மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?
திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார். மேயர் தினேஷ்குமார் கூறும்போது, “வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர். நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார். திருப்பூர்: பவர்ஃபுல்லான மாவட்டப் பொறுப்பாளரை முந்தி மேயரான தினேஷ்குமார்! - பின்னணி தெரியுமா?!
மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?
திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார். மேயர் தினேஷ்குமார் கூறும்போது, “வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர். நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார். திருப்பூர்: பவர்ஃபுல்லான மாவட்டப் பொறுப்பாளரை முந்தி மேயரான தினேஷ்குமார்! - பின்னணி தெரியுமா?!
Telangana: `இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி?' - நடந்தது என்ன? முழுத் தகவல்!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அப்போது, ``நான் நேற்று கால்பந்து ஆடப் போனேன். ஒருவர் 'எனக்குக் கால் வலிக்கிறது, அதனால் வெளியே உட்கார்ந்திருக்கிறேன்' என்றார். அதற்கு நான், 'நீ நன்றாக நடக்கிறாயே! கால்பந்தை காலால்தானே ஆடுவார்கள்? அதுதானே விதி' என்றேன். அரசியலிலும் அப்படித்தான். யாரோ ஒருவர் உங்களை முன்னேறவிடாமல் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார்கள். அது இந்த விளையாட்டின் (அரசியலின்) இயல்பு. அந்தத் தடையை உதறித்தள்ளிவிட்டு நீங்கள் முன்னேற முயன்றால், மீண்டும் வேறொருவர் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார். ரேவந்த் ரெட்டி நீங்கள் கீழே விழுவீர்கள். நான் விழுந்துவிட்டேன் என்றால் யாராவது ஒருவர் என்னைத் தூக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நானே எழுந்து மீண்டும் விளையாட வேண்டும். எனவே, எப்போதும் யாராவது ஒருவர் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதை பெரிய பிரச்னையாகப் பார்க்க வேண்டாம். எல்லோருக்கும் இந்தப் பிரச்னை உண்டு. ராகுல் காந்திக்கே G23 தலைவர்கள் அடங்கியக் குழு சதி செய்தது. செய்து கொண்டிருக்கிறது. நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த காந்தி குடும்பத்தின் மீதே விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் கட்சியில் சுதந்திரம் உள்ளது. இதனால்தான் 140 ஆண்டுகளாக காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது. சுதந்திரம் இல்லாவிட்டால், மற்ற கட்சிகள் போலவும், ஜனதா கட்சி போலவும் எப்போதோ முடிந்து மூடப்பட்டிருக்கும். நம் கட்சியில் எல்லா விதமான மனநிலைகள் உள்ளவர்களும் இருப்பார்கள். நம் இந்து கடவுள்களை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை கடவுள்கள் இருக்கின்றன. மூன்று கோடிக்கும் மேலான கடவுள்கள் இருக்கின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு அனுமன், இரண்டு திருமணங்கள் செய்துகொள்பவர்களுக்கு இன்னொரு கடவுள், மது அருந்துபவர்களுக்கு ஒரு கடவுள், எல்லம்மா, போஸம்மா, மகேசம்மா, ஆட்டை பலிகொடுக்க, கோழியைப் பலிகொடுக்க என தனித் தனிக் கடவுள், பருப்பு சாதம் சாப்பிடுபவர்களுக்கு கூட கடவுள் இருக்கிறார். ஆம். எல்லா விதமான கடவுள்களும் உள்ளனர். ஒருவர் வெங்கடேஸ்வர சுவாமியை வணங்குகிறேன் என்று சொல்கிறார். ஒருவர் ஆஞ்சநேய சுவாமியை வணங்குகிறேன் என்று சொல்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு... சாதித்த ரேவந்த் ரெட்டி! - நேரடியாக பதில் சொல்வாரா மோடி? இன்னொருவன் இல்லை இல்லை, நான் அய்யப்ப மாலை அணிவேன் என்று சொல்கிறான். இன்னொருவன் இல்லை, நான் சிவ மாலை அணிவேன் என்கிறார். இவையெல்லாம் நாம் பார்க்கிறோம் அல்லவா காங்கிரஸ் கட்சியும் எல்லா விதமான மனநிலைகள் உள்ள, எல்லா விதமான மனிதர்களையும் உள்ளடக்கிக் கொண்டு போகும் கட்சி. கடவுள்கள் விஷயத்திலேயே நமக்கு ஒருமித்த கருத்தை கொண்டுவர முடியாதபோது, அரசியல் தலைவர்கள் விஷயத்தில், மாவட்டத் தலைவர்கள் விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ராகுல், ரேவந்த், பிரியங்கா - காங்கிரஸ் ஆனால் நல்ல நோக்கம் இருக்க வேண்டும். நல்ல நோக்கம் இல்லாவிட்டால் இது நமக்குப் பயன் இருக்காது. தயவுசெய்து நேற்று வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நான் கேட்க விரும்பவில்லை. பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் சிலர் பிடிக்கும், சிலர் பிடிக்காது. இவை சிறிய சிறிய விஷயங்கள். இவற்றை நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு விட்டுவிட வேண்டும். ‘கல்வியில் சிறந்தால் மட்டும் போதுமா?’ - கவனம் ஈர்த்த ரேவந்த் ரெட்டி... கவனிப்பாரா மு.க.ஸ்டாலின்? நானும் முதலமைச்சராக ஆகாதபோது எனக்கு பலர் மீது கோபம் இருந்தது. அறையை மூடிக்கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு போய் அடிக்க வேண்டும் என்றுக்கூட யோசித்திருக்கிறேன். அடிக்கும் வாய்ப்பு வந்தபோதுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நம் சக்தியை ஏன் வீணாக்கிக்கொள்ள வேண்டும்? எனவே மக்களுக்குப் பணி செய்தால் போதும். இனி அதுவே நம் இலக்கு என முடிவு செய்தேன் என உரையாற்றினார். பண்டி சஞ்சய் குமார் இந்த நீண்ட உரையில் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடவுள்கள் குறித்துப் பேசிய பகுதி மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் மத்திய அமைச்சரும் முன்னாள் தெலுங்கானா பா.ஜ.க தலைவருமான பண்டி சஞ்சய் குமார் தன் எக்ஸ் பக்கத்தில், ``முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்துக்கள் மற்றும் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்துகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸ் எப்போதும் AIMIM-க்கு வளைந்து கொடுக்கும் கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சி என்று ரேவந்த் ரெட்டியே கூறினார். அந்த அறிக்கை மட்டுமே அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் இந்துக்கள் மீது ஆழமான வேரூன்றிய வெறுப்பைக் கொண்டுள்ளது. இதனால்தான் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலின் போது காங்கிரஸ் அல்லது பி.ஆர்.எஸ் தற்செயலாக வெற்றி பெற்றால்கூட, இந்துக்கள் கண்ணியமாக வாழ முடியாது என்று எச்சரித்தோம். முதலமைச்சரின் சமீபத்திய இந்தக் கருத்துகள் பா.ஜ.க சொன்னது சரி என்பதை நிரூபிக்கின்றன. இந்துக்களுக்கும் இந்து கடவுள்களுக்கும் எதிராக காங்கிரஸ் வைத்திருக்கும் வெறுப்பு இப்போது அம்பலமாகியுள்ளது. Strongly condemn the comments made by Chief Minister Revanth Reddy insulting Hindus and Hindu deities. The Congress has always been a party that bends before the AIMIM. Revanth Reddy himself said Congress is a Muslim party - that statement alone exposes their mindset. Congress… pic.twitter.com/E1yhVrNBy3 — Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) December 2, 2025 இந்து சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் பிரிந்து அவமானங்களைத் தொடர்ந்து சகித்துக்கொள்வீர்களா, அல்லது ஒன்றிணைந்து உங்கள் பலத்தை நிலைநாட்டுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவர் ஜி. ராமச்சந்திர ராவ், முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். முதல்வர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
Telangana: `இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி?' - நடந்தது என்ன? முழுத் தகவல்!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அப்போது, ``நான் நேற்று கால்பந்து ஆடப் போனேன். ஒருவர் 'எனக்குக் கால் வலிக்கிறது, அதனால் வெளியே உட்கார்ந்திருக்கிறேன்' என்றார். அதற்கு நான், 'நீ நன்றாக நடக்கிறாயே! கால்பந்தை காலால்தானே ஆடுவார்கள்? அதுதானே விதி' என்றேன். அரசியலிலும் அப்படித்தான். யாரோ ஒருவர் உங்களை முன்னேறவிடாமல் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார்கள். அது இந்த விளையாட்டின் (அரசியலின்) இயல்பு. அந்தத் தடையை உதறித்தள்ளிவிட்டு நீங்கள் முன்னேற முயன்றால், மீண்டும் வேறொருவர் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார். ரேவந்த் ரெட்டி நீங்கள் கீழே விழுவீர்கள். நான் விழுந்துவிட்டேன் என்றால் யாராவது ஒருவர் என்னைத் தூக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நானே எழுந்து மீண்டும் விளையாட வேண்டும். எனவே, எப்போதும் யாராவது ஒருவர் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதை பெரிய பிரச்னையாகப் பார்க்க வேண்டாம். எல்லோருக்கும் இந்தப் பிரச்னை உண்டு. ராகுல் காந்திக்கே G23 தலைவர்கள் அடங்கியக் குழு சதி செய்தது. செய்து கொண்டிருக்கிறது. நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த காந்தி குடும்பத்தின் மீதே விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் கட்சியில் சுதந்திரம் உள்ளது. இதனால்தான் 140 ஆண்டுகளாக காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது. சுதந்திரம் இல்லாவிட்டால், மற்ற கட்சிகள் போலவும், ஜனதா கட்சி போலவும் எப்போதோ முடிந்து மூடப்பட்டிருக்கும். நம் கட்சியில் எல்லா விதமான மனநிலைகள் உள்ளவர்களும் இருப்பார்கள். நம் இந்து கடவுள்களை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை கடவுள்கள் இருக்கின்றன. மூன்று கோடிக்கும் மேலான கடவுள்கள் இருக்கின்றன. முதல்வர் ரேவந்த் ரெட்டி திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு அனுமன், இரண்டு திருமணங்கள் செய்துகொள்பவர்களுக்கு இன்னொரு கடவுள், மது அருந்துபவர்களுக்கு ஒரு கடவுள், எல்லம்மா, போஸம்மா, மகேசம்மா, ஆட்டை பலிகொடுக்க, கோழியைப் பலிகொடுக்க என தனித் தனிக் கடவுள், பருப்பு சாதம் சாப்பிடுபவர்களுக்கு கூட கடவுள் இருக்கிறார். ஆம். எல்லா விதமான கடவுள்களும் உள்ளனர். ஒருவர் வெங்கடேஸ்வர சுவாமியை வணங்குகிறேன் என்று சொல்கிறார். ஒருவர் ஆஞ்சநேய சுவாமியை வணங்குகிறேன் என்று சொல்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு... சாதித்த ரேவந்த் ரெட்டி! - நேரடியாக பதில் சொல்வாரா மோடி? இன்னொருவன் இல்லை இல்லை, நான் அய்யப்ப மாலை அணிவேன் என்று சொல்கிறான். இன்னொருவன் இல்லை, நான் சிவ மாலை அணிவேன் என்கிறார். இவையெல்லாம் நாம் பார்க்கிறோம் அல்லவா காங்கிரஸ் கட்சியும் எல்லா விதமான மனநிலைகள் உள்ள, எல்லா விதமான மனிதர்களையும் உள்ளடக்கிக் கொண்டு போகும் கட்சி. கடவுள்கள் விஷயத்திலேயே நமக்கு ஒருமித்த கருத்தை கொண்டுவர முடியாதபோது, அரசியல் தலைவர்கள் விஷயத்தில், மாவட்டத் தலைவர்கள் விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ராகுல், ரேவந்த், பிரியங்கா - காங்கிரஸ் ஆனால் நல்ல நோக்கம் இருக்க வேண்டும். நல்ல நோக்கம் இல்லாவிட்டால் இது நமக்குப் பயன் இருக்காது. தயவுசெய்து நேற்று வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நான் கேட்க விரும்பவில்லை. பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் சிலர் பிடிக்கும், சிலர் பிடிக்காது. இவை சிறிய சிறிய விஷயங்கள். இவற்றை நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு விட்டுவிட வேண்டும். ‘கல்வியில் சிறந்தால் மட்டும் போதுமா?’ - கவனம் ஈர்த்த ரேவந்த் ரெட்டி... கவனிப்பாரா மு.க.ஸ்டாலின்? நானும் முதலமைச்சராக ஆகாதபோது எனக்கு பலர் மீது கோபம் இருந்தது. அறையை மூடிக்கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு போய் அடிக்க வேண்டும் என்றுக்கூட யோசித்திருக்கிறேன். அடிக்கும் வாய்ப்பு வந்தபோதுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நம் சக்தியை ஏன் வீணாக்கிக்கொள்ள வேண்டும்? எனவே மக்களுக்குப் பணி செய்தால் போதும். இனி அதுவே நம் இலக்கு என முடிவு செய்தேன் என உரையாற்றினார். பண்டி சஞ்சய் குமார் இந்த நீண்ட உரையில் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடவுள்கள் குறித்துப் பேசிய பகுதி மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் மத்திய அமைச்சரும் முன்னாள் தெலுங்கானா பா.ஜ.க தலைவருமான பண்டி சஞ்சய் குமார் தன் எக்ஸ் பக்கத்தில், ``முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்துக்கள் மற்றும் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்துகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸ் எப்போதும் AIMIM-க்கு வளைந்து கொடுக்கும் கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சி என்று ரேவந்த் ரெட்டியே கூறினார். அந்த அறிக்கை மட்டுமே அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் இந்துக்கள் மீது ஆழமான வேரூன்றிய வெறுப்பைக் கொண்டுள்ளது. இதனால்தான் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலின் போது காங்கிரஸ் அல்லது பி.ஆர்.எஸ் தற்செயலாக வெற்றி பெற்றால்கூட, இந்துக்கள் கண்ணியமாக வாழ முடியாது என்று எச்சரித்தோம். முதலமைச்சரின் சமீபத்திய இந்தக் கருத்துகள் பா.ஜ.க சொன்னது சரி என்பதை நிரூபிக்கின்றன. இந்துக்களுக்கும் இந்து கடவுள்களுக்கும் எதிராக காங்கிரஸ் வைத்திருக்கும் வெறுப்பு இப்போது அம்பலமாகியுள்ளது. Strongly condemn the comments made by Chief Minister Revanth Reddy insulting Hindus and Hindu deities. The Congress has always been a party that bends before the AIMIM. Revanth Reddy himself said Congress is a Muslim party - that statement alone exposes their mindset. Congress… pic.twitter.com/E1yhVrNBy3 — Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) December 2, 2025 இந்து சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் பிரிந்து அவமானங்களைத் தொடர்ந்து சகித்துக்கொள்வீர்களா, அல்லது ஒன்றிணைந்து உங்கள் பலத்தை நிலைநாட்டுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவர் ஜி. ராமச்சந்திர ராவ், முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். முதல்வர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?
