SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
... ...View News by News Source

கடல் வளம் காக்கும் மன்னார் வளைகுடா... கண்ணை கவரும் பவளப்பாறைகளின் புகைப்பட தொகுப்பு....

கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் | மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள்| மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் | மன்னார் வளைகுடா பகுதி

விகடன் 26 Apr 2024 2:23 pm

``1000 நாய்களுக்கு உள்ள மோப்ப சக்தி ஒரு தேனீக்கு உண்டு... - சீமான் சொல்வது உண்மையா?

நாய் என்றாலே நினைவுக்கு வருவது நன்றி, விசுவாசம், மோப்பசக்தி. இதன் காரணமாக நாய்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு மேடையில், கட்சி பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தேனீக்கள் மட்டும் இல்லையென்றால் மானுடர் சமூகம் 4 ஆண்டுகள் கூட வாழ முடியாது. 1 தேனீ 1,000 நாய்களின் மோப்பசக்தி கொண்டது' என்று பேசியிருந்தார். உண்மையில் தேனீக்களின் மோப்ப சக்தி நாயைவிட அதிகமானதா என்பது பற்றி கோவையைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் சதாசிவத்திடம் பேசினோம். நாய் குட்டிகள் கோவை சதாசிவம் கூறுகையில், தேனீக்களின் மோப்பசக்தியை அந்த அளவுக்கு, எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. தேனீக்களுக்கு நிறங்களை பார்க்கும் சக்தி அதிகமாக உள்ளது. தேனீக்கள், பூக்களின் நிறத்தை பார்த்துதான் வருகிறது. நாயை விட தேனீக்கு கூடுதலாக மோப்ப சக்தி இருப்பது என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தூரத்திலிருந்து பார்க்கும்போது மணம் வராது, நிறங்கள்தான் தெரியும். ஒரு நாயின் மோப்ப சக்தி, மனிதர்களை விட அதிகமானது. நாயின் மோப்ப சக்தியை உச்சபட்சமாக பார்க்கும் போது, 8 லிட்டர் தண்ணீர் உள்ள பக்கெட்டில் 2 சொட்டு ரத்தம் விடும் போது, அந்த வாசனையையும் நாயால் நுகர முடியும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் விலங்குகள் குறித்து பேசும் பெரும்பான்மையான விஷயங்கள் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டதல்ல. பூச்சிகள், பறவைகள், விலங்குகளை பற்றியெல்லாம் பேசும்போது, அதற்கான ஆதாரங்களையும் வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். தேனீ வளர்ப்பு காகம் வெள்ளை நிறமாக இருப்பது ஏன்? சூழலியலாளர் விளக்கம்! ஒரு தேன் கூட்டை கலைத்துவிட்டு ஓடும்போது தேனீக்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொட்டி விடும். எவ்வளவு தூரம் ஓடினாலும் விடாமல் துரத்தி வரும். இதற்கு காரணம், தேன் கூட்டினை தொட்ட வாசனை நம்மிடம் இருப்பதால்தான் பின் தொடர்ந்து வந்து தேனீக்கள் நம்மை கொட்டி விடுகின்றன. எனவே, தேனீக்களுக்கு மோப்ப சக்தி உண்டு. ஆனால், மிகப் பெரிய மோப்ப சக்தி அதற்கு உண்டு என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. அதேபோல சின்ன சின்ன பூச்சிகள், எறும்புகள் போன்றவற்றுக்கு வேதி சுரப்புதான் மிகவும் முக்கியம். இந்தச் சுரப்பை வைத்துதான் அதன் நுகர்வு இருக்கும். கோவை சதாசிவம் நாய், தேனீ, எறும்புகள் மற்றும் மனிதர்களிடம் உள்ள மோப்ப சக்தியை அவ்வளவு எளிதில் அளவிட முடியாது. மனிதர்களின் நுகர்வை வைத்துகூட மற்ற உயிரினங்களை ஒப்பிடலாம். ஆனால், நாய், தேனீ, எறும்புகளுக்கிடையிலான மோப்ப சக்தியை இன்னும் முறையாக அளவிடப்படவில்லை. இப்படியிருக்கும்போதுது சீமான் எங்கிருந்து தேனீக்களின் மோப்ப சக்தி குறித்தான தகவலைப் பெற்று பேசினார் என்பது தெரியவில்லை என்றார்.

விகடன் 24 Apr 2024 5:19 pm

Heeramandi: சிவப்பு விளக்குப் பகுதியாக மாறிய ஹீராமண்டியின் மறைக்கப்பட்ட வீர வரலாறு தெரியுமா?

வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்களைப் பிரமாண்டமாக ரசிகர்களுக்கு அளிப்பதில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எப்போதுமே முதன்மையான இடமுண்டு. தேவதாஸ் தொடங்கி சமீபத்திய படைப்பான 'கங்குபாய் கத்தியவாடி' வரை அது தொடர்கிறது. அவரது அடுத்த படைப்பான 'ஹிராமண்டி: தி டைமண்ட் பஜார்' எனும் வெப்சீரிஸ் வருகிற மே 1-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. மனீஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தத் தொடர், பன்சாலியின் முதல் OTT அறிமுகம். சுதந்திரத்துக்கு முன்னர் ஹீராமண்டி என்னும் இடத்தில் வாழ்ந்த 'தாவைப்' எனும் அரசவைப் பெண்களைக் குறிக்கும் விதமாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் பங்கு பெறுவதாகவும் டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது. உண்மையில் 'ஹீராமண்டி' எங்கிருக்கிறது, அதன் வரலாறு என்ன, தாவைப் என்ற பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறியது எப்படி? Heeramandi இந்த சீரியஸின் தலைப்பான 'ஹீராமண்டி', தற்போது பாகிஸ்தானிலுள்ள லாகூர் மாநிலத்திலிருக்கும் ஊர். ‘பாலியல் தொழிலாளிகள் ராணிகளாக இருந்த உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என்றே இந்தத் தொடரின் முன்னோட்டம் ஆரம்பிக்கிறது. வரலாறு முழுக்க பெண்களின் பார்வைகள் மற்றும் அனுபவங்கள் புறக்கணிக்கப்பட்டே இருக்கின்றன. இது இந்தியாவின் ‘தாவைப்’ என்று அழைக்கப்பட்ட பெண் நடனக் கலைஞர்களின் விஷயத்தில் தெளிவாகிறது. இன்று ‘தாவைப்’, ‘ஹீராமண்டி’ என்ற பெயரைக் கேட்டாலே பாலியல் தொழில்/தொழிலாளர்கள் என்று சொந்த நாட்டு மக்களாலேயே ஒதுக்கப்படும் வரலாற்றுச் சூழலில் நேர்மறையான ஒரு வரலாறும் அந்தப் பெண்களுக்கு இருக்கிறது. பகலில் வணிக வளாகமாகவும், இரவில் சிவப்பு விளக்கு பகுதியாகவும் இருப்பதே ஹீராமண்டியின் தற்போதைய நிலைமை. இதிலிருந்து காலச்சக்கரத்தைப் பின்னோக்கி சுழற்றினால் அப்போது வைரத்துக்குப் பெயர்போன இடமாக ஜொலித்திருக்கிறது ஹீராமண்டி. இந்த ஊரின் பெயர் ‘ஹீரா சிங் தி மண்டி’ என்று ஒரு மன்னரின் பெயரிலிருந்தே மருவியிருக்கிறது. காலப்போக்கில் முகலாயர்கள் கையில் ஆட்சியதிகாரம் கைமாற, அரசவையில் நடனமாட பெண்களை பெர்சிய நாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்கள்தான் ‘தாவைப்’. தாவைப் பெண்கள் தமிழகத்தில் ஒருகாலத்தில் தேவதாசி முறையில் தேவரடியார்களாக இருந்து கோயில்களில் கடவுளுக்கு வாழ்த்துப் பாடுவது, நடனமாடுவது என்றிருந்த பெண்கள் காலப்போக்கில் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டதைப் போன்ற வரலாற்றினை ஒத்து இருக்கிறது ‘தாவைப்’ பெண்களின் வரலாறு. அக்காலத்தில் இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் நுட்பமான கலைப்பிரிவினைச் சேர்ந்த பெண்களான தாவைப்கள், இசை, நடனத்தில் நுட்பமாகத் தேர்ச்சி பெற்றவர்கள். தொன்மொழி ஆய்வாளர்கள் 'தாவைப்' என்ற வார்த்தை உருது வார்த்தையான 'தவாஃப்' என்பதிலிருந்து வந்தது என்கிறார்கள். அதற்கான பொருள் சுற்றி வருவது அல்லது ஒரே இடத்தில் நின்று சுற்றுவது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை யோசித்தால், சுற்றி சுற்றி ஆடும் கதக் வகையான ஆட்டத்தில் அந்தப் பெண்கள் சிறப்பாக ஆடியதனால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்பது அவர்கள் கணக்கு. தாவைப் பெண்கள் அதைத் தவிர எந்தவிதமான தரக்குறைவான பொருளும் அவர்களின் பெயருக்கு இல்லை. ஆனால் இன்றைய நிலையில் பாலியல் தொழிலோடு சேர்த்து மோசமான அர்த்தத்தில் அது பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் விதத்தில் 'தி மேக்கிங் ஆஃப் காலனியல் லக்னோ' என்ற புத்தகத்தின் ஆசிரியர் வீனா தால்வார், தாவைப்களை விபச்சாரத்துடன் தொடர்புபடுத்துவது இந்த சமூக நிறுவனத்தின் மிகவும் தவறான சித்திரிப்பு என்கிறார். இந்திய கலை கலாசாரத்தின் பாதுகாவலர்களாகவும், நாகரிகத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகவும் இருக்கும் தாவைப்கள், முகலாயர்களின் கலை, அழகியல் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திர பெண்களாக விலையுயர்ந்த ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஆளுமைக்கு உதாரணமாக சொத்துரிமையை சொல்லலாம். ஏனெனில் சுதந்திரத்துக்குப் பிறகு இந்து சட்ட மசோதாவின் மூலமும் பல போராட்டங்களுக்குப் பிறகுமே இந்தியாவில் பெண்களுக்குச் சொத்துரிமை வந்தது. ஆனால் பல தசாப்தங்களுக்கு முன்னரே தாவைப் பெண்கள், தங்களுக்கான சொத்துரிமையை கொண்டுள்ளார்கள். மேலும் பொருளாதார தன்னிறைவடைந்த அந்தப் பெண்கள் எழுத்தறிவு, இலக்கிய மேதமை கொண்டவர்கள். Heeramandi முதல் இந்திய சுதந்திர போராட்டமாகக் கருதப்படுகிற 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகப் போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் தப்பித்து வந்த வீரர்களுக்கு தாவைப் பெண்கள் அடைக்கலம் தந்திருக்கிறர்கள். அதேபோல காந்தியடிகளின் தண்டி யாத்திரைக்கு நிதி கொடுத்தது, போராளிகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்து, தங்க இடம் கொடுத்தது என இந்திய சுதந்திரத்துக்காக முக்கியமான பங்கைச் செய்திருக்கிறார்கள் தாவைப்கள். ஆனால் இந்த அர்ப்பணிப்புகளெல்லாம் வரலாற்றில் துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளால் நசுக்கப்பட்டுள்ளன. தேசத்தின் முதுகெலும்பாக கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த தாவைப்கள், பிரபுக்களைப் போல வாழ்ந்தார்கள். ஆணாதிக்கம் நிறைந்த உலகில், இந்திய தாவைப்கள் ஆண்களே கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டிருந்தனர். இதற்கு சாட்சியாக பிரிட்டிஷ் அரசாங்க பதிவேடுகளில், இந்திய குடிமக்களின் மிக உயர்ந்த வரி செலுத்துபவர்கள் பட்டியலில் தாவைப்கள் இருந்ததாகவும், செல்வந்தர்களால் மட்டுமே நடத்திய இசை நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிடுகின்றன. இப்படிச் செல்வந்தர்களாக இருந்த பெண்கள் ஒருவேளை உணவுக்காக பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டதற்குக் காரணம் என்ன? Heeramandi முகலாய பேரரசின் மன்னர்களில் சிலர் இவர்களை பாலியல் தொழிலுக்கு அமர்த்தியதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் பங்கைத் தடுக்க பாலியல் தொழிலுக்குக் கொண்டு வந்ததாகவும், இங்கிலாந்தில் இருந்து தனியாக வந்த ஆங்கிலேய ஆண்கள் அவர்களின் காம இச்சைக்கு இந்தப் பெண்களை உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போதுதான் ஹீராமண்டி படிப்படியாக சிவப்பு விளக்குப் பகுதியாக மாறியிருக்கிறது. பிரிவினைக்குப் பின், ஹீராமண்டி பாகிஸ்தான் நாட்டின் எல்லையோடு சேர்க்கப்பட, அங்கிருக்கும் திரைப்படத் துறையான லாலிவுட் கலைஞர்களுடன் கலாசார மையமாக தனது முக்கியத்துவத்தைத் நிலைநிறுத்தியது இந்த இடம். காலப்போக்கில், விபச்சாரத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையும் சமூக விதிமுறைகளும் ஹீராமண்டியை ஓரளவுக்கு மாற்றியிருக்கிறது. அதனால் இப்போது பகல் நேரங்களில் பாரம்பரிய பஜார் போல அதன் துடிப்பான கடந்த காலத்தின் கூறுகளை நினைவுபடுத்தினாலும், இரவில் பாலியல் தொழிலுக்கான வேலைகள் இன்றும் நடந்தே வருகின்றன. சஞ்சய் லீலா பன்சாலி ஹீராமண்டியில் தாவைப் பெண்கள் தங்களது கலை, நடனம், வர்க்கம், கல்வி, புத்திசாலித்தனம், தேசப்பற்று ஆகியவற்றின் மூலம் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இருப்பினும் அவர்களின் உண்மை, வரலாற்றின் இரட்டைத் தரங்களுக்கு மத்தியில் இரையாகிவிட்டது. ஏற்கெனவே சஞ்சய் லீலா பன்சாலி தனது 'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை மிக நுட்பமாகக் கையாண்டிருந்தார். அதனால் தாவைப் பெண்களின் உண்மை வரலாற்றினையும் நிச்சயம் வெளிக்கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவுகிறது.

