SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

'டிஜிட்டல் மயமான தமிழக மட்பாண்டக் குறியீடுகள்' - எப்படி இருக்கிறது தொல்லியல் குறியீடு இணையதளம்?

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும் வகையில், தொல்லியல் துறையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட மட்பாண்டக் குறியீடுகளை ஆவணப்படுத்தி, அவற்றை இணையச் செயலியாக மாற்றும் பிரம்மாண்டத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொல்லியல் தளங்களில் கண்டறியப்படும் மட்பாண்ட ஓடுகளில் காணப்படும் கீறல் குறியீடுகள், தமிழி (தமிழ்-பிராமி) மற்றும் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன. மண்பாண்ட குறியீடுகள் தொடக்க கால எழுத்து முறைகளின் பரிணாம வளர்ச்சியையும், தமிழர்களின் பண்பாட்டு வேர்களையும் புரிந்துகொள்வதில் இந்தக் குறியீடுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதனை உலகறியச் செய்யும் நோக்கில், ‘Documentation and Digitization of Graffiti and Tamili Inscribed Potsherds of Tamil Nadu’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) இணைந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளன. இந்த இணையச் செயலியில் 53 இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் கிடைத்த 9,486 உறுதிசெய்யப்பட்ட கீறல் தரவுகள், 42 அடிப்படைக் குறியீடுகள் (Base signs), 544 மாற்று வடிவங்கள் (Variants), 1,521 கூட்டு வடிவங்கள் (Composites) என அனைத்து தரவுகளும் அறிவியல்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. Graffiti Marks ஒவ்வொரு தனித் தனிக் குறியீடுகள், அவை எங்கு கண்டெடுக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் பொருள் என்ன? என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் மற்றும் நூல்கள் tamildigitallibrary.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழகத்தின் தொன்மை வரலாற்றை உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்களின் விரல் நுனியில் காண முடியும். 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

விகடன் 27 Mar 2026 1:07 pm

'டிஜிட்டல் மயமான தமிழக மட்பாண்டக் குறியீடுகள்' - எப்படி இருக்கிறது தொல்லியல் குறியீடு இணையதளம்?

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும் வகையில், தொல்லியல் துறையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட மட்பாண்டக் குறியீடுகளை ஆவணப்படுத்தி, அவற்றை இணையச் செயலியாக மாற்றும் பிரம்மாண்டத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொல்லியல் தளங்களில் கண்டறியப்படும் மட்பாண்ட ஓடுகளில் காணப்படும் கீறல் குறியீடுகள், தமிழி (தமிழ்-பிராமி) மற்றும் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன. மண்பாண்ட குறியீடுகள் தொடக்க கால எழுத்து முறைகளின் பரிணாம வளர்ச்சியையும், தமிழர்களின் பண்பாட்டு வேர்களையும் புரிந்துகொள்வதில் இந்தக் குறியீடுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதனை உலகறியச் செய்யும் நோக்கில், ‘Documentation and Digitization of Graffiti and Tamili Inscribed Potsherds of Tamil Nadu’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) இணைந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளன. இந்த இணையச் செயலியில் 53 இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் கிடைத்த 9,486 உறுதிசெய்யப்பட்ட கீறல் தரவுகள், 42 அடிப்படைக் குறியீடுகள் (Base signs), 544 மாற்று வடிவங்கள் (Variants), 1,521 கூட்டு வடிவங்கள் (Composites) என அனைத்து தரவுகளும் அறிவியல்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. Graffiti Marks ஒவ்வொரு தனித் தனிக் குறியீடுகள், அவை எங்கு கண்டெடுக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் பொருள் என்ன? என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் மற்றும் நூல்கள் tamildigitallibrary.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழகத்தின் தொன்மை வரலாற்றை உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்களின் விரல் நுனியில் காண முடியும். 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

விகடன் 27 Mar 2026 1:07 pm

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் - தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்? தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’ மாவட்ட கள நிலவரம் தூத்துக்குடி 1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது. கீதாஜீவன் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி  ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து  வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர். செல்லப்பாண்டியன் த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள். எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது. 2. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம். தீப்பெட்டி உற்பத்தி பிரதானத் தொழில். ஆரம்ப காலத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தற்போது முழு இயந்திர மற்றும் பகுதி இயந்திர உற்பத்தி என மாற்றம் பெற்றுள்ளது. இத்துடன் மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலை, பட்டாசு மற்றும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது. கடம்பூர் ராஜூ புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய்க்கு பிரசித்தி பெற்றது. முந்தைய தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக தேவர், நாயக்கர், நாடார் ஆகிய சமூக மக்கள் உள்ளனர். இவர்களுடன் பட்டியலினத்தவர்கள், செட்டியார், விஸ்வகர்மா, இஸ்லாமியர்களும் கலந்து வசிக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் மீண்டும் கடம்பூர் ராஜூவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.கவைப் பொறுத்த வரையில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, மாணிக்கராஜா ஆகியோர் சீட் எதிர் பார்க்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசனே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் விநாயகா ரமேஷ் போட்டியிட்டுவார் எனக் கூறப்படுகிறது. கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். கோவில்பட்டி முந்தைய தேர்தலில் டி.டி.வி.தினகரனையே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில்  வீழ்த்தியவர். தொகுதி சார்ந்த பல கோரிக்கைகள் இவரால் முன்வைக்கப்பட்டும் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. மற்றபடி எம்.எல்.ஏ என்ற முறையில் இவரின் செயல்பாடுகள்,  மக்களிடம் எளிய அணுகுமுறையில் குறைபாடில்லை. தற்போதைய நிலவரப்படி மீண்டும் இலை துளிர்க்கும் எனத் தெரிகிறது. 3. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதி. பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதி மற்றும் முழுக்க முழுக்க ஊராட்சிகளையே உள்ளடக்கியுள்ளது. மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. முந்தைய தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.சி.சண்முகையா.   சண்முகையா வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டயலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தேவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூக மக்களும் கலந்து வசிக்கின்றனர். சிட்டிங் எம்.எம்.ஏ சண்முகையா மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவரோடு, தி.மு.க பிரமுகர்களான காசிவிஸ்வநாதன், ராமஜெயம், இளையராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசனின் அட்ராசிட்டியால் தொகுதிக்குள் சண்முகையா மீது அதிருப்தி நிலவுகிறது. ஓட்டப்பிடாரம் ஆனால், தி.மு.க பலமாக இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சுந்தர்ராஜூம் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.கவோ அ.ம.முகவோ வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். 4. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக  தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி  என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது.  இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று  தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள். கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன் பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது. 5. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள  நீர் செழிப்பான தொகுதி ஸ்ரீவைகுண்டம். நெல், வாழை விவசாயமே முக்கியத் தொழில். நவதிருப்பதி, நவ கைலாயங்கள், தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவை அமைந்துள்ளது. முந்தைய தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், தவிர தேவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர் சம பலத்தில் உள்ளனர். ஊர்வசி அமிர்தராஜ் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், சிட்டிங்  எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜே போட்டியிடுவார் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் காவல்காடு சொர்ணகுமார் போட்டியிடலாம். அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனே மீண்டும் களமிறங்குவார் எனப் பேசப்படுகிறது. இத்தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 126 பேர் ஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வரும் சென்னை, கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் கல்வி பயின்றுள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், ஏரல் பேரூராட்சிகளில் இவர் நடத்தி வரும் “ஊர்வசி இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி”யில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 615 பேருக்கு மாதந்தோறும் ரூ,500 உதவித்தொகை எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார். சண்முகநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி தன் சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்து வருவது இவருக்கு ப்ளஸ். அதே நேரத்தில் தொகுதிக்குள் தலைகாட்டுவதில்லை. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என இவர் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி அலையை வைத்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைக்கிறார் சண்முகநாதன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் தேர்தல் வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இருப்பினும் வெற்றிக்காக காங்கிரஸ், அ.தி.மு.க இரு கட்சிகளுமே உழைக்க வேண்டும். போட்டி கடுமையாகவே உள்ளது, 6.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தையும் கால்நாடை வளர்ப்பையும் கொண்டது. இங்கு விளையும் குண்டுமிளகாய் சிறப்பு பெற்றது.  கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்றவையும் பயிரிடப்படுகிறது.  வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடித்தொழில், உப்பள தொழில்,  கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.   நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை. மார்க்கண்டேயன் விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பேரூராட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் ஊராட்சிகளே. மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.   முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். ரெட்டியார், நாயக்கர், தேவர், நாடார், வாதியார் ஆகிய சமூக மக்கள் இருந்தாலும்  வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக மக்களே உள்ளனர். தி.மு.க சார்பில் மீண்டும் மார்க்கண்டேயனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், காந்தி காமாட்சி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். விளாத்திகுளம் வறண்ட பூமியான விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக்கிட ”வனத்திற்குள் விளாத்திகுளம்” என்ற நோக்கில், இவர் தலைமையேற்று நடத்தி வரும்  மரங்கள் மக்கள் இயக்கம் மூலம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் இலக்கில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக அணுகுதல், உதவி செய்யும் பாங்கு ஆகியவை சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலையே தெரிகிறது.  

