SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டண மாற்றங்கள் இதோ... > துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத சீசனல் டிக்கெட்டுகளின் (Monthly Seasonal ticket) விலையில் மாற்றமில்லை. > சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ வரையிலும் விலை மாற்றமில்லை. > 215 கி.மீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 1 பைசா அதிகரிக்கப்பட உள்ளது. ரயில் `இனி ரயில்களில் Lower Berth இவர்களுக்குத்தான் கிடைக்கும்' - ரயில்வேயின் புதிய அறிவிப்பு > மெயில் மற்றும் ஏ.சி இல்லாத எக்ஸ்பிரஸ்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்பட உள்ளது. > ஏ.சி வகுப்பிற்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்படுகிறது. > 500 கிலோ மீட்டர்களுக்கு ஏ.சி இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. > இந்த விலை உயர்வினால் இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும். Chennai One APP : பஸ், ரயில், ஆட்டோ ஒரே இடத்தில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் - எப்படி தெரியுமா? அறிவிப்பு

விகடன் 21 Dec 2025 2:24 pm

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன. மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர். ``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும் - எச்சரித்த உத்தவ் தாக்கரே மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. உத்தவ் தாக்ரே பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார். மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?

விகடன் 21 Dec 2025 1:51 pm

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன. மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர். ``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும் - எச்சரித்த உத்தவ் தாக்கரே மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது. உத்தவ் தாக்ரே பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார். மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?

விகடன் 21 Dec 2025 1:51 pm

கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?

விகடன் 21 Dec 2025 12:32 pm

கர்நாடகா: நானே முதல்வராகத் தொடர்வேன் - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன? சித்தராமையா பேச்சு கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை என்று பேசியுள்ளார். மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்? இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம் என்று கூறியுள்ளார். இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?

விகடன் 21 Dec 2025 12:32 pm

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. 'நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது. 'நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று 'நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது' - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் சமீபத்திய சர்ச்சை இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை. அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளது. 'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விகடன் 21 Dec 2025 9:48 am

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள தவெக மகளிர் அணி நிர்வாகி வீட்டில் பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்துள்ளார் செந்தில்நாதன். தகவல் அறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், பெண் நிர்வாகியும் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். செந்தில்நாதன் மேலும், செந்தில்நாதன் மற்றும் தவெக பெண் நிர்வாகி இருவரையும் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தவெகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதனை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கம் செய்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். தவெக மாவட்டச் செயலாளர் ஒருவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை' - செங்கோட்டையன் சர்ப்ரைஸ்

விகடன் 21 Dec 2025 9:17 am

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு. இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறது. ஹெச்-1பி விசா உள்ளிட்ட சில‌ விசாக்கள் வைத்திருக்கும் பணியாளர்களை அமெரிக்காவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தி உள்ளது. ஆப்பிள் - கூகுள் US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி என்ன காரணம்? குறிப்பிட்ட பணியாளர்கள் அமெரிக்காவைத் தாண்டி வேறு எங்காவது சென்றால், அவர்கள் மீண்டும் விசா ஸ்டாம்பிங் பெற, 12 மாதங்கள் வரை ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். இதனால், அவர்களது பணி தடைப்படலாம். 12 மாத காலம் வரையிலான தாமதத்திற்கு சமூக வலைதள சோதனையை மிக முக்கியமாகக் கூறுகிறது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?

விகடன் 21 Dec 2025 9:10 am

கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும் கட்டுப்படாமல் இயங்கியிருக்கிறேன் - திருமாவளவன் பேச்சு

மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது, வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தேர்தல் அரசியல் கூட்டணிக்காக நான் எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். திமுக-வை நான் உயர்த்திப் பிடிப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். திமுக மீது எங்களுக்கும் விமர்சனம் உண்டு. விழாவில் தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு உண்மையாகவும் அதே நேரம் ஏற்ற கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும் இயக்கம் வலிமையோடு செயல்படுவதற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எந்தப் பின்புலமும் இல்லாமல் மதுரையில் 20 பேரைக் கொண்டு தொடங்கிய அரசியல் வாழ்க்கை, இன்று லட்சக்கணக்கானவர்கள் திரளும் கூட்டமாக 30 ஆண்டுகளில் பரிணமித்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபோது நான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததை சிலர் இன்றும் விமர்சிப்பதைப் பார்க்கிறேன். வேங்கைவயல் உள்ளிட்ட பல தலித் மக்கள் பிரச்னைகளின்போது எனக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தது உண்டு. வேங்கைவயல் சம்பவம் நடந்த இரண்டாம் நாளே போராட்டம் அறிவித்து நடத்தினேன். பத்துக்கும் மேற்பட்ட முறை முதலமைச்சர், தலைமைச் செயலாளரிடம் பேசினேன், கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்களை மறந்து தனி நபராக என்னுடைய நலன் குறித்து சிந்தித்தது இல்லை, அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எங்களைப் போல் போராடியவர்கள் யாருமில்லை. மதுரையில் நான் அரசைக் கண்டித்துப்பேசியது தொடர்பாக தமிழக முதலமைச்சரே 'ஏன் இப்படி பொதுவெளியில் அரசை குற்றம்சாட்டி பேசுகிறீர்கள்?' என்று என்னிடம் வருத்தப்பட்டார். விழாவில் கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும்கூட கட்டுப்பட்டு இருக்காமல், அதிமுக தலைவர்களோடு இயங்கியிருக்கிறேன். பெரியார் பிற்படுத்தப்பட்டோர் கட்சிகளின் தலைவராகத்தான் இருந்தார். விசிக, அம்பேத்கருடன் பெரியாரையும் இணைத்து படம் ஒட்டியதால்தான் அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஆதரித்தனர். அம்பேத்கரை சாதியவாதியாக கம்யூனிஸ்ட்டுகள் பார்த்த காலமுண்டு. அந்த காலக் கட்டத்தில் அம்பேத்கரை தோழர்கள் கடுமையால விமர்சிப்பார்கள். அம்பேத்கர் இயக்கங்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்தவன் நான். மதுரையை சனாதன மையமாக மாற்றப் பார்க்கிறார்கள். சாதி சங்கங்களை அணுகி சாதி உணர்வுகளைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள். ஜனநாயக உணர்வைச் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல், நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலைப் பற்றி பேசுவேன். சீட் எத்தனை பெறுகிறேன் என்பது என் பிரச்னையல்ல, சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமரப் போவதில்லை. மதுரை விழாவில் பதவி எனக்குப் பெரிதல்ல, 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாகத் தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா? இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணமே பதவி ஆசை இல்லாததுதான். பெரியாரை பிராமண கடப்பாறையைக் கொண்டு இடிப்போம் என்று வெளிப்படையாக சொல்லும் நிலை வந்திருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகிறது. சகோதரத்துவத்தை தகர்க்கப் பார்க்கிறார்கள். உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிர்ப்பது தான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் தான் இருக்கவேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிர்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம் என்றார்.

விகடன் 21 Dec 2025 9:02 am

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட முதல்வர் | Photo Album

நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் திறப்பு விழா| `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!

விகடன் 21 Dec 2025 8:58 am

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட முதல்வர் | Photo Album

நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் திறப்பு விழா| `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!

விகடன் 21 Dec 2025 8:58 am

காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க - தமிழருவி மணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி. இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும். மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன். அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல. தமிழருவி மணியன் கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும். ``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன் இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது. இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார். இணைப்பு விழா 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு விஜய் காவடி எடுத்தாலும் முதல்வராக முடியாது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 சதவீதம், பாஜக 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதை இரண்டையும் சேர்த்தால் 41 சதவீதம் வாக்குகள், விஜய்யுடைய 20 சதவீத வாக்குகளைச் சேர்த்தால் 61 சதவீதமாக மாறிவிடும். இந்தக் கூட்டணி அமைந்தால் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். எப்போது விஜய் அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணிக்கு வருகிறார் என்று செய்தி வருகிறதோ அப்போதே திமுக மூட்டையைக் கட்டிவிடும். திமுக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சொன்னார்கள். தற்போது விஜய்யும் சொல்கிறார். திமுக-வை நல்ல சக்தி என்று எந்த நேர்மையாளனாவது சொல்வானா? விஜய்க்கு உண்மையில் சமூக நோக்கம் இருந்தால், திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றார். காந்தி To கோட்சே பயணமா?! - மனம் திறக்கும் தமிழருவி மணியன்

விகடன் 21 Dec 2025 8:51 am

காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க - தமிழருவி மணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி. இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும். மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன். அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல. தமிழருவி மணியன் கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும். ``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது- தமிழருவி மணியன் இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது. இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார். இணைப்பு விழா 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு விஜய் காவடி எடுத்தாலும் முதல்வராக முடியாது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 சதவீதம், பாஜக 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதை இரண்டையும் சேர்த்தால் 41 சதவீதம் வாக்குகள், விஜய்யுடைய 20 சதவீத வாக்குகளைச் சேர்த்தால் 61 சதவீதமாக மாறிவிடும். இந்தக் கூட்டணி அமைந்தால் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். எப்போது விஜய் அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணிக்கு வருகிறார் என்று செய்தி வருகிறதோ அப்போதே திமுக மூட்டையைக் கட்டிவிடும். திமுக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சொன்னார்கள். தற்போது விஜய்யும் சொல்கிறார். திமுக-வை நல்ல சக்தி என்று எந்த நேர்மையாளனாவது சொல்வானா? விஜய்க்கு உண்மையில் சமூக நோக்கம் இருந்தால், திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றார். காந்தி To கோட்சே பயணமா?! - மனம் திறக்கும் தமிழருவி மணியன்

விகடன் 21 Dec 2025 8:51 am

`கோவைக்கு நோ...' - கரூர் சென்டிமென்ட்டை டிக் அடித்த செந்தில் பாலாஜி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. இதை சரி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். கோவை, கரூர், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களுக்கான பொறுப்பு செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்குப் பதிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கோவை இந்நிலையில் கோவை திமுக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் சேர்க்கபட்டுள்ளனரா என்பதை பூத் வாரியாக ஆராய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள், புதிய அரசியல் கட்சிகள் அனைவரும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். பாஜக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் திமுக-வை மட்டுமே விமர்சிப்பார்கள். எனவே யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. செந்தில் பாலாஜி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். நான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் பரவுகிறது. எனக்கு கரூர் தொகுதி நன்றாகத்தான் உள்ளது. கரூர் மக்கள் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதால் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. என்றார்.