விகடன் 24 Apr 2024 3:19 pm

கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண திரண்ட மக்கள்

சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக மதுரை வைகை ஆற்றுக்குள் வீரராகவப்பெருமாள் எழுந்தருளும் சந்திப்பு மண்டபம், இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது

தி ஹிந்து 24 Apr 2024 9:03 am

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

கீ பேடில் ஹெச்க்கும் எல்-க்கும் இடையில் பார்க்க, என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகிறது. இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் டிரென்டாக மாறிவருகிறது.

தி ஹிந்து 24 Apr 2024 2:03 am

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

கீ பேடில் ஹெச்க்கும் எல்-க்கும் இடையில் பார்க்க, என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகிறது. இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் டிரென்டாக மாறிவருகிறது.

தி ஹிந்து 24 Apr 2024 1:35 am

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

கீ பேடில் ஹெச்க்கும் எல்-க்கும் இடையில் பார்க்க, என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகிறது. இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் டிரென்டாக மாறிவருகிறது.

தி ஹிந்து 23 Apr 2024 11:35 pm

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

கீ பேடில் ஹெச்க்கும் எல்-க்கும் இடையில் பார்க்க, என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகிறது. இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் டிரென்டாக மாறிவருகிறது.

தி ஹிந்து 23 Apr 2024 10:34 pm

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய தஞ்சை பழ வியாபாரி | உலக புத்தக தினம்

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

தி ஹிந்து 23 Apr 2024 9:51 pm

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய தஞ்சை பழ வியாபாரி | உலக புத்தக தினம்

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

தி ஹிந்து 23 Apr 2024 9:35 pm

கீ பேடில் ‘H’க்கும் ‘L’க்கும் இடையில் பார்க்க... - நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வது ஏன்?

கீ பேடில் ஹெச்க்கும் எல்-க்கும் இடையில் பார்க்க, என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகிறது. இதுதான் நெட்டிசன்களின் லேட்டஸ்ட் டிரென்டாக மாறிவருகிறது.

தி ஹிந்து 23 Apr 2024 9:35 pm

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய தஞ்சை பழ வியாபாரி | உலக புத்தக தினம்

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

தி ஹிந்து 23 Apr 2024 8:35 pm

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய தஞ்சை பழ வியாபாரி | உலக புத்தக தினம்

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

தி ஹிந்து 23 Apr 2024 7:35 pm

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய தஞ்சை பழ வியாபாரி | உலக புத்தக தினம்

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

தி ஹிந்து 23 Apr 2024 6:35 pm

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - முக்கிய வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்

தி ஹிந்து 23 Apr 2024 5:10 pm

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - முக்கிய வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்

தி ஹிந்து 23 Apr 2024 4:35 pm

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - முக்கிய வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்

தி ஹிந்து 23 Apr 2024 3:35 pm

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - முக்கிய வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்

தி ஹிந்து 23 Apr 2024 2:35 pm

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - முக்கிய வழிகாட்டுதல்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்

தி ஹிந்து 23 Apr 2024 1:35 pm

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில்

தி ஹிந்து 23 Apr 2024 1:29 pm

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில்

தி ஹிந்து 23 Apr 2024 12:35 pm

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில்

தி ஹிந்து 23 Apr 2024 11:35 am

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில்

தி ஹிந்து 23 Apr 2024 10:36 am

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் ஈரோடு ரியா முதலிடம்!

விழுப்புரத்தில் திருநங்கைக ளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்கூவாகம்-2024' பட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில்

தி ஹிந்து 23 Apr 2024 9:35 am

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது

தி ஹிந்து 22 Apr 2024 7:50 pm

வெயிலின் தாக்கத்தை தடுக்க சில எளிய குறிப்புகள் | கோடை ஸ்பெஷல்

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தி ஹிந்து 22 Apr 2024 7:44 pm

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது

தி ஹிந்து 22 Apr 2024 7:35 pm

வெயிலின் தாக்கத்தை தடுக்க சில எளிய குறிப்புகள் | கோடை ஸ்பெஷல்

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தி ஹிந்து 22 Apr 2024 7:35 pm

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது

தி ஹிந்து 22 Apr 2024 6:35 pm

வெயிலின் தாக்கத்தை தடுக்க சில எளிய குறிப்புகள் | கோடை ஸ்பெஷல்

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தி ஹிந்து 22 Apr 2024 6:35 pm

வெயிலின் தாக்கத்தை தடுக்க சில எளிய குறிப்புகள் | கோடை ஸ்பெஷல்

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தி ஹிந்து 22 Apr 2024 5:36 pm

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது

தி ஹிந்து 22 Apr 2024 4:35 pm

வெயிலின் தாக்கத்தை தடுக்க சில எளிய குறிப்புகள் | கோடை ஸ்பெஷல்

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தி ஹிந்து 22 Apr 2024 4:35 pm

இது என் அம்மாவின் கனவு; வடசென்னை பெண்கள் அழகானவர்கள்... - மிஸ் திருநங்கை ஷாம்சி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி ஆகியவை நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் 2024ம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மும்பை, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல திருநங்கைகள் கலந்துகொண்டிருந்தனர். இப்போட்டியில் வடசென்னையைச் சேர்ந்த திருநங்கை ஷாம்சி, முதல் பரிசை தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தைப் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு படித்து வரும் திருநங்கை வர்ஷா தட்டிச் சென்றார். மூன்றாவது இடத்தைத் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபபிரியா தட்டிச்சென்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ஶ்ரீகாந்த், திருநங்கைகளுடன் மேடையில் நடனமாடி விழாவைக் கொண்டாடினார். வர்ஷா, ஷாம்சி, சுபபிரியா இந்நிலையில் முதல் இடத்தைத் தட்டிச் சென்ற வடசென்னையைச் சேர்ந்த திருநங்கை ஷாம்சி, மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அவர், இது என்னுடைய ஆறு ஆண்டுக்கால உழைப்பு. என்னுடைய அம்மா இதைச் சாதிக்க விரும்பினார். அவரின் கனவை நான் நிறைவேற்றியிருக்கிறேன். நான் ஒரு வடசென்னை பெண். வடசென்னையில் நிறைய அழகிய பெண்கள் இருக்கிறார்கள். நடிப்பின் மீது தீராக் காதல்... பிழைப்புக்காக செல்போன் கடை; ‘நாதஸ்வரம்’ சீரியல் காஜாவின் கதை! பெண்கள் யாரும் பயப்படாதீர்கள். உங்கள் திறமைகளை, கனவுகளைத் தேடிக் கண்டுபிடித்து அதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருங்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். View this post on Instagram A post shared by Villupuram Official 2.0 (@villupuram_official2.0) நான் ஒரு டான்ஸர். நாட்டுப்புறக் கலைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். பத்து ஆண்டுகளாக நான் இதைச் செய்துகொண்டிருக்கிறேன். மாடலிங்கிலும் எனக்கு ஆர்வமிருக்கிறது, அதையும் செய்துகொண்டிருக்கிறேன். மாடலிங் நிறுவனம் தொடங்கி நிறைய திருநங்கைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இந்த ஆண்டு கேரளா கொல்லத்தில் நடைபெற்ற 'தி சூப்பர் நேஷனல் ஐகான் ஆஃப் இந்தியா' போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது பரிசை வாங்கியிருந்தேன். இப்போது இங்கு முதல் பரிசை வாங்கியிருக்கிறேன். சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்குக் காரணமாக இருந்த எல்லோருக்கும் நன்றி. அடுத்தது மிஸ் இந்தியாதான் என்னுடைய கனவு! என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் மிஸ் திருநங்கை ஷாம்சி.

விகடன் 22 Apr 2024 3:45 pm

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது

தி ஹிந்து 22 Apr 2024 3:35 pm

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் சோலங்கி

பொதிகளை சுமப்பதுதான் கழுதைகளின் பணி என்ற பழங்கால கதையை உடைத்து, அவற்றின் பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஒருவர்.

தி ஹிந்து 22 Apr 2024 9:04 am

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் ‘மே ஃபிளவர்’ - சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்

நீலகிரி மாவட்ட சாலையோர மரங்களில் பூத்துள்ள ‘மே ஃபிளவர்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன

தி ஹிந்து 22 Apr 2024 9:03 am

கோவை குற்றாலத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதனால் சாடிவயல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள

தி ஹிந்து 22 Apr 2024 9:03 am

கொடைக்கானலில் கோடை விழா மே 17-ல் தொடக்கம்: வாக்கு எண்ணிக்கை காரணமாக முன்னதாக நடத்த முடிவு

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 17-ம்தேதி தொடங்குகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை காரணமாக வழக்கத்தைவிட முன்னதாகவே கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தி ஹிந்து 22 Apr 2024 8:35 am

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் சோலங்கி

பொதிகளை சுமப்பதுதான் கழுதைகளின் பணி என்ற பழங்கால கதையை உடைத்து, அவற்றின் பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஒருவர்.

தி ஹிந்து 22 Apr 2024 8:34 am

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் சோலங்கி

பொதிகளை சுமப்பதுதான் கழுதைகளின் பணி என்ற பழங்கால கதையை உடைத்து, அவற்றின் பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஒருவர்.

தி ஹிந்து 22 Apr 2024 7:34 am

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் சோலங்கி

பொதிகளை சுமப்பதுதான் கழுதைகளின் பணி என்ற பழங்கால கதையை உடைத்து, அவற்றின் பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஒருவர்.

