SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...! தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் களம் 'தகி தகி' எனத் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாயமும், அந்நியச் செலாவணியும் அச்சாணியாக இருக்கும் இந்த மண்ணில், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை(தனி) விராலிமலை, திருமயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிள் வேட்பாளர் ரேஸில் யார் முந்துகிறார்கள் என்பது பற்றிய அலசல் ரிப்போர்ட்! சமஸ்தானம் யார் கையில்..? 1. புதுக்கோட்டை தொகுதி தற்போதைய திமுக எம்.எல்.ஏ டாக்டர் வை.முத்துராஜா. மீண்டும் களத்தில் இறங்க சீட் வாங்குவதில் படுதீவிரமாக இருக்கிறார். மக்களிடம் அவர் காட்டிய எளிமையான அணுகுமுறை, தொகுதி முழுவதுமுள்ள அறிமுகம், மேலிடத்தில் உள்ள நல்ல தொடர்பு ஆகியவவை இந்த முறையும் சீட்டைப் பெற்றுத் தரும் என நம்புகிறார். இதற்காக கடந்த முறை சீட் பெற முயற்சித்த அதே ரூட்டிலேயே இப்போதும் ஸ்கெட்ச் போடுகிறார். இவருக்கு கடும் போட்டியாளராக திமுகவின் விருப்ப மனு செய்வதற்கான கடைசி நாளில் மனு செய்து சீட்டை பெரிதும் எதிர் நோக்கி இருப்பவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.எம்.எம்.அப்துல்லா. ஹைடெக் அரசியல்வாதி என பெயரெடுத்துள்ள இவர் தனது எம்.பி.பதவியால் பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தவர். தனக்குரிய கட்சியின் மேலிடச் செல்வாக்கால் கட்டாயம் தொகுதியில் களம் இறங்குவது உறுதி என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் முத்துராஜா அதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். அதேபோல் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் பாரம்பரிய திமுக குடும்பத்து உறுப்பினருமான டாக்டர் மு.க.முத்துக்கருப்பனும் முன்னணி ரேஸில் இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசும், அவருடைய மூத்த மகள் மருத்துவர் அபிநயா அரசும் விருப்ப மனு தாக்கல் செய்து தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டை பெரியண்ணன் குடும்பம் என்ற முத்திரை மேலிடத்திடமிருந்து சீட்டைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இப்படி விருப்ப மனுக் களத்தில் முக்கியமானவர்களில் அறிவாலாயம் யாரை டிக் அடிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் தவிர, மாநகராட்சித் தலைவியான மேயர் திலகவதி செந்திலும், அவருடைய மகனும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசீர்வாதத்தோடு ரேஸில் குதித்துள்ளனர். அதிமுகவில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகாமல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவோடு ப.கருப்பையா சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார். இவர்களுடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆர்.மன்ற வடக்கு மாவட்டச் செயலாளர் தொழிலதிபர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோருடன் இன்னும் சில இஸ்லாமியப் பிரமுகர்களும் 'இரட்டை இலை'க்காக தவம் கிடக்கிறார்கள் இறுதிப்பட்டியலில் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஒருவேளை கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் அக்கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் என்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் ஆசியுடன் எளிதில் கைப்பற்ற ஆயத்த நிலையில் இருந்து வருகிறார். த.வெ.க மாவட்டச் செயலாளர் பர்வேஸ், எனக்கு சீட் கன்பார்ம் என விசில் அடித்து வேலையைத் தொடங்கிவிட, நாம் தமிழர் கட்சியோ அதிரடியாகப் பொறியாளர் எழிலரசியை வேட்பாளராகவே அறிவித்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லிவிட்டது. புதுக்கோட்டை தொகுதியில் தவெக பர்வேஸ் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. புதுக்கோட்டையைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ முத்துராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது தி.மு.க-வுக்குப் பெரிய நிம்மதி. ஆனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தியும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. தற்போதைய நிலவரப்படி கூட்டணி பலம், மகளிர் உரிமைத் தொகை, சிட்டிங் எம்எல்ஏவின் திருப்தியான செயல்பாடுகள் தி.மு.க-வை முன்னிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் வைட்டமின் பலம் மற்றும் த.வெ.க, நா.த.க. பிரிக்கும் இளசுகளின் ஓட்டுகள் கடைசி நேரத்தில் 'ட்விஸ்ட்' வைக்கலாம். 'சமஸ்தானம்' யார் கையில்? பொறுத்திருந்து பார்ப்போம்..! வெற்றிமாலை யாருக்கு? 2. விராலிமலை தொகுதி தமிழகமே எதிர்நோக்கும் ஸ்டார் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று விராலிமலை. காரணம் இத்தொகுதியின் கதாநாயகன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். 2011, 2016, 2021 என மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி கண்டவர். திமுக தரப்பில் 2011 இல் தற்போதைய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதே தொகுதியில் போட்டியிட்டு விஜயபாஸ்கரிடம் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அடுத்து 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் தன்னை எதிர்த்து நின்ற திமுகவின் தென்னலூர் மா.பழனியப்பனை வெற்றி கண்டவர். டாக்டர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை, தொகுதிக்குள் இடைவிடாத பயணம், தொகுதி மக்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, வீட்டுக்கு வீடு அன்பளிப்புச் சீர்களை அள்ளிக் கொடுப்பது, ஏராளமான அரசுத் திட்டங்களை புதுக்கோட்டைக்கும், விராலிமலைக்கும் கொண்டு வந்து சேர்த்தது இப்படி செய்த சாதனைகள் அனைத்தும் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு விராலிமலையை விசுவாச மலையாக மாற்றியிருக்கிறது. விஜயபாஸ்கர் செல்வாக்கு பெற்ற வேட்பாளர் என அறியப்படும் முன்னாள் அமைச்சரை எதிர்த்துக் களம் காண இந்த முறை வெயிட்டான ஆளை இறக்க திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டாக்டருக்கு டஃப் பைட் கொடுக்க திமுகவின் வடக்கு மாவட்டம் செல்லப்பாண்டியனோ அல்லது கார்த்திக் தொண்டைமானோ இங்கு இறக்குமதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மீண்டும் தென்னலூர் பழனியப்பனும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். மற்றும் சில திமுக புள்ளிகளும் சீட்டுக்காக அறிவாலயப் படையெடுப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எப்படியும் டாக்டர் விஜயபாஸ்கரின் வெற்றிவாய்ப்பை இந்த முறை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் பிரசாரத் திட்டம் வகுத்து வருகிறதாம் திமுக தலைமை. தவெகவும், நாதகவும் ஓரளவு வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன. எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி வெற்றிக் காற்று அதிமுகவின் பக்கமே வீசுகிறது.! கோட்டை மீண்டும் திமுக வசமாகுமா? 3. திருமயம் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னொரு நட்சத்திரத் தொகுதி திருமயம். பழமையான குடவரைக்கோவிலைக் கொண்ட, தீரர் சத்தியமூர்த்தியை தந்த இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், கோனார், உடையார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல சமூக மக்களும் வசித்து வருகின்றனர். திமுகவில் சீட் கேட்டு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இளைஞரணியைச் சேர்ந்த விராச்சிலை வக்கீல் கைலாசம், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் அடைக்கலம் மணி ஆகியோர் முட்டிமோதினாலும் மீண்டும் அமைச்சர் ரகுபதிதான் இங்கு வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இதனால் தனது மகன் டாக்டர் அண்ணாமலையை அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு ஊராக களமிறங்கி நலத்திட்டப்பணிகளையும் அன்பளிப்புகளையும் அள்ளி வழங்கி வருகிறார். அமைச்சர் ரகுபதி கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற கே.கே.செல்வக்குமாரின் தமிழர் தேசம் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தரப்பில் கடந்த 2 தேர்தல்களிலும் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் (2016- 766, 2021 -1382) தோல்வியை தழுவிய வைரமுத்து இந்த முறை வெற்றிக்கனியைப் பறிக்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் களமாடி வருகிறார். கடந்த முறை அமமுக தனியாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றது. அவ்வாறு பெற்ற வாக்குகள் இந்தமுறை கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு கிடைப்பது ஒரு பலம். இரண்டுமுறை தோல்வியைத் தழுவியவர் என்ற அனுதாபமும் தொகுதி மக்களிடையே நிறையவே உள்ளது. ஆனால் தொகுதியைக் கைப்பற்றுவதற்குள் கட்சியிலிருந்து சீட்டைக் கைப்பற்றவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. அரிமளம் ஒன்றியச் செயலாளர் கடையக்குடி திலகர் பெரும்பான்மையாக உள்ள தனது முத்தரையர் சமூகத்தை முன்னிலைப்படுத்தி எப்படியும் அதிமுகவில் சீட்டைக் கைப்பற்றும் பணியில் தீவிரமாக இருக்கிறார். தவெக சார்பில் சிந்து ராமசாமிதான் வேட்பாளராக இருப்பார் என்பதால் அவரும் சமூக ஊடகங்களில் சளைக்காமல் பதிவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். நாதகவும் லட்சுமி சீனிவாசனை வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் திருமயத்தில் மீண்டும் கடுமையான போட்டியைச் சந்திப்பார்கள் என்பது சந்தேகமில்லை. அதேபோல் முத்தரையர் சமூகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் சுயேட்சையாக களம் இறங்கவும் திட்டம் உள்ளது. தவெகவும், நாதகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெறும் என்பதாலும், இரு முக்கிய கட்சிகளின் இரு தரப்பிலும் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகளும் தூக்கலாக இருக்கும் என்பதால் திருமயம் தொகுதி யாருக்குச் சாதகம் என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல முடியாத நிலையில்தான் தற்போதுவரை கடும் போட்டி நிலவும் தொகுதியாகவே உள்ளது. வெற்றிக் கடல் யார் பக்கம்? 4. அறந்தாங்கி தொகுதி புதுக்கோட்டையின் கடற்கரையோர தொகுதி. முக்குலத்தோர் , முத்தரையர், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், உடையார், கோனார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 'விஐபி' தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி, எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத களம். ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பின் அதிமுகவின் பிடிக்குள் வந்து, இப்போது 'மிக்ஸட்' மோடில் இருக்கிறது. தற்போது காங்கிரஸ் (திமுக கூட்டணி) வசம் தொகுதி இருந்தாலும், கள நிலவரம் என்னவோ கூட்டணி ஒதுக்கீட்டில் தொகுதி திமுகவுக்கா? காங்கிரஸூக்கா? என்பதில்தான் பெரும் அனல் பறக்கிறது. தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், ஒரு காலத்தில் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எஸ்.திருநாவுக்கரசரின் வாரிசு என்ற கூடுதல் அறிமுகமும், அமைதியாவனர் என்ற பெயரும் இருந்தாலும் தொகுதியில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்கிற ஆதங்கம் ஒரு தரப்பு மக்களிடம் இருக்கிறது. இதனை காரணம் காட்டி தொகுதியை காங்கிரஸிடமிருந்து மீட்க தொகுதியின் திமுக உடன்பிறப்புகள் கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகம், அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமான மணமேல்குடி பரணி கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி ஆகியோர் சீட்டுக்கான தீவிர முயற்சியில் இருந்து வருகின்றனர். தொகுதி பங்கீட்டில் மீண்டும் தன் மகனுக்கே தக்க வைப்பதில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்துக்கான வலுவான கோரிக்கைகளுடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்கிறது. அதிமுகவில் சீட்டை கைப்பற்றுவதில் எக்ஸ் எம்எல்ஏ ராஜநாயகம், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் சீட்டைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளார். நாதக முத்துலெட்சுமி தவெக தரப்பில் பிரபு, ஆண்ட்ரூஸ் பாண்டியன் ஆகியோர் சீட்டுக்காக பனையூரை முகாமிட்டுள்ளனர். நாதக தரப்பில் முத்துலெட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தமுறை அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றுள்ளதும், திமுக கூட்டணியில் தமிழர் தேசம் பங்கு பெற்றுள்ளதும் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகி இருப்பதும் இளைஞர்களின் வாக்குகளை தவெகவும், நாம் தமிழர் கட்சியும் அறுவடை செய்ய இருப்பதும் தேர்தலில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தலாம். அறந்தாங்கியைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்! மீண்டும் பறக்குமா செங்கொடி? 5. கந்தர்வகோட்டை தொகுதி புதுக்கோட்டையின் 'தனி'த் தொகுதியான கந்தர்வகோட்டை, எப்போதும் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகவே இருந்து வருகிறது. இந்த முறை வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி, புதுப்புது முகங்களின் வருகை களத்தை 'திக் திக்' ரகமாக மாற்ற இருக்கிறது. தற்போது சிபிஎம் வசம் இருக்கும் இந்தத் தொகுதியில், மீண்டும் மா. சின்னத்துரை களம் இறங்கத் தயாராகி வருகிறார். மக்களோடு மக்களாக நிற்பவர் என்ற பெயர் அவருக்கு பிளஸ். ஆனால், இந்த முறை திமுக நேரடியாக இங்கே கைவைக்க நினைக்கிறது. திமுக ரேஸில் இலக்கிய அணியின் ராசு கவிதைப்பித்தன், கட்சிப் பணிகளில் வேகம் காட்டும் கீரை தமிழ் ராஜா ஆகியோர் முட்டி மோதுகின்றனர். கூட்டணிக்கு ஒதுக்கியது போதும், இந்த முறை உதயசூரியன் சின்னம் வேண்டும் என்பதே உள்ளூர் உடன்பிறப்புகளின் கோஷமாக இருக்கிறது. ஆனாலும் செங்கொடி தோழர்கள் கூட்டணியில் கந்தர்வகோட்டையை அத்தனை எளிதில் இழந்துவிடமாட்டார்கள் . மறுபக்கம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியின் பழைய முகமாக இருந்தாலும், தொகுதிக்குள் மீண்டும் தன் செல்வாக்கை தக்கவைக்கப் பார்க்கிறார் நார்த்தாமலை ஆறுமுகம்.  கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயபாரதி, புதுமுகம் புவனா பாண்டியன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன. பெண் வாக்காளர்களைக் கவர இவர்களில் ஒருவருக்கு 'சீட்' கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது. ராஜ்மோகன் விஜய் கட்சியின் என்ட்ரி இங்கே இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்மோகன், இந்திரகுமார், சரத்குமார் ஆகிய மூவரும் தளபதியின் ஆசிக்குக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, புது முகங்கள் என்பதால் வாக்காளர்களிடம் ஒரு 'கியூரியாசிட்டி' இருக்கிறது. கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற நாதக, நதியாவை களத்தில் இறக்கி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜகவின் பலத்தைக் காட்ட புரட்சிக் கவிதாசன், உதயகுமார், சாந்தார் என ஒரு பட்டாளமே சீட்டுக்காக முட்டி மோதுகிறது. கந்தர்வகோட்டையைப் பொறுத்தவரை பெரும்பான்மையாக உள்ள ஆத்திராவிடர், முக்குலத்தோர், உடையார், கோனார் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் 'மாஸ்டர் கீ'. கூட்டணிக் குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'புது ரத்தம்' பாய்ச்சும் தவெக மற்றும் நாதக வேட்பாளர்கள் இந்த முறை பெரிய கட்சிகளின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை! அனல் பறக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்! 6. ஆலங்குடி தொகுதி ஆலங்குடி என்றாலே அது 'அரசியல் மல்லுக்கட்டு'க்குப் பெயர் போன ஊர். முத்தரையர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்த மண்ணில், இந்த முறை களம் வழக்கமான நேர்கோட்டில் இல்லை. ஜிக்-ஜாக் பாதையில் பயணிக்கிறது. அமைச்சர் மெய்யநாதன் தொகுதியில் பம்பரமாகச் சுழல்கிறார். தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுவார் என்கிற முத்திரை அவருக்குப் பெரிய பலம். 2016-ல் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர், 2021-ல் அந்த இடைவெளியை 25 ஆயிரமாக உயர்த்தினார். இந்த முறை 'ஹாட்ரிக்' அடித்துத் தன் பலத்தை நிரூபிக்க நினைக்கிறார். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை அமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லையே என்ற முணுமுணுப்பை அவர் சரிகட்டியாக வேண்டும். மெய்யநாதன் அதிமுகவின் தர்ம தங்கவேல், கடந்த முறை தோல்வியடைந்தாலும் துவண்டுவிடாமல் இந்த முறையும் மீண்டும் களம் இறங்க காத்திருக்கிறார். நாதகவின் வேட்பாளர் பொறியாளர் ராஜாராம் கிராமம் கிராமமாகத் திண்ணைப் பிரசாரம் செய்கிறார். மாற்று அரசியலை எதிர்பார்க்கும் ஒரு கணிசமான வாக்கு வங்கி நாதகவுக்கு இங்கே உண்டு. இது எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என்பது தெரியவில்லை. தவெக வில் சிவநேசன், ஆதி அரங்குளவன், சூர்யா ஆகியோர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆர்வம் தெரிகிறது. இவர்கள் பிரிக்கும் வாக்குகள், வெற்றியாளரின் மார்ஜினைத் தீர்மானிக்கும் 'டிசைடிங் ஃபேக்டர்'. தொகுதியில் திமுகவுக்குச் சாதகமான காற்று வீசினாலும், அது சூறாவளியாக மாறாமல் தடுப்பது தவெக-வின் என்ட்ரிதான். அதிமுகவின் கோட்டைக்குள் தவெகவும் நாதகவும் புகுந்து வாக்குகளைக் குடைந்தால், அது மறைமுகமாக மெய்யநாதனுக்கு 'லக்' ஆக மாற வாய்ப்புண்டு. ஆகையால் தற்போதைய நிலையில் திமுகவின் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகிக்கிறார். புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் ஆட்டம் இப்போது 'ஆடுபுலி' ஆட்டமாக மாறியிருக்கிறது! விராலிமலையில் அதிமுகவும், ஆலங்குடியில் திமுகவும் 'தனிநபர் செல்வாக்கு' கோட்டை கட்டினாலும், புதுக்கோட்டையிலும் திருமயத்திலும் திமுகவின் 'அதிகார பலம்' அணை கட்டுகிறது. ஆனால், அறந்தாங்கியிலும் கந்தர்வக்கோட்டையிலும் கூட்டணிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர்தான் சமஸ்தானத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது. திமுகவின் ஆட்சித் திறன் ஒருபுறம், அதிமுகவின் மீட்டெடுப்பு வேகம் மறுபுறம் இருந்தாலும், தவெக - நாதக எனும் இளம் சிங்கங்களின் பாய்ச்சலில் யாருடைய கோட்டை சரியப்போகிறது என்பதுதான் நிஜமான ட்விஸ்ட். சுருக்கமாகச் சொன்னால், பெரிய தலைகள் முட்டி மோதிக்கொள்ள, புது ரத்தம் பாய்ச்சும் இளைய சமுதாயத்தின் வாக்குகள் யாருக்குச் சாதகமோ.... அவர்களுக்கே புதுக்கோட்டை சிம்மாசனமிடும்..!

விகடன் 19 Mar 2026 3:22 pm

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' தேனி மாவட்டம் முந்துவது யார்? 1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழக வரலாற்றில் தனித்த இடம் உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகிய மூவரும் களம் கண்ட தொகுதி. தற்போது திமுகவை சேர்ந்த மகராஜன் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது. தொகுதியில், முக்குலத்தோரும், பட்டியல் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாயக்கர், கவுண்டர், செட்டியார் சமூகத்தினர் தொகுதியில் பரவலாக இருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகராஜனும், அதிமுகவில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். மகராஜன் கட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணன், தம்பி போட்டியாக இது பார்க்கபட்டது. இந்த முறை அதிமுகவில் வேறு வேட்பாளரை நிறுத்து வேண்டுமென கட்சியினர் போர்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் லோகிராஜன் திரும்பவும் சீட் கேட்பதோடு தொகுதி முழுவதும் கட்சி பணிகளை செய்து  வருகிறார். கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். அமமுகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டால் டிடிவி தினகரகன் மனைவி அனுராதா நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. லோகிராஜன் திமுக தரப்பில், சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் சீட் கேட்கிறார். புதிதாக கட்சியில் சேர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தர்நாத், தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். தவெக-வை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வுக்கு பின் தான் வாக்குகள் குறித்து தெரியும் என்ற அளவில் தான் உள்ளது. ஆண்டிபட்டியில் தேமுதிகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளது. இது திமுகவிற்கு கூடுதல் பலனளிக்கும் என்பதால் தற்போதைய நிலையில் மீண்டும் உதயசூரியனே உதிக்க வாய்ப்புள்ளது.! 2. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி பெரியகுளம் தொகுதி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது என்பதால் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சுமார் 300 ஏக்கரில் மாம்பழ விவசாயம் நடைபெறுகிறது. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் கரும்பு வெல்ல மார்க்கெட்டும் இருக்கின்றன. பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிக அளவில் பட்டியலினத்தவர்கள் வசிக்கின்றனர். அதற்கடுத்து முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் சமூகத்தினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ சரவணகுமார் தி.மு.க-வில் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணகுமார். ஆனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி நிலவிவுதால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் அவருடைய கட்சியினர். அவருக்கு அடுத்தபடியாக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா, திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்  பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தி.மு.க கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-க்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த லாசர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தவமணி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் ஜெயராமன், நகர மாவட்ட பிரதிநிதி எம் சுரேஷ், தென்கரை பேரூர் கழகச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். அமமுகவில் கதிர்காமு சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் விமலா என்பவர் வேட்பாளாராக களமிறங்குகிறார். தவெக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள். அதிமுக, திமுக இரண்டு தரப்பிலும் வேட்பாளர்களுக்கான தேர்வில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தொகுதியிலும் இரு திராவிட கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற நிலையே தற்போது உள்ளது. தவெக பிரிக்கும் வாக்குகளும் இங்கு வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையே உள்ளது. கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்? 3. கம்பம் சட்டமன்ற தொகுதி நெல், திராட்சை, வாழை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக அமைந்திருக்கும் தொகுதி, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்றத் தொகுதி. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்காகவும் தொகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.  தொகுதியில், ஒக்கலிகக் கவுண்டர், முக்குலத்தோர் சமூகத்தினரே வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்களாகவும் அதற்கடுத்து இஸ்லாமியர்கள், நாயுடு, பட்டியல் சமூகத்தினர் தொகுதி முழுக்கப் பரவலாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் மீண்டும் சீட் கேட்கிறார். அவருக்கு வயதை காரணம் காட்டி தவிர்ப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சு உள்ளது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம் கட்சியினரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில், முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் சீட் கேட்கிறார். ஜக்கையன் பா.ஜ.கவும் தொகுதியை கேட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு செல்வி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், தி.மு.க வே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? 4. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி போடிநாயக்கனூர் தொகுதி மலைப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்குள்ள மலைக் கிராமங்களில் காபி, ஏலக்காய், மிளகு பயிரிடப்படுகின்றன. மலையடிவாரப் பகுதியில் இலவம் பஞ்சு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை களுக்குத் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. தொகுதியில், முக்குலத்தோர் மற்றும் பட்டியல் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, செட்டியார், ஒக்கலிக கவுடர், பிள்ளைமார் சமூகத்தினர் பரவலாக இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அவரும் சீட்டு கேட்டு வருகிறார். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், போடி தி.மு.க நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர துணைச் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சீட் பெற முயன்றுவருகிறார்கள். தேனி அ.தி.மு.க-வில், தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.டி.நாராயணசாமி, வாசு, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், பி.சி.பாண்டியன் அல்லது தண்டபாணிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர். சீ.கலைஅரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தவெக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சீட் பெற முயற்சித்து வருகிறார்.   தற்போதைய சூழலில், திமுகவே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.!

