SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

ஈரோட்டில் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்'பயணம்; இபிஎஸ் ஆவேசப் பேச்சு | Photo Album

அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மிரட்டும் பா.ஜ.க, முரண்டு பிடிக்கும் எடப்பாடி - தொகுதிப் பங்கீட்டில் யார் கை ஓங்குகிறது?

விகடன் 9 Mar 2026 7:16 am

'அரசியலில் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக' - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கில் உழைத்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வானதி சீனிவாசன் மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 82 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயதானவர்கள் வீட்டில் தனியாக வாழ்வதற்கு கூட பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோத மது, போதை விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையை தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. திராவிட மாடல் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வியடைந்த அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் தவெக தலைவர் விஜய்யின் மகளிருக்கான வாக்குறுதிகளை வரவேற்கிறேன். வாக்குறுதிகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை. விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவருக்கு வாய்ப்பு இல்லை ராஜா என்று தான் சொல்ல வேண்டும். நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டேன். அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக. ஸ்டாலின் - திமுக தனி மனித வாழ்க்கையில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் என்கிற கலாசாரத்தை திமுக உருவாக்கியுள்ளது. ஸ்டாலினுக்கு கண்ணை மூடி திறந்தாலே பாஜக தான் கண்ணுக்கு தெரிகிறது. அதனால் எங்களை விமர்சிக்கிறார்” என்றார்.

விகடன் 8 Mar 2026 4:58 pm

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த 'மகன்'நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். அடுத்து ராஜ்ய சபா உறுப்பினராக தேசிய அரசியலில் என்ட்ரி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார் அவர். அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்த வாரத்தில் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. நிதிஷ் குமார் நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில் இந்த நிலையில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முறையாக ஜனதா தளத்தில் இணைந்துள்ளார். 1985-ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் இருந்து வருகிறார் நிதிஷ் குமார். ஆனால், இது நாள் வரை தனது குடும்பத்தை அரசியலில் இருந்து தள்ளியே வைத்திருந்தார். தந்தையின் முதலமைச்சர் பதவி ராஜினாமா அறிவிப்பிற்கு பிறகு, நிதிஷ் குமாரின் மகன் கட்சியில் இணைந்துள்ளார். நிஷாந்த் குமாருக்கு வயது 40. நிதிஷ் குமாரின் ராஜினாமாவிற்கு பிறகு, அமையப் போகும் அமைச்சரவையில் நிஷாந்த் குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி' சாத்தியம்?

விகடன் 8 Mar 2026 2:53 pm

'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' - ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?

ஈரானின் உச்ச தலைவர்‌ இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் தொடர்ந்து சிக்னல் தந்து வருகிறார். இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி லாரிஜானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... நாங்கள் எங்களுடைய தலைவர் மற்றும் மக்களின் ரத்தத்திற்கு பழி வாங்குவோம். இதற்கான விளைவை ட்ரம்ப் சந்திக்க வேண்டும்... சந்திப்பார். லாரிஜானி இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! பின், ஈரான் தேசிய தொலைகாட்சி பேட்டியில் லாரிஜானி, ட்ரம்பை விடமாட்டோம். அவரது செயலுக்கான விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அவர் நமது தலைவர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது மக்களைக் கொன்றுள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை உடைக்க பார்க்கிறது. வெனிசுலாவில் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்துள்ளது போல ஈரானிலும் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது என்று பேசியுள்ளார். லாரிஜானியைப் பற்றி ட்ரம்பிடம் கேட்ட போது, அப்படி ஒருவரை தெரியாது. அவர் சொல்வதைக் கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில்

விகடன் 8 Mar 2026 2:08 pm

கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி'சாத்தியம்?

ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது. இதற்கான '4' காரணங்கள் என்ன? > போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள். அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் 'அமெரிக்க கருவூலப் பத்திரமும்' ஒன்று. ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது. us dollar - usd - அமெரிக்க டாலர் > இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா. அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை. > எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது. இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது. இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது. > இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை. காரணம், அது தான் உலகளாவிய நாணயம். இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.

விகடன் 8 Mar 2026 11:19 am

நீங்கள் 'இதற்காக'வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை'மம்தா பதில்

நேற்றும், இன்றும் மேற்கு வங்கத்தில் 9-வது சர்வதேச சந்தாலி மாநாடு நடக்கிறது. இந்தியாவின் ஜார்காண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கலாச்சாரம், மொழி மற்றும் உரிமையை பாதுகாக்கும், கொண்டாடும் நோக்கமே இந்தச் சர்வதேச மாநாடு. இந்த மாநாட்டில் நேற்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! முதலில் இந்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் உள்ள பன்சிதேவாவின் பிதான்நகரில் நடக்க இருந்தது. இந்த இடத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் கூடலாம். ஆனால், கடைசி நேரத்தில், மேற்கு வங்க அரசு இந்த நிகழ்வை கோஷய்பூருக்கு மாற்றியிருக்கிறது. அது மிகவும் குறுகலான பகுதி. அங்கே அதிக மக்களும் கூட முடியாது. கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதால் மாநாட்டில் அதிக மக்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும் திரௌபதி முர்முவை வரவேற்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதனால், தனது அதிருப்தியை பொதுவெளியிலேயே தெரிவித்திருந்தார் முர்மு... மம்தா பானர்ஜி எனது தங்கையைப் போன்றவர். நானும் மேற்கு வங்கத்தின் மகள் தான். ஆனால், என்னை ஏன் இங்கு வர அனுமதிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அவர் அதிருப்தியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதனால் தான், இடம் மாற்றப்பட்டதா? பொதுவாக, ஜனாதிபதியை வரவேற்க முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வர வேண்டும். ஆனால், அவர்கள் வரவில்லை. சமீபத்தில் தான் இங்கே ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் வரமுடியவில்லை என்பது புரிகிறது என்று பேசியிருந்தார். மம்தா பானர்ஜி ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்தச் செயலை பாஜக, 'அரசியலமைப்பு ஒழுக்கத்தின் முழுமையான சரிவு' என்று விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியும், 'இந்தச் செயல் அவமானகரமானது' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது... ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரை பயன்படுத்தி பாஜக மாநிலத்தின் மீது அவதூறு பரப்புகிறது என்றும், முர்முவிற்கு பதிலளிக்கும் விதமாக, நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நான் உங்களை வரவேற்பேன். ஆனால், தேர்தல் சமயத்தில் வந்தால், உங்களது நிகழ்வுகளில் என்னால் கலந்துகொள்ள முடியாது. ஏனெனில், நான் மக்கள் உரிமையில் பிஸியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 8 Mar 2026 10:29 am

