SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

`கருப்பு சிவப்புக் கொடி; தங்களது நல்வரவு - நல்லுறவு- தேமுதிக-வை வரவேற்ற ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. திமுகவில் இணைந்த தேமுதிக இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. தேமுதிக திமுகவில் இணைந்தது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! திமுகவில் இணைந்த தேமுதிக சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்என்று பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 19 Feb 2026 11:09 am

திமுக பக்கம் வந்தது தேமுதிக..! - அறிவாலயத்தில் பிரேமலதா

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஸ்டாலின், பிரேமலதா சந்திப்பு இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. Loading…

விகடன் 19 Feb 2026 10:48 am

திமுக பக்கம் வந்தது தேமுதிக..! - அறிவாலயத்தில் பிரேமலதா

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஸ்டாலின், பிரேமலதா சந்திப்பு இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. Loading…

விகடன் 19 Feb 2026 10:48 am

சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும் - நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கேரள ஹைகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் மற்றும் மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. துவார பாலகர்கள் சிற்பங்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருவறை தங்கத் திருநடை சென்னையில் வைத்து பூஜை செய்தபோது அதில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. சபரிமலை சென்றபோது அங்குவைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தனது வீட்டில் பூஜை செய்ததற்குச் சிறு தொகை தட்சிணை மட்டுமே கொடுத்ததாகவும் அவருக்கும் தனக்கும் நிதி பரிவர்த்தனை எதுவும் நடந்தது இல்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் நடிகர் ஜெயராம் கூறுகையில், சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கோயில் மீது கேரள மக்களுக்கு தனிப்பட்ட உணர்வு உண்டு. எத்தனை கோயில்கள் இருந்தாலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருந்தால் அதில் உள்ள நூறு சதவிகிதம் உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது கேரளாவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நான் 50 ஆண்டுகளாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர் என்ற முறையில் இது எனது கடமை. நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த 38 ஆண்டுகளாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். அப்படித்தான் சபரிமலை திருநடை பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கும் நான் போனேன். என் மூலம் ஏதாவது நல்ல காரியங்கள் நடந்தால் அது நல்லதுதானே என்பதால் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். சபரிமலை வழக்கில் இனியும் சிக்கவேண்டியவர்கள் யாராவது இருந்தால் சிக்கட்டும். ஐயப்ப சுவாமி அவர்களைச் சும்மா விடமாட்டார் என்றார். ‘சபரிமலை தங்கத்தில் நிக்கல்...’ - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்... மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!

விகடன் 19 Feb 2026 7:23 am

கூட்டணி ஸ்பாம்..!

கார்ட்டூன்

விகடன் 19 Feb 2026 6:04 am

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்கள் அரசு ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாததால் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 1994–95 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் இந்த நில உரிமை தொடர்பாக சையத் ரஹமத்துல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அரசால் வழங்கப்பட்ட பட்டா செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இரு நீதிமன்றங்களும் நிலம் அருந்ததியர் மக்களுக்கே என்பதைக் உறுதிப்படுத்தியிருந்தன. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பட்டாக்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. மின்சாரம் இல்லாத இரவுகள் இங்கு வழக்கமானவை. குழந்தைகள் விளக்கின் வெளிச்சமின்றி படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அவசர நேரங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இரவுகள் நரகம் ஆகிறது. குடிநீர் மற்றும் சாலை வசதிகளும் போதுமான அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 70 நபர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் 17/02/2026 அன்று மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் அவர்களிடம் மனு வழங்கினார்கள். இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் கூறுகையில், ''1995-ல் 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் அரசு அதிகாரிகள், குறிப்பாக ஆதிதிராவிடர் அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு ஆவணங்களில் இதுநாள் வரை பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத காரணத்தினால் அவர்கள் வீடு கட்டவும், மின்சார வசதி பெறவும் முடியவில்லை. 2026 காலத்தில் கௌதம புத்தர் நகரில் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்பது ஏற்புடையது அல்ல. இந்த மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களிடம் இது குறித்து தொலைபேசி மூலம் பேசப்பட்டுள்ளது,” என்றார். விரைவில் அவர்கள் வாழ்வில் ஒளி வீசும் என நம்புவோம்.!

விகடன் 18 Feb 2026 5:47 pm

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்கள் அரசு ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாததால் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 1994–95 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் இந்த நில உரிமை தொடர்பாக சையத் ரஹமத்துல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அரசால் வழங்கப்பட்ட பட்டா செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இரு நீதிமன்றங்களும் நிலம் அருந்ததியர் மக்களுக்கே என்பதைக் உறுதிப்படுத்தியிருந்தன. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பட்டாக்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. மின்சாரம் இல்லாத இரவுகள் இங்கு வழக்கமானவை. குழந்தைகள் விளக்கின் வெளிச்சமின்றி படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அவசர நேரங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இரவுகள் நரகம் ஆகிறது. குடிநீர் மற்றும் சாலை வசதிகளும் போதுமான அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 70 நபர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் 17/02/2026 அன்று மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் அவர்களிடம் மனு வழங்கினார்கள். இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் கூறுகையில், ''1995-ல் 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் அரசு அதிகாரிகள், குறிப்பாக ஆதிதிராவிடர் அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு ஆவணங்களில் இதுநாள் வரை பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத காரணத்தினால் அவர்கள் வீடு கட்டவும், மின்சார வசதி பெறவும் முடியவில்லை. 2026 காலத்தில் கௌதம புத்தர் நகரில் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்பது ஏற்புடையது அல்ல. இந்த மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களிடம் இது குறித்து தொலைபேசி மூலம் பேசப்பட்டுள்ளது,” என்றார். விரைவில் அவர்கள் வாழ்வில் ஒளி வீசும் என நம்புவோம்.!

விகடன் 18 Feb 2026 5:47 pm

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சி.பி.எம் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு உள்ளது. சி.பி.எம் தற்போது ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் ஏற்கனவே ஆண்ட கட்சியாக உள்ளது. அதே சமயம் பா.ஜ.க இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேமம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க அதிக வார்டுகளில் வென்றது. பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக உள்ளார். பா.ஜ.க-வுக்கு அடித்தளம் உள்ளதால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர். மேயர் வி.வி.ராஜேஷ் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம், வர்க்கலா, ஆற்றிங்கல், சிறையின்கீழ், நெடுமங்காடு, வாமனபுரம், களக்கூட்டம், வட்டியூர்காவு, நேமம், அருவிக்கரை, காட்டாக்கடை, கோவளம், நெய்யாற்றின்கரை, பாறசாலை ஆகிய 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருவனந்தபுரம், நேமம், களக்கூட்டம் சட்டசபை தொகுதிகள் முழுவதும் திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சில வார்டுகள் வருகின்றன. எனவே, மாநகராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் முட்டிமோதுகின்றனர். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட நடிகர் கிருஷ்ணகுமார் முயல்கிறார். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி வழங்காத கோபத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் வெளியே கூறிவருகிறார். ஆனாலும், அவர் மறைமுகமாக வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு சாதகமாக களம் இருக்குமா என தனது ஆதரவாளர்கள் மூலம் பல்ஸ் பார்த்து வருகிறாராம். கேரளாவில் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கொடுத்த நேமம் தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப்போட்டு அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர். முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஆற்றிங்கல் தொகுதியை மாநில நிர்வாகிகள் சுதீர் மற்றும் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் கேட்கிறார்கள். காட்டாக்கடை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் விரும்புகிறார். பாறசாலை தொகுதியில் கரமன ஜெயன், களக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் நெய்யாற்றின்கரை தொகுதியில் செங்கால் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட விரும்பி டெல்லி தலைவர்களை சுற்றி வருகிறார்களாம். அதே சமயம் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வெண்டி ட்வெண்டி கட்சியும், பி.டி.ஜே.எஸ் கட்சியும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க-வுக்கு சாதகமான சில தொகுதிகளை கேட்கின்றன. இதனால், என்.டி.ஏ கூட்டணிக்குள் தொகுதி பங்கு வைப்பதில் இழுபறி நீடிக்கிறது.!

விகடன் 18 Feb 2026 5:37 pm

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சி.பி.எம் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு உள்ளது. சி.பி.எம் தற்போது ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் ஏற்கனவே ஆண்ட கட்சியாக உள்ளது. அதே சமயம் பா.ஜ.க இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேமம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க அதிக வார்டுகளில் வென்றது. பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக உள்ளார். பா.ஜ.க-வுக்கு அடித்தளம் உள்ளதால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர். மேயர் வி.வி.ராஜேஷ் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம், வர்க்கலா, ஆற்றிங்கல், சிறையின்கீழ், நெடுமங்காடு, வாமனபுரம், களக்கூட்டம், வட்டியூர்காவு, நேமம், அருவிக்கரை, காட்டாக்கடை, கோவளம், நெய்யாற்றின்கரை, பாறசாலை ஆகிய 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருவனந்தபுரம், நேமம், களக்கூட்டம் சட்டசபை தொகுதிகள் முழுவதும் திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சில வார்டுகள் வருகின்றன. எனவே, மாநகராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் முட்டிமோதுகின்றனர். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட நடிகர் கிருஷ்ணகுமார் முயல்கிறார். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி வழங்காத கோபத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் வெளியே கூறிவருகிறார். ஆனாலும், அவர் மறைமுகமாக வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு சாதகமாக களம் இருக்குமா என தனது ஆதரவாளர்கள் மூலம் பல்ஸ் பார்த்து வருகிறாராம். கேரளாவில் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கொடுத்த நேமம் தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப்போட்டு அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர். முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஆற்றிங்கல் தொகுதியை மாநில நிர்வாகிகள் சுதீர் மற்றும் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் கேட்கிறார்கள். காட்டாக்கடை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் விரும்புகிறார். பாறசாலை தொகுதியில் கரமன ஜெயன், களக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் நெய்யாற்றின்கரை தொகுதியில் செங்கால் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட விரும்பி டெல்லி தலைவர்களை சுற்றி வருகிறார்களாம். அதே சமயம் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வெண்டி ட்வெண்டி கட்சியும், பி.டி.ஜே.எஸ் கட்சியும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க-வுக்கு சாதகமான சில தொகுதிகளை கேட்கின்றன. இதனால், என்.டி.ஏ கூட்டணிக்குள் தொகுதி பங்கு வைப்பதில் இழுபறி நீடிக்கிறது.!

விகடன் 18 Feb 2026 5:37 pm

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா. தமிழில் மனுநீதி, தவசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்த் அவர்களுடன் தவசி படத்தில் அவர் நடனமாடும் `பஞ்சாங்கம் பாக்காதே மாமா' பாடல் தற்போது வரை மிகவும் பிரபலம் நடிப்பு துறையில் உச்சத்தை நெருங்கிக் கொண்டு வந்திருந்த நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஹைதராபாத்தில் நடிகை பிரதியுஷா விஷம் அருந்தி உயிரிழந்தார். அவருடன் விஷம் அருந்திய அவரது காதலர் சித்தார்த்த ரெட்டி உயிர் பிழைத்தார். இருவரும் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதிக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. தற்கொலை (சித்தரிக்கப்பட்ட படம்) இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை 2 ஆண்டுகளாகக் குறைத்தது. எனினும் நடிகை பிரதிஷ்யா தாயார் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல நடிகையின் காதலனும் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற சித்தார்த்த ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதே வேளை பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மருத்துவ ஆதாரங்களின்படி இது விஷம் அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறி அந்தப் புகார்களை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவால் நடிகை பிரதியுஷாவின் மரணத்தில் இருந்த 24 ஆண்டுகால மர்மம் விலகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு தற்கொலை வழக்கை முடிக்க கால் நூற்றாண்டு ஆகியிருக்கிறது என்பது மற்றொரு பக்கம் கசப்பான உண்மையாகவும் உள்ளது.

விகடன் 18 Feb 2026 5:14 pm

திமுக, அதிமுக, தவெக,நாதக பின்னாடி இருப்பது யார்?

திமுக, அதிமுக, தவெக,நாதக பின்னாடி இருப்பது யார்?

சமயம் 18 Feb 2026 4:09 pm

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது! - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி - தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும், பணி கிடப்பில் உள்ளது. இது, ஏமாற்றத்தை தருகிறது. thirumavalavan இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை. அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்காக நடத்தப்படுகிறது போராட்டம் என சுருக்கி பார்க்க தேவையில்லை. உள்நோக்கம் எதுவுமில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் உள்ளது. எந்த குழப்பம் இல்லை. தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றாக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும். thirumavalavan கூட்டணி உருவாக்குவதில், பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். இதில் கேள்விக்கு இடம் இல்லை. காங்கிரஸ் அதிகம் கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். கேட்பதால் கூட்டணி உடையாது. உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்க வேண்டும். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது.தி.மு.க கூட்டணியில் பிரச்னை இல்லை என்றார்.

விகடன் 18 Feb 2026 4:03 pm

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது! - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி - தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும், பணி கிடப்பில் உள்ளது. இது, ஏமாற்றத்தை தருகிறது. thirumavalavan இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை. அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்காக நடத்தப்படுகிறது போராட்டம் என சுருக்கி பார்க்க தேவையில்லை. உள்நோக்கம் எதுவுமில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் உள்ளது. எந்த குழப்பம் இல்லை. தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றாக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும். thirumavalavan கூட்டணி உருவாக்குவதில், பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். இதில் கேள்விக்கு இடம் இல்லை. காங்கிரஸ் அதிகம் கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். கேட்பதால் கூட்டணி உடையாது. உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்க வேண்டும். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது.தி.மு.க கூட்டணியில் பிரச்னை இல்லை என்றார்.

விகடன் 18 Feb 2026 4:03 pm

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியில் தங்களுக்கான பணிகளை பிரித்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே ராகுல் காந்தி அணி, பிரியங்கா வதேரா அணி என இரு அணிகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதில் பிரியங்கா காந்தி அஸ்ஸாம் மாநில தேர்தல் பொறுப்பை தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு கட்சியில் டி.கே.சிவகுமார், புபேஷ் பாகல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் புன்வார் ஜிதேந்திர சிங் ஆகி்யோருடன் செயல்பட்டு வருகிறார். இந்த அணிதான் அஸ்ஸாம் மாநிலத்தில் போட்டியிடப்போகும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 126 பேரை தேர்வு செய்ய இருக்கிறது. அதற்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் புபன் போரா பா.ஜ.க-வில் சேரப்போவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தங்களது பக்கம் இழுத்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி, கூட்டணி குறித்து பேசவோ அல்லது கட்சியில் இருக்கும் உள்கட்சி பிரச்னைகளை சரி செய்யவோ பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று மாநில தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். ராகுல் காந்திக்கு கேரளா மற்றொருபுறம் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரளாவில் கட்சி ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்று போட்டி இப்போதே கட்சிக்குள் உருவாக ஆரம்பித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா எப்படியும் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கே.சி.வேணுகோபால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்க ராகுல் காந்தி உதவுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசி வந்த எம்.பி.சசி தரூர் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் ராகுல் காந்தி அணியில் கேரளா தேர்தல் பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி இது தவிர கர்நாடக அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், ராஜ்யசபா எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மற்றும் கட்சித் தலைவர் கன்ஹையா குமார் ஆகியோர் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பிற பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியோடு சேர்ந்து சசி தரூர் முழு மனதோடு வேலை செய்வாரா என்ற கேள்வி இருந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பொறுப்பும் வேணுகோபால் வசம் வந்திருக்கிறது. கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருப்பதால் வேணுகோபால் முதல்வர் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கட்சியில் ராகுல் காந்திக்கு வேண்டப்பட்டவர்கள் அவருடனும், பிரியங்கா காந்திக்கு வேண்டப்பட்டவர்கள் பிரியங்காவுடனும் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுகின்றனர். இதில் யார் தங்களது செல்வாக்கை நிரூபிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் ராகுல் காந்திக்கு இத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தி வெற்றி பெறச்செய்துவிட்டால் கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கலாம். இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்திடம் பேசியபோது, 'இரு தலைவர்களும் பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டு செய்கின்றனர். இதில் கோஷ்டி பிரச்னை எதுவும் கிடையாது'' என்றார். பாண்டிச்சேரியையும் இத்தேர்தலில் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. Loading…

விகடன் 18 Feb 2026 3:41 pm

மார்ச் முதல் விஜய் செய்ய போகும் செய்கை Explained!

