நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ் - 04 திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார். ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் குழு ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. 'கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது' என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று '25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது' என சோடங்கர் பேசுகிறார். 27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ். TVK Vijay - தவெக விஜய் இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், 'காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்...' என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம். அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? Loading…
நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ் - 04 திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார். ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் குழு ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. 'கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது' என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று '25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது' என சோடங்கர் பேசுகிறார். 27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ். TVK Vijay - தவெக விஜய் இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், 'காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்...' என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம். அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? Loading…
காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!
“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள். திமுக - காங்கிரஸ் தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம். இந்த முறையும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளையே தி.மு.க வழங்க முன்வருகிறது. ஆனால் எண்ணிக்கையை மட்டும் அவர்கள் பிரதானமாக பார்க்கிறார்கள். கூடுதல் இடங்களை வாங்கி தோற்றால் பாதகம் அவர்களுக்கு இல்லை, எங்களுக்கே. அதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம். கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக தி.மு.கவின் ஒற்றைக்கட்சி ஆளுமை மீதே அவர்களுக்கு கடுப்பு இருப்பது தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தி.மு.க தலைமை மீது கடும் வன்மத்தில் இருக்கிறார். இந்த கூட்டணி இப்போது ஒட்டாமல் போவதற்கு அவரும் ஒரு காரணம். கிரிஷ் சோடங்கர் த.வெ.க தரப்பில் சிலர் அவருடன் தொடர்பில் இருப்பதால், த.வெ.க ஆதரவு மனநிலையில் அவர் உள்ளார். அவரது பேச்சைதான் டெல்லி காங்கிரஸ் தலைமையும் கேட்பதாகவே எங்களுக்கு தோணுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் வைத்துள்ளார். மார்ச் 3-ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி விசயத்தில் ஒரு முடிவை எடுக்காவிட்டால், அந்த இடத்தில் தி.மு.க வேட்பாளரை அறிவிக்க தலைமை ரெடியாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “மார்ச் 3 தேதிக்குள் டெல்லி தலைமையே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளது. இப்போதைய நிலையில் த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அன்று முக்கிய ஆலோசனை ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியின் தலைமை த.வெ.கவுடன் நெருக்கத்தை காட்டும் மூடில் உள்ளது. அதேநேரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் டெல்லி தலைமையிடம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார். இந்த குழப்பத்தினால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பு அமைதிகாத்துள்ளது. அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தி.மு.க சொல்வது போல மார்ச் 3-ம் தேதிக்குள் கூட்டணி விசயத்தில் முக்கிய அறிவிப்பை டெல்லி தலைமை அறிவித்துவிடும். த.வெ.கவுடன் கூட்டணி வைத்தால் ஐம்பது தொகுதிகள் வரை கிடைக்கும் என்கிற நிலை இருப்பதால் அதற்கான வாய்ப்பே இப்போது பலமாக உள்ளது. ஒரு வேளை தி.மு.க தலைமை நேரடியாக சோனியாவிடம் பேசினால், இந்த கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்ட கவுன்டவுனில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் நடந்துவருகிறது.” என்கிறார்கள். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் என்னவிதமான பாதிப்பு தங்களுக்கு வரும் என்கிற ஆய்வையும் தி.மு.க எடுத்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் கட்சியின் இடத்தை நிரப்பிவிடலாம் என்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். இதனால் தங்கள் அணியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித் அரசியல் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்க தி.மு.க முடிவெடுத்துள்ளது.! அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்.! Loading…
காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!
“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள். திமுக - காங்கிரஸ் தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம். இந்த முறையும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளையே தி.மு.க வழங்க முன்வருகிறது. ஆனால் எண்ணிக்கையை மட்டும் அவர்கள் பிரதானமாக பார்க்கிறார்கள். கூடுதல் இடங்களை வாங்கி தோற்றால் பாதகம் அவர்களுக்கு இல்லை, எங்களுக்கே. அதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம். கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக தி.மு.கவின் ஒற்றைக்கட்சி ஆளுமை மீதே அவர்களுக்கு கடுப்பு இருப்பது தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தி.மு.க தலைமை மீது கடும் வன்மத்தில் இருக்கிறார். இந்த கூட்டணி இப்போது ஒட்டாமல் போவதற்கு அவரும் ஒரு காரணம். கிரிஷ் சோடங்கர் த.வெ.க தரப்பில் சிலர் அவருடன் தொடர்பில் இருப்பதால், த.வெ.க ஆதரவு மனநிலையில் அவர் உள்ளார். அவரது பேச்சைதான் டெல்லி காங்கிரஸ் தலைமையும் கேட்பதாகவே எங்களுக்கு தோணுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் வைத்துள்ளார். மார்ச் 3-ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி விசயத்தில் ஒரு முடிவை எடுக்காவிட்டால், அந்த இடத்தில் தி.மு.க வேட்பாளரை அறிவிக்க தலைமை ரெடியாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “மார்ச் 3 தேதிக்குள் டெல்லி தலைமையே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளது. இப்போதைய நிலையில் த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அன்று முக்கிய ஆலோசனை ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியின் தலைமை த.வெ.கவுடன் நெருக்கத்தை காட்டும் மூடில் உள்ளது. அதேநேரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் டெல்லி தலைமையிடம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார். இந்த குழப்பத்தினால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பு அமைதிகாத்துள்ளது. அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தி.மு.க சொல்வது போல மார்ச் 3-ம் தேதிக்குள் கூட்டணி விசயத்தில் முக்கிய அறிவிப்பை டெல்லி தலைமை அறிவித்துவிடும். த.வெ.கவுடன் கூட்டணி வைத்தால் ஐம்பது தொகுதிகள் வரை கிடைக்கும் என்கிற நிலை இருப்பதால் அதற்கான வாய்ப்பே இப்போது பலமாக உள்ளது. ஒரு வேளை தி.மு.க தலைமை நேரடியாக சோனியாவிடம் பேசினால், இந்த கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்ட கவுன்டவுனில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் நடந்துவருகிறது.” என்கிறார்கள். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் என்னவிதமான பாதிப்பு தங்களுக்கு வரும் என்கிற ஆய்வையும் தி.மு.க எடுத்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் கட்சியின் இடத்தை நிரப்பிவிடலாம் என்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். இதனால் தங்கள் அணியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித் அரசியல் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்க தி.மு.க முடிவெடுத்துள்ளது.! அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்.! Loading…
திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit) தாக்கல் செய்துள்ளார். அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது. திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன். பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன். பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit) தாக்கல் செய்துள்ளார். அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது. திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன். பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன். பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் போர் காமேனியின் மறைவுக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ஆனால் காமேனி மரணம் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசு கடைபிடித்து வரும் ‘மௌனம்’ அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன? * 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது இந்தியாவின் மௌனத்திற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது. * மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பிரதமர் மோடி * தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது. இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வென்றவர். அப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் வீரமணி அதிகாரத்தில் தொடர்ந்தார். அ.தி.மு.க ஆட்சி முடியும் தருவாயில், வீரமணி சொத்து குவிப்பு போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கினார். கே.சி.வீரமணி இதன் எதிரொலி இருந்தபோதும், மூன்றாவது முறையாக 2021 தேர்தலிலும் ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணி போட்டியிட்டார். அப்போது எதிர்முகமாக இருந்த தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு சீட் கிடைத்தது. ஜோலார்பேட்டை தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். வீரமணியும், தேவராஜியும் வன்னியர் சமூகம் என்பதோடு, இருக்கட்சிகளிலுமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் போட்டிக் கடுமையானது. கடைசியில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார் தேவராஜி. `எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் தங்கவில்லை; கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை' போன்ற குற்றச்சாட்டுகள் எழ, தேவராஜி மீது ஜோலார்பேட்டை தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள். அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி? இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார். தேவராஜி எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக. இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்' மாவட்டம்! Loading…
படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு
தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வென்றவர். அப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் வீரமணி அதிகாரத்தில் தொடர்ந்தார். அ.தி.மு.க ஆட்சி முடியும் தருவாயில், வீரமணி சொத்து குவிப்பு போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கினார். கே.சி.வீரமணி இதன் எதிரொலி இருந்தபோதும், மூன்றாவது முறையாக 2021 தேர்தலிலும் ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணி போட்டியிட்டார். அப்போது எதிர்முகமாக இருந்த தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு சீட் கிடைத்தது. ஜோலார்பேட்டை தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். வீரமணியும், தேவராஜியும் வன்னியர் சமூகம் என்பதோடு, இருக்கட்சிகளிலுமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் போட்டிக் கடுமையானது. கடைசியில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார் தேவராஜி. `எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் தங்கவில்லை; கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை' போன்ற குற்றச்சாட்டுகள் எழ, தேவராஜி மீது ஜோலார்பேட்டை தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள். அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி? இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர். அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார். தேவராஜி எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக. இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்' மாவட்டம்! Loading…
Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?
பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர். இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்றார். மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். ஆம் ஆத்மியின் வீழ்ச்சி காங்கிரஸுக்கு உணர்த்தும் பாடம் என்ன? இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர். காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள். சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர். இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன. பா.ஜ.க-வுக்கு முட்டுக்கொடுத்த தி.மு.க… சோனியாவை அவமதித்த ஜெ.! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 30
Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?
பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர். இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம் என்றார். மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். ஆம் ஆத்மியின் வீழ்ச்சி காங்கிரஸுக்கு உணர்த்தும் பாடம் என்ன? இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர். காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள். சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர். இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன. பா.ஜ.க-வுக்கு முட்டுக்கொடுத்த தி.மு.க… சோனியாவை அவமதித்த ஜெ.! - வாக்காளப் பெருங்குடி மக்களே! - 30
DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது மூர்த்தி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர். இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர். அனிதா ராதாகிருஷ்ணன் அன்பில் மகேஷ் மெய்யநாதன் பெரியகருப்பன் அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். 6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!
DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது மூர்த்தி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர். இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர். அனிதா ராதாகிருஷ்ணன் அன்பில் மகேஷ் மெய்யநாதன் பெரியகருப்பன் அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். 6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!
விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழூர் பாலதுறை என்ற இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், mr vijayabaskar கரூரில் முக்கிய பாசன வாய்க்காலான புகழூர் ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் வாங்கல், நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் இந்த வாய்க்கால் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி இந்த பணிகளை விடியா தி.மு.க அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வராததால் வாங்கல், நெரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு நினைத்திருந்தால் விரைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டு இருக்கும். விவசாயிகள் மீதும் விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீதும் தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை. உடனடியாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லை என்றால், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனை பெற்று உடனடியாக இந்த பகுதியில், விவசாயிகளைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள வெப்பத்தின் தாக்கம் காரணமாக கடைமடை வரை உள்ள விவசாய பயிர்கள் கோரை, வாழை, தென்னை போன்ற பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சாலைவிரிவாக்க பணிகளுக்காக விவசாயிகள் மீது அக்கறையின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலை மூடியது குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் பதில் சொல்லி ஆக வேண்டும். mr vijayabaskar தமிழகத்தில் இரண்டு அமாவாசைகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு இருக்கும் என்றார். அதேபோல், காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் அள்ளப்பட்ட மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட இடத்தில், தற்போது இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. மேலிருந்து அழுத்தம் வருகிறது என்று கூறும் அரசு அதிகாரிகளால், மணல் கொள்ளையை தடுக்க முடியாத அவல நிலை கரூர் மாவட்டத்தில் நிலவுகிறது. இதைப் பார்த்து மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி நினைக்கின்றது. மக்கள் அனைவருக்கும் அனைத்தும் தெரியும். முற்றிலும் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் அடுத்தது திண்டுக்கல் ராமநாதபுரம் வரை பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி தான் உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். புகலூர் தடுப்பணை என்பது கிட்டத்தட்ட 1 டி.எம்.சி அளவுக்கு நீர் தேக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட தடுப்பணை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. mr vijayabaskar அதற்கான ரூ. 450 கோடி நிதியை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பெற்றுக் கொடுத்தார் என பொதுவெளியில் பேசி வருகிறார். படத்தில் வரும் வசனத்தை போல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால், சட்டை என்னுடையது என கூறுவதைப் போல செந்தில் பாலாஜி புகழூர் கதவணைக்கு நிதி பெற்றுக் கொடுத்தார் என்று பேசுவது நகைச்சுவை. நான் தான் முன்னாள் முதலமைச்சரிடம் பேசி, நிதியை ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தேன் என்பதை பொதுவெளியில் நிரூபிக்க முடியும். திட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள விடியா தி.மு.க அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கதவணை பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றார். Loading…
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரான் மீதான போர் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஈரானின் இந்தப் பொறுப்பற்ற தாக்குதல்கள் எங்களது நெருங்கிய கூட்டாளிகளை குறி வைப்பதோடு, பிராந்தியத்தில் இருக்கும் எங்களது படைவீரர்களையும், மக்களையும் பயமுறுத்துகின்றன. இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களது நலம் மற்றும் எங்களது கூட்டாளிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து எங்களின் தற்காப்புக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் கப்பற்படை தளம் ஒன்று அமீரகத்தில் ஈரானிய தாக்குதலில் சேதமடைந்தது எனத் தகவல் வெளியானது. மேலும் பிரிட்டன் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிரது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா தற்காப்பு நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் இது தற்காப்பு மட்டுமே தான் எனவும், தாக்கி அழிக்கும் போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை, இனியும் ஈடுபடாது எனத் தெரிவித்தார், போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரான் மீதான போர் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஈரானின் இந்தப் பொறுப்பற்ற தாக்குதல்கள் எங்களது நெருங்கிய கூட்டாளிகளை குறி வைப்பதோடு, பிராந்தியத்தில் இருக்கும் எங்களது படைவீரர்களையும், மக்களையும் பயமுறுத்துகின்றன. இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களது நலம் மற்றும் எங்களது கூட்டாளிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து எங்களின் தற்காப்புக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் கப்பற்படை தளம் ஒன்று அமீரகத்தில் ஈரானிய தாக்குதலில் சேதமடைந்தது எனத் தகவல் வெளியானது. மேலும் பிரிட்டன் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிரது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா தற்காப்பு நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் இது தற்காப்பு மட்டுமே தான் எனவும், தாக்கி அழிக்கும் போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை, இனியும் ஈடுபடாது எனத் தெரிவித்தார், போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?
Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான'காமேனியின் மரணம்!
அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர். இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம். மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம். கமேனி மரணம் - துக்கம் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்... கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, 'எல்லாமுமானவர்'. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும். தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம். இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்... பிற மத்தியக் கிழக்கு நாடுகள் 'மாற்றம்... முன்னேற்றம்' என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது. இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்? அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; 'மாற்றம்... முன்னேற்றம்' வரும் என்று நினைக்கிறார்கள். கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள். அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது. கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?
Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான'காமேனியின் மரணம்!
அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர். இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம். மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம். கமேனி மரணம் - துக்கம் Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்... கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, 'எல்லாமுமானவர்'. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும். தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம். இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்... பிற மத்தியக் கிழக்கு நாடுகள் 'மாற்றம்... முன்னேற்றம்' என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது. இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்? அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; 'மாற்றம்... முன்னேற்றம்' வரும் என்று நினைக்கிறார்கள். கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள். அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது. கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?
`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, ஜெயலலிதா என்னை அடித்தார் என கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா? என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம். பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம் என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம். எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ் தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா? தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். ops ``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து.. ``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, 'என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க'னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, 'எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்'னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப் பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு. ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே? அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது. 2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடு அதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை 'மாடல் அரசு' என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க. மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை. ``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே? ``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. Vijay அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06 `விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?' ``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். என்றார். Loading…
`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, ஜெயலலிதா என்னை அடித்தார் என கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா? என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம். பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம் என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம். எடப்பாடி பழனிசாமி - இபிஎஸ் தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா? தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது. இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். ops ``ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து.. ``மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, 'என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க'னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, 'எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்'னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப் பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு. ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே? அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது. 2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. NDA கூட்டணி மாநாடு அதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை 'மாடல் அரசு' என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க. மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை. ``புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே? ``திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. Vijay அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06 `விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?' ``விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். என்றார். Loading…
மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album
NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு NDA கூட்டணி மாநாடு ``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்! – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
தொகுதிப் பங்கீடு: எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் - திருமாவளவன் சொல்வது என்ன?
அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம். 2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல. திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி. தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம். எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள். தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி மோதல்களுக்கு ஹாலிவுட் ஸ்டைல் தீர்வு! | Satire
ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?
கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன? தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான். ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில் ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்... 'பழிக்கு பழி' நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது. காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை. இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான். ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான். அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான். ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான். லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை
ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08
(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.) ஸ்டாலினுக்கு சோதனை களமாக அமைந்த ஆயிரம் விளக்கு! முதல் களம் 08 மு.க. ஸ்டாலின் 1989-ல் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) ஒரு சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் அமையவில்லை. இரண்டாம் தலைமுறைத் தலைவராக, ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டவரின் வருகையாகவே அது பார்க்கப்பட்டது. மாணவச் செயல்பாட்டாளராகத் தொடங்கி, இளைஞர் அணி அமைப்பாளராக உருவெடுத்து, அவசர நிலைச் சிறைவாசி ஆகி, கட்சியின் எதிர்கால முகமாக உருவானவரின் அதிகாரபூர்வ நுழைவு அது. சென்னையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து ஸ்டாலின் பெற்ற வெற்றி, தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாக இன்றும் நிற்கிறது. அந்த ஒரு வெற்றிதான் அவரை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதாக உயர்த்தி, இறுதியில் முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டுசென்ற பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஸ்டாலின் முதல் வெற்றிக்கு முன்பே தொடங்கிய அரசியல் பயிற்சி 1989 தேர்தல், ஸ்டாலினுக்கு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தாலும், அதற்கு நீண்ட காலம் முன்பே, அவர் தேர்தல் அரசியலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டார். பதின்வயது சிறுவனாக 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பிரசாரத்தில் ஈடுபட்டும், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், 1970-களின் நடுப்பகுதியில் இளைஞர் அணி அமைப்புப் பணியில் முழுமையாக இறங்கினார். 1976-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் ஸ்டாலின். அந்த அனுபவமே, அவரது பொதுவாழ்வுக்கான மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பல மூத்த திமுக தலைவர்கள் இன்றும் சொல்கிறார்கள். 1980-களில், திமுக இளைஞர் அணியை கட்சியின் மிக வலிமையான அமைப்புப் பிரிவாக உருவாக்கினார் ஸ்டாலின். மாவட்டப் பொறுப்புகளை ஏற்று, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினார். தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், தெருக்களிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர் பட்டாளத்தை உருவாக்கினார். அடித்தளமிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி இந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர். எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கருதினர். நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன. ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் தேர்தல் வெற்றி இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது. அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, 'புதிதாக வந்தவரின் எழுச்சி' போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது. ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது. அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவித்தது. ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தொகுதி, சென்னையின் அரசியல் உணர்வு மிக்க மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. `போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5 நிர்வாக திறனுக்கான பயிற்சி சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர்... 1989 வெற்றிக்குப் பிறகு ஸ்டாலினின் உயர்வு திடீர் பாய்ச்சலாக இல்லை. படிப்படியாகவே நடந்தது. 1991 தேர்தலில், திமுக மாநிலம் தழுவிய தோல்வியைச் சந்தித்தபோதிலும், அவர் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கவில்லை. மாறாக, கட்சி அமைப்புப் பணியில் இன்னும் தீவிரமாக இறங்கினார். 1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதே ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் மீண்டும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அதே ஆண்டில், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயராகவும் பொறுப்பேற்றார். மாநகராட்சி மேயராக அவர் பதவி வகித்த காலமே அவரது நிர்வாக திறனுக்கான பயிற்சியாகவும், அதற்கான உண்மையான களமாகவும் அமைந்தது. சாலைகள், குப்பை மேலாண்மை, வீதி விளக்குகள், பூங்காக்கள், பள்ளிகள் என நகரை அழகுபடுத்தும்'சிங்கார சென்னை' திட்டம் அறிமுகமானது. இது, ஆட்சி நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவராக அவரை வெளிப்படுத்தியது. கருணாநிதி- ஸ்டாலின் அமைச்சரிலிருந்து துணை முதலமைச்சர்... 2006-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தபோது, ஸ்டாலின் ஏற்கனவே ஆயிரம் விளக்கில் பலமுறை வெற்றி பெற்று நிறைவான அனுபவம் பெற்றிருந்தார். இந்தமுறை அவர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். நகராட்சி நிர்வாகத்தில் பெற்ற அனுபவத்திற்கு மிகவும் பொருந்திய துறை அது. 2009-ல் துணை முதலமைச்சராக உயர்த்தப்பட்டபோது, திமுகவில் நீண்ட காலமாகத் தயாராகிக்கொண்டிருந்த தலைமுறை மாற்றம் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் , மேயர் , அமைச்சர் என அமைதியாகவும் அளவாகவும் நடந்த உயர்வு, ஸ்டாலினை 'வாரிசு' என்று மட்டும் சொல்ல முடியாத அளவுக்கு, அனுபவத்தால் வார்க்கப்பட்ட தலைவர் எனக் காட்டுவதை திமுகவுக்கு எளிதாக்கியது. எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03 ஆளுமையை நிரூபித்த ஸ்டாலின் 2018-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்தபோது, திமுக ஸ்டாலினை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என அனைத்துப் பொறுப்புகளிலும் பணியாற்றியவராக இருந்தார். 1989 ஜனவரி 22 அன்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த மு.க. ஸ்டாலின், 2021 மே 7 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். கருணாநிதி மறையும் வரை அவரது நிழலிலேயே வளர்ந்த மு.க. ஸ்டாலின், திமுக தலைவராக பதவியேற்ற பின்னர், இவரால் கட்சியை வழிநடத்தி, திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வைக்க முடியுமா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழத்தான் செய்தது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், 2021 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, அவர் மீதான அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிப்பதாகவும், அவரது ஆளுமையை நிரூபிப்பதாகவும் இருந்தது. ஸ்டாலின் 2021 தேர்தலில், ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு மாறிவிட்டாலும், அவரை உயர்த்திய தேர்தல் வெற்றிக்கான பயணம் தொடங்கிய இடம் ஆயிரம் விளக்கு தொகுதிதான். கட்சிக்குள் அவரை வேறுபடுத்திக் காட்டும் நிர்வாக அனுபவத்தை வளர்த்தெடுக்கவும், திமுகவில் இயற்கையான வாரிசாக அவரை நிலைநிறுத்துவதற்கும் அடிப்படைப் பங்காற்றியதும் அந்தத் தொகுதிதான். அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி, ஒரு தலைமைக்கான மக்கள் அங்கீகாரமாகவும், நீண்ட கால உழைப்புக்கான அடித்தளமாகவும் அமைந்தது! (தொடரும்) Loading…
``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
நாகை, மயிலாடுதுறை மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates
`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!' - மநீம, திமுக டீல் என்ன?
தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இதற்கிடையில் 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக ஆழ்வார்ப்பேட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உதயசூரியன் சின்னம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவந்தும், ம.நீ.ம-வுக்குப் போட்டியிட ஒரு சீட்டைக்கூடத் தரவில்லை தி.மு.க. 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஒரு எம்.பி தொகுதி தருகிறோம்' என்ற அறிவாலயத்தின் ஆஃபரை அன்றைக்கு நிராகரித்தார் கமல்ஹாசன். ஆகையால், ஒரு ராஜ்ய சபா சீட் தரப்பட்டது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அழுத்தமாக சொல்லிவந்தனர் ம.நீ.ம-வினர். அதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி 'டார்ட் லைட்' சின்னத்தை பெற்றனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ம.நீ.ம விலகியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், மற்ற கட்சிகளின் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்கள் நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எங்கள் தலைவர் கமல். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நான்குமுனைப் போட்டியில் வெற்றித் தோல்விகளை சொற்ப வாக்குகள்கூட தீர்மானிக்கலாம். ஆகையால், தேர்தல் களத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, தி.மு.க-வின் கோரிக்கைக்கு ஏற்ப உதயசூரியன் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை களமிறக்க ஓகே சொல்லிவிட்டார் எங்கள் தலைவர் கமல். ஸ்டாலின், கமல்ஹாசன் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்பதால் 4-5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கு இடையே இழுபறியாக இருந்தது சின்னம் விவகாரம்தான். அது முடிவுற்ற நிலையில் விரைவிலேயே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றனர் Loading… கறார் காட்டும் அறிவாலயம்... சூரியனில் மறையும் டார்ச் லைட்? - கையறு நிலையில் மய்யம்!
Iran war: Ali Khameneiயை கொன்ற US Israel - காத்திருக்கும் விபரீதம் என்ன? Decode | Trump| Nethanyahu
Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவைச் சந்திக்காத MK Stalin | Imperfect show
Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவைச் சந்திக்காத MK Stalin | Imperfect show
Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, 'கச்சா எண்ணெய் விலை'. இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீதான போர் 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு எப்போது போர் முடிவுக்கு வரும்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர், நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும் என்றும், ''ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை'' என்றும் பேசியிருக்கிறார். தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold நீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார். மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு
கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு
ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார். அலிபூர் வந்திருந்த காட்சி இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது. கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்? வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், ''அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன. இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம் என்று கூறினார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் அயதுல்லா கமேனி இச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு
ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார். அலிபூர் வந்திருந்த காட்சி இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது. கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்? வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், ''அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன. இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம் என்று கூறினார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் அயதுல்லா கமேனி இச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் சசிகலா - தளவாய் சுந்தரம் பேச்சுக்கு போனில் மிரட்டலா? பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள இரவிப்புதூரில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசினார். அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, அந்த அம்மாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு அந்த அம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் அந்த அம்மாவுக்குச் செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது எனப் பேசியிருந்தார் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்திடம் சசிகலா ஆதரவாளர் ஒருவர் போனில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சமுக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தமிழ்நாட்டில் சின்னம்மாவைப் பற்றி யார் பேசினாலும் நான் கேட்பேன். அண்ணன் என நினைத்துதான் நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அந்த வார்த்தையைப் பேசப் போய்தான் நான் கேட்கிறேன். இனிமேல் நீ சின்னம்மாவைப் பற்றியோ, அந்தக் குடும்பத்தைப் பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன். தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்பு தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே. நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க என மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசியவர் ஆவேசமானார். அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று கூறப்படுகிறது. அந்தப் பதிலில், நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை. நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன். இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க என முடித்தார். எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் போனில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது. அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், 'அது பற்றி தெரியவில்லை' எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும். ஓபிஎஸ் குற்றமற்றவர்; சுற்றியிருந்தவர்கள்தான்... - பசும்பொன்னில் சசிகலா சர்டிபிகேட்
ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் சசிகலா - தளவாய் சுந்தரம் பேச்சுக்கு போனில் மிரட்டலா? பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள இரவிப்புதூரில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசினார். அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, அந்த அம்மாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு அந்த அம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் அந்த அம்மாவுக்குச் செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது எனப் பேசியிருந்தார் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்திடம் சசிகலா ஆதரவாளர் ஒருவர் போனில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சமுக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தமிழ்நாட்டில் சின்னம்மாவைப் பற்றி யார் பேசினாலும் நான் கேட்பேன். அண்ணன் என நினைத்துதான் நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அந்த வார்த்தையைப் பேசப் போய்தான் நான் கேட்கிறேன். இனிமேல் நீ சின்னம்மாவைப் பற்றியோ, அந்தக் குடும்பத்தைப் பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன். தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்பு தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே. நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க என மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசியவர் ஆவேசமானார். அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று கூறப்படுகிறது. அந்தப் பதிலில், நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை. நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன். இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க என முடித்தார். எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் போனில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது. அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், 'அது பற்றி தெரியவில்லை' எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும். ஓபிஎஸ் குற்றமற்றவர்; சுற்றியிருந்தவர்கள்தான்... - பசும்பொன்னில் சசிகலா சர்டிபிகேட்
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album
புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி Modi: மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது - மதுரையில் மோடி பேச்சு
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album
புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி Modi: மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது - மதுரையில் மோடி பேச்சு
Modi: திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது! - மதுரையில் மோடி!
மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்தப் பிறகு பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். Modi At Madurai பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை இன்று நினைவுகூர்கிறேன். நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரையும் இன்று நினைவுகூர்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். முருகனை தரிசனம் செய்வது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டின் நல் வளர்த்திற்காக இறைவனிடம் வேண்டினேன். பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை அறிந்து என் இதயம் கனத்தது. அவருடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் நான் சந்தித்து வந்தேன். அவர்களுடைய துக்கத்தை என்னால் உணர முடிந்தது. பூரண சந்திரனின் ஆத்மா சாந்தியடைய முருகனை பிரார்த்திக்கிறேன். ஆனால், திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது. திமுக என்ன வேணும்னாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது மதுரை. Modi At Madurai நீங்கள் எனக்கு பொழியும் அன்பு கடந்த மாதம் நான் மலேசியா சென்றிருந்ததை நினைவுப்படுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை அங்கு ஆதரிக்க வேண்டி மலாயா பல்கலைக்கழகத்தில், திருவள்ளுவர் இருக்கை ஒன்றை அமைத்திருக்கிறோம். அங்கு திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அங்கு அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பிறகு அவர்களுடைய கனவுகள் கானல் நீராய் ஆகிப் போய்விடும். இந்த தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ் நாட்டு மக்கள் அவர்களுடைய மனதில் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள். Modi At Madurai தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தேஜகூ-வின் அரசாங்கம்தான் என்பதை உங்களின் கண்களில் நான் காண்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால், நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தார்கள். பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது. அதனால்தான் திமுக-விற்கு மதுரை வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது. மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையை தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது. என்றார்.
Modi: திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது! - மதுரையில் மோடி!
மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்தப் பிறகு பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். Modi At Madurai பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை இன்று நினைவுகூர்கிறேன். நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரையும் இன்று நினைவுகூர்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். முருகனை தரிசனம் செய்வது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டின் நல் வளர்த்திற்காக இறைவனிடம் வேண்டினேன். பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை அறிந்து என் இதயம் கனத்தது. அவருடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் நான் சந்தித்து வந்தேன். அவர்களுடைய துக்கத்தை என்னால் உணர முடிந்தது. பூரண சந்திரனின் ஆத்மா சாந்தியடைய முருகனை பிரார்த்திக்கிறேன். ஆனால், திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது. திமுக என்ன வேணும்னாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது மதுரை. Modi At Madurai நீங்கள் எனக்கு பொழியும் அன்பு கடந்த மாதம் நான் மலேசியா சென்றிருந்ததை நினைவுப்படுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை அங்கு ஆதரிக்க வேண்டி மலாயா பல்கலைக்கழகத்தில், திருவள்ளுவர் இருக்கை ஒன்றை அமைத்திருக்கிறோம். அங்கு திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அங்கு அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பிறகு அவர்களுடைய கனவுகள் கானல் நீராய் ஆகிப் போய்விடும். இந்த தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ் நாட்டு மக்கள் அவர்களுடைய மனதில் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள். Modi At Madurai தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தேஜகூ-வின் அரசாங்கம்தான் என்பதை உங்களின் கண்களில் நான் காண்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால், நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தார்கள். பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது. அதனால்தான் திமுக-விற்கு மதுரை வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது. மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையை தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது. என்றார்.
கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்
ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்
ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
Ali Khamenei: பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. IRAN SUPREME LEADER KHAMENI இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkian கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும். இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?
Ali Khamenei: பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. IRAN SUPREME LEADER KHAMENI இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkian கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும். இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா?
Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?
ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும், 7 நாள்கள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் மீது விழுந்துள்ளது. அயதுல்லா அலி கமேனி கமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மோஜ்தபா (56) தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவி பரம்பரையாகத் தொடருவதை கமேனி விரும்பவில்லை என்றும், மோஜ்தபா உயர்மட்ட மத குரு அல்ல என்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், ஈரானை வழிநடத்த சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்; அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது என அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா? கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார். 1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் - ஹொசைன் மொஹ்சேனி-எஜேய். 2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி. 3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார். அயதுல்லா அலி கமேனி ஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட 'நிபுணர்கள் குழு'தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர். அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு. Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode முகமது மெஹ்தி மிர்பாகேரி (60): அதீத பழமைவாதக் கருத்துடையவர். மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது என்பது இவரது கொள்கை. ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60): நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு மிகவும் விசுவாசமானவர் எனக் கருதப்படுபவர். அயதுல்லா அலி கமேனி ஹசன் கோமெய்னி (50): இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கமேனியின் பேரன். அவர் புரட்சிகர சிந்தனையாளர். ஆனால் ஒருபோதும் அரசப் பதவியை வகித்ததில்லை. உயர்மட்ட அளவில் செல்வாக்கு குறைந்தவர். ஈரானின் அடுத்த தலைவர் வெறும் மதத் தலைவராக மட்டும் இல்லாமல், சக்திவாய்ந்த 'புரட்சிகரக் காவல்படை'யை (IRGC) அரவணைத்துச் செல்பவராகவும், அமெரிக்காவின் தற்போதைய கடும் அழுத்தத்தைச் சமாளிப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஹசன் கொமேனி போன்ற மிதவாதிகள் தலைவரானால் அது ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel
Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?
ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும், 7 நாள்கள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் மீது விழுந்துள்ளது. அயதுல்லா அலி கமேனி கமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மோஜ்தபா (56) தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவி பரம்பரையாகத் தொடருவதை கமேனி விரும்பவில்லை என்றும், மோஜ்தபா உயர்மட்ட மத குரு அல்ல என்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், ஈரானை வழிநடத்த சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்; அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது என அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். US-Israel Attacks Iran: ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது - என்ன சொல்கிறது அமெரிக்கா? கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார். 1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் - ஹொசைன் மொஹ்சேனி-எஜேய். 2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி. 3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார். அயதுல்லா அலி கமேனி ஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட 'நிபுணர்கள் குழு'தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர். அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு. Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode முகமது மெஹ்தி மிர்பாகேரி (60): அதீத பழமைவாதக் கருத்துடையவர். மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது என்பது இவரது கொள்கை. ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60): நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு மிகவும் விசுவாசமானவர் எனக் கருதப்படுபவர். அயதுல்லா அலி கமேனி ஹசன் கோமெய்னி (50): இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கமேனியின் பேரன். அவர் புரட்சிகர சிந்தனையாளர். ஆனால் ஒருபோதும் அரசப் பதவியை வகித்ததில்லை. உயர்மட்ட அளவில் செல்வாக்கு குறைந்தவர். ஈரானின் அடுத்த தலைவர் வெறும் மதத் தலைவராக மட்டும் இல்லாமல், சக்திவாய்ந்த 'புரட்சிகரக் காவல்படை'யை (IRGC) அரவணைத்துச் செல்பவராகவும், அமெரிக்காவின் தற்போதைய கடும் அழுத்தத்தைச் சமாளிப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஹசன் கொமேனி போன்ற மிதவாதிகள் தலைவரானால் அது ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel
பூசாரிகள் மாநாடு: ``திமுகவின் இறை நம்பிக்கை இதுதான் - முதல்வர் ஸ்டாலின்!
சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் நேற்று (28.2.2026) கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ வேலு, குன்றக்குடி ஆதீனம், மயிலம் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டனார். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 6,000 பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1,500- வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ``எல்லாருக்கும் எல்லாம்” என்று நாம் சொல்வது, வாய் வார்த்தைக்காக அல்ல; சொற்களில் சொல்வதை, செயலில் நிரூபிக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த மாநாடு! அமைச்சர் சேகர்பாபு ஆய்வு உண்மையான ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசுதான், திராவிட மாடல் அரசு! இந்த மாநாட்டைப் பார்க்கும்போது, பலருக்கு வியப்பாக இருக்கலாம்; ஏன், சிலருக்கு எரிச்சல்கூட வரலாம். கிராம கோயில்களில் பணியாற்றுகின்ற கிராமப் பூசாரிகளான நீங்களும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கம்தான். உங்களுடைய வாழ்விலும், விடியல் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான், நம்முடைய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த மண்ணில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்திய திராவிட இயக்கத்தின் உணர்வை, நம்முடைய அரசில்தான் நிலைநாட்டியிருக்கிறோம். ஒருகாலத்தில், கோயில் இருக்கின்ற தெருக்களில் கூட பலரால் நுழைய முடியாத நிலைதான் இருந்தது. அதை மாற்றி, இன்றைக்கு கோயில்களுக்குள்ளே அனைத்து மக்களும் வரலாம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று மாற்றியிருக்கிறோம். இந்த மாற்றம்தான், நாம் விரும்புகின்ற சமூக முன்னேற்றம்! இதைத்தான் உண்மையான இறைப் பற்றாளர்களும் விரும்புவார்கள். இறை நம்பிக்கையை பொறுத்தவரைக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்பது, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் சொன்ன வழிதான் என்று பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார். பூசாரிகள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அதேபோலதான், தலைவர் கலைஞர் அவர்களும், “கோயில்கள் கூடாது என்பதல்ல; அவை கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார். அந்த வழியில்தான், அனைவருக்கும் மதிப்பளிக்கும், அனைவரது மாண்பையும் காக்கும், அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் துறையாக, நம்முடைய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆட்சிக் காலங்களில், அறநிலையத் துறை அமைச்சர் யார் என்பதுகூட மக்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற யாரை கேட்டாலும், நம்முடைய சேகர்பாபு அவர்களின் பெயரை பளிச்சென்று சொல்வார்கள். அந்தளவுக்கு நாள்தோறும் ஏதாவது ஒரு விழா, ஒரு கோயிலை புதுப்பிப்பது என்று அவர் செய்து கொண்டே இருக்கிறார். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், நான் அதிகமாக எந்த துறையினுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள் என்று யாராவது கேட்டால், இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சிகள் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு, சிறப்பாக, வேகமாக செயல்படுகிறார் நம்முடைய சேகர்பாபு! அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டிருக்கின்ற சாதனைகளின் சில புள்ளிவிவரங்களை இப்போது தலைப்புச் செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நம்முடைய அரசு பொறுப்பேற்ற ஆயிரத்து 759 நாட்களில், 4 ஆயிரத்து 335 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ், 29 அர்ச்சகர்களை பணி நியமனம் செய்திருக்கிறோம். 12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களை பணி நியமனம் செய்திருக்கிறோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக, இந்தத் துறையில், 813 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 946 அலுவலர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி இருக்கிறோம். 19 ஆயிரம் ஒரு கால பூசை திட்ட திருக்கோயில்கள் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்க தொகையாக ஆயிரத்து 500 ரூபாயை வழங்கிக் கொண்டு வருகிறோம். 221 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 616 குடியிருப்புகளை கட்டித் தந்திருக்கிறோம். பணிக்காலத்தில், இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப நல நிதியாக 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கிராம கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. கோயில் சொத்துகளை மீட்கவேண்டும் என பெருமுயற்சி எடுத்து, அதிலும் சாதனை படைத்திருக்கிறோம். 8 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரத்து 140 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். இப்போது, நான் சொன்ன சாதனைகள் எல்லாம் மிகவும் குறைவுதான். பெரிய சாதனை புத்தகத்தின் சில பக்கங்கள்தான்! ஏராளமான சாதனைகள் இருக்கிறது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்! அப்படி இருக்கும்போது, உங்களின் இந்த மாநாட்டுக்கு வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா? அதனால், பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன். முதலாவது அறிவிப்பு - ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது அறிவிப்பு - உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மூன்றாவது அறிவிப்பு - கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 இலட்சம் ரூபாயாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது ! தற்போது உங்களுடைய கோரிக்கையை ஏற்று ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். நான்காவது அறிவிப்பு - இயற்கை எய்திய உறுப்பினரின் ஈமச்சடங்குக்காக தற்போது வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஐந்தாவது அறிவிப்பு – அருகாமையில் இருக்கின்ற பெரிய திருக்கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு, தேர்ந்த பயிற்றுநர்களை கொண்டு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும். ஆறாவது அறிவிப்பு - தற்போது பூசாரிக்கு 3 ஆயிரம், பூசாரிகளின் மகனுக்கு 3 ஆயிரம், மகளுக்கு 5 ஆயிரம் என திருமணத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். ஏழாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது வழங்கப்படும் பள்ளிக்கல்வி நிதி உதவி, மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பூசாரிகள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் எட்டாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். ஒன்பதாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி, ஆண்டுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். பத்தாவது அறிவிப்பு - பூசாரிகளின் மகன், மகள் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். பதினோராவது அறிவிப்பு - உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் நிதி உதவி ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மகிழ்ச்சியா? நானும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சி என்றால், நானும் மகிழ்ச்சி. சமரசமும் - சமத்துவமும்தான் ஆன்மீகப் பாதையாக இருக்க முடியும்! நம்மைப் பொறுத்தவரைக்கும், சமத்துவத்தை போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம்! மக்களுடைய சுயமரியாதையும் - உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்! அதை நாம் சரியாக செய்வதால்தான், ஆன்மீகப் பெரியோர்கள் தொடர்ந்து நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இத்தகைய சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைபெற வேண்டும். மக்களுக்குள்ளே ஒற்றுமைதான் ஓங்கி வளரவேண்டும்! மக்களை பிரிக்க நினைக்கின்ற கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்! இங்கே வந்திருக்கின்ற பக்தர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும், திருக்கோயில் பணியாளர்களுக்கும் கொடுக்கின்ற வாக்குறுதி என்பது, உங்கள் நலன் காக்க, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். உங்கள் ஆதரவோடு திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக! என்றார். முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!
ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. ட்ரம்ப் ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. ட்ரம்ப் ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில் சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் கார் மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு, மீனவர் நலன், தொழிலாளர் நலன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகள், சிறுபான்மையினர் நலன், விவசாயிகள் நலன் போன்ற பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லா ‘வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஈடிலா வளர்ச்சி ஒன்றிய அரசின் 65-க்கு மேலான விருதுகள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என ஊடகங்களும், பத்திரிகைகளும், சான்றோர்களும் பாராட்டுகின்றன ஒன்றிய அரசு 65-க்கு மேலான விருதுகள் வழங்கி பாராட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பன்முகத் திறன்கள் குறித்து கருதும் வேளையில் அவர் சென்னை மாநகராட்சி மேயராக தமிழ்நாட்டின் அமைச்சராக , துணை முதலமைச்சராக, முதலமைச்சராக அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் எல்லாம் தமிழ்நாட்டை வளர்த்து தலைநிமிரச் செய்து உயர்த்தியுள்ள சாதகனைகள் எல்லாம் மணிமாலைகள் போல் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்கின்றன. மாநகராட்சி மேயராக நிர்வாகச் சிறப்பு சென்னைமாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்று மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தினார். மாநகராட்சித் தரத்தை மேம்படுத்தினார். போக்குவரத்து நெரிசல்கைளை போக்கிட இந்தியாவில் எந்தவொரு மாநகராட்சியும் செய்திடாத வகையில் 10 சாலை மேம்பாலங்களை அமைத்தார். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என புகழ்பெற்ற சென்னை கடற்கரை அழகுப்படுத்தினார்.சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்தார் சிங்காரச் சென்னை முழக்கத்தை வைத்து சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை அமர்த்தி சென்னை மாநகரின் தூய்மையை மேம்படுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சராக 2006- 2011 ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ளாட்சி நிறுவனங்களின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தினார். சாதி ஆதிக்கம் காரணமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதலிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை உருவாக்கி உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி சிறப்பான ஜனநாயகவாதியாக உருவெடுத்தார். இராமநாதபுரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக திருச்சி அருகே காவிரி நீரை எடுத்து இராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் வகுத்து மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய பணிகளை இரண்டாண்டுகளில் முடித்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார். அதுபோல ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் தலைவரை ஜப்பான் சென்று சந்தித்து கடன் பெற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேற செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக நிர்வாகத் திறன் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வருவாய் ஈட்டமுடியாத நிலையில் வாழ்ந்து குடும்ப கடமைகளே வாழ்வு என கொண்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி 1,30,69,000 மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இன்ப அதிர்ச்சியாக 5000 ரூபாய் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளார். உயர்கல்வியைத் தொடர முடியாத ஏழை இளைஞர்களையும் மகளிர்களையும் ஊக்கப்படுத்தி கல்லூரி படிப்பை தொடர்ந்திட மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தினார். பசியோடு பள்ளி வரும் குழந்தைகளின் பசிபோக்கி படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்திட காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி ஏறத்தாழ 20 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உட்கொள்ளச் செய்தார். இத்திட்டம் இங்கிலாந்து, கனடா நாடுகளிலும் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. படிப்புக்கும் வேலையில் சேருவதற்கு ஏற்ற திறனுக்கும் இருந்த இடைவெளியை போக்கிட நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் பயிற்சிகள் வழங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்தார். 49 இலட்சம் மாணவர்களுக்கும் 1.17 இலட்சம் கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேருக்கு முதல்முறை மருத்துவச் சேவைகளும் 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகளும் வழங்கி தொற்றா நோய்கள் பரவாமல் மக்கள் உயிர்களை காத்தார். இத்திட்டத்தை பாராட்டி ஜக்கிய நாடுகள் அவையே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டியது. தொழில் வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட வேண்டும் என்னும் உறுதியோடு பல தொழில் மேம்பாட்டாளர்கள் மாநாடு நடத்தி மேற்கொண்ட 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ 12.37 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு – 36 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வகை செய்துள்ளார். 2021-க்கு பின் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மகத்தான சேவை செய்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 21 தளங்களுடன் டைடல் பூங்காவை உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேலும் பல டைடல் பூங்காக்களை உருவாக்கியுள்ளார்.. புத்தாக்கத் தொழில்கள் 4 ஆண்டு காலத்தில் 10,630 புத்தாக்கத் தொழில்களை உருவாக்கி அவற்றுள் 50 சதவீதத்திற்கு மேலான தொழில்கள் மகளிரால் தொடங்கப்பட்டவை என்னும் வரலாற்று புதுமையை நிகழ்த்தியுள்ளார். சமூகநீதி நோக்குடன் காலம் காலமாக தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் குடும்ப வாழ்வு சிறக்கவும் செழிக்கவும் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கி எந்திரங்கள் வாங்கி சுய தொழில் புரிந்திட வழி வகுத்தார். தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் | தாயுமானவர் திட்டம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தாயுமானவர் திட்டம் முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டுத்துறை வளர்ச்சி மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. நேப்பியர் பாலம் செஸ் தீம் ஓவியம் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் 1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சி அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி இந்தியாவிலேயே முதலாவதான அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை கடல் மீது 37 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்தார். நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும் பாடுபட்ட தியாகிகளுக்கும் வீர வேந்தர்களுக்கும் வேலு நாச்சியார் உள்ளிட்ட பல வீரங்கனைகளுக்கும் சிலைகளையும் நினைவு மண்டபங்களையும் அமைத்தார். சங்க இலக்கியம் முதலான நூல்களை அயல் மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுதல் முதலான தமிழ் பரப்பும் பணிகளை மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகள் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்துள்ளார். மழை வெள்ளக் காலங்களில் ஏற்பட்ட பயிச் சேதங்களுக்கு இழப்பீடு தந்துள்ளார். பாசன வசதிகள் சிறப்பாக நடைபெற 2 இலட்சம் விவசாய பம்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். பாசன வசதி தடையின்றி நடைபெற 121 தடுப்பணைகள் 101 அணைக்கட்டுகள் கட்டியுள்ளார். அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றியுள்ளார். ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாக்கும் வசதியினை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்,மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அறநிலையத்துறை 4000-க்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழக்கு விழாக்கள். 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு. சென்னையில் ஹஜ் இல்லம் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமனம். நெடுஞ்சாலைத்துறை மூலம் 24,774 கிமீ நீளச் சாலைகள் 180 உயர்மட்ட பாலங்கள் இப்படி பல்வகையிலும் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் என பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல அரசியல் தலைவர்களும் போற்றுகின்றனர்.
அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்து வந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். கமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode அயதுல்லா அலி கமேனி யார் இந்த அயதுல்லா அலி கமேனி? ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அயதுல்லா அலி கமேனி (86). 1979-ல் ஷா மன்னரின் ஆட்சியை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின்போது கமேனி முக்கியத்துவம் பெற்றார். 1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, மிக உயர்ந்த மதப் பதவியில் இல்லாதபோதிலும், அவர் ஈரானின் உயரிய தலைவராக நியமிக்கப்பட்டார். சமரசத்திலிருந்து எதிர்ப்பு நோக்கி... ஆரம்பத்தில் 'சமரசம் செய்து கொள்ளக்கூடிய' நபராகவே பார்க்கப்பட்டார். ஆனால், காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு குறித்த முடிவுகள், அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஆதரித்தார். 2013-ல் அவர் அறிமுகப்படுத்திய Heroic flexibility என்ற கொள்கை, 2015-ல் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இருப்பினும், 2018-ல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தார். ஆனாலும், கமேனி அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார். `ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel ஈரான் மீதான தாக்குதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை? பல ஆண்டுகளாக ஈரானும் இஸ்ரேலும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரங்களில் ஈரான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. பாலஸ்தீனப் போராளி அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கி வந்தது. பதிலுக்கு இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளைக் கொல்வது, சைபர் தாக்குதல் நடத்துவது எனச் செயல்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை ஏவியதும் இந்த 'நிழல் போரை' நேரடிப் போராக மாற்றிவிட்டது. இதுமட்டுமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடிகளும் ஈரானுக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில் போராட்டங்களும் வெடித்தன. இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 'ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்' என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அறிவித்தார். கமேனி இருக்கும்வரை இது சாத்தியமில்லை என்பதால், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். ட்ரம்ப் - நெதன்யாகு ஈரானிய மக்களுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப், ``ஈரானின் பெருமைமிக்க மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை இன்று இரவு நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே இருப்பது மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படும். நாங்கள் எங்களது பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் கைக்கு வரும். பல தலைமுறைகளுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைத்துள்ள அநேகமாக ஒரே வாய்ப்பு இதுதான் எனப் பதிவிட்டிருக்கிறார். ஈரானிய மக்களிடம் பேசிய நெதன்யாகு, ``நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறான். அது உங்களை ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சி செய்யும் கொடூரமான 'அயதுல்லா' ஆட்சிதான். அவர்தான் உங்கள் அற்புதமான நாட்டைச் சீரழித்து, மிகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றவர்கள். உங்களை மொத்தமாகப் படுகொலை செய்தவர்களும் அவர்களே எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்
மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; பங்கேற்க முடியாது - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்
மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்பு குறித்து பதிலளிக்கும்படி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, ''இப்பிரச்னை குறித்து தெரிந்துகொள்வதற்காக மாசு கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சதீஷ் பட்வெல், மாசு கட்டுப்பாட்டுத்துறை உறுப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் ஆகியோரை அழைத்திருந்தேன். ஆனால் இரண்டு பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் என்னால் சந்திராப்பூர் மாசு பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிவிக்க முடியவில்லை. இரண்டு பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது தங்களால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறி மெசேஜ் அனுப்பி வைத்தனர். தேவேந்திர சிங் அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதால் அமைச்சர்களால் பொதுமக்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விடுகிறது'' என்று குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்த திலீப் லாண்டே, அமைச்சரின் அறிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரியின் செயல் மிகப்பெரிய அலட்சியம் மற்றும் சட்டமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், மாநில அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார், 'அதிகாரியின் நடத்தை ஜனநாயகத்தின் கொடூரமான படுகொலை என்றும், அரசியலமைப்புக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்றும் சாடினார். மக்கள் பிரதிநிதிகளுக்குத் தாங்கள் பதில் கூற வேண்டியவர்கள் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாளில் அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியில் செல்லக்கூடாது. மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?
மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; பங்கேற்க முடியாது - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்
மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்பு குறித்து பதிலளிக்கும்படி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, ''இப்பிரச்னை குறித்து தெரிந்துகொள்வதற்காக மாசு கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சதீஷ் பட்வெல், மாசு கட்டுப்பாட்டுத்துறை உறுப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் ஆகியோரை அழைத்திருந்தேன். ஆனால் இரண்டு பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் என்னால் சந்திராப்பூர் மாசு பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிவிக்க முடியவில்லை. இரண்டு பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது தங்களால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறி மெசேஜ் அனுப்பி வைத்தனர். தேவேந்திர சிங் அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதால் அமைச்சர்களால் பொதுமக்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விடுகிறது'' என்று குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்த திலீப் லாண்டே, அமைச்சரின் அறிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரியின் செயல் மிகப்பெரிய அலட்சியம் மற்றும் சட்டமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், மாநில அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார், 'அதிகாரியின் நடத்தை ஜனநாயகத்தின் கொடூரமான படுகொலை என்றும், அரசியலமைப்புக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்றும் சாடினார். மக்கள் பிரதிநிதிகளுக்குத் தாங்கள் பதில் கூற வேண்டியவர்கள் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாளில் அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியில் செல்லக்கூடாது. மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?
ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!
ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. அயதுல்லா அலி கமேனி இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!
மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு எங்கும் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையே ஆனா தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர் உயிரிழப்பு
இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன. அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி. பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்றார். ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?
US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்? ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இஸ்ரேல் - அமெரிக்கா பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார். 8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன. இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ட்ரம்ப் அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்! அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது. ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மிகப் பெரும் போர்: ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்: இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. 1979-ல் நடந்த உள்நாட்டுப் போரில், பெஹல்விக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அயோதொல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமிய அரசு அமைந்தது. அதையே Islamic Republic of Iran என்று அழைக்கிறோம். மத்திய கிழக்கில் ஈரானை இஸ்ரேல் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் ஈரான் ஆதரவில் இயங்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்கள் இஸ்ரேலுக்கு இடைஞ்சலாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் ஈரான் வளர்வதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஈரான் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவெடுக்கப்பட்டு, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை. அதனால்தான், பிப்ரவரி மாதம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அமெரிக்காவுக்கு சென்று ட்ரம்ப்பை சந்த்திருக்கிறார் நெதன்யாஹு. இந்த சந்திப்பின்போது, “பேச்சுவார்த்தை மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வர முடியாது. தாக்குதல்தான் சரி” என்று நெதன்யாஹு ட்ரம்ப்பிடம் கூறியதாகவும், அதற்கு ட்ரம்ப், “ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம், முடிவு எட்டப்படாவிட்டால் தாக்கலாம்” என்று பதிலளித்ததாகவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்ககள் செய்தி வெளியிட்டன. பிப்ரவரி 26-ம் தேதி ஜெனிவாவில் நடந்த அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பும் கூறியபோதும், நெதன்யாஹு விரும்பியபடியே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. போரின் ஆபத்து: போரில் உள்ள அனைத்து நாடுகளின் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதைத்தாண்டி, மிக முக்கிய ஆபத்து, இந்தப் போர் ஈரானைத் தாண்டி வளைகுடா முழுவதும் பரவுவதுதான். வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சவுதி, அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரேன் போன்ற நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பதில் தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும், அந்நாடுகள் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான பதில் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்த போர் இன்னும் பெரிய அளவில் விரிவடையும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுவது இரண்டாவது ஆபத்து. பெர்சிய கடலில் உள்ள ஹோர்முஸ் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெறும் 30 கி.மீ அகலம் கொண்ட இந்த பகுதியை ஈரான் முடக்கினால், உலகளவிலான எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு அதிகரித்தால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயரும். அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது. உலக நாடுகள் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த முயல்வதே இந்நேரத்தின் அத்தியாவசியம்!