`தாய்க்கழகம் திரும்பும் விழா' - மேடையில் ஸ்டாலினுடன் கைக்கோத்த ஓபிஎஸ்! - Album

தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும்

விகடன் 8 Mar 2026 10:25 am

`தாய்க்கழகம் திரும்பும் விழா' - மேடையில் ஸ்டாலினுடன் கைக்கோத்த ஓபிஎஸ்! - Album

தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும் தாய் கழகத்திற்கு திரும்பும்

விகடன் 8 Mar 2026 10:25 am

வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' - ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது. ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை. நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்... இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார். இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது. அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! காரணம் என்ன? ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி. மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும். இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் கட்டுப்பாடு ஈரான் அதிபர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவருக்குமே இல்லை. வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதலை நிறுத்துவது முழுக்க முழுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையின் முடிவு. அந்தத் தலைமை நினைத்தால் தான் இந்தத் தாக்குதல் நிற்கும். ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

விகடன் 8 Mar 2026 10:21 am

வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' - ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது. ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை. நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்... இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார். இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது. அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian இந்திய விவகாரங்களில் எல்லை மீறும் `ட்ரம்ப்'-ன் அமெரிக்கா.! மௌனம் காக்கும் மோடி! காரணம் என்ன? ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி. மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும். இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் கட்டுப்பாடு ஈரான் அதிபர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவருக்குமே இல்லை. வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதலை நிறுத்துவது முழுக்க முழுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையின் முடிவு. அந்தத் தலைமை நினைத்தால் தான் இந்தத் தாக்குதல் நிற்கும். ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

விகடன் 8 Mar 2026 10:21 am

ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில்

ஈரானில் போர் நடப்பதும், அந்த நாடு ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியதும் உலக அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது... அதன் விலையும் தாறுமாறாக ஏறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 6), இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கிறோம் என்று 'பெர்மிஷன்' கொடுத்திருந்தது அமெரிக்கா. இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதி குறித்தும், கச்சா எண்ணெய் அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் அமெரிக்க அரசு செய்யுமா என்று அமெரிக்க அதிபர்‌‌ ட்ரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது. கச்சா எண்ணெய் அதற்கு அவரது பதில்... கச்சா எண்ணெயின் தேவை அழுத்தம் அதிகரித்தால், தேவைப்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பில் (SPR) இருந்து எண்ணெய் விநியோகிப்பேன். ஆனால், நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. நம் நாட்டிடம் அதிகளவிலான எண்ணெய் இருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னை விரைவில் சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 8 Mar 2026 9:02 am

'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா'- கேரள கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் 'புதுயுக யாத்திரை' என்ற பெயரில் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். புதுயுக யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக திருவனந்தபுரம் புத்தரிகண்டம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சி.பி.எம் - பி.ஜே.பி கூட்டணி காரணமாகத்தான் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ-யும் பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தவில்லை. கேரளாவில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி இணைந்து சி.ஜே.பி தான் உள்ளது. சி.பி.எம்-மும் பி.ஜே.பி-யும் இணைந்து காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கைகோர்க்கிறார்கள். எனக்கு எதிராக அமலாக்கத்துறை 36 வழக்குகள் பதிவு செய்துள்ளது. என்னிடம் 55 மணி நேரம் விசாரணை செய்தது. ஆனால் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ​கேரள அரசுக்கு கம்யூனிஸ்ட் பண்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை இந்த அரசு பாதுகாக்கவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரை மாற்றி 'கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா' என்று ஆக்க வேண்டும். சபரிமலை தங்கக் கொள்ளையில் பல சி.பி.எம் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும். திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி உலகளாவிய ஆபத்தான சூழ்நிலை இருந்தும் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்காவுடன் உடன் ஒப்பந்தம் செய்து நாட்டை வஞ்சித்துள்ளார். அமெரிக்கா சொல்பவர்களிடமிருந்து மட்டுமே கச்சா எண்ணெய் வாங்குவதாக ட்ரம்பிற்கு வாக்கு கொடுத்துள்ளார் மோடி. மோடி சமரசமாக செல்வதற்கு 'எப்ஸ்டீன் ஃபைல்கள்'தான் காரணம். காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். தனி நபராக நடனம் ஆடுவதைவிட, குழு நடனம் தான் நன்றாக இருக்கும். இது மக்களின் அறிவுரையாகும். என் வாழ்வின் நெருக்கடியான கட்டத்தில் ஆதரவாக நின்றவர்கள் கேரள மக்கள். நான் கேரளாவிற்கு கடமைப்பட்டுள்ளேன். திருவனந்தபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்​ பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் இலவசப் பயணத்திட்டமும், கல்லூரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். ​முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். ​உம்மன் சாண்டி பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ​இளம் தொழில்முனைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும். ​மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக தனித் துறை ஏற்படுத்தப்படும். இந்த ஐந்து திட்டங்களும் இந்திரா கேரண்டி ஆகும் இவ்வாறு அவர் பேசினார்.

