்காணிக்கப்படும். வித்தியாசமாகச் செய்தால், அடுத்தகட்ட பரிசோதனைகள் செய்யப்படும். எக்ஸ்ரே, சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படும். நரம்புப் பகுதிகளைக் கண்டறிய, எலெக்ட்ரோ மையோகிராம் (Electromyogram) செய்து பார்க்க வேண்டும். ஸ்கேன் சிகிச்சைகள் முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படும். பிரச்னை தீவிரமாக இருந்தால், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதன் பிறகும் வலி குறையவில்லையென்றால், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். வெகு சிலருக்குத்தான் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதால், பயப்படத் தேவையில்லை. Heel Pain: குதிகால் வலி போக்கும் எருக்கு இலை...எப்படி பயன்படுத்துவது? கழுத்துவலியைக் குறைக்க, * கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள், நேராக அமர்ந்து வேலை பார்க்க வேண்டும். கீபோர்டில் டைப் செய்யும்போது, கைகளுக்கும் கீபோர்டுக்கும் இரண்டு இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். கால்களுக்கு அடியில் ஃபுட் ரெஸ்ட் (Foot Rest) பயன்படுத்தவும். * தூங்கும்போது, சிறிய தலையணையை உபயோகப்படுத்தவும். தோள்பட்டைக்கும் சேர்த்தே தலையணை வர வேண்டும். * உடல் பருமனாக இருப்பவர்கள், தலையணை இல்லாமல் தூங்கக் கூடாது. Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! ஒத்தடம் கொடுத்தால்... * புத்தகம் வாசிக்கும்போதும், டி.வி பார்க்கும்போதும் நேராக அமர்ந்திருக்க வேண்டும். * ஒத்தடம் கொடுத்தால், வலி உணர்ச்சி தற்காலிகமாக குறையத் தொடங்கும். எனவே, அதைப் பின்பற்றலாம். * இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பள்ளங்கள் அதிகமிருக்கும் இடங்களிலும், ஸ்பீடு பிரேக்கர் இருக்கும் இடங்களிலும் மிகவும் மெதுவாகச் செல்ல வேண்டும். அதிக எடையுள்ள ஹெல்மெட்டைத் தவிர்க்க வேண்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: 40 வயது, இரண்டாம் திருமணம், பல வருடங்களாக குழந்தையில்லை; இனி சாத்தியம் ஆகுமா?
Doctor Vikatan: நாங்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். நான் 40 வயது பெண். எனக்கு கருத்தடை ஊசிபோட்டு இருக்கிறார்கள். 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டும். அதற்கு சாத்தியம் இருக்கிறதா? -Jothi basu, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் உங்கள் கேள்வியில் சில விஷயங்களில் தெளிவில்லை. 40 வயது என்கிறீர்கள், குழந்தை வேண்டும் என்கிறீர்கள், கருத்தடை ஊசி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது. உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும். கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை 'ஏ.எம்.ஹெச்' (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக 35 வயதுக்குப் பிறகு இந்த முட்டைகளின் இருப்பு குறையத் தொடங்கும். 40 வயதில் அது இன்னும் குறைந்திருக்கும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. Doctor Vikatan: கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா? 18 வருடங்களாக உங்களுக்குக் குழந்தை இல்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். 18 வருடங்கள் என்பது நீண்டகாலம் என்பதால், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பரிசோதனைகள் அவசியம். ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், விந்தணுப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை என எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. உங்களுடைய வயது இந்த விஷயத்தில் தடையாக இருக்க வாய்ப்புள்ளதால், கருமுட்டைகளின் தரம் சோதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கருமுட்டை தானம் பெற வேண்டி வரலாம். எனவே, இனியும் தாமதிக்காமல் முதல் வேலையாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை உடனே செய்யுங்கள். இயற்கை முறையில் குழந்தைபெற முயற்சி செய்ய நினைத்து, இன்னும் சில வருடங்களை வீணடித்துவிட்டால், பிறகு ஐவிஎஃப் சிகிச்சையும் கைகொடுக்காமல் போகலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?
பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள். மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை சாப்பிட்டது செரிமானம் ஆக அந்த குளிர்பானத்தைக் குடிப்பார்கள். சிலர், பலமான விருந்து சாப்பிட்டப் பிறகு வருகிற எதுக்களித்தல் மற்றும் வயிறு உப்புசம் சரியாக சோடா குடிப்பார்கள். சிறிது நேரத்தில் ஏப்பம் வந்தவுடன், செளகர்யமாக உணர்வார்கள். இது சரியா என சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். Soda இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும்! ''இரைப்பையில் உணவு, தண்ணீர், காற்று மூன்றும் இருக்கும் என அனைவருக்குமே தெரியும். இவை, அதனதன் அளவில் இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மீறி பிரியாணியை ஒரு பிடி பிடித்தால், காற்று இருப்பதற்கு போதுமான இடமில்லாமல் போகும். இந்த நிலையில், அந்தக்காற்றானது இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும். அந்தக் காற்றுக்குமிழ் வயிற்றுக்குள்ளும் நெஞ்சகத்திலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்! அந்தக் காற்றுக்குமிழால் ஏப்பமாக வெளியேறவும் முடியாமல், அபானவாயுவாக வெளியேறவும் முடியாமல் இருக்கும். இந்தக் காற்றானது உதரவிதானத்தை அழுத்தினால், மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில் காற்று நிரம்பிய குளிர்பானத்தையோ அல்லது சோடாவையோ குடித்தால், இரைப்பைக்குள் இருக்கிற காற்றுக்குமிழியின் வடிவம் மாறி, அது ஏப்பமாக வெளியேறி விடும். அளவுக்கதிகமான உணவு ஒரு தப்பை இன்னொரு தப்பால் இதில் உண்மை என்னவென்றால், நீங்கள் அளவாக சாப்பிடாதது ஒரு தவறு. காற்று நிரம்பிய பானத்தைக் குடித்ததும் தேவையில்லாததுதான். அதிகமாக சாப்பிட்ட தவறை, காற்று நிரம்பிய பானத்தைக் குடித்தல் என்னும் இன்னொரு தவறை செய்து ஏப்பமாக காற்றை வெளியேற்றி சரி செய்துவிட்டீர்கள். Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான்! சிலர், சோடா குடித்து ஏப்பம் விட்டால்தான் நன்கு செரிமானம் ஆவதாக நம்புவார்கள். அதையே தொடரவும் செய்வார்கள். இவர்களுக்கு ஏப்பம் விட்டால்தான் திருப்தியாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்தில், 'டாக்டர் எப்போ பார்த்தாலும் ஏப்பம் ஏப்பமா வருது; சங்கடமா இருக்கு' என்பார்கள். சோடா குடித்து ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான். இப்போது அதற்கு உங்களைப் பிடித்துவிட்டது என்பேன் நகைச்சுவையாக. ஆனால், சோடா குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இந்தப் பிரச்னைக்கு சிகிச்சையளித்தால் சரி செய்துவிடலாம். Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்! சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் தவிர, காற்று நிரம்பிய குளிர்பானங்களில் இருக்கிற சர்க்கரை உடலுக்கு நல்லதும் அல்ல. தேவைப்பட்டால் ரசம் குடிக்கலாம். உங்கள் வீட்டில் செரிமானமாவதற்கு சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் குடிக்கிற வழக்கம் இருந்தால், அவற்றையும் அருந்தலாம். மற்றபடி, செரிமானம் ஆவதற்கும், வயிறு உப்புசத்தை சரிசெய்வதற்கும் சோடா குடித்தல் என்பது வேண்டாத பழக்கம்'' என்கிறார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing
தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த முறை சரிதானா என சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம் கேட்டோம். தாம்பத்தியம் ஜெல்கிங் ( jelqing ) ''தன்னுறுப்பு சிறியதாக இருப்பதாக நம்புகிற பல ஆண்கள், இந்த மசாஜ் முறையை கையாளுகிறார்கள். இதை ஜெல்கிங் ( jelqing ) என்போம். இந்த முறையில், ஆணுறுப்பை இழுக்கக்கூடிய உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள். என்னைக் கேட்டால், இப்படி செய்யாதீர்கள் என்றுதான் சொல்வேன். தேவையில்லாமல் இழுத்து விடும்போது ஆணுறுப்புக்குள் வடுக்கள் ஏற்பட்டு பைரோனி போன்ற வியாதிகள் வரலாம். இதனால் ஆணுறுப்பு வளைந்து விடும். `ஆண்கள் விந்துப்பையைத் தொட்டுப் பார்க்க கூச்சப்படக்கூடாது. ஏன்னா...’ - காமத்துக்கு மரியாதை 249 உறுப்பைப்பற்றிய அதீத கவனம் எடுத்தால்... இன்னும் சிலர் ஜெல்கிங் செய்ததால், 'எனக்கு விறைப்புத்தன்மை குறைந்துவிட்டது, ஆண்மைத்தன்மை குறைந்துவிட்டது' என வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஆண்கள் தங்கள் உறுப்பைப்பற்றிய அதீத கவனம் எடுத்தால், அந்த உறுப்பில் பிரச்னை ஏற்படத்தான் அதிகம் வாய்ப்பிருக்கிறது. Chem Sex: இளைஞர்களை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் கெம் செக்ஸ்! - காமத்துக்கு மரியாதை 252 நீளமான ஆணுறுப்புதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கியமா? தன் துணைக்கு முழுமையான திருப்தியை தர வேண்டும் என்பதற்காகத்தான், ஆண்கள் இப்படி அளவு தொடர்பான மன உளைச்சலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் பெண்ணுறுப்பில் 2 முதல் 3 செ.மீ வரைதான் சென்சிட்டிவ் ஆக இருக்கும். இதைத்தாண்டி ஆழமாக போகும்போது, அங்கு சென்சிட்டிவிட்டி குறைவாகவே இருக்கும். அதனால், நீளமான ஆணுறுப்புதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கியம் என நினைத்துக்கொண்டு, ஏதோவொரு எண்ணெயைத் தடவி மசாஜ் செய்வது, உபகரணங்களை வைத்து இழுத்து மசாஜ் செய்வதெல்லாம் தேவையில்லாதவை'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?
Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை. எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்க் குளியல் எடுத்தால் முடி உதிர்வது நிற்கும் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உண்மையிலேயே முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எண்ணெய்க் குளியலுக்கு எந்த எண்ணெய் உகந்தது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம் தலத் சலீம் எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது. ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது. வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது கூந்தலை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ரிலாக்ஸ் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுப்பதால் முடி உதிர்வு குறையும் என்பது உண்மைதான். ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிகமிருக்கும். எனவே, உங்கள் மகளை ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கமும் அவசியம். எண்ணெய்க் குளியலுக்கு சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். முடி உதிர்வு Doctor Vikatan: தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா... எந்த ஷாம்பூ நல்ல ஷாம்பூ? ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும். பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆற வைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும். ஒரு கப் சாற்றுக்கு 3 கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் 2 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்கு கொதிக்க விடவும். இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு இதுவும் நல்ல தீர்வளிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்!
''உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவையிரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், சில வைட்டமின்கள் நமக்கு தேவை. இதேபோல், இளம் தலைமுறையினர் அதிகம் சொல்கிற மூட் ஸ்விங் (mood swings). உண்மையில் மனித மனத்தின் உணர்வுகள் மகிழ்ச்சி, துக்கம் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊசலாட்டத்தன்மையுடன் இருக்கும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருசிலர் மகிழ்ச்சி வந்தால் தலை கால் புரியாமல் இருப்பார்கள். துக்கம் வந்தால், ஒரு சிலர் சாப்பிடக்கூட செய்யாமல் துக்கத்தில் சுருண்டுபோய் விடுவார்கள். இப்படி இல்லாமல் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவும் சில சத்துக்கள் தேவைப்படுகின்றன'' என்கிற மனநல மருத்துவர் டாக்டர் சுபா சார்லஸ், அவைபற்றி விவரித்தார். வைட்டமின் மாத்திரை வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 ''நடுத்தர வயதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, தைராய்டு போன்றவற்றை பரிசோதனை செய்கையில், கூடவே வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 போதுமான அளவு இருக்கிறதா என்றும் பரிசோதிக்க சொல்கிறார்கள், இந்தக் கால மருத்துவர்கள். அந்தளவுக்கு இந்த வைட்டமின்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநலனுக்கும் அவசியமாக இருக்கிறது. சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது. அந்தக் காலத்தில் விவசாயம் செய்கையில், தினமும் நம் மீது சூரிய ஒளி பட்டது. அதனால் வைட்டமின் டி-யை போதுமான அளவுக்கு உடம்பே தயாரித்துக்கொண்டது. ஆனால், இன்றைக்கு சூரிய ஒளி உடல் மேல் படுவதே குறைந்துவிட்டது. பெரும்பாலும் மூடிய ஏ.சி அறைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய இதய நலனில் ஆரம்பித்து மனநலன் வரைக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளி வைட்டமின் பி 12 அவசியம். தற்போது உடலுழைப்புக் குறைந்துவிட்டதும், மூளை உழைப்பு அதிகரித்துவிட்டதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்த மூளை நலமாக இருக்க வேண்டுமென்றால், வைட்டமின் பி 12 அவசியம். இந்த வைட்டமின் குறைந்தால் உடலில் இரும்புச்சத்தும் குறையும்; ரத்தசோகையும் வரும். சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? எவ்வளவு நாள், என்ன அளவு? இந்த 2 வைட்டமின்களுமே நம்முடைய மனதை நிலைப்படுத்துபவை என்பதால், இவற்றை மெடிக்கல் ஷாப்களில், 'ஓவர் த கவுன்ட்டர்' வாங்கி சாப்பிட முடியும். அந்தளவுக்கு முக்கியமான மாத்திரைகள் இவை. அதனால், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வாக உணர்ந்தீர்களென்றால், அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பிரச்னைகளை சொன்னீர்களென்றால், எவ்வளவு நாள், என்ன அளவில் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்குவார்கள். தவிர, இந்த இரண்டு வைட்டமின் மாத்திரைகளையும் ஒரு மாதம், இரண்டு மாதம் என சாப்பிட்டு விட்டு நீங்களாகவே நிறுத்தி விடக்கூடாது. இதனால், மறுபடியும் இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் உடலில் ஏற்படலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா? மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது. மனதை நிலைப்படுத்துவதில் மேலே சொன்ன இரண்டு வைட்டமின்களைப்போலவே மெக்னீஷியம் சத்தும் அவசியம். அந்தக் காலத்தில், விவசாயத்தில் மெக்னீஷியம் சல்பேட் அல்லது எப்சம் சால்ட் உரமாக பயன்படுத்தப்பட்டது. கடலில் உப்பளங்களில் உப்பு விளையும். உப்பை அறுவடை செய்தவுடன், கீழே எப்சம் சால்ட் படிந்திருக்கும். அதை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், கடந்த 50 வருடங்களாக இந்த எப்சம் சால்ட்டில் இருக்கிற மெக்னீஷியம் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் சென்று விடுகிறது. இதனால், நம்முடைய உணவுகளில் மெக்னீஷியம் சத்து குறைந்துவிட்டது. விளைவு மூட் ஸ்விங். இதற்கு மெக்னீஷியம் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிய பிரச்னைக்கும் மனதளவில் ஒடுங்கிப் போய்விடுகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா? - அமைச்சர் மா.சு விளக்கம்
மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்திற்கும் பாதிப்பு இருக்குமா? என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், மாசடைந்த நீர்நிலைகளில் குளிக்கும்போது மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலியும், காய்ச்சலும், கழுத்துவலியும், மயக்கம் போன்றவையும் இருக்கும். அமீபா வைரஸ் கேரள அரசாங்கம் இதற்கு தேவையான சிகிச்சைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கேரள எல்லையிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு அச்சமும் பாதிப்பும் ஏற்படும் நிலை இல்லை. இது தொற்றுநோய் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் கூட மாசுபட்ட குளம், குட்டைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பராமரிப்பு இன்றி இருக்கும் நீச்சல் குளங்களிலும் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நாம் பெரிதாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, என்று அவர் விளக்கம் அளித்தார். குழந்தைகளை பாதித்த `மூளை தின்னும் அமீபா தொற்று' இளைஞர்களுக்கும் பரவல்... கேரளாவில் அதிர்ச்சி..! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?
Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுகிறான். அவசரப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டாம் என்று சிலரும், ஆபரேஷன்தான் சரியான தீர்வு என சிலரும் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நம் உடலில் 'டான்சில்' என்றோர் உறுப்பு உண்டு. வாய்க்கும் உணவுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாதுகாப்பு உறுப்பு அது, சுற்றுப்புற மாசிலுள்ள கிருமிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அந்த உறுப்புதான். தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் டான்சில் வழியேதான் கிருமிகள் உடலுக்குள் செல்லும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காதபடி டான்சில் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதனால் அந்தப் பகுதி வீக்கமடையும். அதனால் தீங்கு விளைவிக்கும் அந்தக் கிருமி, குழந்தையின் நுரையீரல், வயிறு உள்ளிட்ட வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தடுக்கப்படும். குழந்தைகளின் 11 வயது வரை இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே நோய்க்கு எதிராக டான்சில் முன் அளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. டான்சில் வீக்கம் ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம். சில குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் தீவிரமாக இருக்கும். வீக்கம் அதிகரித்த காரணத்தால் சரியாகச் சாப்பிட முடியாது.தண்ணீர் கூட குடிக்க முடியாது. மூச்சு விட சிரமமாக இருக்கும். அதை 'ஃபரின்ஜியல் டான்சில்ஸ்' (pharyngeal tonsils) என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்தால் சிலருக்கு காய்ச்சல் அதிகரிக்கும், சரியாகச் சாப்பிட முடியாது, தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். டான்சில் பழுத்து வீங்கும். அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். டான்சில்ஸ் பாதிப்பு... ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா? Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா? குழந்தைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, இருப்பிடம் என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டையில் வீக்கம் வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஃபிரெஷ்ஷான, சூடான உணவுகளைக் கொடுப்பது, கொதிக்கவைத்து ஆறவைத்த நீர், சுத்தமான காற்றை சுவாசிக்கும்படியான சூழல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு டான்சில் வீக்கம் வராமல் பாதுகாக்கலாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே தேவையின்றி டான்சில் வீக்கத்தைச் சரிசெய்ய முடியும். ஆனால், ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் குழந்தைக்கு இப்படி வருகிறது, மிகவும் அவதிப்படுகிறது என்ற நிலையில் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதற்கு 'டான்சிலெக்டமி' (Tonsillectomy) என்று பெயர். உங்கள் குழந்தைக்கு இப்படி வருகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு மருத்துவர் சொல்வதற்கேற்ப முடிவெடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஹீமோகுளோபின் குறைபாடு; பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்குமா?
Doctor Vikatan: ஹீமோகுளோபின் குறைபாடு இதயச் செயலிழப்பை ஏற்படுத்துமா? குறிப்பாக பெண்களுக்கு, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதய பாதிப்பின் அறிகுறிகளை எப்படி உணர்வார்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஹீமோகுளோபின் என்பது ரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் ஒரு புரதம். இன்னும் எளிமையாகப் புரியவைக்க வேண்டுமானால், செடிகளுக்குப் பச்சையம் எனப்படும் குளோரோபில் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரியானது மனிதர்களுக்கு ஹீமோகுளோபின். இரண்டுமே ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் வேலையைச் செய்பவைதான். உடலியக்கத்துக்கு மிக முக்கியமான வேலையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையானது, ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக தடைப்படும். ஹீமோகுளோபின் எனப்படும் ரத்தச் சிவப்பணுக்கள் குறையும்போது, இதயத்துக்குப் போதுமான பிராணவாயு கிடைக்காமல் போகும். அதனால் இதயநலன் பாதிக்கப்படும் என்பதும் உண்மைதான். சராசரியாக இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவில் ஒன்றிரண்டு கிராம் குறையும்போது இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. சராசரியைவிட மிகவும் குறையும்போதுதான் பிரச்னையே. ஹீமோகுளோபின் அனீமியா எனப்படும் அலாரம் - ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ஆபத்திலிருந்து மீளலாம்!- ரத்தச் சரித்திரம்- 23 பொதுவாக, பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். அது 8 என்ற அளவைவிட குறையும்போது அவர்களுக்கு படபடப்பு, மூச்சுத்திணறல், தளர்ச்சி, களைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம். மாதவிடாய் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் சராசரியைவிட குறையாமல் பார்த்துக்கொள்ள உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, 8 கிராமுக்கு கீழ் குறையும்போது உடனடியாக அலெர்ட் ஆக வேண்டும். உணவின் மூலம் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க முடியாதவர்கள், மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டாலே அனீமியா பாதிப்பிலிருந்து மீளலாம். அதன் மூலம் இதயநலனையும் காக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Juice: ஒரே நேரத்தில் முக்கால் லிட்டர் ஜூஸ் குடிக்கலாமா?
எங்கு பார்த்தாலும் 750 ml பழச்சாறுக்கடைகள் கண்களில் தென்படுகின்றன. பொதுவாக பழச்சாறு ஆரோக்கியமானதுதான். ஆனால், இப்படி 600 ml, 700 ml, 750 ml என ஜூஸ் குடிப்பதும், அதை அடிக்கடி குடிப்பதும் எந்தளவுக்கு நல்லது என்று டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். Juice பழச்சாறுகளைக் குடித்தால்... சர்க்கரையைக் கொட்டி அரை லிட்டர், முக்கால் லிட்டர் என ''இன்றைக்கு பழச்சாறுகளை மக்கள் அதிகம் அருந்துகிறார்கள். அமிர்தமே என்றாலும் அளவுதான். அதே நேரம், சர்க்கரையைக் கொட்டி அரை லிட்டர், முக்கால் லிட்டர் என பழச்சாறுகளைக் குடித்தால், உடலில் கலோரிகள்தான் அதிகமாகும். ஒரு தர்பூசணித் துண்டுதான் சாப்பிட முடியும். ஆனால் தவிர, பழமாக சாப்பிட்டோம் என்றால், உதாரணத்துக்கு, நம்மால் ஒரு தர்பூசணித் துண்டுதான் சாப்பிட முடியும். ஆனால், இப்படி 600 , 700 என்று ஜூஸாக குடித்தால், ஒரே நேரத்தில் மூன்று, நான்கு துண்டுகளை ஜூஸாக அருந்திவிடுவோம். கூடவே, நார்ச்சத்தும் கிடையாது. Juice யாருக்குமே நல்லதல்ல... சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சில், அவற்றின் மொத்த நார்ச்சத்தையும் நீக்கி விட்டுதான் கொடுக்கிறார்கள். இந்த ஜூஸ்களில் சர்க்கரை சேர்க்காமலும் அருந்த முடியாது. இது நீரிழிவு மற்றும் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே நல்லதல்ல. ஏற்கெனவே போட்டு வைத்துக் கொடுத்தால் பழச்சாறுகளில் நமக்கு முக்கியமாக கிடைப்பது வைட்டமின் சி. நம் கண் முன்னே ஃபிரெஷ்ஷாக போட்டுத் தருகிற ஜூஸில்தான் வைட்டமின் சி நமக்கு முழுமையாக கிடைக்கும். அதை ஏற்கெனவே போட்டு வைத்துக் கொடுத்தால், வைட்டமின் சி மிக மிக குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்கவே கிடைக்காது. Juice Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? இதுவும் ஜங்க் ஃபுட் போலத்தான். சிலர் சாப்பாட்டுக்கு பதில் இந்த முக்கால் லிட்டர் ஜூஸை அருந்துகிறார்கள். இதனால், அந்த நாளுக்குத் தேவையான புரதமோ, நல்ல கொழுப்போ கிடைப்பது கடினம். டெட்ரா பாக்கெட்டுகளில் கிடைக்கிற ஜூஸ்களில், பார்ப்பதற்கு ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதுவும் ஜங்க் ஃபுட் போலத்தான். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? 300 ml வரை அருந்தலாம். எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், 750 ml juice குடிப்பது தேவையில்லாத அளவு. 300 ml வரை அருந்தலாம். அதிலும் சுகர் சிரப் விட்டெல்லாம் வேண்டவே வேண்டாம். முடிந்தவரை எல்லோருமே பழங்களைச் சாப்பிடுங்கள். பழச்சாறுகளைத் தவிருங்கள்'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?
Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலே உடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட்டார். இப்படி காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் போடுவது சரியா அல்லது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் காய்ச்சலைத் தணிக்க பாராசிட்டமால்தான் சிறந்த மருந்து. அது அவரவர் எடைக்கேற்ப எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். காய்ச்சல் 102 டிகிரியை தாண்டினால் உடல்வலி, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலவீனம், தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காதது போன்றவை சேர்ந்துகொள்ளும். காய்ச்சலுக்கான உணவு தண்ணீர்கூட பிடிக்கவில்லை என்பதற்காக அதை அறவே தவிர்ப்பது ஆபத்தானது. 'நான்- கார்பனேட்டடு' (Non-Carbonated ) பானங்களை, குளிர்ச்சியின்றி குடிக்கலாம். மாம்பழம், லிச்சி, க்ரான்பெர்ரி என வாய்க்குப் பிடித்த சுவையில் இதைக் குடிக்கலாம். டீ, பால், அரிசி நொய்க் கஞ்சி போன்றவற்றையும் சிறந்த உணவுகள். நீர்ச்சத்து அவசியம் காய்ச்சல் குறையும்போது வியர்க்கும். அந்த வியர்வையின் மூலம் நாம் இழக்கும் நீர்ச்சத்து மற்றும் உப்பை ஈடுகட்டவும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். காய்ச்சலின்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படையான விஷயம். அதனால்தான் காய்ச்சல் மிக அதிகமாகி, உடல் சோர்வாகி மருத்துவரை அணுகும்போது குளுக்கோஸ் ஏற்ற அறிவுறுத்துகிறார்கள். குளுக்கோஸ் ஏற்றியதும் உடல் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறுவதை உணர்வதன் பின்னணியும் இதுதான். காய்ச்சல் Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்? மருந்து ஆரம்பநிலை காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 5 நாள்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தாலோ, 102 டிரிக்கு மேல் காய்ச்சல் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது. மருத்துவர் அந்தந்த சீசனில் பரவும் காய்ச்சலின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து டெங்கு, மலேரியா, டைபாய்டு, கொரோனா போன்றவற்றுக்கான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். டெங்கு காய்ச்சலில் தட்டணுக்கள் குறையும். அது ஆபத்தான நிலை என்பதால் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் பிளட் கல்ச்சர், யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளும் பரிந்துரைக்கப்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
SIMS: மண்டையோடு மற்றும் உச்சந்தலை தோல் புற்றுக் கட்டி; வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஒரு இளம் நிபுணரை பாதித்திருந்த 'டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ்' (DFSP) என்ற அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோய்க்கு சிம்ஸ் மருத்துவமனையின் பலதுறைகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்த வகை புற்றுநோய், தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாகப் பரவக்கூடியது. இந்நோயாளிக்கு ஏற்பட்டிருந்த, புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாகப் பாதித்து மோசமான நிலைமையை எட்டியிருந்தது. சிம்ஸ் மருத்துவமனை தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான திசுக்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறிய, தொடர் மருத்துவப் பரிசோதனைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உச்சந்தலைக்கு சிறப்பான சுகாதார பராமரிப்பு ஆகியவை இந்நோயாளிக்கு தேவைப்படும். புற்றுக்கட்டி அகற்றப்பட்ட பிறகு, நோயாளியின் மண்டையோடு மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின்னர், தோல் ஒட்டுகள், திசு மடிப்பு, திசு விரிவாக்கம் பயன்படுத்தி உச்சந்தலை பல கட்டங்களாகச் சரிசெய்யப்பட்டது. இறுதிச் சீரமைப்பு சிகிச்சையானது, நோயாளியின் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட திசுவின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. இந்த செயல்முறையின் போது, நுரையீரலுக்குப் பரவியிருந்த புற்றுநோய் முடிச்சு ஒன்றும் அகற்றப்பட்டது. சிம்ஸ் மருத்துவமனை டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ் (DFSP) என்று அழைக்கப்படும் பாதிப்பு மிகவும் அரிதானது; பத்து லட்சம் பேரில் 1 முதல் 5 நபர்களை மட்டுமே இது பாதிக்கிறது. ஆரம்பத்தில் வலியற்ற தோல் கட்டி அல்லது தடிப்பாக இது தோன்றும், சிகிச்சையளிக்கப்படாமல் இது விடப்படுமானால், தோல், தசை மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் அபாயம் கணிசமாக அதிகரிக்கும். இந்த நோயாளி, இதற்கு முன்பு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருந்த போதிலும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்நோய் பாதிப்பு பிரச்சனையோடு கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறார். இந்த நேர்வு குறித்து, மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் (ICAPS) முன்னாள் இயக்குநரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “இது ஒரே கட்டத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. உச்சந்தலை மற்றும் மண்டையோடு இரண்டையும் புற்றுக்கட்டி அரித்திருந்ததால், மூளைப் பாதுகாப்பு, மண்டையோடை சரிசெய்தல் முதல் தலைமுடி தாங்கும் உச்சந்தலை மறுசீரமைப்பு வரையிலான ஒவ்வொரு கட்டமும் மிகவும் சிக்கலானதாக இருந்தது. பாதுகாப்பான மற்றும் நீடித்த பலனை அடைவதற்கு, கவனமான திட்டமிடல், பலகட்ட செயல்முறைகள் மற்றும் துல்லியமான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமாக இருந்தன,” என்றார். மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தின் (ICAPS) சிறப்பு நிபுணர் டாக்டர் ஷ்யாம்நாத் கிருஷ்ண பாண்டியன் K. கூறியதாவது, “இந்த நோயாளிக்கான சிகிச்சை நேர்வில், கட்டியை முழுமையாக அகற்றுவதற்கும் பாதுகாப்பான மறுசீரமைப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவலாக இருந்தது. புற்றுநோய், மண்டையோடு போன்ற முக்கிய கட்டமைப்புகளில் ஊடுருவி, மூளைக்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக, பலகட்ட மருத்துவ செயல்முறைகள், சிக்கலான மறுசீரமைப்பு சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் மீண்டும் வராமல் தடுப்பது உட்பட ஒவ்வொரு படிநிலையும் அதிக ஆபத்து நிறைந்ததாக இருந்தது.” வரலாற்று சிறப்புமிக்க இச்சாதனை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கருத்து தெரிவிக்கையில், “இந்த மகத்தான சாதனை, எங்கள் மருத்துவமனையின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதைக் குறிக்கிறது. மேலும், தரம் மற்றும் சிறந்த மருத்துவ சேவையில் புதுமையான உத்திகளை கையாள்வதில் எங்களுக்கு இருக்கும் தளராத அர்ப்பணிப்பையும், சிறப்பான திறனையும் இது வெளிப்படுத்துகிறது. மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சிகிச்சை செயல்பாட்டை மேற்கொள்வதில் எமது மருத்துவக் குழுவினர் மிக நேர்த்தியான அறுவை சிகிச்சைத் திறனையும், மனஉறுதியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்கும் எமது பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.
Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?
Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்போ எடுப்பது தவறா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாக, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொருவித தன்மைகள் இருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் தன்மை வேறு. வலி நிவாரணிகளின் தன்மை வேறு. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வோர் இடத்தில் செயலாற்றும். சாப்பிட்டதும் எல்லா மருந்துகளுமே நம் வயிற்றின் லைனிங் எனப்படும் உள்சுவர் பகுதியில்தான் உட்கிரகிக்கப்படும். சில மருந்துகள் வயிற்றின் லைனிங் பகுதியை எரிச்சலடையச் செய்யும். உதாரணத்துக்கு, தைலம் தடவும்போது அந்த இடத்தில் லேசான எரிச்சலை உணர்வோமில்லையா, அதுபோல வயிற்றுப் பகுதியில் சில மருந்துகள் எரிச்சலை ஏற்படுத்தும். அதைத்தான் வலியாக உணர்கிறார்கள். பொதுவாக வலி நிவாரணிகளுக்கு இதுபோன்ற பிரச்னை இருக்கலாம். அதேபோல தைராய்டு மருந்துகளுக்கு, வலிப்பு மருந்துகளுக்கு இத்தகைய குணம் இருப்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஒருவித எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம். வயிற்று வலி சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பும் சில மருந்துகளை சாப்பாட்டுக்குப் பிறகும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவதன் பின்னணியிலும் காரணங்கள் உண்டு. சில மருந்துகள் சாப்பாட்டுக்கு முன்புதான் உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும், சில மருந்துகள் சாப்பிட்ட பிறகு உட்கிரகிக்கப்படும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இதைத் தவறவிட்டு மாற்றிச் சாப்பிடும்போது, அந்த மருந்து பலனளிக்காமல் போகலாம். அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும். சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு. கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருந்தால், அதை மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளைப் பரிந்துரைப்பார். டிரக் இன்டர்ஆக்ஷன் எனப்படும் மருந்துகள் ஒன்றோடு ஒன்று வினையாற்றாதபடி துணை மருந்துகளையும் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா?
Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா?