தி ஹிந்து 22 Apr 2024 6:36 am

அட்டைப்படம்

விகடன் ப்ளஸ்

விகடன் 22 Apr 2024 2:16 am

`எல்லாரும் தாவணி போட்டாங்க, நீ இன்னும் ஏன் போடல’ - அவளின் சிறகு - 5

மேடம், 'இந்த டிரெஸ் பாருங்க', 'இது உங்க அளவு தான்', ' இப்போ இது டிரெண்ட்ல இருக்கு'... என அந்தக் கடைக்காரப் பெண் நான் போகும் இடமெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தார். வேண்டாம் என மறுக்க முடியாமல் தயக்கத்துடன் ஒவ்வொரு டிரெஸ்ஸாக வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன்... 'ம்ம்மா, இது ஓ.கே...பில் போடலாம்' என்றவாறே கண்ணாடி முன் நின்று புது ஆடையை ரசித்துக்கொண்டிந்தது அந்த ஆறு வயது குழந்தை. தனக்கானதை தான் தேர்வு செய்வதில் அந்தக் குழந்தையின் மனஉறுதி வியக்க வைத்தது. துணி எடுத்துக்கொடுக்க என் பின்னாடியே வந்த பெண்ணை தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். 'இல்ல நீங்களா, டிரெஸ் எடுக்குறத பார்த்தா மேனேஜர் திட்டுவாரு. அதான் நான் காட்டலாம்னு வந்தேன்' என்று அவள் தரப்பு நியாயத்தைச் சொல்லிக்கொண்டே சில அடி நகர்ந்து நின்றாள். பொதுவாக புதுத்துணி வாங்கும்போதெல்லாம் சிறு வயதில் எதிர்கொண்ட கேலி, கிண்டல்கள் மனதுக்குள் மின்னலாய் தோன்றி மறையும். அதனாலேயே பிடித்திருந்தும் சில ஆடைகளை எடுக்காமல் வந்துவிடுவேன். ஒருவருக்கு உடல் குறித்து ஏற்படும் தயக்கம், அவமானங்களுக்கெல்லாம் ஏதோ ஓர் இடத்தில், நேரத்தில் நிகழ்ந்த விமர்சனங்கள், மற்றவர்களின் சிரிப்புகள் காரணமாக இருக்கலாம். பெண் - குழந்தை ஆடை, அரசியல், சட்டம், சமூகம்... பெண்கள் முன்னேற்றம் சார்ந்த முக்கிய நகர்வுகள்! என்னுடைய பள்ளிப்பருவம் அது. பள்ளியில் வயதுக்கு வந்த பெண்கள் என்ன வகுப்பு படித்தாலும் தாவணி அணிந்து வர வேண்டும் . உடை குறித்தோ, உடல் குறித்தோ எந்தத் தெளிவும் இல்லாத வயது அது. ஏழாவது படிக்கும்போது முதல் முதலாக தாவணி அணிந்து வந்தாள் கருப்பாயி. இடுப்புப்பகுதியை மறைக்க பெட்டிக்கோட் அணிந்து அதன் மீது பிளவுஸ் அணிந்து வந்திருந்தாள். நிமிடத்துக்கு ஒருமுறை தாவணியை சரி செய்துகொண்டே இருந்தாள். எல்லோரும் பாவாடை சட்டை அணிந்திருக்க, அவள் மட்டும் தாவணி அணிந்திருந்தை எல்லாரும் வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள். அதன்பின், ஒவ்வொரு பெண்ணாக தாவணிக்கு மாறினார்கள். தாவணி அணிந்துவிட்டாலே அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. வகுப்பில் ஒவ்வொரு பெண்ணாக தாவணிக்கு மாற நான் மட்டும் பத்தாவது வரை பாவாடை சட்டை அணிந்திருந்தேன். எட்டாவது பயிலும்போது, என் சக நண்பன் ஒருவன், 'எல்லாரும் தாவணி போட்டாங்க, நீ இன்னும் ஏன் போடல’ என்ற கேள்வியைக் கேட்டான். ’டீச்சருங்களே ஒண்ணும் சொல்லல, உனக்கு என்ன' என கொஞ்சம் கர்வமாகத்தான் பதில் சொன்னேன். பத்தாவது பொதுத்தேர்வுக்கு சில நாள்களுக்கு முன், ’எரும மாடு மாதிரி வளர்ந்திருக்க, தாவணி போட்டுட்டு வரத்தெரியாதா... இப்படி எல்லாத்தையும் காட்டிட்டு வந்துருக்க’ என, என் சட்டையை பிடித்து எங்கள் தமிழ் ஆசிரியை சக மாணவர்கள் முன்னிலையில் கேட்டபோது, கூனிக் குறுகினேன். மாராப்பு இல்லாத ஆடை பாதுகாப்பு அற்றது, மற்றவர்களின் தவறான பார்வையை நம் மீது திருப்பும் என்பதை அந்த ஆசிரியர் எனக்கு மூளையில் விதைத்தார். என் உடல் குறித்து முதல் முதலாக அவமானப்பட்ட நிமிடம் அது. இந்தக் கேள்வி என் பொதுத்தேர்வு தொடங்கி அடுத்தடுத்த வகுப்பிற்கான படிப்புகள் வரை எங்கும் எதிரொலித்தது. அந்த நிகழ்வுக்குப் பின் துப்பட்டா, தாவணி இல்லாத ஆடைகளை அணிவதில் இருந்த தயக்கத்தை உடைக்க கிட்டத்தட்ட எனக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டன. சில வாரங்களுக்கு முன் என் மகள் பொம்மைகளை வைத்துக்கொண்டு, அவள்தான் அம்மா என ஒரு துண்டை  தன் மார்பின் மீது போட்டு இழுத்து விட்டுக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தாள் . 'இந்தத் துண்டு எதுக்கு' என்று கேட்டபோது, 'இது சேலை. ஆச்சி, பக்கத்து வீட்டு அக்காலாம் போட்டுருக்காங்கல.. அதான்' என்றாள். அம்மா போடலையே என்றதும், 'நீ கிச்சன்ல பெருசா சமைக்கல. சமைக்கிறவங்கதான் போடணும். இது இல்லனா யாராவது பேட் டச் பண்ணிருவாங்க. நீ ஜீன்ஸ் போட்டுருக்க. உன்ன யாரும் பேட் டச் பண்ணமாட்டாங்க...’ என்று சொல்லிக்கொண்டே துண்டை இழுத்து விட்டாள். பெண் குழந்தை அன்று கலெக்டர் கனவு... இன்று காட்டுவேலை! |#அவளின் சிறகுகள் - 1 மாராப்பு என்பது இழுத்துவிட வேண்டிய ஒன்று என்பதை அவள்கூட உணர்ந்திருக்கிறாளே என்பதும் அவளின் பதிலும் என்னை உண்மையில் அதிர்ச்சி அடையவே செய்தது. இருந்தாலும், ஜீன்ஸ் என்பது தைரியத்திற்கான ஓர் உடை என அவளின் மனதில் பதிந்திருப்பது, மகிழ்ச்சியே... புடவை என்பது பாரம்பர்யம், கலாசாரம் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், புடவையை சரி செய்துகொண்டே இருக்க வேண்டும். பீரியட்ஸ் நாள்களில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின் மாற்றுவது எவ்வளவு சிரமம் தெரியுமா..? இறுக்கமான உள்ளாடை, பாவாடை, அதன் மீது பிளவுஸ், புடவை என எத்தனையை கட்டி சமாளிப்பது. புடவையைக் கட்டிக்கொண்டு எப்படி இயல்பாக நடப்பது... இதில் இந்தச் சமூகம் வேறு புடவை கட்டும் பெண்களிடம் நளினத்தையும், வெட்கத்தையும் எதிர்பார்க்கிறது. இருந்தும் பெண்களுக்குப் பிடித்த உடையாக புடவை இருக்கிறது. புடவையில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதை சமூகம் பெண்கள் மனதில் ஆழமாக விதைத்திருக்கிறது. அடக்குமுறையைக்கூட அழகு என்றே பழக்கப்படுத்தி, அமைதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே இதில் நாம் உடைக்க வேண்டிய சூட்சமம்.  கிராமத்துப் பெண் ``ஆசை வேண்டாம்னு குனிஞ்சு நடப்பேன், அதை வெட்கம்னு நினைப்பாங்க | அவளின் சிறகுகள் - 2 ஆடை, உடல் குறித்த தயக்கத்திலிருந்து என்னை மீட்டெடுத்தது ஈஸ்வரி அக்கா. மதுரையில் படித்தவர். திருமணமாகி எங்கள் கிராமத்திற்கு வந்தார். எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு சேலை தவிர்த்து எந்த உடையும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பாதவர்கள். 50 வயதில் பார்டர் வைத்த பிளவுஸ் அணிந்தால், அவர் தவறானவர்...'இவ என்ன  பொம்பள' என்ற கேள்வியை எதிர்கொள்பவர். இப்படியான கிராமத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல், முதல்முதலாக எங்கள் கிராமத்து தெருவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து , கம்பீரமாக நடந்து வந்ததை, ஊரே நிமிர்ந்து பார்த்தது.பெண்கள் வசை பாடினாலும், ஈஸ்வரி அக்கா தெரு முனையில் திரும்பும் வரை அவரின் ஆடையை எல்லா பெண்களும் மனதுக்குள் ரசிக்கவே செய்தார்கள். ஒரு முறை ஈஸ்வரி அக்காவிடம் பேசும்போது, 'நைட்டி, மிடி என எல்லாவிதமான ஆடைகளையும் என் வசதிக்காக உடுத்துறேன். இந்த டிரஸ் போட்டுப்பார்த்தா தான் இதுல இருக்கிற வசதி என்னன்னு தெரியும். இந்த ஊருல இருக்குற எல்லா பொண்ணுங்களுக்கும், இந்த டிரஸ்லாம் போடணும்னு ஆசை இருக்கும். ஆனா, வெளிய சொல்லமாட்டாங்க. ‘எங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு, இந்த உடுப்பெல்லாம் பிடிக்காது. அடக்க ஒடுக்கமா இருப்பாங்க'னு அவங்க வீட்டு ஆம்பளைங்க பொது வெளியில் சொல்லி பெருமை பீத்திக்க இவங்க வாழ்க்கை முழுக்க சேலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இழுத்து கஷ்டப்படுறாங்க. கிராமத்துப் பெண் குடும்பத்தலைவி என்பது குடும்ப அட்டைக்கு மட்டுமா? - அவளின் சிறகு - 4 என் வீட்டுப் பொண்ணுங்களுக்கு இந்த உடுப்பு பிடிக்காது, போட மாட்டாங்கன்னு சொல்ற எந்த ஆம்பளையாவது, உனக்கு ஆசை இருக்கா, நீ வசதியா உணர்வியா, நீ போடுன்னு சொல்லுவாங்களா' என ஈஸ்வரி அக்கா சொல்லும்போது, நானும் என் அருகில் இருந்த அமுதாவும், ஆம் என்பது போல் அமைதியானோம். அதன்பின், நான் பாவாடை சட்டையில் இருந்து சுடிதாருக்கு, குர்தாவுக்கு மாறினேன்.மெள்ள மெள்ள என் கிராமத்துப் பெண்கள் தங்கள் பிடிவாதத்தால் உடுப்பு விஷயத்தில் மாற ஆரம்பித்தார்கள். நான் சுடிதாருக்கு மாறிய அந்த நிமிடம், ஏதோ புதிதாகப் பிறந்தது போல் இருந்தது. உண்மையில் உடையில் நம் வசதிக்கு ஏற்ப மாற்றம் ஏற்படும்போது நம் மனநிலையும் மாறத்தான் செய்கிறது.  நாம் அணியும் உடை நம்முடைய பழக்க வழக்கங்களை, மனநிலையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனில், பாவடையில் கம்பீரமாக நடைபோடும் பெண்கள், வயதுக்கு வந்தபிறகு சேலை கட்டும்போதோ, தாவணி அணியும்போதோ, தலை குனிந்து அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டும். காலை அகட்டி வைத்து நடக்கக்கூடாது, நளினமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என் பாட்டி காலத்திலிருந்து என் காலம் வரை போதிக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. சுடிதார் இவை எல்லாவற்றுக்கும் ஒரு விடுதலை கொடுத்து இயல்பாய் நடக்க கற்றுக்கொடுத்தது. மார்பு துணி விலகியிருக்கிறதா, இடுப்புப்பகுதி தெரிகிறதா என்பதையெல்லாம் மறந்து கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நடந்த தருணம் அது. வேகமாய் மாறிவரும் சூழலில் பெண்கள் நடந்தால் மட்டும் போதுமா... ஓட வேண்டாமா? அப்படி ஓட்டத்திற்கான ஆடையாக ஜீன்ஸ் எனக்கு அறிமுகமானது. ஜீன்ஸ் பேண்ட் 15 வருடங்களாக அவனைத் தேடுகிறேன்... ஆனால், உலகத்தின் கேள்வி ஏன் இப்படி இருக்கிறது? - அவளின் சிறகு - 3 நான் சென்னை வந்த புதிதில் முதலில் கவனித்தது எல்லோருடைய கால்களையும்தான். ஓட்டமும், நடையுமாய் பறக்கும் சக்தி இந்தக் கால்களுக்கு மட்டும் சாத்தியப்படுவது எப்படி என பலமுறை சிந்தித்து இருக்கிறேன். என் அலுவலகத்தோழிதான் எனக்கு ஜீன்ஸ் பேன்ட்டை அறிமுகம் செய்தார். நாடாக்கயிறு இல்லாத அந்த பேன்ட்டை முதல் முதலாக அணிவது சிரமமாகவும், கூச்சமாகவும் இருந்தது. தளர்வான பேன்ட் அல்லது பாவாடைக்குள் நுழையும் காற்றை இறுக்கமான ஜீன்ஸ் தடைசெய்தது. என் ஆடை காற்றில் பறக்கிறது, நான் சரி செய்ய வேண்டும் என்ற மனநிலையை  இறுக்கமான அந்த ஆடை உடைத்தது. தயக்கங்களையும் தான்... முதல் முதலாக ஜீன்ஸ் அணிந்தபிறகு கூடுதல் தன்னம்பிகை பிறந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆண் நண்பர்களுக்கு இணையாக என் கால்களும் நீண்ட அடியை எடுத்து வைத்தன. என் சிந்தனைகளும் விரியத்தொடங்கின.  இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண் குழந்தை பெற்றால்கூட அடுத்த நாளே இறுக்கிக்கட்டிய பாவாடையின் மீது, புடவை அணிவது கட்டாயமாகத்தானே இருந்தது. இன்று வசதிக்காக பயன்படுத்தும் நைட்டியை அன்று நோயாளி பெண்கள்கூட பயன்படுத்த தயங்கினார்கள்தான். இன்று காலம் கொஞ்சம் மாறியிருக்கிறது. அவளின் சிறகு ஆனாலும், 'கற்பு' என்பது பெண்களின் உடையிலும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களின் வளர்ச்சி துப்பட்டாக்களாலும், சேலைகளாலும், தாவணிகளாலும் இறுக்கப்படுவதை, சிறகுகள் முறிக்கப்படுவதைத் தவிர்த்து, பறக்க துணையாய் நிற்போம். உடை வட்டத்தை உடைத்து எறிவோம். வளையம் தாண்டி அவளின் சிறகுகள் இன்னும் வேகமாய் விரியட்டும். 

