SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருகின்றனர். இது குறித்த தகவல் நமக்குக் கிடைக்கப்பெறவே, அவர்களை நேரில் சென்று சந்தித்து, `என்ன பிரச்னை?' என்று விசாரித்தோம். 10 ஆண்டுக்காலப் போராட்டம் தங்கள் பிரச்னை குறித்து தம்பதியர் விரிவாக எடுத்துரைத்தனர். குழந்தையின் தாய் வினோதா பேசுகையில், ``பிரசவத்திற்காக என்னை 19.05.2016ல் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எங்களுடைய குழந்தை மறுநாள் பிறந்தது. அப்போதிலிருந்தே என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழைப் பெற முயற்சி செய்றேன். பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொல்லி அப்போவே 500 ரூபாய் வாங்குனாங்க. குழந்தை பிறந்த உடனே சில மருத்துவக் காரணத்துக்காக அவசர சிகிச்சை பிரிவிலும் இருந்தோம். அதுக்குப் பதிவு செஞ்ச டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. டிஸ்சார்ஜ் சம்மரி இருந்தால் வாங்கிடலாம்ன்னு சொல்லியே பல நாள் அலைக்கழிக்கிறாங்க. அங்க வேலை பார்த்த நர்ஸ் ஒருத்தவங்க வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. இப்போ அவங்களும் வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதுனால, நீங்களே எப்படியாவது வாங்கிக்கோங்கன்னு அலட்சியமா சொல்றாங்க. அரசு மருத்துவமனையிலுள்ள பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகத்துல போய் கேட்கும்போது, 'உங்க பிள்ளையோட பிறப்பு பதிவு செய்யப்படல'ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களே சேலம் மாநகராட்சி அலுவலகத்துல போய் கேட்டுப் பார்க்கச் சொன்னாங்க. தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்... அலைக்கழிக்கப்படும் பெற்றோர்! அங்க போய் கேட்டா, பிறப்பு பதிவில்லா சான்று வாங்குன பிறகுதான் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கணும்னு அதுக்கு ஒரு நோட்டரி வழக்கறிஞர் ஆணையுறுதி ஆவணம், உள்ளூர் மக்கள் வாக்குமூலம், மருத்துவப் பதிவேடு நகல், கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு பதியவில்லைன்னு உறுதிமொழி மற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப அபராதத் தொகைன்னு எல்லாம் தேவைப்படும்ன்னு சொன்னாங்க. ஆனா பெரிசா எழுதப் படிக்க தெரியாத நாங்க இதை எப்படி பண்ணுறதுன்னு தெரியாம ஒரு வக்கீல்கிட்ட போய் கேட்டோம். அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. சாதாரணமா உழைச்சி சாப்பிடுற மக்களால அந்தப் பத்தாயிரத்தை எப்படி கொடுக்க முடியும்? அதுல ஏழு வருசம் ஓடிருச்சு. இந்த எழு வருசத்துல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்ன்னு ஏராளமா செலவழிச்சாலும் பணம் வாங்கினப் பிறகு யாருமே கண்டுக்கிறதில்லை. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் காடையாம்பட்டி வருவாய் துறையினர்கிட்ட மனு கொடுக்கும்போது, அவர் அதை வாங்கவே இல்லை. இப்போ கடைசியாக தாத்தியம்பட்டியிலுள்ள 'முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றம்' பத்தி தெரியவந்து, கடந்த ரெண்டு வருசமா முதல்வரோட மனு பிரிவுக்கு அந்த மன்றம்தான் பார்த்திட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. கடைசியா இந்த மன்றத்தின் மூலமாச்சும் எங்க பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்ன்னு நம்பிப் போராட்டிட்டு இருக்கேன் என்று விரக்தி பொங்க பேசி முடித்தார் வினோதா. முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றத்தில் இந்தப் பிரச்னைக்கு என நியமிக்கப்பட்ட நபரிடம் பேசியபோது, ``அவர்கள் பிரச்சனை பற்றி எங்களிடம் வந்து சொன்னார்கள். அதனடிப்படையில் தொடர்புடைய ஆவணங்களின் நகல்கள் அடிப்படையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்கும் நேரடியாகச் சென்று விசாரித்தோம். அதன்படி குழந்தை பிறப்பு பதிவு கண்டறிய சேலம் மாநகராட்சியில் தேடுதல் விண்ணப்பம் 28.11.2023 அன்று ₹100 கட்டணம் செலுத்தி அளிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பதில் அளிக்கப்படாததால் நேரில் பல முறை சென்று கேட்டதன் விளைவாக, பதிவு இல்லை என வாய்வழியாக பதில் அளித்தனர். முதல் மனு இணைய வழியில் முதல்வர் மனு பிரிவுக்கு 02.07.2023 அன்று அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மனு 18.12.2023 அன்று எழுத்துபூர்வமான பிறப்பு பதிவு தொடர்பான பதிலுக்காக அளிக்கப்பட்டது. 10.01.2024 அன்று, `குழந்தை பிறப்பை பதிய வேண்டியது மருத்துவமனை கடமை. அதன் பின்பு, குழந்தை பிறப்பு தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மருத்துவமனையிலும், பெற்றோரிடமும் உள்ளது. அதன் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மேற்கண்ட 4 மனுக்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று 16.01.2024 அன்று மீண்டும் முதல்வர் மனு பிரிவில் மனு அளிக்கப்பட்டது அதன்படி, தெளிவான பதிலானது 23.01.2024 அன்று பிறப்பு - இறப்பு பதிவு சட்டம்,1969 பிரிவு 13(3) படியும் தமிழ்நாடு பிறப்பு - இறப்பு விதிகள் 2000-ன் 9(3) படியும் பிறப்பு பதிவு செய்ய வருவாய் கோட்டாட்சியரின் ஆணைப் பெற்ற பிறகே பதிவு செய்யப்படும் என்றும், அதற்கு கட்டாயமாக பதிவின்மை சான்று கட்டாயம் விண்ணப்பித்து பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும் என்று பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பலமுறை அரசு மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி என்று அலைந்த பிறகு மாநகராட்சி பிறப்பு பதிவு இல்லை என்று எழுத்துப்பூர்வமான தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் 04.01.2026 அன்று மற்றொரு மனு அடிப்படையில், மருத்துவமனை தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக குழந்தை பிறந்த பதிவு நகல் மருத்துவமனையில் உள்ளதற்கான ஆவணம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பதிவின்மை சான்று பெற்று அதன் பிறகு வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து பிறப்பு பதிவுசெய்ய‌ வேண்டிய பல பணிகள் நிலுவையிலுள்ளது‌ என்றார். நாங்கள் பொறுப்பல்ல இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ பதிவேடு அலுவலரை அணுகி விசாரித்தபோது, ``குழந்தை பிறப்பு தொடர்பான பதிவேடுகள் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. பிறப்பு பதிவு கட்டாயம் செய்யப்பட்டிருக்கும். இந்த தவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். சேலம் மாநகராட்சி அலுவலக பிறப்பு - இறப்பு பிரிவு அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, ``மருத்துவமனை பிறப்பைப் பதிவு செய்யவில்லை. எனவே, மருத்துவமனை சார்பிலேயே பிறப்பு பதிவின்மை சான்று விண்ணப்பிக்க முடியும். தவறு மருத்துவமனையுடையது என்றனர். Birth யார் தவறு? தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள், 2000-படி குழந்தை‌ பிறப்பு மருத்துவமனையில் நடந்திருந்தால், மருத்துவமனை அளிக்கும் தகவலின் பேரில் பிறப்பு இறப்பு பதிவாளர் பிறப்பைப் பதிவுசெய்ய வேண்டும். மருத்துவமனை, குழந்தை பிறப்பு குறித்த தகவல் அளிக்க தவறியதா? அல்லது பிறப்பு இறப்பு பதிவாளர் பதிவுசெய்யத் தவறினாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அரசு துறைகளின் கவனக்குறைவால் ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கப்பட்டு, பெற்றோர் சுமார் 10 ஆண்டுக்காலமாக அரசு அலுவலகப் படிகளை ஏறி இறங்கி, மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். அரசு இயந்திரத்தின் நிர்வாக தவற்றால்... பெரும் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்! சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில், பெற்றோரின்... குழந்தையின் நிலையைக் கருத்தில்கொண்டு `பிறப்புச் சான்று' கிடைக்க விரைந்து வழிவகை செய்ய வேண்டும்!

விகடன் 12 Feb 2026 6:23 pm

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருகின்றனர். இது குறித்த தகவல் நமக்குக் கிடைக்கப்பெறவே, அவர்களை நேரில் சென்று சந்தித்து, `என்ன பிரச்னை?' என்று விசாரித்தோம். 10 ஆண்டுக்காலப் போராட்டம் தங்கள் பிரச்னை குறித்து தம்பதியர் விரிவாக எடுத்துரைத்தனர். குழந்தையின் தாய் வினோதா பேசுகையில், ``பிரசவத்திற்காக என்னை 19.05.2016ல் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எங்களுடைய குழந்தை மறுநாள் பிறந்தது. அப்போதிலிருந்தே என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழைப் பெற முயற்சி செய்றேன். பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொல்லி அப்போவே 500 ரூபாய் வாங்குனாங்க. குழந்தை பிறந்த உடனே சில மருத்துவக் காரணத்துக்காக அவசர சிகிச்சை பிரிவிலும் இருந்தோம். அதுக்குப் பதிவு செஞ்ச டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. டிஸ்சார்ஜ் சம்மரி இருந்தால் வாங்கிடலாம்ன்னு சொல்லியே பல நாள் அலைக்கழிக்கிறாங்க. அங்க வேலை பார்த்த நர்ஸ் ஒருத்தவங்க வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. இப்போ அவங்களும் வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதுனால, நீங்களே எப்படியாவது வாங்கிக்கோங்கன்னு அலட்சியமா சொல்றாங்க. அரசு மருத்துவமனையிலுள்ள பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகத்துல போய் கேட்கும்போது, 'உங்க பிள்ளையோட பிறப்பு பதிவு செய்யப்படல'ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களே சேலம் மாநகராட்சி அலுவலகத்துல போய் கேட்டுப் பார்க்கச் சொன்னாங்க. தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்... அலைக்கழிக்கப்படும் பெற்றோர்! அங்க போய் கேட்டா, பிறப்பு பதிவில்லா சான்று வாங்குன பிறகுதான் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கணும்னு அதுக்கு ஒரு நோட்டரி வழக்கறிஞர் ஆணையுறுதி ஆவணம், உள்ளூர் மக்கள் வாக்குமூலம், மருத்துவப் பதிவேடு நகல், கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு பதியவில்லைன்னு உறுதிமொழி மற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப அபராதத் தொகைன்னு எல்லாம் தேவைப்படும்ன்னு சொன்னாங்க. ஆனா பெரிசா எழுதப் படிக்க தெரியாத நாங்க இதை எப்படி பண்ணுறதுன்னு தெரியாம ஒரு வக்கீல்கிட்ட போய் கேட்டோம். அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. சாதாரணமா உழைச்சி சாப்பிடுற மக்களால அந்தப் பத்தாயிரத்தை எப்படி கொடுக்க முடியும்? அதுல ஏழு வருசம் ஓடிருச்சு. இந்த எழு வருசத்துல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்ன்னு ஏராளமா செலவழிச்சாலும் பணம் வாங்கினப் பிறகு யாருமே கண்டுக்கிறதில்லை. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் காடையாம்பட்டி வருவாய் துறையினர்கிட்ட மனு கொடுக்கும்போது, அவர் அதை வாங்கவே இல்லை. இப்போ கடைசியாக தாத்தியம்பட்டியிலுள்ள 'முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றம்' பத்தி தெரியவந்து, கடந்த ரெண்டு வருசமா முதல்வரோட மனு பிரிவுக்கு அந்த மன்றம்தான் பார்த்திட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. கடைசியா இந்த மன்றத்தின் மூலமாச்சும் எங்க பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்ன்னு நம்பிப் போராட்டிட்டு இருக்கேன் என்று விரக்தி பொங்க பேசி முடித்தார் வினோதா. முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றத்தில் இந்தப் பிரச்னைக்கு என நியமிக்கப்பட்ட நபரிடம் பேசியபோது, ``அவர்கள் பிரச்சனை பற்றி எங்களிடம் வந்து சொன்னார்கள். அதனடிப்படையில் தொடர்புடைய ஆவணங்களின் நகல்கள் அடிப்படையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்கும் நேரடியாகச் சென்று விசாரித்தோம். அதன்படி குழந்தை பிறப்பு பதிவு கண்டறிய சேலம் மாநகராட்சியில் தேடுதல் விண்ணப்பம் 28.11.2023 அன்று ₹100 கட்டணம் செலுத்தி அளிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பதில் அளிக்கப்படாததால் நேரில் பல முறை சென்று கேட்டதன் விளைவாக, பதிவு இல்லை என வாய்வழியாக பதில் அளித்தனர். முதல் மனு இணைய வழியில் முதல்வர் மனு பிரிவுக்கு 02.07.2023 அன்று அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மனு 18.12.2023 அன்று எழுத்துபூர்வமான பிறப்பு பதிவு தொடர்பான பதிலுக்காக அளிக்கப்பட்டது. 10.01.2024 அன்று, `குழந்தை பிறப்பை பதிய வேண்டியது மருத்துவமனை கடமை. அதன் பின்பு, குழந்தை பிறப்பு தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மருத்துவமனையிலும், பெற்றோரிடமும் உள்ளது. அதன் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மேற்கண்ட 4 மனுக்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று 16.01.2024 அன்று மீண்டும் முதல்வர் மனு பிரிவில் மனு அளிக்கப்பட்டது அதன்படி, தெளிவான பதிலானது 23.01.2024 அன்று பிறப்பு - இறப்பு பதிவு சட்டம்,1969 பிரிவு 13(3) படியும் தமிழ்நாடு பிறப்பு - இறப்பு விதிகள் 2000-ன் 9(3) படியும் பிறப்பு பதிவு செய்ய வருவாய் கோட்டாட்சியரின் ஆணைப் பெற்ற பிறகே பதிவு செய்யப்படும் என்றும், அதற்கு கட்டாயமாக பதிவின்மை சான்று கட்டாயம் விண்ணப்பித்து பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும் என்று பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பலமுறை அரசு மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி என்று அலைந்த பிறகு மாநகராட்சி பிறப்பு பதிவு இல்லை என்று எழுத்துப்பூர்வமான தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் 04.01.2026 அன்று மற்றொரு மனு அடிப்படையில், மருத்துவமனை தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக குழந்தை பிறந்த பதிவு நகல் மருத்துவமனையில் உள்ளதற்கான ஆவணம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பதிவின்மை சான்று பெற்று அதன் பிறகு வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து பிறப்பு பதிவுசெய்ய‌ வேண்டிய பல பணிகள் நிலுவையிலுள்ளது‌ என்றார். நாங்கள் பொறுப்பல்ல இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ பதிவேடு அலுவலரை அணுகி விசாரித்தபோது, ``குழந்தை பிறப்பு தொடர்பான பதிவேடுகள் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. பிறப்பு பதிவு கட்டாயம் செய்யப்பட்டிருக்கும். இந்த தவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். சேலம் மாநகராட்சி அலுவலக பிறப்பு - இறப்பு பிரிவு அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, ``மருத்துவமனை பிறப்பைப் பதிவு செய்யவில்லை. எனவே, மருத்துவமனை சார்பிலேயே பிறப்பு பதிவின்மை சான்று விண்ணப்பிக்க முடியும். தவறு மருத்துவமனையுடையது என்றனர். Birth யார் தவறு? தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள், 2000-படி குழந்தை‌ பிறப்பு மருத்துவமனையில் நடந்திருந்தால், மருத்துவமனை அளிக்கும் தகவலின் பேரில் பிறப்பு இறப்பு பதிவாளர் பிறப்பைப் பதிவுசெய்ய வேண்டும். மருத்துவமனை, குழந்தை பிறப்பு குறித்த தகவல் அளிக்க தவறியதா? அல்லது பிறப்பு இறப்பு பதிவாளர் பதிவுசெய்யத் தவறினாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அரசு துறைகளின் கவனக்குறைவால் ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கப்பட்டு, பெற்றோர் சுமார் 10 ஆண்டுக்காலமாக அரசு அலுவலகப் படிகளை ஏறி இறங்கி, மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். அரசு இயந்திரத்தின் நிர்வாக தவற்றால்... பெரும் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்! சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில், பெற்றோரின்... குழந்தையின் நிலையைக் கருத்தில்கொண்டு `பிறப்புச் சான்று' கிடைக்க விரைந்து வழிவகை செய்ய வேண்டும்!

விகடன் 12 Feb 2026 6:23 pm

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், ``சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார். பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.  அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன். யுஜிசி பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன். நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடியினர், ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர். நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.  காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள்.... எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார். அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர். நிர்மலா சீதாராமன் டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும். திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும் என்றார். பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

விகடன் 12 Feb 2026 5:40 pm

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், ``சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார். பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.  அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன். யுஜிசி பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன். நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடியினர், ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர். நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.  காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள்.... எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார். அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர். நிர்மலா சீதாராமன் டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும். திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும் என்றார். பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

விகடன் 12 Feb 2026 5:40 pm

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்னொரு குண்டை வீசியிருந்தார். ராகுல் காந்தி, ஸ்டாலின் ஸ்டாலினின் கருத்துக்கு காங். எம்.பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தலைக் சுட்டிக்காட்டி எதிர்வினை ஆற்றியிருந்தார். அதாவது  “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டிருந்தார்.  மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டிய 2006 தேர்தலில் நடந்தது என்ன? 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இடம்பெற்றன.  அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.  தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.  கலைஞர் - ஸ்டாலின் பெரும்பான்மையைப் பெறாத திமுக இந்தத் தேர்தலின் முடிவில் திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும், சிபிஎம் 9 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும், ஐயூஎம்எல் 1 தொகுதியிலும் என 164 தொகுதிகளை வென்றன.  அதேபோல் அதிமுக 61 இடங்களிலும், மதிமுக 6 இடங்களிலும், விசிக 2 இடங்கள் என 69 தொகுதிகளை வென்றன. தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஒருவர் மட்டும் வென்றார். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஒத்துழைப்புடன் திமுக ஆட்சி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.  கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், பாமக ஒத்துழைப்புடன் தனியாகவே ஆட்சி அமைத்தது திமுக. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்த ஜெயலலிதா - சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் இந்த 2006- ல் அமைந்த திமுக ஆட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா `மைனாரிட்டி அரசு' என ஆட்சி முடியும் வரை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஒருவேளை அன்று கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக என்ன செய்திருக்கும் என்பது கேள்விக்குறியே? காரணம், அன்று மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெற்றிருந்தது. அதனால் காங்கிரஸ் அமைதியாக இருந்துவிட்டது. 34 இடங்களை வென்ற காங்கிரஸ் அமைதியாக இருந்ததால், மற்ற கட்சிகளும் அந்த கோரிக்கையை எழுப்பாமல் அமைதியாக கடந்துவிட்டனர். இதைதான் 2006 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்படுத்தாமல் விட்டது காங்கிரஸ் செய்த தவறு என மாணிக்கம் தாகூர் தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறார். 

விகடன் 12 Feb 2026 5:10 pm

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்னொரு குண்டை வீசியிருந்தார். ராகுல் காந்தி, ஸ்டாலின் ஸ்டாலினின் கருத்துக்கு காங். எம்.பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தலைக் சுட்டிக்காட்டி எதிர்வினை ஆற்றியிருந்தார். அதாவது  “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டிருந்தார்.  மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டிய 2006 தேர்தலில் நடந்தது என்ன? 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இடம்பெற்றன.  அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.  தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.  கலைஞர் - ஸ்டாலின் பெரும்பான்மையைப் பெறாத திமுக இந்தத் தேர்தலின் முடிவில் திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும், சிபிஎம் 9 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும், ஐயூஎம்எல் 1 தொகுதியிலும் என 164 தொகுதிகளை வென்றன.  அதேபோல் அதிமுக 61 இடங்களிலும், மதிமுக 6 இடங்களிலும், விசிக 2 இடங்கள் என 69 தொகுதிகளை வென்றன. தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஒருவர் மட்டும் வென்றார். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஒத்துழைப்புடன் திமுக ஆட்சி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.  கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், பாமக ஒத்துழைப்புடன் தனியாகவே ஆட்சி அமைத்தது திமுக. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்த ஜெயலலிதா - சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் இந்த 2006- ல் அமைந்த திமுக ஆட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா `மைனாரிட்டி அரசு' என ஆட்சி முடியும் வரை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஒருவேளை அன்று கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக என்ன செய்திருக்கும் என்பது கேள்விக்குறியே? காரணம், அன்று மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெற்றிருந்தது. அதனால் காங்கிரஸ் அமைதியாக இருந்துவிட்டது. 34 இடங்களை வென்ற காங்கிரஸ் அமைதியாக இருந்ததால், மற்ற கட்சிகளும் அந்த கோரிக்கையை எழுப்பாமல் அமைதியாக கடந்துவிட்டனர். இதைதான் 2006 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்படுத்தாமல் விட்டது காங்கிரஸ் செய்த தவறு என மாணிக்கம் தாகூர் தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறார். 

விகடன் 12 Feb 2026 5:10 pm

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமைச் செயலக வடிவிலான மேடை அமைப்புகள் மாநாட்டிற்குப் பெருமை சேர்த்தன. மாநாட்டுத் தொடக்கம் மாநாட்டை ஐஜேகே தலைவர் இளையவேந்தர் Dr. ரவி பச்சமுத்து 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தின. நிறைவேற்றப்பட்ட 11 முக்கிய தீர்மானங்கள்: ஊழல் மலிந்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தல். வரும் தேர்தலில் மோடி - இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அமையப் பாடுபடுதல். 'மைனாரிட்டி' என்ற சொல்லுக்குப் பதிலாகச் சட்டத் திருத்தம் கொண்டு வருதல். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதல். விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவித்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். கச்சத்தீவை மீட்டு மீனவர் வாழ்வாதாரத்தைக் காத்தல். பி.சி.ஆர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தில் சீர்திருத்தம் செய்தல். ஒவ்வொரு மாவட்டத்திலும் PM SHRI பள்ளிகளை அமைத்தல். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைத் திறத்தல். தலைவர்களின் எழுச்சியுரை: Dr. ரவி பச்சமுத்து தனது உரையில், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் அவசியத்தையும், பிரதமர் மோடியின் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளையும் விளக்கினார். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் அவர் நினைவு கூர்ந்தார். சிறப்புரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வள்ளலாகவும் அரசனாகவும் திகழும் பாரிவேந்தர், விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகிறார். இந்த மாநாட்டுக் கூட்டமே ஆட்சி மாற்றத்திற்குச் சாட்சி என்றார். நிறைவுரை ஆற்றிய Dr. T.R. பாரிவேந்தர்: பதவிக்காக அன்றி, ஏழைகளுக்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக 650 கோடி ரூபாய் செலவிட்டுள்ளேன். 36,000 மாணவர்கள் என் மூலம் கல்வி பெற்றுள்ளனர். இலவசங்களுக்கு ஆசைப்படாமல், தன்மானத்துடன் வாழ மக்கள் முன்வர வேண்டும். ஊழலற்ற, பண்புள்ள அரசியலே ஐஜேகே-வின் அடையாளம் என முழங்கினார். அதிமுக நிர்வாகிகள் அருண்மொழித்தேவன், குமரகுரு, தாமரை ராஜேந்திரன் மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் ஜி. ராஜன், சண்முகம் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாடு ஐஜேகே-வின் கட்டுக்கோப்பையும், தமிழக அரசியலில் அதன் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது, என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். 

விகடன் 12 Feb 2026 4:56 pm

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது `தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு பிப்ரவரி 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது' என கடந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அறிவித்திருந்தார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். தற்போது இந்த நிகழ்ச்சிதான் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இது குறித்து கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்களுக்கு இன்று அனுப்பியிருக்கும் தகவல் இதுதான்... covid ''இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம். குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள். கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலைத் தந்துள்ளார்கள். சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, 'கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்' என்கிறார்கள் அவர்கள். மா. சுப்பிரமணியன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் காலத்தில் பணிபுரிந்து தற்போது வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் நாளை தங்களுக்கு வேலை கிடைத்துவிடுமென்கிற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கோவிட் சமயத்தில் பணிபுரிந்து நிரந்தரமான வேலைக்காகக் காத்திருக்கும் செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, 'ஐந்து வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நினைச்சோம். ஆனா அவங்க ஆட்சியே முடியப் போகுது. ஆட்சி முடிவடைவதற்குள் பணி கிடைச்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்சோம். அது நடக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுடுச்சுன்னா வேலை அவ்ளோதானு பயப்படுறோம். கோவிட்ல உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச எங்களை அரசு ஏன் இந்தப் பாடுபடுத்துது தெரியலை' என்றார் குமுறலாக.

விகடன் 12 Feb 2026 4:53 pm

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது `தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு பிப்ரவரி 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது' என கடந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அறிவித்திருந்தார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். தற்போது இந்த நிகழ்ச்சிதான் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இது குறித்து கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்களுக்கு இன்று அனுப்பியிருக்கும் தகவல் இதுதான்... covid ''இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம். குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள். கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலைத் தந்துள்ளார்கள். சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, 'கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்' என்கிறார்கள் அவர்கள். மா. சுப்பிரமணியன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் காலத்தில் பணிபுரிந்து தற்போது வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் நாளை தங்களுக்கு வேலை கிடைத்துவிடுமென்கிற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கோவிட் சமயத்தில் பணிபுரிந்து நிரந்தரமான வேலைக்காகக் காத்திருக்கும் செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, 'ஐந்து வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நினைச்சோம். ஆனா அவங்க ஆட்சியே முடியப் போகுது. ஆட்சி முடிவடைவதற்குள் பணி கிடைச்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்சோம். அது நடக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுடுச்சுன்னா வேலை அவ்ளோதானு பயப்படுறோம். கோவிட்ல உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச எங்களை அரசு ஏன் இந்தப் பாடுபடுத்துது தெரியலை' என்றார் குமுறலாக.

