SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Jan 2026 3:37 pm

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை? - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து - நடராசன் நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு நிற உடையில் வருகை தந்தார். அங்கு தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 'மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டார். முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ``வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நீங்கள் அவர்களை சுட்டுக்கொன்ற காங்கிரசோடு கைகோர்த்துக்கொண்டு இந்த வணக்கத்தை செலுத்தினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆன்மாக்கள் தான் ஏற்றுக் கொள்ளுமா? தமிழிசை சௌந்தரராஜன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை கூப்பிடுவீர்களே இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலேயே ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே அவை எல்லாம் தமிழ்நாட்டில் இல்லையா? இத்தனை முரண்பாடுகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளுமா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? இனியும் மொழியை வைத்து நீங்கள் போடும் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Jan 2026 3:37 pm

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 – பெருந்திரளான பங்கேற்புடன் சிறப்பாக The post கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழா 2026 appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 25 Jan 2026 2:42 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நாளை தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடக்கிறது. இதில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைகின்றனர். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. தன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் திமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி கோவிந்தராஜ் வைத்திலிங்கத்தை சந்தித்துள்ளார். இவர் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவினர் வைத்திலிங்கம் மூவை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தஞ்சாவூரில் நாளை டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. குடியரசு தினவிழாவை முடித்த பின்னர் தஞ்சாவூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து கிளம்பியதும் நேராக மேடைக்கு வருகிறார் ஸ்டாலின். முதலில் மகளிர் அணி மாநாட்டில் ஒரு பகுதியில் மேடை அமைத்து இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாம். இணைப்பு விழா நடைபெறும் இடம் தனக்கான தனித்துவத்தை காட்ட வேறு இடத்தில் தனியாக மேடை அமைத்து இணைப்பை நடத்த நினைத்தார். தன் விருப்பத்தை செந்தில் பாலாஜியிடம் சொல்ல அவர் முதல்வர் மூலமாக உடனே ஓகே வாங்கி கொடுத்தாராம். இதையடுத்து இணைப்பு விழாவிற்கான பணிகள் வேகமெடுத்தன. விழா நடைபெறும் இடத்தில் பத்தாயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வைத்திலிங்கம் தற்போது உற்சாகமாக இருக்கிறார் என்கிறார்கள். ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விகடன் 25 Jan 2026 2:31 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை. விஜய் அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்தின் மிக முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன். எதாவது அழுத்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? அழுத்தத்துக்கெல்லாம் அடங்கி போற ஆளா நாம? அழுத்தம் மக்கள் மீதுதான் இருக்கிறது. தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் பாஜகவிடம் நேரடியாக சரண்டர் ஆகிவிட்டார்கள். திமுக மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறது. அவர்களின் வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர் கலர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்கிற அழுத்தத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள் நம் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். விஜய் கூட்டணியைப் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யை நம்பி யார் வருவார் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால், மக்கள் நம்மை நம்புகிறார்கள். அதனால்தான் கரியரின் உச்சம் என்கிற இடத்தில் என்னை தூக்கி வைத்திருக்கிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களாக உழைக்க வேண்டும். ஏற்கனவே ஆண்டவர்களை போலவும் ஆள்பவர்களை போலவும் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். தீய சக்தியும் வேண்டாம். ஊழல் சக்தியும் வேண்டாம். இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் சக்தியும் நமக்குதான் இருக்கிறது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அண்டி பிழைக்கவோ அடிமையாகவோ மாறும் எண்ணமே இங்கில்லை. Vijay யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்யக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும் அண்ணா பெயர் கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நடக்கப்போறது ஜனநாயகப் போர். அதை லீட் செய்யப்போகும் தளபதிகள் நீங்கள்தான். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா அதை உங்க உழைப்புல காட்டுங்க. நாம அறிவிக்கப்போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஆதரவையும் கொடுங்க. நட்பு சக்தி இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மால ஜெயிக்க முடியும்.' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:52 pm

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே'கணக்கு!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை. நிர்மல் குமார் அவர் பேசியதாவது, '1977 யைப் போல 2026 லும் ஆட்சிமாற்றம் ஏற்படும். சமீபத்தில் திமுகவுக்காக வேலை செய்பவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'உங்களுக்கு (தவெக) எவ்வளவு வாக்கு கிடைக்கும்?' என்றார். 'நீங்களே சொல்லுங்கள். எங்களுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?' என்றேன். அவர், 'வீட்டுக்கு ஒரு வாக்கு இருக்கிறது' என்றார். தமிழ்நாட்டில் 2.25 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என 2 கோடி வாக்குகள் கிடைத்தாலும் நமக்கு 40% க்கும் மேல் வாக்கு கிடைத்துவிடும். கரூர் சம்பவத்தின் போது தலைவர் தவித்த தவிப்பை எங்களால் மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்தியாவுக்கே முன்னுதாரணமான அரசாக 2026 இல் ஒரு அரசு அமையும்' என்றார். அருண்ராஜ் கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியதாவது, ''விசில் எப்போது அடிப்பார்கள். போட்டியில் எதாவது தவறு நடக்கையில்தான் விசில் அடிப்பார்கள். இந்த ஆட்சியில் ஊழல் செய்வது யார்? தவறு செய்வது யார்? இங்கே முதல்வர் ஸ்டாலினே தவறு செய்யத்தான் செய்கிறார்? உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு பொறுப்பு டிஜிபியை கூட அவர் நியமிக்கவில்லையே. தமிழகத்தில் கஞ்சாவே இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களும் தவெகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதை வென்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி மக்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு குறைவா? மக்கள் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களிடம் சரியாக எடுத்துச் சென்றால் வென்றுவிடலாம் என்றார்.

