SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்

பா.ஜ.க-வில் பதவி! ம.தி.மு.க-வில் இணைந்தவருக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன். பின்னர் ம.தி.மு.க-வில் இணைந்த அவர், கடந்த 2024-ல் ம.தி.மு.க-விலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், கடந்த நவம்பர் 26-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி வைகோ முன்னிலையில் மீண்டும் ம.தி.மு.க-வில் இணைந்தார் குருநாதன். அது குறித்த அறிவிப்பும் ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி, பா.ஜ.க -வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் ம.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ குருநாதனுக்கு, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பா.ஜ.க-வினர், ‘ம.தி.மு.க-வில் இணைந்துவிட்ட குருநாதனுக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கியது எப்படி... அதுவும், தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாமல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி பதவி வழங்கினார்..?’ என்று கொந்தளிக்கிறார்கள்! கடுப்பான மதுரை தி.மு.க! மேடை ஏறிய மாணிக்கம் தாகூர் பல ஆண்டுகளாக நீடித்துவரும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தற்போது ஏக்கப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. ‘தி.மு.க உடனான கூட்டணியை முறிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸில் உருவாகியிருக்கும் புரட்சிப் படைக்கு, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் தளபதியாக வழிநடத்துகிறாராம். இந்நிலையில், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், எம்.பி என்ற முறையில் மாணிக்கம் தாகூரும் பங்கேற்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கடுப்பான மதுரை தி.மு.க-வினர், ‘காங்கிரஸ் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். மாணிக்கம் தாகூர் குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் இரவு பகல் பாராமால் மாணிக்கத்துக்காக வேலை பார்த்தோம். அந்த நன்றியில்லாமல், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள்...அவர்களை இப்படி மேடை ஏற்றுவது நியாயமா...’ என்று கொதித்திருக்கிறார்கள். சில சீனியர் நிர்வாகிகள், மாணிக்கத்தைச் சாடைமாடையாகவும் விமர்சனம் செய்தார்களாம். இதனால் கடுப்பான மாணிக்கம் தாகூர், விழா முடிந்த அடுத்த நொடி மின்னலாகக் கிளப்பிவிட்டாராம்! கதறும் தம்பிகள்..! பொதுச்செயலாளர் பதவி டம்மிதான்... நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில், ஈழ உணர்வும் நிர்வாகத் திறமையும் கொண்டவர்களை நியமித்து வந்தார் சீமான். மறைந்த தடா சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து, சீமானைக் கண்டிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரது மறைவிற்குப் பிறகு, சீமானின் மனைவி கயல்விழியைப் பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அதற்கு உட்கட்சிக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2024 ஜனவரியில் நடந்த பொதுக்குழுவில், மருத்துவர் திருமால்செல்வன் என்பவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தார் சீமான். திருமால்செல்வன் ஆனால், அவர் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தகவல்கூட பொதுக்குழுவில் அறிவிக்கப்படவில்லை. தற்போது, திருமால்செல்வனை டம்மியாக வைத்திருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘திருமால்செல்வனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், டம்மியாகவே வைத்திருக்கிறார் அண்ணன். தன்னை எதிர்த்து ஒருவார்த்தைகூட யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பவர் உள்ள பதவியை இப்படியே டம்மியாக்கி வைத்திருந்தால், கட்சி எப்படிதான் வளரும்...’ எனக் குமுறுகிறார்கள் தம்பிகள்! மிஸ்டர் கழுகு: நெருக்கடியில் நேரு... வசூல் டார்கெட்டில் ‘ஜோதி’ மாண்புமிகு! தொகுதி மாற நினைக்கும் நயினார்! கட்டமைப்பு போடாத அ.தி.மு.க... 2001-ம் ஆண்டு முதலே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். மொத்தம் நான்கு முறை அ.தி.மு.க சார்பாகவும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்ட அவருக்கு, மூன்று முறை வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக உயர்ந்திருக்கும் நயினார், இம்முறையும் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க படுமோசமான நிலைக்குச் சென்றிருப்பதால், அங்கு போட்டியிட யோசிக்கிறாராம் நயினார். நயினார் நாகேந்திரன் ‘திருநெல்வேலியிலுள்ள அ.தி.மு.க வாக்குகள்தான் நயினார் வெற்றியடைய காரணம். தற்போது திருநெல்வேலி மாநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் தச்சை கணேசராஜா, தனக்குக் கீழ் இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், வெறும் 15 சதவிகித பூத் கமிட்டியைத்தான் முழுமையாக அமைத்திருக்கிறார். அ.தி.மு.க-வை நம்பி நின்றால் தோல்வி உறுதி என்று முடிவெடுத்திருக்கும் நயினார், விருதுநகரிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்! கிளம்பத் தயாராகும் சீனியர்கள்! கூட்டணிக்கு மறுக்கும் தினகரன்... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியை மீண்டும் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, என்.டி.ஏ கூட்டணிக்குள் தினகரன் வருவதற்குத் தடையாக இருந்தது எடப்பாடி பழனிசாமிதான். இம்முறை ஆர்.எஸ்.எஸ் முக்கியமான தலைவர்களே நேரடியாக எடப்பாடியிடம் பேசி, தினகரனைக் கூட்டணிக்குள் கொண்டுவர கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், டி.டி.வி முறுக்கிக் கொண்டுவிட்டார். ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்... ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி’ என்று அடம்பிடிக்கிறார். அவரது நிலைப்பாடு, அ.ம.மு.க-வுக்குள் பெருத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம். டிடிவி தினகரன் அதாவது, ‘இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் பதவியே இல்லாமல், செலவு மட்டும் செய்வது. என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்று வெற்றிபெற்றால்தான், அதிகாரத்தை அடைய முடியும். ஆனால், தனது தனிப்பட்ட ஈகோவால் கட்சியோடு சேர்த்து நம்மையும் சீரழிக்கிறார் தினகரன்... அவரிடம் பேசி எப்படியாவது கூட்டணியில் இணைய வையுங்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமான நபர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள் சில அ.ம.மு.க சீனியர்கள். ஒருவேளை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால், கூண்டோடு அ.தி.மு.க பக்கம் சாயவும் தயாராகி வருகிறார்களாம் அந்த சீனியர்கள்!

விகடன் 11 Dec 2025 12:37 pm

`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்

பா.ஜ.க-வில் பதவி! ம.தி.மு.க-வில் இணைந்தவருக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன். பின்னர் ம.தி.மு.க-வில் இணைந்த அவர், கடந்த 2024-ல் ம.தி.மு.க-விலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். அக்கட்சியில் இணைந்து ஒன்றரை ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், கடந்த நவம்பர் 26-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி வைகோ முன்னிலையில் மீண்டும் ம.தி.மு.க-வில் இணைந்தார் குருநாதன். அது குறித்த அறிவிப்பும் ம.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி, பா.ஜ.க -வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் ம.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ குருநாதனுக்கு, பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கி அறிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பா.ஜ.க-வினர், ‘ம.தி.மு.க-வில் இணைந்துவிட்ட குருநாதனுக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கியது எப்படி... அதுவும், தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாமல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி பதவி வழங்கினார்..?’ என்று கொந்தளிக்கிறார்கள்! கடுப்பான மதுரை தி.மு.க! மேடை ஏறிய மாணிக்கம் தாகூர் பல ஆண்டுகளாக நீடித்துவரும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தற்போது ஏக்கப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. ‘தி.மு.க உடனான கூட்டணியை முறிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸில் உருவாகியிருக்கும் புரட்சிப் படைக்கு, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் தளபதியாக வழிநடத்துகிறாராம். இந்நிலையில், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், எம்.பி என்ற முறையில் மாணிக்கம் தாகூரும் பங்கேற்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கடுப்பான மதுரை தி.மு.க-வினர், ‘காங்கிரஸ் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். மாணிக்கம் தாகூர் குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் கீழ் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் இரவு பகல் பாராமால் மாணிக்கத்துக்காக வேலை பார்த்தோம். அந்த நன்றியில்லாமல், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள்...அவர்களை இப்படி மேடை ஏற்றுவது நியாயமா...’ என்று கொதித்திருக்கிறார்கள். சில சீனியர் நிர்வாகிகள், மாணிக்கத்தைச் சாடைமாடையாகவும் விமர்சனம் செய்தார்களாம். இதனால் கடுப்பான மாணிக்கம் தாகூர், விழா முடிந்த அடுத்த நொடி மின்னலாகக் கிளப்பிவிட்டாராம்! கதறும் தம்பிகள்..! பொதுச்செயலாளர் பதவி டம்மிதான்... நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில், ஈழ உணர்வும் நிர்வாகத் திறமையும் கொண்டவர்களை நியமித்து வந்தார் சீமான். மறைந்த தடா சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து, சீமானைக் கண்டிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரது மறைவிற்குப் பிறகு, சீமானின் மனைவி கயல்விழியைப் பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அதற்கு உட்கட்சிக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2024 ஜனவரியில் நடந்த பொதுக்குழுவில், மருத்துவர் திருமால்செல்வன் என்பவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தார் சீமான். திருமால்செல்வன் ஆனால், அவர் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தகவல்கூட பொதுக்குழுவில் அறிவிக்கப்படவில்லை. தற்போது, திருமால்செல்வனை டம்மியாக வைத்திருப்பது, கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘திருமால்செல்வனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், டம்மியாகவே வைத்திருக்கிறார் அண்ணன். தன்னை எதிர்த்து ஒருவார்த்தைகூட யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பவர் உள்ள பதவியை இப்படியே டம்மியாக்கி வைத்திருந்தால், கட்சி எப்படிதான் வளரும்...’ எனக் குமுறுகிறார்கள் தம்பிகள்! மிஸ்டர் கழுகு: நெருக்கடியில் நேரு... வசூல் டார்கெட்டில் ‘ஜோதி’ மாண்புமிகு! தொகுதி மாற நினைக்கும் நயினார்! கட்டமைப்பு போடாத அ.தி.மு.க... 2001-ம் ஆண்டு முதலே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். மொத்தம் நான்கு முறை அ.தி.மு.க சார்பாகவும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்ட அவருக்கு, மூன்று முறை வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக உயர்ந்திருக்கும் நயினார், இம்முறையும் திருநெல்வேலி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க படுமோசமான நிலைக்குச் சென்றிருப்பதால், அங்கு போட்டியிட யோசிக்கிறாராம் நயினார். நயினார் நாகேந்திரன் ‘திருநெல்வேலியிலுள்ள அ.தி.மு.க வாக்குகள்தான் நயினார் வெற்றியடைய காரணம். தற்போது திருநெல்வேலி மாநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் தச்சை கணேசராஜா, தனக்குக் கீழ் இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், வெறும் 15 சதவிகித பூத் கமிட்டியைத்தான் முழுமையாக அமைத்திருக்கிறார். அ.தி.மு.க-வை நம்பி நின்றால் தோல்வி உறுதி என்று முடிவெடுத்திருக்கும் நயினார், விருதுநகரிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்! கிளம்பத் தயாராகும் சீனியர்கள்! கூட்டணிக்கு மறுக்கும் தினகரன்... தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சியை மீண்டும் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, என்.டி.ஏ கூட்டணிக்குள் தினகரன் வருவதற்குத் தடையாக இருந்தது எடப்பாடி பழனிசாமிதான். இம்முறை ஆர்.எஸ்.எஸ் முக்கியமான தலைவர்களே நேரடியாக எடப்பாடியிடம் பேசி, தினகரனைக் கூட்டணிக்குள் கொண்டுவர கன்வின்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், டி.டி.வி முறுக்கிக் கொண்டுவிட்டார். ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்... ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி’ என்று அடம்பிடிக்கிறார். அவரது நிலைப்பாடு, அ.ம.மு.க-வுக்குள் பெருத்த அதிருப்தியை உருவாக்கியிருக்கிறதாம். டிடிவி தினகரன் அதாவது, ‘இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் பதவியே இல்லாமல், செலவு மட்டும் செய்வது. என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்று வெற்றிபெற்றால்தான், அதிகாரத்தை அடைய முடியும். ஆனால், தனது தனிப்பட்ட ஈகோவால் கட்சியோடு சேர்த்து நம்மையும் சீரழிக்கிறார் தினகரன்... அவரிடம் பேசி எப்படியாவது கூட்டணியில் இணைய வையுங்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமான நபர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள் சில அ.ம.மு.க சீனியர்கள். ஒருவேளை, என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால், கூண்டோடு அ.தி.மு.க பக்கம் சாயவும் தயாராகி வருகிறார்களாம் அந்த சீனியர்கள்!

விகடன் 11 Dec 2025 12:37 pm

மள்ளர் சேனை : ஒருபக்கம் பிற கட்சி பிரமுகர்கள்; மற்றொரு பக்கம் சமூக அமைப்புகள் - தவெக பிளான் என்ன?

