SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
...

'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. சுதீஷ் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. திமுகவிடம் 4 ராஜ்ய சபா சீட்கள் இருக்கிறது. ராஜ்ய சபா சீட்டுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 ஆம் தேதியே கடைசி நாள். அதனால் தேமுதிகவுக்கு உத்தரவாதம் அளித்தபடியே இன்று இரவு 8:30 மணியளவில் முதலமைச்சர் முன்னிலையில் தேமுதிகவின் சுதீஷ் ராஜ்ய சபாவுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டார். செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு அங்கிருந்தபடியே அறிவாலயத்துக்கு நேரில் வந்து ஒப்பந்தத்தை முடித்திருக்கின்றனர். ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியிருப்பது ராஜ்ய சபா ஒப்பந்தம் மட்டுமே. சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் பற்றிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியூரில் இருப்பதால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அவர் வந்தவுடன் அடுத்த சில நாட்களில் தேமுதிகவுடன் சட்டமன்றத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்கின்றனர்.

விகடன் 3 Mar 2026 9:21 pm

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

விகடன் 3 Mar 2026 7:33 pm

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

விகடன் 3 Mar 2026 7:33 pm

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026

விகடன் 3 Mar 2026 7:11 pm

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது... ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம். கமேனி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது. חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8 — Israeli Air Force (@IAFsite) March 3, 2026

விகடன் 3 Mar 2026 7:11 pm

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

விகடன் 3 Mar 2026 6:51 pm

”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாளம் சின்னம். அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க-வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க-வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் எல்லா கட்சிகளு்ம் தங்களைப் பெருமையாவும், துாக்கி உயர்த்திப் பேசுவது தமிழக அரசியலில் வாடிக்கைதான். ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்த நிலையில், அந்தக் கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. த.வெ.க-வில் உத்தரவு போட்டு, கட்டுப்படுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை. ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் கட்சி தொடங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ்., தி.மு.க-வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும். அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரிய மனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. கார்த்திக் சிதம்பரம் எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதிதான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈ ரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கு. அவர்கள் இந்தப் போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள். விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்த நாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் எனத் தான் சொன்னேன். அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை. ஈரான் அரசின் கொடுமையைப் படிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளி்ல் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க.,வுக்குச் சென்று விட்டார்கள். த.வெ.க கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்துவிட்டு செல்ல வேண்டும், மின்கம்பத்தில் ஏறாதீர்கள் என்றார். கூட்டணி... சதி... ‘கை’! நழுவுகிறதா... கழுவுகிறதா?

விகடன் 3 Mar 2026 6:16 pm

”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாளம் சின்னம். அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க-வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டெல்லிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க-வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். கார்த்தி சிதம்பரம் எல்லா கட்சிகளு்ம் தங்களைப் பெருமையாவும், துாக்கி உயர்த்திப் பேசுவது தமிழக அரசியலில் வாடிக்கைதான். ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க-வில் சேர்ந்த நிலையில், அந்தக் கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. த.வெ.க-வில் உத்தரவு போட்டு, கட்டுப்படுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை. ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் கட்சி தொடங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ்., தி.மு.க-வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும். அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரிய மனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. கார்த்திக் சிதம்பரம் எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதிதான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈ ரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கு. அவர்கள் இந்தப் போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள். விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்த நாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் எனத் தான் சொன்னேன். அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை. ஈரான் அரசின் கொடுமையைப் படிக்க வேண்டும். வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளி்ல் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க.,வுக்குச் சென்று விட்டார்கள். த.வெ.க கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்துவிட்டு செல்ல வேண்டும், மின்கம்பத்தில் ஏறாதீர்கள் என்றார். கூட்டணி... சதி... ‘கை’! நழுவுகிறதா... கழுவுகிறதா?

விகடன் 3 Mar 2026 6:16 pm

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

விகடன் 3 Mar 2026 5:41 pm

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

விகடன் 3 Mar 2026 5:41 pm

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!

விகடன் 3 Mar 2026 5:02 pm

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!

விகடன் 3 Mar 2026 5:02 pm

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். Loading…

விகடன் 3 Mar 2026 4:54 pm

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர். அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து 'வணிகர் சங்கங்களின் பேரமைப்பு' என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 'கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்' என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம். தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. ஏ.எம். விக்கிரமராஜா ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா. இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா. விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. 'இப்ப விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கிறவருக்கு திரும்பவும் திமுகவுல சீட் தருவாங்களானு தெரியலை. ஏன்னா விருகம்பாக்கம் தொகுதியை புதுசா கூட்டணிக்கு வந்திருக்கிற தேமுதிக கேக்கறதா சொல்றாங்க. விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதிங்கிறதால் தொகுதி அவங்களுக்குப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால திமுக மேல விக்ரமராஜா குடும்பத்துக்கு அதிருப்தி. பிரபாகர் ராஜா வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு வியபாரிகள் மத்தியில நல்ல செல்வாக்கு இருக்குங்கிறதால, வியாபாரிகள் ஓட்டு தொடர்ந்து திமுகவுக்கு வேணுமா வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க'னு ஆளுங்கட்சிக்கு ஒரு அலெர்ட்னு இதைச் சொல்லலாம்' என இந்தச் சந்திப்பை வைத்த பலவாறு தகவல்கள் கிளம்ப, விக்ரமராஜாவையே தொடர்பு கொண்டு பேசினோம். ''தேர்தல் நேரம் வந்தா அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரிசையாப் போய்ச் சந்திக்கறது வியாபாரிகள் சங்கங்கள் ஆரம்பத்துல இருந்தே செய்து வர்ற ஒரு வழக்கம்தான். எங்களுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவங்ககிட்டத் தருகிற பட்சத்தில் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்வாங்கங்கிற நம்பிக்கைதான். அப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் ஜெயிச்ச பிறகு அவங்ககிட்ட போய் 'சொன்னபடி செய்யுங்க'னு கேக்கலாமில்லையா, அதான். வணிகர் சங்கங்கள் இப்ப தனித்தனியாப் போய் எல்லாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்ல. ஏன்னா ரெண்டு பெரிய கட்சிகளுடன் தான் மத்த எல்லாக் கட்சிகளும் கூட்டணியில இருக்காங்க. அதனால்தான் முதல்வரைச் சந்திச்சுட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமியையும் சந்திச்சோம். மத்தபடி இதுல எந்த அரசியலும் இல்லை. என் மகன் திமுக‌ எம்.எல்.ஏ. வா இருக்கலாம். ஆனா எங்க சங்கத்துல சாதி, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. நாங்க எப்பவுமே வியாபாரிகள் கட்சிதான்'' என்கிறார் அவர். Loading…

விகடன் 3 Mar 2026 4:13 pm

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருப்பது அரசியல் ஏரியாவில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த போது மறைந்த த. வெள்ளையன், விக்கிரமராஜா இருவருமே அதன் நிர்வாகிகளாக இருந்தனர். அந்தக் காலத்தில், த. வெள்ளையன் அதிமுக அனுதாபியாக இருப்பதாக கருதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விக்கிரமராஜா வெள்ளையனிடமிருந்து பிரிந்து 'வணிகர் சங்கங்களின் பேரமைப்பு' என தனிச் சங்கத்தை உருவாக்கியதாகப் பேசப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 'கருணாநிதியே வியாபாரிகள் சங்கத்தை உடைத்தார்' என பகிரங்கமாகவே பேசியிருக்கும் காணொலிகளை இப்போதும் காணலாம். தனிச் சங்கம் கண்ட பிறகு தொடர்ந்து திமூக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. ஏ.எம். விக்கிரமராஜா ஒவ்வொரு வருடமும் வணிகர் தினமான மே 5 ம் தேதி திமுகவைச் சேர்ந்தவர்களையே அழைத்து மாநாடுகள் நடத்தி வந்திருக்கிறார் விக்கிரமராஜா. இந்த நிலையில்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரது மகன் பிரபாகர் ராஜா. விக்கிரமராஜா என்றாலே திமுக சார்பு என்கிற ஒரு பார்வை இருக்கும் பட்சத்தில் தற்போது, அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்திருப்பதால் இந்தச் சந்திப்பு சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. 'இப்ப விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கிறவருக்கு திரும்பவும் திமுகவுல சீட் தருவாங்களானு தெரியலை. ஏன்னா விருகம்பாக்கம் தொகுதியை புதுசா கூட்டணிக்கு வந்திருக்கிற தேமுதிக கேக்கறதா சொல்றாங்க. விஜயகாந்த் வீடு இருக்கும் தொகுதிங்கிறதால் தொகுதி அவங்களுக்குப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால திமுக மேல விக்ரமராஜா குடும்பத்துக்கு அதிருப்தி. பிரபாகர் ராஜா வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு வியபாரிகள் மத்தியில நல்ல செல்வாக்கு இருக்குங்கிறதால, வியாபாரிகள் ஓட்டு தொடர்ந்து திமுகவுக்கு வேணுமா வேண்டாமானு நீங்களே முடிவு செய்துக்கோங்க'னு ஆளுங்கட்சிக்கு ஒரு அலெர்ட்னு இதைச் சொல்லலாம்' என இந்தச் சந்திப்பை வைத்த பலவாறு தகவல்கள் கிளம்ப, விக்ரமராஜாவையே தொடர்பு கொண்டு பேசினோம். ''தேர்தல் நேரம் வந்தா அரசியல் கட்சிகளின் தலைவர்களை வரிசையாப் போய்ச் சந்திக்கறது வியாபாரிகள் சங்கங்கள் ஆரம்பத்துல இருந்தே செய்து வர்ற ஒரு வழக்கம்தான். எங்களுக்கு இருக்கிற பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவங்ககிட்டத் தருகிற பட்சத்தில் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்வாங்கங்கிற நம்பிக்கைதான். அப்படி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் ஜெயிச்ச பிறகு அவங்ககிட்ட போய் 'சொன்னபடி செய்யுங்க'னு கேக்கலாமில்லையா, அதான். வணிகர் சங்கங்கள் இப்ப தனித்தனியாப் போய் எல்லாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்ல. ஏன்னா ரெண்டு பெரிய கட்சிகளுடன் தான் மத்த எல்லாக் கட்சிகளும் கூட்டணியில இருக்காங்க. அதனால்தான் முதல்வரைச் சந்திச்சுட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமியையும் சந்திச்சோம். மத்தபடி இதுல எந்த அரசியலும் இல்லை. என் மகன் திமுக‌ எம்.எல்.ஏ. வா இருக்கலாம். ஆனா எங்க சங்கத்துல சாதி, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. நாங்க எப்பவுமே வியாபாரிகள் கட்சிதான்'' என்கிறார் அவர். Loading…

விகடன் 3 Mar 2026 4:13 pm

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும். காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள் தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது. தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.  முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாடகைக் கட்டணம் அதிகரிப்பு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும். கச்சா எண்ணெய் 2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்பு வளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்?

