SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பா.ம.க கட்சி ராமதாஸ் - அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால் இரண்டாக பிளவுண்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்' என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க அணி எ.டி.ஏ கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளையும் பிரித்து வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். அதே போல, ராமதாஸ் தரப்பு பா.ம.க அணி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ராமதாஸ், சசிகலா இதற்கு முன்னரே ராமதாஸ் தரப்பு, ``கட்சியின் நிறுவனர் நான் என்ற ரீதியில் பா.ம.க-வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனக் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதையும் மீறி அன்புமணி தரப்பு கட்சியின் அடையாளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ``பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (நேற்று) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

விகடன் 26 Mar 2026 7:20 pm

``அடுத்த 60 நாள்களுக்கு... - இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியிருந்தார். அதனால், இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மோடி அதில், ``மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ளதால், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடைவெளியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கையிருப்புத் திறன் 74 நாள்களாக உள்ள நிலையில், தற்போது 60 நாள்களுக்குத் தேவையான உண்மையான இருப்பு கைவசம் உள்ளது. இதில் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நிலத்தடி குகைகளில் சேமிக்கப்பட்டுள்ள அவசர கால இருப்புக்களும் அடங்கும். இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருவதால், எரிபொருள் ஓட்டம் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை. காஸ் சிலிண்டர் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதே தவிர, அது உண்மையான தட்டுப்பாட்டால் ஏற்பட்டது அல்ல. உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது தினசரி தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான எல்பிஜி சரக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு என்பது தட்டுப்பாட்டுக்கான மாற்று அல்ல. அது தூய்மையான எரிசக்தியை நோக்கிய நீண்ட காலத் திட்டம். எனவே, இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பற்றாக்குறை குறித்துத் தவறான காணொளிகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலை வேண்டாம்; சிலிண்டர் இல்லாமலும் சமைக்க சில ஐடியாக்கள்!

விகடன் 26 Mar 2026 6:45 pm

எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள், அங்கீகாரம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பல கட்சிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. வேல்முருகன் - மு.க ஸ்டாலின் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோன்று புரட்சி பாரதம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளும் தங்களது முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை பல சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவுகிறது. இதனால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்காக புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும். நான் தான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவாகவிற்கு கட்டமைப்பு உள்ளது. வேல்முருகன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்குள் மற்ற அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும். விஜய் ஒரு பச்சைத்தமிழர். விஜய் அரசியலுக்கு வந்த போது, நான்தான் முதல் அரசியல்வாதியாக வரவேற்றேன். அதேபோல் விஜய் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்த தேர்தலில் தவெக உடன் தவாக கூட்டணி இல்லை. திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க எந்த முடிவையும் கூட எடுப்போம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 26 Mar 2026 6:23 pm

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வே லூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்பட ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி மட்டுமே அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற நால்வரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க-வின் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் மீண்டும் போட்டியிட ஆயத்தமாகி, பிரசாரக் களத்துக்கும் சென்றுவிட்டனர். `களம் எப்படி இருக்கிறது?’ என்பதை அவர்களின் தொகுதிகளில் இறங்கி அலசினோம். சிக்ஸர் அடிக்கும் அப்பு... டக்அவுட் ஆகும் கார்த்தி? வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்பு மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த அப்புவை, இந்த முறை தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் அட்ராசிட்டியே மேலேற்றிவிடும் என்கிறார்கள். `மாநகராட்சியைக் குட்டிச்சுவராக்கியது, கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வினருடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது’ என கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடந்த 19-ம் தேதி, தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் வழங்கியதாக கார்த்திகேயனின் ஆதரவாளரான மேயர் சுஜாதா உட்பட மூன்றுபேர் மீது சத்துவாச்சாரி போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார் இவையெல்லாம் தி.மு.க தலைமையின் கவனத்திற்குச் செல்லவே, 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின்போது, `வேலூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்துவிடலாமா?’ என்று ஸ்டாலின் கேட்டதற்கு, `சரிங்க, தலைவரே’ என்று கார்த்திகேயன் தலையாட்டிவிட்டு வந்ததுதான் உடன்பிறப்புகளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வேலூர் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. அதற்கு முன்புவரை இரண்டு கட்சிகளுமே மாறி மாறி கூட்டணிக்கே வேலூரைத் தாரைவார்த்தன. எனவே, `மீண்டும் அந்தவொரு சூழலை உருவாக்காமல், அ.தி.மு.க-வுடன் தி.மு.க நேரடியாக மோத வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் வேலூர் உடன்பிறப்புகள். தற்போதைய சூழலில், களம் எஸ்.ஆர்.கே.அப்புக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிறார்கள். வேலழகன் வெறுப்பு பிரசாரம்... நந்தகுமார் சாதுர்யம்! வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான த.வேலழகன் மீண்டும் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதமே தொகுதிக்குள் சோஷியல் மீடியா டீமை இறக்கி, சிட்டிங் எம்.எல்.ஏ-வான தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு எதிராக கடுமையான தனிமனித தாக்குதலையும், வெறுப்பு பிரசாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த நந்தகுமாரே மூன்றாவது முறையாகவும் களமிறங்குகிறார். தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேடைக்கு மேடை பேசி, தனக்கெதிரான வெறுப்பு பிரசாரத்துக்கும் பதிலடி தந்துகொண்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் நந்தகுமாருக்குச் சாதகமாகவே இருக்கிறது. பல்டி அடித்த சுகுமார்... படுஅப்செட்டில் பாட்டாளிகள்! ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.எம்.சுகுமார், கடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்ட செயலாளர் காந்தியோடு மோதி 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது அமைச்சர் பலத்துடன் வலம் வரும் காந்தி, மீண்டும் ராணிப்பேட்டையில் களமிறங்குவது உறுதி என்பதால், தொகுதியை த.மா.கா-வுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, பக்கத்துத் தொகுதியான ஆற்காடுக்குத் தாவியிருக்கிறார் சுகுமார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ராணிப்பேட்டை தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட த.மா.கா முடிவு செய்திருப்பதால், தி.மு.க-வுக்கே களம் சாதகமாக அமைந்திருக்கிறது. கடந்த முறை ஆற்காடு தொகுதியில் 19,958 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த பா.ம.க., மீண்டும் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்க, சுகுமாரின் திடீர் வரவால் படுஅப்செட்டில் இருக்கிறார்கள். பாட்டாளிகளின் அதிருப்தியும், விளாப்பாக்கம், கலவை, திமிரி பேரூராட்சிகள் மற்றும் ஆற்காடு நகர்ப் பகுதிகளில் வாழும் அகமுடைய முதலியார், செங்குந்த முதலியார் பிரிவினரிடையே போதிய வரவேற்பு இல்லாததும் சுகுமாருக்கு பின்னடைவாகத் தெரிகிறது. தி.மு.க-வில் மாவட்ட பொருளாளரும் தொழிலதிபருமான ஏ.வி.சாரதி களமிறக்கப்பட்டால், சுகுமாரின் நிலை பரிதாபமாகிவிடும் என்பதே தற்போதைய கள நிலவரம். சு.ரவி, கே.சி.வீரமணி மகிழ்ச்சியில் சு.ரவி... ஷாக் கொடுக்கும் தி.மு.க! அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றிபெற்று தக்கவைத்துக்கொண்டிருக்கும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான சு.ரவி, மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வின் கௌதம சன்னாவைவிட 27,169 வாக்குகள் அதிகமாகப் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் சு.ரவிக்கு `ஷாக்’ தரும் வகையில், தி.மு.க-வில் நெமிலி ஒன்றியச் சேர்மன் பெ.வடிவேலுவின் மனைவி பவானி உட்பட 48 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அவர்களிடம் ஸ்டாலினும் நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். இந்த முறை கூட்டணிக் கட்சிகள் கேட்காததால், தி.மு.க-வே நேரடியாக களமிறங்க முடிவு செய்துவிட்டது. உதயசூரியன் சின்னத்தில் உள்ளூர் வேட்பாளர் களமிறங்கும் பட்சத்தில், சு.ரவி ஆட்டம் கண்டுவிடுவார் என்பதே கள நிலவரம். வீரமணிக்கு வெற்றி முகம்... தெறித்து ஓடும் தேவராஜி! அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி நான்காவது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். கடந்த தேர்தலின்போது தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜியிடம் வெறும் 1091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை, வீரமணி வைட்டமின்களை அள்ளி இறைத்து தொகுதிக்குள் தனக்கான ஆதரவு அலையை உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால் வாணியம்பாடி தொகுதிக்கு மாற விருப்பப்பட்ட தேவராஜியிடம் `ஜோலார்பேட்டையில் போய் வேலையைப் பார்’ என்று தி.மு.க தலைமை `குட்டு’ வைத்து அனுப்பியதால், பின்னங்கால் பிடரியில் அடிக்க தொகுதிப் பக்கம் ஓடிச்சென்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் வீரமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.!

விகடன் 26 Mar 2026 6:16 pm

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ் பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி. ஹோர்மூஸ் நீரிணை வரைபடம் ஈரானும் - அமெரிக்காவும் ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன. இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்? அமெரிக்காவின் நிபந்தனை! இந்தப் போரை நிறுத்த... இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்...' என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது. அதில் 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா - ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்' என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால் ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது. ஈரான் போர்: கச்சா எண்ணெய் ஹார்முஸ் சுங்கச்சாவடி! இதற்கிடையில்தான் 'லாய்ட்ஸ்லிஸ்ட்' (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக 'சுங்கச்சாவடி' (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது. மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு 'நடைமுறை சுங்கச்சாவடி' முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் 'யுவான்' (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் சின்ஹா இந்தியாவின் நிலைபாடு என்ன? இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், 'இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை' என மறுத்துள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது. மொஜ்தபா கமேனி புதிய கட்டணத் திட்டம்! ஈரான் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன. அதில், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது எனக் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் 'நியாயமான வசூல்' - ஈரான்! இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும். எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது. ஒருவேளை சுங்கச்சாவடி அமைந்தால்..? ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் 'பொருளாதாரக் கழுத்துப்பகுதி' போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை பொதுமக்களுக்கான சிக்கல்... கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது. ஹார்முஸ் சட்ட ரீதியான சிக்கல்... சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை 'ஆபத்தான பகுதி' (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும். ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும். ஆதிக்கச் சிக்கல்... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும். தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் 'யுவான்' கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும். ஈரான் போர் சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும். இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்! ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

விகடன் 26 Mar 2026 6:16 pm

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவட்ட கள நிலவரம்.! 1. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தங்கள் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக, சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழ்நாட்டின் முக்கிய மையங்களில் ஒன்றாக பெரம்பலூர் உள்ளது. அதோடு மக்காச்சோளம், பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. prabhakaran இதனுடன், மலைப்பாங்கான பகுதிகள் பல இருப்பதால் கல் குவாரிகளும் பெரும்பான்மையாக செயல்பட்டு மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்கிறது. இந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், உடையார், முத்தரையர், வன்னியர்,  கவுண்டர்கள், ரெட்டியார், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எ ன்று  வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் அடுத்தடுத்து பல சமூகத்தினர் உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதையை சட்டமன்ற உறுப்பினராக பிரபாகரன் இருந்து வருகிறார். மறுபடியும் அவர் சீட் கேட்கிறார். பெரிய அதிருப்தி இல்லை என்றாலும், இந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளியான ஆ.ராசா, வேறு நபரை வேட்பாளராக்க போகிறார் என்று ஆரம்பத்தில் பேச்சு அடிப்பட்டது. perambalur ஆனால், பிரபாகரனை மறுபடியும் வேட்பாளராக்க அவர் ஆசி வழங்கிவிட்டதாக சொல்கிறார்கள். இவரை தவிர, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் ஜெயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ-வும், பெரம்பலுர் ஒன்றிய செயலாளருமான ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் தங்க.கமல் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் முந்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க வில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட பொருளாளருமான பூவை செழியன், முன்னாள் துணை சபாநாயகரும், கழக அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி ஆகியோர் சீட் பெறும் பட்டியலில் முதன்மையில் இருக்கிறார்கள். thamizhselvan நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியையான ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் ஆளாக தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். த.வெ.க-வில் பெரம்பலூர் தொகுதி மாவட்ட செயலாளர் சிவா தான் வேட்பாளர் என்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள், கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்ட காரணிகளால் இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்கவே வாய்ப்பு அதிகம். 2. குன்னம் சட்டமன்ற தொகுதி: தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 - ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக குன்னம் பரிமளித்து வருகிறது. இந்த தொகுதியில், வன்னியர்கள், பட்டியலின மக்கள், உடையார், ​ரெட்டியார்கள், ​முத்தரையர், யாதவர், பிள்ளைமார், செட்டியார் மற்றும் இஸ்லாமியர்கள் என்று பல சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். kunnam விவசாயமே பிரதான தொழிலாக உள்ள தொகுதி என்பதால், பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் செந்துறை வட்டாரப் பகுதிகளில் பருத்தி, முந்திரி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், சுண்ணாம்பு கல் குவாரிகளும், சிமெண்ட் தொழிற்சாலைகளும் இந்த தொகுதி மக்களுக்கு பொருளாதார ஆதாரமாக உள்ளன. இந்த தொகுதி எம்.எல்.ஏ-வாக கடந்த 2011 - 2016 - க்கு பிறகு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். மறுபடியும் இவருக்குத்தான் சீட் என்கிறார்கள். அவர், தொகுதியில் அதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். ss sivasangar அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க இந்த தொகுதியை கேட்டு வந்த நிலையில், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துதான் வேட்பாளர். ஆனால், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரை தவிர பலமான இரண்டாம் கட்ட மாநில நிர்வாகிகள் இல்லாதது மைனஸ். முழுக்க முழுக்க கூட்டணி கட்சியை நம்பி வேலை செய்ய வேண்டிய நிலை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலோ அல்லது அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் முழு வீச்சில் இறங்கி வேலை பார்த்தாலோ மட்டுமே ஐ.ஜே.கே வேட்பாளரால் தி.மு.க வேட்பாளருக்கு டஃப் கொடுக்க முடியும் . நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கீர்த்திவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். keerthivasan ஊருக்கு முன்பாக முதல் ஆளாக வாக்குகள் சேகரித்து வருகிறார். த.வெ.க சார்பில் ரேவதி முத்தமிழ்செல்வன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். களத்தின் பல்வேறு கூறுகளை ஆராயும்போது தற்போதைய சூழலில் உதயசூரியனே பிரகாசிக்கிறது.

விகடன் 26 Mar 2026 6:09 pm

முட்டி மோதும் நிர்வாகிகள்; நண்பரைக் களமிறக்கும் விஜய் டு சீமானுக்கு ஜோதிடரின் அறிவுரை! | கழுகார்

அறுபடை வீட்டில் ஆரம்பித்த சீமான்! ஜோதிடரின் அறிவுரை... தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிவிட்டுதான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இம்முறை, அறுபடை வீட்டிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என கறாராகச் சொல்லிவிட்டாராம் சீமான். அதன்படி, கடந்த மார்ச் 23-ம் காலை கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். அதன்பிறகு, திருத்தணி முருகன் கோவிலில் செருப்பின்றி படியேறி பிரார்த்தனையும் மேற்கொண்டார். மாலை பிரசாரத்தின்போதும் வேட்பாளரை வேலுடன் நிற்க வைத்து முருகர் பாடலை பாடி மகிழ்ந்தார். 'கட்சியின் கொள்கைப்படி விநாயகர் வழிபாடு முரணானது. சீமான் அதுமட்டுமில்லாமல் பிரசாரத்தைத் தொடங்கும் தினத்தன்று உருகி உருகி வழிபாடு செய்ய வேண்டியது ஏன்...' என்று கட்சிக்குள் பலரும் முணுமுணுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் 'ஜோதிடர்' ஒருவர் இருக்கிறாராம். அவர் பேச்சைக் கேட்டுதான் சீமான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம். 'இன்னும் ஜோதிடர் பேச்சைக் கேட்டு என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ...' எனக் கையைப் பிசைகிறார்கள் தம்பிகள். நண்பரைக் களமிறக்கும் விஜய்! முட்டி மோதும் நிர்வாகிகள்... த.வெ.க-வின் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து, அக்கட்சியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் கட்சியில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவந்தார். ஆனால், கட்சியில் தனக்குப் பொறுப்பு வழங்காததால், பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்ததுடன், மனமுடைந்து தூக்க மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அஜிதா ஆக்னல் அந்த பரபரப்புக்கு இடையே, எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜூவுக்கு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கி, அஜிதாவுக்கு 'ஷாக்' கொடுத்தது த.வெ.க தலைமை. 'கட்சிப்பதவிதான் கைவிட்டுப் போய்விட்டது. தூத்துக்குடி தொகுதியையாவது பெற்றுவிடலாம்...' என்று அஜிதாவும், 'சீட்டை பெற்றே ஆக வேண்டும்' என்று சாமுவேல் ராஜூம் ஆளுக்கொரு வழியில் சீட்டுக்காக காய் நகர்த்தினர். ஆனால், 'பிரச்னை எதற்கு?' என, தன் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடியில் களமிறக்கத் தயாராகிறாராம் த.வெ.க தலைவர் விஜய். அதனால், சீட்டை எதிர்பார்த்திருந்த இரண்டு கோஷ்டிகளுமே கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். குமுறலில் காங்கிரஸ்! குளச்சலைக் கேட்கும் தி.மு.க... கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், தலா மூன்றில் திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலில் போட்டியிட்டன. அதில், தலைநகர் தொகுதியான நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் தி.மு.க தோற்றது. ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றது. எனவே, வரும் தேர்தலில் நாகர்கோவிலை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, வெற்றிவாய்ப்புள்ள குளச்சல் தொகுதியை எடுத்துக் கொள்ள முனைப்புக் காட்டுகிறதாம் திமுக. தகவல் தெரிந்து குமுறும் கதர்கள், 'கஷ்டப்பட்டு வேலைபார்த்து வச்சிருக்க தொகுதியை திமுகவுக்கு கொடுத்துட்டு நாங்க எங்கே போறது...' என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம். மிஸ்டர் கழுகு: லிஸ்ட் ரெடி! - மர்மம் காக்கும் ஸ்டாலின்... கிறுகிறுக்கும் சீனியர்கள்! குழப்பத்தில் ஆதவ் அர்ஜுனா பிரசாரத்துக்கு வருவாரா? தவெக பொதுச்செயலாளர்களின் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கத்தில் களமிறங்கவுள்ளார். அதற்கான தேர்தல் பணிகளையும் தொகுதியில் தொடங்கிவிட்டார். த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடவுள்ள பெரம்பூர் தொகுதிக்கு அருகிலேயே வில்லிவாக்கம் அமைந்திருப்பதால், விஜய்யின் தாக்கம் தனது தொகுதியிலும் பிரதிபலிக்கும் என்பது ஆதவ்வின் கணக்கு. இந்தச்சூழலில், ஆதவ்வை தோற்கடிப்பதற்கான திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் அமைச்சர் சேகர்பாபு, தனது சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், வில்லிவாக்கத்தில்தான் முதல் தேர்தல் பணிமனையை திறந்திருக்கிறாராம். TVK ஆதவ் அர்ஜுனா ஆதவ்வுக்கு எதிராக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை களமிறக்குவது குறித்தும் திமுக-வில் ஆலோசிக்கப்படுகிறது. அந்தப் போட்டியை சரிக்கட்ட, விஜய்யை தனது தொகுதிக்குள் இரண்டு நாள்களாவது பிரசாரத்துக்கு அழைத்துவரும் திட்டத்தில் இருக்கிறார் ஆதவ். ஆனால், 'வில்லிவாக்கத்தில் குறுகலான சாலைகளும் சந்துகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அதற்குள் விஜய்யை அழைத்துவந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும்' என்று தடுக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். இதனால், 'பிரசாரத்துக்கு விஜய் வருவாரா... மாட்டாரா...' என்று குழம்பிப் போய் தவிக்கிறாராம் ஆதவ். அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு? வருத்தத்தில் துரை வைகோ! வேற வழியென்ன இருக்கு? தி.மு.க கூட்டணியில், ம.தி.மு.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது அக்கட்சி. ஒரு தொகுதியில் மட்டும் தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கவுள்ளது. இதில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் எம்.பி-யுமான துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லையாம். கட்சி சீனியர்களிடம் பேசும்போது, 'ம.நீ.ம தைரியமான ஒரு முடிவை எடுத்துட்டாங்க. துரை வைகோ அதுபோல, நம்மால எடுக்க முடியாது. நானும் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அறிவாலயம் இறங்கி வரலை. நமக்கு வேற வழியென்ன இருக்கு...' என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவருடைய வருத்தத்தைத்தான், கட்சியின் அவைத்தலைவரான அர்ஜுன ராஜ், 'தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்பினோம். அது முடியவில்லை என்பதால், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்' என்று அறிவாலய வாசலில் வைத்தே பேட்டியில் உடைத்துவிட்டாராம். ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