விகடன் 27 Mar 2026 1:00 pm

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் - தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்? தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’ மாவட்ட கள நிலவரம் தூத்துக்குடி 1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது. கீதாஜீவன் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி  ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து  வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர். செல்லப்பாண்டியன் த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள். எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது. 2. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம். தீப்பெட்டி உற்பத்தி பிரதானத் தொழில். ஆரம்ப காலத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தற்போது முழு இயந்திர மற்றும் பகுதி இயந்திர உற்பத்தி என மாற்றம் பெற்றுள்ளது. இத்துடன் மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலை, பட்டாசு மற்றும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது. கடம்பூர் ராஜூ புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய்க்கு பிரசித்தி பெற்றது. முந்தைய தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக தேவர், நாயக்கர், நாடார் ஆகிய சமூக மக்கள் உள்ளனர். இவர்களுடன் பட்டியலினத்தவர்கள், செட்டியார், விஸ்வகர்மா, இஸ்லாமியர்களும் கலந்து வசிக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் மீண்டும் கடம்பூர் ராஜூவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.கவைப் பொறுத்த வரையில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, மாணிக்கராஜா ஆகியோர் சீட் எதிர் பார்க்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசனே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் விநாயகா ரமேஷ் போட்டியிட்டுவார் எனக் கூறப்படுகிறது. கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். கோவில்பட்டி முந்தைய தேர்தலில் டி.டி.வி.தினகரனையே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில்  வீழ்த்தியவர். தொகுதி சார்ந்த பல கோரிக்கைகள் இவரால் முன்வைக்கப்பட்டும் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. மற்றபடி எம்.எல்.ஏ என்ற முறையில் இவரின் செயல்பாடுகள்,  மக்களிடம் எளிய அணுகுமுறையில் குறைபாடில்லை. தற்போதைய நிலவரப்படி மீண்டும் இலை துளிர்க்கும் எனத் தெரிகிறது. 3. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதி. பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதி மற்றும் முழுக்க முழுக்க ஊராட்சிகளையே உள்ளடக்கியுள்ளது. மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. முந்தைய தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.சி.சண்முகையா.   சண்முகையா வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டயலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தேவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூக மக்களும் கலந்து வசிக்கின்றனர். சிட்டிங் எம்.எம்.ஏ சண்முகையா மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவரோடு, தி.மு.க பிரமுகர்களான காசிவிஸ்வநாதன், ராமஜெயம், இளையராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசனின் அட்ராசிட்டியால் தொகுதிக்குள் சண்முகையா மீது அதிருப்தி நிலவுகிறது. ஓட்டப்பிடாரம் ஆனால், தி.மு.க பலமாக இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சுந்தர்ராஜூம் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.கவோ அ.ம.முகவோ வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். 4. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக  தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி  என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது.  இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று  தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள். கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன் பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது. 5. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள  நீர் செழிப்பான தொகுதி ஸ்ரீவைகுண்டம். நெல், வாழை விவசாயமே முக்கியத் தொழில். நவதிருப்பதி, நவ கைலாயங்கள், தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவை அமைந்துள்ளது. முந்தைய தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், தவிர தேவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர் சம பலத்தில் உள்ளனர். ஊர்வசி அமிர்தராஜ் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், சிட்டிங்  எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜே போட்டியிடுவார் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் காவல்காடு சொர்ணகுமார் போட்டியிடலாம். அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனே மீண்டும் களமிறங்குவார் எனப் பேசப்படுகிறது. இத்தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 126 பேர் ஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வரும் சென்னை, கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் கல்வி பயின்றுள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், ஏரல் பேரூராட்சிகளில் இவர் நடத்தி வரும் “ஊர்வசி இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி”யில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 615 பேருக்கு மாதந்தோறும் ரூ,500 உதவித்தொகை எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார். சண்முகநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி தன் சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்து வருவது இவருக்கு ப்ளஸ். அதே நேரத்தில் தொகுதிக்குள் தலைகாட்டுவதில்லை. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என இவர் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி அலையை வைத்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைக்கிறார் சண்முகநாதன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் தேர்தல் வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இருப்பினும் வெற்றிக்காக காங்கிரஸ், அ.தி.மு.க இரு கட்சிகளுமே உழைக்க வேண்டும். போட்டி கடுமையாகவே உள்ளது, 6.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தையும் கால்நாடை வளர்ப்பையும் கொண்டது. இங்கு விளையும் குண்டுமிளகாய் சிறப்பு பெற்றது.  கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்றவையும் பயிரிடப்படுகிறது.  வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடித்தொழில், உப்பள தொழில்,  கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.   நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை. மார்க்கண்டேயன் விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பேரூராட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் ஊராட்சிகளே. மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.   முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். ரெட்டியார், நாயக்கர், தேவர், நாடார், வாதியார் ஆகிய சமூக மக்கள் இருந்தாலும்  வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக மக்களே உள்ளனர். தி.மு.க சார்பில் மீண்டும் மார்க்கண்டேயனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், காந்தி காமாட்சி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். விளாத்திகுளம் வறண்ட பூமியான விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக்கிட ”வனத்திற்குள் விளாத்திகுளம்” என்ற நோக்கில், இவர் தலைமையேற்று நடத்தி வரும்  மரங்கள் மக்கள் இயக்கம் மூலம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் இலக்கில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக அணுகுதல், உதவி செய்யும் பாங்கு ஆகியவை சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலையே தெரிகிறது.  

