Doctor Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா?
Doctor Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம். பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும். இரவில் 7- 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிற நிலையில், அந்த நபருக்கு பகல் வேளையில் தூக்கம் தேவைப்படாது. இரவு நேரத் தூக்கம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்க நினைப்பவர்கள் அதை 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க விடக்கூடாது. பகலில் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் தூக்கம், இரவு நேர தூக்கத்தை பாதிக்கும் என்பதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. சிலர், வார நாள்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், வார இறுதி நாள்களை வெளியே செல்வது, படம் பார்ப்பது போன்றவற்றுக்காகச் செலவழிப்பார்கள். அதனால் வழக்கமான தூக்க நேரம் தள்ளிப்போகும். அது ஆரோக்கியமான விஷயமல்ல. வார நாள்களோ, விடுமுறை நாள்களோ.... எல்லா நாள்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதைப் பின்பற்றுவதுதான் ஆரோக்கியமானது. தூக்கம் Doctor Vikatan: டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? தவிர்க்க முடியாத தருணங்களில் இதை அதிகபட்சமாக ஒரு மணி நேரம் தள்ளிப்போடலாம். அதற்கு மேல் தூக்கத்தைத் தள்ளிப்போடுவது சரியானதல்ல. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஆஸ்துமா பிரச்சினையால அவதிப்படறீங்களா? இந்த 3 யோகாசனத்தை செய்ங்க... மூச்சுத் திணறலே வராது...
ஆஸ்துமா பிரச்சினை உள்ள பெண்கள் அதிகமாக மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் ஒருவித இறுக்கம் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இந்த ஆஸ்துமா பிரச்சினை பரம்பரை வாயிலாகவும் வரலாம். மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான சளித் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களாலும் உண்டாகும். இந்த ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு யோகா மிகச்சிறந்த தீர்வாக அமையும். அதற்காக செய்ய வேண்டிய யோகாசனங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
மூக்கின் பக்கவாட்டில், உதட்டை சுற்றி பக்கா? Seborrheic Dermatitis பற்றி நீங்கள் அறிய வேண்டிவை!
பெரும்பாலானவர்களுக்கு மூக்கு பகுதிக்கு அருகிலும், உதட்டை சுற்றியும் கறுப்பு நிறத்தில் பக்குபோல ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும். அதை Seborrheic Dermatitis என்பர். இதனால் பெண்கள் பாதிக்கப்படும்போது பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சிலரோ அதை குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் ஒவ்வாமை என்று கடந்து செல்வர். பெண்களுக்கு இந்த seborrheic dermatitis ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பூப்படைந்த பின் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றம் என ஒருசில மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர், தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் இப்படி ஏற்படும் என்று அதற்கான மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். Seborrheic Dermatitis ஏற்பட என்ன காரணம், இந்தத் தோல் வியாதியை குணமாக்கும் வழிமுறைகள் என்ன? தோல் மருத்துவர் கத்தீஜா விளக்குகிறார். மருத்துவர் கத்தீஜா சருமப் பராமரிப்பில் இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதைப் பின்பற்றலாமா? எச்சரிக்கும் மருத்துவ வல்லுனர்கள்! ``Seborrheic dermatitis என்னும் தோல் நோய் ஏற்பட காரணம், ஹார்மோனில் ஏற்படும் மாற்றம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் பூஞ்சைகள் (fungus). தலையில் ஏற்படும் பொடுகு இதற்குக் காரணம் என்று கருதுவது, ஒருவகையில் ஏற்புடையதே. ஏனென்றல் தலையில் பொடுகு ஏற்பட காரணம் கூட மலசீஸியா (malassezia) என்னும் ஒருவகை பூஞ்சை தான். இந்த seborrheic dermatitis என்னும் பூஞ்சை நோயை பொறுத்தவரை ஆண், பெண் என்று எல்லா பாலினத்தவர்களையும் பாரபட்சமின்றி தாக்கும். ஆண்களுக்கு மீசை, தாடியைச் சுற்றியும், காது மடல்களுக்குப் பின்பும் இது தாக்கும். பெண்களுக்கும் உதட்டுப்பகுதியை சுற்றியும், மூக்கு பகுதியின் ஓரங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் புருவங்கள், கண்ணிமைகள் என இதன் தாக்கம் இருக்கும். இதற்கு காரணம் அந்தப் பகுதியில் அதிகமாக காணப்படும் எண்ணெய் தன்மை. இது malassezia வகை பூஞ்சைகள் அதிகமாக வளர வழிவகுக்கிறது. இதற்கு இதன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்க தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட தோல் பகுதியின் மென்மை தன்மை குறைந்து தடித்து காணப்படுவதுடன், எரிச்சலும் அதிகமாக இருக்கும். அதோடு அந்த தோல் பகுத்து செந்நிறமாகவும் மாறும். ஒரு சிலருக்கு மூக்கின் ஓரத்தில் இது ஏற்பட்டது போன்று இருக்கும். இது எண்ணெய்த்தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் பரவும் தன்மை கொண்டது. ஆயிலி சருமம் தலைமுடி முதல் பாதம் வரை... குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்! ஒருசிலர் இந்த seborrheic dermatitis குளிர்காலத்தில் மட்டும் தான் வரும் என்று கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பொதுவாகவே நம் சருமத்தில் பூஞ்சைகள் இருக்கும். ஆனால் அவை வளர நம் சருமத்தில் அவற்றுக்கேற்ற ஒரு எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமநிலை கிடைக்கும்போது, இன்னும் அதிகமாக வளரும். பூஞ்சைத்தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க சிகிச்சைகளும் உண்டு. உதட்டுப்பகுதியை சுற்றி ஏற்படும் அந்த எரிச்சல் உணர்வு, பக்கு இவற்றை 3 வாரங்களில் சரி செய்ய முடியும். ஆனால், தோலில் ஏற்படும் செந்நிறம் குணமாக 3 மாதங்கள் ஆகலாம். இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி anti-fungal மருந்துகளை பயன்படுத்தலாம். தடிப்புகள் இருக்கும்பட்சத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் Betnovate க்ரீம் பயன்படுத்துவர். அதேநேரம், அதை தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து பயன்படுத்தும்போது அது கட்டுக்குள் இருப்பது போல தோன்றும். ஆனால் அதை பயன்படுத்துவதை நிறுத்தும்போது மீண்டும் பரவும். அதன்பின் மீண்டும் அந்த க்ரீமை பயன்படுத்தும்போது இன்னும் தீவிரமாக செந்நிறமாக மாறும். இதற்குக் காரணம் அந்த க்ரீமில் இருக்கும் ஸ்டெராய்ட்ஸ் (steroids). எனவே அதை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. அதோடு ஒரு சிலர் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றை பயன்படுத்துவர். இது அதன் தாக்கத்தை இன்னும் தீவிரப்படுத்தி, அந்த பூஞ்சைகள் மேலும் வளர வழிவகுக்கும். சருமப் பிரச்னைகள் How to: சருமப் பொலிவுக்கான ஜூஸ் தயாரிப்பது எப்படி? I How to prepare Homemade Juice for Skin Glow? Water Based moisturizer-ஐ ஈரப்பதத்துக்காக பயன்படுத்தலாம். ஆனால் Oil based moisturizer-ஐ முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. அதுபோல இதன் ஆரம்ப கட்டத்தில் plain anti-fungal மருந்துகளை பயன்படுத்தலாம். ஒருவேளை மீண்டும் அதன் தாக்கம் தீவிரமானால் மருத்துவரை அணுகுவது சிறந்தது. அதுபோல நம் சருமத்தில் இருக்கும் எண்ணெய்த் தன்மையை நீக்கும், ஸ்டெராய்ட்ஸ் இல்லாத மென்மையான சோப்புகளை பயன்படுத்தவேண்டும். சருமத்தில் பூஞ்சை தொற்றிருக்கும் பகுதியில் கடினமான சோப்பை பயன்படுத்துவது இன்னும் நிலைமையை மோசமாக்கும். லேசான ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவதும் சிறந்தது. இதற்கு இயற்கைவழியில் (natural remedies) மருத்துவம் கிடையாது என்பது கசப்பான உண்மை என்றார்.
``மார்பக அளவில் இல்லை ஆரோக்கியம்!'' - க்ரீம் முதல் உணவு வரை கற்பிதங்கள் களைவோம்
பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பலருக்கும் தங்கள் உடல் குறித்த அக்கறை ஆரம்பித்துவிடுகிறது. அது அக்கறையாக இருக்கும்வரை பிரச்னையில்லை. ஆனால் அது உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையாக மாறும்போதுதான் பிரச்னையே... சரும நிறம் தொடங்கி, உடல் அளவு வரை எதுவும் இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு காரணமாகலாம். டீன் ஏஜில் பெரும்பாலான பெண்களை கவலைக்குள்ளாக்குவது மார்பக அளவு குறித்த உண்ணம். மார்பகங்கள் சிறியதாக இருந்தாலும் கவலை, பெரிதாக இருந்தாலும் கவலை என இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், அவர்களது இல்லற வாழ்க்கையைத் தாண்டியும் தொடர்கிறது. இதை எப்படி அணுகுவது.... இந்த எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த். உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் 11 கிலோ வரை வளர்ந்த மார்பகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்; அரிய உடல்நிலையால் பாதிக்கப்பட்ட பெண்! ``தங்கள் உடல் குறித்த அதீத கவலை கொள்வது 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டர்' (Body dysmorphic disorder (BDD) எனப்படும் உளவியல் கோளாறு. தனக்கு மிகப்பெரிய உடல் குறைபாடு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது, வெளிப்படையாக வெளியில் தெரியாத சின்னச்சின்ன சருமப் பிரச்னைகள், அழகு சார்ந்த விஷயங்களுக்காக பித்துப் பிடித்தது போன்ற மனநிலைக்குச் செல்வது ஆகியவை இந்த ரகம்தான். பாடி டிஸ்மார்ஃபிக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், தன் உடலைத் தானே வெறுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமூகம் தன்னை எப்படிப் பார்க்குமோ என்ற எண்ணத்தில் வெளியே செல்வதற்கே தயங்குவார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்கள், வேறு பிரச்னைகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளைக்கூட தவிர்ப்பார்கள். உதாரணத்துக்கு மார்பக அளவு குறித்த கவலை உள்ளவர்கள், மார்பகப் புற்றுநோய்க்கான சோதனை செய்வதற்குக்கூட தயங்குவார்கள். இவர்களுக்கு தாம்பத்திய உறவும் பாதிக்கப்படலாம். மார்பகங்கள் சிறியதாக இருந்தாலோ, பெரிதாக இருந்தாலோ அது குறித்துக் கவலை கொள்வதும் பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டரின் அறிகுறிதான். படித்த, நல்ல வேலையில் இருக்கும் பெண்களுக்குக்கூட மார்பகங்களின் அளவு குறித்த கவலை இருக்கிறது. இந்த மனநிலைக்கு சமூகமும் ஒருவகையில் காரணம் என்றே சொல்லலாம். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தம், திரைப்படங்களும், ஊடகங்களும் பெண்ணுடலை சித்தரிக்கும் விதம் போன்றவை, பெற்றோர் மற்றும் உறவினர் நடத்தும் முறை, பள்ளி மற்றும் குடும்பச் சூழலில் சிறுவயதில் எதிர்கொண்ட கேலி, விமர்சனங்கள், கொடுமைகள் போன்றவையும் ஒரு பெண்ணுக்கு தன் உடல் குறித்த அதீத கவலையைக் கொடுத்திருக்கலாம். மார்பகம்.. சில குழப்பங்கள்! பெரிய மார்பகங்கள் இருக்கும் பெண்களுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு இருக்கும். தனக்குப் பிடித்த உடைகளை அணிய முடியாதது, நடக்கவோ, ஓடவோ முடியாதது என அவை தரும் அழுத்தங்கள் பல. சிறிய மார்பகங்கள் கொண்டவர்களுக்கோ தான் பெண்மையுடன் இல்லையோ, அழகாக இல்லையோ என்ற எண்ணம்... பதின்ம வயதில் பெண் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் குறித்த அதீத எதிர்பார்ப்பையும் அப்படி அமையாமல் போகும்போது தீவிர மன அழுத்தத்தையும் கொடுக்கின்றன. மார்பகங்களின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை நாடும் இவர்கள், உண்மையில் அணுக வேண்டியவர் உளவியல் ஆலோசகரே... பிரபலங்கள், நடிகைகள் போன்றோரைப் பார்த்துவிட்டு, மார்பக அளவை மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்வதெல்லாம் சரியான விஷயமில்லை. அந்த அறுவைசிகிச்சை பிற்காலத்தில் பக்க விளைவுகளையே தரும். அதேபோல மார்பக அளவை அதிகரிப்பதாக விளம்பரப்படுத்தப்படும் க்ரீம்களை பயன்படுத்துவதும் ஆபத்தானது. அந்த க்ரீமில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள், அவற்றின் பக்க விளைவுகள் குறித்து தெரியாமல் பயன்படுத்தக்கூடாது. முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றினால் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குறிப்பிட்ட உணவுக்கும் மார்பக அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உடல் எடை அதிகமானவர்களுக்கு மார்பங்களிலும் எடை கூடும். உடல் எடை குறையும்போது மார்பக அளவும் மாறும். இதுதான் இயல்பானது. மற்றபடி மார்பக அளவுக்கும் ஆரோக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. மார்பகம் ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை - S2 E18 கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பக அளவில் மாற்றம் தெரியும். அதற்கேற்ப அவர்கள் உள்ளாடையை மாற்ற வேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் சிந்தனை குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து மார்பக அளவு குறித்து கவலைப்பட்டால் அது மன அழுத்தமாக மாறும். கர்ப்பகால உடல் மாற்றம் என்பது அழகானது என உணர வேண்டும். மார்பக அளவு குறித்த கவலையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கக்கூடாது. சிறுவயதிலிருந்தே உடல் குறித்த தன்னம்பிக்கையுடன் வளர, பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டாகக்கூட, குழந்தைகளை உருவகேலி செய்யாமலிருப்பதோடு, மற்றவர்கள் அப்படிச் செய்வதையும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைக்கு உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை இருப்பது தெரிந்தால் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சரியான நேரத்து கவுன்சலிங் மூலம் அவர்களை மன அழுத்தத்திலிருந்தும், உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் நிச்சயம் மீட்கலாம்'' என்றார். - கவிதா ஸ்ரீ
திடீரென பரவும் சளி, காய்ச்சல்... என்ன காரணம்; தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவ விளக்கம்
கொரோனா பயத்திலிருந்து சற்று மீண்டிருக்கிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என கடந்த சில வாரங்களாகவே சூழல் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு ஒருவராவது உடல்நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்படுகிறோம். என்ன காரணம்...? சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம்.... தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி ஊரெங்கும் ஃப்ளூ காய்ச்சல்… பைசா செலவில்லாமல் பக்காவா விரட்டலாம்! ``2022 ஜூலை இறுதியில் தொடங்கி, 2023, ஜனவரி வரையிலுமே சளி, காய்ச்சல், தும்மல், இருமல், காய்ச்சல் இல்லாத சளி, இருமல் பிரச்னைகளுடன் நிறைய மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவது அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை எடுத்துச் செல்லும் நபர்களில் இந்த அறிகுறிகளோடு வருபவர்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். 'சீசனல் ஃப்ளு' எனப்படும் இந்த பாதிப்பு, சென்னை போன்ற நகரங்களில் மழை மற்றும் குளிர்காலங்களில் பரவும். அதாவது ஜூலையில் ஆரம்பித்து ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி ஆரம்பம் வரை தொடர்ந்து இருக்கும். இந்த பாதிப்பானது எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளையும் பாதிப்பையும் காட்டாது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேலானவர்களுக்கும், இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அறிகுறிகள் இருப்பவர்கள் இரண்டு நாள்களுக்கு மேலும் அவை தொடர்ந்தால் மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. இந்த பாதிப்பானது பெருமளவில் வைரஸால் ஏற்படுவது. அதாவது இன்ஃப்ளுயென்ஸா வைரஸ். அதில் நிறைய திரிபுகள் உள்ளன. சமீபத்தில் சென்னையில் இது குறித்து ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த வைரஸின் திரிபு எப்படியெல்லாம் மாறுகிறது என்பது அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. காய்ச்சல் இது தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவிட் தொற்றும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மழைக்குப் பின் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா போன்ற தொற்றுகளும் ஆங்காங்கே இருக்கின்றன. ஏற்கெனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, தட்பவெப்பம் மாறும்போது ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் தீவிரமாகின்றன. சூழல் மாசு, சுகாதாரமற்ற காற்று போன்றவையும் இதற்கு ஒரு காரணம். பருவநிலை மாற்றம் என்பது சென்னை போன்ற நகரங்களை பாதிக்கலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த வருட இறுதி தொடங்கி, தற்போது வரை குளிர்கூட வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததையும், அதிதீவிர மழையையும் பார்த்தோம். இவையும் உடல்நலக் கோளாறுகளுக்கு காரணம் என்கிறார்கள். இது வைரஸ் தொற்று என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக ஆன்டிபயாடிக் வாங்கிப் பயன்படுத்துவது பலன் தராது. மருத்துவ ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உபயோகிக்கவும் வேண்டாம். தடுப்பூசி Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல்.... உடனே செய்ய வேண்டியது என்ன? கொரோனாவிலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, இதுபோன்ற பிற தொற்றுகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் மாஸ்க் அணிவது அவசியம். ஃப்ளு தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி இருக்கிறது. அதை வருடந்தோறும் போட்டுக்கொள்ளலாம். எந்த வயதினரும் இதைப் போட்டுக்கொள்ளலாம் என்றாலும் ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் வருடந்தோறும் ஜூலை மாதத்தில் எடுத்துக்கொண்டால், தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். சாதாரண சளி, காய்ச்சல்தானே என்ற அலட்சியம் வேண்டாம்'' என்றார். - ராஜலட்சுமி
Doctor Vikatan: டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு?
Doctor Vikatan: நான் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். வயது 38. தினமும் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பைக் ஓட்டுகிறேன். எனக்கு கடந்த ஆறு மாதங்களாக கடுமையான முதுகுவலி இருக்கிறது. டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்ப்பதுதான் வழியா? முதுகுவலிக்கு வேறு தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை டூ வீலர் ஓட்டுவது என்பது முதுகுவலிக்கு முக்கியமான ஒரு காரணம்தான். பலரும் தினமும் 50- 60 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள். இதைத் தவிர்ப்பது என்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கலாம். டூ வீலர் ஓட்டுவோருக்கு முதுகுவலி வருகிறது என்றால் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களது பாஸ்ச்சர் எனப்படும் தோற்றப் பாங்கு. இன்று டூ வீலர்களில் விதம் விதமான மாடல்கள் வருகின்றன. ஃபேன்சி பைக்குகளை ஓட்ட விரும்பும் மனநிலை அதிகரித்திருக்கிறது. 20 வயதில் இருக்கும் ஓர் இளைஞருக்கு அப்படிப்பட்ட பைக்கை ஓட்டுவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். அதுவே வயதானவர்களுக்கு அப்படிப்பட்ட டூ வீலர்களை ஓட்டுவது நிச்சயம் பாஸ்ச்சரை பாதித்து, அதன் தொடர்ச்சியாக முதுகுவலியைத் தரும். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பைக் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறதா, ஓட்டும்போது அசௌகர்யமாக உணரச் செய்யாமல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்து டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், உங்கள் முதுகுப் பகுதியை உறுதியாக்கும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டு, தொடர்ந்து செய்து வர வேண்டும். தினமும் இந்தப் பயிற்சிகளை காலையில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்த பிறகுதான் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும். முதுகுவலி Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் உடல் எடையைக் குறைப்பது சரியானதா? பல வருடங்களாக டூ வீலர் ஓட்டுபவர், முதுகுப் பகுதியிலுள்ள எலும்பு தேய்ந்திருக்கிறது, வலியும் அதிகமிருக்கிறது என்ற நிலையில், அவர்களை வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். வேலையிடத்துக்குப் பக்கத்திலேயே குடியிருப்பது அல்லது வீட்டின் அருகே வேலை என ஏதேனும் ஒரு மாற்றத்தைச் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்றால் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பல் போனால் சொல் போச்சு... பற்களைப் பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க! | வாய் சுகாதாரம் - 4
வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இந்த அத்தியாயத்தில் பல் ஈறு, எலும்பு, பற்காரை உள்ளிட்ட பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளை விளக்குகிறார்... பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர் கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலையும்... போட்டா கேன்சர் வருமா...? வாய் சுகாதாரம் - 3 சென்ற வாரம், பல் மருத்துவமனைக்கு விநோதமான சந்தேகத்துடன் நோயாளி ஒருவர் வந்தார். ``ஒரே நாளில் என் பல்லெல்லாம் ஆட்டம் கண்டு, வாயிலிருந்து கீழே விழுவது போல் கனவு கண்டேன். இப்படி நடக்குமா? என்று ஒரு கேள்வியைக் கேட்டார். இதுவோர் அதீத கற்பனை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வாய் சுகாதாரத்தில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், இது நாளடைவில் நடக்கக்கூடிய ஒன்றுதான். நாம் பற்களை இழக்க, பல் சொத்தை எப்படி ஒரு காரணியோ அப்படித்தான் பற்களின் ஆட்டமும் ஒரு காரணம் ஆகும். எனவே, இந்த வாரம் பற்களைச் சுற்றியுள்ள ஈறு, தசைநார் (ligaments) மற்றும் எலும்புகள் பற்றி பேசலாம். ஏனென்றால் இவை தான் நம் பற்களை வாயில் பிடித்து வைக்கின்றன. நம் பற்களை சுற்றி பிங்க் நிறத்தில் ஈறு என்ற பகுதி இருக்கிறது. இதை மருத்துவத்தில் GINGIVA என்று கூறுவோம். இது பற்களைச் சுற்றி ஒரு காலர் போல் அமைந்திருக்கும். இதைத் தவிர பற்களைச் சுற்றி நார் ( fibre) போன்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு தசைநார் இருக்கும். இந்த மெல்லிய fibres தான், நம் பற்களை தாடை எலும்புடன் இணைக்கின்றன. பற்களைச் சுற்றி உள்ள இந்த ஈறு, தசைநார் மற்றும் எலும்பு, இவற்றின் நிலை நன்றாக இருந்தால் பற்களின் ஆயுள் ஓஹோவென்றிருக்கும். ஆனால் பெரும்பாலானோருக்கு இவை நன்றாக இருப்பதில்லை. ஏன்? இதற்கு நமது அலட்சியம்தான் காரணம். எப்படி... கூறுகிறேன்.... கேளுங்கள்! வாய் சுகாதாரம் இந்த நேரத்தில் உயிர்ப்படலம் (biofilm), plaque என்ற இரண்டு சொற்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. Biofilm என்பது பற்களின் மேல் படிந்திருக்கும் ஒரு மெல்லிய படிமம் ஆகும். உணவுப் பொருள்கள் பற்களின் மேலே தங்குவதால் உண்டாகிறது. இதன் தொடர்ச்சியாக பற்களின் மேல் உருவாகும் படிமம் தான் Plaque எனப்படுவது. இநதப் படிமம் உருவாக இரண்டொரு நாள்கள் ஆகும். அதன் பிறகு இது ஒரு நிலையான structure ஆக பற்களின் மேல் படிந்து விடும். இது, பாக்டீரியாக்களின் புகலிடமாக விளங்கத் தொடங்குகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மி.கி. plaque-ல் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் ஈறிலிருந்து ரத்தக்கசிவு இருக்கும். வாய் துர்நாற்றம் இருக்கும். இதை எப்படித் தடுப்பது என்று பிறகு சொல்கிறேன். இப்படியாக plaque உருவான பிறகு அடுத்ததாக calculus என்ற பற்காரை உருவாகிறது. இது பற்களின் மேல் கெட்டியாக வெள்ளை நிறத்திலோ, பச்சை நிறத்திலோ இருக்கும். பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே இடைவெளி உண்டாகி உணவுப்பொருள்கள் மாட்டிக்கொள்ளும். இதை எடுக்கிறேன் என்று, நாம் குச்சியை வைத்துக் குத்த, அந்த இடைவெளி பெரிதாகும். வாய் சுகாதாரம் | பல் பல் சொத்தை... ஆரம்பத்திலேயே அலெர்ட் ஆனால் பல்லை காப்பாற்றலாம் | வாய் சுகாதாரம் - 2 இப்படியாக பற்களின் பிடிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். அடுத்த நிலையாக பற்களைச் சுற்றி உள்ள எலும்பு கொஞ்சமாகக் கரையத் தொடங்கும் ( Bone loss). இது தொடர்ந்து கொண்டே போகப்போக பற்கள் ஆடத் தொடங்கும். எனவே, இதற்கு biofilm தான் இதற்கு தொடக்கப் புள்ளி. இது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்... அட, சாப்பிட்டால் வரத்தான் செய்யும். அப்புறம் ? பல் தேய்த்தால் போய்விடும். பல் சொத்தையாகாமல் இருக்கவும், பல் ஆடாமல் இருக்கவும் பல் ஒழுங்காகத் தேய்க்க வேண்டும். சில நேரங்களில் பற்கள் ஆடும்போது, சுற்றி உள்ள ஈறுகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. சீழ் வடியவும் செய்யும். பொறுத்துக் கொள்ள முடியாத வலி இருக்கும். இது ஈறுகளில் இருந்து வரும் வலி. இப்படியாக பற்கள் ஆடுவதன் அறிவியல் அடிப்படையைப் பார்த்தாகி விட்டது. ஈறு பிரச்சனையும் வாய் துர்நாற்றமும் இப்போது ஈறு பிரச்னை, வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் ஆடுவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம். ஈறு பலவீனமாகிவிட்டது என்பதற்கான முதல் அறிகுறி, அதில் இருந்து ரத்தம் கசியும். உடனே பல் மருத்துவரிடம் வந்து பற்களை மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விளம்பரங்களில் பார்ப்பது போல் வெறும் பேஸ்ட் போட்டுத் தேய்த்தால், எந்தப் பலனும் உண்டாகாது. பல் சுத்தம் செய்வது (scaling). இதுதான் சரியான சிகிச்சை முறை. அதன் பிறகு ஒழுங்காக பற்களைத் தேய்த்து, plaque வராமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். வாய் துர்நாற்றத்திற்கும் இதுதான் சிகிச்சை முறை. வாய் சுகாதாரம் | பற்கள் அடுத்த நிலையிலான பல் ஆட்டத்திற்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. இவை, பற்களை நிலைத்து நிற்க வைக்கும். ஆனால், இதுவும் மிகவும் கடகடவென ஆடும் பற்களுக்குச் செய்ய முடியாது. அந்தப் பற்களைப் பிடுங்கத்தான் வேண்டும். இதுதவிர, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சரியான முறையில் Dental floss பயன்படுத்தினால், பல் இடுக்கில் உணவு மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளலாம். Mouth wash-ம் பரிந்துரையின் பேரிலேயே உபயோகிக்க வேண்டும். பற்களின் கரை, பற்காரை இவை இரண்டும் ஸ்கேலிங் (Scaling) செய்தால் மட்டுமே நீங்கும். ஸ்கேலிங் செய்த பிறகு மருத்துவரின் அறிவுரையின் பெயரில் சரியான முறையில் பல் தேய்த்தால் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளலாம். பெரும்பாலும் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகளைக் காண்போம். ஸ்கேலிங் செய்வதால் பற்கள் ஆடாது. மாறாக இன்னும் மோசமாகும் நிலையைத்தான் இது தடுக்கும். அடுத்து ஸ்கேலிங் செய்வதால் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்த பின்பு இரண்டொரு நாள்கள் பற்களில் சுற்றி கூச்சம் இருக்கும். இது முற்றிலும் தற்காலிகமானதே. ஸ்கேலிங் செய்த பின்பு பற்களினுடே இடைவெளி வந்தது போல் சிலர் உணர்வர். இது அந்த இடத்தில பற்காரை நீங்கியதால் வந்த இடைவெளிதான். பயப்பட வேண்டியதில்லை. மிகவும் கெட்டியான பற்காரையாக இருந்தால் பற்களைச் சுத்தம் செய்யும்போது சிறு வலி இருக்கும். எனினும் அதுவும் தற்காலிகமானதே. இது தவிர சர்க்கரை நோயாளிகளும் ( Diabetics) ,வைட்டமின் சி சத்துக் குறைபாடு உள்ளவர்களும் ஈறின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இந்த நோயின் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும் என்பது அறிவியல் உண்மை. வாய் சுகாதாரம் | பற்கள் அசைவ உணவுகளுக்கும் பல் சொத்தைக்கும் தொடர்புண்டா? | வாய் சுகாதாரம் - 1 இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு நோயாளிக்கு வந்த அதீத கற்பனை உண்மையாகாமல் இருக்க, இந்த வாரத்தின் TAKE HOME MESSAGE இவை தான்: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சரியான முறையில் கவனத்தோடு பற்களைத் தேய்த்து Plaque உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்கேலிங் பற்றி மனதில் உள்ள அச்சத்தைக் களைய முற்பட வேண்டும். டென்ட்டல் ஃப்ளாஸ் யன்படுத்த, மருத்துவரின் அறிவுரைப்படி பழகிக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்ப்பதோடு, வாய், பல் சுத்தத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பகாலம், மாதவிடாய் நேரம் மற்றும் பூப்பெய்தும் பருவத்தில் பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்படியாக நாம் நல்ல பற்களோடும் நல்ல சொற்களோடும் வாழ்வோம். இதையும் மீறி பற்களை இழக்க நேரிட்டால் அவற்றை கட்டும் முறை குறித்து, அடுத்த வாரம் பார்க்கலாம்.
Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?
Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா? மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு மாற்றம்தான். சினைப்பையானது தான் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரும். இது பெரிமெனோபாஸ் பருவம் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய நாள்களிலேயே ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பானது முழுமையாக நின்று, பீரியட்ஸும் முற்றுப்பெறும். இதைத்தான் நாம் மெனோபாஸ் என்கிறோம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் எலும்புகளின் அடர்த்தியும் குறையும். கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். எதுவுமே சாப்பிடாவிட்டாலும் எளிதில் எடை கூடும். அதேபோல மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இதய நோய் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம். மெனோபாஸ் வந்தவர்களுக்கு கொழுப்பு குறைவான தாவர உணவுகள் ஏற்றவை. கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், யோகர்ட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் டி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்றவையும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். தூக்கத்துக்கும் உதவும். இந்தப் பருவத்தில் ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு என்றாலே ஆபத்தானது என நினைக்க வேண்டாம். மீன்கள், சியா சீட்ஸ், ஆளி விதை, வால்நட்ஸ், சோயா போன்றவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மெனோபாஸ் பருவத்தில் ஏற்படும் வியர்வை, உடல் சூடாவது போன்றவற்றைக் குறைக்கும். மெனோபாஸ் பாலிஷ் செய்யாத தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை எடுப்பதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். வைட்டமின் பி சத்தும் கிடைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து மட்டுமன்றி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் என்பதால் அவையும் இந்தப் பருவத்தில் அவசியம். நெல்லிக்காய், கறுப்பு திராட்சை, நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை உடல் சூடாவதைக் குறைக்கும். காய்கறிகளில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி போன்றவை சிறந்தவை. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். பைட்டோஈஸ்டரோஜென் அதிகமுள்ள சோயா பீன்ஸ், வேர்க்கடலை, ஆளி விதை, க்ரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம், ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் ஏற்படும் அவதிகளை ஓரளவு குறைக்க முடியும். அடுத்தது உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுக்கப்பட வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர், தினமும் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், பால் உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும். இரண்டு கைப்பிடி அளவு காய்கறிகளும் ஒரு கைப்பிடி அளவு பழங்கள் மற்றும் தானியங்களும் போதும். அசைவ உணவுகளை உள்ளங்கை அளவுக்கு மட்டுமே எடுக்க வேண்டும். சிறுதானிய உணவு! Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை? சீஸ் என்றால் இரண்டு விரல் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் எடுக்கும்போது கட்டைவிரலில் பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை சேர்த்த, அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பேக்கரி உணவுகள் வேண்டாம். ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். காபி அளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றுடன் தினமும் சிறிது நேரம் வெயில் படும்படி இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவையும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
weight loss : எடை குறைக்கணும்... ஆனா சோம்பேறித்தனமா இருக்கா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்...
உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கும். சில சமயம் வெயிட்டை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபடுவோம். ஆனால் பலன் ஒன்றும் இருக்காது. உடல் எடையைக் குறைக்கும் பயணத்தை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு நாங்கள் சொல்லும் ஐடியாக்களை பின்பற்றுங்கள். இந்த வழிமுறைகள் உங்கள் சோம்பேறித்தனத்தை ஒழித்து வெயிட்டை குறைக்க உதவி செய்யும்.
How to: உடற்பயிற்சிகளால் முதுகுவலியை போக்குவது எப்படி? | How To Relieve Back Pain With Exercises?
இன்று பலரும் முதுகு வலி பிரச்னை பற்றி கூறுவதை கேட்கிறோம். குறிப்பாக கீழ் முதுகுவலி (Low back pain) என்பது உட்கார்ந்த இடத்திலேயே பணி புரிபவர்களுக்கும், அதிக நேரம் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் அதிகமாக இருக்கும். கீழ் முதுகில் ஏற்படும் இந்த வலியானது சில சமயங்களில் அதிகமாகவும், தாங்க முடியாததாகவும் மாறிவிடும் வாய்ப்புண்டு. சில உடற்பயிற்கிகள் செய்யும்பட்சத்தில், இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்கிறார், ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபிஸ்ட் ராகுல். அவர் தரும் வழிகாட்டல் இங்கே... பெல்விக் டில்ட் | முதுகுவலி பெல்விக் டில்ட் (Pelvic Tilt) படத்தில் உள்ளது போல Leg Shoulder With Half Squat நிலையில் நின்று, abs-ஐ டைட் செய்து ரிலீஸ் செய்யவும். இதை தொடர்ந்து செய்யும்போது கீழ் முதுகில் உள்ள ஜாயின்ட்கள் ரிலீஸ் ஆகும். இதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, 15 முறை செய்யலாம். இதன்மூலம் முதுகுத்தண்டும் இடுப்பு எலும்பும் ரிலீஸ் ஆகும். கேட் அண்ட் கேமல் (Cat and Camel) இது மிக அடிப்படை உடற்பயிற்சி. இதற்கு தோள்பட்டை மற்றும் மணிக்கட்டு இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்றும், இடுப்பு பகுதி மற்றும் முட்டி இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்றும், முட்டி மற்றும் கணுக்கால் (ankle) பகுதி இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்றும் படத்தில் இருப்பது போன்ற நிலையில் இருக்கவும். Abs-ஐ டைட் செய்யும்போது தலையைக் குனிந்து கீழே பார்க்கவும், லூஸ் செய்யும் போது தலையை நிமிர்த்தி மேலே பார்க்கவும். கேட் அண்ட் கேமல் | முதுகுவலி இப்படி abs டைட் செய்யும்போது வயிறு, முதுகு உள்ளிட்ட முக்கிய தசைகள் (core muscles) வலுப்பெறும்; ரிலீஸ் செய்யும்போது தண்டுவடத்தின் கடைசிப் பகுதி (Lumbar) மற்றும் இடுப்புப் பகுதி எலும்புகள் (Pelvic joints) திறக்கும். இதனால் கீழ்முதுகுப் பகுதியில் இருக்கும் இறுக்கங்கள் குறைந்து, வலி குறையும் வாய்ப்பு அதிகமாகும். பெல்விக் பிரிட்ஜ் (Pelvic Bridge) சமதள பரப்பில் நேராகப் படுத்துக்கொள்ளவும். உள்ளங்கைகளை நேராக தரை நோக்கி வைத்து, கால்கள் இரண்டையும் முன்னோக்கி மடக்கிக் கொள்ளவும். பின் இடுப்பை மட்டும் தூக்கி அப்பகுதியை டைட் செய்யவும். பின்பு ரிலீஸ் செய்யவும். இதனை தொடர்ந்து 15 முறை செய்யவும். இவ்வாறு செய்யும் போது கீழ் முதுகு தசைகள் (lower back muscle) வலுவடையும். நம் உடலில் பெரும்பாலும் வலிமை இழக்கும் க்ளூட் தசை (Glute muscle) வலுவடையும்.15 எண்ணிக்கையில், மூன்று செட்கள் செய்ய வேண்டும். முதுகு வலி நன்கு குறையும். பெல்விக் பிரிட்ஜ் | முதுகுவலிக்கான பயிற்சி How to: வீட்டில் செல்லப்பிராணியின் ரோமம், எளிதாக அகற்றுவது எப்படி? | How To Remove Pet Hair At Home? இவை மூன்றும், மிக அடிப்படையான உடற்பயிற்சிகள் ஆகும். கீழ் முதுகு வலியை சரி செய்ய இவை நிச்சயம் கைக்கொடுக்கும். தினமும் தொடர்ந்து செய்துவர முதுகுவலி பிரச்னை நீங்கும்.
மனநல மருத்துவமனைகளில் சட்டத்துக்குப் புறம்பாக நோயாளிகள்: மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு
இந்தியாவில் உள்ள 46 அரசு மனநல மருத்துவமனைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் செயல்பட்டு வருவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மனநல மருத்துவமனைகளின் மனிதத்தன்மையற்ற நிலை மனநல நோயாளிகளின் மனித உரிமைகளை மீறும் வகையில் இருக்கிறது. மேலும் மனநல பிரச்னை குணமான நோயாளிகள் சட்டத்துக்குப் புறம்பாக நீண்ட காலம் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும் அதிகம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது. Mental Health குவாலியர், ஆக்ரா, ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள மனநல மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும், நாட்டின் பிற இடங்களிலுள்ள மீதமுள்ள மருத்துவமனைகளுக்கு தங்களால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் எந்த மனநல மருத்துவமனையும் அதன் நோயாளிகள் எவ்வித பிரச்னையுமின்றி சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான நீண்ட கால நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து, மத்திய சுகாதாரத் துறைச் செயலர், சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல், மாநில சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், பெருநகர காவல்துறை டிஜிபி மற்றும் கமிஷனர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Hospital `ஸ்மைலிங் டிப்ரெஷன்' என்றால் என்ன? மனநல மருத்துவர் தரும் விளக்கம்! அதில், குணமடைந்த நோயாளிகளை சட்டத்துக்குப் புறம்பான வகையில் மருத்துவமனையில் வைத்திருப்பது, மனநல ஆணையம் அமைப்பது, மாநில மனநல மதிப்பாய்வுக் குழு அமைத்தல், மாநில மனநல பராமரிப்புக்கான விதிமுறைகள், நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள், ஊழியர்கள் நியமனம் குறித்த அப்டேட், மனநல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பேராசிரியர்கள் நியமனம், மனநல மருத்துவமனைகளில் அவசர கால சேவைகள், 5 ஆண்டுகளில் வீடு திரும்பியுள்ள நோயாளிகள் குறித்த தரவுகள், மனநல நோயாளிகளின் உணவுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அதற்குச் செலுத்தப்பட்ட உண்மையான தொகை, மருத்துவமனைகளின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதித் தணிக்கை அறிக்கை ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலர்களை அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.
கையில இருக்க Scar-அ மறைக்க Best Tips இதான்! - Dr Shwetha Rahul Explains | Scar Removal Method
Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?
Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா? விட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. அதாவது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பாற்றலே நமக்கு எதிராக மாறுவது. அந்த வகையில் விட்டிலிகோ விஷயத்திலும், நம் உடலின் வெள்ளை அணுக்களே, சருமத்துக்கு நிறம் கொடுக்கும் நிறமிகளைச் சிதைத்துவிடுகிறது. நமது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகள் குறிப்பிட்ட இடத்தில் செயலிழந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். விட்டிலிகோ பாதித்தவர்களுக்கு சருமம், பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பிரவுன் நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம். இந்த பாதிப்பு உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அல்லது உடல் முழுவதும் என எப்படி வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பேட்ச் போல வரலாம். பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் பொறுத்து அதை வகைப்படுத்துவோம். பொதுவாக இந்த பாதிப்பை 20 முதல் 30 வயதில் கண்டுபிடிக்கிறோம். அரிதாக குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு வரும்போது நோயை கணிப்பது சற்று சுலபம். பெரியவர்களுக்கு அதிலும் பரவலாக வரும்போது அது சற்று கடினம். உதடுகளில், விரல் நுனிகளில், கால்களில், அந்தரங்க உறுப்பு முனைகளில் வரும் வெண்புள்ளி பாதிப்பை கணிப்பது சற்று சிரமம். தாத்தா, பாடடிக்கோ, பெற்றோரில் யாருக்காவதோ இந்த பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு வர 10 முதல் 15 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. தைராய்டு, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், சில வகை மருந்துகளின் விளைவு என இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பாதிப்பின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துதான் சிகிச்சை முடிவு செய்யப்படும். சிறிய அளவிலான பேட்ச் போன்ற பாதிப்புகளுக்கு க்ரீம் மூலமே தீர்வு காணலாம். உடல் முழுவதும் பரவுகிறது என்ற நிலையில் சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். வெண்புள்ளி Doctor Vikatan:சிறிய விஷயத்துக்கும் கத்தி கூச்சல் போடும் மனைவி;கோபத்தைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா? நம் எதிர்ப்பு சக்திக்கும் சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தைக் குறைக்கும்வகையில் கார்ட்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மாத்திரைகள், க்ரீம்களை தாண்டி லைட் தெரபியும் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். லேசர் சிகிச்சைகளும் உதவலாம். இவை தவிர அறுவை சிகிச்சையும் ஒரு தீர்வு. அதாவது இரண்டு வருடங்களாக விட்டிலிகோ பரவியிருக்கக்கூடாது, அளவு பெரிதாகியிருக்கக்கூடாது. அப்படியிருந்தால் வேறோர் இடத்திலிருந்து மெலனினை கொண்டுவந்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி அறுவை சிகிச்சை செய்யலாம். வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது. எந்த இடத்தில் நிற மாற்றம் ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் உள்ள முடியும் வெள்ளையாக மாற வாய்ப்புண்டு. மற்றபடி இது பயப்படும்படியான பிரச்னை இல்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
Doctor Vikatan:சிறிய விஷயத்துக்கும் கத்தி கூச்சல் போடும் மனைவி;கோபத்தைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா?
Doctor Vikatan: என் மனைவி எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார். தன் எதிர்பார்ப்புக்கு மீறி சின்ன விஷயம் நடந்தாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நெகட்டிவ்வாக யோசிக்கிறார். தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் என்னிடமும், குழந்தைகளிடமும் கத்துகிறார். உளவியல் ஆலோசனைக்கும் வர மறுக்கிறார். எனக்கு, என் 9 வயதுக் குழந்தையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சாலை சரியாக இல்லாவிட்டாலோ, சுத்தமாக இல்லாவிட்டாலோ, குழந்தை பள்ளிக்கூடத்துக்கு ரெடியாகாவிட்டாலோ என் மனைவி டென்ஷனாகிறார். சின்ன விஷயத்தைக்கூட பெரிதாக்கி, சூழலையே கெடுத்துவிடுவார். இப்படிச் செய்து ஏன் எல்லோரின் மனநிலையையும் கெடுக்கிறாய் என கேட்டால் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டுக் கத்துவார். இதை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. ஆலோசனை சொல்ல முடியுமா? -Arun, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் உடல் எடையைக் குறைப்பது சரியானதா? உங்கள் மனைவிக்கு ஆளுமை தொடர்பான கோளாறு இருக்கலாம். OCPD என்று சொல்லக்கூடிய Obsessive-compulsive personality disorder பாதிப்பாக இருக்கலாம். இவர்களுக்கு எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மிகச் சரியாக இருக்க வேண்டும், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நெகட்டிவ் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமிருக்கும். சூழல் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று இவர்கள் நம்ப வேண்டும். அப்படி இல்லை என்பதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சுற்றியுள்ள யாரும் தன்னைப் புரிந்துகொள்ள வில்லை என்றே நினைப்பார்கள். கணவர், குழந்தைகள், உடனிருப்போரிடம் நிறைய கோபப்படுவார்கள். உணர்வுக் கொந்தளிப்பு இருக்கும். ஆளுமைக் கோளாறு உள்ளவர்களுக்கு அப்படிப்பட்ட பிரச்னை இருப்பதைப் புரியவைப்பதே கஷ்டம்தான். ஆனால் OCPD விஷயத்தில் அதை ஓரளவுக்குப் புரியவைக்க முடியும். இவர்களின் குணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது கணவர் மற்றும் வீட்டாரின் பொறுப்பு. இப்படிப்பட்ட பிரச்னை இருப்பதைப் புரிந்து கொள்வதோடு, சம்பந்தப்பட்ட நபர் கோபத்தில் கத்தும்போதோ, சண்டைபோடும்போதோ, தானும் சேர்ந்து கொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த நபர் அப்படித்தான் இருப்பார் என்ற தெளிவோடு இருக்க வேண்டும். தானும் ரியாக்ட் செய்வதால் அந்த நபரின் வெறுப்பும் கோபமும் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை உணர வேண்டும். உங்கள் விஷயத்தில் மனைவியிடம் உள்ள நல்ல குணங்களை அவ்வப்போது அவரிடம் சொல்லிப் பாராட்ட வேண்டும். பாசிட்டிவ்வாக பேச வேண்டும. அவருக்கு உங்கள்மேல் நம்பிக்கை ஏற்பட்டதும், மனைவி நல்ல மனநிலையில் இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லலாம். மனைவி கத்துவதால் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள் குறித்துப் புரியவைக்கலாம். பொறுமையாகச் சொல்லிப் புரியவைத்தால், உடனே இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் மனைவி அதை உணர்ந்து மாறத் தொடங்குவார். Angry Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா? உங்கள் மனையின் வீட்டார் யாராவதோ அதே மாதிரியான குணநலன்களோடு இருந்திருக்கலாம். காலப்போக்கில் உங்கள் மனைவி அந்த நபருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தானும் அதே மாதிரி மாறிவிடக்கூடாது என்பதை உணர்வார். அதற்கான முயற்சியை கணவராகிய நீங்கள்தான் தொடங்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல மனைவியை பற்றிய பாசிட்டிவ் விஷயங்களைச் சொல்லி அவரை பாராட்டுவதோடு, அவரின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு அதீத பொறுமை வேண்டும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என நீங்கள் நினைப்பதால் இந்த முயற்சியை இன்றே தொடங்குங்கள். மனைவி செய்வதை முட்டாள்தனமாகவோ, வேண்டுமென்றே செய்வதாகவோ பார்க்காதீர்கள். அவருக்குள் ஆளுமைக்கோளாறு இருப்பதால்தான் அப்படி நடந்துகொள்கிறார் என்பது தெரிந்து அவருக்கு சப்போர்ட் செய்தால், காலப்போக்கில் உளவியல் ஆலோசனைக்கு அவர் சம்மதிப்பார். தன்னை மாற்றிக்கொள்ள முனைவார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பயன்படுத்த தகுதியற்ற 378 ஹேண்ட் சானிட்டைசர்கள்; அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை!
கோவிட் சமயத்தில் தொற்றுப் பரவலைக் குறைக்கவும், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் `கை கழுவுதல்' வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்களின் `ஹேண்ட் சானிட்டைசர்கள்' பிரபலமாகத் தொடங்கின. இவற்றில் பலவும் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையே. கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் இப்போதும் கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா? #VikatanPollResults இந்த நிலையில், சானிட்டைசர்களின் தரம் மற்றும் லேபிளை ஆய்வுசெய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், `வெவ்வேறு வகையான 378 சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டாம்' எனச் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட சானிட்டைசர்களில் பெரும்பாலானவை மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தயார் செய்யப்படுகின்றன. மக்கள் ஏன் இந்த சானிட்டைசர்களை உபயோகிக்கக் கூடாதென பல காரணங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம். * மெத்தனால், 1-புரோபனால், பென்சீன், அசிட்டல்டிஹைடு அல்லது அசெட்டால் கொண்ட தயாரிப்புகள், இவை இருப்பதாக லேபிளிடப்பட்ட சானிட்டைசர்களை பயன்படுத்தக் கூடாது. * சோதனையில் நுண்ணுயிர் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. ஹேண்ட் சானிடைசர் (சித்தரிப்பு படம்) ``கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் உதவுமா? - மருத்துவரின் ஆலோசனை * எத்தில் ஆல்கஹால், ஐசோபுரோபைல் ஆல்கஹால் அல்லது பென்சல்கோனியம் குளோரைடு போன்றவை தேவையான அளவைவிடக் குறைவாக இருந்தால் பயன்படுத்தக் கூடாது. * உணவு அல்லது குளிர்பானம் போன்ற கன்டெய்னரில் வைக்கப்பட்ட சானிட்டைசர்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவற்றை உணவு என நினைத்து உட்கொண்டு விடும் அபாயம் உள்ளது. * சானிட்டைசரின் தரம் மற்றும் உற்பத்தி செயல்முறை குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பலமுறை கேட்டும், பதிலளிக்காத சானிட்டைசர் தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. அதோடு சீனாவில் மிக்கி மௌஸ் சானிட்டைசர், டிஸ்னி பிரின்சஸ் ஹேண்டு சானிட்டைசர், மார்வெல் ஹேண்ட் சானிட்டைசர் என டிஸ்னி கதாபாத்திர லேபிளோடு சானிட்டைசர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் திரும்ப பெறுமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெத்தனால் இருக்கும் சானிட்டைசர்களை பயன்படுத்தியவர்கள் உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். சிறிய அளவு மெத்தனால் வெளிப்பாடு கூட, லேசான குமட்டல், வாந்தி, தலைவலியோடு, அதிகப்படியாக வலிப்பு , கோமா, நரம்பு மண்டலத்தில் நிரந்தர சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். தலைவலி! சானிடைசர்... ஒளிந்திருக்கும் ஆபத்துகள்! சானிட்டைசர்களை பயன்படுத்துபவர்கள் 60 சதவிகித ஆல்கஹால் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அதோடு சானிட்டைசர்கள் கொண்டு கை கழுவினால், கோவிட் தொற்றிலிருந்து 24 மணி நேரம் வரை பாதுகாக்கும் போன்ற விளம்பர தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மக்கள் ஹேண்ட் சானிட்டைசர்கள் பயன்படுத்தும் போது, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை; சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 5
‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதாகவும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். மருத்துவர் மு. ஜெயராஜ் குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1 Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் சென்ற இரண்டு அத்தியாயங்களில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்கும் Anti-D ஊசி குறித்து விரிவாகப் பார்த்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் ரத்தசோகைக்கு அளிக்கப்படும் ‘கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை', குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் ‘குருதி மாற்ற சிகிச்சை’ போன்றவை குறித்து விரிவாகக் காண்போம். கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள்: மனைவியின் ரத்தப்பிரிவு நெகட்டிவ் எனில், கணவரின் ரத்தப் பிரிவை அறிய வேண்டும். அவரது ரத்தப் பிரிவும் நெகட்டிவ் எனில், சிசுவின் ரத்தப் பிரிவும் நெகடிவ்வாகவே இருக்கும்; எனவே, Rh இணக்கமின்மை ஏற்படும் சாத்தியம் இல்லை. மாறாக, கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், சிசுவின் ரத்தப் பிரிவும் பாசிட்டிவ்வாக இருப்பதற்கும், அதனால் Rh இணக்கமின்மை ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், அவரின் மரபணுவைப் பரிசோதிப்பதன் மூலம், சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பதற்கு, எவ்வளவு சாத்தியமென்பதைத் துல்லியமாக அறிந்திட முடியும். ICT பரிசோதனை மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 கர்ப்ப காலத்தில், தாய்க்கு ஏற்கெனவே Rh இணக்கமின்மை ஏற்பட்டுவிட்டதா என்பதை, Indirect Coombs test (ICT) பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்தில் ஏற்கெனவே Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளதென அர்த்தம். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்திலுள்ள Cell–free fetal DNA (cff DNA)வை PCR பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா எனக் கண்டறிவோம். சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பது உறுதியானால், தாயின் ரத்தத்திலுள்ள Rh IgG ஆன்டிபாடிகளால் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல் அபாயம் மிக அதிகம். எனவே, தாயின் ரத்தத்தில் எவ்வளவு Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளன என்பதை வாராவாரம் பரிசோதனைகள் மூலம் கண்டறிவோம். Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு <4 IU/mlஆக இருந்தால் சிசுவிற்கு பாதிப்புகள் ஏற்படாது. மாறாக, Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு 4-15 IU/ml ஆக இருந்தால், சிசுவிற்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) ஏற்படும் அபாயம் மிதமாகவும், அதுவே 15 IU/mlக்கு மேலிருந்தால் சிசுவிற்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் தீவிரமாகவும் இருக்கும். Rh இணக்கமின்மையையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனைகள்: தாயின் ரத்தத்தில் உள்ள Rh IgG ஆன்டிபாடிகளால் ஏற்படும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலின் அளவு மிதமாக இருந்தால், ரத்த சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும். சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலின் அளவு மிகத் தீவிரமாக இருந்தால், தீவிர ரத்தசோகையினால் இதயத் திறனிழப்பு ஏற்பட்டு, வயிறு, நுரையீரல், மற்றும் இதயத்தைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். இதனை, ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) என்றழைப்போம். தாயின் ரத்தத்தில் உள்ள Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு 10 IU/mlக்கு மேலிருந்தால், சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, வாராவாரம் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்படும். அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் மாற்றங்களைக் கண்டறிய முடியும். Rh IgG ஆன்டிபாடிகளால் ஏற்படும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலால், சிசுவிற்கு ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகையினால், ரத்த பாகுத்தன்மை (blood viscosity) குறைந்து, ரத்த வேகம் அதிகரிக்கும். டாப்ளர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம், மத்திய பெரூமூளை தமனியின் ரத்த வேகத்தை (Middle Cerebral Artery Peak Systolic Velocity / MCA PSV) கணக்கிடுவதன் மூலம், சிசுவிற்கு ஏற்பட்ட ரத்தசோகையைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். MCA PSV >1.5 MOM-ஆக இருந்தால், சிசுவிற்கு தீவிர ரத்தசோகை ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகம். MCA PSV >1.5 MOM-ஆக இருப்பின், சிசுவின் ரத்தசோகை எவ்வளவென்று கண்டறிய, கார்டோசென்டெசிஸ்/தொப்புள் கொடி துளைப்பு (Cordocentesis) செயல்முறையில், அல்ட்ராசவுண்ட் உதவியுடன், சிசுவின் தொப்புள் கொடி ரத்த நாளத்தில் இருந்து ஊசி மூலம் சிசுவின் ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். ரத்தப் பரிசோதனை மூலம் சிசுவிற்கு ஏற்பட்டுள்ள ரத்தசோகையின் தீவிரம் தெரிய வரும். தீவிர ரத்தசோகைக்கு செய்யப்படும் கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை: சிசுவின் ரத்தப் பரிசோதனையில், தீவிர ரத்தசோகை இருப்பின் (Hematocrit < 30%), கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை (Intrauterine Transfusion/ Intrauterine Fetal Blood Transfusion) செய்யப்படும். அல்ட்ராசவுண்ட் உதவியுடன ஊசி மூலம், சிசுவின் தொப்புள் கொடி ரத்தநாளத்தின் வாயிலாகவோ (Intravascular Transfusion) அல்லது சிசுவின் வயிற்றிலுள்ள பெரிட்டோனியத்திற்குள்ளாகவோ (Intraperitoneal Transfuion) O Rh-ve ரத்தமாற்றம் செய்யப்படும். இதன்மூலம் சிசுவின் தீவிர ரத்தசோகைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, சிசுவின் Hematocrit அளவு 50%க்கு மேல் கொண்டுவரப்படும். Rh இணக்கமின்மையின் தீவிரத்தைப் பொறுத்து, மீண்டும்மீண்டும் கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை தேவைப்படலாம். டாப்ளர் அல்ட்ராசவுண்ட் MCA PSV அளவைப் பொறுத்து, அடுத்தடுத்த கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சையின் தேவையும், நேரமும் நிர்ணயிக்கப்படும். தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 3 தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் ரத்த மாற்றம்: குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி ரத்த நாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, ரத்த வகை, ஹீமோகுளோபின், பிலிருபின், Direct Coombs Test (DCT) பரிசோதனைகளுக்கு, உடனடியாக உட்படுத்தப்படும். குழந்தையின் ரத்த வகை பாசிட்டிவ்வாக இருந்து, DCT பாசிட்டிவாக இருப்பின், பச்சிளங்குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்களின் மீது தாயின் Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளதென பொருளாகும். எனவே, குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் சிதைவுற்று, மிக வேகமாக உடலில் பிலிருபினின் அளவு அதிகரித்து, மூளை பாதிப்புகள் ஏற்பட நேரிடும். எனவே, குழந்தை பிறந்த உடனடியாகவே தீவிர ஒளிக்கதிர் சிகிச்சையைத் (Intensified Phototherapy) தொடங்கிவிடுவோம். பரிசோதனைகளில், மஞ்சள் காமாலையின் தீவிரம் அதிகமெனினும், பிலிருபினின் அளவு வேகமாக அதிகரிப்பினும், அதற்கு காரணமான சிசுவின் உடலிலுள்ள தாயின் Rh ஆன்டிபாடிகளை நீக்குவதற்காக, குழந்தையின் ஒட்டுமொத்த ரத்தமே நீக்கப்பட்டு, தாய் மற்றும் சேயின் ரத்தத்திற்கு ஒத்து வரும் (cross match) O Rh-ve ரத்தம் அல்லது நெகட்டிவ் உடைய சிசுவின் ABO ரத்த வகை ரத்தம், குருதி மாற்றத்திற்கு உபயோகப்படுத்தப்படும் (உதாரணமாக, குழந்தையின் ரத்த வகை B+ve எனில், குருதி மாற்றத்திற்கு O-ve அல்லது B-ve ரத்தம் உபயோகப்படுத்தப்படும்). Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 4 குழந்தையின் ரத்த அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு புதிய ரத்தம் உபயோகப்படுத்தப்படுவதால், இந்தச் செயல்முறை ‘Double Volume Exchange Transfusion (DVET)’ என்றழைக்கப்படுகிறது. அடுத்த அத்தியாயத்தில், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம். பராமரிப்போம்
Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு... எளிய தீர்வுகள் உண்டா?