விகடன் 20 Dec 2025 10:26 pm

`கோவைக்கு நோ...' - கரூர் சென்டிமென்ட்டை டிக் அடித்த செந்தில் பாலாஜி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. இதை சரி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். கோவை, கரூர், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களுக்கான பொறுப்பு செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்குப் பதிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கோவை இந்நிலையில் கோவை திமுக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் சேர்க்கபட்டுள்ளனரா என்பதை பூத் வாரியாக ஆராய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள், புதிய அரசியல் கட்சிகள் அனைவரும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். பாஜக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் திமுக-வை மட்டுமே விமர்சிப்பார்கள். எனவே யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. செந்தில் பாலாஜி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். நான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் பரவுகிறது. எனக்கு கரூர் தொகுதி நன்றாகத்தான் உள்ளது. கரூர் மக்கள் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதால் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. என்றார்.

விகடன் 20 Dec 2025 10:26 pm

80-ல் நுழைந்த‌ ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரிசு!

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னையில் மதிய விருந்தளிக்கப் பட்டது. ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் இருவருக்குமே தற்போது 79 முடிந்து 80 வது வயது தொடங்குகிறது. இதையொட்டி இவர்களது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இதை செலிபிரேட் செய்யும்விதமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் சிலருக்கு மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் நிகழ்ந்த இந்த விருந்து விழாவுக்கு ப.சியின் குடும்பத்தினர், அவரது சகோதரி குடும்பம் மற்றும் நெருங்கிய செட்டி நாட்டுச் சொந்தங்கள் கலந்து கொண்டனர். தவிர நடிகர்கள் சிவக்குமார், கவிஞர வைரமுத்து, வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களும் வருகை தந்த‌னர். கார்த்தி சிதம்பரத்தின் அழைப்பு வந்த அனைவரையும் ப.சி மற்றும் அவரது மனைவி இருவரும் வரவேற்க, விருந்து உபசரிப்பை கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஆகியோர் கவனித்தனர். பிறகு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன‌ வந்த அத்தனை பேரும் தம்பதியை வாழ்த்தி விட்டு விருந்து உண்டுவிட்டுச் சென்றனர். நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் வந்து வாழ்த்தினால் அப்பா அம்மா இருவருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் மறக்காது என்றே இந்த விருந்து ஏற்பாட்டை கார்த்தி சிதம்பரம் செய்ததாகக் கூறுகின்றனர்.

விகடன் 20 Dec 2025 9:03 pm

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பிரியங்கா காந்தி - மோடி இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி - மோடி அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி

விகடன் 20 Dec 2025 3:59 pm

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பிரியங்கா காந்தி - மோடி இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி - மோடி அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி

விகடன் 20 Dec 2025 3:59 pm

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' - சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் 'வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலியர்கள் போராட்டம் - சிவானந்தம் சாலை போராட்டம்... கைது! கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்திருந்தனர். போராடியவர்களை பேருந்துகளில் ஏற்று அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டனர். பேருந்து நிலையத்தில் கூடிய செவிலியர்கள் நள்ளிரவில் அங்கேயே போராட தொடங்கினர். நேற்று அதிகாலையில் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர். செவிலியர்கள் போராட்டம் போராடும் செவிலியர் சங்கத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மா.சுவை சந்திக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்களை கைது செய்து இப்போது ஊரப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக உறுதியாகவும் கூறுகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுவுடனான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? போராட்டம் தொடர்வது ஏன் என்பதை அறிய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் இருந்த நபர்களிடம் பேச்சுக்கொடுத்தோம். ``அவர் எங்களின் கோரிக்கைகளை கேட்கவே தயாராக இல்லை. பேச்சுவார்த்தை நடந்த 20 நிமிடமும் எங்கள் மீது கோபத்தோடு மட்டுமே பேசினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? நீங்க சொல்ற புள்ளிவிவரங்களை எல்லாம் ஏத்துக்க முடியாது. இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான். நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க....போராடிக்கோங்க' என தடாலடியாக கூறுகிறார். எங்களின் பிரச்னைகளை காது கொடுத்தே கேட்க தயாராக இல்லாதவரிடம் என்ன பேசுவது?’ என விரக்தியாக கூறுகின்றனர். இதுதொடர்பாக போராடும் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபினிடம் பேசினேன். 'மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக வருடா வருடம் தேர்வு நடத்தி ஆட்களை எடுக்க வேண்டும். இவர்களை அதை செய்வதே இல்லை. இந்த அரசாங்கம் வந்த பிறகு செவிலியர் பணியில் காலிப்பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை. ஆனால், மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம் 9 நோயாளிகளை கொண்ட ஒரு பொது வார்டுக்கு ஒரு நாளைக்கு 3 செவிலியர்கள் தேவை. ஆனால், நம்மிடம் 0.48 என்ற வீதத்தில்தான் இருக்கிறார்கள். நிறைய தேவை இருந்தும் இவர்கள் காலிப்பணியிடங்களை உருவாக்கவே இல்லை. மாறாக, மருத்துவத்துறையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற புதிய புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பவர்களுக்ககு பணிச்சுமை கூடிக்கொண்டே இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு செவிலியர்களை நியமிப்பதாக அரசாணை வெளியிட்டிருந்தார்கள். கொரோனாவால் அதை நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்த திமுக அரசு வந்தவுடன் அந்தப் பணிகளை மட்டும் நிரப்பினார்கள். அதை செய்துவிட்டு, 'நாங்கள்தான் பணி கொடுத்துவிட்டோமே என்கிறார்கள்'. அது எப்படி முறையாகும்? இவர்களின் ஆட்சியில் எந்த காலிப்பணியிடமும் புதிதாக அறிவிக்கப்படவே இல்லையே. செவிலியர்கள் இப்போது பணி நிரந்தரம் வேண்டி தமிழகம் முழுவதும் 8000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். காலிப்பணியிடங்கள் வரும் போது எங்களை இட்டு நிரப்புவோம் என்கிறார்கள். ஆனால், ஒரு முறைக்கு அதிகபட்சமாக 150 காலிப்பணியிடங்கள்தான் வருகிறது. மற்றவர்களெல்லாம் நீண்ட கால காத்திருப்பில் மட்டுமே இருக்கிறோம். போராடும் எங்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையை வைத்து அடக்கப் பார்க்கிறார்கள். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்' என்கிறார் உறுதியாக. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் மா.சு என்ன சொல்கிறார்? செவிலியர்கள் போராட்டம் குறித்தும் பேச்சுவார்த்தையில் கடுமையாக நடந்துகொண்டதாக எழும் குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் மா.சுவிடம் பேசினேன். 'அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கல்லூரிகளாக இருந்தாலும், எங்களின் ஆட்சியில்தான் அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்டப்பட்டு 3,614 பேர் பணியமர்த்தப்பட்டனர். கூடிய விரைவில் சீனியாரிட்டி அடிப்படையில் 160 பேருக்கு மேல் பணி நிரந்தரம் செய்யப்போகிறோம். போராடுவது அவர்களின் உரிமை. ஆனால், முதலில் அவர்கள் என்னை தொடர்புகொண்டு உட்காந்து பேசியிருக்க வேண்டும். மா.சுப்பிரமணியன் நேரடியாக தெருவில் அமர்ந்து போராடுவது என்ன நியாயம்? ஒரு பணியிடத்துக்கு 20 பேர் என அளவுக்கு அதிகமாகத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களாக எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொண்டால் என்ன செய்வது? தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்க யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராடுகிறார்கள்' என்கிறார் அமைச்சர் மா.சு! ’அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ - கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்

விகடன் 20 Dec 2025 3:20 pm

``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி'டீம்! - அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எஸ்.ஐ.ஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம். நகர பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களைத் தவிர மற்ற நீக்கப்பட்ட வாக்காளர்களை சரிபார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. எங்களுடைய பி.எல்.ஏ, பி.எல்.ஏடு, பி.எல்.சி இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலை பத்து நாள்களுக்குள் சரிபார்த்து விடுவார்கள். அதற்குப் பிறகு, இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியோர் எதுவாக இருந்தாலும் சரி என்றுதான் கூறுவார்கள். நாங்கள் தீய சக்தியும் இல்லை. விஜய் தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது. ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது, திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பா.ஜ.க-வின் சி டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தைக் காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால், விஜய் அந்த தேர்தலில் புறமுதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்-யையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான், தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை. அமைச்சர் ரகுபதி பா.ஜ.க-வின் சி டீம் தான் விஜய். கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இருக்கையில், அவருக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.க-வின் அடிமையாக அவர் இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். தி.மு.க-வை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