விகடன் 26 Mar 2026 4:23 pm

TVK: '5 பாயின்ட்டுகள்... 47 கி.மீ., பயணம்!' - சென்னையில் விஜய்யின் பிரசார திட்டம் என்ன?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் முதல் சென்னையிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். விஜய்யின் பிரசார திட்டம் என்ன? TVK Vijay சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருந்தார். 234 வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் விஜய் போட்டியிடுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். இதற்காக தவெகவின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோட்டையன் விஜய்யின் பிரசார திட்டத்தோடு நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்திருந்தார். நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் MKB நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார். TVK Vijay அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேசவிருக்கிறார். தவெக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் 47 கி.மீ தூரத்துக்கு பயணித்து விஜய் பேசவிருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் 3000 முதல் 5000 பேர் வரைக்கும் கூடுவார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பெரம்பூரில் விஜய், கொளத்தூரில் வி.எஸ்.பாபு, வில்லிவாக்கத்தில் ஆதவ், அண்ணாநகரில் ராம் குமார், விருகம்பாக்கத்தில் சபரி ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.

விகடன் 26 Mar 2026 4:05 pm

நாமக்கல்: `பட்டியல் மற்றும் பிற சமூக குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள்!'- அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இதைக் கண்டித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

விகடன் 26 Mar 2026 3:57 pm

இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி - ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் நான்காவது முறையாகக் களமிறங்குகிறார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று அமைச்சராக அதிகாரத்திலேயே தொடர்ந்த வீரமணி, 2021 தேர்தலின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜிடம் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், சோர்வடையாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லது, கெட்டது என தொகுதி மக்களிடம் நெருக்கம் காட்டி வந்தார் வீரமணி. இதனால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அவருக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. தி.மு.க-வில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத பட்சத்தில், தொகுதிக்குள் முதல் சுற்று பிரசாரத்தை முடித்துவிட்டு, இரண்டாம் சுற்று பிரசாரத்துக்கே தயாராகிவிட்டார் வீரமணி. இதனால், ஜோலார்பேட்டையில் வீரமணி மீண்டும் ஜொலிப்பதற்கான சூழலே பிரதிபலிக்கிறது. கே.சி.வீரமணி கே.சி.வீரமணியின் பின்னணி! வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அப்பா, பெரியப்பா இருவரும் பெரியாரின் தீவிரப் பற்றாளர்கள். தமிழகத்துக்கு வந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவருடன் வீரமணியின் தங்கை தன்மானம் என்கிற சுதாவுக்கு காதல் மலர்ந்தது. காதலனைக் கரம்பிடித்து லண்டனுக்குப் பறந்துவிட்டார் தன்மானம். வீரமணியின் பெரியப்பா தங்கவேலின் மகன்வழிப் பேரன்தான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலை ஆன பேரறிவாளன். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியதால் அ.தி.மு.க-வின் விசுவாசிகளாக மாறினர் வீரமணி குடும்பத்தார். 1994-ல் அ.தி.மு.க-வில் இணைந்த வீரமணிக்கு ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. அதன்பின் ஏற்றம்தான். 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் ஆனார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணியை நியமித்தார். அன்று முதல் இன்று வரை மாவட்டச் செயலாளராக தொடர்கிறார் வீரமணி. கே.சி.வீரமணி மாவட்டச் செயலாளர் போன்ற இன்னுமொரு எதிர்பாராத வாய்ப்புதான் அவரை அமைச்சர் ஆக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வேலூர் எம்.எல்.ஏ விஜய்மீது புகார்கள் குவியவே, அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. மேல்மட்ட சிபாரிசால், வீரமணிக்கு அந்த வாய்ப்பு வந்தது. சில மாதங்களில் சுகாதாரத் துறைக்குப் பதிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2021 தேர்தல் அவருக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், 2026 தேர்தலில் மிகத் தெம்பாக களம் காண்கிறார் கே.சி.வீரமணி.

விகடன் 26 Mar 2026 3:42 pm

தவெக: 234 வேட்பாளர்களையும் இறுதி செய்த விஜய்; நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நாளை நடத்தவிருக்கின்றனர். TVK Vijay | விஜய் தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களைக் கடந்த மார்ச் 10 ஆம் தேதி விஜய் உறுதி செய்திருந்தார். வேட்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து கூறி அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டாம் கட்டமாக 50 வேட்பாளர்களை உறுதி செய்து அவர்களையும் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். 'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' - ஆதவ் அர்ஜூனா உறுதி செய்யப்பட்ட இந்த 110 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி கடந்த சில நாள்களாக தவெகவின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் நடந்திருந்தது. இதே அலுவலகத்தில்தான் என். ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, வியூக வகுப்பாளர் ஜான் ஆகியோர் எஞ்சிய 124 வேட்பாளர்களை உறுதி செய்யும் பணியிலும் இறங்கியிருந்தனர். இன்று அதிகாலை வரைக்கும் மிக திவீரமாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் நடந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று பனையூரில் விஜய்யைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்து கூறி அவரவர் தொகுதிக்கான மொத்த டேட்டாவையும் ஒரு புத்தகமாக விஜய் வழங்கவிருக்கிறார். TVK - Vijay நாளையே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நடத்த தவெக தரப்பு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான இடமும் அனுமதியும் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுவதால், இடத்தை இறுதி செய்ய பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் தரப்பு. கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

விகடன் 26 Mar 2026 3:21 pm

அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என நேற்று பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரத்தையும் பார்த்து விடலாமா? ADMK ஒரே சிட்டிங்கில் ஓவர்! 'பாஜக 80 சீட் கேக்குறாங்களாம்' எனத் தொடங்கி, பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு ஓடுறார், அங்க‌ எழுதிக் கொடுக்கிறதை இங்க வாசிக்கிறார், பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான் நாளை இவருக்கு... என்றெல்லாம் ஏகப்பட்ட கேலி கிண்டல்களை அதிமுகவை நோக்கியும் எடப்பாடி பழனிசாமியை நோக்கியும் வீசினார்கள் எதிரணியினர். ஒரே செய்தியாளர் சந்திப்பில் அனைத்து முக்கியக் கட்சிகளுடனான உடன்படிக்கையையும் இறுதி செய்து அறிவித்து விட்டார் அவர். கூடவே ஜெயலலிதா ஸ்டைலில் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியையும் முதல் கட்சியாக வெளியிட்டு விட்டது அஇஅதிமுக. வழக்கமாக நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒட்டியே இந்தத் தேர்தலையும் எதிர் கொள்கிறது இரட்டை இலை. 'காங்கிரஸை தவெக இழுக்கப் போகிறது' என்கிற பேச்சு எப்படி திமுக கூட்டணியைச் சலசலப்புக்கு உள்ளாக்கியதோ அதேபோல, 'தவெக தே.ஜ.கூ. பக்கம் வருகிறது, விஜய் துணை முதல்வர், எனவே அதிமுகவின் முக்கியத்துவம் குறைந்து விடும்' என்பன போன்ற பேச்சுகள் இந்தப் பக்கமும் பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், 'எதற்குக் கேட்டார்களெனத் தெரியவில்லை, திடீரென நிர்வாகிகளைக் கூப்பிட்டு கூட்டணிக்குப் போகலாமா' என்கிற ஒரு கேள்வியைக் கேட்டது தவெக. ஆனால், 'கூட்டணிக்குத் தலைமை வகிப்பது அதிமுக, நாங்கள் யாரிடமும் பேசவில்லை' என ஒரே பதிலில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட 7 தொகுதிகள் கூடுதல்தான். காங்கிரஸில் மாணிக் தாகூர், வேலுசாமி ஆகியோர் எழுப்பிய கலகக்குரல்கள் போல் பாஜக தரப்பிலிருந்து ஆட்சியில் பங்கு போன்ற எந்தக் குரல்களும் எழும்பாததற்கு இந்தக் கூடுதல் எண்ணிக்கை காரணமாக இருக்கலாம். பாஜக, அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேருடனும் மனக்கசப்பு இல்லாதபடி கூட்டணியை அமைத்து விட்டதை அதிமுகவின் பிளஸ் எனச் சொல்லலாம். மைனஸ் எனப் பார்த்தால் கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி! மோடி - அமித்ஷா சீட் ஓ.கே. ஆனா? எதைத் தின்னா பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் தமிழ்நாட்டில் வெல்லலாம் எனத் தொலைநோக்குத் திட்டம் போட்டு வேலை செய்து வருகிற பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட ஏழு தொகுதிகள் கூடுதலாகக் கிடைத்த வகையில் லாபம்தான். அதேநேரம் பழனிசாமியை ஹேண்டில் செய்வது அல்லது வழிக்குக் கொண்டு வருவது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கே சிரமமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தை நாட்கள். 'நாங்க நாலு பேரு பேசிட்டிருக்கோம். அமித் ஷா சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் சம்மதிக்க மாட்டேங்கிறார் பழனிசாமி. எழுந்து போயிட்டார் அமித் ஷா' எனப் பிரஸ் மீட்டில் பன்னீர் நொந்து போய் பேசியது நினைவிருக்கலாம். எனவே, 'நாம நிக்கிற இடங்களில் ஜெயிக்கப் பாருங்க, மத்ததைப் பிறகு பார்க்கலாம்' என இப்போதைக்கு அந்த வேலையில் இறங்கி விட்டதாகச் சொல்கிறார்கள் பாஜக காரிய கர்த்தாக்கள். கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்? Anbumani ramadoss அந்த ஒரு சீட்டையும் கூட்டிக்கோங்க! உட்கட்சியில் பூசல் உச்சத்தில் போய்க் கோண்டிருக்கிற நிலையில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதையே, 'பாட்டாளி மக்கள் கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என உலகத்துக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு என எடுத்துக் கொண்டார் போல அன்புமணி. எனவேதான், 'கடந்த தேர்தலை விட இந்த முறை குறைவான சீட்டுகள் ஏன்' என தெரிந்து கொண்டே வாயைப் பிடுங்கிய செய்தியாளர்களிடம், 'ஆமாங்க ஒரு ராஜ்ய சபா சீட் தந்திருக்காங்களே, அது எத்தனை எம்.எல்.ஏ சீட்டுக்குச் சமம் தெரியுமா' எனக் கொஞ்சம் கடுப்புடனயே பதில் தந்தார். சின்னம், அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் எந்த நேரத்தில் என்ன வழக்கு வருமெனத் தெரியாத சூழலே நிலவி வருவதால், இந்த நேரத்தில் 'தொகுதி குறையா இருக்கு' என்று பேசவெல்லாம் தயாராக இல்லை அவர். தினகரன் குக்குருக்குத் தாராளம்.. யாருக்கு செக்? திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு லக் என்றால் இந்தப் பக்கம் அமமுகவுக்கு அந்த அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'என்னது டி.டி.விக்கு 11 சீட்டா' என அதிமுகவில் சிலரே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்களாம். கடந்த தேர்தலில் அவர் பிரித்த ஒட்டுகளை மனதில் வைத்தும் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகள் சசிகலா, பன்னீர் உள்ளிட்டோர் பக்கம் சென்று விடாதபடி தடுக்கவுமே தாராளம் காட்டியிருக்கிறாராம் பழனிசாமி. இந்தக் கட்சிகள் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5, ஜான் பாண்டியனுக்கு 1 பூவை ஜெகன் மூர்த்திக்கு 1 ஆகிய சீட்டுகள் வழக்கமான கோட்டா என்றுதான் சொல்ல வேண்டும். கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

விகடன் 26 Mar 2026 3:12 pm

`தாலிக்கு தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அறுக்கிறார்கள்' - சீமான் ஆவேசம்

`தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் ஊத்தங்கரையில் நடந்த நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர்களான மேகலா (ஊத்தங்கரை தனி), கவின் (பர்கூர்), சுகந்தி (கிருஷ்ணகிரி, நாகராஜ் (வேப்பனஹள்ளி), ஸ்டாலின் (ஓசூர்), நரசிம்மன் (தளி) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய சீமான், சாதி, மதம், திரைக் கவர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய அரசியல், ஆட்சி நிர்வாகம் என்பது இலவசம் கொடுப்பவையாக உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் வருவதில்லை. நாம் முன்னெடுக்கும் அரசியலுக்கும் தி.மு.க முன்னெடுத்து வந்த அரசியலுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. புதிய கோட்பாட்டை கொண்டுவரும்போது எதிர்ப்பார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சாராயப் பொருளாதாரத்தில் இருப்பவர்கள், நாம் பசுமை தற்சார்பு பொருளாதாரத்தில் இருப்போம். மனிதர்களின் உயிர்த்தேவையே உணவுதான். அதை அடிப்படையாக வைத்து கட்டமைப்பதுதான் நிலையான பொருளாதாரமாக இருக்கும். சீமான் இந்தியாவிலேயே அதிகப்படியான விதவைகள் உள்ள மாநிலம் தமிழகம். தமிழக இளைஞர்களை மது, கஞ்சா போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என வாக்களித்த மக்கள் அனைவரும் போராடி போராடித்தான் எதையும் பெற வேண்டுமா? தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது? இந்த போராட்டங்களை மக்களிடம் திணித்தது யார்? இது கொடுமை இல்லையா? பிள்ளையின் பசியறிந்து பால் கொடுக்கும் ஒரு தாயைப் போல மக்களின் தேவையறிந்து நிறைவேற்றுபவன்தான் உண்மையான தலைவன். மாறி மாறி ஆட்சி அமைத்தவர்கள் யாரேனும் சாராயக் கடைகளை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்களா? தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அவர்களே அறுக்கிறார்கள். அப்படி தாலி அறுக்கிற கூட்டத்துக்குத்தான் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரத்தை கொடுக்கிறார்கள். இன்று குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு குற்றச் சமூகமாக இந்த நாடு மாறி வருகிறது. யார் இந்த மண்ணை பேரன்பு கொண்டு காதலிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். அதனால்தான் நாங்கள் எத்தனை முறை தோற்றாலும் அவர்களுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்கிறோம். தோல்வி என்பது வெற்றியின் தாய், வெற்றியை துரத்திக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் யாருடைய அரசியல் இந்த நாட்டுக்கு தேவை என்பதை முடிவு செய்யுங்கள். ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் தருவோம், மூவாயிரம் தருவோம், மிக்சி, கிரைண்டர், சிலிண்டர் தருவதாகக் கூறுகிறீர்கள், உங்கள் பரம்பரை சொத்தை விற்றா கொடுக்கிறீர்கள்? இந்த பணம் எங்கிருந்து எடுக்கப்படுகிறது? இதற்கு பதில் யாரிடம் உள்ளது? இலவசம் கொடுப்பதுதான் நல்ல நிர்வாகமா? நல்ல ஆட்சி முறையா? நாட்டின் பட்ஜெட் மூன்று லட்சம் கோடி, இதில் வட்டி மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய். கடன் வாங்கியவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒரு வீடே நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையில் ஒரு நாடு எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இதை அறிவார்ந்த சமுதாயம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். மலை வளத்தை அழிப்பது, ஆற்று மணல் அள்ளுவது தமிழகத்தில் பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போது ஆற்றில் போதிய மணல் கிடைக்காததால் மலையை வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். மரம் வெட்டினால் வேறு மரம் வைத்து விடலாம், மலையை வெட்டினால் வேறு மலையை வைக்க முடியுமா? திருப்பரங்குன்றம் மலைக்கு போராடுகிறவர்கள், அருகில் அழிகின்ற மலைக்கு கவலைப்படுவதில்லை. அன்றைய காலத்தில் பசிக்கு வேட்டையாடினார்கள், இன்று பண வேட்டையாடுகிறார்கள்... வருகின்ற தேர்தலில் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

விகடன் 26 Mar 2026 3:02 pm

அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை - ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டின் போது, ``வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்'' என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ட்ரம்ப் அதைத் தொடர்ந்து வடகொரியா டஜன் கணக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்து சோதனைகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் புதிய போர்க்கப்பல் மற்றும் அணுசக்தி ராக்கெட்டுகளைச் சோதித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளம் வயது மகள் கிம் ஜூ ஏ-வை பொதுவெளியில் முன்னிறுத்தி, இந்த அணுசக்தித் திட்டம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் என்பதை உலகிற்குத் தெரிவித்தார். மறுபுறம், ரஷ்யாவுடனான உறவை வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தி வருகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக பீரங்கிக் குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து உணவு, எரிபொருள் மற்றும் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பங்களை வடகொரியா பெற்று வருகிறது. இது அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிராக ஒரு வலுவான அமெரிக்க எதிர்ப்பு உருவாகி வருவதைக் காட்டுகிறது என உலக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் உச்ச மக்கள் பேரவையில் உரையாற்றினார். அப்போது, ஈரானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய கிம் ஜாங் உன், ``அமெரிக்க நிர்வாகம், அரசு ஆதரவு பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடுகிறது. கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களையும், அவர்களின் பேச்சுக்களையும் வடகொரியா நிராகரித்தது மிகச் சரியானது என்பது தற்போதைய உலகச் சூழலில் தெளிவாகியிருக்கிறது. அணு ஆயுதம் இல்லாத நாடுகள் அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு எளிதில் இலக்காகின்றன என்ற எனது நீண்டகால நம்பிக்கையை, ஈரான் மீதான தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது விரோத கொள்கையைக் கைவிட்டு, வடகொரியாவை ஒரு அணுசக்தி நாடாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இனி பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சாத்தியமாகலாம், ஆனால் அணு ஆயுதங்களைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 2019-ல் முறிந்துபோன பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலத்தைப் போல 'அணு ஆயுத ஒழிப்பு' குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

