SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

பகுதி நேர வேலையாக மணிரத்தினம் படத்தில் நடித்த அனுபவம் - 80s Kids கல்லூரி நினைவலை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அது 2002-ம் ஆண்டு, சென்னையில் எனது கல்லூரிக் காலம். கல்லூரிக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா  என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக தனக்கு சொந்தமான இடத்தில் விடுதியை அமைத்து படிக்க வழி செய்தார். இதை அறிந்து கொண்ட நானும் தேனியில் இருந்து அந்த விடுதியில் தங்கி படிக்க வந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டே கிடைத்த சில பகுதி நேர வேலை சுவாராஸ்யமான அனுபவத்தை மை விகடன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அனுபவம் ஒரு பெரிய திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டாளத்தில் நடித்தது. சித்தரிப்புப் படம் மணிரத்தினத்துடன் ஷூட்டிங் அனுபவம்: ஒரு  சனி ஞாயிறு விடுமுறை நாளில் சினிமா துணை நடிகர்களுக்கான ஒரு ஒப்பந்ததாரர் வந்தார். ஒரு பட ஷூட்டிங், ஷூட்டிங் ஸ்பாட் வந்து டைரக்டர் சொல்வது போல் கூட்டத்துடன் நடித்தால் மாலையில் சம்பளமும் மதியம் சாப்பிட சோறும் கிடைக்கும் என்று கூறினார். உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan இதற்கு முந்தைய காலகட்டத்தில் இதே போன்று விடுதியில் இருந்த மாணவர்களை அழைத்துச் சென்ற அனுபவம் உண்டாம். அடடே... சினிமா ஷூட்டிங் ஸ்பாட் நடிகர்களுடன் நானும் நடிக்கவா என்ற உற்சாகம் பொங்க நானும் சக நண்பர்களுடன் கிளம்பினேன். ஒரு வேனில் எங்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு சென்னை காசி மேட்டு கடலோரம் இறக்கி விட்டார்கள். ' இன்னும் கொஞ்ச நேரத்தில் டைரக்டர், ஆக்டர்ஸ் எல்லாம் வருவாங்க , அவர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவாங்க அவங்க சொல்வது போல நீங்க நடக்கனும், நடிக்கனும் ' என்று கூறினார் அழைத்து வந்த கான்ட்ராக்டர்.  ayudha ezhuthu ஒரு சிறிய மேடை ஒன்றும் அதில் ஏறிச் செல்ல வசதியாக படியும் போட்டு இருந்தார்கள் கடற்கரை ஓரமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் . சிறிது நேரம் கழிந்தும் தெரிந்தது அது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன் சூர்யா, சித்தார்த் இன்னும் பலர் நடிக்கும் 'ஆயுத எழுத்து ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் என்று.  மிகவும் உற்சாகமாக இருந்தது எனக்கு. 'பகல் நிலவு, மெளன ராகம், அக்னி நட்சத்திரம், பம்பாய், உயிரே போன்ற படங்களின் டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் நானும் நடிக்கப்  போகிறேன் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் நான். எங்கள் விடுதி மாணவர்கள் போல் இன்னும் பல மாணவர்கள் கூட்டம் இருந்தனர் அங்கே. கொஞ்ச நேரத்தில் ஒரு நான்கைந்து கார்கள் வேன்கள் மொத்தமாக வந்தது ‌. ஒரே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கிய டைரக்டர் மணிரத்னம் ஷுட்டிங் ஸ்பாட் ஏற்பாடுகளை சுற்றிப் பார்க்கிறார். உடன் இருந்தோர் விளக்குறார்கள் , கவனமாக கேட்டுக்கொண்டே சில குறிப்புகளை கூறுகிறார். வேனில் இருந்து  ஒரு பெரிய குடையை எடுத்து வந்து அதன் கீழே ஒரு நாற்காலி போட அதில் டைரக்டர் மணிரத்னம் சென்று அமர்ந்து கொள்ள அப்போதைய இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் சுசி.