விகடன் 25 Jan 2026 1:26 pm

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக முயற்சியில் இறங்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா? என்ற கேள்வி எழுந்தது. ராமதாஸ் - ஸ்டாலின் ஏற்கெனவே `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமாவளவன். இந்நிலையில் இன்று( ஜன.25) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டோம். அந்த இரு கட்சிகளும் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஓர் அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. திருமாவளவன் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும். பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் இன்றும் உறுதியாக இருக்கிறோம் என்று திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 1:21 pm

TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா'ஆதவ்!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை. விஜய் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை வெறும் ரசிகர் மன்றம் சார்ந்தவர்கள் என பொய்பிரசாரம் செய்வார்கள். நம்மிடம் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. 2300 ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கே கட்சியின் கட்டமைப்பு மீது சந்தேகம் இருந்தது. கடந்த நான்கு மாதங்களாக கடினமாக உழைத்து கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு செல்கையில், அண்ணனோடு காரில் சென்றேன். அப்போது வண்டி சிக்னலில் நின்ற போது அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து அண்ணனை கண்டுகொண்டார்கள். திமுக வீட்டில் நம்முடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். எடப்பாடியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவுடன் ஒரு 20 பேர் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். விசிக மொத்தமும் தவெகவில்தான் இருக்கிறது. ஆதவ் திமுக என்பது திருட்டு திமுக. அவர்கள் நம்மைப் பார்த்து கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நாங்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறோம். அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை எங்கே? திருமா அதை கேட்பாரா? உங்களையெல்லாம் அடியாட்களைப் போல திமுக பயன்படுத்துகிறது. மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் முதல்வரின் சாதனை. எங்கே பாஜகவை எதிர்க்க வேண்டுமோ நாங்கள் எதிர்ப்போம். 2026 தேர்தல் திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். செந்தில் பாலாஜியை 2 நிமிடம் பெரியாரை பற்றி பேசச் சொல்லுங்கள். இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து மிரட்டப்படுகிறோம் என்கிறார்கள். மிரட்டுகிறவர்கள்தான் பயந்தவர்கள் என்று அர்த்தம். அமைதியாக இருப்பவர்கள்தான் தைரியமானவர்கள். எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது கூட்டணியை நம்பி உருவாக்கவில்லை. தாய்க்குலத்தை நம்பி உருவாக்கினார். அப்படித்தான் தலைவரும் கட்சி தொடங்கியிருக்கிறார். ஆதவ் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்குள் தலைவர் நுழைந்தவுடனேயே 10 பேர் செல்பி எடுக்க ஓடி வந்தார்கள். எல்லா இடத்திலும் அவரின் ஆட்கள் இருக்கிறார்கள். தலைவரை பிடித்த எதோ ஒரு அதிகாரி என்ன பிரச்னை ஆகினாலும் பரவாயில்லை என கையெழுத்து போட்டதால்தான் விசில் சின்னம் கிடைத்திருக்கிறது' என்றார்.