விகடன் 8 Mar 2026 8:49 am

'விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்திற்கு பழனிசாமி'– முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

மதுரையில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் இணைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மேடை வித்தியாசமான மேடை. இதில் ஓபிஎஸ் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நானும் ரசிகன். கழகம் அவரை வளர்த்தது அவரும் கழகத்தை வளர்த்தார். அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமை குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தாய் கழகம் திரும்பியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் 2008ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதை குறிப்பிட்டு அடுத்த நாள் அவரை 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்' என்று செய்தி வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . ஓபிஎஸ் ஸ்பெஷலிட்டியே அவருடைய சிரித்த முகம்தான் ஆனால் அந்த சிரிப்பே அவருக்கு பிரச்சனையாகி விட்டது. என்னை பார்த்து ஒரு முறை சிரித்து விட்டார். அதை ஒரு போர் போல சித்தரித்து பேச தொடங்கி விட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நாம் எந்த அரசியல் கட்சியல் இருந்தாலும், வெளியில் பார்க்கும் போது நலம் விசாரிப்பது தான் அரசியல் பண்பு. அமைதியின் புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ், விசுவாசம் என்றாலும் ஓபிஎஸ் பெயர்தான் தான் நியாபகம் வருகிறது. ஜெயலலிதா தான் அமர்ந்திருந்த இருக்கையில் இரண்டு முறை ஓபிஎஸ்ஸை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த ஆட்சியை எந்த துரோகமும் இல்லாமல் திருப்பி கொடுத்தவர் ஓபிஎஸ். விசுசாசத்திற்கு ஓபிஎஸ் என்றால் துரோகத்திற்கு எடப்பாடி பழனிசாமி. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூவத்தூரில் தவழ்ந்து பதவியை பிடிததவர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு பதவியை கொடுத்தவர்களிடமே 'நீ எனக்கு பதவியை கொடுத்தாயா' என கேட்டவர். தன்னை காப்பாற்றி கொள்ள எது வேண்டுமானலும் செய்வார். தற்போது தன்னை காப்பாற்ற அதிமுகவையே அடமானம் வைத்திருக்கிறார். பாஜக நல்லது செய்யும் என நினைக்கிறார், அவர்கள் நல்லது நினைக்க மாட்டார்கள். பாஜக அதிமுகவின் ரத்ததை உரிஞ்சி விடும். 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷையே பாஜக பந்தாடியது. எனக்கு கிடைத்த தகவல் படி நிதிஷ்குமாருக்கு பதிலாக பாஜக சார்பில் வேறு ஒருவரை நியமிக்க இருக்கிறார்கள். அதே போல தான் பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக மாற்ற போகிறார்கள், இந்த தேர்தல் முடிந்ததும் மாற்றி விடுவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மோடி அதிமுக பெயரை சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டிய படத்தையே மாற்றி விடுவார்கள். திமுக வெற்றிபெறும் என பா.ஜ.க., நினைத்ததால் தான் நமது பிரச்சார பீரங்கியை ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றியுள்ளனர். என்னை மீண்டும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமெனவே அவர் கிளம்பி சென்று விட்டார். அவரை தேர்தல் முடியும் வரை தமிழ்நாடு ஆளுநராக தொடர வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் எவ்வளவோ கோரிக்கை வைத்தேன் அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றார்.

விகடன் 8 Mar 2026 7:01 am

நான் இருந்த இயக்கத்தில் தனி அணி உருவாக்கியதில்லை; நேர்மையுடன் பணியாற்றினேன்– ஓ.பி.எஸ்.

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த காலத்தில் நான் ஒருபோதும் தனி அணியை உருவாக்கவில்லை, கட்சிக்கு நேர்மை மற்றும் உண்மையுடன் பணியாற்றினேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியின் கொள்கைக்கு நேர்மையாகவும், வழங்கப்பட்ட பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றியுள்ளேன். நான் இருந்த இயக்கத்தில் தனி அணி அமைக்கவில்லை, அத்தகைய எண்ணமே எனக்கு இருந்ததில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் பணியை செய்தேன். எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய நோக்கததில் இருந்து விலகி, தொண்டர்களின் உரிமைகள் பறித்து விட்டது. எம்ஜிஆரின் அதிமுக அபகரிப்பு அதிமுகவாக மாறியிருக்கிறது. குறுக்கு வழியால் வந்தவர்களால் நான் எப்படி பாதிக்கப்பட்டேன் என எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், சட்ட விதிகளை வளைக்கலாம், ஆனாலும் தோல்வி அவர்களுக்கு தான். 8 தோல்வி 10 தோல்வி மட்டும் இல்லை இனி தொடர்ந்து தோல்வி தான் பெறுவார்கள். திராவிட சிந்தாந்த கொள்கைகளை கடைபிடிக்கும் தாய்கழகத்தில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். இதனால், திராவிட சித்தாந்தம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று, அந்தக் கட்சியில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்து, தன்னையும் தன்னுடன் பயணித்தவர்களையும் அன்புடன் அரவணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ஓ.பன்னீர்செல்வம் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பேரறிஞர் அண்ணாவின் அறிவு, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் தமிழ்ப்பற்று மற்றும் அரசியல் ஞானம், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் விவேகம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். திமுகவுடன் நான் இணைந்தது சிலருக்கு வெறுப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இது எதிரணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலும் தடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் வெறும் பேச்சாகவே உள்ளது , இங்கு எப்போதும் திராவிடமே நம் உயிர் மூச்சு. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக முதலமைச்சருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விகடன் 8 Mar 2026 6:48 am

மீண்டும் கதவை திறந்த எடப்பாடி ? மாறும் கூட்டணி கணக்கு?

மீண்டும் கதவை திறந்த எடப்பாடி ? மாறும் கூட்டணி கணக்கு?

சமயம் 7 Mar 2026 7:43 pm

கேப்டன் செய்யாததை செய்து காட்டிய பிரேமலதா ... உற்சாகத்தில் தேமுதிகவினர்!

கேப்டன் செய்யாததை செய்து காட்டிய பிரேமலதா ... உற்சாகத்தில் தேமுதிகவினர்!

சமயம் 7 Mar 2026 7:37 pm

அரசியலுக்கு வந்தாலே இது தான் கதியா? விஜய்க்கு எதிராக சதியா?

அரசியலுக்கு வந்தாலே இது தான் கதியா? விஜய்க்கு எதிராக சதியா?

சமயம் 7 Mar 2026 7:35 pm

“OPS DMK-க்கு போனதால் Usilampatti அரசியல் மாறுமா_ யார் strong_” (1)

“OPS DMK-க்கு போனதால் Usilampatti அரசியல் மாறுமா_ யார் strong_” (1)

சமயம் 7 Mar 2026 7:33 pm

விஜய் வெளியிடும் அறிவிப்பு... தவெகவை மீட்குமா?

