சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் சிபிஐ சோதனை
காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” - யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
‘மனிதத் தன்மையற்றது’ - பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
‘பெண்ணின் மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் நாடாவை பிடித்திழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी। 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty — Amit Shah (@AmitShah) March 25, 2025 இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில் வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी। 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty — Amit Shah (@AmitShah) March 25, 2025 இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில் வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இந்த ரஹூல் கனல்?
மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். அதற்கு கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹூல் கனல் தலைமை தாங்கினார். ரஹூலையும், அவருடன் சேர்ந்து ஸ்டூடியோவை அடித்து உடைத்த 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏக்நாத் ஷிண்டே கட்சியில் தற்போது மாநில இளைஞரணித் தலைவராக இருக்கும் ரஹூல் கனல் ஒரு நேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதோடு சிவசேனாவின் சோசியல் மீடியா பொறுப்பாளராகவும் இருந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் சென்றபோது, 2023ம் ஆண்டு ரஹூல் கனல் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவருக்கு இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்து இருக்கிறார். அதோடு ஷீரடி சாய்பாபா அறங்காவலராகவும், மும்பை மாநகராட்சி கல்வி கமிட்டி உறுப்பினராவும் இருக்கிறார். மேலும் நடிகர் சல்மான் கானை கௌரவிக்கும் விதமாக பைஜான் என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மும்பை ஸ்டூடியோவை தாக்கியது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஹோல் கனல் கூறுகையில், ''இது ஆரம்பம் தான். எங்கள் தலைவர் அல்லது பெரியவர்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் விட்டு வைக்க மாட்டோம். எப்போது நீங்கள் (குனால்) மும்பைக்கு வந்தாலும் சிவசேனா ஸ்டைலில் பாடம் கற்பிப்போம்'' என்று தெரிவித்தார். ஐ லவ் மும்பை ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சொன்னதற்காக குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: மன்னிப்பு கேட்கப் போவதில்லை - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!
மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும். அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய அட்டை வழங்கப்படும். புதுச்சேரி: ``டீ ரூ.28 லட்சம், பூ 41 லட்சம்; என்.ஆர்.காங்., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” – பாஜக Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும். அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய அட்டை வழங்கப்படும். புதுச்சேரி: ``டீ ரூ.28 லட்சம், பூ 41 லட்சம்; என்.ஆர்.காங்., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” – பாஜக Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் சிபிஐ சோதனை
காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” - யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்
கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர், டாக்டர் வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன். கேரளா அரசின் பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக இருந்த சாரதா முரளிதரன், தனது கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார். கணவனைத் தொடர்ந்து மனைவி கேரள மாநிலத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றது அபூர்வ நிகழ்வாக கருத்தப்பட்டது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளரான சாரதா முரளிதரன், தனது முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தனது உடல் நிறத்தையும், தன் கணவர் வி.வேணு-வின் நிறத்தையும் சுட்டிக்காட்டி தன்னை ஒருவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று காலையில் பதிவேற்றம் செய்த அந்தப் பதிவை சில மணி நேரத்தில் நீக்கினார் சாரதா முரளிதரன். பின்னர் நேற்று இரவு அது சம்பந்தமான விளக்கத்துடன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை சாரதா முரளிதரன் பகிர்ந்தார். அதில், கூறியுள்ளதாவது: ``எனது நிறம் கறுப்பு என்றும், என் கணவரின் நிறம் வெள்ளை எனவும் ஒரு கமென்ட் வந்ததாக முதலில் நான் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் வருத்தத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்தப் பதிவை நீக்கினேன். கணவர் வேணு-வுடன் கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இது விவாதிக்கப்படவேண்டிய