விகடன் 12 Feb 2026 4:53 pm

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரப்பட்டிருக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். நிஷிகாந்த் துபே இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். என்றார். இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் 'அவமதிப்பு நோட்டீஸ்' தாக்கல் செய்வார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான 'முதன்மைத் தீர்மானம்' தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

விகடன் 12 Feb 2026 4:40 pm

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரப்பட்டிருக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். நிஷிகாந்த் துபே இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். என்றார். இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் 'அவமதிப்பு நோட்டீஸ்' தாக்கல் செய்வார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான 'முதன்மைத் தீர்மானம்' தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

விகடன் 12 Feb 2026 4:40 pm

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் இது காவல் மரணம்தான் எனவும், டி.எஸ்.பி அழைத்ததாலேயே இந்தப் பிரச்னை தீவிரமாகியுள்ளது, வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்திருந்தது. மேலும் நகை திருட்டு என்ற புகாரில் உண்மையில்லை எனவும் சிபிஐ தெரிவித்திருந்தது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது மதுரை மாவட்ட நீதிமன்றம் இதையடுத்து பொய் புகார் அளித்தது தொடர்பாக நிகிதா மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.எஸ்.ஐ சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய நால்வர் மீதும் குற்றச் சதி, தவறாக சிறை வைத்தல், ஆதாரம் மறைத்தல் / பொய் தகவல் கொடுத்தல், அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களைப் போலியாக்குதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, வரும் 25 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. `மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

விகடன் 12 Feb 2026 4:23 pm

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்'ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன? 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, 'நான் விரைவில் களத்தில் இறங்குவேன், அதிமுகவைக் கைப்பற்றுவேன்'' என தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பலமுறை சுற்றுப்பயணம் சென்றும் பெரியளவில் ஆதரவு இல்லை. இந்தநிலையில், கடந்த ஆறாம் தேதி தன்னுடைய இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் த.வெ.கவுடன் கூட்டணி வைக்கலாம் என முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட ஒருசிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ''தொகுதியில் சென்று வேலை பாருங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்பதை மட்டும் சசிகலா சொல்லி அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன. இந்தநிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. அவரின் இந்த புதிய அரசியல் பிரவேசத்தின் பின்னணி என்ன? விபரமரந்தவர்களிடம் பேசினோம்... ``2026 தேர்தலுக்குள் மீண்டும் எப்படியாவது அ.தி.மு.கவுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் என நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் - ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனை வைத்து ஒரு ஆட்டம் ஆடலாம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால், செங்கோட்டையன், தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானால் இணைவதற்கு தயாராக இருக்கிறார். அதனால், தனித்து விடப்பட்டுவிட்டடோம் என மீண்டும் உணர்ந்தவர், ஆதரவாளர்கள் கூட்டம் என எதோ நடத்திக்கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மூன்று, நான்கு பேரைத் தவிர அடையாளம் தெரிந்த நபர்கள் யாரும் இல்லை. திவாகரனின் அண்ணா திராவிடக் கழகத்தை புதுப்பித்து ஒரு டிமாண்டை உருவாக்கலாம் இல்லையென்றால் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாம் எனவும் திட்டமிடுகிறார். தமிழகம் முழுவதும் ஐம்பது தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடாது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை கூட்டணிக்குள்ளும் சேர்த்துக்கொள்ளாது. தேவைப்பட்டால், ஆதரவு கொடுத்து அறிக்கை விடச் சொல்வார்கள் அவ்வளவுதான் '' என்கிறார்கள். மறுபுறம், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. அதன் பின்னணி பற்றி விசாரித்தோம்... ``2021 தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக அறிவித்த காலத்திலிருந்தே இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்துவிட்டன. பொருளாதார ரீதியாக சசிகலா உதவி செய்யவில்லை என்கிற கோபம் தினகரனுக்கு இருந்தது. அ.தி.மு.கவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் கைவிடுப்போனதற்கு தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்தான் காரணம் என சசிகலா நினைத்தார். சிறையில் இருக்கும்போது திவாகரன் மூலமாக பல தகவல்கள் அவரின் காதுகளுக்குப் போயிருக்கிறது. அதனாலேயே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஆகாது. 2021 தேர்தலுக்குப் பிறகு சில காலம் அமைதியாக கட்சிக்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார் தினகரன். சசிகலா கட்சிக்கொடி ஏற்றுவது, சுற்றுப்பயணம் எனத் தீவிரமாகக் களத்தில் இறங்க, மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இப்போது எடப்பாடி பழனிசாமியைக் கூட மன்னித்துவிட்டார் தினகரன், ஆனால், சித்தியின் மீதான கோபம் அவருக்குக் குறையவே இல்லை. அதேபோல, தினகரன் கடைசியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதரவாளர்களிடம் சசிகலா கூறிவருகிறார். மறுபுறம், அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்தநேரத்தில், தேர்தலில் போட்டி என வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றிக்கு உதவப்போகிறார் என தினகரனின் ஆதரவாளர்கள் சசிகலா துரோகம் செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர்'' என்கிறார்கள்.

விகடன் 12 Feb 2026 3:57 pm

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்'ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன? 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, 'நான் விரைவில் களத்தில் இறங்குவேன், அதிமுகவைக் கைப்பற்றுவேன்'' என தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பலமுறை சுற்றுப்பயணம் சென்றும் பெரியளவில் ஆதரவு இல்லை. இந்தநிலையில், கடந்த ஆறாம் தேதி தன்னுடைய இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் த.வெ.கவுடன் கூட்டணி வைக்கலாம் என முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட ஒருசிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ''தொகுதியில் சென்று வேலை பாருங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்பதை மட்டும் சசிகலா சொல்லி அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன. இந்தநிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. அவரின் இந்த புதிய அரசியல் பிரவேசத்தின் பின்னணி என்ன? விபரமரந்தவர்களிடம் பேசினோம்... ``2026 தேர்தலுக்குள் மீண்டும் எப்படியாவது அ.தி.மு.கவுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் என நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் - ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனை வைத்து ஒரு ஆட்டம் ஆடலாம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால், செங்கோட்டையன், தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானால் இணைவதற்கு தயாராக இருக்கிறார். அதனால், தனித்து விடப்பட்டுவிட்டடோம் என மீண்டும் உணர்ந்தவர், ஆதரவாளர்கள் கூட்டம் என எதோ நடத்திக்கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மூன்று, நான்கு பேரைத் தவிர அடையாளம் தெரிந்த நபர்கள் யாரும் இல்லை. திவாகரனின் அண்ணா திராவிடக் கழகத்தை புதுப்பித்து ஒரு டிமாண்டை உருவாக்கலாம் இல்லையென்றால் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாம் எனவும் திட்டமிடுகிறார். தமிழகம் முழுவதும் ஐம்பது தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடாது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை கூட்டணிக்குள்ளும் சேர்த்துக்கொள்ளாது. தேவைப்பட்டால், ஆதரவு கொடுத்து அறிக்கை விடச் சொல்வார்கள் அவ்வளவுதான் '' என்கிறார்கள். மறுபுறம், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. அதன் பின்னணி பற்றி விசாரித்தோம்... ``2021 தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக அறிவித்த காலத்திலிருந்தே இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்துவிட்டன. பொருளாதார ரீதியாக சசிகலா உதவி செய்யவில்லை என்கிற கோபம் தினகரனுக்கு இருந்தது. அ.தி.மு.கவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் கைவிடுப்போனதற்கு தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்தான் காரணம் என சசிகலா நினைத்தார். சிறையில் இருக்கும்போது திவாகரன் மூலமாக பல தகவல்கள் அவரின் காதுகளுக்குப் போயிருக்கிறது. அதனாலேயே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஆகாது. 2021 தேர்தலுக்குப் பிறகு சில காலம் அமைதியாக கட்சிக்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார் தினகரன். சசிகலா கட்சிக்கொடி ஏற்றுவது, சுற்றுப்பயணம் எனத் தீவிரமாகக் களத்தில் இறங்க, மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இப்போது எடப்பாடி பழனிசாமியைக் கூட மன்னித்துவிட்டார் தினகரன், ஆனால், சித்தியின் மீதான கோபம் அவருக்குக் குறையவே இல்லை. அதேபோல, தினகரன் கடைசியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதரவாளர்களிடம் சசிகலா கூறிவருகிறார். மறுபுறம், அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்தநேரத்தில், தேர்தலில் போட்டி என வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றிக்கு உதவப்போகிறார் என தினகரனின் ஆதரவாளர்கள் சசிகலா துரோகம் செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர்'' என்கிறார்கள்.

விகடன் 12 Feb 2026 3:57 pm

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்'பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 'உங்க விஜய்... உங்க விஜய்... உயிரென வரவா' என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன என்றனர்.

விகடன் 12 Feb 2026 3:31 pm

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்'பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 'உங்க விஜய்... உங்க விஜய்... உயிரென வரவா' என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன என்றனர்.

விகடன் 12 Feb 2026 3:31 pm

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை. மாணிக்கம் தாகூர் வேளைக்கு ஒரு ட்வீட் போட்டு திமுகவை அட்டாக் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸின் தேசிய தலைமையும் நடப்பவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் விடாமல் கம்பு சுற்றியும் அதிக சீட்டுகளைகொடுப்பதற்கோ அமைச்சரவையில் சேர்ப்பதற்கோ திமுக ஏன் இறங்கி வரவில்லை? 1967 இல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அவர்களுக்கு முழுக்க முழுக்க தேய்மானம் மட்டுமே. கடந்த 55 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் அதிகபட்ச வாக்கு வங்கியே 20.9% மட்டுமே. 1980 தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொண்டு நின்றது. எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கில் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்திருந்தார். இந்திரா காந்தி இந்திரா மத்தியில் வலுவாக இருந்தார். அதனால்தான் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள கருணாநிதியும் சம்மதம் தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் 31 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் 20.9% வாக்குகளைப் பெற்றது. 1984 தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நிற்கிறது. எம்.ஜி.ஆர் 73 தொகுதிகளை காங்கிரஸூக்கு கொடுக்கிறார். 16.3% வாக்குகளுடன் 61 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று எதிர்க்கட்சியானது. 1989 தேர்தல் மிக முக்கியமானது. தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கடைசியாக தனித்துப் போட்டியிட்ட தேர்தல் இதுதான். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி ராஜிவ் காந்தி செய்த சூறாவளி பிரசாரத்தில் காங்கிரஸூக்கு 26 தொகுதிகளும் 19.8% வாக்குகளும் கிடைத்தது. 1991 இல் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வருகிறது காங்கிரஸ். ராஜிவ் குண்டு வெடிப்பில் பலியாகிறார். ஜெயலலிதா 65 தொகுதிகளை காங்கிரஸூக்கு ஒதுக்க 60 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் 15.2% வாக்குகளைப் பெற்றது. எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. 1996 லிருந்து காங்கிரஸின் நிலையே வேறு. அப்போதிருந்து இப்போது வரைக்கும் காங்கிரஸின் வாக்குவங்கி ஒற்றை இலக்கத்தை தாண்டவே இல்லை. காங்கிரஸ் உடைபட்டு தமிழ்மாநில காங்கிரஸ் உருவானது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1980 க்குப் பிறகு 2006 இல் திமுகவும் காங்கிரஸூம் மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸூக்கு 48 சீட்டுகளை கருணாநிதி ஒதுக்கினார். 8.4% வாக்கு வங்கியோடு 34 இடங்களை காங்கிரஸ் வென்றது. திமுக அந்தத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஜெயலலிதா 'மைனாரிட்டி திமுக' என ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் வசைபாடினார். காங்கிரஸ், பாமகவின் தயவோடுதான் திமுகவின் ஆட்சியே ஓடியது. மாணிக்கம் தாகூர் போன்றோர் குறிப்பிடும் காங்கிரஸ் தவறவிட்ட நல்வாய்ப்பும் இதுதான். திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை. அப்போது கூட்டணி கட்சிகள் அறிவாலயத்தை நெருக்கியிருந்தால் அமைச்சரவையில் பங்கு கொடுப்பதை தவிர வேறு வழியே இருந்திருக்காது. அப்போது காங்கிரஸ் அமைதி காத்தது. காரணம், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுகவின் ஆதரவு அப்போது தேவைப்பட்டது. ஒரு மாநிலத்துக்கு ஆசைப்பட்டு டெல்லியை கோட்டைவிட காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! 2006 க்குப் பிறகுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்த கேள்வி திமுகவுக்கே எழுகிறது. ஏனெனில் 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்குகிறது. 2011 இல் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 9.3 சதவிகித வாக்குகளுடன் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. 2016 இல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. வாக்கு வங்கியும் 6.5% ஆக சரிகிறது. காங்கிரஸூக்கு கொடுக்கும் அதிக தொகுதிகள்தான் திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கிறது என்கிற எண்ணம் உடன்பிறப்புகளுக்கு வர தொடங்குகிறது. எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் போட்டி போடும் தொகுதிகளை தங்களுக்கு சாதகமான தொகுதிகளாக பட்டியலிட்டு டார்கெட் வைத்து அடித்தன. இதனால்தான் 2021 தேர்தலில் திமுகவிடமிருந்து 25 தொகுதிகளைப் பெறவே காங்கிரஸ் முட்டி மோதியது. ஸ்டாலின் `தேசியக் கட்சினு கூட பார்க்காம நம்பர் பேசுறாங்க' என அழகிரி கண் கலங்கினார். 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3% வாக்குகளை மட்டுமே பெற்று 18 தொகுதிகளில் வென்றது. இடையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூம் திமுகவும் முறுக்கிக் கொண்டு தனித்தனியாக நின்றன. பிரதமருக்கான அந்தத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி 4.4% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது. ஆக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் 4-5% என்றே அனுமானிக்கப்படுகிறது. இந்த வாக்குவங்கியை உயர்த்த காங்கிரஸூம் பரவலாக எந்த பிரயத்தனத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. 'அந்த கட்சியில பூத் கமிட்டிக்கே ஆள் இல்லை' என மதுரை மாவட்ட திமுக மா.செ தளபதி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸை விட தேமுதிகவும் பாஜகவும் அதிக பூத் ஏஜெண்டுகளை நியமித்து வைத்திருக்கிறது. விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல் ' பூத் அளவில் ஒரு கட்சியின் வலுவை வைத்துதான் அந்தக் கட்சி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். அந்த வகையில் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கிறது. மேலும் காங்கிரஸின் தேசியத் தலைமையும் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அக்கறையை காட்டுவதில்லை. காங்கிரஸின் எதிரியான பாஜகவின் முக்கிய தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதில் பாதியளவுக்கு கூட காங்கிரஸ் தலைகள் இங்கே எட்டிப் பார்ப்பதில்லை. வாக்குவங்கியில் பெரும்பலமில்லாத, அதை உயர்த்திக் கொள்ள எந்த பிரயத்தனமும் எடுக்காத ஒரு கட்சிக்கு எதற்கு அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டும்? எதற்கு அவர்களை மந்திரியாக்க வேண்டும் என்பதுதான் உ.பிக்களின் குமுறல். மாணிக்கம் தாகூர் மேலும், காங்கிரஸின் உருட்டல்களுக்கு பயந்து ஒரு எல்லைக்கு மேல் அதிக சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்தால், விசிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் முகம் சிவப்பார்கள். அவர்களுக்கும் அதிக தொகுதிகளை கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்ட போதே 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. இப்போது ஆட்சியின் மீதான குறைபாடுகளோடு தேர்தலை எதிர்கொள்கிறது. ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து, அதன்வழி தனித்த மெஜாரிட்டியை பெற முடியாமல் போனால் அமைச்சரவையை பகிர்ந்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள யார்தான் விரும்புவார்? 2006 போன்ற மைனாரிட்டி நிலை இப்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக காங்கிரஸிடம் இவ்வளவு கறார் காட்டுவதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.! குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

விகடன் 12 Feb 2026 3:08 pm

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை. மாணிக்கம் தாகூர் வேளைக்கு ஒரு ட்வீட் போட்டு திமுகவை அட்டாக் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸின் தேசிய தலைமையும் நடப்பவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் விடாமல் கம்பு சுற்றியும் அதிக சீட்டுகளைகொடுப்பதற்கோ அமைச்சரவையில் சேர்ப்பதற்கோ திமுக ஏன் இறங்கி வரவில்லை? 1967 இல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அவர்களுக்கு முழுக்க முழுக்க தேய்மானம் மட்டுமே. கடந்த 55 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் அதிகபட்ச வாக்கு வங்கியே 20.9% மட்டுமே. 1980 தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொண்டு நின்றது. எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கில் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்திருந்தார். இந்திரா காந்தி இந்திரா மத்தியில் வலுவாக இருந்தார். அதனால்தான் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள கருணாநிதியும் சம்மதம் தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் 31 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் 20.9% வாக்குகளைப் பெற்றது. 1984 தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நிற்கிறது. எம்.ஜி.ஆர் 73 தொகுதிகளை காங்கிரஸூக்கு கொடுக்கிறார். 16.3% வாக்குகளுடன் 61 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று எதிர்க்கட்சியானது. 1989 தேர்தல் மிக முக்கியமானது. தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கடைசியாக தனித்துப் போட்டியிட்ட தேர்தல் இதுதான். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி ராஜிவ் காந்தி செய்த சூறாவளி பிரசாரத்தில் காங்கிரஸூக்கு 26 தொகுதிகளும் 19.8% வாக்குகளும் கிடைத்தது. 1991 இல் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வருகிறது காங்கிரஸ். ராஜிவ் குண்டு வெடிப்பில் பலியாகிறார். ஜெயலலிதா 65 தொகுதிகளை காங்கிரஸூக்கு ஒதுக்க 60 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் 15.2% வாக்குகளைப் பெற்றது. எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. 1996 லிருந்து காங்கிரஸின் நிலையே வேறு. அப்போதிருந்து இப்போது வரைக்கும் காங்கிரஸின் வாக்குவங்கி ஒற்றை இலக்கத்தை தாண்டவே இல்லை. காங்கிரஸ் உடைபட்டு தமிழ்மாநில காங்கிரஸ் உருவானது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1980 க்குப் பிறகு 2006 இல் திமுகவும் காங்கிரஸூம் மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸூக்கு 48 சீட்டுகளை கருணாநிதி ஒதுக்கினார். 8.4% வாக்கு வங்கியோடு 34 இடங்களை காங்கிரஸ் வென்றது. திமுக அந்தத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஜெயலலிதா 'மைனாரிட்டி திமுக' என ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் வசைபாடினார். காங்கிரஸ், பாமகவின் தயவோடுதான் திமுகவின் ஆட்சியே ஓடியது. மாணிக்கம் தாகூர் போன்றோர் குறிப்பிடும் காங்கிரஸ் தவறவிட்ட நல்வாய்ப்பும் இதுதான். திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை. அப்போது கூட்டணி கட்சிகள் அறிவாலயத்தை நெருக்கியிருந்தால் அமைச்சரவையில் பங்கு கொடுப்பதை தவிர வேறு வழியே இருந்திருக்காது. அப்போது காங்கிரஸ் அமைதி காத்தது. காரணம், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுகவின் ஆதரவு அப்போது தேவைப்பட்டது. ஒரு மாநிலத்துக்கு ஆசைப்பட்டு டெல்லியை கோட்டைவிட காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! 2006 க்குப் பிறகுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்த கேள்வி திமுகவுக்கே எழுகிறது. ஏனெனில் 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்குகிறது. 2011 இல் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 9.3 சதவிகித வாக்குகளுடன் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. 2016 இல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. வாக்கு வங்கியும் 6.5% ஆக சரிகிறது. காங்கிரஸூக்கு கொடுக்கும் அதிக தொகுதிகள்தான் திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கிறது என்கிற எண்ணம் உடன்பிறப்புகளுக்கு வர தொடங்குகிறது. எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் போட்டி போடும் தொகுதிகளை தங்களுக்கு சாதகமான தொகுதிகளாக பட்டியலிட்டு டார்கெட் வைத்து அடித்தன. இதனால்தான் 2021 தேர்தலில் திமுகவிடமிருந்து 25 தொகுதிகளைப் பெறவே காங்கிரஸ் முட்டி மோதியது. ஸ்டாலின் `தேசியக் கட்சினு கூட பார்க்காம நம்பர் பேசுறாங்க' என அழகிரி கண் கலங்கினார். 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3% வாக்குகளை மட்டுமே பெற்று 18 தொகுதிகளில் வென்றது. இடையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூம் திமுகவும் முறுக்கிக் கொண்டு தனித்தனியாக நின்றன. பிரதமருக்கான அந்தத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி 4.4% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது. ஆக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் 4-5% என்றே அனுமானிக்கப்படுகிறது. இந்த வாக்குவங்கியை உயர்த்த காங்கிரஸூம் பரவலாக எந்த பிரயத்தனத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. 'அந்த கட்சியில பூத் கமிட்டிக்கே ஆள் இல்லை' என மதுரை மாவட்ட திமுக மா.செ தளபதி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸை விட தேமுதிகவும் பாஜகவும் அதிக பூத் ஏஜெண்டுகளை நியமித்து வைத்திருக்கிறது. விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல் ' பூத் அளவில் ஒரு கட்சியின் வலுவை வைத்துதான் அந்தக் கட்சி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். அந்த வகையில் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கிறது. மேலும் காங்கிரஸின் தேசியத் தலைமையும் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அக்கறையை காட்டுவதில்லை. காங்கிரஸின் எதிரியான பாஜகவின் முக்கிய தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதில் பாதியளவுக்கு கூட காங்கிரஸ் தலைகள் இங்கே எட்டிப் பார்ப்பதில்லை. வாக்குவங்கியில் பெரும்பலமில்லாத, அதை உயர்த்திக் கொள்ள எந்த பிரயத்தனமும் எடுக்காத ஒரு கட்சிக்கு எதற்கு அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டும்? எதற்கு அவர்களை மந்திரியாக்க வேண்டும் என்பதுதான் உ.பிக்களின் குமுறல். மாணிக்கம் தாகூர் மேலும், காங்கிரஸின் உருட்டல்களுக்கு பயந்து ஒரு எல்லைக்கு மேல் அதிக சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்தால், விசிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் முகம் சிவப்பார்கள். அவர்களுக்கும் அதிக தொகுதிகளை கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்ட போதே 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. இப்போது ஆட்சியின் மீதான குறைபாடுகளோடு தேர்தலை எதிர்கொள்கிறது. ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து, அதன்வழி தனித்த மெஜாரிட்டியை பெற முடியாமல் போனால் அமைச்சரவையை பகிர்ந்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள யார்தான் விரும்புவார்? 2006 போன்ற மைனாரிட்டி நிலை இப்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக காங்கிரஸிடம் இவ்வளவு கறார் காட்டுவதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.! குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

விகடன் 12 Feb 2026 3:08 pm

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என மூன்று கூட்டத்தொடர்களும், சில நேரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வும் நடைபெறும். இந்த கூட்டத் தொடர்களில் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தேவையான சட்டங்களை இயற்றுவது இதன் முக்கியப் பணியாகும். நாடாளுமன்றம் செலவு 1 நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் இருப்பினும், சமீபகாலமாக நாடாளுமன்றம் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதைவிட, அரசியல் மோதல்களால் முடங்குவதையே அதிகம் காணமுடிகிறது. நாடாளுமன்றம் முடங்குவதால் நாட்டின் பொன்னான நேரமும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் வீணாகிறது. 2012-ல் முன்னாள் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் பன்சால் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துப்படி, நாடாளுமன்றத்தை ஒரு நிமிடம் நடத்துவதற்கு ரூ.2.5 லட்சம், மாநிலங்களவைக்கு தலா ரூ.1.25 லட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை 2023-ம் ஆண்டில் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி ஆச்சார்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கணக்கீட்டின்படியே நாடாளுமன்றம் ஒரு முழு வேலை நாள் இயங்குவதற்கு ஏறத்தாழ ரூ.9 கோடி வரை செலவாகிறது. மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும் நிலையில், நாடாளுமன்ற சபையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவது குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்பதற்குப் பதிலாக வெளிநடப்பு செய்வதும், ஆளுங்கட்சி விவாதங்களைத் தவிர்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ஓம் பிர்லா ஒரு நாளில் ஒரு மணிநேரம் சபை முடங்கினால்கூட சுமார் 1.5 கோடி ரூபாய் வீணாகிறது. ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பயன்பட வேண்டிய இந்தப் பெரும் தொகை, வெறும் கூச்சல் குழப்பங்களால் வீணடிக்கப்படுவது ஜனநாயகத்தின் மாண்பைக் குறைப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இப்படி தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்குவதற்கு யார் காரணம்? அதனால் யாருக்கு லாபம் என்றக் கோணத்தில் ஊடகவியலாளர் நாதனை தொடர்புகொண்டோம். ``நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான முடக்கங்கள் நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கினார்... பிரதமர் உரை இல்லாமலே... ``பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது. ஆனால், வாக்கெடுப்புகள் நடத்துவது குறைந்துவிட்டது. பல முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்ற கமிட்டிகள் கோரப்பட்டபோதும், அவை மறுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இந்தியா-அமெரிக்கா வணிக ஒப்பந்தம் போன்றவை நாடாளுமன்றத்துக்கு சம்பந்தமில்லாமல் தனியாக செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை திறந்தவெளியில் விவாதிக்காமல், விவரங்கள் இல்லாமல் ஒரு சட்டகமாக (framework) மட்டும் வழங்கப்படுகின்றன. இதனால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற உரிமைகளை வழங்காத நிலை உருவாகியிருக்கிறது. ஊடகவியலாளர் நாதன் முன்பெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் அரிதான ஒன்று. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் (suspension) செய்வது அதிகரித்துள்ளது. ராணுவ தளபதி நரவானேயின் புத்தகம், எப்ஸ்டீன் பைல்களில் மோடி, அமைச்சர்கள், அனில் அம்பானி போன்றோரின் பெயர்கள் வந்தது போன்றவை விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், அது எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமர் உரை இல்லாமலே நிறைவேற்றப்பட்டுள்ளது. கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலை இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்கத் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வந்தது என்று கூறியுள்ளார். சபாநாயகர் எப்போது உளவுத்துறை தலைவராக ஆனார்? நாடாளுமன்றம் ஜனநாயகத்தைக் கைவிட்டு சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன். எதிர்க்கட்சிகள் சரியான விவாதங்களை முன்னெடுப்பதில்லை என்று ஆளுங்கட்சி கூறுகிறது. ராகுல் காந்தி 'மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தால், நரவானேயின் புத்தகத்தை கொடுக்கிறேன். அதைப் படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும். என்றார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளும் அரசு பதில் சொல்ல வேண்டும். அந்த உரையாடல்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான ஆட்சியைத் தரும். ஆனால் இங்கு, கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலைக்கு பா.ஜ.க சென்றுகொண்டிருக்கிறது. ராகுல் காந்தி, அமித் ஷா அதன் வெளிப்பாடுதான் 'சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார்' என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. நரவானே எழுதிய புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லைதான். ஆனால், புத்தகத்தில் சொல்லப்பட்டது உண்மையா இல்லையா? அதுதான் வாதத்துக்கு உரியது. அதற்கு பதில்சொல்ல வேண்டுமல்லவா? உரிய பதில் இல்லை காங்கிரஸ் ஆட்சியின்போது, போபார்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தில் ஆவணங்கள் கசிந்தது. அப்போது பா.ஜ.க விசாரணை கோரியது. இந்த ரகசிய ஆவணங்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அது கருத்து சுதந்திரம், பேச்சுரிமை சம்பந்தப்பட்டது. ஆனால் இங்கு புத்தகத்தையே முடக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்? தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.3,500 கோடி கல்வி நிதி முடக்கப்பட்டிருக்கிறது. `இந்தி மொழியை ஏற்காவிட்டால் விடுவிக்க முடியாது' என்று சொல்கின்றனர். 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு தொகை விடுவிக்கவில்லை. ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி முடக்கி வைத்துள்ளனர். இவை குறித்து எம்.பி-க்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உரிய பதில் இல்லை. பிரதமர் மோடி 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பதுதான் பா.ஜ.க-வின் லட்சியம். காங்கிரஸுக்கே இந்த கதி என்றால், மாநில எதிர்க்கட்சிகள் நிலை என்ன என்பது கவலைக்குரிய விஷயம். இது ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து. எனவே, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி போதுமான பலத்தைப் பெறாமல், கூட்டணி மனக்கசப்பால் உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே, மக்கள் மன்றத்தில், நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்ட கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களிடம் சென்றடையும். அதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், செய்யத் தவறிவிட்டதுதான் துரதிஷ்டம். என்றார்.

