பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ ரூ.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்ததனர். கோகாவாலா இந்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ மகேந்திர தல்வி கோடிக்கணக்கான பணத்தை கையாள்வது போன்ற ஒரு வீடியோவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. ஆனால் இது உத்தவ் தாக்கரே கட்சியின் அவதூறு செயல் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் தெரிவித்தனர். அம்பாதாஸ் தன்வேயிக்கு மிரட்டுவதுதான் தொழில் என்று தல்வி குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த வீடியோ சர்ச்சை அடங்கும் முன்பு மற்றொரு சிவசேனா அமைச்சர் பரத் கோகாவாலாவும் அது போன்று பணத்துடன் இருக்கும் படத்தை உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த சித்ரலேகா என்பவர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த படத்தை கோகாவாலா நிராகரித்துள்ளார். ஏற்கனவே மற்றொரு சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் பணத்துடன் இருக்கும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் பணத்துடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வீடியோக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தர்ம சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவில் தங்களது கட்சிக்கு மாநகராட்சி தேர்தலில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வரும் நிலையில் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?
கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். அதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் முதலமைச்சரான ரங்கசாமி, விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதுதான். ஆனால் `100% அதற்கு வாய்ப்பே இல்லை. புதுச்சேரியில் அதற்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது’ என்று ஆரம்பத்திலேயே த.வெ.க-வின் அந்த கோரிக்கையை நிராகரித்து புதுச்சேரி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் புதுச்சேரி காவல்துறை டி.ஐ.ஜி சத்தியசுந்தரம். தவெக நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பாராட்டு பெறும் சத்தியசுந்தரம் அதையடுத்து த.வெ.க-வின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் நேரடியாக புதுச்சேரி வந்து காவல்துறையில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதற்கு டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை என்பதால்தான், புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி, த.வெ.க ரோடு ஷோ அனுமதி குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது, ``ரோடு ஷோ தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்கு அனுமதி கொடுப்பதில் நம் அரசுக்கு சிரமங்கள் இருக்கின்றன. ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள் த.வெ.க-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தாராளமாக அனுமதிக்கலாம். ஆனால் `ரோடு ஷோ’வாக அனுமதிக்க வேண்டாம். திறந்தவெளி மைதானத்தில் அனுமதிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். அதனால்தான், `ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டும், முதல்வர் ரங்கசாமி அதை நிராகரித்திருக்கிறார். அதன்பிறகுதான் துறைமுக மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு புதுச்சேரி காவல்துறை கையாண்ட விதம் குறித்து புதுச்சேரி மக்களுடன் சேர்ந்து த.வெ.க-வினரும் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர். டிஐஜி சத்தியசுந்தரம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வைத்திருக்கும் புகைப்படம் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவரான டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர். ஐ.பி.எஸ் முடித்து 2009-ல் பணியில் சேர்ந்த இவர், டெல்லி, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2024-ல் டி.ஐ.ஜி-யாக புதுச்சேரி வந்தவர். பொதுவாக புதுச்சேரிக்கு வரும் டி.ஐ.ஜி-க்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால் புதுச்சேரி காவல் நிலையங்களில் வாரம்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேற்புக் கூட்டங்களில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். காவல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படுபவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி இவரை எளிமையாக அணுகுகிறார்கள். அதேசமயம் நேரடியாக தன்னிடம் புகார்கள் வருவதை ஊக்குவிக்காமல், முதலில் உங்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார். டி.ஐ.ஜி என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சக அதிகாரிகளுடன் களத்தில் நிற்பதுடன், அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் வலம் வருகிறார். சமீபத்தில் வந்த தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக, ஒரு நாளைக்கு சக அதிகாரிளுடன் 5 முதல் 10 கிலோமீட்டர்கள் வரை நடந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறவில்லை. இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.இ படிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களுடன், அவர்களுக்கு ஆகும் பொருளாதார உதவியையும் சத்தமின்றி செய்து வரும் இவர், திரைப்பட இயக்குநர் இரா.சரவணனின் நெருங்கிய நண்பர். மக்கள் மன்றக் குறைகேட்புக் கூட்டத்தில் டிஐஜி அதேபோல விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமானங்களை தன்னுடைய நண்பர்கள் மூலம் செய்து தரும் இவர், எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவுக்கு தன்னுடைய கிராமத்தில் ஆஜராகிவிடுவார். அப்போது தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ளாமல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளையும் நடத்தி ஊரை திருவிழாக் கோலமாக மாற்றிப் பட்டையைக் கிளப்புகிறார் மனிதர். இன்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் யு.பி.எஸ்.சி தொடர்பாக கேட்கும் எந்த உதவிகளாக இருந்தாலும், அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதேபோல கிராமத்தில் இருந்து வரும் எந்த செல்போன் அழைப்பையும் இவர் எடுக்காமல் இருப்பதில்லை என்கின்றனர் அவர் நண்பர்கள். TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி
புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?
கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். அதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் முதலமைச்சரான ரங்கசாமி, விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதுதான். ஆனால் `100% அதற்கு வாய்ப்பே இல்லை. புதுச்சேரியில் அதற்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது’ என்று ஆரம்பத்திலேயே த.வெ.க-வின் அந்த கோரிக்கையை நிராகரித்து புதுச்சேரி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் புதுச்சேரி காவல்துறை டி.ஐ.ஜி சத்தியசுந்தரம். தவெக நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பாராட்டு பெறும் சத்தியசுந்தரம் அதையடுத்து த.வெ.க-வின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் நேரடியாக புதுச்சேரி வந்து காவல்துறையில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதற்கு டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை என்பதால்தான், புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி, த.வெ.க ரோடு ஷோ அனுமதி குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது, ``ரோடு ஷோ தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்கு அனுமதி கொடுப்பதில் நம் அரசுக்கு சிரமங்கள் இருக்கின்றன. ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள் த.வெ.க-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தாராளமாக அனுமதிக்கலாம். ஆனால் `ரோடு ஷோ’வாக அனுமதிக்க வேண்டாம். திறந்தவெளி மைதானத்தில் அனுமதிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். அதனால்தான், `ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டும், முதல்வர் ரங்கசாமி அதை நிராகரித்திருக்கிறார். அதன்பிறகுதான் துறைமுக மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு புதுச்சேரி காவல்துறை கையாண்ட விதம் குறித்து புதுச்சேரி மக்களுடன் சேர்ந்து த.வெ.க-வினரும் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர். டிஐஜி சத்தியசுந்தரம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வைத்திருக்கும் புகைப்படம் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவரான டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர். ஐ.பி.எஸ் முடித்து 2009-ல் பணியில் சேர்ந்த இவர், டெல்லி, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2024-ல் டி.ஐ.ஜி-யாக புதுச்சேரி வந்தவர். பொதுவாக புதுச்சேரிக்கு வரும் டி.ஐ.ஜி-க்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால் புதுச்சேரி காவல் நிலையங்களில் வாரம்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேற்புக் கூட்டங்களில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். காவல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படுபவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி இவரை எளிமையாக அணுகுகிறார்கள். அதேசமயம் நேரடியாக தன்னிடம் புகார்கள் வருவதை ஊக்குவிக்காமல், முதலில் உங்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார். டி.ஐ.ஜி என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சக அதிகாரிகளுடன் களத்தில் நிற்பதுடன், அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் வலம் வருகிறார். சமீபத்தில் வந்த தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக, ஒரு நாளைக்கு சக அதிகாரிளுடன் 5 முதல் 10 கிலோமீட்டர்கள் வரை நடந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறவில்லை. இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.இ படிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களுடன், அவர்களுக்கு ஆகும் பொருளாதார உதவியையும் சத்தமின்றி செய்து வரும் இவர், திரைப்பட இயக்குநர் இரா.சரவணனின் நெருங்கிய நண்பர். மக்கள் மன்றக் குறைகேட்புக் கூட்டத்தில் டிஐஜி அதேபோல விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமானங்களை தன்னுடைய நண்பர்கள் மூலம் செய்து தரும் இவர், எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவுக்கு தன்னுடைய கிராமத்தில் ஆஜராகிவிடுவார். அப்போது தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ளாமல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளையும் நடத்தி ஊரை திருவிழாக் கோலமாக மாற்றிப் பட்டையைக் கிளப்புகிறார் மனிதர். இன்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் யு.பி.எஸ்.சி தொடர்பாக கேட்கும் எந்த உதவிகளாக இருந்தாலும், அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதேபோல கிராமத்தில் இருந்து வரும் எந்த செல்போன் அழைப்பையும் இவர் எடுக்காமல் இருப்பதில்லை என்கின்றனர் அவர் நண்பர்கள். TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக சார்பாக நடந்த அறப்போராட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன் என்று பேசியிருக்கிறார். ராமதாஸ் ராமதாஸ், இட ஒதுக்கீடு இங்கு இருக்கும் சாதியினருக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இருக்கும் 300க்கும் மேற்பட்ட சாதியினரை 6 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீட்டை பங்கிட வேண்டும். ராமதாஸ் சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும் - அன்புமணி காட்டம் இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறுவழியில்லை என்று பேசியிருக்கிறார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக சார்பாக நடந்த அறப்போராட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன் என்று பேசியிருக்கிறார். ராமதாஸ் ராமதாஸ், இட ஒதுக்கீடு இங்கு இருக்கும் சாதியினருக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இருக்கும் 300க்கும் மேற்பட்ட சாதியினரை 6 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீட்டை பங்கிட வேண்டும். ராமதாஸ் சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும் - அன்புமணி காட்டம் இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறுவழியில்லை என்று பேசியிருக்கிறார்.