விகடன் 27 Mar 2026 1:00 pm

பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பா.ம.க கட்சி ராமதாஸ் - அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால் இரண்டாக பிளவுண்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்' என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க அணி எ.டி.ஏ கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளையும் பிரித்து வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார். அதே போல, ராமதாஸ் தரப்பு பா.ம.க அணி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ராமதாஸ், சசிகலா இதற்கு முன்னரே ராமதாஸ் தரப்பு, ``கட்சியின் நிறுவனர் நான் என்ற ரீதியில் பா.ம.க-வின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனக் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதையும் மீறி அன்புமணி தரப்பு கட்சியின் அடையாளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ``பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக என்னை அறிவிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் (நேற்று) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் பாமகவின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்திருக்கிறது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

விகடன் 26 Mar 2026 7:20 pm

``அடுத்த 60 நாள்களுக்கு... - இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியிருந்தார். அதனால், இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மோடி அதில், ``மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ளதால், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடைவெளியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கையிருப்புத் திறன் 74 நாள்களாக உள்ள நிலையில், தற்போது 60 நாள்களுக்குத் தேவையான உண்மையான இருப்பு கைவசம் உள்ளது. இதில் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நிலத்தடி குகைகளில் சேமிக்கப்பட்டுள்ள அவசர கால இருப்புக்களும் அடங்கும். இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருவதால், எரிபொருள் ஓட்டம் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை. காஸ் சிலிண்டர் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதே தவிர, அது உண்மையான தட்டுப்பாட்டால் ஏற்பட்டது அல்ல. உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது தினசரி தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான எல்பிஜி சரக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு என்பது தட்டுப்பாட்டுக்கான மாற்று அல்ல. அது தூய்மையான எரிசக்தியை நோக்கிய நீண்ட காலத் திட்டம். எனவே, இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பற்றாக்குறை குறித்துத் தவறான காணொளிகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலை வேண்டாம்; சிலிண்டர் இல்லாமலும் சமைக்க சில ஐடியாக்கள்!

விகடன் 26 Mar 2026 6:45 pm

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வே லூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்பட ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி மட்டுமே அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற நால்வரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க-வின் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் மீண்டும் போட்டியிட ஆயத்தமாகி, பிரசாரக் களத்துக்கும் சென்றுவிட்டனர். `களம் எப்படி இருக்கிறது?’ என்பதை அவர்களின் தொகுதிகளில் இறங்கி அலசினோம். சிக்ஸர் அடிக்கும் அப்பு... டக்அவுட் ஆகும் கார்த்தி? வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்பு மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த அப்புவை, இந்த முறை தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் அட்ராசிட்டியே மேலேற்றிவிடும் என்கிறார்கள். `மாநகராட்சியைக் குட்டிச்சுவராக்கியது, கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வினருடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது’ என கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடந்த 19-ம் தேதி, தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் வழங்கியதாக கார்த்திகேயனின் ஆதரவாளரான மேயர் சுஜாதா உட்பட மூன்றுபேர் மீது சத்துவாச்சாரி போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார் இவையெல்லாம் தி.மு.க தலைமையின் கவனத்திற்குச் செல்லவே, 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின்போது, `வேலூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்துவிடலாமா?’ என்று ஸ்டாலின் கேட்டதற்கு, `சரிங்க, தலைவரே’ என்று கார்த்திகேயன் தலையாட்டிவிட்டு வந்ததுதான் உடன்பிறப்புகளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வேலூர் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. அதற்கு முன்புவரை இரண்டு கட்சிகளுமே மாறி மாறி கூட்டணிக்கே வேலூரைத் தாரைவார்த்தன. எனவே, `மீண்டும் அந்தவொரு சூழலை உருவாக்காமல், அ.தி.மு.க-வுடன் தி.மு.க நேரடியாக மோத வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் வேலூர் உடன்பிறப்புகள். தற்போதைய சூழலில், களம் எஸ்.ஆர்.கே.அப்புக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிறார்கள். வேலழகன் வெறுப்பு பிரசாரம்... நந்தகுமார் சாதுர்யம்! வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான த.வேலழகன் மீண்டும் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதமே தொகுதிக்குள் சோஷியல் மீடியா டீமை இறக்கி, சிட்டிங் எம்.எல்.ஏ-வான தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு எதிராக கடுமையான தனிமனித தாக்குதலையும், வெறுப்பு பிரசாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த நந்தகுமாரே மூன்றாவது முறையாகவும் களமிறங்குகிறார். தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேடைக்கு மேடை பேசி, தனக்கெதிரான வெறுப்பு பிரசாரத்துக்கும் பதிலடி தந்துகொண்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் நந்தகுமாருக்குச் சாதகமாகவே இருக்கிறது. பல்டி அடித்த சுகுமார்... படுஅப்செட்டில் பாட்டாளிகள்! ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.எம்.சுகுமார், கடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்ட செயலாளர் காந்தியோடு மோதி 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது அமைச்சர் பலத்துடன் வலம் வரும் காந்தி, மீண்டும் ராணிப்பேட்டையில் களமிறங்குவது உறுதி என்பதால், தொகுதியை த.மா.கா-வுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, பக்கத்துத் தொகுதியான ஆற்காடுக்குத் தாவியிருக்கிறார் சுகுமார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ராணிப்பேட்டை தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட த.மா.கா முடிவு செய்திருப்பதால், தி.மு.க-வுக்கே களம் சாதகமாக அமைந்திருக்கிறது. கடந்த முறை ஆற்காடு தொகுதியில் 19,958 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த பா.ம.க., மீண்டும் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்க, சுகுமாரின் திடீர் வரவால் படுஅப்செட்டில் இருக்கிறார்கள். பாட்டாளிகளின் அதிருப்தியும், விளாப்பாக்கம், கலவை, திமிரி பேரூராட்சிகள் மற்றும் ஆற்காடு நகர்ப் பகுதிகளில் வாழும் அகமுடைய முதலியார், செங்குந்த முதலியார் பிரிவினரிடையே போதிய வரவேற்பு இல்லாததும் சுகுமாருக்கு பின்னடைவாகத் தெரிகிறது. தி.மு.க-வில் மாவட்ட பொருளாளரும் தொழிலதிபருமான ஏ.வி.சாரதி களமிறக்கப்பட்டால், சுகுமாரின் நிலை பரிதாபமாகிவிடும் என்பதே தற்போதைய கள நிலவரம். சு.ரவி, கே.சி.வீரமணி மகிழ்ச்சியில் சு.ரவி... ஷாக் கொடுக்கும் தி.மு.க! அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றிபெற்று தக்கவைத்துக்கொண்டிருக்கும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான சு.ரவி, மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வின் கௌதம சன்னாவைவிட 27,169 வாக்குகள் அதிகமாகப் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் சு.ரவிக்கு `ஷாக்’ தரும் வகையில், தி.மு.க-வில் நெமிலி ஒன்றியச் சேர்மன் பெ.வடிவேலுவின் மனைவி பவானி உட்பட 48 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அவர்களிடம் ஸ்டாலினும் நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். இந்த முறை கூட்டணிக் கட்சிகள் கேட்காததால், தி.மு.க-வே நேரடியாக களமிறங்க முடிவு செய்துவிட்டது. உதயசூரியன் சின்னத்தில் உள்ளூர் வேட்பாளர் களமிறங்கும் பட்சத்தில், சு.ரவி ஆட்டம் கண்டுவிடுவார் என்பதே கள நிலவரம். வீரமணிக்கு வெற்றி முகம்... தெறித்து ஓடும் தேவராஜி! அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி நான்காவது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். கடந்த தேர்தலின்போது தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜியிடம் வெறும் 1091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை, வீரமணி வைட்டமின்களை அள்ளி இறைத்து தொகுதிக்குள் தனக்கான ஆதரவு அலையை உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால் வாணியம்பாடி தொகுதிக்கு மாற விருப்பப்பட்ட தேவராஜியிடம் `ஜோலார்பேட்டையில் போய் வேலையைப் பார்’ என்று தி.மு.க தலைமை `குட்டு’ வைத்து அனுப்பியதால், பின்னங்கால் பிடரியில் அடிக்க தொகுதிப் பக்கம் ஓடிச்சென்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் வீரமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.!

