கோலப் போட்டி... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?
கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி
கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!
https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி
`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்
நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.
`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்
நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.
நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க
கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி
`திருந்துவார் என நினைத்தேன்’ ; ஹோட்டலில் மீண்டும் வேறொருவருடன் மனைவி - GPS மூலம் சிக்க வைத்த கணவன்
பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் திருமணமாகி 15ஆண்டுகள் கழித்த பிறகு பெண் ஒருவர் மாற்றான் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். ரவி குலாதி என்ற அந்த நபருக்கு ஹாமினி என்பவருடன் 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனர். 2018ம் ஆண்டு ரவியின் மனைவி வேறு ஒரு நபருடன் ஹோட்டலில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்தார். அந்நேரம் ரவி தனது மனைவியின் பெற்றோரை வரவழைத்து இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் மனைவியின் பெற்றோரும், மனைவியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதனால் ரவி தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மனைவி திருந்துவிடுவார் என்று நினைத்தார். ஆனாலும் மனைவியின் மீது ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் ரவி தனது மனைவி அடிக்கடி பயன்படுத்தும் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் மனைவி மீண்டும் தனது ஸ்கூட்டரில் பிற்பகலில் புறப்பட்டு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. எனவே ரவி தொடர்ந்து தனது மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் மனைவி போனை எடுத்து பேசவில்லை. 15 முதல் 20 முறை போன் செய்தபிறகும் போனை எடுக்காத காரணத்தால் வேறு வழியில்லாமல் ஸ்கூட்டரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் வண்டி எங்கு இருக்கிறது என்று பார்த்தார். அந்த ஜி.பி.எஸ்.கருவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றபோது அது ஒரு ஹோட்டலுக்குள் சென்றது. அங்கு சென்று பார்த்தபோது ரவியின் மனைவி வேறு ஒரு ஆடவருடன் இருந்ததை கையும் களவுமாக ரவி கண்டுபிடித்தார். இது குறித்து ரவி கூறுகையில், ''நான் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். 2018ம் ஆண்டு ஹோட்டலில் வேறு ஒருவருடன் எனது மனைவியை பார்த்தேன். இதனால் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து மன்னித்து ஏற்றுக்கொண்டேன். தவறு நடப்பது புதிதல்ல என்று நினைத்துவிட்டேன். ஆனால் இன்று அவர் பிற்பகல் 3 மணிக்கு வெளியில் கிளம்பிச்சென்றார். 15 முதல் 20 முறை போன் பண்ணியும் எடுத்து பேசவில்லை. எனவே ஸ்கூட்டியில் இருந்த ஜி.பி.எஸ் சாதனத்தை சோதித்து பார்த்தபோது ஸ்கூட்டி ஹோட்டல் ஒன்றில் நிற்பது தெரிய வந்தது'' என்றார். ரவியின் தந்தை பர்வேஷ் குலாதி இது குறித்து, ''இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஹோட்டலில் எனது மருமகள் வேறு ஒருவருடன் இருந்த போது பிடிபட்டார். அப்போது இரு குடும்பமும் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டோம். பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அதே போன்று நடந்திருக்கிறது. இப்போது ரவியுடன் வாழ முடியாது என்று மருமகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். இப்போது ஹோட்டலில் அவருடன் பிடிபட்ட நபர் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருபவர். அவர் எனது மருமகளின் சகோதரன் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். இப்போது எனது மருமகளின் பெற்றோர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வர மறுக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Parenting: உங்க குழந்தை `I hate you'னு சொன்னா என்ன அர்த்தம்?
இந்த உலகில் அதிகம் கவனிக்கப்படாத வார்த்தைகள், குழந்தைகளின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். காரணம், எவ்வளவு சீரியஸாக குழந்தை நம்மிடம் ஒரு விஷயத்தைப் பேசவந்தாலும் அதற்குக் காதுகொடுக்காமல் சென்றுவிடுபவர்கள் பலர். அப்படியே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும், அதன் வீரியம் உணராமல், `குழந்தை ஏதோ சீரியல், சினிமாவைப் பாத்துட்டு பேசுதுபோல', 'ஏதோ தெரியாம இப்படிப் பேசியிருக்கும்' என்றே நம்மில் பலரும் அவர்களை நொடிகளில் கடந்துவிடுகிறோம். அவ்வளவு பரபரப்பு நமக்கு! Parenting என்றாலும், சில வார்த்தைகளைக் குழந்தைகள் சொல்லக்கேட்கும்போது மட்டும், `இதை இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா' என யோசிப்போம். அந்த அளவுக்கு வீரியமுள்ள வார்த்தைகளாக அவை இருக்கும். அப்படியானவைதான், `ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைகள். `ஹேட்', அதாவது வெறுப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அவர்கள் அதைப் பேசுகிறார்கள் எனும்போது, கவனம் செலுத்தவேண்டிய விஷயம் அது. குழந்தை 'ஐ ஹேட் யூ' எனச் சொன்னால், அதன் அர்த்தம் என்ன? குழந்தைக்கு நம்மீது ஏற்படும் வெறுப்பை எப்படி அணுகலாம்? சில யோசனைகள் சொல்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. என்ன அர்த்தம்? * வயதுக்கேற்றபடி இதன் பொருள் மாறும். அந்த வகையில், பேச ஆரம்பித்த முதல் சில வருடங்களிலுள்ள குழந்தை எனில், குழந்தைக்கு விருப்பமான ஏதோவொரு பொருளை நீங்கள் கொடுக்கவில்லை என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அது, குழந்தை விளையாடும் சிறுபொருளாகக்கூட இருக்கலாம். நீங்கள் தடாலடியாக அதைப் பறித்துக்கொண்டீர்கள் என்ற கோபத்தைத்தான், குழந்தை அப்படிக் குறிப்பிடும். இந்த வயதிலுள்ள குழந்தைகளுக்கு, உங்கள் வார்த்தையின் பின்னுள்ள நியாயத்தை தெளிவாகப் புரியவைக்க முடியாது என்றாலும், `ஐ ஹேட் யூ' என்பது தவறான வார்த்தைப் பிரயோகம் எனச் சொல்லிக்கொடுக்க முடியும். ஆகவே, பெற்றோர் தரப்பில் அதை முயலலாம். Parenting * சற்றே வளர்ந்த குழந்தை என்றால், அவர்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கு விஷயத்தை நீங்கள் செய்யவிடவில்லை என்பதால் அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம். அந்தப் பொழுதுபோக்கு, குழந்தையின் நேரத்தை வீணடிக்கிறது என்பதால்கூட நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். பிரச்னை என்னவெனில், உங்கள் நிராகரிப்புக்குப் பின்னாலுள்ள நியாயத்தைக் குழந்தைக்கு நீங்கள் புரியவைக்கவில்லை. * டீன் ஏஜ் குழந்தை என்றால், அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்கள் செயல்பட நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், இப்படிப் பேசுவார்கள். அதற்காக, அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும் என்றில்லை. தவறு இருப்பின், அதை முறையாக சுட்டிக்காட்டலாம். இருப்பினும், விஷயத்தைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் புரிந்துகொள்வார்கள். Parenting * பெரும்பாலான நேரங்களில், குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும் `ஐ ஹேட் யூ' என்பது, `ஐ மிஸ் யூ', `எனக்கு வேண்டியதை நீ கொடுக்கவில்லை', `எனக்குப் பிடிச்ச மாதிரி செயல்பட நீ அனுமதிக்கவில்லை' போன்ற வருத்தத்தின், கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். ஏதோவோர் இடத்தில், நீங்கள் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இல்லை, அல்லது முன்பிருந்ததுபோல இப்போது இல்லை என்பதையே இது குறிக்கும். எனவே இனி வரும் நாள்களில், குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் குவாலிட்டி நேரத்தில், அவர்களுடனான நெருக்கமான உறவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குழந்தையை அணுகும் முறை * கீழ்க்காணும் கேள்விகளை குழந்தையிடம் கேட்டு, விடைக்கேற்றபடி உங்களைச் சரிசெய்துகொள்ளுங்கள். நான் செய்த எந்த விஷயம் உன்னைக் காயப்படுத்தியது? உனக்கு இப்போது கோபமாக உள்ளதா, வருத்தமாக உள்ளதா? நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? நீ ஸ்ட்ராங்கான குழந்தை என்ற உண்மையை, இப்போது நீ உணர்கிறாயா? Parenting * புரிந்துகொள்ளும் வயதில் இருக்கும் குழந்தை என்றால், வெறுப்பு என்ற வார்த்தையின் வீரியத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த வார்த்தையை உங்களை நோக்கி அவர்கள் சொன்னதால், உங்களுக்கு மனத்தளவில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் கூறுங்கள். * குழந்தையை, அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் செலவழிக்க அனுமதியுங்கள். ஒரு விடுமுறை நாளில், ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பொறுமையாக அமர்ந்து பேசுங்கள். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! மீண்டும் குழந்தையுடன் பேசும்போது, கீழ்க்காணும் விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அவை... பூங்கொடி பாலா வார்த்தைகளில் கவனமாக இருப்பது ஏன் அவசியம்? உங்களிடம் ஹேட் யூ சொல்லும் குழந்தையிடம், கீழ்க்காணும் விஷயங்களை அன்பாகச் சொல்லுங்கள். * 'எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம். எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீதான். உன்னுடைய செய்கைகள், உணர்வுகளெல்லாம் எங்களுக்குப் புரிகின்றன. நாங்கள் எப்போதும் உனக்காக, உன்னோடு உடனிருப்போம்! வீ லவ் யூ லாட்!' Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? * 'ஹேட் யூ' வார்த்தை உபயோகம், தவறென சொல்லிக்கொடுங்கள்! * பெற்றோர்கள் சிலர், `ஐ ஹேட் யூ' என்று குழந்தைகள் சொன்னால் ரசிக்கிறார்கள். தன் வயதுக்கு மீறிய அந்த வார்த்தைகளைக் குழந்தை சொன்னவுடன், 'குட்டி எப்படியெல்லாம் பேசுது பாரு' என்று சிரித்து மகிழ்கிறார்கள். இப்படிச் செய்வதை பெற்றோர் தவிர்த்தால் மட்டுமே, குழந்தைகள் அதைச் சொல்வதை நிறுத்துவார்கள். எனவே பெற்றோரே... அடுத்த முறை நீங்கள் கவனமாக இருங்கள்! சொல்லிக்கொடுங்கள் பெற்றோரே! கோபத்தை மற்றவர்களின் மீது வெறுப்புக்கொள்ளாமல் எப்படி வெளிப்படுத்தலாம் எனக் பெற்றோர் அல்லாத வேறொரு நபரைப் பார்த்து 'ஐ ஹேட் ஹிம்/ஹெர்' எனக் கூறினால், பெற்றோர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரால் குழந்தைக்கு ஏதாவது அசௌகர்யம் ஏற்பட்டிருந்தால்தான் குழந்தை அப்படிக் குறிப்பிடும். ஆகவே, 'ஏன்டா அவரைப் பார்த்து அப்படிச் சொன்ன? அவர் என்ன பண்ணினார்?' என்று குழந்தையிடம் கவனமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் பூங்கொடி பாலா.
மின்னல் தாக்கி செல்போன் வெடிக்குமா?
சருமப் பராமரிப்பு என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியதா? - கே.ராஜலட்சுமி, புதுச்சேரி பதில் சொல்கிறார், ஆரணியைச் சேர்ந்த சரும மருத்துவர் ஜெகன் ராமன். சருமம் என்பது நாம் வெளியில் பார்க்கும் தோல் மட்டும் கிடையாது. அது நம் உடல் வெப்பத்தை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வெயிலில் சென்று வந்தால் சருமம் நிறம் மாறியிருப்பதை கவனித்திருப்போம், அது சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை நம் உடலுக்குள் இறக்காமல் இருப்பதற்காக, மெலனோ சைட்ஸ் எனப்படும் நிறமிகளை சருமத்தின் மேற் பகுதிக்குக் கொண்டுவரும் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையே. இப்படி சருமத்துக்கு நிறைய பணிகள் உண்டு. எனவே, சருமப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். தினமும் சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் தேவையற்றது. உதாரணத்துக்கு, சிலர், பாதுகாப்பு கருதி, குழந்தைகளை வெளியே விடாமலேயே வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். அதற்கேற்றவாறு தான் சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் இரண்டும் மிக முக்கியம். வெயிலில் செல்லும்போது தலையில் தொப்பி அணிவது, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகள் அணிவது போன்றவற்றால் வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்படை வதைத் தடுக்கலாம். சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக சருமத்தை அடிக்கடி கிளென்ஸ் செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். எனவே, சருமப் பராமரிப்பு என்பது எப்போதும் பின்பற்றப்பட வேண்டியதுதான். மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்து ஓர் இளைஞர் உயிரிழந்ததாக செய்தி படித்தேன். இது எப்படி சாத்தியம... ? மழை பெய்யும்போது செல்போன் பேசக்கூடாதா? - மல்லிகா அன்பழகன், சென்னை-78 பதில் சொல்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த `அஃறிணை இன்னோவேஷன்' நிறுவனர் முனைவர் விக்னேஷ் கிருஷ்ணன். மின்சாதன பொருளாகவே இருந்தாலும் செல்போனுக்கு மின்னலை ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசும்போது, அது வெடிக்கும் என்பதும், அதனால் மனிதர்கள் இறப்பார்கள் என்பதும் தற்போது வரை நிரூபிக்கப்படாதவை. எப்போதும் மின்னல் வரும்போது அது பூமியை நோக்கி இறங்கும். அப்போது வரும் வேகத்தில் மின்கடத்தும் பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதன்வழியே இறங்கிவிடும். அதனால்தான் பெரிய பெரிய கட்டடங்களில் கூர்மையான முனை போன்ற பகுதியும், மின்னலைத் தாங்கும் அமைப்பும் கொண்டும் கட்டுகின்றனர். மொட்டைமாடியில் நாம் நிற்கும்போது மொட்டைமாடியைவிட அதிக உயரத்தில் நாம் இருப்போம். நம்முடைய உடலும் மின்னலைக் கடத்தும் தன்மையுடையது. அதனால் மின்னல் நம் உடல் வழியே பூமிக்குள் இறங்கும். அதனால்தான் மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கின்றனர். மனித உடலில் பாயும் மின்னல், அதிக வோல்டேஜ் உடன் இறங்கும். அப்போது ஏற்கெனவே கையில் இருக்கும் செல்போன் போன்ற மின்சாதன பொருளில், அந்த அதிக வோல்டேஜால் வெடிக்கும். இதனால்தான் மழை பெய்யும்போது உயரமான இடங்களில் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. இடி என்பது வெறும் சத்தம் தான், மின்னல்தான் பூமியில் இறங்குவது. அதனால் இதனை `மின்னல்தாங்கி' என்றே கூற வேண்டும். அப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். பேச்சு வழக்கில் அது `இடிதாங்கி' என மாறிவிட்டது.
சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் DINK வாழ்க்கை முறை ஏன் இன்று தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளது? இது ஒரு தற்காலிகப் பொருளாதார அதிர்ச்சியின் விளைவா, அல்லது பெண்கள் தேடிய நிரந்தர விடுதலைக்கான வழியா? இந்தக் கட்டுரை, தமிழர் வாழ்வியல் முதல் தற்கால உலகப் போக்கு வரை, DINK வாழ்க்கை முறையின் சமூக, பொருளாதாரப் பரிமாணங்கள் குறித்து விரிவாக அலசுகிறது. இந்திய சமூக அமைப்பில், DINK (DUAL INCOME,NO KIDS) வாழ்க்கை முறை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இத்தகைய தளங்களில், இளம் தம்பதிகளின் பிரபலமான முகங்கள் பலர் உள்ளனர். DINK வாழ்க்கை முறை என்றால் என்ன? DINK என்பது Dual Income, No Kids என்பதன் சுருக்கமாகும். தமிழில் இதை இரட்டை வருமானம், குழந்தை இல்லை என்று குறிப்பிடலாம். இது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் தம்பதிகளைக் குறிக்கிறது. Dual Income (இரட்டை வருமானம்): கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை செய்து வருமானம் ஈட்டுவார்கள். No Kids (குழந்தை வேண்டாம்): அவர்கள் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ்கிறார்கள். சமீபக் காலமாக DINK வாழ்க்கை முறையை பின்பற்றும் தம்பதிகள், தங்கள் துணையின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் DINK vlogs (டிங்க் காணொளிகள்) மூலம் அதிகப் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளனர். அவற்றில் அவர்கள் தங்கள் ஆடம்பரமான மற்றும் சுமை இல்லாத வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வாழ்க்கை முறையின் புகழ்ச்சி, தெரிந்தோ தெரியாமலோ, பல தம்பதிகளை DINK என்ற கருத்தியலை நோக்கி ஈர்க்கவும், உத்வேகப்படுத்தவும் செய்கிறது. இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக இந்தக் தம்பதியினர் பொருளாதார மற்றும் சமூக காரணங்களைக் கூறி பல வாதங்களை முன்வைக்கின்றனர். பொருளாதாரக் காரணம் முக்கியமாக, இரட்டை வருமானம் ஈட்டி, நிதி நெருக்கடிகள் ஏதுமின்றி, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை அனுபவித்து தங்கள் தொழிலைத் தொடர்வதுதான். இந்த வாழ்க்கை முறையை ஆதரிப்பவர்களின் கூற்றுப்படி, குழந்தை உள்ள தம்பதியினரை விட இவர்களுக்கு செலவழிக்கக்கூடிய வருமானம் (disposable income) அதிகமாக உள்ளது, இது அவர்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்கவும், சுதந்திரத்துடன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழவும் கூடுதல் நிதி பலத்தை (financial leverage) அளிக்கிறது. சமூக அமைப்பில், DINK தம்பதியினரின் கூற்றுப்படி, அவர்களுக்குக் குழந்தைகளை வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் சுமை இல்லை. எனவே, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பொறுப்புகள் என்ற சுமை எதுவும் இல்லாமல், தங்கள் வேலைகள், பொழுதுபோக்குகள் மற்றும் பயணங்களை தொடர ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. இது பெற்றோர் என்ற மன அழுத்தம் மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டதாக உணர வைக்கிறது. குழந்தைகள் இல்லாமல், இந்தத் தம்பதியினர் தங்கள் சொந்த தனிப்பட்ட உறவில் அதிக நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்ய முடியும் என்று உணர்கிறார்கள். ஃபைனல்மைல் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நடத்தை அறிவியல் நிபுணருமான பிஜு டொமினிக் கூறுகையில், “பொதுவாக மக்களால் எதிர்காலத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடிவதில்லை. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் மக்களைத் தூண்டும் உந்து சக்தியாக குழந்தைகளே இருக்கிறார்கள் என்று நான் காண்கிறேன்.” இந்தக் கூற்றில் உண்மை உள்ளது, ஏனெனில் இந்தியச் சமூக அமைப்பில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப மரபு தொடர வேண்டும் என்ற வலுவான ஆசை உள்ளது. எனவே, குடும்பத்தில் உள்ள குழந்தைகளே ஒருவரை எதிர்காலத்திற்காக உழைக்கவும் திட்டமிடவும் வைக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மறுக்க முடியாது, ஆனால் அது DINK வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இருக்கக் கூடாது. திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் இளம் தம்பதிகள் DINK வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம், ஆனால் அவர்கள் அத்தகைய வாழ்க்கை முறைக்கு ஒரு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும், மேலும் ஒருமுறை நிலைபெற்ற பிறகு, அவர்கள் குழந்தை பேறு என்னும் சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முதுமையில் வேதனையாகிறது; இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு சமூகத்திலும் மன மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இளமையான மக்கள் தொகை இல்லாத நிலையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நின்றுவிடும் என்றும் கூறுகிறார். DINK என்ற சொல் முதலில் 1980-களில் பிரபலமடைந்தது. ஆனால், youtube, Instagram மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்தத் தளங்களில் இளம் தம்பதிகள் தங்கள் குழந்தைகளற்ற, அனுபவம் நிறைந்த வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். DINK-க்கள் மக்கள் தொகையில் வெறும் 5% மட்டுமே என்றாலும், அவர்களின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன. அவர்களில் 61% பேர் குடும்ப வருமானம் பல கோடிகள் தாண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர், இது வாழ்க்கை முறையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடாக மாறுகிறது. சராசரி அமெரிக்கருடன் ஒப்பிடும்போது DINK-கள் ஒவ்வொரு மாதமும் வெளியே உணவருந்த நான்கு மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றனர். மேலும் விடுமுறைகளுக்காக கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக ஒதுக்குகின்றனர், பயணத்திற்கு முதலீடு செய்கின்றனர். அவர்களின் செலவு முறைகள் ஆடம்பரம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உடனடி முடிவுகள் (spontaneity) ஆகியவற்றை நோக்கியே உள்ளன.குழந்தைப் பேறு வேண்டாம் என்ற அவர்களின் தேர்வால் இந்த குணாதிசயங்கள் சாத்தியமாகின்றன என்று பலர் கூறுகின்றனர். இந்த போக்கு சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. Gen-Zகளில் மில்லினியல் தொண்ணூற்று ஒரு சதவீதம் பேர் DINK க்கு ஆதரவு தருகின்றனர்.