விகடன் 3 Mar 2026 4:07 pm

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும். காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள் தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது. தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.  முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாடகைக் கட்டணம் அதிகரிப்பு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும். கச்சா எண்ணெய் 2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்பு வளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்?

விகடன் 3 Mar 2026 4:07 pm

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய். விஜய் இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது. அப்செட்டில் அன்பில் தர ப்பு? இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது. திருமண அழைப்பிதழ் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள். ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம். காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு. விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம். என்றார்கள் விரிவாக.

விகடன் 3 Mar 2026 3:41 pm

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய். விஜய் இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது. அப்செட்டில் அன்பில் தர ப்பு? இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது. திருமண அழைப்பிதழ் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள். ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம். காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு. விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம். என்றார்கள் விரிவாக.

விகடன் 3 Mar 2026 3:41 pm

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , ``இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர் எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அயதுல்லா கமேனி உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்... அதில், ``மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது. உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு சரியானது (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும். இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது. ட்ரம்ப் - நெதன்யாகு மோடியின் ஒருதலைபட்சம்: பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது. உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. 'இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது' என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். காங்கிரஸின் நிலைபாடு: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம். brics brazil 2025 இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு. ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா? வாஜ்பாய் உதாரணம்: தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது? மோடி - சோனியா காந்தி இந்தியா தன்னை 'உலகத் தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் நம்பகத்தன்மையை (Credibility) அழித்துவிடும். எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும். அமைதி, அகிம்சை, நீதி உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா வெறும் தெற்காசியாவின் பெரிய அண்ணனாக மட்டும் இருக்க விரும்பவில்லை; மாறாக உலகிற்கே ஒரு மனசாட்சிக் காவலராக இருக்கவே நீண்டகாலமாக முயன்று வருகிறது. அமைதி, அகிம்சை மற்றும் நீதிக்காக இந்தியா எப்போதும் பேசும் என்ற நம்பிக்கை உலக நாடுகளுக்கு உண்டு. அந்த மரியாதையையும் அந்தஸ்தையும் நாம் தக்கவைக்க வேண்டுமென்றால், இப்போது நடக்கும் அநீதிக்கு எதிராகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்தியா அறிவிக்க வேண்டும். ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

விகடன் 3 Mar 2026 3:17 pm

அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

விகடன் 3 Mar 2026 3:13 pm

அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

விகடன் 3 Mar 2026 3:13 pm

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..! - சீமான் எச்சரிக்கை

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிகை விடுத்திருக்கிறார். வெட்கக்கேடானது! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக  'கேரளா ஸ்டோரி-2' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு. மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? சாதியும், மதயும் எப்படி ஒரு நாட்டில் அரசியலாகும்?. பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். நாட்டின் குடிகளுக்குள் பகை ஏற்பட்டால் தீர்த்து வைத்து, சமாதானம் ஏற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே, சாதி,  மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? மதத்தைப் பார்ப்பவர்கள் மனிதத்தை எப்படிப் பார்ப்பார்கள்?  படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை. அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே,  தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால்  மக்களுக்குள்  ஏற்றப்படுகிறது. மதப்பிரிவினையை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பாஜக ஆளும் மாநில அரசுகள் வரி தள்ளுபடி செய்து ஊக்கப்படுத்துவதும், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் அதியுயர் அமைச்சர்களே ஆதரித்து விளம்பரம் செய்வதும், விருது கொடுப்பதும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் சிதைக்கவே வழிவகுக்கும். தி கேரளா ஸ்டோரி 2 சினிமா பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்?  இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து  திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. * இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன? அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? *    ஆட்சியாளர்களின் சூழ்ச்சி.! 'காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும்  காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும்,  பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை.  படைப்புச்சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலை மனங்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களைத் துண்டாடுவதாக இருக்கக்கூடாது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த கடந்த 12 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதல்ல. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது. சீமான் கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்?  இந்த அளவிற்கு மதவெறுப்பையும், மனித வெறுப்பையும் கடைபிடிக்கும் எவரும் கிறித்துவ, இசுலாமிய நாடுகளோடு தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? உலகம் முழுவதும் சுற்றிவந்து ஒவ்வொரு கிறித்துவ, இசுலாமிய நாடாக ஓடோடிச் சென்று நட்பு பாராட்டும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவார்களா? மோடி அரசு இசுலாமிய நாடுகளுக்கு மாட்டுக்கறியை ஏற்றமதிசெய்து, எரிபொருளை இறக்குமதி செய்வதை எதிர்த்து என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா? இசுலாமிய – கிறித்துவ நாடுகளுடன் வணிகம், தொழில், இராணுவம் என்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இங்கு வாழும் இசுலாமிய, கிறிஸ்தவ மக்களை இழிவுப்படுத்துவது ஏன்?   திமுக அரசு  அனுமதிப்பது ஏன்? 'கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று திமுக அரசிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா? இல்லையா? அதன்பிறகும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்? தமிழ்நாட்டை உண்மையிலேயே ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா?. இசுலாத்தையும், இசுலாமிய பெருமக்களையும்   இழிவுப்படுத்தும் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தை  தடை செய்யக் கேரள மாநில அரசு நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில்,  அத்திரைப்படத்தைக் காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு முழுதும் திரையிட  திமுக அரசு  அனுமதிப்பது ஏன்? இது குறித்து, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இசுலாமிய அமைப்புகள் இதுவரை வாய்த் திறவாமல் கள்ள அமைதிகாப்பது ஏன்? ஓரிரு சட்டமன்ற இடங்களுக்காக  ஒட்டுமொத்த இசுலாமிய மக்களின் உரிமையையும் அடகு வைத்துவிட்டீர்களா? கிறித்துவ மதக் கோட்பாட்டை இழிவுப்படுத்திய டாவின்சி கோட் திரைப்படத்தை ஐயா கருணாநிதி அவர்களும், இசுலாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்த விசுவரூபம் திரைப்படத்தை அம்மையார் ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதித்த வரலாற்றைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தி கேரளா ஸ்டோரி தடுத்து நிறுத்த வேண்டும் ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட  தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், எப்படி ‘கேரளா ஸ்டோரி1’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி போராடி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தியதோ, அப்படி  ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன் என்று சீமான் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Mar 2026 2:16 pm

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028'கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது.  தி.மு.க  - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு  பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.  ராகுல் காந்தி இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள். 39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம். சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி? மற்றொருபுறம், தி.மு.க  தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின்.  ஸ்டாலின் - சிதம்பரம் காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் - தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.! Loading…

விகடன் 3 Mar 2026 1:57 pm

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028'கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது.  தி.மு.க  - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு  பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.  ராகுல் காந்தி இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள். 39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம். சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி? மற்றொருபுறம், தி.மு.க  தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின்.  ஸ்டாலின் - சிதம்பரம் காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் - தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.! Loading…

விகடன் 3 Mar 2026 1:57 pm

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் செல்வபெருந்தகை. திமுக - காங் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முடிவை நோக்கி க்ளைமாக்ஸை எட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்று மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை கூறுமாறு காங்கிரஸூக்கு திமுக கெடு விதித்திருந்தது. திமுக காங்கிரஸூக்கு 27-28 சீட்கள் வரை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் டெல்லி தலைமை 39 சீட்கள் வரையும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காமலே உள்ளது. திமுக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸின் உள்ளாகவே இரண்டுவிதமான கருத்துகள் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் திமுக உடன் கூட்டணி செல்லவே விரும்புகின்றனர். இந்நிலையில்தான், திமுக விதித்த கெடு நாளான இன்று காலை 11:40 மணியளவில் சிதம்பரத்தின் வீட்டில் செல்வப்பெருந்தகையும் அவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்க மதியம் 12:30 மணிக்கு அப்பாய்ண்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. 12:25 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் சித்தரஞ்சன் சாலைக்கு கிளம்பினர். 12:40 மணிக்கு முதல்வரின் வீட்டை அடைந்த இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக முதல்வருடன் ஆலோசித்து வருகின்றனர். சித்தரஞ்சன் சாலை செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார். Loading…

விகடன் 3 Mar 2026 1:41 pm

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணி தான் சிறை செல்வார் என 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க ஸ்டாலின் கூறினார். அந்தளவுக்கு கோவையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வியூகங்களை திமுக வகுத்தது. அது கைக் கொடுக்காததால் செந்தில் பாலாஜியை கோவை திமுக பொறுப்பாளராக களமிறக்கியது. உள்ளாட்சி தேர்தலில் பரிசு மழைகளை இறக்கி அவர் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தார். கோவை அதிமுக பரிசு பொருள்கள் சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், வேலுமணி அவரை ஓவர்டேக் செய்து களத்தில் வேகம் காட்டி வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக பரிசுகளை இறக்கியது. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் வேட்டி, சட்டை, சேலை, ஹாட் பாக்ஸ், ஃபிளாஷ்க், குடை, தட்டு உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்கினார். அந்தப் பொருள்கள் கொடுத்த சில நாள்களிலேயே தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் சில பரிசுகளை கொடுத்து வேலுமணி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். டிரம் தொண்டாமுத்தூர் மக்களுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வேலுமணியின் இந்த நகர்வு திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள் மூலமாக டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரி லாரியாக டிரம் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து காலை 6-8 மணிக்குள் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்டியலின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல சர்ப்ரைஸ் பரிசுகள் இறங்க வாய்ப்புள்ளது” என்றனர். Loading…

விகடன் 3 Mar 2026 1:22 pm

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணி தான் சிறை செல்வார் என 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க ஸ்டாலின் கூறினார். அந்தளவுக்கு கோவையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வியூகங்களை திமுக வகுத்தது. அது கைக் கொடுக்காததால் செந்தில் பாலாஜியை கோவை திமுக பொறுப்பாளராக களமிறக்கியது. உள்ளாட்சி தேர்தலில் பரிசு மழைகளை இறக்கி அவர் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தார். கோவை அதிமுக பரிசு பொருள்கள் சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், வேலுமணி அவரை ஓவர்டேக் செய்து களத்தில் வேகம் காட்டி வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக பரிசுகளை இறக்கியது. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் வேட்டி, சட்டை, சேலை, ஹாட் பாக்ஸ், ஃபிளாஷ்க், குடை, தட்டு உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்கினார். அந்தப் பொருள்கள் கொடுத்த சில நாள்களிலேயே தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் சில பரிசுகளை கொடுத்து வேலுமணி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். டிரம் தொண்டாமுத்தூர் மக்களுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வேலுமணியின் இந்த நகர்வு திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள் மூலமாக டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன. லாரி லாரியாக டிரம் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து காலை 6-8 மணிக்குள் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்டியலின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல சர்ப்ரைஸ் பரிசுகள் இறங்க வாய்ப்புள்ளது” என்றனர். Loading…