விகடன் 20 Dec 2025 2:41 pm

``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி'டீம்! - அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எஸ்.ஐ.ஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம். நகர பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களைத் தவிர மற்ற நீக்கப்பட்ட வாக்காளர்களை சரிபார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. எங்களுடைய பி.எல்.ஏ, பி.எல்.ஏடு, பி.எல்.சி இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலை பத்து நாள்களுக்குள் சரிபார்த்து விடுவார்கள். அதற்குப் பிறகு, இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியோர் எதுவாக இருந்தாலும் சரி என்றுதான் கூறுவார்கள். நாங்கள் தீய சக்தியும் இல்லை. விஜய் தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது. ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது, திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பா.ஜ.க-வின் சி டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தைக் காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால், விஜய் அந்த தேர்தலில் புறமுதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்-யையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான், தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை. அமைச்சர் ரகுபதி பா.ஜ.க-வின் சி டீம் தான் விஜய். கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இருக்கையில், அவருக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.க-வின் அடிமையாக அவர் இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். தி.மு.க-வை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

விகடன் 20 Dec 2025 2:41 pm

அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மா. சுப்பிரமணியன் இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம். காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது. ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான். போராடுவது என்பது அவர்களின் உரிமை. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி செவிலியர் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் செவிலியர்கள் பிரச்னைக்கு காரணமே அதிமுக தான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் 2014- 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்த செவிலியர் நியமனத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ஆனால் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். செவிலியர்களின் கோரிக்கை இன்னும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட 8000 பேர் ஒப்பந்த செவிலியர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களின் சம்பளம் 14,000 ரூபாயாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 4000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்கள் எல்லாம் அந்த காலிப்பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். ஆனால் இவர்கள் புதிதாக இவர்களுக்கு என்று காலிப்பணியிடங்களை உருவாக்க சொல்கிறார்கள். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 12:51 pm

அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மா. சுப்பிரமணியன் இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம். காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது. ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான். போராடுவது என்பது அவர்களின் உரிமை. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி செவிலியர் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் செவிலியர்கள் பிரச்னைக்கு காரணமே அதிமுக தான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் 2014- 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்த செவிலியர் நியமனத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ஆனால் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். செவிலியர்களின் கோரிக்கை இன்னும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட 8000 பேர் ஒப்பந்த செவிலியர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களின் சம்பளம் 14,000 ரூபாயாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 4000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்கள் எல்லாம் அந்த காலிப்பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். ஆனால் இவர்கள் புதிதாக இவர்களுக்கு என்று காலிப்பணியிடங்களை உருவாக்க சொல்கிறார்கள். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 12:51 pm

ஏமாற்றமா? எதார்த்தமா? - தமிழக அரசியலில் ரஜினி எனும் கேள்விக்குறி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தமிழக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடைவெளியின்றி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி என்றால் அது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பே. 1991 முதல் 2020 வரை ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளில் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும், இந்த ஒரே கேள்வி மட்டும் மக்கள் மனதில் மறைந்து போகவில்லை. கருணாநிதி - ஜெயலலிதா அரசியல் போட்டியின் தீவிரம், பஞ்மில்ல அரசியல் அதிர்வுகள், மத்திய அரசின் ஆட்சிமாற்றங்கள், அதனுடன் சேர்த்து மாற்றத்திற்கான மக்கள் ஏக்கம் - இவை அனைத்தும் இணைந்தபோது ரஜினியின் அரசியல் வருகை ஒரு தனிநபர் முடிவைத் தாண்டி, ஒரு சமூக உற்சாகமாக மாறியது. அந்த சக்தி நிறைவேறாமல் போனது, ஆனால் அதன் தாக்கம் தமிழக அரசியலில் இன்னும் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி தமிழக அரசியல் சந்தித்த கடுமையான அதிர்வுகள் 1990–களின் தொடக்கத்தில் தமிழக அரசியல் கடுமையான அதிர்வுகளை சந்தித்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை, அதற்கு பிறகு உருவான தேசிய உணர்வு அலை, ஜெயலலிதாவின் அதிரடி வெற்றி, பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகள்; திமுகவின் பிளவு இவை அனைத்தும் மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை உருவாக்கின. அப்போது ரஜினிகாந்த் கூறிய 1996 அரசியல் கருத்து தேர்தல் வரலாற்றில் ஒரு பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தியது “ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது” அந்த ஒரு கூற்றின் பின்னணியில் மக்கள் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்தால், ரஜினி அப்போது களமிறங்கியிருந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் இருந்திருக்கும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருப்பது ஆச்சரியம் அல்ல. மாற்றத்திற்கான மக்கள் மனநிலை, “நேர்மையான மனிதர்” என்ற ரஜினி உருவத்துடன் சேரும் போது அது ஒரு பெரிய அரசியல் அலைகளாக மாறியிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அது நிகழவில்லை. 2001 முதல் 2014 வரை தமிழக அரசியல் அதிமுக - திமுக ஆட்சி மாற்றங்களால் நிரம்பியது. ஊழல் வழக்கின் அதிர்வுகள், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் எழுச்சி, ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சி, மத்திய அரசில் மாற்றங்கள், இதன் நடுவே மக்கள் அடிக்கடி ரஜினியை ஒரு “மாற்றத் தலைவர்” என எதிர்பார்த்தனர். குறிப்பாக 2010 பிறகான காலத்தில் ஊழலுக்கு எதிரான கோபம் அதிகரித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற புதிய அரசியல் மாதிரி தெற்கிலும் தோன்றுமா என்ற யோசனை மக்களிடையே எழுந்தது. ரஜினி அந்த தருணத்தில் களத்திற்கு வந்திருந்தால், மாற்ற அரசியலின் புதிய வடிவம் உருவாகியிருக்கலாம். ஜெயலலிதா 2016, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார வெற்றிடம் தமிழக அரசியலை மேலும் குழப்பத்தில் தள்ளியது. அதிமுகவில் தலைமை மோதல், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் உறுதி, மக்கள் மனதில் இருந்த இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை மிக உயர்ந்தது. அவர் வந்திருந்தால் அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கலாம். அவரைச் சுற்றி உருவான எதிர்பார்ப்பு, பொதுமக்களின் மாற்ற ஏக்கம், மக்கள் உணர்வாக மாறியது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதால் எல்லாம் எளிதாகிவிடும் என நினைப்பது தவறு. அவரது உடல்நல பிரச்சனைகள், தொடர்ச்சியான மருத்துவ கவலைகள், அரசியலில் தேவைப்படும் தினசரி நிர்வாக திறன். அரசியலில் இருப்பது திரைபட நாயகனின் புகழால் தீர்க்கப்பட முடியாத ஒன்று. கட்சியின் தலைமை பணி, மாவட்ட நிர்வாகம், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மன வலிமை, ஒழுங்கு படைத்த தலைமை இவை அனைத்தும் கண்டிப்பாக வேண்டும். ரஜினி களம் இறங்கியிருந்தால், அவரைச் சுற்றிய தாக்குதல்களும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் மற்ற நடிகர்களை விட அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில் அவரிடம் இருந்த மக்கள் நம்பிக்கை அவரை பலருக்குப் “அபாயகரமான எதிரி”யாக மாற்றியிருக்கும். ரசிகர் மன்றங்களை நேரடியாக அரசியல் அமைப்பாக மாற்றுவது தமிழ்நாட்டில் மிகச் சிக்கலான ஒன்றாகும். ரசிகர்களின் உற்சாகம் வாக்காளர்களின் முடிவும் எப்போதும் ஒரே கோட்டில் வருவது அரிது. அரசியல் என்றால் உணர்ச்சி மட்டும் அல்ல; அதற்கு பின்னால் நுணுக்கமான கணக்குகளும், சமூக இயக்கங்களும், நிலைமைகளின் கூற்றுகளும் செயல்படும். கட்சி உருவாகும் கட்டத்தில் ஊள்ளுக்குள் பிரிவினைகள், தலைமைப் போட்டிகள், அமைப்பு குழப்பம்  இது ரஜினியின் ஆரம்ப கட்ட அரசியல் பயணத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும். ரஜினி அரசியல் மத்திய அரசுடன் நல்ல உறவு அரசியலில் முக்கியம். பாஜகைக்கு தெற்கில் ஒரு பெரிய முகம் தேவைப்பட்டபோது ரஜினி உதவியிருக்கலாம், ஆனால் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு இருந்ததால் அவர்களுடன் நெருக்கம் ரஜினிக்கு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கும். மத்திய அரசு அவரை ஆதரித்திருந்தால் வளர்ச்சிக்கு சில நன்மைகள் இருந்திருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை “பாஜக முகம்” என்று விமர்சித்திருப்பார்கள். இவரின் பாஜக அடையாளம் காரணமாக திராவிட அரசியல் மேலும் வலுவாக எதிர்த்திருக்கும். இத்தகைய சூழலில் ரஜினி மூன்றாவது சக்தியாக உயர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது. 2021 தேர்தலை எடுத்துக்கொண்டால், ரஜினி களமிறங்கியிருந்தால் சில இடங்களை எளிதில் பெற்றிருக்கலாம் அல்லது பல இடங்களில் வெற்றி தோல்வியை. அவர் சரியான கூட்டணிகள் அமைத்திருந்தால், அரசியல் கணக்கு மேலும் வலுப்பெற்றிருக்கும். அந்த சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி அரசின் புதிய வடிவம் பிறந்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் வராமல் இருந்தது இந்த கதையை முற்றிலும் மாற்றியது. 2017–2020 களத்தில் அவர் எடுத்த முடிவுகளில் தெளிவின்மையும், அடிக்கடி தள்ளிப்போகும் அறிவிப்புகளும், கட்சி அமைப்பு சீராக உருவாக்கப்படாததும், இறுதியில் 2020-ல் அரசியலிலிருந்து விலகிய முடிவும். மொத்தமாக குழப்பத்தில் முடிந்தது ரஜினி அரசியலில் வராமலிருப்பதாக அறிவித்த பிறகு, அவர் நடிப்பதை விட அவரது அரசியல் முடிவுகளே அதிகம் பேசப்பட்டன.. ரசிகர்களும் இரண்டு குழுவாகப் பிரிந்தனர்—உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகிய முடிவை புரிந்துகொண்டவர்கள் ஒரு பக்கம்; நீண்ட காலம் காத்திருந்தும் அவர் இறுதியில் வராததால் வருத்தப்பட்டவர்கள் மற்றொரு பக்கம். இந்தப் பிளவு ரஜினி மீது இருந்த மக்கள் ஆதரவைக் குறைக்கும் வகையில் செயல்பட்டது. ரஜினி முதலில், அரசு அல்லது சில கட்சிகள் தரப்பில் பார்த்தால், ரஜினிகாந்த் வராமலிருப்பது இரு முக்கிய கட்சிகளுக்கும் இடையே நிலைத்த நிலையான பாதுகாப்பதாக இருந்தது. தனிநபர் மற்றும் சமூக அடிப்படையிலான வாக்களிப்பு முறைகளில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. அதாவது, திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகள், அவர்களது நிலையான வாக்களிப்பாளர் ஆதரவையும், எதிர்கட்சிகளால் பிரிக்கப்படாமல் இருப்பதையும் வலுவாக காத்து வைத்துக் கொண்டனர். ரஜினிகாந்த் போன்ற பெரிய ரசிகர் அடிப்படை அரசியலில் நுழைந்திருந்தால், அது தேர்தல் முடிவுகளை முற்றிலும் மாற்றியிருப்பதற்கான சக்தி கொண்டிருந்தது. அவரின் வராமை, இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஒரு வகையான பாதுகாப்பை எளிமையான முறையில் வழங்கியது. ரஜினியின் சினிமா ஈர்ப்பு எப்போதும் போலவே அசைக்க முடியாத ஒன்றாகவே இருந்தது; உண்மையில், அவரின் அரசியல் தீர்மானங்களுக்குப் பிறகு வெளிவந்த படங்கள்தான் அதிக வசூல் குவித்தன என்பது அவரின் அசாதாரண கவர்ச்சியின் மிகத் தெளிவான சான்று. ரசிகர்கள் ரஜினியை ஒருபோதும் ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை; அவர்கள் கண்களில் அவர் எப்போதும் திரைக்கு எழுந்து வரக்காத்திருக்கும் அந்த ஒரே Superstar. அவர் அரசியல் உலகில் எத்தனை குழப்பங்களையும், மாற்றங்களையும் சந்தித்தாலும், திரைக்கு வந்தபோது ரசிகர்கள் முன்பை விட அதிக உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். ஜெயிலர் உலகளவில் ஆயிரம் கோடியைத் தாண்டிய கணிசமான வசூல் செய்த தருணம், ரஜினியின் நட்சத்திரத் திறன் எந்த சூழலிலும், எந்த விமர்சனங்களிலும், எந்த தடைகளிலும் தளராத ஒரு பேரொளி என்பதை மறுபடியும் உலகிற்கு அறிவித்தது. அரசியல் அவருக்குச் சில நிழல்கள் தந்திருக்கலாம்; ஆனால் சினிமாவில், அவர் எழுந்து நிற்கும் ஒவ்வொரு முறையும் அந்த நிழல்களை எல்லாம் தாண்டி ஒளிவீசும் சக்தி ரஜினியிடம் இன்னும் பசுமையாகவே உள்ளது. இவ்வாறு பார்க்கும்போது, ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிறைவேறாத கனவு போலவும், தமிழ் அரசியலின் மனநிலையில் நிலைத்திருக்கும் ஒரு நிரந்தரக் கேள்விக்குறி போலவும் மாறியுள்ளது. அவர் அரசியலுக்குள் இறங்காததால் உருவான வெற்றிடமும், அவர் வந்திருந்தால் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தின் சாத்தியங்கள் இரண்டும் இன்னும் அரசியல் விவாதங்களின் நரம்புகளில் துடிக்கின்றன. ஜெயிலர் ரஜினி அரசியலில் தோல்வியுற்றார் என்று கூறுவது உண்மையை மங்கச் செய்வது; உண்மையில், அவர் அரசியலுக்குள் நுழைய முயன்ற அதே தருணமே, நிறைவேறாத ஒரு மகா முயற்சியாக மக்கள் நினைவில் பதிந்திருக்கிறது. அதே சமயம், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தியின் அரியணையை வருடங்களாகத் தொட்டுப் பார்க்க யாருக்கும் வாய்க்காதபடி உறுதியான செங்கோலாகப் பிடித்திருக்கும் அபூர்வமான நடிகரின் கம்பீரத் தன்மை, திரைத்துறையில் அவர் உருவாக்கிய இடத்தை இன்னும் எவராலும் சிதைக்க முடியாத புகழின் சிகர நிலைக்கு உயர்த்தியுள்ளது. தேர்தல்

