இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி (RIRS) எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயது பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப்பட்டாலும் இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும். இந்நோயாளிக்கு இதயநோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2x1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார். இன்றைய நிலையில் இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது. நாட்டில் RIRS செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களைக் கொண்டிருக்கும் பெருமைமிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும். இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்குச் செலுத்தப்படுகிறது. Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா? அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம் சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர். இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும் அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்தச் சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார். மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார். சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்குச் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். D. பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் திரு.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர். Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
No Tobacco Day: `உயிர் கொல்லும் புகையிலைக்கு நோ சொல்வோம்' - உலக புகையிலை ஒழிப்பு தினம் 2025
'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்' இந்த வசனத்தை கேட்காத யாரும் இங்கே இல்லை. இருந்தும் இந்த வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறியாத பலரும் இன்னும் இந்த புகையிலையை பயன்படுத்த தான் செய்கின்றனர். காணும் அனைத்திலும் நவீனத்தை புகுத்து மனிதர்கள் புகைப்பழக்கத்திலும் சிகரெட்டிலிருந்து குட்கா , பான் மசாலா, ஈ சிகரெட் என நவீன முறையில் தன் ஆயுள் காலத்தை விலை கொடுத்து குறைக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2000ம் ஆண்டு உலகம் முழுவதும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33.3% இல் இருந்து 2018 ஆம் ஆண்டு 23.6% ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை புகையிலை பயன்பாட்டில் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. புகையிலை ஒழிப்பு தினம் நிக்கோட்டினா டபாகம்(nicotina tabacum) என்னும் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் புகையிலையில் நிக்கோட்டின் என்னும் மூலக்கூறு உள்ளது. இந்த நிக்கோர்டினா பயன்படுத்துவோரை அடிமைப்படுத்துகிறது. ஒரு சிகரெட்டில் சுமார் 10 -14 mg நிக்கோட்டின் உள்ளது. இதில் 1- 1.5mg புகை பிடிப்பதன் மூலமாக உடலை பாதிக்கிறது. மேலும் புகையில்லா புகையிலை பயன்படுத்துவதால் பாதிப்பு குறைவு என்று எண்ணி பயன்படுத்தப்படும் புகையிலை பொடி, குட்கா, ஜர்தா ,கைனி போன்றவை சிகரெட்டை காட்டிலும் அதிக ஆபத்தானவை. ஒரு நாளைக்கு 8-10 முறை பயன்படுத்தும் புகையில்லா புகையிலை உடலில் ஏற்படுத்தும் நிகோட்டின் அளவு 30-40 சிகரெட்டை ஒரு நாளில் பயன்படுத்துவதற்கு சமம். மேலும் புகை பிடிப்பவர்களை காட்டிலும் அவர்களை சுற்றியுள்ள நபர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் (passive smoker) அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை ஒழிப்பு தினம் புகைப்பிடிப்பதால் வாய் புற்றுநோய் வாய் மியுக்கோசில் புண்கள், ஈறு நோய்கள் ,உமிழ்நீர் சுரப்பிகள் செயலிழப்பு மற்றும் பல் சொத்தை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாய் புற்றுநோயில் மூன்றில் ஒரு பங்கு புகையிலை பழக்கத்தினால் ஏற்படுகிறது. புகையிலையில் உள்ள கார்சினோஜென்களே இதற்கு காரணம். புற்றுநோயின் முன்னிலைகளான லுகோபிளாக்கியா, எரித்ரோபிளாக்யா ,நிக்கோட்டின் ஸ்டொமாடிடிஸ் போன்றவை தொடரும் புகையிலை பழக்கத்தினால் புற்றுநோயாக உருமாறும். புகைப் பழக்கத்தால் உமிழ்நீர் சுரப்பிகள் சேதம் அடைந்து பல் சொத்தை, வாய் துர்நாற்றம், பற்கறைகள் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்பட்டு பயன்படுத்துவோரை பல தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக்குகிறது. புகையிலையை எந்தவிதத்தில் உட்கொண்டாலும் ஏற்படும் பாதிப்பு ஒன்றுதான். புகையிலை ஒழிப்பு தினம் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த இயலாது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகையிலை பயன்பாட்டை நிறுத்தி வாழ்வை மேம்படுத்தும் வழிகள் பல உள்ளன. புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது மனதை திசை திருப்ப வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு உடல் பயிற்சி, சத்தான உணவு பழக்கம் போன்றவை மேலும் புகையிலை பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி இருந்து, புகையிலை நிறுத்தும் மையங்கள் மூலமாக ஆலோசனை பெற்று புகையிலை பழக்கத்தை நிறுத்தலாம். - ம. நந்தினி தேவி 3year-BDS சி. எஸ். ஐ பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை
Health: ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்! - ஏன் நமக்கு அவசியம்?
''உ டலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். புற்றுநோய், மனஅழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது'' என்கிற பொதுநல மருத்துவர் கு.கணேசன், அதன் பலன்கள் பற்றி விவரிக்கிறார். ஒமேகா 3 ''டிரைகிளிசரைட் அளவைக் குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் - எது பெஸ்ட்? ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது. தினமும் 0.3-0.5 கிராம் இ.பி.ஏ (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) வகையும், 0.8-1.1 கிராம் ஏ.எல்.ஏ (Alpha-Linolenic acid) வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. மீன் புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன? மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும். வால்நட் போன்ற கொட்டைகளில் இருந்து கிடைக்கும் ஏ.எல்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடல், இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலமாக மாற்றித்தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் திறன் சிலருக்கு குறைவாக இருக்கும். அவர்கள், டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் கு.கணேசன்.
Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?
Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்த கொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம் சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டார்கள். உயிரிழப்புகள் குறித்தும் கேள்விப்படுகிறோம். இப்போது பரவும் கொரோனா வீரியம் மிக்கதாக மாறுமா... மீண்டும் லாக்டௌன் அறிவிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானதாக மாறுமா? பதில் சொல்கிறார் ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒரே நேரத்தில் பல வைரஸ் வகைகள் (variants) பரவுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. உதாரணத்துக்கு, ஃப்ளூ வைரஸையே சொல்லலாம். அது பல வைரஸ் வேரியன்ட்டுகளின் கலவையாகவும், ஒவ்வோர் ஆண்டும் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். வைரஸ் கிருமி ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். ஆனால், பொதுவாக நீண்டகாலமாக மனிதர்களுடன் இருக்கும் வைரஸ்கள், காலப்போக்கில் தம் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இதை உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நோய்ப்பரவலுக்கும் எளிதில் இலக்காகிறவர்கள் முதியவர்கள்தாம். அந்த வகையில், இப்போது பரவும் கொரோனாவிலும் அந்த ரிஸ்க் இருக்கிறது. கூடியவரையில் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத தருணங்களில், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும்போதும், பேருந்து, ரயில் பயணங்களின் போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியம். இது அவர்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுகிற அட்வைஸ் அல்ல. ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும் பழக்கமாக இருக்கிறது. ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும் வழக்கமாக இருக்கிறது. இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றவர்கள் மீதான அக்கறையினாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, இப்போது பரவும் கொரோனா குறித்து அச்சம் கொள்வதற்கு பதில், எச்சரிக்கையுடன் இருப்பதுதான் சரியானது. வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்கள் (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை) உள்ளவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த செய்திகள், ஆதாரமற்றவை. தடுப்பூசி பாதுகாப்பளிக்குமே தவிர, ஆபத்தை ஏற்படுத்தாது. இப்போது பரவும் வைரஸ், ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகத் தெரிகிறது. எனவே, லாக்டௌன் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். மீண்டும் பரவும் கொரோனா; மும்பை, பெங்களூரில் பாதிப்பு.. பரிசோதனையை தொடங்கிய கர்நாடகம்
Apollo: #OraLife வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் திட்டம் - அறிமுகப்படுத்திய அப்போலோ
புகையிலை பயன்பாடு என்பது ஒரு தனிநபர் தொடர்பான பழக்கவழக்கம் என்று சுருக்கிவிட முடியாது இதுவொரு தேசிய அளவிலான சுகாதார பெரும் பிரச்சனை. உலகளவில் எற்படும் வாய் புற்றுநோய் நபர்களில் ஏறக்குறைய 3 நபர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் 77,000 நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மற்றும் 52,000 இறப்புகள் நிகழ்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளை (link) விட நம் நாட்டில் இப்புற்றுநோய் பாதித்தவர்கள் மத்தியில் உயிர்பிழைப்பு விகிதம் வெறும் 50% என்பதாக மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த ஆபத்தான போக்கானது, இந்தியாவின் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் புகையிலை நுகர்வு அதிகரிப்பதால் மேலும் மோசமாகி வருகிறது. பான்பராக், புகையிலை மற்றும் பிற போதைதரும் பொருட்கள் மீது செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சுட்டிக்காட்டுகின்ற குடும்பங்களுக்கான நுகர்வு செலவு சர்வே (2022-23) (Link) இதனை முன்னிலைப்படுத்துகிறது. அப்போலோ உலக, புகையிலை இல்லா தினம் அனுசரிப்பையொட்டி, வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற ஒரு தன்முனைப்புள்ள ஸ்க்ரீனிங் முன்னெடுப்பான #OraLife என்பதை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) தொடங்கியிருக்கிறது. குறிப்பாக புகையிலையைப் பயன்படுத்துபவர்கள், மதுபானம் அருந்துபவர்கள் மற்றும் இதற்கு முன்பு வாயில் நசிவுப் புண்கள் இருந்த நபர்கள் உட்பட அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்காக இலக்குடன் கூடிய இடையீட்டு நடவடிக்கையையும் குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் செயல்பாட்டையும் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது. இந்த முன்னெடுப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் நோக்கத்தோடு புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பும் நபர்களுக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்காக ஈஷா ஃபவுண்டேஷனுடன் ACC கூட்டு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. உடல்நலம் சார்ந்த இடையீட்டு நடவடிக்கைகளை மனநலம் மற்றும் உணர்வுரீதியான நல்வாழ்வு ஆதரவோடு இந்த ஒத்துழைப்பு ஒருங்கிணைக்கிறது. புகையிலையைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், புகையிலையைப் பயன்படுத்தும் நபர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 6 முதல் 7 மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் குழு விவாதத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஒரு எளிமையான வாய் பரிசோதனை வழியாக, வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டறிய முடியும் என்பதால், 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும், குறிப்பாக புகையிலையைப் பயன்படுத்தும் நபர்களை குறித்த கால அளவுகளில் ஸ்க்ரீனிங் சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளுமாறு #Oralife முன்னெடுப்பு திட்டம் ஊக்குவிக்கிறது. ஆரம்ப நிலையிலேயே வாய் புற்றுநோயைக் கண்டறிவது, வழங்கப்படும் சிகிச்சையின் விளைவுகளையும், உயிர்பிழைப்பு விகிதங்களையும் கணிசமாக மேம்படுத்துகிறது. எனவே தான் புற்றுநோய் வராமல் முன்தடுப்பு செய்வதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தைப் பயன்படுத்தி பயனடையுமாறும் பொதுமக்களை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்றிக் கேட்டுக்கொள்கின்றனர். நோய் வராமல் முன்தடுப்பு செய்யும் கலாச்சாரத்தை வளர்ப்பதன் வழியாக, வாய் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நம்மால் இயலும் என்று மருத்துவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சுட்டிக்காட்டினர். இந்திய ஆண்கள் மத்தியில் வாய்ப்புற்றுநோய் மிகப் பொதுவான புற்றுநோயாக இருக்கிறது; பெண்கள் மத்தியிலும் இது நிலையாக அதிகரித்து வருகிறது. வெவ்வேறுமாநிலங்களுக்கிடையே இந்த நோய் பாதிப்பு விகிதம் பெரிதும் மாறுபடுகிறது. மேற்கு வங்கத்தில் பாதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும்போது கோளாவில் இது அதிகமாக இருக்கிறது. மஹாராஷ்டிரர், அகமதாபாத் நகர்பகுதி மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் அதிகரித்த புகையிலை பயன்பாட்டின் காரணமாக பாதிப்பு விகிதங்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகமாக இருக்கின்றன. சென்னையை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட் ஆய்வுகள் உலின் பிற பகுதிகளுக்கு பாவக்கூடிய திறன்கொண்ட பகுதிகளான நாக்கின் அடிப்பகுதி மற்றும் வாயின் தளத்தில் உருவாகும் புற்றுநோய்கள் அதிகரித்திருப்பதை அடையாளம். கண்டிருக்கின்றன. தேசிய அளவில், வாயின் சளிச்சவ்வு மிக அதிகமாகப் பாதிக்கப்படும் அலமவிடமாக அறியப்படுகிறது. குறிப்பாக, புகை வெளிவராத புகையிலையின் பயன்பாடு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாய் புற்றுநோயில் இதுவரை இருந்தும் வரும் பாலின் இடைவெளி குறைவதற்கு இது பங்களிப்பை செய்கிறது. புகை வெளிவாம் புகையிலை, வெற்றிலையை மெல்வது மற்றும் எதுபம் ஆக ஆகியவற்றை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது போன்ற இடர்க்காரணிகள், முன்தடும்! பரளிப்பிற்கு குறைவான அணுகுவத்தி கொண்ட சுகாதார சேவை குறைவாக கிடைக்கப்பெறும் சமூகங்களில் குறிப்பாக அதிகமாக காணப்படுகின்றன. 31-60 வயதிற்கு இடைப்பட்ட நபர்களை இந்நோய் அதிகமாக பாதித்து வருகிறது. குறைவான ஊட்டச்சத்து பிரச்சனையாளது இந்த ஆபத்தை மேலும் தீவிரமாக்குகிறது. பயிற்சி பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தலை கழுத்து அறுவைசிகிச்சை வல்லுநர்களால் நடத்தப்படும் விரிவான பார்வை சார்ந்த மற்றும் தொடுஉணர்வு வாய் புரிசோதனையானது, வாய் வாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டமான #ஓராலைஃப் -ல் இடம்பெறுகிறது. தொடர்ந்து இருக்கின்ற வாய்ப்பு சிவந்த அல்லது வெள்ளை நிறத்திலான திட்டுகள், கட்டிகள் மற்றும் குணமடையாத புண்கள் போன்ற ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த அறிகுறிகளுள் பெரும்பாலானவை பல நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. மனநலம் சார்ந்த மற்றும் உணர்வுரீதியான மீட்சிக்கு ஆதரவு, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்தும் எனது முயற்சிகளோடு ஆன்மிக நல்வாழ்வு அம்சங்களை ஒருங்கிணைக்க ஈஷா ஃபவுண்டேஷனுடன் அப்போலோ கைகோர்த்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சத்குருவால் நடத்தப்படும் ஒரு எளிமையான, அதே நேரத்தில் திறன்மிக்க 7-நிமிட வழிகாட்டலுடன் கூடிய தியான செயல்முறைக்கான அணுகுவசதியை இதில் பங்கேற்கும் நபர்கள் பெறுவார்கள். மனதின் அதிசயம் (Miracle of Mind) என்பது. தங்களது நலவாழ்விற்கு பொறுப்பேற்பதற்கு தனிநபர்களுக்கு திறனளிக்கும் ஒரு இலவச தியான செய்வியாகும். 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டிருக்கும் இச்செயலியில், வழிகாட்டலுடன் கூடிய தியானங்கள், தடமறிதல், பிரத்யேக செய்திகள் மற்றும் வாக்கப்படுத்தும் வெகுமதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று ஈஷா ஃபவுண்டேஷன் செய்தித் தொடர்பாளர் கூறினார். முழுமையான புற்றுநோயியல் சிகிச்சை பராமரிப்பில் அப்போலோவின் தலைமைத்துள பங்கினை இந்த முன்மொடுப்பு பிரதிபலிக்கிறது. எமது செயல்பாடானது சிகிச்சை எள்பதற்கும் அப்பால் நீளகிறது. தங்களின் ஆரோக்கியத்தின் மீது பொறுப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க தேவையான கருவிகளையும், அறிவையும் மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிவது மற்றும் மனநலம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான தூன்களாக இருக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைப் பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஈஷா ஃபவுஇந்த ஒத்துழைப்பு ஒரு நல்ய சாட்சியமாகும் என் அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் (APCC) தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரன் பூரி கூறினார். புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுதகமக்கும் கூடுதளாக. விதாால ஏற்படும் நிதி சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான கடும் பாதிப்பையும் இந்த முன்னெடுப்பு திட்டம் கணத்தில் கொண்டு தீர்வுகாண முற்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்தாதலர்களுடன் ஒப்பிடுகையில் புகையிலையைப் பயனபடுத்தும் நபர்கள் அவர்களது வாழ்நாள் காலத்தில் உடல்தவமம.1 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை செயலிடுகின்றனர் என்று ஆராய்ச்சி கட்டிக்காட்டுகிறது புகையிலை பயன்பாட்டின் விளைவுகள் உடல்ாத்தையும் கடந்து பிறவற்றையும் பாதிகளிறது வாழ்நாள் எதிர்பார்ப்பு காலத்தைக் குறைப்பதோடு, காப்பிடு ரிசியங்களையும் இது அதிகரிக்கிறது காப்பீடு மைக்கோரிக்ாககளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை ஏட்டுப்படுத்துத குடும்பங்களின் நிவை றனையும் க்கெடுமாறு செய்கிறது குறிப்பாக குடும்பத்தில் டுநர்கள் புற்றுநோயால் பாதிகாப்படும்போது இதன் விளைவுகள் இருக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதன் பயனை இப்பரப்புரை திட்டம் வலுவாக எடுத்துரைக்கிறது. புறறுநோய் வராமல் தடுப்பதற்கு அதிக சக்தி வாய்ந்த கருவியாக நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றம் இருப்பதை இது கட்டிக்காட்டுகிறது. செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக]] மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம் இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது. 360 டிகிரி முழுமையான சிமிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருந்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவழும் மற்றும் தனராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவளமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பிம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது.
Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?
Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக செய்திகளில் கேள்விப்படுகிறோம். குறைந்த ரத்த அழுத்தம் என்பது உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தான பிரச்னையா... எந்த அளவு வரை குறைந்தால் எச்சரிக்கையாக வேண்டும்... அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்... குறைந்த ரத்த அழுத்தம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் நடிகர் ராஜேஷின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும். யூகங்களின் அடிப்படையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பொதுவாக, 90/60 mm Hg -க்கும் குறைவாக ரத்த அழுத்தம் இருந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று கருதப்படுகிறது. மருத்துவ மொழியில் இதை 'ஹைப்போடென்ஷன்' (Hypotension ) என்று குறிப்பிடுகிறோம். சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ஆனால், 90/60 mm Hg-க்கும் குறைவாகப் போகும்போது அந்த நபருக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பது, நெஞ்சுலி, குழப்பம், அதீத களைப்பு, இதயத்துடிப்பில் அடிக்கடி பிரச்னை (Arrhythmias) போன்றவை ஏற்படலாம். குறை ரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதயம் தொடர்பான பிரச்னைகளோ, கிட்னி பிரச்னைகளோட இருந்தால் குறை ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ரத்தச்சோகை எனப்படும் அனீமியா பாதிப்பிலும் இப்படி வரலாம். தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும் சாதாரண காரணத்தாலும் ஏற்படலாம். உடற்பயிற்சி செய்துவிட்டு நிறைய வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறையலாம். நரம்பு மண்டலச் செயல்பாட்டில் ஏற்படுகிற பிரச்னை (Autonomic dysfunction) காரணமாகவும் சிலருக்கு ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையலாம். ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும் சில ரிசப்டார்ஸ் (Receptors) சரியாக வேலை செய்யாததாலும் ரத்த அழுத்தம் குறையலாம். ஏதேனும் பிரச்னைகளுக்காக எடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவாலும் குறையலாம். எனவே, பொதுவாக ஒரு நபர் லோ பிளட் பிரஷர் பிரச்னையோடு வந்தால், முதலில் அவர்களது பிபி அளவை சரிபார்ப்போம். அறிகுறிகளைக் கேட்போம். அவற்றை வைத்து ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ என தேவைப்படும் டெஸ்ட்டுகளை பரிந்துரைப்போம். Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா? ஹைப்போடென்ஷனில் 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன்' (Orthostatic hypotension) என்றொரு வகை இருக்கிறது. இதில் படுத்திருந்த நிலையில் இருந்து உட்காரும்போதும், உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்கும்போதும் ரத்த அழுத்தம் குறையும். பிபி அளவைக் குறிப்பிடும்போது மேலுள்ள எண்ணை சிஸ்டாலிக் பிளட் பிரஷர் (Systolic blood pressure) என்றும், கீழுள்ள எண்ணை டயஸ்டாலிக் பிளட் பிரஷர் (Diastolic blood pressure) என்றும் சொல்வோம். இதில் சிஸ்டாலிக் பிளட் பிரஷரானது 20 பாயின்ட்டுகளாகவும், கீழுள்ள டயஸ்டாலிக் பிளட் பிரஷரானது 10 பாயின்ட்டுகளாகவும் குறைந்திருந்தால், அதை ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன் என்று சொல்வோம். டீஹைட்ரேஷன், இதயநல பாதிப்பு, கர்ப்பம், மருந்துகளின் பின் விளைவு என பல காரணங்களால் வரும். சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இதையும் மருத்துவர்கள் செக் செய்வார்கள். பிபி அளவு 90/60 mm Hg க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பொதுவாக வயதானவர்களிடம் இந்தப் பிரச்னை வரும்போது சற்று எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இளவயதினரிடம், குறிப்பாக பெண்களில் சிலருக்கு லோ பிளட் பிரஷர் இருக்கலாம். அவர்கள் ஆக்டிவ்வாக இருக்கும்போது அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களும் பிபி அளவு 90/60 mm Hg -க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் இல்லாதவரை, இளவயதினருக்கு மருத்துவர்கள் எந்தச் சிகிச்சையையும் பரிந்துரைக்க மாட்டோம். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்துவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: BP நார்மல்... ஆனாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது... என்ன பிரச்னையாக இருக்கும்?
Doctor Vikatan: ஒருவருக்கு தவறுதலாக வேறு க்ரூப் ரத்தம் ஏற்றினால் உயிரிழப்பு ஏற்படுமா?
Doctor Vikatan: ராஜஸ்தானைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ரத்த வகையை மாற்றிச் செலுத்தியதால் அவரும் அவரின் கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்ததாக சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ரத்தப் பிரிவை மாற்றி ஏற்றினால் உயிர் போகுமா... தவறுதலாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது, எல்லோருக்கும் உயிரிழப்பு ஏற்படுமா... ரத்தப் பிரிவு மாற்றம் குறித்து சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்... பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெவ்வேறு வகையான ரத்தப் பிரிவுகள் இருப்பதையும், அவை மனிதருக்கு மனிதர் வேறுபடுவதையும் நாம் அறிவோம். யாருக்கு, எந்த ரத்தப் பிரிவு இருக்கிறதோ, அது எந்த ரத்தப் பிரிவுடன் பொருந்தும் என்பதற்கேற்பதான் அவருக்கு ரத்தம் ஏற்றுவதோ, அவரிடமிருந்து ரத்த தானம் பெறுவதோ முடிவு செய்யப்படும். இவற்றில் ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் 'யுனிவர்சல் டோனர்' (universal donor) என்று சொல்கிறோம். எல்லோருக்கும் எல்லாவகை ரத்தப் பிரிவுகளும் ஏற்றுக்கொள்ளாது. அதை இன்காம்பாட்டிபிலிட்டி (Incompatibility) என்று சொல்கிறோம். பெரும்பாலும் இந்தப் பிரச்னை ரத்தம் ஏற்றும்போது வரும். பொதுவாக அறுவைசிகிச்சை செய்யும்போதோ, டெலிவரி, விபத்து போன்ற எமர்ஜென்சி சிகிச்சையின்போதோ ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது தவிர, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பில்கூட சிலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை வரும். இது போன்ற தருணங்களில் 'இம்யூன் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' ( Immune Hemolytic Reaction) என்ற பிரச்னை வரலாம். அதாவது ஒரு நபருக்கு ரத்தம் ஏற்றும்போது, அது தானம் செய்பவரின் ரத்த செல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். அதனால் 'ஹீமோலைசிஸ்' ( Hemolysis) என்ற பிரச்னை வரலாம். அதாவது ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இதை 'அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (acute hemolytic reaction) என்று சொல்வோம். ரத்த செல்கள் உடையத் தொடங்கும். அதனால் தலை முதல் கால் வரை பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். அக்யூட் ஹீமோலைட்டிக் ரியாக்ஷன் பாதிப்பானது ரத்தம் ஏற்றிய 24 மணி நேரத்துக்குள் ஏற்படும். சிலருக்கு 6 முதல் 12 மணி நேரத்துக்குள்ளும் வரும். 'டிலேடு ஹீமோலைட்டிக் ரியாக்ஷன்' (delayed hemolytic reaction ) என இன்னொரு வகை இருக்கிறது. இது 24 மணி நேரத்துக்குப் பிறகு 72 மணி நேரத்துக்குள் வரக்கூடியது. எந்த ரத்தப் பிரிவு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியாமல் ஒவ்வாத ரத்தப் பிரிவை ஏற்றும்போது இத்தகைய பிரச்னைகள் வரலாம். இந்த இணக்கமின்மை பாதிப்பானது சருமத்தில் தடிப்புகள், சுவாசக் கோளாறு, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது என பலவித அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். சில அறிகுறிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிரே போகும் அபாயம் உண்டு. இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான் இன்று ரத்த மாற்று சிகிச்சை என்பது மருத்துவத்தில் தனிப்பிரிவாகவே இயங்குகிறது. அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள்தான் இதைப் பார்த்துக்கொள்வார்கள். இணக்கமில்லாத ரத்தப்பிரிவு என்றில்லை, இணக்கமுள்ள ரத்தப்பிரிவை ஏற்றும்போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் கேள்விப்பட்ட செய்தியில் குறிப்பிட்டபடி, அது உயிரிழப்புவரை கொண்டுசெல்லும் அபாயமும் உண்டு. எனவே, ரத்தம் ஏற்றுவதை முறையாக, மிக மிக ஜாக்கிரதையாகச் செய்யாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இதய நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
Healthy Food: 5 கலர்ஸ் சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
‘ஒரு நபர் தினமும் 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த காய்கறி, பழங்களையும் குறைந்தது 2 நிறங்களில் இருந்து அதிகபட்சமாக 5 நிறங்களில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஶ்ரீமதி. அவை என்னென்ன நிறங்கள், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அவரே விளக்குகிறார். சிவப்பு 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிட்டின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin). பலன்கள்: ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உள்பொருள்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதயநோய், புராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை செல்களை எதிர்க்கும். பர்ப்பிள் 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: ஃபிளவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin). பலன்கள்: இதயம், மூளை, எலும்புகள், ரத்த நாளங்கள், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோயை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும். பச்சை 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: சல்ஃபோரஃபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இ்ண்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones). பலன்கள்: கண்கள், ஈறுகள், ரத்த நாளம், நுரையீரல், கல்லீரல், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தன்மையைத் தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும். வெள்ளை 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: அலிசின், குவர்சிடின், இ்ண்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate). பலன்கள்: எலும்புகள், ரத்த ஓட்டம், ரத்தநாளங்கள் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளை நிற காய், கனிகள் உணவுகள் உதவும். மஞ்சள் 5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க! சத்துக்கள்: ஜிஸாந்தின் (Zeaxanthin), ஆல்பாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின். பலன்கள்: பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்துக்கு நல்லது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Apollo: உலக அவசர மருத்துவ தினம்; 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அப்போலோ
சென்னை அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals], [World Emergency Medicine Day] கொண்டாடும் வகையில், 'ஃப்ளீட் ஆஃப் ஹோப்' [Fleet of Hope] என்ற மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. உயிர்களைக் காப்பாற்றுவதிலும், அவசர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் 1066 அவசர ஆம்புலன்ஸ் சேவைகளின் (1066 Emergency Services] முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கு அவசர மருத்துவ சிசிச்சை தேவைப்படும் தருணங்களில் அவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதற்கு தங்களது வாகனங்களில் செல்வதை விட, பொதுமக்கள் 1066 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு அழைப்பதை அப்போலோ மருத்துவமனைகள் வலியுறுத்துகிறது. உங்கள் வீட்டு வாசலிலேயே அவசர மருத்துவ சிகிச்சையைத் தொடங்க முடியும் என்னும் போது, நீங்கள் பதட்டத்துடன் ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்? என்ற விழிப்புணர்வை உருவாக்குவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். ஆம்புலன்ஸ் என்பது அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவரை அழைத்துச் செல்லும் ஒரு போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல நோயாளியின் வீட்டு வாசலுக்கு வந்தவுடன். உடனடியாக மருத்துவச் சிகிச்சையைத் தொடங்கும் ஒரு சிகிச்சை நடைமுறையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பக்கவாதம், மாரடைப்பு அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், மருத்துவ. உதவி இல்லாமல் தாமதம் ஏற்படுவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் இதனால் ஆம்புலனஸ் சேவை என்பது உயிரைக் காக்க உதவும் சேவை என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை.கள் இந்த முன்முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. பொதுமக்களிடையே விழிப்புணாவை ஏற்படுத்தும் முன்முயற்சியாக, சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனை ஆம்புலனஸ் அணிவகுப்பான ஃப்ளீட் ஆஃப் ஹோப் (let of Hoped கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தை திரு. சொக்கையா, திருவல்லிக்கேணி உதவி ஆணையர் (போக்குவரத்து) அவர்கள் ஆம்புலன்ஸ்களுக்கு கொடியசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services, Apollo Hospitals], ரோகிணி ஸ்ரீதர் மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO-Chennal Region, Apollo Hospitals) மற்றும் அப்போலோ மருத்துவமனைகளின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் மருத்துவமனை பிரிவின் தலைவர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் (Dr. Rohini Sridhar, Chief of Medical Services-Hospital Division, Apollo Hospitals] கூறுகையில், உலக அவசர மருத்துவ தினம், மருத்துவ அவசர நிலையில் நாம் ஒவ்வொரு நொடியும் மிக விரைவாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியமானது. இன்று, 'நம்பிக்கையின் அணிவகுப்பான' 'Fleet of Hope'-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது மருத்துவ நெருக்கடி ஏற்படும் தருணத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய தருணம் உயிருக்கு ஆதரவு அளிக்கும் மேம்பட்ட லைஃப் சப்போர்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் மூலம். நோயாளியின் இருக்குமிடத்திற்கு வந்தடையும் தருணத்திலேயே அவசியமான மருத்துவ பராமரிப்பைத் தொடங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம் நோயாளியின் நிலை குறித்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மருத்துவமனையை சென்றடையும் நேரத்தில் மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது கதிரியக்கவியல், கேத் லேப் மற்றும் இன்னும் பிற முக்கியமான பரிசோதனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ நடைமுறைகளை முன்கூட்டியே தயார்நிலையில் வைத்து செயல்படுத்தவும் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் குழுவிற்கு உதவுகிறது. என்றார். அப்போலோ மருத்துவமனையின் தெற்கு மண்டல அவசர சிகிச்சைப் பிரிவுகளின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் தவபழனி. ஏ (Dr. Dhavapalani A, Regional Clinical Director, Emergency Departments, Southern Region, Apollo Hospitals] கூறுகையில், மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் வெறும் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்ல அவை எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் நடமாடும் பராமரிப்பு தளங்கள். மேம்பட்ட நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவர்களுடன் தங்கு தடையில்லா தகவல்தொடர்பு வசதிகள் மூலம் நோயாளி மருத்துவமனையை அடைவதற்கு முன்பே உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடங்க ஆம்புலன்ஸ்கள் உதவுகின்றன. நோயாளி எங்கிருந்தாலும், அவர்கள் எளிதில் பெறக்கூடிய, மருத்துவ சூழலுக்கேற்ற வகையில் சிகிச்சையை மேற்கொள்ளும், தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் அவசர மருத்து சேவையை நேரடியாக வழங்குவதே ஆம்புலன்ஸ்களின் நோக்கமாகும். இதன் மூலம் அவசரகால சிகிச்சையை மேம்பட்டதாக மறுவரையறை செய்வதே எங்கள் குறிக்கோள். என்றார். சென்னை அப்போலோ மருத்துவமனை, அவசர மருத்துவ சிகிச்சைக்கான கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 1066 ஹெல்ப்லைன் மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் மிகப்பெரும் மொபைல் தொடர்பு நெட்வொர்க் மூலம், சரியான நேரத்தில், உயிர்காக்கும் பராமரிப்பை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனை பற்றி 1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 73 மருத்துவமனைகள், 6000-க்கும் அதிகமான மருந்தகங்கள், 2500-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் டயக்னோஸ்டிக் மையங்கள், 500-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 200,000-க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு லட்சம் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.
பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!
ச மீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்புகூட திண்டுக்கல் மாவட்டத்தில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது. பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுனர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழ, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுகிறது. சுதாரித்துக்கொண்ட நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் நடக்கவிருந்த விபத்து தடுக்கப்பட்டது. ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிற செய்திகளை அடிக்கடி காண நேர்வதால், ஓட்டுநர் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்வதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா; வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம். Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு... ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியுமா? ''அரசு பேருந்து ஓட்டுநர்களோ, தனியார் பேருந்து ஓட்டுநர்களோ அல்லது கார் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டவர்களோ, இந்த வேலையில் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போதுமான தூக்கமில்லாமல் நீண்ட நேரம் வண்டி ஓட்டுவதுதான். ஓட்டுநர்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடும் சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படி தொடர்ந்து வெளியே சாப்பிடுவதும், அவை உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்துகிற உணவுகளாக இருப்பதும் இதயத்துக்கு நல்லதல்ல. ஹார்ட் அட்டாக் பீடி, சிகரெட், ஆல்கஹால் போன்ற பழக்கம் இருப்பவர்களுக்கு பொதுவாகவே ஹார்ட் அட்டாக் வருகிற வாய்ப்பு அதிகம். இதில், சரியான தூக்கமில்லாதது, ஆரோக்கியமற்ற உணவுகள் என்கிற வாழ்கிற ஓட்டுநர்களுக்கு மேலே சொன்ன பழக்கமும் இருந்துவிட்டால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். பீடி, சிகரெட், ஆல்கஹால் பழக்கம் இருப்பவர்கள் அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது, அவர்களை வருமுன் காக்கும். இவற்றைத்தவிர, மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களான உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்கள் ஓட்டுநர்களுக்கு இருந்தால், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே உணர முடியுமா? என்ன முதலுதவி செய்ய வேண்டும்? வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் யாருக்கு, எங்கு மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டால் உடனே 108 ஆம்புலன்ஸை உதவிக்கு அழைக்க வேண்டும். உடன் CPR (Cardiopulmonary resuscitation ) என்கிற முதலுதவியை செய்ய வேண்டும். CPR என்பது இதயதுடிப்பு மற்றும் மூச்சுத் தடைப்பட்ட நபர்களுக்கு கையால் நுரையீரலை அழுத்தி, வாய் வழியாக ஆக்சிஜன் அளித்து உயிர்க்காப்பதற்கான ஒரு முதலுதவி செயல் ஆகும். இந்த முதலுதவி நடத்துனர்களுக்குத் தெரிந்திருந்தால், மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் களைக் காப்பாற்றியிருக்கலாம். முதலுதவி உடனே செய்ய வேண்டியதும்... ஓட்டுநர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகளும் இதயத்தில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே அறிகுறிகள் வெளிப்படும். பொதுவாக அதிகமாக வியர்த்தல், படப்படத்தல், உடல் வெப்பநிலை குறைவது, இதயம் மற்றும் மார்பு பகுதியில் வலி ஏற்படுவது, மூச்சுவிட சிரமப்படுவது போன்றவை மாரடைப்பு ஏற்படப் போவதற்கான அறிகுறிகள். சில சமயம் வாந்தி, மயக்கம், காதில் வலிகூட ஏற்படலாம். இந்த அறிகுறிகளை உணர்ந்தால், ஓட்டுநர்கள் உடனே நடத்துனர்களிடம் விஷயத்தைச் சொல்லி 108-க்கு போன் செய்ய சொல்ல வேண்டும். அல்லது உடனே வேறொரு வண்டியில் ஏறி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வலியைப் பொறுத்துக்கொண்டு பேருந்தை ஓட்டக்கூடாது. Gym: ஜிம் மரணங்கள் தொடர்வது ஏன்? - ``நிச்சயம் தவிர்க்க முடியும் மருத்துவர்கள் விளக்கம்! அறிகுறிகள் இல்லாத மாரடைப்பு என்றால்... மேலே சொன்ன மாதிரியான அறிகுறிகள் இல்லாமலேகூட மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால், அவர்களுக்கு வலி உணர்வு திறன் குறைவாக இருக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் மாரடைப்பால் ஏற்படும் வலியை அவர்கள் முன்கூட்டியே உணர முடியாமல் இருப்பார்கள். சிலர் இந்த வலியை அஜீரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டு, அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் அதற்கான மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சுய மருத்துவம் தவறு. அதுவும் இதயம் தொடர்பான பிரச்னைகளில் சுய மருத்துவம் மிக மிக தவறு. சர்க்கரை நோயாளிகள், அதுவும் ஓட்டுநர் பணி செய்பவர்கள் என்றால், மருத்துவர் ஆலோசனைபடி இதயம் தொடர்பான பரிசோதனைகளை அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி Vikatan Explainer : உங்கள் இதயத்துக்கு ஆயுள் நூறு - இதய நலன் ஆதி முதல் அந்தம் வரை முதல்முறை மாரடைப்பு ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படுமா? மாரடைப்பைப்பற்றி ஒரு புரளி ஓடிக்கொண்டே இருக்கிறது. முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டால் காப்பாற்றிவிடலாம். மூன்றாவது முறை மாரடைப்பு ஏற்பட்டால்தான் உயிரிழப்பார்கள் என்று. ஆனால், அது தவறான கருத்து. முதல் முறை மாரடைப்பு வந்து உயிரிழப்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை மாரடைப்பு வந்து உயிர் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அது மாரடைப்பு எந்த இடத்தில் ஏற்படுகிறது, எந்த அளவில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் 90% அடைப்பு ஏற்ப்பட்டால்தான் உயிரிழப்பு நிகழும்'' என்கிறார் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி. நடத்துனர்கள் என்ன சொல்கிறார்கள்? ஓட்டுனருக்கு மாரடைப்புப் போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் நடத்துனர்களுக்கு பேருந்தை எப்படிக் கையாள வேண்டும்; எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் போன்ற பயிற்சிகளை வழங்குகிறார்களா என்பது குறித்து தெரிந்துகொள்ள, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக, நடத்துனராக பணிபுரிகிற சிலரிடம் விசாரித்தோம். நடத்துனர்கள் பேசுகையில், இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை பயிற்சியையும் தந்ததில்லை. அப்போ அப்போ யோகா பயிற்சி மட்டும் தருவாங்க. டிரைவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பஸ்ஸை எப்படி நிறுத்தணும்னு யாரும் சொல்லித் தந்ததில்ல. டிரைவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துபோற அந்த வீடியோவை டிவி நியூஸ்ல பார்த்தோம். அதுல அந்த கண்டக்டருக்கு பஸ்சை எப்படி நிறுத்தணும்னு தெரிஞ்சதுனால பஸ்ல இருந்த அத்தன உசுரையும் காப்பாத்திட்டாரு. இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'' என்கிறார்கள் பதற்றத்துடன். போக்குவரத்துத்துறை தமிழக அரசு கவனத்திற்கு..! இனிவரும் காலங்களிலாவது தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் முதலுதவி அளிப்பது, அவசர காலங்களில் பேருந்தை எப்படிக் கையாள்வது போன்றவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு போதுமான இடைவெளியில் இலவச முழு உடல் பரிசோதனையும் செய்தால் எதிர்காலத்தில் பெரிய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடியும். தமிழக அரசும் போக்குவரத்துத்துறையும் இதில் தனி கவனம் செலுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
Prostate cancer: ஜோ பைடனை பாதித்த புற்றுநோய்; வயதான எல்லா ஆண்களுக்குமே வருமா?!
அ மெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு சமீபத்தில் புராஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 82 வயதான அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், பராக் ஒபாமா என பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தனர். இப்படி வயதான ஆண்களை பாதிக்கும் புராஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய் ஏற்பட்டால் குணப்படுத்த முடியுமா என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன். Prostate cancer ''புராஸ்டேட் என்பது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும், இனப்பெருக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துணை பால் சுரப்பி. இந்த புராஸ்டேட் சுரப்பிதான் விந்தணுக்களை உற்பத்தி செய்து அதற்கு உயிரூட்டமும் அளிக்கிறது. இந்த சுரப்பி அமைந்துள்ள இடத்தில் புற்றுநோய் மூலக்கூறுகள் வளர்ச்சி அடைவதைத்தான் புராஸ்டேட் புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய், தற்போது உலகளவில் ஆண்களை அதிகளவு பாதிக்கக்கூடிய புற்றுநோய் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் வயது. வயது அதிகமாக அதிகமாக அவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதற்கு நம்முடைய உணவுமுறை, பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது மரபியல் முறை. தாத்தாவிற்கோ, தந்தைக்கோ, புராஸ்டேட் புற்றுநோய் இருந்திருந்தால் மரபியல் காரணங்களால் அடுத்த தலைமுறைக்கும் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். புராஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்னென்ன? புராஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் அடைவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் தானாக வெளியேறுவது, சிறுநீர் தடைபடுவது, சிறுநீருடன் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுவது போன்றவை பொதுவான அறிகுறிகள். இதே அறிகுறிகள் பொதுவாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் ஏற்படும். ஆனால், அது புற்றுநோயால் ஏற்படும் அறிகுறிகள் இல்லை. வயது முதிர்வால் ஏற்படுவது. இந்த அறிகுறிகளை தவிர புற்றுநோய் பிரச்னை தீவிரமடையும்போது பாதிப்படைந்தவர்களுக்கு பசியின்மை, எடையிழப்பு போன்றவை ஏற்படலாம். இந்த புற்றுநோய் பல்வேறு உறுப்புகளுக்கும் பரவும்போது, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கலாம். `குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?' காமத்துக்கு மரியாதை - 241 புராஸ்டேட் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியதா? அனைத்துவித புற்றுநோயும் ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். இந்த புராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். மூன்று மற்றும் நான்காம் நிலையில் கண்டறிந்தால், புற்றுநோய் பரவலை பிற உறுப்புகளுக்கு பரவாமல், பாதிப்பு அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், குணப்படுத்த முடியாது. டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன். மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242 உடலுறவு கொள்வதிலோ ஏதேனும் பாதிப்பு இருக்குமா? புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விந்து வெளியேற்றுவதிலோ, புராஸ்டேட் புற்றுநோய் என்பது விந்தணு உற்பத்தியுடன் தொடர்பில் இருப்பதால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். விந்தணு வெளியேற்றத்தின்போது வலி, விந்துவுடன் ரத்தம் அல்லது சீழ் போன்ற திரவங்கள் கலந்து வெளியேறுவது, உடலுறவின்போதும் வலி ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். அறுபது வயது கடந்த ஆண்களோ அல்லது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் ஆண்களோ, புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர். ஸ்ரீவத்சன். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உணவுப்பழக்கம் உதவுமா... எப்படிப்பட்ட உணவுகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மங்கு எனப்படுகிற பிக்மென்ட்டேஷன் பிரச்னை இப்போது பலரையும் பரவலாக பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், கருந்திட்டுகளைப் போக்க, வைட்டமின் ஏ, சி, ஈ என மூன்று வைட்டமின்கள் மிக முக்கியம். இவற்றை நீங்கள் சப்ளிமென்ட் வடிவிலும் எடுக்கலாம். இவற்றில் வைட்டமின் ஏ சப்ளிமென்ட்டை நீண்டகாலத்துக்கு எடுக்கக்கூடாது. மருத்துவப் பரிந்துரை முக்கியம். உணவுகளின் மூலம் மங்கு பாதிப்பிலிருந்து மீளலாம். அதாவது கருந்திட்டுகளைப் போக்க உதவும் மேற்குறிப்பிட்ட வைட்டமின்களை உணவுகளின் மூலமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ சத்துள்ள பப்பாளி, கேரட், பீட்ரூட், கீரை போன்றவற்றையும், வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, கொய்யா, கிவி, நெல்லிக்காய் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஈ சத்துக்காக பாதாம் சாப்பிடலாம். முதல்நாள் இரவு பத்து பாதாம் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிச் சாப்பிடலாம். சருமத்தில் கருமையை ஏற்படுத்தும் மங்கு சருமத்தின் கருந்திட்டுகளைப் போக்குவதில் மாதுளம்பழம் மிகச் சிறப்பாக வேலை செய்யும். ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடலாம். பீட்ரூட், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் சாப்பிடலாம். ப்ளூ பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னைக்கு மிகச் சிறந்தவை. வெண்டைக்காய், கீரை, பீன்ஸ் என பச்சைக் காய்கறிகள் எல்லாமே இந்தப் பிரச்னைக்கு ஏற்றவைதான். பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து தினமும் 150 மில்லி அளவுக்கு, 15 நாள்களுக்குக் குடித்துவந்தால், நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம். Doctor Vikatan: எலுமிச்சை, புதினா, மூலிகைகள் சேர்த்த டீடாக்ஸ் ஜூஸ் உடல் எடையைக் குறைக்குமா? புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். கண்களைச் சுற்றி கறுப்பாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கலாம். அவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டீஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரும் மிகச் சிறந்தது. புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, சருமத்தின் கருந்திட்டுகள் மாறுவதை உணர்வீர்கள். இந்த எல்லாமே உள்ளுக்குச் சாப்பிடுபவை. இவற்றில் எதையும் சருமத்தில் தடவ முயல வேண்டாம். எந்தப் பொருள், யாருக்கு, எப்படிப்பட்ட அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. எனவே, சருமத்துக்கு வெளிப்பூச்சு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே எதையும் பின்பற்றவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Fever: தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; எப்படி பரவுகிறது; தடுக்க முடியுமா?
ஜ ப்பானிய மூளைக்காய்ச்சல் தமிழ்நாட்டிலும் பரவிக்கொண்டிருக்கிறது என்கிற ஆய்வு முடிவு ஒன்று கடந்த சில தினங்களாக பலருடைய கண்களிலும் தென்பட்டிருக்கும். விளைவாக, 'ஏற்கெனவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டது என்கிற பயத்தில் இருக்கிறோம். இப்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்கிற புது வியாதியை சொல்லி பயப்படுத்துகிறீர்களே' என்கிற பயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காரணங்களையும் தீர்வுகளையும் தெரிந்துகொண்டால் வருமுன் தடுக்கலாமே... இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம். க்யூலெக்ஸ் கொசு புதிய நோய் கிடையாது! ''ஜப்பானிய மூளைக்காய்ச்சல் புதிய நோய் கிடையாது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் (Japanese encephalitis - JE) என்கிற பெயரில் ஆசிய நாடுகளுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நோய்தான் இது. ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் என்பது ஒரு வைரஸ். இந்த வைரஸ் க்யூலெக்ஸ் என்ற கொசுவிலும், பன்றிகளின் உடலிலும், சில பறவைகளின் உடலிலும் வாழக்கூடியது. வைரஸ் தொற்று ஏற்பட்ட க்யூலெக்ஸ் கொசு கடித்தால்தான்... விவசாயம் செய்கிற கிராமப்பகுதிகளில் இந்த நோய் அதிகமாக தாக்கும். ஏன் தெரியுமா? விவசாயம் செய்யப்படுகிற இடங்களில் தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பார்கள். க்யூலெக்ஸ் கொசுக்கள் கிணறுகளில், வயல்வெளிகளில், பன்றிகளின் வாழ்விடங்களிலும்தான் வாழும். வைரஸ் தொற்று ஏற்பட்ட க்யூலெக்ஸ் கொசு கடித்தால்தான் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். அதேபோல, இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்த கொசு, ஆரோக்கியமாக இருக்கிற இன்னொருவரைக் கடித்தால் அவருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். மற்றபடி, மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது. வைரஸ் தொற்று அடைந்த க்யூலெக்ஸ் கொசு கடித்தால் மட்டுமே இந்தத் தொற்று மனிதருக்குப் பரவும். டெங்கு, மலேரியா பரவுவதைப்போலதான் ஜப்பானிய மூளைக்காய்ச்சலும் பரவும்'' என்றவரிடம் , அந்த ஆய்வில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நகரங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்றோம். வயல்வெளி இந்த கொசுக்கடி தொற்று பரவிக்கொண்டே இருக்கிறது! ''அதற்குக் காரணம் நகரங்கள் விரிவடைந்துக்கொண்டிருப்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு வருவதும், நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்குச் செல்வதும் இப்போது அடிக்கடி நிகழ்கிற ஒன்றாகிவிட்டது. அதனால், இந்த கொசுக்கடி தொற்று பரவிக்கொண்டே இருக்கிறது. காய்ச்சலின்போது பிதற்றுவார்கள்! இந்தக் காய்ச்சல் வந்தால் 99 சதவிகிதம் பேருக்கு, காய்ச்சல், தலைவலி, வாந்தி என்று சரியாகி விடும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டால் காய்ச்சலின்போது பிதற்றுவார்கள்; கை, கால்கள் செயலிழந்து பக்கவாதம்போல ஏற்படலாம். பின்னர் வலிப்பு, கோமா, மரணம் என்று ஏற்படலாம். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்குமே இத்தனை பிரச்னைகளும் வருமா என்றால், இல்லவே இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இது அரிதிலும் அரிதாக மட்டுமே நிகழும். திடீரெனப் பரவும் காய்ச்சல் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், கரூர் போன்ற மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. வாழ்நாள் முழுவதும் தொடரலாம்! அதே நேரம், இப்படி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சலின்போது வந்த வலிப்பு, பக்கவாதம், சிந்தனைத்திறன் குறைவுபடுதல் போன்ற பக்க விளைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன? எப்படி தடுக்கலாம்? கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும். ஆனால், வயல்வெளிகளில் இதைக் கட்டுப்படுத்துவது கடினம். வாரம் ஒரு நாளாவது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சாமல் விட வேண்டும். இதை இடைவிட்டு செய்யும் பாசனமுறை என்று அழைக்கிறோம். இதன் மூலம் கொசு உற்பத்தி ஆவதைக் கட்டுப்படுத்த முடியும். யூரியா உரத்தில் வேம்பைக் கலந்து போடுவதும் பயன் தரும். டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா தடுப்பூசி மூலம் வராமல் கட்டுப்படுத்தலாம்! ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுப்பூசி மூலம் வராமல் கட்டுப்படுத்தலாம். முதல் டோஸ் குழந்தையின் 9-வது மாதத்திலும், இரண்டாவது டோஸை 16 முதல் 24-வது மாதத்துக்குள்ளும் செலுத்திவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அது மரணம் வரைக்கும் ஏற்படுத்தாது. இந்தத் தடுப்பூசிகள் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது'' என்கிற கூடுதல் தகவலையும் சொல்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?
டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
கோ வை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் காட்டில் இருக்கும் பாம்பு, பூரான் என விஷ ஜந்துக்களெல்லாம் முன்னெச்சரிக்கையாக இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிடும். அல்லது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக், கார் போன்றவற்றிலும் நுழைந்து விடும். அதனை கவனிக்காமல் ஓட்டிச் சென்றால் ஆபத்து நமக்குத்தான். பாம்பு பைக்கில் விஷப்பாம்புகள்! சமீபத்தில் ஆவடியிலும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. டூ வீலரில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்து 20 வயது இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில், பைக்கில் மறைந்திருந்த பாம்பைப் பார்த்து, பைக்கை ஓட்டியவர் ஹேண்டில்பாரில் இருந்து கையை எடுத்துவிட்டார். வண்டி கீழே சாய்ந்துவிடக்கூடாது என பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞர் ஹேண்டில்பாரை பிடிக்க, பாம்பு கடித்துவிட்டது. இதனால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு காரணம் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வண்டியை எடுக்கும்போது அதில் ஏதும் விஷப்பூச்சிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்க தவறிவிடுவதே ஆகும். டூ வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள் வண்டியை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்? வீடுகளில் வாகனங்களை நிறுத்துகிறோம். மறுநாள் அவசர அவசரமாக அதில் ஏறி உட்கார்ந்து கிளம்பி விடுகிறோம். அப்படி செய்யாமல் ஒரு சில நிமிடங்கள் நிதானித்து அந்த வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை இரண்டு, மூன்று முறை முறுக்கினாலே, உள்ளே ஏதேனும் உயிரினங்கள் பதுங்கி இருந்தால் அவை வெளியே வந்துவிடும். நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதைவிட நமது உயிர் முக்கியமல்லவா..? அதனால், கொஞ்ச நேரத்தை ஒதுக்கி வண்டிக்குள் ஏதேனும் விஷப்பூச்சிகள் இருக்கின்றனவா என்பதை பார்ப்பது நல்லது. அப்படியே பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிறார் அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். வி.பி.சந்திரசேகரன். குளவி பதற்றப்பட்டால் விஷம் வெகு விரைவில் உடலில் பரவும்! ஒருசில பாம்புக்கடிகளே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். பாம்பு கடித்துவிட்டால், முதலில் நாம் பதற்றப்படக்கூடாது. கூடவே ஓடுவது, நடப்பது போன்ற வேகமான செயல்களை செய்யவே கூடாது. காரணம் நாம் பதற்றப்படும்போதும், வேகமான அசைவுகளை செய்யும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வெகு விரைவில் உடலில் பரவக்கூடும். பாம்பு கடித்தால் உடனே செய்ய வேண்டியது! அருகில் இருக்கும் யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும். உடனே பாம்பு கடித்த இடத்தில் இருந்து ஆறு இன்ச் தொலைவிற்கு சற்று மேல் பகுதியில் ரிப்பனாலோ, கயிற்றாலோ லேசாக இறுக்கிக்கட்ட வேண்டும். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமோ, தாங்களாகவோ அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விஷத்தன்மைக்கு ஏற்ப விஷமுறிவு மருந்தைக் கொடுப்பார்கள். சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. பாம்பு கடித்தால் செய்யக்கூடாதது! பாம்பு கடித்தால் விஷத்தை எடுக்கிறேன் என வாய் வைத்து உறிஞ்சுவது போன்றெல்லாம் சிலர் செய்கிறார்கள். அப்படியெல்லாம் செய்யவே கூடாது. அது பிரச்னையை இன்னும் அதிகமாக்கும். பாம்பினை அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம். எந்த பாம்பு கடித்தாலும் சரி, எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்கிறோமோ அவ்வளவு நல்லது. காலதாமதம் தான் ஆபத்தானது. சிறு சிறு கிராமங்களில்கூட தமிழக அரசு சிறப்பான முறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்தி வருகிறது. அங்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்துகள் எப்போதும் இருக்கும். Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சுண்ணாம்பு வைக்க வேண்டாம்! குளவி, தேனீ போன்ற பூச்சிகள் கொட்டிவிட்டால் அந்த இடத்தில் சுண்ணாம்பு வைக்க வேண்டாம். குளவி கொட்டினால் அதன் கொடுக்கு உடலில் மாட்டிக்கொள்ளும். அதனை கையால் எடுக்கிறேன் என அழுத்தினால் நஞ்சு உடலுக்குள் சென்றுவிடும். அப்படி செய்யாமல் ஸ்கேல் போன்ற ஒன்றை எடுத்து அதனை மெதுவாக முன்னும் பின்னும் அசைத்தாலே அவை முழுவதுமாக வெளியே வந்துவிடும். டாக்டர் சந்திரசேகரன் Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சுய மருத்துவம் கூடவே கூடாது! சிலர் அவர்களாகவே அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொள்வார்கள். என்ன பூச்சிக் கடித்தது; அதன் விஷத்தின் வீரியம் தெரியாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. ஒரு சில நேரங்களில் விஷம் ரத்தத்தில் கலந்து தீவிர ஒவ்வாமை (Anaphylaxis) ஏற்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிட சிரமப்படலாம், மயக்கமடைந்து விடலாம், அதிக வியர்வை ஏற்படலாம். அப்போது ரத்த அழுத்தம் குறைவாகும். இது உயிருக்குக்கூட ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு Adrenaline/ Epinephrine என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் குணமடையலாம். பூச்சிதானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்'' என்கிறார் டாக்டர் சந்திரசேகரன்.
Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிப்பது வெயிட்லாஸுக்கு உதவுமா?
Doctor Vikatan: உடல் எடையைக் குறைப்பவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிக்கிறார்கள். வேறு சிலரோ நெய்யை முழுமையாகத் தவிர்க்கிறார்கள். நெய் நல்லதா, கெட்டதா? அந்தக் காலத்தில் நெய் காய்ச்சும்போது அதில் முருங்கைக்கீரை சேர்த்து பொரித்துக் கொடுப்பார்கள். அது இந்தக் காலத்துக்கும் ஏற்றதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகளையும் 'க்ருதம்' என்ற பெயரில் நெய்யில் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். காரணம், நெய்யின் வழியே கொடுக்கும்போது அந்த மருந்தின் கிரகிப்புத்தன்மை சிறப்பாக இருக்கும். அதே சமயம், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது நெய்க்கும் பொருந்தும். நாம் உண்ணும் உணவானது எப்படி உட்கிரகிக்கப்படுகிறது, பிறகு அது எப்படி செரிக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். வைட்டமின்கள், மினரல்கள், குறிப்பாக கொழுப்பில் கரையும் மினரல்கள் போன்றவை கொழுப்புச்சத்து இருந்தால்தான் உடலுக்குள் சிறப்பாக உட்கிரகிக்கப்படும். ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்', அஜீரண பிரச்னை, வயிற்றுவலி உள்ளிட்ட குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுடன் இன்று நிறைய பேர் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். அவர்கள் நெய்யில் சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னைகள் கட்டுப்படுவதை உணரலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போரும் நெய் எடுத்துக்கொள்ளலாம். அது கொழுப்பு என்றாலும், எடைக்குறைப்புக்கு உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 மில்லி நெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதில் வெறும் 45 கலோரிகள்தான் இருக்கும். நெய்யை முழுவதும் தவிர்ப்பது தேவையற்றது. வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். Doctor Vikatan: பிறந்த குழந்தையின் உடலில் நெய், வெண்ணெய் தடவலாமா? அந்தக் காலத்தில் வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சும்போது கடைசியாக அது நுரைத்துவரும்போது சிறிது முருங்கை இலைகளைச் சேர்ப்பார்கள். அது படபடவென வெடிக்கும். அதைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும். முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பவுடர், கேப்ஸ்யூல் என அது பல வடிவங்களில் வருகிறது. அதையே நெய்யோடு எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும். 8 மாதக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தினமும் சிறிது நெய் எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். அது கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கண்களுக்கு ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு பார்வை நரம்புகளை வலுப்படுத்த இது உதவும். பார்வை தொடர்பான பிரச்னைகளையும் தவிர்க்கும். நெய் முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய்யை தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்பவர்கள், தினமும் இதை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குழந்தையின்மை பிரச்னையையும் சரியாக்கும். அடிக்கடி களைப்பாகிறவர்கள், எனர்ஜியே இல்லாமல் உணர்கிறவர்களுக்கும் இது மிகச் சிறந்தது. சருமத்தின் பளபளப்புக்கும் உதவும். ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதால், தினமும் இதை எடுத்துக்கொள்வதால் இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும். 'வெண்ணெய் காய்ச்சவெல்லாம் யாருக்கு இன்று நேரமிருக்கிறது... அதில் முருங்கைக்கீரை நெய் வேறா...' என்று சிலர் கேட்கலாம். முருங்கைக்கீரை இன்ஃபியூஸ்டு நெய் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. நேரமில்லாதவர்கள் தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பிறந்த குழந்தையின் உடலில் நெய், வெண்ணெய் தடவலாமா?
Health: வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா?
வை ட்டமின் பி12 குறைபாடுப் பற்றிய விழிப்புணர்வு சமீப வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. உடலுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு மைக்ரோ சத்து இந்த பி 12. பல உடல் உபாதைகளுக்கு ஆரம்பமாக விளங்குவது வைட்டமின் பி12 குறைபாடே. இந்தக் குறைப்பாட்டை பற்றியும் அவற்றைக் கண்டறியும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு வருவதற்கான காரணங்கள் என்ன? உடலுக்குத் தேவையான வைட்டமின்களை, நாம் பெரும்பாலும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்கிறோம். இவற்றில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க ஒன்று. வைட்டமின் பி12 தானியம் சார்ந்த உணவுகள், முட்டை, மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் ஆகியவற்றில் நிரம்பி காணப்படுகிறது. பெரும்பான்மையான வைட்டமின் பி12 குறைபாடு இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பெரும் அளவில் உட்கொள்ளாமல் இருப்பதாலும், காலை உணவு தவிர்ப்பதாலுமே வருகிறது. வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலும் எந்த வயதினரைப் பாதிக்கிறது? பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் பி12 குறைபாடு அதிகம் வருகிறது. ஏனெனில் இவர்கள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள தவறுவார்கள். இவர்களது உடலில் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதால், உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சப்படுவது குறைகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். வைட்டமின் பி12 குறைபாடு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சோகை ஏற்படும். மேலும் உடல் சோர்வு, கவனச்சிதைவு, பாத வலி, வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறுவது, படிப்பில் ஆர்வமின்மை, உடல் மெலிந்துக் காணப்படுவது போன்றவை வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள். Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?! ஒரு நாளுக்கு எத்தனை விட்டமின் பி12 மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்? நோய் தாக்கத்தினைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் எடுத்துக்கொண்டால், மாத்திரையில் உள்ள சத்துக்கள் சிறுநீரில் வெளியேற தொடங்கி விடும். பி 12 சத்தை ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் Health: வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து... வீணாகாமல் சாதம் வடிப்பது எப்படி? டயட்டீஷியன் விளக்கம்! வைட்டமின் பி12 மாத்திரையால் பக்க விளைவுகள் வருமா? வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சாக மாறிவிடும். இதைப் பார்த்து பயந்துவிட வேண்டாம். இது சாதாரணமான ஒன்றே. வைட்டமின் பி12 மருந்துகளால் பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. ரத்தப்பரிசோதனை மூலமாகவே வைட்டமின் பி12 குறைபாட்டினைக் கண்டறிந்துவிட முடியும் என்பதால், நான் மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பி 12 பரிசோதனை செய்து தீர்வை நாடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு 'நான் சரியான அம்மா இல்லையோ, சரியான மனைவி இல்லையோ, சரியான ஊழியர் இல்லையோ...' என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. எல்லா வேலைகளையும் முழுமையாகச் செய்கிறேனா என சந்தேகம் வருகிறது. இது எப்படிப்பட்ட மனநிலை? கோளாறு என்னிடம்தானா, இதற்கு மனநல சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் உங்களுக்கு இருப்பதைப் போன்ற மனநிலையை உளவியலில் ' சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்று சொல்கிறோம். அதாவது, சூப்பர்மேன் போல.... சூப்பர்வுமனாக இருக்க முயல்வது. சூப்பர்வுமன் சிண்ட்ரோம் உள்ள பெண்கள் அதிக வேலை செய்பவர்களாக, அதீத அர்ப்பணிப்பு உள்ளவர்களாக, அளவுக்கதிகமாக களைத்துப் போகிறவர்களாக, ஸட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். ஆறுதலான ஒரு விஷயம் என்ன தெரியுமா? உங்களைப் போன்ற சூப்பர்வுமென் இங்கே ஏராளம் பேர் இருக்கிறார்கள். Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா? அம்மாக்கள், வேலைக்குச் செல்கிறவர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம். இவ்வளவு ஏன்... பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்குக் கூட வரலாம் என்கின்றன ஆய்வுகள். ஒரு வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும்போது 'நான் சரியில்லையோ... இன்னும் அதிகம் ஓடணுமோ, உழைக்கணுமோ' என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். சுமக்கும் எல்லாப் பொறுப்புகளிலும் 'ஆகச் சிறந்தவள்' என்ற கிரீடத்துக்கு ஆசைப்பட்டு ஓடுகிற மனநிலையைத்தான் 'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்கிறது உளவியல். அப்படி ஆகச்சிறந்தவளாக தன்னை நிரூபிக்க முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதீத மன அழுத்தம் ஏற்படுவதையே இது குறிக்கிறது. 100 சதவிகிதம் பர்ஃபெக்ட் ஆக இருப்பது யாருக்கும் சாத்தியமற்றது. Imperfect is perfect too என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். 'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' எல்லாவற்றையும் தலையில் சுமக்கும் தியாகிப்பட்டம் தேவையற்றது. தேவைப்படும்போது உதவி கேளுங்கள். அடுத்தவர் உதவியோடு ஒரு வேலையைச் செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபெக்ஷன் இன்னும் அதிகரிக்கலாம். இயலாமையை வெளிப்படுத்துவதில் குற்ற உணர்வு தேவையில்லை. உங்களை அழுத்தும் விஷயங்களை, வேதனைகளை யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. எப்போதும் எல்லோருக்கும் 'யெஸ்' சொன்னால்தான் நீங்கள் நல்லவராக, வல்லவராக அறியப்படுவீர்கள் என்றில்லை. தேவைப்படும் இடங்களில் 'நோ' சொல்வதும்கூட உங்கள் ஆளுமையின் அழகான வெளிப்பாடுதான். இந்த மனநிலையிலிருந்து விடுபட தியானப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை உங்களுக்கு உதவலாம். உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி மன அழுத்தம் அதிகரிக்கும்போது மனநல சிகிச்சையை நாடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?
Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர்
இ ந்திய கலாசாரத்தில் இனிப்பு என்றாலே அதில் நெய்யும் இருக்கும். சர்க்கரையுடன் நெய் சேர்த்து செய்யும் இனிப்புகள் ’ப்பா….. என்ன சுவை’ என்பதற்கு ஏற்ப வாயில் போட்டவுடன் கரைந்து விடும். இன்றைய அவசர காலத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இனிப்புகளை செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால் பலரும் தீபாவளிக்குக்கூட கடைகளில் தான் இனிப்புகளை வாங்குகிறார்கள். நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது? இனிப்புப்பண்டங்களில் ’நெய் மிதக்க’ என்ற சொல்லை நாம் கேட்பதுண்டு. ஆனால், அதில் நெய் மட்டும்தான் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்விக்குறி. பல கடைகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதியைதான் நிறைய உணவுகளில் பயன்படுத்துகிறார்கள். ’வனஸ்பதி என்பது தாவர எண்ணெய்தானே; அதில் என்ன கெடுதல் இருந்து விடப் போகிறது’ என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. வனஸ்பதி உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் குறித்து சித்த மருத்துவ டாக்டர் விக்ரம் குமார் அவர்களிடம் கேட்டறிந்தோம். வனஸ்பதி என்றால் என்ன? இந்தியாவில் வனஸ்பதி ’டால்டா’ என்ற பெயரால்தான் அறியப்படுகிறது. முழுமையாகவோ அல்லது பகுதியாகவவோ ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணையைதான் வனஸ்பதி என்கிறார்கள். ஹைட்ரஜனேற்றம் என்பது தாவர எண்ணெயில் ஹைட்ரஜனைச் சேர்க்கும்போது, அது அறை வெப்பநிலையில் திடக்கொழுப்பாகி வெண்ணெய் போன்று மாறும். நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது? வனஸ்பதி எப்படி உடலுக்கு கெடுதல் ஆகிறது? ஹைட்ரஜனேற்றம் செய்யும்போது தாவர எண்ணெயிலுள்ள மூலக்கூறுகள் மாறுபாடு அடைவதால், ட்ரான்ஸ் (trans fat) கொழுப்பு அமிலங்களாக மாறுகிறது. இதை உணவுடன் சேர்த்து நாம் எடுத்துக்கொள்ளும்போது அதிக அடர்த்திக்கொண்ட (high density lipoprotein) நல்ல கொழுப்பின் அளவைக்குறைத்து, குறைந்த அடர்த்திக்கொண்ட ( low density lipoprotein) கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. என்னென்ன உடல்நல பிரச்னைகள் வரும்? இதய நோய் – கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதால் உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. இதனால் இதயத்தில் அடைப்பு மற்றும் செயலிழப்பு போன்ற இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நீரிழிவு நீரிழிவு நோய் - உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் நபர்களின் உடலில் இந்த ட்ரான்ஸ் கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக அமைகிறது. உடல் பருமன் - தாவர எண்ணெயில் காணப்படும் அதிக கலோரி காரணமாக ட்ரான்ஸ் கொழுப்புகள் வயிற்றுப்பகுதியில் படிந்து உடல் பருமனுக்கு காரணமாகிறது. புற்றுநோய் - வனஸ்பதியின் தொடர்ச்சியான பயன்பாடு குடல் பகுதிகளில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு தூண்டுதலாக அமைகிறது. மேலும், பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். வனஸ்பதி கண்பார்வை பாதிப்பு - கண் பார்வைக்கு தேவையான லினோலினிக் அமில உற்பத்தியை, வனஸ்பதியில் இருக்கிற டிரான்ஸ் கொழுப்புகள் தடை செய்வதால், குழந்தைகளின் கண் பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்தும். நோய்கள் வராமல் தடுக்கும் பசு நெய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்? அலர்ஜி மற்றும் ஒவ்வாமை - அதிகப்படியான வனஸ்பதி நுகர்வால் வாந்தி, செரிமானக்கோளாறுகள் போன்றவையும் தோல் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளையும் ஏற்படும். சித்த மருத்துவர் - விக்ரம் குமார். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: சில உற்பத்தியாளர்கள் வியாபார நோக்கில் வனஸ்பதியை அதிக அளவில் உணவுகளில் சேர்த்து தயாரிக்கின்றனர். இதைத் தடுப்பதற்கு வழிகள் இல்லை என்றாலும் தவிர்க்கலாம். பேக்கரிகளில் கிடைக்கும் பிஸ்கட், பஃப்ஸ் போன்றவையும், மார்கரின் மற்றும் திரையரங்குகளில் கிடைக்கும் பாப்கார்ன் வகைகள், காபி கிரீமர்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதே சிறந்தது. வேண்டுமென்றால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் டாக்டர் விக்ரம் குமார். Ghee: `நெய்யை டைனிங் டேபிள்ல வெச்சு சாப்பிடாதீங்க; ஏனெனில்...' Health Tips
Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?
Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போது அதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால் எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்பை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அதை நீக்கிவிடுமாறும் சொல்கிறார். என்னுடைய தோழிகள் சிலரும் இதுபோல வேறு வேறு பிரச்னைகளுக்காக கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்கள். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை என்றாலே, கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா...? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் கர்ப்பப்பையை அகற்றுவது தீர்வாகாது. அது அவசியமும் இல்லை. எனவே, முதலில் உங்களுக்கு பீரியட்ஸின் போது அதிக ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதற்கேற்பவே சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும். ஸ்கேன் செய்து பார்த்து ஃபைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து அடினோமயோசிஸ் பாதிப்பு இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும். அடினோமயோசிஸ் (Adenomyosis) என்றால் கர்ப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும். அதுதான் அடினோமயோசிஸ். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கர்ப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின் போது கடுமையான வலியும் இருக்கும். பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. கர்ப்பப்பையின் லைனிங்கான எண்டோமெட்ரியம் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு டி அண்ட் சி செய்து பார்க்கலாம். மேற்கூடிய பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு உங்கள் மருத்துவர் கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுக்கிறாரா எனப் பாருங்கள். கர்ப்பப்பையோடு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் இளம் வயதில் அகற்ற மாட்டோம். அந்த சினைப்பைகள்தான் பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை கொடுப்பவை. மெனோபாஸ் வயதுவரை சினைப்பைகளிலிருந்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். எனவே, சினைப்பைகளில் எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் அவற்றை விட்டுவிட்டு, கர்ப்பப்பையை மட்டும் நீக்கிக்கொள்ளலாம். கர்ப்பப்பையை அகற்றுவது அவசியமா என்பது குறித்து நீங்கள் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளுடன் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டு, பிறகு முடிவு செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். மார்பகம்... கர்ப்பப்பை... சினைப்பை... பெண்ணுறுப்பு... பெண்களை பாதிக்கும் புற்றுநோய்கள்..!
Smoothy: நாம் ஏன் ஸ்மூத்தீஸ் அருந்த வேண்டும்? செய்முறையும் பலன்களும்!
`ஸ்மூத்தி' வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களுக்கும் ஏற்றது. பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட ஸ்மூத்தியாகச் செய்து அருந்தும்போது, முழுப் பலனைப் பெறலாம். ஸ்மூத்தியில், இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள், உலர்ந்த பழங்கள், இயற்கை சுவையூட்டிகள் உள்ளதால், மல்ட்டி வைட்டமின் சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கடைகளில் தயாரிக்கப்படும் ஸ்மூத்தியில் சர்க்கரை, பால் சேர்க்கப்படுகிறது. இது நல்லது அல்ல. வீட்டிலேயே பால் சேர்க்காமல், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். இளநீர் - திராட்சை ஸ்மூத்தி இளநீர் - திராட்சை ஸ்மூத்தி தேவையானவை: இளநீர் - 1 கப், இளநீர் வழுக்கை - 1/4 கப், நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு, ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன், பச்சை திராட்சை - 3. செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒருசுற்று சுற்ற வேண்டும். இதனுடன், சப்ஜா விதை, நறுக்கிய பச்சை திராட்சைகளைத் தூவிப் பறிமாறலாம். பலன்கள்: இளநீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துக்கள் உள்ளன. இவை வறண்ட சருமத்தைப் போக்கி, தோலைப் பளபளப்பாகும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும். நா வறட்சியைப் போக்கும்; உடல்சூட்டைத் தணிக்கும். திராட்சையில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. தாகத்தைத் தணிக்கும்; ரத்த விருத்திக்கு உதவும். பிளம்ஸ் - தக்காளி ஸ்மூத்தி பிளம்ஸ் - தக்காளி ஸ்மூத்தி தேவையானவை: பழுத்த பிளம்ஸ் - 6, தக்காளி - 1, வெல்லப்பாகு - தேவையான அளவு, உலர் கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1/2 டீஸ்பூன். செய்முறை: உலர் கிர்ணி விதையை நெய்யில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பிளம்ஸை நறுக்கி, கொட்டை நீக்கிக்கொள்ளவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து, மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, கிர்ணி விதைப் பொடியைத் தூவிப் பருகலாம். பலன்கள்: பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டாகரோட்டின் உள்ளன. பார்வைத் திறனை மேம்படுத்தும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும். இதயத்துக்கு நல்லது. உடல் புத்துணர்வு பெறும். தக்காளியில் வைட்டமின் ஏ, பி சிறிதளவும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். உடலுக்கு உறுதியளிக்கும். பலா - ஆரஞ்சு ஸ்மூத்தி பலா - ஆரஞ்சு ஸ்மூத்தி தேவையானவை: பலாப்பழச் சுளைகள் - 3, கமலா ஆரஞ்சுச் சுளைகள் (உரித்தது) - 2, ஆப்பிள் பழம் - 2 துண்டுகள், கருப்பட்டிப் பாகு - தேவையான அளவு. செய்முறை: பலாச் சுளைகளுடன் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் கருப்பட்டிப் பாகு கலக்க வேண்டும். மற்றொரு டம்ளரில் உரித்த ஒரு கமலா ஆரஞ்சு சுளையைப் போட்டு அதனுடன் பலாச் சாற்றை ஊற்ற வேண்டும். மேலே மீதமுள்ள கமலா ஆரஞ்சுச் சுளையைப் போட்டுப் பறிமாறலாம். பலன்கள்: பலாப்பழத்தில், வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சிறிது உள்ளது. கண் நோய் வராமல் தடுக்கும். ஜீரண உறுப்புகளைச் சீராக்கும். இந்த ஸ்மூத்தியை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். கிவி-குல்கந்து ஸ்மூத்தி கிவி-குல்கந்து ஸ்மூத்தி தேவையானவை: கிவிப்பழம் - 4, குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன், நீரில் ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன். செய்முறை: தோல் சீவிய கிவிப்பழத்தை குல்கந்து சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைப் போட்டு, அரிந்த வாழைப்பழம் சேர்த்துப் பருக வேண்டும். பலன்கள்: கிவிப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சருமம் பளபளப்பாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா ஸ்மூத்தி கொய்யா ஸ்மூத்தி தேவையானவை: பழுத்த கொய்யாப்பழம் - 2, மாதுளை முத்துக்கள் - 1/2 கப், பனங்கற்கண்டு பொடித்தது - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கொய்யாப்பழத்தை கழுவி, நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் மாதுளை முத்துக்களைச் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன், பனங்கற்கண்டு சேர்த்து, சில மாதுளை முத்துகளை மேலே தூவிப் பருகலாம். பலன்கள்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்கு நல்ல பலன் தரும். மாதுளை விதைகளைச் சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி தேவையானவை: தோல் மற்றும் விதை நீக்கிய பப்பாளித் துண்டுகள் - 2 கப், பழுத்த தக்காளி - 1, வெல்லப்பாகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன். செய்முறை: பப்பாளித் துண்டுகளையும் தக்காளிப் பழத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இதில் கிர்ணி விதைகளைத் தூவிப் பரிமாறலாம். பலன்கள்: பப்பாளி குறைவான கலோரி கொண்டது. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பார்வைத்திறன் மேம்பட, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு இந்த ஸ்மூத்தி உதவும். 100 கிராம் பப்பாளியில் மட்டும் ஒருநாளுக்கு தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. தக்காளியிலும் வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதில், பயோட்டின் உள்ளதால், சருமம், முடி வளர்ச்சிக்கு உதவும். டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி தேவையானவை: உலர்ந்த திராட்சை - 1 கப், உலர்ந்த அத்திப்பழம் - 4, பேரீச்சம்பழம் - 5, பேரீச்சம்பழ சிரப் - 2 டேபிள்ஸ்பூன், வால்நட் - 2, உலர்ந்த பாதாம் - 2, ஏலக்காய் - 1. செய்முறை: உலர்ந்த திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், வால்நட், பாதாம், அத்திப்பழத்தை நீரில் சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து, ஊறவைத்தவற்றை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். ஆறிய பின், அதை மிக்ஸியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, இதனுடன் பேரீச்சம் சிரப் கலந்து, உலர்ந்த திராட்சையை மேலே தூவிப் பருகலாம். பலன்கள்: இதில், புரதச்சத்து, ஒமேகா 3, வைட்டமின்கள் ஏ, பி, தாமிரம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ரத்தசோகையைப் போக்கும். உடலுக்கு வலுவைத் தரும். எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், குழந்தைகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி தேவையானவை: மாதுளை முத்துகள் - 1 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 1 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாதுளையுடன் சிறிதளவு நீர்விட்டு, ரோஜா இதழ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன் கலந்து, சிறிது ரோஜா இதழ்களைத் தூவிப் பரிமாறலாம். பலன்கள்: மாதுளையில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. பித்தம், குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும். பன்னீர் ரோஜா இதழ்கள் தாகம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மாதுளை விதைகள் ரத்தத்தைப் பெருக்கும். இதயத்துக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி தேவையானவை: கிர்ணிப்பழம் சிறியது - 1, நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு - 5, வெல்லப்பாகு - தேவையான அளவு, காய்ந்த கிர்ணிப்பழ விதைகள் - 1 டீஸ்பூன். செய்முறை: வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்லப்பாகாக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் தோலை உரித்து, நறுக்கிய கிர்ணிப்பழத்தை உடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் வெல்லப்பாகு சேர்த்துக் கலந்து, கிர்ணி விதையைத் தூவிப் பருகலாம். பலன்கள்: கிர்ணிப்பழத்தில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். வைட்டமின் பி, சி ஓரளவு இருப்பதால், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், ரத்தசோகை, பித்தப்பைக்கல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.
Doctor Vikatan: நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம்.. முதுமை தோற்றத்தை தள்ளிப்போட எது பெஸ்ட்?
Doctor Vikatan: தினமும் இரவில் முகத்துக்கு க்ரீம் தடவ வேண்டுமா... அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்.... நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா... எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா தினமும் காலையில் எழுந்ததும் முகம் கழுவுவது, குளிப்பது, பிறகு மேக்கப் செய்துகொள்வது என சில விஷயங்களை ரொட்டீனாக செய்கிறோம். அதைப் போலவே நைட் ரொட்டீனும் மிக முக்கியம். உங்கள் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து நைட் க்ரீம், சீரம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அன்றைய தினம் சருமத்துக்கு உபயோகித்த சன் ஸ்கிரீன், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டியது மிகமிக முக்கியம். முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். மேக்கப் போடும்பட்சத்தில் டபுள் கிளென்ஸ்கூட செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். இப்படி முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்துக்கு மீண்டும் அதற்கான மாய்ஸ்ச்சரைசரை கொடுக்க வேண்டும். இதுபோன்றதொரு நைட் ரொட்டீன் அனைவருக்கும் அவசியம். நைட் க்ரீமில் பல வகைகள் உள்ளன. எது, யாருக்கு என்பது வயதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 20 முதல் 25 வயது வரை வெறும் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் போட்டாலே போதுமானதாக இருக்கும். பருக்கள், மங்கு போன்ற ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்தப் பிரச்னைக்கேற்ற நைட் க்ரீமை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் என இவற்றை ஆக்டிவ்ஸ் என்று சொல்வோம். எந்தப் பிரச்னைக்கான ஆக்டிவ் என்பது தெரிந்து அது உள்ள நைட் க்ரீமை பயன்படுத்தும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும். 25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. 25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. சருமம் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கும். ஆனாலும், வயதாக, ஆக அந்தத் தன்மை குறைய ஆரம்பிக்கும். வெளிப்புறத்திலிருந்து அதைக் கொடுக்கும்விதமாக ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிக்கலாம். ஆன்டிஏஜிங் தன்மை உள்ளது என்றால், அதில் ரெட்டினாலுக்கு முதலிடம் உண்டு. Skincare Tips வயதுக்கேற்ப அதன் சதவிகிதம் மாறும். அதைப் பயன்படுத்தவென குறிப்பிட்ட வழிகளும் உள்ளன. சரும மருத்துவரை அணுகினால், உங்களுக்கான சரியான நைட் க்ரீமையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்வார். சீரம் என்பது நிறைய நல்ல தன்மைகளைக் கொண்ட சிறிய அளவிலான திரவ வடிவில் இருக்கும். இதை மிகக் குறைவாக உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும். சுத்தமான சருமத்தில் முதலில் சீரம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்தில் ஊடுருவிய பிறகு ஹைட்ரேட்டிங் தன்மையுள்ள மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் உபயோகிக்கலாம். ரெட்டினால் இருந்தாலே அது ஆன்டிஏஜிங் க்ரீம்தான். அத்துடன் பெப்டைட்ஸ், வைட்டமின் சி போன்றவை சேரும்போது இன்னும் முழுமையானதாக அமையும். காலையிலிருந்து இரவு வரை சருமம் சந்தித்த பாதிப்புகளைச் சரிசெய்ய நைட் கேர் ரொட்டீன் மிக மிக முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நடிகை குஷ்பூ சொன்ன கேரட் - தேங்காய் எண்ணெய் கலவை... சருமத்தை இளமையாக்குமா?
Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா?
இ ன்றைய பரப்பரப்பான உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்போட்டுக்கொண்டே இருக்கிறது. முடி உதிர்வதைத் கூட நம்ப இளசுங்க சகிச்சிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அந்த நூற்றுக்கணக்கான முடியில ஒரு முடி வெள்ளையா இருந்துட்டா போதும். பேரிடி தலையில விழுந்த மாதிரி புஸ்சுனு போயிடுவாங்க. உடனே அந்த வெள்ளை முடியை புடுங்கி வீசுறது, தலைக்கு சாயம் பூசுறது, விளம்பரத்துல காட்டுற ஷாம்பு எல்லாம் வாங்கி தலைக்குப் போடுறதுனு கண்ணாடி முன்னாடியே நிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டீ, காபி குடிக்குறதுனாலதான் இளநரை வருதுன்னு நம்பி அதை குடிக்குறதைக்கூட நிறுத்திடுவாங்கன்னா பார்த்துக்கோங்க. இளநரை சரி, டீ, காபி குடிச்சா இளநரை வரும்னு சொல்றது வெறும் வாய்வார்த்தையா அல்லது உண்மையா? மருத்துவ காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்று சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ அவர்களிடம் கேட்டோம். டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா? ''டீ, காபி எடுத்துக்கொள்வதற்கும் முடி நரைப்பதற்கும் நேரடித்தொடர்பு இல்லை. ஆனால், மறைமுகமானத் தொடர்பு உள்ளது. டீ. காபியில் காஃபைன் அதிகளவு இருக்கும். இதனை நாம் அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது, அது தலைமுடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இளநரை ஏற்படும். ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ இளநரை ஏற்படுவதற்கான பிற காரணங்கள்? ஆக்ஸ்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் (oxidative stress) காரணமாகவும் இளநரை ஏற்படும். ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் என்பது உடலில் கழிவுகள் (free radicals) அதிகளவில் உருவானதால், அவற்றை தடுக்க உடலின் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidant) திறன் போதிய அளவில் இல்லாத நிலையைக் குறிக்கும். இது செல்கள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தம். மனிதர்கள் சரியாக புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை கடைப்பிடித்தல் அவசியம். ஆனால், அதிகப்படியான டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது ஒருவேளை உணவைத் தவிர்ப்போம். அல்லது குறைந்த அளவு உணவு மட்டுமே எடுப்போம். இதனால், அவர்கள் உடலில் ஆக்சிஜன் அழுத்தம் உண்டாகி செல் பாதிப்பு நிகழும். இது, தலைமுடிக்கு நிறத்தை வழங்கக்கூடிய மெலனின் செல்களையும் பாதிக்கும். இதனாலும் இளநரை ஏற்படும். `CT ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வருமா? - பகீர் கிளப்பிய ஆய்வும் மருத்துவர் தரும் விளக்கமும்! மரபும் காரணமா? மிக முக்கியமான ஒன்று மரபியல் காரணம். தாத்தாவிற்கோ, பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ இளநரை பிரச்னை இருந்திருந்தால் அவர்களுடைய சந்ததியினருக்கும் இளநரை ஏற்படும். இதை பல ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. தவிர, புகைப்பழக்கம், போதைப்பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் இளநரை பிரச்னை ஏற்படும். மரபணு தீர்வுகள் என்னென்ன? இளநரைப் பிரச்னைக்கு தீர்வு நம்மிடம்தான் உள்ளது. டீ, காபி அதிகம் எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதை நாளொன்று ஒன்று அல்லது இரண்டு கப் என குறைத்துக்கொள்ள வேண்டும். கூடவே தினமும் உடற்பயிற்சி செய்வது, வயதுக்கு ஏற்ற நிம்மதியான தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது போன்றவை மிக அவசியம். கூடவே மன அழுத்தம் இருந்தால் அதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இளநரை ஏற்படுவதை தவிர்க்க முடியும்'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்திய ஶ்ரீ. இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
90 's கிட்டோ , 2K கிட்டோ இன்றைய இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் பிரச்னைகளின் பட்டியலில் பரவலாக இருப்பது முதுகுவலி. இளைஞர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படியே வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னாலும், 'ஓடுற பாம்பை எட்டி புடிக்குற வயசுல ஓடி ஆடி வேலைபாக்காம 70 வயசு கிழவனாட்டம் என்ன முதுகுவலின்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்க' என்று ஏளனம் பேசுவார்கள். இல்லையென்றால், 'சரியா தூங்குறது இல்ல, எந்த நேரமும் செல்போனையே பார்த்துட்டு இருக்க; ரொம்ப நேரம் வண்டி ஓட்டிட்டுப் போற; நாள் முழுக்க உக்காந்துட்டே வேலைபாக்குற அதான் முதுகுவலி வந்திருக்கு' என்று மருத்துவம் படித்தவர்கள் மாதிரி பேசுவார்கள். இவர்களுக்கிடையே 'கால்சியம் சத்து எலும்புல குறைவா இருக்கும்' என்று டாக்டர் ஆலோசனை இல்லாமலே மாத்திரைகளை வாங்கி முழுங்குகிற கூட்டமும் இருக்கிறது. முதுகுவலி சரி, இளம்வயதிலேயே ஏற்படக்கூடிய முதுகுவலியை, தானாக சரியாகி விடும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? அப்படி இருந்தால் எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பதை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் சௌத்ரி. முதுகுவலியின் 2 வகை! ''முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முதுகுவலி பிரச்னையை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். ஒன்று இயந்திர முதுகுவலி (mechanical back pain), மற்றொன்று நோயியல் முதுகுவலி (pathological back pain). தசைகள், தசைநார்கள் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் நிலையைப் பொறுத்து ஏற்படும் வலியை இயந்திர முதுகுவலி என்று குறிப்பிடுவோம். நோயியல் முதுகுவலி என்பது, முதுகுப்பகுதியில் ஏதேனும் நோய் இருப்பின் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வலி. சில நோய்த்தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்? நம் முதுகு எலும்பு 33 குருத்தெலும்புகளால் ஒன்றிணைந்தது. இந்த எலும்புகளின் இடையே DISC என்றழைக்கக்கூடிய சவ்வுப்பகுதி அமைந்திருக்கும். அதிகளவு பளுவைத்தூக்குவது, நீண்ட நேரம் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது, தசைகள் பலவீனமாக இருப்பது போன்ற காரணங்களால் எலும்புகளுக்கு இடையில் இருந்து இந்த சவ்வுப்பகுதி வெளியே வந்து நீண்டு விடும். இதற்கு வட்டு நீட்டிப்பு (disc bulge) என்று பெயர். இந்த சமயங்களில் கடுமையான முதுகுவலி ஏற்படும். கூடவே இந்த வலியானது கை, கால்களுக்கும் பரவி கால்களை மரத்து (உணர்ச்சியற்று) போகவும் செய்யும். இது முதல் காரணம். Heel Pain: குதிகால் வலி போக்கும் எருக்கு இலை...எப்படி பயன்படுத்துவது? ஸ்போண்டிலோலிஸ்டெசிஸ் (Spondylolisthesis) என்றழைக்கக்கூடிய முதுகெலும்புகள் ஒன்றின் மீது மற்றொன்று நகர்வது போன்ற காரணங்களாலும் முதுகுவலி ஏற்படும். இது இரண்டாவது காரணம். காசநோய் (TB) என்றாலே நுரையீரலைத்தான் பாதிக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. காசநோய் முதுகுத்தண்டையும் பாதிக்கும். தவிர, சில நோய்த்தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். இவை மூன்றாவது மற்றும் நான்காவது காரணங்கள். முதுகுவலி முதுகெலும்பு மற்றும் இடுப்புக்கு நிலைத்தன்மையை வழங்கும் மைய தசைகள் (core muscles) மற்றும் முதுகெலும்பை இடுப்பு உடற்பகுதியுடன் இணைத்து இயங்க வைக்கும் முதுகு தசைகள் (spain muscles) ஆகியவை பலவீனமாக இருந்தாலும் முதுகுவலி ஏற்படலாம். இது ஐந்தாவது காரணம். Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! கால்சியம் மாத்திரை தீர்வு தருமா? பெரும்பாலான இளைஞர்கள் இந்த முதுகுவலி பிரச்னை வந்தாலே, அடுத்தவர்களின் அட்வைஸை கேட்டோ அல்லது விளம்பரங்களைப் பார்த்தோ, எங்களுடைய பரிந்துரை இல்லாமல் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். முதுகுவலி உண்மையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்பட்டிருந்தால் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால், வேறொரு பிரச்னையால் வலி ஏற்பட்டு இருந்தால் இந்த சத்து மாத்திரை பலன் தராது. டாக்டர் ராஜேஷ் சௌத்ரி தீர்வுகள் என்னென்ன? முதுகுவலி பிரச்னையை ஆரம்ப காலங்களில் கண்டறிந்தால் மருந்துகள் மூலமோ, பிசியோதெரபி சிகிச்சை மூலமோ, அல்லது சிறிய அறுவை சிகிச்சை மூலமோ குணப்படுத்திவிட முடியும். ஆனால், அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் அது எலும்பு தேய்மானம், முதுகெலும்பு வளைந்து விடுவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற மிக மோசமான நிலையை அடையக்கூடும். முதுகுவலி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே சரி'' என்கிறார் டாக்டர் ராஜேஷ் சௌத்ரி. தலையணைக்கும் கழுத்து வலிக்கும் தொடர்பு இருக்கிறதா?
மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242
தி ருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆன தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் வருகிற பிரச்னையைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசவிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ''அந்த நபர் நாற்பதுகளின் மத்தியில் இருப்பார். பலமுறை எங்கள் மருத்துவமனை வரை வந்துவிட்டு, உள்ளே வர சங்கடப்பட்டுக்கொண்டு சென்று விடுவாராம். என் அனுபவத்தில் இப்படிப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறேன். உங்கள் காய்ச்சல் சரியாக அதற்கான மருத்துவரைப் பார்ப்பதுபோலதான், பாலியல் பிரச்னைகளுக்கு ஒரு பாலியல் மருத்துவரை சந்திப்பதும். விஷயத்துக்கு வருகிறேன். நன்றாக சென்றுகொண்டிருந்த தாம்பத்திய வாழ்க்கை சில வருடங்களாக கொஞ்சம்கூட மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் அவருடைய பிரச்னை. விசாரித்ததில், அவருடைய இரண்டு மகள்களும் டீன் ஏஜில் இருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகள்களுடன் உறங்க ஆரம்பித்திருக்கிறார். இவர் ஹாலில். ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 Sexual வழிகாட்டல்கள்! | காமத்துக்கு மரியாதை - 238 மகள்கள் குழந்தைகளாக இருந்தவரை, கணவன் - மனைவி இருவருமே வாரத்தில் பல நாள்கள் தாம்பத்திய உறவு கொண்டிருக்கிறார்கள். நான், பல கட்டுரைகளில் குறிப்பிடுவதுபோல இது மிக நல்ல விஷயம். ஒரு தாம்பத்திய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், மகள்கள் வளர்ந்தபிறகு அவருடைய மனைவி, 'பிள்ளைங்க திடீர்னு முழிச்சிக்கிட்டா அசிங்கமாகிடும்; பிள்ளைங்க கதவை திறந்துட்டு திடீர்னு வெளியே வந்துட்டா; அதுங்க கண்ல ஏதாவது தப்பா பட்டுட்டா வழி மாறிப் போயிடுங்க' என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார். உறவையும் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். விளைவு, கணவனும் மனைவியும் மாதக்கணக்கில் உறவுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது கணவன் - மனைவிக்குள் பிரச்னையாக எழ ஆரம்பித்திருக்கிறது. Couple (Representational Image) ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான். ஒருகட்டத்தில், மனைவிக்கு உடலில் ஏதோ பிரச்னை; அவளுக்கு செக்ஸில் விருப்பமில்லாமல் போய்விட்டது; தன்னை வெறுக்கிறாள்; அதனால்தான், மகள்களின் மேல் பழியைப் போட்டு தன்னைத் தவிர்க்கிறாள் என நினைக்க ஆரம்பித்திருக்கிறார். கூடவே, தான் பல மாதங்கள் உறவே இல்லாமல் இருப்பதால், தன்னுடைய ஆண்மைக் குறைந்துக்கொண்டிருக்கிறது என்றும் நம்ப ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் என்னை சந்திக்க வந்திருந்தார். அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239 பரிசோதனை செய்துபார்த்ததில், அவர் நினைத்துக்கொண்டிருந்ததுபோல அவருக்கு பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை, வயதுக்குரிய சின்னச்சின்ன பலவீனங்களைத் தவிர்த்து. டாக்டர் காமராஜ் அதற்கான சிகிச்சைகளை மட்டும் அளித்துவிட்டு, உடனடியாக, இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு மாறுங்கள். உங்களுடைய பிரச்னை தீர்ந்துவிடும் என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான். பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியறையில் உறங்க ஆரம்பியுங்கள். அதுதான், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். `குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?' காமத்துக்கு மரியாதை - 241
விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 1,240 படுக்கைகள் உள்ளன. உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்காக 'ரெனால்ட் நிசான் டெக்னாலஜி', 'பிசினஸ் சென்டர் இந்தியா' நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அமைப்பு கடந்த 2022 -23ல் அமைக்கப்பட்டது. மேலும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தானியங்கி பிளான்ட் என்.எல்.சி., நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்தும் கடந்த 2021-22 இல் ஒரு பிளான்ட் அமைக்கப்பட்டது. இவற்றில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் இருந்து பகலில் உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் பிளான்ட் இரவில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 21-ம் தேதி உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையில் 25 நிமிடங்கள் தடை ஏற்பட்டது. இதையடுத்து செலியர்கள், மருத்துவர்கள் சுதாரித்து ஆக்ஸிஜன் பிளான்ட்டின் வால்வு அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டறிந்து சரிசெய்து விநியோகம் சீரமைக்கப்பட்டது, விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன? போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிப் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், திரவ ஆக்ஸிஜன் பிளான்ட் அமைந்துள்ள பகுதிக்கு ஒருவர் சென்று வந்தது தெரிய வந்தது. போலீஸாரின் விசாரணையில் அவர், மல்லாங்கிணறுவைச் சேர்ந்த சரவணக்குமார் என்பதும், ஆக்ஸிஜன் பிளான்ட் பராமரிப்பாராகப் பணிபுரிந்ததும் தெரிய வந்தது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் நீக்கப்பட்ட 132 ஊழியர்களில் இவரும் ஒருவர் என்பது தெரிந்தது. அவர் வேலையிழந்ததால் மனவேதனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் வால்வை அடைத்தது தெரிந்தது. விருதுநகர் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலரான மருத்துவர் கணேஷ், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார், சரவணகுமாரைக் கைது செய்ததுடன் அவர் மீது குற்றவியல் அத்துமீறல், தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு தடுப்பு) சட்டம் - 2008 இன் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் கவனித்ததால் சில நிமிடங்களிலேயே மீண்டும் ஆக்சிஜன் வால்வு திறக்கப்பட்டு, பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன் பெரும் உயிர் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
Apollo: 'மூட்டுப் பாதுகாப்புத் திட்டம்'அறிமுகப்படுத்திய அப்போலோ
அப்போலோ மருத்துவமனை (Apollo Hospitals) இன்று சென்னையில் அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (Apollo joint Preservation Program) என்ற மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் எலும்பியல் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில் பல அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புதுமையான மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த மூட்டுப் பாதுகாப்பிற்கான மருத்துவ பராமரிப்பை முழுமையாக வழங்கும் பிரத்தியேக முனமுயற்சியாகும் மூட்டுப் பகுதியில் உருவாகும் ஆரோக்கிய பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையிலான சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மூட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மூட்டுப் பகுதியின் அசைவு மற்றும் இயக்கத்தையும் பராமரிக்க முடியும் தேவையில்லாத அறுவைச் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். வழக்கம் போல் தங்களது அன்றாட வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்னெடுக்க முடியும். மூட்டுப் பாதுகாப்புத் திட்டம்: அறிமுகப்படுத்திய அப்போலோ இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும். எம். ஆர்.எஃப் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளருமான திரு எம். செந்தில்நாதன் (Mr M. Senthilnathan Head Coach Tamil Nadu Men's Cricket Team and Head Coach, MRF Pace Foundation) L លក់គ្រ சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர்களான டாக்டர் என். சிதம்பரநாதன் மூத்த கதிரியக்க Dr. N. Chidambaranathan, Senior Consultant Radiologist), டாக்டர் நவலடி சங்கர் மூதத எலும்பியல் அறுவை சிகிச்சை (Dr. Navaladi Shankar, Senior Consultant Orthopaedic Surgeon), LL Ca கோசிகன் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் [IDr K.P Kosygan, Senior Consultant Orthopaedic Surgeon: டாக்டர் மதன் மோகன் ரெட்டிமூத்த ஆலோசகர் மூட்டு மாற்று & ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் Dr.Madan Mohan Reddy, Senior Consultant Joint Replacement & Arthroscopic Surgeon, கண்ணன் மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரும் பங்குபெற்றனர். சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அருண் கணணன (Dr Arun Kannan, Senior Consultant Orthopaedic Surgeon, Apollo Hospitals, Chennai) அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (The ApolloJoint Preservation Program) என்பது மூட்டுப் பராமரிப்பை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியிருக்கும் முன்முயற்சி திட்டமாகும். இது நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையில்லாத மேம்பட்ட அதிநவீன சிகிச்சை முறைகள் advanced non-invasive treatments) மற்றும் குறைந்தபட்ச அறுவை மூலம் மேற்கொள்ளப்படும் ஊடுருவல் சிகிச்சைகளை Iminimally invasive treatments) Qu உதவுகிறது. இவை அவர்களின் உடல் இயக்கத்தை பராமரிக்கவும். வலியைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மூட்டு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. அறுவை சிகிச்சையை முடிந்தளவிற்கு தாமதப்படுத்துவது மட்டுமல்ல, தனிநபர்கள் முடிந்தவரை நீண்ட காலம் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்றார். தமிழ்நாடு ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும். எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளருமான திரு எம் ល់ (Mr. M. Senthilnathan, Hand Coach Tamil Nadu Men's Cricket Team and Head Cosch MRF Pace Foundation பேசுகையில், பரபரப்பாக கிரிக்கெட் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் முதல் வழக்கம் போல் தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் வரை அனைவருக்கும் மூட்டுகள் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டியது அவசியம் மூட்டுப் மராமரிப்பில் ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுடன் கட்டமைக்கப்பட்ட முழுமையான பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இது போன்ற திட்டங்கள் வயதாகும்போது மக்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் அப்போலோ மருத்துவமனைகள் மூட்டு பராமரிப்புக்காக இந்த நிபுணத்துவமிக்க அணுகுமுறையை முன்னெடுத்து இருப்பது கமளிக்கும் அமைந்திருக்கிறது என்றார். மூட்டு வலி ஆர்த்திரிட்டிஸ் வீக்கம் அல்லது விளையாட்டு தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்க்காகவே மிக பிரத்தியேகமாக அப்போலோ மூட்டுப் The Apollo joint Preservation Program வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே தளத்தின் கீழ் அதிநவீன சிகிச்சைகள், மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆதரவு ஆகியவற்றை எளிதில் பெறுவதன் மூலம் இப்போது சென்னையில் மூட்டு வலியால் அவதிப்படுவர்கள் தங்கள் மூட்டுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இந்த புதிய மூட்டுப் பராமரிப்புத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தி இருக்கும் இந்தக் மூட்டுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பல்வேறு சிகிச்சைகளிலிருந்து தங்களுக்கு அவசியமான சிகிச்சையைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளும் வாய்ப்புகள், அதை தொடர்வதற்கு ஆதரவளிக்கும் சேவைகள் இப்போது கிடைக்கின்றன. அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதை ஊக்குவிக்கவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது அப்போலோ மருத்துவமனை பற்றி: 1983-ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார் அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில் உலகம் முழுவதும் 12,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன். 72 மருத்துவமனைகள் சுமார் 5000 மருந்தகங்கள். 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள் 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.
Doctor Vikatan: `பித்தப்பை கற்கள்'அறுவை சிகிச்சையைத் தவிர்க்க சித்த மருந்துகள் உதவுமா?
Doctor Vikatan: என் வயது 40. கடந்த சில வருடங்களாக பித்தப்பை கற்கள் பாடாய்ப் படுத்துகின்றன. ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டும் குணமாகவில்லை. மருத்துவர் பித்தப்பை கற்களை நீக்குவதுதான் தீர்வு என்கிறார். பித்தப்பை கற்களை குணமாக்க, சித்த மருத்துவத்தில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி பித்தப்பை கற்கள் ஏன், எப்படி உருவாகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பித்த நீரைச் சுரக்கிறது. இது தினமும் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் அளவு வரை சுரக்கும். இந்தப் பித்த நீரானது கல்லீரலில் இருந்து பித்தப்பைக்குச் சென்று சேமிக்கப்படும். பித்தப்பை என்பது சிறிய பலூன்போன்ற பை. இது கல்லீரலுக்குப் பக்கத்தில் இருக்கும். பித்தப்பையின் கொள்ளளவு 80 மில்லி அளவுக்கு இருக்கும். அங்கே சேரும் பித்தநீரானது சற்று நேரம் அங்கேயே இருந்து, அடர்த்தியாகி, நாம் சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும். நாம் சாப்பிட்டதும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரத்துக்குள், அந்த உணவிலுள்ள கொழுப்பையும் புரதத்தையும் செரிப்பதற்கு, பித்த நீரானது பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குப் போகும். இது சகஜமாக நடக்கும் விஷயம். பித்தப்பையில் கற்கள் உருவாகும் தன்மை என்பது சிலருக்கு இயல்பாகவே இருக்கும். பரம்பரையாகத் தொடரும். முறையற்ற உணவுப்பழக்கம் அல்லது பித்தப்பை காலியாகும் செயலில் உள்ள பிரச்னை காரணமாகவும் கற்கள் உருவாகலாம். பித்தப்பையில் அதிக நேரம் பித்த நீர் தங்கும்போது, அதிலுள்ள உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகலாம். உதாரணத்துக்கு, பால் காய்ச்சும்போது சாதாரணமாகக் கொதிக்க வைப்பதற்கும் நீண்ட நேரம் சுண்டவைத்துக் காய்ச்சுவதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. சுண்டக் காய்ச்சும்போது பால் கெட்டியாகி, கொழுப்பெல்லாம் பால் ஏடாகப் படியுமல்லவா? அப்படித்தான் பித்த அமில நீரானது நீண்ட நேரம் பித்தப்பையில் தங்குவதால், கெட்டியாகி, திரண்டு, பித்தப்பை கற்களாக உருவாகும். ஆக, பித்தப்பை கற்கள் என்பவை, பித்தநீர் படிமம் மற்றும் கொழுப்பின் சேர்க்கையே. கல்லானது பித்தப்பையின் உள் சுவரை உரசும்போது வலியை ஏற்படுத்தும். பித்தப்பை கற்கள், மணல், ரவை அளவில் குட்டிக்குட்டியாக நிறைய இருக்கலாம் அல்லது பெரிதாக ஒரே கல்லாகவும் இருக்கலாம். இவற்றில் ஒற்றைக் கல்தான் அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடியது. பித்தப்பையானது சுருங்கி, விரியக்கூடிய தன்மை கொண்டது. கல்லானது பித்தப்பையின் உள் சுவரை உரசும்போது வலியை ஏற்படுத்தும். பித்தப்பை காலியானதும் அந்தக் கல், பாதையை அடைத்துக்கொள்ளலாம். பித்தப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தும் கொலேசிஸ்டைட்டிஸ் (Cholecystitis) பிரச்னையை உண்டாக்கலாம். இது அறிகுறி வகையில் வரும். சிலருக்கு பித்தப்பை கற்கள் எந்தப் பிரச்னையையும் காட்டாது. இவர்கள் அறிகுறியற்ற வகையில் வருவார்கள். Health: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை வைத்தே பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்று தீர்மானிக்கப்படும். பித்தப்பை கற்கள் தொல்லை கொடுக்காதவரை அதற்கு அறுவைசிகிச்சை தேவையில்லை. பித்தப்பை கற்கள் அதீத வயிற்றுவலியை ஏற்படுத்தக்கூடியவை. சிலருக்கு சாப்பிட்ட உடனே வயிற்று வலி வரும். பொறுக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்போது அதற்கு மருத்துவ சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அவையும் பலன் தராதபோதுதான் அதற்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறிகுறிகளைக் காட்டாமலிருக்கும் பித்தப்பை கற்கள் கூட திடீரென வீரியமாகி, பித்தநீரை வடியவிடாமல் தடுக்கும். அதனால் சிலருக்கு 'அப்ஸ்ட்ரக்டிவ் ஜாண்டிஸ்' (Obstructive jaundice ) எனப்படும் காமாலை ஏற்படும். இது எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது, எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது. பித்தப்பை கற்கள் தொல்லை கொடுக்காதவரை அதற்கு அறுவைசிகிச்சை தேவையில்லை. அறிகுறிகள் இல்லாவிட்டாலும் வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து, கற்களின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை என்றாலே, அதன் பிறகு உணவு செரிப்பதில் பிரச்னை ஏற்படும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அதில் உண்மை கிடையாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். பித்தப்பை கற்களை அலட்சியம் செய்வதால் முன்னரே குறிப்பிட்டபடி காமாலை, பித்தப்பை சுவர்களில் அழற்சி, பசியின்மை, வயிற்று உப்புசம், அஜீரணம், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வரலாம். நாள்பட்ட, பெரிய கற்கள் இருந்து, கவனிக்காமல் விட்டால், அவை நாளடைவில் கணையத்தையும் பாதிக்கலாம். எனவே, பித்தப்பை கற்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம். Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன? பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் விரதமிருக்கக்கூடாது. சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். பித்தப்பை கற்களை சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட நபரின் வயது, உணவுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து சித்த மருத்துவ சிகிச்சையின் பலன் வேறுபடும். பித்தநீர் சுரப்பு அளவோடு இருந்தால் கற்கள் உருவாகாது. ஒரே கல்லாக, பெரிதாக இருப்பதைவிட, நிறைய குட்டிக்குட்டி கற்கள் என்றால் சிகிச்சை சீக்கிரம் பலனளிக்கும். பித்த நீர் சுரப்பை அளவோடு வைத்துக்கொள்ள தனியா, சீரகம், வெந்தயம்- தலா 50 கிராம் அளவு எடுத்து வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் நைசாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில், இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவிடவும். அந்தத் தண்ணீரை குடித்துவிடலாம். பொடியை நேரடியாகவும் சாப்பிட்டும் தண்ணீரோ, மோரோ குடித்துவிடலாம். இது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும். ஏலாதி சூரணம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், நண்டுக்கல் பற்பம், நெருஞ்சில் குடிநீர், கீழாநெல்லி கற்கம், மூக்கிரட்டை குடிநீர் என பித்தப்பை கற்கள் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் நிறைய நல்ல மருந்துகள் உள்ளன. ஏலாதி சூரணம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், நண்டுக்கல் பற்பம், நெருஞ்சில் குடிநீர், கீழாநெல்லி கற்கம், மூக்கிரட்டை குடிநீர் என பித்தப்பை கற்கள் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் நிறைய நல்ல மருந்துகள் உள்ளன. இவை கல்லீரலில் இருந்து வரும் சுரப்பை முறைப்படுத்தும். கற்கள் இருந்தால் கரைக்கும். கற்களால் வரும் வலி, உப்புசம் போன்றவற்றைக் குறைக்கும். இந்த மருந்துகளை நீங்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு பித்தப்பை கற்கள் எந்த அளவு இருக்கின்றன, அவற்றின் அறிகுறிகள் எப்படியிருக்கின்றன என்பதையெல்லாம் பொறுத்தே சிகிச்சை பரிந்துரைக்கப்படும். எனவே, சித்த மருத்துவத்தில் தீர்வு வேண்டும் என்றால் முறைப்படி மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சரி. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். பித்தப்பை நம் உடலுக்குத் தேவையில்லாத ஒன்றா? உடனுக்குடன் ஆபரேஷன் செய்து அகற்றுவது ஏன்? | Explained
உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாரம்பர்ய மிட்டாய்களை சாப்பிடுகிறார்களா?
''ச ர்க்கரை தூக்கலாக காஸ்ட்லி சாக்லேட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உடனடி எனர்ஜியையும் உண்மையான ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை நம் பாரம்பரிய மிட்டாய்கள். அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம்'' என்கிற திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் உமா மகேஸ்வரி, அவற்றின் பலன்களை நமக்கு சொல்கிறார். கோவில்பட்டி கடலை மிட்டாய் கடலை மிட்டாய் கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையையும் சேர்த்து தயாரிக்கப்படுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி, உடல்சோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். இஞ்சி முரப்பா இதன் மூலப்பொருளே இஞ்சியும் வெல்லமும் தான். இஞ்சியில் உள்ள சத்துக்கள் உடல் வலி, குமட்டல், பசியின்மை ஆகியவற்றுக்கு நல்லது. சாப்பிட்ட பின் இஞ்சி முரப்பா மிட்டாய் சாப்பிடுவது, செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். எள்ளு மிட்டாய் Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்? எள்ளு மிட்டாய் கறுப்பு எள் மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்தும் எள்ளில் கால்சியமும் நிறைந்துள்ளன. இது, இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits சில்லுக்கருப்பட்டி கருப்பட்டி தயாரிப்பின் கடைசியில், சுக்கு, ஏலக்காய் கலந்து சில்லுக்கருப்பட்டி தயாரிக்கிறார்கள். இதிலுள்ள கால்சியத்தால், பற்களும் எலும்புகளும் வலுவடைகின்றன. பதின் பருவப் பெண்களுக்கு சில்லுக்கருப்பட்டியில் ‘உளுத்தங்களி’ செய்து கொடுத்தால், கர்ப்பப்பை மற்றும் இடுப்பு எலும்பு வலுவடையும். பொரி உருண்டை பொரி உருண்டை கார்போஹைட்ரேட், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது; செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இருக்கும் சுக்கு, உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது. Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!
Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?
Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் காரணம் என்றும், எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் மருத்துவர். இது எந்த அளவுக்கு உண்மை... உடல் பருமனால் குழந்தையின்மை பிரச்னை வருமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் உடல் பருமன் காரணமாக ஆண், பெண் இருவரின் உடலிலும் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்கும்போது, அதன் விளைவாக அவர்கள் இருவருக்குமே தாம்பத்திய உறவிலும் சிக்கல் வரும்... அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பதிலும் சிக்கல் வரலாம். உடல் பருமனின் காரணமாக கொழுப்பின் சதவிகிதம் அதிகரிப்பதன் விளைவாக, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலை உருவாகும். இந்நிலையில், நம் உடலின் செல்கள் இந்த இன்சுலினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலையின் காரணமாக, ஆண் உடலில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்கள் சுரப்பதும் குறையத் தொடங்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் விந்தணுக்கள் சரியாக உற்பத்தியாகாது. அப்படியே உற்பத்தியானாலும் அவற்றின் தரம் சரியாக இருக்காது. பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம். அதேபோல விறைப்புத்தன்மையில் சிக்கல் வரும். உடல் பருமனின் முக்கிய அடையாளமாக ஆண்- பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் அதிக சதை போடும். அந்த இடத்துப் பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம். Doctor Vikatan: நீரிழிவு, BP இல்லாத பட்சத்திலும் உடல் பருமன் குறித்துக் கவலைப்பட வேண்டுமா? பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் குறைவதால், கருமுட்டைகளின் தரம் குறைவாக இருக்கும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். மாதவிடாய் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து குழந்தை தங்கும் வாய்ப்பைக் குறைக்கும். உடல் பருமன் எனவே, உடல் பருமன் என்பது தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்து உறுப்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்துவதைப் போலவே, இல்லற வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, குழந்தைப் பேற்றையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். குழந்தைக்கான முயற்சியில் இருக்கும் தம்பதியர், உடல் பருமனோடு இருந்தால், இந்த விஷயங்களை முதலில் கவனத்தில் கொண்டு, எடையைக் குறைப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான உடல் பருமன்... முன்கூட்டியே தவிர்க்க வழிகள் உண்டா?
Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?
''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதில்லை. சென்சிடிவ் பற்களுக்கு, பற்சிதைவைத் தடுப்பது, புத்துணர்வு அளிப்பது, வாய் துர்நாற்றத்தை நீக்குபவை, ஈறுகளை வலிமையாக்குபவை என விதவிதமான பேஸ்ட்டுகள் கிடைக்கின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பற்பசையின் நிறம், சுவை, மணம், அழகான பேக்கிங் ஆகியவற்றைப் பார்த்து பற்பசை வாங்குவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளன, அவை நம் பற்களுக்கு உகந்தவையா, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை'' என்கிறார் வாய் மற்றும் முகம் சீரமைப்பு நிபுணர் வி.சுரேஷ். யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்; டூத் பேஸ்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை; டூத் பேஸ்ட் டியூபின் மேல் இருக்கும் நிறப்பட்டைகள் ஆகியவற்றைப்பற்றி வி.சுரேஷ் விளக்குகிறார். டூத் பேஸ்ட் மூலப்பொருட்கள் பற்பசைகளில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருள்களும், கூடவே நுரை ஏற்படுத்தவும், நறுமணத்துக்காவும், சுவைக்காகவும், நிறத்தை அளிக்கவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவும் எனப் பல்வேறு ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, டூத் பேஸ்ட் வாங்கும்போது அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை படித்துப் பார்த்து வாங்க வேண்டும். Happy Teeth: வாய் உலர்வுக்கு வழங்கப்படும் செயற்கை உமிழ்நீர் சிகிச்சை பற்றி தெரியுமா? பற்பசையில் நுரை ஏற்படுத்த, சோடியம் லாரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride) சேர்க்கப்படுகிறது. ஈரப் பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, `சலவை சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. டூத் பேஸ்ட் யாருக்கு எந்த பேஸ்ட் பெஸ்ட்? ஃபுளோரைடு இயற்கையாகவே கிடைக்கும் ஒரு தாதுஉப்பு. நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள இதன் அளவைப் பொறுத்தும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஃப்ளோரைடின் அளவு மாறுபடும். ஃபுளோரைடு, நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. ஃபுளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்குப் பற்குழி விழுவது குறைகிறது எனப் பல சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸில் பிரபலமாகும் teeth whitening strips நல்லதா, கெட்டதா? – மருத்துவர் விளக்கம்! குழந்தைகளுக்கு... குழந்தைகளுக்குப் பற்சொத்தை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஃபுளோரைடு கலந்த பற்பசைகள் ஏற்றவை. ஆனால், அதிக அளவு ஃபுளோரைடு உபயோகமானது, ஃப்ளூரோசிஸ் என்ற பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. மேலும், குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ஃபுளோரைடு உபயோகித்தால், பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக்கூடும். பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1,000 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்கான பற்பசையில் 500 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும். பற்பசையிலேயே இது குறிப்பிடப்பட்டிருக்கும். டூத் பேஸ்ட் Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? பெரியவர்களுக்கு... நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் டிடர்ஜென்ட், நிறத்தை அளிக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால், பற்கள் எனாமல் இழந்துபோகலாம். மேலும், பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறு வயதிலேயே பற்களுக்கு பாதிப்புகள் உருவாகும். முதியவர்களுக்கும் வயோதிகம் காரணமாக, பற்கள் தேய்மானம் அடைந்திருப்பதால் சென்சிட்டிவ்வாக (Sensitive) மாறிவிடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி, சென்சிடிவ் பற்பசைகளை உபயோகிப்பது நல்லது. ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பற்பசையின் அளவு மாறுபடும். ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ள பற்பசையில் ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும். பெரியவர்கள் பயன்படுத்துவதைவிடக் குழந்தைகளுக்கு குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும். பற்பசை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை... *வண்ணமயமான பேஸ்ட்டைவிட வெள்ளை நிற பேஸ்ட்டே சிறந்தது. *ஃபுளோரைடு குறைவான பேஸ்ட்டையே தேர்வுசெய்யுங்கள். *ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை. *பற்களை பாலீஷ் செய்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அப்ரேஸிவ் (Abrasives) எனும் ‘தேய்க்கும் பொருள்’ பயன்படுத்தப்படுகிறது. இது, பற்கள் சொத்தையாகக் காரணமாகும் ரசாயனங்கள் கொண்டது. ஆகவே, இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பேஸ்ட்டாகப் பார்த்து வாங்குங்கள். *சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். Tooth paste கறுப்பு நிறப் பட்டை: முழுமையாக ரசாயனப் பொருள்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது. டியூபின் வண்ணப்பட்டைக் கோடுகளை கவனியுங்கள்! நாம் வாங்கும் பற்பசை டியூப்பின் அடி முனையில் பச்சை, நீலம், சிவப்பு, கறுப்பு என நான்கு வண்ணங்களில் ஏதேனும் ஒரு வண்ணப்பட்டை தீட்டப்பட்டிருக்கும். அந்த வண்ணப்பட்டையைக் கொண்டு, பற்பசையில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய முடியும். பச்சை நிறப் பட்டை: பற்பசை முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது. நீல நிறப் பட்டை: பற்பசையில் இயற்கைப் பொருட்களுடன் சில மருந்துகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. சிவப்பு நிறப் பட்டை: இயற்கைப் பொருள்களுடன், அதிக அளவில் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கறுப்பு நிறப் பட்டை: முழுமையாக ரசாயனப் பொருள்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது. Happy Teeth: முகம் சுளிக்க வைக்கும் வாய் துர்நாற்றம்... 5 முக்கிய காரணங்கள்!
Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?
Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?, மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல. ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பவராக இருக்கலாம். சில நேரங்களில் அவருடைய ரத்தச் சர்க்கரை அளவுக்கும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய், ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போகலாம். குறிப்பாக, அது 45 மில்லிகிராமைவிட குறைந்தால் மயக்கம் வந்து விழும் அளவுக்குப் போகலாம். மயங்கி விழுந்தவரின் கால் பகுதியை சற்று மேல் உயர்த்தி வைக்கலாம். அடுத்தது சிங்கோப் (Syncope) எனப்படும் பிரச்னையாலும் மயக்கம் வரலாம். இது ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படுவது. வழக்கமாக மூளைக்குப் போகக்கூடிய ரத்த ஓட்டம் குறையும்போதோ, ஆக்ஸிஜன் அளவு குறையும்போதோ, மூளைக்குத் தகவல் போய், உடனே மயக்கம் வரலாம். அதேபோல சிலருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் மயக்கம் வரலாம். அதாவது சராசரியைவிட மிக அதிகமாகும்போது மூளையிலுள்ள ரத்தக்குழாய்கள் வெடித்து, சட்டென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழக்கூடும். Doctor Vikatan: மாமனாருக்கு லோ சுகர்; வாக்கிங் போகும்போது மயக்கம்... சர்க்கரை சாப்பிடுவது சரியானதா? வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திடீர் மயக்கம் வரக்கூடும். காதுக்குள் இருக்கும் பிரச்னை காரணமாக ஏற்படும் வெர்டிகோ பாதிப்பாலும், கழுத்து எலும்பு தேய்மானத்தாலும் கூட சிலருக்கு மயக்கம் வரலாம். மயங்கி விழுந்தவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளிப்பது என்பது காலங்காலமாகச் செய்யப்படுகிற ஒன்றுதான். மயக்கத்திலிருப்பவரின் முகத்தில் சில்லென்ற தண்ணீர் படும்போது, ட்ரைஜெமினல் நரம்பு (Trigeminal Nerve) உடனடியாக மூளைக்குத் தகவல் சொல்லி மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அனுப்ப வாய்ப்பு உண்டு. முதலுதவி ஆனால், மயக்கம் வந்து விழுந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது என்பது முறையான முதலுதவி கிடையாது. மயங்கி விழுந்தவருக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் பார்க்க வேண்டும். மயங்கி விழுந்தவரின் கால் பகுதியை சற்று மேல் உயர்த்தி வைக்கலாம். மயங்கி விழுந்தவரை கவனிக்க ஆளில்லாத பட்சத்தில் அந்த நபர் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பாரா என்பதற்கு உறுதியாக பதிலளிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இறந்துபோனவர்கள் எத்தனையோ பேர் உண்டு, அது மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம்தான். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`Cocomelon’ முதல் `Free Fire’ வரை... நம் குழந்தைகளுக்கு நல்லதை கொடுக்கிறோமா? - ஓர் அலசல்
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அல்லது வீடியோக்கள் என்றதும் நம் கற்பனையில் தோன்றுவது எக்கச்சக்க வண்ணங்கள், எளிமையான பாடல்கள், எண்ணமுடியாத கற்பனைகள், நேரடியான பேச்சுகள்... போன்றவைதான். கிட்டத்தட்ட இதே விஷயங்களை அனைத்திலும் காணாலாம். ஆனால் இந்த அம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே அது குழந்தைகள் பார்ப்பதற்கு தகுதியான கன்டென்டாக மாறிவிடாது. இன்று பெரியவர்களுக்காக வெளியாகும் திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். எல்லாமும் ரிவியூ செய்யப்படுகின்றன. மோசமான படங்கள் விமர்சிக்கப்படுகிறது. அரசியல் சரித்தவறுகள் ஆராயப்படுகின்றன. ஆனால் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சமூகத்தில் எப்போதாவது பெரிய விவாதங்கள் எழுந்திருக்கின்றனவா? Children 'குழந்தைகளுக்கானவை' என்பதன் அர்த்தம் என்ன? குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என பலரும் கவலைகொள்ளாததற்கு காரணம், அதிலிருந்து அவர்களுக்கு என்ன கடத்தப்படக் கூடும் என்பது குறித்த அறியாமைதான். குழந்தைகள் பொழுதுபோக்கு இப்போதெல்லாம் தொலைக்காட்சியை விட மொபைல் ஃபோனையே அதிகம் நம்பியிருக்கிறது. எந்த பொது இடத்திலும் 1 வயது குழந்தைக்குக் கூட மொபைல் காட்டுவதைப் பார்க்கலாம். மொபைலில் யூடியூப் வீடியோக்களைப் காட்டினால்தான் உணவருந்தும் என்ற நிலையில் குழந்தைகளைப் பார்க்கிறோம். வீடியோக்கள் அல்லது நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கானவை எனக் குறிப்பிட்டால், அவை பொழுதுபோக்கைக் கடந்து சில அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? குழந்தைகளைத் திரையோடு கட்டிப்போடுவது மட்டுமல்லாமல், அவை கொஞ்சமேனும் பொறுப்புணர்வோடு உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். நீதி போதனைகள் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது நன்னெறி சொல்லித்தரப்பட வேண்டும். குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்ப்பதாக, கற்பனையைத் தூண்டுவதாக, படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக, உணர்வுகளை நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டுமல்லவா? இப்போது குழந்தைகளால் அதிகம் பார்க்கப்படக் கூடிய வீடியோக்கள் அவர்களை மகிழ்விப்பது கூட இல்லை. மூளையின் ரசாயனங்களைத் தூண்டி கண்கொட்டாமல் பார்க்கவைப்பதில் மட்டுமே கவனம் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதுதான் 'குழந்தைகளுக்கானது' என்பதன் பொருளா என்ற கேள்வியே இந்த கட்டுரை. ஒரு தகவல்களை மூளை பெற்று, அதனை செயலாக்கும் செய்யும் வேகத்தை விட அதிக வேகத்தில் இந்த நிகழ்ச்சிகள் செல்லும். இதனால் குழந்தைகள் கவனம் செலுத்தும் திறனும், சுய ஒழுங்கைப் பேணுவதும் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என்பது மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது. குறிப்பாக யூடியூப் சேனல்கள் குழந்தைகளைவிட பெற்றோர்களின் தேவையை நன்றாக உணர்ந்துள்ளன. குழந்தைகள் கையில் மொபைலைக் கொடுத்துவிட்டால் அவர்கள், அவர்கள் தொந்தரவு செய்யாமல் 'அமைதியாக' ஒரு மூலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். மொபைலை வாங்கும்போது இன்னும் கொஞ்சநேரம் பார்ப்பதாக அழ வேண்டும். அவ்வளவுதானே! இந்த மோசமான நோக்கத்துடன் உருவாக்கப்படும் வீடியோக்களும் நிகழ்ச்சிகளும் குழந்தைகள் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என குழந்தைகள் நல நிபுணர்கள் அஞ்சுகின்றனர். பெற்றோர்களை இந்தவிஷயத்தில் முழுவதுமாக குறைசொல்ல முடியாது. பெரும்பாலான பெற்றோர்கள் அதீத வன்முறையை, கெட்ட வார்த்தைகள், பாலியல்ரீதியான உள்ளடக்கங்கள் இருக்கும் நிகழ்ச்சிகளை, திரைப்படங்களைக் குழந்தைகளுக்கு காட்டாமல் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் மனதைப் பாதிக்கும் தீய விஷயங்களைத் தவிர்க்க இவற்றில் மட்டும் கவனத்துடன் இருந்தால்போதாது. நிகழ்ச்சிகளின் சில நுட்பமான பண்புகளைக் காண வேண்டும். மூளைக்கு அதிக 'தூண்டல்கள்' - மனதுக்கு அதிக ஆபத்து! உதாரணமாக இன்று அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ள, உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளால் பார்க்கப்படும் சுசு டிவி, கோகோமெலன், ரோமா அண்ட் டயானா, விளாட் அண்ர் நிக்கி, மிஸ் ரேசல்... உள்ளிட்ட யூடியூப் வீடியோக்களில் இரண்டு பொதுவான பிரச்னைகள் உள்ளன. முதலாவது அவற்றின் வேகம். தடதடவென ரயில் போல இசை, உணர்ச்சிகள், வண்ணங்களைக் கொட்டிச் செல்லும் வீடியோக்கள் குழந்தைகளின் ஒரு விஷயத்தில் கவனம் குவிக்கும் திறனை பாதிக்கக் கூடும் என்கிறார்கள். Children's Show குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் (Pre-Schooler) இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தகவல்களை மூளை பெற்று, அதனை செயலாக்கும் செய்யும் வேகத்தை விட அதிக வேகத்தில் இந்த நிகழ்ச்சிகள் செல்லும். இதனால் குழந்தைகள் கவனம் செலுத்தும் திறனும், சுய ஒழுங்கைப் பேணுவதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்த ஆய்வுகள் மனதின் 'திட்டமிடுதல், சிக்கல்களைத் தீர்த்தல், தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல்' உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்படலாம் என்கின்றன. மேலும் இந்த நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தூண்டுதல்களை வழங்கக் கூடியவை. இப்படி ஓவர் லோடட் தூண்டுதல்களுக்கு (Stimulation) பழக்கப்படும் குழந்தைகள் கவனத்தைக் குவித்து செய்யும் ஒரு செயல்பாட்டில் திருப்தியடைய மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதனை எளிமையாக விளக்கினார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. குழந்தைகளுக்கு அம்மா ட்வின்கிள் ட்வின்கிள் சொல்லிக்கொடுக்கும்போது, அம்மாவின் உதட்டசைவை, சைகளை குழந்தைகள் நிதானமாக கவனிக்க முடியும். குழந்தைகள் கொஞ்சம் மெதுவாக புரிந்துகொள்பவராக இருந்தால் அம்மாக்கள் இயல்பாகவே மெதுவாக சொல்லிக்கொடுப்பார்கள். குழந்தைகள் அதற்கு ஏற்றதுபோல பதிலளிக்கும். Mother and Daughter குழந்தையுடன் உரையாட ஏதாவது சொல்லிகொடுக்கத்தான் வேண்டும் என்றில்லை, பெற்றோரோ, தாத்தா - பாட்டியோ காக்கா, கிளிகைப் பற்றி பேசினால் கூட குழந்தைகள் அதற்கு செவி சாய்த்து எதிர்வினையாற்றும். இந்த தொடர்பு இருவழியில் (டயலாக்) நடக்கிறது. ஆனால் தொலைக்காட்சி முன்னாலோ, கையில் மொபைலைக் கொடுத்தோ வைக்கும்போது அவர்கள் பார்ப்பது மோனோலாக். பல கலர்கள், பின்னணி இசை, உதட்டசைவில் ஒன்றாத வசனங்கள், ஜிங்கிள்களை ஒன்றும் புரியாமல் பார்க்கின்றனர். இப்படி அடுத்தடுத்து பார்க்கும்போது நிறுத்தி நிதானித்து புரிந்துகொள்ளும், கவனிக்கும் திறன் வளர்வது தடைபடுகிறது. இதற்காகத்தான் முன்னாள் சொன்ன ட்வின்கிள் ட்வின்கிள் உதாரணம் என்றார். எதிலும் மொபைல், எப்போதும் மொபைல்... எங்கு கொண்டு நிறுத்தும் தெரியுமா? குழந்தை வளர்ச்சியில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலில் தாய் வயிற்றுக்குள்ளே இருக்கும்போது, கரு வளரத்தொடங்கும்போதே (embryo) தாயின் உணர்வுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கத் தொடங்கும். 14 வாரங்களில் கருவுக்கு காது கேட்கத் தொடங்கும். இப்போதெல்லாம் கரு வளரும்போதே தாயின் மொபைலில் இருந்து வரும் சத்தம் அதன்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாவது வளர்ச்சிநிலை வெளியில் வந்த முதல் நாளில் இருந்து 3 ஆண்டுகள் வரை. இந்த காலத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சியையும் உளவியல் வளர்ச்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. மருத்துவர் ஜெயந்தினி இந்த காலத்தில் அம்மாக்களும் மற்றவர்களும் பிஸியாக இருப்பதால் தொலைக்காட்சியைப் போட்டு உட்காரவைத்துவிடுகிறார்கள். டிவியில் மூழ்கிப்போகும் குழந்தைகள் அப்படியே தூங்கிவிட்டால் பெற்றோருக்கு மகிழ்ச்சி. சாப்பிடும்போதும் டிவியை, மொபைலைக் காட்டும் பழக்கம் இருக்கிறது. இது மிக மோசமானது. குழந்தையிடம் பேசிக்கொண்டே, ஓடி ஆடி, அதையும் இதையும் காண்பித்து, ஊட்டுவது சிரமான காரியம்தான். அதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். பெற்றோருக்கு அது இருந்தாகவேண்டும். ஆனால் பெற்றோரோ அவர்கள் பார்க்கும் எல்லா வேலைகளைப் போலவும் குழந்தைக்கு சோறு ஊட்டுவதை உடனடியாக முடிக்க வேண்டுமென வீடியோக்களைப் போட்டு வைத்துவிடுகிறார்கள். குழந்தை கொஞ்சம் அட்டகாசம் செய்து சாப்பிட்டாலும் சாப்பிடுகிறோம் என்பதை அறிந்தும் என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்தும் சாப்பிட வேண்டியது அவசியம். மூன்றாவது எங்கு சென்றாலும் குழந்தை கையில் மொபைலைக் கொடுப்பது. மருத்துவமனையில் கூட அம்மா ஒரு மொபைல், குழந்தை ஒரு மொபைல் என உட்கார்ந்திருக்கின்றனர். குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, மற்றவர்களுடன் பேசுவதே குறைந்துவிட்டது. வீட்டுக்குள் இருப்பவர்கள் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இருந்தால்தான் குழந்தைகளால் வெளியில் பேசிப்பழகி இருக்க முடியும். இது இல்லாததால் இப்போது பல குழந்தைகள் ஆட்டிசம் உள்ளதுபோல அறிகுறிகளுடன் காணப்படுகின்றன. Autism (File Image) 40 ஆண்டுகள் முன்னர் பத்தாயிரத்தில் ஐந்து அல்லது ஏழு குழந்தைகளுக்குதான் ஆட்டிசம் இருக்கும். ஆனால் இப்போது 39 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆட்டிசத்தை கண்டறிவது அதிகமாகிவிட்டது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், கோவிட் தொற்றுக்குப் பிறகு குழந்த்கைகள் தொலைக்காட்சி, மொபைல் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணம். குழந்தைகளுக்கு உறுப்புகள் எல்லாமும் வேலை செய்தாலும் தாங்கள் நினைப்பதை பேச (கம்யூனிகேட் செய்ய) முடியாது. இப்படி ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களது சமூக இயக்கம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. என்னிடம் சில குழந்தைகளைக் குறிப்பிட்டு, இவர்கள் மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் இந்த பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறார்களே எனக் கேட்பார்கள். விதை நன்றாக இருந்தால் பாறையில் கூட வளர்ந்துவிடும். ஆனால் செழிப்பான செடியாக வளர நல்ல மண் வளமும் தேவை. இன்னொரு உதாரணம் சொல்கிறேன். நாம் தினமும் ஒரு ஒத்தையடி பாதையில் நடக்கிறோம். ஒரு சிமெண்ட் ரோடும் உள்ளது. நாம் தினமும் ஒத்தையடிப் பாதையைப் பயன்படுத்தினால் மழை பெய்தாலும் ஒத்தையடிப்பாதை அப்படியே இருக்கும். ஆனால் பயன்படுத்தாமல் விட்ட சிமெண்ட் ரோடு உடைந்து புற்கள் முளைத்து மோசமாகிவிடும். நம் மூளையும் ஒரு பாதை போலத்தான். அதில் பில்லியன் கணக்கான நியூரான்களும் ட்ரில்லியல் கணக்கான இணைப்புகளும் உள்ளன. எதை எதையெல்லாம் குழந்தைகள் தினமும் பயன்படுத்துகிறார்களோ அதெல்லாம் உறுதியாக நிலைத்திருக்கும். Structure of Neural Human Nervous System of the Human Brain குழந்தைகளின் காப்பானாக இருங்கள்! 3 வயதுக்குப் பிறகு பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். மொபைல் பார்த்து வளர்ந்த குழந்தைகள் அட்ஜஸ்ட் செய்வது, அடாப்ட் ஆவது, விட்டுக்கொடுப்பது, குழுவில் இணைந்திருப்பது, விதிமுறைகளைப் பின்பற்றுவது, அனுசரித்து செல்வது போன்ற பழக்கங்கள் எதுவும் வளராது. பல குழந்தைகள் மொபைலில் பார்ப்பதைத்தான் உண்மை என நம்புகின்றனர். என்னிடம் குழந்தைகள் வந்து தற்கொலை செய்வது, வீட்டை விட்டு ஓடிப்போகிறேன் என்பது, ஆக்ரோஷமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளின் பண்புகளை வளர்ப்பதில் யதார்த்தை விட மொபைலில் பார்க்கும் விஷயங்கள் பெரிய பங்காற்றத் தொடங்கிவிட்டன. ஆனால் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்த அக்கறையே பெற்றோர்களுக்கு கிடையாது. அனிமேட்டடாக இருந்தாலே அது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அல்ல. இதில் முக்கிய பிரச்னை பெற்றோர்கள் தங்கள் வசதிகாக குழந்தைகளை மொபைல் பார்க்க வைப்பதுதான். இந்த குழந்தைகளிடம் கேட்டால் அப்பா, அம்மா மட்டும் தினமும் மொபைல் பார்க்கிறார்களே எனக் கேள்வி எழுப்பும். மொபைல் கொடுக்கவில்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வாங்குகிறார்கள். இந்த குணத்துக்கும் காரணம் மொபைலில் அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளும் விளையாடும் கேம்களும்தான். 7, 8 வயதில் ஃப்ரீ பயர் விளையாடும் குழந்தைகள் அதில் பார்ப்பது எல்லாமும் வன்முறைதான். இவர்கள் விளையாடவில்லை என்றாலும் இன்னொருவர் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதற்கும் வெளியில் மற்றவர்களுடன் விளையாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? கேம் டெவலப்பர்கள் பணம் சம்பாதிக்க குழந்தைகளைக் குறிவைத்து இவற்றை உருவாக்குகின்றனர். இவை, கொஞ்சம் ஆக்ரோஷமாக உள்ள குழந்தைகளை மேலும் அதீத ஆக்ரோஷமாக மாற்றும், பயப்படும் குழந்தைகள் ரொம்ப பயப்படுபவர்களாக மாற்றும். Children Using Mobile Phone மொபைலில் நல்ல விஷயங்களைப் பார்க்கும் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளின் எல்லா சிக்கல்களுக்கும் மொபைல் தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு குழந்தை நன்றாக பேச, பழக, விளையாட, உடல் வளர்ச்சிக்கும் பண்பு ரீதியாக சமூகத்தில் ஒன்றவும், விட்டுக்கொடுக்கவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளவும் மொபைல் தடையாக உள்ளது. இதனால் 3 வயது வரை மொபைல், டிவி போன்ற திரைகளையும் காட்டக் கூடாது. அதற்கு பிறகு அவர்கள் என்ன பார்க்கிறார்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் அதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதை நாம் உடனிருந்து அறிந்து அவர்களுக்கு விளக்க வேண்டும். முக்கியமாக நாம் குழந்தைகள் முன்னாள் இருந்து மொபைல் பார்த்துவிட்டு, அவர்களைப் பார்க்கக் கூடாது எனக் கூறக்கூடாது. 'கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா' எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த மொபைல், யூடியூப், சமூக வலைத்தளங்கள் எல்லாமும் இருக்கத்தான் செய்யும் குடும்பத்தினர்தான் காப்பானாக இருந்து குழந்தைகளை வழிநடத்த வேண்டும் என்றார். 'சென்சார்போர்டு' இருப்பதற்கு காரணம் உள்ளது! குழந்தைகள் நல மருத்துவர் மாதுரியிடம் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகள் குறித்து, அவற்றில் அளவுக்கு அதிகமான தூண்டுதல்கள் (Stimulation) இருப்பதால் அவை மூளையை பாதிக்கத்தான் செய்யும். கவனம் செலுத்துவதிலும், நிதானமாக இருப்பதிலும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படலாம். இன்று வீட்டிலிருப்பவர்கள் அவர்களது வசதிக்காக குழந்தைகளிடம் மொபைலைக் கொடுப்பது மிகப் பெரிய தவறு. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் மொபைலைக் கொடுக்கலாம். 3 முதல் 7 வயதிலான பருவம் குழந்தைகளின் வளர்சியில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் என்ன பார்க்கிறார்கள், என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர் உடனிருந்து கவனிக்க வேண்டும். நம் வீடுகளில் படமானாலும், நிகழ்ச்சியானாலும் குடும்பாக அமர்ந்து பார்க்கும் பழக்கம் உள்ளது. ஆனால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய வன்முறை அதில் இல்லை என்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும். அது கார்டூனாக இருந்தாலும் சரி. அனிமேட்டடாக இருந்தாலே அது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அல்ல. பென் 10 நிகழ்ச்சி 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தெளிவாக புரிந்துக்கொள்ளக் கூடியது. அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் எதுவும் புரியாமல் அதில் வரும் வன்முறையையே உள்வாங்கிக்கொள்வார்கள். நம் ஊரில் 13+,10+, 7+ போன்ற வயது வரம்புகளுக்கு மதிப்பே கிடையாது. வெளிநாடுகளில் இவற்றை சரியாக பின்பற்றுகின்றனர். 7+ வயது வரம்பு உள்ள ஒரு கார்டூனை 3 வயது குழந்தைக்கு காட்டுவது அவர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். சென்சார்போர்ட் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும்பட்சத்தில் 2 வயதில் குழந்தைகளை பிளே ஸ்கூலுக்கு அனுப்பிவிடுவது நல்லது. வீட்டில் தாத்தா பாட்டி இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வு வேண்டும். மாலை நேரத்தில் அருகில் உள்ள பார்க்குகளுக்கு கூட்டிச் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாட வைத்தால் போதும். டிவி பார்ப்பதாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். என்றார். Brain Rot என்பது என்ன? - இளைஞர்கள் 'விழித்துக்கொள்ள' வேண்டிய நேரமிது - எச்சரிக்கும் மனநல ஆலோசகர்!
Health: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?
ஆ ரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சரியானதை, சரியான நேரத்தில் உண்பதும் அவசியம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அவை எந்தெந்த உணவுகள்... ஏன் என்பதைப் பார்ப்போம். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் சில வகை மருந்துகள்: டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே வெறும் வயிற்றில் மருந்தை எடுக்க வேண்டும். சில மருந்துகள், குடலின் அமிலத்தைப் பாதித்து, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இதனால், வயிற்றில் கற்கள் உருவாகும். Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன? வாழைப்பழம்: வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்பதால், உடலில் மக்னீசியத்தின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இதனால் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சமநிலை பாதிக்கப்படும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு டீ, காபி: காஃபைன் நிறைந்துள்ளது. வெறும் வயிற்றில் இவற்றைப் பருகும்போது குடல் பாதிப்படைகிறது. எனவே, காபி அல்லது டீக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு: இதில் உள்ள பெக்டின், டானின் போன்றவை குடலில் அமிலச்சுரப்பைத் தூண்டும். இதனால் குடல்சுவர் பாதிக்கப்பட்டு அல்சர், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும். Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்! காரமான உணவு வகைகள்: குடல் பாதிப்பு அடைகிறது. அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பை அதிகரிக் கிறது. வயிறு எரிச்சல் உண்டாகும். காரமான உணவுகள் கார்பனேட்டட் பானங்கள்: இதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங் களோடு வினைபுரிந்து செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கும். தயிர்: புரோபயாடிக் எனும் நல்ல பாக்டீரியா நிறைந்தது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அமுதமே நஞ்சாவது போல் நல்ல பாக்டீரியாவே குடலைப் பாதித்துவிடும். Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா?
Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பிறகு நிரந்தரமாக மாறிப்போன குரல்.. பழையபடி மாறுமா?
Doctor Vikatan: நான் 70 வயதுப் பெண். எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜலதோஷம் பிடித்திருந்தது. தொண்டைக்கட்டும் இருந்தது. அதன் பிறகு இதுவரை என் தொண்டைக்கட்டு சரியாகவில்லை. வழக்கமான குரல் மாறி, கரகரப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறேன். கூகுள் செய்து பார்த்ததில் acute laryngitis பிரச்னையாக இருக்கும் என்று வந்தது. அப்படியென்றால் என்ன? என் குரல் பழையபடி மாற வாய்ப்பில்லையா... எனக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா மூன்று வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்றம் தொடர்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உங்களுடைய வயது 70 என்கிறீர்கள். அதையும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும். உங்களுடைய குரல் மாற்றத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். குரல்வளையில் ஏற்பட்ட வீக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். குரல் வளையில் பலவீனம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, முதலில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நேரில் அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வீடியோ லாரிங்கோஸ்கோப்பி (video laryngoscopy ) டெஸ்ட்டை செய்து பார்ப்பார். அந்தப் பரிசோதனையில் குரல்வளையின் தன்மையையும் அது இயங்கும் விதத்தையும் முழுமையாகப் பார்க்க முடியும். உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வீடியோ லாரிங்கோஸ்கோப்பி (video laryngoscopy ) டெஸ்ட்டை செய்து பார்ப்பார். Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா? உங்கள் பிரச்னையின் அறிகுறிகளை வைத்து நீங்களாக கூகுள் செய்து, அதில் வரும் தகவல்களை அப்படியே நம்பவோ, பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் தெரிந்துகொண்ட 'அக்யூட் லாரிங்கைட்டிஸ்' (acute laryngitis ) பிரச்னையானது ஒருவகையான இன்ஃபெக்ஷன். அது தானாகவே குணமாகக்கூடியது. ஆனால், உங்களுக்கு வந்திருப்பது அதுதானா என்பதை மருத்துவர்தான் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் விஷயத்தில் 3 வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்ற பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால், வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். சரியாக கவனிக்காமல் விட்டால் இது புற்றுநோய் ஆபத்தில்கூட கொண்டுவிடலாம். அதற்காக உடனே பயப்படாதீர்கள். ஆண்களிடம்தான் அந்த ரிஸ்க் அதிகம். நம் நாட்டில் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவுதான். ஆனாலும், நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
Doctor Vikatan: கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த நினைப்பது தவறு. கண் தொடர்பான பிரச்னைகளுக்கு தாய்ப்பால் விடுவது நிச்சயம் தவறானதுதான். ஒரு குழந்தைக்கு கண்களில் இன்ஃபெக்ஷன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியா கிருமிகள், கண்களில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனை மேலும் தீவிரமாக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும் கண்களில் தாய்ப்பால் விடுவதை தவிர்த்தாக வேண்டும். Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு' அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்? காலங்காலமாகத் தொடர்கிற இதுபோன்ற நம்பிக்கைகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டியது அவசியம். 'கண்களில் கட்டி வந்தது... நாமக்கட்டியைக் குழைத்துப் போட்டேன்... சரியாகிவிட்டது' என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை அடிக்கடி பார்க்கிறேன். நாமக்கட்டி என்பது களிமண் மற்றும் சாம்பலின் கலவை தான். மருத்துவராக நான் அதை ஊக்கப்படுத்த மாட்டேன். கண்களில் கட்டி வந்து வீங்கும் பிரச்னையை 'ஸ்டை' (Stye) என்று சொல்கிறோம். அது ஒருவகையான தொற்று பாதிப்புதான். கண்களில் கட்டி வந்து வீங்கும் பிரச்னையை 'ஸ்டை' (Stye) என்று சொல்கிறோம். அது ஒருவகையான தொற்று பாதிப்புதான். அந்தத் தொற்றை ஏற்படுத்தியது பாக்டீரியா கிருமியாக இருக்கும். பாக்டீரியா கிருமித் தொற்றை குணப்படுத்த ஆன்டிபயாடிக் கொடுப்பது தான் சரியான சிகிச்சையாக இருக்கும். எனவே, கண் மருத்துவரைக் கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெந்நீர் ஒத்தடமும் கொடுத்தால் மட்டுமே இந்தக் கட்டி சரியாகும். நாமக்கட்டி போன்ற கைவைத்திய முறைகளைத் தவிர்ப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடு; வறண்டுபோகும் கண்கள்... மீள வழிகள் உண்டா?
Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?
'ப சித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை. டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம். நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதில் உண்மை இருக்கிறதா என்று, டயட்டீஷியன் காயத்ரி சொல்கிறார். உணவு... செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருட்கள், வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் தொடங்கிவிடுகின்றன. உணவை, உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியம். சரியான தொடக்கம், பாதி வெற்றி என்பதைப் போல, சரியாக மென்று விழுங்கினாலே, செரிமானப் பணியில் 50 சதவிகிதம் முடிந்தது போலத்தான். உணவு உண்ணும் முறை சிறிய சிறிய விள்ளல்களாக உண்ண வேண்டும். நிதானமாகச் சீராக மெல்ல வேண்டும். வாயில் உள்ள உணவு உமிழ்நீரோடு கலந்து, அதன் தன்மையை இழந்த பிறகே விழுங்க வேண்டும். ஒரு வாய் உணவை 32 முறை மெல்ல வேண்டும் எனக் கூறுவது ஒரு உதாரணம்தான். அதன் அர்த்தம், நன்றாக உணவு கூழாகும் வரை மெல்ல வேண்டும் என்பதே. ஒரு வாய் உணவை முழுதாக மென்று விழுங்கிய பிறகே, அடுத்த வாய் உணவை உண்ண வேண்டும். பேசாமல் உணவு உண்பது நல்லது. உணவு சாப்பிடும் முறை சரியாக மென்று உண்ணாவிட்டால்... சரியாக மெல்லப்படாததால், இரைப்பைக்குள் சென்ற உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். உணவில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்காது. அதிக அளவு உணவை உட்கொள்ளும் நிலை ஏற்படும். பற்களுக்குப் போதிய செயல்பாடு இல்லாமல், வலுவற்றுப்போகும். Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்! மென்று உண்பதன் பலன்கள் சராசரியாக நாம் உண்ணத் தொடங்கியதிலிருந்து 20 நிமிடங்களில் நம் மூளைக்கு நம் வயிறு நிறைந்துவிட்டது என்ற தகவல் செல்லும். நாம் மெதுவாக மென்று உண்ணும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். இதனால், உடல் எடைக் குறைவதோடு, உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம். நம் உமிழ்நீரில் உள்ள என்சைம், கொழுப்பை உடைக்கக்கூடியது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, நன்கு செரிமானம் ஆகும். உணவு சிறிய பகுதிகளாக மாறுவதால் சீக்கிரமாக ஜீரணமாகிவிடுகிறது. உணவை மெல்லும்போது, பற்களுக்கு அது நல்ல பயிற்சியாக உள்ளது. மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர், வாயில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது. உணவு Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா? உமிழ்நீர் நம் உணவில் உள்ள பச்சையம் (Starch), ஃப்ரக்டோஸ் (Fructose), மற்றும் குளுக்கோஸ் (Glucose) ஆகியவற்றைப் பிரித்து செரிமானத்துக்கு ஏற்ப மாற்றுகிறது. மெதுவாக மென்று உண்பதால், உணவின் ருசியை உணர்ந்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், மனதுக்கு முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ‘நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு’ என்ற நம் மூத்தோர் வாக்கில் பொய் ஏதுமில்லை. பொறுமையாக மென்று உண்டால் ஆரோக்கிய வாழ்வு அனைவருக்குமே நிச்சயம்’’ என்கிறார் டயட்டீஷியன் காயத்ரி. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
`குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?'காமத்துக்கு மரியாதை - 241
தி ருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாத தம்பதிகள், பெரும் பதற்றத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் நிலைமை புரிகிறது. என்றாலும், அவர்களுடைய பதற்றமும், பிரச்னையை அதிகப்படுத்தலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ். தாம்பத்திய உறவு ’’அந்தத் தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து வருடத்துக்குள்தான் ஆகியிருந்தது. குழந்தையின்மைக்கான ஆரம்பகட்ட கவுன்சிலிங்கில் இருந்தார்கள். கருத்தரிக்கும் வாய்ப்புள்ள குறிப்பிட்ட நாள்களில் உறவுகொள்ள முடியவில்லை என்பதற்காக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். ’இந்த நாள்கள்ல உறவுகொண்டே ஆகணும்’ என்கிற பதற்றத்தில் உறவுகொள்ள முடியாததுதான் அவர்களுடைய பிரச்னை. இவர்களைப் போன்ற சிக்கலில் இருக்கிற தம்பதிகள் அனைவருக்குமே நான் சொல்ல விரும்புவது இதுதான்’’ என்றவர் தொடர்ந்தார். ஆண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 Sexual வழிகாட்டல்கள்! | காமத்துக்கு மரியாதை - 238 ’’ஒருசில தம்பதியருக்கு உடலளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், கருவுறுதல் காலத்தே நிகழாது. குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள், ’மாதவிடாய் முடிந்த பிறகு குறிப்பிட்ட நாள்களில் உறவுகொண்டால் கருவுறும் வாய்ப்பு அதிகம்’ என்ற கருத்தை மட்டுமே நம்பி, அந்த நாள்களில் உறவுகொண்டே ஆக வேண்டுமென ஈடுபடுவார்கள். அடுத்த மாதம் வழக்கம்போல மாதவிடாய் ஆகிவிட்டால் மனமுடைந்து விடுவார்கள். இவர்கள், தினமும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் அது கருவுறும் வாய்ப்பை இன்னும் அதிகமாக்கும். தாம்பத்திய உறவு அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239 வாரத்தில் நான்கு நாட்களாவது கணவன் - மனைவி உறவுகொண்டால், கருவுறும் வாய்ப்பு 83 சதவிகிதம் வரை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவிர, தினமும் உறவுகொண்டால், பெண்ணின் கருப்பை, கருக்குழாய் ஆகிய இடங்களில் விந்தணுக்கள் இருக்கும். இதன் காரணமாக, பெண்ணின் கருமுட்டை எப்போது வெளியிடப்பட்டாலும் அது விந்தணுவுடன் இணைந்து கருவாக உருவாகலாம். கிட்டத்தட்ட தினமுமே உறவுக்கொள்வதில், ஆண்களுக்கும் ஒரு நன்மை இருக்கிறது. அது, அவர்களின் விந்தணுக்களின் தரம் அதிகமாகும். அதனால், உறவுக்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்காமல், தினமும் உறவுக்கொள்ளுங்கள். உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால், குழந்தையில்லை என்கிற தம்பதியருக்கு, இதுவே தீர்வாக அமையலாம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு'அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்?
Doctor Vikatan: திருவண்ணாமலையில் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அவரின் அம்மா மயங்கி விழுந்து இறந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பது, மனைவி இறந்த தகவல் கேட்டு கணவர் இறப்பது போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதன் பின்னணி என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மருத்துவர் சுபா சார்லஸ் ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழும் நிலையில் இருவரில் ஒருவர் இறந்தபின் அவரோடு அந்த மற்றொருவரும் உயிரிழக்கும் சம்பவம் புதிதல்ல.. தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வுதான். உணர்வுகள் நம் மனதை மட்டுமன்றி, உடலையும் பெரிதும் பாதிக்கக்கூடியவை. அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. இதயத்தைத் தாக்குபவை, மூளையைத் தாக்குபவை. உடலின் உள் உறுப்புகளைத் தாக்கக்கூடியவை. மருத்துவத்தில் 'மாஸிவ் வாசோவேகல் சின்கோப்பி' (Massive Vaso Vagal syncope) என்றொரு நிலை குறித்துச் சொல்வோம். அதாவது இது ஒருவகையான மயக்கம். உடலில் ஏற்படும் சில எதிர்வினைகளால் உண்டாவது. இந்த எதிர்வினைகள் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் திடீரென குறைத்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. சிலர் ரத்தத்தைப் பார்த்தால் மயங்கி விழுந்து விடுவார்கள். இன்னும் சிலர், அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கேள்விப்படும்போது தாங்க முடியாமல் மயங்கி விழுந்து விடுவார்கள். சிறிது நேரத்தில் அவர்களாகவே எழுந்துவிடுவார்கள். திடீர் மற்றும் தீவிரமான மன அழுத்தம் காரணமாக சில சமயங்களில் இதயம் தற்காலிகமாக பலவீனமடையலாம். மருத்துவர்களே நோயாளிகளாகும் துயரம்; அதிகரிக்கும் மன அழுத்தம், அகால மரணங்கள் - என்னதான் நடக்கிறது? அரிதாக சில சமயங்களில் அதீத உணர்ச்சி கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து, இதயத்துடிப்பு குறைந்து ரத்த அழுத்தமும் குறைந்து, அந்த நபர் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படலாம். நெருங்கியவரின் மரணம் ஏற்படுத்தும் துக்கம் மிகவும் ஆழமானதாக இருக்கலாம். இது உடலில் அதிகப்படியான மன அழுத்த ஹார்மோன்களை (stress hormones) வெளியிடத் தூண்டும். இந்த ஹார்மோன்கள் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கலாம். நீண்டகால அல்லது தீவிரமான மன அழுத்தம் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். திடீர் மற்றும் தீவிரமான மன அழுத்தம் காரணமாக சில சமயங்களில் இதயம் தற்காலிகமாக பலவீனமடையலாம். இது மாரடைப்பின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. ஏற்கெனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு, துக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நோய்கள் மோசமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். தம்பதி வயதானவர்களுக்கு உடல் பலவீனமாக இருக்கும். மரணச் செய்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியை அவர்களது உடலால் தாங்க முடியாமல் போகலாம். துக்கத்தைத் தாங்க முடியாத நிலையில் இருக்கும் நபர்களுக்கு உடனடி மருத்துவ மற்றும் உளவியல் உதவி வழங்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம்... தீர்வு என்ன?
Doctor Vikatan: 25 வயதில் பலூன் போல வீங்கியிருக்கும் தொப்புள்.. அறுவை சிகிச்சை தான் தீர்வா?
