SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
... ...View News by News Source

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா அல்சர் பிரச்னை?

Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை.  புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு.  70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்) Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன? உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும்.  அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும். அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம். எண்ணெயில் பொரித்த உணவு Doctor Vikatan: நெஞ்சுப் பகுதியில் வலி... அடிக்கடி வாய்வுப்பிடிப்பு,  வலியிலிருந்து எப்படி மீள்வது? சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும்.  உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Jul 2024 9:00 am

Doctor Vikatan: எலுமிச்சை, தக்காளி, மஞ்சள்... சமையல் பொருள்களை  சருமத்தில் apply பண்ணலாமா..?

Doctor Vikatan: என் தோழி தினமும் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக்கொள்வாள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தயிர், புதினா சாறு... இப்படி எதையும் விட்டுவைக்க மாட்டாள். எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவள் கருத்து. இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது... சமையலுக்கான அனைத்துப் பொருள்களையும் நேரடியாக சருமத்திலும் apply செய்யலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா    சருமநல மருத்துவர் பூர்ணிமா சமையலுக்கான பொருள்களை முகத்தில் தடவிக்கொள்வது பற்றி கேட்கிறீர்கள். சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யூரியா என்பது  நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்கவைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.  எல்லா பொருள்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருள்களால் ஏற்படும் அலர்ஜியை  சரும மருத்துவத்தில், 'அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.  எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல.  facepack Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா? சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்னையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்னைகள் வராது.  ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒருமுறையோ, பத்து நாள்களுக்கு ஒருமுறையோ செய்து கொள்ளலாம். மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருள்களும் பாதுகாப்பானவையாக  இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 26 Jul 2024 9:00 am

பெண்ணின் வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவாக ஊசியை தன் வயிற்றினுள் வைத்ததாகக் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரு, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (52). இவர் 2004-ம் ஆண்டு, தனது 32 வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். stomach pain (Representational image) பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; - முன்னாள் டிஜிபி-யின் தண்டனையை உறுதிசெய்த கோர்ட்! இதற்காக சிகிச்சை பெற சென்ற தனியார் மருத்துவமனையில், இவருக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போதே, குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) பகுதியையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசௌகர்யம் என மருத்துவர்கள் அதனை அலட்சியம் செய்துள்னர். அப்பெண், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோதும், அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. Surgical needle அறுவைசிகிச்சை முடிந்தும் பல ஆண்டுகளாக வயிற்று வலி நீடித்ததால், வேறொரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார் பத்மாவதி. அவர் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒரு வேற்றுப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றுவலிக்கு காரணம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு அவருக்கு அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது, 3.2 செ.மீ அளவுள்ள, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஊசி (Surgical Needle) அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போது இந்த ஊசி தவறுதலாக அவர் வயிற்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களுக்கும் எதிராக கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்குத் தொடர்ந்திருந்தார். judgement இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ’பத்மாவதிக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வழக்குச் செலவுக்காக ரூ.50,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். மேலும், அவர் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. `மாற்றத்தை விரும்புகிறேன், சுஷாந்த் சிங் இறந்த பிறகு நடிப்பு வேண்டாம் என முடிவு’- ரியா சக்ரபோர்த்தி

விகடன் 25 Jul 2024 5:07 pm

Doctor Vikatan: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் heart attack அதிகம் ஏற்பட என்ன காரணம்?

Doctor Vikatan: பொதுவாக மாரடைப்பு என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவு என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீப காலமாக இளவயதினரும் பெண்களும் மாரடைப்பு பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். உண்மையில் அவர்களுக்கு என்னதான் நடக்கிறது...? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம். மருத்துவர் சொக்கலிங்கம் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதயத்தின் ரத்தக்குழாய்களின் அமைப்பு, மற்றும் அவற்றில் நடக்கும் மாறுதல்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதயத்தின் வலது, இடது பக்கங்களில்  2- 3 மில்லி மீட்டர் அளவில் இரண்டு இதய ரத்தக் குழாய்கள்  இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன், சர்க்கரை, மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது இல்லை என்றால் இதயம், மூளை என எல்லாமே செயலற்றுப் போய், மனிதன் இறந்துவிடுவான்.  மகிழ்ச்சியான மனநிலை இதய நலம் 22: இதயத்துக்கு பலம் சேர்க்குமா இஞ்சி, பூண்டு, கருஞ்சீரகம்? மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்வரைதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும். எண்டார்ஃபின் (Endorphin ) என ஒரு ஹார்மோன் நம் உடலில் சுரக்கும். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே சுரக்கக்கூடியது இது. இந்த ஹார்மோன்தான் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை தக்கவைக்கிறது. ஸ்ட்ரெஸ், கவலை என மனிதன் மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரீனலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் படியத் தொடங்கும். அப்படிப் படியும்போது, உங்களைக் காக்கும் கொலஸ்ட்ராலே, உங்களை அழிக்கும் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.  இப்படி கொலஸ்ட்ரால்  படிய குறைந்தது 15-20 வருடங்கள் ஆகும். இதய ரத்தக்குழாயின் உள்ளே உள்ள லைனிங்கானது கண்ணாடிபோல  ஸ்மூத்தாக இருக்கும். அப்படி இருக்கும்வரை ரத்தம் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும். தீவிர ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்நிலையில் எண்டார்ஃபினுக்கு பதில் அட்ரீனலின் சுரந்து, லைனிங்கில் சின்ன கீறல் விழும். அதனால்  அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதற்கு 'கொரோனரி த்ராம்போசிஸ்' (Coronary Thrombosis)  என்று பெயர்.   ரத்தத்தில் கொழுப்பு படிய 15-20 வருடங்கள் ஆகும் என்றாலும், இந்தக் கீறல் விழ சில நிமிடங்கள் போகும்.  உடனடியாக சிகிச்சை எடுத்தால் மட்டுமே இந்த நபரை காப்பாற்ற முடியும். சமீப காலத்தில் 20-25 வயதில் ஆண்களும், பெண்களும் மாரடைப்பில் இறப்பதன் பின்னணி இப்போது புரிகிறதா? ஹார்ட் அட்டாக் இதய நலம் 19: மாரடைப்பு... அதிகாலை வேளைகளில் மட்டும் அதிகமாக நிகழ்வது ஏன்? இதய ரத்தக் குழாயின் விட்டம் 0 என்பது தான் நார்மல். அதுவே 100 என்ற நிலையை எட்டினால் அது 100 சதவிகித அடைப்பு என்று அர்த்தம். 100 சதவிகித அடைப்பு இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வரும். 70,80 சதவிகித அடைப்பில் எல்லாம் வராது. அது 100-ஐ எட்டியதும் சட்டென வந்துவிடும். பிறகு எப்படி 80, 90 சதவிகித அடைப்பு ஏற்பட்டவர்கள் சட்டென இறக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். 50 வயதுள்ள ஒரு நபருக்கு 70-80 சதவிகித அடைப்பு இருப்பதாக  வைத்துக்கொள்வோம். தீவிர ஸட்ரெஸ் காரணமாக அந்த அடைப்பின் மேல் லேசான கீறல் வரும். கீறல் எங்கு விழுந்தாலும் அங்கே ரத்தம் உறைந்துவிடும். உடனடியாக அது 100 சதவிகித அடைப்பாக மாறிவிடும். அது இறப்புக்கும் வழிவகுக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 25 Jul 2024 9:00 am

கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டை சுத்தம் செய்ய தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

கோவை, ராம்நகர் பகுதியில் தனியார் அப்பார்ட்மென்ட் உள்ளது. அங்கு தாய், மகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு  வெளியில் வரவில்லை. அக்கம், பக்கத்தினர் யாருடனும் தொடர்பில்லாமல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். குப்பை வெளி உலக தொடர்பே இல்லாமல், வீட்டையும் சுத்தம் செய்யாமல் குவிந்து கிடந்த குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அவர்களின் வீட்டுக்கு சென்று சுமார் 2 டன் குப்பைகளை அகற்றியது. ஆனாலும் குப்பைகள் அதிகமாக இருந்த நிலையில், அப்பார்ட்மென்ட் அசோஸியேசன் நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. குப்பை அகற்றியபோது “செய்திகள் வெளியானதால் எங்கள் அப்பார்ட்மென்ட் பெயர் கெட்டுவிட்டது. அவர்கள் ஒரு வீட்டை சுத்தம் செய்வதால், எங்கள் அப்பார்ட்மென்ட் முழுவதும் பூச்சிகள் பரவிவிடும்.” என்று சொல்லி அலுவலர்கள், தன்னார்வலர்களை அனுமதிப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதி மக்களிடம் பேசியபோது, “தாய், மகள் நல்ல வசதி படைத்தவர்கள். தற்போதிருக்கும் அப்பார்ட்மென்ட் அவர்கள் சொந்த வீடு. இதுதவிர அவர்களுக்கு மேலும் சில வீடுகள் இருக்கின்றன. குப்பை மூதாட்டியின் கணவர் இருந்தபோதும், அந்த வீட்டுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அடிக்கடி பூஜை நடத்துவார்கள். வெளி உலக தொடர்பு பெரிதாக இருக்காது. அவர் இறந்தப் பிறகு இவர்கள் வெளியில் வருவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர். வீட்டில் திடீரென நள்ளிரவு பூஜை செய்வார்கள். தாய், மகள் இருவருமே ஆங்கிலம் நன்கு பேசுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வீட்டை சுத்தப்படுத்தியபோது, அந்த சாலை முழுவதும் கரப்பான் பூச்சிகள் ஓடின. அந்தளவுக்கு சுகாதாரமே இல்லாமல் உள்ளது. இத்தனைக்கும் அவர்களின் உறவினர்கள் சிலர் அந்த அப்பார்ட்மென்ட்டிலேயே வசிக்கிறார்கள். குப்பை மாநகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றினாலும், அவர்கள் அகற்றியதை விட இன்னும் 2 மடங்கு குப்பை வீட்டில் உள்ளது. குப்பைகளை அகற்றி, தாய் மகள் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.” என்றனர். இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, “அப்பார்ட்மென்ட் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. உள்ளே சென்ற அலுவலர்கள், ஊழியர்களை மிரட்டுகிறார்கள். அங்கிருக்கும் பலர் அந்த பெண்களின் உறவினர்கள். ஏற்கெனவே நாங்கள் சென்றபோது, ‘உங்களை யார் வரச்சொன்னார்கள். எங்கள் பொருள்களை காணவில்லை. ஆணையர் சிவகுரு பிரபாகரன் உங்கள் மீது திருட்டு வழக்கு கொடுத்துவிடுவோம்.’ என்று கூறினார்கள். இதனால் காவல்துறை உதவியுடன் சென்று தான் தூய்மை பணி செய்தோம். இந்த வாரத்தில் மீதமுள்ள குப்பைகளை அகற்றி, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். ’பொறுத்துப் பார்த்தேன், பொறுமை இழந்தேன்’ - சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய அமமுக பெண் கவுன்சிலர்!

விகடன் 24 Jul 2024 6:52 pm

தாம்பத்திய வாழ்க்கையை கட்டாயம் பாதிக்கும் இந்தப் பிரச்னை... |காமத்துக்கு மரியாதை - 185

''என் ஹஸ்பண்ட் உடல் பருமனாக இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு'' - பல பெண்களுடைய சொல்லப்படாத பிரச்னை இது. இதற்கு என்ன தீர்வு? சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. ''உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, இருவரில் ஒருவருடைய உடல் எடை அதிகமாக இருந்தாலும் கணவன், மனைவி இருவராலுமே தாம்பத்திய உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது. உருவ கேலி செய்யாமல், 'நீங்கள் கொஞ்சம் இளைத்தால், நம்முடைய தாம்பத்திய உறவு இன்னும் சுகமாக இருக்கும்' என்பதை அன்பாக, பக்குவமாக எடுத்துச் சொல்வதே இதற்கான முதல் தீர்வு. Couple ``கணவர் என்ன சொன்னாலும் இதைச் செய்யாதீங்க...'' | காமத்துக்கு மரியாதை - 184 இரண்டாவதாக, மருத்துவரை சந்தித்து, உங்கள் கணவருடைய |மனைவியுடைய உடல் பருமனுக்கு என்ன காரணம் என்பதையறிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும். டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் துணை உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மூன்றாவதாக, உணவில் மாவுச்சத்தைக் குறைத்து, புரத உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். கூடவே, நிறைய காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். Dr. Naraya Reddy Awareness: நம்ம வீட்டுப் பசங்க இங்க எல்லாமா போறாங்க..? | காமத்துக்கு மரியாதை - 183 தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, யார் உடல் பருமனாக இருக்கிறாரோ அவர் மேல் பக்கம் இருக்கிற பொசிஷனை தவிர்க்க வேண்டும். பக்கவாட்டு பொசிஷனை பின்பற்றலாம். உடல் பருமனைக் குறைப்பது தாம்பத்திய உறவுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் நல்லது'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

விகடன் 24 Jul 2024 6:00 pm

Barbie: பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளையும் இனி குஷிப்படுத்தும்! வந்தாச்சு புதுரக பொம்மை!

பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென்றே கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மட்டேல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. குழந்தைகளுக்குப் பிடித்தமானவை பொம்மைகள். குழந்தைகளை குஷிப்படுத்துவதற்கென்றே விதம்விதமான பொம்மைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. பொம்மைகள் எத்தனை இருந்தாலும் அதில் தனிச்சிறப்பு வாய்ந்தவை பார்பி பொம்மைகள். மட்டேல் நிறுவனத் தயாரிப்பான பார்பி பொம்மைகள், நிஜ உருவம் போலவே இருப்பவை. அசலாகவே இருப்பது போல் தலைமுடி, நீலநிறக் கண்கள், கவர்ந்திருக்கும் வண்ண வண்ண உடைகள் பார்பி பொம்மைகளின் சிறப்புகள். Barbie கரண் ஜோஹர், இலியானா... பிரபலங்களிடம் காணப்படும் body dysmorphia பிரச்னை... தீர்வு என்ன? அமெரிக்க வர்த்தகரான ருத் ஹேண்ட்லர் தன் மகள் பார்ஃபராவை மனதில் நிறுத்தி 1959-ம் ஆண்டு பார்பி பொம்மையை உருவாக்கினார். ஆரம்பத்தில் லத்தீன் நாட்டவர் போன்ற பார்பி வெளியானது; அதைத் தொடர்ந்து அமெரிக்க- ஆப்பிரிக்க தோற்றமுள்ள பார்பிகள், பின்னர் இந்திய பார்பி என பல நாடுகளின் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை சக்கைபோடு போட்டன. தற்போது மட்டேல் நிறுவனம் 35-க்கும் மேற்பட்ட தோல் நிறங்களில், 94 முடி நிறங்கள், 5 உடல் அமைப்புகளில் பார்பி பொம்மைகள் தயாரிக்கிறது. இந்நிலையில், மட்டேல் நிறுவனம் முதல்முறையாக பார்வை திறனற்ற பார்பி பொம்மையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆன்லைனிலும் கடைகளிலும் கிடைக்கும் இவ்வகை பார்பி பொம்மைகள், பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வைத் திறனுள்ள குழந்தைகளை சமூகத்தில் அதிக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிமுகமாகியுள்ள பார்வைத் திறனற்ற பார்பி பொம்மையானது, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியைப் பிடித்தவாறு இருக்கிறது. அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி, பார்வைத் திறனில்லை என்பதை உணர்த்தும் வகையில் துல்லியமாக உள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அமெரிக்க அறக்கட்டளையுடன் (American Foundation for Blind) இணைந்து, பொம்மையின் கண்கள் முதல் அதன் ஆடை வரை அனைத்தும் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த பார்வைத் திறனுள்ளவர்களை துல்லியமாக சித்திரிப்பதை உறுதி செய்து பணியாற்றியுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த பார்வை கொண்ட குழந்தைகளுடன் பரிசோதனை நடத்திய பிறகு, பொம்மைக்கு பிங்க் நிற சாட்டின் டி-ஷர்ட் மற்றும் ஊதா நிற டல்லே ஸ்கர்ட் என தொட்டுணரக்கூடிய ஆடைகளை அணிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. Barbie சின்னத்திரை டு வெள்ளித்திரை: திவ்யா துரைசாமியுடன் இணைந்து நடிக்கும் `சிறகடிக்க ஆசை' தொடர் பிரபலம்! பொம்மையை எளிதாக அலங்கரிக்கும் வகையில், அதன் மேற்புறத்தின் பின்பக்கம் பின்னல் போடுவதற்கும் ஸ்கர்ட்டினை கட்டுவதற்கு இடுப்புப் பட்டை உள்ளிட்டவையும் உள்ளன. பார்வை மாற்றுத்திறன் குழந்தைகள் எளிதாக அணுகி உணரும் வகையில் பொம்மையின் பேக்கிங் பெட்டி மீது பிரெய்லியில் பார்பி என்று எழுதப்பட்டுள்ளது. பார்பி நிறுவன மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டா பெர்கர் பார்பி என்பது ஒரு பொம்மையையும் தாண்டி மேலானது என்பதை நாங்கள் ஏற்கிறோம். சுய வெளிப்பாட்டையும் சொந்த உணர்வையும் பார்பி பொம்மை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார். புதுவகை பார்பியை விளம்பரப்படுத்தி வரும் பார்வை மாற்றுத்திறனாளியும் சமூக ஆர்வலருமான லூசி எட்வர்ட்ஸ், பதின்பருவத்தில் உள்ள நான் பார்வைத்திறன் இழந்ததும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்; என்னைப் போன்ற ரோல் மாடல்களை பார்க்க விரும்பாமல் இருந்தேன். ஆனால், இப்போது அறிமுகமான பார்பியின் கையில் ஒரு கைத்தடி இருப்பதை அறிந்தபோது என்னை பற்றி மிகவும் வித்தியாசமாக உணர வைத்தது. எனது பார்வைக் குறைபாட்டை ஏற்கும் மனப்பான்மையைத் தர உதவி இருக்கிறது என்றார். Barbie dolls மரபணு மாற்றுக் கடுகு; மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? மட்டேல் நிறுவம் தரப்பில், தொட்டுணரக்கூடிய ஆடைகள் மற்றும் கரும்பு மற்றும் சன்கிளாஸ் கொண்ட இந்தப் புதிய பார்பியை வடிவமைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பார்வையற்ற மற்றும் பகுதியளவு பார்வை கொண்ட சமூகத்திற்கு, இது நிறைய அர்த்தம் தருகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பார்வை இழப்புள்ளவர்களை தங்களின் ஓர் அங்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உணர உதவுவதில் இது நேர்மறையான ஒரு நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டேல் நிறுவனம் ஏற்கெனவே 202-ம் ஆண்டு காது கேளாதவருக்கான பார்பிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியுடன் பார்பி பொம்மைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் 24 Jul 2024 2:24 pm

கரண் ஜோஹர், இலியானா... பிரலங்களிடம் காணப்படும் body dysmorphia பிரச்னை.. தீர்வு என்ன?

அழகாக இருந்தாலும், கண்ணாடியில் மீண்டும் மீண்டும் முகத்தைப் பார்த்துவிட்டு, 'மூக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கலாம்', 'பிம்பிள்ஸ் அதிகமாக இருக்கு', 'இதை விட அழகாக இருந்திருக்கலாம்' என தன்னை உடனிருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது உடல் அமைப்பின் மீது திருப்தி இல்லாமல் ஏதோ ஒரு குறையை பற்றியே நினைத்துக்கொண்டு சிலர் இருப்பாரகள். இந்த நிலையை, மருத்துவ மொழியில் `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) என்கிறார்கள். கரண் ஜோஹர் Doctor Vikatan: பார்வையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானதா கான்டாக்ட் லென்ஸ்? இந்தப் பிரச்னை வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கிறது. 'காபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக 'Kill' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய அவர், எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். இதனால் எனக்கு மனநலப் பிரச்னைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து மீள மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன். `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) நான் உடல் எடையைக் குறைத்து என் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொண்டாலும், இந்தப் பிரச்னையுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்தார். டெல்லியில் நடந்த 21-வது உலக மனநல மாநாட்டில் நடிகை இலியானாவும் தனக்கு பாடி டிஸ்மார்பியா இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. `பாடி டிஸ்மார்பிக் டிஸாடர்’ என்றால் என்ன என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. உடலமைப்பு சார்ந்த இந்த உளவியல் சிக்கலைப் பெரும்பாலும் பெண்களுக்கான பிரச்னையாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னையாகவுமே நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், ஆண் பெண் இருவரையும் சமஅளவில் இது பாதிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், சரும பாதிப்பு உள்ளவர்கள், வளரிளம் பருவத்தினர், கண் பிரச்னை உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மனநல மருத்துவர் குறிஞ்சி சமூகத்தைக் கண்டு பயப்படும் ‘சோஷியல் போபியா’ (Social phobia) வகையைச் சார்ந்த இப்பிரச்னை, சம்பந்தப்பட்ட நபரை வெளி உலகுக்கு வந்து, மக்களோடு மக்களாகப் பழகவிடாது. ஓர் இடத்துக்குச் சென்றால், ‘நம்மை எப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள்’ என்று கற்பனை செய்துகொண்டு, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு நிறையவே இருக்கும். மூளையின் செயல்பாடுகளுக்கு உதவிசெய்யும் 'செரட்டோடினின்' (Serotonin) என்ற ஹார்மோனில் குறைபாடுகள் ஏற்படும்போது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்னையைத் தீவிரப்படுத்தும். தகுந்த மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) ``மனநலப் பிரச்னைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறேன்... ஓப்பனாகப் பேசிய பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர்! மேலும், சமூகத்தைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் விமர்சனங்களைத் தவிர்ப்பது, அவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, அவர்களை நம்புவது போன்ற செயல்களின் மூலம், அவர்களுக்கு இந்தப் பிரச்னையிலிருந்து தீர்வு காண உதவ முடியும் என்று அறிவுறுத்துகிறார்.

விகடன் 24 Jul 2024 10:20 am

Doctor Vikatan: பார்வையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானதா கான்டாக்ட் லென்ஸ்?