விகடன் 26 Mar 2026 6:16 pm

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ் பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி. ஹோர்மூஸ் நீரிணை வரைபடம் ஈரானும் - அமெரிக்காவும் ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன. இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்? அமெரிக்காவின் நிபந்தனை! இந்தப் போரை நிறுத்த... இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்...' என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது. அதில் 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா - ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்' என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால் ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது. ஈரான் போர்: கச்சா எண்ணெய் ஹார்முஸ் சுங்கச்சாவடி! இதற்கிடையில்தான் 'லாய்ட்ஸ்லிஸ்ட்' (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக 'சுங்கச்சாவடி' (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது. மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு 'நடைமுறை சுங்கச்சாவடி' முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் 'யுவான்' (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் சின்ஹா இந்தியாவின் நிலைபாடு என்ன? இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், 'இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை' என மறுத்துள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது. மொஜ்தபா கமேனி புதிய கட்டணத் திட்டம்! ஈரான் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன. அதில், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது எனக் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் 'நியாயமான வசூல்' - ஈரான்! இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும். எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது. ஒருவேளை சுங்கச்சாவடி அமைந்தால்..? ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் 'பொருளாதாரக் கழுத்துப்பகுதி' போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை பொதுமக்களுக்கான சிக்கல்... கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது. ஹார்முஸ் சட்ட ரீதியான சிக்கல்... சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை 'ஆபத்தான பகுதி' (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும். ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும். ஆதிக்கச் சிக்கல்... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும். தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் 'யுவான்' கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும். ஈரான் போர் சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும். இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்! ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

விகடன் 26 Mar 2026 6:16 pm

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவட்ட கள நிலவரம்.! 1. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தங்கள் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக, சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழ்நாட்டின் முக்கிய மையங்களில் ஒன்றாக பெரம்பலூர் உள்ளது. அதோடு மக்காச்சோளம், பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. prabhakaran இதனுடன், மலைப்பாங்கான பகுதிகள் பல இருப்பதால் கல் குவாரிகளும் பெரும்பான்மையாக செயல்பட்டு மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்கிறது. இந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், உடையார், முத்தரையர், வன்னியர்,  கவுண்டர்கள், ரெட்டியார், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எ ன்று  வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் அடுத்தடுத்து பல சமூகத்தினர் உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதையை சட்டமன்ற உறுப்பினராக பிரபாகரன் இருந்து வருகிறார். மறுபடியும் அவர் சீட் கேட்கிறார். பெரிய அதிருப்தி இல்லை என்றாலும், இந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளியான ஆ.ராசா, வேறு நபரை வேட்பாளராக்க போகிறார் என்று ஆரம்பத்தில் பேச்சு அடிப்பட்டது. perambalur ஆனால், பிரபாகரனை மறுபடியும் வேட்பாளராக்க அவர் ஆசி வழங்கிவிட்டதாக சொல்கிறார்கள். இவரை தவிர, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் ஜெயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ-வும், பெரம்பலுர் ஒன்றிய செயலாளருமான ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் தங்க.கமல் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் முந்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க வில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட பொருளாளருமான பூவை செழியன், முன்னாள் துணை சபாநாயகரும், கழக அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி ஆகியோர் சீட் பெறும் பட்டியலில் முதன்மையில் இருக்கிறார்கள். thamizhselvan நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியையான ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் ஆளாக தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். த.வெ.க-வில் பெரம்பலூர் தொகுதி மாவட்ட செயலாளர் சிவா தான் வேட்பாளர் என்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள், கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்ட காரணிகளால் இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்கவே வாய்ப்பு அதிகம். 2. குன்னம் சட்டமன்ற தொகுதி: தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 - ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக குன்னம் பரிமளித்து வருகிறது. இந்த தொகுதியில், வன்னியர்கள், பட்டியலின மக்கள், உடையார், ​ரெட்டியார்கள், ​முத்தரையர், யாதவர், பிள்ளைமார், செட்டியார் மற்றும் இஸ்லாமியர்கள் என்று பல சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். kunnam விவசாயமே பிரதான தொழிலாக உள்ள தொகுதி என்பதால், பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் செந்துறை வட்டாரப் பகுதிகளில் பருத்தி, முந்திரி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், சுண்ணாம்பு கல் குவாரிகளும், சிமெண்ட் தொழிற்சாலைகளும் இந்த தொகுதி மக்களுக்கு பொருளாதார ஆதாரமாக உள்ளன. இந்த தொகுதி எம்.எல்.ஏ-வாக கடந்த 2011 - 2016 - க்கு பிறகு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். மறுபடியும் இவருக்குத்தான் சீட் என்கிறார்கள். அவர், தொகுதியில் அதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். ss sivasangar அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க இந்த தொகுதியை கேட்டு வந்த நிலையில், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துதான் வேட்பாளர். ஆனால், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரை தவிர பலமான இரண்டாம் கட்ட மாநில நிர்வாகிகள் இல்லாதது மைனஸ். முழுக்க முழுக்க கூட்டணி கட்சியை நம்பி வேலை செய்ய வேண்டிய நிலை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலோ அல்லது அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் முழு வீச்சில் இறங்கி வேலை பார்த்தாலோ மட்டுமே ஐ.ஜே.கே வேட்பாளரால் தி.மு.க வேட்பாளருக்கு டஃப் கொடுக்க முடியும் . நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கீர்த்திவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். keerthivasan ஊருக்கு முன்பாக முதல் ஆளாக வாக்குகள் சேகரித்து வருகிறார். த.வெ.க சார்பில் ரேவதி முத்தமிழ்செல்வன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். களத்தின் பல்வேறு கூறுகளை ஆராயும்போது தற்போதைய சூழலில் உதயசூரியனே பிரகாசிக்கிறது.