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் ஜுரம் பற்ற தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்கிவிட்டன. தமிழக வெற்றிக் கழகமும் மற்ற கட்சிகளைப்போல அரசியல் பகடைகளை உருட்ட ஆரம்பித்துள்ளது . தவெக விஜய் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை கட்சியில் இணைத்ததன் மூலம் தி.மு.க, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்த த.வெ.க, தற்போது முக்கிய கட்சிகளில் ஓரங்கட்டுப்பட்டுள்ள அல்லது அதிருப்தியுடன் உள்ள பிரமுகர்களை தவெக-வுக்கு நகற்றிக் கொண்டுவரும் பிளானில் தீவிரமாக இறங்கியுள்ளது.  கொங்கு மாவட்டங்களிலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய கட்சியினரை ஈரோடு நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து விஜய் முன்னிலையில் கட்சியில் இணைக்கின்ற பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே பிற கட்சி பிரமுகர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, அதிமுக-விலிருந்து ஒதுங்கி இருக்கும் மதுரை கிரம்மர் சுரேஷ் உள்ளிட்டோரை தவெக-வினர் அணுகி வருவதாக சொல்லப்படும் போது, இன்னும் சில பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுகிறது. அதில் முக்கியமாக, ராமநாதபுரம் முன்னாள் திமுக எம்பி, அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு சென்ற இரண்டு மாஜி அமைச்சர்கள், மறைந்த சிவகங்கை மாஜி அமைச்சரின் உறவினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிவகங்கை மாஜி அமைச்சர், அதே மாவட்ட அ.தி.மு.க மாஜி எம்.பி, திமுக பெண் பிரமுகர், தூத்துக்குடி திமுக மாஜி எம்பி, விருதுநகர் மாவட்ட அதிமுக மாஜி அமைச்சர், மதுரை அ.ம.மு.க-விலுள்ள பெண் பிரமுகர், சிவகங்கை காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ என்று பட்டியல் நீள்கிறது. இன்னொரு பக்கம், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்குள்ள சாதி சார்ந்த கட்சிகளையும், அமைப்புகளையும் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் வேலையிலும் தீவிரமாக இறஙகியுள்ளனர். ஏற்கனவே மறவர், அகமுடையார், தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியர், வெள்ளாளர், உடையார், பரதவர், யாதவர் அமைப்புகளும், கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கட்சியினர் சொல்கிறார்கள்.     சோலை பழனிவேல்ராசன்-புஸ்ஸி ஆனந்த் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் த.ம.மு.க ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று தேர்தலை சந்தித்திருந்தாலும் கூட்டணில் கட்சிகளின் உள்ளடி வேலைகளால் வெற்றியை எட்ட முடியாததால் அரசியலில் ஒரு சக்தியாக எழமுடியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக த.வெ.க-வுக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனாலும் சில காரணங்களால் த.வெ.க தலைமை இவரை ஹோல்ட் பண்ணி வைத்துள்ளதாம். இந்நிலையில் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 'மள்ளர் சேனை' என்ற அமைப்பின் தலைவர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளது தற்போது தென் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மள்ளர் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசனிடம் பேசினேன், தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்கும், அதைத் தொடர்ந்து தேவர் குருபூஜைக்காகவும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வந்தபோது மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எங்கள் அமைப்பு குறித்து கேட்டார், பின்பு தென் மாவட்ட அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம், மேலும் தேவேந்திர குல வேளார்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், அரசியல், அதிகாரத்தில் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநதித்துவம் குறித்தும் விளக்கினேன்,, என்றவர்,    தொடர்ந்து பேசும்போது, தமிழ்நாட்டு அரசியலில் சுப்பிரமணியசுவாமி பரபரப்பாக செயல்பட்ட 96 காலகட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் அவருடன் பயணித்தார்கள், அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், அதிலிருந்துதான் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நானும் சமயநல்லூரில் போட்டியிட்டு பொது வாழ்க்கையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினருடனும் நெருக்கமாக பழகுவேன். சோலை பழனிவேல்ராசன் தென் மாவட்டத்தில் மட்டுமின்றி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெருவாரியாக வாழும் தேவேந்திரகுல வேளாள மக்கள் அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில் முன்னேறி வரவேண்டும், அனைத்து சமூகத்தினருடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் மள்ளர் சேனையை ஆரம்பித்து 'சுய சாதிப் பற்று, பிற சாதி நட்பு' என்ற கொள்கையுடன் சமுதாய மக்களுக்கு செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் சமூகத்துக்கு நன்மை செய்வார்கள் என்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வந்தாலும் வாக்குகளைப் பெற்ற பின் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. வாக்கு வங்கியாக மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்கள் மக்களை ஏமாற்றுகிறது, சமீபகாலமாக தேவேந்திர குல மக்கள் இந்தக் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதனால், அனைத்து சமுதாய மக்களையும் சமமாக பார்க்கும், இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாத, இளைஞர்கள் விரும்புகின்ற விஜய் தலைமையிலான த.வெ.க மீது எங்கள் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, இதை த.வெ.க பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார். சோலை பழனிவேல்ராசன் மள்ளர் சேனையுடன் த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதுபோல் இன்னும் பல சமூக அமைப்புகளுடன் தவெக தலைமை தொடர்பு கொண்டு வருகிறது. இதற்கிடையே திருவாரூரில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்துக்கு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரனை, திருச்சி வேலுசாமி சந்தித்துப் பேசியுள்ளதுபோல சோலை பழனிவேல்ராசனும் ஆனந்தை சந்தித்துப் பேசியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விகடன் 11 Dec 2025 12:13 pm

TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' - பனையூரில் நாஞ்சில் சம்பத்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன். பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்' என்றார். நாஞ்சில் சம்பத் S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது. TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

விகடன் 11 Dec 2025 11:53 am

TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' - பனையூரில் நாஞ்சில் சம்பத்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன். பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்' என்றார். நாஞ்சில் சம்பத் S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது. TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

விகடன் 11 Dec 2025 11:53 am

அந்த மாடல் பொண்ணுகிட்ட நான் உங்களுக்காக மன்னிப்பு கேட்குறேன்- காங்கிரஸை காட்டமாக விமர்சித்த கங்கனா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று (டிச.10) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரணாவத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கங்கனா ரணாவத் பேசுகையில், இந்த ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தினசரி இடையூறுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. SIR குறித்த விவாதத்தின்போது கத்திக் கூச்சலிட்டு மிரட்ட முயன்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களைத் தவிர, அவர்கள் அவையை நடத்தவே விடவில்லை. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பட்டம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடுகின்றனர். பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை. மாறாக, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அது காலாவதியான நடைமுறை ஆகிவிட்டது. ஹரியானா தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் காட்டுகிறார்கள். அந்த பெண், இதுவரை இந்தியாவிற்கு ஒருமுறைகூட வந்தது இல்லை என்றும், தனக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கமளித்துவிட்டார். ஆனால் இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவையில் காட்டுகிறார்கள். நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளைக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். `பழைய விஷயங்களை விடுங்கள்' எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார். ஆனால் அதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி, உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்ததில்லை என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 11 Dec 2025 10:58 am

``நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்

திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது. ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன். அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன். சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர். முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன். திருத்துறைப்பூண்டி அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார். முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார். `மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்? இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன். அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அண்ணா அறிவாலயம் கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை. நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார். ``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

விகடன் 11 Dec 2025 10:39 am

``நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்

திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது. ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன். அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன். சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர். முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன். திருத்துறைப்பூண்டி அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார். முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார். `மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்? இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன். அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அண்ணா அறிவாலயம் கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை. நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார். ``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

விகடன் 11 Dec 2025 10:39 am

US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

விகடன் 11 Dec 2025 8:57 am

US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி

ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

விகடன் 11 Dec 2025 8:57 am

``நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புறியா?” - ரவுடி தாக்கியதில் உயிரிழந்த கொரியர் ஊழியர்

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31) திருமணமாகாத இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். மருதாநல்லுார், கரிகுளத்தெருவைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. ரவுடியான இவரின் பெயர் போலீஸார் ரவுடி பட்டியலில் உள்ளது. கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்கிறார்கள். கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு புகழேந்தி கொரியர் டெலிவரி செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது முதல் அவர் செல் நம்பரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ' என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் சொல்லியுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த சிபிசக்கரவர்த்தி (33) தனது நண்பர்கள் சிலருடன் சென்று, கடந்த 8ம் தேதி, சிவபுரம் புறவழிச் சாலையில் புகழேந்தியிடம் பேசியுள்ளார். அப்போது நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் புகழேந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் கேட்டதற்கு நாய் குறுக்கே வந்து கீழே விழுந்துட்டேன் என கூறி தாக்கியதை மறைத்து விட்டார். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகழேந்தியை பரிசோதனை செய்த டாக்டர், இவர் விழவில்லை, யாரோ அடித்திருக்கிறார்கள் என அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்தவற்றை சொல்லியுள்ளார். உயிரிழந்த புகழேந்தி இதற்கிடையில் உடல்நிலை மோசமான நிலையில், புகழேந்தியை, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, புகழேந்தி உயிரிழந்தார். இது குறித்து, அவரது உறவினர்கள், நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிபிசக்கரவர்த்தி, இதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(26), கும்பகோணம், மேல கொட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணா(33), கும்பகோணம், முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ்(26), திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த குபேரன்(27) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிபிசக்கரவர்த்தி ரவுடி பட்டியலில், இருப்பதால் இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

விகடன் 11 Dec 2025 8:09 am

``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.  பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

விகடன் 11 Dec 2025 7:42 am

``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.  பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

விகடன் 11 Dec 2025 7:42 am

மனித உரிமைகள் நாள்

மனித உரிமைகள் நாள்: உலக மனித கண்ணியத்திற்கான விழிப்புணர்வு தினம் டிசம்பர் 10 The post மனித உரிமைகள் நாள் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 11 Dec 2025 3:45 am

கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் குழுக்கள்’பட்டியலில் சேர்ப்பு

கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை: நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் The post கனடா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக நான்கு புதிய அமைப்புகள் ‘தீவிரவாதக் குழுக்கள்’ பட்டியலில் சேர்ப்பு appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 11 Dec 2025 3:13 am

கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!

செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா மின்சார வாகனங்கள் செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா

விகடன் 10 Dec 2025 8:46 pm

கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!

செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா மின்சார வாகனங்கள் செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா

விகடன் 10 Dec 2025 8:46 pm

SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!

நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது. நேற்று (டிச 9) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது; சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. RSS ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி சட்டத்திற்கு எதிராக நடந்து வருகிறது. பிரதமரும், அமித் ஷாவும் இந்திய தேர்தல் ஆணையத்த்தை சுதந்திரமாகச் செயல்படவிடுவதில்லை என்று குற்றச்சாட்டிப் பேசியிருந்தார். ராகுல் காந்தி ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் இன்றைய மக்களவையில் இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, SIR பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் 'தேர்தல் சீர்திருத்தங்கள்' என்று வரும்போது அதுபற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். பதில் சொல்லாமல் நாங்கள் அதிலிருந்து எங்கும் ஓடி ஒளிய மாட்டோம் என்பதை இங்குச் சொல்லிக் கொள்கிறோம். SIR நடைமுறை நாங்கள் முதன்முதலில் கொண்டுவந்தது அல்ல. முதல் SIR, 1952-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 1957, 1961, 1965-66, 1983-84 ஆண்டுகளில் இது நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் காங்கிரஸ் SIR மூலம் வாக்குத் திருட்டு செய்துதான் ஆட்சிக்கு வந்ததா? உள்துறை அமைச்சர் அமித் ஷா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா ஹரியானாவில் ஒரு வீட்டில் 501 வாக்குகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். 265-வது வீடு ஒரு சிறிய வீடு அல்ல என்றும், ஒரு குடும்பம் ஒரு ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. வீட்டிற்கு எண் இல்லை, மூன்று தலைமுறைகள் அந்த வீட்டில் வசித்து வருகின்றன. அவர்கள் போலி வீடும் அல்ல, மோசடி வாக்காளர்களும் அல்ல. அமித் ஷாவின் பேச்சிற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அமித் ஷா ஜி ஹரியானா பற்றிப் பேசினார். அவர் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்டார். இதுபோல வேறு பல முறைகேடுகள் நடந்ததற்கான உதாரணங்களும் ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஹரியானாவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபற்றி என்னுடன் விவாதிக்க அமித் ஷா ஜி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வரத் தயாரா? என்று சவால் விடுத்தார் ராகுல். ராகுல் காந்தி, அமித் ஷா அதற்கு அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் முதலில் எனது பதில்களை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். நான் எதைப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். அதை நீங்கள் சொல்லக் கூடாது. மக்களவையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். மக்களவையின் விவாதத்தை எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது. உங்கள் விருப்பதிற்குகெல்லாம் மக்களவை செயல்படாது என்றார் அமித் ஷா. உங்கள் தோல்விக்குக் காரணம் நீங்கள்தான்; EVM அல்லது SIR இல்லை - அமித் ஷா பீகார் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, பீகாரில் உங்கள் தேர்தல் பேரணிகளின்போது 'வாக்குத் திருட்டு (vote chori)' என்று மக்களிடையே பிரசாரம் செய்தீர்கள். ஆனாலும் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள். உங்கள் தோல்விக்குக் காரணம் உங்களின் தலைமையும், கட்சியின் செயல்பாடுகளும்தான். EVM அல்லது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) காரணமல்ல. நான் சொல்வது தவறு என்று நினைத்தால், உங்களது காங்கிரஸ் கட்சிக்காரர்களே ஏன் அத்தனை தேர்தல்களில் தோற்றோம் என்பதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வார்கள், உங்களிடம் கேள்வி கேட்பார்கள். ராகுல் காந்தி EVM- மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். சரி EVM-யை ஹேக் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அழைத்தபோது இவர்கள் யாரும் செல்லவில்லை. என்று பேசினார். இதையடுத்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்றார். இதையடுத்து மக்களவையில் இருந்து வெளிநடுப்பு செய்தனர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், விவாதத்தை திசை திருப்பி மலுப்பலாக தற்காக்கும் விதமாகப் பேசுகிறார். நான் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைக் கேட்டேன், அதன் முறைகேடுகளைப் பற்றி கேள்வி கேட்டேன். அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை, EVM கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டேன், அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 6:41 pm