விகடன் 19 Mar 2026 2:26 pm

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' தேனி மாவட்டம் முந்துவது யார்? 1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழக வரலாற்றில் தனித்த இடம் உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகிய மூவரும் களம் கண்ட தொகுதி. தற்போது திமுகவை சேர்ந்த மகராஜன் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது. தொகுதியில், முக்குலத்தோரும், பட்டியல் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாயக்கர், கவுண்டர், செட்டியார் சமூகத்தினர் தொகுதியில் பரவலாக இருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகராஜனும், அதிமுகவில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். மகராஜன் கட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணன், தம்பி போட்டியாக இது பார்க்கபட்டது. இந்த முறை அதிமுகவில் வேறு வேட்பாளரை நிறுத்து வேண்டுமென கட்சியினர் போர்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் லோகிராஜன் திரும்பவும் சீட் கேட்பதோடு தொகுதி முழுவதும் கட்சி பணிகளை செய்து  வருகிறார். கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். அமமுகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டால் டிடிவி தினகரகன் மனைவி அனுராதா நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. லோகிராஜன் திமுக தரப்பில், சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் சீட் கேட்கிறார். புதிதாக கட்சியில் சேர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தர்நாத், தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். தவெக-வை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வுக்கு பின் தான் வாக்குகள் குறித்து தெரியும் என்ற அளவில் தான் உள்ளது. ஆண்டிபட்டியில் தேமுதிகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளது. இது திமுகவிற்கு கூடுதல் பலனளிக்கும் என்பதால் தற்போதைய நிலையில் மீண்டும் உதயசூரியனே உதிக்க வாய்ப்புள்ளது.! 2. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி பெரியகுளம் தொகுதி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது என்பதால் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சுமார் 300 ஏக்கரில் மாம்பழ விவசாயம் நடைபெறுகிறது. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் கரும்பு வெல்ல மார்க்கெட்டும் இருக்கின்றன. பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிக அளவில் பட்டியலினத்தவர்கள் வசிக்கின்றனர். அதற்கடுத்து முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் சமூகத்தினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ சரவணகுமார் தி.மு.க-வில் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணகுமார். ஆனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி நிலவிவுதால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் அவருடைய கட்சியினர். அவருக்கு அடுத்தபடியாக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா, திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்  பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தி.மு.க கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-க்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த லாசர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தவமணி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் ஜெயராமன், நகர மாவட்ட பிரதிநிதி எம் சுரேஷ், தென்கரை பேரூர் கழகச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். அமமுகவில் கதிர்காமு சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் விமலா என்பவர் வேட்பாளாராக களமிறங்குகிறார். தவெக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள். அதிமுக, திமுக இரண்டு தரப்பிலும் வேட்பாளர்களுக்கான தேர்வில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தொகுதியிலும் இரு திராவிட கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற நிலையே தற்போது உள்ளது. தவெக பிரிக்கும் வாக்குகளும் இங்கு வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையே உள்ளது. கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்? 3. கம்பம் சட்டமன்ற தொகுதி நெல், திராட்சை, வாழை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக அமைந்திருக்கும் தொகுதி, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்றத் தொகுதி. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்காகவும் தொகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.  தொகுதியில், ஒக்கலிகக் கவுண்டர், முக்குலத்தோர் சமூகத்தினரே வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்களாகவும் அதற்கடுத்து இஸ்லாமியர்கள், நாயுடு, பட்டியல் சமூகத்தினர் தொகுதி முழுக்கப் பரவலாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் மீண்டும் சீட் கேட்கிறார். அவருக்கு வயதை காரணம் காட்டி தவிர்ப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சு உள்ளது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம் கட்சியினரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில், முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் சீட் கேட்கிறார். ஜக்கையன் பா.ஜ.கவும் தொகுதியை கேட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு செல்வி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், தி.மு.க வே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? 4. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி போடிநாயக்கனூர் தொகுதி மலைப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்குள்ள மலைக் கிராமங்களில் காபி, ஏலக்காய், மிளகு பயிரிடப்படுகின்றன. மலையடிவாரப் பகுதியில் இலவம் பஞ்சு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை களுக்குத் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. தொகுதியில், முக்குலத்தோர் மற்றும் பட்டியல் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, செட்டியார், ஒக்கலிக கவுடர், பிள்ளைமார் சமூகத்தினர் பரவலாக இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அவரும் சீட்டு கேட்டு வருகிறார். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், போடி தி.மு.க நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர துணைச் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சீட் பெற முயன்றுவருகிறார்கள். தேனி அ.தி.மு.க-வில், தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.டி.நாராயணசாமி, வாசு, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், பி.சி.பாண்டியன் அல்லது தண்டபாணிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர். சீ.கலைஅரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தவெக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சீட் பெற முயற்சித்து வருகிறார்.   தற்போதைய சூழலில், திமுகவே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.!

விகடன் 19 Mar 2026 2:26 pm

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர'தகவல்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது... - என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட். தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது... கமேனி ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப் ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும். இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள். அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை என்று கூறியுள்ளார். 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

விகடன் 19 Mar 2026 12:57 pm

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர'தகவல்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது... - என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட். தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது... கமேனி ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப் ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும். இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள். அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை என்று கூறியுள்ளார். 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

விகடன் 19 Mar 2026 12:57 pm

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நயினார் நாகேந்திரன் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தவறான தகவல்.  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல அமைச்சர்கள் மீது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள் உள்ளன. எனவே இதனைத் தேர்தல் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க எந்த ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ சார்ந்த கட்சி கிடையாது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறோம். இஸ்லாமியர்களின் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில்கூட நான் கலந்துகொள்கிறேன். நயினார் நாகேந்திரன் உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசுவது தி.மு.க.,தான். இந்து மதப் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை, ஆனால், மற்ற பண்டிகைகளுக்குச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.  

விகடன் 19 Mar 2026 12:24 pm

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன. அருணாச்சலம் - மநீம பொதுச்செயலாளர் இப்போது அந்தப் பட்டியலில் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. 'போட்டியிட்டால் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என அறிவாலயத்திலேயே கறாராக பேசியிருக்கிறார் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம். திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை மநீம இன்று நடத்தியிருந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக மநீம கூறியிருக்கிறது. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேசுகையில், 'தொகுதி எண்ணிக்கையில் பிரச்னை இல்லை. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாகவே சென்றது. ஆனால், திமுக எங்களை உதய சூரியன் சின்னத்தில் நிற்க கோரிக்கை வைக்கிறது. ஸ்டாலின் - கமல் கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு சராசரியாக 4% வாக்குகளை வாங்கியிருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் மக்களிடன் சென்று சேர்ந்த சின்னம் டார்ச் லைட் சின்னம். அதில் போட்டியிட வேண்டும் என்றே உறுதியாக இருக்கிறோம். சின்னம் குறித்துதான் இருதரப்புக்கும் மாற்று கருத்துகள் இருக்கிறது. தலைவரிடம் விஷயத்தை கூறுவோம். செயற்குழு கூடி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சந்திக்கிறோம்' என்றார். திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

விகடன் 19 Mar 2026 12:10 pm

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை !' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி * தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும் * தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும் சீமான் * அனைவருக்கும் அரசு வேலை * பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை * தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும் * அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை * நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை கடைப்பிடிக்கப்படும். * சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

விகடன் 19 Mar 2026 11:53 am

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திருச்சி மூத்த வழக்கறிஞர் C.K.ராஜ்குமார் அவர்களின் இணையருமான இவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நிர்மலாராணி. அதோடு, வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்தார். இந்நிலையில், நலமுடன் இருந்த இவர், திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது இயற்கை எய்தியிருக்கிறார். தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு முடிந்திருக்கிறது. அவரது மறைவு குறித்து தோழர் ஒருவர் செய்துள்ள பதிவில், nirmalarani 'தோழர் உ.நிர்மலாராணி எனக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சிதம்பரம் மாநில மாநாட்டின்போது அறிமுகமானவர். நான் தேன்கனிக்கோட்டையில் பணியாற்றிய 1984-86 காலகட்டத்தில் அவர் ஜூனியர் விகடன் மாணவ நிருபர் என்ற முறையில் அங்கு வந்திருந்தார்.  கோலட்டியில் இயங்கிவந்த மிகப் பெரிய பட்டுவளர்ப்புப்பண்ணை பற்றிய செய்தி சேகரிப்புக்காக கமலா முருகன் என்ற தோழருடன் வந்திருந்த அவருடன் தேன்கனிக்கோட்டையில் இருந்து நானும் சென்றிருந்தேன். பிற்பகலில் பண்ணையில் இருந்து திரும்பிய நாங்கள், சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது லாரி ஒன்று வனத்துறை சோதனைச்சாவடியில் கட்டப்பட்டிருந்த கனத்த தடுப்புச் சங்கிலியைத் தலைதெறிக்கும் வேகத்தில் அறுத்துக்கொண்டு எங்களைக் கடந்து பாய்ந்தது. தெறித்த சங்கிலித்துண்டு ஒன்று எங்களுக்கு சில அடிகள் தூரத்தில் வந்து விழுந்தது. சிலநொடிகள் முந்தி இருந்தாலும் எங்களில் யாராவது ஒருவர் கடுமையாக காயமடைந்து இருக்கக்கூடும். அந்தச் சங்கிலித்துண்டு வந்த வேகத்தில் பட்டிருந்தால் என்னவாகியிருப்போம் என்கிற அதிர்ச்சியிலிருந்து மீளவே எங்களுக்கு கொஞ்சம் நேரமெடுத்தது. அன்றைக்கு தப்பித்தது பெரிய விசயம்தான். ஆனால், சற்றுமுன் அவர் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலை எனக்கு வாய்த்திருக்கக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவரைப்பற்றி கவிவர்மன், தமிழகத்தில் உள்ள லீடிங் லாயரில் ஒருவர் நிர்மலாராணி தோழர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியாக கடந்த வருடம் தேர்வாக இருந்து கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போனது. மறுபடியும் அவர் நீதிபதியாக அத்தனை வாய்ப்புகளும் இருந்த நிலையில், திடீரென்று தோழர் மறைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. kavivarman இவரது தந்தைதான் திருச்சி காட்டூர் பகுதியில் சமத்துவ சுடுகாடு அமைய பெரும் முயற்சி எடுத்தவர். 64 வயது ஆகிறது. சட்டப் போராளியாகவும், சமூக ஆய்வாளராகவும் திகழ்ந்த அவரது மறைவு தமிழக முற்போக்கு இயக்கங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழர் மறைவெய்திருப்பது தாங்கமுடியாத இழப்பு என்றார்.

விகடன் 19 Mar 2026 11:48 am

ஈரான் 'இதை'செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப்

இஸ்ரேல் ஈரானின் தலைவர்கள் மற்றும் எரிசக்தி ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகளைத் தாக்கி வருகிறது. அப்படித் தான் நேற்று கத்தாரில் உள்ள எரிவாயு ஆலையை தாக்கியிருக்கிறது ஈரான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... ஈரான் போர் 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல் மீதான கோபத்தில் இஸ்ரேல், ஈரானில் உள்ள மிகப்பெரிய எரிசக்தி வசதியான தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்தத் தாக்குதல் எரிவாயு வாயலின் மிகச் சிறிய பகுதியையே பாதித்தது. அமெரிக்காவிற்கு இந்தத் தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது. கத்தாருக்கும் இந்தத் தாக்குதல் நடக்கும் என்று தெரியாது... அது இந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஈரானுக்கும் இது குறித்து தெரியவில்லை. அதனால், அது கத்தாரின் எல்.என்.ஜி எரிவாயு வசதியை தவறாக தாக்கியுள்ளது. இஸ்ரேல் தாக்காது கத்தார் மீதான தாக்குதல் போல, ஈரான் அறிவீனமான எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றால், இஸ்ரேல் எரிசக்திகள் மீது தாக்குதல் நடத்தாது. ஒருவேளை, கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் இதுவரை பார்த்திராத போல, மிகப்பெரிய தாக்குதலில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை முழுவதுமாக அழிக்கும் அமெரிக்கா. இந்தத் தாக்குதல் நீண்ட காலத்திற்கு ஈரானை பாதிக்கும் என்பதால், அந்த மாதிரியான வன்முறை மற்றும் அழிவிற்கு நான் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், கத்தார் எல்.என்.ஜி மீது மீண்டும் தாக்குதல் நடந்தால், நான் தயங்கமாட்டேன். தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?

விகடன் 19 Mar 2026 11:40 am

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்! பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி... தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சங்கீதாவுக்குத்தான் சீட் எனத் தகவல் பரவின. இந்தச் சூழலில், துரைமுருகன் மீண்டும் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதோடு, காட்பாடியில் தனது மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகக் களப் பணிகளையும் வேகப்படுத்தியிருக்கிறாராம். துரைமுருகன் களச் சூழலும் தனக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதும் துரைமுருகன், `இம்முறை எப்படி பிரசாரம் செய்யலாம்... மக்களை எப்படியெல்லாம் குளிர்விக்கலாம்?’ என்ற ஆலோசனையில் இருக்கியிருக்கிறாராம். பல்வேறு பலே திட்டங்களுடன், அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தன்னுடைய உடம்பை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் துரைமுருகன். இழுபறியில் இணைப்பு! மாம்பழம் டு சூரியன் ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் அவர் அணியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி பேசிவந்த அவர், சமீப காலமாக அடக்கி வாசிப்பதால், 'ம.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்று பேசப்பட்டது. இந்நிலையில், ஆடுதுறையில் கட்டப்பட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் நினைவு மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கான முன்னெடுப்பைச் செய்த ம.க.ஸ்டாலின், நேருவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்து உடன்பிறப்புகளே வாயடைத்துப் போனார்களாம். 'பா.ம.க-வில் பிளவு நிலவுவதால் தி.மு.க-வில் இணைய முட்டி மோதுகிறார் ம.க.ஸ்டாலின். அதற்கு லோக்கல் உடன்பிறப்புக்கள் முட்டுக்கட்டை போடுவதால், இணைப்பு இழுத்துக்கொண்டு போகிறது' என்கிறார்கள் டெல்டா தி.மு.க-வினர். அப்செட்டில் மணியான மாஜி! அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு... அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிசாமி இதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல... அந்த அறிவிப்பு இரட்டை 'மணி'களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். '2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல' என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். மாற்றப்பட்ட காக்கிகள்! ஆளுங்கட்சிக்கு நெருக்கம்? தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நான்கு எஸ்.பி-க்களில் மூன்று பேரின் குடும்பத்தினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாம். இன்னொருவர் மாவட்ட அமைச்சருக்குத் தீவிர விசுவாசியாக இருந்து வந்தாராம். அதுதொடர்பான ரிப்போர்ட் அடிப்படையில்தான் நான்கு எஸ்.பி-க்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவரும் டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றத் திட்டமிட்டுள்ளதாம். காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் நிலை இருப்பதால், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தபடி தகவல்களைப் பார்த்துச் சொன்ன அதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவ் லெட்டரை இப்போதே தயாராக வைத்திருக்கிறாராம். மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி! - ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்... கிளப்பிவிட்ட தி.மு.க! பேசி முடித்த வேலுமணி! தே.ஜ கூட்டணியில் புதிய தமிழகம்... புதிய தமிழகம் கட்சியை தே.ஜ கூட்டணிக்கு இழுத்து வரும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதுதொடர்பாக, டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளை வேலுமணி நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஐந்து சீட் என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி, இரண்டு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் வேலுமணி. விரைவிலேயே கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தாகிவிடும்' என்கின்றன எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள். அதேசமயம், புதிய தமிழகத்துக்குத் தேவையான 'உதவிகள்' அனைத்தையும் செய்வதற்கு, பா.ஜ.க-வின் முன்னணி தலைவர் ஒருவர் மனம் திறந்திருப்பதால், வரும் வாரத்திலேயே எடப்பாடியுடன் கிருஷ்ணசாமி கைக்குலுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

விகடன் 19 Mar 2026 11:10 am

'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி'போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, 'தமிழ் வாழ்க' என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார். இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார். மே 17 இயக்கத்தினர் போராட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! இவருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா? இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக்… — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 18, 2026

விகடன் 19 Mar 2026 10:00 am

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்கக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நேர்காணல் முடிந்து வெளியே வந்த திருவட்டாறு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் கலை வெளிப்படையாகவே மீடியாக்களிடம் பேசினார். நேர்காணலில் நடந்தது குறித்து அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு வழங்கியிருந்த நிலையில் நேர்காணலில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ப்பட 28 பேர் கலந்துகொண்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியபோது டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேர்காணலில், 'வந்த அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. உங்களில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணி செய்து, உழைத்து வெற்றிபெற வைப்பீர்களா?' என முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அனைவரும் சரி எனச் சொன்னார்கள். உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள் என ஸ்டாலின் கேட்டார். முதலில் பேசிய ஜான்பிரைட், 'மனோதங்கராஜுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர் அமைச்சரும் ஆகிவிட்டார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலைதான் இருந்தது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அவரால் பயன் இல்லை. அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும்' எனச் சொன்னார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் கைத்தட்டினர். அடுத்து பேசிய ஜான்சன், 'அமைச்சர் மனோதங்கராஜுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்றார். பின்னர் பேசிய ஸ்டாலின், 'தொகுதியில் வளர்ச்சிப் பற்றி பேசலாம். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றார். ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல் கிள்ளியூர் தொகுதிக்கான நேர்காணலின்போது, அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கவேண்டும் என நிர்வாகிகள் கேட்டனர். கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 18 பஞ்சாயத்துக்களில் 13-ல் தி.மு.க வென்றுள்ளது எனக் கூறியுள்ளனர். அப்போது பேசிய முதல்வர், 'கிள்ளியூர் கூட்டணியான காங்கிரஸ் வசம் உள்ளது. அரசிடம் அதிக நிதிபெற்றவர் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார். அவர்தாம் நம்மை அதிகமாக விமர்சித்தும் பேசினார். ஆனாலும், கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. பார்க்கலாம்' என ஸ்டாலின் பேசினார். அப்போது பாலூரைச் சேர்ந்த நிர்வாகி தேவா என்பவர், 'எப்படியும் காங்கிரசுக்குத்தான் கிள்ளியூரைக் கொடுக்கப் போகிறீர்கள்' எனக் கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும்  முதல்வர் முன்னிலையிலே பிற நிர்வாகிகள் அவரை அடிக்கப் பாய்ந்துள்ளனர். பின்னர், வெளியே வந்த அவரைச் சில நிர்வாகிகள் தாக்க முற்பட்டனர். மனோ தங்கராஜ் நாகர்கோவில் தொகுதிக்கான நேர்காணலின்போது முதலில் மாவட்டச் செயலாளரான மேயர் மகேஷ் பேச எழுந்திருக்கிறார். அப்போது, மாவட்டச் செயலாளர் பேசவேண்டாம் எனக்கூறி உட்கார வைத்தார் முதல்வர்.  முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியபோது இடைமறித்த ஸ்டாலின், 'கடந்த தேர்தலில் பா.ஜ.க-விடம் தோற்றுப்போகக் காரணம் என்ன?' எனக் கேட்டார். 'அவர்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள்' எனச் சுரேஷ்ராஜன் பதில் சொன்னார். குளச்சல் தொகுதி நேர்காணலின்போது அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர் என்றனர்.

விகடன் 19 Mar 2026 8:53 am

திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள் அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''தீபம் ஏற்ற இருக்கும் தூணிற்கு மனுதாரர்கள் உட்பட  5 பேர் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து கொள்ளலாம்’' எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டி மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. மதுரை உயர் நீதிமன்றம்! இந்த அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தனிநீதிபதியே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த உத்தரவும், நேற்றைய இடைக்காலத் தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களைப் போல அல்ல. தீபத்தூண் அமைந்துள்ள மலை உச்சியில் நீதிமன்றம் நியமிக்கும் 5 நபர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தூண் இதில் உரிய முடிவெடுத்து தெரிவிக்காத பட்சத்தில் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். ஏன் இருவரும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என நீதிபதி எச்சரித்தார். அவர்கள் ஆஜராக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பிறகு, ''ஒட்டுமொத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்றார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

விகடன் 19 Mar 2026 7:39 am

கார்ட்டூன்..!

கார்ட்டூன்

விகடன் 19 Mar 2026 5:14 am

தவெக: நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் - கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நோன்பு திறந்த பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு தொழுகையில் விஜய்யும் கலந்துகொண்டார். இதன் பிறகு உரையாற்றிய விஜய் கொள்கையில் என்றைக்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும், பேசப்பட்டு வந்த கூட்டணி கணக்குகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். `90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ் அவர், நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இவர் அந்த டீமைச் சேர்ந்தவர், இந்த டீமைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இவர் எந்த டீமும் இல்லை. இவர் மக்களுடைய டீம்னு எல்லோருக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேற என்ன அவதூறு பரப்பலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அது எதுவும் வொர்க் ஆகல. அதைத் தாண்டி, இவனை என்ன பண்ணலாம்ங்கிற முயற்சியிலதான் அந்தக் கூட்டணியில், இந்தக் கூட்டணியில் சேரப் போறார்னு பொய்யான பிரசாரத்தைப் பரப்பினாங்க. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இந்த நியூஸ் கேட்டு நீங்க குழம்பியிருப்பீங்க. நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்ம தலைமையில்தான் ஆட்சி என்பது உறுதி. நம்ம முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீங்க, இறைவனின் அருளால் நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியும் எனக் கூறியிருக்கிறார். ``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்... - ஆற்காடு நவாப் பேட்டி

விகடன் 18 Mar 2026 7:29 pm

Notary Portal: தமிழ்நாடே இல்லையா? - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் பணிகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசின் சட்ட அமைச்சகம் 'நோட்டரி போர்டல்' (Notary Portal) என்ற புதிய டிஜிட்டல் தளத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. நோட்டரி வழக்கறிஞர் என்பவர் யார்? மத்திய அல்லது மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரே 'நோட்டரி' (Notary Public) எனப்படுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக (பெண்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு 7 ஆண்டுகள்) வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள். Advocate ஒரு ஆவணம் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்துவதும், அதில் கையெழுத்திட்ட நபர் அவர்தானா என்பதைச் சட்டப்பூர்வமாகச் சான்றளிப்பதும் இவர்களின் முதன்மைப் பணியாகும். சொத்து ஒப்பந்தங்கள், கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை, பெயர் மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றிற்கு நோட்டரி கையெழுத்து கட்டாயமாகும். நோட்டரி போர்டல் எனவே, சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தால் இந்த 'நோட்டரி போர்டல்' (Notary Portal) அதிகாரப்பூர்வமாக 2024, ஏப்ரல் 26 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. காகிதமில்லா நிர்வாகத்தை (Paperless Administration) ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டம், இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து மாநிலங்களில் உள்ள நோட்டரிகளும் இந்த மத்திய போர்டலில் தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Notary Portal தற்போது என்ன சிக்கல்? 2018-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இந்த நோட்டரியில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த 10,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதிலிருந்து நேர்காணலுக்கென 3,612 வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய ஆவணங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக மறுவிண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கென இருக்கும் நோட்டரி போர்டல் இணையப் பக்கத்தில் மூன்று முக்கிய சிக்கல்களை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்கின்றனர். 1. விண்ணப்பதாரரின் மாநிலம் தேர்வு பகுதியில், மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் பெயரும் விடுபட்டிருக்கிறது. 12 மாநிலங்களும் பெரும்பாலும் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். எனவே, பட்டியலில் மாநிலங்கள் விடுபட்டிருப்பது தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மாவட்டங்களின் பெயர் பட்டியல் இடம்பெறுகிறது. அதை வைத்து விண்ணப்பத்தைத் தொடர்ந்தால் அடுத்த சிக்கலாக இந்தி வருகிறது. Notary Portal 2. `தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், நோட்டரி போர்ட்டலில் பதிவு செய்யவும் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்' - என்ற வழிகாட்டுதலின் எண் (Step-7) -ல், தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், தங்களின் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவற்றை இந்தி மொழியிலும் உள்ளீடு செய்ய வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கும் வசதி நோட்டரி போர்ட்டலிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக இந்தியில் நீங்கள் உள்ளீடு செய்யும் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவை ஏற்கனவே நீங்கள் 'சர்வீஸ் பிளஸ்' (Service Plus) அல்லது நோட்டரி ஆன்லைன் போர்ட்டலில் ஆங்கிலத்தில் கொடுத்த விவரங்களுடன் சரியாக ஒத்துப்போக வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் (Mis-match) இருந்தால், உங்கள் விண்ணப்பம் குறைபாடுள்ள ஒன்றாகக் கருதப்படும். நீங்கள் வழங்கும் இந்த விவரங்கள் தானாகவே கணினியால் எடுக்கப்பட்டு, உங்கள் 'தொழில்முறை சான்றிதழில்' (Certificate of Practice) அச்சிடப்படும். எனவே, இரண்டு மொழிகளிலும் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. Notary Portal இந்தப் போர்ட்டலில் இந்தி பேசும் மாநிலம் அல்லாத ஒருவர் பதிவு செய்கிறார் என்றால், அவர் தன் பெயர் முதல் முகவரி வரை கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் இந்தி மொழி தெரிந்தவரின் உதவி தேவைப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. 3. மாநிலத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்பதால், மற்ற தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்பித்தாலும், மாநிலம் தேர்வு செய்யவில்லை என்பதால் விண்ணப்பத்தைச் சமர்பிக்க முடியவில்லை. சுமார் 3600-க்கும் மேற்பட்ட, நோட்டரிக்காகப் பதிவு செய்த வழக்கறிஞர்கள் இந்தச் சிக்கல்களால் சிரமப்படுவதாகத் தெரியவருகிறது. எனவே, விண்ணப்பதாரர்களின் காலக்கெடு முடிவதற்குள் இந்தக் கோளாறுகளைச் சரிசெய்து, தென்மாநில வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை உறுதி செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முன்வருமா? மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!- ரித்தேஷ் தேஷ்முக்

விகடன் 18 Mar 2026 7:16 pm

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது. CPI ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'அதிக சீட்டுகள் வேண்டும்' என்கிற தங்களின் நிலைப்பாட்டி உறுதியாக நிற்பதாலும், விசிக திடீரென முதல்வருடனான சந்திப்பை தவிர்த்ததாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தலைவலியில் தவிக்கிறது அறிவாலயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 'அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என பெ.சண்முகம் பேசியிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. Shanmugam சி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி, '6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.' என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர். அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். சி.பி.எம் போல விசிக முரண்டு பிடிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதிலிருந்து சீட்டுகள் குறையாது என விசிக தரப்புக்கு திமுக உத்தரவாதமும் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விசிக இன்று மாலை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தகவல் வெளியானது. விசிக தரப்பிலும் மாலை 5:30 மணியளவில் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கப்பட்டிருந்தது. திருமாவளவன் ஆனால், திடீரென மாலை 5:10 மணிக்கு முதல்வரை சந்திக்க வரவில்லை என விசிக தரப்பில் சொல்லப்பட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். 'சீட் குறைப்பு இல்லை' என்கிற போதும் கடைசி நிமிடத்தில் விசிக முதல்வரின் அப்பாய்ண்மெண்டை கேன்சல் செய்ததில் அறிவாலயமே குழம்பி போயிருக்கிறது. அறிவாலயத்தின் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ?