விகடன் 25 Jan 2026 1:18 pm

தமிழே உயிரே! |அரியணை ஏறியதா தமிழ்?|மொழிப்போரின் வீர வரலாறு – 5

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 5 தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? என்று பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது உணர்ச்சிமிகு வார்த்தைகளை நாமும் வழிமொழிகிறோம்.  தமிழுக்காக உயிரை நீத்தவர்களுக்கு என்றுமே மரணமில்லை. தமிழாகவே  அவர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம் ஆட்சியையே மாற்றியது! தமிழகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்’, ஆட்சியையே புரட்டிப்போட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி என்ற அடையாளத்துடன் இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காங்கிரஸ் கட்சி மமதையோடு இருந்தது. அதனால்தான், இங்கு வந்து இந்தியைத் திணித்தது. இந்திக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போரை தமிழர்கள் நடத்தினார்கள். அந்தச் சூழலில்தான், தமிழகம் 1967-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் என்ற ஆலமத்தைச் சாய்ப்பதற்கு, மொழிப்போரில் ஈடுபட்ட வீரர்படை களமிறங்கியது. காமராஜர் மிகப்பெரிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவான அவர், ‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்று கூறினார். ஆனால், என்ன நடந்தது? மொழிப்போரை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவரான மாணவர் பெ.சீனிவாசனிடம் விருதுநகரில் தோற்றுப்போனார் காமராஜர். காமாஜரே தோற்றுவிட்டார் என்றால், மற்ற காங்கிரஸாரின் கதி? ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் பக்தவத்சலம் தோற்றார். மேலூரில் எளிமையின் சிகரமாக விளங்கிய அமைச்சர் கக்கன் தோல்வியடைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி தோற்றுப்போனார். சி.சுப்பிரமணியம் தோற்றார். ஆர்.வெங்கட்ராமன் தோற்றார். விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகவனைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தோற்றுப்போனார்கள். கருணாநிதி - அண்ணா பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது என்றால், அதற்கு இந்தித் திணிப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அண்ணா, தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு, இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகள். தங்களின் உயிருக்கு இணையாக நேசித்த தாய்மொழிக்காக உயிரையே தியாகம் செய்த அந்த தியாகிகளின் குடும்பங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக நேரில் சென்றேன். அப்போது நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகிய 12 தியாகிகளின் குடும்பங்களைப் பற்றிய நிலையை அறிந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.   தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த இரா.சண்முகத்தின் ஊரான விராலிமலைக்குச் சென்றேன். சண்முகத்தின் அண்ணன் இரா.மாணிக்கத்தைச் சந்தித்தேன். மொழிப்போரில் உயிரிந்தோரின் குடும்பங்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி, அதை நடத்திவருகிறார் இரா.மாணிக்கம். எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் மன்றத்தினர்! தன்னுடைய தம்பியைப் பற்றியும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றியும் விரிவாக என்னிடம் இரா.மாணிக்கம் பேசினார். ‘நாங்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தம்பி சண்முகம் 11.08.1943-ல் பிறந்தார். 5-ம் வகுப்புவரை படித்தார். குடும்பச் சூழல் காரணமாக, நானும் தம்பியும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். திராவிட நாடு, குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகள் இங்கு வரும். அவற்றை நாங்கள் தொடர்ந்து வாசிப்போம். நானும், தம்பியும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைத் தொடங்கி, அதை நடத்திவந்தோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து நானும் தம்பியும் அதில் கலந்துகொள்வோம். தம்பி சண்முகம் தலையை மொட்டையடித்து, இந்திக்கு கொள்ளி வைக்கும் போராட்டத்தை நடத்தினார். அதுவரை இந்திக்கு எதிராக ஐந்து பேர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தனர். எங்கள் ஊரில் கடையடைப்பு நடத்த என் தம்பி முடிவுசெய்தார். ஆனால், கடையடைப்பு நடத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், போராட்டத்தைக் கைவிடுமாறு அண்ணா கேட்டுக்கொண்டார். அதனால், என் தம்பிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எனக்கு ஒரு கடிதம், அண்ணாவுக்கு ஒரு கடிதம், ஆசிரியர் மூர்த்திக்கு ஒரு கடிதம் என மூன்று கடிதங்களை எழுதிவைத்து, அவற்றை ஆசிரியர் மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் மூர்த்தி தன் வீட்டில் போய் தனக்கான கடிதத்தைப் பிரித்து வாசித்திருக்கிறார். உடனே, பதறியடித்துக்கொண்டு போய் பார்த்தபோது, என் தம்பி விஷம் அருந்தி ஒரு மரத்தடியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஆசிரியர் மூர்த்தி மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நிலையில், ‘தமிழுக்காக மீண்டும் ஒருவன் உயிர் துறந்தான் என்று தெரிந்தால், தமிழகம் மீண்டும் போராடத் தொடங்கும்’ என்று தம்பி சண்முகம் கூறினார். அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தமிழுக்காக என் தம்பி உயிரையே கொடுத்தார்” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் இரா.மாணிக்கம். மொழிப்போர் தியாகிகள் அமைப்பின் தலைவராக இரா.மாணிக்கம் இருப்பதால், மற்ற தியாகிகளின் உறவினர்களை விராலிமலைக்கு வரவழைத்திருந்தார். அவர்களுடனும் பேசினேன். அவர்களின் குடும்ப நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவிடத்துக்குச் சென்றேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இரண்டாம்தர குடிமக்களா? சென்னை விருகம்பாக்கத்தில் தியாகி அரங்கநாதன் வீட்டுக்குச் சென்று, அவருடைய மகன் அமுதவாணனைச் சந்தித்தேன். தன் தந்தை எப்படி மொழிக்காக உயிரைத் தியாகம் செய்தார் என்பதை விரிவாக என்னிடம் கூறினார். இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்! “என்னுடைய அப்பா, அண்ணாவின் சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்றுவிடுவார். கட்டாய இந்தி காரணமாக தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று அவர் மிகவும் ஆதங்கப்பட்டார். இது குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அப்போது எனக்கு ஏழு வயது. என்னுடைய தம்பி ஆறு மாத கைக்குழந்தை. ’குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று என் தாயிடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்ற தந்தை, அதிகாலையில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டிருக்கிறார். என் தந்தை தீக்குளித்ததால் அதிர்ச்சியடைந்த என் தாயாருக்கு மனநலம் பாதித்துவிட்டது” என்றார். அந்தக் குடும்பத்தின் சூழலைப் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது. எந்த பலனும் இல்லை! மொழிக்காக உயிரையே தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் பெரிய உதவிகள் எதுவுமில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விராலிமலை சண்முகத்தின் அண்ணன் மாணிக்கம் நம்மிடம் வேதனையுடன் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு “மொழிப்போர் தியாகிகளுக்கு மாதம் நூறு ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக 1987-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அது எங்களுக்கு கிடைக்கவில்லை. மொழிப்போரில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு மட்டும்தான் உதவித்தொகையைத் தருவோம் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வந்ததைக் கேள்விப்பட்டு, அதிகாரிகளிடம் போய்க் கேட்டோம். அதற்கு, மொழிக்காக உயிர்த்தியாம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்லிவிட்டார்கள். என்ன கொடுமை என்றால், மொழிக்காக உயிர்நீத்த 12 பேரில், மூன்று பேர் மட்டுமே திருமணம் ஆனவர்கள். அந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை. மற்ற ஒன்பது பேர் திருமணம் ஆகாதவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடையாதாம். எனவே, இவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். மொழியுணர்வைப் புரிந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியையே விலையாகக் கொடுத்தது. தன் தவறான செயலுக்கான தண்டனையை இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துவிருகிறது.  மொழி உணர்வையும், இன உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் ஒருபோதும் அடக்கிவைக்க முடியாது. அப்படி அடக்கினால், அது பெருநெருப்பாக வெடித்துக்கிளம்பும் என்பதற்கு முத்துக்குமார், செங்கொடி உயிரிழப்புகள் சமீபத்திய சான்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரியணை ஏறியதா தமிழ்? ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு. அதை அடக்க முயன்றபோது,  மெரினா கடற்கரையில் தொடங்கி தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மாற்றியெழுத வைத்தது. இதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் பெயர்களை அரசுக் கட்டடத்துக்கும், பாலத்துக்கும் பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த தியாகிகளின் குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் அக்கறையோடு பார்க்க வேண்டும். நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் குடும்பம் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது? இதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மூலக்கொத்தளத்தில் நடராசன், தாளமுத்து நினைவிடங்களை ரூ.34 லட்சம் செலவில் புதுப்பித்திருக்கிறது. அதை முதல்வர் ஸ்டாலின் சென்று திறந்துவைத்து தியாகிகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதைப்போல, அந்த தியாகிகளின் குடும்பங்களின் நிலையையும் அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழ்நாடு மேலும், தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர், திராவிடம் பேசுபவர்களை அரியணையில் ஏற்றியது. ஆனால், உரிய முறையில் ஆட்சி மொழியாக அரியணையில் தமிழ் ஏறியிருக்கிறதா? என்து மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக, தமிழுக்காகப் போராடியவர்களின் நெஞ்சில் நீங்காத கேள்வியாக இன்னமும் இது இருக்கிறது. (நிறைவுற்றது) ஜனவரி 25- இன்று மொழிப்பேர் தியாகிகள் தினம்

விகடன் 25 Jan 2026 12:27 pm

'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன்

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கடைசி டிசம்பர் விழாவில் பேசிய விஜய். அதன்பிறகு கிட்டத்தட்ட 38 நாட்களுக்கு விஜய் மௌனமாக இருந்தார். விஜய் இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான கட்டத்தில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் NDA கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது, 'இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு. செங்கோட்டையன் இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.