விகடன் 3 Mar 2026 1:22 pm

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்'மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை சிதம்பரம் மூலம்  சொல்லியிருக்கிறார் சோனியா என்கிறார்கள் அவர்கள்.  டெல்லியில் நேற்று இரவு சோனியாவின் இல்லத்தில் கார்கே, ராகுல், சோனியா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் நிலவும் குழப்பான சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த ஆலோசனைக்கு முன்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தி.மு.க நம்மை கூட்டணியில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்கிற ரீதியில் வேணுகோபாலிடம் கருத்து சொல்லியுள்ளார். சோனியா - கார்கே - ராகுல் இதனால் தி.மு.க வுடன் கூட்டணி இருக்காது என்று இருந்த நிலையில், தி.மு.க வினர் மார்ச் 3-ம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்கு சொல்லியுள்ளது. மற்றொருபுறம் தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே கொண்டு போய் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார்.  சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்”  இந்த மெசேஜை  ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார்.  மல்லிகார்ஜுன கார்கே - சோனியா காந்தி தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார். ஏற்கனவே கார்க்கே, தி.மு.க  கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று  டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள்.  சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.! Loading…

விகடன் 3 Mar 2026 1:11 pm

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்'மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை சிதம்பரம் மூலம்  சொல்லியிருக்கிறார் சோனியா என்கிறார்கள் அவர்கள்.  டெல்லியில் நேற்று இரவு சோனியாவின் இல்லத்தில் கார்கே, ராகுல், சோனியா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் நிலவும் குழப்பான சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த ஆலோசனைக்கு முன்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தி.மு.க நம்மை கூட்டணியில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” என்கிற ரீதியில் வேணுகோபாலிடம் கருத்து சொல்லியுள்ளார். சோனியா - கார்கே - ராகுல் இதனால் தி.மு.க வுடன் கூட்டணி இருக்காது என்று இருந்த நிலையில், தி.மு.க வினர் மார்ச் 3-ம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்கு சொல்லியுள்ளது. மற்றொருபுறம் தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே கொண்டு போய் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார்.  சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்”  இந்த மெசேஜை  ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார்.  மல்லிகார்ஜுன கார்கே - சோனியா காந்தி தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார். ஏற்கனவே கார்க்கே, தி.மு.க  கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று  டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள்.  சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.! Loading…

விகடன் 3 Mar 2026 1:11 pm

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சில தொகுதிகளை கேட்டு தி.மு.க-வினர் காயை நகர்த்தி வருகின்றனர். அதில் சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தி.மு.க-வினர் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். வேளச்சேரி, ஸ்ரீவைகுண்டம்.. சென்னை வேளச்சேரி தொகுதி, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைப் போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்ற தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டிருக்கிறார்கள். அசன் மவுலானா எம்.எல..ஏ வேளச்சேரி சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவும் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தொகுதி குறித்து உளவுத்துறையும் தி.மு.கவும் நடத்திய சர்வேயில் சில முக்கிய தகவல் வந்திருக்கிறது. அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய வெற்றி வாய்ப்பு குறித்தும் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்தத் தடவை கூட்டணி அமைந்தாலும் வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாக தகவல் உள்ளது. அதனால் தி.மு.க இளைஞரணி, வேளச்சேரி தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் காயை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியோடு இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய், இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான அசோக் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ``இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் சண்முகநாதனுக்கு சரியான போட்டியாளரை இந்தத் தேர்தலில் களமிறக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுதியை மன்னின் மைந்தனும் உள்ளூரிலேயே குடியிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்தவரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். தூத்துக்குடி எம்.பியும் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தலைமை பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சொர்ணகுமார் சீட் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவர், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் குட் புக்கில் இருக்கிறார். இவரைத் தவிர சங்கர், பிரம்மசக்தி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் என்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை இந்தத் தடவையும் கேட்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெளியூர் எம்.எல்.ஏ என்ற பிம்பத்தை கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஏற்படுத்தி அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க காயை நகர்த்தி வருகின்றனர். கனிமொழி எம்.பி இந்தத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பது பெரிய விஷயமல்ல. காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருப்பதால் நிச்சயம் கை சின்னம் வெற்றி பெறும். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை நாங்கள் கேட்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதைப்போலதான் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர் கேட்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். இதற்கிடையில் இந்தத் தொகுதியில் நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ டேவிட் செல்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொகுதியில் ஏற்கெனவே தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருக்கும் டேவிட் செல்வின், போட்டியிட்டால் விசில் சத்தம் அங்கு கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. Loading…

விகடன் 3 Mar 2026 12:52 pm

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சில தொகுதிகளை கேட்டு தி.மு.க-வினர் காயை நகர்த்தி வருகின்றனர். அதில் சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தி.மு.க-வினர் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். வேளச்சேரி, ஸ்ரீவைகுண்டம்.. சென்னை வேளச்சேரி தொகுதி, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைப் போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்ற தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டிருக்கிறார்கள். அசன் மவுலானா எம்.எல..ஏ வேளச்சேரி சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவும் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தொகுதி குறித்து உளவுத்துறையும் தி.மு.கவும் நடத்திய சர்வேயில் சில முக்கிய தகவல் வந்திருக்கிறது. அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய வெற்றி வாய்ப்பு குறித்தும் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்தத் தடவை கூட்டணி அமைந்தாலும் வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாக தகவல் உள்ளது. அதனால் தி.மு.க இளைஞரணி, வேளச்சேரி தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் காயை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியோடு இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய், இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான அசோக் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ``இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர். நாடார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் சண்முகநாதனுக்கு சரியான போட்டியாளரை இந்தத் தேர்தலில் களமிறக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுதியை மன்னின் மைந்தனும் உள்ளூரிலேயே குடியிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்தவரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். தூத்துக்குடி எம்.பியும் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தலைமை பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சொர்ணகுமார் சீட் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவர், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் குட் புக்கில் இருக்கிறார். இவரைத் தவிர சங்கர், பிரம்மசக்தி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் என்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை இந்தத் தடவையும் கேட்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெளியூர் எம்.எல்.ஏ என்ற பிம்பத்தை கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஏற்படுத்தி அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க காயை நகர்த்தி வருகின்றனர். கனிமொழி எம்.பி இந்தத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பது பெரிய விஷயமல்ல. காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருப்பதால் நிச்சயம் கை சின்னம் வெற்றி பெறும். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை நாங்கள் கேட்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதைப்போலதான் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர் கேட்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். இதற்கிடையில் இந்தத் தொகுதியில் நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ டேவிட் செல்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொகுதியில் ஏற்கெனவே தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருக்கும் டேவிட் செல்வின், போட்டியிட்டால் விசில் சத்தம் அங்கு கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. Loading…

விகடன் 3 Mar 2026 12:52 pm

'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?'என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது. கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. அதற்கும் முதல்வரும் ப.சிதம்பரமும் ஒன்றாக செல்ல வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் இறுதிக்கட்ட பரபரப்பில் உழன்று கொண்டிருக்கிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இதனிடையே, முதல்வரை சிதம்பரம் சந்திக்க இருக்கும் சூழலில், செல்வப்பெருந்தகை சிதம்பரம் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

விகடன் 3 Mar 2026 12:09 pm

நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Mar 2026 11:30 am

நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Mar 2026 11:30 am

நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி பழனிசாமி இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள். இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது? தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. எடப்பாடி பழனிசாமி வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Mar 2026 11:30 am

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? தவெக விஜய் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். அழிவுக் காலத்தின் அழிச்சாட்டிய புத்தி... கருத்துப்படத்துக்கு உறுத்துக்கட்டளையா?

விகடன் 3 Mar 2026 11:05 am

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? தவெக விஜய் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். அழிவுக் காலத்தின் அழிச்சாட்டிய புத்தி... கருத்துப்படத்துக்கு உறுத்துக்கட்டளையா?

விகடன் 3 Mar 2026 11:05 am

Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல் என்று கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 3 Mar 2026 10:50 am

Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல் என்று கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

விகடன் 3 Mar 2026 10:50 am

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``டெல்லியிலிருந்து முறையான அழைப்பு வந்ததால்தான், டெல்லி வந்தேன். நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும். சசிகலா சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். என்றார். Loading… பா.ஜ.க ஆட்சி நல்லது என்கிறீர்கள்... உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி யாரால் வந்தது தினகரன் அவர்களே?

விகடன் 3 Mar 2026 10:31 am

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``டெல்லியிலிருந்து முறையான அழைப்பு வந்ததால்தான், டெல்லி வந்தேன். நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும். சசிகலா சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். என்றார். Loading… பா.ஜ.க ஆட்சி நல்லது என்கிறீர்கள்... உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி யாரால் வந்தது தினகரன் அவர்களே?

விகடன் 3 Mar 2026 10:31 am

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``டெல்லியிலிருந்து முறையான அழைப்பு வந்ததால்தான், டெல்லி வந்தேன். நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும். சசிகலா சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். என்றார். Loading… பா.ஜ.க ஆட்சி நல்லது என்கிறீர்கள்... உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி யாரால் வந்தது தினகரன் அவர்களே?