விகடன் 18 Mar 2026 7:13 pm

State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்கில் உள்ளது. தி.மு.க வின் துணை பொதுச்செயலாளராகவும், தென் மண்டலத்திற்கான பொறுப்பாளராகவும் இருக்கிறார் கனிமொழி. டெல்லியின் தி.மு.க-விற்கான மூவ் களை இவரை வைத்தே ஸ்டாலின் செய்துவருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் - தி.மு.க இடையே கூட்டணி சிக்கல் வந்தபோது கனிமொழி தான் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் கனிமொழி உடன் இருந்தார். டெல்லியில் தி.மு.க தொடர்பான பணிகளாக இருந்தாலும், மத்திய அரசு தொடர்பான கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தி.மு.க சார்பாகவும், இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும் பங்கெடுத்த கனிமொழிக்கு தற்போது டெல்லி அரசியல் மீது விருப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி,கனிமொழி இதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று டெல்லியில் கனிமொழியின் செல்வாக்கை குறைத்துவிட்டு, அந்த இடத்தில் முதல்வரின் மருமகன் சபரீசனை நியமிக்க இருப்பதாக கிளம்பிய பேச்சு. மற்றொன்று தமிழக அரசியல் களத்தில் கனிமொழிக்கு கிடைத்து வரும் அபரீதமான வரவேற்பும், கனிமொழியை உற்சாகப்படுத்தியுள்ளது. மொழி புரியாத டெல்லிக்கு சென்று அரசியல் செய்வதைவிட, தமிழகத்திலே நமது அரசியலை வேகமாக முன்னெடுக்கலாம் என்று சில மாதங்களாகவே கணக்கு போட்டுவந்தார். கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்' சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன? அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடமும் இதுகுறித்து கனிமொழி ஆலோசித்து வந்தார். அவரது ஆசையை புரிந்து கொண்ட தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர், `வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்க போட்டியிடுங்க அக்கா' என்று சொல்ல ஆரம்பித்தனர். அதோடு தி.மு.கவில் விருப்ப மனு பெற்ற போது, பலரும் கனிமொழி சுமார் பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வேட்பாளர்களுக்கான நேர்காணலை தி.மு. க தலைவர் துவக்கியுள்ளார். நேர்காணலுக்கு முன்பாக தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தை தனது அண்ணனும், முதல்வருமான ஸ்டாலினிடம் தெரிவிக்க முயன்றாராம் கனிமொழி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆனால், கனிமொழியின் மூவ் ஏற்கனவே தலைமைக்கு நன்றாக தெரிகிறது. கனிமொழியை டெல்லியின் முகமாக மட்டுமே வைத்துக்கொள்ள தலைமையும், தலைமையின் கிட்சன் கேபினெட்டும் விரும்புவதால் அவரை மாநில அரசியலில் பங்காற்றிடவிடாத அளவுக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள். இந்நிலையில் திருச்செந்துார், பாளையங்கோட்டை, விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட சில தொகுதிகளை கனிமொழி தனக்காக அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு தலைமை இதுவரை இசைவு கொடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்வாகும் பட்சத்தி்ல், எதிர்காலத்தில் உதயநிதிக்கு சிக்கலாகுமோ? என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. அதோடு துாத்துக்குடி மற்றொரு நபரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம யோசித்தே தலைமை இப்போது கனிமொழியின் ஆசைக்கு தடைபோடும் முடிவை எடுத்துள்ளது.! வி.சி.க-வில் யார் யாருக்கு சீட்? - சஸ்பென்ஸ் திருமா... தவிப்பில் நிர்வாகிகள்!

விகடன் 18 Mar 2026 6:38 pm

``ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது - கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த செயலை கண்டித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐபி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள், தூதர்கள், வழக்கறிஞர்கள் என, 204 பேர் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டனர். ராகுல் காந்தி இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், ``ராகுல் காந்தியைப் பார்க்கும் போது எங்களுக்கு (பெண்களுக்கு) மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. அவர் ஒரு 'தபோரி' (நாடோடி| பொறுப்பற்றவர்) போல நடந்துகொள்கிறார். யாரைப் பார்த்தாலும் மரியாதையின்றி ஒருமையில் பேசுகிறார். யாராவது பேட்டி அளித்துக் கொண்டிருந்தால், அவர்களைக் கேலி செய்யும் வகையில் சத்தமிடுகிறார். ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் கண்ணியமான நடத்தையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி ஒரு அவமானம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள் திரண்டு கடிதம் எழுதியிருப்பதும், கங்கனா ரனாவத் அவரை ஒருமையில் விமர்சித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!

விகடன் 18 Mar 2026 5:55 pm

'6 சீட்டுக்கு மேல கேக்காதீங்க!'முடிவைச் சொல்லிய திமுக - ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

சி.பி.எம் - தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. குறைந்த சீட்டுக்கு ஒப்புக்கொள்ள சி.பி.எம் மறுத்த நிலையில் தி.மு.க-வே இறங்கி வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பெ. சண்முகம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க. அதைதொடர்ந்து 'எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள். ஆனால், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 5 தொகுதிகளைதான் பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள். நம்மிடம் பேசிய அறிவாலய புள்ளிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஆரம்பத்தில் சொன்னது தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு. பிறகு தலா 5 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்தோம். இதற்கு ஒப்புக் கொண்ட சி.பி.ஐ மார்ச் 18-ம் தேதி காலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 5 தொகுதிகளுக்கு கையெழுத்திட வாய்ப்பே கிடையாது. எங்களுக்கு கூடுதல் தொகுதி கொடுங்கள் என கடும் நெருக்கடி கொடுத்து வந்தார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் என்றனர். ஸ்டாலின் நம்மிடம் பேசிய சி.பி.எம் நிர்வாகிகள், கூடுதல் தொகுதி இல்லாமல் ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இறுதி வரைக்கும் தி.மு.க ஒப்புக் கொள்ளவில்லை. நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகும்கூட போனமுறை பெற்ற 6 தொகுதிகள் வேண்டுமானால் கிடைக்கும். இதற்குமேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்றுவிட்டனர். ஆகையால் தி.மு.க கொடுக்கும் 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ள சி.பி.ஐ மாநிலக் குழுவும் தயாராகிவிட்டது. நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை தராததால் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்கவுள்ளோம் என்றனர். விரைவில் கூட்டணி இறுதி ஆகும் என்கிறார்கள் கூட்டணி வட்டாரத்தில்.! முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

விகடன் 18 Mar 2026 4:33 pm

சேகர் பாபு தொகுதியில் ரஜினி ரசிகரை களமிறக்கும் விஜய்? - பின்னணி என்ன?

அமைச்சர் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் குமாரை வேட்பாளராக நிறுத்த தவெக ஆயத்தமாகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆனால், அட்வகேட் ஒருவரும் இதே தொகுதியில் சீட் கேட்டு முட்டி மோதி வருவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். Vijay சில வாரங்களுக்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் `சினோரா' அசோக் குமார் ஆதவ் மூலமாக விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தார். தொழிலதிபரான இவர் கட்சிக்குள் வரும்போதே துறைமுகம் தொகுதியை குறிவைத்துதான் வந்தார் என்கின்றனர் தவெகவினர். 'அசோக் குமார் தொழில்ரீதியாக ஆதவ்வுக்கு நெருக்கமானவர். அந்த பழக்கத்தில்தான் தலைவரையே நேரில் சந்தித்து கட்சியிலும் இணைந்தார். தலைமை சைதாப்பேட்டைக்கும் துறைமுகத்துக்கும் மட்டுமே இன்னும் மா.செக்களை நியமிக்கவில்லை. சைதாப்பேட்டை தொகுதியை ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் கேட்கிறார். அவருக்கு தொகுதியை வாங்கி கொடுக்கும் முடிவில் பொதுச்செயலாளர் இருக்கிறார். துறைமுகம் தொகுதிக்கு அட்வகேட் விஜயகுமார் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் தலைமை நடத்திய நேர்காணலிலும் கலந்துவிட்டு வந்தார். இவரே சமீபத்தில் கட்சிக்குள் வந்தவர்தான். ஆனாலும் மக்கள் இயக்க நிர்வாகிகளாக இருந்தவர்கள் யாரும் சீட் கேட்கவில்லை என்பதால், தனக்கு சீட் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தார். இப்போது அதில்தான் சிக்கலே வந்திருக்கிறது. Ashok ரஜினி ரசிகரான அசோக்கும் துறைமுகத்தை கேட்கிறார். ஆதவ் தன்னுடைய கோட்டாவில் அசோக்குக்கு சீட் பெற்றுத்தர முயற்சிக்கிறார். ஆதவ்வே நேரடியாக சிபாரிசு செய்வதால் அசோக்கின் பெயரே துறைமுகம் தொகுதிக்கு டிக் ஆக வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் உள்விவகாரம் அறிந்த நிர்வாகிகள் சிலர். 'விஜய் அண்ணங்கிட்டயே துறைமுகம் தொகுதியை நான் பார்த்துக்கிறேன்னு அசோக் அண்ணன் சொல்லிடாரு' என ஆதவ்வும் நேற்று கொளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆக, ரஜினி ரசிகருக்காக ஓட்டு கேட்க தயாராகி வருகின்றனர் தவெகவினர்?

விகடன் 18 Mar 2026 4:03 pm

'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா... இல்லையா? - இது தற்போது ஈரான் போரை சுற்றியுள்ள சர்ச்சைகளில் ஒன்றாகும். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் இன்றுடன் பத்தொன்பது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனி Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்! ஈரான் தாக்குதல் இதற்குப் பதிலடியாக கடந்த மார்ச் 2-ம் தேதி, இஸ்ரேல் ஜெருசேலத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தை தாக்கியதாக கூறியது ஈரான். இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், அன்றே ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பகுதிகளை நெதன்யாகு பார்வையிட்டுப் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஈரான் போர் தொடர்ந்து வருவதையடுத்து நெதன்யாகு இஸ்ரேல் தொலைகாட்சியிலும், தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார். அப்படித் தான், கடந்த 13-ம் தேதி, இஸ்ரேல் அரசு தொலைகாட்சியில் தோன்றி போர் குறித்து பேசினார். அதில் சில இடங்களில் நெதன்யாகுவின் வலது கையில் ஆறு விரல்கள் தெரிந்தது. இதை 'டெக்னிக்கல் தவறு' என்று இஸ்ரேல் மறுத்தாலும், பலர் ஈரானின் தாக்குதலில் நெதன்யாகு இறந்துவிட்டார்... அதை மறைக்க அவர் பேசுவதுபோல, ஏ.ஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தனர். இந்தச் சர்ச்சை அப்படியே கடந்து போய்விடும் என்று நினைத்தால், அது தொடர்ந்து பூதாகரமாகிக் கொண்டே போனது. காபி ஷாப் வீடியோ இதற்கு ஒரு 'எண்ட் கார்டு' போட, கடந்த 15-ம் தேதி நெதன்யாகு காபி கடை ஒன்றிற்கு சென்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு ஐந்து விரல்கள் தான் உள்ளது என்றும், 'நான் காபிக்காக இறப்பேன்' என்றும் கேலி செய்து பேசியிருந்தார். ஆனால், இந்த வீடியோ சர்ச்சைகளுக்கு வலு சேர்ப்பது போல அமைந்துவிட்டது. ஆம்... நெதன்யாகுவின் காபி ஷாப் வீடியோவையொட்டி எழுப்பப்படும் கேள்விகள்... אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 15, 2026 தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! > அந்த வீடியோவில் நெதன்யாகு 'காபி'யை ஒரு சிப் குடிப்பார். ஆனால், குடித்தப் பின்னரும், அந்தக் கப்பில் முன்பிருந்த அதே அளவு காபி நிரம்பியே இருக்கிறது. > மேலும் காபியை ஒரு சிப் குடித்துவிட்டு, கீழே கப்பைக் கொண்டு வரும்போது, அதில் உள்ள காபியில் எந்தவித அசைவும் இருக்காது. இது புவியீர்ப்பு விசைக்கு எதிரானது. > அடுத்ததாக, அவரது உதட்டின் அசைவுகளும், ஆடியோவும் சரியாக இல்லை. > காபி குடித்ததும் அவரது உதட்டில் ஒட்டிய கறை, அடுத்த ஃபிரேமில் இல்லை. > அந்தக் கடையில் பில் கவுண்டரில், மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்த வாடிக்கையாளர் நிற்கிறார். ஒரு கடையின் பில் கவுண்டரில் வாடிக்கையாளர் நிற்பாரா? > நெதன்யாகு பொதுவாகவே இடது கை பழக்கம் உள்ளவர். பின் எப்படி வலது கையில் காபி கப்பை வைத்திருக்கிறார்? > அந்த வீடியோவில் முதல் ஃபிரேமில் வரும் மெஷினில் ரிசிப்ட்டின் தேதி மார்ச் 13, 2024 என்று குறிப்பிட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. שומרים על ההנחיות ומנצחים ביחד >> pic.twitter.com/HC5w3PqKuV — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 16, 2026 வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன? அந்த வீடியோவை நாம் பார்க்கும்போது, நெதன்யாகு ஒரு சிப் காபி குடித்ததும்... அவரது உதட்டில் கறை ஒட்டியிருக்கும் ஃபிரேமிற்கும், அடுத்த ஃபிரேமிற்கும் சின்ன டிரான்சிஷன் தெரிகிறது. ஆக, அதை இரண்டு ஷாட்களாக கருதலாம். அதனால், முதல் ஷாட்டிலும், இரண்டாவது ஷாட்டிலும் காபி டம்ளர் நிறைந்தே இருந்திருக்கலாம். உதட்டில் கறையும் துடைக்கப்பட்டிருக்கலாம். பில் கவுண்டரில் நின்றிருந்த மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்திருந்த நபர் வாடிக்கையாளர் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் அந்த வீடியோவில் இல்லை. மோதிரம் காணவில்லை இந்த வீடியோ மேலும் மேலும் பெரிதாக... சர்ச்சைகளைக் கிளப்ப மலைப் பிரதேசத்தில் இருப்பது போல, இன்னொரு வீடியோவை 16-ம் தேதி வெளியிட்டார் நெதன்யாகு. அதில் அவரது இடது கையில் போட்டிருந்த மோதிரம் திடீரென மறைகிறது. இதை குறிப்பிட்டு ஏ.ஐ வீடியோ என்கிற விமர்சனம் மீண்டும் மீண்டும் பெரிதானது. ஆக, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேலின் அமெரிக்க தூதரை சந்தித்த வீடியோவை நேற்று வெளியிட்டிருக்கிறார் நெதன்யாகு. Crossing names off the list is good - doing it shoulder to shoulder with our American friends is even better. Good to see Ambassador @GovMikeHuckabee . Always a pleasure. pic.twitter.com/FZrZN03IZI — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 17, 2026 Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்? லேட்டஸ்ட் வீடியோ அந்த வீடியோவில், தூதரான மைக் ஹக்கபீ, 'எங்களது அதிபர் (ட்ரம்ப்) நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்பதை பார்த்து வர கூறினார்' என்று கேட்கிறார். அதற்கு நெதன்யாகு, 'ஆம் மைக்... நான் உயிரோடு தான் இருக்கிறேன்' என்று பதில் அளிக்கிறார். இப்படி வீடியோக்கள் மூலம் தொடர்ந்து நெதன்யாகு பதிலளித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், 'அவர் உயிரோடு இருக்கிறாரா?' என்கிற சர்ச்சை இன்னும் ஓய்ந்தம்பாடில்லை. 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 2:45 pm

'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா... இல்லையா? - இது தற்போது ஈரான் போரை சுற்றியுள்ள சர்ச்சைகளில் ஒன்றாகும். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் இன்றுடன் பத்தொன்பது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனி Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்! ஈரான் தாக்குதல் இதற்குப் பதிலடியாக கடந்த மார்ச் 2-ம் தேதி, இஸ்ரேல் ஜெருசேலத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தை தாக்கியதாக கூறியது ஈரான். இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், அன்றே ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பகுதிகளை நெதன்யாகு பார்வையிட்டுப் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஈரான் போர் தொடர்ந்து வருவதையடுத்து நெதன்யாகு இஸ்ரேல் தொலைகாட்சியிலும், தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார். அப்படித் தான், கடந்த 13-ம் தேதி, இஸ்ரேல் அரசு தொலைகாட்சியில் தோன்றி போர் குறித்து பேசினார். அதில் சில இடங்களில் நெதன்யாகுவின் வலது கையில் ஆறு விரல்கள் தெரிந்தது. இதை 'டெக்னிக்கல் தவறு' என்று இஸ்ரேல் மறுத்தாலும், பலர் ஈரானின் தாக்குதலில் நெதன்யாகு இறந்துவிட்டார்... அதை மறைக்க அவர் பேசுவதுபோல, ஏ.ஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தனர். இந்தச் சர்ச்சை அப்படியே கடந்து போய்விடும் என்று நினைத்தால், அது தொடர்ந்து பூதாகரமாகிக் கொண்டே போனது. காபி ஷாப் வீடியோ இதற்கு ஒரு 'எண்ட் கார்டு' போட, கடந்த 15-ம் தேதி நெதன்யாகு காபி கடை ஒன்றிற்கு சென்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு ஐந்து விரல்கள் தான் உள்ளது என்றும், 'நான் காபிக்காக இறப்பேன்' என்றும் கேலி செய்து பேசியிருந்தார். ஆனால், இந்த வீடியோ சர்ச்சைகளுக்கு வலு சேர்ப்பது போல அமைந்துவிட்டது. ஆம்... நெதன்யாகுவின் காபி ஷாப் வீடியோவையொட்டி எழுப்பப்படும் கேள்விகள்... אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 15, 2026 தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! > அந்த வீடியோவில் நெதன்யாகு 'காபி'யை ஒரு சிப் குடிப்பார். ஆனால், குடித்தப் பின்னரும், அந்தக் கப்பில் முன்பிருந்த அதே அளவு காபி நிரம்பியே இருக்கிறது. > மேலும் காபியை ஒரு சிப் குடித்துவிட்டு, கீழே கப்பைக் கொண்டு வரும்போது, அதில் உள்ள காபியில் எந்தவித அசைவும் இருக்காது. இது புவியீர்ப்பு விசைக்கு எதிரானது. > அடுத்ததாக, அவரது உதட்டின் அசைவுகளும், ஆடியோவும் சரியாக இல்லை. > காபி குடித்ததும் அவரது உதட்டில் ஒட்டிய கறை, அடுத்த ஃபிரேமில் இல்லை. > அந்தக் கடையில் பில் கவுண்டரில், மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்த வாடிக்கையாளர் நிற்கிறார். ஒரு கடையின் பில் கவுண்டரில் வாடிக்கையாளர் நிற்பாரா? > நெதன்யாகு பொதுவாகவே இடது கை பழக்கம் உள்ளவர். பின் எப்படி வலது கையில் காபி கப்பை வைத்திருக்கிறார்? > அந்த வீடியோவில் முதல் ஃபிரேமில் வரும் மெஷினில் ரிசிப்ட்டின் தேதி மார்ச் 13, 2024 என்று குறிப்பிட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. שומרים על ההנחיות ומנצחים ביחד >> pic.twitter.com/HC5w3PqKuV — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 16, 2026 வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன? அந்த வீடியோவை நாம் பார்க்கும்போது, நெதன்யாகு ஒரு சிப் காபி குடித்ததும்... அவரது உதட்டில் கறை ஒட்டியிருக்கும் ஃபிரேமிற்கும், அடுத்த ஃபிரேமிற்கும் சின்ன டிரான்சிஷன் தெரிகிறது. ஆக, அதை இரண்டு ஷாட்களாக கருதலாம். அதனால், முதல் ஷாட்டிலும், இரண்டாவது ஷாட்டிலும் காபி டம்ளர் நிறைந்தே இருந்திருக்கலாம். உதட்டில் கறையும் துடைக்கப்பட்டிருக்கலாம். பில் கவுண்டரில் நின்றிருந்த மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்திருந்த நபர் வாடிக்கையாளர் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் அந்த வீடியோவில் இல்லை. மோதிரம் காணவில்லை இந்த வீடியோ மேலும் மேலும் பெரிதாக... சர்ச்சைகளைக் கிளப்ப மலைப் பிரதேசத்தில் இருப்பது போல, இன்னொரு வீடியோவை 16-ம் தேதி வெளியிட்டார் நெதன்யாகு. அதில் அவரது இடது கையில் போட்டிருந்த மோதிரம் திடீரென மறைகிறது. இதை குறிப்பிட்டு ஏ.ஐ வீடியோ என்கிற விமர்சனம் மீண்டும் மீண்டும் பெரிதானது. ஆக, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேலின் அமெரிக்க தூதரை சந்தித்த வீடியோவை நேற்று வெளியிட்டிருக்கிறார் நெதன்யாகு. Crossing names off the list is good - doing it shoulder to shoulder with our American friends is even better. Good to see Ambassador @GovMikeHuckabee . Always a pleasure. pic.twitter.com/FZrZN03IZI — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 17, 2026 Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்? லேட்டஸ்ட் வீடியோ அந்த வீடியோவில், தூதரான மைக் ஹக்கபீ, 'எங்களது அதிபர் (ட்ரம்ப்) நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்பதை பார்த்து வர கூறினார்' என்று கேட்கிறார். அதற்கு நெதன்யாகு, 'ஆம் மைக்... நான் உயிரோடு தான் இருக்கிறேன்' என்று பதில் அளிக்கிறார். இப்படி வீடியோக்கள் மூலம் தொடர்ந்து நெதன்யாகு பதிலளித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், 'அவர் உயிரோடு இருக்கிறாரா?' என்கிற சர்ச்சை இன்னும் ஓய்ந்தம்பாடில்லை. 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 2:45 pm

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திருமாவளவன் நம்மிடம் பேசிய விசிக முன்னணி நிர்வாகிகள் “2021 சட்டமன்ற தேர்தலில் 6 சீட்டுகளை பெற்று 4 தொகுதிகளில் வென்றது விசிக. இந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு பக்க பலமாக இருந்து கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தினோம். இதற்கிடையில் மாநில கட்சியாக அங்கீகாரமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றோம். ஆகவே 12 தொகுதிகளை பெற்று குறைந்தது 7 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது விசிகவினரின் கருத்து. ஆகவே முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டார் எங்கள் தலைவர். குறைந்தது 7, 8 தொகுதிகளை திமுக கொடுத்தால் தலைவர் கையெழுத்திட வாய்ப்பு உண்டு” என்றனர். திருமாவளவன் இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம் “விசிக 10 தொகுதிகள் பெறக்கூடிய அளவுக்கு ஆளுமையான கட்சி என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தற்போதைய சூழலில் அவ்வளவு ஒதுக்க முடியாது. விசிகவுக்கு 6 தொகுதிகள் கொடுக்கலாம் என பேச்சுவார்த்தை குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே முதல்வரை சந்தித்து கூடுதல் தொகுதி தர வேண்டும் என கோரியிருக்கிறார் திருமா, எனவே 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம்” என்றனர்.

