♿ மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் தடைகள்! | Seriously! | EP - 14 | Vikatan TV
♿ மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் தடைகள்! | Seriously! | EP - 14 | Vikatan TV
Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin
Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin
பணி நிறைவுபெறாத தக்கலை பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர்; போராடிய பா.ஜ.க; நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், மினி டைடல் பார்க் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடியாத நிலையில் அவசரகதியில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பத்மநாபபுரம் நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பணி முடிக்கப்படாத பேருந்து நிலையத்துக்குள் சென்று கண்ணில் கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு முன்னதாகப் பேருந்து நிலையத்துக்குள் நுழைய முயன்ற நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்களைப் போலீஸார் தடுக்க முயன்றனர். நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கவுன்சிலர்களைப் போகக்கூடாது எனச் சொல்ல போலீஸாருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி உன்னிகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருடன் வாக்குவாதம் இதுபற்றி உன்னிகிருஷ்ணன் கூறுகையில், தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையடையாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. பேருந்து நிலைய தரைத்தளத்தின் கான்கிரீட் பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. போதிய கால அவகாசம் இன்றி பேருந்துகளை இயக்கினால், தரைதளம் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவறை வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை. அதற்குள் எதற்காக அவசரப்பட்டுத் திறக்க வேண்டும்? பணி முடிந்த பிறகு முதல்வர் காணொலிக்காட்சி மூலமாவது திறந்து வைத்திருக்கலாம். பணிமுடியாத தக்கலை பேருந்து நிலையம் இந்தத் திட்டம் சுமார் 6.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்கான முழு நிதியையும் அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித் தொகையை நகராட்சி நிதியிலிருந்து செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் காமராஜரின் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. பணிகளை இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக முடிக்காமல் இருந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்தகட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்டு தி.மு.க-வைச் சேர்ந்த பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபனிடம் பேசினோம், பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்கப்பட்டு ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் 10 நாட்கள் கடந்தால் பேருந்துகள் இயக்கலாம். மீதமுள்ள இடத்தில் பக்கச்சுவரை அகற்றி ஃபேவர் பிளாக் போட உள்ளோம். முதல்வர் வந்ததால் வாய்ப்பைப் பயன்படுத்தித் திறந்துள்ளோம். பா.ஜ.க-வினர் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள் என்றார்.
SP Lakshmanan Interview | DMK-வில் ஓபிஎஸ், எல்லாமே எடப்பாடி செய்த தவறு | Vikatan
விஜய்: 'நடிகையுடன் திருமணம் மீறிய உறவு; பெயரை சொல்லும் உரிமை உண்டு, ஆனா.!' - சங்கீதா மனுவின் விவரம்
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 'கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார். விஜய் அதற்கு எதிர்ப்போ ஆமோதிப்போ தெரிவிக்கவே இல்லை. என்னை மனரீதியாக புண்படுத்தி வீட்டிலேயே தனிமைப்படுத்தினார். இந்த விவகாரத்தை கவுன்சலிங் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பினேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பதை ஒத்திவைத்தேன். விஜய்யின் அந்த திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்தது எங்களின் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை குலைத்தது. செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கவுன்சலிங் மூலமாக இந்த விவகாரத்தை பேசி தீர்வு காண நினைத்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கு அனைத்து தரப்பினருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு இப்போது வரை நடிகையின் பெயரை வெளியில் கூறவில்லை. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியோடு அவரின் பெயரையும் மனுவில் சேர்க்கும் உரிமை உண்டு. விஜய் - சங்கீதா எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன். இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் திருமண பந்தம் தொடர்கிறது. மீண்டும் இணைய முடியாத அளவுக்கு எங்களின் பந்தம் உடைந்துவிட்டது. பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கவுன்சலிங் மூலம் சுமுகமான தீர்வை எட்ட முயன்றேன். ஆனால், விஜய் தீர்வை எட்ட முயற்சிக்காமல் அவரின் மனைவி என்ற முறையில் நான் அனுபவித்து வரும் பொருளாதார அம்சங்களின் மீது கட்டுப்பாடை விதிக்க ஆரம்பித்தார். கடைசியாக 9.11.2025 அன்று கூட பரஸ்பர ஒப்புதலோடு இந்த பந்தத்திலிருந்து விலகவும் அதற்கான உரிமை விவகாரங்கள் சார்ந்து பேசவும் முற்பட்டேன். பொதுவெளியில் அவருக்கு இருக்கும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என நினைத்தேன். ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாமல் போகவே விஜய்தான் என்னை நீதிமன்றம் நோக்கி தள்ளியுள்ளார். மன உளைச்சலையும் அவமதிப்பையும் கொடுக்கும் இந்த திருமண பந்தத்தில் இனியும் தொடர முடியாது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய்: 'நடிகையுடன் திருமணம் மீறிய உறவு; பெயரை சொல்லும் உரிமை உண்டு, ஆனா.!' - சங்கீதா மனுவின் விவரம்
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 'கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார். விஜய் அதற்கு எதிர்ப்போ ஆமோதிப்போ தெரிவிக்கவே இல்லை. என்னை மனரீதியாக புண்படுத்தி வீட்டிலேயே தனிமைப்படுத்தினார். இந்த விவகாரத்தை கவுன்சலிங் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பினேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பதை ஒத்திவைத்தேன். விஜய்யின் அந்த திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்தது எங்களின் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை குலைத்தது. செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கவுன்சலிங் மூலமாக இந்த விவகாரத்தை பேசி தீர்வு காண நினைத்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கு அனைத்து தரப்பினருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு இப்போது வரை நடிகையின் பெயரை வெளியில் கூறவில்லை. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியோடு அவரின் பெயரையும் மனுவில் சேர்க்கும் உரிமை உண்டு. விஜய் - சங்கீதா எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன். இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் திருமண பந்தம் தொடர்கிறது. மீண்டும் இணைய முடியாத அளவுக்கு எங்களின் பந்தம் உடைந்துவிட்டது. பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கவுன்சலிங் மூலம் சுமுகமான தீர்வை எட்ட முயன்றேன். ஆனால், விஜய் தீர்வை எட்ட முயற்சிக்காமல் அவரின் மனைவி என்ற முறையில் நான் அனுபவித்து வரும் பொருளாதார அம்சங்களின் மீது கட்டுப்பாடை விதிக்க ஆரம்பித்தார். கடைசியாக 9.11.2025 அன்று கூட பரஸ்பர ஒப்புதலோடு இந்த பந்தத்திலிருந்து விலகவும் அதற்கான உரிமை விவகாரங்கள் சார்ந்து பேசவும் முற்பட்டேன். பொதுவெளியில் அவருக்கு இருக்கும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என நினைத்தேன். ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாமல் போகவே விஜய்தான் என்னை நீதிமன்றம் நோக்கி தள்ளியுள்ளார். மன உளைச்சலையும் அவமதிப்பையும் கொடுக்கும் இந்த திருமண பந்தத்தில் இனியும் தொடர முடியாது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்...' - விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். TVK Vijay - தவெக விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading…
Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்...' - விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். TVK Vijay - தவெக விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading…
பாஜக-விற்கு இது தார்மீக மரண தண்டனை- அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை குறித்து அகிலேஷ் யாதவ்
மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆகியிருக்கிறார். மேலும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதா உள்ளிட்ட 23 பேரும் ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். இன்று நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. உண்மை வென்றது! என உடைந்து அழுது பேசியிருந்தார். மோடி - அமித்ஷா இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார். உண்மையும், நீதியும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக நின்றிருக்கிறது. பாஜகவிற்கு இது தார்மீக மரணதண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு நாட்டின் எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களைச் சுட்டிக்காட்டி கொடுப்பதைத் தொழிலாகக்கொண்டு இருந்தவர்கள் தான் இந்த பாஜக சிந்தாத்ந்தவாதிகள் என்று விமர்சித்திருக்கிறார்.
பாஜக-விற்கு இது தார்மீக மரண தண்டனை- அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை குறித்து அகிலேஷ் யாதவ்
மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆகியிருக்கிறார். மேலும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதா உள்ளிட்ட 23 பேரும் ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். இன்று நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. உண்மை வென்றது! என உடைந்து அழுது பேசியிருந்தார். மோடி - அமித்ஷா இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார். உண்மையும், நீதியும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக நின்றிருக்கிறது. பாஜகவிற்கு இது தார்மீக மரணதண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு நாட்டின் எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களைச் சுட்டிக்காட்டி கொடுப்பதைத் தொழிலாகக்கொண்டு இருந்தவர்கள் தான் இந்த பாஜக சிந்தாத்ந்தவாதிகள் என்று விமர்சித்திருக்கிறார்.
`அழுகை; சிரிப்பு.!'சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்
இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவி கே. கவிதா உள்ளிட்ட 23 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. Aravind Kejriwal வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை! 2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன. டெல்லி அரசு எந்த ஒரு கொள்கை முடிவை எடுத்தாலும் அதற்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி ஆம் ஆத்மி கொண்டு வந்திருந்த மதுபான கொள்கைக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருந்தார். ஆனால் அவர் இந்த விவகாரத்தில் எங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யும் படலத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்தது. இந்த வழக்கின் அடிப்படையில்: பிப்ரவரி 2023: மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மார்ச் 2024: டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அவரது இல்லத்திலேயே வைத்து கைது செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதே விவகாரத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பஞ்சாப் உத்தர பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருந்தனர் கவிதா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும், சிபிஐ-க்கு கண்டனமும் இந்த விவகாரத்தில் விசாரணையானது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்: ஆதாரமின்மை : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நேரடி பணப் பரிமாற்றமோ அல்லது சதித் திட்டமோ நிரூபிக்கப்படவில்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாகக் கருத முடியாது. சிபிஐ-க்கு கண்டனம்: விசாரணை அமைப்பான சிபிஐ, வழக்கில் உள்ள ஓட்டைகளை மறைக்க 'அப்ரூவர்' மட்டுமே நம்பியிருந்தது கவலையளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று நீதிபதி கடுமையாகச் சாடினார். விடுதலை: போதிய முகாந்திரம் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரையும் நீதிமன்றம் 'டிஸ்சார்ஜ்' செய்து உத்தரவிட்டது. நடவடிக்கை : இந்த விவகாரத்தில் சிபிஐயின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட கெஜ்ரிவால் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட 'ஊழல்வாதி' என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் வடித்தார். இக்காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஊழல்வாதி அல்ல பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். ``இரண்டு ஆண்டுகளாக என்னையும் எனது குடும்பத்தையும் சிதைக்கப் பார்த்தார்கள். நான் ஒரு ஊழல்வாதி என்று நாட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதிமன்றம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. எனது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி இது. சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன, உண்மை வெளிவந்தது. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கான வெற்றி என உணர்ச்சி பெருக்குடன் பேசினார் தொடர்ந்து பேச முடியாமல் அவர் வெடித்து அழுதார், பழிவாங்கும் அரசியலுக்குப் பலியாகி நான் சிறையில் இருந்தபோது, டெல்லி மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையே என்னை இன்று விடுவித்துள்ளது, என்றார். கெஜ்ரிவால் மனைவி சுனிதா சுனிதா கெஜ்ரிவாலின் உருக்கமான பதிவு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், சத்தியமே வெல்லும் (Satyamev Jayate). இந்த உலகில் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், சிவ சக்திக்கு மேல் யாரும் கிடையாது, என்று பதிவிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் கொண்டாட்டங்கள் தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கினர்.டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, நமது சிங்கம் மீண்டும் வந்துவிட்டது என்ற முழக்கங்கள் கேட்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் கிளைகளில் இனிப்புகள் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின. அரசியல் முக்கியத்துவம் இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய புத்துயிரைத் தந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டது கெஜ்ரிவாலுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீதான 'ஊழல்' கறை நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உண்மை ஒருபோதும் தோற்காது என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.! Loading…
`அழுகை; சிரிப்பு.!'சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்
இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவி கே. கவிதா உள்ளிட்ட 23 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. Aravind Kejriwal வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை! 2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன. டெல்லி அரசு எந்த ஒரு கொள்கை முடிவை எடுத்தாலும் அதற்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி ஆம் ஆத்மி கொண்டு வந்திருந்த மதுபான கொள்கைக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருந்தார். ஆனால் அவர் இந்த விவகாரத்தில் எங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யும் படலத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்தது. இந்த வழக்கின் அடிப்படையில்: பிப்ரவரி 2023: மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மார்ச் 2024: டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அவரது இல்லத்திலேயே வைத்து கைது செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதே விவகாரத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பஞ்சாப் உத்தர பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருந்தனர் கவிதா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும், சிபிஐ-க்கு கண்டனமும் இந்த விவகாரத்தில் விசாரணையானது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்: ஆதாரமின்மை : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நேரடி பணப் பரிமாற்றமோ அல்லது சதித் திட்டமோ நிரூபிக்கப்படவில்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாகக் கருத முடியாது. சிபிஐ-க்கு கண்டனம்: விசாரணை அமைப்பான சிபிஐ, வழக்கில் உள்ள ஓட்டைகளை மறைக்க 'அப்ரூவர்' மட்டுமே நம்பியிருந்தது கவலையளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று நீதிபதி கடுமையாகச் சாடினார். விடுதலை: போதிய முகாந்திரம் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரையும் நீதிமன்றம் 'டிஸ்சார்ஜ்' செய்து உத்தரவிட்டது. நடவடிக்கை : இந்த விவகாரத்தில் சிபிஐயின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட கெஜ்ரிவால் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட 'ஊழல்வாதி' என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் வடித்தார். இக்காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஊழல்வாதி அல்ல பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். ``இரண்டு ஆண்டுகளாக என்னையும் எனது குடும்பத்தையும் சிதைக்கப் பார்த்தார்கள். நான் ஒரு ஊழல்வாதி என்று நாட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதிமன்றம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. எனது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி இது. சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன, உண்மை வெளிவந்தது. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கான வெற்றி என உணர்ச்சி பெருக்குடன் பேசினார் தொடர்ந்து பேச முடியாமல் அவர் வெடித்து அழுதார், பழிவாங்கும் அரசியலுக்குப் பலியாகி நான் சிறையில் இருந்தபோது, டெல்லி மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையே என்னை இன்று விடுவித்துள்ளது, என்றார். கெஜ்ரிவால் மனைவி சுனிதா சுனிதா கெஜ்ரிவாலின் உருக்கமான பதிவு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், சத்தியமே வெல்லும் (Satyamev Jayate). இந்த உலகில் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், சிவ சக்திக்கு மேல் யாரும் கிடையாது, என்று பதிவிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் கொண்டாட்டங்கள் தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கினர்.டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, நமது சிங்கம் மீண்டும் வந்துவிட்டது என்ற முழக்கங்கள் கேட்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் கிளைகளில் இனிப்புகள் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின. அரசியல் முக்கியத்துவம் இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய புத்துயிரைத் தந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டது கெஜ்ரிவாலுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீதான 'ஊழல்' கறை நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உண்மை ஒருபோதும் தோற்காது என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.! Loading…
காங்கிரஸ் : கூட்டணி மாற்றமா? தலைமை மாற்றமா? - டெல்லியில் நடந்த பரபரப்பு ஆலோசனை!