விகடன் 26 Mar 2026 6:09 pm

தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' - அதிமுகவினர் ஆதங்கம்!

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொடி காட்டியதால் அவர் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்து வந்தார். அதிமுக-வினர் மட்டுமின்றி திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் கூட சரவணன் தான் வேட்பாளர் என பேசினர். திமுகவில் வேட்பாளர் ரேஸில் உள்ளவர்கள் கூட, சரவணன் எங்களுக்கு ஃடப் கொடுப்பார் என்றனர். தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுக்கும் சரவணன் எல்லோரும் இப்படி பேசிய நிலையில், அதிமுக கூட்டணியில் நேற்று யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் பாஜக-வுக்கு என்றதும் சரவணன் உள்ளிட்ட பலரும் அதிர்ந்தனர். தஞ்சாவூர் சரவணனுக்கு இல்லையானு கேட்டு ஆதங்கப்பட்டனர். இது தஞ்சாவூருக்குள் பேசு பொருளானது. சரவணின் ஆதரவாளர்கள் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை முன்பு திரண்டனர். இந்த தகவல் சென்னையில் இருந்த சரவணனுக்கு சொல்லப்பட, சில நிர்வாகிகள் மூலம், தலைமை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட வேண்டும், யாருக்கும், எதற்கும் நாமே இடம் கொடுக்க கூடாதுனு கலைந்து போக சொன்னாராம். இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான் வேலையை பார்னு எடப்பாடி பழனிசாமியே நம்பிக்கை அளித்தார். இப்போது தொகுதி பாஜக-வுக்கு சென்றது ஏன் எனவும் சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பே சிலரிடம் நீங்கதான் வேட்பாளர், வேலையை தொடங்குங்கள்னு பச்சை கொடி காட்டினாராம். இதில் தஞ்சாவூர் சரவணனுக்கு என்றும் சொல்லியிருக்கிறார். வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்தார். டெல்டா அதிமுக-வில் சோழ மண்டல தளபதியாக வலம் வந்தவர் வைத்திலிங்கம். அவர் அதிமுகவில் எப்படியும் பவருக்கு வந்து விடுவார் என்பதால் பலரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் செல்வதற்கு தயங்கி நின்றனர். அந்த சமயத்தில் முதல் ஆளாக எடப்பாடி பக்கம் சென்றவர் சரவணன். அதன் பின்னரே முக்கிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பின்னால் சென்றனர். வைத்திலிங்கம் அணியில் இருந்த பலரை அதிமுவுக்கு அழைத்து சென்றார். இதனால் சரவணனுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்தார். சரவணனும் வைட்டமின்களை இறக்கி எடப்பாடி கையை வலுப்படுத்தினார். எடப்பாடி தஞ்சாவூர் வரும் போதெல்லாம் விமர்சையான வரவேற்பு கொடுத்தார். நினைத்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்க்கும் வகையில் செல்வாக்குடன் வலம் வந்தார் சரவணன். கட்சியை உண்மையாக நேசிக்கும் உன்னை போன்றவர்களை தான் வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறக்க போறேனு 6 மாதத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார் இபிஎஸ். இரண்டு மாதத்திற்கு முன்பு இபிஎஸ் ஓகே சொல்ல உற்சாகமாக தேர்தல் பணிகளை தொடங்கினார் சரவணன். வார்டு வாரியாக வாக்கு சேகரித்தார். எங்கெல்லாம் வீக் என்று அலசி புள்ளிவிபரம் எடுத்தார். தேர்தல் பணிகளை செய்வதற்கு ஒரு டீமை இறக்கி முடுக்கி விட்டார். 90 சதவீதம் வேலையை முடிச்சிட்டார். தொகுதி மற்றும் வேட்பாளர் அறிவிக்க போறாங்கனு சொல்லிட்டு உற்சாகமாக சென்னை சென்றவர் தொகுதி பாஜக-வுக்கு என்று அறிவிப்பு வந்ததும் சரவணனின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சுக்கு நூறானது. தஞ்சாவூரில் முதல் ஆளாக எடப்பாடி கரத்தை பிடித்த சரவணனின் கையை இபிஎஸ் உதறிவிட்டதாக பலரும் பொறுமினர். அமமுகவில் எப்படி தினகரன், ரெங்கசாமியை கை விட்டாரோ சரவணனுக்கும். அதே போன்ற நிலைதான். சரவணனுக்கு தான் சீட்டுனு சொன்னாங்க, அவரும் பெரிய தொகை செலவு செஞ்சிட்டார், இப்ப தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கிட்டாங்க. சீட்டு இல்லாம சரவணன் தொகுதிக்குள்ள எப்படி போவார், எல்லோர் முகத்திலும் எப்படி முழிப்பார், நம்பிக்கையளித்து நட்டாற்றில் தள்ளி விட்டனர்னு சரவணன் ஆதரவாளர்கள் விம்முகின்றனர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் உள்ளவர்களை எப்படி சமாளிக்க போறேனு தான் தெரியலனு தழுதழுத்திருக்கிறார் சரவணன். இதையறிந்த இபிஎஸ், சவரணனை அழைத்து, ``சரவணா உன்னோட ஆதங்கம் புரியுது, நீ வேற தொகுதியில வேணா நில்லுனு' சொல்லியிருக்கிறார். நீண்ட நேர அமைதிக்கு பின்னர் சரவணன், அஞ்சு வருஷமா என்னோட தொகுதில வேலை செஞ்சிட்டு வெளில போய் எப்படி நிக்க முடியும். என் தொகுதியில நான் சர்வீஸ் செய்யணும், எனக்கு பதவி பெருசில்லை, தஞ்சாவூர் தான் முக்கியம்னு சொன்னாராம். `என்னை நம்பிய உனக்கு நான் நல்லது செய்வேனு' சால்சாப்பு செய்து அனுப்பியிருக்கிறார் இபிஎஸ். சீட் இல்லாமல் போனதும் அரசியல் சார்பின்றி சரவணனுக்காக பலரும் பரிந்து பேசி வருவதாக தெரிவித்தனர். சரவணனிடன் சிலர் கேட்டதுக்கு, `தலைமை எடுக்குற முடிவுக்கு கட்டுப்படணும், சீட்டு இல்லை என்றாலும் கட்சிக்கு உண்மையா இருக்கணும், என்னோட கடமையை மிக சரியா செய்யணும் இப்போதைக்கு இது தான் என் மனசுல ஓடுது' என்றுள்ளாராம். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

விகடன் 26 Mar 2026 5:54 pm

முட்டி மோதும் நிர்வாகிகள்; நண்பரைக் களமிறக்கும் விஜய் டு சீமானுக்கு ஜோதிடரின் அறிவுரை! | கழுகார்

