ADMK-வில் OPS தவறவிட்ட 5 வாய்ப்புகள்! | DMK Stalin | EPS | Political Pulse | Vikatan TV
ADMK-வில் OPS தவறவிட்ட 5 வாய்ப்புகள்! | DMK Stalin | EPS | Political Pulse | Vikatan TV
America Model-ஐ பின்பற்றும் Vijay? | Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP
America Model-ஐ பின்பற்றும் Vijay? | Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP
தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?
ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் விமானப் படை. கடந்த 6-ம் தேதியில் இருந்து பாகிஸ்தானில் 3 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழும் தீவிரவாதிகளே காரணம் என்று குற்றம்சாட்டி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... தாக்குதல் நடந்த இடம் Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குச் சொந்தமான ஏழு தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை உளவுத்துறை அடிப்படையிலான தகவலின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளதாவது... பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் எப்போதும் பாடுபட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில், குடிமக்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமையாக உள்ளது. இந்தப் பின்னணியில், பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தாலிபன்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள் மற்றும் ISKP-க்கு சொந்தமான ஏழு தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை உளவுத்துறை தகவல் அடிப்படையில் தேர்ந்தெடுத்து குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளோம். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன? பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைக் குறி வைத்து தாக்கியதாக கூறுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கமோ, நேற்று இரவு, பாகிஸ்தான் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் எங்கள் குடிமக்கள் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்... உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained
மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album
முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம்
`வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன்' - கமல்ஹாசன்
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது, “இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்கள் அத்தனை பேருமே தலைவர்கள். இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இதில் 70 வயதில் நான்தான் மிக இளமையான கட்சி நடத்துபவன். தமிழகத்தின் தலைவர்கள் நீங்கள் எல்லோரும். இங்கே வந்து இந்த மேடையில் என் தலைவனின் (காந்தி) பெயரை சொல்ல வந்திருக்கிறீர்கள். அவருக்கு கட்சி கிடையாது, இருக்கவும் கூடாது, அவரை எந்த கட்சியும் மொத்தமாக கையில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது, மறந்துவிடவும் கூடாது. அதனால்தான் ‘மறவோம்’ என்று நான் சொல்றேன். என் வீட்டில் காந்தியை பற்றியே பேச்சாக இருக்கும், எங்கு பார்த்தாலும் அவருடைய போட்டோ இருக்கும். அப்படி இருக்கும் போது நான் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு புறப்பட போகிறேன் எனும் போதுதான் காந்தி இறந்து விட்டார் என சொன்னார்கள். கவலையோடு ஒரு வாரம் அழுது சென்னைக்கு வந்து நகரத்தை எல்லாம் பார்த்து அதிலிருந்து சில வருடங்களில் நேருவும் இறந்துவிட்டார். எனக்கு பெரிய கவலை. நான் இப்போது இந்தியாவில் காணும் இந்த பிரிவினையை என்னுடைய சாதியிலும் கண்டேன். அதிலிருந்து மேம்பட வேண்டும் என்று புறப்பட்ட பையன் நேராக போய் சேர்ந்தது பெரியார் திடல். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இதை என் தந்தை தடுத்திருக்கலாம் அவருக்கு அந்த பலம் இருந்தது, சட்டமும் அவர் கையில் இருந்தது. அவர் வக்கீல், காந்தியினுடைய சீடர் என்பதனால் என் போக்கில் விட்டுவிட்டார். பெரியார் எங்கிருந்து வந்தார் என்று பார்த்தால் காந்தியிடமிருந்துதான் வந்திருக்கிறார், முரண்பட்டு வந்திருக்கிறார். காந்தியிடம் முரண்படுவது மகா பாவம் இல்லை. அது ஒரு பெரிய வீரமும் இல்லை, முரண்படுவது கடமை. சினிமாவில் டான்ஸ் ஆடினாலே கூட்டத்தை திரட்டி விடலாம். ஆனால் இந்த கூட்டத்தை திரட்டுவது கஷ்டம். ஏனென்றால் இவர்கள் காந்தியுடன் முரண்பட்டவர்கள், இவர்களை எப்படி ஒரு மேடையில் அமர வைப்பது? அதுதான் மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஒன்பதாவது ஆண்டில் நான் செய்திருக்கும் சிறிய சாதனை. நான் காந்தியை ஒரு போதும் மகாத்மா என்று கூப்பிட மாட்டேன். காரணம் அவரை பூஜைக்குரியவராக ஆக்கிவிட்டால் அந்த கோயிலை மூடுவதற்கு கூட வழி உண்டு. நீங்கள் வரக்கூடாது, அது எங்கள் கோயில் என்று உரிமை கொண்டாடுவதற்கு வழி உண்டு. காந்தி எங்களில் ஒருவர், என் தாத்தா, இவர்கள் தாத்தா எங்கள் குடும்பத்திற்கு மூத்தவர். அவரை நாங்கள் சாடுவோம், போற்றுவோம் வணங்குவோம். சூழல்கள் எங்களை எப்படி தாக்குகிறதோ அதற்கு ஏற்ப வீட்டில் வந்து புலம்புவோம். அந்த வீட்டில் காந்தி தாத்தா இருந்திருப்பார், என்றும் இருப்பார் என்று நான் நம்புகிறேன். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி காந்தி ஒரு மனிதர் என்னும் காலகட்டம் கடந்துவிட்டது. காந்தி இஸ் ஐடியா. ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம் , எங்காவது ஒரு துளியாவது அவர்களின் சித்தத்தில் தங்கிவிடாதா என்ற நம்பிக்கையில் தான் பேசுகிறேன். ஒவ்வொரு தடவையும் அந்த பெரிய வட்டத்தில் போய்தான் பேச வேண்டும் என்பது இல்லை... மக்கள் மத்தியில் அமர்ந்து பேசினாலும் அங்கே கேட்கும். என்னுடைய அப்பா பரமக்குடியிலிருந்து நான் புறப்பட்டு சினிமாவுக்கு வந்த பிறகு `என்றைக்காவது நீ அரசியலில் வர வேண்டும்' என்று சொன்ன போது என்னுடைய சகோதரர்கள் ‘அவனையாவது விட்டு வைங்களேன், உங்கள மாதிரி அவனும் பாழாய் போணுமா’ என்று சொன்னார்கள். நான் பாழாகவில்லை நாமாக இருக்கிறோம். காந்தியை கொன்ற மூன்று குண்டுகளையும் நிறுத்த வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. அது எப்படி முடியும் என கேட்பீர்கள். சுகாதாரம் மற்றும் கல்வி என்ற இரண்டு புல்லட்டுகளை தமிழ்நாடு தயார் செய்து விட்டது மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இது மொத்த தேசத்தில 1.4 பில்லியன் மக்கள் முட்டாள்களாக இருக்க முடியுமா? சாத்தியமா யோசித்து பாருங்கள், இல்லை என்கிறேன் நான், இருக்கிறது என்கிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் அகலும்... இல்லை என்றால் அகற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல நமது கடமையும் கூட. இது உணர்வு பூர்வமான விழா, அரசியல் விழா அல்ல, அதனால்தான் வைகோ கண்கலங்கி என் கையை குலுக்கினார். எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, இந்த மனிதர்கள் என் உறவன்றி வேறென்ன? யாருமே எங்களுக்கு எதிரி இல்லை நாங்கள் எதிர்ப்பது தனி மனிதர்களை அல்ல, தனி மனிதர்களின் அவசர சட்டங்களையும் அவசர திட்டங்களையும் சுயநல திட்டங்களையும் தான். இவற்றை எல்லாம் மாற்றுவதற்காக நாம் கஷ்டபட்டு வந்த பாதையை 15 வருடத்தில் மாற்றிவிட முடியுமா? இல்லை 25 வருடத்தில்தான் மாற்றிட முடியுமா? முடியாது என்கிறேன் நான். இந்தியாவெங்கிலும் தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாரும் கட்சி மாற வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இருங்கள் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். ஆள் மாறிவிடுவீர்கள் கட்சி காணாமல் போய்விடும். நான் கோபத்தில் பேசுவதாக நினைக்க வேண்டாம் யோசித்துதான் பேசுகிறேன். குறிப்பெடுக்க எனக்கு அம்பேத்கர் இருக்கிறார் பெரியார் இருக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எப்படி பேச வேண்டும் என பாடம் எடுக்க காந்தி இருக்கிறார். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது. அதற்கு எதிர்ப்பு குரல் இங்கிருந்து அன்றி வேறு எங்கிருந்து கேட்கும். அதை நீங்கள் மதுரை என்று எடுத்துக்கொண்டாலும் சரி மங்கம்மாள் அரண்மனை என்று எடுத்துக்கொண்டாலும் சரி காந்தி மண்டபம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி... இது நம் குரல் இது இவ்வாறாகவே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் என் கொடியை எல்லாம் கீழே வைத்துவிட்டு என் அன்பை மாத்திரம் ஏந்தி வந்திருக்கிறேன். என் கட்சிக்காரர்கள் இதற்கு இதை இப்படி நடத்த வேண்டும் அப்படி நடத்த வேண்டுமே என எல்லாவற்றையும் நடத்திவிட்டு பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்திய நாட்டை சுமக்க எத்தனை தோள்கள் இருக்கிறது பாருங்கள். அதில் எனக்கு கடை நிலை ஊழியன் பதவி கிடைத்தாலும் மிகவும் மகிழ்வேன். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி வெறும் நற்பணி கூட்டமாக வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடை ஏற்றி இருக்கிறேன். இதுதான் மேடை என்று நினைக்காதீர்கள். அதுவும் மேடைதான், நான் சொன்ன சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன். உங்களை பெரிய மனிதர்கள் அவையில் அமர வைப்பேன் என்று 40 வருடங்களுக்கு முன்னால் சொன்னேன். இதோ வந்து விட்டது, இனியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் நாம்” என்றார்
`வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன்' - கமல்ஹாசன்
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது, “இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்கள் அத்தனை பேருமே தலைவர்கள். இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இதில் 70 வயதில் நான்தான் மிக இளமையான கட்சி நடத்துபவன். தமிழகத்தின் தலைவர்கள் நீங்கள் எல்லோரும். இங்கே வந்து இந்த மேடையில் என் தலைவனின் (காந்தி) பெயரை சொல்ல வந்திருக்கிறீர்கள். அவருக்கு கட்சி கிடையாது, இருக்கவும் கூடாது, அவரை எந்த கட்சியும் மொத்தமாக கையில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது, மறந்துவிடவும் கூடாது. அதனால்தான் ‘மறவோம்’ என்று நான் சொல்றேன். என் வீட்டில் காந்தியை பற்றியே பேச்சாக இருக்கும், எங்கு பார்த்தாலும் அவருடைய போட்டோ இருக்கும். அப்படி இருக்கும் போது நான் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு புறப்பட போகிறேன் எனும் போதுதான் காந்தி இறந்து விட்டார் என சொன்னார்கள். கவலையோடு ஒரு வாரம் அழுது சென்னைக்கு வந்து நகரத்தை எல்லாம் பார்த்து அதிலிருந்து சில வருடங்களில் நேருவும் இறந்துவிட்டார். எனக்கு பெரிய கவலை. நான் இப்போது இந்தியாவில் காணும் இந்த பிரிவினையை என்னுடைய சாதியிலும் கண்டேன். அதிலிருந்து மேம்பட வேண்டும் என்று புறப்பட்ட பையன் நேராக போய் சேர்ந்தது பெரியார் திடல். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இதை என் தந்தை தடுத்திருக்கலாம் அவருக்கு அந்த பலம் இருந்தது, சட்டமும் அவர் கையில் இருந்தது. அவர் வக்கீல், காந்தியினுடைய சீடர் என்பதனால் என் போக்கில் விட்டுவிட்டார். பெரியார் எங்கிருந்து வந்தார் என்று பார்த்தால் காந்தியிடமிருந்துதான் வந்திருக்கிறார், முரண்பட்டு வந்திருக்கிறார். காந்தியிடம் முரண்படுவது மகா பாவம் இல்லை. அது ஒரு பெரிய வீரமும் இல்லை, முரண்படுவது கடமை. சினிமாவில் டான்ஸ் ஆடினாலே கூட்டத்தை திரட்டி விடலாம். ஆனால் இந்த கூட்டத்தை திரட்டுவது கஷ்டம். ஏனென்றால் இவர்கள் காந்தியுடன் முரண்பட்டவர்கள், இவர்களை எப்படி ஒரு மேடையில் அமர வைப்பது? அதுதான் மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஒன்பதாவது ஆண்டில் நான் செய்திருக்கும் சிறிய சாதனை. நான் காந்தியை ஒரு போதும் மகாத்மா என்று கூப்பிட மாட்டேன். காரணம் அவரை பூஜைக்குரியவராக ஆக்கிவிட்டால் அந்த கோயிலை மூடுவதற்கு கூட வழி உண்டு. நீங்கள் வரக்கூடாது, அது எங்கள் கோயில் என்று உரிமை கொண்டாடுவதற்கு வழி உண்டு. காந்தி எங்களில் ஒருவர், என் தாத்தா, இவர்கள் தாத்தா எங்கள் குடும்பத்திற்கு மூத்தவர். அவரை நாங்கள் சாடுவோம், போற்றுவோம் வணங்குவோம். சூழல்கள் எங்களை எப்படி தாக்குகிறதோ அதற்கு ஏற்ப வீட்டில் வந்து புலம்புவோம். அந்த வீட்டில் காந்தி தாத்தா இருந்திருப்பார், என்றும் இருப்பார் என்று நான் நம்புகிறேன். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி காந்தி ஒரு மனிதர் என்னும் காலகட்டம் கடந்துவிட்டது. காந்தி இஸ் ஐடியா. ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம் , எங்காவது ஒரு துளியாவது அவர்களின் சித்தத்தில் தங்கிவிடாதா என்ற நம்பிக்கையில் தான் பேசுகிறேன். ஒவ்வொரு தடவையும் அந்த பெரிய வட்டத்தில் போய்தான் பேச வேண்டும் என்பது இல்லை... மக்கள் மத்தியில் அமர்ந்து பேசினாலும் அங்கே கேட்கும். என்னுடைய அப்பா பரமக்குடியிலிருந்து நான் புறப்பட்டு சினிமாவுக்கு வந்த பிறகு `என்றைக்காவது நீ அரசியலில் வர வேண்டும்' என்று சொன்ன போது என்னுடைய சகோதரர்கள் ‘அவனையாவது விட்டு வைங்களேன், உங்கள மாதிரி அவனும் பாழாய் போணுமா’ என்று சொன்னார்கள். நான் பாழாகவில்லை நாமாக இருக்கிறோம். காந்தியை கொன்ற மூன்று குண்டுகளையும் நிறுத்த வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. அது எப்படி முடியும் என கேட்பீர்கள். சுகாதாரம் மற்றும் கல்வி என்ற இரண்டு புல்லட்டுகளை தமிழ்நாடு தயார் செய்து விட்டது மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இது மொத்த தேசத்தில 1.4 பில்லியன் மக்கள் முட்டாள்களாக இருக்க முடியுமா? சாத்தியமா யோசித்து பாருங்கள், இல்லை என்கிறேன் நான், இருக்கிறது என்கிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் அகலும்... இல்லை என்றால் அகற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல நமது கடமையும் கூட. இது உணர்வு பூர்வமான விழா, அரசியல் விழா அல்ல, அதனால்தான் வைகோ கண்கலங்கி என் கையை குலுக்கினார். எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, இந்த மனிதர்கள் என் உறவன்றி வேறென்ன? யாருமே எங்களுக்கு எதிரி இல்லை நாங்கள் எதிர்ப்பது தனி மனிதர்களை அல்ல, தனி மனிதர்களின் அவசர சட்டங்களையும் அவசர திட்டங்களையும் சுயநல திட்டங்களையும் தான். இவற்றை எல்லாம் மாற்றுவதற்காக நாம் கஷ்டபட்டு வந்த பாதையை 15 வருடத்தில் மாற்றிவிட முடியுமா? இல்லை 25 வருடத்தில்தான் மாற்றிட முடியுமா? முடியாது என்கிறேன் நான். இந்தியாவெங்கிலும் தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாரும் கட்சி மாற வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இருங்கள் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். ஆள் மாறிவிடுவீர்கள் கட்சி காணாமல் போய்விடும். நான் கோபத்தில் பேசுவதாக நினைக்க வேண்டாம் யோசித்துதான் பேசுகிறேன். குறிப்பெடுக்க எனக்கு அம்பேத்கர் இருக்கிறார் பெரியார் இருக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எப்படி பேச வேண்டும் என பாடம் எடுக்க காந்தி இருக்கிறார். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது. அதற்கு எதிர்ப்பு குரல் இங்கிருந்து அன்றி வேறு எங்கிருந்து கேட்கும். அதை நீங்கள் மதுரை என்று எடுத்துக்கொண்டாலும் சரி மங்கம்மாள் அரண்மனை என்று எடுத்துக்கொண்டாலும் சரி காந்தி மண்டபம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி... இது நம் குரல் இது இவ்வாறாகவே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் என் கொடியை எல்லாம் கீழே வைத்துவிட்டு என் அன்பை மாத்திரம் ஏந்தி வந்திருக்கிறேன். என் கட்சிக்காரர்கள் இதற்கு இதை இப்படி நடத்த வேண்டும் அப்படி நடத்த வேண்டுமே என எல்லாவற்றையும் நடத்திவிட்டு பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்திய நாட்டை சுமக்க எத்தனை தோள்கள் இருக்கிறது பாருங்கள். அதில் எனக்கு கடை நிலை ஊழியன் பதவி கிடைத்தாலும் மிகவும் மகிழ்வேன். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி வெறும் நற்பணி கூட்டமாக வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடை ஏற்றி இருக்கிறேன். இதுதான் மேடை என்று நினைக்காதீர்கள். அதுவும் மேடைதான், நான் சொன்ன சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன். உங்களை பெரிய மனிதர்கள் அவையில் அமர வைப்பேன் என்று 40 வருடங்களுக்கு முன்னால் சொன்னேன். இதோ வந்து விட்டது, இனியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் நாம்” என்றார்
உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட'ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார். இது குறித்து தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்... அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன். பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும். இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) - முன்னெப்போதும் இல்லாத வகையில். ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை! 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328
உலக நாடுகளின் மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட'ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?
நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார். இது குறித்து தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்... அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன். பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும். இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) - முன்னெப்போதும் இல்லாத வகையில். ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை! 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328
காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்; திருச்சி மாநாட்டில் அறிவிப்பு!
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். seeman அதன்படி, சீமான் போட்டியிடக்கூடிய தொகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டம் என்பதனால் அந்த தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கடந்த 2016 - ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலும், 2021 -ம் ஆண்டு திருவெற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் களம் காண்கின்றார். இதே போன்று, நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய முகங்களாக பார்க்கக்கூடிய இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்தியா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், 117 ஆண்களும், 117 பெண்களும் என ஆண்கள் பெண்கள் சம அளவில் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு திருநங்கைக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. crowd வில்லிவாக்கம் தொகுதியில் ரோஷினி என்ற திருநங்கை போட்டியிட உள்ளார். தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சி, கூட்டணிகள் இன்னும் தொகுதிகளையே பங்கிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களையே அறிவித்திருப்பது, மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.
காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்; திருச்சி மாநாட்டில் அறிவிப்பு!