Doctor Vikatan: `பிறந்ததும் தொப்புள் சரியாக மூடப்படவில்லை அல்லது தானாக மூடவில்லை என்றால், பின்னாளில் பிரச்னையாகி அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்' என்கிறார்கள். 25 வயதில்கூட பிரச்னை வரலாம் என்கிறார்கள். அதேபோல, சிலருக்கு தொப்புள் பலூன் போல வீங்கியிருக்கும். இந்தப் பிரச்னை பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்... பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி சில குழந்தைகள் பிறக்கும்போது, அழும்போதும், முக்கும்போதும் தொப்புளைச் சுற்றி சிறியது முதல் பெரிய அளவு வரையிலான வீக்கத்தைப் பார்க்க முடியும். இதற்கு 'அம்பிலிகல் ஹெர்னியா' (umbilical hernia ) என்று பெயர். குழந்தையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையின் தளர்ச்சி காரணமாக அல்லது தசைப்பகுதி சிறிது வளர்ச்சியடையாமல் இருப்பதாலோ வயிற்றின் உட்பகுதியில் உள்ள திசு மற்றும் குடல் போன்ற உறுப்புகள், தொப்புளைச் சுற்றி வீக்கம்போன்று சற்று பிதுங்கி வெளிப்படுவதே அம்பிலிகல் ஹெர்னியா எனப்படுகிற பாதிப்பு. இது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே பொதுவாக வருகிறது. அதாவது, 30 முதல் 40 சதவிகிதம் என் அளவுக்கு.. அதே சமயத்தில், நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 10 சதவிகிதம் பேருக்கும் இந்தப் பிரச்னை வருகிறது. சிறிய அளவிலான பாதிப்பு என்றால், குழந்தை அழும்போதும், முக்கும் போதும் மட்டும் வீக்கம் போல வெளியே தெரியும். குழந்தை படுத்திருக்கும்போது தானாக மறைந்துவிடும். இந்த வகை ஹெர்னியா, குழந்தை வளர, வளர சிறியதாகி, வயிற்றுத்தசை வலுவடைந்த உடன் மறைந்து தானே சரியாகிவிடும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு, அவர்கள் ஒன்று முதல் ஒன்றரை வயதாகும்போது, இந்தப் பிரச்னை முழுமையாக குணமாகிவிடும். 10 சதவிகிதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு வீக்கம் பெரிதாக இருப்பதோடு, படுத்தாலும் மறையாமலிருக்கும். இருமுதல், முக்குதல் இல்லாமலும் வெளியே தெரியும்படி இருக்கும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மிக அரிதாக குடல் அடைப்பு, குடல் சுற்றிக்கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம். தொடர்ந்து வலியால் குழந்தை அழுவது, வயிறு வீங்குவது, தொப்புள் வீக்கத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போவது, வாந்தி, மலம் கழிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தையின் தொப்புளில் ரப்பர் பேண்ட், நூல் போன்றவற்றைக் கட்டிவிடுவது, வீக்கமுள்ள பகுதியில் காசை வைத்து அழுத்தி ஒட்டிவிடுவது போன்ற பாட்டி வைத்தியங்கள் எந்தப் பலனையும் தராது. மாறாக, அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். அம்பிலிகல் ஹெர்னியா பாதிப்பானது, குழந்தைகளை மட்டுமன்றி, பெரியவர்களையும் பாதிக்கலாம். இதை 'அக்வயர்டு அம்பிலிகல் ஹெர்னியா' (acquired umbilical hernia ) என்று சொல்வார்கள். உடல் பருமன், அடுத்தடுத்து கர்ப்பம் தரிப்பது, ஒன்றுக்கு மேலான குழந்தைகளை கருவில் சுமப்பது, கர்ப்பத்தின் போது உள்ளே அதிக நீர் கோத்திருப்பது, வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தொடர் இருமல் போன்றவற்றின் காரணமாக அழுத்தம் ஏற்பட்டும் அம்பிலிகல் ஹெர்னியா பாதிக்கலாம். பெரியவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு. ஏனென்றால், குறைபாடுள்ள பகுதியின் வழியே குடலானது வெளியே வர வாய்ப்புகள் உண்டு. அம்பிலிகல் ஹெர்னியா பாதிப்பு Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா? வெளியே வந்த குடல் பகுதி தானாக உள்ளே போய்விட்டால் பிரச்னை இல்லை. அப்படிப் போகாமல் மாட்டிக் கொண்டால் அதை 'ஸ்டாங்குலேட்டடு ஹெர்னியா' (strangulated hernia ) என்று சொல்வோம். இதன் காரணமாக கடுமையான வலி வரும். திசுக்கள் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். இதை உடனடியாக குணப்படுத்த வேண்டியிருப்பதால், எமர்ஜென்சியாக அறுவை சிகிச்சை செய்யப்படும். சிறிய அளவிலான ஹெர்னியா, எந்தப் பிரச்னையும் கொடுக்கவில்லை என்றால் காத்திருந்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு வரும் ஹெர்னியாவில் வலி இருக்காது, வீக்கம் மட்டுமே இருக்கும். காலப்போக்கில் தானாகச் சரியாகிவிடும். 4 வயதுக்கு மேலாகியும் சரியாகாவிட்டால்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். பெரியவர்களுக்கு வருவது அப்படியானதல்ல. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
இ ந்த வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும். உள்ளங்கையில் விரலைத்தேய்த்து கட்டியின் மேல் வைப்பார்கள் அல்லது நாமக்கட்டியை உரசிப் பூசுவார்கள். இவையெல்லாம் தீர்வுகளா? கண்களில் வருகிற கட்டிக்கு என்ன தீர்வு? மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவர் அரவிந்த் சீனிவாசன் சொல்கிறார். கண்களில் வருகிற கட்டி Eye Health: `மெட்ராஸ் ஐ' வந்தவர் கண்களை பார்த்தால் தொற்று பரவி விடுமா? கண் மருத்துவர் விளக்கம்! “இமைப் பகுதியில் உள்ள சீபச் சுரப்பியில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக கண்கட்டிகள் உருவாகின்றன. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் எனும் சுரப்பியில் அடைப்பு ஏற்படுவதால், வெளிப்புறக் கண்கட்டிகள் உருவாகின்றன. கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பியில் பிரச்னை ஏற்படுவதால், உட்புறத்திலும் சிலருக்கு கண்கட்டி ஏற்படும். பொதுவாக, வெளிப்புறக் கட்டிகளில் கிருமித்தொற்று ஏற்படுவதால், சீழ் பிடித்து அதிக வலியை ஏற்படுத்தும். உட்புறக் கட்டிகள் நாள்பட்டவையாக இருந்தாலும் வலி இருக்காது. சிலருக்குக் குறைவான வலி இருக்கும். Eye twitching: கண்கள் ஏன் துடிக்கின்றன? கண்கட்டிக்கு எனப் பிரத்யேக மருந்துகள் உள்ளன. கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சொட்டு மருந்து, மாத்திரைகள், களிம்புகள் பயன்படுத்துவதன் மூலம் கண்கட்டிக்குத் தீர்வு காணலாம். காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நிமிடங்களுக்கு வெந்நீர் ஒத்தடம் தரலாம். கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. Eye drops சர்க்கரை நோய் அதிகமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு, கண் கட்டியாகத் தொடங்கி, பின்னர் இவை முகத்திலும் பரவ வாய்ப்புஉண்டு. எனவே, நாமக்கட்டியை பூசுவது போன்ற சுய வைத்தியம் செய்துகொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது'' என்கிறார் டாக்டர் அரவிந்த் சீனிவாசன். Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா?
Health: பிடித்த சுவை சொல்லி விடும் உங்கள் உடலில் இருக்கிற சத்துக்குறைபாட்டை..!
''ஒ வ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். சிலருக்குப் புளிப்பு, சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம் என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு உணவை நம்மையும் அறியாமல் விரும்பிச் சாப்பிடுவோம். உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது அதுபற்றிய முன்னெச்சரிக்கையை உடல் நமக்கு அறிவிக்கிறது. சுவை மூலமாக, உடல் தனது பிரச்னையை வெளிப்படுத்துகிறது. அதாவது ஒருவர் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்தே அவருக்கு உள்ள பாதிப்பையும் அறிய முடியும்'' என்கிற சித்த மருத்துவர் பத்மபிரியா, அதுபற்றி விரிவாகப் பேசுகிறார். அறுசுவை ''கர்ப்பிணிகள் புளிப்புச் சுவையை அதிகம் நாடுவதைக் கவனித்திருப்போம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் காரணமாக, அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, சத்துக்கள் வெளியேறிவிடும். குறிப்பாக, கல்லீரலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காது. இதனால்தான் அவர்களது நாக்கு புளிப்புச் சுவையைத் தேடுகிறது. உடலில் சோடியம் குறைபாடு உள்ளவர்கள் இயல்பாகவே உப்புச் சுவையை அதிகம் விரும்புவார்கள். குளுக்கோஸ் குறைவாகக் காணப்படும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன்மூலமாக, பற்றாக்குறையான சத்துக்களை உடல் தானாகக் கேட்டுப் பெறுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை தெரிவிக்க, மூளை வயிற்றுக்குக் கட்டளை இடுகிறது. இதனைச் செயல்படுத்தி, தேவையான சத்துக்களைப் பெறவே இந்த சுவைக்கான தேடல் தொடங்குகிறது. அறுசுவை சாக்லேட் சாக்லேட் அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்களின் உடலில் மக்னீசியம் அல்லது வைட்டமின் பி பற்றாக்குறை இருக்க வாய்ப்பு உள்ளது. உடல் சோர்வுக்கு முக்கியக் காரணம் வைட்டமின் பி குறைபாடு. சாக்லேட் சாப்பிடும்போது, அதில் உள்ள சர்க்கரை மற்றும் காஃபைன் மூளையில் உள்ள டோபோமைன் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக மூளை தற்காலிகமாகச் சுறுசுறுப்பு அடைகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய முந்திரி, பாதாம், பிஸ்தா, சோயாபீன்ஸ், மீன் ஆகியவற்றை சாப்பிடலாம். காரமான நொறுக்குத் தீனிகள் பிரெஞ்சு ஃபிரை, உருளைக்கிழங்கு வறுவல், பஜ்ஜி, போண்டா போன்ற காரமான நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் குறைவாக இருக்கக்கூடும். பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலமான ஒமேகா3-ல், நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. இது, இதய நோய்களைத் தடுக்கக்கூடியது. ஒமேகா-3 கொழுப்பு சத்துக்களை பெற மீன், அவகேடோ, நட்ஸ், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சாப்பிடலாம். அறுசுவை உப்பு உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிக வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிகமாக உப்புச்சத்து தேவைப்படும். உப்புச்சத்து சிறுநீரகத்தின் மேற்புறத்தில் இருக்கும் அட்ரினல் சுரப்பியின் செயல்திறனுக்கு உதவுகிறது. கடல் உணவுகள், ப்ரெஷ் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? ஐஸ் வாட்டர் சிலர் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பர். ஐஸ் வாட்டர் குடித்தவுடன், மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். ஆனால், இது தற்காலிகமான புத்துணர்ச்சிதான். இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் மந்தத்தன்மை, ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பதால், பற்களின் வேர் மற்றும் தாடை நரம்புகள் பாதிக்கப்படலாம். இதற்குப் பதிலாக பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும். Ice water Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்? நமக்கு ஒரு குறிப்பிட்ட சுவையில் நாட்டம் ஏற்படுத்தி, உடலில் உள்ள குறிப்பிட்ட சத்துக் குறைபாட்டை மறைமுகமாக உணர்த்துகிறது நம் உடல். அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, குறிப்பிட்ட சுவை கொண்ட உணவுகளில் எது ஆரோக்கியமானதோ அதை எடுத்துக்கொண்டால், நம் உடல் நலம் பெறும்'' என்கிறார் சித்த மருத்துவர் பத்மபிரியா.
Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாபட்டீஸ் வருவது ஏன்?
Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அது குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம், தானாகச் சரியாகிவிடும் என்று சொன்னார் மருத்துவர். குடும்ப பின்னணியில் டயாபட்டீஸ் இல்லாதபோதும் சிலருக்கு இப்படி கர்ப்ப காலத்தில் அந்த பாதிப்பு வர என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவை 'ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்' (gestational diabetes ) என்கிறோம். வழக்கமாக இது கர்ப்பத்தின் 5 அல்லது 6-வது மாதங்களில் வரும். கர்ப்பகால நீரிழிவுக்கு முக்கிய காரணமே, கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரிப்பதுதான். உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ (BMI) அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கர்ப்பிணிக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம். Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா... சரியான உணவு முறை எது? கர்ப்பகால நீரிழிவு வந்தால் அது தானாக சரியாகிவிடும் என்ற அலட்சியம் வேண்டாம். மற்ற கர்ப்பிணிகளைவிடவும் இவர்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். குழந்தையின் உடல் எடையும் அதிகரிக்கலாம். குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடை அதிரிக்க, அதிகரிக்க, சுகப்பிரசவ வாய்ப்புகள் குறைந்து, சிசேரியன் செய்ய வேண்டிய தேவை அதிகரிக்கும். Doctor Vikatan: சிசேரியன் செய்த தையலில் வலி... அறுவைசிகிச்சை இல்லாத தீர்வு உண்டா? கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால், அந்தப் பெண்ணுக்கு பிற்காலத்தில் நீரிழிவு பாதிப்பதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் உண்டு. அதாவது எல்லாப் பெண்களுக்கும் பிரசவமானதும் அந்தத் தற்காலிக நீரிழிவு சரியாகிவிடுவதில்லை. சிலருக்கு அது நிரந்தரமாகவும் மாறலாம். எனவே, கர்ப்பகால நீரிழிவு என்பதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அவர்கள் வருடந்தோறும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்க்க வேண்டும். பிரசவமானதும் நீரிழிவு சரியானதாக நினைத்துக்கொண்டு அலட்சியமாக இல்லாமல், உடல் எடையைச் சரியாக வைத்துக்கொள்வது, சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் அப்போதிலிருந்தே அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Happy Teeth: கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை... குழந்தையை பாதிக்குமா?
Doctor Vikatan: `2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டும் குணமாகாத வாய்ப்புண்..' - காரணம், தீர்வு என்ன?
Doctor Vikatan: என் உறவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புண் இருக்கிறது. எல்லாவிதமான மெடிக்கல் செக்கப்பும் செய்து பார்த்துவிட்டார். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் பிரச்னை சரியாகவே இல்லை. இதற்கு இயற்கையான மற்றும் நிரந்தரமான தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.... -இலக்கியா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி வாய்ப்புண் என்பது பரவலாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். சரியான சாப்பாடு சாப்பிடாதது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, வாய் சுகாதாரம் பேணாதது, கூர்மையான பற்கள் இருப்பது போன்றவற்றால் அடிக்கடி வாய்ப்புண்கள் வரலாம். ஆனால், 3 வாரங்களுக்கும் மேல் வாய்ப்புண் இருந்தால், மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா? சத்துக்குறைபாடு, வெற்றிலை-பாக்கு பழக்கம், வாய் துர்நாற்றத்துக்காக எப்போதும் மிட்டாய் போன்ற ஒன்றை மெல்வது, அளவுக்கதிகமாக காபி, டீ குடிப்பது போன்றவற்றாலும் வாய்ப்புண் வரலாம். பொதுவாகவே, வாய்க்குள் நீண்ட நேரம் எதையாவது அடக்கி வைத்திருந்தாலே புண் வரும். வாய்ப்புண் வருவதற்கான பரவலான காரணம், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி சத்துக் குறைபாடுதான். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், உங்கள் உறவினருக்கு 2 வருடங்களுக்கும் மேலாக அது பலனளிக்கவில்லை என்பதுதான் யோசிக்க வைக்கிறது. பல் துலக்கும்போது ஈறுகள் புண்ணாகும்படி அழுத்தித் தேய்க்கக்கூடாது. தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும். பல் துலக்கும்போது பிரஷ் பயன்பாட்டில் கவனம் வேண்டும். இரண்டு மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பிரஷ்ஷின் முனைகள் விரிந்துவிட்டாலே அதை மாற்றிவிட வேண்டும். நம்மில் பலரும் பாத்ரூமுக்குள்தான் பிரஷ்ஷை வைப்போம். அது மிகவும் தவறானது. கழிவறையை ஃப்ளஷ் செய்யும்போது அங்குள்ள கிருமிகள் டூத் பிரஷ்ஷில் வந்து உட்கார்ந்துகொள்ளும். பல் துலக்கும்போது ஈறுகள் புண்ணாகும்படி அழுத்தித் தேய்க்கக்கூடாது. இரவில் பல் துலக்க வேண்டியது மிக மிக முக்கியம். Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்? நம்முடைய உணவுப்பழக்கத்தில் அசிடிக் உணவுகள்தான் அதிகம் இடம்பெறுகின்றன. காரமான, புளிப்பான உணவுகளையும் காபி, டீ போன்றவற்றையும் அதிகம் சாப்பிடுகிறோம். அதை மாற்ற வேண்டும். மணத்தக்காளிக் கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை - இந்த மூன்றுமே வாய்ப்புண்ணுக்கு மிகவும் நல்லது. இவற்றை பாசிப்பருப்பு சேர்த்து மசியலாகச் செய்து சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், வெள்ளைப்பூசணிக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி குறைபாடு ஏற்படாமலிருக்க நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம். மாதுளம்பழமும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. எனவே, மாதுளம்பழத்தையும் நெல்லிக்காயையும் ஜூஸ் போல செய்து தேன் கலந்து (நீரிழிவு இருந்தால் தேனை தவிர்க்கவும்) சிறிதளவு குடித்தால் போதும். ஆயில் புல்லிங் நீரிழிவு உள்ளவர்கள் இந்த இரண்டையும் வெறுமனே மென்று சாப்பிட்டாலே போதும். காய்கறிகளில் கோவைக்காய் மிகவும் நல்லது. பிஞ்சு கோவைக்காய் ஒன்றை பச்சையாக மென்று துப்பிவிடவும். பிறகு இன்னொரு கோவைக்காயை மென்று அதன் சாறு புண்களில் படும்படி சாப்பிடவும். இது வயிற்றுப்புண்ணுக்கும் மருந்து. சின்ன வெங்காயமும் வாய்ப்புண்ணை விரட்டும். இதை தயிர் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிடலாம். பச்சை வாடை பிடிக்காதவர்கள், நல்லெண்ணெயில் வதக்கி, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் இரவில் மவுத்வாஷ் போல வாய்க் கொப்பளிக்கப் பயன்படுத்தலாம். பகலில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்து ஆயில் புல்லிங் முறையில் வாயில் வைத்திருந்துவிட்டு துப்பிவிடலாம். சித்த மருந்துக் கடைகளில் குங்கிலிய வெண்ணெய் என கிடைக்கும். அதை வாய்ப்புண்களில் தடவி வந்தால் எரிச்சல் குறையும். இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்னை தொடர்வதால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: அடிக்கடி வரும் வாய்ப்புண்... புற்றுநோயாக மாறுமா?
கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்கள்!
கோ டைக்காலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்ப்பூசணியும்(watermelon) , முலாம் பழமும்(muskmelon) தான். தர்பூசணி, முலாம்பழம் போன்றே கொடுக்காய்ப்புளியும் கோடை சீசனீல் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒன்று. கோடையில் தான் இந்த காய்கள் காய்க்கும் சீசனும் கூட. மற்ற நேரங்களில் இவற்றை பார்க்க முடியாது. சென்னைப் போன்ற வட தமிழக பகுதிகளில் இதற்க்கு கொரிக்கலிக்காய் என்ற வேறொரு பெயரும் உண்டு. கொடுக்காய்ப்புளி நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுக்காய்ப்புளியை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றளவும் கிராமப்புறங்களில் கொடுக்காய்ப்புளிக்கு மவுசு அதிகம். பழத்திற்கு பாதுகாப்பாய் வேலி அமைத்ததுபோல மரத்தின் கிளைகள் முழுவதும் முற்கள் படர்ந்திருக்கும். இதன் முற்றிய காய்கள் பச்சை நிறத்திலும் சாப்பிடுவதற்கு துவர்ப்பு சுவையிலும், பழம் அடர் சிவப்பு நிறத்திலும் சாப்பிடுவதற்கு இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடனும் இருக்கும். Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! மனிதன் எதையும் போகிற போக்கில் உண்ண பழகவில்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் மறைந்திருக்கும். அப்படி இந்த கொடுக்காய்ப்புளியை உண்பதால் என்ன மருத்துவகுணம் உள்ளது என்பதை விளக்குகிறார் அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். மனிதர்கள் பெரும்பாலும் இனிப்பு, காரம் போன்ற சுவைகளையே பெரிதும் விரும்புகின்றனர். துவர்ப்பு சுவையை யாரும் பெரிதும் விரும்புவதில்லை. கொடுக்காய்ப்புளி துவர்ப்பு சுவை மிகுந்த உணவுப்பொருள்களில் ஒன்று. இப்படி ஒரு பழம் இருப்பதுகூட பலருக்கு தெரிவதில்லை. கொடுக்காய்ப்புளி இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை நிறைந்து இருப்பதால் இவற்றை சாப்பிடும் போது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும். தற்போது உள்ள உணவியல் முறையால் ஏற்படக்கூடிய அல்சர் மற்றும் செரிமான மண்டலங்களில் ஏற்படக்கூடிய சிராய்வுகள் போன்றவற்றையும் சரிசெய்யும் பண்பு இந்த கொடுக்காய்ப்புளிக்கு உள்ளது. கொடுக்காய்ப்புளியை பழமாக உண்பதைவிட பிஞ்சாக இருக்கும்போது உண்டால் நல்லது. அப்போது அதில் அதிகளவு துவர்ப்பு சுவை இருக்கும். இரும்புச்சத்து குறைபாடு முதல் ஆண்மைக் குறைபாடு வரை... சப்போர்ட் செய்யும் சப்போட்டா! நீரிழிவு நோயாளிகள், இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாமா? நீரிழிவு நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் பழங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த கொடுக்காய்ப்புளியில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை, கால் வீக்கம், புண் போன்றவற்றையும் இவை குணப்படுத்தும். சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் கொடுக்காய்ப்புளியை சாப்பிடும் போது தொண்டை அடைப்பது போன்று இருக்கும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவற்றை இடித்து பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம்'' என்கிறார் மருத்துவர் வி.விக்ரம்குமார். -ர.ராஜ்குமார் Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்!
Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?
Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன். என்றாவது ஒன்றிரண்டு நாள்கள் அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சரியான பழக்கம்தானா... எத்தனை பழங்கள் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார் கோயம்புத்துரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து என சத்துகளின் பெட்டகம் என்றே வாழைப்பழத்தைச் சொல்லலாம். இதிலுள்ள கார்போஹைட்ரேட்டின் மூலம் உடலுக்குத் தேவையான கலோரி கிடைத்துவிடும். வாழைப்பழத்தில் புரதச்சத்து கிடையாது. உடலின் கட்டமைப்புக்கு புரதச்சத்து மிக மிக முக்கியமானது. உடலின் நோய் எதிர்ப்பாற்றல், திசுக்களைப் பழுதுபார்த்தல், தசை வளர்ச்சி, எலும்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் புரதச்சத்து மிக அவசியம். கொழுப்புச்சத்தானது, உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, கொழுப்பில் கரையும் ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ள உதவும். தவிர, ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு அவசியம். ஆனால், வாழைப்பழத்தில் கொழுப்புச்சத்தும் கிடையாது. எனவே, வாழைப்பழத்தை முழுமையான உணவாக நினைத்துச் சாப்பிட வேண்டாம். வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது. வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது. எனவே, வாழைப்பழமாக உட்கொள்ளும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆற்றலானது சர்க்கரைச் சத்திலிருந்து பெறப்படுவதாக அமையும். போதுமான அளவு புரதச்சத்தோ, கொழுப்புச்சத்தோ இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது, அது உடல்பருமனுக்கும், ரத்தச் சர்க்கரை சமநிலையின்மைக்கும் காரணமாகும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும் சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது. தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம். Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா? சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சாப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட் உடலில் சேர்ந்திருக்கும். அந்நிலையில் வாழைப்பழத்தின் மூலம் கூடுதல் கார்போஹைட்ரேட் உடலில் சேரும். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைப்பழத்தைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. மலச்சிக்கலைப் போக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் இதை எடுத்துக்கொள்வோர், மேற்குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம். ஆரோக்கியமான நபர், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். பசி நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து, இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைத்துவிடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?
Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும். வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது. Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்? பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரன்ட் என்பது வியர்வையின் வாடையை தன் வாடையின் மூலம் மறைக்கும். ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை அணியும்போது வியர்வை கசிந்து, அதன் அடையாளம் உடையில் தெரியாமலிருக்க ரோல் ஆன் உபயோகிக்கலாம். இவற்றையெல்லாம் உபயோகிப்பது சரியா, தவறா என்றால் இவற்றில் வாசனைக்காகப் பயன்படுத்தும் கூறுகள் நிச்சயம் சருமத்தை பாதிக்கும். அதனால்தான் அதிக வாசனை உள்ள பவுடர், சோப் போன்றவற்றைக்கூட உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கான்டாக்ட் அலர்ஜி என்கிற ஒவ்வாமைக்கு அதுதான் பிரதான காரணமே. பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது என்பது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். மாநிற சருமம் கொண்ட நம்மைப் போன்ற தென்னிந்தியர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகம். உதாரணத்துக்கு அக்குள் பகுதியில் வியர்வைக்காக உபயோகிக்கும் இந்த வாசனைப் பொருள்களால், அந்தப் பகுதி அளவுக்கதிகமாக கருத்துப்போலாம். 'அப்படியென்றால் வியர்வை நாற்றத்தை மறைக்க எதைத்தான் உபயோகிப்பது' என்ற கேள்வி வரலாம். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட டஸ்ட்டிங் பவுடர்கள் கிடைக்கின்றன. இந்த பவுடர்கள் பாக்டீரியாவோ, பூஞ்சையோ வளரவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் கேட்ட எல்லாவற்றையும்விட டஸ்ட்டிங் பவுடரே சருமத்துக்குப் பாதுகாப்பானது. தரமான பிராண்ட் தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: எப்போதும் வழிந்தோடும் வியர்வை... மாத்திரை உதவுமா... தீர்வுதான் என்ன?
Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
சி றுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல் சிறுநீரகக் கற்கள் உருவாக 8 காரணங்கள்; 1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு. 2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது. 3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது. 4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள். 5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல். 6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது. 7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள். 8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல். ரத்தப் பரிசோதனை எப்படிக் கண்டறிவது? எ ளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில், வழக்கத்தை விடவும் மிக அதிக அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும். கால்சியம், யூரிக் அமிலம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, என்ன கற்கள் என்பதை அறியலாம். சி றுநீர்ப் பரிசோதனையில் கழிவு எவ்வளவு வெளிவருகின்றன என்பதைக் கண்டறியலாம். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? அ ல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் 90 சதவிகிதம் வரை கற்களைக் கண்டறிய முடியும். சி றுநீரகத்திலும் சிறுநீரகப் பாதையிலும் கற்கள் வரும் என்பதால், சிலருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கற்கள் தெரியாது. இவர்களுக்கு, சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை தேவைப்படும். எலுமிச்சை சிறுநீரகக் கற்கள் தடுக்க... தவிர்க்க! எ லுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புக் குறையும். ரெ ட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சீ ஸ், பனீர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கே ரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும். உ டல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தி னமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்?
Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!
ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இதுபற்றி விளக்குகிறார் ட்ரைக்காலஜிஸ்ட் தலட் சலீம். Shampoo என்னென்ன ஷாம்புக்கள் உள்ளன? * கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது. * ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது. * ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது. * கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம். * வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும். * மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம். * ரிவைட்டலைசிங் ஷாம்பு (Revitalizing): கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஷாம்பு. * 2 இன் 1 ஷாம்பு: இதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் இரண்டுமே கலந்திருக்கும். * ஸ்விம்மர் ஷாம்பு (Swimmer): நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கூந்தலில் படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். Shampoo ஷாம்பு எப்படித் தேர்வு செய்வது? * ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தலைமுடியில், வறண்ட, எண்ணெய் பசை, நார்மல் கூந்தல் எனப் பல வகை உள்ளன. எந்த வகையான கூந்தலுக்கு எந்த மாதிரியான ஷாம்பு சரியாக இருக்கும் என்று சரும மருத்துவர் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில் ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எண்ணெய்... ஹேர் பேக்... கொப்பரைத் தேங்காய்... ஆரோக்கிய கூந்தல் சீக்ரெட்ஸ்! * எண்ணெய் பசைக் கூந்தலாக இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தலாம். * நார்மல் கூந்தல் உள்ளவர்களுக்கு பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவர்கள், மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இது, தலையில், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். * வறண்ட கூந்தல் உள்ளவர்கள், டிடர்ஜென்ட் உள்ள ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் ஷாம்பு பயன்படுத்த வேண்டும். * பி.ஹெச் (pH) அளவு 5.5 இருக்கும் ஷாம்பு மிதமானது. Shampoo Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? * பொதுவாக, பி.ஹெச் அளவு 5 - 7 வரை இருக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இதில், எந்த கூந்தலுக்கு, எது பொருந்தும் என மருத்துவரிடம் ஆலோசித்துப் பயன்படுத்த வேண்டும். * பென்சாய்ல் (Benzoyl) இருக்கும் ஷாம்பு, ஓரளவுக்கு ஈரப்பதத்தைத் தரும். ஆனால், இந்த கெமிக்கலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும். * ஷாம்புவில் புரோட்டின் இருந்தால், கூந்தலின் தரம் மேம்படும். அதன் நெகிழ்சித்தன்மை அதிகமாகும். கூந்தல் பார்க்க அழகாகத் தெரியும். தண்டு துளைப்பான் தடுப்பு... ஷாம்பு இஞ்சி வளர்ப்பு... கடற்பாசியில் உணவு... * சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன. * மிகவும் வறட்சியான கூந்தலுக்கு இன்டென்ஸ் மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தலாம். இதில், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கலந்திருக்கும். * ஷாம்பு பாட்டிலில், அவகேடோ எண்ணெய், இலாஙஇலாங் எண்ணெய், ஆலிவ், பாதாம், ரோஸ்பெர்ரி, சோயாபீன் போன்ற பல்வேறு எசன்ஷியல் எண்ணெய்கள் கலந்திருந்தால், அந்த ஷாம்புக்கள் நல்லது. சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் பாதிப்பை ஏற்படுத்தும் 5 வில்லன்கள் சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate), சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), பாராபின் (Paraben), ட்ரைதானோலமைன் (Triethanolamine (TEA)), அம்மோனியம் லாரில் சல்ஃபேட் (Ammonium lauryl sulfate) போன்ற கெமிக்கல்களின் பெயர் லேபிளில் இருந்தால் இயன்றவரை அந்த ஷாம்புக்களைத் தவிர்க்கலாம். இவை, கூந்தலை மோசமாகப் பாதிப்பவை. அழகான ஆபத்து! ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வரை
Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?