விகடன் 12 Feb 2026 2:39 pm

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என மூன்று கூட்டத்தொடர்களும், சில நேரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வும் நடைபெறும். இந்த கூட்டத் தொடர்களில் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தேவையான சட்டங்களை இயற்றுவது இதன் முக்கியப் பணியாகும். நாடாளுமன்றம் செலவு 1 நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் இருப்பினும், சமீபகாலமாக நாடாளுமன்றம் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதைவிட, அரசியல் மோதல்களால் முடங்குவதையே அதிகம் காணமுடிகிறது. நாடாளுமன்றம் முடங்குவதால் நாட்டின் பொன்னான நேரமும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் வீணாகிறது. 2012-ல் முன்னாள் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் பன்சால் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துப்படி, நாடாளுமன்றத்தை ஒரு நிமிடம் நடத்துவதற்கு ரூ.2.5 லட்சம், மாநிலங்களவைக்கு தலா ரூ.1.25 லட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை 2023-ம் ஆண்டில் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி ஆச்சார்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கணக்கீட்டின்படியே நாடாளுமன்றம் ஒரு முழு வேலை நாள் இயங்குவதற்கு ஏறத்தாழ ரூ.9 கோடி வரை செலவாகிறது. மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும் நிலையில், நாடாளுமன்ற சபையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவது குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்பதற்குப் பதிலாக வெளிநடப்பு செய்வதும், ஆளுங்கட்சி விவாதங்களைத் தவிர்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ஓம் பிர்லா ஒரு நாளில் ஒரு மணிநேரம் சபை முடங்கினால்கூட சுமார் 1.5 கோடி ரூபாய் வீணாகிறது. ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பயன்பட வேண்டிய இந்தப் பெரும் தொகை, வெறும் கூச்சல் குழப்பங்களால் வீணடிக்கப்படுவது ஜனநாயகத்தின் மாண்பைக் குறைப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இப்படி தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்குவதற்கு யார் காரணம்? அதனால் யாருக்கு லாபம் என்றக் கோணத்தில் ஊடகவியலாளர் நாதனை தொடர்புகொண்டோம். ``நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான முடக்கங்கள் நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கினார்... பிரதமர் உரை இல்லாமலே... ``பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது. ஆனால், வாக்கெடுப்புகள் நடத்துவது குறைந்துவிட்டது. பல முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்ற கமிட்டிகள் கோரப்பட்டபோதும், அவை மறுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இந்தியா-அமெரிக்கா வணிக ஒப்பந்தம் போன்றவை நாடாளுமன்றத்துக்கு சம்பந்தமில்லாமல் தனியாக செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை திறந்தவெளியில் விவாதிக்காமல், விவரங்கள் இல்லாமல் ஒரு சட்டகமாக (framework) மட்டும் வழங்கப்படுகின்றன. இதனால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற உரிமைகளை வழங்காத நிலை உருவாகியிருக்கிறது. ஊடகவியலாளர் நாதன் முன்பெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் அரிதான ஒன்று. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் (suspension) செய்வது அதிகரித்துள்ளது. ராணுவ தளபதி நரவானேயின் புத்தகம், எப்ஸ்டீன் பைல்களில் மோடி, அமைச்சர்கள், அனில் அம்பானி போன்றோரின் பெயர்கள் வந்தது போன்றவை விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், அது எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமர் உரை இல்லாமலே நிறைவேற்றப்பட்டுள்ளது. கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலை இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்கத் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வந்தது என்று கூறியுள்ளார். சபாநாயகர் எப்போது உளவுத்துறை தலைவராக ஆனார்? நாடாளுமன்றம் ஜனநாயகத்தைக் கைவிட்டு சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன். எதிர்க்கட்சிகள் சரியான விவாதங்களை முன்னெடுப்பதில்லை என்று ஆளுங்கட்சி கூறுகிறது. ராகுல் காந்தி 'மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தால், நரவானேயின் புத்தகத்தை கொடுக்கிறேன். அதைப் படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும். என்றார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளும் அரசு பதில் சொல்ல வேண்டும். அந்த உரையாடல்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான ஆட்சியைத் தரும். ஆனால் இங்கு, கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலைக்கு பா.ஜ.க சென்றுகொண்டிருக்கிறது. ராகுல் காந்தி, அமித் ஷா அதன் வெளிப்பாடுதான் 'சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார்' என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. நரவானே எழுதிய புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லைதான். ஆனால், புத்தகத்தில் சொல்லப்பட்டது உண்மையா இல்லையா? அதுதான் வாதத்துக்கு உரியது. அதற்கு பதில்சொல்ல வேண்டுமல்லவா? உரிய பதில் இல்லை காங்கிரஸ் ஆட்சியின்போது, போபார்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தில் ஆவணங்கள் கசிந்தது. அப்போது பா.ஜ.க விசாரணை கோரியது. இந்த ரகசிய ஆவணங்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அது கருத்து சுதந்திரம், பேச்சுரிமை சம்பந்தப்பட்டது. ஆனால் இங்கு புத்தகத்தையே முடக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்? தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.3,500 கோடி கல்வி நிதி முடக்கப்பட்டிருக்கிறது. `இந்தி மொழியை ஏற்காவிட்டால் விடுவிக்க முடியாது' என்று சொல்கின்றனர். 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு தொகை விடுவிக்கவில்லை. ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி முடக்கி வைத்துள்ளனர். இவை குறித்து எம்.பி-க்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உரிய பதில் இல்லை. பிரதமர் மோடி 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பதுதான் பா.ஜ.க-வின் லட்சியம். காங்கிரஸுக்கே இந்த கதி என்றால், மாநில எதிர்க்கட்சிகள் நிலை என்ன என்பது கவலைக்குரிய விஷயம். இது ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து. எனவே, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி போதுமான பலத்தைப் பெறாமல், கூட்டணி மனக்கசப்பால் உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே, மக்கள் மன்றத்தில், நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்ட கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களிடம் சென்றடையும். அதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், செய்யத் தவறிவிட்டதுதான் துரதிஷ்டம். என்றார்.

விகடன் 12 Feb 2026 2:39 pm

2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது? - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை அவர்களுக்கு அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வந்தார்.  காலை சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் போராட்ட களத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை நயினார் கேட்டறிந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், “மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குகிறார்கள். நயினார் நாகேந்திரன் மாநில அரசு தான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறார்கள். மத்திய அரசாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.   மேலும், மாநில அரசிடம் கேட்டால், மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால், மாநில அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். எங்களை இப்படி இரண்டு அரசுகளும் அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது என்று அங்கன்வாடி ஊழியர்கள் அவரிடம் வேதனை தெரிவித்துள்ளனர். நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன், “உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக அரசு தான்.  நீங்கள் அவர்களிடம் தான் முறையிட வேண்டும். நாங்கள் சொன்னதை செய்வோம். இது குறித்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசுகிறோம்” என்றார். 

விகடன் 12 Feb 2026 2:22 pm

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் என இரண்டு பேருமே அந்தத் தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள். அங்கு தங்களுக்கு சீட்டை உறுதி செய்வதற்கு 2 பேரும் செய்து வரும் அதிரடி மூவ்கள், அவர்களுக்கு சீட் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக 2 கட்சிகளில் எழுந்துள்ள கலகக் குரல் ஆகியவற்றால் வடக்கு தொகுதி அதிரி புதிரி ஆகிக் கொண்டிருக்கிறது. சந்திரசேகர் கோவை அதிமுகவினரிடம் பேசினோம், `சந்திரசேகர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே வடக்கு தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அப்போது எங்கள் கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன், வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். சந்திரசேகருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்திரசேகர் அதிருப்தியானார். கடந்த 2025 ஏப்ரல் மாதம் கட்சியை விட்டு விலகிய அவர், மீண்டும்  கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் சேர்ந்தார். இந்தமுறை எப்படியாவது சீட்டை உறுதி செய்ய களத்தில் வேகம் காட்டுகிறார். கட்சிக்காரர்களுக்கு கறி விருந்து கொடுப்பது, தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று ஆக்டிவாக உள்ளார். ஆனால் ஏராளமான புகார்கள் எழுந்ததால் வேலுமணிக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. எனவே அவருக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சந்திரசேகர் தனது பண பலத்தையும், பாஜகவில் வானதிக்கு இங்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்று லாபி செய்யும் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு லாபி செய்து வருகிறார். பிரசார வாகனத்தை கூட புக் செய்துவிட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த காலங்களில் கட்சி பணி செய்யாதவருக்கு, கட்சி எப்படி வாய்ப்பு வழங்க முடியும் என்றனர். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு? கோவை பாஜகவினரிடம் பேசியபோது, கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், இந்தமுறை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவில் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் வடக்கு தொகுதியில் தான் அதிகம் வலம் வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையின்போது அங்குள்ள சக்தி கேந்திர நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கினார். வானதி சீனிவாசன் அவருக்கு நெருக்கமானவர்கள் தான் தொகுதி பொறுப்பாளர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணியிடம் பேசி வடக்கு தொகுதியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். ஆனால் இந்தத் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பாக உள்ளனர். விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல் வடக்கு தொகுதியை குறிவைத்து பலர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள். வானதி சீனிவாசன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தெற்கு தொகுதியில் பணியாற்றிவிட்டு, தற்போது அங்கு வெற்றி வாய்ப்பு குறைகிறது என்பதற்காக வடக்கு தொகுதிக்கு மாறுவதை ஏற்க முடியாது. இன்றைய தினம் கூட நயினார் நாகேந்திரனை வடக்கு தொகுதிக்கு அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். வானதி சீனிவாசன் கோவை மாவட்டத்தின் இதய பகுதியே தெற்கு தொகுதி தான். கோவையில் பாஜக வலுவாக இருக்க அந்தத் தொகுதி முக்கியம். கட்சி நலனை யோசிக்காமல், நிர்வாகிகளின் வசதிக்காக தொகுதி மாறுவதை கட்சி மேலிடம் அனுமதிக்க கூடாது என்றனர். ஆக இருவரில் யாருக்கு சீட் வழங்கினாலும் உள்கட்சி பூசல் வெடித்து தேர்தலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தற்போதைய கள நிலவரம் உணர்த்துகிறது. அதனை சரிகட்டும் பொறுப்பும் தற்போது கட்சி தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது. `ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!' | கழுகார்

விகடன் 12 Feb 2026 1:37 pm

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று 'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்டாலின் , ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும் என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டிருந்தார். மாணிக்கம் தாகூர் இந்நிலையில் மீண்டும் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 1:05 pm

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று 'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்டாலின் , ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும் என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டிருந்தார். மாணிக்கம் தாகூர் இந்நிலையில் மீண்டும் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 1:05 pm

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம்... வாங்க... > இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில், பல அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது... வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும். இதனால், இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவசாயம் மற்றும் பால் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மட்டும் 18% வரி; அமெரிக்க விவசாயிகளுக்கு வரி இல்லை - ஏன்?| நாளை விவசாயிகள் போராட்டம் விவசாயம் > 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பிருந்த 29 சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். மேலும், நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதும்... நீக்குவதும் நடக்கும். கூடவே, தொழில்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இதனால், இந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைக்கின்றன. 'அங்கீகாரங்களா, ஆபத்துகளா?' - என்ன தான் சொல்கிறது புதிய தொழிலாளர் சட்டம்? | Explained கூடுதலாக... > மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் வரைவு விதை சட்டம் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் உயிர்நாடிகளில் ஒன்று, மின்சாரம். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இலவச மின்சாரம் விவசாயிகளின் செலவை ஓரளவு குறைக்கிறது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம். தொழில் Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? வரைவு விதை மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இந்த இரு மசோதாகளையும் எதிர்க்கின்றனர். > பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். > 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முன்பு இருந்த 90 - 10 நிதி பகிர்தலையே மீண்டும் கொண்டு வர வேண்டும். > விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (கிராமின்) மற்றும் சாந்தி சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'! - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

விகடன் 12 Feb 2026 12:59 pm

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம்... வாங்க... > இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில், பல அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது... வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும். இதனால், இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவசாயம் மற்றும் பால் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மட்டும் 18% வரி; அமெரிக்க விவசாயிகளுக்கு வரி இல்லை - ஏன்?| நாளை விவசாயிகள் போராட்டம் விவசாயம் > 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பிருந்த 29 சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். மேலும், நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதும்... நீக்குவதும் நடக்கும். கூடவே, தொழில்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இதனால், இந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைக்கின்றன. 'அங்கீகாரங்களா, ஆபத்துகளா?' - என்ன தான் சொல்கிறது புதிய தொழிலாளர் சட்டம்? | Explained கூடுதலாக... > மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் வரைவு விதை சட்டம் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் உயிர்நாடிகளில் ஒன்று, மின்சாரம். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இலவச மின்சாரம் விவசாயிகளின் செலவை ஓரளவு குறைக்கிறது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம். தொழில் Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? வரைவு விதை மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இந்த இரு மசோதாகளையும் எதிர்க்கின்றனர். > பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். > 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முன்பு இருந்த 90 - 10 நிதி பகிர்தலையே மீண்டும் கொண்டு வர வேண்டும். > விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (கிராமின்) மற்றும் சாந்தி சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'! - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

விகடன் 12 Feb 2026 12:59 pm

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மனுதாரரான தோனிக்கு உத்தரவிட்ட நீதிபதி, மொழியாக்க பணிகளை மார்ச் 3 வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மொழிபெயர்ப்பாளர், தட்டச்சருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

விகடன் 12 Feb 2026 12:33 pm

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மனுதாரரான தோனிக்கு உத்தரவிட்ட நீதிபதி, மொழியாக்க பணிகளை மார்ச் 3 வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மொழிபெயர்ப்பாளர், தட்டச்சருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

விகடன் 12 Feb 2026 12:33 pm

`ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!' | கழுகார்

ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி! சீட்டுக்கு மோதும் நிர்வாகிகள்... கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க. வரும் தேர்தலில் அந்தத் தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எதிர்பார்ப்பதால், 'தொகுதியை தட்டித் தூக்குவதற்கு இதுதான் நேரம். சரியாக பணியாற்றினால் வெற்றிப் பெற்றுவிடலாம்' என்று கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனால் பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக அது மாறியிருப்பதை உணர்ந்துவிட்டனர் உடன்பிறப்புகள். சிட்டிங் மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மா.செ மருதமலை சேனாதிபதி, முன்னாள் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன், குறிச்சி பிரபாகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் என்று ஏராளமானோர் கிணத்துக்கிடவு சீட்டுக்கு முட்டி மோதுவதால், அதிரி புதிரி ஆகியிருக்கிறது கோவை தி.மு.க. செந்தில் பாலாஜி 'வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம்' என்பதால், 50 ஸ்வீட் பாக்ஸ் வரையில் இறக்குவதற்கும் பலருமே தயாராக இருக்கிறார்களாம். இந்த போட்டியாளர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தனக்கு அடக்கமான நிர்வாகி ஒருவருக்கு சீட் வாங்கித் தர செந்தில் பாலாஜி தரப்பு மேலிடத்தில் பேசுவதால், கோவையில் அனல் வீசுகிறது. கொதிப்பில் மதுரை தோழர்கள்! உதவி கோரும் துணை மேயர்... மதுரை மாநகராட்சியில் வெடித்த முறைகேடு புகாரால், கடந்த இரண்டு மாதங்களாக மன்றக் கூட்டமே நடக்கவில்லை. அது குறித்தான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோது, 'கூட்டத்தை நடத்தவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தது நீதிமன்றம். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணைமேயர் நாகராஜனை வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையே, 'நான்கு கவுன்சிலர்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தலைமை ஏற்பதா?' என்று திமுக கவுன்சிலர்கள் சிலர் பிரச்னையை கிளப்புகிறார்களாம். 'வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!' - 'சின்னம்மா' முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்! மிரண்டு போன துணை மேயர் தரப்பு, பிரச்னையை சரி செய்ய அமைச்சர் மூர்த்தியின் உதவியை நாடியிருக்கிறார்கள். 'பெயருக்குத்தான் துணை மேயர் பதவி தந்தார்களே ஒழிய, எந்த அதிகாரமும் அளிக்கவில்லை. இப்போது மன்றத்தை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பறிக்கப் பார்க்கிறார்கள் தி.மு.க-வினர். தொட்டதற்கு எல்லாம் அமைச்சரிடம் பஞ்சாயத்துக்கு போய் நின்றால் சரிவருமா...' என்று கொதிக்கிறார்கள் தூங்கா நகர தோழர்கள். புலம்பும் உடன்பிறப்புகள்! முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்... சமீபத்தில், 'தமிழ்நாடு தலை குனியாது' கூட்டம் ஒரத்தநாட்டில் நடந்து முடிந்தது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்த இராமச்சந்திரனும், வைத்திலிங்கமும் ஒரே மேடையில் இருந்ததைப் பார்த்து தி.மு.க தொண்டர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி. வைத்திலிங்கம் மனமாச்சரியங்களை மறந்து மேடையிலேயே, 'மாப்பிள்ளை, மாப்பிள்ளை' என்று வைத்திலிங்கம் மீது பாசமழையைப் பொழிந்திருக்கிறார் இராமச்சந்திரன். பதிலுக்கு வைத்திலிங்கமும் அதே தொனியில் பேசுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்த வேளையில், இராமச்சந்திரனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் வைத்திலிங்கம். 'அந்தத் தேர்தல் தோல்வியிலிருந்துதான் வைத்திக்கு அ.தி.மு.க-வில் பின்னடைவு ஏற்பட்டது. அந்த வருத்தம் இப்போதும் ஆழமாக மனதில் இருப்பதாலேயே, இராமச்சந்திரனோடு ஒட்டி உறவாட முடியாமல் முறுக்கிக் கொண்டிருக்கிறார் வைத்தி. தேர்தல் சமயத்தில் இப்படி முறுக்கிக் கொண்டிருந்தால் கட்சிக்குத்தானே பின்னடைவு' என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். தூக்கியடிக்கப்பட்ட இரு அதிகாரிகள்! தொடர் குளறுபடி சர்ச்சை... சமீபத்தில் வெளியான காக்கி அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில், ஒரே பணியிடத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதுகுறித்து விசாரித்தபோது, 'காக்கி அதிகாரிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவித்ததில் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு என்று இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், துறை மேல்மட்டத்தில் ஏற்பட்ட சிக்கலே காரணம். இதுபோன்ற குளறுபடிகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தவே, அந்த இரண்டு பெண் அதிகாரிகளும் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர்' என்கிறார்கள் காக்கிகள். மிஸ்டர் கழுகு: குழு போட்ட பா.ஜ.க... அப்செட் எடப்பாடி! ஆனால், 'இந்த குளறுபடிகளுக்கு துறையின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரே பொறுப்பு. அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எங்களை பலிகடா ஆக்கிவிட்டனர்' என்று புலம்புகிறார்கள் மாறுதலான அதிகாரிகள் இருவரும். போட்டா போட்டியில் ஐ.ஏ.எஸ்-கள்! துறைமுக உயர் பதவி... சென்னை துறைமுக நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிந்த அதிகாரி, சமீபத்தில் மத்திய அரசின் வேறொரு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தினம்தோறும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் வந்து செல்லும் முக்கியமான துறைமுகம் என்பதால், துறைமுக உயர் பொறுப்பில் அமர்வதற்கு கோட்டையிலுள்ள சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். 'தமிழக அரசின் கீழ் பணிபுரிய விரும்பாத சில அதிகாரிகள், யார் கண்ணிலும் படாத இந்த பவர்புல் இடத்திற்குச் சென்றுவிட துடிக்கிறார்கள். துறைமுக நிர்வாகப் பதவிக்குத் தீவிரமாகவே காய் நகர்த்தும் ஒரு சீனியர் அதிகாரி, டெல்லியோடு நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகளின் சிபாரிகளைக் கேட்டிருக்கிறார். அவரை ஓரங்கட்டிவிட்டு பதவியை எட்டிப்பிடிக்க மற்றவர்களும் 'நீதி' பிரமுகர் ரூட்டில் முயற்சிக்கிறார்கள். போட்டி கடுமையாகவே இருக்கிறது' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்

விகடன் 12 Feb 2026 11:43 am

இந்திய அரசியலில் அரிதான நிகழ்வு: `சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்' - வரலாறு சொல்லும் கதை!