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். seeman அதன்படி, சீமான் போட்டியிடக்கூடிய தொகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டம் என்பதனால் அந்த தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கடந்த 2016 - ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலும், 2021 -ம் ஆண்டு திருவெற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் களம் காண்கின்றார். இதே போன்று, நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய முகங்களாக பார்க்கக்கூடிய இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்தியா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், 117 ஆண்களும், 117 பெண்களும் என ஆண்கள் பெண்கள் சம அளவில் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு திருநங்கைக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. crowd வில்லிவாக்கம் தொகுதியில் ரோஷினி என்ற திருநங்கை போட்டியிட உள்ளார். தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சி, கூட்டணிகள் இன்னும் தொகுதிகளையே பங்கிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களையே அறிவித்திருப்பது, மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.
`அவர்களுக்கு காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது; கரன்சி நோட்டிலிருந்துகூட...!' - ஸ்டாலின்
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ``இன்று காலையில் இருந்து, ஐந்து, ஆறு அரசு நிகழ்ச்சிகள், மாலையில் ஒரு மிகப் பெரிய தேர்தல் களத்தில் பணியாற்றும் பாக முகவர்களின் மாநாடு, அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு. கமல்ஹாசன் அவர்களின் அழைப்பை நான் மறுக்க முடியுமா? முரசொலியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் ஆற்றிய உரையை இதுவரையில் என்னால் மறக்க முடியாது. அந்த நட்புணர்வோடுதான், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். கமல் திரைப்படத்தில் ஒரு டயலாக் பேசியிருப்பார். “மறதி – ஒரு தேசிய வியாதி” என்று, அது போன்று, காந்தியடிகளையும் மக்கள் மறந்து விடக் கூடாது என்றுதான், காந்தியின் வாழ்க்கையில், பெரிய திருப்புமுனையையும் மன மாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், ‘மறவோம்’ என்கிற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். காந்தி என்றதும், அரையாடை அணிந்து மேலே ஒரு துண்டோடு இருக்கும் எளிமையான உருவம்தான் அனைவர் மனதிலும் தோன்றும். அவ்வாறு அவர் அரையாடைக்கு மாறிய மண்தான், இந்த மதுரை மண். ம்துரையில் மறவோம் நிகழ்ச்சி இந்திய நாட்டில், காந்திக்காக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுதான். காந்தி சுடப்பட்டபோது அவர் அணிந்திருந்த, ரத்தக்கறை படிந்த வேட்டி இங்கேதான் இருக்கிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் இங்கே இருக்கிறது. காந்தியடிகளை ‘தமிழர்கள் மறவோம்’ என்பதன் அடையாளம்தான் இந்த அருங்காட்சியகம். காந்தியைப் பின்பற்றி அரசியல் களத்துக்கு வந்தவர் தந்தை பெரியார். காந்தியடிகளுடன் பல விஷயங்களில் முரண்படவும் செய்தார். ஆனால், காந்தியடிகள் ஒரு பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தந்தை பெரியார்தான், “இந்திய நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்ட வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். காந்தியடிகள், தந்தை பெரியாரையும் அனைத்து மேடைகளிலும், கமல்ஹாசன் நினைவு கூராமல் இருக்கவே மாட்டார். தன்னுடைய தந்தை, காந்தியைத் தொட்டு, அவரிடம் காலணா நிதி அளித்ததாக பெருமையுடன் சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன் ம்துரையில் மறவோம் நிகழ்ச்சி ‘ஹே ராம்’ படத்திலும், காந்தியடிகளை கொல்ல வேண்டும் என்று கிளம்புகின்ற ஒரு கதாபாத்திரம் இறுதியில் திருந்துவதை காட்டியிருப்பார். வெறுப்பரசியலை மூர்க்கமாக திணிக்கும் ஒரு கட்சி, ஒரு கொள்கை, ஒன்றியத்தில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம்முடைய நாடு இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்வுதான், இந்த நிகழ்வு. அனைத்து மாற்றங்களும் தன்னில் இருந்து உருவாக வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அதைத்தான் கமலும் சொல்கிறார். எனக்கு எழுதிய கடிதத்தில்கூட “இன்றைய இந்தியா, உலகம் எதிர்கொள்ளும் முரண்கள், தனி வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள் ஆகியவை காந்தியின் தேவையை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது” என்று கமல் குறிப்பிட்டிருந்தார். காந்தி காந்தியடிகளை மக்களுடைய மனதில் இருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என பா.ஜ.க. அரசு திட்டமிட்டு காத்து கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இப்போது, காந்தி என்கின்ற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருந்து, காந்தியடிகளின் பெயரை நீக்கியது. அடுத்து, கரன்சி நோட்டில் இருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் காந்தி. இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி, மதநல்லிணக்கத்துக்கான மகத்தான மந்திரம் காந்தி, இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. “நான் கொல்லப்பட்டாலும் கூட ராம், ரஹீம் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். இரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்” என்று சொன்னவர் காந்தி. இதனால்தான், மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பதில்லை. மதுரை காந்தி அருங்காட்சியகம். அண்மையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு முதலமைச்சரே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். நம்முடைய அரசும், உங்களைப் போன்ற தோழமை கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம். மன்ட்டோ என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறைய பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா? “முட்டாள்களே, லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதாதீர்கள். 2 லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதுங்கள்” என்ற மனம் வெதும்பி சொன்னார். அவர் சொன்னது சரிதான். மதம் பிடிக்காமல் மக்களை பக்குவப்படுத்துவதுதான் மதங்களின் வேலை. மதவெறி புகுந்தால், முதலில் இறப்பது மனிதம்தான். இதை நன்றாக உணர்ந்த காரணத்தினால்தால் வெறுப்பை புறந்தள்ளி, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது. மறவோம் நிகழ்ச்சி முதலமைச்சர் மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கின்ற பா.ஜ.க.வின் பிடியில் தமிழ்நாடு சிக்கக் கூடாது. இந்த தேர்தல், தமிழ்நாட்டிற்கும், என்.டி.ஏ-விற்குமான தேர்தல், அதில் தமிழ்நாடு வெல்லும். பா.ஜ.க. வெறுப்பு இன்ஜின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை. காந்தியடிகளின் மதநல்லிணக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி பார்வையும்தான் இந்தியாவிற்கு தேவை! அந்த அடிப்படையில்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது. சிலர் சொல்லுவார்கள், கமல் பேசுவது ‘எங்களுக்கு புரியவில்லை’ என்று, அவர்களுக்கு புரியாமல் இல்லை! ஆனால், புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். மீடியா, மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது பார்லிமென்ட் மைக்கிலும் கமல் புலம்ப வைத்துவிட்டார். மதுரையில் மறவோம் நிகழ்ச்சி அதுமட்டுமல்ல, அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், சம நீதிக்காகவும், சமூக நீதிக்காகவும் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும் என வாழ்த்துகிறேன். “அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா” என்பது சகோதரர் கமலின் பாடல் வரி... அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம், காந்தியின் கொள்கைகளை காக்க, வெல்வோம் ஒன்றாக” என்றார்.
`2016-ல் வெறும் 1.1% ; இப்போ 8.5%... தனித்தே போராடுகிறோம்!' - சீமான் பேச்சு
'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். candidaters மேலும், இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில், 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 70-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் சிறப்பான ஏற்பாடுகளாக 234 பேரும் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு, விழா மேடை முழுவதும் தமிழ் அறிஞர்கள், சங்க கால புலவர்கள், தமிழுக்காக போராடியவர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவிர விழா மேடை அரங்கு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாய சின்னம் மற்றும் நாம் தமிழர் கொடி மற்றும் மூவேந்தர்களின் கொடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மாவட்ட வாரியாக தொண்டர்கள் அமர்வதற்காக தனி தனி கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. candidaters அதோடு, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் பேசிய சீமான், “எங்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலிலிருந்து முற்று முழுதாக மாறுபட்டது. அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலோடு வந்த பிள்ளைகள் நாங்கள். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எமக்கான மூச்சுக்காற்றை நாங்களே சுவாசிப்பது போல, உணவை நாங்களே உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடிப் பெறுவது என்ற நோக்கோடு வந்தவர்கள். seeman எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல; ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு. கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல நாங்கள். அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டுப் புத்தம் புதிதாகப் புதிய ஒரு கட்டடத்தைக் கட்ட வந்த புரட்சிவாதிகள். இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை. ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை என்று இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம். கடந்த 2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம். crowd 5 -வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். மக்களை நம்பியே தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர் கூட்டம் இல்லை. லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா, இன எழுச்சியா என்று நிரூபிக்க வந்த கூட்டம். மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?. கருத்தியல் புரச்சியாளர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள். அரசியல் பெரும் படையை கட்டி எழுப்பி வருகின்றோம். எங்களுக்கான வரலாற்றை எழுத கூடியுள்ளோம் திருச்சியில். இலவசத்தில் 15,000 கோடி. அந்த இலவசத்தில் இழக்கின்ற பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்?. படிக்கும் போது பணம். படித்து முடித்தால் பணம் வராது. அவர்களுக்கு வேலையை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஆட்சி முறை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இலவசம். ஓட்டுநருக்கும், நடத்துநருக்கு சம்பளம் எப்படி?. இலவசம் வாங்கும் அம்மா கையிலே இரண்டு லட்சம் கடன் உள்ளது. இதை உணரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் தான் சிறந்த மருத்துவத்தை கொடுக்க முடியும் என்றால் அரசால் ஏன் முடியாது? தனியாரிடம் தோல்வியடைந்ததா அரசு? கடன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக எப்படி பார்க்க முடியும்? தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே கட்சி. seeman இரண்டும் ஒரே இடத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்று பயிற்சி எடுத்த கட்சி. இரண்டும் ஊழல் கட்சி. இது, திருடர்கள் முன்னேற்றம். அது, அனைத்துலக திருடர்கள் முன்னேற்றம். பா.ஜ.க, காங்கிரஸூக்கு என்ன மாற்றம் இருக்கின்றது?. எந்த இடத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.க-விற்கும் மாற்றம் இருக்கின்றது. இவர்கள் யாரோடும் சேராமல் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. மனசாட்சி வழிநடத்த செல்கின்றோம். அதனால் தான் தனியாக செல்கின்றோம். அடுத்தவன் தோள் மேல் நின்று உயரத்தை காட்டுவதை விட தனித்து நிற்கின்றோம் என்றார். அதனைத்தொடர்ந்து, மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து, இது, ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம் என்று கூறிய சீமான், ”8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம். பணமும் பதவியும் சீட்டும் நோட்டும் தான் என்றால்… நாம் தமிழர் கட்சி பணத்திற்காக இல்லை. என் இனத்திற்காக. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தன் உயிரைத் தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழிப் புரட்சி இன்னும் தொடர்கிறது. இனம் செத்துவிடக் கூடாது என்று செத்தார்கள் நமது முன்னவர்கள். வீழ்ந்த தமிழினம் எழுந்தது மறுபடியும் போரிட்டு வென்றது என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும். crowd விழுவோம் விதையாய், எழுவோம் விடுதலையாய் என்ற லட்சிய முழக்கத்தை முன்வைத்து, அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் பேசிய சீமான், ”என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா?. கண்ண தொறந்து பார்ரம்மா.. எங்க கவலைய கொஞ்சம் தீரம்மா… 10 லட்சம் கோடி கடனுல நாடு… இதுல இலவசங்கள் பெரு வெட்க கேடு… பாக்க சகிக்கல சனம் படும் பாடு… இதை வளர்ச்சினு போடுறான் போடு” என்று பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
”திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்”- கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”தமிழக முதல்வரை சந்திப்பதோ, தி.மு.க.,வில் இணைவதோ ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து, ’எம். ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று கூறியுள்ளார். இதை அவரது மனசாட்சியே ஒத்துக்கொள்ளாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் ஒரு காலமும் அவரை மன்னிக்காது. முதல்வரை சந்தித்த பன்னீர் செல்வம் ’கடந்த 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓ.பி.எஸ். இவற்றை எல்லாம் மன்னித்துதான் ஓ.பி.எஸ்-ஐ நகர்மன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் முதல்வர் பதவியை தொடர முடியாத சூழல் இருந்தபோதுகூட, ஓ.பி.எஸூ -க்கு அப்பதவியை வழங்கினார். தி.மு.க-வை எதிர்த்துதான் அ.தி.மு.க.,வை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கினார். அ.தி.மு.க.வுக்கு அரசியல் நேர் எதிரி தி.மு.க.,தான். ’தீய சக்தி’ என்ற அடைமொழியோடு தி.மு.கவை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தியவர் எம். ஜி.ஆர். அ.தி.மு.க தொண்டர்களை எம்.ஜி.ஆர்., ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ என்றுதான் அழைப்பார். அ.தி.மு.கவின் ரத்தம் இருக்கும் வரை தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு ஓ.பி.எஸ் உடலில் ஓடுவது அ.தி.மு.க.,வின் ரத்தமா? இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரைப்பற்றி நாட்டு மக்கள் இன்று தெரிந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் பேசும்போது, தி.மு.கவில் இருந்தவர்கள் மற்றும் அங்கு பலன் பெற்றவர்கள் கூட அப்படி பேசியிருக்க மாட்டார்கள். கடம்பூர் ராஜூ ’பராசக்தி’ திரைப்படத்தைப் பற்றி அன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன நேரத்தில், அந்த பராசக்தி படத்தின் வசன புத்தகத்தை என்றும் வைத்திருப்பேன், என்னுடைய தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என்று சொன்ன நேரத்திலே, அன்றே அவர் தி.மு.கவில் சேர்ந்திருக்க வேண்டும். காலம் கடந்து சென்றிருக்கிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவு நம்பிக்கை துரோகமாக இந்த இயக்கத்தில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எந்த கட்சியாலும் அ.தி.மு.க வின் வாக்கு வங்கி பாதிக்காது. இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள், ஒரு இலையை எம்.ஜி.ஆராகவும், மற்றொரு இலையை ஜெயலலிதாவாகவும் பார்ப்பார்கள். வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். த.வெ.கவைப் பார்த்து தி.மு.க.,தான் பயப்படுகிறது. அதற்காகத்தான் இருக்கிற கட்சி, போன கட்சி, வந்த கட்சி என இடம் எல்லோரையும் சேர்த்து தி.மு.க ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது. ஓ.பி.எஸ்- ஸ்டாலின் ஓவர் லக்கேஜ் ஏற்றிய வண்டி ஓடாது. மனம் வெதும்பிதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கே பயணிக்கிறார். இந்த நிலையில்தான், தே.மு.தி.க இணைந்துள்ளது. ஆற்றில் தத்தளித்து மூழ்கின்றவர்களை காப்பாற்றி மூழ்குவதைப் போலத்தான் தி.மு.க கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்” என்றார்.
NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை முடித்தவர்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். பர்ஹானா பாத்திமா நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களை தாண்டி, நடிகர் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
NTK: 234 வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் போட்டியிடும் சீமான்!
