SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 24 Jan 2026 2:13 pm

தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

விகடன் 24 Jan 2026 2:13 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

விகடன் 24 Jan 2026 1:54 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்தப் பட்டியலில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் எம். பி ஆர்.தர்மரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு எம்பி தர்மர் இன்று (ஜன.24) மாலை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறாரா? ஓபிஎஸ் என்ற பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விகடன் 24 Jan 2026 1:07 pm

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே. NDA பொதுக்கூட்டம் டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி! சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன. அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது. டிடிவி - நயினார் நாகேந்திரன் டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர். TTV - EPS அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார். சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர். மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி: அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார். முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார். கே.பி.முனுசாமி நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர். தங்கமணிக்கு தனி கவனிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார். தங்கமணி மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்! பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை. பாஜக விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர். திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார். அசௌகரியமான அதிமுகவினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர். வளர்மதி இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.! `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 24 Jan 2026 12:35 pm

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

விகடன் 24 Jan 2026 11:48 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில் சாத்தான்குளம் அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை. சாத்தான்குளம் காவல் நிலையம் இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கு: ``மேலும் அவகாசம் கேட்பது ஏன்?'' - CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் 24 Jan 2026 11:14 am

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.  மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.  'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.  சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.  Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.  இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.  1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து  இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

விகடன் 24 Jan 2026 10:53 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. ஸ்டாலின், கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விகடன் 24 Jan 2026 10:36 am

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை. 2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

விகடன் 24 Jan 2026 8:32 am

இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள். எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை. 2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது. டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

விகடன் 24 Jan 2026 8:32 am

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம் - டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இச்சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமையான கூட்டணி எங்களுடையதுதான். நானும்-டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒன்றாக எப்போது இணைந்தோமோ.. அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம். டிடிவி தினகரன் இனி அம்மா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

விகடன் 24 Jan 2026 8:10 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am

மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album

மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

விகடன் 24 Jan 2026 6:13 am

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் செல்லவில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வருகை தரும்போது அவர்களை வரவேற்க மேயர் செல்வது வழக்கமாகும். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க, 'பிரதமர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வரும்போது அவரை வரவேற்பவர்கள் பட்டியலில் பா.ஜ.க மேயர் இடம்பெறுவார்' என தெரிவித்திருந்தது. திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க மேயர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மேயரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி மேயரை அனுமதிக்கவில்லை எனவும், கேரள பா.ஜ.க -வின் முதல் மேயருக்கு எதிராக சிலர் அரசியல் காய் நகர்த்தியதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த விவாதம் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையில் மேயர் வி.வி.ராஜேஷ் இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், எனது பெயரை யாரும் நீக்கவில்லை. பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் மேயர் இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்திருந்தது. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றுவிட்டு உடனே மேடைக்கு வர இயலாது. ஏனென்றால், பிரதமரின் கான்வாயில் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவேதான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்றார்.

விகடன் 23 Jan 2026 8:09 pm

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் செல்லவில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வருகை தரும்போது அவர்களை வரவேற்க மேயர் செல்வது வழக்கமாகும். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க, 'பிரதமர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வரும்போது அவரை வரவேற்பவர்கள் பட்டியலில் பா.ஜ.க மேயர் இடம்பெறுவார்' என தெரிவித்திருந்தது. திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க மேயர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மேயரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி மேயரை அனுமதிக்கவில்லை எனவும், கேரள பா.ஜ.க -வின் முதல் மேயருக்கு எதிராக சிலர் அரசியல் காய் நகர்த்தியதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த விவாதம் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா மேடையில் மேயர் வி.வி.ராஜேஷ் இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், எனது பெயரை யாரும் நீக்கவில்லை. பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் மேயர் இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்திருந்தது. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றுவிட்டு உடனே மேடைக்கு வர இயலாது. ஏனென்றால், பிரதமரின் கான்வாயில் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவேதான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்றார்.

விகடன் 23 Jan 2026 8:09 pm

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' - இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி' என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது. இணைப்பு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் ``அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருக்கிறார் எனப் பேட்டி கொடுத்தவர், வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் இணைப்பு விழா நடப்பதாகவும் சொன்னார். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் இருந்த வைத்திலிங்கத்தை ஆதரவாளர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக-வில் இணைவதாக இருந்த அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், ``என் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் நான் திமுக-வில் இணையவில்லை, அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். நான் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அண்ணன் வைத்திலிங்கம் என்னை மன்னிக்க வேண்டும் என சென்டிமென்டாக டிவியில் பேசியதைப் பார்த்த வைத்திலிங்கத்தின் கண்கள் கலங்கியுள்ளன. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கிய சமயத்தில், ஓ.பி.எஸ் தலைமையில் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். அப்போது பேசிய ராமச்சந்திரன், ``அண்ணன் என் அரசியல் வழிகாட்டி, அவரது ஆளுமையை பார்த்து வளர்ந்த, நான் அவருக்காக எதையும் செய்வேன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறேன் என்ற போது அரங்கம் அதிர்ந்தது. திமுக-வில் இணைவதை மட்டும் கைவிட்டுள்ளார், வைத்திலிங்கத்திடம் இருந்து என்றும் விலக மாட்டார். வாட்ஸப் டீபியில் வைத்திலிங்கம் போட்டோவை தான் இப்போதும் வைத்திருக்கிறார் என்கிறார்கள். ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் வரும் 26ம் தேதி திமுக மகளிர் மாநாடு தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடக்கிறது. அந்த திடலிலேயே இணைப்பு விழா நடக்கிறது. அப்போது தன் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கிறார் வைத்திலிங்கம். ஊரே மெச்சும் வகையில் இந்த நிகழ்வு இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் வைத்தி. இதற்காக நேற்று தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒரத்தநாடு மற்றும் திருவோணத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அப்போது, ``முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி செய்கிறார், மீண்டும் திமுக ஆட்சியில் அமரும், ஸ்டாலின் முதல்வர் ஆவார். ஒருங்கிணைப்பு குறித்து எவ்வளவோ பேசியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் தாய் கழகத்தில் இணைந்தேன். என்னால் பெரிய அளவில் பலனடைந்த பலர் இன்று என்னுடன் இல்லை. என்னால் எந்த பலனும் அடையாத நீங்கள் என் மீது கொண்ட பாசத்தால் என்னை விட்டு விலகாமல் என் பின்னால் அணிவகுத்து நிற்கிறீர்கள். எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். வைத்திலிங்கம் இணைப்பு விழாவை வரலாற்றில் இடம் பெறும் வகையில் நடத்த வேண்டும் எனப் பேசியுள்ளார். மகளிர் மாநாடு மாலை நடக்கிறது. அந்த மேடையிலேயே இணைப்பு விழா நடத்துவதற்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை தவிர்த்த வைத்திலிங்கம், தனித்து தெரிய வேண்டும் என்கிற தன் விருப்பத்தை ஸ்டாலின் தரப்பிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அன்று காலை 11 மணியளவில் அதே இடத்தில் தனி மேடை அமைத்து இணப்பு விழா நடப்பதற்கான ஏற்பாடு ஜரூராக நடக்கிறது. ஒரு கிராமத்திற்கு இரண்டு என ஒரு ஒன்றியத்திற்கு 15 வேன்கள் வீதம் ஆதரவாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு முதலில் செய்யப்பட்டது. தவைத்திலிங்கத்தின் 90 சதவிகித ஆதரவாளர்கள் திமுக-வில் இணைய இருப்பதால், ஒரு ஒன்றியத்திற்கு 30 வேன்கள் அனுப்புகின்றனர். இணைப்பு விழா யார் சொல்லுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என வைத்திலிங்கம் நினைக்கிறார். தன்னுடன் திமுக-வில் இணைபவர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் என அனைத்தையும் குறிப்பிட்ட ஃபைல் தயார் செய்துள்ளனர். ஆதரவாளர்கள் மட்டுமன்றி வைத்திலிங்கமும் அமைச்சராக இருக்கும்போது எப்படி உற்சாகமாக இருப்பாரோ அதே உற்சாகத்துடன் வேகமாகச் செயல்படுகிறாராம்.