விகடன் 21 Apr 2024 8:37 am

`ஒரே நாளில் இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்சிய விகடன் வாசகர்கள்’ - தழுதழுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி

தஞ்சாவூர் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தனியார் வங்கியில் வேலை, கை நிறைய சம்பளம் என எல்லோரையும் போல் மகிழ்ச்சியாக சென்ற இவரது வாழ்க்கை திடீரென வீசிய புயலில் தலைகீழாக மாறியது. 2013-ல் இவருக்கு கண் பார்வை பறிபோனதில் மொத்த வெளிச்சமும் ஒரே நாளில் தொலைந்து வீட்டுக்குள் முடங்கினார் ராஜா. அவரையே நம்பியிருந்த மனைவி, பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. உதவி கிடைத்த பின்னர் மைக்ரோ க்ளாஸ் அணிந்திருக்கும் ராஜா பார்வை பறிபோனதும், அவர் பார்த்த வங்கி வேலையும் பறிபோக அடுப்பெரிக்க முடியாத நிலைக்கு சென்றது வீட்டின் நிலை. பசியும், பட்டினியுமாக பல நாட்கள் கழிந்தது. எங்கும் இருட்டு மட்டுமே சூழ்ந்திருக்க, தன்னை நம்பி வந்த மனைவி, பிள்ளைகள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்க வைக்க வேண்டும் என தன்னம்பிக்கை மட்டும் அவரிடம் மிச்சமிருந்தது. வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தவர் பள்ளிகளில் பென்சில், பேனா விற்றார். மனைவி உதவியுடன் பினாயில் தயாரித்து வீதி வீதியாக அலைந்து திரிந்து விற்பனை செய்தார். ஆனாலும் அவர் மீது துளி வெளிச்சம் படவில்லை. கிடைத்த சொற்ப வருமானத்தில் தன்னை கைப்பிடித்து வழி காட்டியாக அழைத்து செல்ல துணைக்கு வருபவருக்கு சம்பளம் கொடுத்தது போக மிச்சத்தில் குடும்பம் நகர்ந்தது. மைக்ரோ க்ளாஸ் கைக்கும் பத்தலை, வாய்க்கும் பத்தலை என்ற நிலை தொடர தன் மீது வெளிச்சம் படாத என ஏங்கி தவித்தார். இந்த சுழலில் அருகாமையில் நடந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட ராஜாவை சோதித்த மருத்துவர் மைக்ரோ க்ளாஸ் குறித்து கூறியுள்ளார். அந்த க்ளாஸை வாங்கி விட்டால் குடும்பத்தின் தலையெழுத்தே மாறிவிடும் என கனவு கண்ட ராஜாவை சூழ்ந்திருந்த வறுமை அதற்கு தடையாக இருந்தது. ஒரு பக்கம் தொலைந்த பார்வை, மறுபக்கம் குடும்பத்தின் நிலை இரண்டும் சேர்த்து ராஜாவை அழுத்தியது. இவரது நிலை குறித்து தெரிந்ததும் விகடன், கடந்த மார்ச் 4ம் தேதி உழைக்க தெம்பிருக்கு கைடு கொடுத்தால் குடும்பமே பிழைச்சிக்கும்- இருளை எதிர்த்து போராடும் மாற்றுத்திறனாளி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதை படித்த விகடன் வாசகர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது. கொஞ்சமும் யோசிக்காமல் விகடன் மூலமாக ராஜாவிற்கு உதவி கரம் நீட்டினர். மைக்ரோ க்ளாஸ்- மொபை;ல் போன் அதன் பின்னர் தொடர் இருட்டில் தவித்த ராஜா மீது வெளிச்சம் படர்ந்தது. விகடன் வாசக அன்பு நெஞ்சங்கள். மூன்று லட்சத்திற்கு மேல் ராஜாவின் வங்கி கணக்கில் வாரி வழங்கினர். இதில் நெகிழ்ந்த ராஜா, ஒரே நாளில் வாழ்க்கை மொத்தமும் புதுசாக மாறுமுனு கனவு கூட காணல. எங்களை கவ்வியிருந்த இருட்டு காணாமல் போச்சு, இதற்கு வித்திட்ட விகடனுக்கு வாழ் நன்றினு தழு தழுத்தார். ராஜாவிடம் பேசினோம், ``திடீரென பறிபோன பார்வையால் நான் மட்டுமல்ல என்னை நம்பியிருந்த குடும்பமும் நிலை குலைந்தது. வறுமையை விரட்ட அலைந்து திரிந்து பென்சில், பேனா, ஊபத்தி, பினாயில் விற்றும் கால் வயிறு கஞ்சி தான் குடிக்க முடிந்தது. பார்வை இல்லாததுனால துணைக்கு யாருமின்றி வெளியே செல்ல முடியல. இனி பார்வை கிடைப்பதற்கு சாத்தியம் இல்லனு டாக்டர் சொன்னப்ப என் மீது இடி விழுந்த போல் உணர்வு ஏற்பட்டது. குடும்பத்தினருடன் பார்வை மாற்றுத்திறனாளி ராஜா அப்பதான் மைக்ரோ க்ளாஸ் குறித்து சொன்ன டாக்டர், மைக்ரோ க்ளாஸ் அதை கனெக்ட் செய்வதற்கு ஆன்ட்ராய்டு மொபைல் இருந்தால் நீங்க யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக இமயமலை கூட ஏறலாம் என்றார். எனக்குள் ஆயிரம் மின்னல்களின் வெளிச்சம் பாய்ந்தது. ஆனால் அழுத்திய வறுமை அதற்கெல்லாம் ஆசை படக் கூடாது என்பதை அழுத்தமாக உணர்த்தியது. மனைவி ஜனோவா, உறவினர்கள்கிட்ட உதவி கேட்போம் என யோசளை சொல்ல நானும் கேட்டேன். எல்லோரும் சொல்லி வைத்தார் போல் கையை விரித்தனர். இது நமக்கு எட்டாக்கனி தான் என நினைச்சி தவிச்ச நின்ன நிலையை அறிந்த விகடன் என்னை வாரி அணைத்துக் கொண்டது. என் நிலை விகடனில் செய்தியாக வந்த பிறகு கலங்கிய வாசகர்கள் கரம் நீட்டி எங்கள் கண்ணீரை துடைத்தனர். ராஜா ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை வங்கி கணக்கு அனுப்பி நாங்க இருக்கோம் கவலை வேண்டாம் என்றனர். கிட்டதட்ட ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்தது. டாக்டர் ஒருவரின் ஆலோசனைப்படி உதவிக்கு ஒருவருடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று ரூ.37,000 மதிப்பில் மைக்ரோ க்ளாஸ் வாங்கினேன். 13,000 செலவில் ஆன்ட்ராய்டு மொபைல் வாங்கி அதில் மைக்ரோ க்ளாஸில் கனெக்ட் செய்தேன். மைக்ரோ க்ளாஸ் அணிந்து செல்லும் போது எதிரே பள்ளம் இருந்தால் அலர்ட் செய்கிறது. எதிரில் வருபவர்கள் ஆணா, பெண்ணா அவர்களின் தோராய வயது உட்பட அனைத்து விபரங்களையும் தெரியப்படுத்துகிறது. புக் ரீட் செய்வது உள்ளிட்ட இன்னும் பல வசதிகள் உள்ளது. இப்போது உதவிக்கு ஆள் இல்லாமல் வெளியே செல்கிறேன். சொல்லப்போனா புதுசாக பிறந்த உணர்வில் மிதக்கிறேன். வீட்டிலேயே இருக்கும் சின்ன மளிகை கடையை மனைவி கவனித்து வந்தார். கடையை விரிவுப்படுத்தி ரூ.50,000-க்கு பொருட்கள் வாங்கி வைத்திருக்கிறேன். மைக்ரோ க்ளாஸ் அணிந்திருக்கும் ராஜா ரூ.1.50 லட்சம் செலவில் விற்பனைக்கு வந்த பழைய லோடு ஆட்டோவை வாங்கியிருக்கேன். அதுல பினாயில், காய்கறி எடுத்து சென்று விற்பனை செய்யப்போறேன். வாசகர்கள் வாரி வழங்கிய பணத்தை ஒரு பைசா கூட அனாவசியமாக செலவு செய்ய மாட்டேன். இப்பதான் மகன் வர்சன், மகள் வர்சிகா முகம் மலர சிரிக்கின்றனர். கணவர் சாதிச்சுடுவார்னு மனைவி முகத்தில் நம்பிக்கை வந்து இருக்கு. ஒட்டு மொத்தமாக படர்ந்திருந்த இருட்டு விலகி என் மீதும் வெளிச்சம் பட்டுள்ளது. இழந்த அனைத்தும் ஒரே நாளில் திரும்பவும் கையில் கிடைத்திருக்கிறது. இருள் பழகிய என்னை கைப்பிடித்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று வித்திட்ட விகடன் வாசகர்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன். என் குடும்பத்தின் சார்பாக விகடனுக்கும், வாசகர்களுக்கும் நன்றி” என்றார் நெகிழ்ச்சியுடன்!. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

விகடன் 20 Apr 2024 4:02 pm

கடன், தாம்பத்யத்தையும் பாதிக்குமா?! வித்யா, மோகனுக்கு நடந்தது என்ன..? | ரொமான்ஸ் ரகசியங்கள் - 9