Doctor Vikatan: மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்... சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே... தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி கேள்வியில் உங்களுடைய வயது, உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளனவா, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவரா, உடல் பருமன் கொண்டவரா, சராசரி எடையுடன் இருப்பவரா என்பன போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அந்தத் தகவல்கள் தெரிந்தால் இன்னும் விளக்கமாக இதற்கு பதில் அளிக்க முடியும். இரவில் தாமதமாகத் தூங்கும் வழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. அப்படி தாமதமாகத் தூங்கி, குறைந்த நேரம் தூங்கி எழுபவர்களுக்கு அடுத்த நாள் அந்தத் தூக்கம் தொடர்வதில் ஆச்சர்யமில்லை. கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை வரலாம். பொதுவாக இந்தப் பிரச்னைக்கு 'சோம்னாம்புலிசம்' (somnambulism) என்று பெயர். இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது உடல் பருமன். உடல் பருமன் கொண்டவர்களுக்கு பொதுவாகவே, இரவில் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. அதேபோல இவர்களுக்கு மூளையின் தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும் திறனை பாதிக்கும் 'நார்கோலெப்ஸி' ( Narcolepsy ) பிரச்னை இருக்கலாம். அதேபோல 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) போன்ற பிரச்னைகளும் இருக்கலாம். இதில் இரவில் அடிக்கடி கால்களை உதறியபடி விழித்துக்கொள்வார்கள். பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம். அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும். தூக்கம் வராதவர்களுக்கு கைகொடுக்கும் ஸ்லீப்மேக்ஸிங்! ஆறுதலா... ஆபத்தா? இவை தவிர, 'அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) என்ற பாதிப்பும் இருக்கலாம். உடல் பருமனானவர்களுக்கு, நாக்கானது சுவாசக்குழாயில் தடையை ஏற்படுத்துவதால் உண்டாகும் பிரச்னை இது. எனவே, உடல் பருமன் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களது தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் இல்லாமலும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வருவதுமாக இருக்கலாம். ஆல்கஹால் குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் தூக்கத்தில் பாதிப்பு வரும். பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம். அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு சரியாக மாத்திரைகள் எடுக்காதபட்சத்தில், ரத்தச் சர்க்கரை அளவானது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். அதன் காரணமாக அவர்கள் சோர்வாக உணர்வது, தூங்கி வழிவது போன்றவற்றைப் பார்க்கலாம். இதே பிரச்னை தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கும் இருக்கும். எனவே, இதுபோல தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். வாகனம் ஓட்டும்போதோ, பயணத்தின்போதோ இந்தப் பிரச்னையால் ஆபத்துகள் நிகழலாம் என்பதால் இதில் அலட்சியம் வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
டெஸ்ட் டியூப் பேபி எப்படி உருவாகிறது தெரியுமா?முக்கியமான 5 விஷயங்கள்! | பூப்பு முதல் மூப்புவரை
டெஸ்ட் டியூப் பேபி என்றவுடன், நம் அனைவருக்கும் பொதுவாக நினைவில் வருவது, வட்டமான கருமுட்டையை ஒருபக்கம் கருவி ஒன்று தாங்கி நிற்க, மறுபக்கம் அந்தக் கருமுட்டையை ஓர் ஊசி துளைத்து, அதன் குழாய் வழியாக விந்தணு ஒன்று உள்ளே சேர்க்கப்பட்டு, கரு உருவாகி, அதற்குப்பின் இரண்டு, நான்கு செல்களாக அந்தக் கரு உருவாகும் ஓர் அழகிய கறுப்பு-வெள்ளை காணொளி தானே? உண்மையில், அந்தக் காணொளி, செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஓர் அங்கமான இக்ஸி, அதாவது Intra Cytoplasmic Sperm Injection (ICSI) முறை என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்கள். அது என்ன இக்ஸி முறை... ஐ.வி.எஃப் சிகிச்சையும் இக்ஸியும் வேறு வேறா... இதுபோன்ற வேறு சிகிச்சைகள் எதுவும் செயற்கை கருத்தரிப்பில் உள்ளனவா... யாருக்கு, எந்த வகையான சிகிச்சை முறை பயனளிக்கும்... இவற்றின் சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் இனி தெரிந்துகொள்வோம்..! கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் டெஸ்ட் டியூப் பேபி எனும் ஐ.வி.எஃப் & ஈ.டி நமக்கு நன்கு பரிச்சயமான டெஸ்ட் டியூப் பேபி எனும் ஐ.வி.எஃப் & ஈ.டி. (In Vitro Fertilization & Embryo Transfer) என்பது, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினரின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை தனியே எடுத்து, அதற்கான ஆய்வகத்தில் அவற்றை சேகரித்து, அவற்றில் தரமானவற்றை கருவாக உருவாக்கி, தக்க அடைகாப்புக்குப் பின் (Incubation), அந்தக் கருவை சிகிச்சைபெறும் பெண்ணின் கருப்பையில் செலுத்தும் முறை என்பதை அறிவோம். டெஸ்ட் டியூப் பேபி அதாவது, பிரத்யேகமான ஆய்வகக் கூடத்தில், 'பெட்ரி டிஷ்' எனும் பிரத்யேக தட்டையான கலனில், நல்ல நீந்தும் திறன்மிக்க ஆயிரக்கணக்கான விந்தணுக்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருமுட்டையையும் தகுந்த நீர்மக் களத்தில் வைத்து, அவை தாமாகவே கூடி, கருக்கட்டல் நிகழ்வதுதான் இந்த ஐ.வி.எஃப். முறை. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆரோக்கியமான விந்தணுவும் கருமுட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்கும் முறைதான் இது. அதாவது, இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வை, அதுவும் அந்த இயற்கை நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையிலேயே செயற்கையாக நிகழ்த்துவதுதான், செயற்கை கருத்தரிப்பு எனும் ஐ.வி.எஃப். முறை. ஐ.வி.எஃப் சிகிச்சையை நிறுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை? - செயற்கை கருத்தரிப்பு - 12 செயற்கை கருத்தரிப்பு... இந்த 5 விஷயங்கள் முக்கியம்! ஆனால் செயற்கை கருத்தரிப்பு முறைகள் (ART Assisted Reproductive Techniques) எனும் பரந்த வகைப்பாட்டில் ஐ.யூ.ஐ., ஐ.வி.எஃப் மற்றும் வாடகைத்தாய் முறைகள் உள்ளதுபோலவே, ஐ.வி.எஃப் சிகிச்சை முறையிலும், GIFT (Gamete Intra Fallopian Transfer), ZIFT (Zygote Intra Fallopian Transfer), Routine IVF, Natural Cycle IVF, ICSI (Intra Cytoplasmic Sperm Injection) என பற்பல வகைபாடுகள் உள்ளன. செயற்கை கருத்தரிப்பு கேட்பதற்கு சற்று மலைப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது என்றாலும், இவையனைத்திலும் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஏறத்தாழ ஒரேபோலத்தான் இருக்கும் என்றுகூறும் கருத்தரிப்பு வல்லுநர்கள், மருந்துகள் மூலம் சினைப்பைகளைத் தூண்டுதல், அவற்றிலிருந்து சினைமுட்டைகளை மீட்டெடுத்தல், விந்தணுக்களைச் சேகரித்தல், கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆகிய இரண்டு உயிரணுக்களையும் ஆய்வகத்தில் சேர்த்து கரு உருவாக்குதல், உருவான கருவை தக்க சமயத்தில் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் சேர்த்தல் ஆகிய ஐந்தும் செயற்கை கருத்தரிப்பின் இன்றியமையாத வழிமுறைகள் என்கின்றனர். இதில், ஆரம்பநாள்களில் பயன்படுத்தப்பட்டு வந்த GIFT மற்றும் ZIFT சிகிச்சை முறைகளில், கருமுட்டை மற்றும் விந்தணுக்களை தனியே சேகரித்து, அவற்றை பெண்ணின் சினைக்குழாய்க்குள் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை வாயிலாகச் செலுத்தி, கருவுறுதல் நிகழ்வு தானாக நடைபெறக் காத்திருக்கும் சிகிச்சை GIFT என்றும், உயிரணுக்களுக்கு பதிலாக ஆய்வகத்தில் உருவான கருவை அதே அறுவை சிகிச்சை வாயிலாக சினைகுழாய்க்குள் செலுத்தும் சிகிச்சை ZIFT என்றும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு முறைகளிலும், கரு உருவாகி, பின் இயற்கையாகவே அது நகர்ந்து கருப்பைக்குள் பதிந்து வளரவேண்டும் என்பதால், வெற்றி விகிதம் இவற்றில் குறைவு என்பதுடன், எக்டோபிக் சினைகுழாய் கர்ப்பம் போன்ற உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளையும் இவை ஏற்படுத்தலாம் என்பதால் இந்தச் சிகிச்சை முறைகள், வெகு அரிதான சூழல்கள் தவிர பொதுவாக கைவிடப்பட்டுள்ளன. ஐ.வி.எஃப் சிகிச்சையில் பாலினத்தைத் தேர்வு செய்யலாமா? - செயற்கை கருத்தரிப்பு 13 ஐ.வி.எஃப் சிகிச்சையில் என்ன நடக்கும்? அடுத்து, Routine IVF எனப்படும் பெரும்பான்மையினரிடம் மேற்கொள்ளப்படும் ஐ.வி.எஃப் சிகிச்சை. இதில், குறைந்தது 8-10 கருமுட்டைகள் கிடைப்பதற்காக, சினைமுட்டைகளைத் தூண்டும் ஊசிமருந்துகள் பொதுவாக மாதவிடாயின் ஆரம்ப நாள்களிலிருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு, ஸ்கேனிங் மூலமாக கருமுட்டைகளின் அறைகலன்கள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு, பின்னர் சிறு அறுவை சிகிச்சை வாயிலாக முதிர்ந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு, கருத்தரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஐ.வி.எஃப் கருத்தரித்தல் அவற்றில் சில முட்டைகள் எதிர்கால சிகிச்சைக்கென உறைநிலையில் (Oocyte freezing) பாதுகாக்கவும் படுகின்றன. அதாவது இயல்பாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே உருவாகும் இடத்தில் பத்து முட்டைகள் வரை உருவாகச் செய்வது தான் Routine IVF முறை. இந்தத் தூண்டுதல் சிகிச்சையில் ஏற்படும் இரட்டை கர்ப்பம், OHSS எனும் மிக அதிகமான சினைப்பை தூண்டுதல் நிலை அத்துடன் அதிகப்படியான செலவு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, சிலருக்கு Natural Cycle IVF மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையில், தூண்டுதல் மருந்துகளைத் தவிர்த்து, இயல்பாகவே உருவாகும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டும் சேகரிக்கப்பட்டு, அவை கருத்தரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் வெற்றி விகிதம் குறைவு என்றாலும் பக்கவிளைவுகள் இல்லாத காரணத்தால், மேலை நாடுகளில் இது பிரபலமடைந்து வருகிறது. அதேபோல, உருவான கருவை உறைநிலையில் வைத்து, பிந்தைய மாதங்களில் கருப்பைக்குள் செலுத்தும் FET எனும் Frozen Embryo Transfer முறையும், அதன் கூடுதல் கருவுறுதல் விகிதத்தின் காரணமாக நடைமுறையில் உள்ளது. ஐ.வி.எஃப்... குடும்பக் கட்டுப்பாடு செய்தாலும் குழந்தைப்பேறு சாத்தியம்! - செயற்கை கருத்தரிப்பு - 8 இந்தச் செயற்கை கருத்தரிப்பு முறைகள் அனைத்திலும், கருமுட்டைகளைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலான, திறன்மிக்க விந்தணுக்கள் தேவைப்படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது. செயற்கை கருத்தரிப்பு ஆனால் சமயங்களில் ஆணின் காரணமாக, மிகவும் குறைந்த அளவிலான விந்தணுக்கள் காணப்படும்போதும், அசைவுத்திறன், உருவமைப்புக் குறை என, தரம் மிகக்குறைவான விந்தணுக்கள் காணப்படும்போதும் அல்லது விந்து வெளியேற்றப் பாதையின் அடைப்பு காரணமாக விந்தணுக்கள் முற்றிலும் இல்லாத நிலை காணப்படும்போதும் (Severe OAT syndrome/ Obstructive Azoospermia) இந்தக் கருத்தரிப்பு சிகிச்சைகள் எதுவும் பயனளிக்காது. அப்போது மேற்கொள்ளப்படுவதுதான், நாம் காணொளியில் பார்க்கும் மேற்சொன்ன இக்ஸி, அதாவது Intra Cytoplasmic Sperm Injection (ICSI) முறையாகும். ஒரு கருமுட்டை + ஒரு விந்தணு கூடும் இந்தச் செயற்கை முறையில், நேரடியாக கருமுட்டையின் உட்கருவிற்குள் திறன்மிக்க ஒற்றை விந்தணு செலுத்தப்பட்டு கரு உருவாக்கப்பட்டு, இன்க்யூபேஷனுக்குப் பின்னர் கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு 3 தடவைக்கு மேல் ஐ.வி.எஃப். செய்தால்..?! எச்சரிக்கும் மருத்துவர்! இரண்டும் வேறு, வேறல்ல... ஆக, ஐ.வி.எஃப் சிகிச்சையும் இக்ஸியும் வேறு வேறல்ல, ஐ.வி.எஃப் சிகிச்சையின் ஒர் அங்கம் தான் இக்ஸி. என்றாலும், ஆணின் காரணங்களால் கருத்தரிப்பு நிகழ வாய்ப்பற்ற நிலையில், ஒரு பெரிய வரமாகத் திகழ்வதுதான் இக்ஸி என்பதே உண்மை. கருவுறுதல் விகிதம் இன்னும் கூடுதலாக உள்ள இந்தச் சிகிச்சையில் செலவும் கூடுதல் என்பது நமக்குப் புரிகிறது. செயற்கை கருத்தரிப்பு இதில், விந்தணுக்களை ஆணின் விரையிலிருந்து நேரடியாகப் பெறும் TESE (Testicular Sperm Extraction) முறை, மற்றும் விந்தணுக்கிடங்கிலிருந்து PESA (Percutaneous Epididymal Sperm Aspiration) முறை ஆகிய நுண் சிகிச்சைகள் தேவைப்படும் போது மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் தரம் மிக்க விந்தணுக்களை இக்ஸி கருத்தரிப்பு முறையில் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இவை தவிரவும், மரபணுக்கள் சார்ந்த நோய்களை கருவிலேயே கண்டறிய உதவும் PGD (Preimplantation Genetic Diagnosis) எனப்படும் கரு மரபணு ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என, பல அதிசயிக்கத்தக்க முன்னேற்றங்களுடன் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எனும் அறிவியல் நுட்பம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.! செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள்; இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள்... | பூப்பு முதல் மூப்பு வரை
Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?
Doctor Vikatan: எனக்கு எங்கே பயணம் செய்தாலும் வெறும் வயிற்றுடன்தான் செல்ல வேண்டும். கொஞ்சமாக ஏதேனும் சாப்பிட்டாலும் பாதி பயணத்தில் கழிவறைக்கு ஓடும்படியான அவசரநிலை ஏற்படும். இதனால் கழிவறை வசதியில்லாத பயணங்களின் போது பசியோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம்,எப்படித் தவிர்ப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி மருத்துவர் பாசுமணி ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome ) பிரச்னையின் அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையில், குடலானது பரபரப்பாக, தேவைக்கதிகமாக இயங்கும். வயிற்றுவலியும், உப்புசமும் அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்காகவும் சிலருக்கு மலச்சிக்கலாகவும் இது வெளிப்படலாம். சிலருக்கு இரண்டும் மாறி மாறி வரும். பயணம் என்றாலே அலர்ஜியை ஏற்படுத்தும் அளவுக்கு இது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. பல கிலோ மீட்டர் பயணம் என்றில்லாமல், அரைமணி நேர பயணத்தில்கூட இந்தப் பிரச்னை ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே பாத்ரூம் வரும். சிலருக்கு அசைவம் சாப்பிட்டால் வரும்... சிலருக்கு எண்ணெய் உணவுகள் சாப்பிட்டால் வரும். 3-4 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்குள் அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் சிலருக்கு வரும். இது சுனாமி மாதிரி வரும். கட்டுப்பாடின்றி மலம் கழிந்து உடையை நனைத்து அசிங்கமாகி விடுமோ என்ற பயம் பலருக்கும் இருக்கும். மழைவரும்போது குடை பிடிக்கிற மாதிரி பயணம் செய்கிற போது அதற்கு முன் சாப்பிடக்கூடிய மாத்திரை இருக்கிறது. மழைவரும்போது குடை பிடிக்கிற மாதிரி பயணம் செய்கிற போது அதற்கு முன் சாப்பிடக்கூடிய மாத்திரை இருக்கிறது. Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா? சிலருக்கு மேடை ஏறினாலே பதற்றமாகும். அந்த உணர்வைக் கட்டுப்படுத்த ஒரு மாத்திரை இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மேடை ஏறினால் நிதானமாகப் பேசிவிட்டு வருவார்கள். மருந்தியல் புத்தகத்திலேயே 'மேடை பயம் உள்ளோர் இதை எடுத்துக்கொள்ளலாம்' என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் பயணத்தின்போது பாத்ரூம் வரும் அவஸ்தைக்கு, அந்த நேரத்தில் தற்காலிகமாக குடலின் அழுத்தத்தைக் குறைக்க பிரத்யேக மாத்திரை எடுத்துக்கொண்டு கிளம்பினால் பிரச்னை இல்லாமல் சமாளிக்கலாம். உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்பதைத் தெரிந்து, சரியான சிகிச்சையைப் பெற முறையான மருத்துவரை அணுகுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!
மு ட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார். Face pack Beauty: அழகே தக்காளி; கருமை போக்கி முகத்தை பளிச் ஆக்கும் தக்காளி! ''முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! உணவுப் பொருள்களான முட்டை, சர்க்கரை மற்றும் காபித்தூள் போன்ற பொருள்களை முகத்தில் தடவினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் முகம் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சிலருக்கு தோலில் அலர்ஜிகூட ஏற்படலாம். இதில் முட்டை இருப்பதால், சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட முரட்டு சிகிச்சை செய்யாமல், உங்கள் சருமத்தை மென்மையாகப் பராமரிப்பதே சரி. டாக்டர் நித்திலா சந்திரசேகர். Beauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்! இதற்கு பதிலாக, முகத்தில் ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நீக்க மருத்துவர்கள் தரும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சோதித்த பிறகுதான் மருந்தைப் பரிந்துரைப்பார்கள். இல்லையென்றால், அவற்றை நீக்குவதற்கு சரியான முறையில் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். முட்டை, காபித்தூள், சர்க்கரையைப் பயன்படுத்தி உரித்து எடுக்கிற அழகு சிகிச்சை வேண்டவே வேண்டாம்'' என்கிறார், டாக்டர் நித்திலா சந்திரசேகர்.
Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?
Doctor Vikatan: விரதம் இருப்பது என்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லது செய்யுமா அல்லது உடலை பலவீனமாக்குமா? விரதமிருப்பதால் உடல் டீடாக்ஸ் செய்யப்படும் என்பது உண்மையா? விரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போது எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி விரதமிருப்பது என்பது நிச்சயம் உடலை டீடாக்ஸ் செய்யும் விஷயம்தான். 15 நாள்களுக்கொரு முறை விரதமிருக்கலாம். அவரவர் வயது, உடலுழைப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து விரதமிருக்கும் நேரத்தை, தன்மையைத் தேர்ந்தெடுக்கலாம். Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு? இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம். விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பது என உங்களுக்கு வசதியானதைச் செய்யலாம். விரதமிருப்பதை 'ஒரு பொழுது' என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். விரதமிருப்பதன் பலன்களை இன்று மேற்கத்திய நாடுகள் பெரிய அளவில் பேசுகின்றன. உடலை டீடாக்ஸ் செய்வது மட்டுமன்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, புற்றுநோய் ரிஸ்க்கை குறைப்பது என அதன் பலன்கள் ஏராளம். விரதத்தை முடித்ததும் எளிதில் செரிக்கும் கஞ்சி, இட்லி, இடியாப்பம், குழைவான சாதம், பழ ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? விரதம் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விரதம் முடித்ததும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது. விரதத்தை முடித்ததும் பலமாக எதையும் சாப்பிடாமல், எளிதில் செரிக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டும். கஞ்சி, இட்லி, இடியாப்பம், குழைவான சாதம், பழ ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். நாள் முழுக்க விரதமிருந்தோமே என்ற எண்ணத்தில் அதை முடித்ததும் விருந்து சாப்பாடு போல பலமாகச் சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது கூடாது. அதாவது விரதமிருப்பதே டீடாக்ஸ் செய்வதற்குத்தான் என்பதால், டீடாக்ஸ் செயல்பாட்டைத் தடுக்கும்படியான உணவுகள் கூடாது. நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்கீரை, வேப்பம்பூ, மாதுளை, மணத்தக்காளிக் கீரை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே, வயிற்றில் கழிவுகள் சேராது. குடல் ஆரோக்கியத்துக்கு கல்லீரல் ஆரோக்கியமும் அவசியம். அதற்கு கீழாநெல்லிக்கீரை, மூக்கிரட்டைக் கீரை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்?
ப லர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவது வைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது. இதுபற்றி சொல்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலமுருகன். Ears ''காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும். இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம். மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், வெதுவெதுப்பான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள். இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காது கேளாமைகூட ஏற்படலாம். காது ஹைஜீன் காதைச் சுத்தப்படுத்தும் முறைகள்... * காதில் இருந்து தானாகவே வெளிவரும் மெழுகை, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். * தினமும் வெளிக்காதையும் சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும். * குளிக்கும்போது, காதுக்குப் பின்புறம் சோப்பைத் தடவி, மிதமாகத் தேய்த்துவிட வேண்டும். அடிக்கடி உங்க ரூம் சுத்துதா....அதுக்கு காரணம் நான்தான்... காது பேசுகிறேன் - 18 * குளித்து முடித்த பின்னர், துண்டால் விரலைச் சுற்றி காது மடல்களையும் குழியின் மேற்புறத்தையும், சுத்தம் செய்ய வேண்டும். * எந்தக் காரணத்துக்காகவும் உட்காதினுள் விரலை விடக் கூடாது. காதில் அரிப்பு ஏற்பட்டாலோ சீழ் வடிந்தாலோ, தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. காது ஹைஜீன் நான் ஸ்பீக்கர் இல்லீங்க... மைக்..! காது பேசுகிறேன் - 17 காதுத் தொற்றைத் தவிர்க்க... * ஒருவர் பயன்படுத்திய ஹெட்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. * ஹெட்போனில் உள்ள ரப்பரை, குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். * செல்போன் ஸ்பீக்கரில் தூசு சேராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய செல்போனை இன்னொருவர் பயன்படுத்தும்போது, ஒரு முறை துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும். * குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய மருத்துவம் கூடாது. Health: கழுத்துல ஆரம்பிச்சு கால் வரைக்கும் வலிக்குதா? காரணம் இதுவாகவும் இருக்கலாம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Doctor Vikatan: 30 வயதில் திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி; சாதாரண பாதிப்பா, பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் நண்பனுக்கு 31 வயதுதான் ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவன் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் நினைவில்லை என்றான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து நார்மலாகிவிட்டான் என்றாலும் அந்தச் சம்பவம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இந்த இளம்வயதில் இப்படி திடீரென ஞாபக மறதி வருமா... அதற்கு என்ன காரணமாக இருக்கும்... இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் உங்கள் நண்பருக்கு ஏற்பட்ட திடீர் ஞாபக மறதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். மறதியின் தீவிரம் எப்படியிருந்தது என்பதை வைத்துதான் அது குறித்து விளக்கமளிக்க முடியும். பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இப்படி திடீரென மறதி ஏற்படுவதும், பிறகு சரியாவதும் நடந்திருக்கும். உங்கள் நண்பர் ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாரா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, டிப்ரெஷன், பதற்றம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், வலிப்பு, சிலவகை வலிகள் போன்ற பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தற்காலிக மறதியை ஏற்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட ஏதேனும் பிரச்னைக்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், உங்கள் நண்பருக்கு மறதி இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் அதன் விளைவாக மறதி பாதிப்பு ஏற்படலாம். சமீபத்தில் உங்கள் நண்பருக்கு அப்படி ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். மன அழுத்தம் சரியானால் மறதியும் சரியாகும். நினைவாற்றலுக்கு மிக முக்கியமானது வைட்டமின் பி12. அது போதுமான அளவு இல்லாதபோதும் மறதி வரலாம். மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள், பால், சீஸ் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் பி 12 சப்ளிமென்ட்ஸும் எடுத்துக்கொள்ளலாம். தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் அதன் விளைவாக மறதி பாதிப்பு ஏற்படலாம். Doctor Vikatan: அடிக்கடி சாவியைத் தேடும் அளவுக்கு மறதி பிரச்னை... தீர்வுகள் உண்டா? உங்கள் நண்பருக்கு சமீபத்தில் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டதா என்று யோசியுங்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தாலும், தற்காலிகமாக மறதி ஏற்படலாம். இது சில மணி நேரம் முதல் சில நாள்கள்வரைகூட நீடிக்கலாம். அவருக்கு ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு இருந்தாலும் அதன் விளைவுகளில் ஒன்றாக மறதி ஏற்படலாம். எனவே, தைராய்டு அளவுகளை சரிபார்க்கச் சொல்லுங்கள். மருந்துகளில் மாற்றம் தேவையா என்று மருத்துவரைக் கலந்தாலோசிக்கச் சொல்லுங்கள். தற்காலிக மறதிக்கு பெரிய சிகிச்சைகள் தேவையில்லை. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது, நல்ல ஓய்வு, தூக்கம், சத்தான சாப்பாடு, வைட்டமின் பி 12 சப்ளிமென்ட் போன்றவற்றின் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நினைவிழப்பின் தீவிரம் உங்கள் நண்பருக்குத்தான் தெரியும் என்பதால், ஏதேனும் அசாதாரணமாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இளமையைக் காக்கும் தேங்காய் எண்ணெய்; எப்படிப் பயன்படுத்துவது?
`தே ங்காய் எண்ணெய்யா... அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். 'உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?' என்று மருத்துவர்களிடம் கேட்டால், 'இல்லை' என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய். இதுபற்றி விளக்கமாக சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா. தேங்காய் எண்ணெய் *தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது. *தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும். தேங்காய் எண்ணெய் *தேங்காய் எண்ணெயை தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். *அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய் *தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும். *தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும். ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா எந்த எண்ணெயில் என்ன சத்து... ஒருவருக்கு எவ்வளவு எண்ணெய்? *தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெந்நீர், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். பகல் தூக்கம் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குளிர்ந்த நீர், குளிர்பானம் அருந்துவது தவிர்க்க வேண்டும். Health: தினமும் தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா? *தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எண்ணெய்... ஹேர் பேக்... கொப்பரைத் தேங்காய்... ஆரோக்கிய கூந்தல் சீக்ரெட்ஸ்! *உலர் சருமம் மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் இரவு படுக்கும்போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்குக் குளிக்க வேண்டும். *தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்துவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள், தாடைகளில் இருக்கும் கிருமிகள் அழியும்.
Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?
Doctor Vikatan: பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்களே, அது சரியானதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நட்ஸில் கலோரிகள் மிகவும் அதிகம். உதாரணத்துக்கு, 100 கிராம் பாதாமில் 655 கலோரிகள் உள்ளன. சுமார் 20 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 687 கலோரிகள் உள்ளன. 15 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் பிஸ்தாவில் 626 கலோரிகளும், 19 கிராம் புரதமும் உள்ளன. நட்ஸை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்வதுதான் சரியானது. பாதாமை பொறுத்தவரை அதன் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதுதான் சரியானது. ஏனெனில் அதன் தோலில் உள்ள ஃபைட்டேட் எனும் பொருளானது, மற்ற சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும். எனவே, பாதாமை தோலுடன் எடுக்கும்போது நட்ஸில் உள்ள இரும்புச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் உள்ளிட்ட பிற ஊட்டங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனால்தான் முதல்நாள் இரவே பாதாமை ஊறவைத்துவிட்டு, மறுநாள் தோல் நீக்கிவிட்டுச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. முதல்நாள் இரவே பாதாமை ஊறவைத்துவிட்டு, மறுநாள் தோல் நீக்கிவிட்டுச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர் பலரும், நட்ஸ் மிக நல்லது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஆனாலும், அவற்றில் கலோரி அதிகம் என்பதால் அளவு மிக முக்கியம். பாதாம் எடுத்துக்கொள்வது குறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதில், 30 கிராம், அதாவது எண்ணிக்கையில் 10 அல்லது 12 என்ற அளவில் பாதாமை சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது சீராக இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. Fake vs Real: போலி பாதாமை கண்டறிவது எப்படி? இரவு ஊறவைத்த நட்ஸை காலையில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்துவிட்டு அல்லது வாக்கிங் முடித்துவிட்டுதான் காபியோ, டீயோ எடுத்துக்கொள்வோர் இருக்கிறார்கள். இப்படி எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பொதுவாக மாலை 4 மணிவாக்கில் பலருக்கும் ஒருவித பசியோ, உணவுத்தேடலோ வரும். அப்போது நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். நட்ஸை ஓட்ஸ் அல்லது பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். நட்ஸை ஓட்ஸ் அல்லது பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். 100 பாதாம் எடுப்பதெல்லாம் மிகத் தவறானது. சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள். அப்படிச் சொல்லப்படும் உணவு ஆலோசனைகள் பொதுவாக எல்லோருக்குமானவை என்று அர்த்தமில்லை. ஒருவரின் வயது, உடல்நிலை, உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை என பல விஷயங்களைப் பொறுத்தே அந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டுமா, கூடாதா என்று முடிவு செய்யப்படும். உங்களுக்கு அது தேவையா, உங்கள் இலக்கு என்ன என்று பார்த்துவிட்டு முறையான நிபுணரின் ஆலோசனையோடு பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா...?
Health: வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு!
ப னைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதுபற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம். பனங்கற்கண்டு * பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். இதை இரவில் தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும். வாய்வுத்தொல்லையும் நீங்கும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தாகமும் தணியும். * முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம். பனங்கற்கண்டு * 100 கிராம் பனங்கற்கண்டில் 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி கிராம் கால்சியம், 5.40 மி.லி கிராம் பாஸ்பரஸ் உள்ளன. Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்? * அதிமதுரத்துடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். கர்ப்பம் * சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி அதோடு பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் எனக் குரலைப் பயன்படுத்திப் பணியாற்றுபவர்களுக்குத் தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். * கர்ப்பிணிகள் சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும். Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!
தாம்பத்ய வாழ்க்கை Vs இணையம்: டிஜிட்டல் உலகத்தின் பாதிப்பு எதுவரை உள்ளது, தீர்வுகள் என்ன?