விகடன் 23 Jan 2026 8:04 pm

எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள்

விகடன் 23 Jan 2026 7:35 pm

எடப்பாடி - டிடிவி - அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! - Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள்

விகடன் 23 Jan 2026 7:35 pm

'டபுள் இன்ஜின்'எனும் 'டப்பா இன்ஜின்'தமிழ்நாட்டில் ஓடாது!- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டுக்கு 'டபுள் இன்ஜின்' சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றார். பிரதமர் மோடி இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. முதல்வர் ஸ்டாலின் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று கடுமையாக மோடியை ஸ்டாலின் சாடியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:49 pm

'டபுள் இன்ஜின்'எனும் 'டப்பா இன்ஜின்'தமிழ்நாட்டில் ஓடாது!- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டுக்கு 'டபுள் இன்ஜின்' சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றார். பிரதமர் மோடி இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. முதல்வர் ஸ்டாலின் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று கடுமையாக மோடியை ஸ்டாலின் சாடியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:49 pm

பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக் கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். NDA கூட்டணி எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். இப்போது அந்த பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது. மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நமது வெற்றிக்காக அமமுக-வின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபடுவார்கள் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:32 pm

பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக் கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். NDA கூட்டணி எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். இப்போது அந்த பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது. மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி நமது வெற்றிக்காக அமமுக-வின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபடுவார்கள் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:32 pm

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது... பாரத பிரதமர் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால்வைத்த உடனே இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. NDA கூட்டணி எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். இதுவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குச் சான்று. வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்முடைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? நம் கூட்டணிக் கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி! தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகின்றனர். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியைப் பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:07 pm

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது... பாரத பிரதமர் என்ன பேசப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் அவர்கள் இந்த மண்ணில் கால்வைத்த உடனே இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. NDA கூட்டணி எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். இதுவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குச் சான்று. வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்முடைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சியமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? நம் கூட்டணிக் கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் இந்தக் கூட்டணி வெல்லும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி! தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகின்றனர். அதிமுக கோரிக்கைகளை ஏற்றவர் மோடி. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நாங்கள் நிதியைப் பெற்றோம். அதிமுக ஆட்சியில் டெல்லியில் இருந்து பெற்றது ஏராளம். திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 6:07 pm

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்! - ஜோதிமணி

எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பா.ஜ.க-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்கிற நிதி எமது மக்களின் வரிப்பணத்தில் 29% மட்டுமே. அதிலும் இந்தியை திணித்து தமிழை அழிக்க தடையாக இருப்பதால் கல்விக்கு நிதி மறுப்பு. கீழடியில் எமது அடையாளங்களை, தொன்மையை, வரலாற்றுச் சிறப்பை ஏற்க மறுப்பு. இயற்கைச் சீற்றங்களின் போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இல்லாததுபோல புறக்கணிப்பு. ஜி.எஸ்.டி என்ற பெயரில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு. பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் காங்கிரஸ் ஏற்றிவைத்த 100 நாட்கள் வேலை ஒழிப்பு. jothimani விவசாயக் கடனகளை தள்ளுபடி செய்ய மறுப்பு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் பல லட்சம் கோடி கொள்ளையடிக்க மக்கள் வயிற்றில் அடிப்பு. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் அவமதிப்பு. தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பு . தமிழ் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் தமிழ் திரையுலகின் மீது தாக்குதல்... இப்படி எமது மக்களுக்கு எதிரான துரோகப் பட்டியலை தொடர்ந்து வாசித்துக் கொண்டே போகலாம். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் எங்கள் வாழ்வைப் பிடிங்கி தரையில் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு, இப்போது மட்டும் மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை என்று தெரிவித்துள்ளார். `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

விகடன் 23 Jan 2026 5:37 pm

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம். கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும். குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 5:31 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்

விகடன் 23 Jan 2026 4:02 pm

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்'ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைத்திட்டம் எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். அரசினர் தனித் தீர்மானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; ‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ - உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்; இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்; தமிழ்நாடு சட்டமன்றம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன் என்றார்.

விகடன் 23 Jan 2026 3:05 pm

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

விகடன் 23 Jan 2026 2:42 pm

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

விகடன் 23 Jan 2026 2:42 pm

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

Modi : நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவாங்க?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி | Live

நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?- அண்ணாமலை கேள்வி தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் நீட் விலக்கு, கீழடி அறிக்கை , எய்ம்ஸ் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation -இல் தமிழ்நாட்டின் தொகுதிகள்… https://t.co/tapt7nMS4p — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 23, 2026 அண்ணாமலை அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்? AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? என்ற கேள்விகளை முன்வைத்திருக்கிறார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு… https://t.co/siAlRGZ2bX — K.Annamalai (@annamalai_k) January 23, 2026 கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி   தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விகடன் 23 Jan 2026 12:47 pm

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர்.  ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு  மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது.  நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார்  என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்  மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார்.  சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்  தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல்  அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என,  நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக!  தென் மாவட்டங்களில் தினகரன்  வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன்,  அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.   `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

விகடன் 23 Jan 2026 11:55 am

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Jan 2026 11:44 am

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 11:03 am

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Jan 2026 11:03 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

விகடன் 23 Jan 2026 10:58 am

ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன் - 'மீண்டும்'ஈரான் குறித்து ட்ரம்ப்

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப். இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். ஈரான் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இது குறித்து அவர் கூறியுள்ளதாவது… “ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. இப்போது என்ன நடக்க உள்ளதோ? Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

விகடன் 23 Jan 2026 10:54 am

ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன் - 'மீண்டும்'ஈரான் குறித்து ட்ரம்ப்

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப். ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப். இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். ஈரான் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இது குறித்து அவர் கூறியுள்ளதாவது… “ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. இப்போது என்ன நடக்க உள்ளதோ? Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