அறுபடை வீட்டில் ஆரம்பித்த சீமான்! ஜோதிடரின் அறிவுரை... தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிவிட்டுதான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இம்முறை, அறுபடை வீட்டிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என கறாராகச் சொல்லிவிட்டாராம் சீமான். அதன்படி, கடந்த மார்ச் 23-ம் காலை கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். அதன்பிறகு, திருத்தணி முருகன் கோவிலில் செருப்பின்றி படியேறி பிரார்த்தனையும் மேற்கொண்டார். மாலை பிரசாரத்தின்போதும் வேட்பாளரை வேலுடன் நிற்க வைத்து முருகர் பாடலை பாடி மகிழ்ந்தார். 'கட்சியின் கொள்கைப்படி விநாயகர் வழிபாடு முரணானது. சீமான் அதுமட்டுமில்லாமல் பிரசாரத்தைத் தொடங்கும் தினத்தன்று உருகி உருகி வழிபாடு செய்ய வேண்டியது ஏன்...' என்று கட்சிக்குள் பலரும் முணுமுணுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் 'ஜோதிடர்' ஒருவர் இருக்கிறாராம். அவர் பேச்சைக் கேட்டுதான் சீமான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம். 'இன்னும் ஜோதிடர் பேச்சைக் கேட்டு என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ...' எனக் கையைப் பிசைகிறார்கள் தம்பிகள். நண்பரைக் களமிறக்கும் விஜய்! முட்டி மோதும் நிர்வாகிகள்... த.வெ.க-வின் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து, அக்கட்சியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் கட்சியில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவந்தார். ஆனால், கட்சியில் தனக்குப் பொறுப்பு வழங்காததால், பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்ததுடன், மனமுடைந்து தூக்க மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அஜிதா ஆக்னல் அந்த பரபரப்புக்கு இடையே, எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜூவுக்கு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கி, அஜிதாவுக்கு 'ஷாக்' கொடுத்தது த.வெ.க தலைமை. 'கட்சிப்பதவிதான் கைவிட்டுப் போய்விட்டது. தூத்துக்குடி தொகுதியையாவது பெற்றுவிடலாம்...' என்று அஜிதாவும், 'சீட்டை பெற்றே ஆக வேண்டும்' என்று சாமுவேல் ராஜூம் ஆளுக்கொரு வழியில் சீட்டுக்காக காய் நகர்த்தினர். ஆனால், 'பிரச்னை எதற்கு?' என, தன் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடியில் களமிறக்கத் தயாராகிறாராம் த.வெ.க தலைவர் விஜய். அதனால், சீட்டை எதிர்பார்த்திருந்த இரண்டு கோஷ்டிகளுமே கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். குமுறலில் காங்கிரஸ்! குளச்சலைக் கேட்கும் தி.மு.க... கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், தலா மூன்றில் திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலில் போட்டியிட்டன. அதில், தலைநகர் தொகுதியான நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் தி.மு.க தோற்றது. ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றது. எனவே, வரும் தேர்தலில் நாகர்கோவிலை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, வெற்றிவாய்ப்புள்ள குளச்சல் தொகுதியை எடுத்துக் கொள்ள முனைப்புக் காட்டுகிறதாம் திமுக. தகவல் தெரிந்து குமுறும் கதர்கள், 'கஷ்டப்பட்டு வேலைபார்த்து வச்சிருக்க தொகுதியை திமுகவுக்கு கொடுத்துட்டு நாங்க எங்கே போறது...' என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம். மிஸ்டர் கழுகு: லிஸ்ட் ரெடி! - மர்மம் காக்கும் ஸ்டாலின்... கிறுகிறுக்கும் சீனியர்கள்! குழப்பத்தில் ஆதவ் அர்ஜுனா பிரசாரத்துக்கு வருவாரா? தவெக பொதுச்செயலாளர்களின் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கத்தில் களமிறங்கவுள்ளார். அதற்கான தேர்தல் பணிகளையும் தொகுதியில் தொடங்கிவிட்டார். த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடவுள்ள பெரம்பூர் தொகுதிக்கு அருகிலேயே வில்லிவாக்கம் அமைந்திருப்பதால், விஜய்யின் தாக்கம் தனது தொகுதியிலும் பிரதிபலிக்கும் என்பது ஆதவ்வின் கணக்கு. இந்தச்சூழலில், ஆதவ்வை தோற்கடிப்பதற்கான திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் அமைச்சர் சேகர்பாபு, தனது சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், வில்லிவாக்கத்தில்தான் முதல் தேர்தல் பணிமனையை திறந்திருக்கிறாராம். TVK ஆதவ் அர்ஜுனா ஆதவ்வுக்கு எதிராக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை களமிறக்குவது குறித்தும் திமுக-வில் ஆலோசிக்கப்படுகிறது. அந்தப் போட்டியை சரிக்கட்ட, விஜய்யை தனது தொகுதிக்குள் இரண்டு நாள்களாவது பிரசாரத்துக்கு அழைத்துவரும் திட்டத்தில் இருக்கிறார் ஆதவ். ஆனால், 'வில்லிவாக்கத்தில் குறுகலான சாலைகளும் சந்துகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அதற்குள் விஜய்யை அழைத்துவந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும்' என்று தடுக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். இதனால், 'பிரசாரத்துக்கு விஜய் வருவாரா... மாட்டாரா...' என்று குழம்பிப் போய் தவிக்கிறாராம் ஆதவ். அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு? வருத்தத்தில் துரை வைகோ! வேற வழியென்ன இருக்கு? தி.மு.க கூட்டணியில், ம.தி.மு.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது அக்கட்சி. ஒரு தொகுதியில் மட்டும் தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கவுள்ளது. இதில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் எம்.பி-யுமான துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லையாம். கட்சி சீனியர்களிடம் பேசும்போது, 'ம.நீ.ம தைரியமான ஒரு முடிவை எடுத்துட்டாங்க. துரை வைகோ அதுபோல, நம்மால எடுக்க முடியாது. நானும் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அறிவாலயம் இறங்கி வரலை. நமக்கு வேற வழியென்ன இருக்கு...' என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவருடைய வருத்தத்தைத்தான், கட்சியின் அவைத்தலைவரான அர்ஜுன ராஜ், 'தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்பினோம். அது முடியவில்லை என்பதால், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்' என்று அறிவாலய வாசலில் வைத்தே பேட்டியில் உடைத்துவிட்டாராம். ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

விகடன் 26 Mar 2026 4:23 pm

TVK: '5 பாயின்ட்டுகள்... 47 கி.மீ., பயணம்!' - சென்னையில் விஜய்யின் பிரசார திட்டம் என்ன?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் முதல் சென்னையிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். விஜய்யின் பிரசார திட்டம் என்ன? TVK Vijay சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருந்தார். 234 வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் விஜய் போட்டியிடுவதாக திட்டமிடப்பட்டிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். இதற்காக தவெகவின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோட்டையன் விஜய்யின் பிரசார திட்டத்தோடு நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்திருந்தார். நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் MKB நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார். TVK Vijay அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேசவிருக்கிறார். தவெக சார்பில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 5 பாய்ன்ட்டுகளில் 47 கி.மீ தூரத்துக்கு பயணித்து விஜய் பேசவிருக்கிறார். ஒவ்வோர் இடத்திலும் 3000 முதல் 5000 பேர் வரைக்கும் கூடுவார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பெரம்பூரில் விஜய், கொளத்தூரில் வி.எஸ்.பாபு, வில்லிவாக்கத்தில் ஆதவ், அண்ணாநகரில் ராம் குமார், விருகம்பாக்கத்தில் சபரி ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.

