ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன். இவருக்கு அரசியல் என்ட்ரி ஈசியாக கிடைத்திருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? ஆம்... நீங்கள் நினைப்பது உண்மை தான். இவருக்கு எளிதாக அரசியல் என்ட்ரி கிடைத்துவிட்டது. ஆனால், இவருக்கு மக்களிடம் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்துவிடவில்லை. போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே மக்களுக்கு இவருக்கு கொடுத்த பரிசு, 'தோல்வி'. ஸ்டாலின் முதல் அடி பள்ளிக்காலத்திலேயே தன்னுடைய கோபாலபுர நண்பர்களை ஒன்றிணைத்து இளைஞர் திமுக என்கிற அமைப்பைத் தொடங்கினார் ஸ்டாலின். இது ஸ்டாலினின் அரசியல் பயணத்தின் முதல் அடி என்றே கூறலாம். திமுக-வுக்காக பிரசாரம் செய்வது, நிதி திரட்டுவது, இளைஞர்களை ஒன்றிணைப்பது, கட்சி கொள்கைகளை வலியுறுத்தி நாடகங்கள் போடுவது போன்றவை தான் ஸ்டாலினின் ஆரம்பகால பணி. அப்படியிருந்த ஸ்டாலினை 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசு. இந்த சம்பவத்திற்கு பிறகு, ஸ்டாலினின் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து... இன்னும் வேகமானது. ஏற்றமும்... பதவிகளும்... 1980-ம் ஆண்டு, திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது. அந்த அணியின் தலைவர் ஸ்டாலின். அடுத்தடுத்து ஸ்டாலினுக்கு திமுக-வில் ஏற்றமும், பதவிகளும் கிடைத்தன. 1984-ம் ஆண்டு தன்னுடைய முதல் சட்டமன்ற தேர்தலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சந்தித்தார் ஸ்டாலின். ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். இவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுகவை சேர்ந்த KA கிருஷ்ணசாமி. ஸ்டாலினுடைய இந்தத் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தது. ஒன்று, இந்திரா காந்தி மறைவு ஏற்படுத்தி இருந்த அனுதாப அலை. மற்றொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்டாலின் 1984-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸும் தான் கூட்டணி. ஆக, இந்தக் கூட்டணி மீது இருந்த அனுதாப அலைகள் ஸ்டாலினின் வெற்றிக்கு உலை வைத்தது. அந்தத் தேர்தலில் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருந்தார். ஸ்டாலின் போட்டியிட்ட இரண்டாவது சட்டமன்ற தேர்தல் நடந்தது 1989-ல். இந்தத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியையே டிக் செய்திருந்தார் ஸ்டாலின். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தந்து ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நுழைவு பாஸ் வழங்கினர் மக்கள். இரண்டாம் தோல்வி அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், 1991-ம் ஆண்டு தனது மூன்றாம் தேர்தலில் போட்டியிட்டார் ஸ்டாலின். அந்த சமயத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நடந்திருந்தது. அதனால், அந்தத் தேர்தலில் திமுகவில் கருணாநிதி, பருதி இளம்வழுதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை... ஸ்டாலின் உட்பட. ஆக, ஸ்டாலின் சந்தித்த இரண்டு தேர்தல் தோல்விகளிலும் ஏதோ ஒருவகையில் அவருடைய 'தம்பி' ராகுல் காந்தியின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பு சம்பந்தப்பட்டிருந்திருக்கிறது. அடுத்து வந்த எந்தத் தேர்தல்களிலும் இதுவரை தோல்வியைத் தொடவில்லை ஸ்டாலின். எம்.எல்.ஏ, மேயர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் என தொடர்ந்து பதவிகளை வகித்து வருகிறார். ஆனால், அவற்றிலும் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஸ்டாலின் துணை முதலமைச்சர் பள்ளிக்காலத்தில் இருந்தே திமுக பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டாலினுக்கு முதன்முதலாக அமைச்சர் பதவி கிடைத்தது 2006-ம் ஆண்டு தான். இந்தத் தாமதத்திற்கு, அவர் மீது எழுந்த 'வாரிசு அரசியல்' விமர்சனங்களே முக்கிய காரணம். இதுபோக, கட்சியை தாண்டி இவருக்கு வீட்டிற்குள்ளேயே மு.க.அழகிரி, கனிமொழி என இரண்டு போட்டிகள் இருந்தது. இவற்றை எல்லாம் மெல்ல மெல்ல சமாளித்தும், தாண்டியும் ஸ்டாலின் பயணிக்க வேண்டியதாக இருந்தது. 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின். அடுத்து 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு மாறினார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு வெற்றி தான். ஆனால், திமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை. ஆனால், திமுக சார்பாக எதிர்க்கட்சி தலைவராகி இருந்தார் ஸ்டாலின். அந்தக் காலகட்டத்தில் உடல்நிலை காரணத்தால் கருணாநிதியால் முன்னர் போல் இயங்க முடியவில்லை. அதனால், திமுக-வில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அது ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பதவியின் முக்கிய நோக்கமே கருணாநிதிக்கு பதிலாக ஸ்டாலின் செயலாற்றுவது ஆகும். 2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்தார். அதன் பிறகு, நடந்த கட்சித் தேர்தலில் ஸ்டாலினை திமுக தலைவராக்கியது அறிவாலாயம். ஸ்டாலின் 'முதலமைச்சர்' ஸ்டாலின் 2021-ம் ஆண்டு வழக்கம்போல தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். ஆனால், இந்த முறை முதலமைச்சர் வேட்பாளராக. 'ஜாதகத்தில் ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகமில்லை' என்கிற கேலி, கிண்டல்களை தாண்டி, 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ஆட்சியைக் கடந்து அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கப் போகிறார்.
ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன். இவருக்கு அரசியல் என்ட்ரி ஈசியாக கிடைத்திருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? ஆம்... நீங்கள் நினைப்பது உண்மை தான். இவருக்கு எளிதாக அரசியல் என்ட்ரி கிடைத்துவிட்டது. ஆனால், இவருக்கு மக்களிடம் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்துவிடவில்லை. போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே மக்களுக்கு இவருக்கு கொடுத்த பரிசு, 'தோல்வி'. ஸ்டாலின் முதல் அடி பள்ளிக்காலத்திலேயே தன்னுடைய கோபாலபுர நண்பர்களை ஒன்றிணைத்து இளைஞர் திமுக என்கிற அமைப்பைத் தொடங்கினார் ஸ்டாலின். இது ஸ்டாலினின் அரசியல் பயணத்தின் முதல் அடி என்றே கூறலாம். திமுக-வுக்காக பிரசாரம் செய்வது, நிதி திரட்டுவது, இளைஞர்களை ஒன்றிணைப்பது, கட்சி கொள்கைகளை வலியுறுத்தி நாடகங்கள் போடுவது போன்றவை தான் ஸ்டாலினின் ஆரம்பகால பணி. அப்படியிருந்த ஸ்டாலினை 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசு. இந்த சம்பவத்திற்கு பிறகு, ஸ்டாலினின் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து... இன்னும் வேகமானது. ஏற்றமும்... பதவிகளும்... 1980-ம் ஆண்டு, திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டது. அந்த அணியின் தலைவர் ஸ்டாலின். அடுத்தடுத்து ஸ்டாலினுக்கு திமுக-வில் ஏற்றமும், பதவிகளும் கிடைத்தன. 1984-ம் ஆண்டு தன்னுடைய முதல் சட்டமன்ற தேர்தலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சந்தித்தார் ஸ்டாலின். ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். இவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுகவை சேர்ந்த KA கிருஷ்ணசாமி. ஸ்டாலினுடைய இந்தத் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தது. ஒன்று, இந்திரா காந்தி மறைவு ஏற்படுத்தி இருந்த அனுதாப அலை. மற்றொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்டாலின் 1984-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸும் தான் கூட்டணி. ஆக, இந்தக் கூட்டணி மீது இருந்த அனுதாப அலைகள் ஸ்டாலினின் வெற்றிக்கு உலை வைத்தது. அந்தத் தேர்தலில் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருந்தார். ஸ்டாலின் போட்டியிட்ட இரண்டாவது சட்டமன்ற தேர்தல் நடந்தது 1989-ல். இந்தத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியையே டிக் செய்திருந்தார் ஸ்டாலின். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தந்து ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நுழைவு பாஸ் வழங்கினர் மக்கள். இரண்டாம் தோல்வி அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், 1991-ம் ஆண்டு தனது மூன்றாம் தேர்தலில் போட்டியிட்டார் ஸ்டாலின். அந்த சமயத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நடந்திருந்தது. அதனால், அந்தத் தேர்தலில் திமுகவில் கருணாநிதி, பருதி இளம்வழுதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை... ஸ்டாலின் உட்பட. ஆக, ஸ்டாலின் சந்தித்த இரண்டு தேர்தல் தோல்விகளிலும் ஏதோ ஒருவகையில் அவருடைய 'தம்பி' ராகுல் காந்தியின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பு சம்பந்தப்பட்டிருந்திருக்கிறது. அடுத்து வந்த எந்தத் தேர்தல்களிலும் இதுவரை தோல்வியைத் தொடவில்லை ஸ்டாலின். எம்.எல்.ஏ, மேயர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் என தொடர்ந்து பதவிகளை வகித்து வருகிறார். ஆனால், அவற்றிலும் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஸ்டாலின் துணை முதலமைச்சர் பள்ளிக்காலத்தில் இருந்தே திமுக பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டாலினுக்கு முதன்முதலாக அமைச்சர் பதவி கிடைத்தது 2006-ம் ஆண்டு தான். இந்தத் தாமதத்திற்கு, அவர் மீது எழுந்த 'வாரிசு அரசியல்' விமர்சனங்களே முக்கிய காரணம். இதுபோக, கட்சியை தாண்டி இவருக்கு வீட்டிற்குள்ளேயே மு.க.அழகிரி, கனிமொழி என இரண்டு போட்டிகள் இருந்தது. இவற்றை எல்லாம் மெல்ல மெல்ல சமாளித்தும், தாண்டியும் ஸ்டாலின் பயணிக்க வேண்டியதாக இருந்தது. 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின். அடுத்து 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு மாறினார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு வெற்றி தான். ஆனால், திமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை. ஆனால், திமுக சார்பாக எதிர்க்கட்சி தலைவராகி இருந்தார் ஸ்டாலின். அந்தக் காலகட்டத்தில் உடல்நிலை காரணத்தால் கருணாநிதியால் முன்னர் போல் இயங்க முடியவில்லை. அதனால், திமுக-வில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அது ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பதவியின் முக்கிய நோக்கமே கருணாநிதிக்கு பதிலாக ஸ்டாலின் செயலாற்றுவது ஆகும். 2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்தார். அதன் பிறகு, நடந்த கட்சித் தேர்தலில் ஸ்டாலினை திமுக தலைவராக்கியது அறிவாலாயம். ஸ்டாலின் 'முதலமைச்சர்' ஸ்டாலின் 2021-ம் ஆண்டு வழக்கம்போல தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின். ஆனால், இந்த முறை முதலமைச்சர் வேட்பாளராக. 'ஜாதகத்தில் ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகமில்லை' என்கிற கேலி, கிண்டல்களை தாண்டி, 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ஆட்சியைக் கடந்து அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கப் போகிறார்.
கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி காலம் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது. கொங்கு மண்டலம் பாஜகவும் இங்கு கணிசமாக வளர்ந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதைத் தக்க வைப்பதற்கு அதிமுக – பாஜக-வினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி இந்த முறை தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் மீண்டும் திருநெல்வேலியில் போட்டியிடப் போவதை சூசகமாக கூறிவிட்டார். அவரை போலவே பாஜக சீனியர் நிர்வாகிகள் தொகுதிகளை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். வானதி சீனிவாசன் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் பாஜக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தமுறை 3 தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்கின்றனர். இது குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசியபோது, “கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ இருப்பதால் அந்த தொகுதியை தான் மேலிடம் முதலில் கேட்கும். ஆனால் வானதி சீனிவாசன் தொகுதி மாறும் முடிவில் இருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். அண்ணாமலை கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அவர் சுமார் 4.50 லட்சம் வாக்குகளை பெற்றார். அந்த தேர்தல் நிறைவடைந்தவுடனேயே அவர் தன் முகவரியை கோவைக்கு மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் அவர் கரூருக்கு பதிலாக கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதுடன், நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயத்தினர் இருவருமே அங்கு அதிகமாக உள்ளனர். கோவை கடந்தமுறை அந்த 2 சமுதாயத்தினரும் அண்ணாமலைக்கு அதிக ஆதரவு தெரிவித்தனர் என்பதால் இந்த முடிவில் இருப்பதாக சொல்கிறார்கள். சிங்காநல்லூரில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர் ஜெயராமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அண்ணாமலை சத்தமே இல்லாமல் புறநகரில் உள்ள ஒரு தொகுதிக்கும் குறி வைத்து பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒரு சேர கொண்டுள்ள கிணத்துக்கடவு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கிணத்துக்கடவு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே அவர் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட ஆலோசனை நடத்தினார். அதனால் அவர் கிணத்துக்கடவை தேர்வு செய்தாலும் ஆச்சர்யம் இல்லை” என்றனர்.
கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி காலம் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது. கொங்கு மண்டலம் பாஜகவும் இங்கு கணிசமாக வளர்ந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதைத் தக்க வைப்பதற்கு அதிமுக – பாஜக-வினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி இந்த முறை தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் மீண்டும் திருநெல்வேலியில் போட்டியிடப் போவதை சூசகமாக கூறிவிட்டார். அவரை போலவே பாஜக சீனியர் நிர்வாகிகள் தொகுதிகளை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். வானதி சீனிவாசன் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் பாஜக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தமுறை 3 தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்கின்றனர். இது குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசியபோது, “கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ இருப்பதால் அந்த தொகுதியை தான் மேலிடம் முதலில் கேட்கும். ஆனால் வானதி சீனிவாசன் தொகுதி மாறும் முடிவில் இருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். அண்ணாமலை கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அவர் சுமார் 4.50 லட்சம் வாக்குகளை பெற்றார். அந்த தேர்தல் நிறைவடைந்தவுடனேயே அவர் தன் முகவரியை கோவைக்கு மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் அவர் கரூருக்கு பதிலாக கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதுடன், நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயத்தினர் இருவருமே அங்கு அதிகமாக உள்ளனர். கோவை கடந்தமுறை அந்த 2 சமுதாயத்தினரும் அண்ணாமலைக்கு அதிக ஆதரவு தெரிவித்தனர் என்பதால் இந்த முடிவில் இருப்பதாக சொல்கிறார்கள். சிங்காநல்லூரில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர் ஜெயராமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அண்ணாமலை சத்தமே இல்லாமல் புறநகரில் உள்ள ஒரு தொகுதிக்கும் குறி வைத்து பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒரு சேர கொண்டுள்ள கிணத்துக்கடவு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கிணத்துக்கடவு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே அவர் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட ஆலோசனை நடத்தினார். அதனால் அவர் கிணத்துக்கடவை தேர்வு செய்தாலும் ஆச்சர்யம் இல்லை” என்றனர்.
``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகம். அதற்காகவே சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்றோ எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா எனக் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். ஓபிஎஸ் இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து அ.தி.மு.க-வில் இணையும் தொண்டர்கள் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதைத் தொடர்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர் செல்வம் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அவர் 4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார். பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?
``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகம். அதற்காகவே சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்றோ எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா எனக் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். ஓபிஎஸ் இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து அ.தி.மு.க-வில் இணையும் தொண்டர்கள் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதைத் தொடர்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர் செல்வம் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அவர் 4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார். பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?
UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்
கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2012-ம் ஆண்டு சில விதிகளை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகும் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் அடிப்படியில், நீதிமன்ற ஆலோசனையின் பேரில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்த மாத தொடக்கத்தில் 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும். யுஜிசி-க்கு எதிரான போராட்டம் இந்தப் புதிய விதி, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் இந்த புதிய விதிகளுக்கு எதிராக ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. மேலும், இந்தப் புதிய விதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இது நிர்வாக ரீதியிலான குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, நிபுணர்களைக் கொண்டு இந்த விதிகளின் மொழியைச் செம்மைப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும். அதனால், 2012-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்களே உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் உத்தரவிட்டிருக்கின்றனர். சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?
`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டி போராடினர். இவர்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்கும் நிகழ்வுகளும் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் இதனால் மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன. அப்போது அலங்காநல்லூரில் போராடிய 64 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018 முதல் நடந்து வருகிறது. இதை தவிர மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'என்று அறிவித்தார். ஆனால், சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்தது இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, 5 பேர் முறையாக ஆஜராகத்தால் அவர்களை தவிர மீதமுள்ள 56 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டி போராடினர். இவர்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்கும் நிகழ்வுகளும் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் இதனால் மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன. அப்போது அலங்காநல்லூரில் போராடிய 64 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018 முதல் நடந்து வருகிறது. இதை தவிர மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'என்று அறிவித்தார். ஆனால், சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்தது இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, 5 பேர் முறையாக ஆஜராகத்தால் அவர்களை தவிர மீதமுள்ள 56 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி
தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார். இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஓபிஎஸ் எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள் என்றார். அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது! - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்
OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி
தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார். இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஓபிஎஸ் எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள் என்றார். அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது! - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்
OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி
தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார். இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஓபிஎஸ் எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள் என்றார். அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது! - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்
பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்
பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்தையுடன் விபத்துக்கு முன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது. “நாளை பேசலாம்” என்ற கடைசி வார்த்தை மும்பை வொர்லியைச் சேர்ந்த பிங்கி மாலி, தனது தந்தை சிவ்குமார் மாலியிடம் “அப்பா, நான் அஜித் பவாருடன் பாராமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு நான் நாந்தேட் செல்கிறேன். நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார். ஆனால் அந்த “நாளை” இனி ஒருபோதும் வராது என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார். “நான் என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். என் மகளின் உடலை மட்டும் தர வேண்டும். மரியாதையுடன் அவளது இறுதி சடங்கை செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே விருப்பம்,”என்று சிவ்குமார் மாலி தெரிவித்துள்ளார். பிங்கி மாலி சமீப காலமாக அஜித் பவாருடன், அதே சிறிய ரக விமானத்தில் பல பயணங்களில் இணைந்து சென்றதாகவும், அந்த நாளும் வழக்கம்போல தனது பணிக்காகவே விமானத்தில் இருந்ததாகவும் சிவ்குமார் கூறியுள்ளார். இந்த விமான விபத்து புதன்கிழமை காலை, புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையம் அருகே நடந்தது. டெல்லியைச் சேர்ந்த VSR வெஞ்சர்ஸ் நிறுவனம் இயக்கிய Learjet 45 ரக விமானம் (பதிவு எண்: VT-SSK) விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, பிரதான விமானி சுமித் கபூர் மற்றும் இணை விமானி ஷம்பாவி பாதக். இந்த விபத்தில் ஐவரும் உயிரிழந்தனர். விமானப் போக்குவரத்து விவரங்களின்படி, இந்த Learjet 45 விமானம் காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டது. காலை 8.45 மணியளவில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காலை 8.50 மணியளவில் பாராமதி அருகே விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவார், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி (Zilla Parishad) தேர்தல்களை முன்னிட்டு நடைபெற இருந்த நான்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பயணம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விசாரணைக்கு AAIB குழு இந்த விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, விமான விபத்து விசாரணை பணியகம் (Aircraft Accident Investigation Bureau – AAIB) சார்ந்த ஒரு குழு, டெல்லியிலிருந்து புனேவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் உடல் இன்று காலை பாராமதி மருத்துவ கல்லூரியில் இருந்து இறுதிச்சடங்கிற்காக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடி இருந்தனர். அங்கிருந்து வித்யா பிரதிஷ்தான் மைதானத்திற்கு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மறைந்த தலைவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது தவிர மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நிதின் கட்கரி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, சுப்ரியா சுலே, சரத்பவார், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், பிரபுல் பட்டேல் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். அஜித் பவாரின் மனைவி சுனேதிர பவார் தனது கணவர் உடல் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். சுனேத்ரா பவார் முன்னிலையில் அவரது இரண்டு மகன்களான பார்த் பவார் மற்றும் ஜெய்பவார் ஆகியோர் தங்களது தந்தைக்கு தீமூட்டி இறுதிச்சடங்குகளை செய்தனர். முன்னதாக அஜித்பவாரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அவர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுத காட்சியை நேரில் காண முடிந்தது. விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக இன்று தடயவியல் நிபுணர்களும், மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராமதிக்கு வந்திருந்தனர்.
'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026
2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு விளக்குகிறார்... இதுவரை 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் திருத்தங்களைத் தான் மத்திய பட்ஜெட்டில் பார்த்து வந்தோம். கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட் ஸ்பெஷலானது. ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம் இனி 'ஓகே' கொடுத்தால் போதும்! இந்த ஆண்டு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, இதுவரை நாம் வருமானம் சம்பந்தமான தகவல்களை நிரப்பி வருவோம். ஆனால், இனி அரசிடம் இருக்கும் தரவுகளை வைத்து, ஏற்கெனவே அந்தப் படிவம் நிரப்பப்பட்டிருக்கும். அதை செக் செய்து 'ஓகே' கொடுத்தால் மட்டும் போதும். உங்களது வருமான வரிக் கணக்கு ஈசியாக தாக்கல் ஆகிவிடும். இது குறித்து, கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வந்தார். ஆனால், இது இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது. வீட்டுக் கடனில் சலுகை இந்த ஆண்டு வருமானம் மற்றும் பென்சன்களில் Standard deduction அறிவிப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது ரியல் எஸ்டேட் கொஞ்சம் தோய்வில் இருக்கிறது. அதை பூஸ்ட் செய்யும் வகையில் இந்தப் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும். வீட்டுக் கடன் வட்டியில் சலுகைகள் இருக்கலாம். ரியல் எஸ்டேட் இந்த '5' அறிவிப்புகள் வந்தால், அது தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் 'Game Changer' | மத்திய பட்ஜெட் 2026 இந்தப் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு மிக முக்கியமான அறிவிப்புகள் வெளிவரலாம். மத்திய அரசு இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத்தைத் தாண்டி, விவசாய தொழில்நுட்பத்திற்கு அழைக்கலாம். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக 60 வயது மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... இனியும் அதிகரிக்கும். அதனால், அவர்களுக்கு ஏற்ற முதலீட்டுச் சலுகைகள்... தள்ளுபடிகள் மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுச் சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வருமான வரி ஸ்லாப்கள் கூட அதிகரிக்கப்படலாம். என்றார். தங்கம், வெள்ளியுடன் 'இதையும்' கவனிங்க; இதுவும் விலை ஏறும் - இப்போதே அலர்ட் ஆகிடுங்க! | Quick Alert
அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவார் எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அதிகமான நேரங்களை தொண்டர்களுடனும், கட்சிப்பணியிலும் ஈடுபடுத்திக்கொள்வார். அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி தனது சித்தப்பா சரத் பவாரிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். பாராமதியின் செல்லப்பிள்ளையாகவும், புனேயில் வலுவான சக்தியாகவும் விளங்கிய அஜித் பவார் பொதுவாக ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார். அவர் கண்கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விபத்து நடந்த இடம் குறிப்பாக சன்கிளாஸ் வகைகளில் மேபேக் ரகங்களில் இருந்து வழக்கமான ரே பான் வரை பலதரப்பட்ட பிராண்ட் சன்கிளாஸ்கள் அஜித்பவாரிடம் இருந்தது. லென்ஸ்கள் எப்பொழுதும் தடிமனாகவும், சாய்வாகவும், சில சமயங்களில் மென்மையானதாகவும், பெரும்பாலும் தடிமனான பிரேம்களுடன் இருக்கும். கைக்கடிகாரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். எங்கு செல்கிறோம் என்பதை பொறுத்து தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வார். சட்டசபை கூட்டத் தொடர்களிலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சஃபாரி சூட் மற்றும் பூட்ஸ் அணிவது வழக்கம். அவர் பிரதமரைச் சந்திக்க அல்லது நிதியமைச்சராக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் புது டெல்லிக்குச் செல்லும் போது, தனது பாரம்பரிய குர்தா பைஜாமாக்களைத் தவிர்த்துவிட்டு வழக்கமான பார்மல் உடைகளை அணிவது வழக்கம். புகையிலை, மதுவை வெறுத்தார் சரத் பவார் புகையிலை பயன்படுத்தி வந்த நிலையில் அஜித் பவார் அதிலிருந்து விலகியே இருந்தார். சிறு வயதிலேயே அஜித் பவார் மது மற்றும் புகையிலையிலிருந்து விலகியே இருந்தார். அவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் புகையிலை மெல்லுவதை நிறுத்துமாறு எச்சரித்தார். அஜித் பவார் எப்போதும் தானும், தன்னை சுற்றி இருக்கும் இடமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடியவர். சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதும், பணியிடமும் வீடும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதும் பிறவிப் பண்புகளாகும் என்று எப்போதும் கூறுவார். ஒரு முறை அஜித் பவார் தனது பேட்டியில்,பள்ளியில் இருந்தே புத்தகங்களை அலமாரியில் அழகாக வைப்பேன். உடைகளை சரியாக மடித்து, காலணிகளை அதன் குறிப்பிட்ட இடத்தில் வைப்பேன். எனது சைக்கிளை தவறாமல் சுத்தம் செய்வேன். மனைவியுடன் அஜித் பவார் எனது முதல் பைக் 1965 பதிவு எண் கொண்ட ராஜ்தூத். எனக்கு பேனாக்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் சன்கிளாஸ்கள் பிடிக்கும். விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்தேன். அதிர்ஷ்டவசமாக என்னால் அவற்றை வாங்க முடிகிறது. ஏன் அவற்றை விரும்புகிறேன் என்று பரமேஷ்வருக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார். அஜித் பவாரின் சுத்தம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஹசன் முஸ்ரீப் கூறுகையில், ''நாங்கள் 2004-ல் முதல்முறையாக அமைச்சர்கள் ஆனோம், அப்போதிருந்து அவரை நான் அறிவேன். அவர் தூய்மையில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உங்களைச் சந்தித்தால் அழுக்குத் துணிகளையோ அல்லது தூசியோ கிடப்பதைக் கண்டால், அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். அஜித் பவாரை இதற்காகவே ஒருமுறை எனது வீட்டிற்கு அழைப்பதைத் தவிர்த்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி பெட்டியின் மேல் அல்லது சோபாவின் பின்னால் தூசி இருந்தால் கூட அதை கவனிப்பார். மேலும், அவர் கட்டிடக்கலை குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் கட்டமைப்பு மற்றும் அமைப்புகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார், என்று கூறினார்.
அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவார் எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அதிகமான நேரங்களை தொண்டர்களுடனும், கட்சிப்பணியிலும் ஈடுபடுத்திக்கொள்வார். அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி தனது சித்தப்பா சரத் பவாரிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். பாராமதியின் செல்லப்பிள்ளையாகவும், புனேயில் வலுவான சக்தியாகவும் விளங்கிய அஜித் பவார் பொதுவாக ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார். அவர் கண்கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விபத்து நடந்த இடம் குறிப்பாக சன்கிளாஸ் வகைகளில் மேபேக் ரகங்களில் இருந்து வழக்கமான ரே பான் வரை பலதரப்பட்ட பிராண்ட் சன்கிளாஸ்கள் அஜித்பவாரிடம் இருந்தது. லென்ஸ்கள் எப்பொழுதும் தடிமனாகவும், சாய்வாகவும், சில சமயங்களில் மென்மையானதாகவும், பெரும்பாலும் தடிமனான பிரேம்களுடன் இருக்கும். கைக்கடிகாரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். எங்கு செல்கிறோம் என்பதை பொறுத்து தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வார். சட்டசபை கூட்டத் தொடர்களிலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சஃபாரி சூட் மற்றும் பூட்ஸ் அணிவது வழக்கம். அவர் பிரதமரைச் சந்திக்க அல்லது நிதியமைச்சராக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் புது டெல்லிக்குச் செல்லும் போது, தனது பாரம்பரிய குர்தா பைஜாமாக்களைத் தவிர்த்துவிட்டு வழக்கமான பார்மல் உடைகளை அணிவது வழக்கம். புகையிலை, மதுவை வெறுத்தார் சரத் பவார் புகையிலை பயன்படுத்தி வந்த நிலையில் அஜித் பவார் அதிலிருந்து விலகியே இருந்தார். சிறு வயதிலேயே அஜித் பவார் மது மற்றும் புகையிலையிலிருந்து விலகியே இருந்தார். அவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் புகையிலை மெல்லுவதை நிறுத்துமாறு எச்சரித்தார். அஜித் பவார் எப்போதும் தானும், தன்னை சுற்றி இருக்கும் இடமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடியவர். சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதும், பணியிடமும் வீடும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதும் பிறவிப் பண்புகளாகும் என்று எப்போதும் கூறுவார். ஒரு முறை அஜித் பவார் தனது பேட்டியில்,பள்ளியில் இருந்தே புத்தகங்களை அலமாரியில் அழகாக வைப்பேன். உடைகளை சரியாக மடித்து, காலணிகளை அதன் குறிப்பிட்ட இடத்தில் வைப்பேன். எனது சைக்கிளை தவறாமல் சுத்தம் செய்வேன். மனைவியுடன் அஜித் பவார் எனது முதல் பைக் 1965 பதிவு எண் கொண்ட ராஜ்தூத். எனக்கு பேனாக்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் சன்கிளாஸ்கள் பிடிக்கும். விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்தேன். அதிர்ஷ்டவசமாக என்னால் அவற்றை வாங்க முடிகிறது. ஏன் அவற்றை விரும்புகிறேன் என்று பரமேஷ்வருக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார். அஜித் பவாரின் சுத்தம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஹசன் முஸ்ரீப் கூறுகையில், ''நாங்கள் 2004-ல் முதல்முறையாக அமைச்சர்கள் ஆனோம், அப்போதிருந்து அவரை நான் அறிவேன். அவர் தூய்மையில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உங்களைச் சந்தித்தால் அழுக்குத் துணிகளையோ அல்லது தூசியோ கிடப்பதைக் கண்டால், அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். அஜித் பவாரை இதற்காகவே ஒருமுறை எனது வீட்டிற்கு அழைப்பதைத் தவிர்த்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி பெட்டியின் மேல் அல்லது சோபாவின் பின்னால் தூசி இருந்தால் கூட அதை கவனிப்பார். மேலும், அவர் கட்டிடக்கலை குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் கட்டமைப்பு மற்றும் அமைப்புகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார், என்று கூறினார்.
'டீல்'பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்
நிறைவு விழாவில் பிரதமர்! 'டீல்' பேசும் வேலுமணி அ.தி.மு.க -விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கியிருப்பவர்களுக்கு அவரே நேரடியாக போன் செய்து, 'மீண்டும் கட்சிப் பணிக்கு வாங்க... உரிய மரியாதைக்கும் சீட்டுக்கும் நான் பொறுப்பு...' என்று டீல் பேசுகிறாராம். வேலுமணியின் வாக்குறுதியை நம்பி சிலர் தலையசைத்திருப்பதாகத் தகவல். வேலுமணி எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயண நிறைவு விழாவை, பிப்ரவரி மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ளவும் அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான இடம் சேலமா, கோவையா என்பது மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையேறும் வகையில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தே.ஜ கூட்டணியில் ஏற்பாடுகள் மும்முரமாகின்றன. கடைக்கோடி கடமுடா! உள்ளடிக்குப் பதில் உள்ளடி கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைக்கோடி தொகுதியில் போட்டியிட்ட ஆளும்கட்சியின் 'ஆஸ்'தானமான தலைமைக் கழகப் பிரமுகர் தோல்வியைத் தழுவினார். அவருடைய தோல்விக்கு, அதே தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ' பூ கவிஞர்' பிரமுகரின் உள்ளடி வேலைதான் காரணம் என்று தொகுதி முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின் தலைநகரில் செட்டிலான தலைமைக் கழக பிரமுகர், மீண்டும் இம்முறை கடைக்கோடி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அதே தொகுதியைக் குறிவைத்து 'கவிஞர்' பிரமுகரும் முட்டி மோதுவதால், ஆளுங்கட்சியில் அனல் பறக்கிறது. ''எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த 'கவிஞர்' பிரமுகருக்கு மட்டும் கிடைக்கக் கூடாது'' என்று தலைமைக்கழக பிரமுகர் கச்சைக் கட்டிக்கொண்டு களமாடுவது, அறிவாலயத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மீண்டும் வழங்கப்படும் வாய்ப்பு? கொங்கு பிரமுகரிடம் கோரிக்கை... பனையூர் கட்சியின் 'உப்பு' மாவட்டச் செயலாளர் பதவி, இனிஷியல் பிரமுகருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பெண் பிரமுகர், பனையூர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்தி, கடைசியில் ஏதேதோ செய்துகொண்ட சம்பவமெல்லாம் பரபரப்பைக் கிளப்பின. இந்தச் சூழலில், கட்சியில் புதிதாக இணைந்த கொங்கு சீனியரை நேரில் சந்தித்து, கண்ணீர்விட்டு கதறியிருக்கிறாராம் பெண் பிரமுகர். ''என்னுடைய சொந்த நிதியிலிருந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன். அந்த இனிஷியல் பிரமுகருக்கு பதவி வழங்கப்பட்ட பிறகு, மாவட்டத்தில் கட்சியே சோர்ந்துவிட்டது. நீங்களே விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..'' என்று கண்ணீர் சிந்தினாராம். இந்த தகவலையெல்லாம், கொங்கு சீனியரும் தலைமையிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, அந்தப் பெண் பிரமுகருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர். ஆலோசனையில் ஆட்சி மேலிடம்! நழுவிய 'இயக்குநர்' அதிகாரி... தலைநகரில், பவர்புல் பதவியிலிருக்கும் 'ஐஸ்க்ரீம்' காக்கியை தேர்தல் ஆணையம் மாற்றுவதற்கு முன்பாக, நமக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றுவது சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்திருக்கிறதாம் ஆளும் தரப்பு. அவர் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்ற ஆலோசனையில், இயக்குநர் பெயர் கொண்டவர் மற்றும் 'பாச' அதிகாரியின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயமறிந்த இயக்குநர் பெயர்கொண்ட அதிகாரி, 'எனக்கு அந்த பொறுப்பே வேண்டாம்' என்று நழுவியிருக்கிறார். அதனால், 'பாச' அதிகாரியையே பவர்புல் பதவியில் நியமிக்கலாமா, அல்லது வேறு யாரையாவது கொண்டு வரலாமா என்று தீவிரமாக ஆலோசிக்கிறாதாம் ஆளும் கட்சி தரப்பு. மிஸ்டர் கழுகு: ‘அட்டாக்’ மோடில் அ.தி.மு.க... வருத்தத்தில் கனிமொழி... காத்திருப்பில் பனையூர்! காத்திருக்கும் நயினார் நாகேந்திரன்! வருமா புதிய தமிழகம்... பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். வரும் தேர்தலில், சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதிக்கு அவர் மாறவிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் புதிய தமிழகத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறாராம் நயினார். 'இந்தக் கூட்டணிக்குள் புதிய தமிழகம் வந்தால், திருநெல்வேலி தொகுதிக்குள்ளிருக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் நயினாருக்குச் சாதகமாகலாம். நயினார் நாகேந்திரன் அதனால்தான், தொகுதி மாறும் திட்டத்தில் குழம்பிப் போயிருக்கிறார் நயினார்...' என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதற்கிடையே, 'இந்தக் கட்சியோட மாநிலத் தலைவராக இருந்துகொண்டு, சிட்டிங் தொகுதியை மாற்றினால் அது விமர்சனத்தைக் கிளப்பாதா... அ.தி.மு.க., அ.ம.மு.க கூட்டணியில் இருக்கும் நிலையில், தைரியமாக திருநெல்வேலியிலேயே போட்டியிட வேண்டியதுதானே...' என்று நயினாருக்கு நெருக்கமான சிலரும் குழப்பிவிடுவதால், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் நயினார்.! `முக்கோண' ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?
'டீல்'பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்
நிறைவு விழாவில் பிரதமர்! 'டீல்' பேசும் வேலுமணி அ.தி.மு.க -விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கியிருப்பவர்களுக்கு அவரே நேரடியாக போன் செய்து, 'மீண்டும் கட்சிப் பணிக்கு வாங்க... உரிய மரியாதைக்கும் சீட்டுக்கும் நான் பொறுப்பு...' என்று டீல் பேசுகிறாராம். வேலுமணியின் வாக்குறுதியை நம்பி சிலர் தலையசைத்திருப்பதாகத் தகவல். வேலுமணி எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயண நிறைவு விழாவை, பிப்ரவரி மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ளவும் அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான இடம் சேலமா, கோவையா என்பது மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையேறும் வகையில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தே.ஜ கூட்டணியில் ஏற்பாடுகள் மும்முரமாகின்றன. கடைக்கோடி கடமுடா! உள்ளடிக்குப் பதில் உள்ளடி கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைக்கோடி தொகுதியில் போட்டியிட்ட ஆளும்கட்சியின் 'ஆஸ்'தானமான தலைமைக் கழகப் பிரமுகர் தோல்வியைத் தழுவினார். அவருடைய தோல்விக்கு, அதே தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ' பூ கவிஞர்' பிரமுகரின் உள்ளடி வேலைதான் காரணம் என்று தொகுதி முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின் தலைநகரில் செட்டிலான தலைமைக் கழக பிரமுகர், மீண்டும் இம்முறை கடைக்கோடி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அதே தொகுதியைக் குறிவைத்து 'கவிஞர்' பிரமுகரும் முட்டி மோதுவதால், ஆளுங்கட்சியில் அனல் பறக்கிறது. ''எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த 'கவிஞர்' பிரமுகருக்கு மட்டும் கிடைக்கக் கூடாது'' என்று தலைமைக்கழக பிரமுகர் கச்சைக் கட்டிக்கொண்டு களமாடுவது, அறிவாலயத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மீண்டும் வழங்கப்படும் வாய்ப்பு? கொங்கு பிரமுகரிடம் கோரிக்கை... பனையூர் கட்சியின் 'உப்பு' மாவட்டச் செயலாளர் பதவி, இனிஷியல் பிரமுகருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பெண் பிரமுகர், பனையூர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்தி, கடைசியில் ஏதேதோ செய்துகொண்ட சம்பவமெல்லாம் பரபரப்பைக் கிளப்பின. இந்தச் சூழலில், கட்சியில் புதிதாக இணைந்த கொங்கு சீனியரை நேரில் சந்தித்து, கண்ணீர்விட்டு கதறியிருக்கிறாராம் பெண் பிரமுகர். ''என்னுடைய சொந்த நிதியிலிருந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன். அந்த இனிஷியல் பிரமுகருக்கு பதவி வழங்கப்பட்ட பிறகு, மாவட்டத்தில் கட்சியே சோர்ந்துவிட்டது. நீங்களே விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..'' என்று கண்ணீர் சிந்தினாராம். இந்த தகவலையெல்லாம், கொங்கு சீனியரும் தலைமையிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, அந்தப் பெண் பிரமுகருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர். ஆலோசனையில் ஆட்சி மேலிடம்! நழுவிய 'இயக்குநர்' அதிகாரி... தலைநகரில், பவர்புல் பதவியிலிருக்கும் 'ஐஸ்க்ரீம்' காக்கியை தேர்தல் ஆணையம் மாற்றுவதற்கு முன்பாக, நமக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றுவது சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்திருக்கிறதாம் ஆளும் தரப்பு. அவர் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்ற ஆலோசனையில், இயக்குநர் பெயர் கொண்டவர் மற்றும் 'பாச' அதிகாரியின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயமறிந்த இயக்குநர் பெயர்கொண்ட அதிகாரி, 'எனக்கு அந்த பொறுப்பே வேண்டாம்' என்று நழுவியிருக்கிறார். அதனால், 'பாச' அதிகாரியையே பவர்புல் பதவியில் நியமிக்கலாமா, அல்லது வேறு யாரையாவது கொண்டு வரலாமா என்று தீவிரமாக ஆலோசிக்கிறாதாம் ஆளும் கட்சி தரப்பு. மிஸ்டர் கழுகு: ‘அட்டாக்’ மோடில் அ.தி.மு.க... வருத்தத்தில் கனிமொழி... காத்திருப்பில் பனையூர்! காத்திருக்கும் நயினார் நாகேந்திரன்! வருமா புதிய தமிழகம்... பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். வரும் தேர்தலில், சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதிக்கு அவர் மாறவிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் புதிய தமிழகத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறாராம் நயினார். 'இந்தக் கூட்டணிக்குள் புதிய தமிழகம் வந்தால், திருநெல்வேலி தொகுதிக்குள்ளிருக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் நயினாருக்குச் சாதகமாகலாம். நயினார் நாகேந்திரன் அதனால்தான், தொகுதி மாறும் திட்டத்தில் குழம்பிப் போயிருக்கிறார் நயினார்...' என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதற்கிடையே, 'இந்தக் கட்சியோட மாநிலத் தலைவராக இருந்துகொண்டு, சிட்டிங் தொகுதியை மாற்றினால் அது விமர்சனத்தைக் கிளப்பாதா... அ.தி.மு.க., அ.ம.மு.க கூட்டணியில் இருக்கும் நிலையில், தைரியமாக திருநெல்வேலியிலேயே போட்டியிட வேண்டியதுதானே...' என்று நயினாருக்கு நெருக்கமான சிலரும் குழப்பிவிடுவதால், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் நயினார்.! `முக்கோண' ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?
`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்
சிலம்பமே சுவாசம்! ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டாக சிலம்பம் பழகத் தொடங்கிய பழனிவேலுக்கு, அதுவே வாழ்நாள் சுவாசமாக மாறும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கலையின் மீது கொண்ட தீராத காதலால், வெறும் பயிற்சியாளராக மட்டும் நின்றுவிடாமல், இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆசானாக உருவெடுத்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற பழனிவேல் உலக மேடைகளில் சுழன்ற சிலம்பம் இந்திய எல்லைகளைத் தாண்டி, துபாய் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பழனிவேலின் சிலம்பக் கம்புகள் சுழன்றுள்ளன. அங்கு நடந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றதுடன், வெளிநாட்டவர்களுக்கும் நம் மண்ணின் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து அசத்தியவர் இவர். சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல வெற்றிகளைக் குவித்துள்ள இவருக்கு, 2004-இல் சிறந்த இளைஞருக்கான விருதும், 2012-இல் புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருதும் தேடி வந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் வென்று சாதனை படைத்தார். இலவசப் பயிற்சியும்... 3,000 மாணவர்களும்! `கலை என்பது வியாபாரம் அல்ல' என்பதை உரக்கச் சொல்லும் பழனிவேல், `மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக் கலை வளர்ச்சி கழகம்' என்ற கல்விச்சாலையை நிறுவி, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் வித்தை கற்றுத் தேர்ந்துள்ளனர். இதுகுறித்துப் பேசும் பழனிவேல், ``இந்த விருதை சிலம்பக் கலைக்கு கிடைத்திருக்கும் கௌரவமாக நினைக்கிறேன். அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பத்மஸ்ரீ விருது பெற்ற பழனிவேல் `பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்...’ கிராமப்புற கலை மற்றும் விளையாட்டுகளில் சிலம்பம் மிக முக்கியமானது. அதனை அழியாமல் வளர்த்து வருகிறோம். மாணவர்களின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமாகாது. இந்த நாட்டுப்புறக் கலைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டுமானால், பள்ளிகளில் அதனை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றார். நம் பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே எனது லட்சியம் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்தச் சிலம்ப நாயகன். 32 ஆண்டுகால அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள இந்த 'பத்மஸ்ரீ' விருது, புதுச்சேரி மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது. ”மக்கள் இந்தக் கலையை நேசிக்கணும்!” - பத்மஸ்ரீ விருதுபெரும் தவிலிசை கலைஞர் ’கொங்கம்பட்டு’ முருகையன்
'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்'டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும் புரொபஷனல்ஸ் காங்கிரஸ் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து புகைச்சல் ஏற்படுவதற்கு தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணம். சமீபத்தில் டெல்லியில் கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகும், கூட்டணி குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில், பிரவீன் சக்கரவத்தி அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.... ``செப்டம்பர் மாதம் விகடனுக்கு அளித்த பேட்டியில்தான், `காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தீர்கள். அதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கையை காங்கிரஸில் பலரும் முன்வைத்தனர். அதனால், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு உருவானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அந்த நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?’’ `` அது தமிழக காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக கட்சித் தொண்டர்கள் வைக்கும் கோரிக்கை. அவர்களுடைய உரிமை அது. கடந்த ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் தேசியத் தலைமை தனித்தனியாக கருத்துக் கேட்டார்கள். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் மேலிடப் பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாகப் பதிவு செய்தனர். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட தலைமை இனிமேல் முடிவு எடுப்பார்கள்.’’ மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ``தேசிய தலைமை ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்துக் கேட்டதன் பின்னணி என்ன?’’ ``அனைவர் முன்னிலையிலும் கருத்துக் கேட்கும்போது, தங்களுடைய உண்மையான கருத்துக்களை சொல்வதற்கு அவர்கள் தயங்கலாம். நாம் சொல்லும் கருத்து சிலருக்கு ஆதரவாகவும் சிலருக்கு எதிராகவும் இருக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். உண்மையான கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தனிப்பட்ட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த 30 - 40 ஆண்டுகளில் இதுபோன்று தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பது இதுவே முதல் முறை.’’ ``தவெக தலைவர் விஜய்யை நீங்கள் சந்தித்தது குறித்து ராகுல் காந்தியோ அல்லது மற்ற தேசிய தலைவர்களோ உங்களிடம் கேள்வி எழுப்பினார்களா?’’ ``இல்லை, ஒரு வார்த்தை கூட நான் விஜய்யை சந்தித்தது குறித்து என்னிடம் கேட்கப்படவில்லை.” ``அப்படியென்றால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் விஜய்யை சந்தித்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?” ``நமக்கு 1947- லிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம். நான் டெல்லியில் பலபேரை சந்திக்கிறேன். ஆனால், யாருமே இப்படி வந்து, ஏன் சந்தித்தீர்கள், எதற்கு சந்தித்தீர்கள் என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் பண்பாடு பற்றி தமிழ்நாட்டில் புரிதல் இல்லை. காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் யாரைச் சந்திக்க வேண்டும் என்ற சுதந்திரமும் உண்டு. இந்திய மக்களுக்கே பேச்சுருமையும் சுதந்திரமும் வாங்கிக்கொடுத்த கட்சி இந்த காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அந்த உரிமை இருக்காதா?” ``டெல்லி கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தவெக-வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதும், அதுகுறித்து நீங்கள் X தளத்தில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையானதே?’’ ``நான் என்னுடைய பதிவை ஆங்கிலத்தில் நகைச்சுவை தொனியில் பதிவு செய்தேன். ஒரு கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அன்றைக்கு செய்தியாக இருந்தது. அதனால் அதனை மையப்படுத்தி நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டேன். அரசியலில் எப்போதும் சீரியஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாங்களும் அவ்வப்போது ஜோக் அடிக்கிறோம். அதுல என்ன இருக்கு?” விஜய் ``விஜய்க்கு கூடும் கூட்டம் வெறும் ரசிகர்கள் அல்ல, அவர்கள் தொண்டர்கள். விஜய் சினிமா டிக்கெட் விற்க வருவதாக நினைத்து அவர்கள் கூடவில்லை. அவரை அரசியல் தலைவராகப் பார்த்துதான் கூடுகிறார்கள் என்று கரூர் சம்பவத்துக்கு கூறியிருந்தீர்கள். கரூர் சம்பவத்துக்குப் பிறகு, தவெகவின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? ``விஜய்க்கு கூடுவதெல்லாம் ரசிகர் கூட்டம். அதெல்லாம் வாக்காக மாறாது என்று எழுந்த கருத்துக்கு என்னுடைய ஆராய்ச்சிப்படி, அவர்கள் ரசிகர்கள் இல்லை. நிச்சயமாக வாக்காளர்கள்தான் என்று கூறினேன். இப்போது அதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா? இது ஒன்றும் ரகசியமே கிடையாது. இப்போது அவர்களுக்கு பல தடங்கல்கள் இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாகத்தான் இருக்கிறார்கள்” ``ஆனால், தவெக ஒரு அரசியல் கட்சியாக தொடர்சியான செயல்பாட்டினை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது அமைதியாக இருக்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கே நல்லதல்ல. தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதுகுறித்த உங்கள் பார்வை என்ன?” ``அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியென்றால் தேர்தலுக்கு முன்பு எதாவதொரு அரசியல் செயல்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். ஆனால், இப்படியான ஒரு சூழல் எவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது? அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்களா, நின்றுவிட்டார்களா அல்லது அவர்களுக்கான ஆதரவு குறைந்திருக்கிறதா அது எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் கேள்வி சரியானது.” ``ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியில் பலர் குரல் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக, ராகுல் காந்தியே ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். ஆனால், விஜய் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ ``இது ஜனநாயகனுக்காகவோ அல்லது ஒரு தனிப்பட்ட நடிகருக்காகவோ செய்தது கிடையாது. நம் நாட்டில் உள்ள அமைப்புகள் அரசியல் சார்பில்லாமல் தனிப்பட்ட வகையில் செயல்பட வேண்டும். பொங்கல், தீபாவளிக்கான பட ரிலீஸ் என்பது இங்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டமான விஷயம் என்பது தெரியும். ஆனால், இந்த ஒரு படத்துக்கு மட்டும் ஏன் சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காமல், தடுத்தார்கள் என்பது கேள்வி. சென்சார் போர்டை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்த கேள்விதான் ராகுல் காந்தியுடைய குரல். அது யாராக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டால் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.” பிரவீன் சக்கரவர்த்தியின் விரிவான நேர்காணலைக் காண கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்...