விஜய் வெளியிடும் அறிவிப்பு... தவெகவை மீட்குமா?

சமயம் 7 Mar 2026 7:31 pm

என்ன சொல்லப்போகிறார் விஜய்? இதுவும் சதியா?

என்ன சொல்லப்போகிறார் விஜய்? இதுவும் சதியா?

சமயம் 7 Mar 2026 7:29 pm

'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம், எம்ஜிஆர் வளர்த்த கழகம், அதிமுகவின் அடிமைச் சேவகம்' - ஸ்டாலின் பேச்சு

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துடன் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று மதுரையில், அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதனை தாய்க்கழகம் திரும்பும் விழா என்கிற பெயரில் ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வரை சந்தித்த பன்னீர் செல்வம் அவர் பேசுகையில், சில காலத்திற்கு முன்பு வரை சகோதரர் ஓ.பி.எஸ் இந்த மேடையில் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் திரும்பியிருக்கிறார். அவரையும், அவருடைய இயக்கத்திற்குத் திரும்பியிருக்கும் உடன்பிறப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக வரவேற்கிறேன். கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞரை தலைவராக அவர் ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட தாயின் மடிக்கு நீங்கள் திரும்பியிருக்கிறீர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக, யாருக்கோ அடிமைச் சேவகம் செய்யப் போனதனால், உரிமைக்குரல் எழுப்பி தாய்க்கழகத்திற்குத் திரும்பியிருக்கிறீர்கள். பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும் அவருடைய கொள்கைகளையும் மறந்து துரோகத்தின் முழு உருவமானதனால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஓ.பி.எஸை இங்கு பார்க்கும்போது, ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. மு.க. ஸ்டாலின் 2008-ல் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, நவம்பர் 11-ம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பன்னீர்செல்வம் பேசினார். அடுத்த நாள் காலை வெளிவந்த முரசொலியில், பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம் குறித்த செய்தியை வெளியிட்டார்கள். ஓ.பி.எஸும் முரசொலி செய்தியைக் குறிப்பிட்டு அவையில் பேசினார். உடனடியாக கலைஞரும் 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக்கூடாது. பச்சைத் தமிழர் எனப் பெரியார், காமராஜருக்கு பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலியும் கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது' எனத் தலைவர் கலைஞர் சொன்னார். என்றார். ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

விகடன் 7 Mar 2026 7:05 pm

TVK: வருத்தப்படாதீங்க; அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல! - சமீப பிரச்னைகள் பற்றி விஜய்

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார். Vijay பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார். விஜய் தனது உரையை முடிக்கையில், சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை என்றார். Vijay தவெகவின் இந்த நிகழ்வில் துறைவாரியாக சாதித்த பல பெண்களையும் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி விஜய் கௌரவித்திருந்தார். தவெக சார்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. TVK: '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500' - விஜய்யின் தேர்தல் அறிக்கை!

விகடன் 7 Mar 2026 6:12 pm

வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!

முடிந்த விருப்ப மனு விநியோகம்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடைசித் தேதி மார்ச் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 15 தினங்கள் மொத்தம் 15,372 திமுக உறுப்பினர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். இதில் தங்களுக்கான விருப்ப மனுக்களைத் தாண்டி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி 1,473 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். திமுக - விருப்ப மனு முதல்வரைப் போலவே, துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கனிமொழிக்கும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் பலநூறு பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். முக்கிய தலைவர்களைத் தாண்டி, அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில், வட்ட, பகுதி செயலாளர்கள் மட்டுமே 500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன. “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்! ஆசையில் உடன்பிறப்புகள்! விருப்ப மனு கொடுத்து முடித்திருக்கும் நிலையில், யாருக்கு சீட் என்பது குறித்து தி.மு.க தலைமை கனத்த மௌனமாக இருப்பதாகச் சொல்கிறது திமுக வட்டாரம். இந்த விவகாரம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒவ்வொரு தொகுதிகளிலும் சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி பணம் காட்டுவார்கள். இன்னும் சிலர் கட்சித் தலைவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக்காக பணம் காட்டுவார்கள். அப்படி இந்த முறை மற்றவர்களுக்காகத் தாண்டி தனித்தனியாக மட்டுமே 12,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். திமுக - விருப்ப மனு ஒவ்வொரு முறையில் விருப்ப மனு கொடுத்து முடிந்ததுமே அந்தந்தத் தொகுதிக்குள் விருப்ப மனு கொடுத்த தரப்புக்கும், இப்போது இருக்கும் ஒரு தரப்புக்கும் இடையே பல்வேறு குழப்பங்களும் வந்து சேர்வது இயல்பான ஒன்றுதான். எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தல் தேதிக்கு முன்பாக தலைமையே குறிப்பிட்ட ஒருசிலருக்கு சீட் கன்பார்ம் செய்து வேலையை ஆரம்பிக்கச் சொல்வது வழக்கம். ஆனால், இம்முறை தேர்தலே நெருங்கிவிட்டது. இப்போதுவரை அப்படி யாருக்குமே சீட் உறுதி செய்தது குறித்து தலைமை இப்போதுவரை வாயைத் திறக்கவில்லை. 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் உறுதி ஆகாத சீட்! இத்தனைக்கும் தலைவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்கள் சீட் குறித்து ஏதாவது பேசினாலும் 'சீட் பத்தி யாரும் பேசாதீங்க' என்று முகத்தில் அடித்ததுபோல பேசிவிடுகிறார். இதனால், வரும் தேர்தலில் புது முகங்கள் மட்டுமல்ல யாருக்கு சீட் கிடைக்கும் என்று தெரியாமல் கட்சியினர் பலரும் கிலியில் இருக்கிறார்கள். இதில் சீட் உறுதி என்ற நம்பிக்கையில் கடந்த சில மாதங்களாக தொகுதியில் முகாமிட்டு செலவு செய்தவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. திமுக - விருப்ப மனு உண்மையில் கூட்டணி குழப்பமே இப்போதுவரை தீராமல் இருக்க, கட்சி சீட் பஞ்சாயத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் தலைவர். திருச்சி மாநாடு முடிந்ததுமே, நேர்காணல் நடத்தும் திட்டத்தில் இருக்கிறது தலைமை. நேர்காணல் நடந்து முடிந்தாலும், உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியாகப்போவதில்லை. கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரே திமுகவில் பட்டியல் வெளிவரக்கூடும். தொகுதி கிடைக்கும் என்ற ஆசையில் இருப்பவர்கள் முகத்தில் இருள் விலகப் போவதில்லை. அதுவரை தங்கள் சக்திக்கு ஏற்றார் போலப் பலரும் திமுக தலைமை மட்டத்தில் இருப்பவர் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார்கள் விளக்கமாக. கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ்