விகடன் 20 Dec 2025 12:20 pm

SIR: செல்லூர் ராஜூ தொகுதியில் அதிகம்! - மதுரை மாவட்டத்தில் 3,80,474 பேர் நீக்கம்!

மதுரை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பாக வெளியிட்டார். SIR பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்ததிற்கு முன்பாக 27,40,631 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பின்னர், பட்டியலில் 23,60,157 வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 56,116 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (இது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 3 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும்). குறைந்தபட்சமாக சோழவந்தான் (தனி) தொகுதியில் 22,978 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 10 தொகுதிகளில் 40 முதல் 49 வயதிற்குட்பட்ட 5,31,288 வாக்காளர்கள் அதிகமாகவும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் என்ற எண்ணிககையில் குறைந்த பட்சமாகவும் இடம்பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதுடைய 20,324 இளம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 11,58,601 ஆண் வாக்காளர்களும் 12,01,319 பெண் வாக்காளர்களும் 237 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர் 94,432 வாக்களர்கள் இறந்துள்ளனர், 38,036 வாக்காளர்கள் முகவரி மாறியுள்ளனர், 2 லட்சத்து 36 ஆயிரத்து 68 பேரும், இரட்டை பதிவுகள் கொண்ட 11 ஆயிரத்து 336 பெயர்கள், இதர காரணங்களால் 602 வாக்காளர்கள் என மதுரை மாவட்டத்தில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 404 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விவரம் : 1.சோழவந்தான் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,29,545, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 22,978, SIR-க்குப் பின் வாக்காளர்கள்- 2,06,567. 2.மதுரை வடக்குத் தொகுதி: SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,45,296, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,547, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,08,749 3.மதுரை தெற்குத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,858, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 55,760, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,68,098 4.மதுரை மத்தியத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,521, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,272, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,87,249 செல்லூர் ராஜூ 5.மதுரை மேற்குத்தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,11,043, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 56,116, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,927 6.திருப்பரங்குன்றம் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,34,794, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 41,107, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,93,687 7.திருமங்கலம் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,84,179, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 34,897, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,49,282 8.உசிலப்பட்டித் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,86,800, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 32,358, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,442 9.மதுரை கிழக்குத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,51,779, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 35, 554, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 3,16,225 10.மேலூர் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் -2,49,816, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 28,885, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,20,931

விகடன் 20 Dec 2025 11:39 am

SIR: செல்லூர் ராஜூ தொகுதியில் அதிகம்! - மதுரை மாவட்டத்தில் 3,80,474 பேர் நீக்கம்!

மதுரை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பாக வெளியிட்டார். SIR பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்ததிற்கு முன்பாக 27,40,631 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பின்னர், பட்டியலில் 23,60,157 வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 56,116 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (இது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 3 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும்). குறைந்தபட்சமாக சோழவந்தான் (தனி) தொகுதியில் 22,978 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 10 தொகுதிகளில் 40 முதல் 49 வயதிற்குட்பட்ட 5,31,288 வாக்காளர்கள் அதிகமாகவும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 143 பேர் என்ற எண்ணிககையில் குறைந்த பட்சமாகவும் இடம்பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதுடைய 20,324 இளம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 11,58,601 ஆண் வாக்காளர்களும் 12,01,319 பெண் வாக்காளர்களும் 237 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர் 94,432 வாக்களர்கள் இறந்துள்ளனர், 38,036 வாக்காளர்கள் முகவரி மாறியுள்ளனர், 2 லட்சத்து 36 ஆயிரத்து 68 பேரும், இரட்டை பதிவுகள் கொண்ட 11 ஆயிரத்து 336 பெயர்கள், இதர காரணங்களால் 602 வாக்காளர்கள் என மதுரை மாவட்டத்தில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 404 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விவரம் : 1.சோழவந்தான் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,29,545, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 22,978, SIR-க்குப் பின் வாக்காளர்கள்- 2,06,567. 2.மதுரை வடக்குத் தொகுதி: SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,45,296, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,547, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,08,749 3.மதுரை தெற்குத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,858, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 55,760, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,68,098 4.மதுரை மத்தியத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,23,521, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 36,272, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 1,87,249 செல்லூர் ராஜூ 5.மதுரை மேற்குத்தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,11,043, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 56,116, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,927 6.திருப்பரங்குன்றம் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,34,794, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 41,107, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,93,687 7.திருமங்கலம் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,84,179, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 34,897, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,49,282 8.உசிலப்பட்டித் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 2,86,800, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 32,358, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,54,442 9.மதுரை கிழக்குத் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் - 3,51,779, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 35, 554, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 3,16,225 10.மேலூர் தொகுதி : SIR-க்கு முன் வாக்காளர்கள் -2,49,816, நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 28,885, SIR-க்குப் பின் வாக்காளர்கள் - 2,20,931

விகடன் 20 Dec 2025 11:39 am

'பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை' - செங்கோட்டையன் சர்ப்ரைஸ்

தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களுடன் களத்தில் பரபரக்க தொடங்கிவிட்டார்கள். அரசியலில் புதுவரவான தவெக கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எஸ்ஐஆர் பணி தொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும். அதுதான் எங்கள் அனைவரின் கருத்து. தவெக ஈரோடு பொதுக்கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஓர் கருத்தை சொல்கிறார்கள். தவெகவை தவழும் குழந்தை என்று திமுக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தவழும் குழந்தைதான் பெரியவராகி, தன்னாட்சி வழங்குவார்கள். செங்கோட்டையன் களத்தில் யார் இருக்கிறார்கள் என்கிற எங்கள் தலைவரின் விமர்சனத்துக்கு, தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அது அவரின் கருத்து நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை எங்கள் தலைவரிடம் பேசிவிட்டு எந்த இடம், தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்வோம். எங்களைப் பொறுத்த வரையிலும் 2026 பொங்கல் பண்டிகை நிறைவடைந்த பிறகு தவெகவுக்கு திருப்புமுனையாக இருக்கும். அது எப்படி இருக்கும் என்பதை நாடே வியந்து பார்க்கும். என்றார்.