'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்'டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும் புரொபஷனல்ஸ் காங்கிரஸ் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து புகைச்சல் ஏற்படுவதற்கு தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணம். சமீபத்தில் டெல்லியில் கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகும், கூட்டணி குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில், பிரவீன் சக்கரவத்தி அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.... ``செப்டம்பர் மாதம் விகடனுக்கு அளித்த பேட்டியில்தான், `காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தீர்கள். அதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கையை காங்கிரஸில் பலரும் முன்வைத்தனர். அதனால், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு உருவானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அந்த நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?’’ `` அது தமிழக காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக கட்சித் தொண்டர்கள் வைக்கும் கோரிக்கை. அவர்களுடைய உரிமை அது. கடந்த ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியின் தேசியத் தலைமை தனித்தனியாக கருத்துக் கேட்டார்கள். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் மேலிடப் பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாகப் பதிவு செய்தனர். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட தலைமை இனிமேல் முடிவு எடுப்பார்கள்.’’ மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ``தேசிய தலைமை ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்துக் கேட்டதன் பின்னணி என்ன?’’ ``அனைவர் முன்னிலையிலும் கருத்துக் கேட்கும்போது, தங்களுடைய உண்மையான கருத்துக்களை சொல்வதற்கு அவர்கள் தயங்கலாம். நாம் சொல்லும் கருத்து சிலருக்கு ஆதரவாகவும் சிலருக்கு எதிராகவும் இருக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். உண்மையான கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தனிப்பட்ட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த 30 - 40 ஆண்டுகளில் இதுபோன்று தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பது இதுவே முதல் முறை.’’ ``தவெக தலைவர் விஜய்யை நீங்கள் சந்தித்தது குறித்து ராகுல் காந்தியோ அல்லது மற்ற தேசிய தலைவர்களோ உங்களிடம் கேள்வி எழுப்பினார்களா?’’ ``இல்லை, ஒரு வார்த்தை கூட நான் விஜய்யை சந்தித்தது குறித்து என்னிடம் கேட்கப்படவில்லை.” ``அப்படியென்றால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் விஜய்யை சந்தித்தீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?” ``நமக்கு 1947- லிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம். நான் டெல்லியில் பலபேரை சந்திக்கிறேன். ஆனால், யாருமே இப்படி வந்து, ஏன் சந்தித்தீர்கள், எதற்கு சந்தித்தீர்கள் என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் பண்பாடு பற்றி தமிழ்நாட்டில் புரிதல் இல்லை. காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் யாரைச் சந்திக்க வேண்டும் என்ற சுதந்திரமும் உண்டு. இந்திய மக்களுக்கே பேச்சுருமையும் சுதந்திரமும் வாங்கிக்கொடுத்த கட்சி இந்த காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அந்த உரிமை இருக்காதா?” ``டெல்லி கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தவெக-வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதும், அதுகுறித்து நீங்கள் X தளத்தில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையானதே?’’ ``நான் என்னுடைய பதிவை ஆங்கிலத்தில் நகைச்சுவை தொனியில் பதிவு செய்தேன். ஒரு கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அன்றைக்கு செய்தியாக இருந்தது. அதனால் அதனை மையப்படுத்தி நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டேன். அரசியலில் எப்போதும் சீரியஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாங்களும் அவ்வப்போது ஜோக் அடிக்கிறோம். அதுல என்ன இருக்கு?” விஜய் ``விஜய்க்கு கூடும் கூட்டம் வெறும் ரசிகர்கள் அல்ல, அவர்கள் தொண்டர்கள். விஜய் சினிமா டிக்கெட் விற்க வருவதாக நினைத்து அவர்கள் கூடவில்லை. அவரை அரசியல் தலைவராகப் பார்த்துதான் கூடுகிறார்கள் என்று கரூர் சம்பவத்துக்கு கூறியிருந்தீர்கள். கரூர் சம்பவத்துக்குப் பிறகு, தவெகவின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? ``விஜய்க்கு கூடுவதெல்லாம் ரசிகர் கூட்டம். அதெல்லாம் வாக்காக மாறாது என்று எழுந்த கருத்துக்கு என்னுடைய ஆராய்ச்சிப்படி, அவர்கள் ரசிகர்கள் இல்லை. நிச்சயமாக வாக்காளர்கள்தான் என்று கூறினேன். இப்போது அதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா? இது ஒன்றும் ரகசியமே கிடையாது. இப்போது அவர்களுக்கு பல தடங்கல்கள் இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாகத்தான் இருக்கிறார்கள்” ``ஆனால், தவெக ஒரு அரசியல் கட்சியாக தொடர்சியான செயல்பாட்டினை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது அமைதியாக இருக்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கே நல்லதல்ல. தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதுகுறித்த உங்கள் பார்வை என்ன?” ``அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியென்றால் தேர்தலுக்கு முன்பு எதாவதொரு அரசியல் செயல்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். ஆனால், இப்படியான ஒரு சூழல் எவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது? அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்களா, நின்றுவிட்டார்களா அல்லது அவர்களுக்கான ஆதரவு குறைந்திருக்கிறதா அது எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் கேள்வி சரியானது.” ``ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியில் பலர் குரல் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக, ராகுல் காந்தியே ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். ஆனால், விஜய் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ ``இது ஜனநாயகனுக்காகவோ அல்லது ஒரு தனிப்பட்ட நடிகருக்காகவோ செய்தது கிடையாது. நம் நாட்டில் உள்ள அமைப்புகள் அரசியல் சார்பில்லாமல் தனிப்பட்ட வகையில் செயல்பட வேண்டும். பொங்கல், தீபாவளிக்கான பட ரிலீஸ் என்பது இங்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டமான விஷயம் என்பது தெரியும். ஆனால், இந்த ஒரு படத்துக்கு மட்டும் ஏன் சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காமல், தடுத்தார்கள் என்பது கேள்வி. சென்சார் போர்டை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்த கேள்விதான் ராகுல் காந்தியுடைய குரல். அது யாராக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டால் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.” பிரவீன் சக்கரவர்த்தியின் விரிவான நேர்காணலைக் காண கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்...
Helicopter விபத்து குறித்த பயத்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற அரசியல் - விசிக MLA பாலாஜி பேட்டி
'லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டே மாவட்ட ஆட்சியரால் இந்தக் கோவளம் சுற்றுலாச் சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி 12 ஆம் தேதி அமைச்சர் தா.மோ. அன்பரசனால் துவக்கி வைக்கப்பட்டது இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து எஸ். எஸ். பாலாஜியிடம் பேசினோம். கோவளம் ''அந்த நிறுவனம் கோவளத்தில் முதல் தடவையாக இந்தச் சுற்றுலாவைத் தொடங்கினப்ப மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவே என்னுடைய சில சந்தேகங்களை கலெக்டர் கிட்ட கேட்டேன். விமான விபத்துகள் குறித்த அச்சத்தில்தான் கேட்டேன். விமானப் போக்குவரத்து ஆணையரக அனுமதி வாங்கியதா சொல்றாங்கனு பதில் சொன்னார். பிறகு மாவட்ட நிர்வாகம்தான் சீல் வச்சது. ஹெலிகாப்டர் இயக்க லைசென்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையரகம் கொடுத்திருக்கலாம். ஆனா ஹெலிபேடு அமைக்கறது மாதிரியான விஷயங்களில் மாநில அரசுக்குச் சில அதிகாரங்கள் இருக்கு. மாநில அரசில் ஒரு அங்கமா நான் இருக்கேன். அதாவது இநந்த் தொகுதியின் மக்கள் பிரதிநிதி நான். அந்த அடிப்படையில் நான் கேட்கும் சந்தேககளுக்குப் பதில் சொல்ல வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. அதுவும் நான் சம்பந்தப்பட்ட அந்தத் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கிட்ட நேரடியா பேசியதே இல்லை. அதிகாரிகள்கிட்டதான் கேக்குறேன். பைலட்டுக்கு லைசென்ஸ் இருக்கானு கேக்கறார். லைசென்ஸ் இல்லாம ஹெலிகாப்டர் இயக்குவாங்களானு ஒரு எம்.எல்.ஏ.வுக்குத் தெரியாதானு எகத்தாளமா பேசியிருக்கார் அந்தக் கம்பெனி நபர். பைக்கையோ காரையோ ஒட்டிட்டு வர்றவங்களை நிறுத்திதான் லைசென்ஸ் இருக்கா கேக்கறாங்க போக்குவரத்து காவலர்கள். லைசென்ஸ் இல்லாமலா காரை ஓட்டிட்டு வருவோம்னு அவங்ககிட்ட கேப்பிங்களா? என் மீது புகார் தந்தவங்க பேசிய போது இன்னும் சில விஷயங்களைக் கவனிச்சேன். அதாவது எதுக்கு எம்.எல்.ஏ.வுக்குப் பதில் சொல்லணும்கிற தொனியில பேசுறாங்க. எந்த அரசின் திட்டமாக இருக்கட்டும், உள்ளூர் அளவுல மக்களின் பிரதிநிதி நான். நான் கேக்காம யார் கேப்பாங்க? சபாநாயகர் அப்பாவு சபாநாயகர் கிட்டப் போய் புகார் தந்திருக்காங்க. நானே சட்டசபையில கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரணும்னுதான் இருந்தேன். முதல்வர் கவனத்துக்கும் விஷயம் போயிடுச்சு. அதனால இந்த விவகாரத்துல நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றவர், மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தார்.. ''இந்த விவகாரத்துல நிறைய உள் அரசியல் இருக்குமோனு சந்தேகம் எனக்கு ஆரம்பத்துல இருந்தே இருந்தது. இப்ப அது வலுவாகியிருக்கு. சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யாருங்கிறதை நீங்க இணையத்துலயே பார்க்கலாம். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் வேறோரு நிறுவனத்தில் பார்ட்னர்ஷிப்பில் இருந்திருக்கிறார் பா.ஜ.க வின் வினோஜ் செல்வம். திருப்போரூர் திமுக ஒன்றியச் செயலாளர் இதயவர்மனும் என் மீது புகார் தந்த செல்வக்குமாரும் நெருங்கிய கூட்டாளிகள். அடிக்கடி துபாய் போயிட்டு வர்றாங்க. இவர்களுடன் பா.ம.க-வைச் சேர்ந்த அருணும் சேர்ந்திருக்கார். இதயவர்மன் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் கூட. எனக்கு கெட்ட பெயரை உண்டாக்கிட்டா இந்த முறை தொகுதி திரும்பவும் தன் பக்கம் வந்திடலாம்னு செய்கிறாரா தெரியல. நான் இந்த ஐந்தாண்டுகளில் எந்தவித கெட்ட பெயரையும் வாங்காம இருக்கிறது இவங்க கண்ணை உறுத்துது. அதனால தேர்தல் நேரத்துல இப்படியொரு பிரச்னையைக் கிளப்பியிருக்காங்களோனு தோணுது'' என்கிறார். சென்னை: தொடரும் ஆமைகள் இறப்பு... கோவளம் கடற்கரையில் இறந்து கரை ஒதுக்கிய ஆமைகள் | Photo Album
கும்பகோணம்: ”எடப்பாடி பழனிசாமியின் துரோகம் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது”- முதல்வர் ஸ்டாலின்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``பயணங்களில் வரும் அலைச்சலை விட, நீங்கள் தரும் அன்புதான் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. பள்ளிவாசலை மையமாக வைத்து சமூக உதவிகள், சேவைகள், சீர்திருத்தங்கள் செய்யும் சமூகப் பணிகளாக ஆற்றக்கூடிய மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் இஸ்லாமிய பண்பாட்டில் முக்கியமானவை. வழிபாட்டு தலங்கள் தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்து வருகிறீர்கள். தி.மு.க எப்போதும் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள். உள்ளத்தாலும், உணர்வாலும் உடன்பிறப்புகள் நாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு இஸ்லாமியர்களுக்கு தி.மு.க செய்த நன்மைகளில் முக்கியமானதாக, தி.மு.க முதல்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மீலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ரத்து செய்தாலும், கருணாநிதி அரசாணை வெளியிட்டு மீண்டும் மீலாடி நபிக்கு விடுமுறை அளித்தார். உருது பேசும் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இட ஒதுக்கீடு 3.5 சதவீதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் வேறு என நினைத்தது இல்லை. அந்த உணர்வோடு தான் திராவிட மாடல் ஆட்சியும், ஸ்டாலினும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹஜ் மாநில குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், ஹஜ் புனித பயணத்திற்காக 24.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 207 கோடி ரூபாயில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய கல்வி உதவியை நிறுத்திவிட்டது. இந்தாண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,159 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் புனரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிந்தித்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களை வாரி வழங்குவது தான் திராவிட மாடல். இஸ்லாமியர்களின் கோரிக்கை தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,537 உலமார்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 1,500 வழங்கப்படுகிறது. இனி ரூ.5,000 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். உலமார்கள் நலவாரியத்தில் 15,060 பேர் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 1,000 பேருக்கு டூவீலர்கள் வாங்க வழங்கப்படும் ரூ.25,000 அரசு மானியத் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை, மதுரை வக்பு வாரிய தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் கூடுதலாக வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 உருது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை பாராட்டி, திராவிட மாடல் அரசு தான் தொடர்ந்து வர வேண்டும் என நம்பிக்கையோடு தீர்மானங்கள் போட்டதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையை நிச்சயமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான். சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் தீர்மானங்களை பரப்புரை செய்தால் மீண்டும் தி.மு.க ஆட்சி உறுதியாக வரும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் ஸ்டாலின் இஸ்லாமிய மக்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். தி.மு.க தான் சிறுபான்மை இன மக்களை காக்கக்கூடிய காவல் அரண். அதனால் தான் கும்பல் வன்முறை தலை எடுக்காமல் உள்ளது. இந்த அமைதி சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தை எப்படியாவது குழப்பங்களில் தள்ளலாமா என போடும் அவர்களின் ராஜதந்திரங்கள் வீணாகி வருகிறது. தங்களுக்கு ஏற்ற அடிமையான சி.பி.ஐ, இ.டி., ஐ.டி., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி மேடை ஏறியுள்ளனர். துரோகங்களுக்கு அர்த்தமான அகராதியாக இடம் பெற்றுள்ளார் 10 தோல்வி பழனிசாமி. இஸ்லாமியர்களுக்கான துரோகப் பயணத்தை பழனிசாமி தொடர்ந்து கொண்டு இருக்கிறார். பழனிசாமியின் துரோகத்தை நாம் எண்ணிப் பார்த்தால் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று காலில் விழுவது, மற்றொன்று காலை வாரி விடுவது. அவர் இஸ்லாமிய மக்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் நீளமானது. 2019ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வர அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. இதற்காக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க கோரிக்கை வைத்தபோது, பழனிசாமி மறுத்துவிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ.கவிற்க்கு பயந்து அ.தி.மு.க ஆதரவு தரவில்லை. சி.ஏ.ஏ., சட்டம், முத்தலாக் சட்டம், வக்பு சட்ட திருத்தம் ஆகியவற்றில் அ.தி.மு.க இரட்டை வேடம் போட்டது. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கடுமையாக போராடினோம். பிரதமருக்கு கடிதம் எழுதினோம். சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினோம். மக்கள் முன்பாக அம்பலப்பட்டுவிடுவோமே என்ற பயத்தில் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள் என கருப்பு பேட்ஜ் கூட அணியவில்லை. அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை வக்பு சட்ட திருத்த மசோதாவை திருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இப்படியாக துரோகம் செய்து விட்டு, கூட்டணி தர்மத்திற்காக தங்களுக்கு விருப்பமில்லாத சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக பழனிசாமி பச்சை பொய் கூறினார். எனவே ஒட்டுமொத்தமாக அந்த கூட்டணியை விரட்டும் வலிமை மதச்சார்பற்ற கூட்டணிக்கே உள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அ.தி.மு.க-வின் சதி எண்ணத்தை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ள பிரதமர் மோடிக்கும், தமிழகத்திற்கு நடக்கக் கூடிய தேர்தல் இது. பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், வளர்ந்த தமிழகத்தை நாசப்படுத்தும். அதைத் தடுக்கிற துணிச்சலும், தைரியமும் தி.மு.க., கூட்டணிக்கே உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. சுயநலத்திற்காக தமிழக நலனை அடகு வைத்துள்ள அடிமைகளுக்கும், அவர்களுக்கு கட்டளையிடும் டில்லி எஜமானர்களுக்கும் புரிகிறபடி உரக்க சொல்லுவோம். தன்மானம் மிக்க தமிழகம் தலைகுனியாது. தமிழகம் வெல்லும் என்றார்.
கும்பகோணம்: ”எடப்பாடி பழனிசாமியின் துரோகம் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது”- முதல்வர் ஸ்டாலின்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``பயணங்களில் வரும் அலைச்சலை விட, நீங்கள் தரும் அன்புதான் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. பள்ளிவாசலை மையமாக வைத்து சமூக உதவிகள், சேவைகள், சீர்திருத்தங்கள் செய்யும் சமூகப் பணிகளாக ஆற்றக்கூடிய மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் இஸ்லாமிய பண்பாட்டில் முக்கியமானவை. வழிபாட்டு தலங்கள் தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்து வருகிறீர்கள். தி.மு.க எப்போதும் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள். உள்ளத்தாலும், உணர்வாலும் உடன்பிறப்புகள் நாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு இஸ்லாமியர்களுக்கு தி.மு.க செய்த நன்மைகளில் முக்கியமானதாக, தி.மு.க முதல்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மீலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ரத்து செய்தாலும், கருணாநிதி அரசாணை வெளியிட்டு மீண்டும் மீலாடி நபிக்கு விடுமுறை அளித்தார். உருது பேசும் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இட ஒதுக்கீடு 3.5 சதவீதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் வேறு என நினைத்தது இல்லை. அந்த உணர்வோடு தான் திராவிட மாடல் ஆட்சியும், ஸ்டாலினும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹஜ் மாநில குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், ஹஜ் புனித பயணத்திற்காக 24.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 207 கோடி ரூபாயில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய கல்வி உதவியை நிறுத்திவிட்டது. இந்தாண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,159 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் புனரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிந்தித்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களை வாரி வழங்குவது தான் திராவிட மாடல். இஸ்லாமியர்களின் கோரிக்கை தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,537 உலமார்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 1,500 வழங்கப்படுகிறது. இனி ரூ.5,000 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். உலமார்கள் நலவாரியத்தில் 15,060 பேர் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 1,000 பேருக்கு டூவீலர்கள் வாங்க வழங்கப்படும் ரூ.25,000 அரசு மானியத் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை, மதுரை வக்பு வாரிய தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் கூடுதலாக வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 உருது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை பாராட்டி, திராவிட மாடல் அரசு தான் தொடர்ந்து வர வேண்டும் என நம்பிக்கையோடு தீர்மானங்கள் போட்டதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையை நிச்சயமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான். சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் தீர்மானங்களை பரப்புரை செய்தால் மீண்டும் தி.மு.க ஆட்சி உறுதியாக வரும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் ஸ்டாலின் இஸ்லாமிய மக்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். தி.மு.க தான் சிறுபான்மை இன மக்களை காக்கக்கூடிய காவல் அரண். அதனால் தான் கும்பல் வன்முறை தலை எடுக்காமல் உள்ளது. இந்த அமைதி சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தை எப்படியாவது குழப்பங்களில் தள்ளலாமா என போடும் அவர்களின் ராஜதந்திரங்கள் வீணாகி வருகிறது. தங்களுக்கு ஏற்ற அடிமையான சி.பி.ஐ, இ.டி., ஐ.டி., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி மேடை ஏறியுள்ளனர். துரோகங்களுக்கு அர்த்தமான அகராதியாக இடம் பெற்றுள்ளார் 10 தோல்வி பழனிசாமி. இஸ்லாமியர்களுக்கான துரோகப் பயணத்தை பழனிசாமி தொடர்ந்து கொண்டு இருக்கிறார். பழனிசாமியின் துரோகத்தை நாம் எண்ணிப் பார்த்தால் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று காலில் விழுவது, மற்றொன்று காலை வாரி விடுவது. அவர் இஸ்லாமிய மக்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் நீளமானது. 2019ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வர அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. இதற்காக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க கோரிக்கை வைத்தபோது, பழனிசாமி மறுத்துவிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ.கவிற்க்கு பயந்து அ.தி.மு.க ஆதரவு தரவில்லை. சி.ஏ.ஏ., சட்டம், முத்தலாக் சட்டம், வக்பு சட்ட திருத்தம் ஆகியவற்றில் அ.தி.மு.க இரட்டை வேடம் போட்டது. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கடுமையாக போராடினோம். பிரதமருக்கு கடிதம் எழுதினோம். சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினோம். மக்கள் முன்பாக அம்பலப்பட்டுவிடுவோமே என்ற பயத்தில் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள் என கருப்பு பேட்ஜ் கூட அணியவில்லை. அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை வக்பு சட்ட திருத்த மசோதாவை திருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இப்படியாக துரோகம் செய்து விட்டு, கூட்டணி தர்மத்திற்காக தங்களுக்கு விருப்பமில்லாத சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக பழனிசாமி பச்சை பொய் கூறினார். எனவே ஒட்டுமொத்தமாக அந்த கூட்டணியை விரட்டும் வலிமை மதச்சார்பற்ற கூட்டணிக்கே உள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அ.தி.மு.க-வின் சதி எண்ணத்தை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ள பிரதமர் மோடிக்கும், தமிழகத்திற்கு நடக்கக் கூடிய தேர்தல் இது. பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், வளர்ந்த தமிழகத்தை நாசப்படுத்தும். அதைத் தடுக்கிற துணிச்சலும், தைரியமும் தி.மு.க., கூட்டணிக்கே உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. சுயநலத்திற்காக தமிழக நலனை அடகு வைத்துள்ள அடிமைகளுக்கும், அவர்களுக்கு கட்டளையிடும் டில்லி எஜமானர்களுக்கும் புரிகிறபடி உரக்க சொல்லுவோம். தன்மானம் மிக்க தமிழகம் தலைகுனியாது. தமிழகம் வெல்லும் என்றார்.
கும்பகோணம்: ”எடப்பாடி பழனிசாமியின் துரோகம் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது”- முதல்வர் ஸ்டாலின்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``பயணங்களில் வரும் அலைச்சலை விட, நீங்கள் தரும் அன்புதான் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. பள்ளிவாசலை மையமாக வைத்து சமூக உதவிகள், சேவைகள், சீர்திருத்தங்கள் செய்யும் சமூகப் பணிகளாக ஆற்றக்கூடிய மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் இஸ்லாமிய பண்பாட்டில் முக்கியமானவை. வழிபாட்டு தலங்கள் தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்து வருகிறீர்கள். தி.மு.க எப்போதும் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள். உள்ளத்தாலும், உணர்வாலும் உடன்பிறப்புகள் நாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு இஸ்லாமியர்களுக்கு தி.மு.க செய்த நன்மைகளில் முக்கியமானதாக, தி.மு.க முதல்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மீலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ரத்து செய்தாலும், கருணாநிதி அரசாணை வெளியிட்டு மீண்டும் மீலாடி நபிக்கு விடுமுறை அளித்தார். உருது பேசும் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இட ஒதுக்கீடு 3.5 சதவீதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் வேறு என நினைத்தது இல்லை. அந்த உணர்வோடு தான் திராவிட மாடல் ஆட்சியும், ஸ்டாலினும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹஜ் மாநில குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், ஹஜ் புனித பயணத்திற்காக 24.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 207 கோடி ரூபாயில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய கல்வி உதவியை நிறுத்திவிட்டது. இந்தாண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,159 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் புனரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிந்தித்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களை வாரி வழங்குவது தான் திராவிட மாடல். இஸ்லாமியர்களின் கோரிக்கை தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,537 உலமார்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 1,500 வழங்கப்படுகிறது. இனி ரூ.5,000 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். உலமார்கள் நலவாரியத்தில் 15,060 பேர் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 1,000 பேருக்கு டூவீலர்கள் வாங்க வழங்கப்படும் ரூ.25,000 அரசு மானியத் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை, மதுரை வக்பு வாரிய தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் கூடுதலாக வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 உருது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை பாராட்டி, திராவிட மாடல் அரசு தான் தொடர்ந்து வர வேண்டும் என நம்பிக்கையோடு தீர்மானங்கள் போட்டதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையை நிச்சயமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான். சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் தீர்மானங்களை பரப்புரை செய்தால் மீண்டும் தி.மு.க ஆட்சி உறுதியாக வரும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் ஸ்டாலின் இஸ்லாமிய மக்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். தி.மு.க தான் சிறுபான்மை இன மக்களை காக்கக்கூடிய காவல் அரண். அதனால் தான் கும்பல் வன்முறை தலை எடுக்காமல் உள்ளது. இந்த அமைதி சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தை எப்படியாவது குழப்பங்களில் தள்ளலாமா என போடும் அவர்களின் ராஜதந்திரங்கள் வீணாகி வருகிறது. தங்களுக்கு ஏற்ற அடிமையான சி.பி.ஐ, இ.டி., ஐ.டி., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி மேடை ஏறியுள்ளனர். துரோகங்களுக்கு அர்த்தமான அகராதியாக இடம் பெற்றுள்ளார் 10 தோல்வி பழனிசாமி. இஸ்லாமியர்களுக்கான துரோகப் பயணத்தை பழனிசாமி தொடர்ந்து கொண்டு இருக்கிறார். பழனிசாமியின் துரோகத்தை நாம் எண்ணிப் பார்த்தால் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று காலில் விழுவது, மற்றொன்று காலை வாரி விடுவது. அவர் இஸ்லாமிய மக்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் நீளமானது. 2019ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வர அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. இதற்காக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க கோரிக்கை வைத்தபோது, பழனிசாமி மறுத்துவிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ.கவிற்க்கு பயந்து அ.தி.மு.க ஆதரவு தரவில்லை. சி.ஏ.ஏ., சட்டம், முத்தலாக் சட்டம், வக்பு சட்ட திருத்தம் ஆகியவற்றில் அ.தி.மு.க இரட்டை வேடம் போட்டது. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கடுமையாக போராடினோம். பிரதமருக்கு கடிதம் எழுதினோம். சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினோம். மக்கள் முன்பாக அம்பலப்பட்டுவிடுவோமே என்ற பயத்தில் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள் என கருப்பு பேட்ஜ் கூட அணியவில்லை. அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை வக்பு சட்ட திருத்த மசோதாவை திருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இப்படியாக துரோகம் செய்து விட்டு, கூட்டணி தர்மத்திற்காக தங்களுக்கு விருப்பமில்லாத சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக பழனிசாமி பச்சை பொய் கூறினார். எனவே ஒட்டுமொத்தமாக அந்த கூட்டணியை விரட்டும் வலிமை மதச்சார்பற்ற கூட்டணிக்கே உள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அ.தி.மு.க-வின் சதி எண்ணத்தை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ள பிரதமர் மோடிக்கும், தமிழகத்திற்கு நடக்கக் கூடிய தேர்தல் இது. பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், வளர்ந்த தமிழகத்தை நாசப்படுத்தும். அதைத் தடுக்கிற துணிச்சலும், தைரியமும் தி.மு.க., கூட்டணிக்கே உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. சுயநலத்திற்காக தமிழக நலனை அடகு வைத்துள்ள அடிமைகளுக்கும், அவர்களுக்கு கட்டளையிடும் டில்லி எஜமானர்களுக்கும் புரிகிறபடி உரக்க சொல்லுவோம். தன்மானம் மிக்க தமிழகம் தலைகுனியாது. தமிழகம் வெல்லும் என்றார்.