கருத்துதான் என என் நலம்விரும்பிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே மீண்டும் பதிவிட்டுள்ளேன். தலைமைச் செயலாளர் என்ற நிலையில் கடந்த ஏழு மாதங்களாக என் செயல்பாடுகள் கறுப்பு எனவும், என் கணவரான முன்னாள் தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளின் நிறம் வெள்ளை எனவும் விமர்சித்தனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல. அது கெட்ட விஷங்களையும், துக்கம் போன்றவற்றையும் குறிக்கிறது. ஆனால், ஏன் கறுப்பானவர்களை அவமதிக்க வேண்டும். கறுப்பு நிறத்தை எதற்காக இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும். கறுப்பு மிகவும் அழகான நிறம். எதற்காக கறுப்பு நிறத்தை நிந்தனை செய்யவேண்டும். கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருப்பது கறுப்பு என்பதுதான் உண்மை. கறுப்பு நிறம், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்ட நிறமாகும். கார்மேகத்தின் நிறமும் கறுப்புதான். என்னை மீண்டும் கருவறைக்குள் கொண்டுசென்று வெள்ளை நிற அழகியாக்கி மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியுமா என நான்கு வயது இருக்கும் சமயத்தில் நான் என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். போதுமான நிறம் இல்லை என்ற வருத்தத்துடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். கருமையின் அழகை அடையாளம் கண்டுகொள்ளா, வெள்ளை தோலால் ஈர்க்கப்பட்டு ஈர்க்கப்படுவது போன்ற நிலையில் வாழ்வதற்கு நான் பிராயசித்தம் செய்யவேண்டும். கறுப்பில் நான் கண்டுபிடிக்காத அழகை என் குழந்தைகள் கண்டார்கள். கறுப்பு அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். கறுப்பு அழகானது என்பது எனக்குப் புரிகிறது. என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுடுகாட்டிலும் தீண்டாமை வேலி... “சாவிலாவது சமத்துவம் கொடுங்கள்!” - போராடும் அருந்ததியர் மக்கள்!
`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ - யோகி ஆதித்யநாத் பேச்சு
இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் 'பா.ஜ.க'வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் என்று பேசியிருந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். என்று பேசியிருக்கிறார். ஒவைசி இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான். இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை? யோகி ஆதித்யநாத் நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும். யோகி ஆதித்யநாத் இந்து கடவுளைப் பற்றிப் பாடிய இஸ்லாமியர்: இசைக்கு மதம் இல்லை... என விமர்சனங்களுக்குப் பதில்! 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி. என்று பேசியிருக்கிறார். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் சிபிஐ சோதனை
காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” - யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
`பெண் போலீஸாரை டீ, காபி கொடுக்கத்தான் வைத்திருக்கிறார்கள்!’ - முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி முதல் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பூஜ்ஜிய நேரத்தில் நேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, ``புதுச்சேரியில் உள்ள 17 லட்சம் மக்கள்தொகையில் 9 லட்சம் பேர் பெண்கள். ஆனால் மூன்று காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. புதுச்சேரி முழுவதும் 440 பெண் போலீஸார் மட்டுமே இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான சூழலில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அவர்கள் தங்கள் பிரச்னைகளை சொல்லக்கூடிய இடமாக காவல் நிலையங்கள் இல்லை. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் அனைத்து காவல் நிலையங்களிலும் `மகிளா டெஸ்க்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் பணியாற்றும் பெண் போலீஸாரை அந்த காவல் நிலையங்களில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் டீ, காபி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறார்கள். போலீஸ் பணியிடங்களில் 50% சதவிகிதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மகளிர் காவல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மக்கள்தொகையை கணக்கில் வைத்துப் பார்த்தால் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 1% சதவிகிதம்கூட இல்லை” என்றார். புதுச்சேரி: `நான் செயல்படாத அமைச்சரா..?’ - முதல்வருக்கு 9 பக்கக் கடிதம் எழுதிய சந்திர பிரியங்கா