2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம், முன்னாள் இந்திய ராணுவத் தளபதி நரவானே புத்தகத்தின் சம்பவம், எப்ஸ்டீன் பைல் என ஆளும் அரசிடம் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், நரவானே புத்தகம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றும்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்திப் பேச்சை இடைமறித்து, அவரைப் பேச அனுமதிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எட்டு காங்கிரஸ் எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்தார். பிப்ரவரி 4-ம் தேதி, சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், அவையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று முற்றுகையிட்டனர். ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ``பிரதமர் மோடியை தாக்கும் திட்டம் இருப்பதாக நம்பத் தகுந்த செய்தி வந்தது. அதனால் பிரதமர் மோடியை அவைக்கு வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார். இதுவும் அரசியல் அரங்கில் விவாதமானது. கடிதமும் - தீர்மானமும் காங்கிரஸ் அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காங்கிரஸைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குழு, `நாங்கள் இந்தக் கடிதத்தை ஆழ்ந்த வேதனையுடனும், அரசியலமைப்பு பொறுப்புணர்வுடனும் எழுதுகிறோம். மக்களவையின் மாண்புமிகு சபாநாயகராக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சியால் பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்த நிர்பந்திக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனக் கடிதம் ஒன்றை எழுதியது. இதற்கு எதிராக பா.ஜ.க-வின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய கடிதத்தில் ``காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரம்புகளை மீறி,பிரதமரின் இருக்கையைச் சுற்றி வளைத்தனர். பிப்ரவரி 4 அன்று சபாநாயகரின் அறையை ஆக்ரோஷமாக அணுகியதும் வரம்புமீறலாகவே இருந்தது. எனவே, காங்கிரஸ் எம்.பி-கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்றம் மேலும், பிப்ரவரி 4 அன்று மக்களவையில் ஏற்பட்ட மோதலின் வீடியோவையும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பகிர்ந்து, ``பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியையும் நிதானத்தையும் காட்டினர். இல்லையெனில் இது அவையை முழுமையான குழப்பத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 94(c)-ன் விதிகளின்படி, காங்கிரஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ``பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச நேரம் மறுப்பது, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்காதது, காங்கிரஸின் பெண் எம்.பி.க்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்றவை சபாநாயகர் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்கான சான்றாகும். எனக் குறிப்பிட்டடு 120 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றம் பிரிவு 94(C) என்றால் என்ன? அரசியலமைப்பில், பிரிவு 94(C) மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் நடைமுறையைப் பற்றி பேசுகிறது. மக்களவையின் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகராக பதவி வகிக்கும் உறுப்பினர், அப்போதைய அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அவரது பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அரசியலமைப்பு கூறுகிறது. மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்படி, சபையின் எந்தவொரு உறுப்பினரும் சபாநாயகரை நீக்கக் கோரலாம். உறுப்பினர் தீர்மானத்தின் முழு உரையுடன் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அவையின் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பு பெறப்பட்டதும், தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோரும் ஒரு தீர்மானம், அறிவிப்பைச் சமர்ப்பித்த உறுப்பினரின் பெயரில் அலுவல் பட்டியலில் உள்ளிடப்படும். சபாநாயகர் தனது பதவி நீக்கத்திற்கான தீர்மானம் எடுக்கப்படும்போது சபைக்கு தலைமை தாங்க முடியாது. அதனால், இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கான தேதியை துணை சபாநாயகர் நிர்ணயிப்பார். ஓம் பிரகாஷ் பிர்லா அதன் பின்னர் அந்தத் தீர்மானத்தை சபையின் முன் வைத்து, அதை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டுமா? எனக் கேட்கப்படும். தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, குறைந்தது 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக எழுந்து நிற்க வேண்டும். இந்த வரம்பு நிறைவேற்றப்படாவிட்டால், தீர்மானம் தோல்வியடையும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது வாக்கெடுப்புக்கு விடப்படும். குரல் வாக்கெடுப்பு, வாக்குப் பிரிவு அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படலாம். தீர்மானம் நிறைவேறுமா? 120 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்ட பிறகும், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சபையின் துணை சபாநாயகரைப் பொறுத்தது. ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க, அது விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகளை தெளிவாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டிருக்க வேண்டும். தீர்மானத்தில் வாதங்கள், அனுமானங்கள், முரண்பாடான தகவல்கள், அவதூறு அறிக்கைகள் இருக்கக்கூடாது. இந்த ஆய்வுகளுக்குப் பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்படும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தற்போது நடந்துவரும் 18-வது மக்களவையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களுடன் பெரும்பான்மையாக இருக்கிறது. இந்திய கூட்டணி 238 இடங்களைக் கொண்டுள்ளது. எனவே, தீர்மானம் நிறைவேறுவது கடினம். என்றாலும், இந்த தீர்மானம் அவையில் விவாதிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. நாடாளுமன்றத்தின் உயரிய பதவியில் இருக்கும் சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது என்பது அரிதான நிகழ்வாகும். இத்தகைய தீர்மானங்கள் பெரும்பாலும் அவர்களைப் பதவியில் இருந்து நீக்குவதை விட, அவர்களின் தார்மீக அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தவே எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திர இந்திய வரலாற்றில் மக்களவைத் தலைவர் மீது 4 முறையும், மாநிலங்களவைத் தலைவர் மீது ஒரு முறையும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 1954: ஜி.வி. மாவ்லங்கர் சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவை சபாநாயகரான ஜி.வி. மாவ்லங்கருக்கு எதிராகவே முதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. `விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் போதுமான நேரம் வழங்கவில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சபாநாயகர் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி, எம்.பி. விக்னேஷ்வர் மிஸ்ரா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இருப்பினும், இது சபையில் போதிய ஆதரவின்றித் தோற்றது. ஜி.வி. மாவ்லங்கர் 1966: சர்தார் ஹுக்கும் சிங் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த பால ராம் ஜாகருக்கு எதிராக 1987-ல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான பிரச்சினைகளுக்குச் சபையில் போதிய இடமளிக்கவில்லை என்றும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி மது லிமாயே இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போதைய துணை சபாநாயகர் எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் முன்னிலையில் இந்த விவாதம் நடைபெற்றது. ஆனால் இறுதியாகத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 1987: பால்ராம் ஜாகர் சிபிஎம் (CPM) எம்பி சோம்நாத் சட்டர்ஜி, சபாநாயகர் பால்ராம் ஜாகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும், நடைமுறை ரீதியான பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டினார். அப்போது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. எதிர்க்கட்சிகள் (குறிப்பாக இடதுசாரிகள்) அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தன. துணை சபாநாயகர் தம்பி துரை தலைமையில் விவாதம் நடந்தது. ஆனால் அரசின் பெரும்பான்மை காரணமாக இந்தத் தீர்மானமும் தோல்வியடைந்தது. ஜக்தீப் தன்கர் 2024: ஜக்தீப் தன்கர் 2024 டிசம்பர் 10 அன்று 60 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், இந்தத் தீர்மானம் முறையாக வரையப்படவில்லை என்றும், அவைத் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது என்றும் கூறி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்தார். இப்போது ஓம் பிர்லா மீது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஐந்தாவது தீர்மானமாகும். ``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா? - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3' செய்திகள்!

விகடன் 12 Feb 2026 11:27 am

`மாற்று சக்தி என்று கமல் வந்தார்; அவரே ஜெயிக்கல; இப்ப.!' - தவெகவை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த மாதம் வரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி ஆனால் இன்று அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நம் கூட்டணி கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினோம். அதேசமயம் தி.மு.க கூட்டணி தற்போது கலகலத்துக் கிடக்கிறது. அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் தற்போது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் 40 கேட்கிறார், மற்றொருவர் 30 வேண்டும் என்கிறார். அத்துடன் சீட் இல்லையென்றால் அங்கே போய்விடுவேன் என்று அவர்களை மிரட்டுகின்றனர். அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். மூப்பனாரும், வைகோவும் வந்தார்கள், போனார்கள். அதேபோல விஜயகாந்த் வந்தார் போய்விட்டார். நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். நாளை சிம்புகூட அரசியலுக்கு வரலாம். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார். சினிமா தியேட்டரிலும், பேருந்திலும் விசில் அடிக்கலாம். தவெக விஜய் ஆனால் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. நம்மைப் பொறுத்தவரை அன்றும் சரி… இன்றும் சரி… தி.மு.க-தான் எதிரி. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அ.தி.மு.க. இந்தக் கட்சி தலைவர்களை நம்பி இல்லை. அதன் தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க உறுதியாக தோற்கடிக்கப்படும் என்றார். PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை

விகடன் 12 Feb 2026 11:16 am

`மாற்று சக்தி என்று கமல் வந்தார்; அவரே ஜெயிக்கல; இப்ப.!' - தவெகவை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த மாதம் வரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி ஆனால் இன்று அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நம் கூட்டணி கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினோம். அதேசமயம் தி.மு.க கூட்டணி தற்போது கலகலத்துக் கிடக்கிறது. அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் தற்போது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் 40 கேட்கிறார், மற்றொருவர் 30 வேண்டும் என்கிறார். அத்துடன் சீட் இல்லையென்றால் அங்கே போய்விடுவேன் என்று அவர்களை மிரட்டுகின்றனர். அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். மூப்பனாரும், வைகோவும் வந்தார்கள், போனார்கள். அதேபோல விஜயகாந்த் வந்தார் போய்விட்டார். நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். நாளை சிம்புகூட அரசியலுக்கு வரலாம். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார். சினிமா தியேட்டரிலும், பேருந்திலும் விசில் அடிக்கலாம். தவெக விஜய் ஆனால் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. நம்மைப் பொறுத்தவரை அன்றும் சரி… இன்றும் சரி… தி.மு.க-தான் எதிரி. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அ.தி.மு.க. இந்தக் கட்சி தலைவர்களை நம்பி இல்லை. அதன் தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க உறுதியாக தோற்கடிக்கப்படும் என்றார். PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை

விகடன் 12 Feb 2026 11:16 am

பிரதமர் மோடி விருந்தை புறக்கணித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா - அதிருப்திக்கு காரணம் என்ன?

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா. அவர் பா.ஜ.க-வில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலின்போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஸ்ரீலேகா முன்னிறுத்தப்பட்ட நிலையில், பா.ஜ.க பெரும்பான்மை பெற்றபிறகு வி.வி.ராஜேஷ் மேயராக்கப்பட்டார். இதனால் ஸ்ரீலேகா அதிருப்தியில் இருந்தார். கட்சியில் சேர்ந்த சமயத்திலும், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரை கொண்டாடினார்கள். அதன்பிறகு ஸ்ரீலேகாவை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி ஸ்ரீலேகாவின் செயல்பாட்டிலும் வெளிப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் முதன் முதலாக ஒரு மாநகராட்சியை, அதிலும் தலைநகரை கைப்பற்றிய பா.ஜ.க-வை டெல்லி தலைமை கொண்டாடி வருகிறது. மேலும், திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை டெல்லிக்கு அழைத்து விருந்துகொடுக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக கேரளா எக்ஸ்பிரஸில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுக்கு டெல்லி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு இன்று பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விருந்தில் கலந்துகொள்ள கவுன்சிலர் ஸ்ரீலேகா-வுக்கு அழைப்பு விடுத்தும் அவர் டெல்லிக்கு செல்லவில்லை. பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலேகா புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாயின. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகா போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளதால் அவர் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி விருந்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் தனது எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரியவரும், அதன்மூலம்.தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்து ஸ்ரீலேகா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், நான் டெல்லி செல்லாதது குறித்து விவாதம் எழுந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கும் இந்த சமயத்தில் டெல்லியில் இருந்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு வந்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார்கள். வயது முதிர்வு காரணமாக ரயிலில் பயணம் செய்வதில் எனக்கு சிரமம் உள்ளது என நான் கூறினேன். அப்படியானால் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக என்னிடம் தெரிவித்தார்கள். எனக்காக கட்சி எதற்கு வீணாக பணம் செலவு செய்ய வேண்டும் என நான் நினைத்தேன். என்னால் அதிக பணம் செலவு ஆகக்கூடாது என நான் நினைத்துதான் போகவில்லை. எனது தேர்தலின்போதுகூட நான் அதிகமாக பணம் செலவு செய்யவில்லை. பா.ஜ.க கவுன்சிலரும் முன்னாள் டி.ஜி.பியுமான ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் அதுமட்டும் அல்லாது தனிப்பட்ட முறையிலும் சில காரணங்கள் உள்ளன. அம்மாவுக்கு 94 வயது ஆகிறது, அவரை உடனிருந்து கவனிக்க வேண்டும். பணியாளர் விடுப்பில் உள்ளதால் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வது போன்ற வேலைகளை நான்தான் செல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாது கவுன்சிலர் பணியையும் நான் கவனிக்க வேண்டும் என்பதுபோன்ற காரணங்களால் நான் டெல்லிக்கு செல்லவில்லை. ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அதனால்தான் ஒருவர் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளேன். அதனால்தான் கேரளாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவுசெய்துள்ளேன். எனவே இதை ஒரு விவாதமாக மாற்ற யாரும் முயலவேண்டாம் என்றார்.

விகடன் 12 Feb 2026 10:49 am

பிரதமர் மோடி விருந்தை புறக்கணித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா - அதிருப்திக்கு காரணம் என்ன?

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா. அவர் பா.ஜ.க-வில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலின்போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஸ்ரீலேகா முன்னிறுத்தப்பட்ட நிலையில், பா.ஜ.க பெரும்பான்மை பெற்றபிறகு வி.வி.ராஜேஷ் மேயராக்கப்பட்டார். இதனால் ஸ்ரீலேகா அதிருப்தியில் இருந்தார். கட்சியில் சேர்ந்த சமயத்திலும், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரை கொண்டாடினார்கள். அதன்பிறகு ஸ்ரீலேகாவை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி ஸ்ரீலேகாவின் செயல்பாட்டிலும் வெளிப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் முதன் முதலாக ஒரு மாநகராட்சியை, அதிலும் தலைநகரை கைப்பற்றிய பா.ஜ.க-வை டெல்லி தலைமை கொண்டாடி வருகிறது. மேலும், திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை டெல்லிக்கு அழைத்து விருந்துகொடுக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக கேரளா எக்ஸ்பிரஸில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுக்கு டெல்லி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு இன்று பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விருந்தில் கலந்துகொள்ள கவுன்சிலர் ஸ்ரீலேகா-வுக்கு அழைப்பு விடுத்தும் அவர் டெல்லிக்கு செல்லவில்லை. பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலேகா புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாயின. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகா போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளதால் அவர் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி விருந்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் தனது எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரியவரும், அதன்மூலம்.தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்து ஸ்ரீலேகா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், நான் டெல்லி செல்லாதது குறித்து விவாதம் எழுந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கும் இந்த சமயத்தில் டெல்லியில் இருந்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு வந்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார்கள். வயது முதிர்வு காரணமாக ரயிலில் பயணம் செய்வதில் எனக்கு சிரமம் உள்ளது என நான் கூறினேன். அப்படியானால் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக என்னிடம் தெரிவித்தார்கள். எனக்காக கட்சி எதற்கு வீணாக பணம் செலவு செய்ய வேண்டும் என நான் நினைத்தேன். என்னால் அதிக பணம் செலவு ஆகக்கூடாது என நான் நினைத்துதான் போகவில்லை. எனது தேர்தலின்போதுகூட நான் அதிகமாக பணம் செலவு செய்யவில்லை. பா.ஜ.க கவுன்சிலரும் முன்னாள் டி.ஜி.பியுமான ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் அதுமட்டும் அல்லாது தனிப்பட்ட முறையிலும் சில காரணங்கள் உள்ளன. அம்மாவுக்கு 94 வயது ஆகிறது, அவரை உடனிருந்து கவனிக்க வேண்டும். பணியாளர் விடுப்பில் உள்ளதால் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வது போன்ற வேலைகளை நான்தான் செல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாது கவுன்சிலர் பணியையும் நான் கவனிக்க வேண்டும் என்பதுபோன்ற காரணங்களால் நான் டெல்லிக்கு செல்லவில்லை. ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அதனால்தான் ஒருவர் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளேன். அதனால்தான் கேரளாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவுசெய்துள்ளேன். எனவே இதை ஒரு விவாதமாக மாற்ற யாரும் முயலவேண்டாம் என்றார்.

விகடன் 12 Feb 2026 10:49 am

எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'! - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. அமெரிக்கா வெளியிட்டு வரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த சிலரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஹர்தீப் பூரி இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் எங்களுக்கு மட்டும் 18% வரி; அமெரிக்க விவசாயிகளுக்கு வரி இல்லை - ஏன்?| நாளை விவசாயிகள் போராட்டம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் ஹர்தீப் பூரி... எப்ஸ்டீனில் முப்பது லட்சம் இமெயில்களில் என்னுடைய பெயர் வெறும் மூன்று நான்கு முறை தான் இடம்பெற்றிருக்கிறது. அலுவல் ரீதியாக எப்ஸ்டீனை சில நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன். அதைத் தவிர, அவர் செய்துகொண்டிருந்த வேலைக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கு எப்ஸ்டீனின் செயல்பாடுகளில் விருப்பமே இல்லை. அவர்களைப் பொறுத்த வரை, நான் சரியான ஆள் இல்லை. எப்ஸ்டீன் என்னை இரண்டு முகம் கொண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ராகுல் காந்தி அந்த இமெயில்களைப் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா?

விகடன் 12 Feb 2026 10:25 am

எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'! - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. அமெரிக்கா வெளியிட்டு வரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த சிலரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஹர்தீப் பூரி இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் எங்களுக்கு மட்டும் 18% வரி; அமெரிக்க விவசாயிகளுக்கு வரி இல்லை - ஏன்?| நாளை விவசாயிகள் போராட்டம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் ஹர்தீப் பூரி... எப்ஸ்டீனில் முப்பது லட்சம் இமெயில்களில் என்னுடைய பெயர் வெறும் மூன்று நான்கு முறை தான் இடம்பெற்றிருக்கிறது. அலுவல் ரீதியாக எப்ஸ்டீனை சில நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன். அதைத் தவிர, அவர் செய்துகொண்டிருந்த வேலைக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கு எப்ஸ்டீனின் செயல்பாடுகளில் விருப்பமே இல்லை. அவர்களைப் பொறுத்த வரை, நான் சரியான ஆள் இல்லை. எப்ஸ்டீன் என்னை இரண்டு முகம் கொண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ராகுல் காந்தி அந்த இமெயில்களைப் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா?

விகடன் 12 Feb 2026 10:25 am

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பில் இருந்து அனுமதி கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டமாக இல்லாமல் தவெக நிர்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டமாக நடத்த அனுமதி அளிக்குமாறு தவெக தரப்பில் இருந்து போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதைப் பரிசிலித்த போலீஸார் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் பிப்ரவரி 13-ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக மாநாடு 51 நிபந்தனைகள்... இந்தக் கூட்டத்துக்கு தவெக-வினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடிதான் பேச வேண்டும், தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது, இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை போன்ற 51 நிபந்தனைகளை போலீஸார் விதித்துள்ளனர். இந்நிலையில், நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து - நடராஜன் திடலில் நடைபெற்று வரும் பணிகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலத்தில் விஜய்யுடனான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம். இந்தக் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தபடி, தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும் இந்நிகழ்ச்சியை நேரடியாகக் காணலாம். இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனைவருக்கும் காவல்துறையின் அறிவுரையின்படி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. விஜய்யின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாறு படைப்பதாக அமைந்து வருகிறது. சேலத்தில் இருக்கும் மக்களுக்கு வரலாறு படைக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமையும். விஜய் விஜய் எத்தனை மணிக்கு நிகழ்ச்சிக்கு வருவார் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார். சென்னையில் பொது மக்களை தவெக கட்சியினர் தாக்கியதாகக் கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த செங்கோட்டையன், ''பொதுமக்களிடம் குறை கேட்பதற்கு தவெக-வினர் சென்றனர். அப்படி இருக்கையில் மக்களை எதற்காக தவெக-வினர் தாக்கப் போகிறார்கள். இது பற்றிய உண்மைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். விஜயால் மட்டும்தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என மக்கள் நினைக்கின்றனர். அது சேலத்தில் இருந்து தொடங்கும். இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 850 தவெக தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 100 பெண்களும் பங்கேற்றுள்ளனர் என்றார். `எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

விகடன் 12 Feb 2026 8:42 am

கேரளா: சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. கேரளாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வியூகம் வகுத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து களப்பணி செய்துவருகிறது பா.ஜ.க. இதற்கிடையே கேரளாவில் 21 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்ற தனது ஆசையை மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசுவதற்காக கேரள மாநிலம் கொல்லத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுரேஷ்கோபி கூறுகையில், கேரளாவில் நிலம் ஒதுக்கீடு செய்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என நான் கூறவில்லை. அதே சமயம் வளர்ச்சிப் பணிகள் அதிகமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ள ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் எனது கருத்தாக உள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இன்றைய சூழ்நிலையில் ஆலப்புழாவில் இடம் தரவில்லை என்றால் திருச்சூரில் இடம் வாங்கி எய்ம்ஸ் அமைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை 'எய்ம்ஸ் வருமடா மற்ற மோனே' என நான் கூறிய கருத்துக்குத் தவறான விளக்கம் அளித்து கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். என்னை விமர்சித்தவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதில் மற்ற மோனே எனக் குறிப்பிட்டேன். தேர்தல் நெருங்குவதால் நான் பேசியதைத் திரித்து கூறுகின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களையாவது பா.ஜ.க-வுக்கு மக்கள் கொடுத்தால் கேரளாவில் பெரிய மாற்றம் உருவாகும். இந்தச் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. சுரேஷ்கோபி சபரிமலையில் புதிய கொடிமரம் அமைத்த சமயத்தில் ஒரு பக்தர் மூன்றரை கிலோ தங்கம் வழங்கினார். அதில் எனது வியர்வையின் பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் நான் சிறிது தங்கம் காணிக்கையாக வழங்கினேன். என்னிடம் இருந்த 22 கேரட் தங்கத்தை 24 கேரட்டாக மாற்றி வழங்கினேன். கொடிமரத்தின் மேல் உள்ள வாஜி வாகனத்தில் (குதிரை வாகனம்) நான்தான் தங்கம் பதித்தேன். அப்போது நான் வழங்கிய தங்கத்திற்கு ரசீது வழங்கியிருப்பார்கள். நான் அந்த ரசீதைப் பாதுகாத்து வைக்கவில்லை என்றார். ``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

விகடன் 12 Feb 2026 7:34 am

கேரளா: சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. கேரளாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வியூகம் வகுத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து களப்பணி செய்துவருகிறது பா.ஜ.க. இதற்கிடையே கேரளாவில் 21 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்ற தனது ஆசையை மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசுவதற்காக கேரள மாநிலம் கொல்லத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுரேஷ்கோபி கூறுகையில், கேரளாவில் நிலம் ஒதுக்கீடு செய்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என நான் கூறவில்லை. அதே சமயம் வளர்ச்சிப் பணிகள் அதிகமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ள ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் எனது கருத்தாக உள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இன்றைய சூழ்நிலையில் ஆலப்புழாவில் இடம் தரவில்லை என்றால் திருச்சூரில் இடம் வாங்கி எய்ம்ஸ் அமைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை 'எய்ம்ஸ் வருமடா மற்ற மோனே' என நான் கூறிய கருத்துக்குத் தவறான விளக்கம் அளித்து கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். என்னை விமர்சித்தவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதில் மற்ற மோனே எனக் குறிப்பிட்டேன். தேர்தல் நெருங்குவதால் நான் பேசியதைத் திரித்து கூறுகின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களையாவது பா.ஜ.க-வுக்கு மக்கள் கொடுத்தால் கேரளாவில் பெரிய மாற்றம் உருவாகும். இந்தச் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. சுரேஷ்கோபி சபரிமலையில் புதிய கொடிமரம் அமைத்த சமயத்தில் ஒரு பக்தர் மூன்றரை கிலோ தங்கம் வழங்கினார். அதில் எனது வியர்வையின் பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் நான் சிறிது தங்கம் காணிக்கையாக வழங்கினேன். என்னிடம் இருந்த 22 கேரட் தங்கத்தை 24 கேரட்டாக மாற்றி வழங்கினேன். கொடிமரத்தின் மேல் உள்ள வாஜி வாகனத்தில் (குதிரை வாகனம்) நான்தான் தங்கம் பதித்தேன். அப்போது நான் வழங்கிய தங்கத்திற்கு ரசீது வழங்கியிருப்பார்கள். நான் அந்த ரசீதைப் பாதுகாத்து வைக்கவில்லை என்றார். ``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

விகடன் 12 Feb 2026 7:34 am

'வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!' - 'சின்னம்மா'முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!

சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கப்போவதாக கூறியிருக்கும் சசிகலா, இரண்டு நாட்களாக போயஸ்கார்டனில் தனது ஆதரவாளர்களையும் அம்மா தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். சசிகலாவின் நேற்றைய சந்திப்பை நோட்டமிட போயஸ்கார்டன் பக்கமாக சென்றிருந்தோம். சசிகலா ஆதரவாளர்கள் மதியம் இரண்டரை மணி முதலே ஆதரவாளர்கள் வரத் தொடங்கினர். தாய் மண்ணை காக்கும் கட்சி, பழனி பாபாவின் மாணவி, பாரத் மோட்டார் வாகன கட்சி என டிசைன் டிசைனாக பெயர்களை கொண்ட கட்சியினர் சசிகலாவின் ஜெயலலிதா இல்லம் நோக்கி வர ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் சசிகலாவின் வீட்டுக்கு வெளியே ஹேண்ட்பேக்கோடு ஒரு பெண் திருதிருவென முழித்துக் கொண்டிருக்க 'கூட்டத்துக்கா அக்கா வந்தீங்க' என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். 'திண்டிவனத்துல இருந்து வரேன். எங்க மாவட்டம் பொக்கே வாங்கிட்டு வரேன். உள்ள இருங்கன்னுட்டு போனாரு. 'ஜெயலலிதா இல்லம்'னு இங்கே போட்டிருக்கு. அம்மா வீடு இங்க இருக்கு. சின்னம்மா வீடு எங்கன்னு தேடிட்டு இருக்கேன்' என்றார். பதட்டத்தை குறைத்துக் கொண்டு, 'நீங்க எந்த டீமு டிடிவியா ஓபிஎஸ்ஸா...' என்றேன். சசிகலா வீடு 'நான் அதிமுக' என்றார். அப்ப 'எடப்பாடி டீமா' எனக் கேட்க, 'அதான் எல்லாரும் சேர்ந்துட்டதா சொன்னாங்களே. இனிமே ஒரே டீமுன்னு சொல்லித்தானே ஊர்ல இருந்து 10 பேரை கூட்டிட்டு வந்தாங்க' என்றவுடன் அவரின் மாவட்டத்தின் சமயோஜிதம் பிடிபட்டுவிட்டது. ஆள் பிடிப்பதற்காக அணியெல்லாம் ஒன்றாகிவிட்டதாக உருட்டியிருக்கிறார். அவருக்கு வேதா இல்லத்தை காண்பித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே பொக்கேவுடன் அந்த திண்டிவனம் மாவட்டம் வந்துவிட்டார். அம்மாவின் தொண்டர்களுக்கு சசிகலாவின் வீடு எங்கே இருக்கிறதென தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் பலருக்கும் அவர்களின் அம்மாவின் வீடே நியாபகம் இல்லை என்பதுதான் ஷாக். 'அம்மா வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்றேன். அப்புறமும் ஏன்ணே பக்கத்து தெருவுல போயி முட்டிட்டு இருக்கீங்க' என அம்மாவின் தொண்டர்களுக்கே போயஸ்கார்டனுக்குள் வழி சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர் சசிகலாவின் உதவியாளர்கள். சசிகலா ஆதரவாளர்கள் ஆதரவாளர்களை வராண்டாவில் சேர் போட்டு அமர வைத்து காபி, டீ பரிமாறிக் கொண்டிருந்தனர். பத்து பத்து பேராக அழைத்து சின்னம்மா பேசுவார் என உதவியாளர்கள் தகவல் சொல்லிவிட்டு போனர். இடையில் அனைவருக்கும் ஒரு பார்ம் கொடுத்து அதிமுகவிலிருந்து வருகிறீர்கள் எனில் எத்தனை ஆண்டுகள் எந்தெந்த பதவிகளில் இருந்தீர்கள் என்று ஒரு கேள்வியும் மாற்றுக்கட்சியாக இருந்தால் எந்தக்கட்சி என்ன பதவி என கேட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர். உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு ஒரு சாமியாரை திருவள்ளூர் அமமுக மா.செ அழைத்து வந்திருந்தார். நிர்வாகிகள் சந்திப்பிலேயே எதுவும் யாகம் வளர்த்து தமிழக அரசியலில் புயல் வீச செய்யப்போகிறார்களோ என பகீரென்றது. என்னவென விசாரித்ததில், 'திருவள்ளூரின் தண்டலத்தில் உள்ள தடுத்தாட் கொண்டீஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளை செய்து சின்னம்மாவுக்கு பிரசாதத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதைக் கொடுத்துவிட்டு அமாவாசையில் அடுத்த பூஜைக்கான ஆர்டரையும் வாங்கிவிட்டு செல்லலாம் என வந்திருக்கிறோம்' என்றனர். 'என்ன பூஜை?' எனக் கேட்க, 'மிளகாயை தீயில் இட்டு தடைகள் நீங்கி எதிரிகளின் குயுக்திகள் விலகி விஸ்வரூபம் எடுக்க நிகும்பலா யாகம் செய்யச் சொல்லி சின்னம்மா கேட்டிருந்தார். அதை மட்டும் செய்துவிட்டால் இந்த எலெக்சன் சின்னம்மாவுக்கு அமோகமாக இருக்கும்' என்றார். அருகிலிருந்த இன்னொரு ஆதரவாளர், 'யாகத்துக்கு அப்புறம் சின்னம்மா சி.எம் ஆகுறதை யாராலயும் தடுக்க முடியாது' என ஒரே போடாக போட்டார். சசிகலா ஆதரவாளர்கள் சசிகலாவின் வீட்டு முன்பாக விவேக்குக்கு சொந்தமான தனியார் செய்தி சேனலின் வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக 3-4 யூனிட்களுடன் அந்த வண்டி காலையிலிருந்து இரவு வரைக்கும் அங்கேயே நிற்க வேண்டும். அலைகடலென திரண்டு வரும் சின்னம்மாவின் ஆதரவாளர்கள் யாரையும் விடாமல் படம் பிடுத்து பேட்டி எடுத்து போட வேண்டுமென்பது மேலிடத்திம் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம். டிடிவி முகாமிலிருந்து விலகிய ஜீவிதா நாச்சியார் சம்பந்தப்பட்ட இந்த சேனலில் சின்னம்மா குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைவாகப் பேசிவிட்டு பக்கத்து சேனலில் அதிகம் பேசிவிட்டதால் சசி டென்ஷாகிவிட்டதாக கிசுகிசுத்துக் கொண்டனர் ஜெயலிலதா இல்லத்தில். அதனால் இன்றைக்கு மட்டும் அந்த தனியார் இலை சேனலில் 6 கேமரா மேன்கள் 3 ரிப்போர்ட்டர்கள் என முழு பலத்தையும் கவரேஜூக்கு இறக்கியிருக்கிறார்கள். மதுரையிலிருந்து வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வந்திருந்தார். எல்லா சேனல்களுக்கும் பொதுவாக அவர் பேசிவிட, அதில் கொஞ்சம் பன்ச் மிஸ் ஆவதை கவனித்த சசியின் உதவியாளர்கள், 'நம்ம சேனல வரை வைக்குறோம். ரெண்டு மூணு பிட்டு சேர்த்து போடுங்க' என பசும்பொன் பாண்டியனின் காதில் கிசுகிசுத்தனர். அதுக்கென்ன சிறப்பா செய்திடுவோம்...என இலை மைக்கைப் பிடித்த பசும்பொன் பாண்டியன், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க அம்மா இறந்துட்டாங்க. நான் எத்தனையோ அரசியல்வாதிங்க கூட பழகிருக்கேன். ஆனா, சின்னம்மாதான் எனக்கு உடனே போன் போட்டாங்க. 'கவலைப்படாதீங்க பாண்டியன். அரசியல் சூழல் பரபரப்பா இருக்கு. நானும் பிஸியா இருக்கேன். இல்லன்னா நேர்ல வந்திருப்பேன். நீங்க குடும்பத்தோட சென்னைக்கு நேர்ல வாங்க. சசிகலா ஆதரவாளர்கள் நான் ஆறுதல் சொல்றேன் என்றார்' என பாண்டியன் எமோஷனல் ஆக, நமக்கு ஆஹா இது அதுல்ல... என பனையூர் தலைவரின் ரெசார்ட் ஆறுதல் நியாபகம் வந்தது. 'ஆறுதல் பெற்றுவிட்டு அரசியல் பேசினோம்' என்றவர். 'சின்னம்மா கை காட்டுற்வர்தான் சி.எம். டிடிவியெல்லாம் ஒரு துரோகிங்க. அதிமுகவை அழிக்கலாம்னு பாஜக நினைக்குது. சின்னம்மா இருக்குற வரைக்கும் அது முடியாது. டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு புரட்சித் தாய் பாடம் புகட்டுவார்' என எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்துப் போட சசியின் ஆதரவாளர்களே கொஞ்சம் வெடவெடத்து விட்டனர். சசியின் சந்திப்பு நடந்த இல்லத்துக்குள் செல்ல இரண்டே இரண்டு பாஸ்தான். ஒன்று இலை டிவியாக இருக்க வேண்டும் அல்லது வெள்ளைச் சட்டை போட்டிருக்க வேண்டும். 'அம்மாவுக்காக நான் பாட்டு போட்டிருக்கேன். படம் பண்ணிருக்கேன். அந்த எடப்பாடி என்னயவே போட்டுத் தள்ள பார்க்குறான். அவனுக்கு நான் போட்டியா வந்துடுவன்னு பயம். அவனுக்கு அரசியல்னா என்னன்னு காட்டாம விடமாட்டேன். இதுசம்பந்தமா சின்னம்மாவை சந்திச்சு பேசப்போறேன்' என 'தங்கத்தலைவி புரட்சித்தலைவி அம்மா' என ஒரு பாடலை போனில் நமக்கு போட்டுக்காட்டிவிட்டு சசியை சந்திக்க உள்ளே சென்றார். வெள்ளைச் சட்டை போட்டிருந்ததால் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளே விட்டு விட்டார்கள். நல்லவேளையாக நாம் கலர் சட்டை போட்டிருந்தோம்! சசிகலா வீடு இன்றும் தன்னுடைய முரட்டு ஆதரவாளர்களின் சந்திப்பை சசிகலா தொடரவிருப்பதாக சொல்கிறார்கள். போயஸ்கார்டன் பக்கமாக செல்பவர்கள் வெள்ளைச்சட்டையை தவிர்ப்பது நல்லது!

விகடன் 12 Feb 2026 6:45 am

'வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!' - 'சின்னம்மா'முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!

சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கப்போவதாக கூறியிருக்கும் சசிகலா, இரண்டு நாட்களாக போயஸ்கார்டனில் தனது ஆதரவாளர்களையும் அம்மா தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். சசிகலாவின் நேற்றைய சந்திப்பை நோட்டமிட போயஸ்கார்டன் பக்கமாக சென்றிருந்தோம். சசிகலா ஆதரவாளர்கள் மதியம் இரண்டரை மணி முதலே ஆதரவாளர்கள் வரத் தொடங்கினர். தாய் மண்ணை காக்கும் கட்சி, பழனி பாபாவின் மாணவி, பாரத் மோட்டார் வாகன கட்சி என டிசைன் டிசைனாக பெயர்களை கொண்ட கட்சியினர் சசிகலாவின் ஜெயலலிதா இல்லம் நோக்கி வர ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் சசிகலாவின் வீட்டுக்கு வெளியே ஹேண்ட்பேக்கோடு ஒரு பெண் திருதிருவென முழித்துக் கொண்டிருக்க 'கூட்டத்துக்கா அக்கா வந்தீங்க' என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். 'திண்டிவனத்துல இருந்து வரேன். எங்க மாவட்டம் பொக்கே வாங்கிட்டு வரேன். உள்ள இருங்கன்னுட்டு போனாரு. 'ஜெயலலிதா இல்லம்'னு இங்கே போட்டிருக்கு. அம்மா வீடு இங்க இருக்கு. சின்னம்மா வீடு எங்கன்னு தேடிட்டு இருக்கேன்' என்றார். பதட்டத்தை குறைத்துக் கொண்டு, 'நீங்க எந்த டீமு டிடிவியா ஓபிஎஸ்ஸா...' என்றேன். சசிகலா வீடு 'நான் அதிமுக' என்றார். அப்ப 'எடப்பாடி டீமா' எனக் கேட்க, 'அதான் எல்லாரும் சேர்ந்துட்டதா சொன்னாங்களே. இனிமே ஒரே டீமுன்னு சொல்லித்தானே ஊர்ல இருந்து 10 பேரை கூட்டிட்டு வந்தாங்க' என்றவுடன் அவரின் மாவட்டத்தின் சமயோஜிதம் பிடிபட்டுவிட்டது. ஆள் பிடிப்பதற்காக அணியெல்லாம் ஒன்றாகிவிட்டதாக உருட்டியிருக்கிறார். அவருக்கு வேதா இல்லத்தை காண்பித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே பொக்கேவுடன் அந்த திண்டிவனம் மாவட்டம் வந்துவிட்டார். அம்மாவின் தொண்டர்களுக்கு சசிகலாவின் வீடு எங்கே இருக்கிறதென தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் பலருக்கும் அவர்களின் அம்மாவின் வீடே நியாபகம் இல்லை என்பதுதான் ஷாக். 'அம்மா வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்றேன். அப்புறமும் ஏன்ணே பக்கத்து தெருவுல போயி முட்டிட்டு இருக்கீங்க' என அம்மாவின் தொண்டர்களுக்கே போயஸ்கார்டனுக்குள் வழி சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர் சசிகலாவின் உதவியாளர்கள். சசிகலா ஆதரவாளர்கள் ஆதரவாளர்களை வராண்டாவில் சேர் போட்டு அமர வைத்து காபி, டீ பரிமாறிக் கொண்டிருந்தனர். பத்து பத்து பேராக அழைத்து சின்னம்மா பேசுவார் என உதவியாளர்கள் தகவல் சொல்லிவிட்டு போனர். இடையில் அனைவருக்கும் ஒரு பார்ம் கொடுத்து அதிமுகவிலிருந்து வருகிறீர்கள் எனில் எத்தனை ஆண்டுகள் எந்தெந்த பதவிகளில் இருந்தீர்கள் என்று ஒரு கேள்வியும் மாற்றுக்கட்சியாக இருந்தால் எந்தக்கட்சி என்ன பதவி என கேட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர். உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு ஒரு சாமியாரை திருவள்ளூர் அமமுக மா.செ அழைத்து வந்திருந்தார். நிர்வாகிகள் சந்திப்பிலேயே எதுவும் யாகம் வளர்த்து தமிழக அரசியலில் புயல் வீச செய்யப்போகிறார்களோ என பகீரென்றது. என்னவென விசாரித்ததில், 'திருவள்ளூரின் தண்டலத்தில் உள்ள தடுத்தாட் கொண்டீஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளை செய்து சின்னம்மாவுக்கு பிரசாதத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதைக் கொடுத்துவிட்டு அமாவாசையில் அடுத்த பூஜைக்கான ஆர்டரையும் வாங்கிவிட்டு செல்லலாம் என வந்திருக்கிறோம்' என்றனர். 'என்ன பூஜை?' எனக் கேட்க, 'மிளகாயை தீயில் இட்டு தடைகள் நீங்கி எதிரிகளின் குயுக்திகள் விலகி விஸ்வரூபம் எடுக்க நிகும்பலா யாகம் செய்யச் சொல்லி சின்னம்மா கேட்டிருந்தார். அதை மட்டும் செய்துவிட்டால் இந்த எலெக்சன் சின்னம்மாவுக்கு அமோகமாக இருக்கும்' என்றார். அருகிலிருந்த இன்னொரு ஆதரவாளர், 'யாகத்துக்கு அப்புறம் சின்னம்மா சி.எம் ஆகுறதை யாராலயும் தடுக்க முடியாது' என ஒரே போடாக போட்டார். சசிகலா ஆதரவாளர்கள் சசிகலாவின் வீட்டு முன்பாக விவேக்குக்கு சொந்தமான தனியார் செய்தி சேனலின் வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக 3-4 யூனிட்களுடன் அந்த வண்டி காலையிலிருந்து இரவு வரைக்கும் அங்கேயே நிற்க வேண்டும். அலைகடலென திரண்டு வரும் சின்னம்மாவின் ஆதரவாளர்கள் யாரையும் விடாமல் படம் பிடுத்து பேட்டி எடுத்து போட வேண்டுமென்பது மேலிடத்திம் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம். டிடிவி முகாமிலிருந்து விலகிய ஜீவிதா நாச்சியார் சம்பந்தப்பட்ட இந்த சேனலில் சின்னம்மா குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைவாகப் பேசிவிட்டு பக்கத்து சேனலில் அதிகம் பேசிவிட்டதால் சசி டென்ஷாகிவிட்டதாக கிசுகிசுத்துக் கொண்டனர் ஜெயலிலதா இல்லத்தில். அதனால் இன்றைக்கு மட்டும் அந்த தனியார் இலை சேனலில் 6 கேமரா மேன்கள் 3 ரிப்போர்ட்டர்கள் என முழு பலத்தையும் கவரேஜூக்கு இறக்கியிருக்கிறார்கள். மதுரையிலிருந்து வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வந்திருந்தார். எல்லா சேனல்களுக்கும் பொதுவாக அவர் பேசிவிட, அதில் கொஞ்சம் பன்ச் மிஸ் ஆவதை கவனித்த சசியின் உதவியாளர்கள், 'நம்ம சேனல வரை வைக்குறோம். ரெண்டு மூணு பிட்டு சேர்த்து போடுங்க' என பசும்பொன் பாண்டியனின் காதில் கிசுகிசுத்தனர். அதுக்கென்ன சிறப்பா செய்திடுவோம்...என இலை மைக்கைப் பிடித்த பசும்பொன் பாண்டியன், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க அம்மா இறந்துட்டாங்க. நான் எத்தனையோ அரசியல்வாதிங்க கூட பழகிருக்கேன். ஆனா, சின்னம்மாதான் எனக்கு உடனே போன் போட்டாங்க. 'கவலைப்படாதீங்க பாண்டியன். அரசியல் சூழல் பரபரப்பா இருக்கு. நானும் பிஸியா இருக்கேன். இல்லன்னா நேர்ல வந்திருப்பேன். நீங்க குடும்பத்தோட சென்னைக்கு நேர்ல வாங்க. சசிகலா ஆதரவாளர்கள் நான் ஆறுதல் சொல்றேன் என்றார்' என பாண்டியன் எமோஷனல் ஆக, நமக்கு ஆஹா இது அதுல்ல... என பனையூர் தலைவரின் ரெசார்ட் ஆறுதல் நியாபகம் வந்தது. 'ஆறுதல் பெற்றுவிட்டு அரசியல் பேசினோம்' என்றவர். 'சின்னம்மா கை காட்டுற்வர்தான் சி.எம். டிடிவியெல்லாம் ஒரு துரோகிங்க. அதிமுகவை அழிக்கலாம்னு பாஜக நினைக்குது. சின்னம்மா இருக்குற வரைக்கும் அது முடியாது. டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு புரட்சித் தாய் பாடம் புகட்டுவார்' என எக்கச்சக்க பிட்டுகளை சேர்த்துப் போட சசியின் ஆதரவாளர்களே கொஞ்சம் வெடவெடத்து விட்டனர். சசியின் சந்திப்பு நடந்த இல்லத்துக்குள் செல்ல இரண்டே இரண்டு பாஸ்தான். ஒன்று இலை டிவியாக இருக்க வேண்டும் அல்லது வெள்ளைச் சட்டை போட்டிருக்க வேண்டும். 'அம்மாவுக்காக நான் பாட்டு போட்டிருக்கேன். படம் பண்ணிருக்கேன். அந்த எடப்பாடி என்னயவே போட்டுத் தள்ள பார்க்குறான். அவனுக்கு நான் போட்டியா வந்துடுவன்னு பயம். அவனுக்கு அரசியல்னா என்னன்னு காட்டாம விடமாட்டேன். இதுசம்பந்தமா சின்னம்மாவை சந்திச்சு பேசப்போறேன்' என 'தங்கத்தலைவி புரட்சித்தலைவி அம்மா' என ஒரு பாடலை போனில் நமக்கு போட்டுக்காட்டிவிட்டு சசியை சந்திக்க உள்ளே சென்றார். வெள்ளைச் சட்டை போட்டிருந்ததால் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் உள்ளே விட்டு விட்டார்கள். நல்லவேளையாக நாம் கலர் சட்டை போட்டிருந்தோம்! சசிகலா வீடு இன்றும் தன்னுடைய முரட்டு ஆதரவாளர்களின் சந்திப்பை சசிகலா தொடரவிருப்பதாக சொல்கிறார்கள். போயஸ்கார்டன் பக்கமாக செல்பவர்கள் வெள்ளைச்சட்டையை தவிர்ப்பது நல்லது!

விகடன் 12 Feb 2026 6:45 am

இந்த டீலிங் நல்லா இருக்கு..?

கார்ட்டூன்

விகடன் 12 Feb 2026 5:49 am

இந்த டீலிங் நல்லா இருக்கு..?

கார்ட்டூன்

விகடன் 12 Feb 2026 5:49 am

குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்னொரு குண்டை வீசியிருக்கிறார். திகைக்கும் கதர் சட்டைகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என களமாடிக் கொண்டிருந்த கதர் சட்டைகளெல்லாம் திகைத்துப் போய் நிற்கின்றனர். ஸ்டாலின் - ராகுல் காந்தி 'ராகுல் அரசியலைக் கடந்து என்னுடைய சகோதரர்' என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? நிலவரம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? “ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள் போன்றவற்றைக் கேட்பதற்கு காங்கிரஸிற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொடுப்பது கூட்டணிக் கட்சிகளின் தலைமையிடம் தான் இருக்கிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் பங்கு என்ற விஷயத்திற்கு ‘NO’ என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கறார் இன்று கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று ஸ்டாலினும் ஓப்பனாக சொல்லிவிட்டார்.  நேற்று டெல்லியில்  நடத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், தேர்தல் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தியிருக்கிறது.  ஆனால் திமுகவிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. மாநாடுகளை நடந்தி வருகிறார்கள். பல திட்டங்களை நிறைவேற்றி திறப்பு விழாவை நடந்தி வருகிறார்கள். ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் திமுக-விற்கு கட்டாயம் இருக்கிறதா என்ன?  தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் திமுக கவனம் செலுத்துவதால், குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  கடந்த முறை ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது பிப்ரவரியில் தான் தேர்தல் குழுவை அமைத்தது திமுக. திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.  காங்கிரஸ் குழு அமைத்ததால் திமுகவும் குழு அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?  ரியாக்ட் செய்த மாணிக்கம் தாகூர் மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கிறது என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருக்கிறார்களே தவிர இணைந்து ஆட்சி அமைத்தது இல்லை. 2006-தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆதரவோடு திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தரவில்லை. காங்கிரஸிடம் இருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று பேசியிருக்கிறார். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே மாணிக்கம் தாகூர் ரியாக்ட் செய்திருக்கிறார். 2006- ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இண்டி கூட்டணி - திமுக உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால் இந்தக் கேள்வியை சோனியா காந்தியிடம் தான் அவர் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்று தெரியாது. அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் திமுக சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. நம்பிக்கையான தோழனாக இருக்கிறது. இந்தச் சூழலில் இண்டி கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டால் அந்தக் கூட்டணி வலிமையை இழந்துவிடும். திமுக-விற்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் மோடியை அகில இந்திய அளவில் காங்கிரஸ் எதிர்ப்பது நீர்த்துப்போய் விடும். அதனால் இந்த விஷயத்தை சரியாகக் கையாள வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு.  மாணிக்கம் தாகூருக்கு அவரது தொகுதியில் திமுகவுடன் பிரச்னை, ஜோதிமணிக்கு செந்தில் பாலாஜியுடன் பிரச்னை, பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மாயவரம் சீட்டை கொடுக்கவில்லை என்பது பிரச்னை. தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.  தற்போதே எவ்வளவு சீட்டுகள் கொடுக்கும் என்பதை திமுக உறுதிப்படுத்திவிட்டால் காங்கிரஸ் அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும்.  முதல்வர் ஸ்டாலின் திமுக ஏன் தாமதம் செய்கிறது? குறைவான சீட்டுகளை தந்தால் தவெகவிற்கு தாவி விடலாம் என்று காங்கிரஸ் நினைப்பதால் தான் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.  இயல்பாகவே திமுக தேர்தல் குழுவை தாமதமாகத்தான் அமைப்பார்கள். இப்போது ஆளுங்கட்சியாக பல வேலைகள் அவர்களுக்கு இருப்பதால் இன்னும் தாமதமாக அமைக்கிறார்கள்” என்று நம்மிடம் விளக்கினார்.

விகடன் 11 Feb 2026 8:00 pm

குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்னொரு குண்டை வீசியிருக்கிறார். திகைக்கும் கதர் சட்டைகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என களமாடிக் கொண்டிருந்த கதர் சட்டைகளெல்லாம் திகைத்துப் போய் நிற்கின்றனர். ஸ்டாலின் - ராகுல் காந்தி 'ராகுல் அரசியலைக் கடந்து என்னுடைய சகோதரர்' என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? நிலவரம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? “ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள் போன்றவற்றைக் கேட்பதற்கு காங்கிரஸிற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொடுப்பது கூட்டணிக் கட்சிகளின் தலைமையிடம் தான் இருக்கிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் பங்கு என்ற விஷயத்திற்கு ‘NO’ என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கறார் இன்று கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று ஸ்டாலினும் ஓப்பனாக சொல்லிவிட்டார்.  நேற்று டெல்லியில்  நடத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், தேர்தல் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தியிருக்கிறது.  ஆனால் திமுகவிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. மாநாடுகளை நடந்தி வருகிறார்கள். பல திட்டங்களை நிறைவேற்றி திறப்பு விழாவை நடந்தி வருகிறார்கள். ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் திமுக-விற்கு கட்டாயம் இருக்கிறதா என்ன?  தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் திமுக கவனம் செலுத்துவதால், குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  கடந்த முறை ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது பிப்ரவரியில் தான் தேர்தல் குழுவை அமைத்தது திமுக. திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.  காங்கிரஸ் குழு அமைத்ததால் திமுகவும் குழு அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?  ரியாக்ட் செய்த மாணிக்கம் தாகூர் மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கிறது என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருக்கிறார்களே தவிர இணைந்து ஆட்சி அமைத்தது இல்லை. 2006-தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆதரவோடு திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தரவில்லை. காங்கிரஸிடம் இருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று பேசியிருக்கிறார். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே மாணிக்கம் தாகூர் ரியாக்ட் செய்திருக்கிறார். 2006- ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இண்டி கூட்டணி - திமுக உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால் இந்தக் கேள்வியை சோனியா காந்தியிடம் தான் அவர் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்று தெரியாது. அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் திமுக சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. நம்பிக்கையான தோழனாக இருக்கிறது. இந்தச் சூழலில் இண்டி கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டால் அந்தக் கூட்டணி வலிமையை இழந்துவிடும். திமுக-விற்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் மோடியை அகில இந்திய அளவில் காங்கிரஸ் எதிர்ப்பது நீர்த்துப்போய் விடும். அதனால் இந்த விஷயத்தை சரியாகக் கையாள வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு.  மாணிக்கம் தாகூருக்கு அவரது தொகுதியில் திமுகவுடன் பிரச்னை, ஜோதிமணிக்கு செந்தில் பாலாஜியுடன் பிரச்னை, பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மாயவரம் சீட்டை கொடுக்கவில்லை என்பது பிரச்னை. தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.  தற்போதே எவ்வளவு சீட்டுகள் கொடுக்கும் என்பதை திமுக உறுதிப்படுத்திவிட்டால் காங்கிரஸ் அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும்.  முதல்வர் ஸ்டாலின் திமுக ஏன் தாமதம் செய்கிறது? குறைவான சீட்டுகளை தந்தால் தவெகவிற்கு தாவி விடலாம் என்று காங்கிரஸ் நினைப்பதால் தான் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.  இயல்பாகவே திமுக தேர்தல் குழுவை தாமதமாகத்தான் அமைப்பார்கள். இப்போது ஆளுங்கட்சியாக பல வேலைகள் அவர்களுக்கு இருப்பதால் இன்னும் தாமதமாக அமைக்கிறார்கள்” என்று நம்மிடம் விளக்கினார்.