விகடன் 23 Jan 2026 10:54 am

நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!'ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்  பா. முகிலன் , தமிழக தேர்தல்களின்  நினைவுச் சுவடுகள்  தொடர் மூலம்! முதல் அத்தியாயம் : நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்!  அத்தியாயம் 02 நினைவுச் சுவடுகள்: தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள வீடியோக்கள், வைரலாகும் பிரசார காணொலிகள் எல்லாம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான செய்திகளும், தலைவர்களின் பிரசார செய்திகளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக மக்களைச் சென்றடைந்தன. அதுதான் வானொலி.  இந்தியா சுதந்திரம் அடையும் காலத்திற்கும் முன்பே, வானொலி மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறியிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வானொலி ஒளிபரப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முக்கிய செய்திகளை அறிய மக்கள் வானொலியை கவனமாகக் கேட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போர் செய்திகள், அரசியல் அறிவிப்புகள் போன்றவை வானொலியிலேயே முதலில் கேட்டன. 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர அறிவிப்பும், ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும் வானொலியின் மூலமே கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தது. சுதந்திரத்திற்குப் பின், அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புச் சேவை, தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் விரிவடைந்தது. இதனால், வானொலியை நம்பி செய்திகள் கேட்கும் பழக்கம் வலுப்பெற்றது. அதுவே, பின்னாளில் தமிழகத் தேர்தல்களில் அரசியல் குரல்கள் வானொலியின் வழியே மக்களிடம் எளிதாகச் சென்றடைய காரணமாக அமைந்தது. வானொலி தேநீர்க் கடையில், கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில், நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து வரும் கரகரப்பான குரல்தான், தலைவர்களின் உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பல ஆண்டுகளாக வானொலிதான் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தது. தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் ஒன்றாக உட்கார்ந்து ரேடியோ கேட்டு, அரசியலை அறிந்துகொண்ட காலம் அது. பார்த்ததைவிட கேட்டதன் மூலமாகவே அரசியலை அறிந்துகொண்ட காலம் அது.  அரசியலின் முதல் ஊடகமாக இருந்த வானொலி சுதந்திரத்துக்குப் பிறகான ஆரம்ப ஆண்டுகளில், அதாவது 1950-கள் தொடங்கி,  ஆல் இந்தியா ரேடியோதான் — மக்களிடையே அதிக நம்பகத்துக்குரிய, பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஊடகமாக இருந்தது. செய்தித்தாள்கள் அடுத்த நாள் காலையில்தான் வந்து சேரும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றவர்கள்தான் தலைவர்களின் உரையைக் கேட்க முடியும். ஆனால் வானொலி, தூரங்களைக் கடந்து மக்களிடம் தேர்தல் செய்திகளைக் கொண்டு சேர்த்தது.  தேர்தல் தொடர்பான சிறப்புச் செய்தி ஒலிபரப்புகள் அனைவரது கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்தன. செய்தி ஒலிபரப்புக்கு சில நிமிடங்கள் முன்னரே தெருக்கள் அமைதியாகிவிடும். வீடுகளில் கூச்சலிடும் சிறுவர்களை அதட்டல் போட்டு அமைதியாக்குவார்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்கள். இளைஞர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், தங்களது அன்றாட வேலைகளை, தேர்தல் செய்திகளைக் கேட்பதற்கு ஏற்ப, தங்களது வேலைகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் அமைத்துக்கொண்டனர். மீறி ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், செய்தி ஒலிபரப்பாகும் நேரத்தில் அதனைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு கேட்டனர்.  வானொலி தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. தேர்தல் காலங்களில் ரேடியோவில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானதாக உணரப்பட்டது. தலைவர்களின் வானொலி பிரசாரம் 1962 பொதுத் தேர்தலிலிருந்து, அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகப் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு சில தினங்கள் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு , ஒவ்வொரு நாளும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் என்ற நேரக்கட்டுப்பாட்டுடன் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உரைகள், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒலிபரப்பப்பட்டன. கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை வானொலியின் மூலம் மக்களிடம் விளக்க முடிந்தது. கடும் விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகள், தலைவர்களை தெளிவாகவும் நேர்மையாகவும் பேச வலியுறுத்தின. இதன் மூலம், வானொலி தமிழக தேர்தல்களில் ஒரு அதிகாரப்பூர்வமான பிரச்சார மேடையாக உருவெடுத்தது. வானொலியில் நன்றாக அமைந்த ஒரு உரை, மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பொதுக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், வீடுகள், சமையலறைகள், அலுவலகங்கள் போன்ற தனிப்பட்ட இடங்களுக்குள் நேரடியாக நுழைந்ததாலே அந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் மக்கள் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகவுமே அரசியல் பேச்சுகள் மாறின. வானொலி வானொலி வழியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், மக்களுடனான அதன் நெருக்கமான தன்மைதான். ஸ்டுடியோக்களில் மைக்கின் முன் நின்று பேசிய தலைவர்களுக்கு முன் ஆரவாரமான கூட்டங்கள் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. முகபாவனைகள், காட்சியமைப்புகள், நாடகத்தன்மை போன்ற எதுவும் இல்லை. அங்கு முக்கியமானது குரல் மட்டுமே — அதில் இருக்கும் தெளிவு, மொழி, கருத்தின் நேர்மையின் அடிப்படைகளிலேயே வாக்காளர்கள் தலைவர்களையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும்  மக்கள் மதிப்பிட்டனர். கட்சிகளின் நிலைப்பாடுகள், அரசியல் கொள்கை வேறுபாடுகள், வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகளுக்கான பதிலடிகள் போன்றவற்றை தலைவர்களின் வானொலி உரை மூலம் மக்கள் புரிந்துகொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமப்புற மக்களுக்கு, இந்த வானொலி ஒலிபரப்புகளே மூத்த அரசியல் தலைவர்களின் குரலை நேரடியாகக் கேட்கக் கிடைத்த ஒரே வாய்ப்பாக அமைந்தன.  எதிர்வினைகளும் குழு விவாதங்களும் தேர்தல் காலங்களில் அரசியல் செய்திகளையும் தலைவர்களின் உரைகளையும் வானொலியில் கேட்பது என்பது தனிப்பட்ட செயலாக இல்லை. அது ஒரு கூட்டு அனுபவமாக இருந்தது. கிராமங்களில், ஒரு வானொலிப் பெட்டியைச் சுற்றி பலர் கூடி அமர்ந்து உரைகளையும் செய்திகளையும் கவனமாகக் கேட்டனர். ஒலிபரப்பு முடிவடைந்ததும் உடனடியாக அது குறித்த எதிர்வினைகள், கருத்துகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்படும். நகர்ப்புற வீடுகளில், முக்கிய உரைகள் ஒலிபரப்பாகும் போது அமைதி காக்கப்பட்டது. குழந்தைகள் இடையூறு செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர் அல்லது அறிவுறுத்தப்பட்டனர். அந்த அளவுக்கு அந்த நேரத்தில், வானொலி ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. வானொலி தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மொழிக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த மரபை வானொலி மேலும் வலுப்படுத்தியது. நல்ல பேச்சாற்றல் கொண்ட தலைவர்கள்,வானொலியில் தனிப்பட்ட வகையில் முன்னிலை பெற்றனர். தமிழ்மொழி மீது அவர்களுக்கு இருந்த புலமை, இலக்கியக் குறிப்புகள், எதுகை மோனை வடிவிலான பேச்சு, வாக்கியங்களின் ஓட்டம் போன்ற அனைத்தும், தலைவர்களின் உரைகளை மக்கள் மனதில் நிற்கச் செய்தன. காட்சிகள் இல்லாத நிலையில், அவர்கள் சொல்லும் உவமைகள் மற்றும் சொற்கள் கேட்பவர்களின் மனதில் காட்சிகளாக உருவானது. வானொலியில் கேட்ட ஒரு வலிமையான வாக்கியம், பல நாட்கள் அது குறித்து மக்களிடையே பேசுபொருளானது. பேருந்துகள், பள்ளிகள், சந்தைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அது குறித்து மீண்டும் மீணடும் சிலாகித்துப் பேசப்பட்டது.   செய்திகளும் தேர்தல் அறிவிப்புகளும் தலைவர்களின் உரைகள் மட்டுமல்ல, தேர்தல் காலங்களில் வானொலி பல முக்கியத் தகவல்களுக்கும் முதன்மை ஊடகமாக இருந்தது. தேர்தல் அறிவிப்புகள், பிரச்சார அட்டவணைகள், வாக்குப்பதிவு நாளுக்கான வழிமுறைகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் ஆகியவை வானொலியின் வழியே மக்களிடம் சென்றடைந்தன. நேரலை தொலைக்காட்சி இல்லாத காலத்தில், நிகழ்நேர தகவல்களை மக்களுக்குக் கொண்டு சென்றது வானொலியே. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் வானொலி ஒலிபரப்புகள் அதிக பதற்றத்துடன் கேட்கப்பட்டன. ஒவ்வொரு இடைவெளியும், அறிவிப்பாளரின் குரலில் வெளிப்படும் மாற்றமும் கூட, மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.மக்களுக்கு, அவர்களது மனம் கவர்ந்த கட்சி அல்லது தலைவர் அல்லது வேட்பாளரின் வெற்றி தோல்வி குறித்த முதல் தகவலைச் சொன்னது வானொலிதான். ரேடியோ நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் வானொலி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று — அதன் மீது இருந்த நம்பிக்கையும் நம்பகத்தன்மையும்தான். அகில இந்திய வானொலி, கட்டுப்பாடு கொண்ட, பொறுப்பான, அதிகாரப்பூர்வமான ஊடகமாக மக்கள் பார்வையில் இருந்தது. கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து பத்திரிகைகள் வெவ்வேறு கருத்துகள், விமர்சனங்களை வெளியிட்டபோதும், வானொலிச் செய்திகள் நடுநிலையுடன் வழங்கப்படுவதாக நம்பப்பட்டது. அரசியல் வேறுபாடுகள் தீவிரமாக இருந்த காலங்களிலும், வானொலியில் ஒலித்த உரைகளை, தலைவர்களின் உண்மை கருத்தாகவே மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்த நம்பகத்தன்மையே, கட்சிகள் அல்லது தலைவர்கள் மீதான பொதுமக்களின் கருத்துருவாக்கத்தில் வானொலிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது.  காலத்தின் சாட்சி இத்தகைய சூழ்நிலையில்தான் 1980களின் இறுதி மற்றும் 1990களில், தொலைக்காட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மை ஊடகமாக மாறத் தொடங்கியது. காட்சிகள், பேரணிகள், சுருக்கமான காட்சி ஒளிப்பதிவுகள் ஆகியவை முன்னிலை பெற்றன. பின்னர், டிஜிட்டல் தளங்கள் கவனத்தை இன்னும் சிதறடித்தன. இன்றும்  வானொலி மறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கான முக்கியத்துவம் கணிசமாக குறைந்துபோனது. அந்தக் காலத்தில் அமைதியாக கவனத்துடன் கேட்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. அந்தக் குரல்கள் அனுமதி இல்லாமலே வீடுகளுக்குள் நுழைந்தன. கேள்விகளை எழுப்பின. வாக்குறுதிகளை அளித்தன. மக்களின் கருத்துகளை வடிவமைத்தன. கேட்பதையே ஒரு குடிமகனின் கடமையாக மாற்றின. ஆனால், அந்தப் பொறுமையும் அமைதியும் இன்றைய ஜென் Z தலைமுறையினரிடத்தில் காணாமல் போய்விட்டது. வானொலி பிரசாரம் இன்று கைப்பேசிகளும் திரைகளும் பிரசாரங்களால் நிரம்பியுள்ள சூழலில், வானொலிக் கால தேர்தல்கள் ஒரு மெல்லிய, சிந்தனைமிக்க அரசியல் பண்பாட்டை நினைவூட்டுகின்றன. மூத்த தலைமுறையினருக்கு, தேர்தல் காலங்களில் வானொலியைச் சுற்றி அமர்ந்து கேட்ட நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளாகவே உள்ளன. அதுவெறும்  பசுமையான நினைவுகள் மட்டுமல்ல — பொறுமையுடன், ஒலியின் வழியே, ஜனநாயகத்தை அனுபவித்த ஒரு காலத்தின் சாட்சி! (தொடரும்)

விகடன் 23 Jan 2026 10:04 am

20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் நடிகர் கார்த்திக்கின் அரசியல் கதை நம்மை குழப்ப வைக்கும் ஒன்றாக இருக்கும். அரசியல் என்ட்ரியான தேர்தலில் படுதோல்வி - மீண்டும் புதிய கட்சி, மீண்டும் புதிய கட்சி என ஒரே பாதையை சுற்றியது அவருடைய அரசியல் கதை. Actor Karthik - Political Journey சரணாலயம் 90-களில் உச்ச நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக்கை பல கட்சிகளும் அவர்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தன என்கிற பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால், அப்படியான நேரத்தில், 2006-ல் ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைவதற்கு முன்பே ‘சரணாலயம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திக், அவருடைய ரசிகர்கள் பலரை அதில் இணைத்துக் கொண்டார். ஃபார்வர்டு பிளாக் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த கார்த்திக்கின் ‘சரணாலயம்’ அமைப்பிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவருடைய அரசியல் வருகையை அவர் பதிவு செய்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அப்படியான வேளையில்தான், ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் இணைந்தார். பிறகு, அக்கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரசிகர் படையைக் கொண்ட கார்த்திக் கட்சியை முன்னெடுத்துச் செல்வார் என நினைத்திருந்தது தலைமை. ஆனால், கட்சியின் முக்கியக் கூட்டங்களிலேயே அவர் அப்சென்ட் ஆகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கார்த்திக்கின் அடுத்தடுத்த செயல்களும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. பிறகு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். Actor Karthik 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய புதிய கட்சியான ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யைத் தொடங்குவதாக அறிவித்தார். சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிறகு ஆதரவாளர்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் கார்த்திக். அவருடைய சமூக மக்களின் ஆதரவு தொடங்கி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகுதான் விருதுநகரில் அவர் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கணிப்புகள் தலைகீழாக மாறி பெரும் தோல்வியையே சந்தித்தார். அந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை (15,000 வாக்குகள்) மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுகவுடனான கூட்டணியில் இணைத்துவிட முயற்சி செய்தார் கார்த்திக். ஆனால், ஜெயலலிதாவோ அவர் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் அதிமுகவுடனான கூட்டணி திட்டங்களை கைவிட்டார். பிறகு 20-40 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சரியான பரப்புரை திட்டமிடல்கள், வலிமையான வேட்பாளர்கள் இல்லாததால் 2011-லும் இந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. Actor Karthik - Political Journey இதனைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடவில்லை. கார்த்திக் நினைத்த கூட்டணிக் கணக்குகள் சரியாக கைகூடி வராததுதான் அவர் இதற்கிடைப்பட்ட காலத்தில் அரசியலிலிருந்து விலகி சைலன்ட்டாக இருந்ததற்கும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர் ஓரிரு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி' புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். Actor Karthik - Political Journey பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 23 Jan 2026 9:56 am