Doctor Vikatan: சமீபத்தில் நடிகை ஒருவர், தான் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸால், தனக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பார்வை சரியாகத் தெரியாமல் போனதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று சாமானியர்களிடம் கான்டாக்ட் லென்ஸ் அணிகிற வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை பகிர்ந்திருந்த விஷயம் அதிர்ச்சியளிக்கிறது. அப்படியானால் பார்வையை பாதிக்கும் அளவுக்கு அவை ஆபத்தானவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.    விஜய் ஷங்கர் கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கும், கண்ணாடியைத் தவிர்க்க நினைப்போருக்கும் கான்டாக்ட் லென்ஸ் மிகச் சிறந்த ஆப்ஷன் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், அதில் சில மைனஸ் விஷயங்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவது என முடிவு செய்துவிட்டால், அடிப்படையான சில விஷயங்களை அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். லென்ஸை மிகச் சரியாக அணிய வேண்டும். உபயோகித்துக் கழற்றியதும் அவற்றுக்குண்டான பிரத்யேக திரவத்தில்தான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். லென்ஸை அதற்குரிய கேஸில் (டப்பாவில்) தான் பத்திரப்படுத்த வேண்டும். அந்த பாக்ஸானது முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் எதைச் செய்யத் தவறினாலும் இன்ஃபெக்ஷன் வரலாம். அந்த இன்ஃபெக்ஷனானது கண்கள் முழுவதும் பரவலாம். கண் Doctor Vikatan: கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா? கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் உள்ள மிக முக்கியமான மைனஸ், அதனால் ஏற்படும் 'ஹைப்பாக்ஸியா' ( Hypoxia) பிரச்னை.  ஹைப்பாக்ஸியா என்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிற நிலை.  லென்ஸ் அணிவதால் கண்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதன் விளைவாக, பார்வை மங்குதல், வலி, கண்களில் நீர் வடிதல், சிவந்துபோவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும். கான்டாக்ட் லென்ஸ் அணிவோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால், இந்தப் பிரச்னைகளையும் அவர்களே அதிகம் சந்திக்கிறார்கள். கான்டாக்ட் லென்ஸை அவசரமாகப் போட்டுக்கொள்ளும்போது, அவர்களின் கருவிழிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. கார்னியா எனப்படும் கருவிழி எபித்தீலியம் (Epithelium) , போமன்ஸ் லேயர் (Bowman's layer), ஸ்ட்ரோமா (Stroma), டெஸ்மெட் மெம்ப்ரேன் (Descemet's membrane) மற்றும் எண்டோதீலியம் (Endothelium) என ஐந்து லேயர்களை கொண்டது. வெளியில் உள்ள எப்பிதீலீயம் என்கிற லேயரில், விரல் நகம் பட்டு பாதிக்கப்படலாம்.  எபித்தீலியம் பாதிப்பாலும் பார்வை மங்குதல், சிவந்துபோவது, கண்களில் நீர்வடிதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்கு கண் மருத்துவரால்தான் சிகிச்சை அளிக்க முடியும்.  கண்களைப் பரிசோதித்துவிட்டு, மருத்துவர் ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட், டிராப்ஸ் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்துக்குப் பரிந்துரைப்பார். ஒருவேளை இதில் பிரச்னை குணமாகவில்லை என்றால், அடுத்தகட்ட சிகிச்சை என்ன என்று சொல்வார். கண் பரிசோதனை கான்டாக்ட் லென்ஸ்: யாரெல்லாம் அணியலாம்? கவனிக்க வேண்டியவை என்னென்ன? கண்கள் பத்திரம் - 13 எனவே, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைச் சரியாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். லென்ஸ் அணிவதால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 24 Jul 2024 9:00 am

Nipah Virus: கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி; எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்!

கேரள மாநிலம, மலப்புரம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கேரள மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மலப்புரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நிபா தடுப்பு நடவடிக்கை இந்நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். பயணிகளின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த சுகாதாரத்துறையினர், கேரளாவில் இருந்து நீலகிரி வழியாக தமிழகத்திற்குள் நாடுகாணி, சோலாடி, பாட்ட வயல், தாளூர் போன்ற சோதனைச் சாவடிகள் வழியாக வருகின்றனர். நிபா தடுப்பு நடவடிக்கை ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 3 பேர் நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகளை தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கிறோம். முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தி வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றனர்.

விகடன் 23 Jul 2024 8:44 pm

Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?

Doctor Vikatan: திடீர் திடீரென மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் என்ன? திடீரென இனம்புரியாத சோகம், தனிமை, பயம் போன்ற உணர்வுகள் வருவது ஏன்? அழுகை வருவது ஏன்? வேறு விஷயங்களில் மனதைத் திருப்ப முடியாமல் தவிக்கிறேன்.  பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறாள் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ். சுபா சார்லஸ்  'மனம் ஒரு குரங்கு' என அந்தக் காலத்திலேயே பாடிவிட்டார் கவிஞர் கண்ணதாசன். உண்மையில் அப்படித்தான்....மனம் என்பது குரங்கைப்போல தாவிக்கொண்டே இருக்கும். மனமானது திடீரென எதையோ நினைத்து கோபப்படும், திடீரென வருத்தப்படும், திடீரென சந்தோஷப்படும். ஆங்கிலத்தில் 'மூட் ஸ்விங்ஸ்' (mood swings) என்று சொல்லப்படுகிற இந்த நிலை எல்லோருக்கும் இயல்பானதுதான். ஆனால், மனநிலையில் தீவிரமான மாற்றங்கள், தடுமாற்றங்கள் இருக்கக்கூடாது. அதாவது எதிலுமே கவனமின்றி, உணர்வுகள் நொடிக்கொரு முறை மாறிக்கொண்டே இருப்பது சரியானதல்ல. ஒரு விஷயத்தை யோசித்தோம், அது குறித்து முடிவெடுத்தோம், பிறகு செயல்படுத்தினோம் என்றில்லாமல், எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாகத் தவிப்பது சரியானதல்ல. சிலர் செய்யும் வேலைகளை, வகிக்கும் பொறுப்புகளைப் பார்த்து, 'இவர்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது' என்று வியந்து போவோம். அந்தத் திறமையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். மனநிலையாது பெண்டுலம் போன்றது.  மேலும் கீழுமாக மாறி மாறிச் சுழலும். ஏதோ ஒருநாள் மிகவும் சந்தோஷமாக  உணர்ந்தோம் என்றால், நம் உடலானது தானாக தளர்வடைந்து அடுத்து சற்று மந்தமாக உணரவைக்கும். அதுதான் இயல்பும்கூட. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் ஸ்ட்ரெஸ் கெட்டது... ஆனா, நல்லது! திடீர் ஸ்ட்ரெஸ்...எப்படிக் கையாள்வது? #SuddenStress நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் நரம்பு மண்டலத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. நரம்புகளின் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் பி காம்ப்ளெக்ஸ் (B Complex) வைட்டமின் மிக முக்கியம். இந்தச் சத்து குறையும்போது  உணர்வுத் தடுமாற்றங்களையும் உணர்வீர்கள்.  கீரைகள், காய்கறிகள் என ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவோருக்கு இந்தச் சத்துக் குறைபாடு ஏற்படாது.  குறைபாடு ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையுடன் பி காம்ப்ளெக்ஸ் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி, வைட்டமின் டி (vitamin D) சத்தும் நமக்கு மிக முக்கியம். அது சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கும். வெயில் பட்டால் இலைகள் எப்படி குளோரோபில் எனப்படும் பச்சையத்தைத் தயாரிக்கின்றனவோ, அதேபோல நம் சருமமும் வைட்டமின் டி சத்தை தயாரிக்கும். தினமும் காலை மற்றும் மாலை வெயில் படும்படி சிறிது நேரம் இருப்பது வைட்டமின் டி சத்து குறையாமல் தடுக்கும். இவை தவிர, மெக்னீசியம் சத்தும் அவசியம். இந்த மூன்றும் குறையாமல் பார்த்துக்கொண்டாலே, உங்களுடைய உணர்வுத் தடுமாற்றங்கள் சரியாகி, நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உடல்நலமும் மேம்படும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 23 Jul 2024 9:00 am

ஆயுளை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிப்பு! எலிகளுக்கு ஓகே... மனிதர்களுக்கு?

எலிகளின் ஆயுளை அதிகரிக்கும் பரிசோதனையில் சாதகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் சோதனைக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள டியூக்- என்.யு.எஸ். மருத்துவப் பள்ளி விஞ்ஞானிகள் மற்றும் லண்டனில் உள்ள மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் லேபரட்டரி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இம்பீரியல் காலேஜ் (MRC LMS) விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். ஆயுளை அதிகரிக்க Doctor Vikatan: கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா? வயோதிகத்தை ஏற்படுத்தும் இன்டர்லூகின் 11 இதில், மருந்து செலுத்தி இன்டர்லூகின்-11 (IL-11) என்ற புரதத்தைத் தடுப்பதன் மூலம் எலிகளின் வயோதிகம் குறைவதையும், ஆயுட்காலம் அதிகரிப்பதையும் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இன்டர்லூகின்-11 புரதமானது எலிகளின் உடலில் வயதான தன்மையை உண்டாக்குகிறது; கொழுப்பு உருவாக்கம் மற்றும் தசை இழப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, நேச்சர் இதழில் வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவில், எலிகள் வயதாகும்போது, அவற்றின் உறுப்புகள் அதிகளவில் இன்டர்லூகின்-11 புரதத்தை உருவாக்குகின்றன. ரத்த அணுக்களின் உருவாக்கம், கொழுப்பு உருவாக்கம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கு உதவும் இந்தப் புரதம், கல்லீரல் மற்றும் வயிற்றில் தேவையற்ற கொழுப்புக் குவிப்பு மற்றும் தசையின் வலிமையைக் குறைக்கிறது. இது வயோதிகத்தின் முக்கிய அறிகுறிகள். 25% வரை ஆயுள்காலம் அதிகரிப்பு புதிய கண்டுபிடிப்பின்படி, மருந்துகள் செலுத்தப்பட்ட எலிகள் சராசரியாக 155 வாரங்கள் வாழ்ந்தன; சிகிச்சை அளிக்கப்படாத எலிகள் 120 வாரங்களே இருந்தன. 75 வார வயது முதல் இறக்கும் வரை மருந்து கொடுக்கப்பட்ட எலிகளின் சராசரி ஆயுட்காலம், ஆண் எலிகளில் 22.4% மற்றும் பெண் எலிகளில் 25% அதிகரித்துள்ளது. எலிகள் மா சாகுபடியில் கால்பதித்த கோகோ கோலா நிறுவனம்... விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? சிகிச்சையானது தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, எலிகளின் ஆயுட்காலத்தை 5% வரை நீட்டித்தது. சிகிச்சையளிக்கப்பட்ட எலிகள் அவற்றின் இளமைத் தோற்றத்தின் காரணமாக ஆய்வகத்தில் சூப்பர் மாடல் கிரானிகள் என்று அழைக்கப்பட்டன. இந்தச் சிகிச்சையானது, விலங்குகளில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை பெருமளவில் குறைப்பதாகவும், வயதானதன் அடையாளங்களான நாள்பட்ட அழற்சி மற்றும் மோசமான வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பல நோய்களைக் குறைப்பதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்லூகின்-11 எதிர்ப்பு சிகிச்சையானது பல உபாதைகளைத் தடுக்கிறது; இதய நோய்கள், தசை இழப்பு மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. உற்சாகம் தரும் கண்டுபிடிப்பு! சிங்கப்பூரில் உள்ள டியூக் - என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தின் இணை ஆசிரியராக இருந்த பேராசிரியர் ஸ்டூவர்ட் குக் கூறும்போது, இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் உற்சாகம் தருகின்றன. சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருந்தது; வயதான மற்றும் பலவீனத்தின் வழக்கமான அறிகுறிகளில் இருந்து அவை விடுபட்டன என்றார். குக் மேலும் கூறுகையில், ஆயுளை அதிகரிக்கும் முந்தைய சிகிச்சைகள், மருந்துகள் மோசமான பக்க விளைவுகளைக் கொண்டிருந்தன. அல்லது இரு பாலினத்திலும் வேலை செய்யாது; அல்லது ஆயுளை நீட்டிக்க முடியும், ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை இருக்காது என்ற சிக்கல்கள் இருந்தன. இந்தக் கண்டுபிடிப்புகள் எலிகளில் மட்டுமே இருந்தாலும், வயதான மனிதர்களிடமும் மருந்துகள் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் இலக்கு இன்டர்லூகின்-11 எதிர்ப்பு சிகிச்சையை பரவலாகக் கிடைக்கச் செய்வதாகும். இதன் மூலம் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும். இருப்பினும், முதுமை தொடர்பான சிகிச்சைகளுக்கு ஒப்புதல் மற்றும் நிதி பெறுவதில் சவால்கள் உள்ளன என்றார். ஆயுளை அதிகரிக்க கெர்பரா மலர் சாகுபடியில் லட்சக்கணக்கில் வருமானம்! அசத்தும் பொறியியல் பட்டதாரி! மனிதர்களுக்கு இது பொருந்துமா? சிங்கப்பூர் டியூக்- என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் இணை ஆசிரியராக இருந்த அனிசா விட்ஜாஜா பரிசோதனைகளை நாங்கள் எலிகளில் செய்திருந்தாலும், இந்தக் கண்டுபிடிப்புகள் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். மனித செல்கள் மற்றும் திசுக்களின் ஆய்வுகளில் இதே போன்ற விளைவுகள் இருக்கக்கூடும் என்றார். இந்த ஆராய்ச்சி வயோதிகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். பலவீனம் மற்றும் வயதான உடலியல் வெளிப்பாடுகளைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான முறையில் வயதை நீட்டிக்கக்கூடிய ஒரு சிகிச்சையை எலிகளில் நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றார் விட்ஜாஜா.

விகடன் 22 Jul 2024 12:47 pm

கேரளா: 3-வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு; 14-வயது சிறுவன் மரணம்... சுகாதாரத்துறை சொல்வது என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. முதன்முதலில் நிபா பாதித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களின் வீட்டு கிணற்றில் வெளவால்கள் கூட்டமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் மனிதர்களின் தொடர்பு மூலமும் பரவும். தொடர்ந்து நிபா பரவியதை அடுத்து அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 17 பேர் மரணமடைந்தனர். அதன்பிறகு, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் இரண்டாவது முறையாகப் பரவியது. அப்போது 2 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திருவனந்தபுரத்திலும் நிபா பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர், நிபா பாதித்து சிகிச்சையில் இருந்தவர்கள்  நலமடைந்தனர். இந்நிலையில், மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நடந்த மருத்துவக்குழு ஆலோசனைக் கூட்டம் நிபா வைரஸ்: நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன? - விரிவான வழிகாட்டி இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிந்த உடனேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. நிபா தடுப்பு நடவடிக்கைக்காக குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவனுக்கு கேரளாவில்  நடத்திய பரிசோதனையில் ரிப்போர்ட் பாசிட்டிவ் ஆக வந்தது. அதை உறுதிப்படுத்த என்.ஐ.வி புனே-வுக்கு அனுப்பினோம். அங்கும் நிபா பாதித்தது உறுதி செயப்பட்டது. 2023-ம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து மோனோகுளோனைட் மருந்து  வாங்கப்பட்டுள்ளது. அது, என்.ஐ.வி புனே-வில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து கேரளாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மஞ்சேரி மெடிக்கல் காலேஜில் 30 வார்டுகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொருவொருக்கும் தனித்தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஏனென்றால், ஒரே வார்டாக ஏற்படுத்தப்பட்டால், முதலில் சிகிச்சைக்கு வந்து குணமடைந்தவருக்கு, புதிதாக வருபவர் மூலம் பரவ வாய்புள்ளது. ஐ.சி.யூ வார்ட் வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்டவருடன் பிரைமரி கான்டாக்ட், செகண்டரி கான்டக்ட் மற்றும் ஹை ரிஸ்க் காக்டாக்ட் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்பு Nipah Virus: கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த சிறுவன் மரணம்; தொடர்பிலிருந்த 2 பேருக்கு அறிகுறி! நிபா பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த 10-ம் தேதி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. 11-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்ததும் சிறுவன் முதலில் ஒரு டாக்டரிடம் சென்றுள்ளார். அடுத்ததாக, தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சென்று மருந்து வாங்கியுள்ளார். பின்னர், அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சையில் இருந்துள்ளார். அங்கிருந்து கோழிக்கோடு மெடிக்கல் காலேஜுக்கு வந்துள்ளார். சிறுவனுடன் ஹை ரிஸ்க் தொடர்பு, மற்றும் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக முதற்கட்டமாக 214 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் ஹை ரிஸ்க் பிரிவில் உள்ள 60 பேர் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும். சிறுவனின் வீடு அமைந்துள்ளது பாண்டிக்காடு, மாணவன் படிக்கும் ஸ்கூல் ஆனக்கயத்தில் உள்ளது. சிறுவனின் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள், அவர் சென்ற டியூஷனில் உள்ளவர்கள், அவர் சென்ற பஸ்ஸில் சென்றவர்கள் ஆகியோர் ஹை ரிஸ்க் கான்டாக்டில் வருகிறார்கள். இனி, ரூட் மேப் வெளியிடும்போது 60 என்ற ஹை ரிஸ்க் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரூட் மேப் விரைவில் வெளியிடுவோம். அப்போது, அந்தப் பகுதிகளில் இருந்த அனைவரும் கன்ட்ரோல் ரூமை தொடர்புகொள்ள வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் கன்ட்ரோல் ரூம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 0483 2732010, 0483 2732050, 0483 2732060, 0483 2732090 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம். நிபா வைரஸ் கடந்த முறை நிபா வைரஸ் பாதிக்கப்பட்டபோது புனேவில் இருந்து மொபைல் லேப் கோழிக்கோட்டுக்கு வந்திருந்தது. அது போன்று இப்போதும் ஒரு மொபைல் லேப் கேட்டிருக்கிறோம். வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் உள்ளிட்டவற்றால் அது பரவ வாய்ப்பு உள்ளது. காய்ச்சலுடன் தலைவலி, ஜன்னி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை நிபா வைரஸ் பரவலின் அறிகுறிகள். இதில் ஏதேனும் ஓர் அறிகுறியோ, ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ தென்படலாம். மக்கள் பயப்பட வேண்டாம். அதே சமயம், விழிப்புடன் இருக்க வேண்டும். மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.

விகடன் 22 Jul 2024 11:52 am

Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு 10 வருடங்களாக நீரிழிவு இருக்கிறது. பல வருடங்களாக எனக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல், தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. சாப்பாட்டுக்கு முன்பு எடுக்கும் டெஸ்ட்டிலும், சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட்டிலும் நார்மல் என்றே காட்டுகிறது. ஆனாலும், HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாட்டில் இல்லை என்று காட்டுகிறது. இது ஏன்....? இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.    நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா? ஒரு டம்ளர் தண்ணீரில் சர்க்கரை அல்லது உப்பைக் கலந்து தொடாமல் அப்படியே சில நாள்கள் வைத்திருந்தால், அந்தச் சர்க்கரையோ, உப்போ  அடியில் படியும்.  அதேபோல நம் ரத்தத்தில் சர்க்கரை எந்த அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள  ஹெச்பிஏ1சி ( HbA1c) என்ற டெஸ்ட் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிக முக்கியமான பரிசோதனையாக வலியுறுத்தப்படுகிறது. இதயம், கண்கள், நரம்புகள் என உடலின் அனைத்து முக்கியமான இடங்களிலும்  சர்க்கரை படியும். இப்படிப் படிகிற சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும். 5.5 என்ற அளவில் இருந்தால்  ரத்தச் சர்க்கரையின் அளவு நார்மல் என அர்த்தம். அதாவது இவர்களுக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருக்காது.  சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள், 6.5 அல்லது அதிகபட்சமாக 7-க்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். HbA1c Doctor Vikatan: இரட்டைப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதில் வித்தியாசம் இருக்குமா? சிலருக்கு சாப்பாட்டுக்கு முன் எடுக்கும் ரத்தப் பரிசோதனையும், சாப்பிட்ட பிறகு எடுக்கும் ரத்தப் பரிசோதனையும் நார்மலாகவே இருக்கும். ஆனால், ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் அதிகமாகக் காட்டும். ஹெச்பிஏ1சி ( HbA1c) டெஸ்ட் என்பது மூன்றுமாத சர்க்கரைநோயின் சராசரி அளவு. 24 மணி நேரமும் ரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணித்தால் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும். அதெப்படி 24 மணி நேரமும் கண்காணிப்பது என்ற கேள்வி வரலாம்.  வீட்டில் பயன்படுத்தும் குளுக்கோமீட்டரை வைத்து தினமும் 6 முறை சர்க்கரை அளவைப் பரிசோதிக்கலாம்.  அதாவது காலையில் சாப்பிடும் முன், சாப்பிட்ட பிறகு, மதியம் சாப்பிடும் முன், சாப்பிட்ட பிறகு, மீண்டும் இரவு சாப்பிடும் முன், சாப்பிட்ட பிறகு என 6 வேளைகள் டெஸ்ட் செய்யலாம். சில நாள்களில் நள்ளிரவில் டெஸ்ட் செய்யலாம். இதை 'கிளைசெமிக் புரொஃபைல்' ( glycemic profile) என்று சொல்வோம்.  குளுக்கோமீட்டர் இதையும்விட துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இப்போது பேட்ச்சுகள் கிடைக்கின்றன. அவற்றை 'ஆம்புலேட்டரி குளுக்கோஸ் மானிட்டரிங்' (ambulatory glucose monitoring) என்று சொல்வோம்.  5 ரூபாய் காயின் அளவுக்கு உள்ள அதை உடலில் ஒட்டிக்கொள்ளலாம்.  அது 15 நிமிடங்களுக்கொருமுறை ரத்தச் சர்க்கரை அளவைக் கணக்கிட்டுக் கொண்டே இருக்கும். 5 முதல் 7 நாள்கள் வரை,14 நாள்கள் வரை என பலவிதமாக இது கிடைக்கிறது. இந்தியாவிலேயே கிடைக்கிறது. சர்க்கரை அளவு எப்போது அதிகரிக்கிறது, எப்போது குறைகிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பரிசோதனை எல்லோருக்கும் தேவையில்லை. ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், கர்ப்பகாலத்தில் நீரிழிவு பாதித்தவர்கள் போன்றோருக்கு இது உதவும். உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு இந்தக் கருவியை வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். இதன் மூலம் எந்த வேளையில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, ஏன் அதிகரிக்கிறது என்பதைப் பார்த்து, உங்களுக்கான சிகிச்சையை மருத்துவர் மாற்றித் தருவார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: Pre-diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

விகடன் 22 Jul 2024 9:00 am

``கணவர் என்ன சொன்னாலும் இதைச் செய்யாதீங்க...'' | காமத்துக்கு மரியாதை - 184

``என்னுடைய கிளினிக்குக்கு அவ்வப்போது சில நடுத்தர வயதுப் பெண்கள் `முகமெல்லாம் வீங்கி', `முகத்தில் ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகள்' என்று முகம் தொடர்பான ஏதேனும் ஒரு பிரச்னையுடன் வருவார்கள். நான் சரும மருத்துவர் இல்லை யென்றாலும், தேடி வருகிற பேஷன்ட்ஸுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்கிற அடிப்படையில் பேசுவேன். `என்னம்மா ஆச்சு' என்றால், `நீ கலரா இல்ல; உன்கிட்ட தாம்பத்திய உறவு வெச்சுக்க மூடே வர மாட்டேங்குதுன்னு வீட்டுக்காரர் திட்டுறார் டாக்டர். வேற வழியில்லாம கடைகள்ல விக்கிற க்ரீமையெல்லாம் வாங்கிப் பயன்படுத்தினேன். இப்படியாயிடுச்சு' என்று அழுவார்கள். Sad Couple Awareness: நம்ம வீட்டுப் பசங்க இங்க எல்லாமா போறாங்க..? | காமத்துக்கு மரியாதை - 183 கவனியுங்கள், இந்தப் பெண்களுக்குத் திருமணமாகி பல வருடங்களாகிவிட்டன. இவர்களுடன் குடும்பம் நடத்தி, குழந்தைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர்களுக்கு திடீரென என்னவாகிறது என்பது புரியவில்லை. நிறத்துக்கும் அழகுக்கும் தொடர்பு கிடையாது. அந்தந்த இடத்தின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மனிதர்களின் சரும நிறம் வித்தியாசப்படும். குறிப்பாக, தென்னிந்தியாவில், வெயில் காலம்தான் அதிகம். பனிக்காலத்தில் குளிரும் என்றாலும், பனிப்பொழிவெல்லாம் கிடையாது. அதிகப்படியான வெயிலிலிருந்து நம் சருமத்தைக் காக்க, நம்முடைய உடலானது மெலனின் என்கிற நிறமியை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால்தான், வெயில் கொளுத்தினாலும் ஸ்கின் கேன்சர் வராமல் நாமெல்லாம் தப்பித்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஞானம் ஆண்களுக்கு வேண்டும். கூடவே, `நாம என்ன நிறத்துல இருக்கோம்; நம்மளைப் பார்த்தா மனைவிக்கு மூடு வருமா' என்கிற தெளிவும் வேண்டும். மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டீர்களென்றால், அவர்கள் முகம் தெளிவாக இருக்கும்; களையாக இருக்கும்... கணவனுக்குத் தூண்டுதல் கிடைக்க, மனைவியின் மகிழ்ச்சியான முகம் போதும். Dr. Narayana Reddy பெண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் நிறம் குறித்து கணவர் விமர்சனம் செய்தாலும், `க்ரீம் போட்டாவது கலராகிடணும்' என்ற முடிவுக்கு வராதீர்கள். அவற்றில் இருக்கிற Hydroquinone என்ற ரசாயனம் உங்கள் முக அழகையே போக்கிவிடலாம். கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல, முகம் வீங்குதல், வெள்ளைத் திட்டுகள் போன்ற வேறு சில பிரச்னைகள் வரலாம்'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. Condom... கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய A to Z தகவல்கள்... - காமத்துக்கு மரியாதை | 182

விகடன் 21 Jul 2024 6:00 pm

Doctor Vikatan: கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா?