விகடன் 7 Mar 2026 5:54 pm

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் முட்டி மோதுவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். கார்த்திக் அண்ணா நகர் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகன். 2016 இல் அதிமுகவின் கோகுல இந்திராவை 1687 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2021லும் கோகுல இந்திராவை 27445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ் 2026 தேர்தலிலும் 'அண்ணா நகர்' தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர். தனக்கு பதில் தன்னுடைய மகன் 'அண்ணா நகர்' கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். சபரீசனுடன் கார்த்திக் குறிப்பாக, 'மாப்பிள்ளை' சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் 'பட்டா' இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார். சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார். தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக். 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் குடியிருப்பு குடியிருப்பாக சென்று வாக்கும் சேகரித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்ப மனுவையும் தாக்கல் செய்திருந்தார். வலுவாகப் போட்டியளிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், விருப்ப மனு விநியோகம் முடிகிற கடைசி நாளில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான சிற்றரசு அண்ணா நகருக்கு விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் என மூன்று தொகுதிகள் சிற்றரசுவின் கட்டுப்பாட்டில் வருகிறது. சிற்றரசு சேப்பாக்கம் உதயநிதியுடைய தொகுதி, ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலனின் தொகுதி மீதம் இருப்பது அண்ணா நகர் மட்டுமே. போட்டியிட விரும்பிய சிற்றரசு தயாநிதி மாறனின் ஆதரவோடு உதயநிதியின் ஒப்புதலோடு அண்ணா நகர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டார். சிற்றரசுவின் விருப்ப மனுவுக்கு சபரீசனும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர். சென்னையின் மத்தியில் முக்கிய தொகுதியாக திகழும் அண்ணா நகருக்கு முட்டிக் கொள்ளும் இருவருக்கும் மாப்பிள்ளையின் ஆதரவு இருப்பதால், அவர் யாரை டிக் அடித்து டிக்கெட் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய உடன்பிறப்புகள் பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்!

விகடன் 7 Mar 2026 4:32 pm

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் முட்டி மோதுவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக அறிவாலய வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். கார்த்திக் அண்ணா நகர் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகன். 2016 இல் அதிமுகவின் கோகுல இந்திராவை 1687 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். 2021லும் கோகுல இந்திராவை 27445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் - `இன்பன், இனியன் என தொடரும் உறவு' - அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ் 2026 தேர்தலிலும் 'அண்ணா நகர்' தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர். தனக்கு பதில் தன்னுடைய மகன் 'அண்ணா நகர்' கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். சபரீசனுடன் கார்த்திக் குறிப்பாக, 'மாப்பிள்ளை' சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் 'பட்டா' இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார். சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார். தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக். 'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின் குடியிருப்பு குடியிருப்பாக சென்று வாக்கும் சேகரித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்ப மனுவையும் தாக்கல் செய்திருந்தார். வலுவாகப் போட்டியளிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், விருப்ப மனு விநியோகம் முடிகிற கடைசி நாளில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான சிற்றரசு அண்ணா நகருக்கு விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் என மூன்று தொகுதிகள் சிற்றரசுவின் கட்டுப்பாட்டில் வருகிறது. சிற்றரசு சேப்பாக்கம் உதயநிதியுடைய தொகுதி, ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலனின் தொகுதி மீதம் இருப்பது அண்ணா நகர் மட்டுமே. போட்டியிட விரும்பிய சிற்றரசு தயாநிதி மாறனின் ஆதரவோடு உதயநிதியின் ஒப்புதலோடு அண்ணா நகர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டார். சிற்றரசுவின் விருப்ப மனுவுக்கு சபரீசனும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கின்றனர். சென்னையின் மத்தியில் முக்கிய தொகுதியாக திகழும் அண்ணா நகருக்கு முட்டிக் கொள்ளும் இருவருக்கும் மாப்பிள்ளையின் ஆதரவு இருப்பதால், அவர் யாரை டிக் அடித்து டிக்கெட் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய உடன்பிறப்புகள் பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். “செஞ்சுட்டேன்...” - ராகுலை வீழ்த்திய ஸ்டாலின்!

விகடன் 7 Mar 2026 4:32 pm

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலைத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இரவு 11 மணியளவில் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கோவை மாணவி வழக்கு அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட கும்பல், கார் கண்ணாடியை உடைத்து வினீத்தை கத்தியால் சரமாரியாக குத்தி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. கருப்பசாமி காளீஸ்வரன் அரசுத் தரப்பில் 72 சாட்சிகளாக விசாரித்தனர். சாட்சி விசாரணை மற்றும் அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதுதொடர்பாக 270 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கோவை மாணவி பாலியல் வழக்கு ஜிஷா அன்றைய தினம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோதுதான் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் நடைபெற்ற 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 7 Mar 2026 4:18 pm

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ - வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

தி ருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன். அப்போது, அன்பழகன் பிரியப்பட்டு `ஆனியன் ஊத்தாப்பம்’ கேட்டு, அதை வாங்கிக்கொடுத்ததையும் மலரும் நினைவுகளாகப் பகிர்கிறார் ஞானவேலன். தளபதி அறிவாலயம் இந்த நிலையில்தான் `உடன்பிறப்பே வா..’ நிகழ்ச்சி மூலம் ஸ்டாலினுடன் ஒன் டூ ஒன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தளபதி அறிவாலயத்தின் புகைப்படத்தைக் காட்டி பத்து ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஞானவேலன். தற்போது, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய இருத் தொகுதிகளுக்குமே விருப்ப மனு வழங்கிவிட்டு, தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறார். ஞானவேலனுக்காக அவரின் மனைவியும், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவருமான பிரியதர்ஷினி ஞானவேலனும் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் விண்ணப்பம் வழங்கியிருக்கிறார். வாணியம்பாடி தொகுதி தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. `கூட்டணிக்குத் தாரைவார்ப்பதால் தி.மு.க தொடர் தோல்வியைச் சந்திக்கிறது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்ற வேண்டும்’ எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.