ஐ.டி ஊழியர், அரசு அதிகாரி, ஓய்வுபெற்றவர் என எந்த வேறுபாடும், பிரிவுகளும் இல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் மோசடிக்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி சி.வி.சண்முகத்திற்கு 'டிஜிட்டல் அரஸ்ட்' போன்கால் வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடருக்காக தற்போது சி.வி.சண்முகம் டெல்லி இருக்கிறார். சைபர் கிரைம் Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் என்ன நடந்தது? நேற்று காலை 10 மணியளவில், சி.வி.சண்முகத்திற்கு அவருக்கு தெரியாத போன் நம்பரில் இருந்து போன்கால் வந்துள்ளது. எதிர்முனையில் ஆங்கிலத்தில் பேசிய மோசடி பேர்வழி, மும்பை போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். சி.வி.சண்முகத்தை தீவிரவாதி என்றும், அவரை உடனடியாக கைது செய்ய உள்ளதாகவும் பயமுறுத்தி உள்ளனர். அடுத்ததாக, 'சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்' பேசுவதாக ஒரு நபர் பேசியுள்ளார். அவர் சி.வி சண்முகத்திற்கு எதிராக 17 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்த மோசடியாளர்களிடம், உண்மையான போலீசார் என்பதற்கான அடையாளத்தைக் கேட்டுள்ளார் சி.வி.சண்முகம். உடனே, அவர்கள் தமிழில் திட்டி, மிரட்டியுள்ளனர். இதன் பின், சி.வி.சண்முகத்தின் உதவியாளர் போன்கால் வந்த நம்பரை ட்ரூ காலரில் செக் செய்துள்ளார். அந்த நம்பர் ட்ரூ காலர் ஆப்பில், 'பி.கே.சி காவல் நிலையம், மும்பை' என்கிற பெயரில் பதிவாகி உள்ளது. மீண்டும் அந்த மொபைல் எண்ணுக்கு அழைத்த போது, போன்கால் எடுக்கவில்லை. சைபர் கிரைம் மோசடி Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? கோரிக்கை இந்த சம்பவத்தை சி.வி சண்முகம் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாராக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறும்போது, `நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த மாதிரியான சம்பவம் நடக்கும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளார். WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக
மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயக்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன. அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது. கிரண் ரிஜிஜு இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடர் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரண்டாம் நாளும் அவை நடவடிக்கை முடங்கியதால், அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களும் சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தனர். அப்போது SIR குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த நிலையில், SIR குறித்து விவாதம் நடத்தப் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உரையில், SIR குறித்து விவாதம் நடத்த ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறோம். SIR விவாதத்துக்கு முன்பு வந்தே மாதரம் குறித்த விவாதத்தை நடத்த வேண்டும். SIR விவாதம் டிசம்பர் 9-ம் தேதியும், வந்தே மாதரம் தொடர்பான விவாதம் 8-ம் தேதியும் நடைபெறும். இரண்டு விவாதங்களுக்கும் தலா 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் நேரத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என்றார். மல்லிகார்ஜுன கார்கே இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வந்தே மாதரம் நமது சுதந்திரப் போராட்டம் தொடர்பான விஷயம். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விஷயங்களும் மிகவும் முக்கியமானவை. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு விவாதம் மேற்கொள்ளத் தயாராக உள்ளது. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் SIR விவாதத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் வந்தே மாதரம் உங்களிடமிருந்து அல்ல, எங்களிடமிருந்து உருவானது என்று கூறி அரசைக் கடுமையாகச் சாடினார். ஆளும் பா.ஜ.க.வின் கலாச்சார நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தியாவின் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விவாதத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின்னணி என்ன?
`டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான யுத்தம் முடிவுக்கு வருகிறது போலும். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அரசல் புரசலாக இருந்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி, கடந்த வாரம் வெட்ட வெளிச்சமானது. 'வார்த்தை' மோதல் டி.கே.சிவக்குமாரோ, சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும் என்றும், பதிலடியாக, சித்தராமையாவோ, உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை என்று எக்ஸ் பக்கத்தில் மோதிக்கொண்டனர். இந்த மோதலுக்கு உடனடியாக காங்கிரஸ் மேலிடம் எதிர்வினையாற்றியது. காங்கிரஸ் மேலிடம் இருவரையும் அழைத்து சமாதானமாக போக சொல்லியும், அடுத்து டெல்லியில் எந்த மீட்டிங் நடந்தாலும், அதில் இருவரையும் ஒற்றுமையாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் 'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை? சித்தராமையாவின் அழைப்பு இதையடுத்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29), டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டிற்கு சென்றிருந்தார். உணவருந்திய பின், இருவரும் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவரும் ஒன்றாக தான் செயல்படுகிறோம். காங்கிரஸ் மேலிடம் என்ன கூறுகிறதோ, அதை அப்படியே பின்பற்றுவோம் என்று கூறினார்கள். மேலும், அந்தச் சந்திப்பு, 2028-ம் ஆண்டு நடக்க உள்ள கர்நாடகா தேர்தலுக்கான மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான சந்திப்பு என்றும் கூறினார்கள். டி.கே.சிவக்குமாரின் அழைப்பு இந்த நிலையில், நேற்று டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் சித்தராமையா. இருவரும் ஒன்றாக உணவருந்தியுள்ளனர். இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது சித்தராமையா, நானும், சிவக்குமாரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக அரசை நடத்துவோம். எங்களது எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். நாங்கள் ஒரே கட்சியில் இருக்கிறோம். நாங்கள் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகிறோம். நாங்கள் இணைந்து பணிபுரிவோம். சித்தராமையா - டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து? எதிர்காலத்திலும், மீண்டும் எங்களது கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றாக செயல்படுவோம். காங்கிரஸ் மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே என்ன கூறுகிறார்களோ, அதை இருவருமே பின்பற்றுவோம். அவர்கள் எங்களை டெல்லிக்கு அழைத்தாலும், அங்கே செல்வோம். காங்கிரஸ் மேலிடம் சொன்னால் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆவார் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பு என்ன சொல்கிறது? இருவரின் அடுத்தடுத்த சந்திப்புகள் குறித்து காங்கிரஸ் தரப்பு, காங்கிரஸ் மேலிடத்தின் பரிந்துரைப்படி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை சமாதானம் ஆகியுள்ளது. முதலில் சித்தராமையா அழைப்பு விடுத்தார். அடுத்ததாக, டி.கே சிவக்குமார் அழைப்பு விடுத்தார். இருவருமே அழைப்புகளை ஏற்று பரஸ்பரமாக நடந்துகொண்டுள்ளனர். இது மிக நல்ல முன்னேற்றம் ஆகும். இருவருமே காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் உள்ளனர் என்று கூறுகின்றது. கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு மோதல்: காங்கிரஸ் மேலிட உத்தரவு; சித்தராமையா, DKS என்ன சொல்கிறார்கள்?
மணிப்பூர் எல்லையில் ஒரு தமிழ் கிராமம் - பின்னணி என்ன? | Manipur Tamils History | Vikatan Explainer
ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show
ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show
திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!
நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது. பெ.சண்முகம் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்நிலையில் 'திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 'இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்துள்ளார்; இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி. இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்தத் தீர்ப்பினை வரவேற்றிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப்… — K.Annamalai (@annamalai_k) December 2, 2025 ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கலை கண்டித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!
நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது. பெ.சண்முகம் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்நிலையில் 'திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 'இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்துள்ளார்; இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி. இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்தத் தீர்ப்பினை வரவேற்றிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப்… — K.Annamalai (@annamalai_k) December 2, 2025 ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கலை கண்டித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம் - டிடிவி தினகரன்
டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் ஏன்? - செங்கோட்டையன் சொன்ன கலகல பதில் இப்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து இன்னும் சில முக்கிய விஜபிக்கள் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் டிடிவி தினகரன், செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர். அதிமுகவின் விசுவாசியாக இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நம்பிக்கையாக நின்றவர். செங்கோட்டையன் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு செய்த துரோகத்தால் வந்த விளைவு. அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர். ஆனால், ரொம்ப அழுத்தமானவர். டிடிவி தினகரன் 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இப்போது கட்சி மாறியிருக்கிறார் என்றால் எவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பார். பழனிசாமியின் துரோகத்திற்கு நிச்சயம் பாடம் புகட்டுவார் செங்கோட்டையன். தவெகவிற்குச் சென்றபிறகும் அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தது அண்ணன் செங்கோட்டையனின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அது அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது. எங்களுக்கு எல்லாம் அது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம் - டிடிவி தினகரன்
டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் ஏன்? - செங்கோட்டையன் சொன்ன கலகல பதில் இப்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து இன்னும் சில முக்கிய விஜபிக்கள் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் டிடிவி தினகரன், செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர். அதிமுகவின் விசுவாசியாக இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நம்பிக்கையாக நின்றவர். செங்கோட்டையன் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு செய்த துரோகத்தால் வந்த விளைவு. அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர். ஆனால், ரொம்ப அழுத்தமானவர். டிடிவி தினகரன் 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இப்போது கட்சி மாறியிருக்கிறார் என்றால் எவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பார். பழனிசாமியின் துரோகத்திற்கு நிச்சயம் பாடம் புகட்டுவார் செங்கோட்டையன். தவெகவிற்குச் சென்றபிறகும் அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தது அண்ணன் செங்கோட்டையனின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அது அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது. எங்களுக்கு எல்லாம் அது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!' - செங்கோட்டையன் குறித்து நயினார்
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, தெற்கே உள்ள காசியான தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன யாத்திரை இன்று தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் காணொளி வாயிலாக தொடக்கம்: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொளிக் காட்சி வாயிலாக இந்த வாகன யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ZOHO நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். அகத்தியர் வாகன தொடக்க விழா தமிழ் கலாசாரத்தின் பெருமைகளைச் சுமந்து செல்லும் இந்த வாகன யாத்திரை தஞ்சாவூர், புதுச்சேரி, திருப்பதி, நந்தியால், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர் மற்றும் பிரயாக்ராஜ் வழியாக வாரணாசியை அடையும் என்று கூறப்படுகிறது. இந்த வாகன யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு வரவேற்பும் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், நமது நாட்டின் பிரதமர் உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் தமிழ் மொழி பற்றியும், அதன் கலாசாரத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். எஸ்.ஐ.ஆர் குறித்து: குறிப்பாக, இறந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க போராடுகிறது. எஸ்.ஐ.ஆர்-இல் எந்த விதமான குளறுபடியும் இல்லை, குளறுபடியே தமிழக முதல்வர் மட்டும்தான். அகத்தியர் வாகனம் அ.தி.மு.க - த.வெ.க குறித்து: மேலும், 50 வருடகால அ.தி.மு.க ஆட்சியில் இருந்துவிட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல தற்போது த.வெ.க-வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.கவிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து எங்குச் செல்வார் என்று தெரியாது. பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். எந்தத் தனிநபரை வைத்தும் எந்தக் கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள்கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம். நயினார் நாகேந்திரன் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு. மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.
`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம். நயினார் நாகேந்திரன் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு. மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.
நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ``அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders - FEO)' என அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளனர். இதில் அசல் தொகை ரூ.26,645 கோடி. வட்டி (அக்டோபர் 31, 2025 வரை) ரூ.31,437 கோடி. இந்தக் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை மீட்கப்பட்ட தொகை ரூ.19,187 கோடி. இன்னும் மீட்க வேண்டிய தொகை ரூ.38.895 கோடி. தப்பியோடிய 15 குற்றவாளிகளில், 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பல உயர்மட்ட பெயர்கள் அடங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகள் விஜய் மால்யா, தற்போது செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக இந்திய பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த இரண்டு மோசடிகளும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாகக் கூறப்படுகிறது. நிரவ் மோடி இதுபோன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்திய சட்டத்தின் செயல்முறைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுக்க 2018-ம் ஆண்டும் FEO சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் மோசடி தொடர்புடைய தொகை, ரூ.100 கோடியைத் தாண்டும்போது அவர்களின் எல்லா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும், இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும், சிவில் வழக்குகளில் எந்த உரிமையும் வழங்கப்படாது. FEO பட்டியலில் இருப்பவர்கள்? இந்தப் பட்டியலில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். விஜய் மல்லையா நீரவ் மோடி நிதின் ஜே சந்தேசரா சேதன் ஜே சந்தேசரா தீப்தி சி சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் மோசடி) சுதர்ஷன் வெங்கட்ராமன் ராமானுஜம் சேஷரத்னம் புஷ்பேஷ் குமார் பைத் (சைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட்) ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல் என்னுடைய ரூ.14,000 கோடியை... நான்தான் பாதிக்கப்பட்டவன் - வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார் நிர்மலா சீதாராமன் இந்த மோசடியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், கடந்த வாரம், ஸ்டெர்லிங் பயோடெக் வங்கி மோசடி வழக்கில் சந்தேசரா சகோதரர்கள் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கடன் வழங்கிய வங்கிகளுக்கு முழு மற்றும் இறுதித் தொகையாக ரூ.5,100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. விஜய் மல்லையா கேள்வி என்ன? மத்திய அரசின் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான தகவல் வெளியானதும் விஜய் மல்லையா தன் எக்ஸ் பக்கத்தில், ``எவ்வளவு காலம் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னையும் பொதுமக்களையும் ஏமாற்றப் போகின்றன? நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், என்னிடமிருந்து ரூ.14,100 கோடி மீட்டதாகச் சொல்கிறார். ஆனால் வங்கிகள், ரூ.10,000 கோடி மட்டுமே மீட்டதாகக் கூறுகின்றன. அந்த ரூ.4,000 கோடி வித்தியாசம் ஏன்? விஜய் மல்லையா இப்போது, நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், நான் இன்னும் ரூ.10,000 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார். ஆனால் வங்கிகள், நான் ரூ.7,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது என்கின்றன. ஆனால், மீட்ட தொகைகளுக்கான கணக்கு அறிக்கை அல்லது கிரெடிட் பதிவு எதுவும் இல்லை. என் தீர்ப்பின் அடிப்படையில் கடன் ரூ.6,203 கோடிதான். ஆனால் இப்போது அரசு, வங்கிகள் எல்லோரும் வேறு வேறு எண்களைச் சொல்கிறார்கள். எனவே, உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இது என்னைச் சார்ந்த நிலையில் மிகவும் பரிதாபகரமான சூழல். மேலும், நிதி அமைச்சரின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, என்னிடமிருந்து மொத்தமாக ரூ.15,094.93 கோடி மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது, 2024 டிசம்பரில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த தொகையை விட சுமார் ரூ.1,000 கோடி அதிகமாகும். ஆனால், இந்த வித்தியாசத்திற்கான விளக்கமோ அல்லது கணக்கு அறிக்கையோ எதுவும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி
நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ``அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders - FEO)' என அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளனர். இதில் அசல் தொகை ரூ.26,645 கோடி. வட்டி (அக்டோபர் 31, 2025 வரை) ரூ.31,437 கோடி. இந்தக் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை மீட்கப்பட்ட தொகை ரூ.19,187 கோடி. இன்னும் மீட்க வேண்டிய தொகை ரூ.38.895 கோடி. தப்பியோடிய 15 குற்றவாளிகளில், 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பல உயர்மட்ட பெயர்கள் அடங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகள் விஜய் மால்யா, தற்போது செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக இந்திய பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த இரண்டு மோசடிகளும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாகக் கூறப்படுகிறது. நிரவ் மோடி இதுபோன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்திய சட்டத்தின் செயல்முறைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுக்க 2018-ம் ஆண்டும் FEO சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் மோசடி தொடர்புடைய தொகை, ரூ.100 கோடியைத் தாண்டும்போது அவர்களின் எல்லா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும், இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும், சிவில் வழக்குகளில் எந்த உரிமையும் வழங்கப்படாது. FEO பட்டியலில் இருப்பவர்கள்? இந்தப் பட்டியலில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். விஜய் மல்லையா நீரவ் மோடி நிதின் ஜே சந்தேசரா சேதன் ஜே சந்தேசரா தீப்தி சி சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் மோசடி) சுதர்ஷன் வெங்கட்ராமன் ராமானுஜம் சேஷரத்னம் புஷ்பேஷ் குமார் பைத் (சைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட்) ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல் என்னுடைய ரூ.14,000 கோடியை... நான்தான் பாதிக்கப்பட்டவன் - வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார் நிர்மலா சீதாராமன் இந்த மோசடியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், கடந்த வாரம், ஸ்டெர்லிங் பயோடெக் வங்கி மோசடி வழக்கில் சந்தேசரா சகோதரர்கள் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கடன் வழங்கிய வங்கிகளுக்கு முழு மற்றும் இறுதித் தொகையாக ரூ.5,100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. விஜய் மல்லையா கேள்வி என்ன? மத்திய அரசின் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான தகவல் வெளியானதும் விஜய் மல்லையா தன் எக்ஸ் பக்கத்தில், ``எவ்வளவு காலம் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னையும் பொதுமக்களையும் ஏமாற்றப் போகின்றன? நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், என்னிடமிருந்து ரூ.14,100 கோடி மீட்டதாகச் சொல்கிறார். ஆனால் வங்கிகள், ரூ.10,000 கோடி மட்டுமே மீட்டதாகக் கூறுகின்றன. அந்த ரூ.4,000 கோடி வித்தியாசம் ஏன்? விஜய் மல்லையா இப்போது, நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், நான் இன்னும் ரூ.10,000 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார். ஆனால் வங்கிகள், நான் ரூ.7,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது என்கின்றன. ஆனால், மீட்ட தொகைகளுக்கான கணக்கு அறிக்கை அல்லது கிரெடிட் பதிவு எதுவும் இல்லை. என் தீர்ப்பின் அடிப்படையில் கடன் ரூ.6,203 கோடிதான். ஆனால் இப்போது அரசு, வங்கிகள் எல்லோரும் வேறு வேறு எண்களைச் சொல்கிறார்கள். எனவே, உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இது என்னைச் சார்ந்த நிலையில் மிகவும் பரிதாபகரமான சூழல். மேலும், நிதி அமைச்சரின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, என்னிடமிருந்து மொத்தமாக ரூ.15,094.93 கோடி மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது, 2024 டிசம்பரில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த தொகையை விட சுமார் ரூ.1,000 கோடி அதிகமாகும். ஆனால், இந்த வித்தியாசத்திற்கான விளக்கமோ அல்லது கணக்கு அறிக்கையோ எதுவும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி
'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்
'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!' பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையிலேயே மைக்கை வீசிவிட்டுச் சென்றார். அதன்பிறகு பா.ம.க-வில் தினமும் புதுப்புது பஞ்சாயத்துக்கள் கிளம்பி வருகின்றன. பாமக அன்புமணி குறிப்பாக மகன் அன்புமணி மீது பல பகீர் குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் சுமத்தி வருகிறார். இந்தச்சூழலில் கடந்த 15.9.2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை இந்த அங்கீகாரம் இருக்கும் என்றார். இதனால், ராமதாஸ் தரப்பு கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றனர். மறுநாள் டெல்லி சென்ற ராமதாஸின் ஆதரவாளரும் கட்சியின் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் பா.ம.க சார்பில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இணைத்திருந்தார். ஜி.கே மணி | பாமக ஆனாலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எதிர்பார்த்த பதில் ராமதாஸ் தரப்புக்கு கிடைக்கவில்லை. இப்படியான பரபரப்பான சூழலில் 12.11.2025 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டினார். அதில் மைக் பிடித்தவர், பா.ம.க-வின் தலைவராகத் தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. மாம்பழ சின்னமும் நமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி ராமதாஸ் தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். தொடர்ந்து பேசியவர், தேர்தலின்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ, பி படிவங்களில் கையெழுத்து இடுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் சென்றாலும் இதனால் எதுவும் ஆகப்போவதில்லை எனக் கூறி ராமதாஸை சீண்டினார். இதில் ராமதாஸ் தரப்பு கோபத்தின் உச்சத்துக்குச் சென்றது. தேர்தல் ஆணையம் - ECI அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, 2022-ல் நடந்த பா.ம.க பொதுக்குழுவில் தலைவராக மருத்துவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆக்ஸ்ட் 28-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், 2023-ம் ஆண்டுப் பா.ம.க பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரையில் தனக்கு பதவிக்காலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கிவிட்டார் எனக் கொதித்தார். 'கட்சியைத் திருடுவது போல்..' தொடர்ந்து பேசியவர், ஜனநாயகத்தை கட்டிக் காக்கவேண்டிய தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவை வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அன்புமணியின் இந்த நடவடிக்கை ஒரு கட்சியைத் திருடுவதுபோல் அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்துவருகிறோம். ஆனாலும் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அன்புமணி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கிறார்கள். இதை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம். போலியான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அன்புமணியின் மோசடிக்குத் துணைபோயிருக்கிறது என்றார், ஆவேசமாக. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அன்புமணி தரப்பு முற்றிலும் மறுத்தது. அனைத்தும் விதிமுறைப்படிதான் நடந்திருக்கிறது எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வழங்கறிஞர் கே.பாலு கூறினார். இதில் கடுப்பான ராமதாஸ் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த ராமதாஸ், எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் என்னிடமிருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டார். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது என்றார் கொதிப்புடன். பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பேசியவர், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மை தான் வெற்றிபெறும். எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையைப் பறிக்க முடியாது. நீதிமன்றம்மீது நம்பிக்கை உள்ளது. 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறார். அப்படி உழைத்துத் தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாகச் செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன், 'அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது!' கடந்த 28.5.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்; என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டார். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான். நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா?. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிகிறது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அன்புமணியைப் படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான். அமித்ஷா நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டார். மக்களை ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது. மக்கள் என்னுடன் உள்ளனர். நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது. 2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என வெடித்தார். இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க சீனியர்கள் சிலர், ஆரம்பத்திலிருந்தே பா.ம.க-வில் சீனியர்களை அன்புமணி மதிக்காமல் செயல்பட்டது, ராமதாஸுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும் அமைதியாக இருந்துவந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென ராமதாஸ் முடிவு செய்திருந்தார். அவருக்குத் தெரியாமல் பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்தார், அன்புமணி. முடிவில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு அன்புமணியின் தவறான முடிவுதான் காரணம் என ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. அதிலிருந்துதான் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதானது. அ.தி.மு.க தலைவர்கள் எவ்வளவு பேசியும் பெரியவர் சமாதானம் அடையவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் இந்தசூழலில்தான் கட்சியையும் அன்புமணி கைப்பற்றிவிட்டார். இதில் ஐயா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம் அன்புமணி வரும் சட்டமன்ற தேர்தலையும் பா.ஜ.க-வுடன் இணைந்து சந்திக்கலாமென முடிவு செய்திருக்கிறார். அதேநேரத்தில் அன்புமணி வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் ராமதாஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தே.ஜ கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும். எனவே இருவரையும் சமாதானம் செய்யப் பா.ஜ.க-வின் டெல்லி முயற்சித்து வருகிறது என்றனர் விரிவாக. 'கதறும் ராமதாஸ்.. குளுகுளு ஏற்காட்டில் அன்புமணி..' இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், அதிகாரப்பூர்வமாக கட்சி அன்புமணியின் கையில் இருக்கிறது. ஒரு பகுதியில் 100 வாக்குகள் பா.ம.க-வுக்கு இருக்கிறது என்றால், அதில் 20 முதல் 25% வாக்குகள் ராமதாஸுக்கு கிடைக்கும். மற்றவர்கள் அன்புமணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு கட்சி அன்புமணியிடம் சென்றபிறகு நியாயம் இல்லை, தர்மம் இல்லை என ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். காலம் கடந்த பின்பு டாக்டர் ராமதாஸ் யோசித்து பயனில்லை. அதேநேரத்தில் தந்தை இப்படி கதறிக்கொண்டிருக்கும்போது மகன் அன்புமணி ஏற்காட்டில் மனைவியுடன் இருக்கிறார். அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அப்பாவின் கதறலை ரசித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் இருவருக்கும் இடையிலான பிரச்னை இனி பெரிதாகாது. டெல்லி பா.ஜ.க தலைமை விரைவில் சமாதானம் செய்துவிடும். அதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள் என்றார். குபேந்திரன் இதுகுறித்து ராமதாஸின் ஆதரவாளர் அருளிடம் விளக்கம் கேட்டோம், தேர்தல் ஆணையம் கட்சித் திருட்டுக்கு துணை போய்விட்டது. அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் சுருக்கமாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அன்புமணியின் ஆதரவாளர் சதாசிவத்தை தொடர்பு கொண்டபோது, நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என்றார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்! 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்
'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!' பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையிலேயே மைக்கை வீசிவிட்டுச் சென்றார். அதன்பிறகு பா.ம.க-வில் தினமும் புதுப்புது பஞ்சாயத்துக்கள் கிளம்பி வருகின்றன. பாமக அன்புமணி குறிப்பாக மகன் அன்புமணி மீது பல பகீர் குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் சுமத்தி வருகிறார். இந்தச்சூழலில் கடந்த 15.9.2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை இந்த அங்கீகாரம் இருக்கும் என்றார். இதனால், ராமதாஸ் தரப்பு கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றனர். மறுநாள் டெல்லி சென்ற ராமதாஸின் ஆதரவாளரும் கட்சியின் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் பா.ம.க சார்பில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இணைத்திருந்தார். ஜி.கே மணி | பாமக ஆனாலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எதிர்பார்த்த பதில் ராமதாஸ் தரப்புக்கு கிடைக்கவில்லை. இப்படியான பரபரப்பான சூழலில் 12.11.2025 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டினார். அதில் மைக் பிடித்தவர், பா.ம.க-வின் தலைவராகத் தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. மாம்பழ சின்னமும் நமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி ராமதாஸ் தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். தொடர்ந்து பேசியவர், தேர்தலின்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ, பி படிவங்களில் கையெழுத்து இடுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் சென்றாலும் இதனால் எதுவும் ஆகப்போவதில்லை எனக் கூறி ராமதாஸை சீண்டினார். இதில் ராமதாஸ் தரப்பு கோபத்தின் உச்சத்துக்குச் சென்றது. தேர்தல் ஆணையம் - ECI அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, 2022-ல் நடந்த பா.ம.க பொதுக்குழுவில் தலைவராக மருத்துவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆக்ஸ்ட் 28-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், 2023-ம் ஆண்டுப் பா.ம.க பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரையில் தனக்கு பதவிக்காலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கிவிட்டார் எனக் கொதித்தார். 'கட்சியைத் திருடுவது போல்..' தொடர்ந்து பேசியவர், ஜனநாயகத்தை கட்டிக் காக்கவேண்டிய தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவை வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அன்புமணியின் இந்த நடவடிக்கை ஒரு கட்சியைத் திருடுவதுபோல் அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்துவருகிறோம். ஆனாலும் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அன்புமணி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கிறார்கள். இதை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம். போலியான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அன்புமணியின் மோசடிக்குத் துணைபோயிருக்கிறது என்றார், ஆவேசமாக. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அன்புமணி தரப்பு முற்றிலும் மறுத்தது. அனைத்தும் விதிமுறைப்படிதான் நடந்திருக்கிறது எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வழங்கறிஞர் கே.பாலு கூறினார். இதில் கடுப்பான ராமதாஸ் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த ராமதாஸ், எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் என்னிடமிருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டார். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது என்றார் கொதிப்புடன். பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பேசியவர், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மை தான் வெற்றிபெறும். எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையைப் பறிக்க முடியாது. நீதிமன்றம்மீது நம்பிக்கை உள்ளது. 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறார். அப்படி உழைத்துத் தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாகச் செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன், 'அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது!' கடந்த 28.5.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்; என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டார். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான். நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா?. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிகிறது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அன்புமணியைப் படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான். அமித்ஷா நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டார். மக்களை ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது. மக்கள் என்னுடன் உள்ளனர். நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது. 2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என வெடித்தார். இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க சீனியர்கள் சிலர், ஆரம்பத்திலிருந்தே பா.ம.க-வில் சீனியர்களை அன்புமணி மதிக்காமல் செயல்பட்டது, ராமதாஸுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும் அமைதியாக இருந்துவந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென ராமதாஸ் முடிவு செய்திருந்தார். அவருக்குத் தெரியாமல் பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்தார், அன்புமணி. முடிவில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு அன்புமணியின் தவறான முடிவுதான் காரணம் என ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. அதிலிருந்துதான் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதானது. அ.தி.மு.க தலைவர்கள் எவ்வளவு பேசியும் பெரியவர் சமாதானம் அடையவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் இந்தசூழலில்தான் கட்சியையும் அன்புமணி கைப்பற்றிவிட்டார். இதில் ஐயா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம் அன்புமணி வரும் சட்டமன்ற தேர்தலையும் பா.ஜ.க-வுடன் இணைந்து சந்திக்கலாமென முடிவு செய்திருக்கிறார். அதேநேரத்தில் அன்புமணி வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் ராமதாஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தே.ஜ கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும். எனவே இருவரையும் சமாதானம் செய்யப் பா.ஜ.க-வின் டெல்லி முயற்சித்து வருகிறது என்றனர் விரிவாக. 'கதறும் ராமதாஸ்.. குளுகுளு ஏற்காட்டில் அன்புமணி..' இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், அதிகாரப்பூர்வமாக கட்சி அன்புமணியின் கையில் இருக்கிறது. ஒரு பகுதியில் 100 வாக்குகள் பா.ம.க-வுக்கு இருக்கிறது என்றால், அதில் 20 முதல் 25% வாக்குகள் ராமதாஸுக்கு கிடைக்கும். மற்றவர்கள் அன்புமணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு கட்சி அன்புமணியிடம் சென்றபிறகு நியாயம் இல்லை, தர்மம் இல்லை என ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். காலம் கடந்த பின்பு டாக்டர் ராமதாஸ் யோசித்து பயனில்லை. அதேநேரத்தில் தந்தை இப்படி கதறிக்கொண்டிருக்கும்போது மகன் அன்புமணி ஏற்காட்டில் மனைவியுடன் இருக்கிறார். அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அப்பாவின் கதறலை ரசித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் இருவருக்கும் இடையிலான பிரச்னை இனி பெரிதாகாது. டெல்லி பா.ஜ.க தலைமை விரைவில் சமாதானம் செய்துவிடும். அதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள் என்றார். குபேந்திரன் இதுகுறித்து ராமதாஸின் ஆதரவாளர் அருளிடம் விளக்கம் கேட்டோம், தேர்தல் ஆணையம் கட்சித் திருட்டுக்கு துணை போய்விட்டது. அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் சுருக்கமாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அன்புமணியின் ஆதரவாளர் சதாசிவத்தை தொடர்பு கொண்டபோது, நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என்றார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்! 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்
இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சஞ்சார் சாத்தி ஆப் என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப். இந்த ஆப்பை அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத வண்ணம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரியங்கா காந்தி தங்கம், வெள்ளி முதலீட்டிற்கு 'சூப்பர்' நேரம் இது; உடனே பயன்படுத்திக்கங்க மக்களே! பிரியங்கா காந்தி என்ன சொல்கிறார்? மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அனைவருக்கும் தங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும் தனிநபர் உரிமை உண்டு. இவை அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. இந்த அரசு நாட்டை அனைத்து விதங்களிலும் சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது. அரசாங்கம் எது குறித்தும் ஆலோசிக்க மறுப்பதால் தான் நாடாளுமன்றம் இயங்குவதில்லை. எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவது மிக எளிது. ஆனால், அவர்கள் எது குறித்தும் விவாதிக்க அனுமதிப்பதில்லை... அது ஜனநாயகம் இல்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஆலோசனைகள் மிக முக்கியம். அனைவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும். அவை அனைத்தையும் கேட்கவேண்டும். மோசடிகளை ரிப்போர்ட் செய்வதற்கும், இந்திய குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் இடையில் மெல்லிய கோடுதான் உள்ளது. மோசடிகளை ரிப்போர்ட் செய்ய உரிய நடைமுறை வேண்டும் தான். சைபர் பாதுகாப்பு குறித்து நிறைய ஆலோசித்திருக்கிறோம். ஆனால், அது குடிமக்களின் மொபைல் போன்களுக்குள் செல்லும் சாக்குப்போக்காக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா `வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை? ஜோதிராதித்யா சிந்தியா பதில் என்ன? இந்த ஆப் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளதாவது... நுகர்வோருக்கு உதவுவதும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்களது கடமை. சஞ்சார் சாத்தி ஆப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இதுவரை சஞ்சார் சாத்தி ஆப் மூலம்... > 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. > கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. > 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆப் போன் கால்களை கவனிக்காது... எதையும் கண்காணிக்காது. அதை விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆக்டிவேட், டி-ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். சஞ்சார் சாத்தி ஆப் வேண்டாம் என்றால் டெலீட் செய்துகொள்ளலாம். இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கானது ஆகும். அனைவருக்கும் இந்த ஆப் இருப்பதைத் தெரியப்படுத்துவது எங்கள் கடமை. இந்த ஆப்பை வைத்திருக்க வேண்டுமா... வேண்டாமா என்பது பயனாளரின் விருப்பம். பிற ஆப்களைப் போல, இந்த ஆப்பையும் மொபைல்போனில் இருந்து டெலீட் செய்துகொள்ளலாம் என்று பேசியுள்ளார். சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?
அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார் - தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்கும் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் தி.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் தேர்தலை முன்னிட்டு மாற்றமடைந்து வருகிறது. எந்தக் கூட்டணி யாருடன் சேருகிறது என்பது குறித்து பல ஊகங்கள் பேசப்பட்டாலும், தி.மு.கவிற்குக் கவலையில்லை என்று அவர் தெரிவித்தார். “எந்தக் கூட்டணி யாருடன் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்குத் தொடர்பில்லை. முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்துள்ளது; இனியும் அதுவே வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று அவர் உறுதியாக கூறினார். இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு “புயல் வந்தாலும் இறுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் கரையைக் கடக்கும். தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் எந்தப் புயலும் பெரிய சவாலாக மாறாது. அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது” என்றார். முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகளைக் கவனத்துடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி வலுவாகத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு ஒருங்கிணைந்த உழைப்பின் மூலம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வலுவான வெற்றியைப் பெற அனைவரும் செயல்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?
ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால், அதை நடத்தியவரின் பெயர் 'ராஜ் கவுண்டர்'. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' என விளித்து அந்த நபரை புல்லரிக்க வைத்தார். ராஜ் - உதயநிதி மூச்சுக்கு மூச்சு சமூக நீதி பேசும் திமுகவின் வருங்காலமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி இப்படி சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டது மிகப்பெரிய முரண். மாநாட்டை நடத்திய அந்த ராஜ் மேம்போக்கான நுனிப்புல் மேயும் அரசியல் புரிதலை கொண்டிருப்பவர். 'சாதி சான்றிதழை ஏன் ஸ்கூல்லயே கேட்குறீங்க. சாதி சான்றிதழை முதல்ல ஒழியுங்க. அப்போதான் சாதி ஒழியும்.' என வாட்ஸ் அப் பார்வர்ட் புரட்சிகளை பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதே நபர்தான், 'எல்லாருக்கும் ஒரு அடையாளம் உண்டு. எங்களோட அடையாளத்தை நாங்க பெருமையா சொல்லிக்கிறோம்.' என மீசையையும் முறுக்குகிறார். 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளப்போகிறோம்.' என இதே கட்சியின் கடந்த மாநாட்டில் இளைஞர்கள் மத்தியில் சாதிய உணர்வைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார். உதயநிதி இதே ராஜ் என்கிற நபர் நடத்திய முந்தைய மாநாடுகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் மேடையேறி பேசியிருக்கின்றனர். தேர்தல் அரசியலில் சாதிய வாக்குகளை குறிவைத்தல் ஒரு உத்தி. ஆனால், அதற்காக நேற்று பேசியதற்கே முரணாக இன்றைக்கு பேசக்கூடாதல்லவா? அதைத்தான் திமுகவும் உதயநிதியும் செய்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த மாநாட்டில் உதயநிதியை வைத்துக்கொண்டே, 'பவானிசாகர் தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதிலிருந்து எங்கள் சமூகம் முற்றிலுமாக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது.' என பு.தி.க கட்சியின் தலைவர் ராஜ் பேசுகிறார். சமூக நீதி உதட்டளவில் மட்டுமே உச்சரித்துவிட்டு அரைகுறையாக அரசியலை புரிந்திருப்பவர் மட்டுமே பேசும் பேச்சு இது. சாதியக் கட்டமைப்புகளில் இறுகிப் போய் காலங்காலமாக ஒடுக்கப்படுவதிலிருந்து வெளி கொண்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான ஜனநாயக வழிதான் தனித் தொகுதிகள். உதயநிதி தமிழகத்தில் 46 SC/ST தனித்தொகுதிகள் இருக்கின்றன. இந்த தனித்தொகுதிகளைத் தவிர்த்து பொதுத் தொகுதிகளில் எத்தனை தலித்துகளை கட்சிகள் நிறுத்துகின்றன என்று பாருங்கள். சொற்ப அளவில்தான் இருக்கும். அப்படியே தனித்தொகுதிகளில் வென்று வருபவர்களுக்கு அமைச்சரவையில் மட்டும் உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா? அதுவும் கிடையாது. ஒரு கட்டாயமான விதிமுறையை ஏற்படுத்தியிருக்கும்போதே அதிகாரத்தை நோக்கி தலித்துகள் நகர்வது அத்தனை சிரமமாக இருக்கிறது. இன்னமும் பல தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களால் தங்களின் இருக்கையில்கூட அமர முடியாத நிலை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதெல்லாம் சமூகநீதி பேசும் திமுகவுக்கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் தெரியாதா என்ன? ராஜ் பேசிய பிறகு மைக்கைப் பிடித்த உதயநிதி அவர் பேசியதிலுள்ள அரசியல் புரிதலற்றத் தன்மையை அங்கேயே சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா? தேர்தல் வருகிறது. கொங்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இடைநிலை சாதியின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என பம்முகிறீர்கள். சரி, அதுகூட இருக்கட்டும். ஆனால், அந்த மேடையில் உதயநிதி கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அந்த 25 நிமிடத்தில் 19 முறை அத்தனை வாஞ்சையோடு 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' சாதிய பின்னொட்டோடு அவரை விளித்திருந்தார். இடையில் உதயநிதிக்கு ஒரு பெருமிதம் வேறு. அதாவது ராஜ் கவுண்டர் 2010 லிருந்து 2013 வரைக்கும் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்தாராம். அதைவிடுங்கள், இப்படி கூறிவிட்டு அடுத்ததாக 'பெரியாரின் சமூக நீதி மண்ணான ஈரோட்டில் ராஜ் கவுண்டர் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்' என புல்லரித்துப் போய் பேசியிருந்தார். உதயநிதி இளைஞர் கூட்டத்துக்கு முன்பாக அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சாதிப் பெயரை அழுத்தி அழுத்தி அத்தனை முறை கூறுகிறோமே என்கிற உறுத்தல் உதயநிதிக்கு இல்லவே இல்லையா? எனில், எப்படி பெரியாரின் வழி சமூக நீதிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என மேடைக்கு மேடை பேச முடிகிறது? திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்! 1929 இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிய பின்னொட்டைத் துறந்தனர். 'மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்றபட்டு ஒரே லட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங்களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.' என அந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பற்றி குடி அரசு இதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது. பெரியார் பெயருக்குப் பின்னால் சாதியப் பின்னொட்டை சேர்க்காமல் இருப்பது தமிழகத்தின் பெருமை. ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கும் சாதியற்ற சமநிலையை நோக்கிய நீண்ட பயணத்துக்குமாக நம்பிக்கையோடு தமிழகமே எடுத்து வைத்திருக்கும் ஓரடி. அந்த ராஜ் தன்னை ஆண்ட பரம்பரை என்கிறார். சாதிய ஆதிக்கத்தோடு பேசுகிறார். அவரால் தன்னுடைய சாதிப் பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்ளமுடியும். துணை முதல்வரும் அதை அங்கீகரித்து பேச முடியும். ஆனால், காலங்காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிற ஒரு மக்கள் கூட்டம் இங்கே இருக்கிறதே? அவர்களால் தங்களின் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள முடியுமா? அப்படி போட்டுக் கொண்டால் அவர்களை மீண்டும் அதே சாதியின் பெயரால் இந்த சமூகம் ஒடுக்குமே. இதையெல்லாம் பேசித்தானே திராவிட இயக்கங்கள் சமூக நீதியை வளர்த்தன. நூறாண்டுகளாக ஒவ்வொரு அடியாக முன்னிழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சமூக நீதித் தேரை திராவிட இயக்கத்தின் வருங்காலம் எனப் போற்றப்படும் உதயநிதியே பின்னிழுத்து செல்ல முயல்வது பெருங்கொடுமை. உதயநிதி முழுக்க முழுக்க தேர்தல் லாபத்துக்காக மட்டுமே திமுகவும் உதயநிதியும் இப்படி ஒரு அரசியலைக் கையிலெடுக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 17 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வென்றிருந்தது. கோவை, ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிமுக வசமே இருந்தது. ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து விட்டு மக்கள் மத்தியில் 'Anti incumbency' மனநிலையில் தேர்தலுக்குச் செல்கையில், ஆட்சியை தக்கவைக்க திமுகவுக்கு கொங்கு மண்டலம் ரொம்பவே முக்கியம். 'உடன்பிறப்பே வா...' என முதல்வர் நடத்தி வரும் ஒன் டு ஒன் நிர்வாகிகள் சந்திப்பில் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே உதயநிதியை இப்படியொரு மாநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி. DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை எந்தவொரு சமூகத்துக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கேட்க அத்தனை உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை சாதியப் பெருமிதமாக முன்னிலைப்படுத்தி இளைஞர்களுக்கு கொம்பு சீவி விடுவதை ஏற்கவே முடியாது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, 'சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து மக்களுக்குமான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க முயற்சி செய்வோம்.' என துணை முதல்வர் பேசியிருந்தால் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். Udhayanidhi சனாதனம் பற்றிப் பேசி இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கை எதிர்கொண்டவரிடமும் கட்சியின் இளைஞரணிக்காக அறிவுத்திருவிழா நடத்தியவரிடமும் அதைத்தான் மக்கள் எதிர்பார்த்திருப்பர். அதை விட்டுவிட்டு சக சாதி சங்கத் தலைவர் இன்னொரு சாதி சங்கத் தலைவரை விளிப்பதைப் போல வார்த்தைக்கு வார்த்தைக்கு சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து, சாதிய மனநிலைக்கு மேலும் தூபம் போட்டது சமூக நீதிக்கு நேர்ந்த இழுக்கு. `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்
DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?
ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால், அதை நடத்தியவரின் பெயர் 'ராஜ் கவுண்டர்'. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' என விளித்து அந்த நபரை புல்லரிக்க வைத்தார். ராஜ் - உதயநிதி மூச்சுக்கு மூச்சு சமூக நீதி பேசும் திமுகவின் வருங்காலமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி இப்படி சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டது மிகப்பெரிய முரண். மாநாட்டை நடத்திய அந்த ராஜ் மேம்போக்கான நுனிப்புல் மேயும் அரசியல் புரிதலை கொண்டிருப்பவர். 'சாதி சான்றிதழை ஏன் ஸ்கூல்லயே கேட்குறீங்க. சாதி சான்றிதழை முதல்ல ஒழியுங்க. அப்போதான் சாதி ஒழியும்.' என வாட்ஸ் அப் பார்வர்ட் புரட்சிகளை பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதே நபர்தான், 'எல்லாருக்கும் ஒரு அடையாளம் உண்டு. எங்களோட அடையாளத்தை நாங்க பெருமையா சொல்லிக்கிறோம்.' என மீசையையும் முறுக்குகிறார். 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளப்போகிறோம்.' என இதே கட்சியின் கடந்த மாநாட்டில் இளைஞர்கள் மத்தியில் சாதிய உணர்வைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார். உதயநிதி இதே ராஜ் என்கிற நபர் நடத்திய முந்தைய மாநாடுகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் மேடையேறி பேசியிருக்கின்றனர். தேர்தல் அரசியலில் சாதிய வாக்குகளை குறிவைத்தல் ஒரு உத்தி. ஆனால், அதற்காக நேற்று பேசியதற்கே முரணாக இன்றைக்கு பேசக்கூடாதல்லவா? அதைத்தான் திமுகவும் உதயநிதியும் செய்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த மாநாட்டில் உதயநிதியை வைத்துக்கொண்டே, 'பவானிசாகர் தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதிலிருந்து எங்கள் சமூகம் முற்றிலுமாக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது.' என பு.தி.க கட்சியின் தலைவர் ராஜ் பேசுகிறார். சமூக நீதி உதட்டளவில் மட்டுமே உச்சரித்துவிட்டு அரைகுறையாக அரசியலை புரிந்திருப்பவர் மட்டுமே பேசும் பேச்சு இது. சாதியக் கட்டமைப்புகளில் இறுகிப் போய் காலங்காலமாக ஒடுக்கப்படுவதிலிருந்து வெளி கொண்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான ஜனநாயக வழிதான் தனித் தொகுதிகள். உதயநிதி தமிழகத்தில் 46 SC/ST தனித்தொகுதிகள் இருக்கின்றன. இந்த தனித்தொகுதிகளைத் தவிர்த்து பொதுத் தொகுதிகளில் எத்தனை தலித்துகளை கட்சிகள் நிறுத்துகின்றன என்று பாருங்கள். சொற்ப அளவில்தான் இருக்கும். அப்படியே தனித்தொகுதிகளில் வென்று வருபவர்களுக்கு அமைச்சரவையில் மட்டும் உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா? அதுவும் கிடையாது. ஒரு கட்டாயமான விதிமுறையை ஏற்படுத்தியிருக்கும்போதே அதிகாரத்தை நோக்கி தலித்துகள் நகர்வது அத்தனை சிரமமாக இருக்கிறது. இன்னமும் பல தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களால் தங்களின் இருக்கையில்கூட அமர முடியாத நிலை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதெல்லாம் சமூகநீதி பேசும் திமுகவுக்கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் தெரியாதா என்ன? ராஜ் பேசிய பிறகு மைக்கைப் பிடித்த உதயநிதி அவர் பேசியதிலுள்ள அரசியல் புரிதலற்றத் தன்மையை அங்கேயே சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா? தேர்தல் வருகிறது. கொங்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இடைநிலை சாதியின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என பம்முகிறீர்கள். சரி, அதுகூட இருக்கட்டும். ஆனால், அந்த மேடையில் உதயநிதி கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அந்த 25 நிமிடத்தில் 19 முறை அத்தனை வாஞ்சையோடு 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' சாதிய பின்னொட்டோடு அவரை விளித்திருந்தார். இடையில் உதயநிதிக்கு ஒரு பெருமிதம் வேறு. அதாவது ராஜ் கவுண்டர் 2010 லிருந்து 2013 வரைக்கும் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்தாராம். அதைவிடுங்கள், இப்படி கூறிவிட்டு அடுத்ததாக 'பெரியாரின் சமூக நீதி மண்ணான ஈரோட்டில் ராஜ் கவுண்டர் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்' என புல்லரித்துப் போய் பேசியிருந்தார். உதயநிதி இளைஞர் கூட்டத்துக்கு முன்பாக அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சாதிப் பெயரை அழுத்தி அழுத்தி அத்தனை முறை கூறுகிறோமே என்கிற உறுத்தல் உதயநிதிக்கு இல்லவே இல்லையா? எனில், எப்படி பெரியாரின் வழி சமூக நீதிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என மேடைக்கு மேடை பேச முடிகிறது? திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்! 1929 இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிய பின்னொட்டைத் துறந்தனர். 'மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்றபட்டு ஒரே லட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங்களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.' என அந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பற்றி குடி அரசு இதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது. பெரியார் பெயருக்குப் பின்னால் சாதியப் பின்னொட்டை சேர்க்காமல் இருப்பது தமிழகத்தின் பெருமை. ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கும் சாதியற்ற சமநிலையை நோக்கிய நீண்ட பயணத்துக்குமாக நம்பிக்கையோடு தமிழகமே எடுத்து வைத்திருக்கும் ஓரடி. அந்த ராஜ் தன்னை ஆண்ட பரம்பரை என்கிறார். சாதிய ஆதிக்கத்தோடு பேசுகிறார். அவரால் தன்னுடைய சாதிப் பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்ளமுடியும். துணை முதல்வரும் அதை அங்கீகரித்து பேச முடியும். ஆனால், காலங்காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிற ஒரு மக்கள் கூட்டம் இங்கே இருக்கிறதே? அவர்களால் தங்களின் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள முடியுமா? அப்படி போட்டுக் கொண்டால் அவர்களை மீண்டும் அதே சாதியின் பெயரால் இந்த சமூகம் ஒடுக்குமே. இதையெல்லாம் பேசித்தானே திராவிட இயக்கங்கள் சமூக நீதியை வளர்த்தன. நூறாண்டுகளாக ஒவ்வொரு அடியாக முன்னிழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சமூக நீதித் தேரை திராவிட இயக்கத்தின் வருங்காலம் எனப் போற்றப்படும் உதயநிதியே பின்னிழுத்து செல்ல முயல்வது பெருங்கொடுமை. உதயநிதி முழுக்க முழுக்க தேர்தல் லாபத்துக்காக மட்டுமே திமுகவும் உதயநிதியும் இப்படி ஒரு அரசியலைக் கையிலெடுக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 17 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வென்றிருந்தது. கோவை, ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிமுக வசமே இருந்தது. ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து விட்டு மக்கள் மத்தியில் 'Anti incumbency' மனநிலையில் தேர்தலுக்குச் செல்கையில், ஆட்சியை தக்கவைக்க திமுகவுக்கு கொங்கு மண்டலம் ரொம்பவே முக்கியம். 'உடன்பிறப்பே வா...' என முதல்வர் நடத்தி வரும் ஒன் டு ஒன் நிர்வாகிகள் சந்திப்பில் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே உதயநிதியை இப்படியொரு மாநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி. DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை எந்தவொரு சமூகத்துக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கேட்க அத்தனை உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை சாதியப் பெருமிதமாக முன்னிலைப்படுத்தி இளைஞர்களுக்கு கொம்பு சீவி விடுவதை ஏற்கவே முடியாது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, 'சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து மக்களுக்குமான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க முயற்சி செய்வோம்.' என துணை முதல்வர் பேசியிருந்தால் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். Udhayanidhi சனாதனம் பற்றிப் பேசி இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கை எதிர்கொண்டவரிடமும் கட்சியின் இளைஞரணிக்காக அறிவுத்திருவிழா நடத்தியவரிடமும் அதைத்தான் மக்கள் எதிர்பார்த்திருப்பர். அதை விட்டுவிட்டு சக சாதி சங்கத் தலைவர் இன்னொரு சாதி சங்கத் தலைவரை விளிப்பதைப் போல வார்த்தைக்கு வார்த்தைக்கு சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து, சாதிய மனநிலைக்கு மேலும் தூபம் போட்டது சமூக நீதிக்கு நேர்ந்த இழுக்கு. `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்
Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், கல்லூரிகள் தோறும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதன் பின்னணியும் இதுவே என்கிறார்கள் விவரப்புள்ளிகள்! சீமான், விஜய் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியும், இம்முறை புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் கணிசமான வாக்குச் சதவிகிதத்தை பெறும் என கணிக்கப்படுகின்றன. இந்த இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குகளை தன்வசப்படுத்துவதில் குறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “விஜய்யின் மாநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கூட்டத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுபோல நா.த.க தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் பல முன்னணி நிர்வாகிகள் விலகினாலும் இளைஞர்களை ஈர்க்கும் இடத்திலேயே அக்கட்சி உள்ளது. இச்சூழலில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் தி.மு.க, இளைஞர்களின் வாக்குகளை கவருவதில் தீவிரம் காட்டிவருகிறது” என்கிறார்கள். ‘உதயநிதிக்கு முன்னுரிமை!’ “2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் சேர்ந்து 68 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளையே அந்த இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்றிருக்கின்றன. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, திமுக கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் 71 சதவிகிதம் பெற்றுள்ளன. திராவிடக் கட்சிகளின் வாக்குகள் குறைந்துபோக, இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும் முக்கிய காரணம் என்கிறார்கள் என வியூக வகுப்பாளர்கள் சிலர் கூறினர். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து, “2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2024 தேர்தல் முடிந்தவுடன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது தி.மு.க. தொடர்ந்து தி.மு.க-விலும் மக்கள் மன்றத்திலும் அவருக்கான ஸ்பேஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதற்கேற்ப இளைஞர்களைச் சென்றடையும் வகையில் சுவாரஸ்யமாகவும் நகைப்புடனும் பேசிவருகிறார் உதயநிதி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மீதும், விஜய் குறித்து மறைமுகமாக விமர்சிப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. உதயநிதியின் பிறந்தநாள் விழா, இளைஞரணியின் அறிவுத் திருவிழா, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு என அவரை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறது தி.மு.க” என்றனர். ‘கல்லூரி தோறும் தமிழ்மன்றம் தொடங்கும் தி.மு.க மாணவரணி!’ நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப் புள்ளிகள், “கேரள அரசியலில் இளைஞர்கள் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கு, கல்லூரிகள் தோறும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ள மாணவர் மன்றங்களே ஒரு முக்கிய காரணம். அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் கையிலெடுத்துள்ளது தி.மு.க. திமுக அதன்படி, கல்லூரிகள் தோறும் மாணவர் தமிழ்மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லயோலா கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, கே.சி.ஜி பொறியியல் கல்லூரி, தங்கவேல் கல்லூரி, பாரத் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி இணைந்திருக்கிறார்கள். அதோடு தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் மன்றத்தைத் தொடங்கும் பொறுப்பு மாணவரணிக்கு அசைன் செய்யப்பட்டிருக்கிறது” என்றனர். தொடர்ந்து மாணவரணி நிர்வாகிகள் சிலர், “முதல்வரின் வழிகாட்டுதலில், அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி முன்னெடுப்பில் கல்லூரி தோறும் தமிழ் மன்றம் தொடங்கிவருகிறது. தமிழ் மன்றத்தில் இணையும் மாணவர்களுக்கு திராவிட இயக்க வரலாறு, சமூக நீதியின் முக்கியத்துவம், தத்துவமற்ற அரசியலால் ஏற்படும் ஆபத்துகளைப் பிரசாரமாக தமிழ் மன்றம் முன்னெடுக்கிறது. தமிழ் மன்ற நிர்வாகிகளாகிய மாணவர்கள் தி.மு.க-விலும் இணைந்துவருகிறார்கள். ” என்றனர். தமிழ்மன்ற மாணவர்கள் சந்திப்பு நல்ல முன்னெடுப்புதான்., ஆனால்? நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “இன்றைய சூழலில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் தங்களது இயக்கங்கள்மீது பற்றாக இருப்பது தி.மு.க-வுக்கு ஒரு வகையில் இடையூறுதான். தி.மு.க மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் மாணவர்கள் மத்தியில் கட்சியை வலுப்படுத்த அருமையான திட்டம். அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை தொடங்குவது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கேரளாவில் சி.பி.எம் சார்பில் SFI (Students’ Federation of India), காங்கிரஸ் சார்பில் KSU (Kerala Students’ Union), பா.ஜ.க சார்பில் ABVP ஆகிய அமைப்புகள் வலுவாக இருப்பதால் இளைஞர்கள் தொடக்கத்திலேயே அரசியல்படுத்தப்படுகிறார்கள்” என்றனர். `வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ - மக்களிடம் எடுபடுமா?!
Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், கல்லூரிகள் தோறும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதன் பின்னணியும் இதுவே என்கிறார்கள் விவரப்புள்ளிகள்! சீமான், விஜய் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியும், இம்முறை புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் கணிசமான வாக்குச் சதவிகிதத்தை பெறும் என கணிக்கப்படுகின்றன. இந்த இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குகளை தன்வசப்படுத்துவதில் குறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “விஜய்யின் மாநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கூட்டத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுபோல நா.த.க தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் பல முன்னணி நிர்வாகிகள் விலகினாலும் இளைஞர்களை ஈர்க்கும் இடத்திலேயே அக்கட்சி உள்ளது. இச்சூழலில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் தி.மு.க, இளைஞர்களின் வாக்குகளை கவருவதில் தீவிரம் காட்டிவருகிறது” என்கிறார்கள். ‘உதயநிதிக்கு முன்னுரிமை!’ “2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் சேர்ந்து 68 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளையே அந்த இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்றிருக்கின்றன. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, திமுக கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் 71 சதவிகிதம் பெற்றுள்ளன. திராவிடக் கட்சிகளின் வாக்குகள் குறைந்துபோக, இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும் முக்கிய காரணம் என்கிறார்கள் என வியூக வகுப்பாளர்கள் சிலர் கூறினர். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து, “2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2024 தேர்தல் முடிந்தவுடன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது தி.மு.க. தொடர்ந்து தி.மு.க-விலும் மக்கள் மன்றத்திலும் அவருக்கான ஸ்பேஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதற்கேற்ப இளைஞர்களைச் சென்றடையும் வகையில் சுவாரஸ்யமாகவும் நகைப்புடனும் பேசிவருகிறார் உதயநிதி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மீதும், விஜய் குறித்து மறைமுகமாக விமர்சிப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. உதயநிதியின் பிறந்தநாள் விழா, இளைஞரணியின் அறிவுத் திருவிழா, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு என அவரை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறது தி.மு.க” என்றனர். ‘கல்லூரி தோறும் தமிழ்மன்றம் தொடங்கும் தி.மு.க மாணவரணி!’ நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப் புள்ளிகள், “கேரள அரசியலில் இளைஞர்கள் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கு, கல்லூரிகள் தோறும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ள மாணவர் மன்றங்களே ஒரு முக்கிய காரணம். அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் கையிலெடுத்துள்ளது தி.மு.க. திமுக அதன்படி, கல்லூரிகள் தோறும் மாணவர் தமிழ்மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லயோலா கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, கே.சி.ஜி பொறியியல் கல்லூரி, தங்கவேல் கல்லூரி, பாரத் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி இணைந்திருக்கிறார்கள். அதோடு தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் மன்றத்தைத் தொடங்கும் பொறுப்பு மாணவரணிக்கு அசைன் செய்யப்பட்டிருக்கிறது” என்றனர். தொடர்ந்து மாணவரணி நிர்வாகிகள் சிலர், “முதல்வரின் வழிகாட்டுதலில், அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி முன்னெடுப்பில் கல்லூரி தோறும் தமிழ் மன்றம் தொடங்கிவருகிறது. தமிழ் மன்றத்தில் இணையும் மாணவர்களுக்கு திராவிட இயக்க வரலாறு, சமூக நீதியின் முக்கியத்துவம், தத்துவமற்ற அரசியலால் ஏற்படும் ஆபத்துகளைப் பிரசாரமாக தமிழ் மன்றம் முன்னெடுக்கிறது. தமிழ் மன்ற நிர்வாகிகளாகிய மாணவர்கள் தி.மு.க-விலும் இணைந்துவருகிறார்கள். ” என்றனர். தமிழ்மன்ற மாணவர்கள் சந்திப்பு நல்ல முன்னெடுப்புதான்., ஆனால்? நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “இன்றைய சூழலில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் தங்களது இயக்கங்கள்மீது பற்றாக இருப்பது தி.மு.க-வுக்கு ஒரு வகையில் இடையூறுதான். தி.மு.க மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் மாணவர்கள் மத்தியில் கட்சியை வலுப்படுத்த அருமையான திட்டம். அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை தொடங்குவது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கேரளாவில் சி.பி.எம் சார்பில் SFI (Students’ Federation of India), காங்கிரஸ் சார்பில் KSU (Kerala Students’ Union), பா.ஜ.க சார்பில் ABVP ஆகிய அமைப்புகள் வலுவாக இருப்பதால் இளைஞர்கள் தொடக்கத்திலேயே அரசியல்படுத்தப்படுகிறார்கள்” என்றனர். `வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ - மக்களிடம் எடுபடுமா?!
``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் ரதயாத்திரை 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான் . பிரேமலதா விஜயகாந்த் அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் நாங்கள் அமைப்போம். தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை என்று பேசியிருக்கிறார்.
``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் ரதயாத்திரை 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான் . பிரேமலதா விஜயகாந்த் அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் நாங்கள் அமைப்போம். தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை என்று பேசியிருக்கிறார்.
UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?
உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பான வேலைப் பளுவால் ஏற்பட்ட அழுத்தமே தற்கொலைக்கான காரணம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் கடந்த சில வாரங்களாக, அதிகப்படியான வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல பூத் லெவல் ஆபீசர்கள் (BLO) தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது, அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. More than 30 BLOs have committed suicide due to the extreme mental stress of SIR work. This is the video of BLO Sarvesh Singh in which he was crying before taking his life. @ECISVEEP and Gyanesh Kumar have not even acknowledged these deaths, let alone offered a word of… pic.twitter.com/u0eBDzcwX3 — Dr. Shama Mohamed (@drshamamohd) December 1, 2025 காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஷாமா முகமது நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட BLO-க்கள் SIR பணிகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அழுதபடி வீடியோ வெளியிட்ட ஆசிரியர் உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சர்வேஷ் சிங், ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிதான் இவருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான இவரது முதல் பணி இதுதான். BLO என்பவர், பொதுமக்களுக்குத் தேர்தல் தொடர்பான படிவங்களை நிரப்பவும், விவரங்களை உரிய தரவுத்தளங்களில் பதிவேற்றவும் உதவும் முதல்நிலைத் தொடர்பு அதிகாரி ஆவார். தற்கொலை செய்வதற்கு முன் சிங் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோவில், அவர் கடுமையாக உழைத்த போதிலும், தன்னால் பணியை முடிக்க முடியவில்லை என்று கூறி, துக்கத்தில் உடைந்து அழுவதைக் காண முடிகிறது. அந்த வீடியோவில், அவர் தனது தாயிடமும், சகோதரியிடமும் மன்னிப்பு கேட்பதுடன், தனது இளம் மகள்களைக் கவனித்துக் கொள்ளுமாறு கண்ணீருடன் கெஞ்சுகிறார். வீடியோவில் சர்வேஷ் சிங் அதில், கட்டுக்கடங்காமல் அழுதபடி, அம்மா, என் மகள்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். என்னால் பணியை முடிக்க முடியவில்லை. நான் ஒரு கடுமையான முடிவை எடுக்கப் போகிறேன் என்று அவர் கூறியது பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது. மேலும், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என்றும், தனது குடும்பத்தினரை யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். நான் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு நான்கு இளம் மகள்கள் உள்ளனர். மற்றவர்களால் வேலையை முடிக்க முடிகிறது, ஆனால் என்னால் முடியவில்லை என்று வீடியோவில் அவர் விம்மி அழுதுள்ளார். தமது சகோதரியை குறிப்பிட்டு பேசிய அவர், நான் இந்த உலகை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என்னை மன்னித்துவிடு. நான் இல்லாத நேரத்தில் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள் என்று பேசியுள்ளார். இரண்டு பக்க தற்கொலை கடிதம்... காவல்துறையினர் சொல்வதென்ன? அதிகாரிகள் கூறுவதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வேஷ் சிங்கின் மனைவி பப்லி தேவி, அவர் வீட்டின் ஸ்டோர் ரூமில் தூக்கில் தொங்குவதைக் கண்டு, உடனடியாக உள்ளூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தற்கொலை கடிதம் சம்பவ இடத்திலிருந்து, மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரிக்கு கையால் எழுதப்பட்ட, இரண்டு பக்கத் தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று சிங் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். நான் இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் SIR இலக்குகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கவலையால் என்னால் இரவுகளைக் கடக்க முடியவில்லை. நான் பாடுபட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் இரண்டு பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று அந்தத் தற்கொலைக் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தற்கொலைக் குறிப்பின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்திய மூத்த காவல் அதிகாரி ஆஷிஷ் பிரதாப் சிங், BLO பணியின் சுமையைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடந்துவரும் இந்தப் பரந்துபட்ட SIR பணி காரணமாக சிங் கடும் அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். SIR மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் சிங் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், முதற்கட்டத் தகவலின்படி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வேலையின் தரம் சிறப்பாக இருந்திருக்கிறது. அவருக்கு உதவ அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். நிர்வாக ரீதியாகவும் காவல்துறை ரீதியாகவும் விசாரணைகள் நடந்து வருகின்றன. குடும்பத்தினருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். SIR காலக்கெடு நீட்டிப்பு! இதற்கிடையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்துள்ளது. இதனால், வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. மேலும், சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் சாவடி நிலை முகவர்கள் (BLAs) ஆகியோருக்கும் விடுபட்டவர்கள், மாற்றப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் நகல் வாக்காளர்கள் ஆகியோரின் பட்டியலைச் சமர்ப்பிக்க கூடுதலாக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம்
விஜய் எதிரியைச் சொல்லிவிட்டார்; கமலின் எதிரி யார்? - கமல் சொன்ன பதில்!
கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார். அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. கமல் Kamal Haasan: இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் - ஓய்வு குறித்து கமல் ஹாசன் அதற்கு கமல், நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கிடைக்காததால் நான் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதேயில்லை. என் தம்பி விஜய்க்கு அறிவுரை கூற இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன். 'யவருடைய அறிவுரையைவிடவும் அனுபவமே சிறந்த ஆசான்' என்பேன் நான். அனுபவம் சொல்லித்தரும் அனைத்தையும். கேள்வி: விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் எதிரி (திமுக, பாஜக) யார் என்று அடையாளம் கண்டுவிட்டார். கமல் அரசியலில் தனது எதிரியை இன்னும் அடையாளம் காணவில்லையா? கமல்: தனிப்பட்ட வகையில் யாரும் எனக்கு எதிரிகள் அல்ல. என்னுடைய எதிரி மிகப்பெரியது. இங்கு இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்க தைரியமில்லாமல் பயப்படும் எதிரிதான் என்னுடைய எதிரி. அது சாதிதான். சாதிதான் என்னுடைய எதிரி. அந்த சாதியம் என்னும் எதிரியைக் கொன்றுவிடுவதுதான் என்னுடைய லட்சியம். கமல் - விஜய் அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில் ஏன் கொன்றுவிடுவேன் என்று வன்முறையாகச் சூளுரைக்கிறேன் என்றால், சாதியம் அவ்வளவு வன்முறையானது, கொடுமையான வன்முறைகளை இன்னுமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அதைக் கொன்றுவிடவேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ளேன். அதுதான் என்னுடைய எதிரி, மிகப்பெரிய எதிரி என்று பேசியிருக்கிறார் கமல்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின்னணி என்ன?
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்பட்டுள்ளார். எனினும் தான் நாடாளுமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் விதிகளையோ அல்லது பாதுகாப்பு விதிமுறைகளையோ மீறவில்லை எனத் தனது செயலை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ரேணுகா சவுத்ரி என்ன நடந்தது? ரேணுகா சவுத்ரி காரில் தன்னுடன் கொண்டுவந்த நாய் இன்று காலையில் வழியில் மீட்கப்பட்ட தெருநாய் எனக் கூறியுள்ளார். ANI செய்தி நிறுவனத்தின்படி, அந்த நாய் காருக்குள் இருந்ததாகவும், காங்கிரஸ் எம்.பி.யை நாடாளுமன்றத்தில் கார் இறக்கிவிட்ட சிறிது நேரத்திலேயே அது அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நாயை ஒரு காரும் ஸ்கூட்டரும் மோதிய போது பார்த்ததாகவும், வேறு வாகனங்களில் அடிபட்டுவிடக் கூடும் என்பதற்காக மீட்டு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பியை சாடிய பாஜக நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஒரு விலங்கைக் கொண்டுவந்ததற்காக காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், ரேணுகா சவுத்ரி நாடகம் போடுவதாக விமர்சித்ததுடன் முறையான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அழைத்துவர முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார். Jagdambika Pal பிடிஐ செய்தி நிறுவனம் கூறுவதன்படி, நீங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதில் தீவிரமாக இல்லை... இப்படிப்பட்ட தமாஷா (நாடகம்) மூலம் நாடாளுமன்றத்தையே கேலி செய்கிறீர்கள்... அவை உறுப்பினர், இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். இவர் மீது நடவடிக்கை எடுக்க அவைத்தலைவர் வழிவகை செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார் ஜகதாம்பிகா பால். பாஜக செய்திதொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா, ரேணுகா சவுத்ரி நாயை உள்ளே அழைத்து வந்து எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இது அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அவமானம் என்றும், காங்கிரஸ் மற்றும் ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். Parliament விதிமுறைகள் சொல்வதென்ன? நியூஸ்9 தளம் கூறுவதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரோ அல்லது பொருளோ அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்பு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின்படி செல்லப்பிராணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. தனது செயலை நியாயப்படுத்தும் எம்.பி எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி விலங்குகளை விரும்பவில்லை என்றும், தெருநாய்களை பாதுகாக்க எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் ரேணுகா சவுத்ரி. VIDEO | Delhi: “They don’t like animals? 'Waah Sarkar!' If a mute animal wandered into a vehicle, why are they so bothered? Did they see a dog that bites? The ones who bite are inside Parliament, not the dogs", said Congress MP Renuka Chowdhury on the controversy over bringing a… pic.twitter.com/E60bqyBML5 — Press Trust of India (@PTI_News) December 1, 2025 ஏதாவது சட்டம் இருக்கா? நான் வந்துட்டு இருந்தேன். ஒரு ஸ்கூட்டர் ஒரு கார் மேல மோதிச்சு. இந்த சின்ன நாய்க்குட்டி ரோட்டில் அலைஞ்சுட்டு இருந்தது. அது சக்கரத்துல மோதும்னு நினைச்சேன். அதனால நான் அதை எடுத்துட்டு, காரில் போட்டுட்டு, பாராளுமன்றத்துக்கு வந்து, திருப்பி அனுப்பிட்டேன். கார் போயிடுச்சு, நாயும் போயிடுச்சு. அப்போ இந்த விவாதத்துல என்ன பிரயோஜனம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அவர். தன்னை இறக்கிவிட்ட ஓட்டுநகர் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் விளக்கமளித்தார். இந்த அரசாங்கத்திற்கு விலங்குகள் பிடிக்காது. விலங்குகளுக்கு குரல் இல்லை. அது [நாய்] காரில் இருந்தது, அதனால் பிரச்சனை என்ன? அது மிகவும் சிறியது, அதைப் பார்க்க கடிப்பது போல இருக்கிறதா? பாராளுமன்றத்திற்குள் அமர்ந்திருப்பவர்கள் கடிக்கிறார்கள், நாய்கள் அல்ல. எனப் பேசினார் அவர். தன்னை நாய் பிரியராக கூறிக்கொள்ளும் ரேணுகா சவுத்ரி, இதுவரை பல தெரு நாய்களைக் தத்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய Pitbull நாய் - நெகிழும் உரிமையாளர்!
நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின்னணி என்ன?
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்பட்டுள்ளார். எனினும் தான் நாடாளுமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் விதிகளையோ அல்லது பாதுகாப்பு விதிமுறைகளையோ மீறவில்லை எனத் தனது செயலை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ரேணுகா சவுத்ரி என்ன நடந்தது? ரேணுகா சவுத்ரி காரில் தன்னுடன் கொண்டுவந்த நாய் இன்று காலையில் வழியில் மீட்கப்பட்ட தெருநாய் எனக் கூறியுள்ளார். ANI செய்தி நிறுவனத்தின்படி, அந்த நாய் காருக்குள் இருந்ததாகவும், காங்கிரஸ் எம்.பி.யை நாடாளுமன்றத்தில் கார் இறக்கிவிட்ட சிறிது நேரத்திலேயே அது அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நாயை ஒரு காரும் ஸ்கூட்டரும் மோதிய போது பார்த்ததாகவும், வேறு வாகனங்களில் அடிபட்டுவிடக் கூடும் என்பதற்காக மீட்டு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பியை சாடிய பாஜக நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஒரு விலங்கைக் கொண்டுவந்ததற்காக காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், ரேணுகா சவுத்ரி நாடகம் போடுவதாக விமர்சித்ததுடன் முறையான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அழைத்துவர முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார். Jagdambika Pal பிடிஐ செய்தி நிறுவனம் கூறுவதன்படி, நீங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதில் தீவிரமாக இல்லை... இப்படிப்பட்ட தமாஷா (நாடகம்) மூலம் நாடாளுமன்றத்தையே கேலி செய்கிறீர்கள்... அவை உறுப்பினர், இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். இவர் மீது நடவடிக்கை எடுக்க அவைத்தலைவர் வழிவகை செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார் ஜகதாம்பிகா பால். பாஜக செய்திதொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா, ரேணுகா சவுத்ரி நாயை உள்ளே அழைத்து வந்து எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இது அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அவமானம் என்றும், காங்கிரஸ் மற்றும் ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். Parliament விதிமுறைகள் சொல்வதென்ன? நியூஸ்9 தளம் கூறுவதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரோ அல்லது பொருளோ அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்பு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின்படி செல்லப்பிராணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. தனது செயலை நியாயப்படுத்தும் எம்.பி எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி விலங்குகளை விரும்பவில்லை என்றும், தெருநாய்களை பாதுகாக்க எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் ரேணுகா சவுத்ரி. VIDEO | Delhi: “They don’t like animals? 'Waah Sarkar!' If a mute animal wandered into a vehicle, why are they so bothered? Did they see a dog that bites? The ones who bite are inside Parliament, not the dogs", said Congress MP Renuka Chowdhury on the controversy over bringing a… pic.twitter.com/E60bqyBML5 — Press Trust of India (@PTI_News) December 1, 2025 ஏதாவது சட்டம் இருக்கா? நான் வந்துட்டு இருந்தேன். ஒரு ஸ்கூட்டர் ஒரு கார் மேல மோதிச்சு. இந்த சின்ன நாய்க்குட்டி ரோட்டில் அலைஞ்சுட்டு இருந்தது. அது சக்கரத்துல மோதும்னு நினைச்சேன். அதனால நான் அதை எடுத்துட்டு, காரில் போட்டுட்டு, பாராளுமன்றத்துக்கு வந்து, திருப்பி அனுப்பிட்டேன். கார் போயிடுச்சு, நாயும் போயிடுச்சு. அப்போ இந்த விவாதத்துல என்ன பிரயோஜனம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அவர். தன்னை இறக்கிவிட்ட ஓட்டுநகர் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் விளக்கமளித்தார். இந்த அரசாங்கத்திற்கு விலங்குகள் பிடிக்காது. விலங்குகளுக்கு குரல் இல்லை. அது [நாய்] காரில் இருந்தது, அதனால் பிரச்சனை என்ன? அது மிகவும் சிறியது, அதைப் பார்க்க கடிப்பது போல இருக்கிறதா? பாராளுமன்றத்திற்குள் அமர்ந்திருப்பவர்கள் கடிக்கிறார்கள், நாய்கள் அல்ல. எனப் பேசினார் அவர். தன்னை நாய் பிரியராக கூறிக்கொள்ளும் ரேணுகா சவுத்ரி, இதுவரை பல தெரு நாய்களைக் தத்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய Pitbull நாய் - நெகிழும் உரிமையாளர்!
Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK
அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில்
அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என்று பேசியிருந்தார். செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார் என்று விமர்சித்திருந்தார். தன் மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்திருக்கும் செங்கோட்டையன், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் நான் பேசியதில்லை. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றுதான் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகுதான் அவர்களுடன் நான் பேசினேன். எதோவொரு குற்றச்சாட்டை சொல்லி என்னை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பழனிசாமியின் நோக்கம். அவர் நினைத்தது இன்று நிறைவேறுவிட்டது. நான் எனக்கான அரசியல்பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். செங்கோட்டையன் ``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன் கட்சியில் சேர்ந்து கோபிசெட்டிபாளையம் திரும்பியபோது தவெக தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. இளம்தலைமுறையினர் எல்லோரும் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழ்நாடு மக்களும் புதிய மாற்றத்தை, நல்ல அரசியலை விரும்புகிறார்கள் என்பது கூடும் மக்கள் கூட்டம் மூலம் தெரியவருகிறது. என்னுடைய வேகமான செயல்பட்டை தடை போடவேண்டும் என்று என்மீது வீண் பழிபோடுகிறார்கள் என்றார். மேலும், 'திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதிமுக ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லையா?' என்று உதயநிதி விமர்சித்தது குறித்து பேசிய செங்கோட்டையன், நான் யார் சொல்லியும் தவெகவில் இணையவில்லை. இது என்னுடைய முடிவு. செங்கோட்டையன் கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; ரூ.20 லட்சம் இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி தூய்மையான ஆட்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்தார், அம்மா ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்தார். அவர்களுக்குப் பிறகு அதிமுக தலைமையும் மாறிவிட்டது. அவர்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டுதான் ஆட்சி மாறியது. அதனால்தான் தூய்மையான ஆட்சி இனி வரவேண்டும், ஆட்சிமாற்றம் வேண்டும் என்று சொன்னேன் என்று பதிலளித்திருக்கிறார் செங்கோட்டையன்.
அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில்
அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என்று பேசியிருந்தார். செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார் என்று விமர்சித்திருந்தார். தன் மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்திருக்கும் செங்கோட்டையன், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் நான் பேசியதில்லை. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றுதான் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகுதான் அவர்களுடன் நான் பேசினேன். எதோவொரு குற்றச்சாட்டை சொல்லி என்னை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பழனிசாமியின் நோக்கம். அவர் நினைத்தது இன்று நிறைவேறுவிட்டது. நான் எனக்கான அரசியல்பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். செங்கோட்டையன் ``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன் கட்சியில் சேர்ந்து கோபிசெட்டிபாளையம் திரும்பியபோது தவெக தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. இளம்தலைமுறையினர் எல்லோரும் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழ்நாடு மக்களும் புதிய மாற்றத்தை, நல்ல அரசியலை விரும்புகிறார்கள் என்பது கூடும் மக்கள் கூட்டம் மூலம் தெரியவருகிறது. என்னுடைய வேகமான செயல்பட்டை தடை போடவேண்டும் என்று என்மீது வீண் பழிபோடுகிறார்கள் என்றார். மேலும், 'திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதிமுக ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லையா?' என்று உதயநிதி விமர்சித்தது குறித்து பேசிய செங்கோட்டையன், நான் யார் சொல்லியும் தவெகவில் இணையவில்லை. இது என்னுடைய முடிவு. செங்கோட்டையன் கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; ரூ.20 லட்சம் இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி தூய்மையான ஆட்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்தார், அம்மா ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்தார். அவர்களுக்குப் பிறகு அதிமுக தலைமையும் மாறிவிட்டது. அவர்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டுதான் ஆட்சி மாறியது. அதனால்தான் தூய்மையான ஆட்சி இனி வரவேண்டும், ஆட்சிமாற்றம் வேண்டும் என்று சொன்னேன் என்று பதிலளித்திருக்கிறார் செங்கோட்டையன்.