`பெண் போலீஸாரை டீ, காபி கொடுக்கத்தான் வைத்திருக்கிறார்கள்!’ - முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி முதல் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பூஜ்ஜிய நேரத்தில் நேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, ``புதுச்சேரியில் உள்ள 17 லட்சம் மக்கள்தொகையில் 9 லட்சம் பேர் பெண்கள். ஆனால் மூன்று காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. புதுச்சேரி முழுவதும் 440 பெண் போலீஸார் மட்டுமே இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான சூழலில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அவர்கள் தங்கள் பிரச்னைகளை சொல்லக்கூடிய இடமாக காவல் நிலையங்கள் இல்லை. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் அனைத்து காவல் நிலையங்களிலும் `மகிளா டெஸ்க்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் பணியாற்றும் பெண் போலீஸாரை அந்த காவல் நிலையங்களில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் டீ, காபி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறார்கள். போலீஸ் பணியிடங்களில் 50% சதவிகிதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மகளிர் காவல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மக்கள்தொகையை கணக்கில் வைத்துப் பார்த்தால் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 1% சதவிகிதம்கூட இல்லை” என்றார். புதுச்சேரி: `நான் செயல்படாத அமைச்சரா..?’ - முதல்வருக்கு 9 பக்கக் கடிதம் எழுதிய சந்திர பிரியங்கா
MGR விருப்பமனு கொடுத்த MLA; ஜெயலலிதாவுக்காக `ராஜஸ்தான்'பிளான் - கருப்பசாமி பாண்டியனின் அரசியல் கதை
நெல்லையின் மூத்த அரசியல்வாதியும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஆகியோரிடம் மட்டுமல்லாமல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடனும் நெருக்கமாக பழகியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு பயோ இதோ! எம்.ஜி.ஆர் விசுவாசி! 'நெல்லை நெப்போலியன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'கானா' என்கிற கருப்பசாமி பாண்டியன், சிறு வயது முதலாகவே எம்.ஜி.ஆர் மீது தீவிர அன்பு கொண்டிருந்தார். 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக கட்சியை வளர்க்கப்பாடுபட்டார். கானா-வின் வேகமான செயல்பாடு பற்றி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. 1977 சட்டமன்றத் தேர்தலின்போது கட்சியினர் பலரும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என எதிர்பார்த்து, கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள். கருப்பசாமி பாண்டியன் Manoj Bharathiraja: இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும் - பாரதிராஜாவுக்கு அண்ணாமலை ஆறுதல் அந்த சமயத்தில் 25 வயது நிரம்பிய இளைஞரான கருப்பசாமி பாண்டியன் எந்த தொகுதிக்கும் விருப்பம் மனு கொடுக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் விருப்பமனுப் பட்டியலை பரிசீலித்த எம்.ஜி.ஆர்., அதில் கருப்பசாமி பாண்டியன் பெயர் இல்லாததைக் கண்டார். ஏற்கெனவே அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், உடனடியாக கருப்பசாமி பாண்டியனை சென்னைக்கு வரவழைத்தார். அவரிடம் கையெழுத்து பெற்று, 'ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நீதான் போட்டியிடப் போகிறாய். போய் தேர்தல் வேலைகளைக் கவனி' என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் இந்த குணத்தை எப்போதும் சொல்லி நெகிழ்வார், கருப்பசாமி பாண்டியன். அதே போல,ஆலங்குளம் தொகுதியில் அவருக்காக எம்.ஜி.ஆர் நேரில் வந்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் மற்றும் அந்தத் தொகுதி மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கருப்பசாமி பாண்டியன் சுலபமாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக மாறினார். குறிப்பாகத் தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆரின் காரிலேயே பயணிக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கோவப்பட்ட கானா.. சமாளித்த எம்.ஜி.ஆர்! நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு 1986-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது அப்போது அ.தி.முக-வின் ஒன்றுபட்ட மாவட்டச் செயலாளராக இருந்த 'கானா அண்ணாச்சி'க்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்தனர். அவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் எம்.ஜி.ஆர் ஒரு திருப்பத்தை அறிவித்தார். அந்த சமயத்தில் எம்.எல்.சி பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஆர்.எம்.வீரப்பனை சமாளிக்கும் வகையில் நெல்லை சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இது 'கானா'வை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்தத் தகவல் எம்.ஜி.ஆர் காதுக்குச் சென்றது. மனோஜ் பாரதிராஜா மறைவு: தனது நண்பனுடன் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் எம்.ஜி.ஆருடன்... ஆர்.எம்.வீரப்பனுக்காக நெல்லைக்கு பிரசாரம் செய்யத் தயாராக இருந்த எம்.ஜி.ஆர், சென்னையில் இருந்தபடியே கட்சிப் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அதில், நெல்லைக்குச் செல்லும் எனது பிரசார பயணங்கள் அனைத்தையும் கருப்பசாமி பாண்டியனே ஒருங்கிணைப்பார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன கருப்பசாமி பாண்டியன், முன்பை விடவும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் வந்தபோதும் அவருக்கான பயணத் திட்டங்களை வகுத்து பிரசாரத்தை வேகப்படுத்தினார். அதனால் அந்த இடைத்தேர்தலில் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்தது. அன்றே கூவத்தூர் பாணி அரசியல்! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இடையே போட்டி ஏற்பட்டபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-களில் 28 பேர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது கருப்பசாமி பாண்டியன் உதவியை ஜெயலலிதா கோரினார். அதையேற்று அந்த எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு 'சுற்றுலா' அழைத்துச்சென்ற கருப்பசாமி பாண்டியன், பின்னர் அவர்களைச் சென்னைக்கு அழைத்துவருவதாக இருந்தது. அப்போது அவர்களை எதிர்த்தரப்பினர் கைப்பற்றும் ஆபத்து இருப்பதைக் கேள்விப்பட்ட கருப்பசாமி பாண்டியன், தன்னுடன் இருந்த எம்.எல்.ஏ-களை சென்னையில் இறக்காமல் நேராக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை நெல்லை வழியாக சாத்தூர் அழைத்துச் சென்றார். அங்கு கே.கே எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான மில் வளாகத்தில் ரகசியமாகத் தங்க வைத்துப் பாதுகாத்தார். அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒன்றான நிலையில், கருப்பசாமி பாண்டியனுக்கு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி கௌரவித்தார், ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் நெல்லையில் அ.தி.மு.க-வின் பிரமாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார். ஆனாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் 2000 ஆண்டில் அவரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டார். தென்காசி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அவருக்கு தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலும் சரி, தி.மு.க-வில் இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அரசியலில் அனைவரையும் அரவணைத்துச்செல்வது அவரது பாணி. அதே சமயம் கட்சிக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்டிக்கவும் தவறுவதில்லை. மீண்டும் தாய்க் கழகத்தில்..! நெல்லை மாவட்ட தி.மு.க-வை கட்சித் தலைமை, நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய மாவட்டம் என இரண்டாகப் பிரிக்க முடிவுசெய்தது. அதில், கருப்பசாமி பாண்டியனுக்கு துளியும் விருப்பம் கிடையாது. ஆனாலும் அவரை கருத்தை மீறி மாவட்டத்தைப் பிரித்ததால் அதிருப்தியடைந்த அவர், ஒன்றிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த தன்னால் ஒரு சில சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குறுகிய பிரிவில் செயல்பட முடியாது என்றார். அதை, மாவட்ட கலெக்டராக இருந்த நான் தாசில்தாராக செயல்பட விரும்பவில்லை என்று கட்சித் தலைமைக்குத் தெரிவித்ததோடு, உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒருங்கினார். அந்த விவகாரம் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2015 மே மாதம் அவர் தி.மு.க-வில் இருந்து விலகினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் தன்னை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர அரசியலில் இறங்கினார். அவருக்கு அமைப்புச் செயலாளார் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி சார்பாக நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து பங்கேற்பார் என்பதைக் கட்சியினர் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 76 வயது நிரம்பிய அவர் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனையும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க என்கிற இருபெரும் கட்சிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரில்லா தலைவராக நெல்லை மாவட்ட அரசியலில் கோலோச்சிய கானா என்கிற கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
MGR விருப்பமனு கொடுத்த MLA; ஜெயலலிதாவுக்காக `ராஜஸ்தான்'பிளான் - கருப்பசாமி பாண்டியனின் அரசியல் கதை
நெல்லையின் மூத்த அரசியல்வாதியும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஆகியோரிடம் மட்டுமல்லாமல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடனும் நெருக்கமாக பழகியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு பயோ இதோ! எம்.ஜி.ஆர் விசுவாசி! 'நெல்லை நெப்போலியன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'கானா' என்கிற கருப்பசாமி பாண்டியன், சிறு வயது முதலாகவே எம்.ஜி.ஆர் மீது தீவிர அன்பு கொண்டிருந்தார். 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக கட்சியை வளர்க்கப்பாடுபட்டார். கானா-வின் வேகமான செயல்பாடு பற்றி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. 1977 சட்டமன்றத் தேர்தலின்போது கட்சியினர் பலரும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என எதிர்பார்த்து, கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள். கருப்பசாமி பாண்டியன் Manoj Bharathiraja: இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும் - பாரதிராஜாவுக்கு அண்ணாமலை ஆறுதல் அந்த சமயத்தில் 25 வயது நிரம்பிய இளைஞரான கருப்பசாமி பாண்டியன் எந்த தொகுதிக்கும் விருப்பம் மனு கொடுக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் விருப்பமனுப் பட்டியலை பரிசீலித்த எம்.