Karur மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK வில் யார் யாருக்கு சீட்? | Detailed Report | Vikatan
அமமுக: 7; BJP: ?! - பரபர NDA Seat Sharing | TVK கூட்டணியை தடுக்கும் பாஜக - Sengottaiyan| Ajit Pawar
“எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” - விஜய்யின் தந்தை அழைப்புக்கு செல்வப்பெருந்தகை பதில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன. எஸ்.ஏ சந்திரசேகர் இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம் எஸ்.ஏ சந்திரசேகர் காங்கிரஸ் தொடர்பாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், எங்கள் தொண்டர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவையில்லை. செல்வப்பெருந்தகை இருந்தாலும் எங்களுக்கு பூஸ்ட் கொடுப்பதாகச் சொன்னதற்கு நன்றி. மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் விரைந்து செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' - தவெக
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. TVK அதில் பேசிய செங்கோட்டையன், '234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் காட்டப்போகும் வேட்பாளர்கள்தான் கோட்டைக்கு செல்லப்போகிறார்கள். தவெகவில் பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 90 நாட்கள்தான். அதிகாரிகள் உங்களை வரவேற்று வாருங்கள் உட்காருங்கள் என பணிவன்போடு பேசப்போகிறார்கள்' என்றார். தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், 'சென்னையில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருந்தும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. மழை வெள்ளத்தின் போது கருணாநிதி வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினார். ஸ்டாலின் பேண்ட் போட்டுக் கொண்டு இறங்கினார். இதோ உதயநிதியும் மழை தண்ணீரில் இறங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே என்ன மாறியிருக்கிறது? சென்னை திமுகவின் கோட்டை என ரவுடியிசத்தாலும் பணத்தாலும் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். வடசென்னை முழுவதும் குடிசைகள்தான். தென் சென்னைக்கு கிடைத்த வளர்ச்சி வட சென்னைக்கு ஏன் கிடைக்கவில்லை? Sengottaiyan வரப்போகும் தேர்தல் சென்னை மக்களின் வாழ்க்கையை மாற்றும். தலைவர் பயந்துவிட்டார், தலைவரை மிரட்டிவிட்டார்கள் என திமுக எவ்வளவோ பொய்யுரைகளை பரப்பியது. இந்நேரம் தலைவர் 32 மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்திருக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி வேலையை செய்தார். அன்பில் மகேஸ் ஓடி வந்தார். உதயநிதி காலையிலேயே வந்தார். தலைவரின் பிரசாரத்தை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், கரூர் மக்களே தலைவரை ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. டெல்லிதான் தமிழ்நாடானு வசனம் பேசுற படம் எடுப்பாங்க. ஆனா, அந்தப் படக்குழுவை டெல்லிக்கு மோடியோட பொங்கல் கொண்டாட அனுப்புவாங்க. இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாம நடக்குமா? TVK கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அது மத்திய அரசின் கீழ் வருவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். கடல் வழியாக வரும் போதைப் பொருளை தெருவில்தானே விற்கிறார்கள்? உங்களின் காவல்துறை என்ன செய்தது? காவல்துறையை நேர்மையான காவல்துறையாக எங்களின் தலைவர் மாற்றுவார். TVK டாஸ்மாக்கின் விற்பனை 55000 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதல்வரை 'குவார்ட்டர் முதல்வர்' என்றுதான் அழைக்க வேண்டும். திமுகவில் இருக்கும் மா.செக்கள் அத்தனை பேரும் திருடர்கள். தவெகவின் மா.செக்கள் அத்தனை பேரும் 30 வருடமாக சேவை செய்தவர்கள். அதிமுகவை விமர்சிக்காதீர்கள். அவர்களை பல ஆண்டுகளாக காணவில்லை. நம்முடைய கவனம் மொத்தமும் திமுக மீது மட்டும்தான் இருக்க வேண்டும். நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். மே 10 ஆம் தேதிக்குள் தலைவர் முதல்வர் ஆகிறார். எனக்கான முகவரியை கொடுத்தது திருமா அண்ணன். நான் என்றைக்கும் நன்றியை மறக்கமாட்டேன். தோழர் பெ.சண்முகத்தோடும் நமக்கு எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அண்ணன் திருமாவுக்கு மரியாதை இல்லை' என்றார்.
'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' - தவெக
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. TVK அதில் பேசிய செங்கோட்டையன், '234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் காட்டப்போகும் வேட்பாளர்கள்தான் கோட்டைக்கு செல்லப்போகிறார்கள். தவெகவில் பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 90 நாட்கள்தான். அதிகாரிகள் உங்களை வரவேற்று வாருங்கள் உட்காருங்கள் என பணிவன்போடு பேசப்போகிறார்கள்' என்றார். தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், 'சென்னையில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருந்தும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. மழை வெள்ளத்தின் போது கருணாநிதி வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினார். ஸ்டாலின் பேண்ட் போட்டுக் கொண்டு இறங்கினார். இதோ உதயநிதியும் மழை தண்ணீரில் இறங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே என்ன மாறியிருக்கிறது? சென்னை திமுகவின் கோட்டை என ரவுடியிசத்தாலும் பணத்தாலும் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். வடசென்னை முழுவதும் குடிசைகள்தான். தென் சென்னைக்கு கிடைத்த வளர்ச்சி வட சென்னைக்கு ஏன் கிடைக்கவில்லை? Sengottaiyan வரப்போகும் தேர்தல் சென்னை மக்களின் வாழ்க்கையை மாற்றும். தலைவர் பயந்துவிட்டார், தலைவரை மிரட்டிவிட்டார்கள் என திமுக எவ்வளவோ பொய்யுரைகளை பரப்பியது. இந்நேரம் தலைவர் 32 மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்திருக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி வேலையை செய்தார். அன்பில் மகேஸ் ஓடி வந்தார். உதயநிதி காலையிலேயே வந்தார். தலைவரின் பிரசாரத்தை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், கரூர் மக்களே தலைவரை ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. டெல்லிதான் தமிழ்நாடானு வசனம் பேசுற படம் எடுப்பாங்க. ஆனா, அந்தப் படக்குழுவை டெல்லிக்கு மோடியோட பொங்கல் கொண்டாட அனுப்புவாங்க. இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாம நடக்குமா? TVK கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அது மத்திய அரசின் கீழ் வருவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். கடல் வழியாக வரும் போதைப் பொருளை தெருவில்தானே விற்கிறார்கள்? உங்களின் காவல்துறை என்ன செய்தது? காவல்துறையை நேர்மையான காவல்துறையாக எங்களின் தலைவர் மாற்றுவார். TVK டாஸ்மாக்கின் விற்பனை 55000 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதல்வரை 'குவார்ட்டர் முதல்வர்' என்றுதான் அழைக்க வேண்டும். திமுகவில் இருக்கும் மா.செக்கள் அத்தனை பேரும் திருடர்கள். தவெகவின் மா.செக்கள் அத்தனை பேரும் 30 வருடமாக சேவை செய்தவர்கள். அதிமுகவை விமர்சிக்காதீர்கள். அவர்களை பல ஆண்டுகளாக காணவில்லை. நம்முடைய கவனம் மொத்தமும் திமுக மீது மட்டும்தான் இருக்க வேண்டும். நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். மே 10 ஆம் தேதிக்குள் தலைவர் முதல்வர் ஆகிறார். எனக்கான முகவரியை கொடுத்தது திருமா அண்ணன். நான் என்றைக்கும் நன்றியை மறக்கமாட்டேன். தோழர் பெ.சண்முகத்தோடும் நமக்கு எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அண்ணன் திருமாவுக்கு மரியாதை இல்லை' என்றார்.
DMK: குறைசொல்லும் ஜோடங்கர்; ராகுலுடன் சந்திப்பு நடத்திய கனிமொழி - திமுகவின் தேர்தல் திட்டம் என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார். திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? அதில் “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? என தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (ஜன. 28) ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிரிஷ் ஜோடங்கர் திமுகவின் திட்டம் என்ன? இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் திமுகவின் திட்டம்தான் என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் பிரியனைத் தொடர்புகொண்டு பேசினோம். திமுக கூட்டணிக்கு வரும் புதிய பிளேயர்கள் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “ திமுக, கூட்டணி குறித்து பொதுவெளியில் ஏன் பேசாமல் இருக்கிறது என்றால், அங்கே புதிய பிளேயர்கள் வர உள்ளார்கள் என்று அர்த்தம். தேமுதிக, ஓபிஎஸ் அணி மற்றும் இன்னும் சில கட்சிகள் திமுகவுடன் இணைகிற சூழல் இருந்து வருகிறது. திமுக இன்னும் தேர்தலுக்காக தனிக்குழுவை நியமிக்கவில்லை. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் வருகிறது. தேமுதிக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிக்காக ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தகவல்கள் வெளியில் கசியும் என்று நினைக்கிறது திமுக. அதைத் தவிர்க்க, திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய கட்சிகள் இணைவதால் தங்களுக்கான இடங்களைக் குறைத்துக்கொண்டு 175 இடங்களில் போட்டிப்போட இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. முக்கியமாக, ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது. இதை ஏற்கனவே திமுக சொல்லியும் விட்டது. கறார் ஸ்டாலின் இடங்களை அதிகரிப்பது என்றாலும், ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் ஓரிரு இடங்களை அதிகப்படுத்திக் கொடுப்பார்களே தவிர, அதற்கு மேல் வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி 'ஆட்சியில் பங்கு', 'அதிக சீட் கேட்பது' போன்ற விஷயங்களைச் செய்கிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கெல்லாம் ஒத்துப்போகவில்லை. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் வைத்துக்கொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருக்கிறது திமுக. இதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் உஷாராக இருக்கும் திமுக திமுகப் போட்டியிடும் இடங்களைக் குறைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. காரணம், அவர்கள் போட்டிபோடும் இடங்களைக் குறைத்தால், வெற்றி பெறும் இடங்களும் குறையும். அதன் பின், கூட்டணி ஆட்சி கட்டாயமாகிவிடும் என்று கருதுகிறார்கள். கூட்டணி கட்சிகள் என்ன கணக்கு போட்டாலும், திமுக இடங்களை ஒதுக்குவதில் மிகுந்த உஷாராக இருக்கிறது” என்று விளக்கினார்.
DMK: குறைசொல்லும் ஜோடங்கர்; ராகுலுடன் சந்திப்பு நடத்திய கனிமொழி - திமுகவின் தேர்தல் திட்டம் என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார். திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? அதில் “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? என தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (ஜன. 28) ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிரிஷ் ஜோடங்கர் திமுகவின் திட்டம் என்ன? இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் திமுகவின் திட்டம்தான் என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் பிரியனைத் தொடர்புகொண்டு பேசினோம். திமுக கூட்டணிக்கு வரும் புதிய பிளேயர்கள் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “ திமுக, கூட்டணி குறித்து பொதுவெளியில் ஏன் பேசாமல் இருக்கிறது என்றால், அங்கே புதிய பிளேயர்கள் வர உள்ளார்கள் என்று அர்த்தம். தேமுதிக, ஓபிஎஸ் அணி மற்றும் இன்னும் சில கட்சிகள் திமுகவுடன் இணைகிற சூழல் இருந்து வருகிறது. திமுக இன்னும் தேர்தலுக்காக தனிக்குழுவை நியமிக்கவில்லை. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் வருகிறது. தேமுதிக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிக்காக ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தகவல்கள் வெளியில் கசியும் என்று நினைக்கிறது திமுக. அதைத் தவிர்க்க, திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய கட்சிகள் இணைவதால் தங்களுக்கான இடங்களைக் குறைத்துக்கொண்டு 175 இடங்களில் போட்டிப்போட இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. முக்கியமாக, ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது. இதை ஏற்கனவே திமுக சொல்லியும் விட்டது. கறார் ஸ்டாலின் இடங்களை அதிகரிப்பது என்றாலும், ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் ஓரிரு இடங்களை அதிகப்படுத்திக் கொடுப்பார்களே தவிர, அதற்கு மேல் வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி 'ஆட்சியில் பங்கு', 'அதிக சீட் கேட்பது' போன்ற விஷயங்களைச் செய்கிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கெல்லாம் ஒத்துப்போகவில்லை. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் வைத்துக்கொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருக்கிறது திமுக. இதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் உஷாராக இருக்கும் திமுக திமுகப் போட்டியிடும் இடங்களைக் குறைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. காரணம், அவர்கள் போட்டிபோடும் இடங்களைக் குறைத்தால், வெற்றி பெறும் இடங்களும் குறையும். அதன் பின், கூட்டணி ஆட்சி கட்டாயமாகிவிடும் என்று கருதுகிறார்கள். கூட்டணி கட்சிகள் என்ன கணக்கு போட்டாலும், திமுக இடங்களை ஒதுக்குவதில் மிகுந்த உஷாராக இருக்கிறது” என்று விளக்கினார்.
`நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பிட்ட அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, இந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசு இருந்தது. பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் அவர் விசாரித்தார். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதற்கிடையில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் குழுவினர் போராட்டங்களை நடத்தினர். மேலும் அவருக்கு எதிராக புத்தகங்களும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் மணி, ``நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என வாதம் முன் வைத்தார். குறிப்பாக யூடியூப்பர்கள் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும் அல்லது தமிழக அரசு எடுப்பதில்லை எனவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றம் அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனரா?' என கேள்வி எழுப்பியதோடு, `நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது?' என கேள்வி எழுப்பினர். `ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும்' என கூறிய நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஏராளமான புகார் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், ஏன் அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது?' என கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய மனுதாரர் மணி, ``திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் மட்டுமே யூடியூபர்கள் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள. ஆனால் அதனை தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், ``மனுதாரர் கூறக்கூடிய விஷயங்கள் மிகவும் முக்கியமானது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என சொல்லியதோடு, ``என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவியுங்கள் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு சிறிது நேரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர் பிற்பகலில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி, ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கனவே ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும், அதை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் தற்பொழுது தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளது.
`நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பிட்ட அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, இந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசு இருந்தது. பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் அவர் விசாரித்தார். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதற்கிடையில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் குழுவினர் போராட்டங்களை நடத்தினர். மேலும் அவருக்கு எதிராக புத்தகங்களும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் மணி, ``நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என வாதம் முன் வைத்தார். குறிப்பாக யூடியூப்பர்கள் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும் அல்லது தமிழக அரசு எடுப்பதில்லை எனவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றம் அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனரா?' என கேள்வி எழுப்பியதோடு, `நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது?' என கேள்வி எழுப்பினர். `ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும்' என கூறிய நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஏராளமான புகார் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், ஏன் அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது?' என கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய மனுதாரர் மணி, ``திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் மட்டுமே யூடியூபர்கள் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள. ஆனால் அதனை தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், ``மனுதாரர் கூறக்கூடிய விஷயங்கள் மிகவும் முக்கியமானது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என சொல்லியதோடு, ``என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவியுங்கள் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு சிறிது நேரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர் பிற்பகலில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி, ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கனவே ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும், அதை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் தற்பொழுது தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளது.
`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்
தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம் என்று எல்லாருமே கூறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. விஜய் மட்டும் என்ன புதிதாகவா சொல்கிறார்? நானோ என் மனைவி ராதிகாவோ வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பை வாங்கி தர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன். தி.மு.கவு-க்கும், த.வெ.க-விற்கும் போட்டி என்பதை மீறி அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது எழுதிக் கொடுத்தது அவ்வளவுதான், அதை படிக்கிறார்கள். சரத்குமார் கூட்டம் அனைவருக்கும் வரும். வடிவேலுவுக்கும் கூட்டம் வரும் நாளைக்கு அன்பு சகோதரர் அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். சினிமா பிரபலங்களின் கூட்டத்திற்கு வருபவர்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுப்பார்கள். எதற்காக வாக்களிக்கப் போகிறோம், எந்தக் கொள்கைக்காக வாக்களிக்க போகிறோம். அவர்கள் வந்தால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியுமா? என்று சிந்தித்து செயல்படுபவர்கள் மக்கள் மட்டும்தான்” என்றார்.
சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்
மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்காக இன்று காலையில் அஜித்பவார் மும்பையில் இருந்து பாராமதிக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். அஜித் பவார் காலை சுமார் 8:45 மணியளவில் பாராமதி விமான நிலைய ஓடுதளத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளம் அருகே விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் விமானத்தில் இருந்த இரண்டு பாதுகாவலர்கள், பைலட் மற்றும் அஜித் பவார் என அனைவரும் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மகாராஷ்டிரா பா.ஜ.க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித்பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவார் மட்டுமின்றி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளில் பல முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி மோகன் குமாரமங்கலம் * 1973-ம் ஆண்டு மே 31 ஆம் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் எம்.பி. மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார். சஞ்சய் காந்தி * 1980-ம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் ராஜீவ் காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி காலமானார். என்.வி.என். சோமு * 1997 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் என்.வி.என். சோமு உயிரிழந்தார். மாதவராவ் சிந்தியா * 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தனியார் விமான விபத்தில் முன்னாள் ரயில்வே அமைச்சர் மாதவராவ் சிந்தியா காலமானார். பாலயோகி * 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி. பாலயோகி உயிரிழந்தார். நடிகை சௌந்தர்யா * 2004 ஆம் ஆண்டு தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சௌந்தர்யா பெங்களூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். ஓ.பி.ஜிந்தால் - சுரேந்தர் சிங் * 2005-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஹரியானா முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஓ.பி.ஜிந்தால் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். நடிகை சௌந்தர்யா ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி * 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி நல்லமலா வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி காலமானார். டோர்ஜி * 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முதல்வர் டோர்ஜி கண்டு காலமானார். பிபின் ராவத் * 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்துகுள்ளாகி முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விஜய் ரூபானி * 2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!
திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து முசக்குளம் கிராமத்தினர் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முசக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் பேசினோம். முசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கார்த்தி நம்மிடம் பேசும்போது, “இந்த ஊரின் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடம் என்று கிராமத்திற்கு முதன்மையான அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் தான் இருக்கிறது. அதிலும் மழைக்காலங்களில் எங்கள் நிலைமை இன்னும் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்து சேரும் வரை, ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதில்தான், 15-க்கும் மேற்பட்ட சிறார்கள் தினமும் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே அங்கன்வாடி மையமும் செயல்படுவதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தோம். அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டங்களில்தான் ஈடுபடுவோம்” என்கிறார் விரக்தியாக. இதையடுத்து, கூடுர் ஊராட்சியின் அவல நிலை குறி்த்து திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பாக மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெற்ற பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். விரைந்து மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை எற்படுத்தி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!
திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து முசக்குளம் கிராமத்தினர் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முசக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் பேசினோம். முசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கார்த்தி நம்மிடம் பேசும்போது, “இந்த ஊரின் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடம் என்று கிராமத்திற்கு முதன்மையான அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் தான் இருக்கிறது. அதிலும் மழைக்காலங்களில் எங்கள் நிலைமை இன்னும் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்து சேரும் வரை, ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதில்தான், 15-க்கும் மேற்பட்ட சிறார்கள் தினமும் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே அங்கன்வாடி மையமும் செயல்படுவதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தோம். அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டங்களில்தான் ஈடுபடுவோம்” என்கிறார் விரக்தியாக. இதையடுத்து, கூடுர் ஊராட்சியின் அவல நிலை குறி்த்து திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பாக மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெற்ற பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். விரைந்து மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை எற்படுத்தி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விபத்தில் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அஜித் பவார் இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக, ஆளும் கட்சியில் இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்ற அச்சம் எழுகிறது. அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் தனது தாய் கட்சிக்கே திரும்பப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், இந்தச் விபத்தில் ஐயம் எழுகிறது. எனவே, இந்த விபத்து குறித்து மற்ற அரசு விசாரணை அமைப்புகளை விட, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டன. எனவே, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மம்தா பானர்ஜி மட்டுமில்லாமல், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். `6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!
Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விபத்தில் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அஜித் பவார் இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக, ஆளும் கட்சியில் இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்ற அச்சம் எழுகிறது. அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் தனது தாய் கட்சிக்கே திரும்பப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், இந்தச் விபத்தில் ஐயம் எழுகிறது. எனவே, இந்த விபத்து குறித்து மற்ற அரசு விசாரணை அமைப்புகளை விட, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டன. எனவே, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மம்தா பானர்ஜி மட்டுமில்லாமல், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். `6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!