‘வயிறு நிறைய சாப்பிடக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சாப்பாட்டைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியலை...’ - டயட்டை சரியாகப் பின்பற்ற முடியாமல் அவதிப்படும் பலரின் புலம்பல் இது. பசி எடுக்கும்போது, அதற்கேற்ற அளவு சாப்பிடுவது சரியான பழக்கம்தான் என்றாலும், பசி உணர்வு உண்மையானதா, போலியானதா என்பதைக் கண்டறியவேண்டியது அவசியம். பசி ‘போலியான பசி உணர்வு’ பசி உணர்வென்பது, எல்லா நேரத்திலும் உடல் சார்ந்த மாற்றங்கள் (Physiological Factors) காரணமாக மட்டுமே ஏற்படுவதில்லை. சில நேரங்களில் மனரீதியான மாற்றங்களாலும் (Psychological Factors) ஏற்படுகிறது’ என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகையப் பசி உணர்வை ‘போலியான பசி உணர்வு’ (False Hunger) என்று கூறுகிறார்கள். உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறையத் தொடங்கும்போது பசி ஏற்படுவது இயல்பு. அப்படி இல்லாமல், சில காரணங்களால் பசி உணர்வு செயற்கையாகத் தூண்டப்படுகிறது. அது ஏன், அதை எப்படித் தடுப்பது, போலியான பசி உணர்வை எப்படிக் கண்டறிவது? விளக்கமாகப் பேசுகிறார் குடல், இரைப்பை மருத்துவர் சந்திரமோகன். ''பசி உண்டாகச் சில காரணங்களைச் சொல்ல முடியும். அவை: hunger நேரம்: சிலர் அட்டவணை போட்டு, நேரத்துக்குச் சாப்பிடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சாப்பிட்டுவிட்டால், சாப்பாட்டு நேரம் வந்தவுடன் காரணமே இல்லாமல் மீண்டும் அவர்களுக்கு பசியெடுக்கத் தொடங்கிவிடும். பரிமாறும் விதம்: `சாப்பாடு வேண்டாம்’ என்று நினைப்பவர்கள்கூட அழகாகவும் புதுமையாகவும் பரிமாறப்படும் உணவைப் பார்த்ததும், தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள். Greens & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? மீண்டும் பசி * சாப்பாட்டின் மணம்: பசி இல்லையென்றாலும், உணவின் வாசனையே சிலருக்குப் பசி உணர்வைத் தூண்டிவிடும். * அதிக கார்போஹைட்ரேட்: உணவில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதனால், சாப்பிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்கத் தொடங்கிவிடும். Salt: `கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு' - உப்பின் பலன்கள்! | Health Tips குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால் குளிர்ச்சியான சூழலில் சாப்பிடுவது: பசி எடுக்கும்போது, உடலின் கலோரி அளவு குறையத் தொடங்கி, உடலின் வெப்பநிலை குறையும். பசி அடங்கியதும், வெப்பம் சீரான நிலைக்கு வந்துவிடும். குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிப்பது மிகவும் மெதுவாக நடக்கும். பசி அடங்குவதற்கான நேரமும் அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அளவையும் மீறி, அதிகமாகச் சாப்பிட நேரிடும். மேலும் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள், ஏற்கெனவே உட்கொண்ட தரமற்ற உணவு அல்லது குறைவான அளவு உட்கொண்டிருப்பது போன்றவைகூட போலியான பசி உணர்வை ஏற்படுத்தும். ஆக, போலியாகப் பசி ஏற்படும்போது, உணவு உண்ணாமல் நிறுத்திக்கொள்வது நல்லது.’’ சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அறிகுறியா?
Doctor Vikatan: என் மகள் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில நாள்களாக இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் அடிக்கடி வலிப்பதாகச் சொல்கிறாள். இதனால் அபார்ஷன் அறிகுறியாக இருக்குமோ, கரு கலைந்துவிடுமோ என்றும் பயப்படுகிறாள். இந்த வலிக்கு என்ன காரணம், இதற்கு சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில், கர்ப்பத்தின் 3 அல்லது 4-வது மாதங்களில் சில பெண்களுக்கு திடீரென கடுமையான வலி வரும். அதை மருத்துவ மொழியில் 'ரவுண்ட் லிகமென்ட் பெயின்' (Round Ligament pain) என்று சொல்வோம். அந்த வலிக்கும் அபார்ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரவுண்ட் லிகமென்ட் என்பது ஒயர் போன்ற ஓர் அமைப்பு. இது கர்ப்பப்பையிலிருந்து, இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் இணைந்திருக்கும். கர்ப்பத்தின் 3- 4 மாதங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையில் உள்ள கரு வளர, வளர, இந்த ரவுண்ட் லிகமென்ட் அமைப்பானது ஸ்ட்ரெச் ஆகும். அப்படி ஸ்ட்ரெச் ஆவதால் உணரப்படும் வலிதான் ரவுண்ட் லிகமென்ட் பெயின் எனப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த வலியை உணர்வார்கள். சில பெண்கள் இதை தீவிர வலியாக உணர்வார்கள். மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும். திடீரென இருமும்போது, தும்மும்போது, சத்தமாகச் சிரிக்கும்போது, படுக்கையிலிருந்து திடீரென பக்கவாட்டில் திரும்பும்போது, படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கும்போது இந்த வலியை உணர்வார்கள். வழக்கமாக இரண்டு பக்கங்களிலும் வலி இருக்கும். ஆனாலும், இடது பக்கத்தில் இந்த வலி ஏற்படுவது மிகவும் சகஜமானது. இந்த வலியை உணர்ந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. ஒருமுறை இந்த வலி வந்தால், அந்தப் பெண் எல்லா வேலைகளையும் நிதானமாகவே செய்ய வேண்டும். Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ப்ளீடிங்; அபார்ஷன் அறிகுறியாக இருக்குமா? வேகமாக நடக்க வேண்டாம். உட்கார்ந்திருக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ திடீரென எழுந்திருப்பது போன்றவை வேண்டாம். ரிலாக்ஸாகவே எதையும் செய்யச் சொல்லுங்கள். இந்த வலி வந்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி ஒன்றிரண்டு நிமிடங்கள் தாண்டியும் வலி தொடர்ந்தாலோ, அடிக்கடி இந்த வலி வந்தாலோ, நடக்கவே முடியாவிட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பம் சிறுநீரகத் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலியா என்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிறுநீர்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலி என்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை உணர்வது, காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகளும் இருக்கும். அந்த வலிக்கான சிகிச்சைகள் வேறு மாதிரி இருக்கும் என்பதால் இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மூளையை ஆரோக்கியமாக வைக்கும் 5 விஷயங்கள்!
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. `உலகின் மிகப் பெரிய இயந்திரம் மூளை’ என்றே சொல்லலாம். மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, பல்வேறு நினைவுகள், உணர்வுகள், இதயத்துடிப்பு, வளர்ச்சி… ஏன், உயிரும்கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. மூளையானது அனைத்து அதிகாரத்துடன் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக இயங்குகிறது. Brain நம் மூளையில், தோராயமாக 8,600 கோடி நியூரான்கள் உள்ளன. உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இந்த நியூரான்களின் இயக்கம்தான் காரணம். மூளையில் உள்ள நியூரான் என்ற செல்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்பச் செயல்படும்படி உடலிலுள்ள தசைகளுக்கும் உத்தரவு கிடைக்கிறது. மூளையில் 2 வயதில்தான் மிக அதிக செல்கள் உருவாகின்றன.18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக்கொள்கிறது. பிறந்த குழந்தையின் மூளையானது 400 கிராம் வரை எடை இருக்கும். வளர்ந்த ஒரு மனிதனின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் காணப்படும். ஒவ்வொரு நொடியும் நமது மூளையில் ஒரு லட்சம் வரைக்குமான அமில மாற்றங்கள் நடக்கின்றன. மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும். Brain உணவுகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 1 முட்டை, பச்சைக்காய்கறிகள், பூண்டு, கேரட், வல்லாரைக்கீரை, வால் நட், பாதாம், மீன், வைட்டமின் சி, டி மற்றும் பி 12, ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள். மனஅழுத்தம் குறைத்தல்! மூளையின் ஆரோக்கியத்துக்கு... 2 மனஅழுத்தத்தின்போது சுரக்கும் கார்ட்டிசால் (Cortisol) என்ற ஹார்மோன் மூளையை பாதிக்கும். `இதனால் ஞாபகசக்தி குறையும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது. Brain Health போதுமான தூக்கம்! மூளையின் ஆரோக்கியத்துக்கு... 3 தூக்கம், மூளையின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம், மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கும். மூளையைக் கூர்மையாக்கும் பயிற்சிகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 4 சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும். செஸ் Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? உடற்பயிற்சி அவசியம் மூளையின் ஆரோக்கியத்துக்கு... 5 உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும். பார்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவும். யோகாசனம் செய்வது மனதுக்கும் மூளைக்கும் அமைதியைத் தரும். Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையை பாதிக்கின்றன. இன்றைக்கு, பார்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு மூளை நரம்பு தொடர்பான நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்னை. 1,000-க்கும் மேற்பட்ட மூளை தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக `சொசைட்டி ஆஃப் நியூரோசயின்சஸ்' சொல்கிறது. மூளையை பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பதுபோல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும் மூளையையும். தகவல்: டாக்டர் சவுண்டப்பன் (மேலும் விரிவான தகவல்களுக்கு விகடன் பிரசுர வெளியீடான ‘மூளை A to Z’ புத்தகத்தைப் படிக்கவும்) சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Health: `பந்திக்கு முந்து'என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?
உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில் உள்ள ஆரோக்கிய காரணத்தையும் விவரிக்கிறார். உணவு - meals சூடாக சாப்பிட வேண்டும்! ''சூடான உணவில் ருசி கூடுதலாக இருக்கும்; கெடுதல்களும் குறைவாக இருக்கும். ஓர் உணவு கெட்டுப்போவதற்குக் காரணம், மைக்ரோ ஆர்கானிசம். சமைத்து நேரம் ஆக ஆக மைக்ரோ ஆர்கானிசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். பொதுவாக உணவு சமைத்து 3 மணி நேரம், 4 மணி நேரம் ஆனபிறகு உணவின் சூடு எப்படிக் குறைகிறதோ அதேபோல சுவையும் குறையும். இந்த நேரத்துக்குள் உணவை சாப்பிட்டு விடுவதே சிறந்தது. இதைத் தாண்டி நேரமாகும்போது ஏற்கெனவே சொன்னதுபோல கிருமிகள் வரும். சூடாக சாப்பிட வேண்டும் என்கிற கருத்தைத்தான் 'பந்திக்கு முந்து' என்று சொல்லி வைத்தார்கள். பல மணி நேரம் கழித்துதான் சாப்பிடுகிறோம்! ஆனால், இன்றைய வேலைபார்க்கும் பெண்கள் காலை 6 அல்லது 7 மணிக்குள்ளாகவே மதிய உணவு வரை சமைத்துவிடுகிறார்கள். அதனால், சமைத்து பல மணி நேரம் கழித்துதான் பெரும்பாலானோர் சாப்பிடுகிறோம். இந்த உணவில் சுவையும் குறையும்; கிருமிகளும் வளர்ந்திருக்கும். இதற்கு சிம்பிளான தீர்வு, ஹாட் பாக்ஸ்தான். Eating food Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்? ஒரு டெக்னிக் சொல்கிறேன்! இதெல்லாம் தேவையா என்பவர்களுக்கு, என்னுடைய பேஷன்ட்களுக்கு நான் சொல்லித்தருகிற ஒரு டெக்னிக்கை சொல்கிறேன். காலையில் சமைத்ததும் சாப்பாடு, குழம்பு, பொரியல் என சூடாக சாப்பிட்டு விடுங்கள். மதியத்துக்கு இட்லியுடன், பருப்புப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, பூண்டுப்பொடி, வெந்தயப்பொடி என எடுத்துச்செல்லுங்கள். இந்த வகையில், காலை வேளை உணவை நீங்கள் சூடாக சாப்பிட முடியும். Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம்! பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் 'காலையில் சாப்பாடா' என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Whatsapp Call-ஐ பார்த்து வீட்டிலேயே பிரசவம்; வெளியில் காத்திருந்த மருத்துவர்கள்; என்ன நடந்தது?
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் திண்டுக்கல், கோபால்பட்டி எல்லாநகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு சத்யா (26) கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு மருத்துவமனையிலும் கர்ப்பம் தொடர்பான சிகிச்சை பெறாமல் கணவரும் மனைவியும் தங்களுக்குள்ளாகவே சொந்தமாகச் சிகிச்சை அளித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து கணவன், மனைவி இருவரையும் சந்தித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர். வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் வீட்டிலேயே சொந்தமாகப் பிரசவம் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான சத்யாவிற்கு நேற்று பிரசவ வலி வந்ததாகவும் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக தகவல் பரவியது. உடனே கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில் நடமாடும் ஆம்புலன்ஸ்லில் மருத்துவக் குழுவினர், மற்றும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் சத்யா வீட்டின் முன் குவிந்தனர். கஜேந்திரன்- சத்யா தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கணவர் கஜேந்திரன் மனைவி சத்யா ஆகிய இருவரும் வீட்டு அறையை மூடிக்கொண்டுள்ளனர். கஜேந்திரன் தனது செல்போனில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசி அவர்கள் கொடுக்கும் கட்டளைப்படி சொந்தமாகப் பிரசவம் பார்த்துள்ளார். வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் இரவு 7 மணி அளவில் வீட்டின் கதவை கஜேந்திரன் திறந்ததுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்தாலும் இருவரின் பாதுகாப்பு கருதி சத்யாவின் வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். வீட்டில் பிரசவம் பார்ப்பதற்குச் சில வாட்ஸப் குழுக்கள் ஊக்குவிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் மூன்று வாட்ஸ்அப் குரூப்களை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டிலேயே பிரசவம்... விலையாகக் கொடுக்கப்பட்ட தாய் - சேய் உயிர்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Doctor Vikatan: கண் களிக்கம் எனும் சித்த மருந்து; கண் நோய்கள் அனைத்துக்கும் தீர்வாகுமா?
