'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!
ஆடு, மாடு, தண்ணீர், கடல் உள்ளிட்ட சூழலியல் மாநாடுகளை நடத்திய நாம் தமிழர் கட்சி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் முழு நேரமும் மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள்தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். நாமும் விசாரித்தோம். 2024 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் விஜய்யின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்கள் பட்டாளத்தைப் பார்த்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியில் சேதாரம் ஏற்படும் என ஒருமித்த குரலில் ஒலிக்கிறார்கள்... அரசியல் பார்வையாளர்களும் வியூகப் புள்ளிகளும். ஆனால் வாக்குவங்கி நிச்சயமாக உயரும் என்பதிலும், விஜய் கட்சியைவிட நா.த.க-வே இளைஞர்களின் ஆப்ஷனாக இருக்கும் என்பதையும் உறுதியாக நம்புகிறது நாம் தமிழர் தரப்பு. நம்மிடம் பேசிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் சிலர் விஜய்யுடன் நா.த.க கூட்டணி அமைக்காது எனத் தெரியவந்த நொடியிலிருந்தே தேர்தல் வேலைகளை வேகப்படுத்திவிட்டார் அண்ணன் சீமான். இதுவரை இல்லாத வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமனமும், சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தில் வேட்பாளர் தேர்வும் நடந்தேறியிருக்கிறது. ஆனால், விஜய்க்குக் கூடும் கூட்டம் மட்டுமே கட்சி நிர்வாகிகளின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. அதையும் முறியடிக்கும் விதமாக பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டையும் நடத்துகிறோம். 2.5 லட்சம் நிர்வாகிகளையும், 2 லட்சம் பொதுமக்களையும் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாநாட்டு பணிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றனர். மாநாட்டு திடலில் சாட்டை துரைமுருகன். நம்மிடம் பேசிய திருச்சி மாவட்ட நிர்வாகிகள், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூர் அருகே மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் 80 ஏக்கரிலும், பார்க்கிங் வசதிகள் 60 ஏக்கரிலும் முதற்கட்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை 234 பிரிவுகளாக அமைத்து தொகுதிக்கு 1,000 பேரை அமர வைக்க திட்டமிட்டுள்ளனர். ரேம்ப் மாடலில் இல்லாமல் மாநாட்டு திடலுக்கு மத்தியில் சீமான் வாகனத்தில் என்ட்ரி கொடுப்பது போன்ற அமைப்பும் திட்டமிடலில் இருக்கின்றன. தொகுதிவாரியாக மக்களை அழைத்துவரும் பொறுப்பு 234 வேட்பாளர்களிடமும் மாவட்டத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் இருந்து 2 லட்சம் சேர்க்களை வாடகை எடுக்கவுள்ளோம். 2 லட்சம் பேர் நின்றபடி பார்க்கும் அளவுக்கு திடலை விரிவுபடுத்தியுள்ளோம். மாநாட்டு திடல் முழுக்கவே தமிழ்தேசிய ஆளுமைகளின் 'Standing Banner' வைக்கவும், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ-க்கு கொடி நடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான் நா.த.க-வின் வழக்கமான நடைமுறைபடி, மாநாட்டு மேடையில் அதிகாரப்பூர்வமாக 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறார் அண்ணன் சீமான். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை விளக்கும் வகையில் ஆட்சி வரைவை புத்தகமாக அச்சடித்து வெளியிடவுள்ளோம் என்றனர். 'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?
``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியைத் தாக்க திட்டமிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஓம் பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார். அதில், ``விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது. 21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாம் காலாண்டு எப்படித் தீர்க்கமானதாக இருந்ததோ, அதேபோல் இந்த இரண்டாம் காலாண்டும் தீர்க்கமானதாக அமையப் போகிறது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் திசையில், இந்த இரண்டாம் காலாண்டும் அதே அளவுக்குத் திறமையானதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. நாடாளுமன்றம் இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. கடந்த சில நாள்களில், உலகின் 9 பெரிய மற்றும் முக்கியமான நாடுகளுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், இந்த ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாகும். இன்று, இந்தியா பல நாடுகளின் நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது. மேலும் உலகின் நலனுக்காக நாங்கள் எங்கள் பங்கை ஆற்றி வருகிறோம். இன்று, முழு உலகமும் 'குளோபல் சௌத்' (உலகளாவிய தெற்கு) பற்றிப் பேசுகிறது. `பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா அந்த விவாதத்தின் முக்கியப் பாத்திரமாக, இன்று இந்தியா உலகளாவிய தளங்களில் 'குளோபல் சௌத்'-ன் ஒரு வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது இல்லை. எனது தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். எங்களின் ஆற்றலில் கணிசமான பகுதி கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்வதிலேயே செலவிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், உலகின் மனதில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அழிப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. அவர்கள் அந்த அளவுக்குச் சீரழிந்த நிலையில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். பிரதமர் மோடி அதனால்தான் நாங்கள் எதிர்காலத்திற்குத் தயாரான கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். இன்று நாடு, கொள்கை மற்றும் உத்தியின் அடிப்படையில் ஆளப்படுகிறது. இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது. ‘சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்ற மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் முன்னேறிச் சென்றுள்ளோம். இன்று தேசம் சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என்பதே யதார்த்தம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலை இருக்கிறது. என்றார். பிரதமர் உரையின் நடுவே காங்கிரஸ் கட்சியின் எம்.பி-கள் சீன ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பதிலளிக்கும்படி கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி, ``கர்கே-ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதற்காக, அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று தலைவர் அவர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, கார்கே-ஜி அமர்ந்தபடியே முழக்கமிட தயவுசெய்து அனுமதியுங்கள். என சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி இறுதிவரை, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தோ, நரவானே எழுதிய சம்பவம் குறித்தோ, எப்ஸ்டீன் கோப்பு குறித்தோ பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!
``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியைத் தாக்க திட்டமிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஓம் பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றினார். அதில், ``விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது. 21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாம் காலாண்டு எப்படித் தீர்க்கமானதாக இருந்ததோ, அதேபோல் இந்த இரண்டாம் காலாண்டும் தீர்க்கமானதாக அமையப் போகிறது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் திசையில், இந்த இரண்டாம் காலாண்டும் அதே அளவுக்குத் திறமையானதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. நாடாளுமன்றம் இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. கடந்த சில நாள்களில், உலகின் 9 பெரிய மற்றும் முக்கியமான நாடுகளுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், இந்த ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாகும். இன்று, இந்தியா பல நாடுகளின் நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது. மேலும் உலகின் நலனுக்காக நாங்கள் எங்கள் பங்கை ஆற்றி வருகிறோம். இன்று, முழு உலகமும் 'குளோபல் சௌத்' (உலகளாவிய தெற்கு) பற்றிப் பேசுகிறது. `பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா அந்த விவாதத்தின் முக்கியப் பாத்திரமாக, இன்று இந்தியா உலகளாவிய தளங்களில் 'குளோபல் சௌத்'-ன் ஒரு வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது இல்லை. எனது தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். எங்களின் ஆற்றலில் கணிசமான பகுதி கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்வதிலேயே செலவிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், உலகின் மனதில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அழிப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. அவர்கள் அந்த அளவுக்குச் சீரழிந்த நிலையில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். பிரதமர் மோடி அதனால்தான் நாங்கள் எதிர்காலத்திற்குத் தயாரான கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். இன்று நாடு, கொள்கை மற்றும் உத்தியின் அடிப்படையில் ஆளப்படுகிறது. இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது. ‘சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ என்ற மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் முன்னேறிச் சென்றுள்ளோம். இன்று தேசம் சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என்பதே யதார்த்தம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலை இருக்கிறது. என்றார். பிரதமர் உரையின் நடுவே காங்கிரஸ் கட்சியின் எம்.பி-கள் சீன ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பதிலளிக்கும்படி கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி, ``கர்கே-ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதற்காக, அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று தலைவர் அவர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, கார்கே-ஜி அமர்ந்தபடியே முழக்கமிட தயவுசெய்து அனுமதியுங்கள். என சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி இறுதிவரை, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தோ, நரவானே எழுதிய சம்பவம் குறித்தோ, எப்ஸ்டீன் கோப்பு குறித்தோ பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!
கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! - திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த கோவி.செழியன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திருவிடைமருதூரில் கோவி.செழியன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் கட்சி தரப்பில். ஆனால் செழியன் மீது தற்போது நிலவும் அதிருப்தி உள்ளிட்டவையால் தொகுதியில் திமுக பின்னடைவை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில கருத்து கணிப்புகள் தெரிவிப்பதாக பரவும் தகவல் கட்சிக்குள் பரபரப்பை பற்றவைத்துள்ளது. கோவி.செழியன் மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார். ஆனால் சில தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக இல்லை என்ற கருத்து அரசியல் ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகின்றன. அதில் திருவிடைமருதூர் தொகுதியும் ஒன்று என்கிறார்கள். இதனால் கோவி.செழியன் நான்காவது முறை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. இதை அவர் உணர்ந்ததால் தற்போது தொகுதிக்குள் அனைத்திலும் தாராளம் காட்டி வருகிறார் என்கிறார்கள் சிலர். இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம், ``திருவிடைமருதூர் தொகுதியில் 2011ல் போட்டியிட்ட கோவி.செழியன் சுமார் 400 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று நூலிழையில் தொகுதியை தன் வசம் ஆக்கினார். இதையடுத்து 2016 சுமார் 4,000 மற்றும் 2021ல் சுமார் 10,000 என அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றார். கொறடாவாக இருந்த செழியன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அமைச்சராகவும் இருக்கிறார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்திருப்பவரால் தொகுதி போதிய வளர்ச்சி அடையவில்லை என்கிற கருத்து மக்களிடம் நிலவுகிறது. இரண்டு முறை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பதால் மக்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது திமுக ஆளும் கட்சியாகவும், செழியன் அமைச்சராகவும் இருக்கிறார். அதற்கேற்ற வளர்ச்சி தொகுதியில் நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள். செழியன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட அரசு கலைக்கல்லூரி மட்டும் மக்களிடம் கவனம் பெற்றுள்ளது. கல்லூரி தொடர்பான உதவிக்கு செல்பவர்களிடம் சில நிர்வாகிகள் பெயரை சொல்லி அவர்களை பாருங்கள் என திருப்பி அனுப்பி விடுகிறாரார். நல்லது நடக்கும் என நம்பி செல்கிறவர்கள் சுவற்றில் அடித்த பந்தாக திரும்புவதால் மனம் வெதும்புகின்றனர். முன்பு தொகுதிக்குள் காரில் சென்றால் கார் கண்ணாடி திறந்திருக்கும், பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடியே செல்வார். அவரது எளிமை தான் அவருக்கான அடையாளம். ஆனால் அமைச்சர் ஆன பிறகு ஆளே மாறி விட்டார் என்கிறார்கள். தற்போது தேர்தல் செலவிற்கு தேவையான பசை செழியனிடன் இருக்கிறது. தொகுதி எப்படி இருக்கிறது என சிலரை நியமித்து சில மாதங்களுக்கு முன்பு சர்வே ஒன்றை எடுக்க `வீக்' என ரிசல்ட் வந்ததை செழியனே எதிர்பார்க்கவில்லை. இதை சரி செய்வதற்காக புத்தாண்டு, பொங்கலுக்கு தொகுதி முழுக்க வீடு தவறாமல் சில்வர் பாத்திரம், புடவை பரிசாக கொடுத்தார். இதை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்தனர். கோவி. செழியன் கல்யாணசுந்தரத்திடம் இருந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சாக்கோட்டை அன்பழகன் மாவட்ட பொறுப்பாளரானதும் திருவிடைமருதூரில் உள்ள முக்கியமான சீனியர் ஒருவரை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால் செழியன் அந்த சீனியரை கண்டு கொள்வதில்லை. கோஷ்டி அரசியலை ஊக்குவிக்கிறார். இதனால் பல நிர்வாகிகள் செழியன் மீது அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற பல காரணங்களால் கோவி.செழியன் வரும் தேர்தலில் பின்னடவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்தவர் தொகுதி மாறாலாமா என யோசிக்க, அதற்கான சூழல் இல்லாததால் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். தற்போதைக்கு திமுக-வை பொறுத்தவரை கோவி.செழியன் தான் வேட்பாளர். அதிமுக-வில்...! அதிமுக-வில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமாரன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ மகன் எழில்செல்வன், டெல்டா குமார் உள்ளிட்ட மொத்தம் 46 பேர் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ராஜகுமாரன் தலைமையிடம் பேசி வருவதாகவும், இவருக்கு மாவட்ட முக்கிய புள்ளி பரிந்துரை செய்வதாகவும் சொல்கிறார்கள். ஆடுதுறையில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் அருள்ராஜ், கடந்த முறையே அதிமுகவில் போட்டியிடுவார் என பவரலாக சொல்லப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளரான யூனியன் வீரமணிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். கோவி. செழியன் தற்போது டாக்டர் அருள் தனது மகள் டாக்டர் ரம்யாவிற்கு சீட் கேட்கிறார். பசை ரீதியாக பலமாக இருக்கும் கோவி.செழியனை அதே ரூட்டில் மல்லுகட்ட ரம்யா, ராஜகுமாரன் இருவரும் சரியான நபர்களாக இருப்பார்கள் என்றும் இவர்களில் ஒருவரை வேட்பாளராக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்துள்ள செழியன் மீது தன் கட்சியினரே ஆதங்கத்தில் இருக்கின்றனர். தற்போது மீண்டும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோவி.செழியன். இதற்காக தொகுதி முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்கிற விபரம் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளார். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ் ஒரு வீட்டில் ஐந்து வாக்குகள் இருந்தால் வெள்ளி பொருள்கள் என வாக்கிற்கு ஏற்ற வகையில் பரிசு பொருள்களை வீட்டுக்கு வீடு கொடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டை சத்தமில்லாமல் செய்து வருகிறாராம். இன்னொருபுறம், `வெளியில் சொல்வது போல் தொகுதி நிலவரம் இல்லை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. கோவி.செழியன் இந்த முறையும் வெற்றி பெறுவார். அவர் வளர்வதை விரும்பாத உள்கட்சியினர் சிலர் அவருக்கு எதிரான நெகடிவ் கருத்துக்களை பரப்புக்கின்றனர். உள்ளடி வேலைகளை முறியடித்து களத்தில் தனக்கான வெற்றியை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை அவர் செய்து வருவதாக' தெரிவித்தனர்.
கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! - திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த கோவி.செழியன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திருவிடைமருதூரில் கோவி.செழியன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் கட்சி தரப்பில். ஆனால் செழியன் மீது தற்போது நிலவும் அதிருப்தி உள்ளிட்டவையால் தொகுதியில் திமுக பின்னடைவை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில கருத்து கணிப்புகள் தெரிவிப்பதாக பரவும் தகவல் கட்சிக்குள் பரபரப்பை பற்றவைத்துள்ளது. கோவி.செழியன் மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார். ஆனால் சில தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக இல்லை என்ற கருத்து அரசியல் ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகின்றன. அதில் திருவிடைமருதூர் தொகுதியும் ஒன்று என்கிறார்கள். இதனால் கோவி.செழியன் நான்காவது முறை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. இதை அவர் உணர்ந்ததால் தற்போது தொகுதிக்குள் அனைத்திலும் தாராளம் காட்டி வருகிறார் என்கிறார்கள் சிலர். இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம், ``திருவிடைமருதூர் தொகுதியில் 2011ல் போட்டியிட்ட கோவி.செழியன் சுமார் 400 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று நூலிழையில் தொகுதியை தன் வசம் ஆக்கினார். இதையடுத்து 2016 சுமார் 4,000 மற்றும் 2021ல் சுமார் 10,000 என அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றார். கொறடாவாக இருந்த செழியன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அமைச்சராகவும் இருக்கிறார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்திருப்பவரால் தொகுதி போதிய வளர்ச்சி அடையவில்லை என்கிற கருத்து மக்களிடம் நிலவுகிறது. இரண்டு முறை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பதால் மக்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது திமுக ஆளும் கட்சியாகவும், செழியன் அமைச்சராகவும் இருக்கிறார். அதற்கேற்ற வளர்ச்சி தொகுதியில் நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள். செழியன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட அரசு கலைக்கல்லூரி மட்டும் மக்களிடம் கவனம் பெற்றுள்ளது. கல்லூரி தொடர்பான உதவிக்கு செல்பவர்களிடம் சில நிர்வாகிகள் பெயரை சொல்லி அவர்களை பாருங்கள் என திருப்பி அனுப்பி விடுகிறாரார். நல்லது நடக்கும் என நம்பி செல்கிறவர்கள் சுவற்றில் அடித்த பந்தாக திரும்புவதால் மனம் வெதும்புகின்றனர். முன்பு தொகுதிக்குள் காரில் சென்றால் கார் கண்ணாடி திறந்திருக்கும், பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடியே செல்வார். அவரது எளிமை தான் அவருக்கான அடையாளம். ஆனால் அமைச்சர் ஆன பிறகு ஆளே மாறி விட்டார் என்கிறார்கள். தற்போது தேர்தல் செலவிற்கு தேவையான பசை செழியனிடன் இருக்கிறது. தொகுதி எப்படி இருக்கிறது என சிலரை நியமித்து சில மாதங்களுக்கு முன்பு சர்வே ஒன்றை எடுக்க `வீக்' என ரிசல்ட் வந்ததை செழியனே எதிர்பார்க்கவில்லை. இதை சரி செய்வதற்காக புத்தாண்டு, பொங்கலுக்கு தொகுதி முழுக்க வீடு தவறாமல் சில்வர் பாத்திரம், புடவை பரிசாக கொடுத்தார். இதை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்தனர். கோவி. செழியன் கல்யாணசுந்தரத்திடம் இருந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சாக்கோட்டை அன்பழகன் மாவட்ட பொறுப்பாளரானதும் திருவிடைமருதூரில் உள்ள முக்கியமான சீனியர் ஒருவரை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால் செழியன் அந்த சீனியரை கண்டு கொள்வதில்லை. கோஷ்டி அரசியலை ஊக்குவிக்கிறார். இதனால் பல நிர்வாகிகள் செழியன் மீது அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற பல காரணங்களால் கோவி.செழியன் வரும் தேர்தலில் பின்னடவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்தவர் தொகுதி மாறாலாமா என யோசிக்க, அதற்கான சூழல் இல்லாததால் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். தற்போதைக்கு திமுக-வை பொறுத்தவரை கோவி.செழியன் தான் வேட்பாளர். அதிமுக-வில்...! அதிமுக-வில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமாரன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ மகன் எழில்செல்வன், டெல்டா குமார் உள்ளிட்ட மொத்தம் 46 பேர் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ராஜகுமாரன் தலைமையிடம் பேசி வருவதாகவும், இவருக்கு மாவட்ட முக்கிய புள்ளி பரிந்துரை செய்வதாகவும் சொல்கிறார்கள். ஆடுதுறையில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் அருள்ராஜ், கடந்த முறையே அதிமுகவில் போட்டியிடுவார் என பவரலாக சொல்லப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளரான யூனியன் வீரமணிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். கோவி. செழியன் தற்போது டாக்டர் அருள் தனது மகள் டாக்டர் ரம்யாவிற்கு சீட் கேட்கிறார். பசை ரீதியாக பலமாக இருக்கும் கோவி.செழியனை அதே ரூட்டில் மல்லுகட்ட ரம்யா, ராஜகுமாரன் இருவரும் சரியான நபர்களாக இருப்பார்கள் என்றும் இவர்களில் ஒருவரை வேட்பாளராக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்துள்ள செழியன் மீது தன் கட்சியினரே ஆதங்கத்தில் இருக்கின்றனர். தற்போது மீண்டும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோவி.செழியன். இதற்காக தொகுதி முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்கிற விபரம் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளார். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ் ஒரு வீட்டில் ஐந்து வாக்குகள் இருந்தால் வெள்ளி பொருள்கள் என வாக்கிற்கு ஏற்ற வகையில் பரிசு பொருள்களை வீட்டுக்கு வீடு கொடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டை சத்தமில்லாமல் செய்து வருகிறாராம். இன்னொருபுறம், `வெளியில் சொல்வது போல் தொகுதி நிலவரம் இல்லை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. கோவி.செழியன் இந்த முறையும் வெற்றி பெறுவார். அவர் வளர்வதை விரும்பாத உள்கட்சியினர் சிலர் அவருக்கு எதிரான நெகடிவ் கருத்துக்களை பரப்புக்கின்றனர். உள்ளடி வேலைகளை முறியடித்து களத்தில் தனக்கான வெற்றியை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை அவர் செய்து வருவதாக' தெரிவித்தனர்.
அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. ஓம்.பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய ஜே.பி.நட்டா, `` எதிர்க்கட்சிகள் அவையைச் செயல்பட அனுமதிக்கவில்லை. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்ற குற்றச்சாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை நீங்கள் கட்சிக்குள்ளும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், விஷயங்கள் ஜனநாயக முறையில் செய்யப்பட வேண்டும். ஒரு அனுபவமற்ற குழந்தையின் கையில் கட்சியைப் பணயக்கைதியாக விடாதீர்கள். என்றார். நாடாளுமன்றம் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரியாங்கா காந்தி, ``எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பிரச்சினைகளை அரசாங்கம் தவிர்க்கிறதா?... ராகுல் காந்தியை இந்த அவையில் பேச அனுமதிக்க வேண்டும். எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? அவர் ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார் என்று பயப்படுகிறீர்களா? அல்லது எப்ஸ்டீன் கோப்புகளைப் பார்த்து பயப்படுகிறீர்களா? அல்லது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவோம் என்று பயப்படுகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். `பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா
`பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. ஓம்.பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவர், 5 மணிக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எட்டு அல்லது ஒன்பது பெண் எம்.பி.க்கள் மக்களவையில் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து, சரியானதைச் செய்யுங்கள் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக இன்று விளக்கமளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, ``பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் உரைக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இந்த காட்சியை நான் நேற்று சபையிலேயே பார்த்தேன். நாடாளுமன்றத்திற்குள் நிலவும் குழப்பத்தால் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும், விரும்பத்தகாத காட்சியாக இருந்திருக்கும். இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பிரதமரின் உரை ரத்துசெய்யப்பட்டது. நாடாளுமன்றம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல், ``பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால்தான் அவரது உரை ரத்து செய்யப்பட்டது. அவர் எதார்த்தத்தைப் பார்த்து பயப்படுகிறார். அந்த நரவானே தான் 'டராவனே' (பயமுறுத்துபவர்) ஆகிவிட்டார் என்பதுதான் முக்கியக் காரணம். அதனால்தான் பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. கேள்வி கேட்பது தாக்குதல் அல்ல என்றார். இதற்கிடையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ``காங்கிரஸின் உண்மையான முகம் இந்தியாவுக்கு எதிரானது, வன்முறைக்கு ஆதரவானது. நக்சல்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஜனநாயகத்தின் போர்வையில், அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரான ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். அது ஆபத்தானது என்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை மாநிலங்களவையில் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதால், அவரது மாநிலங்களவை வருகை எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறது. பிரதமரின் உரையின் போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பாஜக எம்.பி.க்கள் சபையில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம்
`பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. ஓம்.பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவர், 5 மணிக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எட்டு அல்லது ஒன்பது பெண் எம்.பி.க்கள் மக்களவையில் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து, சரியானதைச் செய்யுங்கள் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக இன்று விளக்கமளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, ``பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் உரைக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இந்த காட்சியை நான் நேற்று சபையிலேயே பார்த்தேன். நாடாளுமன்றத்திற்குள் நிலவும் குழப்பத்தால் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும், விரும்பத்தகாத காட்சியாக இருந்திருக்கும். இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பிரதமரின் உரை ரத்துசெய்யப்பட்டது. நாடாளுமன்றம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல், ``பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால்தான் அவரது உரை ரத்து செய்யப்பட்டது. அவர் எதார்த்தத்தைப் பார்த்து பயப்படுகிறார். அந்த நரவானே தான் 'டராவனே' (பயமுறுத்துபவர்) ஆகிவிட்டார் என்பதுதான் முக்கியக் காரணம். அதனால்தான் பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. கேள்வி கேட்பது தாக்குதல் அல்ல என்றார். இதற்கிடையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ``காங்கிரஸின் உண்மையான முகம் இந்தியாவுக்கு எதிரானது, வன்முறைக்கு ஆதரவானது. நக்சல்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஜனநாயகத்தின் போர்வையில், அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரான ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். அது ஆபத்தானது என்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை மாநிலங்களவையில் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதால், அவரது மாநிலங்களவை வருகை எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறது. பிரதமரின் உரையின் போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பாஜக எம்.பி.க்கள் சபையில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!- ராகுல் காந்தி விமர்சனம்
'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டிருக்கிறது. சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. பறவைக் காய்ச்சல் இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மக்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அதன்படி * சில உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது. * உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். * கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது. பறவைக் காய்ச்சல் * ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். * பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது. * தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தி இருக்கிறது.
'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டிருக்கிறது. சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. பறவைக் காய்ச்சல் இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மக்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அதன்படி * சில உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது. * உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். * கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது. பறவைக் காய்ச்சல் * ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். * பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது. * தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தி இருக்கிறது.
'நான் சரண்டர் ஆவதா'கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்
கொதிக்கும் ராமதாஸ்! 'நான் சரண்டர் ஆவதா...' தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடிக்கிறதாம் அறிவாலயம். இதனால், நாம் தமிழர் கட்சியை அணுகியிருக்கிறார்கள் தைலாபுரத்துவாசிகள். எதற்கு அடிபோடுகிறார்கள் என்பதை புரிந்துகொண்ட நா.த.க-வினர், 'வரும் பிப்ரவரி 21-ம் தேதி எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்துக்குக் கிளம்புகிறோம். ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு ஐயா போனால்தான் சரியாக இருக்கும்...' என்று நாசுக்காக 'நோ' சொல்லிவிட்டார்களாம். த.வெ.க-வும் கதவை சாத்திவிட்ட சூழலில், 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழலாம்' என்று முடிவெடுத்து, எடப்பாடி ரூட்டில் அன்புமணியை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்கிறார்களாம் தோட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், 'அன்புமணியிடம் நான் சரண்டர் ஆவதா... அதற்கு தனியாகவே போட்டியிடலாமே...' என்று கொதித்துப் பேசுகிறாராம் பெரியவர் ராமதாஸ். பொருமலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! தொகுதி மாறச் சொல்லும் ஆளுங்கட்சி அடுத்தடுத்த டெல்லி படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட, சூரிய கட்சிக்கும், கதர்க் கட்சிக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இதுவரை உருவாகவில்லை. இந்தச் சூழலில், சிட்டிங் கதர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீது பவனுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சி. அதில், 'எம்.எல்.ஏ-வாக இருக்கும் 11 கதர் புள்ளிகளின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றன. அவர்களை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வைத்தால், வெற்றிக்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், வேறு தொகுதியில் போட்டியிடச் சொல்லுங்கள்' என்று கூறப்பட்டுள்ளதாம். மிஸ்டர் கழுகு: “எங்கே போனது 80%?’ - புலம்பும் மாண்புமிகுக்கள்! கூட்டணி அமைவதற்கு முன்பாக கண்டிஷன்கள் பறந்து வந்திருப்பதால், சம்பந்தப்பட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்களும் பொருமலில் இருக்கிறார்கள். ''டெல்லி வரைக்கும் போய் இந்தக் கூட்டணி தொடரணும்னு மேலிடத்துக்கிட்ட நாங்க பேசினதுக்கு நல்லா நன்றிக்கடன் செய்திருக்காங்க'' என்று புலம்புகிறார்கள் அவர்களில் சிலர். மும்முனைப் போட்டியில் திண்டுக்கல்! முட்டி மோதும் மூன்று தலைகள்... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திராஜன் இருக்கிறார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான காந்திராஜன், அமைச்சரின் சிபாரிசில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க தீவிரமாகியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி வந்தபோது, அவரது காலில் விழுந்து அதிர்ச்சியைக் கிளப்பினார் காந்திராஜன். 'துணை சபாநாயகராக இருந்தவர் இப்படியெல்லாம் செய்யலாமா... ஒரு சீட்டுக்காக இப்படி இறங்கிவிட்டாரே காந்திராஜன்' என்று கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன் இந்தச்சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான வீரா சாமிநாதனும், அமைச்சர் சக்கரபாணியின் ஆதரவில் வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயனும், வேடசந்தூர் சீட்டுக்காக குட்டிக்கரணம் போடுகிறார்களாம். தங்களுடைய ஆதரவாளருக்கு சீட் பெற்றுத்தர ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி, சக்கரபாணி என்று மூன்று பேருமே முட்டி மோதுவதால், வேடசந்தூரில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க மாஜி மாண்புமிகு! தி.மு.க-வுக்குத் தாவும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான நிலோஃபர், தி.மு.க -வில் இணையவுள்ளதாக மாவட்டம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது. வரும் பிப்.14-ம் தேதி, தி.மு.க வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வரவுள்ள துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நிலோஃபர் தி.மு.க-வில் இணையத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. அமைச்சர் நிலோஃபர் இந்தச்சூழலில், நிலோபரை கட்சியில் இணைப்பதற்கு தி.மு.க-வினர் சில கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். ஏலகிரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நிலோபருக்கு எதிராக 'ஜோதி' மாவட்ட மாண்புமிகுவிடம் நிர்வாகிகள் சிலர் கொதித்துப் பேசியிருக்கிறார்கள். 'நிலோஃபருக்கு பெரியளவில் லோக்கல் செல்வாக்கு இல்லையென்றாலும், அவர் முன்னாள் மாண்புமிகு. அவரைக் கட்சியில் இணைப்பது சரியே...' என்று எதிர்ப்பாளர்களை அடக்கிவிட்டாராம் 'ஜோதி' மாவட்ட மாண்புமிகு. முதல்வரின் நிகழ்ச்சி காரணமா? தள்ளிப்போகும் விஜய் விசிட்... வேலூரில், வரும் பிப் 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம் சேரியில் பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மளமளவென வேலைகளும் நடந்தன. இந்தச்சூழலில், விஜய்யின் வேலூர் விசிட்டுக்கான தேதி மாறியிருக்கிறதாம். 'வரும் பிப்.14-ம் தேதி, ஜோலார்பேட்டை பொன்னேரியில் நடைபெறும் தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் முதல்வர் ஸ்டாலின். விஜய் மண்டலத்திலுள்ள காவலர்கள் பெரும்பகுதியை முதல்வரின் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக அனுப்பவிருக்கிறார்கள். இதனால், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தவிர, 'தி.மு.க நிகழ்ச்சிக்குப் பிறகு நமது நிகழ்ச்சி நடைபெற்றால், அதுவே பேசுபொருளாகும்' என்று திட்டம் போடுகிறது த.வெ.க மேலிடம். பிப்ரவரி மூன்றாவது வாரத்தில், 21-ம் தேதி சனிக்கிழமை அல்லது 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் விஜய்யின் வேலூர் விசிட் இருக்கலாம்' என்கிறார்கள் த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள். அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04
'நான் சரண்டர் ஆவதா'கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்
கொதிக்கும் ராமதாஸ்! 'நான் சரண்டர் ஆவதா...' தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடிக்கிறதாம் அறிவாலயம். இதனால், நாம் தமிழர் கட்சியை அணுகியிருக்கிறார்கள் தைலாபுரத்துவாசிகள். எதற்கு அடிபோடுகிறார்கள் என்பதை புரிந்துகொண்ட நா.த.க-வினர், 'வரும் பிப்ரவரி 21-ம் தேதி எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்துக்குக் கிளம்புகிறோம். ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு ஐயா போனால்தான் சரியாக இருக்கும்...' என்று நாசுக்காக 'நோ' சொல்லிவிட்டார்களாம். த.வெ.க-வும் கதவை சாத்திவிட்ட சூழலில், 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழலாம்' என்று முடிவெடுத்து, எடப்பாடி ரூட்டில் அன்புமணியை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்கிறார்களாம் தோட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், 'அன்புமணியிடம் நான் சரண்டர் ஆவதா... அதற்கு தனியாகவே போட்டியிடலாமே...' என்று கொதித்துப் பேசுகிறாராம் பெரியவர் ராமதாஸ். பொருமலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! தொகுதி மாறச் சொல்லும் ஆளுங்கட்சி அடுத்தடுத்த டெல்லி படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட, சூரிய கட்சிக்கும், கதர்க் கட்சிக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இதுவரை உருவாகவில்லை. இந்தச் சூழலில், சிட்டிங் கதர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீது பவனுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சி. அதில், 'எம்.எல்.ஏ-வாக இருக்கும் 11 கதர் புள்ளிகளின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றன. அவர்களை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வைத்தால், வெற்றிக்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், வேறு தொகுதியில் போட்டியிடச் சொல்லுங்கள்' என்று கூறப்பட்டுள்ளதாம். மிஸ்டர் கழுகு: “எங்கே போனது 80%?’ - புலம்பும் மாண்புமிகுக்கள்! கூட்டணி அமைவதற்கு முன்பாக கண்டிஷன்கள் பறந்து வந்திருப்பதால், சம்பந்தப்பட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்களும் பொருமலில் இருக்கிறார்கள். ''டெல்லி வரைக்கும் போய் இந்தக் கூட்டணி தொடரணும்னு மேலிடத்துக்கிட்ட நாங்க பேசினதுக்கு நல்லா நன்றிக்கடன் செய்திருக்காங்க'' என்று புலம்புகிறார்கள் அவர்களில் சிலர். மும்முனைப் போட்டியில் திண்டுக்கல்! முட்டி மோதும் மூன்று தலைகள்... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திராஜன் இருக்கிறார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான காந்திராஜன், அமைச்சரின் சிபாரிசில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க தீவிரமாகியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி வந்தபோது, அவரது காலில் விழுந்து அதிர்ச்சியைக் கிளப்பினார் காந்திராஜன். 'துணை சபாநாயகராக இருந்தவர் இப்படியெல்லாம் செய்யலாமா... ஒரு சீட்டுக்காக இப்படி இறங்கிவிட்டாரே காந்திராஜன்' என்று கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன் இந்தச்சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான வீரா சாமிநாதனும், அமைச்சர் சக்கரபாணியின் ஆதரவில் வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயனும், வேடசந்தூர் சீட்டுக்காக குட்டிக்கரணம் போடுகிறார்களாம். தங்களுடைய ஆதரவாளருக்கு சீட் பெற்றுத்தர ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி, சக்கரபாணி என்று மூன்று பேருமே முட்டி மோதுவதால், வேடசந்தூரில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க மாஜி மாண்புமிகு! தி.மு.க-வுக்குத் தாவும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான நிலோஃபர், தி.மு.க -வில் இணையவுள்ளதாக மாவட்டம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது. வரும் பிப்.14-ம் தேதி, தி.மு.க வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வரவுள்ள துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நிலோஃபர் தி.மு.க-வில் இணையத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. அமைச்சர் நிலோஃபர் இந்தச்சூழலில், நிலோபரை கட்சியில் இணைப்பதற்கு தி.மு.க-வினர் சில கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். ஏலகிரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நிலோபருக்கு எதிராக 'ஜோதி' மாவட்ட மாண்புமிகுவிடம் நிர்வாகிகள் சிலர் கொதித்துப் பேசியிருக்கிறார்கள். 'நிலோஃபருக்கு பெரியளவில் லோக்கல் செல்வாக்கு இல்லையென்றாலும், அவர் முன்னாள் மாண்புமிகு. அவரைக் கட்சியில் இணைப்பது சரியே...' என்று எதிர்ப்பாளர்களை அடக்கிவிட்டாராம் 'ஜோதி' மாவட்ட மாண்புமிகு. முதல்வரின் நிகழ்ச்சி காரணமா? தள்ளிப்போகும் விஜய் விசிட்... வேலூரில், வரும் பிப் 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம் சேரியில் பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மளமளவென வேலைகளும் நடந்தன. இந்தச்சூழலில், விஜய்யின் வேலூர் விசிட்டுக்கான தேதி மாறியிருக்கிறதாம். 'வரும் பிப்.14-ம் தேதி, ஜோலார்பேட்டை பொன்னேரியில் நடைபெறும் தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் முதல்வர் ஸ்டாலின். விஜய் மண்டலத்திலுள்ள காவலர்கள் பெரும்பகுதியை முதல்வரின் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக அனுப்பவிருக்கிறார்கள். இதனால், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தவிர, 'தி.மு.க நிகழ்ச்சிக்குப் பிறகு நமது நிகழ்ச்சி நடைபெற்றால், அதுவே பேசுபொருளாகும்' என்று திட்டம் போடுகிறது த.வெ.க மேலிடம். பிப்ரவரி மூன்றாவது வாரத்தில், 21-ம் தேதி சனிக்கிழமை அல்லது 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் விஜய்யின் வேலூர் விசிட் இருக்கலாம்' என்கிறார்கள் த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள். அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04
`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வானதி சீனிவாசன் இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. முதலமைச்சர் மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அது நடக்காது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களுடைய கனவு. நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று பணியாற்றி வருகிறோம். அண்ணாமலை தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தார். ஊடகங்கள் அதை பூதாகரம் ஆக்கிவிட்டீர்கள். அண்ணாமலை எங்களுடன் சட்டமன்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய எதுவும் எனக்கு புரியவில்லை. ஏற்கெனவே கோவை மக்களுக்கு அவருடைய பேச்சு புரியவில்லை என்பதற்காக கடந்த 2021 தேர்தலில் அவரை திருப்பி அனுப்பினார்கள் என்றார்.