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை - மக்களவையில் திருமா

நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக நடத்தப்படும் SIR-யை நிறுத்தாமல் நடத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. SIR-யை தேர்தயொட்டி அவசர அவசரமாக நடத்தாமல் தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்தவேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது வழக்கமாக நடைபெறுவதைப்போல இல்லாமல், மக்களின் குடியுரிமையை பரிசோதனை செய்யும் செயல்முறையாக இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. SIR - சிறப்பு தீவிர திருத்தம் ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அது அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது. வாக்குரிமையை மட்டுமல்லாமல் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கிறது. வாக்குரிமை இந்திய மக்களின் அடிப்படை உரிமை, அதை பறிக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கியாமான தூண். ஆனால், தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருதை நாடே இன்று உணர்ந்திருக்கிறது. மக்களவையில் திருமா CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா தேர்தல் ஆணையம் மக்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. அதனால் குடியுரிமையைப் பரிசோதிக்கும், இந்த அரசியல் சட்டத்தை மீறிய SIR-யை உடனே நிறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒருகோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. இந்த EVM தேர்தல் முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 5:24 pm

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூண் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை. ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. வாஞ்சிநாதன் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 4:46 pm

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், தீபத்தூணா அல்லது சர்வே நில அளவைக் கல் தூணா என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதரங்களையும் நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். அது தீபத்தூண்தான், அதில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூண் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண். அதற்கான ஆதரங்களும் தெளிவாக இருக்கின்றன. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திக்கை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முறையாக கையாளவில்லை. விதிமீறல், சட்டமீறல் நடந்திருக்கிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அவரது எல்லையை மீறி செயல்படுகிறார், அதுதான் பிரச்னை. ஜி ஆர் சுவாமிநாதன் பாஜகவில் இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்துகொண்டு அரசியல் சட்டத்தை மீறி செயல்படக் கூடாது, மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளால் பாஜக எப்படி அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது. வாஞ்சிநாதன் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் மதுரையில் மதம், சாதியைக் கடந்து மெட்ரோ, ஐடி பார்க்குகள் கொண்டுவரும் மக்களுக்குத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது. முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மதுரையில் இப்படியான பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்னைகளை கொண்டுவரவேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 4:46 pm

டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பிரச்சாரத்தை இன்று (டிச.10) திமுக தொடங்கியிருக்கிறது. 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரச்சாரம் ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! அமித்ஷா தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!… pic.twitter.com/k6R8qQRPHB — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 10, 2025

விகடன் 10 Dec 2025 3:11 pm

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர் 15 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார். அதுசம்பந்தமாக இந்தப் பொதுக்குழுவில் எதுவும் பேசப்படுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. EPS ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாக ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிருப்தியாளர்களை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பில்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆலோசனையின் முடிவில் வைத்தியலிங்கம், 'பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே கெடு. இல்லையேல் புதிய கட்சி ஆரம்பிப்போம்' என அறிவித்தார். EPS இதே சமயத்தில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்தார். கடந்த வாரத்தில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணித்து அமித்ஷாவையும் சந்தித்து வந்திருந்தார். இன்று பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும், 'அதிமுக ஒருங்கிணைவதையே அனைவரும் விரும்புகின்றனர்' என பேட்டி கொடுத்துச் சென்றார். இவற்றால்தான் அதிமுகவின் ஒருங்கிணைவு குறித்து பொதுக்குழுவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதாவது பேசப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி புள்ளிவிவரங்களுடன் அடுக்கிய அவரின் உரையின் மூலம் ஓ.பி.எஸ் நோக்கி இன்னமும் க்ரீன் சிக்னலை கொடுக்க தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? உரையின் தொடக்கத்திலேயே 2016 முதல் அதிமுக என்னென்ன இன்னல்களை சந்தித்து என பட்டியலிட்டு எடப்பாடி பேசியிருந்தார். அப்போது, 'எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் வாரிசுகள். நமக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? 2017 -ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தீர்மானம் கொண்டு வந்த போது நம்முடன் இருந்த சிலரே எதிர்க்கட்சியுடன் இணைந்து கைகோர்த்து சோதனைகளை ஏற்படுத்தினார்கள். எண்ணிப்பாருங்கள். அதையெல்லாம் தாண்டிதான் நாம் வந்தோம்' என்றார். பொதுக்குழு 2017 -ல் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் மேற்கொண்டு அவர் பக்கம் சில எம்.எல்.ஏக்கள் நின்ற சம்பவத்தைதான் எடப்பாடி பெயர் கூறாமல் குறிப்பிட்டிருந்தார். கட்சிக்குள் சேர்க்க ஓ.பி.எஸ் விடுத்த கெடுவுக்கு எடப்பாடியின் மறைமுக பதிலாகவே இதை பார்க்க முடிகிறது. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவரை கட்சிக்குள் எப்படி சேர்க்க முடியும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி கொடுத்த மெசேஜாகவும் புரிந்துகொள்ளலாம். அதேமாதிரி இன்னொரு இடத்தில், '2021 சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளை மொத்தமாக சேர்த்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் இழந்தோம். அது யாருடைய சூழ்ச்சியால் நடந்தது எனத் தெரியும்' என்றார். இதையும் இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். முன்னதாக பேசிய எஸ்.பி.வேலுமணி S.I.R குறித்துப் பேசியிருந்தார். அப்போது திமுக தில்லுமுல்லுகளை செய்யும். அதனால் அதிமுக நிர்வாகிகள் கவனமாக செயல்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார். எடப்பாடி இதை மேற்கோள்க்காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேமாதிரி, 2021 தேர்தலில் தினகரன் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியிருந்தார். அதை மனதில் வைத்து கூட எடப்பாடி பேசியிருக்கலாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் 'நீங்கள் எதிர்பார்க்கிற கூட்டணியை அண்ணன் எடப்பாடி ஏற்படுத்துவார்' என வேலுமணி பேசியிருந்தார். மேடையில் பேசிய அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த லைனை தொட்டுச் சென்றனர். பாமக, தேமுதிக போன்ற NDA வில் முன்பிருந்த கட்சிகளை மனதில் வைத்து இப்படி பேசியிருக்கலாம். ஆனால், 'ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டியே ஒன்னு திமுக இன்னொன்னு தவெக' எனப் பேசி வரும் விஜய் குறித்தும் யாரும் எதுவும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பேசியிருக்கிறார். ஆக, பிரசார பயணத்தின் போது எடப்பாடி போட்ட பிள்ளையார் சுழியை இன்னும் அழிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அதிமுக: தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

விகடன் 10 Dec 2025 2:33 pm

அதிமுக: கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இருக்கும். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. திமுக மட்டும் நமக்கு எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள். ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 1:47 pm

அதிமுக: கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இருக்கும். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. திமுக மட்டும் நமக்கு எதிரி அல்ல. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். துரோகிகள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். அதிமுக அழிந்துவிடும் என்றார்கள். ஆனால் அதிமுகவை 4 ஆண்டுகள் சிறப்பாக நிலைநிறுத்தி காட்டியிருக்கிறார் எடப்பாடி அவர்கள். இதுதான் அதிமுகவின் சரித்திரம். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் யார் போனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். இது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. இது கோபாலபுரம் குடும்பம் அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். 2026-ல் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களை அமர வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 10 Dec 2025 1:47 pm

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்​டமன்றத் தேர்​தல் குறித்​தும், தி.மு.க அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்னெடுப்பது குறித்தும் பல அறி​விப்​பு​கள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டன. சகோதரத்துவம் சமத்துவம் ஆகிவற்றை எக்காலமும் பேணிக்காப்பது நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோர்த்து சோதனைகளை உருவாக்கினார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க. அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். என்றார். (தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உரை இங்கு அப்டேட் செய்யப்படும்!) ``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

விகடன் 10 Dec 2025 1:44 pm

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்​டமன்றத் தேர்​தல் குறித்​தும், தி.மு.க அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்னெடுப்பது குறித்தும் பல அறி​விப்​பு​கள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டன. சகோதரத்துவம் சமத்துவம் ஆகிவற்றை எக்காலமும் பேணிக்காப்பது நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோர்த்து சோதனைகளை உருவாக்கினார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க. அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார். என்றார். (தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உரை இங்கு அப்டேட் செய்யப்படும்!) ``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

விகடன் 10 Dec 2025 1:44 pm

அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. நீண்டகால நண்பர் என்பதால் கோவையில் சந்தித்து பேசினோம். அதில் அரசியல் உறுதியாக இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலில்படி நடக்கிறது. அதன்அடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தேர்வு செய்து கொடுக்கிறது. தவெக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அனுமதி கேட்டபோது கூட காலஅவகாசம் கேட்டதாக செய்திகளில் பார்த்தேன்.” என்றார். டி.டி.வி.தினகரன் `125 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்’ என கேட்டதற்கு, ``யார் எதற்காக இடித்தார்கள் என்ன காரணம் என தெரியாமல் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செய்வதை மதங்களைக் கடந்து வாழ்கின்ற மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கூட்டணி ஆட்சி அமைகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும், அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர், ``மற்ற கட்சியில் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது உங்களுக்கே தெரியும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் போதை கலாசாரம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதது அதிகளவில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு முழுமையான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வரவேண்டுமென பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். எந்த கட்சியில் பேசுகிறது என்று தற்போது கூற முடியாது” என தெரிவித்தார்.

விகடன் 10 Dec 2025 1:37 pm

அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. நீண்டகால நண்பர் என்பதால் கோவையில் சந்தித்து பேசினோம். அதில் அரசியல் உறுதியாக இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலில்படி நடக்கிறது. அதன்அடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தேர்வு செய்து கொடுக்கிறது. தவெக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அனுமதி கேட்டபோது கூட காலஅவகாசம் கேட்டதாக செய்திகளில் பார்த்தேன்.” என்றார். டி.டி.வி.தினகரன் `125 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்’ என கேட்டதற்கு, ``யார் எதற்காக இடித்தார்கள் என்ன காரணம் என தெரியாமல் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செய்வதை மதங்களைக் கடந்து வாழ்கின்ற மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கூட்டணி ஆட்சி அமைகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும், அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர், ``மற்ற கட்சியில் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது உங்களுக்கே தெரியும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் போதை கலாசாரம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதது அதிகளவில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு முழுமையான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வரவேண்டுமென பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். எந்த கட்சியில் பேசுகிறது என்று தற்போது கூற முடியாது” என தெரிவித்தார்.

விகடன் 10 Dec 2025 1:37 pm

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம கம உணவுகள்! | Album

அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்

விகடன் 10 Dec 2025 1:01 pm

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம கம உணவுகள்! | Album

அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள் அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்

விகடன் 10 Dec 2025 1:01 pm

USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!

அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் - எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை அமெரிக்க சட்டப்படி அமெரிக்கராகவே கருதப்படும் எனச் சட்டமியற்றப்பட்டது. அதன்படி, அமெரிக்க அரசியலைப்பின் 14-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1868, ``அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள். என வரையறுக்கிறது. அந்தச் சட்டம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது. ட்ரம்ப் இந்தச் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 2025-ல், சட்டவிரோத குடியேறிகள், சுற்றுலா விசா போன்ற தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது. இதற்கு முன் அத்தகைய குடியுரிமைப் பெற்றவர்களிடமிருந்து குடியுரிமை திரும்பப்பெறப்படாது. இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கே இந்த சட்டம் செல்லும்' என அறிவித்தார். அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனமான பொலிட்டிகோவிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்த வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சட்டம் அடிமைகளின் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் ஆண்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ட்ரம்ப் அது உள்நாட்டுப் போருடன் தொடர்புடையது. வேறொரு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து, இங்கு குழந்தைப்பெறும் சில பணக்காரர்கள் நம் நாட்டில் கால் வைப்பதற்காக அந்தச் சட்டம் இல்லை. திடீரென்று பெரும் பணக்காரரின் முழு குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுகிறது. அது எப்படி நடக்கிறது என இப்போது மக்கள் இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள். நீதிமன்றமும் அதைப் புரிந்துகொள்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்த வழக்கில் நாம் தோற்றால் அது ஒரு பேரழிவு தரும் முடிவாக இருக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்

விகடன் 10 Dec 2025 11:46 am

``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்​டமன்றத் தேர்​தல் குறித்​தும், தி.மு.க அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்னெடுப்பது குறித்தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், ``கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். அதிமுக பொதுக்குழு கூட்டம் தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர். அவரின் ஆசியோடும், உங்களின் ஆதரவோடும் தீர்மானத்தை வாசிக்கிறேன். பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது ! ஆர்.பி. உதயகுமார் வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் (i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது! கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்! (ii)சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்! மதுரை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு! ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும்! அத்தகைய வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.I.R.) கழகம் வரவேற்கிறது! முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். (i) விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது! (ii) தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, 'தானும் டெல்டாக்காரன்' என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் ! நயினார், எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! |இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம் படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடனாளிகளாக்கும் கண்டனம்! சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்! முதல்வர் ஸ்டாலின் 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 'நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக போலி மாடல் அரசுக்கும், முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கண்டனம். நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்: அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது! மீண்டும் முதலமைச்சராக்குவோம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித் துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. மக்களும் முறையான நீதியை பெறுவதற்காக, தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களையே நாடுகிறார்கள். நீதி தேவதையிடம் நீதியை எதிர்பார்த்து மக்கள் நம்பிக்கையோடு இருந்துவரும் நிலையிலும், இன்றைய திமுக ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும்; தங்களுக்கு பாதகமான தீர்ப்பு என்று கருதும்போது, அத்தீர்ப்பை வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சிக்கும் போக்கு, நீதித் துறையையும், நீதிபதிகளையும், சுதந்திரமாக செயல்படவிடாமல் மறைமுகமாக அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், தங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால், அவற்றை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வது தேவையில்லாமல் அரசு நிதியை செலவு செய்து, மேல்முறையீடு என்ற வாய்ப்பைய் பயன்படுத்திக்கொண்டு தீர்ப்புகளை செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடுவது திமுக ஆட்சியின் வாடிக்கையாகிவிட்டது. அதோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தீர்ப்புக்கு தவறான விளக்கம் கொடுப்பது தீர்ப்பை விமர்சிப்பது; அதன் வாயிலாக நீதிபதிகளை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது, ஆட்சியாளர்களின் நீதித் துறையை மதிக்காத போக்கையே காட்டுகிறது. நீதித் துறை தனித் தன்மையோடு இயங்கும் உச்சபட்ச அமைப்பாகும். நீதித் துறை நிர்வாகத்திற்கென்று 'கொலிஜியம்' என்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு இருக்கிறது. கொலிஜியம் எடுக்கும் முடிவுகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எந்தெந்த வகையில் முட்டுக்கட்டை போடமுடியுமோ, அந்தந்த வகையில் முட்டுக்கட்டை போட அரசே முயலுகிறது. இத்தகைய ஆட்சியாளர்களின் செயல்கள் நீதித் துறைக்கே சவால் விடுவதாக இருக்கிறது. நீதித் துறையை முடக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்களால், மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை குறைந்து வருவதைப் போல, நீதித் துறை மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்தால், மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் 10 Dec 2025 11:45 am

``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்​டமன்றத் தேர்​தல் குறித்​தும், தி.மு.க அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்னெடுப்பது குறித்தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், ``கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். அதிமுக பொதுக்குழு கூட்டம் தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர். அவரின் ஆசியோடும், உங்களின் ஆதரவோடும் தீர்மானத்தை வாசிக்கிறேன். பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது ! ஆர்.பி. உதயகுமார் வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் (i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது! கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்! (ii)சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்! மதுரை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு! ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும்! அத்தகைய வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.I.R.) கழகம் வரவேற்கிறது! முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். (i) விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது! (ii) தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, 'தானும் டெல்டாக்காரன்' என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் ! நயினார், எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! |இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம் படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடனாளிகளாக்கும் கண்டனம்! சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்! முதல்வர் ஸ்டாலின் 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 'நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக போலி மாடல் அரசுக்கும், முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கண்டனம். நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்: அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது! மீண்டும் முதலமைச்சராக்குவோம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித் துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. மக்களும் முறையான நீதியை பெறுவதற்காக, தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களையே நாடுகிறார்கள். நீதி தேவதையிடம் நீதியை எதிர்பார்த்து மக்கள் நம்பிக்கையோடு இருந்துவரும் நிலையிலும், இன்றைய திமுக ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும்; தங்களுக்கு பாதகமான தீர்ப்பு என்று கருதும்போது, அத்தீர்ப்பை வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சிக்கும் போக்கு, நீதித் துறையையும், நீதிபதிகளையும், சுதந்திரமாக செயல்படவிடாமல் மறைமுகமாக அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், தங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால், அவற்றை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வது தேவையில்லாமல் அரசு நிதியை செலவு செய்து, மேல்முறையீடு என்ற வாய்ப்பைய் பயன்படுத்திக்கொண்டு தீர்ப்புகளை செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடுவது திமுக ஆட்சியின் வாடிக்கையாகிவிட்டது. அதோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தீர்ப்புக்கு தவறான விளக்கம் கொடுப்பது தீர்ப்பை விமர்சிப்பது; அதன் வாயிலாக நீதிபதிகளை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது, ஆட்சியாளர்களின் நீதித் துறையை மதிக்காத போக்கையே காட்டுகிறது. நீதித் துறை தனித் தன்மையோடு இயங்கும் உச்சபட்ச அமைப்பாகும். நீதித் துறை நிர்வாகத்திற்கென்று 'கொலிஜியம்' என்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு இருக்கிறது. கொலிஜியம் எடுக்கும் முடிவுகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எந்தெந்த வகையில் முட்டுக்கட்டை போடமுடியுமோ, அந்தந்த வகையில் முட்டுக்கட்டை போட அரசே முயலுகிறது. இத்தகைய ஆட்சியாளர்களின் செயல்கள் நீதித் துறைக்கே சவால் விடுவதாக இருக்கிறது. நீதித் துறையை முடக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்களால், மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை குறைந்து வருவதைப் போல, நீதித் துறை மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்தால், மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் 10 Dec 2025 11:45 am

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயாராகி வருகிறது. இதுதொடர்பான உணவுப் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா, மீன் வறுவல், அல்வா, மட்டன், மட்டன் குழம்பு, சாதம், தால்சா போன்ற உணவுகளும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வடை, பாயாசம், காரக்குழம்பு, மோர், பொரியல் போன்றவைகளும் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

விகடன் 10 Dec 2025 11:30 am

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயாராகி வருகிறது. இதுதொடர்பான உணவுப் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா, மீன் வறுவல், அல்வா, மட்டன், மட்டன் குழம்பு, சாதம், தால்சா போன்ற உணவுகளும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வடை, பாயாசம், காரக்குழம்பு, மோர், பொரியல் போன்றவைகளும் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

விகடன் 10 Dec 2025 11:30 am

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயாராகி வருகிறது. இதுதொடர்பான உணவு பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா, மீன் வறுவல், அல்வா, மட்டன், மட்டன் குழம்பு, சாதம், தால்சா போன்ற உணவுகளும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வடை, பாயாசம், காரக்குழம்பு, மோர், பொரியல் போன்றவைகளும் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

விகடன் 10 Dec 2025 11:30 am

`மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

'மீண்டும் மஞ்சப்பை'திட்டம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்து, நமது பாரம்பரிய மஞ்சப்பையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவே தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் “மீண்டும் மஞ்சப்பை” திட்டமாகும். 2021 ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமே -சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இத்தகைய திட்டங்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை, குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் சிறந்த முயற்சிகளாக இருந்து வருகின்றன. மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை மாநில அளவில் பரிசு தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளது. அதில், மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தங்கள் வளாகத்திலும் வளாகத்திற்கு வெளியிலும் முழுவதுமாக தவிர்த்து, அதற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் சிறந்த மூன்று பள்ளிகள், மூன்று கல்லூரிகள், மூன்று வணிக நிறுவனங்களுக்கு மாநில அளவில் பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாகட்டும் ‘மஞ்சப்பை இயக்கம்!’ மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், மஞ்சப்பை விருது”களை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில்அல்லது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் ( tnpcb.gov.in ) டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன் (soft copy) இரண்டு அச்சுப் பிரதிகள் (hard copy) அந்தந்த மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ``இனி `மஞ்சப்பை' கிராமத்தானின் அடையாளம் அல்ல! - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்டாலின்

விகடன் 10 Dec 2025 11:10 am

நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்டோம்' - பாஜக உறுதி

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். அதோடு தேர்தலின் போது சிவசேனாவில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவினர் தங்களது கட்சிக்கு இழுத்து வந்தனர். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த மாதம் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேயுடன் சமாதானமாக செல்ல பா.ஜ.க முடிவு செய்துள்ளது. பட்னாவிஸ் இதற்காக நாக்பூரில் ஏக்நாத் ஷிண்டேயை அழைத்து இரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான், அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் ரவீந்திர சவான் தான் சிவசேனாவில் இருந்து பல தலைவர்களை பா.ஜ.கவிற்கு கொண்டு வந்தார். பா.ஜ.க தலைவர்களுடன் ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் இரு கட்சிகளும் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தலைவர்களை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இனி சிவசேனாவில் இருந்து தலைவர்களை எடுக்க மாட்டோம் என்று பா.ஜ.க தலைவர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். மேலும் மும்பை மற்றும் தானே மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மும்பை, தானே மாநகராட்சி தேர்தலுக்கு தனித்தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைத்து வார்டு பங்கீடு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மும்பை மாநகராட்சி வார்டு பங்கீடு குறித்து இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். பேச்சுவார்த்தையில் தலைவர்கள் இழுப்பை நிறுத்தும்படி ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார். இப்பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் உள்ளூர் தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள்''என்றார். மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி தேர்தலிலும் தங்களது கட்சிக்கு கணிசமான வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி இருக்கிறார். அதோடு மும்பை, தானேயில் முந்தைய தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை மாநகராட்சியை கடந்த முறையே பா.ஜ.க குறிவைத்தது. ஆனால் கடந்த முறை சிவசேனா ஒரு சில வார்டுகள் அதிகமாக பெற்றதால் மேயர் பதவியை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் 10 Dec 2025 10:48 am

BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?

அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது. போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. டெல்லி பறந்த அண்ணாமலை! அமித் ஷாவின் அவசர அழைப்பு இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார். அண்ணாமலை, தினகரன் முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம். 'என்னால் தனிக்கட்சி தொடங்க முடியாது!' பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, 'வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், 'வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அன்புமணி, ராமதாஸ் பரபரப்பில் கமலாலயம்..' 'அடுத்தடுத்த சந்திப்புகள்.. அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், 'நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்' என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அமித்ஷா இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர் விரிவாக. இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார். குபேந்திரன் அதேநேரத்தில், 'எடப்பாடி வேண்டாம் என்பதில்' டி.டி.வி தினகரனும், 'அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும் என்றார். 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

விகடன் 10 Dec 2025 10:31 am

BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?

அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது. போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. டெல்லி பறந்த அண்ணாமலை! அமித் ஷாவின் அவசர அழைப்பு இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார். அண்ணாமலை, தினகரன் முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம். 'என்னால் தனிக்கட்சி தொடங்க முடியாது!' பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, 'வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், 'வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அன்புமணி, ராமதாஸ் பரபரப்பில் கமலாலயம்..' 'அடுத்தடுத்த சந்திப்புகள்.. அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், 'நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்' என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அமித்ஷா இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர் விரிவாக. இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார். குபேந்திரன் அதேநேரத்தில், 'எடப்பாடி வேண்டாம் என்பதில்' டி.டி.வி தினகரனும், 'அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும் என்றார். 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

விகடன் 10 Dec 2025 10:31 am

BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?

அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது. போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. டெல்லி பறந்த அண்ணாமலை! அமித் ஷாவின் அவசர அழைப்பு இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார். அண்ணாமலை, தினகரன் முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம். 'என்னால் தனிக்கட்சி தொடங்க முடியாது!' பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, 'வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், 'வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அன்புமணி, ராமதாஸ் பரபரப்பில் கமலாலயம்..' 'அடுத்தடுத்த சந்திப்புகள்.. அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், 'நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்' என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அமித்ஷா இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர் விரிவாக. இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார். குபேந்திரன் அதேநேரத்தில், 'எடப்பாடி வேண்டாம் என்பதில்' டி.டி.வி தினகரனும், 'அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும் என்றார். 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

விகடன் 10 Dec 2025 10:31 am

``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். பள்ளிக்கு ஊர்வலமாக சென்ற ம.க.ஸ்டாலின் இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை பள்ளியிலிருந்து சக மாணவர்களுடன் வீட்டுக்குச் சென்ற கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் கவியரசன் தலையில் கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவியரசனை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். விழுப்புரம்: தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கினாரா பள்ளி மாணவர்?- என்ன நடந்தது? கவியரசன் தாய் ராஜலெட்சுமி, என் மகனை 25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்று விட்டனர். ஆனால், அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என யாரும் வந்து எங்களுக்கு ஆறுதலாக நிற்கவில்லை என கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனை தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து கவியரசனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த பட்டீஸ்வரம் அரசுப்பள்ளி மாணவன் கவியரசன் இந்நிலையில், கவியரசன் கொலை தொடர்பாக, வருவாய் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, விரைவில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் வருகிறது. மாணவர்கள் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக கூடாது. எந்த பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது. முழுமையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரகசியமாக பேபியிடம் பள்ளியில் நடக்கும் குறைகளை சொன்னதாக சொல்கிறார்கள். கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் - நடந்தது என்ன? இந்நிலையில், பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளரான ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ம.க.ஸ்டாலின், நிர்வாகிகளுடன் பள்ளி தலைமை ஆசிரியரை, சந்திப்பதற்கு ஊர்வலமாக பட்டீஸ்வரம் வந்தார். இதனை அறிந்த போலீசார், அவரை, கடைவீதியில் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்பினர். பின்னர் ம.க.ஸ்டாலின் இனாம்கிளியூர் சென்று கவியரசன் பெற்றோரை சந்திந்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, ம.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளியில், உள்ளூர் மாணவர்கள், ஃபேவர் பிளாக் கொண்ட நடைபாதையிலும், வெளியூர் மாணவர்கள் மண் பாதையிலும் நடக்க வேண்டும் என பல மாதங்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தபிரச்னையை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறி விட்டனர். கவியரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலுக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் என ஒருவர் கூட அஞ்சலி செலுத்த செல்லவில்லை. கரூர் சம்பவத்தில் கலங்கி குலுங்கி அழுத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி சீருடையில், ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இதுவரை வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, கொலை செய்த மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த வெளிநபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவனின் குடும்பத்தினர் பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதால் யாரும் சென்று அறுதல் கூறவில்லையா, இதிலும் அரசியல் உள்ளதா என தெரியவில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். பள்ளிக்கூடத்தின் உள்ளேயே உள்ளூர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

விகடன் 10 Dec 2025 7:58 am

``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். பள்ளிக்கு ஊர்வலமாக சென்ற ம.க.ஸ்டாலின் இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை பள்ளியிலிருந்து சக மாணவர்களுடன் வீட்டுக்குச் சென்ற கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் கவியரசன் தலையில் கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவியரசனை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். விழுப்புரம்: தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கினாரா பள்ளி மாணவர்?- என்ன நடந்தது? கவியரசன் தாய் ராஜலெட்சுமி, என் மகனை 25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்று விட்டனர். ஆனால், அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என யாரும் வந்து எங்களுக்கு ஆறுதலாக நிற்கவில்லை என கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனை தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து கவியரசனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த பட்டீஸ்வரம் அரசுப்பள்ளி மாணவன் கவியரசன் இந்நிலையில், கவியரசன் கொலை தொடர்பாக, வருவாய் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, விரைவில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் வருகிறது. மாணவர்கள் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக கூடாது. எந்த பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது. முழுமையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரகசியமாக பேபியிடம் பள்ளியில் நடக்கும் குறைகளை சொன்னதாக சொல்கிறார்கள். கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் - நடந்தது என்ன? இந்நிலையில், பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளரான ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ம.க.ஸ்டாலின், நிர்வாகிகளுடன் பள்ளி தலைமை ஆசிரியரை, சந்திப்பதற்கு ஊர்வலமாக பட்டீஸ்வரம் வந்தார். இதனை அறிந்த போலீசார், அவரை, கடைவீதியில் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்பினர். பின்னர் ம.க.ஸ்டாலின் இனாம்கிளியூர் சென்று கவியரசன் பெற்றோரை சந்திந்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, ம.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளியில், உள்ளூர் மாணவர்கள், ஃபேவர் பிளாக் கொண்ட நடைபாதையிலும், வெளியூர் மாணவர்கள் மண் பாதையிலும் நடக்க வேண்டும் என பல மாதங்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தபிரச்னையை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறி விட்டனர். கவியரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலுக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் என ஒருவர் கூட அஞ்சலி செலுத்த செல்லவில்லை. கரூர் சம்பவத்தில் கலங்கி குலுங்கி அழுத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி சீருடையில், ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இதுவரை வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, கொலை செய்த மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த வெளிநபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவனின் குடும்பத்தினர் பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதால் யாரும் சென்று அறுதல் கூறவில்லையா, இதிலும் அரசியல் உள்ளதா என தெரியவில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். பள்ளிக்கூடத்தின் உள்ளேயே உள்ளூர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

விகடன் 10 Dec 2025 7:58 am

``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் RSS அரசின் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக குற்றம்சாட்டி பேசி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தி இதில் RSS அமைப்புக் குறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை நெஞ்சில் மூன்று குண்டுகளால் சுட்டுக் கொலை செய்தான் நாத்தூராம் கோட்சே. அதன்பிறகு CBI, அமலாக்கத் துறை, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து அரசின் அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டது ராகுல் காந்தி இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ராகுல் காந்தி, இந்த உண்மை உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும் என்றார். அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிதான் நான் பேச வருகிறேன். இதெல்லாம் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றபிறகு, RSS அமைப்பு அரசின் அமைப்புகளை கைப்பற்றத் தொடங்கியதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதனால்தான் இந்த கசப்பான உண்மையை முதலில் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் சொல்லவருவது என்னவென்றால் RSS அமைப்பு அரசின் மற்ற அமைப்புகளை எப்படி கைப்பற்றியதோ, அந்த வரிசையில் இப்போது இந்தியத் தேர்தல் ஆணையமும் RSS அமைப்பால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதை நாடே அறியும். மக்களவையில் கிரண் ரிஜிஜு, அமித் ஷா மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்! முதலில் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றினார்கள். அங்கெல்லாம் அறிவியலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பரப்பினார்கள், தங்களுக்கு வசதினார்களை உயர் பதவிகளில் அமர வைத்தார்கள். இரண்டாவதாக இந்தியாவின் இந்திய புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை கைப்பற்றினார்கள். யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை, அரசியல் எதிரியோ அவர்களை எல்லாம் குறிவைத்துத் தாக்கினார்கள். மூன்றாவதாக ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் ஜனநாயகத்தை சீர்கெடுத்திருக்கிறது என்பதற்கான ஆதரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது. பிரதமரும், அமித்ஷாவும் எப்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகளைத் தேர்வு செய்ய முடியும்? பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேர்தல் ஆணையருக்கு ஏன் இந்த விலக்கு பரிசை வழங்க வேண்டும்? தேர்தல்களின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும். வாக்களித்த 45 நாட்களுக்கு பிறகு அதை அழிக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது ஏன்? ராகுல் காந்தி CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறை கேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரின் புகைப்படம் இந்தியாவின் ஹரியானா தேர்தல் வாக்காளர் பட்டியலில் 22முறை இடம்பெற்றிப்பது எப்படி? இதுபோல பல போலியான வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பது ஏன்? தேர்தல் நடக்கப்போகும் சமயத்தில் அவசர அவசரமாக ஏன் SIR-யை செயல்படுத்த வேண்டும்? இவையெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் செய்ததில் மிகப்பெரிய தவறு 'வாக்குத் திருட்டு'தான். அது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக்கியிருக்கிறது. என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் இன்று அளிப்பார் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் 10 Dec 2025 7:07 am

சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல - திமுக அரசுக்கு எதிராகச் சீறும் கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா அவர் பேசியதாவது, எங்களுடைய சம்பவம் நடந்தபோது கலைஞர் கருணாநிதி, 'தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த தகவல் வந்துள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடைமுறைகளை பின்பற்றி மக்கள் மத்தியில் சாதிய கொடுமைகளைக் களைய வழிவகுக்க வேண்டும்' என எங்களுக்கு ஆதரவளித்திருந்தார். 2017 இல் திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளான அன்னலெட்சுமியும் பாண்டிதுரையும் விடுவிக்கப்பட்டனர். 2020 இல் A1 குற்றவாளியான சின்னசாமி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள், 'சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தவறிவிட்டது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் தண்டனை குறைப்பும் விடுவிப்புமே தீர்ப்பாக வந்துள்ளன. அரசுத்தரப்பில் உரிய ஆதாரங்களைச் சாட்சியங்களைச் சமர்பிக்க காவல்துறை தவறியுள்ளது. மாதம் ஓர் ஆணவக்கொலை... என்னதான் தீர்வு? #Avaludan உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிலாவது தமிழக அரசு கௌசல்யாவுக்கு துணை நின்று நீதிபெற்றுக் கொடுக்குமா? என என் பக்கம் நின்று பேசியிருந்தார். ஆனால், அதே ஸ்டாலின் இப்போது முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் எனக்கு நீதி கிடைக்க துணையாக இருந்திருக்க வேண்டும். அவர் துணையாக நிற்கவில்லையே. சிசிடிவியில் பதிவான நபர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துதான் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய அரசு துணையாக இல்லை. பல முறை விரைவு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். அதையும் அரசு மெத்தனப்போக்காகத்தான் அணுகியது. கடைசியாக நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவணங்களை மொழிப்பெயர்க்க ஆறு மாத அவகாசம் தேவை என்றனர். சாதிய வாக்குகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்களின் வழக்கை மெத்தனமாக இழுத்தடிக்க முயல்கிறார்கள். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா உங்களால் 6 மாதத்தில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடியுமெனில், ஐந்தரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? அரசு சார்பில் ஒரு விரைவு மனுவைக் கூட தாக்கல் செய்யவில்லையே? அரசு வழக்கறிஞர்களும் யாரும் என்னை அழைத்துப் பேசவில்லையே. எங்களை வெட்டிய அந்தக் கூலிப்படைக்கும் எங்களுக்கும் என்ன முன் தகராறு இருக்கிறது? அவர்கள் ஏன் எங்களை வெட்ட வேண்டும்? உண்மையில், அவர்களின் பின்னால் இருப்பவர்களைத்தான் நாம் உறுதியாகத் தண்டிக்க வேண்டும். சாதியவாதிகளின் வாக்குதான் வேண்டுமென்றால் அதை வெளிப்படையாகக் கூறுங்கள். எதற்காக சமூக நீதி அரசு, கௌசல்யாவுடன் துணை நிற்போம் என்றெல்லாம் பேசினீர்கள்? இதில் கவனம் செல்லுத்தினால் சாதியவாதிகளின் வாக்கு போய்விடும் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழகம் அப்படியான மண் அல்ல எனக் காட்டமாகப் பேசி முடித்தார். சாதி ஆணவக்கொலை அதிகரிக்கிறது... தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது! - பெ.சண்முகம் Exclusive Interview கௌசல்யா பேசி முடித்தவுடன், அவரிடம் தனியாகவும் உரையாடினோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மனரீதியாக நீங்கள் எப்படியான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்? சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியொரு சம்பவத்திலிருந்து மனரீதியாக மீண்டு வருவதே பெரும் போராட்டம். அதிலிருந்து மீண்டு வந்து இதையே பணியாக எடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். மக்கள் மத்தியில் ஆணவப்படுகொலைகளைப் பற்றியும் சாதிய ஒழிப்பைப் பற்றியும் தீவிரமாகப் பேசி வருகிறேன். அப்படியிருக்க ஒரு அரசின் இப்படியான மெத்தனப் போக்குகள் என் கால்களைப் பிடித்து இழுப்பதைப் போன்ற அயர்ச்சியைக் கொடுக்கிறது. எனக்கு நீதி கிடைத்தால்தானே, அதைச் சாட்சியாக வைத்து என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்குமென நம்பிக்கையூட்ட முடியும்? இப்போது அந்த நம்பிக்கையையே இவர்கள் அறுத்துப் போட முயல்கிறார்கள். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா அப்போதைய கலைஞரும், இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் உங்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்ததைக் குறிப்பிட்டீர்கள். இப்போது எங்கே அவர்கள் தவறி நிற்கிறார்கள் என நினைக்கிறார்கள்? திமுக ஆட்சியமைந்த போது நிஜமாகவே எனக்கு நீதி கிடைக்கும் என நம்பினேன். சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன். ஆனால், நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தாமதிக்கிறார்கள். வழக்கை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்முறையீட்டில் கொலை செய்த தரப்புக்கு எதிராக எந்த வாதத்தையும் முன் வைக்கவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் 15,000 பக்கங்கள் கொண்ட வழக்கின் கோப்புகளில் 500 பக்கங்களைக் காணவில்லை எனக் கூறினர். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா அதை வைத்தே மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டனர். இப்போது மொழிப்பெயர்க்க வேண்டுமென 6 மாதங்களைக் கேட்கிறார்கள். இவ்வளவு அலட்சியத்தைப் பார்க்கையில், இந்த வழக்கில் நீதி கிடைக்கக் கூடாதென அரசு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதைப் போல தோன்றுகிறது. சமூக நீதி பேசும் இந்த அரசே ஆணவக்கொலைக்கு எதிராக வலுவாக நிற்கவில்லையெனில் வேறெந்த கட்சி, வேறெந்த அரசு சாதியவாதிகளுக்கு எதிராக நிற்கும்? DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே? ஆணவப்படுகொலைகளுக்குத் தனிச்சட்டம் இயற்ற முதல்வர் ஒரு கமிஷனை அமைத்திருக்கிறாரே. அதையெல்லாம் நீங்கள் ஒரு நம்பிக்கையாக பார்க்கவில்லையா? ஆணவக்கொலைகளுக்குத் தனிச்சட்டம் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்த முதல்வர், இப்போது தனி கமிஷன் அமைத்திருப்பது நம்பிக்கையான விஷயம். அடுத்தடுத்த ஆணவப்படுகொலையால் மக்கள் மத்தியில் எழுந்த அழுத்தத்தால் அந்த கமிஷனை அமைத்திருக்கிறார். ஆனால், அந்த கமிஷன் எப்படி செயல்படுகிறது எனப் பாருங்கள். கமிஷன் அமைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்ட யாரையும் அந்த கமிஷன் சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் எப்படி சட்டம் இயற்றுவீர்கள்? இதிலும் மெத்தனப் போக்கைக் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை - கௌசல்யா ஆளுங்கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். அதிமுக, பாஜக, விசிக, கம்யூனிஸ்டுகள், புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக என எந்த எதிர்க்கட்சியாவது உங்களை அணுகினார்களா? வழக்கு விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார்களா? விசிகவும் இடதுசாரி கட்சிகளுமே தொடர்ச்சியாக எனக்காக நிற்கின்றன. என் வலியை அதிகார வர்க்கத்திற்குக் கடத்த முயற்சிக்கின்றனர். அவர்களின் அழுத்தத்தால்தான் இப்போது கமிஷன் வரை வந்திருக்கிறார்கள். மற்ற எந்தக் கட்சியும் எனக்காக நிற்கவில்லை. ஆணவக்கொலை எனப் பேசவே அவர்கள் பயப்படுகிறார்களே. அந்த வார்த்தையை உச்சரிக்கவே தயங்குபவர்கள் எப்படி எனக்காக நிற்பார்கள்? ஆணவப்படுகொலைகளை இன்னும் பிளவு அரசியல் செய்யத்தான் அவர்கள் நினைப்பார்கள். சமூகநீதி பேசும் கட்சியே அவ்வளவு மெத்தனமாக இருக்கும் போது, மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? என்று பதிலளித்தார். `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்