Doctor Vikatan: கண் களிக்கம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் சித்த மருந்து, கண் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வு தரும் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை? -மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நவீன மருத்துவ முறைகள் அறிமுகமாவதற்கு முன்னரே, சித்த மருத்துவத்தில் கண் மருத்துவத்துக்கு தனி இடம் இருந்திருக்கிறது. அதற்கான குறிப்புகள் சித்த மருத்துவப் புத்தகங்களிலும் இருக்கின்றன. கண் மை அந்தக் காலத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகளின் நீட்சியை இன்று பார்க்கிறோம். உதாரணத்துக்கு, களிக்கம் போடுவது, அஞ்சனம் இட்டு கண் நோய்களை குணப்படுத்துவது போன்றவை அப்போதிருந்து தொடர்கின்றன. கண்களுக்குத் தீட்டும் மையைக் கூட கெமிக்கல் சேர்க்கை இல்லாமல், கரிசலாங்கண்ணி இலைகளைப் பயன்படுத்தித் தயாரித்துப் பயன்படுத்துவார்கள். உண்மையில், அதுதான் ஒரிஜினல் கண் மையும்கூட. அதேபோல தேங்காய் சிரட்டையில் மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கும் கண் மை, நந்தியாவட்டையிலிருந்து தயாரிக்கும் கண் மை என நிறைய இருந்தன. மூலிகைகள் கலந்த கண் மை பயன்படுத்தியதால் அந்தக் காலத்தில் கண் நோய்கள் அவ்வளவாக இருந்ததில்லை. இன்று கரிசாலை வைத்துத் தயாரித்த மை பயன்படுத்துவோரெல்லாம் அரிதாகிவிட்டார்கள். கரிசாலையின் மகத்துவம் தெரிந்தவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள், வெள்ளைக் கரிலாங்கண்ணியைக் கண்டுபிடித்து சாறெடுத்து மை தயாரித்தால் தான் அதைப் பார்க்க முடியும். கண் மருத்துவம் என்பது மிக மிக ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டும். களிக்கம் களிக்கம் என்பது சொட்டு மருந்து மாதிரியானது. இதிலும் நிறைய வகை மருந்துகள் உள்ளன. நந்தியாவட்டை மாதிரியான மலர்களில் இருந்து சாறு எடுத்துத் தயாரிக்கிறார்கள் என்றால் பிரச்னையில்லை. கண்களுக்கான மருந்துகள் எந்த அளவு சுத்தமானவை என்பது முக்கியம். ஏதேனும் கிருமிகள் இருந்து, அந்த மருந்தை கண்களுக்குப் பயன்படுத்தினால் பிரச்னைகள் வரலாம். இந்த மாதிரியான மருந்துகளை பாரம்பர்யமான, படித்த, அனுபவமுள்ள சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது ஓகே. சித்த மருந்துகளை பற்றிய தெளிவில்லாமல் யாரோ பரிந்துரைப்பதைப் பயன்படுத்த வேண்டாம். கண் மருத்துவம் என்பது மிக மிக ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டும். சிறிய அலட்சியம்கூட கண்களை பெரிய அளவில் பாதிக்கலாம் என்பதுதான் காரணம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
Less eating: தொடர்ந்து குறைவாகவே சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்!
இன்றைய வாழ்க்கைச்சூழல், நம் அன்றாட பணிகளைக்கூடச் சுமைகளாக மாற்றிவிட்டது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, செய்தித்தாள் படிக்க நேரமில்லை, குழந்தைகளோடு விளையாட நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை. இப்போது சாப்பாடுவரை வந்து நிற்கிறது நேரமின்மை. உணவைத் தட்டிக்கழிக்க நேரமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தின்மீது காட்டும் அலட்சியம் போன்றவையே முக்கியமான காரணங்கள். Less eating நீண்ட நாள் போதுமான உணவு உட்கொள்ளவில்லையென்றால் சாப்பிடாமல் இருப்பதைவிட ஆபத்தானது, பசியிருந்தும் போதுமான அளவுக்குச் சாப்பிடாததும் அரைகுறையாகச் சாப்பிடுவதும். இதை `Hangry’ என்று மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். வயது, பாலினம், உடலுழைப்பு, வயது இவற்றையெல்லாம் பொறுத்து ஒருவருக்குத் தேவைப்படும் கலோரிகளின் அளவு மாறுபடும். என்றாலும், நீண்ட நாள்களுக்குப் போதுமான அளவு உணவு உட்கொள்ளவில்லையென்றால் என்னென்னவோ விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எந்தெந்த உறுப்புகளில் என்னென்ன பாதிப்புகள் உதாரணமாக, ஹார்மோன் குறைபாடுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது (Hypoglycemia), வைட்டமின் குறைபாடுகள், ரத்தச்சோகை, தலைவலி, மனநிலையில் மாற்றங்கள், இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரலில் பிரச்னை, ரத்த ஓட்டம் சீர்கெடுவது இப்படிப் பல பிரச்னைகள் ஏற்படலாம். போதுமான அளவுக்குச் சாப்பிடாவிட்டால் எந்தெந்த உறுப்புகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனப் பட்டியலிடுகிறார் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன். Eating மூளை: தலைவலி, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம். இதயம்: சில நாள்களிலேயே இதயமும், தசைகளும், உள்ளுறுப்புகளும் குளுகோஸ் உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைத்து விடலாம். கல்லீரல்: உங்கள் கல்லீரலில் குளுகோஸ் அளவு குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Hypoglycemia) குறையும். Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்! சருமம்: உங்கள் உடல் வறட்சி நிலையை அடையத் தொடங்கும். உடலில் சோடியம், பொட்டாசியம், நீர்ச்சத்து மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் எல்லாமே குறையும். அடிவயிற்றுப் பகுதி: ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு, இதன் காரணமாக முறையற்ற மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படலாம். Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? உண்பதில் வேண்டாமே ஒப்பீடு! புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரின் உடல்வாகும் வேறுபடும். எனவே, மற்றவர்களின் சாப்பாட்டு அளவோடு உங்களுடையதை ஒப்பிடக் கூடாது. உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அதிலிருந்து ஆரம்பியுங்கள். கலோரி அளவைத் தெரிந்துகொள்ள, கலோரி கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். உடல் எடையை அப்படியே பராமரிக்க நினைப்பவர்கள் மட்டும், இதைப் பின்பற்றலாம். உடல் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்ளலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை Pick-up & Drop செய்முறை பற்றி தெரியுமா? | பூப்பு முதல் மூப்புவரை
ஆச்சர்யமான அறிவியல் பயணம்... கருத்தரிப்பு நிகழ்வு என்பதே இயற்கையில் நிகழும் ஓர் அழகிய பயணம் என்றிருக்க, செயற்கை கருத்தரிப்பில் இந்தப் பயணத்தை முழுமையாக்கிட உதவுகிறது ஒரு பிக்-அப் அண்ட் ட்ராப்.! ஆம், 'Oocyte Retrieval' எனும் கருமுட்டைகளின் 'பிக்-அப்', அதற்குப் பின் ஆய்வகத்தில் உருவான கருவை கருப்பைக்குள் வைத்திடும் 'ட்ராப்' ஆகியன குறித்த ஓர் ஆச்சர்யமான அறிவியல் பயணத்தைத் தான் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். கருமுட்டை குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியான 'சூப்பர் ஓவுலேஷன்' எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டலில், மாதவிடாய் சுழற்சி தொடங்கிய 2-3 நாள்களிலிருந்து மருந்துகள் (சினைப்பைத் தூண்டல் மாத்திரைகள் அல்லது ஊசிகள்) பெண்ணுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, சினைப்பையின் நுண்ணறைகளின் வளர்ச்சி அன்றாடம் கண்காணிக்கப்பட்டு, அவை தகுந்த எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி நிலையை எட்டியபிறகு, ஹெச்சிஜி தூண்டல் ஊசி அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. இவையனைத்தும், தம்பதியினர் இருவருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு, முறையான ஒப்புதலும் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன. 30 முட்டைகள்; 30 நிமிடங்கள் ஹெச்சிஜி ஊசி செலுத்தப்பட்ட 34-36 மணிநேரத்தில் பொதுவாக முட்டைகள் வெளியேறும் என்பதால், Oocyte Retrieval எனும் சினைமுட்டை 'பிக்-அப்', ஹெச்சிஜி ஊசி வழங்கப்பட்ட 36 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண்ணை இதற்கெனத் தயார்படுத்துதல் அவசியமாகிறது. இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்பதால், சிகிச்சைக்கு வருமுன், குறைந்தது 4-6 மணிநேர உணவு உண்ணாமை (ஃபாஸ்ட்டிங்) அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் Health: ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகள்... தேவை... கவலையல்ல, கவனம்! பூப்பு முதல் மூப்பு வரை- 10 செயற்கை கருத்தரிப்பு கிளினிக் அல்லது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தக்க ஆயத்தங்களுடன், பிரத்யேக அறுவை அரங்கில், மயக்கவியல் நிபுணரால் வலி நிவாரண மருந்து வழங்கப்படும். பின் ட்ரான்ஸ் வெஜைனல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் உதவியுடன், யோனிப்பாதை வழியாக, ஒரு சிறிய ஊசி கொண்டு, வளர்ச்சி அடைந்த சினைப்பை நுண்ணறைகளிலிருந்து, திரவத்துடன் கூடிய கருமுட்டைகளை தக்க அழுத்தம் தந்து, ஒரு பிரத்யேக உறிஞ்சு-குழாய்க்குள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் சேகரிக்கிறார். பொதுவாக 10-15 கருமுட்டைகள் கிடைக்கப்பெறும் இந்த பிக்-அப்பில் 25-30 முட்டைகள் வரையில் கிடைக்கக்கூடும். அதேபோல, அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனை உள்-அனுமதி பொதுவாகத் தேவையில்லை. பிக்-அப் சிகிச்சை முடிந்த 5-6 மணிநேரத்தில் அவர் வீடு திரும்பவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் இந்த எளிய சிகிச்சை உதவுகிறது. என்றாலும், சிலரில் மட்டும், சிகிச்சைக்குப் பின் அதிக வலியோ, சிறுநீர்த் தேக்கமோ அல்லது வயிற்றுக்குள் ரத்தக்கசிவோ ஏற்படக்கூடும் என்பதையும், அதன் காரணமாக சிகிச்சை நேரம் நீடிக்கக்கூடும் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றின் பக்கங்களை சிறிது திரும்பிப் பார்த்தோமேயானால், உண்மையில் இந்த oocyte retrieval எனும் சினைமுட்டை பிக்-அப், நமது அன்றாட பிக்-அப் அண்ட் ட்ராப் வாகன சேவைகளைக் காட்டிலும், பற்பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனலாம். ஆரம்பநிலையில் லேப்ராட்டமி