குழந்தைகள் இல்லாததால், நானும் எனது துணையும் எங்களுக்காக முதலீடு செய்ய என்னிடம் அதிக செலவிடக்கூடிய வருமானம் உள்ளது, என்றும் கூறுகின்றனர். DINK குடும்பங்கள் 84% பேர் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் குறிப்பிட்டனர். DINK-களில் 76% பேர், குழந்தைகளற்ற தங்கள் நிலையே, உலகை தங்கள் விருப்பப்படி ஆராய அவர்களுக்கு உதவுகிறது என்று கூறுகின்றனர், அதேசமயம் 79% பேர் இது தொழில் மற்றும் வாழ்க்கை முறைக்கான இலக்குகளை அடைய உதவுகிறது என்று நம்புகின்றனர். மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் முதல் சமூக வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் வரை, DINK-கள் பெற்றோரையும் பொது மக்களையும் விட தங்கள் நல்வாழ்வை தொடர்ந்து உயர்வாக மதிப்பிடுகின்றனர். கருத்துக் கணிப்பின்படி, DINK-கள் தங்கள் காதல் உறவு குறித்து 83% - 88% மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். DINK வாழ்க்கை முறை பெரும்பாலும் தற்காலிகமானது என்றாலும் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட Gen Z மற்றும் DINK-களில் 65% பேர், தாங்கள் இறுதியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். மேலும், சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், குடும்பம், வேலை மற்றும் நிதி சுதந்திரம் தொடர்பான கலாச்சார நெறிமுறைகளையும் மறுவடிவமைக்கின்றன. ஹாரிஸ் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லிப்பி ராட்னி கூறுகையில், DINK-களின் எழுச்சி என்பது பெற்றோர் ஆவதை நிராகரிப்பது அல்ல. இது ஒரு தலைமுறையின் பொருளாதார அதிர்ச்சிக்கு (economic trauma) அளித்த பதிலாகும். இதன் மூலம் அவர்கள் நிதிப் பாதுகாப்பை (financial security) மிக உயர்ந்த ஆடம்பரமாக மாற்றுகிறார்கள். என்றார். பெரியார் ``குழந்தை பிறப்பை ஒரு பெண்ணின் அடிமைத்தனத்துக்கான கருவியாகப் பார்க்காமல், பிறப்புக் கட்டுப்பாடு (Family Planning) மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும். மேலும் திட்டமிடல் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதைத் தவிர்த்து, நல்ல திட்டமிடலுடன் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் தரமான கல்விக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களின் ஒரே கடமை குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்ற எண்ணமே அவர்களை அடிமைகளாக மாற்றுகிறது; இது பெண்களின் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் பாதிக்கிறது” என்றார் தந்தை பெரியார். அகம் புறம் என்று பகுக்கப்பட்ட சங்ககாலத் தமிழர் வாழ்வியலிலுக்கு அறம் பொருள் இன்பம் தான் அடிப்படையே தவிர வீடு எனப்படும் வீடுபேறு அல்ல. அதனால்தான் திருவள்ளுவரும் அறம் பொருள் இன்பத்துடன் நிறுத்திக்கொண்டார். இளங்கோவடிகளும் வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. வீடுபேறேதான் வேண்டுமென்றால் சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலையில் சென்று படித்துக்கொள்ளுங்கள் என்று கைகாட்டிவிடுகிறார். (சிலம்பு சமணநூல் என்பதெல்லாம் சிலம்பைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்விட்ட கதை. எது எப்படியிருந்தாலும் சந்நியாசத்தால் பெருத்த சுரண்டலுக்குள்ளாவது பெண்கள்தான். சம்சாரத்திலாவது குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்கும் பங்கிருந்தது. சந்நியாசத்தில், ஆண் முற்றமுழுதாக விடுதலை அடைந்தவன். சந்நியாசிக்குப் பிள்ளைபெற்றவள் தலையில்தான் மொத்தப் பிள்ளைவளர்ப்பின் சுமையும் விழுந்து கழுத்தை முறித்தது. தற்காலத்தில், பெண்களுக்கும் சந்நியாசம் தேவைப்படுகிறது. பொருளாதாரத் தன்னிறைவடைந்த புதிய தலைமுறைப் பெண்கள், சந்நியாச ஆண்களைப் போலவே தாங்களும் எந்தநேரமும் இன்பமாக இருக்க விழைகிறார்கள். பிள்ளைகுட்டி பிக்கல் பிடுங்கலில்லாத வாழ்வின்மீது அவர்களுக்கும் ஆசை வந்திருக்கிறது. இது பிழையே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகாலப் பெண்குலத்தின் கனவு இப்பொழுதுதான் நனவாக ஆரம்பித்திருக்கிறது. அனுபவித்துவாழ வாழ்த்துகள். தேர்தல்
ரஜினி கண்டிப்பா பூமர்இல்லை! - 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம். 90 களில் பிறந்தவர்களின் முதல் மின்னணு விளையாட்டுச் சாதனமான பொம்மை தொலைபேசியில் இப்பாடலை வைத்து விளையாடி இருப்போம். பள்ளிகளில் தனித் திறமைகளை காட்டுவதற்கு இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி கைத்தட்டல்கள் வாங்குவோம். இவ்வாறு இப்படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதில் ஒருநாள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை மூவரும் அடம்பிடித்து சந்திரமுகி படத்தை காண திரையரங்கிற்கு சென்றோம். HBD Rajini | ரஜினி 75 அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து 30 மைல் பயணம் செய்து திரையரங்கை வந்தடைந்தோம். அவரது ரசிகர்களின் விசில் சத்தம் காதுகளை துளைத்துக் கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் திரையில் தோன்றிய போது சத்தம் மேலும் அதிகரித்தது. படம் ஆரம்பித்த உடனே நாங்கள் விரும்பிய தேவுடா..தேவுடா..பாடல் திரையில் தோன்றியது. அந்த பாடலை மனப்பாடம் செய்த என் தங்கை பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது பாடலில் திடீரென நிறுத்தம் ஏற்பட்டது. பாடலை ஆடியோவாக கேட்ட போது நிறுத்தம் ஏதும் இருக்காது. இது தெரியாத என் தங்கை ஹரே ஹரே ஹரே.. என்று சத்தமாக பாடி விட்டாள். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வாறு அந்தத் திரைப்பட அனுபவம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் படங்களாக உள்ளது. எனவே அவரது படங்கள் வசூலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவரை பின் தொடரும் நடிகர்களும் இவர் பாணியில் படங்கள் தயாரிப்பார்கள். ஒரு படத்திற்கு ஐந்து பாடல்கள் மற்றும் ஐந்து சண்டைக் காட்சிகள் வைத்திருப்பார்கள். ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நீதி, நியாத்திற்காக சண்டையிடுவது போல் காட்சியமைத்திருப்பர். அவர் படங்களில் வரும் பெரும்பாலான பாடல்கள் தத்துவப் பாடல்கள் ஆகும். அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் யதார்த்த படங்களாக இருந்தன. அவருடைய கதைத் தேர்வு பார்ப்பவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. அவருடைய பல படங்களில் வழிகாட்டுதல்கள் இல்லாத இளைஞராக நடித்திருப்பார். புவனா ஒரு கேள்விக்குறி வறுமையிலும் நேர்மை தவறாத மனிதராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். அவருடைய ‘ புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் சாலையோர வியாபாரியாக இருந்து வறுமையில் தவறான வாழ்க்கை வாழ்வதை தடுக்கும் விதமாக நடித்திருப்பார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒருவரின் இளமை காலத்தில் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சரியான பாதையில் சென்றால் இறுதியில் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை சொல்லி விட்டுச் சென்றிருப்பார். ரஜினி இன்றைய தலைமுறை இயக்குனர்கள் போதை பொருட்களை எதிர்க்கும் படங்களில் காட்டப்படும் Code Red கருத்தியலுக்கு படிக்காதவன் படத்தில் சாதாரண டாக்ஸியில் எரியும் சிவப்பு வண்ண விளக்கில் பதிவு செய்திருப்பார். முந்தைய தலைமுறையில் பிறந்தவர்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டாததால் பூமர்கள் என்று சிலரால் ஏளனமாக அழைக்கப்படுகின்றனர். எல்லா காலங்களிலும் இளைஞர்களை கவர்ந்து வழிநடத்தும் ரஜினிகாந்த் அவர்கள் என்றும் ‘சூப்பர் ஸ்டார் தான். -சுபி தாஸ்
`ஓய்வுக்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம்' - எந்த நாடு பெஸ்ட்? ஆய்வு சொல்லும் தகவல்
