பிரசவமும் பெண்ணுறுப்பில் சில மாற்றங்களும்... நிபுணர் வழிகாட்டல்! | காமத்துக்கு மரியாதை - 247
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பு என்பது பழைய நிலையிலேயே இருக்க முடியாது. சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதற்கு ஏற்றபடி, எப்போது, எப்படி தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா இங்கே சில தகவல்களைப் பகிர்கிறார். பிரசவம் ''சுகப்பிரசவம் நல்லது. ஆனால், சுகப்பிரசவத்தின்போது பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்தால் அது ஆறுகிறவரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். சிசேரியன் மூலமாக பிரசவம் நடந்திருந்தால், தையல்போட்ட இடம் ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். தவிர, ஒருசில மாதங்கள்வரை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் உறவுகொள்வது நல்லது. குழந்தை பெரிதாக இருந்து, சுகப்பிரசவமாகியிருந்தால் பிறப்புறுப்பு தளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, வாக்குவம், ஃபோர்செப்ஸ் என்று உபகரணங்கள் உதவியுடன் சுகப்பிரசவம் நடந்திருந்தாலோ, பிறப்புறுப்பில் அதிக தையல்கள் போட்டிருந்தாலோ பிறப்புறுப்பு தளர்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், உறவுகொள்ளும்போது முன்பிருந்த இறுக்கம் கிடைக்காமல் போகலாம். இது இயல்பான ஒன்றுதான். பிரசவம் சிசேரியன் செய்தாலுமே ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் சில மாறுதல்கள் ஏற்படவே செய்யும். இதனாலும் தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 'பிரசவத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவில் திருப்தியில்லை' என்பதை உணர்கிற பெண்களும், அதை வெளிப்படையாகச் சொல்கிற பெண்களும் குறைவு. அபூர்வமாக சில பெண்கள் அப்படிச் சொன்னால், அந்த இடத்து தசையை இறுக்கமாக்கும் கெகல் பயிற்சி செய்ய வேண்டும். கெகல் பயிற்சி என்பது, பிறப்புறுப்பை இறுக்கமாக்கி, தளர்த்துகிற ஒரு பயிற்சி. இந்தப் பயிற்சியை ஏதாவது வேலை செய்யும்போதுகூட செய்யலாம். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர பிறப்புறுப்பு இறுக்கமாகும். கூடவே, தாம்பத்திய உறவிலும் திருப்தி கிடைக்கும். அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244 சில பெண்களுக்குத் தும்மினால், இருமினால் சிறுநீர் கசியும். இதற்கும், குழந்தை பெரிதாக இருப்பதும் உபகரணங்கள் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும்தான் காரணங்கள். இப்படிப்பட்டவர்களை, அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சிறுநீரை அடக்கி வைத்து, பிறகு வெளியேற்றச் சொல்வோம். இந்தப் பயிற்சியிலேயே பிரச்னை சரியாகிவிடும். சரியாகவில்லை என்றால், சிறுநீர்ப்பையைச் சற்று மேலே ஏற்றித் தைக்கிற அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்போம். சிலருக்கு பிறப்புறுப்பு வழியாக காற்று வருவதாகச் சொல்வார்கள். பிரசவத்துக்குப் பிறகு வயிறு தளர்வதுதான் இதற்குக் காரணம். குழந்தை பிறந்து கர்ப்பப்பை சுருங்கியவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த குடல்பகுதி மறுபடியும் அதனுடைய இடத்துக்கு வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வயிற்றைத் தொட்டால் சத்தம் வருவதுபோல இருக்கும். இதைத்தான் 'காத்து வயித்துக்குள்ள போயிடுச்சு' என்கிறார்கள். உடற்பயிற்சி செய்து வயிறு உள்நோக்கிச் சென்றாலே, இது சரியாகிவிடும். குழந்தை பிறந்தவுடனே தாயின் வயிற்றுக்குள் காற்று போய்விடுமென துணியால் வயிற்றை இறுக்கிக் கட்டுற பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. இதனால், குடல் திரும்ப தன்னுடைய இடத்துக்கு வருவதற்கு வழியில்லாமல் மேல் நோக்கி நகர ஆரம்பிக்கும். விளைவு, நெஞ்சடைப்பதுபோல இருக்கும்... கவனம்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜயா. Sexual Health: ஏன் சில ஆண்களும் பெண்களும் ஆர்கசமே அனுபவிப்பதில்லை? - காமத்துக்கு மரியாதை 246 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
நாய்க்குட்டி கடித்து கபடி வீரர் உயிரிழந்த சோகம்; ரேபிஸ் பாதிப்பால் கடும் துயரம்..
உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவில் கபடி வீரராக இருந்தவர் பிரிஜேஷ் சோலங்கி. இவர் அங்குள்ள புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடையில் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை மீட்டார். அப்படி மீட்ட போது அந்த நாய்க்குட்டி சோலங்கியை கடித்துவிட்டது. அந்த நாய்க்குட்டி கடித்ததை சோலங்கி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியும் போடாமல் அலட்சியமாக இருந்துவிட்டார். கடந்த 26-ம் தேதி சோலங்கி சக வீரர்களுடன் மைதானத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். உடனே அலிகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சோலங்கியை நாய் அல்லது குரங்கு கடித்திருக்கவேண்டும் என்று கூறி அவரை உடனே அலிகர் மருத்துவ கல்லூரி அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லும் படி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். இது குறித்து சோலங்கியின் சகோதரர் சந்தீப் கூறுகையில், ''சோலங்கியை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அதோடு சிகிச்சையும் கொடுக்கவில்லை'' என்றார். கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது? அவரை வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவருக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி தொற்று ஏற்பட்டு அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்தது. தனி அறையில் அவரை அடைத்திருந்தனர். அவர் படுக்கையில் இருந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த மற்றவர்கள் முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்து போனார். தெரு நாய் சோலங்கி கபடி போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருக்கிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டனர். இது குறித்து சோலங்கியின் பயிற்சியாளர் பிரவீன் இது குறித்து கூறுகையில்,'' சோலங்கி தனது உடம்பில் இருந்த காயத்தை விளையாட்டில் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றும், வலி விளையாட்டால் ஏற்படுகிறது என்று கவனக்குறைவாக இருந்துவிட்டார்''என்றார். வெறிநாய்க்கடி எனப்படும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் பொதுவாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. இது ஒரு வாரம் முதல் ஒரு வருடம் வரை இருக்கலாம். இது தொற்று ஏற்பட்ட இடம் மற்றும் வைரஸின் அளவு போன்றவற்றை பொறுத்து மாறுபடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் குறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சந்தானம்!
Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
Doctor Vikatan: மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களை பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி மருத்துவர்களும் டயட்டீஷியன்களும் அறிவுறுத்துவது ஏன், பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக உடல்எடை அதிகரிக்கும். அதே சமயம், அந்த நாள்களில் பெண்களுக்கு அதிக அளவு புரதச்சத்து தேவைப்படும். அதற்கு பொட்டுக்கடலை சிறந்த சாய்ஸ். எண்ணெய் இல்லாமல் வறுத்தது என்பதால் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. பொட்டுக்கடலை என்பது எளிதில் செரிமானமாகக்கூடிய ஓர் உணவு. காரணம், அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் தினமும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சாப்பிடலாம். பொட்டுக்கடலையில் உள்ள புரதமானது, புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். மெனோபாஸுக்கு பிறகு புற்றுநோய் தாக்கும் ரிஸ்க் அதிகரிப்பதால், பெண்கள் இதைத் தவறாமல் பின்பற்றலாம். மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கும் ப்ளீடிங் சற்று அதிகமிருக்கும். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள், பீரியட்ஸின்போது தினமும் காலையில் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால், ப்ளீடிங்கின் அளவு குறையும். 100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் பொட்டுக்கடலையில் 21 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதற்கும் அதே அளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. வேர்க்கடலையில் இருப்பதைவிட பாதி அளவு கொழுப்புச்சத்துதான் பொட்டுக்கடலையில் இருக்கிறது. எனவே, ஒப்பீட்டளவில் ஆரோக்கியத்திலும் வேர்க்கடலையைவிட பொட்டுக்கடலை சிறந்தது. மெனோபாஸ் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில், பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகள் எடுக்கலாமா? வேர்க்கடலை சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுவலி வரலாம். பொட்டுக்கடலையில் அந்தப் பிரச்னையும் இல்லை. பருப்பு வைத்து சாம்பார் செய்யும்போது சிலருக்கு வாயுத் தொந்தரவு வரலாம். அவர்கள், பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையை மிக்சியில் பொடித்து சாம்பாருக்குப் பயன்படுத்தலாம். இதைச் செய்வதும் சுலபம், செரிமானத்துக்கும் நல்லது. மெனோபாஸ் காலத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைக்கச் சொல்வோம். இயல்பாகவே அந்த நாள்களில் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னை வரலாம். அதைத் தவிர்க்க, பொட்டுக்கடலை சட்னி, பொட்டுக்கடலை சாம்பார் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!
இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Children hair care * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். * ஒருநாள்விட்டு ஒருநாளாவது குழந்தையைத் தலைக்குக் குளிக்கவைக்க வேண்டும் * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. * இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன. தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். baby soap * குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தும் சோப்பைத் தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம் அளவு மற்றும் பி.ஹெச் அளவைக் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சோப்பைத் தேர்வுசெய்ய வேண்டும். * குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிரத்யேகமான ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைக்கும்போது, ஷாம்பூ தலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்படி நன்கு கழுவ வேண்டும். Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி! * குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஷாம்பூவை, பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது. * குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தி * குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், க்ராடில் கேப் (Cradle cap) என்கிற பிரச்னை ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படும். * குழந்தைகளுக்கு முடி எந்தப் பக்கம் போகிறதோ, அதன் போக்கில்தான் குழந்தைகளுக்கான சீப்பில் தலை சீவ வேண்டும். அதற்கு எதிர்த்திசை நோக்கி சீவக் கூடாது. இதனால், முடி உதிர்வு ஏற்படும். Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்! அத்திப்பழ ஸ்மூத்தி அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. அத்திப்பழத்தோடு, அரை கப் பால், அரை கப் ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய வாழைப்பழம், தேங்காய், பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலக்கி, ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்த பின், இந்த ஸ்மூதியை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதனால், அவர்களது முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். இப்போது நான் 8 மாத கர்ப்பிணி. வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எல்லா வேலைகளையும் வழக்கம்போல செய்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் நிகழுமா? அம்மாவுக்கு சிசேரியன் ஆனதால் எனக்கும் சிசேரியன்தான் ஆகும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் எட்டு மாத கர்ப்பத்திலும் எல்லா வேலைகளையும் செய்வதாகவும், வேலைக்கும் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையிலேய மிகவும் நல்ல செய்தி. ஏனெனில், இன்றைய தலைமுறை பெண்கள் பலரும் சொகுசான வாழ்க்கையையே வாழ விரும்புகிறார்கள். கர்ப்பகாலத்திலும் அவர்களிடம் அதே மனநிலையைப் பார்க்க முடிகிறது. உண்மையில் கர்ப்பகாலத்தை நினைத்து அவ்வளவாக பயப்படத் தேவையில்லை. கருவில் இருக்கும் குழந்தையானது மிகமிக பத்திரமாக, பாதுகாப்பாகவே இருக்கும். சில பெண்களுக்கு மருத்துவர்களே ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியிருப்பார்கள். அந்தப் பெண்கள் மட்டும் அதிக வேலைகள் செய்யாமல், உடலை வருத்திக்கொள்ளாமல் ஓய்வில் இருந்தால் போதும். உதாரணத்துக்கு, நஞ்சுக்கொடி கீழே இருப்பதாகச் சொல்லப்பட்ட கர்ப்பிணிகள், ஏற்கெனவே கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆன அனுபவம் உள்ளவர்கள், ப்ளீடிங் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவரால் எச்சரிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மருத்துவர்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மற்றபடி எல்லோருக்கும் அது அவசியமில்லை. Representational Image நீங்கள் சாதாரணமாக வேலை செய்பவராக இருந்தால் உங்களுடைய வழக்கமான வேலைகளை எப்போதும்போல தொடரலாம். அதிக எடை தூக்குவது, உடலை வருத்திச் செய்கிற வேலைகளை மட்டும் தவிர்க்கவும். வேலை செய்வதாலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். உங்கள் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள் என்பதால் உங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய உடல் அமைப்பு வேறு, உங்கள் அம்மாவின் உடல் அமைப்பு வேறு. வலியைத் தாங்கும் திறன் உங்களுக்கு உங்கள் அம்மாவைவிட சற்று அதிகமாக இருக்கலாம். 'எபிடியூரல் அனஸ்தீசியா' (Epidural anesthesia) கொடுத்து உங்கள் வலியைக் குறைக்கச் செய்யும் வசதிகள் இன்று உள்ளன. அதாவது 50 முதல் 60 சதவிகித வலியை இதன் மூலம் குறைக்கலாம். எனவே, அம்மாவின் சிசேரியனை நினைத்து தேவையின்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஏற்கெனவே இருமுறை சிசேரியன்... மூன்றாவது சிசேரியன் செய்வது பாதுகாப்பானதா?
Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension), 'நான்எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Non-essential hypertension), 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. இதில் நீங்கள் குறிப்பிடுவது 'வொயிட்கோட் ஹைப்பர் டென்ஷன்' வகையில் வருவது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இயல்பாக BP அளவு நார்மலாகவே இருக்கும். ஆனால், கிளினிக் அல்லது ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது மட்டும் BP அளவு சற்று அதிகரித்துக் காணப்படும். அதற்காக அது ரொம்ப அதிகமாகவெல்லாம் போகாது. நார்மல் அளவைவிட சற்று அதிகரிக்கும், அவ்வளவுதான். உதாரணத்துக்கு, நார்மல் அளவில், இதயத்துடிப்பின்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிஸ்டாலிக் (Systolic pressure) பிரஷர் 120 என்றும், இதயத்துடிப்புக்கு இடையே ஏற்படும் டயஸ்டாலிக் (Diastolic blood pressure) பிரஷர் 80 என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணத்தில் மட்டும் 120 என்பது 130-140 என்ற அளவிலும், 80 என்ற அளவு 85-90 என்ற அளவிலும் அதிகரிக்கலாம். முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அதனால்தான் முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அந்த நோயாளிக்கு பிபி அதிகமாக இருக்கும்பட்சத்தில், முதலில் அவரது உடல்பருமனைப் பார்ப்போம். உடல் எடை அதிகமிருந்தால் அதைக் குறைக்க அறிவுறுத்துவோம். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். கூடவே, ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்வியல் மாற்ற அறிவுரைகளைக் கொடுப்போம். Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? முதல் விசிட்டிலேயே ஒரு நபரின் பிபி அளவு அதிகரித்துக் காணப்படுவதை வைத்து அதைக் குறைக்க எந்த மருத்துவரும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார். அதுவே, அந்த நபர், தலைச்சுற்றல், தலைவலி, முதுமை, இணை நோய்கள் என அறிகுறிகள் மற்றும் பிரச்னைகளுடன் வரும்போதும், பிபி அளவு 150-160க்கும் மேல் இருப்பது என்ற நிலையில் மட்டும் மருந்துகள் கொடுப்போம். BP சம்பந்தப்பட்ட நோயாளிளை இரண்டு-மூன்று வாரங்கள் கழித்து வரச் சொல்வோம். அப்போதும் பிபி குறையாமல் அப்படியே இருந்தால் இரண்டு கைகள், இரண்டு கால்களில் செய்யப்படுகிற 'ஃபோர் லிம்ப் பிளட் பிரஷர்' (Four-limb blood pressure) அளவைப் பார்ப்போம். அதிலும் அசாதாரணம் தெரிந்தால், பிற ரத்தப் பரிசோதனைகள், கொலஸ்ட்ரால், கிரியாட்டினின் அளவுகளைப் பரிசோதிக்கச் சொல்வோம். அதற்கேற்பவே மருந்துகள் கொடுப்போம். அதுவும் வயதுக்கேற்ப வேறுபடும். எனவே, 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' என்பது பரவலான பிரச்னையல்ல. பயப்பட வேண்டிய பிரச்னையும் அல்ல. மேற்குறிப்பிட்ட முறைகளில் அதை அணுகலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ ஆதரவுக் குழு | ஸ்டோரீஸ் ஃப்ரம் தி ஸ்டேஜ்
புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கான தேசிய மாத நிகழ்வை முன்னிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs) ‘CanWin’ என்ற புற்றுநோய் ஆதரவு குழு தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தியது. இது புற்றுநோய் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. 'பகிரப்படும் பலம் பலரின் வாழ்க்கைகளை மேம்படுத்தி மாற்றும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான CanWin திட்டமானது, புற்றுநோய் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், நோயாளிகள், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும். இது பரிவு, புரிந்துணர்வு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த ஒரு கனிவான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் இது, பல நபர்கள் இணைந்திருக்கும் ஒரு குழு மட்டுமல்ல; அதற்கும் மேலானது; பேசுவதற்கும், கேட்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், குணமடைவதற்கும் இதுவொரு பாதுகாப்பான இடமாகும். சமீபத்தில் உங்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை நீங்கள் பராமரித்தாலும், அல்லது புற்று நோயிலிருந்து மீண்டு குணமடைந்து வந்திருந்தாலும், நீங்கள் தனிநபராக தனித்து விடப்படுவதில்லை என்பதை இந்த ஒருங்கிணைப்பு குழு உணர்த்துகிறது. 'CanWin' என்ற பெயரானது இரண்டு பலம் வாய்ந்த சிந்தனைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோயில் (Cancer) உள்ள 'கேன்' (Can) என்பது வலிமையையும், சாத்தியக்கூறுகளையும் நினைவூட்டும் ஒரு மென்மையான குறிப்பாகும். மேலும், 'வின்' (Win) என்பது, சென்றடையும் இலக்கை மட்டுமல்லாமல், ஒரு மனப்பான்மையையும் குறிக்கிறது. இது தளர்வடையாமை, கருணை மற்றும் மனஉறுதியுடன் எழுந்து நின்று போராடி வெற்றி காண்பதற்கான ஒரு முடிவை உணர்த்துகிறது. புற்றுநோயை வென்றவர்கள், தங்கள் தனிப்பட்ட துணிச்சல், வலிமை மற்றும் வெற்றியின் கதைகளை மேடையில் பலரும் அறியுமாறு பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வுபூர்வமான அமர்வுடன் இந்த முன்முயற்சி திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிஜமான, ஊக்கமளிக்கும் வாழ்க்கை சித்தரிப்புகள் இதேபோன்ற பாதையில் பயணிக்கும் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களை அக்கறையுடன் பராமரிப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு கலங்கரை விளக்காக அமைந்தன. தனது வாழ்க்கை கதையைப் பகிர்ந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமூளையில் தீங்கு விளைவிக்கும் புற்றுக்கட்டி (மெடுல்லோபிளாஸ்டோமா) என்ற புற்றுநோயில் இருந்து மீண்டு குணமடைந்திருக்கும் சிறுவன் லித்தின் “புற்றுநோயைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு சிறுவனாக நான் இருந்தேன்; ஆனால் பிற சிறுவர்களைப்போல நானும் விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும் விரும்பினேன் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். புற்றுநோயை எதிர்த்து நான் போராட மருத்துவர்கள் எனக்கு உதவினார்கள்; நான் நம்பிக்கையை இழக்க ஒருபோதும் என் குடும்பத்தினர் விடவில்லை. புற்றுநோய்க்காக பல சிகிச்சைகள் எனக்கு செய்யப்பட்டன. ஆனால் இன்று, நான் பலம் வாய்ந்தவனாக உணர்கிறேன். வயதில் நான் சிறியவனாக இருக்கலாம், ஆனால் எனது போராட்டம் மிகப் பெரியது; புற்றுநோயை நான் வென்று சாதித்திருக்கிறேன். இப்போது, நான் விரும்புவதெல்லாம் இயல்பாக வாழ்வதும், சிரிப்பதும், வளர்ச்சியடைவதும் தான்.” என்று கூறினான். சென்னையைச் சேர்ந்த உளவியலாளரும் மற்றும் நிணநீர் புற்றுநோயிலிருந்து மீண்டவருமான திருமதி மோனிகா, தனது விதிவிலக்கான உயிர் பிழைத்த பயணத்தைக் குறித்து மனம்திறந்து பகிர்ந்து கொண்டபோது, “எனக்கு ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு கட்டி உருவாகியிருப்பதை நான் கண்டறிந்தேன். முதலில் அது காசநோயாக இருக்கலாம் என்று தவறாகக் கருதப்பட்டது. ஆனால் பின்னர் நிணநீர் புற்றுநோய் கட்டி என அது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப அக்கட்டி உருவான பாதிப்புகள், ஐந்து முறை கீமோதெரபி, ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 35 சுற்றுகள் கதிர்வீச்சு சிகிச்சைகளை ஒரு சிலுவையைப் போல நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போலோ கேன்சர் சென்டர் வலியையும், என் குழந்தையின் வளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளையும் தவறவிட்ட மன உளைச்சலையும் நான் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நம்பிக்கையுடனும், குடும்பத்தின் ஆதரவோடும், தீவிரமான மனஉறுதியுடனும் ஒரு ஃபீனிக்ஸ் பறவைபோல நான் புத்துயிர் பெற்று மீண்டெழுந்தேன். இன்று, நான் ஒரு சிறப்பான வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். மேலும் மாற்றம் 360 என்ற அமைப்பில் திறமை மற்றும் நிறுவன மேம்பாடு சிறப்பு நிபுணராகவும், அவப்பெயரை அகற்றவம், மாற்றத்தை தூண்டவும் பணியாற்றுகிறேன்,” என்று அவர் கூறினார். பார்வை நரம்பைச் சுற்றியுள்ள சவ்வுகளில் தோன்றும் ஒரு அரிய வகை புற்றுநோயை (மெனின்ஜியோமாவை) எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்திருக்கும் சிறுவனான ஸ்ரீகர் கூறுகையில், “ஒரு கண்ணில் பார்வையை இழந்தது நான் உலகைப் பார்க்கும் விதத்தை மாற்றியது - ஆனால் என்னையே நான் பார்க்கும், கருதும் விதத்தை அது மாற்றவில்லை. ஒவ்வொரு ஸ்கேனையும், ஒவ்வொரு சிகிச்சையையும் மற்றும் ஒவ்வொரு சவாலையும் நான் நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன். புரோட்டான் சிகிச்சை எனக்கு நம்பிக்கையை அளித்த நிலையில், என் குடும்பத்தின் பலமும், ஆதரவும் என்னை தொடர்ந்து போராடுமாறு செய்தது. வாழ்க்கை மங்கலாக தோன்றும்போதும், தைரியம் தெளிவைத் தரும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறினான். புற்றுநோய் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியிருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதனை வரையறுக்கவில்லை. இருள் சூழ்ந்த வாழ்க்கை திருப்பத்திலும் கூட நான் ஒளியைத் தேடும் முடிவை நான் தேர்ந்தெடுத்தேன். லுகேமியாவுடனான எனது பயணம், மீள்தன்மை என்பது எவராலும் தகர்க்க இயலாதது என்பது மட்டுமல்ல. அது வீழ்ச்சிக்குப் பிறகு எழுவது, நம்பிக்கையுடன் குணமடைவது மற்றும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்பது என்ற நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது, என்று லுகேமியா நோயில் இருந்து மீண்டவரும், 'சன்ஷைன் அட் தி பென்ட்' புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் பிரியங்கா பாக்டி கூறினார். Apollo cancer centres இந்த நிகழ்வில் பேசிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேசப் பிரிவின் தலைவர் திரு. தினேஷ் மாதவன், இன்றைய புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மேம்பட்ட சிகிச்சை முறைகள் என்பதற்கும் அப்பாற்பட்டதாகும்; இது உணர்வுரீதியான மீள்திறன் மற்றும் மானுட பிணைப்பு குறித்தும் சமஅளவு முக்கியத்துவம் கொண்டதாகும். CanWin போன்ற முயற்சிகள் புற்றுநோயை வென்றவர்களுக்கு தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிரவும், பிரதிபலிக்கவும், குணமடையவும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்கின்றன. இம்முயற்சிகளில் மருத்துவர்களும், நோயாளிகளைப் பராமரிப்பவர்களும் ஒருமித்த உணர்வுடன் நோயாளிகளோடு இணைந்து நிற்கின்றனர். பரிவான புரிந்துணர்வுடன் வழிநடத்தப்படும்போது, கதைசொல்லல் ஒரு சிகிச்சை கருவியாக மாறுகிறது. பேசுபவர் மற்றும் கேட்பவர் ஆகிய இருவருக்கும் இது திறனதிகாரத்தை வழங்குகிறது. மேலும் முழுமையான சிகிச்சை வழிமுறைகளை நோக்கி நாங்கள் நகரும்போது, அறிவியலும் மனிதநேயமும் கைகோர்த்து செயல்படும் சூழலியல் அமைப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை CanWin திட்டம் வெளிப்படுத்துகிறது, என்று கூறினார். “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “குணமடைதல் என்பது, சிகிச்சை என்பதையும் கடந்தது என்று அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் நாங்கள் எப்போதும் நம்புகிறோம். CanWin திட்டம் மூலம், துணிச்சலும், தைரியமும் பகிரப்படும், மனதின் குரல்கள் கேட்கப்படும், நேர்மறையான வாழ்க்கை கதைகள் மருத்துவத்திற்கு ஒரு ஆதரவாக மாறும் ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம். இது எந்தவொரு பிராண்டையும் சாராத தளமாகும். அதாவது அனைத்து புற்றுநோய் நோயாளிகள், பராமரிப்பாளர்கள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய அனைவருக்கும் தனது கதவுகளை திறந்து வைத்திருக்கும் ஒரு செயல்தளமாகும். இந்த முயற்சி புற்றுநோய் சிகிச்சையை மனிதநேய செயல்பாடாக ஆக்குவதற்கான ஒரு படிநிலையாகும். இது மருத்துவ நிபுணத்துவத்தை மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான வலிமையையும், தோழமை உணர்வையும் வழங்குகிறது” என்று கூறினார். Breast cancer இந்நிகழ்வில், குணமடைதல், ஆதரவு குரலெழுப்புதல் மற்றும் பிணைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக புற்றுநோயை வென்றவர்கள் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை நேர்த்தியாகப் பகிர்ந்துகொள்ள வழிகாட்டிய தொழில்முறை கதை சொல்பவர்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றனர். “கதை சொல்வது, வலிக்கு அர்த்தம் பெற உதவுகிறது. இது மௌனமான போராட்டங்களை பகிரப்படும் ஞானமாக மாற்றுகிறது. புற்றுநோயை வென்ற இவர்கள் வெறும் கதைகளைச் சொல்லவில்லை. அவர்கள் புற்றுநோயுடன் வாழ்வது மற்றும் அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதற்கான ஒரு புதிய கதையை எழுதுகிறார்கள்,” என்று புற்றுநோயை வென்றவர்களுக்கு வழிகாட்டிய தொழில்முறை கதைசொல்லியான திருமதி அம்புஜவள்ளி கூறினார். இந்த நிகழ்வில் முன்னணி புற்றுநோய் நிபுணர்களும் பங்கேற்றனர். அவர்கள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் அனைத்து வயதினரிலும் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் விகிதங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளதாக எடுத்துரைத்தனர். ‘CanWin’ போன்ற முயற்சிகள், சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் உணர்வு ரீதியான மீட்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். CanWin மாதாந்திர சந்திப்புகள், கதை சொல்லல் சிகிச்சை, உயிர் பிழைத்தவர்கள் முன்னின்று வழிநடத்தும் பயிலரங்குகள், நிபுணர்களின் கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் தன்னார்வ சேவைக்கான வாய்ப்புகள் மூலம், ‘CanWin’ என்ற இந்த முன்முயற்சி, பரிவான புரிந்துணர்வு, மீள்தன்மை மற்றும் பகிரப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு துடிப்பான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும் தவறானது. அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும். தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும். அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது. வெந்நீரில் குளித்தால் சருமத்தின் துவாரங்கள் திறந்து இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் வெளியேறிவிடும். சிலர் கொகொரவென்ற ஸ்கிரப் உபயோகித்தோ, பிரஷ் உபயோகித்தோ தேய்த்துக் குளிப்பார்கள். ஒவ்வொரு முறை இப்படித் தேய்க்கும்போதும், அது சருமத்தில் உராய்வை, கீறல்களை ஏற்படுத்தும். சருமத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த இடம் எப்படி நிறம் மாறி, பிறகு சரியாகுமோ, தேய்த்துக் குளிக்கும்போதும் அப்படித்தான் ஏற்படும். தேவையில்லாமல் நீங்களே பிக்மென்ட்டேஷன் பிரச்னையை வரவழைப்பதற்குச் சமம் இது. குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது. குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது. முகத்துக்கு ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். முகத்தின் சருமமும் உடலின் சருமமும் வேறு வேறானவை. எனவே, உடலுக்கு உபயோகிக்கிற சோப்பையோ, பாடி வாஷையோ முகத்துக்கு உபயோகிக்கக்கூடாது. குளித்த பிறகு சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை சற்று வெளியேறியிருக்கும். அதை திரும்பப் பெறும்வகையில் குளித்து முடித்ததும் முகம், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுத்தாலே ஜலதோஷம்... தவிர்ப்பதுதான் ஒரே வழியா?
Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!