விகடன் 26 Mar 2026 4:05 pm

நாமக்கல்: `பட்டியல் மற்றும் பிற சமூக குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள்!'- அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இதைக் கண்டித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

விகடன் 26 Mar 2026 3:57 pm

இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி - ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

தி ருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் நான்காவது முறையாகக் களமிறங்குகிறார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று அமைச்சராக அதிகாரத்திலேயே தொடர்ந்த வீரமணி, 2021 தேர்தலின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜிடம் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், சோர்வடையாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லது, கெட்டது என தொகுதி மக்களிடம் நெருக்கம் காட்டி வந்தார் வீரமணி. இதனால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அவருக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. தி.மு.க-வில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத பட்சத்தில், தொகுதிக்குள் முதல் சுற்று பிரசாரத்தை முடித்துவிட்டு, இரண்டாம் சுற்று பிரசாரத்துக்கே தயாராகிவிட்டார் வீரமணி. இதனால், ஜோலார்பேட்டையில் வீரமணி மீண்டும் ஜொலிப்பதற்கான சூழலே பிரதிபலிக்கிறது. கே.சி.வீரமணி கே.சி.வீரமணியின் பின்னணி! வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அப்பா, பெரியப்பா இருவரும் பெரியாரின் தீவிரப் பற்றாளர்கள். தமிழகத்துக்கு வந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவருடன் வீரமணியின் தங்கை தன்மானம் என்கிற சுதாவுக்கு காதல் மலர்ந்தது. காதலனைக் கரம்பிடித்து லண்டனுக்குப் பறந்துவிட்டார் தன்மானம். வீரமணியின் பெரியப்பா தங்கவேலின் மகன்வழிப் பேரன்தான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலை ஆன பேரறிவாளன். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியதால் அ.தி.மு.க-வின் விசுவாசிகளாக மாறினர் வீரமணி குடும்பத்தார். 1994-ல் அ.தி.மு.க-வில் இணைந்த வீரமணிக்கு ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. அதன்பின் ஏற்றம்தான். 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் ஆனார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணியை நியமித்தார். அன்று முதல் இன்று வரை மாவட்டச் செயலாளராக தொடர்கிறார் வீரமணி. கே.சி.வீரமணி மாவட்டச் செயலாளர் போன்ற இன்னுமொரு எதிர்பாராத வாய்ப்புதான் அவரை அமைச்சர் ஆக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வேலூர் எம்.எல்.ஏ விஜய்மீது புகார்கள் குவியவே, அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. மேல்மட்ட சிபாரிசால், வீரமணிக்கு அந்த வாய்ப்பு வந்தது. சில மாதங்களில் சுகாதாரத் துறைக்குப் பதிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2021 தேர்தல் அவருக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், 2026 தேர்தலில் மிகத் தெம்பாக களம் காண்கிறார் கே.சி.வீரமணி.

விகடன் 26 Mar 2026 3:42 pm

அப்செட், கடுப்பு, அதிர்ஷ்டம்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு லாபம்? நஷ்டம் யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என நேற்று பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரத்தையும் பார்த்து விடலாமா? ADMK ஒரே சிட்டிங்கில் ஓவர்! 'பாஜக 80 சீட் கேக்குறாங்களாம்' எனத் தொடங்கி, பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு ஓடுறார், அங்க‌ எழுதிக் கொடுக்கிறதை இங்க வாசிக்கிறார், பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான் நாளை இவருக்கு... என்றெல்லாம் ஏகப்பட்ட கேலி கிண்டல்களை அதிமுகவை நோக்கியும் எடப்பாடி பழனிசாமியை நோக்கியும் வீசினார்கள் எதிரணியினர். ஒரே செய்தியாளர் சந்திப்பில் அனைத்து முக்கியக் கட்சிகளுடனான உடன்படிக்கையையும் இறுதி செய்து அறிவித்து விட்டார் அவர். கூடவே ஜெயலலிதா ஸ்டைலில் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதியையும் முதல் கட்சியாக வெளியிட்டு விட்டது அஇஅதிமுக. வழக்கமாக நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒட்டியே இந்தத் தேர்தலையும் எதிர் கொள்கிறது இரட்டை இலை. 'காங்கிரஸை தவெக இழுக்கப் போகிறது' என்கிற பேச்சு எப்படி திமுக கூட்டணியைச் சலசலப்புக்கு உள்ளாக்கியதோ அதேபோல, 'தவெக தே.ஜ.கூ. பக்கம் வருகிறது, விஜய் துணை முதல்வர், எனவே அதிமுகவின் முக்கியத்துவம் குறைந்து விடும்' என்பன போன்ற பேச்சுகள் இந்தப் பக்கமும் பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், 'எதற்குக் கேட்டார்களெனத் தெரியவில்லை, திடீரென நிர்வாகிகளைக் கூப்பிட்டு கூட்டணிக்குப் போகலாமா' என்கிற ஒரு கேள்வியைக் கேட்டது தவெக. ஆனால், 'கூட்டணிக்குத் தலைமை வகிப்பது அதிமுக, நாங்கள் யாரிடமும் பேசவில்லை' என ஒரே பதிலில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட 7 தொகுதிகள் கூடுதல்தான். காங்கிரஸில் மாணிக் தாகூர், வேலுசாமி ஆகியோர் எழுப்பிய கலகக்குரல்கள் போல் பாஜக தரப்பிலிருந்து ஆட்சியில் பங்கு போன்ற எந்தக் குரல்களும் எழும்பாததற்கு இந்தக் கூடுதல் எண்ணிக்கை காரணமாக இருக்கலாம். பாஜக, அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேருடனும் மனக்கசப்பு இல்லாதபடி கூட்டணியை அமைத்து விட்டதை அதிமுகவின் பிளஸ் எனச் சொல்லலாம். மைனஸ் எனப் பார்த்தால் கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி! மோடி - அமித்ஷா சீட் ஓ.கே. ஆனா? எதைத் தின்னா பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் தமிழ்நாட்டில் வெல்லலாம் எனத் தொலைநோக்குத் திட்டம் போட்டு வேலை செய்து வருகிற பாஜகவுக்குக் கடந்த தேர்தலை விட ஏழு தொகுதிகள் கூடுதலாகக் கிடைத்த வகையில் லாபம்தான். அதேநேரம் பழனிசாமியை ஹேண்டில் செய்வது அல்லது வழிக்குக் கொண்டு வருவது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கே சிரமமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தை நாட்கள். 'நாங்க நாலு பேரு பேசிட்டிருக்கோம். அமித் ஷா சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் சம்மதிக்க மாட்டேங்கிறார் பழனிசாமி. எழுந்து போயிட்டார் அமித் ஷா' எனப் பிரஸ் மீட்டில் பன்னீர் நொந்து போய் பேசியது நினைவிருக்கலாம். எனவே, 'நாம நிக்கிற இடங்களில் ஜெயிக்கப் பாருங்க, மத்ததைப் பிறகு பார்க்கலாம்' என இப்போதைக்கு அந்த வேலையில் இறங்கி விட்டதாகச் சொல்கிறார்கள் பாஜக காரிய கர்த்தாக்கள். கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்? Anbumani ramadoss அந்த ஒரு சீட்டையும் கூட்டிக்கோங்க! உட்கட்சியில் பூசல் உச்சத்தில் போய்க் கோண்டிருக்கிற நிலையில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதையே, 'பாட்டாளி மக்கள் கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என உலகத்துக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு என எடுத்துக் கொண்டார் போல அன்புமணி. எனவேதான், 'கடந்த தேர்தலை விட இந்த முறை குறைவான சீட்டுகள் ஏன்' என தெரிந்து கொண்டே வாயைப் பிடுங்கிய செய்தியாளர்களிடம், 'ஆமாங்க ஒரு ராஜ்ய சபா சீட் தந்திருக்காங்களே, அது எத்தனை எம்.எல்.ஏ சீட்டுக்குச் சமம் தெரியுமா' எனக் கொஞ்சம் கடுப்புடனயே பதில் தந்தார். சின்னம், அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் எந்த நேரத்தில் என்ன வழக்கு வருமெனத் தெரியாத சூழலே நிலவி வருவதால், இந்த நேரத்தில் 'தொகுதி குறையா இருக்கு' என்று பேசவெல்லாம் தயாராக இல்லை அவர். தினகரன் குக்குருக்குத் தாராளம்.. யாருக்கு செக்? திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு லக் என்றால் இந்தப் பக்கம் அமமுகவுக்கு அந்த அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'என்னது டி.டி.விக்கு 11 சீட்டா' என அதிமுகவில் சிலரே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்களாம். கடந்த தேர்தலில் அவர் பிரித்த ஒட்டுகளை மனதில் வைத்தும் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகள் சசிகலா, பன்னீர் உள்ளிட்டோர் பக்கம் சென்று விடாதபடி தடுக்கவுமே தாராளம் காட்டியிருக்கிறாராம் பழனிசாமி. இந்தக் கட்சிகள் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5, ஜான் பாண்டியனுக்கு 1 பூவை ஜெகன் மூர்த்திக்கு 1 ஆகிய சீட்டுகள் வழக்கமான கோட்டா என்றுதான் சொல்ல வேண்டும். கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