இன்றைய காலகட்டத்தில், ஓய்வூதியம் என்பது பணியிலிருந்து விடைபெற்று ஒதுங்குவது மட்டுமல்ல; அது வாழ்க்கையின் புதிய தொடக்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை கிரீஸ் பிடித்துள்ளது. எப்போதும் டாப் இடங்களில் இருந்த போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்தள்ளி, ஏழாவது இடத்தில் இருந்த கிரீஸ் முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்தக் குறியீடு, ஓய்வுக்காலத்திற்கு பிறகு தனிநபருக்கு கிடைக்கும் மருத்துவம், காலநிலை, பாதுகாப்பு, நிதி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் கிரீஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு அங்குள்ள மலிவான வாழ்வாதாரச் செலவு முக்கிய காரணம். இது அந்த நாட்டில் உள்ள ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் அல்ல, பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறும் ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும். கிரீஸ் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய குடியிருப்புகள், கோல்டன் விசா திட்டம், குறைந்த செலவில் மருத்துவம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்தக் குறியீட்டில் அடுத்தடுத்த இடங்களில் அயர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. US: `H-1B visa' மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி
`மன அழுத்தத்திற்கு குட்பை!'ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ஜப்பானிய `வாபி ஷாபி'தத்துவம் - அது என்ன?
சமூக வலைதளங்களில் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை அல்லது வாழ்க்கையை மட்டுமே காட்ட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு புதிய தத்துவம் இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வருகிறது. அதுதான் ஜப்பானின் ‘வாபி–ஷாபி’ (Wabi-Sabi) என்ற தத்துவம்.. தற்போது இது ஜென் Z தலைமுறையினரிடம் பரவி வருகிறது. அதாவது குறைகளை அழகாகக் கருதி, இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொடுக்கும் இந்த தத்துவம், ஜென் Z தலைமுறையினரிடம் புதிய ட்ரெண்டாக உருவாகியுள்ளது. Gen Z இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் ஃபில்டர் போட்ட புகைப்படங்களும், பாசிட்டிவான வாழ்க்கை முறைகளை மட்டுமே காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான இளைஞர்கள், இப்போது 'வாபி-ஷாபி' என்ற தத்துவத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். எதுவும் பெர்ஃபெக்ட் இல்லை, குறைகளே இயல்பு, அதுவும் அழகுதான் என்ற இந்த தத்துவம் தற்போது ட்ரெண்ட் ஆனாலும் இது 400 ஆண்டுகள் பழமையான தத்துவம் தான், மீண்டும் இது இந்தாண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'வாபி-ஷாபி' 'வாபி-ஷாபி' என்பது ஜப்பானிய பௌத்தத்திலிருந்து உருவான ஒரு வாழ்க்கை முறை தத்துவம் என கூறப்படுகிறது. வாபி என்பதன் பொருள், குறைந்த வசதிகளோடு, எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பது ஆகும். ஷாபி என்பதன் பொருள், காலம் செல்லச் செல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள், குறைகள் ஆகியவற்றை அழகாகப் பார்ப்பது ஆகும். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெர்ஃபெக்ஷன் என்று பரவி வந்த கலாச்சாரத்திற்கு எதிர்வினையாக ஜென் Z இளைஞர்கள் 'வாபி-ஷாபி' தத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் #my wabi-sabi சமூக வலைதளங்களில் பரவுவது எப்படி? டிக்டாக்கில் பயனர்கள் #my wabi-sabi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் உண்மையான பக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர். கலைந்த படுக்கையறை, பழைய புத்தகம், செல்லப் பிராணியின் சேட்டைகள் என ஃபில்டர் செய்யப்படாத யதார்த்தமான காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு எல்லோரும் இப்படி தான் இயல்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளிக்க உதவுகிறது. இந்த ட்ரெண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்! போனில் `ஹலோ' சொல்ல மறுக்கும் ஜென் Z தலைமுறையினர்; காரணம் என்ன? - விளக்கும் கம்யூனிகேஷன் ரிசர்ச்
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை: மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை |மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
அந்த நினைவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? - ஆய்வுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்
நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திருப்போம், கற்றுக்கொண்டிருப்போம்.. ஆனால் ஏன் அந்த காலக்கட்ட நினைவுகள் மட்டும் முற்றிலும் நம் மனதிலிருந்து அழிந்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆயுட்கால உளவியல் துறையின் ஆராய்ச்சியாளரான சாரா பவர் கூற்றுப்படி, பொதுவாக நாம் மறந்துபோகும் இந்த விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாகப் பார்க்கின்றனர். Brain மூன்று வயதுக்குட்பட்ட பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நினைவில் இருந்து நீங்குவதை 'இன்ஃபான்டைல் அம்னீஷியா' என்றும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை 'சைல்ட்ஹுட் அம்னீஷியா' என்றும் அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் நமது மூளை தகவல்களைப் பதிவு செய்தாலும், வளர்ந்த பிறகு அவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் திறனை இழந்துவிடுகிறது என்று கூறுகின்றனர். பலர் தங்களுக்கு இரண்டு வயதில் நடந்த பிறந்தநாள் விழா அல்லது சுற்றுலா சென்றது நினைவிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் ஆய்வாளர் சாரா பவர் என்ன கூறுகிறார் என்றால், இது பெரும்பாலும் உண்மையான நினைவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிறுவயது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது பெற்றோர்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்பதாலோ நமது மூளை தானாகவே ஒரு போலியான காட்சியை உருவாக்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இதனை 'போலி நினைவுகள்'என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு முறை நாம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதும், நினைவுகள் வரும். ஆனால் நமக்கு நினைவிருப்பது உண்மையான சம்பவமா அல்லது புகைப்படத்தைப் பார்த்ததால் உருவான பிம்பமா என்பதைப் பிரித்தறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாரா பவர் மற்றும் அவரது குழு இணைந்து, சுமார் 360 குழந்தைகளை வைத்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மறக்கிறோம்? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம், 'எபிசோடிக் மெமரி'எனப்படும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. அதனால்தான் நாம் எப்படி நடக்கக் கற்றுக்கொண்டோம், எப்படி பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உங்களின் குழந்தை பருவம் நினைவில் இருக்கிறதா? என்று கமென்ட்டில் சொல்லுங்கள்!
Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்
தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள். வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. Relationship அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம். யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்? சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். Relationship விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது. தீர்வு என்ன? கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார். Relationship Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது! 'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும். கேஸ்லைட்டிங் இயல்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.
சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?
குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் 24 விளிம்புகள் இருந்தது 1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார். அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் மூடிகளை விட இந்த மூடி நன்றாக மூடியிருக்கிறது. ஆனால் பிரச்னையும் இருந்துள்ளது. தானியங்கி இயந்திரங்களில் பாட்டில்களை மூடும் போது, இந்த 24 விளிம்புகள் மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாட்டில்கள் உடைந்து போயிருக்கின்றன. இயந்திரங்களும் அடிக்கடி ஜாம் ஆகியிருக்கின்றன. பின்னர் பொறியாளர்கள் 23 மற்றும் 22 விளிம்புகளுடன் சோதனை செய்தனர். ஆனால் இவை சரியாக வேலை செய்யவில்லை. நிறைய சோதனைகளுக்குப் பிறகு 21 விளிம்புகள் தான் இதற்கு சரியான தீர்வு என கண்டுபிடித்துள்ளனர். 21 விளிம்புகள் ஏன்? சோடா மற்றும் பீர் போன்ற பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தை உள்ளேயே வைத்திருக்க முழுவதும் காற்று புகாத மூடி தேவை. 21 விளிம்புகள் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சரியாக பிடித்து, அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாம். அதிக விளிம்புகள் இருந்தால் மூடி மிகவும் இறுக்கமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் திறக்கும் போது பாட்டில் உடையலாம். குறைவான விளிம்புகள் இருந்தால் நன்றாக மூடாது, கசிவு ஏற்படும். இப்படி பல பிரச்னைகளுக்கு 21 விளிம்புகள் என்பது சரியான சமநிலையாக இருந்துள்ளது. 1900களின் ஆரம்பத்தில் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 21 விளிம்புகள் கொண்ட மூடியை விரும்பின. இன்று உலகம் முழுவதும் பீர் அல்லது சோடா பாட்டில் போன்றவற்றில் இதே 21 விளிம்புகள் கொண்ட மூடியைத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த அந்த ஒரு உதவி! - ரஜினி அனுப்பிய போஸ்ட் கார்டு பின்னணி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எனக்கு 63 வயது, யுனிலீவரில் இருந்து ஓய்வு பெற்று மாஸ்டர் டேட்டா மேனேஜ்மென்ட்டில் ஃப்ரீலான்ஸ் ஆலோசனை செய்கிறேன். 1981-ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் சென்னை பச்சையப்பாவின் மாலை கல்லூரியில் B.Com படித்து வந்தேன். நான் நிதி ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தேன், நான் பட்டம் பெறுவதை உறுதி செய்ய பகல் நேரத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. எனது சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எனது மூன்றாம் ஆண்டு இறுதி செமஸ்டரில் சிக்கிக்கொண்டேன், ஏனெனில் எனது கட்டணத்திற்கு சுமார் ரூ .290 (ஆறு மாத செமஸ்டருக்கு) பணத்தை திரட்ட முடியவில்லை. என் எதிர்காலத்திற்கான ஒரே டிக்கெட் அதுதான் என்பதால் நான் என் படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் வீணாகிவிட்டன. பில்லா ரஜினி அந்த நாட்களில் 'பேசும் படம்’ என்ற தமிழ் திரைப்பட இதழ் வந்தது, அதில் சினிமா நட்சத்திரங்களின் முகவரிகள் இருந்தன. நான் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு, 10 போஸ்ட் கார்டுகளை (10 பைசா அட்டைகள்) வாங்கி, எனது கட்டணத்திற்கு உதவுமாறு ஒரு எளிய கோரிக்கையை எழுதி, ரஜினிகாந்த் உட்பட அன்றைய சில பிரபல நடிகர்கள் / நடிகைகளுக்கு அனுப்பினேன். சுமார் ஒரு வாரத்தில், பில்லா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இருந்து எனக்கு பதில் கிடைத்தது, குரோம்பேட் முகவரியுடன் (நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) எனது அசல் சான்றிதழ்களுடன் அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். உடனே அங்கு சென்றேன். அந்த இடம் ஓலைக் கூரையுடன் கூடிய ஒரு பெரிய 'குடிசை', அனைத்து பக்கங்களிலும் பல்வேறு ரஜினிகாந்த் திரைப்படங்களின் சுவரொட்டிகள் இருந்தன. சுமார் 20-22 வயதுடைய அரை டஜன் கரடுமுரடான தோற்றமுடைய சிறுவர்கள் அங்கு மிதந்து கொண்டிருந்தனர். உண்மையில் நான் அவர்களைப் பார்த்து பயந்தேன். ரஜினி மக்கள் மன்றம் நான் வருகை தரும் நோக்கத்தை சரிபார்த்து, எனது சான்றிதழ்களை சரிபார்த்தபோது, பாருங்கள், இந்த செமஸ்டருக்கான உங்கள் கட்டணத்திற்கு உங்களுக்கு உதவுமாறு ரஜினி சார் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு நிபந்தனையின் பேரில். உங்கள் முடிவுகளுடன் நீங்கள் வந்து உங்கள் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள் என்று ஒரு ஆவணத்தில் நீங்கள் எங்களுடன் கையெழுத்திட வேண்டும், மேலும் நீங்கள் 60 அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றால் இது ஒரு கடன். அதேசமயம், நீங்கள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், இது ரஜினி சார் உங்களுக்கு வழங்கும் பரிசு, நீங்கள் நன்றாக சம்பாதிக்கத் தொடங்கும் போது தகுதியான ஒருவருக்கு அதே கட்டணத்தை செலுத்துவதாக மட்டுமே நீங்கள் உறுதியளிக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியடைந்தேன், உடனடியாக காகிதத்தில் கையெழுத்திட்டேன். உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது, நான் பரீட்சைகளை எழுதினேன், நிச்சயமாக 60 க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்றேன். ரஜினி சார் மற்றும் அவரது ரசிகர் மன்றங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நல்ல தொழில்முறை கல்வி மற்றும் ஒரு சிறந்த கார்ப்பரேட் வாழ்க்கையுடன் இவ்வளவு தூரம் வந்த எனக்கு அவர் நிச்சயமாக முக்கிய கருவிகளில் ஒருவர். நிச்சயமாக நான் மனிதராக ரஜினி சார் அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன். கடவுள் அவருக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்கட்டும். - பரிமள் குமார்
'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்
நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி. நடிகை சமந்தாவிற்கும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். Samantha - Raj Nidimoru சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார். சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். சமந்தாவின் சேலை ஸ்டைலிஸ்ட் பல்லவி பதிவிட்டுள்ள பதிவில், சமந்தா என்னுடைய 15 வருட தோழி, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவைப் பொறுத்தவரை ஆடை என்பது அழகுக்காக அணிவது என்பதைத் தாண்டி, அதில் உணர்வுப் பூர்வமான கனெக்ஷன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரின் திருமண ஆடைகளிலும் அதனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். Samantha - Raj Nidimoru இந்த ஆடையை வடிவமைத்தவர் ஆர்பிதா மேத்தா. இதற்கு முன்பும் கூட நான், சமந்தா, ஆர்பிதா மூவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம். அது மேஜிக் மொமன்ட்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முறையும் அதே கூட்டணி வேலை செய்திருக்கிறது. ஆடையில் உணர்வுப்பூர்வமான வடிவங்களை ஆடையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஜெயதி போஸ். Tree of life ஜெயதி போஸ் ஒரு கதையை வடிவங்களாக உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். சமந்தாவின் திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்றதும், சில நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார். 'Tree of life' ஒன்றை உருவாக்கி, அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பது போல் உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தார். Samantha - Raj Nidimoru அதாவது சமந்தாவின் கலைப்பயணம், வேர்கள், இன்றைய வளர்ச்சி, எதிர்கால ஆசீர்வாதம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மரம் ஒன்றையும், அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பதுபோல் வடிவமைத்தார். இதனை நாங்கள் சமந்தாவின் பிளவுஸ் டிசைன் ஆக்கியிருக்கிறோம். ராஜ் நிதிமொரு ஆடை அதே போல் ராஜ் நிதிமொரு ஆடையிலும் ஸ்பெஷல் இருக்கிறது. நான் பழகியதில் அவர் ஒரு நல்ல மனிதர். 'குணத்தில் தங்கம்' என்பதை குறிக்கும் விதமாக தங்க நிற ஆடையைத் தேர்வு செய்தோம் என்று பதிவிட்டிருக்கிறார். Samantha - Raj Nidimoru மோதிரம் சமந்தா அணிந்திருந்த மோதிரத்திலும் தனித்துவம் இருக்கிறது. சமந்தா அணிந்திருந்த மோதிரம், பெரிய டிசைன்களில் செய்யப்படாமல் சிம்பிள் லுக்கில் இருந்தது. இதற்கு அவர்களுடைய இயல்பான குணத்தையும், மனதின் தெளிவை எதிரொலிப்பதைப் போலவும் மோதிரம் சிம்பிள் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் துணிவு என்றால் என்ன? துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவே துணிவு. இன்று தோல்வி அடைந்தாலும் நாளை நான் மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் அந்த அமைதியான உள் குரல் தான் அது. நாம் பெரும்பாலும் துணிவு என்றால் போரில் போராடுவது, யாரையாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற வீரச் செயல்களுடன் ஒப்பிடுகிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் துணிவு என்பது உண்மையை பேசுவது, நேர்மையாக நடந்து கொள்வது, புதிய வாய்ப்புகளை கண்டு அஞ்சாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிப்பது. துணிவின் முக்கியத்துவம்: துணிவு இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் மற்ற அனைத்து நற்குணங்களும் ஒளிர்ந்து வெளிப்படும். உங்கள் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது துணிவு. மனதளவிலான உறுதியையும், சுயமரியாதையையும் அது வளர்க்கிறது. ஒரு துணிவான செயல் பலரையும் ஊக்குவிக்கிறது. துணிவு இருந்தால், பயம் உங்கள் எதிரியாக இல்லாமல், ஒரு ஆசிரியராக மாறும். ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3 இன்றைய காலத்தில் ஏன் மக்கள் துணிவை இழக்கிறார்கள்? நாம் ஏதாவது துணிச்சலாக செய்து அது தவராகிவிட்டால் என்ன செய்வது என்ற தோல்வியின் பயம் பலரிடம் இருக்கிறது. நாம் செய்கின்ற செயல்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற மதிப்பீட்டின் பயம். அதீத சிந்தனை, எப்போதும் இதை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு காலத்தை கடத்துவது, அது மட்டுமல்லாமல் நடக்கவே நடக்காத எதிர்மறை முடிவுகளை மனதில் உருவாக்கி கொண்டு வருந்துவது. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, இது என்னால் முடியாது, இந்த துணிச்சல் என்னிடம் இல்லை என்ற எண்ணம் ஒருபோதும் நம்மை முன்னேற விடுவதில்லை. சரி எப்படி துணிவை வளர்ப்பது? துணிவை வளர்க்கும் வழிகள்: உங்களுடைய சிறிய சிறிய பயங்களை கண்டறியுங்கள், சிலருக்கு கூட்டத்தில் பேசுவதற்கு பயமாக இருக்கலாம், புதிதாக ஒன்றை முயற்சிக்க பயம் இருக்கலாம், சில நேரங்களில் இல்லை, இப்போது என்னால் அது முடியாது என்று சொல்வதற்கு பயமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, துணிவாக அவற்றை எதிர்கொள்ளுங்கள். தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2 எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறீர்களா? உதாரணத்திற்கு, மேடை பேச்சு என்றாலே எனக்கு பயம் என்று கூறுபவர்கள் அதை பயிற்றுவிக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், அதை முறையாக கற்றுக் கொள்ளலாம். அங்கே கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் பயந்தாலும் உங்களை மேடையில் ஏற்றி விடுவார்கள் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும். யோசித்து பாருங்கள் முதல் முறை உங்கள் பயத்தை தாண்டி துணிவுடன் நீங்கள் விரும்பும் செயலை செய்வது எத்தகைய உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும். துணிவின் பாதையில் நீங்கள் பயணிக்க எடுத்து வைக்கும் முதல் படி பயத்தை எதிர்கொள்வது தான். இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6 உங்கள் தோல்வியை ஏற்று கொள்ளுங்கள், எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே அனுபவிக்க முடியாது, நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் எப்படி ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். தொடக்கம் எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆம், நான் இந்த முறை தோற்றுவிட்டேன் நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து தவறுகளை சரி செய்து முன்னேறுங்கள். இன்று செயற்கை நுண்ணறிவு பாதையில் உலகம் நுழைந்துவிட்டது, அட இது என்ன புதிதாக இருக்கிறதே இதை எப்படி கற்றுக்கொள்ள முடியும் என்று அச்சப்பட்டு அதை கற்றுக்கொள்ளவோ, பயன்படுத்தவோ மறுப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவார்கள் ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதை கற்றுக் கொண்டு சரியாக பயன்படுத்துபவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் வலிமையாக இல்லை அதனால் என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தேவையற்ற பயம் என்று தான் உங்களுக்கு நான் சொல்லுவேன். உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக உள்ளவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள். நீங்கள் எப்போதெல்லாம் பயம் கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை தாண்டி வெற்றி அடைவதுபோல சிந்தனை செய்து பாருங்கள், இது நீங்கள் பயத்தை மீறி செயலில் இறங்க உங்களை ஊக்குவிக்கும். துணிவு என்பது நேர்மை, வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தின் அடித்தளம். ஒரு துணிவான நபர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதோடு, மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வலிமையை கடைபிடிக்க உதவுகிறார். செய்முறை பயிற்சி: உங்களின் பயம் என்ன ? பயத்தின் காரணம் என்ன ? அதை எப்படி எதிர்கொள்ளலாம் ? மேலே இருக்கும் கேள்விகளுக்கு சிந்தித்து உங்கள் பதிலை எழுதுங்கள், பின் உடனே செயலில் இறங்குங்கள். வெற்றி பெறுங்கள். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். தேர்தல்
எத்தனை வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டக்கூடாது?