புதிய மாடல் ஓஎல்ஈடி (OLED) டிவியை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தாள் வித்யா. அதன் விலை ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தது. ``ஏங்க… பழைய மாடல் டி,வியில இன்டெர்நெட் கனெக்ட் பண்ணி ஓடிடில படம் பாக்க முடியல. புது டிவி ஒண்ணு ஆர்டர் போட்டுடவா?’’ என்று வித்யா கேட்டதுமே தன் பர்ஸில் இருந்த கிரெடிட் கார்டை கொடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினான் மோகன். வித்யா - மோகன் தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இதுவரை, இருவருக்குள்ளும் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. 8 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகன் என அளவான குடும்பம். ``பொண்ணக் கட்டிக் கொடுத்ததுல இருந்து ஒரு கொறையும் இல்லப்பா… வீடு, காரு, பேரன், பேத்தி படிக்க நல்ல ஸ்கூலு, வருஷத்துக்கு ஒரு முறை டூருன்னு மாப்பிள்ளை என் பொண்ணை நல்லா பாத்துக்குறாரு..’’ என்று வித்யாவின் அப்பா தன் மாப்பிள்ளை மோகனின் பெருமைகளை உறவினர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். குடும்ப உறவினர்களுக்கென்று இருந்த வாட்ஸ்அப் குரூப்பில் கூட, தன் மாப்பிள்ளை வீட்டில் புதிதாக வாங்கிய சிட்சூ ( Shih Tzu) நாய்க் குட்டியின் புகைப்படத்தைப் பதிவிட்டு பெருமை பாடிக் கொண்டிருந்தார் அவர். தன் மனைவியின் குடும்ப உறவினர்கள், தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது மோகனுக்கு தனியொரு மகிழ்வைக் கொடுத்தது. அந்த சந்தோஷத்துக்காகவே வித்யாவை அவள் பிறந்த வீட்டுக்கு அழைத்துப் போகும் போதெல்லாம் புதிய ஆடைகள், புதிய நகை, புதிய ஹேண்டு பேக்குகள் என எதையாவது அவளுக்குப் புதிதாக வாங்கிக் கொடுத்து அழைத்துச் செல்வான். மோகன் வாங்கிக் கொடுக்கும் பொருளின் விலையை விட, அதனால் தன் பிறந்த வீட்டில் மோகனின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருவதை எண்ணி வித்யாவுக்கும் கொள்ளைப் பெருமை. couple `முட்டி தேய்ஞ்ச காலத்துல இதெல்லாம் தேவையா..?!’ - பதில் இதுதான் | ரொமான்ஸ் ரகசியங்கள்-5 வீட்டுக்குத் தேவையானப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதிலோ, வித்யாவுடனான தாம்பத்ய வாழ்விலோ இதுவரை மோகன் அவளுக்கு எந்தக் குறையுமே வைத்ததில்லை. சொந்தமாக `கார் இன்டீரியர் டிசைன்ஸ்’ கடை வைத்திருக்கிறான். நல்ல வருமானம், நல்ல வாழ்க்கை என இதுவரை எந்தக் குறையுமில்லை. `வாழ்ந்தா மோகன் மாதிரி வாழணும்’ என்று உறவினர்களும் நண்பர்களும் உதாரணம் காட்டி வந்த மோகனின் குடும்பத்தில்தான், இப்போது திடீர் பிரச்னை. மோகன், கடந்த சில வாரங்களாகவே வித்யாவுடன் படுப்பதில்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்து படுப்பது, உடல்நிலை சரியில்லை என்று தனியாகப் படுப்பது என தினம் ஒரு சாக்கு வைத்து தனித்துப் படுக்கத் துவங்கியிருந்தான். ஆரம்பத்தில், மோகனின் நடவடிக்கையில் வித்யாவுக்கு எந்த குழப்பமுமில்லை. அதனால், பெரிய கேள்விகளுமில்லை. ஆனால், இன்று மாதவிடாய்க்கு 4 நாள்கள் முன்னதான நாளில் வித்யா மோகனுக்காகக் காத்திருக்கிறாள். பியூட்டி பார்லருக்குச் சென்று ஃபேசியல் மற்றும் வேக்ஸிங் செய்துவிட்டு வந்ததுடன், குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தாள் வித்யா. புதிய ஷாம்பூவும் கண்டிஷனரும் அவள் கூந்தலின் நறுமணத்தை அறையெங்கும் பரவச் செய்தது. போன மாதம் மோகன் வாங்கிக் கொடுத்த லாவெண்டர் பெர்ஃபியூமை தெளித்துக் கொண்டாள். அவனுக்குப் பிடித்த வெள்ளை நிற சில்க் காட்டன் புடவை, ஊசியால் கோர்த்துக் கட்டிய செண்டு மல்லிப்பூச்சரம், ஃபேன்ஸி கொண்டை, மை தீட்டிய கண்கள், மஸ்காரா இமைகள், சாயப்பூச்சில் மின்னுகிற இதழ்கள் என... பார்க்கும்போதே போதையேற்றுகிற வசீகர அழகில் மிளிர்ந்தாள் ``உன்னப் பாத்தா ரெண்டு புள்ள பெத்தவ மாதிரியா இருக்கு… எப்பப் பாத்தாலும் மொதவாட்டி பாத்த மாதிரியே சிக்குனு இருக்கியேடீ…’’ - வித்யாவை இப்படித்தான் கொஞ்சிக் கொஞ்சிக் கிறங்க வைப்பான் மோகன். ``பிரைவேட் பார்ட்ல ஹேர் ரிமூவ் பண்றது அப்பப்போ அவஸ்தையாகிடுதுப்பா. பேசாம லேஸர் பண்ணிக்கவா?’’ ``ஏய் வேணாம்டி… அப்றம் எப்பவாச்சும் தோணும்போது நேச்சுரல் ஃபீல் கிடைக்காதுடி. உனக்கு மட்டும் தான் மீசை, தாடிலாம் குத்துற ஃபீல் பிடிக்குமா என்ன?’’ ``ச்சீ. என்ன என்னவோ சொல்றீங்க… பேட் பாய் நீங்க...’’ ``ஆமா… இவ ரொம்ப குட் கேர்ள் பாரு...’’ குழந்தைகளுக்குக் கேட்டுவிடாமல் இவர்கள் ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சிக் கொள்வதே பேரழகு தான். முந்தைய ரொமான்ஸ் நாள்களை எல்லாம் நினைத்தபடி வித்யா இவ்வளவு நேரமாகக் காத்திருந்தும் மோகன் இன்னும் வரவில்லை. யார் கண்பட்டதோ தெரியவில்லை. பக்கத்து அறையில் படுத்திருந்த மோகனிடமிருந்து வித்யாவுக்கு ஒரு நீண்ட மெசெஜ் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. ``வித்யாமா… என்னை மன்னிச்சிரு செல்லம்… என்னை உனக்கு எவ்ளோ பிடிக்குமோ அதவிட ஆயிரம் மடங்கு அதிகமா உன்னை எனக்குப் பிடிக்கும்டி. இதுவரைக்கும் என்கிட்ட நீ அது வேணும், இது வேணும்னு எதையுமே தொந்தரவு பண்ணிக் கேட்டதில்ல. எல்லாமே நானே தான் வாங்கிக் கொடுத்திருக்கேன். இதுவரைக்கும் என்னோட சரியான வருமானம் என்னனு உனக்கு நான் உண்மையை சொல்லாம மறைச்சிட்டேன். ஆரம்பத்துல நம்ம கடை ஆரம்பிச்சப்ப , பிசினஸ்ல போட்டினு யாருமில்ல. அப்ப வந்த வருமானத்தை போல இப்ப என்னால சம்பாதிக்க முடியல. இந்த மூணு, நாலு வருஷமா கோவிட் டைம், பிசினஸ் போட்டி, அது இதுனு நல்லா வந்த வருமானம் கூட பாதியா குறைஞ்சு போச்சு. இப்ப சரியாகும், அப்ப சரியாகும்னு நானும் உன்கிட்ட சொல்லாமலே விட்டுட்டேன். வருமானம் வரும்னு நம்பி வெளிய கொஞ்சம் கடன் வாங்கிட்டேன். அது போக, கார் கூட இஎம்ஐ ல தான் இருக்கு. அளவுக்கு அதிகமா கிரெடிட் கார்டை யூஸ் பண்ணிட்டேன். என்னைச் சுத்தி இப்ப கடன் தான் அதிகமா இருக்கு. நைட்டு படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உன் கூட ஆசையா கொஞ்சிப் பேச முடியல. கடன்தான் மனசுல எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கு. கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதுடி தங்கம்… பேசாம செத்துரலாம் போல இருக்குடி. எனக்கு இதையெல்லாம் நேர்ல சொல்ல தைரியம் இல்லடி. மன்னிச்சிரு வித்யா’’ - வித்யாவுக்கு மெசெஜ் அனுப்பிவிட்டு புளூ டிக் வரும் வரை கூட காத்திராமல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான் மோகன். பதறி அடித்துக் கொண்டு அவன் அறைக்கதவை திறக்க ஓடினாள் வித்யா. பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. மோகன் அறைக்குள்ளே அழுது கொண்டிருப்பது மெதுவாகக் கேட்கிறது. ‘`கதவ திறங்க ப்ளீஸ்’’ என்று ஆயிரம் முறைக்கு மேல் கத்திக் கதறிவிட்டாள். `திறக்கவே மாட்டேன்’ என்றபடி பிடிவாதமாய்க் கிடக்கிறான். குழந்தைகள், பள்ளி ஆண்டு விடுமுறை என்பதால் வித்யாவின் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் முன்பாக இதெல்லாம் நடக்கவில்லை என்று நினைத்தாலும், அவர்கள் இருந்திருந்தால் மோகன் இப்படிச் செய்திருக்க மாட்டானே என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது பார்க்கிறாள். கடன் ``இப்ப நீங்க வெளிய வரலைனா… என்னை நீங்க உயிரோடவே பாக்க முடியாது’’ - கடைசியாக ஒருமுறை கத்திவிட்டு அங்கிருந்துப் போகிறாள் வித்யா. பெரிய அளவில் சத்தம். ஏதோ வெடித்த மாதிரி கேட்கவும், அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போரும் ஓடிவந்து மோகன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை, அறையின் மூலையில் அழுது கொண்டிருந்த மோகன் பதறியடித்துக் கொண்டு வெளியே வருகிறான். வாசலில் நின்று கூச்சல் போட்டவர்களிடம் அந்த வெடிச் சத்தத்துக்கான காரணத்தை எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தாள் வித்யா. எல்லோரும் கலைந்து போனபின் வாசல் கதவை சாத்திவிட்டு மோகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டாள் ``என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க… இப்ப மட்டும் நீங்க வெளிய வராம போயிருந்தா அடுத்து இந்த வீட்ல கேஸ் சிலிண்டர் தான் வெடிச்சிருக்கும். உங்களுக்கு என்ன பையித்தியமா பிடிச்சிருக்கு?’’ மோகனை உலுக்கிய உலுக்கில் அவன் நிலைகுலைந்து நின்றான். ஹால் முழுக்கக் கண்ணாடிச் சிதறல்கள். டைனிங் டேபிள் அருகில் இருந்த ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாத்திர செட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து வைத்திருந்தாள் வித்யா. வைத்த கண் வாங்காமல் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மோகன். என்றைக்குமில்லாமல், அவன் குடித்திருப்பதை வித்யாவால் உணர முடிந்தது. இரண்டு வாரமாகவே அவன் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் வித்யாவுடன் படுக்காமல் தனியே படுக்கிறான். பதற்றத்தில் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தவள், அருகில் இருந்த சோபாவில் அவனை உட்கார வைத்தாள். அவள் அழுது துடைத்ததில்... போட்டிருந்த கண்மையும் மஸ்காராவும் அழிந்து கன்னத்தில் கறை படிந்திருந்தது. ``நான் என்ன உங்க பணத்துக்காகத்தான் உங்க கூட குடும்பம் நடத்துறேன்னு நினைச்சிட்டீங்களா? நானும் சும்மா இல்ல, ஃபேஷன் டிசைனிங் முடிச்சிருக்கேன். என்னோட படிப்பை விட உங்களையும் நம்ம பசங்களையும் லவ் பண்றதாலதான் இப்டி வீட்லயே உட்கார்ந்துட்டு இருக்கேன். ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை… இப்டி ஒரு கடன் பிரச்னை இருக்குனு சொன்னா நான் என்ன உங்களை விட்டுட்டு ஓடிரவா போறேன்? போயும் போயும் கேவலம் இந்த பணத்துக்காகத்தான் நாங்க உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேன்னு நினைச்சிட்டீங்க பாத்திங்களா?’’ விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் வித்யா. மோகனுக்கு, அடித்த போதையெல்லாம் இறங்கிவிட்டிருந்தது. ``இல்லடி… செல்லம்மா… நான் அப்டி சொல்லலடி தங்கம்… தாங்க முடியாத அளவுக்கு கடன் ஆகிப் போச்சு. என் கஷ்டம் என்னோட போகட்டும். நீ எப்டி தாங்கிப்பேனு தான் மறைச்சிட்டேன்டி.’’ - மோகனும் உடனிணைந்து அழுதான். ``எத்தனை வருஷமா கடன் வாங்கிட்டு இருக்கீங்க… இன்னும் எவ்ளோ கடன் இருக்குனு சொல்லுங்க…’’ - கைகளில், கழுத்தில் அணிந்திருந்த நகைகளையெல்லாம் மடமடவென உருவினாள். `வேண்டாம்’ என்பது போல் அவள் கைகளை மடக்கித் தடுத்தான். எதுவும் சொல்லாமல் சில நிமிடங்கள் நகைகளை சோபாவின் மீது வைத்துவிட்டு கண்கள் பொத்திக் கொண்டு அழுதாள் வித்யா. கடன் எல்லா வகையிலும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போன தம்பதி. திகட்டத் திகட்டக் காதல். இருவருக்குள்ளும் ஏதோவொன்றை மறைத்து வாழ வேண்டிய அவசியமில்லாத வாழ்க்கை. இப்படி நான்கு சுவருக்குள் அன்யோன்யமாய் வாழ்கிற சுக வாழ்வு கிடைத்தாலும் , ஊர் மெச்சுகிற வாழ்க்கைக்காக, சமூகம் கொடுக்கிற `பொருளாதார அங்கீகாரம்’ என்கிற தற்பெருமை வலையில் சிக்கியதன் விளைவுதான் மோகன் இப்போது கடனாளியாகி இருக்கிறான். மோகன், தன் வருமானம் எவ்வளவு என்கிற உண்மையை வித்யாவிடம் சொல்லியிருந்தால், வருமானத்துக்கேற்ற செலவு செய்து கடனில்லாத வாழ்க்கையை இருவரும் வாழ்ந்திருக்க முடியும். குறைந்தபட்சம், அதிக அளவிலான கடன் சுமைக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம். ஆனால், மோகன் வித்யாவை ராணியைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தன் விருப்பத்தால் எல்லா சுமைகளையும் தான் ஒருவனாக தோளில் சுமந்து கொண்டு, இப்போது `வாழப் பிடிக்கவில்லை’ என தனியறையில் பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறான். சிறிது நேர அமைதிக்குப் பின் வித்யா கண்களைத் துடைத்துக் கொண்டு, மோகனின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். ``இங்கப் பாருங்க…. கல்யாணம்ங்கிறது புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து இழுக்குற தேர் மாதிரி. நீங்க தான் என்னை ராணி மாதிரி பாத்துக்கணும்னு எந்த ரூல்ஸும் இல்ல, நானும் உங்களை ராஜா மாதிரி பாத்துக்கலாம். இல்லாட்டிம் நீங்க என்னை ராணி மாதிரியும் நான் உங்களை ராஜா மாதிரியும் சேர்ந்து பார்த்துக்கலாம். மொத்தப் பொறுப்பையும் நீங்க மட்டுமே தூக்கி சொமக்கணும்னு நினைக்காதீங்க. நாங்க சந்தோஷமா இருக்கணும்னு தெனம் தெனம் இப்டி தனியா உட்கார்ந்து அழுதிருக்கீங்களே… உங்களை அழவெச்சுதான் நாங்க சந்தோஷமா இருந்தோமானு நெனச்சாவே எனக்கு இப்ப உயிர் போற மாதிரி இருக்குங்க. சரி, இவ்ளோ நாளா முடிஞ்சு போனதெல்லாம் விடுங்க. நாளையிலிருந்து நான் வேலை தேடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து கடனை அடைப்போம்… என்ன சொல்றீங்க?’’ மோகன் இதுவரை வித்யாவின் பேச்சைத் தட்டியதில்லை. ஆனால் முதன்முறையாக அவள் சொல்வதை அவனால் ஏற்க முடியவில்லை. ``இல்ல வித்யா… உன்ன கஷ்டப்படுத்த விரும்பல. அப்றம் உங்க அப்பா… அம்மா சொந்தக்காரங்க எல்லாம் என்னை தப்பா நெனைப்பாங்க...’’ - மோகன் சொல்லி முடிப்பதற்குள் பொசுக்கென கோபம் வந்தது வித்யாவுக்கு. ``ஓஹோ… அப்ப இவ்ளோ நாளா எனக்காகவும், எங்க வீட்டாளுங்களுக்காகவும் ஊருக்காகவும் தான் இதெல்லாம் பண்றீங்க? நாளைக்கு உங்களுக்கு மன அழுத்தம் தாங்க முடியாம ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்போச்சுன்னா இவங்களா வந்து என்னையும் நம்ம புள்ளைங்களையும் பாத்துக்கப் போறாங்க. மொதல்ல ஊருக்காக வாழாதீங்க… நமக்காக வாழுங்க’’ - பொரிந்து தள்ளினாள் வித்யா. மோகன், தன் அன்பு மனைவியின் மீது வைத்திருக்கும் காதலாலும் தன்னை இந்த சமூகமும் உறவினரும் பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவும் திட்டமிடாமல் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்ததும், அதை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளாததுமே இன்று அவன் தற்கொலை முடிவு எடுக்கும் அளவுக்கு அவனை மன அழுத்தத்திற்கு தள்ளியிருக்கிறது. couple லவ், எக்ஸ், செக்ஸ்... முதலிரவில் பேச வேண்டியதும், பேசக் கூடாததும்! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 7 `சிறுதுளி பெரு வெள்ளம்’ என்கிற பழமொழி சேமிப்புக்கு மட்டுமல்ல. சிறுக இருக்கும் போதே அடைத்துவிடாமல் போவதால் வட்டியும் முதலுமாகச் சேர்ந்துவிடும் கடன் சுமைக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான். கணவனோ, மனைவியோ எந்த பிரச்னையாக இருந்தாலும் அது வளர்ந்து பெரிதாகும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே பகிர்ந்து கொள்வதுதான் ஒருவருக்கொருவர் காயப்படுத்தாத சிறந்த வாழ்க்கை என்பதை வித்யா மோகனுக்கு உணர்த்தியிருந்தாள். ``சரி.. கண்ணத் தொடச்சிட்டு எழுந்து வாங்க’’ - தலைகுனிந்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்த மோகனின் கைகளை இழுத்து அவனை தன் தோள் மீது சாய்த்து இறுக்கி அணைத்தாள் வித்யா. மனைவியின் தோள் அன்று தாய்மடியாய் மாறிப் போக கட்டியணைத்து விம்மியழுதான் மோகன். ``ஸாரிடி என் தங்கம்மா… லவ் யூ டி’’ என்றான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் செய்து அணைத்து நின்றார்கள். அந்த ஜோடி கட்டியணைத்த காட்சி, ஆஃப் செய்யப்பட்டிருந்த ஓஎல்ஈடி டிவியின் கறுப்புத் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. - ரகசியங்கள் தொடரும்... - அர்ச்சனா