விகடன் 18 Mar 2026 2:05 pm

நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், பெட்டைக்குளத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இருந்து 300 மீட்டர் உள்பகுதியில் கார் ஒன்று எரிந்து கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்று போலிஸார் பார்த்தபோது காரில் உள்ளே நான்கு பேர் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான பிரசன்னகுமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். எரிந்து கிடந்த காரின் அருகே காலியான தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. அதில் பெட்ரோல் கொண்டுவரப்பட்டு காரின் வெளி மற்றும் உள்பகுதியில் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காரின் பதிவு எண் எரிந்து விட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் காரின் 'சேஸ்' எண்ணைக் கொண்டு உரிமையாளர் யார் என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். கடன் தொல்லையால் விபரீத முடிவு! எரிந்து கிடந்த காரின் உரிமையாளர் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபி (45) என்பது தெரியவந்தது. அவருடன் காருக்குள்ள அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்பரின் பாத்திமா (15), மகன் முஹம்மது காஜா (13) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. முகமது ரபி சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். கடன் பிரச்சனையில் சிக்கி அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுள்ளார். அதன் பின்னர், நந்தம்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விட்டு விட்டு குடும்பத்துடன் நெல்லைக்கு குடி பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு ஆற்றங்கரை பள்ளிவாசல் சென்ற அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் நாகர்கோயில் சென்று அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர்கள் கடந்த சில வாரங்களில் மட்டும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி ஏழைகளுக்கு உதவி; தாயின் அரவணைப்பில் கருகிய குழந்தைகள்! குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்த பின் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில் ஏழை மக்களுக்காக துணிமணிகள் வாங்கியுள்ளனர். அவற்றைக் கொண்டு வந்து ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள ஆதரவற்றவர்களிடம் கொடுத்துவிட்டு, உணவையும் அளித்த பின்னரே தற்கொலை செய்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. காருக்குள் முகமது ரபி டிரைவர் சீட்டில் அமர்ந்துள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பின் சீட்டில் இருந்துள்ளனர். கார் தீப்பற்றி எரிந்ததும் குழந்தைகள் இருவரும் தாய் நஸ்ரின் பாத்திமாவை கட்டிப் பிடித்துள்ளனர். அதனால் அவர்களது உடல் எரிந்த நிலையிலும் கட்டிப் பிடித்தபடி இருந்தது காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடல் தொல்லைக்காக முகமது ரபி குடும்பத்தினரை யாராவது மிரட்டி தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடன் 18 Mar 2026 1:40 pm

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய'ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில். பிற நாடுகளின் தேர்தல்களில் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. ஆனால், வட கொரியாவில் 'இவர்' தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தல் நடக்கிறது அல்லது நடத்தப்படுகிறது. அவ்வளவு தான். வட கொரியாவின் நாடாளுமன்றத்தின் பெயர் 'சுப்ரீம் மக்கள் சட்டமன்றம்'. இந்தச் மன்றத்திற்கான 15-வது தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது. கிம் ஜாங் உன் ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா வாக்குகள்: வெற்றியும், தோல்வியும்! அந்தத் தேர்தலில் இப்போது வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 99.93 சதவிகித வாக்குகளில். மீதம் உள்ள வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளிநாடு சென்றதாலும், கடலில் பணி செய்துகொண்டிருந்ததாலும் வாக்களிக்கவில்லை. இன்னும் சில சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. மேலும், 99.93 சதவிகித வாக்குகள் கிம் ஜாங் உன் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வாக்களிக்கப்பட்டுள்ளது. மீதம் பதிவாகி உள்ள வாக்குகளில் 0.07 சதவிகிதம் எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. 0.07 சதவிகிதம் எதிரான வாக்குகள் என்பது வட கொரியாவைப் பொறுத்தவரை மிக மிக அதிசயமானது. காரணம், தேர்தலில் வாக்களித்த அனைவரும் கிம் ஜாங் உன்னிற்கே வாக்களிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம். 'ஒரே' வேட்பாளர் தான் இந்தத் தேர்தலில் சுப்ரீம் மக்கள் சட்டமன்றத்திற்கு 687 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் 687 தொகுதிகள் அல்லது பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. கிம் ஜாங் உன் Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்? ஆனால், இதில் என்ன ஹைலைட் என்றால், 687 தொகுதிகள் அல்லது பகுதிகளிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை தவிர யாருக்குமே வாக்களிக்க முடியாது. இப்படியிருக்கையில், வட கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1957-ம் ஆண்டு முதல் இதுவே 0.07 சதவிகித எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆண்டுகளுக்கு வட கொரியாவின் அதிபராக இருந்த கிம் ஜாங் உன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர உள்ளார். வாழ்த்துக்கள் கிம் ஜாங் உன்! 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 12:25 pm

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய'ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில். பிற நாடுகளின் தேர்தல்களில் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. ஆனால், வட கொரியாவில் 'இவர்' தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தல் நடக்கிறது அல்லது நடத்தப்படுகிறது. அவ்வளவு தான். வட கொரியாவின் நாடாளுமன்றத்தின் பெயர் 'சுப்ரீம் மக்கள் சட்டமன்றம்'. இந்தச் மன்றத்திற்கான 15-வது தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது. கிம் ஜாங் உன் ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா வாக்குகள்: வெற்றியும், தோல்வியும்! அந்தத் தேர்தலில் இப்போது வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 99.93 சதவிகித வாக்குகளில். மீதம் உள்ள வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளிநாடு சென்றதாலும், கடலில் பணி செய்துகொண்டிருந்ததாலும் வாக்களிக்கவில்லை. இன்னும் சில சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. மேலும், 99.93 சதவிகித வாக்குகள் கிம் ஜாங் உன் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வாக்களிக்கப்பட்டுள்ளது. மீதம் பதிவாகி உள்ள வாக்குகளில் 0.07 சதவிகிதம் எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. 0.07 சதவிகிதம் எதிரான வாக்குகள் என்பது வட கொரியாவைப் பொறுத்தவரை மிக மிக அதிசயமானது. காரணம், தேர்தலில் வாக்களித்த அனைவரும் கிம் ஜாங் உன்னிற்கே வாக்களிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம். 'ஒரே' வேட்பாளர் தான் இந்தத் தேர்தலில் சுப்ரீம் மக்கள் சட்டமன்றத்திற்கு 687 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் 687 தொகுதிகள் அல்லது பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. கிம் ஜாங் உன் Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்? ஆனால், இதில் என்ன ஹைலைட் என்றால், 687 தொகுதிகள் அல்லது பகுதிகளிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை தவிர யாருக்குமே வாக்களிக்க முடியாது. இப்படியிருக்கையில், வட கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1957-ம் ஆண்டு முதல் இதுவே 0.07 சதவிகித எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆண்டுகளுக்கு வட கொரியாவின் அதிபராக இருந்த கிம் ஜாங் உன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர உள்ளார். வாழ்த்துக்கள் கிம் ஜாங் உன்! 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 12:25 pm

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’ புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு `கோதாவரி கோட்டைக் கிழி… நீங்க நல்லா இருக்கீங்களா, நாங்களும் நல்லா இருக்கோம்…' என்ற ரீதியில் இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணம் ஆளுநர் மூலம் `செக்' வைக்கும் பா.ஜ.க ஃபார்முலா. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்தது பா.ஜ.க. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி. ரங்கசாமி, மோடி எப்படியாவது கூட்டணியை இறுதி செய்துவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் புதுச்சேரிக்கு படையெடுத்த மத்திய அமைச்சர்களை, `கோதாவரி' பாணியிலேயே டீல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி அங்கிருந்த செய்தியாளர்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். அதேசமயம்,  இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். `ரங்கசாமிக்கு என்ன பிரச்னை ?’ அந்த வகையில் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அவர்கள் கூட்டணிக்கு வருவதற்கு முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருந்தார். ஆனால் பா.ஜ.க-வின் இந்தக் கருத்தை என்.ஆர்.காங்கிரஸ் உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இருக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், `எங்களுக்கான 14 தொகுதிகளில்தான் ல.ஜ.க-வுக்கு ஒதுக்கப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்ற ரீதியில் கேள்வி எழுப்பிய பா.ஜ.க, மாநில அந்தஸ்து குறித்த பேச்சை கவனமாக தவிர்த்தது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது, `மாநில அந்தஸ்து பற்றி அவர்கள் எதையும் பேச மறுக்கிறார்கள். ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். இவர்கள் சொன்னதை நம்பி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம். `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினால்...’ அடுத்த தேர்தலே வந்துவிட்டது. மக்களை நாம் எப்படி எதிர்கொள்வது ? அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார். அதையடுத்து இரவோடு இரவாக தனியார் விடுதியில் காத்திருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வரின் கருத்தைக் கூறினார்கள். ஆனால், `லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணியில்தான் இருக்கும்' என்று ஆவேசமாகக் கூறியது பா.ஜ.க தரப்பு. அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாததால் இரண்டு தரப்பும் ஏக டென்ஷனில் இருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி இந்த நிலையில், `பா.ஜ.க-வுடனான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன ? கூட்டணியில் தொடர்கிறீர்களா ?' என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் பேசினோம். அதற்கு, `தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ல.ஜ.க வருவதை என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை. பா.ஜ.க அந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால், எங்கள் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்போம்' என்றார். தொடர்ந்து, `த.வெ.க-வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா ?' என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்துப் பேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், `அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக' கூறியது அவரது செல்போன். என்.ஆர்.காங்கிரஸுடனான மோதலால், `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினார் என்றால் நாங்கள் போட்டியிடவே மாட்டோம்' என்று பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க தரப்பு. மோடி அடித்த பல்டி... முகம் கறுத்த ரங்கசாமி... சிக்கலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி!

விகடன் 18 Mar 2026 12:08 pm

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’ புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு `கோதாவரி கோட்டைக் கிழி… நீங்க நல்லா இருக்கீங்களா, நாங்களும் நல்லா இருக்கோம்…' என்ற ரீதியில் இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணம் ஆளுநர் மூலம் `செக்' வைக்கும் பா.ஜ.க ஃபார்முலா. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்தது பா.ஜ.க. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி. ரங்கசாமி, மோடி எப்படியாவது கூட்டணியை இறுதி செய்துவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் புதுச்சேரிக்கு படையெடுத்த மத்திய அமைச்சர்களை, `கோதாவரி' பாணியிலேயே டீல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி அங்கிருந்த செய்தியாளர்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். அதேசமயம்,  இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். `ரங்கசாமிக்கு என்ன பிரச்னை ?’ அந்த வகையில் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அவர்கள் கூட்டணிக்கு வருவதற்கு முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருந்தார். ஆனால் பா.ஜ.க-வின் இந்தக் கருத்தை என்.ஆர்.காங்கிரஸ் உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இருக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், `எங்களுக்கான 14 தொகுதிகளில்தான் ல.ஜ.க-வுக்கு ஒதுக்கப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்ற ரீதியில் கேள்வி எழுப்பிய பா.ஜ.க, மாநில அந்தஸ்து குறித்த பேச்சை கவனமாக தவிர்த்தது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது, `மாநில அந்தஸ்து பற்றி அவர்கள் எதையும் பேச மறுக்கிறார்கள். ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். இவர்கள் சொன்னதை நம்பி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம். `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினால்...’ அடுத்த தேர்தலே வந்துவிட்டது. மக்களை நாம் எப்படி எதிர்கொள்வது ? அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார். அதையடுத்து இரவோடு இரவாக தனியார் விடுதியில் காத்திருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வரின் கருத்தைக் கூறினார்கள். ஆனால், `லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணியில்தான் இருக்கும்' என்று ஆவேசமாகக் கூறியது பா.ஜ.க தரப்பு. அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாததால் இரண்டு தரப்பும் ஏக டென்ஷனில் இருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி இந்த நிலையில், `பா.ஜ.க-வுடனான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன ? கூட்டணியில் தொடர்கிறீர்களா ?' என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் பேசினோம். அதற்கு, `தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ல.ஜ.க வருவதை என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை. பா.ஜ.க அந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால், எங்கள் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்போம்' என்றார். தொடர்ந்து, `த.வெ.க-வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா ?' என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்துப் பேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், `அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக' கூறியது அவரது செல்போன். என்.ஆர்.காங்கிரஸுடனான மோதலால், `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினார் என்றால் நாங்கள் போட்டியிடவே மாட்டோம்' என்று பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க தரப்பு. மோடி அடித்த பல்டி... முகம் கறுத்த ரங்கசாமி... சிக்கலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி!

விகடன் 18 Mar 2026 12:08 pm

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே'களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார். ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? அமெரிக்காவின் சம்பவம் இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ? Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

விகடன் 18 Mar 2026 11:09 am

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே'களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார். ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? அமெரிக்காவின் சம்பவம் இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ? Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

விகடன் 18 Mar 2026 11:09 am

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது..! திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக கூட்டணி கட்சிகளை எப்போதும் மிரட்டியது இல்லை. பிரபல தலைவர்களையோ, நடிகர்களையோ மிரட்டிய வரலாறு இல்லை. எனவே ரஜினி காந்தை திமுக மிரட்டியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் பாஜக தான் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணிக்குள் சேர்க்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பெண் நடிகை குறித்து பேசியது பண்பல்ல, கண்ணியம் அல்ல. இதனை முதலில் நாங்கள் கண்டிக்கிறோம். இன்று முதல்வரை சந்தித்து பேசினோம். இது சாதாரண தேர்தல் அல்ல. பாஜக அமைதியான தமிழக மண்ணை சீர்குழைக்கத் துடிக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது பாஜகவையும், அதன் கூட்டணியையும் வீழ்த்துவது தான். கம்யூனிஸ்ட்கள் தங்களது உரிமைகளை, அரசியல் கடமைகளைக் கடந்து சென்றது இல்லை. அந்தவகையில் சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் இடம் வேண்டும் என்று நாங்கள் கூற காரணம் உழைக்கும் மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். திமுகவுடன் மூன்று கட்ட பேச்சுவர்த்தைகளை நாங்கள் நடத்தினோம். கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டோம். அதைவிட கூடுதல் தொகுதியை நாங்கள் கேட்டோம். ஆனால் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்ற காரணத்தினால் குறைத்துகொண்டோம். முதல்வர் ஒத்துழையுங்கள் என்று கேட்டுகொண்டார். அதற்கு இணங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் 5, 6 இடங்கள் என்ற எண்ணிக்கை கட்சியை சோர்வடைய செய்யும். ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் எங்களுக்கான இடங்களைக் கூட குறைத்துக்கொள்கிறோம். அதற்காவே நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். அதற்கான கையெழுத்து தான் இது. எங்களிடம் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை என்று கூறியிருக்கிறார்.

விகடன் 18 Mar 2026 10:58 am

முட்டுகட்டை போட்ட சிபிஎம்; கறார் காட்டிய திமுக - '5'சீட்டுக்கு இறங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட்!

தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்தன. சுமார் 4 சுற்று பேச்சுவார்த்தைகள் வரை நடந்தும் முடிவு எட்டப்பட்டாமல் இருந்தது. இந்நிலையில் தி.மு.க தருவதாக சொன்ன 5 சீட்டுக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க-வுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு 4 இடங்கள் தருவதாகச் சொன்னார்கள். மு. வீரபாண்டியன் ஆனால் 6 இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இரண்டு, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலேயே 5 சீட்டுக்கு ஏறி வந்தது தி.மு.க. நாங்களும் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கையெழுத்துப் போட வேண்டாம் என எங்களை கேட்டுக் கொண்டர்கள். ஆகவே இழுபறியாகிவிட்டது. எவ்வளவு மல்லுகட்டினாலும் 6 தொகுதிகள் தர அவர்கள் தயாராக இல்லை என்பதால் கையெழுத்துப் போட்டுவிட்டோம் என்றனர். தி.மு.க கூட்டணி அமைந்ததிலிருந்து சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இருவருக்குமே ஒரே எண்ணிக்கையில்தான் சீட் தரப்பட்டிருக்கிறது. ஆனால் 5 சீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓகே சொல்லிவிட்ட நிலையில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெ. சண்முகம் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனியர்களிடம் பேசினோம், 5 சீட் தான் தர முடியும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டது தி.மு.க, ஆனால், சண்முகம் தோழரும், முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழரும் 6 சீட் இல்லாமல் கையெழுத்துப் போடக் கூடாது என கறார் காட்டுகிறார்கள். ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க தரப்பு தயாராக இல்லை. எனவே 5 சீட்டில் முடியவே வாய்ப்புகள் இருக்கிறது. இதை ஏற்க மாட்டோம் என மாநிலச் செயலாளர் சொன்னால் உறுதியாக வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்க கூடிய தொகுதிகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது என்றனர்.

விகடன் 18 Mar 2026 10:29 am

நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இமயமலையின் சிகரங்களுக்கு இடையே அமைதியான தேசம் நேபாளம், இன்று ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா என இரு பெரும் நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், நேபாளம் எப்போதும் தனது தனித்துவமான அடையாளத்தை விட்டுக் கொடுத்ததில்லை. பல ஆண்டுகளாக மன்னராட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்த இந்த நாடு, தற்போது 'மாற்றம்' என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் அணிவகுத்து நின்று இளைஞர்களின் கைகளுக்கு அதிகாரம் நகரத் தொடங்கியிருக்கிறது. நேபாளத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதன் வீரமும் துணிச்சலும் நமக்குப் புரியும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தெற்காசியாவையே ஆக்கிரமித்திருந்த காலத்தில், தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காத மிகச் சில நாடுகளில் நேபாளமும் ஒன்று. 1768-ல் மன்னர் பிரித்வி நாராயண் ஷாவால் ஒருங்கிணைக்கப்பட்ட நேபாளம், சுமார் 240 ஆண்டுகள் ஷா வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. இமயமலையின் கடினமான நிலப்பரப்பும், உலகப்புகழ் பெற்ற கூர்க்கா வீரர்களின் அசாத்திய துணிச்சலும் அந்நாட்டைப் பிற சக்திகளிடம் இருந்து பாதுகாத்தன. இருப்பினும், நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் எப்போதும் சீராக இருந்ததில்லை. மன்னர்களுக்குத் தெரியாமல் 'ராணா' குடும்பத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அதிகாரத்தைக் கைப்பற்றி, பல ஆண்டுகள் ராணாக்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1951-ல் மக்கள் நடத்திய பெரும் புரட்சி ராணாக்களின் பிடியை உடைத்து, மீண்டும் மன்னருக்கே அதிகாரம் கிடைக்கச் செய்தது. ஆனால், மக்களாட்சி மலர்வதில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டன. 1960-களில் மன்னர் மகேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து 'பஞ்சாயத்து' முறையைக் கொண்டுவந்தார். இதனால் ஜனநாயகம் என்பது நீண்ட காலத்திற்கு எட்டாக்கனியாகவே இருந்தது. 1990-களின் இறுதியில் நேபாளத்தில் ஒரு பெரிய ரத்த சரித்திரம் தொடங்கியது. மாவோயிஸ்ட் அமைப்பினர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் சுமார் பத்தாண்டுகள் நீடித்தது. இந்த உள்நாட்டுப் போரில் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். நேபாளத்தின் மன்னராக இருந்த பிரேந்திரா 2001 சூன் முதல்நாளில் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். அவரை தொடர்ந்து நேபாளத்தின் மன்னராக ஞானேந்திரா பதவியேற்றார், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், மன்னராட்சியின் மீதான அதிருப்தியும் மக்களை வீதிக்கு வரவழைத்தன. இறுதியாக 2006-ல் மக்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தின் விளைவாக மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. 2008-ல் நேபாளம் முறைப்படி ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. குடியரசு மலர்ந்த பிறகு நேபாளம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், பழைய அரசியல் கட்சிகளான நேபாளி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியும், ஊழலும் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. தலைமுறை தலைமுறையாக அதே முகங்களைப் பார்த்துச் சலித்துப் போன இளைஞர்கள், புதிய ரத்தத்தை அரசியலில் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடாகத்தான் 2022-ல் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாலேந்திர ஷா பாலாந்திர ஷா, சுருக்கமாக 'பாலென்' ஷா என்று அழைக்கப்படும் ஒரு இளைஞர் காத்மாண்டு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு ராப் இசைக்கலைஞர் மற்றும் சிவில் இன்ஜினியர். எந்தப் பெரிய அரசியல் பின்னணியும் இல்லாமல், ஒரு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பல தசாப்தங்களாக அரசியலில் ஊறிப்போன ஜாம்பவான்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் மேயராகப் பதவியேற்ற பிறகு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், குறிப்பாகச் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது மற்றும் குப்பை மேலாண்மையில் காட்டிய வேகம், நேபாள இளைஞர்களிடம் நம்மாலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற பெரும் தன்னம்பிக்கையை விதைத்தது. இந்த எழுச்சி மாநகராட்சித் தேர்தலோடு நின்றுவிடவில்லை. ரபி லமிச்சானே தலைமையிலான 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) என்ற புதிய கட்சி தேசிய அளவில் உருவெடுத்தது. ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற இவர்களது முழக்கங்கள், குறிப்பாக 'ஜென் Z' என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சமூக ஊடகங்கள் மூலம் இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்கள் பழைய அரசியல் அமைப்பையே அதிர வைத்தன. சமீபத்தில் நேபாள அரசு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தபோது, இளைஞர்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியது. இது வெறும் ஒரு செயலி மீதான தடைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல், அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு எதிரான இயக்கமாக மாறியது. மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களைச் சூழ்ந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் K.P. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவானது. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நேபாளத்தின் எதிர்காலத்தை இளைஞர்களே தீர்மானிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பழைய கட்சிகள் இன்னும் செல்வாக்குடன் இருந்தாலும், புதிய கட்சிகளின் வரவு அவர்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. நேபாள இளைஞர்களுக்கு இன்று இருக்கும் மிகப்பெரிய கவலை பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம். போதிய வாய்ப்புகள் இல்லாததால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த நிலையை மாற்றி, தாய்நாட்டிலேயே கௌரவமான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் முன் உள்ள சவால். நேபாளம் இப்போது ஒரு சந்திப்பில் நிற்கிறது. ஒருபுறம் பாரம்பரியமான பழைய அரசியல் சக்திகள், மறுபுறம் மாற்றத்தை விரும்பும் துடிப்பான இளைஞர்கள். பல நூற்றாண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும், உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்தான் இருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இப்போது வீசும் இந்த மாற்றத்தின் காற்று, நேபாளத்தை ஒரு நவீன மற்றும் வளமான நாடாக மாற்றும் என்று உலகம் உற்று நோக்குகிக் கொண்டிருக்கிறது. புதிய தலைமுறைத் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளைச் செயலில் காட்டினால், நேபாளத்தின் புதிய விடியல் என்பது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறும். இந்திய மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையில் சுமார் 1,700 கி.மீ. நீளமான திறந்த எல்லை உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் குடிமக்களும் விசா இல்லாமல் பயணம் செய்து, வாழ்ந்து, வேலை செய்யலாம். பல நேபாள குடிமக்கள் இந்தியாவில் வேலை செய்கிறார்கள்; சிலர் இந்திய ராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் பணியாற்றுகின்றனர். இது இரு நாடுகளின் நெருங்கிய உறவை காட்டுகிறது.  நேபாளத்தின் அரசியல் எழுச்சி, அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நேபாளம், இனி ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற புதிய தலைவர்கள், 'நேபாளத்தின் நலன் முதலில்' (Nepal First) என்ற கொள்கையை முன்னெடுக்கின்றனர். இந்தியாவுடனான நீண்டகால கலாச்சார மற்றும் திறந்த எல்லை உறவை மதிக்கும் அதேவேளை, எல்லைப் பிரச்சனைகளில் சமரசமற்ற போக்கையும், பொருளாதார ரீதியாக இந்தியாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் அவர்கள் விரும்புகின்றனர். மற்றொருபுறம், சீனாவின் உள்கட்டமைப்பு உதவிகளை வரவேற்றாலும், இலங்கையைப் போன்ற 'கடன் பொறி'களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், புதிய நேபாளம் என்பது உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, தேசத்தின் இறையாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு யதார்த்தமான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை நோக்கிப் பயணிக்கிறது. இது தெற்காசியாவின் அதிகாரச் சமநிலையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தேர்தல்

விகடன் 18 Mar 2026 10:22 am

நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை! - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து கூற முடியாது. தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஆனால், விஜய் NDA கூட்டணியில் சேராத நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. ஏற்கனவே, கூட்டணி முடிவு செய்யப்பட்டு, எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. கோவையில் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கேட்கிறீர்கள். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் நடந்த அந்த சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என்று கூறக்கூடாது. thirunavukarasar நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தேன். பா.ஜ.க-வில் மத்திய மந்திரி ஆக இருந்தேன். எனக்கு எம்.எல்.ஏ ஆக விருப்பமில்லை. ஆனாலும் ,காங்கிரஸ் தலைமை, தொண்டர்கள் விரும்பினால் போட்டியிடுவேன். எனது மகன் ராமச்சந்திரன் ஏற்கனவே அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் அதே தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றார்.

விகடன் 18 Mar 2026 10:03 am

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி லரிஜானி. இவர் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஆவார். ட்ரம்ப் மிரட்டலும், லரிஜானியின் பதிலடிகளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால், அதுவரையிலான தாக்குதலை விட 20 மடங்கு அதிக தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். அலி லரிஜானி LPG தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை 'இப்படி' புக் செய்யாதீர்கள்; இது பக்கா மோசடி இதற்கு லரிஜானி, 'உங்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்திருந்தார். அடுத்ததாக, ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் அரை மணிநேரத்திற்குள் இருளில் தள்ளப்படும் என்று சாடி இருந்தார். இப்படி லரிஜானி தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், ட்ரம்போ தனக்கு லரிஜானி யாரென்றே தெரியாது... அவருடைய அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பது போல டீல் செய்து வந்தார். லரிஜானி கொலை இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் லரிஜானி உயிரிழந்துள்ளார். இதை ஈரான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. ஈரானை ஆளும் குண்டர் கும்பலான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைவர் என்று லரிஜானியை முன்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் காணப்படுவதில்லை. அவருக்குப் பதிலாக இதுவரை லரிஜானி தான் ஈரானின் குரலாக இருந்து வந்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொடுக்கும் ஆணைகளை நிறைவேற்றும் நபராகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

விகடன் 18 Mar 2026 9:43 am

டிராபிக்கில் சிக்கிய அண்ணாமலை; உளறி கொட்டிய அதிமுக நிர்வாகிகள்.. கோவை தே.ஜ.கூ ஆர்ப்பாட்ட ரிப்போர்ட்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரம் என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்களை அழைத்து கூட்டத்தை திரட்டினர். கோவை தேஜகூ ஆர்ப்பாட்டம் அண்ணாமலை தலைமையில், வேலுமணி முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை தலைமையில் எஸ்.பி வேலுமணி கலந்துகொள்வதா என்று அதிமுக தொண்டர்கள் குமுறினார்கள். மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லோரும் குறித்த நேரத்தில் வந்துவிட, மாலை 6 மணியளவில் தான் வேலுமணியும், அண்ணாமலையும் மேடை ஏறினார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தாமதமானதாக சொல்லப்பட்டது. அண்ணாமலை அண்ணாமலை ஜிடி மேம்பாலத்தில் நிலவிய கடுமையான போக்குவரத்தில் அண்ணாமலை சிக்கிவிட்டார். ஒருகட்டத்தில் அவர் நடந்தும், அந்த வழியே பைக்கில் வந்தவர்களின் உதவியை கேட்டும்  ஆர்ப்பாட்டத்துக்கு வந்து சேர்ந்தார். ஆர்ப்பாட்டம் பெண்கள் பாதுகாப்புக்காக நடந்தாலும் ஏற்கெனவே சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். கோவையிலும் அதிமுக நிர்வாகிகள் சர்ச்சையில் சிக்கினார்கள். அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன், “மகளிருக்கு ரூ.5,000 பணத்தை ஏன் அதிகாலை 5 மணிக்கு செலுத்த வேண்டும். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தொகையை செலுத்தவே கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளனர். மூக்குத்தி உள்ளதா, கம்மல் உள்ளதா என கேட்கிறார்கள். விட்டால் புருஷன் இருக்கிறாரா” என்று கேட்பார்கள் என பேசினார். கோவை தேஜகூ ஆர்ப்பாட்டம் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது கூட்டத்தில் சில பெண்கள் அதை கவனிக்காமல் ஏதோ பேசியுள்ளனர். கடுப்பான ஜெயராமன், “ஏம்மா.. நீங்கள் 4 பேர் பேசிட்டே இருக்கீங்க. நீங்க பேசற மாதிரி இருந்தால் நான் மைக் கொடுக்கறேன். நீங்களே பேசுங்க” என்று கடிந்து கொண்டார். அடுத்தடுத்து 2 சீனியர் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எஸ்.பி வேலுமணி பேசும்போது, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு பெண்ணை எரித்து கொலை செய்தனர். அதுகுறித்து ஊடகங்களுக்கு தகவல் கொடுக்காமல் காவல்துறை மறைத்துவிட்டது. கோவையில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களை காப்பாற்ற முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலில் கொலுசை காட்டி ஏமாற்றினார்கள். இப்போது கோவை மாநகரில் சாக்கடை கூட சுத்தம் செய்யப்படுவதில்லை” என்றார். அண்ணாமலை கடைசியாக பேசிய அண்ணாமலை, “ஸ்டாலின் ரீல்ஸ் முதலமைச்சராக மட்டுமே இருக்கிறார். வேறு எதிலும் அக்கறை காட்டுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 1,495 கோடி மதுபாட்டில்கள் விற்கப்பட்டுள்ளன. பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ரூ.14,950 கோடி பணத்தை செந்தில் பாலாஜி வசூல் செய்துள்ளார். தீய சக்தியை தூக்கி எறிய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் நம்மை மன்னிக்காது. அனைவரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணி வகுத்து செல்ல வேண்டிய  கட்டாயம் இருக்கிறது” என்றார்.