கொரிமேட்டோ ஜூஸ் கொரிமேட்டோ ஜூஸ் தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும். பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும். கேட்டி - டாட்டி மிராக்கிள் கேட்டி - டாட்டி மிராக்கிள் தேவையானவை: கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு. செய்முறை: கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பின், வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலை நேர உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைந்த ஜூஸ் இது. எளிதில் செரிமானம் ஆகும். காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களைக் குணமாக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கண்புரை நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளரி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, சிறுநீர் வெளியேற உதவும். கண்பொங்குதல் பிரச்னை நீங்கும். ஆப்பிள் - கேரோ பன்ச் ஆப்பிள் - கேரோ பன்ச் தேவையானவை: தோல், விதை நீக்கிய ஆப்பிள் - 1 கப், கேரட் துருவல் - 1/2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், பட்டைத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சி - சிறு துண்டு, தேன் - தேவையான அளவு. செய்முறை: கேரட், இஞ்சி, பட்டைத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின், ஆப்பிளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இப்போது, இரண்டு சாறுகளையும் ஒன்று சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், தேன் விட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அருந்தலாம். இனிப்பு வேண்டாம் என்பவர்கள் தேன் சேர்க்காமலே அருந்தலாம். பலன்கள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மெத்தத்தில் இந்த ஜூஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும், சருமத்தைப் பொலிவாக்கும். தேங்காய்ப்பால் கூலர் தேங்காய்ப்பால் கூலர் தேவையானவை: தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளரிக்காய் - 1/2 கப், பனங்கற்கண்டு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த் துருவல், வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். பலன்கள்: முகம் பளபளப்பு பெற வெள்ளரிக்காய் உதவுகிறது. தேங்காய்த் துருவல், வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணைக் குணமாக்க உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீஸ் நிறைந்து உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தசோகையைச் சரிசெய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். ஸ்ட்ராபெர்ரி - திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ் தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு. செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம். பலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அந்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவில் உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும். அன்னாசி - புதினா ஜூஸ் அன்னாசி - புதினா ஜூஸ் தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு. செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும். பலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு. ப்ரைம்ஸ்டோன் ஜுஸ் ப்ரைம்ஸ்டோன் ஜுஸ் தேவையானவை: மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு. செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும்
செ யற்கை நுண்ணறிவு (AI), இதுதான் இன்றைய உலகின் அதி பிரபலமான தொழில்நுட்பமே. கல்வி கற்பிப்பது தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இதன் வளர்ச்சி அளப்பரியது. மனிதர்களின் வேலையை சுலபமாக மாற்றுகிறது என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தாலும், மனிதர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக அமைகிறது என்ற எதிர்மறை கருத்துக்களும் AI தொழில்நுட்பத்தை பின்தொடரவே செய்கிறது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த MIT நிறுவனம் நடத்திய ஆய்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் பெறுபவர்களுக்கு Cognitive Debt போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். cognitive debt Cognitive Debt பற்றிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன். ’’AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைகளை மிகவும் எளிதாக்கக்கூடிய ஒரு பயனுள்ள தொழில்நுட்பம்தான். இந்த ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களைவிட, AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு Cognitive debt பிரச்னை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர். மூளை அதென்ன Cognitive Debt? ஒரு தகவல் அல்லது விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாமல், ஏதேனும் ஒரு விடை கிடைத்தால் போதும் என்கிற மனப்பான்மை.. அந்த விடை ஏன் வந்தது; எப்படி வந்தது; அது சரியா என்பதை ஆராயாத அல்லது யோசிக்காத நிலையைத்தான் Cognitive debt என்போம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் மூளைக்கு வேலை கொடுத்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, AI தொழில்நுட்பத்தையே முழுவதுமாக நம்பி இருப்பதுதான் இந்த Cognitive debt. இது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு. மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சுயமாக யோசித்து எழுதுபவர்கள் ஒரு குழுவினர்களாகவும். மற்றொரு குழு சுயமாக யோசித்து தேவைக்கு ஏற்ப கூகுள் தேடுபொறிகளை பயன்படுத்தி எழுதுபவர்களாகவும், மூன்றாவது குழு முழுவதுமாக AI உதவியை நாடி எழுதுபவர்களாகவும் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் AI தொழில்நுட்பத்தை மட்டுமே முழுவதுமாக பயன்படுத்தி கட்டுரையை எழுதுபவர்களுக்கு, Cognitive debt பிரச்னை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் செயல்பாடுகளை கண்டறியும் EEG (Electroencephalogram) தொழில்நுட்பத்தின் மூலம் இதனை கண்டறிந்துள்ளார்கள். Chatgpt user இப்படியே AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவலை பெற்றுக்கொண்டிருந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? நாம் புத்திக்கூர்மை வாய்ந்தவர்களா, இல்லையா என்பதை முடிவு செய்வதென்பது மூளையில் உள்ள நம்முடைய நியூரான்களின் அமைப்புதான் . நாம் ஏதேனும் ஒன்றினைப் பற்றி சிந்திக்கும்போது நம்முடைய நியூரான்களுக்கு இடையேயான ’சினாப்சிஸ்’ ( சினாப்சிஸ் என்பது ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு இடையேயான கனெக்ஷன்) மற்றும் புதிய புரதங்கள் உருவாவது அதிகரிக்கும். இந்த நியூரான் சினாப்சிஸ் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய நினைவாற்றல், கற்பனைத்திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். ஆனால், நாம் சிந்திக்காமல் முழுவதுமாக AI உதவியை நாடியிருக்கும்போது சினாப்சிஸ் அதிகரிக்காது. இது எதிர்காலத்தில் நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. AI-யை பயன்படுத்தினாலும் நாம் தகவல்களை கேட்டோ, படித்தோ தானே தெரிந்து கொள்கிறோம். அவை, ஏன் நம் நினைவில் நிற்பதில்லை? இந்த ஆய்வில் இது குறித்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI-யை பயன்படுத்தி கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பின்னர் அந்தக் கட்டுரையை படிக்கும்போதும், அதனை சார்ந்த கேள்விகளை கேட்கும்போதும், அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், மூளையை பயன்படுத்தி யோசித்து கட்டுரையை எழுதியவர்களுக்கு, அது குறித்த கேள்விகளை கேட்கும்போது 100% அவர்கள் என்ன எழுதினார்கள் என்பது அவர்கள் நினைவில் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மாணவர்கள் நமது மூளையில் ’பேப்பர் சர்க்யூட்மென்ட்’ என்று ஒன்று உள்ளது. இது, நாம் ஒன்றினைப் பற்றி பார்க்கும்போதும், படிக்கும்போதும் அதனை பதிவு செய்துகொள்ளும். பின் நாம் அதை சார்ந்து சிந்திக்கும்போது, இரண்டு அல்லது மூன்று சூழற்சிகளுக்கு பின்பு நம் நினைவிற்கு அவற்றை அனுப்பும். AI பயன்படுத்தும்போது நாம் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதனை அப்படியே எழுதுவதில்தான் கவனம் செலுத்துகிறோம். அதனால், அந்த தகவல்கள் நம் மூளையில் பதிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. `அப்பா மாதிரி கண்ணு; அம்மா மாதிரி மூக்கு..!' - ஜெனிட்டிக் மேக்கப் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் 26 சதவீத மாணவர்கள் வீட்டுப்பாடத்தினை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்வதாகவே சில தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுப்பாடம் கொடுப்பதே நம் பள்ளியில் படித்ததை, ரீ கால் செய்துபார்ப்பதற்காகவும், அதைச்சார்ந்து யோசிப்பதற்காகவும்தான். அவற்றையும் AI உதவியுடன் செய்யும்போது யோசிப்பதற்கான வாய்ப்புகளே அங்கே இருக்காது. இது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர் பிரபாஷ் Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? AI பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமா? எந்த ஒரு தொழில்நுட்பம் என்றாலும், அதை பயன்படுத்துபவரின் முறையை பொறுத்தே அவை நன்மையாகிறதா, தீமையாகிறதா என்பது முடிவு செய்யப்படும். AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம்தான். அதிலிருந்து பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும். ஆனால், யோசிப்பதற்கே நேரம் கொடுக்காமல் அனைத்து தகவல்களையும் பெற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தவறான விஷயம். AI-ல் தகவல்களை பெறுவதற்கு முன் அதைச் சார்ந்து நாம் யோசிக்க வேண்டும். யோசித்து ஒரு கட்டமைப்பை செய்தபிறகு AI நுட்பத்தின் உதவியை நாட வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய சுய சிந்தனை மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியால் ஆகச் சிறந்த தகவல்களை கொடுக்க முடியும்’’ என்கிறார் மருத்துவர் பிரபாஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
`திட்டங்களுக்கும் பெண்களுக்கும் இடையே இடைவெளி; பாலம் போடும் விகடன்!'விருதுநகரில் விழிப்பு உணர்வு!
அவள் விகடன் இதழ், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய 'பெண்ணால் முடியும்' பெண்கள் சுயமுன்னேற்ற திருவிழா இன்று சிறப்பாக நடந்தது. பவர்டு பை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சத்யா ஏஜென்சீஸ். அசோசியேட் ஸ்பான்சர் STRI நிதி நிறுவனம், ஹைஜின் பார்ட்னர் பெல்லா - பெண்களுக்கான ஆரோக்கியப் பொருள்கள் நிறுவனம், கிஃப்ட் பார்ட்னர்ஸ் சௌபாக்யா கிச்சன் அப்ளயன்சஸ், கயல் அக்ரோ ஃபுட்ஸ், சக்தி மசாலா மற்றும் சேவரைட் பாஸ்தா. விழா மேடையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடந்த இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையருமான முனைவர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேசும்போது, பெண்களின் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாநில அரசும், மத்திய அரசும் பல திட்டங்களை வழங்குகின்றன. அதே நேரம், பெண்களுக்கும் திட்டங்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. அதனை இணைக்கும் பாலம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு பாலத்தை அமைக்கும் விகடன் குழுமத்திற்கு நன்றி என்று கூறி சிறப்புரை ஆற்றினார். விழா அரங்கம் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் பேசும்போது, பெண்களுக்கு இருக்கக்கூடிய வலிமையை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதில் இடைவெளி இருக்கிறது என நாம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். பெண்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தக்கூடிய விழிப்புணர்வு இங்கு இல்லை. அதை கொடுக்க வேண்டியது முக்கியம். அதனை விகடன் குழுமம் இன்று செய்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கான மிக முக்கியமான வலிமை, பொருளாதார சுதந்திரம். அது உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று ஊக்கமூட்டினார். சாதனைப் பெண்களுக்குப் பாராட்டு குடும்ப நல நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் பேசும்போது, பெண்களின் தன்னம்பிக்கை என்பது கல்வியும், அதன் மூலம் வரும் வேலையும் தான். தன் ஊதியத்தில் நூறு ரூபாய் செலவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்காமல் வாழ்வதுதான் பொருளாதார சுதந்திரம். பெண்கள் மாதத்தின் முதல் நாளை ‘சேமிப்பு முதல்‘ என்பதாக வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதனை கூட்டு வட்டி முறையில் சேமிக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகச் சொல்லும் திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. ஆடம்பரச் செலவுக்காக கடன் வாங்கக் கூடாது என்று வழிகாட்டினார். நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசும்போது, விருதுநகர் போன்ற சிறு நகரங்களில் இதுபோன்ற பெண்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சியை நடத்தும் அவள் விகடனுக்கு நன்றி. பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள், சிரிக்க நேரம் ஒதுக்காதவர்கள் மருத்துவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும், சிரித்து வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று கூறி தனது நகைச்சுவை பெர்ஃபார்மன்ஸை எடுத்துவிட, ஆர்ப்பரித்தது அரங்கம். தொடர்ந்து, பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மாவும், பெண்களின் சட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழக்கறிஞர் செல்வகோமதியும் சிறப்பாக வழங்கினார்கள். கல்வி, சேவை, சாகசம், சுய உதவிக்குழுக்கள் எனப் பல்துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாதனைப் பெண்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட, மனதில் ஏறிய தன்னம்பிக்கையுடன் விடைபெற்றனர் மகளிர்! சர்வதேச விருதுகள் பெற்ற 3 வயது தமிழ்ச் சிறுமி... கொண்டாடிய மும்பைத் தமிழ்ச் சங்கம் + ‘அவள் விகடன்’!
Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?
Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா? அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும் காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது. இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம். Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம். இதிலுள்ள ஜம்போலின் என்ற வேதிப்பொருள், ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அது குறித்த தகவல்கள் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளன. 'நாவல் ஊற்று நீர்' பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாவல் மரங்களுக்கு அடியில் ஏதேனும் ஊற்றோ, சிற்றாறோ இருந்தால், அதிலிருக்கும் தண்ணீரைக் குடித்தாலே இனிப்பும் துவர்ப்புமாக அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கான பானமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். நாவல் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. எது கிடைத்தாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட மறந்த சுவைகளில் துவர்ப்புச் சுவை முக்கியமானது. அதை ஈடுகட்டும்வகையில் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை தவறவிடாமல் சாப்பிடுவது மிகச் சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?
Doctor Vikatan: நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா... உணவின் மூலம் மக்னீசியம் பெற என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவரான ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தூக்கத்தை வரவழைப்பதில் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் ஓரளவு உதவும். மார்க்கெட்டில் பலவிதமான மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், உங்கள் தூக்கப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதைச் சரிசெய்ய நினைப்பதுதான் சரியான வழியே தவிர, எதையுமே யோசிக்காமல் நேரடியாக சப்ளிமென்ட் உபயோகிக்க நினைப்பது சரியல்ல. நீங்கள் தினமும் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்கிறீர்களா, தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கேட்ஜெட்ஸை ஆஃப் செய்கிறீர்களா, தூக்கத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற விஷயங்களை முதலில் செக் செய்யுங்கள். தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு, மூளையை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சருமப் பராமரிப்பு, இசை கேட்பது என எதை வேண்டுமானாலும் செய்யலாம். வேலை பார்த்து முடித்த அடுத்த நிமிடமே தூங்கிவிட வேண்டும் என நினைக்கக்கூடாது. செயற்கை வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பதால், சூரியன் அஸ்தமனம் ஆனதும் மூளைக்குத் தெரிய வாய்ப்பில்லை. தவிர, கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தூங்கச் செல்கிற நேரமானது மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 10- 15 நிமிடங்கள் வேறுபடலாம், மற்றபடி அதிக வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்ளவும். இவற்றை எல்லாம் சரிசெய்யாமல், சப்ளிமென்ட்ஸ் எடுப்பதில் பலனிருக்காது. கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தூக்கத்துக்கான சப்ளிமென்ட்டுகளில் மெலட்டோனின் மிக முக்கியமானது. அது சர்கேடியன் ரிதம் எனப்படும் நம்முடைய உடல் கடிகாரத்தைக்கூட முறைப்படுத்தி, தூங்குவதற்கு உதவும். தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்னீசியம் சப்ளிமென்ட்டும் உதவும். சரிவிகித உணவுகள் சாப்பிட்டாலே மக்னீசியம் உடலில் சேரும். நட்ஸ், சீட்ஸ், முழுத்தானியங்கள் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட சப்ளிமென்ட் சரியானது என்பதை மருத்துவ ஆலோசனை கேட்டுப் பின்பற்றலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தூக்கமின்மை இதயத்தை பாதிக்குமா?
Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!
முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அவற்றில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்கிற ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைத்துவிடும். Pimples (Representational Image) * அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. * சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். * காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். * பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம். * பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான். dandruff treatment * அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். * தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone), முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம். Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன? * அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருள்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள். * ஐஸ்க்ரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?
Doctor Vikatan: என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸின்போதான தலைவலி என்பது மிகவும் சகஜமான விஷயம்தான். அதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது, பீரியட்ஸ் தொடங்கும் முன்போ, அல்லது பீரியட்ஸ் வந்த உடனேயோ குறையும். அதன் விளைவாகவே நீங்கள் தலைவலியை உணர்வீர்கள். பீரியட்ஸ் நாள்களில் வரும் தலைவலிக்கு 'மென்ஸ்டுரல் மைக்ரேன்' (Menstrual migraine) என்ற பெயரே உண்டு. இதை 'கேட்டமீனியல் சிம்ப்டம்ஸ்' (Catamenial symptoms) என்றும் சொல்வதுண்டு. அதாவது பீரியட்ஸின்போது மட்டும் ஒருவருக்கு தலைவலி வரும். அதில் ஒருவகைதான் மென்ஸ்டுரல் மைக்ரேன். பீரியட்ஸின்போதான ப்ளீடிங்கை வெளியே தள்ள கர்ப்பப்பையானது சுருங்கும். அப்படிச் சுருங்கும்போது புராஸ்டோகிளாண்டின் என்றொரு கெமிக்கல் சுரக்கும். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் அதீத களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் வறட்சி, மனப்பதற்றம், போதுமான அளவு தூக்கமில்லாதது, சாப்பிடாதது போன்றவற்றாலும் தலைவலி வரலாம். ஒரு பக்கத்தில் வலி, கூடவே வாந்தி உணர்வு, வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சல் உணர்வு போன்றவை மென்ஸ்டுரல் மைக்ரேனின் அறிகுறிகளாக இருக்கும். வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம். தாம்பத்திய உறவின்போது ஏற்படும் தலைவலி- அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்: மருத்துவர் எச்சரிக்கை! வலியைத் தாங்க முடியாதபோது பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளலாம். வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம். பீரியட்ஸின்போது ஏற்படுகிற சாதாரண தலைவலிக்கு மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளும் உதவும். மருத்துவரைக் கேட்டு அதையும் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு ஈஸ்ட்ரோஜென் அளவை நிலைப்படுத்த வாய்வழியே எடுத்துக்கொள்ளக்கூடிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். ஹார்மோன்களை உள்ளடக்கிய அந்த மாத்திரைகளும் தலைவலியை சரியாக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, போதுமான தூக்கம், யோகா, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் போன்றவை ஓரளவு உதவும். ஹெட்ஏக் டைரி என ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தலைவலி வருகிறது, எத்தனை நாள், எத்தனை மணி நேரம் நீடிக்கிறது என்று குறித்துவையுங்கள். மருத்துவரை சந்திக்கும்போது அவை கூடுதல் தகவல்களாக உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Dream & Psychology: கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? உளவியல் நிபுணர்கள் சொல்வதென்ன?
க னவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன். தூக்கம் கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன. கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement - REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை! எவை கனவாகின்றன? கனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு இடம், பொருள், முகம் தெளிவாகத் தெரியலாம். சிலருக்குக் கனவுகள் தெளிவற்றதாக புகைமூட்டமானதாகத் தோன்றும். பொதுவாக, நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகள் கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. ஒரு சில நேரங்களில், நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள், கனவு மூலமாகக் கிடைக்கலாம். கனவுகள் நம்மில் பலராலும் கனவுகளை எளிதில் நினைவுபடுத்த முடியாது. தூக்கம் கலைவது தன்னிச்சையாக நடந்தால், அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிவிடும். மனஅழுத்தம், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு, கனவுகள் கவலைக்குரியதாகவும், அதிர்ச்சி ஏற்படுத்தும் விதங்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்குத் தாயின் பிரிவு பற்றியும், முதியோருக்கு உடல்நிலை மற்றும் இறப்புப் பற்றியும் கனவுகள் வரலாம். ஒரு சிலருக்குக் கனவு காண்பதால் பதற்றம் அதிகரிக்கும். உளவியல் நிபுணர் இவான் வாலஸ் (Ian Wallace) என்பவர், தன்னுடைய 30 ஆண்டுகால உளவியல் அனுபவத்தில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனவுகளைப் பற்றி கேட்டு, அவற்றில் இருந்து மிக முக்கியமான கனவுகளை வகைப்படுத்தியிருக்கிறார். சில முக்கியமான, அடிக்கடி ஏற்படக்கூடிய கனவுகள் பற்றியும் அவற்றுக்கான பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். கனவுகள் * நிர்வாணமாக இருப்பது: உங்கள் பலவீனத்தை மற்றவர் அறிந்துகொள்கிறார்கள் என்று உங்கள் உள்மனம் அச்சப்படுவதைத் குறிக்கும். * விமானம், ரயில், பஸ் வாகனங்களைத் தவறவிடுவது: நீங்கள் ஏராளமான பொறுப்புக்களைக் கையில் எடுத்து இருப்பீர்கள்; அதை முடிக்க முடியுமா, முடியாதா என்ற அச்சத்தின் வெளிப்பாடு. * பற்கள் உடைவது அல்லது விழுவது: ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் குறிக்கும். * குழந்தைகள் கனவில் வருவது: அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன? * உறவினர்கள், நண்பர்கள் இறப்பதுபோல் கனவு: இனம் புரியாத பயம் அல்லது புதிய மாறுதல் ஒன்றைக் குறித்த அச்சம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. * கீழே விழுவது: நமக்குக் கவலைகள் அதிகமாக இருப்பதையும் மனக்கட்டுப்பாட்டை இழப்பதையும் குறிக்கும். * உணவுப் பொருட்கள் கனவில் வருவது: புத்திக்கூர்மை அடைவதைக் குறிக்கும். பொதுவாக, உணவு, நம் உடலுக்கும் மூளைக்கும் ஊட்டத்தை அளிக்கிறது. கனவுகள் * கைகள் வருவது: வெறும் கைகளைப் பார்ப்பது, நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற சிந்தனையைக் குறிக்கும். கைகளைக் கழுவது போல் கனவு வருவது, தனிமையைக் குறிக்கும். கைகளை மூடி இருப்பதுபோல் வந்தால், நீங்கள் செல்லும் பாதை, தெளிவானது, சரியானது என்பதை உணர்த்தும். * வீடு அல்லது கட்டடம்: ஆழ்மனதின் எண்ணங்களைக் குறிக்கும். மேலும், ஒவ்வொரு தளம் மற்றும் அறையாக வருவது, வித்தியாசமான உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் ஆழ்மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும். * மிருகம் துரத்துவது: நிகழ்காலப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடும் மனப் பான்மை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வரலாம். Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்! * பறப்பது: சுதந்திரம், பிரச்னைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளல் ஆகியவை காரணமாக இருக்கலாம். * பணம்: சுயமதிப்பைக் குறிக்கும். பணப் பரிமாற்றம் செய்வதுபோன்ற கனவு வந்தால், நீண்ட நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிறைவேறப் போவதை அறிவுறுத்தும். * பாதைகள் அல்லது வெற்றுச் சாலைகள்: வாழ்க்கைப் பயணம் செல்லும் திசையை அறிவுறுத்தும். மேலும், உங்களுடைய வாழ்க்கைப் பாதை சரியாகத்தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பும். கனவுகள் * தண்ணீர்: பல விதங்களில் தண்ணீர் கனவில் வரலாம். அவற்றின் பொதுவான குறிப்பு, உணர்ச்சி மற்றும் மயக்கநிலை. மிகவும் அமைதியான சூழலில் குளத்தில் நீர் உள்ளது போன்ற கனவு, உங்களுடைய ஆழ்மனதைப் பிரதிபலிக்கும். கடல் போன்ற நீண்ட நீர்ப்பரப்பு, நீங்கள் எடுத்துள்ள வேலை அல்லது காரியத்தின் பலத்தைப் பிரதிபலிக்கும்; அவற்றை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவுறுத்தும். * உச்சியிலிருந்து கீழே விழுவது: தோல்வி பயம் காரணம். ''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை கனவுக்கும் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டா? சிலருக்கு தாங்கள் அழுவது போல் கனவு வரலாம். அது நிகழ்கால வாழ்வில், அதிகப்படியான மனஅழுத்தத்துடன் இருப்பதால் வரும். தூக்கத்தில் கண்ணீர்த்துளி வருவது, விரும்பிய ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும். மீண்டும் மீண்டும் ஒரே கனவு வரலாம். இது சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து, கவலை அல்லது துக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரலாம். தெரியாத நபரின் முகம் மீண்டும் மீண்டும் கனவில் வரலாம். அவர், உங்களின் ஆழ்மனதில் பதிவாகி உள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடை யவராக இருக்கலாம். பொதுவாக பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும். ஓடுவதுபோல் கனவு வரலாம். அது, நீங்கள் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறீர்கள் அல்லது ஒதுங்க நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். அது உங்களுக்கு அச்சம் அல்லது சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் ராமன். 8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: சரும அழகுக்கு மஞ்சள் மட்டுமே போதுமா, ஃபேஷியல் செய்வது தேவையற்றதா?
Doctor Vikatan: என் வயது 18. என்னுடன் படிக்கும் பலரும் பார்லர் சென்று ஃபேஷியல், ப்ளீச் போன்ற சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால், என் வீட்டில் அதற்கெல்லாம் அனுமதி இல்லை. 'மஞ்சள் தேய்ச்சுக் குளி, ஃபேஷியல் தராத பளபளப்பை அது தரும்' என்கிறார் அம்மா. அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை. ஃபேஷியலுக்கு பதிலாக மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மட்டுமே சருமத்தை அழகாக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா . சருமநல மருத்துவர் பூர்ணிமா மஞ்சளுக்கும் சந்தனத்துக்கும் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை உண்டு. 'அந்தக் காலத்துல மஞ்சள் யூஸ் பண்ணலையா' என்று பலரும் கேட்கலாம். முன்பு இந்த அளவுக்கு சூழல் மாசு இல்லை. இன்று சூழல் மாசு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு வெயிலில் சென்று வந்தால், சருமம் கறுத்துப்போவதற்கான வாய்ப்பு முன்பைவிட 10 மடங்கு அதிகம். மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதை மறுப்பதற்கில்லை. மஞ்சளை உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள், மஞ்சளின் முழுப்பலனும் கிடைக்கும். மஞ்சளுடன் துளி மிளகுத்தூளும் சேர்த்து எடுத்துக்கொள்வது இன்னும் சிறப்பு. எனவே, உள்ளுக்கு சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிப்பூச்சாக உபயோகிப்பதைவிட, சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப் பலனையும் பெற முடியும். இயற்கையான பொருள் எதுவானாலும் அதற்கு குறிப்பிட்ட அளவு புராசஸிங் தேவை. உதாரணத்துக்கு, எலுமிச்சைப்பழத்தில் நிறைய வைட்டமின் சி சத்து உள்ளது. அதற்காக அதை நேரடியாக சருமத்தில் தேய்த்தால் எரிச்சல் உணர்வு வரும். அதுவே அதை புராசெஸ் செய்து, வைட்டமின் சி சீரமாக உபயோகிக்கும்போது, சருமத்தின் உள்ளே முழுமையாக ஊடுருவும், எரிச்சலும் இருக்காது. ரோஜா இதழ்கள், பயத்தமாவு, மஞ்சள் என எல்லாமே இப்படித்தான். இயற்கையான இவையெல்லாம் சருமத்துக்கு நல்லது என நினைத்து உபயோகிக்கும்போது, அவற்றின் கொரகொர தன்மையால் சருமத்தில் உராய்வு ஏற்பட்டு, எரிச்சல், அரிப்பெல்லாம் ஏற்படும் என்பதால் இவற்றை நேரடியாக சருமத்தில் உபயோகிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. சருமத்திலுள்ள செல்கள் 14 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து புதிதாக உருவாகும். வயதாக, ஆக இந்தச் செயல் சற்று மந்தமாகும். அந்நிலையில் இறந்த செல்களை அகற்ற ஃபேஷியல் உதவும். ஜான்வி கபூர் முதல் ராஷ்மிகா மந்தனா வரை... அழகு சிகிச்சையில் டிரெண்டாகும் ஐவி தெரபி..! சருமத்திலுள்ள செல்கள் 14 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து புதிதாக உருவாகும். வயதாக, ஆக இந்தச் செயல் சற்று மந்தமாகும். அந்நிலையில் இறந்த செல்களை அகற்ற ஃபேஷியல் உதவும். ஆனால், மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வது பாதுகாப்பானது. பார்லர்களில் என்ன பிராண்ட் உபயோகிக்கிறார்கள், வாடிக்கையாளரின் சருமத்தின் தன்மையை செக் செய்து அதற்கேற்ற பொருளை வைத்து ஃபேஷியல் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஃபேஷியல் செய்வது ஜிம்முக்கு செல்வது போன்றதுதான். ஜிம் போன அடுத்த நாளே உடலில் வித்தியாசம் தெரிந்துவிடாது, ஃபேஷியலும் அப்படித்தான். 15 நாள்களுக்கொரு முறை ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம். சருமத்துக்கான எந்த அழகு சிகிச்சையையும் 18 வயதுக்குப் பிறகே தொடங்க வேண்டும். அதுவரை மாய்ஸ்ச்சரைசரும் சன் ஸ்கிரீனும் மட்டுமே போதும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Fitness: முதல் முறை ஜிம்முக்குப் போகப் போறீங்களா? - ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
ம ருத்துவம், ஃபிட்னஸ் எல்லோருக்கும் ஒரேமாதிரியாகப் பொருந்துவது இல்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இரண்டுமே மாறுபடும். குழுவாக இணைந்து எந்த ஒரு வேலையும் செய்யும்போது உற்சாகத்துடன் செய்ய முடியும். என்றாலும், அது ஃபிட்னஸுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே. இன்றைக்கு குழுவாக இணைந்து செய்யும் யோகா முதல் ஸும்பா ஃபிட்னஸ் நடனம் வரை குரூப் எக்சர்ஸைஸ் செல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதேபோல், ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் பலரும், ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் வரை கூட தாக்குப்பிடிப்பது இல்லை. ஜிம், ஒர்க்அவுட் மிஸ்டேக்ஸ் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் இந்த பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறார் உடற்பயிற்சியாளர் விஜய் ஸ்டீபன். 1. வார்ம் அப் Fitness பயிற்சியாளர்கள் சொன்னாலும் சரி, பத்திரிகைகளில் படித்தாலும் சரி பலர் உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப் செய்வதை தவிர்க்கின்றனர். நமது உடல் உடற்பயிற்சிக்கு தயாராக, நாம் மனதளவில் தயாரானால் மட்டும் போதாது, நமது உடலும் தயாராக வேண்டும். அதற்கு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகக் கூடிய வார்ம் அப் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக உடற்பயிற்சிகள் செய்வதால், தசைகள் பாதிக்கப்படும். தசைகளில் ஏற்படும் வலியால் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையானது, ஜிம்மில் சேர்ந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குறைந்துவிடுகிறது. 2. முதல் நாள் ரிசல்ட் Fitness ஜிம்மில் சேர்ந்தவுடன், முதல் நாளே உடல் ஃபிட்டாகி விட வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். பலர் முதல் நாளே ஜிம்மில் உள்ள எல்லா கருவிகளையும் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். பயிற்சியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முதல் நாளே இப்படிச் செய்வது தவறு. 3. ஆன்லைன் ஒர்க்அவுட் ஆன்லைன், யூடியூப், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில், பயிற்சி வீடியோக்களை பார்த்து பலர் வீட்டிலேயே பயிற்சிகளை செய்ய முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம், பயிற்சி செய்யத் தூண்டுபவையே தவிர, முன்மாதிரி அல்ல. ஒவ்வொருவர் உடல்நிலை, அவரது ஃபிட்னஸ் ஆகியவற்றைப் பொறுத்து பயிற்சிகள் வேறுபடும். எனவே உடற்பயிற்சியாளரை நேரில் பார்த்து, பரிசோதித்து, அவர் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற வேண்டும். நன்கு பயிற்சி பெற்றபிறகு வீட்டில் சுயமாக செய்யலாம். 4. டிரெட்மில் தவறுகள் fitness Health: ஆரோக்கியமா இருக்கணுமா? சைக்கிளிங் செய்யுங்க... ஏனெனில்?! முதன் முதலில் ஜிம்முக்கு பயிற்சி செய்ய வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரம், குறைவான வேகத்தில் டிரெட்மில்லில் நடக்கச் சொல்வார்கள் டிரெய்னர்கள். ஒரு சிலர் முதல் நாளே ஜிம்மில், நல்ல ஸ்பீடு வைத்து ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அடுத்த 10 நிமிடத்திலேயே களைப்படைந்து எந்தவித பயிற்சியும் செய்ய முடியாமல் வீட்டுக்குத் திரும்புவார்கள். ஒருவருக்கு அவரது ஃபிட்னஸை பொறுத்துதான் எவ்வளவு நேரம், எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் ஜிம்மில் நடக்கலாம் அல்லது ஓடலாம் என முடிவு செய்ய முடியும். திடீரென சாகசங்களை செய்ய எப்போதுமே, ஆசைப்படக் கூடாது. படிப்படியாகத்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும். 5. ரெகுலராக வர வேண்டும் fitness பத்தில் ஆறு அல்லது ஏழு பேர் ஜிம்முக்கு சேர்ந்த சில நாட்களில், ஏதேதோ சாக்கு போக்குளைச் சொல்லி ஜிம்முக்கு வருவதை நிறுத்திவிடுகிறார்கள். வாழ்க்கையில் முதன் முதலாக ஜிம்முக்கு செல்லும்போது, அங்கே சில பயிற்சிகளைச் செய்வதால், தசைகளில் சிறு சிறு காயங்கள், தசைப்பிடிப்பு, தொடை வலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படுவது சகஜம். அவர்கள் சிறு ஓய்வுக்குப் பிறகு ரெகுலராக ஜிம்முக்கு வர வேண்டியது அவசியம். குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் தொடர்ந்து லீவு போடாமல் ஜிம்முக்கு வந்தால் மட்டுமே ஃபிட்னஸ் மேம்படும். 6. வருத்திக்கொண்டு பயிற்சி செய்வது fitness உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. சிலர், மிக வேகமாக ஃபிட்டான தோற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்யத் தொடங்குவர். இதனால், வெகுவிரைவில் உடல் சோர்ந்துவிடும். உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். 7. ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் ஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால், பல இடங்களில் 30 - 40 பேர் கூட்டம் கூட்டமாக டான்ஸ் செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை. ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் தெரியாதவர்கள் எப்போதும் டிரெய்னருக்கு முன் வரிசையில், அவர் சொல்லித் தருகிறபடி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏதோ ஒரு வரிசையில், டிரெய்னரின் பார்வையில்படாமல் நின்று பயிற்சி செய்தால், சரியான ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொள்ள முடியாது. அதோடு நேர விரயம், பண விரயம்தான் ஏற்படும். ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள் பின் வரிசைகளில் குழுவோடு சேர்ந்து பயிற்சி செய்வதில் தவறில்லை. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு; விரிவான தகவல்கள்!