அல்லது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் வாயிலாக மட்டுமே இந்த பிக்-அப் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயிற்றைக் கிழித்து அல்லது சிறுதுளை வழியாக சினைப்பை முற்றிலுமாகவோ அல்லது அதன் ஒருபகுதி மட்டும் நீக்கப்பட்டு, அதிலிருந்து சினை முட்டைகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே சேகரிக்கப்பட்டன. செயற்கை கருத்தரிப்பு அதனைத் தொடர்ந்து, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை வாயிலாக, தேர்ந்த ஊசி கொண்டு, சினைப்பையின் நுண்ணறைகளில் உள்ள ஃபாலிக்குலர் திரவமும், அதிலிருந்து கருமுட்டைகளும் சேகரிக்கப்பட்டன. உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான லூயி பிரவுன் பிறந்ததும் இந்த வகை சிகிச்சையில் தான்.1980-களில் ஸ்கேனிங் நுட்பம் எளிமையாக்கப்பட, அறுவை சிகிச்சையின்றி, வயிற்றுப்பகுதி வழியாக (Trans abdominal) ஸ்கேனிங் மூலமாக ஊசி செலுத்தி சினைமுட்டைகளைச் சேகரிப்பதும், அதற்குப்பின் ஸ்கேனிங் நுட்பம் இன்னும் மேம்பட, தற்சமயம் மருத்துவர்கள் பயன்படுத்தி வரும் ட்ரான்ஸ் வெஜைனல் பிக்-அப் சிகிச்சையும் நடைமுறைக்கு வந்துள்ளது. சற்று சிக்கலான பிக்-அப் சிகிச்சைகளில், டாப்ளர் (Doppler scan) எனும் ரத்த ஓட்ட ஸ்கேனிங் பலனளிக்கிறது என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்கள். மாதவிடாய் சுகாதாரம்... அவசரம், அவசியம் தேவைப்படுவது இதுதான்! | பூப்பு முதல் மூப்பு வரை -24 தரம் பிரித்து, தயார்படுத்தி. இப்படி, பிக்-அப் சிகிச்சையில் சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை, Embryologist எனும் கருவியல் நிபுணர், அதற்கான பிரத்யேக ஆய்வகத்திற்கு உடனடியாக மாற்றி, ஃபாலிக்குலர் திரவத்திலிருந்து முட்டைகளைப் பிரித்து, வெளித்தோல் போன்ற க்யூமுலஸ் (denudation of cumulus) அவற்றின் தரத்தை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நிகழ்வான கருக்கட்டல்/ கருவாக்கத்திற்கு (Fertilization) கருமுட்டைகளைத் தயார்படுத்துகிறார். செயற்கை கருத்தரிப்பு பிக்-அப் சிகிச்சைக்கு ஓரிரு மணிநேரங்களுக்கு முன்னரே, ஆணின் விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் சேகரிப்புக்கு முன், குறைந்தது மூன்று நாள்களாவது பாலுறவைத் தவிர்ப்பது அவசியமாகிறது. சமயத்தில் முன்னரே எடுத்து உறைநிலையில் காக்கப்பட்ட விந்தணுக்கள் (Frozen semen sample) அல்லது தானமாகப் பெற்ற விந்தணுக்கள் (Donor sperms) இதில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, கருவாக்கம் நிகழ்வுக்கு முன்னரே, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அவற்றில் அல்லவை நீக்கி, நல்லவை மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு (sperm processing) சிகிச்சைக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. இப்படி, ஏற்கெனவே தயார்நிலையில் உள்ள ஆணின் விந்தணுக்களை, ஐவிஎஃப் சிகிச்சையில் பிக்-அப் செய்த 3-4 மணிநேரத்திற்குள் நான்கைந்து கருமுட்டைகளுடன் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் ஒன்றுசேர பெட்ரி-டிஷ் (petri dish) எனும் தட்டையான கிண்ணத்தில், பிரத்யேக இன்குபேட்டரில் (Incubator) வைக்கப்படுகின்றன. இக்ஸி சிகிச்சை முறையில் முந்தைய பதிவில் குறிப்பிடப்பட்டது போல, ஒற்றைக் கருமுட்டையும், ஒரே ஒரு விந்தணுவும் மூன்று மணிநேர அவகாசத்திற்குள் கருவாக்கப்படுகின்றன. இதில் ஐவிஎஃப், இக்ஸி என எந்தவகையான சிகிச்சை என்றாலும், ஆய்வகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் உபயோகிக்கப்படும் திரவங்கள் ஆகியன, முற்றிலும் அப்பெண்ணின் இனப்பெருக்க அமைப்பையும், சூழலையும், தட்பவெப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கருவாக்க நிகழ்வின் கனியாக உருவாகும் கருவை, எம்பிரியோ (embryo) என அழைக்கும் கருவியல் நிபுணர்கள், பிக்-அப் மற்றும் கருக்கட்டல் நிகழ்ந்த 24 மணிநேரத்தில் கருவாக்கத்தை மைக்ரோஸ்கோப் மூலம் உறுதி செய்கின்றனர். இந்த முதல் நாளிலிருந்து ஐந்து நாள்கள்வரை, கருவின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், கருவின் தரமும் A-D வரிசையில் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, கிரேட் ஏ என்பது அதிகத் தரம் கொண்ட கரு என்றால், கிரேட் பி சற்றே குறைவானது என்றும், கிரேட் டி என்பது மிகவும் தரம் குறைந்த கரு என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். பிக்-அப் செய்து, தரம் பிரித்து, இப்போது நல்ல கருவை ட்ராப் செய்ய வேண்டுமல்லவா? அது எங்கு, எப்போது, எப்படி என்பதை அடுத்து தெரிந்து கொள்வோம்.! பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.! டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை!
வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254
கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது தற்போது சகஜமாகிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக இது பெற்றோர்களாலே நடத்தி வைக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காதல் திருமணங்களில் இது சகஜமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் சிலருக்கு வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. அதற்கான பதிலை இங்கே சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Fertility கூடவே, அந்த ஆணுடைய பெற்றோரும் ''அந்த இளம் தம்பதியர் என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். கூடவே, அந்த ஆணுடைய பெற்றோரும். தங்கள் மகன் அவனைவிட வயது அதிகமானப் பெண்ணை திருமணம் செய்ததால்தான், அவர்களுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்றார்கள். அவர்களை வெளியே அமர சொல்லிவிட்டு, அந்த இளம் தம்பதியரிடமும் தனித்தனியாகப் பேசினேன். அந்தப்பெண், கணவனைவிட 3 வயது மூத்தவள்! அவர்களுக்குத் திருமணமாகி ஜஸ்ட் ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது. அந்தப்பெண், கணவனைவிட 3 வயது மூத்தவள். காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்கள். இந்த வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி திருமணத்தை தடைசெய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் கணவனின் வீட்டார். ஆனால், இவர்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்திருக்கிறார்கள். இப்போது திருமணமாகி ஒருவருடம் ஆன நிலையில், 'நம்ம குடும்பத்துல எல்லாம் கல்யாணமான ஒரு வருஷத்துலேயே பொண்ணுங்க கர்ப்பமாகிடுவாங்க. ஆனா, உன் மனைவி உன்னைவிட மூத்தவங்கிறதாலதான் அவ இன்னும் கர்ப்பமாகலை'ன்னு சொல்லியிருக்காங்க. Couple fight உங்கள் மகனையும் செக் செய்ய சொல்லுங்கள்! இந்த விஷயம் தெரிய வந்ததும், அந்தப் பெண் உடனே மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, அவர் குழந்தைப் பெறுவதற்கான உடல் ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியதோடு அதை கணவர் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். கூடவே, 'என்னிடம் எந்தக் குறையும் இல்லை. உங்கள் மகனையும் செக் செய்ய சொல்லுங்கள்' என்றிருக்கிறார். அதனால்தான், குடும்பமாக வந்திருக்கிறார்கள். தினமும் உறவுகொள்ளுங்கள்! உங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருப்பதால், இவ்வளவு சீக்கிரம் குழந்தைப்பற்றி யோசிக்காமல் உங்கள் செக்ஸ் லைஃபை நன்றாக என்ஜாய் செய்யுங்கள். தினமும் உறவுகொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு குழந்தைப்பேறை ஏற்படுத்தி கொடுத்துவிடும் என்றேன். 'என்னைவிட என் மனைவியின் வயது அதிகமாக இருப்பதால்தான் இன்னும் கருத்தரிக்கவில்லை என்கிறார்களே' என்றவரிடம், விளக்கமாக பேசினேன். Sexual wellness கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது நம்முடைய சமூகத்தில் பெரும்பாலும் மனைவியைவிட கணவன் வயது அதிகமானவராக இருப்பார். கணவனைவிட மனைவிக்கு வயது குறைவாக இருந்தால், 'நம்மளைவிட சின்னவ' என்று கணவன் மனைவியின் குறைகளை அனுசரித்துப் போவான். மனைவி கணவரிடம் 'நம்மளவிட பெரியவர்' என்கிற மரியாதையுடன் நடந்துகொள்வார். இதனால், குடும்பத்தில் பிரச்னை வராது என நம்பி நம் முன்னோர்கள் இதை செய்திருக்கலாம். வீட்டுப் பொறுப்பு, குழந்தைகள் வளர்ப்பு, கூடவே கணவனையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், மனைவி வயதில் சிறியவராக இருந்தால்தான் முடியும் என்கிற ஆணாதிக்க மனப்பான்மைகூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு கணவனும் மனைவியும் சம வயதாக இருப்பதும், கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பதும் சகஜமாகி விட்டது. Chem Sex: இளைஞர்களை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் கெம் செக்ஸ்! - காமத்துக்கு மரியாதை 252 மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும்! கணவனுக்கு வயது அதிகமாகவும், மனைவிக்கு வயது குறைவாகவும் இருக்கையில் எப்படி குழந்தைப் பிறக்குமோ, அதேபோல கணவனுக்கு வயது குறைவாகவும் மனைவிக்கு வயது அதிகமாகவும் இருந்தால்கூட குழந்தைப் பிறக்கும். அதற்கு உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும் என்றேன். இளம் வயதில் போதைப்பழக்கம்; பிற்கால தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? - காமத்துக்கு மரியாதை 253 மகிழ்ச்சியாக இருங்கள்! குழந்தையில்லாத பிரச்னையை என் பெற்றோர் எழுப்புவதற்கு முன்னால் வரை, நாங்கள் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம் டாக்டர் என்றவருக்கு, விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை எல்லாமே நார்மலாகவே இருந்தன. மகிழ்ச்சியாக இருங்கள் என்று வாழ்த்தி அனுப்பினேன் என்றார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் மஞ்ஜிஷ்டா சோப், ஆயில் - அப்படி என்ன ஸ்பெஷல்?