இ ன்றைய காலகட்டத்தில் இல்லற வாழ்வில், தங்கள் இணையுடன் நேரம் செலவிடும் நபர்களின் எண்ணிக்கையைவிட இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். மேலும் தற்போது இந்த இணைய உலகம் 'படிக்கும்' அறையைத் தாண்டி 'படுக்கை' அறைவரை வந்துவிட்டது. இன்று பல குடும்பங்கள் பிரிய முக்கியக் காரணமும் இந்த டிஜிட்டல் உலகம்தான். டிஜிட்டல் உலகம் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையை எந்தெந்த விதங்களில் எல்லாம் பாதிக்கிறது? அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? மனநல மருத்துவர் டி.வி. அசோகனிடம் பேசினோம். தாம்பத்ய வாழ்க்கை Vs இணையம் இணையத்தைச் சார்ந்த ஃபேஸ்புக், யூ-டியூப் போன்றவை தங்களது வியாபார நோக்கத்தை முன் நிறுத்தி ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றன. இவர்கள் விரிக்கும் வலையில்தான் நாம் சிக்கிக்கொள்கிறோம். இது ஒருவரின் பொது வாழ்க்கை முதல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைவரை பாதிக்கிறது. மேலும் இன்றைய கணவன்-மனைவி வாழ்க்கைக்குள் இணையத்தின் குறுக்கீடு அதிகமாகவே உள்ளது. கணவன்-மனைவி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து நேருக்கு நேர் பேசிக்கொள்வதைவிட மொபைலிலோ அல்லது இணையதளத்தின் வழியாகவோ பேசிக்கொள்வதுதான் அதிகம். இது அவர்களின் அன்யோன்யத்தை பாதிக்கும். தம்பதி ஒருவரை மற்றொருவர் நேரடியாகப் பார்த்துப் பேசிக்கொள்ளும்போது உருவாகும் உணர்ச்சிகள் எதுவும் போனில் பேசிக்கொள்வதாலோ அல்லது வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜை ஃபார்வேர்ட் செய்வதாலோ ஏற்படப்போவதில்லை. `தாம்பத்ய உறவு; ஈடுபாடில்லாத மனைவி; காரணங்கள் இவையாக இருக்கலாம்!' - கணவர்களே கவனியுங்கள் - S2 E14 குறிப்பாக, இந்த டிஜிட்டல் உலகம் தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படுத்தும் விரிசல்கள் ஏராளம். டிஜிட்டல் உலகம் வழியாக இல்லற வாழ்க்கையை பாதிக்கும் முதல் காரணி, ஆபாசப் படங்கள். கணவனோ மனைவியோ இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு தங்கள் நிஜ வாழ்க்கையிலும் அதுபோன்ற ஒரு தாம்பத்ய உறவை எதிர்பார்த்து அது கிடைக்காதபோது விரக்தியடைகின்றனர். தாம்பத்ய வாழ்க்கை என்னிடம் சிகிச்சை பெற வந்த ஒருவர், 'எனக்கு தாம்பத்யத்தில் ஆர்வமே இல்லை சார்' என்றார். ஏன் என்று கேட்டதற்கு, 'என் மனைவியுடன் நான் உறவு கொள்ளும்போது, நான் பார்த்த ஆபாசப் படங்களில் பெண்கள் ஒலி எழுப்புவதைப்போல என் மனைவி செய்வதில்லை. இதனால் எனக்கு உறவு முழுமையடையாத ஓர் உணர்வு ஏற்படுகிறது' என்றார். ஓர் ஆபாசப்படம் ஒருவரின் தாம்பத்ய வாழ்க்கையை எதுவரை பாதித்திருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. தாம்பத்ய உறவு தொய்வடைகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - காமத்துக்கு மரியாதை 13 மேலும் ஒருவர் இதுபோன்ற ஆபாசப்படங்களைப் பார்த்துவிட்டு வெறும் காமத்தோடு மட்டும் தன் இணையை நெருங்கும்போது அந்த தாம்பத்ய உறவு வலுவாக இருக்காது. சிலர் இந்த ஆபாசப்படங்களில் காட்டப்படும் காட்சிகளைப்போல நிஜ தாம்பத்யத்திலும் எதிர்பார்க்கும்போது அது அவரின் துணைக்குப் பிடிக்காமல் இருந்தாலோ, அருவருப்பை ஏற்படுத்தினாலோ அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் விரிசல் ஏற்படலாம். இதுபோல பல்வேறு விதங்களில் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்ய வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது டிஜிட்டல் உலகம். மனநல மருத்துவர் டி.வி.அசோகன் டிஜிட்டல் உலகம் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள ஆலோசனைகள்... * வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா போன்றவற்றில் தங்கள் இணையரின் மீதான அன்பை வெளிப்படுத்துவதைவிட, நேரில் பார்த்து சண்டைபோட்டுக்கொள்வதுகூட இணையருக்குள் ஒரு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். * இணையத்தில் இருக்கும் ஆபாசப் படங்கள் எல்லாம் சித்திரிக்கப்பட்டவையே. இதில் நடிப்பவர்கள் இதற்கென பிரத்யேகமாக தங்கள் உடல்களைத் தயார்செய்து வைத்திருப்பவர்கள். எனவே இந்த ஆபாசப் படங்களையும் நிஜ தாம்பத்ய வாழ்க்கையையும் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. * இணையருடன் இருக்கும் பர்சனல் நேரங்களில் மொபைல் ஆஃப்லைனில் இருப்பதே சிறந்தது. * தினமும் அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள். * விடுமுறை தினங்களில் உங்கள் துணையுடன் கடற்கரை, மலைப்பிரதேசம் போன்ற இயற்கை சார்ந்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். காதலுடன் கூடிய காமமே ஆரோக்கியமானது என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள். தாம்பத்ய உறவு: உச்சக்கட்டம்... டாக்டர் டிப்ஸ்! காமத்துக்கு மரியாதை | S3 E 50
``6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' - சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்திருக்கிறார். நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. Ambulance: ``சட்டைக்கூட இல்லாமல்.. சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! - யார் இவர்? இது குறித்து தெரிவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அனைத்தையும் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்தை இயக்க வேண்டியிருக்கிறது. ஆம்புலன்ஸ் 5 - ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பார்வை பறிபோகக் கூடாது என்பது மட்டுமே குறியாக இருந்தது. வழியில் அந்தந்த ஊரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுக்க போக்குவரத்து காவலர்கள் ஒத்துழைப்புடன் 3 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை அடைய முடிந்தது என்றார். 7 நாள்களேயான குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை; `திருச்சி டு கோவை' - 3 மணிநேரத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Doctor Vikatan: பிரேக்அப் ஆன காதல்; நிச்சயமான திருமணம்... வெஜைனாவுக்கான சர்ஜரி அவசியமா?
Doctor Vikatan: என் தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவளுக்கு இதற்கு முன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்து, வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கடந்தகால தாம்பத்திய அனுபவம் கணவருக்குத் தெரியாமலிருக்க, வெஜைனாவில் செய்யப்படுகிற அறுவைசிகிச்சை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறாள். அந்தச் சிகிச்சை அவசியமா...? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஹைமன் என்பது பெண்ணின் பிறப்புறுப்பின், அதாவது வெஜைனாவின் நுழைவாயிலில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற தோல் திசு. இது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெஜைனாவின் திறப்பை மூடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சவ்வு வித்தியாசமான வடிவம் மற்றும் தடிமனில் இருக்கும். ஹைமன் கிழிந்தாலோ அல்லது விரிவடைந்தாலோ வலி அல்லது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் இதை உணர்வதில்லை. உடற்பயிற்சி செய்வது, டாம்பூன், மென்ஸ்டுரல் கப் போன்றவற்றைப் பயன்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் அல்லது தாம்பத்திய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் ஹைமன் கிழியலாம் அல்லது விரியலாம். ஹைமன் பகுதிக்கென பிரத்யேக பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஹைமன் டெஸ்ட் என்பது எல்லாப் பெண்களுக்கும் செய்யப்பட மாட்டாது. அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருந்தாலோ, வேறு ஏதேனும் பிரச்னை என்றாலோ மட்டும்தான் ஹைமன் டெஸ்ட் செய்யப்படும். சமீபகாலங்களில் 'ஹைமனோபிளாஸ்டி' (Hymenoplasty ) அல்லது 'ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி' (Reconstructive surgery ) போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். எல்லாப் பெண்களுக்கும் இந்தச் சிகிச்சை அவசியப்படுவதில்லை. தாம்பத்திய உறவு தவிர்த்து அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதால் பெண்கள் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்துபோன வெஜைனா: அறுவை சிகிச்சையில்லாமல் தீர்வு உண்டா? திருமணத்துக்கு முன்பு தாம்பத்திய உறவில் ஈடுபட்ட அனுபவம் பலருக்கும் இருக்கலாம். எதிர்பாராத சூழ்நிலையில் வேறொருவருடன் திருமணம் நிகழும்போது, முந்தைய அனுபவம் தெரியாமலிருக்க, இதுபோன்ற ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி தேவையா என்ற கேள்வியோடு சிலர் மருத்துவர்களை அணுகுவதுண்டு. தேவையில்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் பதிலாக இருக்கும். செக்ஸ் அனுபவத்துக்கும், ஹைமன் பகுதி கிழிந்தோ, தளர்ந்தோ போவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல தாம்பத்திய உறவு தவிர்த்து அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதால் பெண்கள் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் காலத்தில் பல பெண்களும் மென்ஸ்டுரல் கப் பயன்படுத்துகிறார்கள். அதை வேகமாகச் செலுத்திப் பழகியவர்களுக்கும் ஹைமன் பகுதி பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் தோழிக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு?
Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் வேலைக்குச் செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலே எனக்கு தலைவலிக்கிறது. இதற்கு என்ன காரணம்... தவிர்ப்பது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி வெயிலில் அலைந்துவிட்டு இருப்பிடம் திரும்பும்போது சில விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் வெளிச்சூழலின் வெப்பநிலை அதிகரிக்கும், இன்னொரு பக்கம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்நிலையில் உடலின் ரத்தக்குழாய்களின் தன்மையில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே அடிக்கடி தலைவலி வரும் தன்மை கொண்டவர்களுக்கு இந்தச் சூழலில் தலைவலியின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். Summer: வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? காரணம் சொல்லும் நிபுணர்! வெயிலில் போய்விட்டு வரும்போது தலைவலி ஏற்பட பரவலான இன்னொரு காரணம், டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. மற்ற நாள்களைவிட, வெயில் காலத்தில் நம் உடலிலுள்ள நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அதிகமாக வியர்வை வெளியேறும். அதை ஈடுகட்ட நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்காதபட்சத்தில், 'டீஹைட்ரேஷன் ஹெட்டேக்' (dehydration headache) என்ற தலைவலி ஏற்படும். அதிகம் வெயிலில் நின்றபடி வேலை செய்வோர், ஹெல்மெட் அணிந்துகொண்டே இருப்பவர்களுக்கெல்லாம் இது மிகவும் சகஜம். வெயில் காலத்தில் பொதுவாகவே திரவ உணவுகளாகவே எடுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால், டீ, காபி மட்டுமன்றி, ஜூஸ், பாட்டில் பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வோர் பலர். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் காரணமாக, உடலில் தேவையின்றி குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். அதனால் நீர்ச்சத்து குறையத் தொடங்கும். சிறுநீர் அதிகம் வெளியேறும். இதனாலும் சிலருக்கு தலைவலி வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா? வெயிலில் அலைவதும், ஏசியில் இருப்பதுமாக சிலர் மாறி மாறி இருப்பார்கள். ஏசியில் இருக்கும்போது ஒருவரது உடலின் வெப்பநிலை ஒரு மாதிரியும், வெளியே சென்றதும் வேறு மாதிரியும் இருக்கும். இந்த மாறுபாட்டின் காரணமாகவும் சிலருக்கு தலைவலி வரலாம். இந்தப் பிரச்னைகள் எல்லாமே கோடைக்காலம் முடியும்வரை நீடிக்கலாம். எந்தக் காரணத்தால் தலைவலி வருகிறது என்று தெரிந்து அதைத் தவிர்த்தாலே போதும். தலைவலி மிக அதிகமாக இருக்கும்போது பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
IVF சிகிச்சையில் குழந்தைக் கனவு நனவாகுமா..? | பூப்பு முதல் மூப்புவரை
திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இருமுறை கருத்தரித்தபோதும் இருமுறையும் உயிருக்கே ஆபத்தான எக்டோபிக் எனும் சினைக்குழாய் கர்ப்பம் என்பதால், இருமுறையும் அறுவை சிகிச்சை, இனி இயல்பாக கருத்தரிக்கவே இயலாத நிலை.. நாற்பது வயதுவரை குடும்பச்சூழல் காரணமாக திருமணம் குறித்த யோசனை கூட எழவில்லை. அதன்பிறகு மணமுடித்து, சில காலம் காத்திருப்பிற்குப் பிறகு, கருத்தரிப்பு சிகிச்சைக்குச் சென்றபோது, சினைமுட்டைகள் மிகவும் குறைந்து, மாதவிடாய் நிறுத்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால் கருத்தரிப்புக்கு வாய்ப்பற்ற நிலை.. செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வயதுக்கு வந்தது முதலே கடுமையான மாதாந்தர வலி.. திருமணத்திற்குப் பின் பரிசோதனைகள் மேற்கொண்டபோது, எண்டோமெட்ரியோசிஸ் எனும் சாக்லேட் கட்டிகளின் தீவிரநிலை என்பதுடன் கருத்தரிப்பு இயல்பாக நிகழவும் வாய்ப்பற்ற நிலை.. கருத்தரிப்பில் சிக்கல்கள் உள்ளனவா என்பதை அறிய மேற்கொண்ட பரிசோதனைகளில், பி.ஐ.டி. (PID) எனும் நோய்த்தொற்றின் காரணமாக சினைக்குழாய்களில் அடைப்பு கண்டறியப்பட்டு, இயல்பான கருத்தரிப்பு நிகழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.! இளவயது சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன்... அவை தந்த பலனாக, மிகவும் குறைந்த விந்தணுக்கள் நிலை மற்றும் விந்துவெளியேற்றக் குறைபாட்டு நிலை. கருத்தரிப்பு என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்ட நிலை.. கல்வி, பணி, பதவி, அத்துடன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என அனைத்தும் நலமாக இருந்தும், முற்றிலும் விந்தணுக்கள் இல்லாத azoospermia நிலை கண்டறியப்பட்டபோது உலகமே இருண்டுவிட்டது எனலாம். கருத்தரிப்பு சாத்தியமே இல்லை எனும் கையறுநிலை..! IVF சிகிச்சை செயற்கையா? குழந்தை உருவாக புதிய நம்பிக்கை!! In Vitro Fertilization (IVF- ஐ.வி.எஃப்) இதுபோன்ற பற்பல காரணங்களால், இனிமேல் குழந்தை பாக்கியம் கிட்டவே கிட்டாது எனும் அதீத நிலைகளில், குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர், விரக்தியுடன் அடுத்து பொதுவாக நாடுவது, தத்துக்குழந்தை அல்லது வாடகைத்தாய் முறைகளைத் தான். ஆனால், இத்தம்பதியினரின் கையறுநிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இனி எங்களுக்கும் ஒரு குழந்தை! என அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக, செயற்கை கருத்தரிப்பில் முக்கியமானதொரு சிகிச்சைமுறையாகத் திகழ்வதுதான், டெஸ்ட் டியூப் பேபி எனும் சோதனைக்குழாய் சிகிச்சை முறையாகும். அதாவது, இயல்பாக கருத்தரிக்க இயலாத இந்த நிலைகளிலும், முன்னர் சொன்ன ஐ.யூ.ஐ எனும் செயற்கை விந்தூட்டல் சிகிச்சைகள் தோல்வியுறும்போதும், அடுத்து மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சிகிச்சை, 'In Vitro Fertilization' (IVF- ஐ.வி.எஃப்) எனும் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை என வழங்கப்படுகிறது . உண்மையில், இம்முறையில் சினைக்குழாய் அடைப்பு அல்லது விந்தணு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, அவர்களது கருமுட்டை மற்றும் விந்தணுக்களை தனியே எடுத்து அதற்கான ஆய்வகத்தில் அவற்றைச் சேகரித்து, பின் கருவாக உருவாக்கி, அந்தக் கருவை, தக்க சமயத்தில் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படுகிறது. அதாவது, இயல்பாக உடலுக்குள் கருத்தரிப்பு நிகழ்வதை (In Vivo), ஆய்வகத்தில் நிகழ்த்துவதைத் தான், In Vitro Fertilization என மருத்துவர்கள் அழைக்கின்றனர். மருத்துவ அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளில் அதிசயிக்கத்தக்க ஒரு முன்னேற்றமாகவும் விளங்கும் இந்தச் சிகிச்சையை பற்றித் தெரிந்துகொள்ளும் முன், இதற்கென வித்திட்ட மருத்துவ விஞ்ஞானிகளின் வரலாற்றையும், புராணங்கள் கூறும் சில ஆச்சர்யமான தகவல்களையும் தெரிந்துகொள்வோம். செயற்கை கருத்தரிப்பு: வெற்றி வாய்ப்பு எவ்வளவு; எத்தனை முறை முயற்சிக்கலாம்? | பூப்பு முதல் மூப்புவரை புராண காலத்திலேயே இருந்த செயற்கை கருவூட்டல்! புராணக் கதைகளில் இறைவன் கண்ணனின் சகோதரரான பலராமனுக்கு, 'சங்கர்ஷனன்' எனும் பெயர் ஏற்படக் காரணமே, அவரது பிறப்பு தான் எனப்படுகிறது. இழுத்து வைக்கப்பட்ட எனும் பொருள்படும் இப்பெயருக்குப் பின்னால், தேவகி எனும் தாயின் வயிற்றில் உதித்து, கருவுற்ற காலத்திலேயே ரோகிணி எனும் தாயின் வயிற்றுக்குள் மாற்றி வைக்கப்பட்டதை, ஒரு தாய் உதிரத்தில் உறைந்த பிள்ளை, ஒரு தாய் வயிற்றில் வந்துற்றதெம் மாயம் எனும் வரிகள் குறிக்கின்றன. அதேபோல, சமண சமயத்தில், பூமிக்கடவுளான சக்ரா, தேவநந்தா எனும் தாயின் கருவிலிருந்து, திரிசாலா எனும் தாயின் கருவில் மகாவீரரை மாற்றி வைத்ததாக அப்புராணக் கதை கூறுகிறது. புராணங்கள் தாண்டி, உண்மை வரலாற்றில், 1887-ம் ஆண்டில் ஸ்கென்க் எனும் அமெரிக்க விஞ்ஞானி, முயல் மற்றும் கினி எலிகளிலும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை முயற்சி செய்ததும், 1891-ம் ஆண்டில், வால்டர் ஹீஃப் எனும் விஞ்ஞானி, முயல்களிலிடையே ஒரு தாய் முயலின் கருவிலிருந்து மற்றொரு தாய் முயலுக்கு கருவை மாற்றிவைக்கும் முறையை முதன்முதலாக மேற்கொண்டு, பல தோல்விகளுக்கு இடையே வெற்றியடைந்துள்ளதையும் அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில், கருக்குழாய் அடைப்புநீக்க நுண் அறுவை சிகிச்சைகள் முயற்சி செய்யப்பட்டு ஆனால் அவை தோல்வியடைந்துள்ளன. மாத்திரையா, ஆணுறையா, பெண்ணுறையா... கருத்தடைக்கு எது சிறந்தது? - பூப்பு முதல் மூப்புவரை 1930-களில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளான் கிரெகரி ஃபின்கஸ், ஜான் ராக் மற்றும் அவர்களின் உதவியாளர் மிரியம் மென்கின் ஆகிய மூவரும், கருவிற்கு பதிலாக, முயல்களின் கருமுட்டைகளையும் விந்தணுக்களையும் தனித்தனியே சேகரித்து, ஆய்வகத்தில் கருவாக்கி, அந்தச் செயற்கை கருவை பெண் முயல்களின் கருப்பைக்குள் செலுத்தும் இன்றைய டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையை முதன்முதலாக மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்தச் செயற்கை கருவை சுமக்க உதவும் வளர்ப்பூடக திண்மங்கள் மற்றும் திரவங்கள் குறித்த ஆய்வில் ஆல்பர்ட் பிராச்செட் ஈடுபட்டிருந்தபோது, ஹார்வர்ட் பல்கலைக்கழக மும்மூர்த்தியர், மனித கருவை செயற்கையாக உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் வேறு காரணங்களுக்காக, சினைப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்ட பெண்களிடமிருந்து, அவர்களது சம்மதத்துடன் முழு சினைப்பையையோ அல்லது சினைப்பையின் ஒருபகுதியையோ அறுவை சிகிச்சை மருத்துவர் உதவியுடன் பெற்றுக்கொண்டு, ஆய்வகத்தில் அதிலிருந்து கருமுட்டைகளைத் தேடிப் பிரித்து, பின்னர் விந்தணுக்களுடன் கலந்து, கரு உருவாக அவர்கள் காத்திருந்தது ஆறு வருடங்களாம். கிட்டத்தட்ட 138 முறைகள், அவர்களது ஆராய்ச்சி முறைகள் தோற்றுக்கொண்டே இருந்தபோதும், தொடர் முயற்சிகளுக்குப் பின், 1944-ம் ஆண்டு, முதல் செயற்கை மனிதக் கரு உருவாகி, அவர்களுக்கும் இவ்வுலகிற்கும் ஒரு வெற்றிக்கனியை அறிவியல் வழங்கியது. அதற்குப்பின், செயற்கை முறையில் உருவான கருவை, தாயின் கருப்பைக்குள் வைக்கும் தொழில்நுட்பத்தை (Embryo Transfer) உருவாக்கும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள முயற்சிக்கும்போது, செயற்கை கரு என்பது, மிகப்பெரிய ஊழல் என்றும், இயற்கைக்கு எதிரானது என்றும், கற்பழிப்புக்கு சமமானது (Baby in vitro is Rape in vitro) என்றும் மத ரீதியான பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழ, அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவக் குழு, அப்படியே கைவிட்டது. பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சீக்கிரமே வயதுக்கு வருவார்களா பெண்கள்?: பூப்பு முதல் மூப்புவரை தொடர் தோல்விக்குப் பின் கிடைத்த வெற்றி... ஆனால் அவர்களின் முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு, உலகெங்கும் sperm capacitation எனும் விந்தணு திறன்கூட்டல், சரியான முட்டைகளைத் தேர்வு செய்தல், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் சரியான முட்டைகளைச் சேகரித்தல், சரியான வளர்ப்பூடகத்தைத் தேர்வு செய்தல் போன்ற செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ, முதல் செயற்கை கரு உருவான நாளிலிருந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978-ம் ஆண்டு, ஜூலை 25-ம் தேதி, இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் பெரும் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்து, மருத்துவ அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல் அரங்கேறியது. பல தடைகற்களையும் இன்னல்களையும் கடந்துவந்த இந்த மருத்துவர்களும், இங்கிலாந்தின் போர்னே ஹாலில் செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தோற்றுவித்து, அடுத்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு பிறந்து, பலரின் துயர் நீக்கிய சாதனையை நிகழ்த்தி, அதற்கு நோபல் பரிசையும் வென்றுள்ளனர். செயற்கை கருத்தரிப்பு அதே காலகட்டத்தில் இந்தியாவின் சுபாஷ் முகர்ஜி மற்றும் பட்டாச்சாரியா உள்ளிட்ட மேற்கு வங்க மருத்துவர்கள், சோதனைக் குழாய் முயற்சியில் வெற்றியடைந்ததாகவும், ஆனால், அனுமதியின்றி சமர்ப்பித்த அவர்களது ஆய்வை அரசாங்கம் நிராகரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகு, அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ நெறிகளைப் பின்பற்றியும், மகாராஷ்டிர மாநிலத்தில், பேராசிரியர் ஆனந்த் குமாரின் வழிகாட்டலுடன், டாக்டர் இந்திரா ஹிந்துஜா அவர்கள், ஷ்யாம் சாவ்தா மற்றும் மணி சாவ்தா தம்பதியினருக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள, 1986-ம் ஆண்டு இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான ஹர்ஷா சாவ்தா பிறந்து, நமது நாட்டிலும் மருத்துவ நுட்பம் செழித்தோங்கியது. இந்த 50 ஆண்டுகளில் பற்பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் கண்ட இந்த ஐ.வி.எஃப். செயற்கை கருத்தரிப்பு முறை, இன்று உலகெங்கும் பல லட்சம் குழந்தைகள் பிறக்கவும், குழந்தைப்பேறில்லா தம்பதியினரின் துயர் நீக்கவும் காரணமாக விளங்கி வருகிறது. 55% வரை வெற்றி, கருத்தரிப்பிற்கு முன்னராகவே குரோமோசோம்களை பகுப்பாய்வு செய்யும் முறைகள் என ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவியல் ஆச்சர்யங்களைத் தந்து கொண்டேயிருக்கும் இந்தச் சிகிச்சை குறித்து இனி தெரிந்து கொள்வோம்..! பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது. அதென்ன 'பேலன்ஸ்டு டயட்...?' பருவ வயதுப் பெண்களுக்கான உணவு எச்சரிக்கை!| பூப்பு முதல் மூப்புவரை
Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?
Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிக்கிறது. எனவே, காபி, டீயுடன் பிஸ்கட், வடை என ஏதேனும் சாப்பிடுகிறேன். அதேபோல மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசிக்கிறது. பஜ்ஜி, போண்டா சாப்பிடும்படி ஆகிறது. என்னையும் அறியாமல் அதிகம் சாப்பிடுகிறேனோ என்று பயமாக இருக்கிறது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசி எடுப்பது ஏன்... இதை எப்படி சரிசெய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி மருத்துவர் பாசுமணி இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. காலையில் இட்லி அல்லது தோசை, மதியம் சாதம் என சாப்பிடும்போது அது சீக்கிரமே செரிமானமாகி, சீக்கிரமே ரத்தச் சர்க்கரையாக மாறிவிடும். Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, சிகிச்சை தேவையா? உதாரணத்துடன் விளக்கினால் உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும், இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான். அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும். மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான். புரதச்சத்து இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் உட்கொள்ளும்போது அது உடனே ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எப்போதுமே புரதச்சத்து சாப்பிட்டால் அப்படி ரத்தச் சர்க்கரையானது சட்டென ஏறாது. உதாரணத்துக்கு, 2 இட்லி சாப்பிடப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு, அதன் மேல் இரண்டு இட்லி சாப்பிட்டால் அது ரத்தச் சர்க்கரையாக மாற சற்று நேரம் எடுக்கும். அதுவே நான்கு இட்லி சாப்பிட்டால் வெகு சீக்கிரமே ரத்தச் சர்க்கரை அளவு எகிறிவிடும். கஞ்சி மட்டும் சாப்பிடும்போதும் இப்படித்தான் நடக்கும். காலை 8 மணிக்கு இப்படி மாவுச்சத்துள்ள பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால், நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி 10 மணி அளவில் கொலைப்பசி வரும். காரணம், சட்டென எகிறிய ரத்தச் சர்க்கரைதான். உடனே உடல் பதறிப்போய், 'பிஸ்கட் சாப்பிடு, டீ குடி' என சிக்னல் கொடுக்கும். சிலருக்கு உடல் நடுங்கும். களைத்துப்போகும். காலையில் சாப்பிட்ட கார்போஹைட்ரேட்தான் இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். அது தெரியாமல் மறுபடி பிஸ்கட் வடிவில் இன்னொரு கார்போஹைட்ரேட்டை உடலுக்குக் கொடுத்தால் 12 மணிக்கு மீண்டும் பசி வரும். ஸ்டார்ச் உணவுகள் சாப்பிட்டால் அடுத்த ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் இப்படித்தான் நிகழும். இப்படி நடக்காமலிருக்க முதலில் புரதம், காய்கறிகள் சாப்பிட்டு, பிறகு ஸ்டார்ச் உணவுகளை அளவு குறைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது. உடல் பதறிப்போய், 'பிஸ்கட் சாப்பிடு, டீ குடி' என சிக்னல் கொடுக்கும். சிலருக்கு உடல் நடுங்கும். களைத்துப்போகும். Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா? சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருகாலத்தில் உடலுழைப்பு அதிகமிருந்தது. அப்போது அவர்கள் அதிக அளவு சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒல்லியாகவே இருந்தார்கள். உடலுழைப்பே இல்லாத நாமும் அப்படிச் சாப்பிட்டால் அத்தனையும் போய் தொப்பையாகத்தான் உருவாகும். எனவே, நீங்கள் சாப்பிடுகிற முறையை கவனித்து அதில் தவறு இருப்பின் மாற்றுங்கள். புரதம் சாப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!
வே லை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது. சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்காக, வீட்டிலேயே செய்ய முடிந்த வீக் எண்ட் அழகு பராமரிப்பு டிப்ஸ் தருகிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த். இந்த வார இறுதியில் இதை ட்ரை செய்து பாருங்களேன். எண்ணெய்க் குளியல் தலைக்குப் பாதாம் ஆயில் பாத்! சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு மட்டும் ஒரே நாள் லீவு கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி ஊற விடுங்கள். பப்பாளி ஃபேஷியல்! தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் கால் மணி நேரம் தடவி ஊற விடுங்கள். ஃபேஷியல் & பேக் பாசிப்பருப்பு பேக்! உங்கள் சருமம் வறண்டது என்றால், பப்பாளியுடன், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பால் ஏடு கலந்து பேக்காக போட்டுகொண்டு 15 நிமிடம் ஊற விடுங்கள். பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகும். ஃபேஷியல் செய்தது போன்ற உணர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும். அன்னாசிப்பழ பேக்! உங்கள் சருமம் எண்ணெய்ப்பசை கொண்டது என்றால், ஒரு துண்டு பப்பாளி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 4 சொட்டு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஏற்கெனவே பப்பாளிப் பழ பேக் போட்டு வைத்துள்ள முகத்தில், இந்த அன்னாசிக் கலவையைத் தடவி, கால் மணி நேரம் காய விடுங்கள். பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகி விடும். மசாஜ் சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story பாடி மசாஜ்! இப்போது உடம்புக்குக் கவனம் கொடுக்க வேண்டிய நேரம். உடம்பு முழுக்க முடிந்தால் பாதாம் எண்ணெய், முடியாவிட்டால் தேங்காய் எண்ணெயை உடம்பு முழுக்கத் தடவிக் கொண்டு பாத்ரூமுக்குள் பத்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து இருங்கள். பிறகு, வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியை அரிசிக் கஞ்சியில் கலந்து (முந்தைய நாளே எடுத்து வைத்துகொள்ளுங்கள்) தலையை அழுந்த தேய்த்து குளித்துவிடுங்கள். அடுத்து, கடலை மாவுடன் தயிரைக் கலந்து உடம்பு முழுக்கத் தடவி, கீழிருந்து மேலாக தேய்த்து தேய்த்து, இறந்த செல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். உடம்பு வழு வழுவென்று ஆகி விடும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! ரோஜாக்குளியல்! வாரம் முழுக்க சாமிப்படங்களுக்குப் போட்ட ரோஜாப்பூக்களை முந்தைய இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். புது பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தண்ணீரை வடிகட்டி குளித்து முடித்ததும் தலை முதல் பாதம் வரை ஊற்றிக் குளியுங்கள். ஒரு ரூபாய்கூட செலவில்லாத ஸ்பா இது. Beauty: பிம்பிள்கள் ஏன் வருகின்றன? சிம்பிளான இயற்கை தீர்வுகள் இதோ! பாத பராமரிப்பு கால் அழகு! பியூமிஸ் ஸ்டோன் கட்டாயம் இருக்கட்டும் உங்கள் பாத்ரூமில். குளித்து முடித்ததும் மறக்காமல், கால்களை அந்தக் கல்லால் தேய்த்துவிடுங்கள். இறந்த செல்கள், பாத வெடிப்பு இல்லாமல் உங்கள் ஸ்லிப்பரே லவ் பண்ணும்படி அழகாக இருக்கும் உங்கள் பாதங்கள். கை அழகு! குளித்து முடித்து வந்தவுடனே நகங்களை விருப்பப்படி கட் செய்து, ஃபைல் செய்துகொள்ளுங்கள். கலர்லெஸ் நெயில்பாலிஷ் போட்டுக்கொள்ளுங்கள். கூந்தல் பராமரிப்பு கூந்தல் அழகு! குளித்த தலைமுடி காய்ந்ததும் நுனி முடியை லேசாக ட்ரிம் செய்துகொள்ளுங்கள். வாரம் முழுக்க நீங்கள் எந்த ஹேர்ஸ்டைல் செய்தாலும், இப்படி ட்ரிம் செய்வது இது ஒரு நீட் லுக் கொடுக்கும் உங்கள் ஹேர்ஸ்டைலுக்கு. அடுத்த வரும் திங்கட்கிழமை, ஃபிரெஷ்ஷாக அலுவலகத்துக்குக் கிளம்ப இப்போது நீங்கள் ரெடி! Beauty: அழகே தக்காளி; கருமை போக்கி முகத்தை பளிச் ஆக்கும் தக்காளி! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் வயது 55. சில நேரங்களில் நிற்கும்போது ஒருவித மயக்கம் வருகிறது. பிறகு உட்கார்ந்தாலோ, நடந்தாலோ தானாக சரியாகிவிடுகிறது. இது என்ன பிரச்னை, இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமான காரணம், வெயிலின் தாக்கம். சென்னை மாதிரியான பகுதிகளில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பலருக்கும் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருகிறது என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். நீங்கள் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா, பலவீனமாக உணர்கிறீர்களா, பேலன்ஸ் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும் நிலையில் உங்களுக்குத் தலைச்சுற்றல் வருகிறது என்றால், அந்த நேரத்தில் உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்பர்டென்ஷன்' (Orthostatic hypotension) என்று பெயர். இந்தப் பிரச்னை வருவதற்கு டீஹைட்ரேஷன் காரணமாக இருக்கலாம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வரலாம். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும் இப்படி வரலாம். எனவே, முதலில் உங்கள் ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். ரத்த அழுத்த அளவு பரிசோதனை Doctor Vikatan: Low BP-யால் தினமும் தலைச்சுற்றல்... இனிப்பு சாப்பிடுவது உதவுமா? சிலவகையான தலைச்சுற்றல், நடந்தால் சற்று சரியாகும். இதற்கு உடலில் சமநிலையைப் பேணுவதிலும், தலை மற்றும் உடல் அசைவுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றுவதிலும் ஏற்படும் குறைபாடு காரணமாக இருக்கலாம். காதில் உள்ள பேலன்ஸ் மெக்கானிசத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். நீண்டநேரம் நிற்பவர்களுக்கு ரத்தமானது கால் பகுதியில் சேர்ந்து, அதன் விளைவாகவும் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். தலைச்சுற்றலோடு சேர்த்து பேச்சில் தெளிவின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகளும் இருந்தால் அதை உயர் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் பக்கவாத பாதிப்புகளுக்கான சோதனைகளையும் செய்து பார்க்க வேண்டியிருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.