விகடன் 18 Mar 2026 9:27 am

'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?'ட்ரம்பின் 'டாப்'அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட். இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவிற்கு இவர் சொன்ன காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கே நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். அப்படி அவர் சொன்ன காரணம் என்ன? ஈரான் நமது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தாலும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த லாபியாலும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னால் மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது என்று தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் போர் Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்! அதிருப்தி..? ஏற்கெனவே ட்ரம்ப் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஈரான் போரில் உடன்பாடில்லை என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஆனால், ஒரு அதிகாரி நேரடியாக இந்தக் காரணத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை. இதில் இவர் தனது பதவியை ராஜினாமா வேறு செய்துள்ளார். ஆக, இது ட்ரம்ப் அரசாங்கத்திற்குள்ளேயே ஈரான் போர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதா என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது. மேலும், ட்ரம்ப் இப்போதைக்கு இந்தப் போரை முடிப்பதாகவும் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

விகடன் 18 Mar 2026 9:05 am

தண்டனையை நிறுத்திவைக்க மறுத்த ஐகோர்ட்; தேர்தலில் போட்டியிட முடியாமல் தவிக்கும் முன்னாள் அமைச்சர்!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி விமானம் மூலம் கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவரை பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், அதை மறைத்துவைத்த உள்ளாடை ஆகியவை ஆதாரங்களாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தன. ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்புக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞராக இருந்த ஆண்டனி ராஜூ, கோர்ட்டில் உதவியாளராக பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்து, அதை வெட்டி சின்ன அளவில் தைத்து மறுபடியும் அதை கோர்ட் கஷ்டடியில் வைத்துவிட்டார். அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக்கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் நட்பாக பழகிய நிலையில், கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சின்னதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தையும் கூறினார். இந்த தகவல் வெளியே கசிந்ததை அடுத்து ஆதாரங்களை அழித்ததாக விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் ஊழியரான ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் பலகட்டங்களை கடந்து 13 ஆண்டுகளுக்குப்பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பினராயி விஜயன் இதற்கிடையே ஆண்டனி ராஜூ ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் ஆகிவிட்டார். ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சி சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதையடுத்து கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதுடன் பினராயி 2.0 ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் ஆண்டனி ராஜூ. இதற்கிடையேதான் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நெடுமங்காடு ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட் அளித்த தீர்ப்பில், கோர்ட் கஸ்டடியில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. எம்.பி, எம்.எல்.ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் குற்ற வழக்கில் கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளுக்காக 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் முடிவடைந்த தேதியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அதன்படி ஆண்டனி ராஜூ-வை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த ஜனவரி 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ஆண்டனி ராஜூ, இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆண்டனி ராஜூவின் மனுவை ஐகோர்ட் நேற்று நிராகரித்தது. எனவே ஆண்டனி ராஜூ இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டனி ராஜூ போட்டியிடுவதற்காக திருவனந்தபுரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆண்டனி ராஜூ-வுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பரிந்துரைக்கும் வேட்பாளரை நிறுத்தலாம் என எல்.டி.எஃப் கூட்டணி தீர்மானித்துள்ளது. இன்று நடைபெறும் ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கூட்டத்தில் அதுகுறித்த விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் முடிவு எட்டாமல் இருந்தால் சுயேச்சையாக பொது வேட்பாளரை நிறுத்தலாமா எனவும் எல்.டி.எஃப் கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

விகடன் 18 Mar 2026 7:36 am

'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே 'ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்' எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார். அசோக் முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், 'எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக வாழ வேண்டும் என்பதை என் குரு ரஜினிதான் கற்றுக்கொடுத்தார். 'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! - ஆதவ் விளக்கம்! ரஜினி அரசியலுக்கு வராததுக்கு கொரோனா மட்டுமே காரணம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதன்பிறகும் நான் அரசியலில் சேவை செய்ய நினைத்தேன். அதற்காகத்தான் விஜய்யை தலைவராக ஏற்று வந்தேன். ஆதவ் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி வந்தவர். ரஜினி ரசிகர் மன்றத்தில் நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகையில் மக்களுக்காக ஆதவ்வும் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். அசோக் 45 வருடமாக ரஜினியுடன் இருந்தவர். அவரை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். ஆதவ் வேண்டுமென்றே ரஜினியை பற்றி பேசியிருந்தால் அங்கேயே மேடையில் ஏறி கேட்டிருப்பேன். அவர் வார்த்தை தவறிதான் பேசினார். ரஜினி பயந்தவர் கிடையாது. போராட்டக்குணம் மிக்கவர். ஆதவ்விடம் எனக்கு ஒரு கோரிக்கை. ரஜினி சாரை பற்றி எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என நீங்கள் விளக்கிவிடுங்கள். ரஜினி சாரை பற்றி யாரும் தவறாக பேசினால் நான் தட்டிக் கேட்பேன்' என்றார்.

விகடன் 17 Mar 2026 10:31 pm

'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே 'ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்' எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார். அசோக் முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், 'எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக வாழ வேண்டும் என்பதை என் குரு ரஜினிதான் கற்றுக்கொடுத்தார். ரஜினி அரசியலுக்கு வராததுக்கு கொரோனா மட்டுமே காரணம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதன்பிறகும் நான் அரசியலில் சேவை செய்ய நினைத்தேன். அதற்காகத்தான் விஜய்யை தலைவராக ஏற்று வந்தேன். ஆதவ் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி வந்தவர். ரஜினி ரசிகர் மன்றத்தில் நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகையில் மக்களுக்காக ஆதவ்வும் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். அசோக் 45 வருடமாக ரஜினியுடன் இருந்தவர். அவரை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். ஆதவ் வேண்டுமென்றே ரஜினியை பற்றி பேசியிருந்தால் அங்கேயே மேடையில் ஏறி கேட்டிருப்பேன். அவர் வார்த்தை தவறிதான் பேசினார். ரஜினி பயந்தவர் கிடையாது. போராட்டக்குணம் மிக்கவர். ஆதவ்விடம் எனக்கு ஒரு கோரிக்கை. ரஜினி சாரை பற்றி எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என நீங்கள் விளக்கிவிடுங்கள். ரஜினி சாரை பற்றி யாரும் தவறாக பேசினால் நான் தட்டிக் கேட்பேன்' என்றார்.

விகடன் 17 Mar 2026 10:31 pm

'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! - ஆதவ் விளக்கம்!

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினியை பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினியே அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார். Aadhav ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'தலைவர் சிபிஐ விசாரணைக்கு சென்று விட்டு வரும் போது தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அண்ணனின் காரில் பின்னால்தான் உட்காந்திருந்தேன். வெளியில் 2000 பேர் இருந்தார்கள். திடீரென ராயப்பன் கேரக்டரை போல மேல க்ளாஸ ஓபன் பண்ணுங்க என்றார். 'என்ன அர்ஜூன் இங்க இருந்தே ஆரம்பிச்சுரலாமா?' எனக் கேட்டார். தலைவர் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு மாதமாக திமுக செட் செய்த நரேட்டிவை தலைவர் உடைத்துவிட்டார். Aadhav நம்முடைய தலைவரே ரஜினி ரசிகர் என கூறுபவர். கடந்த ஒரு வாரமாக நானும் தலைவரும் கடும் மனவலியில் இருக்கிறோம். தூத்துக்குடி மாணவியின் கொலையை மறைக்கத்தான் ஒரு வாரமாக வேறுவிதமான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அந்த வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை? என்கிற ஆதங்கத்தில்தான் முட்டாள் முதல்வர் எனப் பேசியிருந்தேன். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ரஜினி மீது எங்களுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன், தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார். Aadhav ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொன்னபோது நான் திமுகவில் தேர்தல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எடுத்த சர்வேயில் ரஜினிக்கு 18% வாக்கு இருந்தது. அதனால்தான் திமுக அவர் மீது போலி பிரசாரங்களை முன்னெடுத்தது. அதைத்தான் அன்று சொல்ல வந்தேன். அது ரஜினி சாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.' என்றார்.

விகடன் 17 Mar 2026 10:27 pm

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சா நந்தினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், குழந்தையை ஈன்றெடுக்கும் தாய்க்கும், தத்தெடுக்கும் தாய்க்கும் இடையே வேறுபாடு காட்டுவது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி தவறானது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை. இதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4), அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளுக்கு முரணானது. எனவே, சட்டப்பிரிவு 60(4) ரத்து செய்யப்படுகிறது. Represental images மேலும், தாய்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பைபோல, தந்தைக்கான விடுப்பையும் சமூக பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்ட விதியை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

விகடன் 17 Mar 2026 7:32 pm

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கின் விசாரணையின்போது, 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலேயே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் தவறாக நினைக்கும் பட்சத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதற்கும் தயார்' என, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, `திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக் கொள்ளலாம்' என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். அதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றம் தூண் அரசு தரப்பில், `நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் 5 நபர்களை தீபம் ஏற்ற இருக்கும் தூணில் பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக முடிவு செய்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிய நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது' எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், `அவ்வாறு அனுமதிப்பதில் என்ன சிக்கல்?' எனக் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், `நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழக்கிற்கான அதிகாரத்தைக் கடந்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தரப்பில், `தீபம் ஏற்றுவதற்கு அரசு போதுமான ஏற்பாடுகள் செய்து தரவில்லை. அதற்காகவே அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், `நீதிமன்ற உத்தரவு விவரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மேலும், 5 நபர்களை பரிந்துரைப்பதில் பிரச்சனை எனில், கோயிலே பூஜை செய்யலாமே? சிறிய விஷயம், அதைச் செய்து பிற பிரச்னைகளைத் தவிர்க்கலாமே?' எனவும் கருத்து தெரிவித்தனர்.

விகடன் 17 Mar 2026 7:00 pm

`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' - சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்று சொன்னார். ஆனால் இவர் ஒரு படி மேலே போய், 'உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்' என்கிறார். எனக்கு 'பிரபலமான நடிகை ஒருவர் வேண்டும்' என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா? என்று நடிகையின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். சி.வி.சண்முகத்தின் அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருக்கிறார். சி.வி.சண்முகம் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பெண்கள், குறிப்பாக நடிகைகள் யாருடைய சொத்தும் கிடையாது. ஒரு நடிகையின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவதூறுகளுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருவியோ கிடையாது. ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை கேலி செய்வதும் அல்லது ஒரு கருத்தை நிரூபிக்க முயல்வதும், பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையுமே வெளிப்படுத்துகிறது. இதுவே போதும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணிடமிருந்தே பிறக்கிறார். ஒரு நடிகையைப் பற்றி சாதாரணமாகக் கருத்து தெரிவிக்கும் முன் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், இதே உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் நீங்கள் இதேபோல் பேசுவீர்களா என்று? ஒரு நடிகை பொது வாழ்வில் அறியப்பட்டவராக இருக்கலாம், ஆனால் அவர் பொதுச்சொத்து அல்ல. மற்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு நீங்கள் அளிக்கும் அதே மரியாதையை பெண் நடிகைகளுக்கும் கொடுங்கள். குஷ்பு இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்பவர்கள், தாங்கள் பேசும் பெண்ணுக்கு அவமானத்தை தேடித்தருவதில்லை. மாறாக, தங்களுடைய குறுகிய மனப்பான்மையையும், தவறான வளர்ப்பையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையுமே வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். இது வெறும் அவமரியாதை மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம் என, சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்.. - சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்!

விகடன் 17 Mar 2026 6:46 pm

ரஜினி விவகாரம்: அப்செட்டில் விஜய்; குஷியில் ஆனந்த் - பின்னணி என்ன?

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவுக்கு செய்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அவரின் பேச்சும் அதற்கான எதிர்வினைகளும் தவெக தலைமையையே அப்செட் ஆக செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். Aadhav Arjuna 'ஆதவ் தலைமையை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குறது இது ஒன்னும் முதல் முறை இல்லைங்க...' என பேசத் தொடங்கும் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள், 'அவர் கட்சியில் சேர்ந்த புதிதிலேயே, 'இந்த கட்சியில் கட்டமைப்பே இல்லை. கட்சியின் கட்டமைப்பை நான் தான் முறைப்படுத்தப் போகிறேன்' என கொஞ்சம் துடுக்காக இருந்தார். விசிக-வில் செய்ததை போல தவெகவிலும் தனியாக ஒரு ரூட் எடுக்க நினைத்தார். ஆனால், ஆனந்தும் ஜானும் அதற்கான இடத்தை கொடுக்கவில்லை என்கிறார்கள். அதிலேயே இவர்களுக்குள் முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. ஆக்டிவாக வேலை செய்யக்கூடியவர், தேர்தல் அனுபவம், வைட்டமின் வசதிகள் உண்டு என்பதால் தலைவருக்கு ஆதவ்வின் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதனால்தான் விஜய்யை விட ஆதவ் தான் அதிகமாக பேசுகிறார் என்கிற விமர்சனங்களுக்கெல்லாம் தலைவர் காது கொடுத்ததே இல்லை. ஆதவ் ஆனால், கரூருக்கு பிறகான சிறப்புப் பொதுக்குழு ஒன்றில் அத்தனை சேனல்களிலும் லைவ் ஓடிக்கொண்டிருக்கையிலேயே, '2021 இல் கருப்பு சிவப்பு சைக்கிளை ஓட்டி தலைவர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்' எனப் பேசி தலைவரையே சங்கடப்படுத்தினார். ஆதவ் பேசியதை ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தலைவர் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். அதன்பிறகு ஆதவ் செங்கோட்டையனை கட்சிக்குள் சேர்க்க காய்களை நகர்த்தி வெற்றிகரமாக அதை செய்து முடிக்கையில்தான் தலைவர் கொஞ்சம் கூல் ஆனார். ஆனால், ஆனந்த், ஆதவ் மீது இருந்த மன மாச்சர்யங்கள் மட்டும் அப்போதும் குறையவில்லை' என்கின்றனர். 'சமீபத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களை விஜய் நியமித்திருந்தார். அதில் முதன்மை கண்காணிப்பாளராக ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கியிருந்தார். மூவரில் ஆதவ்வுக்கு மட்டும் கூடுதலாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கான பொறுப்பையும் வழங்கியிருந்தார். உடனே ஆதவ் டீம் 'ஆனந்துக்கு கொடுக்கப்படாத கூடுதல் பொறுப்பு ஆதவ்வுக்கு கொடுக்கப்படுகிறது. தளபதியின் நம்பிக்கையை பெற்று கட்சிக்குள் பவர் சென்டராக ஆதவ் மாறுகிறார்' என ஒரு செய்தியை முக்கியமானவர்களுக்கு ஃபார்வர்ட் செய்தனர். Aadhav ஆனந்த் இதில் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டார். அது தெரிந்தும் ஆதவ் தரப்பு நிறுத்தவில்லை. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதால் அங்கே முதலில் செயல் வீரர்களை கூட்டத்தை நடத்தினர். பேசிய அத்தனை நிர்வாகிகளும் தொகுதியை தலைவரே அறிவித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் பூடகமாக மட்டுமே பேசினார். ஆனால், ஆதவ் மைக்கை பிடித்த உடனேயே முந்தி கொண்டு தலைவர் பெரம்பூரில் போட்டியிடுகிறார் என மொத்தமாக போட்டுடைத்தார். ஸ்கூப் நியூஸை ஆதவ் இறக்கிவிட்டதால் ஆனந்தின் பேச்சுக்கு அந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கியத்துவமே இல்லாமல் போனது. அதில் ஆனந்த் கடும் அப்செட். சென்னை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் என்பதால் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியை மொத்தமாக கையிலெடுத்துவிட்டார் ஆதவ். தொகுதியில் ஆனந்தை மிஞ்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அதேமாதிரி, ஆதவ் போட்டியிடவிருக்கும் வில்லிவாக்கம் தொகுதியில் அவரின் தங்கை சீதா லெட்சுமியும் வீடு வீடாக பரப்புரை செய்வார் என மேடையிலேயே அறிவித்திருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு நாமே இப்படி செய்தால் எப்படி என அதிலும் ஆனந்த் கடும் அப்செட். ஆதவ் மீதான புகார்களை லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டு தலைவரின் காதில் போட சரியான சமயம் பார்த்து காத்திருந்தார். அதற்குள் ரஜினியை பற்றி பேசி அவரே சிக்கிக்கொண்டார். இப்போது ரஜினியே ஆதவ்வுக்கு எதிராக அறிக்கை விட்டிருப்பதால் தலைவரே அவரின் பேச்சுக்கு செக் வைப்பார் என்கிற குஷியில் இருக்கிறார் ஆனந்த்' என்கின்றனர் தவெகவின் உள் விவகாரம் அறிந்தவர்கள். Aadhav 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என்கிற ரஜினியின் அறிக்கைக்கு ஆதவ்வை வைத்தே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி சுமுகமாக பிரச்னையை முடிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் எதையாவது பேசி கிளப்பிடக்கூடாது என்பதற்காக இப்போது அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர். 'தேர்தல் நேரத்தில் இன்னொரு நடிகரின் ரசிகர்களை எதிரிகளாக மாற்றும் வகையில் இப்படியான விவகாரமெல்லாம் தேவையா..' என தவெக நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

விகடன் 17 Mar 2026 6:41 pm

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்? பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்...  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி: பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி  அரவக்குறிச்சி.  டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுதியின் அடையாளமாக இருந்து வருகிறது. சாயக்கழிவால் முழுமையாக  பாதிக்கப்பட்டு நாசமாகி  கிடக்கும் நொய்யல் ஆறு, காவிரி, அமராவதி, குடகனாறு, நல்காஞ்சி என பஞ்ச நதிகள் ஓடியும் 70 சதவீதம் விவசாயம் வானம் பார்த்த பூமியாய் மானாவாரி விவசாயத்தை நம்பியே உள்ளது. பரமத்தி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. அதிக அளவு வெடி மருந்து பயன்படுத்தி மிக ஆழமாக  வெட்டி எடுக்கப்படும் பாறைகளால் கரூர் மாவட்டம் வெப்ப மண்டலமாக மாறி வருகிறது எனும் குற்றச்சாட்டும் உள்ளது . 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி மழைக்காலங்களில் காவிரி மற்றும் அமராவதியில் செல்லும் தண்ணீரை இராட்சச குழாய் மூலம் எரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற 35 ஆண்டுகால கோரிக்கை இன்றுவரை விவசாயிகளின் கனவாக இருந்து வருகிறது. இதனால், பல கிராமங்களில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல், ஆடு, மாடுகளுக்கு தண்ணீரின்றி வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இத்தொகுதி மக்கள்.  அரவக்குறிச்சி கவுண்டர்கள், பட்டியலின மக்கள், மூன்றாவதாக நாயக்கர் சமுதாய மக்கள் என பல்வேறு பிரிவு சார்ந்த மக்கள் தொகுதி முழுதும் பரவி காணப்பட்டாலும், பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சுமார் 30 ஆயிரம் இஸ்லாமிய  வாக்காளர்களின் வாக்குகள் அரவக்குறிச்சி தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணையம் செய்வதாக உள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக  கூட்டணி கட்சியான பாஜக-வில் போட்டியிட்ட  முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் இளங்கோ. மீண்டும் அவர் கட்சியில் சீட் கேட்க, இவருக்கு போட்டியாக நொய்யல் குணசேகரன், பரமத்தி ஒன்றியம் கருணாநிதி உள்ளிட்ட பலர் கட்சியில் சீட் கேட்டு களம் இறங்க தயாராகி வருகின்றனர். கூட்டணிக்கு தொகுதி கைமாறும் பட்சத்தில் புதிய திராவிட கழகம் சார்பில் ராஜ்கவுண்டர், மதிமுக நிர்வாகி ஆசை சிவா என பலர் ரேஸ் ஓட தயார் நிலையில் நிற்கினர். அதிமுகவில்  கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி  இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் சீட் கேட்டு தலைமையிடம் அழுத்தம் கொடுத்த வருகின்றனர். திமுகவில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொறுத்து  நால்வரில் ஒருவருக்கு சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம் கட்சி தலைமை . தவெகவில் பெயர் சொல்லும் அளவிற்கு மக்கள் அறிமுகம் செல்வாக்கு கொண்டவர்கள் யாரும் இல்லையென்றாலும்,  தொகுதியில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் என விஜய் பெறும்  கனிசமான வாக்குகள்  திராவிட கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.  கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, சிறுபான்மையினரின் வாக்கு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்குத் தொகுதியில் உதயசூரியன் கூடுதலாகப் பிரகாசிக்கிறது எனலாம். எனினும் வேட்பாளர் தேர்வும், தவெக பிரிக்கும் வாக்குகளும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கரூர் சட்டமன்ற தொகுதி: தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள கரூர், வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதியாகும்.  சேர மன்னர்களின் தலைநகராக விளங்கிய வஞ்சி மாநகரத்தின் மறு பெயர்  கரூர். சமூக ரீதியாக கொங்கு வேள்ளாளக் கவுண்டர், அதற்கு அடுத்து முதலியார், சோழிய வேளாளர், முத்தரையர், ஆதிதிராவிடர்  மக்கள் என பரவலாக காணப்படுகின்றனர். ஆதிதிராவிடர், முத்தரையர் மற்றும் முதலியார் சமூகத்தினர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். நகர்ப் புறங்களில் சிறுபான்மையினர் வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. செந்தில் பாலாஜி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் சவால்களாக இருப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினை, ஜவுளித் தொழிலால் நிலத்தடி நீர் பாதிப்பு, அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க பொதுச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் கரூர் நகரின் மையப்பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். கைத்தறி மற்றும் ஜவுளி தொழில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குத் தேவையான திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் கரூர் முன்னணியில் உள்ளது. ஆண்டு தோறும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் செய்யப்பட்டு  அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி மையமாக உள்ளது. கொசுவலை உற்பத்தி ஆசியாவிலேயே கொசு வலை உற்பத்தியில் முதலிடம் பிடித்த நகரம் என்பது  குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் “Bus Body Building” தலைநகரம் எனப் போற்றப்படும் கரூர், பேருந்து கூண்டு கட்டும் தொழிலில் தேசிய அளவில் பெயர் பெற்றுள்ளது. எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 2021 தேர்தலில் திமுகவில் களம் கண்ட செந்தில் பாலாஜி, 12,446 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார். திராவிட கட்சிகளில் பங்காளிகள் இருவருமே மீண்டும் களம் காண்பதால் பெரிய அளவில் இவர்களுக்கு கட்சியில் போட்டியில்லை களத்தில் தான்  இவர்களுக்கு போட்டி என்கிறார்கள். TVK - விஜய்யுடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கரூர் மாவட்டத்தின் ராசியோ என்னவோ இங்குள்ள மாவட்ட செயலாளர்கள் எதாவது ஒரு வகையில் கட்சி தலைமையில் நெருக்கமாகி விடுகின்றனர். கரூர் மாவட்ட தவெக தலைவர் மதியழகன் கட்சி மேல்மட்டத்தில் மிக நெருக்கமாகி விட்டார். இதனால், இவருக்கே சீட் என  தெரிகிறது.  கட்சிக் கட்டமைப்பு, சிறுபான்மை வாக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைய சூழலில் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கிறது. எனினும் கரூர் தொகுதியில் விஜய்க்கு கணிசமான ஓட்டுகள் கனிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டுகளால் பின்னுக்கு தள்ளப்படும் திராவிட கட்சி எது? என்பது தான் விஷயமே என்கிறார்கள். மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி 1967-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்து வரும் கிருஷ்ணராயபுரம் (தனி),  1952-ல் முதல் 2021 வரை 16 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது. பட்டியலினத்தோர், முத்தரையர், ஊராளி கவுண்டர், குரும்ப கவுண்டர், நாயக்கர் மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர்.   விவசாயம் கூலி வேலை, கால்நடை வளர்ப்பு, கட்டட தொழில், வாழை, வெற்றிலை, நெல், கரும்பு, கடலை, எள், சூரியகாந்தி போன்ற விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவில் சீட் கேட்பவர்கள் பட்டியல் பெரிய அளவில் நீண்டுள்ள போதும்,  கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக உள்ள தானேஷ் (எ) முத்துக்குமார்  கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 31,625 வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியை சந்தித்தார்.  இம்முறையும் மீண்டும் தனக்கு சீட் வேண்டும் போராடி வருகிறார். கிருஷ்ணராயபுரம் இந்த நிலையில்  தொகுதியில் பிரபல டாக்டர் திவ்யா என்பவர்  மக்களை களத்தில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதிமுகவில் இந்த இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.  திமுக சிட்டிங் எம்எல்ஏ சிவகாம சுந்தரிக்கும் மாவட்ட துணைச் செயலாளர் பூவை.ரமேஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தான் போட்டி. இருவரும் ரேஸில் உள்ளனர். தவெக சார்பில் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் டி. அரசு, மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் ரேஸில் தயார் நிலையில் உள்ளனர். கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்கு உதயசூரியன் தொகுதியில் பிரகாசிக்கிறது. தவெக வாக்குகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிப்பதும் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைக்கிறது. முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! - கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்? குளித்தலை சட்டமன்ற தொகுதி: குளித்தலை தொகுதியில் ரெட்டியார், முத்தரையர், சோழியவெள்ளார்,  பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர்.  இத்தொகுதி அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதன் முதலாக போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் நிறைந்த விவசாயம் நிறைந்த பூமியாகும். காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் பலரும் நெல் கரும்பு வாழை வெற்றிலை முருங்கை பயிர்களை பயிரிட்டும் வருகின்றனர். குளித்தலை பகுதிகளில் வாழைத்தார்கள் மற்றும் முருங்கையை பதனிட செய்ய சேமிப்புக் கிடங்கு வேண்டுமென்றும் விவசாயிகள்  கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. குளித்தலை 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் இரா.மாணிக்கம்,  23,540வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் என். ஆர். சந்திரசேகரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார். சிட்டிங் எம்எல்ஏ மாணிக்கம் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில், குளித்தலையில் சீட் கேட்டு முன்னாள் நகராட்சி தலைவர் பல்லவிராஜா, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ராமர் உள்ளிட்ட பலர் போட்டி போட்டுக் கொண்டு  கேட்டு ரேஸில் இருந்து வருகின்றனர். அதிமுகவில் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம்,  நான்கு முறை எம்எல்ஏ வாக இருந்த பாப்பா சுந்தரம் மகன் ஒன்றிய செயலாளர் கருணாகரன், கரூர் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் தீவிரமாக சீட் கேட் களத்தில் போட்டா போட்டியில் உள்ளனர். தவெக சார்பில் பலர் சீட் கேட்டுள்ள நிலையில், கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து களத்தில் தயார் நிலையில் இருந்து வருகிறார்.  தவெக வாங்கும் வாக்குகள் தான் திராவிட கட்சிகளின் வெற்றி தோல்வி தலையெழுத்தை நிர்ணையிக்கும் நிலை காணப்படுகிறது. களம் திமுக அதிமுக என இரு கூட்டணிகளுக்குமே சவாலானதாக தான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக, அதிமுக சம பலத்தில் இருந்தது. கடந்த 2021 தேர்தலில் நான்கு தொகுதியையும் திமுக வசமாகியது. ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வெற்றியின் வாக்கு வித்தியாசம் 20 முதல் 30 ஆயிரம் வாக்குகள். கூட்டணி பலத்தையும் மீறி இம்முறை தவெக ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பெற்று தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. ஆக, திமுக, அதிமுக இரு கட்சிகளின் கரூர் ஆட்டம், தவெக பெறும் வாக்குகளை மையப்படுத்தி உள்ளது.!