மார்ச் முதல் விஜய் செய்ய போகும் செய்கை Explained!

சமயம் 18 Feb 2026 3:22 pm

அந்த போன்கால் வரட்டும்! - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆட்சியில் பங்கு குறித்து தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பழமையான கூட்டணி. பாசிச சக்திகளை எதிர்ப்பதில் ஓரணியில் நாங்கள் போராடி வருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். தி.மு.க தரப்பிலும் ஒரு குழு அமைத்து எங்களுடன் பேசுவதற்காகக் காத்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவும் ராகுல்காந்தியும்தான் எடுப்பார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். கே.சி.வேணுகோபால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் தினம்தோறும் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்ரவர்த்தியும் கல்லெறிந்து வரும் நிலையில், 'கூட்டணி தொடர்கிறது. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கோஷமில்லை' என்று கே.சி.வேணுகோபால் கூறியிருப்பது, புது திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும்கூட, வேணுகோபாலின் வார்த்தைகளை நம்புவதற்கு அறிவாலயம் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருப்பவர் மாணிக்கம் தாகூர். மதுரையில் நடந்த ஒரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக வரவேண்டிய அவசியமில்லை. அந்தக் கூட்டத்தில்தான், 'அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர் முன்னிலையிலேயே, தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம், ராகுல் காந்தியின் முன் அனுமதி இல்லாமல் மாணிக்கம் தாகூர் செய்யவே மாட்டார். ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! தவிர, 'அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியது, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர்தான். அவரது பேட்டி, டிச.23-ம் தேதி வெளிவந்த தினத்தந்தி இதழிலில், தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது. 'காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது அவசியம்' என்ற கருத்தைச் சொல்லியிருந்தார் கிரிஷ் சோடங்கர். அவரது கருத்தை வழிமொழிந்த மாணிக்கம் தாகூரும், 'இதுதான் காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடும்' என்று கூறியிருந்தார். இப்படி, அவர்கள் இருவருமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் பேசிவரும் நிலையில், 'ஆட்சியில் பங்கு கோஷத்துக்கும் கட்சித் தலைமைக்கும் சம்பந்தமில்லை' என்று வேணுகோபால் கூறியிருப்பதை நம்புவதற்கில்லை. அதனால்தான், டெல்லி தலைமையே வாய் திறக்கட்டும் என்று அமைதி காக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். தினத்தந்தி தலைப்புச் செய்தி வேணுகோபால் சென்னை வந்திருந்தபோதுதான், சீட் பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, மக்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோருடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, காங்கிரஸ் தொடர்பாகவும் பேச்சு திரும்பியிருக்கிறது. இவ்வளவு தூரம் உறவுநிலை மோசமாகிவிட்ட பிறகு, காங்கிரஸ் உடன் கூட்டணியே அமைந்தாலும், அவர்கள் ஓட்டு நமக்கு விழுமா.. அல்லது, நமது தொண்டர்கள்தான் அவர்களுடன் இணக்கமாக வேலைப் பார்ப்பார்களா... இனி காங்கிரஸை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்வதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதற்கு, காங்கிரஸ் தொண்டர்கள் நமக்கு வாக்களிப்பார்களா, இல்லையா என்பதல்ல பிரச்னை. காங்கிரஸ் நம்மோடு இருந்தால்தான் சிறுபான்மை வாக்குகள் சிதறாமல் நமக்கு விழும். அந்த பிம்பம்தான் முக்கியம். இந்த மனமாச்சரியங்களெல்லாம், டெல்லியிலிருந்து ஒரு போன் வந்தால் சரியாகிவிடும் என்றாராம் முதல்வர் ஸ்டாலின். கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி முதல்வரின் மனநிலை குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும், இதேபோலத்தான் 40 சீட்டுகள் கேட்டு விடாப்பிடியாக நின்றது காங்கிரஸ் கட்சி. அப்போது மாநிலத் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம், '40 சீட்டுகளுக்குக் குறைந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாதீர்கள்' என்று கறாராகச் சொல்லிவிட்டார் ராகுல் காந்தி. கடைசியில், சோனியா காந்தியிடம் தலைவர் ஸ்டாலினே போனில் பேசி நிலைமையை விளக்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில், கே.எஸ்.அழகிரிக்கு சோனியா காந்தியின் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. எந்த பிரச்னையும் செய்யாமல், தி.மு.க அளித்த 25 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி. ஸ்டாலின், ராகுல் காந்தி இதனால் எழுந்த மனமாச்சரியத்தால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்த தலைவர் ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்மொழியவில்லை. வெளிப்பார்வைக்கு சகோதரர்களாக பழகினாலும், உள்ளுக்குள் சிற்சில மனக்கசப்புகள் இருக்கவே செய்கிறது. ஆனால், சோனியாவிடம் நல்ல உறவில் இருக்கிறது தி.மு.க தலைமை. சோனியாவிடமிருந்து ஒரு போன்கால் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தால், இப்போது நிலவும் பிரச்னையெல்லாம் ஒரு நிமிடத்தில் சரியாகிவிடும். அதற்காகத்தான் கார்கே, ரேவந்த் ரெட்டியின் ரூட்டில் சோனியாவை 'ரீச்' செய்யப் பார்க்கிறார் முதல்வர். பிப்.22-ம் தேதிக்கு முன்னதாகவே எல்லாம் சுமூகமாகிவிடும் என்றார் நம்பிக்கையுடன். எல்லாம் சுமூகமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது தி.மு.க. ஆனால், 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்று பதிவு போட்டு, மீண்டும் அனலைக் கிளப்பப் பார்க்கிறார் மாணிக்கம் தாகூர். ராகுலின் எண்ணவோட்டம் தி.மு.க-வுக்கு எதிர்திசையில் இருப்பதால், சோனியா காந்தியையே மலைபோல நம்பியிருக்கிறது அறிவாலயம். அவர்கள் எதிர்பார்ப்பின்படி, சோனியாவிடமிருந்து போன்கால் வருமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.! DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

விகடன் 18 Feb 2026 2:55 pm

அந்த போன்கால் வரட்டும்! - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆட்சியில் பங்கு குறித்து தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பழமையான கூட்டணி. பாசிச சக்திகளை எதிர்ப்பதில் ஓரணியில் நாங்கள் போராடி வருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். தி.மு.க தரப்பிலும் ஒரு குழு அமைத்து எங்களுடன் பேசுவதற்காகக் காத்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவும் ராகுல்காந்தியும்தான் எடுப்பார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். கே.சி.வேணுகோபால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் தினம்தோறும் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்ரவர்த்தியும் கல்லெறிந்து வரும் நிலையில், 'கூட்டணி தொடர்கிறது. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கோஷமில்லை' என்று கே.சி.வேணுகோபால் கூறியிருப்பது, புது திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும்கூட, வேணுகோபாலின் வார்த்தைகளை நம்புவதற்கு அறிவாலயம் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருப்பவர் மாணிக்கம் தாகூர். மதுரையில் நடந்த ஒரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக வரவேண்டிய அவசியமில்லை. அந்தக் கூட்டத்தில்தான், 'அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர் முன்னிலையிலேயே, தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம், ராகுல் காந்தியின் முன் அனுமதி இல்லாமல் மாணிக்கம் தாகூர் செய்யவே மாட்டார். ‘தன்மான’ காங்கிரஸ்... தவிக்கும் ஸ்டாலின்... குஷியில் விஜய்! தவிர, 'அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியது, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர்தான். அவரது பேட்டி, டிச.23-ம் தேதி வெளிவந்த தினத்தந்தி இதழிலில், தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது. 'காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது அவசியம்' என்ற கருத்தைச் சொல்லியிருந்தார் கிரிஷ் சோடங்கர். அவரது கருத்தை வழிமொழிந்த மாணிக்கம் தாகூரும், 'இதுதான் காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடும்' என்று கூறியிருந்தார். இப்படி, அவர்கள் இருவருமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் பேசிவரும் நிலையில், 'ஆட்சியில் பங்கு கோஷத்துக்கும் கட்சித் தலைமைக்கும் சம்பந்தமில்லை' என்று வேணுகோபால் கூறியிருப்பதை நம்புவதற்கில்லை. அதனால்தான், டெல்லி தலைமையே வாய் திறக்கட்டும் என்று அமைதி காக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். தினத்தந்தி தலைப்புச் செய்தி வேணுகோபால் சென்னை வந்திருந்தபோதுதான், சீட் பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, மக்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோருடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, காங்கிரஸ் தொடர்பாகவும் பேச்சு திரும்பியிருக்கிறது. இவ்வளவு தூரம் உறவுநிலை மோசமாகிவிட்ட பிறகு, காங்கிரஸ் உடன் கூட்டணியே அமைந்தாலும், அவர்கள் ஓட்டு நமக்கு விழுமா.. அல்லது, நமது தொண்டர்கள்தான் அவர்களுடன் இணக்கமாக வேலைப் பார்ப்பார்களா... இனி காங்கிரஸை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்வதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதற்கு, காங்கிரஸ் தொண்டர்கள் நமக்கு வாக்களிப்பார்களா, இல்லையா என்பதல்ல பிரச்னை. காங்கிரஸ் நம்மோடு இருந்தால்தான் சிறுபான்மை வாக்குகள் சிதறாமல் நமக்கு விழும். அந்த பிம்பம்தான் முக்கியம். இந்த மனமாச்சரியங்களெல்லாம், டெல்லியிலிருந்து ஒரு போன் வந்தால் சரியாகிவிடும் என்றாராம் முதல்வர் ஸ்டாலின். கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி முதல்வரின் மனநிலை குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும், இதேபோலத்தான் 40 சீட்டுகள் கேட்டு விடாப்பிடியாக நின்றது காங்கிரஸ் கட்சி. அப்போது மாநிலத் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம், '40 சீட்டுகளுக்குக் குறைந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாதீர்கள்' என்று கறாராகச் சொல்லிவிட்டார் ராகுல் காந்தி. கடைசியில், சோனியா காந்தியிடம் தலைவர் ஸ்டாலினே போனில் பேசி நிலைமையை விளக்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில், கே.எஸ்.அழகிரிக்கு சோனியா காந்தியின் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. எந்த பிரச்னையும் செய்யாமல், தி.மு.க அளித்த 25 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி. ஸ்டாலின், ராகுல் காந்தி இதனால் எழுந்த மனமாச்சரியத்தால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்த தலைவர் ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்மொழியவில்லை. வெளிப்பார்வைக்கு சகோதரர்களாக பழகினாலும், உள்ளுக்குள் சிற்சில மனக்கசப்புகள் இருக்கவே செய்கிறது. ஆனால், சோனியாவிடம் நல்ல உறவில் இருக்கிறது தி.மு.க தலைமை. சோனியாவிடமிருந்து ஒரு போன்கால் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தால், இப்போது நிலவும் பிரச்னையெல்லாம் ஒரு நிமிடத்தில் சரியாகிவிடும். அதற்காகத்தான் கார்கே, ரேவந்த் ரெட்டியின் ரூட்டில் சோனியாவை 'ரீச்' செய்யப் பார்க்கிறார் முதல்வர். பிப்.22-ம் தேதிக்கு முன்னதாகவே எல்லாம் சுமூகமாகிவிடும் என்றார் நம்பிக்கையுடன். எல்லாம் சுமூகமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது தி.மு.க. ஆனால், 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்று பதிவு போட்டு, மீண்டும் அனலைக் கிளப்பப் பார்க்கிறார் மாணிக்கம் தாகூர். ராகுலின் எண்ணவோட்டம் தி.மு.க-வுக்கு எதிர்திசையில் இருப்பதால், சோனியா காந்தியையே மலைபோல நம்பியிருக்கிறது அறிவாலயம். அவர்கள் எதிர்பார்ப்பின்படி, சோனியாவிடமிருந்து போன்கால் வருமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.! DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

விகடன் 18 Feb 2026 2:55 pm

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை'சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம். இதுவரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது, தரவுகளை நாம் நிரப்பி வந்தோம். இனி அப்படி இல்லை. வருமான வரிப் படிவத்தை ஓபன் செய்தாலே, தரவுகள் ஏற்கனவே பதிவாகி இருக்கும். அதை செக் செய்தால் போதுமானது. மேலும், ஏதேனும் தரவுகளில் மாற்றம் இருந்தால், அதை எடிட் செய்துகொள்ளலாம். income tax - வருமான வரி வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க! இதே மாதிரி, இனி வருமான வரிப் படிவங்களின் நம்பர்களும் மாற உள்ளதாம். வரைவு வருமான வரிச் சட்டம், 2026-ன் கீழ், சம்பளதாரர்களின் படிவமான 16-ன் பெயர் 130 ஆக மாற உள்ளது. இப்படி எந்தெந்த படிவங்களின் பெயர் எப்படி மாற உள்ளது என்பதைப் பார்ப்போம். 3CA, 3CB, 3CD > 26 16A > 131 24Q > 138 26Q > 140 27Q > 144 26AS > 168 ஆக, இனி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, படிவங்களின் பெயரைப் பார்த்து தாக்கல் செய்யவும் மக்களே. PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