Doctor Vikatan: என் வயது 26. தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. முடியும் அதிகமாக உதிர்கிறது. இது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத் தடுக்க எளிய வீட்டு சிகிச்சை இருந்தால் சொல்லவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் கீதா அஷோக் நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே கூந்தலை சரியாகப் பராமரிக்காததுதான் காரணம். தினமும் தலைக்குக் குளிப்பதுதான் ஆரோக்கியமானது. நம்மைச் சுற்றிலுமுள்ள சூழல் மாசு காரணமாக மண்டைப்பகுதியில் சீக்கிரம் அழுக்கும் தூசும் படியும். அதை சுத்தப்படுத்த தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது. தவிர வேலைச்சுமை, டென்ஷன், வாழ்க்கைமுறை என பல காரணங்களால் மண்டைப்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். அதன் காரணமாக மண்டைப்பகுதியில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளும். இதன் காரணமாக பொடுகு சேரும், முடி உதிர்வும் அதிகரிக்கும். தினமும் காலையில் தலைக்குக் குளிக்க நேரமில்லாதவர்கள், மாலையிலாவது குளிக்கலாம். மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில், கேப்ஸயூல் வடிவில் கிடைக்கும். 50 மில்லி தேங்காய்ப் பாலில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலில் மூன்றை உடைத்துச் சேர்க்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி, வில்வப் பொடி கிடைக்கும். இவற்றில் தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கலவையில் கலந்து கொள்ளவும். Hair Care (Representational Image) Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் உடல் எடையைக் குறைப்பது சரியானதா? முதல்நாள் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, மறுநாள் இந்தக் கலவையைத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். காலையில் எண்ணெய் வைத்து அதன் மேல் கலவையைத் தடவி, ஊறியும் குளிக்கலாம். மைல்டான ஷாம்பூ பயன்படுத்தவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்து வந்தாலே உங்கள் பிரச்னை சரியாகும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் உடல் எடையைக் குறைப்பது சரியானதா?
Doctor Vikatan: ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்கிறவர்களுக்கு சப்ளிமென்ட்டுகளும் புரோட்டீன் பவுடரும் அவசியமா? உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் எடையைக் குறைப்பது சரியானதா? பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் ஜிம்மில் பயிற்சியாளர்களாக இருக்கும் எல்லோரும் முறைப்படி அதற்காகப் படித்து, தகுதிபெற்றவர்களா என்பது சந்தேகம். பல இடங்களிலும் அப்படித் தகுதியில்லாதவர்கள்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. வொர்க் அவுட் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காகவே பலருக்கும் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்கும் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். மாத்திரைகளாகவோ, பவுடர் வடிவிலோ சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்ளச் சொல்வோரும் உண்டு. அப்படிப்பட்ட பொருள்களில் இயற்கையான தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கும். அவை எந்த மாதிரியான தாவரங்கள் என்பது அந்தப் பயிற்சியாளருக்கும் தெரியாது, சாப்பிடுவோருக்கும் தெரியாது. உடல் தசைகள் திரண்டு தெரியவும், சீக்கிரமே பலனை உணரவும் பலரும் இப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்டீராய்டு கலந்திருக்கும். அந்த ஸ்டீராய்டுகள் சீக்கிரமே தசைகளை உருண்டு, திரளச் செய்யும். இது பயங்கரமான பக்க விளைவுகளைக் கொடுக்கும். இந்த அளவு ஸ்டீராய்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லீரலும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு மனநிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்படும். சரிவிகித உணவு Doctor Vikatan: 20 ப்ளஸ் வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்... தீர்வுகள் உண்டா? புரதம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்படும் பவுடர்களும் இந்த ரகம்தான். பல வருடங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடலின் பிரதான உறுப்புகள் பாதிக்கப்படும். குழந்தையின்மை பிரச்னை வரலாம். எனவே வொர்க் அவுட் செய்வோர், சரிவிகித உணவு உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 30 சதவிகிதம் புரதம், 30 சதவிகிதம் கார்போஹைட்ரேட் மற்றும் மீதமுள்ள சதவிகிதம் கொழுப்பு என எடுத்துக்கொள்வதுதான் சரியானது. இன்னும் சிலர், குறிப்பாக பெண்கள், உடலை வருத்தாமல், உடற்பயிற்சி செய்யாமல் எடையைக் குறைக்க பவுடர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதுண்டு. அத்தகைய திரவங்களில் சேர்க்கப்படும் பொருள்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை ஆராய மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல சீக்கிரமே எடை குறையும், அதே வேகத்தில் இதயநலனும் பாதிக்கப்படும். தூக்கமின்மை வரும். எடைக்குறைப்பு Doctor Vikatan: விபத்தில் ஏற்பட்ட தலைக்காயம்... இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்? எடைக்குறைப்புக்கு சரியான உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இரண்டும்தான் உதவும். குறுக்குவழிகள் சீக்கிரம் பலன் தருவது போலத் தெரிந்தாலும் அவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் காலத்துக்கும் உங்களை பாதிப்பதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
``விகடன் வாசகர்கள் சரியான நேரத்துல உதவிட்டாங்க''- புற்றுநோயிலிருந்து மீளும் தாயின் ஆனந்தக்கண்ணீர்!
``என் பொண்ணுக்காக நான் வாழணும்''... புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதையை, கடந்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி விகடன் டிஜிட்டலில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். வாசிக்காதவர்களுக்காக, அந்தத் தாயின் நிலைமை பற்றி சில வரிகள். சிகிச்சைக்கு முன்னால் வேலூர்: சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்ட நாடோடி இன மக்கள்! - உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு கணவரைப் பறிகொடுத்தவர் மோகன லட்சுமி. தனி மனுஷியாகப் படாதபாடுகள் பட்டு, தன் ஒற்றை மகளை வளர்த்தெடுத்தார். மகளும் தாயின் நிலைமை புரிந்து நன்கு படித்து, இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். தாயும் மகளும், 'இனி எல்லாம் நல்லதா நடக்கும்' என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், மோகன லட்சுமியின் சினைப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ''நாலு மாசமா கீமோ தெரபிதான் போயிக்கிட்டிருக்கு. சினைப்பையையும் கருப்பையையும் ஆபரேஷன் செஞ்சு நீக்கிடணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு தடவை கீமோ கொடுக்கணுமாம். இதுவரைக்கும் கீமோவுக்கே இரண்டரை லட்சம் செலவாகிடுச்சு. ஆபரேஷனுக்கு நாலு முதல் அஞ்சு லட்சம் செலவாகலாம்னு சொல்லியிருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஷுரன்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். ஆனா, சமாளிக்க முடியலைங்க. ஒரு கீமோவுக்கு முப்பதாயிரம் செலவாச்சுன்னா, பன்னிரண்டு ஆயிரம்தான் க்ளெய்ம் பண்ண முடியுது. ஆபரேஷனுக்கும் அறுவதுல இருந்து எழுவது ஆயிரம்தான் க்ளெய்ம் ஆகும்னு சொல்றாங்க. பாவம், என் பொண்ணுதான் அவ ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பணம் கேட்டுட்டு இருக்கா. ஆனா, என் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைக்கலை. தவிச்சிக்கிட்டிருக்கா என் குழந்தை. அவ இப்போதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்திருக்கா. சிகிச்சைக்குப் பிறகு அப்பாவின் தவறான முடிவால் படிப்பு நிறுத்தப்பட்ட மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்! என் வீட்டுக்காரர் இறந்த பிறகு என் பொண்ணுக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என் பொண்ணுக்குத் துணையா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு. இந்தப் புற்றுநோய்ல இருந்து நான் மீண்டு வரணும். என் பொண்ணு நல்லபடியா வாழறதை கண்குளிரப் பார்க்கணும். உதவிகளுக்காகக் காத்திருக்கோம்'' என்கிற கண்ணீர் வார்த்தைகளுடன் விகடன் வாசகர்களின் உதவியை நாடியிருந்தார் மோகன லட்சுமி. வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு, கல்வி கற்க பொருளாதார பலம் இல்லாமல் போராடும் மாணவர்களுக்கு, உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கும், பேரிடர் காலங்களிலும் 'Vasan Charitable Trust' உதவி செய்து வருவது அனைவரும் அறிந்ததே... மோகன லட்சுமி பற்றிய கட்டுரை வெளியான நாளிலிருந்து, விகடன் வாசகர்கள் பலரும் என்ற Vasan Charitable Trust-க்கு நெட் பேங்க்கிங் மூலம் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யவும் ஆரம்பித்தார்கள். இதன் மூலம், மோகன லட்சுமிக்கு 2,02,137 ரூபாய் பண உதவி கிடைத்தது. இந்தத் தொகையுடன், உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் 'Vikatan readers charitable Trust for medical aid' தன்னுடைய பங்காக ரூபாய் ஒரு லட்சத்தை, மோகன லட்சுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு வழங்கியது. மோகன லட்சுமி ``என் பொண்ணுக்காக நான் வாழணும்!'' - புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதை! தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட மோகன லட்சுமி, ''இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன். விகடன் வாசகர்களும், விகடனோட டிரஸ்ட்டும் கரெக்டான நேரத்துல உதவி செஞ்சிருக்காங்க. ஆபரேஷனுக்கு பிறகு அந்த இடத்துல இன்ஃபெக்ஷனாயிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. ஆனா, எனக்கு இப்போ எந்த பயமும் இல்ல. நான் எப்படியும் மீண்டு வந்திடுவேன்கிற தைரியம் எனக்கு வந்திருச்சு'' என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கண்கலங்குகிறார் மோகன லட்சுமி. 'என் பொண்ணுக்காக நான் வாழணும்' என்று நீங்கள் விருப்பப்பட்டதைப் போலவே, ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள் அம்மா!
Doctor Vikatan: விபத்தில் ஏற்பட்ட தலைக்காயம்... இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்?
Doctor Vikatan: கடந்த 2020- ம் வருடம், 6வது மாதம் இரு சக்கர வாகன சாலை விபத்தில் சிக்கிய எனக்கு, ஸ்டேஜ் 1 என்ற தலைக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து சுமாராக 3 மாதங்களுக்கு சுயநினைவிழந்த நிலையில் இருந்தேன். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றின் மூலம் மீண்ட எனக்கு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்? - Vevaigai Suresh, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார் நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார் | சென்னை. Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு? தலையில் ஏற்படும் காயங்களை பொதுவாக கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3 என மூன்றாகப் பிரிக்கலாம். மைல்டானது, மிதமானது, தீவிரமானது என அர்த்தம். காயத்தை எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தால் கிரேடு 1-ல் சாதாரணமாக இருக்கும். கிரேடு 2-ல் சாதாரணமாகவோ, ஓரளவு அசாதாரணமாகவோ இருக்கும். கிரேடு 3-ல் அசாதாரணமாக மட்டுமே இருக்கும். கிரேடு 1-ல் நினைவிழப்பு 30 நிமிடங்களை விட குறைவாக இருக்கும். கிரேடு 2-ல் 30 நிமிடங்கள் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். கிரேடு -3ல், 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கும். அம்னீஷியா எனப்படும் மறதி பாதிப்பு, கிரேடு 1-ல் 24 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கலாம். கிரேடு -2-ல் 7 நாள்கள்வரை அது தொடரலாம். கிரேடு -3-ல் அதைவிட அதிகமாக நீடிக்கும். இது பொதுவான அளவுகோல். நம்முடைய சுயநினைவுக்கான அளவுகோலை 'ஜிசிஎஸ்' ( The Glasgow Coma Scale -GCS) என்று சொல்வோம். ஒருவர் எத்தனை நாள்கள் நினைவின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பது இது. நம்முடைய சுயநினைவின் அளவானது 15 என்ற நிலையில், தலையில் அடிபட்டு, அது மைனர் பாதிப்பாக இருக்கும்போது இந்த அளவானது13 முதல் 15- ஆக இருக்கும். மிதமான பாதிப்பு என்றால் 9 முதல் 12 ஆகவும், தீவிர பாதிப்பில் அது 9-ஐவிடக் குறைவாகவும் இருக்கும். உங்களுடைய விஷயத்தில் நீங்கள் 3 மாதங்கள் அம்னீஷியாவில் இருந்தது தெரிகிறது. எனவே உங்களுக்கு ஏற்பட்டது தீவிர பாதிப்பு. மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேனில் ஏதேனும் அசாதாரணம் இருந்திருக்க வாய்ப்புண்டு. தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு பிசியோதெரபி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட பிறகு தற்போதைய நிலை என்ன என்பது தெரிய வேண்டும். தீவிர பாதிப்புக்குள்ளான நிலையில் முழுமையான நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அது நபருக்கு நபர் வேறுபடும். தலை Doctor Vikatan: 20 ப்ளஸ் வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்... தீர்வுகள் உண்டா? நினைவு திரும்புவது என்பது 3 மாதங்களில் தொடங்கி ஒரு வருடம் வரை படிப்படியாக நிகழலாம். 3 மாதங்களில் நினைவு திரும்பவில்லை என்றால் அடுத்தடுத்து அதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டேதான் போகும்.பெரும்பாலான நோயாளிகளுக்கு இப்படித்தான் ஆகும். அந்தக் காலகட்டத்தைத் தாண்டிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். அதன் பிறகு நினைவு திரும்புவதெல்லாம் மெடிக்கல் மிராக்கிளாகவே பார்க்கப்படும். உங்களுக்கு இப்போது முறையான பிசியோதெரபி, ஸ்டிமுலேஷன் தெரபி போன்றவை கொடுக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உங்களுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளி என்றால் படுக்கைப் புண்கள், அதனால் இன்ஃபெக்ஷன் போன்றவை வராமலிருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டால் ஓரளவு தேறி வர வாய்ப்புண்டு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்
மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்
மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்
மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்
மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doctor Vikatan: 20 ப்ளஸ் வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்... தீர்வுகள் உண்டா?
Doctor Vikatan: என் வயது 23. ஆனால் இந்த வயதிலேயே என் சருமம் கரடுமுரடாக இருக்கிறது. சரும துவாரங்கள் பெரிதாக இருக்கின்றன. வயதானது போல காட்சியளிப்பதாக பலரும் சொல்கிறார்கள். என்னுடைய வேலை காரணமாக நான் தினமும் வெயிலிலும் புழுதியிலும் வண்டி ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. என் சருமப் பிரச்னைக்கு அதுதான் காரணமா? இதற்கு என்ன தீர்வு? - Hari Vengadesh, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை நம்முடைய சருமத்தில் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் என இரண்டு லேயர்கள் இருக்கும். டெர்மிஸ் எனும் லேயரில் செபேஷியஸ் சுரப்பிகள் இருக்கும். சருமத்துக்குத் தேவையான எண்ணெய்ப் பசையைச் சுரப்பது இவைதான். இந்த செபேஷியஸ் சுரப்பிகளிலிருந்து சீபம் என்கிற திரவம் சுரக்கும். சருமத்தின் மேல் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். இவை எல்லோருக்கும் இருக்கும். சிறு வயதில் இந்தத் துவாரங்கள் எல்லாம் டைட்டாக இருக்கும். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் சுரப்பவர்களுக்கு, அதன் காரணமாக சருமத் துவாரங்கள் திறந்திருப்பது போலத் தெரியும். அளவுக்கதிமாக வெயிலில் அலையும்போது சருமத்தின் அடியில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படும். இவைதான் நம் சருமத்தை இளமையோடும், உறுதியோடும் வைத்திருப்பவை. சருமத் துவாரங்களைச் சுற்றியுள்ள கொலாஜென், எலாஸ்டின் குறைவதால் துவாரங்கள் திறந்ததுபோலத் தெரியும். சருமத்திலுள்ள கொலாஜெனையும் எலாஸ்டினையும் தூண்டிவிட சில சிகிச்சைகள் இருக்கின்றன. மைக்ரோ நீட்லிங், ரேடியோ ஃப்ரீக்வன்சி, ஸ்கின் டைட்டனிங் கார்பன் டை ஆக்ஸைடு லேசர், சருமத்துக்கு அடியில் போடப்படும் ஹைலுரானிக் ஊசி போன்றவை இதற்கு உதவும். அதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். ஆயிலி சருமம் Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு? ரெட்டினால், சாலிசிலிக் அமிலம், கிளைகாலிக் அமிலம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். அதிகப்படியான வெயில், சூழல் மாசு, ஸ்ட்ரெஸ் காரணமாக சிலருக்கு சராசரியைவிட சீக்கிரமே சருமம் முதுமைத்தன்மையை அடையும். அவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி இருக்காது. எனவே இந்தக் காரணிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சரும மருத்துவரை அணுகி, உங்களுக்கான சரியான சிகிச்சைகளைக் கேட்டுப் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலையும்... போட்டா கேன்சர் வருமா...? வாய் சுகாதாரம் - 3
வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இத்தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்களில், பல் சொத்தை, அதன் வகைகள், சிகிச்சை முறைகளை விவரித்தார். இந்த அத்தியாயத்தில் வாய்ப்புற்று நோய், அதற்கான காரணங்களை விவரிக்கிறார்... பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா How To: வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of mouth smell? இந்தியாவை ‘வாய்ப் புற்றுநோயின் தலைநகரம்’ என்று அறிவிக்கும் நிலைமை கூட வரலாம். இது மிகவும் அபாயகரமான, ஆனால் நிதர்சனமான உண்மை. உலகில் மூன்றில் ஒருபங்கு வாய்ப் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில்தான் காணப்படுகிறது. இந்தியாவில் வாய்ப் புற்றுநோய்க்குதான் முதலிடம், நுரையீரல், கல்லீரல் புற்றுநோய்களுக்கு அல்ல. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் , இந்தியாவில் 60% - 80 % மக்கள் நோய் முற்றிய பிறகே மருத்துவரிடம் வருகிறார்கள். இப்படி நோயளிகளாக வரும் மக்கள் உயிர் பிழைக்கும் விகிதம் வெறும் 27% தான். வாய்ப் புற்றுநோய் உண்மையில் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றே கூறவேண்டும். இந்தியாவின் முதன்மையான 5 வகை புற்றுநோய் இத்தனைக்கும் வாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளான புகையிலை, வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சுண்ணாம்பு இவை அனைத்தும் மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள் (modifiable risk factors) . இந்தப் பழக்கங்களை கைவிட்டால், வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். 80% வாய்ப் புற்றுநோய்க்கு காரணம் புகையிலை தான். புகையிலை என்பது இரண்டு விதங்களில் கிடைக்கிறது. முதலில் smokeless tobacco. உதாரணம் பான்மசாலா, குட்கா, வெற்றிலைப் பாக்கு, புகையிலை போன்றவை. அடுத்து smoking tobacco... அதாவது சிகரெட், பீடி போன்ற புகைக்கக்கூடியவை. இந்தப் பழக்கங்கள் இருந்தால் நிச்சயமாக வாய்ப் புற்றுநோய் வரும். இந்தியாவின் புகையிலை பழக்கத்தை பற்றிய வரைபடம்... பல் சொத்தை... ஆரம்பத்திலேயே அலெர்ட் ஆனால் பல்லை காப்பாற்றலாம் | வாய் சுகாதாரம் - 2 அடுத்த காரணி ஆல்கஹால். மது + புகையிலை என்பது பயங்கரமான கலவை. 35% வாய்ப் புற்றுநோய்க்கான காரணியாக இந்தக் கலவை இருக்கிறது. அடுத்து கொட்டைப்பாக்கு. இது மட்டுமேகூட புற்றுநோயை (carcinogen) உண்டாக்கக்கூடியதுதான். வெற்றிலை, சுண்ணாம்பு மற்றும் கொட்டைப்பாக்கு - இது மற்றுமொரு மோசமான கலவை. 50 % வாய்ப் புற்றுநோய்க்கான காரணியாக இந்த combo விளங்குகிறது. இந்தக் கலவை தாம்பூலத்திற்கு உகந்ததாக இருக்கலாம். அதே நேரம், வாயில்போட்டு மென்று கொண்டே இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இது தவிர வைரஸ் நுண்கிருமியாலும் வாய்ப் புற்றுநோய் வரலாம். எனினும், அது பெரும்பாலும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. காரணிகளைப் பார்த்தாயிற்று. இப்போது நம் வாயில் எந்தெந்தப் பகுதியை புற்றுநோய் பாதிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இத்தொடரை தொடங்கும்போது, நம் வாயில் பற்களைத் தவிர, கன்னத்தின் உள்பகுதி (buccal mucosa), நாக்கு, அண்ணம், நாக்கின் கீழ்ப்பகுதி (floor of the mouth), உதடு மற்றும் ஈறு என்ற பகுதிகள் இருக்கின்றன என்று நான் குறிப்பிடது நினைவிருக்கும். எனவே, இதில் பற்களைத் தவிர எல்லா பகுதிகளிலும் வாய்ப் புற்றுநோய் வரலாம். இந்தப் பகுதிகளிலெல்லாம் Pre-Cancerous lesions-ம் வரலாம். Cancer என்றால் புற்றுநோய். அது என்ன Pre-cancerous lesions? இது புற்றுநோய்க்கு முந்தைய நிலை. இதுவும் பற்களைத் தவிர, வாயின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வரலாம். இந்த நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் கட்டாயம் அது புற்றுநோயாக மாறாமல் தடுத்துவிட முடியும். வாய்ப் புற்று நோய் இதுவரை புற்றுநோய்க்கு முந்தைய நிலையைப் பார்த்தோம். இப்போது புற்றுநோய் குறித்து பார்ப்போம். இதுவும் வாயின் அனைத்துப் பகுதிகளிலும் வரலாம். ஆனால் நாக்கு மற்றும் அதன் கீழ்ப் பகுதி ( floor of the mouth) - இந்த இரண்டிலும், இரண்டு வாரங்களுக்கு மேல் ஆறாமல் ஏதாவது புண் இருந்தால், அது சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்பட வேண்டும். உடனே மருத்துவரை அணுகியே ஆகவேண்டும். இந்தப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை உடையது. நாக்கில் ஏற்படும் புற்றுநோய் பெரும்பாலும் கூர்மையான பற்கள் மற்றும் செயற்கைப் பற்களில் உள்ள கம்பிகள் தொடர்ந்து உரசிக் கொண்டே இருப்பதால், சிறு புண்ணாகத்தான் ஆரம்பிக்கும். அப்போதே கவனித்து விட்டால் சிறிய புண்ணோடு தப்பித்து விடலாம். இல்லாவிட்டால், நாம் நமது கவனக்குறைவுக்கு பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இதை அவசியம் மனதில் கொள்ளுங்கள். இப்படியாக புற்றுநோய் என்று கண்டறிந்த பின்பு மாத்திரைகள், கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலம் நம் நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். ஆனால் சிகிச்சையானது நோயைவிட மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இத்தொடரின் நோக்கம் சிகிச்சையை பற்றி பேசுவதல்ல.... நோய் நாடி நோய் முதல் நாடி.. வருமுன் காப்போம்... இதுதான் எனது நோக்கம். வாய்ப் புற்றுநோய் அசைவ உணவுகளுக்கும் பல் சொத்தைக்கும் தொடர்புண்டா? | வாய் சுகாதாரம் - 1 இந்த வாரத்தின் TAKE HOME மெசேஜ்... புகையிலை வேண்டாம். கொட்டைப்பாக்கு வேண்டாம். உங்களுக்கு இந்தப் பழக்கங்கள் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள், ஒருவேளை நிறுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதத்திற்கொரு மருத்துவரை அணுகி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். புற்றுநோய்க்கு முந்தைய நிலையா, புற்றுநோயா என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் விட்டுவிடுங்கள். உங்களின் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். ஏனென்றால் self love is the best love!
Get Instant Glowing Skin In One Day | Hydra Facial | Before & After | Best Facial For Brides
Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?