`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வானதி சீனிவாசன் இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. முதலமைச்சர் மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அது நடக்காது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களுடைய கனவு. நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று பணியாற்றி வருகிறோம். அண்ணாமலை தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தார். ஊடகங்கள் அதை பூதாகரம் ஆக்கிவிட்டீர்கள். அண்ணாமலை எங்களுடன் சட்டமன்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய எதுவும் எனக்கு புரியவில்லை. ஏற்கெனவே கோவை மக்களுக்கு அவருடைய பேச்சு புரியவில்லை என்பதற்காக கடந்த 2021 தேர்தலில் அவரை திருப்பி அனுப்பினார்கள் என்றார்.
சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு
சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி. கு.பாரதி இது சம்பந்தமாக தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். கு.பாரதி பேசியதாவது, 'தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்ட எந்த இடத்திலுமே அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டதில்லை. அதை இங்கே போராட்டத்தின் மூலம் சாதித்திருக்கிறோம். எங்கள் தொழிலாளர்கள் நான்கைந்து மாதங்களாக போராடியிருக்கிறார்கள். கு.பாரதி தங்களின் பணி மறுக்கப்பட்டதால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். ஆக, போராடிய ஐந்து மாதங்களுக்குமான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். போராடிய சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 761 ரூபாய் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். அரசு எங்களுக்காக செய்திருக்கும் விஷயங்களுக்கு நன்றி. ஆனால், பணி நிரந்தரம் வேண்டிய எங்களின் போராட்டம் தொடரும். கு.பாரதி பிப்ரவரி 12 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடவிருக்கிறோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. தவெக உட்பட எல்லாருமே எங்களுக்கு பொதுவானவர்கள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைக் குழுக்களை சந்தித்து எங்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்துவோம். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை எனில் சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவோம்' என்றார்.
விஜய்க்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு கூடுது!
விஜய்க்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு கூடுது!
தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித்பவார் மற்றும் சரத்பவார் தலைமையில் செயல்படும் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து தனது மரணத்திற்கு முன்பே சரத்பவாருடன் அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத நிலையில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், பா.ஜ.கவும் சரத்பவார் அணியுடன் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டு சொந்த ஊரான பாராமதி திரும்பி இருக்கும் சுனேத்ரா பவாரை அவரது வீட்டிற்கு சென்று சரத்பவார் சந்தித்து பேசி இருக்கிறார். அஜித்பவார் வீட்டில் தனி அறையில் சுனேத்ராபவார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். சுனேத்ரா பவார் இந்த சந்திப்பின் போது சுனேத்ரா பவார் கண்ணீரை அடக்க முடியாமல் அழுததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்பு அஜித்பவாரின் சகோதரி விஜயா பாட்டீல் மற்றும் அஜித்பவாரின் மகன்கள் இரண்டு பேரையும் பிரதிஷ்தான் கல்வி வளாகத்திற்கு அழைத்து அவர்களுடன் தனிப்பட்ட முறையில் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். வித்யா பிரதிஷ்தான் கல்வி நிறுவனத்திற்கு சரத் பவார் தலைவராக இருக்கிறார். இதில் அஜித்பவாரும் அறங்காவலராக இருந்தார். இச்சந்திப்பை தொடர்ந்து சரத்பவார் தனது மனைவியோடு அஜித்பவார் இல்லத்திற்கு சென்று சுனேத்ரா பவாரை சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், அஜித்பவாரின் விமான விபத்து குறித்து சந்தேகம் எழுப்பியதோடு அது குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சுனேத்ரா பவாருடன் என்ன பேசிக்கொண்டார் என்ற விபரம் குறித்து சரத்பவார் எதுவும் குறிப்பிடவில்லை.
தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித்பவார் மற்றும் சரத்பவார் தலைமையில் செயல்படும் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து தனது மரணத்திற்கு முன்பே சரத்பவாருடன் அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத நிலையில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், பா.ஜ.கவும் சரத்பவார் அணியுடன் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டு சொந்த ஊரான பாராமதி திரும்பி இருக்கும் சுனேத்ரா பவாரை அவரது வீட்டிற்கு சென்று சரத்பவார் சந்தித்து பேசி இருக்கிறார். அஜித்பவார் வீட்டில் தனி அறையில் சுனேத்ராபவார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். சுனேத்ரா பவார் இந்த சந்திப்பின் போது சுனேத்ரா பவார் கண்ணீரை அடக்க முடியாமல் அழுததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்பு அஜித்பவாரின் சகோதரி விஜயா பாட்டீல் மற்றும் அஜித்பவாரின் மகன்கள் இரண்டு பேரையும் பிரதிஷ்தான் கல்வி வளாகத்திற்கு அழைத்து அவர்களுடன் தனிப்பட்ட முறையில் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். வித்யா பிரதிஷ்தான் கல்வி நிறுவனத்திற்கு சரத் பவார் தலைவராக இருக்கிறார். இதில் அஜித்பவாரும் அறங்காவலராக இருந்தார். இச்சந்திப்பை தொடர்ந்து சரத்பவார் தனது மனைவியோடு அஜித்பவார் இல்லத்திற்கு சென்று சுனேத்ரா பவாரை சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், அஜித்பவாரின் விமான விபத்து குறித்து சந்தேகம் எழுப்பியதோடு அது குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சுனேத்ரா பவாருடன் என்ன பேசிக்கொண்டார் என்ற விபரம் குறித்து சரத்பவார் எதுவும் குறிப்பிடவில்லை.
'எங்க வீட்டுக்கு வாங்க'என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்
திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார். மேடையில் பேசிய அவர், தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருந்தார். நாங்கள் அங்கேயேதான் இருந்தோம். ஜெகத்ரட்சகன் எங்களை வெளியே போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என கலைஞர் சொன்னார். அப்போது கலைஞரை நலம் விசாரித்த பிரதமர் மோடி கோபாலபுரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பிறகு கலைஞரிடம், ' நீங்கள் எத்தனையோ தலைவர்களையும், பிரதமரையும், ஜனாநிதிபதியையும் உருவாக்கியிருக்கிறீர்கள். இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாருங்கள்' என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் 'எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் வீடு பத்தாது' என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன் என நினைவுக்கூர்ந்திருக்கிறார். ஸ்டாலின் தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, 'உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார். அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்' என அவர் சொன்னார் என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.
'எங்க வீட்டுக்கு வாங்க'என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்
திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார். மேடையில் பேசிய அவர், தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருந்தார். நாங்கள் அங்கேயேதான் இருந்தோம். ஜெகத்ரட்சகன் எங்களை வெளியே போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என கலைஞர் சொன்னார். அப்போது கலைஞரை நலம் விசாரித்த பிரதமர் மோடி கோபாலபுரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பிறகு கலைஞரிடம், ' நீங்கள் எத்தனையோ தலைவர்களையும், பிரதமரையும், ஜனாநிதிபதியையும் உருவாக்கியிருக்கிறீர்கள். இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாருங்கள்' என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் 'எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் வீடு பத்தாது' என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன் என நினைவுக்கூர்ந்திருக்கிறார். ஸ்டாலின் தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, 'உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார். அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்' என அவர் சொன்னார் என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.
`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' - அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுப் பேசினர். முதலில் பேசிய மனோஜ் பாண்டியன், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை எனப் பேச எடப்படி பழனிசாமிக்கு அருகதை இல்லை. மனோஜ் பாண்டியன் அவர் முதல்வராக இருந்த போதுதான் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது. கொடநாடு என்றாலே நடுங்குபவர்தான் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டனை பெற்று மீண்டும் அவர் எந்த பதவிக்கும் வர முடியாத நிலை ஏற்படும். தன்னை பாதுகாக்க தமிழகத்தையே அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க என்ற கட்சி திராவிடக் கொள்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தி.மு.கவை வீழ்த்தி விடலாம் என பா.ஜ.கவினர் கங்கணம் கட்டிம் கொண்டு சுற்றி வருகிறார்கள். எந்தக் கொம்பனாலும் தி.மு.கவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. எனக்கு 6 முறை எந்த இடத்திலும் தனிகுனிவை ஏற்படுத்தி விடாமல் வெற்றி பெற வைத்தவர்கள் திருச்செந்தூர் தொகுதி மக்கள். அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியை வீழ்த்திவிடலாம் என பா.ஜ.கவினர் சுற்றி வருகிறார்கள். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் விட்டுக் கொடுப்பார்களா? சிறுபான்மை மக்களும், வி.சி.கவினரும் அ.தி.மு.க, பா.ஜ.கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.கவுடன் சேர்ந்த போதே அ.தி.மு.க காலாவதி ஆகி விட்டது.” என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது - செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டும். செங்கோட்டையன் ஆனால் தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் சிந்தித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுகிறார். இந்தத் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது. அதிமுகவினர் நேரடியாக தவெகவை விமர்சிக்கிறார்கள். யார் யாருக்கு B டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதிமுக தங்களின் தோல்வி பயத்தை மறைக்க இப்படி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மேலும், தமிழக மக்கள் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் தன்னுடைய வருவாயை பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்ற வந்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். வெளிநாடு வாழ் தமிழர்கள் முதல் உள்ளூர் குழந்தைகள் வரை தவெகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இது இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும். தவெக விஜய் அவர் மீது அனைத்துக் கட்சிகளுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற முடியாது என்பதால்தான் விமர்சனம் செய்கிறார்கள்” என்றார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 02 எஸ்.ஜி சூர்யா, பாஜக (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. 'AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும். மோடி - ட்ரம்ப் மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான். அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்? இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்: ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும். பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் 'அமெரிக்காவிடம் சரணாகதி' என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy' எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம். வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, 'என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்' என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம். இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு. கச்சா எண்ணெய் காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும் இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், 'Free Trade Agreements' (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை. இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது. 'எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து' என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை. பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01 மோடி என்னும் 'பிராண்ட்' எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்தியா 'ZERO TARIFF' என்று எல்லாவற்றையும் திறந்துவிடவில்லை. எங்கே நமக்குத் தொழில்நுட்பம் தேவையோ, எங்கே நமக்குச் சந்தை தேவையோ அங்கே மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமே ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்கா விதித்திருந்த தடைகளை உடைத்து, நமக்கான சாதகமான சூழலை உருவாக்கியது பிரதமர் திரு.மோடி அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும், உலகத் தலைவர்களுடன் அவர் பேணும் நட்புக்கும் கிடைத்த வெற்றி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்று கண்ணியம் குறையாமல், நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. மோடி சீனாவுக்கு மாற்றாக உலகமே ஒரு உற்பத்தி மையத்தைத் தேடும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வரிச்சலுகை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 500 பில்லியன் டாலர் என்பது வெறும் கொள்முதல் அல்ல; அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகின் நம்பிக்கை. காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்பது புரியும்.! (தொடரும்..!)
India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. களம் 02 எஸ்.ஜி சூர்யா, பாஜக (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. 'AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும். மோடி - ட்ரம்ப் மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான். அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்? இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்: ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும். பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் 'அமெரிக்காவிடம் சரணாகதி' என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy' எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம். வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, 'என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்' என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம். இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு. கச்சா எண்ணெய் காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும் இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், 'Free Trade Agreements' (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை. இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது. 'எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து' என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை. பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01 மோடி என்னும் 'பிராண்ட்' எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்தியா 'ZERO TARIFF' என்று எல்லாவற்றையும் திறந்துவிடவில்லை. எங்கே நமக்குத் தொழில்நுட்பம் தேவையோ, எங்கே நமக்குச் சந்தை தேவையோ அங்கே மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமே ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்கா விதித்திருந்த தடைகளை உடைத்து, நமக்கான சாதகமான சூழலை உருவாக்கியது பிரதமர் திரு.மோடி அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும், உலகத் தலைவர்களுடன் அவர் பேணும் நட்புக்கும் கிடைத்த வெற்றி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்று கண்ணியம் குறையாமல், நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. மோடி சீனாவுக்கு மாற்றாக உலகமே ஒரு உற்பத்தி மையத்தைத் தேடும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வரிச்சலுகை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 500 பில்லியன் டாலர் என்பது வெறும் கொள்முதல் அல்ல; அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகின் நம்பிக்கை. காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்பது புரியும்.! (தொடரும்..!)