விகடன் 18 Feb 2026 2:12 pm

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கான ரேஸ் இப்போது ஆரம்பித்துவிட்டது.  திமுக-வுக்கு 4... அதிமுகவுக்கு 2 தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், உள்ளிட்ட தி.மு.க-வை சேர்ந்தவர்களும், த.மா.கா-வை சேர்ந்த  ஜி.கே. வாசன், அ.தி.மு.க-வின் தம்பிதுரை ஆகிய ஆறு பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த  ஆறு இடங்களை தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேர் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். அதன்படி தி.மு.க கூட்டணிக்கு நான்கு உறுப்பினர்களும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் இரண்டு உறுப்பினர்களும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.  திருச்சி சிவா இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வர உள்ளது. இரண்டு கூட்டணியிலும், சீட் ஷேரிங், தொகுதி உடன்பாடு என பல சிக்கல்களில் உள்ள அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு கழகங்களும் ராஜ்யசபா தேர்தலை எப்படி சமாளிப்பது என்று அல்லாடி வருகிறார்கள். திமுக-வுக்கு தலைவலி..! “தி.மு.க அணியில் காலியாக உள்ள நான்கு இடங்களில் ஒரு இடம் திருச்சி சிவாவுக்கு மீண்டும் கிடைத்துவிடும் என்கிறார்கள். அடுத்த மூன்று இடங்களுக்கு தான் பெரும் போட்டியே தி.மு.கவுக்குள் உள்ளது. கனிமொழி சோமு, எம்.எல்.ஏ. சீட்டை மட்டும்  வாங்கி கொண்டு ஒழுங்காக மருத்துவர் தொழிலை பார்ககலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார். என்.ஆர்.இளங்கோவும், டெல்லி பாலிடிக்ஸ் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார். அந்தியூர் செல்வராஜ் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று அவரே முடிவுக்கு வந்துவிட்டார். இந்த மூன்று இடத்திற்கு தி.மு.கவில் கடும் போட்டியுள்ளது.  குறிப்பாக இளைஞர் அணியை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த பட்டியலில் எப்படியும் இணைந்துவிடலாம் என்று துாத்துக்குடி ஜோயல் நினைக்கிறார். அவருக்கு வாய்ப்பு அளித்தால் தென்மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவருக்கு வாய்ப்பு கொடுத்த கணக்கு வந்துவிடும். பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து கனிமொழி இடத்தை நிரப்ப இரண்டு பெண் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதற்காக கோயம்புத்துார் முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக் கடுமையாக முயற்சி செய்கிறார்” என்கிறார்கள் தி.மு.கவினர்.  திமுக - அண்ணா அறிவாலயம் அதேநேரம் உட்கட்சியில் சீட் கொடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி கட்சிகளை சரிகட்டுவதுதான் இப்போது தி.மு.கவுக்கு உள்ள சிக்கலே என்கிறார்கள் மேல்மட்ட நிர்வாகிகள். “தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான சீட் ஷேரிங் விவகாரம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் வந்தால் அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தை வழங்க வேண்டும். அதே போல் தே.மு.தி.கவும் ஒருவேளை தி.மு.க கூட்டணிக்குள் வந்தால் அந்த கட்சியும் ஒரு சீட்டை கேட்கிறது. அப்படி பார்த்தால் இரண்டு இடங்களை இப்போதே கூட்டணி கட்சிகள் கபளிகரம் செய்துவிடும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் குறைந்த சீட்டை எங்களுக்கு கொடுத்தால் இரண்டு ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு ஒன்று, அடுத்த ஆண்டு ஒன்று என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போகவே தி.மு.க தனது வேட்பாளர்களை களத்தில் இறக்க முடியும். அதனால்,யாருக்கு சீட் என்பதை விட எத்தனை இடங்கள் தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதிலேயே சிக்கல் உள்ளது” என்கிறார்கள்.  ஆக்ரோஷமான செல்வபெருந்தகை... ஆக்ஷன் மோடு டெல்லி!  - பெங்களூரு சந்திப்பில் நடந்தது என்ன? அ.தி.மு.கவின் நிலை..! தி.மு.க வின் நிலையைவிட அ.தி.மு.கவின் நிலை பரிதாபமாக உள்ளது. அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “தற்போது அ.தி.மு.க அணிக்கு இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகள் மட்டுமே கைவசம் உள்ளது. அதில் தம்பிதுரையை மீண்டும் டெல்லிக்கு அனுப்பும் திட்டம் தலைமையிடம் உள்ளது. இன்னும் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சிக்கு தான் விட்டுக்கொடுக்க போகிறோம். ஆனால் எந்த கட்சிக்கு அதை இப்போது கொடுப்பது என்கிற சிக்கல் உள்ளது. பாமக அன்புமணி தரப்பு தங்களுக்கு ஒரு இடம் கேட்டுள்ளது. ஜி.கே.வாசனின் பதவி இப்போது முடிவடைவதால் அவரும் சீட் கேட்கும் மூடில் இருக்கிறார். அதே போல் கூட்டணிக்கு வரும் ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்ய சொல்கிறது தே.மு.தி.க. ஏற்கனவே அ.தி.மு.க எங்களுக்கு சொன்னமாதிரி ஒரு ராஜ்யசபா இடத்தை கொடுக்கவில்லை என்று பிரேமலதா பொங்கினார். அ.தி.மு.க தலைமை அலுவலகம் இப்போது தே.மு.தி.க உள்ளே வந்தால் கண்டிப்பாக அவருக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும். அ.ம.மு.கவின் டி.டி.வி தினகரன் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று கூட்டணி உறுதியானபோதே அறிவித்தார். அவரும் ராஜ்யசபா சீட் வாங்கி மத்திய அரசில் ஒரு பதவியை வாங்கிவிடும் திட்டத்தில் இருக்கிறார். அதனால் பா.ஜ.க தரப்பு மூலம் தனக்கு ஒரு சீட் வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார். போகிற போக்கை பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க வேடிக்கை பாரக்கும் நிலையில் தான் இருக்கிறது” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர். எடப்பாடி பழனிசாமி மற்றொரு தரப்பிலோ, ``இந்த முறை அ.தி.மு.க தரப்பு கூட்டணியில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே சீட்டை விட்டுக்கொடுக்கும். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு,க அணி ஆட்சியை பிடித்தபிறகு அடுத்த ஆண்டு காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களில் கூடுதலாக அ.தி.மு.கவுக்கு வாய்ப்பு கிடைக்கும் அப்போது பிற கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என எடப்பாடி பேச உள்ளார். ஜி.கே.வாசனை மட்டும் பா.ஜ.கவிடம் சொல்லி, வேறு மாநிலத்திலிருந்து தேர்வாக்கும் திட்டமும் எடப்பாடியிடம் உள்ளது” என்கிறார்கள்.   எந்த கட்சிக்கு சீட் போகும் என்று தெரியாமலேயே இரண்டு கழங்களிலும் சீட் வாங்க போட்டா போட்டி நடப்பது தான் வேடிக்கை! Loading…

விகடன் 18 Feb 2026 2:00 pm

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கான ரேஸ் இப்போது ஆரம்பித்துவிட்டது.  திமுக-வுக்கு 4... அதிமுகவுக்கு 2 தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், உள்ளிட்ட தி.மு.க-வை சேர்ந்தவர்களும், த.மா.கா-வை சேர்ந்த  ஜி.கே. வாசன், அ.தி.மு.க-வின் தம்பிதுரை ஆகிய ஆறு பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த  ஆறு இடங்களை தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேர் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். அதன்படி தி.மு.க கூட்டணிக்கு நான்கு உறுப்பினர்களும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் இரண்டு உறுப்பினர்களும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.  திருச்சி சிவா இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வர உள்ளது. இரண்டு கூட்டணியிலும், சீட் ஷேரிங், தொகுதி உடன்பாடு என பல சிக்கல்களில் உள்ள அ.தி.மு.க மற்றும் தி.மு.க என இரண்டு கழகங்களும் ராஜ்யசபா தேர்தலை எப்படி சமாளிப்பது என்று அல்லாடி வருகிறார்கள். திமுக-வுக்கு தலைவலி..! “தி.மு.க அணியில் காலியாக உள்ள நான்கு இடங்களில் ஒரு இடம் திருச்சி சிவாவுக்கு மீண்டும் கிடைத்துவிடும் என்கிறார்கள். அடுத்த மூன்று இடங்களுக்கு தான் பெரும் போட்டியே தி.மு.கவுக்குள் உள்ளது. கனிமொழி சோமு, எம்.எல்.ஏ. சீட்டை மட்டும்  வாங்கி கொண்டு ஒழுங்காக மருத்துவர் தொழிலை பார்ககலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார். என்.ஆர்.இளங்கோவும், டெல்லி பாலிடிக்ஸ் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார். அந்தியூர் செல்வராஜ் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று அவரே முடிவுக்கு வந்துவிட்டார். இந்த மூன்று இடத்திற்கு தி.மு.கவில் கடும் போட்டியுள்ளது.  குறிப்பாக இளைஞர் அணியை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த பட்டியலில் எப்படியும் இணைந்துவிடலாம் என்று துாத்துக்குடி ஜோயல் நினைக்கிறார். அவருக்கு வாய்ப்பு அளித்தால் தென்மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவருக்கு வாய்ப்பு கொடுத்த கணக்கு வந்துவிடும். பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து கனிமொழி இடத்தை நிரப்ப இரண்டு பெண் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதற்காக கோயம்புத்துார் முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக் கடுமையாக முயற்சி செய்கிறார்” என்கிறார்கள் தி.மு.கவினர்.  திமுக - அண்ணா அறிவாலயம் அதேநேரம் உட்கட்சியில் சீட் கொடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி கட்சிகளை சரிகட்டுவதுதான் இப்போது தி.மு.கவுக்கு உள்ள சிக்கலே என்கிறார்கள் மேல்மட்ட நிர்வாகிகள். “தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான சீட் ஷேரிங் விவகாரம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் வந்தால் அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தை வழங்க வேண்டும். அதே போல் தே.மு.தி.கவும் ஒருவேளை தி.மு.க கூட்டணிக்குள் வந்தால் அந்த கட்சியும் ஒரு சீட்டை கேட்கிறது. அப்படி பார்த்தால் இரண்டு இடங்களை இப்போதே கூட்டணி கட்சிகள் கபளிகரம் செய்துவிடும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் குறைந்த சீட்டை எங்களுக்கு கொடுத்தால் இரண்டு ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு ஒன்று, அடுத்த ஆண்டு ஒன்று என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போகவே தி.மு.க தனது வேட்பாளர்களை களத்தில் இறக்க முடியும். அதனால்,யாருக்கு சீட் என்பதை விட எத்தனை இடங்கள் தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதிலேயே சிக்கல் உள்ளது” என்கிறார்கள்.  ஆக்ரோஷமான செல்வபெருந்தகை... ஆக்ஷன் மோடு டெல்லி!  - பெங்களூரு சந்திப்பில் நடந்தது என்ன? அ.தி.மு.கவின் நிலை..! தி.மு.க வின் நிலையைவிட அ.தி.மு.கவின் நிலை பரிதாபமாக உள்ளது. அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “தற்போது அ.தி.மு.க அணிக்கு இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகள் மட்டுமே கைவசம் உள்ளது. அதில் தம்பிதுரையை மீண்டும் டெல்லிக்கு அனுப்பும் திட்டம் தலைமையிடம் உள்ளது. இன்னும் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சிக்கு தான் விட்டுக்கொடுக்க போகிறோம். ஆனால் எந்த கட்சிக்கு அதை இப்போது கொடுப்பது என்கிற சிக்கல் உள்ளது. பாமக அன்புமணி தரப்பு தங்களுக்கு ஒரு இடம் கேட்டுள்ளது. ஜி.கே.வாசனின் பதவி இப்போது முடிவடைவதால் அவரும் சீட் கேட்கும் மூடில் இருக்கிறார். அதே போல் கூட்டணிக்கு வரும் ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்ய சொல்கிறது தே.மு.தி.க. ஏற்கனவே அ.தி.மு.க எங்களுக்கு சொன்னமாதிரி ஒரு ராஜ்யசபா இடத்தை கொடுக்கவில்லை என்று பிரேமலதா பொங்கினார். அ.தி.மு.க தலைமை அலுவலகம் இப்போது தே.மு.தி.க உள்ளே வந்தால் கண்டிப்பாக அவருக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும். அ.ம.மு.கவின் டி.டி.வி தினகரன் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று கூட்டணி உறுதியானபோதே அறிவித்தார். அவரும் ராஜ்யசபா சீட் வாங்கி மத்திய அரசில் ஒரு பதவியை வாங்கிவிடும் திட்டத்தில் இருக்கிறார். அதனால் பா.ஜ.க தரப்பு மூலம் தனக்கு ஒரு சீட் வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார். போகிற போக்கை பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க வேடிக்கை பாரக்கும் நிலையில் தான் இருக்கிறது” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர். எடப்பாடி பழனிசாமி மற்றொரு தரப்பிலோ, ``இந்த முறை அ.தி.மு.க தரப்பு கூட்டணியில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே சீட்டை விட்டுக்கொடுக்கும். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு,க அணி ஆட்சியை பிடித்தபிறகு அடுத்த ஆண்டு காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களில் கூடுதலாக அ.தி.மு.கவுக்கு வாய்ப்பு கிடைக்கும் அப்போது பிற கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என எடப்பாடி பேச உள்ளார். ஜி.கே.வாசனை மட்டும் பா.ஜ.கவிடம் சொல்லி, வேறு மாநிலத்திலிருந்து தேர்வாக்கும் திட்டமும் எடப்பாடியிடம் உள்ளது” என்கிறார்கள்.   எந்த கட்சிக்கு சீட் போகும் என்று தெரியாமலேயே இரண்டு கழங்களிலும் சீட் வாங்க போட்டா போட்டி நடப்பது தான் வேடிக்கை! Loading…

விகடன் 18 Feb 2026 2:00 pm

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! - இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும் தொடர்புடைய சாலைகளுக்கு அவர்களின் பெயரைச் சூட்டி பெயர்ப்பலகைகளை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இது இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Road name 1. எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை (முன்பு டிமாண்டி சாலை) 'மெல்லிசை மன்னர்' என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் (MSV) அவர்கள், தமிழ் திரையிசையின் பொற்காலத்தை உருவாக்கியவர். அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு (Demonte Road), இனி 'எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2. சீர்காழி கோவிந்தராஜன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலை) வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரரான இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பக்தி இசை மற்றும் திரை இசையில் தனி முத்திரை பதித்தவர். மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு, 'சீர்காழி கோவிந்தராஜன் சாலை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3. திருச்சி லோகநாதன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெரு) 'வாராய்... நீ வாராய்...', 'ஆசையே அலைபோலே' போன்ற தத்துவப் பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் சென்னையில் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு, 'திருச்சி லோகநாதன் சாலை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் திரை, இசைக் கலைஞர்களின் பெயரில் அமைந்துள்ள பிற முக்கிய சாலைகள்.! கலைவாணர் என்.எஸ்.கே. - கோடம்பாக்கத்தின் மிக முக்கிய சாலையான ஆற்காடு சாலைக்கு கலைவாணரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் - தி.நகரில் உள்ள சவுத் போக் சாலைக்கு செவாலியர் சிவாஜி கணேசன் சாலை எனப் பெயர் மாற்றப்பட்டது. கண்ணதாசன் - தி.நகரில் உள்ள ஹென்ஸ்மேன் சாலைக்கு கவிஞர் கண்ணதாசன் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. Road name டி.எம். சௌந்தரராஜன் - மந்தைவெளி பகுதியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியன் - சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ் பி பி பெயர் சூட்டப்பட்டுள்ளது. விவேக் - சாலிகிராமத்தில் உள்ள பத்மாவதி தெருவுக்கு ‘சின்ன கலைவாணார் விவேக் சாலை’ என்று பெயர். ஜெய்சங்கர் - நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. Road name இந்தப் பெயர் மாற்றங்கள் வெறும் நடவடிக்கைகள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையினருக்கு நமது மண்ணின் மைந்தர்களையும், அவர்களின் கலைப் பங்களிப்பையும் நினைவுபடுத்தும் ஆவணங்களாக இந்தச் சாலைப் பெயர்கள் அமைகின்றன. குறிப்பாக, டிமாண்டி காலனி போன்ற பெயர்கள் ஒருவித அச்ச உணர்வோடு பார்க்கப்பட்ட நிலையில், அதனை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற ஒரு மேதையின் பெயரில் அழைக்கப்படுவது அப்பகுதிக்கு ஒரு நேர்மறையான அடையாளத்தைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

விகடன் 18 Feb 2026 12:59 pm

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அமித் ஷா அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது... இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்… உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே… pic.twitter.com/gDJTjT9XBq — Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 18, 2026 ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல... மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 18 Feb 2026 12:31 pm

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அமித் ஷா அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது... இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்… உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே… pic.twitter.com/gDJTjT9XBq — Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 18, 2026 ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல... மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 18 Feb 2026 12:31 pm

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அமித் ஷா அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது... இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்… உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே… pic.twitter.com/gDJTjT9XBq — Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 18, 2026 ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல... மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 18 Feb 2026 12:31 pm

தலைமைகள் அடிச்சிக்கிட்டாலும்; நாங்கெல்லாம் பிரண்ட்ஸ்தான்- க்ரூப் சேலையில் திமுக-காங் கவுன்சிலர்கள்!

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, விசிக-வை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் கட்சி வேற்றுமைகளை கடந்து ஒரே ஸ்டைலில் க்ரூப் சேலை கட்டி வந்து கவனம் ஈர்த்திருந்தனர். கவுன்சிலர்கள் தமிழகத்துக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத்துக்கு திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக-வை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் 16 பேர் ஒரே கலரில் க்ரூப் சேலை கட்டி வந்து மகிழ்ச்சியாக போஸ் கொடுத்து கொண்டிருந்தனர். இதில் பாஜக-வின் கவுன்சிலர் உமா ஆனந்தும் உண்டு. கூட்டணியில் கிலி கிளப்பிக் கொண்டிருக்கும் காங்கிரஸின் கவுன்சிலர் சுகன்யா செல்வமும் உண்டு. இதைப்பற்றி அந்த கவுன்சிலர்களிடம் கேட்கையில், 'பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் ஒரு சிறப்பான நாள். இந்த ஸ்பெசலான நாளுக்காக எங்களின் ஒருமைப்பாட்டை காண்பிக்க இப்படி ஒரே மாதிரியாக சேலை கட்டி வந்திருக்கிறோம். வெவ்வேறு கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக இணைந்தே செயல்படுவோம்' என்றனர் ஒருமித்த குரலில். 'எலெக்சன் நேரத்துல இது என்னய்யா புது உருட்டா இருக்கு' என சில ஆண் கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளாகவே இவர்களை கலாய்த்துக் கொண்டனர். கவுன்சிலர்கள் தலைமைகள் வேணா அடிச்சிக்கலாம்; நாங்க எப்பவும் பிரண்ட்ஸ்தான்!