விகடன் 20 Apr 2024 2:30 pm

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 6:04 am

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 5:34 am

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 4:34 am

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 3:34 am

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 2:34 am

குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் பெங்களூரு: 3 ஏரிகளை மீட்டமைத்த ஆர்சிபி!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

தி ஹிந்து 20 Apr 2024 1:34 am

உலக பாரம்பரிய தினம் | கலை சின்ன வளாகங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பல்லவ மன்னர்களின் கலைச்சின்ன வளாகங்களுக்குள், சுற்றுலா பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தி ஹிந்து 19 Apr 2024 9:01 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 6:11 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 4:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 3:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 2:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 1:35 am

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தி ஹிந்து 17 Apr 2024 9:02 am

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தி ஹிந்து 17 Apr 2024 8:36 am

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தி ஹிந்து 17 Apr 2024 7:35 am

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தி ஹிந்து 16 Apr 2024 9:02 am

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தி ஹிந்து 16 Apr 2024 7:34 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 9:02 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 8:35 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 7:34 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 6:34 am

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 8:00 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 7:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 6:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 4:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 3:35 pm

Buffaloes: எருமைகள் ஏன் நீர்நிலைகளை அதிகம் விரும்புகின்றன தெரியுமா? ஓர் எளிய விளக்கம்!

எருமை மாடுகள் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் அதிக நேரம் செலவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. நீர்நிலைகளை அதிகம் விரும்பும். இது எதனால் என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் அலமாதி உறை விந்து நிலையத்தின் பொது மேலாளர் முனைவர் குணசேகரன், பொதுவாகவே தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு வெயிலினால் வரும் அசௌகரியம் போலவே கால்நடைகளிடையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஹீட் ஸ்ட்ரெஸ் (Heat stress) என்பார்கள். எருமை Summer foods: கோடைக்கால பரிசு... நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதுதான்! பசு மாடுகளை விட எருமைகள் இதனால் அதிகமாக பாதிப்படுகிறது. ஏனென்றால் எருமைகளின் தோல் தடிமனாகவும் அதன் கறுப்பு நிறம் சூரிய ஒளியை நேரடியாக உள்வாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. அதேபோல எருமைகளின் தோலில் குறைந்த அளவிலேயே வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இந்த வெப்ப அழுத்தத்தினால் உடல் வெப்பநிலை மற்றும் நாடித் துடிப்பு அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல் குறைதல், உமிழ்நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வாய் திறந்த மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகிறது. மற்ற எருமை இனங்களை காட்டிலும் முர்ரா எருமை வெப்ப அழுத்தத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. குணசேகரன் Fishing: கடலில் கிடைத்த மீன் புதையல்... ஒரே நாளில் கோடீஸ்வரர்களான 3 மீனவர்கள்! 20-25% கால்நடைகள் வெப்ப அழுத்தத்துடன் மருத்துவமனையில் அடையாளம் காணப்படுகின்றன. வெப்ப அழுத்தமானது பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறன் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் கன்று இறப்பு சதவிகிதமும் அதிகரிக்கும். இந்த வெப்ப அழுத்தத்தை குறைப்பதற்கு போதுமான குடிநீர், உயர்தர தீவனங்கள் மற்றும் தாது கலவைகளுடன் சீரான உணவுகளை வழங்குவதன் மூலம் வெப்ப அழுத்தத்தை குறைக்க முடியும். அமிலத்தன்மையைத் தடுக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகள் கால்நடைக் கொட்டகையில் மின்விசிறிகளை ஏற்பாடு செய்யலாம் மற்றும் மதியம் கால்நடைகளுக்கு குளிர்ந்த நீரை தெளிக்கலாம். எருமைகளின் வெப்ப அழுத்தத்தைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, நீர் நிலைகள், குளத்தில் குளிப்பதாகும் என்றார்.

விகடன் 14 Apr 2024 10:49 am

பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி, தல தோனி, 2கே கிட்ஸ்... காதல் சண்டைகளும் காலத்துக்கேற்ற தீர்வுகளும்!