விகடன் 20 Dec 2025 11:26 am

`பொதுவாழ்வில் நன்னடத்தை தேவை'தண்டனைக்கு தடைவிதிக்க மறுப்பு - முன்னாள் அமைச்சரின் MLA பதவி தப்புமா?

மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மாணிக்ராவ் கோடே. மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசின் ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இந்த விவகாரம் இப்போது பிரச்னையாகி இருக்கிறது. பொய்யான காரணத்தை கூறி அரசிடமிருந்து வீடு வாங்கியதற்காக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரருக்கு நாசிக் கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனையை தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாணிக்ராவ் மும்பை மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார். அதோடு தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். தண்டனை விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணிக்ராவ் கோடே மற்றும் அவரது சகோதரருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது. இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், 'ஜனநாயகத்திற்கு பொது வாழ்வில் நன்னடத்தை தேவை' என்று தெரிவித்தது. இதையடுத்து மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ பதவி கேள்விக்குறியாகி இருக்கிறது. தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டதால் மாணிக்ராவ் கோடேயின் பதவியை பறிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவு செய்வார் என்று சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து தண்டனைக்கு தடை விதிக்கும்படி கோரலாம். சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியும். மாணிக்ராவ் கோடே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதால் அந்த இடத்திற்கு வர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 6 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

விகடன் 20 Dec 2025 10:16 am

`பொதுவாழ்வில் நன்னடத்தை தேவை'தண்டனைக்கு தடைவிதிக்க மறுப்பு - முன்னாள் அமைச்சரின் MLA பதவி தப்புமா?

மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மாணிக்ராவ் கோடே. மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசின் ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இந்த விவகாரம் இப்போது பிரச்னையாகி இருக்கிறது. பொய்யான காரணத்தை கூறி அரசிடமிருந்து வீடு வாங்கியதற்காக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரருக்கு நாசிக் கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனையை தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாணிக்ராவ் மும்பை மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார். அதோடு தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். தண்டனை விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணிக்ராவ் கோடே மற்றும் அவரது சகோதரருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது. இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், 'ஜனநாயகத்திற்கு பொது வாழ்வில் நன்னடத்தை தேவை' என்று தெரிவித்தது. இதையடுத்து மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ பதவி கேள்விக்குறியாகி இருக்கிறது. தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டதால் மாணிக்ராவ் கோடேயின் பதவியை பறிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவு செய்வார் என்று சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து தண்டனைக்கு தடை விதிக்கும்படி கோரலாம். சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியும். மாணிக்ராவ் கோடே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதால் அந்த இடத்திற்கு வர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 6 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

விகடன் 20 Dec 2025 10:16 am

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' - ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. 'கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு பேசினார். ஆனா சம்பத்தும் முக்கியமான ஆள் இல்லையா? அதுவும் சிறந்த பேச்சாளர். ஆனா அவர் கட்சியில சேர்ந்த பிறகு நடக்கிற முதல் கூட்டத்துக்கு அவர் வரலைன்னா எப்படி? என்ன பிரச்னை தெரியலையே' என்கிற ரேஞ்சுக்கு அங்கே விவாதங்கள். தவெகவுக்கு எதிரானவர்கள் இதைப் பிடித்துக் கொண்டு, 'மரியாதை இல்லைனுதான் முன்பு இருந்த கட்சிகள்ல இருந்து வெளியேறினார். இப்ப இங்கயும் இதே நிலையா' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. TVK Vijay விதண்டாவாதம் 'ஏன் ஈரோட்டுக்கு வரவில்லை' என நாஞ்சில் சம்பத்தையே தொடர்பு கொண்டு கேட்டோம். ''இது மாதிரி சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணி விவாதிக்கணுமா? டிவியில கூட விவாதிச்சாலும் விவாதிப்பாங்க போல.. அப்படி வந்தா அதுக்கு பேரு விவாதம் இல்ல, விதண்டாவாதம். இதையே வேலையாச் செய்திட்டிருப்பாங்க சிலர். அவங்களுக்கு பொழுது போகாது. அந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் பனையூர்ல நடந்த மீட்டிங்ல பேசினேன். ஈரோட்டுக் கூட்டம் குறுகிய காலத் திட்டமிடல்ல உருவானது. அதுக்கு முன்னாடியே என்னுடைய பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. அந்தப் பயணத்துல ஈரோடு கூட்டம் இல்லை. அங்க நான் வராததற்கு இதுதான் காரணம். வேறு ஏதாச்சும் பின்னணி இருக்குமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா அலசி ஆராயட்டும். அவங்க நேரம் தான் விரயமாகும்' என முடித்துக் கொண்டார்.

விகடன் 20 Dec 2025 9:54 am

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' - ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. 'கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு பேசினார். ஆனா சம்பத்தும் முக்கியமான ஆள் இல்லையா? அதுவும் சிறந்த பேச்சாளர். ஆனா அவர் கட்சியில சேர்ந்த பிறகு நடக்கிற முதல் கூட்டத்துக்கு அவர் வரலைன்னா எப்படி? என்ன பிரச்னை தெரியலையே' என்கிற ரேஞ்சுக்கு அங்கே விவாதங்கள். தவெகவுக்கு எதிரானவர்கள் இதைப் பிடித்துக் கொண்டு, 'மரியாதை இல்லைனுதான் முன்பு இருந்த கட்சிகள்ல இருந்து வெளியேறினார். இப்ப இங்கயும் இதே நிலையா' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. TVK Vijay விதண்டாவாதம் 'ஏன் ஈரோட்டுக்கு வரவில்லை' என நாஞ்சில் சம்பத்தையே தொடர்பு கொண்டு கேட்டோம். ''இது மாதிரி சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணி விவாதிக்கணுமா? டிவியில கூட விவாதிச்சாலும் விவாதிப்பாங்க போல.. அப்படி வந்தா அதுக்கு பேரு விவாதம் இல்ல, விதண்டாவாதம். இதையே வேலையாச் செய்திட்டிருப்பாங்க சிலர். அவங்களுக்கு பொழுது போகாது. அந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் பனையூர்ல நடந்த மீட்டிங்ல பேசினேன். ஈரோட்டுக் கூட்டம் குறுகிய காலத் திட்டமிடல்ல உருவானது. அதுக்கு முன்னாடியே என்னுடைய பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. அந்தப் பயணத்துல ஈரோடு கூட்டம் இல்லை. அங்க நான் வராததற்கு இதுதான் காரணம். வேறு ஏதாச்சும் பின்னணி இருக்குமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா அலசி ஆராயட்டும். அவங்க நேரம் தான் விரயமாகும்' என முடித்துக் கொண்டார்.

விகடன் 20 Dec 2025 9:54 am

SIR : `வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார்!’ - அமைச்சர் ஐ.பெரியசாமி

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில்  3,24,894 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதில்  1,07,991 பேர் இறந்தவர்கள்,  முகவரியில் இல்லாதவர்கள் 1,44,816 பேர்,  முகவரி மாறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் 51,905 பேர், இரட்டைப் பதிவாக 20,182 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்களர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாக்கு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படுவதோடு புதிதாக 173 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்  திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,  எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார். திண்டுக்கல்லில் விரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்போம். எஸ்ஐஆர் வரைவு வாக்காளார் பட்டியல் வெளியீடு விஜய் அரசியல் கட்சியே கிடையாது அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. விஜய் முதலில் தேர்தல் களத்திற்கு வரட்டும் பின் அவரைப்பற்றி பேசலாம். அவரைப் பற்றி கருத்து ஏதும் இல்லை. 75 ஆண்டுகள் வருட பழமையான கட்சி திமுக. விஜய் இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். ஜனவரி 7ஆம் தேதி முதலமைச்சர்  ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு வரவுள்ளார். அது குறித்து நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்போம்” என தெரிவித்தார்.

விகடன் 20 Dec 2025 9:40 am

SIR: 'திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணாக போனது..!'- வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து இபிஎஸ் கருத்து

கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR - பணி அதன் அடிப்படையிலான தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது. SIR - சிறப்பு தீவிர திருத்தம் அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும். இதற்கு உங்களுக்கு நம் அதிமுக கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது. என் உயிருக்கு உயிரான நம் கழக உடன்பிறப்புகளே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை. அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்.