20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் நடிகர் கார்த்திக்கின் அரசியல் கதை நம்மை குழப்ப வைக்கும் ஒன்றாக இருக்கும். அரசியல் என்ட்ரியான தேர்தலில் படுதோல்வி - மீண்டும் புதிய கட்சி, மீண்டும் புதிய கட்சி என ஒரே பாதையை சுற்றியது அவருடைய அரசியல் கதை. Actor Karthik - Political Journey சரணாலயம் 90-களில் உச்ச நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக்கை பல கட்சிகளும் அவர்கள் பக்கம் இழுக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தன என்கிற பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால், அப்படியான நேரத்தில், 2006-ல் ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைவதற்கு முன்பே ‘சரணாலயம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திக், அவருடைய ரசிகர்கள் பலரை அதில் இணைத்துக் கொண்டார். ஃபார்வர்டு பிளாக் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த கார்த்திக்கின் ‘சரணாலயம்’ அமைப்பிற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவருடைய அரசியல் வருகையை அவர் பதிவு செய்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அப்படியான வேளையில்தான், ‘ஆல் இந்தியா ஃபார்வர்டு பிளாக்’ கட்சியில் இணைந்தார். பிறகு, அக்கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரசிகர் படையைக் கொண்ட கார்த்திக் கட்சியை முன்னெடுத்துச் செல்வார் என நினைத்திருந்தது தலைமை. ஆனால், கட்சியின் முக்கியக் கூட்டங்களிலேயே அவர் அப்சென்ட் ஆகியிருக்கிறார். இதுமட்டுமல்ல, கார்த்திக்கின் அடுத்தடுத்த செயல்களும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. பிறகு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். Actor Karthik 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய புதிய கட்சியான ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யைத் தொடங்குவதாக அறிவித்தார். சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிறகு ஆதரவாளர்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் கார்த்திக். அவருடைய சமூக மக்களின் ஆதரவு தொடங்கி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகுதான் விருதுநகரில் அவர் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கணிப்புகள் தலைகீழாக மாறி பெரும் தோல்வியையே சந்தித்தார். அந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை (15,000 வாக்குகள்) மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுகவுடனான கூட்டணியில் இணைத்துவிட முயற்சி செய்தார் கார்த்திக். ஆனால், ஜெயலலிதாவோ அவர் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் அதிமுகவுடனான கூட்டணி திட்டங்களை கைவிட்டார். பிறகு 20-40 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் என அதிரடியாக அறிவித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சரியான பரப்புரை திட்டமிடல்கள், வலிமையான வேட்பாளர்கள் இல்லாததால் 2011-லும் இந்தக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. Actor Karthik - Political Journey இதனைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கார்த்திக் போட்டியிடவில்லை. கார்த்திக் நினைத்த கூட்டணிக் கணக்குகள் சரியாக கைகூடி வராததுதான் அவர் இதற்கிடைப்பட்ட காலத்தில் அரசியலிலிருந்து விலகி சைலன்ட்டாக இருந்ததற்கும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் அவர் ஓரிரு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி' புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார். Actor Karthik - Political Journey பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.! Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

விகடன் 23 Jan 2026 9:56 am

சபரிமலை தங்கம் கொள்ளை: சட்டசபையில் பாட்டுப் பாடி போராடிய எதிர்க்கட்சி; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு குறித்து கோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. அதில், உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் கமிஷனர், முன்னாள் தலைவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் அன்றைய தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் எழுந்து, '2024-2025 ஆண்டுகளில் சபரிமலையில் நடந்த மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தற்போதைய தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும். எஸ்.ஐ.டி மீது முதல்வர் அலுவலகம் கொடுக்கும் அழுத்தத்தை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சபை நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது'' என்று கூறினார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபரிமலை தங்கக் கொள்ளைக்கு எதிரான பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். சபாநாயகரை மறைக்கும் விதமாக பதாகைகளை உயர்த்திப் பிடித்து போராட்டம் நடத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். அதுமட்டும் அல்லாது, அவையின் நடுவே இறங்கி 'ஸ்வர்ணம் கட்டவர் (திருடியவர்) யாரப்பா... சகாக்களாணே ஐய்யப்பா' எனக் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாட்டுப் பாடி போராட்டம் நடத்தினர். சபரிமலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் சி.பி.எம் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கினர். இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சி.பி.எம் அமைச்சர் எம்.பி.ராஜேஷ், ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா எனக் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் கன்வீனர் அடூர் பிரகாஷிடம் கேளுங்கள். பதில் திருப்தி இல்லாமல் இருந்தால் டெல்லி சென்று சோனியா காந்தியின் வீட்டில் போய் கேளுங்கள். சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா? - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம் தங்கம் கொள்ளையடித்தவரும், அதை வாங்கியவரும் சோனியா காந்தியுடன் நிற்கும் போட்டோ உள்ளது. காங்கிரீட் கொடிமரத்தை கரையான் அரித்ததாக பொய்க்கதை கூறியவர்கள் நீங்கள். உண்மையான குற்றவாளிகள் சிறைக்குச் செல்லும்போது பாடுவதற்கு ஒரு பாடல் வைத்துள்ளோம் என்று காங்கிரஸ் எம்.எல்.எ-க்களைப் பார்த்து கூறினார். கேரள அமைச்சர் சிவன்குட்டி இதற்கிடையே அமைச்சர் சிவன்குட்டி, ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா... காங்கிரஸாணே ஐயப்பா எனக் கோஷம் எழுப்பினார். மேலும், சோனியா காந்தியைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரது வீட்டில் தங்கம் உள்ளதாகவும் அமைச்சர் சிவன்குட்டி கூறினார். அவரை சபாநாயகர் கட்டுப்படுத்தினார். மேலும், ''சபையில் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார்தான். நோட்டீஸ் வழங்காமல் சபையை அலங்கோலப்படுத்தக்கூடாது. இது முன்னுதாரணமான செயல் அல்ல'' எனவும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும், சோனியா காந்தி குறித்து சட்டசபையில் பேசியது குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் சபாநாயகருக்குக் கடிதம் அளித்துள்ளார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

விகடன் 23 Jan 2026 7:28 am

சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து VIBGIOR 26 மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர். இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்த உலக சாதனை முயற்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா முழுமையான ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். கல்வி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ரமணன் மற்றும் சங்கீதா ஆகிய செயலாளர்கள் ஏற்றுக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தி, 5 மணி நேரத்துக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இந்த மாபெரும் போர்ட்ரேட்டை நிறைவு செய்தனர். ஒற்றுமை, கலை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த உலக சாதனை முயற்சி, இளம் தலைமுறையின் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. வாக்குரிமையின் அவசியத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சி, கல்வி வளாகத்தைத் தாண்டி பொதுமக்களிடையிலும் பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

விகடன் 22 Jan 2026 9:48 pm

சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து VIBGIOR 26 மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர். இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்த உலக சாதனை முயற்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா முழுமையான ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். கல்வி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ரமணன் மற்றும் சங்கீதா ஆகிய செயலாளர்கள் ஏற்றுக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தி, 5 மணி நேரத்துக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இந்த மாபெரும் போர்ட்ரேட்டை நிறைவு செய்தனர். ஒற்றுமை, கலை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த உலக சாதனை முயற்சி, இளம் தலைமுறையின் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. வாக்குரிமையின் அவசியத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சி, கல்வி வளாகத்தைத் தாண்டி பொதுமக்களிடையிலும் பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

விகடன் 22 Jan 2026 9:48 pm

தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - செங்கோட்டையன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், எல்லோரும் இன்று தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஒருபுறம் 10 கட்சி கூட்டணி. மற்றொரு புறம் 8 கட்சி கூட்டணி. ஆனால் யாரை எல்லோரும் தேடித்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் தவெக விஜய்யைத் தான். எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு தானாகவே கூட்டணி அமையும். அப்படி கூட்டணி அமைந்தால் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும். செங்கோட்டையன் விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்கள் தான் வெல்வார்கள். தவெகவை தவிர யாராலும் தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற வரலாற்றைப் படைப்போம். அந்தக் காலத்திற்காகத் தான் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:10 pm

TVK Vijay : முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் - விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து தவெக விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெக-விற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். விசில் தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. தவெக தலைவர் விஜய் நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:07 pm

TVK Vijay : முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் - விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து தவெக விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெக-விற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். விசில் தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. தவெக தலைவர் விஜய் நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 8:07 pm

ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?