விகடன் 17 Mar 2026 6:20 pm

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகள் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இக்கோரிக்கைக்கு எந்த நாடும் சாதகமாக பதில் கொடுக்கவில்லை. இதற்கிடையே இப்போரில் ஈரானின் புதிய மத உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு இதனால்தான் அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு இத்தாக்குதலில் காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இப்போது படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் ஜனாதிபதி மசூத்திடம் போனில் பேசியபோது தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தால் மொஜ்தபாவிற்கு ஈரானில் சிகிச்சை கொடுக்க சரியாக இருக்காது என்று கருதி, அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஈரான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவர் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் ரஷ்ய ராணுவ விமானத்தில் ரஷ்யாவிற்கு அனுப்பி அவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவில் புதின் வீட்டு வளாகத்திற்குள் இருக்கும் மருத்துவமனையில் மொஜ்தபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் அல் ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மத உச்ச தலைவர் மொஜ்தபாவை இஸ்ரேல் குறிவைக்கும் அபாயம் இருக்கிறது. அதோடு அவர் ஈரானில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் யாராவது அவர் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. மற்றொருபுறம் மொஜ்தபா ஈரானில்தான் சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மொஜ்தாபா கமேனி ஈரானுக்குள் சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜாபர்காண்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திப்படி, புதிய உச்ச தலைவரின் ஒன்று அல்லது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது கல்லீரல் அல்லது வயிற்றிலும் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோமா நிலையில் இருப்பதாகத் அச்செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கமேனிக்கு அருகில் கட்டடக் கழிவுகள் விழுந்ததால் அவரது உடலின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ''மொஜ்தபா உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை யாரும் உயிருடன் காட்டவில்லை. அவர் உயிரோடு இல்லை என்றுதான் எனக்கு செய்திகள் வருகிறது'' என்றார். இதே போன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர் சமீபத்தில் காபி குடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார். அதுவும் உண்மையானதா அல்லது ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வழக்கமாக கைவிரலில் மோதிரம் அணிந்து இருப்பார். சமீபத்தில் வெளியான வீடியோவில் மோதிரம் இல்லை. அதோடு அவரது மகன் தினமும் எக்ஸ் தளத்தில் குறைந்தது 20 பதிவுகளையாவது வெளியிடுவார். ஆனால் அவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனால் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

விகடன் 17 Mar 2026 6:17 pm

தமிழ்நாட்டுக்கு கூடுதல் செலவின பார்வையாளர்கள்! - நெருக்கடி கொடுக்க திட்டமா?

அமலுக்கு வந்த தேர்தல் நடைமுறை: தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மற்ற அனைத்து இடங்களையும் சேர்த்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை வரும் மே 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் 50,000 ரூபாய் மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். பறக்கும் படை சோதனை 234 தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்பது பறக்கும் படை, ஒன்பது நிலை கண்காணிப்புக் குழு என 2,160 பறக்கும்படை மற்றும் 2,160 நிலை கண்காணிப்புக் குழு தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 15-ம் தேதி மாலை 4.27 முதல் 17-ம் தேதி வரை 23.28 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றித் தேர்தல் அலுவலர்கள் விசாரணையில் இருக்கிறார்கள். தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல்துறை பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் நியமனம் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல்துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2026 மார்ச் 18-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பார்வையாளர்கள் அங்குச் சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான அவர்களின் குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. கடந்த முறையை விட அதிகம்: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாகச் செலவின பார்வையாளர்களைத் (Expenditure Observers) தமிழகத்துக்கு நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பின்னல் கெடுபிடிகளை அதிகப்படுத்தத் திட்டமிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்கள் சிலரிடம் பேசினோம், தேர்தல் பார்வையாளர்களில் செலவின பார்வையாளர்களின் பணி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் ஒருவர் தொகுதியின் அளவை பொறுத்து 28 முதல் 40 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதி உள்ளது. இந்த குறிப்பிட்ட அளவுக்குள் ஒரு வேட்பாளர் பிரசார கூட்டங்கள், வாகனங்கள், விளம்பரங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும், வேட்பாளர்களின் செலவுப் பதிவேடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் செலவின பார்வையாளருடையது. செலவின பார்வையாளர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 118, மேற்கு வங்கத்துக்கு 122 செலவின பார்வையாளர்களை நியமித்திருந்த நிலையில், இம்முறை மேற்கு வங்கத்துக்கு 100, தமிழ்நாட்டுக்கு 151 செலவின பார்வையாளர்களை நியமித்திருக்கிறது. தொகுதி அதிகமான மேற்கு வங்கத்துக்குக் குறைவாகவும், தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாகவும் அதிகாரிகளை நியமித்திருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பலமுனை போட்டி நிலவப்போகும் இந்த தேர்தலில் பல்வேறு தொகுதிகளின் பணம், பரிசுப்பொருள் இஷ்டத்துக்கு விளையாடும். தேர்தலுக்கு முன்பாகவே ஆளும் தரப்பில் பரிசுப் பொருள்கள் வாரி இரைக்கப்பட்ட நிலையில் அது தேர்தலில் இன்னும் அதிகரிக்கக் கூடம். அதனைக் கட்டுப்படுத்தி இறுக்கிப் பிடிக்கவும், ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கவும் ஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறதா என்ற சந்தேகம் தன்னிசையாகவே எழுகிறது. ஆளும் தரப்பை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இறுக்கிப் பிடித்துத் தேர்தலை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்... செய்வார்களா... என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். என்றார்கள் விளக்கமாக.

விகடன் 17 Mar 2026 6:16 pm

கன்னியாகுமரி: மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா? - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட்டுப்படுத்த தவறியகாக, தி.மு.க அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு பாலங்கள் அமைத்து தந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனைச் சேரும்.  அதேபோல நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றிய  பெருமை எடப்பாடியாரை சேரும். குமரி மாவட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க சாதனைகளை சொன்னால் காலம் போதாது. தி.மு.க ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வந்தது கிடையாது. தமிழக முதல்வர் நாகர்கோவில் வந்தபோது தி.மு.க மாவட்டச் செயலாளரை பாராட்டவில்லை. எங்கிருந்தோ வந்த மாவட்ட கலெக்டரை பாராட்டுகிறார் என்றால், அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்று காலையில் 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்தனர். ஆனால் கலெக்டர் கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு 10.30 மணிக்கு பிறகுதான் அனுமதியளித்தார். எனவே, இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அரசியல்வாதிகள் தவறு செய்தால் மக்கள் தண்டனை கொடுப்பார்கள், ஆட்சி மாற்றம் வரும். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை இறைவன் கொடுப்பார். உங்களுக்குக் கீழே இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளும் உங்கள் மேல் வெறுப்பிலே இருக்கிறார்கள். அனைத்து வி.ஏ.ஓ-க்களும் இந்த மாவட்ட ஆட்சியர்  மாவட்டத்தை விட்டுச் செல்லமாட்டாரா என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீங்கள் முதலமைச்சரிடம் சிறப்புப் பரிசு பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த கால ஆட்சியில் நீங்கள் எங்கு வேலை பார்த்தீர்கள், யாருடைய தயவில் இருந்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த அதிகாரியாக இருந்தாலும் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இங்கே இருக்கக்கூடிய காவல்துறைக் கண்காணிப்பாளர் கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேகமாகச் செயல்படுகிறார். அவருக்கு இணையாக இதுவரை எந்தக் கண்காணிப்பாளரும் இங்கே வந்ததே  கிடையாது. மாவட்ட ஆட்சியரின் லட்சணத்தைப் பாருங்கள். தானாக முந்திக்கொண்டு, இங்குள்ள தி.மு.க மாவட்டச் செயலாளரை ஒதுக்கிவிட்டு, மாவட்டச் செயலாளர்போல் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியின்போது வி.ஏ.ஓ முகத்தில் செல்போனை வீசி எறிந்து மன்னிப்பு கேட்டீர்கள். விரைவில் இந்த மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்கிவிடாதீர்கள். மீண்டும் இது தொடருமானால் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஏற்கெனவே புகார் அனுப்பியிருக்கிறோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தளவாய் சுந்தரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், சில நாள்களுக்கு முன்பாக தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வந்தபோது, அவர் இந்த மாவட்ட ஆட்சியரைப் புகழ்ந்து பேசிய விஷயம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது. அவர் பேசிய தோரணையும் அங்கிருந்தவர்கள் கேட்ட விதத்தையும் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் தனது மாவட்டத்தினுடைய செயலாளரைப் புகழ்ந்து பேசியது போன்ற ஒரு தோற்றம் அங்கே இருந்தது. மாவட்ட ஆட்சியரே உங்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம். 15-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வந்தாகிவிட்டது, இப்போது மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரி நீங்கள். உங்கள் இரண்டு கண்ணிலும் வெண்ணெய் இருக்க வேண்டும். இரண்டு பார்வைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தவிர்த்து நீங்கள் செயல்படுவீர்கள் என்று சொன்னால், இந்த மேடையை மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரிக்கை வைக்கக்கூடிய இடமாக நாங்கள் பயன்படுத்துவோம். தேர்தல் அதிகாரி என்று கடவுளுக்குச் சமமாக இருந்து நீங்கள் நீதி பரிபாலனம் செய்யவில்லை என்று சொன்னால், அந்த இடத்தில் இருப்பதற்கு நீங்கள் அருகதை அற்றவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலே மலைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. வடிவேலு காமெடி சீனில் வருவதுபோன்று மலையை காணோம். அந்த அளவுக்குக் கேவலமான நிலையிலே அமைச்சர் மனோ தங்கராஜ் இருக்கிறார். அவரை அப்புறப்படுத்துவதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய மலைகளைக் காப்பதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் அமைச்சராக இருந்தபோது பார்வதிபுரத்திலே ஒரு ரயில் நிலையம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம். அதிகாரிகள் அங்குள்ள 12 ஏக்கர் இடத்தை பார்த்தார்கள். ஆனால், அந்த 12 ஏக்கர் இடத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி அரசாங்கம் முடிவெடுத்தது. ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம் அங்கே இல்லை என்று  சொல்லிவிட்டார்கள். இன்னைக்கு அதே இடம் ஆக்கிரமிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்டுக்கு விடப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. அது யாருடைய அப்பன் வீட்டுச் சொத்து. ஒரு ரயில் நிலையம் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி, உங்களுடைய சந்ததிகள் அத்தனை பேருக்கும் பயன்பட வேண்டிய ஒரு இடத்தில் இன்றைக்கு பார்வதிபுரத்தில் ரியல் எஸ்டேட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தையும் காப்பதற்கான ஒரு போராட்டம். தேங்காய்ப்பட்டணத்தில் 28 மீனவர்கள் கொல்லப்பட்டபோது ஒரு மீன்பிடி துறைமுகத்தைச் சரி செய்வதற்கு வக்கற்ற நிலையிலே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இதை நம்முடைய தேர்தலாக நாம் கருதக் கூடாது. நம்முடைய சந்ததிகளுடைய தேர்தலாகக் கருதி இதிலே நாம் பணிபுரிய வேண்டும். நான்கு வழிச்சாலை ஒன்றரை வருடத்துக்கு முன்பே வேலை முடிந்திருக்க வேண்டும். இன்னும் முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட 4000 கோடிக்கும் மேலாக மீண்டும் 1400 கோடி ரூபாய் நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்திலிருந்து நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். இன்னும் வேகம் காட்ட முடியவில்லை ஏன்? கன்னியாகுமரி மாவட்டத்திலே சாலைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மனநிலை இங்கிருக்கக்கூடிய அரசாங்கத்திற்கு கிடையாது. நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்பதுதான் அவர்கள் மனநிலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மானம் உள்ளவர்கள் தி.மு.க-வுக்கு ஓட்டு போடலாமா? மாற்றங்கள் வந்தாக வேண்டும். சொரணையுள்ளவர்களாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாறியாக வேண்டும். குமரியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது என்ற சரித்திரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

விகடன் 17 Mar 2026 4:51 pm

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் இறங்கப் போவது யார்? பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவை நிறுத்த ஆலோசனை

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2001 - 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியிலும் 2011, 2016, 2021 ஆண்டு தேர்தல் காலங்களில் போடி தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த 5 - தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார். பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளார். திமுக வெற்றிக்காக தென்மாவட்டங்களில் அவர் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். விரைவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் போடி தொகுதியில் அவர் போட்டியிட திமுக தலைமைக் கழகத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். போடி தொகுதியில் அவர் மீண்டும் களம் இறங்கினால், அவரை எதிர்த்து யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அ.தி.மு.க பாஜக கூட்டணியில் போடி தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வலிமையான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க.வினர் ஆலோசித்து வருகின்றனர். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதாவும் போடி தொகுதியை கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் `நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன'த் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு போடி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா அதிமுக-வுடன் கூட்டணி வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனவே போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க அதிமுக, பாஜக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நமது மக்கள் முன்னேற்றக் கழகம், த வெ.க உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும்அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தாலும், ஜெகநாத் மிஸ்ராவே போடி தொகுதியில் களமிறங்கலாம் என்று பேசப்படுகிறது. பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா எனவே இந்த தேர்தலின் போது போடி தொகுதி பரபரப்பான அரசியல் களமாக இருக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை

விகடன் 17 Mar 2026 4:47 pm

எஸ்கேப் ஆகும் முஸ்லிம் லீக்; பிடிகொடுக்காத ஜவாஹிருல்லா! - வாணியம்பாடியை கழற்றிவிடுகிறாரா எ.வ.வேலு?

தி ருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி, தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. கடந்த தேர்தல்களில், `தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்குத் தொகுதியை தாரை வார்த்ததால்தான் தோல்வியடைந்தோம். வரும் தேர்தலில், வாணியம்பாடி தொகுதியைக் கூட்டணிக்குக் கொடுக்கக் கூடாது. தி.மு.க நேரடியாக போட்டியிட வேண்டும்’ என உடன்பிறப்புகள் போர்க்கொடித் தூக்கியிருக்கின்றனர். தொடர் தோல்வி காரணமாக, முஸ்லிம் லீக் கட்சித் தலைமைக்கும், அந்தக் கட்சி நிர்வாகிகளுக்குமே வாணியம்பாடி தொகுதியில் இந்த முறை போட்டியிட விருப்பமில்லை. தி.மு.க கூட்டணியில், இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், `ஆம்பூர் அல்லது கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளை தேர்வுசெய்யலாம்’ என்றும் கணக்குப் போடுகிறது முஸ்லிம் லீக் தலைமை. அமைச்சர் எ.வ.வேலு முதல் விருப்பமாக, ஆம்பூர் தொகுதியைத் தான் முஸ்லிம் லீக் தேர்வு செய்து வைத்திருக்கிறது. காரணம், ஆம்பூர் தொகுதியில் இஸ்லாமியர் வாக்குவங்கி அதிகம். தி.மு.க கூட்டணிக்கும் சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. எனவே தான் முஸ்லிம் லீக் இந்த முறை ஆம்பூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க தலைமையிடம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தி.மு.க வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு, பல்வேறு நெருக்கடிகளை முஸ்லிம் லீக் கட்சிக்குக் கொடுப்பதாகவும் கூட்டணிக்குள் பேச்சு அடிப்படுகிறது. வாணியம்பாடி `வடதமிழகத்தில் நீங்கள் வாணியம்பாடி தொகுதியில் மட்டும்தான் போட்டியிட வேண்டும். ஆம்பூர் தொகுதியை தர முடியாது’ என்று விடாபிடியாக எ.வ.வேலு குடைச்சல் கொடுக்கிறாராம். இதனால், `எ.வ.வேலு ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வாணியம்பாடியும் வேண்டாம்; ஆம்பூர் தொகுதியும் வேண்டாம்’ என எஸ்கேப் ஆகியிருக்கும் முஸ்லிம் லீக் கட்சித் தலைமை, தங்களுக்கு சாதகமாக இருக்கும் கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளையே கேட்டு பெறும் முடிவுக்கு வந்திருக்கிறதாம். அதே சமயம், கடைசி நேரத்தில் `முதலமைச்சர் ஸ்டாலின் மனமிறங்கி வந்து முஸ்லிம் லீக்கிற்கு ஆம்பூர் தொகுதியைக் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்றும் நம்புகிறார்கள் அக்கட்சியினர். `கூட்டணிக்கு ஆம்பூர் தொகுதி போய்விடக் கூடாது’ என்பதில், எ.வ.வேலு இவ்வளவு சிரமப்படுவதற்குப் பின்னணியில் அவரின் சமூக கணக்கு இருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் பரபரக்கின்றன. `ஆம்பூர் தொகுதியில் தனது சமூகத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ அ.செ.வில்வநாதனுக்கே மீண்டும் சீட் வாங்கித் தந்துவிட வேண்டும்’ என கங்கணம் கட்டிக்கொண்டு கூட்டணிக்குள் உள்ளடி வேலைப் பார்க்கிறாராம் அமைச்சர் எ.வ.வேலு என்கிறார்கள் சில திமுக வினர். இப்படியான செயல்களால், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க-வினரே அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம். மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? இந்த நிலையில், தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதற்காக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்குத் தூண்டில் போட்டிருக்கிறாராம் எ.வ.வேலு. `ஆம்பூர் தொகுதி தனது ஆதரவாளருக்குக் கிடைக்க வேண்டுமானால், எப்படியாவது வாணியம்பாடியைக் கூட்டணிக்குத் தள்ளிவிட வேண்டும்’ என்பது தான் எ.வ.வேலுவின் திட்டமாம். அதன்படி, மனிதநேய மக்கள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட வற்புறுத்தி காய்நகர்த்திக் கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம்பூர் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கலவரத்துக்குத் தலைமை தாங்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், `இவ்வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், 2020-ம் ஆண்டிலேயே அஸ்லம் பாஷாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆம்பூர் கலவரத்துக்குப் பிறகு நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் அந்தத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. ஆம்பூர் மக்களின் கோபத்துக்கு ஆளானதால், அந்தக் கட்சி தோல்வியடைந்தது. இதனால், 2021 தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு பெறவில்லை. பாபநாசம், மணப்பாறை ஆகிய இருத் தொகுதிகளிலும் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றிபெற்றது. ஜவாஹிருல்லா, பாபநாசம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்தச் சூழலில்தான் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரிடம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறாராம் எ.வ.வேலு. `ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியிலும் எதிரொலிக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்த இருத் தொகுதிகளிலுமே எங்களுக்குப் போட்டியிட விருப்பமில்லை’ என பிடிகொடுக்காமல் கைவிரித்துவிட்டாராம் ஜவாஹிருல்லா. இதனால், `வாணியம்பாடியை எப்படி கழற்றிவிடுவது?’ எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு. `அமைச்சரின் இந்த குழப்படியான உள்ளடி வேலைகளால், வாணியம்பாடி தொகுதி மீண்டும் `இலை’மறைவாக அ.தி.மு.க-வுக்கே சாதமாகிவிடும்’’ என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள். என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருப்பத்தூர்

விகடன் 17 Mar 2026 3:51 pm

`நடக்கக்கூட முடியலை, மாசம் 20 நாள் ஆஸ்பத்திரியில... எதுக்கு பதவி வெறி!' - ஓபிஎஸ்-ஸைச் சாடும் டிடிவி

தஞ்சாவூரில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது, ``2021ல் நாங்கள் பிரிந்து கிடந்தோம். நீங்கள் எளிதாக ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போது ஜெயலலிதாவின் பிள்ளைகள் ஓரணியில் திரண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அமமுக, அதிமுகவுடன் கரம் கோத்திருக்கிறது. டி.டி.வி.தினகரன் எந்த ஒரு கோரிக்கையும், நிபந்தனையும் வைக்கவில்லை. ஏன் நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை என முடிவு எடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற இந்த மக்கள் விரோத தீய ஆட்சி, வருங்கால சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கிற, ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே காரணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன். அப்போது தான் வருங்கால தமிழகம் வளம் பெற முடியும். அதற்கு ஜெயலலிதாவின் ஆட்சி தான் ஒரே வழி என்பதால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறோம். சிலரை போல சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் நாங்கள் செல்லவில்லை. அமித்ஷா, மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை டெல்லிக்கு அழைத்தார். அப்போது, நீங்கள் 2021ல் எங்களோடு கூட்டணிக்கு வர வேண்டும் என்றேன், நீங்களும் சரி என்றீர்கள். ஆனால் அவர்கள் அன்றைக்கு தேவையில்லை என்றார்கள். அதனால் ஜெயலலிதா ஆட்சி வரமுடியாமல் போனது. தற்போது அதிமுக தலைவர்கள் அமமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். பேசி அழைத்து வாருங்கள் என்கிறார்கள் என சொன்னார். டி.டி.வி.தினகரன் இதை அமித் ஷா மத்தியசத்திற்கு எதற்கு வர வேண்டும் என சிலர் பேசினார்கள். இருவருக்குள் சண்டை இருந்தால் மதிக்கத்தக்க இன்னொரு பெரிய மனுஷன் பிரச்னையை தீர்த்து வைப்பார்கள். அதுபோல் அமித் ஷா, என்னை அழைத்து இபிஎஸ் மனப்பூர்வமாக அழைக்கிறார் என்றார். நானும், 2021ல் சொன்ன அதே பதிலை சொன்னேன். உறுதியாக கூட்டணிக்கு வருகிறோம். எங்களுக்குள் இருந்த மனவருத்தங்களை தூக்கி எரிந்து விட்டு அமமுக, அதிமுக நலனையும் கருத்தில் கொண்டு இணைவதாக அமித் ஷாவிடம் சொன்னேன். நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். சிலரை போல் ஜெயலலிதாவால் பதவி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற்று, அமைச்சர், முதலமைச்சர் என பதவிகளை பெற்று முகவரி பெற்று பொருளாதாரத்தில் டாடா பிர்லாவாக மாறவில்லை. ஊரையே விலைக்கு வாங்கும் வகையில் பணத்தை சேர்த்து விட்டு இன்றைக்கு பாதுகாப்பிற்காக பல காரணங்களை சொல்லி அதிமுக சரியான கட்சியாக இல்லை என்று பொய் பிரசாரம் செய்து, என்னை சேர்த்து கொள்ளுங்கள் நான் தொண்டனாக இருக்கிறேன் என நரி வேஷம் போட்டு நடித்து எங்கோ போய் சேர்ந்திருக்கிறார். ஜெயலலிதா படத்தை பையில் வைத்திருந்தவர்கள், வீட்டில் மாட்டியிருந்தவர்கள் எல்லாம் அந்த படத்தை தூக்கி எரிந்து விட்டு பதவி வெறியில் திமுகவோடு சென்று விட்டனர். எம்.ஜி.ஆர் எந்த இயக்கத்தை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா எந்த இயக்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகள் போராடினாரோ அந்த தீய சக்தி திமுகவிடம் சென்று விட்டனர். தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டு சென்றுள்ளனர். உங்களுக்கு எத்தனையோ மனக்குறைகள் இருக்கலாம், மூன்று மாதம் அமைதியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு என்ன வயதாகிறது, இளைஞரா? உங்களால் நடக்கக்கூட முடியவில்லை, மாதம் 20 நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் உங்களுக்கு ஏன் இப்படி பதவி வெறி. உங்களை தரக்குறைவாக சொல்லவில்லை. மனவருத்தத்தில், பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன். எங்களுக்கும் எத்தனையோ மனக்குறை வருத்தம் இருந்தது. தனி இயக்கம் கண்டோம். ஒன்பது ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக இருந்ததில்லை. பலர் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக சொன்னார்கள். ஒரு நாள் கூட நாங்கள் அப்படி நினைத்ததில்லை. எதற்கு இதை சொல்கிறேன் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைந்து விட்டதால் திமுக இங்கிருந்து சென்றவர்கள், இரட்டை இலையில் போட்டியிட்டு பூனைப்படை நடத்தியவர்களை தூண்டி விட்டு நம் இணைப்பை பெட்டிக்காக பதவிக்காக இணைந்ததாக பேச வைக்கின்றனர். திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இணைந்துள்ளோம். தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கு எதிரான, நரகத்திற்கு ஈடான திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம். நம் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு வீடாக சென்று மோடி, அண்ணன் இபிஎஸ் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். தமிழ் நாட்டின் நலனுக்காக இதை செய்ய வேண்டும். நானும் டெல்டாகாரன் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு எதையாவது செய்து தந்திருக்கிறாரா. விலைவாசி விண்ணை முட்டி உயந்துள்ளது. அனைத்து தொழிலும் பாதிப்படைந்துள்ளன. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையில் முதல்வர் குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்கிறது. கொடுங்கோல் ஆட்சி முடிவிற்கு கொண்டு வர நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