விகடன் 25 Mar 2026 9:18 pm

அழுத்தம் கொடுக்கும் வானதி சீனிவாசன்; அப்செட் அண்ணாமலை; கோவை வடக்கு தொகுதிக்கு உச்சகட்ட போட்டி

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை இங்குதான் பிரச்னை வெடித்துள்ளது. கோவை பாஜகவின் முகமாக முன்பு வானதி சீனிவாசன் இருந்தார். அண்ணாமலை வந்த பிறகு கோவையில் கோலோச்சுவது யார் என்று அவர்களிடையே பனிப்போர் வெடித்தது. கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியைக் குறிவைத்து அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவரும் காய் நகர்த்தினார்கள். பாஜக தலைமை அண்ணாமலையை டிக் செய்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக வானதி தன் சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்குக் குட்பை சொல்லிவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். வானதி சீனிவாசன் பாஜக, அதிமுக இரண்டு தலைமைகளிலும் பேசி வடக்கு தொகுதியை ரிசர்வ் செய்து வைத்துள்ளார். அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கோவையில் வடக்கு தொகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதைக் கைப்பற்ற இருவருக்கும் மியூஸிகல் சேர் போட்டி நடந்து வருகிறது. அண்ணாமலை பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ மற்றும் கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றி வருவதால், வடக்கு தொகுதி தனக்குதான் என்று வானதி உறுதியாக உள்ளார். அங்கு ஏற்கெனவே வடவள்ளி, கணபதி, சாய்பாபாகாலனி என்று பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து வானதி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி! தனக்கு சீட்டை உறுதி செய்ய டெல்லி மேலிடம் மூலம் வானதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். மறுபக்கம் அண்ணாமலையோ, “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டேன். அதற்குட்பட்ட கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிக வாக்குகள் கிடைத்தன. வானதி சீனிவாசன், அண்ணாமலை எனவே தனக்குதான் சீட் வழங்க வேண்டும்” என்று அண்ணாமலை கேட்கிறார். இதில் பாஜக தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதனால் அண்ணாமலை அப்செட்டாகியுள்ளார். சென்னையில் நேற்று பியூஷ் கோயலைச் சந்தித்தபோது தன் வருத்தத்தைப் பதிவு செய்த அண்ணாமலை செய்தியாளர்களிடம், “நான் யாரிடமும் சீட் கேட்கவில்லை’' என்று கூறி சென்றார். இன்னும் ஒரு படி மேலே சென்று தனக்கு சீட்டே வேண்டாம் என்று டெல்லிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அண்ணாமலை இந்த அரசியல் டெல்லியில் மட்டுமல்லாமல் கோவை களத்தையும் கொதிக்க வைத்துள்ளது.  கோவை பாஜகவினர், “அண்ணாவா.. அக்காவா.. யார் முக்கியம்” என்று சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

விகடன் 25 Mar 2026 8:49 pm

கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இரண்டு முக்கியக் கட்சிகளூம் தேர்தல் கூட்டணிகளை ஒரு வழியாக இறுதி செய்து விட்டன. இந்த இரு அணிகள் தவிர நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தனித்துக் களம் காண்கின்றன. இவர்களில் சீமானுக்கு ஆரம்பத்திலிருந்தே கூட்டணி என்கிற வார்த்தை ஒவ்வாமைதான். ஆனால் விஜய் கூட்டணி காண விரும்பினார். காங்கிரஸை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் செல்லவில்லை. எனவே பிந்தைய இந்த இருவரையும் விட்டு விடலாம். கூட்டணி அமைத்த இருபெரும் கட்சிகளில் யார் லாபம் அடைந்தது? யார் யாருக்கு ஏமாற்றம் பார்க்கலாமா? முதலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கலவரத்தைப் பார்க்கலாம் திமுக கூட்டணி கட்சிகள் தோள் கொடுத்தோருக்கு துயர் ! ’ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ என ஹெச்,ராஜா சொன்னது வைரலானது. இதிலிருந்தே தங்கள் தளபதியின் ஆளுமையைப் புரிந்துகொள்ளலாம் எனக் காலர் தூக்கி விட்டனர் உடன்பிறப்புகள். ஆனால் கூட்டணி விஷயத்தில் ஸ்டாலினின் நடவடிக்கைகள் ராஜதந்திரமானவையாக, புத்திசாலித்தனமானவையாக இருந்ததா என்றால் உடன்பிறப்புகளே கூட சட்டென ஆமெனச் சொல்லத் தயங்குகின்றனர். ‘இருந்த கூட்டணி உடையாம பார்த்துகிட்டது மட்டுமில்லாம புதுசா பலரையும் சேர்த்திருக்கிறாரே’ என்கிற ஒரே விஷயம்தான் அவர்களுக்கு ஆறுதல் தரவல்லதாக இருக்கிறது. நலத்திட்டங்கள் நிறையச் செய்திருக்கிறோம் எனச் சொல்கிறார். அதிமுக பலவீனமாக இருப்பதாக மேடைக்கு மேடை பேசுகிறார். அப்படியிருக்க எதற்கு கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்? இந்த இடத்தில்தான் ’ஸ்டாலினுக்குப் பயம் வந்து விட்டது’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். எதிர்க்கட்சிகளை விடுங்கள், ஐந்தாண்டுகள் திமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் தவிர வேறு எவருக்காவது கூட்டணி அமைந்த விதத்தில் மன நிறைவா என்றால் இல்லை என்பதே நிஜம். காங்கிரஸ் கட்சியை தவெக பக்கம் போக விடாமல் செய்ததை சாதனையாக நினைக்கிறார் முதல்வர். ஆனால் இரண்டு கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், வைகோ ’சீட்டே வேண்டாம்ங்க’ என ஒதுங்கிய கமல் என அத்தனை பேருமே கூட்டணி அமைந்த விஷயத்தில் அவ்வளவு ஆற்றாமைக்கு உள்ளாகியிருக்கின்றனர். காரணம், நேற்று வரை பாஜக பக்கமிருந்த கடைசியாக எதிர்கொண்ட தேர்தலில் அரை சதவிகித  வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவைக் கூப்பிட்டு பத்து தொகுதிகள் தந்தது, ஒ. பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் என முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களை இழுத்தது போன்ற திமுகவின் செயல்பாடுகள்தான். பன்னீர் அண்ட் கோ-வாவது திமுகவில் ஐக்கியமாகி விட்டதால் அவர்களால் பாதிக்கபப்டுவது சம்பந்தப்பட்ட பகுதிகளின் உள்ளூர் திமுகவினர்தான். ஆனால் தேமுதிக மட்டும் வராமல் இருந்திருந்தால் மேலே சொன்ன இவர்கள் அத்தனை பேருக்கும் கேட்ட சீட்டுகள் நிச்சயம் கிடைத்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உள்ளுக்குள் புழுக்கத்துடன் இந்தத் தலைவர்கள் இப்போது சரி சொல்லி விட்டார்கள். ஆனால் இவர்களின் தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். சில ஆயிரம் ஓட்டுகளையாவது எதிர்ப்பக்கம் போகவிடாமல் தடுக்க தேமுதிக, பன்னீர் அண்ட் கோ உதவுவாரகள் என ஸ்டாலின் நினைத்திருக்கக் கூடும். எது எப்படியோ கட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பெரியதொரு கூட்டணியை உருவாக்கி இருப்பது ஒன்றே திமுக பக்கம் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட். பழைய பங்காளிகள் அத்தனை பேரையும் வருத்தப்பட வைத்து விட்டது மைனஸ். செல்வப்பெருந்தகை மூணு சீட்டுக்காகவா பனையூர் ரூட்டு? காங்கிரஸ் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை 28 ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று சீட்டுகள் கூடுதலாக வேண்டுமென ராகுலோ சோனியாவோ நேரடியாக ஸ்டாலினிடமே கேட்டிருந்தால் அவரே கொடுத்திருப்ப்பார். ஏனெனில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் தேமுதிக வரவே இல்லை. ஆனால் அப்படிச் செய்யாமல் மாணிக் தாகூர் வகையாறா ஆட்களை இறக்கி விட்டு பனையூர் போறோம் எனச் சலசலப்பைக் கிளப்பி, பாவம் விஜய்யையும் ஏமாற்றி, ’இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா’ எனக் காங்கிரஸ் கட்சியைப் பார்த்துதான் கேட்கத் தோணுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளிலேயே சந்தோஷமடைந்த ஒரே பார்ட்டி இதுதான். உடன்பிறப்புகள்தான் காங்கிரஸ் உடனான உடன்படிக்கை கையெழுத்தான அன்று ஸ்டாலின் கையை மேலே தூக்கி காட்டி முடித்து விட்டதைப் போல் சொன்னதைப் பெருமையாகப் பேசித் திரிகின்றனர். காங்கிரஸ் கட்சியில் சிலர் இப்படியும் சொல்கிறார்கள். 'தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்தபடியா அதிக எம்.பி.க்களை வச்சிருக்கிற கட்சி. எங்களுக்கு ஸ்டாலின் ஆதரவு ரொம்ப முக்கியம், ஆனாலும் அவர்க்கிட்டயே மூணு சீட் அதிகமா வாங்கிட்டோம்னா எங்க கெத்தை புரிஞ்சுக்கோங்க' மிஸ்டர் கழுகு: லிஸ்ட் ரெடி! - மர்மம் காக்கும் ஸ்டாலின்... கிறுகிறுக்கும் சீனியர்கள்! திமுக - தேமுதிக திண்ணையில் கிடந்த கட்சி! ’திண்ணையில கிடந்தவனுக்குத் திடுக்னு வந்ததாம் கல்ய்யாணம்’ என்பார்கள் கிராமங்களில். தேமுதிகவுக்கு இது இப்போது ரொம்பவே பொருந்திப் போகிறது. விஜய்காந்த் மறைவுக்குப் பிறகு கட்சியே காலாவதி ஆகி விட்ட நிலைதான். வாக்கு சதவிகிதம் அதலபாதாளத்துக்குப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது. ஆனாலும் தேர்தல் வந்து விட்டால், ‘’என்னை மாயவரத்துல கேட்டாக மன்னார்குடியில கேட்டாக என ஒரு சினிமா பாட்டு வருமே அந்தக் கதையாக எங்களைக் கூப்பிடாமல் யாரும் இங்கே அரசியல் செய்ய முடியாது எனச் சொல்வார் பிரேமலதா. கடந்த பத்தாண்டுகளாக சட்டப்பேரவையில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சீட்டுகளின் எண்னிக்கையை அவர் தாறுமாறாகக் கேட்பதாக செய்திகள் வெளியாகின. இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிரேமலதாவை பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. ஸ்டாலினோ அள்ளித் தந்திருக்கிறார். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்களே. டார்ச் சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும் - கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்கும் திருமா தொல் திருமாவளவன் சீற்றத்தைத் தொலைத்த சிறுத்தை! வி.சி.க.வுக்குக் கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட இரண்டு சீட்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரு சீட்டை வாங்குவதற்குள் அவ்வளவு வெதும்பி விட்டார் திருமாவளவன். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் தலித் சமூகத்தினர் பிரச்னைகளைச் சந்தித்த போதெல்லாம் திமுகவை உரத்த குரலில் எதிர்க்க முடியாமல் ஏற்கெனவே நொந்து போய் இருந்தவருக்கு கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் திருப்தியாக இல்லை. கடைசியில் இரட்டை இலக்கத்தில் சீட் எனத் தீர்மானம் போட்ட பிறகே கூடுதலா இரண்டைக் கொடுத்து ஃபைனல் செய்ய முன்வந்தது திமுக. திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி எப்போதுமே இடது கை டீலிங்தானா? இடதுசாரி கட்சிகளின் மேடைக்குச் சென்றால் தன்னுடைய பெயர் கூட கம்யூனிச தலைவர் பெயர் தான் என்பார் ஸ்டாலின். ஆனால் இடது சாரிக் கட்சிகளை திமுக எப்போதுமே இடது கையால் டீலிங் செய்கிறதோ என்கிற எண்ணம் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலருக்கும் இருக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் ஒரே எண்ணிக்கையில்தான் சீட். ஆனால் கடந்த தேர்தல் முதல் செலவுக்கு பணமும் தரப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இந்த முறை வந்தவரைப் போதுமென நினைத்தது என்றார்கள். ஆனால் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடைசி வரை முறுக்கிக் கொண்டு நின்றது. இறுதியில் இரு கட்சிகளுக்கும் தலா ஐந்து சீட்டுகள் கிடைத்திருக்கின்றன. கடந்த முறை கிடைத்ததை விட ஒரு சீட் குறைவாக வாங்கியதில் இரு தோழர்களுக்குமே வருத்தம்தானாம். 'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை? பொள்ளாச்சியா... நாமக்கல்லா? - களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆளுக்கு ரெண்டு! மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா இரண்டு சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் வழக்கமான கோட்டாவின் கீழ் வருகிறவர்கள் என்பதால் லாப நஷ்டம் பார்க்கத் தேவையில்லை. வைகோ உரிமையை மீட்க ஒண்ணே ஒண்ணு! திமுக கூட்டணியில் வைகோவின் நிலைதான் படு மோசம். நான்கு சீட் எனச் சொல்லி அதில் மூன்று பேரை உதயசூரியனில் நிற்கச் சொல்லி விட்டார்கள். ஒருவர் மட்டும் தனிச் சின்னத்தில் நின்று கட்சியின் அங்கீகாரத்தைப் பெறப் போகிறார்களாம். ஒரு சீட் தனிச் சின்னத்தில் நிற்க அனுமதி வாங்கவே பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருந்தது கலிங்கப்பட்டி காளை எனவும் கலைஞரின் போர்வாள் எனவும் புகழப்பட்ட வைகோவால். கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்? பிரதமரைச் சந்தித்த கமல் வட்டத்துக்கு வெளியில் மய்யம்! மய்யம் என்றால் வட்டத்தின் நடுப் பகுதியைக் குறிக்கும். ஆனால் தேர்தல் ஆட்டம் என்ற வட்டத்தை விட்டு அவராகவே வெளியேற வைத்து விட்டார்கள் கமலஹாசனை. ’இந்தத் தடவை வேடிக்கை மட்டும் பார்க்கிறேன், அதுல எனக்கொண்ணும் வருத்தமில்ல’ எனச் சொன்னாலும் கூடவே, ‘எங்களுக்குச் சொன்ன நம்பரும் திருப்தி இல்ல, உதயசூரியன்ல நிக்கச் சொன்னதும் ரசிக்கும்படி இல்ல’ எனப் பொதுவெளியில் போட்டுடைத்து விட்டார். எனவே 2026 தேர்தல் கூட்டணி ம.நீ.ம தொண்டர்களுக்குமே கசப்பான அனுபவம்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிலவரம் நாளை.. ` 13 திமுக அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள்' - எடப்பாடியின் அடடே மூவ்!

விகடன் 25 Mar 2026 7:37 pm

`ஒரு டீ விலை 5 ரூபாய் இருக்கும்போது 50,000 லிமிட்னு சொன்னாங்க.! இன்னைக்குமா?' - விக்கிரமராஜா

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் மக்களுக்குப் பண விநியோகம் நடப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது தேர்தல் ஆணையம். ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் எவர் எடுத்துச் சென்றாலும், அந்தப் பணம் வந்ததற்கான அல்லது செல்வதற்கான உரிய ஆதார ஆவணங்கள் இல்லையென்றால் பணத்தைப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்குப் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐம்பதாயிரம் என்ற இந்த உச்ச வரம்பு சென்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் கொண்டுவரப்பட்டது. இப்போது வரை அதே தொகைதான் உச்ச வரம்பாக இருக்கிறது. விக்கிரமராஜா? இன்று வியாபாரம் செய்யும் ஒரு சிறு வியாபாரி இந்தத் தொகைக்கு மேல் சாதாரணமாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. அந்த வியாபாரியிடம் போய் ரசீது கொடு, அல்லது பணத்தைக் கொடு என்று கேட்பது எவ்விதத்தில் நியாயம்? என்று குமுறுகின்றனர் வியாபாரிகள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ஐம்பதாயிரம் ரூபாய் என்று தீர்மானித்தபோது ஒரு டீயின் விலை 5 ரூபாய். இன்றைக்கு நான்கு மடங்கு கூடியிருக்கிறது. இதைச் சொல்லித்தான் உச்ச வரம்பை குறைந்தபட்சம் ஒரு லட்சமாவது உயர்த்துங்கள் என்று தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னாடியே தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு கொடுத்தோம். இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறோம், அங்கிருந்து பதில் வந்ததும் அறிவிக்கிறோம் என்று சொன்னார்கள். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் வியாபாரிகள் படும் பாடு மாறவே இல்லை. இரண்டு நாள் முன்னாடி வள்ளியூர் பக்கம் ஆடு அறுத்துத் தர வந்தவர்களிடம் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். உடனே உள்ளூர் ஆட்கள் திரண்டு, நாங்கள் கொடுத்த பணம் அது என்று சொல்லி போராட்டம் நடத்துவோம் என்று சொன்னதும் விட்டுப் போய்விட்டார்கள். சின்னச் சின்ன வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்களையெல்லாம் மடக்கி பணம் இருக்கிறதா என்று கேட்கிறார்களே, இவர்களா ஓட்டுக்குப் பணம் தருவதற்கு கொண்டுபோகிறார்கள்? பறக்கும் படை தேர்தல் நடத்துகிற அதிகாரிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ள மறுக்கிறார்கள். வியாபாரிகள் காய்கறி வாங்க கோயம்பேடு வந்தால் மார்க்கெட்டுக்கு எதிரில் நின்று சோதனை போடுகிறார்கள். டாஸ்மாக் பக்கத்தில் போய் நின்றுகொண்டு குடித்திருக்கிறாயா என்று கேப்பார்களே, அதே நடைமுறையைத்தான் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கணக்கு காட்ட வேண்டும் என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் போகின்ற வருகின்ற அப்பாவி வியாபாரிகளைப் பிடித்து அவர்கள் வயிற்றில் ஏன் அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி, பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் தேர்தலுக்குப் பிறகு யாரிடமிருந்து பறிமுதல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பக் கிடைத்துவிடுகிறதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. கடந்த கால தேர்தல்களின்போது இப்படிக் கைப்பற்றிய பணத்திற்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. கலெக்டர் ஆபீஸ் சென்றால் ஆர்டிஓவைப் பார்க்கச் சொல்கிறார்கள், அங்கே சென்றால் தாசில்தாரைப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று அலைக்கழிக்கிறார்கள். இதையெல்லாம் கண்டித்துத்தான் 31-ம் தேதி போராட்டம் நடத்தலாம் என்று அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் போராட்டம் செய்தே ஆகவேண்டும் என்கிற மனநிலையில்தான் வியாபாரிகள் இருக்கிறார்கள். என்கிறார் இவர்.! இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

விகடன் 25 Mar 2026 6:15 pm

தளபதிக்கு உதயநிதி; எனக்கு கதிரவன் - மகனுக்காக களமிறங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மகனுக்கு மகுடம்.! தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தன் மகன் கதிரவனுக்கு எப்படியாவது மகுடம் சூட்டிவிட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் காய்நகர்த்தி வருகிறார். 2021 தேர்தலின்போதே கதிரவனுக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்குமாறு கேட்டார் அமைச்சர். ஆனால் அதற்கு `நோ’ சொல்லிவிட்ட அறிவாலயம், அதன் பிறகு கதிரவனுக்கு கடலூர் மாவட்டப் பொருளாளர் பதவியை வழங்கியது. அதில் ஆறுதலடைந்த அமைச்சர், மகனை முன்னிறுத்தி சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு சிதம்பரம் தொகுதியைத் தவிர்த்துவிட்டு, புவனகிரி தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ``அப்பாவைவிட அதிகமாகச் செய்வேன்..!’’ அதன் தொடர்ச்சியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, ``தளபதிக்கு உதயநிதியைப் போல எனக்குக் கதிரவன். அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று தழுதழுத்திருக்கிறார். அத்துடன் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் எடுத்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தந்தது, தன் மகனுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார் பன்னீர்செல்வம். இந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த கதிரவன், ``அப்பா செய்ததைவிட அதிகமாகச் செய்வேன். தொகுதிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்’’ என்று அழுத்தமாகக் கூறிவருகிறார். ``முதல்வர் அப்படிச் செய்ய மாட்டார்’’ இதற்கிடையே அமைச்சர் தரப்பின் நடவடிக்கை, புவனகிரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ துரை கி.சரவணன் தரப்பை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. ‘`கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருவதால், இந்த முறை எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்த நிலையில், `அமைச்சர் மகன்’ என்ற அதிகாரத்துடன் திடீரென தொகுதிக்குள் நுழைந்தால், எங்கள் எதிர்காலம் என்னாவது... முதல்வர் ஸ்டாலின் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்’’ என்று குமுறுகின்றனர் சரவணனின் ஆதரவாளர்கள். கதிரவன் அதேநேரம், ‘‘எதிரணி வேட்பாளரான அ.தி.மு.க-வின் அருண்மொழித்தேவன் போன்ற ஒரு நபரை வீழ்த்த வேண்டுமென்றால் கட்சிக் கட்டமைப்புடன், பொருளாதார பலமும் வேண்டும். அந்த வகையில் இளைஞரான கதிரவன்தான் தகுதியானவர்’’ என்று முட்டுக்கொடுக்கிறது அமைச்சர் எம்.ஆர்.கே தரப்பு. இந்த விவகாரம் குறித்து எம்.ஆர்.கே.பி.கதிரவனிடம் கேட்டபோது, ``தி.மு.க தொண்டன் என்ற முறையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறேன். அது தவிர மற்றவர்களின் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார். அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது - உதயநிதி தாக்கு

விகடன் 25 Mar 2026 5:57 pm

'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது.!' - பாஜகவிடம் கட்சியை அடகு வைத்த ஜி.கே.வாசன்?