காங்கிரஸ் கட்சி, யாருடன் கூட்டணி வைப்பது என்கிற குழப்பத்திற்கு தீர்வு காண, டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர்ந்தால் தமிழக நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கூட்டணி மாற்றம் என்றால் தலைமையிலும் மாற்றம் இருக்கும் என்கிற தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காத்துள்ளது. இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குவார் என்று நேற்று காங்கிரஸ் கட்சி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இன்று காலையிலிருந்து கிரிஷ் ஜோடாங்கர் வருவது குறித்து எந்த தகவலும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இல்லை. இந்நி்லையில் 28-ம் தேதி சனிக்கிழமை அன்று தி.மு.க -வுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் என்று தகவல் வெளியானது. செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் ஆனால் இந்த தகவலையும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளும் அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை. மற்றொரு புறம் காங்கிரஸ் தரப்பு த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் சொல்லபட்டது. இப்படி பல்வேறு செய்திகள் காங்கிரஸ் சுற்றி எழுந்துவரும் நிலையில்,டெல்லியில் இன்று காலை முக்கிய ஆலோசனை ஒன்று நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தற்போது கேரளாவில் உள்ளார்கள். இவர்கள் இருவரும் இன்று காலை டெல்லி சென்றுள்ளார்கள். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் இவர்கள் ஆலோசனை செய்துள்ளார்கள். ‘கேம் சேஞ்சர்’ சோனியா... ‘கப்சிப்’ காங்கிரஸ்! தி.மு.க-வுடன் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தலாம். அதில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தராவிட்டால், கூட்டணியில் அடுத்த ஆப்சனை நோக்கி நாம் நகரலாம் என்று முடிவெடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள செல்வபெருந்தகை தி.மு.க -வுடன் கூட்டணி வைப்பதில் தீவிரமாக உள்ளார். த.வெ.கவுடன் கூட்டணி வைப்பதை இவர் ஆதரிக்கவில்லை. மற்றொருபுறம் தி.மு.க கூட்டணி வேண்டாம், த.வெ.கவுடன் பயணிக்கலாம் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஸ்குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தி.மு.க கூட்டணி தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் வரும் என்கிற தகவல் டெல்லியிலிருந்து வெளியாகியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி த.வெ.கவுடன் கூட்டணி பேசும் முன்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் ராஜேஷ்குமாரை உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேணுகோபால் உள்ளிட்டவர்கள் திட்டமிடுகிறார்கள் என்ற தகவலும் பரபரக்கிறது. கடைசி கட்டமாக எப்படியும் தி.மு.க கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியை கொண்டுவந்துவிட வேண்டும் என்று செல்வபெருந்தகை உள்ளிட்டவர்கள் தீவிரமாக உள்ளார். இதனால் கூட்டணியில் மாற்றம் வருமா,? வந்தால், காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வருமா? என்கிற கேள்விக்கு இரண்டு நாட்களுக்குள் முடிவு வந்துவிடும் என்றே தெரிகிறது. ! Loading…
மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்! - மன வருத்தத்தில் தங்க தமிழ்ச்செல்வன்? | தேனிக்குள் கடாமுடா
திமுகவில் ஓ.பி.எஸ்! அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வர், ஒரு முறை துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. பின் அனைவரும் கலந்து பேசி இருவரையும் ஒரே அணிக்குக் கொண்டு வந்து ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் போன பின் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட மன மாச்சர்யங்களால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவரை கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. தி.மு.க - ஓ.பி.எஸ் அதிமுக-வை மீட்கப் போராடுவேன் என்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார் ஓ.பி.எஸ். இந்த சூழலில் அவருடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அவருடன் இருந்த கடைசி ஆதரவாளரான உசிலம்பட்டி அய்யப்பன் முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் திமுகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் கசிந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன்? ஓ.பி.எஸ் திமுகவுக்குக் கூடுதல் பலமாகக் கருதுகிறது திமுக தலைமை. கூடுதலாக, அவரது வருகையால் தேவர் சமுதாய வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகளவில் வந்து சேரும் என்று கணக்குப் போடுகிறது திமுக. திமுக தலைமையின் எண்ணம் இப்படியிருக்க, ஓ.பி.எஸ் பகுதியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடும் வருத்தத்தில் இருப்பதாக கிசு கிசுகிறார்கள் தேனி மாவட்ட உடன் பிறப்புகள். இந்த விவகாரம் குறித்து லோக்கல் உடன் பிறப்புகள் சிலரிடம் பேசினோம். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன்பாக அமமுக-வில் இருக்கும்போது 'ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம் உண்மையான போராட்டம் அல்ல, அரசியல் நாடகம் மட்டுமே. ஓ.பி.எஸ் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகக் கட்சியைப் பயன்படுத்தினார்' என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன் இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் மறைவில் அவரது அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைந்தவர் ஓ.பி.எஸ் என்று கடுமையாகச் சாடியிருந்தார். காரணம் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்த சமயத்தில் அவரை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பி.எஸ். அந்த கடுப்பில் தான் அதிமுகவிலிருந்து அமமுக, அடுத்ததாக திமுக என்று கட்சி மாறி வந்தார். யாரை எதிர்த்து இதுவரை அரசியல் செய்துகொண்டிருந்தாரோ, இப்போது அவரே திமுகவுக்கு வந்திருப்பது தங்க தமிழ்செல்வனுக்குத் தலைவலியாக மாறும் என்கிறார்கள். காரணம், ஏற்கனவே தேனி மாவட்ட திமுகவில் அவருக்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இப்போதும் நீடிக்கிறது. சமீபத்தில் ஆண்டிபட்டி எம்.எம்.ஏ மகாராஜனும், தங்க தமிழ்ச்செல்வனும் மேடையிலேயே ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட சம்பவங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். மேடையிலேயே இந்த நிலை என்றால் திரைமறைவில் நடப்பதையெல்லாம் தனியாகச் சொல்லவேண்டிய தேவையில்லை. ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமில்லாத சூழலில் தத்தளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கு ஓர் பெரிய பவர் செண்டர் அவர் பகுதியிலிருந்து கட்சிக்குள் புதிதாக வந்திருப்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை. ஓ.பி.எஸ்-யை தாண்டி அவரது இரண்டு மகன்களின் தலையீட்டையும் கூடுதலாகச் சமாளிக்கவேண்டிய நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்-காக இருவரும் ஒன்றாக இணைந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஓ.பி.எஸ் வெவ்வேறு துருவங்களாக இருந்த இவர்கள் ஒரே கோட்டில் இணைந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அந்த இணக்கம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பதும், அவருக்கும் அவரது மகன் உட்பட ஆதரவாளர்களுக்குப் பதவி, சீட் வழங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவது ஓ.பி.எஸ்-க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பது தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் மன உளைச்சலையே கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பல கடமுடா காட்சிகளைத் தேனிக்குள் பார்க்கலாம் என்றார்கள் விரிவாக. Loading…
மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்! - மன வருத்தத்தில் தங்க தமிழ்ச்செல்வன்? | தேனிக்குள் கடாமுடா
திமுகவில் ஓ.பி.எஸ்! அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வர், ஒரு முறை துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. பின் அனைவரும் கலந்து பேசி இருவரையும் ஒரே அணிக்குக் கொண்டு வந்து ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் போன பின் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட மன மாச்சர்யங்களால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவரை கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. தி.மு.க - ஓ.பி.எஸ் அதிமுக-வை மீட்கப் போராடுவேன் என்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார் ஓ.பி.எஸ். இந்த சூழலில் அவருடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அவருடன் இருந்த கடைசி ஆதரவாளரான உசிலம்பட்டி அய்யப்பன் முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் திமுகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் கசிந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன்? ஓ.பி.எஸ் திமுகவுக்குக் கூடுதல் பலமாகக் கருதுகிறது திமுக தலைமை. கூடுதலாக, அவரது வருகையால் தேவர் சமுதாய வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகளவில் வந்து சேரும் என்று கணக்குப் போடுகிறது திமுக. திமுக தலைமையின் எண்ணம் இப்படியிருக்க, ஓ.பி.எஸ் பகுதியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடும் வருத்தத்தில் இருப்பதாக கிசு கிசுகிறார்கள் தேனி மாவட்ட உடன் பிறப்புகள். இந்த விவகாரம் குறித்து லோக்கல் உடன் பிறப்புகள் சிலரிடம் பேசினோம். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன்பாக அமமுக-வில் இருக்கும்போது 'ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம் உண்மையான போராட்டம் அல்ல, அரசியல் நாடகம் மட்டுமே. ஓ.பி.எஸ் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகக் கட்சியைப் பயன்படுத்தினார்' என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வருத்தத்தில் தங்க தமிழ்செல்வன் இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் மறைவில் அவரது அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைந்தவர் ஓ.பி.எஸ் என்று கடுமையாகச் சாடியிருந்தார். காரணம் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்த சமயத்தில் அவரை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பி.எஸ். அந்த கடுப்பில் தான் அதிமுகவிலிருந்து அமமுக, அடுத்ததாக திமுக என்று கட்சி மாறி வந்தார். யாரை எதிர்த்து இதுவரை அரசியல் செய்துகொண்டிருந்தாரோ, இப்போது அவரே திமுகவுக்கு வந்திருப்பது தங்க தமிழ்செல்வனுக்குத் தலைவலியாக மாறும் என்கிறார்கள். காரணம், ஏற்கனவே தேனி மாவட்ட திமுகவில் அவருக்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் இப்போதும் நீடிக்கிறது. சமீபத்தில் ஆண்டிபட்டி எம்.எம்.ஏ மகாராஜனும், தங்க தமிழ்ச்செல்வனும் மேடையிலேயே ஒருமையில் பேசி சண்டை போட்டுக்கொண்ட சம்பவங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். மேடையிலேயே இந்த நிலை என்றால் திரைமறைவில் நடப்பதையெல்லாம் தனியாகச் சொல்லவேண்டிய தேவையில்லை. ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமில்லாத சூழலில் தத்தளிக்கும் தமிழ்ச்செல்வனுக்கு ஓர் பெரிய பவர் செண்டர் அவர் பகுதியிலிருந்து கட்சிக்குள் புதிதாக வந்திருப்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை. ஓ.பி.எஸ்-யை தாண்டி அவரது இரண்டு மகன்களின் தலையீட்டையும் கூடுதலாகச் சமாளிக்கவேண்டிய நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ்-காக இருவரும் ஒன்றாக இணைந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஓ.பி.எஸ் வெவ்வேறு துருவங்களாக இருந்த இவர்கள் ஒரே கோட்டில் இணைந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அந்த இணக்கம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. அதிமுகவிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பதும், அவருக்கும் அவரது மகன் உட்பட ஆதரவாளர்களுக்குப் பதவி, சீட் வழங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவது ஓ.பி.எஸ்-க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்திருப்பது தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் மன உளைச்சலையே கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பல கடமுடா காட்சிகளைத் தேனிக்குள் பார்க்கலாம் என்றார்கள் விரிவாக. Loading…
'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!
தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம். தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது தேர்தல் ஆணையம். தி.மு.க தரப்பில் பங்கேற்ற ஆர்.எஸ் பாரதி, தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை ஓரே கட்டமாக ஏப்ரல் மாதத்துக்குள் நடத்திமுடிக்க வேண்டும் என கோரினார். வி.சி.க தரப்பில் பேசிய ரவிக்குமார், பிரசாரத்துக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இறுதியாக பேசிய சீமான், தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து ஓரிரு மாதங்கள் வாக்குப் பெட்டியை பூட்டி பாதுகாக்கிறோம் என்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள் என வலியுறுத்தியுள்ளார். சீமான் நா.த.க-வின் பிரசாரம் குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம், ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து, வாக்கு இயந்திரம் இருக்கும் அறையை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அது மட்டும் இன்றி, மாநாடுக்கு கூடிய கூட்டத்தை பார்த்த அண்ணன் சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்திவிட வேண்டும் என விரும்புகிறார். அதற்கு 40 நாட்கள் தேவைப்படுகிறது. அதையும் மனதில் வைத்தே கடைசி கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் என்றனர். Loading… நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!
தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம். தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது தேர்தல் ஆணையம். தி.மு.க தரப்பில் பங்கேற்ற ஆர்.எஸ் பாரதி, தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை ஓரே கட்டமாக ஏப்ரல் மாதத்துக்குள் நடத்திமுடிக்க வேண்டும் என கோரினார். வி.சி.க தரப்பில் பேசிய ரவிக்குமார், பிரசாரத்துக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இறுதியாக பேசிய சீமான், தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து ஓரிரு மாதங்கள் வாக்குப் பெட்டியை பூட்டி பாதுகாக்கிறோம் என்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள் என வலியுறுத்தியுள்ளார். சீமான் நா.த.க-வின் பிரசாரம் குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம், ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து, வாக்கு இயந்திரம் இருக்கும் அறையை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அது மட்டும் இன்றி, மாநாடுக்கு கூடிய கூட்டத்தை பார்த்த அண்ணன் சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்திவிட வேண்டும் என விரும்புகிறார். அதற்கு 40 நாட்கள் தேவைப்படுகிறது. அதையும் மனதில் வைத்தே கடைசி கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் என்றனர். Loading… நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' - தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!
அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். 'இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!' என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்சம் சங்கடத்துடன் தான் காணப்பட்டனர். OPS - Stalin 'இப்படி பண்ணிட்டானே அந்த படுபாவி எடப்பாடி. நேத்து வரைக்கும் கூட அண்ணன் காத்திருந்தாரே. ஒரு போன் ராயப்பேட்டையில இருந்து வந்திருந்தா கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாரே. அவரும் என்ன பண்ணுவாரு பாவம். எல்லாவனும் ஒதுக்குறான். எவ்வளவோ இறங்கி போயும் மரியாதை இல்லன்னா, மரியாதை எங்க கிடைக்குதோ அங்க போயித்தானே ஆகணும். ஆனாலும், அறிவாலயம் உள்ள கால் வச்ச உடனே கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு. கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்குது' என நம்மிடம் புலம்பினார் ஓ.பி.எஸ் உடன் அறிவாலயம் வந்திருந்த கரைவேட்டி ஒருவர். ஜெயலலிதா படம் பொறித்திருந்த சங்கிலி அணிந்த ஒரு வயதான அம்மாவைதான் மீடியாவின் கேமராக்கள் அத்தனையும் சுற்றி வந்தன. ஓ.பி.எஸ் இன் ஆதரவாளரான அவர் கண்ணீர் மல்க நெஞ்சில் அடித்துக் கொண்டு ஏரியா அதிமுகக்காரர்கள் பலருக்கும் அழைத்து புலம்பிக் கொண்டிருந்தார். 'அண்ணன் மனசு எங்க போகுதோ. அங்க நாமளும் போயிடுவோம். ஆனால், அறிவாலயத்துக்குள்ள கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர் வந்திடுச்சு. மனசு பாரமா இருக்கு' என புலம்பி தவித்தார். அழுது உருண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர் இன்னும் சில ஆதரவாளர்கள் அறிவாலயத்தின் நிர்வாகிகளை பிடித்து தொலைபேசி எண்ணை பரிமாறி முகத்தை பதிய வைக்கும் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஓ.பி.எஸ்க்கும் அறிவாலயம் வருவதில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் தரப்பு, முக்கிய அமைச்சர்களின் படையோடு அவருக்கு வரவேற்பு கொடுத்தார். எ.வ.வேலு, கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு என முக்கிய அமைச்சர்களெல்லாம் அறிவாலயத்தின் வாசலில் ஆஜராகியிருந்தனர். அதிமுகவினரை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை ஏற்றிருக்கும் சேகர் பாபு ஓ.பி.எஸ் உடனே காரில் வந்தார். ஓ.பி.எஸ் இன் தேனியிலிருந்து தங்கத்தமிழ்செல்வனும் வரவைக்கப்பட்டிருந்தார். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் போது தங்கத்தமிழ்செல்வனும் சேகர்பாபும்தான் உடனிருந்து பார்த்துக் கொண்டனர். ஓ.பி.எஸ் ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தாலும் அவரின் ஆதரவாளர்கள் பலரும் சட்டைப் பையில் ஜெ.வின் படத்தோடுதான் சுற்றி வருகின்றனர். அதேமாதிரி, ஓ.பி.எஸ் அறிவாலயத்திலிருந்து கிளம்புகையிலும் அவரின் காரில் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது. ஓ.பி.எஸ் ஓ.பி.எஸ் 'கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் முதல்வர் அரவணச்சதுல அண்ணன் ஹாப்பிதான்' என்கின்றனர் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்! Loading…
'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' - தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!
அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். 'இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!' என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்சம் சங்கடத்துடன் தான் காணப்பட்டனர். OPS - Stalin 'இப்படி பண்ணிட்டானே அந்த படுபாவி எடப்பாடி. நேத்து வரைக்கும் கூட அண்ணன் காத்திருந்தாரே. ஒரு போன் ராயப்பேட்டையில இருந்து வந்திருந்தா கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாரே. அவரும் என்ன பண்ணுவாரு பாவம். எல்லாவனும் ஒதுக்குறான். எவ்வளவோ இறங்கி போயும் மரியாதை இல்லன்னா, மரியாதை எங்க கிடைக்குதோ அங்க போயித்தானே ஆகணும். ஆனாலும், அறிவாலயம் உள்ள கால் வச்ச உடனே கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு. கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்குது' என நம்மிடம் புலம்பினார் ஓ.பி.எஸ் உடன் அறிவாலயம் வந்திருந்த கரைவேட்டி ஒருவர். ஜெயலலிதா படம் பொறித்திருந்த சங்கிலி அணிந்த ஒரு வயதான அம்மாவைதான் மீடியாவின் கேமராக்கள் அத்தனையும் சுற்றி வந்தன. ஓ.பி.எஸ் இன் ஆதரவாளரான அவர் கண்ணீர் மல்க நெஞ்சில் அடித்துக் கொண்டு ஏரியா அதிமுகக்காரர்கள் பலருக்கும் அழைத்து புலம்பிக் கொண்டிருந்தார். 'அண்ணன் மனசு எங்க போகுதோ. அங்க நாமளும் போயிடுவோம். ஆனால், அறிவாலயத்துக்குள்ள கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர் வந்திடுச்சு. மனசு பாரமா இருக்கு' என புலம்பி தவித்தார். அழுது உருண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர் இன்னும் சில ஆதரவாளர்கள் அறிவாலயத்தின் நிர்வாகிகளை பிடித்து தொலைபேசி எண்ணை பரிமாறி முகத்தை பதிய வைக்கும் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஓ.பி.எஸ்க்கும் அறிவாலயம் வருவதில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் தரப்பு, முக்கிய அமைச்சர்களின் படையோடு அவருக்கு வரவேற்பு கொடுத்தார். எ.வ.வேலு, கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு என முக்கிய அமைச்சர்களெல்லாம் அறிவாலயத்தின் வாசலில் ஆஜராகியிருந்தனர். அதிமுகவினரை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை ஏற்றிருக்கும் சேகர் பாபு ஓ.பி.எஸ் உடனே காரில் வந்தார். ஓ.பி.எஸ் இன் தேனியிலிருந்து தங்கத்தமிழ்செல்வனும் வரவைக்கப்பட்டிருந்தார். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் போது தங்கத்தமிழ்செல்வனும் சேகர்பாபும்தான் உடனிருந்து பார்த்துக் கொண்டனர். ஓ.பி.எஸ் ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தாலும் அவரின் ஆதரவாளர்கள் பலரும் சட்டைப் பையில் ஜெ.வின் படத்தோடுதான் சுற்றி வருகின்றனர். அதேமாதிரி, ஓ.பி.எஸ் அறிவாலயத்திலிருந்து கிளம்புகையிலும் அவரின் காரில் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது. ஓ.பி.எஸ் ஓ.பி.எஸ் 'கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் முதல்வர் அரவணச்சதுல அண்ணன் ஹாப்பிதான்' என்கின்றனர் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்! Loading…
`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!
சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர் பரக்கல பிரபாகர், நீதியரசர் ஹரிபரந்தாமனின் உரைகள் கவனம் பெற்றன. எஸ்.ஐ.ஆர், தொகுதி மறுசீரமைப்பு, மாநில சுயாட்சி விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசால் தென்னிந்திய மாநிலங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறும் விதமாக அகில இந்திய மக்கள் இயக்கம் தென்னிந்திய மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தது. அதில் உரையாற்றிய பொருளாதார நிபுணரும், அரசியல் ஆய்வாளருமான பரக்கல பிரபாகர், முதல்முறை இந்திய வரலாற்றில், மத்திய அமைச்சரவையில் தற்போதுதான் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக இல்லை. கிறிஸ்துவர் ஒருவர் எம்.பியாக இருக்கிறார். டிசம்பர் 25-ல் தேவலாயங்கள் தாக்கப்பட்டபோது, அவர் எங்கே போனார்? எனத் தெரியவில்லை. குஜராத்தில் மாநிலத்திலும் ஒரேயொரு எம்.எல.ஏ கூட இல்லை. உத்திரபிரதேசத்திலும் இதுதான் நிலை. கர்நாடகாவிலும் அப்படித்தான் நிலை. ஒரு எம்.எல்.ஏ இல்லை என்பது மட்டுமல்ல, ஒரே ஒருவர் கூட போட்டியிடவில்லை. இவர்கள் விடுக்கும் செய்தி என்ன? 'நாங்கள் எதற்கும் கவலைப்படவில்லை என்பது தான். நீங்கள் எங்கள் அரசியல் சமுகத்தின் பகுதியல்ல என்று சொல்கிறார்கள். நீங்கள் எங்கள் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டல், கூட வரலாம்' என்பதுதான் எஸ்.ஐ.ஆர் பூதம் தொகுதி மறுசீரமைப்பில் நாம் தமிழ்நாடு , கன்னடம் கேரளம், பாண்டிச்சேரி, தெலங்கானா ஆகியவை பற்றி கவலைப்பட வேண்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் தோராயமாக 130 தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் உத்திரபிரதேசத்தில் 80, பீகாரில் 40 என இரண்டு மாநில எண்ணிக்கையில் தென்னிந்தியாவை சுருக்குகிறார்கள், ஆக, தென்னிந்திய இடங்கள் இல்லாமலே ஆட்சிக்கு வரலாம்.. அதேபோல் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. குடிமக்களைக் கொல்ல முடியாவிட்டால், குடியுரிமையை கொல்… என்பதுதான் இந்தியாவில் நடக்கிறது… மீளாய்வு என்கிற பெயரில் வாக்குரிமை பறித்து அதன்வழியாக குடியுரிமை பறிக்கப் பார்க்கிறார்கள். நாம் ஒரு பகுதியில் வாழ்கிறோம். ஒருவருக்கும் ஓட்டு இல்லை. ஏதாவது ஒரு அரசியல் தலைவர் வாக்குரிமை இல்லாத பகுதிக்கு சென்று வாக்கு கேட்பாரா? அவர்களுக்கு வாக்கு இல்லை என்றால் குடிநீர் கிடைக்குமா? ரேசன் அட்டை கிடைக்குமா? கேரளாவில் 24 இலட்சம் பேரும் தமிழ்நாட்டில் 74 இலட்சம் பேரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் நீக்கபப்ட்டவர்கள் யார்? வாக்குரிமை பறிப்புமூலம் நடக்கும் ரத்தமில்லாத படுகொலை அன்றி வேறில்லை என்றார். ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அந்நிகழ்வில் பேசிய நீதிபதி அரிபரந்தாமன், பிரபாகர் பேசும்போது முஸ்லிம் சமூகத்தில் இருந்து எம்பிக்கள், அமைச்சர்கள் இல்லை என்றார்…பிஜேபியில் மட்டுமல்ல, மொத்த்தில் எத்தனை முஸ்லிம் எம்.பி இருக்கிறார்கள்? 24 பேர் அதாவது 14% முஸ்லிம் மக்கள் தொகையில் 543 பேருக்கு 73 பேர் இருக்க வேண்டும். ஆனால், 1952-ல் இருந்தே போதிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை… இப்போது இன்னும் மோசமாக இருக்கிறது.. 1950 இல் காங்கிரஸ் தான் நிரந்தரமாக ஆளுவோம் என்று நினைத்துக் கொண்டது. ஊபா, போடா, என்.ஐ.ஏ. எல்லாம் காங்கிரஸ் கொண்டு வந்தது தான்.. என்.ஐ.ஏ. கேரளாவில், தமிழ்நாட்டில் நுழைந்து யாரையும் கைது செய்யலாம் என்றார். இந்நிகழ்வில், அமைச்சர் மனோ தங்கராஜ், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அஷோக் வர்த்தன் ஷெட்டி உள்ளிட்டோரும் தென்னிந்திய மாநாட்டில் பங்கேற்று எஸ்.ஐ.ஆர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தென்னிந்தியா பாதிப்படைவது குறித்து பேசினர்.
ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?
அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! இந்த இணைவுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவின் மூலம் தி.மு.க தாய்க் கழகம். அதில் இணைவதில் எந்தக் கொள்கை முரணும் இல்லை என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்-க்கு முக்கியப் பங்கு இருக்கும் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறார். ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போதுகூட, தாய்க் கழகம் என்றும், தலைமையின் ஆலோசனைக்கு கட்டுப்படுவேன் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார் என்றும் திமுக தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பன்னீர் செல்வம் - ஸ்டாலின் இதன் பின்னணியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு போடி தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வின் பாரம்பர்ய வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்தினர் மிக முக்கியமானவர்கள். ஓ.பி.எஸ் தி.மு.க-விற்குச் வந்திருப்பதால் முக்குலத்தோர் வாக்கு சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். எனவே, ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அதிரடி மாற்றம் மூலம் யாருக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம் என்றக் கேள்வியுடன் மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டோம். எல்லாத்துக்கும் காரணம் இபிஎஸ்! அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா நீக்கப்பட்ட அன்றே அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஜெயலலிதா காலத்தில் 42 சதவீதமாக இருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி, தற்போது 23 சதவீதமாகக் குறைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையே காரணம். ஏனெனில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி பலவீனமடைந்தது. டெபாசிட் இழப்பு போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க வரலாற்றில் இல்லாதவை. அ.தி.மு.க வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும், சில இடங்களில் வாக்குகள் சிதறி, ஓ.பி.எஸ். போன்றோருக்கு 3.5 லட்சம் வாக்குகள் கிடைக்கும் நிலை உருவானது. அய்யநாதன் ஓ.பி.எஸ் செல்வாக்கு என்பது வெறும் 'முக்குலத்தோர்' என்ற சாதி வட்டத்திற்குள் அடங்குவது கிடையாது. ஜெயலலிதா இக்கட்டான சூழலில் சிறைக்குச் சென்றபோதெல்லாம், நம்பிக்கைக்குரியவராக இருந்து முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றித் தந்தவர் ஓ.பி.எஸ். இந்த விசுவாசம் மக்கள் மனதில் அவர் மீது ஒரு தனி மரியாதையை உருவாக்கியுள்ளது. திமுக-வுக்கு பலம்! தனிப்பட்ட முறையில் அவர் தனது தொகுதிக்கும், மக்களுக்கும் செய்துள்ள நற்பணிகள் இன்றும் பேசப்படுகின்றன. இதனால்தான், கடந்த தேர்தலில் 3.5 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த மக்கள் செல்வாக்கை எடப்பாடி சரியாகக் கையாளத் தவறியதே அ.தி.மு.க-வின் தற்போதைய பின்னடைவு. ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் எதிர்காலத் தூணாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனை இபிஎஸ் சரியாக நடத்தாததால், அவர் இன்று தி.மு.க-வின் தேனி எம்.பி-யாக இருக்கிறார். தற்போது ஓ.பி.எஸ்-ஸும் தி.மு.க-விற்குச் சென்றிருப்பது அந்தப் பகுதியில் தி.மு.க-வுக்கு பெரும் பலத்தை தந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதாகச் சொல்லப்படுவதும் பொய். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த அந்தப் பகுதியில், திராவிட உணர்வு அதிகம். பா.ஜ.க-வின் அண்ணாமலை அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் திமுக-வின் பலத்தையே காட்டுகின்றன. இரட்டைக் குழல் - ஒற்றைக்குழல் எடப்பாடி தன்னை மட்டுமே மையப்படுத்தி, கட்சியின் விதிகளை மாற்றி 'ஒற்றைத் தலைமை'யைக் கொண்டு வந்தது தொண்டர்களுக்குத் தெரியும். இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்த அ.தி.மு.க-வை உடைத்து, சிதைத்தது எடப்பாடிதான் என்பது தொண்டர்களின் எண்ணம். ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து 'திமுக-வின் பி டீம்' என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் முடிவு திமுக தான் என்றால் அவர் அப்போதே வந்திருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவுக்கு எடப்பாடிதான் காரணம். ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்! தி.மு.க-அ.தி.மு.க இடையே அரசியல் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர கொள்கை மாற்றம் அல்ல. இது திராவிட சக்திகளின் மறுசீரமைப்பு எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பழைய பா.ஜ.க உறுப்பினர்களை கூட இழுத்து, மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் கொள்கை ரீதியாக திராவிடச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், 2026 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸிற்கு போடி தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியின் மீதான மக்கள் செல்வாக்கே இத்தகைய பெரிய தலைவர்களை தி.மு.க நோக்கி ஈர்க்கிறது. என்றார். மறுபுறம் அதிமுக ஆதரவாளர்களோ, ``பன்னீர் ஒரு துரோகி என்று சொல்லி தான் வந்தோம். இப்போது அதனை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டார்கள். பன்னீர் எப்போதுமே கட்சிக்காக செயல்பட்டவர் கிடையாது. தனக்காக செயல்பட்டவர் தான் பன்னீர். கட்சிக்காக செயல்பட்டவராக இருந்திருந்தால், தலைமை அலுவலகத்தில் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா? தீய சக்தி திமுக எப்படி இப்போது தாய் கழகம் ஆனது? அவருக்கு ஆதாயம் வேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம். அவர் மூலம் அவர் சார்ந்த சமூகம் கூட பலன் அடைந்தது கிடையாது. அதனால், அவரின் திமுக சேர்க்கை, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். Loading… பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? - என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?
ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?
அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! இந்த இணைவுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவின் மூலம் தி.மு.க தாய்க் கழகம். அதில் இணைவதில் எந்தக் கொள்கை முரணும் இல்லை என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்-க்கு முக்கியப் பங்கு இருக்கும் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறார். ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போதுகூட, தாய்க் கழகம் என்றும், தலைமையின் ஆலோசனைக்கு கட்டுப்படுவேன் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார் என்றும் திமுக தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பன்னீர் செல்வம் - ஸ்டாலின் இதன் பின்னணியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு போடி தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வின் பாரம்பர்ய வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்தினர் மிக முக்கியமானவர்கள். ஓ.பி.எஸ் தி.மு.க-விற்குச் வந்திருப்பதால் முக்குலத்தோர் வாக்கு சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். எனவே, ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அதிரடி மாற்றம் மூலம் யாருக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம் என்றக் கேள்வியுடன் மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டோம். எல்லாத்துக்கும் காரணம் இபிஎஸ்! அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா நீக்கப்பட்ட அன்றே அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஜெயலலிதா காலத்தில் 42 சதவீதமாக இருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி, தற்போது 23 சதவீதமாகக் குறைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையே காரணம். ஏனெனில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி பலவீனமடைந்தது. டெபாசிட் இழப்பு போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க வரலாற்றில் இல்லாதவை. அ.தி.மு.க வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும், சில இடங்களில் வாக்குகள் சிதறி, ஓ.பி.எஸ். போன்றோருக்கு 3.5 லட்சம் வாக்குகள் கிடைக்கும் நிலை உருவானது. அய்யநாதன் ஓ.பி.எஸ் செல்வாக்கு என்பது வெறும் 'முக்குலத்தோர்' என்ற சாதி வட்டத்திற்குள் அடங்குவது கிடையாது. ஜெயலலிதா இக்கட்டான சூழலில் சிறைக்குச் சென்றபோதெல்லாம், நம்பிக்கைக்குரியவராக இருந்து முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றித் தந்தவர் ஓ.பி.எஸ். இந்த விசுவாசம் மக்கள் மனதில் அவர் மீது ஒரு தனி மரியாதையை உருவாக்கியுள்ளது. திமுக-வுக்கு பலம்! தனிப்பட்ட முறையில் அவர் தனது தொகுதிக்கும், மக்களுக்கும் செய்துள்ள நற்பணிகள் இன்றும் பேசப்படுகின்றன. இதனால்தான், கடந்த தேர்தலில் 3.5 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த மக்கள் செல்வாக்கை எடப்பாடி சரியாகக் கையாளத் தவறியதே அ.தி.மு.க-வின் தற்போதைய பின்னடைவு. ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் எதிர்காலத் தூணாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனை இபிஎஸ் சரியாக நடத்தாததால், அவர் இன்று தி.மு.க-வின் தேனி எம்.பி-யாக இருக்கிறார். தற்போது ஓ.பி.எஸ்-ஸும் தி.மு.க-விற்குச் சென்றிருப்பது அந்தப் பகுதியில் தி.மு.க-வுக்கு பெரும் பலத்தை தந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதாகச் சொல்லப்படுவதும் பொய். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த அந்தப் பகுதியில், திராவிட உணர்வு அதிகம். பா.ஜ.க-வின் அண்ணாமலை அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் திமுக-வின் பலத்தையே காட்டுகின்றன. இரட்டைக் குழல் - ஒற்றைக்குழல் எடப்பாடி தன்னை மட்டுமே மையப்படுத்தி, கட்சியின் விதிகளை மாற்றி 'ஒற்றைத் தலைமை'யைக் கொண்டு வந்தது தொண்டர்களுக்குத் தெரியும். இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்த அ.தி.மு.க-வை உடைத்து, சிதைத்தது எடப்பாடிதான் என்பது தொண்டர்களின் எண்ணம். ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து 'திமுக-வின் பி டீம்' என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் முடிவு திமுக தான் என்றால் அவர் அப்போதே வந்திருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவுக்கு எடப்பாடிதான் காரணம். ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்! தி.மு.க-அ.தி.மு.க இடையே அரசியல் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர கொள்கை மாற்றம் அல்ல. இது திராவிட சக்திகளின் மறுசீரமைப்பு எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பழைய பா.ஜ.க உறுப்பினர்களை கூட இழுத்து, மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் கொள்கை ரீதியாக திராவிடச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், 2026 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸிற்கு போடி தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியின் மீதான மக்கள் செல்வாக்கே இத்தகைய பெரிய தலைவர்களை தி.மு.க நோக்கி ஈர்க்கிறது. என்றார். மறுபுறம் அதிமுக ஆதரவாளர்களோ, ``பன்னீர் ஒரு துரோகி என்று சொல்லி தான் வந்தோம். இப்போது அதனை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டார்கள். பன்னீர் எப்போதுமே கட்சிக்காக செயல்பட்டவர் கிடையாது. தனக்காக செயல்பட்டவர் தான் பன்னீர். கட்சிக்காக செயல்பட்டவராக இருந்திருந்தால், தலைமை அலுவலகத்தில் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா? தீய சக்தி திமுக எப்படி இப்போது தாய் கழகம் ஆனது? அவருக்கு ஆதாயம் வேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம். அவர் மூலம் அவர் சார்ந்த சமூகம் கூட பலன் அடைந்தது கிடையாது. அதனால், அவரின் திமுக சேர்க்கை, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். Loading… பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? - என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?
தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா
அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று பதிவிட்டிருக்கிறார். Loading…
தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா
அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று பதிவிட்டிருக்கிறார். Loading…
உடைந்து அழுத கெஜ்ரிவால் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!
டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024ம் ஆண்டு செப்டம்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறி 2021-22ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது. மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ம் ஆண்டு டெல்லி தலைமை செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் ஆளுநர் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவர் 17 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஊழல் சதியில் முதன்மையானவர் அர்விந்த் கெஜ்ரிவால் என்று கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அவரும் 6 மாதம் சிறையில் இருந்தார். அதன் பிறகு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. அவர்கள் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. `அரசு தரப்பு தனது குற்றச்சாட்டுகளை நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. பெரிய சதி மற்றும் குற்றவியல் நோக்கம் பற்றிய கூற்றுக்கள் நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்று நீதிமன்றம் கூறியது. ``கெஜ்ரிவாலுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் வேண்டும் என்று கூறிய டெல்லி நீதிமன்றம், ``மத்திய சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்கான காரணத்தை ஆதாரங்கள் இல்லாமல் உறுதி செய்ய முடியாது என்றும் கூறியது. ``அரசுத் தரப்பு கூற்றுகள் ஆதாரங்களுடன் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், சி.பி.ஐ மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை குறித்து டெல்லி நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், கலால் கொள்கையை உருவாக்கும்போது பல நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனந்த கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்! கோர்ட் தீர்ப்பை கேட்டதும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்து அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறுகையில்,''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது. அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். எங்களுக்கு நீதி வழங்கிய நீதிபதிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். உண்மை வென்றது என்று கெஜ்ரிவால் கூறினார்.
உடைந்து அழுத கெஜ்ரிவால் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!
டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024ம் ஆண்டு செப்டம்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறி 2021-22ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது. மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ம் ஆண்டு டெல்லி தலைமை செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் ஆளுநர் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவர் 17 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஊழல் சதியில் முதன்மையானவர் அர்விந்த் கெஜ்ரிவால் என்று கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அவரும் 6 மாதம் சிறையில் இருந்தார். அதன் பிறகு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. அவர்கள் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. `அரசு தரப்பு தனது குற்றச்சாட்டுகளை நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. பெரிய சதி மற்றும் குற்றவியல் நோக்கம் பற்றிய கூற்றுக்கள் நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்று நீதிமன்றம் கூறியது. ``கெஜ்ரிவாலுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் வேண்டும் என்று கூறிய டெல்லி நீதிமன்றம், ``மத்திய சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்கான காரணத்தை ஆதாரங்கள் இல்லாமல் உறுதி செய்ய முடியாது என்றும் கூறியது. ``அரசுத் தரப்பு கூற்றுகள் ஆதாரங்களுடன் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், சி.பி.ஐ மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை குறித்து டெல்லி நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், கலால் கொள்கையை உருவாக்கும்போது பல நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனந்த கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்! கோர்ட் தீர்ப்பை கேட்டதும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்து அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறுகையில்,''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது. அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். எங்களுக்கு நீதி வழங்கிய நீதிபதிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். உண்மை வென்றது என்று கெஜ்ரிவால் கூறினார்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலையில் பாகிஸ்தான் ஆப்கானில் உள்ள காபூல் மற்றும் கந்தகார் மீது குண்டுகளை வீசித்தாக்கி இருப்பது மோதலை மேலும் அதிகரித்துள்ளது. அதோடு ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ''எங்களது பொறுமை எல்லையை தாண்டிவிட்டது. இப்போது ஆப்கானுக்கும் எங்களுக்கும் வெளிப்படையான போர்''என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 133 பேர் இறந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தங்களது தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது. கசாப் லில் ஹக் என்ற பெயரில் பாகிஸ்தான் இத்தாக்குதலை தொடங்கி இருக்கிறது. காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ``பாகிஸ்தான் தெற்கே காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது''என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு ஆப்கானிய அதிகாரி இது குறித்து கூறுகையில், ``பாகிஸ்தானில் இருந்து திரும்பிய மக்களுக்கான டோர்காம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஷெல்கள் முகாம்களை தாக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக எங்கள் அகதிகள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து எல்லையில் உள்ள முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆப்கானில் ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேசமயம் தாங்கள் பாகிஸ்தானின் 19 முகாம்களை அழித்து சில ராணுவ வீரர்களை உயிரோடு பிடித்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலையில் பாகிஸ்தான் ஆப்கானில் உள்ள காபூல் மற்றும் கந்தகார் மீது குண்டுகளை வீசித்தாக்கி இருப்பது மோதலை மேலும் அதிகரித்துள்ளது. அதோடு ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ''எங்களது பொறுமை எல்லையை தாண்டிவிட்டது. இப்போது ஆப்கானுக்கும் எங்களுக்கும் வெளிப்படையான போர்''என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 133 பேர் இறந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தங்களது தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது. கசாப் லில் ஹக் என்ற பெயரில் பாகிஸ்தான் இத்தாக்குதலை தொடங்கி இருக்கிறது. காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ``பாகிஸ்தான் தெற்கே காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது''என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு ஆப்கானிய அதிகாரி இது குறித்து கூறுகையில், ``பாகிஸ்தானில் இருந்து திரும்பிய மக்களுக்கான டோர்காம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஷெல்கள் முகாம்களை தாக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக எங்கள் அகதிகள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து எல்லையில் உள்ள முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆப்கானில் ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேசமயம் தாங்கள் பாகிஸ்தானின் 19 முகாம்களை அழித்து சில ராணுவ வீரர்களை உயிரோடு பிடித்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07
தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07 இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலைவர்களை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. தொலைக்காட்சி மூலம் தலைவர்கள், மக்களின் வீடுகளுக்குள் நேரடியாக நுழைந்தனர். அது, அவர்களின் புகழை மட்டும் உயர்த்தவில்லை; அரசியல் பேசும் விதம், மக்களை அணுகும் முறை, தேர்தல் பிரசாரத்தின் தோற்றம் ஆகியவற்றையும் மாற்றியமைத்தது. இதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்தது. தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி அறிமுகம் 1980களின் இறுதி வரை, தமிழ்நாட்டில் அரசியல் பிரசாரங்கள் பெரும்பாலும் பொதுக் கூட்டங்கள், கட்சி நாளிதழ்கள், சுவர் விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வானொலி ஒலிபரப்புகள் மூலமே நடந்தன. அண்ணா மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள், திறந்த வெளி மேடைகளில் நிகழ்த்திய உரைகள் மற்றும் எழுத்து வழி அரசியலின் மூலம் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை உருவாக்கினர். 1950கள் முதல் 1970கள் வரை, அரசியல் செய்திகளுக்கும் உரைகளுக்கும் கிடைத்த ஒரே மின்னணு ஊடகமாக அகில இந்திய வானொலி செயல்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஜனவரியில், சென்னையில் தூர்தர்ஷன் நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமானது. ஆனால், மக்களிடையே அதன் பரவல் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் சென்னை போன்ற நகரப் பகுதிகளில்தான் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் சென்றடைந்தன. பொதுமக்களிடையே தொலைக்காட்சிப் பெட்டிகள் அரிதாக இருந்தன. தினசரி ஒளிபரப்பு நேரமும் குறைவாக இருந்தது; அரசியல் நிகழ்ச்சிகளும் மிகக் குறைவு. இதற்கிடையே, 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூர்தர்ஷன் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. செய்தி ஒளிபரப்புகள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கருத்துகள், விமர்சனங்கள், அரசுக்கு எதிரான செய்திகள் பெரும்பாலும் தொலைக்காட்சியில் இடம்பெறவில்லை. அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சியில் தோன்றினாலும், அது அரசு அனுமதித்த வடிவங்களில் மட்டுமே இருந்தது. பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் மேடையாக தொலைக்காட்சி அப்போது செயல்படவில்லை. தமிழ் மொழி ஒளிபரப்புகள் ஆரம்ப காலத்தில் சில கலாசார மற்றும் கல்வி நிகழ்ச்சிகளாக மட்டுமே இருந்தன. அரசியல் செய்திகளும் விவாதங்களும் தெளிவாகத் தோன்றத் தொடங்கியது 1980களின் தொடக்கத்தில் இருந்துதான். மக்களிடையே தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் மெதுவாக அதிகரித்தபோதுதான், அது அரசியல் தொடர்புகளுக்கான ஒரு முக்கிய ஊடகமாக மாறத் தொடங்கியது. அதற்கு முன், தேர்தல் அரசியலில் தொலைக்காட்சி முக்கிய ஆயுதமாக இருக்கவில்லை. அரசியல் களத்தில் தொலைக்காட்சி 1980களின் இறுதி மற்றும் 1990களின் தொடக்க காலத்தில்தான்,தொலைக்காட்சி தமிழ்நாட்டு அரசியலில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைக்காட்சி வைத்திருக்கும் வீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்தக் காலத்தில் தூர்தர்ஷன் ஒளிபரப்புகள் சென்னை மட்டுமின்றி, பல பகுதிகளுக்கும் சென்றடைந்தன. தமிழ்ச் செய்தி அறிவிப்புகள் மற்றும் நடப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகள் மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின. 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின் தாக்கம் அரசியலில் தெளிவாக உணரத் தொடங்கிய முதல் தேர்தல்களில் ஒன்றாகும். தேர்தல் பிரசார மேடைகளில் நடந்த நிகழ்வுகள், தலைவர்களின் பயணங்கள், செய்தியாளர் சந்திப்புகள் போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. இதன் மூலம், வாக்காளர்கள் அரசியலை முகங்கள், அசைவுகள், உடல் மொழி ஆகியவற்றின் வழியாகவும் பார்க்கத் தொடங்கினர். இவையெல்லாம் வாக்காளர்களின் மனநிலையை, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக பாதிக்கத் தொடங்கிய ஆரம்ப கட்டத் தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தக் காலகட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் காட்சி ஊடகங்களின் வீச்சையும் அதன் ஆற்றலையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தனர். குறிப்பாக, இருவருக்கும் இருந்த திரைப்பட அனுபவம் காரணமாக, தொலைக்காட்சிக்கு ஏற்ப எளிதாகத் தங்களைப் பொருத்திக்கொண்டனர். உட்காரும் முறை, குரலில் ஏற்றத்தாழ்வுகள், நேரடியாகப் பேசும் நடை போன்ற அனைத்தும் தொலைக்காட்சியில் அவர்களது அரசியல் முகத்தை வலுப்படுத்தின. தலைவர்களின் இமேஜை கட்டமைத்த தொலைக்காட்சி! 1991 முதல் 1996 வரையிலான காலகட்டம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சியும் அரசியலும் நெருக்கமாக இணைந்த ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. 1991 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்ததால், மக்கள் மனநிலையில் அதிக உணர்ச்சி கலந்த சூழல் காணப்பட்டது. அந்த நேரத்தில், தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அரசியல் செய்திகள், இரங்கல் காட்சிகள், தலைவர்களின் எதிர்வினைகள் மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகள் மக்கள் மனதை பாதித்தன. சொற்களைக் கடந்து, காட்சிகளின் வழியாக அரசியல் மக்களிடம் சென்றடைந்தது. இந்தக் காலத்தில்தான், தொலைக்காட்சி அரசியல் தலைவர்களின் இமேஜை கட்டமைக்கும் முக்கிய ஊடகமாகவும் மாறியது. ஜெயலலிதாவின் உறுதியான, தீர்மானமான தலைமைத் தோற்றம், தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அவரது பொதுக் கூட்டங்கள், அவர் பங்கேற்ற பெரிய பேரணிகளின் காட்சிகள் அவருக்கான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது. மறுபுறம், மேடை அரசியல் மற்றும் 'உடன் பிறப்புக்கு கடிதம்' போன்ற எழுத்து வழி அரசியலில் வலுவாக இருந்த கருணாநிதி, தொலைக்காட்சியையும் தனக்கான அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். தனியார் தொலைக்காட்சிகளின் வருகை 1993 ஏப்ரலில், கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட சன் டிவி, குறுகிய காலத்திலேயே நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் அதிகம் பார்க்கப்படும் தனியார் தமிழ் சேனலாக மாறியது. பல இடங்களில், கேபிள் தொலைக்காட்சி என்றாலே “சன் டிவி” என அழைக்கப்படும் அளவுக்கு, அதன் தாக்கம் இருந்தது. 1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தில், சன் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று, மக்களிடையே அவரது ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை அதிகரிக்கச் செய்ததில் சன் தொலைக்காட்சிக்கும் அப்போது கணிசமான பங்கு இருந்தது. இன்னொருபுறம் போராட்டங்கள், மக்கள் கருத்துகள், முக்கிய தலைவர்களின் பேட்டிகள் போன்றவையும் அரசுக்கு எதிரான மனநிலையை அதிகரிக்கச் செய்தன.அந்த வகையில் 1996 தேர்தலில், மக்களின் அரசியல் பார்வையைக் கட்டமைத்ததில் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்காற்றியது. இதனையடுத்து 1999 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஜெயா டிவி, அதிமுகவுடன் நெருக்கமாக இணைந்த ஒரு தொலைக்காட்சி சேனலாக அறிமுகமானது. இதன் மூலம், அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரிய தொலைக்காட்சி தளங்களை உருவாக்கும் போக்குத் தொடங்கியது. இதனால், ஊடக அரசியலின் அதிகார சமன்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் கண்டன. அரசியல் தலைவர்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒளிபரப்புகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை மாறியது. கட்சிகளின் கருத்துகள், விளக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தினந்தோறும் வீடுகளுக்குள் சென்று சேர்ந்தன. அரசியல், மேடைகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டுமல்லாமல், நேரடியாக குடும்ப அறைகளிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியது. அதற்கு இந்த தனியார் தொலைக்காட்சிகளின் வருகை பெரும் ஊக்கமாக அமைந்தது. `அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்! `சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5 2001–2006: தேர்தல் War Room ஆக மாறிய தொலைக்காட்சி இன்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், தேர்தலின்போது War Room-களை அமைத்து, தங்களது பிரசாரங்களையும் பதிலடிகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்புகின்றன. ஆனால், 2001 மற்றும் 2006 தேர்தல்களில் கட்சி சார்புடைய தனியார் சேனல்கள்தான், அவற்றின் War Room ஆக செயல்பட்டன. அந்த வகையில், 2001 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின் முழுமையான தாக்கத்தையும் அதன் வெளிப்பாடுகளையும் காணக்கூடிய ஒரு முக்கியக் கட்டமாக அமைந்தது. தேர்தல் பிரசார உரைகள் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களின் குறும் பேச்சுத் துணுக்குகள் (sound bites) கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்பட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பதில்கள் தொலைக்காட்சிகள் வழியாக வழங்கப்பட்டன. 2006 தேர்தலில், இதைவிட பன்மடங்கான தாக்கத்தை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்படுத்தின. கூடவே உள்ளூர் கேபிள் டிவி-கள் மூலமாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார பலம் கொண்ட சில வேட்பாளர்கள், கட்சித்தலைமையின் பிரசாரத்தைத் தாண்டி, தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பாகும் கேபிள் டிவி-கள் மூலம், தங்களுக்கான புரமோஷன் உத்திகளை மேற்கொண்டனர். இத்தகைய மாற்றங்களால், அரசியல் மொழியும் மாறத் தொடங்கியது. உரைகள் சுருக்கமானதாக மாறின. முழக்கங்கள் இன்னும் கூர்மையானவையாக அமைந்தன. காட்சிகள் மிக இலாவகமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம், தொலைக்காட்சிகள் தமிழக அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டு மையமாக மாறின. Representational Image 2007–2011: விரிவடைந்த ஊடகப் போர்க்களம் 2007 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கலைஞர் டிவி, திமுகவுக்கான ஊடகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியது. இதற்குள், தமிழ்நாடு கடும் தொலைக்காட்சிப் போட்டி நிறைந்த ஒரு கட்டத்தில் நுழைந்திருந்தது. அரசியல் செய்திகளும் கருத்துகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இணைந்து, ஒரே நேரத்தில் வீடுகளுக்குள் சென்றடைந்தன. 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சி சார்ந்த அரசியல் முழுமை பெற்ற நிலையில் இருந்ததை வெளிப்படுத்தியது. நலத்திட்டங்கள், சலுகைகள், மானிய அறிவிப்புகள், மக்கள் நல உறுதிமொழிகள் ஆகியவை தொலைக்காட்சி விளம்பரங்கள், நேர்காணல்கள் மற்றும் செய்தி ஒளிபரப்புகள் மூலம் தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், தொலைக்காட்சி ஒரு தகவல் ஊடகமாக மட்டும் இல்லாமல், அரசியல் நேரடியாக நடைபெறும் ஒரு களமாகவே மாறியது. தலைமைப் பண்பில் ஏற்படுத்திய மாற்றம் அந்த வகையில், தொலைக்காட்சி, தமிழ்நாட்டில் “தலைவர்” என்ற சொல்லின் அர்த்தத்தையே மாற்றியது. மக்களைக் கவரும் கவர்ச்சி என்பது, பொதுக் கூட்ட மேடைகளில் பேசுவதிலிருந்து கேமரா முன் நின்று பேசும் திறனாக மாற்றம் கண்டது. தலைவர்களின் பேட்டியோ அல்லது உரையோ, அதனைப் பார்க்கும் மக்களிடத்தில், சில விநாடிகளிலேயே தன் மீதான அல்லது தனது கட்சியின் மீதான நம்பிக்கையையும், அனுதாபத்தையும், தீர்மானத்தையும் பெறும் திறன் போன்றவையெல்லாம்தான் தலைமைக்கு அவசியமான பண்புகளாக மாறின. இந்த மாற்றம், தனிப்பட்ட கவர்ச்சியும் (charisma) ஒழுங்கான தொடர்புத் திறனும் (Communication Skill) கொண்ட தலைவர்களுக்கு சாதகமாக அமைந்தது. கட்சித் தொண்டர்கள் வழியாகச் செய்திகளை எடுத்துச் செல்லும் முறையின் முக்கியத்துவம் குறைந்தது. தலைவர்கள் நேரடியாகவே மக்களின் வீட்டறைகளுக்குள் நுழைந்ததால் அரசியல், பொதுமக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. அதே நேரத்தில், தொலைக்காட்சி அரசியலில் சில விமர்சனங்களும் எழுந்தன. அரசியல் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களின் ஆதிக்கத்தால், அத்தகைய வாய்ப்பும் பொருளாதார பலமும் இல்லாத எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடம் கிடைக்கவில்லை என்கிற புகார்களும் எழுந்தன. இதனால், ஊடக பன்முகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தன. இவை அனைத்தையும் மீறியும், தொலைக்காட்சி இன்று தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பில் ஆழமாக பதிந்துவிட்டதை மறுப்பதற்கில்லை! (சுவடுகள்... தொடரும்) Loading…
`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக
அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ் தி.மு.க ஆட்சியை பாராட்டியிருந்தார். புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன் அப்போது, `தி.மு.க-வில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `பொறுத்திருந்து பாருங்கள்' என சஸ்பென்ஸ் வைத்தார். இந்த நிலையில்தான் இன்று தன் மகன் ரவீந்தரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் ஓ.பி.எஸ். இது குறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன், ``ஓ.பி.எஸ்ஸின் இந்த செயல் இது துரோகத்தின் உச்சக்கட்டம். சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பி.எஸ்சை, மறைந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தார்கள். அந்த நன்றியை மறந்து புரட்சித் தலைவி சிறை செல்வதற்கும், அதன்பிறகு அவரது மரணத்துக்கும் காரணமாக இருந்த தி.மு.க-வுடன் கைகோர்த்திருப்பது கடைந்தெடுத்த துரோகத்தின் உச்சகட்டம் என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார். புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா
`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய ஓ.பி.எஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் மோதலால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் அவர் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்கள் கைகூடாத நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க-வில் இணையும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார். ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், ``திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார். பன்னீர் செல்வம் தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன். எனறார். ஓ.பி.எஸ்-ஸின் இந்த மாற்றம் தென் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் இது மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க-வினர், ``ஓ.பி.எஸ்-ஸின் துரோகம் இன்று அம்பலமாகிவிட்டது. அவர் எப்போதும் தி.மு.க-வின் பி டீமாகவே செயல்பட்டார் என விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது. Loading…
`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய ஓ.பி.எஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் மோதலால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் அவர் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்கள் கைகூடாத நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க-வில் இணையும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார். ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், ``திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார். பன்னீர் செல்வம் தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன். எனறார். ஓ.பி.எஸ்-ஸின் இந்த மாற்றம் தென் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் இது மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க-வினர், ``ஓ.பி.எஸ்-ஸின் துரோகம் இன்று அம்பலமாகிவிட்டது. அவர் எப்போதும் தி.மு.க-வின் பி டீமாகவே செயல்பட்டார் என விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது. Loading…
சென்னை யாருடைய கோட்டை? 50 ஆண்டுகால வரலாறு சொல்வது என்ன? | TN Elections 360 Updates | Vikatan
'எனக்கு தான் சீட்!'முட்டி மோதும் உடன்பிறப்புகள் - 'ஹைப்'ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை
சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை. வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. muthuraja இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மருத்துவர் வை.முத்துராஜா இருக்கிறார். அரசு மருத்துவராக இருந்த இவர், கடந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டு வெற்றிபெற்றார். இந்தமுறையும் சீட் கேட்டு கடுமையாக ஃபைட் செய்து வருகிறார். அவரது எளிமையான அணுகுமுறை, சொல்லிக் கொள்ளும்படியான மக்கள் நல பணிகள் அவருக்கு பலம் கூட்டுகிறது. இந்நிலையில், அவருக்கு போட்டியாக புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் மு.க.முத்துக்கருப்பன் சீட் கேட்கிறார். புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரையா, முன்னாள் மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோரது குடும்ப வகையறாவை சேர்ந்த பாரம்பர்ய குடும்ப பின்னணி உடையவர் என்பதால், தொகுதி முழுக்க பரவலாக அறியப்படுகிறார். muthukaruppan கொரோனா காலங்களில் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியது, கட்சியினருக்கு உதவுவது, கோடைக் காலங்களில் மக்கள் நலனில் அக்கறை காட்டும் செயல்களை செய்வது என்று தொகுதி மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயம் ஆனவர் என்பதால், இவருக்கு சீட் கிடைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஐபேக் டீம், உளவுத்துறை ரிப்போர்ட்டிலும் இவரது பெயர் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அதேபோல், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், 'இந்தமுறை எப்படியும் சீட் வாங்கியே தீருவது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சித்து வருகிறார். தொகுதியில் பரவலாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர், மக்களிடம் நன்கு அறிமுகமானவர், மாவட்ட செயலாளர் கோட்டா என்ற அடிப்படையில் இவருக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. அதேபோல், ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த எம்.எம்.அப்துல்லாவும் சீட் பிடி ரேஸில் முன்னணியில் இருக்கிறார். 'மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். நகர செயலாளர் பதவி பிரிப்பு விஷயத்தில் இவர் நடந்துகொண்ட விதம் கட்சியினர் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்கியிருந்தாலும், அதைத்தாண்டி அவரது மக்கள் நல செயல்பாடுகள் அவருக்கு ப்ளஸாக உள்ளன. kk sellapandiyan தவிர, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதும் அவருக்கு வலு சேர்க்கிறது. இவர்களைத்தவிர, சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு தாவிய கார்த்திக் தொண்டைமானும் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார். இந்நிலையில், இந்த தொகுதி நிலவரம் குறித்து பேசிய புதுக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், எங்க கட்சியில் நிறைய பேர்கள் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஐந்து பேர்கள் தான் சீட் கிடைக்கும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. அதனால், இந்த தொகுதியை பெற பலரும் முட்டி மோதி வருகிறார்கள். mm abdulla அமைச்சர் ரகுபதி இந்தமுறை புதுக்கோட்டையை தனது மகன் அண்ணாமலைக்காக கேட்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், ஏற்கனவே கம்னியூஸ்ட் கட்சி வென்ற தொகுதி என்பதால், அவர்கள் கூட இந்த தொகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் வைத்திருக்கிறார்கள். ஆனால், யாருக்கு சீட் கிடைக்க போகிறது என்பது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தபிறகே தெரியவரும் என்றார்கள். Loading…