புலி, சிறுத்தை, Bison எல்லாம் இங்கே இருக்கு | KC Palanisamy Estate Visit
புலி, சிறுத்தை, Bison எல்லாம் இங்கே இருக்கு | KC Palanisamy Estate Visit
`பழனிசாமி, மக்களை கேட்டுத்தான் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தாரா?' - டிடிவி தினகரன்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவுக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தீர்களே? என்ற கேள்விக்கு, 31ஆம் தேதி வரை டிசம்பர் மாதம் உள்ளது, அதற்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது, கூட்டணி உறுதியான பின்பு அது குறித்து தெரிவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே? என்றதற்கு, துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017 -இல் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும். உங்களிடம் ஓட்டுக் கேட்டவர், ராஜினாமா செய்யும்போது கேட்டாரா என எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் மக்களிடம் கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, 2017 ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து, அவர் முதல்வராகக் காரணமான 18 எம்எல்ஏக்களையும் தொகுதி மக்களிடம் கேட்டுதான் தகுதி நீக்கம் செய்தாரா? அதேபோல் எம்ஜிஆர் கொண்டுவந்த சட்ட விதிகளையெல்லாம் தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு தனக்கு சாதகமாக சட்ட விதிகளை மாற்றினார், அப்போது அதிமுக தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா? அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைக்கு அதிமுக என்ற கட்சியை இல்லாமல் செய்து, இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில், பணத்திமிரில் பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார். அதிமுக என்ற கட்சியை, 'எடப்பாடி அதிமுக' என மாற்றி, ஒரு வட்டார கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். அங்கிருக்கக் கூடிய தொண்டர்கள் எல்லாம் தூங்குவது போல் நடித்தாலும் 2026 தேர்தலுக்குப் பின்னர் விழித்துக் கொள்வார்கள். பாஜக, கூட்டணிக்கு அழைத்தார்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றவரிடம் ஓபிஎஸ், வரும் 15 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து இருக்கிறாரே? என்ற கேள்விக்கு 15 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
’உதயநிதி முதல்வராக வருவார்’ என்ற பிறகும் என்னை ஏற்க மறுக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத்
கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந்தவர். பிறகு அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என இவரைக் கலாய்த்தவர்களும் உண்டு. நாஞ்சில் சம்பத் ஜெ. மறைவுக்குப் பிறகு மறுபடியும் திமுக மேடைகளில் பார்க்க முடிந்த சூழலில், தற்போது மீண்டும் அக்கட்சியுடன் பிரச்னை என்கிற தகவல்கள் உலா வருகின்றன. திமுகவுடன் என்ன பிரச்னை? தவெக வில் சேரும் திட்டம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுடன் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். ஒன்றுக்கும் உதவாத 19 ஆண்டு பயணம்! ‘’நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். என் பெயரே சம்பத். வைகோ தனியா போனபோது அவர் மீது பழி சுமத்துறாங்களேன்னுதான் நானும் கூடசேர்ந்து வெளியேறுனேன். மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தேன். அந்த அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. அதிமுக மேடையில் நாஞ்சில் சம்பத் வைகோவுக்குத் தன்னைப் போல இன்னொருவர் வளர்ந்திடக் கூடாதுங்கிற எண்ணம். அதனால் மறுபடியும் திமுகவில் சேரலாமென நினைத்து அந்த விருப்பத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படுத்தினேன். ஆனால் திமுகவில் கண்டு கொள்ளவில்லை. மதிமுகவில் இருந்தபோது நான் திமுகவை விமர்சித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிய வந்தது. இன்னோவா மட்டுமல்ல சுதந்திரமும் தந்த ஜெ! ஆனால் என்னுடைய அந்தப் பேட்டி கண்டு என்னை அழைத்தார் ஜெயலலிதா அம்மையார். எனவே அதிமுகவில் சேர்ந்தது திட்டமிட்ட செயல் இல்லை. அதேநேரம் என் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அவசியமில்லாத அளவுக்கு அங்கு எனக்கு சுதந்திரம் தந்திருந்தார் ஜெயலலிதா. வைகோ தவிர ’ராஜபக்ஷேவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும்’, ;இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது’ போன்ற தீர்மானங்களை இயற்றிய அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்தன. எனவே அவருடைய மறைவு வரை அந்த இயக்கத்தில் நான் இருந்தேன். அவருக்குப் பின் அங்கு யார் தலைமையையும் ஏற்க மனமில்லாததால் ஒதுங்கி இருந்தேன். இந்தச் சூழலில் பாசிச பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் ஒரே காரணத்துக்காக மீண்டும் திமுக மேடைகளில் பேசி வந்தேன்’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம். சி.எம். உதயநிதி! பிறகு எப்படி மீண்டும் திமுகவுடன் பிரச்னை உருவானது? ’’ஒரு இடத்துல பேசறப்ப வருகிற 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனப் பேசினேன். ஒரு பேச்சாளனாக எனக்குத் தோன்றியது அந்தக் கருத்து. அந்தக் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல. நான் பேச சம்மத்தித்திருந்த சில கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தகவல்கூட எனக்குத் தெரியப்படுத்தப் படவில்லை. அதையும் மீறி நவம்பர் 27 ல் உதயநிதி பிறந்த நாள் கூட்டத்தில் ’வருங்காலத்தில் முதல்வராக வருவார்’ என்றும் பேசினேன். ஆனால் அதற்கடுத்த நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. வழக்கம்போல் தகவல் தெரிவிக்கவில்லை. அழைப்பார்கள் என சென்னையில் காத்திருந்து ஏமாற்றமடைந்து மனம் வருந்தி மறுநாள் ஊர் திரும்பினேன். அவர்கள் இனி என்னை அழைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். உதயநிதி தானா சேரும் கூட்டம்! தவெக தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா? அந்தக் கட்சியின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள்.’பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை. மற்றபடி அந்தக் கட்சியின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. ஒரே நேரத்தில் மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதை விஜய்யின் போர்க்குணமாகவே பார்க்கிறேன். அவருக்காக கூடும் வாலிபர்கள் கூட்டம் தானாகச் சேர்கிற கூட்டம்தான். தாய்மார்கள் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென நினைக்கிறேன். உதிரி, அவசியமற்ற நிகழ்காலமே இல்லாத கட்சிகள்! 2026 தேர்தல் நெருங்குகிறது. உங்கள் நிலையைப் போலவே அதிமுக, மதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சியையும் ஒரு குழப்ப சூழல் சூழந்துள்ளதே அது பற்றி? என் விவகாரத்தில் நடந்ததைச் சொல்லி விட்டேன். இன்றைய தேதிக்கு நான் எந்தக் கட்சியிலும் இல்லை. தவெக தலைவர் விஜய் அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோரைச் சேர்க்காத எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குப் பிறகு சிக்கலைச் சந்திக்கலாம். உட்கட்சிப் பிரச்னை அங்கு மேலும் வலுத்து அது உதிரிக் கட்சி ஆகிவிடலாம். பா.ம.க சண்டையை நான் குடும்பப் பிரச்னையாகவே பார்க்கிறேன். முறைகேடாக சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில்தான் அவர்களுக்குள் அடிதடி. வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்துக்கு அவசியமில்லாத ஒரு கட்சி ஆகி விடும் அந்தக் கட்சி. மதிமுகவுக்கு எதிர்காலம் உண்டா என நீங்கள் கேட்டால் கேள்வி தவறு. ஏனெனில் அந்தக் கட்சிக்கு நிகழ்காலமே இல்லையே! என்கிறார் உறுதியாக
’உதயநிதி முதல்வராக வருவார்’ என்ற பிறகும் என்னை ஏற்க மறுக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத்
கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந்தவர். பிறகு அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என இவரைக் கலாய்த்தவர்களும் உண்டு. நாஞ்சில் சம்பத் ஜெ. மறைவுக்குப் பிறகு மறுபடியும் திமுக மேடைகளில் பார்க்க முடிந்த சூழலில், தற்போது மீண்டும் அக்கட்சியுடன் பிரச்னை என்கிற தகவல்கள் உலா வருகின்றன. திமுகவுடன் என்ன பிரச்னை? தவெக வில் சேரும் திட்டம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுடன் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். ஒன்றுக்கும் உதவாத 19 ஆண்டு பயணம்! ‘’நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். என் பெயரே சம்பத். வைகோ தனியா போனபோது அவர் மீது பழி சுமத்துறாங்களேன்னுதான் நானும் கூடசேர்ந்து வெளியேறுனேன். மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தேன். அந்த அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. அதிமுக மேடையில் நாஞ்சில் சம்பத் வைகோவுக்குத் தன்னைப் போல இன்னொருவர் வளர்ந்திடக் கூடாதுங்கிற எண்ணம். அதனால் மறுபடியும் திமுகவில் சேரலாமென நினைத்து அந்த விருப்பத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படுத்தினேன். ஆனால் திமுகவில் கண்டு கொள்ளவில்லை. மதிமுகவில் இருந்தபோது நான் திமுகவை விமர்சித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிய வந்தது. இன்னோவா மட்டுமல்ல சுதந்திரமும் தந்த ஜெ! ஆனால் என்னுடைய அந்தப் பேட்டி கண்டு என்னை அழைத்தார் ஜெயலலிதா அம்மையார். எனவே அதிமுகவில் சேர்ந்தது திட்டமிட்ட செயல் இல்லை. அதேநேரம் என் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அவசியமில்லாத அளவுக்கு அங்கு எனக்கு சுதந்திரம் தந்திருந்தார் ஜெயலலிதா. வைகோ தவிர ’ராஜபக்ஷேவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும்’, ;இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது’ போன்ற தீர்மானங்களை இயற்றிய அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்தன. எனவே அவருடைய மறைவு வரை அந்த இயக்கத்தில் நான் இருந்தேன். அவருக்குப் பின் அங்கு யார் தலைமையையும் ஏற்க மனமில்லாததால் ஒதுங்கி இருந்தேன். இந்தச் சூழலில் பாசிச பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் ஒரே காரணத்துக்காக மீண்டும் திமுக மேடைகளில் பேசி வந்தேன்’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம். சி.எம். உதயநிதி! பிறகு எப்படி மீண்டும் திமுகவுடன் பிரச்னை உருவானது? ’’ஒரு இடத்துல பேசறப்ப வருகிற 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனப் பேசினேன். ஒரு பேச்சாளனாக எனக்குத் தோன்றியது அந்தக் கருத்து. அந்தக் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல. நான் பேச சம்மத்தித்திருந்த சில கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தகவல்கூட எனக்குத் தெரியப்படுத்தப் படவில்லை. அதையும் மீறி நவம்பர் 27 ல் உதயநிதி பிறந்த நாள் கூட்டத்தில் ’வருங்காலத்தில் முதல்வராக வருவார்’ என்றும் பேசினேன். ஆனால் அதற்கடுத்த நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. வழக்கம்போல் தகவல் தெரிவிக்கவில்லை. அழைப்பார்கள் என சென்னையில் காத்திருந்து ஏமாற்றமடைந்து மனம் வருந்தி மறுநாள் ஊர் திரும்பினேன். அவர்கள் இனி என்னை அழைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். உதயநிதி தானா சேரும் கூட்டம்! தவெக தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா? அந்தக் கட்சியின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள்.’பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை. மற்றபடி அந்தக் கட்சியின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. ஒரே நேரத்தில் மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதை விஜய்யின் போர்க்குணமாகவே பார்க்கிறேன். அவருக்காக கூடும் வாலிபர்கள் கூட்டம் தானாகச் சேர்கிற கூட்டம்தான். தாய்மார்கள் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென நினைக்கிறேன். உதிரி, அவசியமற்ற நிகழ்காலமே இல்லாத கட்சிகள்! 2026 தேர்தல் நெருங்குகிறது. உங்கள் நிலையைப் போலவே அதிமுக, மதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சியையும் ஒரு குழப்ப சூழல் சூழந்துள்ளதே அது பற்றி? என் விவகாரத்தில் நடந்ததைச் சொல்லி விட்டேன். இன்றைய தேதிக்கு நான் எந்தக் கட்சியிலும் இல்லை. தவெக தலைவர் விஜய் அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோரைச் சேர்க்காத எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குப் பிறகு சிக்கலைச் சந்திக்கலாம். உட்கட்சிப் பிரச்னை அங்கு மேலும் வலுத்து அது உதிரிக் கட்சி ஆகிவிடலாம். பா.ம.க சண்டையை நான் குடும்பப் பிரச்னையாகவே பார்க்கிறேன். முறைகேடாக சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில்தான் அவர்களுக்குள் அடிதடி. வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்துக்கு அவசியமில்லாத ஒரு கட்சி ஆகி விடும் அந்தக் கட்சி. மதிமுகவுக்கு எதிர்காலம் உண்டா என நீங்கள் கேட்டால் கேள்வி தவறு. ஏனெனில் அந்தக் கட்சிக்கு நிகழ்காலமே இல்லையே! என்கிறார் உறுதியாக
கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; ரூ.20 லட்சம் இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்தில் இப்பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக தொண்டரான அர்ஜுன் (33) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் பழனிசாமி, அதிமுகவிற்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர் அர்ஜுன். கோபிசெட்டிபாளையத்தில் அன்றைய அதிமுக கூட்டத்திற்கு வந்திருந்த அவர், கூட்டத்திற்கு முன்பாகவே வந்து நீண்ட நேரம் காத்திருந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் மயங்கி விழுந்திருக்கிறார். அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? இந்தத் தகவல் அறிந்து உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமி மேலும், கோபிசெட்டிபாளையம் அதிமுக மாவட்டம் சார்பாக ரூ.10 லட்சமும், அதிமுக தலைமை சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கவிருக்கிறோம். மகனை இழந்து வாடும் அர்ஜுனின் தாயாருக்கு இந்த இழப்பீடு தொகையைக் கொடுக்கிறோம் என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. `வழிக்கு வராத எடப்பாடி; பலிக்காத அமித் ஷா ஜாலம்; அமையாத மெகா கூட்டணி!' - தடுமாறும் NDA?
கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; ரூ.20 லட்சம் இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்தில் இப்பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக தொண்டரான அர்ஜுன் (33) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் பழனிசாமி, அதிமுகவிற்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர் அர்ஜுன். கோபிசெட்டிபாளையத்தில் அன்றைய அதிமுக கூட்டத்திற்கு வந்திருந்த அவர், கூட்டத்திற்கு முன்பாகவே வந்து நீண்ட நேரம் காத்திருந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் மயங்கி விழுந்திருக்கிறார். அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? இந்தத் தகவல் அறிந்து உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமி மேலும், கோபிசெட்டிபாளையம் அதிமுக மாவட்டம் சார்பாக ரூ.10 லட்சமும், அதிமுக தலைமை சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கவிருக்கிறோம். மகனை இழந்து வாடும் அர்ஜுனின் தாயாருக்கு இந்த இழப்பீடு தொகையைக் கொடுக்கிறோம் என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. `வழிக்கு வராத எடப்பாடி; பலிக்காத அமித் ஷா ஜாலம்; அமையாத மெகா கூட்டணி!' - தடுமாறும் NDA?