என்.டி.ஏ கூட்டணியில் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டிருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். பாஜகவை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளாத உண்மையான காங்கிரஸ்காரர் மூப்பனார். அவரின் மகன் கட்சியை மொத்தமாக பாஜகவிடம் அடிய பணிய வைத்து தாமரை சின்னத்திலேயே போட்டி என்றும் அறிவித்திருப்பதை பார்த்து, 'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்குமா..' என கொந்தளிக்கின்றனர் மூப்பனார் விசுவாசிகள். ஜி.கே.வாசன் 1991 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியோடு இணைந்து சந்தித்தது காங்கிரஸ். ராஜிவ் காந்தியின் இறப்பால் உருவான அனுதாப அலையில் அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அந்த 5 ஆண்டுகால ஜெ.வின் ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. எதேச்சதிகார போக்கால் மக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது அதிருப்தி ஏற்பட்டது. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி செல்லக்கூடாது என மூப்பனார் நினைக்கிறார். ஆனால், அகில இந்திய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்புகிறது. அந்த சமயத்தில்தான் காங்கிரஸை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார் மூப்பனார். ரஜினியின் ஆதரவுடன் திமுகவுடன் கூட்டணி வைத்து 40 இடங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமாகா 39 இடங்களில் பெரு வெற்றிப் பெற்றது. ஜி.கே.வாசன் 1999 சமயத்தில் திமுக மத்தியில் பாஜக கூட்டணியோடு இணைகிறது. காங்கிரஸூக்கு நேரெதிராக நிற்கும் வலதுசாரி சக்தியோடு திமுக சேர்ந்ததில் மூப்பனாருக்கு உடன்பாடில்லை. உடனடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கிறார். மூப்பனாருக்கு படுதோல்வி. 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே மூப்பனாருக்கு வலைவிரித்தன. ஆனால், எக்காரணம் கொண்டும் பாஜகவை ஆதரிக்கக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு செல்லாமல், அதிமுகவை டிக் அடித்தார் மூப்பனார். இதுசம்பந்தமாக பேசும் மூப்பனார் விசுவாசிகள் சிலர், 'அதிமுகவை எதிர்த்துதான் மூப்பனார் தமாகா கட்சியையே தொடங்கினார். ஆனால், மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டுமென வரும்போது எந்த சமரசமும் செய்யாமல் ஈகோ பார்க்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் மூப்பனார். எந்த காலத்திலும் அவர் வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாக நின்றதே இல்லை. மூப்பனாரின் நெருங்கிய நண்பர் ரஜினி. திமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் அவரே கொஞ்சம் வருந்தினார். ஆனால், தனிப்பட்ட நட்பும் தனக்கு கிடைக்கும் சுயலாபங்கள் எதையும் மனதில் வைக்காமல் மூப்பனார் பாஜகவுக்கு எதிராக நின்றார். மூப்பனார் இன்று அவரின் மகன் பாஜகவின் தாமரை சின்னத்தில் 5 தொகுதிகளை வாங்கிவிட்டு எந்த உறுத்தலும் இன்றி தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இன்னமும் கட்சியை கொண்டு பாஜகவில் இணைக்கவில்லை, அவ்வளவுதான். மற்றபடி வலதுசாரி சக்திகளுடன் அத்தனை நெருக்கமாக இருக்கிறார். மூப்பனாரின் ஆன்மா வாசனை ஒரு போதும் மன்னிக்காது' என்கின்றனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

விகடன் 25 Mar 2026 5:47 pm

` 13 திமுக அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள்' - எடப்பாடியின் அடடே மூவ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தி.மு.க அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில், செல்வாக்குமிக்க 13 அமைச்சர்களின் தொகுதிகள் மற்றும் சபாநாயகரின் தொகுதி என மொத்தம் 14 இடங்களை அ.தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளித்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் இம்முறை பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான அமைச்சர்களின் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை கோட்டையில் பா.ஜ.க களம் காண்கிறது. பா.ஜ.க தொகுதிகள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் நாசர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் தொகுதிகளான ஆவடி, திருப்பத்தூர் தொகுதிகளும் பா.ஜ.க வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவுவை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பையும் பா.ஜ.க-வுக்கு தான் கொடுத்துள்ளது அதிமுக. இதுதவிர அமைச்சர்கள் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி, மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க-வுக்கு சென்னை மற்றும் டெல்டாவின் முக்கிய இடங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி) ஆகியோரை எதிர்த்து அ.ம.மு.க வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர். ஜி.கே. வாசனின் தமாகா-வுக்கு, அமைச்சர்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முத்துசாமி (ஈரோடு மேற்கு) மற்றும் ஆர். காந்தி (ராணிப்பேட்டை) ஆகியோரின் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் 5 தொகுதிகளில் தமாகா 3 தொகுதிகளில் அமைச்சர்களை சந்திக்கும் நிலையில் உள்ளது. நயினார் நாகேந்திரன் - டிடிவி தினகரன் பா.ம.க-வுக்கு சேலம் வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அமைச்சர் ராஜேந்திரனை எதிர்த்து பா.ம.க தனது பலத்தைக் காட்டவுள்ளது. ஐ.ஜே.கே-வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதி கிடைத்துள்ளது. இங்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில் ஐ.ஜே.கே-வுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. பொதுவாக கடந்த கால தேர்தல் வரலாறுகளில் அமைச்சர்களின் தொகுதிகளில் அ.தி.மு.க-வே நேரடியாகப் போட்டியிட விரும்பும். ஆனால், இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தொகுதி ஒதுக்கீடில் கவனம் பெற்றிருக்கிறது. `என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 5:19 pm

டார்ச் சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும் - கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்கும் திருமா

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்கு வங்கி வலிமைதான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களைப் பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் 'கருத்தியல் வலிமை' ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது. கமல்ஹாசன் தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன. புதுச்சேரி: திமுக வேட்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் காங்கிரஸ்; கூட்டணிப் புகைச்சலின் பின்னணி என்ன? கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும். கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது. ஸ்டாலின், கமல்ஹாசன் கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும். தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. 'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை? தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும். கமல்ஹாசன் இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

விகடன் 25 Mar 2026 4:05 pm

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரத்தில் தி.மு.க-வின் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், பிரின்ஸ் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் போட்டியிட்டது. கிள்ளியூர் தொகுதியில் த.மா.க போட்டியிட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி கிள்ளியூர் தொகுதி ஏற்கெனவே த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவிர்த்து மீதமுள்ள 5 தொகுதிகளிலும் தாமரைச் சின்னம் போட்டியிட உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க போட்டியிட உள்ளது. இந்த முறை அ.தி.மு.க அதிக தொகுதிகளை குமரி மாவட்டத்தில் பெற வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறி வந்தனர். அதன்படி குளச்சல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பச்சைமால் காய் நகர்த்தி வந்தார். பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயசுதர்சன் போட்டியிடும் விதமாகப் பணி செய்துவந்தார். ஆனால் கன்னியாகுமரி தொகுதி மட்டுமே அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டாக்டர் நிவின் சைமன் கன்னியாகுமரி அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க சார்பில் நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி அல்லது மீனா தேவ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. கிள்ளியூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப்பின் மகன் டாக்டர் நிவின் சைமன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. குளச்சல் தொகுதியில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கோபகுமார் அல்லது சிவகுமார் போட்டியிட வாய்ப்பு உள்ளது. பத்மநபபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது பாவானி எட்வின் ஜோஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் உள்ளிட்டோரில் ஒருவருக்கு சீட் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. `என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 3:38 pm

`என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பா.ம.க-வுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரன் தலைமையிலான அ.மு.மு.க-வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் த.ம.மு.க கட்சிக்கு 1 இடமும், திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 3:08 pm

`என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பா.ம.க-வுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரன் தலைமையிலான அ.மு.மு.க-வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் த.ம.மு.க கட்சிக்கு 1 இடமும், திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 3:08 pm

`` `இந்த'தேவைக்கு `இதனுடன்'ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம்! - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026-ஐ வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி தேர்தல் ஆணயம் அறிவித்த உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அர்ச்சனா பட்நாயக் தேர்தல் காலங்களில் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், வியாபாரிகள், மருத்துவ செலவுக்காகக் கொண்டு செல்லும் நோயாளிகள் போன்றோர் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக செய்திகள் வெளியானது. எனவே, பல்வேறு தரப்பினரும் ரூ.50,000 மேல் பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்,``பொதுமக்கள் மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 மேல் பணம் எடுத்து சென்றால், அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம். மேலும், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்கிறோம். சோதனையின்போது, பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சனா பட்நாயக் பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் வாக்கு பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. சமூக வலைதலங்களில் வெறுப்பு பேச்சு, பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்க சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறோம். எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்! - யார் இவர்?

விகடன் 25 Mar 2026 1:42 pm

வைரமுத்துவுக்கு விருது? நியாயமில்லையா?

வைரமுத்துவுக்கு விருது? நியாயமில்லையா?

சமயம் 25 Mar 2026 1:42 pm

ரஜினி ரசிகர்கள் ஓட்டு...திட்டம் போடும் கட்சிகள்!

ரஜினி ரசிகர்கள் ஓட்டு...திட்டம் போடும் கட்சிகள்!

சமயம் 25 Mar 2026 1:36 pm

ஆதவ் பேச்சுக்கு ரஜினி ரியாக்‌ஷன்- அரசியல் என்ன?

ஆதவ் பேச்சுக்கு ரஜினி ரியாக்‌ஷன்- அரசியல் என்ன?

சமயம் 25 Mar 2026 1:33 pm

தேர்தல் வந்தாலே ரஜினி மேல பாசம் வந்துடுமோ

தேர்தல் வந்தாலே ரஜினி மேல பாசம் வந்துடுமோ

சமயம் 25 Mar 2026 1:30 pm

ரஜினி செல்வாக்கு தெரியாம பேசக்கூடாது! எச்சரித்த ரஜினி ஆதரவாளர்

ரஜினி செல்வாக்கு தெரியாம பேசக்கூடாது! எச்சரித்த ரஜினி ஆதரவாளர்

சமயம் 25 Mar 2026 1:27 pm

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

சமயம் 25 Mar 2026 1:24 pm

தலைநகரில் தாராளம் காட்டும் எடப்பாடி...இது தான் வியூகமா?

தலைநகரில் தாராளம் காட்டும் எடப்பாடி...இது தான் வியூகமா?

சமயம் 25 Mar 2026 1:21 pm

சைதாப்பேட்டை முதல் காரைக்குடி வரை; அமமுக போட்டியிடும் உத்தேச தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 11 தொகுதிகள், அங்கு போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. `அதிமுக-வை மீட்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில்,தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. 165 தொகுதிகளில் போட்டியிட்டு, 2.35 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரனே வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்தநிலையில், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவி தினகரனுக்கு, 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்த உத்தேச தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், சென்னையில் சைதாப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, மதுரையில் மதுரை மத்தி, தஞ்சாவூரில் ஒரு தொகுதி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், திருப்பத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ என்.ஜி.பார்த்திபன் அல்லது ஞானசேகரன், காரைக்குடியில் தேர்போகி பாண்டி, பெரியகுளத்தில் கதிர்காமு, நாங்குநேரியில் இசக்கிமுத்து, மன்னார்குடியில் எஸ்.காமராஜ், திருச்சி மேற்கில் தொட்டியம் ராஜசேகர், மதுரை மத்தியில் டேவிட் அண்ணாதுரை,தஞ்சாவூரில் ரெங்கசாமி அல்லது கார்த்திகேயன், ஒட்டபிடாரத்தில் சுந்தர்ராஜ், பூந்தமல்லியில் ஏழுமலை போட்டியிடுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தவிர, முதுகுளத்தூர், அரூர், திருவையாறு உள்ளிட்ட தொகுதிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

விகடன் 25 Mar 2026 1:20 pm

எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது விசிக? - பொதுத் தொகுதிகள் பெறுவதில் குழப்பம்!

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 8 தொகுதிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக பொதுத் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் பெரும் குழப்பம் நீடிப்பதாக சொல்கிறார்கள். திருமாவளவன் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள். 2021-ல் 4 தனித் தொகுதிகளும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் இம்முறை கூடுதலாக இரண்டு தனித் தொகுதிகள் என 6 தனித் தொகுதிகளை வி.சி.க பெறவுள்ளது. அதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் மாவட்டம் வானூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஆகிய நான்கு தொகுதிகளை உறுதியாக பெறுகிறது வி.சி.க. இதுபோக பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூர், பூந்தமல்லி, புவனகிரி, அரூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் இரண்டு தொகுதிகளையும் தேர்வு செய்யவுள்ளனராம். நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆனால் எந்தெந்த பொதுத் தொகுதிகளை பெறப் போகிறோம் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிறது என்றனர். வி.சி.க போட்டியிடும் பொதுத் தொகுதிகள் குறித்து விவரப்புள்ளிகளிடம் விசாரித்தோம். 2021-ல் திருப்போரூர், நாகை என இரண்டு தொகுதிகளை பெற்று வெற்றியும் பெற்றது கட்சி. நாகையில் ஆளூர் ஷாநவாஸும், திருப்போரூரில் எஸ்.எஸ் பாலாஜியும் வென்றனர். ஆளூர் ஷாநவாஸ் ஆனால் இந்த தேர்தலில் திருப்போரூர் தொகுதியை மீண்டும் தர திமு.க தயாராக இல்லை. அங்கே பா.ம.க களமிறங்கும் நிலையில் தி.மு.க சார்பில் இதயவர்மன் களமிறங்க வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார். திருப்போரூரை திரும்ப கொடுத்துவிடுங்கள் என வி.சி.க தலைமையிடமும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற முனைப்பு காட்டுகிறது. மேலும் தி.மு.க நாகை மாவட்டச் செயலாளர் கெளதமன் அமைச்சர் அன்பில் மகேஷ் வாயிலாக முயல்கிறார், தமிமுன் அன்சாரிக்கு தி.மு.க கூட்டணியில் தொகுதி கிடைத்தால் அவரும் நாகையை கேட்பார். ஆகையால் வி.சி.கவுக்கு நாகை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. விசிக திருமாவளவன் ஆகவே வி.சி.க விரும்பும் திருப்போருர், நாகை கைவிட்டுப் போனால் ராயபுரம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சோழிங்கநல்லூர் ஆகியவற்றில் இரண்டை தேர்வு செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆனால் வி.சி.க-வின் விருப்பம் என்பது நாகை, திருப்போரூரை திரும்பப் பெறுவதுதான் என்றனர். புதுமுகங்கள் Vs சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்! - யாருக்கு சீட்... முடிவெடுத்த திருமா!

விகடன் 25 Mar 2026 1:16 pm

தலைவரின் SIGNAL இது! Maturity இல்லாத ரசிகர்கள்

தலைவரின் SIGNAL இது! Maturity இல்லாத ரசிகர்கள்

சமயம் 25 Mar 2026 1:13 pm

அரசியலில் பெண்களின் நிலை! இதற்க்கு என்ன காரணம்?

அரசியலில் பெண்களின் நிலை! இதற்க்கு என்ன காரணம்?