'எனக்கு தான் சீட்!'முட்டி மோதும் உடன்பிறப்புகள் - 'ஹைப்'ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை
சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை. வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. muthuraja இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மருத்துவர் வை.முத்துராஜா இருக்கிறார். அரசு மருத்துவராக இருந்த இவர், கடந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டு வெற்றிபெற்றார். இந்தமுறையும் சீட் கேட்டு கடுமையாக ஃபைட் செய்து வருகிறார். அவரது எளிமையான அணுகுமுறை, சொல்லிக் கொள்ளும்படியான மக்கள் நல பணிகள் அவருக்கு பலம் கூட்டுகிறது. இந்நிலையில், அவருக்கு போட்டியாக புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் மு.க.முத்துக்கருப்பன் சீட் கேட்கிறார். புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரையா, முன்னாள் மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோரது குடும்ப வகையறாவை சேர்ந்த பாரம்பர்ய குடும்ப பின்னணி உடையவர் என்பதால், தொகுதி முழுக்க பரவலாக அறியப்படுகிறார். muthukaruppan கொரோனா காலங்களில் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியது, கட்சியினருக்கு உதவுவது, கோடைக் காலங்களில் மக்கள் நலனில் அக்கறை காட்டும் செயல்களை செய்வது என்று தொகுதி மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயம் ஆனவர் என்பதால், இவருக்கு சீட் கிடைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஐபேக் டீம், உளவுத்துறை ரிப்போர்ட்டிலும் இவரது பெயர் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அதேபோல், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், 'இந்தமுறை எப்படியும் சீட் வாங்கியே தீருவது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சித்து வருகிறார். தொகுதியில் பரவலாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவர், மக்களிடம் நன்கு அறிமுகமானவர், மாவட்ட செயலாளர் கோட்டா என்ற அடிப்படையில் இவருக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. அதேபோல், ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த எம்.எம்.அப்துல்லாவும் சீட் பிடி ரேஸில் முன்னணியில் இருக்கிறார். 'மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். நகர செயலாளர் பதவி பிரிப்பு விஷயத்தில் இவர் நடந்துகொண்ட விதம் கட்சியினர் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்கியிருந்தாலும், அதைத்தாண்டி அவரது மக்கள் நல செயல்பாடுகள் அவருக்கு ப்ளஸாக உள்ளன. kk sellapandiyan தவிர, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதும் அவருக்கு வலு சேர்க்கிறது. இவர்களைத்தவிர, சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு தாவிய கார்த்திக் தொண்டைமானும் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார். இந்நிலையில், இந்த தொகுதி நிலவரம் குறித்து பேசிய புதுக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், எங்க கட்சியில் நிறைய பேர்கள் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஐந்து பேர்கள் தான் சீட் கிடைக்கும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. அதனால், இந்த தொகுதியை பெற பலரும் முட்டி மோதி வருகிறார்கள். mm abdulla அமைச்சர் ரகுபதி இந்தமுறை புதுக்கோட்டையை தனது மகன் அண்ணாமலைக்காக கேட்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், ஏற்கனவே கம்னியூஸ்ட் கட்சி வென்ற தொகுதி என்பதால், அவர்கள் கூட இந்த தொகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் வைத்திருக்கிறார்கள். ஆனால், யாருக்கு சீட் கிடைக்க போகிறது என்பது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தபிறகே தெரியவரும் என்றார்கள். Loading…
இது பெரிய ஹீரோ படம்; விஜய்க்கு செட் ஆகாதுனு சொன்னேன் - A.Venkatesh | Subramaniam Siva
NCERT பாடத்திட்ட சர்ச்சை: 'நீதித்துறையில் ஊழல்' - கொந்தளிப்பில் உச்ச நீதிமன்றம்; பாஜக வருத்தம்
மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை ஊழல் குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ``நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு என்ற பாடம் இடம்பெற்றிருக்கிறது. அதில் நீதித்துறையின் அமைப்பு பற்றி மட்டும் பேசாமல், அதன் சவால்கள் மற்றும் ஊழல் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 5.3 கோடி வழக்குகளின் (உச்ச நீதிமன்றத்தில் 81,000, உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி) புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றம் நீதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய கருத்துகளும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, ``இதில் ஆழமான விசாரணை தேவை. இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கை இப்போதைக்கு முடிக்கப் போவதில்லை என மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது. பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’ மேலும், இந்த விவகாரத்தில் மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. NCERT, ``அந்தப் பாடத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தவறு எனக் கூறி மன்னிப்புக் கோரியது. இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பியதோடு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``நீதித்துறையை நாங்கள் உயரிய இடத்தில் வைத்து மதிக்கிறோம். அவர்களை அவமதிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம் என வருத்தம் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் இந்திய நீதித்துறைக்கு வணக்கம் செய்கிறோம். இந்திய நீதித்துறை இயங்கும் நடுநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் எப்போதும் நீதித்துறையை மதிக்க வேண்டும். அதன் பக்கமே நிற்க வேண்டும். NCERT: 'முகலாயர்கள் வேண்டாம்; இந்தி வேண்டும்!' - மத்திய அரசே கல்வியிலும் அரசியலா? | In Depth NCERT பாடப்புத்தக விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்திய நீதித்துறையைப் போல சுதந்திரமான, தகுதியுள்ள மற்றுமொரு நிறுவனம் இந்தியாவிலோ அல்லது இந்த உலகத்திலோ வேறு எங்கும் இல்லை என்று என்னால் சொல்ல முடியும். இந்திய நீதித்துறையின் மீது நாம் அனைவரும் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டுள்ளோம். இதுவே அனைவரின் இதயத்திலும் இருக்கும் உண்மையான உணர்வு எனத் தெரிவித்தார். இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.. - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை
NCERT பாடத்திட்ட சர்ச்சை: 'நீதித்துறையில் ஊழல்' - கொந்தளிப்பில் உச்ச நீதிமன்றம்; பாஜக வருத்தம்
மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை ஊழல் குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ``நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு என்ற பாடம் இடம்பெற்றிருக்கிறது. அதில் நீதித்துறையின் அமைப்பு பற்றி மட்டும் பேசாமல், அதன் சவால்கள் மற்றும் ஊழல் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 5.3 கோடி வழக்குகளின் (உச்ச நீதிமன்றத்தில் 81,000, உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி) புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றம் நீதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய கருத்துகளும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, ``இதில் ஆழமான விசாரணை தேவை. இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கை இப்போதைக்கு முடிக்கப் போவதில்லை என மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது. பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’ மேலும், இந்த விவகாரத்தில் மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. NCERT, ``அந்தப் பாடத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தவறு எனக் கூறி மன்னிப்புக் கோரியது. இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பியதோடு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``நீதித்துறையை நாங்கள் உயரிய இடத்தில் வைத்து மதிக்கிறோம். அவர்களை அவமதிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம் என வருத்தம் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் இந்திய நீதித்துறைக்கு வணக்கம் செய்கிறோம். இந்திய நீதித்துறை இயங்கும் நடுநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் எப்போதும் நீதித்துறையை மதிக்க வேண்டும். அதன் பக்கமே நிற்க வேண்டும். NCERT: 'முகலாயர்கள் வேண்டாம்; இந்தி வேண்டும்!' - மத்திய அரசே கல்வியிலும் அரசியலா? | In Depth NCERT பாடப்புத்தக விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்திய நீதித்துறையைப் போல சுதந்திரமான, தகுதியுள்ள மற்றுமொரு நிறுவனம் இந்தியாவிலோ அல்லது இந்த உலகத்திலோ வேறு எங்கும் இல்லை என்று என்னால் சொல்ல முடியும். இந்திய நீதித்துறையின் மீது நாம் அனைவரும் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டுள்ளோம். இதுவே அனைவரின் இதயத்திலும் இருக்கும் உண்மையான உணர்வு எனத் தெரிவித்தார். இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.. - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை
மயிலாப்பூர் தொகுதி மல்லுக்கட்டு; படையெடுக்கும் பிரபலங்கள் Vs மண்ணின் மைந்தர்கள்! |TN Election 2026
மயிலாப்பூர் தொகுதி மல்லுக்கட்டு; படையெடுக்கும் பிரபலங்கள் Vs மண்ணின் மைந்தர்கள்! |TN Election 2026
முதலில் ராஜினாமா... பின் திமுக! - முடிவெடுத்த ஓபிஎஸ்?
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஓ.பன்னீர் செல்வம் எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். இதற்கிடையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ்., தி.மு.க ஆட்சியை பாராட்டினார். தி.மு.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தது ஊகங்களை அதிகரித்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் கோவை புறப்படுகிறார். அதற்கு முன்பாகவே, ஒ.பன்னீர் செல்வம் இன்று காலை தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?
முதலில் ராஜினாமா... பின் திமுக! - முடிவெடுத்த ஓபிஎஸ்?
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஓ.பன்னீர் செல்வம் எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். இதற்கிடையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ்., தி.மு.க ஆட்சியை பாராட்டினார். தி.மு.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தது ஊகங்களை அதிகரித்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் கோவை புறப்படுகிறார். அதற்கு முன்பாகவே, ஒ.பன்னீர் செல்வம் இன்று காலை தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?
குழப்பத்தில் NDA கூட்டணி | அரசு ஊழியரைக் கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | IPS Vikatan
குழப்பத்தில் NDA கூட்டணி | அரசு ஊழியரைக் கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | IPS Vikatan
R.Nallakannu: 23 வயதில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை - C Mahendran interview | Vikatan
`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' - அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ளது. கே.என்.நேரு இந்நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள ராகுல் நவீன், தமிழகம் வருகை தர உள்ளார். இந்தப் பயணம் திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழக அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நிய செலாவணி வழக்குகள் பல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கவுகாதியில் நடந்த அமலாக்கத்துறையின் அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை ராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள். ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் கிடக்கின்றன. அந்த வழக்குகளின் விவரங்களை இப்போது அமலாக்கத்துறையின் இயக்குநர் கேட்பார்” என்கிறார்கள். சமீபத்தில் அமித் ஷா, “தமிழ்நாட்டை தி.மு.க-விடமிருந்து மீட்போம்” என்று முழங்கியிருந்தார். இதற்கு ஏற்றார்போல மத்திய அரசின் ஏஜென்சிகளும் தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது. அமலாக்கத்துறை தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் கருதிட முடியாது. “தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறையை வைத்து நெருக்கடி கொடுத்து தேர்தல் பணிகளை முடக்கும் யுக்தியைக்கூட பா.ஜ.க தரப்பு மேற்கொள்ளலாம்” என்கிறார்கள் தி.மு.க-வினர்.
`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' - அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ளது. கே.என்.நேரு இந்நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள ராகுல் நவீன், தமிழகம் வருகை தர உள்ளார். இந்தப் பயணம் திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழக அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நிய செலாவணி வழக்குகள் பல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கவுகாதியில் நடந்த அமலாக்கத்துறையின் அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை ராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள். ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் கிடக்கின்றன. அந்த வழக்குகளின் விவரங்களை இப்போது அமலாக்கத்துறையின் இயக்குநர் கேட்பார்” என்கிறார்கள். சமீபத்தில் அமித் ஷா, “தமிழ்நாட்டை தி.மு.க-விடமிருந்து மீட்போம்” என்று முழங்கியிருந்தார். இதற்கு ஏற்றார்போல மத்திய அரசின் ஏஜென்சிகளும் தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது. அமலாக்கத்துறை தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் கருதிட முடியாது. “தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறையை வைத்து நெருக்கடி கொடுத்து தேர்தல் பணிகளை முடக்கும் யுக்தியைக்கூட பா.ஜ.க தரப்பு மேற்கொள்ளலாம்” என்கிறார்கள் தி.மு.க-வினர்.
களத்தில் முந்தும் eps ! இணக்கம் காட்டாத கூட்டணி!
களத்தில் முந்தும் eps ! இணக்கம் காட்டாத கூட்டணி!
ஒரே கூட்டணியில் அன்புமணி &ராமதாஸ்_ அமித்ஷா போட்ட கணக்கு_
ஒரே கூட்டணியில் அன்புமணி &ராமதாஸ்_ அமித்ஷா போட்ட கணக்கு_
கூட்டணி முடிவை தாமதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்
கூட்டணி முடிவை தாமதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்
பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’
என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசு மற்றும் நீதித்துறையின் இடையிலான இந்த மோதல் போக்கு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.. இனி அது குறித்து விரிவாக காணலாம்... உச்ச நீதிமன்றம் இந்திய ஜனநாயகத்தின் தூண்களான நிர்வாகத் துறையும் (Executive) நீதித்துறையும் (Judiciary) கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒரு தொடர்ச்சியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக, மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல், நீதிபதிகள் நியமனம் மற்றும் தீர்ப்புகளில் தொடர் சர்ச்சைகள் இருந்து வருகிறது. மோதலின் தொடக்கம்: NJAC விவகாரம் (2014-2015) பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், செய்த முதல் முக்கிய சட்டத்திருத்தம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) ஆகும். அதுவரை நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் 'கொலீஜியம்' (Collegium) முறையை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக மத்திய அரசு அந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம் என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2015-ல் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி ரத்து செய்தது. இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுவே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான போரின் தொடக்கப்புள்ளி. கொலீஜியம் முறை மீதான கடுமையான விமர்சனங்கள்: மத்திய சட்ட அமைச்சர்களாக இருந்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கொலீஜியம் முறையை பகிரங்கமாகத் தாக்கினர். ``நீதிமன்றங்களே தங்களை நியமித்துக்கொள்ளும் முறை உலகில் எங்கும் இல்லை என்றும், இது வெளிப்படைத்தன்மை அற்றது என்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்தனர். என்னதான் கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்தாலும், அதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசுதான் இறுதி செய்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். எனவே அரசுக்கு உடன்பாடு இல்லாத நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, மத்திய அரசு அந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காமல் மாதக்கணக்கில் அல்லது ஆண்டுகணக்கில் கிடப்பில் போடுவதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நான்கு நீதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் சந்திப்பு (2018) இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் (செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப்) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சாதகமான அமர்வுகளுக்கு ஒதுக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று அவர்கள் எச்சரித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு எப்பொழுதும் நீதித்துறையின் மீதான விமர்சனங்களை மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது முன்வைப்பதுண்டு. அடிப்படை அமைப்பு' (Basic Structure) கோட்பாடு குறித்த மோதல் சமீபகாலமாக, நாடாளுமன்றமே உயர்ந்தது என்றும், நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், 1973-ம் ஆண்டின் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பை விமர்சித்தார். அரசியலமைப்பின் 'அடிப்படை அமைப்பை' மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அந்தத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மீறுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு நீதித்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் சமீபத்திய மோதல்கள் மற்றும் சம்பவங்கள் (2023-2026) பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இது அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் சமயம் என்பதால் எதிர்க்கட்சிகள் பாஜகவை இந்த தீர்ப்பை வைத்து மிகக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய பத்துக்கும் அதிகமான மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142 ஐ பயன்படுத்தி ஒப்புதலும் வழங்கியிருந்தது. உச்சகட்டமாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்குமே காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்தது மத்திய அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இது ஆளுநர்கள் மூலமாக மாநில அரசியலில் தலையிட நினைக்கும் மத்திய அரசுக்கு எதிரான கசப்பான அனுபவமாக அமைந்தது. டெல்லியில் நடைபெற்ற அரசியல் சாசன தின மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய நீதித்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ, நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்தும் நீதிபதிகள் நியமனம் குறித்தும் விமர்சன தொணியில் பேசி இருந்தார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். பிறகு அவர் அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டு இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளில் நீதிமன்றங்கள் 'நீதித்துறை மேலாதிக்கம்' (Judicial Activism) செலுத்துவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. இன்னொரு பக்கம் தங்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தை உறுதி செய்யும் நோக்கில் நீதிமன்றங்களும் செயல்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணமாக தான் என்.சி.இ.ஆர்.டி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது. நீதிமன்றம் அதாவது, 8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், நீதித்துறை ஊழல் என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை குலைக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ``நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவும், கேள்வி கேட்கவும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை எந்த அளவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எந்த தாக்குதலையும் நீதிமன்றம் அனுமதிக்காது. இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிடப்பட்ட மற்றும் ஆழமான தாக்குதல் ஆகும். உச்ச நீதிமன்றம் யாரையும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. இந்த பிரச்சினை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏராளமானோரிடருந்து தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடப்புத்தகத்தில் வந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்''என்று காட்டமானார். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த பாடப்பகுதி நீக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். எனினும், மத்திய பாஜக அரசுக்கும், நீதித்துறைக்குமான மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.! Loading…
சிவகார்த்திகேயன் சொன்னது யாரை_ எதனால் அப்படி பேசுகிறார்_
சிவகார்த்திகேயன் சொன்னது யாரை_ எதனால் அப்படி பேசுகிறார்_
விடைபெற்றார் நல்லகண்ணு!அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள்
விடைபெற்றார் நல்லகண்ணு!அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள்
விஜயை வம்பிழுக்கு நடிகை? viral ஆகும் video
விஜயை வம்பிழுக்கு நடிகை? viral ஆகும் video
எஸ்.ஐ தேர்வு: 'எங்கும் தமிழ்'என்பது வாயளவுக் கொள்கை தானா? - திமுக அரசைச் சாடும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ., தேர்வு குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, `தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?' என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எங்கும் தமிழ் என்பது வாயளவுக் கொள்கை தானா? மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? `எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கை தானா? `எதற்கு தமிழ்?' என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? மு.க ஸ்டாலின். தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? டி.என்.பி.சி குரூப் 2 கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, `வாங்கியதை' எல்லாம் `திருப்பி கொடுக்காமல்' இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை. எடப்பாடி பழனிசாமி அழகுபார்க்கும் அரசாகத் திகழும் `3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்' என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் அதிமுக அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும் என்று பதிவிட்டிருக்கிறார்.