Doctor Vikatan: எனக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றன. பெரும்பாலும் மோசமான கனவுகள்... அவற்றிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. கனவுகள் வராத தூக்கம் சாத்தியமில்லையா? கனவுகள் என்ன உணர்த்துகின்றன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கனவுகளோடு கூடிய தூக்கம் எல்லோருக்கும் அவசியம். தூங்க ஆரம்பித்ததில் இருந்து 90வது நிமிடத்தில் வரும் Rapid eye movement (REM) sleep அவசியம். அப்படித்தான் நம் மூளையின் அமைப்பு இருக்கிறது. இந்தத் தூக்கத்தில் ஓடுவது மாதிரி, துரத்துவது மாதிரி, பாலியல் இச்சைகள், ஸ்ட்ரெஸ் என எல்லாம் கலந்த கனவுகள் வரும். கண்கள் சுழன்றாலும், நாம் அசைவற்ற நிலையிலேயே இருப்போம் என்கின்றன ஆய்வுகள். அதாவது கனவுகளை உண்மையென நினைத்து அந்த நேரத்தில் நாம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே நம் தசைகள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். பொதுவாகவே நெகட்டிவ் கனவுகள் நினைவில் இருக்கும். பாம்பு துரத்துவது போல, தண்ணீரில் மூழ்குவது போல, சோகத்தில் துடிக்கிற மாதிரியெல்லாம் கனவுகள் வரும். கனவுகள் என்பவை சிறு குழந்தைக்குக்கூட வரும். குழந்தை தூங்கும்போது சிரிப்பதைப் பார்ப்போம். அதே போல அது பயந்து அழுவதையும், விம்முவதையும்கூட பார்க்கலாம். வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயத்தையும் ரொம்பவும் யோசித்து, அது குறித்த நெகட்டிவ் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தாலோ, எதிர்காலத்தை நினைத்து அதீதமாகக் கவலைப்பட்டாலோ, நடந்து முடிந்த விஷயங்கள் குறித்து 'இப்படிச் செய்திருக்கலாமோ, அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ' என்று வருத்தப்பட்டாலோ இப்படிப்பட்ட கனவுகள் வரலாம். இறந்த காலத்தை மீண்டும் மீண்டும் யோசித்து, மன அழுத்தம் கொள்வது இத்தகைய நெகட்டிவ் கனவுகளுக்கு முக்கிய காரணமாகலாம். மற்றபடி கனவுகள் பலித்துவிடுமோ, நடக்கப்போகிற செயல்களை உணர்த்துகின்றனவோ என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். dream Doctor Vikatan: ஆரோக்கியமான நபர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? நெகட்டிவ் கனவுகள் வேண்டாமென நினைத்தால் நீங்கள் விழித்திருக்கும் வேளைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அந்த நேரத்தில் பாசிட்டிவ் சிந்தனையுடன், ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழப் பழகுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு அணுகுங்கள். நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது எல்லாமே நன்மைக்கே என்ற பாசிட்டிவ் மனநிலைக்குத் தயாராகுங்கள். உங்கள் சிந்தனை மாறினால், அது உங்கள் தூக்கத்திலும் பிரதிபலிக்கும். ஆழ்ந்த, நிம்மதியான உறக்கத்துக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவையும் உதவும். உங்களால் முடிகிற விஷயத்தைப் பின்பற்றிப் பாருங்கள். தூங்கச் செல்வதற்கு முன் மனதை லேசாக்கும் விஷயங்களை மட்டும் யோசியுங்கள். நல்ல புத்தகங்கள் வாசிப்பது, நல்ல இசையைக் கேட்பது, நகைச்சுவையான விஷயங்களை அசைபோடுவது என அது எதுவாகவும் இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
தாய்மையா, வேலையா என்று கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்புரிமைகள் சிலவற்றை சட்டம் வரையறுக்கிறது. ஆனால் சில நிறுவனங்கள் சட்டம் வரையறுக்கும் உரிமைகளை, பெண்களுக்குக் கொடுப்பதில்லை. இதில் அரசுத்துறைகளும் விதிவிலக்கல்ல. ராஜேஸ்வரி என்னும் பெண், 2013-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிகப் பணி அடிப்படையில் பணியாற்றினார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் | மாதிரிப்படம் இவருக்கு, ஜூன் மாதம் 2013-ம் ஆண்டு திருமணமானது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரி கருவுற்றார். இதையடுத்து, மகப்பேறு விடுப்புக்கு மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை (180 நாள்கள்) விண்ணப்பித்தார். மகப்பேறு விடுப்பு விண்ணப்பித்த போதும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சம்பளத்துடன் பேறுகால விடுப்பினை கொடுக்கவில்லை. ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது, இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்கு கிடைத்தது. உயர் நீதிமன்றம் `கர்ப்பிணி மாணவிகளுக்கு 60 நாள்கள் பேறுகால விடுமுறை!’ - கேரள பல்கலைக்கழகம் தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால் ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கூறுகிறது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம், 'பெண்கள் குடும்பத்துக்காக பல தியாகங்கள் செய்கின்றனர். பேறுகாலத்தில் பெண்கள் வேலையா, தாய்மையா என்று அலைக்கழிக்கப்படக்கூடாது. அவர்களுக்கு பேறுகால சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது.
காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்கும் - நிபுணர் அலெர்ட்!
`உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே...' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்தானே.... ஆம்! ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவருக்கு தங்களது தலைமுடி மீது எப்போதும் தனிபிரியம் உண்டு. அது உதிர்வதை யாராலும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தலைமுடி உதிர்வு Doctor Vikatan: வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்? `இந்த எண்ணெய் தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். இந்த ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி பார்க்க பளபளவென இருக்கும்' என்றெல்லாம் நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தலைமுடி, சோடா, ஜூஸ், காபி, டீ போன்ற பானங்கள் குடிப்பதால் உதிரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? பீஜிங்கில் உள்ள Tsinghua பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் 30% ஆண்களுக்கு குறிப்பிட்ட சில பானங்களைக் குடிப்பதால் வழுக்கை ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே வைத்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக் கட்டுரை Nutrients என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உணவியல் நிபுணர் ஶ்ரீமதி வெங்கடராமன் இந்த ஆய்வு குறித்து பெங்களூரைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ஶ்ரீமதி வெங்கடராமன் விளக்குகிறார்... Nutrients இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையைப் பொறுத்தவரை, அது வெறும் சர்வே தானே தவிர அறிவியல் ஆய்வு இல்லை. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 13-29 வயது உள்ள ஆண்களில் எத்தனை பேர் சோடா, ஜூஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் எனர்ஜி டிரிங்க்ஸ் உள்ளிட்ட சர்க்கரை மற்றும் கஃபைன் மிகுந்த பானங்களைப் பருகுகிறார்கள் என்றும், அவர்களின் மரபியல், உடல் எடை, நோய்கள், உணவுப்பழக்கங்கள், புகைப்பழக்கம் ஆகியவற்றையும் சர்வே எடுத்துள்ளனர். பொதுவாக எனர்ஜி டிரிங்க் பருகும்போது அதிலுள்ள கஃபைன் மற்றும் அதிகமான சர்க்கரைதான் நமது எனர்ஜியை கூட்டுகிறது. அதிக சர்க்கரை மற்றும் அதிக கஃபைன் நமக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. சாதாரண காபியைவிட எனர்ஜி டிரிங்க்ஸில் கஃபைன் அதிகளவில் உள்ளது. கோலாவை எடுத்துக்கொண்டால், அதில் 27 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரு டீஸ்பூன் சர்க்கரை என்பது 5 கிராம் என்றால் 27 கிராம் என்பது எவ்வளவு அதிகம் என யோசியுங்கள். சர்க்கரை கொரோனாவால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்னை... தீர்வு என்ன? #ExpertExplains ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 5 முதல். 12 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால் தாகம் எடுக்கிறது என்று கோலா அல்லது செயற்கை ஜூஸை நாம் ஒரு நாளைக்கு ஒன்று குடித்தாலே, அதிலேயே 5 டீஸ்பூன் சர்க்கரை நமது உடலுக்குள் சென்றுவிடும். நமது உடல் இயந்திரத்தைப் போன்றது. அதில் தினமும் பல பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடக்கும். கஃபைன் மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை நாம் அளவுக்குமீறி பருகும்போது நம் உடலில் நடக்கும் பயோகெமிக்கல் செயல்பாடுகள் பாதிக்கப்படும். உதாரணமாக ஒருவர் கேக், டோநட், கோலா பானங்கள் என அனைத்தையும் சிறு சிறு இடைவெளியில் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அவருக்கு அதிகமான எனர்ஜியை கூட்டும். இதனால் அதிக பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடந்து அவர்களின் ஹார்மோன்கள் பாதிப்படையும். பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி எடுக்கும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த அளவு அதிகரிக்கும்போது வீக்கம், கொழுப்பு அதிகரித்தல், ஹார்மோன் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். இந்த பானங்களை அறவே தவிர்த்துவிட்டு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது பல் சொத்தை, உடல் பருமன் ஆகியவையும் ஏற்படும். மேலும் நாம் அதிக சர்க்கரை அல்லது கஃபைன் உட்கொள்ளும்போது அடுத்த அரை மணி நேரத்திற்கு சற்று அதிக எனர்ஜியுடன் இருப்போம். ஆனால் அரை மணி நேரம் கழித்து உடனடியாக நமது எனர்ஜி இறங்கி மன அழுத்தம், சோர்வு ஆகியவை ஏற்படும். இதனால் இந்த பானங்களை முடிந்தளவு தவிர்த்துவிட வேண்டும். Doctor Vikatan: உப்புத் தண்ணீரில் தலை குளிப்பதால் முடி உதிர்வு; தீர்வு என்ன? முடி வளர்ச்சிக்கு என தனியாக எந்த பானமும் கிடையாது. தானியங்கள், புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், வேர்க்கடலை, ராஜ்மா, கொண்டைக்கடலை, முட்டை, மீன் போன்றவை நல்ல கொழுப்புள்ள உணவு வகைகள். நெய், கடுகு எண்ணெய், எள் எண்ணெய் என அனைத்து சத்துகளும் கலந்த உணவுகளை உண்ணும்போது முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒரு வாரத்தில் ஒரே வகையான பழங்கள் அல்லது காய்கறிகளை உண்டுவிட்டு முடி வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எதிர்பார்க்கக்கூடாது. அனைத்து நிறங்களில் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு வகைகளைக் கலந்து உண்ண வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பெறலாம் என்கிறார்.
Doctor Vikatan: ஆரோக்கியமான நபர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா?
Doctor Vikatan: முன்பெல்லாம் ஆண்களுக்குத்தான் அதிக அளவில் ஹார்ட அட்டாக் வரும். பெண்களில் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இன்று பெண்களுக்கும் மாரடைப்பு அதிகம் வருவது ஏன்? 'நேத்துவரை நல்லாதான் இருந்தாங்க... இன்னிக்கு திடீர்னு இறந்துட்டாங்க...' என ஆரோக்கியமான நபர், ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பது பற்றியும் அதிகம் கேள்விப்படுகிறோம். நன்றாக இருக்கும் நபருக்கு இப்படி திடீரென மாரடைப்பு வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ். இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ் | சென்னை இதய நோய் பாதிப்புக்கான ரிஸ்க்கை கணக்கிட யூரோ ஸ்கோர் (EuroSCORE) என ஒன்று உண்டு. யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம் என்பதைச் சொல்லும் அது, பெண்களாக இருந்தாலே ரிஸ்க் சற்று அதிகம் என்கிறது. காரணம், அவர்களின் ரத்தக்குழாய் சுருங்கியிருப்பது. பெண்களின் ரத்தக்குழாய்கள், ஆண்களின் ரத்தக்குழாய்களைவிட சிறியதாக இருப்பதால் பெண்களுக்கு மாரடைப்பு வரும் ரிஸ்க் அதிகம் என்பதுதான் இதன் அர்த்தம். அது தவிர மெனோபாஸுக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பெண்களுக்கு மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன. நீங்கள் சொல்வது போல அந்தக் காலத்துப் பெண்களுக்கு மாரடைப்பே வந்ததில்லை என அர்த்தமில்லை. அவர்களுக்கும் வந்திருக்கும், மாரடைப்பால் இறந்திருப்பார்கள். ஆனால் அந்தக் காலத்துப் பெண்களுக்கு அறிகுறிகளே தெரியாமல் போயிருக்கலாம். அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைய பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், விழிப்புணர்வு இருக்கிறது. அறிகுறிகளையும் உணர்கிறார்கள். அதனால் பெண்களின் பல பிரச்னைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. எனவே மாரடைப்புக்கு ஆண், பெண் பேதமெல்லாம் கிடையாது. `நேற்றுவரை நல்லாதான் இருந்தாங்க... திடீர்னு இறந்துட்டாங்க' என்ற ஆதங்கத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் ஆரோக்கியம் கேள்விக்குரியது. ஆரோக்கியமானவர் என நாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நபர், பெரிய உடலியக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்திருக்கலாம். திடீரென நெஞ்சுவலி வந்திருக்கும், டெஸ்ட் செய்தால் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வரும். ஒருவேளை அவர் அறிகுறிகளை உணராத நிலையில், அடைப்பும் அதிகமானதால் திடீரென இறந்திருப்பார். இதயத்தில் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அது 30-50 சதவிகிதம் வரை இருக்கும்போது அறிகுறிகளை பெரிதாகக் காட்டாது. இதயத்துக்கு வேலை கொடுக்கும்படியான வேலைகள் செய்யும்போதுதான் நெஞ்சுவலியை உணர்வார்கள். டெஸ்ட் செய்து பார்த்தால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியும். டெஸ்ட் செய்யாதவர்களுக்கு அதுவும் தெரியாது. அந்த அடைப்பு 80 சதவிகிமாகும்போதுதான் அறிகுறிகளை உணர்வார்கள். Heart attack (Representational Image) Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்பு உண்டா? அதனால்தான் குறிப்பிட்ட வயதுக்கு மேலானவர்களும், குடும்ப பின்னணியில் இதய நோய்கள் இருப்பவர்களும், இணைநோய்கள் உள்ளவர்களும், புகை, மதுப் பழக்கங்கள் இருப்பவர்களும் வாழ்வியல் முறையில் கவனமாக இருக்கவும், புகை, மதுப் பழக்கங்களைக் கைவிடுமாறும், வருடாந்தர உடல் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
How to: சருமத்துக்கு ஏற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி? | How To Choose Foundation For Skin?
மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது ஃபவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப ஃபவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். ஃபவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான ஃபவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம். சரும வகையை அறிந்துகொள்ளுதல் ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கொண்டே ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் ஃபவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான ஃபவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும். வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் ஃபவுண்டேஷன், க்ரீம் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம். முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த ஃபவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது. Foundation How to: நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி? | How To Keep Nails Healthy? சரும நிறம் சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடை பகுதி அல்லது கழுத்துப் பகுதி நிறத்தை கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே ஃபவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். மேலும் குளிர்காலம், கோடைக்காலம் என்று சருமத்தின் நிறம் மாறும் என்பதால் ஒவ்வொரு முறை ஃபவுண்டேஷன் வாங்கும் போது நிறத்தை கவனிப்பது நல்லது. சருமத்தின் டோன் (Tone) சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பீச், மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோன்க்கு பொருந்தும் ஃபவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும். கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், ரெட் நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான ஃபவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும். நியூட்ரல் (Neutral) அண்டர்டோன் உள்ளவர்கள், மேலே சொன்ன இரண்டின் சீரான கலவை சருமத்தை கொண்டிருப்பார்கள். ஃபவுண்டேஷன் உங்கள் சருமத்தில் எந்த மாதிரியான இறுதிப் பொலிவை (Finish) ஏற்படுத்த விருபுகிறீர்களோ, அதற்கேற்ப dewy, matte, semi-matte மற்றும் luminizing finish வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பரிசோதனை ஃபவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. தாடையின் நிறம்தான் முகத்திற்கேற்ப இருக்கும். தற்போது விர்ச்சுவல் ட்ரை வசதி இருப்பதால் அதையும் பயன்படுத்தலாம். Skin Care How to: லெஹங்காவை தேர்வு செய்வது எப்படி?|How To Choose Lehenga? டிப்ஸ் * ஃபவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய வட்டமான ஃபவுண்டேஷன் பிரெஷ், மேக்கப் ஸ்பாஞ் என வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும். ஆனால் அது தரமானதாக இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். * ஃபவுண்டேஷனுடன் ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது நல்ல, நீடித்த மேக்கப்புக்கு அவசியம். * தேவைக்கும் அதிகமான ஃபவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். சிறிது சிறிதாக தேவையான இடங்களில் இட்டு, சீராக தடவும் போது இயற்கையான லுக் கிடைக்கும்.
Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்பு உண்டா?
Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமிருக்குமா? நான் கடந்த ஆறு மாதங்களில் 6 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அதனால் எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. இது சாதாரணமானதுதானா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் எடையைக் குறைக்க நீங்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியம். முறையான ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் செய்கிறீர்களா, ஃபிட்னெஸ் நிபுணரின் ஆலோசனை பெற்றுச் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை. பலரும் தாங்கள் கண்டது, கேட்டது என பல விஷயங்களையும் சுயமாக முயற்சி செய்துபார்த்து எடைக்குறைப்பில் இறங்குவார்கள். அது சரியான முறையாக இல்லாமல் போகும்போது இப்படிப்பட்ட பின் விளைவுகள் வரலாம். எடையைக் குறைக்கிற எல்லோருக்கும் முடி கொட்டிப் போகும் என்று சொல்வதற்கில்லை. கூந்தல் ஆரோக்கியத்துக்கு இரும்புச்சத்து, புரதம் மற்றும் பயோட்டின் ஆகிய மூன்று சத்துகளும் மிக அவசியம். எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும் பலரும், மஞ்சள் கரு ஆகாது என முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மஞ்சள் கருவில்தான் இரும்புச்சத்தும் பயோட்டினும் கிடைக்கும். பால் குடித்தால் கொழுப்பு என அதையும் தவிர்ப்பார்கள். பாலில் உள்ள புரதமும் கூந்தல் வளர்ச்சிக்கு அவசியம். கேரட்டில் அதிக சர்க்கரை உள்ளது என அதையும் தவிர்ப்பார்கள். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளிக்கக்கூடியது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சின்ன வெங்காயம், காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் சத்து, கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பதால் அவற்றையும் உங்கள் எடைக்குறைப்புக்கான உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரெட் மீட்டில் இரும்புச்சத்து மிக மிக அதிகம். கீரை, முழு கோதுமை உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்குக் கிடைப்பதைவிட, இந்த ரெட் மீட் மூலம் கிடைக்கிற இரும்புச்சத்து அதிகம் என்பதால் வாரம் ஒரு முறை 100 கிராம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அளவு தாண்டக்கூடாது. ஈரல் மற்றும் எலும்பு சூப் போன்றவையும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவுக்காரர்கள், பாதாம், பேரீச்சம் பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். எடைக்குறைப்பு Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா... அதனால் பற்கள் கறையாகுமா? எடைக்குறைப்பு என்பது அதிரடியாக நடக்கக்கூடாது. அதாவது ஒரே மாதத்தில் நான்கைந்து கிலோ எடை குறைப்பது ஆபத்தானது. அது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே முதல் வேலையாக டயட்டீஷியன் ஆலோசனையோடு உங்களுக்கான சரியான உணவுப்பட்டியலைக் கேட்டுப் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 4
பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும், வாரம் ஒன்றாக மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். சென்ற வார அத்தியாயத்தில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி எவ்வாறு செயல்படுகிறது, அதன்மூலம் கடந்த 59 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள் எவ்வாறு தடுக்கப்பட்டன என்பது குறித்து விரிவாகக் காண்போம். மருத்துவர் மு. ஜெயராஜ் தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 3 Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ வழிமுறை: ரத்த மாற்றத்திற்கு முன், அனைத்துப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டு, பொருத்தமுடைய ரத்தம் கண்டறியப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவர்களுக்கு, தவறான ரத்த மாற்றத்தினால் Rh ஆன்டிபாடிகள் ஏற்படும் நிகழ்வுகள் தற்போது மிகவும் அரிது. எனினும், Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தால், நோய் எதிர்ப்பு அமைப்பானது, Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின் போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-maternal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு, சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகள் உருவாவதற்கு 5-15 வாரங்கள் தேவைப்படும். Rh ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதால், அவை சிசுவின் குருதியோட்டத்தில் எளிதில் சேரமுடியும். எனவே, தாயின் குருதியிலுள்ள Rh ஆன்டிபாடிகள் சிசுவின் குருதியோட்டத்தை அடையும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மேலுள்ள Rh ஆன்டிஜென்னிற்கு எதிராகச் செயல்பட்டு, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் (hemolysis). ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல், மிதமாக இருந்தால், ரத்தச்சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும். தீவிரமாக இருந்தால் ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) ஏற்படும். இதனை Rh இணக்கமின்மையால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) என்றழைப்போம். ஆஸ்திரேலியா மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜான் கோர்மன் மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 இவ்வாறு, சிசுவிற்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும், தாயின் குருதியில் தோன்றும் Rh ஆன்டிபாடிகளே காரணம். Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தாலும், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பானது, சிசுவின் குருதியுலுள்ள சிவப்பணுக்களின் மேலிருக்கும் Rh ஆன்டிஜெனை உணர்வதைத் தடுக்கமுடியுமாயின், Rh ஆன்டிபாடிகள் உருவாவதை முற்றிலும் தடுக்க முடியும். பல ஆண்டுகள் ஆராய்ச்சி முடிவில் ஆஸ்திரேலியா மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜான் கோர்மன் (John Gorman) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி, வருடாவருடம் பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு Rh இணக்கமின்மையால் பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றி வருகிறது. 100 ஆஸ்திரேலியர்களில் 17 பேர் Rh-ve ரத்த வகையினர் என்பதும், Anti-D கண்டுபிடிப்பதற்கு முன் வருடாவருடம் பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பச்சிளங்குழந்தைகள் Rh இணக்கமின்மையால் உயிரிழந்ததும், ஜான் கோர்மனை Anti-D கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாகச் செலுத்தியுள்ளன. Anti-D ஆன்டிபாடிகளை செயற்கையாக ஊசி மூலம் தாய்க்குச் செலுத்துவதன் மூலம், சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்வதைத் தடுத்து, தாயின் உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று ஜான் கோர்மன் கூறியபோது, மருத்துவ உலகம் அதனை முட்டாள்தனமான யோசனையாகக் கருதியது. அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பும் எழுந்தது. அதனால், அவர் Rh-ve ரத்த வகையுடைய தன் தம்பி ஃப்ராங்க் கோர்மன்னின் மனைவி கேத் கோர்மன்னிற்கு ஜனவரி 31, 1964- அன்று Anti-D ஊசியைச் செலுத்தினார். அவர், எந்தவித பாதிப்புமில்லாத சிசுவைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு கர்ப்பத்திலும் Anti-D ஊசி செலுத்தப்பட்டு, Rh இணக்கமின்மை ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு, மொத்தமாக 7 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். Anti-D ஊசி அதற்கு முன்பு வரை, Rh-ve ரத்த வகையுடைய பெண்ணுக்கு முதல் குழந்தை மட்டுமே நார்மலாகவும், இரண்டாவது குழந்தை உயிருடன் பிறப்பதே அரிதான நிகழ்வாகவும் இருந்தபோது, நெகட்டிவ் ரத்த வகையுடைய கேத் கோர்மன் 7 நார்மல் குழந்தைகளைப் பெற்றெடுத்தது மிகப்பெரும் அதிசயமாகக் கருதப்பட்டது. 1966-இல், Anti-D ஊசி, Rh இணக்கமின்மையால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோயினை (Hemolytic Disease of the Newborn) தடுக்கவல்லதென மருத்துவ உலகால் அங்கீகரிக்கப்பட்டது. 1969-ல் ஆஸ்திரேலிய அரசு, Rh-ve கர்ப்பிணிகளுக்கு இலவசமாக Anti-D ஊசிகளைத் தரத் தொடங்கியது. கடந்த 59 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பச்சிளங்குழந்தைகள், Rh இணக்கமின்மையால் இறப்பதை, Anti-D ஊசிகள் தடுத்துள்ளன. Anti-D ஊசி செயல்படும் விதம்: Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள் உள்ளவரது குருதி நீர்மத்திலிருந்து (plasma), D ஆன்டிபாடிகள் பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, Anti-D ஊசிகள் உருவாக்கப்பட்டன. தற்போது, செயற்கை முறையில், மீளிணைதிற தொழில்நுட்ம் (recombinant technology) உதவியுடன் உருவாக்கப்பட்ட Anti-D ஊசிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் Anti-D ஊசிகள் 2000 - 4000 ரூபாயில் கிடைக்கப் பெறுகின்றன. குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1 Anti-D கொடுக்கப்படும் விதம்: பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின் போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-maternal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். எனவே, எப்போதெல்லாம் சிசு-தாய் ரத்தப்போக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதோ அப்போதெல்லாம் Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும். சிசு-தாய் ரத்தப்போக்கு இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடும் என்பதால், 1500 IU Anti-D ஊசி, கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் கொடுக்கப்படும். Anti-D ஊசி 12 வாரங்கள் வரை பாதுகாப்பு தரக்கூடியவை என்பதால், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிசு-தாய் ரத்தப்போக்குக்கெதிராக பாதுகாப்பு தரவல்லது. பிரசவத்திற்குப் பிறகு, பரிசோதனையில் குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், 72 மணி நேரத்திற்குள் உடனடியாக, 1500 IU Anti-D ஊசி, தாய்க்கு கொடுக்கப்பட வேண்டும். கருக்கலைப்பின் போது 500 IU Anti-D ஊசியும், வயிற்றின்மீது விபத்தோ, சிசு இறப்பு ஏற்பட்டாலோ, 1500 IU Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும். ஒருவேளை, அதிகளவு சிசு-தாய் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கக் கூடுமென மகப்பேறு மருத்துவர் கருதினால், தாயின் ரத்தத்தில் ‘Kleihauer Betke’ பரிசோதனை மூலம் எவ்வளவு சிசுவின் ரத்தம் கலந்துள்ளதென கண்டறியப்படும். ஒவ்வொரு மில்லிலிட்டர் சிசுவின் ரத்தத்திற்கும் 50 IU Anti D என்று டோஸ் கணிக்கப்படும். உதாரணமாக தாயின் ரத்தத்தில், 40 மில்லிலிட்டர் சிசுவின் ரத்தம் கலந்திருக்கிறதென கண்டறியப்பட்டால், 2000 IU Anti D ஊசி, தாய்க்குப் போடப்படும். மாறாக, வழக்கமான டோஸான 1500 IU மட்டுமே போடப்பட்டால், Rh இணக்கமின்மை ஏற்படவும், அடுத்த கர்ப்பத்தில் சிசுவிற்கு Rh இணக்கமின்மையால் பாதிப்பு ஏற்படவும் நேரிடும். அடுத்த அத்தியாயத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் ரத்தச்சோகையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு செய்யப்படும் குருதி மாற்றம் போன்றவை குறித்து, விரிவாகக் காண்போம். பராமரிப்போம்...
டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா
டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இதனால் மொத்த மீட்பு விகிதமானது19,80,781 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.24 மணி நேரத்தில் 150கொரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? - மருத்துவர் விளக்கம்
பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும் இதய நலத்திற்குமான தொடர்பு குறித்தும் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் குருபிரசாத்திடம் கேட்டோம்… ``கடந்த 10, 15 ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த கருவிகளை அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டிட் பிட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை வந்த பிறகு ஒருவர் தனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அறிவியலைப் பொறுத்தவரை இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பதால் ஆப்பிள் போனில் உள்ள ஹெல்த் செயலியையும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சும் கொண்டு சோதனை செய்யப்பட்டதில், இந்தக் கருவிகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. இதில் முக்கியமானது இந்தக் கருவிகள் ஈ.சி.ஜி எப்படி இருக்கிறது, இதயத் துடிப்பில் உள்ள மாற்றங்கள் என்ன, ஒருவரது உடற்பயிற்சியின் தேவை என்ன, உடலில் போதுமான ஆக்ஸிஜன் அளவு இருக்கிறதா என்பதை எல்லாம் கண்காணிக்க உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இந்தக் கருவிகள் மேலும் மேம்பட்ட வடிவில் பயன்பாட்டிற்கு வரும். ஆனால், 9 ஆயிரம் அடிகள் கட்டாயம் நடந்தால் மாரடைப்பு வருவது 50 சதவிகிதம் குறையும் என பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது. Doctor Vikatan: உடலுழைப்பே இல்லாத நபர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வாக்கிங் செய்யலாம்? உடல் உழைப்பு குறைவாக இருக்கும் வேலைகளைச் செய்வோருக்கு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதனைக் கண்காணிக்கவும் நடக்கும் தூரத்தைக் கணக்கிட இந்தச் செயலிகள் உதவுகின்றன. குறைந்தது ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு இப்படியான அளவுகோல்கள் உதவலாமே தவிர, இளைஞர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் தங்கள் இலக்கை 9 ஆயிரம் அடிகளாக சுருக்கிக்கொள்ளத் தேவையில்லை” என்றவர் நடைப்பயிற்சிக்கும் இதய நலத்துக்குமான தொடர்பு குறித்து கூறினார். ``நடப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்றால், நம் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் உள்ள தசைகளுக்கும், நமது இதயத்திற்கும் நரம்புகள் மூலம் தொடர்பு உள்ளது. நடப்பதால் தசைகளின் செயல்பாடு ஆக்டிவ்வாக இருக்கும், அதன் மூலம் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இந்தத் தசைகளின் செயல்பாடு அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும். தொடர்ந்து நடப்பதன் மூலம் இதயத்தில் இருக்கும் சிறிய அளவிலான அடைப்புகள் கூட நீங்கும் வாய்ப்பு உள்ளது. 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியே கிடையாது. 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஜிம், ஜாகிங் என தங்களால் இயன்ற அளவுக்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி என்பதே 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல் நலக்குறைபாடு உள்ளவர்களுக்கும் மட்டுமே அவசியமாகிறது. அதனால்தான், இந்த 9 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது என்று கூறுகிறோம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குமே கூட 9 முதல் 13 ஆயிரம் அடிகள் வரையும், அதற்கு இணையான நேரமும் நடக்கலாம். Walking Doctor Vikatan: குளிர்காலத்தில் வாக்கிங் செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா? 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதைவிட 10 மடங்கு கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும், குறைந்தது ஓட வேண்டும். குறைந்தது 45 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பது சிறந்தது. 45 நிமிடங்கள் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது என்பதை காலை 30 நிமிடங்கள், மாலை 30 நிமிடங்கள் என பிரித்துக்கொண்டு, அதிலும் 15 நிமிடங்கள் வேகமாக நடக்கவும், 15 நிமிடங்கள் ஓடவும் செய்யலாம். எப்படியாயினும் உடல் நலத்தைப் பேண அவசியம் உடல் உழைப்பு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறார் குருபிரசாத்.
டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா
டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இதனால் மொத்த மீட்பு விகிதமானது19,80,781 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.24 மணி நேரத்தில் 150கொரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா
டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இதனால் மொத்த மீட்பு விகிதமானது19,80,781 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.24 மணி நேரத்தில் 150கொரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா
டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.இதனால் மொத்த மீட்பு விகிதமானது19,80,781 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.24 மணி நேரத்தில் 150கொரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
saffron water benefits : குங்குமப்பூ நீரை குடிச்சா எடை வேகமா குறையுமாம்... எவ்வளவு குடிக்கணும்...
குங்குமப்பூ நம்முடைய சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் அதனால் ஏராளமான சரும பராமரிப்பு பொருள்களிலும் குங்குமப்பூ உட்பொருளாக சேர்க்கப்படுகிறது இவை எல்லாவற்றையும் தாண்டி குங்குமம் பூ சரியான அளவில் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைந்த உடல் எடையை வேகமாக குறைக்க இந்த குங்குமப்பூ உதவி செய்யும் என்பது நிறைய பேருக்கு தெரியாது உடல் எடையை குறைப்பதற்கு குங்குமம் பூ நீர் குடிப்பது நல்லது.
Skin எப்போவுமே Young-ஆ இருக்க 3 Best Natural Skin Tightening Home Remedies | Face Lifting Massage
Doctor Vikatan: மெனோபாஸை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா?
Doctor Vikatan: எனக்கு கடந்த 8 மாதங்களாக பீரியட்ஸ் வருவதில்லை. வயது 49. இதை மெனோபாஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா? மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸை உறுதிப்படுத்தும் டெஸ்ட் எல்லாப் பெண்களுக்கும் அவசியமில்லை. 50 வயதைக் கடந்த ஒரு பெண்ணுக்கு, தொடர்ந்து ஒரு வருடமாக பீரியட்ஸ் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சில பெண்களுக்கு 40 வயதிலேயேகூட 'ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' வரலாம். அப்படி வரும்போது மருத்துவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுக்கப் பரிந்துரைப்பார்கள். அதாவது ஈஸ்ட்ரோஜென் மற்றும் எஃப்.எஸ்.ஹெச்(FSH) போன்றவற்றுக்கான ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். ஒன்றரை மாத இடைவெளியில் இந்த ரத்தப் பரிசோதனையை இருமுறை செய்ய வேண்டியிருக்கும். அதில் ஹார்மோன் அளவுகளைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் வந்துவிட்டதா என்பதை உறுதிசெய்வோம். ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில்தான் இந்த ஒரு வருடம் என்பது குறிப்பிடப்படுகிறது. சில பெண்களுக்கு ஒரு வருடம் பீரியட்ஸ் வராமலிருந்து, அதன் பிறகு பீரியட்ஸ் வரலாம். கருமுட்டைகளை உற்பத்தி செய்கிற சினைப்பையானது சட்டென செயலிழக்காது. சிலருக்கு அரிதாக ஸ்பாட்டிங் மாதிரி ரத்தப்போக்கு தென்படலாம். ஒரு வருடம் வரை பீரியட்ஸே வராமலிருந்து, பீரியட்ஸ் வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மெனோபாஸ் Doctor Vikatan: குளிர்காலத்தில் வாக்கிங் செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா? அது கர்ப்பப்பையில் புற்றுநோய் தாக்கியிருப்பதன் அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்த நிலையில் மருத்துவரை அணுகினால், கர்ப்பப்பையின் லைனிங் அளவை ஸ்கேன் செய்து பார்ப்போம். அது 5 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருப்பது தெரிந்தால் அடுத்தகட்டமாக பயாப்சி பரிசோதனை செய்யச் சொல்வோம். அதைவைத்து ப்ளீடிங் ஆனதற்கான காரணம் கண்டறியப்பட்டு, சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
30 நாட்களில் 60000 மரணங்கள் - சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா
சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால் அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938 என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் 60000 மரணங்கள் - சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா
சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால் அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938 என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் 60000 மரணங்கள் - சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா
சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால் அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938 என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல் சொத்தை... ஆரம்பத்திலேயே அலெர்ட் ஆனால் பல்லை காப்பாற்றலாம் | வாய் சுகாதாரம் - 2
பற்கள் குறித்த அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இத்தொடரின் முதல் அத்தியாயத்தில் பற்கள், அவற்றில் ஏற்படும் சொத்தை, அதன் அறிவியல் காரணிகள், அறிகுறிகள் குறித்து விவரித்தார். இந்த அத்தியாயத்தில் பல் சொத்தையின் வகைகள் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பார்க்கலாம்... பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர் Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா? பல் சொத்தை ஏற்படுவது எப்படி? வாய்க்கு ருசியாக இருக்கிறதே என்று மனம் விரும்பியதைச் சாப்பிடுகிறோம். இதன் விளைவாக பல் சொத்தை வந்துவிடும் ஆபத்து உள்ளது. பல் சொத்தை என்பது ஒரு விநோதமான நோய். உலகம் உருண்டை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் எப்படி நாம் உணருவதில்லையோ, அப்படித்தான் பல் சொத்தையையும் நாம் உணருவதில்லை. எனாமல் (Enamel) என்ற லேயரில் இருந்து தொடங்கும் பல் சொத்தை, பற்களின் ஆழத்திற்குப் பரவ, சுமார் ஆறு மாதங்களில் இருந்து ஐந்து வருடங்கள்கூட ஆகலாம், அது நம் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது. சென்ற வாரம் நான் கூறியது போல், எனாமல் என்பது நரம்பு முடிச்சுகளற்ற, உயிரற்ற திசு. பல்லின் ஓரிடத்தில் சொத்தை இருக்குமானால் அதற்கான எந்த அறிகுறியும் பெரும்பாலும் இருக்காது. சில நேரங்களில் உணவுத்துகள் மாட்டிக் கொள்ளும், அவ்வளவே. அடுத்த லேயரான 'டென்ட்டின்'-க்கு (Dentin) போகும்போது பல் கூச்சம், சிறு வலி தொடங்கும். ஏனென்றால் இந்த லேயரில் இருந்து பற்களின் உயிர் தொடங்குகிறது. இனிப்பு வகைகள், ஜில்லென்ற ஐஸ்கிரீம், பேரிச்சம் பழம் என சாப்பிடும்போது கனநேரம் கூச்சம் ஏற்படும். பிறகு அந்த உணர்வு நின்றுவிடும். இப்போதாவது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் இதுவே தாமதம்தான். பல் சொத்தை நிலைகள் பல் வலி உண்டாவது இப்படித்தான் இதற்கடுத்த லேயரான pulp-க்கு சொத்தை பரவும்போது தான் வலி என்ற ஒன்றை நாம் முதலில் அனுபவிக்கிறோம். இந்த வலியானது பல் இடுக்கில் உணவு மாட்டும்போது ஏற்பட்டு பின்னர் மறைந்துவிடும். சில நேரங்களில் இனிப்பாகவோ, ஜில்லென்றோ, சூடாகவோ உணவுண்டு முடித்த பிறகு சில நிமிடங்களுக்கு வலி நீடிக்கலாம். இந்த நிலைக்கு வந்த பிறகு நீங்களே பல் மருத்துவரைத் தேடிச் சென்றுவிடுவீர்கள். இந்த நிலையையும் தாண்டி பற்களின் வேரினைச் சுற்றி சொத்தை பரவத் தொடங்கும்போது தான் வலி ஏற்படுகிறது. வேரைச்சுற்றி சீழ் சேர்ந்துவிடும். இரவில் படுத்துறங்கும் போது வலி அதிகமாகும். பெரும்பாலானவர்கள் வலியைத்தான் தொடக்கநிலை என்றே கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வலி என்பது இதுதான் முதல்முறையாகும். பல் சொத்தை என்பது பல்லின் மேல் பகுதியில் இருந்தும் தொடங்கும். சிலநேரங்களில் இரண்டு பற்களின் இடுக்கில் இருந்தும் தொடங்கும். இந்த நேரத்தில் சொத்தை எந்தளவு பரவி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, IOPA என்ற X ray தேவைப்படலாம். ஏனென்றால் சிகிச்சை முறை எந்த லேயரில் சொத்தை இருக்கிறது என்பதைப் பொறுத்து வேறுபடும். பல் சொத்தையை காண்பிக்கும் IOPA X Ray Doctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்... சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா? பல் வலி ஏற்பட மற்ற காரணிகள் பல் சொத்தையைத் தவிர பற்களின் அழற்சியினாலும், அதாவது பற்களின் தேய்மானத்தினாலும் பல் வலி ஏற்படலாம். பற்களை நறநறவென்று தூக்கத்தில் கடித்தல், தவறான பல் தேய்க்கும் முறை ( horizontal brushing), சுண்ணாம்பு, செங்கல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரி, ஏன் சிலவகை பற்பொடிகூட பற்களின் எனாமல் போக காரணமாக இருக்கலாம். பல் சொத்தையினால் ஏற்படும் அனைத்துவிதமான கூச்சமும் வலியும், பல் தேய்மானத்திலும் ஏற்படலாம். சிகிச்சை முறைகள்: பல் சொத்தையை, அது எனாமலில் இருக்கும்போதே கவனித்து விட்டால், மிக எளிதாக Resins மற்றும் Pit and fissure sealants மூலம் சொத்தையை எடுத்துவிட்டு அடைத்து விடலாம். இதுவே டென்ட்டினில் சொத்தை பரவி விட்டால், அது மேலோட்டமாக இருந்தால், வெள்ளி மற்றும் பற்கள் நிறத்திலேயே உள்ள சில பொருள்களை வைத்து பல்லை அடைத்து விடலாம். ஆனால், இதுவே பல் சொத்தை கொஞ்சம் ஆழமாக இருந்தால், மருந்து பொருளை ( calcium hydroxide) வைத்து, அதன் மேல் தற்காலிகமாக அடைத்து விடுவோம். அதற்கு பிறகு வலி எதுவும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் வேறொருநாளில் நிரந்தரமாக அடைத்துவிடுவோம். இதுவே சொத்தை pulp என்ற ஆழமான இடத்திற்குப் பரவி விட்டால், பெரும்பாலும் வேர் சிகிசிச்சை ( Root canal treatment) தான் செய்யப்படும். இந்தச் சிகிச்சையில் தொற்றுக்கு ஆளான திசுக்களை முற்றிலுமாக எடுத்துவிட்டு அந்த இடத்தை அடைத்து விடுகிறோம். இந்த முறையில், வலி வந்த பற்களைப் பிடுங்காமல் காப்பாற்ற முடிகிறது. என்ன இருந்தாலும் நம் சொந்தப் பல்லுக்கு அது ஈடாகுமா? வேர் சிகிச்சை முறை அசைவ உணவுகளுக்கும் பல் சொத்தைக்கும் தொடர்புண்டா? | வாய் சுகாதாரம் - 1 மாத்திரைகள் தீர்வல்ல... பல் சொத்தையைப் பொறுத்தவரை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இது மாத்திரைகளால் சரிசெய்யக்கூடிய நோய் அல்ல. பாதிப்புக்கு ஏற்ப முழுக்க பற்களில்தான் சிகிச்சை செய்ய வேண்டும். மாத்திரை என்பது தற்காலிகமான வலி நிவாரணியே. நிறைவாக, இந்த வாரத்தின் Take Home Message.... பற்களைத் தேய்ப்பதற்கு சிறந்த கருவி fluoridated பற்பசை மற்றும் டூத் பிரஷ். இது எந்த பிராண்ட் என்றாலும் சரி. வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம். அன்றாடம் 'டென்ட்டல் ஃப்ளாஸ்' (Dental floss) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற உதவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக பல் மருத்துவரைச் சந்திக்கவும். அடுத்த வாரம்... வாய்க் குழியில் (Oral Cavity) ஏற்படும் புற்றுநோய் குறித்து விரிவாகப் பார்க்கலாம்! பராமரிப்போம்...
Doctor Vikatan: உப்பு வைத்து பல் துலக்கினால் பற்களின் மஞ்சள் நிறம் மாறுமா?
Doctor Vikatan: எனக்கு பற்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உப்புத்தூளால் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு தொடர்ந்து ஒரு வாரம் அப்படிச் செய்தேன். இப்போது பற்களில் கூச்சம் அதிகமாகிவிட்டது. புண்ணாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு? மஞ்சள் பற்களை வெள்ளையாக்க என்ன வழி? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபி பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான் உங்களுக்குப் பிரச்னையாக இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் எல்லோருக்கும் பற்கள் வெள்ளைவெளேர் என இருக்கும், அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பற்களின் நிறங்களில் பல ஷேடுகள் உள்ளன. லேசான மஞ்சள் நிறம் முதல் வெள்ளை நிறம் வரை அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். யாரோ சொன்னதன் பேரில் உப்பு வைத்துப் பல் துலக்கியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது கல் உப்பா, பொடி உப்பா தெரியாது. எந்த உப்பானாலும் அதை வைத்துப் பல் துலக்கும்போது ஈறுகள் பாதிக்கப்படும். ஈறுகளில் உள்ள மென்மையான திசுக்கள் பாதிக்கப்பட்டு புண்ணாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உப்பால் பல் தேய்ப்பதன் விளைவாக பற்களின் மேல் உள்ள எனாமல் போய்விடும். உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்திலிருக்க என்ன காரணம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவை இயல்பிலேயே மஞ்சள் ஷேடில்தான் இருக்கின்றனவா, புகையிலை உள்ளிட்ட ஏதோ ஒன்றால் கறைபடிந்து மஞ்சள் நிறமாக மாறி உள்ளனவா என்று பார்க்க வேண்டும். Teeth (Representational Image) Doctor Vikatan: தலை, உடம்பு முழுவதும் அரிப்பு... சொரிந்தால் கட்டிகள்... குணப்படுத்த முடியுமா? அப்படி கறை படிந்ததால் மாறியிருக்கும் பட்சத்தில் பற்களை க்ளீன் செய்தாலே அவற்றின் நிறம் மாறிவிடும். ரொம்பவும் ஆழமான கறையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். செயற்கையாக மஞ்சள் நிறமாக மாறிய பற்களை வெள்ளையாக்க இன்று பல சிகிச்சைகள் உள்ளன. கவலை வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்... 11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாகப் பிரிப்பு
ஈராக்கில், அலி மற்றும் உமர் என்ற குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். குழந்தைகளின் அடிப்பகுதி மார்பு, வயிறு ஒன்றாக இணைந்துள்ளன. இரட்டையர்கள் இருவரும் கல்லீரல், பித்தப்பை, குடல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களை அறுவை சிகிச்சை மூலமாகப் பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். மருத்துவர்கள்! சவூதி ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா சிறப்புக் குழந்தைகள் மருத்துவமனையில், வியாழனன்று 6 நிலைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர் அப்துல்லா அல் ரபீஹ்வின் தலைமையில் சிறப்பு நிபுணர்கள், செவிலியர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 27 பேர் அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர். 11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் அல் ரபீஹ் கூறுகையில், ``ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளான உமர் மற்றும் அலி, 2022 செப்டம்பர் மாதத்தில் அவர்களின் பெற்றோர்களால் ரியாத்திற்கு கொண்டு வரப்பட்டனர். குழந்தைகளின் அடி மார்பும் வயிறு ம் ஒட்டியிருந்தன. இருவரும் கல்லீரல், குடல் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர். The Iraqi conjoined twins have been successfully separated after a complicated surgery that lasted 11 hours pic.twitter.com/ueiPQxaQAB — KSrelief (@KSRelief_EN) January 12, 2023 `முதலில் நான் டாக்டர்’... 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்! அறுவை சிகிச்சை 70 சதவிகிதம் வெற்றிகரமாக இருந்தது. ஈராக்கில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை இங்கு ஐந்தாவது முறையாக நடைபெறுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்யாணமாகி ஒரு மாசத்துலேயே சிலர் பிரியுறதுக்கான காரணம் இதுதான்! - Psychologist Kirthika Tharan
How to: வெள்ளை ஷூக்களை பளிச்சிடச் செய்வது எப்படி? | How To Clean White Shoes?
பொதுவாக நமக்கு வெள்ளை நிறத்தின் மீதான நாட்டம் அதிகம். வேட்டி உள்ளிட்ட வெள்ளை உடைகள் மங்கியிருந்தால் பிடிக்காது; தும்பைப்பூ வெண்மையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேபோல், நாம் வாங்கிய வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அதனை பளிச் என மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான ஒன்று. வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு, எளிதாக அதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்... வெதுவெதுப்பான சோப்புநீர் லெதர் ஷூ, க்ராக்ஸ் என எந்த மெட்டீரியல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்யவும், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்பு ஒரு துணி அல்லது பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி, ஷூ சுத்தமாகும் வரை மெதுவாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் அதிகப்படியாக உள்ள தண்ணீரைத் துடைத்து, ஈரம் காய காற்றில் நன்கு உலர வைத்து எடுங்கள். பழுப்புக்கு பை சொல்லி வெள்ளை நிறம் மீண்டிருக்கும். Tooth brush How To: சிபில் ஸ்கோரை சிறப்பாக பராமரிப்பது எப்படி? | How To Maintain A Healthy CIBIL Score? பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர் இந்த இரண்டும் கேன்வாஸ் ஷூக்களை சுத்தம் செய்ய சிறந்தது. மற்ற வகை ஷூக்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீரில், ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போல உருவாக்கவும். பின்பு பிரெஷ் கொண்டு அதில் தோய்த்து எடுத்து, அதைக் கொண்டு ஷூவை வட்ட வடிவில் மசாஜ் செய்வது போன்று தேய்க்கவும். எல்லா பக்கமும் இப்படியே சுத்தம் செய்யவும். சில மணி நேரம் அப்படியே காயவிட்டு, அந்த பேஸ்ட்டை ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்து, அல்லது ஷூவைக் கழுவி எடுத்து நிழலில் நன்கு உலர்த்திப் பயன்படுத்தவும். டூத்பேஸ்ட் ஷூக்களை பளிச்சிடச் செய்ய, வெள்ளை க்ரீம் உள்ள டூத்பேஸ்ட்டை பயன்படுத்தலாம். டூத்பிரஷ்ஷில் டூத்பேஸ்ட்டை எடுத்து, வட்ட வடிவில் ஷூ முழுக்க, குறிப்பாக அதிகக் கறை உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தேய்க்கலாம். 10 நிமிடங்கள் அப்படியே காயவிட்டு, ஈரமான துணியைக் கொண்டு துடைக்கவும். துடைத்த பின்னர் அழுக்குகள் இருந்தால் அந்த இடத்தில் மட்டும் மீண்டும் ரிப்பீட் செய்து, ஈரத்துணி கொண்டு துடைத்து, நன்கு உலரவைத்துப் பயன்படுத்தவும். எலுமிச்சை சாறு ஓர் எலுமிச்சை பழம் அடுத்து அதன் சாற்றை ஒரு பவுல் நிறைய நீரில் கலந்து கொள்ளவும். பின்னர் அந்த நீரை எடுத்து அழுக்கான ஷூ மீது வட்டவடிவில் தேய்க்கவும். தேய்த்த ஷூவை வெயிலில் ஒரு மணிநேரம் வைத்திருந்து, பின்னர் கழுவவும். எலுமிச்சை How to: நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி? | How To Keep Nails Healthy? ப்ளீச்சிங் ஏஜென்ட் கொண்டு தூய்மை ஒரு பங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டுடன் ஐந்து பங்கு தண்ணீர் கலக்கவும் (அதிகமாக ப்ளீச்சிங் ஏஜென்ட் சேர்ப்பது காலணிகளை மஞ்சள் நிறமாக மாற்றும்). ஒரு திறந்த, காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து, கைகளுக்கு கிளவுஸ் போட்டபடி, கலவையை ஷூவை சுத்தம் செய்யப் பயன்படுத்தவும். டூத்பிரஷ்ஷில் கலவையை எடுத்து ஷூவில் வட்ட வடிவில் தேய்க்கவும். தொடர்ந்து சாதாரண நீரில் கழுவிய பின்பு 5 மணி நேரம் ஈரம் காய நன்கு உலர விட்டு பின்பு பயன்படுத்தவும். குறிப்பு * ஒவ்வொரு வாரமும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் ஷூகளை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது அதிகமாக அழுக்கானல், சுத்தம் செய்யும் நேரமும் அதிகமாகும். * ஷூ சேதப்படும் என்பதால் வாஷிங்மெஷினில் ஷூக்களை போட்டு சுத்தப்படுத்துவதை தவிர்க்கவும். * ஷூவில் அழுக்கு பட்டாலோ, ஏதேனும் திரவங்கள் பட்டாலோ உடனே சுத்தம் செய்யவும்.
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!
கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!
கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!
கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!
கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோவிட்: `நீண்ட தூர விமானப் பயணங்களுக்கு முகக்கவசம் போடுங்க’ - உலக சுகாதார நிறுவனம் அறிவுரை
முகக்கவசம், தடுப்பூசிகள், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கோவிட் தொற்று பரிணமித்துக் கொண்டே அதன் வேரியன்ட்டுகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரானின் துணைப் பிரிவு திரிபு அமெரிக்காவில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் அமெரிக்காவின் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 27.6 சதவிகித மக்கள், ஒமிக்ரானின் துணை வேரியன்ட்டான XBB.1.5 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நீண்ட தூர விமானப் பயணிகள் முகக்கவசம் அணிவதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது. WHO - உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா? உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறுகையில், `` பயணிகள் நீண்ட தூர விமானப் பயணங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள தருணங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட வேண்டும். கோவிட் தொற்று பரவலாகக் காணப்படும் பகுதிகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இது ஒரு பரிந்துரையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Doctor Vikatan: தலை, உடம்பு முழுவதும் அரிப்பு... சொரிந்தால் கட்டிகள்... குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: எனக்கு தலை மற்றும் உடல் முழுவதும் மிகவும் அரிக்கிறது. சொரிந்தால் கட்டிக்கட்டியாக வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? -விகடன் வாசகர், இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா | சென்னை உங்களுடைய கேள்வி மேலோட்டமாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அரிப்பு எப்போதெல்லாம் வருகிறது, திடீரென தூண்டப்படுகிறதா, தொடர்ச்சியாக அரிப்பு இருக்கிறதா அல்லது அவ்வப்போது அரிப்பு வந்து சொரிந்ததும் கட்டியாக மாறுகிறதா என்ற தகவல்கள் தெரிய வேண்டும். கூடவே, இரவு நேரங்களில் அரிப்பு அதிகமிருக்கிறதா, கை இடுக்குகளில் அரிப்பு இருக்கிறதா, அந்தரங்க உறுப்பில் அரிக்கிறதா, உடல் முழுவதும் அரிக்கிறதா... இப்படிப் பல கேள்விகளுக்கு பதில் தெரிந்தால்தான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். அரிப்புக்கான பொதுவான காரணங்களைச் சொல்கிறேன். அவற்றில் முதலிடம் சரும வறட்சிக்கு. சருமம் அதீதமாக வறண்டுபோகும் நிலையில் அந்தப் பகுதியில் அரிப்பு அதிகமிருக்கும். சொரியும்போது புண்ணாகி, அந்த இடமே கருமையாக மாற வாய்ப்புகள் அதிகம். அடுத்து 'அர்டிகேரியா' என்றொரு ஒவ்வாமை பிரச்னை காரணமாகவும் அரிப்பு இருக்கலாம். அதாவது உணவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒன்று ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு மீன், உணவுகளில் சேர்க்கப்படும் கெமிக்கல், நிறமிகள் என அது எதுவாகவும் இருக்கலாம். அந்த உணவுகளைச் சாப்பிடும்போதெல்லாம் ஒவ்வாமை தூண்டப்பட்டு, அர்டிகேரியா பாதிப்பு தீவிரமாகி, அரிப்பும் அதிகமாகலாம். அரிப்பு Doctor Vikatan: ஒரே பிரச்னை... இரண்டுவிதமான ஆன்டிபயாட்டிக் எடுப்பது சரியானதா? குழந்தைகளுக்கு சிரங்கு வரும். அப்படி வந்தால் அது வீட்டிலுள்ள வயதானவர்கள்வரை அனைவரையும் பாதிக்கும். இது குறிப்பாக விரல் இடுக்கு, அக்குள், சிறுநீர் கழிக்கும் இடம், தொப்புளைச் சுற்றி... இப்படியான இடங்களில் அரிப்பை ஏற்படுத்தலாம். நீரிழிவு அதிகமானாலோ, உப்பு குறைந்தாலோ, சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டாலோ கூட உடலில் அரிப்பு இருக்கலாம். எனவே எந்தக் காரணத்தினால் அரிப்பு வந்தது என்பதைக் கண்டுபிடிக்க இத்தனை தகவல்கள் தேவை. அதனால் நீங்கள் முதலில் சரும மருத்துவரை அணுகி அரிப்புக்கான காரணம் தெரிந்து, அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
எடை குறைக்க விரும்புவோர் அதிகம் சாப்பிட வேண்டிய 5 சிறுதானியங்கள் என்னென்ன...