2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி
அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும் என்று பேசியிருந்தார். செங்கோட்டையன் ``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 2017-ஆம் ஆண்டு முதல் பழனிசாமி செய்த துரோகத்திற்கு இப்போது ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் அதிமுகவை நாசம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு அகம்பாவத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அண்ணா திமுக கட்சியை, எடப்பாடி பழனிசாமி திமுக கட்சியாக மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன். திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்
2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி
அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும் என்று பேசியிருந்தார். செங்கோட்டையன் ``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 2017-ஆம் ஆண்டு முதல் பழனிசாமி செய்த துரோகத்திற்கு இப்போது ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் அதிமுகவை நாசம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு அகம்பாவத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அண்ணா திமுக கட்சியை, எடப்பாடி பழனிசாமி திமுக கட்சியாக மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன். திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்
``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே - பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), பல பூத் நிலை அதிகாரிகளின் (BLO) தற்கொலைகள், நவம்பர் 10 டெல்லி பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளன. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களை விவாதிக்க வேண்டும். வெறும் கோஷங்களுக்கான இடமல்ல நாடாளுமன்றம். பிரதமர் மோடி தோல்வியின் கசப்பையும், வெற்றியின் ஆணவத்தையும் வெளியே வைத்துவிட்டு நாட்டு மக்களின் நலனுக்காக உரையாற்ற வேண்டும். நாடாளுமன்றம் வெறும் நாடகம் நடத்துவதற்கான இடமல்ல. பேசுவதற்கான இடம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான பிரியாங்கா காந்தி வத்ரா, தற்போது நடந்துவரும் தேர்தல்களின் நிலை, எஸ்.ஐ.ஆர், டெல்லி மாசுபாடு ஆகியவை மிகப்பெரிய பிரச்னைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். நாடாளுமன்றம் எதற்காக? பேசுவதற்காகத்தானே... எனவே, இவற்றைப் பற்றி பேசுவது நாடகமாகாது. பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதும், கேள்வி எழுப்புவதும் நாடகம் அல்ல. பொதுமக்களுக்கு முக்கியமான பிரச்னைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை நாடகங்கள் அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்தார். ``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம் - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி
``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம் - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் கசப்பால் அவையைச் செயல்பட விடாமல் தடுப்பது இளம் எம்.பி.க்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கும். தோல்வியின் கசப்பும் வெற்றியின் ஆணவமும் அவையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியடைந்த யுக்திகளை மாற்ற வேண்டும். அதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன். பீகார் தோல்வி நடந்து பல நாள்கள் ஆகிறது. அவர்கள் இப்போது அதிலிருந்து மீண்டிருக்க வேண்டும். சமநிலையுடனும், பொறுப்புணர்வுடனும், மக்கள் பிரதிநிதிகளாக நமது பொறுப்பைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இளம் எம்.பி.க்களும், முதல் முறையாக எம்.பி.க்களாக இருப்பவர்களும் தங்கள் திறமையைக் காட்டவும், தங்கள் தொகுதியின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக மாற தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் முடியவில்லை. இதைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புதிய எம்.பி.க்களுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களிலிருந்து சபை பயனடைய வேண்டும். புதிய தலைமுறை தேசத்திற்குப் பயனளிக்க முடியும். எனவே, இந்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்திற்குப் பல இடங்கள் உள்ளன. இங்கே, நாடகம் அல்ல பேச்சு அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். முழு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் உங்களின் கோஷத்தை எழுப்பலாம். நாடாளுமன்றம் நீதிக்கானது, உங்கள் கோஷங்களுக்கானதல்ல. மோடி சில மாநிலங்களில், மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பு அவர்கள் மீது அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் அவையில் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் மாநில அரசியலுக்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாடு இந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு: காணாமல் போன எதிர்க்கட்சிகள்; பாஜக-வுடன் மோதும் ஷிண்டே!
``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம் - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் கசப்பால் அவையைச் செயல்பட விடாமல் தடுப்பது இளம் எம்.பி.க்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கும். தோல்வியின் கசப்பும் வெற்றியின் ஆணவமும் அவையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியடைந்த யுக்திகளை மாற்ற வேண்டும். அதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன். பீகார் தோல்வி நடந்து பல நாள்கள் ஆகிறது. அவர்கள் இப்போது அதிலிருந்து மீண்டிருக்க வேண்டும். சமநிலையுடனும், பொறுப்புணர்வுடனும், மக்கள் பிரதிநிதிகளாக நமது பொறுப்பைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இளம் எம்.பி.க்களும், முதல் முறையாக எம்.பி.க்களாக இருப்பவர்களும் தங்கள் திறமையைக் காட்டவும், தங்கள் தொகுதியின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக மாற தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் முடியவில்லை. இதைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புதிய எம்.பி.க்களுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களிலிருந்து சபை பயனடைய வேண்டும். புதிய தலைமுறை தேசத்திற்குப் பயனளிக்க முடியும். எனவே, இந்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்திற்குப் பல இடங்கள் உள்ளன. இங்கே, நாடகம் அல்ல பேச்சு அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். முழு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் உங்களின் கோஷத்தை எழுப்பலாம். நாடாளுமன்றம் நீதிக்கானது, உங்கள் கோஷங்களுக்கானதல்ல. மோடி சில மாநிலங்களில், மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பு அவர்கள் மீது அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் அவையில் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் மாநில அரசியலுக்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாடு இந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு: காணாமல் போன எதிர்க்கட்சிகள்; பாஜக-வுடன் மோதும் ஷிண்டே!
டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் - புடின் பயணம் எதை சாதிக்கும் ?
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன் மணிவண்ணன் திருமலை ரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம் இந்திய ரஷ்ய உறவுகள் , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்தால் முக்கியமான “சோதனைக் கட்டத்தில்” இருக்கும் சூழலில் வருகிறது. வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருக்கும் புடினின் வருகை , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் நிகழும் ஒரு அரசுமுறை விஜயம். இது இந்திய ரஷ்யத் தலைவர்களுக்கிடையே ஆண்டுக்கொருமுறை நடக்கும் வழக்கமான சந்திப்புதான். இது இரு நாட்டுத் தலைவர்களிடையே நடக்கும் 23வது உச்சி மாநாடு. ஆனால் இந்த சந்திப்பு நிகழும் சர்வதேச அரசியல் தட்பவெப்ப நிலை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானவை. இந்திய ரஷ்ய நட்பு - புடின் இந்தியா வருகை சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே இந்திய ரஷ்ய நட்பு என்பது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. சோவியத் ஒன்றியம் உடைந்து, பனிப்போர் முடிந்த பின்னும் இந்திய ரஷ்ய உறவுகள் பலமாகவே இருந்து வந்துள்ளன. புடின் அதிபரான பின்னும் இந்த சூழல் தொடர்கிறது. புடின் கடந்த 2021ல் இந்தியாவுக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குப் பின் உக்ரெயின் மீது தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ல் ரஷ்யா உக்ரெயின் மீது தொடுத்த போரை அடுத்து சர்வதேச அளவில் அது தனிமைப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் நிலவினாலும், அவ்வாறு தனிமைப்படுத்தவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இது போன்ற முக்கிய விஜயங்கள் புடினுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கடியையும் மீறி தன் கேந்திர அரசியல் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காத நிலையைக் காட்ட இந்த சந்திப்பு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. புட்டின் - மோடி புடினின் இந்தப் பயணம், உக்ரெயின் போரை அடுத்து மேற்குலகின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவிடம் தொடர்ந்து மலிவு விலை எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக இந்தியா அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் 25% அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட சூழலில் வருகிறது. இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா விமர்சித்திருந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய எண்ணெயை மற்றும் எரி வாயுவை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரிய வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. தடைகள் வரும் டிசம்பரிலிருந்து கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக்குறைத்து வருவதுடன், அமெரிக்காவிடமிருந்து கடந்த சில மாதங்களாக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கின்றன. புடினின் இந்தியப் பயணத்தின் போது, இந்த பொருளாதாரத் தடைகளையும் மீறி , இந்தியாவுக்கு தொடர்ந்து எப்படி எண்ணெய் விற்பது என்பது பற்றி ஆலோசிப்பார் என்பது உறுதி. ஏற்கனவே ரஷ்யா இந்தியாவுக்கு விற்று வரும் எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி தரும் என்று செய்திகள் கூறுகின்றன. சகாய விலையில் கிடைத்தாலும், இந்த ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குமா, அதன் பொருளாதார லாப நஷ்டக் கணக்கு என்ன என்பதை இந்திய நிதி அமைச்சகமும், மற்றும் இந்தியாவின் கேந்திர அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. crude oil - கச்சா எண்ணெய் மேலும், பொருளாதாரத் தடையை மீறி எண்ணெய் கொள்முதலைத் தொடர்வது என்று இந்தியா முடிவெடுத்தால், இந்த இறக்குமதிக்கான பணத்தை அமெரிக்க டாலரில் தராமல் , ரஷ்ய ரூபிள் அல்லது இந்திய ரூபாய் போன்ற உள் நாட்டு கரன்சியையே பயன்படுத்தலாமா என்பது குறித்தும் இரு தரப்புகளும் விவாதிக்கக்கூடும். இந்தியாவின் Rupay , ரஷ்யாவின் Mir போன்ற பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அமைப்புகளை அங்கீகரித்து இரு தரப்பு வர்த்தகங்களில் பயன்படுத்துவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளவாட வர்த்தகம் இந்த எண்ணெய் வர்த்தகம் மட்டுமின்றி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ராணுவ தளவாட கொள்முதல் விஷயங்களும் முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ தளவாடக் கொள்முதலுக்கு பல தசாப்தங்களாகவே ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எஸ் யு 57 ரக விமானங்களை கூட்டாகத் தயாரிப்பது பற்றி பேசியிருக்கிறது. ஆனால் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. இவை stealth fighters எனப்படும், எதிரியின் ராடார் கண்காணிப்பு சாதனங்களுக்கு “டிமிக்கி” கொடுத்து ஊடுருவித் தாக்கும் வல்லமை படைத்த விமானங்கள். அமெரிக்காவின் F 22 , F 35 ரக விமானங்களுக்குப் போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை. ரஷ்யா இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்க விரும்பலாம். ஆனால் இந்தியா இந்த விமானங்களை உடனடியாக வாங்க ஒப்புக்கொள்ளும் என்று தோன்றவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. Putin ஒன்று, இந்தியா இந்த விமானங்களை , ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்தியா-ரஷ்யக் கூட்டுத்தயாரிப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்ற கருத்தில் இருந்தது. இதற்கு ரஷ்யா உடன்பட்டதாக தெரியவில்லை. இதனிடையே இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் விலகிக்கொண்டது. இந்தப் பின்னணியில் இப்போதைய புடின் விஜயத்தில் இந்த Su57 குறித்த விஷயங்களை பேச ரஷ்யா விரும்பலாம், இரண்டாவது, ரஷ்யாவே இந்த விமானத் தயாரிப்புகளில் இன்னும் முழுமையான வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது . ரஷ்ய விமானப்படையே சமீபத்தில்தான் இந்த விமானங்களை தனது படையில் சேர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்! இந்தியாவைப் பொறுத்தவரை, சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து இயங்குவதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தளங்களுக்கு எதிராக நடத்திய “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், அது பயன்படுத்திய போர்விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிரான S400 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து கூடுதலாகப் பெற விரும்புவதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்தியா பல பாகிஸ்தான ஆளில்லா தாக்குதல் விமானங்களையும், ஏவுகணைகளையும் இந்த “சிந்தூர்” நடவடிக்கையில் அழித்ததாக இந்திய விமானப்படை கூறியிருந்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்புக் கவசங்கள் இந்த S400 வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் அமைத்திருக்கும் இரும்புக்கூரை ( iron dome) போன்ற அமைப்பல்ல என்றாலும், இந்தியாவுக்கு ஏவுகணைத்தாக்குதல்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பைத் தரவல்லது. ஏற்கனவே கடந்த 2018ல் இந்தியா சுமார் 5 பிலியன் டாலர் மதிப்பில் இந்த பாதுகாப்பு அமைப்பின் முதல் ஐந்து பிரிவுகளை வாங்க ஒப்புக்கொண்டது. இதில் மூன்று பிரிவுகள் தயாரிப்பு முடிந்து இந்தியாவுக்கு தரப்பட்டு, அவைதான் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. மீதி இரண்டு பிரிவுகள் வந்து சேரவேண்டும். இது தவிர மேலும் கூடுதலாகவும் இந்த பாதுகாப்புப் பிரிவுகளை வாங்க இந்தியா விரும்புகிறது. விசா இல்லாத சுற்றுலா பயணம் இது தவிர, இரு நாட்டு மக்களிடையே கலாசார மற்றும் பொருளாதார உறவுகளிய மேம்படுத்த , சுற்றுலா பயணங்களை விசா கெடுபிடிகள் இல்லாததாக்குவது பற்றியும் இரு நாடுகளும் சிந்தித்து வருகின்றன. இந்த திட்டத்தின்படி, இரு நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக வரும்போது அவர்களுக்கு விசாவை தேவையற்றாதாக்கலாம் என்ற யோசனை விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து மாஸ்கோவில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துணை அமைச்சர் ஆன்ட்ரே ருடென்கோ இது குறித்த விவாதங்கள் இரு தரப்புகளிடையே நடத்தப்பட்டுவருவதாகக் கூறியிருக்கிறார். இந்த விஷயங்கள் ஒரு புறமிருக்க புடினின் இந்த விஜயம் , அவருக்கு தனிப்பட்ட அளவில் மேலும் தனது சர்வதேச செல்வாக்கு குறைந்து விடவில்லை என்பதை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பத்தைத் தரும் என்று ராஜிய விவகார வல்லுனர்கள் கருதுகிறார்கள். ரஷ்யா உக்ரெயின் போரால் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் வந்த பின், அவர் அழைப்பை ஏற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடத்தப்பட்ட சந்திப்பு புடினின் சர்வதேச இமேஜை உயர்த்தியது. இதன் பின் சீனாவில் கடந்த ஆகஸ்டில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு இயக்க உச்சி மாநாட்டிலும் புட்டின் கலந்து கொண்டார். ( அந்த மாநாட்டில் விளிம்பில் , புடினும் மோடியும் தனியே சந்தித்ததும் நினைவிருக்கலாம்). கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா புடினும் தனிப்பட்ட வகையில் லாபமிருக்கிறதோ இல்லையோ, இந்த விஜயம் இந்திய அமெரிக்க உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். டிரம்ப்பை பொறுத்தவரை, உக்ரெயின் பிரச்சனையில் அவர் புடினுக்கு எதிராக முந்தைய அமெரிக்க நிர்வாகங்களைப் போல கடும்போக்கு காட்டவில்லை என்பதே உண்மை. டிரம்ப் ஆனால் , உக்ரெயின் போரை நிறுத்த டிரம்ப் கடைப்பிடிக்கும் சாம பேத தான தண்ட வழிமுறைகளில், ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்துக்கு இடைஞ்சல் செய்வதும் ஒன்று. இதை அவரால் முழுமையாக செய்ய முடியாவிட்டாலும், ( உதாரணத்துக்கு, ரஷ்யாவிடம் மிக அதிகமாக எண்ணெய் வாங்கும் சீனாவிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை) , இந்தியா மீது நெருக்கடி கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் இறக்குமதி வரி. இந்த சூழலில் டிசம்பரில் நடக்கவுள்ள புடினின் இந்திய விஜயத்தின் முடிவுகளை டிரம்ப் நிர்வாகம் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - அரச நீதி தவறியதற்கு தண்டனையா அல்லது பழி தீர்க்கும் அரசியலா?
'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே
பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained தேதி மாற்றம் விவரம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025 ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026 தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026 எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா? ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள். இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week. Read in detail: https://t.co/f83g3nShuX #ECI pic.twitter.com/hLoQ45TPFL — Election Commission of India (@ECISVEEP) November 30, 2025 SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to
'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே
பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained தேதி மாற்றம் விவரம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025 ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026 தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026 எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா? ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள். இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week. Read in detail: https://t.co/f83g3nShuX #ECI pic.twitter.com/hLoQ45TPFL — Election Commission of India (@ECISVEEP) November 30, 2025 SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

25 C