விகடன் 18 Feb 2026 12:20 pm

அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06

‘மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி அரிசி நிச்சயம்...’ நீங்கள் 1960-களில் இளைஞராக இருந்திருப்பீர்கள் என்றால், இந்த கோஷத்தை மறந்திருக்க முடியாது. பெரும் பணக்காரர்களாக இல்லாத அனைத்து தரப்பு மக்களுக்கும் அரிசி சோறு ‘லக்சுரி’யாக இருந்த காலக்கட்டம் அது. சோளச் சோறும், சோளத் தோசையும் தான் ஏழைகளுக்கு விதிக்கப்பட்டது. அதுவும் கிடைக்காதவர்கள் கப்பைக்கிழங்கு, கப்பை மாவு என்று தஞ்சமடைய வைத்திருந்தது பஞ்சம். அரிசி அறுவடை செய்யும் விவசாயி கூட அரிசி சோற்றை ருசித்துவிட முடியாத காலம். 2-ம் உலகப் போரின்போது ஏற்பட்ட உணவுப் பஞ்சம், குறிப்பாக ‘பெங்கால் ஃபேமைன்’ என்று கூறப்படும் வங்காளப் பஞ்சத்துக்கு ஒரு முக்கிய காரணம், வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் படிப்படியாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதில் தமிழ்நாடு ஒன்றும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, வயிற்றுப் பசியும் மக்கள் மத்தியில் போராட்டங்களாக ஆங்காங்கே வெடித்துச் சிதறியது. வறட்சி இதையொட்டி, 1967 தேர்தலுக்கு முன்னால் திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானது தான், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்பது. கூடவே, ‘கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’ என்ற திமுகவின் அடுக்குமொழி வசனங்கள் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த மக்கள் பிரச்னைப் போராட்டம் முழக்கம், இந்தி எதிர்ப்பு முழக்கத்தோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல் காங்கிரஸ் ஆட்சியை துல்லியமாகக் குறி பார்த்து பக்குவமாகப் பதம் பார்த்து வீட்டுக்கு அனுப்பியது. 1967-ல் திமுக ஆட்சி அமைந்தபோது அண்ணாவின் முன்னால் இருந்த மிகப் பெரிய சவால், அரிசிப் பஞ்சத்தைப் போக்குவது. அதற்கான திட்டங்களை வகுப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்த போதே அண்ணாவை பிடித்திருந்த நோய் அவர் உடல் மீது அதிதீவிரம் காட்ட அவர் மறைந்தார். அதன் பின்னர் 1969-ல் கருணாநிதி முதல்வரான போது, திமுக அரசின் மீது, ‘மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்...’ விமர்சனக் கணைகளாகத் திரும்பியிருந்தன. அப்போதுதான் கருணாநிதி, மாநில அரசே நேரடியாக அரிசி கொள்முதல் செய்ய வழிவகுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கேற்ப மாநில அரசு நெல் கொள்முதல் திட்டம் மாற்றி அமைக்கபட்டு அரிசி அதிக அளவில் வாங்கப்பட்டது. அந்த கையிருப்பைக் கொண்டு முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் ரேஷன் கடை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறது. 1970-களில் குறைந்த விலையில் அரிசி மக்களுக்கு மாவட்டம்தோறும் கொடுக்கப்பட, தமிழ்நாடு உணவுத் தன்னிறைவு பெற்றது. பின்னாளில் குஜராத் மாநில அரிசிப் பஞ்சத்துக்கு உதவும் வகையில் தமிழகம் முன்னேறியதாக முரசொலியில் தலைப்புச் செய்திகளும், தலையங்களும் வந்ததும் நினைவில் இல்லாவிடில் திமுக வரலாற்றுப் புத்தகங்களை ரெஃபர் செய்யலாம். ரேஷன் கடை எம்ஜிஆர் முன்னெடுத்த போராட்டங்கள் மக்கள் பிரச்னைகள்தான் போராட்டக் களத்தில் முக்கிய ஆயுதம் என்று நாம் தலைப்பிலேயே சுட்டியுள்ளோம். அதை நிறுவும் வகையில் பஞ்சத்தை வெல்ல திமுக முன்னெடுத்த போராட்டங்கள் அமைந்தன. அந்த வகையில், மக்கள் பிரச்னைக்கான எம்ஜிஆரின் சில போராட்டங்களையும் சுட்டிக் காட்டவது அவசியம். எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோதே மக்களுக்காகப் போராடியுள்ளார். இந்தி எதிர்ப்புக்காக அப்போதைய பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட திமுக முயற்சித்தபோது, கருப்புக் கொடி தயாரிப்புக்கு தனது சினிமா பின்னணியை பயன்படுத்தியதற்காக கைதானார். பின்னர், இந்தி திணிப்பை எதிர்த்து, குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தனது பத்மஸ்ரீ விருதைத் திரும்ப அளித்து எதிர்ப்பைத் தெரிவித்தார். சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர் அதனைத் தொடர்ந்து 1953-ல் டால்மியாபுரம் என்ற பெயரை மாற்ற வலியுறுத்தி திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரிலான போராட்டம், தமிழக அரசியலின் திருப்புமுனை எனலாம். அந்தப் போராட்டத்தின் வாயிலாக, அதிமுக என்ற கட்சியைத் தோற்றுவிக்க அடித்தளமிட்டார். 1980-களில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அங்குள்ள சூழலைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1982-ல் எம்ஜிஆர் சட்டப்பேரவையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது, தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்த காலக்கட்டம். அத்திட்டத்துக்காக அரசுக்கு கூடுதல் அரிசி தேவைப்பட்டது. எனவே மத்திய தொகுப்பில் இருந்து இந்திரா காந்தி கூடுதல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காத சூழலில், எம்ஜிஆர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். சட்டப்பேரவையில் போராட்டத்தை அறிவித்த அவர், அடுத்த நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் போராட்டத்தை நடத்தினார். இந்தத் தகவல், இந்திரா காந்திக்குப் பறந்தது. அவர் எம்ஜிஆர் கோரிக்கையால் ஆவேசமடைந்தார். இருப்பினும், அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிமுகவுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் கோரிக்கைகளை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கவே, இந்திரா காந்தி ஒப்புக்கொள்ள ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். எம்ஜிஆரை எதிர்த்து நடந்த போராட்டங்கள்: சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து, கிராமங்களில் 'கர்ணம்' (கணக்குப்பிள்ளை) மற்றும் 'மணியம்' (கிராமத் தலைவர்) ஆகிய பதவிகள் குறிப்பிட்ட உயர் சமூகத்தினரால் பரம்பரையாக வகிக்கப்பட்டு வந்தன. இந்தப் பரம்பரை பதவிகளை ஒழித்து, அனைத்து சாதியினரும் பங்குபெறும் வகையில் போட்டித் தேர்வுகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்ற புதிய பணியிடங்களை உருவாக்கியது. ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எம்ஜிஆர் அரசு பிடிவாதமாக இருந்து விஏஓ பணியிடத்தைக் கொண்டுவந்தது. எம்ஜிஆரை எதிர்த்து திமுக முன்னெடுத்த முக்கியப் போராட்டங்களில் ஒன்று இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம். 1979-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார். தொடர்ந்து இதற்கான அரசாணையும் ஆதே ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.9000 மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பை முன்வைத்தது. அதற்கு சற்றும் அசையாத எம்ஜிஆர், ``இது திமுக ஆட்சிக் காலத்தில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளின் படியே செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இடஒதுக்கீடு “ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினருடன் போட்டியிடாதவகையில் செய்யப்படாவிட்டால், சமூக நீதி என்பதை அடைய முடியாது” என சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டதாக அதிமுக அரசு கூறியது. கூடவே, கேரள அரசின் ஆணை ஒன்றையும் சுட்டிக்காட்டியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற கேரள அரசு 10,000 ரூபாயை வருவாய் வரம்பாக நிர்ணயித்திருந்ததை எம்ஜிஆர் சுட்டிக்காட்டினார் . ஆனால், இதற்கு எதிரான திமுக போராட்டம், மக்கள் போராட்டமானது. கடும் மக்கள் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஆணையை ரத்து செய்தார் எம்ஜிஆர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி தனது அரசியலுக்கு ஸ்கோர் சேர்த்தார். தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் போராட்ட வியூகம் எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவருக்கு மிகப்பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. அதன் பின்னர் தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர் அவமதிக்கப்பட்ட விதம் இன்றளவும் பேசுபொருள். அப்போது ‘இனி ஒரு முதல்வராகவே அவைக்குள் நுழைவேன்’ என்று சூளுரைத்து, கடும் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் 1991-ல் முதல்வராக நுழைந்தார். முதலாவது ஆட்சிக் காலத்தில், எம்ஜிஆர் பாணியிலேயே ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு டெல்லி வரை அதிர்வலைகளைக் கடத்தினார் ஜெயலலிதா. 1993-ம் ஆண்டு ஜூலை 18 எம்ஜிஆர் சமாதிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். உச்சி வெயிலில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியவர் மார்ச் 23-ம் தேதிதான் அதை முடித்தார். ஜெயலலிதா உண்ணாவிரதம் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உண்ணாவிரதம் இருந்தார். அந்த 4 நாட்கள் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டங்களில் இறங்கினர். அப்போது மத்தியில் இருந்த பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் விசி சுக்லாவை அனுப்பியது. அவர் ஆரஞ்சு ஜூஸ் கொடுக்க ஜெயலலிதா போராட்டத்தை முடித்தார். சில, பல மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா கோரிய மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03 மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக... திமுக ஆட்சியில் 1999 ஜூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இப்படுகொலைக்குக் காரணமான அரசுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தார். காவிரி நீர், ஈழத் தமிழர்கள் என ஜெயலலிதாவின் போராட்டங்கள் நீண்டன. குறிப்பாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் பிரதமர்களுக்கு கடிதம் எழுதுவதையும், தூதரக ரீதியான நடவடிக்கை கோருவதையும் அவர் செய்துவந்தார். அதன் நீட்சியாக, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தான் ஆட்சி செய்த காலங்களில் அக்டோபர் 3, 1991, மே 3, 2013 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவையில், தீர்மானங்களை நிறைவேற்றினார். மேலும், 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கையும் அவர் தொடுத்திருந்தார். ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத காலத்தில் திமுகவை எதிர்த்து அன்றாடம் போராட்டங்களை நடத்துவதை அவர் வழக்கமாக்கினார். இதில் விலைவாசி உயர்வு முக்கிய இடத்தைப் பிடித்தது. அதுபோல் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பதிலும் ஜெயலலிதா கடுமைகாட்டியது நினைவுகூரத்தக்கது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நீட் தேர்வு, உதய் மின் திட்டம் என பல திட்டங்களுக்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்டுவந்தார். 2012-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்ததை மறக்க முடியாது. மாநில அரசியலில் திமுகவை தீய சக்தி என்று சொல்லிச் சொல்லியே தனது பிரச்சாரங்களை முன்னெடுத்து திமுக vs அதிமுக, என்பதைவிட திமுக vs அம்மா என்ற பிம்பத்தை உருவாக்கினார். அம்மா உணவகம் தொடங்கி அனைத்து நலத்திட்டங்களுக்கும் அம்மா என்ற அடைமொழியைக் கொடுத்து தன்னை நிறுவினார். 2011-ல் தேமுதிகவை வளர்த்துவிட்டு விஜயகாந்தின் பிரபல்யத்தை ஆட்சியைப் பிடிப்பதற்காக அறுவடை செய்து கொண்ட வியூகம் கவனிக்கத்தக்கது. பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05 ஸ்டாலினின் களப் போராட்டங்கள் ஸ்டாலின் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மிகப் பெரிய மைலேஜ் கொடுத்தது 2016-ல் அவர் முன்னெடுத்த ‘நமக்கு நாமே’நடைபயணம், அவருக்கு பெரிய பலமாக இருந்தது. திமுகவை அப்போதைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவருக்கு பக்கபலமாக இருந்தது. 2017-ல் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டபோது மீண்டும் அதே பெயரிலான நடைபயணத்தை மேற்கொண்டார். இதெல்லாம் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அசெட்டானது. 2021-ல் திமுக ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டிய நிலையில், சட்டப்பேரவைக்குள்ளும், வெளியேயும் ஸ்டாலின் சுழன்றடித்தார் என்றே சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, கள்ளச்சாராய மரணங்கள் போன்றவற்றிற்கு எதிராக ஸ்டாலின் வலுவான போராட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வை கொண்டுவந்ததாக அதிமுகவை கண்டித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். அரியலூர் அனிதா மரணம், திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டக் களமானது. மின் திட்டங்களில் அதிமுக மத்திய அரசுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் போராட்டம் நடத்தினார். அரசு ஊழியர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக இறக்கினார். ஜெயலலிதாவின் மறைவு, அதிமுகவின் உட்கட்சிப் பூசல், பாஜகவுடனான கூட்டணி ஆகியவை அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த ஸ்டாலினுக்கு துணைக்கு வந்தது. அதிமுக ஆட்சியும் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று நீட் மரணங்கள் நிகழும்போது தொடங்கி ஒவ்வொன்றுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தது அதிமுக. கூடவே தமிழக பாஜகவும் போராட்டக் களத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. போகப் போக திமுக அரசைக் கண்டித்துப் போராடும் கட்சிகளின் எண்ணிக்கை இப்போது தவெக வரை அதிகரித்து நிற்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேள்வி கேட்பது, வெளிநடப்பு செய்வது, கறுப்பு பேட்ஜ் அணிவது தொடங்கி தர்ணா, முற்றுகை எனப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் - ஒழுங்கு சரியில்லை, கடனில் தவிக்கிறது தமிழகம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கி போராட்டங்களை நடத்தி வருகிறார். முன்கூட்டியே தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி, தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, அதிமுக ஆட்சியையும் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்ய ‘விடியா ஆட்சி - உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ என்ற தலைப்பிலான பிரச்சாரம் வரை முடுக்கிவிட்டிருக்கிறார். எல்லாமே அரசியல் தான் என்றாலும், இங்கே அரசியல் செய்ய மக்கள் பிரச்னைகளே வேர். சில பிரச்சினைகள் தீர்வு காணப்படும், சில பிரச்னைகள் அரசியல் செய்வதற்காகவே பிரச்னைகளாகவே வைக்கப்படும். (தொடரும்)

விகடன் 18 Feb 2026 11:28 am

மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா?- திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று எட்டாவது நாளாக மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அறவழியில் போராட்டம் நடத்திய 800-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து, மாலை ஆன பிறகும் விடுவிக்காமல் பேருந்துகளில் ஏற்றி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அலைக்கழித்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நள்ளிரவை தாண்டியும் போராடிய மாற்றுத்திறனாளிகள் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாழ்வாதார உரிமை கோரி போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் மனிதநேயமின்றி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 75 விழுக்காட்டுக்கும் கீழ் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.1,500, 75 விழுக்காட்டுக்கும் கூடுதலான மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது. விலைவாசியும், வாழ்வாதாரச் செலவுகளும் கடுமையாக அதிகரித்து விட்ட நிலையில் தங்களுக்கான உதவித் தொகையை மாதம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் கைது செய்யப்படுவதும், மாலையில் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கொடுமையே! மாற்றுத்திறனாளிகளிடம் சென்னை காவல்துறையின் இரக்கமற்ற நள்ளிரவு வெறியாட்டம்! - Spot Report எட்டாவது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும் போதிலும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த முன்வராத திமுக அரசு, அவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நம்புமானால் அது எந்த அளவுக்கு பாசிசத்தில் ஊறியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். முதல்வர் ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளின் காவலன் திமுக தான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ததெல்லாம் துரோகம் மட்டும் தான். தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் தற்காலிகப் பணியாளர்களாக மாற்றுத் திறனாளிகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வகை செய்யும் இரு அரசாணைகளை அண்மையில் ரத்து செய்த திமுக அரசு, அவர்களும் போட்டித் தேர்வு எழுதி தான் அரசு பணியில் சேர முடியும் என்ற புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இப்போது உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மிகவும் நியாயமானது. மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக புதுச்சேரியில் ரூ.5,500 வரையிலும், தெலுங்கானாவில் ரூ.4,016, ஆந்திராவில் ரூ.15 ஆயிரம் வரையிலும், திரிபுரா மற்றும் தில்லியில் ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மிக குறைவாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே அளவிலான தொகையை தமிழகத்தில் வழங்க தடையில்லை. ஆனால், மாற்றுத் திறனாளிகள் மீது ஆட்சியாளர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். அன்புமணி ராமதாஸ் அடக்குமுறைகள் மூலம் உலகில் எதையும் சாதிக்க முடியாது. இதை உணர்ந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறையை கைவிடுவதுடன், மாதம் ரூ.6000 உதவித் தொகை என்ற அவர்களின் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். Loading…

விகடன் 18 Feb 2026 11:26 am

`கோவை மக்களை அவமரியாதையாகப் பேசுகிறார் தயாநிதி; சிரிக்கிறார் செந்தில் பாலாஜி' - அண்ணாமலை காட்டம்

கோவை மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட எம்.பி தயாநிதி மாறன் கோவை மக்கள், அவர்கள் ஊரைக் கெடுக்காமல் பக்கத்து ஊரை கெடுப்பார்கள் என்று பேசியிருக்கிறார். தயாநிதிமாறன் இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி. கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை. அண்ணாமலை கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும். தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk Loading…

விகடன் 18 Feb 2026 11:15 am

நீலகிரி: இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்; மகளிருக்கு கிச்சன் செட்- வாக்குகளை வளைக்க களமிறங்கிய அதிமுக

2026 - ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சி நாற்காலியைத் தக்க வைக்க ஆளுங்கட்சியும், எட்டிப்பிடிக்க எதிர்க்கட்சிகளும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும் என்பதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் குற்றமாக பதிவு செய்யும். தேர்தல் நன்னடத்தை விதிகள் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், கிரிக்கெட் கிட் இரவோடு இரவாக 5 ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கிக் கணக்குகளில் செலுத்தியது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இந்த செயலை தங்களுக்கான பின்னடைவாக் கருதிய எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கி தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க வைப் பொறுத்தவரை த.வெ.க ஆதரவு இளைஞர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் கவரும் வகையில் கிராமங்கள் தோறும் கிரிக்கெட் கிட்களை வாரி வழங்கி வருகின்றனர். அதேவேளையில், தி.மு.க ஆதரவு மகளிர்களை கவரும் விதமாக வீடுகள் கிச்சன் செட் தோறும் கிச்சன் செட்களை வழங்கி வருகின்றனர். அ.திமு.க இலச்சினை மற்றும் நிர்வாகிகள் படங்கள் அடங்கிய பைகளில் தொகுப்பாக பரிசு பொருள்களை வழங்கி வரும் இவர்களின் முயற்சி தேர்தல் களத்தில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விகடன் 18 Feb 2026 10:48 am

திமுக: சீட் எதிர்பார்க்கும் சார்பு அணிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள்! - வாய்ப்பளிக்குமா தலைமை?