விகடன் 25 Jan 2026 11:51 am

காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்? - எடப்பாடி பழனிசாமி

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி என்பவரை நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, இரண்டு கார்களில் வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது. அதைத் தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெள்ளகாளி கொலை முயற்சி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா? திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு! பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடியை அழைத்து வந்த காவலர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி! துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய அறிவாலய ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை! எனக் குறிப்பிட்டிருக்கிரார். எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

விகடன் 25 Jan 2026 10:29 am

எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 9:32 am

எங்களுக்கு விசில் தேவையில்லை; குக்கர் விசில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன்

“எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் நேற்று ( ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெக என்டிஏ கூட்டணிக்கு வருமா? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் அதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ விஜய்யை டெல்லிக்கு வரவைத்தது விசாரணைக்காகத் தான். அவரை என்டிஏ கூட்டணிக்கு வர வைப்பதற்காக இல்லை. தேர்தலைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக எப்போது வேண்டுமானாலும், எதுவும் நடக்கலாம். இப்போது எங்கள் கூட்டணிக்கு விசில் (தவெக) தேவையில்லை . எங்கள் கூட்டணியில் ஏற்கனவே விசில் (அமமுகவின் குக்கர் சின்னம்) இருக்கிறது. எங்கள் கூட்டணியில் அமமுக உள்ளது. அவர்களின் குக்கர் சின்னத்திலும் விசில் இருக்கிறது. விசில் சின்னம் அதுவே எங்கள் கூட்டணிக்கு போதும். அதனால், எங்களுக்கு விசில் சின்னம் தேவையில்லை. இனி மேலும் எங்கள் கூட்டணிக்கு பலக் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் கூட்டணி உறுதியானக் கூட்டணியாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 9:32 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am

T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது. வங்கதேச அணி அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐசிசி இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன். ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது. வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 25 Jan 2026 8:59 am

'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.

விகடன் 24 Jan 2026 8:34 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:31 pm

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில்  தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில்  உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.   தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. பிரேமலதா  தே.மு.தி.க.,  யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான்  தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ  நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது.  பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார்.  அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று  அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:25 pm

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில்  தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில்  உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.   தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. பிரேமலதா  தே.மு.தி.க.,  யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான்  தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ  நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது.  பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார்.  அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று  அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.

விகடன் 24 Jan 2026 7:25 pm

தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை - பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், முதலில், இந்தப் பொதுக்கூட்டம் மதுரையில் நடத்துவதாகத்தான் ஏற்பாடானது. அதற்காக, மதுரை பாண்டிக் கோயில் அருகே இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் உச்சத்தில் இருந்ததால், 'மதுரை வரை பிரதமர் வந்துவிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் சங்கடமாகிவிடும். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம்' என்று பா.ஜ.க சீனியர்கள் வலியுறுத்தினர். அதன்பின்னரே, சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக மூன்று இடங்கள் பார்க்கப்பட்டு, மதுராந்தகம் அருகேயுள்ள 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்தான் அதற்கானப் பணிகளை விரைவாகச் செய்து முடித்தனர். பொதுக்கூட்டத்திற்கு நாள் குறித்தபோதே, 'இது தேசிய ஜனநாயகக் கூட்டணியோட பொதுக்கூட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொதுக்கூட்டம் மாதிரிதான் நம்ம ஆட்கள் திரண்டு வரணும்...' என்று உத்தரவு போட்டுவிட்டார் எடப்பாடி. அதற்கேற்ப, வடமாவட்டங்களிலுள்ள நிர்வாகிகளுக்கெல்லாம் அறிவுறுத்தல் சென்றது. பிரதமர் மோடியை மேடையில் கெளரவிப்பதற்காக, தேனியிலிருந்து சிறப்பு ஏலக்காய் மாலையை வரவழைத்தார். அ.தி.மு.க ஐ.டி விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யனிடம், 'பிரதமர் சாமியார் மாதிரிப்பா... விரதமெல்லாம் கடுமையாக இருக்கிறவரு. ஏ கிரேடு ஏலக்காய் மாலையாக பார்த்து வாங்குங்க..' என்று ஸ்டிக்ட்டாகச் சொல்லிவிட்டார். நல்லி சில்க்ஸிலிருந்து நயமான பச்சை பட்டு சால்வையும் ரெடி செய்யப்பட்டது. மதுராந்தகம் ஹெலிபேடில் பிரதமரை வரவேற்ற எடப்பாடி, மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில், சுமார் பத்து நிமிடங்கள் சில நிர்வாகிகளுடன் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்னரே மேடைக்கு இருவரும் வந்தனர். 'கூட்டம் நல்லா திரண்டிருக்கே...' என்று பிரதமர் கேட்க, 'உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. தி.மு.க-வைப் பத்தி நீங்க என்ன பேசப் போறீங்கனு கேட்க மக்கள் ஆர்வமாக இருக்காங்க..' என்று ஆங்கிலத்தில் எடப்பாடி சொல்ல, இருவரும் கலகலத்தனர். கூட்டத்தை முன்னின்று நடத்தியது பா.ஜ.க தான் என்றாலும்கூட, வடமாவட்டங்களிலுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளெல்லாம், ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலிருந்தும் தலா ஐந்தாயிரம் பேரை பொதுக்கூட்டத்திற்கு திரட்டி வந்தனர். பொதுக்கூட்ட மேடையிலேயே டி.டி.வி.தினகரனை அருகே அழைத்து, 'இந்தக் கூட்டணியில் நீங்கள் இணைந்ததற்கு சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு உரிய மரியாதை கூட்டணியில் நிச்சயம் அளிக்கப்படும்' என்று வாழ்த்தினார் மோடி. கூட்டம் முடிந்து புறப்படுவதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியை அருகே அழைத்து, அவரது முதுகில் செல்லமாக மோடி அடித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 2017-லில் தொடங்கி, பா.ஜ.க கூட்டணியைவிட்டு அ.தி.மு.க வெளியேறியது வரையில், டெல்லியுடன் நல்ல இணக்கமாக இருந்தவர் தங்கமணி. அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பிரதமருடன் நேரில் பேசியிருக்கிறார். அந்த அறிமுகத்தில்தான், அவரது முதுகில் செல்லமாக அடித்து வாழ்த்தினார் மோடி... என்றனர் விரிவாக. மதுராந்தகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, இன்னும் நான்கு மாதங்கள்தான்... நீங்கள் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன். அதற்கேற்ப எல்லோரும் உழையுங்கள்... என்று எடப்பாடியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறாராம் மோடி.