விகடன் 7 Mar 2026 3:55 pm

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த பேனர்கள் - இரவோடு இரவாக கிழித்துச் சென்ற மர்ம நபர்கள்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை நடைபெற உள்ள பயண கூட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பங்கேற்க இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக அந்த பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்களை வைத்திருக்கிறார்கள். இன்று மாலை எடப்பாடி பழனிசாமி அந்தியூர் வரவுள்ள நிலையில், பல பகுதிகளிலும் ஃபிளக்ஸ் பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துச் சென்றிருக்கிறார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி பேனர் கிழிப்பு இது குறித்து காவல்துறையினர், அந்தியூர் அருகில் உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவு, காட்டூர் மேடு, கருவாடடிப்புதூர், கீழ்வாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட முக்கிய சாலையோரங்களில் அ.தி.மு.க சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை விரும்பாத நபர்கள் சிலர் இரவோடு இரவாக இந்த பேனர்களை கிழித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர் .

விகடன் 7 Mar 2026 2:40 pm

Christopher Tilak: உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன் - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது சொந்த ஊர் திருச்சி. cristober thilak இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டோபர் திலக், எனது அரசியல் பயணம் குறித்து கட்சியின் தலைமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு, இவ்வளவு பெரிய பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. இது, எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்னைகளையும், குறிப்பாக திருச்சி மாவட்டத்தின் தேவைகளையும் உரத்த குரலில் ஒலிப்பேன் என உறுதி அளிக்கிறேன். திருச்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படப் போகிறேன். விரைவில் பொது மக்களையும், கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க இருக்கிறேன் என்றார். `ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' - காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி

விகடன் 7 Mar 2026 1:23 pm

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்' அரசியல் ஆடுபுலி 8 தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதலமைச்சர் ஆன அரசியல் வரலாறு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று, வெற்றி பெற்றால்தான் முதலமைச்சராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதில்லை. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், முதன் முதலாக முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி அப்போது தேர்தலில் போட்டியிடவே இல்லை. அரசியலே வேண்டாமென்று ஒதுங்கி இருந்தார். பிரதமர் நேரு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான காமராஜர் உள்ளிட்டோரின் வற்புறுத்தலால் ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு ராஜாஜியை தங்கள் தலைவராகத் தேர்வு செய்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு அப்போதிருந்த சட்டமன்ற மேலவைக்கு ராஜாஜி தேர்வு செய்யப்பட்டார். ராஜாஜி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அப்படியொரு ஆதரவு கிடைத்து விட்டால், வாக்குரிமை உள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சராக பதவி ஏற்க முடியும். அப்படித்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மரணமடைந்த பின்பு அதிமுக உறுப்பினர்களால் மூன்று சட்டமன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எம்.எல்.ஏ. இல்லாத வி.கே.சசிகலாவும் ஒருவர். 2016 டிசம்பர் 5 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு தாண்டி 1 மணிக்கு மேல், அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் இரண்டு மாத காலம் மட்டும் ஆட்சி நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தம் நடத்தினார். இதற்கிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தங்களின் சட்டமன்றக் குழுத் தலைவராக, ஜெயலலிதாவின் தோழி, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தேர்வு செய்தனர். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென, 130 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதும், சசிகலாவை முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். சசிகலா சிறை செல்லும் முன்பு, கூவத்தூர் விடுதியில் நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வி.கே.சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சசிகலா இங்கு, எம்.எல்.ஏ.வாக இல்லாத வி.கே.சசிகலா முதலமைச்சராக தகுதிபெற்றும், பதவியேற்க முடியவில்லை. அதாவது 118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சராகத் தொடர முடியாது. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, 1988ஆம் ஆண்டு, அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆறு மாத காலத்திற்குள் அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும். ஆனால், ஜானகி ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அவர் 24 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. 1952 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. இல்லாத ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, அப்போதிருந்த சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது போல, 1967ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. எம்.எல்.ஏ. இல்லாத திமுக தலைவர் அண்ணாதுரை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அண்ணா அப்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தென் சென்னை எம்பியாக இருந்தார். முதலமைச்சராக பதவியேற்க எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்படாமல், முதலமைச்சராக பதவியேற்றவர்கள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் போது, அரசியல் ஆடுபுலி ஆட்டங்களுக்கு அளவே இருக்காது. இடைத்தேர்தல் என்றாலே தேர்தல் திருவிழா களைகட்டும், அதுவும் முதலமைச்சரே தேர்தலில் போட்டியிட்டால் எப்படி இருக்கும். காமராஜர் அப்படித்தான், 1954ஆம் ஆண்டு ராஜாஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின்பு காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு காமராஜருக்கு இருந்தது, ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அதனால் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, பின்னர் அத்தொகுதியில் போட்டியிடலாம் அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறினர். ஆனால், அந்த நேரத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் காமராஜர். காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கோதண்டராமன் களமிறங்கினார். காமராஜர் ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல். ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வி திட்டத்தை காமராஜர் ரத்து செய்துவிட்டார். அதனால், ஈ.வே.ரா. பெரியார் பச்சைத் தமிழர் காமராஜர் வெற்றிபெற வேண்டுமென பரப்புரை செய்தார். காங்கிரசை எதிர்த்து கட்சி தொடங்கிய திமுக தலைவர் அண்ணா குலக் கொழுந்தே குணாளா என்று காமராஜரை ஆதரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளராக காமராஜர் பார்க்கப்பட்டார். குடியாத்தம் இடைத்தேர்தலில் 38,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் காமராஜர். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை இருந்தது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தார். ஒரு நபர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. ஆனால் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். அத்தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. அதிமுக 132, தமிழ் மாநிலக் காங்கிரஸ் 22, பாட்டாளி மக்கள் கட்சி 20, காங்கிரஸ் 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, இந்தியக் கம்யூனிஸ்ட் 5 என்று அதிமுக கூட்டணி 197 இடங்களில் வென்றது. தேர்தலில் போட்டியிடாத, எம்.எல்.ஏ. ஆகாத, ஜெயலலிதாவை சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியிடம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடித்தத்தைக் கொடுத்து, பதவியேற்க அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. எம்.எல்.ஏ. இல்லாத ஜெயலலிதா 2001 மே 4 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்குகள் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி சில நாட்களில் பதவியில் இருந்து விலகினார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தினமும் போயஸ் கார்டன் இல்லம் சென்றுவிட்டு, பின்னர் தலைமைச் செயலகமான கோட்டைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 2001 டிசம்பர் 4 அன்று ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தனி நீதிமன்றம் டான்சி வழக்கில் கொடுத்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், டி.ஆர்.சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ரத்தானதால் தேர்தலில் போட்டியிடவும், முதலமைச்சராக பதவி ஏற்கவும் தகுதி பெற்றார் ஜெயலலிதா. அப்போது ஆண்டிபட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் (தற்போதைய தேனி தொகுதி திமுக எம்பி) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில், அப்பகுதியைச் சேர்ந்த, நடிகர் வாகை சந்திரசேகர் களத்தில் குதித்தார். அதிமுகவில் டிடிவி தினகரன், திமுகவில் அழகிரி ஆண்டிபட்டி தொகுதியில் முகாமிட்டனர். மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். 2002 பெப்ரவரி 21 அன்று நடைபெற்ற ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் 78,437 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார் ஜெயலலிதா. திமுக வேட்பாளர் வாகை சந்திரசேகர் 37,236 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் வென்ற ஜெயலலிதா அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். 2002 மார்ச் 2 அன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட, ஜெயலலிதா அமைச்சரவையில் 26 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். முன்னாள் முதலமைச்சராக மாறிய பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இரண்டாமிடம் பிடித்தார். பொதுத்தேர்தல் இல்லாமலேயே புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.! (தொடரும்)