சமயம் 25 Mar 2026 1:11 pm

எப்போதும் பெண்களை இழிவுபடுத்துவது ஏன்_-Stop disrespecting women

எப்போதும் பெண்களை இழிவுபடுத்துவது ஏன்_-Stop disrespecting women

சமயம் 25 Mar 2026 1:05 pm

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பா.ம.க போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த உத்தேச தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பா.ம.க-வின் அரசியல் பயணத்தில் 2016 தேர்தல் தவிர்த்து, 2001 முதல் தற்போது கூட்டணியில் அங்கம் வகித்துதான் தேர்தலைச் சந்தித்து வருகிறது. 2001 -ல் 20 இடங்களில் வெற்றி, 2006 -ல் 18 இடங்களில் வெற்றி, 2011 -ல் 3 இடங்களில் வெற்றி, 2021 தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் அந்தக் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தனியாக ஒரு அணி செயல்பட்டு வருவதால் இந்தமுறை 5 இடங்கள் குறைக்கப்பட்டு, 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த, 18 இடங்கள் எவை என்பது குறித்து உத்தேச தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, திருப்போரூர், உத்திரமேரூர், போளூர், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், இராதாபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் இந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், சேலம் மேற்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சேலம் வடக்கில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தர்மபுரியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிபட்டியில் சௌமியா அன்புமணி அல்லது அரசாங்கம், சோளிங்கரில் வழக்கறிஞர் பாலு, அம்பத்தூரில் கே.என்.சேகர், கும்மிடிப்பூண்டியில் பிரகாஷ், திருப்போரூரில் சௌமியா அன்புமணி, செஞ்சியில் இளைஞரணித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கணேஷ்குமார், விக்கிரவாண்டியில் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், விருத்தாச்சலத்தில் மருத்துவர் தமிழரசி, காட்டுமன்னார்கோவிலில் வடிவேல் இராவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமி, ஜெயங்கொண்டத்தில் வைத்தி, இராதாபுரத்தில் பொருளாளர் திலகபாமா அல்லது மகளிர் அணி நிர்வாகி வழக்கறிஞர் ஷகீலா போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. `ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி! கடந்தமுறை பா.ம.க போட்டியிட்டு வெற்றிபெற்ற மைலம் தொகுதியில், இந்தமுறை அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். அதனால், விக்கிரவாண்டி தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. அந்த வகையில், மைலத்தில் வெற்றிபெற்ற சிவக்குமார், இந்த முறை விக்கிரவாண்டியில் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, மேட்டூர் தொகுதியும் இந்தமுறை அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது. அதனால், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் சேலம் வடக்கில் களமிறங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சேலம் மேற்கில் கடந்தமுறை வெற்றிபெற்ற அருள், தற்போது ராமதாஸ் அணியில் இருப்பதால் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மட்டும் சௌமியா அன்புமணி, 82,434 வாக்குகள் பெற்றார். வடிவேல் ராவணன் அதனடிப்படையில் அவர் அங்கு களமிறங்கலாம். ஆனால், திருப்போரூரும் சௌமியா போட்டியிடுவதற்கான சாய்ஸில் முதன்மையாக இருக்கிறது. சௌமியா திருப்போரூரில் போட்டியிடும் பட்சத்தில், கடந்தமுறை தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் வாங்கப்பட்ட அரசாங்கம் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, நெய்வேலி தொகுதி கிடைக்காததால், கடலூரில் நெய்வேலிக்குப் பதில் காட்டுமன்னார்கோவிலில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் களமிறங்கலம என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில், 2,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சித்தமல்லி பழனிசாமி மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. கடந்தமுறை ஜெயங்கொண்டத்தில் போட்டியிட்ட வழக்கறிஞர் பாலு இந்தமுறை சோளிங்கரில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டதால், இந்தமுறை சோளிங்கர் அல்லது திருப்போரூரில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் 25 Mar 2026 12:49 pm

“த.வெ.க-வுடன் தனி அணி; `போட்டி'காங்கிரஸுக்கு 20 சீட்!” - காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் சத்தமில்லாமல் ஒரு டீம் வெளியேற தயாராகி வருகிறது என்பது பரபர ஹாட் டாபிக் ஆக அரசியல் வட்டாரத்தில் பரபரக்கிறது. சென்னை எழும்பூரில் த.வெ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் தி.மு.கவுடன் கூட்டணியை விரும்பவில்லை. எங்கள் கட்சி அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வந்துக்கொண்டுள்ளார்கள்” என்று பேசினார். இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் புயலை ஏற்படுத்தியது. தி.மு.க-வுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யார் த.வெ.கவுடன் தொடர்பில் இருந்தது என்கிற விவரங்கள் தேடியது காங்கிரஸ் தலைமை.  ஆதவ் அர்ஜுனா இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக உள்ள டி.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ள மாநில காங்கிரஸ் தலைமை. த.வெ.க தரப்புடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக காங்கிரஸார் சொல்கிறார்கள். அதேநேரம் செல்வம் மட்டும் த.வெ.கவுடன் பேசவில்லை மேலும் சிலரும் கட்சிமாறும் யோசனையில் இருக்கிறார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். “த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தால் பலருக்கு சீட் கிடைக்கும் என்கிற கனவில் இருந்தனர் சிலர். ஆனால் தி.மு.கவுடன் கூட்டணி போனதால் இப்போது தங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்காது என்பதால் அவர்கள் தனியாக த.வெ.கவுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடந்து வந்தது. செல்வம் மட்டுமல்ல, மாநில துணைத் தலைவராக உள்ள ஒருவரும், மாநில நிர்வாகத்தில் உள்ள மேலும் மூவரும் கடந்த ஒரு வாரமாக நந்தனத்தில் உள்ள த.வெ.க தேர்தல் அலுவலவத்தில் தான் முழுநேரமும் இருந்துவருகிறார்கள்.  இவர்கள் அங்கிருக்கும் போதே எங்களுக்கும் தகவல் வந்துவிட்டது. குறிப்பாக செல்வம், கடந்த இரண்டு நாட்களாக வடமாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைவர்களுக்கு போன் செய்து “நீங்க வாங்க.. நாம போட்டி காங்கிரஸ் கட்சியை அமைத்து த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கலாம்” என்று பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா - விஜய் இவர் பேச்சை கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக முப்பது நிர்வாகிகள் த.வெ.க அலுவலகத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அவர்கள் விவரமும் எங்களிடம் இருக்கிறது. தற்போது செல்வம் தலைமையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு முப்பது சீட் வேணும் என்று த.வெ.க-வுடன் பேச்சு நடந்துவருகிறது” என்கிறார்கள்.  இந்நிலையில் த.வெ.க தரப்பு இதையே உறுதி செய்கிறது. ஆதவ் அர்ஜூனா சும்மா ஒன்றும் பேசவில்லை, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தபிறகே பேசியிருக்கிறார் என்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள். “த.வெ.க-வில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவாகியுள்ளது. இருபது இடங்கள் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் முன்னணி பொறுப்பில் இருப்பவர்கள் எங்கள் அணிக்குள் வந்துவிடுவார்கள். அதற்கான எல்லா பேச்சுவார்தைகளும் முடிந்துவிட்டது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு மட்டுமே பாக்கி” என்கிறார்கள்.  பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில்  காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் ஒரு அணியாக தனி சின்னத்தில் போட்டியிட திட்டம் இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கலகம் தான் போல!

விகடன் 25 Mar 2026 12:48 pm

நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ - புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தி.மு.க தனித்தனியே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதில் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் `ஏ’ மற்றும் `பி’ படிவங்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரி திமுக - காங்கிரஸ் அதேபோல வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து தி.மு.க முறையிட்டதும், தங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் வாங்குமாறு கூறியது காங்கிரஸ். ஆனால் அந்த ஆறு தொகுதிகளிலும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் காங்கிரஸ் வேட்பாளர்கள். காங்கிரஸ் கட்சியின் இந்தப் போட்டி வேட்பாளர்கள் `மூவ்’, தி.மு.க-வையும் வி.சி.க-வையும் உஷ்ணமேற்றியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, `புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அங்கு கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ், தி.மு.க போட்டியிடும் 5 தொகுதிகளில் வாபஸ் பெறுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஃபிரண்ட்லி ஃபைட் என்ற பெயரில் நீங்களும் நில்லுங்கள், நாங்களும் நிற்கிறோம். யார் வெற்றிபெறுகிறார்களோ பிறகு ஆட்சி அமைக்கும்போது ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்ற வாதங்களையும் அவர்கள் முன்வைப்பதாக கேள்விப்படுகிறோம்’ என்று கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன். மேலும் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியையும் சேர்த்து மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருக்கிறது வி.சி.க. காங்கிரஸ் தலைமை தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுமாறு கூறி வருகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருமாவளவன் மங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ரகுபதி, ``என்னுடைய வேட்பு மனுவை நான் வாபஸ் பெற மாட்டேன். பீகாரில் சில தொகுதிகளில் எப்படி நட்பு ரீதியில் போட்டியிட்டார்களோ, அதேபோல புதுச்சேரியிலும் நாங்கள் போட்டியிடுவோம்” என்று கூறியிருக்கிறார். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு நாளை 26.03.2026 அன்று கடைசி தினம் என்பதால், புதுச்சேரி காங்கிரஸ் தரப்பில் `பேச்சுவார்த்தை’ நடத்தி வருகிறது தி.மு.க. அதேபோல, ``காங்கிரஸ் தரப்பில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் எம்.எல்.ஏ வைத்தியநாதன். புதுச்சேரி: `சீட் இல்லை!’ - கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி

விகடன் 25 Mar 2026 12:39 pm

+2 மாணவி வழக்கில் கிடைத்த அப்டேட்| சிசிடிவியில் சிக்கிய கொடூரன்! ஆதாரத்துடன் விளக்கிய காவல்துறை

+2 மாணவி வழக்கில் கிடைத்த அப்டேட்| சிசிடிவியில் சிக்கிய கொடூரன்! ஆதாரத்துடன் விளக்கிய காவல்துறை

சமயம் 25 Mar 2026 12:36 pm

கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' இன்று நாம் பார்க்கப்போவது தஞ்சாவூர் மாவட்ட கள நிலவரம்.! தஞ்சாவூர் மாவட்ட கள நிலவரம் 1. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தஞ்சாவூர் தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், வீணை உள்ளிட்ட கலை பொருட்கள் தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். புகழ் மிக்க பெரிய கோயில் அமைந்திருப்பதால் சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. தொகுதிக்குள் முக்குலத்தோர், பட்டியலினத்தவர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், வெள்ளாளர், யாதவர் உள்ளிட்ட பல மைனாரிட்டி சமூகத்தினரும் கலவையாக வசிக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த டி.கே.ஜி.நீலமேகம் சிட்டிங் எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் திமுக திமுகவை பொறுத்தவரை டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, துரை.சுதாகர், எஸ்.எஸ்.ராஜ்குமார், எல்.ஜி.அண்ணா, செந்தமிழ்செல்வன், கரந்தை உதயநிதி, து.செல்வம், மணிமாறன் என சீட்டுக்கான ரேஸில் உள்ளவர்களின் லிஸ்ட் ரொம்பவே நீளம். திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் தொகுதியை குறி வைத்து கேட்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவர் தொகுதிக்குள் 90 சதவீத பிரச்சார பணிகளை முடித்து விட்டதாகவும் பேசப்படுகிறது. தவெக-வில் தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தான் வேட்பாளர் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் சத்தமில்லாமல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார். என்.எஸ்.சரவணன் அதிமுக திமுகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் தஞ்சாவூரும் ஒன்று. தொகுதிக்குள் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கே சாதகமாக உள்ளது. கடந்த முறை வாக்குகளை பிரித்த அமமுக இம்முறை கூட்டணியில் இருப்பது அதிமுகவுக்கு பலம். தற்போதைய நிலவரப்படி தொகுதி திமுக-விற்கு சாதகமாக உள்ளது. திமுக-வில் வேட்பாளர் யார் என்பதும், இங்கு வலுவாக இருக்கும் தவெக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு லாபத்தை தரும் என்பதை பொறுத்து கடைசி நேரத்தில் முடிவுகள் மாறுவதற்கான சூழலும் நிலவுவதாக களம் இருக்கிறது. 2. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி ஒரத்தநாடு தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவை முக்கிய தொழில்கள். தொகுதிக்குள் கள்ளர், முத்தரையர், பட்டியலினத்தவர் அடுத்தபடியாக யாதவர், உடையார் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். கடந்த தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக இங்கு மட்டும் தான் வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ-வாக இருந்த வைத்திலிங்கம் திமுக-வில் ஐக்கியமாகி விட்டார். திமுக-வை பொறுத்தவரை வைத்திலிங்கத்திற்கு சீட் உறுதி என்கிறார்கள். எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, கலைமணி இளையபாரதி உள்ளிட்ட பலர் ரேஸில் உள்ளனர். வைத்திலிங்கம் அதிமுக-வை பொறுத்தமட்டில் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் வேட்பாளர். தவெக-வை பொறுத்தவரை டாக்டர் அரவிந்த், சிங்கப்பூர் சுதாகர், ஒன்றிய செயலாளர் ரஜினி ஆகியோர் ரேஸில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியில் நடிகர் களவாணி திருமுருகன் வேட்பாளர். தொகுதிக்குள் திமுக மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து திருமுருகன் மேற்கொள்ளும் அனல் பறக்கும் பிரச்சாரம் ஹைலைட். வைட்டமின்களுக்கு பஞ்சமில்லாத வைத்திலிங்கம் வருகை திமுவிற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தொகுதியில் பெரும்பாலான பணிகளை முடித்து விட்டார் வைத்தி. தேர்தல் வேலையில் எக்ஸ்பர்டானவர் கூடவே வைட்டமினையும் இறக்குவதால் ஒரத்தநாடு திமுக-விற்கு சாதகமாக உள்ளது. 3. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பட்டுக்கோட்டை தொகுதியில் தென்னை, நெல் விவசாயம், மீன்பிடி, போன்றவை முக்கியத் தொழில்கள். முக்குலத்தோர், முத்தரையர், வேளாளர், இஸ்லாமியர், பட்டியலினத்தவருக்கு அடுத்தபடியாக கோனார், நாடார் சமூகத்தினர் நிறைந்திருக்கின்றனர். திமுகவை சேர்ந்த அண்ணாதுரை சிட்டிங் எம்.எல்.ஏ. பட்டுக்கோட்டை திமுகவில் வேட்பாளர் ரேஸில் உள்ளவர்கள் திமுக-வை பொறுத்தவரை சூரப்பள்ளம் சொ.விஜயகுமார், பார்த்திபன், பழனிவேல், அண்ணாதுரை, பழஞ்சூர் செல்வம், மாளிக்காடு ரமேஷ் என பலர் ரேஸில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதியை கேட்பதாகவும் மகேந்திரன் வேட்பாளராக களமிறங்குவார் என்கிறார்கள். அதிமுக-வில் முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.சேகர், கல்யாணஓடை செந்தில், எஸ்.டி.எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் ரேஸில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதியை கேட்டு மல்லுகட்டுகின்றது. தவெக-வில் ஆதி.ராஜாராம், சிங்காரவேலு, மதன் சீட் எதிர்பார்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் கண்ணன் வேட்பாளர். கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி திமுக நேரடியாக போட்டியிட்டால் தொகுதியை கைபற்றுவதற்கான சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.! 4. பேராவூரணி சட்டமன்ற தொகுதி பேராவூரணி தொகுதியில் தென்னை, மீன்பிடி, கூல்டிரிங்க்ஸ் பெட்டி தயாரித்தல் போன்றவை முக்கியத்தொழில்கள். மனோரா, புதுப்பட்டினம் பீச் போன்றவை அமைந்திருப்பதால் சுற்றுலாத் தளமாகவும் திகழ்கிறது. முத்தரையர், அகமுடையர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் இவருக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்கிறார்கள். அருள்நம்பி, முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் கருணாஸ் மற்றும் தேமுதிகவும் தொகுதியை குறி வைத்துள்ளார்களாம். பேராவூரணி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார் அதிமுக-வை பொறுத்தவரை கோவி.இளங்கோ, திருஞானசம்பந்தம், பில்லங்குழி செந்தில்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கோவி.இளங்கோவுக்கு தொகுதி உறுதி செய்யப்பட்டதாகவும் தேர்தல் பணிகளை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். கூட்டணியில் பாஜகவும் தொகுதியை கேட்கிறதாம். தவெக-வில் அருள்முருகன், டெல்டா ராஜவிக்னேஷ், ராஜேந்திரன் என பலர் சீட்டுக்காக மெனக்கெடுகின்றனர். நாம் தமிழர் கட்சியில் புவனா என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பேராவூரணியிலும் இஸ்லாமிய வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருக்கின்றன. தன்னார்வத்துடன் தவெக-வில் அதிகளவில் உறுப்பினர் ஆனவர்களின் பட்டியலில் பேராவூரணியும் ஒன்று என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. திமுக அதிமுக நேரடியாக போட்டியிட்டால் இழுபறி நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். கோவி.இளங்கோ 5. திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு தொகுதியின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. தொகுதிக்குள் கல்லணை அமைந்திருப்பதால் சுற்றுலாத் தளமாகவும் திகழ்கிறது. கள்ளர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், முத்தரையர், உடையார், மூப்பனார், வன்னியர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த துரை.சந்திரசேகரன் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை மீண்டும் துரை.சந்திரசேகரனுக்கு சீட் என்கிறார்கள். ஆனாலும் முகில் வேந்தன், கல்லணை செல்லக்கண்ணு உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இருந்தவரையில் அவர்கள் இந்த தொகுதியை கேட்பதாகவும், பாடலாசிரியர் சினேகன் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் பேச்சுகள் அடிப்பட்டது. இப்போது மநீம தேர்தல் ரேஸில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக-வை பொறுத்தவரை ரெத்தினசாமி, தில்லைஸ்தானம் சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் தொகுதி அமமுகவுக்கு செல்வது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள். வேலு கார்த்திகேயன் வேட்பாளர் என்கிறார்கள். தவெக-வில் ராஜ்மோகன், மணிகண்டன் ஆகிய இருவரின் பெயர் அடிபடுகிறது. நாம் தமிழர் கட்சியில் செந்தில்நாதன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்ட நிலையில் வேலுகார்த்திகேயன் 37,000 வாக்குகள் பெற்றார். தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து களம் காண்பதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி திமுக முந்துவதற்கு வாய்ப்புள்ளது. துரை.சந்திரசேகரன் 6. பாபநாசம் சட்டமன்ற தொகுதி பாபநாசம் தொகுதியில் விவசாயம், ஐம்பொன் சிலை தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். சுவாமிமலை முருகன் கோயில் அமைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாக திகழ்கிறது. பட்டியலினத்தவர், வன்னியர், முக்குலத்தோர், இஸ்லாமியர், மூப்பனார், முத்தரையர், உடையார், உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை எஸ்.கே.முத்துசெல்வம், அய்யாராசு, அம்மாப்பேட்டை கலைச்செல்வன், தாமரைச்செல்வன், பாவை ஹனிபா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். இந்த முறையும் ஜவாஹிருல்லா கேட்பதால் அக்கட்சிக்கு கிட்டதட்ட தொகுதி உறுதி என்றே சொல்கிறார்கள். மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்? அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் மறைந்த துரைக்கண்ணு மகன் அய்யபன்னுக்கு சீட் உறுதி என்கிறார்கள். கூட்டணியில் அமமுகவும் தொகுதியை கேட்கின்றனர். தவெக-வில் வைட்டமினுக்கு பஞ்சமில்லாத அசாருதீன் வேட்பாளர் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் அனீஸ் பாத்திமா வேட்பாளர். தொகுதிக்குள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இஸ்லாமியர் வாக்குகள் சாதகமாக இருப்பது திமுக-வின் பலம். இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட்டால் வெற்றி வாகை சூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கூட்டணிக்கு ஒதுக்கினால் இழுபறி நிலை ஏற்படலாம்.! அய்யப்பன் அதிமுக 7. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கும்பகோணம் தொகுதியில் விவசாயம், நெசவு உற்பத்தி, பித்தளை பாத்திரம் தயாரித்தல் போன்றவை முக்கியத் தொழில்கள். கோயில்கள் நிறைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாகவும் திகழ்கிறது. தொகுதிக்குள் வன்னியர், பட்டியலினத்தவர், செளராஷ்டிரா, பிராமணர், இஸ்லாமியர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். தி.மு.க-வைச் சேர்ந்த சாக்கோட்டை க.அன்பழகன் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு சீட் உறுதி. அதிமுக-வில் ரத்னா சேகர், இராமநாதன், பாரதிமோகன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் த.மா.கா மற்றும் பாஜக தொகுதியை கேட்கின்றனர். தவெக-வில் மாவட்ட செயலாளர் வினோத் வேட்பாளர் என்கிறார்கள். நாம் தமிழரில் ஆனந்த் வேட்பாளர். கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்காதது தி.மு.க மீது அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர், கிறிஸ்துவர் வாக்குகள், சாக்கோட்டை க.அன்பழகன் தனிப்பட்ட செல்வாக்கு போன்றவற்றால் திமுக கைப்பற்றும் நிலையே தற்போது உள்ளது. எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் 8. திருவிடைமருதூர் - தனி சட்டமன்ற தொகுதி திருவிடைமருதூர் தனி தொகுதியில் விவசாயம், திருபுவனம் பட்டு, நாச்சாச்சியார் கோயில் குத்து விளக்கு, பித்தளை பாத்திரங்கள் தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன், கஞ்சனூர், சூரியனார் கோயில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாகவும் திகழ்கிறது. வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். அமைச்சர் கோவி.செழியன் வசம் தொகுதி உள்ளது. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் கோவி.செழியன் வேட்பாளர். தேர்தல் பணிகளை சத்தமில்லாமல் தொடங்கி விட்டார். அமைச்சர் கோவி.செழியன் அதிமுக-வில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமாரன், கஞ்சனூர் முருகன், எழில்செல்வன், யூனியன் வீரமணி உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். தவெக-வில் பிரபாகரனுக்கு வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யபாரதி. பாஜக எதிர்பால் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க-வில் நிலவும் பிளவும் திமுகவிற்கு ப்ளஸாக அமைய வாய்ப்புள்ளது. தற்போதைய நில்வரப்படி தொகுதியை திமுக தக்க வைத்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

விகடன் 25 Mar 2026 12:33 pm

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5'நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் 'The Wall Street Journal' வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரான் முன்வைக்கும் 5 நிபந்தனைகள்... > ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். > அமெரிக்கா எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் நடத்தாது என்கிற உறுதி வேண்டும். ஈரோன் போர் ``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார் - ட்ரம்ப் > இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்க வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும். > ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது. இவற்றுக்கு ஒப்புக்கொண்டாலே அடுத்த பேச்சுவார்த்தை என்று ஈரான் தெரிவித்துள்ளதாம். இதற்கு அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ? சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

விகடன் 25 Mar 2026 12:19 pm

`ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி!