Doctor Vikatan: ஒரு காலத்தில் குங்குமாதி தைலத்துக்கு இருந்தது போல இப்போது பலரும் மஞ்சிஷ்டா எண்ணெய், மஞ்சிஷ்டா சோப் என தேடித்தேடி உபயோகிக்கிறார்கள். மஞ்சிஷ்டா என்பது என்ன, அது எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளுமா, எப்படி உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி சித்த மருத்துவர் அபிராமி சம்ஸ்கிருதத்தில் 'மஞ்ஜிஷ்டா' என்றும் தமிழில் 'மஞ்சட்டி' என்றும் இதைச் சொல்வோம். மஞ்சட்டியின் வேர், சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிலுள்ள சிவப்பு நிறமிக்காக அந்தக் காலத்தில் டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், பெயின்ட் போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நிறைய தைலங்கள் மற்றும் வெளிப் பிரயோக மருந்துகளில் பயன்படுத்துவதுண்டு. மஞ்ஜிஷ்டா என்பது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒருவகையான வேர். மலைப்பிரதேசத்தில் விளையக்கூடிய காபி போன்ற செடியின் வேர் இது. சருமத்துக்கான தைலங்கள் மற்றும் புண்களை ஆற்றும் தைலங்களில் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்துவோம். பிக்மென்ட் எனப்படும் மங்கு பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் மஞ்ஜிஷ்டாவுக்கு உண்டு என்பதால்தான் சமீப காலமாக இதற்கான வரவேற்பு அதிகமிருக்கிறது. மஞ்சட்டி வேரைப் பயன்படுத்த ஆரம்பித்தால், சரும நிறம் சீராகும். மஞ்ஜிஷ்டா வேர் சேர்த்த தைலத்தை சருமத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆங்காங்கே காணப்படும் சரும கருமை மாறும். சரும அழகு Doctor Vikatan: சரும அழகுக்கு மஞ்சள் மட்டுமே போதுமா, ஃபேஷியல் செய்வது தேவையற்றதா? வீட்டிலேயே தயாரிக்கப்படும் சோப் மற்றும் தைலங்களில் மஞ்ஜிஷ்டா பயன்படுத்துவது சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறது. கால்களில் புண்களை ஏற்படுத்தி, நிறத்தை மாற்றும் வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைக்கும் இந்த வேர் பயன்படும். சித்த மருத்துவத்தில் இந்த வேரை உள்ளுக்குக் கொடுக்கும் சில மருந்துகளிலும் பயன்படுத்துவோம். ஆனால், அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது. 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 10 கிராம் மஞ்ஜிஷ்டா வேரை நசுக்கிச் சேர்த்து சூடு செய்ய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துதான் காய்ச்ச வேண்டும். எண்ணெய் தீய்ந்துவிடக்கூடாது. காய்ச்சிய எண்ணெயை ஆறவைத்து சருமத்தில் தடவி வரலாம். இப்படிச் செய்யவெல்லாம் நேரமில்லை என்பவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவப்பு குக்கிலி எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதில் மஞ்சட்டி மட்டுமன்றி, குங்கிலியம், தேன்மெழுகு போன்ற வேறு சில பொருள்களையும் சேர்த்திருப்பார்கள். சரும அழகு இதில் சில துளிகளை சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வந்தால் சரும அழகு மேம்படும். மெனோபாஸ் காலத்தில் நிறைய பெண்களுக்கு சருமத்தில் மங்கு பிரச்னை வரும். அவர்கள் இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். அதே போல வெயில் பட்டுக் கருத்துப்போன சருமத்தின் நிறத்தை மாற்றவும் பயன்படுத்தலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்: அதற்கான பதில்கள் தினமும் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்!
நடைப்பயிற்சி எனும் வாக்கிங் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம், எப்படி நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பலனும் கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு பலருக்கும் இருக்காது. அந்த விழிப்புணர்வை இந்தக் கட்டுரையில் ஏற்படுத்தவிருக்கிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஒலிம்பியா ஜெய். Walking எங்கும் நடக்கலாம்! பீச்சில் நடப்பது மட்டுமல்ல வாக்கிங். அங்கும் நடக்கலாம். வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கிலும் நடக்கலாம்; வீட்டைச் சுற்றி நடக்கலாம்; மொட்டை மாடியில்கூட நடக்கலாம், எல்லாமே வாக்கிங்தான். எவ்வளவு நேரம்; எத்தனை நாள்? ஒருநாளைக்கு 30 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது. வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 நாள்களாவது வாக்கிங் செல்ல வேண்டும். உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களால் முடியுமென்றால் 7 நாளும்கூட வாக்கிங் போகலாம். அரை மணி நேரம் வாக்கிங் செல்வது என்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதே நேரம், இன்றைக்குத்தான் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கிறீர்கள் என்றால், முதல் நாளே அரை மணி நேரம் நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 15 நிமிடம் என மெதுவாக நடந்து, நடைப்பயிற்சியை உங்கள் உடலுக்கு அறிமுகப்படுத்துங்கள். பிறகு மெள்ள மெள்ள நேரத்தை அதிகரித்து நாளொன்றுக்கு 30 நிமிடம் வரை நடக்கலாம். ஒருவேளை 30 நிமிடம் வாக்கிங் செல்ல முடியவில்லையென்றால், காலையில் 15 நிமிடம், மாலையில் 15 நிமிடம் என பிரித்து வாக்கிங் போகலாம். Walking ஏன் அதிகாலையில் வாக்கிங் செல்வது நல்லது? அதிகாலை 5 மணியில் இருந்து 6:30 மணிக்குள் வாக்கிங் சென்றால், காற்று சுத்தமாக இருக்கும் அல்லது காற்றில் மாசுபாடு குறைவாக இருக்கும். ஏற்கெனவே ஆஸ்துமா போன்ற பிரச்னையுடன் இருப்பவர்கள் காற்று மாசு அதிகமாக இருக்கிற மாலை நேரத்தில் வாக்கிங் சென்றால், அது அவர்களுடைய பிரச்னையை அதிகப்படுத்தலாம். ஒருவேளை நீங்க வசிக்கிற பகுதியில் காற்று சுத்தமாக இருந்தால், மாலையிலோ அல்லது இரவிலோகூட வாக்கிங் போகலாம். வாக்கிங்கும் வலியும்! புதிதாக வாக்கிங் செல்ல ஆரம்பித்தவர்களுக்கு, பயன்படுத்தாத தசைகளை திடீரென பயன்படுத்துவதால் கட்டாயம் கால்களில் வலி ஏற்படும். அது நடப்பதால் உண்டான வலி என்றால், தூங்கி எழுந்தாலே சரியாகி விடும். இவர்கள் அடுத்த நாளும் வாக்கிங் செல்லலாம். ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்கிங் செல்பவர்கள் தங்கள் உடம்பு கொடுக்கிற ஃபீட் பேக்கை கவனிக்க வேண்டும். கால்வலி, முட்டி வலி ஏற்பட்டால் உடலுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும். வலியுள்ள இடங்களில் ஐஸ்கட்டி ஒற்றடம் கொடுக்க வேண்டும். வெந்நீர் ஒற்றடம் கொடுக்கக்கூடாது. முட்டி வலி 50, 60 வயதில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தாலும்... ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் போன்ற பிரச்னை இருப்பவர்கள் வாக்கிங் சென்று, அதனால் வலி ஏற்பட்டு, 'எழவே முடியவில்லை; நடக்கவே முடியவில்லை' என்றால், கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். 50, 60 வயதில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தாலும், முட்டிகளில் வலி ஏற்படவே செய்யும். இருந்தாலும் இந்த வயதுக்காரர்கள் நடப்பதே நல்லது. இளவயதில் இருந்தே ஜிம்முக்கு சென்றவர்கள் 50, 60-களிலும் செல்வார்கள். ஆனால், அந்தப் பழக்கம் இல்லாதவர்களால் வயதானப்பிறகு பெரும்பாலும் புதிதாக ஜிம்முக்கு செல்ல முடியாது. அதனால், அவர்கள் குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். மற்றபடி எல்லோரும் நடக்கலாம்; எந்த வயதிலும் நடக்கலாம். நடைப்பயிற்சியை கடமையாக செய்யக்கூடாது; லவ் பண்ணி வாக்கிங் செல்ல வேண்டும். சாப்பிட்டப் பிறகு வாக்கிங் போகலாமா? சாப்பிட்டப் பிறகு வாக்கிங் போகலாமா? தாராளமாக போகலாம். ஆனால், மெதுவாக, ரிலாக்ஸாக நடக்க வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. காலை எடுத்து வைப்பதில் சில ரூல்ஸ்! நடப்பதற்கென்றால் வலது காலை எடுத்து முதலில் வைப்போம். அந்தக் காலை தொப்பென்று வைக்கக்கூடாது. அதேபோல, காலின் நுனிப்பகுதி முதலில் தரையில் படக்கூடாது. குதிகால் பகுதிதான் முதலில் தரையில்பட வேண்டும். பிறகு வலது காலுக்கு அழுத்தம்கொடுத்து நின்று, பிறகு இடதுகாலை எடுக்க வைத்து வேண்டும். இதற்கும் 'தொப்பென்று வைக்கக்கூடாது; நுனிப்பகுதி முதலில் தரையில் படக்கூடாது; குதிகால்தான் முதலில் பட வேண்டும் என்கிற அதே விதிகளை பின்பற்ற வேண்டும். இப்படி நடக்கும்போது, இரண்டாவது இதயம் எனச் சொல்லப்படுகிற கெண்டைக்கால் தசைகள் ரத்தத்தை இதயத்துக்கு சரியாக பம்ப் செய்யும். இதனால், இதயமும் நுரையீரலும் நன்றாக இயங்கும். நடைப்பயிற்சி நடைப்பயிற்சியில் குறுநடையின் முக்கியத்துவம் என்ன? நடைப்பயிற்சியைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது கிடையாது. கூழாங்கல் மீது வாக்கிங்? நம் உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் பல அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. அவை பல உள்ளுறுப்புகளுடன் தொடர்புடையதாக அக்குபஞ்சர் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால், கூழாங்கற்கள் மீது நடந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். கூழாங்கல் மீது வாக்கிங் 8 வாக்கிங்; ஏன் முக்கியம்; எப்படி நடக்க வேண்டும்? இதை 'முடிவிலாத நடை' எனச் சொல்வார்கள். 8 வடிவ வாக்கிங்கிலும் அரைமணி நேரம் நடக்க வேண்டும். இதில் முதல் 15 நிமிடங்கள் கிளாக் வைஸில் நடக்க வேண்டும். அடுத்த 15 மணி நிமிடங்கள் ஆன்டி கிளாக் வைஸில் நடக்க வேண்டும். 8 வடிவத்தில் வாக்கிங் செல்லும்போது, ஃபோகஸாக நடக்க வேண்டி வரும். பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டு நடந்தால், 8 வடிவத்தை விட்டு வெளியே வந்துவிடுவோம் என்பதால், மிக கவனமாக நடப்போம். இதனால், உடம்பின் பேலன்ஸ் மேம்படும். பேலன்ஸ் மேம்பட்டால், தடுமாற்றம் இருந்தாலும் கட்டுக்குள் வரும். தவிர, 8 வடிவத்தின் வளைவில் நீங்கள் அடிக்கடி திரும்ப வேண்டி வருதால், இடுப்புப்பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். இதனால், உடற்பகுதியின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அமைந்துள்ள முக்கியமான தசைகள் வலுவாகி வயதான காலத்தில் கீழே விழுவது தவிர்க்கப்படும். வாக்கிங் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்..! வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள்கூட, ஹாலுக்கும், பெட்ரூமுக்கும், கிச்சனுக்கும் 5 ஆயிரம் ஸ்டெப்ஸ்கூட நடந்துவிட முடியும். இது ஒரு நாள் கூடும், ஒரு நாள் குறையும். அதனால் இதை ஒரு நடைப்பயிற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கென தனியாகத்தான் வாக்கிங் செல்ல வேண்டும். பத்தாயிரம் அடிகள் நடந்தே தீர வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். இப்படி ஓவராக வாக்கிங் செல்லும் போது பாத வலி அல்லது பாதை எலும்புகளில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய விரிசல்கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தவிர, வாக்கிங் செல்கையில் உங்கள் உடம்பின் கீழப்பகுதிக்கு மட்டுமே பயிற்சி கிடைக்கும். அதனால் 5000 அடிகள் நடந்துவிட்டு, உடலின் மேல்பகுதிக்கான சில பயிற்சிகளை செய்யலாம். இதனால் மொத்த உடம்பும் வலுவாகும்; உடல் வடிவமும் அழகாகும். ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெய். ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு! பின்நோக்கி நடத்தல்! நடைப்பயிற்சியில் இது பெஸ்ட். பின்னோக்கி நடக்கும்போது மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும். மூளை எப்படி நடக்க வேண்டும் என்று சொல்ல, உடல் அதைக் கேட்டு அப்படியே செய்யும். பின்னோக்கி நடப்பதால் மனம் ஒருமுகப்படும். இது நம்முடைய மற்ற வேலையிலும் வெளிப்படும். பின்னோக்கி நடக்க நடக்க தொடையின் தசைகள் இயல்பைவிட வேறு மாதிரி இயங்குவதால் அது இன்னும் பலப்படும். தவிர, வழக்கமான நடைப்பயிற்சியில் தொடையின் முன்பகுதி தசைகள் மட்டுமே வலுப்பெறும். பின்பகுதி தசைகள் அந்தளவுக்கு வலுவாக இருக்காது. அடிக்கடி நீங்கள் பின்நோக்கி நடக்கவும் செய்தீர்களென்றால், தொடையின் அனைத்து தசைகளும் வலுவாகும். நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! வாக்கிங் செல்கையில் நம் உடம்பு எப்படி இருக்க வேண்டும்? நன்றாக நிமிர்ந்து நடக்க வேண்டும். கீழே மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கக்கூடாது. மேல் முதுகு முன்னாடியோ அல்லது பின்னாடியோ சாயக்கூடாது. கீழ் முதுகு திடமாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். வாக்கிங் அற்புதமான எக்ஸர்சைஸ் என்றாலும், தொடர்ந்து நடப்பது என முடிவெடுத்துவிட்டீர்களென்றால், நல்ல தரமான நடைப்பயிற்சிக்கான ஷூவை அணிவது மிக மிகக் கட்டாயம். கூடவே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீரும், தேவைப்பட்டால் முகம் துடைக்க சிறு டவலும் எடுத்துச் செல்லுங்கள். மற்றபடி தனியாக நடப்பது, மற்றவர்களுடன் பேசாமல் நடப்பது நடைப்பயிற்சியை ஒருமனதாக செய்ய வைக்கும். இந்த வழிமுறைகளை ஃபாலோ செய்து வாக்கிங் சென்றால், என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்'' என்கிறார் ஜெயக்குமார். நடப்போம்; நலமாக இருப்போம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காற்றில் மிதக்கும்; செல்களுக்குள் செல்லும்; மைக்ரோ பிளாஸ்டிக் பற்றிய கம்ப்ளீட் விளக்கம்!