`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் - தேதியை அறிவித்த செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆனால், காவல்துறை தரப்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு உரிய பதிலை கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தாமதமாகி வந்தது. எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும். என்று செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்பட்த்தியிருந்தார். TVK Madurai Maanadu இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் வருகிற 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல் கேட் அருகே ‘சரளை’ என்ற இடத்தில் விஜயின் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார். ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள் “காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்,” என்று கூறியுள்ளார். தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் மேலும், “இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டை சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளின் படி, ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி தர தயாராக இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு முதன்முதலில் ஈரோட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். விஜயின் இந்த அரசியல் சுற்றுப்பயணம் பெரும் வரலாறாக இருக்கும்,” என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்- செங்கோட்டையன்
கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் அமைத்த SIT-ஐ எதிர்த்து தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியது, சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறியது. அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் விவகார தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது” என வாதங்களை முன் வைத்தனர். கரூர் விஜய் பிரசாரம் அப்போது நீதிபதிகள் ``சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜராகி இருக்கின்றனரா? அமர்வு, மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்களா?” என கேள்வி எழுப்பினர் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை அதற்கு பதில் அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர், ``கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும், ``எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள். உச்ச நீதிமன்றம் அப்போது பேசிய நீதிபதிகள், ``கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர். குறிப்பாக, ``உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ``மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர். உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர். எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது
கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் அமைத்த SIT-ஐ எதிர்த்து தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியது, சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறியது. அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் விவகார தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது” என வாதங்களை முன் வைத்தனர். கரூர் விஜய் பிரசாரம் அப்போது நீதிபதிகள் ``சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜராகி இருக்கின்றனரா? அமர்வு, மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்களா?” என கேள்வி எழுப்பினர் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை அதற்கு பதில் அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர், ``கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும், ``எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள். உச்ச நீதிமன்றம் அப்போது பேசிய நீதிபதிகள், ``கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர். குறிப்பாக, ``உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ``மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர். உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர். எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மண்டலங்கள் 5 மற்றும் 6 இரண்டிலும் தூய்மைப் பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்பந்தமாக வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து தாங்கள் பழைய நிலையிலேயே மாநகராட்சியின் கீழே தொடர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங்கின் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன்பிறகு, சென்னை அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைஞர் சமாதி முன்பும், மதியம் 1 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பும் கூடி போராட முயன்றனர். தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் போட்டு கோரிக்கைகளை முன்வைத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மண்டலங்கள் 5 மற்றும் 6 இரண்டிலும் தூய்மைப் பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்பந்தமாக வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து தாங்கள் பழைய நிலையிலேயே மாநகராட்சியின் கீழே தொடர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங்கின் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன்பிறகு, சென்னை அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைஞர் சமாதி முன்பும், மதியம் 1 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பும் கூடி போராட முயன்றனர். தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் போட்டு கோரிக்கைகளை முன்வைத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.
திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!
திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது அந்தத் திறந்த குழிகள் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்! என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியில், பாதுகாப்பு வேலி இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்த கால்வாய் பணி மற்றும் அப்பகுதிச் சாலையின் பரிதாப நிலை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, தற்போது அரசு, அப்பகுதியில் தார்சாலை அமைத்துள்ளது. பல ஆண்டுக்கால பிரச்னை அப்பகுதியில் தார்சாலைகள் சேதமடைந்து, இடையிடையே உருவான குழிகள் மற்றும் பள்ளமேடுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளாகத் தவித்து வந்தனர். குறிப்பாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள், காலை நேரப் பயணிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் இது தினசரி எதிர்கொள்ள வேண்டிய அபாயமாக மாறியிருந்தது. இந்தத் திறந்த குழிகள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் எங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகக் கவலை தெரிவித்திருந்தனர். இந்தப் பிரச்னை குறித்து விகடன் தளத்தில் செய்தி வெளியானதும், அதற்கு மக்கள் ஆதரவும் கவனமும் கிடைத்தது. சமூக வலைதளங்களில் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பின்வரும் பணிகளைத் தொடங்கி நிறைவேற்றி வருகிறது: சேதமடைந்த தார்சாலைகளை முழுமையாக அகற்றி புதிதாக லேயர் அமைத்தல் ஆழமான குழிகளை மூடுதல் கழிவுநீர் கால்வாய் பகுதிகளைச் சீரமைத்தல் சாலை பழுதுபார்ப்பு முடிக்கப்பட்டதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், எங்களுக்கு இதுதான் ஸ்கூல், காலேஜ் போறதுக்கு முக்கியமான வழி. ஆனா இந்த ரோடு சரியில்லாததால வேற வழி மாறி பல கிலோமீட்டர் சுத்திட்டுப் போவோம். இதுவே தினம்தினம் போராட்டமா இருந்துச்சு! ஆனா இனி அந்தப் பிரச்னை இல்லை. இனிமே தினமும் இதே வழியில நிம்மதியாவும் பாதுகாப்பாவும் போவோம் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!
திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது அந்தத் திறந்த குழிகள் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்! என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியில், பாதுகாப்பு வேலி இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்த கால்வாய் பணி மற்றும் அப்பகுதிச் சாலையின் பரிதாப நிலை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, தற்போது அரசு, அப்பகுதியில் தார்சாலை அமைத்துள்ளது. பல ஆண்டுக்கால பிரச்னை அப்பகுதியில் தார்சாலைகள் சேதமடைந்து, இடையிடையே உருவான குழிகள் மற்றும் பள்ளமேடுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளாகத் தவித்து வந்தனர். குறிப்பாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள், காலை நேரப் பயணிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் இது தினசரி எதிர்கொள்ள வேண்டிய அபாயமாக மாறியிருந்தது. இந்தத் திறந்த குழிகள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் எங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகக் கவலை தெரிவித்திருந்தனர். இந்தப் பிரச்னை குறித்து விகடன் தளத்தில் செய்தி வெளியானதும், அதற்கு மக்கள் ஆதரவும் கவனமும் கிடைத்தது. சமூக வலைதளங்களில் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பின்வரும் பணிகளைத் தொடங்கி நிறைவேற்றி வருகிறது: சேதமடைந்த தார்சாலைகளை முழுமையாக அகற்றி புதிதாக லேயர் அமைத்தல் ஆழமான குழிகளை மூடுதல் கழிவுநீர் கால்வாய் பகுதிகளைச் சீரமைத்தல் சாலை பழுதுபார்ப்பு முடிக்கப்பட்டதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், எங்களுக்கு இதுதான் ஸ்கூல், காலேஜ் போறதுக்கு முக்கியமான வழி. ஆனா இந்த ரோடு சரியில்லாததால வேற வழி மாறி பல கிலோமீட்டர் சுத்திட்டுப் போவோம். இதுவே தினம்தினம் போராட்டமா இருந்துச்சு! ஆனா இனி அந்தப் பிரச்னை இல்லை. இனிமே தினமும் இதே வழியில நிம்மதியாவும் பாதுகாப்பாவும் போவோம் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
`பீகாரால் முடியாமல் போகலாம்; ஆனால் மேற்கு வங்க மக்களால் முடியும்’ - பாஜக-வை சாடிய மம்தா
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (11-ம் தேதி) மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாங்கரில் நடந்த பொதுகூட்டத்தில், உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா? தேர்தலின் போது டெல்லியில் இருந்து போலீஸை அழைத்து வந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மிரட்டுவார்கள். மம்தா பானர்ஜி தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இல்லையா... உங்களிடம் வலிமை இல்லையா... உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால் அதை நீங்கள் கடந்து செல்லமாட்டீர்கள் தானே? அந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள். ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்பார்கள். நான் வகுப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டவள் அல்ல. மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், பா.ஜ.க பணத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களிலிருந்து மக்களை அழைத்து வந்து பொதுமக்களிடம் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறது. நீங்கள் எங்களைத் தாக்கினால், பதிலடி எப்படி கொடுப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். அநீதியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதும் எங்களுக்குத் தெரியும். நினைவில் கொள்ளுங்கள், பீகாரால் முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அதை முறியடிக்க எங்கள் மேற்கு வங்க மக்களால் முடியும், என்று அவர் மேலும் கூறினார். SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!
Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு
நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'கோல்டு கார்டு' விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது. 'ட்ரம்ப் கோல்டு கார்டு' என்றால் என்ன? ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும். ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold Card US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி EB-5 விசா திட்டம் என்றால் என்ன? EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது. இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய 'ட்ரம்ப் கோல்டு கார்டு' திட்டம். இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டு குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ' விசா! விலை என்ன? இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது. அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். உங்களது தகவல்களை பதிவிட வேண்டும். அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும். இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அது 'ஓகே' ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது. அமெரிக்க டாலர்கள் உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி? சிக்கலும்... இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும். ஒரு கண்டிஷன் இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும். `போருக்கு பின் பைக் சாகசங்கள்' - பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம்
”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்காக ராக்கெட் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் விண்வெளியில் வீரர்களுக்கு தேவையான வெப்பநிலை, அழுத்தம், கார்பன்-டை-ஆக்சைடு, ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டுப்பணிகளும் சிறப்பாக நடந்து வருகின்றன. ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில், அவர்களை பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் ”குரூப் எஸ்கேப் சிஸ்டம்’ திட்டப்பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதர்களுடன் செல்லும் ககன்யான் விண்கலத்தை 2027-ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆட்கள் இல்லாத 3 பரிசோதனை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 5 தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி அமைக்க 2028-ம் ஆண்டில் ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் இந்த பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நாராயணன் இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்த திட்டம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பேசுவதற்கு பதிலாக, இந்திய நாட்டிற்கான ஒரு முக்கியமான மையமாக பார்க்கப்பட வேண்டும். 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும். அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.
ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனம் புனேயில் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக சீத்தல் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியது. அதுவும் ரூ.1800 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.300 கோடிக்கு வாங்கினார். இது தொடர்பாக தெரிய வந்தவுடன் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து மாநில அரசு தலையிட்டு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு நில ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது நிலம் பதிவு செய்யப்பட்டதில் ரூ.21 கோடி முத்திரை தீர்வை பாக்கி இருப்பதாக கூறி கட்டணத்தை செலுத்தும்படி மாநில பத்திர பதிவுத்துறை அஜித் பவார் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பத்திர பதிவு துறையில் விசாரணைக்கு வந்தபோது அஜித் பவார் மகன் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி அரசு பத்திர பதிவை ரத்து செய்து இருப்பதால் முத்திரை தீர்வை கட்டணத்தை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பத்திர பதிவு துறை, பத்திர பதிவு செய்ததற்கு பாக்கி முத்திரை தீர்வை கட்டணம் ரூ.21 கோடி மற்றும் அதற்கு அபராதம் ரூ.1.5 கோடி ஆகிய கட்டணத்தை இரண்டு மாதத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பேச இனி வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு பத்திர பதிவை இரண்டு தரப்பினரும் சேர்ந்து ரத்து செய்தால் மட்டுமே முத்திரை தீர்வை செலுத்தவேண்டும் என்றும், அரசு தரப்பில் ரத்து செய்தால் முத்திரை தீர்வை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நில மோசடியை மாநில அரசு அஜித் பவார் மகனுக்கு சாதமாக முடித்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனம் புனேயில் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக சீத்தல் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியது. அதுவும் ரூ.1800 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.300 கோடிக்கு வாங்கினார். இது தொடர்பாக தெரிய வந்தவுடன் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து மாநில அரசு தலையிட்டு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு நில ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது நிலம் பதிவு செய்யப்பட்டதில் ரூ.21 கோடி முத்திரை தீர்வை பாக்கி இருப்பதாக கூறி கட்டணத்தை செலுத்தும்படி மாநில பத்திர பதிவுத்துறை அஜித் பவார் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பத்திர பதிவு துறையில் விசாரணைக்கு வந்தபோது அஜித் பவார் மகன் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி அரசு பத்திர பதிவை ரத்து செய்து இருப்பதால் முத்திரை தீர்வை கட்டணத்தை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பத்திர பதிவு துறை, பத்திர பதிவு செய்ததற்கு பாக்கி முத்திரை தீர்வை கட்டணம் ரூ.21 கோடி மற்றும் அதற்கு அபராதம் ரூ.1.5 கோடி ஆகிய கட்டணத்தை இரண்டு மாதத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பேச இனி வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு பத்திர பதிவை இரண்டு தரப்பினரும் சேர்ந்து ரத்து செய்தால் மட்டுமே முத்திரை தீர்வை செலுத்தவேண்டும் என்றும், அரசு தரப்பில் ரத்து செய்தால் முத்திரை தீர்வை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நில மோசடியை மாநில அரசு அஜித் பவார் மகனுக்கு சாதமாக முடித்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
'கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்' - வானதி சீனிவாசன்
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா. திருப்பரங்குன்றம் இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். SIR - சிறப்பு தீவிர திருத்தம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.
'கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்' - வானதி சீனிவாசன்
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா. திருப்பரங்குன்றம் இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். SIR - சிறப்பு தீவிர திருத்தம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.
TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் 'பலே'சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! - பின்னணி என்ன?
தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்திருந்தது. கூட்டத்தில் ஆதவ் சில புள்ளி விவரங்களை போட்டு மா.செக்களுக்கு பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மா.செக்களிடம் சில முக்கியமான விஷயங்களை ஹைலைட் செய்து ரெய்டு விட்டு எச்சரித்திருக்கிறார். தவெக நிர்வாகிகள் கூட்டம் சூப்பர் சீனியரான செங்கோட்டையனும் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் கூட்டி பேசியிருக்கிறார். நேற்றைய கூட்டம் குறித்து சில மா.செக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். கட்சியில் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிய பிறகு முதல் கூட்டம் என்பதால் செங்கோட்டையன் ஏகத்துக்கும் பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தலின் போது சூழல் எப்படியிருந்தது, எம்.ஜி.ஆர் எப்படி தனக்கு சீட் கொடுத்தார், அதில் என்ன மாதிரி களப்பணிகள் ஆற்றி அவர் வென்றார் என ஒரு ஃப்ளாஸ்பேக்கே ஓட்டி காண்பித்திருக்கிறார். தவெக நிர்வாகிகள் கூட்டம் 'எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் தன்னெழுச்சியான கூட்டத்தை காண்கிறேன். என்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விஜய்யின் வெற்றிக்காக பயன்படுத்துவேன். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டும். அங்கே சிந்தாமல் சிதறாமல் வெற்றியை தேடித் தருவது என்னுடைய பொறுப்பு' என மா.செக்கள் புல்லரிக்கும்படி பேசியிருக்கிறார். பேச்சை முடிக்கையில், 'ஜனவரி 10 க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!' என பொடி வைத்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மேடையேறிய ஆதவ் அர்ஜூனா பெரிய திரையில் சர்வே முடிவை பவர்பாய்ண்டாக காண்பித்திருக்கிறார். 'ஒவ்வொரு வாரமும் நாம் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வேப்படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது. ஜான் ஆரோக்கியசாமி திமுகவுக்கே 29% தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களத்தில் இறங்கி வேலை பார்த்து அந்த வாக்குகளை பூத்துக்குள் கொண்டு வந்துவிடுவதில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' எனக் கூறி பூத் கமிட்டி சார்ந்து நிர்வாகிகள் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆதவ்வின் பவர் பாய்ண்ட் பல மா.செக்களுக்கு பூஸ்ட்டை கொடுத்திருக்கிறது. சிலர் அமைச்சர் கனவே காண ஆரம்பித்துவிட்டனர் என கிசுகிசுக்கின்றனர். ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், 'ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்' என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், 'பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?' என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். 'போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க. தேர்தல் வேலையை பார்க்குறதா இல்ல கட்சிக்குள்ள உங்க கோஷ்டி பூசல பார்க்குறதா? இதுவரைக்கும் நீங்க செஞ்ச சின்னச்சின்ன தப்புகளை பொறுத்துக்கிட்டு நம்ம புள்ளைங்கன்னு அமைதியா இருந்துட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. அதனால இருக்குற பஞ்சாயத்தெல்லாம் முடிச்சிட்டு தேர்தல் வேலையை ஒழுங்கா பாருங்க. அப்புறம் முக்கியமா வெற்றி வாய்ப்பு நமக்கு பிரகாசமா இருக்கு. எம்.எல்.ஏ சீட்டுக்குலாம் யார்க்கிட்டயும் பேரம் பேசிடாதீங்க. காசு வாங்கிடாதீங்க. அப்டி எதுவும் தகவல் வந்துச்சு நடவடிக்கை கடுமையா இருக்கும்' என உரத்தக் குரலில் எச்சரித்திருக்கிறார். நிர்வாகிகள் கூட்டம் மேற்கொண்டு கூட்டத்தில் S.I.R குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. 'S.I.R பணிகளில் திமுகதான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் 90% செய்தால் நாம் 10% தான் வேலை செய்திருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் விடுபட்டவர்களின் பெயரை எடுத்து அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும்' எனவும் கூறப்பட்டிருக்கிறது.
TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் 'பலே'சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! - பின்னணி என்ன?
தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்திருந்தது. கூட்டத்தில் ஆதவ் சில புள்ளி விவரங்களை போட்டு மா.செக்களுக்கு பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மா.செக்களிடம் சில முக்கியமான விஷயங்களை ஹைலைட் செய்து ரெய்டு விட்டு எச்சரித்திருக்கிறார். தவெக நிர்வாகிகள் கூட்டம் சூப்பர் சீனியரான செங்கோட்டையனும் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் கூட்டி பேசியிருக்கிறார். நேற்றைய கூட்டம் குறித்து சில மா.செக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். கட்சியில் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிய பிறகு முதல் கூட்டம் என்பதால் செங்கோட்டையன் ஏகத்துக்கும் பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தலின் போது சூழல் எப்படியிருந்தது, எம்.ஜி.ஆர் எப்படி தனக்கு சீட் கொடுத்தார், அதில் என்ன மாதிரி களப்பணிகள் ஆற்றி அவர் வென்றார் என ஒரு ஃப்ளாஸ்பேக்கே ஓட்டி காண்பித்திருக்கிறார். தவெக நிர்வாகிகள் கூட்டம் 'எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் தன்னெழுச்சியான கூட்டத்தை காண்கிறேன். என்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விஜய்யின் வெற்றிக்காக பயன்படுத்துவேன். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டும். அங்கே சிந்தாமல் சிதறாமல் வெற்றியை தேடித் தருவது என்னுடைய பொறுப்பு' என மா.செக்கள் புல்லரிக்கும்படி பேசியிருக்கிறார். பேச்சை முடிக்கையில், 'ஜனவரி 10 க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!' என பொடி வைத்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மேடையேறிய ஆதவ் அர்ஜூனா பெரிய திரையில் சர்வே முடிவை பவர்பாய்ண்டாக காண்பித்திருக்கிறார். 'ஒவ்வொரு வாரமும் நாம் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வேப்படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது. ஜான் ஆரோக்கியசாமி திமுகவுக்கே 29% தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களத்தில் இறங்கி வேலை பார்த்து அந்த வாக்குகளை பூத்துக்குள் கொண்டு வந்துவிடுவதில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' எனக் கூறி பூத் கமிட்டி சார்ந்து நிர்வாகிகள் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆதவ்வின் பவர் பாய்ண்ட் பல மா.செக்களுக்கு பூஸ்ட்டை கொடுத்திருக்கிறது. சிலர் அமைச்சர் கனவே காண ஆரம்பித்துவிட்டனர் என கிசுகிசுக்கின்றனர். ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், 'ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்' என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், 'பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?' என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். 'போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க. தேர்தல் வேலையை பார்க்குறதா இல்ல கட்சிக்குள்ள உங்க கோஷ்டி பூசல பார்க்குறதா? இதுவரைக்கும் நீங்க செஞ்ச சின்னச்சின்ன தப்புகளை பொறுத்துக்கிட்டு நம்ம புள்ளைங்கன்னு அமைதியா இருந்துட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. அதனால இருக்குற பஞ்சாயத்தெல்லாம் முடிச்சிட்டு தேர்தல் வேலையை ஒழுங்கா பாருங்க. அப்புறம் முக்கியமா வெற்றி வாய்ப்பு நமக்கு பிரகாசமா இருக்கு. எம்.எல்.ஏ சீட்டுக்குலாம் யார்க்கிட்டயும் பேரம் பேசிடாதீங்க. காசு வாங்கிடாதீங்க. அப்டி எதுவும் தகவல் வந்துச்சு நடவடிக்கை கடுமையா இருக்கும்' என உரத்தக் குரலில் எச்சரித்திருக்கிறார். நிர்வாகிகள் கூட்டம் மேற்கொண்டு கூட்டத்தில் S.I.R குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. 'S.I.R பணிகளில் திமுகதான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் 90% செய்தால் நாம் 10% தான் வேலை செய்திருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் விடுபட்டவர்களின் பெயரை எடுத்து அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும்' எனவும் கூறப்பட்டிருக்கிறது.
Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி - மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வரி விதித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், மெக்ஸிகோவுடன் முறையான வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்தும் புதிய கட்டண முறைக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஒப்புதல் அளித்திருக்கிறார். ட்ரம்ப் வரி விதிப்பு கார் ஏற்றுமதி சந்தையில் தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. எனவே, மெக்சிகோவின் ஆசிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான வரி ஒப்புதல், இந்திய வாகன உற்பத்தியாளர்களை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மெக்சிகோவின் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தும் முடிவு, வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களின் 1.8 பில்லியன் டாலர் (தோராயமாக 14,940 கோடி) மதிப்புள்ள ஏற்றுமதிகளை பாதிக்கும். அதனால், மெக்சிகோவின் கட்டண நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என இந்தியத் தரப்பை வலியுறுத்த கார் ஏற்றுமதி தொழில்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கார் ஏற்றுமதி: டிரேடிங் எகானமிக்ஸ் வழங்கியிருக்கும் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியா $5.63 பில்லியன் டாலர் (ரூ5,085 கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாகனங்களே அதிகம். 2025ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களில், வாகன ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் $1.86 பில்லியன் டாலர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான் ஏற்றுமதி மின்சாரம், மின்னணு உபகரணங்கள் - $612.38 மில்லியன் டாலர் இயந்திரங்கள், அணு உலைகள், பாய்லர்கள் - $560.87 மில்லியன் டாலர் கரிம இரசாயனங்கள் - $388.04 மில்லியன் டாலர் அலுமினியம் - $386.03 மில்லியன் டாலர் மருந்து பொருட்கள் - $211.20 மில்லியன் டாலர் இது தொடர்பாக பேசிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனத் தலைவர் பியூஷ் அரோரா, ``இந்தியா பல ஆண்டுகளாக வலுவான ஏற்றுமதி தளமாக இருந்து வருகிறது. எங்கள் நிறுவனம் மட்டும் இங்கிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஸ்கோடா கைலாக் நாங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மெக்சிகோ முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்று. அங்கு அதிகரித்து வரும் தேவை, எங்கள் தயாரிப்பின் மீதான ஈர்ப்பு ஆகியவை அதற்கு முக்கிய காரணம் என்றார். மெக்ஸிகோவிற்கு இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் ஸ்கோடா ஆட்டோ கிட்டத்தட்ட 50% ஏற்றுமதி செய்கிறது, அதைத் தொடர்ந்து ஹூண்டாய், நிசான் மற்றும் சுஸுகி ஆகியவை அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி?
குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ'விசா!
எந்த நாட்டினராக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அமெரிக்க குடிமகனாகக் கருதப்படும் - இது அமெரிக்காவின் சட்டம். அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இதற்கு தற்போது செக் வைத்துள்ளது அமெரிக்க தூதரகம். நேற்று இந்திய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... அமெரிக்க குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப் பயணம் மேற்கொள்வது தெரிந்தால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி, இனி அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது நடக்காது. அமெரிக்க தூதரக அதிகாரிக்கு பயணத்தில் இந்த மாதிரியான ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கூட, விசா ரத்து செய்யப்படலாம். அமெரிக்கா இப்படியெல்லாமா செய்வார்கள்? 'அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்வார்களா?' இந்த சந்தேகம் எழுவது நியாயம் தான். தரவுகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 33,000 குழந்தைகள் இந்த மாதிரியான பயணங்கள் மூலம் பிறக்கிறார்கள். இந்தப் பயணத்தைப் 'பிறப்பு சுற்றுலா (Birth Tourism)' என்று கூறுகிறார்கள். U.S. consular officers will deny tourist visa applications if they believe the primary purpose of travel is to give birth in the United States to obtain U.S. citizenship for the child. This is not permitted. pic.twitter.com/Xyq4lkK6V8 — U.S. Embassy India (@USAndIndia) December 11, 2025
TTV-யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains
TTV-யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains
சிக்கலில் K N Nehru, எப்படி நடக்கிறது டெண்டர் ஊழல்? | Arappor Jayaram Interview
சிக்கலில் K N Nehru, எப்படி நடக்கிறது டெண்டர் ஊழல்? | Arappor Jayaram Interview
SIR: Rahul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS
SIR: Rahul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS
கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம். பனையூர் தவெக அலுவலகம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில் தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர். ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும். கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை. பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி 'Party Fund' எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை? பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார். என்று பேசியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. 'சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது? நிர்மல் குமார் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாதுஎன்று பேசியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன் - தவெக நிர்மல் குமார் பதில்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. 'சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது? நிர்மல் குமார் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாதுஎன்று பேசியிருக்கிறார்.
கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!
இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும். தமிழச்சி தங்கபாண்டியன் SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. என்றார்.
கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!
இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும். தமிழச்சி தங்கபாண்டியன் SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. என்றார்.
நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன் - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது. அதில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.11)பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 14ஆம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடியுடனான சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதைப் பற்றி தான் எடப்பாடியிடம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
Vande Mataram | BJP அடுத்த டார்கெட் West Bengal, அதற்குத்தான்... - Peter Alphonse Interview Vikatan
'முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; கூட்டணி பேச தனிக்குழு!' - தவெக அப்டேட்ஸ்!
பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் கூட்டம் நடந்திருந்தது. இதன்முடிவில், தவெக சார்பில் தேர்தல் கூட்டணியை பேச ஒரு குழுவும், தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. TVK Vijay தவெகவின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 'தீர்மானம் 1 : ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 2: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 3 : இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 4 : அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
'முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; கூட்டணி பேச தனிக்குழு!' - தவெக அப்டேட்ஸ்!
பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் கூட்டம் நடந்திருந்தது. இதன்முடிவில், தவெக சார்பில் தேர்தல் கூட்டணியை பேச ஒரு குழுவும், தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. TVK Vijay தவெகவின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 'தீர்மானம் 1 : ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 2: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 3 : இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் 4 : அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி?
பொதுவாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4-5 வாரங்களில், வருமான வரி ரீஃபண்ட் கிடைத்துவிடும். ஆனால், சிலருக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். eportal.incometax.gov.in வலைதளத்திற்குள் செல்லவும். உங்களுடைய பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை வைத்து ' Log in ' செய்யவும். ஹோம் பேஜில் இருக்கும் ' e-File '-ஐ கிளிக் செய்யவும். வருமான வரி 'வேகத்தடை'யில் தங்கம் விலை; 'ஜெட் வேகத்தில்' வெள்ளி விலை - ஏன்? இப்போது முதலீடு செய்யலாமா? Income Tax Returns > View Filed Returns என அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கவும். இப்போது வரும் பக்கத்தில், எந்த ஃபைலிங்கிற்கான ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்ய வேண்டுமோ, அதை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரீஃபண்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். குறிப்பு: வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவும் அதே பிராசஸ் தான். வருமான வரி ரீஃபண்ட் ஏன் தாமதமாகலாம்? வங்கிக் கணக்கு தவறாக பதிவு செய்திருந்தால், ரீஃபண்டில் பிரச்னை ஏற்படலாம். அதை செக் செய்யுங்கள். ஆதார் - பான் இணைப்பில் தவறு இருந்தாலும், ரீஃபண்டில் சிக்கல் ஏற்படும். தவறாக எதாவது பதிவு செய்திருந்தாலோ, கூடுதல் ஆவணம் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டுமா என்பதை செக் செய்யுங்கள். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
பனையூரில் பா.ம.க பாலு; விஜய்க்கு அழைப்பு விடுத்த அன்புமணி
இன்று (டிச.11) காலை 10 மணிக்கு பனையூரில் தவெக மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அன்புமணியின் ஆதரவாளரான பாமக பாலு தவெக அலுவலம் வந்திருக்கிறார். தவெக ஆலோசனைக் கூட்டம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் மா.செக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டம் முடிகிற தருவாயில் அன்புமணியின் ஆதரவாளரான அட்வகேட் பாலு பாமக நிர்வாகிகளோடு பனையூர் அலுவலகம் வந்தார். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார். பா.ம.க பாலு இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விஜய்யின் தவெகவும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களும் தவெக சார்பில் கட்டாயம் கலந்துகொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரமில்லை என சட்டமன்றத்தில் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். பா.ம.க வழக்கறிஞர் பாலு 17 ஆம் தேதி நடக்கும் போராட்டம் தமிழக அரசியலில் முக்கியமான போராட்டமாக இருக்கும். தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை அழுத்தமாக கூறுகிறார்கள். திமுகவை தவிர எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.இது போராட்டத்துக்கான அழைப்பு என்று பேசினார். பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?