விகடன் 24 Jan 2026 7:09 pm

தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை - பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், முதலில், இந்தப் பொதுக்கூட்டம் மதுரையில் நடத்துவதாகத்தான் ஏற்பாடானது. அதற்காக, மதுரை பாண்டிக் கோயில் அருகே இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் உச்சத்தில் இருந்ததால், 'மதுரை வரை பிரதமர் வந்துவிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் சங்கடமாகிவிடும். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம்' என்று பா.ஜ.க சீனியர்கள் வலியுறுத்தினர். அதன்பின்னரே, சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக மூன்று இடங்கள் பார்க்கப்பட்டு, மதுராந்தகம் அருகேயுள்ள 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்தான் அதற்கானப் பணிகளை விரைவாகச் செய்து முடித்தனர். பொதுக்கூட்டத்திற்கு நாள் குறித்தபோதே, 'இது தேசிய ஜனநாயகக் கூட்டணியோட பொதுக்கூட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொதுக்கூட்டம் மாதிரிதான் நம்ம ஆட்கள் திரண்டு வரணும்...' என்று உத்தரவு போட்டுவிட்டார் எடப்பாடி. அதற்கேற்ப, வடமாவட்டங்களிலுள்ள நிர்வாகிகளுக்கெல்லாம் அறிவுறுத்தல் சென்றது. பிரதமர் மோடியை மேடையில் கெளரவிப்பதற்காக, தேனியிலிருந்து சிறப்பு ஏலக்காய் மாலையை வரவழைத்தார். அ.தி.மு.க ஐ.டி விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யனிடம், 'பிரதமர் சாமியார் மாதிரிப்பா... விரதமெல்லாம் கடுமையாக இருக்கிறவரு. ஏ கிரேடு ஏலக்காய் மாலையாக பார்த்து வாங்குங்க..' என்று ஸ்டிக்ட்டாகச் சொல்லிவிட்டார். நல்லி சில்க்ஸிலிருந்து நயமான பச்சை பட்டு சால்வையும் ரெடி செய்யப்பட்டது. மதுராந்தகம் ஹெலிபேடில் பிரதமரை வரவேற்ற எடப்பாடி, மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில், சுமார் பத்து நிமிடங்கள் சில நிர்வாகிகளுடன் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்னரே மேடைக்கு இருவரும் வந்தனர். 'கூட்டம் நல்லா திரண்டிருக்கே...' என்று பிரதமர் கேட்க, 'உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. தி.மு.க-வைப் பத்தி நீங்க என்ன பேசப் போறீங்கனு கேட்க மக்கள் ஆர்வமாக இருக்காங்க..' என்று ஆங்கிலத்தில் எடப்பாடி சொல்ல, இருவரும் கலகலத்தனர். கூட்டத்தை முன்னின்று நடத்தியது பா.ஜ.க தான் என்றாலும்கூட, வடமாவட்டங்களிலுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளெல்லாம், ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலிருந்தும் தலா ஐந்தாயிரம் பேரை பொதுக்கூட்டத்திற்கு திரட்டி வந்தனர். பொதுக்கூட்ட மேடையிலேயே டி.டி.வி.தினகரனை அருகே அழைத்து, 'இந்தக் கூட்டணியில் நீங்கள் இணைந்ததற்கு சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு உரிய மரியாதை கூட்டணியில் நிச்சயம் அளிக்கப்படும்' என்று வாழ்த்தினார் மோடி. கூட்டம் முடிந்து புறப்படுவதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியை அருகே அழைத்து, அவரது முதுகில் செல்லமாக மோடி அடித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 2017-லில் தொடங்கி, பா.ஜ.க கூட்டணியைவிட்டு அ.தி.மு.க வெளியேறியது வரையில், டெல்லியுடன் நல்ல இணக்கமாக இருந்தவர் தங்கமணி. அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பிரதமருடன் நேரில் பேசியிருக்கிறார். அந்த அறிமுகத்தில்தான், அவரது முதுகில் செல்லமாக அடித்து வாழ்த்தினார் மோடி... என்றனர் விரிவாக. மதுராந்தகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, இன்னும் நான்கு மாதங்கள்தான்... நீங்கள் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன். அதற்கேற்ப எல்லோரும் உழையுங்கள்... என்று எடப்பாடியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறாராம் மோடி.

விகடன் 24 Jan 2026 7:09 pm

தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 24 Jan 2026 2:13 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே. NDA பொதுக்கூட்டம் டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி! சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன. அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது. டிடிவி - நயினார் நாகேந்திரன் டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர். TTV - EPS அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார். சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர். மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி: அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார். முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார். கே.பி.முனுசாமி நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர். தங்கமணிக்கு தனி கவனிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார். தங்கமணி மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்! பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை. பாஜக விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர். திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார். அசௌகரியமான அதிமுகவினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர். வளர்மதி இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.! `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 24 Jan 2026 12:35 pm

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே. NDA பொதுக்கூட்டம் டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி! சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன. அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது. டிடிவி - நயினார் நாகேந்திரன் டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர். TTV - EPS அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார். சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர். மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி: அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார். முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார். கே.பி.முனுசாமி நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர். தங்கமணிக்கு தனி கவனிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார். தங்கமணி மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்! பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை. பாஜக விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர். திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார். அசௌகரியமான அதிமுகவினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர். வளர்மதி இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.! `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 24 Jan 2026 12:35 pm

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.  மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.  'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.  சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.  Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.  இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.  1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து  இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

விகடன் 24 Jan 2026 10:53 am

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.  மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.  'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.  சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.  Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.  இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.  1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து  இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