விகடன் 3 Mar 2026 10:31 am

Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் - உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய பகுதியான ஹோர்முஸ் நீரிணை, எப்படி உலக வர்த்தகத்துக்கு மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது என்பதை பற்றிப் பார்ப்போம். Strait of Hormuz ஹோர்முஸ் நீரிணை பழங்காலத்தில் இருந்தே ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்திருக்கிறது. பாரசீக, கிரேக்க மற்றும் அரபு வர்த்தகர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பட்டு, முத்து மற்றும் மசாலா பொருள்களை வர்த்தகம் செய்திருக்கின்றனர். பழைமை வாய்ந்த பாரசீக நகரான ஹோர்முஸ் நகரத்தின் பெயரில்தான் இந்த நீரிணை அமைந்துள்ளது. அந்தக் காலத்திலேயே ஹோர்முஸ் ஒரு முக்கியமான துறைமுக நகரம். ஹோர்முஸ் நீரிணை வரைபடம் ஹோர்முஸ் நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. இந்த சிறிய பகுதி உலகப் பொருளாதாரத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை தாண்டிதான் பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல முடியும். கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் கப்பல்கள் செல்ல முடியும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. ஒரு நாளுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகிறது. பாரசீக வளைகுடா, கச்சா எண்ணெய் வளம் மிகுதியான பகுதி. இந்த பாரசீக வளைகுடாவையும், ஓமான் வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் புள்ளிதான் ஹோர்முஸ் நீரிணை. 2024ம் ஆண்டிலும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகின் கால் பங்கு கடல்வழி எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடந்திருக்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயுவும் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்குதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் தவிர உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், விவசாய உற்பத்திப் பொருள்கள், எத்தனால், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகின்றன. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபடுவது மட்டுமல்லாமல் தினசரி தேவைகளுக்கு அவசியமான பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்து சர்வதேச அளவில் பாதிப்பு இருக்கும். ஹோர்முஸ் நீரிணை ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது சாத்தியமா? ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானதல்ல. நீரிணையின் வடக்குப் பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்பகுதி இருக்கிறது. தென்பகுதியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஈரானுக்குச் சொந்தமில்லாத ஹோர்முஸ் நீரிணையில், பல ஆண்டுகளாக ஈரான் தனது ஆதிக்கத்தையும், ராணுவ பலத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது. உதாரணமாக, ஈரான் கடற்படை வேகமாக தாக்கக்கூடிய படகுகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆழ்கடல் குண்டுகள் போன்றவற்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இயக்கி வருகிறது. சீனாவால் தயாரிக்கப்பட்ட இ.எம்-52 ஆழ்கடல் குண்டு உட்பட ஆயிரக்கணக்கான ஆழ்கடல் குண்டுகளை ஈரான் இப்பகுதியில் வைத்திருக்கிறது. இதுதவிர, ஈரானின் கடலோர நிலப்பரப்புகளில் ஏவுகணை, டிரோன் போன்ற ராணுவ அமைப்புகளும் இருக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்கெனவே கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்த வரலாறு இருக்கிறது. 1980களில் ஈரான் – ஈராக் போரின்போது, இரு நாடுகளுமே 400க்கும் மேற்பட்ட கப்பல்களை தாக்கின. ஆனால், வர்த்தகம் நடந்துகொண்டுதான் இருந்தது. சமீபகால உதாரணமாக, 2019ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியது. 2022ம் ஆண்டில் இரண்டு கிரீஸ் நாட்டு கப்பல்களை கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு கப்பலைப் பிடித்தது. பெரும்பாலும் பதிலடி கொடுப்பதற்காகவே கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் வலுவாக காணப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு, ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயன்றது். இதனால், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. அப்போதும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்த பேச்சுகள் எழுந்தது. சீனா ஈரானின் நட்பு நாடு. ஈரானிடம் இருந்து மிக அதிகளவில் கச்சா எண்ணெய்யை சீனா வாங்குகிறது. சீனாவின் 47% கச்சா எண்ணெய் தேவையை வளைகுடா நாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. மத்தியக் கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு சீனா ஆதரவு தெரிவிக்காது. crude oil - கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியான வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை சில வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பில் இருக்கும், இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவால் எண்ணெய் வாங்க முடியும். ஆனால், கச்சா எண்ணெய் விலை லேசாக உயர்ந்தாலும் இந்தியாவுக்கு நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஈரான் போரைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஒரே வழி! அதுதான் உலக வர்த்தகத்துக்கும் நல்லது! இஸ்ரேல் - ஈரான் பிரச்னையால் தவிக்கும் அரிசி ஏற்றுமதியாளர்கள்! பங்குகள் விலை என்னவாகும்?

விகடன் 3 Mar 2026 10:27 am

முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு! - அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்நிலையில் இன்று (மார்ச்.3) முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் உதவிதொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். ஸ்டாலின் அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!என்று பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 3 Mar 2026 10:21 am

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான The United Fruit Co. என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்திக் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா... அயதுல்லா கமேனி டாலர் அரசியலின் தொடக்கம் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா. அதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும் என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் ' Reserve Currency' ஆக டாலர் மாறியது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின. அதிகாரப்போட்டியின் ஆரம்பம் அதற்குப்பின், 'இனி உலகின் பவர் சென்டர் யார்?' என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி - சோவியத் யூனியன் அணி - அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது. இதில் அமெரிக்கா - சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன. அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது. அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல். சோவியத் - இரண்டாம் உலகப்போர் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் 1971-ல் அமெரிக்கா இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், ``சவூதி அரேபியா, தன் எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும். என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் 'டாலருக்கு எண்ணெய் விற்பனை' என்ற முடிவுக்கு உடன்பட்டன. அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இப்படித்தான் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது. ஆயுதமும் - பொருளாதார வளர்ச்சியும் பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின. இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது. அமெரிக்கா ஆயுத விற்பனை யுக்திகள் `அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது' போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன. இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா? 1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான். ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலை ஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 'ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்' என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. கச்சா எண்ணெய் நிலமும் அரசியலும் லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனியின் லாபத்திற்காக ஒரு ஒட்டுமொத்த தேசமே சிதைக்கப்பட்டது. இந்த அநீதியைக் நேரில் கண்ட ஒரு இளைஞன்தான், பின்னாளில் புரட்சியாளராக மாறிய 'சே குவேரா' என்பது வரலாறு நமக்குச் சொல்லும் சுவாரசியமான உண்மை. வைரமும் யுரேனியமும்: காங்கோ 1961-ல் 'காங்கோ நாட்டின் தங்கம், வைரம், குறிப்பாக அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் இந்த நாட்டு மக்களுக்கே சொந்தம்' என சட்டமியற்றினார், காங்கோவின் முதல் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா. அதனால், அமெரிக்க அதிபர் ஐசனோவர் உத்தரவின் பேரில், உள்ளூர் கிளர்ச்சி மூலம் லுமும்பா பதவியிறக்கப்பட்டு, பெல்ஜியம் அதிகாரிகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பாவின் வீழ்ச்சிக்கு பின் காங்கோ சுமார் 30 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது. காங்கோ இன்றும் அமைதியின்மையில் இருக்கிறது. சால்வடார் அல்லெண்டே நெருக்கமானவர்களாக இருந்தாலும்... இதேப்போல தாமிரச் சுரங்கங்களை தேசியமயமாக்கிய சிலி நாட்டின் ஆட்சியாளர் சால்வடார் அல்லெண்டே, அமெரிக்காவின் சதித் திட்டத்தால் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உளவாளியான மானுவேல் நோரியேகா காலச் சூழலால் பனாமாவின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா வசம் இருந்த பனாமா கால்வாயை மீட்க முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காகவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜார்ஜ் புஷ் அவரைக் கைது செய்து, 40 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். அமெரிக்காவிற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அதன் நலன்களுக்கு நீங்கள் குறுக்கே நின்றால், ஒரே இரவில் நீங்கள் 'சர்வாதிகாரியாக' மாற்றப்பட்டு வேட்டையாடப்படுவீர்கள் என்ற உண்மையை நோரியேகாவின் வீழ்ச்சி உலகுக்கு சொன்னது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும். ஈராக்கும் சதாமும் ஈராக்கின் எண்ணெயை அமெரிக்க டாலருக்குப் பதில் ' யூரோ ' கரன்சியில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்த, ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் `அணு ஆயுதம் வைத்திருந்தார்' என்றக் குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார். அதற்குப்பிறகு, அமெரிக்கா தேடிய அந்த 'அணு ஆயுதங்கள்' ஈராக்கில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. 'ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும்' என்று பின்னாளில் பல உளவுத்துறை அறிக்கைகள் ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்குள் ஒரு நாடு சிதைக்கப்பட்டு, சதாம் வீழ்த்தப்பட்டு, டாலரின் ஆதிக்கம் அங்கே நிலைநாட்டப்பட்டுவிட்டது. சதாம் உசேன் கடாபிக்கு நேர்ந்த துயரம் சுமார் 42 ஆண்டுகள் லிபியாவைத் தனது இரும்புப்பிடியில் வைத்திருந்தவர் முஅம்மர் கடாபி (Muammar Gaddafi). ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்க டாலருக்குப் பதில் 'தங்க நாணயங்களை' (Gold Dinar) அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் எண்ணெயை விற்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது அமெரிக்க டாலரின் மரணத்திற்குச் சமமானது. அதனால் உள்நாட்டுக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கொண்ட அமெரிக்கா, லிபியாவில் நுழைந்து, முஅம்மர் கடாபியைக் கொடூரமாகக் கொன்றது. நீளும் பட்டியல் இந்தப் பட்டியல் வியாட்னாமின் நோ டின் டியெம், கியூபாவின் சே குவேரா, டொமினிக்கன் குடியரசு நாட்டின் பேல் ட்ருஜிலோ, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ என நீண்டுகொண்டே போகிறது. அதன் தொடராகதான், எண்ணெய் வளமிக்க ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது, நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குகிறது, ஈரான் மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்ற வேண்டும் எனக் காரணங்களை அடுக்கினாலும், எண்ணெய் வளம்தான் குறி எனவும், அதற்கு ஆதரவளிக்கும் ஆட்சியாளர்களை அங்கு அமர்த்துவதுதான் நோக்கம் எனவும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அயதுல்லா கமேனி இது தவிர, உலக நாடுகளின் பிரிக்ஸ் குழுவில் டாலருக்கு மாற்றான பிரிக்ஸ் பணம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முழுநேர உறுப்பினராக ஈரான் செயல்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, அதற்கான இறுதி முடிவுதான் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் காட்டமான விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இத்துடன் முடிவடையப்போவதில்லை. இது தொடரும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் உலக நாடுகளின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது ஏன் கவனிக்கப்படுவதில்லை என்பதுதான் ந்மக்கு எழும் கேள்வி..! என்று தெளியுமோ... தணியுமோ இந்த அதிகார போதை?