பனையூரில் பா.ம.க பாலு; விஜய்க்கு அழைப்பு விடுத்த அன்புமணி
இன்று (டிச.11) காலை 10 மணிக்கு பனையூரில் தவெக மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அன்புமணியின் ஆதரவாளரான பாமக பாலு தவெக அலுவலம் வந்திருக்கிறார். தவெக ஆலோசனைக் கூட்டம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் மா.செக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டம் முடிகிற தருவாயில் அன்புமணியின் ஆதரவாளரான அட்வகேட் பாலு பாமக நிர்வாகிகளோடு பனையூர் அலுவலகம் வந்தார். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார். பா.ம.க பாலு இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விஜய்யின் தவெகவும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களும் தவெக சார்பில் கட்டாயம் கலந்துகொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரமில்லை என சட்டமன்றத்தில் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். பா.ம.க வழக்கறிஞர் பாலு 17 ஆம் தேதி நடக்கும் போராட்டம் தமிழக அரசியலில் முக்கியமான போராட்டமாக இருக்கும். தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை அழுத்தமாக கூறுகிறார்கள். திமுகவை தவிர எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.இது போராட்டத்துக்கான அழைப்பு என்று பேசினார். பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?
`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்
பா.ஜ.க-வில் பதவி! ம.தி.மு.க-வில் இணைந்தவருக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன். பின்னர் ம.தி.மு.க-வில் இணைந்த அவர், கடந்த 2024-ல் ம.தி.மு.க-விலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், கடந்த நவம்பர் 26-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி வைகோ முன்னிலையில் மீண்டும் ம.தி.மு.க-வில் இணைந்தார் குருநாதன். அது குறித்த அறிவிப்பும் ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி, பா.ஜ.க -வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் ம.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ குருநாதனுக்கு, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பா.ஜ.க-வினர், ‘ம.தி.மு.க-வில் இணைந்துவிட்ட குருநாதனுக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கியது எப்படி... அதுவும், தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாமல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி பதவி வழங்கினார்..?’ என்று கொந்தளிக்கிறார்கள்! கடுப்பான மதுரை தி.மு.க! மேடை ஏறிய மாணிக்கம் தாகூர் பல ஆண்டுகளாக நீடித்துவரும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தற்போது ஏக்கப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. ‘தி.மு.க உடனான கூட்டணியை முறிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸில் உருவாகியிருக்கும் புரட்சிப் படைக்கு, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் தளபதியாக வழிநடத்துகிறாராம். இந்நிலையில், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், எம்.பி என்ற முறையில் மாணிக்கம் தாகூரும் பங்கேற்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கடுப்பான மதுரை தி.மு.க-வினர், ‘காங்கிரஸ் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். மாணிக்கம் தாகூர் குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் இரவு பகல் பாராமால் மாணிக்கத்துக்காக வேலை பார்த்தோம். அந்த நன்றியில்லாமல், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள்...அவர்களை இப்படி மேடை ஏற்றுவது நியாயமா...’ என்று கொதித்திருக்கிறார்கள். சில சீனியர் நிர்வாகிகள், மாணிக்கத்தைச் சாடைமாடையாகவும் விமர்சனம் செய்தார்களாம். இதனால் கடுப்பான மாணிக்கம் தாகூர், விழா முடிந்த அடுத்த நொடி மின்னலாகக் கிளப்பிவிட்டாராம்! கதறும் தம்பிகள்..! பொதுச்செயலாளர் பதவி டம்மிதான்... நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில், ஈழ உணர்வும் நிர்வாகத் திறமையும் கொண்டவர்களை நியமித்து வந்தார் சீமான். மறைந்த தடா சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து, சீமானைக் கண்டிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரது மறைவிற்குப் பிறகு, சீமானின் மனைவி கயல்விழியைப் பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அதற்கு உட்கட்சிக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2024 ஜனவரியில் நடந்த பொதுக்குழுவில், மருத்துவர் திருமால்செல்வன் என்பவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தார் சீமான். திருமால்செல்வன் ஆனால், அவர் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தகவல்கூட பொதுக்குழுவில் அறிவிக்கப்படவில்லை. தற்போது, திருமால்செல்வனை டம்மியாக வைத்திருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘திருமால்செல்வனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், டம்மியாகவே வைத்திருக்கிறார் அண்ணன். தன்னை எதிர்த்து ஒருவார்த்தைகூட யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பவர் உள்ள பதவியை இப்படியே டம்மியாக்கி வைத்திருந்தால், கட்சி எப்படிதான் வளரும்...’ எனக் குமுறுகிறார்கள் தம்பிகள்! மிஸ்டர் கழுகு: நெருக்கடியில் நேரு... வசூல் டார்கெட்டில் ‘ஜோதி’ மாண்புமிகு! தொகுதி மாற நினைக்கும் நயினார்! கட்டமைப்பு போடாத அ.தி.மு.க... 2001-ம் ஆண்டு முதலே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். மொத்தம் நான்கு முறை அ.தி.மு.க சார்பாகவும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்ட அவருக்கு, மூன்று முறை வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக உயர்ந்திருக்கும் நயினார், இம்முறையும் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க படுமோசமான நிலைக்குச் சென்றிருப்பதால், அங்கு போட்டியிட யோசிக்கிறாராம் நயினார். நயினார் நாகேந்திரன் ‘திருநெல்வேலியிலுள்ள அ.தி.மு.க வாக்குகள்தான் நயினார் வெற்றியடைய காரணம். தற்போது திருநெல்வேலி மாநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் தச்சை கணேசராஜா, தனக்குக் கீழ் இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், வெறும் 15 சதவிகித பூத் கமிட்டியைத்தான் முழுமையாக அமைத்திருக்கிறார். அ.தி.மு.க-வை நம்பி நின்றால் தோல்வி உறுதி என்று முடிவெடுத்திருக்கும் நயினார், விருதுநகரிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்! கிளம்பத் தயாராகும் சீனியர்கள்! கூட்டணிக்கு மறுக்கும் தினகரன்... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியை மீண்டும் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, என்.டி.ஏ கூட்டணிக்குள் தினகரன் வருவதற்குத் தடையாக இருந்தது எடப்பாடி பழனிசாமிதான். இம்முறை ஆர்.எஸ்.எஸ் முக்கியமான தலைவர்களே நேரடியாக எடப்பாடியிடம் பேசி, தினகரனைக் கூட்டணிக்குள் கொண்டுவர கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், டி.டி.வி முறுக்கிக் கொண்டுவிட்டார். ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்... ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி’ என்று அடம்பிடிக்கிறார். அவரது நிலைப்பாடு, அ.ம.மு.க-வுக்குள் பெருத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம். டிடிவி தினகரன் அதாவது, ‘இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் பதவியே இல்லாமல், செலவு மட்டும் செய்வது. என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்று வெற்றிபெற்றால்தான், அதிகாரத்தை அடைய முடியும். ஆனால், தனது தனிப்பட்ட ஈகோவால் கட்சியோடு சேர்த்து நம்மையும் சீரழிக்கிறார் தினகரன்... அவரிடம் பேசி எப்படியாவது கூட்டணியில் இணைய வையுங்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமான நபர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள் சில அ.ம.மு.க சீனியர்கள். ஒருவேளை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால், கூண்டோடு அ.தி.மு.க பக்கம் சாயவும் தயாராகி வருகிறார்களாம் அந்த சீனியர்கள்!