விகடன் 17 Mar 2026 3:44 pm

மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' முந்துவது யார்? திருச்சி மாவட்டம் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. 'திருச்சி என்றால் திருப்பம்' என்று அரசியல் கட்சிகள் மாநாடு, கட்சி நிகழ்ச்சிகள் நடத்தும் 'சென்டிமென்ட்' மாவட்டமாக திருச்சி அமைந்துள்ளது. த.வெ.க தலைவர் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியது, தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் மாநாடுகள் நடத்தியது, பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் என்று நடப்பு தேர்தலை மையப்படுத்தி, அனல் பறக்கும் மாவட்டமாக திருச்சி மாறியிருக்கிறது. trichy இங்குள்ள 9 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் வென்றெடுத்துள்ளது. இந்நிலையில், வரும் தேர்தலில் யார் யாருக்கு சீட், யாருக்கு தொகுதிகள் பலமாக இருக்கின்றன என்று பார்ப்போமா? 1. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கொள்ளிடம் வடகரையில் அமைந்துள்ள இந்த தொகுதியில் பிரசித்திப்பெற்ற  சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதோடு, அரிசி ஆலைகளும் இங்கும் நிறைய அமைந்துள்ளன. இந்த தொகுதி மக்கள் நெல், பருத்தி, மக்காசோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்வதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.  முத்தரையர், பட்டியல் சமுகத்தினர், கவுண்டர்கள், செட்டியார், ரெட்டியார், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகத்தினர் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கின்றனர். இந்த தொகுதியின் தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-வான கதிரவன் மறுபடியும் சீட் கேட்கிறார். அவருக்குத்தான் சீட் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இருந்தாலும் இவரைத்தவிர, முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசணும் சீட் பெறும் ரேஸில் இருக்கிறார். kathiravan அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, கடந்த எம்.பி தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்ட  என்.டி.சந்திரமோகன் ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  த.வெ.க சார்பில் மண்ணச்சநல்லூர் தொகுதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். ஆளும் தரப்பு மேல் சில அதிருப்தி வாக்குகள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் பலம், தி.மு.க-வின் வாக்குகள், அதிருப்தி வாக்குகள் பிரிவது உள்ளிட்ட காரணங்களால், இப்போதைக்கு உதயசூரியன் இந்த தொகுதியில் சற்று பிரகாசிக்கிறது. 2. லால்குடி சட்டமன்ற தொகுதி : லால்குடி தொகுதியில் நெல், வாழை, கரும்பு, சோளம், பருத்தி  என்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல பயிர்கள் பயிர்  செய்யப்படுகின்றன. கொள்ளிடம் ஆறு இந்த தொகுதியில் பாய்கிறது. லால்குடி தொகுதியில் உடையார், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் என்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து  பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர்.  இந்த தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் சௌந்தர பாண்டியன் தி.மு.க-வில் மறுபடியும் சீட் கேட்கிறார். ஆனால், இவருக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுக்கும் வேலைகளில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பு ஈடுப்பட்டு வருவதாக தி.மு.க-வில் திகுதிகு கிளம்பியிருக்கிறது. sountharapandiyan இவரைத்தவிர, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் துரை.கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினரும்,  முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கருணாநிதி ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி இந்த தொகுதியை கேட்டு வருகிறது. அதேபோல், சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் இந்த தொகுதியில் போட்டியிட போவதாக சொல்கிறார்கள். இவரைத்தவிர, தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜேஷ் தங்கராஜன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய  செயலாளர்  தின்னக்குளம் டி.என்.சிவகுமார், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் 'சூப்பர்' டி.என்.டி நடேசன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வும் சீட் பெயர் முயற்சிப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட டி.ஆர்.தர்மராஜ் சீட் கேட்டு ஃபைட் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் மதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். த.வெ.க சார்பில் லால்குடி தொகுதி மாவட்டச் செயலாளர் விக்னேஷ் சீட் கேட்டு முயற்சித்து வருகிறார். அறிமுகம் இல்லாத நாம் தமிழர், த.வெ.க வேட்பாளர்கள் களம் காண இருப்பதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது. 3. மணப்பாறை சட்டமன்ற தொகுதி முறுக்கு, மாட்டுச்சந்தை, பால்கோவா, அதிகமாக நடைபெறும் பால் உற்பத்தி ஆகிய விஷயங்களுக்கு பெயர்பெற்ற தொகுதி மணப்பாறை. இந்த  தொகுதியில் காய்கறி, சிறுதானியங்கள், பூ, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி என்று பல விவசாயம் செய்யப்படுகிறது. ஊராளிக் கவுண்டர், பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், முக்குலத்தோர், உடையார், செட்டியார் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில பல சமூகத்தினர் உள்ளனர். தி.மு.க கூட்டணியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அப்துல் சமது மறுபடியும் ம.ம.க சார்பில் சீட்டுக்காக முயற்சிக்கிறார். abdul samathu ஒருவேளை இந்த தொகுதி தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், தி.மு.க தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மணப்பாறை முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி, வையம்பட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி, தெற்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு சீட் என்கிறார்கள். அதேபோல், காங்கிரஸூம்  இந்த தொகுதியில் கண்  பதித்திருப்பதால்  அந்த  கட்சி சார்பில் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார்,  தெற்கு மாவட்ட துணைத் தலைவர் 'மிலிட்டரி' முருகன் ஆகியோரும் சீட்டை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ம.தி.மு.க-வும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இந்த தொகுதியை கேட்டு வருவதால், அந்த கட்சிகளின் சார்பில் முறையே தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கமும், ஆளூர் ஷானவாஸூம் சீட் கேட்கிறார்களாம். pa.kumar அ.தி.மு.க-வில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், முன்னாள் எம்.எல்.ஏ இரா.சந்திரசேகர், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் மருத்துவர் விஜயகுமார், மருங்காபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.  நாம் தமிழர் காட்சி சார்பில் அருணகிரி வேட்பாளராகியிருக்கிறார். த.வெ.க சார்பில் அந்த கட்சியின் மணப்பாறை தொகுதி மாவட்டச் செயலாளர் கதிரவன் தான் வேட்பாளர் என்கிறார்கள். இப்போதைய சூழலில், இந்த தொகுதியில் அதிமுக - திமுக கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகள் பெறும் வாக்குகளும் வெத்தி தோல்வியில் பங்காற்றும் என்று அறிய முடிகிறது. 4. துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதி : திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி) தொகுதியில்  உள்ள  பகுதிகள் மட்டும்  கொங்கு  நாட்டின் ஒரு பகுதியாக அறியப்படுகிறது.  விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த தொகுதியில் சிறுதானியங்கள்,  பருத்தி, வெங்காயம், நெல் ஆகிய பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.  பச்சைமலை இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.  அதேபோல், தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், முத்தரையர்,  வெள்ளாளர்,  இஸ்லாமியர் என்று வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் அடுத்தடுத்த சமூக  மக்கள் இருக்கிறார்கள்.  தி.மு.க-வை பொறுத்தமட்டில் கடந்த இரண்டு முறையாக தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருப்பவரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான  ஸ்டாலின் குமார் மீண்டும் சீட் கேட்கிறார்.  stalinkumar இவரைத் தவிர, துறையூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரண்யா  மோகன்தாஸ், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் செ.சுரேஷ்குமார் ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில்  இருக்கிறார்கள்.  அ.தி.மு.கவை பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆர் மன்ற வடக்கு மாவட்ட  செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் நகர்மன்ற உறுப்பினரும்,  பொதுக்குழு உறுப்பினருமான சரோஜா இளங்கோவன், மருத்துவர்  மணியம்மை, முன்னாள் எம்.எல்.ஏ இந்திராகாந்தி ஆகியோர் சீட் பெறும்  முயற்சியில் முன்னணியில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் தனியார் பள்ளி ஆசிரியை கௌசல்யா வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். த.வெ.க சார்பில் குடமுருட்டி கரிகாலனின் மனைவி பிச்சை ரத்தினம், கவியரசன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். இப்போதுள்ள சூழலில், இந்த தொகுதியில் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதை காணமுடிகிறது. வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படும் என தெரிகிறது. 5. முசிறி சட்டமன்ற தொகுதி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக முசிறி  சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. காவிரி கரையையொட்டி  அமைந்துள்ளதால், விவசாயம் முக்கியத் தொழிலாக இருக்கிறது. வாழை, வெற்றிலை, நெல், மானாவரி பயிர்கள், வெங்காயம், கோரை என்று பல விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கிறது.  முத்தரையர், பட்டியல் சமூகம்,  வெள்ளாளர், பிள்ளைமார், ரெட்டியார்,  செட்டியார், உடையார், கவுண்டர்கள், இஸ்லாமியர்கள் என்று அடுத்தடுத்து பல சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.  தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான காடுவெட்டி தியாகராஜன்  மறுபடியும் சீட் கேட்கிறார். kaduvetti thiyagarajan இவரைத்தவிர, தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன், தொட்டியம் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஷ், முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மகன் கருணைராஜா, முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர்  ராமச்சந்திரன் ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார்கள்.  காங்கிரஸூம் இந்த தொகுதியை கேட்டு வருவதால், அந்த கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் எரிகுளம் சரவணன், முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தமட்டில், முன்னாள் அமைச்சர்  என்.ஆர்.சிவபதி  முதன்மையில் இருக்கிறார். இவரைத்தவிர,  சிவானி கல்லூரி தாளாளர்  செல்வராஜ் பிள்ளை, முசிறி நகரச் செயலாளர் 'ஸ்வீட் ராஜா' மாணிக்கம்,  முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர்  தீவிரமாக  முயற்சி செய்கிறார்கள். அ.ம.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் டி.டி.வி.தினகரன் மூலம் இந்த தொகுதியை பெற முயற்சித்து வருகிறார். nr sivapathi நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். த.வெ.க சார்பில் முசிறி தொகுதி மாவட்டச் செயலாளர் ஜெகன்மோகனுக்கு தான் சீட் என்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சிவபதி வேட்பாளர் என்றால், தொகுதி சமபலத்தோடு தேர்தலை எதிர்கொள்ளும். வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டாலோ, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டலோ, திமுக கூட்டணி முந்தும் சூழலே உள்ளது. 6. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலால் புகழ்பெற்ற இந்த தொகுதியில் காவிரியும், அதன் கிளை ஆறான கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன.   மக்களை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா இந்த தொகுதியில் தான்  அமைந்துள்ளது. தவிர, முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 - ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதி. இங்கு, நெல், வாழை, பூ, காய்கறி என்று பல விவசாயப் பொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர், உடையார், பட்டியல் சமூகத்தினர்,  வெள்ளாளர், பிராமணர்கள், கிறிஸ்தவர்கள் என்று அடுத்தடுத்து வாக்குகளை  நிர்ணயிக்கும் இடங்களில் பல சமூகத்தினர் வசிக்கிறார்கள்.  தி.மு.க சார்பில் பழனியாண்டி மறுபடியும் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக  இருக்கிறார். palaniyandi இவரைத் தவிர, தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை  அமைப்பாளர் என்.ஆனந்த், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ்  ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்திய கம்னியூஸ்ட் கட்சியும் இந்த தொகுதியை கேட்டு தங்களது தலைமைக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது. நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்? அதேபோல், அ.தி.மு.க-வில் முன்னாள் அரசு கொறடாவும்,  கட்சியின்  அமைப்புச் செயலாளருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர்  பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான  எஸ்.வளர்மதி ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் முன்னணியில்  இருக்கிறார்கள்.  பா.ஜ.க-வும் இந்த தொகுதியை கேட்டு அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜ் வேட்பாளராகி இருக்கிறார். manokaran த.வெ.க சார்பில் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளர் லிஸ்டில் முதன்மையில் இருக்கிறார். முக்கியத் தலைகள் மோதும் தொகுதி என்பதால், இப்போதைக்கு தொகுதியில் சமபலத்துடன் போட்டி கடுமையானதாக உள்ளது நிலவுகிறது. 7. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி: பிரசித்திப்பெற்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், ரயில்வே ஜங்ஷன்,  மத்திய பேருந்து நிலையம், கல்வி நிலையங்கள் ஆகியவை இந்த தொகுதியின் அடையாளமாக விளங்குகின்றன. அதேபோல், வியாபார தலங்கள்,  அதன்மூலம் கிடைக்கும் வேலை ஆகியவை இங்குள்ள மக்களின்  வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. iniko iruthayaraj இந்த தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள், பட்டியல் சமூகத்தினர்,  இஸ்லாமியர்கள், யாதவர்கள், பிள்ளைமார் என்று அடுத்தடுத்து வாக்குகளை  நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர் உள்ளனர். கிறிஸ்தவ நல்லெண்ண  இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக, உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்.  லோக்கல் தி.மு.க-வினர் இந்த தொகுதியை கேட்டு அடம் பிடித்தாலும் முதல்வரோடு உள்ள நெருக்கத்தால் மறுபடியும் இனிகோ இருதயராஜூக்கு தான் சீட் என்கிறார்கள். தொகுதியில் அவர் வேலையையும் தொடங்கிவிட்டார். அதேநேரம், தி.மு.க-வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால்  கிழக்கு மாநகர  செயலாளர் மதிவாணன், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோர் சீட்  கேட்கிறார்கள். காங்கிரஸூம் இந்த தொகுதியை கேட்டு காய் நகர்த்தி வருவதால் முன்னாள்  எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப்  லூயிஸ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். ம.தி.மு.க-வும் இந்த தொகுதிக்காக மல்லுக்கு நிற்பதால், அந்த கட்சியின் துணைபொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையாவும் சீட் கேட்கிறார். seenivasan அ.தி.மு.க-வில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு தான்  சீட்  என்கிறார்கள்.  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி வேட்பாளராகியிருக்கிறார். த.வெ.க தரப்பில் விஜய் களமிறங்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அவர் நிற்கவில்லை என்றால், ஜெரால்டு மில்டன் வேட்பாளராகலாம் என்கிறார்கள். இப்போதைய சூழலில், இந்த தொகுதியில் உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது. எனினும் வேட்பாளர் தேர்வும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. `மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்? 8. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: காவிரி ஆறு, பி.ஹெச்.எல், கனரக உலோக தொழிற்சாலை, பொன்மலை  ரயில்வே பணிமனை, படைக்கல தொழிற்சாலை, தேசிய தொழில்நுட்பக் கழகம், ஐ.ஐ.எம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,  துவாக்குடியில் அரசு கலைக்கல்லூரி, அரசு ஐ.டி.ஐ என்று பல அடையாளங்கள் திருவெறும்பூர் தொகுதிக்கு உள்ளன.  இதைத்தவிர, இந்த தொகுதியில் உள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களில் வேலை, நெல் விவசாயம் ஆகிவற்றால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது.  anbil makes இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், சோழிய வெள்ளாளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், யாதவர்கள், முத்தரையர் என்று வாக்குகளை  நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து பல சமூகத்தினர் உள்ளனர்.  தி.மு.க சார்பில் தொடர்ந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாகவும், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தான் சீட் என்கிறார்கள். அவர் மட்டும் தான் சீட் கேட்டிருக்கிறார். அ.தி.மு.க சார்பில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், புறநகர்  தெற்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற மணிகண்டன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், கூத்தப்பார்  பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி பாண்டியன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேட்பாளராகியிருக்கிறார். navalpattu viji த.வெ.க சார்பில் இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்குடைய தி.மு.க முன்னாள் பொறுப்பாளரான நவல்பட்டு விஜி வேட்பாளராகலாம் என்கிறார்கள். அவர் வேட்பாளராகும்பட்சத்தில் அன்பில் மகேஸூக்கு டஃப் ஃபைட் கொடுப்பார் என்கிறார்கள். இருந்தாலும், இப்போதைய சூழலில் உறுதியான தி.மு.க கூட்டணி கட்சிகளின் பலத்தால், உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது. 9. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி: திருச்சி மேற்கு தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம், தலைமை ரயில் நிலையம் என்று முக்கிய மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. வியாபார நிறுவனங்கள், அதுசம்மந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் என இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், பிள்ளைமார், இஸ்லாமியர்,  கிறிஸ்தவர்கள்  என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர்  உள்ளனர். இந்த தொகுதியில் வெற்றிப்பெற்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக  இருக்கும் கே.என்.நேரு, இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது  முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றிருக்கிறார். தி.மு.க சார்பில்  கே.என்.நேருவுக்கு தான் சீட் என்பதால், அவர் அதற்கான  வேலைகளில்  இறங்கிவிட்டார்.  kn neru அ.தி.மு.க சார்பில் மருத்துவ அணியின் மாநகர் மாவட்ட செயலாளர்  மருத்துவர் செந்தில், தில்லை நகர் பகுதி கழக செயலாளர்  எம்.ஆர்.ஆர் முஸ்தபா,  ஜங்க்ஷன் பகுதி கழக செயலாளர்  'நாகநாதர்'  ஏ.பாண்டி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.  நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேஸ்வரி வேட்பாளராகியிருக்கிறார். த.வெ.க சார்பில் ஷேக் அலாவுதீனும், அப்பாதுரை ராவுத்தரும் வேட்பாளர் ரேஸில் இருக்கிறார். மற்ற கட்சிகளில் டஃப் கொடுக்காத வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்பதால், இந்த தொகுதியில் உதயசூரியனுக்கு இப்போதைக்கு ஏறுமுகம் தெரிகிறது. முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! - கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்? திருச்சி யாருக்கு? கடந்தமுறை, இந்த மாவட்டத்தில் 9 - க்கு 9 என்று மொத்தமாக தி.மு.க கூட்டணி அறுவடை செய்திருந்தாலும், இந்தமுறை புதிய கட்சிகளின் வரவுகள், கூட்டணி மாறுபாடுகள், சிதறும் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள் என்று பல அம்சங்களால் சில தொகுதிகளில் சமபலத்தோடு திராவிட கட்சிகளும், த.வெ.க-வும் இருக்கின்றன. trichy இருந்தாலும், வேட்பாளர்கள், வைட்டமின் 'ப' , முடிவாகும் கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவை மாறும்போது, இங்குள்ள தொகுதிகளின் வெற்றிவாய்ப்பு மாறுபடவும் அதிக வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த மாவட்டத்தில் அதிகமான தொகுதிகளில் இப்போதைக்கு தி.மு.க முன்னிலை வகிப்பதாக தெரிகிறது.!

விகடன் 17 Mar 2026 3:26 pm

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ரஜினியை பற்றி விமர்சித்தது தான், அரசியல் விளையாட்டுக்கு மையப்புள்ளியாக மாறியுள்ளது. த.வெ.க சார்பில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும் போதும் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் திமுகவின் அழுத்தம் வந்ததால் பின்வாங்கினார். ஆனால் விஜய் அப்படி இல்லை என்று பேசினார். இந்த பேச்சிற்கு ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொருபுறம் தி.மு.க-வை சேர்ந்த தமிழக அமைச்சர்களும் இதே விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  ஆதவ் அர்ஜூனா இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணையும் என்று கடந்த ஒருவாரமாக செய்திகள் கசிந்து வந்தது. ஆனால்,நேற்று காலை “வதந்திகளை நம்பவேண்டாம். பா.ஜ.க, உள்ளிட்ட யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தவில்லை” என்று அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டிஆர் நிர்மல் குமார். இதனால் த.வெ.க தனித்து நிற்கும் முடிவுக்கு வந்ததாக அடுத்து செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வரிசையாக ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.  பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக அரசியலின் வரலாறு  தெரியாமல் பேசுகிறார் ஆதவ் அர்ஜூனா. அவர் மீது விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று   கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் அதே போல் கண்டனத்தை பதிவு செய்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கண்டனங்களை பதிவு செய்ததற்கு பின்னால் டெல்லி மேலிடம் இருப்பதாக செய்திகள் இப்போது கசிந்துள்ளது.  இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் ரஜினி பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினிக்கு வருத்ததை ஏற்படுத்தியது. பயந்து போனார் என்று சொல்வதை ரஜினி எப்போது ஏற்றுக் கொள்வதில்லை. இந்த விவகாரத்தை அப்போது தனக்கு நெருக்கமான பா.ஜ.க டெல்லி பிரமுகர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த். விஜய்யுடன் கூட்டணி வரும் என்கிற நம்பிக்கையில் இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டது டெல்லி.  இப்போது விஜய்க்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்க போவதால், ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டது. நேற்று டெல்லியிலிருந்து வந்த உத்தரவுக்கு பிறகுதான், ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எல்லாம் வரிசையாக அறிக்கை விட்டு ஆதவ் அர்ஜூனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதோடு, ரஜினி ரசிகர்களையும் தங்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கும் அரசியலை கையில் எடுத்துள்ளார்கள்.  ரஜினி ரஜினி இன்று வெளியிட்ட அறிக்கையிலும் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்“ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக பேசிய பேச்சுக்கு இப்போது கண்டனங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஆதவ் அர்ஜூனாவிற்கான நெருக்கடி இனிதான் துவங்கும் என்பதை குறிப்பிடும் வகையில் தான், ரஜினி காலத்தை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். இந்த மொத்த ஆக்ஷனக்கும் பின்னால் பா.ஜ.க வின் ப்ளானே உள்ளது.தேர்தல் அரசியல் களத்தில் ரஜினியை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட பா.ஜ.்க முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள் விரிவாக. த.வெ.க தரப்பிலும் திடீரென இந்த விவகாரம் வெடித்ததில் அப்செட்டாகியிருக்கிறார்கள். இதை எப்படி சரிகட்டுவது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள். ரஜினி ரசிகர்களை தேர்தல் நேரத்தில் துாண்டிவிட்டு தங்களுக்கு எதிராக அரசியல் செய்ய வைக்கும் யுக்தியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரகள் த.வெ.க-வினர்.  ஆதவ் அர்ஜூனாவை வைத்து அடுத்த அரசியலை ஆட ஆரம்பித்துவிட்டது டெல்லி தலைமை. Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

விகடன் 17 Mar 2026 2:53 pm

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' - டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக... திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தினகரனுக்கு மரியாதை செலுத்தினர். முடிவில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் இதில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது, ``தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை வீடுகளில்கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை. கஞ்சா போன்ற போதை புழக்கம் தமிழ்நாடு முழுவதும் பட்டித்தொட்டியெல்லாம் பரவியுள்ளது. இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு இடைஞ்சல், பெண்கள் உயிரை காவு வாங்குகின்ற செயல்கள் நடக்கிறது. மிகவும் மோசமான நிலைக்கு ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை தள்ளியுள்ளார்கள். எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். இப்போது நாம் கேள்வி படாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக-வை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் மணல் கடத்தல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளை, சட்டவிரோத செயல்கள் நடக்கிறது. இதை தட்டி கேட்கிற சாமானியர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என யாராக இருந்தாலும் கொலை செய்கின்ற உயிரை அச்சுறுத்துகின்ற காட்டாட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது. முதல்வர் குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக நான் தொடந்து சொல்லி வருகிறேன். நாம் உயிரோடு இருக்கும் போதே நரகத்தை அனுபவிக்கின்ற ஆட்சியாக நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 2021ல் ஜெயலலிதாவின் பிள்ளைகள் பிரிந்து கிடந்த காரணத்தினால் விபத்துபோல் இந்த ஆட்சி அமைந்து விட்டது. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது தொண்டர்கள் பிரிந்து கிடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட்டதால் அந்த ஆட்சி இரண்டு ஆண்டுகளில் தூக்கி எரியப்பட்டது. மீண்டும் ஒரே கட்சியாக இணைந்த பிறகு 1991ல் அதிமுக ஆட்சி அமைந்தது. இன்றைக்கு காலம் திரும்பியிருக்கிறது. ஜெயலலிதாவின் பிள்ளைகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. எம்.ஜி.ஆர் திமுக-வை தீயசக்தி என்று சொன்னது, 50 ஆண்டுகளை கடந்தும் அதை உண்மை என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர். இரண்டு வயது பச்சிளம் குழந்தைகளுக்கு திமுக-வைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்திருக்கிறார். இவர்களின் செயலால் தமிழ்நாடு வேதனையில் உள்ளது. பள்ளி செல்லும் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டிகள் கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்படுகின்றனர். வீட்டில் யாரும் தனியாக இருக்க முடியவில்லை. காவலர்கள் கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய வகையில் திமுக ஆட்சி இருக்கிறது. இது போன்ற கொடுமைகளை கேள்விப்பட்டதே இல்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதா மீது பொய் பிரசாரம் செய்து திமுக ஆட்சி அமைக்கும். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் திமுக ஆட்சியை தூக்கியெறிவர்கள். இன்றைக்கு அதே நிலை நீடிக்கிறது. மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் தமிழ்நாட்டு பெண்கள் எங்கள் பக்கம் என்று முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சிறிதும் கூச்சமின்றி பெருமை படுகின்றனர். ஆனால் பெண்கள் மனம் கொதித்திருக்கின்றனர். பெட்டி கடைகளில் கூட கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள்கள் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன. திமுகவினர் ஆட்சியில் இருந்தால் போதும், தமிழ்நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். இன்றைக்கு ஊழல் இல்லாத துறைகளே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் பாய்கின்ற சூழலில் அமைச்சர்கள் சிறை செல்கிற பயத்தில் இருக்கின்றனர். திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர், வேலை வாய்ப்பு, டிரான்ஸ்ஃபர் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி ஊழலை அமலாக்கதுறை கண்டுபிடித்து முதலமைச்சருக்கு அனுப்பி வழக்கு பதிய சொன்னால் மெளனம் காக்கின்றனர். அந்த 2,500 கோடி ஊழல் பணம் எங்கு சென்றது என தெரியும். தஞ்சாவூர் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் தினகரன் திருச்சியில் பிரதமர் மோடி எங்கும், எதிலும் ஊழல் நடக்கிறது என்றார். பல ஆயிரம் கோடி ஊழல் பணம் ஒரு குடும்பத்தை நோக்கி செல்கிறது. கைத்தடிகளாக, அடியாட்களாக திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ரூ.5,000 கொடுத்து கூலிப்படைகளை வைத்து கொலை செய்து விடலாம் என்கிற நிலையில், யாருடைய உயிருக்கும் பாதுகாப்பும் இல்லை. அந்த அளவிற்கு தமிழ்நாடு மோசமாகி விட்டது. 1,000 கொடுத்து பெண்களை சரிகட்டி விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் வரும் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி இருந்தால் தான் தலை நிமிர முடியும் என நினைக்கிறார்கள். ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என பொய் பிரசாரங்களைச் செய்கின்றனர். இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் இஃப்தார் நோன்பு நடத்தி, நிம்மதியாக ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்ட போது சோனியா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணியில் திமுக இருந்தது. தன் குடும்பம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்டு காணாமல் திமுக-வினர் ஆட்சியில் இருந்தனர். டி.டி.வி.தினகரன் பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை பொருள்கள் விற்பனையின் சந்தையாக தமிழ்நாடு மாறிவிட்டது. இதன் பின்னணியில் திமுக-வினர் உள்ளனர். எங்கு, என்ன சட்டவிரோத செயல்கள் நடந்தாலும் அதில் திமுக-வினரின் பெயர் அடிபடுகிறது. முதல்வர் ஸ்டாலினிடம் தான் காவல்துறை இருக்கிறது. ஆனால் அதை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் ஆட்சியில் இருக்கிறார், இது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதில்லை. மே 4ம் தேதி வரை ஸ்டாலின் ஆட்சியை விட்டு இறங்க மாட்டார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக சேர்ந்து திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் என்பது உண்மை என்றார்.