Doctor Vikatan: என் வயது 29.  இன்னும் 2 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் வருமா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள ஏதேனும் டெஸ்ட் உள்ளதா... என்னுடைய கருமுட்டைகளின் தரத்தைத் தெரிந்துகொள்ள  டெஸ்ட் இருக்கிறதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. Doctor Vikatan: வாழைப்பழத் தோல் சேர்த்துக் கொதிக்க வைத்த நீர், BP-யை குறைக்குமா? வயதாக, ஆக கருமுட்டைகளின் தரமானது குறையத் தொடங்கும். எங்களுடைய அனுபவத்தில் அது 37 வயதிலிருந்து குறையத் தொடங்குவதைப் பார்க்கிறோம். அந்த வயதிலிருந்து முட்டைகளின் எண்ணிக்கையும்கூட  வேகமாகக்  குறையத்  தொடங்கும். அரிதாகச் சிலருக்கு, பிறவியிலேயே கருமுட்டைகளின் இருப்பு குறைவாக இருக்கும். அவர்களுக்கு 25 - 26 வயதிலேயே கருமுட்டைகளின் தரம் குறைவதையும் பார்க்கிறோம். முட்டைகளின் தரம் எப்படியிருக்கிறது என்பதை யூகத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த முட்டைகளை வெளியே எடுத்துப் பரிசோதித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில் முட்டைகளை வெளியே எடுக்க வேண்டியிருக்கும். அதை வெளியில் எடுத்து மைக்ராஸ்கோப்பில் வைத்துப் பார்க்கும்போது அதன் தரம் எப்படியிருக்கிறது என்பது தெரியும். அவற்றில் எந்த முட்டைக்கு கருத்தரிக்கும் தன்மை இருக்கும் என்பதை மருத்துவரால் ஓரளவு யூகிக்க முடியும். தரமான முட்டைகளை மட்டும் எடுத்து கருவாக்கும் முயற்சிக்குப் பயன்படுத்துவார்கள். 'ஆன்டிமுலேரியன் ஹார்மோன்' ரத்தப் பரிசோதனை Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா? திருமணமானதும் உடனே கர்ப்பம் தரிக்க வேண்டாம், அதைத் தள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவ ஆலோசனைக்கு நிறைய பேர் வருவார்கள். அந்தப் பெண்களின் கருமுட்டை இருப்பை டெஸ்ட் செய்தால் அது மிகக் குறைவாக இருப்பது தெரியவரும். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைக்கும் தம்பதியர், மருத்துவரை அணுகி, அடிப்படையான ஹெல்த் செக்கப் எல்லாவற்றையும் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கருமுட்டை இருப்புக்கான டெஸ்ட்டையும் செய்ய வேண்டும். 'ஆன்டிமுலேரியன் ஹார்மோன்' (Anti-Mullerian Hormone ) அளவைப் பரிசோதிக்கும் ரத்தப் பரிசோதனையின் மூலம் கருமுட்டை இருப்பைத் தெரிந்துகொள்ளலாம். இன்னும் எத்தனை நாள்களுக்கு கர்ப்பத்தைத் தள்ளிப்போடலாம் என்ற தெளிவும் கிடைக்கும். உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, அடிப்படை பரிசோதனைகளைச் செய்துகொள்வதன் மூலம் இந்த விஷயத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அதற்கேற்ப திருமணம், கருத்தரிப்பு போன்றவற்றைத் திட்டமிடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 21 Jul 2024 9:00 am

Happy Teeth: அடிக்கடி உலரும் வாய்... தீர்வு என்ன? | Dry Mouth

வாய் உலர்வாக இருப்பது (Dry mouth) என்பது பொதுவான பிரச்னையா என்ற கேள்வியை ChatGPT-யில் தட்டினேன். 'மிகவும் பொதுவான பிரச்னை' (Quite Common) என்று பதிலளித்ததோடு, இந்தப் பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது என்றும் அட்வைஸ் செய்தது. வாய் உலர்வாக இருப்பதற்கான காரணங்கள், பிரச்னைக்கு தீர்வுகள் என்ன என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி. வாய் உலர்வாக இருப்பது என்பது வாயில் உமிழ்நீர் (எச்சில்) ஊறும் செயல்பாடு குறைவதே. Happy Teeth: ஒருநாளைக்கு 2 முறை பிரஷ் செய்தும் பல் சொத்தை... என்னதான் தீர்வு? வாய் உலர்வாக இருப்பது என்பது வாயில் உமிழ்நீர் (எச்சில்) ஊறும் செயல்பாடு குறைவதே.  இந்தப் பிரச்னையை மருத்துவச் சொற்களில் 'ஸெரோஸ்டோமியா' (Xerostomia) என்போம். இது ஒரு நோய் கிடையாது. ஆனால், வேறு நோய்களின் அறிகுறியாகவோ, பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளின் பக்கவிளைவாகவோ உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வாகலாம். உமிழ்நீர் வாய், பல் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. அதில் பல்வேறு நொதிகள் ( Enzymes), ஊட்டச்சத்துக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், நோய் எதிர்ப்புத் திறனுக்குத் தேவையான ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளிட்டவை உள்ளன. உமிழ்நீர் சுரப்பது குறைந்துவிட்டது என்றால் இவை அனைத்துமே குறையும். நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாகும் செயல், வாயில் இருந்துதான் தொடங்கும். அதற்கும் உமிழ்நீர் முக்கிய செயலாற்றுகிறது. நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாகும் செயல் வாயில் இருந்துதான் தொடங்கும். அதற்கும் உமிழ்நீர் முக்கிய செயலாற்றுகிறது. Happy Teeth: பற்களின் நடுவே இடைவெளி இருந்தால் பணம் சேருமா? சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு சுமார் ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கும். குறிப்பாக, உணவு உட்கொள்ளும் நேரங்களில் சற்று அதிகமாக உமிழ்நீர் சுரக்கும். இரவு நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். அதனால்தான் காலையில் எழுந்திருக்கும்போது வாய் உலர்வாகவும், வாய் துர்நாற்றமும் ஏற்படுகிறது. 'ஜாக்ரீன் சிண்ட்ரோம்' (Sjogren's syndrome) எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், வலி நிவாரணம், மனச்சோர்வு, உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மாத்திரை எடுப்பவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். சளிப் பிடித்தல், மூக்கடைப்பின்போது வாயால் மூச்சு விடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அதே போல தூக்கத்தில் வாய் திறந்து குறட்டைவிடும் பழக்கம் இருக்கும். இதுபோன்ற காரணங்களாலும் உமிழ்நீர் சுரப்பு குறைந்து, வாய் உலர்வாக இருக்கும். அதேபோல புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுப்பவர்களுக்கும் உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். Snoring Happy Teeth: நிறம் மாறும் பற்கள், உடையும் பற்கள்... அலட்சியம் வேண்டாம்! என்ன விளைவுகள் வாய் உலர்வாக இருக்கும் (Dry Mouth) பிரச்னை நீடிக்கும்போது வாயில் புண், வாயில் எரிச்சலுணர்வு, மூக்கில் உலர்வு போன்றவையும் ஏற்படலாம். இதனால் குரலில்கூட மாற்றம் ஏற்படலாம். எச்சில் விழுங்குவதில் சிரமம், வாய் உலர்வின் காரணமாக உதட்டில் வறட்சி, வெடிப்பு போன்றவை ஏற்படலாம்.  வாயை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் மெக்கானிசம் உமிழ்நீர்தான். உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருந்தால் சொத்தைப்பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். சொத்தைப்பல் இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பு அதிகமாகும். அதே போல வாய் துர்நாற்றம் ஏற்படும். மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். மதுவானது உமிழ்நீர் சுரப்பை ஏற்படுத்தும் சுரப்பிகளை சுருங்கிப் போக வைக்கும். தீவிர மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களின் இரண்டு பக்க கன்னங்களிலும் வீக்கம் தென்படும். இரண்டு கன்னங்களில்தான் உமிழ்நீரை சுரக்கும் இரண்டு பெரிய சுரப்பிகள் அமைந்திருக்கும். அந்தச் சுரப்பிகள் பாதிக்கப்படுவதால்தால் கன்னங்கள் வீக்கமாகும். Dr. Suresh Velumani அதேபோல, மவுத்வாஷ் பயன்படுத்தினால் வாய் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான மவுத் வாஷில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். மவுத் வாஷ் பயன்படுத்திய உடனே புத்துணர்ச்சியாக இருக்கும். அதன் பிறகு வாய் உலர்வாகும். எனவே, மவுத் வாஷ் அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தீர்வு என்ன? வாய் உலர்வாக இருக்கிறது என்றால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல உமிழ்நீர் சுரப்பை அதிகரிப்பதற்காக சிட்ரஸ் அதிகமுள்ள எலுமிச்சம்பழம், ஆரஞ்சு மிட்டாய், ஷுகர் ஃப்ரீ சூயிங்கம் போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு அதிகமாக உள்ள பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது என்பதால், தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். chewing gum Happy Teeth: பல் எடுத்தால் முகத்தோற்றம் மாறுமா? உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும் நேரத்தில் காரம், இனிப்பு அதிகமுள்ள உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். வாய்ப் பகுதியை ஈரப்பதத்துடன் வைப்பதற்கான செயற்கை உமிழ்நீர் பயன்படுத்தலாம். அதை மருத்துவர்கள்தான் பரிந்துரைப்பார்கள். உமிழ்நீர் சுரப்பு குறைந்து,  வாய் உலர்வாக இருக்கிறது என்றால் அதற்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண வேண்டும். பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 20 Jul 2024 6:00 pm

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை... இப்போதாவது கையில் எடுக்கப்படுமா பாண்டியாறு-புன்னம்புழா திட்டம்!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் 'தண்ணீர் தன்னிறைவு தமிழகம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பேசிய மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முனைவர் வீரப்பன், தமிழ்நாடு, தண்ணீருக்கு முழுமையாக அண்டை மாநிலங்களை சார்ந்திருப்பதாக ஒரு தோற்றத்தைப் பரப்புகிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட ஏரி, கண்மாய்கள் மூலம் பெறப்படும் நீரின் அளவு 390 டி.எம்.சி. அணைகள் மூலமாக 243 டி.எம்.சி. நிலத்தடி நீர் மூலம் 425 டி.எம்.சி பெறப்படுகிறது. ஆறுகள் மூலமாக 833.40 டி.எம்.சி பெறப்படுகிறது. காவிரியை தவிர்த்து அண்டை மாநிலங்களிலிருந்து பெறும் நீரின் அளவு 31.50 டி.எம்.சிதான். நிகழ்வில் பேசும் வீரப்பன் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் அணைகள், ஏரிகள், கண்மாய்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுத்தாலே 142 டி.எம்.சி தண்ணீரை நாம் சேமிக்க முடியும். தமிழ்நாட்டின் சராசரி மழையளவு 925 மி.மீ. இந்த மழையின் அளவை கொண்டே நாம் போதுமான தண்ணீரை பெற்று தன்னிறைவாக இருக்க முடியும். அண்டை மாநிலங்களை நோக்கி கையேந்த வேண்டியதில்லை. இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பலமுறை எங்கள் சங்கத்தின் சார்பாக ஆலோசனைகளை அனுப்பியிருக்கிறோம். தமிழக அரசு மனது வைக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் பொறியாளர் ஆர்.ஜெயபிரகாசம் பேசியபோது, கடந்த 3 நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. கூடலூர் தாலுக்கா தண்ணீரில் மிதக்கிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கூடலூருக்கு மேற்கே 'ஓ' பள்ளத்தாக்கு பகுதியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாண்டியாறு. சுமார் 30 கி.மீ தூரம் தமிழக எல்லைப்பகுதிக்குள் ஓடி மேற்கே கேரள மாநில எல்லைக்குள் நுழைகிறது. கேரள மாநில பகுதியில் புகுந்து அங்கிருக்கும் கிளை ஆறுகளோடு இணைந்து புன்னம்புழா என்ற பெயரில் அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்று நீரை கேரளா மாநிலம் பயன்படுத்துவதே இல்லை. நிகழ்வில் ஜெயபிரகாசம்(இடதுபுறம் கடைசியிலிருப்பவர்) தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பாண்டியாற்று நீரை திருப்பி மோயாற்றில் இணைத்தால் தமிழகத்துக்கு 3.29 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றுப்படுகை நீரை கேரள அரசுடன் பங்கிட்டு கொள்ளும் எந்த ஓர் ஒப்பந்தமும் போடபடவில்லை. அதனால் கேரள அரசு எதிர்த்திட எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு எந்தத் தடையுமின்றி இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இத்திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் செலவாகும். பாண்டியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 82.80 சதுர கிலோ மீட்டர். பாண்டியாற்றில் உற்பத்தியாகும் தண்ணீரை பம்பிங் முறை எதுவும் இல்லாமலேயே இயற்கையாக ஓடும் வாட்டத்திலே தெப்பக்காடு அருகேயுள்ள மோயாற்றில் இணைக்க முடியும். இதற்கான செயல்விளக்க அறிக்கையை சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். `மீன்களைவிட கழிவுகளின் அளவு கடலில் அதிகரிக்கும்' அதிர வைக்கும் தரவு... கைகோத்த அமைப்புகள்! நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவழை 75 சதவிகிதம் பெய்கிறது. வடகிழக்கு பருவழை 25 சதவிகிதம்தான். பாண்டியாற்று தண்ணீரை மோயாற்றுக்கு திருப்பி பவானி சாகர் அணைக்கு கொண்டு வந்தால் மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். தமிழக அரசு இத்திட்டத்தை இப்போதாவது கையில் எடுக்க வேண்டும் என்றார். நிகழ்வில் நிகழ்வில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், சென்னை மாநகர் வெள்ள சேதங்களை தடுத்தல் குறித்து முன்னாள் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் நாகராஜன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மன்மதன், நீரியல் வல்லுநர் ஜனகராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர். மா சாகுபடியில் கால்பதித்த கோகோ கோலா நிறுவனம்... விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

விகடன் 20 Jul 2024 5:49 pm

10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராத கோவை தாய், மகள் - குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த அதிர்ச்சி

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வசித்து வருபவர் ருக்மணி (75) . அவரது மகள் திவ்யா (45). இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர். கோவை அப்பார்ட்மென்ட் அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசாமல் வெளிஉலக தொடர்பே இல்லாமல் இருந்துள்ளனர். வீட்டையும் சுத்தம் செய்யாமல், குவிந்து கிடந்த குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்து வந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் சமூக ஆர்வலர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்று பெண்களுடன் உரையாடி அவர்களின் நிலையை வீடியோவாக எடுத்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.  வீடு குப்பை ருக்மணி வீடு குப்பை திவ்யா அப்போது சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரைக் குடித்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. வெளி உலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் சில அறைகளில் மின்விளக்கு கூட இல்லை. சில இடங்களில் மின்கசிவால் தீயும் பற்றியுள்ளது. இருந்தபோதும் இருவரும் வெளியில் சொல்லவில்லை. அவர்களின் வீட்டை சுத்தம் செய்து, இரண்டு பெண்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர். தூய்மை பணியாளர்கள் இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று அவர்களின் வீட்டுக்கு சென்று குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து 2 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

விகடன் 20 Jul 2024 3:13 pm

Doctor Vikatan: ரத்தத்தில் கிரியாட்டின் அளவைத் தாண்டும்போது கிட்னி பாதிக்கப்படுமா

Doctor Vikatan: கிரியாட்டின் என்பது என்ன... அது  ஒருவருக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? சராசரி அளவைத் தாண்டும்போது கிட்னி பாதிக்கப்படும் என்பது உண்மையா... இதன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் வழிகள் என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் மகப்பேறு மருத்துவர் ப்ரீத்தி கப்ரா மருத்துவர் ப்ரீத்தி கப்ரா Doctor Vikatan: வாழைப்பழத் தோல் சேர்த்துக் கொதிக்க வைத்த நீர், BP-யை குறைக்குமா? கிரியாட்டினைன் (Creatinine) மற்றும் கிரியாட்டின் (Creatine) என இதில் இரண்டு உண்டு. நம் தசைகளில் கிரியாட்டின் பாஸ்பேட் என ஒன்று இருக்கும். அது உடைந்து உருவாவதுதான் கிரியாட்டினைன். இந்த  கிரியாட்டினைன் நம் உடலில் இருந்து சிறுநீர் வழியே வெளியேறும்.  பிரித்தெடுக்கப்பட்ட இந்த கிரியாட்டினைன், மீண்டும் நம் உடலுக்குள் வராது.  அதனால்தான் இந்த கிரியாட்டினைன் என்பதை வேஸ்ட் பொருள் என்று சொல்கிறோம். நம்முடைய சிறுநீரகங்கள் செயலிழந்துபோகும்போதுதான் கிரியாட்டினைன் அளவு  நம் உடலில் ரத்தத்தில் அதிகரிக்கும். பெண்களைவிட இயல்பாகவே ஆண்களுக்கு கிரியாட்டினைனின் சராசரி அளவு சற்று அதிகமாகவே இருக்கும். ஆண்களுக்கு தசைத்தன்மை இயல்பிலேயே அதிகம் என்பதே இதற்கு காரணம்.  பெண்களுக்கு 0.6 முதல் 1 மில்லிகிராம்/டெசிலிட்டர் என்ற அளவிலும், ஆண்களுக்கு 0.7 முதல் 1.2 மில்லிகிராம் /டெசிலிட்டர் என்ற அளவிலும் இருக்கும். இறைச்சி நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள்,  தைராய்டு பாதிப்புள்ளவர்கள், அடிக்கடி இன்ஃபெக்ஷனுக்கு உள்ளாவோர், குறிப்பாக புராஸ்டேட் இன்ஃபெக்ஷன் ஏற்படுவோர் போன்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் இதன் அளவை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டிய சராசரி அளவைத் தாண்டும்போது அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கண்டறிய வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு ரெட் மீட், இறைச்சி மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறோமா என்று பார்க்க வேண்டும். தசைகளில் காயங்கள் ஏற்படுகின்றனவா, உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறதா, புகை அல்லது மதுப்பழக்கங்களின் காரணத்தினாலா என்றெல்லாம் யோசித்தால்,  எந்தக் காரணத்தால் கிரியாட்டினைன் அளவு அதிகரிக்கிறது என்று ஓரளவு யூகிக்க முடியும். அதன் பிறகு அதிக புரதச்சத்து, அதிக உப்புள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நிறைய காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இவற்றையும் தாண்டி,  சராசரியை விட கிரியாட்டினைன் அளவு அதிகரித்தால் யூரியா அளவுக்கான டெஸ்ட்டும் செய்ய வேண்டியிருக்கும். சிறுநீரில் கிரியாட்டின் மற்றும் கிரியாட்டினைன் இரண்டும் எந்த அளவுக்கு ஃபில்டர் ஆகின்றன என்பதையும், சிறுநீரில் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ ஆல்புமின் புரோட்டீன் எவ்வளவு உள்ளது என்பதையும், சிறுநீரில் புரததத்தின் அளவு போன்றவற்றையும் டெஸ்ட் மூலம் கண்டறிய வேண்டும். இவற்றின் மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். கிரியாட்டினைன் அளவு சராசரியைவிட குறைவாக இருந்தால், அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்க்கிறதா, கர்ப்பமா இருக்கிறாரா, கல்லீரலில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.  உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை மாற்றம் எல்லாவற்றையும் செய்த பிறகும், கிரியாட்டினைன் அளவு குறையவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டும். பொட்டாசியம் அளவு, ரத்த அழுத்த அளவு போன்றவையும் பார்க்கப்பட வேண்டும். இப்படி எல்லா அளவுகளையும் பார்த்த பிறகு மருத்துவர்கள் தேவை என நினைத்தால் டயாலிசிஸ் என்ற சிகிச்சையைப் பரிசீலிப்பார்கள். மாத்திரை Doctor Vikatan: மாதம் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்‌ஷன்... கிட்னி பாதிப்புக்கு காரணமாகுமா? கிரியாட்டினைன் அளவு அதிகரிப்பதன் அறிகுறிகளை எல்லோரும் உணர மாட்டார்கள். சிலர் வாந்தி, களைப்பு, சிறுநீர் கழிப்பது குறைவது, கால்களில் வீக்கம் போன்றவற்றை உணர்வார்கள். அந்த நிலையில் கிரியாட்டினைன் அளவை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியிருக்கும். சாதாரண விஷயங்களுக்குக்கூட அடிக்கடி மருந்துகள், பெயின் கில்லர் எடுக்கும்போது, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். கிரியாட்டினைன் அளவும் அதிகரிக்கும். எனவே, இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 20 Jul 2024 9:00 am

கிராமிய சந்தை, பாரம்பர்ய உணவுகளில் உலக சாதனை... ஜூலை 28-ல் சென்னையில் கிராமிய திருவிழா!

பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதேசமயம் பாரம்பர்ய அரிசியை எங்கு வாங்கலாம், அதில் என்னென்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்பது பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சென்னையில் வருகிற ஜூலை 28-ம் தேதி 'கிராமிய திருவிழா-2024' என்ற பெயரில் விழா நடைபெற உள்ளது. வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளி சார்பில் மண்வாசனை அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த கிராமிய திருவிழாவுக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது. நிகழ்ச்சி அறிவிப்பு நஷ்டம் இல்லாமல் விவசாயம் செய்வது எப்படி? விருது பெற்ற விவசாயியின் வெற்றிக்கதை! இந்நிகழ்வு குறித்து மண்வாசனை மேனகா பேசியபபோது, மக்களிடையே பாரம்பர்ய அரிசியில் உள்ள சத்துகள் குறித்தான விழிப்புணர்வு இருந்து வருகிறது. பாரம்பர்ய அரிசியை பெண்கள் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளும் நிறைய பேருக்கு தெரிகிறது. அதேசமயம் அந்த அரிசியை வாங்கி என்னென்ன சமைக்கலாம், எப்படி சாப்பிடலாம் போன்ற சந்தேகங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எப்படி சமைப்பது என்ற சந்தேகம் இருக்கும். அதை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். விவசாயிகள் விளைவிக்கும் பாரம்பர்ய நெல் வகைகள், அரிசி வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகள், அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? இயற்கை விவசாயம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன, ஆரோக்கியமான காய்கறிகளை மாடித்தோட்டத்தில் விளைவிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்த விழாவில் வல்லுநர்கள், இயற்கை விவசாயிகள், சித்த மருத்துவர்கள் பேச இருக்கிறார்கள். அதேபோல உணவே மருந்து... அந்த உணவுக்கு ஆரோக்கியான விளைபொருள்கள் எவை என்பதையும் இந்நிகழ்ச்சியில் விளக்க இருக்கிறார்கள். உணவுத் திருவிழா கிராமிய திருவிழாவின் ஒரு பகுதியாக இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பதற்கான சந்தையும் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கெடுக்கலாம். சிறுதானிய பிஸ்கெட்டுகள், சிறுதானிய மற்றும் பாரம்மபர்ய நொறுக்குத்தீனி வகைகள், கறுப்புக் கவுனி அரிசி மற்றும் சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம், குல்பி, மர பொம்மைகள், சானிட்டரி நாப்கின்ஸ், தினை லட்டு, கம்பு லட்டு, எள்ளுருண்டை, கமர்கட் போன்ற பாரம்பரிய உணவு பண்டங்கள், பனையோலை  பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் கிடைக்கும். பாரம்பர்ய உணவுகள் 500 விவசாயிகள், கோடிக்கணக்கில் வர்த்தகம்... ஆர்கானிக் பொருள்கள் விற்பனையில் அசத்தும் பட்டதாரி! பாரம்பர்ய மற்றும் சிறுதானிய உணவுகள் நேரடியாக சமைத்து காண்பிக்கப்படும். சமையலில் உள்ள சந்தேகங்களை அங்கே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இல்லத்தரசிகள், வயதில் மூத்தோர் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மரச்செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை என்று எந்த கலப்படமும் இல்லாத இயற்கை சார்ந்த விளைபொருள்கள், உணவுப் பொருள்களை விற்கும் கடைகளும் இடம் பெற உள்ளன. விழாவின் சிறப்பம்சமாக உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் பலவிதமான சிறுதானிய தோசை வகைகள் கண்முன்னே நேரடியாக சமைத்து காட்டப்படும். மேலும், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த சாதனை  நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என முப்பாலினத்தவரும் பங்குபெறும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். நெல் திருவிழா..! `பேருந்துப் பயணத்தில் ஒரு கோவிட் நோயாளியால் 9 பேர் பாதிக்கப்படலாம்' - சென்னை ஆய்வு சொல்வதென்ன? வி. ஜி. பி. குழுமத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி. சந்தோசம், மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை  மற்றும் அரசின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர். ஜே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜ் ராமநாதன், மாநில திட்டக்குழு உறுப்பினர் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன், தஞ்சாவூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை செம்மல் கோ.சித்தர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கவிதா ராமு, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் உழவன் கே.எம்.பாலு என இயற்கை விவசாயிகள், இயற்கை வாழ்வியல் வல்லுநர்கள், சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். விதை விற்பனை மேலும் இந்த திருவிழாவில் சித்தூர் குட்டை, சிவகங்கை குட்டை போன்ற அரிய வகை தென்னிந்திய குட்டை ரக நாட்டு மாடுகளும் இடம் பெறுகின்றன. குழந்தைகள் கொஞ்சி விளையாட, புகைப்படம் எடுக்க கன்றுக் குட்டிகளும் இருக்கும். மேலும் ராட்டினம், பாரம்பரிய தின்பண்டங்கள், மாட்டு வண்டி, கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் என்று பொழுதுபோக்கு அம்சங்களோடு இந்த கிராமிய திருவிழா நடைபெற உள்ளது. கண்காட்சியில் 100 வகையான அரிசி மற்றும் நெல்  ரகங்கள், நாட்டு விதைகள், மூலிகைகள் போன்றவையும் இடம்பெற உள்ளன. மண்வாசனை அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஆரோக்கியமான உணவு மற்றும் பாரம்பர்ய அரிசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னையில் நடத்தி வருகிறது. இந்த முறை வேலம்மாள் கல்வி நிறுவனமும் இணைந்திருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அழைக்கிறோம் என்று தெரிவித்தார். கிராமிய திருவிழா நாள் : ஜூலை 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. இடம்: வேலம்மாள் நிறை நிலை மேல்நிலைப் பள்ளி, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர், சென்னை. நேரம்: காலை 9 .30 மணி முதல் மாலை 6 .30 மணி வரை   அரங்கு அமைக்க விரும்புவர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு... 98841 66772 / 097909 72612

விகடன் 19 Jul 2024 5:25 pm

செல்போனில் அதிக நேரம் கேம்: மனநலம் பாதிப்பால் கிணற்றில் குதித்த 16 வயது மாணவர்..!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் இரவு சுமார் 10 மணியளவில் அவசர போன் கால் வந்தது. அதில் பேசியவர்கள், திற்பரப்பு அருகே பிணந்தோடு பகுதியில் 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 35 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் குதித்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்துசென்று பார்த்தபோது கிணற்றுக்குள் இருந்த மாணவர், ’மேலே வரமாட்டேன், நான் சாகப்போகிறேன்’ என அடம்பிடித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் மாணவரை சமாதானப்படுத்தி, வலை கட்டி மீட்டுள்ளனர். மாணவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டுள்ளார். என்ன காரணம் என போலீஸார் அவரிடம் கேட்க, காய்ச்சலுக்கான 20 மாத்திரைகளை தான் சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவரை குலசேகரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது என போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், செல்போன் கேமுக்கு அடிமையானதைத் தொடர்ந்தே மாணவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. மொபைல் கேம் `பேருந்துப் பயணத்தில் ஒரு கோவிட் நோயாளியால் 9 பேர் பாதிக்கப்படலாம்' - சென்னை ஆய்வு சொல்வதென்ன? இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், 16 வயதாகும் அந்த மாணவர் திருவட்டாறு அருகேயுள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக செல்போன் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடியதால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டு உள்ளார். கடந்த வருடம், மன விரக்தியின் காரணமாகக் காய்ச்சலுக்கான மருந்தை அளவுக்கு அதிகமாகச் சப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து உயிர் தப்பியுள்ளார். மாணவர் படிப்பில் கவனம் இல்லாமலும், விரக்தியால் இயல்புக்கு மாறான செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளார். அவை எப்படியாவது மீட்க வேண்டும் என அவர் பெற்றோர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை செய்துவந்த மாணவரின் தந்தை, மகனின் நிலைமையை சீராக்குவதற்காக கடந்த ஒரு வருடம் முன்பு நீண்ட விடுப்பு எடுத்து ஊருக்கு வந்துள்ளார். அவரும், மகனை செல்போன் கேமிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. இதையடுத்து, விடுமுறை முடிந்து அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தாய், பாட்டி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார் மாணவர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவர் உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா..? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள்..! கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார் மாணவர். சற்று நேரத்தில், வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டதால், என்னவென்று பாட்டி சென்று பார்த்துள்ளார். கிணற்றின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக மாணவரின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் டார்ச் லைட் உதவியுடன் கிணற்றுக்குள் பார்த்தனர். சுமார் 35 அடி ஆழம் கொண்ட கிணற்றில் மாணவர் உள்ளே இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அக்கம்பக்கத்தில் இருந்து வந்தவர்கள், மாணவரை காப்பாற்ற முயற்சிகள் எடுத்தனர். சுமார் 35 அடி ஆழமுள்ள கிணற்றில், கயிறு கட்டி மாணவரை மீட்க முயன்றனர். ஆனால், ’யாரும் உள்ளே வரக்கூடாது நான் சாக முடிவு எடுத்துள்ளேன். உள்ளே வந்தால் உங்களுக்கும் ஆபத்து ஏற்படும்’ என அவர் கத்தியுள்ளார். இதனால், யாரும் உள்ளே செல்லவேண்டாம் என மாணவரின் தாய் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரே, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கூறியுள்ளனர். அதன் பிறகே மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். செல்போன் கேம் அடிக்‌ஷனால் மாணவரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, பலருக்கும் அதிர்ச்சியும் கவலையும் தந்துள்ளது.

விகடன் 19 Jul 2024 4:51 pm

``பொதுமக்கள் தினமும் சிரிக்கணும்…ஜப்பானில் அமலுக்கு வந்த புதிய சட்டம்!

‘இதுக்கெல்லாமா சட்டம்‘ என்று கேட்டவுடனே நமக்கு குபீர் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால், இன்றைய நவீன வாழ்க்கை எந்தளவு இறுக்கமாகவும், மகிழ்ச்சி இல்லாமலும் வறட்சியாக நகர்கிறது என்பதற்கான உதாரணமாக இதைப் புரிந்துகொள்ளலாம். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ளது யமகட்டா மாகாணம். இங்கு ஆட்சி செய்யும் லிபரல் டெமாக்ரட்டிக் பார்ட்டிதான் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. ‘தினமும் சிரிப்பது உடல்நலம், மனநலம் இரண்டையும் மேம்படுத்தும். மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது‘ என இதுகுறித்து அரசு விளக்கமளித்துள்ளது. மேலும், இந்தப் புதிய சட்டம் பற்றிய அரசின் செய்திக்குறிப்பு தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பணிச்சூழலை மகிழ்ச்சிகரமாக சிரிக்கும் வகையில் அமைக்க வேண்டுமென்றும் தொழிலதிபர்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜப்பான் 500 விவசாயிகள், கோடிக்கணக்கில் வர்த்தகம்... ஆர்கானிக் பொருள்கள் விற்பனையில் அசத்தும் பட்டதாரி! சரி… இப்படி ஒரு திடீர் சட்டம் அமலுக்கு வர என்ன காரணம்? யமகட்டா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மேற்கொண்ட ஆராய்ச்சியின் எதிரொலியாகவே இந்த முன்னெடுப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 17,152 பேரிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடையோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். குறைவாக சிரிப்பவர்கள் அல்லது சிரிக்காமலேயே இருக்கும் சீரியஸ் ஆசாமிகளுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் அதிகம் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சிரிப்பில்லாத வாழ்க்கை உயிரிழப்பு போன்ற அபாயங்களுடனும் தொடர்பு கொண்டது என ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இந்த ஆய்வுக்கட்டுரை Journal of Epidemiology இதழிலும் வெளியானது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நலன் கருதி புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ‘சிரிப்பது வாழ்க்கையை அனுபவிப்பதற்கும், நேர்மறையான எண்ணங்களுக்கும், செயல்திறனை வளர்ப்பதற்கும், அமைதி, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, மனசாட்சியுடன் வாழ்வதற்கும் உதவி செய்யும்‘ என்றும் கூறுகிறது புதிய சட்டம். இந்தச் சிரிப்பு சட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க, ஒவ்வொரு மாதத்தின் 8-ம் நாளானது சிரிப்பின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரிப்பு `நீங்கள் இறக்க விரும்பினால், இதுவே சிறந்த வழி' -தற்கொலை எந்திரம் கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்? யமகட்டா அரசின் இந்தச் சட்டமானது எதிர்க்கட்சியினர் மற்றும் சில சமூக ஆர்வலர்களால் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது. ‘சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை. இந்தச் சட்டம் தனி மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எல்லோருக்கும் சிரிக்கும் சூழ்நிலை இருக்காது. சிலர் தனிப்பட்ட வாழ்வில் ஏதேனும் துக்க மனநிலையில் இருப்பார்கள். வேலை பளு இருக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் சென்று ஏன் சிரிக்கவில்லை என்று கேட்க முடியாது‘ என்று கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். இதன் எதிரொலியாக சிரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வதந்தி பரவியது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை. பொதுமக்களிடம் சிரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அபராதமெல்லாம் விதிக்கப்படாது என்றும் உள்ளூர் அரசு நிர்வாகத்தினர் சந்தேகம் கேட்ட பொதுமக்களிடம் விளக்கமளித்துள்ளனர். ஜப்பானில் அமலுக்கு வந்த இந்தச் சட்டம் விநோதமாக இருந்தாலும், எதிர்ப்பினை சந்தித்தாலும் பொதுமக்களிடையே சிரிப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதால் இது வரவேற்க வேண்டியதே. இதைத்தான் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்‘ என்று எந்த ஆராய்ச்சியும் செய்யாலமேயே நம் ஊரில் பழமொழியாக முன்பே சொல்லி வைத்தார்கள்! சிரிப்பு உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா..? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள்..! ஜப்பானின் சில விநோதமான சட்டங்கள்... ஜப்பானில் இதுபோன்ற விநோதமான சட்டம் அமலுக்கு வருவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே சில சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. * ஜப்பானின் ரூபாய் நோட்டை சேதப்படுத்துவது ஓர் ஆண்டு வரை சிறைத்தண்டை அளிப்பதற்கேற்ற தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். * வீட்டிலுள்ள குப்பையை அதற்குரிய நாளில்தான் வெளியில் எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். * ஒரு சதவிகிதத்துக்கும் மேல் ஆல்கஹால் கொண்ட மதுபானத்தை விற்பனை செய்வது சட்ட விரோதம். மீறினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். * கடந்த 1948-ம் ஆண்டு முதல் இரவுவிடுதிகளிலும், பார்களிலும் நடனமாடுவது குற்றமாகவே இருந்தது. நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு 2014-ம் ஆண்டுதான் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. * டாட்டூ குத்துகிறவர்கள் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அரசு கருதியது. இதனால் வெளியில் தெரியும் வகையில் டாட்டூ போட்டுக் கொண்டு வருகிறவர்களுக்குப் பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

விகடன் 19 Jul 2024 11:27 am

Doctor Vikatan: வயது 28, படுக்கையில் சிறுநீர்... பிறப்புறுப்பில் அரிப்பு.. தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகவில்லை. இரவு தூங்கும்போது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருக்கிறது. சில நாள்களில் உடை முழுவதும் நனைந்தபிறகுதான் கண் விழிக்கிறேன்.  கடந்த ஒரு வருடமாக பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது. அதற்காக தேங்காய் எண்ணெய், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தியும் பலனில்லை.  எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய்  அல்லது பிறப்புறுப்புத் தொற்று இருக்குமோ என பயமாக இருக்கிறது. திருமணம் முடிந்து தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்னைகள் தானாகச் சரியாகிவிடும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? இந்தப் பிரச்னைகளுக்கு நான் எந்த மருத்துவரை அணுக வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.    டாக்டர் நித்யா ராமச்சந்திரன் இந்தக் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே பெல்விக் இன்ஃபெக்ஷன் (pelvic infection) எனப்படும் இடுப்புப்பகுதியைச் சுற்றியுள்ள தொற்றின் அறிகுறிகள் போன்றுதான் தெரிகின்றன. நீங்கள் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகியே தீர வேண்டும்.  தாமதிக்காமல் உங்கள் பிரச்னைகளைச் சொல்லி, பரிசோதிக்கச் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, தயிர் உள்ளிட்ட எதுவும் உங்களுடைய இந்தப் பிரச்னைகளுக்கு நிச்சயம் உதவாது. ஏனெனில் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது உடலுக்குள் உருவான தொற்று. அதற்கு வெளிப்பூச்சுகள் எந்த வகையிலும் பலன் தராது. உங்களுக்கு உடனடியாக வெஜைனா பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து ஸ்வாப் டெஸ்ட் ( Swab test) செய்து பார்க்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு ஏற்படுகிற இதுபோன்ற பல பிரச்னைகளும் கல்யாணமானால் தானாகச் சரியாகிவிடும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அப்படியெல்லாம் இல்லை. உங்கள் விஷயத்திலும் அப்படித்தான். உங்களுக்கு என்ன பிரச்னை என்பதே முதலில் கண்டுபிடிக்கப்படவில்லை. பல காலமாக இந்தப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  திருமணம் ஆனாலுமே உங்கள் பிரச்னை கண்டறியப்படும்வரை நீங்கள் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும்.  தொற்று | Infection Doctor Vikatan: சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கும் உணர்வு, ஆசனவாயில் அரிப்பு... தீர்வுகள் என்ன? படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இரவில் தூங்கும்போது கனவுகள் வருகின்றனவா, எதையாவது நினைத்துப் பதற்றப்படுகிறீர்களா, குழந்தைப்பருவத்தில் அல்லது உங்களுடைய டீன் ஏஜில் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட அனுபவம் ஏதேனும் இருக்கிறதா, பயப்படுகிறீர்களா என்றெல்லாம் தெரிய வேண்டும். இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சை எடுக்கும் முன், உங்களுடைய மற்ற பிரச்னைகளை சரி செய்யப் பாருங்கள். உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுங்கள். அவற்றிலிருந்து மீண்டதும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 19 Jul 2024 9:00 am

வலியில்லை, மூச்சுத்திணறல் இல்லை, ஒரு பட்டனை அழுத்தினால் உயிர் பிரியும்... தற்கொலைக்கு உதவும் வாகனம்!

தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. தற்கொலை வாகனம் | Portable Suicide Pods 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி; ஒரே நேரத்தில் கருணைக்கொலை! நெகிழ வைக்கும் பின்னணி! சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அனுமதிக்காவிட்டாலும் கருணைக் கொலைக்கு அனுமதி உண்டு. சுயநல நோக்கமின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவர்களும் தற்கொலை செய்து கொள்ளலாம். அங்கு இதற்கான பணிகளைச் செய்வதற்கென்றே சில அமைப்புகளும் செயல்படுகின்றன. அத்தகைய அமைப்புகளில் ஒன்றான தி லாஸ்ட் ரிசார்ட் (Last Resort) தலைமை நிர்வாகி ஃபோரியன் வில்லட் கூறுகையில், எங்களிடம் மக்கள் வரிசையில் நிற்பதால், எளிதாக மரணிக்க இந்த வாகனத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரும்புகிறோம். அது விரைவில் நடைபெறும் என்றார். ஆழ்ந்த உறக்கத்தில் விழும் வரை ஆக்ஸிஜன் இல்லாமல் காற்றை சுவாசிக்காம... அதாவது இறப்பதற்கு இதைவிட இன்னும் அழகான வழியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது, என்றார் அவர். அதே நேரம், இறக்க விரும்பும் நபர் முதலில் அவர்களின் மனத்திறன் பற்றிய மனநல மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டம். இறக்க விரும்பும் நபர், மரணிப்பதற்கான வாகனத்தில் ஏறி, மூடியை மூடிவிட்டு அவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், பொத்தானை அழுத்தினால் என்ன நடக்கிறது என்பன போன்ற தானாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதன்பின் வாகனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி, மரணத்தை தேடிக் கொள்ளலாம். Portable Suicide Pods குழந்தைகளை தாக்கும் மூளைதின்னும் அமீபா தொற்று, கேரளாவில் பரவல், குமரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கை! மரண வாகனத்தில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 விநாடிகளுக்குள் 21 சதவிகிதத்திலிருந்து 0.05 சதவிகிதமாகக் குறையும் போது, உள்ளே இருப்பவர் சிறு மாற்றத்தை உணர்வார். எனினும் சுய நினைவு இழப்பதற்கு முன்புவரை அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார் என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளரான பிலிப் நிட்ஸ்கே. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜனை நைட்ரஜனுடன் மாற்றி உடனே மரணத்தை விளைவிக்கிறது. இதற்கு கட்டணமாக 20 அமெரிக்க டாலரை செலவிட வேண்டும். எந்த பீதியோ, மூச்சுத்திணறலோ இல்லாமல் மரணம் நேரிடுகிறது. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நபரின் இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை வாகனம் கண்காணிக்கிறது. 30 விநாடிகளுக்குள் செயல்முறை நிறைவடைய, மரணிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாக அந்த நபர் சுய நினைவு இழந்துவிடுவார் என்றார் பிலிப் நிட்ஸ்கே. அதே நேரம், மரணிப்பதற்கான வாகனத்தில் ஒருவர் அமர்ந்த பிறகு எல்லா செயல்முறைகளும் தொடங்கி, திடீரென மனமாற்றம் நேரிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிட்ஸ்கே, ஒருமுறை நீங்கள் அந்த பொத்தானை அழுத்தினால், திரும்பிச் செல்ல வழி இல்லை என்றார். இந்த வருடத்திற்குள் முழு பயன்பாட்டுக்கு வரும் இந்த வாகனத்தை பயன்படுத்தி இறப்போரின் விவரங்கள் மற்றவர்களுக்கு பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த வாகனத்தைப் பயன்படுத்தி மரணத்தை எதிர்கொள்ளலாம். Portable Suicide Pods ``மரணக்குறிப்பு எழுதி வைத்தேன்''- அரசு மருத்துவமனை லிஃப்டில் 3 நாள்கள் சிக்கியவரின் திகில் அனுபவம்! கடந்த 12 மாதங்களில் ரோட்டர்டாம் நகரில் உள்ள பரிசோதனைக்கூடத்தில் பலமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பரிசோதனைக்கு மனிதர்கள், விலங்குகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில், ஐந்து அடி மற்றும் எட்டு அங்குலம் (1.73 மீட்டர்) உயரமுள்ள ஒருவருக்கு மட்டுமே இடமளிக்க முடியும். ஒன்றாக இறக்க விரும்பும் தம்பதியருக்கு ஏற்ப, இரட்டை வாகனத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளதாகக் கூறுகின்றனர். எனினும், மரண தண்டனைக்காக ஒருபோதும் இந்த வாகனம் பயன்படுத்தப்படாது என்று தி லாஸ்ட் ரிசார்ட் தெரிவித்துள்ளது.

விகடன் 18 Jul 2024 2:58 pm

Doctor Vikatan: வாழைப்பழத் தோல் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர், BP -ஐ குறைக்குமா?