விகடன் 3 Mar 2026 9:31 am

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான The United Fruit Co. என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்திக் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா... அயதுல்லா கமேனி டாலர் அரசியலின் தொடக்கம் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா. அதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும் என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் ' Reserve Currency' ஆக டாலர் மாறியது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின. அதிகாரப்போட்டியின் ஆரம்பம் அதற்குப்பின், 'இனி உலகின் பவர் சென்டர் யார்?' என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி - சோவியத் யூனியன் அணி - அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது. இதில் அமெரிக்கா - சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன. அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது. அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல். சோவியத் - இரண்டாம் உலகப்போர் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் 1971-ல் அமெரிக்கா இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், ``சவூதி அரேபியா, தன் எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும். என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் 'டாலருக்கு எண்ணெய் விற்பனை' என்ற முடிவுக்கு உடன்பட்டன. அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இப்படித்தான் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது. ஆயுதமும் - பொருளாதார வளர்ச்சியும் பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின. இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது. அமெரிக்கா ஆயுத விற்பனை யுக்திகள் `அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது' போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன. இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா? 1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான். ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலை ஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 'ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்' என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. கச்சா எண்ணெய் நிலமும் அரசியலும் லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனியின் லாபத்திற்காக ஒரு ஒட்டுமொத்த தேசமே சிதைக்கப்பட்டது. இந்த அநீதியைக் நேரில் கண்ட ஒரு இளைஞன்தான், பின்னாளில் புரட்சியாளராக மாறிய 'சே குவேரா' என்பது வரலாறு நமக்குச் சொல்லும் சுவாரசியமான உண்மை. வைரமும் யுரேனியமும்: காங்கோ 1961-ல் 'காங்கோ நாட்டின் தங்கம், வைரம், குறிப்பாக அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் இந்த நாட்டு மக்களுக்கே சொந்தம்' என சட்டமியற்றினார், காங்கோவின் முதல் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா. அதனால், அமெரிக்க அதிபர் ஐசனோவர் உத்தரவின் பேரில், உள்ளூர் கிளர்ச்சி மூலம் லுமும்பா பதவியிறக்கப்பட்டு, பெல்ஜியம் அதிகாரிகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பாவின் வீழ்ச்சிக்கு பின் காங்கோ சுமார் 30 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது. காங்கோ இன்றும் அமைதியின்மையில் இருக்கிறது. சால்வடார் அல்லெண்டே நெருக்கமானவர்களாக இருந்தாலும்... இதேப்போல தாமிரச் சுரங்கங்களை தேசியமயமாக்கிய சிலி நாட்டின் ஆட்சியாளர் சால்வடார் அல்லெண்டே, அமெரிக்காவின் சதித் திட்டத்தால் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உளவாளியான மானுவேல் நோரியேகா காலச் சூழலால் பனாமாவின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா வசம் இருந்த பனாமா கால்வாயை மீட்க முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காகவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜார்ஜ் புஷ் அவரைக் கைது செய்து, 40 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். அமெரிக்காவிற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அதன் நலன்களுக்கு நீங்கள் குறுக்கே நின்றால், ஒரே இரவில் நீங்கள் 'சர்வாதிகாரியாக' மாற்றப்பட்டு வேட்டையாடப்படுவீர்கள் என்ற உண்மையை நோரியேகாவின் வீழ்ச்சி உலகுக்கு சொன்னது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும். ஈராக்கும் சதாமும் ஈராக்கின் எண்ணெயை அமெரிக்க டாலருக்குப் பதில் ' யூரோ ' கரன்சியில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்த, ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் `அணு ஆயுதம் வைத்திருந்தார்' என்றக் குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார். அதற்குப்பிறகு, அமெரிக்கா தேடிய அந்த 'அணு ஆயுதங்கள்' ஈராக்கில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. 'ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும்' என்று பின்னாளில் பல உளவுத்துறை அறிக்கைகள் ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்குள் ஒரு நாடு சிதைக்கப்பட்டு, சதாம் வீழ்த்தப்பட்டு, டாலரின் ஆதிக்கம் அங்கே நிலைநாட்டப்பட்டுவிட்டது. சதாம் உசேன் கடாபிக்கு நேர்ந்த துயரம் சுமார் 42 ஆண்டுகள் லிபியாவைத் தனது இரும்புப்பிடியில் வைத்திருந்தவர் முஅம்மர் கடாபி (Muammar Gaddafi). ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்க டாலருக்குப் பதில் 'தங்க நாணயங்களை' (Gold Dinar) அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் எண்ணெயை விற்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது அமெரிக்க டாலரின் மரணத்திற்குச் சமமானது. அதனால் உள்நாட்டுக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கொண்ட அமெரிக்கா, லிபியாவில் நுழைந்து, முஅம்மர் கடாபியைக் கொடூரமாகக் கொன்றது. நீளும் பட்டியல் இந்தப் பட்டியல் வியாட்னாமின் நோ டின் டியெம், கியூபாவின் சே குவேரா, டொமினிக்கன் குடியரசு நாட்டின் பேல் ட்ருஜிலோ, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ என நீண்டுகொண்டே போகிறது. அதன் தொடராகதான், எண்ணெய் வளமிக்க ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது, நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குகிறது, ஈரான் மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்ற வேண்டும் எனக் காரணங்களை அடுக்கினாலும், எண்ணெய் வளம்தான் குறி எனவும், அதற்கு ஆதரவளிக்கும் ஆட்சியாளர்களை அங்கு அமர்த்துவதுதான் நோக்கம் எனவும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அயதுல்லா கமேனி இது தவிர, உலக நாடுகளின் பிரிக்ஸ் குழுவில் டாலருக்கு மாற்றான பிரிக்ஸ் பணம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முழுநேர உறுப்பினராக ஈரான் செயல்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, அதற்கான இறுதி முடிவுதான் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் காட்டமான விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இத்துடன் முடிவடையப்போவதில்லை. இது தொடரும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் உலக நாடுகளின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது ஏன் கவனிக்கப்படுவதில்லை என்பதுதான் ந்மக்கு எழும் கேள்வி..! என்று தெளியுமோ... தணியுமோ இந்த அதிகார போதை?

விகடன் 3 Mar 2026 9:31 am

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான The United Fruit Co. என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்தித் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன். இப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா... அயதுல்லா கமேனி டாலர் அரசியலின் தொடக்கம் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா. அதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும் என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் ' Reserve Currency' ஆக டாலர் மாறியது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின. அதிகாரப்போட்டியின் ஆரம்பம் அதற்குப்பின், 'இனி உலகின் பவர் சென்டர் யார்?' என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி - சோவியத் யூனியன் அணி - அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது. இதில் அமெரிக்கா - சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன. அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது. அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல். சோவியத் - இரண்டாம் உலகப்போர் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் 1971-ல் அமெரிக்கா இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், ``சவூதி அரேபியா எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும். என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உடன்பட்டன. அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இதனால் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது. ஆயுதமும் - பொருளாதார வளர்ச்சியும் பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின. இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது. அமெரிக்கா ஆயுத விற்பனை யுக்திகள் `அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் அவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது' போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன. இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா? 1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான். ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலை ஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 'ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்' என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. கச்சா எண்ணெய் நிலமும் அரசியலும் லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனியின் லாபத்திற்காக ஒரு ஒட்டுமொத்த தேசமே சிதைக்கப்பட்டது. இந்த அநீதியைக் நேரில் கண்ட ஒரு இளைஞன்தான், பின்னாளில் புரட்சியாளராக மாறிய 'சே குவேரா' என்பது வரலாறு நமக்குச் சொல்லும் சுவாரசியமான உண்மை. வைரமும் யுரேனியமும்: காங்கோ காங்கோ நாட்டின் தங்கம், வைரம், குறிப்பாக அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் இந்த நாட்டு மக்களுக்கே சொந்தம் என சட்டமியற்றினார் 1961-ல் காங்கோவின் முதல் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா. அதனால், அமெரிக்க அதிபர் ஐசனோவர் உத்தரவின் பேரில், உள்ளூர் கிளர்ச்சி மூலம் லுமும்பா பதவியிறக்கப்பட்டு, பெல்ஜியம் அதிகாரிகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பாவின் வீழ்ச்சிக்கு பின் காங்கோ சுமார் 30 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது. காங்கோ இன்றும் அமைதியின்மையில் இருக்கிறது. சால்வடார் அல்லெண்டே நெருக்கமானவர்களாக இருந்தாலும்... இதேப்போல தாமிரச் சுரங்கங்களை தேசியமயமாக்கிய சிலி நாட்டின் ஆட்சியாளர் சால்வடார் அல்லெண்டே அமெரிக்காவின் சதித் திட்டத்தால் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உளவாளியான மானுவேல் நோரியேகா காலச் சூழலால் பனாமாவின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா வசம் இருந்த பனாமா கால்வாயை மீட்க முயற்சித்தார். அதற்காகவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜார்ஜ் புஷ் அவரைக் கைது செய்து, 40 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். அமெரிக்காவிற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அதன் நலன்களுக்கு நீங்கள் குறுக்கே நின்றால், ஒரே இரவில் நீங்கள் 'சர்வாதிகாரியாக' மாற்றப்பட்டு வேட்டையாடப்படுவீர்கள் என்ற உண்மையை நோரியேகாவின் வீழ்ச்சி உலகுக்கு சொன்னது. ஈராக்கும் சதாமும் ஈராக்கின் எண்ணெயை அமெரிக்க டாலருக்குப் பதில் ' யூரோ ' கரன்சியில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்த, ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் `அணு ஆயுதம் வைத்திருந்தார்' என்றக் குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார். அதற்குப்பிறகு, அமெரிக்கா தேடிய அந்த 'அணு ஆயுதங்கள்' ஈராக்கில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும் என்று பின்னாளில் பல உளவுத்துறை அறிக்கைகள் ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்குள் ஒரு நாடு சிதைக்கப்பட்டு, சதாம் வீழ்த்தப்பட்டு, டாலரின் ஆதிக்கம் அங்கே நிலைநாட்டப்பட்டுவிட்டது. சதாம் உசேன் கடாபிக்கு நேர்ந்த துயரம் சுமார் 42 ஆண்டுகள் லிபியாவைத் தனது இரும்புப்பிடியில் வைத்திருந்தவர் முஅம்மர் கடாபி (Muammar Gaddafi). ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்க டாலருக்குப் பதில் 'தங்க நாணயங்களை' (Gold Dinar) அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் எண்ணெயை விற்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது அமெரிக்க டாலரின் மரணத்திற்குச் சமமானது. அதனால் உள்நாட்டுக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கொண்ட அமெரிக்கா, லிபியாவில் நுழைந்து, முஅம்மர் கடாபியைக் கொடூரமாகக் கொன்றது. நீளும் பட்டியல் இந்தப் பட்டியல் வியாட்னாமின் நோ டின் டியெம், கியூபாவின் சே குவேரா, டொமினிக்கன் குடியரசு நாட்டின் பேல் ட்ருஜிலோ, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ என நீண்டுகொண்டே போகிறது. அதன் தொடராகதான், எண்ணெய் வளமிக்க ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது, நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குகிறது, ஈரான் மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்ற வேண்டும் எனக் காரணங்களை அடுக்கினாலும், எண்ணெய் வளம்தான் குறி எனவும், அதற்கு ஆதரவளிக்கும் ஆட்சியாளர்களை அங்கு அமர்த்துவதுதான் நோக்கம் எனவும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அயதுல்லா கமேனி இது தவிர, உலக நாடுகளின் பிரிக்ஸ் குழுவில் டாலருக்கு மாற்றான பிரிக்ஸ் பணம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முழுநேர உறுப்பினராக ஈரான் செயல்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, அதற்கான இறுதி முடிவுதான் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் காட்டமான விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இத்துடன் முடிவடையப்போவதில்லை. இது தொடரும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் உலக நாடுகளின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது ஏன் கவனிக்கப்படுவதில்லை என்பதுதான் கேள்வி! என்று தெளியுமோ... தணியுமோ இந்த அதிகார போதை?