வருகின்ற சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும், அதை உதயநிதி, தன் குழு மூலம் இப்போதே தேர்வு செய்து வருகிறார் என்றும் விருதுநகர் இளைஞர் அணி மாநாட்டிற்குப் பின்பு திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது. திமுக இது கட்சியிலுள்ள சீனியர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் அப்செட் ஆக்கி வருவது ஒருபக்கமென்றால், தற்போது திமுக-வின் ஒவ்வொரு சார்பு அணி நிர்வாகிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதிதியிடம் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வில் உள்ள சார்பு அணிகளில் இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவ அணி, பொறியாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, கல்வியாளர் அணி, தொண்டர் அணி, சிறுபான்மையினர் நல அணி, அயலக அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, ஆதி திராவிடர் நல அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வர்த்தக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, நெசவாளர் அணி, மகளிர் தொண்டர் அணி என்று ஒவ்வொரு அணியிலுமுள்ள மாநில நிர்வாகிகள் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கும்படி உதயநிதியிடம் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் இது மட்டுமின்றி, சுப வீரபாண்டியன் வழிகாட்டலில் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2024-ல் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தினர் உதயநிதியுடன் மிக நெருக்கமாக உள்ளனர். வரும்காலத்தில் திராவிடக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வரும் இச்சங்கத்தினர் மீது உதயநிதி அதிக அக்கறை காட்டி அதற்கான உதவிகளை செய்து வருகிறார். அந்த அடிப்படையில் இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் சென்னை, மதுரை, சிவகங்கை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரை போட்டியிட தேர்வு செய்துள்ளதாகவும் திமுகவில் பேசப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்குவது, திமுக-விலுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்குவதே பெரும் சவாலாக உள்ள நிலையில், திமுகவின் சார்பு அணியினரும், ஆதரவு அமைப்புகளும் போட்டியிட இடங்ககளை எதிர்பார்த்து உதயநிதியிடம் அழுத்தம் கொடுத்து வருவது திமுக தலைமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Feb 2026 10:15 am

திமுக: சீட் எதிர்பார்க்கும் சார்பு அணிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள்! - வாய்ப்பளிக்குமா தலைமை?

வருகின்ற சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும், அதை உதயநிதி, தன் குழு மூலம் இப்போதே தேர்வு செய்து வருகிறார் என்றும் விருதுநகர் இளைஞர் அணி மாநாட்டிற்குப் பின்பு திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது. திமுக இது கட்சியிலுள்ள சீனியர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் அப்செட் ஆக்கி வருவது ஒருபக்கமென்றால், தற்போது திமுக-வின் ஒவ்வொரு சார்பு அணி நிர்வாகிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதிதியிடம் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வில் உள்ள சார்பு அணிகளில் இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவ அணி, பொறியாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, கல்வியாளர் அணி, தொண்டர் அணி, சிறுபான்மையினர் நல அணி, அயலக அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, ஆதி திராவிடர் நல அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வர்த்தக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, நெசவாளர் அணி, மகளிர் தொண்டர் அணி என்று ஒவ்வொரு அணியிலுமுள்ள மாநில நிர்வாகிகள் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கும்படி உதயநிதியிடம் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் இது மட்டுமின்றி, சுப வீரபாண்டியன் வழிகாட்டலில் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2024-ல் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தினர் உதயநிதியுடன் மிக நெருக்கமாக உள்ளனர். வரும்காலத்தில் திராவிடக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வரும் இச்சங்கத்தினர் மீது உதயநிதி அதிக அக்கறை காட்டி அதற்கான உதவிகளை செய்து வருகிறார். அந்த அடிப்படையில் இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் சென்னை, மதுரை, சிவகங்கை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரை போட்டியிட தேர்வு செய்துள்ளதாகவும் திமுகவில் பேசப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்குவது, திமுக-விலுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்குவதே பெரும் சவாலாக உள்ள நிலையில், திமுகவின் சார்பு அணியினரும், ஆதரவு அமைப்புகளும் போட்டியிட இடங்ககளை எதிர்பார்த்து உதயநிதியிடம் அழுத்தம் கொடுத்து வருவது திமுக தலைமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Feb 2026 10:15 am

`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' - தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி

இரட்டை இலை சின்னம், கொடி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் வா.புகழேந்தி அளித்த புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்தார். அப்போது உடனடியாக பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது. இந்த முக்கிய வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வா.புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் கொடுத்து இரண்டு வருடங்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று வாதிட்டனர். புகழேந்தி புகார் மீது விசாரணை நடத்தினீர்களா? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும்? உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதம் ஏன்? என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரட்டை இலை சின்ன விவகாரம் சம்பந்தமான புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டவர், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

விகடன் 18 Feb 2026 9:59 am

`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' - தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி

இரட்டை இலை சின்னம், கொடி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் வா.புகழேந்தி அளித்த புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்தார். அப்போது உடனடியாக பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது. இந்த முக்கிய வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வா.புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் கொடுத்து இரண்டு வருடங்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று வாதிட்டனர். புகழேந்தி புகார் மீது விசாரணை நடத்தினீர்களா? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும்? உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதம் ஏன்? என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரட்டை இலை சின்ன விவகாரம் சம்பந்தமான புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டவர், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

விகடன் 18 Feb 2026 9:59 am

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது. இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் 1. மாணவி லாவண்யாவின் மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் கட்டாய மதமாற்ற நெருக்கடியா அல்லது பள்ளியில் நிலவிய சூழலா அல்லது குடும்ப பிரச்னையா என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தினோம். 2. முதலில் பள்ளி சூழல் குறித்த விசாரணையை முதன்மையாக நடத்தினோம். 3. மைக்கேல் பட்டி பள்ளியில் இருக்கும் விடுதியில் சகோதரி சகாயமேரி விடுதி காப்பாளராக பொறுப்பேற்ற பின்பு விடுதியின் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், துணை விடுதி காப்பாளர்கள் அடிக்கடி பணியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். 4. விடுதி கணக்கு வழக்கு வவுச்சர் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் விடுதி மாணவிகள் சகாய மேரியால் பயன்படுத்தப்பட்டார்கள். 5. கடந்த கொரோனா காலத்தில் பள்ளி விடுதி முழுவதுமாக மூடப்பட்ட பின்பும் மாணவி லாவண்யா மட்டும் விடுதியிலே தங்கி இருந்திருக்கிறார், அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வரை மாணவி லாவண்யா விடுதியிலே தங்கி இருக்கிறார். 6. முதல் லாக் டவுன் முடிந்து விடுதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மீண்டும் திறந்த பிறகு விடுதியில் துணை காப்பாளர்கள் இல்லாத காரணத்தால் லாவண்யாவிற்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருகை பதிவேடு பில் புத்தகம் விடுதிக்கான கட்டணம் வசூலிக்கும் புத்தகத்தை பராமரிப்பது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 7. கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வரை இரண்டாவது லாக் டவுன் சமயத்திலும் 20 நாள்கள் லாவண்யா விடுதியிலேயே தங்கியிருந்திருக்கிறார். 8. 2021 தீபாவளி சமயத்தில் விடுதியில் சில பொருட்கள் காணாமல் போனதை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் மற்றும் லாவண்யாவிடமும் விடுதி காப்பாளரான சகாய மேரி விசாரணை நடத்தியுள்ளார். அதில் சில பொருட்கள் இலவசமாக லாவண்யா மாணவர்களுக்கு வழங்கியதாக கண்டறியப்பட்டது இதன் காரணமாக லாவண்யாவை விடுதி காப்பாளர் சகாய மேரி கடிந்து கொண்டுள்ளார். இதனால் லாவண்யா மிகவும் அவமானம் அடைந்ததாகவும், அதனால் இந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார் 9. 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது லாவண்யா 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அதன் காரணமாக வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி இருந்துள்ளார். அந்த சமயத்தில் விடுதிக்காப்பாளர் சகாய மேரியால் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட பல வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 10. கணக்கு வழக்குகளில் சில தவறுகள் செய்த போது சகாயம் மேரி லாவண்யாவை கடிந்து கொண்டிருக்கிறார். விடுதி காப்பாளர் சகாய மேரி விடுதி தொடர்பான கணக்கு வழக்குகளை விரைந்து முடித்து தருமாறு அடிக்கடி லாவண்யாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக லாவண்யா மன அழுத்தத்தில் இருந்துள்ளார் 11. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை விடுதி காப்பாளர் சகாய மேரி வழங்கி உள்ளார். அதன்படி பொங்கல் விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பும் போது அனைவரும் விடுதிக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்றைய தினமும் லாவண்யா விடுதி தொடர்பான கணக்குகளை முடித்து விடுதி காப்பாளரான சகாய மேரியிடம் வழங்கிவிட்டு மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஜெபம் செய்வதற்காக அனைத்து மாணவிகளுடன் குழுமியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் திடீரென லாவண்யா பச்சை மற்றும் நீல நிறத்தில் வாந்தி எடுத்தபோது அவருக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அன்று இரவு லாவண்யா எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் தூங்க சென்றுள்ளார். 12. பின்னர் அடுத்த நாள் லாவண்யாவின் பெற்றோருக்கு விடுதி காப்பாளர் தொலைபேசியில் அழைத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளார். அதன் அடிப்படையில் லாவண்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற பின்பும் லாவண்யாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிபிஐ 13. இந்த நிலையில் 2022 ஜனவரி 15ஆம் தேதி லாவண்யா ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது லாவண்யாவின் நிலை மிக மிக மோசமாக இருந்ததாக தெரிவித்ததோடு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும்படி அவருடைய பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு லாவண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த போது லாவண்யா நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் லாவண்யாவின் நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவர் விஷமருந்தி இருக்க கூடும் என்பதை கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியாக லாவண்யா என்ன விஷத்தை அறிந்தினார் என்பதை மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பூச்சி மருந்து அதுவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே அந்த விஷ மருந்தை அருந்தியதாக கூறியுள்ளார். 14. இதையடுத்து லாவண்யாவின் தந்தை முருகானந்தம் அவருடைய உறவினர்களுக்கு அலைபேசியில் அழைத்து லாவண்யா விஷம் அருந்திய விவகாரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதும் மதமாற்றம் காரணமாக விஷம் அருந்தினார் என்பது தொடர்பாக எந்த ஒரு விவகாரத்தையும் முருகானந்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் விடுதி காப்பாளரான சகாய மேரியின் அழுத்தம் காரணமாக விஷத்தை அருந்தியதை முருகானந்தம் தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 15. லாவண்யா பேசும் வீடியோவில் அவர் நினைவுடன் இருந்ததும் அதில் விடுதி காப்பாளரான சகாயம் ஏரி தன்னையும் தன்னைப் போல பிற மாணவிகளையும் விடுதி தொடர்பான வேலைகளை கொடுத்து அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். இவ்வாறு தொடர் வேலைப்பளு காரணமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதையும் அந்த வீடியோ பதிவில் லாவண்யா கூறியிருந்தார். மேலும் ஒன்றரை கிளாஸ் அளவுக்கு பூச்சி மருந்தை 9-1-2022 அன்று அருந்தியதை அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் 16. இறுதியாக மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்த போதும் விடுதி காப்பாளரான சகாய மேரி விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து லாவண்யாவுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார் 17. தன்னை படிக்க விடாமல் சகாயம் மேரி தடுத்து துன்புறுத்தி இருக்கிறார். தான் பூச்சி மருந்தை குடித்ததற்கு காரணமும் அவர்தான் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மரண வாக்கு மூலத்தில் லாவண்யா கூறி இருக்கிறார் 18. அடுத்ததாக கட்டாய மதமாற்றம் நடைபெற்றதா என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக மைக்கேல் பட்டி பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது. 19. விரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை என்பது விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது 20. மேலும், மாணவி லாவண்யா இறந்த பின்பாக அவருடைய தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விஷ்வ இந்து பரிஷத் தலைவரான முத்துவேல் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால் இறந்த லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . 21. இறந்து போன லாவன்யாவின் உடலை பெறக் கூடாது என்பதற்காக அவருடைய தந்தை மற்றும் அவருடைய சித்தி ஆகியோர் பல இடங்களில் ஒளிந்து இருந்தார்கள். 22. முன்னதாக மதமாற்ற அழுத்தம் என குற்றம் சாட்டி முத்துவேல் என்பவர் பதிவு செய்த லாவண்யாவின் வீடியோக்கள் அவருடைய அடையாளங்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன, இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மீது காவல்துறை சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை 23. லாவண்யா உயிரிழந்தது என்பது மன அழுத்தத்தின் காரணமாக தான். ஏனெனில் விடுதி காப்பாளர் ஆன சகாய மேரி விடுதி கணக்கு வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் லாவண்யாவை ஈடுபடுத்தியதாலும் விடுமுறைக்கு கூட அவரை வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்ததாலும் ஏற்பட்ட மன அழுத்தம் தான் லாவண்யாவின் மரணத்திற்கு காரணம். 24. சகாய மேரியை பொறுத்தவரை லாவண்யாவுக்கு அதிக அளவிலான வேலைப்பளுவை கொடுப்பதை அறிந்திருந்தும், அவர் அதனை குறைத்துக் கொள்ளவில்லை. இதனால் லாவண்யாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் திணறவும் செய்திருக்கிறார். இறுதியாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக லாவண்யா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார். 25. லாவண்யா தன்னை படிப்பதற்கு அனுமதிக்குமாறு விடுதி காப்பாளர் சகோதரி சகாய மேரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதற்கு விடுதி காப்பாளர் இசையவில்லை என்பது விசாரணையில் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. 26. எனவே மேற்கூறிய செயல்களை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட சகாய மேரி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சகாய மேரியின் இந்த செயல் ஐபிசி 305 மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாகும். எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 27. குடும்ப அழுத்தம் காரணம் குறித்த ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிபிஐ கூறியுள்ளது.