`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்
பா.ஜ.க-வில் பதவி! ம.தி.மு.க-வில் இணைந்தவருக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன். பின்னர் ம.தி.மு.க-வில் இணைந்த அவர், கடந்த 2024-ல் ம.தி.மு.க-விலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், கடந்த நவம்பர் 26-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி வைகோ முன்னிலையில் மீண்டும் ம.தி.மு.க-வில் இணைந்தார் குருநாதன். அது குறித்த அறிவிப்பும் ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி, பா.ஜ.க -வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் ம.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ குருநாதனுக்கு, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பா.ஜ.க-வினர், ‘ம.தி.மு.க-வில் இணைந்துவிட்ட குருநாதனுக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கியது எப்படி... அதுவும், தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாமல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி பதவி வழங்கினார்..?’ என்று கொந்தளிக்கிறார்கள்! கடுப்பான மதுரை தி.மு.க! மேடை ஏறிய மாணிக்கம் தாகூர் பல ஆண்டுகளாக நீடித்துவரும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தற்போது ஏக்கப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. ‘தி.மு.க உடனான கூட்டணியை முறிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸில் உருவாகியிருக்கும் புரட்சிப் படைக்கு, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் தளபதியாக வழிநடத்துகிறாராம். இந்நிலையில், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், எம்.பி என்ற முறையில் மாணிக்கம் தாகூரும் பங்கேற்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கடுப்பான மதுரை தி.மு.க-வினர், ‘காங்கிரஸ் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். மாணிக்கம் தாகூர் குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் இரவு பகல் பாராமால் மாணிக்கத்துக்காக வேலை பார்த்தோம். அந்த நன்றியில்லாமல், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள்...அவர்களை இப்படி மேடை ஏற்றுவது நியாயமா...’ என்று கொதித்திருக்கிறார்கள். சில சீனியர் நிர்வாகிகள், மாணிக்கத்தைச் சாடைமாடையாகவும் விமர்சனம் செய்தார்களாம். இதனால் கடுப்பான மாணிக்கம் தாகூர், விழா முடிந்த அடுத்த நொடி மின்னலாகக் கிளப்பிவிட்டாராம்! கதறும் தம்பிகள்..! பொதுச்செயலாளர் பதவி டம்மிதான்... நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில், ஈழ உணர்வும் நிர்வாகத் திறமையும் கொண்டவர்களை நியமித்து வந்தார் சீமான். மறைந்த தடா சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து, சீமானைக் கண்டிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரது மறைவிற்குப் பிறகு, சீமானின் மனைவி கயல்விழியைப் பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அதற்கு உட்கட்சிக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2024 ஜனவரியில் நடந்த பொதுக்குழுவில், மருத்துவர் திருமால்செல்வன் என்பவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தார் சீமான். திருமால்செல்வன் ஆனால், அவர் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தகவல்கூட பொதுக்குழுவில் அறிவிக்கப்படவில்லை. தற்போது, திருமால்செல்வனை டம்மியாக வைத்திருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘திருமால்செல்வனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், டம்மியாகவே வைத்திருக்கிறார் அண்ணன். தன்னை எதிர்த்து ஒருவார்த்தைகூட யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பவர் உள்ள பதவியை இப்படியே டம்மியாக்கி வைத்திருந்தால், கட்சி எப்படிதான் வளரும்...’ எனக் குமுறுகிறார்கள் தம்பிகள்! மிஸ்டர் கழுகு: நெருக்கடியில் நேரு... வசூல் டார்கெட்டில் ‘ஜோதி’ மாண்புமிகு! தொகுதி மாற நினைக்கும் நயினார்! கட்டமைப்பு போடாத அ.தி.மு.க... 2001-ம் ஆண்டு முதலே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். மொத்தம் நான்கு முறை அ.தி.மு.க சார்பாகவும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்ட அவருக்கு, மூன்று முறை வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக உயர்ந்திருக்கும் நயினார், இம்முறையும் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க படுமோசமான நிலைக்குச் சென்றிருப்பதால், அங்கு போட்டியிட யோசிக்கிறாராம் நயினார். நயினார் நாகேந்திரன் ‘திருநெல்வேலியிலுள்ள அ.தி.மு.க வாக்குகள்தான் நயினார் வெற்றியடைய காரணம். தற்போது திருநெல்வேலி மாநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் தச்சை கணேசராஜா, தனக்குக் கீழ் இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், வெறும் 15 சதவிகித பூத் கமிட்டியைத்தான் முழுமையாக அமைத்திருக்கிறார். அ.தி.மு.க-வை நம்பி நின்றால் தோல்வி உறுதி என்று முடிவெடுத்திருக்கும் நயினார், விருதுநகரிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்! கிளம்பத் தயாராகும் சீனியர்கள்! கூட்டணிக்கு மறுக்கும் தினகரன்... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியை மீண்டும் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, என்.டி.ஏ கூட்டணிக்குள் தினகரன் வருவதற்குத் தடையாக இருந்தது எடப்பாடி பழனிசாமிதான். இம்முறை ஆர்.எஸ்.எஸ் முக்கியமான தலைவர்களே நேரடியாக எடப்பாடியிடம் பேசி, தினகரனைக் கூட்டணிக்குள் கொண்டுவர கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், டி.டி.வி முறுக்கிக் கொண்டுவிட்டார். ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்... ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி’ என்று அடம்பிடிக்கிறார். அவரது நிலைப்பாடு, அ.ம.மு.க-வுக்குள் பெருத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம். டிடிவி தினகரன் அதாவது, ‘இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் பதவியே இல்லாமல், செலவு மட்டும் செய்வது. என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்று வெற்றிபெற்றால்தான், அதிகாரத்தை அடைய முடியும். ஆனால், தனது தனிப்பட்ட ஈகோவால் கட்சியோடு சேர்த்து நம்மையும் சீரழிக்கிறார் தினகரன்... அவரிடம் பேசி எப்படியாவது கூட்டணியில் இணைய வையுங்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமான நபர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள் சில அ.ம.மு.க சீனியர்கள். ஒருவேளை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால், கூண்டோடு அ.தி.மு.க பக்கம் சாயவும் தயாராகி வருகிறார்களாம் அந்த சீனியர்கள்!
மள்ளர் சேனை : ஒருபக்கம் பிற கட்சி பிரமுகர்கள்; மற்றொரு பக்கம் சமூக அமைப்புகள் - தவெக பிளான் என்ன?
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் ஜுரம் பற்ற தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்கிவிட்டன. தமிழக வெற்றிக் கழகமும் மற்ற கட்சிகளைப்போல அரசியல் பகடைகளை உருட்ட ஆரம்பித்துள்ளது . தவெக விஜய் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை கட்சியில் இணைத்ததன் மூலம் தி.மு.க, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்த த.வெ.க, தற்போது முக்கிய கட்சிகளில் ஓரங்கட்டுப்பட்டுள்ள அல்லது அதிருப்தியுடன் உள்ள பிரமுகர்களை தவெக-வுக்கு நகற்றிக் கொண்டுவரும் பிளானில் தீவிரமாக இறங்கியுள்ளது. கொங்கு மாவட்டங்களிலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய கட்சியினரை ஈரோடு நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து விஜய் முன்னிலையில் கட்சியில் இணைக்கின்ற பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே பிற கட்சி பிரமுகர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, அதிமுக-விலிருந்து ஒதுங்கி இருக்கும் மதுரை கிரம்மர் சுரேஷ் உள்ளிட்டோரை தவெக-வினர் அணுகி வருவதாக சொல்லப்படும் போது, இன்னும் சில பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுகிறது. அதில் முக்கியமாக, ராமநாதபுரம் முன்னாள் திமுக எம்பி, அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு சென்ற இரண்டு மாஜி அமைச்சர்கள், மறைந்த சிவகங்கை மாஜி அமைச்சரின் உறவினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிவகங்கை மாஜி அமைச்சர், அதே மாவட்ட அ.தி.மு.க மாஜி எம்.பி, திமுக பெண் பிரமுகர், தூத்துக்குடி திமுக மாஜி எம்பி, விருதுநகர் மாவட்ட அதிமுக மாஜி அமைச்சர், மதுரை அ.ம.மு.க-விலுள்ள பெண் பிரமுகர், சிவகங்கை காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ என்று பட்டியல் நீள்கிறது. இன்னொரு பக்கம், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்குள்ள சாதி சார்ந்த கட்சிகளையும், அமைப்புகளையும் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் வேலையிலும் தீவிரமாக இறஙகியுள்ளனர். ஏற்கனவே மறவர், அகமுடையார், தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியர், வெள்ளாளர், உடையார், பரதவர், யாதவர் அமைப்புகளும், கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கட்சியினர் சொல்கிறார்கள். சோலை பழனிவேல்ராசன்-புஸ்ஸி ஆனந்த் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் த.ம.மு.க ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று தேர்தலை சந்தித்திருந்தாலும் கூட்டணில் கட்சிகளின் உள்ளடி வேலைகளால் வெற்றியை எட்ட முடியாததால் அரசியலில் ஒரு சக்தியாக எழமுடியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக த.வெ.க-வுக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனாலும் சில காரணங்களால் த.வெ.க தலைமை இவரை ஹோல்ட் பண்ணி வைத்துள்ளதாம். இந்நிலையில் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 'மள்ளர் சேனை' என்ற அமைப்பின் தலைவர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளது தற்போது தென் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மள்ளர் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசனிடம் பேசினேன், தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்கும், அதைத் தொடர்ந்து தேவர் குருபூஜைக்காகவும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வந்தபோது மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எங்கள் அமைப்பு குறித்து கேட்டார், பின்பு தென் மாவட்ட அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம், மேலும் தேவேந்திர குல வேளார்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், அரசியல், அதிகாரத்தில் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநதித்துவம் குறித்தும் விளக்கினேன்,, என்றவர், தொடர்ந்து பேசும்போது, தமிழ்நாட்டு அரசியலில் சுப்பிரமணியசுவாமி பரபரப்பாக செயல்பட்ட 96 காலகட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் அவருடன் பயணித்தார்கள், அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், அதிலிருந்துதான் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நானும் சமயநல்லூரில் போட்டியிட்டு பொது வாழ்க்கையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினருடனும் நெருக்கமாக பழகுவேன். சோலை பழனிவேல்ராசன் தென் மாவட்டத்தில் மட்டுமின்றி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெருவாரியாக வாழும் தேவேந்திரகுல வேளாள மக்கள் அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில் முன்னேறி வரவேண்டும், அனைத்து சமூகத்தினருடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் மள்ளர் சேனையை ஆரம்பித்து 'சுய சாதிப் பற்று, பிற சாதி நட்பு' என்ற கொள்கையுடன் சமுதாய மக்களுக்கு செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் சமூகத்துக்கு நன்மை செய்வார்கள் என்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வந்தாலும் வாக்குகளைப் பெற்ற பின் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. வாக்கு வங்கியாக மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்கள் மக்களை ஏமாற்றுகிறது, சமீபகாலமாக தேவேந்திர குல மக்கள் இந்தக் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதனால், அனைத்து சமுதாய மக்களையும் சமமாக பார்க்கும், இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாத, இளைஞர்கள் விரும்புகின்ற விஜய் தலைமையிலான த.வெ.க மீது எங்கள் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, இதை த.வெ.க பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார். சோலை பழனிவேல்ராசன் மள்ளர் சேனையுடன் த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதுபோல் இன்னும் பல சமூக அமைப்புகளுடன் தவெக தலைமை தொடர்பு கொண்டு வருகிறது. இதற்கிடையே திருவாரூரில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்துக்கு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரனை, திருச்சி வேலுசாமி சந்தித்துப் பேசியுள்ளதுபோல சோலை பழனிவேல்ராசனும் ஆனந்தை சந்தித்துப் பேசியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' - பனையூரில் நாஞ்சில் சம்பத்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன். பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்' என்றார். நாஞ்சில் சம்பத் S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது. TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?
TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' - பனையூரில் நாஞ்சில் சம்பத்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன். பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்' என்றார். நாஞ்சில் சம்பத் S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது. TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?