`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். `இது காவல் மரணம் தான் நகை திருடு போகவில்லை, டிஎஸ்பி அழைத்து பேசியதால் தான் பிரச்சினை தீவிரமாகியிருக்கிறது' என சிபிஐ நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையொட்டி அஜித்குமாரின் குடுமத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து அஜித்குமாரின் தாய் மாலதி, என் மகன் திருடவில்லையென சிபிஐ நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது சந்தோஷம். என் மகனை கோவிலுக்குள்ளேயே அடித்திருக்கிறார்கள், 11 மணிக்கு கைது செய்திருக்கிறார்கள். எனக்கு 4.30 மணிக்கு தெரிய வந்து காவல்நிலையத்திற்கு சென்றேன். விசாரித்து விட்டு அனுப்பி விடுவோம் என காவல்துறையினர் சொன்னார்கள். என்னுடைய வீட்டையும் சோதனை செய்து விட்டு என்னுடைய இன்னொரு மகன் நவீனையும் அழைத்து சென்று அடித்திருக்கிறார்கள். அடித்து விட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை, தண்ணீர் கூட கொடுக்க கூடாது என என சட்டத்தில் உள்ளதா? இயல்பாக வரக்கூடிய சிறுநீர், மலத்தை கூட கட்டயாமாக வரவழைத்திருக்கிறார்கள் நிகிதா பொய் புகார் கொடுத்ததால் தான் இப்படி நடந்திருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும். அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். கைதான ஐந்து பேரையும் வெளியே விட கூடாது, வெளியே வந்தால் சாட்சிகளை அழித்து விடுவார்கள்.என்றார் இது தொடர்பாக வழக்கறிஞர் கணேஷ் பேசும் போது, காவல்நிலையத்தில் நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கான காரணம் தெரிய வேண்டும். நிகிதா யோசித்துதான் வழக்கு கொடுத்திருக்கிறார். நகை வந்தால் அதை பிரித்து கொள்ளலாம் என ஒரு நபர் சொல்லியிருக்கிறார். அந்த நபர் குறித்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் போன் எங்கே, மற்ற காவலர்களின் போன் எங்கே , காவலர்கள் வீடியோ எடுத்தனர் அவர்களுடைய போன் குறித்து விசாரிக்க வேண்டும். `மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி! இதற்கு முன் இதே போல இந்த ஊரில் ஆறு பேர் காவல்துறையினால் அடித்து கொல்லப்பட்டடிருக்கிறார்கள். யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த மக்களுக்கு சட்டம் குறித்து அறிவு இல்லை. இதனாலேயே இது குறித்து கேள்வி கேட்க முடியவில்லை. இதில் அஜித்குமாரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அடித்ததற்காக இழப்பீடு வழங்குகிறோம் என சொன்னார்கள். 6 மாதமாகிறது இன்னும் எதுவும் வரவில்லை என்றார்.
`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். `இது காவல் மரணம் தான் நகை திருடு போகவில்லை, டிஎஸ்பி அழைத்து பேசியதால் தான் பிரச்சினை தீவிரமாகியிருக்கிறது' என சிபிஐ நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையொட்டி அஜித்குமாரின் குடுமத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து அஜித்குமாரின் தாய் மாலதி, என் மகன் திருடவில்லையென சிபிஐ நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது சந்தோஷம். என் மகனை கோவிலுக்குள்ளேயே அடித்திருக்கிறார்கள், 11 மணிக்கு கைது செய்திருக்கிறார்கள். எனக்கு 4.30 மணிக்கு தெரிய வந்து காவல்நிலையத்திற்கு சென்றேன். விசாரித்து விட்டு அனுப்பி விடுவோம் என காவல்துறையினர் சொன்னார்கள். என்னுடைய வீட்டையும் சோதனை செய்து விட்டு என்னுடைய இன்னொரு மகன் நவீனையும் அழைத்து சென்று அடித்திருக்கிறார்கள். அடித்து விட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை, தண்ணீர் கூட கொடுக்க கூடாது என என சட்டத்தில் உள்ளதா? இயல்பாக வரக்கூடிய சிறுநீர், மலத்தை கூட கட்டயாமாக வரவழைத்திருக்கிறார்கள் நிகிதா பொய் புகார் கொடுத்ததால் தான் இப்படி நடந்திருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும். அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். கைதான ஐந்து பேரையும் வெளியே விட கூடாது, வெளியே வந்தால் சாட்சிகளை அழித்து விடுவார்கள்.என்றார் இது தொடர்பாக வழக்கறிஞர் கணேஷ் பேசும் போது, காவல்நிலையத்தில் நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கான காரணம் தெரிய வேண்டும். நிகிதா யோசித்துதான் வழக்கு கொடுத்திருக்கிறார். நகை வந்தால் அதை பிரித்து கொள்ளலாம் என ஒரு நபர் சொல்லியிருக்கிறார். அந்த நபர் குறித்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் போன் எங்கே, மற்ற காவலர்களின் போன் எங்கே , காவலர்கள் வீடியோ எடுத்தனர் அவர்களுடைய போன் குறித்து விசாரிக்க வேண்டும். `மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி! இதற்கு முன் இதே போல இந்த ஊரில் ஆறு பேர் காவல்துறையினால் அடித்து கொல்லப்பட்டடிருக்கிறார்கள். யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த மக்களுக்கு சட்டம் குறித்து அறிவு இல்லை. இதனாலேயே இது குறித்து கேள்வி கேட்க முடியவில்லை. இதில் அஜித்குமாரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அடித்ததற்காக இழப்பீடு வழங்குகிறோம் என சொன்னார்கள். 6 மாதமாகிறது இன்னும் எதுவும் வரவில்லை என்றார்.
`அன்புமணி வேட்பாளர்களை டார்கெட் செய்யும் முடிவில் ராமதாஸ்' - அதிமுக கூட்டணி என்ன பிளான்?
`கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து, அவர்களைத் தோற்கடிப்பதுதான் ஒரே இலக்கு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்து வருவதாக' அவருடைய ஆதரவாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். ராமதாஸ் - அன்புமணி குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் கட்சிக்குள்ளும் எதிரொலித்ததால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியாகவும், அவர் மகன் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவை அங்கீகரித்து அவருடைய தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்புமணியுடனே இருப்பதை புரிந்துகொண்ட டாக்டர். ராமதாஸ், திமுக-வுடன் கூட்டணி வைக்க விரும்பி நெருங்கி வந்தாலும், திமுக தலைமையோ இதுவரை எந்தச் சிக்னலும் காட்டாமல் உள்ளது. தவெக-வுடன் கூட்டணி வைக்கவும் டாக்டர். ராமதாஸ் முயற்சித்து வந்தாலும், தவெக தலைமையும் பாசிவ்டிவான பதிலைக் கூறவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஏதாவதொரு கூட்டணியில் இணைந்து, தன் பக்கம்தான் பாமக உள்ளது என்பதை நிரூபிக்க நினைக்கும் டாக்டர். ராமதாஸ், கட்சியின் செயல் தலைவரான மகள் ஸ்ரீகாந்தி, கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்தி, டாக்டர். ராமதாஸின் அணியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி, வட மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறாராம். அதே நேரம், திமுகவோ, தவெக-வோ எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தங்களுக்கு நியாயமான அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிடலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளாரம். அப்படியே தனித்து போட்டியிடும் நிலை வந்தாலும் அன்புமணி தலைமையிலான அணியினர் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் தன்னுடைய ஆதரவாளர்களைப் போட்டியிட வைத்து அன்புமணி ஆதரவாளர்களைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். பாமக ராமதாஸ் 'டாக்டர் ராமதாஸ் அணி தனித்து போட்டியிட்டால் நமக்கு நல்லதுதான், அவருக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை, விசிக தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை' என்று திமுக தலைமையும் பாஸ்ட்டிவாக பார்க்கிறதாம். அதே நேரம், 'டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணிக்கு எதிராகப் போட்டியிட்டால் நமக்கு சிக்கல்தான், அதனால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும்' என்று தேசிய ஜனனாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க டாக்டர் ராமதாஸின் இறுதி நிலைப்பாடு தெரிய வரும், அதனால் ஏற்படும் லாபம், நட்டம் யாருக்கு என்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.!திட்டமிடும் டாக்டர் ராமதாஸ் Loading…
`அன்புமணி வேட்பாளர்களை டார்கெட் செய்யும் முடிவில் ராமதாஸ்' - அதிமுக கூட்டணி என்ன பிளான்?
`கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து, அவர்களைத் தோற்கடிப்பதுதான் ஒரே இலக்கு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்து வருவதாக' அவருடைய ஆதரவாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். ராமதாஸ் - அன்புமணி குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் கட்சிக்குள்ளும் எதிரொலித்ததால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியாகவும், அவர் மகன் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவை அங்கீகரித்து அவருடைய தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்புமணியுடனே இருப்பதை புரிந்துகொண்ட டாக்டர். ராமதாஸ், திமுக-வுடன் கூட்டணி வைக்க விரும்பி நெருங்கி வந்தாலும், திமுக தலைமையோ இதுவரை எந்தச் சிக்னலும் காட்டாமல் உள்ளது. தவெக-வுடன் கூட்டணி வைக்கவும் டாக்டர். ராமதாஸ் முயற்சித்து வந்தாலும், தவெக தலைமையும் பாசிவ்டிவான பதிலைக் கூறவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஏதாவதொரு கூட்டணியில் இணைந்து, தன் பக்கம்தான் பாமக உள்ளது என்பதை நிரூபிக்க நினைக்கும் டாக்டர். ராமதாஸ், கட்சியின் செயல் தலைவரான மகள் ஸ்ரீகாந்தி, கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்தி, டாக்டர். ராமதாஸின் அணியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி, வட மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறாராம். அதே நேரம், திமுகவோ, தவெக-வோ எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தங்களுக்கு நியாயமான அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிடலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளாரம். அப்படியே தனித்து போட்டியிடும் நிலை வந்தாலும் அன்புமணி தலைமையிலான அணியினர் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் தன்னுடைய ஆதரவாளர்களைப் போட்டியிட வைத்து அன்புமணி ஆதரவாளர்களைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். பாமக ராமதாஸ் 'டாக்டர் ராமதாஸ் அணி தனித்து போட்டியிட்டால் நமக்கு நல்லதுதான், அவருக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை, விசிக தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை' என்று திமுக தலைமையும் பாஸ்ட்டிவாக பார்க்கிறதாம். அதே நேரம், 'டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணிக்கு எதிராகப் போட்டியிட்டால் நமக்கு சிக்கல்தான், அதனால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும்' என்று தேசிய ஜனனாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க டாக்டர் ராமதாஸின் இறுதி நிலைப்பாடு தெரிய வரும், அதனால் ஏற்படும் லாபம், நட்டம் யாருக்கு என்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.!திட்டமிடும் டாக்டர் ராமதாஸ் Loading…
Coimbatore மாவட்ட தொகுதிகள் : DMK, ADMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Election 360 updates
Russian Oil: 'எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்' - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை. ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, 'எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ் இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்! அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது, இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது. இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், 'என்ன நிலைப்பாடு?' என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும். Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!
கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம் - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம். இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல, மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகளை நாங்கள் செய்வோம். இந்தியா முழுவதும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அன்பில் மகேஸ் பொய்யாமொழி 16-வது நிதிக்குழுவிலாவது அது சரி செய்யப்படும் என நினைத்தோம். ஆனால், இந்தப் பட்ஜெட்டிலும் 41 சதவிகிதமே தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, அந்த 41-யும் பிரித்து தரும் பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான், நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது என்றால் திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்? நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல், குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயைப் பற்றி இந்தப் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. சிறப்பாகச் செயல்பட்ட ஜல் ஜீவன் மிஷின் சார்பாக ரூ.3112 கோடி வழங்காமலும், திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட்? விவசாயிகளாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒரு பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது என்றார். ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? - அன்பில் மகேஸ்
கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம் - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம். இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல, மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகளை நாங்கள் செய்வோம். இந்தியா முழுவதும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அன்பில் மகேஸ் பொய்யாமொழி 16-வது நிதிக்குழுவிலாவது அது சரி செய்யப்படும் என நினைத்தோம். ஆனால், இந்தப் பட்ஜெட்டிலும் 41 சதவிகிதமே தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, அந்த 41-யும் பிரித்து தரும் பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான், நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது என்றால் திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்? நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல், குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயைப் பற்றி இந்தப் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. சிறப்பாகச் செயல்பட்ட ஜல் ஜீவன் மிஷின் சார்பாக ரூ.3112 கோடி வழங்காமலும், திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட்? விவசாயிகளாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒரு பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது என்றார். ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? - அன்பில் மகேஸ்
அண்ணாமலை அதிருப்தியா? | BJP-யில் நடப்பது என்ன? | Political Pulse | Vikatan
அண்ணாமலை அதிருப்தியா? | BJP-யில் நடப்பது என்ன? | Political Pulse | Vikatan
Vijay-ஐ Target பண்ணும் EPS? | Supreme Court-ல் Mamata Banerjee, Rahul | Parliament | IPS Vikatan
Vijay-ஐ Target பண்ணும் EPS? | Supreme Court-ல் Mamata Banerjee, Rahul | Parliament | IPS Vikatan
2026 ஆட்சிக்கு வரப்போவது யார்_ Sandhya ravishankar interview
2026 ஆட்சிக்கு வரப்போவது யார்_ Sandhya ravishankar interview
ஆதவ் பேச்சு தவறானது! திமுக வாய்ப்பு கொடுக்கணும்
ஆதவ் பேச்சு தவறானது! திமுக வாய்ப்பு கொடுக்கணும்
முடிவெடுக்க முடியாமல் திணறும் தேமுதிக!
முடிவெடுக்க முடியாமல் திணறும் தேமுதிக!
Budget 2026-ல் தமிழ்நாட்டிற்கு வரப்போகும் திட்டங்கள் என்ன?
Budget 2026-ல் தமிழ்நாட்டிற்கு வரப்போகும் திட்டங்கள் என்ன?
TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``கரூர் சம்பவம் நடந்து 72 நாள்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள். என்றார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி அ.தி.மு.க-வால் உருவாக்கப்பட்டதல்ல. அது பா.ஜ.க-வால் வடிவமைக்கப்பட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், ஒரு தனியார் விடுதியில்தான் நடந்தன. கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரைத்தான் சந்தித்தார்கள். யாரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி அமைக்கவில்லை. செங்கல்பட்டில் நடந்த பிரதமர் மோடியின் கூட்டமே இதற்குச் சாட்சி. அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க-வே அனைத்தையும் முன்னெடுத்து வருகிறது. இது தெளிவாக பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான். ஜெயலலிதாவை திமுக அரசு பல வழிகளில் ஒடுக்கியது. அவர் மீது போடப்பட்ட பல வழக்குகள் பொய்யானவை. அவரது வீட்டில் இருந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் எங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் கருத்து. விஜய் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை 'தவழ்ந்து போய் காலில் விழுந்தவர். இரட்டைக் கொலை செய்தவர்' என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, இன்று அதே நபரை 'முதல்வர் வேட்பாளர்' என முன்னிறுத்துவது கேவலமான அரசியல். இப்படி தினமும் ஒரு பேச்சு பேசும் நபர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டுள்ளன. கடந்த முறை தி.மு.க அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. தற்போது அ.தி.மு.க அள்ளி வீசும் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆனால், எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னையையும் ஆய்வு செய்து வருகிறார். அவர் அறிவிக்கப்போகும் வாக்குறுதிகள் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான காவல்துறையின் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தலைவர் விஜய் இதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகிறார். என்றார். ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா? - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!
TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``கரூர் சம்பவம் நடந்து 72 நாள்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள். என்றார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி அ.தி.மு.க-வால் உருவாக்கப்பட்டதல்ல. அது பா.ஜ.க-வால் வடிவமைக்கப்பட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், ஒரு தனியார் விடுதியில்தான் நடந்தன. கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரைத்தான் சந்தித்தார்கள். யாரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி அமைக்கவில்லை. செங்கல்பட்டில் நடந்த பிரதமர் மோடியின் கூட்டமே இதற்குச் சாட்சி. அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க-வே அனைத்தையும் முன்னெடுத்து வருகிறது. இது தெளிவாக பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான். ஜெயலலிதாவை திமுக அரசு பல வழிகளில் ஒடுக்கியது. அவர் மீது போடப்பட்ட பல வழக்குகள் பொய்யானவை. அவரது வீட்டில் இருந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் எங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் கருத்து. விஜய் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை 'தவழ்ந்து போய் காலில் விழுந்தவர். இரட்டைக் கொலை செய்தவர்' என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, இன்று அதே நபரை 'முதல்வர் வேட்பாளர்' என முன்னிறுத்துவது கேவலமான அரசியல். இப்படி தினமும் ஒரு பேச்சு பேசும் நபர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டுள்ளன. கடந்த முறை தி.மு.க அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. தற்போது அ.தி.மு.க அள்ளி வீசும் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆனால், எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னையையும் ஆய்வு செய்து வருகிறார். அவர் அறிவிக்கப்போகும் வாக்குறுதிகள் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான காவல்துறையின் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தலைவர் விஜய் இதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகிறார். என்றார். ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா? - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!
Budget-ல் வந்த முக்கிய அறிவிப்புகள்...உங்க வரி குறையப்போகுதா?
Budget-ல் வந்த முக்கிய அறிவிப்புகள்...உங்க வரி குறையப்போகுதா?
ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்
கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. தவெக தலைவர் விஜய் குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி! எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்
கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. தவெக தலைவர் விஜய் குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி! எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். மம்தா பானர்ஜி எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். ஸ்டாலின், கமல்ஹாசன் இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். என்றார். கமல்ஹாசன் தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே) . தமிழ் என்றும் வாழும் நலமுடன். என்றார். ``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். மம்தா பானர்ஜி எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். ஸ்டாலின், கமல்ஹாசன் இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். என்றார். கமல்ஹாசன் தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே) . தமிழ் என்றும் வாழும் நலமுடன். என்றார். ``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்
`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ - முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்
விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயன்கள் வழங்குதல், என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தளம் துவக்குதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ``2021 சட்டமன்றத் தேர்தலின்போது தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். அதேசமயம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றையும் முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்திருக்கிறோம். தி.மு.க-வைப் பொறுத்தவரை சட்டங்களையும், பெரிய பெரிய திட்டங்களையும் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் அதற்காகத்தான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வந்து உங்கள் கோரிக்கைகளைக் கேட்டு, அதை மனுக்களாக வாங்கியிருக்கிறேன். அந்தப் பயணத்தில் நான் கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற்று திராவிட மாடல் அரசை அமைத்தோம். அந்த கோரிக்கைகளை நூறு நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டுமென்று பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கினேன். அந்த துறையின் மூலமாக மக்களிடம் இருந்து பெற்ற 4,57,641 மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு கண்டோம். அந்தத் துறையின் மூலம் மூலம் 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். இப்படி நாம் ஒருபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொருபுறம் ஒன்றிய பா.ஜ.க அரசும், அதன் கூட்டாளிகளும் அந்த வளர்ச்சியைக் கெடுக்க அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் சமீபத்திய உதாரணம்தான் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட். அதில் பெயரளவுக்குக் கூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. இதற்கு முன்பு ஒப்புக்காகவாவது திருக்குறளை சொன்னார்கள். இந்தமுறை அதுவும் இல்லை. பொதுவாக தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது பா.ஜ.க-வின் தந்திரங்களில் ஒன்று. பீகார், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு அப்படித்தான் நிதி ஒதுக்கினார்கள். அதன்பிறகு அதை செய்தார்களா என்று பார்த்தால், அதையும் செய்திருக்கமாட்டார்கள். விழா மேடையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க வழக்கமாக செய்யும் அந்த ஸ்டண்ட்டைக் கூட தமிழ்நாட்டுக்கு செய்யவில்லை. அந்த அளவுக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுக்கு வரி வருவாயை வாரி வழங்கும் நம் மாநிலத்திற்கு மிக மிக சொற்பமான பங்கைத்தான் திருப்பித் தருகிறார்கள். எப்படியும் தேர்தலில் தோற்கத்தானே போகிறோம். அப்புறம் ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள் அதுதான் உண்மை. உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டில் அடுத்து அமையப் போவது திராவிட மாடல் 2.0 அரசுதான் என்றார். விழுப்புரம்: `பாஜக-வுடன் சந்தர்ப்பவாத, கள்ளக் கூட்டணி’ - எடப்பாடி, ராமதாஸை சாடிய முதல்வர் ஸ்டாலின்
துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது. இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. மு. க ஸ்டாலின் இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும். இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ரவி இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது. தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது. இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. மு. க ஸ்டாலின் இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும். இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ரவி இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது. தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ் களம் 01: இனியன் ராபர்ட் (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர். மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும். இனியன் ராபர்ட் ரஷ்யாவின் பங்களிப்பு..! இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்! இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம். மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது. US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும். அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது. இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.! (தொடரும்..)
India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ் களம் 01: இனியன் ராபர்ட் (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை ஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை கொள்கை மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர். மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும். இனியன் ராபர்ட் ரஷ்யாவின் பங்களிப்பு..! இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்! இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம். மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது. US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது சாதாரண வணிக உடன்பாடு அல்ல. இது இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, வெளிநாட்டு கொள்கை, சுதந்திரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாகும். அமெரிக்காவின் உடனடி நலன்களுக்கு ஏற்ற முடிவுகள் இந்திய மக்களின் நீண்டகால நலனுக்கு எதிராக மாறிவிடக் கூடாது. இந்தியா தனது இறையாண்மை மரபையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய நலனே எந்த ஒப்பந்தத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே இந்தியாவின் வலிமையும் எதிர்காலமும்.! (தொடரும்..)
இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்'ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!
சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்... இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவார்கள். இது சந்தையை சற்று இறங்குமுகத்தில் தள்ளும். கடந்த சில மாதங்களாகவே, இதை நமது சந்தையில் கண்டு வந்தோம். அமெரிக்க டாலர் 'மீண்டுமா?' 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Gold அமெரிக்க டாலரில் தான் உலக அளவில் வர்த்தகம் நடக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இறக்குமதியாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஒவ்வொரு பொருளை இறக்குமதி செய்யும்போதும், அமெரிக்க டாலர் கொடுத்துத் தான் அவற்றை வாங்குவார்கள். அப்போது இந்திய ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந்திருந்தால், அவர்கள் அதிக ரூபாயைக் கொடுத்து அமெரிக்க டாலர்களை வாங்குவார்கள். அந்த டாலரை வைத்து வர்த்தகம் செய்வார்கள். இது அவர்களது வருமானத்தைக் குறைக்கும் தானே? ஏற்றுமதியாளர்களுக்கு 'ப்ளஸ்' ஆனால், இந்த ரூபாய் மதிப்பு பலவீனம் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல ப்ளஸ். இவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்க டாலரில் பேமென்டைப் பெறுவார்கள். அவர்கள் அமெரிக்க டாலரை இந்திய ரூபாயிற்கு மாற்றும்போது, அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஒரு தரப்பினருக்கு ப்ளஸ் என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பல தரப்பினருக்கும் நெகட்டிவ் தான். ஆனால், இந்த நிலைமையை நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பு மாற்றியது. ஏற்றுமதி Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? ஒரே ஓர் அறிவிப்பு... Total Change கடந்த 2-ம் தேதி, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார்கள். அப்போது 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்த அறிவிப்பும்... இந்தியா - அமெரிக்கா இடையில் முடிவாகி உள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பும் வெளியானது. இது நமது சந்தைக்கு பெரும் பூஸ்டைத் தந்தது. அதே போல, இந்த அறிவிப்பு இந்திய ரூபாயின் மதிப்பையும் வலுவாக்கியது. பிப்ரவரி 2-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.49 என சந்தை முடிவடைந்தது. நேற்று, பிப்ரவரி 3-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.27 என முடிவடைந்திருந்தது. இரண்டிற்கும் கிட்டத்தட்ட ரூ.1.22 வித்தியாசம். கடந்த ஏழு ஆண்டுகளில், நாணய சந்தை கண்டிராத ஆச்சரியம் இது. இதையொட்டி, பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, வரும் மார்ச் மாதத்தின் இறுதிக்குள், இந்திய ரூபாயின் மதிப்பு 88.60-89.00-க்குள் வரும். இதற்கு இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளது. இந்தக் கணிப்பு மட்டும் உண்மையாகி விட்டால், இந்திய சந்தை, ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் என அனைத்தும் வலுவடையும். பொறுத்திருந்து பார்ப்போம்! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்'ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!
சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்... இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவார்கள். இது சந்தையை சற்று இறங்குமுகத்தில் தள்ளும். கடந்த சில மாதங்களாகவே, இதை நமது சந்தையில் கண்டு வந்தோம். அமெரிக்க டாலர் 'மீண்டுமா?' 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Gold அமெரிக்க டாலரில் தான் உலக அளவில் வர்த்தகம் நடக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இறக்குமதியாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஒவ்வொரு பொருளை இறக்குமதி செய்யும்போதும், அமெரிக்க டாலர் கொடுத்துத் தான் அவற்றை வாங்குவார்கள். அப்போது இந்திய ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந்திருந்தால், அவர்கள் அதிக ரூபாயைக் கொடுத்து அமெரிக்க டாலர்களை வாங்குவார்கள். அந்த டாலரை வைத்து வர்த்தகம் செய்வார்கள். இது அவர்களது வருமானத்தைக் குறைக்கும் தானே? ஏற்றுமதியாளர்களுக்கு 'ப்ளஸ்' ஆனால், இந்த ரூபாய் மதிப்பு பலவீனம் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல ப்ளஸ். இவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்க டாலரில் பேமென்டைப் பெறுவார்கள். அவர்கள் அமெரிக்க டாலரை இந்திய ரூபாயிற்கு மாற்றும்போது, அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஒரு தரப்பினருக்கு ப்ளஸ் என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பல தரப்பினருக்கும் நெகட்டிவ் தான். ஆனால், இந்த நிலைமையை நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பு மாற்றியது. ஏற்றுமதி Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? ஒரே ஓர் அறிவிப்பு... Total Change கடந்த 2-ம் தேதி, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார்கள். அப்போது 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்த அறிவிப்பும்... இந்தியா - அமெரிக்கா இடையில் முடிவாகி உள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பும் வெளியானது. இது நமது சந்தைக்கு பெரும் பூஸ்டைத் தந்தது. அதே போல, இந்த அறிவிப்பு இந்திய ரூபாயின் மதிப்பையும் வலுவாக்கியது. பிப்ரவரி 2-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.49 என சந்தை முடிவடைந்தது. நேற்று, பிப்ரவரி 3-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.27 என முடிவடைந்திருந்தது. இரண்டிற்கும் கிட்டத்தட்ட ரூ.1.22 வித்தியாசம். கடந்த ஏழு ஆண்டுகளில், நாணய சந்தை கண்டிராத ஆச்சரியம் இது. இதையொட்டி, பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, வரும் மார்ச் மாதத்தின் இறுதிக்குள், இந்திய ரூபாயின் மதிப்பு 88.60-89.00-க்குள் வரும். இதற்கு இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளது. இந்தக் கணிப்பு மட்டும் உண்மையாகி விட்டால், இந்திய சந்தை, ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் என அனைத்தும் வலுவடையும். பொறுத்திருந்து பார்ப்போம்! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video
2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறார். அந்தச் சுழலின் காரணமாக மூன்றாவது நாளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் முடங்கின. நேற்று முன்தினம் ராகுல் அந்தப் புத்தகம் குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையை வைத்துப் பேச முயன்றார். அவர் பேசத் தொடங்கியதுமே பாஜக-வினர் பெரும் அமளியில் ஈடுபட, வெளியே வந்த ராகுல், `அந்தப் புத்தகம் குறித்தும், அதிலிருக்கும் வரி குறித்து நிச்சயம் பேசுவேன். அதற்கு தான் அவர்கள் பயப்படுகிறார்கள்' எனக் கூறியிருந்தார். ராகுல் காந்தி அதைத் தொடர்ந்து நேற்றைய தினம், ராகுல் காந்தியை பேச விடாமல் தடுத்ததாகக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி-க்கள் கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். அப்போது சபாநாயகரை நோக்கி காகிதங்களை கிழித்து வீசியிருக்கின்றனர். அதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் உட்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தொடர் முழுக்க பங்கேற்க தடை விதிக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் இன்றும் `சீன ஊடுருவல்' விவகாரத்தை ராகுல் பெரிதாக்க, அவை ஒத்திவைக்கப்பட்டது. வெளியே வந்தவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, `பிரதமருக்கு இந்தப் புத்தகத்தை வழங்குவேன். அவர் படிக்கட்டும். மக்களுக்கு உண்மை தெரியட்டும்' என்றார். PM is Compromised முன்னதாக அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மக்கர் துவாரில் (Makar Dwar) ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் `PM is Compromised' என்ற பேனரைக் கையிலேந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திய இணை அமைச்சர் (ரயில் போக்குவரத்து துறை மற்றும் உணவு உற்பத்தித் துறை) ரவ்நீத் சிங் பிட்டு (மாநிலங்களவை உறுப்பினர்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் மற்றும் காங்கிரஸாரை நோக்கி, `ஏதோ கார்கில் போரை வென்றுவிட்டு வந்திருக்கிற மாதிரி' எனக் கூறி, கடந்திருக்கிறார். உடனே ராகுல், `இதோ ஒரு துரோகி நடந்து வருகிறார். அவர் முகத்தைப் பாருங்கள்' என சக கட்சியினரிடம் சொல்ல... அவர்கள் அனைவரும் ஆமோதித்து ஆரவாரம் செய்தனர். Heated words exchanged between Rahul Gandhi and Union Minister Ravneet Bittu at Parliament House @DeccanHerald pic.twitter.com/UCZUPDO1y5 — Shemin (@shemin_joy) February 4, 2026 என்னுடைய துரோகி நண்பா! அதைத் தொடர்ந்து ராகுல் ரவ்நீத் சிங் பிட்டுவை நோக்கி, `ஹலோ பிரதர். என்னுடைய துரோகி நண்பா. கவலைப்பட வேண்டாம், நீங்கள் சீக்கிரம் காங்கிரஸுக்குத் திரும்பி வந்துவிடுவீர்கள்' எனக் கூறி.... ஹேண்ட்ஷேக் செய்ய கையை நீட்டினார். ஆனால் ரவ்நீத் சிங் பிட்டு, அதைத் தவிர்த்துவிட்டு, `நாட்டை விற்றுவிட்டனர். தேஷ் கே துஷ்மன்' என்றபடி அங்கிருந்து கடந்து சென்றார். முன்னாள் காங்கிரஸ்காரர் ரவ்நீத் சிங் பிட்டு தற்போது பாஜக-வில் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சரவையிலும் இருந்தாலும், அவர் முன்னர் காங்கிரஸில்தான் இருந்தார். 