பெண்ணின் கருமுட்டையில்கூட நேனோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எப்படி ரத்தத்தில் கலக்கிறது என்பதற்கான காரணம், இதுவரை சரிவர தெரியவில்லை. என்றாலும் குடலில் சேரும் நேனோ பிளாஸ்டிக், குடலில் உள்ள இறுக்கமான புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் கண்ணுக்குப்புலப்படாத இடைவெளிகளின் வழியே ரத்தத்தில் கலந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது நம் உடலில் நேனோ பிளாஸ்டிக்கின் நேரடி தாக்குதலாக இருக்கலாம். இதைத் தவிர, நேனோ பிளாஸ்டிக் நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம், குடலில் உள்ள நுண்ணிய விரல் போன்ற அமைப்புகளில் பிளவு ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. இதனால் குடலில் இன்ஃபளமேட்டரி பவல் டிசீஸ் (Inflammatory bowel disease - IBD) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றைத் தவிர, ரத்தக்குழாயில் படிகிற படிவுகளிலும் (Plaques) நேனோ பிளாஸ்டிக் ஊடுருவி இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ பிளாஸ்டிக் ரத்தம், தாய்ப்பால் வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது! இப்படி மைக்ரோ பிளாஸ்டிக், இது நமக்கு செய்யும் கெடுதல்களை உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச்சொல்லி பதறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விளைவு, ஒருபக்கம் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க சொல்லி உலகின் பல நாடுகளும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பல மாநிலங்கள் தடை விதித்துக் கொண்டிருக்கின்றன. என்றாலும் நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நூறு சதவிகிதம் முடியவில்லை என்பதுதான் நிஜம். மருத்துவ உபகரணங்கள் சிறு கருவிகளில் தொடங்கி மருத்துவ உபகரணங்கள் வரை பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பல துறைகளிலும் பிளாஸ்டிக்கின் தன்மை, வேறு மாற்றுப்பொருள்களைவிட பயன்பாட்டுக்கு உகந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம். மைக்ரோ பிளாஸ்டிக் மைக்ரோ பிளாஸ்டிக் ஆபத்துகள்! இந்த நேரத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் நமக்கு செய்யக்கூடிய அல்லது செய்துகொண்டிருக்கும் ஆரோக்கிய ஆபத்துகளை பற்றி தெரியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு என்கிற பதற்றமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன; அது நமக்கு என்னென்ன தீங்குகள் செய்கிறது; அதைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன? நாம் தினசரி பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு துளித்துளியாக பிளாஸ்டிக் நம் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சிறு துளி பிளாஸ்டிக்கைதான் மைக்ரோ பிளாஸ்டிக் என்று சொல்கிறோம். மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு என்று பார்த்தால், குறைந்தபட்சம் ஒரு மைக்ரோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 மில்லி மீட்டர் வரை இருக்கும். இதில் ஒரு மைக்ரோ மீட்டர் என்பது கண்ணுக்கே தெரியாதது. இதைத்தான் நானோ பிளாஸ்டிக் என்றும் குறிப்பிடுகிறோம். மைக்ரோ பிளாஸ்டிக் மெல்லிய இழைகளாக சிதையும்! நம் எல்லோருக்குமே பிளாஸ்டிக் மட்கிப்போகாது என்பது தெரியும். ஆனால், சூரிய ஒளி, நீர் போன்ற காரணிகளால் அது புலப்படுகிற அளவுக்கு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு மெல்லிய இழைகளாக சிதையும். பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமல்லாமல், பாலியஸ்டர் போன்ற செயற்கை நூல் இழைகள்கூட இப்படித்தான் மெல்லிய இழைகளாக சிதையும். ஒரு மைக்ரோ மீட்டர் அளவு, நம் கண்களுக்கு புலப்படாத பிளாஸ்டிக் துகள்கள் நம் சுற்றுப்புறத்தில் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். நம் உடலில் இருக்கிற செல்களோ 10 மைக்ரோ மீட்டர் முதல் 100 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும். பொதுவாக நம் உடலின் செல்களுக்குள் வேறு எதுவும் சென்றுவிட முடியாது என்றாலும், எப்போதுமே அப்படி இருக்க முடியாது என்பதும் நிஜம். மனித செல்களைவிட மைக்ரோ பிளாஸ்டிக் சிறியது! மைக்ரோ பிளாஸ்டிக் நம் ரத்தத்துக்குள் கலப்பது மிக மிக கடினம் என்று நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அது நம் வயிற்றுக்குள் சென்ற பிறகு நம் உடலில் இருக்கிற கல்லீரல் நமக்கு ஒவ்வாத விஷயங்களை அது தன்னகத்தே தக்க வைத்துக் கொள்ளும். கல்லீரலைத் தாண்டி நமக்கு எந்தக் கெடுதலும் வந்து விடாது என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. ஆனால், சமீப கால ஆராய்ச்சிகள் 'மனித செல்களைவிட இந்த மைக்ரோ பிளாஸ்டிக், அளவில் மிக மிகச் சிறியதாக இருப்பதால், எப்படியோ கல்லீரல் பாதுகாப்பையும் தாண்டி நம்முடைய செல்களுக்குள் நுழைந்து விடுகின்றன' என்கின்றன. டாக்டர் ராஜேஷ். கல்லீரலில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படுத்தலாம்? கல்லீரலைத் தாண்டி மைக்ரோ பிளாஸ்டிக் எப்படி நம்முடைய ரத்தத்தில் கலக்கின்றன என்பதும், கல்லீரலில் தன்னகத்தே தடுத்து நிறுத்துகிற இந்த மைக்ரோ பிளாஸ்டிக் கல்லீரலில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படுத்தலாம் என்பதும் இன்னமும் ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன. Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? 'ரீ யூஸ்' இதை தடுக்க வேண்டும் என்றால் 'ரீ யூஸ்' எனப்படுகிற மறுசுழற்சி முறையில் முழு கவனம் செலுத்த வேண்டும். எவற்றில் எல்லாம் பிளாஸ்டிக் தவிர்க்க முடியுமோ அதில் எல்லாம் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். ஒரு பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவதைவிட கழுவி பயன்படுத்தக்கூடிய டம்ளர்களில் அருந்தலாம். Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்? பூமியிலிருக்கிற உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி! உணவுக்கு செராமிக் அல்லது ஸ்டீல் பாத்திரங்களை உபயோகிக்கலாம். மெட்டல் கேன்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் அவற்றை பயன்படுத்தலாம். ஃபவுண்ட்டன் பேனா வழக்கத்தை திரும்பவும் கொண்டு வர முயற்சி செய்யலாம். ஒவ்வொரு முறையும் பிளாஸ்டிக் பேனாக்களை வாங்கி, அவை தீர்ந்த பிறகு குப்பைகளாக்க வேண்டமே. பருத்தி உடைகளை முடிந்தவரை பயன்படுத்துங்கள். ஷாப்பிங் செய்ய துணிப்பைகளையும், சணல் பைகளையும் பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதப்பைகள் நல்ல மாற்று. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், குறைப்பதற்கு முயற்சி செய்வது மட்டுமே மைக்ரோ பிளாஸ்டிக் ஆபத்திலிருந்து, பூமியிலிருக்கிற உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி'' என்கிறார் டாக்டர் ராஜேஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் (MMHRC) இணைந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது; மதுரை மாவட்ட காவல்துறை பணியாளர்களுக்கு CPR (Cardio-Pulmonary Resuscitation) மற்றும் BLS (Basic Life Support) ஆகியவற்றில் மாவட்ட அளவிலான பயிற்சியளிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி திடீரென ஏற்படும் cardiac arrest மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு உயிர்காக்கும் அவசரநிலை சிகிச்சை உத்திகளில் மாவட்டத்தின் ஒட்டுமொத்த காவல்துறையினரும் முறைப்படி பயிற்சியளிக்கப்படுவது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும். தொடர்ந்து வரும் 18 சனிக்கிழமைகளில், மதுரை மாவட்டம் முழுவதிலும் பணியாற்றுகிற காவல்துறையினருக்கு இதில் சிறப்பான பயிற்சியளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது தொடர்பான முதல் நேரடி அமர்வு மதுரையிலுள்ள SS மஹாலில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை குழுவினர், CPR மற்றும் BLS ஆகியவற்றைப் பற்றித் தெளிவான விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். போக்குவரத்து விபத்துகள், திடீரென ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளின் போது உதவி வழங்கும் முதல் நபர்களாக காவல்துறை அதிகாரிகளே பெரும்பாலும் இருப்பதால் இந்த பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பது மிக முக்கியம். மருத்துவ உதவி வந்து சேரும் வரை, “Golden Hour” என அழைக்கப்படுகிற நேரத்தை, “சிகிச்சைக்கான நேரமாக” மாற்றுவது இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும். மீனாட்சி மிஷன் மருத்துவமனை இந்த பயிற்சி அமர்வில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் , MMHRC-ன் அவசர சிகிச்சை பிரிவின் இயக்குநர் திரு. நரேந்திர நாத் ஜெனா மற்றும் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர். S. பிரபு, டாக்டர். ஷீமா கண்மணி மற்றும் டாக்டர். நான்சி ஆகியோருடன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் திரு. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.