விகடன் 18 Feb 2026 8:53 am

ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களை பார்த்து வெட்கப்படுகிறேன்- கொதித்த எழுத்தாளர்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. கேரளாவில் உடல் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்தவர் என ஆலின் ஷெரின் ஆபிரகாமை மக்கள் கொண்டாடினர். அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அரசு மரியாதையுடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆலின் ஷெரின் ஆபிரகாமின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உடல் உறுப்பு தானம் சிறப்பு மையத்துக்கு ஆலின் ஷெரின் ஆபிரகாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என பிரபல எழுத்தாளர் எதிரன் கதிரவன் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எழுத்தாளர் எதிரன் கதிரவன் இதுகுறித்து மலையாள எழுத்தாளர் எதிரன் கதிரவன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆலின் என்ற குழந்தையை கொண்டாடுவதன் மூலம் நமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மிகவும் கொடுமையானதும், மோசமான நடவடிக்கையும் ஆகும். குழந்தைகளுக்கான பேபி சீட் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லையா? நம்முடைய அலட்சியம் அந்த குழந்தையை கொன்றுவிட்டது என்பதை உணர இங்கு யாருமே இல்லையா? அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பாலா என்ற இடத்தில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஒரு சிறிய குழந்தையை மடியில் அமரவைத்து ஒருவர் கார் ஓட்டிய காட்சியை நேற்று பார்த்தேன். ஒரு சிறு நிகழ்வால் ஸ்டீயரிங் குழந்தையின் தலையில் இடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பேச்சுகூட வராத குழந்தைகளை வைத்து வேடிக்கை காட்டும் இவர்கள் பெற்றோர்கள்தானா? ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் 18 Feb 2026 8:03 am

ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களை பார்த்து வெட்கப்படுகிறேன்- கொதித்த எழுத்தாளர்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. கேரளாவில் உடல் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்தவர் என ஆலின் ஷெரின் ஆபிரகாமை மக்கள் கொண்டாடினர். அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அரசு மரியாதையுடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆலின் ஷெரின் ஆபிரகாமின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உடல் உறுப்பு தானம் சிறப்பு மையத்துக்கு ஆலின் ஷெரின் ஆபிரகாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என பிரபல எழுத்தாளர் எதிரன் கதிரவன் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எழுத்தாளர் எதிரன் கதிரவன் இதுகுறித்து மலையாள எழுத்தாளர் எதிரன் கதிரவன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆலின் என்ற குழந்தையை கொண்டாடுவதன் மூலம் நமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மிகவும் கொடுமையானதும், மோசமான நடவடிக்கையும் ஆகும். குழந்தைகளுக்கான பேபி சீட் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லையா? நம்முடைய அலட்சியம் அந்த குழந்தையை கொன்றுவிட்டது என்பதை உணர இங்கு யாருமே இல்லையா? அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பாலா என்ற இடத்தில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஒரு சிறிய குழந்தையை மடியில் அமரவைத்து ஒருவர் கார் ஓட்டிய காட்சியை நேற்று பார்த்தேன். ஒரு சிறு நிகழ்வால் ஸ்டீயரிங் குழந்தையின் தலையில் இடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பேச்சுகூட வராத குழந்தைகளை வைத்து வேடிக்கை காட்டும் இவர்கள் பெற்றோர்கள்தானா? ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் 18 Feb 2026 8:03 am

தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது - திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை முகப்பேரில் அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அந்தக் கூட்டத்தில், கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம். எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை. கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 17 Feb 2026 8:14 pm

திமுக - காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்குள் இடம்பெற்றிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் திமுக- காங்கிரஸ் மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் - திமுக அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் சமயத்தில் இது போன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். முரண்கள் எழும். திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதுதான் நிகழ்கிறது. ஆனால் இறுதியில் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும். இதனால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பலவீனமானக் கூட்டணியில் போட்டி அதிகமாக இருக்காது. அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை இருக்காது. பலமுள்ள கூட்டணியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான போட்டி எழும். அதிகாரப் பகிர்வு தேவை என்கிற அந்தக் கருத்தும் எழும். இவ்வாறு சலசலப்பு எழுவதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம், திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது, ஆட்சிக்கு வரப்போகிறது. திருமாவளவன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக என்ன முயற்சியை மேற்கொண்டாலும், என்ன சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டங்களைத் தீட்டினாலும், அவர்களால் இங்கே வெல்ல முடியாது. அவர்கள் கணக்குத் தப்புக் கணக்காகத்தான் முடியும். தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட, வேறுபட்ட ஒரு மண். இந்திய மாநிலங்களில் இருந்து வேறுபட்ட ஒரு மண் என்பதை இந்தத் தேர்தலின் மூலமும் மீண்டும் அவர்கள் உணர்வார்கள் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

விகடன் 17 Feb 2026 7:23 pm

vengataramani pmk

vengataramani pmk

சமயம் 17 Feb 2026 7:13 pm

விஜயகாந்த் மீதான அன்பு...ஓட்டாக மாறுமா? வெங்கட ரமணி

விஜயகாந்த் மீதான அன்பு...ஓட்டாக மாறுமா? வெங்கட ரமணி

சமயம் 17 Feb 2026 7:11 pm

காங்கிரஸ் vs திமுக...இது தான் CLIMAX?

காங்கிரஸ் vs திமுக...இது தான் CLIMAX?

சமயம் 17 Feb 2026 7:07 pm

விஜயகாந்த் மீதான அன்பு...ஓட்டாக மாறுமா?

விஜயகாந்த் மீதான அன்பு...ஓட்டாக மாறுமா?

சமயம் 17 Feb 2026 7:05 pm

கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்கள். கொங்கு மண்டல அரசியல் எப்போதுமே அனல் பறக்கும். கோவை ஏற்கெனவே கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில்தான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் வருகைக்குப் பிறகு தவெகவும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த முறை கோவையில் வெற்றி பெறாத குறையை இந்த முறை சரி செய்வதற்காக திமுக-வும் காய் நகர்த்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் செந்தில் பாலாஜி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். கோவை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கோவையில் அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 22-ம் தேதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி அருகே நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸில் நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர்.

விகடன் 17 Feb 2026 6:50 pm

கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்கள். கொங்கு மண்டல அரசியல் எப்போதுமே அனல் பறக்கும். கோவை ஏற்கெனவே கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில்தான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் வருகைக்குப் பிறகு தவெகவும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த முறை கோவையில் வெற்றி பெறாத குறையை இந்த முறை சரி செய்வதற்காக திமுக-வும் காய் நகர்த்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் செந்தில் பாலாஜி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். கோவை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கோவையில் அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 22-ம் தேதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி அருகே நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸில் நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர்.

விகடன் 17 Feb 2026 6:50 pm

குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை'கொடுக்குமா கமலின் முயற்சி?!

திமுக - காங்கிரஸ் விரிசல்! கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி... கொள்கை கூட்டணி' என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது கூட்டணிக் கட்சிகள் ஆளும் அரசின் செயல்களை விமர்சித்தாலும் அதனை உடனடியாக சரிசெய்துகொண்டிருந்தது திமுக தரப்பு. இந்தச் சூழலில் அந்தக் கூட்டணி குளத்தில் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற ஒரு கல் விழுந்தது. அந்த ஒரே ஒரு கல்லைத் தொடர்ந்து அடுத்தடுத்த கற்கள் இப்போதுவரை தொடர்ச்சியாக விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகள் தொடருமா இல்லையா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. ஸ்டாலின், ராகுல் காந்தி அதிலும் திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்களைக் களைய திமுக தலைமை அடுத்தடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமையைச் சந்திக்கத் தூது அனுப்பிக்கொண்டே தான் இருந்தது. கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று இரண்டு கட்சிகளும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் கூட்டணி ஆட்சி கிடையாது என்று முதல்வர் வெளிப்படையாகப் போட்டு உடைக்க... மீண்டும் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, காங்கிரஸ் மாவட்ட அளவில்... `கூடுதல் இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு என்பதைத் தாண்டி நாம் விஜய்யுடன் கூட்டணிக்குச் செல்லவேண்டும்' என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்கள். குழப்பத்தில் கூட்டணி! ஒரு பக்கம் காங்கிரஸ் பிரச்னைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அரவணைக்கும் வேலைகளையும் செய்துகொண்டிருந்தது திமுக. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்றாலும், அமைச்சர்களை வைத்து ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் பேசிக்கொண்டிருக்கிறது திமுக. அதில் சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு வரை உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் போன்ற சில முக்கிய கட்சிகளுடன் இப்போதுவரை பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம். அண்ணா அறிவாலயம் இந்த விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். திமுக-வின் தொடர் வெற்றிக்கு எங்கள் கூட்டணிக் கட்சிகளின் பலம் மிக முக்கிய காரணம். எங்கள் கூட்டணியில் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியில் குழப்பம் என்ற பிம்பம் உண்டாவது எங்கள் கூட்டணிக்கு நல்லதல்ல. இந்த நிலையை உடனடியாக மாற்றியே ஆகவேண்டும் என்று கருதியது திமுக தலைமை. ஏற்கெனவே ஒருபக்கம் முதல்வரின் மருமகன் சபரீசன், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மூத்த அமைச்சர் வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து அனைத்தும் உறுதியாகிவிடும். கமலின் முயற்சி! ஒரு பக்கம் திமுக பேசிக்கொண்டிருந்தாலும் சில கட்சிகள் விடாப்பிடியாக முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. இதனை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வைத்து காய்நகர்த்துகிறது திமுக தலைமை. வரும் பிப்ரவரி 21-ம் தேதி திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதே தினம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை காந்தி மண்டபத்தில் 'ரிமெம்பரன்ஸ் ஆஃப் பாபுஜி' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த கருத்தரங்கத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா, வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் மற்றக் கூட்டணிக் கட்சிகளைப் போலவே காந்தி தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைமையையும் அழைத்திருக்கிறது ம.நீ.ம. அதே நேரத்தில் காந்தி பெயரில் நடைபெறவுள்ள நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கவும் முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கூட்டணித் தலைவர்களும் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் காந்தியைத் தாண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக்குள் நிகழும் குழப்பத்துக்கான தீர்வு காணப்படும் என்றார்கள் விரிவாக.  திமுக கூட்டணிக்காக கமல் முன்னெடுக்கும் இந்த முயற்சி கைகொடுக்குமா... 'கை' கூடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.  'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!

விகடன் 17 Feb 2026 6:14 pm

திமுக கூட்டணியை உடைக்க நினைப்பது யார்? don ashok பேச்சு

திமுக கூட்டணியை உடைக்க நினைப்பது யார்? don ashok பேச்சு

சமயம் 17 Feb 2026 6:09 pm

விஜய் கட்சியின் ரியல் செல்வாக்கு என்ன? காமேஷ் ஓபன் டாக்!

விஜய் கட்சியின் ரியல் செல்வாக்கு என்ன? காமேஷ் ஓபன் டாக்!

சமயம் 17 Feb 2026 5:53 pm

தவெக-காங்கிரஸ் கூட்டணி களத்தில் Work ஆகுமா?

தவெக-காங்கிரஸ் கூட்டணி களத்தில் Work ஆகுமா?

சமயம் 17 Feb 2026 5:51 pm

அதிமுக -பிஜேபி கூட்டணி களத்தை மாற்றுமா?

அதிமுக -பிஜேபி கூட்டணி களத்தை மாற்றுமா?

சமயம் 17 Feb 2026 5:48 pm

பட்ஜெட் தாக்கல் குறித்து பரபரப்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி!

பட்ஜெட் தாக்கல் குறித்து பரபரப்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி!

சமயம் 17 Feb 2026 5:45 pm

விஜய் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்...கூடும் பலம்?

விஜய் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்...கூடும் பலம்?

சமயம் 17 Feb 2026 5:43 pm

பட்ஜெட் 2026: ``இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக மக்களை 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஏமாற்றி வரும் தி.மு.க அரசு, தனது கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு மக்களுக்கு எந்த அளவுக்குக் காது குத்துகிறது என்பதை விளக்கும் வகையில், 'மாபெரும் காதுகுத்தும் விழா' அழைப்பிதழை இன்று நாங்கள் சட்டமன்றத்தில் வழங்கினோம். இது பட்ஜெட் அல்ல, மக்களை ஏமாற்றும் வெறும் வார்த்தை ஜால அறிக்கை. அதிமுக காதுகுத்து விழா 2021 தேர்தலின் போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதில் நான்கில் ஒரு பங்குகூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) வழங்கப்படும் என்றார்கள், ஆனால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்கிறார்கள். சத்துணவு அமைப்பாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் இந்த அரசு வஞ்சித்துவிட்டது. தமிழகமே இன்று போராட்டக் களமாக மாறியுள்ளது. மாநிலத்தின் சொந்த வருவாய் 2.58 லட்சம் கோடி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 2.32 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. சுமார் 26,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2024-25-ல் 96,000 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, தற்போது 1.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும். ரகுராம் ராஜன் தலைமையில் நிதி மேலாண்மை குழு அமைத்து நிதிநிலையைச் சீர் செய்வோம் என்றார்கள். ஆனால், அந்தக் குழு அமைத்த பிறகுதான் கடன் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர், இது நிதி நிர்வாகத் திறனற்ற அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை ஏமாற்ற வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் 5 மணி நேரம் அமைச்சர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆனால் அதில் உருப்படியாக எதுவும் இல்லை. நீர்வளம், மீன்வளம், கால்நடை என ஏற்கனவே இருக்கும் துறைகளை ஒன்றாகக் கோர்த்து விவசாயிகளைத் திசைதிருப்புகிறார்கள். இந்த பட்ஜெட் பார்ப்பதற்கு அத்திப்பழம் போல வெளியே அழகாக இருக்கும், ஆனால் புட்டுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். கரிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு விவசாயிகளைக் கவலைப்படாமல், பெரும் நிறுவனங்களுக்குத் தான் உதவியாக இருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு அரசாங்கம் இருக்குமென்றால் அது தி.மு.க அரசாங்கம் தான். ஸ்டாலின் சட்டமன்ற நேரலையில், நான் பேசும்போது கேமரா இணைப்பு கொடுக்க மாட்டார்கள். நாங்கள் கேட்கும் கேள்விகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் அரசு குறியாக இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் வரை சென்றும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. இந்தக் கூட்டத்தொடரோடு இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும். என உறுதியுடன் தெரிவித்தார். `அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' - மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

விகடன் 17 Feb 2026 3:02 pm

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' - மாணிக்கம் தாகூர் 'பளீச்'பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பிரதமர் மோடிக்கு இன்று ஒரு முக்கியக் கடிதம் எழுதியுள்ளேன். 1871-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'குற்றப்பரம்பரைச் சட்டம்' மூலம் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடி (DNT/NT/SNT) சமூகத்தினரைத் தனியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் நோக்கம். ஸ்டாலின், செல்வப்பெருந்தகை இவர்களை வெறும் ஓ.பி.சி, எஸ்.சி பட்டியலோடு சேர்த்து எண்ணுவது சரியாக இருக்காது. 1952-லேயே இவர்களுக்கான உரிமைகளை அரசு முன்னெடுத்தாலும், வரவிருக்கும் சென்சஸில் இவர்களுக்கெனத் தனிப்பகுதியை ஒதுக்க வேண்டும். இல்லையெனில், இந்த மக்களின் சரியான எண்ணிக்கை இல்லாமல் போய்விடும். சாதி வாரிக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இவர்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்த வேண்டும். கரூர் எம்.பி ஜோதிமணி சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். அவர் குறித்து மிகக் கேவலமாகச் சங்கிகள் பேசி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன் பெண்களைப் பற்றி எப்படி அவதூறாகப் பேசினாரோ, அதே 'வியாதி' இப்போது பாஜக மாவட்டத் தலைவர்களுக்கும் ஒட்டியிருக்கிறது. பெண்களை அசிங்கமாகப் பேசுவது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கலாசாரமாகவே மாறிவிட்டது. 'புதிய இந்தியா' என்று பேசும் பிரதமர் மோடி, தனது கட்சியினரின் இந்த இழிவான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேணுகோபால் மணிசங்கர் அய்யர் கே.சி. வேணுகோபாலை 'ரௌடி' என்று விமர்சித்திருக்கிறார். மணிசங்கர் அய்யருக்கு வயதாகிவிட்டது. அந்த வயோதிகத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பேசுகிறார். அவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சியில் அண்ணன்-தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் நாங்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறோம். பத்திரிகையாளர்கள் இதைச் சிண்டு முடிந்துவிட வேண்டாம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். இது குறித்து பிப்ரவரி 17-ம் தேதி தலைமையிடம் பேசிவிட்டுத்தான் வந்துள்ளோம். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை இது 'தமிழ்நாடு Vs டெல்லி' என்பதற்கான போராட்டம். தமிழகத்தின் நன்மைக்காகவும், டெல்லியின் அதிகாரப் போக்கை எதிர்த்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறும். நான் தினமும் காலையில் ஒரு நல்ல செய்தியைப் போடுவேன், காலை எக்ஸில் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாரதியார் கவிதையைப் போட்டதில் என்ன தவறு? பதவி ராஜினாமா செய்யப்போகிறேன் போன்ற வதந்திகளைப் பரப்பும் ஐ.டி-க்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்றார். மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர... - செல்வப்பெருந்தகை