விகடன் 7 Mar 2026 1:23 pm

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். 'கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். நடிகர் விஜய் ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.' உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். விஜய் - சங்கீதா முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `நோட்டா' எல்லாம் ஒரு போட்டி வேட்பாளரா? `கட்டாய வாக்கு' கொண்டுவருவது சரியா? - ஒரு நீதிமன்ற விவாதம்!

விகடன் 7 Mar 2026 12:31 pm

'வீட்டில் சிலுவை இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என அர்த்தமாகாது'- மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவரின் முன்னோர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதால், அவருக்கு பட்டியலின சான்றிதழ் பெறத் தகுதியில்லை என்று அகோலா சாதி சரிபார்ப்புக் குழு முடிவு செய்திருந்தது. விண்ணப்பத்தாரரின் வீட்டில் சிலுவை மற்றும் கிறிஸ்து படங்கள் இருப்பு மற்றும் 1962-ஆம் ஆண்டு பள்ளிப் பதிவேட்டில் அவரது குடும்பம் கிறிஸ்துவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை ஆதாரமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மனுதாரர் தனது மனுவில், ''தனது குடும்பம் முறையாக ஒருபோதும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சாதிப் பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காகவே தனது தாத்தா பள்ளிப் பதிவேடுகளில் கிறிஸ்துவர் என்று குறிப்பிட்டுக்கொண்டார் என்றும், உண்மையில் மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தனது வாதத்திற்கு ஆதாரமாக பள்ளி மற்றும் அரசு ஆவணங்களையும், தனது உறவினர் ஒருவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சாதி உறுதிச் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார். இம்மனு நீதிபதிகள் முகுலிகா ஜவால்கர் மற்றும் நந்தேஷ் தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆதாரங்களை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளின் முடிவு சரியானது அல்ல என்று கண்டறிந்தது. மேலும் அகோலா சாதி சரிபார்ப்புக் குழுவின் முடிவை தவறானது மற்றும் பிழையானது என்று தெரிவித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், மனுதாரருக்கு பட்டியலின சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஒருவரது வீட்டில் இருக்கும் மத அடையாளங்களை வைத்து மட்டுமே மதமாற்றத்தை உறுதி செய்ய முடியாது என்றும், மதமாற்றத்திற்கு உறுதியான ஆவண ஆதாரங்கள் அவசியம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,மதமாற்றம் குறித்த எந்தவொரு குற்றச்சாட்டும் ஞானஸ்நான சடங்குகள் (baptism rituals) அல்லது ஞானஸ்நானச் சான்றிதழ் போன்ற ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தனர். முறையான மதமாற்றச் சடங்குகள் நடந்ததா என்பதையும் சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.!

விகடன் 7 Mar 2026 11:50 am

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரிக்கா நீர் மூழ்கி ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இந்தப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் கடற்படையினருக்கு இந்தியா மற்றும் இலங்கை மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் அளித்துள்ளன. ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான 'ஐரிஸ் லவன்', தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகக் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புக அனுமதி கேட்டிருந்தது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்று, மார்ச் 1 அன்று இந்தியா அனுமதி வழங்கியது. மார்ச் 4 அன்று கொச்சி வந்தடைந்த இந்தக் கப்பலில் இருந்த 183 மாலுமிகளும் தற்போது கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே ஈரானியக் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த 32 மாலுமிகளை இலங்கை மீட்டது. மேலும், 'ஐரிஸ் புஷெர்' (IRIS Bushehr) என்ற மற்றொரு ஈரானியக் கப்பலும் எஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கேட்டது. இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 219 மாலுமிகள் கொழும்பு அருகே உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, ``ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. நடுநிலை வகிக்கும் அதே வேளையில், உயிர்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம், என்று தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ``எங்கள் மாலுமிகளை மீட்ட இலங்கை அரசுக்கு நன்றி. எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, 2000 மைல்களுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இருந்த ஒரு கப்பலை அமெரிக்கா தாக்கியிருப்பது ஒரு குற்றம். இது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படும். எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அணு ஆயுதமா... ஆட்சி மாற்றமா... ஈரான் போர்... இந்தியாவுக்கு என்னவாகும்?

