'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்...' - திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!
திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில், பெரியளவில் வெளிப்படையாக தங்களுடைய எதிர்பார்ப்பை பேசாமல் இருந்த திருமாவளவன், திடீரென கறாராக டிமாண்ட் ஏற்றும் வகையில் ஒரு நகர்வை செய்திருக்கிறார். திருமாவளவன் திடீரென விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டிய திருமா, அந்தக் கூட்டத்தில் 8 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஈரான், இஸ்ரேல் விவகாரம் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கும் அவற்றில் எட்டாவது தீர்மானம்தான் முக்கியம். திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் ராஜ்ய சபா சீட்டையும் கேட்டுப்பெற வேண்டுமென அந்த தீர்மானம் கூறுகிறது. அந்த 8 வது தீர்மானம், 'திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது. திருமாவளவன் எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிக'வுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.' எனக் கோரப்பட்டிருக்கிறது. திருமா என்ன ட்விஸ்ட் கொடுக்கப் போகிறாரோ?
தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சியில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த விஜய்யின் வாகனத்தை, கட்சித் தொண்டர்கள் பலர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என தவெக நிர்வாகிகள் எச்சரித்தனர். தவெக தலைவர் விஜய் இந்நிலையில், திருச்சி, கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் விக்னேஷ், 19, அவரது நண்பர் ஹாரூண், 20 இருவரும் டூவீலரில் பின்தொடர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினர். இதில் விக்னேஷ்க்கு தலையில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் பலத்த காயம் ஏற்பட்ட ஹாரூணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், விக்னேஷை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி ஆகியோர் சிகிச்சையில் இருந்த ஹாரூணை மட்டும் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர். விக்னேஷ் ஐ.சி.யு வார்டில் இருந்ததால் அவரைச் சந்திக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து தவெக மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிகிச்சைக்குச் செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை வெளியிடப்பட்டது. தவெக விஜய் இந்நிலையில், விக்னேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, கடந்த மார்ச். 20ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை இருந்த விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' - 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!
திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இறங்கி வந்தது என பேசிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 'கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், எல்லாருக்கும் சீட்டுகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்ட 6 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை குறைத்துகொள்ள சொல்லி முதல்வர் கேட்டார். எங்களின் மாநில செயற்குழுவால் சீட் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு திருப்தியில்லை. முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்தும் தொகுதியை குறைக்க வேண்டாம், 6 சீட்டே கொடுங்கள் எனக் கேட்டோம். அப்போதும் முதல்வர் அவர் தரப்பு சிரமங்களை சொல்லி, 5 சீட்டுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். கூட்டணி நாங்கள் எடுக்கும் முடிவு கூட்டணியின் ஒற்றுமையை குலைத்து, அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை ஏற்றுக்கொண்டோம். சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென எங்களின் விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றி கொடுக்குமாறு கேட்டிருக்கிறோம்' என்றார்
எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஏகாதிபத்திய அமெரிக்காவும் ஏடாகூடமாக ஈரானும் இஸ்ரேலும் ஈகோ பார்த்து எதிரெதிரே மோதிக்கொள்ளும் தருணத்தில் இடையிலே நமக்கேன் இத்துன்பம்? இட்லி பாதி தான் வெந்திருக்கு குக்கரின் விசிலும் கூப்பிடலை பாப்பாக்கு பாலும் கொதிக்கவில்லை பாட்டியின் காப்பிக்கு வழியுமில்லை அடுப்புத் தீ அணைந்த மாயம் என்ன? அதிகாரத் தீயின் கோபம் என்ன? அப்பாவி மக்கள் செய்த பாவம்என்ன? அனுபவிக்கும் கொடும் சாபம் என்ன? அடிப்படை தேவைகள்நின்றுவிட அல்லாடும் மக்கள் துவண்டு விழ இரு நாட்டுக்கான பகை உணர்வில் இருளில் தவிக்குமா முழு உலகும்? மாற்றி மாட்ட கேஸ் உருளையில்லே ஏனென்று கேட்கவும் துணிவுமில்லை தேற்றிக் கொள்ளவும் முடியவில்லை தேடிச்செல்லவும் வழி தெரியவில்லை பாலுக்கு குழந்தை அழுகின்றது பசி என்று பாலகன் தேம்புகின்றான் வாராது வந்த துன்பம் என்ன? போரால் கிடைக்கும் இன்பம் என்ன? வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவர வைகறை வேளையில் போனவரும் வரிசையில் பசியுடன் காத்திருக்க இருப்பு முடிந்ததென வந்த குரல் இடி எனத் தலையில் இறங்கி விட எல்லாரும்பதறிசிதறிஓடியதில் நெரிசலில் கணவர் வீழ்ந்தார் என எதிர் வீட்டுக்காரர் கூட்டி வந்தார் ஆஸ்பத்திரி செல்ல ஆட்டோ இல்லை வைத்தியம் பார்க்கவும் வழியில்லை ஹோட்டலில் உணவுஇல்லைஎன்றார் விடுதியில்இருவேளைமட்டுமென்றார் வீடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு வெளியில் வாட்டுகின்ற கட்டுப்பாடு மார்க்கெட்டில் காய்கறிகள் அழுகி வீணாகும் விற்காத உணவுப்பொருள் கெட்டு வீணாகும் போக்குவரத்து நிலை தடுமாறி விடும் பொது ஜன வாழ்க்கைவழிமாறிவிடும் உண்ணாத வயிறுகள் சுருங்கிப் புண்ணாகும் ஏழைகளின் வாழ்வு இனி இங்கே என்னாகும்? போட்டா போட்டி போட்டு இங்கே போர் நடத்தும் நாடுகளே! இன்று பாமர மக்கள்படும் துன்பம்உங்கள் மனதில் பதிவது எப்போது? போர் நிலை முடிவது எப்போது? இடிந்து விழுகின்ற கட்டிடங்கள் மடிந்து கிடக்கின்ற நல்லுயிர்கள் பற்றி எரிகின்ற நகரங்கள் உயிர் பரிதவித்து கிடக்கின்ற மானுடங்கள் எதுவும்கண்களில்படவில்லையா விழியில் கருணை ஒளிஇல்லையா இருவீர் வெல்லலும் இயற்கையும் அன்றே ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே என்ற எம் ஔவைக்கிழவியின் கூற்றை நீவிர் அறியாதவராயின் இம்மண்ணில் உம் பிறப்பு வீணானதாகும் நிகழும் உம் ஆட்சி கற்காலமாகும் எரியாத அடுப்பின் முன் நின்று எரியும் மனதுடன் பரிதவிக்கும் பாமரர்கள் விடும் சாபத்தின் அம்பு அதிகாரத்தை துளைத்து கொடும் அக்கிரமங்களை அழித்துதகர்த்து நன்னெறி புகட்டும் நாள் இனி வெகு தூரத்தில் இல்லை நாளை விடியும் பொழுது அமைதி சூழலை ஒளியாய் தரும் என்று நம்புவோம்! -கோவையிலிருந்து உங்கள் நீலவேணி தேவராஜன் தேர்தல்
எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஏகாதிபத்திய அமெரிக்காவும் ஏடாகூடமாக ஈரானும் இஸ்ரேலும் ஈகோ பார்த்து எதிரெதிரே மோதிக்கொள்ளும் தருணத்தில் இடையிலே நமக்கேன் இத்துன்பம்? இட்லி பாதி தான் வெந்திருக்கு குக்கரின் விசிலும் கூப்பிடலை பாப்பாக்கு பாலும் கொதிக்கவில்லை பாட்டியின் காப்பிக்கு வழியுமில்லை அடுப்புத் தீ அணைந்த மாயம் என்ன? அதிகாரத் தீயின் கோபம் என்ன? அப்பாவி மக்கள் செய்த பாவம்என்ன? அனுபவிக்கும் கொடும் சாபம் என்ன? அடிப்படை தேவைகள்நின்றுவிட அல்லாடும் மக்கள் துவண்டு விழ இரு நாட்டுக்கான பகை உணர்வில் இருளில் தவிக்குமா முழு உலகும்? மாற்றி மாட்ட கேஸ் உருளையில்லே ஏனென்று கேட்கவும் துணிவுமில்லை தேற்றிக் கொள்ளவும் முடியவில்லை தேடிச்செல்லவும் வழி தெரியவில்லை பாலுக்கு குழந்தை அழுகின்றது பசி என்று பாலகன் தேம்புகின்றான் வாராது வந்த துன்பம் என்ன? போரால் கிடைக்கும் இன்பம் என்ன? வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவர வைகறை வேளையில் போனவரும் வரிசையில் பசியுடன் காத்திருக்க இருப்பு முடிந்ததென வந்த குரல் இடி எனத் தலையில் இறங்கி விட எல்லாரும்பதறிசிதறிஓடியதில் நெரிசலில் கணவர் வீழ்ந்தார் என எதிர் வீட்டுக்காரர் கூட்டி வந்தார் ஆஸ்பத்திரி செல்ல ஆட்டோ இல்லை வைத்தியம் பார்க்கவும் வழியில்லை ஹோட்டலில் உணவுஇல்லைஎன்றார் விடுதியில்இருவேளைமட்டுமென்றார் வீடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு வெளியில் வாட்டுகின்ற கட்டுப்பாடு மார்க்கெட்டில் காய்கறிகள் அழுகி வீணாகும் விற்காத உணவுப்பொருள் கெட்டு வீணாகும் போக்குவரத்து நிலை தடுமாறி விடும் பொது ஜன வாழ்க்கைவழிமாறிவிடும் உண்ணாத வயிறுகள் சுருங்கிப் புண்ணாகும் ஏழைகளின் வாழ்வு இனி இங்கே என்னாகும்? போட்டா போட்டி போட்டு இங்கே போர் நடத்தும் நாடுகளே! இன்று பாமர மக்கள்படும் துன்பம்உங்கள் மனதில் பதிவது எப்போது? போர் நிலை முடிவது எப்போது? இடிந்து விழுகின்ற கட்டிடங்கள் மடிந்து கிடக்கின்ற நல்லுயிர்கள் பற்றி எரிகின்ற நகரங்கள் உயிர் பரிதவித்து கிடக்கின்ற மானுடங்கள் எதுவும்கண்களில்படவில்லையா விழியில் கருணை ஒளிஇல்லையா இருவீர் வெல்லலும் இயற்கையும் அன்றே ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே என்ற எம் ஔவைக்கிழவியின் கூற்றை நீவிர் அறியாதவராயின் இம்மண்ணில் உம் பிறப்பு வீணானதாகும் நிகழும் உம் ஆட்சி கற்காலமாகும் எரியாத அடுப்பின் முன் நின்று எரியும் மனதுடன் பரிதவிக்கும் பாமரர்கள் விடும் சாபத்தின் அம்பு அதிகாரத்தை துளைத்து கொடும் அக்கிரமங்களை அழித்துதகர்த்து நன்னெறி புகட்டும் நாள் இனி வெகு தூரத்தில் இல்லை நாளை விடியும் பொழுது அமைதி சூழலை ஒளியாய் தரும் என்று நம்புவோம்! -கோவையிலிருந்து உங்கள் நீலவேணி தேவராஜன் தேர்தல்
இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ். அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், ஜெகத்ரட்சகன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா அதில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுத்தது தி.மு.க. அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதுகுறித்து இறுதி செய்வதற்காக புதுச்சேரி தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, எதிர்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்டவர்கள் கடந்த 21-ம் தேதி தனியார் விடுதியில் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனால் அன்றைய தினம் இரவே தி.மு.க தேர்தல் குழுவினர் சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ப.சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டவர்கள், புதுச்சேரி தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பிறகு காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், தி.மு.க-வுக்கு 12 தொகுதிகள், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்று என உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அஜந்தா சிக்னல் அருகேயிருக்கும் தனியார் விடுதியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை, நேற்று இரவு 11.30 மணிக்கு தி.மு.க-வின் தேர்தல் குழுவினர் சந்தித்து ஆலோசனை செய்தனர். இரவு ஒரு மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள். புதுச்சேரி அரசு இதற்கிடையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவரான சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து தொகுதி உடன்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல், இறுதி நாளான இன்று காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்தனியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தன. இந்த நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க மேலிடப் பார்வையாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்கள் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெகத்ரட்சகன், ``புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி 30 ஆண்டுகளாக தொடர்கிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்போம்” என்றார். புதுச்சேரி: `சீட் இல்லை!’ - கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி
இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ். அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், ஜெகத்ரட்சகன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா அதில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுத்தது தி.மு.க. அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதுகுறித்து இறுதி செய்வதற்காக புதுச்சேரி தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, எதிர்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்டவர்கள் கடந்த 21-ம் தேதி தனியார் விடுதியில் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனால் அன்றைய தினம் இரவே தி.மு.க தேர்தல் குழுவினர் சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ப.சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டவர்கள், புதுச்சேரி தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பிறகு காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், தி.மு.க-வுக்கு 12 தொகுதிகள், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்று என உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அஜந்தா சிக்னல் அருகேயிருக்கும் தனியார் விடுதியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை, நேற்று இரவு 11.30 மணிக்கு தி.மு.க-வின் தேர்தல் குழுவினர் சந்தித்து ஆலோசனை செய்தனர். இரவு ஒரு மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள். புதுச்சேரி அரசு இதற்கிடையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவரான சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து தொகுதி உடன்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல், இறுதி நாளான இன்று காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்தனியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தன. இந்த நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க மேலிடப் பார்வையாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்கள் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெகத்ரட்சகன், ``புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி 30 ஆண்டுகளாக தொடர்கிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்போம்” என்றார். புதுச்சேரி: `சீட் இல்லை!’ - கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி
”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?
அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்கு ஏதேனும் டிமாண்டும் வைக்கப்பட்டதா என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்படி எதுவும் வைக்கவில்லை என்றார். ஆனாலும் ஒரத்தநாடு தொகுதி வைத்திலிங்கத்திற்கு உறுதி செய்யப்பட்டதாக அப்போது பேசப்பட்டது. தொகுதிக்குள் பம்பரமாகச் சுழன்றவர், வேட்பாளர் அறிவிப்பு வருவதற்கு முன்பே 90 சதவீத தேர்தல் பணிகளை முடித்து விட்டார் என்கிறார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரத்தநாடு நேர்காணல் இந்தச் சூழலில் இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திமுக-வில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. தொகுதி வாரியாக விருப்பமனு அளித்தவர்களை ஒன்றாக அமரவைத்து, வேட்பாளர் ரேஸில் இருப்பவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் சிலவற்றைக் கேட்டார். இதே போல் ஒரத்தநாடு தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. இதில் விருப்பமனு அளித்திருந்த வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர். நேர்காணலில் நடந்தவை குறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம். முதல்வர் ஸ்டாலின், முதலில் தொகுதியில் தேமுதிகவிற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது எனப் பொதுவாகக் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார். அவர் கடந்த தேர்தலில் 38,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எனக் குறிப்பிட்டு பேசியவர், இப்போது தொகுதி எப்படி இருக்கிறதுனு வைத்திலிங்கத்திடம் இருந்து தொடங்கினார். உடனே வைத்தி, நான் கட்சியில் சேர்ந்த பிறகு எல்லா ஊருக்கும் சென்றேன் மக்கள் உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளனர். நாம்தான் ஜெயிக்குறோம் என்றாராம். வைத்திலிங்கம், எம்.இராமச்சந்திரன் இதையடுத்து கடந்த 2016 தேர்தலில் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்த எம்.இராமச்சந்திரனிடம் கேட்க, தம்பி நீங்க எடுக்குற முடிவு சரியாத்தான் இருக்கும், என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே, யார் போட்டியிட்டாலும் வெற்றி என்கிற நிலையில் தொகுதி உள்ளது என்றுள்ளார். இதையடுத்து கலைமணி இளையபாரதியிடம் கேட்க, கடந்த முறை திமுக ஏன் தோற்றது என இங்குள்ள அனைவருக்கும் தெரியும். தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், நீங்க அப்பாவா, அண்ணனா, வீட்டில் ஒருத்தரா வாழ்றீங்க. வைத்திலிங்கம் வந்த பிறகு நமக்கு தொகுதியில் கூடுதல் பலமாகியிருக்கிறது. நாம்தான் ஜெயிக்குறோம் என்றாராம். வைத்திலிங்கம் வருகையால் வாய்ப்பு நழுவிய அதிருப்தியில் இருக்கும் மகேஷ் கிருஷ்ணசாமி நேர்காணலுக்குப் பிறகு டல்லாகக் காணப்பட்டாராம். எனக்கு சப்போர்ட் செய்து பேசியிருக்காலாமேனு சிலரிடத்தில் உரிமையுடன் கடிந்து கொண்டாராம். நேர்காணலில் முதல்வர் பேசியது அங்கு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்த்தால் ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு நூறு சதவீதம் உறுதியாகி இருப்பது தெரிகிறது. அவரும் படு உற்சாகமாகக் காணப்படுகிறார் என்றனர். `சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்
5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம் - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்! கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு
5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம் - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்! கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு
'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டத்தில், 'நமக்கு 5 சீட்டு 6 சீட்டுனு வெளியே பேசிக்கிறாங்க. அதெல்லாம் வதந்தி. நமக்கு கௌரவமான எண்ணிக்கையில சீட் கிடைக்கும்' என பிரேமலதா பேசியிருப்பதால் மா.செக்கள் குஷியாகியிருக்கின்றனராம். பிரேமலதா விஜயகாந்த் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த கூட்டத்தில் என்னவெல்லாம் பேசப்பட்டதென மா.செக்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'நீண்ட நாள் கழித்து அண்ணியார் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசினார். ராஜ்யசபா உத்தரவாதம் கொடுத்துவிட்டு இல்லை என்றது தொடங்கி, எங்களின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அந்தக் கூட்டணியில் சரியாக மரியாதை இல்லாதது வரைக்கும் எல்லாவற்றையும் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், மா.செக்கள் விரும்பியபடியே திமுக கூட்டணிக்காக முயன்று வெற்றிகரமாக முடித்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினார். குறிப்பாக, வெளியில் பேசப்படுவதைப் போல தேமுதிகவுக்கு 5-6 சீட்கள் என்பதை வதந்தி என உறுதி செய்தார். 'நமக்கு கௌரவமான ஒரு எண்ணிக்கையில் சீட்டை பேசி முடித்திருக்கிறோம்' என்றார். மேலும், உள்ளாட்சியிலும் 10-15% இடங்களுக்கு உத்தரவாதம் கேட்டுதான் கூட்டணியை முடித்திருக்கிறோம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சியில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை ஊட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரேமலதா விசிகவும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள் நாம் திமுகவுடன் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிடுவோம் என்றும் அழுத்தமாக கூறினார்' என்றனர். கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள் சார்பில் திமுகவுடன் கூட்டணி பேசி ராஜ்ய சபா சீட்டையும் வாங்கி வந்ததற்காக கூட்டாக நன்றி கூறப்பட்டிருக்கிறது. '5-6 சீட்டுனு வர்ற செய்தியெல்லாம் வதந்தினு சொல்றது மூலமா விசிக, கம்யூனிஸ்ட்டை விட அதிக தொகுதிலதான் நிக்கபோறோங்றதை அண்ணியார் குறிப்பால உணர்த்துறாங்க' என குஷியாகின்றன தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள்.
'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டத்தில், 'நமக்கு 5 சீட்டு 6 சீட்டுனு வெளியே பேசிக்கிறாங்க. அதெல்லாம் வதந்தி. நமக்கு கௌரவமான எண்ணிக்கையில சீட் கிடைக்கும்' என பிரேமலதா பேசியிருப்பதால் மா.செக்கள் குஷியாகியிருக்கின்றனராம். பிரேமலதா விஜயகாந்த் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த கூட்டத்தில் என்னவெல்லாம் பேசப்பட்டதென மா.செக்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'நீண்ட நாள் கழித்து அண்ணியார் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசினார். ராஜ்யசபா உத்தரவாதம் கொடுத்துவிட்டு இல்லை என்றது தொடங்கி, எங்களின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அந்தக் கூட்டணியில் சரியாக மரியாதை இல்லாதது வரைக்கும் எல்லாவற்றையும் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், மா.செக்கள் விரும்பியபடியே திமுக கூட்டணிக்காக முயன்று வெற்றிகரமாக முடித்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினார். குறிப்பாக, வெளியில் பேசப்படுவதைப் போல தேமுதிகவுக்கு 5-6 சீட்கள் என்பதை வதந்தி என உறுதி செய்தார். 'நமக்கு கௌரவமான ஒரு எண்ணிக்கையில் சீட்டை பேசி முடித்திருக்கிறோம்' என்றார். மேலும், உள்ளாட்சியிலும் 10-15% இடங்களுக்கு உத்தரவாதம் கேட்டுதான் கூட்டணியை முடித்திருக்கிறோம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சியில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்குமென நம்பிக்கை ஊட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரேமலதா விசிகவும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள் நாம் திமுகவுடன் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிடுவோம் என்றும் அழுத்தமாக கூறினார்' என்றனர். கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள் சார்பில் திமுகவுடன் கூட்டணி பேசி ராஜ்ய சபா சீட்டையும் வாங்கி வந்ததற்காக கூட்டாக நன்றி கூறப்பட்டிருக்கிறது. '5-6 சீட்டுனு வர்ற செய்தியெல்லாம் வதந்தினு சொல்றது மூலமா விசிக, கம்யூனிஸ்ட்டை விட அதிக தொகுதிலதான் நிக்கபோறோங்றதை அண்ணியார் குறிப்பால உணர்த்துறாங்க' என குஷியாகின்றன தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான்!- நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் கொலை குறிப்பிட்ட அனுமதி நேரத்திற்குப் பிறகு கடையை திறந்து வைத்ததாகக்கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு போலீஸார் நடத்திய தாக்குதலில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் , ரகுகணேஷ் உள்பட 10 போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில் வழக்கின் தீவிரம் காரணமாக சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் முதல் கட்டமாக 2,207 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் உறவினர்கள் தந்தை-மகன் கொலை வழக்கில் தீர்ப்பு சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காவலர்கள் ரேவதி, பியூலா ஆகியோரின் சாட்சியங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பரபரப்பான இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு வழக்கில் நீதிபதி குறிப்பிட்டவை.... * போலீஸார் அடித்ததால்தான் தந்தை, மகன் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. * கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் இருவரும் அடைக்கப்பட்ட போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன. * உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. * கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை * மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் அந்த காயங்கள் இருந்தது. * கைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. மேசையில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர். * ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் காவலர்கள் அடித்துள்ளனர். * நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா- மகன் கிடைத்துள்ளனர் என, போலீஸார் பேசிக் கொண்டனர். என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 9 பேருக்கும் வரும் மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
வேல்முருகன் போடும் மாஸ்டர் பிளான்? இது தான் வியூகமா?
வேல்முருகன் போடும் மாஸ்டர் பிளான்? இது தான் வியூகமா?
ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா? - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத கட்சி தேமுதிக. எப்படி கேப்டன் மீது குடிக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிய உள்ளார் என்று தவறாக விமர்சனத்தை முன் வைத்தார்களோ.. அதேபோல தற்போது என் மீதும், கழகத்தின் மீதும் பேரம், பெட்டி என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர். பிரேமலதா விஜயகாந்த் நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா? மக்களுக்காக 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பின்னால் இருந்தவள் நான் என்பது இந்த ஊர் அறியும். தேமுதிக 0.5% வாக்கு வைத்துள்ளது என்கிறீர்கள் பிறகு, ஏன் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்கிறீர்கள். அதனை விட்டு விட வேண்டியது தானே. வாழ்த்தினாலும் தேமுதிக தான் விமர்சித்தாலும் தேமுதிக தான் உயர்த்து பிடித்தாலும் தேமுதிக தான். என்று பேசியிருக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் சீட் குறைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு? பதிலளித்த அவர், ஒரு கூட்டணி வெல்ல சில தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேமுதிக விட்டுக்கொடுக்கும். மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக் கொடுப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் கட்சியில் விசுவாசிகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' - தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார். இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர். சென்னையில் பியூஸ் கோயல்... இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார். தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக அலுவலகத்தில் தினகரன்.... டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார் தொகுதி பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஸ்டாலினின் வாடிக்கையாக இருக்கிறது. கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்கிறோம். நாங்கள் டெல்லி செல்வதை விமர்சிக்கிறார்கள். அப்படி என்றால் கனிமொழி எதற்கு டெல்லி சென்றார்? அதிமுக அலுவலகத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை. எடப்பாடி பழனிசாமி இது உணர்வுபூர்வமான கூட்டணி. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணியில் 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். எங்கள் கூட்டணியில் காலையில் வந்தார்கள். மலையில் தொகுதி பங்கீடை அறிவித்துவிட்டோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!
இதுவரை பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1962-ம் ஆண்டு அமலுக்கு வந்தது ஆகும். வருகிற 1-ம் தேதி முதல், புது வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய வருமான வரிச் சட்டத்தின் கொள்கைகள் மூன்று - வெளிப்படைத் தன்மை, டிஜிட்டல் தன்மை மற்றும் தரத்தை உயர்த்துதல் ஆகும். அதன் வழியே வர உள்ள மாற்றங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்... வாங்க... வருமான வரி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க இதுவரை வருமான வரித் தாக்கலுக்கு நாம் பயன்படுத்தி கொண்டிருந்த பல படிவங்களின் பெயர்கள் மாற உள்ளன. மாற இருக்கும் அந்தப் படிவங்களின் பெயர்கள்... இப்போதிருக்கும் படிவங்களின் பெயர்கள் > புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள படிவங்களின் பெயர்கள் 3CA, 3CB, 3CD > 26 16A > 131 24Q > 138 26Q > 140 27Q > 144 26AS > 168 'வரி ஆண்டு' என்றால் என்ன? பழைய வருமான வரிச் சட்டத்தில், 'முந்தைய ஆண்டு', 'மதிப்பீட்டு ஆண்டு' என்று இரண்டு ஆண்டு கான்செப்ட் இருந்தது. ஆனால், இனி 'வரி ஆண்டு (Tax Year)' மட்டுமே. வரி ஆண்டு என்றால் என்ன என்பதை உதாரணத்தோடு பார்ப்போம். 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சம்பாதிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். வருமான வரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! பழைய சட்டத்தின் படி, இந்த ஆண்டை 'முந்தைய' ஆண்டு என்று குறிப்பிடுவோம். இதற்கு வருமான வரித் தாக்கல் முதல் வருமான வரிக் கட்டுதல் வரை 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செய்வோம். இதை 'மதிப்பீட்டு ஆண்டு' என்று குறிப்பிடுவோம். வருமான வரித் தாக்கலின் போது, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலான வருமானத்திற்கு 'மதிப்பீட்டு ஆண்டு' என்று கிளிக் செய்து தாக்கல் செய்வோம். இனி அது தேவையில்லை. புதிய சட்டத்தின் படி, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை 'வரி ஆண்டு' என்று கூறுவோம். வருமான வரித் தாக்கலின் போது, இனி இரண்டு ஆப்ஷன்கள் இருக்காது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், 'நிதி ஆண்டு' என்று நாம் குறிப்பிடுவது தான், இனி 'வரி ஆண்டு' ஆகும். HRA ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே! புதிய சட்டத்தின் கீழ், சம்பளதாரர்கள் சந்திக்க உள்ள மாற்றங்கள்... > HRA விலக்கு இந்த விலக்கு பழைய வரி முறையைத் தேர்வு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே. முன்பு, இந்த விலக்கு டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் வசிப்பவர்களுக்கே கிடைத்து வந்தது. இப்போது இந்த நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத், பூனா, அகமதாபாத் மற்றும் பெங்களூருவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. HRA விலக்கு எப்படி வழங்கப்பட உள்ளது? உதாரணத்திற்கு, ராஜிற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அடிப்படை சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு வழங்கப்படும் HRA - ரூ.4.5 லட்சம். அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் எவ்வளவு - ரூ.1 லட்சம். இப்போது HRA-ல் இருந்து 10 சதவிகித அடிப்படை சம்பளம் கழிக்கப்பட வேண்டும். ராஜிற்கு கழித்தால் ரூ.4 லட்சம் வரும். இந்த 4 லட்சம் தான் ராஜிற்கு கிடைத்துள்ள HRA வரி விலக்கு. HRA-ல் இருந்து மீண்டும் மேலே வந்த 4 லட்சத்தைக் கழித்தால், ரூ.50 ஆயிரம். ஆக, ராஜ் இந்த ரூ.50 ஆயிரத்திற்கு வரி கட்ட வேண்டும். படிப்பு செலவு Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக் குழந்தைகள் படிப்பு செலவு விலக்கு இந்த விலக்கும் பழைய வரி முறையைப் பின்பற்றுபவருக்கு மட்டுமே... குழந்தைகளின் கல்விச் செலவுகளில்... ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.3,000 வரையில் விலக்கு அளிக்கப்படும். இது முன்பு ரூ.100 ஆக இருந்தது. குழந்தைகளின் ஹாஸ்டல் செலவுகளில்... ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.9,000 வரையில் விலக்கு அளிக்கப்படும். இது முன்பு ரூ.300 ஆக இருந்தது. ஆனால், இந்த விலக்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே. முன்பெல்லாம் வாடகை கட்டினேன்... வீட்டுக் கடன் எடுத்தேன் என்று கொஞ்சம் எளிதாக வருமான வரி விலக்கு பெற முடிந்தது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ், சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் தான் இனி விலக்கு. இதற்கான சில உதாரணங்களைப் பார்க்கலாம். > ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வீட்டு வாடகைக் கட்டினால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டை தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும். > வீட்டுக் கடனுக்கு வட்டி சலுகையைப் பெற, எங்கிருந்து கடன் வாங்கியிருக்கிறோமோ, அந்தத் தகவலை இணைக்க வேண்டும். > LTA (Leave Travel Allowance) வரிச் சலுகைப் பெற, டிராவல் சம்பந்தமான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். > சாப்டர் VI-A வரிக் குறைப்புகளைப் பெற, முதலீட்டு ஆவணங்களைத் தர வேண்டும். பரிசுப் பொருள்கள் 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail கவனிக்க வேண்டியவை... > ஒரு வரி ஆண்டில் ரூ.15,000-க்கு மேல் பரிசு மற்றும் வவுச்சர்கள் பெற்றால், அதற்கு வரி செலுத்த வேண்டும். > வேலை நேரங்களில், வவுச்சர்கள் (Sodexo, Pluxee...) வழியாக கொடுக்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை ஒரு நேரத்திற்கு ரூ.200-ஐ தாண்டினால், அதற்கும் வரிக் கணக்கிடப்படும். இது பழைய வரி முறைக்கு மட்டும். > பணியாளர்கள் ரூ.2 லட்சம் வரை வாங்கப்படும் கடன்களுக்கு வரி இல்லை. > விதிமுறை 18-ன் கீழ் குறிப்பிட்டுள்ள நோய்களுக்கு... மருத்துவக் காரணங்களுக்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் வரி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். கடைசி தேதி மாற்றங்கள் > இனி (ஆடிட் அல்லாத) ITR - 3 மற்றும் 4-ன் வருமான வரித் தாக்கல் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி ஆகும். இது இந்த நிதியாண்டு (2025 - 26) முதலே தொடங்குகிறது. ITR - 1 மற்றும் 2 தாக்கல் தேதியின் கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல ஜூலை 1-ம் தேதி தான். அதுபோல, வரி ஆடிட்டிற்கான கடைசி தேதியும் அக்டோபர் 31-ம் தேதியாகவே தொடர்கிறது. கடைசி தேதி தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று! > திருத்தம் செய்யப்பட்ட வருமான வரித் தாக்கலை செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதியாக மாற்றப்படுகிறது. ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட தாக்கல்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும். தாமதமாகவும் தாக்கல் செய்யப்படும் வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை.! ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார். இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர். சென்னையில் பியூஸ் கோயல்... இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார். கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி முடிவு செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவரம் வெளியாகி வருகிறது. அதிமுக அலுவலகத்தில் தினகரன்.... அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும் , (கடந்த முறை 20 தொகுதிகள்) பாமகவுக்கு 18 தொகுதிகளும், (கடந்த முறை 23 தொகுதிகள்) அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார். இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர். சென்னையில் பியூஸ் கோயல்... இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார். கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி முடிவு செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவரம் வெளியாகி வருகிறது. அதிமுக அலுவலகத்தில் தினகரன்.... அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும் , (கடந்த முறை 20 தொகுதிகள்) பாமகவுக்கு 18 தொகுதிகளும், (கடந்த முறை 23 தொகுதிகள்) அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்! | முதல் களம் 11
டி.டி.வி.தினகரன் முதல் களம் 11 ஓர் இடைத்தேர்தலில் வழக்கமாக என்னவெல்லாம் நடக்கும்? அந்த நேரத்து ஆளும் கட்சி எதுவோ, அதன் கை ஓங்கி இருக்கும். எங்கு திரும்பினாலும் கொடிகளும் தோரணங்களுமாக பிரசாரம் அனல் பறக்கும். அணி வகுக்கும் வாகனங்கள் அந்தத் தொகுதி மக்களை மலைக்க வைக்கும். பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் தூள் பறக்கும். எதிர்க்கட்சி வேட்பாளருக்கும், ஆளும் கட்சி வேட்பாளருக்கு நிகராக செல்வாக்கும் பொருளாதார பலமும் இருந்தால், அவரது பிரசாரமும் அதே பாணியில் 'டஃப்' கொடுப்பதாக இருக்கும். அதே சமயம், ஒரு சுயேட்சை வேட்பாளரால் இவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்ட முடியுமா என்றால், அது பெரும்பாலும் சாத்தியமில்லாததாகத்தான் இருக்கும். ஆனால், 2017 டிசம்பரில் நடைபெற்ற சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளரின் பிரசாரம் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுவதாக இருந்தது. அந்த வேட்பாளர் டி.டி.வி. தினகரன். ஆம், இன்றைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தினகரனேதான். அதுவரை சட்டசபை தேர்தல் எதிலும் போட்டியிடாத தினகரன், தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே, அபார வெற்றி பெற்றது மட்டுமல்லாது, தேர்தல் பிரசாரம் சார்ந்த சில சர்ச்சைகளிலும் குற்றச்சாற்றுகளிலும் சிக்கி, தேர்தல் ஆணையம் தலையிடும் அளவுக்கு பேசுபொருளானார். என்ன நடந்தது? போயஸ்தோட்ட அதிகார மையத்தின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த தினகரன் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அதிமுகவிலிருந்து அவர் வெளியேற்றப்பட என்ன காரணம்? ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் தீவிரமாக களமாடும் அளவுக்கு கசப்புணர்வு வெடித்துக் கிளம்பியது ஏன்? எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள 1990-களின் இறுதியில் இருந்து பயணிக்கலாம். டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை சசிகலாவின் சகோதரி வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன்தான் டி.டி.வி. தினகரன். இரண்டாவது மகன் பாஸ்கரன், மூன்றாவது மகன் சுதாகரன். 1987 டிசம்பரில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் மறைவுக்குப் பின், ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் இருந்த அவரது அரசியல் எதிரிகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோது, அவரது தோழியான சசிகலா, மன்னார்குடியில் உள்ள தனது உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து, ஜெயலலிதாவைப் பாதுகாக்கத் தொடங்கினார். அப்படித்தான் தினகரன் சகோதரர்கள் 1990-களின் தொடக்கத்தில் போய்ஸ் கார்டனுக்குள் நுழைந்தனர் (சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவர். இவருக்கு நடைபெற்ற ஆடம்பர திருமணம்தான், 1996 தேர்தலில் அதிமுகவின் பெரும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பேசப்பட்டது). தினகரன், ஜெயலலிதாவின் அரசியல் பிரசாரங்களைக் கவனித்துக்கொண்டதோடு, அவரது பயணங்களிலும் உடன் சென்று, கட்சி விவகாரங்களையும் பார்த்துக் கொண்டார். இதனால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறிய தினகரன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாகவும் வலம்வந்தார். எம்.பி. தேர்தலில் போட்டி 1999-ஆம் ஆண்டின் மத்தியில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பினார் தினகரன். சசிகலாவிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவருக்கு பெரியகுளத்தில் போட்டியிட சீட் வாங்கிக்கொடுத்தார் சசிகலா. அதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனை பெரியகுளம் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. சீட் கிடைத்துவிட்டது, வெற்றி பெற்று காட்ட வேண்டுமே..? பெரியகுளம் புறப்பட்டார் தினகரன். போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை அல்லவா? தினகரனின் குட்புக்கில் இடம்பெற்றுவிட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் போட்டிப்போட்டுக்கொண்டு, தினகரன் தொகுதிக்குள் காலடி எடுத்துவைத்ததும் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்து அசத்தினர். ஓபிஎஸ், டிடிவி வெற்றிக்கு உதவிய ஓ.பி.எஸ் பெரியகுளத்தில் முகாமிட்ட தினகரனை, கட்சிக்காரர்கள் தினமும் வந்து சந்தித்து, வணக்கம் வைத்து, தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தினர். இவர்களில், அப்போது கட்சியில் சாதாரண பதவியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். தனது தம்பி ராஜாவின் வீட்டிலேயே தினகரனைத் தங்கவைத்து, குனிந்து, வளைந்து பன்னீர்செல்வம் காட்டிய பவ்யமும் உபசரிப்புகளும் தினகரனுக்கு ரொம்பவே பிடித்துப்போக, தனக்கான தேர்தல் பிரசாரத்துக்கான வரவு செலவுகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவரிடம் வழங்கினார். ஆனால், பன்னீர் அந்த வேலைகளை மட்டும் பார்க்கவில்லை. இருக்கின்ற வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார். வாக்காளர்களுக்கான 'கவனிப்பு' ஒருபுறம் இருக்க, எதிர்தரப்பு நிர்வாகிகளையும் வளைத்து, அவர்களது தேர்தல் வேலைகளையும் பிரசாரத்தையும் 'ஆஃப்' செய்வதற்கான வேலைகளையும் கச்சிதமாக செய்து, ‘ஆக்டிவ்’ புள்ளிகளை அமைதியாக்கினார். பன்னீரின் இந்த சூட்சுமங்கள் பக்காவாக 'ஒர்க் அவுட்' ஆனது. அப்புறமென்ன... அந்தத் தேர்தலில் 3 லட்சத்து 3,881 வாக்குகளைப் பெற்று, 45,806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி , அவரை டெல்லி பக்கம் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள உதவியது. ஆனால், 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட தினகரனுக்கு தோல்வியே கிடைத்த நிலையில், அவர் மாநிலங்களவை உறுப்பினரானார். டி.டி.வி.தினகரன் | முதல் களம் 11 கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா இந்த நிலையில், 19.12.2011 அன்று, டி.டி.வி. தினகரனை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் போயஸ்தோட்டத்திலிருந்தே வெளியேற்றினார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு அதிமுகவில் அதிகரித்துவிட்டதாகவும், ஜெயலலிதாவே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுவெளியிலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாற்றுகள் எழுந்தன. இதனையடுத்து, தான் யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே எழுந்த குற்றச்சாற்றுகளைத் தொடர்ந்தே ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனாலும், 2012 ல் சசிகலாவை போயஸ் தோட்டத்துக்குள் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அதே சமயம் தினகரன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. டி.டி.வி.தினகரன் | முதல் களம் 11 ஜெயலலிதாவின் மறைவும் தினகரனின் ரீ -என்ட்ரியும் 2016 செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் வரத்தொடங்கினர். டிசம்பர் 5-ஆம் நாள், ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அதிமுக, சசிகலா குடும்பத்தினரின் கைகளுக்குச் செல்கிறது. சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானார். அப்புறமென்ன... தினகரனும் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு, 2017, பிப்ரவரி 15 அன்று கட்சியின் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதே கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் இதுகுறித்து அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், அதிமுகவில் எழுந்த அதிகார சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து விடுபட விரும்பிய மூத்த தலைவர்களின் முடிவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் தினகரன். அலறவிட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017 ஏப்ரல் 12-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சுயேட்சையாக களமிறங்கினார் தினகரன். பிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என சுமார் 62 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்முனைப் போட்டி என்பதால், பிரசாரம் அமளிதுமளிப்பட்டது. பணப்பட்டுவாடாக்களுக்கும் பரிசுப் பொருட்கள் விநியோகத்துக்கும் பஞ்சமில்லை. இதில், தினகரன் கை ஓங்கி காணப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் முறையிட்டு, புகார் மனுக்கள் அளித்தன. இந்த நிலையில், வாக்குக்கு பணம் அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தினகரன் எம்.எல்.ஏ-வாக வருவதை டெல்லி பாஜக மேலிடம் விரும்பவில்லை என்கிற பின்னணியும் தேர்தல் ரத்துக்கு இன்னொரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. பின்னர் ஒருவழியாக டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனே வெற்றி பெற்றார். பலரும் அதை ஒரு சாத்தியமற்ற முயற்சியாகவே பார்த்தனர். ஏனெனில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் மீது விழுந்த பழி, கட்சிச் சின்னம் இல்லாத நிலை, ஜெயலலிதாவுக்கு புனிதமாகக் கருதப்பட்ட தொகுதியில், ஆளும் கட்சியின் அனுபவமிக்க அரசு இயந்திரத்துக்கு எதிரான போட்டி போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தினகரன் இந்த வெற்றியைப் பெற்றார். சசிகலாவுக்கு விசுவாசமான ஒரு பிரிவினரின் ஆதரவு மற்றும் அள்ளி இறைக்கப்பட்ட வைட்டமின்கள் போன்றவை வெற்றிக்கு பெருமளவில் கைகொடுத்தன. டி.டி.வி தினகரன் ஆச்சரியங்களை அள்ளித்தந்த தேர்தல் முடிவு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார் தினகரன். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை, 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் பெற்ற வாக்குகள் 89,013. இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வியப்பில் ஆழ்த்தினார். மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையைத் தவிர, அனைத்து சுற்றுகளிலும் தினகரனே முன்னிலை வகித்தார். இதைவிட இன்னொரு ஆச்சரியமான முடிவு என்னவென்றால், திமுக வேட்பாளர் மருது கணேஷ், வெறும் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று, டெபாசிட் இழந்ததுதான். இந்தத் தேர்தலில், மருது கணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறிகொடுத்தனர். அதேபோன்று, பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே, அதாவது 1,417 வாக்குகளே கிடைத்தன. நோட்டா பெற்ற வாக்குகள் 2,373. இவை தவிர, 11 ஆண்டுகளுக்குப் பின் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நிகழ்வும் அரங்கேறி இருந்தது. அதற்கு முன்னர், 2006-ஆம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்றிருந்தார். சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10 இப்படி, தான் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, அதிரடிகளையும் ஆச்சரியங்களையும் நிகழ்த்திக் காட்டிய டி.டி.வி. தினகரன், பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ( அமமுக) கட்சியைத் தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து, அக்கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்த அமமுகவிலிருந்து, தற்போது அதன் தொடக்க கால முன்னணி நிர்வாகிகள் பலரும் வெளியேறிவிட்டனர். தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக தினகரன் மட்டுமே வாள் வீசிக்கொண்டிருக்கிறார். இந்த முறை அவர், பல முறை துரோகி என சொன்ன எடப்பாடி பழனிசாமியுடனே கூட்டணி வைத்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை மக்கள் தான் சொல்வார்கள். ! ( தொடரும் ) கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2
புதுச்சேரி: `சீட் இல்லை!’ - கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. என்.டி.ஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டதுடன், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., ல.ஜ.க கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் – தி.மு.கவில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இன்று காலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது' என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர். எம்.பி வைத்திலிங்கம் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து அவர்களுக்கு `ஏ' மற்றும் `பி' படிவங்களை வழங்கினார், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அதேசமயம் அந்தப் படிவம் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி தயார் செய்திருந்த வேட்பாளர் பட்டியலிலும் நாராயணசாமியின் பெயர் இல்லை. அதையடுத்து, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் பரவியது. அதில் கோபமடைந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள், வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, வைத்திலிங்கத்துக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள். `எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாகவே, நாராயணசாமிக்கு போட்டியிடும் வாய்ப்பை மறுத்திருக்கிறீர்கள்' என்று குற்றம் சுமத்தினர். அதேசமயம் இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநிலத் தலைவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள், ``தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான நாராயணசாமி, 2016-ல் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் மூலம் தன்னுடைய முதல்வர் பதவியை மட்டும்தான் அவர் காப்பாற்றிக் கொண்டாரே தவிர, அந்த தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. நாராயணசாமி ஆதரவாளர்கள் அதைக் கூட விட்டுவிடலாம்… ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், அவரை முதலமைச்சராக்கிய நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடாமல் தவிர்த்தார். அதன்பிறகு தொகுதிப் பக்கம் போகாத நாராயணசாமி, இப்போது `நான்தான் முதல்வர் வேட்பாளர்' என்று அந்த தொகுதியில் சுற்றி வருகிறார். ஆனால் நெல்லித்தோப்பு மக்கள் இவரை நம்புவார்களா ? அதனால்தான் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அது எங்கள் அகில இந்திய தேசிய தலைமை எடுத்த முடிவு. அதில் கட்சியின் மாநிலத் தலைவர் என்ன செய்ய முடியும்? என்றனர். அதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கிளம்பிய வைத்திலிங்கத்தை மறித்து, ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள். புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி
சமபலத்தில் மோதும் அதிமுக, திமுக; களத்தில் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்! மதுரையில் முந்துவது யார்?
முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' கள நிலவரம் மதுரை மாவட்டம் 1. மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி மதுரையின் பிரதான அடையாளமான மீனாட்சியம்மன் திருக்கோயில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு, கூடலழகர் பெருமாள் திருக்கோயில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், பழைமையான காஜிமார் தெரு பள்ளிவாசல், டவுன்ஹால் ரோடு என்று மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்கள் நிறைந்த தொகுதி மதுரை மத்தி. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர், பட்டியல் சமூகத்தினருடன், இஸ்லாமியர், யாதவர் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க-வில், மீண்டும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கே சீட் என்கிறார்கள். அதேசமயம், வழக்கறிஞர் அன்புநிதி, செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், முன்னாள் மேயர் குழந்தைவேல் ஆகியோரும் சீட் பெற முயல்கிறார்கள். சோலைராஜா அ.தி.மு.க-வில், பேராசிரியர் ஜெயபாலன், சோலைராஜா மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்த பி.எம் மன்னன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.ம.மு.க-வில் டேவிட் அண்ணாதுரை, பா.ஜ.க-வில் ராஜரத்தினம், சசிகுமார் ஆகியோரும் சீட் பெறுவதற்கான ரேஸில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் ஹக்கிம் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய நிலவரப்படி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் சொந்த செல்வாக்கு, தி.மு.க-வின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றால், தொகுதியில் தி.மு.க-வே முன்னிலை பெற்றிருக்கிறது. 2. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், பாண்டி கோயில் என ஏராளமான ஆன்மிகத் தலங்களும், சென்னை உயர் நீதிமன்றக் கிளையும் அமைந்திருக்கும் சட்டமன்றத் தொகுதி, மதுரை கிழக்கு. மதுரை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியாகவும் விளங்கும் இந்தத் தொகுதியில், விவசாயம் ஒரு பக்கம் நடந்தாலும், நெசவு, வெள்ளிப் பட்டறை உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுடன் ஹெச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன. அமைச்சர் பி.மூர்த்தி தொகுதியில், யாதவர், முக்குலத்தோர், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க-வில், மீண்டும் மூர்த்தியே களம் காண்பார் என்கின்றன அந்தக் கட்சி வட்டாரங்கள். அவர் தொகுதி மாறினால் மட்டுமே, கட்சியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க-வில், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா பரிந்துரைப்பவருக்கே வாய்ப்பு என்கிறது அந்தக் கட்சி வட்டாரம். நாம் தமிழர் கட்சி வேட்பாளார் செல்வம் ராஜன் செல்லப்பாவின் சிபாரிசில், வழக்கறிஞர்களான கோபி அல்லது ரமேஷின் பெயர்கள் சீட்டுக்கு அடிபடுகின்றன. அதேசமயம், பா.ஜ.க-வில் சுசீந்தரனும், த.வெ.க-வில் கல்லானையும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில், அமைச்சர் மூர்த்தியின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிக் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தொகுதியில் தி.மு.க-வே முந்துகிறது! 3. மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி திருமலை மன்னரின் அரண்மனை, பிரமாண்ட மாரியம்மன் தெப்பக்குளம், தூய மரியன்னை ஆலயம் என்று வரலாற்றைத் தாங்கி நிற்கும் ஏராளமான அடையாளங்கள் அமைந்திருக்கும் தொகுதி மதுரை தெற்கு. மதுரையின் வர்த்தகப் பகுதி அதிகமுள்ள பகுதியாகவும் இருக்கிறது. மு.பூமிநாதன் தொகுதியில், வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக சௌராஷ்டிரர் சமூகத்தினரும், முக்குலத்தோரும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து பட்டியலினத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்துவர், நாடார் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர். ம.தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்கத் தீவிரமாகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ பூமிநாதன். அதேநேரம், தொகுதியைக் குறிவைக்கும் தி.மு.க-வில், வேலுசாமி, முகேஷ் ஷர்மா சீட் எதிர்பார்க்கிறார்கள். எஸ்.எஸ்.சரவணன் அ.தி.மு.க-வில், எஸ்.எஸ்.சரவணன், அண்ணாதுரை, பகுதிச் செயலாளர்களான ஜெயபால், சண்முகவள்ளி ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். பாஜக சார்பில் இராம. ஸ்ரீநிவாசன், மஹாலட்சுமி ஆகியோர் போட்டியிடத் தீவிரமாகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் சுமதி என்பவர் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், தற்போதைய நிலவரப்படி தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிகள் சம பலத்தில் இருக்கின்றன! 4. மேலூர் சட்டமன்ற தொகுதி கக்கன் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களை, பொதுவாழ்க்கைக்குக் கொடுத்த சட்டமன்றத் தொகுதி, மேலூர். மதுரை மாவட்டத்தின் முக்கியமான தொகுதியான மேலூரில், தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், அழகர்கோயில், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர் எனப் புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களும் அமைந்திருக்கின்றன. நெல் விவசாயம், கரும்பு, வாழை, தென்னை விவசாயமும் பலருக்கும் வாழ்வாதாரம் அளிக்கின்றன. பெரியபுள்ளான் (எ) செல்வம் தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினருடன், யாதவர், இஸ்லாமியர், வெள்ளாளர், செட்டியார் சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், மீண்டும் பெரியபுள்ளான் (எ) செல்வமே போட்டியிடுவார் என்கிறார்கள். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசனும் சீட்டுக்காக முயல்கிறார். அ.ம.மு.க-வுக்கு இந்தத் தொகுதியில் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ சாமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், அந்தக் கட்சியின் சார்பில் இங்கு போட்டியிடுவார் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோட்டைக்குமார் கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், மாவட்ட நிர்வாகி ராஜசிம்மன் சீட் கேட்கிறார். தி.மு.க-வில், மதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரகுபதி, மேலூர் சேர்மன் முகமது யாசின் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ரவிச்சந்திரன், மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் கோட்டைக்குமார் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில், களத்தில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான நிலையே நிலவுகிறது! 5. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மதுரையை ஆண்ட பாண்டியர்களின் அடையாளங்கள், சங்க காலத்து தொல்லியல் மீதங்கள், குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்த பெருங்காமநல்லூர் என்று பல்வேறு முக்கிய இடங்கள் அமைந்துள்ள தொகுதி, உசிலம்பட்டி. ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத் தேவர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் உருவான தொகுதி. மல்லிகைப் பூ விவசாயம் பலருக்கும் வாழ்வாதாரம் அளிக்கிறது. ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான அய்யப்பன் சமீபத்தில் திமுகவில் இணைந்ததோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். அய்யப்பன் தொகுதியில், முக்குலத்தோர் அதிகமாகவும், பட்டியல் சமூகத்தினர், நாடார் உள்ளிட்ட பிற சமூகத்தினர் கணிசமாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க கூட்டணியிலுள்ள அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் பி.வி.கதிரவனும், அ.தி.மு.க-விலுள்ள மகேந்திரனும் சீட் எதிர்பார்க்கிறார்கள். வழக்கறிஞர் இளமகிழன் தி.மு.க-வில், கனிமொழியின் ஆதரவுபெற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் இளமகிழன் சீட் எதிர்பார்க்கிறார். அதேசமயம், நகரச் செயலாளர் தங்கபாண்டியன், ஜெயச்ந்திரன் உள்ளிட்ட சிலரும் சீட்டுக்காக முயல்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிராமி தனபால் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில், தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிகளுக்கு இடையே இழுபறியான நிலை நிலவுகிறது! 6. சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதி ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகள் அடங்கிய தொகுதி சோழவந்தான். மதுரை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்தொகுதியாகவும் அமைந்திருக்கிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தால் நெல் உள்ளிட்ட பயிர், பழ விவசாயத்துடன் வெற்றிலைச் சாகுபடியும் நடைபெறுகிறது. பண்ணைக் கருவிகள் உற்பத்தி ஆலை, ஜவுளிப் பூங்கா, சிறு குறு தொழில்களை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரத்தை அமைத்திருக்கின்றனர். ஆ.வெங்கடேசன் தொகுதியில், பட்டியல் சமூகத்தினருக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகமாக இருக்கின்றனர். தெலுங்கு மொழி பேசுவோர், வெள்ளாளர், கவுண்டர் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்தியின் நம்பிக்கைக்குரியவர் என்பதால், மீண்டும் ஆ.வெங்கடேசனுக்கே சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். கே.மாணிக்கம் அதேசமயம், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசியும், காங்கிரஸ், வி.சி.க கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்கள். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான கே.மாணிக்கம், கருப்பையா ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் நாகலட்சுமி திருமாறன் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில், அ.தி.மு.க - தி.மு.க இடையே தொகுதி யில் இழுபறி நிலையே நிலவுகிறது! 7. திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ‘திருமங்கலம் ஃபார்முலா’ மூலம் அரசியல் களத்தில் புகழ்பெற்ற இந்தத் தொகுதி, ஆன்மிகரீதியாக மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமைக்குரியது. விவசாயமும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையும் இந்தத் தொகுதியின் அடையாளங்கள். ஆர்.பி. உதயகுமார் தொகுதியில், அகமுடையார், கள்ளர், நாயக்கர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், பட்டியல் சமூகத்தினர், நாடார் சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், இந்த முறையும் ஆர்.பி.உதயகுமாருக்கே மீண்டும் வாய்ப்பு என்பது உறுதியாகியிருக்கிறது. மணிமாறன் தி.மு.க-வில், மணிமாறன் மீண்டும் சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் முனீஸ் என்பவர் போட்டியிடுகிறார். சசிகலாவின் புதிய கட்சியான அஇபுதமமுக சார்பில் ஜீவிதா என்பவர் சீட் கேட்டு வருகிறார். தற்போதைய நிலவரப்படி, தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர் தேர்வு, தவெக வுக்கு கிடைக்கும் ஆதரவு உள்ளிட்டவை வெற்றி தோல்வியில் பெரும் பங்காற்றும். 8. மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி காந்தி அருங்காட்சியம் , கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., கமிஷனர், எஸ்.பி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், தமுக்கம், உலகத் தமிழ்ச் சங்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என மதுரையின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி மதுரை வடக்கு தொகுதி. இங்கு, அரசு ஊழியர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். கோ.தளபதி தொகுதியில், முக்குலத்தோர், யாதவர், பட்டியல் சமூகத்தினர் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சௌராஷ்டிரர், நாயுடு, வெள்ளாளர் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர். டாக்டர் சரவணன், அ.தி.மு.க தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் சோமசுந்தரம், பொன் சேது, அக்ரி கணேசன் ஆகியோர் தொகுதியை விரும்பினாலும், மாநகரச் செயலாளர் என்பதால் மீண்டும் கோ.தளபதியே போட்டியிட வாய்ப்புள்ளது. காங்கிரஸில் கார்த்திகேயன் சீட் கேட்கிறார். அ.தி.மு.க-வில், டாக்டர் சரவணனுக்குத்தான் சீட் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் வி.திருநாவுக்கரசு என்பவர் போட்டியிடுகிறார். தற்போது கூட்டணி பலத்தால், தி.மு.க-வே களத்தில் முந்துகிறது ! 9. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி பொதுவுடைமை இயக்க முன்னோடிகள் என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்றோரும், எம்.ஜி.ஆரும் வெற்றிபெற்ற சிறப்புக்குரிய தொகுதி மதுரை மேற்கு. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம், முத்துப்பட்டி, விளாங்குடி உள்ளிட்ட மதுரை மாநகராட்சியின் 22 வார்டுகளும் வடக்கு தாலுகா, தெற்கு தாலுகாவிலுள்ள பகுதிகளும், பரவை பேரூராட்சியும் அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சிறிய பெரிய வர்த்தக நிறுவனங்கள், சிறு குறு தொழில்களிலுள்ள வேலைவாய்ப்புகளை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரத்தை அமைத்திருக்கின்றனர். செல்லூர் ராஜூ தொகுதியில், அகமுடையார், பிறமலைக்கள்ளர் சமூகத்தினர் அதிகமாகவும், நாயக்கர், வெள்ளாளர், யாதவர், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் கணிசமாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ செல்லூர் ராஜூவே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோ.விக்னேஷ் குமார் தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்திக்கு நெருக்கமான தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பாலாஜியின் பெயர் அடிபடுகிறது. கூடவே இளைஞரணி ஜி.பி.ராஜா, சின்னம்மாள் உள்ளிட்டோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் சோ.விக்னேஷ் குமார் என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய நிலையில் களத்தில், தி.மு.க - அ.தி.மு.க இடையே இழுபறியான சூழல் நிலவுகிறது! 10. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி முருகக் கடவுளின் முதலாம் படை வீடு அமைந்திருக்கும் தொகுதி திருப்பரங்குன்றம். ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அவனியாபுரம், மதுரை விமான நிலையம், காமராசர் பல்கலைக்கழகத்துடன் ஏராளமான தனியார் கல்லூரிகள், எய்ம்ஸ், வடபழஞ்சி ஐடி பார்க் உள்ளிட்டவை தொகுதியின் முக்கியமான அடையாளங்கள். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் தொகுதியில் நிறைந்திருக்கின்றனர். ராஜன் செல்லப்பா தொகுதியில், முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், நாயக்கர், சௌராஷ்டிரர் உள்ளிட்ட சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில் மீண்டும் ராஜன் செல்லப்பாவே சீட் கேட்கிறார். தி.மு.க-வில், திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யப்ரியா பாலாஜி, மகளிர் அணி நிர்வாகி கிருத்திகா தங்கபாண்டி ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கிருத்திகா தங்கபாண்டி அதேசமயம், தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகளும் தொகுதியை எதிர்பார்க்கின்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்தியாதேவி என்பவர் போட்டியிடுகிறார். கட்சிக் கட்டமைப்பு, எம்.எல்.ஏ-வின் செயல்பாடுகள் போன்றவற்றால், தற்போதைய சூழலில் அ.தி.மு.க-வே முந்திச் செல்கிறது!
அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!- பியூஸ் கோயல்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார். இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா போன்ற மாநிலங்கள் காங்கிரஸை வெறுத்தது போல தமிழக மக்களும் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வெறுக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். பியூஸ் கோயல் - எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கீட்டு விபரங்களை அறிவிப்போம். நாங்கள் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் திருப்தி மற்றும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு அமையும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளம்; டெல்லி வரை எதிரொலித்த திருச்செந்தூர் இடைத்தேர்தல் |ஆடுபுலி
ஜெ.,-வின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்ட இடைத்தேர்தல் அரசியல் ஆடுபுலி தமிழ்நாட்டின் சட்டமன்ற அரசியல் வரலாற்றில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் செல்வி ஜெயலலிதா. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் முதலமைச்சரும் ஜெயலலிதாதான். திரைத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்து இந்திய அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்டது, அங்கீகாரம் வழங்கியது திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல். திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள் டெல்லி வரை எதிரொலித்தன. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி திருச்செந்தூரிலேயே முகாமிட்டார். முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து திரும்பினார். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் தனக்கு வைக்கப்பட்ட சோதனையில் வெற்றியைத் தட்டிச் சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் 1982 ஜூன் 19, 20 இருநாட்கள் தென்னாற்காடு மாவட்ட அதிமுக சார்பாக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கடலூர் திருவந்திபுரம் முதல் மஞ்சக்குப்பம் வரை மாபெரும் மகளிர் பேரணி நடைபெற்றது. மஞ்சக்குப்பம் பொதுக்கூட்டத்தின் முதல் நாள் மாநாட்டில் ”பாரதி கண்ட புதுமைப்பெண்” என்ற தலைமையில் செல்வி ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இணைந்த ஜெயலலிதாவிற்கு, மிகப்பெரும் மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பு வழங்கி, அரசியல் நுழைவிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன். 1984 மார்ச் 29 நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சார்பில் செல்வி ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுக்கு உரை எழுதிக் கொடுத்தவர் என்று கூறப்பட்ட வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அதிமுக சார்பிலும், திமுக சார்பில் வைகோவும், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலுவும் அதே சமயத்தில் மாநிலங்களவை சென்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்திருந்த இடம் ஜெயலலிதாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தின் பிரச்னைகள் பற்றி பேசுவதற்கு அடிக்கடி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார் ஜெயலலிதா. 1986 ஜூலை 12 அன்று அதிமுக சார்பாக மதுரையில் நடந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மாநாட்டில், எம்ஜிஆருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார் ஜெயலலிதா. அந்த செங்கோலை மீண்டும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கினார் எம்ஜிஆர். மதுரை மாநாட்டின் நிகழ்வுகள், அன்றைய காலகட்டத்தில் அரசியல் குறியீடாகப் பார்க்கப்பட்டது. முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் 1987ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த, அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுக ஜெயலலிதா அணி, அதிமுக ஜானகி அணி என்று இரண்டாகப் பிளவு பட்டது. 1986 முதல் 1989 வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த செல்வி ஜெயலலிதா, மாநில அரசியலுக்குள் நுழைந்தார். 1989 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்ததால் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதன் பின்னர் அதிமுகவும் ஒன்றிணைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் ஆக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால், நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெருவாரியான இடங்களைப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா. சாதாரண தொண்டர், கட்சி மாநாட்டில் கலை நிகழ்ச்சி, மகளிர் மாநாட்டில் சிறப்புரை, தேர்தல் கூட்டங்களில் பரப்புரை என்று படிப்படியாக அரசியலில் உயர்ந்த ஜெயலலிதாவிற்கு முதல் சவால் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் மூலம் வந்தது. தொண்டர்களை சந்தித்து, வாக்குகளை ஈர்த்து கட்சியில் தன்னை ஒரு தனிப்பெரும் ஆளுமையாகக் காட்டிக் கொள்ள திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஜெயலலிதாவிற்கு உதவியது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா 1982 ஜூன் 4 அன்று கட்சியில் சேர்ந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு காலத்திலேயே 1983 ஜனவரியிலேயே கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதனை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனால், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தபோது, அத்தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், கலைச்செல்வி ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் வைத்த சோதனை என்றார்கள் கட்சி நிர்வாகிகள். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். கேசவ ஆதித்தன் திடீரென மரணமடைந்திருந்தார். அதிமுக எம்.எல்.ஏ.வான கேசவ ஆதித்தன் மீதும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மீதும், முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் மீதும், எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்திய நேரம் அது. திருச்செந்தூர் முருகனின் தங்க வேல் காணாமல் போய் விட்டது. உண்டியலில் போடப்பட்ட வேல், ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று விட்டது என்று குற்றம் சுமத்தினார்கள் திமுகவினர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அறநிலையத் துறை உதவி ஆணையாளர் சுப்பிரமணிய பிள்ளை ஆலய வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அது கொலை என்று குற்றம் சுமத்தினர் எதிர்க்கட்சியினர். ”எப்பா எப்பா வீரப்பா.. முருகன் வேல் எங்கப்பா..” திருச்செந்தூர் அதிகாரி மரணத்திற்கும், காணாமல் போன வேல் எங்கே என்று கேட்டும், நீதி கேட்டு நெடும் பயணம் சென்றார் கருணாநிதி. மதுரை அண்ணா சிலை முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் வரை நடந்தே சென்று மக்கள் மத்தியில் நீதி கேட்டார். ”எப்பா எப்பா வீரப்பா.. முருகன் வேல் எங்கப்பா..” என்று நெடும்பயணத்தில் முழக்கமிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு இந்தப் பிரச்னை மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. வேல் காணாமல் போனது குறித்து விசாரிக்க நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கமிஷனை அமைத்தது தமிழக அரசு. பால் கமிஷன் அறிக்கை கசிந்து அதுவும் சர்ச்சையானது. இந்த சூழ்நிலையில்தான், திருச்செந்தூர் தொகுதிக்கு 1983 மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் முருகனின் வேல் திருடப்பட்டதே முதன்மையான பிரச்சனையாக எதிரொலித்தது. பெரியார் வழி வந்த திமுக, முருகன் பிரச்சனைக்காகப் போராடும் போது, முருக பக்தர்கள் வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால் எம்ஜிஆர் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த உடன்குடி அமிர்தராஜ் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமாக அறியப்பட்ட திமுக மக்கள் தொடர்புச் செயலாளர் நெல்லை நெடுமாறன் திமுக வேட்பாளராக களம் கண்டார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாக, இந்திரா காங்கிரஸ், திராவிடர் கழகம், ஜனதா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், குமரி அனந்தன் கட்சி, பழ நெடுமாறன் கட்சி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை. இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சி, குமரி அனந்தனின் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். திமுகவின் ஆளுங்கட்சிக்கு எதிரான பொது வேட்பாளர் கனவு நிறைவேறவில்லை. ஆனாலும் போட்டி கடுமையாக இருந்தது. போட்டிப்போட்ட வீடியோ பிரசாரங்கள்! திமுக சார்பில் தேர்தல் பரப்புரை செய்திட கருணாநிதி, அன்பழகன், நாஞ்சில் மனோகரன், வைகோ, கேபி கந்தசாமி உள்ளிட்டோர் திருச்செந்தூரில் முகாமிட்டனர். அதிமுக சார்பில் ராஜா முகமது, வலம்புரி ஜான், ஜெயலலிதா முக்கியப் பேச்சாளர்களாக இருந்தனர். தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருந்த நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எம்ஜிஆர் உண்ணாவிரதம் தொடங்கி விட்டார். தமிழ்நாட்டிற்குத் தேவையான அரிசி, மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதா ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருப்பதாக விமர்சனம் செய்தனர். முதலமைச்சர் எம்ஜிஆருக்கு பிரதமர் இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார். டெல்லி சென்று திரும்பினார் எம்ஜிஆர். அரிசிப் பிரச்னையும் முடிவுக்கு வந்தது. ஆனால், எம்ஜிஆர் உண்ணாவிரதம், டெல்லிப் பயணம் இரண்டையும் வைத்து அதிமுகவை காங்கிரஸில் இணைக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. திருச்செந்தூர் தேர்தல் பரப்புரையிலும் அந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஆனால், திமுகவினர் எழுப்பிய, வேல் காணாமல் போன பிரச்னை முதல் எம்ஜிஆர் டெல்லிப் பயணம் வரை அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து தீவிர பரப்புரை செய்தார் ஜெயலலிதா. காயல்பட்டினம், குரும்பூர், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது. ஜெ.,-வின் ஒற்றை நாற்காலி முறை - திருச்செந்தூர் போட்ட விதை இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காலம் அது. ஆளுங்கட்சியான அதிமுக சத்துணவுத் திட்டம் வீடியோக்களை கிராமங்களில் திரையிட்டுக் காட்டினர். எதிர்க்கட்சியான திமுக நீதி கேட்டு நெடிய பயணம் போன கருணாநிதியின் வீடியோக்களை திரையிட்டார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியும் போட்டியில் இருந்தார்கள். கருப்பையா மூப்பனார் தலைமையில் பரப்புரை செய்தனர். ஜனதா கட்சியும் அத்தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தது. செல்லுமிடமெல்லாம், ஜெயலலிதாவின் பேச்சிற்கு கிடைத்த வரவேற்பு, பெண்களின் வாக்குகளை அதிகளவில் ஈர்த்தது. 1983 மார்ச் 1 அன்று திருச்செந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகளில் 1,766 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அமிர்தராஜ் வெற்றி பெற்றார். முன்னதாக 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமிர்தராஜ் 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணிய ஆதித்தனை தோற்கடித்திருந்தார். திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள் அரசியல் திருப்பங்களை பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, செல்வி ஜெ.ஜெயலலிதா எனும் அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் வழங்கியது. மற்றொருபுறம் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் ஒற்றை நாற்காலி மட்டும் போடுகின்ற வழக்கமும் திருச்செந்தூரில் இருந்தே தொடங்கியது.!
புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ். அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அப்படி ஆரம்பித்த பேரம் 14+14+2 என்ற கணக்கில் இறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அதில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுக்கிறது தி.மு.க. அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதுகுறித்து இறுதி செய்வதற்காக புதுச்சேரி தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, எதிர்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்டவர்கள் கடந்த 21-ம் தேதி தனியார் விடுதியில் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனால் அன்றைய தினம் இரவே தி.மு.க தேர்தல் குழுவினர் சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ப.சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டவர்கள், புதுச்சேரி தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தனர். புதுச்சேரி தி.மு.க தலைவர்கள் அதன்பிறகு காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், தி.மு.க-வுக்கு 12 தொகுதிகள், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்று என உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அஜந்தா சிக்னல் அருகேயிருக்கும் தனியார் விடுதியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை, நேற்று இரவு 11.30 மணிக்கு தி.மு.க-வின் தேர்தல் குழுவினர் சந்தித்து ஆலோசனை செய்தனர். இரவு ஒரு மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள். இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது' என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ``அது உண்மைதான் என்று முடித்துக் கொண்டார். `காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு இறுதி முடிவா அல்லது தி.மு.க-வை வழிக்கு கொண்டுவருவதற்கான ஸ்டண்டா என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்’ என்று முகநூலில் விவாதித்து வருகின்றனர் அரசியல் ஆர்வலர்கள். தமிழ்நாடு ஓவர்... புதுச்சேரி ஸ்டார்ட்… தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் குழாயடிச் சண்டை!
`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகின்றன. அக்கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருப்பதால் இவர் தான் வேட்பாளர் என்பது உறுதியாகியிருப்பதாகவும் பரவலாக பேசப்படுகின்றன. தேமுதிக-வில் அவைத்தலைவர் கே.வி.ஆர்.ராஜரத்தினம் வைட்டமின் செலவு செய்வதற்கு தயாராக இருப்பதால், பிரேமலதா இவருக்காக தொகுதியை கேட்கிறாராம். பட்டுக்கோட்டை தொகுதியில் ரேஸில் உள்ள திமுக நிர்வாகிகள் அதே நேரத்தில் திமுக-வில் சுமார் 35 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாகவும் சீட்டுகான ரேஸில் பலர் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த திமுக-வினரிடம் பேசினோம், ``1996 தேர்தலுக்கு பிறகு கடந்த 2021 தேர்தலில் திமுக இங்கு நேரடியாக களமிறங்கி தொகுதியை கைப்பற்றி, அண்ணாதுரை சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பாஜக எதிர்ப்பால் தொகுதிக்குள் கணிசமாக வசிக்கும், இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருப்பதால் இங்கு மீண்டும் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும்னு ஏகப்பட்ட பேர் தலைமையின் கதவை தட்டி வருகின்றனர். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சூரப்பள்ளம் சொ.விஜயகுமார், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், பழஞ்சூர் செல்வம், சிட்டிங் எம்.எல்.ஏ அண்ணாதுரை. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் என பெரிய லிஸ்டே போட்டியில் உள்ளது. இதில் சொ.விஜயகுமார், பார்த்திபன் ஆகியோர் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். கடந்த 2018ல் வீசிய கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை சூரப்பள்ளம் அழைத்து வந்து ரூ.13 லட்சம் செலவில் 25,000 தென்னங்கன்றுகள் வழங்கும் நலத்திட்ட உதவி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றவர் சொ.விஜயகுமார். மரத்தான், கைப்பந்து என தொடர்ந்து பல விளையாட்டு போட்டிகளை நடத்தினார். பழஞ்சூர் செல்வம் கடந்த 2025ல் அமைச்சர் நேரு தலைமையில் ரூ.22 லட்சம் செலவில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தி கட்சியினர் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார். மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பெயர் போன நேருவே, கபடி போட்டிக்கு விஜயகுமார் செய்திருந்த ஏற்பாட்டில் வியந்து, `உனக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்குயா'னு முதுகில் தட்டி கொடுத்தாராம். தொய்வடையாமல் தொடர்ந்து தன் சொந்த பணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இவரை போன்றவர் தான் கட்சிக்கு வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் நேரு சொன்னதாக சொல்கிறார்கள். மண்டல பொறுப்பாளர் என்கிற முறையில் நேரு, சொ.விஜயகுமாரை டிக் செய்து விட்டார் என்கிறார்கள். திமுக தலைமையும் உளவுத்துறை மூலம் இவரை விசாரித்துள்ளனர். தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்? பார்த்திபன் கட்சிக்கு சின்சியராக இருப்பவர். கஜா, கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பில் தன் சொந்த பணத்த செலவு செய்து மக்களுக்கு உதவியிருக்கிறார். சிக்கலான சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளுக்கு பலரும் இவரை நாடுகின்றனர். மேல்மட்டத்தில் நல்ல தொடர்பில் இருக்கும் பார்த்திபன் கடந்த 2021 தேர்தலிலே வேட்பாளர் ஆவார் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அண்ணாதுரை வேட்பாளரானது யாரும் எதிர்பார்க்காதது. கட்சியிலும், மக்களுக்கும் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு 128 பக்கம் கொண்ட புத்தகத்தை மேல்மட்டத்தை சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே காட்டினாராம். அதைபார்த்தவர்கள் நம்பிக்கையாக இருங்கள் நல்லது நடக்கும் என்றார்களாம். சிபாரிசு இல்லாமல் இருந்தால் மெரிட்டில் தனக்கு சீட் கிடைக்கும் என உழைப்பை நம்பும் பார்த்திபன், முதல்வர் ஸ்டாலின் தனக்கான வாய்ப்பை தருவார் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார். சொ.விஜயகுமார், பார்த்திபன் மாவட்ட செயலாளராக இருந்த எம்.எல்.ஏ அண்ணாதுரை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளரான பழனிவேல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்தது. கட்சியில் ஆக்டீவாக இல்லாதவர் மாவட்ட பொறுப்பாளரா என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டன. இதில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகவும் அதனால், டி.ஆர்.பி.ராஜா இவரை பவருக்கு கொண்டு வந்திருக்கிறார் என்றனர். இப்போது டி.ஆர்.பி.ராஜா, பழனிவேலுக்கு தொகுதியை பரிந்துரை செய்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் நேர்காணல் நடக்கிறது. இதில் யாருக்கு தொகுதி ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளது என தெரிந்து விடும். திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்பது தான் அக்கட்சியினர் எண்ணமாக உள்ளது. மகேந்திரனுக்காக ராகுல்காந்தி நேரடியாக தொகுதியை கேட்பார். இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பட்டுக்கோட்டை அரசியல் நிகழ்வுகள் இருப்பதாக தெரிவித்தனர். கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?