விகடன் 9 Dec 2025 9:28 pm

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்- செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். விஜய், செங்கோட்டையன் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் செங்கோட்டையன், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன. மொத்தம் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக மழை பெய்தால் என்ன செய்வீர்கள், வெயில் அடித்தால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் இதுவரை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்திய பின்பு சரியான தேதியை அறிவிப்போம். செங்கோட்டையன் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும். அவர்கள் கொடுத்த விதிகளை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கரூர் சம்பவ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அனுமதியை மறுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சரியான வழியில் இந்த அனுமதியைப் பெறவதற்காக வேலைகளைச் செய்து வருகிறோம். இன்னும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன இந்த அனுமதியைப் பெறுவதில். சொல்லத்தான் நினைக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும் என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

விகடன் 9 Dec 2025 8:53 pm

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்- செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். விஜய், செங்கோட்டையன் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் செங்கோட்டையன், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன. மொத்தம் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக மழை பெய்தால் என்ன செய்வீர்கள், வெயில் அடித்தால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் இதுவரை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்திய பின்பு சரியான தேதியை அறிவிப்போம். செங்கோட்டையன் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும். அவர்கள் கொடுத்த விதிகளை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கரூர் சம்பவ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அனுமதியை மறுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சரியான வழியில் இந்த அனுமதியைப் பெறவதற்காக வேலைகளைச் செய்து வருகிறோம். இன்னும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன இந்த அனுமதியைப் பெறுவதில். சொல்லத்தான் நினைக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும் என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

விகடன் 9 Dec 2025 8:53 pm

அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2020-இல் செங்கோட்டையனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த, அவரது சொந்த அண்ணன் மகனான கே.கே.செல்வம், இன்று திமுக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்துள்ளது ஈரோடு மாவட்ட அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டியபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் கே.கே.செல்வம். செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகனான இவர், சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பாவுடன் சேர்ந்து அதிமுக-வில் பயணித்து வந்தார். அவருக்கும் செங்கோட்டையனுக்கு இடையே 2020-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வில் செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை திமுக தலைமை நீக்கியது. செல்வம்-முதல்வர் ஸ்டாலின் செல்வம் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கட்சியின் சீனியர்களிடம் விசாரித்தோம். செங்கோட்டையனிடம் முரண்பாடு ஏற்பட்டுதான் திமுக-வுக்கு செல்வம் வந்தார். அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அதிமுக மீதான பழைய பாசம் விட்டுப்போகவில்லை. திமுக-விலும் கட்சி வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில்தான், தனது சொந்த சித்தப்பாவான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. செங்கோட்டையன் இடத்தைப் பிடிக்க திட்டமிட்ட செல்வம், அதிமுக மண்டலப் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து, தான் மீண்டும் அதிமுக-வில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.! - செங்கோட்டையன் இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்ட அவரும் செல்வத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். இது உளவுத்துறை மூலமாக திமுக தலைமைக்கு எட்டவே, ஏற்கெனவே கொங்கு மண்டலம் திமுக-வுக்குப் பலவீனமாக உள்ளது. அதிலும், செங்கோட்டையனின் அண்ணன் மகனான செல்வம் திமுக-வில் இருக்கும்போதே அதிமுக-வுக்குச் சென்றால் அது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும், எனவே, செல்வம் அதிமுக-வுக்குச் செல்லும் முன் அவசர அவசரமாக கட்சியில் இருந்து நீக்கி உள்ளது திமுக தலைமை என்றனர். விரிவாக. செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டப்பட்டேன் இதுகுறித்து செல்வத்திடம் பேசினோம். செங்கோட்டையன் அதிமுக-வுக்குத் துரோகம் செய்துவிட்டு தவெக-வுக்குச் சென்றுவிட்டார். கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. நிறைய அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் அதிமுக-வுக்கு மீண்டும் வர வேண்டுமென விரும்பினார்கள். அதனால், நான் அதிமுக-வுக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரான நல்லசிவம் என்னை தொடக்கத்தில் இருந்தே ஓரங்கட்டி வந்தார். என்னைச் செயல்படவே அவர் விடவில்லை. மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளரான கோபாலபுரம் எஸ்.ஏ. ரமேஷ், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிக் கொண்டு மருந்து வணிகர்கள் சங்கத்துக்குச் சொந்தமான சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பள்ளியை அபகரிக்க முயன்றார். இதுதொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து என்னை நீக்கினர். அதனால்தான் அதிமுக-வுக்கே மீண்டும் வந்துவிட்டேன் என்றார். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

விகடன் 9 Dec 2025 8:32 pm

அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2020-இல் செங்கோட்டையனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த, அவரது சொந்த அண்ணன் மகனான கே.கே.செல்வம், இன்று திமுக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்துள்ளது ஈரோடு மாவட்ட அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டியபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் கே.கே.செல்வம். செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகனான இவர், சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பாவுடன் சேர்ந்து அதிமுக-வில் பயணித்து வந்தார். அவருக்கும் செங்கோட்டையனுக்கு இடையே 2020-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வில் செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை திமுக தலைமை நீக்கியது. செல்வம்-முதல்வர் ஸ்டாலின் செல்வம் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கட்சியின் சீனியர்களிடம் விசாரித்தோம். செங்கோட்டையனிடம் முரண்பாடு ஏற்பட்டுதான் திமுக-வுக்கு செல்வம் வந்தார். அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அதிமுக மீதான பழைய பாசம் விட்டுப்போகவில்லை. திமுக-விலும் கட்சி வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில்தான், தனது சொந்த சித்தப்பாவான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. செங்கோட்டையன் இடத்தைப் பிடிக்க திட்டமிட்ட செல்வம், அதிமுக மண்டலப் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து, தான் மீண்டும் அதிமுக-வில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.! - செங்கோட்டையன் இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்ட அவரும் செல்வத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். இது உளவுத்துறை மூலமாக திமுக தலைமைக்கு எட்டவே, ஏற்கெனவே கொங்கு மண்டலம் திமுக-வுக்குப் பலவீனமாக உள்ளது. அதிலும், செங்கோட்டையனின் அண்ணன் மகனான செல்வம் திமுக-வில் இருக்கும்போதே அதிமுக-வுக்குச் சென்றால் அது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும், எனவே, செல்வம் அதிமுக-வுக்குச் செல்லும் முன் அவசர அவசரமாக கட்சியில் இருந்து நீக்கி உள்ளது திமுக தலைமை என்றனர். விரிவாக. செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டப்பட்டேன் இதுகுறித்து செல்வத்திடம் பேசினோம். செங்கோட்டையன் அதிமுக-வுக்குத் துரோகம் செய்துவிட்டு தவெக-வுக்குச் சென்றுவிட்டார். கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. நிறைய அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் அதிமுக-வுக்கு மீண்டும் வர வேண்டுமென விரும்பினார்கள். அதனால், நான் அதிமுக-வுக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரான நல்லசிவம் என்னை தொடக்கத்தில் இருந்தே ஓரங்கட்டி வந்தார். என்னைச் செயல்படவே அவர் விடவில்லை. மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளரான கோபாலபுரம் எஸ்.ஏ. ரமேஷ், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிக் கொண்டு மருந்து வணிகர்கள் சங்கத்துக்குச் சொந்தமான சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பள்ளியை அபகரிக்க முயன்றார். இதுதொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து என்னை நீக்கினர். அதனால்தான் அதிமுக-வுக்கே மீண்டும் வந்துவிட்டேன் என்றார். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

விகடன் 9 Dec 2025 8:32 pm

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானம்; 120 MP-கள் ஆதரவு; அடுத்து என்ன?

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான மனுவை திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திருப்பரங்குன்றம் இதனால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருந்தது. அதன்படி இன்று (டிச.9) திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ஒன்றாக இணைந்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் மக்களவையிலிருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். இந்தக் குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு, தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது முறையான விசாரணை நிலையை அடையும். மனு வழங்கிய எம்பிக்கள் அதன் பிறகு மூவர் குழு நியமிக்கப்பட்டு, அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால்தான் அதுதொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அயோத்தி முதல் திருப்பரங்குன்றம் வரை’ - வழிபாட்டுத் தல விவகாரங்கள்...

விகடன் 9 Dec 2025 7:04 pm

CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா

மாநிலங்களவையில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசியிருக்கும் திருச்சி சிவா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்திய அளவில் அங்கீகாரங்கள் வேண்டும், அவர்களை இந்திய அளவில் கொண்டாட வேண்டும், CBSE பாடத்திட்டத்தில் அவர்களின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசியிருக்கிறார். திருச்சி சிவா இதுகுறித்து பேசியிருக்கும் திருச்சி சிவா, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மாசினி, செண்பகராமன், தீரன் சின்னமலை, பூலித்தேவன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டும். இவர்களின் வரலாற்றை CBSE பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு இவர்களைக் கொண்டாடுகிறது. குறிப்பாக திமுக திராவிட அரசு தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மண்டபம், சாலைகளுக்குப் பெயர், பாடப்புத்தகத்தில் அவர்களின் வரலாறு, சிலை உள்ளிட்ட மரியாதைகளைச் செய்கிறது. 'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம் தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளன. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார், பூலித்தேவன், குயிலி, செண்பகராமன், தீரன் சின்னமலை உள்ளிட்டவர்களின் பெயர் எதற்கேனும் சுட்டப்பட்டுள்ளதா?  நாங்கள் தேசிய விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். நீங்கள் எங்களின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறீர்களா? திருச்சி சிவா மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்! 'வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை' முதன்முதலின் முழங்கியவர் பூலித்தேவன், 'ஜெய் ஹிந்த்' சொல்லை முதன்முதலில் சொன்னவர் செண்பகராமன், வேலுநாச்சியார் உடன் நின்று வெள்ளையனை எதிர்த்தவர் குயிலி. முதன்முதலில் வெள்ளையர்களுக்கு எதிராக சொந்தமாக கப்பல் ஓட்டி சிறை வாசம் அனுபவித்தவர் வ.உ.சி. இப்படி பல விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளை CBSE பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள் சாலைகளுக்கும், போர் கப்பல்களுக்கும் சூட்ட வேண்டும். போர் கப்பலை எடுத்து வந்து இந்திய விடுதலைக்காகப் போராட பல போராட்டங்களைச் செய்த செண்பகராமன் பெயரை போர் கப்பலுக்கு வைக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு. தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நிராகரிக்கக் கூடாது, மறைக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார் திருச்சி சிவா.