2021-ல் மக்களவை காங்கிரஸ் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ்காரரான ரவ்நீத் சிங் பிட்டு - ராகுல் காந்தி இடையே நடந்த இந்த உரையாடல் தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக-வில் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் வேட்பாளரர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். சரவணனும் வார்டு வாரியாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். ஆனால் திமுக-வை பொறுத்தவரை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுவதை காண முடிகிறது. பாரம்பர்ய விதை நெல் வழங்கிய நடிகர் துரை.சுதாகர் சீட்டுக்கான ரேஸில் முந்துவதற்கு முக்கிய நிர்வாகிகளில் தங்களுக்கு தெரிந்த மேலிட தொடர்பு மூலம் முயற்சித்து வருகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், எஸ்.எஸ்.ராஜ்குமார், செந்தமிழ்செல்வன், உதயநிதி உள்ளிட்ட பலர் தொகுதியை கைப்பற்ற மல்லுக்கட்டி வருகின்றனர். முதலில், ஒரத்தநாடு தொகுதியில் எம்.இராமச்சந்திரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர், எல்.ஜி.அண்ணா, கலைமணி இளையபாரதி, மகேஸ் கிருஷ்ணசாமி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பேசப்பட்டது. இவர்களும் வாய்ப்புக்காக தீவிரமாக மெனக்கெட்டு வந்தனர். அணிமாறிய வைத்தி... குழப்பத்தில் உடன் பிறப்புகள்! ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து களத்தில் மல்லுக்கட்ட, பண பலத்துடன் அவரை வீழ்த்த சரியான நபர் நடிகர் சுதாகர் என திமுக தலைமை கருதியது. மேலிடத்தில் உள்ள நெருங்கிய தொடர்பும், பசை செலவு செய்வதிலும் வலுவானவர் என்பதால் சுதாகர் தான் ஒரத்தநாடு வேட்பாளர் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் அணியிலில் இருந்து விலகி திமுகவிற்குள் ஐக்கியமானார். மேயர் சண்.இராமநாதன் தற்போது, ஒரத்தநாடு தொகுதி வைத்திலிங்கத்திற்கு தான் சொல்லப்படுகிறது. 2016-ம் ஆண்டை தவிர தொகுதியை தொடர்ந்து அவர் தக்க வைத்திருப்பது முக்கிய காரணம். இதற்கிடையில் , ஒரத்தநாடு நமக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் சீட்டுக்காக காத்திருந்தவர்கள் இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை. சீட்டுகாக முயற்சித்த பலர் இந்த ஷாக்கிலிருந்து இதுவரை மீளவில்லை. இதையடுத்து நடிகர் துரை.சுதாகர், அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா ஆகியோர் அப்படியே யூடர்ன் அடித்து தஞ்சாவூர் தொகுதியை கைப்பற்ற கவனம் செலுத்துவதால் தஞ்சாவூர் திமுக களத்தில் அனல் பறக்கிறது. ஒரத்தநாடு இல்லைனா.... தஞ்சாவூர் - பெருகும் போட்டி! இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் தொகுதியை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன் தான் வேட்பாளர் என பரவலாக பேசப்பட்டது. திமுக மேலிடம் தயாரித்து வைத்திருந்த உத்தேச பட்டியலிலும் இராமநாதன் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், செந்தமிழ்செல்வன், உதயநிதி ஆகியோர் இப்போது வரை முயற்சியை நிறுத்தவில்லை. டாக்டர் அஞ்சுகம் பூபதி உதயநிதி பிறந்தநாளில் அவரை சந்தித்து வாழ்த்தினர். அப்போது நீலமேகம் அவருக்கு பெரிய வீணையும், செந்தமிழ்செல்வன் விலை உயர்ந்த அழகிய வளர்ப்பு நாய் ஒன்றையும் பிறந்தநாள் பரிசாக உதயநிதியிடம் அளித்தனர். இப்படி ஒவ்வொருவரும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கவர்வதற்கு மெனக்கெடுகின்றனர். இந்நிலையில் தான், ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்குத்தான் என்பதால் டாக்டர் அஞ்சுகம் பூபதி, துரை.சுதாகர் ஆகியோர் தஞ்சாவூர் தொகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். நீலமேகம் சமீபத்தில் மண்டல பொறுப்பாளரான கே.என்.நேருவை சந்தித்த நீலமேகம், `என்னை பற்றி தவறான தகவல்களை சொல்லி என்னை உங்களிடம் இருந்து சிலர் பிரித்து விட்டனர். நான் அது போல் கிடையாது, எப்போதும் தலைவருக்கு விசுவாசமாக இருப்பவன் என்பது உங்களுக்கு தெரியும். எதையும் மனசுல வச்சிக்காம இந்த முறை எனக்கு மீண்டும் வாய்ப்பு வாங்கி கொடுங்கள், அதற்கான நன்றியுடன் இருப்பேன்' என்றிருக்கிறார். எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம் அஞ்சுகம் பூபதி அரசு டாக்டராக பணி புரிந்த டாக்டர் அஞ்சுகம் பூபதி, அந்த வேலையை உதறிவிட்டு அரசியலுக்கு வர எடுத்ததுமே தஞ்சாவூர் தொகுதியை தந்தது தலைமை ஆனால் சில காரணங்களால் அவர் தோல்வி அடைந்தார். முதல்வர் ஸ்டாலின் வீட்டு கிச்சன் வரை செல்லக்கூடிய நம்பிக்கையை பெற்ற, குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார் அஞ்சுகம் பூபதி. கட்சிக்காக தான் பார்த்தை வேலையை உதறியவர் என்பதால் ஸ்டாலின் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற மன நிலையுடன் இருக்கிறார். கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி ஒதுக்குவதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் வாய்ப்பு கை நழுவி சண்.இராமநாதனுக்கு சென்றது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும், முதல்வர் கை விடமாட்டார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் அஞ்சுகம். சண்.இராமநாதன் சண்.இராமநாதனை பொறுத்தவரை முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர். அதை பெரிதாக வெளியே காட்டி கொள்ளாமல் கட்சி பணிகளை செய்யக்கூடியவர். சென்னை சென்றால் அறிவாலயம் சென்று தலைவரை சந்திக்க கூட நினைக்க மாட்டார். ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்வார். நலிவடைந்த கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுக்கான ஒவ்வொரு மாத மருத்துவச் செலவிற்கு சத்தமில்லாமல் உதவி செய்கிறார். இவரால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைகின்றனர். உதயநிதியின் குட் புக்கில் இருக்கும் இராமநாதனுக்கு சீட் கிடைக்கும் என உறுதியாக பேசப்பட்டது. செந்தமிழ்செல்வன் வட்டமடிக்கும் புதிய தகவல்! இப்படியான சூழலில் நடிகர் துரை.சுதாகருக்கு தஞ்சாவூர் தொகுதி உறுதியாகி விட்டதாகவும், சத்தமில்லாமல் அவர் தேர்தல் பணியை தொடங்கி விட்டார் என்றும் கிளம்பியிருக்கும் தகவல் பலருக்கு ஆச்சர்யத்தை தந்துள்ளது. முக்கிய பொறுப்பில் இல்லை என்றாலும் திமுக விசுவாசியான இவர், அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு நெருக்கமானவர். உதயநிதி பிறந்தநாளில் பாரம்பர்ய நெல் ரகங்களை எங்கும் பரவலாக்கி பரப்பும் வகையில், 48 விவசாயிகளுக்கு 48 வகையான பாரம்பர்ய விதை நெல் கொடுத்து பலராலும் கவனம் பெற்றது. வானதி, சீமான், அண்ணாமலை, பொன்முடி... தொகுதி மாற திட்டமிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள்! பின்னணி என்ன? முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தஞ்சாவூருக்கு வந்தால் நாளிதழில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுப்பது இவரின் வழக்கம். இது திமுகவினர் மத்தியில் இப்போதும் பேசு பொருளாக இருக்கிறது. தாரளமாக செலவு செய்யக்கூடியவர் என்ற அடையாளத்துடன் வரும் சுதாகர் போட்டியிடுவதற்கு தஞ்சாவூர் தொகுதியை தலைமை ஓகே செய்து விட்டதாக சொல்கிறார்கள் ஒரு தரப்பினர். எனினும் சீட்டுக்கான ரேஸ் பட்டியலில் உள்ளவர்கள் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர் முயற்சியில் இருக்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், தஞ்சாவூர் தொகுதி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றனர்.
திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!
திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது, இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது. அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கூறினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம் என்றனர்.
திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!
திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது, இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது. அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கூறினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம் என்றனர்.
`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து சரத் பவாரிடம்கூட சுனேத்ரா பவார் கருத்து கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரத் பவாரே குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேசியவாத காங்கிரஸின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இணைவதாக இருந்தால் அது குறித்து பா.ஜ.கவிடம் பேசவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றது மற்றும் கட்சியின் இரு அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்த பேட்டியில், ''சுனேத்ரா பவார் துணை முதல்வரானதில் எனக்கு மகிழ்ச்சிதான். பட்னாவிஸ் ஆனால் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்ட வித்யா பிரதிஷ்தான் கல்வி வளாகத்தில் அவருக்கு நினைவகம் கட்டுவது குறித்து எனக்கு தெரியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸுக்கோ அல்லது பா.ஜ.க-விற்கோ எந்த தொடர்பும் கிடையாது. தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அது பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இப்போது எந்த ஓர் அரசியல் முடிவு குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும்'' என்று தெரிவித்தார். இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. அதோடு வரும் நாளை நடக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் இரு அணிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன.
`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சிபிஐ தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது. என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? எனக் கேள்வி எழுப்பினார். அஜித்குமார் மரண வழக்கு முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம் எனக் குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது'பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!
சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை உடல்நலம் காரணமாக பயணம் செய்ய முடியாது. பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதும் சந்தேகம் என்று அறிவித்துள்ளார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்? அண்ணாமலை 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம்! பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, நேற்றைய செய்தியாளர் சந்திப்பு பட்ஜெட் பற்றியது. அதில் பட்ஜெட் தான் முதன்மையாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'நீங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே' என்று கேட்டனர். அதற்கு தான் அண்ணாமலை, 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக கூறினார். அந்தக் கேள்விக்கும், அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பட்டு வருவது உண்மை. இந்த 2 ஆண்டுகளில் அவருக்கு எவ்வளவோ கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் மறுக்காமல் அண்ணாமலை அதை செய்தார். தந்தைக்காக கட்சிப் பணிகளில் இருந்து விடுவிக்க சொல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. பட்ஜெட் ஆனால் அது 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம். அதை அவர் தலைப்புச் செய்தியாக சொல்லியிருக்கக் கூடாது. பட்ஜெட், அமெரிக்கா வரி குறைப்பு என்று தேசியளவுக்கு பல்வேறு முக்கிய விவகாரங்கள் உள்ளன. அவைதான் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். `அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார்' தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போதுதான் பிரச்னைகளை ஓரளவுக்கு சரி செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவை அனைத்தையும் அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவரான அவருக்கு 6 தொகுதிகளை கொடுத்து தற்போதைய மாநிலத் தலைமை மட்டுப்படுத்துவதாக எல்லாம் அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதேபோல முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனுக்கு 5 தொகுதிகள் தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இது சுற்றுப் பயணத்திற்காக போடப்பட்ட பொறுப்புதான். அதில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்குமே 3-7 தொகுதிகள் தான் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான முகம் என்பதால் கட்சி நிச்சயம் அவருக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும். கமலாலயம் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்த தமிழ்நாடும் அண்ணாமலையின் பொறுப்பில் தான் விடப்பட்டது. அதில் அண்ணாமலை என்ன சாதனை செய்தார். கூட்டணி தொடங்கி அப்போதெடுத்த பல முடிவுகள் தவறு என்பதால்தான் இந்த தேர்தலுக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவை பொறுத்தவரை கட்சிதான் முதன்மையானது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இங்கு ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது. அண்ணாமலை தொடர்ந்து அந்தத் தவறை செய்து வருகிறார். இதை அமித் ஷா உள்ளிட்டோர் விரும்பவில்லை. அமித்ஷா ஏற்கெனவே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அமித் ஷாவின் டெல்லி ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தபோதே அவர் கடும் கோபமடைந்தார். தற்போது அமித் ஷாவின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம் இந்த 6 தொகுதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவருக்கு தேசிய அளவில் முக்கியமான பதவி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை வழங்கவில்லை. நிதின் நபின் நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேசிய பொறுப்புகள் போடும் பணி நடந்து வருகிறது. இதில் அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் இருந்து பிறகு நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது அவரின் ஈகோவை சீண்டிவிட்டது. கட்சி தன்னை ஓரம் கட்டுவதற்கு முன்பு, நான் விலகியதுதான் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தமே இல்லாமல் இதனை அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவில் விரிசல் என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி – டிடிவியை இணைத்த அமித் ஷா சொந்தக் கட்சி விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார். அண்ணாமலை அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால் டெல்லி தலைமை அதிருப்தியாகியுள்ளது. தேசியளவிலான பதவி, எம்எல்ஏ சீட் என்று அவருக்கு அடுத்தடுத்து காத்திருந்த பதவிகள் எல்லாமே இனி கானல் நீராகிவிடவும் வாய்ப்பு இள்ளது. ” என்றனர்.
`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது'பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!
சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை உடல்நலம் காரணமாக பயணம் செய்ய முடியாது. பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதும் சந்தேகம் என்று அறிவித்துள்ளார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்? அண்ணாமலை 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம்! பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, நேற்றைய செய்தியாளர் சந்திப்பு பட்ஜெட் பற்றியது. அதில் பட்ஜெட் தான் முதன்மையாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'நீங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே' என்று கேட்டனர். அதற்கு தான் அண்ணாமலை, 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக கூறினார். அந்தக் கேள்விக்கும், அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பட்டு வருவது உண்மை. இந்த 2 ஆண்டுகளில் அவருக்கு எவ்வளவோ கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் மறுக்காமல் அண்ணாமலை அதை செய்தார். தந்தைக்காக கட்சிப் பணிகளில் இருந்து விடுவிக்க சொல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. பட்ஜெட் ஆனால் அது 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம். அதை அவர் தலைப்புச் செய்தியாக சொல்லியிருக்கக் கூடாது. பட்ஜெட், அமெரிக்கா வரி குறைப்பு என்று தேசியளவுக்கு பல்வேறு முக்கிய விவகாரங்கள் உள்ளன. அவைதான் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். `அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார்' தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போதுதான் பிரச்னைகளை ஓரளவுக்கு சரி செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவை அனைத்தையும் அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவரான அவருக்கு 6 தொகுதிகளை கொடுத்து தற்போதைய மாநிலத் தலைமை மட்டுப்படுத்துவதாக எல்லாம் அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதேபோல முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனுக்கு 5 தொகுதிகள் தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இது சுற்றுப் பயணத்திற்காக போடப்பட்ட பொறுப்புதான். அதில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்குமே 3-7 தொகுதிகள் தான் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான முகம் என்பதால் கட்சி நிச்சயம் அவருக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும். கமலாலயம் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்த தமிழ்நாடும் அண்ணாமலையின் பொறுப்பில் தான் விடப்பட்டது. அதில் அண்ணாமலை என்ன சாதனை செய்தார். கூட்டணி தொடங்கி அப்போதெடுத்த பல முடிவுகள் தவறு என்பதால்தான் இந்த தேர்தலுக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவை பொறுத்தவரை கட்சிதான் முதன்மையானது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இங்கு ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது. அண்ணாமலை தொடர்ந்து அந்தத் தவறை செய்து வருகிறார். இதை அமித் ஷா உள்ளிட்டோர் விரும்பவில்லை. அமித்ஷா ஏற்கெனவே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அமித் ஷாவின் டெல்லி ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தபோதே அவர் கடும் கோபமடைந்தார். தற்போது அமித் ஷாவின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம் இந்த 6 தொகுதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவருக்கு தேசிய அளவில் முக்கியமான பதவி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை வழங்கவில்லை. நிதின் நபின் நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேசிய பொறுப்புகள் போடும் பணி நடந்து வருகிறது. இதில் அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் இருந்து பிறகு நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது அவரின் ஈகோவை சீண்டிவிட்டது. கட்சி தன்னை ஓரம் கட்டுவதற்கு முன்பு, நான் விலகியதுதான் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தமே இல்லாமல் இதனை அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவில் விரிசல் என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி – டிடிவியை இணைத்த அமித் ஷா சொந்தக் கட்சி விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார். அண்ணாமலை அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால் டெல்லி தலைமை அதிருப்தியாகியுள்ளது. தேசியளவிலான பதவி, எம்எல்ஏ சீட் என்று அவருக்கு அடுத்தடுத்து காத்திருந்த பதவிகள் எல்லாமே இனி கானல் நீராகிவிடவும் வாய்ப்பு இள்ளது. ” என்றனர்.
ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா? - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட வாக்குறுதி இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.4) எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். *சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன் * ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம் * மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி * முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000 * ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் * மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை! இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள். தவெக தலைவர் விஜய் யாரை குறிப்பிடுகிறார்? ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது. அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன். அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார். எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். Loading…
ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா? - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட வாக்குறுதி இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.4) எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். *சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன் * ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம் * மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி * முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000 * ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் * மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை! இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள். தவெக தலைவர் விஜய் யாரை குறிப்பிடுகிறார்? ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது. அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன். அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார். எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். Loading…
``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன் - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி
சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகம் தொடர்பாக காரவன் இதழில் வெளியான செய்திக்கட்டுரையை மேற்கோளிட்டு பேச முயன்றார். அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் குறித்துப் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. ராகுல் காந்தி அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால், (முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற) இந்தப் புத்தகத்தை நானே நேரில் சென்று அவரிடம் வழங்குவேன். அப்போதுதான் அவர் இதைப் படிக்க முடியும். நாட்டின் உண்மையை இந்த தேசமும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இப்படி ஒரு புத்தகம் இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம். லடாக் விவகாரம் குறித்து முழுமையான விவரங்களை அவர் இதில் அளித்துள்ளார். மக்களவையில் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டக் கூடாது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் புத்தகத்தில் முக்கியமான வரி ஜோ உசித் சம்ஜோ வோ கரோ (எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்) என்பதுதான். ராகுல் காந்தி இந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது. சீன டாங்கிகள் இந்திய எல்லையின் கைலாஷ் மலைத்தொடருக்குள் அத்துமீறி வந்தபோது, அந்த டாங்கிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த அப்போதைய தளபதி நரவானேவும், நம் ராணுவமும் தயாராக இருந்தன. சீனப் படைகள் உள்ளே நுழைந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடி ராணுவத்துக்கு வழங்கியிருந்த உத்தரவு என்பதால், ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே, ராஜ்நாத் சிங் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறி, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார். முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராஜ்நாத் சிங் என மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், ராணுவத் தளபதி நரவானேவின் அழைப்பை ஏற்ற ராஜ்நாத் சிங், `நான் மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அத்துமீறி நம் எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது எனக் கூறியதற்குப் பிறகு பிரதமர் மோடி, `எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்' என்ற செய்தியை அளித்திருக்கிறார். ராகுல் காந்தி இதன் பொருள், 'என்னால் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது. ராணுவத் தளபதியிடமே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். இந்த சம்பவத்தை விளக்கியிருக்கும் நரவானே, அந்த இக்கட்டான சூழலில், ஒட்டுமொத்த அரசாங்கமும் தன்னைத் தனித்து விட்டுவிட்டதாகவும், தனக்குத் துணையாக யாரும் இல்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்றார். ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன் - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி
சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகம் தொடர்பாக காரவன் இதழில் வெளியான செய்திக்கட்டுரையை மேற்கோளிட்டு பேச முயன்றார். அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் குறித்துப் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. ராகுல் காந்தி அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால், (முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற) இந்தப் புத்தகத்தை நானே நேரில் சென்று அவரிடம் வழங்குவேன். அப்போதுதான் அவர் இதைப் படிக்க முடியும். நாட்டின் உண்மையை இந்த தேசமும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இப்படி ஒரு புத்தகம் இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம். லடாக் விவகாரம் குறித்து முழுமையான விவரங்களை அவர் இதில் அளித்துள்ளார். மக்களவையில் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டக் கூடாது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் புத்தகத்தில் முக்கியமான வரி ஜோ உசித் சம்ஜோ வோ கரோ (எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்) என்பதுதான். ராகுல் காந்தி இந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது. சீன டாங்கிகள் இந்திய எல்லையின் கைலாஷ் மலைத்தொடருக்குள் அத்துமீறி வந்தபோது, அந்த டாங்கிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த அப்போதைய தளபதி நரவானேவும், நம் ராணுவமும் தயாராக இருந்தன. சீனப் படைகள் உள்ளே நுழைந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடி ராணுவத்துக்கு வழங்கியிருந்த உத்தரவு என்பதால், ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே, ராஜ்நாத் சிங் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறி, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார். முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராஜ்நாத் சிங் என மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், ராணுவத் தளபதி நரவானேவின் அழைப்பை ஏற்ற ராஜ்நாத் சிங், `நான் மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அத்துமீறி நம் எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது எனக் கூறியதற்குப் பிறகு பிரதமர் மோடி, `எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்' என்ற செய்தியை அளித்திருக்கிறார். ராகுல் காந்தி இதன் பொருள், 'என்னால் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது. ராணுவத் தளபதியிடமே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். இந்த சம்பவத்தை விளக்கியிருக்கும் நரவானே, அந்த இக்கட்டான சூழலில், ஒட்டுமொத்த அரசாங்கமும் தன்னைத் தனித்து விட்டுவிட்டதாகவும், தனக்குத் துணையாக யாரும் இல்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்றார். ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். *சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன் * ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம் * மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி * முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000 * ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் * மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் * ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் *கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் *மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.
``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்
சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் , சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை படிக்க முயன்றார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரிய விளக்கங்களை அளிக்கவும் வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்ட, இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் சபாநாயகர் ஓம்.பிர்லாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார். 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்
``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்
சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் , சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை படிக்க முயன்றார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரிய விளக்கங்களை அளிக்கவும் வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்ட, இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் சபாநாயகர் ஓம்.பிர்லாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார். 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்
”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும். ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார். Loading…
”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும். ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார். Loading…
SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..! - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக'மம்தா பானர்ஜி | Live Updates
உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மம்தாவின் குற்றச்சாட்டு மம்தா பானர்ஜி தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..! - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக'மம்தா பானர்ஜி | Live Updates
உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மம்தாவின் குற்றச்சாட்டு மம்தா பானர்ஜி தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04
இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் ‘வாவ்’ வியூகம் 04 ஜனநாயகத்தில் ‘போராட்டம்’ என்பது மிகப் பெரிய ஆயுதம். அதுவே அரசியல் என்று வரும்போது, அது கட்சிகளின் மாபெரும் சக்தி. சில போராட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும், சில போராட்டங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கும். குறிப்பாக ஆட்சியில் இல்லாதபோது ஒரு கட்சி தனது இருப்பை உறுதி செய்ய உதவியாக இருக்கும். இதையும் தாண்டி, நுணுக்கமாக தேர்தல் அரசியல் என்று குறுகும்போது, ‘போராட்டங்கள்’ மக்கள் தீர்ப்பை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஒரு ‘வாவ் வியூகம்’. அன்றும், இன்றும், என்றும் தேர்தல் அரசியலையும் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படியாக தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற சில போராட்டங்களைப் பற்றித்தான் இங்கே அலசுவோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தமிழக அரசியல் வரலாற்றில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு போராட்டம் என்றால், அது இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனலாம். எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு ‘டார்மன்ட் வால்கனோ’ ரகம் இது. இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் வெடித்ததை 1930-களின் கடைசி 3 ஆண்டுகளுக்குள் சுருக்கலாம். 1937-ல் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ராஜாஜி முதல்வரானார். அதன் பின்னர், சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும்” என்றார். அவரது பேச்சுக்கே அன்றிருந்த நீதிக் கட்சியும், சுயமரியாதை இயக்கமும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தின. ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாதவராக, 1938-ல் தமிழக மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஓர் அரசாணையை வெளியிட்டது ராஜாஜி அரசு. அதை எதிர்க்கும் வகையிலான போராட்டங்கள் இந்த முறை இன்னும் தீவிரமடைந்தன. ஆனால், அப்போது முதலாம் உலகப் போர் மூண்டது. தொடர்ந்து 1939-ல் ராஜாஜி ராஜினாமாவால் ஆட்சி கலைக்கப்பட்டது. 1940-ல் மெட்ராஸ் மாகாணம் ஆளுநர் கட்டுப்பாட்டில் வர, ‘வெள்ளைக்கார துரை’ இந்தி பள்ளிகளில் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்தார். ஓர் போராட்ட அலை ஓய்ந்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூரார் மீண்டும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஒரு சின்ன சகாயமாக தமிழ்ப் பேசும் பகுதிகளில் இந்தி விருப்பப் பாடம் மற்ற தென்னிந்திய மொழிகள் பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கும் எதிர்ப்புகள் வலுத்தது, அப்புறம் ஓமந்தூரர் ராஜினாமாவோடு அந்தப் போராட்டங்களும் ஓய்ந்தன. அதன் பின்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியாக இருந்த எரிமலை 1965-ல் வெடித்துச் சிதறியது. ரத்தம் தெறித்தது. 1949-ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி, ஆங்கிலம் இருக்கும், அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 26, 1965-க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இந்த அச்சம் இந்தி பேசாத மாநிலங்களில் பரவியது. தமிழகத்தில் ‘தகத்தகாய சூரியன்’ போல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பிரகாசித்தது. அப்படியான அடைமொழியை இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக் கொடுக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கே! 1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன, பரவிய தீ... அப்படியே காலம் சென்று கொண்டிருக்க 1964-ஆம் ஆண்டு டிச.5-ல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதுதான் போராட்டத் தீ பரவக் காரணமானது. அதில், “1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியே பயன்படுத்தப்படும். இருப்பினும், முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி எதிர்ப்பு மனநிலை தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்க அதில் இந்த அறிக்கை எண்ணெய் ஊற்றியது. `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 திமுகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. மத்திய அரசு சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜனவரி 26, 1965 கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை அறிவித்தார். ஆனால், அவரை அந்தப் போராட்ட நாளுக்கு முன்னதாகவே காவல் துறை கைது செய்தது. இது திமுகவினரை இன்னும் கொந்தளிக்க வைத்தது. தமிழகத்தில் பல இடங்களில், குறிப்பாக தலைநகர் சென்னை, தென்னகத்தில் மதுரை, மேற்கில் பொள்ளாச்சி என்று போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. திமுகவின் உத்வேகப் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தது என்னவோ மாணவர்கள் தான். ஒரு கட்சி இளைஞர்களை அரசியல்மயமாக்குவதில் தான் வளர முடியும். அதற்குத் தோதாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக தன்னெழுச்சியாக வந்த மாணவர்கள் உள்பட மாணவ சமுதாயத்தை அரசியல்மயமாக்குவதில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்தியது. திமுகவின் இன்றைய பலத்துக்கு அன்று போடப்பட்ட ஆலமர விதை எனலாம்! இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிப்.10 1965 மற்றும் பிப்.12 1965 மறக்கக் கூடாதவை என்றே சொல்லலாம். பிப்.10 அன்று திருப்பூரில் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது மாணவர் உயிரிழந்தார். அது மக்களை வெகுண்டெழச் செய்தது. காவல் நிலையமே கொளுத்தப்பட்டது. பிப்.10-ம் தேதி போலீஸ் தமிழகம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல். பிப்ரவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டம். அன்றைய தினம் தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொள்ளாச்சி போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக பல்வேறு நூல்களிலும் தகவல்கள் உள்ளன. இப்படியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் எழுச்சிக்கு வித்திட்டதோடு 1967-ல் அதை ஆட்சி அரியணையில் ஏற்றிய வாவ் வியூகமாக இருந்தது. அண்ணாதுரை அணையாத அந்தத் தீ... இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்றளவு ஒழியவில்லை. கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதற்கு ஒரு சாட்சி. “இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம். இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர்க் களத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்திற்கும் அதன் அரசியல் பேரியக்கமான திமுகவுக்கும் உண்டு. ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக கட்சியினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ‘இந்தி தெரியாது போடா’ இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் காலத்துக்கு ஏற்ப தனது வடிவமைத்தை மாற்றிக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு சாட்சிதான் ‘இந்தி தெரியாது போடா’ இயக்கம். கடந்த 2020 செப்டம்பரில் இந்த இயக்கம் பிரபலமானது. சமூக ஊடகங்களில் இந்தி எதிர்ப்புக்கு பெறும் ஆதரவு பெருகியிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி மத்திய அரசால் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டுமே இந்தி பேசாத மாநில மக்களால், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு முன்வைக்கப்படும். கடந்த காலங்களிலும் #WeDontWantHindiDivas, #StopHindiImposition போன்ற ஹாஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டன. அந்த வகையில் 2020-ம் ஆண்டு இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது #HindiTheriyathuPoda. இந்தி எதிர்ப்பு - கனிமொழி முன்னதாக, இந்தி மொழி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கனிமொழி. அதாவது, ‘இந்தி தெரியாது’ என்று கூறியதாலேயே, ‘நீங்கள் இந்தியரா...’ என்ற கேள்வியை விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், ‘இந்தி தெரிந்தால்தான் இந்தியரா...’ என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார் கனிமொழி. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தி தெரியாததை சுட்டிக்காட்டி சுமத்தப்பட்ட ஏளனங்களை பகிரங்கமாக தெரிவித்தனர். அதன்பின் கனிமொழி இந்தி திணிப்புக்கு எதிரான வார்த்தைகள் கொண்ட டி-ஷர்ட் அணிந்தவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். கூடவே, “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகியிருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் திரைத் துறையில் பரவலாக ஆதரவு இருந்தது. இது விமர்சனத்துக்கும் உள்ளானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 தமிழர்கள் பலரும் ‘இந்தி தெரியாது போடா’ வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்துகொள்ள, அது உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானது. களத்தில் கெத்து காட்டி இந்தியை எதிர்த்த வரலாறு கொண்ட திமுக, இணையத்தில் காட்டிய கெத்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. தொடர்ந்து 2021-ல் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அப்போதும் இந்தி எதிர்ப்பு திமுகவுக்கு சாதகமான வியூகமானது. இந்தியை திணிக்கும், நீட்டை திணிக்கும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற ஆயுதத்தை கையில் எடுத்த திமுக, அதில் வெற்றியும் கண்டது. தேசிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கை - 2020 எத்தனை வலுவான எதிர்ப்பு வந்தாலும் இந்தியை திணிப்பதில் பாஜக சற்றும் தளர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியை கையில் எடுத்தது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தன் எஸ்எஸ்ஏ நிதி விடுவிப்பு என்று டெல்லி மேலிடம் கையில் எடுத்தபோது, “ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச் சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று கர்ஜித்தார் முதல்வர் ஸ்டாலின். “நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தி எதிர்ப்பு மனநிலையை திமுக சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை. கடந்த மார்ச் 2025-ல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவு இப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் மிக முக்கியமானது. “மும்மொழி சூத்திரத்திற்கான ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சார சர்க்கஸ் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய விஷயமாக மாறிவிட்டது. முடிந்தால் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவும், இந்தி திணிப்பு குறித்த வாக்கெடுப்பாகவும் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இறங்கட்டும் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். வரலாறு மிகவும் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துகொண்டுள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு என்றும் பொறுத்துக்கொள்ளாது. திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் இந்தியை குமட்டல் தரும் அளவுக்கு திணிக்கின்றனர், இது இந்தியாவில் இந்தி பேசாமல் இருக்கும் பெரும்பான்மையானவர்களை மூச்சுத் திணறவைக்கிறது. ஸ்டாலின் மனிதர்கள் வருவார்கள் போவார்கள் (men may come, men may go) ஆனால் இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும் கூட, முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கை. தவெக தலைவர் விஜய்க்கு விசிலடிக்கும் ஜென்Z தலைமுறையினருக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றை அவர்களுக்குப் பிடித்த திரைமொழியில் சொல்ல ‘பராசக்தி’ படத்தை திமுக பயன்படுத்திக் கொண்டதும் மிக முக்கிய வியூகமே. பாஜகவுடன் மீண்டும் அதிமுக-வுடன் கைகோத்துள்ள இந்த 2026 தேர்தலிலும் தேர்தலில் இந்தி திணிப்பு விவகாரத்தை திமுக நிச்சயம் கையில் எடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதற்கு அச்சாரமாக, சமீபத்தில் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளில் முதல்வர் ஸ்டாலின், “மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஓர் உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்று அந்தத் தீயை அணைக்காமல் பார்த்துக்கொள்வதன் பின்னணியில் சமகால தேர்தல் அரசியல் வியூகமும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. (தொடரும்...) | அடுத்த வாரம்: அரசியல் கட்சிக்கு அடித்தளம் அமைத்த ‘சமூக’ போராட்டம் |
அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04
இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் ‘வாவ்’ வியூகம் 04 ஜனநாயகத்தில் ‘போராட்டம்’ என்பது மிகப் பெரிய ஆயுதம். அதுவே அரசியல் என்று வரும்போது, அது கட்சிகளின் மாபெரும் சக்தி. சில போராட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும், சில போராட்டங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கும். குறிப்பாக ஆட்சியில் இல்லாதபோது ஒரு கட்சி தனது இருப்பை உறுதி செய்ய உதவியாக இருக்கும். இதையும் தாண்டி, நுணுக்கமாக தேர்தல் அரசியல் என்று குறுகும்போது, ‘போராட்டங்கள்’ மக்கள் தீர்ப்பை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஒரு ‘வாவ் வியூகம்’. அன்றும், இன்றும், என்றும் தேர்தல் அரசியலையும் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படியாக தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற சில போராட்டங்களைப் பற்றித்தான் இங்கே அலசுவோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தமிழக அரசியல் வரலாற்றில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு போராட்டம் என்றால், அது இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனலாம். எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு ‘டார்மன்ட் வால்கனோ’ ரகம் இது. இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் வெடித்ததை 1930-களின் கடைசி 3 ஆண்டுகளுக்குள் சுருக்கலாம். 1937-ல் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ராஜாஜி முதல்வரானார். அதன் பின்னர், சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும்” என்றார். அவரது பேச்சுக்கே அன்றிருந்த நீதிக் கட்சியும், சுயமரியாதை இயக்கமும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தின. ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாதவராக, 1938-ல் தமிழக மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஓர் அரசாணையை வெளியிட்டது ராஜாஜி அரசு. அதை எதிர்க்கும் வகையிலான போராட்டங்கள் இந்த முறை இன்னும் தீவிரமடைந்தன. ஆனால், அப்போது முதலாம் உலகப் போர் மூண்டது. தொடர்ந்து 1939-ல் ராஜாஜி ராஜினாமாவால் ஆட்சி கலைக்கப்பட்டது. 1940-ல் மெட்ராஸ் மாகாணம் ஆளுநர் கட்டுப்பாட்டில் வர, ‘வெள்ளைக்கார துரை’ இந்தி பள்ளிகளில் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்தார். ஓர் போராட்ட அலை ஓய்ந்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூரார் மீண்டும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஒரு சின்ன சகாயமாக தமிழ்ப் பேசும் பகுதிகளில் இந்தி விருப்பப் பாடம் மற்ற தென்னிந்திய மொழிகள் பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கும் எதிர்ப்புகள் வலுத்தது, அப்புறம் ஓமந்தூரர் ராஜினாமாவோடு அந்தப் போராட்டங்களும் ஓய்ந்தன. அதன் பின்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியாக இருந்த எரிமலை 1965-ல் வெடித்துச் சிதறியது. ரத்தம் தெறித்தது. 1949-ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி, ஆங்கிலம் இருக்கும், அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 26, 1965-க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இந்த அச்சம் இந்தி பேசாத மாநிலங்களில் பரவியது. தமிழகத்தில் ‘தகத்தகாய சூரியன்’ போல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பிரகாசித்தது. அப்படியான அடைமொழியை இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக் கொடுக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கே! 1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன, பரவிய தீ... அப்படியே காலம் சென்று கொண்டிருக்க 1964-ஆம் ஆண்டு டிச.5-ல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதுதான் போராட்டத் தீ பரவக் காரணமானது. அதில், “1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியே பயன்படுத்தப்படும். இருப்பினும், முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி எதிர்ப்பு மனநிலை தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்க அதில் இந்த அறிக்கை எண்ணெய் ஊற்றியது. `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 திமுகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. மத்திய அரசு சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜனவரி 26, 1965 கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை அறிவித்தார். ஆனால், அவரை அந்தப் போராட்ட நாளுக்கு முன்னதாகவே காவல் துறை கைது செய்தது. இது திமுகவினரை இன்னும் கொந்தளிக்க வைத்தது. தமிழகத்தில் பல இடங்களில், குறிப்பாக தலைநகர் சென்னை, தென்னகத்தில் மதுரை, மேற்கில் பொள்ளாச்சி என்று போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. திமுகவின் உத்வேகப் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தது என்னவோ மாணவர்கள் தான். ஒரு கட்சி இளைஞர்களை அரசியல்மயமாக்குவதில் தான் வளர முடியும். அதற்குத் தோதாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக தன்னெழுச்சியாக வந்த மாணவர்கள் உள்பட மாணவ சமுதாயத்தை அரசியல்மயமாக்குவதில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்தியது. திமுகவின் இன்றைய பலத்துக்கு அன்று போடப்பட்ட ஆலமர விதை எனலாம்! இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிப்.10 1965 மற்றும் பிப்.12 1965 மறக்கக் கூடாதவை என்றே சொல்லலாம். பிப்.10 அன்று திருப்பூரில் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது மாணவர் உயிரிழந்தார். அது மக்களை வெகுண்டெழச் செய்தது. காவல் நிலையமே கொளுத்தப்பட்டது. பிப்.10-ம் தேதி போலீஸ் தமிழகம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல். பிப்ரவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டம். அன்றைய தினம் தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொள்ளாச்சி போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக பல்வேறு நூல்களிலும் தகவல்கள் உள்ளன. இப்படியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் எழுச்சிக்கு வித்திட்டதோடு 1967-ல் அதை ஆட்சி அரியணையில் ஏற்றிய வாவ் வியூகமாக இருந்தது. அண்ணாதுரை அணையாத அந்தத் தீ... இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்றளவு ஒழியவில்லை. கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதற்கு ஒரு சாட்சி. “இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம். இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர்க் களத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்திற்கும் அதன் அரசியல் பேரியக்கமான திமுகவுக்கும் உண்டு. ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக கட்சியினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ‘இந்தி தெரியாது போடா’ இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் காலத்துக்கு ஏற்ப தனது வடிவமைத்தை மாற்றிக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு சாட்சிதான் ‘இந்தி தெரியாது போடா’ இயக்கம். கடந்த 2020 செப்டம்பரில் இந்த இயக்கம் பிரபலமானது. சமூக ஊடகங்களில் இந்தி எதிர்ப்புக்கு பெறும் ஆதரவு பெருகியிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி மத்திய அரசால் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டுமே இந்தி பேசாத மாநில மக்களால், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு முன்வைக்கப்படும். கடந்த காலங்களிலும் #WeDontWantHindiDivas, #StopHindiImposition போன்ற ஹாஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டன. அந்த வகையில் 2020-ம் ஆண்டு இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது #HindiTheriyathuPoda. இந்தி எதிர்ப்பு - கனிமொழி முன்னதாக, இந்தி மொழி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கனிமொழி. அதாவது, ‘இந்தி தெரியாது’ என்று கூறியதாலேயே, ‘நீங்கள் இந்தியரா...’ என்ற கேள்வியை விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், ‘இந்தி தெரிந்தால்தான் இந்தியரா...’ என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார் கனிமொழி. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தி தெரியாததை சுட்டிக்காட்டி சுமத்தப்பட்ட ஏளனங்களை பகிரங்கமாக தெரிவித்தனர். அதன்பின் கனிமொழி இந்தி திணிப்புக்கு எதிரான வார்த்தைகள் கொண்ட டி-ஷர்ட் அணிந்தவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். கூடவே, “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகியிருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் திரைத் துறையில் பரவலாக ஆதரவு இருந்தது. இது விமர்சனத்துக்கும் உள்ளானது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 தமிழர்கள் பலரும் ‘இந்தி தெரியாது போடா’ வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்துகொள்ள, அது உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானது. களத்தில் கெத்து காட்டி இந்தியை எதிர்த்த வரலாறு கொண்ட திமுக, இணையத்தில் காட்டிய கெத்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. தொடர்ந்து 2021-ல் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அப்போதும் இந்தி எதிர்ப்பு திமுகவுக்கு சாதகமான வியூகமானது. இந்தியை திணிக்கும், நீட்டை திணிக்கும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற ஆயுதத்தை கையில் எடுத்த திமுக, அதில் வெற்றியும் கண்டது. தேசிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கை - 2020 எத்தனை வலுவான எதிர்ப்பு வந்தாலும் இந்தியை திணிப்பதில் பாஜக சற்றும் தளர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியை கையில் எடுத்தது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தன் எஸ்எஸ்ஏ நிதி விடுவிப்பு என்று டெல்லி மேலிடம் கையில் எடுத்தபோது, “ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச் சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று கர்ஜித்தார் முதல்வர் ஸ்டாலின். “நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தி எதிர்ப்பு மனநிலையை திமுக சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை. கடந்த மார்ச் 2025-ல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவு இப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் மிக முக்கியமானது. “மும்மொழி சூத்திரத்திற்கான ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சார சர்க்கஸ் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய விஷயமாக மாறிவிட்டது. முடிந்தால் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவும், இந்தி திணிப்பு குறித்த வாக்கெடுப்பாகவும் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இறங்கட்டும் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். வரலாறு மிகவும் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துகொண்டுள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு என்றும் பொறுத்துக்கொள்ளாது. திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் இந்தியை குமட்டல் தரும் அளவுக்கு திணிக்கின்றனர், இது இந்தியாவில் இந்தி பேசாமல் இருக்கும் பெரும்பான்மையானவர்களை மூச்சுத் திணறவைக்கிறது. ஸ்டாலின் மனிதர்கள் வருவார்கள் போவார்கள் (men may come, men may go) ஆனால் இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும் கூட, முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கை. தவெக தலைவர் விஜய்க்கு விசிலடிக்கும் ஜென்Z தலைமுறையினருக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றை அவர்களுக்குப் பிடித்த திரைமொழியில் சொல்ல ‘பராசக்தி’ படத்தை திமுக பயன்படுத்திக் கொண்டதும் மிக முக்கிய வியூகமே. பாஜகவுடன் மீண்டும் அதிமுக-வுடன் கைகோத்துள்ள இந்த 2026 தேர்தலிலும் தேர்தலில் இந்தி திணிப்பு விவகாரத்தை திமுக நிச்சயம் கையில் எடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதற்கு அச்சாரமாக, சமீபத்தில் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளில் முதல்வர் ஸ்டாலின், “மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஓர் உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்று அந்தத் தீயை அணைக்காமல் பார்த்துக்கொள்வதன் பின்னணியில் சமகால தேர்தல் அரசியல் வியூகமும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. (தொடரும்...) | அடுத்த வாரம்: அரசியல் கட்சிக்கு அடித்தளம் அமைத்த ‘சமூக’ போராட்டம் |
”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” - மனோஜ் பாண்டியன் அட்டாக்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது. எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆதாரங்களை அளித்தாலும் எத்தனை கோணங்களில் நீங்கள் எதை செய்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும். இன்று உங்களுக்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு இருக்கலாம். தேர்தலுக்குப் பின்னால் கூவத்தூரில் உருவான அ.தி.மு.க பெறக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று யூகித்து பார்த்தால் என்னுடைய யூகம் எல்லாம் மூன்றாவது இடம். ஒரு தொகுதி கூட அதிமுக பெறாது என்பதுதான். காரணம், அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை. கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள். தலைமைக் கழகத்தில் வைத்து அ.தி.மு.கவுக்கும் பா. ஜ.கவுக்கும் கூட்டணி ஏற்படவில்லை. மனோஜ் பாண்டியன் ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்குதான் அவர்களுடைய சுயமரியாதை உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது. ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திற்கு வருகை தந்து தலைவரை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்குதான் கொள்கையும் சுயமரியாதையும் உள்ளது. இதுதான் திராவிட மாடல்.” என்றார்.
”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள், ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் இதுகூடத் தெரியாமல் நம்முடைய முதலமைச்சர் ஒண்ணுமே தரவில்லை ஒண்ணுமே தரவில்லை என்று கூறினால் பத்திரிக்கையாளர்கள்தான் அவரை கேட்க வேண்டும். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ரயில்களை கொண்டு வரப்பட்டது? இன்றைக்கு சென்னையில் இருந்து அதிவேக விரைவு ரயில் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் கூறியுள்ளனர் இதை உங்களைக் கேட்டால் கூறினார்கள்... நீங்கள் கேட்காமலே கொடுத்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி நடமாடிக் கொண்டிருந்தால் கடைசி வரையில் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த ஐந்தாண்டு காலம் ஸ்டாலின்தான முதல்வர். சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர்தான் கையில் வைத்துள்ளார். நயினார் நாகேந்திரன் ஆனால், கஞ்சா விற்பனை கிராமந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எதிரான 50 சதவீதம் பெண்கள் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் மரணத்திற்கு எல்லா கட்சிகளும் ஐயோ என்று குதித்தார்கள். இன்றைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 32 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.
”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள், ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் இதுகூடத் தெரியாமல் நம்முடைய முதலமைச்சர் ஒண்ணுமே தரவில்லை ஒண்ணுமே தரவில்லை என்று கூறினால் பத்திரிக்கையாளர்கள்தான் அவரை கேட்க வேண்டும். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ரயில்களை கொண்டு வரப்பட்டது? இன்றைக்கு சென்னையில் இருந்து அதிவேக விரைவு ரயில் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் கூறியுள்ளனர் இதை உங்களைக் கேட்டால் கூறினார்கள்... நீங்கள் கேட்காமலே கொடுத்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி நடமாடிக் கொண்டிருந்தால் கடைசி வரையில் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த ஐந்தாண்டு காலம் ஸ்டாலின்தான முதல்வர். சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர்தான் கையில் வைத்துள்ளார். நயினார் நாகேந்திரன் ஆனால், கஞ்சா விற்பனை கிராமந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எதிரான 50 சதவீதம் பெண்கள் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் மரணத்திற்கு எல்லா கட்சிகளும் ஐயோ என்று குதித்தார்கள். இன்றைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 32 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.
DMK To TVK - களத்தில் இறங்கிய வியூக வகுப்பாளர்கள்! | Political Strategists | TN Elections | Vikatan
DMK To TVK - களத்தில் இறங்கிய வியூக வகுப்பாளர்கள்! | Political Strategists | TN Elections | Vikatan
அண்ணாமலை முதல் சீமான் வரை தொகுதி மாறும் 15 பிரபலங்கள்! | TN Election 360 Updates
அண்ணாமலை முதல் சீமான் வரை தொகுதி மாறும் 15 பிரபலங்கள்! | TN Election 360 Updates
அண்ணாமலை முதல் சீமான் வரை தொகுதி மாறும் 15 பிரபலங்கள்! | TN Election 360 Updates
கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. 2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர். கரூர் துயர சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்காக இரண்டுமுறை டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவந்திருக்கிறார் விஜய். இச்சூழலில் துயர சம்பவம் நிகந்த வேலுச்சாமிபுரத்தில் 'ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி' என்ற பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க. கரூர்: விஜய் பரப்புரை நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், வேலுச்சாமிபுரத்தில் நா.த.க பொதுக்கூட்டம் நடத்துவதும் அதில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்பதும் இயல்பாக அமைந்ததாக தெரியவில்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்தபோது விஜய்யை வெளுத்து வாங்கியது நா.த.க முகாம். துயர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் விஜய் சென்னை ஓடி பனையூரில் ஒளிந்துகொண்டதை தொடர் பிரசாரமாக முன்னெடுத்தனர். இன்றுவரையிலும் த.வெ.க-வின் அரசியலை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் கரூர் மாவட்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தை வேலுச்சாமிபுரத்தில் நடத்துகிறார்கள் நா.த.க-வினர். கரூர் துயரம் கரூர் விவகாரத்தில் த.வெ.க-வின் மோசமான செயல்பாட்டையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் சொன்ன சம்பவங்கள் மீது கடும் விமர்சனங்களை எழுந்தன. அவற்றையெல்லாம் த.வெ.க- கடந்துவந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் கோட்டைவிட்ட விவகாரங்களை நினைவுகூறி அதை பேசுபொருளாக மாற்ற முயற்சிப்பதாகவும், கரூர் துயர சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி கவனம்ஈர்க்கும் ப்ளானுடன் நா.த.க-வினர் கரூர் செல்கின்றனர். துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது என்றனர். ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்?
கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. 2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர். கரூர் துயர சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்காக இரண்டுமுறை டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவந்திருக்கிறார் விஜய். இச்சூழலில் துயர சம்பவம் நிகந்த வேலுச்சாமிபுரத்தில் 'ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி' என்ற பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க. கரூர்: விஜய் பரப்புரை நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், வேலுச்சாமிபுரத்தில் நா.த.க பொதுக்கூட்டம் நடத்துவதும் அதில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்பதும் இயல்பாக அமைந்ததாக தெரியவில்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்தபோது விஜய்யை வெளுத்து வாங்கியது நா.த.க முகாம். துயர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் விஜய் சென்னை ஓடி பனையூரில் ஒளிந்துகொண்டதை தொடர் பிரசாரமாக முன்னெடுத்தனர். இன்றுவரையிலும் த.வெ.க-வின் அரசியலை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் கரூர் மாவட்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தை வேலுச்சாமிபுரத்தில் நடத்துகிறார்கள் நா.த.க-வினர். கரூர் துயரம் கரூர் விவகாரத்தில் த.வெ.க-வின் மோசமான செயல்பாட்டையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் சொன்ன சம்பவங்கள் மீது கடும் விமர்சனங்களை எழுந்தன. அவற்றையெல்லாம் த.வெ.க- கடந்துவந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் கோட்டைவிட்ட விவகாரங்களை நினைவுகூறி அதை பேசுபொருளாக மாற்ற முயற்சிப்பதாகவும், கரூர் துயர சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி கவனம்ஈர்க்கும் ப்ளானுடன் நா.த.க-வினர் கரூர் செல்கின்றனர். துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது என்றனர். ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்?
SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக'களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம். இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. SIR Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி? மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்... > மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது. > இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது. > எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது. > Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும். > அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார். இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார். மம்தா பானர்ஜி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points 'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம். இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது. 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail
SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக'களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம். இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. SIR Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி? மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்... > மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது. > இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது. > எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது. > Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும். > அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார். இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார். மம்தா பானர்ஜி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points 'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம். இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது. 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

28 C