விகடன் 19 Dec 2025 7:34 pm

SIR: 'திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணாக போனது..!'- வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து இபிஎஸ் கருத்து

கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR - பணி அதன் அடிப்படையிலான தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது. SIR - சிறப்பு தீவிர திருத்தம் அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும். இதற்கு உங்களுக்கு நம் அதிமுக கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது. என் உயிருக்கு உயிரான நம் கழக உடன்பிறப்புகளே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை. அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்.

விகடன் 19 Dec 2025 7:34 pm

'விஜய் தான் களத்தில் இல்லை' - தமிழிசை செளந்தரராஜன் கடும் தாக்கு

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடி பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். இதற்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். திருப்பரங்குன்றம் மதம் பிரச்னை அல்ல. இது ஈகோவால் எழுந்துள்ள பிரச்னை. இதில் நீதிபதியை குற்றம் சாட்டுவது மிகவும் தவறான போக்கு. முருக பகவான் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் கூறுகிறார்கள். அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண் அரசியல்வாதியான நான் பேச முடியாது. எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் மஞ்சளுக்காக தனி வாரியத்தை அமைத்தது பாஜக தான். எனவே மஞ்சள் நகரத்து மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன் 10 வயதில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார். எனில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு எந்தளவு மக்கள் தொடர்பு இருக்கும் என்பதை அவர் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் தான் களத்தில் இல்லை. திடீர், திடீரென வருகிறார். திடீர், திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் அவரைப் பற்றிதான் சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன். பாஜக நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. நநேந்திர மோடி சிறந்த பிரதமராக உள்ளார். அதனால் விஜய் சொல்வது பாஜகவுக்கு பொருந்தாது. திமுக ஆட்சியில் மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. காந்திக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்றார்.

விகடன் 19 Dec 2025 7:28 pm

S.I.R : 'தமிழகத்தில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; பீஹாரை விட அதிகம்! - அதிகாரப்பூர்வ அப்டேட்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று (19.12.2025) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். தமிழக அளவில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கூறினார். அர்ச்சனா பட்நாயக் அவர் கூறியதாவது, 'கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது. BLO க்களால் முகவரியை கண்டுபிடித்து உறுதி செய்ய முடியாதவர்களின் பெயரை மட்டுமே நீக்கியிருக்கிறோம். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்டவர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்' என்றார். அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்) SIR க்கு முன்பு (அக்.27 வரை) வாக்காளர்களின் எண்ணிக்கை - 6,41,14,587 SIR க்குப் பின் (வரைவு வாக்காளர் பட்டியலில்) - 5,43,76,755 ஆண்கள் - 2,66,63,033 பெண்கள் - 2,77,06,332 மாற்றுத்திறனாளிகள் - 4,19,355 அர்ச்சனா பட்நாயக் இறந்தவர்கள் - 26,94,672 இடம் பெயர்ந்தவர்கள் - 52,74,499 விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்காதவர்கள் - 13,54,013 பல இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள் - 3,98,278 மொத்தம் நீக்கப்பட்டவர்கள் - 97,37,831 தமிழக அளவில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்ட தகுதியான நபர்கள் இன்றிலிருந்து 18.01.2026 வரை தங்களின் பெயரை இணைக்க மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம்கள் பூத் வாரியாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.

விகடன் 19 Dec 2025 6:33 pm

S.I.R : 'தமிழகத்தில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; பீஹாரை விட அதிகம்! - அதிகாரப்பூர்வ அப்டேட்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று (19.12.2025) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். தமிழக அளவில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கூறினார். அர்ச்சனா பட்நாயக் அவர் கூறியதாவது, 'கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது. BLO க்களால் முகவரியை கண்டுபிடித்து உறுதி செய்ய முடியாதவர்களின் பெயரை மட்டுமே நீக்கியிருக்கிறோம். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்டவர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்' என்றார். அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்) SIR க்கு முன்பு (அக்.27 வரை) வாக்காளர்களின் எண்ணிக்கை - 6,41,14,587 SIR க்குப் பின் (வரைவு வாக்காளர் பட்டியலில்) - 5,43,76,755 ஆண்கள் - 2,66,63,033 பெண்கள் - 2,77,06,332 மாற்றுத்திறனாளிகள் - 4,19,355 அர்ச்சனா பட்நாயக் இறந்தவர்கள் - 26,94,672 இடம் பெயர்ந்தவர்கள் - 52,74,499 விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்காதவர்கள் - 13,54,013 பல இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள் - 3,98,278 மொத்தம் நீக்கப்பட்டவர்கள் - 97,37,831 தமிழக அளவில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்ட தகுதியான நபர்கள் இன்றிலிருந்து 18.01.2026 வரை தங்களின் பெயரை இணைக்க மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம்கள் பூத் வாரியாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.

விகடன் 19 Dec 2025 6:33 pm

'பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி' - திருமாவளவன் விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கு 'ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியுள்ளனர். 'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர். காந்தி மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை பாஜக படிப்படியாக குறைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள்கூட வேலை கிடைப்பதில்லை. தற்போது 125 நாள்கள் வேலையை உயர்த்தியுள்ளதாக ஏமாற்றுகின்றனர். திருமாவளவன் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் வருகிற 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். விசிக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் வீதம், 234 மாவட்டச் செயலாளர்கள் நியமித்துள்ளோம். அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான பதவிகள் நியமிக்கப்படவுள்ளன. அதன் பிறகு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவோம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்படுவோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நாட்டின் பூர்வீக குடிமக்கள். வாக்குரிமையைப் பறித்து, பிறகு குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இதை செய்கிறார்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்கி தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும். பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் கள பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என கவலையளிக்கிறது. என்றார்.

விகடன் 19 Dec 2025 6:15 pm

'பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி' - திருமாவளவன் விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கு 'ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியுள்ளனர். 'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர். காந்தி மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை பாஜக படிப்படியாக குறைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள்கூட வேலை கிடைப்பதில்லை. தற்போது 125 நாள்கள் வேலையை உயர்த்தியுள்ளதாக ஏமாற்றுகின்றனர். திருமாவளவன் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் வருகிற 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். விசிக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் வீதம், 234 மாவட்டச் செயலாளர்கள் நியமித்துள்ளோம். அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான பதவிகள் நியமிக்கப்படவுள்ளன. அதன் பிறகு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவோம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்படுவோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நாட்டின் பூர்வீக குடிமக்கள். வாக்குரிமையைப் பறித்து, பிறகு குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இதை செய்கிறார்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்கி தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும். பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் கள பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என கவலையளிக்கிறது. என்றார்.

விகடன் 19 Dec 2025 6:15 pm

SIR: வெளியான பட்டியல்; சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. SIR - பணி அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் இங்கே... 1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501 2.பெரம்பூர் தொகுதி - 97,345 3.கொளத்தூர் தொகுதி - 1,03,812 4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960 5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043 6.எழும்பூர் தொகுதி - 74,858 7.ராயபுரம் தொகுதி - 51,711 8.துறைமுகம் தொகுதி - 69,824 9.சேப்பாக்கம் தொகுதி - 89,241 10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981 11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287 Chennai represent images 12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824 13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228 14.தியாகராயநகர் தொகுதி - 95,999 15.மயிலாப்பூர் தொகுதி - 87,668 16.வேளச்சேரி தொகுதி - 1,27,521

விகடன் 19 Dec 2025 5:55 pm

SIR: வெளியான பட்டியல்; சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. SIR - பணி அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் இங்கே... 1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501 2.பெரம்பூர் தொகுதி - 97,345 3.கொளத்தூர் தொகுதி - 1,03,812 4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960 5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043 6.எழும்பூர் தொகுதி - 74,858 7.ராயபுரம் தொகுதி - 51,711 8.துறைமுகம் தொகுதி - 69,824 9.சேப்பாக்கம் தொகுதி - 89,241 10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981 11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287 Chennai represent images 12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824 13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228 14.தியாகராயநகர் தொகுதி - 95,999 15.மயிலாப்பூர் தொகுதி - 87,668 16.வேளச்சேரி தொகுதி - 1,27,521

விகடன் 19 Dec 2025 5:55 pm

சேலம்: 26,68,108 வாக்காளர்களுக்கு இடம்.. எஸ்ஐஆரில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் - விரிவான தகவல்கள்!

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,284 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் என மொத்தம் 3,62,429 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் Voters.ec.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

விகடன் 19 Dec 2025 5:09 pm

சேலம்: 26,68,108 வாக்காளர்களுக்கு இடம்.. எஸ்ஐஆரில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் - விரிவான தகவல்கள்!

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,284 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் என மொத்தம் 3,62,429 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் Voters.ec.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

விகடன் 19 Dec 2025 5:09 pm

SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. தஞ்சாவூர் இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 20,98,561 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர். அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும் என்றனர்.

விகடன் 19 Dec 2025 4:47 pm

SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. தஞ்சாவூர் இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 20,98,561 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர். அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும் என்றனர்.

விகடன் 19 Dec 2025 4:47 pm

SIR: கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - விரிவான தகவல்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஈடுபட்டு வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தார்கள். தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். கோவை வரைவு வாக்காளர் பட்டியல் SIR: கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! உயிரிழந்தவர்களில் 1,19,489 பேர், முகவரி இல்லாதவர்களில் 1,08,360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களில் 3,99,159 பேர், இரட்டை பதிவுகளில் 23,202 பேர், இதர காரணங்களுக்காக 380 பேர் என 6,50,590 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12,43,282 பேர் ஆண்கள், 13,30,807 பேர் பெண்கள், 518 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி தொகுதி வாரியாக மேட்டுப்பாளையம் தொகுதியில் 2,69, 898, வாக்காளர்களும், சூலூர் தொகுதியில் 2,93,516 வாக்காளர்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் 3,77, 740 வாக்காளர்கள், கோவை வடக்கு தொகுதியில் 2,78,531 வாக்காளர்கள்,தொண்டாமுத்தூர் தொகுதியில் 2,72,946 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் 1,79,308 வாக்காளர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 2,54,422 வாக்காளர்கள், கிணத்துக்கடவு தொகுதியி்ல் 2,83,621 வாக்காளர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 1,96,375 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 3,77,740 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளன SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

விகடன் 19 Dec 2025 4:29 pm

பங்களாதேஷ்: இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை; மீண்டும் வன்முறை பதற்றம்!

பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இருந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனால் பங்களாதேஷில் தற்காலிகமாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பதவியில் இருக்கிறது. அந்த அரசு ஷேக் ஹசீனாவை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திருப்பமாக கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு கவிழ்வதற்கு காரணமான வன்முறையை தூண்டிவிட்ட இளைஞரணித் தலைவரான ஷேக் ஓஸ்மான் ஹாடி என்பவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஹாடி போட்டியிடுகிறார். அவர் டாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹாடியின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். தாக்கப்பட்ட பத்திரிகை அலுவலகம் ஹாடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பங்களாதேஷில் இன்று மீண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே வானகங்கள் எரிந்தபடி இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசில் இடம்பெற்று இருந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். அதோடு அவர்கள் பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அந்த அலுவலகத்திற்கு தீவைத்தனர். உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் 25 பேர் தப்பினர். சட்டோகிராம் என்ற இடத்தில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டின்மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். டாக்காவிலும் போராட்டக்காரர்கள் இந்திய தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டபடி அவர்கள் சென்றனர். பங்களாதேஷின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இப்போராட்டத்தால் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹாடி இந்தியாவிற்கு எதிரானவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்து பிரஜை அடித்துக் கொலை மைமன்சிங் என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலை செய்யும் கம்பெனியில் உலக அரபி மொழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சதாஸ், இஸ்லாம் பற்றியும் முகமது நபி குறித்தும் ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. அவர் கூறிய வார்த்தைகள் கம்பெனி முழுக்க பரவியது. இதையடுத்து அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தாஸை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்தில் தாஸ் இறந்து போனார். அத்தோடு விடாமல் தாஸ் உடலை கும்பல் அங்குள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு கொண்டு வந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மரம் ஒன்றில் தாஸ் உடலைக் கட்டி வைத்தனர். அதோடு அவர்கள் ஏதோ கோஷமிட்டபடி தாஸ் உடலை மீண்டும் அடித்தனர். அதன் பிறகு உடலை அங்கிருந்து டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். நெடுஞ்சாலையில் வைத்து தாஸ் உடலுக்குத் தீவைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பங்களாதேஷ் தலைவர் முகமது யூனுஸ், தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டோம் என்றும், பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹாடி படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை, தூண்டுதல் மற்றும் வெறுப்பை நிராகரித்து தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 19 Dec 2025 4:02 pm

பங்களாதேஷ்: இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை; மீண்டும் வன்முறை பதற்றம்!

பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இருந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனால் பங்களாதேஷில் தற்காலிகமாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பதவியில் இருக்கிறது. அந்த அரசு ஷேக் ஹசீனாவை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திருப்பமாக கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு கவிழ்வதற்கு காரணமான வன்முறையை தூண்டிவிட்ட இளைஞரணித் தலைவரான ஷேக் ஓஸ்மான் ஹாடி என்பவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஹாடி போட்டியிடுகிறார். அவர் டாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹாடியின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். தாக்கப்பட்ட பத்திரிகை அலுவலகம் ஹாடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பங்களாதேஷில் இன்று மீண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே வானகங்கள் எரிந்தபடி இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசில் இடம்பெற்று இருந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். அதோடு அவர்கள் பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அந்த அலுவலகத்திற்கு தீவைத்தனர். உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் 25 பேர் தப்பினர். சட்டோகிராம் என்ற இடத்தில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டின்மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். டாக்காவிலும் போராட்டக்காரர்கள் இந்திய தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டபடி அவர்கள் சென்றனர். பங்களாதேஷின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இப்போராட்டத்தால் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹாடி இந்தியாவிற்கு எதிரானவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்து பிரஜை அடித்துக் கொலை மைமன்சிங் என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலை செய்யும் கம்பெனியில் உலக அரபி மொழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சதாஸ், இஸ்லாம் பற்றியும் முகமது நபி குறித்தும் ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. அவர் கூறிய வார்த்தைகள் கம்பெனி முழுக்க பரவியது. இதையடுத்து அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தாஸை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்தில் தாஸ் இறந்து போனார். அத்தோடு விடாமல் தாஸ் உடலை கும்பல் அங்குள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு கொண்டு வந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மரம் ஒன்றில் தாஸ் உடலைக் கட்டி வைத்தனர். அதோடு அவர்கள் ஏதோ கோஷமிட்டபடி தாஸ் உடலை மீண்டும் அடித்தனர். அதன் பிறகு உடலை அங்கிருந்து டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். நெடுஞ்சாலையில் வைத்து தாஸ் உடலுக்குத் தீவைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பங்களாதேஷ் தலைவர் முகமது யூனுஸ், தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டோம் என்றும், பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹாடி படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை, தூண்டுதல் மற்றும் வெறுப்பை நிராகரித்து தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 19 Dec 2025 4:02 pm

சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ₹5, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்; தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், ஒரு மினிபேருந்தில் எழுதப்பட்டிருந்த இரண்டு வரிகள், நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஶ்ரீ கருடாழ்வார்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்த மினி பேருந்தில் ₹17 வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். அந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு ₹5 மட்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனவும் எழுதியிருந்தது. மகளிர் விடியல் பயணம் திட்டத்தைப்போலவே... இந்த மினிபேருந்தின் சலுகையினாலும் பல்வேறு மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பள்ளி தொடர்புடைய பயணங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்குவதற்கு வெறும் ₹5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளி அட்டை அடிப்படையில், அந்தப் பேருந்தில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள இயலும். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து அப்பேருந்து நடத்துனரிடம் கேட்கும் போது, விஷ்ணு டிராவல்ஸ் அனைத்து பேருந்துகளிலும் இந்தச் சலுகை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மாற்றுத்திறனாளி அட்டையும் இருந்தால் மக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை இல்லையென்றாலும்கூட இந்தச் சலுகையை அளிக்கிறோம் என்கிறார். இந்தச் சலுகைப் பற்றி பொதுமக்கள் கூறும்போது, சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோயில் -கொல்லப்பட்டி- ஜங்ஷன் - சிவராஜ் கல்லூரி - தண்ணீர்த்தொட்டி வரையிலான வழித்தடத்தில் இயங்கி வரும் மினி பேருந்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமான செயலாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். பள்ளி நேரங்களில் கூட்டமான பேருந்துகளில் அலைக்கழிக்கப்படும் நிலையில் காலை... மாலை நேரத்தில் எங்கள் பிள்ளைகள் சுமுகமான பயணம் மேற்கொள்ள இச்சலுகை உதவியாக உள்ளது. தனியார் மினி பேருந்து என்பதால் நடத்துடனர்களின் அன்பான கண்டிப்பும், மாணவர்கள் மீதான தனி கவனமும் கருடாழ்வார் மினி பேருந்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. இந்தப் பேருந்தில் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்கின்றனர். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து விஷ்ணு டிராவல்ஸ் உரிமையாளர் விஸ்வநாதனிடம் பேசும்போது, இந்தச் சலுகை 1996-ல் பேருந்து இயக்க ஆரம்பித்தது முதலே உள்ளது. அன்றைக்கு பள்ளி மாணவர்களுக்குப் பயணக் கட்டணமாக இரண்டு ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணமாகவும் அறிவித்து செயல்படுத்தி வந்தோம். தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி ₹5 ஆக உயர்த்தி உள்ளோம். சுமார் 29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நடைமுறை உள்ளது. தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இந்தப் பேருந்தில் குறைவான வருமானமே வரும் என்பதால், மற்ற வழித்தட மினி பேருந்து வழி அதனை சரிகட்ட முயற்சிப்போம். என்றைக்கும் இந்தச் சலுகையை நாங்கள் சுமையாக கருதியதே இல்லை. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையாகவே செய்து வருகிறோம் எனக் கூறி மனம் நெகிழ்கிறார்.