யார் இந்த Ajit Pawar? - Full Details | `6 முறை Maharashtra துணை முதல்வர்' | Vikatan
யார் இந்த Ajit Pawar? - Full Details | `6 முறை Maharashtra துணை முதல்வர்' | Vikatan
4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் எனப் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. 1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார். அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி, உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்! 1,000-வது குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில். 2,000-வது குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024) 3,000-வது குடமுழுக்கு நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025) 4,000-வது குடமுழுக்கு இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்... இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! திராவிடன் மாடல் = எல்லாருக்கும் எல்லாம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்
``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகர்
திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், நாட்டு நலனை காக்கவும், உண்மையான விடுதலையை கொடுக்கவும் சர்வீஸ் செய்வதற்காக புதியவர் யாராவது வந்தால் இடையூறு ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரய்ப்படுறதுக்கு ஒன்றுமில்லை. ஜெயிக்கணும் என்றால் இதையெல்லாம் பேசணும். ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை இதில் அரசியல் இருக்கா, இல்லையானு எல்லோருக்கும் தெரியும். மாற்றத்தை ஏற்படுத்த ஒரு இணைஞன் வரும் போது அது நல்லதா, நியாயமானு யாரும் பேசுவதில்லை. இதெல்லாம் சரித்திரம் மாற்ற முடியாது. மாற்றத்தை உருவாக்கு வருபவர்கள் இது போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டும். விஜய், இதுமாதிரி எவ்வளவோ தடைகளை எதிர் கொள்வார். ஜனநாயகன் - மக்களுக்கு தெரியும் ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லைனு மக்களுக்கு தெரியும். தெருவில் செல்லும் ஒரு பெண்ணிடம் கேட்டால் சொல்வார். கரூரில் என்ன நடந்ததுனு மக்கள் சொல்கிறார்கள். நான் சொன்னால் விஜயின் அப்பா என்பதால் சொல்கிறார் என்பார்கள். ஐந்து வருடத்திற்கு முன் இருந்த மக்கள் இப்போது இல்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள், வயதான பெண்கள் கூட அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். ரூ.3,000 கொடுத்தாலும் 5,000 கொடுத்தாலும் ஓட்டு அங்கேதான் போடுவோம் என்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் பணத்தால் மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர்... அது நடக்காது. கட்சி ஆரம்பித்து போராட வரும் விஜய்க்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் பயம் இல்லை. எனக்கும் எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு சரித்திரம், வரலாறு இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சி தற்போது தேய்ந்து போயிருக்கிறது. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டனர். அந்த பவரை விஜய் கொடுக்கிறேன் என்கிறார். காங்கிரஸ் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகர்
திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், நாட்டு நலனை காக்கவும், உண்மையான விடுதலையை கொடுக்கவும் சர்வீஸ் செய்வதற்காக புதியவர் யாராவது வந்தால் இடையூறு ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரய்ப்படுறதுக்கு ஒன்றுமில்லை. ஜெயிக்கணும் என்றால் இதையெல்லாம் பேசணும். ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை இதில் அரசியல் இருக்கா, இல்லையானு எல்லோருக்கும் தெரியும். மாற்றத்தை ஏற்படுத்த ஒரு இணைஞன் வரும் போது அது நல்லதா, நியாயமானு யாரும் பேசுவதில்லை. இதெல்லாம் சரித்திரம் மாற்ற முடியாது. மாற்றத்தை உருவாக்கு வருபவர்கள் இது போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டும். விஜய், இதுமாதிரி எவ்வளவோ தடைகளை எதிர் கொள்வார். ஜனநாயகன் - மக்களுக்கு தெரியும் ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லைனு மக்களுக்கு தெரியும். தெருவில் செல்லும் ஒரு பெண்ணிடம் கேட்டால் சொல்வார். கரூரில் என்ன நடந்ததுனு மக்கள் சொல்கிறார்கள். நான் சொன்னால் விஜயின் அப்பா என்பதால் சொல்கிறார் என்பார்கள். ஐந்து வருடத்திற்கு முன் இருந்த மக்கள் இப்போது இல்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள், வயதான பெண்கள் கூட அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். ரூ.3,000 கொடுத்தாலும் 5,000 கொடுத்தாலும் ஓட்டு அங்கேதான் போடுவோம் என்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் பணத்தால் மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர்... அது நடக்காது. கட்சி ஆரம்பித்து போராட வரும் விஜய்க்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் பயம் இல்லை. எனக்கும் எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு சரித்திரம், வரலாறு இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சி தற்போது தேய்ந்து போயிருக்கிறது. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டனர். அந்த பவரை விஜய் கொடுக்கிறேன் என்கிறார். காங்கிரஸ் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
FTA: இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained
ஒப்பந்தப் பேச்சுவார்த்தை... வர்த்தகப் பிரச்னை... வரி விதிப்பு... என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் முறுக்கிக் கொண்டு இருக்க... இன்னொரு பக்கம், இந்தியா வெற்றிகரமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம் என்ன நடந்தது? எத்தனையோ நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. 'பின், இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் என்ன இவ்வளவு சிறப்பு?' என்று இந்த இடத்தில் கேள்வி தோன்றுவது நியாயமானது தான். அதற்கு பதில்... இந்த ஒப்பந்தம் ஓராண்டு, ஈராண்டு ஆக இல்லை. இது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆம்... 2007-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. அதன் பின், பல்வேறு தடைகள், பிரச்னைகளால் நின்ற இந்தப் பேச்சுவார்த்தை, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இந்த மாதம் இறுதியாகி உள்ளது. குடியரசு தினத்திற்காக இந்தியா வந்தனர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா. அதையொட்டி நேற்று இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தகத்தை அறிவித்தார் மோடி. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் - ஏன் முக்கியமானது? ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என 27 ஐரோப்ப நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம். இதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையில் சிறந்தது... ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா பலதரப்பட்ட நாடுகளுடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். அந்தந்த நாடுகளின் சிறந்தவைகளையும் இந்தியாவால் பெற முடியும். ஏற்றுமதிகள் Gold: இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால் - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்ன செய்யலாம்? என்ன அறிவிப்பு? இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் படி... ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் கிட்டத்தட்ட 70 சதவிகித பொருள்களுக்கு வரிகளே இல்லை. இதனால், கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதிகள் பலனடையும். இந்த ஏற்றுமதிகளில் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், தங்கம் மற்றும் நவரத்தினங்கள், கடல்சார் பொருள்கள் போன்ற துறைகள் இடம்பிடித்துள்ளன. ஸ்டீல் மற்றும் அலுமினியம், ஆட்டோமொபைல்ஸ், இயந்திரம் மற்றும் இன்ஜீனியரிங் பொருள்கள், மதுபானங்கள் ஆகிய துறைகளுக்கு பெரியளவில் வரிச்சலுகைகள் கிடைத்துள்ளன. முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய சேவைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது ஒப்பந்தத்திற்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 -150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்ன லாபம்? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் கிட்டத்தட்ட அனைத்து இயந்திரங்கள், விமானங்கள் அல்லது விண்வெளி விமானங்கள், 90 சதவிகித மருத்துவம் சார்ந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஜீரோ வரி. வாகனங்கள் மற்றும் மதுபானங்களுக்கும் அதிக வரி குறைப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியா ஐரோப்பிய ஒன்றியப் பொருள்களுக்கு 11 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் இவைகளுக்கு வரி விலக்கு இல்லை! இந்தியாவும் சரி... ஐரோப்பிய ஒன்றியமும் சரி... சில பொருள்களின் ஏற்றுமதிகளுக்கு எந்த வரி விலக்கும் செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பால் பொருள்கள், தானியங்கள், மாமிசம், சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இந்தியா எந்த வரி விலக்கும் தரவில்லை. இந்தியாவில் இருந்து அங்கே செல்லும் பீஃப், சர்க்கரை, அரிசி, மாமிசம், பால் பவுடர், தேன், வாழைப்பழம் போன்றவைகளுக்கு அவர்கள் வரி விலக்கு தரவில்லை. இதற்கு காரணம் ஒன்று தான் - இரு தரப்புமே அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் காக்க விரும்புகின்றனர். அவ்வளவு தான். தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் பலனடையும்? ஜவுளித்துறை - திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். தோல் மற்றும் காலணித் துறை - ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை. கடற்சார் பொருள்கள் - தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி. ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகத் துறை - ஒரகடம், ஓசூர், சென்னை. தொழில்நுட்பம் - சென்னை, கோவை. தமிழ்நாடு பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! ஒப்பந்தம் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது? ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரியால் ஜவுளித்துறை, காலணித் துறை உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பலத்த அடியைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிற்கு மாற்றாக இந்தத் துறையினர் ஏற்கெனவே வேறு சந்தைகளைத் தேடி வந்தனர். இந்த நேரத்தில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தினால் கிடைக்கும் வரி விலக்கு இந்தத் துறைகளுக்கு மிகப்பெரிய ப்ளஸ். அனைத்து நாடுகளுமே, ட்ரம்பின் மிரட்டல்கள், மனமாற்றங்களால் வேறு சந்தைகளைத் தேடி வருகிறது. அப்படியான நேரத்தில் இந்தியாவின் இந்த மூவ் மிக முக்கியமானது. இந்த இடத்தில் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்வார்கள். இது வர்த்தகத்தை விரிவாக்கும். சீனாவின் பொருள்களுக்கு ஐரோப்ப நாடுகளில் பெரிய சந்தை இருந்து வருகிறது... இந்த இடத்தை இந்தியா பிடிப்பதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உண்டாக்கி தருகிறது. இந்த ஒப்பந்தத்தினால் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளுக்கு லாபம். இன்னமும் இந்த ஒப்பந்தத்தினால் லாபம் அதிகரிக்கும். இதனால், இங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்று வந்த பில்லியன் கணக்கான டாலர் வரி மிச்சமாகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கியப் பாசிட்டிவான விஷயம். சீனா Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? அடுத்ததாக, இந்த ஒப்பந்தத்தினால், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கும் திறன் வாய்ந்த நபர்களும், திறன்களும் வந்து செல்வார்கள்... வந்து செல்லும். ஏ.ஐ, தொழில்நுட்பங்களில் இந்தியாவை விட, பல அடிகள் முன்னேறி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒப்பந்தத்தினால், அவைகள் இங்கேயும் வளரும்... அப்டேட் ஆகும். இதே மாதிரி இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் வலுவடையும். இப்படி அனைத்து துறைகள் முதல் அனைத்து தரப்பினர் அதாவது மக்கள், ஏற்றுமதியாளர்கள், அரசாங்கத்தினருக்கு என அனைவருக்கும் பெரும் லாபத்தை அள்ளித் தர உள்ளது, 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்!' ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth
FTA: இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained
ஒப்பந்தப் பேச்சுவார்த்தை... வர்த்தகப் பிரச்னை... வரி விதிப்பு... என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் முறுக்கிக் கொண்டு இருக்க... இன்னொரு பக்கம், இந்தியா வெற்றிகரமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம் என்ன நடந்தது? எத்தனையோ நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. 'பின், இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் என்ன இவ்வளவு சிறப்பு?' என்று இந்த இடத்தில் கேள்வி தோன்றுவது நியாயமானது தான். அதற்கு பதில்... இந்த ஒப்பந்தம் ஓராண்டு, ஈராண்டு ஆக இல்லை. இது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆம்... 2007-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. அதன் பின், பல்வேறு தடைகள், பிரச்னைகளால் நின்ற இந்தப் பேச்சுவார்த்தை, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இந்த மாதம் இறுதியாகி உள்ளது. குடியரசு தினத்திற்காக இந்தியா வந்தனர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா. அதையொட்டி நேற்று இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தகத்தை அறிவித்தார் மோடி. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் - ஏன் முக்கியமானது? ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என 27 ஐரோப்ப நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம். இதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையில் சிறந்தது... ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா பலதரப்பட்ட நாடுகளுடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். அந்தந்த நாடுகளின் சிறந்தவைகளையும் இந்தியாவால் பெற முடியும். ஏற்றுமதிகள் Gold: இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால் - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்ன செய்யலாம்? என்ன அறிவிப்பு? இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் படி... ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் கிட்டத்தட்ட 70 சதவிகித பொருள்களுக்கு வரிகளே இல்லை. இதனால், கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதிகள் பலனடையும். இந்த ஏற்றுமதிகளில் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், தங்கம் மற்றும் நவரத்தினங்கள், கடல்சார் பொருள்கள் போன்ற துறைகள் இடம்பிடித்துள்ளன. ஸ்டீல் மற்றும் அலுமினியம், ஆட்டோமொபைல்ஸ், இயந்திரம் மற்றும் இன்ஜீனியரிங் பொருள்கள், மதுபானங்கள் ஆகிய துறைகளுக்கு பெரியளவில் வரிச்சலுகைகள் கிடைத்துள்ளன. முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய சேவைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது ஒப்பந்தத்திற்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 -150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்ன லாபம்? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் கிட்டத்தட்ட அனைத்து இயந்திரங்கள், விமானங்கள் அல்லது விண்வெளி விமானங்கள், 90 சதவிகித மருத்துவம் சார்ந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஜீரோ வரி. வாகனங்கள் மற்றும் மதுபானங்களுக்கும் அதிக வரி குறைப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியா ஐரோப்பிய ஒன்றியப் பொருள்களுக்கு 11 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் இவைகளுக்கு வரி விலக்கு இல்லை! இந்தியாவும் சரி... ஐரோப்பிய ஒன்றியமும் சரி... சில பொருள்களின் ஏற்றுமதிகளுக்கு எந்த வரி விலக்கும் செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பால் பொருள்கள், தானியங்கள், மாமிசம், சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இந்தியா எந்த வரி விலக்கும் தரவில்லை. இந்தியாவில் இருந்து அங்கே செல்லும் பீஃப், சர்க்கரை, அரிசி, மாமிசம், பால் பவுடர், தேன், வாழைப்பழம் போன்றவைகளுக்கு அவர்கள் வரி விலக்கு தரவில்லை. இதற்கு காரணம் ஒன்று தான் - இரு தரப்புமே அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் காக்க விரும்புகின்றனர். அவ்வளவு தான். தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் பலனடையும்? ஜவுளித்துறை - திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். தோல் மற்றும் காலணித் துறை - ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை. கடற்சார் பொருள்கள் - தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி. ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகத் துறை - ஒரகடம், ஓசூர், சென்னை. தொழில்நுட்பம் - சென்னை, கோவை. தமிழ்நாடு பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! ஒப்பந்தம் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது? ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரியால் ஜவுளித்துறை, காலணித் துறை உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பலத்த அடியைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிற்கு மாற்றாக இந்தத் துறையினர் ஏற்கெனவே வேறு சந்தைகளைத் தேடி வந்தனர். இந்த நேரத்தில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தினால் கிடைக்கும் வரி விலக்கு இந்தத் துறைகளுக்கு மிகப்பெரிய ப்ளஸ். அனைத்து நாடுகளுமே, ட்ரம்பின் மிரட்டல்கள், மனமாற்றங்களால் வேறு சந்தைகளைத் தேடி வருகிறது. அப்படியான நேரத்தில் இந்தியாவின் இந்த மூவ் மிக முக்கியமானது. இந்த இடத்தில் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்வார்கள். இது வர்த்தகத்தை விரிவாக்கும். சீனாவின் பொருள்களுக்கு ஐரோப்ப நாடுகளில் பெரிய சந்தை இருந்து வருகிறது... இந்த இடத்தை இந்தியா பிடிப்பதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உண்டாக்கி தருகிறது. இந்த ஒப்பந்தத்தினால் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளுக்கு லாபம். இன்னமும் இந்த ஒப்பந்தத்தினால் லாபம் அதிகரிக்கும். இதனால், இங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்று வந்த பில்லியன் கணக்கான டாலர் வரி மிச்சமாகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கியப் பாசிட்டிவான விஷயம். சீனா Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது? அடுத்ததாக, இந்த ஒப்பந்தத்தினால், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கும் திறன் வாய்ந்த நபர்களும், திறன்களும் வந்து செல்வார்கள்... வந்து செல்லும். ஏ.ஐ, தொழில்நுட்பங்களில் இந்தியாவை விட, பல அடிகள் முன்னேறி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒப்பந்தத்தினால், அவைகள் இங்கேயும் வளரும்... அப்டேட் ஆகும். இதே மாதிரி இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் வலுவடையும். இப்படி அனைத்து துறைகள் முதல் அனைத்து தரப்பினர் அதாவது மக்கள், ஏற்றுமதியாளர்கள், அரசாங்கத்தினருக்கு என அனைவருக்கும் பெரும் லாபத்தை அள்ளித் தர உள்ளது, 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்!' ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth
ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார்; காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்! - எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன. தவெக தலைவர் விஜய் இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
`முக்கோண'ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரம், அவிநாசி ஆகிய இரண்டு தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இதில், அதிமுக-வின் கோட்டையாக அவிநாசி தொகுதி கருதப்படும் நிலையில், தாராபுரம் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. 1951-இல் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 6 முறையும், திமுக-வுடன் கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக-வின் லேடீஸ் சென்டிமென்ட்: 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பார்வதி என்ற பெண் வேட்பாளர் முதன் முதலில் தாராபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் திமுக-வைச் சேர்ந்த பழனியம்மாள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். அதிலிருந்து, திமுக தலைமை தாராபுரம் தொகுதியை சென்டிமென்ட் அடிப்படையில் பெண்களுக்கே ஒதுக்கி வருகிறது. 1989 தேர்தலில் சாந்தகுமாரி, 1996 தேர்தலில் சரஸ்வதி, 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக வேட்பாளர் சிவகாமி, 2006- தேர்தலில் பார்வதி, 2021 தேர்தலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் என தொடர்ச்சியாக பெண்களை நிற்க வைத்து தாராபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திமுக லேடீஸ் சென்டிமென்ட்டுக்கும் இடையில் 1977-இல் தொடங்கி 1984 வரை தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று தேர்தல்கள் மற்றும் 1991, 2011 தேர்தல்களில் அதிமுக ஆண் வேட்பாளர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 2026 தேர்தலில் தாராபுரம் தொகுதியை திமுக-வில் ஆண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றார்போல், தற்போதைய தாராபுரம் எம்எல்ஏ-வும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் ஒருபுறமும், மறுபுறம் மாநிலங்களவை எம்.பி.யும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் மற்றொருபுறமும் தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன் என போட்டி போட்டுக் கொண்டு சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர். காய் நகர்த்தும் கயல்விழி இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், தனித் தொகுதியில் அவிநாசி எப்படி அதிமுக-வின் கோட்டையோ அதேபோல் மற்றொரு தனித் தொகுதியான தாராபுரம் திமுக-வின் கோட்டையாக உள்ளது. தாராபுரத்தில் நின்றால் வெற்றி உறுதி என்பதால் மீண்டும் சீட்டை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ். மீண்டும் வெற்றி பெற்றால் சீனியர் அமைச்சராகி விடலாம் என திட்டமிடும் அமைச்சர் கயல்விழியின் கணவர் செல்வராஜ் அதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறார். திராவிடர் கழகத்தில் இருந்த செல்வராஜ், கி.வீரமணியுடனான நெருக்கத்தை வைத்து தனது மனைவி கயல்விழிக்கு கடந்த 2021 தேர்தலில் சீட்டை பெற்றதுடன், அமைச்சர் பதவியையும் பெற்றார். இந்த முறை தாராபுரம் தொகுதியை பெண்களுக்கென்று திமுக தலைமை மீண்டும் ஒதுக்கினால் தனது மனைவி கயல்விழிக்கும், ஆண்களுக்கென்று ஒதுக்கினால் தனக்கும் எப்படியாவது சீட்டை பெற்றுவிட வேண்டுமென்று நினைக்கிறார் செல்வராஜ். அதற்காக இப்போதிருந்தே இருந்தே கி.வீரமணி ரூட்டிலும், அமைச்சர் சக்கரபாணி வைத்தும் காய்களை நகர்த்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கயல்விழி செல்வராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதால் உள்கட்சி அளவிலும் தனக்கு ஆதரவு இருப்பதை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளார். மு.பெ.சாமிநாதன் இதுஒருபுறம் இருக்க கயல்விழி செல்வராஜ் மீண்டும் வெற்றி பெற்று வந்தால், சீனியர் அமைச்சர் அந்தஸ்த்து கொடுக்க வாய்ப்புள்ளது. அப்போது, தனக்கான அரசியலில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நினைப்பதால், கயல்விழியை அவர் பரிந்துரைக்க மாட்டார் என்கிறார்கள். அதற்குப் பதிலாக தனது தீவிர விசுவாசியான தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன்தான் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது. மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணியோ, மு.பெ.சாமிநாதனின் துணைப் பொதுச் செயலாளராக இருப்பதால், இறுதியில் அவர் யாரைக் கை காட்டுகிறாரோ அவரை பரிந்துரைத்துவிடலாம் என நினைக்கிறார் என்கின்றனர் விரிவாக. தலைமையை நெருங்கும் பாப்புக்கண்ணன்: தற்போது தாராபுரம் நகர்மன்றத் தலைவராக இருக்கும் பாப்புக்கண்ணனும் தாராபுரம் தொகுதியை கைப்பற்ற வேண்டுமென தீவிரம் காட்டி வருகிறார். அவர் சார்ந்த சமூக மக்கள் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அதை பலமாக வைத்து சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார். மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தீவிர ஆதரவாளராக பாப்புக்கண்ணன் இருந்தாலும், அவருக்கு எதிராக தாராபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர். இருந்தாலும், மு.பெ.சாமிநாதன் பரிந்துரைத்துவிட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் பாப்புக்கண்ணன் களத்தில் இறங்கியுள்ளார். பாப்புகண்ணன் அதுமட்டுமில்லாமல், அமைச்சர் கே.என்.நேரு, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் மூலமும் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் பாப்புக்கண்ணன். நகர்மன்றத் தலைவராக இருப்பதால் துறை அமைச்சர் என்ற ரீதியில் கே.என்.நேருவிடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். தலைமைக்கு நெருக்கமாக வேண்டும் என்பதற்காகவே, அண்ணா அறிவாலத்தில் பல லட்சம் செலவில் உயர்மின் கோபுரத்தை தனது சொந்த செலவில் பாப்புக்கண்ணன் அமைத்துக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அடிக்கடி சென்னை சென்று தலைமையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். புதுமுகம், பெரிய குற்றச்சாட்டுகள் இல்லாதது மற்றும் அவர் சார்ந்த சமூக வாக்குகள் பலம், தற்போதைய எம்எல்ஏ கயல்விழி செல்வராஜ் மீதான அதிருப்தி மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பரிந்துரை பாப்புக்கண்ணனுக்கு பிளஸாக மாறும் என்கின்றனர் விவரம் அறிந்த திமுக நிர்வாகிகள். குறிவைக்கும் அந்தியூர் செல்வராஜ்: இதுகுறித்து பேசிய திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானிசாகர் தனித் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்துக்குள் வரும் அவிநாசி தொகுதியும் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகள் என்பதால், வெற்றி பெறுவது மிக கடினம். இதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிமுள்ள தாராபுரம் தொகுதியை அந்தியூர் செல்வராஜ் குறி வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தாராபுரம் தொகுதியில் தான் சார்ந்த அருந்ததியர் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பதாலும், திமுக-வுக்கு அந்த தொகுதியில் ஏற்கெனவே இருக்கும் பலத்தால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என அந்தியூர் செல்வராஜ் நினைக்கிறார். அந்தியூர் செல்வராஜ் அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச் செயலாளராக இருப்பதால் அவர் தாராபுரம் தொகுதி கேட்டால் கட்சித் தலைமை பரிசீலிக்க வாய்ப்புகள் அதிக உள்ளது. அதேவேளை மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனும் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். அந்தியூர் செல்வராஜும் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். ஒருவேளை அவருக்கு சீட் கொடுத்து வெற்றி பெறும்பட்சத்தில் இருவரில் யாராவது ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது. அதனால், தனது அரசியலுக்கு ஆபத்து வந்துவிடும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நினைப்பதால், அந்தியூர் செல்வராஜை அவர் பரிந்துரைக்க வாய்ப்புகள் மிக குறைவு. இருந்தாலும், தாராபுரம் தொகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் அந்தியூர் செல்வராஜ் அண்மைக்காலமாக தலைகாட்டத் தொடங்கியுள்ளார். அண்மையில் தாராபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அந்தியூர் செல்வராஜ் பேசினார். தாராபுரத்துக்குள் அந்தியூர் செல்வராஜ் தலை காட்டுவதை அமைச்சர் கயல்விழி செல்வராஜும், அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் விரும்பவில்லை என்கின்றனர். அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன் இடையிலான சீட் ரேஸ், அந்தியூர் செல்வராஜின் வருகை ஆகியவற்றால் தாராபுரம் திமுக பரபரப்பாகி உள்ளது.!
`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!
மகாராஷ்டிரா அரசியலில் அண்ணா(தாதா) என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பவாரின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தை கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கதறி அழுதனர். அஜித் பவார் சிறிய விமானத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது இந்த துயரச்சம்பவம் நடந்தது. விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானம் பாராமதி அருகில் 8.45 மணிக்கு சென்ற போது விமானத்தில் கடுமையான தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானம் பைலட் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் விழுந்து தீப்பிடித்துக்கொண்டது''என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கதறி அழுத தொண்டர்கள் இதில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. அதன் பாகங்கள் விமான நிலைய ஓடுபாதை முழுக்க பரவி கிடந்தது. அதோடு விமான நிலைய ஓடுதளம் கரும்புகையுடன் காட்சியளித்தது. அதிக அளவில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய Learjet 45XR என்ற அந்த விமானம் VSR Ventures என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். 100 அடியிலிருந்து விழுந்தது விமானம் மேலிருந்து கீழே விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''விமானம் ஓடுதளத்தை நோக்கி சென்ற போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானம் கீழே விழுந்தவுடன் உள்ளூர் மக்கள் ஓடி வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை'' என்று தெரிவித்தார். அஜித் பவார் மரணம் கட்சி தொண்டர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில், ''எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை'' என்றார். கட்சி தொண்டர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அதிகமானோர் சரத்பவார் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்து அறிந்தனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், அஜித் பவார் மக்கள் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் மரணம் தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முர்மு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உட்பட தலைவர்கள் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சரத் பவார் ஆகியோர் பாராமதிக்கு விரைந்துள்ளனர். சரத்பவார் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 முறை துணை முதல்வர் அஜித் பவார் தனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு யாருமே செய்ய முடியாத ஒரு காரியமாக 6 முறை துணை முதல்வராக இருந்திருக்கிறார். அதில் 2019-ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து துணை முதல்வராக பதவியேற்று மிகவும் சொற்ப தினங்கள் மட்டும் பதவியில் இருந்தார். அப்படி இருந்தும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அமைச்சரவையிலும் அஜித் பவார்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றார். 2014-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் காங்கிரஸ் நிர்ப்பந்தம் காரணமாக அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.க, கூட்டணி, உத்தவ் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என அனைத்து கூட்டணியிலும் அஜித் பவார் துணை முதல்வராக இருந்துவிட்டார். ஆட்சிகள் கவிழ்ந்தாலும், கூட்டணிகள் மாறினாலும் அஜித் பவாரை விட்டு துணை முதல்வர் பதவி மட்டும் சென்றதே இல்லை. அவர் கடைசி வரை துணை முதல்வராக இருந்துவிட்டு இறந்துவிட்டார். Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?
`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!
மகாராஷ்டிரா அரசியலில் அண்ணா(தாதா) என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பவாரின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தை கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கதறி அழுதனர். அஜித் பவார் சிறிய விமானத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது இந்த துயரச்சம்பவம் நடந்தது. விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானம் பாராமதி அருகில் 8.45 மணிக்கு சென்ற போது விமானத்தில் கடுமையான தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானம் பைலட் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் விழுந்து தீப்பிடித்துக்கொண்டது''என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கதறி அழுத தொண்டர்கள் இதில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. அதன் பாகங்கள் விமான நிலைய ஓடுபாதை முழுக்க பரவி கிடந்தது. அதோடு விமான நிலைய ஓடுதளம் கரும்புகையுடன் காட்சியளித்தது. அதிக அளவில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய Learjet 45XR என்ற அந்த விமானம் VSR Ventures என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். 100 அடியிலிருந்து விழுந்தது விமானம் மேலிருந்து கீழே விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''விமானம் ஓடுதளத்தை நோக்கி சென்ற போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானம் கீழே விழுந்தவுடன் உள்ளூர் மக்கள் ஓடி வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை'' என்று தெரிவித்தார். அஜித் பவார் மரணம் கட்சி தொண்டர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில், ''எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை'' என்றார். கட்சி தொண்டர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அதிகமானோர் சரத்பவார் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்து அறிந்தனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், அஜித் பவார் மக்கள் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் மரணம் தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முர்மு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உட்பட தலைவர்கள் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சரத் பவார் ஆகியோர் பாராமதிக்கு விரைந்துள்ளனர். சரத்பவார் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 முறை துணை முதல்வர் அஜித் பவார் தனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு யாருமே செய்ய முடியாத ஒரு காரியமாக 6 முறை துணை முதல்வராக இருந்திருக்கிறார். அதில் 2019-ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து துணை முதல்வராக பதவியேற்று மிகவும் சொற்ப தினங்கள் மட்டும் பதவியில் இருந்தார். அப்படி இருந்தும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அமைச்சரவையிலும் அஜித் பவார்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றார். 2014-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் காங்கிரஸ் நிர்ப்பந்தம் காரணமாக அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.க, கூட்டணி, உத்தவ் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என அனைத்து கூட்டணியிலும் அஜித் பவார் துணை முதல்வராக இருந்துவிட்டார். ஆட்சிகள் கவிழ்ந்தாலும், கூட்டணிகள் மாறினாலும் அஜித் பவாரை விட்டு துணை முதல்வர் பதவி மட்டும் சென்றதே இல்லை. அவர் கடைசி வரை துணை முதல்வராக இருந்துவிட்டு இறந்துவிட்டார். Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?
மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார். இந்தியாவில் வலுவான ஜி.டி.பி வளர்ச்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி... இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்... இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி... - இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் வரும் மத்திய பட்ஜெட் என்பதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் இந்த எதிர்பார்ப்புகள் மக்களாகிய உங்களுக்கும் இருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கான களம் இதோ... விவசாயம், தொழில்நுட்பம், Gig பொருளாதாரம், தங்கம், ஏற்றுமதி, இறக்குமதி, வருமான வரி, சிறு, குறு, நடுத்தர தொழில்... என எந்தத் துறையில் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கே கமென்டில் பகிருங்கள் மக்களே...!
மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார். இந்தியாவில் வலுவான ஜி.டி.பி வளர்ச்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி... இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்... இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி... - இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் வரும் மத்திய பட்ஜெட் என்பதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் இந்த எதிர்பார்ப்புகள் மக்களாகிய உங்களுக்கும் இருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கான களம் இதோ... விவசாயம், தொழில்நுட்பம், Gig பொருளாதாரம், தங்கம், ஏற்றுமதி, இறக்குமதி, வருமான வரி, சிறு, குறு, நடுத்தர தொழில்... என எந்தத் துறையில் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கே கமென்டில் பகிருங்கள் மக்களே...!
``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்? - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு பேசியவர், டாக்டர் அம்பேத்கர் பெயரைமட்டும் குறிப்பிடவில்லை. அவரின் உரை முடிவை எட்டும்போது, அந்த சபையில் இருந்த வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், அப்போதே ஆட்சேபனை தெரிவித்தார். அதனால் அந்த இடம் சலசலப்பானது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரீஷ் மகாஜன், ``அம்பேத்கர் பெயரை உரையில் குறிப்பிடாமல் இருந்தது தற்செயலானது. எந்த திட்டமும் இல்லை. என் செயல் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என விளக்கமளித்திருந்தார். கிரீஷ் மகாஜன் இது குறித்து வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், ``பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய குறிப்பைத் தவிர்த்தது தற்செயலானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், சம்பாஜி மகாராஜ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் தந்தையைப் பற்றிய குறிப்பை வசதியாகத் தவிர்த்திருக்கிறார். இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பது கிரீஷ் மகாஜனின் அதிர்ஷ்டம். அது என் துரதிர்ஷ்டம். கிரீஷ் மகாஜன் பாபாசாகேப் அம்பேத்கரின் அனைத்துப் பின்பற்றுபவர்களிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கிரீஷ் மகாஜன் மீது பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, நாசிக்கில் உள்ள சர்க்கார்வாடா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். மாதவி ஜாதவ் இந்த நிலையில், நேற்று கிரீஷ் மகாஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` என் உரையில் பி.ஆர்.அம்பேத்கரைக் குறிப்பிடாததற்கு வருந்துகிறேன். இதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் எந்தக் கோரிக்கையையும் வைக்கலாம். நான் நேற்றும் இதைத் தெளிவுபடுத்தினேன். என் உரைக்குப் பிறகுதான் இந்த குழப்பம் பற்றி எனக்குத் தெரியவந்தது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தச் சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு
``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்? - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு பேசியவர், டாக்டர் அம்பேத்கர் பெயரைமட்டும் குறிப்பிடவில்லை. அவரின் உரை முடிவை எட்டும்போது, அந்த சபையில் இருந்த வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், அப்போதே ஆட்சேபனை தெரிவித்தார். அதனால் அந்த இடம் சலசலப்பானது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரீஷ் மகாஜன், ``அம்பேத்கர் பெயரை உரையில் குறிப்பிடாமல் இருந்தது தற்செயலானது. எந்த திட்டமும் இல்லை. என் செயல் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என விளக்கமளித்திருந்தார். கிரீஷ் மகாஜன் இது குறித்து வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், ``பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய குறிப்பைத் தவிர்த்தது தற்செயலானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், சம்பாஜி மகாராஜ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் தந்தையைப் பற்றிய குறிப்பை வசதியாகத் தவிர்த்திருக்கிறார். இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பது கிரீஷ் மகாஜனின் அதிர்ஷ்டம். அது என் துரதிர்ஷ்டம். கிரீஷ் மகாஜன் பாபாசாகேப் அம்பேத்கரின் அனைத்துப் பின்பற்றுபவர்களிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கிரீஷ் மகாஜன் மீது பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, நாசிக்கில் உள்ள சர்க்கார்வாடா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். மாதவி ஜாதவ் இந்த நிலையில், நேற்று கிரீஷ் மகாஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` என் உரையில் பி.ஆர்.அம்பேத்கரைக் குறிப்பிடாததற்கு வருந்துகிறேன். இதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் எந்தக் கோரிக்கையையும் வைக்கலாம். நான் நேற்றும் இதைத் தெளிவுபடுத்தினேன். என் உரைக்குப் பிறகுதான் இந்த குழப்பம் பற்றி எனக்குத் தெரியவந்தது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தச் சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு
அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுக ‘வாவ்’ வியூகம் கடந்த காலங்களில் அனுதாப அலைகளை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு அறுவடை செய்த கட்சிகளை, ஆளுமைகளைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இந்த அத்தியாயத்தில், பழம் நழுவி பாலில் விழுந்தாலும் கூட, விழுந்தது எலுமிச்சம் பழம்போல என்று பாலை திரியவிட்ட கட்சியைப் பற்றியும், கூடவே மக்கள் மத்தியில் மட்டும்தான் அனுதாப அலைகள் ஒர்க் அவுட் ஆகும் என்பதில்லை, கட்சிக்குள்ளேயும் கூட அது பலிக்கும், ஆட்சியையும், அரியணையையும் கைக்குக் கொண்டுவரும் என்று ப்ரூவ் பண்ண ஸ்டாலினையும் பற்றி கொஞ்சம் பேசிக் கலைவோம். அதிமுக தலைமை அலுவலகம் சொதப்பிய அதிமுக ‘அனுதாப அலை’களை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும், சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கு அதிமுக சாட்சியாக நிற்கிறது என்று ஏற்கெனவே சுட்டிக்காடியதை இங்கே நிறுவ முயற்சித்தபோது, சிலவற்றை பட்டியலிடுவது அவசியமாகிறது. அதில் முதலாவது விஷயம், டிச.5, 2016 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிகழ்வு. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை மங்கிப் போய்தான் இருந்தது. அதற்கிடையில் அவரை எல்லோரும் கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று பார்த்து வருவதும், பேட்டி கொடுப்பதும் நடந்து கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து டிச.5 மாலை அவர் மரணித்தது அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியானது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தேசியத் தலைவர்கள் பலர், பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பல்வேறு துறை ஆளுமைகள் என அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு அணிவகுத்திருந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஸ்டாலின் கூட வந்திருந்தார். ஜெயலலிதா மறைவை தங்கள் வீட்டுத் துக்கமாக அனுசரித்த அக்கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என எல்லோர் மீதும் பரிதாபப்பட்டனர். அதிமுகவுக்கு ‘ராணுவ ஒழுக்கம்’ கொண்ட கட்சி என்ற அடைமொழியையும், ‘மோடியா... இல்லை இந்த லேடியா?’ வகையறா சவால்களால், ‘உங்களால் நான்; உங்களுக்காகத் தான்’, ‘செய்வீர்களா?’ போன்ற தேர்தல் பிரச்சார பஞ்ச் வசனங்களாலும், மகளிரை குறிவைக்கும் இலவசங்களாலும் தன்னை தன்னிகரற்ற தலைவியாக நிலைநிறுத்தியிருந்த ஆளுமை இல்லாமல் நிற்பவர்களை ‘நாம் தானே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்றொரு அனுதாப அலை எஃபக்ட் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த காலம். அதை அப்படியே அறுவடை செய்திருந்தால், 2021-ல் ஆட்சி மாற்றத்துக்கான தேவையே வந்திருக்காது. ஆனால், ‘செய்வீர்களா? செய்வீர்களா?’ என்று கேட்டுச் சென்ற ஜெயலலிதாவுக்கு கட்சியைக் காப்பாற்றி, ஆட்சியைத் தக்கவைக்கும் பணியை செய்தார்களா அதிமுகவினர்?! ஜெயலலிதா உடல் அன்றாடம் அக்கப்போர் அத்தகைய கேள்வியோடு ஜெ. மறைவுக்குப் பிந்தைய சில மாதங்களை திரும்பிப் பார்த்தால், வரிசையாக கண்முன் விரிவதெல்லாம் அதிமுக உட்கட்சிப் பூசலாக மட்டுமே இருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். அது தான் ‘அம்மாவின் ஆன்மாவை இன்ஸ்டன்ட்டாக குளிர்விக்கும்’ என்று நம்பினார்களோ என்னவோ! ஆனால், அடுத்துதான் மெயின் பிக்சர் ஓப்பன் ஆனது. முதல்வர் ஓபிஎஸ் ஓகே, ஆனால் கட்சி யார் கட்டுப்பாட்டில் என்று போயஸ் கார்டனில் அன்றாடம் அக்கப்போர்கள் நடக்க, அது ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் சென்று சேர்ந்தது. அரசல், புரசலா ஏன் கேட்குறீங்க நானே சொல்கிறேன் என்று நேராக ஜெ. சமாதிக்கு சென்று தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓபிஎஸ். அதை யாரும் மறக்கவே முடியாது. கூவத்தூர் களேபரங்கள் அதன்பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்ற பிரச்னைகள் எழ, கூவத்தூர் களேபரங்கள் அரங்கேற, இபிஎஸ்-க்கு முடிசூடிவிட்டு சசிகலா சபதம் செய்து சிறை செல்ல, அதிகாரப் போட்டி ஓபிஎஸ் vs இபிஎஸ் என்று மாறியது. கொஞ்ச காலம் சசிகலா விசுவாசியாக இருந்த இபிஎஸ் ‘அட சிறை சென்றவருக்கு எதற்கு அதிகாரத்தை கொடுப்பானேன்... நாமே எடுத்துக்கலாம்’ என்று ஓபிஎஸ் விதித்த சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் விசாரிக்கிறோம் என்று சொல்லி ஓபிஎஸ்-ஸுடம் இணைந்த கைகள் போஸ் கொடுத்தார். 2017 ஆகஸ்ட்டில் இது நடந்தது. ‘தாய் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே...’ என்று குடும்பப் பாடலெல்லாம் பாடும் அளவுக்கு ஒற்றுமை காட்டினர். எடப்பாடி - பன்னீர் அதன்பின்னர் ஒரு சம்பவம் நடந்தது. ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இணைந்த கைகள் பவரை காட்ட ஓபிஎஸ், இபிஎஸ் களமிறங்கியிருக்க, ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தின் சதி இருப்பதாகச் சொல்லியவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இறக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன். அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேச்சையாக டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ் களமிறக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.வான வெற்றிவேல் (தினகரன் ஆதரவாளர் ) ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா இட்லியும், சட்னியும் எல்லாம் சாப்பிடவில்லை. அவர் எப்போதும் கோமாவில் தான் இருந்தார். அம்மா மரணத்தின் பின்னணியில் நிச்சயமாக சசிகலா குடும்பம் இல்லவே இல்லை என்று வாதங்களை முன்வைத்தார். “ஐயோ பழிபோட்டுவிட்டோமே” என்று பதறிப்போன எமோஷனல் வாக்காளர்களும், அட 20 ரூபாய் டோக்கனும், அதனை மாற்றும்போது நிறைய பரிசும் உண்டாமே என்ற ‘கையில காசு வாயில தோசை’ ரக வாக்காளர்களும் குத்துங்க எஜமான் என்று குத்திவைக்க குக்கர் விசில் சட்டப்பேரவைக்குள் கேட்டது. ஜெ. தொகுதியில் அவர் கட்சி வேட்பாளர் வீழ்த்தப்பட்டு, ஜெ.வை விட அதிக வாக்குகள் பெற்று ஒரு சுயேச்சை வெற்றி பெற்றார். 11 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றார் என்ற வரலாறு உருவானது. முன்னதாக, 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பின் 2017 ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றிருந்தார். டிடிவி வெற்றியால், சசிகலா சிறையில் இருந்து திரும்பியதும் அதிமுக மீண்டும் சசிகலா கைக்கு செல்லும் என்று டிவி ஷோக்களில் விவாதம் நடைபெற, டிடிவி வெற்றியும், அதன் பிந்தைய சலசலப்புகளும் இபிஎஸ் - ஓபிஎஸ் காம்போவுக்கு பெரிய பின்னடைவானது. ஆனால், இதெல்லாம் பெருசல்ல என்பதுபோல் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தாங்கள் உருவாக்கிய புதிய பதவிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் லயித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று அவர்கள் காட்டிய தாராளம், பெருந்தன்மை பேசுபொருளானதும் நினைவுகூரத்தக்கது. அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி பாஜகவிடம் அடகு..! இணைந்த கைகள் நாங்கள் என்று அவர்கள் சொன்னாலும் கூட கட்சிக்குள் கோஷ்டி பிளவு பெருகிக் கொண்டே தான் இருந்தது. இதையெல்லாம் டெல்லியில் இருந்து உற்று நோக்கிய பாஜக, சந்தில் சிந்து போடலாம் என்று காய்களை நகர்த்தியது. அப்போதிருந்தே அதிமுகவை பாஜகவிடம் அடகுவைக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எஞ்சிய 4 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சவால் விட்டுக் கொண்டே இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திய அத்தனை அரசியல் நகர்வுகளையும் தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அதிமுகவின் கடைசி ஓராண்டில் கொரோனா பெருந்தொற்றும் கும்மியடிக்க, 4 ஆண்டு காலத்தில் கட்சிக்காக சண்டை போட்டுக் கொண்டவர்கள் பெருந்தொற்றிலிருந்து மீண்டு நமக்கென்ன செய்யப் போகிறார்கள் என்று கொரோனா நிவாரணத் தொகை, பொங்கல் இனாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ஓட்டை திமுகவுக்கு போட்டார்கள். ஆக, ஜெயலலிதா இல்லாத இடத்தை அழகாக தகவமைத்து சிந்தாமல், சிதறாமல் வெற்றியை கட்டியெழுப்பியருக்க வேண்டியதை கோட்டை விட்டது அதிமுக. கேப்பில் கிடாய் வெட்டுவது போல், ஆர்கே நகரில், மக்கள் அனுதாபத்தை சரியாக அறுவடை செய்து கொண்டு சட்டப்பேரவையில் ஒரு ஷார்ட் டெர்ம் சகாப்தம் எழுதிக் கொண்டவர் என்னவோ டிடிவி தினகரன் தான். அன்று கோட்டை விட்ட அதிமுக இன்று கோட்டையப் பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவும், அரசியல் வெற்றிடமும்: தமிழகம் ஜெயலலிதாவை 2016-ல் இழந்திருக்க, 2018 ஆகஸ்ட் 7-ல் கருணாநிதியை இழந்தது. இது தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து தமிழகத்தை குறிவைத்த பாஜகவுக்கோ ‘திண்ணை காலி’ என்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அவ்வளவு மகிழ்ச்சியடைந்து விட வேண்டாம் என்று, கருணாநிதி உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நாளிலிருந்தே டெல்லிக்கு ஒரு செக் வைத்துக் கொண்டுதான் இருந்தார் ஸ்டாலின். அதற்கு முன்பு, திமுகவில் செயல் தலைவர் பதவி இல்லாத நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பிப்ரவரி 2017-ல் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது நிகழ்ந்த அமளி, துமளி அத்தனை லேசில் மறக்கமுடியாதது. சட்டப்பேரவையில் இருந்து கிழிந்த சட்டையுடம் ஸ்டாலின் வெளியே வந்த காட்சிகள் நேஷனல் மீடியாவிலும் ஃப்ளாஷ் ஆனது. அத்துடன் நில்லாமல், அதே கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை வரை சென்று முறையிட்டும் வந்தார். கருணாநிதி மறைவு கருணாநிதிக்கு ஆண் வாரிசாக நால்வர் என்றாலும் இருவர் தான் அரசியலில் தீவிரம் காட்டினர். தலைநகரில் எப்போதும் தந்தைக்குப் பின்னால் கைகட்டிய தனயனாக ஸ்டாலின் திகழ, மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களில் பவர் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருந்தார் மு.க.அழகிரி. கருணாநிதியும் அவரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், கருணாநிதி ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸில் அழகிரியை விட ஸ்டாலின் தான் மிக நேர்த்தியாக பொருந்தி வந்தார். அதை கருணாநிதியும் உணர்ந்திருந்தார். அதனால் தான் கட்சியிலிருந்து அழகிரியை நீக்குவது வரை நடவடிக்கைகளை எடுக்க அவர் தயங்கியதே இல்லை. அது மட்டுமல்லாது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலையில்தான் தன் ஒப்புதலோடு செயல் தலைவர் பதவிக்கு ஒப்புக் கொண்டார். 1970-களில், மிசா அவசரச் சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறை சென்றதிலிருந்து, சென்னை மேயராக கருணாநிதியிடம் கற்றுக் கொண்ட அரசியல் வழியில் தனித்து நின்றது வரையிலும், அமைச்சராக, துணை முதல்வராக தன் கடமைகளை அப்பா தானே முதல்வரென்று ஆடாமல் அடக்கத்துடன் செய்ததிலும், பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சோபித்ததிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார் ஸ்டாலின் எனலாம். நமக்கு நாமே என்று ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம், கருணாநிதியால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கட்சியினராலும் வரவேற்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த காலத்தில் எல்லாம் அவருக்கு அழகிரி ஒரு குடைச்சல் என்றே விமர்சிக்கப்பட்டதாலும், கட்சியின் மூத்தோரை எல்லாம் சரமாரியாக விமர்சிக்கும் போக்கினாலும் அவருக்கு எதிர்ப்பும், எலோரிடமும் பாங்காகப் பேசும் பொறுப்பினாலும், குணத்தினாலும் ஸ்டாலினுக்கு ஆதரவும் திமுகவுக்குள் இயல்பாகவே உருவாகியிருந்தது. திமுக கட்சியில் இருந்த அந்த அனுதாபம் திமுக அனுதாபிகள் தாண்டி தமிழக மக்களுக்கும் பாய்ந்து கொண்டிருந்தது. அதிமுக போட்டுக் கொண்டிருந்த கொட்டங்களுக்கு நடுவே, ஸ்டாலின் திமுகவை வலுவாகக் கட்டமைத்துக் கொண்டே இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018-ல் மறைய, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டது. அப்போது அந்த சூழ்நிலையை ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் லாவகமாக அணுகி இடத்தைப் பெற்றதும், அந்த அறிவிப்பு வந்தவுடன் அதனை தனது தந்தையின் முக்கிய மூத்த அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்ட பரிவும் அவரை பளிச்சிடச் செய்தது. ஸ்டாலின் - கருணாநிதி ஆகஸ்ட் 28, 2018 - திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின். அடுத்து 2021 தேர்தலைக் குறிவைத்து அவர் தனது செயல்களைத் தீவிரப்படுத்தினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலும் வந்தது. மேடைப் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், இணையவழி பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் தீவிரம் காட்டினார் ஸ்டாலின். ஒற்றுமையில்லாத கட்சி, டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கும் கட்சி எப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்வியை செல்லுமிடமெல்லாம் எடுத்து வைத்தார் ஸ்டாலின். அதற்கு பலன் கிடைத்தது. அரசியலில் அனுதாப அலைகள் பலவகை, அதில் நான் எதிர்கொண்டது புதிய வகை என்று சொல்லும் அளவுக்கு அதை அழகாக மெட்டீரியலைஸ் செய்து வெற்றி பெற்று கோட்டைக்குச் சென்றவர்தான் ஸ்டாலின்.! (தொடரும்) `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுக ‘வாவ்’ வியூகம் கடந்த காலங்களில் அனுதாப அலைகளை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு அறுவடை செய்த கட்சிகளை, ஆளுமைகளைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இந்த அத்தியாயத்தில், பழம் நழுவி பாலில் விழுந்தாலும் கூட, விழுந்தது எலுமிச்சம் பழம்போல என்று பாலை திரியவிட்ட கட்சியைப் பற்றியும், கூடவே மக்கள் மத்தியில் மட்டும்தான் அனுதாப அலைகள் ஒர்க் அவுட் ஆகும் என்பதில்லை, கட்சிக்குள்ளேயும் கூட அது பலிக்கும், ஆட்சியையும், அரியணையையும் கைக்குக் கொண்டுவரும் என்று ப்ரூவ் பண்ண ஸ்டாலினையும் பற்றி கொஞ்சம் பேசிக் கலைவோம். அதிமுக தலைமை அலுவலகம் சொதப்பிய அதிமுக ‘அனுதாப அலை’களை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும், சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கு அதிமுக சாட்சியாக நிற்கிறது என்று ஏற்கெனவே சுட்டிக்காடியதை இங்கே நிறுவ முயற்சித்தபோது, சிலவற்றை பட்டியலிடுவது அவசியமாகிறது. அதில் முதலாவது விஷயம், டிச.5, 2016 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிகழ்வு. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை மங்கிப் போய்தான் இருந்தது. அதற்கிடையில் அவரை எல்லோரும் கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று பார்த்து வருவதும், பேட்டி கொடுப்பதும் நடந்து கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து டிச.5 மாலை அவர் மரணித்தது அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியானது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தேசியத் தலைவர்கள் பலர், பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பல்வேறு துறை ஆளுமைகள் என அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு அணிவகுத்திருந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஸ்டாலின் கூட வந்திருந்தார். ஜெயலலிதா மறைவை தங்கள் வீட்டுத் துக்கமாக அனுசரித்த அக்கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என எல்லோர் மீதும் பரிதாபப்பட்டனர். அதிமுகவுக்கு ‘ராணுவ ஒழுக்கம்’ கொண்ட கட்சி என்ற அடைமொழியையும், ‘மோடியா... இல்லை இந்த லேடியா?’ வகையறா சவால்களால், ‘உங்களால் நான்; உங்களுக்காகத் தான்’, ‘செய்வீர்களா?’ போன்ற தேர்தல் பிரச்சார பஞ்ச் வசனங்களாலும், மகளிரை குறிவைக்கும் இலவசங்களாலும் தன்னை தன்னிகரற்ற தலைவியாக நிலைநிறுத்தியிருந்த ஆளுமை இல்லாமல் நிற்பவர்களை ‘நாம் தானே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்றொரு அனுதாப அலை எஃபக்ட் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த காலம். அதை அப்படியே அறுவடை செய்திருந்தால், 2021-ல் ஆட்சி மாற்றத்துக்கான தேவையே வந்திருக்காது. ஆனால், ‘செய்வீர்களா? செய்வீர்களா?’ என்று கேட்டுச் சென்ற ஜெயலலிதாவுக்கு கட்சியைக் காப்பாற்றி, ஆட்சியைத் தக்கவைக்கும் பணியை செய்தார்களா அதிமுகவினர்?! ஜெயலலிதா உடல் அன்றாடம் அக்கப்போர் அத்தகைய கேள்வியோடு ஜெ. மறைவுக்குப் பிந்தைய சில மாதங்களை திரும்பிப் பார்த்தால், வரிசையாக கண்முன் விரிவதெல்லாம் அதிமுக உட்கட்சிப் பூசலாக மட்டுமே இருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். அது தான் ‘அம்மாவின் ஆன்மாவை இன்ஸ்டன்ட்டாக குளிர்விக்கும்’ என்று நம்பினார்களோ என்னவோ! ஆனால், அடுத்துதான் மெயின் பிக்சர் ஓப்பன் ஆனது. முதல்வர் ஓபிஎஸ் ஓகே, ஆனால் கட்சி யார் கட்டுப்பாட்டில் என்று போயஸ் கார்டனில் அன்றாடம் அக்கப்போர்கள் நடக்க, அது ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் சென்று சேர்ந்தது. அரசல், புரசலா ஏன் கேட்குறீங்க நானே சொல்கிறேன் என்று நேராக ஜெ. சமாதிக்கு சென்று தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓபிஎஸ். அதை யாரும் மறக்கவே முடியாது. கூவத்தூர் களேபரங்கள் அதன்பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்ற பிரச்னைகள் எழ, கூவத்தூர் களேபரங்கள் அரங்கேற, இபிஎஸ்-க்கு முடிசூடிவிட்டு சசிகலா சபதம் செய்து சிறை செல்ல, அதிகாரப் போட்டி ஓபிஎஸ் vs இபிஎஸ் என்று மாறியது. கொஞ்ச காலம் சசிகலா விசுவாசியாக இருந்த இபிஎஸ் ‘அட சிறை சென்றவருக்கு எதற்கு அதிகாரத்தை கொடுப்பானேன்... நாமே எடுத்துக்கலாம்’ என்று ஓபிஎஸ் விதித்த சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் விசாரிக்கிறோம் என்று சொல்லி ஓபிஎஸ்-ஸுடம் இணைந்த கைகள் போஸ் கொடுத்தார். 2017 ஆகஸ்ட்டில் இது நடந்தது. ‘தாய் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே...’ என்று குடும்பப் பாடலெல்லாம் பாடும் அளவுக்கு ஒற்றுமை காட்டினர். எடப்பாடி - பன்னீர் அதன்பின்னர் ஒரு சம்பவம் நடந்தது. ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இணைந்த கைகள் பவரை காட்ட ஓபிஎஸ், இபிஎஸ் களமிறங்கியிருக்க, ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தின் சதி இருப்பதாகச் சொல்லியவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இறக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன். அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேச்சையாக டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ் களமிறக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.வான வெற்றிவேல் (தினகரன் ஆதரவாளர் ) ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா இட்லியும், சட்னியும் எல்லாம் சாப்பிடவில்லை. அவர் எப்போதும் கோமாவில் தான் இருந்தார். அம்மா மரணத்தின் பின்னணியில் நிச்சயமாக சசிகலா குடும்பம் இல்லவே இல்லை என்று வாதங்களை முன்வைத்தார். “ஐயோ பழிபோட்டுவிட்டோமே” என்று பதறிப்போன எமோஷனல் வாக்காளர்களும், அட 20 ரூபாய் டோக்கனும், அதனை மாற்றும்போது நிறைய பரிசும் உண்டாமே என்ற ‘கையில காசு வாயில தோசை’ ரக வாக்காளர்களும் குத்துங்க எஜமான் என்று குத்திவைக்க குக்கர் விசில் சட்டப்பேரவைக்குள் கேட்டது. ஜெ. தொகுதியில் அவர் கட்சி வேட்பாளர் வீழ்த்தப்பட்டு, ஜெ.வை விட அதிக வாக்குகள் பெற்று ஒரு சுயேச்சை வெற்றி பெற்றார். 11 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றார் என்ற வரலாறு உருவானது. முன்னதாக, 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பின் 2017 ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றிருந்தார். டிடிவி வெற்றியால், சசிகலா சிறையில் இருந்து திரும்பியதும் அதிமுக மீண்டும் சசிகலா கைக்கு செல்லும் என்று டிவி ஷோக்களில் விவாதம் நடைபெற, டிடிவி வெற்றியும், அதன் பிந்தைய சலசலப்புகளும் இபிஎஸ் - ஓபிஎஸ் காம்போவுக்கு பெரிய பின்னடைவானது. ஆனால், இதெல்லாம் பெருசல்ல என்பதுபோல் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தாங்கள் உருவாக்கிய புதிய பதவிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் லயித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று அவர்கள் காட்டிய தாராளம், பெருந்தன்மை பேசுபொருளானதும் நினைவுகூரத்தக்கது. அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி பாஜகவிடம் அடகு..! இணைந்த கைகள் நாங்கள் என்று அவர்கள் சொன்னாலும் கூட கட்சிக்குள் கோஷ்டி பிளவு பெருகிக் கொண்டே தான் இருந்தது. இதையெல்லாம் டெல்லியில் இருந்து உற்று நோக்கிய பாஜக, சந்தில் சிந்து போடலாம் என்று காய்களை நகர்த்தியது. அப்போதிருந்தே அதிமுகவை பாஜகவிடம் அடகுவைக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எஞ்சிய 4 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சவால் விட்டுக் கொண்டே இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திய அத்தனை அரசியல் நகர்வுகளையும் தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அதிமுகவின் கடைசி ஓராண்டில் கொரோனா பெருந்தொற்றும் கும்மியடிக்க, 4 ஆண்டு காலத்தில் கட்சிக்காக சண்டை போட்டுக் கொண்டவர்கள் பெருந்தொற்றிலிருந்து மீண்டு நமக்கென்ன செய்யப் போகிறார்கள் என்று கொரோனா நிவாரணத் தொகை, பொங்கல் இனாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ஓட்டை திமுகவுக்கு போட்டார்கள். ஆக, ஜெயலலிதா இல்லாத இடத்தை அழகாக தகவமைத்து சிந்தாமல், சிதறாமல் வெற்றியை கட்டியெழுப்பியருக்க வேண்டியதை கோட்டை விட்டது அதிமுக. கேப்பில் கிடாய் வெட்டுவது போல், ஆர்கே நகரில், மக்கள் அனுதாபத்தை சரியாக அறுவடை செய்து கொண்டு சட்டப்பேரவையில் ஒரு ஷார்ட் டெர்ம் சகாப்தம் எழுதிக் கொண்டவர் என்னவோ டிடிவி தினகரன் தான். அன்று கோட்டை விட்ட அதிமுக இன்று கோட்டையப் பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவும், அரசியல் வெற்றிடமும்: தமிழகம் ஜெயலலிதாவை 2016-ல் இழந்திருக்க, 2018 ஆகஸ்ட் 7-ல் கருணாநிதியை இழந்தது. இது தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து தமிழகத்தை குறிவைத்த பாஜகவுக்கோ ‘திண்ணை காலி’ என்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அவ்வளவு மகிழ்ச்சியடைந்து விட வேண்டாம் என்று, கருணாநிதி உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நாளிலிருந்தே டெல்லிக்கு ஒரு செக் வைத்துக் கொண்டுதான் இருந்தார் ஸ்டாலின். அதற்கு முன்பு, திமுகவில் செயல் தலைவர் பதவி இல்லாத நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பிப்ரவரி 2017-ல் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது நிகழ்ந்த அமளி, துமளி அத்தனை லேசில் மறக்கமுடியாதது. சட்டப்பேரவையில் இருந்து கிழிந்த சட்டையுடம் ஸ்டாலின் வெளியே வந்த காட்சிகள் நேஷனல் மீடியாவிலும் ஃப்ளாஷ் ஆனது. அத்துடன் நில்லாமல், அதே கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை வரை சென்று முறையிட்டும் வந்தார். கருணாநிதி மறைவு கருணாநிதிக்கு ஆண் வாரிசாக நால்வர் என்றாலும் இருவர் தான் அரசியலில் தீவிரம் காட்டினர். தலைநகரில் எப்போதும் தந்தைக்குப் பின்னால் கைகட்டிய தனயனாக ஸ்டாலின் திகழ, மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களில் பவர் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருந்தார் மு.