``நான் காத்துல கட்டுன கோட்டையை கட்டி ஆளும் ராசாவே… உன்ன பாத்த நாள்ல இருந்து கையில ரோசாவே’’ - இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புடவை கட்டிக்கொண்டு தீபக்குடன் ஆடிக் கொண்டிருந்தாள் காவ்யா. கூடவே, தீபக்கின் ஐடியையும் டேக் (Tag) செய்திருந்தாள். 80,000 லைக்ஸ் தாண்டிய ரீச். `வாவ்… செம ஹிப்', 'ஸோ பியூட்டிqபுல்… ஸோ எலகன்ட்… ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ்!’, ’செக்ஸி லேடி… கிட்ட வாடி’ என்றெல்லாம் எக்கச்சக்கமான ஹாட் கமென்ட்கள். ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க ரோஹித்துக்கு டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது. காவ்யா... அந்தக் கல்லூரியின் கல்ச்சுரல் செகரட்டரி. ரோஹித் - காவ்யா இருவரின் காதல்தான் கல்லூரியின் ஹாட் டாபிக். ரீல்ஸிலோ, காவ்யா - தீபக்கின் ஜோடிப் பொருத்தத்தை, கெமிஸ்ட்ரியைக் கொண்டாடி பல கமென்ட்கள் விழுந்தபடி இருந்தன. ``காவ்யா… அங்க பாருடி அந்தப் பையன் தினம் உன்னை சைட் அடிச்சிட்டுப் போறான்… ‘’ என்று ரோஹித்தை முதன்முதலாக காவ்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே தீபக்தான். அதன் பின் ரோஹித் - காவ்யா இருவருக்கும் இடையே நடந்த எல்லா சாட்டிங் குறித்தும் தீபக்குக்குத் தெரியும். `’என்னடி... ரோஹித் நாளைக்கு உனக்கு ப்ரோபோஸ் பண்ணப் போறான் போலருக்கு… ஒழுங்கு மரியாதையா ட்ரீட் வச்சிடு இல்லனா அவ்ளோதான்’’ - தீபக், தன் கேர்ள் பெஸ்டி காவ்யாவின் காதலுக்கு பச்சைக் கொடி அசைத்துக் கொண்டிருந்தான். Friends லவ், எக்ஸ், செக்ஸ்... முதலிரவில் பேச வேண்டியதும், பேசக் கூடாததும்! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 7 பள்ளிக் காலத்திலிருந்தே தீபக், காவ்யாவின் பாய் பெஸ்டி. இதுவரை இருவரும் ஒருவருக்கொருவர் எதையுமே மறைத்துக் கொண்டதே இல்லை. எந்த அளவுக்கு இவர்கள் க்ளோஸ் என்றால், கிட்டத்தட்ட எல்லா பாஸ்வேர்டுகளுமே இருவருமே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம், அடிதடி கலாட்டா என என்ன நடந்தாலும் சரி, `வா… மச்சான் பாத்துக்கலாம்...‘ என்று பரஸ்பரம் தோள் கொடுக்கும் நண்பர்கள். நட்பின் வலிமை கூடும்போது நண்பன் என்ற சொல்லே நாளடைவில் ட்ரெண்டுக்கு ஏற்ப பெஸ்டியாய் மாறிப்போனது. தீபக், காவ்யாவின் பெஸ்டி என்று தெரிந்த பின்புதான் ரோஹித்தும் காவ்யாவுடன் தன் காதலைப் பகிர்ந்திருக்கிறான். தன்னோடு பயணித்த காலங்களை விட, தீபக்குடன்தான் காவ்யா நிறைய நேரம் செலவு செய்திருக்கிறாள் என்பதும் ரோஹித் அறியாமலில்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை... காவ்யாவின் ரீல்ஸ்க்கு வந்த கமென்ட்கள் ரோஹித்தை நிம்மதி இழக்க வைத்துக்கொண்டே இருந்தன. `பாய் பெஸ்டின்னாலும் ஒரு லிமிட் வேணாமா?’ மனதுக்குள் அடக்க முடியாத எரிச்சல். ’போன் செய்து கேட்கலாமா? வேண்டாமா?’ என்று பலமுறை யோசிக்கிறான். இதையெல்லாம் கேட்டால் காவ்யா கோபித்துக் கொள்வாளோ என்கிற யோசனை ஒருபக்கம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காவ்யாவிடமிருந்து போன். ``ஹே… ரோஹி… என்னடா பண்ணிட்டு இருக்கே… எங்க ரீல்ஸ் இன்ஸ்டால வைரலாகிப் போய்ட்டிருக்கு. நீ என்ன… ஒரு லைக் இல்ல... ஸ்டோரி இல்ல… ஆர் யூ ஓகே?’’ காவ்யா, மீண்டும் அதே ரீல்ஸ் பற்றிக் கேட்டதுதான் தாமதம். சுர்ரென்று கோபம் வந்தது ரோஹித்துக்கு. ``இப்ப அவன் கூட க்ளோஸா ரீல்ஸ் பண்ணாட்டி செத்துருவியா நீ?’’ - யோசிக்காமல் கேட்டுவிட்டான். ரிப்ளை எதுவும் இல்லாமல் போனை துண்டித்தாள் காவ்யா. ரோஹித்தின் போன் நம்பர், வாட்ஸ்ஆப், சோஷியல் மீடியா அக்கவுன்ட்டுகள் என எல்லாவற்றையும் பிளாக் செய்தாள். Bestie Problems I Representational Image ``அவனுக்கு நாம க்ளோஸா ரீல்ஸ் பண்ணது பிடிக்கல போல. பிடிக்கலைன்னா பிடிக்கலைனு மூஞ்சிக்கு நேரா சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு செத்துருவியானு அசிங்கமா கேக்குறான். எல்லாத்துலயும் அவனை பிளாக் பண்ணிட்டேன் மச்சான்’’ - நடந்ததை தீபக்கிடம் சொல்லிப் புலம்பினாள். `` ஹேய் விட்றீ, பசங்க அப்டிதான் ஈஸியா பொசஸ்டு ஆவங்க… கண்டுக்காத. எனக்குத் தூக்கம் வருதுடி...’’ - சொல்லிவிட்டுத் தூங்கப் போனான் தீபக். ``மச்சான்… இங்க பாரேன்.... நானும் ரோஹித்தும் லிப் கிஸ் அடிக்கிறதை சில்லவ்ட் போட்டோ எடுத்துக் கொடுடா’’ என்று பலமுறை தீபக்கை இன்டிமசி போட்டோகிராஃபர் ஆக்கியிருக்கிறாள் காவ்யா. தீபக் தன்னை ரோஹித்துடன் எடுத்த கப்பிள் ஃபோட்டோஸ், ரீல்ஸ் என எல்லாவற்றையுமே தன் சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறாள். தீபக், தங்கள் காதலை நன்கறிந்த பெஸ்டி என்பதாலும், ரோஹித்துக்கும் தீபக்கை நன்கு தெரியும் என்பதாலும், காவ்யாவுக்கு தீபக்குடன் ரீல்ஸ் செய்தது தவறாகவே தெரியவில்லை. ஆனால், ரோஹித் ஏன் இப்படி பொசஸிவ் ஆகிறான் என்பதே அவள் கவலையாக இருந்தது. மறுநாள் எல்லா அக்கவுன்ட்டில் இருந்தும் ரோஹித்தை பிளாக்கில் இருந்து ரிமூவ் செய்தாள். ஆனாலும், அவனிடமிருந்து ஒரு ஸாரி கூட இல்லை. கையில் பாப்கார்னோடு டிவியின் முன் அமர்ந்தாள். ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் லைவ். விளையாட்டு வீரர் தோனி கையில் பேட்டை எடுத்துக் கொண்டு களத்துக்கு வருகிறார். சேப்பாக்கம் மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்கிறது. மஞ்சள் டிஷர்ட் அணிந்து விசிலடித்தபடி உற்சாகமாய் நடனமாடிக் கொண்டிருந்த ரோஹித்தை, ஒரு ஷாட்டில் லைவ்வில் பார்த்ததும் காவ்யாவின் கையில் இருந்த பாப்கார்ன் அதிர்ச்சியில் தரையில் விழுந்தது. ரோஹித்துடன் அவன் கேர்ள் பெஸ்டி ஜான்ஸி அவனை உரசிக்கொண்டே நடனமாடிக் கொண்டிருந்தாள். இது காவ்யாவின் தருணம். ரோஹித், அவன் கேர்ள் பெஸ்டியுடன் க்ளோஸாக இருந்தது கூட அவளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் மேட்ச்சுக்குப் போனதை பற்றித்தான் திரும்பத் திரும்ப யோசித்தாள். மேட்ச் முடியும் வரை காத்திருந்து, அவளாகவே ரோஹித்துக்குப் போன் செய்தாள். முதல் இரண்டு முறை அவள் அழைப்பை ரோஹித் கவனிக்கவில்லை. பின், எடுத்துப் பேசினான். தோனி ``இப்ப என்ன… நான் என் பெஸ்டி கூட கிரவுண்ட்ல டான்ஸ் பண்ணதை லைவ்ல பார்த்திருப்பே… நீ மட்டும் யோக்கியமானு கேட்கப் போறே? அதானே?’’ - அவளை பேச விடாமல் இவனாகவே பேசி முடித்தான். ``நான் தல தோனியோட டை ஹார்டு ஃபேன்னு உனக்குத் தெரியும். ஒரு வார்த்தை எனக்கும் சொல்லியிருக்கலாம்ல…’’ - சொல்லிவிட்டுப் போனை துண்டித்தாள். இருவருக்குமான சண்டை நாள் கணக்கிலிருந்து வாரக்கணக்கானது. ``என்னடி உங்க சண்டை இன்னும் முடியலையா... நான் வேணும்னா ரோஹித்கிட்ட பேசவா?’’ என்றான் தீபக். வழக்கமாக வாயாடிக் கொண்டே இருக்கும் காவ்யா, அமைதியாக எழுந்து சென்றது தீபக்குக்கு என்னவோ போலிருந்தது. அன்று மாலை ரோஹித்தை அவன் கஸின் பிரதருடன் ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்தான் தீபக். ``புரோ… அந்த ரீல்தான் பிராப்ளம்னா அதை இப்பவே டெலீட் பண்ணச் சொல்லிடுறேன். ஆனா, காவ்யாகிட்ட இப்டி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணாதீங்க புரோ… இதுக்கு முன்னாடி அவ இப்டி இருந்து பாத்ததே இல்ல.’’ - தீபக் பேசுவதற்கு பதில் இல்லாமல் அமைதியாக இருந்தான் ரோஹித். ரோஹித்தின் கஸின் பிரதர், அவர் காலத்துப் புராணக் காதலைப் பேச ஆரம்பித்தார். ``முன்னாடியெல்லாம் லவ்வர்ஸ் ரெண்டு பேரு இருந்தா, பொண்ணு தன் கூட இருக்குற ஃப்ரெண்டை புரோனு சொல்வாங்க. பதிலுக்கு அந்தப் பையனும், பொண்ணோட லவ்வரை மச்சான்னு சொல்வான். ஆனா இப்ப… பொண்ணுங்க தன் ஃப்ரெண்டை பாய் பெஸ்டினு சொல்றாங்க… மச்சான்னு சொல்றாங்க. அந்த பாய் பெஸ்டி என்னடான்னா பொண்ணோட லவ்வரை புரோனு சொல்லிக் கூப்ட்டு கதையை முடிக்கிறான்… எங்க காலத்துல எல்லாம்...’’ தீபக் அவரை ஷார்ப்பாக கட் பண்ணிவிட்டு ரோஹித்திடம் கேட்டான். ``புரோ… காவ்யா கூட பேசுவீங்களா, மாட்டிங்களா?’’ - கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு எழுந்தான். . ``அவளுக்காக கிரிக்கெட் மேட்ச்சுக்கு டிக்கெட்லாம் வாங்கி வச்சுட்டு சர்ப்ரைஸா கூட்டிட்டுப் போலாம்னு பாத்தேன். ஆனா, அவதான் நான் என்ன சொல்றேன்னு கூட கேட்காம பிளாக் பண்ணிட்டா. அவ பண்ணது ரைட்டா புரோ..?’’ ரோஹித் தீபக்கிடம் கேட்டான். ``அப்ப நான் காவ்யா ஹிப்ல கை வச்சு டான்ஸ் ஆடுனதை பத்தி நீங்க எதுவுமே அவகிட்ட கேக்கலையா புரோ?’’ - தீபக் கேட்டதும் ரோஹித் அமைதியாக இருந்தான். மீண்டும் தீபக்கே தொடர்ந்தான். `` உங்களுக்கு முன்னாடியே காவ்யா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அப்றம் நல்லா தெரிஞ்சிக்கோங்க… நாங்க ரெண்டு பேருமே டான்ஸ் கிளாஸ் போயிட்டு இருக்கோம். அந்த ரீல்ஸை நாங்க ஏதோ ஒரு ப்ரைவேட் லோகேஷன்ல வீடியோ பண்ணல… க்ளாஸ்ல எல்லார் முன்னாடியும் எடுத்த ரீல்ஸை தான் ஷேர் பண்ணோம். தப்பு பண்றவங்க ஓபனா பண்ண மாட்டாங்க. நான் அவளுக்கு ஃப்ரெண்ட் மட்டுமில்ல... அதுக்கும் மேல நான் அவ பெஸ்டி. இப்பவும் சொல்றேன்… உங்க பிராப்ளம் எதுனாலும் பேசி சால்வ் பண்ணுங்க… எல்லாமே என்னாலதான்னு நினைக்கும்போது, எந்தத் தப்பும் பண்ணலைன்னாலும் எனக்கே கில்டியா இருக்கு புரோ...’’ - மொத்தமாக தீபக் பேசி முடிக்கவும், ரோஹித் ஆரம்பித்தான். Friends `முட்டி தேய்ஞ்ச காலத்துல இதெல்லாம் தேவையா..?!’ - பதில் இதுதான் | ரொமான்ஸ் ரகசியங்கள்-5 ``எனக்கு உங்க மேல சந்தேகமெல்லாம் இல்ல புரோ… எனக்கும்தான் கேர்ள் பெஸ்டிஸ் இருக்காங்க. அந்த ரீல்ஸ்க்கு வந்த சோஷியல் மீடியா கமென்ட்ஸ்லாம் கொஞ்சம் வல்கரா இருந்துச்சு. நீங்க அவ பெஸ்டிதானே..? அதையெல்லாம் படிச்சும் உங்களால ஈஸியா மூவ் ஆக முடியுதா புரோ?’’- தயங்கித் தயங்கிப் பேசினான் ரோஹித். நூலிழை தப்பினாலும் சந்தேகக் கண்ணோடு பேசுவதாக நினைத்துவிட வாய்ப்பிருக்கும் சூழல் என்பதால் அவனால் அதிகம் பேச முடியவில்லை. ரோஹித்தின் கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தெரிந்தது. ``எனக்கு புரியுது புரோ… நான் இதை சால்வ் பண்றேன்’’ - தீபக் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு ரோஹித்தின் அண்ணனைப் பார்த்தான். ``கஸின் புரோ… ஏதோ 2கே கிட்ஸ்னாலே ட்ரூ லவ் இல்ல, நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இல்ல, பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டினு கல்ச்சர் தெரியாம இருக்காங்கன்னு நீங்களா பூமர் மாதிரி எதையாவது பேசிட்டு இருக்காதீங்க. எத்தனை ஜெனெரேஷன் மாறினாலும் லைஃப்ஸ்டைல்தான் மாறுமே தவிர எமோஷன்ஸ் எப்பவும் ஒண்ணுதான். நாங்க நாங்களாவே வளர்ந்துட்டுப் போறோம்… இப்ப உங்களுக்கு என்ன பிரச்னை?’’- வந்ததுக்கு சும்மா போகக் கூடாது என்பதால் ரோஹித்தின் அண்ணனிடம் தன் மனதில் நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான் தீபக். ``1000 டைம்ஸ் ஸாரி. 2000 டைம்ஸ் ஸாரி இன்ஃபினிட்டி டைம்ஸ் ஸாரி…’’ - ரோஹித்திடமிருந்து மெசேஜ் நோட்டிஃபிகேஷன்ஸ் வந்துகொண்டே இருந்தன. காவ்யாவின் கண்களிலிருந்து அவளை அறியாமல் கண்ணீர். ``செத்துருடா இடியட்’’ பதிலுக்கு ரிப்ளை செய்தாள். ``ஆல்ரெடி ஐ’ம் டெட்’’ என பதில் அனுப்பினான். ``இனிமே தீபக்கை இப்படி நினைப்பியா?’’ ``லூஸூ… நான் தப்பா எதுவும் நினைக்கலடி...’’ இருவரும் மீண்டும் சாட்டிங்கில் பேச ஆரம்பித்தார்கள். தீபக் , ரோஹித்திடம் பேசிவிட்டு வந்ததை காவ்யாவிடம் நேரில் வந்து பகிர்ந்துகொண்டான். இருவரும் சேர்ந்து ஆன்லைனில் சிக்கன் தந்தூரியை ஆர்டர் செய்துவிட்டு, பின் ரோஹித்தை வீட்டுக்கு அழைத்தார்கள். தீபக், காவ்யாவின் நட்பை ரோஷித் உண்மையில் மனதிலிருந்து தவறாக நினைக்கவில்லை. ஆனால், காவ்யாவும் தீபக்கும் அப்படித்தான் ஆரம்பத்தில் அவனைப் புரிந்துகொண்டார்கள். அதேபோல், ரோஹித் தன் கேர்ள் பெஸ்டியுடன் நடனமாடியதற்காக காவ்யாவும் சந்தேகப்படவில்லை. ஆனால், ரோஹித்தும் அவளை தவறாகவே நினைத்துக்கொண்டான். ரோஹித் - காவ்யா இருவரின் காதல் உண்மையாகவும் ஆழமாகவும் இருப்பதைப் போலவே, காவ்யா - தீபக்கின் நட்பும் களங்கமில்லாமல் தான் இருக்கிறது. காலத்திற்கேற்ப இளைய தலைமுறையின் வாழ்க்கை முறை மாறிக்கொண்டே வருவதன் நன்மை, தீமைகளை முந்தைய தலைமுறையினர் ஒருவித அக்கறையோடு அணுகி வருவதையோ, புரிதல் இல்லாமல் புலம்புவதையோ இந்த இடத்தில் மறுக்கவும் முடியாது. அதன் வெளிப்பாடுதான், காவ்யாவுக்கு வந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கமென்ட்கள். Best Friend Forever ஃப்ரெண்ட்ஷிப், ரிலேஷன்ஷிப் குறித்த தெளிவு மனதில் இருந்தாலும், மேலைநாட்டு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வரும் இளைய தலைமுறை, தங்கள் காதலை அணுகுகிற விதம் ஜெட் விமானத்தைவிட வேகமாக இருக்கிறது. இருபாலினர் பயிலும் கல்வி நிலையங்களில் பயில்வதே முன்பெல்லாம் சவாலாக இருந்த காலகட்டத்திலிருந்து இப்போது ஃப்ரெண்ட், பாய் ஃப்ரெண்ட், பாய் பெஸ்ட்டி என்று பொதுவெளியில் தைரியமாகச் சொல்லும் சூழலும் இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருப்பது வரவேற்கக் கூடியதே. அதே நேரத்தில் `அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு’ என்பது போல், கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால், காவ்யா - ரோஹித் எப்படி ஒரு தருணம் தங்கள் உணர்வுகளை தவறான முறையில் வெளிப்படுத்தினார்களோ, அதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதோ, அப்படி பல இடங்களில் புரிதலின்மையால் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம். இந்த இடத்தில், நல்ல நண்பனாக தீபக் தக்க சமயத்தில் தன் ஈகோவை விட்டுவிட்டு ரோஹித்திடமும் காவ்யாவிடமும் பேசி நடந்ததைப் புரிய வைத்தான். இல்லாவிட்டால், இந்நேரம் இருவருமே ப்ரேக் அப் என்று சொல்லிவிட்டு அவரவர் வழிகளில் கடந்திருக்கலாம். ஒரு நல்ல காதலுக்கு அழகு என்பது , கோபத்தில் பிளாக் செய்துவிட்டு பேசாமல் இருப்பதைவிட, பிளாக் எதுவும் செய்யாமல் மணிக்கணக்கில் சண்டை போட்டாலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதே என்பதை ரோஹித் - காவ்யா இருவருமே புரிந்து கொண்டார்கள். ``புரோ… இப்ப நான் காவ்யாவோட கண்ணை மூடிட்டு மெதுவா திறந்துவிடுவேன். நீங்க அதை வீடியோ எடுக்குறீங்களா? சர்ப்ரைஸா ஒரு ரீல்ஸ் போடுவோம்’’ - ரோஹித் தன் செல்போனை தீபக்கிடம் கொடுத்துவிட்டு காவ்யாவின் கண்களை பொத்தினான். நடப்பது புரியாமல் ரோஹித்தின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காவ்யா. மெதுவாக ரோஹித் அவள் கண்களை மூடியிருந்த தன் கைகளை விலக்கவும், தனக்கு முன்னால் இருந்த டீப்பாயின் மீதிருந்த அந்த கிஃ ப்ட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் காவ்யா. ``தல தோனி ஆடுற மேட்ச்சுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. இப்ப ஹாப்பியா?’’ - காவ்யாவின் கையில் கிரிக்கெட் மேட்ச்சுக்கான டிக்கெட்டை கொடுத்தான் ரோஹித். அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் காவ்யா. தீபக் இந்த அழகான தருணங்களைப் படம் பிடித்தவாறே புன்னகை பூத்திருந்தான். கடைசி ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த வீரர், பேட்டை தன் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது போல், ரோஹித் காவ்யாவை தூக்கினான். தன்னுடைய டீம் வென்ற மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யும் ரசிகனைப் போல் தீபக் அப்போது விசிலடித்துத் துள்ளிக் குதித்தான். - ரகசியங்கள் தொடரும்... - அர்ச்சனா