விகடன் 17 Mar 2026 2:43 pm

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று'நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களை ஒரே தாக்குதலில் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை உயிரோடு பிடித்துச் சென்றது போன்று அலி கமேனியைப் பிடிக்க முடியாது என்பதாலும், ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்துவது முடியாத காரியம் என்பதாலும் அவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்து அழித்துவிட வேண்டும் என்று நினைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இத்தாக்குதலை நடத்தின. ஆனால் இத்தாக்குதலில் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பேசப்பட்ட ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. டெலிகிராப் இதழுக்குக் கிடைத்த ஆடியோவின் படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சில வேலைகளுக்காக அவர் தங்கி இருந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததால் உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் ராணுவத் தலைவர் உடல் சிதறி, வெறும் சில கிலோ சதைத்துண்டுகளே கிடைத்தது. அவர் உடல் உறுப்புகள் பல மீட்டர் தூரத்திற்கு சென்றுவிழுந்தது. அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி 28ம் தேதி அன்று நடந்த அந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அலி கமேனியின் அலுவலகத்தில் நெறிமுறைத் தலைவராக பணியாற்றும் மஸாஹர் ஹொசைனி சமீபத்தில் டெஹ்ரானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த ஆடியோ படி, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு கமேனியின் குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது. கமேனி குடும்பத்தினரையும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக திட்டமிடப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹா, துபாய், அபுதாபியில் இத்தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 56 வயதான மொஜ்தபா கமேனி, தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வெளியில் வந்து அங்குள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். தோட்டத்தில் இருந்து மீண்டும் வீட்டிற்குச் செல்ல கட்டடத்தின் படிக்கட்டில் ஏறியபோதுதான் அக்கட்டடத்தில் குண்டு விழுந்தது. இந்தத் தாக்குதலில் அவரது காலில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது மனைவி ஜஹ்ரா மற்றும் மகன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அலி கமேனியின் மற்றொரு மகனான முஸ்தபா கமேனி தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தார். இருப்பினும், அவரும் அவர் மனைவியும் காயமின்றி உயிர் தப்பினர்.

விகடன் 17 Mar 2026 2:29 pm

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த கார் முழுமையாக எரிந்த நிலையில் கிடந்தது. பனை மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் எரிந்து கிடந்த காருக்குள் நான்கு பேரின் ஊடல்கள் கிடந்தன. காட்டுப்பகுதியில் கிடந்த அந்த காருக்குள் எரிந்து கிடந்த நான்கு உடல்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகளின் உடல்கள் கருகிய நிலையில் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தக் குழந்தைகள் பெண்ணின் உடலைக் கட்டிப்பிடித்த நிலையில் இருந்ததால், கார் எரியும்போது குழந்தைகள் தாயைக் கட்டிப் பிடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் விசாரணையை முடுக்கி விட்டார். அத்துடன், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன. காரில் இறந்து கிடப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அவர்கள் கடன் தொல்லை காரானமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து காருடன் எரித்து விட்டார்களா என்று விசாரணை நடக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, இந்த கார் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை ஆற்றங்கரை பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு வந்தவர்களா என்பதைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கேரளாவில் இருந்து அந்த கார் வந்திருகலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விரைவில் இந்தச் சம்பவத்தின் பின்னணி தெரியவரும் என்கிறார்கள்.

விகடன் 17 Mar 2026 1:44 pm

``எனக்கு `அந்த'நடிகை வேண்டும் எனக் கேட்டால்.! - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், ``ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசைத் தூக்கி எறியக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. சி.வி. சண்முகம் இங்கு வருகை தந்திருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துப் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். வேட்பாளர் யார் என்பது நமக்கு முக்கியமல்ல. இந்த மக்கள் விரோத அரசை வீழ்த்துவது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்த அரசு ஒரு கஞ்சா அரசு, போதை அரசு மற்றும் ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காத அரசு. ஸ்டாலின் அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தை மக்களிடமும், வாக்காளர்களிடமும் கொண்டு செல்லுங்கள். இந்த அரசு செய்யும் தவறுகளையும், குறைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே நல்ல நிர்வாகம் செய்திருந்தால், உங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், எதற்காக இப்போது 5000 ரூபாய் கொடுக்கிறீர்கள்? இது யாருடைய பணம்? மக்களின் பணத்தை மக்களிடமே கொடுத்து ஓட்டு கேட்பது என்ன விதமான நியாயம்? நீங்கள் நேர்மையானவராக இருந்தால், கடந்த 28 மாதங்களாக வழங்காமல் நிறுத்தி வைத்திருந்த பணத்தைக் கொடுத்திருக்க வேண்டும். சிவி. சண்முகம் அதைச் செய்யாமல், இப்போது அடுத்த மாதம் பணம் தருவதாகக் கூறி 2000 ரூபாய் கொடுக்கிறீர்கள். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு மக்கள் கோடை வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியுமா? இந்த 2000 ரூபாய் ஒரு கடைத்தெருவுக்குச் சென்று வரக் கூடப் பத்தாது. இப்படித்தான் இந்த அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் வசனம் பேசுவதையும், கவிதை சொல்வதையுமே இவர்கள் வேலையாக வைத்திருக்கிறார்கள். அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்று சொன்னார். ஆனால் இவர் ஒரு படி மேலே போய், 'உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்' என்கிறார். ஒருவர் தனக்கு 'பிரபலமான நடிகை ஒருவர் வேண்டும்' என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா? முதல்வர் ஸ்டாலின் இப்படி வேடிக்கையான வாக்குறுதிகளை ஆட்சி முடியும் காலத்தில் கொடுக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக எதையும் செய்யாமல், இப்போது ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, பைக் மற்றும் கார் ஓட்டுவது என விளம்பரம் தேடுகிறார். ராக்கெட் ஒன்றுதான் இன்னும் ஓட்டவில்லை. இவரை ராக்கெட்டில் வைத்துத் திரும்ப வராத இடத்திற்கு அனுப்பிவிட வேண்டும். மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசை அகற்ற அனைத்துக் கழக நிர்வாகிகளும் பாடுபட வேண்டும். என உரையாற்றினார். தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

விகடன் 17 Mar 2026 1:29 pm

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை. சண்முகம் பெ.சண்முகம் பேசியதாவது, 'மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு இன்று இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் சுமுகமாக முடியுமென நினைக்கிறேன். நிறைய கட்சிகள் இருப்பதால் எங்களையும் சீட்டுகளை குறைக்க சொன்னார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவர் கட்சிக்கு ஏற்ப தகுதிக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது உரிமை. காங்கிரஸ் இதில் வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தையில் எந்த தடையும் இல்லை. இன்று இரவோ அல்லது காலையிலோ கூட அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம். சண்முகம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவை கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல' என்றார்.

விகடன் 17 Mar 2026 1:16 pm

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

தவெக - என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம். பார்த்துக்கலாம்...' கறாராக கூறிவிட்டதாக உற்சாகமாக தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். TVK Vijay | விஜய் தவெகவுக்கான வார் ரூமை ஆதவ் அர்ஜூனா தேனாம்பேட்டையில் ஒரு பெரிய வளாகத்தின் 7 வது மாடியில் நடத்தி வருகிறார். விஜய்யும் அவ்வபோது இந்த வார் ரூமுக்கு வந்து ஆலோசனைகளை நடத்திவிட்டு பணியாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்திவிட்டு செல்வார். நேற்றும் விஜய் இந்த தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்திருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த மீட்டிங்கில்தான் 'என்ன ஆனாலும் நாம தனியாதான் போறோம். தனியாதான் எலெக்சனை சந்திக்கிறோம்' என விஜய் கறாராக கூறியதாக கிசுகிசுக்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள். TVK Vijay - தவெக விஜய் முதற்கட்டமாக வேட்பாளர்களை இறுதி செய்த விஜய், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கேட்டிருக்கிறார். அந்த வேட்பாளர்களையும் இந்த வாரத்துக்குள்ளேயே சந்திக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

விகடன் 17 Mar 2026 12:57 pm

தமிழகத்தின் தொன்மைக்குக் கிடைத்த வெற்றி - 11ம் கட்ட கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்ளிட்ட எட்டு முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மார்ச் 13-ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1959-ம் ஆண்டின் பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதிகளின் கீழ், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரதமர் மோடி இதன் மூலம் தமிழகத்தின் தொன்மையான நகர நாகரிகத்தை வெளிக்கொணரும் அடுத்தகட்டப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக, தமிழக அரசு தனது 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடதக்கது. எனவே, மத்திய அரசு வழங்கியிருக்கும் ஒப்புதலின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11-ம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர், தென்காசி மாவட்டத்தின் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டத்தின் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், கோவை மாவட்டத்தின் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தின் தெலுங்குனூர்-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய வரலாற்றுத் தளங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள இந்த விரிவான ஆய்வுகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகத் தமிழகத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அனுமதி கிடைக்கத் தாமதமானதால், களப்பணிகள் பருவமழைக் காலத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவானது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்த நேரடி வேண்டுகோளில், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பணிகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முதல்வரின் இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பண்டைய துறைமுக நகரமாகத் திகழ்ந்த பூம்புகார் கடற்கரைப் பகுதியில், நீருக்கடியில் மறைந்துள்ள வரலாற்றுச் சான்றுகளைத் தேடும் ஆய்வுகளுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சென்னனூர் அகழ்வாராய்ச்சி பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினத்தின் கடல்சார் வணிகத் தொடர்புகளைக் கண்டறியும் வகையில், கடந்த செப்டம்பர் 2025 முதல் அந்தப் பகுதிகளில் நீருக்கடியிலான ஆய்வுகள் (Underwater Survey) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நிலப்பரப்பில் எட்டு இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளதால், தமிழகம் முழுவதும் வரலாற்றுத் தேடல் ஒரு புதிய வேகத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 17 Mar 2026 12:54 pm

தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒருவர் பணம் கொண்டு சென்றால், அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுவார்கள். நேற்று கூட, திருப்பூர் பல்லடத்தில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் நந்தினி. அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார். சிகிச்சைக்காக தன்னுடன் ரூ.2 லட்சம் எடுத்து சென்றிருக்கிறார் நந்தினி. தேர்தல் Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில் இவர்களைப் பல்லடம் அருகே நிறுத்திய பறக்கும் படையினர், கார் முழுவதும் சோதனையிட்டுள்ளனர். அப்போது சிகிச்சைக்கு கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் பறக்கும் படையினர். நந்தினி 'சிகிச்சை'க்காக என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் பறக்கும் படையினர் செவி சாய்க்கவில்லை. தேர்தல் சமயத்தில் பொதுமக்கள் இந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் என்னென்ன தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன என்றும், எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் இருப்பது எப்படி என்பதையும் இங்கே பார்க்கலாம்... தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, பொதுவாகவே ரூ.50,000-க்கு மேல் கையில் ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்லக்கூடாது. மேலே சொன்ன சம்பவத்தில் நந்தினி, அவரது அம்மா மற்றும் கணவர் ஆகிய மூவர் காரில் பயணம் செய்திருக்கின்றனர். பணம் 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு ஆளுக்கு ரூ.50,000 என்றாலும், மொத்தமாக ரூ.1.5 லட்சம் எடுத்து செல்லலாமே என்கிற கேள்வி எழுவது நியாயம் தான். மூவரும் ஒன்றாக சென்றிருக்கின்றனர்... அவர்களது கையில் ரூ.2 லட்சம் இருக்கிறது என்கிற போது, தானாக பறக்கும் படையினருக்கு சந்தேகம் எழும். அதனால், அவர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். ஒரே வாகனத்தில் செல்லும் 3 - 4 நபர்கள் ஆளுக்கு ரூ.50,000 எடுத்து செல்ல முடியுமென்றால், தேர்தல் நேரத்தில் இதை பயன்படுத்தி பல லட்சங்கள் கைமாற்றப்படும். இதை தடுக்கவே, பறக்கும் படையினர் இவ்வளவு கெடுபிடி செய்கின்றனர். அதற்காக, தேர்தல் நேரத்தில் கல்யாணம், வீட்டில் விசேஷங்கள், மருத்துவ செலவு, அவசர செலவு என எதுவும் வராமல் இருக்காது. இந்தச் சூழல்களில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, உங்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்திருந்தீர்கள் என்றால், அதற்கான ரசீதை கூடவே எடுத்து செல்லுங்கள். இது உதாரணத்திற்குத் தான். உங்கள் கையில் இருக்கும் பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், உடனே பணம் உங்களுக்கே கொடுக்கப்பட்டுவிடும். அர்ச்சனா பட்நாயக் ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன? வங்கி பரிவர்த்தனைகள் கூட... தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், வங்கியில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆப்கள் கூட கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார். இதனால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு பெரிய தொகை வங்கிக் கணக்கிற்கு கிரெடிட் ஆனால், நிச்சயம் கேள்வி எழுப்பப்படும். அதனால், அந்தப் பணம் யாரிடம் இருந்து எதற்காக வந்தது என்கிற தரவுகளைக் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களைத் தேவையில்லாத கெடுபிடிகள்... நடவடிக்கைகளில் இருந்து காக்கும். பறக்கும் படையினரின் கெடுபிடி பணமோடு மட்டும் முடிந்துவிடாது. தங்க நகைகள், விலை உயர்ந்த (பரிசுப்) பொருள்களுக்குக் கூட நீளலாம். அதனால், பணம் அல்லது விலை உயர்ந்த பொருள்கள் எதையும் எடுத்தோ, கொண்டோ செல்கிறீர்கள் என்றால், அவைகளுக்குத் தகுந்த ஆவணங்களை வைத்திருப்பது சால சிறந்தது. RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

விகடன் 17 Mar 2026 12:14 pm

``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து ஆடும் பன்னீர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ``அண்ணா ஆரம்பித்த தி.மு.க-வில் என்னை இணைத்த முதல்வருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தி.மு.க கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தரக் கூட்டணியாகத்தான் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் புதிதாக தே.மு.திக இணைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தபோது ராஜ்யசபா உறுப்பினர் சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை துச்சம் என தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒப்பந்தமே போடாமல் தி.மு.க., தே.மு.தி.கவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கியிருக்கிறது. லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தினார்  எடப்பாடி பழனிசாமி. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தினார். இப்படி ஜெயலலிதா மக்கள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகிய நால்வருமே மக்களால் ஓட்டு போட்டு முதல்வர் ஆனவர்கள். ஆனால், நான் உட்பட மற்றவர்கள் அப்பாயிண்மென்ட். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி நான் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றுக் கொண்டு, தற்போது சசிகலாவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்கிறார். அப்படிச் சொல்லலாமா? உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அ.தி.மு.கவை அழித்த வரலாற்றுப் பெருமை இவர்களையே சாரும். என்னைப் பற்றியோ நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேச அவர்களுக்கு அருகதை இல்லை” என்றார்.

விகடன் 17 Mar 2026 12:03 pm

Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது...  ``தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த் திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! அன்புடன் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் அறிக்கை

விகடன் 17 Mar 2026 11:55 am

நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள் - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அந்த வகையில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க-வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். ஸ்டாலின் அப்போது, ``இந்த உலகத்தை ஒன்பது கோள்கள் இயக்குகின்றன. அதில் சக்தி வாய்ந்த சூரியன் சின்னத்தை பேரறிஞர் அண்ணா அன்று அறிவியல் பூர்வமாகத் தேர்ந்தெடுத்தார். இன்று அதே உதயசூரியன் சின்னத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். அநியாயத்திற்கு தமிழகம் தலைகுனியாது என்பதால், மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறையாக முதலமைச்சராக வருவது உறுதி. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா, இப்போது ஸ்டாலின் இவர்கள் எல்லோரும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். நான் உட்பட மற்றவர்கள் எல்லோரும் அப்பாயிண்ட்மென்ட் செய்யப்பட்டவர்கள். நன்றிகெட்ட அரசியல்வாதி இந்த உலகத்திலேயே எடப்பாடி பழனிசாமிதான். தேர்தலில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று உதயகுமார் போன்றவர்கள் திட்டமிட்டனர். 6 சட்டமன்றத் தொகுதிகளில் சதி செய்தார்கள். ஆனால் என்ன நடந்தது? இன்று அவர்களே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க-வை இன்று குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். கடப்பாறை எடுத்து கட்சியைப் புதைத்த பெருமை அவரையே சாரும். எடப்பாடி பழனிசாமி நான் எடப்பாடி பற்றிப் பேசக் கூடாது என உதயகுமார் எச்சரிக்கிறாராம். என்னை எச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் ஒரு சாதாரணத் தொண்டன். மாநாட்டில் கூட 200-க்கும் மேற்பட்டோர் என்னுடன் நின்றனர். நான் தளபதி வாழ்க என்று சொன்னேன். பதவிக்காக நான் அலைபவன் அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வரலாறு அவரை மன்னிக்காது என்றார். `திராவிட மாடல் ஆட்சி' - முதல்வரின் நம்பிக்கைக்கு காரணம் என்ன? - சரிவுகளும் சவால்களும்! | In Depth

விகடன் 17 Mar 2026 11:52 am

Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம் கட்சி வலுவாக உள்ளது. கண்ணுர் மாவட்டத்தில் உள்ள தளிப்பறம்பு சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார் எம்.வி.கோவிந்தன். இதற்கு முன்பு இரண்டுமுறை அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். தற்போது சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருக்கும் எம்.வி.கோவிந்தன் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துவிட்டார். அதே சமயம் எம்.வி.கோவிந்தன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தளிப்பறம்பு தொகுதியில் அவரது மனைவி பி.கே.ஷியாமளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது கட்சி சீனியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பது ஆண்டுகள் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டக் குழு உறுப்பினராகவும் 60 ஆண்டுகள் சி.பி.எம் கட்சியில் செயல்பட்ட டி.கே.கோவிந்தன் கட்சியில் இருந்து வெளியேறி, தளிப்பறம்பு தொகுதியில் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தனின் மனைவி பி.கே.ஷியாமளாவுக்கு எதிராகப் போட்டியிடுகிறார். சுயேச்சையாகப் போட்டியிடுவதோடு காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் தன்னை ஆதரித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார். தளிப்பறம்பு தொகுதி சி.பி.எம் வேட்பாளர் பி.கே.சியாமளா இதுகுறித்து டி.கே.கோவிந்தன் கூறுகையில், கட்சியின் விதிப்படி இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மூன்றாவது முறை போட்டியிடக்கூடாது. ஆனால், எம்.வி.கோவிந்தன் நான்காவதாக எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று நினைத்தார். அவர் இப்போது மாநிலச் செயலாளராக இருப்பதால் அது நடக்காது. கேரள சிபிஎம் வேட்பாளர்கள்: முதல்வர் தர்மடத்தில் போட்டி; நடிகர் முகேஷுக்கு சீட் மறுக்க காரணம் என்ன? அதனால், அவருடைய மனைவியை சட்டமன்ற உறுப்பினராக்க முயற்சி நடக்கிறது. இதை மாவட்டக் குழுக் கூட்டத்திலேயே நான் எதிர்த்தேன். எம்.வி.கோவிந்தன் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அந்த இருக்கையில் நான்காவது முறையாக மனைவியை அமர வைக்க முயல்வது எந்தவிதத்தில் நியாயம் எனக் கேட்டதுடன் தேர்தல் பணி செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தேன். டி.கே.கோவிந்தன் மாவட்டக் குழு கூட்டத்திலும், மண்டலக் குழு கூட்டத்திலும் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் பி.கே.சியாமளாவைப் போட்டியிட வைக்கும் முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். அந்தக் கூட்டத்தில் எம்.வி.கோவிந்தனும் இருந்தார். மனைவியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அவரிடம் நேரடியாகவே கோரிக்கை வைக்கப்பட்டது.  பி.கே.சியாமளாவிற்குப் பதிலாக என்.சுகன்யா உள்ளிட்ட பலருடைய பெயரையும் மாவட்டச் செயற்குழு பரிசீலித்து. ஆனால், அவற்றை மாநிலச் செயற்குழுவிற்கு அனுப்பவில்லை. இறுதியில் பி.கே.சியாமளாவின் பெயரை மட்டும் மேல்மட்டக் குழுவிற்கு அனுப்பி அதை அங்கீகரிக்க வைத்துள்ளனர். எனவே கட்சியில் இருந்து விலகி தளிப்பறம்பு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன் என்றார். சி.பி.எம் கட்சியில் 63 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஜி.சுதாகரன் அம்பலப்புழா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவது கட்சி பலமாக உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுபோன்று தளிப்பறம்பு தொகுதிதில் 60 ஆண்டுகளாகச் செயல்பட்ட டி.கே.கோவிந்தன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதால் சி.பி.எம் கட்சியின் எஃக்கு கோட்டையான கண்ணூர் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி!

விகடன் 17 Mar 2026 11:29 am

RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும், இதனால் இந்தியாவின் R&AW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவை, 'கவலைக்குரிய நாடு' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ரந்தீர் ஜெய்ஸ்வால் 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்... அமெரிக்காவின் USCIRF-ன் அறிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியாவை உள்நோக்கத்துடனும், பாரபட்சத்துடனும் சித்தரிப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியலை வைத்து USCIRF இந்தியாவை ஒருதலைப்பட்சமாகவும், தவறாகவும் சித்தரித்து வருகிறது. இப்படித் தொடர்ந்து தவறாகச் சித்தரிப்பது அந்த ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறி ஆக்குகிறது. இந்தியாவை இப்படி விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த ஆணையம் அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் கவனம் செலுத்தலாம். மேலும், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் அச்சுறுத்தல்களில் தீவிர கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

விகடன் 17 Mar 2026 10:18 am

'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன. இப்போது இந்த முட்டல், மோதல் பெரும் தாக்குதலாக உருமாறி உள்ளது. இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் அங்கு இருந்த மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ளனர்... 250 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன? ஆப்கானிஸ்தான் சொல்லும் குற்றச்சாட்டு இது குறித்து ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு, பாகிஸ்தான் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் இந்தச் செயலை மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என்று ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. மறுக்கும் பாகிஸ்தான் ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்தக் கூற்றை, 'நாங்கள் எந்தவொரு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தவில்லை' என்று பாகிஸ்தான் மறுக்கிறது. ஆப்கானிஸ்தானின் ராணுவத் தளவடங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?

விகடன் 17 Mar 2026 8:52 am