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள் 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் அனைவரும் பட்டப் படிப்பை முடித்தவர்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். பர்ஹானா பாத்திமா நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களை தாண்டி, நடிகர் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
NTK: தேர்தல் அரசியலில்... இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல - திருச்சி மாநாட்டில் சீமான் உரை
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் - பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சாதிக்காக, சாமிக்காக, மதத்துக்காக கூடிய தமிழன் தன் மொழிக்காகக் கூடியிருப்பது இங்குதான். நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பதுதான் அரசியல். அது ஒரு வாழ்வியல். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றமல்ல, ஆட்சி முறை மாற்றம் எங்கள் இலக்கு. அரசியல் என்பது இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. விளம்பர அரசியல் இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப் போதை, இயற்கை வளக் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுப்பதே எங்கள் கனவு. கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் என்ற பெருமை மிகு வாழ்வை வழங்கும் ஆட்சியே எங்கள் இலக்கு. மொழி வளம், கலை, பண்பாடு ஆகிய எல்லாவற்றையும் காப்பது இது எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ்த் தேசிய அரசியல். TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.! - வெற்றி விழாவில் சீமான் ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து தனித்து நின்று, தோற்றும் வளர்ந்து வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இல்லை. இங்கு கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக மாறிவிட்டது. ஒரு மொழி சிதைந்து அழிந்தால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிட முடியும். பயிற்று மொழி, பாட மொழியாகி, விருப்ப மொழியாகி சிதைந்துவிட்டது. தமிழன் ஆளும்போதுதான் தமிழ் மீட்சி ஏற்படும். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தவன் மொழி எப்படி அறிவாகும் என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை... நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் நாம் இவர்களைப் பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. நாம் செத்தாலும் பரவாயில்லை நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவர்கள். அதற்காகதான் அறிவாயுதம் ஏந்திக் களத்துக்கு வந்திருக்கிறோம். இந்தித் திணிப்பால் நம் பாட்டன்கள் உயிர் கொடுத்தார்கள். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, வரலாறு தெரியாதவன் எழ வாய்ப்பில்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களின் வரலாற்றை எழுதுவார்கள். நம்முடைய 5,000 ஆயிரம் ஆண்டின் அரசியல் வரலாறு என்ன... நமக்குத் தெரியுமா? ஆனால், திராவிட இனத்தின், ஈ.வெ.ரா தொடங்கி உதயநிதி வரைக்குமான 100 ஆண்டு அரசியல் வரலாறுதான் நம் வரலாறு எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். விழிப்புணர்வுதான் விடுதலையின் முதல் படி. அரிசி, பருப்பு, வேட்டி, சேலை எல்லாம் இலவசம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள் என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனி தங்கும் விடுதி இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தனித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது என்றால் இதில் யார் சமூக நீதியைக் காப்பது? நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் இந்தக் கடன் வாங்கி செய்யப்படும் செலவுக்கு மக்கள் வரியும், மண் வளமும்தான் அடகு வைக்கப்படுகிறது. அதிமுக - திமுக இரண்டும் தனித்தனிக் கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி திருடுவது என்பதை ஒரே இடத்தில் கற்ற இரண்டும் ஒரே கட்சிதான். இந்த இரண்டு கட்சிக்கும் எந்த இடத்தில் வித்தியாசம் இருக்கிறது? அதே போலதான், பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிகளும். இரண்டின் பொருளாதாரக் கொள்கை, பாதுகாப்புக்கொள்கை என எல்லாமே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் நிற்கும். சட்டமன்றத் தேர்தல் என்றால் அந்த இரண்டு கட்சிகளும் இந்த இரண்டுக் கட்சிகளுக்குப் பின்னால் வரும். அவ்வளவுதான் இவர்களின் அரசியல். எனப் பேசிக்கொண்டிருக்கிறார்... மேலதிக தகவல்கள் இங்கு பதிவேற்றப்படும்... திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்' மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos
NTK: தேர்தல் அரசியலில்... இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல - திருச்சி மாநாட்டில் சீமான் உரை
'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் - பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சாதிக்காக, சாமிக்காக, மதத்துக்காக கூடிய தமிழன் தன் மொழிக்காகக் கூடியிருப்பது இங்குதான். நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பதுதான் அரசியல். அது ஒரு வாழ்வியல். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றமல்ல, ஆட்சி முறை மாற்றம் எங்கள் இலக்கு. அரசியல் என்பது இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. விளம்பர அரசியல் இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப் போதை, இயற்கை வளக் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுப்பதே எங்கள் கனவு. கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் என்ற பெருமை மிகு வாழ்வை வழங்கும் ஆட்சியே எங்கள் இலக்கு. மொழி வளம், கலை, பண்பாடு ஆகிய எல்லாவற்றையும் காப்பது இது எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ்த் தேசிய அரசியல். TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.! - வெற்றி விழாவில் சீமான் ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து தனித்து நின்று, தோற்றும் வளர்ந்து வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இல்லை. இங்கு கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக மாறிவிட்டது. ஒரு மொழி சிதைந்து அழிந்தால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிட முடியும். பயிற்று மொழி, பாட மொழியாகி, விருப்ப மொழியாகி சிதைந்துவிட்டது. தமிழன் ஆளும்போதுதான் தமிழ் மீட்சி ஏற்படும். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தவன் மொழி எப்படி அறிவாகும் என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை... நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் நாம் இவர்களைப் பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. நாம் செத்தாலும் பரவாயில்லை நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவர்கள். அதற்காகதான் அறிவாயுதம் ஏந்திக் களத்துக்கு வந்திருக்கிறோம். இந்தித் திணிப்பால் நம் பாட்டன்கள் உயிர் கொடுத்தார்கள். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, வரலாறு தெரியாதவன் எழ வாய்ப்பில்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களின் வரலாற்றை எழுதுவார்கள். நம்முடைய 5,000 ஆயிரம் ஆண்டின் அரசியல் வரலாறு என்ன... நமக்குத் தெரியுமா? ஆனால், திராவிட இனத்தின், ஈ.வெ.ரா தொடங்கி உதயநிதி வரைக்குமான 100 ஆண்டு அரசியல் வரலாறுதான் நம் வரலாறு எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். விழிப்புணர்வுதான் விடுதலையின் முதல் படி. அரிசி, பருப்பு, வேட்டி, சேலை எல்லாம் இலவசம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள் என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனி தங்கும் விடுதி இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தனித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது என்றால் இதில் யார் சமூக நீதியைக் காப்பது? நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான் இந்தக் கடன் வாங்கி செய்யப்படும் செலவுக்கு மக்கள் வரியும், மண் வளமும்தான் அடகு வைக்கப்படுகிறது. அதிமுக - திமுக இரண்டும் தனித்தனிக் கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி திருடுவது என்பதை ஒரே இடத்தில் கற்ற இரண்டும் ஒரே கட்சிதான். இந்த இரண்டு கட்சிக்கும் எந்த இடத்தில் வித்தியாசம் இருக்கிறது? அதே போலதான், பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிகளும். இரண்டின் பொருளாதாரக் கொள்கை, பாதுகாப்புக்கொள்கை என எல்லாமே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் நிற்கும். சட்டமன்றத் தேர்தல் என்றால் அந்த இரண்டு கட்சிகளும் இந்த இரண்டுக் கட்சிகளுக்குப் பின்னால் வரும். அவ்வளவுதான் இவர்களின் அரசியல். எனப் பேசிக்கொண்டிருக்கிறார்... மேலதிக தகவல்கள் இங்கு பதிவேற்றப்படும்... திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்' மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின்'மாநாடு; குவிந்த தொண்டர்கள் | Photos
`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்
”ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்” - டிடிவி தினகரன் காட்டம்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எம்.எல்.ஏ. ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியது, தி.மு.க.வில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்குக் கலங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதை கோடானுகோடி தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்ற வேண்டும் என இன்னொரு கட்சிக்குக் கூட செல்லலாம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக்கிய கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக, 2017ல் தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் நண்பர் ஓ.பி.எஸ். டி.டி.வி.தினகரன் இருப்பினும், ஓ.பி.எஸ்ஸைப் பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, அண்ணன் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி துணை முதல்வராகக் கொண்டு வந்தார். இன்றைக்கு பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யும் போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஓ.பி.எஸ், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார். அவர் தி.மு.க-வில் சேரட்டும், பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். ஓ.பி.எஸ், ஐயப்பன் இருவரும் பேசியதை, துரியோதன கும்பல், முதல்வர் கைத்தட்டி ரசித்து புன்முறுவலாக இருந்தார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது. `டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி, பணநாயகத்தால் எப்படியாவது வென்றுவிடலாம் என நினைத்தவர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை பெற்று, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்ட பிறகு தி.மு.க அச்சமடைந்து அவசரக் கதியில் ரூ.5,000 கொடுத்துள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வளர்ச்சி நிதி ரூ. 11,000 கோடியை மாற்றியுள்ளனர். 50 ஆயிரம் அல்ல, வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. உறுதியாக தமிழக மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள். ஓபிஎஸ் இந்தப் பயத்தினால்தான் கேச்சர்ஸ் போல பல கட்சிகளில் இருந்து தி.மு.க-வுக்குப் பிடித்து வருகின்றனர். இதை அரசியல் ராஜதந்திரம் எனப் பலரும் பேசுகிறார்கள். பணநாயகத்திற்கான வெற்றியே தவிர பொதுநலனுக்கான வெற்றி அல்ல. ஓ.பி.எஸ் தன்னை தர்மராக நினைத்து 1.0 எனத் தர்மயுத்தம் நடத்தினார். இதை குருமூர்த்தி சொன்னதால்தான் செய்தேன் என்றார். இதில், சுயபுத்தி இல்லை எனத் தெரிகிறது, தர்மயுத்தம் 2.0-வை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் தங்கபாண்டியன் சொன்னதால் தொடங்கியதாக ஓ.பி.எஸ். கூறினார். தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை. இது ஓ.பி.எஸ்-க்கு நல்ல பாடமாகும். தர்மயுத்தம் தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும். துரியோதரன் கூட்டத்தில், ஓ.பி.எஸ் சென்று சேர்கிறார்கள். ``ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்; ஏன்னா.!’’ - மணி சங்கர் அய்யர் அதிரடி சட்டமன்ற, ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஒரணியில் இணைந்து, எங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, ஜெயலலிதாவின் ஆட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என உள்ளோம். தங்களுக்கு பதவி இல்லை என்பதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவேன் எனச் சொன்னவர்கள் எல்லாம் திடீரெனக் கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இன்னும் டம்மியாக சிலர் தி.மு.க-வுக்குச் சேவை செய்யவும் கிளம்பிவிட்டனர். டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் எனக் கூறியவர்கள் எல்லோரும் தி.மு.க.வின் ஏஜென்ட்களாகச் செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது. ஒரு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆறு மாதங்கள் ஆகும்; மூன்று மாதங்களில் முடியாது. எனவே யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம். இன்னொரு கட்சியில் இருந்து ஆட்களைப் பிடித்து வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவது விந்தையாகும். ஓ.பி.எஸ். பரதனாகக் காட்டினார்; இன்னும் சிலரின் சுயரூபம் விரைவில் வெளிப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேசவில்லை. எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குச் செல்வார்கள். கஞ்சா, ஊழல் புகழ் தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்து வருகிறார். போலீஸார் கஞ்சா விற்கிறார்கள், வெளிநாட்டிலிருந்து குண்டு வைப்பது போல ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் தி.மு.க-வின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வழக்கில் வரும் என்பதால் அமைச்சர் நேருவைப் பாதுகாக்க நினைக்கிறார்கள் என்றார். ”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ கூட எடப்பாடி கண்டுக்கல - தவெகவில் இணைந்த தனபாலின் மகன் வேதனை
அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் உட்பட மாற்றுக்கட்சியினர் சிலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கின்றனர். தவெகவில் இணைந்தவர்கள் தவெகவில் இணைந்தவர்களின் பட்டியல் இங்கே: லோகேஷ் (முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன்) கேத்ரின் எழில் மலை (தலித் எழில்மலையின் மகள்) சக்கரவர்த்தி (இமானுவேல் சேகரனின் பேரன்) அசோக் - ரஜினி ரசிகர் மன்றம் மா.செ தி.நகர் பாபுஜி கௌதம் - அதிமுக தனபாலின் மகன் லோகேஷ் பேசுகையில், தந்தையின் நிர்பந்தத்தால்தான் இவ்வளவு நாள் அதிமுகவில் இருந்தேன். கட்சிக்குள் எங்கள் குடும்பத்துக்கெனப் பெரும் மனவருத்தம் இருந்தது. ஜூலை மாதத்தில் என்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எடப்பாடி உட்பட கட்சியிலிருந்து யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. அப்பா ஒரு சீனியர் என்கிற மதிப்பே இல்லை. அதிமுக ஒரு நான்கைந்து பேருக்கான கட்சியாக மாறிவிட்டது. நிறைய பேர் இதேபோல மனவருத்தத்தில் இருக்கிறார்கள். விஜய்யுடன் லோகேஷ் என்னுடைய அப்பா இங்கே வரமாட்டார். அவர் அதிமுகவின் விசுவாசி. நேற்றுதான் தவெகவில் இணைய அப்பாவின் சம்மதத்தைப் பெற்றேன். எங்களை முதுகில் குத்தினார்கள். எங்களுக்கு நிறைய மனக்கசப்புகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் வெளியில் பேச முடியாது என்றார். விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்
பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. அதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு ஸ்டால் அமைத்து, தங்கள் தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், `ஓரியன் என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் மிக்கது' என்றார். அந்தப் பேட்டி வைரலான நிலையில், அது தங்கள் நாட்டின் தயாரிப்பு என்றும் சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்றும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலக அரங்கில் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதன் தொடர்ச்சியாக ஏ.ஐ மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கில் சட்டையைக் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது. 'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. அதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு ஸ்டால் அமைத்து, தங்கள் தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், `ஓரியன் என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் மிக்கது' என்றார். அந்தப் பேட்டி வைரலான நிலையில், அது தங்கள் நாட்டின் தயாரிப்பு என்றும் சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்றும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலக அரங்கில் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதன் தொடர்ச்சியாக ஏ.ஐ மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கில் சட்டையைக் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது. 'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா
Trump Tariff: வரியை ரத்து செய்த US Supreme Court - Indiaவுக்கு எவ்வளவு வரி? | Decode | Vikatan
Trump Tariff: வரியை ரத்து செய்த US Supreme Court - Indiaவுக்கு எவ்வளவு வரி? | Decode | Vikatan
Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!
SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை ஸ்மார்ட் (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளை மாற்றி, தரவு (Data) மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் கையாள்வதாகும். இந்த அமைப்பில் அரசு நீர் வாரியங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உறுப்பினராக இணையமுடியும். அதன் அடிப்படையில், 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவில் பெங்களூரு நீர் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெங்களூரு நகரின் குடிநீர் மேலாண்மையில் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் புகுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த (Data-driven) நவீனத் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேசக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில், இந்தியா என 6 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும், இந்த அமைப்பின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே இந்திய அதிகாரி என்ற சிறப்பையும் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெற்றிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கும், 'பிராண்ட் பெங்களூரு' (Brand Bengaluru) தொலைநோக்குத் திட்டத்திற்கும் எனது நன்றி. மேலும், பெங்களூருவின் தொழில்நுட்பக் குழுவின் கடின உழைப்பிற்கே இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ராம் பிரசாத் மனோகருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள BWSSB தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள இத்தருணம், கர்நாடக மாநிலத்திற்குப் பெருமிதமான ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அடிப்படையிலான நீர் மேலாண்மையில் பெங்களூருவின் முன்னோடி முயற்சிகளுக்கும், நிலையான நகர்ப்புற நிர்வாகத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உலகளாவிய நீர் மேலாண்மைப் புதுமைகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ``ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் சர்வதேச மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெங்களூரு நீர் வாரியத் (BWSSB) தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் @PrasathIas அவர்களுக்கு வாழ்த்துகள். தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் நமது நீர் மேலாண்மை முறைகளை நவீனப்படுத்தி வரும் 'பிராண்ட் பெங்களூரு' (Brand Bengaluru) திட்டத்திற்கு இது ஒரு பெருமிதமான தருணம். 'ஸ்மார்ட்' நீர் மேலாண்மையின் உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் இப்போது நமது நகரமும் தனது பங்களிப்பை வழங்குகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். `ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரியானால்' - தன் புத்தகம் குறித்து ராம் பிரசாத் மனோகர் IAS
கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனுமான அமிர்தத்தின் பேத்தி இலக்கியா - டாக்டர். கிரிதரா திருமண நிச்சயதார்த்தம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வர் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்து உறவுகள் அனைவரும் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் மருமகனும் கலைஞர் தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான அமிர்தம் - வசந்தா தம்பதியின் மகள் வழிப் பேத்தி இலக்கியா. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் உயரதிகாரியாக இருக்கும் சதீஷ்குமாரின் மகள். இவருக்கு டாக்டர் கிரிதரா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்து அது இரு வீட்டுத் தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட, பெரியவர்கள் சம்மதத்துடன் நாளை நடக்கவிருக்கிறது நிச்சயதார்த்த நிகழ்ச்சி. ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நாளை மாலை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட கலைஞர் கருணாநிதி குடும்ப உறவுகள் எல்லோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமிர்தம் மீது எப்போதுமே தனிப் பிரியம் உண்டு. 'அப்பாவிடம் கூட அடி வாங்கியது கிடையாது, ஆனால் அமிர்தம் மாமாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அதனால் எப்போதும் அவரிடம் ஒரு பயம் உண்டு. அந்தளவுக்கு கண்டிப்போடு வளர்த்தவர்' என அமிர்தம் குறித்து அவர் முன்பொருமுறை அவர் பேசியது நினைவிருக்கலாம். இலக்கியா - கிரிதரா ஜோடியின் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்கிறார்கள்.
'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய். TVK Vijay - தவெக விஜய் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவற்றுக்கு முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களையும் இணை கண்காணிப்பாளர்களையும் நியமித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது பெரம்பூரில் போட்டியிடலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் விஜய்யை தவிர்த்து கட்சியின் முக்கிய முகங்கள் சிலரும் சென்னையில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கியஸ்தர்கள் களமிறங்கப்போகும் ஏரியா என்பதால் இந்தத் தொகுதிகளுக்கான பொறுப்பு ஆதவ் அர்ஜூனுக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர். தேர்தல் பொறுப்பு அதேமாதிரி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் என கொங்கில் ஒரு பகுதியும் அதனுடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி சேர்த்து செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமாபுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளராக ஆனந்த் மற்றும் ஆதவோடு இணைந்து செங்கோட்டையன் செயல்படுவாராயினும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் இங்கே செங்கோட்டையன் அதிக கவனம் செலுத்துவார் என்கின்றனர். சேலம் அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜின் சொந்த ஊர். கடந்த வாரத்தில் விஜய் சேலம் சென்றிருந்த போது ஆனந்த், செங்கோட்டையன் உட்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அருண் ராஜ் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்திருந்தார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்த போதும் கொங்கு மண்டலத்தோடு சேர்த்து சேலம் பொறுப்பையும் அவருக்கு கொடுக்காமல் வைத்திருந்தனர். காரணம் அருண் ராஜ். அவர் கொங்கில் தனக்கும் ஒரு பிடி வேண்டுமென எதிர்பார்த்தார். விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு வேண்டியதும் இப்போது கிடைத்திருக்கிறது. சேலம் + நாமக்கல் இரண்டு மாவட்டங்களும் அருண் ராஜூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமக்கலில் உள்ள திருச்செங்கோட்டில் அருண் ராஜ் போட்டியிடப் போவதும் குறிப்பிடத்தக்கது. TVK Vijay சத்யபாமாவுக்கு 6 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக அதிகமாக 5 மாவட்டங்களை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்கள் இவரின் கீழ் வருகிறது. முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், டெல்டாவில் கணிசமாக இருக்கும் அந்த சமூகத்தினரை கவரும் வகையில் கு.ப.கிருஷ்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் வழங்கப்படுகிறது. சி.டி.ஆர் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடலாமா எனும் ஐடியாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் கண்காணிப்பாளர்களை நியமித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தென் மாவட்டங்கள் தவிர்த்து 28 மாவட்டங்களுக்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கும் விஜய், 10 தென்மாவட்டங்களுக்கு 5 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியதை தாண்டி தென் மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடு பெரிதாக இல்லை என்பதால் அதிகமான பொறுப்பாளர்களை நியமித்திருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். Aadhav Arjuna இந்தப் பட்டியல் தயாரானவுடனேயே கட்சிக்குள் ஒருவித புகைச்சலும் எழுந்திருக்கிறது. முதன்மைப் பொறுப்பாளர் பட்டியலிலும் தன்னை வைத்து வட மாவட்டங்களையும் கையில் கொடுத்திருப்பதால் ஆதவ் அர்ஜூனா தரப்பு செம குஷியாம். ஆனால் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை. அதேமாதிரி, கட்சிக்காக ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் அருண் ராஜூக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்படாமல் இரண்டு மாவட்டங்களில் அடக்கியதில் அவரும் கொஞ்சம் அப்செட் என்கின்றனர். மேலும், தென் மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பை வழங்காமல் திடீரென கட்சிக்குள் வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சில மா.செக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். Loading…
'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய். TVK Vijay - தவெக விஜய் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவற்றுக்கு முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களையும் இணை கண்காணிப்பாளர்களையும் நியமித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது பெரம்பூரில் போட்டியிடலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் விஜய்யை தவிர்த்து கட்சியின் முக்கிய முகங்கள் சிலரும் சென்னையில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கியஸ்தர்கள் களமிறங்கப்போகும் ஏரியா என்பதால் இந்தத் தொகுதிகளுக்கான பொறுப்பு ஆதவ் அர்ஜூனுக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர். தேர்தல் பொறுப்பு அதேமாதிரி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் என கொங்கில் ஒரு பகுதியும் அதனுடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி சேர்த்து செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமாபுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளராக ஆனந்த் மற்றும் ஆதவோடு இணைந்து செங்கோட்டையன் செயல்படுவாராயினும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் இங்கே செங்கோட்டையன் அதிக கவனம் செலுத்துவார் என்கின்றனர். சேலம் அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜின் சொந்த ஊர். கடந்த வாரத்தில் விஜய் சேலம் சென்றிருந்த போது ஆனந்த், செங்கோட்டையன் உட்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அருண் ராஜ் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்திருந்தார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்த போதும் கொங்கு மண்டலத்தோடு சேர்த்து சேலம் பொறுப்பையும் அவருக்கு கொடுக்காமல் வைத்திருந்தனர். காரணம் அருண் ராஜ். அவர் கொங்கில் தனக்கும் ஒரு பிடி வேண்டுமென எதிர்பார்த்தார். விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு வேண்டியதும் இப்போது கிடைத்திருக்கிறது. சேலம் + நாமக்கல் இரண்டு மாவட்டங்களும் அருண் ராஜூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமக்கலில் உள்ள திருச்செங்கோட்டில் அருண் ராஜ் போட்டியிடப் போவதும் குறிப்பிடத்தக்கது. TVK Vijay சத்யபாமாவுக்கு 6 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக அதிகமாக 5 மாவட்டங்களை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்கள் இவரின் கீழ் வருகிறது. முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், டெல்டாவில் கணிசமாக இருக்கும் அந்த சமூகத்தினரை கவரும் வகையில் கு.ப.கிருஷ்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் வழங்கப்படுகிறது. சி.டி.ஆர் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடலாமா எனும் ஐடியாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் கண்காணிப்பாளர்களை நியமித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தென் மாவட்டங்கள் தவிர்த்து 28 மாவட்டங்களுக்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கும் விஜய், 10 தென்மாவட்டங்களுக்கு 5 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியதை தாண்டி தென் மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடு பெரிதாக இல்லை என்பதால் அதிகமான பொறுப்பாளர்களை நியமித்திருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். Aadhav Arjuna இந்தப் பட்டியல் தயாரானவுடனேயே கட்சிக்குள் ஒருவித புகைச்சலும் எழுந்திருக்கிறது. முதன்மைப் பொறுப்பாளர் பட்டியலிலும் தன்னை வைத்து வட மாவட்டங்களையும் கையில் கொடுத்திருப்பதால் ஆதவ் அர்ஜூனா தரப்பு செம குஷியாம். ஆனால் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை. அதேமாதிரி, கட்சிக்காக ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் அருண் ராஜூக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்படாமல் இரண்டு மாவட்டங்களில் அடக்கியதில் அவரும் கொஞ்சம் அப்செட் என்கின்றனர். மேலும், தென் மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பை வழங்காமல் திடீரென கட்சிக்குள் வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சில மா.செக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். Loading…
NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்'என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக 2017-18 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்தியத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CAG) ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவை இந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையில், `தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலும், ராஜஸ்தானிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை இயக்கி வரும் என்.எல்.சி நிறுவனம், உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றிச் செயல்பட்டது முதல், அனல்மின் நிலையங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியது வரை பல விதிமீறல்களைச் செய்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. என்.எல்.சி 'சிஏஜி அறிக்கையில் என்னென்ன விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன' என்ற கேள்வியுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர ராஜனைத் தொடர்புகொண்டோம். இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையை விரிவாகப் பேசத் தொடங்கிய சுந்தர ராஜன், ``நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்கரிலும் இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2017 -18 முதல் 2022 -23 ஆண்டுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை சிஏஜி ஆய்வு செய்து, அந்த அறிக்கையை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது சிஏஜி. 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், `1994-ம் ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற அனைத்துத் திட்டங்களுக்கும், 2006இல் வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் மீண்டும் அனுமதி பெற வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. NLC: வாரக்கணக்கில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டம் - ஜீவா தொழிற்சங்கக்கோரிக்கைகள் நிறைவேறுமா?! என்.எல்.சி என்.எல்.சி-யின் சுரங்கம்-II 1994-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் (EIA) கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. அதனால், மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், என்.எல்.சி. நிறுவனம் அந்த அனுமதியைப் பெறவில்லை. இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டு, 2023 செப்டம்பர் மாதம்தான் என்.எல்.சி-யின் விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது. 2006-2016 வரை அனுமதி பெறாமலே இந்த நிறுவனம் இயங்கியிருக்கிறது. சுரங்கம்-I-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள்படி, சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்படும் மண், பாறை உள்ளிட்டவற்றை 20 மீட்டர் உயரத்திற்கு 28 டிகிரி சரிவு இருக்கும்படியாகத்தான் கொட்ட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக 50 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டிருக்கிறது. அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்த மண் குவியல் சரிந்து விழும் அபாயமிருப்பதாக சிஏஜி குறிப்பிட்டிருக்கிறது. அதே போல, சுரங்கம் II-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின்படி கொட்டப்படும் மண் மற்றும் பாறைகளின் உயரம் 65 மீட்டர் மற்றும் 28 டிகிரி சரிவு என்கிற அளவைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிபந்தனைக்கு மாறாக 120 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து அருகிலுள்ள கால்வாய் மற்றும் விவசாய நிலங்களை மூடியிருக்கிறது. என்.எல்.சி NLC விவகாரம்: வேதனை தெரிவித்த நீதிபதி... விளைநிலங்களில் தொடரும் விரிவாக்கப் பணிகள் - நடப்பது என்ன?! 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் என்.எல்.சி நிறுவனத்தின் அலட்சியத்தால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்துள்ளன. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு ரூ. 2.18 கோடி அளவிலான இழப்பீட்டை என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. சுரங்கங்களில் நிலத்தைத் தோண்டவும், நிலக்கரியை அள்ளவும், கொண்டு செல்லவும் பெரிய அளவிலான சிறப்புச் சுரங்க இயந்திரங்கள் (Specialised Mining Equipment – SME) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 1,00,000 முதல் 1,37,500 மணி வேலை நேரங்கள்தான். காலாவதியான இயந்திரங்களைப் புத்துயிராக்கம் செய்து, கூடுதலாக 15 ஆண்டுகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என என்.எல்.சி நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. ஆனால், மொத்தமுள்ள 72 SME இயந்திரங்களில் 26 SME இயந்திரங்கள் எவ்வளவு மணிநேரம் பயன்படுத்தப்பட்டன என்கிற கணக்கே பராமரிக்கப்படவில்லை. என்.எல்.சி மேலும் கணக்குகள் பராமரிக்கப்பட்ட 46 SME இயந்திரங்களில் 15 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பும் புத்துயிராக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பு 11 ஆண்டுகள் கழித்தே புத்துயிராக்கம் செய்யப்பட்டுள்ளன. 4 SME இயந்திரங்கள் காலாவதியான பின்னர் புத்துயிராக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1961 மற்றும் 1966 இடைப்பட்ட காலத்தில் 2 SME இயந்திரங்களுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வாங்கப்பட்ட பின்னரும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. காலாவதியான இயந்திரங்களால் என்.எல்.சி சுரங்கங்களில் பலமுறை விபத்துகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு சுரங்கப் பாதுகாப்புத் தலைவர் நடத்திய ஆய்வில் 'முறையாகப் பராமரிக்கப்படாத இயந்திரங்களால்தான் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தன' எனத் தெரியவந்தது. 12 காலாவதியான இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு ஆய்வே நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், என்.எல்.சி. நிறுவனத்தால் சுரங்கம் தோண்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட 12,835 ஹெக்டரில் 9,180 ஹெக்டர் நிலத்தை மட்டுமே என்.எல்.சி. கையகப்படுத்தியுள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி இதில் 5,880.34 ஹெக்டர் நிலத்தைத் தோண்டிவிட்டது. 3,253.47 ஹெக்டர் நிலம் மண் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 46.19 ஹெக்டர் நிலம் மட்டுமே இன்னும் தோண்டப்படாமல் உள்ளது. NLC: 25,000 ஏக்கர் கையகம்: என்.எல்.சி-யால் என்னென்ன பிரச்னைகள்? - போராடும் மக்கள் சொல்வதென்ன?! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் இன்னும் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல் கிடைக்கின்றன. ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு நிலம் வழங்க சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நெய்வேலியில் செயல்படும் மூன்று அனல்மின் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகளால் அவற்றை முழு உற்பத்தித் திறனுக்கு இயக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக ரூ. 2,353.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மூன்று அனல்மின் நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக மட்டும் 6 ஆண்டுகளில் 742 முறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 14,538.66 MU மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் 2001, 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 4 தீ விபத்துகள் நடந்தன. 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விபத்துகளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 'அதிக வெப்பமான லிக்னைட் தூசுகளை உரிய முறையில் அகற்றாமல் விட்டதுதான் தீ விபத்துக்குக் காரணம்' என சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக லிக்னைட் தூசுகளை அகற்றி வந்திருந்தால் இவ்விபத்துகளைத் தடுத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்த விபத்துகள். என்.எல்.சி ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் அலட்சியத்துடன் செயல்படக் கூடாதோ அப்படியெல்லாம் செயல்பட்டு வந்துள்ளது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனத்துக்குத் தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகள், எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். விதிமீறல் செயல்பாடுகளால் சுற்றியுள்ள கிராமங்களின் மண்வளத்தையும் நீர்வளத்தையும் கெடுத்து மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் என்.எல்.சி. மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்
`தனியாக கட்சி துவக்கலாமா?'ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். மூத்த நிர்வாகிகள் சிலர் தனி கட்சி யோசனையில் இருப்பதாக செய்திகள் கசிய காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் கடந்த 17-ம் தேதி அன்று நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “தி.மு.க -வுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட கூட்டணி உறவை கொண்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு மட்டுமே உள்ளது. இங்கிருக்கும் நபர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது” எச்சரித்தார் காங்.பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். கே.சி.வேணுகோபால் இந்த நிகழ்வுக்கு பிறகு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள். வேறு சிலர் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால் பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்தபிறகு அந்த கட்சியுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் த.வெ.க வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், வியூக வகுப்பாளர்கள் என பலரையும் சந்தித்து பேசி வருகிறார்கள். த.வெ.க வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி மும்பையை சேர்ந்த மூத்த தொழில் அதிபர் ஒருவர் மூலம் ராகுலிடமே பேசியிருக்கிறார். தி.மு.க கூடுதல் இடங்களை தராவிட்டால் த.வெ.க பக்கம் வரும் எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளது. காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் தனித்த செல்வாக்கு படைத்த ப.சிதம்பரமே இந்த முறை டெல்லியின் நடவடிக்கை வேறு விதமாக இருப்பதாக புலம்பியுள்ளார். சமீபத்தில் காரைக்குடியில் மூத்த நிர்வாகிகளிடம் ப.சி பேசிக்கொண்டிருந்த போது, “அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நான் ராகுலிடம் தி.மு.க கூட்டணி ஏன் வேண்டும் என்று விளக்கிவிட்டேன். நான் என்ன சொன்னாலும் உடனே ரியாக்சன் செய்யும் ராகுல், தி.மு.க கூட்டணி விசயத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு ரியாக்ஷன் செய்யாமல் அமைதியாக இருந்ததே எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று சொல்லியுள்ளார். ப. சிதம்பரம் மற்றொருபுறம் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் தான் கூட்டணி வைக்கும்” என்று தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார். அப்படி த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி சென்றால், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பத்து பேர் தி.மு.க பக்கம் நிற்கும் மூடில் உள்ளார்கள். ஏன்? மாநில தலைவர் செல்வபெருந்தகையே தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சிதம்பரம் தலைமையில் ஒரு டீம் தி.மு.க ஆதரவு காங்கிரஸ் கட்சியாக களம் இறங்கும் என்கிறார்கள் இவர்களின் ஆதரவாளர்கள். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் அழைத்து, “நாம் மீண்டும் தனியாக கட்சி துவங்கினால் ஜெயிக்க முடியுமா?” என்று கருத்து கேட்டுள்ளார் கார்த்திக் சிதம்பரம். அப்பா, மகன் என இருவரும் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை பார்த்தால், “சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடையாமல் தப்பிக்குமா ?” என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவாகியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. 40 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை குறைவு என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் வரும் வாரத்தில் தெரியும்.! Loading…
`தனியாக கட்சி துவக்கலாமா?'ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். மூத்த நிர்வாகிகள் சிலர் தனி கட்சி யோசனையில் இருப்பதாக செய்திகள் கசிய காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் கடந்த 17-ம் தேதி அன்று நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “தி.மு.க -வுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட கூட்டணி உறவை கொண்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு மட்டுமே உள்ளது. இங்கிருக்கும் நபர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது” எச்சரித்தார் காங்.பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். கே.சி.வேணுகோபால் இந்த நிகழ்வுக்கு பிறகு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள். வேறு சிலர் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால் பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்தபிறகு அந்த கட்சியுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் த.வெ.க வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், வியூக வகுப்பாளர்கள் என பலரையும் சந்தித்து பேசி வருகிறார்கள். த.வெ.க வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி மும்பையை சேர்ந்த மூத்த தொழில் அதிபர் ஒருவர் மூலம் ராகுலிடமே பேசியிருக்கிறார். தி.மு.க கூடுதல் இடங்களை தராவிட்டால் த.வெ.க பக்கம் வரும் எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளது. காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் தனித்த செல்வாக்கு படைத்த ப.சிதம்பரமே இந்த முறை டெல்லியின் நடவடிக்கை வேறு விதமாக இருப்பதாக புலம்பியுள்ளார். சமீபத்தில் காரைக்குடியில் மூத்த நிர்வாகிகளிடம் ப.சி பேசிக்கொண்டிருந்த போது, “அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நான் ராகுலிடம் தி.மு.க கூட்டணி ஏன் வேண்டும் என்று விளக்கிவிட்டேன். நான் என்ன சொன்னாலும் உடனே ரியாக்சன் செய்யும் ராகுல், தி.மு.க கூட்டணி விசயத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு ரியாக்ஷன் செய்யாமல் அமைதியாக இருந்ததே எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று சொல்லியுள்ளார். ப. சிதம்பரம் மற்றொருபுறம் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் தான் கூட்டணி வைக்கும்” என்று தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார். அப்படி த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி சென்றால், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பத்து பேர் தி.மு.க பக்கம் நிற்கும் மூடில் உள்ளார்கள். ஏன்? மாநில தலைவர் செல்வபெருந்தகையே தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சிதம்பரம் தலைமையில் ஒரு டீம் தி.மு.க ஆதரவு காங்கிரஸ் கட்சியாக களம் இறங்கும் என்கிறார்கள் இவர்களின் ஆதரவாளர்கள். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் அழைத்து, “நாம் மீண்டும் தனியாக கட்சி துவங்கினால் ஜெயிக்க முடியுமா?” என்று கருத்து கேட்டுள்ளார் கார்த்திக் சிதம்பரம். அப்பா, மகன் என இருவரும் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை பார்த்தால், “சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடையாமல் தப்பிக்குமா ?” என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவாகியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. 40 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை குறைவு என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் வரும் வாரத்தில் தெரியும்.! Loading…
ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து, ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். ட்ரம்ப் இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். எனப் பாராட்டியிருந்தார். சமீப சில நாள்களாக அடங்கிருந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக விவகாரம் இப்போது மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், `` பிரதமர் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டார். அவரது துரோகம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அவர் மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் அடைவார். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்ப் - மோடி அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்காமல், மோடி அரசு ஏன் அவசரகால கதியில் இந்த 'ஒப்பந்தம் எனும் 'வரி' வலையில் விழுந்தது? இதன் மூலம் இந்தியா பல முக்கிய சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது ஏன்? அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு 'பூஜ்ஜியம் வரி' (Zero Tariff) விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ஒரு முடிவாகும். டிஜிட்டல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள் வழங்கப்பட்டுள்ளன. Pahalgam தாக்குதல் விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே இந்தியாவின் தேசிய நலன்களையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்கும்படி உங்களை நெருக்கியது யார் அல்லது எது? சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) தொடர்பான விவகாரங்கள் ஏதேனும் இந்த அழுத்தத்திற்குக் காரணமா? இந்திய மக்கள் முன் உண்மையைச் சொல்லுங்கள். இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும், நம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்குமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். Loading… ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து, ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். ட்ரம்ப் இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். எனப் பாராட்டியிருந்தார். சமீப சில நாள்களாக அடங்கிருந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக விவகாரம் இப்போது மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், `` பிரதமர் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டார். அவரது துரோகம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அவர் மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் அடைவார். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்ப் - மோடி அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்காமல், மோடி அரசு ஏன் அவசரகால கதியில் இந்த 'ஒப்பந்தம் எனும் 'வரி' வலையில் விழுந்தது? இதன் மூலம் இந்தியா பல முக்கிய சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது ஏன்? அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு 'பூஜ்ஜியம் வரி' (Zero Tariff) விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ஒரு முடிவாகும். டிஜிட்டல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள் வழங்கப்பட்டுள்ளன. Pahalgam தாக்குதல் விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே இந்தியாவின் தேசிய நலன்களையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்கும்படி உங்களை நெருக்கியது யார் அல்லது எது? சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) தொடர்பான விவகாரங்கள் ஏதேனும் இந்த அழுத்தத்திற்குக் காரணமா? இந்திய மக்கள் முன் உண்மையைச் சொல்லுங்கள். இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும், நம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்குமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். Loading… ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் மின்சார ரயிலில் தினசரி பயணித்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணி இதற்கிடையில், ரயில் சேவையில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் ரயில் இயக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், சென்னை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``நாளை ஒரு சிறந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் பெறுவதற்காக, இன்று ஏற்படும் தற்காலிகச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சென்னை கோட்டம் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறது. இந்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் முடிக்க இத்தகைய தற்காலிக மாற்றங்கள் மிகவும் அவசியமானவை. ரயில்வே நிர்வாகம் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரயில்வே செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ரயில்கள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மின்சார ரயில் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன. அனைத்து ரயில் இயக்கங்களும் உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இயக்கவியல் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தற்காலிக ஏற்பாடுகளைச் சீராகச் செயல்படுத்தி வருகின்றனர். பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பின் மூலம் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் உறுதி செய்யப்படும். எனக் குறிப்பிட்டிருக்கிறது. விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!
Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் மின்சார ரயிலில் தினசரி பயணித்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணி இதற்கிடையில், ரயில் சேவையில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் ரயில் இயக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், சென்னை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``நாளை ஒரு சிறந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் பெறுவதற்காக, இன்று ஏற்படும் தற்காலிகச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சென்னை கோட்டம் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறது. இந்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் முடிக்க இத்தகைய தற்காலிக மாற்றங்கள் மிகவும் அவசியமானவை. ரயில்வே நிர்வாகம் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரயில்வே செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ரயில்கள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மின்சார ரயில் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன. அனைத்து ரயில் இயக்கங்களும் உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இயக்கவியல் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தற்காலிக ஏற்பாடுகளைச் சீராகச் செயல்படுத்தி வருகின்றனர். பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பின் மூலம் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் உறுதி செய்யப்படும். எனக் குறிப்பிட்டிருக்கிறது. விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!
Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் மின்சார ரயிலில் தினசரி பயணித்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில் ரயில் நிலையங்கள் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணி இதற்கிடையில், ரயில் சேவையில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் ரயில் இயக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், சென்னை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``நாளை ஒரு சிறந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் பெறுவதற்காக, இன்று ஏற்படும் தற்காலிகச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சென்னை கோட்டம் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறது. இந்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவாகவும், பாதுகாப்பாகவும் முடிக்க இத்தகைய தற்காலிக மாற்றங்கள் மிகவும் அவசியமானவை. ரயில்வே நிர்வாகம் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரயில்வே செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ரயில்கள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மின்சார ரயில் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன. அனைத்து ரயில் இயக்கங்களும் உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இந்த மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இயக்கவியல் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தற்காலிக ஏற்பாடுகளைச் சீராகச் செயல்படுத்தி வருகின்றனர். பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பின் மூலம் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் உறுதி செய்யப்படும். எனக் குறிப்பிட்டிருக்கிறது. விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!
திருமணப் பதிவு: பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும் - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்
குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்வதற்கு விண்ணப்பித்தால், அது குறித்து அந்த ஜோடியின் பெற்றோருக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குள், வாட்ஸ்அப் எண் அல்லது மெசேஜ் மூலமாகத் தெரிவிக்கப்படும். திருமணப் பதிவுக்கு ஆதார், திருமணப் பத்திரிகை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஆதார் போன்றவையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும். மேலும், திருமணப் பதிவு விண்ணப்பம் கொடுத்த உடனே திருமணச் சான்றிதழ் கிடைக்காது. 30 நாள் இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், திருமணப் புகைப்படங்கள், மற்ற சாட்சிகளின் விவரங்கள் அரசின் இணையத்தில் பதிவேற்றப்படும். குடும்ப ஆவணங்களில் குடும்ப விவரங்கள் நேரடியாக இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இந்த விவகாரம் குறித்துப் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, ``பெற்றோரின் உணர்வுகளையும், குடும்ப அமைப்பையும் பாதுகாப்பதே இந்தப் புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம். பல்வேறு சமூக அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்றார். இந்தத் திட்டம் இன்னும் சட்டமாகவில்லை. தற்போது இது பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு உடன்பாடு இருந்தாலும், தனிமனித உரிமை மற்றும் ரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகச் சிலர் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எனவே, 30 நாள் கருத்துக் கேட்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!