உடல் எடை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்டிரால் பிரச்சினை, கார்டியோ வாஸ்குலர் நோய்கள் போன்றவற்றிற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பதே நம்முடைய உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களும் குறிப்பாக நார்ச்சத்தும் குறைவாக இருப்பதேயாகும். உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் முதலில் தங்களுடைய டயட்டில் செய்யும் மாற்றமே கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பது தான். ஆனால் கார்போஹைட்ரேட்டும் நம்முடைய உடலுக்குத் தேவையானது தான். ஆனால் வெள்ளை அரிசி, கோதுமை என குளூட்டன் நிறைந்த மாவுப் பொருள்களைத் தவிர்த்துவிட்டு சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு -3
`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். கேள்வி: டாக்டர், எனது ப்ளட் க்ரூப் O-ve. என்னோட ப்ரெக்னென்ஸி பீரியட்ல, அல்ட்ராசவுண்ட் டெஸ்ட்டெல்லாம் நார்மலா இருந்தது. 28 வாரத்துல Anti-D போட்டாங்க. 40 வாரம் முடிஞ்சு நார்மல் டெலிவரி ஆச்சு. டெலிவரி ஆன ஒரு மணி நேரத்துல, குழந்தைக்கு, ஜாண்டிஸ் இருக்கு, ரத்தத்தை கம்ப்ளீட்டா மாத்தலன்னா, மூளை டேமேஜ் ஆகிடும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. DVET பண்ணதும், ஜாண்டிஸ் நார்மலாயிடுச்சி. அம்மாவுக்கு நெகடிவ் ப்ளட் க்ரூப் இருந்தா, குழந்தைக்கு எப்படி ஜாண்டிஸ் வருது? அடுத்த ப்ரெக்னென்ஸில, இதைத் தடுக்க என்ன செய்யணும்? DVET பண்ணதால குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா, டாக்டர்? blood groups 650 கிராம் பச்சிளம் குழந்தை... போராடி உயிரை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை! உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன், ரத்த வகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது, நெகடிவ் ரத்த வகையுள்ள கர்ப்பிணிகளுக்கு Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மை ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது, Rh இணக்கமின்மை ஏற்பட்டால் தரும் சிகிச்சை முறைகளை பற்றி விரிவாகக் காண்போம். ரத்த வகைகள்: ரத்த சிவப்பணுக்களின் மேலுள்ள ஆன்டிஜென்களை (Antigen – பிறபொருளெதிரியாக்கி) கொண்டு, ரத்த வகைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ரத்தச் சிவப்பணுக்களின் மேல் ‘A’ ஆன்டிஜென் இருந்தால், ‘A’ ரத்த வகை என்றும், ‘B’ ஆன்டிஜென் இருந்தால், ‘B’ ரத்த வகை என்றும், ‘A’ மற்றும் ‘B’ ஆன்டிஜென்கள் இரண்டுமிருந்தால் ‘AB’ ரத்த வகை என்றும், ‘A’ மற்றும் ‘B’ ஆன்டிஜென்கள் இரண்டும் இல்லையென்றால் ‘O’ ரத்த வகை என்றும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரத்தச் சிவப்பணுக்களின் மேல் ‘Rh’ ஆன்டிஜென் இருந்தால், ‘Rh+ve’ அல்லது சுருக்கமாக ‘+ve’ ரத்த வகை என்றும், ‘Rh’ ஆன்டிஜென் இல்லையென்றால், ‘Rh-ve’ அல்லது சுருக்கமாக ‘-ve’ ரத்த வகை என்றும் அழைக்கப்படும். மருத்துவர் மு. ஜெயராஜ் உதாரணமாக, ஒருவரின் ரத்த வகை ‘AB+ve’ என்றால், அவரது ரத்தச் சிவப்பணுக்களின் மேல், ‘A’, ‘B’ மற்றும் ‘Rh’ ஆகிய அனைத்து ஆன்டிஜென்களும் இருக்கும். உலகளவில் O+ ரத்த வகையினர் 37%, A+ ரத்த வகையினர் 27%, B+ ரத்த வகையினர் 23%, AB+ ரத்த வகையினர் 6%, O- ரத்த வகையினர் 3%, A- ரத்த வகையினர் 2%, B- ரத்த வகையினர் 1% மற்றும் AB- ரத்த வகையினர் 0.4% பேர் உள்ளனர். சுமார் 6% பேர் மட்டுமே நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர். A, B மற்றும் Rh ஆன்டிபாடிகள்: நம் உடலில் ஆன்டிஜெனை, நமது நோய் எதிர்ப்பு அமைப்பு உணரும்போது, அந்த ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை (Antibody – பிறபொருளெதிரி) உருவாக்குகிறது. குழந்தை பிறக்கும்போது, பெரும்பாலும் அதன் உடலில் A, B மற்றும் Rh ஆன்டிபாடிகள் உருவாகியிருக்காது. எனினும் குடலிலுள்ள பாக்டீரியாக்கள் மற்றும் சில உணவுகளிலும், A மற்றும் B ஆன்டிஜென்களை போன்ற ஆன்டிஜென்கள் உள்ளன. அந்த ஆன்டிஜென்களை நோய் எதிர்ப்பு அமைப்பு உணரும்போது, குழந்தைகளின் உடலில் A மற்றும் B ஆன்டிபாடிகள் உருவாகிவிடுகின்றன. எனவே, ஒருவரின் ரத்த வகை ‘A’ எனில், அவரின் ரத்தச் சிவப்பணுக்களின் மீது, ‘A’ ஆன்டிஜெனும், ரத்தத்தில் ‘B’ ஆன்டிபாடிகளும் இருக்கும். எனவே தான், ஒருவருக்கு ரத்தமாற்றம் (blood transfusion) செய்யும்போது, அவரது ரத்த வகைக்கு ஏற்ற ரத்த வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘A+’ ரத்த வகை உள்ளவருக்கு, A+, A-, O+ மற்றும் O-ve ரத்த வகைகளையே ரத்த மாற்றத்திற்கு ஏற்படுத்த வேண்டும்; மாறாக, B+, B-ve, AB+, AB-ve போன்ற ரத்த வகைகளை உபயோகப்படுத்தினால், அவரது உடலில் ஏற்கெனவே உள்ள, B ஆன்டிபாடிகள், B+, B-ve, AB+, AB-ve ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள B ஆன்டிஜென்களுக்கெதிராக செயல்பட்டு, ரத்தச் சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும். எனினும் குடலிலுள்ள பாக்டீரியாக்களிலோ, உணவுகளிலோ Rh ஆன்டிஜென்கள் இல்லாததால், Rh-ve குழந்தைகளுக்கு, Rh ஆன்டிபாடிகள் உருவாகாது. Rh-ve ரத்த வகை உள்ளவருக்கு, தவறுதலாக பாசிட்டிவ் ரத்த மாற்றம் (blood transfusion) செலுத்தினாலோ, அல்லது Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தாலோ, நோய் எதிர்ப்பு அமைப்பு Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அதனால்தான், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவருக்கு, அவரது ரத்த வகைக்கேற்ற நெகட்டிவ் ரத்த வகையே ரத்த மாற்றத்திற்கு உபயோகப்படுத்த அறிவுறுத்துகிறோம். குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1 கர்ப்பிணிகளில் Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது? ரத்த மாற்றத்திற்கு முன், அனைத்துப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டு, பொருத்தமுடைய ரத்தம் கண்டறியப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவர்களுக்கு, தவறான ரத்த மாற்றத்தினால் Rh ஆன்டிபாடிகள் ஏற்படும் நிகழ்வுகள் தற்போது மிகவும் அரிது. எனினும், Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தால், நோய் எதிர்ப்பு அமைப்பானது, Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின்போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-matenal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு, சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகள் உருவாவதற்கு 5-15 வாரங்கள் தேவைப்படும். எனவே, பெரும்பாலும் முதல் குழந்தை எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் பிறக்கும். ஆனால், முதல் குழந்தையின் ரத்த வகை பாசிடிவ்வாக இருந்தால், அதனால் தாயின் உடலில் ஏற்பட்ட Rh ஆன்டிபாடிகளால், அதற்கடுத்த கர்ப்ப காலத்தில், சிசுவிற்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும். Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள்: பெரும்பான்மையான Rh ஆன்டிபாடிகள் IgG ஆன்டிபாடி வகையைச் சேர்ந்தவை. IgG ஆன்டிபாடிகள், நஞ்சுக்கொடியைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதால், அவை சிசுவின் குருதியோட்டத்தில் எளிதில் சேர முடியும். எனவே, தாயின் குருதியில் உள்ள Rh ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைத் தாண்டி, சிசுவின் குருதியோட்டத்தை அடையும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மேலுள்ள Rh ஆன்டிஜெனுக்கு எதிராகச் செயல்பட்டு, சிசுவின் ரத்த சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் (hemolysis). ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல், மிதமாக இருந்தால், ரத்த சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும். ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல் மிகத்தீவிரமாக இருந்தால், தீவிர ரத்த சோகை, தீவிர மஞ்சள் காமலையால் மூளை பாதிப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தீவிர ரத்த சோகையினால், இதயத் திறனிழப்பு ஏற்பட்டு, வயிறு, நுரையீரல், மற்றும் இதயத்தைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். இதனை, ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) என்றழைப்போம். மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸில் இறப்பு சதவிகிதம் 30-50% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்புகள் அனைத்தும், சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதனாலேயே ஏற்படுவதால், பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) எனவும் அழைக்கப்படுகிறது. Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள், அடுத்தடுத்த கர்ப்பத்தில், மிகத் தீவிரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த அத்தியாயத்தில், கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுப்பதற்கான மருத்துவ வழிமுறைகள், Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு செய்யப்படும் குருதி மாற்றம் போன்றவை குறித்து, விரிவாகக் காண்போம்! பராமரிப்போம்...
Doctor Vikatan: ஒரே பிரச்னை... இரண்டுவிதமான ஆன்டிபயாட்டிக் எடுப்பது சரியானதா?
Doctor Vikatan: கடந்த வாரம் உடல்நலமின்றி மருத்துவரை அணுகினேன். அவர், மூன்று நாள்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுத்தார். இரண்டு நாள்களுக்கு அதை எடுத்தும் குணமாகவில்லை என வேறு மருத்துவரைப் பார்த்தேன். அவர் அந்த ஆன்டிபயாட்டிகை நிறுத்தச் சொல்லிவிட்டு மீண்டும் வேறு ஆன்டிபயாடிக் கொடுத்தார். இப்படி வேறு வேறு ஆன்டிபயாட்டிக் எடுப்பதால், ஒன்றை பாதியோடு நிறுத்திவிட்டு வேறு ஒன்றை எடுப்பது சரியானதா? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி. நீரிழிவு மருத்துவர் சஃபி|நாகர்கோவில் ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுக்காக கொடுக்கக்கூடியது. சாதாரண சளி, இருமல், சுவாசப்பாதை கோளாறுகள், வயிறு தொடர்பான பிரச்னைகள், சருமப் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமான பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் அவற்றின் பரவலையும் வீரியத்தையும் குறைப்பதற்காகக் கொடுக்கப்படுபவையே ஆன்டிபயாடிக் மருந்துகள். உடல்நலம் சரியில்லை என்றதும் உங்களுக்கு மருத்துவர் ஆன்டிபயாடிக் பரிந்துரைத்திருப்பார். ஒவ்வொரு விதமான ஆன்டிபயாடிக்கும் நம் உடலில் ஒவ்வொரு விதமாகச் செயலாற்றும். அந்த வகையில் ஒருசில ஆன்டிபயாட்டிக்குகள் ஒருசில பாக்டீரியா தொற்றுக்குப் பலன் அளிக்காமல் போகலாம் அல்லது அந்த ஆன்டிபயாடிக் மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அந்த மாதிரி தருணங்களில் ஏற்கெனவே கொடுத்த ஆன்டிபயாட்டிக்கை நிறுத்திவிட்டு வேறு ஆன்டிபயாட்டிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கும், இத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அது 3, 5, 7, 10, 15, 21 என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வேறு மருந்து மாற்றிப் பரிந்துரைக்க வேண்டிய நிலையில் ரத்தத்தில் கல்ச்சர் டெஸ்ட் செய்து, அதில் எந்தவிதமான கிருமி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். Drugs Doctor Vikatan: குளிர்காலத்தில் வாக்கிங் செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா? ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்கால் அந்தக் கிருமி வெளியேறவில்லை, முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற நிலையில் பிளட் கல்ச்சர் டெஸ்ட்டுக்கேற்ப வேறு ஆன்டிபயாட்டிக் பரிந்துரைப்பதில் தவறில்லை. அப்போதுதான் அந்த நோய் முழுமையாக குணமாகும். ஆனால் பரிந்துரைக்கப்பட்ட நாள்களுக்கு அந்த ஆன்டிபயாட்டிக்கை எடுத்துக் கொள்ளாமல், இடையில் நிறுத்திவிட்டு சிறுநீர், ரத்தம், சளிப் பரிசோதனையும் செய்யாமல் வேறு ஆன்டிபயாட்டிக்கை எடுக்க ஆரம்பிப்பது தவறு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
12 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுமா... கர்நாடக சிறுவனுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவர் விளக்கம்!
கர்நாடக மாநிலத்தில், நெஞ்சு வலிப்பதாகக் கூறிய 12 வயது ஆறாம் வகுப்பு சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்துள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடமங்களூரில் வசித்து வருபவர் மஞ்சச்சரி. இவர், அருகேயுள்ள பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார். அவரின் 12 வயது மகன் கீர்த்தன் அதே பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை மாலை, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்துள்ளான் கீர்த்தன். treatment கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மரணம்; மாரடைப்பு காரணமா? சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறிய கீர்த்தனை, குடும்பத்தினர் உடனடியாக குஷால்நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயம் தொடர்பான பிரச்னையால் சிறுவன் இறந்ததை அறிந்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்; திடீர் மரணத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் கதறியழுதனர். சிறுவன் கீர்த்தனின் எதிர்பாராத மரணம், அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது. சிறுவயதிலேயே குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து, தனது முகநூலில் விரிவாகப் பதிவிட்டிருந்தார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவரிடம் பேசினோம். ``மிகச் சிறு வயதில் மரணத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இதயம் தொடர்பான பிரச்னையை மாரடைப்புக்குள் கொண்டு வருதல் கூடாது. முதலில் மாரடைப்புக்கும் இதய முடக்கம் அல்லது செயலிழப்பு ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு என்பது 30 வயதை கடந்தவர்களுக்கு, தற்போது 20 வயதை கடந்தவர்களுக்குக்கூட வருகிறது. டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் Doctor Vikatan: பெண்களிடமும் இளம் ஆண்களிடமும் சமீபகாலமாக மாரடைப்பு விகிதம் அதிகரித்திருப்பது ஏன்? மாரடைப்புக்கு இளம்வயது நீரிழிவு, ரத்த அழுத்த நோய், தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றம், அதீத பருமன் எனப் பல காரணங்கள் உண்டு. என்றாலும், மிக இளம் வயதில் ஏற்படக்கூடிய இதுபோன்ற மரணங்களை நாம் மாரடைப்புக்குள் மட்டுமே வைத்துவிட முடியாது. இதயத் துடிப்புகளில் (cardiac rhythm) ஏற்படக்கூடிய இதய முடக்கம்/செயலிழப்பு பிரச்னையாக இது இருக்கும். இது பெரும்பாலும் கண்டறிப்படாமலேயே இருந்திருக்கலாம், அல்லது சில நேரம் தோன்றி உடனே மறைந்திருக்கலாம். இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள காரணங்களாக குடும்பத்தில் இதற்கு முன்னதாக யாரேனும் சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருந்திருப்பது போன்ற மரபு, சிறுவயதிலேயே இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது, இதயத்துடிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம். இதன் அறிகுறிகளாக உடற்பயிற்சி செய்யும்போது மயங்கி விழுவது, ஓடி விளையாடும்போது அதிகப்படியான மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுவது, தலைசுற்றி கீழே விழுவது, மார்புப்பகுதியில் ஏற்படும் பலத்த காயத்தின் (BLUNT CHEST INJURY) பின்விளைவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். மாரடைப்பு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது ஏன்... தடுப்பது எப்படி? இதுபோன்ற இதயப் பிரச்னைகள் மிகச் சிறு வயதில் (3 - 7) தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலும் நன்றாக ஓடி விளையாடும் வயதிற்கு வந்த பின்னர்தான் இந்த அறிகுறிகள் தெரியும். ஆஸ்துமா, மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே, மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பிரச்னைக்கான காரணத்தை தெரிந்துகொள்வது அவசியம். பரிசோதனை செய்து தொடர்ந்து மருந்துகள் எடுப்பதன் மூலம் தீவிரத்தை குறைக்கலாம்” என்றார்.
குளிர்காலத்துல ஏன் எடை குறைக்க முடியல தெரியுமா? இதெல்லாம் சாப்பிடுங்க...
குளிர்காலம் தான் எடையைக் குறைப்பதற்கு மிகவும் ஏற்ற காலகட்டம் என சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்கோத்ரா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். குளிர்காலத்தில் எப்படி வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
Doctor Vikatan: குளிர்காலத்தில் வாக்கிங் செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?
Doctor Vikatan: குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் நிகழும் என்று சொல்லப்படுவது உண்மையா? மற்ற நாள்களைவிட குளிர்காலத்தில் இள வயதினரும் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பதாகவும், அதனால் குளிர்காலத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாகவும் ஒரு செய்தி பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் பொதுவாக அதிகம்தான். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்தான். அமெரிக்காவில் குளிர்காலத்தில் மட்டும் 30 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படி நிகழ காரணங்கள் பல. அங்கே பனி உறைவு அதிகம். உடலளவில் ஆரோக்கியமாக இல்லாதவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது அந்தப் பனி உறைவைத் தகர்க்க முயற்சி செய்வார்கள். அது அவர்களுக்கு மாரடைப்புக்கான ஆபத்தை அதிகரிக்கும். ஏற்கெனவே இணை நோய் உள்ளவர்களுக்கும், இதயம் தொடர்பான வேறு பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற செயல் மாரடைப்புக்கான ஆபத்தை அதிகரிக்கும். குளிர்ச்சியான சூழலில், இதயம் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். தவிர குளிர்காலத்தில் 'ஆஞ்சைனா' என்ற பாதிப்புக்கும் வாய்ப்புகள் அதிகம். அதாவது இதயத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்லாததால் ஏற்படும் பாதிப்பு இது. நடந்தால் நெஞ்சுவலிப்பது போன்று தோன்றும். சரி... அப்படியானால் குளிர்காலம் வந்தாலே ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்ற பயத்துடன்தான் வாழ வேண்டுமா என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தில் வாக்கிங் செல்வோரும், வெளியே செல்வோரும் குளிரைத் தாங்கும்படியான உடைகள் அணிந்து செல்ல வேண்டும். உடலை வார்ம் அப் செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும். அதீத குளிரில் மட்டும் வெளியே செல்லாமலிருப்பது பாதுகாப்பானது. சென்னையைப் பொறுத்தவரை மார்கழி மாதத்தில்கூட தாங்கமுடியாத அளவு குளிரை எல்லாம் நாம் உணர்வதில்லை. குளிருக்கும் மாரடைப்புக்கும் பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கத் தேவையில்லை. குளிர் Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகரால் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யலாமா? வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். நம்மில் பலரும் புத்தாண்டை ஒட்டி, ஃபிட்னெஸ் குறித்த சபதங்களை எடுப்போம். `நாளை முதல் ஜிம் செல்லப் போகிறேன்.... வாக்கிங் போகப் போகிறேன்' என்றெல்லாம் கிளம்புபவர்கள் பலர். புத்தாண்டு என்பது குளிர்காலத்தில் வருவது. உடற்பயிற்சியும் உடல் இயக்கமும் ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வருடக்கணக்கில் உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்குவது என்பது சரியானதல்ல. வாக்கிங்கோ, ஜாகிங்கோ, ஜிம் பயிற்சிகளோ.... மெள்ள மெள்ள ஆரம்பித்து படிப்படியாக அதிகரிப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி!
உலகளவில் பல மாற்றங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கல்ல. கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க, சீன அரசு பல கடுமையான கட்டுப்பபாடுகளை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! இந்நிலையில் சீன இன்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த 20 முக்கிய இன்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதிக்குள் இறந்துள்ளதாக இந்த அகாடமியின் இணையதளம் கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை, சீன இன்ஜினீயரிங் அகாடமியில் குறைந்தபட்சம் 16 பேரும், 2021-ம் ஆண்டு 13 பேரும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் புகழ்பெற்ற சீன இன்ஜினீயரிங் அகாடமியில் 900-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிவேக ரயில் நெட்வொர்க், டியாங்காங் விண்வெளி நிலையம் உள்ளிட்ட சீன நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இந்த அகாடமியின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரே மாதத்தில் சீன என்ஜினீயரிங் அகாடமியில் 20 பேர் பலி! சீனாவில் மீண்டும் கொரோனா... பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?! ஒரு மாதத்துக்கும் குறைவான இடைவெளியில் இந்த அகாடமியைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்துள்ளதும், அதன் காரணம் தெரியாததும் சீனாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
வேண்டுமென்றே கொரோனாவை வரவழைத்துக் கொள்ளும் சீனர்கள்... இப்படியொரு காரணமா?
உலகளவில் கோவிட் தொற்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது என்றே கூற வேண்டும். பல அரசுகள் பதைபதைத்திருக்கும் வேளையில், சீனாவின் இளைஞர்கள் பலரும் தவறான கருத்துகளைச் சுமந்து கொண்டு வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். Quarantine சீனாவில் கோவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. அந்நாடு பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டு வரும் அதேநேரத்தில், மருத்துவச்சேவைகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், அங்குள்ள இளைஞர்கள் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். கொரோனா `இந்த 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம்!’- மத்திய அரசு இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஏழைகளால் வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், இளைஞர்கள் தவறான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருவது, நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது.
Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகரால் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யலாமா?
Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த தண்ணீரில் குளிப்பது வெஜைனா ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையுடன் ஈஸ்ட் சேர்க்கும்போது அது நொதித்து ஆல்கஹலாக மாறுவதுதான் ஆப்பிள் சைடர் வினிகர். ஆல்கஹாலுடன் பாக்டீரியா உருவாகும்போது அது அமிலமாக மாறுகிறது. அமிலம் என்பது வெஜைனா பகுதியைப் பாதுகாக்கக்கூடியது. வெஜைனா பகுதியில் லேக்டோ பேசிலை, ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்கிற கெமிக்கலை உருவாக்கும் பாக்டீரியா போன்றவை இயற்கையாகவே இருக்கும். வெஜைனா பகுதியின் பிஹெச் என்பது அமிலத்தன்மை வாய்ந்தது. அது அமிலத்தன்மையிலேயே இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. தொற்றும் வராது. அந்தத் தடுப்புசக்தியானது நீங்கும்போதுதான் வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படும். ஆப்பிள் சைடர் வினிகர் என்பதும் அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதை உபயோகிப்பது வெஜைனாவுக்கு நல்லது என்ற கருத்து உருவாகியிருக்கிறது. மற்ற வெஜைனல் வாஷ் போல ஆப்பிள் சைடர் வினிகரையும் உபயோகிக்கலாம். ஆனால் இதை தொடர்ந்து உபயோகிக்கலாமா, இதைக் கலந்த தண்ணீரில் குளிக்கலாமா என்றெல்லாம் கேட்டால், தேவையில்லை என்றே சொல்ல வேண்டும். மனித உடல்களில் இதைவைத்து எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே இது மனித உடலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானது என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. சமீப காலமாக ஆப்பிள் சைடர் வினிகர் மிகப் பிரபலமாகப் பேசப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதை உபயோகிக்க வேண்டாம் என்பதே மருத்துவராக என் அட்வைஸ். ஆப்பிள் சிடர் வினிகர் Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல்.... உடனே செய்ய வேண்டியது என்ன? வெஜைனா பகுதியை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தப்படுத்தினாலே போதுமானது. அதே போல வெஜைனா பகுதிக்கு அதிக வாசனையுள்ள சோப்புகளையும் பயன்படுத்த வேண்டாம். வெஜைனல் வாஷ், வாசனை சோப் போன்றவற்றை எல்லாம் உபயோகித்து வெஜைனா பகுதியை அடிக்கடி சுத்தப்படுத்துவதால் அந்தப் பகுதியிலுள்ள நல்ல பாக்டீரியாவை நீங்கள் நீக்குகிறீர்கள். அதன் மூலம் இன்ஃபெக்ஷனுக்கான வாய்ப்பையும் நீங்களே உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல்.... உடனே செய்ய வேண்டியது என்ன?
Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் உடலைப் போர்த்தி வைப்பது சரியா? குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் வந்த உடனே என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய். குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் காய்ச்சலில் உள் காய்ச்சல், வெளிக் காய்ச்சல் என எதுவும் கிடையாது. உங்கள் கை என்பது தெர்மாமீட்டர் கிடையாது. கையால் கழுத்தில், நெற்றியில், வயிற்றில் வைத்துப் பார்த்து உடல் சூடாக இருப்பதால் காய்ச்சல் என முடிவுக்கு வருவது தவறு. காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்த தெர்மாமீட்டர்தான் பயன்படுத்த வேண்டும். இப்போது நிறைய வகை தெர்மா மீட்டர்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் காய்ச்சலை உறுதிசெய்ய வேண்டும். உடல் வெப்பநிலை 100.4 டிகிரிக்கு மேல் இருப்பதுதான் காய்ச்சலாகக் கருதப்படும். இது குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பொருந்தும். மற்றபடி வெளியில் உடல் சூடாக இருப்பதாக உணர்வதெல்லாம் காய்ச்சலில் அடங்காது. வெளியில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால் உடல் சூடாக இருப்பது போலத் தோன்றும். அதுவே வெளியில் சூடாக இருந்தால் உடல் குளிர்ச்சியாகத் தெரியலாம். எனவே அதையெல்லாம் காய்ச்சல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் கம்பளியில் சுற்றி வைக்கக்கூடாது. முதல் வேலையாக உடைகளை அகற்றிவிட்டு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த டவலால் உடலைத் துடைத்துவிட்டால் உடனே காய்ச்சல் குறையும். fever (Representational image) Doctor Vikatan: பருவ வயதிலிருக்கும் பெண் குழந்தை.... மருத்துவ ஆலோசனை அவசியமா? பெரியவர்களுக்கு வியர்வை வந்தாலே காய்ச்சல் குறையும். வியர்க்க அனுமதிக்கும்படி உடைகளைத் தளர்த்தி, அது ஆவியாக இடம்தர வேண்டும். குழந்தைகளுக்கு உடலைப் போர்த்திவைத்தால் காய்ச்சல் ஏறி, ஏறி இறங்கும். அதனால் அப்படிச் செய்யக்கூடாது. மூன்று நாள்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். சுய மருத்துவம் செய்யாதீர்கள். காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், வாந்தி, பேதி இருந்தால் மூன்று நாள்கள் வரை காத்திருக்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
அசைவ உணவுகளுக்கும் பல் சொத்தைக்கும் தொடர்புண்டா? | வாய் சுகாதாரம் - 1
Mouth is the mirror of the oral cavity - இது, பல் மருத்துவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்தொடராகும். நம் உடலின் நுழைவாயிலான வாய், நமது ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. வாய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பற்கள்தான். ஆனால் அவற்றோடு நம் வாயில் நாக்கு, உதடு, அண்ணம், கன்னத்தின் உள்பகுதி, மேல் தாடை, கீழ் தாடை, அவற்றின் எலும்புகள் என்று, பல பகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி அடிப்படை புரிந்துணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம். அதை உணர்த்தவே இந்தத் தொடர். இந்தத் தொடரை எழுதும் பா.நிவேதிதா, பல் மருத்துவ நிபுணர். இந்தத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது தனியார் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இப்போது இத்தொடருக்கான தேவை என்ன என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தற்போதைய காலச்சூழலில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டன, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. அடிப்படை மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி இருக்கிற சூழலில், பற்கள், சீரான முக அமைப்பு, அழகான சிரிப்பு போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் அடிப்படையில், அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கான விடை அளிப்பதே இத்தொடரின் நோக்கம். இத்தொடரின் முதல் வாரத்தில், பற்கள் மற்றும் அவற்றில் ஏற்படும் சொத்தை, அதன் அறிவியல் காரணிகள், அதன் அறிகுறிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர் பால் பற்கள் பராமரிப்பு ! பல் அமைப்பும் தன்மையும் மனிதர்களுக்கு இரண்டு வகையான பல் அமைப்புகள் உள்ளன. பால் பற்கள் ( primary dentition), இதில் மொத்தம் இருபது பற்கள். நிரந்தர பற்கள் ( permanant dentition), இதில் மொத்தம் முப்பத்தி இரண்டு பற்கள். இப்போது பற்களின் உள்கட்டமைப்பு குறித்து ஒரு சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்... பல் என்பது Enamel, dentin, pulp என்ற திசுக்களைக் கொண்ட ஒரு கடினமான கட்டமைப்பாகும். எனாமல் என்பது எலும்பைக் கடித்து நொறுக்கும் அளவுக்கு கடினமான பகுதி. ஆனால் அது ஒரு உயிரற்ற திசு. பற்களின் உயிர் என்பது, dentin-ல் இருந்துதான் தொடங்குகிறது. இதுபற்றி ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், இதற்கும் பல் சொத்தையால் ஏற்படும் பல் வலிக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதுதவிர பற்களுக்கு வேர் என்ற பகுதி உள்ளது. தாடை எலும்பில் இது புதைந்திருக்கும். பல் சொத்தையின் தொடக்கம்! நமக்கு எப்போதுமே வாயோடு பல்லையும், பல்லோடு சொத்தை பிரச்னையையும் தொடர்புபடுத்தும் மனநிலை இயல்பாகவே இருக்கிறது. ஒரேயொரு பல்கூட சிதைவடையாத நபர் என்று இவ்வுலகில் ஒருவர்கூட இருக்க முடியாது என்பதே உண்மை. காதல்வலியைவிட பல் வலி கொடுமையானது என்பது, அனுபவித்தவருக்குத்தான் தெரியும். இந்த வலியைக் கொடுக்கும் பல் சொத்தை, நாம் உண்ணும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் (refined carbohydrates) மற்றும் பாக்டீரியா நுண்கிருமியின் கூட்டுச்சதியில் உண்டாகும் அமில திரவத்தின் விளைவே ஆகும். இந்த அமிலம், பற்களின் எனாமலை கரைத்துவிடும் தன்மை வாய்ந்தது. இதுதான் பல் சொத்தையின் தொடக்கம். பல் சிகிச்சை சிறுவனின் வாயில் 526 பற்கள்... மருத்துவர்களையே மிரள வைத்த மிராக்கிள் ஆபரேஷன்..! சுத்தரிகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகள் எவை என்று தெரியுமா? நாம் அன்றாடம் உட்கொள்ளும் க்ரீம் பிஸ்கட்டுகள், கேக், டோனட், பீட்சா உள்ளிட்டவை. இவைதான் 90 சதவிகிதம் பல் சொத்தைக்கு காரணம். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதெப்படி இவற்றையெல்லாம் சாப்பிடாமல் இருப்பது என்று கேட்கும் ரகமா நீங்கள்? அப்படியென்றால், இவற்றை சாப்பிட்டதும் பல் தேய்த்துவிடவும்; இது முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயை நீங்கள் கொப்பளிக்கலாமே. இதுவும் முடியாது என்றால், நிச்சயம் நீங்கள் பல் சொத்தையில் இருந்து தப்பவே முடியாது. அசைவம் பல்லுக்கு ஆபத்தா? இதுதவிர, பல் சொத்தைக்கு பற்களின் அமைப்பு, பரம்பரை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன. பல் சொத்தை குறித்து சில தவறான தகவல்கள், கருத்துகள் உள்ளன. அவற்றில் உண்மை எது, கட்டுக்கதை எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் பல் சொத்தை என்பது புழுக்களால் வருவதல்ல, நுண்கிருமிகளால் வருவது. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. இரண்டாவதாக, சொத்தை ஒரு பல்லில் இருந்து மற்றொரு பல்லுக்குப் பரவாது, இரண்டு பற்களிலும் biofilm என்ற படிமம் இருந்தால் இரண்டிலும் தனித்தனியாகத்தான் சொத்தை வரும். அடுத்து, பற்களில் உள்ள கால்சியத்திற்கும், பல் சொத்தைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க fluorine என்ற கனிமம் மிக அவசியமாகும். பொதுவாக பல் என்றாலே கால்சியம் கனிமத்தோடு நாம் முடிச்சு போடுகிறோம். அது, தவறான நம்பிக்கை. பல் சுத்தம் Doctor Vikatan: பேருந்து இருக்கையில் மோதி உடைந்த பற்கள்... பழையபடி சீராக்க வாய்ப்பிருக்கிறதா? உங்களது டூத் பேஸ்ட்டில் 1000 PPM என்றளவில் fluoride இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். கடைசியாக, பல் சொத்தைக்கு அசைவ உணவு, சைவ உணவு முறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நார்ச்சத்து மிகுதியாக உள்ள உணவை எடுத்துக் கொண்டால், அது இயற்கையாகவே பற்களைத் தூய்மைப்படுத்திவிடும். எனவே, அத்தகைய உணவுகளைத் தேடி உட்கொள்வது சிறந்தது. இப்போது உங்களுக்கு பல் சொத்தை பற்றிய அடிப்படை தெளிவு ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாரத்தின் TAKE HOME MESSAGE ஒன்றுதான். பற்களில் பிசுபிசுப்புத் தன்மையுடன் ஒட்டிக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்டால் உடனே பல் துலக்கிவிடுங்கள். பல் சொத்தை, பல் வலி , மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
Doctor Vikatan: பருவ வயதிலிருக்கும் பெண் குழந்தை.... மருத்துவ ஆலோசனை அவசியமா?
Doctor Vikatan: நான் சிங்கிள் பேரன்ட். என்னுடைய மகள் பூப்பெய்தும் வயதில் இருக்கிறாள். அவளுக்கு அந்தப் பருவத்துக்கான விஷயங்களை என்னால் சொல்லிக்கொடுக்க முடியாதநிலையில் பூப்பெய்துவதற்கு முன்பே அவளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது சரியா? அவர்கள் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வார்களோ என பயமாக இருக்கிறது.... அவளை குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்ட வேண்டுமா அல்லது மகளிர் மருத்துவரிடமா? நான் என்ன முடிவெடுப்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சாரதா மகப்பேறு மருத்துவர் சாரதா Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? பெண் குழந்தை என்றால் 13 முதல் 15 வயதுக்குள் மகளிர் மருத்துவரிடம் முதல் கன்சல்ட்டேஷனுக்கு அழைத்துச் செல்லலாம். சில வேளைகளில் பெண் குழந்தையின் பெற்றோரால் சில விஷயங்களைக் குழந்தைக்குப் புரியவைக்க முடியாது. அந்நிலையில் மகளிர் மருத்துவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். மேற்கத்திய நாடுகளில் பின்பற்றுவதுபோன்ற முறையை நம் நாட்டில் பின்பற்றுவதில்லை. இங்கே பருவமடைந்த பிறகுகூட குழந்தைகள்நல மருத்துவர்களிடம் குழந்தைகளைக் காட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். சில குழந்தைகள் 8, 9 வயதில்கூட பூப்பெய்துவதுண்டு. பொதுவாகவே பூப்பெய்திய பெண் குழந்தையை மகளிர் மருத்துவரிடம் ஒருமுறை அழைத்துச் செல்வது நல்லதுதான். அவர் அந்தக் குழந்தைக்கு பீரியட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரியவைப்பதுடன், எது நார்மல் பீரியட்ஸ், எது அசாதாரணமானது என்று சொல்லி, நாப்கின் பயன்பாடு, அந்தரங்க சுகாதாரம் என எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார். மற்றபடி, மிக இள வயதிலேயே பூப்பெய்தும் பெண் குழந்தையை மற்ற உடல்நலக் கோளாறுகளுக்கு குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். சில பிரச்னைகளுக்கு குழந்தைகள்நல மருத்துவர்களே, குழந்தைகளை மகளிர் மருத்துவரிடம் காட்டப் பரிந்துரைப்பார்கள். பெண் குழந்தை Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்... மற்ற பாகங்களுக்கும் பரவுமா? உதாரணத்துக்கு அந்தப் பெண் குழந்தைக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு இருக்கலாம். மகளிர் மருத்துவரை அணுகும்போது அந்தப் பிரச்னையை அவரால் இன்னும் எளிதாகக் கையாள முடியும். குழந்தையை டெஸ்ட் செய்வது, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா என பார்ப்பதெல்லாம் எளிதாக இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல மருத்துவர் உங்கள் பெண் குழந்தைக்கு தேவையற்ற பரிசோதனைகளை எல்லாம் செய்ய மாட்டார் என்பதால் பயப்பட வேண்டாம். மற்றபடி குழந்தைக்கு பீரியட்ஸ் தவிர்த்த பிரச்னைகளுக்கு குடும்ப மருத்துவர் அல்லது குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். 21 வயதுக்குப் பிறகு மீண்டும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். எனவே உங்கள் குழந்தை பூப்பெய்தியதும் முதலில் மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
Doctor Vikatan: பருவ வயதிலிருக்கும் பெண் குழந்தை.... மருத்துவ ஆலோசனை அவசியமா?
Doctor Vikatan: நான் சிங்கிள் பேரன்ட். என்னுடைய மகள் பூப்பெய்தும் வயதில் இருக்கிறாள். அவளுக்கு அந்தப் பருவத்துக்கான விஷயங்களை என்னால் சொல்லிக்கொடுக்க முடியாதநிலையில் பூப்பெய்துவதற்கு முன்பே அவளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது சரியா? அவர்கள் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வார்களோ என பயமாக இருக்கிறது.... அவளை குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்ட வேண்டுமா அல்லது மகளிர் மருத்துவரிடமா? நான் என்ன முடிவெடுப்பது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சாரதா மகப்பேறு மருத்துவர் சாரதா Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? பெண் குழந்தை என்றால் 13 முதல் 15 வயதுக்குள் மகளிர் மருத்துவரிடம் முதல் கன்சல்ட்டேஷனுக்கு அழைத்துச் செல்லலாம். சில வேளைகளில் பெண் குழந்தையின் பெற்றோரால் சில விஷயங்களைக் குழந்தைக்குப் புரியவைக்க முடியாது. அந்நிலையில் மகளிர் மருத்துவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். மேற்கத்திய நாடுகளில் பின்பற்றுவதுபோன்ற முறையை நம் நாட்டில் பின்பற்றுவதில்லை. இங்கே பருவமடைந்த பிறகுகூட குழந்தைகள்நல மருத்துவர்களிடம் குழந்தைகளைக் காட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். சில குழந்தைகள் 8, 9 வயதில்கூட பூப்பெய்துவதுண்டு. பொதுவாகவே பூப்பெய்திய பெண் குழந்தையை மகளிர் மருத்துவரிடம் ஒருமுறை அழைத்துச் செல்வது நல்லதுதான். அவர் அந்தக் குழந்தைக்கு பீரியட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரியவைப்பதுடன், எது நார்மல் பீரியட்ஸ், எது அசாதாரணமானது என்று சொல்லி, நாப்கின் பயன்பாடு, அந்தரங்க சுகாதாரம் என எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார். மற்றபடி, மிக இள வயதிலேயே பூப்பெய்தும் பெண் குழந்தையை மற்ற உடல்நலக் கோளாறுகளுக்கு குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். சில பிரச்னைகளுக்கு குழந்தைகள்நல மருத்துவர்களே, குழந்தைகளை மகளிர் மருத்துவரிடம் காட்டப் பரிந்துரைப்பார்கள். பெண் குழந்தை Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்... மற்ற பாகங்களுக்கும் பரவுமா? உதாரணத்துக்கு அந்தப் பெண் குழந்தைக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு இருக்கலாம். மகளிர் மருத்துவரை அணுகும்போது அந்தப் பிரச்னையை அவரால் இன்னும் எளிதாகக் கையாள முடியும். குழந்தையை டெஸ்ட் செய்வது, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா என பார்ப்பதெல்லாம் எளிதாக இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல மருத்துவர் உங்கள் பெண் குழந்தைக்கு தேவையற்ற பரிசோதனைகளை எல்லாம் செய்ய மாட்டார் என்பதால் பயப்பட வேண்டாம். மற்றபடி குழந்தைக்கு பீரியட்ஸ் தவிர்த்த பிரச்னைகளுக்கு குடும்ப மருத்துவர் அல்லது குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். 21 வயதுக்குப் பிறகு மீண்டும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். எனவே உங்கள் குழந்தை பூப்பெய்தியதும் முதலில் மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் - சீனாவில் நடப்பதென்ன?
சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான் சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் - சீனாவில் நடப்பதென்ன?
சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான் சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் - சீனாவில் நடப்பதென்ன?
சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான் சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் - சீனாவில் நடப்பதென்ன?
சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான் சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 30 ஆண்களைத் தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டனர். Representational Image கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா? அவர்களிடமிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு முதல் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனை 74 நாள்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது. முதல் சேகரிப்பின் சோதனையில், விந்தணுவில் கொரோனாவின் பாதிப்பு இல்லை என்றாலும், விந்தணுககளின் எண்ணிக்கையும் அவற்றின் இயக்கமும் குறைவாக இருந்துள்ளது. அதுவே இரண்டாவது சோதனையில் இதற்கு நேர்மாறாக விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் இயக்கம் மற்றும் அளவு வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இம்முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ``சோதனையில் ஆண்களிடமிருந்து பெறப்பட்ட விந்துவில் SARS - CoV-2 நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாவது மாதிரி எடுக்கப்படும் வரை விந்தின் தரம் மோசமானதாகவே இருந்தது. கோவிட்: பீதியில் தொடங்கி பிஎஃப் 7-ல் நிறைவடைந்த 2022 ! இனப்பெருக்க தொழில்நுட்ப கிளினிக்குகள் மற்றும் விந்தணு வங்கிகள், SARS-CoV-2 - வால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுவின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களிடமிருந்து விந்தணுவைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களைப் பரிசோதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு குறித்த முடிவுகள் கியூரியஸ் என்ற மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
``நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்? - டாக்டர் ஷர்மிகா விளக்கம்
“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார். செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா. “சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். எனது பதிவு எண் போட்டு யார் வேண்டுமானாலும் பரிசோதித்துக்கொள்ளலாம். நான், சித்த மருத்துவத்தில் என்ன படித்தேனோ அதைத்தான் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பேசிவருகிறேன். ஷர்மிகா சரண் சித்த மருத்துவத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ‘நோயில்லா நெறி' என்ற புத்தகத்தில் 'மாட்டு இறைச்சியால் சகல நோயும் வரும்' என்று உள்ளது. எனது பாடத்தில் படித்ததைத்தான், நானும் கூறினேன். உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். பலரும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யுறோம். அதனாலதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன். அவர்களும் மாட்டுக்கறி குறித்துதான் கேள்வி கேட்டார்கள். இதுக்குப்போயி, என்னை பாஜகவோட தொடர்புபடுத்தி விமர்சிக்கிறாங்க. நான், ஒரு மருத்துவராத்தான் பேசுறேன். ஏன், என்னை பாஜக 4ட இணைச்சு பேசணும்? ஷர்மிகா சரண் “குலோப் ஜாமூன் ஒன்று சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும் என்று சொல்லியிருக்கிறீர்களே? இது எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? தமிழக அரசு வழங்கிய சித்த மருத்துவ நூலில் உள்ளதா?” “அப்படி சொன்னது ஒரு ஹியூமன் எரர்தான். சிறு தவறுதலா சொல்லிட்டேன். எல்லா டாக்டரும் இப்படி பேசுறதுதான். இதுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதேபோல, ஒருநாளைக்கு நாலு ஸ்பூன் நெய் சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருந்தேன். நாலு ஸ்பூன் நெய்யை உருக்கி சாப்பிட்டுட்டு சுடு தண்ணீர் குடிச்சுட்டு வாக்கிங் போனா கண்டிப்பா முகம் பொலிவாகிடும். இதை, டிப்ஸா சொல்றேன். நிறைய பேரு ஃபாலோ அப் பண்ணி எனக்கு ஃபோட்டோவும் அனுப்புறாங்க. இதுல தப்பே கிடையாது. நான் பி.எஸ்.எம்.எஸ் படிச்சிருக்கேன். எல்லா நோய்களுக்குமான அறிவும் உள்ளது. தினமும் புதுசு புதுசா நோய்கள் வருது. புதிய விஷயங்களை படிக்கிறோம். சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் சொல்லவேண்டும்னா நான் மருத்துவமே பார்க்கமுடியாது”. “குப்புறப் படுத்தா பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்று வரும் என்று எந்த புத்தகத்தில் உள்ளது?” “குப்புறப் படுத்தா மார்பகப் புற்றுநோய் வரும் என்று சித்த மருத்துவத்தில் நேரடியா சொல்லப்படல. ஆனால், அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் செல்லவேண்டும் என்பதால், நாம் அணியும் ஆடைகளை தளர்ந்து போடவேண்டும் என்றும் ஒருக்களித்துப் படுக்கவேண்டும் என்றும் 'நோயில்லா நெறி' புத்தகம் கூறுகிறது. மார்பக புற்றுநோய் வருவதற்கு 50 காரணங்கள் இருந்தால், அதில் இது ஒன்றும் இருக்கலாம். இதை இப்படித்தான் சொல்லமுடியும். ஷர்மிகா சரண் “நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகும்னு சொல்லியிருக்கீங்களே?” “நுங்கு குளிர்ச்சியானது. குளிர்ச்சியான உணவு எடுத்தால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகம் பெரிதாகும். நிறைய பெண்கள், `மார்பகம் பெரிதாக இல்லையே என்ன செய்வது?' என்று கேட்கிறார்கள். மார்பகம் சிறிதாக இருப்பது ஒரு குறையே இல்லை. ஆனால், கேட்பவர்களுக்கு எப்படி சொல்லாமல் இருக்கமுடியும்? அப்படிப்பட்ட பெண்கள் பயன்படுத்திக்கொள்ளட்டுமே? இது சித்த மருத்துவத்தில் நேரடியாக இல்லை. சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பது மட்டும்தான் சொல்லவேண்டும் என்றால் நாங்கள் என்னைக்கு முன்னேறுவது?”. “தவறான மருத்துவக்குறிப்புகளை சொல்கிறீர்கள் என்று சோஷியல் மீடியாக்களில் உங்களை ட்ரோல் பன்றாங்களே எப்படி பார்க்குறீங்க?” “என்னுடைய ஒரே நோக்கம் நல்ல விஷயங்களைப் பரப்புறதுதான். என் அம்மா டெய்சி பாஜகவில் இருப்பதால் வெறும் 10 சதவிகிதம் பேர் விமர்சனம் செய்றாங்க. 90 சதவிகிதம் பேர் என்னை பாராட்டுறாங்க. பாஜக அரசியலாலதான் எனக்கு கெட்டப்பேரு ஏற்படுத்துறாங்க. இல்லைன்னா வந்திருக்காது. என் அம்மா, பாஜகவுல இருக்கிறதால இனிமே கொஞ்சம் விழிப்புணர்வா இருக்கணும். கொஞ்சம் வெள்ளந்தியா பேசிட்டேன். இனிமேல் பொறுப்புணர்வோட தெளிவா பேசுவேன். என்னை எல்லோரும் பூமரு, உருட்டுன்னு விமர்சிக்கிறாங்க. இப்படியெல்லாம் பேசவேணாம். உங்களுடைய விமர்சனங்களை அன்பா வெளிப்படுத்துங்க, நான் கேட்டுக்கிறேன். ஆனா, இதையெல்லாம் எங்கம்மா டெய்சி சரண் ‘தைரியமா ஹேண்டில் பண்ணு’ அப்படின்னு சொன்னாங்க”. டெய்சி சரண் “நீங்கள் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. பிரபலப்படுத்திக்கொள்வதற்காக இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்று உங்களை மருத்துவராக பணி செய்வதற்காக பதிவு செய்துள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருக்கிறாரே?” “எனக்கு பிரபல படுத்திக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேபோல், என்னுடைய பேட்டிகளை எல்லாம் பெய்டு புரமோஷன் என்று சோஷியல் மீடியாக்களில் பலர் சொல்கிறார்கள். நான், ஒரு ரூபாய் கூட கொடுத்து பேட்டி கொடுக்கல”. “மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக பேசும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’னு இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் எச்சரித்திருக்கிறாரே?” “இணை இயக்குனருக்கு என் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. ஆனால், நம்ம சித்த மருத்துவத்திலிருந்து ஒரு பொண்ணு வளர்ந்து வர்றாங்கன்னு அவர் என்னிடமே சொல்லியிருக்கலாம். ஆனால், என்னுடைய கருத்துகளை புரிஞ்சுக்காம, அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னது எனக்கு வருத்தத்தைதான் ஏற்படுத்தியது”.
டாக்டர் ஷர்மிகா ‘மொத்த’ வைத்தியசாலை: போகப் போக இப்படியெல்லாம் சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை!
‘நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், ஹோமியோபதி, அம்பிகாபதி, நேட்சுரோபதியோட சேர்த்து வாஸ்து, மனையடி சாஸ்திரம், கிளி ஜோசியமெல்லாம் பார்த்து எல்லாவிதமான விஷக்கடிகளுக்கும் தகுந்தமுறையில் இன்ஸ்டா ரீல்ஸில் மொத்த வைத்தியமும் பார்க்கப்படும்.’ இப்படி ஒரு போர்டு மட்டும்தான் மாட்டலயே தவிர மத்தபடி 2100ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறை சார்ந்த காமெடிகள் எல்லாம் பண்ணிட்டாங்க. டைம் மிஷின் காலத்து ஜோக்குகள்னு இந்தப் புத்தகக் காட்சில புத்தகமே கொண்டுவரலாம். “மேடம் நீங்க பல் டாக்டரா?”ன்னு கேள்வி கேட்டா, நான் ‘பல’ டாக்டர்ப்பா’னு சொல்லிப் பெருமப்படுற அளவுக்குப் பலவிதமான நோய்களுக்கும் குண்டக்க மண்டக்க சொல்லி டண்டனக்கா ஆகிட்டிருக்காங்க நம்ம மேடம். ஷர்மிகா சரண், டெய்சி சரண் அவங்க பேசின சில தத்துபித்து தத்துவ மருத்துவமுறைகள்தான் லேட்டஸ்ட் வைரல். இந்த வைரல் எப்படி சாத்தியமாச்சுனு கேட்டா கொரோனா வைரஸ அழிக்க கொரோனா மாதிரியே இருக்கிற ரம்புட்டான் பழத்த சாப்பிடுங்கனு ஏதாச்சும் டிப்ஸ் கொடுப்பாங்க. அவ்வளவு சகஜமா சிரிச்சிக்கிட்டே பேசுற அழகே தனி. “நம்மள விட பெரிய மிருகம் மாடு, அதைச் சாப்பிட்டா நம்ம உடம்பால செரிக்க முடியாது, ஏன்னா நம்ம DNA அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கு”னு அவங்க சொல்ல, 'மாட்டை யாரும் முழுசா முழுங்க மாட்டாங்க மேடம், அப்புறம் எதுக்காக DNA வரைக்கும் போயி அலசி ஆராய்ஞ்சாங்க தெரியல'ன்னு இங்க ஒரு பதில் வருது. அவங்க பேசுறது மாற்று மருத்துவமா மாட்டு மருத்துவமா ஒரே கன்ஃபியூஷன்ஸ்ப்பா... ‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு’ன்னு பேசினது சூர்யா. ‘ஒரேயொரு குலோப்ஜாமூன் சாப்பிட்டீங்கன்னா உடனே 3 கிலோ வெயிட் ஏறிடும்’னு பேசினது யார்யான்னு பாத்தா அதுவும் நம்ம டாக்டர் ஷர்மிகாதான். குழந்தை பெத்துக்க நல்லவனா இருந்தா போதும், எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்னு சொன்னதுல அந்த கடவுளே ஜெர்க் ஆகி 'wait... what?' அப்டின்னு கேட்ருப்பாரு. கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்; நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிசாகும்னு இவங்க அடிச்சுவிட்ட அரிய தகவல்களை ஃபாலோ பண்ணிப் போனா, டாக்டர் ஷர்மிகா * இருமல் சரியாக இஷ்ட தெய்வத்தக் கும்பிடு * சளி பிடிச்சா சாணி தேய்ச்சிக் குளி * சுகர் பிரச்னையா துர்க்கை அம்மனுக்கு விளக்குப் போட்டு வேப்பிலை சாப்பிடு * காய்ச்சல் வந்தா காளகஸ்தி போயி மூணு வேலை பூஜை பண்ணு * சீதபேதிக்கு சீனாவுக்கு ஆன்மிக சுற்றுலா போங்க * இரும்புசத்துக்கு தோசை சாப்டாம தோசைக் கல்லயே சாப்டுங்க இப்படியெல்லாம் இவங்க See more... லிஸ்ட் போட்டு என்ன சொன்னாலும் நாம ஆச்சரியப்படுறதுக்கில்ல. ‘என்ன வேணா நடக்கட்டும் நாங்க சந்தோசமா இருப்போம்’னு ஆர்மி ஆரம்பிச்ச இவங்க ரசிக நோயாளிகள் இருக்கிற வர இப்படி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கலாம். ஜாலியான ட்ரீட்மென்ட்டா இருக்கேனு வான்ட்டடா வண்டில வந்து ஏறின ரசிகர்களுக்காக ஃபேன்ஸ் மீட், ஆட்டோகிராப் மீட் இதெல்லாம் வைக்கிறதுல என்ன தப்புங்குறேன்? (பிரஸ் மீட் மட்டும் வேணாம்ங்க!) “ஒரு ராணுவ வீரன் மாதிரிதான் டாக்டரும் நாட்டுக்கு சேவை பண்றோம். அதனால யாரும் கலாய்க்காதீங்க”னு டாக்டர் வருத்தப்படுறாங்க. ஆனா அவங்கள அவங்களே கலாய்ச்சுக்குறது அவங்களுக்கே தெரியல. ‘அந்த அப்பாவியான முகத்தப் பாருங்க சார்...’ சயின்ஸ் படிச்சு டாக்டரான டாக்டரம்மாவே ‘சயின்ஸ ஒரு பக்கம் ஒதுக்கி வெச்சிடலாம்’னு சொல்லி அறிவுபூர்வமா பேசினபோதே பலபேரோட இதயம் நின்னுடுச்சு. இன்னும் கூடுதல் தகவல்கள் + அறிவியல் ஆதாரங்கள் + முன்னோர்களின் வாக்கு + கடவுள் மனசு வைக்கிறது எல்லாம் கலந்து அவங்க பேசப் பேச யூடியூப் தறிகெட்டு ஓடுது. சோசியல் மீடியால என்ன பேசினா 'Followers' கிடைப்பாங்கனு ரத்தம், சதை, நாடி, நரம்பெல்லாம் தெரிஞ்ச ஒரு வெயிட்டு கையாலதான் இப்படி எல்லாம் பேச முடியும். ஷர்மிகா சரண் வாய்க்கு வந்தத அடிச்சு விடுற அவங்ககிட்ட உடம்புல இருக்க சர்வ பிரச்னைக்கும் வாய் வழியா மாத்திர சாப்பிடலாமா மேடம்னு மட்டும் தப்பித்தவறிக்கூட யாரும் கேட்டுடாதீங்க. மத்தபடி என்டர்டெயின்மென்ட்டுக்கு அவங்க கேரண்டி. பாக்யராஜோட முருங்கைக்காய் காமெடிக்கு அப்றம் டாக்டரோட நுங்கு காமெடிதான் சமீபத்திய ட்ரெண்டிங். இதுக்கு அப்றம் எல்லாக் காய்கறிகளயும் அக்கு வேரா ஆணி வேரா ஆராய்ஞ்சு பாத்தாதான் டாக்டர் சொல்ல வந்த அறிவியல் என்னனு வெகுஜனங்களுக்கு வெளங்கும்போல. கத்தரிக்காய் சாப்ட்டா என்னாகும், தக்காளி சாப்ட்டா என்ன பலன், தர்பூசணி சாப்பிட்டா எதுக்கு நல்லதுனு சீக்கிரமா சொல்வாங்க. அதுவரைக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுல காத்திருப்போம்.