விகடன் 11 Feb 2026 8:00 pm

`ராஜா என்னுடைய பிள்ளை; யாரோ ஒரு தாய், தவறான கணிப்பிலே.!' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி குறித்து ராஜா கேள்வியெழுப்பியதாக, சர்ச்சைக் கிளம்பியிருக்கிறது. `சாதி' சர்ச்சை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. `சாதி கேட்பது தமிழர்களின் பழக்கமே கிடையாது. உணவு பரிமாறுபவரிடம் உணவு குறித்துதான் கேட்க வேண்டுமே தவிர, அந்த இடத்தில் சாதி குறித்து கேட்க வேண்டிய அவசியம்?' எனப் பலரும் ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ‘பட்டிமன்றம்’ ராஜா அதைத் தொடர்ந்து, ராஜா இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், `சாதி குறித்து கேட்கும் அளவுக்குச் சிறிய புத்தி எனக்கு இல்லை. உணவு பரிமாறியவர் தன்னுடைய ஊர் காரைக்குடி எனக் கூறினார். அதனால் செட்டிநாடா என்று கேட்டதாகத்தான் நியாபகம். சாதி குறித்தெல்லாம் கேட்கவில்லை' என்று விளக்கம் அளித்திருந்தார். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. `சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறையில் சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம். சாலமன் பாப்பையா எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன், எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது - சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா

விகடன் 11 Feb 2026 7:08 pm

புதுச்சேரி: போலீஸ் தடியடி... எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! - நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். இதற்கிடையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றனர். புதுச்சேரி போலீஸ் தடியடி அந்த தகவலை கேள்விப்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, முதல்வர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிடுவதற்காக முன்னேறினர். ஆனால் அவர்களை சுமார் 100 அடிகளுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய போலீஸார், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதையடுத்து போராட்டக்காரர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் சாலை மறியலில் அமர்ந்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது. போராட்டக்கார்கள் மீது தடியடி... போலீஸார் மீது தாக்குதல் அதில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில போலீஸார் கீழே விழுந்தார்கள். அதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையடுத்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன்பிறகு வாயில் ரத்தம் வழிந்தபடி கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்த போராட்டக்காரர்கள், போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். அப்போது அவருக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சென்றார் ஒதியன்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜ். அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்க ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள். காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போராட்டக்காரர்கள் அதையடுத்து பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீண்டும் தடியடி நடத்தி அவரை மீட்டனர். இந்த சம்பவங்களால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, ``சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதாக இருந்த கவர்னர் மற்றும் முதல்வர் வரும் வழிகளை மறிப்பதற்காக போராட்டக்காரர்கள் தயாராக இருந்தனர். அது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் கவர்னரை வேறு வழியில் அழைத்துச் சென்றோம். அதற்குப் பிறகு வந்த முதலமைச்சரை முற்றுகையிட முயற்சி செய்தார்கள். அவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம். `அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன...’ அதன்பிறகு ஒருமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அவர்களை கைதாகுங்கள் என்றோம். அப்போது, `எங்களுக்கு இரண்டு பஸ்கள் வேண்டும். அப்போதுதான் வருவோம்’ என்றார்கள். அதனடிப்படையில் இன்னொரு பஸ்சை வரவழைத்தோம். ஆனால் மறுபடியும் அவர்கள், `எங்களுக்கு 10 பஸ்கள் வேண்டும். அப்போதுதான் நாங்கள் கைதாவோம்’ என்றார்கள். அவர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்ட நாங்கள், போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தோம். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார் சிலரை தாக்கி கீழே தள்ளினார்கள். மருத்துவமனையில் போலீஸார் அதன்பிறகுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக லேசான தடியடி நடத்தினோம். அப்போது வலிப்பு வந்து கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்து, போலீஸ் தாக்கியதால்தான் அவருக்கு அடிபட்டது என்று கோஷமிட்டார்கள். யாருக்கு அடிபட்டது என்று பார்ப்பதற்காக சென்ற ஒதியஞ்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜை கடுமையாக தாக்கினார்கள். அத்துடன் அவரை தனியாக தூக்கிக் கொண்டு போய் அடித்தார்கள். ஆனால் வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தவர் வேறு திசையில் இருந்தார். நாங்கள் வேறு திசையில் இருந்தோம். அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தானாக கீழே விழுந்த ஒருவரை போலீஸார் தாக்கியதாக தகவல் பரப்ப முயற்சிக்கிறார்கள்” என்றார். இதுகுறித்துப் பேச போராட்டக் குழுவின் தலைவர் சரவணனின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

விகடன் 11 Feb 2026 6:37 pm

புதுச்சேரி: போலீஸ் தடியடி... எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! - நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். இதற்கிடையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றனர். புதுச்சேரி போலீஸ் தடியடி அந்த தகவலை கேள்விப்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, முதல்வர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிடுவதற்காக முன்னேறினர். ஆனால் அவர்களை சுமார் 100 அடிகளுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய போலீஸார், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதையடுத்து போராட்டக்காரர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் சாலை மறியலில் அமர்ந்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது. போராட்டக்கார்கள் மீது தடியடி... போலீஸார் மீது தாக்குதல் அதில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில போலீஸார் கீழே விழுந்தார்கள். அதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையடுத்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன்பிறகு வாயில் ரத்தம் வழிந்தபடி கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்த போராட்டக்காரர்கள், போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். அப்போது அவருக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சென்றார் ஒதியன்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜ். அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்க ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள். காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போராட்டக்காரர்கள் அதையடுத்து பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீண்டும் தடியடி நடத்தி அவரை மீட்டனர். இந்த சம்பவங்களால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, ``சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதாக இருந்த கவர்னர் மற்றும் முதல்வர் வரும் வழிகளை மறிப்பதற்காக போராட்டக்காரர்கள் தயாராக இருந்தனர். அது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் கவர்னரை வேறு வழியில் அழைத்துச் சென்றோம். அதற்குப் பிறகு வந்த முதலமைச்சரை முற்றுகையிட முயற்சி செய்தார்கள். அவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம். `அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன...’ அதன்பிறகு ஒருமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அவர்களை கைதாகுங்கள் என்றோம். அப்போது, `எங்களுக்கு இரண்டு பஸ்கள் வேண்டும். அப்போதுதான் வருவோம்’ என்றார்கள். அதனடிப்படையில் இன்னொரு பஸ்சை வரவழைத்தோம். ஆனால் மறுபடியும் அவர்கள், `எங்களுக்கு 10 பஸ்கள் வேண்டும். அப்போதுதான் நாங்கள் கைதாவோம்’ என்றார்கள். அவர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்ட நாங்கள், போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தோம். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார் சிலரை தாக்கி கீழே தள்ளினார்கள். மருத்துவமனையில் போலீஸார் அதன்பிறகுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக லேசான தடியடி நடத்தினோம். அப்போது வலிப்பு வந்து கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்து, போலீஸ் தாக்கியதால்தான் அவருக்கு அடிபட்டது என்று கோஷமிட்டார்கள். யாருக்கு அடிபட்டது என்று பார்ப்பதற்காக சென்ற ஒதியஞ்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜை கடுமையாக தாக்கினார்கள். அத்துடன் அவரை தனியாக தூக்கிக் கொண்டு போய் அடித்தார்கள். ஆனால் வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தவர் வேறு திசையில் இருந்தார். நாங்கள் வேறு திசையில் இருந்தோம். அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தானாக கீழே விழுந்த ஒருவரை போலீஸார் தாக்கியதாக தகவல் பரப்ப முயற்சிக்கிறார்கள்” என்றார். இதுகுறித்துப் பேச போராட்டக் குழுவின் தலைவர் சரவணனின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

விகடன் 11 Feb 2026 6:37 pm

TN மக்கள் எதிர்பார்க்கும் UPDATE

TN மக்கள் எதிர்பார்க்கும் UPDATE

சமயம் 11 Feb 2026 6:26 pm

அல்வா நகரத்துக்கு வந்த சோதனை!

அல்வா நகரத்துக்கு வந்த சோதனை!

சமயம் 11 Feb 2026 6:21 pm

விஜய் வழக்கில் உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

விஜய் வழக்கில் உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

சமயம் 11 Feb 2026 6:17 pm

விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்

அதிமுக Vs அமமுக மல்லுக்கட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், இரண்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காமல் அதிமுக முரண்டு பிடித்து வருவது அந்தக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுஒருபுறம் இருக்க திமுக-வில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் சமூக கணக்கை முன்வைத்து நடைபெறும் அரசியல் அந்தக் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் விஐபி தொகுதியாக உடுமலைப்பேட்டை பார்க்கப்படுகிறது. திமுக-வின் பொருளாளராக நீண்டகாலம் இருந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா, அதிமுக-வில் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய உடுமலைப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உடுமலைப்பேட்டை  1951-ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் 8 முறை அதிமுக-வும், 4 முறை திமுக-வும், காங்கிரஸ் மூன்று முறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், உடுமலைப்பேட்டை தொகுதியையொட்டி உள்ள மடத்துக்குளம் தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இரண்டு முறை அதிமுக-வும், ஒருமுறை திமுக-வும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-வின் கோட்டையாக பார்க்கப்படும் உடுமலைப்பேட்டை தொகுதியில் அறிவிக்கப்படாத வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ-வான சி.மகேந்திரனும் தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள், பரிசுப் பொருள்கள் என தீவிரமாக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதிமுக-வில் அமைச்சராக இருந்தவரும், தற்போது அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் சி.சண்முகவேல் இரண்டு தொகுதிகளில் ஒன்றை குறிவைத்துள்ளது, அதிமுக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மகேந்திரன், ராதாகிருஷ்ணன், சண்முகவேல் விட்டுக் கொடுக்காத அதிமுக இது குறித்து அதிமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், சண்முகவேல் ஏற்கெனவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் இரண்டு முறையும், மடத்துக்குளத்தில் ஒருமுறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் என்பதால், இரண்டு தொகுதிக்குள்ளும் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. கடந்த 2021 தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு சண்முகவேல் தோல்வியைத் தழுவினார். இந்த முறை அமமுக தனித்துப் போட்டியிட்டால், தேர்தலில் நிற்கப்போவதில்லை என்ற முடிவில் இருந்த சண்முகவேல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததை அடுத்து, உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சண்முகவேல் உள்ளார். எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி. தினகரன் இதற்காக உடுமலை - பழனி சாலையில் அலுவலகத்தையும் சண்முகவேல் திறந்துள்ளார். சண்முகவேலுவின் வருகை அதிமுக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பாகவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் மகேந்திரனும் பிரசாரம், நலத்திட்ட உதவிகள் என தடபுடலாக செலவு செய்யத் தொடங்கிவிட்டனர். உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்று சண்முகவேல், டிடிவி தினகரன் மூலம் தீவிரமாக காய் நகர்த்துகிறார். அந்த இரண்டு தொகுதிகளுக்கும் சண்முகவேல் விருப்ப மனு கொடுத்துள்ளார். சண்முகவேல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்பதாலும், மேற்கு மண்டலத்தில் தங்களுக்கான ஒரு பிடிப்பு இருக்க வேண்டும் என்று தினகரன் நினைப்பதாலும், எப்படியாவது சண்முகவேலுக்கு இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஒரு பக்கம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மூலமும், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போது இணைக்கமாகச் செல்வதால் அதை வைத்தும் உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை சண்முகவேலுவுக்கு பெற்றுவிட வேண்டும் என்பதுதான் டி.டி.வி.தினகரனின் திட்டமாக உள்ளது. சண்முகவேலுவுக்கு உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதி ஒதுக்கினால், அது தங்களுடைய இருப்புக்கு பாதிப்பாக இருக்கும் என ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். உடுமலைப்பேட்டை தொகுதியை தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளார் ராதாகிருஷ்ணன். அதேவேளை மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு ஒதுக்கிவிட்டு, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ-வான மகேந்திரனுக்கு வரும் தேர்தலில் எம்.பி சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை யோசித்து வந்தது. இதை அறிந்து கொண்ட மகேந்திரன் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன் பங்குக்கு ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அனைத்தையும் கேட்டுவிட்டு நம்பிக்கையுடன் செல்லுமாறு மகேந்திரனிடம் கூறியுள்ளதால், தற்போது அவர் உற்சாகத்தில் உள்ளார். இதையும் மீறி இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை அமமுக-வுக்கு ஒதுக்கினால், தேர்தல் வேலை செய்யமாட்டோம் என வெளிப்படையாகவே அதிமுக தலைமையிடம் அதிருப்தியை காட்டத் தொடங்கி உள்ளனர், அதிமுக நிர்வாகிகள். இதை கவனமாக பரிசீலித்த அதிமுக தலைமை உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதான். இரு கட்சியினரிடையே புகைச்சல் அதேவேளை அமமுக சண்முகவேலுவை பல்லடம் தொகுதிக்கு தள்ளிவிட ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். பல்லடம் தொகுதிக்கு சண்முகவேல் செல்லும்பட்சத்தில் தேர்தல் செலவைக்கூட இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துள்ளனராம். ஆனால், உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் இந்த இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியை கொடுத்தால் போட்டியிடுகிறேன். இல்லையென்றால் தேர்தலிலேயே நான் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரனிடம் கண்டிப்பாக சண்முகவேல் தெரிவித்துவிட்டாராம். இதனால், இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக-வுக்கும், அமமுக-வுக்கும் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுக-வினர். சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! இதுஒருபுறம் இருக்க திமுக-வில் சமூக கணக்குகளை முன்னிறுத்தி நடைபெறும் அரசியல் அக்கட்சி வட்டாரத்துக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்துக்கு இந்தமுறை உடுமலைப்பேட்டை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடிமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி களத்தில் இறங்கியுள்ளார். அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு வந்த முரளி இந்த அஜண்டாவை முன்வைத்து சைலன்ட்டாக பணியாற்றுவது, திமுக-வில் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதையடுத்து, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோரை முரளி அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அனிதா, ஜெயக்குமார், அடிவள்ளி முரளி, ஜெயராமகிருஷ்ணன். இது திமுக-வில் இருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வான தம்பு என்கிற செல்வராஜின் மகளுமான அனிதா, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரனை நேரில் சந்தித்து தாங்கள் இல்லாமல் முதல்வரைச் சந்தித்தது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால், இந்த அரசியலுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என கம்மவர் நாயுடு சங்கம் முடிவெடுத்துள்ளது. உடுமலைப்பேட்டையைவிட மடத்துக்குளத்தில்தான் நாயுடு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். எனவே, அந்த நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு மடத்துக்குளம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரான அனிதா ஆகிய இருவரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். திமுக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மு.ஜெயக்குமார் உடுமலைப்பேட்டை தொகுதியையும், மாவட்ட அவைத் தலைவரான ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் தொகுதியையும் பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் உள்ள ஜெயக்குமாருக்கு இந்த முறை உடுமலைப்பேட்டை தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடுவதால் அவர் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். அமைச்சர் சக்ரபாணியின் ஆதரவாளரான ஜெயராமகிருஷ்ணன் மீது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சரியாக செயல்படாதது, தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், கட்சித் தலைமையும் அவருக்கு மடத்துக்குளம் ஒதுக்கலாமா? வேண்டாமா? என பரிசீலித்து வருகிறது. அதேவேளை, மடத்துக்குளத்தில் பலமாக உள்ள அதிமுக-வை எதிர்த்து பெண் வேட்பாளரான அனிதாவை களமிறக்கினால், நாயுடு சமூகத்தினருக்கு பிரதிநித்துவம் அளித்தாற்போல் ஆகிவிடுவதுடன், அந்த சமூகத்தினருக்கு உள்ள அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என திமுக தலைமை நினைக்கிறது. என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், சீட்டை பெறுவதில் கட்சிபேதமின்றி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதியில் களேபரங்கள் நடைபெற்று வருகின்றன.

விகடன் 11 Feb 2026 6:14 pm

விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்

அதிமுக Vs அமமுக மல்லுக்கட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், இரண்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காமல் அதிமுக முரண்டு பிடித்து வருவது அந்தக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுஒருபுறம் இருக்க திமுக-வில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் சமூக கணக்கை முன்வைத்து நடைபெறும் அரசியல் அந்தக் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் விஐபி தொகுதியாக உடுமலைப்பேட்டை பார்க்கப்படுகிறது. திமுக-வின் பொருளாளராக நீண்டகாலம் இருந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா, அதிமுக-வில் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய உடுமலைப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உடுமலைப்பேட்டை  1951-ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் 8 முறை அதிமுக-வும், 4 முறை திமுக-வும், காங்கிரஸ் மூன்று முறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், உடுமலைப்பேட்டை தொகுதியையொட்டி உள்ள மடத்துக்குளம் தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இரண்டு முறை அதிமுக-வும், ஒருமுறை திமுக-வும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-வின் கோட்டையாக பார்க்கப்படும் உடுமலைப்பேட்டை தொகுதியில் அறிவிக்கப்படாத வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ-வான சி.மகேந்திரனும் தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள், பரிசுப் பொருள்கள் என தீவிரமாக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதிமுக-வில் அமைச்சராக இருந்தவரும், தற்போது அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் சி.சண்முகவேல் இரண்டு தொகுதிகளில் ஒன்றை குறிவைத்துள்ளது, அதிமுக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மகேந்திரன், ராதாகிருஷ்ணன், சண்முகவேல் விட்டுக் கொடுக்காத அதிமுக இது குறித்து அதிமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், சண்முகவேல் ஏற்கெனவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் இரண்டு முறையும், மடத்துக்குளத்தில் ஒருமுறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் என்பதால், இரண்டு தொகுதிக்குள்ளும் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. கடந்த 2021 தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு சண்முகவேல் தோல்வியைத் தழுவினார். இந்த முறை அமமுக தனித்துப் போட்டியிட்டால், தேர்தலில் நிற்கப்போவதில்லை என்ற முடிவில் இருந்த சண்முகவேல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததை அடுத்து, உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சண்முகவேல் உள்ளார். எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி. தினகரன் இதற்காக உடுமலை - பழனி சாலையில் அலுவலகத்தையும் சண்முகவேல் திறந்துள்ளார். சண்முகவேலுவின் வருகை அதிமுக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பாகவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் மகேந்திரனும் பிரசாரம், நலத்திட்ட உதவிகள் என தடபுடலாக செலவு செய்யத் தொடங்கிவிட்டனர். உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்று சண்முகவேல், டிடிவி தினகரன் மூலம் தீவிரமாக காய் நகர்த்துகிறார். அந்த இரண்டு தொகுதிகளுக்கும் சண்முகவேல் விருப்ப மனு கொடுத்துள்ளார். சண்முகவேல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்பதாலும், மேற்கு மண்டலத்தில் தங்களுக்கான ஒரு பிடிப்பு இருக்க வேண்டும் என்று தினகரன் நினைப்பதாலும், எப்படியாவது சண்முகவேலுக்கு இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஒரு பக்கம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மூலமும், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போது இணைக்கமாகச் செல்வதால் அதை வைத்தும் உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை சண்முகவேலுவுக்கு பெற்றுவிட வேண்டும் என்பதுதான் டி.டி.வி.தினகரனின் திட்டமாக உள்ளது. சண்முகவேலுவுக்கு உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதி ஒதுக்கினால், அது தங்களுடைய இருப்புக்கு பாதிப்பாக இருக்கும் என ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். உடுமலைப்பேட்டை தொகுதியை தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளார் ராதாகிருஷ்ணன். அதேவேளை மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு ஒதுக்கிவிட்டு, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ-வான மகேந்திரனுக்கு வரும் தேர்தலில் எம்.பி சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை யோசித்து வந்தது. இதை அறிந்து கொண்ட மகேந்திரன் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன் பங்குக்கு ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அனைத்தையும் கேட்டுவிட்டு நம்பிக்கையுடன் செல்லுமாறு மகேந்திரனிடம் கூறியுள்ளதால், தற்போது அவர் உற்சாகத்தில் உள்ளார். இதையும் மீறி இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை அமமுக-வுக்கு ஒதுக்கினால், தேர்தல் வேலை செய்யமாட்டோம் என வெளிப்படையாகவே அதிமுக தலைமையிடம் அதிருப்தியை காட்டத் தொடங்கி உள்ளனர், அதிமுக நிர்வாகிகள். இதை கவனமாக பரிசீலித்த அதிமுக தலைமை உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதான். இரு கட்சியினரிடையே புகைச்சல் அதேவேளை அமமுக சண்முகவேலுவை பல்லடம் தொகுதிக்கு தள்ளிவிட ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். பல்லடம் தொகுதிக்கு சண்முகவேல் செல்லும்பட்சத்தில் தேர்தல் செலவைக்கூட இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துள்ளனராம். ஆனால், உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் இந்த இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியை கொடுத்தால் போட்டியிடுகிறேன். இல்லையென்றால் தேர்தலிலேயே நான் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரனிடம் கண்டிப்பாக சண்முகவேல் தெரிவித்துவிட்டாராம். இதனால், இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக-வுக்கும், அமமுக-வுக்கும் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுக-வினர். சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! இதுஒருபுறம் இருக்க திமுக-வில் சமூக கணக்குகளை முன்னிறுத்தி நடைபெறும் அரசியல் அக்கட்சி வட்டாரத்துக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்துக்கு இந்தமுறை உடுமலைப்பேட்டை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடிமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி களத்தில் இறங்கியுள்ளார். அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு வந்த முரளி இந்த அஜண்டாவை முன்வைத்து சைலன்ட்டாக பணியாற்றுவது, திமுக-வில் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதையடுத்து, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோரை முரளி அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அனிதா, ஜெயக்குமார், அடிவள்ளி முரளி, ஜெயராமகிருஷ்ணன். இது திமுக-வில் இருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வான தம்பு என்கிற செல்வராஜின் மகளுமான அனிதா, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரனை நேரில் சந்தித்து தாங்கள் இல்லாமல் முதல்வரைச் சந்தித்தது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால், இந்த அரசியலுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என கம்மவர் நாயுடு சங்கம் முடிவெடுத்துள்ளது. உடுமலைப்பேட்டையைவிட மடத்துக்குளத்தில்தான் நாயுடு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். எனவே, அந்த நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு மடத்துக்குளம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரான அனிதா ஆகிய இருவரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். திமுக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மு.ஜெயக்குமார் உடுமலைப்பேட்டை தொகுதியையும், மாவட்ட அவைத் தலைவரான ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் தொகுதியையும் பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் உள்ள ஜெயக்குமாருக்கு இந்த முறை உடுமலைப்பேட்டை தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடுவதால் அவர் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். அமைச்சர் சக்ரபாணியின் ஆதரவாளரான ஜெயராமகிருஷ்ணன் மீது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சரியாக செயல்படாதது, தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், கட்சித் தலைமையும் அவருக்கு மடத்துக்குளம் ஒதுக்கலாமா? வேண்டாமா? என பரிசீலித்து வருகிறது. அதேவேளை, மடத்துக்குளத்தில் பலமாக உள்ள அதிமுக-வை எதிர்த்து பெண் வேட்பாளரான அனிதாவை களமிறக்கினால், நாயுடு சமூகத்தினருக்கு பிரதிநித்துவம் அளித்தாற்போல் ஆகிவிடுவதுடன், அந்த சமூகத்தினருக்கு உள்ள அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என திமுக தலைமை நினைக்கிறது. என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், சீட்டை பெறுவதில் கட்சிபேதமின்றி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதியில் களேபரங்கள் நடைபெற்று வருகின்றன.

விகடன் 11 Feb 2026 6:14 pm

விருகம்பாக்கம் யார் கோட்டை?

விருகம்பாக்கம் யார் கோட்டை?

சமயம் 11 Feb 2026 6:08 pm

தினம் தினம் புதுப்புது வியூகம் வகுக்கும் திமுக- Decoded

தினம் தினம் புதுப்புது வியூகம் வகுக்கும் திமுக- Decoded

சமயம் 11 Feb 2026 5:03 pm

காத்து வாங்கிய தேமுதிக அலுவலகம்! கூட்டணி அறிவிப்பு எப்போது

காத்து வாங்கிய தேமுதிக அலுவலகம்! கூட்டணி அறிவிப்பு எப்போது

சமயம் 11 Feb 2026 4:57 pm

விஜய் அரசியல் பற்றி கேட்ட ரஜினி_ Arjuna moorthy interview

விஜய் அரசியல் பற்றி கேட்ட ரஜினி_ Arjuna moorthy interview

சமயம் 11 Feb 2026 4:49 pm

தொழுநோயாளிகளுடன் அடைத்தனர்!மனம் திறந்த stalin

தொழுநோயாளிகளுடன் அடைத்தனர்!மனம் திறந்த stalin

சமயம் 11 Feb 2026 4:46 pm

BL சந்தோஷ் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் வியூகம் என்ன Explained

BL சந்தோஷ் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் வியூகம் என்ன Explained

சமயம் 11 Feb 2026 4:42 pm

ரிவர்ஸ் கியரில் காங்கிரஸ்_ சம்பவம் செய்யும் திமுக

ரிவர்ஸ் கியரில் காங்கிரஸ்_ சம்பவம் செய்யும் திமுக

சமயம் 11 Feb 2026 4:35 pm

விசிக-காங்கிரஸ் சர்ச்சை! அதிர்ச்சியில் திமுக

விசிக-காங்கிரஸ் சர்ச்சை! அதிர்ச்சியில் திமுக

சமயம் 11 Feb 2026 4:30 pm

கடைசி நேரத்தில் மாறிய கணக்கு

கடைசி நேரத்தில் மாறிய கணக்கு

சமயம் 11 Feb 2026 4:27 pm

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா? - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3'செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரின் உரையில், ``இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சமநிலையற்றதாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தவர் போலவும் மற்றொருவர் அவருக்கு கீழ் இருப்பவர் போலவும் இருக்கிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுமாதிரியாக இருந்திருக்கும். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு டாலரின் மதிப்பு முக்கியம் என்றால், அதற்கான தீர்வு இந்திய மக்களிடம் உள்ள தரவுதான். எனவே, அந்தத் தரவை அமெரிக்காவிற்கு வழங்குவதற்குப் பதிலாக, அதை வைத்து நாம் அமெரிக்காவுடன் சம உரிமையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அடிமையாகச் சரணடையக் கூடாது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை பிரதமர் மோடியோ அல்லது அவரது அமைச்சர்களோ உறுதிப்படுத்தாத உண்மை, இது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. ஆனால், இப்போது நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நமது பிரதமர் அதை வேடிக்கைப் பார்க்கிறார். அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேபோல், நம் விவசாயிகளையும் நாம் பாதுக்க வேண்டுமல்லவா... எனவே, பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவைக் கருதும் ட்ரம்ப்பிடம், பாகிஸ்தானுக்கு சமமாக மாற்றப்பட மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து, நம் விவசாயிகளின் நலன் காக்க வலியுறுத்தியிருப்போம். இந்தியாவின் உணர்வுபூர்வமான விவசாயச் சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம், பிரதமர் மோடி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்... எங்கள் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு கதவைத் திறந்துவிட்டீர்கள் எனக் காட்டமாகப் பேசினார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``முதலில், இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ கூடிய எந்த மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவில்லை என பதிலளித்தார். நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்? - ராகுல் காந்தி கேள்வி!