ஜி.ஆர்., அதில் கருப்பசாமி பாண்டியன் பெயர் இல்லாததைக் கண்டார். ஏற்கெனவே அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், உடனடியாக கருப்பசாமி பாண்டியனை சென்னைக்கு வரவழைத்தார். அவரிடம் கையெழுத்து பெற்று, 'ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நீதான் போட்டியிடப் போகிறாய். போய் தேர்தல் வேலைகளைக் கவனி' என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் இந்த குணத்தை எப்போதும் சொல்லி நெகிழ்வார், கருப்பசாமி பாண்டியன். அதே போல,ஆலங்குளம் தொகுதியில் அவருக்காக எம்.ஜி.ஆர் நேரில் வந்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் மற்றும் அந்தத் தொகுதி மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கருப்பசாமி பாண்டியன் சுலபமாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக மாறினார். குறிப்பாகத் தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆரின் காரிலேயே பயணிக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கோவப்பட்ட கானா.. சமாளித்த எம்.ஜி.ஆர்! நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு 1986-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது அப்போது அ.தி.முக-வின் ஒன்றுபட்ட மாவட்டச் செயலாளராக இருந்த 'கானா அண்ணாச்சி'க்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்தனர். அவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் எம்.ஜி.ஆர் ஒரு திருப்பத்தை அறிவித்தார். அந்த சமயத்தில் எம்.எல்.சி பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஆர்.எம்.வீரப்பனை சமாளிக்கும் வகையில் நெல்லை சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இது 'கானா'வை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்தத் தகவல் எம்.ஜி.ஆர் காதுக்குச் சென்றது. மனோஜ் பாரதிராஜா மறைவு: தனது நண்பனுடன் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் எம்.ஜி.ஆருடன்... ஆர்.எம்.வீரப்பனுக்காக நெல்லைக்கு பிரசாரம் செய்யத் தயாராக இருந்த எம்.ஜி.ஆர், சென்னையில் இருந்தபடியே கட்சிப் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அதில், நெல்லைக்குச் செல்லும் எனது பிரசார பயணங்கள் அனைத்தையும் கருப்பசாமி பாண்டியனே ஒருங்கிணைப்பார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன கருப்பசாமி பாண்டியன், முன்பை விடவும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் வந்தபோதும் அவருக்கான பயணத் திட்டங்களை வகுத்து பிரசாரத்தை வேகப்படுத்தினார். அதனால் அந்த இடைத்தேர்தலில் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்தது. அன்றே கூவத்தூர் பாணி அரசியல்! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இடையே போட்டி ஏற்பட்டபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-களில் 28 பேர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது கருப்பசாமி பாண்டியன் உதவியை ஜெயலலிதா கோரினார். அதையேற்று அந்த எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு 'சுற்றுலா' அழைத்துச்சென்ற கருப்பசாமி பாண்டியன், பின்னர் அவர்களைச் சென்னைக்கு அழைத்துவருவதாக இருந்தது. அப்போது அவர்களை எதிர்த்தரப்பினர் கைப்பற்றும் ஆபத்து இருப்பதைக் கேள்விப்பட்ட கருப்பசாமி பாண்டியன், தன்னுடன் இருந்த எம்.எல்.ஏ-களை சென்னையில் இறக்காமல் நேராக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை நெல்லை வழியாக சாத்தூர் அழைத்துச் சென்றார். அங்கு கே.கே எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான மில் வளாகத்தில் ரகசியமாகத் தங்க வைத்துப் பாதுகாத்தார். அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒன்றான நிலையில், கருப்பசாமி பாண்டியனுக்கு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி கௌரவித்தார், ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் நெல்லையில் அ.தி.மு.க-வின் பிரமாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார். ஆனாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் 2000 ஆண்டில் அவரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டார். தென்காசி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அவருக்கு தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலும் சரி, தி.மு.க-வில் இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அரசியலில் அனைவரையும் அரவணைத்துச்செல்வது அவரது பாணி. அதே சமயம் கட்சிக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்டிக்கவும் தவறுவதில்லை. மீண்டும் தாய்க் கழகத்தில்..! நெல்லை மாவட்ட தி.மு.