Doctor Vikatan: வாழைப்பழத்தைச் சாப்பிட்டு முடித்ததும், அதன் தோலைத் தூக்கி எறியாமல், நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால்,  ரத்த அழுத்தம் குறையும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை? இதை தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் உண்மையல்ல. வெறும் வாழைப்பழத் தோல் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர், ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடாது.  வாழைப்பழத்தின் தோலை நீரில் கொதிக்கவைத்து டீ போன்று குடிப்பதற்கு பதில், பழமாகச் சாப்பிடுவதுதான் அதிக பலன்களைத் தரும். வாழைப்பழத்தோலில் பொட்டாசியம் சத்து இருப்பதைப் போலவே, அந்தப் பழத்திலும் பொட்டாசியம் சத்து உள்ளது. வாழைப்பழத் தோல் தேநீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறையாவிட்டாலும், அந்தத் தேநீர் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், இது மட்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்று நம்பிக்கொண்டு, ரத்த அழுத்தத்தை அலட்சியமாகக் கையாள்வது ஆபத்தானது.  குறிப்பிட்ட இடைவேளைகளில் உங்கள் ரத்த அழுத்த அளவை சரிபார்த்து, அதன் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும்.  Blood Pressure Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? ரத்த அழுத்தம் அதிகரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல... அது குறிப்பிட்ட அளவைத் தாண்டினாலும் குறைந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். வாழைப்பழத் தோலில் அழுக்கு, கிருமிகள் போன்றவை இருக்கும்.  அந்தப் பழங்கள் எங்கிருந்து வருகின்றன, எத்தனை கைகள் தாண்டி வருகின்றன, எங்கு போட்டு வைத்திருந்தார்கள் என பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவே, தோலை அப்படியே பயன்படுத்துவது கிருமித்தொற்றை ஏற்படுத்தலாம்.  எப்போதாவது ஆசைக்கு இதுபோன்ற முயற்சிகளைச் செய்யலாம், தவறில்லை. அப்போதும் வாழைப்பழத் தோலை நன்கு கழுவிவிட்டு பிறகு தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.  மற்றபடி இதை ஒரு சிகிச்சையாகக் கருதிப் பின்பற்றுவது தேவையற்றது. சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர்கள் பகிரும் இதுபோன்ற தகவல்களை கண்மூடித் தனமாக நம்பி பின்பற்றுவது மிகப்பெரிய தவறு. ஆரோக்கிய விஷயத்தில் மருத்துவர் சொல்வதை மட்டுமே கேளுங்கள்... அதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 18 Jul 2024 9:00 am

Awareness: நம்ம வீட்டுப் பசங்க இங்க எல்லாமா போறாங்க..? | காமத்துக்கு மரியாதை 183

ஷங்கர் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த `பாய்ஸ்' படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். டீன் ஏஜ் பிள்ளைகளின் மனநிலை, ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் என்று இளைய தலைமுறையினரை பற்றி தெளிவாக எடுத்துச் சொன்ன படம் அது. அந்தப் படத்தில் வருகிற ஐந்து பாய்ஸும் ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்வார்கள். அதையொட்டி அவர்கள் சில பிரச்னைகளையும் சந்திப்பார்கள். கிட்டத்தட்ட அதே போன்றதொரு சம்பவத்தை செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் நம்மிடம் பகிர்ந்தார். Sex Education ''அவர்கள் ப்ளஸ் டூ மாணவர்கள். ஏழெட்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஒரு மலைவாசஸ்தலத்துக்கு டூர் சென்றிருக்கிறார்கள். `ஜஸ்ட் ஃபார் ஃபன்' என்று ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்கிறார்கள். அதில் ஒரேயொரு பையன் மட்டும், முதிர்ச்சியான ஆண்போல அந்த செக்ஸ் வொர்க்கரிடம் உறவு கொள்கிறான். எல்லாம் முடிந்த பிறகு அவர்கள், தங்கள் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள, அப்போது, தங்களில் ஒருவன் மட்டும் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறான் என்பது மற்ற மாணவர்களுக்குத் தெரிய வருகிறது. பொறாமை, எரிச்சல், கேலி... இவற்றில் ஏதோவோர் உணர்வுக்கு ஆட்பட்ட மற்ற மாணவர்கள், `டேய், செக்ஸ் வொர்க்கர்கிட்ட இன்டர்கோர்ஸ் வெச்சுக்கிட்டதால உனக்கு எய்ட்ஸ் வரப்போகுது... உன் ஆண்மை இதோட போயிடப்போகுது...' என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விஷயம் மெள்ள மெள்ள மற்ற மாணவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அவர்களில் சிலரும் இந்த நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, `ஆமாம்டா... உன் ஆண்மை போகப் போகுது' என்று பயங்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் `போங்கடா' என்று அலட்சியப்படுத்திய அந்த மாணவன், ஒருகட்டத்தில் `அவர்கள் சொல்வதுபோல தனக்கு ஆண்மை குறைந்துவிடுமோ' என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறான். பிறகு, அதை நம்பவும் ஆரம்பித்திருக்கிறான். விளைவு மிகத் தீவிரமான உளவியல் பிரச்னையில் சிக்கி விட்டான். Dr. Kamaraj Sexual Health: எல்லோருடைய honey moon-ம் இப்படித்தான் இருக்கும்..! - காமத்துக்கு மரியாதை 181 பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறான். தன் பிள்ளைக்கு என்ன நடந்தது என்று அவன் நண்பர்களிடம் விசாரித்த அவனுடைய அப்பாவுக்கு எல்லா உண்மைகளும் தெரியவர, அவனை என்னிடம் அழைத்து வந்தார். அவனிடம் பேசிப் பார்த்ததில் மிக மோசமான மனநிலை பாதிப்பில் இருக்கிறான் என்பது தெரிய வந்தது. உடனடியாக மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தான். சிறுவயதில் செக்ஸ் வொர்க்கரிடம் சென்றுவிட்டு, பயத்துடன் என்னைச் சந்திக்க வருகிற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி இருக்கிறது. இதைத் தவிர, பள்ளிக்கூட மாணவர்களிடம் இன்னும் இரண்டு பிரச்னைகள் இருப்பதையும் என் அனுபவத்தில் கவனித்து வருகிறேன். சில மாணவர்களுக்கு மார்பகம் பெரிதாக இருக்கும். அந்த மாணவர்களின் மார்பை மற்ற மாணவர்கள் கிள்ளுவது... ஒன்றாக சிறுநீர் கழிக்கச் செல்கையில் `உன்னோடது சின்னதா இருக்குது' என்று கேலி செய்வது ஆகியவையும் சம்பந்தப்பட்ட மாணவர்களை மனதளவில் பாதிக்கிறது. கேலி செய்கிற மாணவர்கள் விபரீதம் தெரியாமல்தான் செய்கிறார்கள். ஆனால், பாதிக்கப்படுகிற மாணவர்களின் ஆளுமையை, கம்பீரத்தை கிட்டத்தட்ட நாசம் செய்துவிடுகிறார்கள். Adolescent boys and girls Condom... கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய A to Z தகவல்கள்... - காமத்துக்கு மரியாதை | 182 பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதும், வெளியூர் டூர் போகும்போதும் செக்ஸ் வொர்க்கர்களுடன் உறவு வைத்துக் கொள்வதை இன்றைய டீன் ஏஜ் இளைஞர்கள் ஜாலியான விஷயமாகப் பார்க்கிறார்கள். இது அவர்களுடைய உடலுக்கும் நல்லதல்ல.. மனதுக்கும் நல்லதல்ல... பெற்றோர்கள் இந்த விஷயத்திலும் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும்'' என்று அறிவுறுத்துகிற டாக்டர் காமராஜ், மார்பகம் பெரிதாக இருக்கிற இளைஞர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் தங்களுடைய பிரச்னையை சரி செய்து கொள்ளலாம். அதை 22 வயதில் செய்வதே நலம். வளரும் வயது என்பதால் அதற்கு முன்னால் செய்தால் மார்பகம் மறுபடியும் வளரும் என்பதையும் குறிப்பிடுகிறார்.

விகடன் 17 Jul 2024 6:00 pm

``மரணக்குறிப்பு எழுதிவைத்தேன்'' - அரசு மருத்துவமனை லிஃப்டில் 3 நாள்கள் சிக்கியவரின் திகில் அனுபவம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். அவர், எலும்பு சம்பந்தமான பிரச்னைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி காலையில் சென்றுள்ளார். தரைத்தளத்தில் புற நோயாளிக்கான சீட்டு வாங்கிய ரவீந்திரன், மருத்துவரை பார்க்க முதல் தளத்துக்கு லிஃப்டில் செல்ல முயன்றார். லிஃப்ட் கிரவுண்ட் ஃப்ளோரை நோக்கிச் சென்றதுடன் பாதியிலேயே நின்றுவிட்டது. அச்சத்தில், அவசர உதவிக்கான அலாரம் பட்டனை அழுத்திப் பார்த்துள்ளார் ரவீந்திரன். அலாரம் ஒலித்த பின்னரும் யாரும் உதவிக்குச் செல்லவில்லை. லிஃப்டில் குறிப்பிடப்பட்டிருந்த அவசர உதவி எண்களுக்கு, தன் மொபைல் போனிலிருந்து தொடர்பு கொண்டுள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில், தன் மொபைலில் இருந்த சார்ஜ் தீர்ந்த நிலையில், தண்ணீர், உணவு இல்லாமல் லிஃப்டுக்குள் கிடந்துள்ளார் ரவீந்திரன். இனி தப்பிக்க வழியில்லை என முடிவுக்கு வந்த அவர், தன் மரணத்துக்கான காரணம் குறித்து ஒரு பேப்பரில் மரண குறிப்பு எழுதியிருக்கிறார். மூன்று நாள்கள் கழித்து, ஒருவழியாக அவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லிஃப்டில் சிக்கி 3 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட ரவீந்திரனை சந்தித்த அமைச்சர் வீணா ஜார்ஜ் விட்டு விட்டு விழும் தூறல்... ஓயாத குளிர்காற்று... கலவையான காலநிலைக்குக் காரணம் என்ன? இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், அந்த லிஃப்ட் ஏற்கெனவே ரிப்பேராகி இருந்திருக்கிறது. அது குறித்து அங்கு எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் நான் உள்ளே தனியாகச் சென்று சிக்கி இருக்க மாட்டேன். மாட்டிக்கொண்டதை உணர்ந்த நான், பலமுறை அலாரத்தை அழுத்தினேன். செல்போனில் அங்கு எழுதியிருந்த அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் அனைத்திற்கும் பலமுறை அழைத்துப் பார்த்தேன். யாரும் போனை எடுக்கவில்லை. மொபைலும் ஆஃப் ஆகிவிட்டது. லிஃப்டில் சிக்கிய ரவீந்திரன் தப்பிக்க வழிதேடி, லிஃப்டின் கதவை திறந்து கீழே குதித்துவிடலாம் எனப் பார்த்தேன். அங்கு சுவர் தான் தெரிந்தது. லிப்டை இடித்துப் பார்த்தேன். கிரவுண்ட் ஃப்ளோரில் இறந்த பலரது உடல்களை கொண்டு செல்லும் அழுகுறல்கள் சத்தம் எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய உறவினர்கள் இறந்ததாகக் கூறி அழுது கொண்டிருந்தது மிகத் தெளிவாக எனக்குக் கேட்டது. உணவில்லாமல், குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இனி தப்பிக்க வாய்ப்பு இல்லை, இறந்துவிடுவோம் என நினைத்தேன்.  என்னுடைய பையில் என் மனைவி எழுதிய சில கவிதை பேப்பர்கள் இருந்தன. அதில் ஒரு பேப்பரில் நான், என்னுடைய மரணத்திற்கான காரணம் குறித்து எழுதினேன். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லிஃப்டில் மாட்டிக் கொண்ட நபர்... காப்பாற்றியவர் தாக்கப்பட்ட சம்பவம்! - கைதுசெய்த போலீஸ் என் கை, கால்கள் தளர்ந்துகொண்டே இருந்தன. இரவா, பகலா என்பது தெரியவில்லை. இறந்துபோன என் அப்பா, அம்மா எல்லோரும் என் கண் முன்பு வந்துபோனார்கள். நான் இறந்துபோனால், எப்படி என் மூத்த மகனை எல்.எல்.பி படிக்க வைப்பது, இளைய மகனை பி.எஸ்சி ஜியாலஜி படிப்பை பூர்த்திசெய்ய வைப்பது என கலங்கினேன். இதையெல்லாம் மரணக்குறிப்பாக எழுதி அந்த பைக்குள் வைத்தேன். பேக்கை லிஃப்டின் கைப்பிடியில் தொங்கவிட்டேன். மரணம் என் கண்களில் தெரிந்தது. நான் இறந்துவிட்டால், என் உடலை மீட்கக்கூட எத்தனை நாள்கள் ஆகும் என தெரியாது. அதற்கிடையில் உடல் அழுகி, பேக்கில் இருக்கும் பேப்பர்கள் நாசமாகிவிடக்கூடாது என்பதற்காக பையை உயரமான இடத்தில் வைத்தேன். ஒருவழியாக, மூன்று நாள்களுக்குப் பின் என்னை மீட்டவர் தேவ தூதனைப்போன்று என் கண்ணுக்குத் தெரிந்தார் என்று கண்களில் நீர் பெருக கூறியுளார். தனது வழக்கமான வேலைகளுக்காக வந்த லிஃப்ட் ஆபரேட்டர் ஒருவருக்கு, ரவீந்திரன் லிஃப்டில் சிக்கிக்கொண்டிருப்பது பற்றி தெரிய வர, அதற்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

விகடன் 17 Jul 2024 2:44 pm

Doctor Vikatan: இரவில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு தூங்கலாமா?

Doctor Vikatan: என் வயது 45. நான் தினமும் இரவில் ஆன்டி-ஏஜிங் க்ரீம் உபயோகிக்கிறேன்.  ஆனால், ஆன்டி-ஏஜிங் க்ரீமை தினமும் உபயோகிக்கக்கூடாது என சிலர் சொல்கிறார்களே... அப்படியா? வேறு என்ன உபயோகிக்க வேண்டும்? இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு படுத்துவிட்டு, காலையில் முகம் கழுவுவது சரியானதா? அது இளமையைத் தக்கவைக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா 45 வயதில் சருமப் பராமரிப்பில் நீங்கள் அக்கறை காட்டுவது மிகவும் நல்ல விஷயம். அதற்காக உங்களுக்குப் பாராட்டுகள். ஆன்டி- ஏஜிங் (Anti-aging) க்ரீம்களில் பொதுவாக ரெட்டினால் (Retinol) சேர்க்கப்பட்டிருக்கும்.  ரெட்டினாலுக்கு இயல்பிலேயே சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, நீங்கள் பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீமில் மிகவும் குறைவான சதவிகிதத்தில் ரெட்டினால் இருந்தால் பிரச்னையில்லை. ஒருவேளை உங்கள் க்ரீமில், ரெட்டினாலின் சதவிகிதம் சற்று அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதை நீங்கள் ஒருநாள் விட்டு ஒருநாளோ, வாரத்துக்கு இரண்டு நாள்களோ உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும். அதுவே, நீங்கள் அந்த க்ரீமை பல நாள்கள் உபயோகித்துவிட்டீர்கள், அது உங்கள் சருமத்தில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை என்றால், தொடர்ந்து உபயோகிக்கலாம். இதைத்தாண்டி, பெப்டைட்ஸ் (peptide) உள்ள க்ரீம் உபயோகிப்பதும் சருமத்துக்கு மிக நல்லது. அது சருமத்தை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. அதேபோல வைட்டமின் சி, நயாசினமைட்ஸ் (Niacinamide) போன்றவை உள்ள க்ரீம்களையும் உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு முன் உங்கள் சரும மருத்துவரை அணுகி, உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் தேவையைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனப்படும் கரும்படலம் இருக்கிறதா, வேறு பிரச்னை இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்து உங்களுக்கேற்ற ஆன்டி ஏஜிங் க்ரீமை மருத்துவர் பரிந்துரைப்பார். ரெட்டினால் ஆன்டி ஏஜிங் க்ரீம் ஜான்வி கபூர் முதல் ராஷ்மிகா மந்தனா வரை... அழகு சிகிச்சையில் டிரெண்டாகும் ஐவி தெரபி..! இரவு முழுவதும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு தூங்குவது நிச்சயம் சரியானதல்ல. தேங்காய் எண்ணெய் ஒருவிதமான மாய்ஸ்ச்சரைசர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் வெளியேறாமல் தடைசெய்யும். அதன் விளைவாக பருக்கள் போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, அதைத் தவிர்ப்பதே சிறந்தது. அதற்கு பதிலாக மருத்துவ ஆலோசனையோடு உங்களுக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 17 Jul 2024 9:00 am

Doctor Vikatan: அதிக புரதச்சத்து கிட்னியை செயலிழக்கச் செய்யுமா... எந்த அளவு உணவில் சேர்க்கலாம்?

Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 27. ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்கிறான். ஜிம்மில் சேர்ந்தது முதல் சதா சர்வகாலமும் புரோட்டீன் உணவுகளைத் தேடித் தேடிச் சாப்பிடுகிறான். ஒரு நபருக்கு புரதச்சத்து எந்த அளவுக்கு முக்கியம்...? அது அளவுக்கு அதிகமானால் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா.   ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா. Doctor Vikatan: 20 வயதுக்கு முன்பான இளநரையை reverse செய்ய முடியுமா... வீட்டு சிகிச்சை உதவுமா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, உணவு விஷயத்துக்கு மிகப் பொருத்தமான வாசகம். அது எல்லாச் சத்துகளுக்கும் பொருந்தும். ஒருவரது எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் புரதம் தினமும் தேவை.  அதாவது, 50 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு புரதச்சத்து அவசியம்.  நம் உடலால் புரதச்சத்தை உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலம்தான் அதை நாம் உடலுக்குக் கொடுக்க முடியும். 6 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு பெரியவர்கள் எடுத்துக்கொள்வதிலிருந்து 3-4 கிராம் குறைவாக கொடுக்கலாம். 6 வயதுக்குப் பிறகு அவர்களுக்கும் எடைக்கேற்ற அளவுதான் பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு வேளை உணவிலும் 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்பற்றுவதால், புரதச்சத்து உடலில் சேமிக்கப்படாது. பருப்பில் தொடங்கி, ஆட்டுக்கறிவரை பல உணவுகளில் புரதச்சத்து இருக்கிறது. புரதச்சத்து இருப்பதாலேயே எல்லா உணவுகளும் ஆரோக்கியமானவை என அர்த்தமில்லை. புரதத்தோடு சேர்த்து அதில் வேறு என்னவெல்லாம் இருக்கின்றன, கொழுப்புச்சத்து எவ்வளவு இருக்கிறது, நார்ச்சத்து அதிகமிருக்கிறதா என்பதையும் பார்த்தே  தேர்வு செய்ய  வேண்டும். கிட்னி Doctor Vikatan: எட்டு வடிவ நடை- எல்லோருக்கும் ஏற்றதா? புரதம் தேவைதான். ஆனால், அதற்காக புரதத்தைவிடவும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது ஆபத்தானது.  எனவே, எந்த மாதிரியான புரதம் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். தேவைக்கு அதிகமான புரதச்சத்து எடுப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்.  சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட பிரதான உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். வழக்கமாக யாரும் உடலில் புரதத்தின் அளவை செக் செய்வதில்லை. வேறு ஏதேனும்  உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, அதற்காக   மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளைச் செய்யும்போதுதான் உடலில் புரதம் அதிகமிருப்பது தெரியவரும். புரதத் தேவைக்காக ஒரு நாளைக்கு பத்து முட்டைகள், சிக்கன் என அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதும் தவறு. உங்கள் நண்பருக்கு இதைப் புரிய வையுங்கள். பாடி பில்டிங் மாதிரியான உடல் கட்டுமானம், உடல் உறுதி தொடர்புள்ள துறைகளில் ஈடுபடுவோர் என்றால், அவர்களுக்கான புரதத் தேவை சற்று வேறுபடும். வெறும் உடற்பயிற்சிக்காக உங்கள் நண்பர் அதிக புரோட்டீன் எடுப்பது தேவையற்றது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 16 Jul 2024 9:00 am

Condom... கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய A to Z தகவல்கள்... - காமத்துக்கு மரியாதை | 182

காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார். ``காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆனால், அந்தக் காலத்தில் சிஃபிலிஸ் (SYPHILIS) போன்ற பால்வினை நோய்கள் அதிகம் இருந்ததால், அடிக்கடி உறவு கொள்ள பயந்தார். மன்னருடைய மருத்துவர் ஆட்டுக்குடலின் நுனியைத் தைத்து ஆணுறை போல உருவாக்கி அதை மன்னருக்கு வழங்கினார். இது பால்வினை நோய்கள் வராமல் தடுக்கும் என்பதையும் கண்டறிந்தார். மன்னருடைய மருத்துவரின் பெயராலேயே, 'காண்டம்' என்று அது அழைக்கப்படுகிறது. condom இரண்டாம் உலகப்போரின்போது உலகின் சில இடங்களில் மட்டும் இருந்து வந்த சிஃபிலிஸ் என்ற நோய், உலகம் முழுக்க பெருமளவில் பரவியது. அந்த நேரத்தில் அதைத் தடுக்க காண்டம் அதிகளவில் பயன்பட்டது. இதன்பிறகு காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பல விதங்களில் தயாரிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் தற்போது லேட்டேக்ஸ், பாலியூரித்தின், ரப்பர், ஃப்ளேவர்டு, ஈட்டபிள், ஹனிமூன் காண்டம், முதலிரவு காண்டம், வைப்ரேட்டிங் காண்டம் என்று பலவிதங்களில் வருகின்றன. காண்டம் பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் கவனிக்க வேண்டியவை என்னென்னவென்றால்... * காண்டம் சேதாரமாகி இருக்கக்கூடாது. * அதன் காலாவதி தேதி முடிந்திருக்கக்கூடாது. * காண்டமில் ஸ்மால், மீடியம், பிக் சைஸ் என மூன்று அளவுகள் இருக்கின்றன. அதில், உங்களுக்கு என்ன சைஸ் பொருந்துமோ அதைத்தான் பயன்படுத்த வேண்டும். * சிறியதாக இருந்தால் ஆணுறுப்பில் வலி ஏற்படுத்தும்; பெரியதாக இருந்தால் கழன்று வந்துவிடும். இதனால், தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். * ஒருமுறை அணிந்து, அதைச் சரியாக அணிய முடியவில்லை என்றாலோ அல்லது சிறிதாகக் கிழிந்துவிட்டாலோ அதைப் பயன்படுத்தவே கூடாது. * துளையிருந்தாலும் பயன்படுத்தக்கூடாது. * ஒருமுறை பயன்படுத்திய காண்டமை மறுமுறை பயன்படுத்தவே கூடாது. Relationship Happy Sex: செக்ஸ்ல இந்த 7 விஷயங்களுக்கு `நோ' சொல்லணும்... - காமத்துக்கு மரியாதை 172 * காண்டமை பர்ஸில் வைக்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதனால் காண்டம் சேதமாகும். விளைவு, பால்வினை நோய்கள் வரலாம். * பால்வினை நோய்கள் வந்து விடுமோ என்கிற பயத்தில் சிலர் இரண்டு காண்டம் அணிந்து உறவில் ஈடுபடுகிறார்கள். இது அவசியமில்லாதது. * காண்டம் உள்ளே கொஞ்சம் லூப்ரிகேஷனும், ஸ்பெர்மிசைட் என்கிற திரவமும் இருக்கும். இந்தத் திரவம் விந்தணுக்களைக் கொல்லும் தன்மை கொண்டது. * மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் குழந்தையின்மை சிகிச்சைக்காக semen எடுக்கும்போது, கமர்ஷியல் காண்டமில் semen கலெக்ட் செய்யக்கூடாது. செய்தால், விந்தணுக்கள் இறந்துவிடும். பரிசோதனை முடிவும் தவறாக வரும். சிலருக்கு காண்டம் அலர்ஜி இருக்கலாம். எந்த மாதிரி காண்டம் அலர்ஜி ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து அந்த மெட்டீரியல் காண்டமை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அதற்குள் இருக்கிற திரவம் அலர்ஜி ஏற்படுத்துகிறது என்றால், காண்டமை தவிர்த்துவிட்டு வேறு கருத்தடைகளை முயற்சி செய்யலாம். ஆனால், இந்த இரண்டு பிரச்னைகளுமே அரிதாக வருபவைதான். காண்டம் அணிவதால் சில பிரச்னைகளும் வரலாம். இதை அணிவதால் விறைப்புத்தன்மை வரவில்லை என்கிற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். Dr. Kamaraj Happy relationship: தம்பதிகள் லவ்வர்ஸ் மாதிரி இருக்க 11 பாயின்ட்ஸ்... | காமத்துக்கு மரியாதை - 173 அணிந்தால்தான் நன்றாக இருக்கிறது என்கிற ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களால் காண்டம் அணியாமல் உறவு கொள்ள முடியாது. அதனால், இவர்களுக்கு காண்டம் அடிக்‌ஷன் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இறுதியாக, முக்கியமான ஒரு பாயின்ட்... காண்டம் பெண்ணுறுப்பில் கிழிந்து தங்கிவிட்டால் என்னவாகுமோ என்கிற பயம் கணவர்களுக்கும் இருக்கிறது, மனைவியருக்கும் இருக்கிறது. உண்மையில், அப்படிக் கிழிந்து பெண்ணுறுப்பில் தங்கிவிட்ட காண்டம் துண்டு தானாகவே வெளியே வந்துவிடும். பயப்படத் தேவையில்லை'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 14 Jul 2024 6:00 pm

Doctor Vikatan: சைனஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மூக்கடைப்பு... மருத்துவரின் அலட்சியம் காரணமா?