விகடன் 3 Mar 2026 9:31 am

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை.... என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினரை சமாதானப்படுத்தத்தான் என்கிறார்கள். அன்புமணி - மோடி பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, திமுக அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைத்துவிட்டது. தமிழக மக்கள் ஸ்டாலினை மன்னிக்க மாட்டார்கள். கடந்த 6 ஆண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் மிகப்பெரிய 3 சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை வைத்துதான் இந்தியாவில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைத்து நவீன இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதைப்போல நீண்ட நாள் கோரிக்கையான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்தை கொடுத்துள்ளார் மோடி, திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. சமூக நீதி என்றாலே மோடிதான், மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும், மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மன்மோகன் சிங் அன்புமணி இப்படி ஆவேசமாகப் பேச கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த 'ஆஷா' திரைப்பட விழாதான் காரணம் என்கிறார்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினர். அந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லையென்றால் மத்திய அமைச்சராக இருந்தபோது என்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை தடுக்க அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் என்ற ஆஷா திட்டம் 2005-ல் மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின்படி நாடு முழுவதும் பத்து லட்சம் கிராமங்களில் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் வெற்றி குறித்து ஆஷா எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மராத்தியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் தீபக் பாட்டில் தயாரிப்பாளர் தைவதா பாட்டில் ஆகியோருடன் அன்புமணியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அன்புமணி, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பத்து மாதம் திட்டமிட்டு ஆஷா திட்டத்தை உருவாக்கினேன். கடநத இருபது ஆண்டுகளில் இத்திட்டம் மிகப்பெரும் வெற்றி அமைந்துள்ளது. 2005-ல் ஒரு லட்சம் பிரசவத்தில் தாய், இறப்பு விகிதம் 300 ஆக இருநதது. அது இப்பொழுது 88 ஆக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 க்கு 68 ஆக இருந்தது, இப்போது 35 ஆக குறைந்துள்ளது. ஆஷா திட்டம் மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போது பிரதமாக இருந்த மன்மோகன் சிங்தான், இல்லாவிட்டால் என்னால் எதையும் செய்திருக்க முடியாது. என்று பேசியிருந்தார். அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி ராமதாஸ் மன்மோகன் சிங் ஆதரவில்தான் பிரசவ இறப்புகளை தடுக்கும் ஆஷா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது என்று பேசியது பாஜகவினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அது மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நேரத்தில் அன்புமணி இப்படி பேசியதால் டென்சனான பாஜக முக்கிய நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை அன்புமணி தரப்பில் தெரிவிக்க, அதன் காரணமாகவே அன்புமணி மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தும் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார் என்கிறார்கள்.

விகடன் 3 Mar 2026 9:24 am

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை.... என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினரை சமாதானப்படுத்தத்தான் என்கிறார்கள். அன்புமணி - மோடி பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, திமுக அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைத்துவிட்டது. தமிழக மக்கள் ஸ்டாலினை மன்னிக்க மாட்டார்கள். கடந்த 6 ஆண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் மிகப்பெரிய 3 சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை வைத்துதான் இந்தியாவில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைத்து நவீன இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதைப்போல நீண்ட நாள் கோரிக்கையான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்தை கொடுத்துள்ளார் மோடி, திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. சமூக நீதி என்றாலே மோடிதான், மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும், மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மன்மோகன் சிங் அன்புமணி இப்படி ஆவேசமாகப் பேச கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த 'ஆஷா' திரைப்பட விழாதான் காரணம் என்கிறார்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினர். அந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லையென்றால் மத்திய அமைச்சராக இருந்தபோது என்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை தடுக்க அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் என்ற ஆஷா திட்டம் 2005-ல் மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின்படி நாடு முழுவதும் பத்து லட்சம் கிராமங்களில் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் வெற்றி குறித்து ஆஷா எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மராத்தியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் தீபக் பாட்டில் தயாரிப்பாளர் தைவதா பாட்டில் ஆகியோருடன் அன்புமணியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அன்புமணி, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பத்து மாதம் திட்டமிட்டு ஆஷா திட்டத்தை உருவாக்கினேன். கடநத இருபது ஆண்டுகளில் இத்திட்டம் மிகப்பெரும் வெற்றி அமைந்துள்ளது. 2005-ல் ஒரு லட்சம் பிரசவத்தில் தாய், இறப்பு விகிதம் 300 ஆக இருநதது. அது இப்பொழுது 88 ஆக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 க்கு 68 ஆக இருந்தது, இப்போது 35 ஆக குறைந்துள்ளது. ஆஷா திட்டம் மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போது பிரதமாக இருந்த மன்மோகன் சிங்தான், இல்லாவிட்டால் என்னால் எதையும் செய்திருக்க முடியாது. என்று பேசியிருந்தார். அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி ராமதாஸ் மன்மோகன் சிங் ஆதரவில்தான் பிரசவ இறப்புகளை தடுக்கும் ஆஷா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது என்று பேசியது பாஜகவினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அது மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நேரத்தில் அன்புமணி இப்படி பேசியதால் டென்சனான பாஜக முக்கிய நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை அன்புமணி தரப்பில் தெரிவிக்க, அதன் காரணமாகவே அன்புமணி மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தும் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார் என்கிறார்கள்.

விகடன் 3 Mar 2026 9:24 am

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது. கப்பல் ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. எபிக் ஃபியூரி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது.

விகடன் 3 Mar 2026 8:53 am

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது. கப்பல் ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. எபிக் ஃபியூரி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது.

விகடன் 3 Mar 2026 8:53 am

Iran Vs Israel: என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார். மோடி - நெதன்யாகு அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவருடனான உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்தது. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கியெறியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றம் நிகழும்போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும். என்றார். இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன. தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேல்: ``'மோடி ஹக்' மிகவும் சிறப்பு வாய்ந்தது.! - நெகிழ்ந்த நெதன்யாகு

விகடன் 3 Mar 2026 8:49 am

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ் - 04 திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார். ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் குழு ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. 'கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது' என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று '25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது' என சோடங்கர் பேசுகிறார். 27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ். TVK Vijay - தவெக விஜய் இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், 'காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்...' என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம். அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? Loading…

விகடன் 2 Mar 2026 8:00 pm

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ் - 04 திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார். ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் குழு ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. 'கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது' என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று '25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது' என சோடங்கர் பேசுகிறார். 27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ். TVK Vijay - தவெக விஜய் இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், 'காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்...' என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம். அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? Loading…

விகடன் 2 Mar 2026 8:00 pm

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம்  மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள். திமுக - காங்கிரஸ் தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம். இந்த முறையும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளையே தி.மு.க வழங்க முன்வருகிறது. ஆனால் எண்ணிக்கையை மட்டும் அவர்கள் பிரதானமாக பார்க்கிறார்கள். கூடுதல் இடங்களை வாங்கி தோற்றால் பாதகம் அவர்களுக்கு இல்லை, எங்களுக்கே. அதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம். கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக தி.மு.கவின் ஒற்றைக்கட்சி ஆளுமை மீதே அவர்களுக்கு கடுப்பு இருப்பது தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தி.மு.க தலைமை மீது கடும் வன்மத்தில் இருக்கிறார். இந்த கூட்டணி இப்போது ஒட்டாமல் போவதற்கு அவரும் ஒரு காரணம். கிரிஷ் சோடங்கர் த.வெ.க தரப்பில் சிலர் அவருடன் தொடர்பில் இருப்பதால், த.வெ.க ஆதரவு மனநிலையில் அவர் உள்ளார். அவரது பேச்சைதான் டெல்லி காங்கிரஸ் தலைமையும் கேட்பதாகவே எங்களுக்கு தோணுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் வைத்துள்ளார். மார்ச் 3-ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி விசயத்தில் ஒரு முடிவை எடுக்காவிட்டால், அந்த இடத்தில் தி.மு.க வேட்பாளரை அறிவிக்க தலைமை ரெடியாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “மார்ச் 3 தேதிக்குள் டெல்லி தலைமையே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளது. இப்போதைய நிலையில் த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அன்று முக்கிய ஆலோசனை ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியின் தலைமை த.வெ.கவுடன் நெருக்கத்தை காட்டும் மூடில் உள்ளது. அதேநேரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் டெல்லி தலைமையிடம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார். இந்த குழப்பத்தினால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பு அமைதிகாத்துள்ளது. அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தி.மு.க சொல்வது போல மார்ச் 3-ம் தேதிக்குள் கூட்டணி விசயத்தில் முக்கிய அறிவிப்பை டெல்லி தலைமை அறிவித்துவிடும். த.வெ.கவுடன் கூட்டணி வைத்தால் ஐம்பது தொகுதிகள் வரை கிடைக்கும் என்கிற நிலை இருப்பதால் அதற்கான வாய்ப்பே இப்போது பலமாக உள்ளது. ஒரு வேளை தி.மு.க தலைமை நேரடியாக சோனியாவிடம் பேசினால், இந்த கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்ட கவுன்டவுனில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் நடந்துவருகிறது.” என்கிறார்கள். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் என்னவிதமான பாதிப்பு தங்களுக்கு வரும் என்கிற ஆய்வையும் தி.மு.க எடுத்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் கட்சியின் இடத்தை நிரப்பிவிடலாம் என்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். இதனால் தங்கள் அணியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித் அரசியல் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்க தி.மு.க முடிவெடுத்துள்ளது.! அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்.! Loading…

விகடன் 2 Mar 2026 7:03 pm

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம்  மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள். திமுக - காங்கிரஸ் தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம். இந்த முறையும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளையே தி.மு.க வழங்க முன்வருகிறது. ஆனால் எண்ணிக்கையை மட்டும் அவர்கள் பிரதானமாக பார்க்கிறார்கள். கூடுதல் இடங்களை வாங்கி தோற்றால் பாதகம் அவர்களுக்கு இல்லை, எங்களுக்கே. அதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம். கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக தி.மு.கவின் ஒற்றைக்கட்சி ஆளுமை மீதே அவர்களுக்கு கடுப்பு இருப்பது தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தி.மு.க தலைமை மீது கடும் வன்மத்தில் இருக்கிறார். இந்த கூட்டணி இப்போது ஒட்டாமல் போவதற்கு அவரும் ஒரு காரணம். கிரிஷ் சோடங்கர் த.வெ.க தரப்பில் சிலர் அவருடன் தொடர்பில் இருப்பதால், த.வெ.க ஆதரவு மனநிலையில் அவர் உள்ளார். அவரது பேச்சைதான் டெல்லி காங்கிரஸ் தலைமையும் கேட்பதாகவே எங்களுக்கு தோணுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் வைத்துள்ளார். மார்ச் 3-ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி விசயத்தில் ஒரு முடிவை எடுக்காவிட்டால், அந்த இடத்தில் தி.மு.க வேட்பாளரை அறிவிக்க தலைமை ரெடியாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “மார்ச் 3 தேதிக்குள் டெல்லி தலைமையே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளது. இப்போதைய நிலையில் த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அன்று முக்கிய ஆலோசனை ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியின் தலைமை த.வெ.கவுடன் நெருக்கத்தை காட்டும் மூடில் உள்ளது. அதேநேரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் டெல்லி தலைமையிடம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார். இந்த குழப்பத்தினால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பு அமைதிகாத்துள்ளது. அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தி.மு.க சொல்வது போல மார்ச் 3-ம் தேதிக்குள் கூட்டணி விசயத்தில் முக்கிய அறிவிப்பை டெல்லி தலைமை அறிவித்துவிடும். த.வெ.கவுடன் கூட்டணி வைத்தால் ஐம்பது தொகுதிகள் வரை கிடைக்கும் என்கிற நிலை இருப்பதால் அதற்கான வாய்ப்பே இப்போது பலமாக உள்ளது. ஒரு வேளை தி.மு.க தலைமை நேரடியாக சோனியாவிடம் பேசினால், இந்த கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்ட கவுன்டவுனில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் நடந்துவருகிறது.” என்கிறார்கள். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் என்னவிதமான பாதிப்பு தங்களுக்கு வரும் என்கிற ஆய்வையும் தி.மு.க எடுத்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் கட்சியின் இடத்தை நிரப்பிவிடலாம் என்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். இதனால் தங்கள் அணியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித் அரசியல் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்க தி.மு.க முடிவெடுத்துள்ளது.! அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்.! Loading…