விகடன் 11 Feb 2026 3:50 pm

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா? - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3'செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரின் உரையில், ``இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சமநிலையற்றதாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தவர் போலவும் மற்றொருவர் அவருக்கு கீழ் இருப்பவர் போலவும் இருக்கிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுமாதிரியாக இருந்திருக்கும். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு டாலரின் மதிப்பு முக்கியம் என்றால், அதற்கான தீர்வு இந்திய மக்களிடம் உள்ள தரவுதான். எனவே, அந்தத் தரவை அமெரிக்காவிற்கு வழங்குவதற்குப் பதிலாக, அதை வைத்து நாம் அமெரிக்காவுடன் சம உரிமையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அடிமையாகச் சரணடையக் கூடாது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை பிரதமர் மோடியோ அல்லது அவரது அமைச்சர்களோ உறுதிப்படுத்தாத உண்மை, இது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. ஆனால், இப்போது நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நமது பிரதமர் அதை வேடிக்கைப் பார்க்கிறார். அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேபோல், நம் விவசாயிகளையும் நாம் பாதுக்க வேண்டுமல்லவா... எனவே, பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவைக் கருதும் ட்ரம்ப்பிடம், பாகிஸ்தானுக்கு சமமாக மாற்றப்பட மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து, நம் விவசாயிகளின் நலன் காக்க வலியுறுத்தியிருப்போம். இந்தியாவின் உணர்வுபூர்வமான விவசாயச் சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம், பிரதமர் மோடி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்... எங்கள் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு கதவைத் திறந்துவிட்டீர்கள் எனக் காட்டமாகப் பேசினார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``முதலில், இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ கூடிய எந்த மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவில்லை என பதிலளித்தார். நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்? - ராகுல் காந்தி கேள்வி!

விகடன் 11 Feb 2026 3:50 pm

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் ‘வாவ்’ வியூகம் 5 வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக' என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ளளவும் விலக்கி வைக்க முடியாது. தான் சார்ந்த சமூகத்துக்கான போராட்டம்தான் என்றாலும் கூட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கும் ஊக்கமளித்த போராட்டமாக அமைந்ததோடு, பாமக என்ற கட்சியை தமிழகம் முழுவதும், குறிப்பாக வட தமிழகத்தில் அழுத்தமாகக் கொண்டு சேர்க்கும் வியூகமாக அமைந்தது. 1980-ம் ஆண்டில் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை அச்சங்கம் நடத்தியது. முதன்முதலாக 1980-ல் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இடஒதுக்கீடு மாநாடு நடந்தது, தொடர்ந்து, 1981 முதல் 1989 வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று வன்னிய மக்களைச் சந்தித்து சமூக நீதிப் போராட்டத்துக்கு ராமதாஸ் தயார்ப்படுத்தினார். தனியொருவனாக தான் மேற்கொண்ட அந்தப் பயணம் பற்றி இன்றளவும் பல பேட்டிகளில் ராமதாஸே பெருமிதமாகச் சொல்லி வருவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 1984-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், 1985-ல் சென்னை தீவுத் திடலில் நடந்த மாநாடு, 06.05.1986 அன்று தமிழ்நாடு முழுவதும் நடந்த ஒருநாள் சாலை மறியல் போராட்டம், பின்னர் 19.12.1986 அன்று நடந்த ஒருநாள் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்டவை வன்னியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவை. அத்தனையையும் ராமதாஸ் தன் தலைமையில் வன்னியர்களுக்காக முன்னெடுத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 21 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தப் போராட்டங்களை பதிவு செய்யும்போது, வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 17.09.1987 முதல் 23.09.1987 வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதை குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. 1980 தொடங்கி ஏழு ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் அவரைச் சந்திக்கக் கூட அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் 1987 செப்.17-ல் தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. அன்று தொட்டு ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். ராமதாஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக அரசு. ஆனால், ராமதாஸை சந்தித்த ஒரே மாதத்தில் எம்ஜிஆர் மறைந்தார். மீண்டும் தனது கோரிக்கைகள் கிடப்பில் போக, போராட்டங்களை மட்டும் ராமதாஸ் கைவிட்டுவிடவே இல்லை. இந்தச் சூழலில் தான், 1989-ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ராமதாஸும் மீண்டும் போராட்டத்தை அறிவித்தார். முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்திருந்த கருணாநிதி, ராமதாஸை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் நீட்சியாக வன்னியர் உட்பட 107 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் கொண்டுவந்து, அதற்கென 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதில் ராமதாஸ் சமரசம் அடையவில்லை. வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தார். இந்த முறை அவருக்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க, கள யதார்த்தம் புரிந்தவராக அரசியல் கட்சியை, சாதிச் சங்கமாக மட்டுமல்லாது முறையாக ஓர் அரசியல் கட்சியாகப் பரிமாணித்து எதிர்ப்பதே நலம் என்று உணர்ந்தார். விளைவு, 16.07.1989-ல் பாமக உதயமானது . பாமகவின் அரசியலுக்கு வீச்சு... திமுகவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், அரசியலில் பெரிய வீச்சைக் கொடுத்தது என்றால், ராமதாஸுக்கு பின்னாளில் பாமக ஓர் அரசியல் இயக்கமாக தன்னை கட்டமைத்ததற்கு மிகப் பெரிய உந்துவிசையாக இருந்தது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் எனலாம். ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கி கூட்டணி பேரங்களில் இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்கமாக பாமக உருவெடுக்க வைத்த பின்னணியில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் ஒரு வாவ் வியூகம்தான். அதேபோல், தமிழ் மொழியை தங்களால் மட்டுமே காக்க முடியும் என்று திமுக கூறிவந்த சூழலில் தமிழுக்கு ராமதாஸ் அளித்த முக்கியத்துவமும் அவரது கட்சிக்கு பலம் சேர்ந்தது. அவரது கட்சியின் தமிழ் ஓசை நாளிதழும், மக்கள் தொலைக்காட்சியும் குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி, தமிழ் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று அறிவிக்கச் செய்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருவான பின்னரும் பல கட்டப் போராட்டங்களை சந்தித்த நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன் வரைவு ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து 2021-ல் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம். வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன். வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த உள் ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வராமல் போனது வேறு கதை. ராமதாஸ் சாதித்தது என்ன? வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்கள் ஊடாக ராமதாஸ் சாதித்தது என்னவென்பது சற்றே திரும்பிப் பார்க்க வேண்டிய அரசியல் பாதை. அரசியல் கட்சியான பாமக, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்று தன்னை அடையாளப்படுத்தியது. 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதுவே பாமக சந்தித்த முதல் சட்டசபை தேர்தலும் கூட. அதில், பண்ருட்டி தொகுதியில் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவின் தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக என பாமக செல்லாத கூட்டணியே இல்லை என்று சொல்லலாம். ராமதாஸ் ஆனால், மத்தியில் பங்கு வகித்தபோது ராமதாஸ் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். அதில் ஒன்றுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. 2008-ல் ஐக்கிய முற்போக்குகூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ், போராடி இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததிலும் பாமகவின் பங்கு மிகவும் முக்கியமானது. ‘நானோ, என் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம்’ என்று சூளுரைத்தவர் ராமதாஸ். ஆனால், அன்புமணி விஷயத்தில் அவர் அதை பின்பற்றத் தவறினார். இப்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீகாந்தியையும் அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியின்போது, அன்புமணி ராமதாஸ் அமைச்சரானார். அன்புமணி மத்திய அமைச்சராக தேசிய ஊரக சுகாதார இயக்கம் உருவாக வழிவகுத்தார். ‘108 ஆம்புலன்ஸ்’ திட்டம் அறிமுகமானதும் அவரால்தான். ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை நீளமானது. ஆனால், அத்தனை போராட்டங்கள், மத்திய அமைச்சரவையில் பங்களிப்பு, அன்புமணியின் சுகாதாரத் துறை பங்களிப்புகள் என்று இருந்தாலும் கூட தமிழகத்தில் இதுவரை பாமக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03 அன்புமணி கையில் அஸ்திரம்: வன்னியர் சமூகத்தான போராட்டங்களால் கட்டியெழுப்பப்பட்டு பின்னர் ஓபிசியினர் அனைவருக்குமான போராட்டமாக வலுப்பெற்று தேர்தல்களில் ஒரு லெவல் ப்ளேயராகவே பார்க்கப்பட்ட கட்சி இப்போது பாமக (ரா), பாமக (அ) என்று பிளவுபடுமோ என்று சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறேன் என்பது போல் அன்புமணியும் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து அதற்காகப் பேசி வருகிறார். “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது” என்பதே அன்புமணியின் ஆதங்கமாக உள்ளது. அன்புமணி, ராமதாஸ் “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதால், வன்னியர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பதை திமுக ஆட்சி முடியும் தருவாய் வரையிலும் அன்புமணி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு போராட்டம் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி, அதை செதுக்கி, என்னதான் உட்கட்சி மோதல் சூழ்ந்தாலும்கூட இன்றளவும் அதன் பிரபலமும் முக்கியத்துவமும் குறையாமல் வைத்திருக்கும் என்றால் அது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்தான். ராமதாஸ் என்ற தனிநபரின் வியூகங்களால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ‘வாவ்’ சொல்லாமல் இருக்கவே முடியாது. அதே நேரத்தில் அண்மைக்காலமாக ராமதாஸ் கட்சி, அன்புமணிக்கு எதிராக வெளிப்படையாகவே ‘போராடி’ புலம்புவதைக் கண்டு வருத்தப்படாமலும் இருக்க இயலாது! (தொடரும்)

விகடன் 11 Feb 2026 3:08 pm

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் ‘வாவ்’ வியூகம் 5 வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக' என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ளளவும் விலக்கி வைக்க முடியாது. தான் சார்ந்த சமூகத்துக்கான போராட்டம்தான் என்றாலும் கூட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கும் ஊக்கமளித்த போராட்டமாக அமைந்ததோடு, பாமக என்ற கட்சியை தமிழகம் முழுவதும், குறிப்பாக வட தமிழகத்தில் அழுத்தமாகக் கொண்டு சேர்க்கும் வியூகமாக அமைந்தது. 1980-ம் ஆண்டில் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை அச்சங்கம் நடத்தியது. முதன்முதலாக 1980-ல் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இடஒதுக்கீடு மாநாடு நடந்தது, தொடர்ந்து, 1981 முதல் 1989 வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று வன்னிய மக்களைச் சந்தித்து சமூக நீதிப் போராட்டத்துக்கு ராமதாஸ் தயார்ப்படுத்தினார். தனியொருவனாக தான் மேற்கொண்ட அந்தப் பயணம் பற்றி இன்றளவும் பல பேட்டிகளில் ராமதாஸே பெருமிதமாகச் சொல்லி வருவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 1984-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், 1985-ல் சென்னை தீவுத் திடலில் நடந்த மாநாடு, 06.05.1986 அன்று தமிழ்நாடு முழுவதும் நடந்த ஒருநாள் சாலை மறியல் போராட்டம், பின்னர் 19.12.1986 அன்று நடந்த ஒருநாள் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்டவை வன்னியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவை. அத்தனையையும் ராமதாஸ் தன் தலைமையில் வன்னியர்களுக்காக முன்னெடுத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 21 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தப் போராட்டங்களை பதிவு செய்யும்போது, வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 17.09.1987 முதல் 23.09.1987 வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதை குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. 1980 தொடங்கி ஏழு ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் அவரைச் சந்திக்கக் கூட அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் 1987 செப்.17-ல் தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. அன்று தொட்டு ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். ராமதாஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக அரசு. ஆனால், ராமதாஸை சந்தித்த ஒரே மாதத்தில் எம்ஜிஆர் மறைந்தார். மீண்டும் தனது கோரிக்கைகள் கிடப்பில் போக, போராட்டங்களை மட்டும் ராமதாஸ் கைவிட்டுவிடவே இல்லை. இந்தச் சூழலில் தான், 1989-ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ராமதாஸும் மீண்டும் போராட்டத்தை அறிவித்தார். முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்திருந்த கருணாநிதி, ராமதாஸை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் நீட்சியாக வன்னியர் உட்பட 107 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் கொண்டுவந்து, அதற்கென 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதில் ராமதாஸ் சமரசம் அடையவில்லை. வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தார். இந்த முறை அவருக்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க, கள யதார்த்தம் புரிந்தவராக அரசியல் கட்சியை, சாதிச் சங்கமாக மட்டுமல்லாது முறையாக ஓர் அரசியல் கட்சியாகப் பரிமாணித்து எதிர்ப்பதே நலம் என்று உணர்ந்தார். விளைவு, 16.07.1989-ல் பாமக உதயமானது . பாமகவின் அரசியலுக்கு வீச்சு... திமுகவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், அரசியலில் பெரிய வீச்சைக் கொடுத்தது என்றால், ராமதாஸுக்கு பின்னாளில் பாமக ஓர் அரசியல் இயக்கமாக தன்னை கட்டமைத்ததற்கு மிகப் பெரிய உந்துவிசையாக இருந்தது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் எனலாம். ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கி கூட்டணி பேரங்களில் இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்கமாக பாமக உருவெடுக்க வைத்த பின்னணியில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் ஒரு வாவ் வியூகம்தான். அதேபோல், தமிழ் மொழியை தங்களால் மட்டுமே காக்க முடியும் என்று திமுக கூறிவந்த சூழலில் தமிழுக்கு ராமதாஸ் அளித்த முக்கியத்துவமும் அவரது கட்சிக்கு பலம் சேர்ந்தது. அவரது கட்சியின் தமிழ் ஓசை நாளிதழும், மக்கள் தொலைக்காட்சியும் குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி, தமிழ் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று அறிவிக்கச் செய்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருவான பின்னரும் பல கட்டப் போராட்டங்களை சந்தித்த நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன் வரைவு ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து 2021-ல் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம். வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன். வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த உள் ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வராமல் போனது வேறு கதை. ராமதாஸ் சாதித்தது என்ன? வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்கள் ஊடாக ராமதாஸ் சாதித்தது என்னவென்பது சற்றே திரும்பிப் பார்க்க வேண்டிய அரசியல் பாதை. அரசியல் கட்சியான பாமக, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்று தன்னை அடையாளப்படுத்தியது. 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதுவே பாமக சந்தித்த முதல் சட்டசபை தேர்தலும் கூட. அதில், பண்ருட்டி தொகுதியில் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவின் தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக என பாமக செல்லாத கூட்டணியே இல்லை என்று சொல்லலாம். ராமதாஸ் ஆனால், மத்தியில் பங்கு வகித்தபோது ராமதாஸ் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். அதில் ஒன்றுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. 2008-ல் ஐக்கிய முற்போக்குகூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ், போராடி இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததிலும் பாமகவின் பங்கு மிகவும் முக்கியமானது. ‘நானோ, என் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம்’ என்று சூளுரைத்தவர் ராமதாஸ். ஆனால், அன்புமணி விஷயத்தில் அவர் அதை பின்பற்றத் தவறினார். இப்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீகாந்தியையும் அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியின்போது, அன்புமணி ராமதாஸ் அமைச்சரானார். அன்புமணி மத்திய அமைச்சராக தேசிய ஊரக சுகாதார இயக்கம் உருவாக வழிவகுத்தார். ‘108 ஆம்புலன்ஸ்’ திட்டம் அறிமுகமானதும் அவரால்தான். ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை நீளமானது. ஆனால், அத்தனை போராட்டங்கள், மத்திய அமைச்சரவையில் பங்களிப்பு, அன்புமணியின் சுகாதாரத் துறை பங்களிப்புகள் என்று இருந்தாலும் கூட தமிழகத்தில் இதுவரை பாமக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03 அன்புமணி கையில் அஸ்திரம்: வன்னியர் சமூகத்தான போராட்டங்களால் கட்டியெழுப்பப்பட்டு பின்னர் ஓபிசியினர் அனைவருக்குமான போராட்டமாக வலுப்பெற்று தேர்தல்களில் ஒரு லெவல் ப்ளேயராகவே பார்க்கப்பட்ட கட்சி இப்போது பாமக (ரா), பாமக (அ) என்று பிளவுபடுமோ என்று சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறேன் என்பது போல் அன்புமணியும் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து அதற்காகப் பேசி வருகிறார். “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது” என்பதே அன்புமணியின் ஆதங்கமாக உள்ளது. அன்புமணி, ராமதாஸ் “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதால், வன்னியர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பதை திமுக ஆட்சி முடியும் தருவாய் வரையிலும் அன்புமணி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு போராட்டம் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி, அதை செதுக்கி, என்னதான் உட்கட்சி மோதல் சூழ்ந்தாலும்கூட இன்றளவும் அதன் பிரபலமும் முக்கியத்துவமும் குறையாமல் வைத்திருக்கும் என்றால் அது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்தான். ராமதாஸ் என்ற தனிநபரின் வியூகங்களால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ‘வாவ்’ சொல்லாமல் இருக்கவே முடியாது. அதே நேரத்தில் அண்மைக்காலமாக ராமதாஸ் கட்சி, அன்புமணிக்கு எதிராக வெளிப்படையாகவே ‘போராடி’ புலம்புவதைக் கண்டு வருத்தப்படாமலும் இருக்க இயலாது! (தொடரும்)

விகடன் 11 Feb 2026 3:08 pm

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. அந்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பு தளவாட தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. பந்த் போராட்டம் அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ``மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் சுமார் 5 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அனைத்து விஷயத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே அரசு செயல்படுகிறது. புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒப்பந்த ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு நிரந்தரமான ஆணையர் நியமிக்கப்படவில்லை. இப்படி இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் கண்டித்துத்தான் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினர் பஸ், ஆட்டோ மற்றும் டெம்போ வாகனங்களை இயக்க மாட்டார்கள். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். அதேபோல தொழிற்பேட்டைகளும் முற்றிலும் இயங்காது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு `இந்தியா' கூட்டணி ஆதரவு தெரிவித்திருக்கிறது. புதிய பேருந்து நிலையம், வில்லியனூர், அரியாங்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், சேதராப்பட்டு மற்றும் காரைக்கால் என ஒன்பது இடங்களில் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார். ``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

விகடன் 11 Feb 2026 1:36 pm

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது' என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 11 Feb 2026 12:55 pm

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது' என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 11 Feb 2026 12:55 pm

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று பேசியிருந்தார். இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மாணிக்கம் தாகூர் அப்பதிவில், மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறு என்று பதிவிட்டிருக்கிறார் மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு. — Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 11, 2026

விகடன் 11 Feb 2026 12:27 pm

தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார். ஆதவ் அர்ஜூனா இந்நிலையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள். எப்படி பனையூரில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ...அதே போன்ற மோதல் தான் தற்போது நடந்திருக்கிறது. தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள் என்று சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 12:09 pm

தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார். ஆதவ் அர்ஜூனா இந்நிலையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள். எப்படி பனையூரில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ...அதே போன்ற மோதல் தான் தற்போது நடந்திருக்கிறது. தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள் என்று சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 12:09 pm

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும். அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும். > எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். பங்கிம் சந்திர சாட்டர்ஜி Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! > வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும். > எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு. > ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும். > அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும். > அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம். > தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும். > மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும். > ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 11 Feb 2026 12:06 pm

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும். அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும். > எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். பங்கிம் சந்திர சாட்டர்ஜி Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! > வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும். > எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு. > ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும். > அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும். > அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம். > தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும். > மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும். > ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 11 Feb 2026 12:06 pm

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 11:46 am

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுக கூட்டணி சர்க்கஸ் 5 ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுகவும் 1977 இல் அதிமுகவும் கூட்டணி வைத்தே தேர்தல்களை எதிர்கொண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தன. அதிலும் `தோல்வியையே சந்தித்திடாத தலைவர்' என போற்றப்படும் எம்.ஜி.ஆர், தான் அமைத்த கூட்டணிகளாலயே தோல்வியை சந்தித்த வரலாறும் உண்டு. சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர் கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது..! அதிமுகவின் தேர்தல் பயணமே கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது. 1972 இல் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கில் அதிமுகவை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அந்தத் தேர்தலையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன்தான் இறங்கி எம்.ஜி.ஆர் வென்றார். அதேமாதிரி, 1977 நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணியுடன்தான் எதிர்கொண்டார். 1975 இல் எமெர்ஜென்சியை அமல்படுத்தியதால் இந்திரா காந்தி மீது கடும் அதிருப்தி நிலவியது. திமுக எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனக் கூறி எமெர்ஜென்சியை முழுமையாக ஆதரித்தது. அ.இ.அ.தி.மு.க அதேமாதிரி, இந்திரா காந்தி மாநில கட்சிகளையெல்லாம் தடை செய்யப் போகிறார் என ஒரு தகவல் பரவவே, கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். மத்தியில் வலுவாக இருக்கும் சக்திகளோடு கரம் கோத்து நிற்பதில் எம்.ஜி.ஆர் எப்போதுமே தெளிவாக இருந்தார். அதன்படிதான் எமெர்ஜென்சிக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி வைத்தார். இந்தியா முழுவதும் காங்கிரஸூக்கு பெருத்த அடி விழ, தமிழகத்தில் மட்டும் தலைகீழாக நடந்தது. அதிமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்றது. திமுக - ஜனதா கூட்டணிக்கு பலத்த தோல்வி. ஆனால், அகில இந்திய அளவில் ஜனதாவின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். திமுக - ஜனதா கூட்டணி அந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸை கழட்டிவிட்டு விட்டு கம்யூனிஸ்ட்டுகளோடு மட்டும் தேர்தலை சந்திக்கிறார் எம்.ஜி.ஆர்.  அதிமுகவுக்கு பெரு வெற்றி. எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகிறார். தஞ்சாவூர் தொகுதியில் எம்.பி ஆக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் சேர்த்தார் எம்.ஜி.ஆர். தஞ்சாவூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். ஆனால், மொரார்ஜி தேசாயின் அழுதத்தால் எம்.ஜி.ஆர் இந்திரா போட்டியிட ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார். இது அதிமுக - காங்கிரஸ் இடையேயான பிளவை மேலும் அதிகரித்தது. ஜனதா ஆட்சி கவிழ்ந்து 1980 இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த முறை எம்.ஜி.ஆர் ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். இந்திரா காந்தி திமுகவுடன் நெருங்கினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்தன. வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது. தவறான கூட்டணி, பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு போன்றவை எம்.ஜி.ஆருக்கு பின்னடைவை கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது காங்கிரஸ் மீண்டெழுந்தது. இந்திரா காந்தி பிரதமரானார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சிக் கலைப்புகள் அரங்கேறியது. எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தலா 109 தொகுதிகள் எனப் பிரித்துக் கொண்டனர். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணிக்கு சென்றார். 'என்ன பாவம் செய்தேன்? எதற்காக என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டது?' என எம்.ஜி.ஆர் மக்களிடம் நியாயம் கேட்டார். மக்கள் எம்.ஜி.ஆருக்கு பெரு வெற்றியை கொடுத்தனர். இந்திரா காந்தி வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆட்சியை கலைத்த அதே இந்திராவுடனும் காங்கிரஸூடனும் நெருக்கமானார். ஈழத்தமிழர் விவகாரங்கள் குறித்து இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகள் அதிமுகவையும் காங்கிரஸையும் கூட்டணி நோக்கி நகர்த்தின. 1984 இல் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ராஜிவ் காந்தி பிரதமரானார். இதே காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். ராஜிவ் மத்திய அரசை கலைக்கிறார். எம்.ஜி.ஆர் தமிழக அரசை கலைக்கிறார். 1984 இல் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு சேர வருகிறது. அதிமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறுகிறது. 400+ தொகுதிகளோடு ராஜிவ் மத்தியில் ஆட்சியமைத்தார். 132 தொகுதிகளோடு எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதிமுக ஜெ. அணி vs அதிமுக ஜா அணி மூன்றாண்டுகள் எந்த சிக்கலும் இல்லை. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமானார். அதிமுக ஜெ. அணி ஜானகி என இரண்டாக பிரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என ராஜிவ் கூறுகிறார். 1989 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. திமுக வெல்ல, ஜெ.அணி அதிமுகவை கைப்பற்றுகிறது. 1991 தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸூம் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறார். அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைக்கிறது. அதிமுக 164 தொகுதிகளில் வெல்கிறது. 91-96 ஆட்சியில் அதிமுகவின் மீது கடும் அதிருப்தி. வளர்ப்பு மகன் திருமணம், வாச்சாத்தி சம்பவம், ஊழல் குற்றச்சாட்டுகள் என மக்கள் மத்தியில் அந்த ஆட்சி மதிப்பிழந்தது. ஜெயலலிதா மேலும் 'ராஜிவ்வின் ரத்தத்தால் நாங்கள் வெல்லவில்லை' என ஜெயலலிதா கூறியது காங்கிரஸ்க்காரர்களை கடுப்பேற்றியது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாமென போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸின் தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்பியது. காங்கிரஸ் உடைந்தது. தமாகா வை மூப்பனார் தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ரஜினி அதிமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்கிறது. காங்கிரஸின் ஸ்கோர் 0. 1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைத்தது. 96 தேர்தல் முடிந்த இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த ஆதரவு பிரமிக்க வைத்தது. ஆனால், அதிமுக ஆதரவுடன் நடந்த வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 வாக்கில் பெரும்பான்மையை தவறவிட்டு ஆட்சி பறிபோனது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நின்றது அதிமுக. பாஜக ஆட்சி போக காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதிமுகவோடு இன்னும் நெருக்கமானது. மேலும், திமுக பாஜக கூட்டணிக்குள் சென்றது. இது தமாகாவையும் அதிமுக பக்கமாக நகர்த்தியது. 2001 தேர்தலில் காங்கிரஸ், தமாகா, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. அந்த வலுவான கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 132 தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிமுக - பாஜக இந்த ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை என வலதுசாரித்தனத்தோடு சில திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால் பாஜக அதிமுகவோடு இணக்கம் காட்டியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேற, அதிமுக பாஜகவோடு சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அத்தனை தொகுதிகளையும் வென்றது. அதிமுகவுக்கு படுதோல்வி. 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. இது ஒரு பொருந்தா கூட்டணி. 2001-06 ஆட்சிக்காலத்தில் வைகோவை பொடாவில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தார் ஜெயலலிதா. அதிமுகவை பாசிச அரசு என வைகோ விமர்சித்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் கூட்டணி வைத்தனர். கூட்டணி டேக் ஆப் ஆகவில்லை. திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் விஜயகாந்தும் வளர்ந்தார். 2006 தேர்தலில் 8% வாக்குகளை எடுத்த தேமுதிக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10% வாக்குகளை எடுத்தது. ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தின் உதவி தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். சோ வழி விஜயகாந்துக்கு தூது விடப்பட்டது. தேமுதிகவுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் சேர்ந்து ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனாலும், இந்த கூட்டணி களத்தில் பெரியளவில் எடுபட்டது. அதிமுக 150 தொகுதிகளில் வெல்ல தேமுதிக 29 தொகுதிகளில் வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டிக் கொண்டது. சட்டமன்றத்திலேயே நாக்கை துறுத்தினார் விஜயகாந்த். கூட்டணி முறிந்தது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகினர். தேமுதிக | விஜயகாந்த் துணிச்சலான முடிவு ஜெயலலிதா கூட்டணியையே வெறுத்தார். 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டி என முடிவெடுத்தார். 1967க்குப் பிறகான அரசியலில் எடுக்கப்பட்ட மிகப்பெரும் துணிச்சலான முடிவாக அது பார்க்கப்பட்டது. 2014 இல் மோடியா லேடியா எனக் கேட்டு 37 தொகுதிகளில் பெற்ற வெற்றி ஜெ.வுக்கு பெரிய தெம்பை கொடுத்திருந்தது. இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணி. மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி. மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் திமுகவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதிமுக 136 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. வாக்குவங்கியும் 41% ஆக அதிகரித்தது. 2016-ல் ஜெயலலிதா காலமாகிறார். அதிமுக சில துண்டுகளாக உடைகிறது. எடப்பாடி தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த தோல்வி. 2021 தேர்தலிலும் என்.டி.ஏவுக்குள்ளேயே அதிமுக தொடர்ந்தது. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா விரும்புகிறார். எடப்பாடி கட்டையைப் போடுகிறார். கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிகவும் கூட்டணியை விட்டு வெளியேறியது. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், விசிக, மதிமுக என வலுவான கூட்டணியை வைத்திருந்தது திமுக. எதிர்பார்த்தப்படியே திமுக வெற்றி. ஆனால், அதிமுக மோசமாக தோற்கவில்லை. என்.டி.ஏவுக்கு 75 தொகுதிகள் கிடைத்தது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி மெகா கூட்டணி அமைப்பேன் என்றார். யாரும் அவரை நம்பி வரவில்லை. தேமுதிக மட்டுமே வந்தது. மீண்டும் தோல்வி. இந்த முறை பல இடங்களில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. வலுவான கூட்டணியில்லாமல் 2026 தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற யதார்த்தம் எடப்பாடிக்கு புரிந்தது. புதிததாக கட்சி ஆரம்பித்த விஜய் அதிமுகவோடு கூட்டணிக்கு வருவார் என அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். விஜய் பிடிகொடுக்காமல் நகரவே வேகவேகமாக டெல்லிக்கு பயணித்து அமித் ஷாவுக்கு பொக்கே கொடுத்து மீண்டும் என்.டி.ஏவில் சேர்ந்தார். அமித்ஷா ஆறு மாதமாக பிக் அப் ஆகாமல் இருந்த அந்த கூட்டணியில் ஜனவரிக்கு மேல்தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அன்புமணி என்.டி.ஏவுக்குள் வந்தார். டிடிவி பழையதை எல்லாம் மறந்து கைக்கோத்தார். ஆனால், இன்னமும் அந்த கூட்டணி முழுமை பெறவில்லை. தேமுதிக இன்னமும் முரண்டு பிடிக்கிறது. கிருஷ்ணசாமி இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. வருகிறவர்களையெல்லாம் வண்டியில் ஏற்றும் மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி (ஓ.பி.எஸ் தவிர்த்து). ஆனாலும் இன்னும் சிலர் தண்ணி காட்டிக் கொண்டே இருக்கின்றனர். மத்தியில் ஆளும் அரசுக்கு எம்.ஜி.ஆர் எப்போதுமே இணக்கமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார். அதற்காக அதிமுகவின் தனித்தன்மையையும் அதன் மீதான பிடிமானத்தையும் எம்.ஜி.ஆர் விட்டதில்லை. ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து நின்றிருக்கிறார். அதற்காக கடுமையான எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால், மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த எப்போதும் விட்டதில்லை. டெல்லி போயஸ்கார்டனை தேடி வந்தது. எடப்பாடி பழனிசாமி எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ஜெயலலிதா மட்டும் பார்க்க முடியவில்லை என்கிற மத்திய அமைச்சர்களின் விரக்தி குரலை மறக்க முடியுமா? எடப்பாடி எம்.ஜி.ஆரும் கிடையாது. ஜெயலலிதாவும் கிடையாது. ஆனால், அவர்களின் வழி நின்று அதிமுகவை ஒரு ஆதிக்க சக்தியாக நிலைநாட்ட குறைந்தபட்ச முயற்சிகளையாவது எடுக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் விருப்பம். எடப்பாடி அதையாவது செய்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி! (தொடரும்)