க.அழகிரி. கருணாநிதியும் அவரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், கருணாநிதி ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸில் அழகிரியை விட ஸ்டாலின் தான் மிக நேர்த்தியாக பொருந்தி வந்தார். அதை கருணாநிதியும் உணர்ந்திருந்தார். அதனால் தான் கட்சியிலிருந்து அழகிரியை நீக்குவது வரை நடவடிக்கைகளை எடுக்க அவர் தயங்கியதே இல்லை. அது மட்டுமல்லாது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலையில்தான் தன் ஒப்புதலோடு செயல் தலைவர் பதவிக்கு ஒப்புக் கொண்டார். 1970-களில், மிசா அவசரச் சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறை சென்றதிலிருந்து, சென்னை மேயராக கருணாநிதியிடம் கற்றுக் கொண்ட அரசியல் வழியில் தனித்து நின்றது வரையிலும், அமைச்சராக, துணை முதல்வராக தன் கடமைகளை அப்பா தானே முதல்வரென்று ஆடாமல் அடக்கத்துடன் செய்ததிலும், பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சோபித்ததிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார் ஸ்டாலின் எனலாம். நமக்கு நாமே என்று ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம், கருணாநிதியால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கட்சியினராலும் வரவேற்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த காலத்தில் எல்லாம் அவருக்கு அழகிரி ஒரு குடைச்சல் என்றே விமர்சிக்கப்பட்டதாலும், கட்சியின் மூத்தோரை எல்லாம் சரமாரியாக விமர்சிக்கும் போக்கினாலும் அவருக்கு எதிர்ப்பும், எலோரிடமும் பாங்காகப் பேசும் பொறுப்பினாலும், குணத்தினாலும் ஸ்டாலினுக்கு ஆதரவும் திமுகவுக்குள் இயல்பாகவே உருவாகியிருந்தது. திமுக கட்சியில் இருந்த அந்த அனுதாபம் திமுக அனுதாபிகள் தாண்டி தமிழக மக்களுக்கும் பாய்ந்து கொண்டிருந்தது. அதிமுக போட்டுக் கொண்டிருந்த கொட்டங்களுக்கு நடுவே, ஸ்டாலின் திமுகவை வலுவாகக் கட்டமைத்துக் கொண்டே இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018-ல் மறைய, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டது. அப்போது அந்த சூழ்நிலையை ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் லாவகமாக அணுகி இடத்தைப் பெற்றதும், அந்த அறிவிப்பு வந்தவுடன் அதனை தனது தந்தையின் முக்கிய மூத்த அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்ட பரிவும் அவரை பளிச்சிடச் செய்தது. ஸ்டாலின் - கருணாநிதி ஆகஸ்ட் 28, 2018 - திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின். அடுத்து 2021 தேர்தலைக் குறிவைத்து அவர் தனது செயல்களைத் தீவிரப்படுத்தினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலும் வந்தது. மேடைப் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், இணையவழி பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் தீவிரம் காட்டினார் ஸ்டாலின். ஒற்றுமையில்லாத கட்சி, டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கும் கட்சி எப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்வியை செல்லுமிடமெல்லாம் எடுத்து வைத்தார் ஸ்டாலின். அதற்கு பலன் கிடைத்தது. அரசியலில் அனுதாப அலைகள் பலவகை, அதில் நான் எதிர்கொண்டது புதிய வகை என்று சொல்லும் அளவுக்கு அதை அழகாக மெட்டீரியலைஸ் செய்து வெற்றி பெற்று கோட்டைக்குச் சென்றவர்தான் ஸ்டாலின்.! (தொடரும்) `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
பட்ஜெட் 2026: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்! | Live
ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சசி தரூர்! சசி தரூர் பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து அவர் விளக்கமளித்தபோது, ``கூட்டம் குறித்து ஒரு நாள் முன்னதாகவே தகவல் கிடைத்ததால் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார். எனினும், சசிதரூர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காலை 11 மணிக்கு உரை! மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன் அடிப்படையில் காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13-ம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்
தமிழக ஊர்ப்பெயர்களில் 'ஹள்ளி'இணைக்கப்பட்ட விவகாரம்; ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று இருப்பதை மாற்ற வேண்டும் என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது. ஜி.கே.மணி சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய பென்னாகரம் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று வருகிறது. அஜ்ஜம்பட்டி என்ற ஊர் அஜ்ஜனஹள்ளி என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவழக்கில் அது அஜ்ஜம்பட்டி என்றே அழைக்கப்படுகிறது. மாராண்டாம்பட்டியாக இருந்த ஊர் மாராண்டஹள்ளியாக மாறியுள்ளது, சோம்பட்டி என்ற ஊர் சோமனஹள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி எங்கு பார்த்தாலும் ஊர்ப்பெயர்களில் ஹள்ளி என்ற வார்த்தை உள்ளது. அது தெலுங்கா, கன்னடமா, வடமொழியா என்பது தெரியவில்லை, அதனால் நடைமுறை பேச்சு வழக்கில் எப்படி உள்ளதோ அதன்படி ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அப்போது இதற்குப் பதில் அளித்த தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஊர்களுக்கு பெயர் வைப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் எம்.எல்.ஏ-வின் கருத்து பரிசீலிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் இந்தப் பெயர் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?
மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS
மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS
விஜயுடன் டீல்? - திருமா - அன்புமணி முட்டுக்கட்டை, ராமதாஸின் திட்டம்! | Political Pulse | Vikatan
விஜயுடன் டீல்? - திருமா - அன்புமணி முட்டுக்கட்டை, ராமதாஸின் திட்டம்! | Political Pulse | Vikatan
கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - EU ஒப்பந்தம்! முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையெற்ற ஒப்பந்தம் இன்று (ஜன. 27) கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் அப்போது ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னிலையில் ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்திய - EU ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த ஏழாண்டுகளில், 93 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், தோல், காலணிகள், ரசாயனங்கள் போன்றவற்றின் வரி விதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு விகிதம், 3.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே (POST-STUDY VISA) 9 மாதங்கள் கால அவகாசம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் உருவாகி இருக்கிறது. எனக் கூறப்படுகிறது.
கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - EU ஒப்பந்தம்! முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையெற்ற ஒப்பந்தம் இன்று (ஜன. 27) கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் அப்போது ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னிலையில் ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்திய - EU ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த ஏழாண்டுகளில், 93 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், தோல், காலணிகள், ரசாயனங்கள் போன்றவற்றின் வரி விதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு விகிதம், 3.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே (POST-STUDY VISA) 9 மாதங்கள் கால அவகாசம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் உருவாகி இருக்கிறது. எனக் கூறப்படுகிறது.
'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்'பாலிடிக்ஸ்!
டபுள் கேம் பிரேமலதா.. கடுப்பில் கட்சிகள்! ஜனவரி மாநாடு... கடலூர் மைதானம்... கூட்டணி அறிவிப்பு! - கடந்த ஆறு மாதமாக கேப்டன் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட 'பில்டப்' இதுதான். மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்தப் பெட்டியைப் பத்திரப்படுத்தி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு கடந்த 9-ம் தேதி கடலூரில் திரண்டார்கள் தொண்டர்கள். ஆனால், மேடை ஏறிய பிரேமலதா கொடுத்ததோ செம ஷாக்! சீட்டு என்கிட்டதான் இருக்கு... ஆளுங்கட்சிகளே இன்னும் வாயைத் திறக்காதப்போ நாங்க ஏன்பா அவசரப்படணும்? என நிதானம் காட்ட, ஆடிப்போய்விட்டார்கள் தொண்டர்கள். ஸ்டாலின் இதையடுத்து ஒரு பக்கம் 'உதய சூரியன்', மறுபக்கம் 'இரட்டை இலை' என இரண்டு பக்கமும் பிரேமலதா தூது விடுகிறார் என்கிற விமர்சனம் கிளம்பியது. தே.ஜ கூட்டணியில் இழுக்க பியூஸ் கோயலும், அறிவாலயத்துக்கு அழைத்து வர அமைச்சர் ஏ.வேலுவும் மல்லுக்கட்டுகிறார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த அந்த முதல் நாள் வரை பியூஸ் கோயல் தரப்பு 'கோயம்பேடு' கட்சியுடன் பேசி வந்தது. அங்கேயும் ஒரு முடிவும் எட்டப்படாததால், அப்படியே யூ-டர்ன் போட்டு தி.மு.க-வுக்குத்தான் பிரேமலதா செல்வார் எனப் பேச்சுக்கள் கிளம்பியது. இப்படிப்பட்ட கிளைமாக்ஸ் சூழலில்தான் ஆளுநரின் தேநீர் விருந்து நடந்தது. அதில் பங்கேற்ற தே.மு.தி.க பொருளாளர் சுதீஷை, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வளைத்துப் பிடித்து நீண்ட நேரம், 'குசலம்' விசாரித்திருக்கிறார். இந்தத் தனிப்பட்ட பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. உண்மையிலேயே கோயம்பேடு கட்சியில் என்னதான் நடக்கிறது.. அடுத்த மூவ் என்ன? விசாரித்தோம்... சுதீஷ் அறிவாலயத்தின் கணக்கும்... அ.தி.மு.க-வின் பிடிவாதமும்! இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், அ.தி.மு.க ராஜ்யசபா சீட் வழங்க மறுத்ததால் பிரேமலதா ஏற்கெனவே அதிருப்தியில் இருந்தார். அதே சமயம், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதால், ம.தி.மு.க 12 இடங்களைக் கேட்டு திமுகவுக்குக் குடைச்சல் கொடுத்தது. அந்தச் சமயத்தில்தான் அறிவாலயத்தில் நடந்த மா.செ-க்கள் கூட்டத்தில், 'ம.தி.மு.க-வை விட தே.மு.தி.க களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. அவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது பலம் சேர்க்கும்' என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. உடனே முதல்வர் ஸ்டாலின், 'ஏ.வ.வேலுவை என்னவென்று பார்க்கச் சொல்லுங்கள்' என க்ரீன் சிக்னல் காட்டினார். இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், பிரேமலதா தரப்பு 18 இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் தேர்தல் நிதி எனப் பெரும் பட்டியலை நீட்டியுள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க தரப்பில் ராஜேந்திர பாலாஜி மூலம் சமாதானத் தூது போனது. அங்கும் 30 இடங்கள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்கப்பட, எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன்படவில்லை. தமிழகத்தில் தே.ஜ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பியூஸ் கோயலிடம் இருக்கிறது. பியூஸ் கோயல் அவர் பேசியபோதும், 30 இடங்கள், ஒரு ராஜ்யசபா, ஒரு மத்திய அமைச்சர் பதவி எனப் பிரேமலதா தரப்பு எதிர்பார்ப்புகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால், ஒற்றை இலக்கத்தில்தான் சீட் தர முடியும் என டெல்லி மேலிடம் கறாராகக் கூறிவிட்டதால்தான், பிரதமர் பங்கேற்ற மாநாட்டில் பிரேமலதா கலந்துகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க தரப்போ, 6 இடங்கள் மட்டுமே தர முடியும், ஆனால் தேர்தல் செலவுகளை நாங்கள் கவனிக்கிறோம் எனத் தூண்டில் போட்டிருக்கிறது. நயினாரின் 'டீ' பார்ட்டி வியூகம் பலிக்குமா? இதையடுத்து அறிவாலயத்தை நோக்கி வண்டி திரும்பும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில்தான், ஆளுநர் விருந்தில் சுதீஷை நயினார் சந்தித்து 'குசலம்' விசாரித்தார். கூட்டணியை முதலில் அறிவியுங்கள், மற்ற விவரங்களை பிறகு பேசிக்கொள்ளலாம் என நயினார் வலியுறுத்தியும், சுதீஷ் பிடிகொடுக்கவில்லை. முன்னதாக பெங்களூரு வழியாக டெல்லி சென்று பா.ஜ.க மேலிடத்தைச் சந்தித்த சுதீஷ், தனது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் டெல்லி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் மறுபுறம், இரண்டு தரப்பிலும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவது முதல்வர் ஸ்டாலினைச் சினமடையச் செய்திருக்கிறது. பிப்ரவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என பிரேமலதா கூறி வந்தாலும், இறுதி நிமிடம் வரை மௌனம் காப்பதுதான் தே.மு.தி.க-வின் 'சிக்னேச்சர் ஸ்டைல்'. அந்த ரகசியப் பெட்டிக்குள் இருப்பது உதயசூரியனா அல்லது இலையுடன் கூடிய தாமரையா என்பது பிப்ரவரி இறுதியில் தெரிந்துவிடும்! என்றனர். கறார் காட்டும் தே.மு.தி.க… கையைப் பிசையும் அ.தி.மு.க…கடலூர் மாநாட்டில் `டிவிஸ்ட்’ வைத்த பிரேமலதா!
'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்'பாலிடிக்ஸ்!
டபுள் கேம் பிரேமலதா.. கடுப்பில் கட்சிகள்! ஜனவரி மாநாடு... கடலூர் மைதானம்... கூட்டணி அறிவிப்பு! - கடந்த ஆறு மாதமாக கேப்டன் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட 'பில்டப்' இதுதான். மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்தப் பெட்டியைப் பத்திரப்படுத்தி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு கடந்த 9-ம் தேதி கடலூரில் திரண்டார்கள் தொண்டர்கள். ஆனால், மேடை ஏறிய பிரேமலதா கொடுத்ததோ செம ஷாக்! சீட்டு என்கிட்டதான் இருக்கு... ஆளுங்கட்சிகளே இன்னும் வாயைத் திறக்காதப்போ நாங்க ஏன்பா அவசரப்படணும்? என நிதானம் காட்ட, ஆடிப்போய்விட்டார்கள் தொண்டர்கள். ஸ்டாலின் இதையடுத்து ஒரு பக்கம் 'உதய சூரியன்', மறுபக்கம் 'இரட்டை இலை' என இரண்டு பக்கமும் பிரேமலதா தூது விடுகிறார் என்கிற விமர்சனம் கிளம்பியது. தே.ஜ கூட்டணியில் இழுக்க பியூஸ் கோயலும், அறிவாலயத்துக்கு அழைத்து வர அமைச்சர் ஏ.வேலுவும் மல்லுக்கட்டுகிறார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த அந்த முதல் நாள் வரை பியூஸ் கோயல் தரப்பு 'கோயம்பேடு' கட்சியுடன் பேசி வந்தது. அங்கேயும் ஒரு முடிவும் எட்டப்படாததால், அப்படியே யூ-டர்ன் போட்டு தி.மு.க-வுக்குத்தான் பிரேமலதா செல்வார் எனப் பேச்சுக்கள் கிளம்பியது. இப்படிப்பட்ட கிளைமாக்ஸ் சூழலில்தான் ஆளுநரின் தேநீர் விருந்து நடந்தது. அதில் பங்கேற்ற தே.மு.தி.க பொருளாளர் சுதீஷை, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வளைத்துப் பிடித்து நீண்ட நேரம், 'குசலம்' விசாரித்திருக்கிறார். இந்தத் தனிப்பட்ட பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. உண்மையிலேயே கோயம்பேடு கட்சியில் என்னதான் நடக்கிறது.. அடுத்த மூவ் என்ன? விசாரித்தோம்... சுதீஷ் அறிவாலயத்தின் கணக்கும்... அ.தி.மு.க-வின் பிடிவாதமும்! இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், அ.தி.மு.க ராஜ்யசபா சீட் வழங்க மறுத்ததால் பிரேமலதா ஏற்கெனவே அதிருப்தியில் இருந்தார். அதே சமயம், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதால், ம.தி.மு.க 12 இடங்களைக் கேட்டு திமுகவுக்குக் குடைச்சல் கொடுத்தது. அந்தச் சமயத்தில்தான் அறிவாலயத்தில் நடந்த மா.செ-க்கள் கூட்டத்தில், 'ம.தி.மு.க-வை விட தே.மு.தி.க களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. அவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது பலம் சேர்க்கும்' என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. உடனே முதல்வர் ஸ்டாலின், 'ஏ.வ.வேலுவை என்னவென்று பார்க்கச் சொல்லுங்கள்' என க்ரீன் சிக்னல் காட்டினார். இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், பிரேமலதா தரப்பு 18 இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் தேர்தல் நிதி எனப் பெரும் பட்டியலை நீட்டியுள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க தரப்பில் ராஜேந்திர பாலாஜி மூலம் சமாதானத் தூது போனது. அங்கும் 30 இடங்கள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்கப்பட, எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன்படவில்லை. தமிழகத்தில் தே.ஜ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பியூஸ் கோயலிடம் இருக்கிறது. பியூஸ் கோயல் அவர் பேசியபோதும், 30 இடங்கள், ஒரு ராஜ்யசபா, ஒரு மத்திய அமைச்சர் பதவி எனப் பிரேமலதா தரப்பு எதிர்பார்ப்புகளை அள்ளி வீசியிருக்கிறது. ஆனால், ஒற்றை இலக்கத்தில்தான் சீட் தர முடியும் என டெல்லி மேலிடம் கறாராகக் கூறிவிட்டதால்தான், பிரதமர் பங்கேற்ற மாநாட்டில் பிரேமலதா கலந்துகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க தரப்போ, 6 இடங்கள் மட்டுமே தர முடியும், ஆனால் தேர்தல் செலவுகளை நாங்கள் கவனிக்கிறோம் எனத் தூண்டில் போட்டிருக்கிறது. நயினாரின் 'டீ' பார்ட்டி வியூகம் பலிக்குமா? இதையடுத்து அறிவாலயத்தை நோக்கி வண்டி திரும்பும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில்தான், ஆளுநர் விருந்தில் சுதீஷை நயினார் சந்தித்து 'குசலம்' விசாரித்தார். கூட்டணியை முதலில் அறிவியுங்கள், மற்ற விவரங்களை பிறகு பேசிக்கொள்ளலாம் என நயினார் வலியுறுத்தியும், சுதீஷ் பிடிகொடுக்கவில்லை. முன்னதாக பெங்களூரு வழியாக டெல்லி சென்று பா.ஜ.க மேலிடத்தைச் சந்தித்த சுதீஷ், தனது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் டெல்லி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் மறுபுறம், இரண்டு தரப்பிலும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவது முதல்வர் ஸ்டாலினைச் சினமடையச் செய்திருக்கிறது. பிப்ரவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என பிரேமலதா கூறி வந்தாலும், இறுதி நிமிடம் வரை மௌனம் காப்பதுதான் தே.மு.தி.க-வின் 'சிக்னேச்சர் ஸ்டைல்'. அந்த ரகசியப் பெட்டிக்குள் இருப்பது உதயசூரியனா அல்லது இலையுடன் கூடிய தாமரையா என்பது பிப்ரவரி இறுதியில் தெரிந்துவிடும்! என்றனர். கறார் காட்டும் தே.மு.தி.க… கையைப் பிசையும் அ.தி.மு.க…கடலூர் மாநாட்டில் `டிவிஸ்ட்’ வைத்த பிரேமலதா!
டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க. புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது. அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது. விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார் ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார். அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள் என்றார். ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார் அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள். இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது. `ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’ ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார். அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார். அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அமித்ஷா உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ? இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார். திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது என்றார். ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!
டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க. புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது. அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது. விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார் ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார். அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள் என்றார். ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார் அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள். இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது. `ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’ ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார். அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார். அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அமித்ஷா உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ? இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார். திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது என்றார். ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!
'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சர்க்கஸ் 3 ``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார். திருமாவளவன் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது. - ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.! ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம். வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ராமதாஸ் - பாமக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார். 'கருணாநிதி ஒரு துரோகி' என..! கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது. ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார். ஜெயலலிதா தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது. பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம் 96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார். ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி. 'தமிழ்க்குடிதாங்கி' 90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம். ராமதாஸ் 1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது. இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார். ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்... அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். Anbumani 2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார். ராமதாஸ் கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார். பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார். திருமாவளவன் 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார். 2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது. பாமக 'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார். திருமாவளவன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார். கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது. 'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர். அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: 'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி. ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம். மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ். தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார். ராமதாஸ் - மோடி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 அன்புமணி vs ராமதாஸ் அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. 'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். பாமக 2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும். 2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம். வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! (சர்க்கஸ் தொடரும்..!) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01
'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சர்க்கஸ் 3 ``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார். திருமாவளவன் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது. - ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.! ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம். வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ராமதாஸ் - பாமக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார். 'கருணாநிதி ஒரு துரோகி' என..! கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது. ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார். ஜெயலலிதா தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது. பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம் 96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார். ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி. 'தமிழ்க்குடிதாங்கி' 90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம். ராமதாஸ் 1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது. இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார். ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்... அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். Anbumani 2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார். ராமதாஸ் கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார். பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார். திருமாவளவன் 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார். 2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது. பாமக 'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார். திருமாவளவன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார். கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது. 'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர். அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: 'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி. ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம். மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ். தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார். ராமதாஸ் - மோடி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 அன்புமணி vs ராமதாஸ் அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. 'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். பாமக 2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும். 2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம். வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! (சர்க்கஸ் தொடரும்..!) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01
அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது! - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செங்கோட்டையன் - டிடிவி தினகரன் நான் டெல்லி சென்றபோது கூட 'செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்' என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் இதை செங்கோட்டையனிடம் சொன்னேன். ஆனால் அவர் 'நான் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டேன். என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது' என்று சொன்னார்' மூத்த அரசியல்வாதியான அவரை வற்புறுத்துவதெல்லாம் சரியான விஷயம் கிடையாது என்றிருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் எப்படி திமுகவிற்கு போவார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி தவிர கூட்டணி ஆட்சி குறித்து பேசிய டிடிவி தினகரன் , தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இருப்பதாகத் தான் அரசியல்வாதிகளும், மூத்த பத்திரிகையாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டுமே. நிபந்தனை எதுவும் நான் விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது என்று பேசியிருக்கிறார்.
ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்கியது. ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்கியது. ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் மகளிர் அழைத்து வரப்பட்டனர். இதற்காக அந்தச் சாலையின் போக்குவரத்து மாற்றப்பட்டது. மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் அணி வகுத்து நின்றன. திமுக மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் மாநாட்டுத் திடலில் போடப்பட்ட நாற்காலிகளில் இரண்டு பைகள் வைத்திருந்தனர். ஒரு பையில் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவையும், மற்றொரு பையில் ஹாட்பாக்ஸ் அதில் சிக்கன் பிரியாணியும் இருந்தது. முன்கூட்டியே வந்த பெண்கள் பக்கத்து இருக்கையில் இருந்த ஹாட்பாக்ஸையும் சேர்த்து எடுத்துக் கொண்டனர். இதனால் பின்னால் வந்த பெண்களுக்கு ஹாட்பாக்ஸ் கிடைக்கவில்லை. பின்பகுதியில் தனியாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதை வாங்குவதற்கு பெண்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல பெண்கள் பிரியாணி கிடைக்காமல் திரும்பினர். மாநாட்டுத் திடலுக்குள் பிரசார வேனில் நின்று கையசைத்தபடி என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். மேடையேறிய ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் வீரவாள் பரிசாகக் கொடுத்தனர். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் பேசிய பிறகு ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ''ராணுவப் படை போல மிடுக்காக திரண்டு இருக்கும் என் அன்பு சகோதரிகளுக்கு என்னுடைய வணக்கம். வீட்டை மட்டுமல்ல கழகத்தை நாங்கள் காப்போம் என்கிற உணர்வோடு கருப்பு சிவப்பு கடல் போல திரண்டு வந்துள்ளீர்கள். நம் தமிழ்நாட்டையும் ஏன் இந்திய நாட்டையும் காக்கவும் நாங்கள் தயார். யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற துணிச்சலோடு திரண்டுள்ளீர்கள். தஞ்சை மண் கம்பீரமான மண், மன்னர்களுக்கெல்லாம் மன்னரான ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழமண். இந்த மண் கம்பீரமாக நிற்கக்கூடிய பெரியகோயிலும், காலங்கள் கடந்தும் உறுதியாக இருக்கக்கூடிய கல்லணையும் நிலைத்திருக்கக்கூடிய மண். கனிமொழியிடம் பொறுப்பு ஒப்படைத்தால் அதை அமைதியாகவும் சிறப்பாகவும் செய்து காட்டுவார் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. கழகப் பணியில்தான் இந்த அமைதி. உரிமைக் குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் கர்ஜனை மொழியாக மாறிப் போராடுவார். அதுதான் கனிமொழி. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன? பெண் விடுதலை. சாதிய ஏற்றத்தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்று நடத்துவது தவறானது என்பதை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். சூத்திரர்களைப் போல பெண்களும் இழிவானவர்கள் என ஒடுக்கப்பட்ட காலத்தில் இந்த இருவருடைய விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் பெரியார். திராவிட இயக்கத்துடைய தாய் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்குச் சமபங்கு உண்டு என அறிவித்தார் கலைஞர். மகளிர் மாநாடு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன- உதயநிதி இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடுதான். இதை அடித்துச் சொல்கிறேன். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அண்மையில், இந்தியாவிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்குகிற நகரங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளனர். 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில் முதல் 25 நகரங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு என ஏழு நகரங்கள் இருந்தன பிரதமருக்குத் தெரியுமா? ஸ்டாலின் பிரதமர் அவர்களே மணிப்பூரை மறந்து விட்டீர்களா? 2023ம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில் இதுவரை அரசுக் கணக்குப்படி பார்த்தால் 260 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக இருக்கும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் மேல் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஒன்றியத்தை ஆள்வது, மணிப்பூரை ஆண்டது பாஜகதான். ஆனால் உங்கள் டபுள் இன்ஜின் ஏன் மணிப்பூர் மக்களைக் காப்பாற்றவில்லை? மணிப்பூர் முதலமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியிருக்கிறார்கள். மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க-வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பாஜகவின் லட்சணமா? மாண்புமிகு பிரதமரே, மணிப்பூரையும் உத்தரப்பிரதேசத்தையும் பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளுகிற 2 மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப்பொருள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருகிறதே பத்திரிகையை நீங்கள் படிக்கவில்லையா? இதை அனைத்தையும் மறைத்துவிட்டு அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள். ஏதோ புதிதாக கூட்டணியை உருவாக்கியது போல அவரும் தோள் உயர்த்தி இருக்கிறார். தோற்ற கூட்டணியைப் புதுப்பித்து பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் இருக்கிற அனைவரும் ஈடி, ஐடி, சிபிஐ என ஏதோ ஒரு வகையில் பாஜகவிடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களை வெளுக்காதா என்கிற நப்பாசையில் கைகட்டி உட்கார்ந்து இருக்கிறார்கள். மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல் ஏற்கனவே இதே பாஜக - அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜைக் கழற்றிவிட்டு, 'அப்புறமா சேர்த்துக்கலாம்' என்று மறைமுகக் கூட்டணியா வந்தார்கள். ஆனால் எந்தக் கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிட்டாங்க. இப்போ திரும்பவும் பழையபடியே உடைந்து போனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதுசா என்டிஏ கூட்டணி என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் பாஜக, அதிமுக கூட்டணி கட்டாயத்தால் உருவாகி இருக்கிற கூட்டணி என்று. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தனது சுயலாபத்திற்காக வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநல கூட்டணி. டெல்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி மாறி சென்று, அங்கே வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏசி காரில் இருந்தும் ஒருவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுக்க, எப்படி கர்சிஃப் வைத்து துடைத்துக்கொண்டு வந்தார் என்பதை நாடே பார்த்தது. தஞ்சாவூர் மகளிர் அணி மாநாட்டில் பேசும் ஸ்டாலின் பாஜக என்ன நினைக்கிறது, திரும்பவும் தனது கண்ணசைவில் தலையாட்டுகிற எடுபிடிகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளலாம் என நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியை தமிழ்நாடு தரும். இப்போது வெளிப்படையாக பாஜக அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எங்களுடைய எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம். நடக்க இருக்கும் தேர்தலில் என்டிஏ வெர்சஸ் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது. என்டிஏ வெர்சஸ் தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாடு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற, நாடே திரும்பிப் பார்க்கக் கூடிய செயல் திட்டங்களைச் செயல்படுத்துகிற, தலை நிமிர்ந்து, தன்மானத்தோடு போராடுவது திமுகதான். எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள். நான் என்னை விட அதிகமாக நம்புவது தமிழ்நாடு மக்களைத்தான். எனவே என் மீது நம்பிக்கை வைத்திருக்கிற மக்களை, நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்றைக்கும் எப்போதும் மக்களுடனேயே இருக்க வேண்டும். இதுதான் உங்களுடைய சகோதரராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோள். எனவே அதற்கான பரப்புரையில் ஈடுபட வெல்லும் தமிழ்ப் பெண்களே புறப்படுங்கள். மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அமைய ஓய்வை மறந்து உழையுங்கள் உழையுங்கள் என்றார். பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல்
மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?
தியாகிகள் தினம்! தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்காக நடந்த வீரவணக்க நாள் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அங்கே அமைத்திருக்கும் தாளமுத்து - நடராசன் நினைவிடத்திலும், சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையைச் செலுத்தினர். அதன் பின் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் சிலைகளைத் திறந்துவைத்திருந்தார். வீரவணக்க நாள் பேரணி முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள். அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று பதிவு செய்திருந்தார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா? காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம். கீழடி தமிழர் தாய்மடி. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க என்ற முழக்கங்களைப் பிரதான கருத்தாக வைத்து கூட்டங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின், திருவெற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி, சைதாப்பேட்டையில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம்பரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி என 74 இடங்களிலும் மூத்த நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழக மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் சிலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம். தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது. அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன். மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை. சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது. எதிரிகளை வீழ்த்தவேண்டிய நேரம்! 3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதுவரை 10 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து திமுகவை வீழ்த்தப்போவதாகக் கூறுகின்றனர். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது. பொதுமக்கள், தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய நேரம் இது. தியாகிகளின் தியாகம் வீண் போகாத வகையில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இந்தி திணிப்பை எந்த வகையிலும் திமுக ஏற்றுக்கொள்ளாது. தொடர்ச்சியாக ஒன்றிய பாஜக அரசு தமிழ் மொழியையும், தமிழர்களையும் புறக்கணித்து வருகிறது. எப்படியாவது ஏதோ ஒருவகையில் இந்தி திணிப்பைத் தமிழகத்தில் நடத்திவிடத் துடிக்கிறது பாஜக அரசு. அதற்காக நமக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியைக் கூட நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் திமுக அரசு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. இந்த இடத்தில் திமுகவைத் தாண்டி வேறெந்த கட்சி இருந்தாலும் பாஜக அடிபணிய வைத்திருக்கும். இதனைத் தமிழ்நாடு மக்களுக்கும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்மொழியைக் காக்கவேண்டிய தேவை குறித்து திமுக தொடர்ந்து பேசும். தமிழுக்காக திமுக செய்தது குறித்து நடந்து முடிந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்களில் எங்கள் கழக உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அதேபோல், வரும் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றார்கள்.
Iran நோக்கி விரையும் US படைகள் - Middle Eastல் போர் பதற்றமா? | Trump | Khamenei | Decode
Iran நோக்கி விரையும் US படைகள் - Middle Eastல் போர் பதற்றமா? | Trump | Khamenei | Decode
Vijay-ஐ தாக்கும் TTV Dhinakaran, செல்லூர் ராஜூ, சீமான் சொன்ன அட்வைஸ்! | Political Pulse
Vijay-ஐ தாக்கும் TTV Dhinakaran, செல்லூர் ராஜூ, சீமான் சொன்ன அட்வைஸ்! | Political Pulse
மகளிர் மாநாடு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன- உதயநிதி
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''மற்ற இயக்கங்கள், வருடத்திற்கு ஒரு முறை, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள், ஆனால் திமுக மட்டும்தான் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்துகிறது. இதன் மூலம் இயக்கத்தின் கொள்கைகள், அரசின் சாதனைகள், தலைவர் சாதனைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. மகளிர் அணி மாநாட்டில் உதயநிதி இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தவர் கலைஞர். அவர் வழியில், பெண்களுக்குப் பார்த்துப் பார்த்து நமது தலைவர் ஆட்சி செய்கிறார். விடியல் பயணத்திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்களைச் சொல்லலாம். மகளிர் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக வழிகாட்டியாக முதல்வர் ஆட்சி செய்கிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தவர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பேசியுள்ளார். பிரதமர், மைக் என நினைத்து கண்ணாடியைப் பார்த்துப் பேசியிருக்கிறார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டது. ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல் திமுக மகளிர் அணி மாநாடு 2002 ஆம் ஆண்டு இதே பிரதமர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பாலியல் கொடுமை செய்யப்பட்டார். குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. குற்றவாளிகளுக்கு ஆதரவு கரம் கொடுத்த கட்சிதான் பாஜக. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குப் போகும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம். இந்த மாநிலங்களை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லையா மோடி என்று மக்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் வந்தால் மகளிருக்கும் பாதுகாப்பு கிடையாது நம்முடைய மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது. டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு பெண்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை மாநில அரசின் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது முதல்வர். நம்பர் ஒன் அடிமையான எடப்பாடி பழனிசாமி இதற்கும் முட்டுக்கொடுத்து வருகிறார். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்போம், முரட்டுத் தொண்டர் பார்த்திருப்போம். ஆனால் அடிமையாக நமது கண் முன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி புதுப்புது அடிமைகளுடன் நுழைகின்றனர். எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும் ஆனால் திமுகவை, நம்முடைய தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அதற்கு இங்கு இருக்கக்கூடிய நமது மகளிர் படை நிச்சயம் காவல் அரணாக இருப்பார்கள். நமது அரசு அமைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மகளிர்தான். அரசைக் கொண்டாடுவதும் இங்கு வந்துள்ள மகளிர்தான். அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறை ஆட்சி அமைக்கவும், தலைவர் இரண்டாவது முறை மீண்டும் முதலமைச்சராக அமரவும் இங்கு வந்திருக்கும் மகளிர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்'' என்றார். திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?
மகளிர் மாநாடு: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன- உதயநிதி
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி பேசியதாவது, ''மற்ற இயக்கங்கள், வருடத்திற்கு ஒரு முறை, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள், ஆனால் திமுக மட்டும்தான் மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்துகிறது. இதன் மூலம் இயக்கத்தின் கொள்கைகள், அரசின் சாதனைகள், தலைவர் சாதனைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. மகளிர் அணி மாநாட்டில் உதயநிதி இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தவர் கலைஞர். அவர் வழியில், பெண்களுக்குப் பார்த்துப் பார்த்து நமது தலைவர் ஆட்சி செய்கிறார். விடியல் பயணத்திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்களைச் சொல்லலாம். மகளிர் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக வழிகாட்டியாக முதல்வர் ஆட்சி செய்கிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தவர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பேசியுள்ளார். பிரதமர், மைக் என நினைத்து கண்ணாடியைப் பார்த்துப் பேசியிருக்கிறார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டது. ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல் திமுக மகளிர் அணி மாநாடு 2002 ஆம் ஆண்டு இதே பிரதமர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பாலியல் கொடுமை செய்யப்பட்டார். குடும்பமே கொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. குற்றவாளிகளுக்கு ஆதரவு கரம் கொடுத்த கட்சிதான் பாஜக. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குப் போகும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம். இந்த மாநிலங்களை ஆட்சி செய்து கொண்டிருப்பது பாஜக. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லையா மோடி என்று மக்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் வந்தால் மகளிருக்கும் பாதுகாப்பு கிடையாது நம்முடைய மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது. டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு பெண்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முயல்கிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை மாநில அரசின் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது முதல்வர். நம்பர் ஒன் அடிமையான எடப்பாடி பழனிசாமி இதற்கும் முட்டுக்கொடுத்து வருகிறார். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்போம், முரட்டுத் தொண்டர் பார்த்திருப்போம். ஆனால் அடிமையாக நமது கண் முன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமின்றி புதுப்புது அடிமைகளுடன் நுழைகின்றனர். எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும் ஆனால் திமுகவை, நம்முடைய தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அதற்கு இங்கு இருக்கக்கூடிய நமது மகளிர் படை நிச்சயம் காவல் அரணாக இருப்பார்கள். நமது அரசு அமைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மகளிர்தான். அரசைக் கொண்டாடுவதும் இங்கு வந்துள்ள மகளிர்தான். அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறை ஆட்சி அமைக்கவும், தலைவர் இரண்டாவது முறை மீண்டும் முதலமைச்சராக அமரவும் இங்கு வந்திருக்கும் மகளிர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்'' என்றார். திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?
அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?
தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது... நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். வரி பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன். பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை? இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்
அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?
தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது... நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம். வரி பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்! 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன். பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை? இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! - தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்
மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்
தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் தந்த நம் முதல்வரை வணங்குகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நடுமலரே, ஒளி உமிழ் புதுநிலவே, அன்பே, அறிவே, அழகே, உயிரே, இன்பே, இனிய தென்றலே, பனியே, கனியே, மரகத அணியே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழைப் போற்றினாலும், தமிழை தமிழே என்று கூறுவதுதான் பெருமை, அழகு என்பார் முதல்வர். திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி ஓடு வளர் காடு தணி ஓடி விளையாடுகின்ற பீடு மிகு மாநிலமும், பாடு திசை ஜோடி குயில் தாலமொடு பாவம் மிகு கானமயில் புள்ளினமும், மட்டுப்படிகற்ற கொடைச் சிற்றடர் வெற்றிச் சீர் பெற்றிடவும் உல, மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! இன்புற்றான் என் தமிழன். இங்கு வந்த இந்தினை எதிர்ப்பதற்கு இவையின்றி செங்குத்துத் தூணைப் போல் இருக்கின்றானா அல்லது அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானா? ஐயோ பாவம், அவனுக்கு சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள் என்று இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை அரியணை ஏற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றுகின்ற கழகத்தைத் தொடங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர். அதுமட்டுமல்லாமல், அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றைக் காவியத்தை வைத்தார் கலைஞர் என்றால், அப்பா என்ற ஒற்றை வார்த்தையிலே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உமிழ்நீரைக் கூட விழுங்குவதற்கு நேரமின்றி ஊரெல்லாம் உரையாடி உழைப்பவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றிற்கு இணங்க, பசித்த ஒரு குழந்தையின் முகத்தைக் கண்ட அடுத்த கணமே அவர் கொண்டு வந்தாரோ ஒரு சட்டம், அதுவே காலை உணவுத் திட்டம். கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டைய உரிக்கும் சுடுகாட்டில் அவன் பட்டை வேகம் என்ற வரிகளுக்கு இணங்க, நம் முதல்வர் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, ஏரோட்டுபவரின் மகன் ஏரோப்ளேன் ஓட்டுகின்றான், களை பறிப்பவரின் மகன் கலெக்டர் ஆகின்றான். Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்! பெண்கள் விண்வெளிக்கே போனாலும், அவர்கள் போக முடியாத ஒரே இடம் கோவிலின் கருவறை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் இனி கரு சுமக்கும் பெண் கூட கோவிலின் கருவறைக்குள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற வாதத்தை மாற்றி, பெண்களுக்கு சொத்துரிமை தந்து, வாழ்வுரிமை தந்து, கல்வியைத் தந்து, கல்விக்குத் தொகையும் தந்து, இடஒதுக்கீடு தந்து, சம உரிமையைப் படைத்து, பெண்களின் தடைகளை உடைத்து, பெண்களின் வழித்தடத்தை வாழ்க்கைத் தடமாக மாற்றி வரும் ஒரு சகாப்த நாயகர் நம் தமிழ்நாட்டின் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற மாபெரும் மாநாட்டை நடத்தி பெண்மையைப் போற்றுவதுதான் நம் திராவிட மாடல் அரசியலுடைய புரட்சி. அதுமட்டுமல்லாமல் நான் இன்னொன்னு கருத்தைச் சொல்கிறேன். விதவைக்கு கைம்பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று இல்லாமல் கட்டணமில்லாப் பயணம், பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல் ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை. விளையாட்டுத் துறையில் முக்கியமாகப் பெண்கள் - கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா; கிரிக்கெட்டில் ஜெமிமா என முன்வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே! திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபொழுதும் நல்ல தலைவர்களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்குச் சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்'' என்றார். நான் தினம் தினம் சென்னையைப் பார்த்து வியக்கிறேன்! - பெண்ணின் பிரமிப்பு| #Chennaidays
மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்
தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் தந்த நம் முதல்வரை வணங்குகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நடுமலரே, ஒளி உமிழ் புதுநிலவே, அன்பே, அறிவே, அழகே, உயிரே, இன்பே, இனிய தென்றலே, பனியே, கனியே, மரகத அணியே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழைப் போற்றினாலும், தமிழை தமிழே என்று கூறுவதுதான் பெருமை, அழகு என்பார் முதல்வர். திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி ஓடு வளர் காடு தணி ஓடி விளையாடுகின்ற பீடு மிகு மாநிலமும், பாடு திசை ஜோடி குயில் தாலமொடு பாவம் மிகு கானமயில் புள்ளினமும், மட்டுப்படிகற்ற கொடைச் சிற்றடர் வெற்றிச் சீர் பெற்றிடவும் உல, மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! இன்புற்றான் என் தமிழன். இங்கு வந்த இந்தினை எதிர்ப்பதற்கு இவையின்றி செங்குத்துத் தூணைப் போல் இருக்கின்றானா அல்லது அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானா? ஐயோ பாவம், அவனுக்கு சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள் என்று இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை அரியணை ஏற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றுகின்ற கழகத்தைத் தொடங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர். அதுமட்டுமல்லாமல், அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றைக் காவியத்தை வைத்தார் கலைஞர் என்றால், அப்பா என்ற ஒற்றை வார்த்தையிலே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உமிழ்நீரைக் கூட விழுங்குவதற்கு நேரமின்றி ஊரெல்லாம் உரையாடி உழைப்பவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்றிற்கு இணங்க, பசித்த ஒரு குழந்தையின் முகத்தைக் கண்ட அடுத்த கணமே அவர் கொண்டு வந்தாரோ ஒரு சட்டம், அதுவே காலை உணவுத் திட்டம். கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டைய உரிக்கும் சுடுகாட்டில் அவன் பட்டை வேகம் என்ற வரிகளுக்கு இணங்க, நம் முதல்வர் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, ஏரோட்டுபவரின் மகன் ஏரோப்ளேன் ஓட்டுகின்றான், களை பறிப்பவரின் மகன் கலெக்டர் ஆகின்றான். Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்! பெண்கள் விண்வெளிக்கே போனாலும், அவர்கள் போக முடியாத ஒரே இடம் கோவிலின் கருவறை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் இனி கரு சுமக்கும் பெண் கூட கோவிலின் கருவறைக்குள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற வாதத்தை மாற்றி, பெண்களுக்கு சொத்துரிமை தந்து, வாழ்வுரிமை தந்து, கல்வியைத் தந்து, கல்விக்குத் தொகையும் தந்து, இடஒதுக்கீடு தந்து, சம உரிமையைப் படைத்து, பெண்களின் தடைகளை உடைத்து, பெண்களின் வழித்தடத்தை வாழ்க்கைத் தடமாக மாற்றி வரும் ஒரு சகாப்த நாயகர் நம் தமிழ்நாட்டின் முதல்வர். திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற மாபெரும் மாநாட்டை நடத்தி பெண்மையைப் போற்றுவதுதான் நம் திராவிட மாடல் அரசியலுடைய புரட்சி. அதுமட்டுமல்லாமல் நான் இன்னொன்னு கருத்தைச் சொல்கிறேன். விதவைக்கு கைம்பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று இல்லாமல் கட்டணமில்லாப் பயணம், பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சி தானே! பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!– முதல்வர் ஸ்டாலின் விளாசல் ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை. விளையாட்டுத் துறையில் முக்கியமாகப் பெண்கள் - கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா; கிரிக்கெட்டில் ஜெமிமா என முன்வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே! திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபொழுதும் நல்ல தலைவர்களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்குச் சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்'' என்றார். நான் தினம் தினம் சென்னையைப் பார்த்து வியக்கிறேன்! - பெண்ணின் பிரமிப்பு| #Chennaidays
தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது - சௌமியா அன்புமணி
மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு, ஆனால், பெண்களுக்கு இங்கு மரியாதை இல்லை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 850 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலம் பெற்றுக்கொண்டது. சௌமியா அன்புமணி டாஸ்மாக் காலி மது பாட்டில்களைச் சேமித்து வைக்க குடோன் இருக்கும்போது விவசாயிகளின் மலர்களைச் சேமித்து வைக்க குடோன் இல்லை. மலர் விவசாயம் மட்டுமல்ல, தென்னை விவசாயம், மா விவசாயம் என எந்தவொரு விவசாய வளர்ச்சிக்கான கட்டமைப்பும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை. ``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை - அன்புமணி காட்டம்! மாவுக்கு மதிப்புக்கூட்ட இப்பகுதியில் தொழிற்சாலை இல்லை, ஆனால், இப்பகுதி இளைஞர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மா விவசாயமும் பெருமளவு குறைந்துவிட்டது. மாவிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயர்த்தியதால்தான் நாம் அதைப் பயன்படுத்தி வருகிறோம். இல்லையென்றால் பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். சௌமியா அன்புமணி மூன்று போகம் விளைச்சல் தரும் விளைநிலத்தைப் பறித்து தொழிற்சாலை அமைப்பது நல்லதல்ல. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், மாவட்டத்தில் பல பகுதிகளுக்குப் போய்ச்சேரவில்லை. அதேபோல் கிராமங்களுக்குச் சரியான பேருந்து வசதிகள் இல்லை, இந்தப் பகுதியில் கல்லூரிகள் கிடையாது. கிரானைட் குவாரிகளில் வெடி வைப்பதால் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இக்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு அபராதத்தைக் கட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கும் கடனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுப்பது இல்லை. மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பவர் அன்புமணி ராமதாஸ். நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும், அதை உணர்ந்து வாக்களியுங்கள். மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு புதிய மதுக்கடைகளைத் திறப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது என்று பேசினார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!

28 C