விகடன் 2 Mar 2026 7:03 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit)  தாக்கல் செய்துள்ளார்.  அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது. திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன்.  பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன். பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை.  அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விகடன் 2 Mar 2026 5:57 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit)  தாக்கல் செய்துள்ளார்.  அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது. திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன்.  பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன். பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை.  அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விகடன் 2 Mar 2026 5:57 pm

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் போர் காமேனியின் மறைவுக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருக்கின்றன.  ஆனால் காமேனி மரணம் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசு கடைபிடித்து வரும் ‘மௌனம்’ அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன?  * 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது  இந்தியாவின்  மௌனத்திற்கு  முக்கியமான  காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது.  * மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பிரதமர் மோடி * தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது. இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா  மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விகடன் 2 Mar 2026 5:37 pm

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வென்றவர். அப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் வீரமணி அதிகாரத்தில் தொடர்ந்தார். அ.தி.மு.க ஆட்சி முடியும் தருவாயில், வீரமணி சொத்து குவிப்பு போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கினார். கே.சி.வீரமணி இதன் எதிரொலி இருந்தபோதும், மூன்றாவது முறையாக 2021 தேர்தலிலும் ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணி போட்டியிட்டார். அப்போது எதிர்முகமாக இருந்த தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு சீட் கிடைத்தது. ஜோலார்பேட்டை தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். வீரமணியும், தேவராஜியும் வன்னியர் சமூகம் என்பதோடு, இருக்கட்சிகளிலுமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் போட்டிக் கடுமையானது. கடைசியில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார் தேவராஜி. `எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் தங்கவில்லை; கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை' போன்ற குற்றச்சாட்டுகள் எழ, தேவராஜி மீது ஜோலார்பேட்டை தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள். அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி? இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார். தேவராஜி எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக. இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்' மாவட்டம்! Loading…

விகடன் 2 Mar 2026 5:15 pm

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வென்றவர். அப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் வீரமணி அதிகாரத்தில் தொடர்ந்தார். அ.தி.மு.க ஆட்சி முடியும் தருவாயில், வீரமணி சொத்து குவிப்பு போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கினார். கே.சி.வீரமணி இதன் எதிரொலி இருந்தபோதும், மூன்றாவது முறையாக 2021 தேர்தலிலும் ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணி போட்டியிட்டார். அப்போது எதிர்முகமாக இருந்த தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு சீட் கிடைத்தது. ஜோலார்பேட்டை தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். வீரமணியும், தேவராஜியும் வன்னியர் சமூகம் என்பதோடு, இருக்கட்சிகளிலுமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் போட்டிக் கடுமையானது. கடைசியில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார் தேவராஜி. `எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் தங்கவில்லை; கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை' போன்ற குற்றச்சாட்டுகள் எழ, தேவராஜி மீது ஜோலார்பேட்டை தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள். அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி? இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார். தேவராஜி எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக. இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்' மாவட்டம்! Loading…

விகடன் 2 Mar 2026 5:15 pm

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர். இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்றார். மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். ஆம் ஆத்மியின் வீழ்ச்சி காங்கிரஸுக்கு உணர்த்தும் பாடம் என்ன? இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர். காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள். சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர். இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன. பா.ஜ.க-வுக்கு முட்டுக்கொடுத்த தி.மு.க… சோனியாவை அவமதித்த ஜெ.! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 30

விகடன் 2 Mar 2026 4:42 pm

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர். இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்றார். மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். ஆம் ஆத்மியின் வீழ்ச்சி காங்கிரஸுக்கு உணர்த்தும் பாடம் என்ன? இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர். காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள். சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர். இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன. பா.ஜ.க-வுக்கு முட்டுக்கொடுத்த தி.மு.க… சோனியாவை அவமதித்த ஜெ.! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 30

விகடன் 2 Mar 2026 4:42 pm

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது மூர்த்தி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர். இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர். அனிதா ராதாகிருஷ்ணன் அன்பில் மகேஷ் மெய்யநாதன் பெரியகருப்பன் அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். 6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!

விகடன் 2 Mar 2026 4:21 pm

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது மூர்த்தி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர். இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர். அனிதா ராதாகிருஷ்ணன் அன்பில் மகேஷ் மெய்யநாதன் பெரியகருப்பன் அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். 6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!

விகடன் 2 Mar 2026 4:21 pm

விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழூர் பாலதுறை என்ற இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், mr vijayabaskar கரூரில் முக்கிய பாசன வாய்க்காலான புகழூர் ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் வாங்கல், நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக  கடந்த நவம்பர் மாதம் இந்த வாய்க்கால் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி இந்த பணிகளை விடியா தி.மு.க அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வராததால் வாங்கல், நெரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு நினைத்திருந்தால் விரைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டு இருக்கும். விவசாயிகள் மீதும் விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீதும் தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை. உடனடியாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லை என்றால், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனை பெற்று உடனடியாக இந்த பகுதியில், விவசாயிகளைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள வெப்பத்தின் தாக்கம் காரணமாக கடைமடை வரை உள்ள விவசாய பயிர்கள் கோரை, வாழை, தென்னை போன்ற பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சாலைவிரிவாக்க பணிகளுக்காக விவசாயிகள் மீது அக்கறையின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலை மூடியது குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் பதில் சொல்லி ஆக வேண்டும். mr vijayabaskar தமிழகத்தில் இரண்டு அமாவாசைகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு இருக்கும் என்றார். அதேபோல், காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் அள்ளப்பட்ட மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட இடத்தில், தற்போது இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. மேலிருந்து அழுத்தம் வருகிறது என்று கூறும் அரசு அதிகாரிகளால், மணல் கொள்ளையை தடுக்க முடியாத அவல நிலை கரூர் மாவட்டத்தில் நிலவுகிறது. இதைப் பார்த்து மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி நினைக்கின்றது. மக்கள் அனைவருக்கும் அனைத்தும் தெரியும். முற்றிலும் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் அடுத்தது திண்டுக்கல் ராமநாதபுரம் வரை பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி தான் உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். புகலூர் தடுப்பணை என்பது கிட்டத்தட்ட 1 டி.எம்.சி அளவுக்கு நீர் தேக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட தடுப்பணை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. mr vijayabaskar அதற்கான ரூ. 450 கோடி நிதியை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பெற்றுக் கொடுத்தார் என பொதுவெளியில் பேசி வருகிறார். படத்தில் வரும் வசனத்தை போல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால், சட்டை என்னுடையது என கூறுவதைப் போல செந்தில் பாலாஜி புகழூர் கதவணைக்கு நிதி பெற்றுக் கொடுத்தார் என்று பேசுவது நகைச்சுவை. நான் தான் முன்னாள் முதலமைச்சரிடம் பேசி, நிதியை ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தேன் என்பதை பொதுவெளியில் நிரூபிக்க முடியும். திட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள விடியா தி.மு.க அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கதவணை பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றார். Loading…

விகடன் 2 Mar 2026 4:15 pm

விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழூர் பாலதுறை என்ற இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், mr vijayabaskar கரூரில் முக்கிய பாசன வாய்க்காலான புகழூர் ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் வாங்கல், நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக  கடந்த நவம்பர் மாதம் இந்த வாய்க்கால் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி இந்த பணிகளை விடியா தி.மு.க அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வராததால் வாங்கல், நெரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு நினைத்திருந்தால் விரைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டு இருக்கும். விவசாயிகள் மீதும் விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீதும் தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை. உடனடியாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லை என்றால், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனை பெற்று உடனடியாக இந்த பகுதியில், விவசாயிகளைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள வெப்பத்தின் தாக்கம் காரணமாக கடைமடை வரை உள்ள விவசாய பயிர்கள் கோரை, வாழை, தென்னை போன்ற பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சாலைவிரிவாக்க பணிகளுக்காக விவசாயிகள் மீது அக்கறையின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலை மூடியது குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் பதில் சொல்லி ஆக வேண்டும். mr vijayabaskar தமிழகத்தில் இரண்டு அமாவாசைகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு இருக்கும் என்றார். அதேபோல், காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் அள்ளப்பட்ட மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட இடத்தில், தற்போது இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. மேலிருந்து அழுத்தம் வருகிறது என்று கூறும் அரசு அதிகாரிகளால், மணல் கொள்ளையை தடுக்க முடியாத அவல நிலை கரூர் மாவட்டத்தில் நிலவுகிறது. இதைப் பார்த்து மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி நினைக்கின்றது. மக்கள் அனைவருக்கும் அனைத்தும் தெரியும். முற்றிலும் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் அடுத்தது திண்டுக்கல் ராமநாதபுரம் வரை பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி தான் உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். புகலூர் தடுப்பணை என்பது கிட்டத்தட்ட 1 டி.எம்.சி அளவுக்கு நீர் தேக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட தடுப்பணை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. mr vijayabaskar அதற்கான ரூ. 450 கோடி நிதியை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பெற்றுக் கொடுத்தார் என பொதுவெளியில் பேசி வருகிறார். படத்தில் வரும் வசனத்தை போல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால், சட்டை என்னுடையது என கூறுவதைப் போல செந்தில் பாலாஜி புகழூர் கதவணைக்கு நிதி பெற்றுக் கொடுத்தார் என்று பேசுவது நகைச்சுவை. நான் தான் முன்னாள் முதலமைச்சரிடம் பேசி, நிதியை ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தேன் என்பதை பொதுவெளியில் நிரூபிக்க முடியும். திட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள விடியா தி.மு.க அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கதவணை பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றார். Loading…

விகடன் 2 Mar 2026 4:15 pm

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரான் மீதான போர் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஈரானின் இந்தப் பொறுப்பற்ற தாக்குதல்கள் எங்களது நெருங்கிய கூட்டாளிகளை குறி வைப்பதோடு, பிராந்தியத்தில் இருக்கும் எங்களது படைவீரர்களையும், மக்களையும் பயமுறுத்துகின்றன. இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களது நலம் மற்றும் எங்களது கூட்டாளிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து எங்களின் தற்காப்புக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் கப்பற்படை தளம் ஒன்று அமீரகத்தில் ஈரானிய தாக்குதலில் சேதமடைந்தது எனத் தகவல் வெளியானது. மேலும் பிரிட்டன் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிரது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா தற்காப்பு நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் இது தற்காப்பு மட்டுமே தான் எனவும், தாக்கி அழிக்கும் போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை, இனியும் ஈடுபடாது எனத் தெரிவித்தார், போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?