விகடன் 24 Jan 2026 10:53 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி கேரண்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் 2026 சட்டசபைத் தேர்தல் பிரசாரம் தொடக்க விழா ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கட்சிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த திருவனந்தபுரத்தை நாட்டின் முன்மாதிரி நகரமாக உருவாக்குவோம். அதற்காக மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். மக்கள் பா.ஜ.க-வை நம்பத் தொடங்கியுள்ளதற்கு தலைநகரில் கிடைத்த வெற்றியே சாட்சி. மாறாதது இனி மாறும். மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஏற்பட்ட மாற்றம் கேரளாவிலும் ஏற்படும். பி.எம் ஸ்ரீ திட்டத்தை நிராகரித்ததன் மூலம் ஏழைக் குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளது இடதுசாரி அரசு. கேரளாவில் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் வழிமுறைகள் ஒன்றேதான். ஊழலும், வகுப்புவாதமும் 100 சதவிகிதம் உள்ளன. வெளிப்படைத்தன்மையும், வளர்ச்சியும் பூஜ்ஜியமாக உள்ளன. திருவனந்தபுரம் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) என்பது முஸ்லிம் மாவோயிஸ்ட் காங்கிரஸ் (எம்.எம்.சி) என மாறிவிட்டது. முஸ்லிம் லீக்கை விட வகுப்புவாதமும், மாவோயிஸ்டுகளை விட அராஜகமும் அவர்களின் அடையாளமாகிவிட்டன. காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.க அடிப்படை வசதிகளைப் பெருக்கி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. கேரளாவில் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களும், அம்ருத் பாரத் ரயில்களும் கேரளாவுக்குக் கிடைத்துள்ளன. கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன? கேரளம் வளருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு விழிஞ்ஞம் துறைமுகம். துறைமுகத்தை நான் திறந்து வைத்த 6 மாதங்களில் 150 பெரிய கப்பல்களும், 3 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஊழல். கூட்டுறவு வங்கி மோசடி மூலம் சாதாரண மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளன இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணம் திரும்பப்பெற்றுத்தரப்படும். திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி மீது பக்தியும் நம்பிக்கையும் உள்ளன. ஆனால் சபரிமலையின் நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் இல்லாமல் ஆக்குவதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியது இடதுசாரி அரசு. இப்போது சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன். பா.ஜ.க கேரளாவில் ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும் சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்ததாக இப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதான் மோடியின் கேரண்டி என்றார். நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும் - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

விகடன் 24 Jan 2026 10:01 am

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை. 2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

விகடன் 24 Jan 2026 8:32 am

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை. 2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

விகடன் 24 Jan 2026 8:32 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் செல்லவில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வருகை தரும்போது அவர்களை வரவேற்க மேயர் செல்வது வழக்கமாகும். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க, 'பிரதமர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வரும்போது அவரை வரவேற்பவர்கள் பட்டியலில் பா.ஜ.க மேயர் இடம்பெறுவார்' என தெரிவித்திருந்தது. திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க மேயர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மேயரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி மேயரை அனுமதிக்கவில்லை எனவும், கேரள பா.ஜ.க -வின் முதல் மேயருக்கு எதிராக சிலர் அரசியல் காய் நகர்த்தியதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த விவாதம் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையில் மேயர் வி.வி.ராஜேஷ் இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், எனது பெயரை யாரும் நீக்கவில்லை. பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் மேயர் இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்திருந்தது. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றுவிட்டு உடனே மேடைக்கு வர இயலாது. ஏனென்றால், பிரதமரின் கான்வாயில் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவேதான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்றார்.

விகடன் 23 Jan 2026 8:09 pm

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் செல்லவில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வருகை தரும்போது அவர்களை வரவேற்க மேயர் செல்வது வழக்கமாகும். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க, 'பிரதமர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வரும்போது அவரை வரவேற்பவர்கள் பட்டியலில் பா.ஜ.க மேயர் இடம்பெறுவார்' என தெரிவித்திருந்தது. திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க மேயர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மேயரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி மேயரை அனுமதிக்கவில்லை எனவும், கேரள பா.ஜ.க -வின் முதல் மேயருக்கு எதிராக சிலர் அரசியல் காய் நகர்த்தியதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த விவாதம் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையில் மேயர் வி.வி.ராஜேஷ் இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், எனது பெயரை யாரும் நீக்கவில்லை. பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் மேயர் இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்திருந்தது. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றுவிட்டு உடனே மேடைக்கு வர இயலாது. ஏனென்றால், பிரதமரின் கான்வாயில் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவேதான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்றார்.