’என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டிவைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்பச்சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். * ஒன்றரை முதல் இரண்டு வயதுவரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம்பிடித்தால் நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல், தாங்களே சாப்பிடுவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * குழந்தைக்கு மணிக்கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு. ‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன்; செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு. சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான், குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்பச் சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம்பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். பசியெடுத்தால், தானாகச் சாப்பிட வருவார்கள். `அடம்பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும். * குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிட வேண்டும். அதனால் இயல்பாகவே அவர்களுக்குப் பசியெடுத்துவிடும். குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள்! * ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனே, ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது. அது அன்றையச் சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்க வேண்டும். அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு மேஜிக்! * குழந்தைகள் எப்போதும் புதுமையை, வண்ணமயமான விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். எனவே, தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம். ஏ, பி, சி, டி வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கிக் கொடுக்கலாம். * பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள், காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் என ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால்/டீ/காபி கொடுக்கலாம். பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ’போதும் மம்மி’ என்றால் விட்டுவிடலாம். மாறாக, ’முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டினால், குழந்தைகளுக்குச் சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும். அட... பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் போடுவாங்களா? - குழந்தைகள் நல மருத்துவர் சொல்வதென்ன?
``ஸ்லீப்பர் கோச்சுக்கும் தலையணை, பெட்ஷீட்'' - பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் புதிய சலுகை என்ன?
சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வழங்கப்பட உள்ளது. 'இலவசம்' என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் எவ்வளவு? பெட்ஷீட், தலையணை, தலையணை உரை வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பெட்ஷீட் மட்டும் போதுமென்றால் ரூ.20 கட்ட வேண்டும். தலையணை, தலையணை உரை மட்டும் போதுமென்றால் ரூ.30 செலுத்த வேண்டும். பெட்ஷீட், தலையணை, தலையணை உரை ரயில் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்க... இந்த டிரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க மக்களே..! ஏ.சி கோச் இதுவரை ஏ.சி கோச்களுக்கு மட்டுமே தலையணை, தலையணை உரை, பெட்ஷீட் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ஸ்லீப்பர் கோச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ.சி கோச்களுக்கு அவை இலவசம் (அதாவது டிக்கெட் கட்டணத்துடனேயே சேர்க்கப்பட்டுவிடும்) என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இனி ரயில் தனியாக பயணத்திற்கு தலையணை, தலையணை உரை, பெட் ஷீட் கொண்டுபோக வேண்டியதாக இருக்காது. ஹேப்பி ஜர்னி மக்களே! மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?
புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் வெள்ளகவி! கொடைக்கானல் வெள்ளகவி நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம் கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது. ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் 'தேசிய நெடுஞ்சாலை'. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைக்கு வழியில்லை! சாலை இல்லாத துயரம், வெள்ளகவி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இங்கு தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறி இறங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது மருத்துவமனைக்கான பயணம் அல்ல; உயிருடன் நடத்தும் போராட்டம். பல நேரங்களில் அடிப்படை சிகிச்சைகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதுதான் நிதர்சனம். கல்வியும் ஒரு போராட்டமே! கல்விக்காக இங்கிருக்கும் சிறு குழந்தைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தினமும் குன்றுச்சரிவுகளையும், அடர்ந்த காட்டுப் பாதைகளையும் கடந்துதான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு சாகசப் பயணம்தான். வீட்டிற்குத் தேவையான ஒரு குண்டூசி முதல் அரிசி மூட்டை வரை எதுவாக இருந்தாலும், கொடைக்கானல் நகருக்கு நடைப்பயணமாகச் சென்று, தலைச்சிறையாகச் சுமந்து வர வேண்டிய நிலையே இன்றும் தொடர்கிறது. செருப்பு அணியாத பூமி! இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், வெள்ளகவி ஒரு ஆன்மீகப் பூமியாகத் திகழ்கிறது. கிராமத்தின் மையத்தில் பழங்காலம் தொட்டு வழிபாட்டில் இருக்கும் காளிகாம்பாள் மற்றும் தாதையார் கோவில்கள், இவர்களின் ஆதித் தமிழ்க் கலாச்சாரத்தின் சாட்சிகள். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்தச் சின்னஞ்சிறிய மலைக் கிராமத்தில் சுமார் 24 முதல் 25 கோவில்கள் வரை உள்ளன. இந்த கிராமம் முழுவதுமே புனிதப் பகுதியாகக் கருதப்படுவதால், ஊருக்குள் காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்ற பழக்கவழக்கம் இன்றளவும் அங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பசுமை சூழ்ந்த இயற்கை எழில், சத்தமில்லாத அமைதியை விரும்புவோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வைரலான வீடியோவும்... விடியாத வாழ்வும்! வெளியுலகின் கண்களில் படாமல் மறைந்து கிடந்த இந்த மலைக் கிராமத்தின் நிஜ முகத்தை, சமீபத்தில் வெளியான ஒரு யூ டியூப் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்ஃப்ளூயன்சர் தமிழரசன் உருவாக்கிய வெள்ளகவி கிராமம் பற்றிய வீடியோ 97 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த வீடியோ மூலம்தான் வெள்ளகவி மக்களின் துயரமும், வாழ்வியலும், தேவைகளும் பொதுமக்கள் மத்தியிலும், அதிகாரிகளிடமும் சென்றடைந்தது. இதன் பின்னர் அரசுத் துறைகளின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறை மாற்றங்கள் என்னவோ மிக மிக மெதுவாகவே நகர்கின்றன என்பதுதான் கிராம மக்களின் ஆதங்கம். காத்திருக்கும் நம்பிக்கை! வெள்ளகவி மக்கள் கேட்பதெல்லாம், அடிப்படை வசதிகள் தான். அவசர மருத்துவ சேவைகளுக்கான துரிதமான அணுகல். தற்போதைய காட்டுப்பாதைகளைப் பாதுகாப்பான படிக்கட்டுகள், கைப்பிடி தடுப்புகளுடன் மாற்றுதல். முறையான கல்வி, மின்சாரம், தூய்மையான குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள். நீண்ட காலமாகச் சாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலைக் கிராம மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. சாலை என்பது இவர்களுக்கு ஒரு சொகுசு வசதி அல்ல; அடிப்படை உரிமை! அந்த உரிமைக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் வெள்ளகவி மக்களின் குரல், உரியவர்களின் செவிகளை எட்டுமா? தேர்தல்
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை; பசுமை சூழலில் படகு பயணம் | Photo Album
முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை

28 C