அந்த மாடல் பொண்ணுகிட்ட நான் உங்களுக்காக மன்னிப்பு கேட்குறேன்- காங்கிரஸை காட்டமாக விமர்சித்த கங்கனா
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று (டிச.10) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரணாவத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கங்கனா ரணாவத் பேசுகையில், இந்த ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தினசரி இடையூறுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. SIR குறித்த விவாதத்தின்போது கத்திக் கூச்சலிட்டு மிரட்ட முயன்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களைத் தவிர, அவர்கள் அவையை நடத்தவே விடவில்லை. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பட்டம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடுகின்றனர். பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை. மாறாக, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அது காலாவதியான நடைமுறை ஆகிவிட்டது. ஹரியானா தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் காட்டுகிறார்கள். அந்த பெண், இதுவரை இந்தியாவிற்கு ஒருமுறைகூட வந்தது இல்லை என்றும், தனக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கமளித்துவிட்டார். ஆனால் இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவையில் காட்டுகிறார்கள். நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளைக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். `பழைய விஷயங்களை விடுங்கள்' எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார். ஆனால் அதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி, உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்ததில்லை என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.
``நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்
திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது. ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன். அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன். சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர். முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன். திருத்துறைப்பூண்டி அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார். முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார். `மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்? இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன். அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அண்ணா அறிவாலயம் கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை. நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார். ``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
``நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்
திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது. ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன். அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன். சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர். முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன். திருத்துறைப்பூண்டி அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார். முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார். `மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்? இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன். அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அண்ணா அறிவாலயம் கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை. நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார். ``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி
ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா
US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி
ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா
``நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புறியா?” - ரவுடி தாக்கியதில் உயிரிழந்த கொரியர் ஊழியர்
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31) திருமணமாகாத இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். மருதாநல்லுார், கரிகுளத்தெருவைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. ரவுடியான இவரின் பெயர் போலீஸார் ரவுடி பட்டியலில் உள்ளது. கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்கிறார்கள். கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு புகழேந்தி கொரியர் டெலிவரி செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது முதல் அவர் செல் நம்பரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ' என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் சொல்லியுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த சிபிசக்கரவர்த்தி (33) தனது நண்பர்கள் சிலருடன் சென்று, கடந்த 8ம் தேதி, சிவபுரம் புறவழிச் சாலையில் புகழேந்தியிடம் பேசியுள்ளார். அப்போது நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் புகழேந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் கேட்டதற்கு நாய் குறுக்கே வந்து கீழே விழுந்துட்டேன் என கூறி தாக்கியதை மறைத்து விட்டார். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகழேந்தியை பரிசோதனை செய்த டாக்டர், இவர் விழவில்லை, யாரோ அடித்திருக்கிறார்கள் என அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்தவற்றை சொல்லியுள்ளார். உயிரிழந்த புகழேந்தி இதற்கிடையில் உடல்நிலை மோசமான நிலையில், புகழேந்தியை, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, புகழேந்தி உயிரிழந்தார். இது குறித்து, அவரது உறவினர்கள், நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிபிசக்கரவர்த்தி, இதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(26), கும்பகோணம், மேல கொட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணா(33), கும்பகோணம், முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ்(26), திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த குபேரன்(27) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிபிசக்கரவர்த்தி ரவுடி பட்டியலில், இருப்பதால் இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது
``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி
``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி
BJP தலைமையைச் சீண்டும் EPS, Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS
Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains
Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains
மனித உரிமைகள் நாள்: உலக மனித கண்ணியத்திற்கான விழிப்புணர்வு தினம் டிசம்பர் 10 The post மனித உரிமைகள் நாள் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் குழுக்கள்’பட்டியலில் சேர்ப்பு
கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை: நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் The post கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் குழுக்கள்’ பட்டியலில் சேர்ப்பு appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
TVK வை அட்டாக் பண்ணலைன்னா... | எடப்பாடியை எச்சரிக்கும் KC Palanisamy interview | Vijay
TVK வை அட்டாக் பண்ணலைன்னா... | எடப்பாடியை எச்சரிக்கும் KC Palanisamy interview | Vijay
கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!
செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா மின்சார வாகனங்கள் செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா
SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!
நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது. நேற்று (டிச 9) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது; சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. RSS ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி சட்டத்திற்கு எதிராக நடந்து வருகிறது. பிரதமரும், அமித் ஷாவும் இந்திய தேர்தல் ஆணையத்த்தை சுதந்திரமாகச் செயல்படவிடுவதில்லை என்று குற்றச்சாட்டிப் பேசியிருந்தார். ராகுல் காந்தி ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் இன்றைய மக்களவையில் இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, SIR பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் 'தேர்தல் சீர்திருத்தங்கள்' என்று வரும்போது அதுபற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். பதில் சொல்லாமல் நாங்கள் அதிலிருந்து எங்கும் ஓடி ஒளிய மாட்டோம் என்பதை இங்குச் சொல்லிக் கொள்கிறோம். SIR நடைமுறை நாங்கள் முதன்முதலில் கொண்டுவந்தது அல்ல. முதல் SIR, 1952-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 1957, 1961, 1965-66, 1983-84 ஆண்டுகளில் இது நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நடத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா ஹரியானாவில் ஒரு வீட்டில் 501 வாக்குகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். 265-வது வீடு ஒரு சிறிய வீடு அல்ல என்றும், ஒரு குடும்பம் ஒரு ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. வீட்டிற்கு எண் இல்லை, மூன்று தலைமுறைகள் அந்த வீட்டில் வசித்து வருகின்றன. அவர்கள் போலி வீடும் அல்ல, மோசடி வாக்காளர்களும் அல்ல. அமித் ஷாவின் பேச்சிற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அமித் ஷா ஜி ஹரியானா பற்றிப் பேசினார். அவர் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்டார். இதுபோல வேறு பல முறைகேடுகள் நடந்ததற்கான உதாரணங்களும் ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஹரியானாவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபற்றி என்னுடன் விவாதிக்க அமித் ஷா ஜி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வரத் தயாரா? என்று சவால் விடுத்தார் ராகுல். ராகுல் காந்தி, அமித் ஷா அதற்கு அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் முதலில் எனது பதில்களை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். நான் எதைப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். அதை நீங்கள் சொல்லக் கூடாது. மக்களவையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். மக்களவையின் விவாதத்தை எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது. உங்கள் விருப்பதிற்குகெல்லாம் மக்களவை செயல்படாது என்றார் அமித் ஷா. உங்கள் தோல்விக்குக் காரணம் நீங்கள்தான்; EVM அல்லது SIR இல்லை - அமித் ஷா பீகார் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, பீகாரில் உங்கள் தேர்தல் பேரணிகளின்போது 'வாக்குத் திருட்டு (vote chori)' என்று மக்களிடையே பிரசாரம் செய்தீர்கள். ஆனாலும் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள். உங்கள் தோல்விக்குக் காரணம் உங்களின் தலைமையும், கட்சியின் செயல்பாடுகளும்தான். EVM அல்லது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) காரணமல்ல. நான் சொல்வது தவறு என்று நினைத்தால், உங்களது காங்கிரஸ் கட்சிக்காரர்களே ஏன் அத்தனை தேர்தல்களில் தோற்றோம் என்பதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வார்கள், உங்களிடம் கேள்வி கேட்பார்கள் என்று பேசியிருக்கிறார் அமித் ஷா.
SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!
நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது. நேற்று (டிச 9) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது; சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. RSS ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி சட்டத்திற்கு எதிராக நடந்து வருகிறது. பிரதமரும், அமித் ஷாவும் இந்திய தேர்தல் ஆணையத்த்தை சுதந்திரமாகச் செயல்படவிடுவதில்லை என்று குற்றச்சாட்டிப் பேசியிருந்தார். ராகுல் காந்தி ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் இன்றைய மக்களவையில் இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, SIR பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் 'தேர்தல் சீர்திருத்தங்கள்' என்று வரும்போது அதுபற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். பதில் சொல்லாமல் நாங்கள் அதிலிருந்து எங்கும் ஓடி ஒளிய மாட்டோம் என்பதை இங்குச் சொல்லிக் கொள்கிறோம். SIR நடைமுறை நாங்கள் முதன்முதலில் கொண்டுவந்தது அல்ல. முதல் SIR, 1952-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 1957, 1961, 1965-66, 1983-84 ஆண்டுகளில் இது நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் காங்கிரஸ் SIR மூலம் வாக்குத் திருட்டு செய்துதான் ஆட்சிக்கு வந்ததா? உள்துறை அமைச்சர் அமித் ஷா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா ஹரியானாவில் ஒரு வீட்டில் 501 வாக்குகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். 265-வது வீடு ஒரு சிறிய வீடு அல்ல என்றும், ஒரு குடும்பம் ஒரு ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. வீட்டிற்கு எண் இல்லை, மூன்று தலைமுறைகள் அந்த வீட்டில் வசித்து வருகின்றன. அவர்கள் போலி வீடும் அல்ல, மோசடி வாக்காளர்களும் அல்ல. அமித் ஷாவின் பேச்சிற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அமித் ஷா ஜி ஹரியானா பற்றிப் பேசினார். அவர் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்டார். இதுபோல வேறு பல முறைகேடுகள் நடந்ததற்கான உதாரணங்களும் ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஹரியானாவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபற்றி என்னுடன் விவாதிக்க அமித் ஷா ஜி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வரத் தயாரா? என்று சவால் விடுத்தார் ராகுல். ராகுல் காந்தி, அமித் ஷா அதற்கு அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் முதலில் எனது பதில்களை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். நான் எதைப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். அதை நீங்கள் சொல்லக் கூடாது. மக்களவையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். மக்களவையின் விவாதத்தை எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது. உங்கள் விருப்பதிற்குகெல்லாம் மக்களவை செயல்படாது என்றார் அமித் ஷா. உங்கள் தோல்விக்குக் காரணம் நீங்கள்தான்; EVM அல்லது SIR இல்லை - அமித் ஷா பீகார் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, பீகாரில் உங்கள் தேர்தல் பேரணிகளின்போது 'வாக்குத் திருட்டு (vote chori)' என்று மக்களிடையே பிரசாரம் செய்தீர்கள். ஆனாலும் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள். உங்கள் தோல்விக்குக் காரணம் உங்களின் தலைமையும், கட்சியின் செயல்பாடுகளும்தான். EVM அல்லது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) காரணமல்ல. நான் சொல்வது தவறு என்று நினைத்தால், உங்களது காங்கிரஸ் கட்சிக்காரர்களே ஏன் அத்தனை தேர்தல்களில் தோற்றோம் என்பதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வார்கள், உங்களிடம் கேள்வி கேட்பார்கள். ராகுல் காந்தி EVM- மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். சரி EVM-யை ஹேக் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அழைத்தபோது இவர்கள் யாரும் செல்லவில்லை. என்று பேசினார். இதையடுத்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்றார். இதையடுத்து மக்களவையில் இருந்து வெளிநடுப்பு செய்தனர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், விவாதத்தை திசை திருப்பி மலுப்பலாக தற்காக்கும் விதமாகப் பேசுகிறார். நான் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைக் கேட்டேன், அதன் முறைகேடுகளைப் பற்றி கேள்வி கேட்டேன். அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை, EVM கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டேன், அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை - மக்களவையில் திருமா
நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக நடத்தப்படும் SIR-யை நிறுத்தாமல் நடத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. SIR-யை தேர்தயொட்டி அவசர அவசரமாக நடத்தாமல் தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்தவேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது வழக்கமாக நடைபெறுவதைப்போல இல்லாமல், மக்களின் குடியுரிமையை பரிசோதனை செய்யும் செயல்முறையாக இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. SIR - சிறப்பு தீவிர திருத்தம் ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அது அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது. வாக்குரிமையை மட்டுமல்லாமல் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கிறது. வாக்குரிமை இந்திய மக்களின் அடிப்படை உரிமை, அதை பறிக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கியாமான தூண். ஆனால், தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருதை நாடே இன்று உணர்ந்திருக்கிறது. மக்களவையில் திருமா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா தேர்தல் ஆணையம் மக்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. அதனால் குடியுரிமையைப் பரிசோதிக்கும், இந்த அரசியல் சட்டத்தை மீறிய SIR-யை உடனே நிறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒருகோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. இந்த EVM தேர்தல் முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று பேசியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூண் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை. ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. வாஞ்சிநாதன் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் என்று பேசியிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூண் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை. ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. வாஞ்சிநாதன் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் என்று பேசியிருக்கிறார்.