எஸ்.ஐ தேர்வு: 'எங்கும் தமிழ்'என்பது வாயளவுக் கொள்கை தானா? - திமுக அரசைச் சாடும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ., தேர்வு குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, `தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?' என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எங்கும் தமிழ் என்பது வாயளவுக் கொள்கை தானா? மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? `எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கை தானா? `எதற்கு தமிழ்?' என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? மு.க ஸ்டாலின். தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? டி.என்.பி.சி குரூப் 2 கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, `வாங்கியதை' எல்லாம் `திருப்பி கொடுக்காமல்' இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை. எடப்பாடி பழனிசாமி அழகுபார்க்கும் அரசாகத் திகழும் `3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்' என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் அதிமுக அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும் என்று பதிவிட்டிருக்கிறார்.
ஜெ' சொன்ன அந்த வார்த்தை! புது கட்சிக்கு காரணம் இதுதான்...sufian reveal
ஜெ' சொன்ன அந்த வார்த்தை! புது கட்சிக்கு காரணம் இதுதான்...sufian reveal
தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சி.டி.ஆர் நிர்மல் குமார் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. தரப்பில், `பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன' என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிகள், `இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை அரசுத்தரப்பில், ``இந்த வழிகாட்டி வழிமுறைகள்படி த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ``பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத்தரப்பை கேட்ட நீதிபதிகள், த.வெ.க. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். Loading…
தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சி.டி.ஆர் நிர்மல் குமார் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. தரப்பில், `பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன' என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிகள், `இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை அரசுத்தரப்பில், ``இந்த வழிகாட்டி வழிமுறைகள்படி த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ``பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத்தரப்பை கேட்ட நீதிபதிகள், த.வெ.க. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். Loading…
மயிலாடுதுறை: `ஆட்சியர் நிதி ஒதுக்கியும், பள்ளியில் கழிவறை கட்டாம இருக்காங்க' - புலம்பும் பெற்றோர்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி தொடங்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு இப்பள்ளியின் கட்டடமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணவர்கள் (20 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள்) கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளிக் குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையைப் பற்றியும், பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அன்று, விகடன் டாட்.காமில் செய்தியானது வெளியிடப்பட்டது. பள்ளியிலுள்ள கழிப்பறை இச்செய்தியானது ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்குத் தனிக் கழிவறை அமைக்க ஆட்சியரால் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை புதிய கழிவறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மாணவர்கள் மிகுந்த அசௌகரியத்துடன் இருக்கின்றனர். மயிலாடுதுறை: பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், எங்க புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல ஆம்பள புள்ளைக்கும் பொம்பள புள்ளைக்கும் தனித்தனி பாத்ரூம்லா கெடையாது. ஒரே பாத்ரூம் தான். இதனால எங்க புள்ளைங்க நெறைய சிரமப் படுறாங்கன்னு விகடன்லகூட செய்தி போட்டாங்க. அந்தச் செய்தியைப் பாத்துட்டு, கலெக்டரும் நிதி ஒதுக்கிட்டாங்க, சீக்கிரம் பாத்ரூம் கட்டிடு வாங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். டெய்லியும் வீட்ல வந்து பொளம்புற பிள்ளைங்க கிட்டக்கூடச் சொன்னோம். சீக்கிரம் பாத்ரூம் கட்டிடுவாங்க, கலெக்டர் பணம் கொடுத்துட்டாங்கன்னு. பசங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கலெக்டர் ஒதுக்குன நிதி, நிதியாவே இருக்கு நாளு மாசமா. அந்த நிதியை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. ஒன்னும் கட்ட ஆரம்பிச்சப்பாடு இல்ல. குழந்தைங்க ரொம்ப சிரமமப்படுறாங்க. அதனால அதிகாரிங்க உடனடியா கலெக்டர் ஒதுக்கின நிதியில கழிவறை கட்டிக் கொடுக்கணும் என்றனர். மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர் இது குறித்து, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சனிடம் பேசியபோது, நான் கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் கட்ட வில்லையா? என அதிர்ச்சியுடன் கேட்ட வண்ணமே... இதர தகவல்களை அறிய உதவிப்பொறியாளரை அழைக்குமாறு கூறினார். தொடர்ந்து உதவிப் பொறியாளர் பூவராகவன் கூறியதாவது, டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும் எனக் கூறினார். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய கழிவறையை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
மயிலாடுதுறை: `ஆட்சியர் நிதி ஒதுக்கியும், பள்ளியில் கழிவறை கட்டாம இருக்காங்க' - புலம்பும் பெற்றோர்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி தொடங்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு இப்பள்ளியின் கட்டடமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணவர்கள் (20 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள்) கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளிக் குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையைப் பற்றியும், பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அன்று, விகடன் டாட்.காமில் செய்தியானது வெளியிடப்பட்டது. பள்ளியிலுள்ள கழிப்பறை இச்செய்தியானது ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்குத் தனிக் கழிவறை அமைக்க ஆட்சியரால் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை புதிய கழிவறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மாணவர்கள் மிகுந்த அசௌகரியத்துடன் இருக்கின்றனர். மயிலாடுதுறை: பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், எங்க புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல ஆம்பள புள்ளைக்கும் பொம்பள புள்ளைக்கும் தனித்தனி பாத்ரூம்லா கெடையாது. ஒரே பாத்ரூம் தான். இதனால எங்க புள்ளைங்க நெறைய சிரமப் படுறாங்கன்னு விகடன்லகூட செய்தி போட்டாங்க. அந்தச் செய்தியைப் பாத்துட்டு, கலெக்டரும் நிதி ஒதுக்கிட்டாங்க, சீக்கிரம் பாத்ரூம் கட்டிடு வாங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். டெய்லியும் வீட்ல வந்து பொளம்புற பிள்ளைங்க கிட்டக்கூடச் சொன்னோம். சீக்கிரம் பாத்ரூம் கட்டிடுவாங்க, கலெக்டர் பணம் கொடுத்துட்டாங்கன்னு. பசங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கலெக்டர் ஒதுக்குன நிதி, நிதியாவே இருக்கு நாளு மாசமா. அந்த நிதியை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. ஒன்னும் கட்ட ஆரம்பிச்சப்பாடு இல்ல. குழந்தைங்க ரொம்ப சிரமமப்படுறாங்க. அதனால அதிகாரிங்க உடனடியா கலெக்டர் ஒதுக்கின நிதியில கழிவறை கட்டிக் கொடுக்கணும் என்றனர். மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர் இது குறித்து, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சனிடம் பேசியபோது, நான் கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் கட்ட வில்லையா? என அதிர்ச்சியுடன் கேட்ட வண்ணமே... இதர தகவல்களை அறிய உதவிப்பொறியாளரை அழைக்குமாறு கூறினார். தொடர்ந்து உதவிப் பொறியாளர் பூவராகவன் கூறியதாவது, டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும் எனக் கூறினார். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய கழிவறையை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' - காங்கிரஸ் கடும் சாடல்
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை புழந்து உரையாற்றினார் நெதன்யாகு. அவருக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இஸ்ரேலுடன் இந்தியா உறுதியாக நிற்பதாகவும், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்றும் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி - இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பயங்கரவாதத்தை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, காசா அமைதி முயற்சிகள் இப்பிராந்தியத்தில் ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், `இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்த தினத்தில்தான் நான் பிறந்தேன்' எனவும் பெருமிதமாகக் கூறினார். இந்த நிலையில், பிரதமரின் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன் நண்பர் நெதன்யாகுவை ஒருதலைபட்சமாகப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தான் பிறந்த அன்றே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்ததாக ஒரு பெருமிதத்தோடு அவர் பேசினார். ஆனால், அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் எவ்வளவு முதிர்ச்சியோடு சிந்தித்தார் தெரியுமா? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1947-லேயே இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு கேட்டு நேருவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய நேரு, 'யூதர்கள் மீது எனக்குப் பரிதாபம் இருக்கிறது, ஆனால் அதே சமயம் அரேபிய மக்கள் (பாலஸ்தீனம்) படும் துன்பமும் என் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்காமல், இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்' என்று நடுநிலையோடு கூறினார். பிரதமர் மோடி இப்போது ஒரு தரப்பை மட்டும் வெட்கமின்றி ஆதரித்துப் பேசுவது, இந்தியா காலம் காலமாகப் பின்பற்றி வந்த அந்த நடுநிலையான கௌரவத்தைக் குறைப்பது போல இருக்கிறது எனப் பதிவிட்டு பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் படங்களைப் பகிர்ந்திருந்தார். In his address to the Knesset yesterday - which was an unabashed defence of his host - Prime Minister Modi drew attention to the fact that India recognised the new state of Israel on the day he was born. Actually, Albert Einstein had written to Jawaharlal Nehru on June 13, 1947,… pic.twitter.com/TTtkUgJVMF — Jairam Ramesh (@Jairam_Ramesh) February 26, 2026 ஜவஹர்லால் நேரு 1947-ல் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்சம்: இந்தியா யூத மக்களின் துயரங்களுக்கும், நாஜிக்களின் கொடுமைகளுக்கும் ஆழமான அனுதாபம் கொண்டுள்ளது. யூதர்களின் இனவாதக் கொள்கையையும், அரபு மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. வன்முறை தீர்வு அல்ல, ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான தீர்வே சாத்தியம். மூன்றாம் தரப்பு ஆதிக்கம் இருக்கக் கூடாது. `இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி
மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' - காங்கிரஸ் கடும் சாடல்
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை புழந்து உரையாற்றினார் நெதன்யாகு. அவருக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இஸ்ரேலுடன் இந்தியா உறுதியாக நிற்பதாகவும், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்றும் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி - இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பயங்கரவாதத்தை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, காசா அமைதி முயற்சிகள் இப்பிராந்தியத்தில் ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், `இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்த தினத்தில்தான் நான் பிறந்தேன்' எனவும் பெருமிதமாகக் கூறினார். இந்த நிலையில், பிரதமரின் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன் நண்பர் நெதன்யாகுவை ஒருதலைபட்சமாகப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தான் பிறந்த அன்றே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்ததாக ஒரு பெருமிதத்தோடு அவர் பேசினார். ஆனால், அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் எவ்வளவு முதிர்ச்சியோடு சிந்தித்தார் தெரியுமா? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1947-லேயே இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு கேட்டு நேருவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய நேரு, 'யூதர்கள் மீது எனக்குப் பரிதாபம் இருக்கிறது, ஆனால் அதே சமயம் அரேபிய மக்கள் (பாலஸ்தீனம்) படும் துன்பமும் என் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்காமல், இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்' என்று நடுநிலையோடு கூறினார். பிரதமர் மோடி இப்போது ஒரு தரப்பை மட்டும் வெட்கமின்றி ஆதரித்துப் பேசுவது, இந்தியா காலம் காலமாகப் பின்பற்றி வந்த அந்த நடுநிலையான கௌரவத்தைக் குறைப்பது போல இருக்கிறது எனப் பதிவிட்டு பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் படங்களைப் பகிர்ந்திருந்தார். In his address to the Knesset yesterday - which was an unabashed defence of his host - Prime Minister Modi drew attention to the fact that India recognised the new state of Israel on the day he was born. Actually, Albert Einstein had written to Jawaharlal Nehru on June 13, 1947,… pic.twitter.com/TTtkUgJVMF — Jairam Ramesh (@Jairam_Ramesh) February 26, 2026 ஜவஹர்லால் நேரு 1947-ல் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்சம்: இந்தியா யூத மக்களின் துயரங்களுக்கும், நாஜிக்களின் கொடுமைகளுக்கும் ஆழமான அனுதாபம் கொண்டுள்ளது. யூதர்களின் இனவாதக் கொள்கையையும், அரபு மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. வன்முறை தீர்வு அல்ல, ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான தீர்வே சாத்தியம். மூன்றாம் தரப்பு ஆதிக்கம் இருக்கக் கூடாது. `இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி
100 வயதிலும் அப்டேட், அதிசய மனிதர் நல்லகண்ணு - CPI leader M.Veerapandian Interview
100 வயதிலும் அப்டேட், அதிசய மனிதர் நல்லகண்ணு - CPI leader M.Veerapandian Interview
இராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் | DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates
தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!
தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே அந்தச் சினிமாவின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தன. ஒரு மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ள டீசர் விவாதத்தைக் கிளப்பியது. டீசருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அந்தச் சினிமாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே 'கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டதாகவும், அது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள சினிமாக்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தி கேரளா ஸ்டோரி -2 சினிமாவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தச் சினிமாவின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர். படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், டீசரைத் திரும்பப் பெற முடியுமா என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டிருந்தது. டீசர் மற்றும் டிரெய்லரைத் திரும்பப் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஐகோர்ட் வழக்கு தொடர்பான வாதம் முடியும் வரை, அந்தப் படத்தை வெளியிடக் கூடாது எனவும், திரைப்படத்தைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடரும் எனவும் ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா இதற்கிடையே படத் தயாரிப்பாளர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்தச் சினிமாவை மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஐகோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியல்ல. சினிமாவின் பெயரை மாற்ற முடியாது. கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. டீஸரில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த டீஸர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைக் காட்டுகிறது. தலைப்பில் உள்ள 'கோஸ் பியாண்ட்' என்ற வார்த்தை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சினிமாவின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தணிக்கைக் குழு மீண்டும் சினிமாவைப் பார்த்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறிய ஐகோர்ட், சினிமாவை வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?
தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!
தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே அந்தச் சினிமாவின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தன. ஒரு மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ள டீசர் விவாதத்தைக் கிளப்பியது. டீசருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அந்தச் சினிமாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே 'கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டதாகவும், அது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள சினிமாக்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தி கேரளா ஸ்டோரி -2 சினிமாவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தச் சினிமாவின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர். படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், டீசரைத் திரும்பப் பெற முடியுமா என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டிருந்தது. டீசர் மற்றும் டிரெய்லரைத் திரும்பப் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஐகோர்ட் வழக்கு தொடர்பான வாதம் முடியும் வரை, அந்தப் படத்தை வெளியிடக் கூடாது எனவும், திரைப்படத்தைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடரும் எனவும் ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா இதற்கிடையே படத் தயாரிப்பாளர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்தச் சினிமாவை மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஐகோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியல்ல. சினிமாவின் பெயரை மாற்ற முடியாது. கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. டீஸரில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த டீஸர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைக் காட்டுகிறது. தலைப்பில் உள்ள 'கோஸ் பியாண்ட்' என்ற வார்த்தை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சினிமாவின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தணிக்கைக் குழு மீண்டும் சினிமாவைப் பார்த்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறிய ஐகோர்ட், சினிமாவை வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?
`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? - மாற்று திட்டத்துடன் தி.மு.க!
“எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. த.வெ.க - எங்களை கூட்டணி பேச்சுவார்த்தை அழைத்தது” என்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொன்ன கருத்து தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் முடிவை எடுத்துவிட்டதாகவே சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த ஜூம் மீட்டிங்கிற்கு பிறகு, `தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடருவது இனி கடினம். அதற்கான அறிகுறிகள் காங்கிரஸ் கட்சிக்குள் தெரிய துவங்கிவிட்டது' என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். நம்மிடம் பேசிய மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “இத்தனை முறை காட்டாத கடும் நெருக்கடியை தி.மு.க-வுக்கு காங்கிரஸ் கட்சி இந்த முறை காட்டியுள்ளது. குறிப்பாக தி.மு.க-விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. கிரிஷ் சோடங்கர் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு டீம், `த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதனால் கூடுதலான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடலாம்' என்று டெல்லி மேலிடத்திற்கு ஐடியா கொடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வைத்து பரிசோதனை மேற்கொண்டு வரும் ராகுலின் கவனம் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியை வைத்து புதிய கூட்டணியை கட்டமைக்கும் நினைக்கிறார் ராகுல். அதற்கு த.வெ.க வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்கிறார்கள். `அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அனைத்து நிபந்தனைகளையும் த.வெ.க செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக கொடுப்பது கடினம் என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளது. கனிமொழியை காங்கிரஸ் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் சந்தித்த போது இது தான் பிரதான விசயமாக பேசப்பட்டது. மற்றொருபுறம் முதல்வரை சந்தித்துவிட்டு டெல்லி சென்று வேணுகோபாலும், “தி.மு.க சீட் விசயத்தில் இறங்கிவருவது போல தெரியவில்லை. அவர்கள் நாம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்கள் என்று சொன்னதை தொடர்ந்து ராகுல் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. சோனியாவின் கடைசி முடிவுக்காகவே காங்கிரஸ் கட்சி காத்துள்ளது. சோனியா ஒப்புதல் தந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் கூட்டணி விவகாரத்தில் புதிய அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஸ்டாலின் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்டால், ``காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கொடுக்க தி.மு.க தலைமை விரும்பவில்லை. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபாவுக்கு கூட ஒப்புக்கொண்டோம். ஆனால் இனி ராஜ்ய சபாவும் கிடையாது என்கிற மூடுக்கு முதல்வர் வந்துள்ளார். இத்தனை வருடம் நாங்கள் நம்பிக்கையான கூட்டணிகாக இருக்கும் போது, எங்களுக்கே கெடு வைத்து ஆழம்பார்த்தால் நாங்கள் சும்மாஇருப்போமா?” என்கிறார்கள். நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் யார் பக்கம் இருப்பது என்கிற முடிவை எடுக்க உள்ளார்கள். இன்றைய நிலையில் த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி செல்லும் வாய்ப்பும் இருப்பதால் “போனால் போகட்டும்” என்று மாற்று திட்டத்தையும் தி.மு.க-கையில் எடுத்துள்ளது. ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டால், இந்த வாரத்திற்குள் தொகுதியை இறுதி செய்யவும் தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது. இதனால், திமுக காங்கிரஸ் தரப்பில் அடுத்த இரு நாள்களுக்கு அரசியல் அனல் தகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.! Loading…
`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? - மாற்று திட்டத்துடன் தி.மு.க!
“எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. த.வெ.க - எங்களை கூட்டணி பேச்சுவார்த்தை அழைத்தது” என்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொன்ன கருத்து தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் முடிவை எடுத்துவிட்டதாகவே சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த ஜூம் மீட்டிங்கிற்கு பிறகு, `தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடருவது இனி கடினம். அதற்கான அறிகுறிகள் காங்கிரஸ் கட்சிக்குள் தெரிய துவங்கிவிட்டது' என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். நம்மிடம் பேசிய மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “இத்தனை முறை காட்டாத கடும் நெருக்கடியை தி.மு.க-வுக்கு காங்கிரஸ் கட்சி இந்த முறை காட்டியுள்ளது. குறிப்பாக தி.மு.க-விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. கிரிஷ் சோடங்கர் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு டீம், `த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதனால் கூடுதலான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடலாம்' என்று டெல்லி மேலிடத்திற்கு ஐடியா கொடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வைத்து பரிசோதனை மேற்கொண்டு வரும் ராகுலின் கவனம் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியை வைத்து புதிய கூட்டணியை கட்டமைக்கும் நினைக்கிறார் ராகுல். அதற்கு த.வெ.க வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்கிறார்கள். `அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அனைத்து நிபந்தனைகளையும் த.வெ.க செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக கொடுப்பது கடினம் என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளது. கனிமொழியை காங்கிரஸ் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் சந்தித்த போது இது தான் பிரதான விசயமாக பேசப்பட்டது. மற்றொருபுறம் முதல்வரை சந்தித்துவிட்டு டெல்லி சென்று வேணுகோபாலும், “தி.மு.க சீட் விசயத்தில் இறங்கிவருவது போல தெரியவில்லை. அவர்கள் நாம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்கள் என்று சொன்னதை தொடர்ந்து ராகுல் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. சோனியாவின் கடைசி முடிவுக்காகவே காங்கிரஸ் கட்சி காத்துள்ளது. சோனியா ஒப்புதல் தந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் கூட்டணி விவகாரத்தில் புதிய அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஸ்டாலின் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்டால், ``காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கொடுக்க தி.மு.க தலைமை விரும்பவில்லை. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபாவுக்கு கூட ஒப்புக்கொண்டோம். ஆனால் இனி ராஜ்ய சபாவும் கிடையாது என்கிற மூடுக்கு முதல்வர் வந்துள்ளார். இத்தனை வருடம் நாங்கள் நம்பிக்கையான கூட்டணிகாக இருக்கும் போது, எங்களுக்கே கெடு வைத்து ஆழம்பார்த்தால் நாங்கள் சும்மாஇருப்போமா?” என்கிறார்கள். நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் யார் பக்கம் இருப்பது என்கிற முடிவை எடுக்க உள்ளார்கள். இன்றைய நிலையில் த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி செல்லும் வாய்ப்பும் இருப்பதால் “போனால் போகட்டும்” என்று மாற்று திட்டத்தையும் தி.மு.க-கையில் எடுத்துள்ளது. ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டால், இந்த வாரத்திற்குள் தொகுதியை இறுதி செய்யவும் தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது. இதனால், திமுக காங்கிரஸ் தரப்பில் அடுத்த இரு நாள்களுக்கு அரசியல் அனல் தகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.! Loading…
`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு'டு `பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வேணுமா?' | கழுகார்
தவிக்கும் 'பெல்' மாஜி! சீட்டுக்காக மல்லுக்கட்டும் உறவினர்... மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக் குறிவைத்து, இலைக்கட்சி 'பெல்' மாஜியின் உறவினர் தீவிரமாகக் காய் நகர்த்துகிறாராம். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு வயதாகிவிட்டதால், இந்த முறை எப்படியும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறாராம். ஆனால், அதே தொகுதியை மலர்க்கட்சியும் எதிர்பார்ப்பதால் கூட்டணிக்குள் அனல் வீசுகிறது. 'கிணத்தை' காணோம் கதையாக ஆகிவிடப் போகிறதே என்று டென்ஷனான 'பெல்' மாஜியின் உறவினர், 'அந்த கட்சிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், அடுத்து நமக்கு திரும்ப வரவே வராது. மொத்தமா மறந்திட வேண்டியதுதான்' என்று லோக்கல் நிர்வாகிகளைக் கொம்பு சீவிவிட்டு தனது சீட்டை உறுதிப்படுத்தக் குட்டையைக் குழப்புகிறாராம். 'பெல்' மாஜியும் மலர்க்கட்சியும் படு நெருக்கம் என்பதால், இந்தத் தொகுதி விவகாரத்தில் எந்தப் பக்கம் சாய்வதென புரியாமல் தவித்துப் போயிருக்கிறாராம் 'பெல் மாஜி'. கொந்தளித்த 'பிரதமர்' புள்ளி! மறுக்கப்பட்ட வாய்ப்பு... சமீபத்தில் ஆளும் கட்சியின் மாநாடு கொங்கு மண்டலத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக முதன்மையானவர் தலைநகரில் தங்கிவிட, துணையானவர்தான் அந்த மாநாட்டுக்குச் சென்று வந்திருந்தார். மாநாடு செலவுகளை ஜெயில் மாஜியும், 'கடவுள்' மாண்புமிகுவும் செய்திருந்தார்கள். கூட்டத்தில், 'இளநீர் நகரத்தின்' அடைமொழி கொண்ட நிர்வாகி பேச வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட நிர்வாகிக்கு வாய்ப்பே வழங்கவில்லையாம். கடைசி வரையில் ஒரு பார்வையாளராக மட்டுமே அமரவைத்ததால் கடுப்பாகிவிட்டாராம் அந்த நிர்வாகி. 'ஒரு அணியின் செயலாளரான எனக்கு பேச வாய்ப்புக்கூட தரப்படவில்லை. இப்படி ஓரங்கட்டுகிறார்களே...' என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அந்த நிர்வாகி. கடையநல்லூர் கடமுடா! ஆளாளுக்கு சண்டை... கடந்த 20 ஆண்டுகளாக கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடவே இல்லை. காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வசமே அந்தத் தொகுதி தொடர்ச்சியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதனால், 'இம்முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்கே கடையநல்லூரை ஒதுக்க வேண்டும்' என்று லோக்கல் உடன்பிறப்புகளெல்லாம் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்தச்சூழலில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, இரண்டு சீட்டுகளைத்தான் ஒதுக்க முடியும் என்று முஸ்லீம் லீக் கட்சிக்கு அறிவாலயம் சொல்லிவிட்டதால், கடையநல்லூரை விட்டுக்கொடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாம் முஸ்லீம் லீக் கட்சி. இந்தத் தகவல் அரசல் புரசலாக வெளியே வர, தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க-வினர் கடையநல்லூர் தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி வந்தால் அவர்களும் அதே தொகுதியைத்தான் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். லோக்கல் நெருக்கடி ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளும் டிமாண்ட் செய்வதால் இப்போதே கடையநல்லூரில் கடமுடா சத்தம் அதிகரித்திருக்கிறது. மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு..! கடந்த பிப்ரவரி 23-ம் தேதி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு வேலூரில் நடந்து முடிந்தது. கூட்டத்தில், 'இந்த விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் போர்...' என்று நீட்டி முழங்கிவிட்டுப் புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய். காவல்துறையின் கெடுபிடியான நிபந்தனைகளுக்கு ஈடுகொடுத்து சேர், பந்தல், உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் இம்தியாஸ் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். 'வேலூர் மாவட்டம் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதை உடைத்து, தி.மு.க பொதுச்செயலாளரின் ஊரிலேயே கூட்டத்தைத் திரட்ட முடியும் என்று காட்டவே மூவரும் பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் மூவருமே சீட் எதிர்பார்த்திருக்கிறார்கள்' என்கின்றன த.வெ.க வட்டாரங்கள். அசரவைத்த அருவி மாவட்ட நிர்வாகி! பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வேணுமா... கோயம்பேடு கட்சியில் விருப்பமனு நேர்காணல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்தச் சந்திப்பில், கட்சியின் மீசை பிரமுகர் சீட் கேட்கவும், 'தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள். நமது கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரியம் வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறேன்' என்று சொல்லிவிட்டதாம் தலைமை. அதில், மீசை பிரமுகர் டோட்டல் அப்செட்டாம். அருவி மாவட்டத்திலிருந்து வந்த நிர்வாகி ஒருவர் சீட் கேட்டிருக்கிறார். பத்து ஸ்வீட் பாக்ஸ் வரை செலவு செய்யத் தயார் என்று அவர் சொல்லவும், எதிரில் இருந்தவர்களோ, 'இரண்டு தினத்தில் பணத்தைக் கட்ட முடியுமா' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு 'பிளாக்கில் கொடுக்கவா அல்லது ஒயிட்டில் கொடுக்கவா...' என்று சத்தமாகச் சொல்லி அங்கிருந்த அனைவரையுமே அசர வைத்துவிட்டாராம். அருவி மாவட்ட நிர்வாகியின் வார்த்தைகளைக் கேட்டு குஷியான தலைமையும், 'நமக்கு தொகுதி ஒதுக்கியதும் மற்றவற்றைப் பேசிக் கொள்ளலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்திருக்கிறதாம்.
`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு'டு `பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வேணுமா?' | கழுகார்
தவிக்கும் 'பெல்' மாஜி! சீட்டுக்காக மல்லுக்கட்டும் உறவினர்... மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக் குறிவைத்து, இலைக்கட்சி 'பெல்' மாஜியின் உறவினர் தீவிரமாகக் காய் நகர்த்துகிறாராம். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு வயதாகிவிட்டதால், இந்த முறை எப்படியும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறாராம். ஆனால், அதே தொகுதியை மலர்க்கட்சியும் எதிர்பார்ப்பதால் கூட்டணிக்குள் அனல் வீசுகிறது. 'கிணத்தை' காணோம் கதையாக ஆகிவிடப் போகிறதே என்று டென்ஷனான 'பெல்' மாஜியின் உறவினர், 'அந்த கட்சிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், அடுத்து நமக்கு திரும்ப வரவே வராது. மொத்தமா மறந்திட வேண்டியதுதான்' என்று லோக்கல் நிர்வாகிகளைக் கொம்பு சீவிவிட்டு தனது சீட்டை உறுதிப்படுத்தக் குட்டையைக் குழப்புகிறாராம். 'பெல்' மாஜியும் மலர்க்கட்சியும் படு நெருக்கம் என்பதால், இந்தத் தொகுதி விவகாரத்தில் எந்தப் பக்கம் சாய்வதென புரியாமல் தவித்துப் போயிருக்கிறாராம் 'பெல் மாஜி'. கொந்தளித்த 'பிரதமர்' புள்ளி! மறுக்கப்பட்ட வாய்ப்பு... சமீபத்தில் ஆளும் கட்சியின் மாநாடு கொங்கு மண்டலத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக முதன்மையானவர் தலைநகரில் தங்கிவிட, துணையானவர்தான் அந்த மாநாட்டுக்குச் சென்று வந்திருந்தார். மாநாடு செலவுகளை ஜெயில் மாஜியும், 'கடவுள்' மாண்புமிகுவும் செய்திருந்தார்கள். கூட்டத்தில், 'இளநீர் நகரத்தின்' அடைமொழி கொண்ட நிர்வாகி பேச வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட நிர்வாகிக்கு வாய்ப்பே வழங்கவில்லையாம். கடைசி வரையில் ஒரு பார்வையாளராக மட்டுமே அமரவைத்ததால் கடுப்பாகிவிட்டாராம் அந்த நிர்வாகி. 'ஒரு அணியின் செயலாளரான எனக்கு பேச வாய்ப்புக்கூட தரப்படவில்லை. இப்படி ஓரங்கட்டுகிறார்களே...' என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அந்த நிர்வாகி. கடையநல்லூர் கடமுடா! ஆளாளுக்கு சண்டை... கடந்த 20 ஆண்டுகளாக கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடவே இல்லை. காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வசமே அந்தத் தொகுதி தொடர்ச்சியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதனால், 'இம்முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்கே கடையநல்லூரை ஒதுக்க வேண்டும்' என்று லோக்கல் உடன்பிறப்புகளெல்லாம் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்தச்சூழலில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, இரண்டு சீட்டுகளைத்தான் ஒதுக்க முடியும் என்று முஸ்லீம் லீக் கட்சிக்கு அறிவாலயம் சொல்லிவிட்டதால், கடையநல்லூரை விட்டுக்கொடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாம் முஸ்லீம் லீக் கட்சி. இந்தத் தகவல் அரசல் புரசலாக வெளியே வர, தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க-வினர் கடையநல்லூர் தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி வந்தால் அவர்களும் அதே தொகுதியைத்தான் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். லோக்கல் நெருக்கடி ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளும் டிமாண்ட் செய்வதால் இப்போதே கடையநல்லூரில் கடமுடா சத்தம் அதிகரித்திருக்கிறது. மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு..! கடந்த பிப்ரவரி 23-ம் தேதி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு வேலூரில் நடந்து முடிந்தது. கூட்டத்தில், 'இந்த விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையேதான் போர்...' என்று நீட்டி முழங்கிவிட்டுப் புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய். காவல்துறையின் கெடுபிடியான நிபந்தனைகளுக்கு ஈடுகொடுத்து சேர், பந்தல், உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் இம்தியாஸ் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். 'வேலூர் மாவட்டம் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதை உடைத்து, தி.மு.க பொதுச்செயலாளரின் ஊரிலேயே கூட்டத்தைத் திரட்ட முடியும் என்று காட்டவே மூவரும் பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் மூவருமே சீட் எதிர்பார்த்திருக்கிறார்கள்' என்கின்றன த.வெ.க வட்டாரங்கள். அசரவைத்த அருவி மாவட்ட நிர்வாகி! பிளாக்கா வேணுமா... ஒயிட்டா வேணுமா... கோயம்பேடு கட்சியில் விருப்பமனு நேர்காணல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்தச் சந்திப்பில், கட்சியின் மீசை பிரமுகர் சீட் கேட்கவும், 'தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள். நமது கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரியம் வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறேன்' என்று சொல்லிவிட்டதாம் தலைமை. அதில், மீசை பிரமுகர் டோட்டல் அப்செட்டாம். அருவி மாவட்டத்திலிருந்து வந்த நிர்வாகி ஒருவர் சீட் கேட்டிருக்கிறார். பத்து ஸ்வீட் பாக்ஸ் வரை செலவு செய்யத் தயார் என்று அவர் சொல்லவும், எதிரில் இருந்தவர்களோ, 'இரண்டு தினத்தில் பணத்தைக் கட்ட முடியுமா' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு 'பிளாக்கில் கொடுக்கவா அல்லது ஒயிட்டில் கொடுக்கவா...' என்று சத்தமாகச் சொல்லி அங்கிருந்த அனைவரையுமே அசர வைத்துவிட்டாராம். அருவி மாவட்ட நிர்வாகியின் வார்த்தைகளைக் கேட்டு குஷியான தலைமையும், 'நமக்கு தொகுதி ஒதுக்கியதும் மற்றவற்றைப் பேசிக் கொள்ளலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்திருக்கிறதாம்.
``இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது - நடிகர் மன்சூர் அலிகான்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணு நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி மறைந்துவிட்டார், தனக்கென ஒரு சிறு சில்லறையைக் கூடச் சேர்க்கத் தெரியாத செங்கொடி வேந்தன் மறைந்துவிட்டார் என்று உலகம் சொல்லாது. மாறாக எளிய வாழ்க்கைக்குச் சிறந்த உதாரணமாக விளங்கியவர் மறைந்துவிட்டார் என்றே சொல்லும். இந்தியாவில் கம்யூனிசம் தோன்றிய காலத்திலேயே நம்மிடையே உதித்து, ஒரு தமிழனாக இந்தச் சமூகத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு எளிய தலைவரை இப்போது நம்மால் பார்க்க முடிவதில்லை. ஐயா மறைந்துவிடவில்லை. நல்லகண்ணு அவர்கள் எரிக்கப்படப் போவதுமில்லை, புதைக்கப்படப் போவதுமில்லை. அவர் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையுமே இந்த மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டார். அவர் விதைத்த விதைகள் இப்போது மாணவ, மாணவிகளாக, ஆயிரக்கணக்கான 'இளம் நல்லகண்ணுகளாக' தமிழகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனிடம் இந்த நாடு அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவன் சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம் (இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்). ஜனநாயகம் என்பது பிணநாயகமாக மாறிப்போன இக்காலகட்டம் இப்படியே தொடர்ந்துவிடாது. மன்சூர் அலிகான் இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கி, நாளைய தமிழகத்தில் ஒரு புரட்சியை அவர் மறைவு நிச்சயம் வெடிக்கச் செய்யும். உண்மையான ஜனநாயகம் மலரும். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்' என்பதற்கு இணங்க, இந்த மண்ணுலகில் ஒப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். செம்மாந்த இளைஞர்கள் மூலம் உண்மையான ஜனநாயகத்தைப் படைப்பதற்காகவே இந்த மாத்தமிழன் மறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். என்றார். நல்லகண்ணு: அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம் - நடிகர் பார்த்திபன்
`தோழருக்கு செவ்வணக்கம்' - வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி!