விகடன் 11 Feb 2026 11:14 am

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுக கூட்டணி சர்க்கஸ் 5 ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுகவும் 1977 இல் அதிமுகவும் கூட்டணி வைத்தே தேர்தல்களை எதிர்கொண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தன. அதிலும் `தோல்வியையே சந்தித்திடாத தலைவர்' என போற்றப்படும் எம்.ஜி.ஆர், தான் அமைத்த கூட்டணிகளாலயே தோல்வியை சந்தித்த வரலாறும் உண்டு. சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர் கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது..! அதிமுகவின் தேர்தல் பயணமே கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது. 1972 இல் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கில் அதிமுகவை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அந்தத் தேர்தலையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன்தான் இறங்கி எம்.ஜி.ஆர் வென்றார். அதேமாதிரி, 1977 நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணியுடன்தான் எதிர்கொண்டார். 1975 இல் எமெர்ஜென்சியை அமல்படுத்தியதால் இந்திரா காந்தி மீது கடும் அதிருப்தி நிலவியது. திமுக எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனக் கூறி எமெர்ஜென்சியை முழுமையாக ஆதரித்தது. அ.இ.அ.தி.மு.க அதேமாதிரி, இந்திரா காந்தி மாநில கட்சிகளையெல்லாம் தடை செய்யப் போகிறார் என ஒரு தகவல் பரவவே, கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். மத்தியில் வலுவாக இருக்கும் சக்திகளோடு கரம் கோத்து நிற்பதில் எம்.ஜி.ஆர் எப்போதுமே தெளிவாக இருந்தார். அதன்படிதான் எமெர்ஜென்சிக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி வைத்தார். இந்தியா முழுவதும் காங்கிரஸூக்கு பெருத்த அடி விழ, தமிழகத்தில் மட்டும் தலைகீழாக நடந்தது. அதிமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்றது. திமுக - ஜனதா கூட்டணிக்கு பலத்த தோல்வி. ஆனால், அகில இந்திய அளவில் ஜனதாவின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். திமுக - ஜனதா கூட்டணி அந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸை கழட்டிவிட்டு விட்டு கம்யூனிஸ்ட்டுகளோடு மட்டும் தேர்தலை சந்திக்கிறார் எம்.ஜி.ஆர்.  அதிமுகவுக்கு பெரு வெற்றி. எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகிறார். தஞ்சாவூர் தொகுதியில் எம்.பி ஆக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் சேர்த்தார் எம்.ஜி.ஆர். தஞ்சாவூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். ஆனால், மொரார்ஜி தேசாயின் அழுதத்தால் எம்.ஜி.ஆர் இந்திரா போட்டியிட ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார். இது அதிமுக - காங்கிரஸ் இடையேயான பிளவை மேலும் அதிகரித்தது. ஜனதா ஆட்சி கவிழ்ந்து 1980 இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த முறை எம்.ஜி.ஆர் ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். இந்திரா காந்தி திமுகவுடன் நெருங்கினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்தன. வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது. தவறான கூட்டணி, பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு போன்றவை எம்.ஜி.ஆருக்கு பின்னடைவை கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது காங்கிரஸ் மீண்டெழுந்தது. இந்திரா காந்தி பிரதமரானார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சிக் கலைப்புகள் அரங்கேறியது. எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தலா 109 தொகுதிகள் எனப் பிரித்துக் கொண்டனர். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணிக்கு சென்றார். 'என்ன பாவம் செய்தேன்? எதற்காக என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டது?' என எம்.ஜி.ஆர் மக்களிடம் நியாயம் கேட்டார். மக்கள் எம்.ஜி.ஆருக்கு பெரு வெற்றியை கொடுத்தனர். இந்திரா காந்தி வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆட்சியை கலைத்த அதே இந்திராவுடனும் காங்கிரஸூடனும் நெருக்கமானார். ஈழத்தமிழர் விவகாரங்கள் குறித்து இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகள் அதிமுகவையும் காங்கிரஸையும் கூட்டணி நோக்கி நகர்த்தின. 1984 இல் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ராஜிவ் காந்தி பிரதமரானார். இதே காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். ராஜிவ் மத்திய அரசை கலைக்கிறார். எம்.ஜி.ஆர் தமிழக அரசை கலைக்கிறார். 1984 இல் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு சேர வருகிறது. அதிமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறுகிறது. 400+ தொகுதிகளோடு ராஜிவ் மத்தியில் ஆட்சியமைத்தார். 132 தொகுதிகளோடு எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதிமுக ஜெ. அணி vs அதிமுக ஜா அணி மூன்றாண்டுகள் எந்த சிக்கலும் இல்லை. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமானார். அதிமுக ஜெ. அணி ஜானகி என இரண்டாக பிரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என ராஜிவ் கூறுகிறார். 1989 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. திமுக வெல்ல, ஜெ.அணி அதிமுகவை கைப்பற்றுகிறது. 1991 தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸூம் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறார். அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைக்கிறது. அதிமுக 164 தொகுதிகளில் வெல்கிறது. 91-96 ஆட்சியில் அதிமுகவின் மீது கடும் அதிருப்தி. வளர்ப்பு மகன் திருமணம், வாச்சாத்தி சம்பவம், ஊழல் குற்றச்சாட்டுகள் என மக்கள் மத்தியில் அந்த ஆட்சி மதிப்பிழந்தது. ஜெயலலிதா மேலும் 'ராஜிவ்வின் ரத்தத்தால் நாங்கள் வெல்லவில்லை' என ஜெயலலிதா கூறியது காங்கிரஸ்க்காரர்களை கடுப்பேற்றியது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாமென போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸின் தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்பியது. காங்கிரஸ் உடைந்தது. தமாகா வை மூப்பனார் தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ரஜினி அதிமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்கிறது. காங்கிரஸின் ஸ்கோர் 0. 1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைத்தது. 96 தேர்தல் முடிந்த இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த ஆதரவு பிரமிக்க வைத்தது. ஆனால், அதிமுக ஆதரவுடன் நடந்த வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 வாக்கில் பெரும்பான்மையை தவறவிட்டு ஆட்சி பறிபோனது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நின்றது அதிமுக. பாஜக ஆட்சி போக காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதிமுகவோடு இன்னும் நெருக்கமானது. மேலும், திமுக பாஜக கூட்டணிக்குள் சென்றது. இது தமாகாவையும் அதிமுக பக்கமாக நகர்த்தியது. 2001 தேர்தலில் காங்கிரஸ், தமாகா, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. அந்த வலுவான கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 132 தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிமுக - பாஜக இந்த ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை என வலதுசாரித்தனத்தோடு சில திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால் பாஜக அதிமுகவோடு இணக்கம் காட்டியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேற, அதிமுக பாஜகவோடு சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அத்தனை தொகுதிகளையும் வென்றது. அதிமுகவுக்கு படுதோல்வி. 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. இது ஒரு பொருந்தா கூட்டணி. 2001-06 ஆட்சிக்காலத்தில் வைகோவை பொடாவில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தார் ஜெயலலிதா. அதிமுகவை பாசிச அரசு என வைகோ விமர்சித்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் கூட்டணி வைத்தனர். கூட்டணி டேக் ஆப் ஆகவில்லை. திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் விஜயகாந்தும் வளர்ந்தார். 2006 தேர்தலில் 8% வாக்குகளை எடுத்த தேமுதிக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10% வாக்குகளை எடுத்தது. ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தின் உதவி தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். சோ வழி விஜயகாந்துக்கு தூது விடப்பட்டது. தேமுதிகவுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் சேர்ந்து ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனாலும், இந்த கூட்டணி களத்தில் பெரியளவில் எடுபட்டது. அதிமுக 150 தொகுதிகளில் வெல்ல தேமுதிக 29 தொகுதிகளில் வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டிக் கொண்டது. சட்டமன்றத்திலேயே நாக்கை துறுத்தினார் விஜயகாந்த். கூட்டணி முறிந்தது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகினர். தேமுதிக | விஜயகாந்த் துணிச்சலான முடிவு ஜெயலலிதா கூட்டணியையே வெறுத்தார். 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டி என முடிவெடுத்தார். 1967க்குப் பிறகான அரசியலில் எடுக்கப்பட்ட மிகப்பெரும் துணிச்சலான முடிவாக அது பார்க்கப்பட்டது. 2014 இல் மோடியா லேடியா எனக் கேட்டு 37 தொகுதிகளில் பெற்ற வெற்றி ஜெ.வுக்கு பெரிய தெம்பை கொடுத்திருந்தது. இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணி. மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி. மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் திமுகவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதிமுக 136 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. வாக்குவங்கியும் 41% ஆக அதிகரித்தது. 2016-ல் ஜெயலலிதா காலமாகிறார். அதிமுக சில துண்டுகளாக உடைகிறது. எடப்பாடி தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த தோல்வி. 2021 தேர்தலிலும் என்.டி.ஏவுக்குள்ளேயே அதிமுக தொடர்ந்தது. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா விரும்புகிறார். எடப்பாடி கட்டையைப் போடுகிறார். கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிகவும் கூட்டணியை விட்டு வெளியேறியது. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், விசிக, மதிமுக என வலுவான கூட்டணியை வைத்திருந்தது திமுக. எதிர்பார்த்தப்படியே திமுக வெற்றி. ஆனால், அதிமுக மோசமாக தோற்கவில்லை. என்.டி.ஏவுக்கு 75 தொகுதிகள் கிடைத்தது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி மெகா கூட்டணி அமைப்பேன் என்றார். யாரும் அவரை நம்பி வரவில்லை. தேமுதிக மட்டுமே வந்தது. மீண்டும் தோல்வி. இந்த முறை பல இடங்களில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. வலுவான கூட்டணியில்லாமல் 2026 தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற யதார்த்தம் எடப்பாடிக்கு புரிந்தது. புதிததாக கட்சி ஆரம்பித்த விஜய் அதிமுகவோடு கூட்டணிக்கு வருவார் என அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். விஜய் பிடிகொடுக்காமல் நகரவே வேகவேகமாக டெல்லிக்கு பயணித்து அமித் ஷாவுக்கு பொக்கே கொடுத்து மீண்டும் என்.டி.ஏவில் சேர்ந்தார். அமித்ஷா ஆறு மாதமாக பிக் அப் ஆகாமல் இருந்த அந்த கூட்டணியில் ஜனவரிக்கு மேல்தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அன்புமணி என்.டி.ஏவுக்குள் வந்தார். டிடிவி பழையதை எல்லாம் மறந்து கைக்கோத்தார். ஆனால், இன்னமும் அந்த கூட்டணி முழுமை பெறவில்லை. தேமுதிக இன்னமும் முரண்டு பிடிக்கிறது. கிருஷ்ணசாமி இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. வருகிறவர்களையெல்லாம் வண்டியில் ஏற்றும் மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி (ஓ.பி.எஸ் தவிர்த்து). ஆனாலும் இன்னும் சிலர் தண்ணி காட்டிக் கொண்டே இருக்கின்றனர். மத்தியில் ஆளும் அரசுக்கு எம்.ஜி.ஆர் எப்போதுமே இணக்கமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார். அதற்காக அதிமுகவின் தனித்தன்மையையும் அதன் மீதான பிடிமானத்தையும் எம்.ஜி.ஆர் விட்டதில்லை. ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து நின்றிருக்கிறார். அதற்காக கடுமையான எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால், மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த எப்போதும் விட்டதில்லை. டெல்லி போயஸ்கார்டனை தேடி வந்தது. எடப்பாடி பழனிசாமி எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ஜெயலலிதா மட்டும் பார்க்க முடியவில்லை என்கிற மத்திய அமைச்சர்களின் விரக்தி குரலை மறக்க முடியுமா? எடப்பாடி எம்.ஜி.ஆரும் கிடையாது. ஜெயலலிதாவும் கிடையாது. ஆனால், அவர்களின் வழி நின்று அதிமுகவை ஒரு ஆதிக்க சக்தியாக நிலைநாட்ட குறைந்தபட்ச முயற்சிகளையாவது எடுக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் விருப்பம். எடப்பாடி அதையாவது செய்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி! (தொடரும்)

விகடன் 11 Feb 2026 11:14 am

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை'வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது. இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே. இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. Four Stars of Destiny Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ் பென்குயின் நிறுவனத்தின் பதில் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன. இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நாரவனே 'ஒற்றை' பதில் இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, 'இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை. Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!

விகடன் 11 Feb 2026 10:55 am

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை'வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது. இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே. இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. Four Stars of Destiny Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ் பென்குயின் நிறுவனத்தின் பதில் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன. இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நாரவனே 'ஒற்றை' பதில் இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, 'இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை. Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!

விகடன் 11 Feb 2026 10:55 am

திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசுவதா? - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்...? ஞாயிறு உண்டு திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ...? 'அவர்கள்' படத்துக்காக கவியரசர் ரசிகர்கள் முன்னிலையில் பாலச்சந்தர் அவர்கள் சூழல் சொல்ல மெல்லிசை மன்னர் மெட்டமைக்க எழுதிய பாடல் இது. சரியான முடிவெடுக்க முடியாதவர்கள், முடிவெடுக்க தெரியாதவர்களுக்கான பாடல். தேமுதிகவின் இன்றைய நிலைக்கு மிகப்பொருத்தமான பாடல் இது. பலர் அக்கட்சியைப் பார்த்து கேட்கும் கேள்வி இதுதான். திமுகவா...அதிமுகவா...எது உங்கள் பாதை...? செய்தியாளர்களின் கேள்விக்கு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் திருமதி பிரேமலதா. பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் தேமுதிக நிலைப்பாடு சமீபகாலங்களில் அதிகம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறது. அதை அவர்கள் பார்ப்பார்களா... இல்லையா... என்ற சந்தேகமும் வருகிறது. விஜயகாந்த் தனக்கென 8 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போது அது சரிவைக் கண்டது. அவர் உடல் நலம் குன்றிய பிறகு வாக்கு வங்கி இன்னும் சரிவை சந்தித்தது. திருமதி பிரேமலதா அவர்கள் தற்போது கட்சியை நடத்தி வருகிறார். எதற்காக என்பது அவருக்கே தெரியுமா...? கடலூரில் மாநாடு நடத்தி பெரிய கூட்டத்தை கூட்டினார். கூட்டம் அப்படியே ஓட்டாக மாறுமா...? அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மாநாட்டில் தொண்டர்கள் கருத்துப்படி முடிவு எடுப்பேன் என்றார். எந்தவித அறிவிப்பும் இதுவரையில் இல்லை. 'தேமுதிமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும்' -அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்லும் மிகச் சிறந்த ஜோக்கை இவரும் சொல்லிவிட்டார். பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிக என் பிள்ளை, அதை எங்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்குத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார். கூட்டணி என்பதை கல்யாணத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இதைக் கேட்டதும்... கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...டேக் இட் ஈஸி... - சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வாலி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வந்தது. கல்யாணத்தை கிண்டல் செய்யும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் அதன் புனிதத்தைசொல்லி பதிலடி கொடுப்பது போல பாடல் அமைந்திருக்கும். இன்று ஒரு பெண்ணே புனிதமான திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது வேதனைக்குரிய விஷயம். கூட்டணி என்பது தற்காலிகமானது. அரசியலை புனிதமாக மாற்றுவதற்காக அல்ல, தங்களை தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்வதற்காக. அப்படிப்பட்ட கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் போக்கு மேலும் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. கடவுள் அமைத்து வைத்த மேடை...இணைக்கும் கல்யாண மாலை.. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று... - திருமணம் தொடர்பாக கவியரசர் எழுதிய மிகச் சிறந்த பாடல். யார் யார் இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையவேண்டும் என்பது என்றோ இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அதில் சொல்லியிருக்கிறார். விஜயகாந்த் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட புனிதமான ஒரு பந்தத்தை அரசியலில் அமைக்கப்படும் கூட்டணியோடு எப்படி உதாரணமாக சொல்ல முடியும். வாழ்க்கை கூட்டணி நிரந்தரமானது. அரசியல் கூட்டணி தேர்தல் முடிந்து முடிவுகள் தெரியும் வரையில் மட்டுமே. அதன் பிறகு தொடரலாம்... தொடராமலும் போகலாம். அடுத்த தேர்தலில் வேறு கூட்டணி மாறலாம். இதுதான் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே' பாடலில் மிகப்பெரிய மனிதன் ஒருவன் தாலி மூலமாக ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது 'விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்ன்னு காட்டி இருப்பார்கள். அந்த உயரமான ஒன்றை..(அதுவும் கட்சியின் நிறுவனர் நடித்த மிகச்சிறந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ) சாதாரண அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது சரியல்ல. விஜயகாந்த் கட்சியை எதற்காக தொடங்கினாரோ அதுவே சிதைந்து போகும் அளவுக்கு வேலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல்

விகடன் 11 Feb 2026 10:38 am

திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசுவதா? - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்...? ஞாயிறு உண்டு திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ...? 'அவர்கள்' படத்துக்காக கவியரசர் ரசிகர்கள் முன்னிலையில் பாலச்சந்தர் அவர்கள் சூழல் சொல்ல மெல்லிசை மன்னர் மெட்டமைக்க எழுதிய பாடல் இது. சரியான முடிவெடுக்க முடியாதவர்கள், முடிவெடுக்க தெரியாதவர்களுக்கான பாடல். தேமுதிகவின் இன்றைய நிலைக்கு மிகப்பொருத்தமான பாடல் இது. பலர் அக்கட்சியைப் பார்த்து கேட்கும் கேள்வி இதுதான். திமுகவா...அதிமுகவா...எது உங்கள் பாதை...? செய்தியாளர்களின் கேள்விக்கு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் திருமதி பிரேமலதா. பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் தேமுதிக நிலைப்பாடு சமீபகாலங்களில் அதிகம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறது. அதை அவர்கள் பார்ப்பார்களா... இல்லையா... என்ற சந்தேகமும் வருகிறது. விஜயகாந்த் தனக்கென 8 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போது அது சரிவைக் கண்டது. அவர் உடல் நலம் குன்றிய பிறகு வாக்கு வங்கி இன்னும் சரிவை சந்தித்தது. திருமதி பிரேமலதா அவர்கள் தற்போது கட்சியை நடத்தி வருகிறார். எதற்காக என்பது அவருக்கே தெரியுமா...? கடலூரில் மாநாடு நடத்தி பெரிய கூட்டத்தை கூட்டினார். கூட்டம் அப்படியே ஓட்டாக மாறுமா...? அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மாநாட்டில் தொண்டர்கள் கருத்துப்படி முடிவு எடுப்பேன் என்றார். எந்தவித அறிவிப்பும் இதுவரையில் இல்லை. 'தேமுதிமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும்' -அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்லும் மிகச் சிறந்த ஜோக்கை இவரும் சொல்லிவிட்டார். பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிக என் பிள்ளை, அதை எங்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்குத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார். கூட்டணி என்பதை கல்யாணத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இதைக் கேட்டதும்... கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...டேக் இட் ஈஸி... - சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வாலி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வந்தது. கல்யாணத்தை கிண்டல் செய்யும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் அதன் புனிதத்தைசொல்லி பதிலடி கொடுப்பது போல பாடல் அமைந்திருக்கும். இன்று ஒரு பெண்ணே புனிதமான திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது வேதனைக்குரிய விஷயம். கூட்டணி என்பது தற்காலிகமானது. அரசியலை புனிதமாக மாற்றுவதற்காக அல்ல, தங்களை தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்வதற்காக. அப்படிப்பட்ட கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் போக்கு மேலும் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. கடவுள் அமைத்து வைத்த மேடை...இணைக்கும் கல்யாண மாலை.. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று... - திருமணம் தொடர்பாக கவியரசர் எழுதிய மிகச் சிறந்த பாடல். யார் யார் இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையவேண்டும் என்பது என்றோ இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அதில் சொல்லியிருக்கிறார். விஜயகாந்த் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட புனிதமான ஒரு பந்தத்தை அரசியலில் அமைக்கப்படும் கூட்டணியோடு எப்படி உதாரணமாக சொல்ல முடியும். வாழ்க்கை கூட்டணி நிரந்தரமானது. அரசியல் கூட்டணி தேர்தல் முடிந்து முடிவுகள் தெரியும் வரையில் மட்டுமே. அதன் பிறகு தொடரலாம்... தொடராமலும் போகலாம். அடுத்த தேர்தலில் வேறு கூட்டணி மாறலாம். இதுதான் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே' பாடலில் மிகப்பெரிய மனிதன் ஒருவன் தாலி மூலமாக ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது 'விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்ன்னு காட்டி இருப்பார்கள். அந்த உயரமான ஒன்றை..(அதுவும் கட்சியின் நிறுவனர் நடித்த மிகச்சிறந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ) சாதாரண அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது சரியல்ல. விஜயகாந்த் கட்சியை எதற்காக தொடங்கினாரோ அதுவே சிதைந்து போகும் அளவுக்கு வேலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல்

விகடன் 11 Feb 2026 10:38 am