விகடன் 2 Mar 2026 3:34 pm

Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான'காமேனியின் மரணம்!

அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர். இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம். மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம். கமேனி மரணம் - துக்கம் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்... கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, 'எல்லாமுமானவர்'. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும். தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம். இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்... பிற மத்தியக் கிழக்கு நாடுகள் 'மாற்றம்... முன்னேற்றம்' என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது. இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்? அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; 'மாற்றம்... முன்னேற்றம்' வரும் என்று நினைக்கிறார்கள். கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள். அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது. கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?

விகடன் 2 Mar 2026 3:14 pm

Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான'காமேனியின் மரணம்!

அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர். இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம். மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம். கமேனி மரணம் - துக்கம் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்... கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, 'எல்லாமுமானவர்'. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும். தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம். இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்... பிற மத்தியக் கிழக்கு நாடுகள் 'மாற்றம்... முன்னேற்றம்' என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது. இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்? அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; 'மாற்றம்... முன்னேற்றம்' வரும் என்று நினைக்கிறார்கள். கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள். அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது. கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?

விகடன் 2 Mar 2026 3:14 pm

`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, ஜெயலலிதா என்னை அடித்தார் என கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா? என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம். பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம் என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம். எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ் தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா? தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். ops ``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து.. ``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, 'என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க'னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, 'எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்'னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப் பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு. ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே? அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது. 2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடு அதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை 'மாடல் அரசு' என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க. மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை. ``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே? ``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. Vijay அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06 `விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?' ``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க‌ மாட்டேன். என்றார். Loading…

விகடன் 2 Mar 2026 3:05 pm

`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, ஜெயலலிதா என்னை அடித்தார் என கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா? என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம். பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம் என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம். எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ் தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா? தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். ops ``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து.. ``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, 'என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க'னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, 'எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்'னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப் பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு. ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே? அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது. 2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடு அதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை 'மாடல் அரசு' என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க. மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை. ``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே? ``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. Vijay அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06 `விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?' ``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க‌ மாட்டேன். என்றார். Loading…

விகடன் 2 Mar 2026 3:05 pm

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album

NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு ``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்! – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

விகடன் 2 Mar 2026 1:25 pm

தொகுதிப் பங்கீடு: எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் - திருமாவளவன் சொல்வது என்ன?

அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம். 2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல. திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி. தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம். எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள். தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி மோதல்களுக்கு ஹாலிவுட் ஸ்டைல் தீர்வு! | Satire

விகடன் 2 Mar 2026 1:17 pm

ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர்... பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன? தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான். ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில் ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்... 'பழிக்கு பழி' நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது. காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை. இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான். ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான். அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான். ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான். லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை

விகடன் 2 Mar 2026 11:57 am

ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன? தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான். ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில் ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்... 'பழிக்கு பழி' நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது. காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை. இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான். ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான். அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான். ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான். லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை

விகடன் 2 Mar 2026 11:57 am

ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.) ஸ்டாலினுக்கு சோதனை களமாக அமைந்த ஆயிரம் விளக்கு! முதல் களம் 08 மு.க. ஸ்டாலின் 1989-ல் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) ஒரு சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் அமையவில்லை. இரண்டாம் தலைமுறைத் தலைவராக, ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டவரின் வருகையாகவே அது பார்க்கப்பட்டது.  மாணவச் செயல்பாட்டாளராகத் தொடங்கி, இளைஞர் அணி அமைப்பாளராக உருவெடுத்து, அவசர நிலைச் சிறைவாசி ஆகி, கட்சியின் எதிர்கால முகமாக உருவானவரின் அதிகாரபூர்வ நுழைவு அது. சென்னையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து ஸ்டாலின் பெற்ற வெற்றி, தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாக இன்றும் நிற்கிறது. அந்த ஒரு வெற்றிதான் அவரை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதாக உயர்த்தி, இறுதியில் முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டுசென்ற பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.  ஸ்டாலின் முதல் வெற்றிக்கு முன்பே தொடங்கிய அரசியல் பயிற்சி 1989 தேர்தல், ஸ்டாலினுக்கு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தாலும், அதற்கு நீண்ட காலம் முன்பே, அவர் தேர்தல் அரசியலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டார். பதின்வயது சிறுவனாக 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பிரசாரத்தில் ஈடுபட்டும், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், 1970-களின் நடுப்பகுதியில் இளைஞர் அணி அமைப்புப் பணியில் முழுமையாக இறங்கினார். 1976-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் ஸ்டாலின். அந்த அனுபவமே, அவரது பொதுவாழ்வுக்கான மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பல மூத்த திமுக தலைவர்கள் இன்றும் சொல்கிறார்கள். 1980-களில், திமுக இளைஞர் அணியை கட்சியின் மிக வலிமையான அமைப்புப் பிரிவாக உருவாக்கினார் ஸ்டாலின். மாவட்டப் பொறுப்புகளை ஏற்று, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினார். தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், தெருக்களிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர் பட்டாளத்தை உருவாக்கினார். அடித்தளமிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி இந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை,  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர். எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த  முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்  கருதினர்.  நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன.  ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் தேர்தல் வெற்றி  இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது.  அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, 'புதிதாக வந்தவரின் எழுச்சி' போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது. ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது.  அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவித்தது. ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தொகுதி, சென்னையின் அரசியல் உணர்வு மிக்க மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.  `போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5 நிர்வாக திறனுக்கான பயிற்சி  சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர்... 1989 வெற்றிக்குப் பிறகு ஸ்டாலினின் உயர்வு திடீர் பாய்ச்சலாக இல்லை. படிப்படியாகவே நடந்தது. 1991 தேர்தலில், திமுக மாநிலம் தழுவிய தோல்வியைச் சந்தித்தபோதிலும், அவர் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கவில்லை. மாறாக, கட்சி அமைப்புப் பணியில் இன்னும் தீவிரமாக இறங்கினார். 1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதே ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் மீண்டும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அதே ஆண்டில்,  நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயராகவும் பொறுப்பேற்றார். மாநகராட்சி மேயராக அவர் பதவி வகித்த காலமே அவரது நிர்வாக திறனுக்கான பயிற்சியாகவும், அதற்கான உண்மையான களமாகவும் அமைந்தது. சாலைகள், குப்பை மேலாண்மை, வீதி விளக்குகள், பூங்காக்கள், பள்ளிகள் என நகரை அழகுபடுத்தும்'சிங்கார சென்னை' திட்டம் அறிமுகமானது. இது, ஆட்சி நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவராக அவரை வெளிப்படுத்தியது.   கருணாநிதி- ஸ்டாலின் அமைச்சரிலிருந்து துணை முதலமைச்சர்...  2006-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தபோது, ஸ்டாலின் ஏற்கனவே ஆயிரம் விளக்கில் பலமுறை வெற்றி பெற்று நிறைவான அனுபவம் பெற்றிருந்தார். இந்தமுறை அவர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். நகராட்சி நிர்வாகத்தில் பெற்ற அனுபவத்திற்கு மிகவும் பொருந்திய துறை அது. 2009-ல் துணை முதலமைச்சராக உயர்த்தப்பட்டபோது, திமுகவில் நீண்ட காலமாகத் தயாராகிக்கொண்டிருந்த தலைமுறை மாற்றம் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் , மேயர் , அமைச்சர் என அமைதியாகவும் அளவாகவும் நடந்த உயர்வு, ஸ்டாலினை 'வாரிசு' என்று மட்டும் சொல்ல முடியாத அளவுக்கு, அனுபவத்தால் வார்க்கப்பட்ட தலைவர் எனக் காட்டுவதை திமுகவுக்கு எளிதாக்கியது. எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03 ஆளுமையை நிரூபித்த ஸ்டாலின்  2018-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்தபோது, திமுக ஸ்டாலினை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என அனைத்துப் பொறுப்புகளிலும் பணியாற்றியவராக இருந்தார். 1989 ஜனவரி 22 அன்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த  மு.க. ஸ்டாலின், 2021 மே 7 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். கருணாநிதி மறையும் வரை அவரது நிழலிலேயே வளர்ந்த மு.க. ஸ்டாலின், திமுக தலைவராக பதவியேற்ற பின்னர், இவரால் கட்சியை வழிநடத்தி, திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வைக்க முடியுமா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழத்தான் செய்தது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், 2021 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, அவர் மீதான அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிப்பதாகவும், அவரது ஆளுமையை நிரூபிப்பதாகவும் இருந்தது.  ஸ்டாலின் 2021 தேர்தலில், ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு மாறிவிட்டாலும், அவரை உயர்த்திய தேர்தல் வெற்றிக்கான பயணம் தொடங்கிய இடம் ஆயிரம் விளக்கு தொகுதிதான். கட்சிக்குள் அவரை வேறுபடுத்திக் காட்டும் நிர்வாக அனுபவத்தை வளர்த்தெடுக்கவும், திமுகவில் இயற்கையான வாரிசாக அவரை நிலைநிறுத்துவதற்கும் அடிப்படைப் பங்காற்றியதும் அந்தத் தொகுதிதான்.  அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி, ஒரு தலைமைக்கான மக்கள் அங்கீகாரமாகவும், நீண்ட கால உழைப்புக்கான அடித்தளமாகவும் அமைந்தது!   (தொடரும்) Loading…

விகடன் 2 Mar 2026 11:24 am

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி

விகடன் 2 Mar 2026 10:30 am

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி

விகடன் 2 Mar 2026 10:30 am