விகடன் 19 Dec 2025 3:41 pm

சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ₹5, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்; தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், ஒரு மினிபேருந்தில் எழுதப்பட்டிருந்த இரண்டு வரிகள், நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஶ்ரீ கருடாழ்வார்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்த மினி பேருந்தில் ₹17 வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். அந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு ₹5 மட்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனவும் எழுதியிருந்தது. மகளிர் விடியல் பயணம் திட்டத்தைப்போலவே... இந்த மினிபேருந்தின் சலுகையினாலும் பல்வேறு மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பள்ளி தொடர்புடைய பயணங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்குவதற்கு வெறும் ₹5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளி அட்டை அடிப்படையில், அந்தப் பேருந்தில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள இயலும். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து அப்பேருந்து நடத்துனரிடம் கேட்கும் போது, விஷ்ணு டிராவல்ஸ் அனைத்து பேருந்துகளிலும் இந்தச் சலுகை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மாற்றுத்திறனாளி அட்டையும் இருந்தால் மக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை இல்லையென்றாலும்கூட இந்தச் சலுகையை அளிக்கிறோம் என்கிறார். இந்தச் சலுகைப் பற்றி பொதுமக்கள் கூறும்போது, சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோயில் -கொல்லப்பட்டி- ஜங்ஷன் - சிவராஜ் கல்லூரி - தண்ணீர்த்தொட்டி வரையிலான வழித்தடத்தில் இயங்கி வரும் மினி பேருந்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமான செயலாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். பள்ளி நேரங்களில் கூட்டமான பேருந்துகளில் அலைக்கழிக்கப்படும் நிலையில் காலை... மாலை நேரத்தில் எங்கள் பிள்ளைகள் சுமுகமான பயணம் மேற்கொள்ள இச்சலுகை உதவியாக உள்ளது. தனியார் மினி பேருந்து என்பதால் நடத்துடனர்களின் அன்பான கண்டிப்பும், மாணவர்கள் மீதான தனி கவனமும் கருடாழ்வார் மினி பேருந்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. இந்தப் பேருந்தில் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்கின்றனர். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து விஷ்ணு டிராவல்ஸ் உரிமையாளர் விஸ்வநாதனிடம் பேசும்போது, இந்தச் சலுகை 1996-ல் பேருந்து இயக்க ஆரம்பித்தது முதலே உள்ளது. அன்றைக்கு பள்ளி மாணவர்களுக்குப் பயணக் கட்டணமாக இரண்டு ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணமாகவும் அறிவித்து செயல்படுத்தி வந்தோம். தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி ₹5 ஆக உயர்த்தி உள்ளோம். சுமார் 29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நடைமுறை உள்ளது. தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இந்தப் பேருந்தில் குறைவான வருமானமே வரும் என்பதால், மற்ற வழித்தட மினி பேருந்து வழி அதனை சரிகட்ட முயற்சிப்போம். என்றைக்கும் இந்தச் சலுகையை நாங்கள் சுமையாக கருதியதே இல்லை. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையாகவே செய்து வருகிறோம் எனக் கூறி மனம் நெகிழ்கிறார்.

விகடன் 19 Dec 2025 3:41 pm

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயங்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன. தேர்தல் ஆணையம் அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது. இந்த விவகாரங்கள் அனைத்தும் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர். ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. Election Commission - SIR அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. > காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. > கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. > சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தான் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. (தொடர்ந்து பிற மாவட்டத்தின் தரவுகள் இங்கு அப்டேட் செய்யப்படும்) ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?

விகடன் 19 Dec 2025 3:33 pm

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயங்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன. தேர்தல் ஆணையம் அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது. இந்த விவகாரங்கள் அனைத்தும் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர். ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. Election Commission - SIR அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. > காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. > கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. > சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தான் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. (தொடர்ந்து பிற மாவட்டத்தின் தரவுகள் இங்கு அப்டேட் செய்யப்படும்) ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?

விகடன் 19 Dec 2025 3:33 pm

மும்பை மாநகராட்சி தேர்தல்: தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் பாஜக தீவிரம்; திணறும் எதிர்க்கட்சிகள்!

மகாராஷ்டிராவில் வரும் ஜனவரி 15-ம் தேதி மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நடக்கும் இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. மும்பை, புனே போன்ற மாநகராட்சிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது. புனேயில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் நட்பு ரீதியிலான போட்டி இருக்கும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் மும்பையில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது. நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நவாப் மாலிக்கை பிரசாரத்தில் இருந்து நீக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. உத்தவ், ராஜ் தாக்கரே இதனால் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் வார்டு பங்கீட்டை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆசிஷ் ஷெலார், அமித் சாத்தம், அதுல் பட்கல்கர், பிரவின் தாரேகர் ஆகியோர் சிவசேனா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 150 வார்டுகளில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு 21 கவுன்சிலர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக பா.ஜ.க 102 வார்டிலும், சிவசேனா 55 வார்டிலும் போட்டியிட ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. எஞ்சிய வார்டுகளுக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 21ம் தேதிக்குள் அனைத்து வார்டுகளிலும் முடிவு எட்டப்பட்டு 22ம் தேதி முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சிவசேனா தலைவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில்,''களநிலவரம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளின் அடிப்படையில் வார்டுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களில் இப்பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும். அப்பட்டியலை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஷிண்டே ஆகியோர் இறுதி செய்வார்கள். 23 முதல் 25ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்''என்றார். நீடிக்கும் குழப்பம்: மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது. சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் ராஜ் தாக்கரே இடம் பெறும்பட்சத்தில் அக்கூட்டணியில் இடம் பெறமாட்டோம் என்று காங்கிரஸ் கூறிவிட்டது. அதோடு மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு ஒன்று சேர்ந்துள்ள ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் வார்டு பங்கீடு தொடர்பாக பல முறை நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர். ஆனால் இரு கட்சிகளும் மராத்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வார்டுகளை கேட்பதால் வார்டு ஒதுக்கீடு இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே இன்னும் இரண்டு நாட்களில் சிவசேனா(உத்தவ்), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடையே தேர்தல் கூட்டணி அறிவிக்கப்படும் என்று உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மும்பையில் வார்டு பங்கீடு குறித்து இன்னும் உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மற்றொரு கூட்டணி சமாஜ்வாடி கட்சியும் இன்னும் சிவசேனா(உத்தவ்)வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ் கட்சி புதிதாக தங்களது கூட்டணியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சியை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பிரகாஷ் அம்பேத்கரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தையில் மும்பையில் 20 சதவீத வார்டுகளை கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு பிரகாஷ் அம்பேத்கர் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. வரும் 23ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

விகடன் 19 Dec 2025 3:20 pm

கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கு வேறுபாடு கிடையாது - உதயநிதி ஸ்டாலின்

பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் மதுரையில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை மக்களிட போதிக்க வேண்டும் என்பவை. ஒருவரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ்தான். கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி இயேசுவின் வாழ்க்கை எளிமையானது. மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்கிற கருத்தை உடைப்பதற்காக மாட்டுக்கொட்டகையில் பிறந்தார். சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். அவரைப்போல மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆவார்கள். பிறர் மீது இரக்கம் காட்டுங்கள் என்று கிறிஸ்துவம் சொல்கிறது, அதைத்தான் திமுக பின்பற்றுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை, நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம். நலத்திட்ட உதவி மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள் வெறுப்பு பேச்சு, பிளவுபடுத்தும் பிரசாரங்களை புறம் தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணியினருக்கு, கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மீது பயம் உள்ளது, எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது. ஒன்றிய அரசின், பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது. சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது, தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். கிறிஸ்துவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் நம் முதல்வர். ஆனால், பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை, நாம் அதிகமான வரியை வழங்கியும் ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காத நிலையிலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்தது திராவிட இயக்கம். உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனிப் பாசம், அன்பு வைத்துள்ளனர். தமிழர் என்ற உணர்வோடு கிறிஸ்துவர், முஸ்லீம் என அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். இதுதான் தமிழகம். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை நம் அடையாளம். பாசிஸ்ட்டுகளின் வெறுப்பு பிரசாரத்தை தாண்டி தமிழ்நாட்டையும் மக்களையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது என்றார்.

விகடன் 19 Dec 2025 12:44 pm

கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கு வேறுபாடு கிடையாது - உதயநிதி ஸ்டாலின்

பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் மதுரையில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை மக்களிட போதிக்க வேண்டும் என்பவை. ஒருவரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ்தான். கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி இயேசுவின் வாழ்க்கை எளிமையானது. மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்கிற கருத்தை உடைப்பதற்காக மாட்டுக்கொட்டகையில் பிறந்தார். சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். அவரைப்போல மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆவார்கள். பிறர் மீது இரக்கம் காட்டுங்கள் என்று கிறிஸ்துவம் சொல்கிறது, அதைத்தான் திமுக பின்பற்றுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை, நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம். நலத்திட்ட உதவி மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள் வெறுப்பு பேச்சு, பிளவுபடுத்தும் பிரசாரங்களை புறம் தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணியினருக்கு, கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மீது பயம் உள்ளது, எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது. ஒன்றிய அரசின், பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது. சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது, தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். கிறிஸ்துவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் நம் முதல்வர். ஆனால், பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை, நாம் அதிகமான வரியை வழங்கியும் ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காத நிலையிலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்தது திராவிட இயக்கம். உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனிப் பாசம், அன்பு வைத்துள்ளனர். தமிழர் என்ற உணர்வோடு கிறிஸ்துவர், முஸ்லீம் என அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். இதுதான் தமிழகம். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை நம் அடையாளம். பாசிஸ்ட்டுகளின் வெறுப்பு பிரசாரத்தை தாண்டி தமிழ்நாட்டையும் மக்களையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது என்றார்.

விகடன் 19 Dec 2025 12:44 pm

தூத்துக்குடி: பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதிகோரி வேதாந்தா வழக்கு! - விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

காற்று, நிலம், நீர் மாசுபடுவதாகக் கூறி தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை  மூடிட தமிழக அரசு, கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவினை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அந்த மனுவில், “தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதிகோரி தமிழக தொழில்துறை மற்றும் தமிழக சுற்றுச்சூழல் துறைகளின் செயலாளர்களுக்கு கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலக்கப்படவில்லை. எனவே, எங்கள் நிறுவனத்தின் மனுக்களை பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை அப்போது அரசுத் தரப்பு கூடுதல் பிளீடர் விஜய் ஆனந்த் ஆஜராகி, ”பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மட்டுமே மனு அளிக்கப்பட்டிருக்கிறது. முறையாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கப்படவில்லை. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கு நிலுவையில் உள்ளன” என்றார். நிலுவையில் உள்ள வழக்கினையும், இந்த வழக்கினையும் இணைத்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

விகடன் 19 Dec 2025 12:27 pm