விகடன் 7 Mar 2026 11:39 am

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்'– டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார். ஆனால் அவரால் நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது ஒரு காலனித்துவ மனப்போக்கு. ஈரானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் வாழ்வா-சாவா போராட்டம். ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜா ஈரானால் எந்தத் தூண்டுதலும் இல்லாத நிலையில், இஸ்ரேல் எனும் மாயையாலும், அதிகார அரசியலாலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டின் தலைவரைக் குறிவைத்துத் தாக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. இந்தியாவின் 'மிலன்' கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஆயுதங்கள் ஏதுமற்ற நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த ஒரு விருந்தினரை அமெரிக்கா தாக்கியது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகும். ஈரான் ஒரு பொறுப்புள்ள தேசம். ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மைக்கு நாங்களே அச்சாணி. நாங்கள் அதை மூடவில்லை. அவ்வாறு மூடுவதாக இருந்தால் முறைப்படி அறிவிப்போம் என்று என்றார். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல்: பகை தோன்றிய வரலாறு - சர்வதேச சட்டங்களை மீறிய ட்ரம்ப் மீது அதிருப்தி!

விகடன் 7 Mar 2026 11:35 am

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z'ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பலேன் ஷா நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது. காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடைக்கால அரசை வழிநடத்தப் பலேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு முழு பதவி காலத்திற்குப் பிரதமராக விரும்புவதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் ஜனவரி மாதம் ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களைக் கண்ட நேபாளத்தில், இந்தத் தேர்தல் ஒரு நிலையான ஆட்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், நேபாளத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முடிவு கட்டுதல், நல்லாட்சி, வாரிசு அரசியலை ஒழித்தல் மற்றும் அரசியலில் தலைமுறை மாற்றம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 'ஜென் ஸீ' இளைஞர்கள் நடத்திய போராட்டமே இந்தத் தேர்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது. ஊழல் வழக்குகளை உடைத்த ஜெயலலிதா… கண்ணகிக்காகப் போராடிய கருணாநிதி! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 34

விகடன் 7 Mar 2026 11:32 am

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z'ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பலேன் ஷா நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது. காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடைக்கால அரசை வழிநடத்தப் பலேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு முழு பதவி காலத்திற்குப் பிரதமராக விரும்புவதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் ஜனவரி மாதம் ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களைக் கண்ட நேபாளத்தில், இந்தத் தேர்தல் ஒரு நிலையான ஆட்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், நேபாளத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முடிவு கட்டுதல், நல்லாட்சி, வாரிசு அரசியலை ஒழித்தல் மற்றும் அரசியலில் தலைமுறை மாற்றம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 'ஜென் ஸீ' இளைஞர்கள் நடத்திய போராட்டமே இந்தத் தேர்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது. ஊழல் வழக்குகளை உடைத்த ஜெயலலிதா… கண்ணகிக்காகப் போராடிய கருணாநிதி! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 34

விகடன் 7 Mar 2026 11:32 am

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.. - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கூடுதல் கோப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு மைனர் பெண் கூறிய உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் இடம்பெற்று இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்ணிடம் எஃப்.பி.ஐ நடத்திய விசாரணையின் மூன்று பகுதிகளைக் கொண்ட கோப்புகள் வெளியாகி இருக்கிறது. முந்தைய கோப்புகளை வெளியிடும்போது மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களின் சில பகுதிகளை நகல் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டதால், அவை அப்போது வெளியிடப்படவில்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நிர்வாகம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து ஜனநாயக கட்சியினர் விசாரணை வேண்டும் என்கிறார்கள். இக்கோப்பில் எஃப்.பி.ஐ டொனால்டு ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இடம்பெற்று இருக்கிறது. அதில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''டொனால்டு ட்ரம்பிடம் என்னை எப்ஸ்டீன் தான் அறிமுகம் செய்தார். என்னை எப்ஸ்டீன் நியூயார்க் அல்லது நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்றார். அதிக அறைகள் உள்ள பெரிய கட்டடத்திற்கு என்னை அழைத்துச் சென்று, ட்ரம்பிடம் அறிமுகம் செய்து வைத்தார். உடனே ட்ரம்ப் அங்கிருந்த அனைவரையும் வெளியில் போகும்படி கேட்டுக்கொண்டார். என்னை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் வாய்வழியாக உறவை ஏற்படுத்திக்கொண்டபோது அவரது அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டேன். உடனே அவர் என்னை அடித்தார். இதனால் ஏற்பட்ட சத்தத்தில் மற்றவர்கள் மீண்டும் அறைக்குள் வந்தனர். ட்ரம்பும், எப்ஸ்டீனும் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். இதில் எப்ஸ்டீன் மற்றவர்களை மிரட்டுவது குறித்து பேசினார். ட்ரம்ப் பணத்தை சூதாட்டத்தில் செலவிடுவது குறித்து பேசினார். பாலியல் உறவின்போது எப்ஸ்டீன் என்னை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி எனது தாயாரை மிரட்டினார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டபோது அவர் அடிக்கடி மது, கஞ்சா மற்றும் கோகோயின் போன்ற போதைபொருளை எனக்கு கொடுத்தார். கடந்த பல ஆண்டுகளில் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று எனக்கும், என்னோடு தொடர்புடையவர்களுக்கும் பல முறை மிரட்டல் அழைப்புகள் வந்தது''என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இச்சம்பவம் நடக்கும்போது 13 முதல் 15 வயது இருக்கும். அப்பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் சரிபார்க்கவில்லை என்று எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்டு ட்ரம்ப் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,'' இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், நம்பகமான ஆதாரங்கள் இல்லாதவை. குற்ற பின்னணி கொண்ட பெண்ணிடமிருந்து இது போன்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது''என்று குறிப்பிட்டுள்ளார். ஏராளமான மைனர் சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது மற்றும் அச்சிறுமிகளை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தொடர்பான கோப்புகள் வெளியாகி அமெரிக்க பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

விகடன் 7 Mar 2026 10:28 am

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!

ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்பாரோ மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும். அயதுல்லா அலி கமேனி தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது. 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

விகடன் 7 Mar 2026 10:04 am

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!

ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்பாரோ மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும். அயதுல்லா அலி கமேனி தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது. இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது. 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

விகடன் 7 Mar 2026 10:04 am