2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், அவரைக் கவனிக்கிறார் சலூன்காரர். ஜெயலலிதாவின் சாய்ஸ்! அப்படியே கடையில் கிடக்கும் செய்தித்தாளையும் பார்க்கிறார். 'தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்' என்றச் செய்தியையும் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தையும் பார்த்த சலூன்காரருக்கு, கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. ஆம், கடைக்கு ஆட்டோவில் வந்திருந்தது ஓ.பன்னீர் செல்வமேதான். முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக சலூன் வந்திருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணிக்குச் சென்றவர் என்றாலும், தான் பதவி விலக வேண்டி வந்த போதெல்லாம்... ஒரே சாய்ஸாக ஜெயலலிதா கை காட்டியது இவரைத்தான். எங்கேயோ பெரியகுளத்தில் உள்ளாட்சி மன்றப் பதவியில் இருந்தபடி அரசியல் வெளிச்சம் படாமல் இருந்தவரை, ஜெயலலிதா முன்பாக போய் நிறுத்தியது சசிகலா என்றார்கள். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். நிதி அமைச்சராக தமிழக அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இன்று?! ஓ.பன்னீர் செல்வம் தன்னந்தனியாக நான் நிற்கும் வேளை! திக்குத் தெரியாத ஒரு பாதையில் நின்று கொண்டிருக்கிறார். அடையாளம் தந்த அதிமுக-வில் இன்றைய தேதிக்கு இவர் உறுப்பினர்கூட இல்லை. அதிமுக-வை மீட்கப் போகிறேன் என சிலரைச் சேர்த்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக அறிக்கை விட்டபடி இருந்தார். உடன் இருந்த அந்தச் சிலரில், 'மத்த நேரம் சரி, தேர்தல் நேரத்துல ஏதாவதொரு முடிவெடுத்து யார் கூடவாச்சும் போய் பதவி கிதவி கிடைச்சாதானே அரசியல் செய்ய முடியும், இப்படியே இருந்தா எப்படி?' என நினைத்தவர்கள் கிளம்பி விட்டனர். எம்.எல்.ஏ-வாக இவருடன் இருந்த மூன்று பேரில் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுக-வுக்குப் போய் விட்டார்கள். உசிலம்பட்டி ஐயப்பனும், இவரால் ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைத்த முதுகுளத்தூர் தர்மரும் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெக பக்கம் சென்று விட்டார். ஏன் இந்த நிலை?! ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவராலும் மிகவும் நம்பிக்கையான‌ மனிதராகப் பார்க்கப் பட்ட ஓ.பி.எஸ் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானார்? அதிமுக சீனியர் ஒருவரிட‌ம் பேசினோம். ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி? ஜெயலலிதா சறுக்களில் தொடங்கிய யுத்தம்! ''அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்? கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? 'என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க'ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு 'தர்ம யுத்தம்' அது இதுன்னு போய் உட்கார்ந்தார். ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார். சசிகலா அரசியலுக்கு செட் ஆகாத பணிவே துணை! ஏன்னா, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற துணிச்சல், கட்சி மீதான பற்று எல்லாம் இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை. 'எங்க உட்கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க' என அமித் ஷாவிடம் சொல்கிற துணிச்சல் எல்லாம் ஓ.பி.எஸ் க்கு கிடையாது. ஒராண்டுக்கு முன் கூட்டணி அறிவிக்க வந்த அமித் ஷா, 'அதிமுக-வின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்' எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல போகிற போக்கில் ஜெயலலிதாவையே விமர்சித்த அண்ணாமலை இருந்தால் கூட்டணி செட் ஆகாது என மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியிலிருக்கும் போதுதான் சொல்லி கூட்டணியை முறித்தார் எடப்பாடி. இந்த இடத்தில் பன்னீர் செல்வம் இருந்திருந்தால் பேசியிருப்பாரா? 2016 முதல் 21 வரையிலான ஆட்சியில் ஜெயலலிதா இல்லாத மிச்சக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்ததும், கட்சியை இப்போது வரை கட்டுக் கோப்பாக கொண்டு போவதும் எடப்பாடிதான். ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொருபுறம் இவங்க வழியா சவாரி செய்யலாமா எனத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி. 'திமுக-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' எனப் புதுசா கிளம்பியிருக்கிற ஒருத்தர் என எல்லாரையும் சமாளிச்சபடியே கட்சியை 2026 தேர்தலுக்குத் தயார்படுத்திட்டு வர்றார் பழனிசாமி. . துணிவே துணை என எந்த முடிவையும் எடுக்கிறார் பழனிசாமி. இவர் பணிவே துணைன்னு இருந்தா அரசியலுக்கு அது செட் ஆகாதே. இதை ஏத்துக்கிட்டுப் போயிருந்தா இவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்கிறார் அவர். OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம் ஓ.பன்னீர் செல்வம் தவற விட்ட அன்பழகன் இடம்! மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''எளிமையான மனிதர்தான். ஆனா சமயத்துல என்ன பண்றோம்னு தெரியாமச் செய்கிறாரா அல்லது தெரிஞ்சே செய்கிறாரா தெரியல. அவருடைய சில செயல்பாடுகள் கட்சியின் உண்மையான தொண்டர்கள்கிட்ட இருந்து அவரை அந்நியப்படுத்திடுது. 'இந்த தேர்தல்ல திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கு'னு சொல்றது, அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தல்ல நின்னது போன்ற செயல்களை உதாரணமாகச் சொல்லலாம். கட்சியின் கள நிலவரத்தைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா திமுக-வில் அன்பழகன் இருந்த மாதிரி, நம்பர் 2 என்ற இடத்தில் இவர் அதிமுக-வில் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமி எங்கே செல்லும் இந்தப் பாதை? எது என்னவோ இன்று திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறார் பன்னீர் செல்வம். இயக்குநர் பாலா இவரின் உறவினர் என்கிறார்கள். அவரது 'சேது' படத்தில் வரும் 'எங்கே செல்லும் இந்தப் பாதை' பாடல்தான் நினைவுக்கு வருகிறது, பன்னீர் செல்வத்தின் நாளைய அரசியலை நினைத்துப் பார்க்கும் போது. 'நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை' எனச் சொன்ன பிறகும் பழனிசாமி இவரைச் சேர்க்க மறுக்கிறார் என்றால், உள்ளே வந்த பிறகு எப்படியும் மாறலாம் என்று நினைக்கிறார்போல. டி.டி.வி.தினகரன் போல தனியாக ஓரிரு இடங்களை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வருவாரா என்றால், டெல்லியே இவரை விரும்பி அழைக்குமா என்பதும் தெரியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை யார் மூலமாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே அவர்கள் பக்கம் போவார்கள். மொத்தத்தில் பழைய பன்னீர் செல்வமாக அரசியலில் இனி ஒ.பி.எஸ்.ஸைப் பார்க்க முடியுமா என நோக்கினால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் இல்லை. காலத்திடம்தான் விடை இருக்கிறது.!

விகடன் 22 Jan 2026 7:25 pm

ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?