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சந்தேகத்துக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு. நம் இதயத்தை பலவீனமடைய செய்து மரணத்துக்கு வழிவகுக்கும் வில்லன், ஒரு வேதிப்பொருள், நாம் விரும்பி பயன்படுத்தும் ஷாம்பூவிலும், ஆசையாக போடும் மேக்கப்பிலும், சமையலறையில் இருக்கும் டப்பா அல்லது பிற பொருட்களிலோ இருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. நீண்டநாட்களாக நம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக நாம் அச்சம் கொள்ளும் பிளாஸ்டிக், நம் உடலிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறிந்துள்ள ஆய்வு, eBiomedicine இதழில் வெளியாகியிருக்கிறது. பித்தலேட்டுகள் எனப்படும் சிந்தடிக் வேதிப்பொருட்கள் நம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கின்றன. இவை இதய நோய்களால் மரணம் ஏற்படுவதை அதிகரிக்கின்றன. plastic food package 2018ம் ஆண்டு உலகம் முழுவதும் 55-64 வயதினருக்கு இதய நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் 13.5% மரணங்களுக்கு இந்த வேதிப்பொருட்கள் காரணமாயிருந்திருப்பதாக ஆய்வில் கூறுகின்றனர். பிளாஸ்டிக்குகளை மென்மையானதாகவும், நீண்டநாள் உழைப்பதாகவும், நெகிழ்வானதாகவும் வைத்திருக்க பித்தலேட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இவை இதய தமனிகளில் (கரோனரி) வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோயால் மரணம் ஏற்பட காரணமாகின்றன. இதய நோயால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பித்தலேட்டுகள் இதற்கு முன்னரே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களாக எச்சரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆண்களின் இனப்பெருக்கத் திறனை குறைக்கும் எனக் கூறப்பட்டு வந்தது. இவை விந்தணுக்கள் எண்ணிக்கையையும் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்து பிறப்புறுப்பில் குறைபாட்டை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது ஆஸ்துமா, குழந்தைகள் உடல்பருமன் மற்றும் புற்றுநோயுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதய நோய்களை தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதில் டை(2-எத்தில்ஹெக்சைல்) என்ற குறிபிட்ட பித்தலேட் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை DEHP என்று அழைக்கின்றனர். பித்தலேட்டுகள் பரவல் உலகம் முழுவதும் உள்ளது. 2018ம் ஆண்டு கிட்டத்தட்ட 200 நாடுகளில் 3.5 லட்சம் மரணங்களுக்கு பித்தலேட்டுகள் காரணமாக இருந்துள்ளன. இவற்றில் தெற்காசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் அதிக மரணங்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. Plastic in Production ஆபிரிக்காவில் இதய பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களில் 30% பித்தலேட்டுகளுடன் தொடர்புள்ளவை. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இது 25% ஆக உள்ளது. இதய நோயால் அதிக மரணங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே நமக்கு இந்த வேதிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். DEHP என்ற வேதிப்பொருளாலின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் எத்தனை இதய நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிவதே அவர்களது ஆய்வின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் DEHP தாக்கம் எத்தனை வலிமையாக இருக்கிறது என்பதை அறிய முடியும். இதற்காக 2018ம் ஆண்டில் இதய நோயால் மரணமடைந்த 55 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டோரின் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதய நோயால் இறப்பவர்களின் தரவுகளை IHME நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர். மக்கள் எந்த அளவு DEHP வேதிப்பொருளுக்கு வெளிப்படுகின்றனர் என்ற தரவுகளையும் மக்கள் தொகை பற்றிய தரவுகளையும் சேகரித்துள்ளனர். முந்தைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு DEHP எவ்வளவு ஆபத்தானது என்பதை கணக்கிட்டுள்ளனர். 2008ம் ஆண்டு DEHP பாதிப்பு எந்த அளவில் இருந்துள்ளது என்பதை கண்டறிய உடலில் உள்ள ரசாயனங்களை அளவிடும் ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2018ம் அந்த பாதிப்பால் நிலைமை எந்த அளவு மோசமாகியிருக்கிறது என்பதையும் அளவிட்டுள்ளனர். உடலில் உள்ள DEHP அளவுக்கும் அது இதய நோயாளிகளில் மரணத்தை ஏற்படுத்துவதற்குமான விகிதத்தைக் கணக்கிட்டிருக்கின்றனர். நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் லியனார்டோ ட்ரசாண்டே ஆய்வின் முடிவில் நம் உடலில் DEHP வேதிப்பொருள் இருப்புக்கு 98% நெகிழி (Plastic) பயன்பாடுதான் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதிக மக்கள் தொகை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். 2018ம் ஆண்டு இந்தியாவில் 103,587 மரணங்களுக்கு DEHP காரணமாக இருந்திருக்கிறது. இந்த வேதிப்பொருளால் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள் தொகையைக் கடந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மோசமான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை இதற்கு காரணம் என்கின்றனர். DEHP என்பது என்ன? எல்லா பித்தலேட்டுகளும் பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கக் கூடிய நாப்தலீன் அல்லது ஓ-சைலீனில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. DEHP (di-2-ethylhexyl phthalate) நெகிழ்வானதாகவும் கொழுப்பில் கரையக்கூடியதாகவும் இருக்க, புரோப்பிலீன் போன்ற பெட்ரோலியத்திலிருந்தே கிடைக்கக் கூடிய ஆல்ஹால் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களே இதைத் தயாரிக்கின்றன. இயற்கையில் இந்த வேதிப்பொருளே கிடையாது. பிவிசி உள்ளிட்ட மென்மையான வெகுமக்கள் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள், உணவு பேக்கேஜிங், மருத்துவ உபகரணங்கள், நுகர்வு பொருட்களில் DEHP உள்ளது. இந்த வேதிப்பொருள் முன்னரே கூறியதுபோல பிளாஸ்டிக்குக்கு நெகிழ்வுத் தன்மையும் மென்மையும் நீண்டநாள் உழைக்கும் தன்மையும் வழங்கினாலும், இது பிளாஸ்டிக்குடன் வேதியல் பிணைப்பைக் கொண்டிருப்பதில்லை. அதாவது பிளாஸ்டிக் மூலக்கூறுகளுடன் ஒட்டியிருக்காமல், சப்பாத்திக்கு மாவில் எண்ணெய் கலப்பதுபோல, பிளாஸ்டிக்குடன் கலக்கப்படுகிறது. இதனால் இது பிளாஸ்டிக்கில் இருந்து பிரிந்து நம் உடலுக்குள் செல்வது எளிமையாகிறது. குறிப்பாக உணவு டப்பாளில் எண்ணெய்ப்பாங்கான பொருட்கள் இருந்தால் எளிதாக அதில் கலந்துவிடும். Plastic நீண்டநாட்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அதிலிருந்து கசிந்தோ, காற்றுடன் கலந்தோ, மற்ற பொருட்கள் தேய்த்தோ DEHP வெளியேறிவிடும். ஆனாலும் பிளாஸ்டிக்குக்கு குறைந்த செலவில் நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் இந்த வேதிப்பொருளைச் சேர்ப்பதுதான் லாபகரமானதென்பதால் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. Baobab: ஆப்பிரிக்காவின் ``Tree of Life தமிழகம் வந்தது எப்படி? - அதிசய மரம் பற்றிய அடடே தகவல்கள்..! மருத்துவர் சொல்வது என்ன? DEHP உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் பா.கவின், டி.எச்.இ.பி என்பது நெகிழிப் பொருள்களுக்கு மென்மையூட்டியாக பயன்படுத்தப்படுகின்றது. இப்பொருள் நம் அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் காரணியாக நம் உடலை ஏதோ ஒரு வகையில் வந்தடைகின்றது. பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ், பாட்டில், உணவைப் பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டு டைல்ஸ், வயர், கேபிள், அழகுப் பொருட்கள், சில ஷாம்பூ என்று பல காரணிகள் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த டி.எச்.இ.பி நம் உடலை மூன்று வகையில் அணுகுகின்றது: சுவாசப் பாதை மூலமாகவும், வாய் வழியாகவும் மற்றும் தோல் வழியாகவும். உடலுக்குள் DEHP அப்படியே இருப்பதில்லை, வளர்சிதை மாற்றம் மூலம் MEHP, MEHHP, MEOHP, MECPP ஆகிய உயிரினக்கழிவுகளாக (metabolites) மாறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வேதிப்பொருட்களின் அளவை வைத்தே ஒருவரின் உடல் எந்தளவுக்கு DEHP -க்கு வெளிப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார்கள். Blood சீனாவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளின் உடல் பருமனுக்கு ஒரு காரணியாகவும் இந்த டி.எச்.இ.பி அமைகின்றது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (oxidative stress) ஏற்படுத்தி DNA-வைப் பாதித்து 'P53' என்று கூறப்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. NHANES என்ற அமைப்பு 2011 முதல் 2018 வரை நடத்திய ஆய்வில் பல புற்றுநோயாளிகளின் உடலில் இந்த வேதிப்பொருள் அதிகமாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இது கருவுற்றிருக்கும் தாய் மூலம் குழந்தைகளுக்கும் இந்த வேதிப்பொருள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாவதில் பிரச்னையை விதைப்பை, விந்தணுக்களில் பிரச்னையும், பெண்களுக்குக் கருமுட்டை வளர்ச்சியில் பிரச்னை என்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது. என்றார். மேலும், விலங்குகளில் ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் விதைப்புற்று, மார்பகப்புற்று, பிராஸ்டேட் புற்று ஆகியவற்றிற்கு காரணியாக இந்த டீஹெச்இபி அமைந்துள்ளது. கருக்குழந்தைகள் கருவில் இருக்கும் வேளையில் இந்த வேதிப்பொருள் அவர்களைப் பாதித்தால், பிற்கால வாழ்வில் புற்று வருவது விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பிகளின் சுரப்பைப் பாதிக்கின்றது. மனிதர்களுக்கு லூயி பாடி டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் உள்ளவர்களின் மூளை தண்டுவள நீரில் (cerebro spinal fluid) டிஹெச்இபி-யின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதய தசைகள், செல்கள், ரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி, பல இதய கோளாறுகளுக்கு ஒரு அடித்தளமாக இது அமைகின்றது. சில மணிநேரங்கள் முதல் ஒன்றிரண்டு நாட்கள் வரை உடலில் இருக்கும் DEHP-ல் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள், சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் DEHP-உடன் தொடர்புகொள்வதுதான் தீவிர பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொது மருத்துவர் பா.கவின் இன்டர்நேஷனல் ஏஜென்சி ஆஃப் ரிசர்ச் ஆன் கேன்சர் IARC இந்த டிஹெச்இபி-யை கிளாஸ் 3 காரணியாகக் கூறுகின்றது. அதாவது விலங்குகளில் இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகவும், மனிதர்களுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த டிஹெச்இபி மனித இனத்திற்கு கேடு விளைவிப்பதாக அறிவிக்க வேண்டும் என்ற கூற்றை முன்வைக்கின்றனர். நாம் நம் அன்றாட வாழ்வில் எப்படி இந்த டிஹெச்இபி-யைத் தவிர்ப்பது என்று பார்த்தால், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். இது 1958 ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வேதிப்பொருளாக இருந்தாலும், இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றார். எந்தெந்த பொருட்களில் DEHP அபாயம் அதிகம்? மருத்துவத்துறையில் பயன்படுத்தக் கூடிய டியூப்கள், பைகள் மூலம் DEHP உடலில் எளிதாக நுழைய முடியும். இதய நோயாளிகளுக்கு இந்த பொருட்களைப் பயன்படுத்துவது அபாயத்தை அதிகரிக்கிறது. உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைப்பது, பிளாஸ்டிக் கவரில் ( PVC cling wrap) சுற்றி வைப்பது, உணவு பரிமாற பயன்படுத்தும், உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் உணவில் இந்த வேதிப்பொருள் கலக்கிறது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த, சூடான உணவுப்பொருட்கள் மூலம் எளிதாக உடலுக்குள் நுழைகிறது. Plastic Toys அன்றாடம் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள், ஷாம்பு, லோஷன், வாசனைப் பொருட்கள், தரையில் ஒட்டும் ஃப்ளோரிங் ஸ்டிக்கர்கள், காரில் இருக்கும் சீட் கவர்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் கூட இந்த வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றன. அபாயத்தை தவிர்ப்பது எப்படி? பிவிசி பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது அவசியம். இதனை மறுசுழற்சி குறியீடு எண் 3 என இருப்பதைக் கொண்டு அறியலாம். குழந்தைகள் இதனால் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால், குழந்தைகளுக்கு மர விளையாட்டு சாமான்களைக் கொடுக்கலாம். தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக செராமிக், கண்ணாடி பொருட்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக மைக்ரோவேவில் சூடுபடுத்தும்போது பிளாஸ்டிக் கூடவே கூடாது. லோஷன்கள், சலவைப் பொருட்கள், சுத்தப்படுத்தும் பொருட்களில் மணமற்றவற்றைத் தேர்வு செய்யலாம். உணவுப் பொருட்களை வைக்க கண்ணாடி, செராமிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மர பெட்டகங்களைப் பயன்படுத்தலாம். பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு பதிலாக ஃப்ரெஷ்ஷானவற்றை வாங்கலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். Air Freshener -களைத் தவிர்க்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பிளாஸ்டிக் மாசு உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும். மறுசுழற்சி குறியீடு எண் 6 மற்றும் 7 என இருக்கும் பிளாஸ்டிக்குகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் DEHP-free உபகரணங்கள் இருக்கிறதா எனக் கேட்கலாம். ஷாம்பு, லோஷன், வாசனை திரவியம், நெயில் பாலிஷ்களில் வாசனை இல்லாத, பித்தலேட்டுகள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். குழந்தைகள், கர்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களை அதிக கனவத்துடன் கவனித்துக்கொள்ளலாம். உலகளாவிய அரசுகள் பித்தலேட்டுகள் தயாரிப்பை தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பிளாஸ்டிக் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வு முன்மொழியப்படும் எனக் கூறப்படுகிறது. சுருக்கமாக பிளாஸ்டிக்கில் கலக்கப்படும் செயற்கையான DEHP வேதிப்பொருள், நாம் நெகிழிப்பொருட்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் நம் உடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. ஒரு நாளில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, தினசரி எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். சென்டினல் தீவு: கால் வைத்த அமெரிக்கர் கைது; இந்த தீவின் ரகசியங்கள் என்ன?
Sexual Health: ஏன் சில ஆண்களும் பெண்களும் ஆர்கசமே அனுபவிப்பதில்லை? - காமத்துக்கு மரியாதை 246
தன் உடலை நேசிக்காதவர்களும், தன் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களும் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். அது எப்படி என்று அவரிடம் கேட்டோம். Sex education செக்ஸ் ஆபாசம், அசிங்கம் என்கிற பிற்போக்கு எண்ணங்கள் வேக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது! ''உச்சக்கட்டம் அல்லது ஆர்கசம் என்கிற வார்த்தைகூட தெரியாமல் இருந்தது ஒருகாலத்து தலைமுறை. அது தெரிந்த பிறகும், அது ஆண்களுக்கான விஷயம்போலவே இருந்து வந்தது. செக்ஸில் ஆர்வம் காட்டுகிற பெண்கள் மோசமான கேரக்டர் என்கிற பொதுபுத்தியும் சமூகத்தில் இருந்தது. இப்போதும் இதன் மிச்சம் நம் குடும்பங்களில் இருக்கவே செய்கிறது. ஆனால், கடந்த 10 வருடங்களில் செக்ஸ் ஆபாசம், அசிங்கம் என்கிற பிற்போக்கு எண்ணங்கள் வேக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இது மிக மிக ஆரோக்கியமான விஷயம். இந்த நேரத்தில், ஒரு கணவனும் மனைவியும் ஆர்கசம் அடைவதைத் தடை செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்'' என்றவர் தொடர்ந்தார். பிரெஸ்ட்டை மட்டும் தொட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்! ''எல்லா காலத்திலும் பெரும்பாலான ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, தங்களுடைய அந்தரங்க உறுப்பு குறித்த ஏதோவொரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். உதாரணத்துக்கு, சில சம்பவங்கள். அவர்களுக்கு திருமணமான புதிது. உறவின்போது, கணவரை பிரெஸ்ட்டை மட்டும் தொட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார் மனைவி. அது பிடிக்கவில்லையா; அங்கே ஏதாவது பிரச்னையா என்று கணவர் வற்புறுத்திக் கேட்ட பிறகுதான், 'தன்னோட பிரெஸ்ட் சிறியதாக இருப்பதால்தான் அப்படி தடுத்ததாகத்' தெரிவித்திருக்கிறார். Sex education இன்னொரு சம்பவத்தில், மார்பகக்காம்பைச் சுற்றி ரோம வளர்ச்சி அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் கூச்சப்பட்டுக்கொண்டு உறவைத் தவிர்த்து வந்திருக்கிறார். இன்னுமொரு சம்பவத்தில், ஓர் ஆண் 'தன்னுடைய உறுப்பு சிறிதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையில்' மனைவியிடம் நெருங்காமலே இருந்தார். Sexual Health: ஆண்மை என்றால் என்ன? - பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி! | காமத்துக்கு மரியாதை - 160 அவர்களால் ஆர்கசம் அனுபவிக்கவே முடியாது! தன் உடல் மீதான தாழ்வு மனப்பான்மை காரணமாக உறவைத் தவிர்ப்பவர்கள் ஒருவகை என்றால், முதல் சம்பவம்போல தன் உடலின் சில பகுதிகளை மட்டும் மறைப்பவர்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினர் உறவுகொள்ளும்போதும், தங்களுடைய உடல் குறைபாடு தன் வாழ்க்கைத்துணைக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே இருப்பார்கள். இந்த அச்சம் காரணமாக அவர்களால் ஆர்கசம் அனுபவிக்கவே முடியாது. சில ஆண்களும், பெண்களும் உச்சக்கட்டம் அடையாமல் போவதற்கு இது முக்கியமான காரணம். Dr. Kamaraj Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள்... ஏன் இந்த நிலைமை? கொழு கொழு பெண்கள்தான் செக்ஸி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்! உடல் அழகு தொடர்பான கருத்துகள் சமூகத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன. 20, 25 வருடங்களுக்கு முன்னால் கொழு கொழு பெண்கள்தான் செக்ஸி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஸ்லிம்மாக இருப்பதுதான் செக்ஸி என்கிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால், எத்தனை பேர் கட்டுமஸ்தான உடலுடன் இருக்கிறார்கள்? உங்கள் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்; நேசியுங்கள்... ஆணோ, பெண்ணோ ஆரோக்கியமான உடலுடன் இருந்தாலே தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும்; ஒவ்வொரு உறவிலும் ஆர்கசமும் கிடைக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?
Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வெஜைனா வறட்சி மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதற்கு க்ரீம் உபயோகிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தருமா.. தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏதும் வருமா..? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸின்போது வெஜைனா பகுதியில் வறட்சியும் எரிச்சலும் ஏற்படுவது சகஜம். இதனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதில் சிரமம் இருக்கும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் லூப்ரிகன்ட்ஸை வாங்கி தாம்பத்திய உறவுக்கு முன் பயன்படுத்தி இந்த அவதியிலிருந்து விடுபடலாம். பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம். அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும். அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம். தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வெஜைனல் க்ரீம் உதவுமா? Doctor Vikatan: மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அவசியமா? மெனோபாஸ் வயதில் இருக்கும் பல பெண்களும், 'கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார்... எனக்கு விருப்பமும் இல்லை. வலியும் அதிகமாக இருக்கிறது...' என்ற புலம்பலோடு வருவார்கள். இவர்கள், மருத்துவ ஆலோசனையோடு ஜெல், க்ரீம், ஹார்மோன் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலருக்கு திடீரென லேசான ப்ளீடிங் வரலாம். வெஜைனா சருமமானது வறண்டும் மெலிந்தும் போய் விடும். இந்த இரண்டையும் சரிசெய்ய ஈஸ்ட்ரோஜென் க்ரீம் உதவும். இவை எல்லாமே ஒரு பெண்ணின் வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடையவை. எனவே, இந்தச் சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் காலகட்டத்தைத் தாண்டி எடுக்கக்கூடாது. அப்படித் தொடர்ந்தால் கல்லீரல் கூட பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி எதையும் உபயோகிக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?
பாம்பு கடித்து மனிதர்கள் இறந்த செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில தினங்களாக மனிதனைக் கடித்தப் பாம்பு இறந்த செய்தி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாம்புக்கடி சச்சின் நாக்பூரே மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாலகாட் மாவட்டத்தில் உள்ள சச்சின் நாக்பூரே (25) என்ற இளைஞர், தற்செயலாக விஷப்பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அதனால், அந்தப் பாம்பு அவரை கடித்துள்ளது. சிறிது நேரத்தில் சச்சினைக் கடித்த அந்தப் பாம்பு அங்கேயே உயிரிழந்துள்ளது. பாம்பு கடிப்பட்ட சச்சின் நாக்பூரே, 'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நான் வேப்பங்குச்சி, மா குச்சி போன்றவற்றைக் கொண்டுதான் பல் துலக்கி வருகிறேன். அதனால்தான் அந்தப் பாம்பு கடித்தவுடன் எனக்கு அதன் விஷம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அந்தப் பாம்பின் விஷமே அதைக் கொன்றுவிட்டது' எனப் பேசியிருந்தார். அவர் பேசிய அந்த செய்தி சில நாள்களாக பரவலாகப் பேசிப்பட்டு வருகிறது. பாம்பின் விஷமே பாம்பினைக் கொல்லுமா? உண்மையில் மனிதர்களைக் கடித்தால் பாம்பு இறந்துபோவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா; பாம்பின் விஷமே பாம்பினைக் கொல்லுமா; அவர் சொன்னதுபோல வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்றவற்றால் பல் துவக்கினால் விஷக்கடியில் இருந்து உயிர்ப்பிழைக்க முடியுமா..? அலசுகிறது இந்தக் கட்டுரை. ஆராய்ச்சி இயக்குநர் கலையரசன் மனிதனின் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு விஷப்பாம்பைக் கொல்லுமா? உண்மையில் மனிதனின் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு விஷப்பாம்பைக் கொல்லுமா என்பதை விவரிக்கிறார் சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளையின் ஆராய்ச்சி இயக்குனர் வி.கலையரசன். அவர் பேசுகையில், மனிதனைக் கடித்ததால் பாம்பு இறந்து விட்டது என்பது ஒரு கட்டுக் கதையாகத்தான் இருக்கும். இதுவரை இப்படியொரு நிகழ்வு நடக்கும் என எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆய்வும் சொல்லவில்லை. மனிதர்களுக்கு தானாகவே பாம்புக் கடிக்கான நோய் எதிர்ப்புத்திறன் உண்டாவதற்கு வாய்ப்புகள் இல்லை. உலகிலேயே குதிரைகளுக்கு மட்டும்தான், பாம்பக்கடிக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட எதிர்விஷ புரதங்களை உருவாக்கக்கூடிய தன்மை உண்டு. அதனால்தான் பாம்புக் கடிக்கு எதிரான 'Anti venom' (எதிர்விஷம்) மருந்து தயாரிப்பில் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது . பாம்பு கொன்ற மனிதர்களைவிட மனிதன் கொன்ற பாம்புகள்தான் அதிகம்..! - வந்ததும்... வாய்த்ததும்..! அந்த செத்துப்போன பாம்பை ஆய்வு செய்தால் மட்டுமே... அந்த மனிதரை கடித்தவுடன் பாம்பு இறந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தப் பாம்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பாம்புகளுக்கு அதனுடைய வாய்ப்பகுதியிலோ, விஷப்பற்களிலோ தொற்று பாதிப்பு ஏற்படும். அவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கும்போது பாம்புகள் உணவு உட்கொள்ளாமல் சிறிது காலத்திலேயே இறந்துவிடும். அந்த இறந்த பாம்பிற்கும் அந்தப் பிரச்னை இருந்திருக்கலாம். எந்த ஒரு மனிதனும் பாம்பு கடிக்கிறது என்றால் அமைதியாக நின்றுகொண்டிருக்க மாட்டார்கள். அதை அடிப்பது, மிதிப்பது போன்று தொந்தரவுகளை ஏற்படுத்தவே செய்வார்கள். பாம்புகளின் தலையை அழுத்தமாக மிதித்தால்கூட இறந்துவிடும். அந்த நபர் பதற்றத்தில் அதன் தலையை மிதித்து இருப்பார். அதனால்கூட அந்தப் பாம்பு இறந்திருக்கலாம். அதை ஆய்வு செய்தால் மட்டுமே, அது இறந்ததற்கான உண்மையானக் காரணத்தைக் கண்டறிய முடியும்'' என்கிறார் கலையரசன். வேப்ப மரங்கள் இயற்கை குச்சிகளால் பல் துலக்குவதால் விஷமுறிவு தன்மை ஏற்படுமா? வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்ற இயற்கை குச்சிகளைப் பயன்படுத்தி பல் துலக்குவதால் மனித உடலில் விஷமுறிவு தன்மையை ஏற்படுமா என்பதை விளக்குகிறார் திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார். ''அந்தப் பாம்பு இறந்துபோனதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். மா,வேம்பு போன்ற மரத்தின் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கியதால்தான் இந்த பாம்பு இறந்து இருக்கும் என கூறியிருப்பது புரிதல் இல்லாமல் கூறியிருக்கும் ஒரு தவறான தகவல். சித்த மருத்துவர் விக்ரம் குமார் ஆலமரம், வேப்பமரம், புங்கை மரம், நாயுறுவி, மருதம், நாவல்மரம் ஆலமரம், வேப்பமரம், புங்கை மரம், நாயுறுவி, மருதம், நாவல்மரம் போன்றவற்றின் குச்சிகளையோ, வேர்களையோ கொண்டு பல் துலக்கும்போது பற்கள், ஈறுகள் வலுப்பெறும். வாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் அழிந்துவிடும். நாக்கு சுத்தமடையும். தவிர, இதுபோன்ற இயற்கைப்பொருள்களை கொண்டு பல் துலக்குமபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். அது சில கிருமிகள் உடலுக்குள் செல்வதையோ, பல்கி பெருகுவதையோ தடுக்கும்தான். ஆனால், கொடிய பாம்புகளின் விஷத்தன்மையை முறிக்கும் அளவுக்கு பலன் தராது. Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்! சித்த மருத்துவத்தில் குறிப்பிடவில்லை. 'இந்த இயற்கை பொருள்களைக் கொண்டு பல் துலக்குவதால் விஷ முறிவு தன்மை உடலில் உருவாகும்' என இதுவரை சித்த மருத்துவத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், விஷக்கடி சிகிச்சைக்கான புத்தகத்தில் 'நிம்பை எண்ணெய் உள்ளிருந்தால் விஷக்கடி ஒடும் அன்றோ' என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, வேப்ப எண்ணெய் எடுத்துக்கொள்ளும்போது விஷக்கடியோட குறி குணங்கள் இல்லாமல் போகும் என்பது அதன் அர்த்தம். மேலும் விஷக்கடிகளின் குறி குணங்களுக்கு ஏற்ப அவற்றை குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளும் சித்த மருத்துவத்தில் உள்ளது. Fact Check: தக்காளியைக் கடிக்கும் பாம்பு; வைரலாகும் வீடியோ; உண்மை என்ன? பாம்பு கடித்தால் உடனே மருத்துவரை பாருங்கள்! ஆனால், அந்த வைரல் செய்தியைப் படித்துவிட்டு, யாராவது 'நானும் வேப்பமரம், ஆலமரம் போன்ற இயற்கைக்குச்சிகளில்தான் பல் துலக்குகிறேன். எனக்கும் விஷமுறிவுத்தன்மை ஏற்பட்டிருக்கும்' என நம்பிக்கொண்டு பாம்பு கடித்தாலும் டாக்டரைப் பார்த்து சிகிச்சை எடுக்காமல் இருக்கக்கூடாது. விஷப்பாம்போ, விஷமற்ற பாம்போ எதுவாயினும் பாம்பு கடித்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!
கு ழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில் எக்கச்சக்க அழகுக் குறிப்புகளும் இருக்கின்றன என்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசந்த்ரா. ஃபேஸ் பேக் பொலிவான முகம்! வெயிலில் சென்று வந்தப் பிறகு நெற்றியும், கன்னங்களும், மூக்கும் நிறம் மாறி கறுத்துப் போயிருக்கும். உருளைக்கிழங்கை அரைத்து, சாறு எடுத்து, அதை உடனே முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலசி விட்டீர்கள் என்றால், வெயிலால் கருத்த முகத்தின் நிறம் மாறி பழைய பொலிவுக்கு வந்துவிடும். நேச்சுரல் ப்ளீச்! நேரம் காலம் பார்க்காமல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு, அது ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்குமே கருவளையம் கட்டாயம் இருக்கும். இவர்கள் உருளைக்கிழங்கை அரைத்து, சாறுப் பிழிந்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கிற நேச்சுரல் ப்ளீச் கருவளையத்தை படிப்படியாக சரி செய்து விடும். உருளைக்கிழங்கு ஃபேஷியல் கண்கள் பிரைட்டாக மாறும்! கருவளையம் காரணமாக பலருக்கும் கண்கள் இடுங்கியது போல இருக்கும். உருளைக்கிழங்குச் சாறு கருவளையத்தை நீக்கிய பின்பு முகம் மட்டுமல்ல கண்களும் பிரைட்டாக பளிச்சென்று தெரியும். சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story கண் ஓரக் கோடுகள்! கண்களின் ஓரத்தில் சிலருக்கு கோடுகள் விழுந்திருக்கும். இது அவர்களை வயதானவர் போல காட்டும். இவர்கள் தினமும் உருளைக்கிழங்குச் சாறைத் தொட்டு அந்தக் கோடுகளின் மீது வைத்து வந்தால், மெள்ள மெள்ள அது குறைய ஆரம்பிக்கும். கறுப்பான கழுத்துக்கு.. கறுத்த கழுத்துக்கு... சிலருக்கு கழுத்தில் செயின் உரசி உரசி கருப்பாக இருக்கும். அவர்களும் அடிக்கடி உருளைக்கிழங்குச் சாறை அந்த இடத்தில் தடவி வந்தால் கருமை மாறும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! உருளைக்கிழங்கு ஃபேஷியல் உருளைக்கிழங்குச் சாறு 2 டீஸ்பூன், சம அளவு காய்ச்சாதப் பால், சில துளிகள் கிளிசரின், பாதாம் எண்ணெய் சில துளிகள், முல்தானி மட்டி போலவே இருக்கும் கயோலின் மண் (kaolin powder) சிறிதளவு... இவை ஐந்தையும் நன்கு கலந்து, வாரம் இரண்டு முறை முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு வந்தால், ஃபேஷியல் செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album
உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி A. KURUZ THANAMA. KURUZ THANAM
மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?
வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இயர்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை வரை பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒப்பனை கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தியதால் கிட்டத்தட்ட 45% காது கேட்கும் திறனை இழந்ததாக கூறியிருக்கிறார். ஆருசி என்ற பெண்ணின் பதிவின்படி, டெல்லிக்கு செல்லும்போது அவர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தனது இயர்போன்களை பயன்படுத்தி இருக்கிறார். மறுநாள் காலையில் அவரது இடது காது, கேட்கும் திறனை இழந்ததாக குறிப்பிட்டார், ஆரம்பத்தில் அதை நிராகரித்தவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவரை அணுகி பரிசோதித்திருக்கிறார். இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவரது இடது காதில் 45% காது கேளாமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். திடீரென ஏற்பட்ட காதுகேளாமையை சரி செய்ய மருத்துவரிடம் அணுகியபோது அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. காதில் ஸ்டெராய்டுகள் செலுத்தியதாகவும், ஊசி போன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கையாக ஸ்பீக்கர்களையோ அதிகமான சத்தங்கள் இருக்கும் இடங்களையோ தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இடையில் ஏற்பட்ட காதுகேளாமையை, சிகிச்சை பெற்று சரி செய்யலாம் என்று நம்பிக்கையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மீண்டும் செவித்திறன் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமையில் இருந்து மீள முடியாது என்று குறிப்பிட்டார் அந்த பெண். இதனை ஒரு விழிப்புணர்வு பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எச்சரித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்று வருகிறது. View this post on Instagram A post shared by Aarushi Oswal (@aarushimakeupartist) புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?
Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்
சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் [Tamil Nadu's first Centre of Excellence in Pediatric Orthopedics and Trauma Care] தொடங்குவதாக அறிவித்தது. குழந்தைகள் விளையாட்டில் அடையும் வழக்கமான காயங்கள் முதல் பிறக்கும் போதே இருக்கும் சிக்கலான நிலைமைகள் வரை, சிறப்பு எலும்பியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான மாநிலத்தின் முதன்மையான சிகிச்சை மையமாக இது செயல்படும். அப்போலோ மருத்துவமனையின் சென்னை வளாகத்தில் அனுபவம் வாய்ந்த குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு குழுக்களை [pediatric orthopedic surgeons, trauma specialists, rehabilitation teams] இந்த சிறப்பு சிகிச்சை மையம் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. அப்போலோ மருத்துவமனை குழந்தை மருத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்கு அடையாளமாக இந்த குழந்தை எலும்பியல் மருத்துவம், அவசரகால சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியா முழுவதிலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை இம்மையம் பூர்த்தி செய்யும் விதமாக செயல்படும். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் எலும்பியல் தொடர்பான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையிலுள்ள குழந்தை மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் காயங்கள் முதல் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் கிளப்ஃபுட் மற்றும் இடுப்பில் ஏற்படும் ஹிப் டிஸ்ப்ளாசியா [clubfoot & hip dysplasia] போன்ற பிறவிலேயே இருக்கும் நிலைமைகள் வரையிலான பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். இதை சமாளிக்கும் வகையில் விரைவான மற்றும் பயனுள்ள குழந்தை சார்ந்த எலும்பியல் பராமரிப்புக்கான தேவையை இந்த சிறப்பு சிகிச்சை மையம் பூர்த்தி செய்கிறது. பிறவியிலேயே இருக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள், மூட்டு குறைபாடுகள், நரம்புத்தசை பிரச்சினைகள், காயங்கள், தொற்றுகள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கட்டிகள் [pediatric orthopedic conditions, including congenital and developmental disorders, limb deformities, neuromuscular issues, injuries, infections, tumors] உள்ளிட்ட குழந்தை எலும்பியல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த சிறப்புக்குழு நிபுணத்துவம் பெற்றது. இந்த சிகிச்சைகளில் முதுகெலும்பு குறைபாடுகள் மற்றும் நடப்பதில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. அப்போலோ குழந்தைகள்மருத்துவமனையின்மூத்தஆலோசகர்குழந்தைஎலும்பியல்மற்றும்முதுகெலும்புஅறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர்ஆர். சங்கர் [Dr. R. Sankar, Sr. Consultant Pediatric Orthopedic & Spine Surgeon, Apollo Children’s Hospitals] கூறுகையில், இந்தசிறப்புசிகிச்சைமையத்தின்அறிமுகமானது, தமிழ்நாட்டில்குழந்தைதசைக்கூட்டுபராமரிப்பில் [pediatric musculoskeletal care] ஒருகுறிப்பிடத்தக்கமுன்னேற்றத்தைக்குறிக்கும்வகையில்அமைந்திருக்கிறது. காயங்கள்அல்லதுகுறைபாடுகளுக்குசிகிச்சையளிப்பதுமட்டுமல்ல, ஒவ்வொருகுழந்தையும்வழக்கமானமுழுசெயல்பாடுகளைமேற்கொள்ளசெய்வதையும், உடல்அசைவுகளிலானஇயக்கத்தைபெறுவதிலும், முழுநம்பிக்கையுடன்திரும்புவதையும்உறுதிசெய்வதேஎங்களுடையகுறிக்கோளாகஇருக்கிறது. மிகவும்மேம்பட்டநவீனஅறுவைசிகிச்சைதொழில்நுட்பங்கள்மற்றும்பன்னோக்குசிறப்புசிகிச்சைநிபுணர்களின்ஆதரவையும்பெற்றிருப்பதால், வழக்கமானவிளையாட்டுகாயங்கள்முதல்குழந்தைகளில்காணப்படும் மிகவும் சிக்கலான எலும்பியல் பிரச்சினைகள் வரை அனைத்தையும் திறம்பட கையாள நாங்கள் தயாராக உள்ளோம். என்றார். அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO - Chennai Region, Apollo Hospitals] கூறுகையில், ‘’குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற, அவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் முறை மற்றும் நவீன மருத்துவ பராமரிப்பை ஒருங்கிணைத்திருப்பது இந்த சிறப்பு சிகிச்சை மையம் மற்ற சிகிச்சை மையங்களிலிருந்து தனித்துவமிக்கதாக மாற்றியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தங்கியிருக்கும் அறைகளில், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் ஈடுபடக்கூடிய அம்சங்களைக் கொண்ட சுவர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அதே நேரம், உடல்ரீதியான சிகிச்சைகளுக்கான பகுதிகள், சிகிச்சை அறைகளைப் போல் இல்லாமல், குழந்தைகள் விளையாட்டைப் போல் உணரும் வகையிலான மருத்துவ உபகரணங்கள் இருப்பதால், குழந்தைகளின் மறுவாழ்வு பயிற்சிகளை எளிதில் செய்யத் தூண்டுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த அனுபவமிக்க நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறை இவை இரண்டும், குழந்தை மருத்துவத்தில் வரையறைக்கான ஒரு அளவுகோலாக எங்களது மையத்தை முக்கியத்துவம் பெறச் செய்திருக்கிறது’’ என்றார். இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் குழந்தை மருத்துவ நடைமுறைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உபகரணங்கள் உள்ளன. இதில் சிறிய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் திறம்பட செயல்படும் இமேஜிங் சிஸ்டம்கள் மற்றும் குழந்தைகளின் உடற்கூறியல் அளவிற்கு ஏற்ற அளவிலான அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவையும் அடங்கும். அறுவை சிகிச்சை அரங்குகளில் மேம்பட்ட காட்சிப்படுத்தல் தொழில்நுட்பம் உள்ளது. இத்தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மென்மையான, வளரும் திசுக்களில் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறது. இந்த மையம் மாதந்தோறும் 140 மருத்துவ நடைமுறைகளைக் கையாளக் கூடிய திறன் பெற்றது. மேலும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பது பற்றி விவாதிக்கக்கூடிய ஆலோசனைகளும் அடங்கும். அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற நற்பெயரை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த புதிய சிறப்பு சிகிச்சை மையம், தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக, தனது முக்கியத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகிறது.. மேலும் சவாலான காலங்களில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுடன் மருத்துவ நிபுணத்துவத்தை துல்லியமாக அளிப்பதால் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனை பற்றி: 1983-ல்டாக்டர்பிரதாப்சிரெட்டிசென்னையில்இந்தியாவிலேயேமுதல்முறையாகமிகப்பெரியகார்ப்பரேட்மருத்துவமனையைத்தொடங்கியதன்மூலம்ஒருமுன்னோடிமுயற்சியைமேற்கொண்டார். அப்போதுஇந்தியாவில்அப்போலோஒருமிகப்பெரியமருத்துவப்புரட்சியைஏற்படுத்தியது. இன்றுஆசியாவிலேயேமிகவும்நம்பகமானஒருங்கிணைந்தமருத்துவநலகுழுமமாகதிகழும்அதில், உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், சுமார் 6600 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 2182 மருத்துவ பரிசோதனை மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.
Yoga Day: கோவையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி; மத்திய அதிவிரைவுப்படையினர் பங்கேற்பு | Photo Album
மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மத்திய 105 பட்டாலியன் அதிவிரைவுப்படையினரின் யோகா மனதாலும் உடலாலும் அடிக்கடி சோர்ந்துபோகிறீர்களா... உங்களுக்கான இலவச மருத்துவர் இதோ! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album
சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் சர்வதேச யோகா தினம் Yoga Day: யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை - பிரதமர் மோடி பேச்சு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?
Doctor Vikatan: ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள் அவசியமா அல்லது கட்டுக்குள் வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் ரத்த அழுத்தத்தைப் பல வழிகளில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மிக முக்கியமாக, வாழ்க்கைமுறை மாற்றங்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு, உப்பு குறைவான உணவுப்பழக்கம், எடைக்குறைப்பு, ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, போதுமான அளவு தூங்குவது போன்றவை.. தேவைப்பட்டால் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் நீங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், பிபி (BP) மருந்துகள் எடுத்துக்கொள்வதை மெள்ள மெள்ள நிறுத்திவிடலாம். ஆனால், உங்களுக்கு மாத்திரைகளின் உதவியால்தான் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற நிலையில், மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால் முதல் வேலையாக, ஒரு நாளைக்கு உணவில் 2 கிராமுக்கு மேல் உப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தினமும் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். பர்சனல், வேலையிடம் என எல்லாவிதமான ஸ்ட்ரெஸ்ஸையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் எடையில் 8 முதல் 10 சதவிகிதத்தைக் குறைத்தாலே, ரத்த அழுத்தம் குறையும். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, மாத்திரைகளும் தேவைப்படும். வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒழுங்காகப் பின்பற்றுவோருக்கு மாத்திரைகள் குறைந்த அளவே தேவைப்படும். மாத்திரைகளின் பக்கவிளைவுகளுக்கு பயந்துகொண்டு பலரும், ரத்த அழுத்தம் அதிகமானாலும் பரவாயில்லை என அலட்சியமாக இருக்கிறார்கள். பிளட் பிரஷர் என்பது ஒருவித சைலன்ட் கில்லர். 'கொஞ்சூண்டுதான் ஜாஸ்தியா இருக்கு... அதனால ஒண்ணும் ஆகாது' என்ற சமாதானத்தோடு, பிபியை அலட்சியமாக அணுகாதீர்கள். ரத்தக்குழாய்களின் அடர்த்தி அதிகரிக்கும் நிலையானது, நீங்கள் குறிப்பிடுகிற 'கொஞ்சூண்டு ஜாஸ்தி' என்ற கட்டத்திலேயே தொடங்கிவிடும். அந்த நேரத்தில் அறிகுறிகள்கூட இருக்காது. எனவே, தேவைப்படும் பட்சத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே, வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் பிபி அளவானது கட்டுக்குள் வந்தபிறகு, மருத்துவரே மாத்திரைகளை படிப்படியாகக் குறைக்கச் சொல்வார். தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையிருக்காது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?
Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
இது மாம்பழம் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? மாம்பழம் கோடையில்தான் சீசன் என்பதால், 'மாம்பழம் சூடு; வெயில் காலத்துல அதைச் சாப்பிட்டா கட்டி வந்துடும்' என்கிற பேச்சு ரொம்ப காலமாகவே நமக்கு மத்தியில் இருக்கிறது. அது உண்மைதானா என, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் மருத்துவர் விஷால் அவர்களிடம் கேட்டோம். மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? ''மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வராது. மாம்பழத்தில் வைட்டமின் A, C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு நன்மைதான் அளிக்கும். இருப்பினும், சிலருக்கு மாம்பழம் உட்கொள்ளும்போது உடலில் உஷ்ணம் அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை (sebum) உற்பத்தி அதிகமாகி, கட்டி ஏற்படுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. தவிர, அறிவியல்ரீதியாக இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வருவதைவிட உணவு ஒவ்வாமை, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சரும பராமரிப்பு பழக்கங்கள், அல்லது அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதால் முகப்பரு, கட்டிகள் ஏற்படலாம். உங்களுக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு கட்டி வருவதாக உணர்ந்தால், உணவியல் நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனைப் பெறலாம். Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா? சில ஆயுர்வேத மருத்துவர்கள் மாங்காய் உஷ்ணம் என்றும், அது கட்டிகள் வரக் காரணமாகலாம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உற்பத்தியாகும்; இதனால் சில ஹார்மோன்கள் சுரப்பதால், சிலருக்கு முகப்பரு வரலாம். சில நேரங்களில் மாம்பழத்தில் இருக்கிற வேதிப்பொருள் வாய் மற்றும் முகத்தில் பட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் விஷால் `மேங்கோ குல்ஃபி' சச்சின்,`கீற்று மாங்காய்' தீபிகா... பிரபலங்களின் மாம்பழ லவ்! மற்றபடி, மாங்காய் சாப்பிடும் அனைவருக்கும் கட்டிகள் வராது. ரசாயனம் தெளித்த பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சில அழற்சிகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க, மாங்காயைச் சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு உண்ணலாம். முடிந்தவரைப் பதப்படுத்தப்பட்ட மாங்காய் உணவுகளைச் சாப்பிடக்கூடாது. முகத்தைத் தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்; மாம்பழம் பிடிக்கும் என்றாலும் அளவாகச் சாப்பிடுங்கள். கட்டி, முகப்பருவெல்லாம் வராது'' என்கிறார் மருத்துவர் விஷால். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!
நீங் கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும், டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வராது என்று நம் மூளைகளை ஆசுவாசப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. தற்காலத்தில் பலரும் மூளைக்கு ஆரோக்கியம் தராத உணவுகளையே உண்டு வருகிறார்கள். அதனால்தான், இன்றைக்கு பலருடைய மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தடுக்க, நாள்தோறும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையையும் அந்த ஆய்வு விடுத்திருக்கிறது. சரி, மூளை ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர் பாலபிரசன்னா அவர்களிடம் கேட்டோம். Brain - Representational Image ''வயதாக ஆக மனித உடலில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் நம் உடலில் உள்ள நியூரான்கள் அழிந்து, புதிய நியூரான்கள் உருவாக முடியாது. விளைவு, மூளை பாதிக்கப்படுகிறது. பொதுவாக, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா, நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். இவை அனைத்தும் வயது மூப்பால் வரக்கூடியவையே. என்றாலும், ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால் இந்த நோய்களின் வீரியம் அதிகமாக இருக்கும். தினமும் ஆரோக்கியமற்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டு, மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) என்ற பிரச்னை வரலாம். இதனால், மன அழுத்தம், படிப்பில் ஆர்வமின்மை, நினைவாற்றல் குறைவு, கவனச்சிதறல், ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள். மூளை வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? பொதுவாக, நல்ல கொழுப்புள்ள உணவுகள், அதாவது ஒமேகா-3 நிறைந்த நட்ஸ், சிறுதானியங்கள் ஆகியவை உடலில் ஏற்படுகிற வீக்கங்களைக் குறைப்பதற்கும், புதிய நியூரான் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். இதன் மூலம் டிமென்ஷியா போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். நிறைய கீரை வகைகள், பெர்ரி பழங்கள், கிரீன் டீ போன்ற உணவுகளிலும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இவை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றன. தவிர, நமது மூளைக்கும் குடலுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உணவியல் நிபுணர் பாலபிரசன்னா மூளை ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்..! உங்கள் உணவில் சர்க்கரை அளவு குறைவாக இருக்க வேண்டும், டால்டா போன்ற எண்ணெய் வகைகளைத் தவிர்க்க வேண்டும், முக்கியமாக ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். மனித மூளைக்கு தினசரி ஒரே மாதிரி வேலை தரக்கூடாது. தினம் தினம் வித்தியாசமான செயல்களைச் செய்ய வேண்டும். அடிக்கடி மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களை செய்துவந்தால், உங்கள் மூளை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா. Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
இ ன்று பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்னை மனப்பதற்றம். 'ஒரே ஆங்சைட்டியா இருக்கு' என்று பயத்துடன் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தி அதைச் சரிசெய்ய முயற்சிப்பார்கள்; சிலர் அதற்கான நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவார்கள்; மீதமுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இது சரியா; மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது; அறிகுறிகள்; அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன; தீர்வுகள் இருக்கின்றனவா என்பனப்பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் லட்சுமிபாய் நம்மிடம் விளக்குகிறார். Anxiety ''மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது? மனப்பதற்றம் அல்லது ஆங்சைட்டி ஏற்படுவதற்கு, மரபணுவும் ஒரு காரணம். சம்பந்தப்பட்டவரின் சூழ்நிலை இன்னொரு காரணம். சிலர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தன்னுடன் பொருத்திக்கொண்டு, 'அவங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் ஃபிளைட் ஆக்ஸிடெண்ட் நடந்திடுமோ' என்றெல்லாம் மனப்பதற்றம் அடைவார்கள். இப்படி மூளையில் ஆங்சைட்டி ஏற்படும் பகுதிக்கு யாரெல்லாம் அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்கள் பல நோய்களுக்கு வெல்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வரவேற்கிறார்கள் என்று அர்த்தம். என் மருத்துவமனைக்கு வரும் பெண்களில் பலரும், சமீபத்தில் யாருக்கோ நடந்த பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை தங்களுக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற மனப்பதற்றத்துடன் வருகிறார்கள். மனப்பதற்றத்தின் அறிகுறிகள்... மனப்பதற்றம் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், நடுக்கம், கை-கால் உதறல், வேகமான இதயத்துடிப்பு, அதிகமாக வியர்வை போன்றவை ஏற்படும். சிலருக்கு இதயம் இருக்கும் இடத்தில் லேசான வலி போன்றதொரு உணர்வும் ஏற்படும். வயிறு உப்புசம், எதுக்களித்தல், வயிற்றில் ஒருவித அசௌகரியம், எப்போதும் சிறுநீர் அல்லது மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவையும் மனப்பதற்றத்தின் அறிகுறிகள்தான். இதயத்துடிப்பு வேகமாக இதயத்துடிப்பு மற்றும் இதயத்தில் வலிப்பதுபோல உணர்பவர்கள், 'ஹார்ட் பிராப்ளமாக இருக்குமோ' என பயந்துகொண்டு ECG, Echo, Treadmill போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மனப்பதற்றம் மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லா ரிப்போர்ட்களும் இயல்பாகவே இருக்கும். மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..? அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? மனப்பதற்றம் இருப்பவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட மாட்டார்கள். எப்போதும், எந்த வேலையைச் செய்தாலும், அவர்களது மனதில் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) ஓடிக்கொண்டே இருக்கும். விளைவு, மனதில் பிரச்னை; குடும்பத்தில் பிரச்னை; அலுவலகத்தில் பிரச்னை என தவித்துப்போவார்கள். டாக்டர் லட்சுமிபாய் Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது? மனப்பதற்றத்துக்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பது சரியா? மனப்பதற்றத்தைப் பொருட்படுத்தாமல, அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை (Quality of Life) தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன். இந்தப் பிரச்னையை, பாதிக்கப்பட்டவர்களால் தனியாக சமாளிக்க முடியாது. அது அவசியமும் இல்லை. ஏனென்றால், இன்றைக்கு மனப்பதற்றத்துக்கு உளவியல்ரீதியாக நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதைப் பெற்று, மனப்பதற்றம் நீங்கி நிம்மதியாக வாழுங்கள்'' என்கிறார் டாக்டர் லட்சுமிபாய். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?
Doctor Vikatan: எனக்கு வயது 50. பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதால் கர்ப்பப்பையை அகற்றிவிடும்படி சொல்கிறார் மருத்துவர். எனக்குத் தெரிந்த சிலர், கர்ப்பப்பை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட பிறகு எக்கச்சக்கமாக உடல் எடை அதிகரித்திருக்கிறார்கள். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படுவது உண்மையா... அதைத் தவிர்க்க முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் கர்ப்பப்பையை நீக்கும் 'ஹிஸ்டெரெக்டமி' (hysterectomy) அறுவை சிகிச்சையானது, ப்ளீடிங் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களுக்காகச் செய்யப்படலாம். Doctor Vikatan: பீரியட்ஸில் அளவுக்கு அதிகமாக வெளியேறும் ப்ளீடிங்... கர்ப்பப்பை நீக்கம்தான் தீர்வா? பொதுவாகவே, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயம் பலருக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கர்ப்பப்பையை நீக்கும்போது, சிலருக்கு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து நீக்கிவிடுவார்கள். சினைப்பைகளை நீக்கிவிட்டால், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு இருக்காது. அதன் விளைவாக கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆஸ்டியோபொரோசிஸ் (osteoporosis) எனப்படும் பாதிப்பு வரும். இதில், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாக மாறி, வலுவிழக்கும். அதனால்தான் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட எல்லாப் பெண்களையும், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் இயக்கம் என்பது குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாகவே சிலருக்கு உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வந்துவிட்டால், பலருக்கும் கை, கால் வலி, மூட்டுவலியும் சேர்ந்துகொள்ளும். முன்பெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரி முறையில்தான் அதிகம் செய்தார்கள். அந்த ஆபரேஷனுக்கு பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படும். அதனாலும் அந்தப் பெண்களின் உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும். அப்படியானால், கர்ப்பப்பை நீக்க ஆபரேஷன் செய்துகொள்கிற எல்லோருக்குமே உடல் எடை அதிகரிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் அறிவுரைக்கேற்ப கால்சியம் சப்ளிமென்ட்டுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால், எடை கூடாது. இப்போதெல்லாம் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி முறையில் செய்துவிடுகிறார்கள். இந்த முறையில் ஆபரேஷன் செய்யும்போது, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். என்ன நோய்... எந்த டாக்டர்? 9 - எலும்பும், எலும்பு சார்ந்த பிரச்னைகளும்...
கணவனுக்கும் மனைவிக்கும் இது தெரிந்தால் விவாகரத்து நிகழாது - காமத்துக்கு மரியாதை - 245
ஒ ரு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய தாம்பத்திய உறவு எப்படி இருக்க வேண்டும்; திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா..? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ''இன்றைக்கு இளம் வயதில் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு வருபவர்களில் பலரும், தாம்பத்திய வாழ்க்கையில் சரியான இன்பத்தை அனுபவிக்காதவர்களாக இருக்கிறார்கள். அஃப்கோர்ஸ் இந்தப் பிரச்னை காரணமாகத்தான், அவர்கள் விவாகரத்தையே நாடுகிறார்கள். ஒரு திருமணத்தில் கணவனும் சரி, மனைவியும் சரி, ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக தெரிந்துகொண்டுதான் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பேன் நான். தன் மனைவியை எப்படி திருப்திப்படுத்துவது என்று கணவனுக்கும், உறவின்போது கணவனை எப்படித்தூண்ட வேண்டும் என மனைவிக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்களின் வீடியோக்களைப் பார்த்து அல்லது செக்ஸாலஜிஸ்ட்டின் ஆலோசனைப் பெற்று இதைத் தெரிந்துகொள்ளலாம். காமசூத்ரா எழுதிய மண்ணில் இந்த நிலைமை வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதுதான் இன்றைய யதார்த்தம். தாம்பத்தியம் `என்னோட தாழ்வு மனப்பான்மை போக ஜீவிதாதான் காரணம்!'' - நடிகர் டாக்டர் ராஜசேகர் #AangalaiPurindhuKolvom விந்து வெளியேற்றினாலே ஆண் ஆர்கசம் அடைந்து விடுவான். ஆனால், பெண் நிலைமை அப்படிக் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். பெண்கள் ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரை ஆகும். அதுவரை எந்தெந்த உடல் பாகங்களைத்தொட்டால் அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப்பகுதிகளைக் கணவன் தூண்ட வேண்டும். இதையே தான் மனைவியும் கணவனுக்கு செய்ய வேண்டும். தாம்பத்திய உறவு என்பது 'நீ பாதி நான் பாதி' ஷேரிங் தான். அதனால், 'நான் ஏதாவது செய்தால் கணவர் தப்பாக நினைத்துக்கொள்வாரோ' என்று எண்ணாமல் செக்ஸை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு செல்லவேண்டும் என மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஆண்களும் மார்பைத்தொட்டால் உணர்வெழுச்சி அடைவார்கள்'' என்றவர் தொடர்ந்தார். ``ஆண் மனது கலப்படத்துடன்தான் இருக்கிறது! - ஆண்களின் காதல் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர் திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்றால், 'அது பாதுகாப்பானது' என்றே சொல்வேன் நான். இன்றைக்கு செக்ஸ் டூரிசம் அதிகமாகி விட்டது. எங்கே போனாலும் மசாஜ் பார்லர், அங்கே ஹேப்பி எண்டிங் என உறவுகொள்கிற வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. இந்த வாய்ப்புகளை அனுபவித்தவர்கள், திருமணத்துக்கு முன்னால் பால்வினை நோய்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். டாக்டர் காமராஜ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?
Doctor Vikatan: இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் விரல்கள் இயல்புக்கு வந்துவிடுகின்றன. இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரச்னையை 'நைட் கிராம்ப்ஸ்' (night cramps) என்று சொல்வோம். இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். வெயில் அதிகமுள்ள நாள்களிலும் சரி, குளிர்ச்சியான நாள்களிலும் சரி, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக முக்கியம். தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, போதுமான அளவு உப்புச்சத்து எடுக்காமல் விட்டாலும் பிரச்னைதான். அதாவது வெயில் காலத்தில், வியர்வையின் மூலம் வெளியேறும் உப்புச்சத்தை ரீப்ளேஸ் செய்ய வேண்டும். மழை நாள்களிலும், குளிர் நாள்களிலும் தாகம் அதிகமிருக்காது. ஆனாலும், அப்போதும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் நைட் கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு, நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் வரலாம். அடுத்து உங்கள் உடலில் நுண்ணூட்டச் சத்துகள் குறையும்போதும் இந்தப் பிரச்னை வரலாம். வைட்டமின் குறைபாடு இருந்தாலும் இப்படி வரலாம். அடுத்த காரணம், அதிக நேரம் உழைப்பது அல்லது அளவுக்கதிகமாக ஓய்வெடுப்பது. அதாவது நீண்டநேரம் நின்றதன் விளைவாகவும் விரல்கள் இழுத்துப் பிடிப்பது போல இருக்கலாம். அல்லது கொஞ்சம்கூட உழைப்பே இல்லாமல் ஓய்விலேயே இருந்திருந்தாலும் அதன் விளைவாக இப்படி ஏற்படலாம். உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். நீர்வறட்சி ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓஆர்எஸ் பவுடரை பரிந்துரைப்பார். தவிர, காலையில் தூங்கி எழுந்ததும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கற்றுத் தருவார். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்களுடைய பிரச்னையிலிருந்து மீள்வீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?
Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?
கோ டைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும். இப்படி அசௌகரியத்தை ஏற்படுத்தும் இடுக்குத்தொடை பிரச்னை ஏன் வருகிறது; அதனால் என்ன பாதிப்பு ஏற்படும், சரிசெய்ய என்ன வழி என்பதைப்பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சக்தி சரண்யா. Fungal Infection ''இடுக்குத்தொடை பிரச்னை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பூஞ்சைத்தொற்றுதான். தொடை இடுக்கில் உருவாகும் அதிக வியர்வையின் ஈரப்பதத்தால் இந்த பூஞ்சைத்தொற்று உருவாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்படலாம். மேலும் தொடை இடுக்கில் உள்ள தசைப்பகுதிகள் ஒன்றோடு ஒன்று உராயும்போது, அந்த இடத்தில் இருக்கும் தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு பாதிக்கப்படும். தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு என்பது, நம் தோலின் ஈரத்தன்மையை காப்பதுடன், வெளியிலிருந்து வரும் கிருமிகள் உடலுக்குள் செல்லாமல் ஒரு பாதுகாப்பு கோட்டையாக செயல்படும். இறுக்கமான உடைகள் பெரும்பாலும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். காரணம் அவர்களுக்கு தொடைப்பகுதியில் அதிகளவு தசை மடிப்புகள் இருக்கும். அந்த மடிப்புகளில் காற்று புகாமல் வியர்வை ஈரப்பதம் உலராமல் எப்போதும் இருப்பதால் பூஞ்சை ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்படும். காற்று நுழையாத அளவுக்கு தடிமனான உடைகள் அணியும்போதும், இறுக்கமாக உடைகள், உள்ளாடைகள் அணியும்போதும் கூட இந்த பிரச்னை ஏற்படலாம். Doctor Vikatan: `பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை' - skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா? சிகிச்சை என்ன? வெயில் காலத்தில் சிலருக்கு அதிகளவு வியர்க்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால், ஈரமில்லாமல் உடலைத் துடைத்து பின் ஈரமில்லாத துணிகளை அணிந்தால் இந்த பிரச்னை வராமல் தடுக்கலாம். ஒருவேளை வந்துவிட்டால், இதற்கென இருக்கிற சோப்பை பயன்படுத்தலாம். அப்படியும் குணமாகவில்லை எனில், தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது கட்டாயம். தவிர, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வந்தால், அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது. டாக்டர் சக்தி சரண்யா. தீவிர பிரச்னையை ஏற்படுத்துமா இடுக்குத்தொடை? பெரும்பாலும் இந்தத்தொற்று ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் மருத்தவரை அணுகி தொற்றின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இது உடல் முழுக்க பரவக்கூடும். அப்படி நிகழ்ந்தால் குணப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். இந்த தொற்று பிறருக்கும் பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்டவரின் உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன? தொற்று பாதித்திருக்கும்போது உடலுறவு கொள்வது சரியா? தொடைப்பகுதி என்பதால் உடலுறவில் ஈடுபடும்போது துணைக்கும் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே தொற்று பாதிப்பு இருக்கும்போது உடலுறவைத் தவிர்த்தால் தொற்று பரவலை தவிர்க்க முடியும்'' என்கிறார் டாக்டர் சக்தி சரண்யா. தொற்று பாதித்திருக்கும்போது உடலுறவுக் கொள்வது சரியா? Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் நாவல் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும் என்று சொல்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை? சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நாவல்பழத்திலும் சர்க்கரைச்சத்து இருக்கும். ஆனால், அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்துச் சாப்பிடலாம். கசப்புத்தன்மையும் நார்ச்சத்தும் உள்ள எல்லா உணவுகளுக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கும். சர்க்கரை அளவைக் குறைக்கும், சர்க்கரை நோயே இல்லாமல் செய்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் நாவல் பழ சீசனில் அதை கிலோ கிலோவாக வாங்கிச் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். உண்மையில், அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தானதே... பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் அதைச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்திலும், சீரகத்திலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் சர்க்கரைநோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாமே 20 சதவிகிதம் வரை சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்காக ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொள்வதால் தலா 20 சதவிகிதம் சர்க்கரை குறையும் என அர்த்தமில்லை. தனித்தனியாக எடுத்துக்கொண்டாலும், சேர்த்து எடுத்துக்கொண்டாலும் 20 சதவிகிதம் வரை மட்டுமே சர்க்கரை அளவு குறையும். ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். Doctor Vikatan: ப்ரீ டயாபட்டீஸ் நிலை, டயாபட்டீஸாக மாறுமா... எப்படி ரிவர்ஸ் செய்வது? இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?