US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்? ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இஸ்ரேல் - அமெரிக்கா பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார். 8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன. இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ட்ரம்ப் அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்! அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது. ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மிகப் பெரும் போர்: ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்: இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. 1979-ல் நடந்த உள்நாட்டுப் போரில், பெஹல்விக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அயோதொல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமிய அரசு அமைந்தது. அதையே Islamic Republic of Iran என்று அழைக்கிறோம். மத்திய கிழக்கில் ஈரானை இஸ்ரேல் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் ஈரான் ஆதரவில் இயங்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்கள் இஸ்ரேலுக்கு இடைஞ்சலாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் ஈரான் வளர்வதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஈரான் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவெடுக்கப்பட்டு, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை. அதனால்தான், பிப்ரவரி மாதம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அமெரிக்காவுக்கு சென்று ட்ரம்ப்பை சந்த்திருக்கிறார் நெதன்யாஹு. இந்த சந்திப்பின்போது, “பேச்சுவார்த்தை மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வர முடியாது. தாக்குதல்தான் சரி” என்று நெதன்யாஹு ட்ரம்ப்பிடம் கூறியதாகவும், அதற்கு ட்ரம்ப், “ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம், முடிவு எட்டப்படாவிட்டால் தாக்கலாம்” என்று பதிலளித்ததாகவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்ககள் செய்தி வெளியிட்டன. பிப்ரவரி 26-ம் தேதி ஜெனிவாவில் நடந்த அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பும் கூறியபோதும், நெதன்யாஹு விரும்பியபடியே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. போரின் ஆபத்து: போரில் உள்ள அனைத்து நாடுகளின் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதைத்தாண்டி, மிக முக்கிய ஆபத்து, இந்தப் போர் ஈரானைத் தாண்டி வளைகுடா முழுவதும் பரவுவதுதான். வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சவுதி, அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரேன் போன்ற நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பதில் தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும், அந்நாடுகள் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான பதில் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்த போர் இன்னும் பெரிய அளவில் விரிவடையும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுவது இரண்டாவது ஆபத்து. பெர்சிய கடலில் உள்ள ஹோர்முஸ் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெறும் 30 கி.மீ அகலம் கொண்ட இந்த பகுதியை ஈரான் முடக்கினால், உலகளவிலான எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு அதிகரித்தால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயரும். அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது. உலக நாடுகள் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த முயல்வதே இந்நேரத்தின் அத்தியாவசியம்!
”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டத்தில் பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், சிங்.செல்வராஜ் கும்பகோணம் பகுதிகளில் ஓபிஎஸ் குறித்த போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். ஓபிஎஸ் குறித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி சிங்.செல்வராஜ் ``முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்னிடம் வாங்கிய கடனை இன்னாள் முதல்வர் மீட்டு தருவாரா? 2020ம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளில் இருமுகங்களின் படங்களை போட்டு என்னிடம் வாங்கினார். ஆனால் இதுவரையிலும் பணம் தராத துரோகி ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுங்கள் என்ற வாசகம் அந்த போஸ்டரில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செல்வராஜ் கூறுகையில், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டு புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது பெற்றது. இதற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் இருவரையும் சந்தித்து பட்டுப்புடவை நினைவு பரிசாக வழங்கினோம். போஸ்டர் இதையடுத்து கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பட்டுப் புடவையை நினைவு பரிசாக கொடுக்கணும் என பணம் தருவதாக கூறி பிரதமர் மோடி உருவம் பொறித்த பட்டுப்புடவை கேட்டு ஓ.பி.எஸ் ஆர்டர் கொடுத்தார். நானும் தயாரித்து கோவை எடுத்து சென்றேன். அப்போது, நாங்கள் மேடைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் ஓ.பி.எஸ் பட்டுப்புடவையை வாங்கிச் சென்று மோடியிடம் பரிசாக வழங்கினார். இதற்கான பணத்தை பலமுறை கேட்டும் ஓ.பி.எஸ் தரவில்லை. தற்போது அவர் தி.மு.க-வுக்கு சென்று விட்டார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாங்கிய கடனை அவரிடமிருந்து இன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெற்று தர வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளேன் என்றார்.
”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டத்தில் பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், சிங்.செல்வராஜ் கும்பகோணம் பகுதிகளில் ஓபிஎஸ் குறித்த போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். ஓபிஎஸ் குறித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி சிங்.செல்வராஜ் ``முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்னிடம் வாங்கிய கடனை இன்னாள் முதல்வர் மீட்டு தருவாரா? 2020ம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளில் இருமுகங்களின் படங்களை போட்டு என்னிடம் வாங்கினார். ஆனால் இதுவரையிலும் பணம் தராத துரோகி ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுங்கள் என்ற வாசகம் அந்த போஸ்டரில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செல்வராஜ் கூறுகையில், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டு புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது பெற்றது. இதற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் இருவரையும் சந்தித்து பட்டுப்புடவை நினைவு பரிசாக வழங்கினோம். போஸ்டர் இதையடுத்து கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பட்டுப் புடவையை நினைவு பரிசாக கொடுக்கணும் என பணம் தருவதாக கூறி பிரதமர் மோடி உருவம் பொறித்த பட்டுப்புடவை கேட்டு ஓ.பி.எஸ் ஆர்டர் கொடுத்தார். நானும் தயாரித்து கோவை எடுத்து சென்றேன். அப்போது, நாங்கள் மேடைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் ஓ.பி.எஸ் பட்டுப்புடவையை வாங்கிச் சென்று மோடியிடம் பரிசாக வழங்கினார். இதற்கான பணத்தை பலமுறை கேட்டும் ஓ.பி.எஸ் தரவில்லை. தற்போது அவர் தி.மு.க-வுக்கு சென்று விட்டார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாங்கிய கடனை அவரிடமிருந்து இன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெற்று தர வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளேன் என்றார்.
நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?'பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்
ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர். ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும். காமேனி இப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள். ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை. ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில் , இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது.
நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?'பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்
ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர். ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும். காமேனி இப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள். ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை. ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில் , இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது.
சபாநாயகர் ஆகிறாரா OPS? - DMK -வில் என்ன பொறுப்பு? | O Panneerselvam, MK Stalin |TN Election Updates
சபாநாயகர் ஆகிறாரா OPS? - DMK -வில் என்ன பொறுப்பு? | O Panneerselvam, MK Stalin |TN Election Updates
DMK -வில் OPS; எடப்பாடிக்கு சிக்கல்? | KC Palanisamy Interview | O Paneerselvam, MK Stalin |Vikatan
பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா மீது போக்சோ வழக்குப் பதிவு - பின்னணி என்ன?
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஓய்வுபெற்ற பிறகு பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீலேகா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோக்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாகக் குற்றம் சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட சிவில் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் சொசைட்டியின் செயலாளர் ஜெயச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீலேகா மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் கடந்த 26.02.2026 அன்று போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் பெண் டி.ஜி.பி மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு குறித்து ஸ்ரீலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில், முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் போலீஸில் பணியாற்றிய பெண் அதிகாரி நான். 2012-ம் ஆண்டு போக்ஸோ சட்டம் வந்த சமயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் மிக அதிகமாக செயல்பட்டிருந்தேன். நிர்பயா ஸ்கீம் வந்த சமயத்தில் அதன் நோடல் ஆப்பீசராக நான் இருந்தேன். போக்ஸோ வழக்கு எனது யு டியூப் சேனலில் நான் வெளியிட்ட வீடியோவில் கிளிரூர் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியதாக என் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பாலியல் வழக்கை எனது தலைமையிலான டீம் விசாரித்தது. அதில் அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது. கேரளா போலீஸ் விசாரித்தபின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எஃப்.ஐ.ஆரில் மைனர் என குறிப்பிட்டிருந்தோம். விசாரணையில் அந்த பெண் சிறுமி அல்ல என்பது தெரியவந்தது. 2002-ல் நடந்த வழக்கில் 2003-ம் ஆண்டு அந்த பெண் மரணமடைந்தார் என நினைக்கிறேன். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வயது இருபதை நெருங்கி இருந்தது. அந்த பெண் மைனர் அல்ல 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே என் மீதான போக்ஸோ வழக்கு விசாரணை நிலைநிற்காது. முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே என்மீதான விமர்சனங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேண்டும் என்றே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணாக, அம்மாவாக, போலீஸ் அதிகாரியான நான் ஒரு குழந்தைக்கோ, பெண்ணுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் நான் செயல்படமாட்டேன். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை, இனியும் செயல்படமாட்டேன். நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயர் வலைத்தளங்களில் இப்போதும் உள்ளன. எனது வீடியோ வெளியாகி ஏழு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என நினைக்கிறேன். போலீஸ் விசாரித்தால் இதில் போக்ஸோ பிரிவு நிலைநிற்காது என்பது தெரியவரும் என்றார்.
பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா மீது போக்சோ வழக்குப் பதிவு - பின்னணி என்ன?
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஓய்வுபெற்ற பிறகு பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீலேகா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோக்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாகக் குற்றம் சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட சிவில் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் சொசைட்டியின் செயலாளர் ஜெயச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீலேகா மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் கடந்த 26.02.2026 அன்று போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் பெண் டி.ஜி.பி மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு குறித்து ஸ்ரீலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில், முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் போலீஸில் பணியாற்றிய பெண் அதிகாரி நான். 2012-ம் ஆண்டு போக்ஸோ சட்டம் வந்த சமயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் மிக அதிகமாக செயல்பட்டிருந்தேன். நிர்பயா ஸ்கீம் வந்த சமயத்தில் அதன் நோடல் ஆப்பீசராக நான் இருந்தேன். போக்ஸோ வழக்கு எனது யு டியூப் சேனலில் நான் வெளியிட்ட வீடியோவில் கிளிரூர் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியதாக என் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பாலியல் வழக்கை எனது தலைமையிலான டீம் விசாரித்தது. அதில் அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது. கேரளா போலீஸ் விசாரித்தபின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எஃப்.ஐ.ஆரில் மைனர் என குறிப்பிட்டிருந்தோம். விசாரணையில் அந்த பெண் சிறுமி அல்ல என்பது தெரியவந்தது. 2002-ல் நடந்த வழக்கில் 2003-ம் ஆண்டு அந்த பெண் மரணமடைந்தார் என நினைக்கிறேன். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வயது இருபதை நெருங்கி இருந்தது. அந்த பெண் மைனர் அல்ல 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே என் மீதான போக்ஸோ வழக்கு விசாரணை நிலைநிற்காது. முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே என்மீதான விமர்சனங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேண்டும் என்றே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணாக, அம்மாவாக, போலீஸ் அதிகாரியான நான் ஒரு குழந்தைக்கோ, பெண்ணுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் நான் செயல்படமாட்டேன். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை, இனியும் செயல்படமாட்டேன். நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயர் வலைத்தளங்களில் இப்போதும் உள்ளன. எனது வீடியோ வெளியாகி ஏழு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என நினைக்கிறேன். போலீஸ் விசாரித்தால் இதில் போக்ஸோ பிரிவு நிலைநிற்காது என்பது தெரியவரும் என்றார்.
Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
Iran Vs Israel US அடுத்தடுத்து வெடித்த 2 WAR | வலிமைபெற்ற DMK கூட்டணி -வருத்தத்தில் உடன்பிறப்புகள்?
Iran Vs Israel US அடுத்தடுத்து வெடித்த 2 WAR | வலிமைபெற்ற DMK கூட்டணி -வருத்தத்தில் உடன்பிறப்புகள்?
ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு'மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?
இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன. இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன. ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர் மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் - மோடியின் சமீபத்திய பயணம். கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, 'நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்' அவருக்கு வழங்கப்பட்டது. மோடி - நெதன்யாகு மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் அதெல்லாம் சரி... இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு... மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர் விருது கூட பெற்றிருக்கிறார். இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது. மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு
'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு &கோ
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சோடங்கர் & செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக. காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 - 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர். காங்கிரஸ் குழு முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார். 'எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது' என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. 'பவர் ஷேரிங்' பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திமுக குழு 'தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்' என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் 'இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே...' என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர். காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்' என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர். முதல்வர் அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, 'அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு' என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார். வைகோ புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.
'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு &கோ
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சோடங்கர் & செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக. காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 - 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர். காங்கிரஸ் குழு முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார். 'எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது' என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. 'பவர் ஷேரிங்' பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திமுக குழு 'தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்' என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் 'இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே...' என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர். காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்' என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர். முதல்வர் அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, 'அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு' என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார். வைகோ புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.
'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு &கோ
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சோடங்கர் & செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக. காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 - 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர். காங்கிரஸ் குழு முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார். 'எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது' என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. 'பவர் ஷேரிங்' பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திமுக குழு 'தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்' என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் 'இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே...' என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர். காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்' என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர். முதல்வர் அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, 'அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு' என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார். வைகோ புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.
'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு &கோ
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சோடங்கர் & செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக. காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 - 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர். காங்கிரஸ் குழு முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார். 'எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது' என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. 'பவர் ஷேரிங்' பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திமுக குழு 'தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்' என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் 'இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே...' என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர். காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்' என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர். முதல்வர் அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, 'அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு' என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார். வைகோ புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.
அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப், ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருக்கிறோம். இஸ்ரேல் - ஈரான் பதட்டம் அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது. இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், அபுதாபி, கத்தாரைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் - ஈரான் பதட்டம் மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ஈரான். இந்தத் தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் மக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் போர் பதற்றம் காரணமாக கத்தார் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப், ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருக்கிறோம். இஸ்ரேல் - ஈரான் பதட்டம் அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது. இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், அபுதாபி, கத்தாரைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் - ஈரான் பதட்டம் மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ஈரான். இந்தத் தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் மக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் போர் பதற்றம் காரணமாக கத்தார் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.ம இடையே என்ன நடக்கிறதென விசாரித்தோம். அண்ணா அறிவாலயம் பிப்ரவரி 23-ம் தேதி இந்திய முஸ்லீம் லீக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. வருகின்ற மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தைக்கு வருவதாகவோ, அழைப்பு விடுக்கப்பட்டதாகவே எந்த தகவலும் இல்லை. நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், முதலில் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் செல்வதாக இருந்தோம். எத்தணை தொகுதிகள் கேட்பது, எந்தெந்த தொகுதிகள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெற முடியவில்லை. ஸ்டாலின், கமல்ஹாசன் அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் எனச் கட்சி மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதையும் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லிவிட்டார்கள் என்றனர். தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம், அதுகுறித்துப் பேசும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய மூவரும்தான் தொகுதி குறித்து பேசுவார்கள். அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட் கையெழுத்தானது. 2026 பொறுத்தவரையில் 6 சீட் கேட்கிறது ம.நீ.ம, தி.மு.க 3 தொகுதியிலேயே நிற்கிறது. அதிலொரு தெளிவு கிடைத்தபிறகுதான் தொகுதி பங்கீட்டுக்கு செல்ல இருக்கிறோம். கூடுதல் சீட்டுக்காக தனிச்சின்னத்தை விட்டுக்கொடுக்கவும் எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார் என்றனர் மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் இதுகுறித்து விளக்கம் கேட்க ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம் தி.மு.க-வுடன் மிகுந்த இணக்கமாக இருக்கிறார் எங்கள் தலைவர். எத்தணை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம் என்றார்.
அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.ம இடையே என்ன நடக்கிறதென விசாரித்தோம். அண்ணா அறிவாலயம் பிப்ரவரி 23-ம் தேதி இந்திய முஸ்லீம் லீக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. வருகின்ற மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தைக்கு வருவதாகவோ, அழைப்பு விடுக்கப்பட்டதாகவே எந்த தகவலும் இல்லை. நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், முதலில் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் செல்வதாக இருந்தோம். எத்தணை தொகுதிகள் கேட்பது, எந்தெந்த தொகுதிகள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெற முடியவில்லை. ஸ்டாலின், கமல்ஹாசன் அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் எனச் கட்சி மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதையும் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லிவிட்டார்கள் என்றனர். தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம், அதுகுறித்துப் பேசும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய மூவரும்தான் தொகுதி குறித்து பேசுவார்கள். அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட் கையெழுத்தானது. 2026 பொறுத்தவரையில் 6 சீட் கேட்கிறது ம.நீ.ம, தி.மு.க 3 தொகுதியிலேயே நிற்கிறது. அதிலொரு தெளிவு கிடைத்தபிறகுதான் தொகுதி பங்கீட்டுக்கு செல்ல இருக்கிறோம். கூடுதல் சீட்டுக்காக தனிச்சின்னத்தை விட்டுக்கொடுக்கவும் எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார் என்றனர் மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் இதுகுறித்து விளக்கம் கேட்க ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம் தி.மு.க-வுடன் மிகுந்த இணக்கமாக இருக்கிறார் எங்கள் தலைவர். எத்தணை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம் என்றார்.
ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது. ஆந்திரா - பட்டாசு விபத்து வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா - பட்டாசு விபத்து இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது. ஆந்திரா - பட்டாசு விபத்து வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா - பட்டாசு விபத்து இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது. ஆந்திரா - பட்டாசு விபத்து வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா - பட்டாசு விபத்து இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது. ஆந்திரா - பட்டாசு விபத்து வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா - பட்டாசு விபத்து இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

27 C