Doctor Vikatan: அரசு மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனாலும், எனக்கு மூக்கடைப்பு பிரச்னை சரியாகவில்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், அதைத் தொடர்ந்து, இப்போது எண்டோஸ்கோபி சிகிச்சை செய்யச் சொல்கிறார். எனக்கு அவர் மேல் நம்பிக்கையே போய்விட்டது. சிகிச்சையைச சரியாகச் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? - மனோஜ்குமார், விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை எண்டோஸ்கோபி முறையில் செய்யப்படுகிற சைனஸ் அறுவை சிகிச்சை என்பது அவ்வளவு சாதாரண சிகிச்சை அல்ல. அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சையை உங்களுக்குச் செய்த மருத்துவர், பல வருட பயிற்சி மற்றும் அனுபவத்துக்குப் பிறகே இதைச் செய்திருப்பார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூக்கடைத்துக் கொள்வது என்பது சகஜமான விஷயம் தான். அந்தப் பிரச்னை முழுமையாகச் சரியாக சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை நீங்கள், உங்களுக்கு உங்கள் மருத்துவர் அறிவுறுத்திய அறுவை சிகிச்சைக்குப் பிறகான விஷயங்களைப் பின்பற்றி தான் ஆக வேண்டும். அதில் நேசல் வாஷ் (nasal wash), நேசல் ஸ்பிரே (nasal spray) உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். சைனஸ் பிரச்னை தவிர்க்க... தப்பிக்க மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு எண்டோஸ்கோபி சிகிச்சை முறையானது சில முறை செய்யப்பட வேண்டி வரலாம். அது, அந்தப் பகுதியில் உள்ள கட்டிகள், இறுகி, வறண்டுபோன சளி போன்றவற்றை நீக்குவதற்காகச் செய்யப்படுவது. எனவே, உங்கள் மருத்துவர் மேல் நம்பிக்கை வையுங்கள். அவரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுங்கள். நீங்கள் சீக்கிரமே குணமடைய வாழ்த்துகள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வரும் கால் ஆணி; காரணம் என்ன?

விகடன் 14 Jul 2024 9:00 am

மரணத்திலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்... நெகிழ்ச்சியில் ஊட்டி மக்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, மேரிஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் எமிலி. 62 வயதான இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார். இதைக் கண்டு பதறிய உறவினர்கள், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எமிலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்து சிகிச்சை அளித்துள்ளனர். தொடர் சிகிச்சையில் இருந்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்திருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எமிலியின் மூளையில் ரத்தம் உறைவு ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்திருப்பதை மருத்துவ குழுவினர் கண்டறிந்துள்ளனர். உயிரிழந்த எமிலி வருமானத்தை இதய ஆபரேஷனுக்கு வழங்கும் பாடகி... 3,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு! எமிலியின் உடல் உறுப்புகளை கொடையளிக்க அவரின் மகன்கள் முன்வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, எமிலியின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றிய‌ ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளனர். எமிலியின் உடல் உறுப்புகள் மூலம் 6 நபர்கள் மறுவாழ்வு பெற உள்ளனர். ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முதல் உடல் உறுப்பு கொடை நிகழ்வு, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து தெரிவித்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், ’’மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன. உறுப்புகளை தானமாக வழங்க எமிலியின் உறவினர்கள் முழு மனதுடன் சம்மதித்தனர். அரசு மரியாதை 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துவிட்டு இறந்த எமிலியின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரியில் இதுபோன்ற உறுப்பு தானம் முதல் முறை என்பதால், எமிலி ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்றனர்.

விகடன் 13 Jul 2024 7:12 pm

Happy Teeth: ஒருநாளைக்கு 2 முறை பிரஷ் செய்தும் பல் சொத்தை... என்னதான் தீர்வு?

இரண்டு வேளை பிரஷ் செய்கிறேன், டீ சாப்பிட்டால்கூட வாய் கொப்பளித்துவிடுகிறேன். ஆனாலும், பல் சொத்தை உருவாகியிருக்கிறது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு என்ன தீர்வு என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி. பல் சொத்தை பல்லின் ஆரோக்கியத்துக்கு பிரஷ் செய்வதுதான் முக்கியமான விஷயம். பிரஷ்ஷிங் சரியாக, முறையாகச் செய்தாலே பற்களுக்கு வரும் பிரச்னைகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும். சில நேரங்களில் சாதாரணமாக நாம் செய்யும் பிரஷ்ஷிங் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நாம் சாதாரணமாக பிரஷ் செய்யும்போது மேற்பரப்பு சுத்தமாகிறது. ஆனால், பற்களின் இடையில் சிக்கியிருக்கும் உணவுத்துகள், அழுக்குகள் முழுமையாக நீங்காது. குறிப்பாக, அசைவ உணவு, நார் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது பற்களின் நடுவில் சிக்கிக்கொள்ளும். பீன்ஸ் சாப்பிட்டால்கூட அதிலிருக்கும் நார் பற்களின் நடுவில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. நாளடைவில் இது பல்சொத்தையை ஏற்படுத்தும். சில நேரங்களில் பற்களில் சிக்கியிருக்கும் உணவுத்துகளை வெளியேற்றும் வகையில் சற்று அழுத்தம் கொடுத்தும் பிரஷ் செய்வோம். அதுபோன்ற நேரங்களில் சிக்கியிருக்கும் துகள் வெளியேறாது. ஆனால், அழுத்தி பிரஷ் செய்வதால் குறிப்பிட்ட இடத்தின் மேற்பரப்பு சேதமடையும். Happy Teeth: காற்றுபட்டாலே கூசும் பற்கள்... தீர்வு என்ன? டூத் பிக், சேஃப்டி பின், குச்சி, மருந்து அட்டையின் பின்புறம் இருக்கும் அலுமினியம் ஃபாயில் போன்றவற்றைப் பயன்படுத்தி பற்களில் சிக்கியிருக்கும் உணவை சிலர் நீக்குவார்கள். அவை தற்காலிகமாக அழுக்குகளை வெளியேற்றும். ஆனால், பற்களை சேதப்படுத்திவிடும்.  பற்களின் மேல்புறத்தில் உள்ள எலும்பு மெல்லியதாக இருக்கும் என்பதால் இவற்றைப் பயன்படுத்தும்போது எலும்பு சேதமடைய வாய்ப்புள்ளது. எலும்பு சேதமடையும்போது ஈறுகளுக்கு போதுமான சப்போர்ட் கிடைக்காது. பற்களின் நடுவில் இருக்கும் இடைவெளி மேலும் அதிகமாகும். ஒவ்வொருமுறை வேறு பொருள்களை பற்களின் நடுவே பயன்படுத்தும்போதும் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகும். பற்களின் இடையே சுத்தப்படுத்துவதற்கு Flossing, Inter Dental Brushing என்ற இரண்டு முறைகள் உள்ளன. பல் சொத்தையைத் தடுப்பதற்கு இவை இரண்டும் உதவும். ஆனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் Inter Dental Brushing பிரபலமாகவில்லை. காரணம் இது தொடர்பான விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. Inter Dental Brushing Happy Teeth: பல் எடுத்ததும் Ice cream சாப்பிடச் சொல்வது ஏன்? யாருக்கெல்லாம் தேவை? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் Inter Dental பிரஷ்ஷிங் அவசியம். நிரந்தரப் பற்கள் அனைத்தும் முளைத்த பிறகு 15, 16 வயதில் குழந்தைகள் Flossing அல்லது Inter Dental பிரஷ்ஷிங் செய்யலாம். குறைந்தபட்சம் ஒருநாளைக்கு ஒருமுறையாவது, குறிப்பாக இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அதைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், ஈறுகள் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த முறை பிரஷ்ஷிங் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் நோய்த்தொற்று எளிதாக ஏற்படும். அதுபோன்ற சூழலில் அவர்களின் ஈறுகள் சற்று பஞ்சு போல (Sponge) இருக்கும். ஈறுகளில் உணவு சிக்கும்போது, உணவு அதன் உள்ளே சென்றுவிடும். கர்ப்பிணிகளுக்கும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஈறுகள் சற்று பஞ்சு போல மாறியிருக்கும். ஈறுகளில் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கும் கூடுதல் கவனிப்பு தேவை. இதுபோன்றவர்களும் Inter Dental பிரஷ்ஷிங் செய்வது நல்லது. Dr. Suresh Velumani Inter Dental பிரஷ் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. முதன்முறை வாங்கும்போது மட்டும் மருந்துக்கடைகளுக்குச் சென்று நேரடியாகப் பார்த்து வாங்குவது நல்லது. வாங்கிப் பழகிய பிறகு ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தலாம். பொதுவாக சிறிய பிரஷ் இதற்கு போதுமானதாக இருக்கும். ஒருவேளை பற்களின் நடுவில் இடைவெளி இருக்கிறது என்றால் அதைவிட சற்று பெரிய பிரஷ்ஷை பயன்டுத்தலாம். இந்த பிரஷ்ஷை பயன்படுத்துவதால் எலும்பு சேதமடையாது, பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். Inter Dental பிரஷ் பார்ப்பதற்கு குழந்தைகளின் பால் பாட்டிலைக் கழுவதற்கான பிரஷ் போல இருக்கும். பற்களின் நடுவே அதனைப் பயன்படுத்திவிட்டு தண்ணீரில் சுத்தப்படுத்தி வைத்துவிடலாம். Happy Teeth Happy Teeth: பல் எடுத்தால் முகத்தோற்றம் மாறுமா? சாதாரண பிரஷ்ஷை போல இரண்டு, மூன்று மாத பயன்பாட்டுக்குப் பிறகு மாற்ற வேண்டிய அவசியமில்லை. பிரஷ்ஷில் இருக்கும் இழைகள் (Bristles) விரிவடைந்துவிட்டால் புதியது மாற்றிவிடலாம். இதனைப் பயன்படுத்துவதற்கு மருத்துவர் பரிந்துரை அவசியம் இல்லை. ஆனால், என்ன அளவிலுள்ள பிரஷ் வாங்க வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி கேட்டுத் தெளிவுபெறலாம். பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

விகடன் 13 Jul 2024 6:00 pm

Doctor Vikatan: பீரியட்ஸ் நாள்களில் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 32. மாதவிலக்கு நாள்களில் எனக்கு மார்பகங்களில் கடுமையான வலி ஏற்படுகிறது.  சில நேரங்களில் பீரியட்ஸுக்கு முன்பே இந்த வலி ஆரம்பிக்கிறது. ஆனால், பீரியட்ஸ் முடிந்ததும் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்.... சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.    நித்யா ராமச்சந்திரன் மாதவிலக்கின்போதான மார்பக வலி என்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் இயல்பான பிரச்னைதான். இந்த வலி பொதுவாக, பீரியட்ஸ் தொடங்குவதற்கு 3-4 நாள்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும்.  சிலருக்கு மார்பங்களில் வலியோடு, கனத்த உணர்வும் ஏற்படும். உடை அணியும்போது மார்பகங்களில் அதிகமாக வலிக்கலாம். இந்த எல்லா அறிகுறிகளுக்கும் புரொஜெஸ்ட்ரான் (Progesterone) என்ற ஹார்மோன்தான் காரணம். ஓவரீஸ் (Ovaries) எனப்படும் சினைப்பைகள்தான் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.  ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் பெண் ஹார்மோன்கள். இவற்றில் மாதவிலக்கு நெருங்கும்போது புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு சற்று அதிகரிக்கும். அதன் விளைவாக மாதவிலக்கு வருவதற்கு முன்பு மார்பகங்களில் வலி, மார்பகங்கள் மென்மையானது போன்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். Hormones Doctor Vikatan: திருமண நாளன்று எதிர்பாராமல் வரும் பீரியட்ஸ்... எப்படிச் சமாளிப்பது? சிலருக்கு உடல் உப்புசம்கூட இருக்கும். வழக்கமான உடைகளே அந்த நாள்களில் அணியும்போது சற்று டைட்டாக இருப்பது போன்று உணர்வார்கள். 'நேத்துவரை நல்லாதானே இருந்தது... திடீர்னு டிரெஸ் டைட் ஆயிடுச்சே... வெயிட் போட்டுட்டோமோ' என்றுகூட நினைப்பார்கள். ஆனால், இதற்கு காரணம், உடலில் நீர் கோத்திருப்பதுதான். இந்த நீர்கோத்தல்  பிரச்னையும்கூட  புரொஜெஸட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரித்ததன் விளைவுதான். அதுவே, பீரியட்ஸ் ஆரம்பித்ததும் மார்பக வலியானது தானாக குறைந்துவிடும். ஏனெனில், அப்போது புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் குறைந்துவிடும். அதனால் வலியும், உடல் உப்புசமும் தானாகவே சரியாகிவிடும். இது பயப்பட வேண்டிய பிரச்னையோ, சிகிச்சை எடுக்க வேண்டிய விஷயமோ அல்ல. கவலைப்படாதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 13 Jul 2024 9:00 am

Doctor Vikatan: சமந்தா சொன்ன Hydrogen Peroxide சிகிச்சை... உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan: நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்காக நெபுலைஸரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து உள்ளிழுத்ததாகவும், அந்தச் சிகிச்சை தனக்குப் பலன் தந்ததாகவும் பகிர்ந்திருந்தார். எனக்கு வீஸிங் பிரச்னை உள்ளது. அதற்காக இன்ஹேலர் உபயோகிக்கிறேன். வீஸிங் பாதிப்பு தீவிரமாகும்போது நான் அடிக்கடி நெபுலைஸர் சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம். சமந்தா குறிப்பிட்டபடி ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைஸரில் சேர்த்துப் பயன்படுத்துவது உண்மையிலேயே பலன் தருமா...  ஹைட்ரஜன் பெராக்ஸைடுக்கு அத்தகைய மருத்துவ குணங்கள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி நுரையீரல் மருத்துவர் திருப்பதி Doctor Vikatan: புதிதாகத் திருமணமான பெண்கள் கர்ப்பத்தைத் தள்ளிப்போட காப்பர் டி போட்டுக்கொள்ளலாமா? பொதுவாக ஆஸ்துமா, வீஸிங் (Wheezing), சிஓபிடி (Chronic obstructive pulmonary disease) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் இன்ஹேலர்களை பரிந்துரைப்பார்கள். இன்ஹேலரில் மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்' (Metered dose inhalers) மற்றும் 'டிரை பவுடர் இன்ஹேலர்' ( Dry powder inhalers ) என இருவகை உண்டு.  டிரை பவுடர் இன்ஹேலரில் விசில் போன்ற ஒரு கருவி இருக்கும். அதில் கேப்ஸ்யூல் ஒன்றை வைத்து அழுத்தி உள்ளிழுக்க வேண்டும்.  அதுவே மீட்டர்டு டோஸ் இன்ஹேலரில் அதை அழுத்தினால்  புகை போல வரும். பேச்சு வழக்கில் 'பஃப்' என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு. ரெகுலராக இன்ஹேலர் உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றையே மருத்துவர் பரிந்துரைப்பார்.  இவை இரண்டிலும் நிறை, குறைகள் உள்ளன.  இன்ஹேலர் உதாரணத்துக்கு, மீட்டர்டு டோஸ் இன்ஹேலரை அழுத்தும்போது அதிலுள்ள மருந்து இரண்டு நொடிகளில் ரிலீஸ் ஆகிவிடும். அதற்குள் சம்பந்தப்பட்டவர் சுதாரித்து அதை உள்ளிழுக்க வேண்டும். ஒருவேளை சரியாக உள்ளிழுக்காவிட்டால், அந்தப் புகை வீணாகிவிடும். நுரையீரலுக்கு மருந்து ஒழுங்காகச் செல்லாது.  இதைச் சமாளிக்க இன்ஹேலருடன் சேர்த்து ஸ்பேஸர் (spacer) என்ற கருவியையும் கொடுப்போம். ஸ்பேஸர் என்பது கண்ணாடிக்குடுவை போன்று இருக்கும். அதை வைத்து குழந்தைகள், வயதானவர்கள்கூட இந்த வகை இன்ஹேலரை உபயோகிக்க முடியும். இந்த வகை வேண்டாம் என கேட்கும் இள வயதினருக்கு 'டிரை பவுடர் இன்ஹேலர்' கொடுப்போம். இதை உபயோகிக்கும்போது சம்பந்தப்பட்ட நபர்தான் காற்றை வேகமாக உள்ளிழுப்பார். அதனால்  மருந்தானது நுரையீரலுக்குள் சென்று வேலை செய்யும்.  மீட்டர்டு டோஸ் இன்ஹேலரை போல இதில் மருந்து வீணாவதற்கு வாய்ப்பில்லை. அதே சமயம், சம்பந்தப்பட்ட நபருக்கு இதை இயக்க ஒரு வேகம் தேவைப்படும். அது  சாத்தியமற்றவர்களுக்கு இந்த வகை இன்ஹேலரை பரிந்துரைக்க மாட்டோம். உதாரணத்துக்கு, சிறிய குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும்  இதைக் கொடுக்க முடியாது. சிலருக்கு திடீரென வீஸிங் பாதிப்பு அதிகமான நிலையில், இந்த இரண்டு வகை இன்ஹேலர்களையும் பயன்படுத்த தெம்பிருக்காது. அந்நிலையில், அவர்களுக்கு நெபுலைஸர் (nebulizer) வைத்து சிகிச்சை அளிப்போம். திரவ வடிவிலான மருந்தை இதில் நிரப்பி, மெஷினை ஆன்செய்தால் நுண்ணிய துளைவழியே மருந்தானது, ஏரோசால் (aerosol) எனப்படும் நீர்ப்படலமாக மாறி, உள்ளே போகும். இதற்காக சம்பந்தப்பட்ட நோயாளி எந்த முயற்சியும் எடுக்க வேண்டியிருக்காது. சாதாரண சுவாசத்தின் மூலமே இந்த நீர்ப்படலம் அவரது நுரையீரலுக்குள் போய்விடும்.  nebulizer Doctor Vikatan: மாதம் ஒருமுறை பேதி மருந்து எடுப்பது சரியானதா? பொதுவாக இப்படி நெபுலைஸரில் சால்புட்டமால் (Salbutamol), லீவோசால்புட்டமால் (Levosalbutamol), இப்ராட்ரோப்பியம் (Ipratropium) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவோம். மேற்குறிப்பிட்ட இந்த எல்லா மருந்துகளுமே 'ப்ரான்கோடைலேட்டர்ஸ்' (Bronchodilators ) எனப்படுபவை. அதாவது காற்றுக்குழாயை விரிவடையச் செய்பவை.  இவை தவிர, வீக்கத்தைக் குறைக்க கார்டிகோஸ்டீராய்டு  மருந்துகளையும் பயன்படுத்துவோம். அதேபோல சிலருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளையும் நெபுலைஸர் வழியே கொடுப்போம். இன்னும் சிலருக்கு சளி கட்டியாக உறைந்திருக்கும். அதை இளகவைக்க ஹைப்பர்ட்ரானிக் சலைன் (hypertonic saline) பயன்படுத்துவோம். எனவே, மேற்குறிப்பிட்ட நான்குவகை மருந்துகளை மட்டுமே நெபுலைஸர் சிகிச்சையில் பயன்படுத்துவோம். குறைவான மருந்து கொடுக்க வேண்டும், அதை நுரையீரலுக்கு நேரடியாகச் செல்லும்படி கொடுக்க வேண்டும் என்பதுதான் இன்ஹேலர் மற்றும் நெபுலைஸர்  சிகிச்சைகளின் நோக்கமே.  நுரையீரல் Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்... அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா? இந்நிலையில் சமந்தா செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது. அது சருமத்தைச் சுத்தப்படுத்த, காயங்களைச் சுத்தப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படுவது. ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது என்பதால், நுரையீரலின் உள்ளே உள்ள இன்ஃபெக்ஷனையும் சரிசெய்துவிடும் என நினைத்துச் செய்திருக்கிறார். ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது என்பதால் அதை உள்ளுக்குக் குடிக்க முடியுமா? உள்ளுக்குக் குடிப்பது எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதுதான் அவர் செய்த நெபுலைஸர் சிகிச்சையும். அதை  சமூக ஊடகங்களில் பதிவுசெய்வது அதைவிட ஆபத்தானது. உங்களைப் போல இதை உண்மையென நம்பி இதைப் பின்பற்றுவோரின் நிலை என்னவாகும்? இன்ஹேலர் பயன்படுத்த முடியாதவர்களுக்கு மட்டுமே வீட்டில் நெபுலைஸர் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துவோம். அது எல்லோருக்குமானதல்ல.  எனவே, சோஷியல் மீடியா பிரபலங்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே பின்பற்றாமல், உங்கள் மருத்துவர் சொல்வதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியம் காக்கும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 12 Jul 2024 9:00 am

Tripura HIV Cases: 828 மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு; 47 பேர் இறப்பு... பரவியது எப்படி?

திரிபுரா மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக, புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், திரிபுராவில் 2007 - 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. HIV இது தொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ``திரிபுராவில் 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவிலிருந்து படிக்கச் சென்றிருக்கும் மாணவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) அதிகாரிகள்,``திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஹெச்.ஐ.வி தொற்று பரவியுள்ளது. இந்த தொற்று மாணவர்களிடையே ஊசி மூலமும், போதைப்பொருள் பயன்பாடு மூலமும் விரைவாக பரவுவதற்கு காரணம் எனக் கருதுகிறோம். தினசரி ஐந்து முதல் ஏழு ஹெச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர். HIV (Representational Image) புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையையும், உடனடி தீர்வு காணவேண்டிய கட்டாயத்தையும் உணர்த்துகிறது. எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். திரிபுரா ஜர்னலிஸ்ட் யூனியன், வெப் மீடியா ஃபோரம், TSACS இணைந்து நடத்திய ஊடக நிகழ்வின்போது, ​​மூத்த அதிகாரிகள், ``மாநிலம் முழுவதும் உள்ள 164 சுகாதார நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவு, இந்த தொற்று பரவல் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக பெற்றோர் அரசுப் பணிகளில் பணிபுரியும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மே 2024 நிலவரப்படி, திரிபுராவின் ஏ.ஆர்.டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையங்களில் ஹெச்.ஐ.வி தொற்றால் 8,729 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பராமரிப்புக்கு இந்த மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தீவிர மருத்துவ உதவிகள், பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு முயற்சிகள் இந்த மையங்கள் மூலம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb HIV Positive என தெரிந்தும் 211 நபர்களுடன் உறவு கொண்ட பெண்... கஸ்டமர்களுக்கு எச்சரிக்கை!

விகடன் 11 Jul 2024 10:00 am

Doctor Vikatan: புதிதாகத் திருமணமான பெண்கள் கர்ப்பத்தைத் தள்ளிப்போட காப்பர் டி போட்டுக்கொள்ளலாமா?

Doctor Vikatan: என் வயது 27. ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. இன்னும் ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறோம். கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் உள்ளவை என்பதால் அவற்றைப் பயன்படுத்த பயமாக உள்ளது. நான் ஒரு வருட காலத்துக்கு கர்ப்பத்தைத் தள்ளிப்போட காப்பர் டி பயன்படுத்தலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மாலா ராஜ். Doctor Vikatan: 15 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன்... அதைத் தவிர்க்க ஆபரேஷன் செய்துகொள்ளலாமா? இன்றைய நவீன மருத்துவ உலகில் ஏராளமான கருத்தடை முறைகள் வந்துவிட்டன. அவற்றில் யாருக்கு, எது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இன்றைய காலத்தில் திருமணத்துக்கு முன்பான தாம்பத்திய உறவு அதிகரித்திருக்கிறது. மிக இளவயதில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதைக் கலைக்க மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிப்பதில் பெரிய சிக்கல்கள் வரலாம். எனவே, எதிர்கால உடல்நலம், வாழ்க்கை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, திருமணத்துக்கு முன்பான தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப்போட நினைக்கிற இளம் பெண்கள் கருத்தடை முறை குறித்த ஆலோசனை கேட்டால், அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளைத்தான் பரிந்துரைப்போம். அதாவது குறைந்த டோஸ் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தாம்பத்திய உறவு கொண்டு, எதிர்பாராமல் கருத்தரித்துவிட்டவர்களுக்கு மருந்துகள் மூலம் அதைக் கலைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.  கருத்தரித்துவிடலாம் என பயப்படுகிற பெண்கள்,  தாம்பத்திய உறவு கொண்ட குறிப்பிட்ட இடைவெளியில் 'எமர்ஜென்சி கான்ட்ரசெப்ட்டிவ் பில்ஸ்' (Emergency Contraceptive Pills) எனப்படும் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த மாத்திரைகள் தற்போது பெரிய அளவில் கிடைப்பதில்லை.  கருத்தடை மாத்திரைகள் Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து, கருத்தடை ஆலோசனைக்காக மருத்துவரிடம் வரும் பெண்களுக்கு அவர்களது வயது, உடல்நலம் போன்றவற்றை எல்லாம் கேட்டறிந்து, அந்த முடிவு சரியானதுதானா என்று பார்ப்போம். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அதை விளக்கிப் புரியவைப்போம். கர்ப்பத்தைத் தள்ளிப்போடுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் குறைந்த டோஸ் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளைத்தான் பரிந்துரைப்போம். அவர்களுக்கு காப்பர் டி மாதிரி, கர்ப்பப்பைக்குள் செலுத்தும் எந்தச் சாதனத்தையும் பொருத்திக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். குழந்தைப்பேறு முடிந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்களுக்கு அவர்களது வயது, உடல்நலம் ஆகியவற்றுக்கேற்ப வேறு கருத்தடை முறைகளைப் பரிந்துரைப்போம். எனவே, உங்கள் விஷயத்தில் முதலில் மருத்துவ ஆலோசனை அவசியம். இப்போதுதான் திருமணமாகியிருக்கிறது என்ற நிலையில், காப்பர் டி உங்களுக்கான கருத்தடை முறையாக நிச்சயம் இருக்காது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 11 Jul 2024 9:00 am

Doctor Vikatan: 15 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன்... அதைத் தவிர்க்க ஆபரேஷன் செய்துகொள்ளலாமா?