2020 - 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றால் அந்த கொரோனா ஒருவழியாக அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்னாளில் தூக்கக்கோளாறு sleep disruption, மூளை மூடுபனி (Brain fog) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்கள். கொரோனா தொற்று தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன; அவற்றை எப்படி சரிசெய்வது போன்றவற்றை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபாஷ் பிரபாகரன். அதென்ன Brain fog? ''Brain fog என்ற சொல் மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுவதில்லை. அது நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை குறிப்பிடுவதற்கு மக்களிடையே இருக்கும் ஓரு சொல்லாடல். Brain fog என்ற பிரச்னை இருப்பதாக வருபவர்களிடம் முதலில் அவர்களுக்கு நினைவில் குழப்பம், தெளிவில்லாமை, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமை, ஞாபகமறதி போன்றவற்றில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்வோம். Brain fog தூக்கக்கோளாறு என்றால் என்ன? தூக்கம் சார்ந்த பிரச்னை என்பது பல வகைகளாக இருக்கும். சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல் இருப்பது, தூங்கினாலும் இடையில் விழித்துக்கொள்வது, நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருப்பது, காலை எழுந்தாலும் சரியாக தூங்காதது போன்ற உணர்வு ஏற்படுவது, எந்நேரமும் தூக்கக்கலக்கத்துடனே இருப்பது போன்ற பிரச்னைகளை தூக்கக்கோளாறு என குறிப்பிடலாம். கொரோனாவிற்குப் பிறகு இந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? நிறைய பேர் கொரோனாவிற்கு பிறகுதான் தங்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வந்திருப்பதாக கூறி சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணம் கொரோனா காலங்களில் ஏற்பட்ட தூக்க மாற்றமாகக்கூட இருக்கலாம். கொரோனா காலங்களில் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்திருப்போம். பொழுதுபோக்கிற்காக நீண்ட நேரம் போன், டிவி என ஸ்கிரீன்களை பயன்படுத்தி இருப்போம். இவற்றால் நம்முடைய தூக்க நேரங்கள் மாறி இருக்கலாம். அதனால்கூட, இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதுவொரு காரணம். கொரோனா அடுத்தக் காரணம், கொரோனாவால் அதிகம்பேர் பாதித்தபோது, நாம் உயிர்ப்பிழைப்போமா அல்லது இறந்துவிடுவோமா என்கிற பயம் நம் எல்லோருடைய மனங்களிலும் இருந்திருக்கும். சிலர், ஐ.சி.யூ. வரைகூட சென்று மீண்டு வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்ட மன அழுத்தம், பயம் போன்றவற்றால் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது குறைவுபட்ட நோயெதிர்ப்பு சக்தி காரணமாக, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதனால்கூட இந்த பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக (Hypoxia) இருந்தாலும்கூட தூக்கக்கோளாறும், Brain fog-ம் வர வாய்ப்பு உண்டு. Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth சரிசெய்வது எப்படி? சீரான தூக்கமும், தினமும் உடற்பயிற்சி செய்வதும்தான் இவற்றுக்கான தீர்வே. தற்போது பலருக்கும் படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு 'இன்னும் தூக்கம் வரலையே' என்று அதைப்பற்றி சிந்தித்து அதையொரு கவலையாக்கிக்கொண்டு இருப்பார்கள். படுக்க சென்றவுடன் இந்த சிந்தனையை மறந்துவிட வேண்டும். எதையும் யோசிக்காமல் இருந்தாலே, படுத்தவுடன் நல்ல தூக்கம் வரும். தவிர, தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே உணவு உட்கொள்ள வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இருட்டான அறையில் தூங்க வேண்டும். இப்படி சீரான தூக்கமும் தினமும் உடற்பயிற்சியும் இருந்தாலே போதுமானது. இந்த இரண்டு பிரச்னைகளில் இருந்து மீண்டு விடலாம்'' என்று தைரியம் தருகிறார் டாக்டர் பிரபாஷ். டாக்டர். பிரபாஷ் பிரபாகரன். சென்னை: பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி... மிக்ஸட் வைரஸ் பரவல்? மருத்துவர் சொல்வதென்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!
நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக்கியமான நுரையீரலுக்கு சில வழிகாட்டல்களை இங்கே தருகிறார். மூச்சுப்பயிற்சி ஆழமான மூச்சு, ஆயுள் கூடிப்போச்சு! நாம் ஓய்வில் இருக்கும்போது சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 12 - 15 முறை மூச்சுவிடுகிறோம். நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கு மூச்சை நன்றாக இழுத்து, பொறுமையாகவிட வேண்டும். இதனால், நம் நெஞ்சுக்கூடு நன்றாக விரிவடைவதோடு, நுரையீரல் ஆக்சிஜனை மற்ற பாகங்களுக்கு முழுமையாகக் கடத்த முடியும். அதேபோல், தேவையற்ற கார்பன் டை ஆக்ஸைடையும் முழுமையாக வெளியேற்ற இது உதவுகிறது. பொதுவாகவே, மூச்சை ஆழமாக இழுத்து, விடப் பழகிக்கொள்வது நல்லது. தினமும் காலை எழுந்ததும், இரவு படுப்பதற்கு முன்னரும்... சில நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக இழுத்து விடும் பயற்சிசெய்வது நுரையீரலையும் உங்கள் மனதையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நுரைதள்ளும் நீச்சல், நுரையீரலுக்குப் புதுப் பாய்ச்சல்! நுரைபொங்கப் பாய்ந்துவரும் கடலானாலும் சரி, நீச்சல்குளமானாலும் சரி... நீச்சல் பயிற்சி எப்போதுமே நுரையீரலுக்கு நல்லது. மூக்கின் வழி மூச்சை நன்றாக இழுத்து, வாய் வழியாக விடும்போது ஒளிந்து கிடக்கும் கார்பன் டை ஆக்ஸைடு முழுவதும் வெளியேறும். நீச்சல் தெரியாதவர்களும்கூட நீரில் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரலைப் பலப்படுத்த முடியும். கழுத்து மூழ்கும் வரையிலான நீரில் நின்றுகொண்டு சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் வெயிட் லிஃப்ட்டிங் பயிற்சிகளையும் செய்யலாம். டம்பிள்ஸ் அல்லது மெடிசின் பால் போன்ற கனமான ஒரு பொருளை நீரிலிருந்து மேலும், கீழுமாகத் தூக்கி பயிற்சி செய்யும்போது, நெஞ்சுக்கூட்டில் ரத்தம் நிரம்பி, காற்று குறையும். அந்த அழுத்தத்தில் நுரையீரல் தன் முழுத்திறனோடு செயல்படும். நீரில் செய்வதற்கென சில ஹைட்ரோ தெரப்பிகளும் (Hydro Therapy) இருக்கின்றன. இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால், நம்முடைய சுவாச மண்டலம் சிறப்பாகச் செயல்படும். நடைப்பயிற்சி நடை, தடைகளை உடை! போரில் வெற்றிபெற தளபதி மட்டும் வலுவாக இருந்தால் போதாது. அவனைச் சுற்றி இருக்கும் வீரர்களும் வலிமையானவர்களாக இருத்தல் அவசியம். அதுபோலத்தான், நுரையீரலின் வலிமை, அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலிமையைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 நிமிட நடை என்பது, இதற்கான எளிமையான தீர்வாக இருக்க முடியும். நல்ல ஓட்டம், நுரையீரலுக்கான உயிரோட்டம்! “கொஞ்ச தூரம்கூட ஓடவே முடியலை, மூச்சு இப்படி வாங்குது... என்னோட லங்ஸ்ல ஏதோ பெரிய பிரச்னை இருக்கு...” என்று சமயங்களில் நமக்கு நாமே டாக்டர்கள் ஆகிவிடுவோம். ஆனால், இப்படி ஆவதற்கான காரணம் கை, கால்களின் தசைகள் உறுதியாக இல்லாததே. வீண் பழியோ நுரையீரல் மீது. திடீரென ஒருநாள் உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி எனச் செய்யும் போது தசைகள் அதிகப்படியான சுமையைத் தாங்குகின்றன. உடலில் குளூக்கோஸை எனர்ஜியாக மாற்றத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால், அந்தத் தசைகள் லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த லாக்டிக் அமிலம், `உடலுக்குக் காற்று போதவில்லை’ என்ற அபாய மணியை ஒலிக்கச்செய்கிறது. அதன் காரணமாகவே `தஸ்...புஸ்...’ என்று மூச்சு வாங்குகிறது. தொடர் பயிற்சிகளின் மூலம் தசைகளை வலிமைப்படுத்தி, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தினால், நுரையீரலுக்கு மட்டுமல்ல... உடலின் அனைத்து பாகங்களுக்குமே அது வரமாக இருக்கும். வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்! வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்! நம் வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவதன் மூலம் நுரையீரலை வலுப்படுத்த முடியும். ஏனெனில், வயிற்றுக்கு சற்று மேல் பகுதியில்தான் `உதரவிதானம்’ எனப்படும் டையஃப்ரம் (Diaphragm) இருக்கிறது. இது மூச்சை இழுத்துவிட உதவிசெய்யும் முக்கியத் தசை. தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒரு கையை வயிற்றிலும், ஒரு கையை நெஞ்சின் மீதும் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஆழமாக இழுத்து, வாய் வழியாக விட வேண்டும். இப்படி செய்யும்போது வயிற்றின் மீதிருக்கும் உங்கள் கை, மார்பின் மீதிருக்கும் கையைவிடவும் உயரமாகச் செல்ல வேண்டும். மூச்சை இழுத்து, சில விநாடிகள் மூச்சைப் பிடித்து நிறுத்துவதும் நல்ல பயிற்சியாக இருக்கும். Vikatan Explainer : உங்கள் இதயத்துக்கு ஆயுள் நூறு - இதய நலன் ஆதி முதல் அந்தம் வரை உட்காரும் விதத்தைக் கவனியுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது, சிறிது நேரத்திலேயே ஆற்றல் இழந்தவர்களைப்போல உணர்வோம். இதற்கு, நாம் எப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உடலை வளைத்து உட்காரும்போது, அது நுரையீரலையும் அழுத்தி, காற்றை இழுக்கும் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் இல்லாததால், சோர்வுநிலை ஏற்படுகிறது. கால்களைத் தரையில் ஊன்றி, 90 டிகிரியில் முதுகை வைத்தபடி, நிமிர்ந்து சரியான பொசிஷனில் உட்கார்ந்து பாருங்கள்... உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் அளவு கிடைப்பதால், புத்துணர்வாக உணர்வீர்கள். உட்காரும் விதம் நல்ல இசை வாசிப்பு, நுரையீரலுக்கான சுவாசிப்பு! ட்ரம்பெட், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற காற்றை அடிப்படையாகக்கொண்ட கருவிகளை வாசிப்பது நுரையீரலை வலுப்படுத்துவதற்கான நல்ல பயிற்சி. பாடல்கள் பாடுவதும் நுரையீரலை வலுப்படுத்தும் ஒரு பயிற்சியே. நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: குழந்தைக்கு அதிகம் சுரக்கும் உமிழ்நீர்; நார்மல் தானா, சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் 10 வயதுக் குழந்தைக்கு சமீபகாலமாக உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது. காரணம் என்ன... அது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... அப்படியே விடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபி உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னையை மருத்துவத்தில் 'ஹைப்பர்சலைவேஷன்' (Hypersalivation) அல்லது 'சயலோரியா' (Sialorrhea) என்று சொல்வோம். பொதுவாக, குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்துவரும் நேரத்தில் இப்படி உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அது நார்மலானதுதான். மற்றபடி, குழந்தைகளுக்கு கட்டுப்பாடின்றி உமிழ்நீர் சுரந்து வழிகிறது என்றால், அது செரிப்ரல் பால்சி (Cerebral palsy) அல்லது மனநலம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். உமிழ்நீர் சுரப்பிகளில் (Salivary glands) ஏதேனும் இன்ஃபெக் ஷனோ, இன்ஃப்ளமேஷன் எனப்படும் வீக்கமோ இருந்தாலும், ஹைப்பர்சலைவேஷன் என்கிற அதிக உமிழ்நீர் சுரப்பு பிரச்னை இருக்கலாம். வயதானவர்களில் சிலருக்கும் இதுபோல உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னை இருக்கலாம். அதற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் இருந்தாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். வாய்ப்பகுதியில் உள்ள தசைகளில் தளர்வும் சோர்வும் இருக்கும். அதுபோன்ற நிலைகளில் உமிழ்நீர் சுரப்பும் அதிகமிருக்கும். அது வெளியே வழிவதும் அதிகமாக இருக்கும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் உமிழ்நீர் அதிகம் சுரக்கலாம். உதாரணத்துக்கு, ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia), மனநல பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் ஆன்டிசைக்கோட்டிக் மருந்துகளின் பக்க விளைவாகவும் இப்படி வரலாம். எனவே, உங்கள் குழந்தைக்கு எந்தக் காரணத்தால் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?
Beauty: இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?
தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது. இதோ கலப்படமில்லாத தேனின் சில அழகு பலன்கள்..! தேனின் சில அழகுக்குறிப்புகள். முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும். வடுக்கள்: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேன் தடவும்போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும். ஈரப்பதம்: தேனை முகத்தில் தடவி ஊறவைத்து ஃபேஷியல் செய்யும்போது, முகத்தின் வறட்சியை நீக்கி, பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை உண்டாக்கும். மூப்படையாமல் இருக்க: இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ஊறவைத்து, முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தேனின் சில அழகுக்குறிப்புகள் உதடு: சர்க்கரையும் தேன்துளிகளும் கலந்த எலுமிச்சைச் சாற்றை உதட்டில் தடவி, 5 நிமிடங்கள் ஊறவைத்தால், வறண்ட உதட்டுப் பகுதி மென்மை அடையும். நக கண்டிஷனர்: தலா ஒரு டீஸ்பூன் தேன், வினிகர் எடுத்து கலந்து, நகம் மற்றும் நக இடுக்குகளிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவிவந்தால், நகங்கள் வலிமையும் மென்மையும் பெறும். உணவு 360 டிகிரி - 6 - அல்சர் முதல் புற்றுநோய் வரை... அருமருந்தாகும் தேன்! ஷேவிங்: ஷேவிங் செய்த பின்பு, முகத்தில் தோன்றும் புடைப்புகள் மற்றும் கொப்புளங்களிலிருந்து தப்பிக்க, தேன் தடவலாம். அவை எளிதில் சரியாகும். தேனின் சில அழகுக்குறிப்புகள் கருவளையம்: கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தைச் சரிசெய்ய, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு டீஸ்பூன் தேனைக் கண்களைச்சுற்றி தடவி, 20 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால் போதும். படை: உடலில் தோன்றும் படையையும் , நாள்பட்ட தோல் ஒவ்வாமையையும் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சில நாட்களில் சரியாகிவிடும். Health: மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன், கொசுவந்தேன்... ஆரோக்கியமான 15 தகவல்கள்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?
Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத் தேவைப்படும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மிகவும் எளிமையான டெஸ்ட் என்பதால் பலரும் இசிஜி (ECG) பரிசோதனையைச் செய்து பார்க்கிறார்கள். இதில் சில விஷயங்கள் தெரியும், சிலது தெரியாது. ‘வருடம் தவறாமல் நான் இசிஜி டெஸ்ட் செய்து பார்த்துவிடுகிறேன். என் இதயம் நன்றாக இருக்கிறது’ என அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது சரியானதல்ல. அதே மாதிரிதான் எக்கோ (echocardiogram) டெஸ்ட்டும். அதைச் செய்கிறபோது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படியிருக்கிறது என்று தெரியும். ஆனால், ரத்தக் குழாய்கள் எப்படியிருக்கின்றன என்பது எக்கோ டெஸ்ட்டில் தெரியாது. இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவர் டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்வார். எனவே, யாருக்கு, எந்த டெஸ்ட் என்பதை மருத்துவரிடம் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்யப்படும். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது இசிஜியில் உறுதிசெய்யப்பட்டால், உடனே ஆஞ்சியோகிராம் வழியே அடைப்பைத் திறக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மற்றும் டிரெட்மில் டெஸ்ட்டுகளில் அப்நார்மல் என வந்தாலும் உடனே ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். மாரடைப்புக்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரியும்போது, மருத்துவர் உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ய அறிவுறுத்துவார். ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் எல்லோருமே 40 ப்ளஸ்ஸில் ஆஞ்சியோகிராம் செய்துபார்க்கலாமா என சிலர் கேட்பதுண்டு. ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. துல்லியமான அறிகுறிகள் இருக்கும்போது இதைச் செய்தால் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். 30 சதவிகித அடைப்பு இருப்பது தெரிந்தால், வருடா வருடம் அந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் செய்து பார்க்க வேண்டியதில்லை. 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது மேலும் அதிகமாவதை எப்படித் தவிர்க்கலாம் என்றுதான் மருத்துவர் யோசிப்பார். ரத்தச் சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் வேகமான நடைப்பயிற்சி செய்கிற ஒரு நபருக்கு ஆஞ்சியோகிராம் அவசியமில்லை. அதுவே, திடீரென அவர், ‘என்னால முன்ன மாதிரி நடக்க முடியல... மூச்சு வாங்குது’ என்று சொன்னால் அவருக்கு பரிசோதனை அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். திடீர்னு குப்புனு வேர்க்குதா? ஹார்ட் அட்டாக் முதல் புற்றுநோய் பாதிப்புவரை: கவனம்! #SuddenSweat
தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!
ம ருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இருக்கின்றன. ஆனால், அதை ஏதோ களைச்செடி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவம் இன்றளவும், இந்த மூலிகைச்செடிகளை மருந்தாக்கி மக்களின் நோய்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நமக்குத் தெரிந்த செடிகள், அதன் தெரியாத மருத்துவ பயன்கள் பற்றி சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் அவர்களிடம் பேசினோம். குப்பைமேனி குப்பைமேனி இதுதான் தோல் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரிப்பு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு குப்பை மேனி உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து தடவி வர குணமாகும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். கீழாநெல்லி கீழாநெல்லி பித்தம், அதாவது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும். வெயில் காலங்களில் மோருடன் சிறிது கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து பருகலாம். இது தொற்று நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மணத்தக்காளி மணத்தக்காளி கீரை, பழம் என இரண்டும் வாய்ப்புண், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். செரிமான கோளாறுகளை சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலை சரி செய்யும். இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து நெய் சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். காய்ச்சல் வந்து சுவை தெரியாதவர்கள், அந்த நேரத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்து சாப்பிடலாம். இது, நாக்கில் சுவை அரும்புகளைத் தூண்டி சுவையை உணரச் செய்யும். துத்தி இலை துத்தி இலை மூலத்திற்கான சிறந்த மருந்து. பருப்புடன் சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மஞ்சள் நிற பூக்கள் கொண்ட துத்திச்செடியை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். கண்டங்கத்திரி கண்டங்கத்திரி கண்டத்தில், அதாவது தொண்டையில் வரக்கூடிய நோய்களை கத்தரிக்கும் இயல்பு கொண்டது இது. ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் கண்டங்கத்தரி லேகியம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மருதாணி மருதாணி இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்வதும், கைகளில் வைத்துக் கொள்வதும், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். கண் எரிச்சல் குறைக்கும் அருமருந்து. மருதாணி இலையுடன் சிறிது தேயிலைத்தூள் மற்றும் அவுரி இலையை கலந்து அரைத்து, தலையில் தேய்த்து வர இளநரை குறையும். பாலின பாகுபாடு இன்றி அனைவரும் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. கற்றாழை கற்றாழை குமரி கற்றாழை என்று அழைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து 6 முதல் 7 முறை கழுவிவிட்டு மோர், உப்பு சேர்த்து அரைத்து ஜூஸ் போல குடித்து வர வாய்ப்புண், அல்சர் சரியாகும். உலகளவில் கற்றாழை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை சாறுடன் பால் கலந்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். தும்பை தும்பை தும்பை இலை அல்லது பூவை குளிக்கும் நீரில் போட்டு குளித்துவந்தால் உடல் சோர்வு நீங்கும். தும்பைப் பூவை பிழிந்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை நாசியில் விடுவதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் குணமாகும். மேலும், பூவை கசக்கி முகப்பரு, கட்டிகள் மீது வைத்தால் அவை சரி ஆகும். ஆவாரம் பூ ஆவாரம்பூ நாம் உணவில் சேர்க்க மறக்கிற சுவையான துவர்ப்பு சுவையைக் கொண்டது இது. ஆவாரம் பூ கிடைக்கக்கூடிய காலங்களில் அனைவருமே அதை பறித்து சாப்பிடலாம். பூவை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போலவும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வது இன்சுலின் அளவை நெறிப்படுத்தும் என்கின்றன ஆய்வுகள். இவை எல்லாம் காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்றாலும், மருந்தாக உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்பெறுதல் அவசியம்.
`சைவம்... பதவி, புகழ் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள்’ - ஆய்வு முடிவு சொல்வதென்ன?
உணவுக்கும், நமக்கும் எப்போதுமே நெருங்கிய உறவு உண்டு. இதை ஆய்வுகள் கூட தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன. சமீபத்தில், இதே மாதிரியான ஆய்வு ஒன்று போலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3,500 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சைவ உணவை மட்டும் உண்பவர்கள் பதவி, புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுப் பிரியர்கள் பாரம்பரியம், சமூக ரீதியாக ஏற்றுகொள்ளப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவது, பிறரை வருத்தப்பட வைக்கக்கூடாது போன்றவற்றை டிக் செய்துள்ளனர். மேலும், அவர்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், பாதுகாப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். அசைவம் இந்த ஆய்வை தலைமை தாங்கிய வார்சாவின் SWPS பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் நெஸ்லெக் கூறும்போது, 'ஆரோக்கியம், சுற்றுச்சூழல், விலங்குகளின் நலன் - இவை மூன்றும் தான் ஒருவர் சைவ உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்கள். இவைகளை வைத்துப் பார்க்கும்போது, சைவ உணவுப் பிரியர்கள் மிக அன்பானவர்களாக இருப்பார்கள் என்று பொதுவாக நாம் நினைப்போம். ஆனால், ஆய்வில் நாங்கள் கண்டுபிடித்ததோ முற்றிலும் வேறொன்று என்று தெரிவித்துள்ளார். ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது? கற்பனைக் கதாபாத்திரத்தின் ஓவியம் ஒன்று ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'இவருக்கு வெற்றி என்பது மிக முக்கியம், இவர் மற்றவர்களை ஈர்ப்பதில் விருப்பம் உள்ளவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அந்தக் கதாபாத்திரத்திற்கும், ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை உண்டு என்பதை ஒன்றில் இருந்து ஆறு வரைக்கும் மதிப்பெண் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். இப்படி தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது! நீங்கள் சைவமா, அசைவமா? - கமென்ட் பண்ணுங்க!
Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் விடாமல் தொடரும் வறட்டு இருமல்.. கருவை பாதிக்குமா?
Doctor Vikatan: என் தங்கைக்கு 30 வயதாகிறது. 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவளுக்கு தீவிரமான இருமல் ஏற்பட்டது. வறட்டு இருமல்தான்... ஆனால், ஒருநாள் முழுவதும் இருந்தது. இருமும்போது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்துகொண்டே இருந்தாள். இருமல் மருந்து குடிக்கவும் மறுத்துவிட்டாள். இப்படிப்பட்ட இருமலுக்கு என்ன காரணம்... அடிவயிற்றிலிருந்து இருமும்போது கரு கலைய வாய்ப்புள்ளதா... இன்னொரு முறை இப்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஐந்து மாத கர்ப்பத்தில் வறட்டு இருமல் ஏற்பட வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். உங்கள் தங்கைக்கு ஏற்கெனவே அலர்ஜி பிரச்னை இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, செல்லப் பிராணிகளால் அலர்ஜி, தூசு அலர்ஜி போன்ற ஏதாவது இருந்தாலும் ஜலதோஷம், தும்மல், இருமல் வரலாம். கர்ப்பிணிகளுக்கு உணவு எதுக்களித்தல் (Acid reflux) பிரச்னை சகஜமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் சரியாகச் சாப்பிட முடியாது. வாந்தி உணர்வு இருப்பதால் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்? கர்ப்ப காலத்தில் செரிமானம் மந்தமாவதால் உணவு எதுக்களித்துக் கொண்டு வரலாம். சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கக்கூடும். அதாவது ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்தால், கர்ப்ப காலத்தில் அதன் தீவிரம் அதிகமாகலாம். அதன் காரணமாகவும் இருமல் வரலாம். சிலருக்கு படுத்த நிலையில் இருமல் வரும். எழுந்து உட்கார்ந்தால் சரியாகிவிடும். இதை 'போஸ்ட் நேசல் டிரிப்' (Post-nasal drip) என்று சொல்வோம். ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். வீட்டில் யாராவது புகை பிடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால் அதனாலும் இருமல் வரலாம். கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. சுற்றுப்புறத்தில் தூசு, புகை அதிகமிருந்தாலோ, டூ வீலர் ஓட்டுபவர் என்றால் வாகனப் புகையாலோ இருமல் வரலாம். நீங்கள் பயப்படுகிற மாதிரி இருமலால் கரு கலைய வாய்ப்பில்லை. ஏனென்றால், கருவிலுள்ள குழந்தையானது கர்ப்பப்பைக்குள் மிகப் பாதுகாப்பாக, பத்திரமாகவே இருக்கும். அதே சமயம், இருமல் நிற்கவில்லை, தீவிரமாக இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன என பார்க்க வேண்டியது அவசியம். நிமோனியா, டிபி போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனைகள் அவசியம். நீண்ட நாள்களாக இருமல் தொடரும் நிலையில், அந்த நபருக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையலாம். டிபி நோயாளிகளைப் பார்த்தால் அவர்கள் தொடர் இருமலின் காரணமாக உடல் மெலிந்து, களைப்பாக காணப்படுவார்கள். எனவே, கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: கர்ப்பிணிகள் டூ வீலர் ஓட்டலாமா?
அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244
''மு தலிரவுக்குப் பின்னர் ஆயிரம் ஆயிரம் இரவுகள் இருக்கின்றன. அதனால், முதல் இரவிலேயே முழு தாம்பத்திய உறவும் நடந்துவிட வேண்டும் என்கிற அவசரம் தேவையில்லை என்று, புதிதாக திருமணமானவர்களுக்கு சொல்கிறோம். அந்த ஆயிரம் ஆயிரம் இரவுகளில், ஒரு கணவனுடைய தாம்பத்திய வேகம் எப்படி இருக்க வேண்டும்; அது எப்படி இருந்தால் மனைவிக்குப் பிடிக்கும் என்று சொல்லித் தந்திருக்கிறோமா என்றால், கிட்டத்தட்ட இல்லை. ஆனால், காமசூத்ரா சொல்லிக் கொடுத்திருக்கிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுபற்றி விவரித்தார். உறவு ''தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறவியிலேயே ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஆண், மனசுக்குப் பிடித்த மனைவியைப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்படுவான். அடுத்து, ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு விடும். உறவு கொண்டு விந்து வெளியேறவுடன் உணர்ச்சி அடங்கி நார்மலாகி விடுவான். ஆணின் இந்த நிலையை ஸ்விட்ச் போட்டவுடனே எரிகிற பல்புக்கு ஒப்பாக சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். மெதுவாகத்தான் தாம்பத்திய உறவுக்கும் தயாராவார்கள். உறவுகொண்டு உச்சக்கட்டம் அடைந்த பிறகும் அந்த உணர்வு சிறிது நேரம் இருக்கும். ஆண்களைப்போல சட்டென்று பல்ப் ஆஃப் ஆகாது பெண்களுக்கு. இதனால்தான், நான் பெண்களின் செக்ஸ் உணர்வை அயர்ன் பாக்ஸுக்கு ஒப்பிடுவேன். தாம்பத்திய உறவு ஆண்கள் உறவில் ஈடுபட ஆரம்பித்தவுடன் அதை சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு. இதிலும், விந்து முந்துதல் பிரச்னை இருக்கிற ஆண்கள், 'ரொம்ப நேரம்தான் செய்ய முடியலை; நிறைய முறையாவது செய்யலாம்' என்று மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நார்மல் ஆண்களைவிட இன்னும் வேக வேகமாக உறவை முடிக்க பார்ப்பார்கள். இது இன்னும் பிரச்னையை அதிகப்படுத்தவே செய்யும். இதனால், ஒரு நிமிடத்திலேயே வெளியேறி விடுகிற விந்து இன்னும் சீக்கிரமாக முந்தி விடும். இது இன்னும் சிக்கலை ஏற்படுத்தி விடும். அந்த நேரத்தில் ஆண்களின் மனநிலைமையை விளக்குவது மிக மிக கடினம். `3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235 இந்த இடத்தில்தான் நான் இப்போது சொல்லப்போகிற பாயிண்ட் எல்லா ஆண்களுக்குமே உதவியாக இருக்கும். பெண்களுக்கு, தாம்பத்திய உறவை ரொம்ப நிதானமாக, ஜென்டிலாக கொண்டு போகிற ஆணைத்தான் மிகவும் பிடிக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பெண்கள் மெதுவாகத்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். கணவன் இப்படி நிதானமாக உறவு மேற்கொள்கையில், எண்டார்பின், ஆக்சிடோசின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் அவர்களுடைய உடலில் வெளிப்படும். இதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இதய நலமும் மேம்படும். பெண்களுக்கு ஆர்கசம் அடைய 14 நிமிடங்கள் வரைக்கும் தேவைப்படும். ஆனால், ஆண்களால் அவ்வளவு விந்து வெளியேறாமல் உறவுகொள்ள முடியாது. இப்படி நிதானமாக உறவுகொள்ளும்போது, கணவனைப்போல மனைவியும் ஆர்கசம் அடைவார். சில நேரம், ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகூட அவர் ஆர்கசம் அடையலாம். படுக்கையறை ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது. அங்கு வெற்றி, தோல்வியும் கிடையாது. அதனால், தாம்பத்திய உறவில் நிதானமாகவே ஈடுபடுங்கள் கணவர்களே... அதுதான் உங்கள் வாழ்க்கைத்துணைக்குப் பிடிக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். Sexologist Kamaraj `காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா?