விகடன் 9 Dec 2025 6:49 pm

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ - தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியில் கட்டிகொடுத்திருக்க வேண்டிய வீடுகளை ரூ. 6,43,000 பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியிருந்த தகவல் பாதிப்படைந்த மக்கள் தலையில் இடியாக வந்து விழுந்தது. மொத்தமாக இவ்வளவு பணம் கட்ட முடியாது என்றும் தவணை முறையில் கட்டுவதாகவும் 2022-ஆம் ஆண்டு மனு அளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் வீடுகள் இன்னும் கொடுக்கப் படவில்லை என்று நேற்று (டிச.8) இந்திய மீனவர் மகளிர் தொழிற்ச் சங்கத்தினர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு போராடினர். இது தொடர்பாக பேசிய இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் மீனவ சாந்தி, “சுனாமில பாதிக்கப்பட்ட எங்களுக்கு கார்கில் நகர்ல தற்காலிகமா இடம் கொடுத்திருந்தாங்க, அந்த வீடுகள் தீப்பற்றி எரிந்ததால அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டோம். சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல. எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல இருந்தோம், அங்க தீ விபத்து ஏற்பட்டு அப்புறப்படுத்தப்பட்டடோம். அதே இடத்துல தான் இப்போ 15 மாடி குடியிருப்பு கட்டி இருக்காங்க. நாங்க பல முறை போராடுனத தொடர்ந்து அதுல எங்களுக்கும் வீடு ஒதுக்கி இருந்தாங்க. ஆனா, 6 லட்சம் பணம் கட்டனும்னு சொன்னாங்க. அதையும் ஒப்புக்கொண்டு, 50,000 முன்பணம் கட்டுனோம். மாதம் 2000 என்ற தவணை முறையில மீதி பணத்த வீடு கொடுத்ததும் கொடுப்பதா மனு கொடுத்தோம். வீடு கட்டி முடித்த பின் முன்னிரிமை கொடுக்கப்படும்னு சான்றிதழ் கொடுத்தாங்க. ஆனா வீடு கட்டி முடிந்த பின்னும் வீடு கொடுக்காம 6,00,000 மொத்தமாக கேக்குறாங்க, அதுக்கு எங்களுக்கு வசதி இல்லனு முறையிட்டப்போ, வங்கில லோன் வாங்க சொன்னாங்க, வங்கில லோன் வாங்க போனா மாதம், 7000 ரூபா கேக்குறாங்க, இன்னும் வீடே தரல. ஆனா வங்கியிலருந்து லோன் காசு கேக்க வந்துட்டாங்க. வங்கியில பணம் கட்ட நாங்க தயாரா இல்ல, வாரியத்துல கட்டிக்கிறோம். எங்களுக்கு உடனே வீடு வழங்கனும்.” என்று நிலவரத்தைச் சொன்னார். உலக வங்கி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனாக பணம் கொடுக்கவில்லை, நிதியாகக் கொடுத்தார்கள். என்று சமூக ஆர்வலர் கீதா ராமகிருஷ்ணன் கூறுகிறார். கீதா, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு பல இடங்களில் முறையிட்டு வீடுகள் கட்டிக்கொடுக்க போராடியவர். கீதா ராமகிருஷ்ணன் மேலும் தொடர்ந்த கீதா, இங்கே நாம் குறிப்பிடும் 158 குடும்பங்களும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மீன்வளத்துறையால் சான்றளிக்கப் பட்டவர்கள். இந்த 158 குடும்பங்களைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வீடு கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் போராட முன்வரவில்லை. இந்திய மீனவர் மகளிர் தொழிற்ச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் போராட முன்வந்துள்ளனர். தற்போது சிக்கலே கார்கில் நகரில் தீ விபத்துக் காரணமாக அப்புறப்படுத்தப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதே கார்கில் நகரில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் முன்னுரிமை கொடுக்கப்படாதது ஏன் என்பதுதான். என்றார். மேலும், நகர்ப்புற குடியிருப்பு நில உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் கூறுகையில், சுனாமி வந்த போது பல இடங்களில் இருந்து நிதி வந்தது, பலருக்கு வீடு அப்போது கட்டிக் கொடுக்கப்பட்டாலும் அதில் இப்படி வீடுகள் வழங்கப்படாமல் இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். தட்டிக் கழித்தே 21 ஆண்டுகளைக் கடத்தி விட்டார்கள். நியாயமாக இந்த மக்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் ஆனால், அரசாங்கம் தொடர்ந்துத் தட்டிக் கழித்ததால் மக்களும் சமரசமாகி பணம் கொடுக்க ஒப்புக்கொண்டனர். இங்கு பிரச்சனையே பயனீட்டாளர் பங்கீட்டுத் தொகை என்பதுதான், இதன் அடிப்படையில் தான் மக்களிடம் பணம் கேட்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயத்தை அரசு மறந்து விட்டது, இந்த விதி வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த மக்களுக்கு வீடு வந்திருக்க வேண்டும். அதைத் தாமதப்படுத்தியதற்கு அரசுதான் பொறுப்பு. செபஸ்டின், நகர்ப்புற குடியிருப்பு நில உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நியாயமாக அரசுதான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதை மறந்துவிட்டு மக்களிடம் பணம் வசூலிப்பது எப்படி நியாயமாகும். இந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், கடலில் இறங்கிக்கூட போராடினார்கள். பல போராட்டங்களுக்குப் பின்னரும், பிரச்சனையைத் தீர்க்க யாருக்கும் மனமில்லை.” என்றார் காட்டமாக. இது தொடர்பாக விசாரிக்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் ஸ்ரேயா.பி.சிங் அவர்களை தொடர்புகொள்ள முயன்றோம், அவர் நம் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. மேலும், மீன்வளத்துறை இயக்குனர் கே.வி.முரளிதரன் அவர்களையும் தொடர்புகொள்ள முயன்றோம், மற்றொருவர் போனை எடுத்து, 'சார் மீட்டிங்ல இருக்காரு, உங்க நம்பர் கொடுங்க அவருகிட்ட சொல்றேன்' என்றார். கட்டுரையை எழுதி முடித்த பின்னும் இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம், கடைசி வரை பதில் இல்லை. அவர்கள் பதில் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம். - கோகுல் சரண்

விகடன் 9 Dec 2025 5:22 pm

பாமக: அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

சென்னை மகாபலிபுரத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று( டிச.9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், இதுவும் கடந்துபோகும் என்று நானும் எவ்வளவோ விஷயங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேன். அவமானங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மன உளைச்சலில் இருக்கிறேன். தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். இதெல்லாம் பாமக கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் தான். அன்புமணி ராமதாஸ் அமைதியாக நானும் நம் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தாலும் கூட சில துரோகிகள் விடமாட்டேன் என்கிறார்கள். இந்த துரோகிகளை நான் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. என்ன நடக்குமோ அது கண்டிப்பாக நடக்கும். இந்த மூன்று மாதங்களில் யாரெல்லாம் ஜெயிலுக்கு போகப்போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறீர்கள். நான் சும்மா விடப்போவதில்லை. தைலாபுரத்தை இன்று திமுக ஆக்கிரமித்துவிட்டது. இதுதான் உண்மை நிலவரம். ஐயாவிடம் (ராமதாஸ்) சென்று அந்த துரோகிகள் தினமும் பொய் சொல்கிறார்கள். ராமதாஸ் அவருக்கு 87 வயதாகிவிட்டது. முதுமை வந்துவிட்டது. அவர் குழந்தை மாதிரி ஆகிவிட்டார். சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அவர்கள் சொல்லும் பொய்யை தான் ஐயா நம்பிக்கொண்டிருக்கிறார் என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 9 Dec 2025 4:54 pm

பாமக: அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

சென்னை மகாபலிபுரத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று( டிச.9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், இதுவும் கடந்துபோகும் என்று நானும் எவ்வளவோ விஷயங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேன். அவமானங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மன உளைச்சலில் இருக்கிறேன். தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். இதெல்லாம் பாமக கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் தான். அன்புமணி ராமதாஸ் அமைதியாக நானும் நம் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தாலும் கூட சில துரோகிகள் விடமாட்டேன் என்கிறார்கள். இந்த துரோகிகளை நான் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. என்ன நடக்குமோ அது கண்டிப்பாக நடக்கும். இந்த மூன்று மாதங்களில் யாரெல்லாம் ஜெயிலுக்கு போகப்போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறீர்கள். நான் சும்மா விடப்போவதில்லை. தைலாபுரத்தை இன்று திமுக ஆக்கிரமித்துவிட்டது. இதுதான் உண்மை நிலவரம். ஐயாவிடம் (ராமதாஸ்) சென்று அந்த துரோகிகள் தினமும் பொய் சொல்கிறார்கள். ராமதாஸ் அவருக்கு 87 வயதாகிவிட்டது. முதுமை வந்துவிட்டது. அவர் குழந்தை மாதிரி ஆகிவிட்டார். சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அவர்கள் சொல்லும் பொய்யை தான் ஐயா நம்பிக்கொண்டிருக்கிறார் என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 9 Dec 2025 4:54 pm

வந்தே மாதரம் : `எந்த விவாதங்களுக்கும் நாங்கள் யாரும் பயப்படுவதில்லை' - கொந்தளித்த அமித் ஷா

இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அந்த உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிரிவினையாற்றின. அந்தவகையில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்த விவாதத்தின்போது பேசிய திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா, அவையின் மாண்பைக் காக்க எம்.பி.க்கள் 'ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' உள்ளிட்ட எந்த கோஷங்களும் எழுப்பக் கூடாது என மாநிலங்களவை செயலகம் 2 வாரங்களுக்கு முன்பு, செய்தி அனுப்பியது. மஹுவா மொய்த்ரா இப்போது திடீரென வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேரம் விவாதம் அரசால் நடத்தப்படுகிறது. ஏன்? என்ற காரணத்தையும் நான் சொல்கிறேன். இதைச் செய்தால் மேற்கு வங்கத் தேர்தலில் வெல்லலாம் என பாஜக ஐ.டி. விங் அரைகுறைகள் யாராவது ஐடியா கூறியிருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தே மாதரம் குறித்த விவாதத்தை தொடங்கினார். அப்போது,`` வந்தே மாதரம் குறித்த இந்த விவாதங்களின் அவசியம் குறித்து மக்களவையில் சில உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு இப்போது தேவைப்படுகிறது. 2047-ம் ஆண்டுக்கான நாம் கற்பனை செய்துள்ள பிரகாசமான எதிர்காலத்திற்கு, இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேற்கு வங்க தேர்தல்கள் காரணமாக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதாக சிலர் நினைக்கிறார்கள். இந்த விவாதங்களை தேர்தல்களுடன் தொடர்புபடுத்துவதன் மூலம், நமது தேசியப் பாடலின் மகிமையை அவர்கள் குறைத்து மதிப்பிட விரும்புகிறார்கள். வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் பாபு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான், ஆனந்த் மடம் நூல் வங்காளத்தில் தோன்றியதுதான். அமித் ஷா இதில் எந்த மாற்றும் இல்லை. ஆனால் வந்தே மாதரம் வங்காளத்திற்கு மட்டும் என சுருக்கப்படவில்லை. நாட்டின் எல்லையில் ஒரு இராணுவ வீரரோ, அல்லது நாட்டை உள்ளே இருந்து பாதுகாக்கும் ஒரு காவல்துறை அதிகாரியோ தனது உயிரைத் தியாகம் செய்யும்போது, ​​வந்தே மாதரம் மட்டுமே துணை. வந்தே மாதரம் குறித்த விவாதம் ஒரு அரசியல் உத்தி, பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு வழி என காங்கிரஸ் கூறுகிறது. பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கு நாங்கள் யாரும் பயப்படுவதில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கவில்லை. எல்லா விவாதங்களும் நடக்கும். நாங்கள் எதையும் கண்டு பயப்படவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கவில்லை. எந்தப் பிரச்சினையிலும் நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். ஜவஹர்லால் நேரு தேசியப் பாடலை இரண்டு சரணங்களுக்குள் சுருக்கினார். வந்தே மாதரம் மட்டுப்படுத்தப்பட்டபோதுதான் நாட்டு விஷயத்தில் சமரசம் தொடங்கியது. ராகுல் காந்தி அந்த சமரசம் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் வந்தே மாதரத்தைப் பிரிக்கவில்லை என்றால், நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்காது. வந்தே மாதரம் 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, ​​அவசரநிலை விதிக்கப்பட்டது. தேசியப் பாடலைப் புகழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வந்தே மாதரம் என்ற முழக்கத்தைப் பிரச்சாரம் செய்து எழுப்பியவர்களை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார்... நேற்று மக்களவையில் விவாதங்கள் நடைபெற்றபோது, ​​காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அவையில் இல்லை. ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய தலைமை வரை, காங்கிரஸ் வந்தே மாதரத்தை தொடர்ந்து எதிர்க்கிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth

விகடன் 9 Dec 2025 4:29 pm

``SIR-ஐ நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமையே இல்லை - மக்களவையில் காங்கிரஸ் கடும் வாதம்

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட தேர்தல் ஆணையம் (EC), அதன் தொடர்ச்சியாக அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன. அதோடு, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் SIR பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் மக்களவையில் இன்று SIR விவாதம் நடைபெற்றது. மக்களவை தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தில் திருத்தும் வேண்டும்! விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, ``முதலில் தேர்தல் சீர்திருத்தமாக, தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான 2023 சட்டத்தைத் திருத்த வேண்டும். இந்தத் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதில் என்னுடைய பரிந்துரை என்னவென்றால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய இரண்டு பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அத்தகைய குழு அமைக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையம் மீதான சந்தேகங்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு இருக்கும் பலர் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர். வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth SIR நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை! பிரிவு 327 ஆனது வாக்காளர் பட்டியல் மற்றும் எல்லை நிர்ணயத்திற்கான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை அளித்திருக்கிறது. இன்று பல மாநிலங்களில் SIR நடக்கிறது. ஆனால், SIR-ஐ நடத்த சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பிலோ அல்லது சட்டத்திலோ SIR நடவடிக்கைக்கு எந்தவொரு ஏற்பாடும் இல்லை. ஏதாவது தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து பகிரங்கப்படுத்த வேண்டிய காரணங்களுக்காக, அதைச் சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. அப்போதுதான் நீங்கள் SIR-ஐ நடத்த முடியும். தவிர முழு பீகார் அல்லது முழு கேரளாவுக்கும் SIR நடத்த முடியாது. காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி (Manish Tewari) பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது! SIR நடத்த வேண்டுமென்றால் முதலில் எழுத்துப்பூர்வமாகப் பிரச்னைகளைப் பதிவு செய்த பிறகு, வாக்காளர் பட்டியலில் சிக்கல் உள்ள தொகுதிகளில் தனித்தனியாகச் நடத்துங்கள். எனவே, எழுத்துப்பூர்வ காரணங்கள் எங்கே என்று அரசாங்கத்திடம் கேட்கிறேன். இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் SIR நடவடிக்கையை நிறுத்துங்கள். SIR-ஐ தொடர்வதற்கான அனுமதி சட்டத்தில் இல்லை. அப்படியென்றால் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட SIR சட்டவிரோதமானவை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு என்னுடைய பதில், பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது. இந்திய ஜனநாயகத்தில் இரண்டு பங்குதாரர்கள் உள்ளனர். ஒன்று வாக்களிக்கும் வாக்காளர்கள், மற்றொன்று அதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள். 1988-89ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்ததன் மூலம் மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தம் செய்தார் என்று கூறினார். Vande Mataram 150: எழுச்சியை உருவாக்கிய `வந்தே மாதரம்' - அதை மோடி கொண்டாடுவது மோசமான அரசியலா?

விகடன் 9 Dec 2025 4:04 pm

TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?

 புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்’ என்று பேசியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், `புதுச்சேரி, காரைக்காலை விஜய் எப்போது சுற்றிப் பார்த்தார்? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகூடத் தெரியாமல் விஜய் பேசுவது அர்த்தமற்றது’ என்று விமர்சித்திருந்தார். இந்த விவகாரம்தாம்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், அதன் பின்னணி குறித்து விசாரித்தோம். ரங்கசாமி - நமச்சிவாயம் புதுச்சேரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டு, சிகப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ என அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி, அரிசி கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாகக் கூறியதுடன், அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி உத்தரவிட்டார். அதன் காரணமாக புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் ரங்கசாமி. நடவடிக்கை எடுக்கப்படவில்லை! ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் ரேஷன் கடைகளை திறப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதையடுத்து ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2024 முதல் இலவச அரிசி வழங்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகளுக்கு ஆண்டுக்கணக்கில் வாடகை கொடுக்கப்படாததால், அவற்றின் உரிமையாளர்கள் பூட்டு போட்டுவிட்டார்கள். அதனால் அப்போது முதல் அரசுப் பள்ளிகள், ஊர் முக்கியஸ்தர்களின் வீடுகளில் வைத்து இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தவெக விஜய் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் செயல்பட்டதாலும், அந்தக் கடைகளும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாலும் திட்டம் ஆரம்பிக்கும்போது மட்டும் நகர்ப்புறத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டன. அதன்பிறகு பயனாளர்களுக்குப் போன் செய்து வரவழைத்து விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை பெரும்பாலான இடங்களில் நிரந்தர ரேஷன் கடைகள் இல்லாமல், அரசுப் பள்ளிகள் மூலம்தான் அரசி விநியோகிக்கப்படுகிறது. கடந்த தீபாவளியில் இருந்துதான் மாதம்தோறும் இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டு வருகிறதே தவிர, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெற்றுவரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் கூடுதல் தகவல்.! TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

விகடன் 9 Dec 2025 3:14 pm

இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்'புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?

கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக பாஸ் இல்லாத தொண்டர்கள் சிலரை புஸ்ஸி ஆனந்த் மைதானத்துக்குள் அனுமதிக்க முயற்சித்தார். TVK Vijay அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.பி. இஷா சிங் ஆனந்திடம் கடுமையாக எதிர்வினையாற்றி பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுத்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் வரக்கூடாது. அதிகபட்சமாக 5000 பேருக்கு மட்டும்தான் அனுமதி. அவர்களுக்கும் பாஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே கட்டுப்பாடு. அதன்படி தவெக சார்பில் பாஸூம் விநியோகிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை பார்க்க பாஸ் இல்லாமலும் நிறைய தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களும் மைதானத்தை சூழ்ந்திருந்தனர். அதில் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்குமாறு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும் சில மாவட்டச் செயலாளர்களும் அங்கிருந்த பெண் காவலரிடம் கோரினர். Anand அவர்களை உள்ளே அழைக்கவும் முயன்றனர். உடனே அதை தடுத்த பெண் எஸ்.எஸ்.பி இஷா சிங், 'நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்.' என கடுமையாக கூறி தொண்டர்களை உள்ளே விடாமல் தடுத்தார். நூற்றுக்கணக்காக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக அமல்படுத்தி உறுதியாக நின்ற இஷா சிங்கை இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இஷா சிங் இஷா சிங் இதற்கு முன்பு புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி ஆக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எஸ்.எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இஷா சிங்கின் தாத்தா, அப்பா இருவருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள். அவரின் அப்பா Y.P.சிங் சில ஊழல் வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடத்தியதால் ஓரங்கட்டப்பட்டதாக இஷா சிங் சொல்கிறார். மனமுடைந்த Y.P.சிங் 2004 இல் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுகிறார். இஷா சிங் அப்போதிருந்தே ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் இஷாவுக்கு விருப்பம். 'National School Of Law' வில் சட்டம் படிக்கிறார். மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்திருக்கிறார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம் 'வழக்கறிஞராக இருந்த போது நான் இரண்டு விதமான நபர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பக்கம் சமூகத்தின் இழிவு மனப்பான்மையால் மலம் அள்ளப் போய் உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள். இன்னொரு பக்கம் எல்லா அதிகாரமும் அவர்களால் எதையும் சாதிக்கும் வல்லமை வாய்க்கப்பெற்ற சக்திமிக்கவர்கள். ஆனால், எல்லாருக்கும் மேலானது நம்முடைய சட்டம்தான். சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம். எந்த பேதமும் கிடையாது. ஆனால், இதை பேசுகையில் அதெல்லாம் வெறுமென சட்டப்புத்தகத்தில் மட்டுமே சாத்தியம். யதார்த்தம் வேறாக இருக்கும் என்றனர். சட்டத்தை எந்த பேதமும் இல்லாமல் அமல்படுத்தும் இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகதான் ஐ.பி.எஸ் ஆனேன்.' என சமீபத்தில் ஒரு மேடையில் பேசியிருக்கிறார் இஷா சிங். இஷா சிங் இவர்தான் இன்றைக்கு கட்டுப்பாட்டை மீறி தவெகவினர் சிலரை அனுமதிக்க முயன்ற போது, கடுமையாக எதிர்வினையாற்றி அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.!

விகடன் 9 Dec 2025 1:00 pm

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா குறித்து பேசிவந்தார். இப்போது என்ன ஆனதோ... ஏது ஆனதோ அந்தர்பல்டி அடித்து இந்தியாவிற்கு எதிராகப் பேசியிருக்கிறார். மோடி, ட்ரம்ப் வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to ட்ரம்ப் என்ன சொல்கிறார்? நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருக்கும் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசிக்கும், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களுக்கும் அதிக வரி விதிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். அதுவும் இதை அமெரிக்க விவசாயிகளுக்காகச் செய்வதாகக் கூறியுள்ளார். பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டிவிட்டது அமெரிக்கா. ஆனால், இன்னமும் இந்தியா மற்றும் கனடா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்தவொரு முடிவும் எட்டியபாடில்லை. இந்த நிலையில் தான், ட்ரம்ப் வரி குறித்து பேசியுள்ளார். ட்ரம்ப் ஃபார்முலா இதை இன்னொரு பக்கம் பார்த்தால், ட்ரம்ப் இதுகுறித்து பேசியிருக்கும் தருணம் மிக முக்கியமானது என்றும் கூறலாம். நாளை வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. காரணம், அவர் ஒவ்வொரு நாட்டையும் வரியைக் காட்டிதான் மிரட்டி வருகிறார். அதே ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஃபாலோ செய்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது. ட்ரம்ப் `இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன் அடுத்ததாக, இந்த வரியால் இந்தியா பாதிக்கப்படுமா... அமெரிக்கா பாதிக்கப்படுமா என்று பார்த்தால், அமெரிக்கா தான் பாதிக்கப்படும். காரணம், இந்தியா தனது மொத்த அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனது 25 சதவிகித பயன்பாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்கிறது. இதனால், இந்த விஷயத்தில் ட்ரம்ப் மிக கவனமாக இருக்க வேண்டும். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 9 Dec 2025 12:32 pm

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா குறித்து பேசிவந்தார். இப்போது என்ன ஆனதோ... ஏது ஆனதோ அந்தர்பல்டி அடித்து இந்தியாவிற்கு எதிராகப் பேசியிருக்கிறார். மோடி, ட்ரம்ப் வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to ட்ரம்ப் என்ன சொல்கிறார்? நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருக்கும் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசிக்கும், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களுக்கும் அதிக வரி விதிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். அதுவும் இதை அமெரிக்க விவசாயிகளுக்காகச் செய்வதாகக் கூறியுள்ளார். பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டிவிட்டது அமெரிக்கா. ஆனால், இன்னமும் இந்தியா மற்றும் கனடா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்தவொரு முடிவும் எட்டியபாடில்லை. இந்த நிலையில் தான், ட்ரம்ப் வரி குறித்து பேசியுள்ளார். ட்ரம்ப் ஃபார்முலா இதை இன்னொரு பக்கம் பார்த்தால், ட்ரம்ப் இதுகுறித்து பேசியிருக்கும் தருணம் மிக முக்கியமானது என்றும் கூறலாம். நாளை வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. காரணம், அவர் ஒவ்வொரு நாட்டையும் வரியைக் காட்டிதான் மிரட்டி வருகிறார். அதே ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஃபாலோ செய்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது. ட்ரம்ப் `இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன் அடுத்ததாக, இந்த வரியால் இந்தியா பாதிக்கப்படுமா... அமெரிக்கா பாதிக்கப்படுமா என்று பார்த்தால், அமெரிக்கா தான் பாதிக்கப்படும். காரணம், இந்தியா தனது மொத்த அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனது 25 சதவிகித பயன்பாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்கிறது. இதனால், இந்த விஷயத்தில் ட்ரம்ப் மிக கவனமாக இருக்க வேண்டும். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

விகடன் 9 Dec 2025 12:32 pm