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலாஜி மாறிய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க வேட்பாளராக தங்கப்பாண்டியன் போட்டியிட்டார். தங்கப்பாண்டியன் 74,158 வாக்குகளும், ராஜேந்திர பாலாஜி 70,260 வாக்குகளும் பெற்றனர். இதில், ராஜேந்திர பாலாஜி, 3,078 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். ராஜேந்திர பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். அவர் சார்ந்த விஸ்வகர்மா சமூக வாக்குகளை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திருப்பினார். ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ராதாகிருஷ்ணன் செயல்பட தொடங்கினார். இதற்காக தி.மு.கவும் மறைமுகமாக அவருக்கு ஆதரவாக நின்றது. சிவகாசி தொகுதி மக்களின் அதிருப்தியும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இதனையெல்லாம் அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தனக்கு இரண்டு முறை அமைச்சர் பதவியை கொடுத்த சிவகாசி தொகுதியை கைவிட்டு, ராஜபாளையத்திற்கு தாவினார். ஜோதிட நம்பிக்கையுள்ள ராஜேந்திர பாலாஜியிடம், ”ராஜாவாக முடிசூட வேண்டுமென்றால் ராஜபாளையத்திற்கு மாறுங்கள்” என அவரது ஆஷ்டான ஜோதிடர் கூறியதாகச் சொல்லப்பட்டது. ராஜேந்திர பாலாஜி அந்த நேரத்தில் ராஜேந்திர பாலாஜி மஞ்சள் உடையில் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். அவர் மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களும் மஞ்சள் உடையிலேயே அவரைச் சுற்றி வலம் வந்தனர். ஆனால், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியால் வெல்ல முடியவில்லை. ஆனாலும், ராஜபாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் இணக்கமாக இருந்ததோடு, நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு முன்னாள் எம்.பி.,ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். இதனால், தனக்கு எதிராகச் செயல்படும் சக்தியாக யாரும் இல்லை என நினைத்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் சிவகாசி தொகுதிக்கு திரும்புவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டாக சிவகாசி தொகுதியில் பழையபடி விளையாட்டு போட்டிகளை நடத்துவது, நலத்திட்ட உதவிகள் செய்வது என்று பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் சிவகாசி தொகுதி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் இருப்பதால், மீண்டும் சிவகாசி தொகுதியில் வெல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி நடிகை கெளதமி, பா.ஜ.கவில் பயணித்தபோதே, கடந்த 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியைக் குறிவைத்து வேலை பார்த்தார். கடைசி நேரத்தில், ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்தில் களமிறங்க, கௌதமிக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு பறிபோனது. தற்போது அ.தி.மு.கவில் இணைந்திருக்கும் கௌதமி, வரும் தேர்தலிலும் ராஜபாளையத்தைக் கேட்கிறாராம். ஆனால், அந்தத் தொகுதியை பா.ஜ.கவுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறாராம் ராஜேந்திர பாலாஜி.!

விகடன் 25 Mar 2026 12:16 pm

2026 தேர்தலில் தவெக தனித்து தான் போட்டி என அறிவிப்பு

2026 தேர்தலில் தவெக தனித்து தான் போட்டி என அறிவிப்பு

சமயம் 25 Mar 2026 11:37 am

விஜய் போட்ட உத்தரவு...சரியான திசையில் நகர்வு!

விஜய் போட்ட உத்தரவு...சரியான திசையில் நகர்வு!

சமயம் 25 Mar 2026 11:34 am

நயினார் போடும் புது கணக்கு! இது எடுபடுமா?

நயினார் போடும் புது கணக்கு! இது எடுபடுமா?

சமயம் 25 Mar 2026 11:27 am

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

சமயம் 25 Mar 2026 11:23 am

NDA கூட்டணியில் குழப்பமா? கரூரில் பட Shooting?

NDA கூட்டணியில் குழப்பமா? கரூரில் பட Shooting?

சமயம் 25 Mar 2026 11:18 am

தரமான சம்பவம் செய்த நாம் தமிழர்...2026 நாங்க தான்!

தரமான சம்பவம் செய்த நாம் தமிழர்...2026 நாங்க தான்!

சமயம் 25 Mar 2026 11:09 am

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோமானி 13,500 கோடிக்கு வாங்கினார். ராஜஸ்தான் அணியை வாங்கிய கல் சோமானி ராஜஸ்தான் அணியை தொடர்ந்து தற்போது ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கி இருக்கின்றன. இதற்கு முன்பு பெங்களூரு அணியை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்களான, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பங்கு முதலீட்டு நிறுவனமான EQT, மற்றும் மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் ஆகியவை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆதித்யா பிர்லா குழுமம் இந்நிலையில் தற்போது 16,700 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கியிருக்கின்றன.

விகடன் 25 Mar 2026 11:05 am

அமைதியாக ஆட்டத்தை தொடங்கிய விஜய்... அதிரும் அரசியல் களம்!

அமைதியாக ஆட்டத்தை தொடங்கிய விஜய்... அதிரும் அரசியல் களம்!

சமயம் 25 Mar 2026 11:01 am

நெல்லையில் நிகழ்ந்த சோகம்!கையில் உருக்கமான பதிவு

நெல்லையில் நிகழ்ந்த சோகம்!கையில் உருக்கமான பதிவு

சமயம் 25 Mar 2026 10:51 am

விஜய் வந்த பிறகு இது மாறியுள்ளது! உடைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி!

விஜய் வந்த பிறகு இது மாறியுள்ளது! உடைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி!

சமயம் 25 Mar 2026 10:47 am

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அந்த இடத்தில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்று இருந்த சரத் பவார் இப்பதவிக்கு போட்டியிட எதிர்க்கட்சிகள் சம்மதித்தன. இதையடுத்து சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தவ் தாக்கரே எனவே சரத் பவார் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களான உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நானா பட்டோலே, விஜய் ஆகியோரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவித்து, தன்னை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதோடு சரத் பவார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து சரத் பவார் பேசுவது இதுவே முதன்முறையாகும். வரும் மே மாதம் சட்டமேலவையில் உத்தவ் தாக்கரேயின் பதவிக்காலம் முடிகிறது. மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அவர்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அந்த ஓர் இடத்திற்கு உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்வது குறித்து சரத் பவார் கூட்டிய விருந்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொள்ளவில்லை.

விகடன் 25 Mar 2026 10:19 am

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதன்படி கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். நத்தத்தில் நத்தம் விசுவநாதனும், தொண்டாம்புத்தூரில் எஸ்.பி வேலுமணியும், குமாரபாளையத்தில் தங்கமணியும், ராயபுரத்தில் ஜெயக்குமாரும், மைலம் தொகுதியில் சி.வி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். முழுபட்டியலின் விவரம் கீழே....

விகடன் 25 Mar 2026 10:06 am

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதன்படி கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். நத்தத்தில் நத்தம் விசுவநாதனும், தொண்டாம்புத்தூரில் எஸ்.பி வேலுமணியும், குமாரபாளையத்தில் தங்கமணியும், ராயபுரத்தில் ஜெயக்குமாரும், மைலம் தொகுதியில் சி.வி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். முழுபட்டியலின் விவரம் கீழே....

விகடன் 25 Mar 2026 10:06 am

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார் - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார். அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது... > ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும். > அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும். ஈரான் போர் கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது? > ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது. > ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். > நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும். > சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும். > ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். > அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும். > ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும். > எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail இவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்? > ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும். > புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும். > ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

விகடன் 25 Mar 2026 9:46 am

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார் - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார். அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது... > ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும். > அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும். ஈரான் போர் கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது? > ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது. > ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். > நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும். > சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும். > ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். > அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும். > ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும். > எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail இவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்? > ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும். > புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும். > ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

விகடன் 25 Mar 2026 9:46 am

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், சசிகலா கடந்த மாதம் பசும்பொன்னில் நடந்த கூட்டத்தில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, ஏற்கெனவே தொடங்கப்பட்ட அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று, தற்போது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளார். தற்போது விருப்ப மனு விநியோகம் செய்துவரும் நிலையில், பெரிய அளவில் ஆதரவாளர்கள் வராவிட்டாலும், ஓரளவு விருப்ப மனு அளித்துள்ளனர். மனு அளித்தவர்களில் ஒரு சிலரை சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்களிடம் நேர்காணல் நடத்தாமலே அவர்களை முதற்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். சசிகலாவுடன் ஜீவிதா நாச்சியார் அந்த வகையில், சசிகலா அறிவிக்கவிருக்கும் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்கிறார்கள்! 1. திருத்தணி -நரசிம்மன் (முன்னாள் எம்.எல்.ஏ) 2. திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார் (அமமுக-வில் பயணித்த வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், அங்கு தனக்கு சீட் கிடைக்காது என்பது தெரிந்ததால், சமீபத்தில் சசிகலா அணிக்கு வந்தார். ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை வெற்றிபெற்ற திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியாரை நிறுத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம்) வெள்ளத்துரை 3. நாங்குனேரி அல்லது அம்பாசமுத்திரம் - வெள்ளத்துரை. காவல்துறை அதிகாரியாக பொறுப்பில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்பும் சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறியுள்ள வெள்ளத்துரைதான் தற்போது அரசியல் ஆலோசகர்போல செயல்பட்டு வருகிறார். இவர் நாங்குனேரியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தாலும், இசக்கி சுப்பையாவுக்கு குடைச்சலை கொடுக்க வெள்ளத்துரையை அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். 4. ஆண்டிப்பட்டி - கர்ணன் 5. முதுகுளத்தூர் - பசும்பொன் ராமகிருஷ்ணன் 6. மேலூர் - சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பி.ஸ்டாலின் 7. சிவகங்கை - வழக்கறிஞர் முருகானந்தம் 8. மதுரை மேற்கு - சக்கரவர்த்தி (அஇபுதமமுக-த்தின் நிறுவனரான இவரை செல்லூர் ராஜூவுக்கு எதிராக நிறுத்த உள்ளார்) 9. உசிலம்பட்டி - ஒச்சாத்தேவர் (முன்னாள் போலீஸ்காரர்) என்று முதல் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் சசிகலா, அடுத்து அ.தி.மு.க, அ.ம.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியாகி தன்னைத் தேடி வருகின்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து வருகிறாராம். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 8:30 am

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், சசிகலா கடந்த மாதம் பசும்பொன்னில் நடந்த கூட்டத்தில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, ஏற்கெனவே தொடங்கப்பட்ட அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று, தற்போது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளார். தற்போது விருப்ப மனு விநியோகம் செய்துவரும் நிலையில், பெரிய அளவில் ஆதரவாளர்கள் வராவிட்டாலும், ஓரளவு விருப்ப மனு அளித்துள்ளனர். மனு அளித்தவர்களில் ஒரு சிலரை சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்களிடம் நேர்காணல் நடத்தாமலே அவர்களை முதற்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். சசிகலாவுடன் ஜீவிதா நாச்சியார் அந்த வகையில், சசிகலா அறிவிக்கவிருக்கும் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்கிறார்கள்! 1. திருத்தணி -நரசிம்மன் (முன்னாள் எம்.எல்.ஏ) 2. திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார் (அமமுக-வில் பயணித்த வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், அங்கு தனக்கு சீட் கிடைக்காது என்பது தெரிந்ததால், சமீபத்தில் சசிகலா அணிக்கு வந்தார். ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை வெற்றிபெற்ற திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியாரை நிறுத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம்) வெள்ளத்துரை 3. நாங்குனேரி அல்லது அம்பாசமுத்திரம் - வெள்ளத்துரை. காவல்துறை அதிகாரியாக பொறுப்பில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்பும் சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறியுள்ள வெள்ளத்துரைதான் தற்போது அரசியல் ஆலோசகர்போல செயல்பட்டு வருகிறார். இவர் நாங்குனேரியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தாலும், இசக்கி சுப்பையாவுக்கு குடைச்சலை கொடுக்க வெள்ளத்துரையை அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். 4. ஆண்டிப்பட்டி - கர்ணன் 5. முதுகுளத்தூர் - பசும்பொன் ராமகிருஷ்ணன் 6. மேலூர் - சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பி.ஸ்டாலின் 7. சிவகங்கை - வழக்கறிஞர் முருகானந்தம் 8. மதுரை மேற்கு - சக்கரவர்த்தி (அஇபுதமமுக-த்தின் நிறுவனரான இவரை செல்லூர் ராஜூவுக்கு எதிராக நிறுத்த உள்ளார்) 9. உசிலம்பட்டி - ஒச்சாத்தேவர் (முன்னாள் போலீஸ்காரர்) என்று முதல் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் சசிகலா, அடுத்து அ.தி.மு.க, அ.ம.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியாகி தன்னைத் தேடி வருகின்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து வருகிறாராம். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

விகடன் 25 Mar 2026 8:30 am

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக'கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில்  இறங்கியுள்ளது தி.மு.க. கடந்த ஒரு வாரமாக   நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியில் இழுபறியாக இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடனான  தொகுதி பங்கீட்டையும் தி.மு.க தலைமை ஒரே நாளில் இறுதி செய்துவிட்டது. ஸ்டாலின் மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வைத்த கோரிக்கையால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இதனால் தி.மு.க பிற கூட்டணிக் கட்சிகளுடன் கிட்டதட்ட தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் தி.மு.க தரப்பு முடிவு செய்துவிடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாற்பது தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தரப்பிடம்  கொடுத்துள்ளது. அதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்குள் அளித்துவிடும் என தெரிகிறது. இந்த வார இறுதிக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்ய வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளிடம் முதல்வர் சொல்லியுள்ளார். வேலு, நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளிடம் விரைவில் தொகுதியை இறுதி செய்ய இருக்கிறார்கள். கூ்ட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதியான பிறகு முதல்வர் பிரசாரத்தை துவக்க உள்ளார் என்கிறார்கள் தி.மு.கவினர். இதுகுறித்து தி.மு.க மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசும் போது “தொகுதிகள் முடிவான பிறகே முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். மாவட்டத்திற்கு ஒரு இடம் என்கிற ரீதியில் பிரசாரம் திட்டமிடப்பட உள்ளது. ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி அன்று காலை தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்று மாலை சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று, ஏப்ரல் 3-ம் தேதி தஞ்சாவூர் அல்லது திருவாரூரிலிருந்து முதல்வர் பிரசாரத்தை துவக்கும் வகையில் தி.மு.க வின் வியூகும்  உள்ளது” என்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவுக்கு அதன் தேர்தல் அறிக்கை பெரும் பலமாக அமையும். அதனாலே தி.மு.க-வின் தேர்தல் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான் என கருணாநிதி குறிப்பிடுவார்.அந்த வகையில், இந்த முறையும் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையே பேசுபொருளாக இருக்கும் என்கிற பேச்சு எழுந்துள்ளது.  இதுகுறித்து தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் “கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கடந்த ஒரு மாதமாக தீவிரமாக  தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வர தேர்தல் அறிக்கை முக்கிய காரணம். அதே போல் இந்த முறையும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற உள்ளது. குறிப்பாக எல்.இ.டி-டி.வியை இலவசமாக அறிவிக்கும் திட்டம் இப்போது உள்ளது.  கனிமொழி எம்.பி அதே போல் இலவச முழு உடல் பரிசோதனை திட்டம், இளைஞர்களுக்கென பிரதேயக அறிவிப்புகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே,முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். தேர்தல் அறிக்கையே பிரசாரத்தில் மையப்பொருளாக இருக்க வேண்டும் என்கிற மூடில் முதல்வர் இருக்கிறார்” என்கிறார்கள்.  “முதல் நாள் தேர்தல் அறிக்கை... மறுநாள் தேர்தல் பிரசாரம்” என்று ப்ளானில் இருக்கிறது தி.மு.க தலைமை. 

விகடன் 25 Mar 2026 8:24 am

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு'காசு பிடிக்கப் போறாங்க!

டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரூபாய் ரீஃபண்ட் செய்யப்படும் என்பதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை. அவை என்னென்ன? ரயில் கிளம்புவதற்கு... 72 மணிநேரத்திற்கு முன்பு, எப்போது கேன்சல் செய்தாலும், மிக சிறிய தொகையே கழிக்கப்படும். அதிகபட்ச தொகை ரீஃபண்ட் செய்யப்பட்டுவிடும். ரயில் இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம் 72 - 24 மணிநேரத்திற்குள் கேன்சல் செய்யப்பட்டால், 25 சதவிகித தொகை அபராதமாக பிடிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை ரீஃபண்ட் செய்யப்படும். 24 - 8 மணிநேரத்திற்குள் என்றால், டிக்கெட் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே ரீஃபண்ட் செய்யப்படும். 8 மணிநேரத்திற்கும் குறைவாகச் சென்றால், ரீஃபண்ட் கிடையாது. அடுத்து..? ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை, எந்த ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறலாம் என்கிற ஆப்ஷனை மாற்றலாம். இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 15 என இரண்டு கால இடைவெளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. 'என்னது?' வீட்டிலேயே இருக்கும் தங்க நகைகளுக்கு மதிப்பும் இல்லை; அதனால், லாபமும் இல்லையா?|Gold

விகடன் 25 Mar 2026 8:09 am

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் திருநாவுக்கரசர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில் இவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அங்குள்ள தி.மு.க-வினர், 'இந்தமுறை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளரான மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தீர்மானம் போட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார். thirunavukkarasar இதனால், 'திருச்சி கிழக்கு தொகுதியில் திருநாவுக்கரசர் களம் காணத்தான் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்' என்று சொல்கிறார்கள். ஓன்று தனது மகனுக்கு சீட் வாங்க வேண்டும், அது முடியாவிட்டால் தனக்காவது சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், 'நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவன். எனக்கு எம்.எல்.ஏ ஆசையில்லை' என்று பேசியிருக்கிறார். இந்நிலையில், இதுபற்றி விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம். திருச்சி எம்.பி-யாக இருந்த திருநாவுக்கரசர் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை. அதேபோல், திருச்சி தி.மு.க முக்கிய புள்ளியான அமைச்சர் கே.என்.நேருவோடு அணுசரணையாக நடந்துகொள்ளவில்லை. அதோடு, திருச்சி எம்.பி-யாக இருந்துகொண்டு திருச்சிக்கு எப்போதாவது வருவது, அப்போதும் பேட்டி மட்டும் கொடுப்பது என்று செயல்பட்டார். அதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. திருச்சியில் ம.தி.மு.க துரை வைகோ வேட்பாளர் என்றதும் மயிலாடுதுறை தொகுதி வரை கேட்டு ஓய்ந்தார். இந்நிலையில், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பதவி அனுபவித்து வந்த அவருக்கு, கடந்த இரண்டு வருடங்களாக பதவியில் இல்லாமல் இருப்பு கொள்ளவில்லை. josep louis இந்நிலையில் தான், ஒரு மாதத்துக்கு முன்பு அவரது ஆதரவாளரான திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், 'திருச்சி கிழக்கை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும்' என்று தீர்மானம் போட்டு கட்சி தலைமைக்கு அனுப்பினார். ஆனால், இன்னொருபக்கம் திருநாவுக்கரசருக்கு எதிர்நிலையில் உள்ள, திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகனான ஜோசப் லூயிஸூம் திருச்சி கிழக்கை கேட்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தனக்கு வாங்கிவிட வேண்டும் என்று திருநாவுக்கரசர் முனைப்புக் காட்டி வருவதாக சொல்கிறார்கள். ஆனால், திருச்சிக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களிடம், 'அறந்தாங்கி தொகுதியில் தற்போது எனது மகன் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அவரையே வேட்பாளராக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசிலும், பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் அமைச்சராக இருந்துள்ளேன். எனவே, மீண்டும் அமைச்சர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் உள்ளது' என்று பேசினார். sakthi ramasami ஆனால், அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரது மகனான எஸ்.டி.ராமசந்திரன், அங்குள்ள லோக்கல் தி.மு.க புள்ளிகளோடு இணக்கமாக போகவில்லை. அதோடு, 'தி.மு.க-வுக்கு சாதகமான அந்த தொகுதியை இந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று தி.மு.க -வினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். தி.மு.க சார்பில் மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளருமான உதயம் சண்முகம், தேர்தல் பணிக்குழு மாநில செயலாளரும், மணமேல்குடி முன்னாள் ஒன்றிய சேர்மனுமான பரணி கார்த்திகேயன் ஆகியோர் சீட் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் தான், திருச்சியில்,'எனக்கு எம்.எல்.ஏ ஆசையில்லை. என் மகனுக்கு கொடுங்கள்' என்று தனது அபிலாஷையை வெளிப்படுத்தியிருக்கிறார். தன மகனுக்கோ அல்லது தனக்கோ சீட் கிடைக்கவில்லை என்றால், அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்பதால் யாரேனும் ஒருவருக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.. அதாவது, அவரது லாபி அறந்தாங்கி தொகுதியில் தனது மகனுக்கு சீட் வாங்க முயல்வது. ramachandran அது, அறந்தாங்கி தொகுதி தி.மு.க-வினரின் போராட்டத்தால் மகனுக்கு அந்த தொகுதி கிடைக்காமல் போனால், 'எம்.பி சீட்டும் கொடுக்கவில்லை. எனக்கு எம்.எல்.ஏ சீட்டாவது கொடுங்கள்' என்று சென்டிமென்டாக பேசி, திருச்சி கிழக்கை தனக்கு பெறும் முயற்சியை பிரம்மாஸ்திரமாக வைத்திருக்கிறார். அதற்காகத்தான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து, 'எனக்கு ஆசையில்லை. மகனுக்கு சீட் கொடுங்கள்' என்று முதல் பாலை வீசியிருக்கிறார். விக்கெட் விழுதா அல்லது நோ பால் ஆகிறதா என்பதை பொறுத்து அடுத்த பாலை வீசுவார் என்றார்கள். இந்த விவகாரம் குறித்து, தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸிடம் பேசினோம். திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, எல்லாரும் தான் கேட்பார்கள். 37 பேர்களை நேர்காணல் செய்து, மேலிடத்துக்கு லிஸ்ட் அனுப்பியிருக்கிறோம். 37 பேர்களில் திருநாவுக்கரசர் பெயர் இருக்கிறதா என்பது கட்சி விவகாரம் என்பதால், அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்றார். இறுதியாக, திருநாவுக்கரசரிடம் பேசினோம். rex காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை என்றார். திருநாவுக்கரசரின் சீட் பெறும் 'ஆடுபுலி ஆட்டம்' என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

விகடன் 25 Mar 2026 6:33 am

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது'மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ யு.பிரதீபா மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.லிஜூ போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜு மேடையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியடைவதால் தன்னை பலரும் கேலியாக பேசுவதாகவும், அந்தப் பேச்சு இதயத்தை நொறுக்குவதாகவும், தனிப்பட்ட முறையில் மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் பேசியுள்ளார்.  காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ கண்ணீர்மல்க பேசினார் காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ காயம்குளம் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று மக்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தோல்வியடைபவன் என எதிர் கட்சியினர் கிண்டலடிப்பது இதயத்தை நொறுக்குகிறது. அவர்கள் கேலி செய்வது என்னை தனிப்பட்ட முறையில் சோர்வடையச் செய்கிறது. ஆனால் அந்தத் தோல்விகளுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.  மேடையில் பேசிய எம்.லிஜூ ஏற்கனவே மூன்று முறை நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இப்போது நான்காவது முறையாக நான் போட்டியிடுகிறேன். மீண்டும் உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பினைத் தாருங்கள் என நான் மக்களிடம் வேண்டுகிறேன். அரசியல் பிரமுகர் என்ற நிலையில் துக்கம் அனுபவிக்கும் மக்களை தேடிச்சென்று அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என விரும்புகிறேன். காயம்குளம் தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருணையையும், அங்கீகாரத்தையும் வேண்டுகிறேன் என அவர் கண்ணீர் மல்க வார்த்தைகள் உடைந்த நிலையில் பேசி பார்வையாளர்களின் மனதை கரைய வைத்தார்.

விகடன் 25 Mar 2026 6:22 am

'கூட்டணி போறவங்க நரிக்கூட்டம் மாதிரி... விஜய்தான் சிங்கம்!' - பஞ்ச் அடிக்கும் செங்கோட்டையன்!

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது,'அமைச்சராக இருந்த போது எழும்பூருக்கு பல பேருந்துகளை விட்டிருக்கிறேன். எழும்பூர் தவெகவின் எஃகு கோட்டையாக மாறியிருக்கிறது. அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது திரைப்படம் போல 100 நாட்கள்தான் என்றார்கள். ஆனால், இறக்கும் வரைக்கும் எம்.ஜி.ஆர் தான் முதல்வர். அதேமாதிரி, நாளைய தமிழகத்தை மாற்றக்கூடிய முதல்வராக விஜய் வருவார். கூட்டணி இல்லை என்றார்கள். நரிகள்தான் கூட்டமாக வரும். சிங்கம் தனியாகத்தான் வரும். என் உயிர் மூச்சு உள்ள வரை தளபதியை முதல்வராக்குவதுதான் என் லட்சியம். ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் வல்லமை நம்முடைய தலைவருக்கு மட்டுமே உண்டு. ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கே நமக்கு 60% வாக்குகள் கிடைத்துவிடும். செங்கோட்டையன் விஜய் எப்போது பிரசாரத்துக்கு வருவார் என மக்கள் காத்திருக்கின்றனர். தலைவர் பெரம்பூரிலிருந்து புறப்படுவார். சரித்திரம் படைப்பவர். தலைவர் பார்த்த மாத்திரலேயே, 'வாங்க ராஜ்மோகன்...' என தோளில் தட்டி பேசக்கூடியவர் ராஜ்மோகன். அவர் எழும்பூரில் மாபெரும் வெற்றி பெறுவார். என்றார்.

விகடன் 24 Mar 2026 9:50 pm

'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' - ஆதவ் அர்ஜூனா

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது,'1962 க்குப் பிறகு சென்னை எங்களின் கோட்டை என திமுக திமிரில் இருந்தது. கடந்த இரண்டு மாதமாக நாம் பிரசாரத்தை தொடங்கிய பிறகு திமுகவின் சத்தத்தையே காணோம். சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் எம்.எல்.ஏக்களையே காணோம். எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ யாரென கூகுளுக்கே தெரியவில்லை. தங்களை எதிர்க்க யாரும் இல்லை என திமுக மமதையில் இருக்கிறது. எடப்பாடி எதற்கெடுத்தாலும் டெல்லி செல்கிறார். அவர் அங்கேயே இருந்துவிடலாம். மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். திமுகவும் நம்மை பார்த்து பயந்துதான் 26 கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. இன்றைக்கு திமுகவை விட நமக்கு 2% அதிகமாக இருக்கிறது. காங்கிரஸில் 2 குழு இருக்கிறது. ஒன்று ராகுலின் க்ரூப். இன்னொன்று வயதான திமுகவுக்கு ஆதரவான க்ரூப். அந்த கட்சி உருப்படாது என காங்கிரஸின் பொதுச்செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளென 100 பேர் நம் அலுவலகத்தில் வந்து நிற்கிறார்கள். ஆதவ் பாண்டிச்சேரியில் காங்கிரஸை தோற்கடிக்க திமுக பாஜகவுடன் கரம் கோத்து கொண்டு செயல்படுகிறது. ஜெகத்ரட்சகன் மேல் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. அதை வைத்து பாஜக மிரட்டுகிறது. பாண்டிச்சேரியின் திமுக விசுவாசிதான் நாராயணசுவாமி. அதேமாதிரி, தமிழகத்தில் திமுக விசுவாசி ப.சிதம்பரம். அவர் காங்கிரஸை அழித்துவிட்டார். இப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் நம் அலுவலகத்தில் உட்காந்திருக்கிறார்கள். இன்னும் 2 நாளில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள். ராகுல் விஜய் மீதுதான் அன்பு கொண்டவர். வயதான கும்பல்தான் எதையோ பேசி காங்கிரஸை திமுக பக்கம் தள்ளிவிட்டது.' என்றார்

விகடன் 24 Mar 2026 9:50 pm

'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' - ஆதவ் அர்ஜூனா

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது,'1962 க்குப் பிறகு சென்னை எங்களின் கோட்டை என திமுக திமிரில் இருந்தது. கடந்த இரண்டு மாதமாக நாம் பிரசாரத்தை தொடங்கிய பிறகு திமுகவின் சத்தத்தையே காணோம். சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் எம்.எல்.ஏக்களையே காணோம். எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ யாரென கூகுளுக்கே தெரியவில்லை. தங்களை எதிர்க்க யாரும் இல்லை என திமுக மமதையில் இருக்கிறது. எடப்பாடி எதற்கெடுத்தாலும் டெல்லி செல்கிறார். அவர் அங்கேயே இருந்துவிடலாம். மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். திமுகவும் நம்மை பார்த்து பயந்துதான் 26 கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. இன்றைக்கு திமுகவை விட நமக்கு 2% அதிகமாக இருக்கிறது. காங்கிரஸில் 2 குழு இருக்கிறது. ஒன்று ராகுலின் க்ரூப். இன்னொன்று வயதான திமுகவுக்கு ஆதரவான க்ரூப். அந்த கட்சி உருப்படாது என காங்கிரஸின் பொதுச்செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளென 100 பேர் நம் அலுவலகத்தில் வந்து நிற்கிறார்கள். ஆதவ் பாண்டிச்சேரியில் காங்கிரஸை தோற்கடிக்க திமுக பாஜகவுடன் கரம் கோத்து கொண்டு செயல்படுகிறது. ஜெகத்ரட்சகன் மேல் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. அதை வைத்து பாஜக மிரட்டுகிறது. பாண்டிச்சேரியின் திமுக விசுவாசிதான் நாராயணசுவாமி. அதேமாதிரி, தமிழகத்தில் திமுக விசுவாசி ப.சிதம்பரம். அவர் காங்கிரஸை அழித்துவிட்டார். இப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் நம் அலுவலகத்தில் உட்காந்திருக்கிறார்கள். இன்னும் 2 நாளில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள். ராகுல் விஜய் மீதுதான் அன்பு கொண்டவர். வயதான கும்பல்தான் எதையோ பேசி காங்கிரஸை திமுக பக்கம் தள்ளிவிட்டது.' என்றார்

விகடன் 24 Mar 2026 9:50 pm

மநீம சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்!

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். மநீம தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை வாழ்த்துவோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின், கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்று விளக்கமளித்த கமல்ஹாசன், இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. கட்சியினுடைய முடிவு. நீங்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கூறினேன். தமிழ்நாட்டிற்கு நெருக்கடி வந்துள்ளது. நாட்டு நலனுக்கான போராட்டம் தான் இந்தத் தேர்தல். எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை. தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் மாட்டேன். எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளம் அல்ல. முதல்வரும், துணை முதல்வரும் என்னுடன் நட்புணர்வோடு நடந்துகொண்டார்கள். என்னுடன் பயணித்தவர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் அதன்பிறகு கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து பேசிய ஆர். எஸ். பாரதி, முதல்வர் ஸ்டாலின் சார்பாக கமல்ஹாசனுக்கு நன்றி. திமுகவின் 2 கோடி தொண்டர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கலைஞரால் வளர்க்கப்பட்ட பிள்ளை கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 24 Mar 2026 8:41 pm

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. மீதமிருந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே. ஸ்டாலின், கமல்ஹாசன் இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே...

விகடன் 24 Mar 2026 8:11 pm

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!'- கமல்ஹாசன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. மீதமிருந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே. ஸ்டாலின், கமல்ஹாசன் இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே...

விகடன் 24 Mar 2026 8:11 pm

`10 தொகுதிகள்' - திமுக - தேமுதிக இடையே ஒப்பந்தமானது தொகுதிப் பங்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே. திமுக - தேமுதிக இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், 10 தொகுதிகளை திமுக ஒதுக்கி இருக்கிறது.

விகடன் 24 Mar 2026 7:27 pm

அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி? ஏமாற்றப்பட்ட என்.ஜி.பார்த்திபன்! - சோளிங்கர் தொகுதி களேபரம்!

ரா ணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்துவிட்டார் டி.டி.வி.தினகரன். அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார். இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோளிங்கர் தொகுதி இடம்பெறவில்லை என்கிறார்கள். மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர்களின் ஆதரவாளர்களும் அ.தி.மு.க கூட்டணி மீது வெறுப்படைந்திருக்கிறார்கள். என்.ஜி.பார்த்திபன் `ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதியும், அ.ம.மு.க-வுக்கு சோளிங்கர் தொகுதியும், அ.தி.மு.க-வுக்கு அரக்கோணம் தனித் தொகுதியும், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை தொகுதியும் ஒதுக்கப்படும்’ என்பதே என்.டி.ஏ மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, அடிமட்ட தொண்டர்களாலும் உத்தேசிக்கப்பட்டது. இவ்வளவு களேபரத்துக்கும் ஒரே காரணம், `பா.ம.க-வுக்கு கிடைக்க வேண்டிய ஆற்காடு தொகுதியை அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் தான்னோன்றித்தனமாக கைப்பற்றியதே’ என்று கொதிக்கிறார்கள் என்.டி.ஏ கூட்டணியினர். கடந்த தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுமார், தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சரான ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலும், தோல்வி பயம் வந்துவிட்டதால், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாமல், ஆற்காடு தொகுதிக்கு தாவிச் சென்றிருக்கிறார் சுகுமார் என்று அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுமே விமர்சிக்கிறார்கள். `பா.ம.க-வுக்கு ஆற்காடுக்கு பதிலாக ராணிப்பேட்டை தொகுதியை கொடுத்துவிடலாம்’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அணுகி, தனது யோசனையை சொல்லியிருக்கிறார் சுகுமார். அது தொடர்பான பேச்சுவார்த்தையில், `ராணிப்பேட்டை தொகுதி பா.ம.க-வுக்கு சாதகமானது இல்லை’ என்று பாட்டாளிகள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணியை சமரசம் செய்யவும் சுகுமார் தரப்பு முயன்றது. பா.ம.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சரவணனுக்கு சோளிங்கர் தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. எஸ்.எம்.சுகுமார் இதையறிந்து, சரவணன் மூலமாக பா.ம.க தலைவர் அன்புமணியை சமீபத்தில் சந்தித்து `ஆற்காடு தொகுதியை விட்டுக் கொடுத்து, சோளிங்கர் தொகுதியை பெற்றுக் கொண்டால், தேர்தல் செலவையும் பார்த்துக் கொள்கிறோம்’ என்று எஸ்.எம்.சுகுமார் தரப்பு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அன்புமணி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, சோளிங்கர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. அ.ம.மு.க வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை ஏற்கெனவே அறிவித்துவிட்டதால், பார்த்திபனும் களத்தில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். `அன்று பார்த்திபனை தூக்கிபிடித்த தினகரனுமே இன்று ஏமாற்றிவிட்டாரே’ என்று பொருமித்தள்ளுகிறார்கள் அ.ம.மு.க தொண்டர்கள். என்.டி.ஏ கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பதால், சோளிங்கர் தொகுதி களேபரமாகியிருக்கிறது.!