Iran War: Nuclear Weapons வைத்திருக்கிறதா Israel | US | Decode | Vikatan
ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்'சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். என்ன காரணம்? இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும். அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஈரான் போர் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க மேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர். இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம். இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும். அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்... இதனால், விலையும் குறையும். இந்திய ரூபாய் வலுபெறும். இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'போர் செலவு இருக்கிறதே' - ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்
விருதுநகர் மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Elections 360 updates
பத்மநாபபுரம்: `தொகுதியை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும்'மனோ தங்கராஜுக்கு எதிராகும் நிர்வாகிகள்?
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிதான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதி. கடந்த 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மனோ தங்கராஜிக்கு எதிராக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொந்தளித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலுவாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொகுதியைச் சேர்ந்தவருக்கே சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க காரணம் குறித்து தி.மு.க திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் நம்மிடம் கூறுகையில், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இதற்கு முன்பு தி.மு.க-வைச் சேர்ந்த தியோடர் ரெஜினால்ட், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் போன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ-க்களாக இருந்தனர். அப்போது கட்சி சம்பந்தமாகவும், தொகுதி மக்களின் பிரச்னைக்காகவும் அவர்களை எளிதில் அணுக முடிந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரைச் சேர்ந்தவர். அவரை மாவட்டச் செயலாளர் ஆக்கவும், எம்.எல்.ஏ ஆக்கவும் உழைத்தவர்கள் நாங்கள். ஆனால், அவர் அமைச்சர் ஆனதும் முகாம் அலுவலகத்தை கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றிவிட்டார். பத்மநாபபுரம் தொகுதிக்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது, அதில் அவரை பார்க்க முடியாது. சென்னை சென்று பார்த்தால் 'இங்கு ஏன் வந்தீர்கள், எனக்கு ஆயிரத்தி எட்டு வேலை இருக்கிறது' என்பார். பத்மநாபபுரம் தொகுதியைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால் 'மகனை பார்த்து கோரிக்கையை சொலுங்கள்' என்பார். மகனை பார்த்து கோரிக்கை வைக்கவா நாங்கள் அவருக்காக தேர்தல் பணி செய்தோம். கட்சி நிர்வாகிகளுக்காகவும் அவர் எதுவும் செய்யவில்லை. பொதுமக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால் எளிதில் அணுக முடியும் என்றார். மனோ தங்கராஜ் இதுபற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கட்சியில் முக்கிய பதவியை வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்துகொண்டு பத்மநாபபுரத்தில் போட்டியிட காய் நகர்த்துகிறார். அதற்காக சிலரை அமைச்சருக்கு எதிராக வேலைசெய்ய தூண்டிவிடுகிறார். அமைச்சருக்கு எதிராக உடன்பிறந்த தம்பியை வைத்து வீடியோ போட வைப்பதன் பின்னணியிலும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ உள்ளார். கடந்த தேர்தல் சமயத்திலும் இதுபோன்ற பிரச்னைகளை மனோ தங்கராஜிக்கு எதிராக எழுப்பினர். அதை புரிந்துகொண்டு தலைமை சீட் வழங்கியது. இந்த முறையும் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு தலைமை சீட் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்'வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க
வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். > இனி (ஆடிட் அல்லாத) ITR - 3 மற்றும் 4-ன் வருமான வரித் தாக்கல் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி ஆகும். இது இந்த நிதியாண்டு (2025 - 26) முதலே தொடங்குகிறது. ITR - 1 மற்றும் 2 தாக்கல் தேதியின் கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல ஜூலை 31-ம் தேதி தான். அதுபோல, வரி ஆடிட்டிற்கான கடைசி தேதியும் அக்டோபர் 31-ம் தேதியாகவே தொடர்கிறது. வருமான வரித் தாக்கல் தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா? > திருத்தம் செய்யப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 31-ம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதியாக மாற்றப்படுகிறது. ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட தாக்கல்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!
என்னை சினிமா பிரபலமாக மட்டும் பார்க்கவேண்டாம்- அரசியலில் இறங்கிய அஞ்சலி நாயர் சொல்வது என்ன?
கேரள மாநில சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினமாகும். இதற்கிடையே வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ட்வெண்டி 20 கட்சி சார்பில் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை தொகுதியில் சினிமா நடிகை அஞ்சலி நாயர் வேட்பாளராக களத்தில் உள்ளார். திருப்பூணித்துறை நகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு உள்ள திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்திருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தயக்கத்துடனே பா.ஜ.க நிர்வாகிகள் தேர்தல் பணி செய்துவருகின்றனர். ட்வெண்டி 20 வேட்பாளர் நடிகை அஞ்சலி நாயர் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வருகின்றார். தேர்தல் பிரசாரத்தில் நடிகை அஞ்சலி நாயர் அரசியல் அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி நாயர், தேர்தலில் எனக்காக பணிசெய்யும் நிர்வாகிகள்தான் எனக்கு பக்கபலமாக உள்ளனர். மக்களின் ஆதரவு எனக்கு உற்சாகம் அளிக்கிறது. என்னை சினிமா பிரபலமாக மட்டும் நான் நினைக்கவில்லை. கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன் ஆனால், இப்போதும் நான் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைகளுக்கும், சந்தைகளுக்கும் சாதாரண நபர்களைப் போன்று சென்று வருவேன். 'நீ சினிமா பிரபலம் என்பதால் சாதாரணமாக இப்படி போகாதே' என என் கணவரும், பிள்ளைகளும் அடிக்கடி கூறுவார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் சாதாரண மக்களைப் போன்றுதான் இருப்பேன். நடிகை அஞ்சலி நாயர் என்னை திருப்பூணித்துறையின் மகளாகவும், அவர்களின் வீட்டில் ஒருவராக மக்கள் கருதவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். நான் சினிமா பிரபலம் அல்ல. சினிமா என்பது எனது வேலை என்ற வகையில் மட்டும் பார்த்தால் போதும். திருப்பூணித்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு கிடைத்த வாய்ப்பை இறைவன் தந்த ஆசியாக கருதி நான் ஏற்றுக்கொண்டேன் என்றார்.
பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! - விஜய்யின் Election பிளான் என்ன?
சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். TVK Vijay இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகையில், 'தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையிலுள்ள தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி, தலைவர் அவர் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார். வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் முடிவடையப் போகிறது. அடுத்தக்கட்டமாக மக்களிடம் சென்று வாக்கு கேட்பதுதான் முக்கியப் பணி. அதற்காக தலைவர் தன்னுடைய பிரசாரத்தை பெரம்பூர் மற்றும் ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கத்திலிருந்து தொடங்கும் முடிவில் இருக்கிறார். வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியில் பெரம்பூருக்கு தலைவரை அழைத்து வரும் பணிகளை நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கின்றனர்' என்றனர். TVK - Vijay மேலும் பேசியவர்கள், 'அதுமட்டுமல்லாமல் மார்ச் 26 ஆம் தேதி 2000 க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய நகராட்சி லெவல் நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களுடன் உரையாடி போட்டோ ஷூட்டும் நடத்தப் போகிறார். அடிமட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு' என விவரித்தனர்.
`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? - பெ.சண்முகம் பேட்டி
திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் சிபிஎம் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினோம். முதல்வர் ஸ்டாலின் “5 தொகுதிகளை நீங்கள் ஏற்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடர்வதற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திப்பதற்கும் அது கட்டாயம் பயன்படும். ஆகவே நீங்கள் இந்த 5 என்கிற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று முதல்வர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். முதலமைச்சருடைய கருத்தை கட்சியினுடைய மாநில செயற்குழுவில் விவாதித்து அதனுடைய முடிவு என்ன என்பதை நாங்கள் உரிய முறையில் தலைவருக்கு செய்திகள் அனுப்புகிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறோம். மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்ற போராட்டத்தை நாங்கள் நடத்துவது என்பது வேறு. அதற்காக வேறுவிதமான முடிவுகள் எதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லாது. எந்த நேரத்திலையும் அப்படிப்பட்ட ஒரு முடிவை நாங்கள் எடுக்க மாட்டோம். கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். பெ.சண்முகம் எங்கள் நிலைப்பாட்டில் குழப்பமெல்லாம் ஒன்றும் இல்லை. 6 தொகுதி பெற வேண்டும் என்பதே மாநிலக்குழுவினுடைய முடிவு. முதல்வர் கூப்பிட்டுப் பேசி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிற நிலையில், அதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டியது எங்களுடைய கடமை. நாங்க கட்டாயம் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார்.
`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி'திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்
``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...” புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அதில் 13 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்றது. ஆனால் 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான் மற்றும் கமலக்கண்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவற்றின் மூலம் புதுச்சேரி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க-வின் கை ஓங்கியது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் அதன் தொடர்ச்சியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரி மாநில தி.மு.க-வின் அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி சிவக்குமாரின் மகன் திருமணம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ``தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி மலர்ந்திருக்கிறது. அதை `திராவிட மாடல் ஆட்சி' என இன்று பெருமையுடன் கூறுகிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். எனக்கு முன்பு பேசியவர்கள் தங்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் கூறினார்கள். உங்களுக்கு மட்டுமா அந்த ஆசை இருக்கிறது? ``புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி” எனக்கும்தான் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட அந்த வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. ஆனால் அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே நாம் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள்தான். இதே புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அதனால் நிச்சயமாக தி.மு.க ஆட்சி புதுவை மாநிலத்தில் மீண்டும் உதயமாகும். அதில் எந்தவிதச் சந்தேகமும் கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்களாக இருந்த வைத்திலிங்கம், நாராயணசாமி போன்றவர்களுடன் நாம் கூட்டணி ஆட்சி நடத்தவில்லையா? ஆக... அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஆனால் உறுதியாக புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக் கூடாது என்று பேசிவிட்டுச் சென்றார். புதுச்சேரி தி.மு.க தலைவர்கள் அன்றிலிருந்து, `புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' என்ற கோஷத்தை உயர்த்திப் பிடித்த தி.மு.க, 2026 தேர்தலில் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமையேற்போம் என்றும் கூறி வந்தது தி.மு.க. `ஆளும் கட்சியாக இருந்த நம்மால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாமல் போய்விட்டதே…' என்று ஏற்கெனவே நொந்து கொண்டிருந்த காங்கிரஸ் தரப்பு, தி.மு.க-வின் இந்த கோஷங்களால் துவண்டுபோனது. ஒருகட்டத்தில் எரிச்சலான முன்னாள் முதல்வர் நாராயணசாமி, `` புதுச்சேரியில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்கள் தி.மு.க தலைமையில் நடைபெறுவதாகத்தான் செய்திகள் வெளியாகின்றன. தனித்தனி போரட்டங்கள்... எதிரெதிர் திசையில் தி.மு.க - காங்கிரஸ் போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை. கூட்டணிக் கட்சி ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் சார்பில் தனித்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை என்று கடுகடுத்திருந்தார். உடனே, ``தி.மு.க-வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது. எங்கள் கொள்கையைக் கூறி கட்சியை வளர்க்கிறோம் என்று அதற்கு பதிலடி கொடுத்தார் தி.மு.க அமைப்பாளர் சிவா. அதன் தொடர்ச்சியாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ``புதுச்சேரியில் கூட்டணிக்குத் தலைமை என்பது காங்கிரஸ்தான். அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கொந்தளித்திருந்தார். நாராயணசாமி அப்போதிலிருந்து காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் இடையேயான மோதல், உரசலுக்கும் விரிசலுக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு வருகிறது. காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டங்களை தி.மு.க-வும், தி.மு.க முன்னெடுக்கும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும் வெளிப்படையாக தவிர்த்து வந்தன. அந்த மோதல்தான், புதுச்சேரியில் தற்போது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிலவும் இழுபறிக்குக் காரணம். ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ். தொகுதிக்கு மட்டுமல்ல, வேட்பாளர்களுக்கும் ஸ்கெட்ச்! அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அப்படி ஆரம்பித்த பேரம் 14+14+2 என்ற கணக்கில் இறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்தப் பட்டியலில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதை கொடுக்க மறுக்கிறது தி.மு.க. அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆனால் இந்த தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைக்கும் தி.மு.க, அந்தத் தொகுதிகளை தருவதற்கு மறுத்து வருகிறது. இந்தக் குழப்பம் நீடித்து வரும் நிலையில், `நமது மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கியிருக்கும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேருவை சந்தித்திருக்கிறது காங்கிரஸ் தரப்பு. காங்கிரஸ் கட்சியின் இந்த `மூவ்' தி.மு.க-வை உஷ்ணமாக்கியிருக்கிறது. அதனால், `காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு நாம் தனித்துப் போட்டியிடலாம்' என்று ஆலோசனை செய்து வருகிறது தி.மு.க தரப்பு. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில் அவர்களுக்கு வேட்பாளர்களே இல்லை. ஆனால் அந்த தொகுதிகளை எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் எங்கள் வேட்பாளர்களையே வளைத்து நிற்க வைக்க திட்டமிடுகிறார்கள் என்றனர். புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?
'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' - பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்
இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர். சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் சரத்குமார் பேசியவை, 'உங்களின் ஆதங்கத்தையெல்லாம் மனதில் வைத்திருக்கிறேன். எடுக்கிற முடிவு எல்லாருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தோம் என்று இருக்கக்கூடாது. கட்சியினரான நீங்கள்தான் என் குடும்பத்தினர். 'இப்போதும் பாருங்கள். இரவில் மனைவியிடம் கேட்டு ஒரு முடிவெடுப்பார்' என கிண்டலடிக்கிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்கள். - என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது. நம் கட்சி சார்பில் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வையுங்கள். கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் என்ன செய்வதென பார்ப்போம். நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். SarathKumar அவர்களுக்கு எதோ தடங்கல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது. அத்தனை தகுதியும் உடைய எனக்கு ஏன் அங்கீகாரம் இல்லை? என்னுடைய மனைவி அறிவு, திறமை, ஆற்றல் மிக்கவர். திமுகவுக்காக பிரசாரம் செய்தவர். அப்படிப்பட்டவரிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது? சமூகவலைதளங்களில் தற்குறிகளாக இருக்கிறார்கள். 41 பேரை கொன்றுவிட்டு அவர்களின் வீட்டாரை ஹோட்டலுக்கு அழைத்து துக்கம் விசாரித்த கூட்டம் இது. நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகு முடிவெடுப்போம்.' என்றார். -
திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். வேல்முருகன் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடி இருக்கிறேன். நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை. திமுக எங்களை புறகணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் கூறியிருக்கின்றனர். சமூக நீதிக்கு எதிரான தீய சக்திகளை திமுக உடன் வைத்திருக்கிறது. இந்நிலையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே'நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?
கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது. அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை தான். ஆனாலும், அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியும் வெறும் 30 நாள்களுக்குத் தான். ஈரான் போர் எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்! ஈரானிய எண்ணெய் Kpler தரவுகளின் படி, மத்திய கிழக்கு கடற்பகுதியில் இருந்து சீனா கடற்பகுதிக்கு அருகே வரை, 170 மில்லியன் பேரல்கள் ஈரானிய எண்ணெய் கப்பல்களில் உள்ளன. அமெரிக்காவின் அறிக்கை படி, இந்த எண்ணெயை தான் உலக நாடுகள் வாங்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் ஈரானிய எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஈரானிய எண்ணெய் வாங்கப் போகிறதா? இந்தியாவில் இப்போதே எண்ணெய் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஈரான் போர் நீடித்தால், இந்த நிலை இன்னும் மோசமாகும். அதனால், அமெரிக்காவின் அனுமதிக்குப் பிறகு, ஈரானிய எண்ணெயை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரெடியாக உள்ளனவாம். ஆனால், அதை உடனே செய்யாமல் இந்திய நிறுவனங்கள் இரண்டு விஷயங்களுக்காக காத்திருக்கின்றன. ஒன்று, இந்திய அரசின் வழிகாட்டுதலுக்காக. மற்றொன்று, ஈரானுக்கு எப்படி கட்டணம் செலுத்துவது என்கிற அமெரிக்காவின் நெறிமுறைகளுக்காக. இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டணத்தில் என்ன பிரச்னை? ஈரான் பொதுவாக வர்த்தகங்களுக்கு அமெரிக்க டாலர்களை பெறுவதில்லை. அது தான் சிக்கல். ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை
Iran war: கட்டுக்கடங்காத செலவு, நெருக்கடியில் Trump! - Ex UN officer R Kannan Interview | West Asia
தமிழ்நாடு தேர்தல்: Thiruvarur மாவட்டம் கள நிலவரம்! | IPS Show On Road| #15 திருவாரூர் Ground Report
திருக்குவளை : கலைஞர் கருணாநிதி சொந்த ஊர் கள நிலவரம்? | IPS Show On Road | #17 | TN Elections 2026
Cuddalore பிரச்னைகள் என்ன? வெல்ல போவது யார்? | Influencers Meet | IPS Show On Road TN Election #16
Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS Vikatan
எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்!
கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமான நிறுவனம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனத்தின் இந்தப் பிரச்னையால், பயணிகள் வேறு விமான நிறுவனங்களை நோக்கி நகர்ந்தனர். விமானம் ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை செக் விலக்கு... அந்தச் சமயத்தில் விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணங்களை விதிக்கக்கூடாது என்று மத்திய அரசு செக் ஒன்றை வைத்தது. அதன் படி, விமான நிறுவனங்கள் எகனாமிக் வகுப்பு ஒரு வழி பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எல்லை வகுத்திருந்தது. மேலும், தேவைப்பட்டால் டிமாண்ட் அடிப்படையில் டிக்கெட் விலை உயர்த்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், நாளை முதல் இந்தக் கெடுபிடிகள் விலக்கப்பட உள்ளது. என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் அதனால், ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம். எரிபொருள் விலையேற்றத்தை விமான நிறுவனங்கள் சமாளிக்கவே மத்திய அரசு இந்த விலக்கை அளித்துள்ளது. ஆனால், விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் விதித்தால், மீண்டும் டிக்கெட் விலையின் எல்லை நிர்ணயிக்கப்படும் என்று செக் வைத்துள்ளது மத்திய அரசு. '48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்
ஈரானின் 'இந்த'ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை
அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது. தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏன் இவ்வளவு பரபரப்பு? டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது. இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. முக்கியமாக, இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது. ஈரான் போர் '48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான் இஸ்ரேல் என்ன சொல்கிறது? இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது. ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம். இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும். ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது. 'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail
'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை'மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?'சீறும் ஈரான்
ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் போர் 'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா? என்ன எச்சரிக்கை? எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக திறக்கவில்லை என்றால்... அமெரிக்கா ஈரானின் வெவ்வேறு எரிசக்தி கட்டமைப்புகளை அழிக்கும். இதில் ஈரானின் மிகப்பெரிய கட்டமைப்பே முதலில் அழிக்கப்படும் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் பதிலடி ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தராமல் இருக்குமா என்ன? Fars செய்தி நிறுவனத்தின் வழியாக, ஈரானின் இராணுவ செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி கதம் அல்-அன்பியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஈரானின் எரிபெருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் எதிரிகளால் தாக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உப்புநீக்கம் ஆகிய கட்டமைப்புகள் குறி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் போரினால் உலகளவில் எரிசக்தி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கூறியுள்ளது எல்லாம் நடந்தால் நிலைமை மிகவும் மோசமடையும். 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு
'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா'வாக்குறுதிகள்
தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் மரிய வில்சன் பேசியதாவது, ''கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது. நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும். மரிய வில்சன் தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்'' என்றார். மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்து அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அப்போதுதான் மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியையும் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா
தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் மதிமுக சுய கௌரவத்தை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று வரைக்கு சீட் வாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறது. ஜவாஹிருல்லாவின் கட்சியை திமுக அழித்துவிட்டது. திமுகவுக்கு தலித்துகளும் சிறுபான்மையினரும் அதிகாரத்துக்கு வருவது பிடிக்காது. இவர்களை நம்பாதீர்கள் எனத் திருமா அண்ணனிடம் எவ்வளவோ சொன்னேன். 'நம்மை வளரவிட மறுக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் வலிமை பெறக்கூடாது என நினைக்கிறார்கள்' என மனம் வருந்தி திருமா அண்ணன் பேசியிருக்கிறார். திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திருமா திமுக-வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தார். ஆனால், இப்போது 5 தொகுதியைக் கொடுத்து, 'இருந்தால் இரு போனால் போ' என்கின்றனர். ஆதவ் திமுகவின் பண்ணையார்த்தனம்தான் இது. விசிகவை அழிக்க திமுக தயாராகிவிட்டது. திருமா அண்ணனின் வலி எங்களின் வலி. திருமாவின் கண்ணீருக்காகவே ஸ்டாலினுக்கு ஒரு முடிவை மக்கள் கொடுப்பார்கள்' என்றார். கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
கரூரில் 'ஜனநாயகன்'பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, ''திமுக மாலை 4-6 மணிக்குத்தான் கள்ள ஓட்டைப் போடுவார்கள். அப்போதுதான் நாம் இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வட சென்னையை திமுகவும் அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன. 2014 இல் திமுக 40-40லும் தோல்வியடைந்த சமயத்தில்தான் நான் திமுகவில் வேலை செய்ய ஆரம்பித்தேன். `தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக தினமும் முதல்வரைச் சந்தித்து வியூகங்களை வகுத்து கடுமையாக உழைத்தேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அப்படிப்பட்டவனுக்கு அங்கே முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சரியான எதிரியை திமுக பார்க்கவில்லை. அதனால்தான் தலைவர் 6 மாவட்டங்களுக்குச் சென்றவுடனேயே கரூர் சம்பவம் நடந்தது. ஆளும் தரப்பு எடுக்கும் சர்வேக்களே திமுகவை நடுங்க வைத்தது. அதனால்தான் நம்மைப் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கினார்கள். திருவாரூரில் தலைவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தே திமுக பயந்துவிட்டது. கடந்த 15 நாட்களாக தவெக - பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்கிறது என்கிற செய்தி பரப்பப்பட்டது. திமுக, அதிமுகவும் சேர்ந்து பரப்பிய செய்தி அது. மிரட்டுபவர்கள்தான் கோழை. அமைதியாக இருப்பவன்தான் வீரன். அதேமாதிரி, காலை - மாலை எனப் பேசிக் கொண்டிருப்பவனே அரசியல் தெரியாதவன். ஆதவ் குஜராத் கலவரத்தை கலைஞர் அந்த மாநிலப் பிரச்னை எனக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை பேசும் ஸ்டாலின் அப்போது கலைஞரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே? பணமும் அதிகாரமும் கிடைத்தால் திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குச் சேரும். பாஜகவுடன் கூட்டணி பேசியிருந்தால் ஜனவரி 10 ஆம் தேதியே ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருக்கும். பராசக்தி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகியது. ஜனநாயகன் இன்றைக்கு வரைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து வெளியேறியிருந்தால் டெல்லியே தலைவரை முதல்வர் ஆக்கியிருக்கும். ஆனால், தலைவர் கொள்கைப் பிடிப்போடு உறுதியாக நிற்கிறார். உதயநிதி நம்மை பார்த்து கொள்கை என்ன எனக் கேட்கிறார். அவரை நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தேன் இன்னும் வரவில்லை. கூட்டணிக்கு நாம் செல்லவில்லை என்றவுடன் அதிமுக நம்மை விமர்சிக்கத் தொடங்குகிறது. கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பொய் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். தலைவர் கூப்பிட்டால் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் கூடும். எதற்காக கரூரில் சூட்டிங் நடத்த வேண்டும்? அது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். நாம் சமீபத்தில் எடுத்த சர்வேயில் திமுகவை விட 2% வாக்குகள் அதிகமாக எடுக்கிறோம். அதிமுக மூன்றாம் இடத்துக்குச் செல்கிறது. அதனால்தான் நம்மை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்'' என்றார். 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்
தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?
வே லூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் டொயோட்டா கிளான்ஸா காரையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், விளக்கமளிக்கவும் மார்ச் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் மேயர் சுஜாதாவுக்கு சத்துவாச்சாரி போலீஸார் இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர். அதேபோல, வழக்கில் தொடர்புடைய தி.மு.க கவுன்சிலர் உட்பட மற்ற இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகரச் செயலாளருமான கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார் மேயர் சுஜாதா. எனவே, `பரிசுப் பொருள் வழங்கியதில் கார்த்திகேயனுக்கும் தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.98,241/- இருக்கிறது. இவற்றுடன் இரண்டு யமஹா பைக்குகளும், ஹோண்டா சிட்டி, கியா கார்னிவல் என இரண்டு கார்களும் இருக்கின்றன. மேலும் தலா 12 கிராமில் ஒரு செயின், ஒரு மோதிரம் என ரூ.21,25,752/- மதிப்புடையவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி அதேபோல தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுர அடியில் ஒரு இடமும், ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுர அடியில் இரண்டு இடங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் 2,400 சதுர அடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.78 கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல கோகுலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட இருவரிடம் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! - பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி
நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ். சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக். தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, 'கெரோ', 'போராட்டம்', 'கோ பேக் கோஷம்' என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கியது திரிணாமுல் காங்கிரஸ். மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு உரையின்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா 'குயிக் கன் முருகன்' பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார். 'அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்' என அவருக்குப் பதில் தந்தார் முருகன். பரபரப்பான தேர்தல் பணியிலிருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''என்னுடைய ஊர் சாத்தூர் பக்கம் கத்தாளம்பட்டி. அப்பா சின்ன கோவிந்தன் தீவிர திமுககாரர். அம்மா அப்பா நான், தங்கைனு அளவான குடும்பம். மகிழ்ச்சியா போயிட்டிருந்த என் பால்யத்தைப் புரட்டிப் போட்டது சாத்தூரில் நிகழ்ந்த ஜாதிக் கலவரம். கலவரத்தில் அப்பா உயிர் போயிடுச்சு. அப்ப 10வது படிச்சிட்டிருந்த நான் குலதெய்வக் கோவிலுக்குப் போயிருந்ததால் அன்னைக்கு நான் தப்பிச்சேன். இல்லாட்டி அன்னைக்கே என்னையும் கொலை செய்திருப்பாங்க. ஏன்னா அப்பெல்லாம் கவுன்ட் காட்ட கொலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பாவும் முன்னாடி அரிவாள் தூக்கினவர்தான். மம்தா பானர்ஜி இருந்த இடத்தைச் சுத்தி கலவரம், கொலைன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்ததுல பயம் போயிடுச்சு. ஆனா 'இதுதான் வாழ்க்கையா'ங்கிற கேள்வி எழ, படிச்சு பெரிய பதவிகளுக்குப் போனாதான் குடும்பச் சூழலை மாத்த முடியும்கிற ஒரு வைராக்கியம் மனசுக்குள் வந்தது. போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினேன். கல்லூரிப் படிப்பு முடியறதுக்குள்ளாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் புரபஷனரி ஆபீஸர் பணிக்குத் தேர்வானேன். கேரளாவில் முதல் வேலை. வேலையையும் பார்த்துகிட்டே மீதிப் படிப்பையும் முடிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிச்சது. பிறகு தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு டி.என்.பி.எஸ்.சி எழுதினேன். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! குரூப் 1 க்ளியர் ஆகி, காவல்துறைப் பணி கிடைக்க வங்கி வேலையை விட்டுட்டு சென்னை வந்து ஆவடி டி.எஸ்.பி. ஆனேன். அந்தச் சமயத்தில் தவறே செய்யாம உயரதிகாரிகள் ரெண்டு பேர் முன்னாடி குற்றவாளி போல நிக்க வேண்டிய சம்பவம் ஒண்ணு நிகழ்ந்தது. அந்த ரெண்டு அதிகாரிகளும் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரிகள். அன்னைக்குத்தான் சிவில் சர்வீஸ் எழுதணுங்குற உந்துதல் உண்டாச்சு. சம்பளமில்லா விடுப்பு எடுத்துகிட்டு டெல்லி போய் யு.பி.எஸ்.சி-க்குத் தயார் செய்ததுக்குப் பலன் கிடைச்சது. மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா 2007ம் ஆண்டு பணியைத் தொடங்கினேன்'' என்றவரிடம், முருகன் ஐஏஎஸ் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதல் போக்கு குறித்துக் கேட்டோம். நான் பணியில் சேர்ந்த 4 வது வருஷம் அவங்க முதல்வரானாங்க. தொடர்ந்து மூணு முறை அவங்க ஆட்சிதான். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. ஆனா நேர்மையா சட்டப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகள் என்னை அவருக்கு எதிரியாக்கிடுச்சுனு நினைக்கேன். அதனால எங்காச்சும் என்னைப் பார்த்தால், நான் வணக்கம் வச்சாக் கூட பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டாங்க. நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில் முக்கியத்துவம் இல்லாத துறைகளையே ஒதுக்குவாங்க. மோதல் போக்கின் உச்சமா ஒரு விஷயம் நடந்தது. என் மகனுக்கு ஆட்டிசம் பிரச்னை ப்ளஸ் பேச்சு சரியா வராம இருந்தது. தாய்மொழி புழங்குகிற இடத்துல இருந்து சிகிச்சை தந்தா சரியாகும்னு அங்க இருக்கிற டாக்டர்கள் பரிந்துரைச்சாங்க. 'தமிழ்நாட்டுக்கு டெபுடேஷனில் போய் வர்றேன்'னு கேட்டேன். அனுமதி தரலை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியா இருந்தும் மகனுக்குத் தேவைப்படுகிற ஒரு சிகிச்சையைத் தரமுடியாமப் போச்சேங்கிற அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இப்பவும் இருந்துட்டே இருக்கு'' என்கிறார். மேற்கு வங்கம் 'பாஜக மம்தாவுக்கு எதிராக உங்களைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்களே?' எனக் கேட்டதற்கு, தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சிக்குச் சாதகமா நடக்கிற அதிகாரிகள், நடுநிலையோட செயல்படுகிற அதிகாரிகள்னு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில்தான் தேர்தல் கமிஷன் பணி ஒதுக்கும். தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை பா.ஜ.க கட்சியோட தொடர்பு படுத்தி நான் பார்க்கலை. நான் சரியா வேலையைச் செய்வேன்னு நம்பி தந்தாகவே நினைக்கிறேன். நாளை பாஜகவே இங்க ஆட்சிக்கு வந்தாலும் அப்ப நான் மாநிலப் பணியில இருந்தா அவங்களுக்கும் ஆகாத ஆளாகவே இருப்பேன்னுதான் நினைக்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் இது சாதாரணம் என்றார். LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது... - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!