விகடன் 17 Feb 2026 2:19 pm

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' - மாணிக்கம் தாகூர் 'பளீச்'பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பிரதமர் மோடிக்கு இன்று ஒரு முக்கியக் கடிதம் எழுதியுள்ளேன். 1871-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'குற்றப்பரம்பரைச் சட்டம்' மூலம் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடி (DNT/NT/SNT) சமூகத்தினரைத் தனியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் நோக்கம். ஸ்டாலின், செல்வப்பெருந்தகை இவர்களை வெறும் ஓ.பி.சி, எஸ்.சி பட்டியலோடு சேர்த்து எண்ணுவது சரியாக இருக்காது. 1952-லேயே இவர்களுக்கான உரிமைகளை அரசு முன்னெடுத்தாலும், வரவிருக்கும் சென்சஸில் இவர்களுக்கெனத் தனிப்பகுதியை ஒதுக்க வேண்டும். இல்லையெனில், இந்த மக்களின் சரியான எண்ணிக்கை இல்லாமல் போய்விடும். சாதி வாரிக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இவர்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்த வேண்டும். கரூர் எம்.பி ஜோதிமணி சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். அவர் குறித்து மிகக் கேவலமாகச் சங்கிகள் பேசி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன் பெண்களைப் பற்றி எப்படி அவதூறாகப் பேசினாரோ, அதே 'வியாதி' இப்போது பாஜக மாவட்டத் தலைவர்களுக்கும் ஒட்டியிருக்கிறது. பெண்களை அசிங்கமாகப் பேசுவது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கலாசாரமாகவே மாறிவிட்டது. 'புதிய இந்தியா' என்று பேசும் பிரதமர் மோடி, தனது கட்சியினரின் இந்த இழிவான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேணுகோபால் மணிசங்கர் அய்யர் கே.சி. வேணுகோபாலை 'ரௌடி' என்று விமர்சித்திருக்கிறார். மணிசங்கர் அய்யருக்கு வயதாகிவிட்டது. அந்த வயோதிகத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பேசுகிறார். அவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சியில் அண்ணன்-தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் நாங்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறோம். பத்திரிகையாளர்கள் இதைச் சிண்டு முடிந்துவிட வேண்டாம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். இது குறித்து பிப்ரவரி 17-ம் தேதி தலைமையிடம் பேசிவிட்டுத்தான் வந்துள்ளோம். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை இது 'தமிழ்நாடு Vs டெல்லி' என்பதற்கான போராட்டம். தமிழகத்தின் நன்மைக்காகவும், டெல்லியின் அதிகாரப் போக்கை எதிர்த்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறும். நான் தினமும் காலையில் ஒரு நல்ல செய்தியைப் போடுவேன், காலை எக்ஸில் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாரதியார் கவிதையைப் போட்டதில் என்ன தவறு? பதவி ராஜினாமா செய்யப்போகிறேன் போன்ற வதந்திகளைப் பரப்பும் ஐ.டி-க்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்றார். மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர... - செல்வப்பெருந்தகை

விகடன் 17 Feb 2026 2:19 pm

ஆக்ரோஷமான செல்வபெருந்தகை... ஆக்ஷன் மோடு டெல்லி!  - பெங்களூரு சந்திப்பில் நடந்தது என்ன?

``எங்களுக்கு என்ன தேவை என்பதை தாயும், தந்தையுமாக இருக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். எனக்கு பேச தெரியும், நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி, அது என்னமுறை, அது என்ன ஜனநாயகம்? ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான்.” என கார்க்கேவை சந்தித்துவிட்டு, உற்சாகமாக சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உதிர்த்த வார்த்தைகள் இவை. மாணிக்க தாகூர் மீது  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவிடம் அளித்த புகாரும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனுமே  செல்வபெருந்தகை இவ்வளவு ஆக்ரோஷமாக மாற காரணம். செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வபெருந்தகை நேற்று திடீரென பெங்களூர் பயணித்தார். டெல்லியிலிருந்து பெங்களூர் வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவை அங்கு சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் செல்வபெருந்தகையுடன் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ணா சேதுராமன் மட்டுமே உடன் இருந்துள்ளார். இந்த மூன்று பேர் மட்டுமே சுமார் ஒரு மணிநேரத்திற்கும்  மேலாக தமிழக கூட்டணி நிலவரம் குறித்து பேசியிருக்கிறார்கள். இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதல் இல்லாமலே பலரும் கருத்துகள் வெளியிடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.  இதுகுறித்து செல்வபெருந்தகைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டெல்லியில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறினார்கள்.  அதன்பிறகும் விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் தேசிய செயலாளராகவும் உள்ள மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவந்தார். குறிப்பாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தி அதில் கூட்டணி குறித்த தீர்மானத்தையும் போட்டார்கள். மேலும், மாணிக்கம் தாகூருடன், தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்றகுழு தலைவராக உள்ள ராஜேஷ் குமாரும் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்தார். இது மாநில தலைவராக உள்ள செல்வபெருந்தகைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் “மாநில தலைவராக நான் இருக்கும் போதே ஆளாளுக்கு கருத்து சொல்வதும், தீர்மானம் போடுவதாக இருந்தால் தலைவர் பதவியில் நான் ஏன் இருக்க வேண்டும்? ” என்று கடுகடுத்துவந்தார். டெல்லி தலைமையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்தது இவரை மேலும் சூடாக்கியது. இந்நிலையில் தான் கார்கே பெங்களூர் வந்த தகவல் தெரிந்து அவரை சந்திக்க முடிவெடுத்தார். இந்த சந்திப்பில் தி.மு.க கூட்டணி நமக்கு நம்பகமான கூட்டணி. கொடுக்குற சீட்டை வெற்றியாக மாற்றிக்கொள்ளலாம். அதே நேரம் த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பது இப்போதுள்ள நிலையில், தற்கொலைக்கு சமம். நமக்கு கிடைக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும், எம்.பிக்களையும் நாமே கோட்டைவிடுவதாக மாறிவிடும் என்று விளக்கியுள்ளார். ஏற்கனவே கார்கேவும் தி.மு.க கூட்டணியில் தொடர்வதே உத்தமம் என்கிற மனநிலையில் இருக்கிறார். அதோடு செல்வபெருந்தகை, “மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இப்படி கூட்டணிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். இனிமேல் அவர் பேசினால் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொங்கிவிட்டார். கார்கேவும் “இனி கூட்டணி விசயங்கள் குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க தரப்பில் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து கேட்கலாம்” என்று முடித்துள்ளார். திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன? கார்கேவின் இந்த பேச்சுக்கு பிறகு உற்சாக மூடுக்கு வந்த செல்வபெருந்தகை சென்னையில் இறங்கிவுடனே தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்துவிட்டார். இனி எல்லாம் தி.மு.க-வுக்கு சாதகமாகவே நடக்கும்” என்று சொல்லி முடித்தார்கள். காங்கிரஸ் கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என தி.மு.கவும் சத்தமில்லாமல் ஆக்ஷன் எடுத்து வருகிறது. டி.ஆர்.பாலு மூலம் டெல்லியில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடம் கூட்டணியை தக்க வைக்க பேச்சு நடந்துள்ளது. அதே போல் இன்று தமிழகம் வந்துள்ள கே.சி.வேணுகோபாலிடமும் தி.மு.க கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என நிர்வாகிகளை வைத்து அழுத்தம் கொடுக்க செல்வபெருந்தகை திட்டமிட்டுள்ளார். தி.மு.க தரப்பில் முப்பது இடங்கள் வரை தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஒரு ராஜ்யசபா, அடுத்த ஆண்டு ஒரு ராஜ்யசபா என இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை கொடுத்து காங்கிரஸ் கட்சியை கை பிடிக்க தி.மு.க தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். காங்கிரஸ் - திமுக இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம், “ கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு மேலிடம் முடிவுகளை எடுக்கும். அது தவிர கூட்டணி குறித்து யாரும் பேச மாட்டார்கள்” என்று சொல்லியுள்ளார். இதனால் தனது புகாருக்கு வலுசேர்ந்துள்ளது என செல்வபெருந்தகையும் குஷியாகியுள்ளார்.   இதனிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவரது எக்ஸ் கணக்கில் “அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என பதிவிட்டு என்னை பற்றி என்ன புகார் சொன்னாலும் நான் அச்சப்பட போவதில்லை என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார். இனி தி.மு.க கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யும் வேலைகள் வேகம் எடுக்கும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.  அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

விகடன் 17 Feb 2026 1:58 pm

ஆக்ரோஷமான செல்வபெருந்தகை... ஆக்ஷன் மோடு டெல்லி!  - பெங்களூரு சந்திப்பில் நடந்தது என்ன?

``எங்களுக்கு என்ன தேவை என்பதை தாயும், தந்தையுமாக இருக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். எனக்கு பேச தெரியும், நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி, அது என்னமுறை, அது என்ன ஜனநாயகம்? ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான்.” என கார்க்கேவை சந்தித்துவிட்டு, உற்சாகமாக சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உதிர்த்த வார்த்தைகள் இவை. மாணிக்க தாகூர் மீது  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவிடம் அளித்த புகாரும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனுமே  செல்வபெருந்தகை இவ்வளவு ஆக்ரோஷமாக மாற காரணம். செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வபெருந்தகை நேற்று திடீரென பெங்களூர் பயணித்தார். டெல்லியிலிருந்து பெங்களூர் வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவை அங்கு சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் செல்வபெருந்தகையுடன் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ணா சேதுராமன் மட்டுமே உடன் இருந்துள்ளார். இந்த மூன்று பேர் மட்டுமே சுமார் ஒரு மணிநேரத்திற்கும்  மேலாக தமிழக கூட்டணி நிலவரம் குறித்து பேசியிருக்கிறார்கள். இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதல் இல்லாமலே பலரும் கருத்துகள் வெளியிடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.  இதுகுறித்து செல்வபெருந்தகைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டெல்லியில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறினார்கள்.  அதன்பிறகும் விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் தேசிய செயலாளராகவும் உள்ள மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவந்தார். குறிப்பாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தி அதில் கூட்டணி குறித்த தீர்மானத்தையும் போட்டார்கள். மேலும், மாணிக்கம் தாகூருடன், தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்றகுழு தலைவராக உள்ள ராஜேஷ் குமாரும் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்தார். இது மாநில தலைவராக உள்ள செல்வபெருந்தகைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் “மாநில தலைவராக நான் இருக்கும் போதே ஆளாளுக்கு கருத்து சொல்வதும், தீர்மானம் போடுவதாக இருந்தால் தலைவர் பதவியில் நான் ஏன் இருக்க வேண்டும்? ” என்று கடுகடுத்துவந்தார். டெல்லி தலைமையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்தது இவரை மேலும் சூடாக்கியது. இந்நிலையில் தான் கார்கே பெங்களூர் வந்த தகவல் தெரிந்து அவரை சந்திக்க முடிவெடுத்தார். இந்த சந்திப்பில் தி.மு.க கூட்டணி நமக்கு நம்பகமான கூட்டணி. கொடுக்குற சீட்டை வெற்றியாக மாற்றிக்கொள்ளலாம். அதே நேரம் த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பது இப்போதுள்ள நிலையில், தற்கொலைக்கு சமம். நமக்கு கிடைக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும், எம்.பிக்களையும் நாமே கோட்டைவிடுவதாக மாறிவிடும் என்று விளக்கியுள்ளார். ஏற்கனவே கார்கேவும் தி.மு.க கூட்டணியில் தொடர்வதே உத்தமம் என்கிற மனநிலையில் இருக்கிறார். அதோடு செல்வபெருந்தகை, “மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இப்படி கூட்டணிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். இனிமேல் அவர் பேசினால் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொங்கிவிட்டார். கார்கேவும் “இனி கூட்டணி விசயங்கள் குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க தரப்பில் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து கேட்கலாம்” என்று முடித்துள்ளார். திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன? கார்கேவின் இந்த பேச்சுக்கு பிறகு உற்சாக மூடுக்கு வந்த செல்வபெருந்தகை சென்னையில் இறங்கிவுடனே தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்துவிட்டார். இனி எல்லாம் தி.மு.க-வுக்கு சாதகமாகவே நடக்கும்” என்று சொல்லி முடித்தார்கள். காங்கிரஸ் கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என தி.மு.கவும் சத்தமில்லாமல் ஆக்ஷன் எடுத்து வருகிறது. டி.ஆர்.பாலு மூலம் டெல்லியில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடம் கூட்டணியை தக்க வைக்க பேச்சு நடந்துள்ளது. அதே போல் இன்று தமிழகம் வந்துள்ள கே.சி.வேணுகோபாலிடமும் தி.மு.க கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என நிர்வாகிகளை வைத்து அழுத்தம் கொடுக்க செல்வபெருந்தகை திட்டமிட்டுள்ளார். தி.மு.க தரப்பில் முப்பது இடங்கள் வரை தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஒரு ராஜ்யசபா, அடுத்த ஆண்டு ஒரு ராஜ்யசபா என இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை கொடுத்து காங்கிரஸ் கட்சியை கை பிடிக்க தி.மு.க தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். காங்கிரஸ் - திமுக இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம், “ கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு மேலிடம் முடிவுகளை எடுக்கும். அது தவிர கூட்டணி குறித்து யாரும் பேச மாட்டார்கள்” என்று சொல்லியுள்ளார். இதனால் தனது புகாருக்கு வலுசேர்ந்துள்ளது என செல்வபெருந்தகையும் குஷியாகியுள்ளார்.   இதனிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவரது எக்ஸ் கணக்கில் “அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என பதிவிட்டு என்னை பற்றி என்ன புகார் சொன்னாலும் நான் அச்சப்பட போவதில்லை என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார். இனி தி.மு.க கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யும் வேலைகள் வேகம் எடுக்கும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.  அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

விகடன் 17 Feb 2026 1:58 pm

மத்திய அரசின் நிதிப்பகிர்வு: தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன? | Full list

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதையடுத்து இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அந்தப் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு நிதிப் பகிர்வு குறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது... 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு > சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை (GST Compensation to States) முடிவடைந்ததால், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், மாநிலங்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained > ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயிலிருந்து முன்னறிவிப்போ அல்லது அரசுடன் கலந்தாலோசனையோ இன்றி, பெரும் தொகையான 1,709 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மாநில அரசின் கணக்கில் இருந்து ஒன்றிய அரசு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிடித்தம் செய்தது. இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பின் கீழ் வருவாய்க் குறைவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. > 2025-26-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. > அரசியல் சாசனப் பிரிவு 293-ன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 16,290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்கவேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு வழங்க இயலாத நிலையில் மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் உச்சவரம்பிலிருந்து அத்தொகை கழிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. மின்பகிர்மானம் PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 413 கோடி ரூபாய் மட்டுமே உள்ளபடியான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிபந்தனை, நடப்பு ஆண்டில் மாநில அரசிற்கு 15,877 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. > மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3.548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் ஆகியவை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளவற்றில் உள்ளடங்கும். > சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான செலவினத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் 50:50 என மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதன்படி மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவேண்டிய பலன்கள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய், மாநில அரசின் மொத்த நிலுவைக்கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவது மட்டுமல்லாமல், மாநிலத்திற்கு உரிய கடன் திரட்டும் திறனையும் பாதித்துள்ளது. சென்னை மெட்ரோ ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold இதனால், மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை செவிமடுத்து, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் தவறியுள்ளது என்று பேசி... எனினும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு வழங்க மறுக்கும் நிதி, அனுமதி மறுக்கப்படும் நலத் திட்டங்கள் என பல தடைகளைத் தாண்டியும், தமிழ்நாடு சாதனைகள் பல புரிந்து வருவதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள் என்று திமுக அரசைப் பாராட்டி முடித்தார். AI Impact Summit 2026: ஏ.ஐ உச்சி மாநாடு! - இந்தியாவுக்கு வரும் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன்

விகடன் 17 Feb 2026 1:34 pm

மத்திய அரசின் நிதிப்பகிர்வு: தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன? | Full list

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதையடுத்து இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அந்தப் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு நிதிப் பகிர்வு குறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது... 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு > சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை (GST Compensation to States) முடிவடைந்ததால், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், மாநிலங்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained > ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயிலிருந்து முன்னறிவிப்போ அல்லது அரசுடன் கலந்தாலோசனையோ இன்றி, பெரும் தொகையான 1,709 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மாநில அரசின் கணக்கில் இருந்து ஒன்றிய அரசு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிடித்தம் செய்தது. இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பின் கீழ் வருவாய்க் குறைவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. > 2025-26-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. > அரசியல் சாசனப் பிரிவு 293-ன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 16,290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்கவேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு வழங்க இயலாத நிலையில் மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் உச்சவரம்பிலிருந்து அத்தொகை கழிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. மின்பகிர்மானம் PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 413 கோடி ரூபாய் மட்டுமே உள்ளபடியான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிபந்தனை, நடப்பு ஆண்டில் மாநில அரசிற்கு 15,877 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. > மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3.548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் ஆகியவை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளவற்றில் உள்ளடங்கும். > சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான செலவினத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் 50:50 என மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதன்படி மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவேண்டிய பலன்கள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய், மாநில அரசின் மொத்த நிலுவைக்கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவது மட்டுமல்லாமல், மாநிலத்திற்கு உரிய கடன் திரட்டும் திறனையும் பாதித்துள்ளது. சென்னை மெட்ரோ ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold இதனால், மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை செவிமடுத்து, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் தவறியுள்ளது என்று பேசி... எனினும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு வழங்க மறுக்கும் நிதி, அனுமதி மறுக்கப்படும் நலத் திட்டங்கள் என பல தடைகளைத் தாண்டியும், தமிழ்நாடு சாதனைகள் பல புரிந்து வருவதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள் என்று திமுக அரசைப் பாராட்டி முடித்தார். AI Impact Summit 2026: ஏ.ஐ உச்சி மாநாடு! - இந்தியாவுக்கு வரும் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன்

விகடன் 17 Feb 2026 1:34 pm

உட்கட்சிப் புயல்:``மணி சங்கர் அய்யர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக... - கே.சி வேணுகோபால்!; என்ன நடந்தது?