`தோழருக்கு செவ்வணக்கம்' - வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி!
'80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் விஜய்?' - குழப்பத்தில் நிர்வாகிகள்!
தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்போகிறார் என பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலால் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். TVK VIJAY தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியிருந்தது. விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 பேர் விருப்ப மனு வாங்கியதாகவும், மொத்தமாக 50,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாவும் கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. நிரப்பிய விருப்ப மனுக்களை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்ப மனுக்களை சமர்பித்திருந்தனர். இடையில் ஒரு நாள் வீடியோ கால் மூலம் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், 'இத்தனை பேருக்கும் நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிப்பது பெரும் சவாலாக இருக்கும். அதனால் தொகுதிக்கு 2-3 பேரின் பெயரை நீங்களே டிக் அடித்து கொடுங்கள். அவர்களை மட்டும் பரிசீலிக்கலாம்' என்றார். TVK Vijay அதன்படி மா.செக்களும் ஒரு விருப்பப்பட்டியலை தலைமைக்கு கொடுத்திருந்தனர். வேட்பாளர் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்கிற தகவலும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென கடந்த இரண்டு நாட்களாக கட்சிக்குள் புதிய தகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது. அதாவது, 'முதற்கட்டமாக 80 வேட்பாளர்களை விஜய் டிக் அடித்து முடிக்க, பட்டியலும் ரெடியாகிவிட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி தலைவரே முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பை வெளியிடப்போகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் வாரத்துக்குள் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்' கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றனர். விருப்ப மனு தாக்கல் செய்த நிர்வாகிகள் காதிலும் இந்த தகவல் விழ அவர்கள் ஒருவித அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். 'விருப்ப மனு விநியோகத்தை அவ்வளவு படோபடமாக நடத்திவிட்டு, யாருக்குமே நேர்காணல் நடத்தாமல் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்தால் என்ன நியாயம்? எல்லா கட்சிகளிலும் நேர்காணல் என்பது கண்துடைப்பாகத்தான் நடக்கிறது. இங்கே அப்படி இருக்காது என நினைத்தோம். ஆனால், இப்போது வெளிவரும் தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதும் இந்த தகவல் உண்மையாக இருக்காது என நம்புகிறோம். தலைமையிலிருந்து வேட்பாளர் தேர்வு பற்றி முறையாக தகவல்களை பரிமாற வேண்டும்' என்கிறார் டெல்டாவை சேர்ந்த மா.செ ஒருவர். குழம்பி நிற்கும் நிர்வாகிகளுக்கு தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! Loading…
'80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் விஜய்?' - குழப்பத்தில் நிர்வாகிகள்!
தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்போகிறார் என பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலால் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். TVK VIJAY தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியிருந்தது. விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 பேர் விருப்ப மனு வாங்கியதாகவும், மொத்தமாக 50,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாவும் கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. நிரப்பிய விருப்ப மனுக்களை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்ப மனுக்களை சமர்பித்திருந்தனர். இடையில் ஒரு நாள் வீடியோ கால் மூலம் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், 'இத்தனை பேருக்கும் நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிப்பது பெரும் சவாலாக இருக்கும். அதனால் தொகுதிக்கு 2-3 பேரின் பெயரை நீங்களே டிக் அடித்து கொடுங்கள். அவர்களை மட்டும் பரிசீலிக்கலாம்' என்றார். TVK Vijay அதன்படி மா.செக்களும் ஒரு விருப்பப்பட்டியலை தலைமைக்கு கொடுத்திருந்தனர். வேட்பாளர் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்கிற தகவலும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென கடந்த இரண்டு நாட்களாக கட்சிக்குள் புதிய தகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது. அதாவது, 'முதற்கட்டமாக 80 வேட்பாளர்களை விஜய் டிக் அடித்து முடிக்க, பட்டியலும் ரெடியாகிவிட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி தலைவரே முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பை வெளியிடப்போகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் வாரத்துக்குள் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்' கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றனர். விருப்ப மனு தாக்கல் செய்த நிர்வாகிகள் காதிலும் இந்த தகவல் விழ அவர்கள் ஒருவித அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். 'விருப்ப மனு விநியோகத்தை அவ்வளவு படோபடமாக நடத்திவிட்டு, யாருக்குமே நேர்காணல் நடத்தாமல் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்தால் என்ன நியாயம்? எல்லா கட்சிகளிலும் நேர்காணல் என்பது கண்துடைப்பாகத்தான் நடக்கிறது. இங்கே அப்படி இருக்காது என நினைத்தோம். ஆனால், இப்போது வெளிவரும் தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதும் இந்த தகவல் உண்மையாக இருக்காது என நம்புகிறோம். தலைமையிலிருந்து வேட்பாளர் தேர்வு பற்றி முறையாக தகவல்களை பரிமாற வேண்டும்' என்கிறார் டெல்டாவை சேர்ந்த மா.செ ஒருவர். குழம்பி நிற்கும் நிர்வாகிகளுக்கு தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! Loading…
நல்லகண்ணு: அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம் - நடிகர் பார்த்திபன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகர் பார்த்திபன், நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்னும் மறையாத ஐயா நல்லகண்ணு. கண் நன்றாக இருந்தால் பார்வை நன்றாக இருக்கும். ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்வியலில் நல்ல பார்வை கொண்ட, நேர்மையான, உண்மையான, தூய்மையான என எல்லா வார்த்தைகளுக்கும் உதாரணமானவர். நல்லகண்ணு இன்று ஐயாவுக்கு மாலை, மரியாதை செய்த அரசியல்வாதிகளில் சிலரைத் தவிர அவரைப் பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஐயாவைச் சிலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் பெரும்பாலான படங்களில் சிவப்பு சிந்தனை பற்றிய சிந்தனையைப் பேசியிருப்பேன். அதையெல்லாம் அவர் பாராட்டியிருக்கிறார். இந்த உலகில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்வதே அரசியல். ஐயா ஒரு சிறந்த அரசியல்வாதி. தியாகத் திருவிளக்கு தோழர் நல்லகண்ணு | இயக்குநர் வ.கௌதமனின் உருக வைக்கும் பாடல்! | Ananda Vikatan இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் ஏன் ஐயாவைப் போல இருக்க முடியவில்லை என்பதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. மக்களும் காரணம். இந்த முறையாவது வாக்குக்கு காசு வாங்காமல் வாக்களித்தால், காசு கொடுக்கும் அரசியல்வாதிகள் முகத்தில் அந்தக் காசைத் தூக்கி வீசினால் பாடம் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். ஐயா மிகப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். பணத்தால் ஐயாவை வாங்க முடியவில்லை. நடிகர் பார்த்திபன் அரசு கொடுத்த அன்பளிப்பைக்கூட அதற்கு மேல் தன் கைகாசைப் போட்டு அரசுக்கே கொடுத்தவர். அவரைப்போல வாழ்வது கஷ்டம் என்றாலும், அவரிடமிருந்து ஒரு விஷயத்தையாவது இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும். ஐயாவின் உடல் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இறந்த பிறகும் இந்தச் சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற அவரின் எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரைப் பார்த்து நானும் நீண்ட நாள்களுக்கு முன்பே உடல் தானம் செய்திருக்கிறேன். இதையே என் வீர வணக்கமாக அவருக்குச் செலுத்துகிறேன் என்றார். Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள் - நடிகர் பார்த்திபன்
நல்லகண்ணு: அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம் - நடிகர் பார்த்திபன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகர் பார்த்திபன், நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்னும் மறையாத ஐயா நல்லகண்ணு. கண் நன்றாக இருந்தால் பார்வை நன்றாக இருக்கும். ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்வியலில் நல்ல பார்வை கொண்ட, நேர்மையான, உண்மையான, தூய்மையான என எல்லா வார்த்தைகளுக்கும் உதாரணமானவர். நல்லகண்ணு இன்று ஐயாவுக்கு மாலை, மரியாதை செய்த அரசியல்வாதிகளில் சிலரைத் தவிர அவரைப் பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஐயாவைச் சிலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் பெரும்பாலான படங்களில் சிவப்பு சிந்தனை பற்றிய சிந்தனையைப் பேசியிருப்பேன். அதையெல்லாம் அவர் பாராட்டியிருக்கிறார். இந்த உலகில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்வதே அரசியல். ஐயா ஒரு சிறந்த அரசியல்வாதி. தியாகத் திருவிளக்கு தோழர் நல்லகண்ணு | இயக்குநர் வ.கௌதமனின் உருக வைக்கும் பாடல்! | Ananda Vikatan இப்போது இருக்கும் அரசியல்வாதிகளால் ஏன் ஐயாவைப் போல இருக்க முடியவில்லை என்பதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. மக்களும் காரணம். இந்த முறையாவது வாக்குக்கு காசு வாங்காமல் வாக்களித்தால், காசு கொடுக்கும் அரசியல்வாதிகள் முகத்தில் அந்தக் காசைத் தூக்கி வீசினால் பாடம் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். ஐயா மிகப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். பணத்தால் ஐயாவை வாங்க முடியவில்லை. நடிகர் பார்த்திபன் அரசு கொடுத்த அன்பளிப்பைக்கூட அதற்கு மேல் தன் கைகாசைப் போட்டு அரசுக்கே கொடுத்தவர். அவரைப்போல வாழ்வது கஷ்டம் என்றாலும், அவரிடமிருந்து ஒரு விஷயத்தையாவது இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும். ஐயாவின் உடல் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இறந்த பிறகும் இந்தச் சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற அவரின் எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரைப் பார்த்து நானும் நீண்ட நாள்களுக்கு முன்பே உடல் தானம் செய்திருக்கிறேன். இதையே என் வீர வணக்கமாக அவருக்குச் செலுத்துகிறேன் என்றார். Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள் - நடிகர் பார்த்திபன்
மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும் ஏராளமான கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நிறைவேற்றி வருகின்றன. மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மொத்தம் ரூ. 80, 952 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரவை விட செலவு அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 74,427 கோடியாக இருந்த பட்ஜெட் இப்போது 8.8 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதில் திட்டச் செலவு ரூ. 48,164 கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. அதே போன்று சொத்து வரியும் அதிகரிக்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் வடிகால் பிரிவுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் பூசன் மாநகராட்சி கமிஷனர் பூஷன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருவாயை அதிகரிக்க மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கும் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவதற்குக் கூடுதல் எஃப்எஸ்ஐ, டிடிஆர் பயன்படுத்துவதற்கான கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும் பொழுதுபோக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் ரூ.500 கோடி வருவாய் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையைச் சரி செய்ய ஏற்கனவே இருக்கும் வைப்புத் தொகையில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கடற்கரை சாலையை வர்சோவாவில் இருந்து தகிசர் வரை நீட்டிக்க ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காமாட்டிபுரா பகுதியில் 16 மாடியில் புதிய மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பஸ் போக்குவரத்தை இயக்கி வரும் பெஸ்ட் நிர்வாகம் தங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கும்படி கேட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி பட்ஜெட்டில் வெறும் ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.7456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கட்டிடங்களின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தீயணைப்புக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?
மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும் ஏராளமான கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நிறைவேற்றி வருகின்றன. மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மொத்தம் ரூ. 80, 952 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரவை விட செலவு அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 74,427 கோடியாக இருந்த பட்ஜெட் இப்போது 8.8 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதில் திட்டச் செலவு ரூ. 48,164 கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. அதே போன்று சொத்து வரியும் அதிகரிக்கப்படவில்லை. தண்ணீர் மற்றும் வடிகால் பிரிவுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் பூசன் மாநகராட்சி கமிஷனர் பூஷன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருவாயை அதிகரிக்க மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கும் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவதற்குக் கூடுதல் எஃப்எஸ்ஐ, டிடிஆர் பயன்படுத்துவதற்கான கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும் பொழுதுபோக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் ரூ.500 கோடி வருவாய் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையைச் சரி செய்ய ஏற்கனவே இருக்கும் வைப்புத் தொகையில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கடற்கரை சாலையை வர்சோவாவில் இருந்து தகிசர் வரை நீட்டிக்க ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காமாட்டிபுரா பகுதியில் 16 மாடியில் புதிய மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பஸ் போக்குவரத்தை இயக்கி வரும் பெஸ்ட் நிர்வாகம் தங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கும்படி கேட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி பட்ஜெட்டில் வெறும் ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.7456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கட்டிடங்களின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தீயணைப்புக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?
`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பயணம் இது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் மோடி. அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுப்பினர்கள் 'மோடி, மோடி' என முழக்கமிட்டு எழுந்து நின்று உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, ``இஸ்ரேல் இந்தியாவால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன். இங்கு உரையாற்றுவது ஒரு சிறப்பு மற்றும் மரியாதை. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு இன்று நேற்று தொடங்கியதல்ல, இது 2000 ஆண்டுகளுக்கு மேலானது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி யூதர்களின் புனித நூல்களான 'தால்முட்' மற்றும் 'எஸ்தர் புத்தகம்' ஆகியவற்றில் இந்தியாவுடனான வணிகத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம், துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது. மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாத 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையைக் கொண்டுள்ளது. காசா பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். என்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நாடாளுமன்ற கௌரவமான 'க்னெசெட் சபாநாயகர் பதக்கம்' முதல் முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பதக்கத்தைப் பெற்ற பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``எனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தாழ்மையுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவம் ஒரு தனிநபருக்கானது அல்ல, மாறாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நீடித்த நட்புறவு மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களுக்கான அங்கீகாரம் எனப் பதிவிட்டிருந்தார். விருதுடன் மோடி ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அந்த நாட்டின் மிக உயரிய விருதான 'கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீனம்' (Grand Collar of the State of Palestine) விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடி இணைந்துள்ளார். இஸ்ரேல்: ``'மோடி ஹக்' மிகவும் சிறப்பு வாய்ந்தது.! - நெகிழ்ந்த நெதன்யாகு
`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பயணம் இது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் மோடி. அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுப்பினர்கள் 'மோடி, மோடி' என முழக்கமிட்டு எழுந்து நின்று உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, ``இஸ்ரேல் இந்தியாவால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன். இங்கு உரையாற்றுவது ஒரு சிறப்பு மற்றும் மரியாதை. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு இன்று நேற்று தொடங்கியதல்ல, இது 2000 ஆண்டுகளுக்கு மேலானது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி யூதர்களின் புனித நூல்களான 'தால்முட்' மற்றும் 'எஸ்தர் புத்தகம்' ஆகியவற்றில் இந்தியாவுடனான வணிகத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம், துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது. மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாத 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையைக் கொண்டுள்ளது. காசா பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். என்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நாடாளுமன்ற கௌரவமான 'க்னெசெட் சபாநாயகர் பதக்கம்' முதல் முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பதக்கத்தைப் பெற்ற பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``எனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தாழ்மையுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவம் ஒரு தனிநபருக்கானது அல்ல, மாறாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நீடித்த நட்புறவு மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களுக்கான அங்கீகாரம் எனப் பதிவிட்டிருந்தார். விருதுடன் மோடி ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அந்த நாட்டின் மிக உயரிய விருதான 'கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீனம்' (Grand Collar of the State of Palestine) விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடி இணைந்துள்ளார். இஸ்ரேல்: ``'மோடி ஹக்' மிகவும் சிறப்பு வாய்ந்தது.! - நெகிழ்ந்த நெதன்யாகு
நல்லகண்ணு: அண்ணா, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை இவரிடம் பார்த்தேன் - ரஜினிகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணு அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``நான் ஓமந்தூராரைப் பார்த்ததில்லை, அறிஞர் அண்ணாவை, காமராஜரை, கக்கனைப் பார்த்ததில்லை. அவர்கள் எல்லோரையும் சேர்த்தது போல ஐயா நல்லகண்ணுவைப் பார்த்தேன். நல்லவராக, நேர்மையானவராக, எளிமையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. மாபெரும் ஆத்மா தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம் என்றார். அதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``ஐயா நல்லகண்ணு அவரின் உடலை மருத்துவமனைக்குக் கொடுத்திருக்கிறார். உண்மையில் ஈடு இணையில்லா இழப்பு இது. நிச்சயம் நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என இரங்கல் தெரிவித்தார். `தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வென்றவர் நல்லகண்ணு ஐயா' - ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கண்ணீர்
நல்லகண்ணு: அண்ணா, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை இவரிடம் பார்த்தேன் - ரஜினிகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணு அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``நான் ஓமந்தூராரைப் பார்த்ததில்லை, அறிஞர் அண்ணாவை, காமராஜரை, கக்கனைப் பார்த்ததில்லை. அவர்கள் எல்லோரையும் சேர்த்தது போல ஐயா நல்லகண்ணுவைப் பார்த்தேன். நல்லவராக, நேர்மையானவராக, எளிமையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. மாபெரும் ஆத்மா தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம் என்றார். அதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``ஐயா நல்லகண்ணு அவரின் உடலை மருத்துவமனைக்குக் கொடுத்திருக்கிறார். உண்மையில் ஈடு இணையில்லா இழப்பு இது. நிச்சயம் நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என இரங்கல் தெரிவித்தார். `தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வென்றவர் நல்லகண்ணு ஐயா' - ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கண்ணீர்

27 C