'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?
சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர். 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம். அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம். மதூர் சத்யா அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார். அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார். அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார். பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது! வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். மதூர் சத்யா இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர். 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது என்றனர். உன் கணவர் இறந்துவிடுவார் - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்
'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?
சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர். 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம். அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம். மதூர் சத்யா அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார். அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார். அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார். பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது! வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். மதூர் சத்யா இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர். 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது என்றனர். உன் கணவர் இறந்துவிடுவார் - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்
கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம். சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி
கேரளம்: பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம். சி.பி.எம் - பா.ஜ.க இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது. கே.என்.பணிக்கர் மறைவு: கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர் - பினராயி விஜயன் இரங்கல் காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். வி.டி.சதீசன் பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு. கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி
CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV
கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன். அமித்ஷா தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது அவர் பேசியதாவது... நாங்கள் எல்லாம் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார். 'தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெற்று தரமாட்டார்களா?' என்று எங்களைக் கேட்கிறார். சரியான புரிதல் இல்லாமல் டெல்லியோடு நீங்கள் குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்குப் பிறகு நாங்கள் எப்படி நிதியைப் பெற்று தரமுடியும்? இது தேர்தல் காலம். அதனால், திமுகவை எப்படி விழ்த்துவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி... நிதி... என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 12 லட்சம் கோடி வழங்கியிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சியில் 3 லட்சம் கோடி தான் நிதி வந்திருக்கிறது. எஸ்.சி, எஸ்.டிக்கான நிதியை ரூ.5,000-க்குச் செலவு செய்துவிட்டார். இது 'கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல' இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிதி ஆளுகையைச் சரியாக செய்யவில்லை. ஸ்டாலின் விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா சி.எஸ்.கேவிற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை? பணியிடை மாற்றம், போஸ்டிங் எனக் கிட்டத்தட்ட ரூ.2,500 ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாட்டு அரசின் தலையில் குட்டியிருக்கிறது. தவறு செய்தால் டெல்லியைக் கண்டு பயப்பட தான் செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சி.எஸ்.கே-விற்குத் தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்? இதற்கு சென்று முதலமைச்சர் போராடச் சொல்லுங்கள். பஞ்ச பாண்டவ கூட்டணி டெல்லி, தமிழ்நாடு என்று கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது. டெல்லியில் இவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எத்தனை கெட்ட பெயர், அவமானம் என்று அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாகத் தோற்கடிக்கும். அதற்கான ஸ்ட்ரேட்டஜியைப் பேசதான் வந்தேன். பீகாரைப் போல எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் பூத் லெவலில் ஒற்றுமையாக உழைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக என்பதை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார்கள். ராமதாஸ் - சசிகலா அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன? ராமதாஸ் - சசிகலா கூட்டணியைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. இப்போது நாங்கள் முழுமையாக உள்ளோம். திமுக என்னும் துரியோதன கூட்டணியை வீழ்த்த எங்களது பஞ்ச பாண்டவ கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். திமுகவிற்கான ஒரே மாற்று அதிமுக தலைமையிலான எங்களது கூட்டணி. தமிழ்நாட்டிற்கான நிதி வரவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து எளிதாக நிதி பெற்றுத்தரக் கூடியது எங்களது கூட்டணி.
”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா தி.மு.கவிலிருந்து, அண்ணா தொடங்கிய தி.மு.கவில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள். ஓ.பி.எஸ் வருகை பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர். வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? பழனிசாமியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும். அவர் உடன் இருப்பது உதயகுமார். நான் முந்தைய மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது 6 ஒ.பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார் உதயகுமார். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் போன்றோரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? `பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்! தலையைப் பிய்த்துக் கொண்டு பேய் பிடித்தது போல பழனிசாமி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் காலி ஆனது. 14 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பழனிசாமியும், உதயகுமாரும் அ.தி.மு.க-வைக் குழி தோண்டி புதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதியை ரத்து செய்து, பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் பழனிசாமி. கூட்டத்தில் ஓ.பி.எஸ் 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றால் பணம் வாங்காமல் இருப்பார்களா? இனி அ.தி.மு.கவில் மிட்டா மிராசுதார்தான் பொதுச் செயலாளராக வர முடியும். சபாநாயகர் கூட சில நேரம் எதிர்க்கட்சி உறுப்பினரைக் கண்டித்தாலும், முதல்வர் பேச விட்டு, பதில் அளிப்பார். தி.மு.க கூட்டணியிலிருந்து ஒரு கட்சிகூட வெளியேறாததற்கு, கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கண்ணியத்துடன் நடத்துவதே காரணம்” என்றார். 'நான் ஜெயிச்சா மட்டும் போதாது...' - விஜய்-ன் அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள் இவர்கள்தான்?
அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன் - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். 'இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ' என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல. என் மீது எல்லையற்ற வாஞ்சையும், அன்பும் கொண்டிருப்பவர். M A பேபி விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும் - திருமா அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தேன். அப்போது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி, நானும், என்னோடு வந்தவர்களும் அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் பேபி. ஒற்றுமை எனக்கும், அவருக்கும் ஒரு ஒற்றுமை. பழைய பாடல்களைக் கேட்பது எனக்கும், அவருக்கும் பொழுதுபோக்கு. இப்போது கூட, அவருடன் உணவருந்தும் போது, பாசமலர், திருவிளையாடல், பாவ மன்னிப்பு போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டோம். 'செம்மீன் பாடல்களைக் கேட்போம்' என்று கூறினேன். அதையும் கேட்டோம். எங்கள் இருவருக்கிடையில் அப்படிப்பட்ட நட்பு. அதனால், அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை தொலைகாட்சியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்தேன். வைகோ அவர்கள் முக்கியமான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவரைச் சந்திக்க வந்தேன். தேர்தலுக்குப் பிறகு இங்கு வரும்போது, வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தேன். அதன் பின், அவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது. இதைத் தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திற்குள் எந்த அரசியலையும் பேசமாட்டேன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!
58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். தன்னை ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, கேப்டன் என்ற அடையாளத்துடன் அப்பகுதியில் செயல்பட்டு வந்தார். ஆன்மீக நடைமுறைகள் என்ற போர்வையில் பெண்களை உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அசோக் கராட்டை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அப்பென் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கராட் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து 2022 முதல் டிசம்பர் 2025 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தார். அசோக் கராட்டிற்கு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் மாநில மகளிர் அணித்தலைவரும், மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவருமான ரூபாலி சாகங்கருக்கு ஜோதிடருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்) நிர்வாகி சுஷ்மா அந்தாரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தோம்ப்ரே ஆகியோர் அளித்திருந்த பேட்டியில், சாகங்கர் கைதான ஜோதிடர் கராத்துடன் இணைந்து பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினர். கராட் தலைமையிலான கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக சாகங்கர் இருந்துள்ளார். கராட் கைதை தொடர்ந்து, கராட்டின் கால்களைக் கழுவுவது போன்றும், கராட் சாகங்கருக்கு உணவளிப்பது போன்றும், சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற கராடிற்கு குடையைப் பிடித்துக் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. மேலும் ஒரு காணொளியில் கராடை விட்டல் பகவானுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் போன் இது குறித்து சுஷ்மா அந்தாரே கூறுகையில்,''ஜோதிடரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களை சாகங்கர் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் என்னிடம் கூறினார். அதோடு புகார் அளிக்க வேண்டாம் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகச் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். மற்றவர்களிடம் குற்றத்தைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். சாகங்கர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கராட் ஆகியோரின் போன் அழைப்பு விபரங்களை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். திரவம்? சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில்,'' கராடின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தன்னுடன் ஒரு உள் நபர் பகிர்ந்து கொண்டார். கராட் 'ஓஷ்னோ ஜல்' என்ற திரவத்தை தயாரிப்பதாக அவர் கூறினார். இது வயாக்ராவை போன்றதுஆகும். கராடின் வாடிக்கையாளர்களில் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஒரு மத அறக்கட்டளையின் அறங்காவலர் இருக்கிறார். மேலும் அவர்கள் நாசிக்கில் இருந்து 'ஜல்' சேகரிக்க தங்கள் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பினர். அவர்களில் பலர் தங்களது வலிமையை அதிகரிக்க உதவும் 'ஓஷ்னோ ப்ரே' மற்றும் 'சித்தா பிரார்த்தனை' செய்ய கராடின் உதவியை நாடியதாக அவர் கூறினார். இப்புகார்களையடுத்து சாகங்கரை அழைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். இதில் உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே சாகங்கர் துணை முதல்வர் சுனேத்ரா பவாரை சந்தித்து பேசிவிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இது குறித்து சாகங்கர் கூறுகையில், `கராட்டை குருவாகத்தான் நினைத்தேன். அவர் மீதான புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்று தெரிவித்தார்.
? அமெரிக்க ஆதிக்கம் ஏன் ஆபத்தானது! | Seriously! | EP - 15 | Vikatan TV | Trump | USA
Iran war: US Fighter Jet F35 தாக்கிய ஈரான் | Decode | Israel | Vikatan
`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே வளைகுடாவில் 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். புதிதாக வரும் கப்பல் மத்திய கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தது இஸ்ரேல்தான். எனவேதான் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் தங்களது பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகளிடம் போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் எந்த நாடும் போர்க்கப்பலை அனுப்ப மறுத்திவிட்டது. இதனால் நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்த போர் அமெரிக்காவிற்கு தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மற்றொரு புறம் போரை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவிற்கு கடுமையான பொருட்செலவாகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகிறது. இது தொடர்பாக அவர் தற்போது தனது சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான ராணுவ முயற்சிகள் அதன் நோக்கத்தை எட்டிவிட்டன. ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கடற்படை மற்றும் வான்படை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுபுறம் இருப்பவர்களை நாம் முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர்நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறி, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த அவர் மறுத்துவிட்டார். ஹார்முஸை கைவிட்ட ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணை தொடர்பான தனது செய்தியில், `அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதன் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி அதைச் செய்யாது. அமெரிக்கா இதற்கு உதவ முடியும் என்றாலும், அது அவசியமற்றது. உதவி கேட்கப்பட்டால், ஹார்முஸ் தொடர்பான முயற்சிகளில் அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு அது தேவையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். இந்த பணி எளிதானது என்று விவரித்த ட்ரம்ப், அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார். ட்ரம்பின் இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் பதற்றங்கள் இன்னும் தணியாத நிலையிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலிலும், மூன்று வாரங்களாகத் தீவிரமாக நடத்தி வந்த தனது நேரடி ராணுவ தாக்குதலை அமெரிக்கா குறைக்கத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவின் உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?
ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்
'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத'அமெரிக்கா?
ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா. ஈரான் எண்ணெய்க்கு அனுமதி இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே. தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்காட் பெசென்ட் `அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்! இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது. சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது. ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம். அமெரிக்காவின் செயல் ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல. மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும். இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது. ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது. 'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்
திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார். நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள். சீமான் தேர்தல் பிரசாரம் இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான் என்றார். நம்மிடம் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், பொதுவாக கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தையோ, மாநில சுற்றுப் பயணத்தையோ அண்ணன் சீமான் தொடங்குவார். குமரியில் தொடங்கி சென்னையில் முடிப்பதே வழக்கமான பிரசார ரூட். இம்முறையும் அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால், 'தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பிரசாரத்தை தொடங்கிட வேண்டும்' என்பது அண்ணனின் விருப்பமாக இருந்தது. திருத்தணி முருகன் கோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக முப்பாட்டன் முருகனின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். மேலும் மார்ச் 23-ம் தேதி தேய்பிறை அஷ்டமி என்பதால் அன்று அறுபடை வீடான திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம். மார்ச் 23-ம் தேதி காலை திருத்தணி முருகன் கோவில் வழிபாட்டோடு பிரசாரம் தொடங்கும். திருத்தணியில் தொடங்கி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பிரசாரங்களை முதற்கட்டமாக முடிக்கிறோம். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் பேசுகிறார். பிறகு மார்ச் 30ம் தேதி அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு செல்கிறார். வேட்புமனு தாக்கல் பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குவார். பிரசாரத்தில் எல்.இ.டி திரைமூலம் நாம் தமிழர் அரசு எப்படி இருக்கும் என காணொளி வாயிலாக விளக்க உள்ளார். பிறகு திராவிடக் கட்சிகள் அட்டாக், பாடல்கள் என கலவையாக இருக்கும் என்றனர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்
'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள் - NATO-வை சாடும் ட்ரம்ப்
ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை. போர் நிறுத்தம் வேண்டாம் 'விரைவில் போர் முடிவுக்கு வரும்' என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது. ஈரான் போர் தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே 'ஹார்முஸ் ஜலசந்தி மூடலே'. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார். சிலர் மறுத்துவிட்டனர்... சிலர் வாயைக் கூட திறக்கவில்லை. நேட்டோ நாடுகள் - 'கோழைகளே' இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை. இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்... உங்களை மறக்கமாட்டோம் என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?
அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?
ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் போர்ப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். மார்ச் 4 ஆம் தேதி 8 கப்பல்கள் மற்றும் இரண்டு போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக்கோரி அமெரிக்கா கேட்டது. ட்ரம்ப் ஆனால் அந்தக் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்த அழுத்தமும் வந்தாலும், நம் நாடு நடுநிலை வகிக்கும் என்று பேசியிருக்கிறார்.

28 C