2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், அவரைக் கவனிக்கிறார் சலூன்காரர். ஜெயலலிதாவின் சாய்ஸ்! அப்படியே கடையில் கிடக்கும் செய்தித்தாளையும் பார்க்கிறார். 'தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்' என்றச் செய்தியையும் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தையும் பார்த்த சலூன்காரருக்கு, கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. ஆம், கடைக்கு ஆட்டோவில் வந்திருந்தது ஓ.பன்னீர் செல்வமேதான். முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக சலூன் வந்திருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணிக்குச் சென்றவர் என்றாலும், தான் பதவி விலக வேண்டி வந்த போதெல்லாம்... ஒரே சாய்ஸாக ஜெயலலிதா கை காட்டியது இவரைத்தான். எங்கேயோ பெரியகுளத்தில் உள்ளாட்சி மன்றப் பதவியில் இருந்தபடி அரசியல் வெளிச்சம் படாமல் இருந்தவரை, ஜெயலலிதா முன்பாக போய் நிறுத்தியது சசிகலா என்றார்கள். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். நிதி அமைச்சராக தமிழக அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இன்று?! ஓ.பன்னீர் செல்வம் தன்னந்தனியாக நான் நிற்கும் வேளை! திக்குத் தெரியாத ஒரு பாதையில் நின்று கொண்டிருக்கிறார். அடையாளம் தந்த அதிமுக-வில் இன்றைய தேதிக்கு இவர் உறுப்பினர்கூட இல்லை. அதிமுக-வை மீட்கப் போகிறேன் என சிலரைச் சேர்த்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக அறிக்கை விட்டபடி இருந்தார். உடன் இருந்த அந்தச் சிலரில், 'மத்த நேரம் சரி, தேர்தல் நேரத்துல ஏதாவதொரு முடிவெடுத்து யார் கூடவாச்சும் போய் பதவி கிதவி கிடைச்சாதானே அரசியல் செய்ய முடியும், இப்படியே இருந்தா எப்படி?' என நினைத்தவர்கள் கிளம்பி விட்டனர். எம்.எல்.ஏ-வாக இவருடன் இருந்த மூன்று பேரில் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுக-வுக்குப் போய் விட்டார்கள். உசிலம்பட்டி ஐயப்பனும், இவரால் ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைத்த முதுகுளத்தூர் தர்மரும் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெக பக்கம் சென்று விட்டார். ஏன் இந்த நிலை?! ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவராலும் மிகவும் நம்பிக்கையான‌ மனிதராகப் பார்க்கப் பட்ட ஓ.பி.எஸ் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானார்? அதிமுக சீனியர் ஒருவரிட‌ம் பேசினோம். ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி? ஜெயலலிதா சறுக்களில் தொடங்கிய யுத்தம்! ''அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்? கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? 'என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க'ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு 'தர்ம யுத்தம்' அது இதுன்னு போய் உட்கார்ந்தார். ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார். சசிகலா அரசியலுக்கு செட் ஆகாத பணிவே துணை! ஏன்னா, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற துணிச்சல், கட்சி மீதான பற்று எல்லாம் இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை. 'எங்க உட்கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க' என அமித் ஷாவிடம் சொல்கிற துணிச்சல் எல்லாம் ஓ.பி.எஸ் க்கு கிடையாது. ஒராண்டுக்கு முன் கூட்டணி அறிவிக்க வந்த அமித் ஷா, 'அதிமுக-வின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்' எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல போகிற போக்கில் ஜெயலலிதாவையே விமர்சித்த அண்ணாமலை இருந்தால் கூட்டணி செட் ஆகாது என மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியிலிருக்கும் போதுதான் சொல்லி கூட்டணியை முறித்தார் எடப்பாடி. இந்த இடத்தில் பன்னீர் செல்வம் இருந்திருந்தால் பேசியிருப்பாரா? 2016 முதல் 21 வரையிலான ஆட்சியில் ஜெயலலிதா இல்லாத மிச்சக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்ததும், கட்சியை இப்போது வரை கட்டுக் கோப்பாக கொண்டு போவதும் எடப்பாடிதான். ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொருபுறம் இவங்க வழியா சவாரி செய்யலாமா எனத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி. 'திமுக-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' எனப் புதுசா கிளம்பியிருக்கிற ஒருத்தர் என எல்லாரையும் சமாளிச்சபடியே கட்சியை 2026 தேர்தலுக்குத் தயார்படுத்திட்டு வர்றார் பழனிசாமி. . துணிவே துணை என எந்த முடிவையும் எடுக்கிறார் பழனிசாமி. இவர் பணிவே துணைன்னு இருந்தா அரசியலுக்கு அது செட் ஆகாதே. இதை ஏத்துக்கிட்டுப் போயிருந்தா இவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்கிறார் அவர். OPS: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன் - ஓபிஎஸ் விளக்கம் ஓ.பன்னீர் செல்வம் தவற விட்ட அன்பழகன் இடம்! மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''எளிமையான மனிதர்தான். ஆனா சமயத்துல என்ன பண்றோம்னு தெரியாமச் செய்கிறாரா அல்லது தெரிஞ்சே செய்கிறாரா தெரியல. அவருடைய சில செயல்பாடுகள் கட்சியின் உண்மையான தொண்டர்கள்கிட்ட இருந்து அவரை அந்நியப்படுத்திடுது. 'இந்த தேர்தல்ல திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கு'னு சொல்றது, அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தல்ல நின்னது போன்ற செயல்களை உதாரணமாகச் சொல்லலாம். கட்சியின் கள நிலவரத்தைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா திமுக-வில் அன்பழகன் இருந்த மாதிரி, நம்பர் 2 என்ற இடத்தில் இவர் அதிமுக-வில் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமி எங்கே செல்லும் இந்தப் பாதை? எது என்னவோ இன்று திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறார் பன்னீர் செல்வம். இயக்குநர் பாலா இவரின் உறவினர் என்கிறார்கள். அவரது 'சேது' படத்தில் வரும் 'எங்கே செல்லும் இந்தப் பாதை' பாடல்தான் நினைவுக்கு வருகிறது, பன்னீர் செல்வத்தின் நாளைய அரசியலை நினைத்துப் பார்க்கும் போது. 'நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை' எனச் சொன்ன பிறகும் பழனிசாமி இவரைச் சேர்க்க மறுக்கிறார் என்றால், உள்ளே வந்த பிறகு எப்படியும் மாறலாம் என்று நினைக்கிறார்போல. டி.டி.வி.தினகரன் போல தனியாக ஓரிரு இடங்களை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வருவாரா என்றால், டெல்லியே இவரை விரும்பி அழைக்குமா என்பதும் தெரியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை யார் மூலமாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே அவர்கள் பக்கம் போவார்கள். மொத்தத்தில் பழைய பன்னீர் செல்வமாக அரசியலில் இனி ஒ.பி.எஸ்.ஸைப் பார்க்க முடியுமா என நோக்கினால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் இல்லை. காலத்திடம்தான் விடை இருக்கிறது.!

விகடன் 22 Jan 2026 7:25 pm

TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?

திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. தேமுதி-கவும் ராமதாஸூம் மட்டுமே கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எதோ ஒரு பக்கம் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். இந்த இடத்தில்தான் விஜய் தனித்து விடப்படுகிறாரா எனும் கேள்வி எழுகிறது. TVK VIJAY 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தங்கள் பக்கமாக பல கட்சியினரும் வந்து சேருவார்கள் என விஜய் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்யை திமுக, அதிமுக-விடம் டிமாண்ட் ஏற்ற மட்டுமே ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இது சம்பந்தமாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் சிலரிடம் பேசினோம். ``புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்கள் தாங்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தங்களின் பலத்தை தெரிந்துகொள்ள தனித்தே போட்டியிடுவார்கள். விஜயகாந்த் அப்படித்தான் போட்டியிட்டார். கமல்ஹாசனும் பெரிதாக எந்த கட்சிக்கும் வலைவீசவில்லை. தன்னை தேடி வந்த மார்க்கெட் இல்லாத கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தார். கடைசி வரை பூச்சாண்டி மட்டுமே காட்டிய ரஜினிகாந்துமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றே அறிவித்தார். TVK Vijay கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதை அறிந்து எடுக்கும் ரிஸ்க் இது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த், தன்னுடைய வாக்குவங்கியை நிரூபித்து அடுத்த தேர்தலிலேயே கூட்டணிக்கு போனார். ஆனால், விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் கொஞ்சம் வித்தியாசமான போக்கையே கொண்டிருந்தது. சந்திக்கப்போகும் முதல் தேர்தலையே கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டுமென விஜய் தரப்பு நினைத்தது. அதனால்தான் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே 'நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்' என விஜய் பேசினார். அப்போது விஜய்யின் மனதில் இருந்தது திருமா. அவரும் அந்த சமயத்தில்தான் ஆட்சியில் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்தார். கூடவே விஜய்யின் முதல் மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். TVK Vijay விஜய்யும் திருமாவும் கூட்டணிக்காக நெருங்குவார்கள் என ஹேஸ்யங்கள் பறந்து கொண்டிருந்த சமயத்திலேயே திருமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 'விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை திருமா தவிர்த்தார். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திரைமறைவில் பேச வேண்டிய விஷயம்' என விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை இடைக்காலமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். அந்த சமயத்திலும் விஜய் விடவில்லை. 'புத்தக வெளியீட்டுக்கு திருமா வரவில்லையெனினும் அவர் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும்' என தொடர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டே இருந்தார். விக்கிரவாண்டி மாநாடு முடிந்த 2 மாதங்களுக்கு மட்டுமே தவெக - விசிக கூட்டணி என்பது பேசுபொருளாக இருந்தது. அதன்பிறகு, தவெகவின் பார்வை அப்படியே காங்கிரஸ் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ்காரர்களும் விஜய்க்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து நட்பு சக்தியாகவே காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸூம் அமைச்சரவையில் பங்கு என்கிற கோஷத்தை முன்வைத்தது. அதன்பிறகுதான் திமுக கூட்டணியில் விரிசல், காங்கிரஸ் தவெக பக்கமாக செல்கிறது போன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. ராகுல் காந்தி 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வரின் ஒரே ட்வீட்டோடு திமுக கூடாரம் கப்சிப் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தது. ராகுல் காந்தியே விஜய்க்காக ட்வீட் செய்தார். ஆனால், காங்கிரஸூம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டென எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் முட்டல் மோதல் ஏற்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி நகர்வார்கள் எனும் நிலையே இப்போது. ஆக, அவர்களுக்கும் விஜய் முதல் ஆப்சன் கிடையாது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் டிடிவி விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். விஜய்க்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருடன் டிடிவி தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது. அதை வேகப்படுத்தி டிடிவியை உள்ளே இழுக்கவும் தவறிவிட்டனர். ஓ.பி.எஸ் சீட்டெழுதி வாங்கிய வாக்கெடுப்பிலும் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்றே அதிகம் பேர் கூறியிருக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்துக்காக அன்புமணியின் பாமக தரப்பில் பாலு தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். டிடிவி தினகரன் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் தவற விட்டு விட்டு இப்போது இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிரேமலதா விஜயகாந்தும் ராமதாஸூம் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். 'தேமுதிக தகுதிக்கு மீறி சீட் எதிர்பார்க்கிறது' என்பதுதான் திமுக அதிமுக-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக - அதிமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிகவினரும் உறுதி செய்கின்றனர். ஒருவேளை தேமுதிக தவெக பக்கமாக வந்தாலும் அது பெரிய பலனை கொடுக்குமா என்பதும் சந்தேகமே. ராமதாஸ் தரப்பையும் தவெக தொடர்புகொண்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பழுத்த அனுபவமிக்கவர். அவர் அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை நம்பி வருவாரா என்பதும் சந்தேகமே என்கின்றனர் முக்கியப் புள்ளிகள் சிலர். ராமதாஸ் இன்னொரு பக்கம் 'திமுகவை பொது எதிரியாக முன்நிறுத்தி விஜய் எங்களின் பக்கம் வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் எந்த கட்சிக்கும் இன்னமும் சீட் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருக்கிறோம். விஜய் வந்தால் எல்லாமே மாறும்' என கிசுகிசுக்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். TVK Vijay அதேநேரத்தில் விஜய்யின் இந்த இரண்டாண்டு நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், 'வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போகிறேன் என 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற ஆயுதத்தோடு வந்த விஜய் இப்போது வேறு வழியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்' என அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.

விகடன் 22 Jan 2026 7:19 pm

TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?

திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. தேமுதி-கவும் ராமதாஸூம் மட்டுமே கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எதோ ஒரு பக்கம் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். இந்த இடத்தில்தான் விஜய் தனித்து விடப்படுகிறாரா எனும் கேள்வி எழுகிறது. TVK VIJAY 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தங்கள் பக்கமாக பல கட்சியினரும் வந்து சேருவார்கள் என விஜய் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்யை திமுக, அதிமுக-விடம் டிமாண்ட் ஏற்ற மட்டுமே ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இது சம்பந்தமாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் சிலரிடம் பேசினோம். ``புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்கள் தாங்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தங்களின் பலத்தை தெரிந்துகொள்ள தனித்தே போட்டியிடுவார்கள். விஜயகாந்த் அப்படித்தான் போட்டியிட்டார். கமல்ஹாசனும் பெரிதாக எந்த கட்சிக்கும் வலைவீசவில்லை. தன்னை தேடி வந்த மார்க்கெட் இல்லாத கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தார். கடைசி வரை பூச்சாண்டி மட்டுமே காட்டிய ரஜினிகாந்துமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றே அறிவித்தார். TVK Vijay கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதை அறிந்து எடுக்கும் ரிஸ்க் இது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த், தன்னுடைய வாக்குவங்கியை நிரூபித்து அடுத்த தேர்தலிலேயே கூட்டணிக்கு போனார். ஆனால், விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் கொஞ்சம் வித்தியாசமான போக்கையே கொண்டிருந்தது. சந்திக்கப்போகும் முதல் தேர்தலையே கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டுமென விஜய் தரப்பு நினைத்தது. அதனால்தான் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே 'நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்' என விஜய் பேசினார். அப்போது விஜய்யின் மனதில் இருந்தது திருமா. அவரும் அந்த சமயத்தில்தான் ஆட்சியில் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்தார். கூடவே விஜய்யின் முதல் மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். TVK Vijay விஜய்யும் திருமாவும் கூட்டணிக்காக நெருங்குவார்கள் என ஹேஸ்யங்கள் பறந்து கொண்டிருந்த சமயத்திலேயே திருமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 'விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை திருமா தவிர்த்தார். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திரைமறைவில் பேச வேண்டிய விஷயம்' என விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை இடைக்காலமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். அந்த சமயத்திலும் விஜய் விடவில்லை. 'புத்தக வெளியீட்டுக்கு திருமா வரவில்லையெனினும் அவர் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும்' என தொடர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டே இருந்தார். விக்கிரவாண்டி மாநாடு முடிந்த 2 மாதங்களுக்கு மட்டுமே தவெக - விசிக கூட்டணி என்பது பேசுபொருளாக இருந்தது. அதன்பிறகு, தவெகவின் பார்வை அப்படியே காங்கிரஸ் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ்காரர்களும் விஜய்க்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து நட்பு சக்தியாகவே காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸூம் அமைச்சரவையில் பங்கு என்கிற கோஷத்தை முன்வைத்தது. அதன்பிறகுதான் திமுக கூட்டணியில் விரிசல், காங்கிரஸ் தவெக பக்கமாக செல்கிறது போன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன. ராகுல் காந்தி 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வரின் ஒரே ட்வீட்டோடு திமுக கூடாரம் கப்சிப் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தது. ராகுல் காந்தியே விஜய்க்காக ட்வீட் செய்தார். ஆனால், காங்கிரஸூம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டென எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் முட்டல் மோதல் ஏற்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி நகர்வார்கள் எனும் நிலையே இப்போது. ஆக, அவர்களுக்கும் விஜய் முதல் ஆப்சன் கிடையாது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் டிடிவி விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். விஜய்க்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருடன் டிடிவி தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது. அதை வேகப்படுத்தி டிடிவியை உள்ளே இழுக்கவும் தவறிவிட்டனர். ஓ.பி.எஸ் சீட்டெழுதி வாங்கிய வாக்கெடுப்பிலும் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்றே அதிகம் பேர் கூறியிருக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்துக்காக அன்புமணியின் பாமக தரப்பில் பாலு தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். டிடிவி தினகரன் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் தவற விட்டு விட்டு இப்போது இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிரேமலதா விஜயகாந்தும் ராமதாஸூம் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். 'தேமுதிக தகுதிக்கு மீறி சீட் எதிர்பார்க்கிறது' என்பதுதான் திமுக அதிமுக-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக - அதிமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிகவினரும் உறுதி செய்கின்றனர். ஒருவேளை தேமுதிக தவெக பக்கமாக வந்தாலும் அது பெரிய பலனை கொடுக்குமா என்பதும் சந்தேகமே. ராமதாஸ் தரப்பையும் தவெக தொடர்புகொண்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பழுத்த அனுபவமிக்கவர். அவர் அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை நம்பி வருவாரா என்பதும் சந்தேகமே என்கின்றனர் முக்கியப் புள்ளிகள் சிலர். ராமதாஸ் இன்னொரு பக்கம் 'திமுகவை பொது எதிரியாக முன்நிறுத்தி விஜய் எங்களின் பக்கம் வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் எந்த கட்சிக்கும் இன்னமும் சீட் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருக்கிறோம். விஜய் வந்தால் எல்லாமே மாறும்' என கிசுகிசுக்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். TVK Vijay அதேநேரத்தில் விஜய்யின் இந்த இரண்டாண்டு நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், 'வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போகிறேன் என 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற ஆயுதத்தோடு வந்த விஜய் இப்போது வேறு வழியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்' என அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.

விகடன் 22 Jan 2026 7:19 pm

'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா'பிரேமலதா; திக்...திக் தேமுதிக!

பேரம் பேசுவதில் என்ன தப்பு? விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, அ.தி.மு.க கொடுத்த ராஜ்ய சபா சீட் `அல்வா' என அடுத்தடுத்த சறுக்கல்களால் சோர்ந்து போயிருந்தார், பிரேமலதா. ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அதிரடி முடிவு வரும் என அவர் கொடுத்த பில்டப், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கடலூரில் திரட்டியது. கூட்டத்தில் மைக் பிடித்த சுதீஷ், ஆமாம்... நாங்க பேரம் பேசுறோம். 10 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போது சீட்டுக்காகப் பேரம் பேசுவதில் என்ன தப்பு? தே.மு.தி.க யாருடன் இருக்கிறதோ அவங்கதான் ஆட்சி அமைப்பாங்க. அப்போது பொதுச்செயலாளர் துணை முதல்வராக வருவார் என எகிற, தொண்டர்கள் உற்சாகமானார்கள். எடப்பாடி பழனிசாமி ஆனால், கிளைமாக்ஸில் பேசிய பிரேமலதாவோ, மத்திய, மாநில ஆளும் கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காதபோது நாம் ஏன் அவசரப்பட வேண்டும்? எனச் சொல்லி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணைப் போட்டார். குடும்பத்துக்குள் குஸ்தி? இதற்கு, கடந்த முறை ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய அ.தி.மு.க-வை நம்ப வேண்டாம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்பது மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த கருத்து. ஆனால் விருதுநகர் தோல்வியை இன்னும் மறக்காத விஜயபிரபாகரன், தி.மு.க கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்றிருக்கிறார். இதற்கிடையில் வெற்றி வாய்ப்பு தி.மு.க பக்கமே இருப்பதால், அங்கு செல்வதே புத்திசாலித்தனம் என சுதீஷ் நினைத்திருக்கிறார். இதனால்தான் பிரேமலதாவால் அப்போது முடிவு எடுக்க முடியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். விஜயபிரபாகரன் இதற்கிடையில்தான், தே.ஜ கூட்டணியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தீவிரமாகக் கையில் எடுத்தது பா.ஜ.க தலைமை. இதையடுத்துதான் முரண்டு பிடித்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டனர். பியூஸ் கோயல் தரப்பு பிரேமலதாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்வார் என்று ஒரு தரப்பு சொன்னாலும், ரகசியமாக 'அறிவாலய' டீலிங் முடிந்துவிட்டதாகத் தகவல்களும் கசிகின்றன. இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தையில், '12 சீட், ஒரு ராஜ்ய சபா' எனப் பேரம் பேசியது தே.மு.தி.க. ஆனால் அறிவாலயம் 6-க்கு மேல் தர முடியாது எனக் கையை விரித்துவிட்டது. அ.தி.மு.க-விடமும் 18 சீட் கேட்டு 'நோ' சொல்லப்பட்டது. விஜய்யின் த.வெ.க-வில் சீட் கிடைக்குமே தவிர, 'தேர்தல் செலவு'க்கு வழி இருக்காது என்பதால், அந்த ஆப்ஷனையும் பிரேமலதா தள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து 'பாசிட்டிவ்' சிக்னல் கிடைத்திருக்கிறது. அண்ணா அறிவாலயம் இதையடுத்து, `அ.தி.மு.க பக்கம் போனால் வெற்றி சந்தேகம். தி.மு.க பக்கம் போனால் நிச்சயம் எம்.எல்.ஏ-க்கள் ஆகலாம்' எனக் கணக்கு போட்டிருக்கிறார், அண்ணி. இருந்தாலும், கடைசி நிமிடம்வரை பேரம் பேசி அதிகப்படியான பலனைப் பெற வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் தந்திரம். எனவே, நாளை மோடி மேடைக்குப் பிரேமலதா செல்வாரா அல்லது அறிவாலயம் நோக்கி வண்டியைத் திருப்புவாரா? என 'கேப்டன்' கட்சித் தொண்டர்கள் திக்திக் நிமிடங்களில் காத்திருக்கிறார்கள்! என்றனர். 'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