விஜயைப் பற்றி வாய்திறக்காத எடப்பாடி பழனிசாமி | அதிமுக பொதுக்குழு ஹைலைட்ஸ் | Full Speech
விஜயைப் பற்றி வாய்திறக்காத எடப்பாடி பழனிசாமி | அதிமுக பொதுக்குழு ஹைலைட்ஸ் | Full Speech
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பிரச்சாரத்தை இன்று (டிச.10) திமுக தொடங்கியிருக்கிறது. 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரச்சாரம் ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! அமித்ஷா தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!… pic.twitter.com/k6R8qQRPHB — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 10, 2025
`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர் 15 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார். அதுசம்பந்தமாக இந்தப் பொதுக்குழுவில் எதுவும் பேசப்படுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. EPS ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாக ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிருப்தியாளர்களை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பில்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆலோசனையின் முடிவில் வைத்தியலிங்கம், 'பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே கெடு. இல்லையேல் புதிய கட்சி ஆரம்பிப்போம்' என அறிவித்தார். EPS இதே சமயத்தில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்தார். கடந்த வாரத்தில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணித்து அமித்ஷாவையும் சந்தித்து வந்திருந்தார். இன்று பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும், 'அதிமுக ஒருங்கிணைவதையே அனைவரும் விரும்புகின்றனர்' என பேட்டி கொடுத்துச் சென்றார். இவற்றால்தான் அதிமுகவின் ஒருங்கிணைவு குறித்து பொதுக்குழுவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதாவது பேசப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி புள்ளிவிவரங்களுடன் அடுக்கிய அவரின் உரையின் மூலம் ஓ.பி.எஸ் நோக்கி இன்னமும் க்ரீன் சிக்னலை கொடுக்க தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? உரையின் தொடக்கத்திலேயே 2016 முதல் அதிமுக என்னென்ன இன்னல்களை சந்தித்து என பட்டியலிட்டு எடப்பாடி பேசியிருந்தார். அப்போது, 'எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் வாரிசுகள். நமக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? 2017 -ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தீர்மானம் கொண்டு வந்த போது நம்முடன் இருந்த சிலரே எதிர்க்கட்சியுடன் இணைந்து கைகோர்த்து சோதனைகளை ஏற்படுத்தினார்கள். எண்ணிப்பாருங்கள். அதையெல்லாம் தாண்டிதான் நாம் வந்தோம்' என்றார். பொதுக்குழு 2017 -ல் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் மேற்கொண்டு அவர் பக்கம் சில எம்.எல்.ஏக்கள் நின்ற சம்பவத்தைதான் எடப்பாடி பெயர் கூறாமல் குறிப்பிட்டிருந்தார். கட்சிக்குள் சேர்க்க ஓ.பி.எஸ் விடுத்த கெடுவுக்கு எடப்பாடியின் மறைமுக பதிலாகவே இதை பார்க்க முடிகிறது. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவரை கட்சிக்குள் எப்படி சேர்க்க முடியும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி கொடுத்த மெசேஜாகவும் புரிந்துகொள்ளலாம். அதேமாதிரி இன்னொரு இடத்தில், '2021 சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளை மொத்தமாக சேர்த்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் இழந்தோம். அது யாருடைய சூழ்ச்சியால் நடந்தது எனத் தெரியும்' என்றார். இதையும் இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். முன்னதாக பேசிய எஸ்.பி.வேலுமணி S.I.R குறித்துப் பேசியிருந்தார். அப்போது திமுக தில்லுமுல்லுகளை செய்யும். அதனால் அதிமுக நிர்வாகிகள் கவனமாக செயல்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார். எடப்பாடி இதை மேற்கோள்க்காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேமாதிரி, 2021 தேர்தலில் தினகரன் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியிருந்தார். அதை மனதில் வைத்து கூட எடப்பாடி பேசியிருக்கலாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் 'நீங்கள் எதிர்பார்க்கிற கூட்டணியை அண்ணன் எடப்பாடி ஏற்படுத்துவார்' என வேலுமணி பேசியிருந்தார். மேடையில் பேசிய அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த லைனை தொட்டுச் சென்றனர். பாமக, தேமுதிக போன்ற NDA வில் முன்பிருந்த கட்சிகளை மனதில் வைத்து இப்படி பேசியிருக்கலாம். ஆனால், 'ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டியே ஒன்னு திமுக இன்னொன்னு தவெக' எனப் பேசி வரும் விஜய் குறித்தும் யாரும் எதுவும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பேசியிருக்கிறார். ஆக, பிரசார பயணத்தின் போது எடப்பாடி போட்ட பிள்ளையார் சுழியை இன்னும் அழிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அதிமுக: தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக: கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!- சி.வி சண்முகம்
சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இருக்கும். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. திமுக மட்டும் நமக்கு எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள். ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அதிமுக: கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!- சி.வி சண்முகம்
சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இருக்கும். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. திமுக மட்டும் நமக்கு எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள். ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டன. சகோதரத்துவம் சமத்துவம் ஆகிவற்றை எக்காலமும் பேணிக்காப்பது நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோர்த்து சோதனைகளை உருவாக்கினார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க. அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். என்றார். (தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உரை இங்கு அப்டேட் செய்யப்படும்!) ``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்
அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டன. சகோதரத்துவம் சமத்துவம் ஆகிவற்றை எக்காலமும் பேணிக்காப்பது நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோர்த்து சோதனைகளை உருவாக்கினார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க. அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். என்றார். (தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உரை இங்கு அப்டேட் செய்யப்படும்!) ``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்
அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. நீண்டகால நண்பர் என்பதால் கோவையில் சந்தித்து பேசினோம். அதில் அரசியல் உறுதியாக இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலில்படி நடக்கிறது. அதன்அடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தேர்வு செய்து கொடுக்கிறது. தவெக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அனுமதி கேட்டபோது கூட காலஅவகாசம் கேட்டதாக செய்திகளில் பார்த்தேன்.” என்றார். டி.டி.வி.தினகரன் `125 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்’ என கேட்டதற்கு, ``யார் எதற்காக இடித்தார்கள் என்ன காரணம் என தெரியாமல் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செய்வதை மதங்களைக் கடந்து வாழ்கின்ற மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கூட்டணி ஆட்சி அமைகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும், அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர், ``மற்ற கட்சியில் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது உங்களுக்கே தெரியும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் போதை கலாசாரம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதது அதிகளவில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு முழுமையான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வரவேண்டுமென பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். எந்த கட்சியில் பேசுகிறது என்று தற்போது கூற முடியாது” என தெரிவித்தார்.
அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. நீண்டகால நண்பர் என்பதால் கோவையில் சந்தித்து பேசினோம். அதில் அரசியல் உறுதியாக இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலில்படி நடக்கிறது. அதன்அடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தேர்வு செய்து கொடுக்கிறது. தவெக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அனுமதி கேட்டபோது கூட காலஅவகாசம் கேட்டதாக செய்திகளில் பார்த்தேன்.” என்றார். டி.டி.வி.தினகரன் `125 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்’ என கேட்டதற்கு, ``யார் எதற்காக இடித்தார்கள் என்ன காரணம் என தெரியாமல் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செய்வதை மதங்களைக் கடந்து வாழ்கின்ற மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கூட்டணி ஆட்சி அமைகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும், அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர், ``மற்ற கட்சியில் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது உங்களுக்கே தெரியும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் போதை கலாசாரம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதது அதிகளவில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு முழுமையான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வரவேண்டுமென பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். எந்த கட்சியில் பேசுகிறது என்று தற்போது கூற முடியாது” என தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம கம உணவுகள்! | Album
அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்

28 C