விகடன் 13 Apr 2024 1:29 pm

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 13 Apr 2024 2:12 am

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 13 Apr 2024 1:36 am

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 13 Apr 2024 12:35 am

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 12 Apr 2024 11:35 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 10:36 pm

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 12 Apr 2024 10:36 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 10:10 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 9:35 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 9:35 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 8:37 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 8:37 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 7:35 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 7:35 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 6:35 pm

Swiggy: செல்லபிராணிகளைப் பராமரிக்க ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு... ஸ்விக்கியின் புது திட்டம்!

பலரும் தங்களின் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக வளர்ப்பதுண்டு. தான் வேலை செய்யும் அலுவலகத்தில், `செல்லப் பிராணிக்கு உடம்பு சரியில்லை, அதைக் கால்நடை மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும்' என்று சொன்னால் எல்லாம் விடுமுறை கிடைக்காது.  ஆனால், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தங்களின்  ஊழியர்கள் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்கும், தத்தெடுப்பதற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் 'Paw-ternity' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  dog பெரும் மோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு மரண தண்டனை... நீதிமன்றம் தீர்ப்பு! இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் புதிய செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வரவேற்க, பராமரிக்க, அவற்றின் இறப்பிலிருந்து மீள எனக்  கூடுதலாக விடுமுறை அளித்துள்ளது. அதுவும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. ஏப்ரல் 11 அன்று தேசிய செல்லப்பிராணிகள் தினத்தில் இந்தத் திட்டத்தை ஸ்விக்கி அறிமுகப்படுத்தியது. இது குறித்து ஸ்விக்கியின் தலைமை மனித வள அதிகாரி கிரிஷ் மேனன் கூறுகையில், ``2020-ல் பாலின-நடுநிலை பெற்றோர் திட்டத்தை (gender-neutral parental policy) அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் குழந்தைகளைப் பராமரிக்கும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. அதோடு, குழந்தை தத்தெடுப்பு, வாடகைத் தாய் முறை, கருச்சிதைவு மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை போன்றவற்றிற்கும் விடுப்பு வழங்கப்பட்டது.  இப்போது  செல்லபிராணிகளின் பெற்றோரையும் அதில் சேர்த்திருக்கிறோம். அதனால்தான், இன்று முதல் அனைத்து முழுநேர ஸ்விக்கி ஊழியர்களுக்கும் `Paw-ternity’ திட்டத்தை அறிவிக்கிறோம். ஊழியர்கள் தங்கள் புதிய செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வரவேற்க, கூடுதலாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவார்கள். ஊழியர்களின் வருடாந்தர விடுப்போடு சேர்த்து இந்த விடுப்பு கூடுதலாக வழங்கப்படும். செல்லப்பிராணி பெற்றோர்கள் தங்கள் புதிய குடும்ப உறுப்பினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவதற்காக செட்டில்-இன் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்வு செய்யலாம்.  cat கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY மேலும், செல்லப்பிராணிகளுக்கான வழக்கமான தடுப்பூசி, நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த செல்லப்பிராணியைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என எதுவாக இருந்தாலும், ஊழியர்கள் செல்லப்பிராணிகளோடு தேவையான நேரத்தை ஒதுக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். செல்லப்பிராணிகளின் பெற்றோர்கள் அவற்றின் இறப்பின் துக்கத்திலிருந்து மீள்வதற்கும் தேவையான விடுப்பை வழங்குகிறது.  ஸ்விக்கியின் இந்தத் திட்டம் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.  

விகடன் 12 Apr 2024 1:59 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 9:31 pm