கேரள சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்திருக்கும் வார்த்தைப்போர் அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. கேரளாவின் இடதுசாரி அரசு ஏற்பாடு செய்திருந்த ‘விஷன் 2031’ மாநாடு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மணிசங்கர் அய்யர் - பினராயி விஜயன் அந்த மாநாட்டில் உரையாற்றிய மணிசங்கர் அய்யர், ``கேரளாவின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது. காந்தியின் திசையில் முன்னேறிய ஒரே மாநிலம் கேரளா. இந்த மாநாட்டில் என் கட்சி (காங்கிரஸ்) தோழர்கள் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. கேரளாவில் பினராயி விஜயன்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார். என உரையாற்றினார். அவரின் உரை காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களாகவே மணிசங்கர் அய்யர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சசி தரூர், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அவர், நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் அளித்திருந்த பேட்டியில், ``காங்கிரஸ் கட்சி வெளியுறவு அமைச்சராக்கவில்லை என்பதற்காக, இப்போது மோடியின் வெளியுறவு அமைச்சராக முயலும் சசி தரூரை விட கொள்கையற்ற, பதவியைத் தேடுபவரை நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் கட்சி கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அல்ல. பவன் கேரா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஒரு பொம்மை மட்டுமே. ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. கே.சி. வேணுகோபால் போன்ற ஒரு ரவுடியை சர்தார் படேல் அளவிற்கு உயர்த்தும் கட்சியின் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு காந்தியவாதி, நேருயவாதி, ராஜீவியவாதி. ஆனால் நான் ஒரு 'ராகுலியன்' அல்ல. ராகுல் காந்தி நான் கட்சியில் இருப்பதை மறந்துவிட்டார் போலும். கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன்தான் முதலமைச்சராவார் என்று எனக்கு வாக்குறுதி அளித்தால், பினராயி தான் அடுத்த முதல்வர் என்ற எனது கருத்தை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் மதச்சார்பற்ற சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் நானும் அவரும் மட்டும்தான். மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதில்லை எனத் தெரிவித்தார். சசிதரூர் மணி சங்கர் அய்யரின் இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பவன் கேரா, ``மணி சங்கர் அய்யருக்கு கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தெரிவித்தவை அவரின் தனிப்பட்டக் கருத்து. என்றார். கே.சி வேணுகோபால், ``மணிசங்கர் அய்யர் கடந்த சில ஆண்டுகளாகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத சூழலில், திடீரென வந்து இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பேசுவது அவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியோ அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணியோ (UDF) அவரது பேச்சை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மணிசங்கர் அய்யரின் தனிப்பட்டக் கருத்துகள் கட்சியின் நிலைப்பாட்டை பாதிக்காது. என்றார். DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

விகடன் 17 Feb 2026 12:35 pm

உட்கட்சிப் புயல்:``மணி சங்கர் அய்யர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக... - கே.சி வேணுகோபால்!; என்ன நடந்தது?

கேரள சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்திருக்கும் வார்த்தைப்போர் அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. கேரளாவின் இடதுசாரி அரசு ஏற்பாடு செய்திருந்த ‘விஷன் 2031’ மாநாடு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மணிசங்கர் அய்யர் - பினராயி விஜயன் அந்த மாநாட்டில் உரையாற்றிய மணிசங்கர் அய்யர், ``கேரளாவின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது. காந்தியின் திசையில் முன்னேறிய ஒரே மாநிலம் கேரளா. இந்த மாநாட்டில் என் கட்சி (காங்கிரஸ்) தோழர்கள் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. கேரளாவில் பினராயி விஜயன்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார். என உரையாற்றினார். அவரின் உரை காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களாகவே மணிசங்கர் அய்யர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சசி தரூர், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அவர், நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் அளித்திருந்த பேட்டியில், ``காங்கிரஸ் கட்சி வெளியுறவு அமைச்சராக்கவில்லை என்பதற்காக, இப்போது மோடியின் வெளியுறவு அமைச்சராக முயலும் சசி தரூரை விட கொள்கையற்ற, பதவியைத் தேடுபவரை நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் கட்சி கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அல்ல. பவன் கேரா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஒரு பொம்மை மட்டுமே. ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. கே.சி. வேணுகோபால் போன்ற ஒரு ரவுடியை சர்தார் படேல் அளவிற்கு உயர்த்தும் கட்சியின் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு காந்தியவாதி, நேருயவாதி, ராஜீவியவாதி. ஆனால் நான் ஒரு 'ராகுலியன்' அல்ல. ராகுல் காந்தி நான் கட்சியில் இருப்பதை மறந்துவிட்டார் போலும். கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன்தான் முதலமைச்சராவார் என்று எனக்கு வாக்குறுதி அளித்தால், பினராயி தான் அடுத்த முதல்வர் என்ற எனது கருத்தை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் மதச்சார்பற்ற சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் நானும் அவரும் மட்டும்தான். மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதில்லை எனத் தெரிவித்தார். சசிதரூர் மணி சங்கர் அய்யரின் இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பவன் கேரா, ``மணி சங்கர் அய்யருக்கு கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தெரிவித்தவை அவரின் தனிப்பட்டக் கருத்து. என்றார். கே.சி வேணுகோபால், ``மணிசங்கர் அய்யர் கடந்த சில ஆண்டுகளாகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத சூழலில், திடீரென வந்து இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பேசுவது அவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியோ அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணியோ (UDF) அவரது பேச்சை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மணிசங்கர் அய்யரின் தனிப்பட்டக் கருத்துகள் கட்சியின் நிலைப்பாட்டை பாதிக்காது. என்றார். DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

விகடன் 17 Feb 2026 12:35 pm

`'விதி'படமே வக்கீல் ஆக்குச்சு!' - நீதிபதி | `84-ல் வெளியான படம்; மறக்க முடியாத அந்த ராதா' - பூர்ணிமா

3000 வழக்குகள், முதல் பெண் தபேதார்! நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா, நடிகை சுஜாதா ஆகியோரின் நடிப்பில் எண்பதுகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘விதி’. படத்தில் வழக்கறிஞராக வரும் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரம் அப்போதே பெரிதும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி புரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி மஞ்சுளா, `அந்தப் படத்தின் சுஜாதா கேரக்டர்தான் தன்னை சட்டம் படிக்கத் தூண்டியதாக' தனக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசினார். நிகழ்ச்சியில் முதலில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக பெண் சிங்கமாக போராடியவர் நீதிபதி மஞ்சுளா. நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஒரு பெண் நீதிபதியை இன்று இழக்கிறது” என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் முப்பதாயிரம் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருக்கும் மஞ்சுளா, முதல் பெண் தபேதாரை நியமித்துக் கொண்டதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். justice manjula மஞ்சுளா பேசிய போது, 'பி.எஸ்.சி முடிச்ச பிறகு எம்.எஸ்.சிக்கு இடம் கிடைச்சது. அந்தச் சமயத்துலதான் 'விதி' படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படத்தில் சுஜாதா கேரக்டர் என்னை ரொம்பவே ஈர்த்தது. அதனாலேயே சட்டத்தை தேர்ந்தெடுத்துப் படிச்சேன்' என கூறினார். எல்லா மொழியிலும் ஹிட்! இது குறித்து 'விதி' படததின் தயாரிப்பாளரான மறைந்த கே.பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜியிடம் பேசினோம். ''மலையாளத்துல வெளியான படம். தமிழில் நாங்க ரீ மேக் செய்தோம். தெலுங்கு, இந்தியிலயும் வெளியாச்சு. எல்லா மொழியிலயுமே பெரிய ஹிட். தமிழைப் பொறுத்தவரை வசனம் ஆரூர் தாஸ். பட்டி தொட்டி எங்கும் வசனம் பெரிய ரீச். அப்ப ஆடியோ கேசட் காலம் வேறயா, அவ்வளவு வரவேற்பு தந்தாங்க மக்கள். சுஜாதாம்மா, பூர்ணிமா, மோகன்னு படத்தின் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் நல்ல வரவேற்பு தந்திச்சு படம். நான் என்ன சொல்றது? சப்ஜெக்ட் அந்த மாதிரி. நாங்க ரீ மேக் செய்த ஒரு படம் நாப்பது வருஷம் கடந்து இன்னைக்கும் அதுவும் உயர் நீதிமன்றம் மாதிரியான ஒரு இடத்துல நினைவு கூறப்படுதுனு கேக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார் அவர். suresh k balaji மறக்க முடியாத ராதா! 'விதி' படத்தின் ஹீரோயின் பூர்ணிமா பாக்யராஜிடம் பேசினோம். ''நானும் இந்த செய்தி பார்த்தேன். ரொம்ப பெருமையா இருந்திச்சு. 1984 ல் வெளியாச்சு படம். வெளியான சமயத்துலயே சுஜாதாம்மா கேரக்டர் ரொம்ப பேரை இன்ஸ்பைர் பண்ணிய செய்திகள் வந்திச்சு. அவங்க இப்ப இல்லங்கிறதுதான் ஒரு வருத்தம். சினிமா பார்த்து கெட்டுப் போறாங்கனு ஒரு பொதுப்புத்தி சமூகத்துல பரவலா இருந்த காலத்துலயே எத்தனையோ பேரை நல்ல வழியில ஊக்குவிச்ச படங்களும் வெளிவந்திருக்குங்கிறதுக்கு இந்தப் படம் ஒரு பெரிய‌ உதாரணம். அந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டு வக்கீலாகி நீதிபதியானவங்க, நிச்சயம் தன்னிடம் வந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான தீர்ப்பைத்தான் தந்திருப்பாங்க. பூர்ணிமா பாக்யராஜ் எனக்குமே 42 வருஷமாகியும் இன்னைக்கும் அந்த 'ராதா' கேரக்டர் தர்ற அடையாளம் சும்மா சொல்லக் கூடாது. ஞாபகம் வச்சிருந்து பேசறாங்க மக்கள். அதனால இப்படியொரு படத்துல நடிச்சதை நினைக்கிறப்ப பெருமையா இருக்கு'' என்கிறார் இவர்.

விகடன் 17 Feb 2026 11:03 am

இந்து கோயிலில் வழிபட்ட மகாராஷ்டிர இஸ்லாமிய அமைச்சர்: கோமியத்தால் கோயிலை சுத்தப்படுத்தியதால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனாவை சேர்ந்த அவர் மகா சிவராத்திரியையொட்டி மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இருக்கும் ரஹிமாபாத் என்ற இடத்தில் இருக்கும் நாகேஷ்வர் கோயிலுக்கு வந்தார். அவர் கோயிலுக்குள் சென்று வழிபட முயன்றார். அதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய அமைச்சரான அப்துல் சத்தார் அசைவம் சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார் என்றும், எனவே அவரை கோயிலுக்குள் விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அப்துல் சத்தார் கோயிலுக்குள் சென்று வழிபட்டார். அவர் கோயிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு சென்ற பிறகு கோயில் மாசுபட்டுவிட்டதாக உள்ளூர் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். அதோடு கோயிலை புனிதப்படுத்தவேண்டும் என்று சிலர் பேசிக்கொண்டனர். இதையடுத்து ஒருவர் கோயில் முழுவதும் கோமியம் தெளித்து புனிதப்படுத்துவதாக தெரிவித்தார். அவர் கோயிலில் கோமியம் தெளிக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவத்தால் கோயிலுக்கு வெளியில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோயிலை கோமியம் கொண்டு புனிதப்படுத்தி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து அமைச்சர் அப்துல் சத்தார் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் சிவசேனாவை சேர்ந்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இச்சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், ``இது துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''கோயிலுக்கு கோமியம் தெளித்து புனிதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. அப்துல் சத்தார் எங்களது கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர். தேசத்திற்கு எதிராக பேசுபவர்கள் எங்களுக்கும் எதிரி'' என்று குறிப்பிட்டுள்ளார். அதே சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் `முஸ்லிம் அமைச்சர் இந்துகோயிலுக்குள் சென்று வழிபட்டதில் தவறில்லை. சிவன் அனைவருமானவர்'' என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 17 Feb 2026 9:26 am

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!|Live

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்! திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, புதிய கட்சி தவெக என இந்தச் சட்டமன்ற தேர்தல், அதிக கவனம் பெறுகிறது. ஆட்சியைத் தொடர வேண்டும் என்று திமுகவும், 'விட்டதைப் பிடிக்க வேண்டும்' என்று அதிமுக கூட்டணியும், புதிதாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தவெகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ப்ளஸ் கோடைக்கால ஊக்கத்தொகை என்று ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறது திமுக. பட்ஜெட்டிற்கு முன்பே, மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு திமுக இப்படியான ஒரு செயலை செய்து பெண்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால், இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றற் போல, பெரும் அறிவிப்புகளை இன்று வாரி வழங்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 'இன்று' தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்! இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இன்று காலை 9.30 மணியளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.

விகடன் 17 Feb 2026 8:33 am

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: 'மாபெரும் காது குத்தும் விழா' - திமுக பட்ஜெட்டை விமர்ச்சிக்கும் அதிமுக அழைப்பிதழ்|Live

மாபெரும் காது குத்தும் விழா இன்று தாக்கலாகும் தமிழ்நாடு இடைக்காலப் பட்ஜெட்டையொட்டி அதிமுகவினர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியான தமிழ்நாடு பட்ஜெட்டைக் கேலி செய்யும் விதமாக, 'மாபெரும் காது குத்தும் விழா' என்கிற அழைப்பிதழைக் கொண்டு வந்துள்ளனர். அதிமுக அழைப்பிதழ் பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்! திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, புதிய கட்சி தவெக என இந்தச் சட்டமன்ற தேர்தல், அதிக கவனம் பெறுகிறது. ஆட்சியைத் தொடர வேண்டும் என்று திமுகவும், 'விட்டதைப் பிடிக்க வேண்டும்' என்று அதிமுக கூட்டணியும், புதிதாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தவெகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ப்ளஸ் கோடைக்கால ஊக்கத்தொகை என்று ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறது திமுக. பட்ஜெட்டிற்கு முன்பே, மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு திமுக இப்படியான ஒரு செயலை செய்து பெண்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால், இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றற் போல, பெரும் அறிவிப்புகளை இன்று வாரி வழங்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 'இன்று' தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்! இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இன்று காலை 9.30 மணியளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.

விகடன் 17 Feb 2026 8:33 am