நம் உடலில் உள்ள எலும்புகளின் இயக்கத்திற்கும், தசைகள் சீராக இயங்குவதற்கும் தேவைப்படும் முக்கியமான மினரல் மெக்னீஷியம். உடலில் மெக்னீஷியம் குறைபாடு ஏற்படுவது பல்வேறு அறிகுறிகள் மூலம் வெளிப்படும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைப் போல, மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் அது உங்கள் முகத்திலேயே தெரிந்துவிடும்' என்கிற உணவியல் நிபுணர் பாலபிரசன்னா, மெக்னீஷியம் நிறைந்த உணவுகள், குறைந்தால் வரக்கூடிய அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசினார். மெக்னீஷியம் குறைபாடு ''பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண் இமைகள் தன்னிச்சையாக துடிக்கும். இது மெக்னீஷியம் குறைபாட்டினால் ஏற்படுவதுதான். கண்களுக்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. கண்கள் எரிச்சலாகவும், மிகவும் வறண்டும் இருக்கும். மெக்னீஷியம் இருந்தால் மட்டுமே கண் தசைகள் சரியாக இயங்கும். மெக்னீஷியம் உடலின் திரவ நிலையைச் சீராக்கப் பயன்படுகிறது. இது குறையும்போது உடலின் திரவத்தன்மை அதிகரித்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படும். கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது தூக்கமின்மை மற்றும் சோர்வினால் மட்டுமல்ல, மெக்னீஷியம் குறைபாட்டினாலும் ஏற்படும். மெக்னீஷியம் நரம்பு தூண்டுதலுக்கு உதவுவதோடு, மனநிலையைச் சீராக வைப்பதற்கும், இதயத்தைச் சீராக இயங்க வைப்பதற்கும் உதவுகிறது. மெக்னீஷியம் நிறைந்த உணவுகள் மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் முகத்தில் தோல் சுருக்கம், பொலிவின்மை ஏற்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படும். உடலில் போதுமான அளவு மெக்னீஷியம் இருந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், முகப்பரு, எக்ஸிமா போன்றவை வராமல் தடுக்கும். அரிப்பு மற்றும் சிவப்புத்திட்டுகளும் ஏற்படாது. Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்! முடி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது மெக்னீஷியம். இது குறைந்தால் புருவங்களில்கூட முடி கொட்டும். மெக்னீஷியம் குறைந்தால் உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படுவதோடு, தாடை இறுக்கமாக இருப்பது போன்ற பிரச்னைகளும் வரும். உணவியல் நிபுணர் பாலபிரசன்னா இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து, மெக்னீஷியம் குறைபாடு இருப்பதை உறுதி செய்துகொண்டு, தினமும் 200 முதல் 400 மில்லிகிராம் வரை மெக்னீஷியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். கூடவே, போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், நட்ஸ், அவகாடோ, பயறு மற்றும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துகொள்ள வேண்டும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா. Food Supplement: சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
செயற்கை கருத்தரிப்பு: `சூப்பர் ஓவுலேஷன் சிகிச்சை'என்றால் என்ன?; யாருக்கு தேவைப்படும்?
சூப்பர்..! இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை அர்த்தங்களை, எத்தனை நம்பிக்கைகளை எவ்வளவு நிறைவை, எவ்வளவு மனமகிழ்வைத் தருகிறது.! இதே வார்த்தையை, அதிக அர்த்தம் நிறைந்த, அத்துடன் நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கும் குழந்தைப்பேற்றிலும் கருத்தரிப்பு சிகிச்சையின்போது பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள். ஆம்.! குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியே 'சூப்பர் ஓவுலேஷன்'.. குறிப்பாக (Controlled Ovarian Hyperstimulation - COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் தான் என்கின்றனர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர்கள். செயற்கை கருத்தரிப்பு சூப்பர் ஓவுலேஷன் அது என்ன 'சூப்பர் ஓவுலேஷன்'... அது, ஏன், எதற்கு, எப்படி, யாருக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.! பெண்ணின் இரு சினைப்பைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சினைமுட்டைகளில் ஏதேனும் ஒருபக்க சினைப்பையிலிருந்து ஒரு சினைமுட்டை மட்டும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, முதிர்வடைந்து வெளியேறி இனப்பெருக்கத்திற்கு அப்பெண்ணை தயார்படுத்துவதுதான் இயல்பு. பிறந்தது முதல் ஒரு பெண்ணின் இரு சினைப்பைகளிலும் மில்லியன்கள் கணக்கில் உயிரணுக்களான சினைமுட்டைகள் கையிருப்பில் இருந்தாலும், reproductive age எனும் இனப்பெருக்க வாழ்நாள் முழுவதும் மொத்தம் 400 சினைமுட்டைகள் மட்டுமே வளர்ந்து, முதிர்வடைந்து அண்டவிடுப்பாகி கருத்தரிப்புக்குத் தயாராகின்றன என்பது இயற்கை நியதி. கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன் இதில், ஒவ்வொரு மாதமும் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சுரக்கும் GnRH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பியின் FSH மற்றும் LH ஹார்மோன்களைத் தூண்டி, அவை முறையே சினைப்பையின் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களை சுரக்கச்செய்து, கருமுட்டை வளர்ச்சி, முட்டை முதிர்வாக்கம், அண்டவிடுப்பு எனும் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன் இறுதியில் கருத்தரிப்பு அல்லது மாதவிடாய் உதிரப்போக்காக சுழற்சியை முறைமைப் படுத்துகின்றன. என்றாலும், ஒரே சுழற்சியின்போது ஒன்றுக்கு மேலான கருமுட்டைகள் அண்டவிடுப்பாவதும், சமயங்களில் கருமுட்டைகள் முற்றிலும் வளராமலோ அல்லது வளர்ந்தபின் வெளியேறாமலோ இருப்பதும் இயல்பாக நிகழக்கூடும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள்; இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள்... | பூப்பு முதல் மூப்பு வரை யாருக்கு இந்தச் சிகிச்சை? பொதுவாக, இந்தக் கருமுட்டை வளராமல் அல்லது வெளியேறாமல் இருக்கும் நிலைகளில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தான், ஓவுலேஷன் இண்டக்ஷன் (Ovulation Induction Drugs) எனும் சினைப்பைத் தூண்டல் மருந்துகள் என அழைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றுள் உட்கொள்ளப்படும் மாத்திரைகளான Clomiphene citrate அல்லது Letrozole, மற்றும் போடப்படும் ஊசியான Low dose Gonadotropins ஆகிய ஓவுலேஷன் இண்டக்ஷன் மருந்துகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு சினைமுட்டைகளை மட்டுமே தூண்டும் என்பதால் பிசிஓடி, உடல் பருமன் போன்ற நிலைகளிலும், ஆரம்பகட்ட குழந்தைப்பேறின்மை சிகிச்சையிலும் இவை பெரிதும் பயனளிக்கின்றன. ஆனால், செயற்கை கருத்தரிப்பின் ஐவிஎஃப், இக்ஸி போன்ற சிறப்புச் சிகிச்சைகளில், குறைந்தது எட்டு முதல் பத்து வரையிலான தரமான, முதிர்வடைந்த கருமுட்டைகள் ஒரே மாதவிடாய் சுழற்சியில் கிடைப்பது அவசியம் என்பதால், இதில் பிரத்யேக ஊசி மருந்துகள் சற்று கூடுதல் டோஸேஜில் வழங்கப்படுவதுடன், ஸ்கேனிங் மூலமாக அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கண்காணிக்கப்பட்டு, தக்க சமயத்தில் அண்டவிடுப்பு தூண்டப்பட்டு, செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டத்திற்காக அவை சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பிரத்யேக சினைமுட்டைத் தூண்டலைத் தான் 'சூப்பர் ஓவுலேஷன்' என அழைக்கின்றனர் மருத்துவர்கள். சூப்பர் ஓவுலேஷன் சரி.. அதிலேயே என்ன COH எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்ற கேள்வி எழுகிறதல்லவா? செயற்கை கருத்தரிப்பு கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் பொதுவாக, ஐ.வி.எஃப் மற்றும் இக்ஸி சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இந்த சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள், மூளையின் ஹைபோ-தலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகளே என்பதுடன், அவற்றின் செயல்பாடுகளும் பொதுவாக, இயற்கை நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையில்தான், ஆனால், சற்று கூடுதலாகச் செயல்படுகின்றன. என்றாலும், பெண்ணின் அதிகரிக்கும் வயது, அதிக உடல் எடை, பிசிஓடி சினைப்பை நீர்க்கட்டிகள், தைராய்டு பாதிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள், முந்தைய அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்று ஆகியன, சினைமுட்டை தூண்டலை பெருமளவு பாதிக்கக் கூடும் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மாதவிடாய் சுகாதாரம்... அவசரம், அவசியம் தேவைப்படுவது இதுதான்! | பூப்பு முதல் மூப்பு வரை -24 மருந்துகள் பலனளிக்காத நிலையில்... பொதுவாக, சினைமுட்டைத் தூண்டல் மருந்துகள் முற்றிலும் பயனளிக்காத பெண்ணை Poor responder எனவும், தேவைப்படும் சினைமுட்டைகள் கிடைக்கப்பெறும் பெண்ணை Normal responder எனவும், மிக அதிகமான சினைமுட்டைகள் உருவாக்கிடும் பெண்ணை Hyper responder எனவும் மருத்துவர்கள் வகைப்படுத்துவார்கள். இதில் முதலாவது நிலை என்பது, மனதளவில் செயற்கை கருத்தரிப்புக்குத் தயாரான ஒரு பெண்ணுக்கு, அதற்கான தூண்டல் மருந்துகள் வழங்கப்பட்ட பின்னர், முட்டைகள் கைகூடாததால், சிகிச்சையைக் கைவிடும் நிலை என்றால், மூன்றாவது நிலையில் மிக அதிகப்படியான சினைமுட்டைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் சிகிச்சையைக் கைவிடும் நிலை என்பது நமக்கு விளங்குகிறது. இந்த முதலாவது மற்றும் மூன்றாவது நிலைகள் நிகழாமல், நார்மல் ரெஸ்பாண்டராக இருக்கப் பரிந்துரைக்கப்படுவதுதான், Controlled Ovarian Stimulation (COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் சிகிச்சை. செயற்கை கருத்தரிப்பு இதில், கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட உள்ள பெண்ணில், மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாள்களில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாக சினைப்பை நுண்ணறைகளில் உள்ள முதிர்வடையாத கருமுட்டைகளின் எண்ணிக்கை (antral follicular count) கணக்கில் கொள்ளப்படுவதுடன், ஒவேரியன் ரிசர்வ் எனும் சினைப்பை இருப்பைக் குறிக்கும் ஏ.எம்.ஹெச் அளவுகளும் (AMH) பரிசோதிக்கப்படுகின்றன. அத்துடன், முந்தைய சினைமுட்டை தூண்டலின்போது ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது குறைகள் குறித்த தகவல்களும் பெறப்படுகின்றன. அதற்குப்பின், மேற்சொன்ன GnRH, FSH, LH சார்ந்த தயாரிப்புகள், குறிப்பாக மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்ணின் சிறுநீரிலிருந்து பெறப்படும் Human Menopausal Gonadotropin (HMG) அல்லது மீள்சேர்க்கை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Recombinant FSH போன்ற சிறப்பு ஊசிமருந்துகள், கூடுதல் அளவில் தினமும் வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, கருமுட்டை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருபக்க சினைப்பையில் போதுமான ஃபாலிக்கிள்களும், அவற்றின் போதுமான வளர்ச்சியும் (20mm) கிட்டியபின், அண்டவிடுப்பைத் தூண்டும் ஹெச்சிஜி (HCG Human Chorionic Gonadotropin) ஊசிமருந்து வழங்கப்பட்டு, அதற்குப்பின் இந்தக் கருமுட்டைகள் சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் கருத்தரிப்புக்குத் தயார்செய்யப்படுகின்றன. ஆக.. குழந்தைப்பேறின்மையில், எல்லாம் சூப்பர்டா.. என அந்தப் பெண்ணை தட்டிக்கொடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது இந்த சூப்பர் ஓவுலேஷன் மற்றும் Controlled Ovarian Hyperstimulation எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் என்பதே உண்மை..! ஆனால். சூப்பர் கூட சில சிக்கல்களைத் தரக்கூடுமாம். அதுகுறித்தான தகவல்களுடன் பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது. டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை!
மேகாலயா தேனிலவு கொலை: கணவரைக் கொல்ல உடந்தையான மனைவியின் உளவியல் சிக்கல்!
'மே காலயா தேனிலவு கொலை' தான் எங்கெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த செய்திகளின் மற்றும் வீடியோக்களின் பின்னூட்டங்களில், 2006-ல் நடந்த 'மூணாறு தேனிலவு கொலையும் இப்படித்தான் நிகழ்ந்தது' என்றும் 'தேனிலவு சென்ற இடத்தில் கணவர் கொலை செய்யப்பட்டால் அதற்கு மனைவிதான் காரணமாக இருப்பார்' என்றும் எக்கச்சக்க கருத்துகள். இந்தக் கருத்துக்களில் இருக்கிற முன்முடிவுகள் 'வருங்காலத்தில் ஏதோ ஓர் அப்பாவி மனைவிக்கு எதிராக அமைந்துவிடலாமோ' என்கிற அச்சம் ஒருபக்கம் எழுகிறது. மறுபக்கமோ, 'மேகாலயா தேனிலவு கொலை'யில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி மனைவி சோனம்தான், கணவர் ராஜா ரகுவன்ஷி கொலைக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது தெரிகிறது. honeymoon murder மேகாலயா தேனிலவு கொலை அது என்ன மேகாலயா தேனிலவு கொலை என்பவர்களுக்கு, அந்த சம்பவம் தொடர்பான சிறு அறிமுகம். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும், அவருடைய மனைவி சோனமும் தேனிலவுக் கொண்டாட மேகாலயா சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் காணாமல் (மே 23) போனதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர், ஜூன் 2-ம் தேதி 150 அடி ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உடல் ராஜா ரகுவன்ஷியினுடையது என்று அடையாளம் காணப்பட்டது. அடுத்து, காணாமல் போன சோனத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ரகுவன்ஷி கொலைத்தொடர்பாக அவருடைய மனைவி உள்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது, தன் காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவரை கொல்வதற்கு ஏற்பாடு செய்ததே சோனம் தான் என்பது தெரிய வந்திருக்கிறது. 2006-ல் நடந்த மூணாறு தேனிலவு கொலை வழக்கிலும் சரி, தற்போதைய மேகாலயா தேனிலவு கொலை வழக்கிலும் சரி, திருமணத்துக்கு முந்தைய காதல்; விருப்பமில்லாத திருமணம்; காதலுடன் சேர்ந்து கணவனை திட்டுமிட்டுக் கொலை செய்தல் என பல சம்பவங்கள் ஒத்துப்போகின்றன. இரண்டு கொலை வழக்கிலுமே, பெற்றோர் திருமணம் செய்துவைத்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்றதைத் தவிர வேறு எதுவும் அறியாத அந்த ஆண்களின் மரண நிமிடங்களை நினைத்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விருப்பமில்லாத திருமணத்தைத் தவிர்ப்பது அல்லது நிறுத்துவதை விடுத்து, ஓர் உயிரை எடுக்கிற அளவுக்கு எது இந்தப் பெண்களை இயக்குகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மனநல மருத்துவர் ராமானுஜம் அவர்களிடம் பேசினோம். மனநல மருத்துவர் ராமானுஜம் தற்கொலை போல தான் கொலையும்! ''ஒருவகையில் தற்கொலை போல தான் கொலையும். தற்கொலை செய்துகொண்டால், எப்படி அதற்கடுத்து தங்களுக்கு வாழ்க்கை இல்லையோ, அதேபோல கொலை செய்தாலும் வாழ்க்கையில்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், 'ஒருவேளை தப்பித்துக்கொண்டால்' என்கிற ஆப்ஷனை நம்பி இப்படியொரு செயலுக்குத் துணிகிறார்கள். இந்த விஷயத்தில், திருமண முடிவு பெண்களுடைய கையில் இல்லாததுதான் முக்கியமான காரணம். கல்யாணத்துக்கு முன்னால் பெண்களுடைய விருப்பத்தைக் கேட்பதில்லை. அதையும் மீறி பெண்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னாலும் கட்டாயப்படுத்தி தாங்கள் பார்த்த ஆணுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர் பக்கத்து தவறு. பெண் பக்கத்து தவறு என்று பார்த்தால், 'இந்த ஆணுடன் எனக்கு திருமணம் வேண்டாம்' என்பதில் பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும். திருமணம் தன்னுடைய நலம் மட்டுமே... பெற்றோர்களை கன்வின்ஸ் செய்ய முடியாமலும், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறாமலும், திருமணம் செய்துகொண்டு கணவனைக் கொல்வதும் கோழைத்தனம்தான். காலங்காலமாக பல பெண்கள், மனதுக்குப் பிடிக்காத திருமணமே நிகழ்ந்தாலும், தங்களை வருத்திக்கொண்டு வாழத்தான் செய்தார்கள். அது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததோ, அதைப்போன்றதே எங்கோ ஒருசிலர் இப்படி கணவனைக் கொல்வதும். இவர்களுக்கு தன்னுடைய நலம் மட்டுமே பெரிதாக தெரியும். அடுத்தவர்களின் வலியை உணர்ந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும். பிடிக்காத திருமணம் இதில் இன்னொரு கோணம், அந்தக் காதலன் சம்பந்தப்பட்டப் பெண்ணை கொலை செய்யத்தூண்டும் அளவுக்கு மூளைச்சலவை செய்திருக்கலாம். மேலே சொன்ன அத்தனைக் காரணங்களும் சேர்ந்துதான், ஓர் அப்பாவி ஆணின் உயிரைப்பறித்திருக்கிறது'' என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தால் டான்சில்ஸ் பிரச்னை வருமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் சாக்லேட்டும் எப்போதாவது ஐஸ்கிரீமும் சாப்பிடுவான். அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, சளி பிடித்துக்கொள்கிறது. அவனுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வீக்கம் இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். சாக்லேட்டும் ஐஸ்க்ரீமும் கொடுத்தால் டான்சில்ஸ் பாதிப்பு அதிகமாகும் என நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை சாக்லேட்டுக்கும் இன்ஃபெக்ஷனுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் குழந்தைகள் அளவுக்கதிகமாக சாக்லேட் சாப்பிடும்போது வேறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். சாக்லேட்டில் கெமிக்கல் சேர்ப்பு மிக அதிகம் என்பதால் அளவு குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாக்லேட்டிலும் அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளதால் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இன்று பல குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருப்பதைப் பார்க்கிறோம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம். இனிப்பு உள்பட வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளால் இப்படி எந்தப் பிரச்னையும் வருவதில்லை. வெளியிடங்களில் வாங்கும்போது அவை எந்த அளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்படுகின்றன, கையாளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகிறது. தொற்று ஏற்பட அதுதான் காரணம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளிப் பிடிக்கலாம். ஐஸ்க்ரீமும் அதே போலத்தான். சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு, உடனே சாப்பிடுகிற போது ஐஸ்க்ரீமால் பிரச்னை வருவதில்லை. தயாரிக்கப்பட்டு பல நாள்கள் ஆகி, இடையில் குளிர்பதனப் பெட்டி இயங்காமல் உருகி, அதில் தொற்று ஏற்பட்டு அந்த ஐஸ்க்ரீமை சாப்பிடும்போதுதான் பிரச்னை வருகிறது. ரொம்பவும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீமை சாப்பிடும்போது தொண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைகிறது. அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக ஐஸ்க்ரீமே சாப்பிடக்கூடாது என அர்த்தமில்லை. அடிக்கடி குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதைத் தவிர்ப்பது சிறந்தது. சுத்தமாகத் தயாரிக்கப்ட்ட உணவுகளைச் சாப்பிடும்போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: சிலருக்கு மட்டும் மழைநாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் சளி பிடிக்காதது ஏன்?
Health: நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? - எச்சரிக்கும் மருத்துவர்
உ ங்களுக்கு சாலையோரம் விற்கப்படும் பஜ்ஜி மற்றும் போண்டாவை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அங்கே பயன்படுத்திய செய்தித்தாளில் உணவு பொருள்களை வைத்து கொடுப்பார்கள். வேறு வழி இல்லை என்று நாமும் சிறிது நேரத்திற்கு அந்த உணவுகளை செய்தித்தாளில் வைத்து சாப்பிட்டு இருப்போம். சிறிது நேரம் தானே அப்படி அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து சாப்பிடுகிறோம், இதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதில் தான் பிரச்னையே... சமீபத்தில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'உணவு வணிகர்கள் இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவுப்பொருட்களை விநியோகிக்கக்கூடாது’ என்றிருக்கிறது. நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? மேலும், ‘அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருட்கள் நேரடியாக படும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது. குறிப்பாக, உணவுப்பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது; உணவகங்களில் உணவு பரிமாற வாழையிலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. அச்சிடப்பட்ட செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட்டால் என்னவிதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். “சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப்பொருள்களை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது பழைய நியூஸ் பேப்பரில் வைத்து கொடுக்கிறார்கள். இவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நாம் உட்கொள்வதினால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, அந்த நியூஸ் பேப்பர் பிரிண்ட் செய்வதற்காக மையை பயன்படுத்துவார்கள். அந்த மையில் 2-நாப்தைலமைன் மற்றும் 4-அமினோபிஃபீனைல் (2-naphthylamine and 4-aminobiphenyl) போன்ற ரசாயனங்கள் இருக்கும். இவ்வாறு ரசாயனங்கள் அடங்கிய நியூஸ் பேப்பரில் நாம் சூடான பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் கலந்த உணவு பொருள்களை வைத்து சாப்பிடும்போது, அந்த உணவில் இந்த ரசாயனங்கள் எளிதாக கலந்து விடும். இவ்வாறாக தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், உணவு பாதுகாப்புத்துறை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது நியூஸ் பேப்பர்களில் உள்ள ரசாயனம் உணவில் கலந்து உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா இரண்டாவது விஷயம் என்னவென்றால், முறையான பேக்கிங் எதுவும் இல்லாமல் உணவுப்பொருட்களை கொடுப்பதினால் எளிதாக வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று அந்த உணவில் கடத்தப்படும். இந்தியா போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்பு, உணவை சுத்தமான முறையில் பரிமாறுவது, உணவைப் பரிமாறும் போது கைகளை சுத்தமாக கழுதல் என்பது மிக மிக குறைவு. உணவை பரிமாறவும், பேக்கேஜிங் செய்யவும் இலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி குடுவைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக பிளாஸ்டிக், நியூஸ் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதாக கிருமித்தொற்றுகள் கடத்தப்படும். மேலும் உடல் நலத்திற்கும் அது தீங்கும் விளைவிக்கக்கூடும். உணவு பாதுகாப்புத்துறை சொல்வது போல உணவுகளை நியூஸ் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்டவற்றில் வைத்து சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். சிந்தித்து அதற்கான மாற்று வழியை பயன்படுத்துவோம்” என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மனிதனால் 150 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா? - ஆயுள் காலம் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?
மனிதர்களின் ஆயுள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில் உலக மக்களின் ஆயுள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. இந்த நிலையில் “மனிதர்களின் உண்மையான ஆயுள் காலம்தான் என்ன?” என்பதை அறிவியல் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நாழிகைப்பூச்சியின் ஆயுள் நாம் ஒரு விந்தையான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். இவ்வுலகில் வாழும் கோடான கோடி உயிரினங்களில் நாழிகைப்பூச்சியும் (Mayfly) ஒன்று. இவைப் பார்க்கச் சிறிய தட்டான் மாதிரி இருக்கும். இவைப் பறக்க ஆரம்பித்த 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இந்த ஒருநாளுக்குள் தன் ஜோடியைக் கண்டறிந்து இணைந்து, நீரின் மேற்பரப்பில் நிறைய முட்டைகளையிட்டு இறந்து விடுகின்றன! நாழிகைப்பூச்சி (Mayfly) சுறா மீன் ஆயுள் கிரீன்லாந்தை ஒட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பெரிய சுறா மீன் வாழ்கிறது. இந்தச் சுறா மீன் கடந்த 400 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகின்றது! அதாவது இந்தச் சுறா அக்பர் இந்தியாவை ஆண்ட காலத்தில் பிறந்தது. அதிசயிக்கும் வகையில் இது இன்றும் உயிர் வாழ்ந்து வருகின்றது! 80 ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் இதற்கு எல்லாம் மேலாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூட்டா என்ற மாநிலத்தில் ஒரு மரம் 80 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது. ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் காலத்தில்தான் தற்கால மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியக் கண்டத்திற்குள் குடிபெயர்ந்தான்! அன்று பிறந்த இந்த மரம் இன்றும் உயிர்வாழ்ந்து வருவது அதிசயமே! இவ்வாறாகப் பூமியில் வாழும் உயிரினங்களின் வாழ்நாள்களில் மிகப் பெரிய அளவிலான வித்தியாசத்தைப் பார்க்கலாம். `தங்கமாக மாறிய ஈயம்' - செயற்கை தங்கம் கண்டுபிடிப்பும் வரலாறும்.. இனி தங்கம் விலை? மனிதர்களின் வாழ்நாள் ஆச்சரியப்படும் அளவில் மனிதர்களின் வாழ்நாள்கள் கூட நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. உதாரணமாக, இவ்வுலகில் அதிக காலம் ஜப்பானியர்கள்தான் வாழ்கின்றனர். இவர்களின் சராசரி ஆயுள் காலம் 84 ஆண்டுகள் ஆகும். அடுத்ததாகச் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் சராசரியாக 83 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர். சீனர்கள் சராசரியாக 77 வயதுவரை உயிர் வாழ்கின்றனர். ஆனால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் சராசரியாக 64 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். அதிலும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 53 ஆண்டுகள் தான். Japanese மேற்கண்ட தகவல் “வளர்ந்த நாட்டில் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர்” என்பதை எடுத்துரைக்கின்றது. “வளர்ந்த நாடுகளில் மக்களுக்கு அப்படி என்ன கிடைக்கின்றது?” எனக் கூர்ந்து நோக்கினால், “தேவையான சத்தான உணவுடன் தரமான மருத்துவ வசதிகளும் இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன” எனத் தெரிகின்றது. முயல் ஆய்வு சொல்வதென்ன? முயல்களும் இப்படித்தான். இயற்கையாகக் காடுகளில் வாழும் இவை குறைவான உணவு கிடைப்பதாலும்; பல்வேறு நோய்களின் தாக்கத்தாலும்; மற்றும் பிற விலங்குகளால் வேட்டையாடப்படுவதாலும் காடுகளில் வாழும் முயல்கள் சுமார் மூன்று ஆண்டுகளே உயிர்வாழ்கிறன. ஆனால் தேவையான உணவும் நல்ல பராமரிப்பும் கிடைக்கும் படி வீடுகளிலோ அல்லது மிருகக்காட்சி சாலைகளிலோ வளர்க்கப்படும் முயல்கள் 13 ஆண்டுகள்வரை கூட உயிர் வாழ்கின்றன! சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் ஆயுள் “நம் இந்தியத் திருநாட்டிலும் 1960 வாக்கில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 46 ஆண்டுகளாகவே இருந்தது. அப்போதைய இந்தியா இன்றைய நைஜீரியாவைவிட மோசமாகவே இருந்தது. இந்தியாவில் 1960-க்கு அடுத்த 20ஆண்டுகளில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 55.6 ஆண்டுகளாக முன்னேறியது. பின்னர் 2000 ஆண்டில் நம்நாட்டு மக்களின் ஆயுள் 63.5 ஆண்டுகளாக உயர்ந்தது. 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்திய மக்களின் சராசரி ஆயுள்காலம் 67 ஆண்டுகளை எட்டிப் பிடித்துள்ளது” எனக் கண்டறியப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இந்தியப் பொருளாதாரம் அவ்வப்போது வீழ்ச்சியைச் சந்தித்தாலும் சுதந்திரத்திற்குப் பிறகு நம் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவது மறுக்க முடியாத உண்மை. இதனால் நம் மக்களுக்குச் சற்று ஊட்டச்சத்துள்ள உணவுடன் அடிப்படை மருத்துவ வசதியும் படிப்படியாக முன்னேறியபடி தான் உள்ளது. எனவேதான் 1947-ல் இருந்து இன்றுவரை மக்களின் சராசரி ஆயுள்காலமும் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கின்றது. 11,500 ஆண்டுகளுக்குப் பின் மறுபிறவி எடுத்த ஓநாய்கள்; உயிர்த்தெழும் ஆதிகால விலங்குகள்.. | Explainer ஆயுளை கணிக்கும் இரத்தப் பரிசோதனை இதுபோல உலக மக்களின் சராசரி வாழ்நாளும் படிப்படியாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில், “மனிதனின் அதிகபட்ச வாழ்வுகாலம் தான் என்ன? இதனைக் கண்டறிவது எப்படி?” என்ற கேள்விகள் எழுகின்றன. “முழுமையான இரத்தப் பரிசோதனை (Complete Blood test) செய்து மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண முடியும்” என சிங்கப்பூர், ரஷ்யா, மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை 2021ஆம் ஆண்டு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டனர். இவர்கள் “இரத்தத்தில் அப்படி என்னதான் கண்டறிந்தனர்? மற்றும் எப்படி மனிதர்களின் அதிகபட்ச வாழ்நாளைக் கண்டறிந்தனர்?” என்பதை பார்ப்போம். Blood test நம் உடல் முழுவதும் உள்ள கோடான கோடி செல்களுக்குச் சுவாசிக்க ஆக்சிசனை இரத்த சிவப்பணுக்கள்தான் எடுத்துச் செல்கின்றன. வயதாக வயதாக இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகின்றன எனவும், மேலும் வட்ட வடிவில் இருக்கும் இந்தச் சிவப்பணுக்கள் வயதானவர்களின் இரத்தத்தில் ஒழுங்கற்ற உருவத்தில் மாறியும் வருகின்றன எனவும், அதே நேரத்தில் வயதானவர்களின் உடலில் நீயூட்ரோபில் என்ற இரத்த செல்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றன எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. Red blood cells நீயூட்ரோபில் வகை செல்கள் நோய்த் தொற்று ஏற்பட்டால் இரத்தத்தில் அதிகமாகும். காரணம் இவை நோய்கிருமிகளை அழிக்க வல்லது. ஆனால் வயதானவர்களின் உடலில் இவற்றின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை லட்சக்கணக்கானவர்களிடம் இவ்வாறு இரத்த சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள், இரத்த சோதனைமூலம் ஒருவரின் வயதைக் கணிக்கலாம். மேலும் இதனை வைத்து மனிதனின் அதிக பட்ச வாழ்நாளையும் அறியலாம் என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி “மனிதர்களின் ஆயுள் காலம் அதிகபட்சமாக 120 முதல் 150 ஆண்டுகளுக்குள் இருக்கும்” எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால், சுமார் 800 கோடி மக்கள் வாழ்ந்துவரும் இந்தப் பூமியில் யாராவது 120 வயதையும் கடந்து வாழ்ந்திருக்க வேண்டும். “அப்படி யாராவது இருகின்றார்களா?” என்ற தேடலில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த ஜீனி கல்மேன்ட் (Jeanne Calment) என்ற அம்மையார் பூமியில் 122 ஆண்டுகளும் 164 நாட்களும் இவ்வுலகில் வாழ்ந்தது தெரிந்தது. Jeanne Calment இவர் 1875ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிறந்து 1997ஆம் ஆண்டுஆகஸ்ட் 4 வரை வாழ்ந்துள்ளார். இந்த அம்மையார் போல 122 ஆண்டு உயிர் வாழ நைஜீரிய மக்கள் இரண்டு பிறவிகள் எடுத்தாலும் போதாது! “இவர்தான் பூமியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் “என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர்போல வேறுயாரும் 120 வயதுக்கும் மேல் வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இருந்தாலும் மனிதர்களின் அதிகபட்ச ஆயுள் 120-க்கு மேலும் 150 க்கு கீழும் இருக்கும் என்ற கணிப்பை உண்மையென நிரூபிக்கும் படியே ஜீனி கல்மேன்ட் அம்மையாரின் வாழ்க்கை உள்ளது. Freeze Light: `ஒளியை உறைய வைத்த இத்தாலி விஞ்ஞானிகள்' - கற்பனைக்கு எட்டாத சாதனை; நன்மைகள் என்ன? சுண்டெலி ஆய்வு சொல்வதென்ன? ஆமைகள்தான் 150 ஆண்டு உயிர் வாழ்வதாக அறியப்பட்ட நிலையில், மனிதனுக்கும் இது சாத்தியம் எனக் கணிக்கின்றது இந்த ஆராய்ச்சி. மேலும் சுண்டெலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியும் இந்தக் கணிப்பிற்கு ஆதரவளிக்கிறது. சுண்டெலிகளை இரண்டு குழுக்களாக எடுத்துக் கொண்டனர். முதல் குழு சுண்டெலிகளுக்குத் தேவைக்கும் அதிகமாகச் சாப்பாடு வழங்கப்பட்டது. இரண்டாம் குழு சுண்டெலிகளுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் சாப்பாடு வழங்கப்பட்டது. முதல் குழு சுண்டெலிகள் ஓராண்டில் ஒவ்வென்றாகச் செத்து மடிந்தன. காரணம் இவை உடலுழைப்பின்றி நிறைய தின்று தீர்த்தன. இதனால் இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற வகை வகையான நோய்கள் வந்தன. இந்த நோய்களே இந்தச் சுண்டெலிகளின் அரைகுறையான ஆயுளுக்கு காரணங்களாக அமைந்தன. ஆனால் இரண்டாம் குழு சுண்டெலிகள் வழக்கமாக ஆய்வகத்தில் வாழும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து முதுமை அடைந்து இறந்தன. பணக்கார நாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்வும் ஒருவகையில் முதற்குழு சுண்டெலி போல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏழை நாட்டு மக்களைவிட இவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கின்றனர் என்பது உண்மைதான். இருந்தாலும் அளவுக்கு அதிகமான உணவும் குறைவான உடல் உழைப்பும் வளர்ந்த நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து ஆயுளைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது. ஆக, அதிநவீன மருத்துவ வசதிகளுள்ள ஊரில், தரமான உணவைத் தேவையான அளவுக்கு உட்கொண்டு, வேண்டிய உடற் பயிற்சியும் செய்து, கூடவே நல்ல வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டால் நாம் அதிக பட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும்? என்ற கேள்வி எழுகின்றது. இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கண்டறியப்படவில்லை. காரணம் முயல் மற்றும் சுண்டெலிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தது போல மனிதர்களைக் கொண்டு இப்படியொரு ஆராய்ச்சி நடந்ததில்லை. ஆனால், `திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட ஒரு நல்வாழ்வு கிடைத்தால் மனிதன் 150 ஆண்டுகளுக்கு மேலும் வாழ வாய்ப்புள்ளது' என்றே ஆராய்ச்சி முடிவுகள் மூலம் அறியமுடிகிறது. ``1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்...'' - வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!
Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?
Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமனாருக்கு இதுவரை ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரியவில்லை. அவர் எந்த அசௌகர்யத்தையும் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் இப்படிச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒருவருக்கு அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மாரடைப்பின் அறிகுறி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு அறிகுறிகள் எதையும் காட்டாமல் வரலாம். சிலருக்கு அது வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டலாம். உதாரணத்துக்கு, நெஞ்செரிச்சல், முதுகுவலி, கைகளில் மட்டும் குடைச்சல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளாகவும் வெளிப்படலாம். அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி என்பதை உணராமலேயே சிலர் அதிலிருந்து மீண்டிருப்பார்கள். இது போன்ற அறிகுறிகள் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரலாம். உங்கள் மாமனாருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். மாரடைப்பு என்றதுமே தாங்க முடியாத நெஞ்சுவலி, வலது தோள்பட்டையில் வலி, அது கைகளுக்குப் பரவுதல் போன்ற பிரதான அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. ஆனால், ரத்தக்குழாய் மூடியிருக்கும். வேறொரு சந்தர்ப்பத்தில் இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பகுதி சரியாகச் செயல்படாமலேயோ, இசிஜியில் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாறுதல்கள் இருப்பதோ தெரியவரும். இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். எனவே, உங்கள் மாமனாருக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்திருப்பதால் இனி நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். மாமனாருக்கு எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என பரிசோதனை செய்து பார்க்கவும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். அதன்படி தேவையான டெஸ்ட்டுகளை செய்துபார்த்து மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளைப் பின்பற்றச் சொல்லுங்கள். மீண்டும் இதே பாதிப்பு வராமல் தடுப்பதற்கான விஷயங்களைப் பின்பற்ற அறிவுறுத்துங்கள். அதை 'செகண்டரி ப்ரிவென்ஷன்' (Secondary prevention) என்று சொல்வோம். உணவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரை கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே உணர முடியுமா?
Fiber: நார்ச்சத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. ஏன் தெரியுமா?
நா ர்ச்சத்து... நாம் உட்கொள்ளும் இயற்கை உணவில் நிறைந்து இருக்கும், ஆனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் அளிக்காத ஒரு பொருள். இதுமட்டும் இல்லை என்றால், நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். அந்த அளவுக்கு அத்தியாவசியமான பொருள். நாம் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வழியே பயணித்து வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியாகப் பயணிக்கும்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளும். நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொள்ளும்போது அது உணவின் செரிமான மண்டலப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முத்து கிருஷ்ணன். நார்ச்சத்து உணவுகள் ''விலங்குகளில், சைவம், அசைவ உணவு சாப்பிடுபவை எனப் பிரித்து அதன் வாழ்க்கை முறையைக் கவனித்தோம் என்றால், நார்ச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். யானை, மான், மாடு போன்ற சைவ விலங்குகள், உடல் கழிவை பெரிய அளவில் அதேநேரத்தில் எந்தவிதச் சிரமமும் இன்றி வெளியேற்றும். இதுவே அசைவம் உண்ணும் சிங்கம், புலி தொடங்கி நம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகளின் கழிவுகள் கெட்டியாக, வெளியேற்றவே சிரமப்படுவதைக் காணலாம். இதே உதாரணம், மனிதர்களுக்கு கிட்டத்தட்டப் பொருந்தும். இதற்கு, சைவ உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதும், அசைவ உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதுமே முக்கியக் காரணம். Food Supplement: சுயமாக கால்சியம் சப்ளிமென்ட் சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா? நார்ச்சத்து என்றால் என்ன? நார்ச்சத்து என்பது ஒருவகையான கார்போஹைட்ரேட் சத்து. ஆனால், இதை நம்முடைய உடலால் செரிமானம் செய்ய முடியாது. மற்ற கார்போஹைட்ரேட் எல்லாம் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடல் பயன்படுத்தும். ஆனால், இந்த நார்ச்சத்து மட்டும் குளுக்கோஸாக மாற்றப்படுவது இல்லை. ஆனால், செரிமானம் ஆகாமல், கழிவாக வெளியேறுகிறது. குடலில், உணவு பயணிக்கும்போது, எங்கேயும் சிக்கிவிடாமல், வெளியேற சங்கிலித் தொடர்போல செயல்பட்டு உதவுகிறது. தவிர, நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும்போது, சிறிது சாப்பிட்டாலும், வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சர்க்கரை அளவை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கச் செய்யும், இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்தை நீரில் கரையக்கூடியது, கரையாதது என்று இரண்டாகப் பிரிக்கலாம். செரிமானம் Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்! நார்ச்சத்து ஏன் முக்கியம்? நார்ச்சத்து அதிலும் குறிப்பாக, கரையா நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்குகிறது. கழிவின் எடையை அதிகரிக்கச் செய்து, செரிமான மண்டலத்தில் பயணிக்கும் கால அளவைக் (Colonic transit time) குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால்தான் குடலின் இயக்கம், செரிக்கும் தன்மை எளிதாக நடக்கும். கழிவுகள் முழுமையாக வெளியேறும். நார்ச்சத்து குறைந்த உணவு உட்கொள்ளும்போது, உணவு பயணிக்கும் நேரம் அதிகமாகும். மலக்குடலிலே அதிக நேரம் கழிவு தங்கும். இந்தநிலையில், கழிவில் இருந்து நைட்ரஜன் உருவாகி, மலக்குடல் செல்களைப் பாதிக்கும். இவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுவே நார்ச்சத்து உள்ள உணவாக இருந்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியா, நார்ச்சத்தை புளிக்கச் செய்கிறது. இப்படி புளிக்கச் செய்வதால் கிடைக்கும் பொருளே, பெருங்குடல் செல்களுக்கு தேவையான ஆற்றலாக மாறிவிடுகிறது. இதனால், பெருங்குடல் மற்றும் மலக்குடல் தொடர்பான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவு உட்கொள்பவர்களுக்கு சர்க்கரைநோய் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவையும் கட்டுக்குள் வைக்க இது உதவும். குடல் ஆரோக்கியம் எதில் அதிக நார்ச்சத்து? ப ச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், இலைகள் கொண்ட காய்கறிகள் அதாவது முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல், வெங்காயத் தாள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மற்ற காய்கறிகளில் மிதமான அளவில் உள்ளது. எ ல்லா பழங்களிலும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழங்களை அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து உடலுக்குள் சேரும். ஜூஸாகத் தயாரிக்கும்போது, நார்ச்சத்து சிதைந்துவிடும். வெறும் வைட்டமின், தாதுஉப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மட்டுமே கிடைக்கும். வா ழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தோலை நாம் தவிர்த்தாலும், மெல்லிய இழை போன்ற தோலில் ஒட்டியிருக்கும் படிமத்தை எடுத்துச் சாப்பிட்டு வர, நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். ப ருப்பு, பயறு, நட்ஸ் ஆகியவற்றிலும் நார்ச்சத்து இருக்கிறது. கை க்குத்தல் அரிசி, சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. அரிசியை பாலீஷ் செய்யும்போது நார்ச்சத்தும் சேர்ந்து வெளியேற்றப்படுகிறது. அரிசி அசைவப் பிரியர்கள் கவனிக்க... அசைவ உணவுகளில் நார்ச்சத்து இல்லை. அசைவ உணவு உட்கொள்ளும்போது, அதற்கு இணையாக கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சாலட் எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து தப்பலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நார்ச்சத்து தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு சராசரியாக 10-15 கிராம் நார்ச்சத்து தேவை. தினமும் உணவு வழக்கத்தில், ஒரு வேளையாவது காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்'' என்கிறார் டாக்டர் முத்து கிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர். இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 1 - ல் (1-10-2024) இதேபோல் 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்று அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பாராட்டுகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த ஆண்டும் இந்த சிறப்பான சாதனையைச் செய்துள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நல பெட்டகம் அளிக்கப்பட்டு மேலும் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கி மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் வழிகாட்டுதலின்படி, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்கிற இலக்கோடு அனைத்து சுகப்பிரசவங்களும் பாதுகாப்பாகவும் மருத்துவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இததகைய சாதனையை இரண்டாவது முறையாக செய்துள்ளனர். மருத்துவர் குழுவுடன் இதுபற்றி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறும்போது, காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் மேற்பார்வையில் சுகப்பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதர நேரங்களில் வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுடைய பிரசவத்தின் தன்மையை பொறுத்து காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை வளையப்பட்டி, அரசு ராணியார் மருத்துவமனை புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதன் மூலம், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் இதன் மூலம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் நம்முடைய புதுக்கோட்டையில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்னும் இலக்கினை அடைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் எண்டார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்களும், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர். இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 1 - ல் (1-10-2024) இதேபோல் 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்று அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பாராட்டுகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இந்த ஆண்டும் இந்த சிறப்பான சாதனையைச் செய்துள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நல பெட்டகம் அளிக்கப்பட்டு மேலும் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கி மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ராமகணேஷ் வழிகாட்டுதலின்படி, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்கிற இலக்கோடு அனைத்து சுகப்பிரசவங்களும் பாதுகாப்பாகவும் மருத்துவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இததகைய சாதனையை இரண்டாவது முறையாக செய்துள்ளனர். மருத்துவர் குழுவுடன் இதுபற்றி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் கூறும்போது, காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் மேற்பார்வையில் சுகப்பிரசவங்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதர நேரங்களில் வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுடைய பிரசவத்தின் தன்மையை பொறுத்து காரையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை வளையப்பட்டி, அரசு ராணியார் மருத்துவமனை புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதன் மூலம், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரசவங்கள் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் இதன் மூலம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் நம்முடைய புதுக்கோட்டையில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 'மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை' என்னும் இலக்கினை அடைய மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் எண்டார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்களும், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Mental Health: டீன் ஏஜில் வரக்கூடிய ஸ்ட்ரெஸ்; காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்..!
ப ரீட்சை பயம், பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையை எப்படிப் பூர்த்திசெய்வது என்ற பயம் எனப் பள்ளி, கல்லூரி செல்லும் டீன் ஏஜினர் மத்தியில் தற்போது மனஅழுத்தம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, தூக்கம் எனப் பல பிரச்னைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ, ஒன்றிரண்டு பேருக்கு அல்ல... அதிகப்படியானவர்கள் இந்த மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டீன் ஏஜ் ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சேல்விழி சுப்பிரமணியன். Teen Age Stress படிப்பால் ஏற்படும் மனஅழுத்தம் டீன் ஸ்ட்ரெஸ் காரணங்கள்... பெரும்பாலான இளவயதினரின் மனஅழுத்தத்துக்கு அவர்களின் படிப்பே காரணமாக இருக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் அவர்களின் நாள் காலை 4 மணியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. 6 மணிக்கு கணக்கு டியூஷன், 7 மணிக்கு கெமிஸ்ட்ரி டியூஷன் முடித்துப் பள்ளிக்குச் சென்றால்... இரவு வரை வகுப்புகள், செயல்முறை வகுப்புகள், தேர்வுகள்... அவற்றை முடித்து வீட்டுக்கு வந்தால், ரெக்கார்டு ரைட்டிங், மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் எனத் தொடர்ந்து அவர்களின் தினசரி நாட்கள் மனஅழுத்தத்திலேயே கழிகிறது. இதில், நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று, விளையாட்டு உள்பட பொழுதுபோக்குகளுக்குத் தடை வேறு. ‘நான் சென்ட்டம் எடுத்தேன், என் மகன் நீ, கண்டிப்பாக என்னைவிட அதிகமாகத்தான் எடுக்க வேண்டும். அதுதான் எனக்குப் பெருமை’ என்றும், ‘பக்கத்து வீட்டு ப்ரியாவைவிட நீ நிறைய மதிப்பெண் எடுத்தால்தான் எனக்கு கெளரவம்’ என்றும் சொல்லும்போது, அது மனஅழுத்தத்தை அதிகரித்துவிடுகிறது. சமூகம் உறவுகளில் ஏற்படும் விரிசல், நட்பில் பிரிவு, பெற்றோரிடம் சண்டை போன்றவற்றைக் கடக்க முடியாமல் தடுமாறும் பருவம் இது. சமூகத்தில் பல ஜீரணிக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அதனைச் சகித்துக்கொள்வதற்கு மனம் பக்குவப்படாமல் இருக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். பல வருடங்களாக ஒரே வீட்டில் இருந்துவிட்டு புதிதாக வேறு வீடு மாறும்போதும், நண்பர்களை விட்டு புதிதாக வேறு பள்ளிக்குச் செல்லும்போதும் புதிய சூழல் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த எண்ணம் யாரோடும் சீக்கிரத்தில் சேரவிடாமல் தனித்தே இருக்கச்செய்யும். Teen Age Stress குறைந்த சுய மதிப்பீடு சக மாணவனைவிட உயரம் குறைவாக இருக்கிறோம், நண்பனைவிட கறுப்பாக இருக்கிறேன், அவன் நன்றாகப் படிக்கிறான், என்னால் படிக்க முடியவில்லை, அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால், என்னிடம் யாரும் பேசுவதுகூட இல்லை என்பதைப் போன்ற தாழ்வு மனப்பான்மையும் மனஅழுத்தத்துக்கு க் காரணம். குடும்பப் பிரச்னைகள் அடிக்கடி குடும்பத்தில் பெற்றோர்களிடையே சண்டை, வாக்குவாதம், உடன்பிறப்புகளோடு சண்டை, பெற்றோர்கள் காட்டும் பேதம், முக்கியத்துவம் போன்றவையும் மனஉளைச்சலுக்குக் காரணமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்காமல், வேலையில் மூழ்கி இருத்தல், அவர்கள் மேல் அக்கறையும், கவனமும் செலுத்தாமல் இருப்பது, அவர்களின் எண்ணங்களைப் பொறுமையாகக் கேட்காமல் கோபப்படுவது, வெறுப்பைக் காட்டுவது என இருந்தால், குழந்தைகளுக்கு நிறைய எதிர்மறை எண்ணங்கள் வருவதோடு, மனஅழுத்தமும் ஏற்படும். Family Health: பருவமடையும் ஆண் குழந்தைகளின் உடலில் நிகழும் 8 மாற்றங்கள்! காதல் மற்றும் உறவுகள் பருவம் அடைந்த பிறகு இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஏற்படும் ஈர்ப்பு, காதலாக மாறும். அந்த உறவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரியாமல் மனதில் எப்போதும் எதையாவது நினைத்து வருந்திக்கொண்டே இருப்பார்கள். இந்த வயதில்தான் காதல் தோல்வி என்று தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையையே கெடுத்துக்கொள்வார்கள். `டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?’ - ஆய்வு முடிவும், மாணவர்களின் பதிலும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் அறிகுறிகள்... எப்போதும் கவலையாக, நம்பிக்கையற்ற நிலையிலேயே இருப்பார்கள். மந்தமாகவோ விபரீதமாகவோ நடந்துகொள்வார்கள். வழக்கத்துக்கு மாறாகக் கோபப்படுதல், எதுவும் சரியாக நடப்பது இல்லை என்ற எண்ணம், நாம் எதற்கும் தகுதி இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை மேலோங்கி இருக்கும். இவ்வாறு, உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாக இருக்கும். Teen Age Stress நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பதற்றம் அதிகமாக இருக்கும். படபடப்போடு இருப்பார்கள். நட்பு வட்டத்தில் இருந்தும், கூட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பார்கள். போதைப் பொருள்கள் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக உறங்குவது, அழுவது, பள்ளி, கல்லூரி செல்ல மறுப்பது, குறைவாகச் சாப்பிடுவது, உடம்பில் சத்து இல்லாதது போல் உணர்வது, எப்போதும் உணர்ச்சி நிலையில் ஏற்ற இறக்கத்தோடு இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் நடந்துகொள்வது, தன் தோற்றத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பது, எல்லா நேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் காணப்படும். Sexual Wellness: `ச்சீ, என் பிள்ள சுயஇன்பம் செய்யுறானே'ன்னு கோபப்படறீங்களா?| காமத்துக்கு மரியாதை 153 எண்ணங்களில் மாற்றம் எதையும் நினைவில் வைக்க முடியாமல் சிரமப்படுவர். சரியான, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம், எதைப் பற்றியாவது யோசனை அல்லது பேச்சுக்களில் மூழ்கிப்போதல், கவனச்சிதறல், பகுத்தறியும் ஆற்றல் குறைந்து, தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, திட்டமிடுதலில் பிரச்னை போன்றவை தோன்றும். Teen age உடல் மாற்றங்கள் பசியின்மை அல்லது அதீதப் பசி, உடல் நிலை சரி இல்லாமல் இருப்பது, உடல் எடை திடீரென அதிகரித்தல் அல்லது குறைதல், மயக்கம், சுவாசப் பிரச்னை, அச்சவுணர்வு, அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல், அடிக்கடி சளிப் பிடித்தல், மாதவிடாயில் மாற்றம் உடலியல் மாற்றங்கள் ஏற்படும். எப்படி மீட்டு எடுப்பது? பெ ற்றோர்கள் தங்கள் வேலைகளைத் தாண்டி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கையைக் குறித்த லட்சியங்கள், அவர்களின் பிரச்னைகள், உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்துப் பொறுமையாகக் கேட்டு ஆலோசனை கூற வேண்டும். “உ ன்னிடம் திறமை உள்ளது; உன்னால் முடியும், நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும். அ ன்பாக, நட்பாகப் பழக வேண்டும். கோபப்படாமல், திட்டாமல், அடிக்காமல் ஆறுதலாகப் பேசும்போது பிள்ளைகளுக்கு எதையும் மறைக்காமல் சொல்லும் எண்ணம் வரும். மறைக்காமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லும்போது பிரச்னைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள். இதனால், மன அழுத்தம் வருவதை முன்கூட்டியே தவிர்க்க முடியும். teen age ஒ ழுங்கற்ற உணவுப்பழக்கம்கூட உடலிலும் மனதிலும் சோர்வை ஏற்படுத்தும் என்பதால், சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும். ம னஅமைதியைத் தரக்கூடிய பொழுதுபோக்குகளான ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது போன்றவற்றை செய்ய பிள்ளைகளுக்கு தடைபோடக் கூடாது. பி ள்ளைகள் அவசியம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாகத் தூங்கி எழுந்தாலே அவர்கள் உடலும் மனமும் நன்கு செயல்படும். கு ழந்தைகளுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது. பிடித்தவற்றைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்காமல், உற்சாகம் கொடுக்க வேண்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். என்னால் அதை உணர முடியவில்லை. குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை எல்லாம் கிடையாது என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை இருக்கிறதா, இதிலிருந்து நிரந்தரமாக மீள முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் குறட்டை பல காரணங்களால் வரலாம். தொண்டைக்கு மேல், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதே போல தொண்டைக்குக் கீழ், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். உடல் பருமன் காரணமாகவும் குறட்டை வரலாம். மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாகச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை 'டீவியேட்டடு நேசல் செப்டம்' (deviated nasal septum) என்று சொல்வோம். இதனாலும் குறட்டை வரலாம். டான்சில்ஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம். அசிடிட்டி பிரச்னையின் காரணமாகவோ, அதிகம் மது அருந்துவதாலோ சிலருக்கு குரல் நாண் ( Vocal Cord) வீங்கியிருக்கும். இவர்களுக்கு குரல் மாறும், குறட்டை அதிகமிருக்கும். உடல்பருமனால் வரும் குறட்டை சற்றே சீரியஸானது. அதாவது வயிற்றுக்குள் கொழுப்பு அதிகமிருக்கும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். நுரையீரலின் கொள்ளவு குறையும்போது, நம்மை அறியாமல் வாயைத் திறந்து மூச்சு விட ஆரம்பிப்போம். அப்போது நாக்கு உள்வாங்கி, தொண்டையை அடைக்கும். மூச்சுக் காற்றானது அதைத் தாண்டி, மேலும் கீழும் போகும்போது குறட்டையாக வெளியே வரும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக மாட்டார்கள். அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள். மூளைக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். மறுநாள் அதிக களைப்புடன் உணர்வார்கள். உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவார்கள். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, 'ஸ்லீப் ஸ்டடி' (sleep study) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற பாதிப்பு இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால் நுரையீரல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். எடை அதிகமிருந்தால் எடையைக் குறைக்க அறிவுறுத்துவார்கள். மூக்கில் சதை வளர்ந்திருந்தால் இ.என்.டி மருத்துவரை அணுகச் சொல்வார்கள். குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம். சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் குறட்டை பிரச்னையை 100 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?
Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
“ஜி ம்முக்குப் போறேன், டயட் ஃபாலோ பண்றேன்... ஆயில் ஃபுட்ஸை விட்டுட்டேன். ஆனாலும், வெயிட் குறைஞ்சபாடில்லை” என்று இன்றைக்கும் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், எவையெல்லாம் உடல் எடையை அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டாலே, உடல் ஃபிட்டாக மாறி விடும். அவை என்னென்ன என்று பட்டியலிடுகிறார் பொதுநல மருத்துவர் முருகேஷ். Obesity உ டல் பருமனுக்கு உணவை மட்டுமே குறை சொல்ல முடியாது. எதைச் சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். கிடைத்த கலோரியைச் செலவழித்தோமா என்பதையும் கவனிக்க வேண்டும். செலவாகாத கலோரிதான் கொழுப்பாக மாறும். இது உடலில் சேகரிக்கப்படும். தொடர்ந்து சேகரிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படும். இந்தச் சுழற்சியைப் புரிந்துகொண்டாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம். Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? - டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை ஏ ன் கொழுப்பை உடல் சேகரிக்கிறது என்று சந்தேகம் எழலாம். உடல் ஆரோக்கியமாக இயங்க ஆற்றல் தேவை. தினசரி, போதுமான ஆற்றல் கிடைத்தாலும் எதிர்காலத் தேவையை உடல் கவனத்தில்கொள்ளும். எனவே, தேவையான அளவு பயன்படுத்திக்கொண்டு, மீதம் உள்ள கலோரியை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதுபோல, உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கும். கலோரியை எரிக்க, கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, நடைப்பயிற்சி போன்ற எளிய விஷயங்களைச் செய்தாலேபோதும், கலோரிகள் எரிக்கப்படும். Obesity உ ணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து என நான்கு முக்கிய சத்துக்கள் இருக்கின்றன. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மூன்றும் கலோரிகளாக மாற்றப்படும். இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்டால், உடல் எடையைத் தவிர்க்க முடியும். தே வையான நேரத்தில் உணவு உள்ளே செல்லும்போது, செரிமானம் சீராக நடக்கும். காலை உணவை 11 மணிக்கு சாப்பிட்டால், பாதி உணவு செரிமானம் ஆகாமல் கழிவாகவும் மாறாமல் கொழுப்பாக மாறிவிடும். Obesity இ ரவு நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது, நான்கு பேருடன் பேசும்போது சும்மா நொறுக்குத்தீனிகளைக் கொறிப்பது, ‘இந்தக் கடையில் ஸ்வீட் சூப்பர்’, ‘இந்த கலர்...செம’, ‘இந்த உணவு டேஸ்ட்டி’ எனத் தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் எடை கூடுவதற்கான முக்கியக் காரணங்கள். Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்? நே ரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் வாயு சேரும். சில வகை உணவுகளாலும் வாயு சேரும். இப்படி, பல வகையில் வாயு சேர்ந்தால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும். கா ர்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்டு உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும். gastric problem Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது! டி. வி பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, சுவாரஸ்யம் காரணமாகப் போதுமான அளவைவிட சற்றுக் கூடுதலாகச் சாப்பிட நேரும். ஏ. சியிலேயே இருப்பவர்கள், வியர்க்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உடல் உழைப்பு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதிகளில் சதை போடத்தான் செய்யும். ம லச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்குக் கழிவுகள் உடலில் தேங்கி நிற்கும். உடல் எடை கூட வாய்ப்பாக அமைந்துவிடும். Good Food ஹா ர்மோன் பிரச்னைகளும்கூட பருமனுக்குக் காரணம் ஆகலாம். ஹைப்போதை ராய்டிசம், தைராய்டு, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும். வா ழ்க்கை முறையிலும், உணவிலும் தவறான பழக்கங்களைச் சரி செய்தால், உடல் எடை தானாக குறைந்துவிடும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Doctor Vikatan: கருஞ்சீரகம் மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகுமா?
Doctor Vikatan: கருஞ்சீரகம் என்பது மரணத்தைத் தவிர எல்லா நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும், அதை எல்லோரும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிறைய செய்திகள், வீடியோக்கள் பார்க்கிறோம். உண்மையிலேயே கருஞ்சீரகத்தை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா,எப்படிச் சாப்பிட வேண்டும். எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம். யார் தவிர்க்க வேண்டும். சமையலில் சேர்க்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி என்னதான் மருத்துவத்தன்மை கொண்டதாக இருந்தாலும் கருஞ்சீரகத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக்கூடாது. உடல் சூடு அதிகமுள்ளோர், உடல் வறட்சியடையும் தன்மை கொண்டவர்கள் எல்லாம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதில் கருஞ்சீரகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. ரத்தம் உறைதல் பிரச்னையையும் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இது நல்லது. பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் என்பதால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும், அதன் மூலம் உடல் எடை குறையும். கருஞ்சீரகம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது என்பதால் புற்றுநோயாளிகள், சுவாசப்பாதை தொந்தரவு உள்ளவர்களுக்கெல்லாம் பலனளிக்கும். மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்கும் ஏற்றது. இத்தனை பிரச்னைகளுக்கு மருந்தாகும் என்றாலும், இந்தப் பிரச்னைகள் உள்ளவர்கள் யாரும் இவற்றை மருத்துவ ஆலோசனையின்றி, தாமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இது நல்லது. கருஞ்சீரகத்தை அவரவர் பிரச்னை மற்றும் அதன் வீரியத்தைப் பொறுத்து அளவை கூட்டியோ, குறைத்தோ எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வாதம், பித்தம், கபம்... இவற்றின் அளவைப் பார்த்தும் பரிந்துரைக்கப்படும். தவிர, உடல் எடைக்கேற்பதான் அளவு தீர்மானிக்கப்படும். அதையெல்லாம் மருத்துவரால்தான் சரியாகக் கணிக்க முடியும். Doctor Vikatan: சகலநோய்களையும் தீர்க்குமா கருஞ்சீரகம்... யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? கருஞ்சீரகம் அருமையான மருந்துப்பொருள் என்பதற்காக அதை ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்வதும் தவறு. கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், கருஞ்சீரகத்தைத் தவிர்ப்பதே நல்லது. ரத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம். சாதாரண சீரகம் போல, கருஞ்சீரகத்தை சமையலில் சேர்க்க முடியாது. இது வெறும் மருந்துப் பொருள் மட்டுமே. வெறும் கருஞ்சீரகத்தைப் பொடித்து சாப்பிடுமாறு சிலருக்கு அறிவுறுத்தப்படும். சிலருக்கு எள்ளுடன் கலந்து சாப்பிடச் சொல்வோம். பேரீச்சம்பழம், எலுமிச்சம் பழம், ஏலக்காய், கரிசலாங்கண்ணி, மிளகு போன்ற சில பொருள்களை கற்ப மூலிகைகள் என்று சொல்வோம். அவற்றை சமையலில் சேர்க்கலாம். கருஞ்சீரகம் அப்படிப்பட்டதல்ல. இதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதும் அவரவர் பிரச்னையைப் பொறுத்து மாறும். வெறும் கருஞ்சீரகத்தைப் பொடித்து சாப்பிடுமாறு சிலருக்கு அறிவுறுத்தப்படும். சிலருக்கு எள்ளுடன் கலந்து சாப்பிடச் சொல்வோம். நீரிழிவு உள்ளவர்களுக்கு ஓமம் மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். உடல் எடை குறைய வேண்டும் என்பவர்களுக்கு தனியாவோடு கருஞ்சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொல்வோம். எனவே, யாருக்கு, எவ்வளவு, எப்படி என்பதை மருத்துவரால்தான் சரியாகப் பரிந்துரைக்க முடியும். யூடியூபில் பார்ப்பதையோ, வாட்ஸ்அப்பில் வரும் ஃபார்வேர்டையோ நம்பி, எல்லோரும் எல்லா மூலிகைகளையும் சாப்பிடுவது என்பது நிச்சயம் ஆபத்தானதுதான். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உதவுமா?
காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்கும் மருத்துவர்
சிறுவயதில் காயம் ஏற்பட்டால் கசியும் ரத்தத்ததை உடனே வாயில் வைப்போம். வளர்ந்த பிறகும்கூட பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இது சரியா; இதனால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.பி.சந்திரசேகரன். காயம் ''காயங்களில் இருந்து கசியும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சுவது உடலுக்கு ஒருபோதும் நல்லதல்ல. வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சினால், அது மீண்டும் ரத்தத்தில் கலந்துவிடும் என்பதெல்லாம் பொய்யான புரளி. மாறாக நாம் உறிஞ்சக்கூடிய ரத்தமானது இரைப்பைக்குச் சென்று அங்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் வயிற்றுவலி, வாந்தி போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ரத்தத்தை உறிஞ்ச முற்படும்போது... நாம் ஒரு நாளைக்கு பலவித உணவுப்பொருள்களை உட்கொள்கிறோம். அந்த உணவுப்பொருள்களில் உள்ள பாக்டீரியாக்கள் நமது வாயிலோ, பல்லிலோ தங்கியிருக்கும். நாம், காயத்தின் மீது வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்ச முற்படும்போது பாக்டீரியாக்கள் காயங்களில் ஒட்டிக்கொள்ளும். இந்த பாக்டீரியாக்கள் விரைவில் குணமடையக் கூடிய காயத்தைக்கூட, ஆற விடாமல் பெரிய காயங்களாக, பாக்டீரியா தொற்றாக மாற்றிவிடும். அதனால், காயத்தில் கசியும் ரத்தத்தை உறிஞ்ச வேண்டாம். டெட்டனஸ் ஊசி காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் கழுவி, காயத்தில் ஆன்டிசெப்டிக் மருந்து போட்டுவிட்டாலே போதுமானது. காயம் பெரியது என்றால், அதற்கேற்ப தையல்போடுவதோ, கட்டுப் போட்டுக்கொள்வதோ செய்யலாம். சிறிய காயம் என்றால் காற்றோட்டமாக விட்டாலே சரியாகிவிடும். தேவைப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளோ, வலிநிவாரண மாத்திரைகளோ, டெட்டனஸ் ஊசியோ எடுத்துக்கொள்ள வேண்டும். Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன? இரத்தம் நிற்காமல் கசிந்துக் கொண்டே இருந்தால் ஈரத்துணியால் காயத்தைக் கட்டி அடிப்பட்ட இடத்தை மேல்நோக்கி தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தக் கசிவை கட்டுப்படுத்தும். அதன்பிறகு கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்ட இடத்தில் எலும்போ, நரம்புகளோ, தசை மண்டலமோ உள்காயமாக பாதிக்கப்பட்டிருந்தால் அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். இரத்த கசிவு நிற்காவிடில் மூல காரணம் என்ன என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஹீமோஃபிலியா, ரத்தத்தட்டு குறைபாடுகள் போன்ற நோய் பாதிப்புடையவர்கள் மற்றும் ரத்த உறைவை தடுக்கக்கூடிய மருந்துகளை உட்கொள்பவர்களும் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் சந்திரசேகரன். கைகளிலோ, காலிலோ அல்லது விரல்களிளோ காயம் ஏற்பட்டால் அவற்றில் அணிந்திருக்கக் கூடிய வளையல், மோதிரம், கொலுசு போன்றவற்றை அகற்ற வேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்டால், கை, கால்களில் வீக்கம் ஏற்படும். அந்த நேரத்தில் இந்த அணிகலன்கள் அழுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்துவிடும். இதனால், பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் அவை அழுகிப்போகும் நிலைகூட ஏற்படலாம். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், ரத்த தமணி அடைப்புள்ளவர்களுக்கு காயம் ஆறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, 'சிறிய காயம்தானே' என்று கண்டுக்கொள்ளாமல் இருந்து விடாதீர்கள், காயத்திற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு'' என்கிறார் மருத்துவர் சந்திரசேகரன். Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..'என்பது சாத்தியமா?
Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா....? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்... வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் அடல்ட் எனப்படும் வளர்ந்த ஒருவரின் இரைப்பையின் கொள்ளளவு 1.5 முதல் 2 லிட்டர் வரை இருக்கும். இது அதிகபட்சமாக 4 லிட்டர் வரை விரிவடைய வாய்ப்பு உண்டு. ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும் பசி உணர்வு ஏற்படும். நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும். சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். ஒரே கல், பல மாங்காய்கள்! பருமனைக் குறைக்கும் மருந்துகள் கேன்சரைத் தடுக்குமா? | Long Read இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும். இந்த உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. தவிர, உடல் பருமனைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். எனவே, இதில் வயிறு 1.5 லிட்டரைவிட குறைவாகச் சுருங்கவோ, 4 லிட்டரைவிட அதிகமாக விரியவோ மாற வாய்ப்பில்லை. அவரவர் உடல் எடை, ரத்தச் சர்க்கரை அளவு, ஹார்மோன்கள் சுரக்கும் அளவு போன்றவற்றைப் பொறுத்து இது மாறும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: இன்ஸ்டா ரீல்ஸில் வரும் detox சிகிச்சைகள் குடலை சுத்தம் செய்ய உதவுமா?
Doctor Vikatan: என் வயது 36. என்னுடைய வேலையின் தன்மை காரணமாக என்னால் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிட முடியாது. பெரும்பாலும் வேலை நிமித்தம் வெளியே செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவேன். அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுவோர், குடலை எளிதாகச் சுத்தம் செய்யும் வழிகள் என இன்ஸ்டாவில் நிறைய ரீல்ஸ் பார்க்கிறேன். அவை எல்லாம் உதவுமா... வெளியிடங்களில் சாப்பிடும்போது சில நேரங்களில் உடனே வயிறு கலக்குகிறது. அதற்கு எளிமையான தீர்வு ஏதும் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி சித்த மருத்துவர் அபிராமி ஹாஸ்டலில் தங்கியிருப்போர், வெளியே அலையும் வேலையில் இருப்போருக்கெல்லாம் தினமும் மூன்று வேளைகளும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது. தினமும் மூன்று வேளைகளுமே வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறோம். வெளி உணவுகளால் குடலில் சேரும் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்ற மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என எதுவும் கிடையாது. இன்ஸ்டா ரீல்ஸில் நீங்கள் பார்க்கிற விஷயங்களை எல்லாம் அப்படியே நம்பி பின்பற்றுவது ஆபத்தானது. வாரத்தில் ஒரு நாள் நீங்கள் பின்பற்றக்கூடிய எளிய சித்த மருத்துவம் ஒன்று உள்ளது. சித்த மருந்துக் கடைகளில் சுண்டைவற்றல் சூரணம் என கிடைக்கும். மார்க்கெட்டிங் வேலையில் இருப்போர், வெளியே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போரெல்லாம் இந்தச் சூரணத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் அல்லது நீர்மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும். சுண்டை வற்றல் சுண்டை வற்றலை பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. உண்மையில், குடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் சுண்டை வற்றலுக்கு நிகரே இல்லை எனலாம். சுண்டை வற்றல் இருந்தால் கையில் தங்கம் இருப்பதற்குச் சமம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கெட்ட பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்கும் தன்மை சுண்டை வற்றலுக்கு உண்டு. கிராமங்களில் வாரம் முழுக்க சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என சாப்பிட்டாலும், வார இறுதியில் சுண்டை வற்றலைச் சேர்த்துக் குழம்பாகச் செய்து சாப்பிடுவார்கள். அப்பளம் பொரிப்பது போல சுண்டை வற்றலைப் பொரித்து, பொடித்து, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து வாரம் ஒருநாள் சாப்பிட்டால்கூட குடல் சுத்தமாகிவிடும். குடலை உணவுகள் மூலம்தான் சுத்தப்படுத்த முடியும். டீடாக்ஸ் சிகிச்சைகள் எல்லாம் தேவையே இல்லை. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய உணர்வு வரும். அந்தப் பிரச்னைக்கும் சுண்டைவற்றல் சூரணம் சூப்பர் மருந்தாகச் செயல்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: `பித்தப்பை கற்கள்' அறுவை சிகிச்சையைத் தவிர்க்க சித்த மருந்துகள் உதவுமா?
Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?
’’க ர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அந்த இடத்தைச் சுற்றி நரம்புகள் சுருண்டு விடும். இதையே வெரிகோஸ் வெயின்ஸ் என்கிறோம். இது, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வந்தால், நாளடைவில் அந்த இடமே பச்சை நிறத்தில் மாறி நரம்புகள் சுருண்டு, அந்த இடம் முழுவதுமே புண்ணாகிவிடும். ஆரம்ப காலத்திலேயே இதைச் சரி செய்ய வேண்டும்; இல்லையென்றால் கஷ்டமாகிவிடும்.சில இயற்கை மருத்துவ முறைகளைப் பயன்படுத்தினால், இதைச் சரி செய்துவிடலாம்’’ என்கிற இயற்கை மருத்துவர் யோ.தீபா, அந்த முறைகள்பற்றி விளக்குகிறார். உடல் எடை கோல்டு லெக் பேக் ஒரு காட்டன் துணியை மூன்று மீட்டர் வரை நீளவாக்கில் கிழித்து, அதை நீரில் நனைத்து, நரம்பு சுருண்டிருக்கும் இடத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும். பிறகு அதன் மேல் உலர்ந்த துணியால் மூடி, 45 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இந்த கோல்டு லெக் பேக்கை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதை தினசரி செய்து வந்தால், ரத்தநாளங்களில் ரத்தம் எங்கும் தடைபடாமல் செல்ல ஆரம்பிக்கும். இதனால், சுருண்ட நரம்புகள் படிப்படியாக சரியாகும். சாப்பிட்ட உடனே இதை செய்யக்கூடாது; சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இதைச் செய்யலாம் அல்லது சாப்பிடுவதற்கு முன்னால் செய்யலாம். மண் சிகிச்சை முறை மண்ணை உடல் முழுவதும் பூசிக்கொண்டு வெயிலில் உட்கார வேண்டும். இந்த மண் சிகிச்சை முறையைச் செய்தால், பிற்காலத்தில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படாமல் வெரிகோஸ் வெயின் சரியாகலாம். தவிர,அக்குபஞ்சர் சிகிச்சையைச் செய்தால் அது ரத்த அடைப்புகளைச் சரி செய்யும்; இதனால், வெரிகோஸ் வெயின் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கலாம். மசாஜ் மசாஜ் சிகிச்சை லாவண்டர் எண்ணெய், லெமன் கிராஸ் எண்ணெய் வைத்து அந்தப் பகுதியில் மசாஜ் செய்தால், எளிதில் தளர்ந்த நரம்புகளை சரி செய்யலாம். இயற்கை மருத்துவத்தில் செய்யப்படுகிற ஸ்வீடிஷ் மசாஜை தினசரி 15 நிமிடங்கள் செய்து வந்தால், சுருண்ட ரத்தநாளங்கள் மெள்ள மெள்ள பழைய நிலைக்குத் திரும்பும். Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்! வெரிகோஸ் வெயினுக்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி? 50 கிராம் நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 பிரண்டைத் துண்டுகள் போட்டு, கூடவே10 கிராம் இஞ்சியை இடித்துச் சேர்த்து, மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு, அதை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் சிறிதளவு எடுத்து லேசாக சூடு செய்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு உள்ள இடத்தில் பூசிக்கொள்ளலாம். இதனால், நாளடைவில் வலி மற்றும் நரம்பு சுருள் குறையும். யோகா யோகா முறையிலும் சரி செய்யலாம்? உத்தான பாதாசனம் மற்றும் சலபாசனம் போன்ற யோகா முறைகளைப் பயன்படுத்தி, வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம். ஆனால், நான் இங்கே சொல்லியுள்ள குறிப்புகளை ஓர் இயற்கை மருத்துவரின் நேரடி ஆலோசனைப் பெற்று செய்துவந்தால், சீக்கிரம் குணமடைய வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் டாக்டர் தீபா. Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?
தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243
தா ம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் ஓகே தானா..? கிட்டத்தட்ட எல்லா கணவன் மனைவி இடையிலும் இருக்கிற சந்தேகம் இது. விளக்கம் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்திய உறவு ஒரு சுலபமான வழி திருப்தியான தாம்பத்திய உறவுக்கு ’’ஓரல் செக்ஸ் இல்லையென்றால் பெண்கள் ஆர்கசம் அடைவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனென்றால், பெண்கள் தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடைவதற்கு 14 நிமிடங்கள் ஆகும். அதுவரை விந்து வெளியேற்றாமல் ஆண்களால் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது மிக மிக கடினம். அதனால், ஓரல் செக்ஸ் மூலம் உங்கள் மனைவியை முதலில் ஆர்கசம் அடைய செய்துவிடுவதே, திருப்தியான தாம்பத்திய உறவுக்கு ஒரு சுலபமான வழி. ஓரல் செக்ஸ் ஆனால், பழமையான மனப்பான்மை கொண்ட கணவர்களாலும் மனைவிகளாலும் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏன் நான் கணவர், மனைவி என இருவரையும் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஓரல் செக்ஸ் அசிங்கம் என்கிற எண்ணம் இருக்கும். இன்னொரு குடும்பத்திலோ மனைவிக்கு இந்த எண்ணம் இருக்கும். இந்த இடத்தில்தான் ஓரல் செக்ஸ் பல தம்பதிகளின் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது தவிர்க்கப்பட வேண்டியதாக புரிந்து கொள்ளப்படுகிறது’’ என்றவர், ஓரல் செக்ஸ் தொடர்பான தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார். தாம்பத்திய உறவில் 550 பொசிஷன்கள் ’’ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஓரல் செக்ஸ் பற்றி காமசூத்ரா மிக விரிவாக பேசியிருக்கிறது. தாம்பத்திய உறவில் 550 பொசிஷன்கள் அதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஸோ, தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸ் பற்றி இந்தியர்களுக்கு சரியான புரிதல் இருந்திருக்கிறது. அதனால்தான், நம்முடைய கோயில்களில் தாம்பத்திய உறவு தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தான், செக்ஸில் குழந்தைப் பிறப்பதற்கான பொசிஷனை தவிர்த்து மற்ற பொசிஷன்களை இயற்கைக்கு மாறான உறவு என்று குறிப்பிட்டனர். அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239 தொடர்பான முழுமையான நாலேட்ஜ் இருந்தது நம்முடைய சமூகத்தில் தாம்பத்திய உறவு ஆனால், இப்போது அவர்களே தாம்பத்திய உறவில் ஓரல் செக்ஸும் ஒன்றுதான். இப்படிப்பட்ட பல்வேறு நிலைகளை உள்ளடக்கியதுதான் சிறப்பான தாம்பத்திய உறவு என்பதையும் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், பெண் உறுப்பில் இருக்கிற ஜி ஸ்பாட் தான் ஆர்கசம் அடைகிற இடம் என்று வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகள் செய்து இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வாத்ஸ்சாயனாருக்கு பின்வந்த கல்யாண மல்லா என்பவர் தன்னுடைய அனங்க ரங்கா என்கிற புத்தகத்தில், அந்த ஜி ஸ்பாட்டை அர்த்த சந்திர நாடி என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆக, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நம்முடைய சமூகத்தில் தாம்பத்திய உறவு தொடர்பான முழுமையான நாலேட்ஜ் இருந்தது. தாம்பத்திய உறவு மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242 'தொண்டையில புற்றுநோய் வந்துடும்னு சொல்றாங்களே டாக்டர்’ ஆபாசப்படங்கள் வர ஆரம்பித்ததில் இருந்துதான், இதில் சிக்கல் வர ஆரம்பித்தது. ஆபாசப் படங்களையும், பாலியல் கல்வியும் ஒன்றுதான் என குழப்பிக் கொண்டதால்தான், தாம்பத்திய உறவின் ஒருநிலையான ஓரல் செக்ஸை அசிங்கம், தவறு, ஆபாசம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுத்தமும் விருப்பமும்தான் முக்கியம். ’ஓரல் செக்ஸ் செய்ய ஆசைதான். ஆனா, தொண்டையில புற்றுநோய் வந்துடும்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பவர்களுக்கு ஒரு வார்த்தை. கணவன் மனைவிக்கு இடையே, அவர்கள் தங்கள் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொண்டு ஓரல் செக்ஸ் செய்யும் போது தொண்டை புற்று நோயை முற்றிலும் தவிர்க்க முடியும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: 17 வயதில் 33 கிலோ; நன்றாகச் சாப்பிட்டும் அதிகரிக்காத எடை.. என்னதான் பிரச்னை?
Doctor Vikatan: என் மகளுக்கு வயது 17. அவள் மிகவும் மெலிந்து காணப்படுகிறாள் .160 செ.மீ உயரம் இருக்கிறார். அவரது உடல் எடை 33 அல்லது 34-க்கு மேல் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பீரியட்ஸ் நாள்களில் மிகவும் பலவீனமாக காணப்படுகிறாள். நன்றாகச் சாப்பிடுகிறாள். ஆனாலும், அவள் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லை. டாக்டரிடம் சென்று பரிசோதித்தால் ஒரு பிரச்னையும் இல்லை என்கிறார். அவரது உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டுமா? இந்தப் பிரச்னைக்கு வேறு என்னதான் தீர்வுகள்? - SATHYAN, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ஒருவரது பி.எம்.ஐ (BMI) அளவீட்டை வைத்துதான் அவரது உடல்எடை சாதாரணமாக இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும். பிஎம்ஐ அளவீடானது 18.5-க்கும் குறைவாக இருந்தால் அந்த நபர் அண்டர்வெயிட்டில் (under weight) இருக்கிறார் என்று சொல்வோம். உங்களுடைய மகளின் பிஎம்ஐ அளவீடு, 18.5-க்கும் குறைவாக இருப்பதால் அவர் அண்டர்வெயிட் பிரிவில்தான் வருவார். உங்கள் மகளின் உயரத்துக்கு, அவர் 45- 50 கிலோவரை எடை இருக்க வேண்டும். ஆனால், அவர் 33 கிலோதான் இருக்கிறார் என்பதை மிகக்குறைவான உடல் எடையாகத்தான் கணக்கிட வேண்டும். உடல் எடை குறைவாக இருப்பதால் உடலளவில் நிறைய பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு, எலும்புத் தேய்மானம், ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு, சருமம் மற்றும் கூந்தலில் பாதிப்பு, பற்களில் பிரச்னை போன்றவை வரலாம். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எனர்ஜி குறைவாக இருக்கும். அதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வரலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். எப்போதும் களைப்பாக உணரலாம். பீரியட்ஸ் சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். திருமணத்துக்குப் பிறகு கருத்தரித்தால், குறைமாதப் பிரசவம் ஏற்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எனர்ஜி குறைவாக இருக்கும். உங்கள் மகள் எடை குறைவாக இருக்க என்ன காரணம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் எடை குறைவாக இருக்க, அவரது குடும்பப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் அனைவரும் எடை குறைவாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படி இருக்கலாம். சிலருக்கு மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றச் செயல்பாடு மிக அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் எடை கூடாது. ஒருவர் உடல்ரீதியான இயக்கத்தில் அதிகம் ஈடுபடுபவராக இருந்து, அதற்கேற்ப சாப்பிடாமல் இருந்தாலும் எடை குறைவாக இருக்கலாம். உதாரணத்துக்கு, விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுபவராக இருக்கலாம்... குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில் அவருக்கு உடல் எடை ஏறாது. ஏதேனும் தீவிர உடல்நலப் பிரச்னை இருந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடல் எடை ஏறாது. தைராய்டு பிரச்னை, நீரிழிவு, குடல் சார்ந்த பிரச்னை, உணவு ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேராமல், எடை குறையலாம். புற்றுநோய் பாதிப்புக்கும், உடல் எடை குறைவது மிக முக்கியமான ஓர் அறிகுறி. உங்கள் மகள் விஷயத்தில் அவர் நன்றாகச் சாப்பிடுவதாகச் சொல்லியிருப்பதால், அந்த ரிஸ்க் இருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் இருந்தால் பசி எடுக்காது. டிப்ரெஷன், மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்னைகள், அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உண்ணுதல் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் எடை குறைவாக இருக்கலாம். டிப்ரெஷன், மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்னைகள், அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உண்ணுதல் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் எடை குறைவாக இருக்கலாம். Doctor Vikatan: எடை குறைவான குழந்தை... பொட்டுக்கடலை மாவுக் கஞ்சி உடல் எடையை அதிகரிக்குமா? எனவே, உங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு அளவு போன்றவற்றைப் பரிசோதியுங்கள். சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவை தேவைப்படலாம். ஹார்மோன் பிரச்னைகள் இருந்தால், எண்டோகிரைனாலஜிஸ்ட் எனப்படும் நாளமில்லா சுரப்பியியல் சிகிச்சை மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம். அதிக புரதச்சத்தும், முழுத்தானியங்களால் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவுகளை எடுக்கும்போது உடல் எடை அதிரிக்கும். உதாரணத்துக்கு, பீநட் பட்டர், புரோட்டீன் பார் போன்றவை. அசைவம் சாப்பிடுவோர், நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் சிறு இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். தினம் கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடலாம். கலோரி அடர்த்தியான உணவுகளைச் சாப்பிடலாம். இத்தனை நாள்கள் உடல் எடை சரியாக இருந்து, திடீரென குறையத் தொடங்கினாலோ, மற்றவர் முன்னிலையில் சாப்பிடாமல் மறைந்து மறைந்து சாப்பிட்டாலோ, களைப்பாக உணர்ந்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டும். டெஸ்ட்டுகள் செய்து நார்மலாக இருக்கும்பட்சத்தில், உணவியல் ஆலோசரின் உதவியோடு, எடையை அதிகரிக்கச் செய்கிற உணவுகளைச் சாப்பிட வைக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!
அ ழகு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முகம் மட்டுமே. அந்த முகத்தை அழகாகவும் பொலிவுடனும் காண்பிப்பதற்கு ஏராளமான கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது. அந்த வேதிப்பொருள் சிலருக்கு முகத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக கிடைக்கும் சில மூலிகைகளைப் பயன்படுத்தி முகத்தை அழகுடனும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். இவையனைத்தையும் விடுத்து, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஓர் ஆயுர்வேத அழகுக்குறிப்பை சொல்வதோடு, அதை தயாரிக்கும் முறையையும் சொல்லித்தருகிறார் தேனியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா. ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்: காய்ச்சாத பால், நவரா அரிசி மாவு, லாக்ஷா என்கிற கோல் அரக்கு, மஞ்சட்டி தூள் ((Manjistha), ஒரிஜினல் கஸ்தூரி மஞ்சள் தூள், பாலில் கலந்த குங்குமப்பூ. செய்முறை: நவரா அரிசி மாவு 2 ஸ்பூன், லாக்ஷா தூள் சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் தூள் (எரிச்சல் ஏற்படலாம், அதனால் சிறிதளவு மட்டும் போதும்) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சுத்தமான வெள்ளைத்துணியில் பொட்டலமாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பசும்பால் எடுத்து நன்கு காய்ச்சி, அதில் கட்டி வைத்த பொட்டலத்தைப் போட்டு பாலைக் காய்ச்சிக்கொண்டே இருக்க வேண்டும். பொட்டலத்தில் உள்ள தூளின் நிறம் பாலில் இறங்கி, பாலின் நிறம் மாறும் அளவிற்கும், பால் சுண்டும் அளவிற்கும் நன்கு காய்ச்ச வேண்டும். தேவையென்றால், பாலில் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். சூடு தணிந்த பிறகு, பாலில் ஊறிய பொட்டலத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்படும் விழுதை (கிரீம்) முகத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் முகத்தை நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். beauty பிழிந்து எடுக்கப்பட்ட விழுதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாள்தோறும் பயன்படுத்தலாம். இந்தக் கிரீம் முகத்திற்கு மட்டுமல்ல, உடலிலும் பூசிக்கொள்ளலாம். முகத்தை, உடலை மாசுமருவில்லாமல் கண்ணாடிப்போல மாற்றும் ஆயுர்வேத அழகுக்குறிப்பு இது. மசாஜ் செய்யும்போதும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். Beauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்! இந்த செய்முறை கடினமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், விரைவில் செய்துகொள்ள எளிமையான இந்த ஆயுர்வேத அழகுக் குறிப்பைப் பின்பற்றலாம். மஞ்சட்டியை மஞ்சள் உரசும் கருங்கல்லின் மீது உரசி எடுக்க வேண்டும். அதனுடன் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் களிம்பை முகத்தில் பூசி, நன்கு காயவைக்க வேண்டும். பின்னர், முகத்தை நீரில் அலசிக்கொள்ளலாம். முகம் பொலிவுடன் காணப்படும். இந்த அழகுக் குறிப்புகளை நாள்தோறும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித பக்கவிளைவுகளும் வராது'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா. இந்தக் கட்டுரையில் உள்ள செய்முறை வீடியோவை மேலே காணலாம்.
Doctor Vikatan: நுரையீரலில் சளி கோத்து, உயிர் பயத்தை தரும் மூச்சுத்திணறல்.. தவிர்க்க முடியுமா?
Doctor Vikatan: நுரையீரலில் சளி கோத்திருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் முதியவர்கள் குறித்து அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். முதியவர்களுக்கு நுரையீரலில் ஏன் சளி கோத்துக்கொள்கிறது... அதை வெளியேற்ற சிகிச்சைகள் கிடையாதா, உயிரிழப்பைத் தவிர்க்க முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி. நுரையீரல் மருத்துவர் திருப்பதி வயதானவர்களுக்கு நுரையீரலில் சளி கோத்துக்கொள்ள சிஓபிடி (Chronic obstructive pulmonary disease) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பும், காற்றுக்குழாய் முழுமையாக சிதைவடையும் பிரான்கியெக்டாசிஸ் (Bronchiectasis) என்ற பாதிப்பும் முக்கிய காரணங்கள். இந்த இரண்டாவது பிரச்னையில் சளி அதிகமாகத் தங்கிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இது குழந்தைப்பருவத்தில் பாதிக்கும் என்றாலும், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. முதியவர்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது பார்க்கின்சன்ஸ் பாதிப்பு. இது அவர்களது நரம்பியல் மண்டலத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்னை. இவர்களுக்கு விழுங்குவதில் சிரமம் இருக்கும். அதனால் உணவானது உணவுக்குழாய்க்குள் போகாமல், காற்றுக்குழாய்க்குள் போய்விடும். அதனால் புரையேறும். இந்நிலை சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகலாம். அடுத்தது முதியவர்களை பக்கவாதம் பாதிக்கும்போதும் மேற்குறிப்பிட்ட பிரச்னை ஏற்படும். நுரையீரலில் சளி அடைத்துக்கொள்ள இவையெல்லாம்தான் பிரதான காரணங்கள். சளியின் அளவு அதிகமாக இருந்தாலோ, அதன் அடர்த்தி மிக அதிகமாக இருந்தாலோ அவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும். மாத்திரைகள் கொடுப்பதற்கு முன், அந்தச் சளியை வெளியே எடுப்பதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். Doctor Vikatan: நாள்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? இப்படி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு சளி அதிகரித்ததற்கான காரணத்தை முதலில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இன்ஃபெக்ஷன் ஏதேனும் இருந்தால், ஆன்டிபயாடிக் உள்ளிட்ட மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். பிரான்கியெக்டாசிஸ் பாதிப்பில் ஒருவருக்கு சேரும் சளியானது, ஒன்றிரண்டு டம்ளர்களுக்கு மேல் என்ற அளவில் இருக்கலாம். மாத்திரைகள் கொடுப்பதற்கு முன், அந்தச் சளியை வெளியே எடுப்பதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். அதற்கு நெஞ்சுப் பகுதிக்கான பிசியோதெரபி (Chest physiotherapy ) செய்யப்பட வேண்டும். அதில் பலவகை உண்டு. சில மருத்துவமனைகளில் நோயாளியைப் படுக்க வைத்து முதுகில் தட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சளியின் சுரப்பை அசைய வைக்கச் செய்யப்படுகிற சிகிச்சை இது. அடுத்தது 'போஸ்டுரல் டிரெய்னேஜ்' (Postural drainage ) என்று சொல்வோம். அதாவது, நுரையீரலின் வலதுபக்கத்தில் சளி இருந்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் ஈர்ப்புவிசை காரணமாக சளியானது சற்று கீழே இறங்கும். அது பிரதான காற்றுப்பாதைக்கு வந்ததும், இருமி, அதை வெளியேற்ற வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, நீராவி பிடிப்பது, சளியை இளக வைக்கும் மருந்துகள் போன்ற சிகிச்சைகளும் உள்ளன. தினமும் சளியை வெளியேற்ற வேண்டியிருக்கும். குறிப்பாக, பார்க்கின்சன்ஸ் பாதிப்புள்ளோர், புரையேறாமலிருக்க முறையான நரம்பியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி, சிலருக்கு புரையேறுவதைத் தற்காலிகமாகத் தடுக்க டியூப் வழியே உணவு (Nasogastric tube feeding) கொடுக்க வேண்டி வரலாம். சிலருக்கு புரையேறுவதைத் தற்காலிகமாகத் தடுக்க டியூப் வழியே உணவு (Nasogastric tube feeding) கொடுக்க வேண்டி வரலாம். Myths and Facts:10 சிகரெட் பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வராதா? ஸ்ட்ரோக் பாதித்தவர்களுக்கு தொண்டையில் நிற்கும் சளியை வெளியேற்றத் தெரியாது. விழுங்கவோ, துப்பவோ முடியாத நிலையில் சக்ஷன் போட்டு அதை வெளியேற்றுவோம். சிலர் டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்திருப்பார்கள். அவர்களுக்கு சளி கோத்தால், காற்று உள்ளேயும் போகாது, வெளியேவும் வராது. அந்நியப் பொருள் அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். டிரக்கியாஸ்டமி செய்த பிறகு சரியான அக்கறை எடுக்காத நிலையில்தான் சளி கோத்து, உயிரிழப்பு ஏற்படும். மற்றபடி சளியாமல் மூச்சடைத்து உயிரிழப்பது என்பது மற்றவர்களுக்கு அவ்வளவு சகஜம் அல்ல. டிரக்கியாஸ்டமி செய்தவர்களுக்கு அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள், சக்ஷன் போட்டு சளியை வெளியேற்றும் சிகிச்சை பற்றியும், சளி அடைத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டால் எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவை அவ்வப்போது சரிபார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.