விகடன் 22 Jan 2026 6:27 pm

``தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல - தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது. இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப்பான கணக்கும் அல்ல, அச்சுப் பிழையும் அல்ல,1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே” என்று பதிலுரை அளித்திருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் அதாவது, மாண்புமிகு உறுப்பினர் திரு.தங்கமணி அவர்கள் பேசும்போது, ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரம் தவறாக தெரிவதாகவும், 12 இலட்சம் பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ஆண்டுக்கு 12 ஆயிரம் செலவழித்தால், 720 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், ஆளுநர் உரையில் அது 1,831 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியா என்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிக் காலம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகின்றது. அதாவது, ஒருவர் கல்லூரியில் சேரும்போது அளிக்கப்படும் இந்தத் தொகை மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலட்சம் பயனாளிகள் என்பது, இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை. இந்தத் திட்டங்களின் முதல் மாதத்திலிருந்து இப்பயனாளிகள், தாங்கள் கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு, மாதந்தோறும் இந்தத் தொகையைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். எனவே, 12 இலட்சம் பயனாளிகளுக்கு தலா ஓராண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, 720 கோடி ரூபாய் என்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்த கணக்கீடு சரியானதல்ல. 2022-2023 ஆம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன்கீழ் பயனடைந்த 6.95 இலட்சம் பயனாளி மாணவிகளும், 2024-2025 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ள 5.4 இலட்சம் மாணவர்களும், மேற்கூறியவாறு தாங்கள் படிக்கக்கூடிய கல்லூரிப் பருவம் முழுமைக்கும் மாதந்தோறும் இதுவரை பெற்றுள்ள தொகை 1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே ஆகும். மேலும், சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திட்டத்தின் செலவினங்கள் அனைத்தும், மத்திய கணக்காய்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கைகள் இப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு சந்தேகமிருந்தால், இந்த அறிக்கைகளில் கணக்கு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிலுரை ஆற்றி இருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 6:10 pm

``தப்பான கணக்கும் அல்ல; அச்சுப் பிழையும் அல்ல - தங்கமணிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (ஜன.22) கூடியது. இந்தக் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தொடர்பாக தங்கமணி பேசியதற்கு, “தப்பான கணக்கும் அல்ல, அச்சுப் பிழையும் அல்ல,1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே” என்று பதிலுரை அளித்திருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் அதாவது, மாண்புமிகு உறுப்பினர் திரு.தங்கமணி அவர்கள் பேசும்போது, ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரம் தவறாக தெரிவதாகவும், 12 இலட்சம் பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ஆண்டுக்கு 12 ஆயிரம் செலவழித்தால், 720 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், ஆளுநர் உரையில் அது 1,831 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சரியா என்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிக் காலம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகின்றது. அதாவது, ஒருவர் கல்லூரியில் சேரும்போது அளிக்கப்படும் இந்தத் தொகை மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலட்சம் பயனாளிகள் என்பது, இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை. இந்தத் திட்டங்களின் முதல் மாதத்திலிருந்து இப்பயனாளிகள், தாங்கள் கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று முதல் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு, மாதந்தோறும் இந்தத் தொகையைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். எனவே, 12 இலட்சம் பயனாளிகளுக்கு தலா ஓராண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, 720 கோடி ரூபாய் என்று மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்த கணக்கீடு சரியானதல்ல. 2022-2023 ஆம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன்கீழ் பயனடைந்த 6.95 இலட்சம் பயனாளி மாணவிகளும், 2024-2025 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ள 5.4 இலட்சம் மாணவர்களும், மேற்கூறியவாறு தாங்கள் படிக்கக்கூடிய கல்லூரிப் பருவம் முழுமைக்கும் மாதந்தோறும் இதுவரை பெற்றுள்ள தொகை 1,831 கோடி ரூபாய் என்பது சரியான கணக்கே ஆகும். மேலும், சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திட்டத்தின் செலவினங்கள் அனைத்தும், மத்திய கணக்காய்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கைகள் இப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு சந்தேகமிருந்தால், இந்த அறிக்கைகளில் கணக்கு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிலுரை ஆற்றி இருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 6:10 pm

ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன. திமுகவில் வைத்திலிங்கம் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை, பிடிக்காமல் முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். அதிமுக-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் சமீபத்தில் திமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் ஐக்கியமானார். செங்கோட்டையன் இந்த நிலையில் 'எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் வரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டேன்' என்று தொடர்ந்து பேசி வந்த டி.டி.வி.தினகரன், நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்க முடியாமலும் ஓ.பி.எஸ்-ஸும், சசிகலாவும் தனித்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நடவடிக்கையால் ஒதுஙகி நிற்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு அழைத்துச் செல்ல பெங்களூர் புகழேந்தி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. டிடிவி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் கர்நாடக மாநில அதிமுகச் செயலாளராகவும் பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்தும் வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராகி பின்பு தினகரனுடன் பயணித்து, கருத்து வேறுபாட்டால் பின்பு எடப்பாடி பழனிசாமி அதரவாளராகி, அங்கிருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த நிலையில்தான், தற்போது தவெக-வில் சேர முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார். ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார். சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார். புகழேந்தி இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றவர், இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன் என்று சூசகமாகத் தெரிவித்தார். அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் 22 Jan 2026 5:37 pm

ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன. திமுகவில் வைத்திலிங்கம் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை, பிடிக்காமல் முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். அதிமுக-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் சமீபத்தில் திமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் ஐக்கியமானார். செங்கோட்டையன் இந்த நிலையில் 'எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் வரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டேன்' என்று தொடர்ந்து பேசி வந்த டி.டி.வி.தினகரன், நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்க முடியாமலும் ஓ.பி.எஸ்-ஸும், சசிகலாவும் தனித்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நடவடிக்கையால் ஒதுஙகி நிற்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு அழைத்துச் செல்ல பெங்களூர் புகழேந்தி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. டிடிவி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் கர்நாடக மாநில அதிமுகச் செயலாளராகவும் பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்தும் வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராகி பின்பு தினகரனுடன் பயணித்து, கருத்து வேறுபாட்டால் பின்பு எடப்பாடி பழனிசாமி அதரவாளராகி, அங்கிருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த நிலையில்தான், தற்போது தவெக-வில் சேர முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார். ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார். சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார். புகழேந்தி இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றவர், இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன் என்று சூசகமாகத் தெரிவித்தார். அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் 22 Jan 2026 5:37 pm

தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் தவெகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விசில் சின்னம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது! அனைத்து கட்சிகளும் இப்போது Ready… Set… Go! என்று பதிவிட்டிருக்கிறார். தவெக விஜய் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானப்போதும், தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 22 Jan 2026 4:28 pm

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி புள்ளிகள் கரைவேட்டி மாற்றுவது சஜகமானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தது போன்றவற்றால் அதிமுகவில் களேபரம் ஏற்பட்டது. கோவை அடுத்தடுத்து சீனியர் நிர்வாகிகள் திமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் மற்றும் ஏற்கனவே அந்தக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் அஸைன்மென்டுடன் வேலுமணி களமிறங்கியுள்ளார். கோவை திமுக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தின் அவைத் தலைவராக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அவர் அதிருப்தியில் இருந்த நிலையில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்த பார்த்திபன், கடந்த மாதம் தவெகவில் இணைந்தார். ஈஸ்வரமூர்த்தி பேரூராட்சி தலைவர் சசிக்குமார் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதிமுகவில் இணைத்துள்ளனர். மேலும் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் சசிக்குமார், 8 கவுன்சிலர்களுடன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி திட்டமிட்டுள்ளார். அதிமுவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலுமணி கோவையை தனி அசைன்மென்ட்டாக கையில் எடுத்துள்ளாராம். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது என்கிறார்கள். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

விகடன் 22 Jan 2026 3:09 pm

அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே தெரியும். அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கசப்பான விஷயங்களை மறந்து.! 2024-ல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) இணைந்த அவர், எப்படி 2026-ல் நம்மை விட்டுச் செல்வார்? சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன்தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார். மிகப்பெரிய விஷயம்... இது அவருக்குக் கடினமான முடிவாகத்தான் இருந்திருக்கும். அவர் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம். இப்படி இருக்கையில் டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம். மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார்.... ஏன் அவர் பேச வேண்டும்? என்றிருக்கிறார். ஓபிஎஸ் சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர்.! தொடர்ந்து ஓ.பி.எஸ்., குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஓ.பி.எஸ் அண்ணனைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர். சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர். அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை? தொடர்ந்து சர்ச்சையான ரஹ்மான் கருத்து குறித்த கேள்விக்கு, ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார். அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. 'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். AR ரஹ்மான் சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. பாஜக பின்னணியில் இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று பேசியிருக்கிறார்.

விகடன் 22 Jan 2026 3:06 pm

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம். எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்' கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் 'சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக' மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது. தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?' என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?' எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை... அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே! ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்... நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம் என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.

விகடன் 22 Jan 2026 3:00 pm

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம். எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்? காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்' கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரசியல் 'சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக' மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது. தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?' என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?' எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை... அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது. இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே! ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்... நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம் என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.

விகடன் 22 Jan 2026 3:00 pm

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்' கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர். வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர். ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம் இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், ``எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம். முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம் என்றார். `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

விகடன் 22 Jan 2026 2:54 pm

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்' கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர். வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர். ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம் இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், ``எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம். முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம் என்றார். `மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

விகடன் 22 Jan 2026 2:54 pm