விகடன் 23 Jan 2026 8:09 pm

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' - இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி' என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது. இணைப்பு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் ``அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருக்கிறார் எனப் பேட்டி கொடுத்தவர், வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் இணைப்பு விழா நடப்பதாகவும் சொன்னார். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் இருந்த வைத்திலிங்கத்தை ஆதரவாளர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக-வில் இணைவதாக இருந்த அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், ``என் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் நான் திமுக-வில் இணையவில்லை, அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். நான் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அண்ணன் வைத்திலிங்கம் என்னை மன்னிக்க வேண்டும் என சென்டிமென்டாக டிவியில் பேசியதைப் பார்த்த வைத்திலிங்கத்தின் கண்கள் கலங்கியுள்ளன. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கிய சமயத்தில், ஓ.பி.எஸ் தலைமையில் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். அப்போது பேசிய ராமச்சந்திரன், ``அண்ணன் என் அரசியல் வழிகாட்டி, அவரது ஆளுமையை பார்த்து வளர்ந்த, நான் அவருக்காக எதையும் செய்வேன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறேன் என்ற போது அரங்கம் அதிர்ந்தது. திமுக-வில் இணைவதை மட்டும் கைவிட்டுள்ளார், வைத்திலிங்கத்திடம் இருந்து என்றும் விலக மாட்டார். வாட்ஸப் டீபியில் வைத்திலிங்கம் போட்டோவை தான் இப்போதும் வைத்திருக்கிறார் என்கிறார்கள். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் வரும் 26ம் தேதி திமுக மகளிர் மாநாடு தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடக்கிறது. அந்த திடலிலேயே இணைப்பு விழா நடக்கிறது. அப்போது தன் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கிறார் வைத்திலிங்கம். ஊரே மெச்சும் வகையில் இந்த நிகழ்வு இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் வைத்தி. இதற்காக நேற்று தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒரத்தநாடு மற்றும் திருவோணத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அப்போது, ``முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி செய்கிறார், மீண்டும் திமுக ஆட்சியில் அமரும், ஸ்டாலின் முதல்வர் ஆவார். ஒருங்கிணைப்பு குறித்து எவ்வளவோ பேசியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் தாய் கழகத்தில் இணைந்தேன். என்னால் பெரிய அளவில் பலனடைந்த பலர் இன்று என்னுடன் இல்லை. என்னால் எந்த பலனும் அடையாத நீங்கள் என் மீது கொண்ட பாசத்தால் என்னை விட்டு விலகாமல் என் பின்னால் அணிவகுத்து நிற்கிறீர்கள். எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். வைத்திலிங்கம் இணைப்பு விழாவை வரலாற்றில் இடம் பெறும் வகையில் நடத்த வேண்டும் எனப் பேசியுள்ளார். மகளிர் மாநாடு மாலை நடக்கிறது. அந்த மேடையிலேயே இணைப்பு விழா நடத்துவதற்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை தவிர்த்த வைத்திலிங்கம், தனித்து தெரிய வேண்டும் என்கிற தன் விருப்பத்தை ஸ்டாலின் தரப்பிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அன்று காலை 11 மணியளவில் அதே இடத்தில் தனி மேடை அமைத்து இணப்பு விழா நடப்பதற்கான ஏற்பாடு ஜரூராக நடக்கிறது. ஒரு கிராமத்திற்கு இரண்டு என ஒரு ஒன்றியத்திற்கு 15 வேன்கள் வீதம் ஆதரவாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு முதலில் செய்யப்பட்டது. தவைத்திலிங்கத்தின் 90 சதவிகித ஆதரவாளர்கள் திமுக-வில் இணைய இருப்பதால், ஒரு ஒன்றியத்திற்கு 30 வேன்கள் அனுப்புகின்றனர். இணைப்பு விழா யார் சொல்லுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என வைத்திலிங்கம் நினைக்கிறார். தன்னுடன் திமுக-வில் இணைபவர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் என அனைத்தையும் குறிப்பிட்ட ஃபைல் தயார் செய்துள்ளனர். ஆதரவாளர்கள் மட்டுமன்றி வைத்திலிங்கமும் அமைச்சராக இருக்கும்போது எப்படி உற்சாகமாக இருப்பாரோ அதே உற்சாகத்துடன் வேகமாகச் செயல்படுகிறாராம்.

விகடன் 23 Jan 2026 8:04 pm

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' - இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி' என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது. இணைப்பு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் ``அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருக்கிறார் எனப் பேட்டி கொடுத்தவர், வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் இணைப்பு விழா நடப்பதாகவும் சொன்னார். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் இருந்த வைத்திலிங்கத்தை ஆதரவாளர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக-வில் இணைவதாக இருந்த அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், ``என் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் நான் திமுக-வில் இணையவில்லை, அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். நான் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அண்ணன் வைத்திலிங்கம் என்னை மன்னிக்க வேண்டும் என சென்டிமென்டாக டிவியில் பேசியதைப் பார்த்த வைத்திலிங்கத்தின் கண்கள் கலங்கியுள்ளன. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கிய சமயத்தில், ஓ.பி.எஸ் தலைமையில் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். அப்போது பேசிய ராமச்சந்திரன், ``அண்ணன் என் அரசியல் வழிகாட்டி, அவரது ஆளுமையை பார்த்து வளர்ந்த, நான் அவருக்காக எதையும் செய்வேன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறேன் என்ற போது அரங்கம் அதிர்ந்தது. திமுக-வில் இணைவதை மட்டும் கைவிட்டுள்ளார், வைத்திலிங்கத்திடம் இருந்து என்றும் விலக மாட்டார். வாட்ஸப் டீபியில் வைத்திலிங்கம் போட்டோவை தான் இப்போதும் வைத்திருக்கிறார் என்கிறார்கள். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் வரும் 26ம் தேதி திமுக மகளிர் மாநாடு தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடக்கிறது. அந்த திடலிலேயே இணைப்பு விழா நடக்கிறது. அப்போது தன் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கிறார் வைத்திலிங்கம். ஊரே மெச்சும் வகையில் இந்த நிகழ்வு இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் வைத்தி. இதற்காக நேற்று தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒரத்தநாடு மற்றும் திருவோணத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அப்போது, ``முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி செய்கிறார், மீண்டும் திமுக ஆட்சியில் அமரும், ஸ்டாலின் முதல்வர் ஆவார். ஒருங்கிணைப்பு குறித்து எவ்வளவோ பேசியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் தாய் கழகத்தில் இணைந்தேன். என்னால் பெரிய அளவில் பலனடைந்த பலர் இன்று என்னுடன் இல்லை. என்னால் எந்த பலனும் அடையாத நீங்கள் என் மீது கொண்ட பாசத்தால் என்னை விட்டு விலகாமல் என் பின்னால் அணிவகுத்து நிற்கிறீர்கள். எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். வைத்திலிங்கம் இணைப்பு விழாவை வரலாற்றில் இடம் பெறும் வகையில் நடத்த வேண்டும் எனப் பேசியுள்ளார். மகளிர் மாநாடு மாலை நடக்கிறது. அந்த மேடையிலேயே இணைப்பு விழா நடத்துவதற்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை தவிர்த்த வைத்திலிங்கம், தனித்து தெரிய வேண்டும் என்கிற தன் விருப்பத்தை ஸ்டாலின் தரப்பிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அன்று காலை 11 மணியளவில் அதே இடத்தில் தனி மேடை அமைத்து இணப்பு விழா நடப்பதற்கான ஏற்பாடு ஜரூராக நடக்கிறது. ஒரு கிராமத்திற்கு இரண்டு என ஒரு ஒன்றியத்திற்கு 15 வேன்கள் வீதம் ஆதரவாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு முதலில் செய்யப்பட்டது. தவைத்திலிங்கத்தின் 90 சதவிகித ஆதரவாளர்கள் திமுக-வில் இணைய இருப்பதால், ஒரு ஒன்றியத்திற்கு 30 வேன்கள் அனுப்புகின்றனர். இணைப்பு விழா யார் சொல்லுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என வைத்திலிங்கம் நினைக்கிறார். தன்னுடன் திமுக-வில் இணைபவர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் என அனைத்தையும் குறிப்பிட்ட ஃபைல் தயார் செய்துள்ளனர். ஆதரவாளர்கள் மட்டுமன்றி வைத்திலிங்கமும் அமைச்சராக இருக்கும்போது எப்படி உற்சாகமாக இருப்பாரோ அதே உற்சாகத்துடன் வேகமாகச் செயல்படுகிறாராம்.