விகடன் 26 Mar 2026 3:12 pm

`தாலிக்கு தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அறுக்கிறார்கள்' - சீமான் ஆவேசம்

`தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் ஊத்தங்கரையில் நடந்த நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர்களான மேகலா (ஊத்தங்கரை தனி), கவின் (பர்கூர்), சுகந்தி (கிருஷ்ணகிரி, நாகராஜ் (வேப்பனஹள்ளி), ஸ்டாலின் (ஓசூர்), நரசிம்மன் (தளி) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய சீமான், சாதி, மதம், திரைக் கவர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய அரசியல், ஆட்சி நிர்வாகம் என்பது இலவசம் கொடுப்பவையாக உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் வருவதில்லை. நாம் முன்னெடுக்கும் அரசியலுக்கும் தி.மு.க முன்னெடுத்து வந்த அரசியலுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. புதிய கோட்பாட்டை கொண்டுவரும்போது எதிர்ப்பார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சாராயப் பொருளாதாரத்தில் இருப்பவர்கள், நாம் பசுமை தற்சார்பு பொருளாதாரத்தில் இருப்போம். மனிதர்களின் உயிர்த்தேவையே உணவுதான். அதை அடிப்படையாக வைத்து கட்டமைப்பதுதான் நிலையான பொருளாதாரமாக இருக்கும். சீமான் இந்தியாவிலேயே அதிகப்படியான விதவைகள் உள்ள மாநிலம் தமிழகம். தமிழக இளைஞர்களை மது, கஞ்சா போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என வாக்களித்த மக்கள் அனைவரும் போராடி போராடித்தான் எதையும் பெற வேண்டுமா? தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது? இந்த போராட்டங்களை மக்களிடம் திணித்தது யார்? இது கொடுமை இல்லையா? பிள்ளையின் பசியறிந்து பால் கொடுக்கும் ஒரு தாயைப் போல மக்களின் தேவையறிந்து நிறைவேற்றுபவன்தான் உண்மையான தலைவன். மாறி மாறி ஆட்சி அமைத்தவர்கள் யாரேனும் சாராயக் கடைகளை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்களா? தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அவர்களே அறுக்கிறார்கள். அப்படி தாலி அறுக்கிற கூட்டத்துக்குத்தான் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரத்தை கொடுக்கிறார்கள். இன்று குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு குற்றச் சமூகமாக இந்த நாடு மாறி வருகிறது. யார் இந்த மண்ணை பேரன்பு கொண்டு காதலிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். அதனால்தான் நாங்கள் எத்தனை முறை தோற்றாலும் அவர்களுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்கிறோம். தோல்வி என்பது வெற்றியின் தாய், வெற்றியை துரத்திக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம் யாருடைய அரசியல் இந்த நாட்டுக்கு தேவை என்பதை முடிவு செய்யுங்கள். ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் தருவோம், மூவாயிரம் தருவோம், மிக்சி, கிரைண்டர், சிலிண்டர் தருவதாகக் கூறுகிறீர்கள், உங்கள் பரம்பரை சொத்தை விற்றா கொடுக்கிறீர்கள்? இந்த பணம் எங்கிருந்து எடுக்கப்படுகிறது? இதற்கு பதில் யாரிடம் உள்ளது? இலவசம் கொடுப்பதுதான் நல்ல நிர்வாகமா? நல்ல ஆட்சி முறையா? நாட்டின் பட்ஜெட் மூன்று லட்சம் கோடி, இதில் வட்டி மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய். கடன் வாங்கியவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒரு வீடே நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையில் ஒரு நாடு எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இதை அறிவார்ந்த சமுதாயம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். மலை வளத்தை அழிப்பது, ஆற்று மணல் அள்ளுவது தமிழகத்தில் பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போது ஆற்றில் போதிய மணல் கிடைக்காததால் மலையை வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். மரம் வெட்டினால் வேறு மரம் வைத்து விடலாம், மலையை வெட்டினால் வேறு மலையை வைக்க முடியுமா? திருப்பரங்குன்றம் மலைக்கு போராடுகிறவர்கள், அருகில் அழிகின்ற மலைக்கு கவலைப்படுவதில்லை. அன்றைய காலத்தில் பசிக்கு வேட்டையாடினார்கள், இன்று பண வேட்டையாடுகிறார்கள்... வருகின்ற தேர்தலில் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

விகடன் 26 Mar 2026 3:02 pm