Doctor Vikatan: பிரசவத் தேதியை துல்லியமாகக் கணக்கிட முடியுமா?
Doctor Vikatan: எனக்கு கர்ப்பம் உறுதியாகி இருக்கிறது. பிரசவத் தேதியை என்னால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி என்பது என்ன என்று முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் 40 வார காலம் முடிவடைவதை, அதாவது தோராயமாக 280 நாள்கள் முடிவடைவதையே பிரசவமாகும் என எதிர்பார்க்கப்படும் தேதியாக கணக்கிடப்படும். இது தோராயமான கணக்குதானே தவிர, உறுதியான தேதி இல்லை. வெறும் 4 சதவிகிதம் பேருக்குதான் அப்படி அதே தேதியில் பிரசவமாகும். பலருக்கும் 37-42 வாரங்களில் பிரசவமாவது சகஜம். ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து, முன்கூட்டியே பிரசவம் நடக்க வேண்டும் என உங்கள் மருத்துவர் வலியுறுத்தலாம். பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele's formula என்று பெயர். கடைசியாக வந்த பீரியட்ஸின் முதல் நாளை எடுத்துக் கொள்ளவும். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்துவிட்டு, ஒரு வருடம், ஏழு நாள்களைச் சேர்க்க வேண்டும். கர்ப்பிணி Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்.... மற்ற பாகங்களுக்கும் பரவுமா? உதாரணத்துக்கு, உங்களுடைய கடைசி பீரியட்ஸின் முதல் நாள் டிசம்பர் 1, 2022 என வைத்துக் கொள்வோம். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்தால் வருவது செப்டம்பர் 1, 2022. அத்துடன் ஒரு வருடம், ஏழு நாள்களைக் கூட்டினால் வருவது, செப்டம்பர் 8, 2023. மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருப்பவர்களுக்கு இந்த ஃபார்முலா உதவாது. இப்படிப்பட்டவர்களுக்கு டேட்டிங் ஸ்கேன் உதவியோடு பிரசவத் தேதியை மருத்துவர் கணித்துச் சொல்வார். இதை, முதல் ட்ரைமெஸ்டரில் செய்வதுதான் சரியாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கமும் எச்சரிக்கையும்!
சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இதேபோல இருமல் டானிக் உட்கொண்ட குழந்தைகள் இறந்த துயர் சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதில் கானா நாடு, அதன் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, டானிக் அருந்தாத குழந்தைகளும் இறந்துள்ளதால் இருமல் டானிக்கை உறுதியாகக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறியிருக்கிறது. குழந்தைகள் இறப்புக்குக் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் இருமல் டானிக்குகள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதால் நமது கவனம் இவ்விஷயத்தில் இன்னும் அதிகமாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருமல் டானிக்குகள்தான் உலகச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்றன. டாக்டர் ஃபரூக் அப்துல்லா 18 குழந்தைகள் மரணம்... இந்திய இருமல் சிரப் காரணம்? தொடரும் மருந்து தொடர்பான சர்ச்சை! இருமல் டானிக்குகளை உற்பத்தி செய்யும் வேதியியல் வினையின்போது உருவாகும் ரசாயனமான டை எதிலின் க்ளைகால், சராசரியாக இருக்க வேண்டிய அளவுகளை விட சற்று கூடுதலாக இருந்தால், அது விஷமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்போது, அவர்களுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும் நிலையும் ஏற்படக்கூடும். எனவே, இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுக் கழகமானது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இது போன்ற துயர நிகழ்வுகள் நடந்த பிறகு மருந்து கம்பெனிகளை சீல் வைப்பதை விடவும் முன்னெச்சரிக்கையாக மருந்துகளின் உற்பத்தி தரத்தை உயர்த்த ஆவண செய்வது கட்டாயம். இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி கொண்டு நுரையீரலைப் பரிசோதனை செய்த பின் பரிந்துரைக்கும் டானிக்குகளைக் கொடுப்பதே சரியான பழக்கம். ஆனால் மருத்துவர்களிடம் காத்திருக்க வேண்டுமே என்று கருதியும், மருத்துவர் கட்டணத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், பெற்றோர்கள் நேரடியாக மருந்தகங்களில் இருமல் டானிக்குகள் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காண முடிகிறது. இது ஆபத்தான பழக்கம். இருமல் Doctor Vikatan: தினமும் இரவில் இருமல் மருந்து... பல வருடப் பழக்கத்தில் இருந்து மீள வழி உண்டா? ஒரு குழந்தைக்கு சளி, இருமல் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவரை சந்திக்கும் போது, அவர் அந்த இருமலின் காரணத்தை முதலில் கண்டறிவார். அது வறட்டு இருமலா, அல்லது சளி வரும் இருமலா, கிருமித் தொற்றால் இருமல் ஏற்பட்டுள்ளதா, அல்லது ஒவ்வாமை காரணமா என்பதையும் அறிந்துகொள்வார். வறட்டு இருமலுக்கு ஒருவித மருந்து, அதுவே இளைப்பு என்றால் ஒருவித மருந்து. கிருமித் தொற்று இருந்தால் இன்னொருவித மருந்து, இருமலின்போது சளி வெளிப்பட்டால் அதை வெளிக்கொணரும் மருந்து என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மருந்து வழங்கப்பட வேண்டும். ஆஸ்துமா, அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள் தேவைப்படும். இன்னும் தீவிரமான சுவாசப்பிரச்னை இருப்பின் ஸ்டீராய்டு டானிக்குகள் கூடவே மருந்தை நெபுலைசேஷன் செய்ய வேண்டும். தீவிரமான சளித்தொற்றாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழலும் கூட இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்றால் மருத்துவரை விரைவாக சந்திப்பதே சிறந்தது. காலத்தைக் கடத்தி விட்டு மருத்துவரை நாடுவது பிரச்னையை வளரவிட்டு ஆபத்தில் முடியக்கூடும். டெக்ஸ்ட்ரோமெதார்பன் (Dextromethorphan), கோடின் (Codeine) போன்ற இருமல் மருந்துகள் குழந்தைகளுக்குக் கட்டாயம் வழங்கக் கூடாதவையாக இருக்கின்றன. நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே டெக்ஸ்ட்ரோமெதர்பன் வழங்கலாம். இன்னும் சில பெற்றோர்கள் நன்றாக தூங்க வைக்க, இருமல் டானிக்குகளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அது மிகத் தவறான போக்கு. இருமல் டானிக்குகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்திவிட்டால், பின்னர் அது இல்லாமல் குழந்தை உறங்காது. இருமல் மருந்து பயன்படுத்தினால் தூக்கம் வருமா, அப்படி தூங்கும்போது இருமல் வராதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது, எந்தக் காரணத்துக்காக இருமல் மருந்து வழங்கப்படுகிறது என்பதை பொறுத்தது. உதாரணமாக, குழந்தைக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு, வறட்டு இருமல் இருந்து, அதற்காகப் பரிந்துரைக்கப்படும் டானிக்கால் இருமல் கட்டுப்படுத்தப்படும். இருமல் தொல்லையின்றி இருப்பதால் குழந்தை உறங்கும். சில டானிக்குகளில், தூங்கவைக்கும் (Sedation) மூலக்கூறுகளும் இருக்கும். ஆனால், இருமலுக்கான காரணம் நுரையீரலில் அலர்ஜி, சுவாசப்பாதையின் கடைசிப்பகுதியில் அலர்ஜி போன்றவையாக இருந்தால் வழக்கமான இருமல் டானிக்குகள் கைக்கொடுக்காது. இருமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையிலேயே அதற்குரிய மருந்து பரிந்துரைக்கப்பப்டும். இருமல் மருந்து Doctor Vikatan: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் தொடரும் இருமல்; தீர்வே கிடையாதா? பல இருமல் மருந்துக் கலவைகளில், காய்ச்சலுக்கான மருந்தான பாராசிட்டமாலும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதை அறியாத பெற்றோர் மருந்தகங்களில் சென்று பிள்ளைக்குக் காய்ச்சல், இருமல் என்று கூறி காய்ச்சலுக்கென்று ஒரு டானிக்கும், இருமலுக்கென்று ஒரு டானிக்கும் வாங்கி வருவர். காய்ச்சலுக்கான டானிக்கில் பாராசிட்டமால் இருக்கும். இருமலுக்கான டானிக் கலவையிலும் பாராசிட்டமால் இருக்கும். இரண்டையும் ஒருசேர குழந்தைக்குக் கொடுக்கும் போது பாராசிட்டமால் விஷத்தன்மை ஏற்பட்டு குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, உயிரை பாதிக்கும் நிலைகூட வரலாம். எனவே, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி, இருமல் வந்தால், மருத்துவ அறிவுரையைப் பெற எப்போதும் தவறக்கூடாது. சுய மருத்துவம் செய்யவே கூடாது. மருத்துவர் பரிந்துரையில் மருந்தை உட்கொள்வதே எப்போதும் பாதுகாப்பானது.
7 நாள் டீடாக்ஸ் டயட்... என்னல்லாம் சாப்பிடணும்... என்ன சாப்பிட கூடாது...
டீடாக்ஸ் டயட்டில் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும் உணவுகளைத் தவிர்த்து விட்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான திரவ உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக எளிதாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடியும்.
தூக்கத்தில் பேசுவது, நடப்பது; ஏன், தீர்வு என்ன? - மருத்துவ விளக்கம்
நம்மில் சிலருக்கு தூக்கத்தில் பேசுகிற பழக்கம் இருக்கலாம். அதே நேரம், தான் தூக்கத்தில் பேசியது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபருக்கே நினைவில் இருப்பதில்லை. தூக்கத்தில் பேசுவதை பலரும் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிலருக்கு அது குறித்த கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னையா என, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணர் பென்ஹர் ஜோயல் ஷாத்ராக்கிடம் கேட்டோம். பென்ஹர் ஜோயல் ஷாத்ராக் உங்கள் உறக்கம் சரிதானா? ``மனிதர்களாகிய நாம், வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்தில்தான் செலவிடுகிறோம். பொதுவாக, நாம் 6 மணிநேரம் தூங்குகிறோம் என்றால் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம் என கட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை மருத்துவத்தில் REM (Rapid Eye Moment Sleep) மற்றும் NREM (Non Rapid Eye Moment Sleep ) என்பார்கள். இந்த NREM தூக்கத்தில் இன்னும் பல கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்துக்குக்கென ஒவ்வொரு செயல்பாடு நடக்கும். ஆனால் தூக்கத்தில் அசாதாரணமாக ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்தால், அப்போது அந்த நிலையை Parasomnia என்கிறோம். பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம். எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், மனஅழுத்தம், ஏதேனும் வருத்தம், மதுப்பழக்கம், புகையிலைப் பழக்கம், வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா என்று கவனம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தூக்கம்! எனவே, 7 வயத்துக்கு மேல் தொடர்ந்து தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் இருக்கிறவர்களை, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. அப்போதுதான் எந்த நேரத்தில் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். தூக்கத்தில் பேசுவது நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அல்ல. அதேபோல, தூக்கத்தில் பேசுவதும், தூக்கத்தில் நடப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது அல்ல. ஆனால் அவை இரண்டுமே மருத்துவத்துறையில் Parasomnia என்றுதான் அழைக்கப்படுகிறது. அதாவது, தூக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அசாதாரண செயல்பாடுகள் இவை. தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தை பொறுத்தவரை தன்னை அறியாமல் மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்த நேரிடலாம். தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்ற பழக்கங்களை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சில வழிகள் உள்ளன. முதலாவதாக, இது சாதாரணமான ஒன்றுதான் என்பதை நம்ப வேண்டும். இரண்டாவதாக, தூங்கச் செல்லும் நேரம் மற்றும் தூக்கத்தில் இருந்து எழும் நேரத்தை தினமும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்? அடுத்ததாக, உறங்கும் அறையில் வேறெந்த வேலைகளும் செய்யக்கூடாது. அதாவது டிவி பார்ப்பது, அலுவல் சார்ந்த பணிகளை மேற்கொள்வது கூடாது. டிவி, லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றை, தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அணைத்து வைத்து விடுவது சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் அதிக கலோரி நிறைந்த உணவுகள், காஃபின் (caffine) உணவுகள், மதுபானம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் நல்ல ஆரோக்கியமான தூக்கம் பெற வழிவகை செய்யும்’’ என்றார்.
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை
சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை
சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2
மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது? பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம். Kramer zone Doctor Vikatan: பிறக்கும்போதே குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருமா? குழந்தையை இயற்கை வெளிச்சத்திலோ அல்லது வெண்மை ஒளியின் கீழோ, அதன் உடைகளை முழுதும் நீக்கி பரிசோதிக்க வேண்டும். ஆள்காட்டி விரலை சில நொடிகள் குழந்தையின் சருமத்தில் அழுத்தியெடுக்கும்போது, குழந்தையின் சருமத்தில் மஞ்சள் நிறமாற்றம் ஏற்படுகிறதாவென பார்க்க வேண்டும். மஞ்சள் நிறமாற்றம், எலுமிச்சை மஞ்சள் நிறத்தில், முகத்தில் மட்டும் இருந்தால், பிலிருபின் அளவு 5-7 mg/dL, மார்பு மற்றும் மேல்பகுதி வரை இருந்தால் – 7-9 mg/dL, கீழ் வயிறு மற்றும் தொடைப்பகுதி வரை இருந்தால் – 9-11 mg/dL, முழங்கால் மற்றும் கைகளில் இருந்தால் – 11-13 mg/dL மற்றும் உள்ளங்கை மற்றும் பாதங்கள் வரை இருந்தால் – 13-15 mg/dL வரை ரத்தத்தில் உள்ளதென கணிக்கலாம். அதுவே மஞ்சள் நிறமாற்றம் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில், முகத்தில் மட்டும் இருந்தால், பிலிருபின் அளவு 7-9 mg/dL, மார்பு மற்றும் மேல் பகுதி வரை இருந்தால் – 9-11 mg/dL, கீழ் வயிறு மற்றும் தொடைப் பகுதி வரை இருந்தால் – 11-13 mg/dL, முழங்கால் மற்றும் கைகளில் இருந்தால் – 14-16 mg/dL மற்றும் உள்ளங்கை மற்றும் பாதங்கள் வரை இருந்தால் – 17 mg/dL மேல் இரத்தத்தில் உள்ளதென கணிக்கலாம். மஞ்சள் நிறமாற்றம் முழங்கால் மற்றும் கைகளில் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் Transcutaneous Bilirubinometer (TcB) கொண்டு பிலிருபின் அளவை கண்டறிவார். அதிகமாக இருக்கும்பட்சத்திலோ, TcB இல்லாதபட்சத்திலோ, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பிலிருபினின் அளவு உறுதி செய்யப்படும். குழந்தை நல மருத்துவர் மு. ஜெயராஜ் Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை... வெயிலில் காட்டினால் போதுமா? சிகிச்சை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? முதலில் ரத்தப் பரிசோதனை மூலம் பிலிருபினின் அளவு கண்டறியப்படும். 35 வாரங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு ‘American Academy of Pediatrics (AAP)’ மற்றும் 35 வாரங்களுக்கு முன் பிறந்த குறைமாத குழந்தைகளுக்கு NICE Guidelines / Maisel’s chart வரையறுத்துள்ள ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் ரத்த மாற்றம் வரை கட்டத்தில், பிலிரூபினின் அளவு குறிக்கப்பட்டு, ஒளிக்கதிர் சிகிச்சை அல்லது ரத்த மாற்ற சிகிச்சைக்குத் தேவையுள்ளதா என்பதை மருத்துவர் முடிவு செய்து சிகிச்சையைத் தொடங்குவார். ஒளிக்கதிர் சிகிச்சை என்றால் என்ன? ஒளிக்கதிர் சிகிச்சைக்கு (Phototherapy) பயன்படுத்தப்படும் விளக்குகள் 460-490 nm அலைநீளத்தில் நீல நிற கதிர்களை உமிழக் கூடியவை. இந்த அலைநீளத்தில், உடலிலுள்ள பிலிருபின் நீரில் கரையக்கூடிய சமபகுதியமாக (isomers) மாற்றப்பட்டு, சிறுநீர் மற்றும் மலத்தில் கழிவாக வெளியேற்றப்பட்டுவிடும். இதன் மூலம் உடலிலுள்ள பிலிருபினின் அளவு குறைந்து, மூளை பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுவிடும். ஒளிக்கதிர் சிகிச்சையின் போது, அதன் கதிர்கள் குழந்தையின் கண்களில் படாமல் இருக்க, கண்கள் பேண்ட் கொண்டு மூடப்படும். மேலும் கதிர்கள் உடல் முழுதும் படுவதற்காக டயப்பர் விடுத்து, அனைத்து உடைகளும் நீக்கப்படும். பிலிருபினின் அளவு மிகவும் அதிகமாக இருந்தால், குழந்தையின் மேல்புறம் மட்டுமல்லாமல் கீழ்ப்புறத்திற்கும் ஒளிக்கதிர் சிகிச்சை (Double Surface Phototherapy) கொடுக்கப்படும். ஒளிக்கதிர் சிகிச்சைக்குப் பிறகு பிலிருபினின் அளவு குறைகிறதா என்று பரிசோதிக்கப்படும். 12 மணி நேர இடைவேளையில் செய்யப்பட்ட இரு ரத்தப் பரிசோதனைகளின் பிலிருபினின் அளவு ஒளிக்கதிர் சிகிச்சைத் தேவையின் எல்லைகீழ் இருந்தால், ஒளிக்கதிர் சிகிச்சை நிறுத்தப்படும். முன்பு, CFL விளக்குகளே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டன; தற்போது பிலிருபினின் அளவை வெகுவாகவும், வேகமாகவும் குறைக்கவல்ல அதிக வீரியமுள்ள LED விளக்குகள் உபயோகத்திற்கு வந்துவிட்டன. AAP chart ஒளிக்கதிர் சிகிச்சை, உடலிலுள்ள பிலிருபினின் அளவைத்தான் குறைக்குமே தவிர, பிலிருபின் அதிகரித்ததற்கான காரணத்தைச் சரி செய்யாது. எனவே, அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வது மிக முக்கியமாகும். பிலிருபினின் அளவு மீண்டும் அதிகரிக்கிறதா, என்பதைக் கண்டறிய ஒளிக்கதிர் சிகிச்சை நிறுத்திய பிறகு 12 மற்றும் 24 மணி நேரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை தேவைப்படும். எனவே, பல்வேறு முறை ரத்த நாளங்களிலிருந்து ரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்குப் பதிலாக, குதிகால் குத்தல் (heel prick) மூலம், துளி ரத்தத்தின் வாயிலாக Capillary TSB மூலம் பிலிருபினின் அளவு கணடறியும் வசதி, நாட்டின் முக்கிய மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், PGI மற்றும் ஜிப்மரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில், நமது அரசு மருத்துவமனைகளிலும் எதிர்பார்க்கலாம். தற்போது, பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் மஞ்சள் காமாலை பற்றி விரிவாக அறிந்திருப்பீர்கள்! முதல் அத்தியாயத்தில் தாங்கள் கேட்டிருந்த கேள்வியில், தாய் மற்றும் குழந்தையின் ரத்த வகை குறிப்பிடப்படாததால், Rh அல்லது ABO இணக்கமின்மை இருக்குமா என்பதை அறிய முடியவில்லை. மேலும், பிலிருபினின் அளவும் கூறப்படாததால், மஞ்சள் காமாலையின் தீவிரம் என்னவென்று தெரியவில்லை. எனினும், பிறந்த 3 நாள்களில் 300 கிராம் எடையிழப்பு என்பது, பிறந்த எடையின் 10% ஆகும். பிறந்த முதல் 7 நாள்களில் எடையிழப்பு இருக்குமெனினும், ஒரு நாளுக்கு 2% மேல் இருக்கக் கூடாது. குழந்தைக்கு போதிய தாய்ப்பால் கிடைக்காததையே இது காட்டுகிறது. எனவே, ‘Breast feeding failure jaundice’ தான் மஞ்சள் காமாலையின் காரணமாக இருக்கக்கூடுமென நான் கருதுகிறேன். தாய்ப்பால் கொடுக்கும் நிலை மற்றும் இணைப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். Transcutaneous Bilirubinometer (TcB) குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1 தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் வலி போன்றவை தாய்ப்பால் சுரப்பை குறைத்துவிடும் என்பதால், அதையே நினைத்து அழுத்தத்திற்கு உள்ளாகாதீர்கள். தேவைப்பட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மாத்திரைகள் மற்றும் உணவுமுறைகளில் மாற்றங்களை மருத்துவர் பரிந்துரைப்பார். குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்ய, சில நாள்கள் பாலாடையிலும் பால் கொடுக்க அறிவுறுத்துவார். மேற்குறிப்பிட்டதுபோல ஒளிக்கதிர் சிகிச்சை பிலிருபினின் அளவை குறைக்கவல்லது. பிலிருபின் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் மூளை பாதிப்பு ஏற்படத் தொடங்கும். அதைத் தடுக்க ‘ரத்த மாற்றம்’ செய்ய வேண்டுமென்ற AAP-இன் DVET வரைகட்டத்தில் உள்ள அளவிற்கு மேல் குழந்தையின் பிலிருபின் இருந்தால், ‘ரத்த மாற்றம்’ செய்து மூளை பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிட முடியும். Rh-இணக்கமின்மை போன்ற காரணங்களால், குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் சிதைவுற்றால் மட்டுமே அந்த அளவிற்கு பிலிருபினின் அளவு அதிகரிக்கும் என்பதாலும், பெரும்பான்மையான ‘Breast feeding failure Jaundice’, ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் போதுமான பால் கிடைப்பது மூலம் சரியாகிவிடுமென்பதாலும், ‘மூளை பாதிப்பு’ குறித்தோ `ரத்த மாற்றம்’ குறித்தோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். பராமரிப்போம்...
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை
சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்.... மற்ற பாகங்களுக்கும் பரவுமா?
Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்கு உடலில் சில இடங்களில் தேமல் போன்று இருக்கிறது. அது என்னவாக இருக்கும்? அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா? தேமல் உடலில் பரவுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் பொதுவாக தேமல் என்று குறிப்பிட்டுள்ள பிரச்னையில் நிறைய வகைகள் உண்டு. சில வகை தேமல் அலர்ஜி தன்மையைக் கொடுக்கும். 'ஏடோபிக் டெர்மடைட்டிஸ்' (Atopic dermatitis) எனப்படும் வகையில் இப்படி அலர்ஜி தன்மையோடு சில குழந்தைகள் பிறப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு முகத்தில் தேமல் வரலாம். அந்தத் தேமல் வெள்ளை நிறத்தில் (Hypopigmented) இருக்கலாம். இதைத் தாண்டி சில குழந்தைகளுகு வியர்வையின் காரணமாகவும் தேமல் வரலாம். அந்தக் குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையைத் துடைக்காமல், சருமத்திலேயே தங்கிவிடும்போதும், சரியாகக் குளிக்காத நிலையிலும் தேமல் வரலாம். எனவே தேமலைப் பொறுத்தவரை அதை நேரில் பார்த்தால்தான் அது எந்தவகையான தேமல், அதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கேற்ற சிகிச்சையைக் கொடுத்துதான் அதைச் சரியாக்க முடியும். தொற்றின் காரணமாகவும் தேமல் வரலாம். ஃபங்கல் இன்ஃபெக்ஷன் காரணமாக வரும் தேமலை Pityriasis versicolor என்று சொல்வோம். இந்த வகை தேமலும் சரி, வியர்வை காரணமாக வரும் தேமலும் சரி, உடலில் பரவத்தான் செய்யும். இன்ஃபெக்ஷன் ஏற்பட்ட இடத்தைத் தொட்டுவிட்டு, இன்னொரு பகுதியைத் தொடும்போது நிச்சயம் பரவும். Skin Care Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்? தவிர தேமலுக்கு சரியான சிகிச்சை கொடுக்காவிட்டாலும் அது உடல் முழுவதும் வரைபடம் மாதிரி பரவிக்கொண்டே போகும். எனவே எந்தவகையான தேமல், அதற்கான காரணம், சிகிச்சை போன்றவற்றை வைத்துதான் அது பரவுமா, பரவாதா என்று சொல்ல முடியும். உங்கள் குழந்தையை சரும மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை
சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.