விகடன் 24 Mar 2026 6:45 pm

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் மட்டுமே. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு டபுள் டிஜிட்டலில் தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நிலவரம் என்னவென விசாரித்தோம். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், 'கட்சியில் 84 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 90% பேர் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். வாக்கெடுப்பின் போது அந்த கருத்தை தெளிவாக சீட்டில் எழுதியும் கொடுத்தனர். அதன்படிதான் அண்ணியார் திமுகவுடன் கூட்டணி பேசி முடித்தார். ராஜ்ய சபா சீட்டும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்பதில் அண்ணியார் உறுதியாக இருந்தார். கடந்த 2021 தேர்தலிலேயே சீட்டு எண்ணிக்கை ஒத்துவராததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தினகரனுடன் இணைந்து போட்டியிட்டார். அதனால் திமுகவில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேமுதிகவுக்கான ஏற்ற இடத்தை அண்ணியார் உறுதி செய்துவிடுவார் என நம்பினோம். அதன்படி திமுக தலைமையிடம் 12 சீட்டுகளை அண்ணியார் கேட்டிருக்கிறார். டபுள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்ததால்தான் கூட்டணிக்கே ஒப்பும் கொண்டார். எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின் நேற்று நடந்த மா.செக்கள் கூட்டத்திலும், 'நமக்கு 5-6 சீட்டுனு வெளிய பேசிக்குறாங்க. அதையெல்லாம் நம்ப வேணாம். கௌரவமான இடத்தைதான் பேசி முடிச்சிருக்கோம். நம்பிக்கையா இருங்க'னு மகிழ்ச்சியா பேசியிருந்தார். குறைந்தபட்சம் 10 தொகுதியையாவது அண்ணியார் வாங்கிட்டு வந்துடுவாங்க. அதனாலதான் திமுகவும் மற்ற கட்சிகளோட கையெழுத்து போட்டுட்டு கடைசியா எங்களை கூப்பிடுறாங்க. இன்று இரவோ அல்லது நாளையோ அண்ணியார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவார்' என்கின்றனர். தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை கொடுக்க திமுக தயாராக இருப்பதாகவும், ஆனாலும் இயன்றவரை பேசி 9 இல் முடிக்க முயற்சிப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

விகடன் 24 Mar 2026 5:22 pm

விஜய் கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள்! இது தானா?

விஜய் கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள்! இது தானா?

சமயம் 24 Mar 2026 5:03 pm

திருமாவளவன் மறுபக்கம்...யாரும் பேசாத உண்மைகள்!

திருமாவளவன் மறுபக்கம்...யாரும் பேசாத உண்மைகள்!

சமயம் 24 Mar 2026 5:00 pm

Mass காட்டும் EPS -உண்மையில் அரவணைப்பது யார்_

Mass காட்டும் EPS -உண்மையில் அரவணைப்பது யார்_

சமயம் 24 Mar 2026 4:58 pm

பக்காவாக வேலை பார்க்கும் சிவகார்த்திகேயன்_

பக்காவாக வேலை பார்க்கும் சிவகார்த்திகேயன்_

சமயம் 24 Mar 2026 4:56 pm

கூட்டணி தர்மம் எங்கே_ ஏமாற்றத்தில் விசிக_

கூட்டணி தர்மம் எங்கே_ ஏமாற்றத்தில் விசிக_

சமயம் 24 Mar 2026 4:54 pm

தியேட்டர்ல சிரிச்சு என்ஜாய் பண்ணுன படம் |Actor Bala Saravanan Exclusive Interview

தியேட்டர்ல சிரிச்சு என்ஜாய் பண்ணுன படம் |Actor Bala Saravanan Exclusive Interview

சமயம் 24 Mar 2026 4:52 pm

'ஒரு அறை விட்டேன், அப்புறமும் பாலியல் தொல்லை குறைய‌லை!' - டெல்லி வரை சென்ற `நம்பர் 2'மீதான புகார்

மத்திய ஆளுங்கட்சி சார்பாக மக்களுக்குச் சொல்ல ஏதாவது கருத்து இருந்தால் முண்டியடித்துக் கொண்டு முதல் ஆளாக மீடியா முன் வந்து விடுகிறவர் அந்தப் பிரமுகர். மாநிலத்தில் இருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதங்களிலும் பங்கேற்று பேசுவார். அவர் இருக்கும் கட்சியின் நம்பர் 2 வேறு.(அக்கட்சியில் பல நம்பர் 2-க்கள் உண்டு!) இவர் மீது, சொந்த கட்சி மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறியிருக்கும் ஏடாகூடப் புகார் இந்திய தலைநகர் வரை சென்றிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் தேர்தலை மிஞ்சிய சூடாக தகிக்கிறது. ரெண்டு நாள் முன்பு 'என் திறமையைப் பயன்படுத்திக்க மாட்டேங்கிறாங்க' என் குமுறியவருடன் இருந்தவர்தான் புகாருக்கு ஆளானவர். தேசிய நீரோட்டத்தில் இணைந்தவருக்கு சேர்ந்த இடத்தில் மரியாதையும் கிடைக்கவே செய்தது. நம்பர் 2 என்கிற அளவில் பதவி தந்தார்கள். ஆனால் இருந்த இடத்துக்குப் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லையோ என இப்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது மேற்படி புகார். 'உன்னை முதன் முதல்ல பார்த்ததுல இருந்தே உன் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிடுச்சு. தனியாதான் இருக்கேன், வர முடியுமா' என சம்பந்தப்பட்ட மகளிரணி தலைவியை இரவில் அழைத்துள்ளார். அந்தத் தலைவியோ 'இரவு நேரத்தில் நான் யாரையும் சந்திப்பதில்லை' எனச் சொல்லி விட்டு போனைக் கட் செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் கட்சி வேலையாக அலுவலகம் சென்று அவரையே சந்திக்க வேண்டிய சூழல் அந்த நிர்வாகிக்கு. பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) நான்கைந்து பெண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். 'என்ன, தனியா வருவான்னு பார்த்தா படையோட வந்திருக்காளே' என யோசித்த நம்பர் 2, ஒப்புச் சப்புக்கு கொஞ்சம் நேரம் பேசி விட்டு 'அப்ப நீங்க எல்லாரும் கிளம்புங்க' எனச் சொல்லியிருக்கிறது. உடன் வந்தவர்களுடன் சேர்ந்து தலைவியும் கிளம்ப முற்பட, 'நீ எங்க போற' என அவரை மட்டும் இருக்கச் சொல்லியிருக்கிறார் அவர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருக்கையில் அமர, அருகே வந்து தன் சேட்டையை தொடங்கியிருக்கிறார் நம்பர் 2 நபர். அவ்வளவுதான், மறு நொடி கன்னம் பழுக்க ஒரு அறை. கொடுத்து விட்டு வெடுக்கென வெளியேறி விட்டார் மகளிரணி. அடி வாங்கின பிறகு சும்மா இருப்பாரா. அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் தந்து கொண்டே இருந்திருக்கிறார். 'கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துட்டு போயிட்டா மகாராணி மாதிரி இருக்கலாம். புரிஞ்சு நடந்துக்கோ' என கிடைக்கிற கேப்பிலெல்லாம் நூல் விட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் இடம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டார் அந்த பெண் நிர்வாகி. பொறுத்துப் பார்த்த நிர்வாகி, இதற்கு முன் அக்கட்சி மாநில தலைவராக இருந்தவரிடம் புகாரும் தந்திருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, முன்பு காவல் பணியிலிருந்த அந்த தலைவரும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. விளைவு, தேர்தல் நேரம் பார்த்து விஷயத்தை டெல்லிக்கு புகாராக அனுப்பி கலகத்தை தொடங்கி வைத்துவிட்டார். மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே அந்த புகாரில் இருந்தது தான். பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தப் பெண்ணிடம் நாம் பேசினோம். ''ஆமாங்க. புகார் சொன்னது நாந்தான். புகாரில் சொல்லியிருக்கும் அத்தனையும் நான் அனுபவச்சது. எனக்கு நடந்தது. ஒரு தடவை கன்னத்துல அறைஞ்சதும் திருந்திடுவார்னு பார்த்தேன். அப்படியும் திருந்தலை. கட்சிங்கிற ஒரு அமைப்புல இருக்கிறதால புகாரை முதல்ல அங்க அனுப்பி வச்சேன். இங்க இருக்கிறவங்க நடவடிக்கை எடுக்காட்டி அடுத்து அங்கதான அனுப்ப முடியும். அதான் அனுப்பியிருக்கேன். அவங்க இந்தாள் மேல என்ன நடவடிக்கை எடுக்கறாங்கங்கிறதைப் பொறுத்தே என் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க்கும்' என முடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

விகடன் 24 Mar 2026 4:34 pm

'ஒரு அறை விட்டேன், அப்புறமும் பாலியல் தொல்லை குறைய‌லை!' - டெல்லி வரை சென்ற `நம்பர் 2'மீதான புகார்

மத்திய ஆளுங்கட்சி சார்பாக மக்களுக்குச் சொல்ல ஏதாவது கருத்து இருந்தால் முண்டியடித்துக் கொண்டு முதல் ஆளாக மீடியா முன் வந்து விடுகிறவர் அந்தப் பிரமுகர். மாநிலத்தில் இருக்கும் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதங்களிலும் பங்கேற்று பேசுவார். அவர் இருக்கும் கட்சியின் நம்பர் 2 வேறு.(அக்கட்சியில் பல நம்பர் 2-க்கள் உண்டு!) இவர் மீது, சொந்த கட்சி மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறியிருக்கும் ஏடாகூடப் புகார் இந்திய தலைநகர் வரை சென்றிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் தேர்தலை மிஞ்சிய சூடாக தகிக்கிறது. ரெண்டு நாள் முன்பு 'என் திறமையைப் பயன்படுத்திக்க மாட்டேங்கிறாங்க' என் குமுறியவருடன் இருந்தவர்தான் புகாருக்கு ஆளானவர். தேசிய நீரோட்டத்தில் இணைந்தவருக்கு சேர்ந்த இடத்தில் மரியாதையும் கிடைக்கவே செய்தது. நம்பர் 2 என்கிற அளவில் பதவி தந்தார்கள். ஆனால் இருந்த இடத்துக்குப் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லையோ என இப்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது மேற்படி புகார். 'உன்னை முதன் முதல்ல பார்த்ததுல இருந்தே உன் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிடுச்சு. தனியாதான் இருக்கேன், வர முடியுமா' என சம்பந்தப்பட்ட மகளிரணி தலைவியை இரவில் அழைத்துள்ளார். அந்தத் தலைவியோ 'இரவு நேரத்தில் நான் யாரையும் சந்திப்பதில்லை' எனச் சொல்லி விட்டு போனைக் கட் செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் கட்சி வேலையாக அலுவலகம் சென்று அவரையே சந்திக்க வேண்டிய சூழல் அந்த நிர்வாகிக்கு. பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) நான்கைந்து பெண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். 'என்ன, தனியா வருவான்னு பார்த்தா படையோட வந்திருக்காளே' என யோசித்த நம்பர் 2, ஒப்புச் சப்புக்கு கொஞ்சம் நேரம் பேசி விட்டு 'அப்ப நீங்க எல்லாரும் கிளம்புங்க' எனச் சொல்லியிருக்கிறது. உடன் வந்தவர்களுடன் சேர்ந்து தலைவியும் கிளம்ப முற்பட, 'நீ எங்க போற' என அவரை மட்டும் இருக்கச் சொல்லியிருக்கிறார் அவர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருக்கையில் அமர, அருகே வந்து தன் சேட்டையை தொடங்கியிருக்கிறார் நம்பர் 2 நபர். அவ்வளவுதான், மறு நொடி கன்னம் பழுக்க ஒரு அறை. கொடுத்து விட்டு வெடுக்கென வெளியேறி விட்டார் மகளிரணி. அடி வாங்கின பிறகு சும்மா இருப்பாரா. அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் தந்து கொண்டே இருந்திருக்கிறார். 'கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துட்டு போயிட்டா மகாராணி மாதிரி இருக்கலாம். புரிஞ்சு நடந்துக்கோ' என கிடைக்கிற கேப்பிலெல்லாம் நூல் விட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் இடம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டார் அந்த பெண் நிர்வாகி. பொறுத்துப் பார்த்த நிர்வாகி, இதற்கு முன் அக்கட்சி மாநில தலைவராக இருந்தவரிடம் புகாரும் தந்திருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, முன்பு காவல் பணியிலிருந்த அந்த தலைவரும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. விளைவு, தேர்தல் நேரம் பார்த்து விஷயத்தை டெல்லிக்கு புகாராக அனுப்பி கலகத்தை தொடங்கி வைத்துவிட்டார். மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே அந்த புகாரில் இருந்தது தான். பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தப் பெண்ணிடம் நாம் பேசினோம். ''ஆமாங்க. புகார் சொன்னது நாந்தான். புகாரில் சொல்லியிருக்கும் அத்தனையும் நான் அனுபவச்சது. எனக்கு நடந்தது. ஒரு தடவை கன்னத்துல அறைஞ்சதும் திருந்திடுவார்னு பார்த்தேன். அப்படியும் திருந்தலை. கட்சிங்கிற ஒரு அமைப்புல இருக்கிறதால புகாரை முதல்ல அங்க அனுப்பி வச்சேன். இங்க இருக்கிறவங்க நடவடிக்கை எடுக்காட்டி அடுத்து அங்கதான அனுப்ப முடியும். அதான் அனுப்பியிருக்கேன். அவங்க இந்தாள் மேல என்ன நடவடிக்கை எடுக்கறாங்கங்கிறதைப் பொறுத்தே என் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க்கும்' என முடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

விகடன் 24 Mar 2026 4:34 pm

இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ... ஆங்காங்கே தென்படுகிறார்களோ... அதே அளவுக்கு தினமும் பறக்கும் படையினரை சாலைகளில் சந்தித்து வருகிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், தனிநபர் ரூ.50,000-க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பது பொது விதி. 2014-ம் ஆண்டு முதலே, ரூ.50,000 தான் லிமிட். ஆனால், 2014-ம் ஆண்டும், 2026-ம் ஆண்டும் ஒன்றா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. பணம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலையே ரூ.1 லட்சத்திற்கு மேல். வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.50,000 எடுத்து சென்றா, நகை வாங்க முடியும். நகை மட்டும் அல்ல, விஷேச வீட்டுகளில் பொருள்கள் வாங்வதற்க அதிக பணம் தேவைப்படுகிறது. அது மாதிரி, அனைத்து நேரங்களிலும் கையில் இருக்கும் பணத்திற்கு ரசீது வைத்திருக்கவும் முடியாது. இதெல்லாம் இல்லாமல், பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டால், மக்கள் அடுத்து என்ன செய்வார்கள்... எங்கே போய் அலைவார்கள்? அதனால், இன்றைய சூழலில் ரூ.50,000 என்கிற லிமிட்டை கட்டாயம் தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வரும் விவசாயிகள் என பலரும் முன்வைத்து வருகிறார்கள். மக்களே... இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... அதிக பணம் எடுத்து சென்று, நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன... எத்தனை ரூபாய் வரை பணம் எடுத்து செல்ல அனுமதிக்கலாம்.. என்பதை கமென்டில் சொல்லுங்க மக்களே. 'என்னது?' வீட்டிலேயே இருக்கும் தங்க நகைகளுக்கு மதிப்பும் இல்லை; அதனால், லாபமும் இல்லையா?|Gold

விகடன் 24 Mar 2026 3:34 pm

'மநீம-வுக்கு 2 சீட்!'சின்னத்துக்காக போராடிவரும் கமல்ஹாசன் - இறங்கி வருமா திமுக?

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 சீட் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என கமல்ஹாசனை கட்டாயப் படுத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க - ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறதென விசாரித்தோம். திமுக கூட்டணி கட்சிகள் தி.மு.க கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. காங்கிரஸுக்கு 28, வி.சி.க-வுக்கு 8, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5, ம.தி.மு.க-வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது தி.மு.க. இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.நீ.ம நிர்வாகிகள் சிலர், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் தி.மு.க கூட்டணிக்கு வந்தது மக்கள் நீதி மய்யம். அப்போது எங்கள் தலைவர் கமல் போட்டியிட ஒரேயொரு எம்.பி தொகுதி கேட்டோம். முதலில் ஒரு தொகுதி ஒதுக்க முன்வந்துள்ள தி.மு.க, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்தித்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்க தலைவர் விரும்பாத நிலையில்தான் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தமானது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரு சீட்டுகளை ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் தி.மு.க எதிர்பார்ப்பது போல் உதயசூரியன் சின்னத்தில் நிற்க எங்கள் தலைவர் ஒப்புக்கொள்ள மாட்டார் எனக் கருதுகிறோம் என்றனர். உதயநிதி, கமல்ஹாசன் ம.நீ.ம தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் பேசினோம், தி.மு.க கூட்டணியில் கூடுதல் சீட் பெறும் நோக்கமெல்லாம் எங்கள் தலைவருக்கு இல்லை. ஆனால் ஒரு தொகுதியில் நின்றால்கூட அது எங்கள் டார்ச் லைட் சின்னமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவரை பொறுத்தவரை, 'நம் கட்சியை சார்ந்த ஓரிரண்டு பேர் சட்டமன்றத்துக்குள் செல்வதைவிட நம் கட்சி சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும்' என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஒருவேளை டார்ச் லைட் சின்னத்துக்கு கடைசிவரை ஓகே சொல்லாவிட்டால் தேர்தல் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அளவுக்கு பிடிவாதமாக இருக்கிறார் எங்கள் தலைவர். முதல்வருடன் துணை முதல்வருடனும் நட்புடன் இருப்பதால் அதைவைத்து அவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வருவார் என எண்ணுகிறார்கள், ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றனர். தி.மு.க என்ன நிலைப்பாட்டில் இருக்கிறதென விசாரித்தோம், நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், மக்கள் நீதி மய்யம் உதயசூரியன் சின்னத்துக்கு ஒப்புக் கொண்டால் 3 தொகுதிகள்வரை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. ஆனால், ம.நீ.ம-வின் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். ஏற்கனவே எம்.பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தவிர்த்திருக்கிறேன் என தொடக்கம் முதலே பிடிக்கொடுக்கால் போராடி வருகிறார் கமல்ஹாசன். விஜய், கமல் தமிழ்நாடு முழுக்க அவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி, விஜய்க்கு எதிரான நட்சத்திரமாக நிறுத்த முனைவது, வருங்கால சினிமா ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் ம.நீ.ம கேட்கும் டார்ச் லைட் சின்னத்தில் நிற்க 2 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமையும் சம்மதம் தெரிவிக்கலாம் எனகிறார்கள். உதயசூரியன் ஆசிபெற்ற டார்ச் லைட் சின்னமா... டார்ச் லைட் ஆசிபெற்ற உதயசூரியன் சின்னமா.. இன்று மாலை தெரிந்துவிடும்!

விகடன் 24 Mar 2026 3:17 pm

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் தனது நாட்டு எல்லைக்குள் ஓடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஈரான் மூடி இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்கவில்லையெனில், ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டி இருந்தார். ஆனால் திடீரென ஈரானுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் மின் உற்பத்தி மையங்கள் மீது நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதலை 5 நாள்களுக்குத் தள்ளி வைத்து இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் தனது மத்திய கிழக்குத் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தனது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார். அதோடு இப்பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், தற்போது அவை மிகவும் தீவிரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்வு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் அமெரிக்காவுடன் அது போன்று பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்க பாகிஸ்தான், ஓமன் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் இவ்விவகாரத்தில் நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், மூன்றாவது நாடு மூலம் பேச மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தைக்கு இப்போது ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது. இரானின் புதிய உச்சபட்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி 'அல் அரபியா' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விகடன் 24 Mar 2026 3:17 pm