திருமணப் பதிவு: பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும் - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்
குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்வதற்கு விண்ணப்பித்தால், அது குறித்து அந்த ஜோடியின் பெற்றோருக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குள், வாட்ஸ்அப் எண் அல்லது மெசேஜ் மூலமாகத் தெரிவிக்கப்படும். திருமணப் பதிவுக்கு ஆதார், திருமணப் பத்திரிகை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஆதார் போன்றவையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும். மேலும், திருமணப் பதிவு விண்ணப்பம் கொடுத்த உடனே திருமணச் சான்றிதழ் கிடைக்காது. 30 நாள் இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், திருமணப் புகைப்படங்கள், மற்ற சாட்சிகளின் விவரங்கள் அரசின் இணையத்தில் பதிவேற்றப்படும். குடும்ப ஆவணங்களில் குடும்ப விவரங்கள் நேரடியாக இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இந்த விவகாரம் குறித்துப் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, ``பெற்றோரின் உணர்வுகளையும், குடும்ப அமைப்பையும் பாதுகாப்பதே இந்தப் புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம். பல்வேறு சமூக அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்றார். இந்தத் திட்டம் இன்னும் சட்டமாகவில்லை. தற்போது இது பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு உடன்பாடு இருந்தாலும், தனிமனித உரிமை மற்றும் ரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகச் சிலர் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எனவே, 30 நாள் கருத்துக் கேட்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!
1957: `திரைக்கவர்ச்சி'என திமுகவை விமர்சித்த காங்., - திராவிட இயக்கத்தின் அரசியல் உதயம்! | ஆடுபுலி 6
1957 அரசியல் களம் அரசியல் ஆடுபுலி 06 `தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி' என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின். `நடிகர்கள் பின்னால் திரளும் கூட்டம் வாக்குகளாக மாறாது. கூடிக்கலையும் கூட்டம்' என்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் விமர்சனத்திற்கு ஆளாகிறது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு கருத்துக்களை மையமாக வைத்தே ஆதரவு, எதிர்ப்பு பரப்புரை யுக்திகள் வகுக்கப்படுகின்றன. இதே போன்றதொரு காட்சிகள் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த, இரண்டாவது பொதுத்தேர்தலிலும் எதிரொலித்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நோக்கி, “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா, கருணாநிதி நாடகம் ஆடி வந்தவர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். சினிமா படங்களுக்கு வருகின்ற கூட்டத்தை, மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கருதுகிறார்கள் என்று திமுகவை நோக்கி விமர்சனமாக முன் வைத்தது காங்கிரஸ். முதல் பொதுத்தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இருந்த தேர்தல் களம், 1957 தேர்தலில் திமுகவின் அரசியல் வருகையால் சற்றே மாறியிருந்தது. காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை யார் முதலமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது என்று களம் கட்டமைக்கப்பட்டது. குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்திருந்தார். 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சர் ஆகியிருந்தார். பொதுத்தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்று, 1956 மே 17ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற, திருச்சி திமுக மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன் முதலாக திமுக போட்டியில் குதித்தது. 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலும், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் ஒன்றாக நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. மாநில உரிமைகள் முதன்மையான பிரச்சனையாக தேர்தலில் எதிரொலித்தது. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், டால்மியாபுரம் ரயில் மறியல், தமிழகத்தின் எல்லை பிரிப்பு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மரணம், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் நேரு, ”ஒரு பாகிஸ்தான் உருவானது போதும், என்ன நடந்தாலும் இனி இந்தியா துண்டாடப்படாது. திராவிடப் பிரதேசம் அமைப்பதாக முழக்கமிடும் வகுப்புவாத சக்திகளைப் புறக்கணிப்போம்” என்று திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசினார். நேரு அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில், எந்த காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்று பெரியார் குரல் கொடுத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்த பச்சைத் தமிழன் காமராஜரை ஆதரிக்கிறேன் என்று பெரியார் பேசினார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனுவாசய்யரை ஆதரித்தார். வெத்து வேட்டு திமுக, அபாயகரமான கம்யூனிஸ்ட் என்று பரப்புரை செய்தார் காமராஜர். குடியாத்தம் இடைத்தேர்தலில், குலக்கொழுந்தே குணாளா என்று காமராஜரை ஆதரித்த அண்ணா, இப்போது எதிரணியில் இருந்தார். திமுகவோ இளைஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. 1952ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி திரைப்படம், செவாலியே சிவாஜிகணேசன் நடிப்பில், கலைஞர் கருணாநிதி வசனத்தில் பெருவெற்றி பெற்றிருந்தது. அப்படத்தின் வசனங்கள் காங்கிரஸ் எதிர்ப்பை, திமுக ஆதரவை விதைத்திருந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் என்ற படத்தில் தீனா மூனா கானா என்ற பாடல் பிரபலமடைந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை உருவாக்கியிருந்தது. அடுத்ததாக, எம்ஜிஆர் நடித்த சக்கரவர்த்தி திருமகள் திரைப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவைப் பெற்றது. இத்திரைப்படத்தில் உதயசூரியன் என்பது கதாநாயகன் பெயர். இது மட்டுமின்றி கல்வி நிலையங்களின் சிறப்பு பேச்சாளர்களாக திமுகவினர் இருந்தனர். கிராமங்கள் தோறும் நாடகம் போட்டனர். வீதிவீதியாக மேடை போட்டு, தமிழ், தமிழர் நலனுக்கான குரலை உயர்த்தினர். 1955 ஜனவரியில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 60வது மாநாடும், அந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசபாணி சமுதாயத்தை அமைக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் காமராஜர் மீதான மதிப்பை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருந்தது. 1956ஆம் ஆண்டில் 29,017 பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டம், கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளி திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. காமராஜர், அண்ணா காங்கிரஸ் கட்சியினர் காளைமாடு சின்னத்திற்க்கு ஓட்டு போடச்சொல்லி பணம் கொடுப்பதாக விமர்சித்து, ஒத்த ரூபா தாரேன் என்ற பாவலர் வரதராசன் பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புரை செய்தனர். காஞ்சிபுரத்தில் அண்ணாவையும், சேலத்தில் நெடுஞ்செழியனையும் தோற்கடிக்க கம்யூனிஸ்ட் கட்சி வியூகம் வகுத்தது. ஆனால், கள செயல்பாட்டாளர்கள் இல்லாமல் கம்யூனிஸ்ட் தேர்தலை சந்தித்தது. நெல்லை சதி வழக்கு, திருச்சி, சேலம், ராமநாதபுரம் சதி வழக்குகளில் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான, பி.ராமமூர்த்தி, பி,சீனிவாசராவ், மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கே.டி.கே. தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் முதன் முறையாக நாமக்கல் ஈ.வி.கே. சம்பத், திருவண்ணாமலை ஆர். தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றனர். சட்டமன்ற தேர்தலில், 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றதால், காமராஜர் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சாத்தூர் தொகுதியில் இருந்து காமராஜர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 13 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. வாக்கு விழுக்காடும் குறைந்தது. சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்தித்த திமுக, 15 இடங்களில் வென்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியிருந்தது. அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் கருணாநிதி, எழும்பூரில் அன்பழகன், திருவண்ணாமலையில் ப.உ.சண்முகம், வி.எஸ்.சந்தானம், ஆயிரம் விளக்கு ஆசைத்தம்பி, பெரம்பூர் சத்தியவாணிமுத்து, போளூர் தொகுதியில் களம்பூர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆனந்தன், கள்ளக்குறிச்சி டி.நடராசன், ஆத்தூர் இருசப்பன், ஆத்தூர் எம்.பி. சுப்பிரமணியம், வளவனூர் ஏ.கோவிந்தசாமி, வேலூர் எம்.பி.சாரதி, விருத்தாச்சலம் எம்.செல்வராசு ஆகிய 15 பேர் திமுகவில் வெற்றி பெற்று இருந்தாலும், கட்சியின் முக்கியத் தலைவரான நெடுஞ்செழியன் சேலத்தில் கோழி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இரட்டை உறுப்பினர் தேர்வு இருந்த தேர்தல், அதில் திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி இரண்டு உறுப்பினர்களும் திமுகவாக தேர்வாகியிருந்தனர். திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், அதிக வாக்குகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்தது திமுக. தேசிய கட்சிகளுக்கு மாற்றாக உதயசூரியன் உதித்தது 1957 சட்டமன்ற பொதுத் தேர்தலில்தான். திரைக்கவர்ச்சி என்று விமர்சித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது திமுகவின் தேசிய அரசியலுக்கு எதிரான தேர்தல் வெற்றி. 1957 ஏப்ரல் 13 பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார். முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்த திமுக 1957 மே 7 அன்று கொண்டு வந்த முதல் தீர்மானம், சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். 15 உறுப்பினர்கள் கொண்ட திமுகவின் தீர்மானத்திற்கு 42 வாக்குகள் கிடைத்தன. 127 வாக்குகள் எதிராக இருந்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், அங்குதான் திமுகவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தொடங்கியது.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) Loading…
1957: `திரைக்கவர்ச்சி'என திமுகவை விமர்சித்த காங்., - திராவிட இயக்கத்தின் அரசியல் உதயம்! | ஆடுபுலி 6
1957 அரசியல் களம் அரசியல் ஆடுபுலி 06 `தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி' என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின். `நடிகர்கள் பின்னால் திரளும் கூட்டம் வாக்குகளாக மாறாது. கூடிக்கலையும் கூட்டம்' என்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் விமர்சனத்திற்கு ஆளாகிறது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு கருத்துக்களை மையமாக வைத்தே ஆதரவு, எதிர்ப்பு பரப்புரை யுக்திகள் வகுக்கப்படுகின்றன. இதே போன்றதொரு காட்சிகள் இந்திய விடுதலைக்குப் பின்னர் நடந்த, இரண்டாவது பொதுத்தேர்தலிலும் எதிரொலித்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நோக்கி, “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா, கருணாநிதி நாடகம் ஆடி வந்தவர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். சினிமா படங்களுக்கு வருகின்ற கூட்டத்தை, மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கருதுகிறார்கள் என்று திமுகவை நோக்கி விமர்சனமாக முன் வைத்தது காங்கிரஸ். முதல் பொதுத்தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இருந்த தேர்தல் களம், 1957 தேர்தலில் திமுகவின் அரசியல் வருகையால் சற்றே மாறியிருந்தது. காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை யார் முதலமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது என்று களம் கட்டமைக்கப்பட்டது. குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, ராஜாஜி ராஜினாமா செய்திருந்தார். 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சர் ஆகியிருந்தார். பொதுத்தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்று, 1956 மே 17ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற, திருச்சி திமுக மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன் முதலாக திமுக போட்டியில் குதித்தது. 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலும், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் ஒன்றாக நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. மாநில உரிமைகள் முதன்மையான பிரச்சனையாக தேர்தலில் எதிரொலித்தது. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், டால்மியாபுரம் ரயில் மறியல், தமிழகத்தின் எல்லை பிரிப்பு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மரணம், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் நேரு, ”ஒரு பாகிஸ்தான் உருவானது போதும், என்ன நடந்தாலும் இனி இந்தியா துண்டாடப்படாது. திராவிடப் பிரதேசம் அமைப்பதாக முழக்கமிடும் வகுப்புவாத சக்திகளைப் புறக்கணிப்போம்” என்று திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசினார். நேரு அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில், எந்த காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்று பெரியார் குரல் கொடுத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்த பச்சைத் தமிழன் காமராஜரை ஆதரிக்கிறேன் என்று பெரியார் பேசினார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனுவாசய்யரை ஆதரித்தார். வெத்து வேட்டு திமுக, அபாயகரமான கம்யூனிஸ்ட் என்று பரப்புரை செய்தார் காமராஜர். குடியாத்தம் இடைத்தேர்தலில், குலக்கொழுந்தே குணாளா என்று காமராஜரை ஆதரித்த அண்ணா, இப்போது எதிரணியில் இருந்தார். திமுகவோ இளைஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. 1952ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி திரைப்படம், செவாலியே சிவாஜிகணேசன் நடிப்பில், கலைஞர் கருணாநிதி வசனத்தில் பெருவெற்றி பெற்றிருந்தது. அப்படத்தின் வசனங்கள் காங்கிரஸ் எதிர்ப்பை, திமுக ஆதரவை விதைத்திருந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் என்ற படத்தில் தீனா மூனா கானா என்ற பாடல் பிரபலமடைந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை உருவாக்கியிருந்தது. அடுத்ததாக, எம்ஜிஆர் நடித்த சக்கரவர்த்தி திருமகள் திரைப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவைப் பெற்றது. இத்திரைப்படத்தில் உதயசூரியன் என்பது கதாநாயகன் பெயர். இது மட்டுமின்றி கல்வி நிலையங்களின் சிறப்பு பேச்சாளர்களாக திமுகவினர் இருந்தனர். கிராமங்கள் தோறும் நாடகம் போட்டனர். வீதிவீதியாக மேடை போட்டு, தமிழ், தமிழர் நலனுக்கான குரலை உயர்த்தினர். 1955 ஜனவரியில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 60வது மாநாடும், அந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசபாணி சமுதாயத்தை அமைக்க வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் காமராஜர் மீதான மதிப்பை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருந்தது. 1956ஆம் ஆண்டில் 29,017 பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டம், கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளி திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. காமராஜர், அண்ணா காங்கிரஸ் கட்சியினர் காளைமாடு சின்னத்திற்க்கு ஓட்டு போடச்சொல்லி பணம் கொடுப்பதாக விமர்சித்து, ஒத்த ரூபா தாரேன் என்ற பாவலர் வரதராசன் பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புரை செய்தனர். காஞ்சிபுரத்தில் அண்ணாவையும், சேலத்தில் நெடுஞ்செழியனையும் தோற்கடிக்க கம்யூனிஸ்ட் கட்சி வியூகம் வகுத்தது. ஆனால், கள செயல்பாட்டாளர்கள் இல்லாமல் கம்யூனிஸ்ட் தேர்தலை சந்தித்தது. நெல்லை சதி வழக்கு, திருச்சி, சேலம், ராமநாதபுரம் சதி வழக்குகளில் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான, பி.ராமமூர்த்தி, பி,சீனிவாசராவ், மணலி கந்தசாமி, கே.பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கே.டி.கே. தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் முதன் முறையாக நாமக்கல் ஈ.வி.கே. சம்பத், திருவண்ணாமலை ஆர். தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றனர். சட்டமன்ற தேர்தலில், 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றதால், காமராஜர் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சாத்தூர் தொகுதியில் இருந்து காமராஜர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 13 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. வாக்கு விழுக்காடும் குறைந்தது. சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்தித்த திமுக, 15 இடங்களில் வென்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியிருந்தது. அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் கருணாநிதி, எழும்பூரில் அன்பழகன், திருவண்ணாமலையில் ப.உ.சண்முகம், வி.எஸ்.சந்தானம், ஆயிரம் விளக்கு ஆசைத்தம்பி, பெரம்பூர் சத்தியவாணிமுத்து, போளூர் தொகுதியில் களம்பூர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆனந்தன், கள்ளக்குறிச்சி டி.நடராசன், ஆத்தூர் இருசப்பன், ஆத்தூர் எம்.பி. சுப்பிரமணியம், வளவனூர் ஏ.கோவிந்தசாமி, வேலூர் எம்.பி.சாரதி, விருத்தாச்சலம் எம்.செல்வராசு ஆகிய 15 பேர் திமுகவில் வெற்றி பெற்று இருந்தாலும், கட்சியின் முக்கியத் தலைவரான நெடுஞ்செழியன் சேலத்தில் கோழி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இரட்டை உறுப்பினர் தேர்வு இருந்த தேர்தல், அதில் திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி இரண்டு உறுப்பினர்களும் திமுகவாக தேர்வாகியிருந்தனர். திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், அதிக வாக்குகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்தது திமுக. தேசிய கட்சிகளுக்கு மாற்றாக உதயசூரியன் உதித்தது 1957 சட்டமன்ற பொதுத் தேர்தலில்தான். திரைக்கவர்ச்சி என்று விமர்சித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது திமுகவின் தேசிய அரசியலுக்கு எதிரான தேர்தல் வெற்றி. 1957 ஏப்ரல் 13 பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார். முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்த திமுக 1957 மே 7 அன்று கொண்டு வந்த முதல் தீர்மானம், சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். 15 உறுப்பினர்கள் கொண்ட திமுகவின் தீர்மானத்திற்கு 42 வாக்குகள் கிடைத்தன. 127 வாக்குகள் எதிராக இருந்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், அங்குதான் திமுகவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தொடங்கியது.! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) Loading…
Saidapet-ல் விஜய்யின் நண்பர்; அண்ணா நகரில் கோகுல இந்திரா! | சென்னை மாவட்ட தொகுதிகள் Part 3 |Vikatan
Saidapet-ல் விஜய்யின் நண்பர்; அண்ணா நகரில் கோகுல இந்திரா! | சென்னை மாவட்ட தொகுதிகள் Part 3 |Vikatan
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை; கேரள அரசியலில் புதுப் புயல்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உஷா ஜோசப்புக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கினார். ஆனாலும், வலி தீரவில்லை. வலிக்காக மருந்து எடுத்தபடியே நாள்களைக் கடத்தினார். சில நாள்களுக்கு முன்பு வேறு ஒரு மருத்துவரைச் சந்தித்து தனது பிரச்னையைக் கூறினார். அவர் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றும்படி அந்த மருத்துவர் கூறி உஷா ஜோசப்பை அனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று விவரம் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட்டானால் மறுநாளே அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த உஷா ஜோசப் உறவினர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவரது உறவினரான தொபியாஸ் புன்னப்புரா தெற்கு ஊராட்சி துணை த்தலைவராக உள்ளார். அவரது வழிகாட்டுதல்படி புன்னப்புரா காவல் நிலையத்தில் உஷா ஜோசப் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சை Representational Image இதுகுறித்து உஷா ஜோசப் கூறுகையில், ஆபரேஷனுக்குப்பின் வயிற்று வலி என நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதாகக் கூறி மருந்து தருவார்கள். அதை எடுத்துக்கொண்டால் தற்காலிகமாக வலி குறையும். இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் கடந்தது. கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம் சில நாள்களுக்கு முன் ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவேண்டாம் எனவும், திங்கள்கிழமை அட்மிட்டானால் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்துவிடலாம் என ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறி அனுப்பினர். ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயமாக உள்ளது என்றார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்து விமர்சனம் செய்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது. மூதாட்டி உஷா ஜோசப் வயிற்றில் கத்தரிக்கோல் இருக்கும் எக்ஸ்ரே காட்சி இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், உஷா ஜோசப்புக்கு நேர்ந்தது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்த மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளின் விசாரணை அறிக்கை காவல்துறைக்கும் வழங்கப்படும். உஷா ஜோசப்பின் மகனிடம் நான் பேசினேன். இந்தத் தவறில் டாக்டருக்கும், நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கும் பங்கு உண்டு. இதில் துறை ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை; கேரள அரசியலில் புதுப் புயல்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உஷா ஜோசப்புக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கினார். ஆனாலும், வலி தீரவில்லை. வலிக்காக மருந்து எடுத்தபடியே நாள்களைக் கடத்தினார். சில நாள்களுக்கு முன்பு வேறு ஒரு மருத்துவரைச் சந்தித்து தனது பிரச்னையைக் கூறினார். அவர் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றும்படி அந்த மருத்துவர் கூறி உஷா ஜோசப்பை அனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று விவரம் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட்டானால் மறுநாளே அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த உஷா ஜோசப் உறவினர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவரது உறவினரான தொபியாஸ் புன்னப்புரா தெற்கு ஊராட்சி துணை த்தலைவராக உள்ளார். அவரது வழிகாட்டுதல்படி புன்னப்புரா காவல் நிலையத்தில் உஷா ஜோசப் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சை Representational Image இதுகுறித்து உஷா ஜோசப் கூறுகையில், ஆபரேஷனுக்குப்பின் வயிற்று வலி என நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதாகக் கூறி மருந்து தருவார்கள். அதை எடுத்துக்கொண்டால் தற்காலிகமாக வலி குறையும். இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் கடந்தது. கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம் சில நாள்களுக்கு முன் ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவேண்டாம் எனவும், திங்கள்கிழமை அட்மிட்டானால் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்துவிடலாம் என ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறி அனுப்பினர். ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயமாக உள்ளது என்றார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்து விமர்சனம் செய்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது. மூதாட்டி உஷா ஜோசப் வயிற்றில் கத்தரிக்கோல் இருக்கும் எக்ஸ்ரே காட்சி இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், உஷா ஜோசப்புக்கு நேர்ந்தது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்த மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளின் விசாரணை அறிக்கை காவல்துறைக்கும் வழங்கப்படும். உஷா ஜோசப்பின் மகனிடம் நான் பேசினேன். இந்தத் தவறில் டாக்டருக்கும், நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கும் பங்கு உண்டு. இதில் துறை ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!
ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்! - திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?
மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது. இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுட சுடமட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு வருகிறது. மதுரை வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மொத்தம் 15 சமையலாளர்கள் டீம் உணவு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்களில் தான் கொடுப்பார்கள். இந்த முறை ஹாட்பாக்ஸ்களில் பிரியாணிகளை அடைத்து கொடுக்க இருக்கின்றனர். மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் மாநாடு... ஹாட்பாக்ஸில் பிரியாணி பேக்கிங்; கிட்சன் கிளிக்ஸ்! மேலும் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட இருக்கிறது. அதில் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையேடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டிருகிறது. மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கூட்டம் நடைபெறும் இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டு குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. Loading…
ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்! - திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?
மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது. இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுட சுடமட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு வருகிறது. மதுரை வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மொத்தம் 15 சமையலாளர்கள் டீம் உணவு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்களில் தான் கொடுப்பார்கள். இந்த முறை ஹாட்பாக்ஸ்களில் பிரியாணிகளை அடைத்து கொடுக்க இருக்கின்றனர். மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் மாநாடு... ஹாட்பாக்ஸில் பிரியாணி பேக்கிங்; கிட்சன் கிளிக்ஸ்! மேலும் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட இருக்கிறது. அதில் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையேடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டிருகிறது. மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கூட்டம் நடைபெறும் இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டு குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. Loading…
மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் மாநாடு... ஹாட்பாக்ஸில் பிரியாணி பேக்கிங்; கிட்சன் கிளிக்ஸ்!
மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் மாநாடு... ஹாட்பாக்ஸில் பிரியாணி பேக்கிங்; கிட்சன் கிளிக்ஸ்!
ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ``மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. ட்ரம்ப் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உலக நாடுகள் மீதான வரி குறைக்கப்படுமா அல்லது வேறு சட்டங்கள் மூலம் வரி விதிக்கும் வழமையை அதிபர் ட்ரம்ப் தொடரப்போகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இதற்கிடையில், சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப், ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். இது முன்பு இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. ட்ரம்ப் - மோடி இந்தியா அமெரிக்காவை அதிக வரி விதித்து அமெரிக்காவை சுரண்டியது என்ற என் கருத்திலிருந்து, இப்போது அமெரிக்காவுக்கு சாதகமாகியிருக்கிறது. நாங்கள் ஒரு சிறிய திருப்பத்தை செய்தோம். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களைவிட மிகவும் புத்திசாலி. என்றார். Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ``மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார். எனக் குறிப்பிட்டிருந்தது. ட்ரம்ப் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது. எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உலக நாடுகள் மீதான வரி குறைக்கப்படுமா அல்லது வேறு சட்டங்கள் மூலம் வரி விதிக்கும் வழமையை அதிபர் ட்ரம்ப் தொடரப்போகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இதற்கிடையில், சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப், ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். இது முன்பு இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. ட்ரம்ப் - மோடி இந்தியா அமெரிக்காவை அதிக வரி விதித்து அமெரிக்காவை சுரண்டியது என்ற என் கருத்திலிருந்து, இப்போது அமெரிக்காவுக்கு சாதகமாகியிருக்கிறது. நாங்கள் ஒரு சிறிய திருப்பத்தை செய்தோம். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களைவிட மிகவும் புத்திசாலி. என்றார். Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
? Ai Videos மூலம் வரும் ஆபத்து! | Seriously! | EP - 13 | Vikatan TV
? Ai Videos மூலம் வரும் ஆபத்து! | Seriously! | EP - 13 | Vikatan TV
US Iran மோதல் - வருகிறதா நீண்ட போர்? | Trump | Ali khamenei | Netanyahu | Decode | Vikatan
US Iran மோதல் - வருகிறதா நீண்ட போர்? | Trump | Ali khamenei | Netanyahu | Decode | Vikatan
DMK -வில் OPS - CM சந்திப்பு பின்னணி |தேர்தல தள்ளிவைங்க -Ramadoss-க்கு பல்பு |அதிரும் பிரியாணி ஊழல்
‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ - நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!
பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நம்முடைய நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக நடத்தவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ பெருந்திரளாக வருகை தரவிருக்கும் என்னுயிர்ச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன். வரும்வழியில் ஆரவாரம் ஏதுமின்றி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைதியான முறையில் உங்கள் பயணம் கட்டுகோப்பான இனிய பயணமாக அமைய வேண்டும். தமிழ்த்தேசிய தலைவரின் மீது நீங்கள் கொண்டுள்ள பேரன்பும், பெருமதிப்பும் சத்தியமானால், அந்த மாதலைவனின் பெரும்புகழுக்கு சிறுகளங்கமும் ஏற்படாதவாறு இத்தனை நாட்கள் எத்தகைய ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடுடனும் நடந்துகொண்டீர்களோ, அதையே உலகத் தமிழினமே உற்றுநோக்கும் இம்மாபெரும் மாநாட்டிலும் கடைப்பிடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சீமான் உங்கள் அனைவரையும் மாநாட்டுத்திடலில் சந்திக்க பெரும் உணர்வெழுச்சியுடனும் உற்சாகத்துடனும் உங்கள் அண்ணன் சீமான் காத்திருக்கிறேன்” என்ற உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க. இந்த மாநாட்டில் என்ன நடக்கும், சீமான் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலேயே ஏற்பட்டிருக்கிறது. '80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!
Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார். இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர். 'ட்ரம்ப் விதித்த வரி செல்லாது' என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ட்ரம்ப் தரப்பு. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன? அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் 6 - 3 என்கிற விகிதத்தில் 6 நீதிபதிகள் ட்ரம்பின் வரிக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை ட்ரம்பின் பரஸ்பர வரியால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு 'செக்' இவை வசூலிக்கப்பட்ட நாடுகளிடையே திரும்பக் கொடுக்கப்பட்டு விடுமா என்றால் அங்கே தான் ஒரு செக் உள்ளது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை யாரேனும் அமெரிக்காவிற்கு எதிராக பின்பற்றினால், வர்த்தக சட்டம், 1974-ன் கீழ், பிரிவு 301-ல் அதிபரால் வரி விதிக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில், வர்த்தக விரிவாக்குதல் சட்டம், பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்க முடியும். இந்த இரண்டு துருப்புச் சீட்டுகளையும் ட்ரம்பின் அரசு பயன்படுத்த உள்ளதாம். ட்ரம்ப் - வரி ஏற்கெனவே, உலக நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன... சில நாடுகள் அமெரிக்காவிற்குள் போதைப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் ட்ரம்ப். அந்தத் துருப்புச் சீட்டுகளுக்கு இந்தக் காரணங்கள் கூட பயன்படுத்தப்படலாம். லாஸ்ட்... பட் நாட் லீஸ்ட்... அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ட்ரம்பின் ரியாக்ஷன்... இப்போது அமெரிக்க நேரப்படி, பிப்ரவரி 20-ம் தேதியின் காலை. சில ஆளுநர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை 'அவமானம்' என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.. இனி ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமோ?!
Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?
உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார். இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர். 'ட்ரம்ப் விதித்த வரி செல்லாது' என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ட்ரம்ப் தரப்பு. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன? அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் 6 - 3 என்கிற விகிதத்தில் 6 நீதிபதிகள் ட்ரம்பின் வரிக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை ட்ரம்பின் பரஸ்பர வரியால் அமெரிக்காவின் கருவூலத்தில் 133 பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் சேர்ந்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு 'செக்' இவை வசூலிக்கப்பட்ட நாடுகளிடையே திரும்பக் கொடுக்கப்பட்டு விடுமா என்றால் அங்கே தான் ஒரு செக் உள்ளது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை யாரேனும் அமெரிக்காவிற்கு எதிராக பின்பற்றினால், வர்த்தக சட்டம், 1974-ன் கீழ், பிரிவு 301-ல் அதிபரால் வரி விதிக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு அடிப்படையில், வர்த்தக விரிவாக்குதல் சட்டம், பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்க முடியும். இந்த இரண்டு துருப்புச் சீட்டுகளையும் ட்ரம்பின் அரசு பயன்படுத்த உள்ளதாம். ட்ரம்ப் - வரி ஏற்கெனவே, உலக நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன... சில நாடுகள் அமெரிக்காவிற்குள் போதைப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் ட்ரம்ப். அந்தத் துருப்புச் சீட்டுகளுக்கு இந்தக் காரணங்கள் கூட பயன்படுத்தப்படலாம். லாஸ்ட்... பட் நாட் லீஸ்ட்... அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ட்ரம்பின் ரியாக்ஷன்... இப்போது அமெரிக்க நேரப்படி, பிப்ரவரி 20-ம் தேதியின் காலை. சில ஆளுநர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை 'அவமானம்' என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.. இனி ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமோ?!
AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், டெலிகேஷன்கள், பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையைக் கழற்றி பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. AI மாநாடு காங்கிரஸ் அணி போராட்டம் மாநாட்டின் ஒரு பகுதியில் உலகளாவிய சிஇஓ-க்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் சட்டைகளைக் கழற்றி கையில் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு அரங்கிற்குள் நுழைந்தனர். அவர்களின் முழக்கத்தில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குப் போதிய பலன்கள் கிடைக்கவில்லை என்றும், இது நாட்டுக்கு எதிரானது என்றும் கோஷமிட்டனர். இந்த உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தை மீறி, அவர்கள் கியூஆர் (QR) கோடுகளைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உபி மாநிலத் துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகிய நான்கு முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் கருப்பு குடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி, அரங்குக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குடைகள் பறிமுதல் செய்யப்படும் என்பதால், சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்து பின்னர் அதைக் கழற்றிப் போராடியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Remember, when their “Pea-brained, immature” leader @RahulGandhi laughs in front of a dead body and wipes his nose on his own party president in public, It’s no surprise then that his followers strip their shirts and run around vulgarly at an AI Summit. Leadership sets the… pic.twitter.com/xaxRpElM2K — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) February 20, 2026 இந்தச் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், `` இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் வேளையில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்துகிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல, இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்கும் சதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது. எனத் தெரிவித்திருக்கிறார். பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், டெலிகேஷன்கள், பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையைக் கழற்றி பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. AI மாநாடு காங்கிரஸ் அணி போராட்டம் மாநாட்டின் ஒரு பகுதியில் உலகளாவிய சிஇஓ-க்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் சட்டைகளைக் கழற்றி கையில் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு அரங்கிற்குள் நுழைந்தனர். அவர்களின் முழக்கத்தில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குப் போதிய பலன்கள் கிடைக்கவில்லை என்றும், இது நாட்டுக்கு எதிரானது என்றும் கோஷமிட்டனர். இந்த உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தை மீறி, அவர்கள் கியூஆர் (QR) கோடுகளைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உபி மாநிலத் துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகிய நான்கு முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் கருப்பு குடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி, அரங்குக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குடைகள் பறிமுதல் செய்யப்படும் என்பதால், சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்து பின்னர் அதைக் கழற்றிப் போராடியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Remember, when their “Pea-brained, immature” leader @RahulGandhi laughs in front of a dead body and wipes his nose on his own party president in public, It’s no surprise then that his followers strip their shirts and run around vulgarly at an AI Summit. Leadership sets the… pic.twitter.com/xaxRpElM2K — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) February 20, 2026 இந்தச் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், `` இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் வேளையில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்துகிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல, இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்கும் சதி. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது. எனத் தெரிவித்திருக்கிறார். பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22-ம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஸ்டாலின் - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை 2021 தேர்தலை விட 2026 தேர்தல் திமுக-விற்கு ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கும். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளை லாவகமாகக் கையாண்டு, அதிக இடங்களில் போட்டியிட்டது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸிற்கு 25 இடங்களைக் கொடுத்து பிற கூட்டணிக் கட்சிகளுக்கு 36 தொகுதிகள் ஒதுக்கியது. 2021- ல் திமுக... அந்தத் தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. குறிப்பாக திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபித்திருந்தது. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. திமுக - தேமுதிக கூட்டணிக்குள் நுழைந்த தேமுதிக குறிப்பாக 2026 தேர்தலுக்காக தேமுதிக, திமுக கூட்டணிக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்திருக்கிறது. இது திமுக-விற்கு ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும், தொகுதிப் பங்கீட்டில் திமுக-விற்கு பல முனைகளில் செக் வைப்பதாகவே அமைந்திருக்கிறது. கூட்டணிக்கு 50 முதல் 60! தொகுதிப் பங்கீட்டில் திமுக-விற்கு இருக்கும் சிக்கல் என்ன? என்பது குறித்து மூத்தப் பத்திரிகையாளர் தராசு ஷ்யாமைத் தொடர்புகொண்டு பேசினோம். ``தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க விரும்பும் எந்தக் கட்சியும் குறைந்தது 170 முதல் 180 இடங்களில் போட்டியிட வேண்டும். அப்படி என்றால் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும் கொடுக்க 50 முதல் 60 இடங்கள்தான் இருக்கின்றன. தராசு ஷ்யாம் ஆறு இடங்கள்... திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சித் தொடர்வதாக வைத்துக் கொண்டால் அதற்கு 25 இடங்கள் குறைந்தது கொடுக்க வேண்டும். இப்போது தேமுதிக சேர்ந்துள்ளது. அதற்கு குறைந்தது ஆறு இடங்கள் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே ஆறு இடங்கள் பெற்றுள்ள கட்சிகள், அதிக இடங்களை எதிர்பார்க்கும். திமுக கூட்டணியில் ஹவுஸ்ஃபுல்! இப்போது ஓ.பி.எஸ் திமுக-வில் சேர்வதாக அல்லது கூட்டணியில் இடம் பெறுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே அதிமுக-விலிருந்து போனவர்கள் திமுக-வில் இடம் எதிர்பார்ப்பார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் திமுக கூட்டணியில் ஹவுஸ்ஃபுல். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் பங்கீடு செய்வது மிகவும் கடினம். ஸ்டாலின் - திமுக பெரிய சவால் சொந்தக் கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பும் இருக்கிறது. சிலருக்கு இதயத்தில் இடம் கொடுத்தால் மட்டும்தான் இடப் பங்கீடு சாத்தியம். திமுக கூட்டணியில் இருக்கும் பெரிய சவால் இதுதான்” என்றார்.
Tvk - Congress கூட்டணி, பைத்தியக்காரத்தனம்! - மணி சங்கர் அய்யர் Exclusive Interview
Tvk - Congress கூட்டணி, பைத்தியக்காரத்தனம்! - மணி சங்கர் அய்யர் Exclusive Interview
வண்டியை திருப்பும் ஓ.பி.எஸ்...சிக்னல் கொடுத்த ஸ்டாலின்?
வண்டியை திருப்பும் ஓ.பி.எஸ்...சிக்னல் கொடுத்த ஸ்டாலின்?
திமுக கூட்டணியின் பலம் இது தான்... உடைத்து பேசிய வம்சி!
திமுக கூட்டணியின் பலம் இது தான்... உடைத்து பேசிய வம்சி!
திமுக கூட்டணியில் தேமுதிக...மக்கள் கருத்து இது தான்?
திமுக கூட்டணியில் தேமுதிக...மக்கள் கருத்து இது தான்?
KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல... - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!
அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். கே.என் நேரு இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இருவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ் பாரதி, ``இந்த வழக்கே விசித்திரமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கடன் பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, அமலாக்கத்துறை சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்தது. ஆனால், சி.பி.ஐ தொடர்ந்த மெயின் வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது. அடிப்படை வழக்கே ரத்தான பிறகு, அதில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதுதான் உண்மை. அதன் பிறகு அமலாக்கத்துறை சில தகவல்களை மாநில அரசுக்கு அனுப்பியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர் கே.என்.நேரு என்றுகூடப் பார்க்காமல், உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அந்த விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க எம்.பி இன்பதுரை தொடர்ந்த பொதுநல வழக்கில்தான், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இது அரசு ஏற்கெனவே எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதிதானே தவிர, புதிய பின்னடைவு அல்ல. ஆர்.எஸ்.பாரதி தேர்தல் நேரத்தில் தி.மு.க-வின் செல்வாக்கைச் சிதைக்க டெல்லியில் இருப்பவர்கள் போடும் திட்டம் இது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை நள்ளிரவில் கைதுசெய்து 100 நாள்கள் சிறையில் வைத்தார்கள். இன்று வரை அந்த வழக்கில் என்ன முன்னேற்றம்? 2016-ல் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரி வழக்கு என்ன ஆனது? எனவே, அமலாக்கத்துறையின் நோக்கம் பொதுமக்களிடம் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதே. அமைச்சர் கே.என்.நேரு 41 தொகுதிகளுக்குத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் களத்தைச் சிறப்பாகத் தயார் செய்திருப்பதைப் பார்த்து பயந்துபோய் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து இந்தச் சதியைச் செய்கின்றன. ஜெயலலிதா காலத்திலேயே பல வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டவர் நேரு. தட்டத் தட்டத்தான் பந்து உயரே எழும். அதுபோல, நேருவை எவ்வளவு துன்புறுத்தினாலும் அவர் இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவாரே தவிர, ஒருபோதும் சோர்ந்து போகமாட்டார். கே.என்.நேரு அச்சுறுத்தலுக்கு அஞ்சுகிற கட்சி தி.மு.க அல்ல. இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வெறும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைதான். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்பது நிரூபிக்கப்படும். தி.மு.க சட்டத்துறை இதனை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, இந்த வழக்குக் கற்பனையானது என்பதை உறுதி செய்து வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். KN Nehru: திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது - தவெக தலைவர் விஜய்
`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
ஸ்டாலின் மனநிறைவுடன் நிற்கிறேன் 16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், சமூகநிதியும், பேரறிஞர் அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சி கொள்கையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசை கடந்த ஐந்த ஆண்டு காலத்தில் நடத்திக் காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிக சிறப்பாகவே செய்ததாகவே கருதுகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும் இன்றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவருமே போற்றப்படக்கூடியவர்கள். தலைமைப் பொறுப்பு உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்பு தன்மை, காலநேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைபிடித்திருக்கிறேன். ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு, அந்த முடிவினால் விளையும் பயன், பயன்பெற்றவர்களின் உயர்வு, உயர்வினால் உண்டாகும் வளம், வளத்தினால் விளைந்திடும் இன்பம், இன்பத்தால் கிடைத்திடும் நன்மை, இதுவே நாம் இப்பொழுது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கை தந்து, நாளைய ஆட்சியாளர்களாக எங்களை தொடர செய்யப்போகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளேன். முதல்வர் ஸ்டாலின் நன்றி... நன்றி... நன்றி நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் என ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும், என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் நன்றிகள். நூற்றாண்டை கடந்த பெருமையோடு இயங்கி வருகிறது, இந்த பேரவை. கடந்த 2021-ம் ஆண்டு இந்த பேரவையினுடைய நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்து, நவீன தமிழ்நாட்டின் சிற்பியான தலைவர் கலைஞரின் படத்தை திறந்து வைத்த அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நன்றி. ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தன்னுடைய சுயமரியாதை எள்முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும் எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். ஸ்டாலின் - ஆளுநர் ரவி ஸ்டாலின் பண்பாட்டை மனதில் கொண்டு நன்றி தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு ஆளுநருக்கு என்னுடைய நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் பேரவை தலைவராக பணியாற்றி, அமைதியாகவும் கண்ணியத்தோடும், அதே நேரத்தில் கட்டுப்பாட்டோடும் இந்தப் பேரவையை சிறப்பாக நடத்திச் சென்றதற்காக உங்களுக்கும், பேரவையின் துணைத் தலைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கும், அரசு தலைமை கொறடா, என்னில் ஒரு பாதியாய் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆட்சியின் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகள். பல்வேறு திட்டங்களை நாங்கள் உருவாக்கினாலும், அவை சிந்தாமல் சிதராமல் மக்களிடம் சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி. குறைகளை சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்கு சிறகுகளை தரக்கூடியவர்கள் என்று எண்ணி செயலாற்ற கூடியவன் நான். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தக்க யோசனைகளை கூறுவதிலும், குறைகளை சுட்டி காட்டுவதிலும், கண்ணியமான முறையை கடைபிடித்து ஒத்தழைப்பு நல்கிய எதிர்க்கட்சி தலைவர், மற்றுமுள்ள கட்சி தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கு எல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமை கட்சி தலைவர்களுக்கும் என்னுடைய நன்றி. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் அன்போடும், பாசத்தோடும் என்னிடத்திலே உரிமையோடு அன்பு காட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது... 16 வது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரோடு, முதலமைச்சர் என்ற முறையிலே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றமைக்காக நான் பெருமிதம் அடைகிறேன். இந்த அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்களுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றிகளை நான் உரித்தாக்குகிறேன். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு துறையிலும் இருந்து வருகிற கோப்புக்களை எனக்கு சமர்ப்பித்து, அனுமதி பெற்று, அத்திட்டங்களை கண்காணிக்கும் என்னுடைய செயலாளர்களுக்கு என்னுடைய நன்றி. இப்பேரவை மிகச் சிறப்பாக நடைபெற, கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டக்கூடிய வகையில், பணியாற்றும் நம்முடைய பேரவை முதன்மை செயலாளர் அவர்களுக்கும், பேரவையினுடைய அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. பேரவையினுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு, உறுப்பினரை உற்சாகப்படுத்தக்கூடிய பத்திரிகையாளர்கள், ஊடகத்ததுறை சார்ந்த நண்பர் அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் நான் நினைவுகூற வேண்டியவர்கள், இந்த பேரவைக்கு நாம் எல்லோரோடும் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்முடன் பணியாற்றிய மறைந்த மாண்புமிகு உறுப்பினர்கள் ஐந்து பேரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து, அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக என்னுடைய நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பேரவையில் நான் உரையாற்றும் போது குறிப்பிட்டதை இப்பொழுது நினைவு கூறுகிறேன். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. ஸ்டாலின் ஸ்டாலின் நான் மறைக்க விரும்பவில்லை... அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை நான் எப்படி செய்யப்போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது எனச் சொல்லியிருந்தேன். முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு, நமக்கு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசு இரண்டுக்கும் இடையிலே தான் நாம் இருந்தோம். நமக்கு பெரும் வெற்றியை தந்து, பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும், எப்பொழுது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தை போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை இயற்றிய சட்டங்களை, மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும், அதனை காரணமாக சொல்லி சும்மா இருக்காமல், நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். திராவிட மாட அரசால், இந்த ஐந்து ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமை பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதி அளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம், இன்னுயிர் காப்போம், 4000-க்கு மேற்பட்ட திருக்கோவில்களில் குடமுழுக்கு, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலைவில் உள்ள ஆதிராவிட பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணி பார்க்கிறேன். ஸ்டாலின் நம்பிக்கை எனக்கு இருக்கிறது... இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லவே இல்லை... ஒட்டுமொத்த தமிழர்களும், என் கையோடு கை சேர்ந்து எனக்கு, ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்கி பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள். நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன். இன்னும் உழைக்க காத்திருக்கிறேன் நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் நாளை திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமர வைத்து நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என உழைத்த லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கக்கூடிய திசை நோக்கி வணங்கி, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன் மீண்டும் வெல்வோம் மீண்டும் ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழக மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். என்றார். KN Nehru: திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது - தவெக தலைவர் விஜய்
'டைம்'கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் என்ன? | Quick Read
'இன்னும் 10 - 15 நாள்கள்தான் டைம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு கொடுத்து அதிர வைத்திருக்கிறார். ட்ரம்ப் கூறுவது என்ன? 10 - 15 நாள்களுக்குள் ஈரான் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைக் கலைக்க வேண்டும்... அவர்கள் வைத்திருக்கும் யுரேனியத்தை ஏதேனும் ஓர் அணு ஆயுத நாட்டிற்கு வழங்க வேண்டும். இல்லையேல்... அடுத்தது கெட்ட விஷயங்கள்தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார், ட்ரம்ப். ஒருவேளை ஈரான் இதைச் செய்யவில்லை என்றால், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். ட்ரம்ப் ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? - 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains இது நடந்தால், ஈரான் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. உலக நாடுகளிலும் இதன் எதிரொலி இருக்கும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம். > ஹார்மூஸ் ஜலசந்தி ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. இதன் வழியாகத் தான் உலகத்தில் பயன்படுத்தப்படும் 20 - 25 சதவிகித எண்ணெய்களும், 20 சதவிகித எல்.என்.ஜிகளும் சென்று வருகின்றன. ஒருவேளை, ஈரானை அமெரிக்கா தாக்கினால், இந்தப் பாதை பிளாக் செய்யப்படும். இதனால், எண்ணெய் மற்றும் எரிவாயுக்களின் விலை தாறுமாறாக எகிறும். > உலகத்தில் பதற்றமான சூழல் நிலவும் போது, பங்குச்சந்தையிலும் தாக்கங்கள் எட்டிப்பார்க்கும். > இப்போது தங்கம், வெள்ளி விலை ஓரளவு நிதானத்திற்கு வந்துள்ளது. புதிய போர் ஒன்று தொடங்கும்போது, அதன் விலை தாறுமாறாக உயரலாம். > போக்குவரத்திற்கு எண்ணெய்கள் மிக முக்கியம். எண்ணெய் கிடைப்பதிலேயே சிக்கல் எழும்போது, அனைத்துப் பொருள்களின் விலையும் எகிறலாம். > ஒரு நாட்டில் போர் நடக்கும்போது, அந்த நாட்டு மக்கள் அங்கே இருந்து வெளியேறுவார்கள். இது அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால், பக்கத்து நாடுகள் பாதிக்கப்படும். இதை தாண்டியும் நிறைய நிறைய தாக்கங்கள் இருக்கும். 'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
காங்கிரஸ் நான்கு வருடத்தில் செத்துரும்_- சூர்யா பிரகாசம் congress
காங்கிரஸ் நான்கு வருடத்தில் செத்துரும்_- சூர்யா பிரகாசம் congress
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் மக்கள் சொல்வது என்ன?
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் மக்கள் சொல்வது என்ன?
ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்....Entry கொடுத்த தேமுதிக!
ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்....Entry கொடுத்த தேமுதிக!
விஜய்க்கு கூடப்போகும் பலம்_ TN களம் என்னவாகும்_
விஜய்க்கு கூடப்போகும் பலம்_ TN களம் என்னவாகும்_
திருவெற்றியூரை குறிவைக்கும் TVK வேட்பாளர் யார்?
திருவெற்றியூரை குறிவைக்கும் TVK வேட்பாளர் யார்?
கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு... ஏற்பாடுகள் மும்முரம்! - Photo Album
மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்
கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு... ஏற்பாடுகள் மும்முரம்! - Photo Album
மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்
'அட்டைப் பூச்சியா எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டாங்க!' - மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை!
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையான நிவாரணமும் இழப்பீடும் கம்பெனி தரப்பிலிருந்து கிடைக்கவில்லையென்றும், அதைப் பெற்றுத் தருவதில் அரசும் சுணக்கம் காட்டுவதாகவும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். திருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி பேசுகையில், ``மாஞ்சோலை எஸ்டேட்டை பாம்பே பர்மா கம்பேனி சட்ட விரோதமாக மூடி நான்கு தலைமுறையாக வேலை பார்த்தவர்களை வெளியே அனுப்புகிறது. அங்கே காடை திருத்தி தேயிலை தோட்டத்தை உருவாக்கியதே நம்முடைய தொழிலாளர்கள்தான். ஆண்டுக்கு 4,000 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் லாபம் பார்த்திருக்கிறது. ஆனால், நம்முடைய தொழிலாளர்களை ஏமாற்றி தாமாக ஓய்வு பெறுகிறோம் என கையெழுத்து வாங்கி சொற்ப தொகையை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 200 நாள்கள் என்ற கணக்கில் ஒரு தொழிலாளர் எத்தனை ஆண்டுகள் உழைத்தார்களோ அதே அளவில் நட்ட ஈடு கொடுக்க வேண்டும். போர்டு நிறுவனம் மூடிய போது 147 நாள்கள் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், இங்கே 15 நாள்கள் என்ற வீதத்தில்தான் இழப்பீட்டை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் 58 வயதை கடந்தவர்களுக்கெல்லாம் வெறும் 2 லட்சத்தைதான் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் 1,000 கோடி ரூபாயை வரி கட்டாமல் நீதிமன்றத்தில் தடையும் வாங்கி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீட்டை வாங்கி கொடுப்பதில் என்ன பிரச்னை? ஆனால், இந்த திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? திருமுருகன் காந்தி அண்ணாவின் காலத்தில் திமுக-வின் வழக்கறிஞர்கள் இந்த மக்களுக்காக போராடி சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். இங்கே என்னுடன் இருக்கும் எஸ்டேட்டை சேர்ந்த ஸ்டாலின், ஊத்து கிராமத்தின் திமுக கவுன்சிலர். அவருக்கும் கூட இந்த அரசு காது கொடுக்கவில்லை. SIR இல் இந்த மக்கள் நிரந்தரமாக வெளியேறியவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு முறையாக இழப்பீடு கொடுக்காமல் அந்த நிறுவனம் தொழிற்சாலையை காலி செய்துகொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நுஸ் வாடியா பாஜக-வுக்கு 25 ஆண்டுகளாக நன்கொடை கொடுப்பவர். அந்த நபருக்கு சாதகமாக திமுக அரசு நிற்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். ஆனால், ஏன் இப்போது வரை அதை கொண்டு வரவில்லை. சீமானும் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. தமிழர்களை வஞ்சித்து மார்வாடிக்கு ஆதரவாக இவர்கள் நிற்கிறார்கள். மாஞ்சோலை என ஒன்று இருக்கிறதா என்றே விஜய் கட்சிக்கு தெரியுமா என தெரியவில்லை. நீங்களெல்லாம் கட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள். நாகர்கோவிலிலிருந்து ஒரு Plantation ஆபிசர் வந்து சம்பள உயர்வு விண்ணப்பம் என ஓய்வு விண்ணப்பத்தை கொடுத்து ஏமாற்றி கையெழுத்து வாங்கியிருக்கிறார். தொழிலாளர்கள் வேலையை விட்டு சென்றதால் கம்பெனியை மூடுகிறார்களாம். என்னய்யா நாடகம் இது? சமத்துவபுரத்தில் ஒரு வீடும், சுயமரியாதோடு வாழ ஒரு வேலையும் நிறுவனத்திடமிருந்து முறையான இழப்பீட்டையுமே தொழிலாளர்கள் கோருகிறார்கள். இதை கூட உங்களால் செய்ய முடியாதா? என்றார். ஸ்டெல்லா மேரி மாஞ்சோலை எஸ்டேட்டை சேர்ந்த ஸ்டாலின் பேசுகையில், ``96 வருடமாக நான்கு தலைமுறையாக அந்த எஸ்டேட்டில் வாழ்ந்திருக்கிறோம். 10 அடி வீட்டுக்குள் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்திருக்கிறோம். வேலைக்கு சென்றால் தலை முதல் கால் வரை அட்டை பிய்த்து எடுக்கும். அப்படி கஷ்டப்பட்டுதான் அந்த கம்பெனிக்காக வேலை செய்தோம். ஆனால், எங்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். நாங்கள் அரசிடம் இழப்பீடு கேட்கவில்லை. இந்த நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை வாங்கி தர சொல்கிறோம். அங்கே 5 வார்டுகளிலுமே திமுக கவுன்சிலர்கள்தான். அமைச்சர் நேருவை பல முறை சந்தித்திருக்கிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களால் எதையும் செய்ய முடியாது என கையை விரித்துவிட்டார்கள். எங்கள் மீது வழக்கு பதிவோம் என மிரட்டுகிறார்கள். தண்ணியை நிறுத்திவிட்டார்கள். ரேஷனை நிறுத்திவிட்டார்கள். பேருந்தை நிறுத்திவிட்டார்கள். முழுமையாக நெருக்கடி கொடுத்து எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். பொங்கல் பரிசைக்கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. நாங்கள் இருப்பது மாஞ்சோலையில், ஆனால் மணிமுத்தாறில் வந்து பொங்கல் பரிசையும் ரேஷனையும் வாங்க சொல்கிறார்கள். அதை வைத்து நாங்கள் மலையை விட்டு காலி செய்துவிட்டோம் என நிரூபிக்கப் பார்க்கிறார்கள். ஒரு நாள் வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு 450 ரூபாய் சம்பளம். எங்களின் ரத்தத்தை சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். நாங்கள்தான் அந்த வனத்துக்கே பாதுகாப்பு என்றார். ஸ்டாலின் நாலுமுக்கை சேர்ந்த ஸ்டெல்லா மேரி பேசுகையில், ``ஒரு நாளைக்கு 2 பேருந்து விட்டுக் கொண்டிருந்தார்கள். அதுதான் பெண்களுக்கு உதவியாக இருந்தது. இப்போது ஒரு பேருந்தை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் எப்படி மேலே செல்ல முடியும்? நாங்கள் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். எங்களுக்கு அந்த காடுதான் எல்லாமே. இப்படி ஊர் இருக்கிறது மக்கள் இருக்கிறார்கள் என்று கூட. எங்களுக்கு தெரியாது. அட்டை எங்களின் பாதி ரத்தத்தை உறிந்தது. அந்த நிறுவனம் மீதி ரத்தத்தை உறிந்துவிட்டது. நாங்கள் எதையும் சண்டை போட்டு கேட்டதில்லை. கும்பிட்டுதான் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு லைனாக சென்று வீடு வீடாக திமுக-வுக்கு ஓட்டு கேட்டிருக்கிறோம். முதல்வர் ஐயா எங்களுக்கு உரியதை செய்து கொடுக்க வேண்டும். நாங்கள் 267 குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை. எஸ்டேட்டை விட்டு கீழே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை. நீதி கிடைக்காமல் எஸ்டேட்டை விட்டு இறங்கமாட்டோம் என்றார்.
மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? - தடதடக்கும் களம்!
திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி. 2014 ஆம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார் மு.க.அழகிரி. இவரின் வலது கரமாக இருந்தவரும், முன்னாள் துணை மேயராக இருந்தவருமான பி.எம் மன்னன் மீண்டும் திமுக-வில் இணைவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், திடீரென அதிமுக-வில் இணைந்தார். மேலும் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளையும் மன்னன் செய்து வருகிறார் என்ற தகவல், உடன்பிறப்புகளிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து சீனியர் திமுக நிர்வாகிகள் நம்மிடையே பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பிறகு அவருடைய அரசியல் வாரிசு யார் என்கிற போட்டி மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இருந்தது. இதற்கிடையேதான் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி. அதன் பின் அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களோ திரும்பவும் திமுக-வில் சேர்க்கச் சொல்லி தூது அனுப்பிக் கொண்டே இருந்தனர். பி.எம்.மன்னன் திமுக தலைமையே அவர்களை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டால், மு.க. அழகிரியின் போட்டோவுடன் போஸ்டர்கள் அடிப்பார்கள், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள், மறைமுகமாக கட்சிக்குள் அழகிரியின் குரல் உயர வாய்ப்புள்ளது என்பதால், இது குறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் அதிமுக-வில் சேர்வதற்காகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. முதலமைச்சரை நேரில் பார்த்த மன்னன், கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்ததோடு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். கடந்த வாரம் சபரீசன் மதுரைக்கு வந்திருந்தார். 10 தொகுதிகளின் நிர்வாகிகளையும் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தித்த சபரீசன், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்கான விவரங்களை வாங்கியதோடு திருமங்கலம், மதுரை தெற்கு தொகுதிகளை டார்க்கெட் செய்யுங்கள் எனச் சொன்னார். அழகிரியுடன் மன்னன் இதற்கிடையே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியாக சபரீசனைச் சந்தித்து தனக்கு கீழே உள்ள நிர்வாகிகளில் யார் யார் வேலை செய்யவில்லை? அதற்கான காரணம் என்ன? என்பதையெல்லாம் எழுதி கொடுத்ததோடு, மன்னன் அதிமுக-விடம் மத்திய தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது குறித்தும் சொல்லி, அரை மணிநேரம் இது குறித்தும் விவாதித்தார்கள். இதற்கு பின் வெளிய வந்த சபரீசன், பி.எம் மன்னன் கட்சியில் இணைவது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்று விட்டார். அதற்கு பிறகும் இன்னும் முடிவு சொல்லவில்லை என்கிற விரக்தியிலேயே அதிமுக-வில் சேர்ந்திருக்கிறார் பி.எம்.மன்னன்” என்றனர் விரிவாக. சபரீசன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மதுரை திமுக-வில் நடக்கும் கோஷ்டி மோதல்களை சரி செய்யமால் அதை கொழுந்துவிட்டெரிய செய்திருக்கிறார் சபரீசன். பி.எம்.மன்னன் செல்வாக்கோடு இருந்த காலகட்டத்தில் கட்சிக்குள் நிர்வாகியாக இருந்தவர்களிடம் போய் தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என நிற்பதா? என்கிற ஈகோ ஏற்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ. தளபதி ஆகியோர் மன்னனை கட்சிக்குள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரீசன் வந்து சென்ற இரண்டு நாள்கள் கழித்து மதுரைக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் இது குறித்து விவாதித்து, அவரும் பதில் சொல்லவில்லை என்பதாலேயே அதிமுக-விற்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறார் மன்னன். அதிமுக-வில் சேர்ந்தால் தனக்கு மத்திய தொகுதியை ஒதுக்க வேண்டும் என்கிற டீலிங் பேசி அதற்கு அதிமுக கீரின் சிக்னல் காட்டிய பிறகே கட்சியில் இணைந்திருக்கிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேலும் திமுக அமைச்சர்கள் மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, `மதுரையிலே சிலர் அதிகாரத் திமிரில் திமுக-வின் கீழ்மட்டத் தொண்டர்களை அடிமை போல் நடத்தக்கூடிய அடிமைத்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்' என காட்டமாகப் பேசியுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் ஏற்கெனவே ஆரப்பாளையம் பகுதியில் மன்னனுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனுடன் இரட்டை இலை வாக்குகள் சேர்ந்தால் திமுக-விற்கு கடுமையான போட்டி ஏற்படும். இதையெல்லாம் சபரீசனும் கணக்கு போட்டு பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை வெற்றி பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகளை கண்டிப்புடன் பேசி விட்டு சென்றுள்ளார். அமைச்சர் மூர்த்தி ஆனால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ தனக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள் மீது விரக்தியில் இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு மதுரை தெற்கு அல்லது மதுரை மத்தியை ஒதுக்குங்கள் என திமுக-விடம் கேட்பதற்கு தயாராக உள்ளனர்” என்றனர்.
மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? - தடதடக்கும் களம்!
திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி. 2014 ஆம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார் மு.க.அழகிரி. இவரின் வலது கரமாக இருந்தவரும், முன்னாள் துணை மேயராக இருந்தவருமான பி.எம் மன்னன் மீண்டும் திமுக-வில் இணைவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், திடீரென அதிமுக-வில் இணைந்தார். மேலும் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளையும் மன்னன் செய்து வருகிறார் என்ற தகவல், உடன்பிறப்புகளிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து சீனியர் திமுக நிர்வாகிகள் நம்மிடையே பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பிறகு அவருடைய அரசியல் வாரிசு யார் என்கிற போட்டி மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இருந்தது. இதற்கிடையேதான் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி. அதன் பின் அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களோ திரும்பவும் திமுக-வில் சேர்க்கச் சொல்லி தூது அனுப்பிக் கொண்டே இருந்தனர். பி.எம்.மன்னன் திமுக தலைமையே அவர்களை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டால், மு.க. அழகிரியின் போட்டோவுடன் போஸ்டர்கள் அடிப்பார்கள், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள், மறைமுகமாக கட்சிக்குள் அழகிரியின் குரல் உயர வாய்ப்புள்ளது என்பதால், இது குறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் அதிமுக-வில் சேர்வதற்காகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. முதலமைச்சரை நேரில் பார்த்த மன்னன், கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்ததோடு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். கடந்த வாரம் சபரீசன் மதுரைக்கு வந்திருந்தார். 10 தொகுதிகளின் நிர்வாகிகளையும் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தித்த சபரீசன், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்கான விவரங்களை வாங்கியதோடு திருமங்கலம், மதுரை தெற்கு தொகுதிகளை டார்க்கெட் செய்யுங்கள் எனச் சொன்னார். அழகிரியுடன் மன்னன் இதற்கிடையே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியாக சபரீசனைச் சந்தித்து தனக்கு கீழே உள்ள நிர்வாகிகளில் யார் யார் வேலை செய்யவில்லை? அதற்கான காரணம் என்ன? என்பதையெல்லாம் எழுதி கொடுத்ததோடு, மன்னன் அதிமுக-விடம் மத்திய தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது குறித்தும் சொல்லி, அரை மணிநேரம் இது குறித்தும் விவாதித்தார்கள். இதற்கு பின் வெளிய வந்த சபரீசன், பி.எம் மன்னன் கட்சியில் இணைவது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்று விட்டார். அதற்கு பிறகும் இன்னும் முடிவு சொல்லவில்லை என்கிற விரக்தியிலேயே அதிமுக-வில் சேர்ந்திருக்கிறார் பி.எம்.மன்னன்” என்றனர் விரிவாக. சபரீசன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மதுரை திமுக-வில் நடக்கும் கோஷ்டி மோதல்களை சரி செய்யமால் அதை கொழுந்துவிட்டெரிய செய்திருக்கிறார் சபரீசன். பி.எம்.மன்னன் செல்வாக்கோடு இருந்த காலகட்டத்தில் கட்சிக்குள் நிர்வாகியாக இருந்தவர்களிடம் போய் தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என நிற்பதா? என்கிற ஈகோ ஏற்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ. தளபதி ஆகியோர் மன்னனை கட்சிக்குள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரீசன் வந்து சென்ற இரண்டு நாள்கள் கழித்து மதுரைக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் இது குறித்து விவாதித்து, அவரும் பதில் சொல்லவில்லை என்பதாலேயே அதிமுக-விற்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறார் மன்னன். அதிமுக-வில் சேர்ந்தால் தனக்கு மத்திய தொகுதியை ஒதுக்க வேண்டும் என்கிற டீலிங் பேசி அதற்கு அதிமுக கீரின் சிக்னல் காட்டிய பிறகே கட்சியில் இணைந்திருக்கிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மேலும் திமுக அமைச்சர்கள் மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, `மதுரையிலே சிலர் அதிகாரத் திமிரில் திமுக-வின் கீழ்மட்டத் தொண்டர்களை அடிமை போல் நடத்தக்கூடிய அடிமைத்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்' என காட்டமாகப் பேசியுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் ஏற்கெனவே ஆரப்பாளையம் பகுதியில் மன்னனுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனுடன் இரட்டை இலை வாக்குகள் சேர்ந்தால் திமுக-விற்கு கடுமையான போட்டி ஏற்படும். இதையெல்லாம் சபரீசனும் கணக்கு போட்டு பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை வெற்றி பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகளை கண்டிப்புடன் பேசி விட்டு சென்றுள்ளார். அமைச்சர் மூர்த்தி ஆனால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ தனக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள் மீது விரக்தியில் இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு மதுரை தெற்கு அல்லது மதுரை மத்தியை ஒதுக்குங்கள் என திமுக-விடம் கேட்பதற்கு தயாராக உள்ளனர்” என்றனர்.
KN Nehru: திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது - தவெக தலைவர் விஜய்
அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். கே.என். நேரு அதில்,``கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ. 1020 கோடி ஊழலை அமலாக்கத்துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத்துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊழல் மலிந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. தமிழக வெற்றிக் கழகம் விஜய் இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். DMK பக்கம் வந்த DMDK - பின்னணி? | TVK உடன் இணையும் `பெரிய' மாநில கட்சி? | ADMK BJP | IPS Vikatan
KN Nehru: திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது - தவெக தலைவர் விஜய்
அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். கே.என். நேரு அதில்,``கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ. 1020 கோடி ஊழலை அமலாக்கத்துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத்துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊழல் மலிந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. தமிழக வெற்றிக் கழகம் விஜய் இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். DMK பக்கம் வந்த DMDK - பின்னணி? | TVK உடன் இணையும் `பெரிய' மாநில கட்சி? | ADMK BJP | IPS Vikatan
ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? - 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains
10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த இடங்களை நிரப்ப வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்குகிறது. மேலே சொன்ன 10 மாநிலங்களில் தமிழ்நாடும் அடக்கம். நாடாளுமன்றம் வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க! ராஜ்ய சபாவில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 245. அதில் பாஜக உறுப்பினர்கள் மட்டும் 103. தேசிய ஜனநாயகக் கூட்டணியினரின் மொத்த எண்ணிக்கை 133. ராஜ்ய சபாவைப் பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படும். ஆனால், அதைத் தாண்டியும் 11 இடங்களை வைத்திருக்கிறது பாஜக. தற்போது ராஜ்ய சபா தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள் - மகாராஷ்டிரா (7), தமிழ்நாடு (6), பீகார் (5), மேற்கு வங்கம் (5), ஒடிசா (4), அசாம் (3), சத்திஸ்கர் (2), அரியானா (2), தெலங்கானா (2), இமாச்சல பிரதேசம் (1). இதில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் - அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா. ராஜ்ய சபா தேர்தல் நடக்கும் 10 மாநிலங்களில், 6 மாநிலங்கள் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள். இதிலேயே பாஜக-விற்கு ஒரு பெரும்பான்மை கிடைத்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? இன்னமும் கணக்குப் போட்டுப் பார்த்தால்... மகாராஷ்டிராவில் 6 இடங்களும், தமிழ்நாட்டில் 2 இடங்களும், பீகாரில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும், அஸ்ஸாமில் 3 இடங்களும், சத்தீஸ்கரில் ஓரிடமும், ஹரியானாவில் ஓரிடமும் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும். ஆக, இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 21 இடங்கள் கிடைக்க உள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும் கட்டாயம் பாஜக-விற்குத் தான். இந்த 10 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு மிஸ் ஆகும் இரண்டு மாநிலங்கள் தெலங்கானா, இமாச்சல பிரதேசம். இப்போது இந்தியா கூட்டணிக்கு வருவோம்... மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரே ஒரு இடம் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு. அந்த இடத்திற்கும் சரத் பவார், சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி... என போட்டிகளின் பட்டியல் நீள்கிறது. இதை எல்லாம் சமாளித்துத் தான் இந்தியா கூட்டணி இடம் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு உள்ளது. அதில் 2 இடங்கள் கட்டாயம் திமுக-விற்குத் தான். மீதி 2 இடங்கள் தான் கூட்டணி கட்சிகளுக்கு. ‘இந்தியா’ கூட்டணி 'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி மேற்கு வங்கத்தில் 4 இடங்களைப் பெறுகிறது திரிணாமுல் காங்கிரஸ். தெலங்கானாவில் ஓரிடத்தை காங்கிரஸ் பெறுகிறது. இதுபோக சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஓரிடம் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். ஒடிசா, அஸ்ஸாமில் இந்தியா கூட்டணிக்கு இடம் இல்லை. ஆக, மொத்தம் 14 இடங்களை இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெறுகிறது. மார்ச் 16-ம் தேதி வருகிற தேர்தல் கணக்கைப் போட்டுப் பார்த்தால், அதிலும் பாஜக கூட்டணியின் கை தான் ஓங்குகிறது. ஏற்கெனவே, ராஜ்ய சபாவில் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டியிருக்கும் பாஜக கூட்டணிக்கு, இது மிக மிக ப்ளஸ். இந்த 37 இடங்களின் தேர்தலுடன் இந்த ஆண்டு மொத்தம் 71 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுவிட வேண்டும் என்று இப்போதே பிளானில் இருக்கிறதாம் பாஜக. Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?
ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? - 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains
10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த இடங்களை நிரப்ப வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்குகிறது. மேலே சொன்ன 10 மாநிலங்களில் தமிழ்நாடும் அடக்கம். நாடாளுமன்றம் வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க! ராஜ்ய சபாவில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 245. அதில் பாஜக உறுப்பினர்கள் மட்டும் 103. தேசிய ஜனநாயகக் கூட்டணியினரின் மொத்த எண்ணிக்கை 133. ராஜ்ய சபாவைப் பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படும். ஆனால், அதைத் தாண்டியும் 11 இடங்களை வைத்திருக்கிறது பாஜக. தற்போது ராஜ்ய சபா தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள் - மகாராஷ்டிரா (7), தமிழ்நாடு (6), பீகார் (5), மேற்கு வங்கம் (5), ஒடிசா (4), அசாம் (3), சத்திஸ்கர் (2), அரியானா (2), தெலங்கானா (2), இமாச்சல பிரதேசம் (1). இதில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் - அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா. ராஜ்ய சபா தேர்தல் நடக்கும் 10 மாநிலங்களில், 6 மாநிலங்கள் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள். இதிலேயே பாஜக-விற்கு ஒரு பெரும்பான்மை கிடைத்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? இன்னமும் கணக்குப் போட்டுப் பார்த்தால்... மகாராஷ்டிராவில் 6 இடங்களும், தமிழ்நாட்டில் 2 இடங்களும், பீகாரில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும், அஸ்ஸாமில் 3 இடங்களும், சத்தீஸ்கரில் ஓரிடமும், ஹரியானாவில் ஓரிடமும் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும். ஆக, இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 21 இடங்கள் கிடைக்க உள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும் கட்டாயம் பாஜக-விற்குத் தான். இந்த 10 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு மிஸ் ஆகும் இரண்டு மாநிலங்கள் தெலங்கானா, இமாச்சல பிரதேசம். இப்போது இந்தியா கூட்டணிக்கு வருவோம்... மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரே ஒரு இடம் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு. அந்த இடத்திற்கும் சரத் பவார், சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி... என போட்டிகளின் பட்டியல் நீள்கிறது. இதை எல்லாம் சமாளித்துத் தான் இந்தியா கூட்டணி இடம் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு உள்ளது. அதில் 2 இடங்கள் கட்டாயம் திமுக-விற்குத் தான். மீதி 2 இடங்கள் தான் கூட்டணி கட்சிகளுக்கு. ‘இந்தியா’ கூட்டணி 'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி மேற்கு வங்கத்தில் 4 இடங்களைப் பெறுகிறது திரிணாமுல் காங்கிரஸ். தெலங்கானாவில் ஓரிடத்தை காங்கிரஸ் பெறுகிறது. இதுபோக சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஓரிடம் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். ஒடிசா, அஸ்ஸாமில் இந்தியா கூட்டணிக்கு இடம் இல்லை. ஆக, மொத்தம் 14 இடங்களை இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெறுகிறது. மார்ச் 16-ம் தேதி வருகிற தேர்தல் கணக்கைப் போட்டுப் பார்த்தால், அதிலும் பாஜக கூட்டணியின் கை தான் ஓங்குகிறது. ஏற்கெனவே, ராஜ்ய சபாவில் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டியிருக்கும் பாஜக கூட்டணிக்கு, இது மிக மிக ப்ளஸ். இந்த 37 இடங்களின் தேர்தலுடன் இந்த ஆண்டு மொத்தம் 71 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுவிட வேண்டும் என்று இப்போதே பிளானில் இருக்கிறதாம் பாஜக. Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?
Vijay முதல்ல இதை செய்யணும் | My Lord இயக்குநர் Raju Murugan Gen Z உரையாடல் | Open Talk
Vijay முதல்ல இதை செய்யணும் | My Lord இயக்குநர் Raju Murugan Gen Z உரையாடல் | Open Talk
`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி
பா.ம.க.வில் டாக்டர் ராமதஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். அதில், ``2025-ம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் கடித போக்குவரத்து என் முகவரிக்குதான் இருக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ராமதாஸ் தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு வழக்கில், ‘‘பா.ம.க., தலைவராக நான்தான் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது. அதனால், என்னை பா.ம.க., தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியுள்ளார். மாம்பழம் சின்னம் எனக்கு தான் சொந்தம் மற்றொரு மனுவில், ‘‘பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்மந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்றும் இந்த மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்று அறிவிக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்த்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஒரு அரசியல் கட்சியின் உள் விவகாரம் குறித்து சிவில் கோர்ட்டை அணுகிதான் நிவாரணம் பெறவேண்டும். அன்புமணி, ராமதாஸ் சிவில் கோர்ட்டின் உத்தரவின் படி, தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் தந்தை மகனுக்கு மத்தியில் பிரச்சனை உள்ளது. ஏன் தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ராமதாஸ் தரப்பில் தந்தையின் பேச்சை மகன் கேட்பது இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், `பாமக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். எனவே இதில் ஹை கோர்ட் தலையிட முடியாது. அதேபோல ராமதாஸுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிவிட்டு பிறருக்கு வழங்காமல் முடக்கி வைக்கவும் முடியாது' என்று கூறினார். இதை அடுத்து `இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீண் அடிப்பதற்காக ராமதாஸுக்கு அபராதம் விதிக்க போவதாக' எச்சரிக்கை செய்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Loading…
`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி
பா.ம.க.வில் டாக்டர் ராமதஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். அதில், ``2025-ம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் கடித போக்குவரத்து என் முகவரிக்குதான் இருக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ராமதாஸ் தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு வழக்கில், ‘‘பா.ம.க., தலைவராக நான்தான் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது. அதனால், என்னை பா.ம.க., தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியுள்ளார். மாம்பழம் சின்னம் எனக்கு தான் சொந்தம் மற்றொரு மனுவில், ‘‘பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்மந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்றும் இந்த மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்று அறிவிக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்த்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஒரு அரசியல் கட்சியின் உள் விவகாரம் குறித்து சிவில் கோர்ட்டை அணுகிதான் நிவாரணம் பெறவேண்டும். அன்புமணி, ராமதாஸ் சிவில் கோர்ட்டின் உத்தரவின் படி, தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் தந்தை மகனுக்கு மத்தியில் பிரச்சனை உள்ளது. ஏன் தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ராமதாஸ் தரப்பில் தந்தையின் பேச்சை மகன் கேட்பது இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், `பாமக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். எனவே இதில் ஹை கோர்ட் தலையிட முடியாது. அதேபோல ராமதாஸுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிவிட்டு பிறருக்கு வழங்காமல் முடக்கி வைக்கவும் முடியாது' என்று கூறினார். இதை அடுத்து `இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீண் அடிப்பதற்காக ராமதாஸுக்கு அபராதம் விதிக்க போவதாக' எச்சரிக்கை செய்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Loading…
இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? - தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை, திருச்சி தொடங்கி விஜய் போட்டியிடும் தொகுதி என பல ஊர்களின் பெயர்கள் அவ்வப்போது வெளியான நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், 2024 பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக. விசில் சின்னம் அந்தக் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவிருப்பதாக்ச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அறுபது வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் தயாராகியிருப்பதாகவும் மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும், அதேபோல திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே 'வி' சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, வேளச்சேரி போன்ற தொகுதிகளில் போட்டியிடப்போவதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது, இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம், `` ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு முடிவுகள் வேறு மாதிரியாக வந்தால், முதல் கோணலே முற்றும் கோணலாக மாறிவிடும். அதைவைத்தே எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதனால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பெரம்பூர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் தொகுதியில், பட்டியலினத்தவரும் வன்னியர் சமூகத்தினருமே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கிறார்கள். அடுத்தபடியாக சிறுபான்மையினர் வாக்குகளும் இருக்கின்றன. இந்த மூன்று சமூக வாக்குகளும் தவெகவுக்கு சாதகமான வாக்குகள். அ.தி.மு.கவிலும் இந்தத் தொகுதியை கூட்டணிக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்குவார்கள். அதனால் எளிதாக வெல்ல முடியும். தவிர, தொகுதியில் எடுத்த சில சர்வேக்கள் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. அடுத்ததாக திருச்சி கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. தவிர, கிறிஸ்தவ வெள்ளாளர் வாக்குகள் அதிகம். திருச்சியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே சிறுபான்மையின மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால், திருச்சியும் கைகொடுக்கும் என நம்பி இரண்டு தொகுதிகளில் களமிறங்குகிறோம். அடுத்ததாக, எங்கள் பொதுச் செயலாளர் ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் அதிமுகவிலிருந்து எங்கள் கட்சியில் இணைந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியிலும் ஜே.சி.டி.பிரபாகர் அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடவிருக்கிறார்கள். அருண்ராஜ், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா எங்கள் தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர் திட்டக்குடி தொகுதிலும் அதேபோல, கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பெரம்பலூர் தொகுதியிலும், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் சம்பத்குமார் கோவில்பட்டியிலும், லயோலா மணி எழும்பூர் தொகுதியிலும், வீர விக்னேஸ்வரன் மணப்பாறை தொகுதியிலும், டாக்டர் பிரபு காரைக்குடி தொகுதியிலும், நம் எல்லோருக்குமே தெரிந்த செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிட இருக்கிறார்கள். அதேபோல, அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ஶ்ரீதர் வால்பாறை தொகுதியில் போட்டியிட உள்ளார். தவிர, சிறிய கட்சிகள் சிலவும் கூட்டணிக்கு வர இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீட்டு உண்டு'' என்கிறார்கள். Loading…

30 C