Doctor Vikatan: நான் 15 வருடங்களாக கண்ணாடி அணிகிறேன். 60 வயதுக்கு மேல் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க ஆபரேஷன்  செய்து கொள்ளலாமா... அதற்கு எவ்வளவு செலவாகும்? -தக்கோலம் ச சிவானந்தம், விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷோபா கினி. கண் மருத்துவர் ஷோபா கினி எந்த வயதிலும் கண்ணாடி அணிவதில் விருப்பமில்லை என்பவர்களுக்கு அதற்கான மாற்று வழிகள் இன்று நிறைய உள்ளன. ஆனால், அப்படி மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், விழித்திரையும் விழி நரம்புகளும் நன்றாக உள்ளனவா, பார்வைத்திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மேற்குறிப்பிட்ட பரிசோதனையில் எல்லாம் நார்மல் என்று தெரிந்தால், கண்களுக்குள் செயற்கை லென்ஸ் பொருத்தலாம். இந்தச் சிகிச்சைக்கு 'க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்ஷன்' (Clear Lens Extraction) என்று பெயர்.  க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்ஷன் சிகிச்சை செய்யும்போது நம் கண்களுக்குள் வைக்கப்படுகிற இன்ட்ரா ஆகுலர் லென்ஸை  (Intraocular lens  ) மோனோஃபோக்கலாக (Monofocal lens) பொருத்தினால், ஒருபக்க பார்வை தெளிவாக இருக்கும். படிக்கும்போதான பார்வை தெளிவாக இருக்காது. அதையே மல்ட்டிஃபோக்கல் ( Multifocal lens)  அல்லது ட்ரைஃபோக்கல் (Trifocal Lens) லென்ஸ் பொருத்தினால், தூரப்பார்வை, இடைப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை மூன்றையும் சரிசெய்து கொடுக்கும். கண் பரிசோதனை Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பார்வைக் குறைபாடு... நிரந்தர பார்வையிழப்புக்குக் காரணமாகுமா? உங்கள் கேள்வியில் போதுமான விவரங்கள் இல்லாததால், பொதுவான விளக்கம்தான் தர முடியும். ஒருவேளை நீங்கள் இரவில் டிரைவிங் செய்யும் வழக்கம் உள்ளவர் என்றால் உங்களுக்கு கண் மருத்துவர் மல்ட்டி ஃபோக்கல் லென்ஸ் பொருத்திக்கொள்ள அறிவுறுத்த  மாட்டார். அதேபோல நீங்கள் செலவு குறித்துக் கேட்டிருப்பதற்கும் துல்லியமான பதிலைச் சொல்ல முடியாது. ஏனெனில், உங்களுடைய பிரச்னை என்ன, உங்களுக்கு எப்படிப்பட்ட லென்ஸ் தேவைப்படுகிறது, அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லென்ஸா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா, எந்த மாதிரியான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, அதாவது ரோபோட்டிக் அறுவை சிகிச்சையா, லேசர் சிகிச்சையா என்பதையெல்லாம் பொறுத்து சிகிச்சைக்கான செலவு வேறுபடும். எனவே, நீங்கள் முதலில் கண் அறுவை சிகிச்சை மருத்துவரை நேரில் அணுகி, உங்கள் பிரச்னை மற்றும் தேவைகளைச் சொல்லி ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களுக்கான சரியான சிகிச்சை, அதற்கான செலவு உள்ளிட்ட தகவல்களைச் சரியாகச் சொல்வார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 10 Jul 2024 9:00 am

குழந்தைகளை தாக்கும் மூளை தின்னும் அமீபா தொற்று, கேரளாவில் பரவல், குமரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தாக்கும் அமீபா தொற்று பரவி வருகிறது. மூளையை தின்னும் அமீபா நோய் என அழைக்கப்படும் இந்த தொற்றுக்கு, ஏற்கெனவே 3 குழந்தைகள் பலியான நிலையில், கோழிக்கோட்டில் 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், கேரளாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நோய் குறித்து முன்னெச்சரிகையுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோய். இந்நோயானது நைக்லீரியா பௌலேரி என்னும் ஒரு வகை அமீபாவினால் பரவக்கூடியது. மூளைக்காய்ச்சலில் காணப்படும் அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, மாயத்தோற்றம் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள். குளம் Doctor Vikatan: மாதம் ஒருமுறை பேதி மருந்து எடுப்பது சரியானதா? இந்நோயினால் கேரளாவில் நிகழ்ந்த மரணங்களை கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள், முக்கியமாகக் குழந்தைகள் தேங்கியுள்ள மற்றும் மாசுபட்ட தண்ணீரில் குளிப்பதையும், நீந்துவதையும் தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீச்சல் குளங்களை பொதுசுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக, நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்ய வேண்டும். இதனை, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் குளோரினேஷன் அளவானது 2 PPM-க்கு மேல் இருப்பதை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குளோரினேஷன் அளவு 2 PPM-க்கு மேல் இருக்கும் போது நைக்லீரியா பௌலேரி அமீபா உயிர்வாழாது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுகாதாரமற்ற குளம் மற்றும் குட்டைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அமீபா அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இந்நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக சந்தேகப்படும் நபர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதுடன், அவர்களை உடனடியாக மேல்சிகிச்சைக்காக மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைக்கான வசதியுள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். 1 கிலோ 110 ரூபாய்... காய்த்துக் குலுங்கும் ஊட்டி ஆப்பிள்; கன்றுகளும் கிடைக்கும்! எங்கே தெரியுமா?

விகடன் 9 Jul 2024 12:52 pm

கட்டாய மாதவிடாய் விடுப்பு'மாதிரி கொள்கை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்கினால், பணியிடங்களில் அவர்களை ஒதுக்கி வைக்க அது வழி வகுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாதிரி கொள்கை வகுக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்க கோரி சைலேந்திர திரிபாதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது என்பது அவர்களை தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். அவ்வாறு நடப்பதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள், அவர்களுக்கு பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றம் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தால், தனியார் நிறுவனங்கள் பெண்களை பணிக்கு எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடும்; அவர்களைத் தவிர்க்க நேரிடலாம். இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம்; இது நீதிமன்றம் விசாரிக்கக்கூடிய விஷயம் அல்ல. எனவே, மனுதாரர்கள் இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை அணுகலாம். மத்திய அரசும் இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய வழிகாட்டு நெறிமுறைகள், மாதிரி கொள்கைகளைக் கொண்டு வரலாம் என்று தெரிவித்தனர். மாதவிடாய் சுகாதாரம்... அவசரம், அவசியம் தேவைப்படுவது இதுதான்! | பூப்பு முதல் மூப்பு வரை -24

விகடன் 9 Jul 2024 12:48 pm

Doctor Vikatan: மாதம் ஒருமுறை பேதி மருந்து எடுப்பது சரியானதா?

Doctor Vikatan: என் கிராமத்து உறவினர் ஒருவர், மாதம் ஒருமுறை வீட்டிலுள்ள அனைவருக்கும் பேதி மாத்திரை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இது வயிறு மற்றும் குடல் பகுதியைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்கிறார். அன்றைய தினம் உணவு எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கிறார். இது எந்த அளவுக்குச் சரியானது? குடலைச் சுத்தப்படுத்த வேறு ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் மருத்துவர் விக்ரம்குமார் பேதி என்பது குடல் மற்றும் வயிற்றுப்பகுதியைச் சுத்தப்படுத்துகிற ஒரு விஷயம்தான். ஆனால், எந்த வயதில், யார், எவ்வளவு, எத்தனை நாள்களுக்கொரு முறை எடுக்கிறார் என்பது இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.  சித்த மருத்துவத்தில் இதற்கென பிரத்யேக மருந்துகள் உள்ளன. மருத்துவரின் பரிந்துரையோடு அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  அந்தக் காலத்தில் வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு இதற்கான மருந்தைத் தயாரித்துப் பயன்படுத்துவார்கள். தவிர, வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது. அதையெல்லாம் அளவோடு எடுத்துக்கொள்வதில் பிரச்னையல்ல. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மாதம் ஒருநாள் தவறாமல் இதைச் செய்வது நிச்சயம் சரியானதல்ல. அடிக்கடி பேதிக்கு மாத்திரை எடுப்பது நல்லதல்ல. நான்கு மாதங்களுக்கொரு முறை இதை எடுத்துக்கொள்ளலாம் என்கிறது சித்த மருத்துவம். ஆனால், ஆறு மாதங்களுக்கொரு முறை எடுப்பது சிறப்பு. நீங்கள் குறிப்பிடுவது போல மாதம் ஒருமுறை எடுப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். விளக்கெண்ணெய்! #CastorOil Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு... பிரச்னையின் அறிகுறியா... சிகிச்சை தேவையா? உங்கள் உறவினர் எந்த மாதிரியான மாத்திரையை எடுத்துக்கொள்கிறார் என்ற விவரம் இல்லை. மருத்துவர் அறிவுரையின்படி எடுத்தாலுமே, மாதம் ஒருமுறை பேதிக்கு மாத்திரை எடுப்பது கொஞ்சம் அதிகமானதுதான். இப்படிச் செய்வதன் மூலம், குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துபோக வாய்ப்புகள் மிக அதிகம். தவிர, அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதன் மூலம் உடலில் நீரிழிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கும் இப்படிச் செய்கிறார் என்றால், அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். பெரியவர்களுக்கும் ஆறு மாதங்களுக்கொரு முறை பேதி மருந்து கொடுப்பதுதான் நல்லது. அந்தக் காலத்தில் வாரம் ஒருமுறை இரவில் விளக்கெண்ணெய் குடிக்கும் வழக்கமும் இருந்தது. குறிப்பாக, அசைவ உணவுகள் சாப்பிடும் நாள்களில் இப்படிச் செய்வார்கள். நீர்மோர் நிறைய குடிக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  மலச்சிக்கல் இன்றி, சரியாக மலம் வெளியேறும்படி பார்த்துக்கொண்டாலே, உடலின் கழிவுகள் நீங்கிவிடும். வாரம் ஒருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், குடலில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.  இப்போது வரும் சுண்டைக்காயில், அந்தக் காலத்துக் காய்களைப் போல அவ்வளவு கசப்பு இருப்பதில்லை. ஆனாலும், குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அத்துடன் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். இவற்றையெல்லாம் பின்பற்றினாலே குடல் சுத்தமாகும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 9 Jul 2024 9:00 am

Doctor Vikatan: பீரியட்ஸ் தள்ளிப்போனால் எத்தனை நாள்களில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

Doctor Vikatan: என் வயது 26. திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.  கர்ப்பத்துக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை பீரியட்ஸ் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டாம் என்கிறார் என் மாமியார். அதெல்லாம் அந்தக் காலம்... அடுத்தநாளே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள் தோழி. இருவர் சொல்வதில் எது சரி... பீரியட்ஸ் தள்ளிப்போன எத்தனையாவது நாளில் மருத்துவரை அணுக வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. உங்களுடைய மாதவிலக்கு சுழற்சி ரெகுலராக இருக்கும்பட்சத்தில், 2 நாள்கள் பீரியட்ஸ் தள்ளிப்போனாலே, உடனடியாக மருத்துவரிடம் சென்று செக் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  ஒருவேளை அது கர்ப்பம் தரித்திருப்பதன் அறிகுறியாக இருந்தால்,  சீக்கிரமே அந்தத் தாய் ஃபோலிக் அமில (folic acid) மாத்திரைகளைத் தொடங்குவதன் மூலம், குழந்தையின் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கச் செய்ய முடியும்.  முந்தைய காலத்தில் எல்லாம் 40- 50 நாள்கள் ஆன பிறகு மருத்துவரைப் பார்த்தால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இன்று அப்படியெல்லாம் அவசியமில்லை.  எவ்வளவு சீக்கிரம் கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்பது  விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதால்,  பீரியட்ஸ் தள்ளிப்போன உடனேயே மருத்துவரைச் சந்திக்கலாம்.  அது தவிர, அந்தப் பெண்ணுக்கு கர்ப்பம் ஆரோக்கியமான முறையில்தான் உருவாகியிருக்கிறதா அல்லது கருக்குழாயில் பதிந்திருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியது அவசியம். அரிதாக சிலருக்கு கருக்குழாய்களில் கரு பதிந்து வளரத் தொடங்கும். 'எக்டோபிக் பிரெக்னன்சி' (ectopic pregnancy ) என்று சொல்லப்படும் இதைச் சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டால், மருந்துகளின் உதவியோடு அந்தக் கருவை அகற்றிவிடலாம். Periods: ரத்தப் பரிசோதனை... Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா? பீரியட்ஸ் தள்ளிப்போனதாக மருத்துவரைச் சந்தித்தால் அவர் முதலில் பீட்டா ஹெச்சிஜி (Beta hCG) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்வார். அந்த டெஸ்ட்டில் சில அளவுகளைப் பார்க்க வேண்டியிருக்கும். அதில் சந்தேகம் வந்தால் இன்னும் இரண்டு நாள்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் அதே டெஸ்ட்டை செய்யச் சொல்வார்கள். பீட்டா ஹெச்சிஜி அளவானது இரண்டு மடங்காக வேண்டும். அப்படி ஆகும்பட்சத்தில் அந்தக் கர்ப்பம் நல்ல முறையில் இருப்பதாகவும், நல்லபடி வளரும் என்றும் அர்த்தம்.  ஒருவேளை அந்த பீட்டா ஹெச்சிஜி அளவானது மிகக் குறைந்த அளவே அதிகரித்திருந்தால், கரு நன்றாக வளரவில்லை என அர்த்தம்.  கரு கலைந்துபோகவோ, கருக்குழாயில் பதிந்து வளரவோ வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கத்தைவிட சற்று சீக்கிரமே அல்ட்ரா சவுண்டு சோதனை செய்ய வேண்டியிருக்கும்.  அதாவது 2 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, கருவானது கர்ப்பப்பையில் இருக்கிறதா, வெளியே கருக்குழாயில் உருவாகியிருக்கிறதா என்று பார்க்கப்படும்.  கர்ப்பப்பையில்தான் இருக்கிறது என்றால், கருவின் இதயத்துடிப்பை செக் செய்வார்கள் மருத்துவர்கள்.  இதயத்துடிப்பு இருக்கும்பட்சத்தில் அந்தக் கரு நன்றாகவே வளரும்.  கருக்குழாயில் கரு பதிந்திருந்தால் லேப்ராஸ்கோப்பி அல்லது மருந்துகள் என எந்த முறையில் அதை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர் முடிவு செய்வார். எனவேதான், பீரியட்ஸ் தள்ளிப்போனதும் தாமதிக்காமல் உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இரட்டைப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதில் வித்தியாசம் இருக்குமா?

விகடன் 29 Jun 2024 9:00 am

Smoking: புகைபிடிக்கும் பழக்கத்தால் தொண்டையில் வளர்ந்த முடி... யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?!

ஆஸ்திரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 52 வயதான நபர் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து வந்திருக்கிறார். புகைபிடிக்கத் தொடங்கிய 17 வருடங்கள் கழித்து அவருக்குத் தொடர்ச்சியான இருமல், குரலில் மாற்றம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்காக 2007-ல் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.  சிகரெட் smoking Smoking: டீன் ஏஜ் பெண்களின் புகைப்பழக்கம் இருமடங்கு அதிகரிப்பு... மோசமான பிரச்னைகள் வரலாம்?! `பிராங்கோஸ்கோபி' (Bronchoscopy) மூலம் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த நபரின் தொண்டை வீக்கமடைந்திருப்பதையும் அதில் சில முடிகள் வளர்ந்திருப்பதையும் கண்டறிந்தனர். அவர் தொண்டையில் முடி வளரும் (Endotracheal Hair Growth) என்ற மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிப்பதைக் கூறியுள்ளனர்.  *காரணம் என்ன?! இவருக்கு 10 வயது இருந்தபோது, நீரில் மூழ்கியிருக்கிறார். அந்தச் சமயத்தில் இவரின் சுவாசத்தை சீராக்க தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் 'ட்ரக்கியோஸ்டோமி ' (Tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தக் காயத்தை மூட அவரது  காதிலுள்ள தோல் மற்றும் குருத்தெலும்பை பயன்படுத்தி இருக்கின்றனர். தற்போது அந்த இடத்திலேயே இவருக்கு முடி வளர்ந்திருக்கிறது. முதல்முறை மருத்துவர்கள் அந்த முடிகளைப் பிடுங்கி அகற்றியுள்ளனர். ஆனால், இது நிரந்தர நிவாரணம் தரவில்லை. அதே இடத்தில் மீண்டும் முடிகள் வளர்த் தொடங்கியுள்ளன. 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே பிரச்னையோடு அவர் மருத்துவமனையை அணுகி இருக்கிறார்.  அவரது தொண்டையில் 2 இன்ச் நீளமுள்ள முடிகள் இருந்துள்ளன. அது குரல் வளையைத் தாண்டி வாய் வரை வளர்ந்திருந்தது. இந்த முடிகள் பாக்டீரியாவால் மூடப்பட்டிருந்த நிலையில் இவருக்கு முதலில் ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டன. அதன்பின்னர் தொண்டையில் முடி வளரும் வேரை எரிக்கும் சிகிச்சை (Argon plasma coagulation) அளிக்கப்பட்டுள்ளது. தொண்டையில் வளர்ந்திருக்கும் முடி! Quit Smoking: பெண்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையானால் மீள்வது கடினம்... ஏன் தெரியுமா? அதோடு இவர் 2022-ல் புகைபிடிப்பதை நிறுத்தியதில் இருந்து முடி வளர்வது நின்றுள்ளது. 28.3 மில்லியன் மக்களில் அல்லது ஒன்பது அமெரிக்கர்களில் ஒருவர் இந்த அரிய பிரச்னையால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். `இது அரிய பிரச்னையாக இருந்தாலும், புகைப்பழக்கத்தால் இந்தப் பிரச்னை தூண்டப்பட்டிருக்கிறது. புகைபிடித்தல் தொண்டை திசுக்களின் வீக்கத்தைத் தூண்டி, ஸ்டெம் செல்களை முடியாக (hair follicles) மாற்றுகிறது' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகள் அமெரிக்கன் ஜர்னலில் வெளிவந்துள்ளன.

விகடன் 28 Jun 2024 6:59 pm

Doctor: டாக்டரால் கண்டுபிடிக்க முடியாத நோயை 10 விநாடிகளில் கண்டுபிடித்த மூதாட்டி..!

`தி லிவர் டாக்டர்' என பிரபலமாக அறியப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த சைரியாக் அப்பி பிலிப்ஸ். கடந்தாண்டு ஆகாசா ஏர் விமானத்தில் கொச்சியில் இருந்து மும்பை சென்றபோது, பயணி ஒருவர் மூச்சுத்திணறலால் சிரமப்பட, அவரை காப்பாற்றி கவனம் பெற்றார்.  அன்றிலிருந்து தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர், தனக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  Test Malaria: ``பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம்... தடுக்க இதையெல்லாம் பண்ணுங்க!'' அதில், அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சளி, சோர்வு, மூட்டுவலி போன்ற பிரச்னைகளும், கூடவே உடலில் விநோதமான சருமப் பிரச்னையும் இருந்துள்ளது. விட்டு விட்டு காய்ச்சலும் வந்திருக்கிறது.  என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிய ஹெபடைடிஸ், கோவிட்,  இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு போன்ற பல நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார். ஆனால், பிரச்னை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்தவரிடம் அவரது வீட்டில் பணிபுரியும் வயதான பணிப்பெண், ``இது போன்ற சருமப் பிரச்னை என் பேரக்குழந்தைகளுக்கு இருந்தது. இதை உள்ளூர் மொழியில் `அஞ்சாம்பாணி’ (5th Disease) என்று சொல்வோம்’’ என்றிருக்கிறார்.  அதன்பின் 'பார்வோ வைரஸ்' தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட போது, அந்தப் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. My adult family member had episodes of relentless low grade fever with chills and crippling fatigue and arthritis and a weird rash and I tested everything from viral hepatitis to covid-19 to Influenza and Dengue and Ebstein Barr Virus and nothing came back positive and it was… — TheLiverDoc (@theliverdr) June 13, 2024 Auto-Immune Disease: நம் நோயெதிர்ப்பு மண்டலமே நம் செல்களைத் தாக்கும் விநோத நோய்! `அஞ்சாம்பாணி’ என்ற நோய் எரைத்திமா இன்ஃபெக்ஷியோசம் (erythema infectiosum) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று மனித பார்வோவைரஸ் பி 19-ஆல் உண்டாகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் சொறி போன்று இருக்கும். இது உடலின் பிற பாகங்களுக்கும் பரவும். பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்நோய், பாதிக்கட்ட நபர் இருமும் போதும், தும்மும்போதும் பிறருக்குப் பரவுகிறது.  இதுகுறித்து பதிவிட்டுள்ள மருத்துவர், `எனது 17 வருட மருத்துவக் கல்வியில் அறிய முடியாததை வயதான பணிப்பெண் 10 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் கற்பிக்க ஏதாவது ஒன்று இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 28 Jun 2024 5:39 pm

``இதைச் செய்தாலே உலகளவில் 4 - 5 பில்லியன் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்திவிடலாம்! - WHO இயக்குநர்

இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வயதானவர்கள் உடலளவில் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. சமீபத்தில் தி லான்செட் குளோபல் ஹெல்த் மருத்துவ இதழில் ஆய்வு தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, உலகில் 2-ல் ஒரு முதியோர் உடல் சார்ந்த எந்தச் செயல்பாடுகளையும் செய்வதில்லை என்று கூறப்பட்டுள்ளது. உடல் சார்ந்த செயல்பாடுகள் குறைவு! Doctor Vikatan: மாதத்தில் சில நாள்கள் தூக்கமின்மை பாதிப்பு... காரணமென்ன.. எப்படிச் சமாளிப்பது? உலக சுகாதார நிறுவன மருத்துவ நிபுணர்கள் குழு, வயதானவர்கள் குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 70 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், ஆய்வில், உலகளவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 31 சதவிகிதம் பேரும், இந்தியளவில் 49.9 சதவிகிதம் பேரும் அதிகளவு உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆண்களை விட (57 சதவிகிதம்) பெண்கள் (42 சதவிகிதம்) குறைவாகவே உடல் சார்ந்த செயல்பாடுகள் செய்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. 2000-ம் ஆண்டில், வயதானவர்களில் 22 சதவிகிதம் பேர், உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். 2010-ம் ஆண்டு அது 34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2030-ல் 60 சதவிகிதமாக உயர்ந்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பெட்ரோஸ் அதானோம், வயதானவர்களிடையே உடல் சார்ந்த செயல்பாடுகள் எந்த அளவிற்கு மோசம் அடைந்து வருகின்றன என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. முந்தைய ஆய்வுகளைக் காட்டிலும் தற்போதைய ஆய்வு முடிவுகளின் சதவிகிதம் அதிகரித்து உள்ளது. WHO இயக்குனர் கூறுவதாவது... பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகளை விட வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இந்த நிலை அதிகரித்திருக்கிறது. உடல் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாததால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு நோய், டிமென்ஷியா, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அன்றாட உடல் செயல்முறைகளை குறிப்பிட்ட அளவு கடைப்பிடித்து வந்தாலே வருடத்திற்கு 4 முதல் 5 பில்லியன் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். Doctor Vikatan: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் whey protein எடுத்துக் கொள்ள வேண்டுமா?