க-வை கட்சித் தலைமை, நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய மாவட்டம் என இரண்டாகப் பிரிக்க முடிவுசெய்தது. அதில், கருப்பசாமி பாண்டியனுக்கு துளியும் விருப்பம் கிடையாது. ஆனாலும் அவரை கருத்தை மீறி மாவட்டத்தைப் பிரித்ததால் அதிருப்தியடைந்த அவர், ஒன்றிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த தன்னால் ஒரு சில சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குறுகிய பிரிவில் செயல்பட முடியாது என்றார். அதை, மாவட்ட கலெக்டராக இருந்த நான் தாசில்தாராக செயல்பட விரும்பவில்லை என்று கட்சித் தலைமைக்குத் தெரிவித்ததோடு, உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒருங்கினார். அந்த விவகாரம் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2015 மே மாதம் அவர் தி.மு.க-வில் இருந்து விலகினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் தன்னை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர அரசியலில் இறங்கினார். அவருக்கு அமைப்புச் செயலாளார் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி சார்பாக நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து பங்கேற்பார் என்பதைக் கட்சியினர் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 76 வயது நிரம்பிய அவர் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனையும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க என்கிற இருபெரும் கட்சிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரில்லா தலைவராக நெல்லை மாவட்ட அரசியலில் கோலோச்சிய கானா என்கிற கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி
சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது. இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளை 'எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?' என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது. கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா? மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள். கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி
சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது. இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளை 'எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?' என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது. கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா? மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள். கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
EPS: 45 நிமிடங்கள் பேசினோம் - அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தனர். அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்தித்தனர். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டார். இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போகிறது என்று பேச்சுக்கள் பரவத் தொடங்கின. இந்நிலையில், டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி , ``மத்திய உள்துறை அமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம் மேலும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என்றும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படவிருப்பதாகத் தமிழக அரசு செய்திகள் வெளியிடுகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறுவதை முழுமையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். மேலும், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அமித் ஷா - எடப்பாடி கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. 45 நிமிடங்கள் பேசினோம். அதில், அரசின் திட்டங்களில் மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று விளக்கினார். 'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
EPS: 45 நிமிடங்கள் பேசினோம் - அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தனர். அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்தித்தனர். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டார். இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போகிறது என்று பேச்சுக்கள் பரவத் தொடங்கின. இந்நிலையில், டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி , ``மத்திய உள்துறை அமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம் மேலும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என்றும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படவிருப்பதாகத் தமிழக அரசு செய்திகள் வெளியிடுகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறுவதை முழுமையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். மேலும், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அமித் ஷா - எடப்பாடி கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. 45 நிமிடங்கள் பேசினோம். அதில், அரசின் திட்டங்களில் மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று விளக்கினார். 'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் சிபிஐ சோதனை
காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
கருத்து சுதந்திரத்தை கொண்டு ஒருவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்புடையது அல்ல என குணால் கம்ரா விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை குணால் கம்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ்
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அமித்ஷா சந்திப்பு இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், 'எல்லாம் நன்மைக்கே'. அதிமுக கட்சியில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைவதுதான் என்னுடைய விருப்பம். அமிஷாவை அவர் சந்தித்தது குறித்து அவரிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ்
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அமித்ஷா சந்திப்பு இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், 'எல்லாம் நன்மைக்கே'. அதிமுக கட்சியில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைவதுதான் என்னுடைய விருப்பம். அமிஷாவை அவர் சந்தித்தது குறித்து அவரிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
உ.பி.யில் நாட்டின் முதல் ஜவுளி இயந்திரப் பூங்கா: 875 ஏக்கரில் 35 உற்பத்தி நிறுவனங்களுடன் அமைகிறது
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
திஷா மரண வழக்கில் மீண்டும் விசாரணை: ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
லண்டன் வீதியில் சேலையுடன் நடைபயிற்சி மேற்கொண்டார் மம்தா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
லண்டன் வீதியில் சேலையுடன் நடைபயிற்சி மேற்கொண்டார் மம்தா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திஷா மரண வழக்கில் மீண்டும் விசாரணை: ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
உ.பி.யில் நாட்டின் முதல் ஜவுளி இயந்திரப் பூங்கா: 875 ஏக்கரில் 35 உற்பத்தி நிறுவனங்களுடன் அமைகிறது
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
Savukku Shankar Interview: `என் வீடு மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இவர்கள் தான்'
Savukku Shankar Interview: `என் வீடு மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இவர்கள் தான்'
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு ஆய்வு தொடக்கம்
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு ஆய்வு தொடக்கம்
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 லட்சமா?
ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
லண்டன் வீதியில் சேலையுடன் நடைபயிற்சி மேற்கொண்டார் மம்தா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திஷா மரண வழக்கில் மீண்டும் விசாரணை: ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா மழைக்கால தொடரில் அறிமுகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
புதிய வருமான வரி மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
உ.பி.யில் நாட்டின் முதல் ஜவுளி இயந்திரப் பூங்கா: 875 ஏக்கரில் 35 உற்பத்தி நிறுவனங்களுடன் அமைகிறது
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு ஆய்வு தொடக்கம்
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 லட்சமா?
ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
திஷா மரண வழக்கில் மீண்டும் விசாரணை: ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா மழைக்கால தொடரில் அறிமுகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
புதிய வருமான வரி மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
உ.பி.யில் நாட்டின் முதல் ஜவுளி இயந்திரப் பூங்கா: 875 ஏக்கரில் 35 உற்பத்தி நிறுவனங்களுடன் அமைகிறது
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை குழு ஆய்வு தொடக்கம்
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 லட்சமா?
ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
லண்டன் வீதியில் சேலையுடன் நடைபயிற்சி மேற்கொண்டார் மம்தா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திஷா மரண வழக்கில் மீண்டும் விசாரணை: ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா மழைக்கால தொடரில் அறிமுகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
புதிய வருமான வரி மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
உ.பி.யில் நாட்டின் முதல் ஜவுளி இயந்திரப் பூங்கா: 875 ஏக்கரில் 35 உற்பத்தி நிறுவனங்களுடன் அமைகிறது
நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்
தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2 தமிழர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
ஆப்பிரிக்க கடல் பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் பணியாற்றும் 2 தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 7 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.