விகடன் 23 Jan 2026 8:04 pm

எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள்

விகடன் 23 Jan 2026 7:35 pm

எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள்

விகடன் 23 Jan 2026 7:35 pm

'டபுள் இன்ஜின்'எனும் 'டப்பா இன்ஜின்'தமிழ்நாட்டில் ஓடாது!- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டுக்கு 'டபுள் இன்ஜின்' சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றார். பிரதமர் மோடி இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. முதல்வர் ஸ்டாலின் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று கடுமையாக மோடியை ஸ்டாலின் சாடியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:49 pm

பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக் கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். NDA கூட்டணி எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். இப்போது அந்த பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது. மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நமது வெற்றிக்காக அமமுக-வின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபடுவார்கள் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:32 pm

பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக் கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். NDA கூட்டணி எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். இப்போது அந்த பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது. மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நமது வெற்றிக்காக அமமுக-வின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபடுவார்கள் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:32 pm

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது... பாரத பிரதமர் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால்வைத்த உடனே இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. NDA கூட்டணி எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். இதுவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குச் சான்று. வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்முடைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? நம் கூட்டணிக் கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி! தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகின்றனர். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியைப் பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:07 pm

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது... பாரத பிரதமர் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால்வைத்த உடனே இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. NDA கூட்டணி எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். இதுவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குச் சான்று. வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்முடைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? நம் கூட்டணிக் கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி! தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகின்றனர். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியைப் பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:07 pm

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்! - ஜோதிமணி

எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பா.ஜ.க-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்கிற நிதி எமது மக்களின் வரிப்பணத்தில் 29% மட்டுமே. அதிலும் இந்தியை திணித்து தமிழை அழிக்க தடையாக இருப்பதால் கல்விக்கு நிதி மறுப்பு. கீழடியில் எமது அடையாளங்களை, தொன்மையை, வரலாற்றுச் சிறப்பை ஏற்க மறுப்பு. இயற்கைச் சீற்றங்களின் போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இல்லாததுபோல புறக்கணிப்பு. ஜி.எஸ்.டி என்ற பெயரில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு. பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் காங்கிரஸ் ஏற்றிவைத்த 100 நாட்கள் வேலை ஒழிப்பு. jothimani விவசாயக் கடனகளை தள்ளுபடி செய்ய மறுப்பு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் பல லட்சம் கோடி கொள்ளையடிக்க மக்கள் வயிற்றில் அடிப்பு. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் அவமதிப்பு. தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பு . தமிழ் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் தமிழ் திரையுலகின் மீது தாக்குதல்... இப்படி எமது மக்களுக்கு எதிரான துரோகப் பட்டியலை தொடர்ந்து வாசித்துக் கொண்டே போகலாம். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் எங்கள் வாழ்வைப் பிடிங்கி தரையில் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு, இப்போது மட்டும் மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று தெரிவித்துள்ளார். `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 23 Jan 2026 5:37 pm

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்! - ஜோதிமணி

எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பா.ஜ.க-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்கிற நிதி எமது மக்களின் வரிப்பணத்தில் 29% மட்டுமே. அதிலும் இந்தியை திணித்து தமிழை அழிக்க தடையாக இருப்பதால் கல்விக்கு நிதி மறுப்பு. கீழடியில் எமது அடையாளங்களை, தொன்மையை, வரலாற்றுச் சிறப்பை ஏற்க மறுப்பு. இயற்கைச் சீற்றங்களின் போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இல்லாததுபோல புறக்கணிப்பு. ஜி.எஸ்.டி என்ற பெயரில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு. பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் காங்கிரஸ் ஏற்றிவைத்த 100 நாட்கள் வேலை ஒழிப்பு. jothimani விவசாயக் கடனகளை தள்ளுபடி செய்ய மறுப்பு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் பல லட்சம் கோடி கொள்ளையடிக்க மக்கள் வயிற்றில் அடிப்பு. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் அவமதிப்பு. தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பு . தமிழ் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் தமிழ் திரையுலகின் மீது தாக்குதல்... இப்படி எமது மக்களுக்கு எதிரான துரோகப் பட்டியலை தொடர்ந்து வாசித்துக் கொண்டே போகலாம். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் எங்கள் வாழ்வைப் பிடிங்கி தரையில் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு, இப்போது மட்டும் மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று தெரிவித்துள்ளார். `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 23 Jan 2026 5:37 pm

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்'ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைத்திட்டம் எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். அரசினர் தனித் தீர்மானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; ‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ - உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்; இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்; தமிழ்நாடு சட்டமன்றம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன் என்றார்.

விகடன் 23 Jan 2026 3:05 pm

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்'ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைத்திட்டம் எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். அரசினர் தனித் தீர்மானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; ‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ - உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்; இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்; தமிழ்நாடு சட்டமன்றம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன் என்றார்.

விகடன் 23 Jan 2026 3:05 pm

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

விகடன் 23 Jan 2026 2:42 pm

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

Modi : நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவாங்க?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி | Live

நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?- அண்ணாமலை கேள்வி தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் நீட் விலக்கு, கீழடி அறிக்கை , எய்ம்ஸ் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation -இல் தமிழ்நாட்டின் தொகுதிகள்… https://t.co/tapt7nMS4p — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 23, 2026 அண்ணாமலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்? AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? என்ற கேள்விகளை முன்வைத்திருக்கிறார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு… https://t.co/siAlRGZ2bX — K.Annamalai (@annamalai_k) January 23, 2026 கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Jan 2026 11:44 am

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Jan 2026 11:44 am

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 11:03 am

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 11:03 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am