விகடன் 28 Jun 2024 5:17 pm

Malaria: ``பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம்... தடுக்க இதையெல்லாம் பண்ணுங்க!''

பருவமழை காலங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவது இயல்பு. பருவமழை பொழியும் மாதங்களாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிடுவோம். அந்தக் காலகட்டங்களில் சுகாதாரத்துறையும் விழித்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது, கொசு உற்பத்தியைத் தடுப்பது என தனது பணிகளைச் செய்யத் தொடங்கும். பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா ஆனால், தற்போது காலம் தவறிப் பெய்யும் மழை அதிகமாகிவிட்டது. அதனால் இந்தக் காலத்திலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நாடு முழுவதும் வெப்ப அலை வீசிய போதிலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பந்த்ரா மாவட்டத்தின் கிராம மக்கள் பலரும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா. மலேரியா நோய் என்பது அனோஃபிலஸ் எனும் கொசு இனம் கடிப்பதால் ஏற்படக்கூடிய நோய். ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு கையுறை, காலுறை என உடல் முழுவதும் மூடும் உடைகளை அணிவிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தி ஆகாமலும் தவிர்க்க வேண்டும். கொசு விரட்டி, கொசு எதிர்க்கும் களிம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மலேரியா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது ப்ளாஸ்மோடியம் கிருமிக் கொல்லிகள் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனால், இதை மருத்துவர்களது பரிந்துரையின் பேரில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். Malaria: அறிகுறிகள் என்னென்ன? Doctor Vikatan: காய்ச்சிய பாலில், காய்ச்சாத பாலை சேர்த்து போடும் டீ, காபி... உடல் நலம் பாதிக்குமா? அறிகுறிகள் என்னென்ன? குளிர் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, அதிகமான வியர்வை சில நேரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்போது, மக்கள் சாதாரண காய்ச்சல் என்று எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர். இது முற்றிலும் தவறு. என்னவாக இருந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது அவசியம். முக்கியமாக, ஓரிரு நாள்கள் காய்ச்சல் இருந்தால் உடனே ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்டால்... மலேரியா உறுதி செய்யப்பட்டால் அதற்கான ப்ளாஸ்மோடியம் கொல்லி சிறப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. மலேரியா நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன. நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் மூளையை பாதிக்கக் கூடிய செரிப்ரெல் மலேரியா வகையாகவும் மாற்றமடையும். இது முக்கிய‌ உள்ளுறுப்புகளை பாதித்து உயிரைப் பறிக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம். சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்‌‌ மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும்‌. மேலும், மலேரியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் தடுப்பூசியைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது என்று விளக்கினார். Doctor Vikatan: மாதத்தில் சில நாள்கள் தூக்கமின்மை பாதிப்பு... காரணமென்ன.. எப்படிச் சமாளிப்பது?

விகடன் 27 Jun 2024 4:00 pm

Doctor Vikatan: மாதத்தில் சில நாள்கள் தூக்கமின்மை பாதிப்பு... காரணமென்ன.. எப்படிச் சமாளிப்பது?

Doctor Vikatan: நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கிறேன். பொதுவாக இரவில் படுத்த உடனே தூங்கிவிடுவேன். ஆனால், மாதத்தில் சில நாள்கள் மட்டும் இரவில் முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன். அடுத்தநாள் பகலில் தூங்கி ஓய்வெடுக்கவும் என் வேலைச்சூழல் இடம் தராது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்.... தூக்கமின்மையை எப்படிச் சமாளிப்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நபருக்கு, திடீரென தூக்கம் பாதிக்கலாம். மாதத்தில் சில நாள்கள் இப்படி தூக்கமே இல்லாமல் போகலாம். காரணம் தெரியாவிட்டாலும் இந்தப் பிரச்னையைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். மனநல மருத்துவர் சுபா சார்லஸ் Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா? முதல்நாள் இரவு முழுவதும் தூக்கமில்லை என்பதற்காக அடுத்தநாள் பகல் முழுவதும் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருநாள் இரவு தூக்கமில்லாதது ஒன்றும் அவ்வளவு சீரியஸான பிரச்னை அல்ல. பைலட்டுகள், ஓட்டுநர்கள், மருத்துவர்கள் என எத்தனையோ பேர் அப்படி தூக்கமில்லாமல் இருக்கிறார்கள். ஒருநாள் தொடங்கி, நான்கைந்து நாள்கள்வரை தூக்கமில்லாதது என்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. தூக்கமின்மை குறித்து பதற்றமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. முதல்நாள் இரவு தூக்கமில்லாத பட்சத்தில், அடுத்த நாள் பகலில் குட்டித்தூக்கம் போடலாமே தவிர, அது இரவு அளவுக்கு நீண்ட தூக்கமாக இருக்கக்கூடாது. காலையில் சூரியன் உதயமாகும்போது எழுந்திருக்கவும், இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கவும் பழக வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் வெளிச்சமான விளக்குகளை, திரைகளைப் பார்ப்பதைத் தவிருங்கள். த்ரில்லர் படங்கள், காட்சிகளைப் பார்க்காதீர்கள். அடுத்தநாள் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, விசேஷம் போன்றவை இருந்தால், அது குறித்த சிந்தனை காரணமாக முந்தைய இரவு தூக்கம் தடைப்படலாம். அதுவும் இயல்பானதே. இரவு தூக்கம் Doctor Vikatan: இரட்டைப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதில் வித்தியாசம் இருக்குமா? மனதை அமைதிப்படுத்தினால் தூக்கம் தானாக வரும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி பெரிதும் உதவும். புதிய இடம், புதிய சூழல் போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாகலாம். மெனோபாஸ், ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸ், தைராய்டு பாதிப்பு, வைரஸ் தொற்று, மனப்பதற்றம் என தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் தசைகளைத் தளர்த்தும் பயிற்சிகளைப் பழக வேண்டும். சிலருக்கு படுத்த உடனேயே கால்களில் ஒருவித குடைச்சல், அசௌகர்யம் தோன்றும். புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார்களே தவிர, தூங்க மாட்டார்கள். இந்தப் பிரச்னைக்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) என்று பெயர். மக்னீசியம் சத்து இந்தப் பிரச்னைக்கான தீர்வாக இருக்கும் என சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். எப்சம் சால்ட் கலந்த நீரில் சில நிமிடங்கள் கால்களை வைத்திருப்பதன் மூலம், சருமத்தின் வழியே மக்னீசியம் சத்து உள்ளிறங்கி, நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, இரவு நல்ல உறக்கத்துக்கு உதவும். மருத்துவரின் ஆலோசனையோடு மெக்னீசியம் மற்றும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

விகடன் 27 Jun 2024 11:35 am

Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு!

`உலகம் முழுவதும் மூன்று மில்லியன் மக்கள் மது அருந்துவதால் (Alcohol) ஆண்டுதோறும் இறக்கிறார்கள்’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குடிப்பழக்கத்தை ஒருபோதும் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. `கொஞ்சமாக’, `சோஷியல் வாழ்க்கைகாக’, `சந்தோஷத்திற்காக’, `சோகத்திற்காக’ எனக் குடிப்பதற்கு எந்தக் காரணம் சொன்னாலும் அது ஏற்றுக் கொள்வதற்கல்ல. இந்நிலையில் ஆல்கஹால் மற்றும் ஆரோக்கியம் பற்றி ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  alcohol அதில், ``ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் நிகழும் 20 இறப்புகளில் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஆல்கஹாலால் தூண்டப்பட்ட வன்முறை மற்றும் துஷ்பிரயோகம், நோய்களின் பாதிப்பு போன்ற காரணங்களால் இறக்கிறார். சமீபத்தில் குடிப்பழக்கத்தினால் இறப்பவர்களின் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், இது ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  புள்ளி விவரங்களின்படி, 2019-ல் 2.6 மில்லியன் இறப்புகள் மது அருந்தியதால் ஏற்பட்டிருக்கின்றன. அந்த ஆண்டு உலகம் முழுவதும் நடந்த இறப்புகளில் இது 4.7 சதவிகிதம். இப்படி இறப்பவர்களில் முக்கால்வாசி பேர் ஆண்களாகவும், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களாகவும் உள்ளனர்.  இது மட்டுமல்லாமல் குடிப்பழக்கம் கல்லீரல் அழற்சி மற்றும் சில புற்றுநோய்களின் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. 2019-ல் மதுவினால் நிகழ்ந்த அனைத்து இறப்புகளிலும் 1.6 மில்லியன் பேர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 474,000 பேர் இதய நோய்களாலும், 401,000 பேர் புற்றுநோயாலும், 724,000 பேர் போக்குவரத்து விபத்துகள் மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொள்வது (self-harm)  உட்பட மோசமான பெரிய காயங்களால் பாதிக்கப்பட்டனர். புற்றுநோய் -சித்திரிப்பு படம் Penis cancer: ``பிரச்னையைச் சொன்னால் ஜோக் அடிப்பார்கள்'' ஆபத்தாகும் ஆண்குறி புற்றுநோய்..! இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதேனாம் கூறுகையில், ``ஆல்கஹால் பயன்பாடு தனிப்பட்ட நபரின் ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கிறது. நாள்பட்ட நோய்கள், மனநல பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதோடு ஒவ்வோர் ஆண்டும் தடுக்கப்படக் கூடிய மில்லியன் கணக்கான மரணங்கள் துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மது அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னை மற்றும் சமூகச் சுமை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இளம் வயதினர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 26 Jun 2024 6:58 pm

தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..? | காமத்துக்கு மரியாதை - 178

தா ம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் (Foreplay) என்கிற வார்த்தையை பல வருடங்களாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த ஓரிரண்டு வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஏன் அவசியம்; உறவின் உச்சக்கட்டத்துக்கும் இது அவசியமா என்பதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். ''ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டு. ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முக்கியமாகப் பிறப்புறுப்புகளில். இது வலியில்லாத, எரிச்சலில்லாத நல்ல தாம்பத்திய அனுபவத்தைக் கொடுக்கும். முக்கியமாக, ஃபோர்பிளேவுடன் ஆரம்பிக்கப்பட்ட உறவில் கணவன், மனைவி இருவருமே உச்சக்கட்டம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதனால், ஃபோர்பிளேவும் உங்கள் தாம்பத்தியத்தின் ஓர் அங்கமாக இருக்கட்டும்'' என்றவரிடம், ஃபோர்பிளே தொடர்பான வாசகர் ஒருவரின் கேள்வியை முன்வைத்தோம். Foreplay உயிரற்ற விந்தணுக்கள் கொண்டவருக்கு குழந்தை பிறக்குமா? | காமத்துக்கு மரியாதை - 177 வாசகரின் கேள்வி: எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. 3 மாதத்தில் மகள் இருக்கிறாள். என் மனைவி மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், உடலின் Anatomy பற்றியும் காமத்தை வெளிப்படையாக அணுகுவதையும் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர் இப்போது தாம்பத்திய உறவில் தனக்கு எது தேவை என்பதைக் கேட்டுப் பெறுகிறார். முன்விளையாட்டுகள் மூலம் தன்னை திருப்திப்படுத்தியும் கொள்கிறார். ஆனால், முதல் குழந்தை பிறந்ததிலிருந்து உறவுகொள்வதற்கு மிகவும் பயப்படுகிறார். ஏனென்று கேட்டால், `ரெண்டாவது குழந்தை உடனே நின்னுடுமோன்னு பயமா இருக்கு' என்கிறார். `சரி, நான் காண்டம் அணிந்துகொள்கிறேன்' என்றால், `அது எனக்கு அசெளகர்யமா இருக்கு' என்கிறார். மாதவிடாயைக் கணக்கிட்டு உறவுகொள்ளலாம் என்றாலும், அது அவருக்குப் புரியவில்லை. `சரி, நீயே ஏதாவதொரு கருத்தடை முறையை ஃபாலோ செய்யேன்' என்றாலும் சங்கடப்படுகிறார். வேறு வழி தெரியாமல், முன் விளையாட்டுகள் மூலம் என் மனைவியைத் திருப்திபடுத்தி வருகிறேன். `எனக்கு என்ன வழி' என்றால், `நீங்க மாஸ்டர்பேட் செஞ்சுக்கோங்க' என்கிறார். இதற்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை. மருத்துவரின் பதில்: செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது. `முன்விளையாட்டுகளிலேயே திருப்தியாகிவிடுகிறேன்' என்று உங்களுடைய மனைவி சொல்வது உண்மையாகவே இருக்கலாம். மார்புப்பகுதியைத் தூண்டி விடுவது, பிறப்புறுப்பைத் தூண்டி விடுவது போன்ற முன் விளையாட்டுகளிலேயே அவருக்கு உச்சக்கட்டம் நிகழ்ந்திருக்கலாம். Foreplay மற்றபடி, மருத்துவரீதியாக கர்ப்பத்தடை முறைகள் கண்டறியப்படாத காலத்தில் `கரு நின்று விடுமோ' என்று பயந்தால் அது நியாயம்தான். இன்றைக்கு இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் அணிகிற காண்டம் சரியில்லையென்றால், இயற்கையான உணர்வைத் தருகிற காண்டம் அணியலாம். அல்லது உங்கள் மனைவி, மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு முறையொன்றை ஃபாலோ செய்யலாம். குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன என்று உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனால், உங்கள் மனைவிக்குப் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற உணர்விருக்கிறதா, அதனால் உறவைத் தவிர்க்கிறாரா என்று கேளுங்கள். அதுதான் பிரச்னையென்றால், தேங்காய் எண்ணெயை ஆணுறுப்பின் நுனியில் தடவிக்கொள்ளுங்கள். எந்த வகையிலும் உங்கள் பிரச்னை தீரவில்லையென்றால், இருவரும் உளவியல் நிபுணரைச் சந்தியுங்கள். Dr. Asokan மத்தவங்க டவலை யூஸ் பண்ணுவீங்களா..? | காமத்துக்கு மரியாதை 176 மேலேயுள்ள என்னுடைய பதிலைப் படிக்கும்போது, சிலருக்கு ஃபோர்பிளே மூலமே உச்சக்கட்டம் அடைய முடியுமா என்கிற கேள்வி எழலாம். `அடைய முடியும்' என்பதுதான் உண்மை. உச்சக்கட்டத்தைப் பொறுத்தவரை, வஜைனல் ஆர்கஸம், எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் என இரண்டு உண்டு . கணவன் - மனைவி பிறப்புறுப்புகள் இணைவது வஜைனல் ஆர்கஸம், பிறப்புறுப்பைத் தூண்டி விடுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம். சிக்மண்ட் ஃபிராய்டு, பிறப்புறுப்புகள் இணைகிற வஜைனல் ஆர்கஸம்தான் சிறந்தது என்று சொல்லியிருப்பார். ஆனால், அது சரியல்ல என்பதையும், வஜைனல் ஆர்கஸம் போலவே எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸமும் உச்சக்கட்ட இன்பத்தைத் தரும் என்பதையும் அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் உறுதியாக நிரூபித்துவிட்டன. ஆனால், ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். தாம்பத்திய உறவு என்பது ஃபலூடா ஐஸ்க்ரீம்போல. ஃபோர்பிளேவிலேயே திருப்தியடைந்துவிட்டேன் என்பது ஃபலூடாவின் மேலிருக்கும் ஒரு லேயரை சாப்பிட்டுவிட்டு திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்வதுபோல. ஃபலூடாவின் அத்தனை லேயர்களையும் ருசியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.''

விகடன் 26 Jun 2024 6:00 pm

Apollo: அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டி கதிரியக்க அறுவைச் சிகிச்சை திட்டம்!

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), கதிரியக்க சிகிச்சை சாதனங்களை வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமான அக்யூரே – ன் ஒத்துழைப்போடு, ரோபோட்டிக்  & சீரியோடாட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டத்திற்காக இந்திய துணைக்கண்டத்தில் முதல் 'ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் சிகிச்சை கல்வி மையம்' தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் இயங்கி வரும் அப்போலோ கேன்சர் சென்டர் வளாகங்களில் இக்கல்வி மையங்கள் நிறுவப்படும். மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேம்பட்ட கதிரியக்க அறுவைசிகிச்சை கல்வி சார்ந்த பயிற்சியினை இம்மையங்கள் வழங்கும்.  Apollo Cancer Centre ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் இக்கல்வித்திட்டத்தில் விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி பயிற்சி ஆகியவை உள்ளடங்கும்.  உலகத்தரம் வாய்ந்த பயிற்சியானது, உள்நாட்டிலேயே கிடைப்பதை உறுதிசெய்வதால், இந்தியாவின் மருத்துவக் கல்வி சேர்வதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கையானது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.  வலுவான மற்றும் நடைமுறை யதார்த்தம் சார்ந்த கற்றல் அனுபவம், பயிற்சி திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆழமான விவாதங்களிலும் மற்றும் செய்முறை பயிற்சிகளிலும் இதன் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள். புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் இது தொடர்பாக கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டரின் சைபர்நைஃப் அகாடமியா தொடங்கப்பட்டிருப்பது, ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சையில் மருத்துவப் பணியாளர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.  இந்தியாவில் சைபர்நைஃப் ரோபோட்டிக் அறுவைசிகிசிச்சை அமைப்பை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருவதன் மூலம் நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை என்பது, மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது; எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த பயிற்சி செயல்திட்டத்தின்போது மதிப்புமிக்க நிபுணத்துவ திறனையும், உள்நோக்குகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்வை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்; எமது நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பாக நாங்கள் சேவையாற்றவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உலகளாவிய தரநிலைகளை நிறுவவும் இது எங்களை ஏதுவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”  Apollo Cancer Centre புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் மகாதேவ் போத்தராஜு இது தொடர்பாக பேசுகையில், “இந்த மிக நவீன கல்வி மையத்தை நிறுவி தொடங்குவது, உலகத்தரத்தில் மிக உயர்ந்த புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கான எமது குறிக்கோளோடும், செயல்திட்டத்தோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது.  எமது புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் மற்றும் செயல்திறன்களையும் இந்த சைபர்நைஃப் பயிற்சி இன்னும் சிறப்பாக மேம்படுத்தும்; இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான நமது அணுகுமுறையிலேயே விரிவான மாற்றத்தை கொண்டு வரும்.” என்று குறிப்பிட்டார்.  அப்போலோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் இன்டர்நேஷனல் துறையின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் பேசுகையில் , “புற்றுநோய் சிகிச்சை காலத்தில் புதிதாக வந்திருக்கும் புரட்சிகர தொழில்நுட்பங்கள் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, பிரத்யேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அக்யூரே ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியேடேட்டிக் கதிரியக்க சிகிச்சை செயல்திட்டம், ஏஷியன் பிராந்தியத்தில் இது தொடர்பான பயிற்சி வசதிகளை பெரிய அளவில் முன்னேற்றும்.  சைபர்நைஃப் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும் இன்றியமையாத அறிவு மற்றும் திறன்களை புற்றுநோயியல் மருத்துவர்களும், இயற்பியலாளர்களும் மற்றும் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்களும்  பெற்று பயனடைவதற்கு இது உதவும்.” என்று கூறினார்.  Apollo Cancer Centre அக்யூரே நிறுவனத்தின் பிரசிடென்ட் மற்றும் தலைமை செயல் அலுவலர் Ms. சூஸன் வின்டர் கூறியதாவது: “ சைபர்நைஃப்® S7™  சிஸ்டம், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அப்போலோ கேன்சர் சென்டர்களில் விரிவாக்கம் செய்யப்படுவதை அக்யூரே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.  இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த மருத்துவமனைகளுடன் நாங்கள் மேற்கொள்ளும் உறுதியான ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  இதன் நிகரற்ற துல்லியத்தினால் சிகிச்சை தரநிலைகளை சைபர்நைஃப் S7 சிஸ்டம் மறுவரையறை செய்கிறது; சிகிச்சையின் விளைவுகளை மிகச் சிறப்பானதாக ஆக்குவதற்கு மருத்துவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது.  கூடுதலாக, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக வழக்கமாக 1 முதல் 5 அமர்வுகளில் வேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைகளுக்காக அதிக உயர் அளவிலான கதிர்வீச்சு வழங்கப்படுவதை இது ஏதுவாக்குகிறது.”  சைபர்நைஃப் சிஸ்டம் என்பது, ஊடுருவல் அல்லாத, ரோபோட்டிக் முறையிலான கதிர்வீச்சு சிகிச்சை சாதனமாகும்.  புற்றுக்கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், உயர் துல்லியத்துடன் புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  மிக சிக்கலான மற்றும் எட்டுவதற்கு கடினமான இடத்திலுள்ள புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க இச்சாதனம் வகை செய்கிறது.  உயர் கூர்நோக்கத்துடன் கதிர்வீச்சு அலைக்கற்றைகளை வழங்குவதற்கு மேம்பட்ட இமேஜிங் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இது பயன்படுத்துகிறது. Apollo Cancer Centre உலகத்தரம் வாய்ந்த விரிவான பயிற்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இக்கல்வி செயல்திட்டம், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் சைபர்நைஃப் சிகிச்சை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.  இந்தியாவிற்கு சிறப்பு திறன் வாய்ந்த கல்வி முன்னெடுப்பு திட்டத்தை கொண்டு வந்திருப்பதன் வழியாக மருத்துவ புத்தாக்கத்தில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிறருக்கு வழிகாட்டுவதில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.  உடல்நல பராமரிப்பு பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை முன்னேற்றம் காணச்செய்வது என்ற குறிக்கோளுடன் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

விகடன் 26 Jun 2024 3:18 pm

Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார்.   இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.  வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள்,  மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி (HbA1c ) பரிசோதனையில், ரத்தச் சர்க்கரையின் அளவானது 7-க்குள் இருக்கும் நிலையில்,  வாரம் இருமுறை இளநீர் குடிக்கலாம்.  அது இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும். அதுவே, ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இல்லை என்பவர்கள் நிச்சயம் இளநீர் குடிக்கவே கூடாது. HbA1c Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா? சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.  இவர்கள் இளநீர் குடிக்கும்போது பொட்டாசியம் அளவு சட்டென அதிகரித்துவிடும் என்பதால் இளநீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இளநீரைப் போலவே அதன் உள்ளே உள்ள வழுக்கைப் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணத்துக்கு வயிற்றின் உள்பகுதியை ஆற்றும் தன்மை  கொண்டது என்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும். டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர்வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு இல்லாத நிலையில் தினமும் 2 இளநீர் கூட குடிக்கலாம்.  உடற்பயிற்சி செய்வோர், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். மற்றபடி உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 26 Jun 2024 9:00 am