கணேசன் மிகவும் பவ்யமாக சில காகிதங்களுடன் இருந்த ஒரு அட்டையை கையில் வைத்துக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் அருகில் சென்று காட்டி கொண்டு இருந்தார் ‌.  அக்னிப் பறவைகள் - சிறுகதை | My Vikatan இன்றைய நடிகர் கார்த்தி அன்றைய இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அன்றைய கார்த்தி ஓடியாடி வேலைகளை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வர அதில் இருந்து இயக்குனர் பாரதிராஜா நடிகராக கருப்புச் சட்டையுடன் இறங்கி வருகிறார். சுசி கணேசன் பாரதிராஜா அவர்களிடம் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளை விளக்கினார். கவனமாக கேட்டுக் கொண்டு டைரக்டர் மணிரத்னம் அருகில் சென்று பேசினார். சில நிமிடத்தில் நடிகர் மாதவன் வந்தார். பாரதிராஜாவும் மாதவனும் மணிரத்னம் கூறுவதை கேட்டுக் கொண்டனர். சித்தரிப்புப் படம் மேடையில் நடிகர் பாரதிராஜா பேசி முடிக்க மேடையின் படியில் நிற்கும் நடிகர் மாதவன் கீழே மேடையைச் சுற்றி நிற்கும் எங்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்துக் கத்திட நாங்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை உயர்த்திக்  கத்த வேண்டும். இதுதான் இன்றைய ஷுட்டிங் என்று விளக்கினார்கள்.‌  மேடையில் ஏறிய பாரதிராஜா கூட்டத்தை நோக்கி ' வடக்கு வாழ்ந்திட தெற்கு தேய்ந்திட வேண்டுமா, வடக்கே பரந்து விரிந்து கிடப்பது தெற்கே வரவர சுருங்குகிறது இது பூகோளத்தின் குறைபாடா இல்லை புத்தியின் குறைபாடா'  என்று பேசி முடிக்க நடிகர் மாதவன் உற்சாகமான குரலுடன் எங்களை நோக்கி கைகளை உயர்த்தி ஆட்டிட நாங்களும் கைகளை உயர்த்திக் குரல் கொடுத்தோம். ஒரு பத்து முறை நடிகர் பாரதிராஜா பேச நாங்கள் கத்திட என அப்போதைய ஷூட்டிங் முடிந்தது. துணை நடிகர்களாக நடித்த நாங்கள் அனைவரும் வரிசையில் வர வேண்டும் என்று கூறிட மதிய உணவு தயிர் சோறு ஊறுகாய் கொடுத்தார்கள். மதிய உணவு முடிந்ததும் கான்ட்ராக்டர் தன் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதியை கொடுக்க வாங்கிக் கொண்டு கிளம்பினோம். விடுதிக்கு வந்து சேர்ந்த பின் அடடே என வித்தியாசமான அனுபவமாக இருந்தது அன்றைய பகுதி நேர வேலை.  ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 25 Mar 2025 2:47 pm

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: போரினால் மகிழ்ச்சியான பின்லாந்து; இந்தியாவின் இடம் என்ன?

தொடர்ந்து 8-வது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற படத்தைப் பெற்றிருக்கிறது பின்லாந்து. மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவோ அமெரிக்காவோ பிரகாசிக்காதது ஏன்? கடந்த மார்ச் 20-ம் தேதி, ஐ.நாவின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தில் வெளியான வருடாந்திர அறிக்கையில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் மகிழ்ச்சி, சமூக நம்பிக்கை குறைந்து வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. Finland tops in World Happiness Report இந்த உலக மகிழ்ச்சி அறிக்கையின் நிறுவன ஆசிரியர் (founding editor) ஜான் ஹெல்லிவெல், மக்கள் நினைப்பதை விட அவர்களது சுற்றத்தினர் அதிக அக்கறையுடன் நடந்துகொள்கின்றனர் என அறிக்கையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளார். நாடுகளின் மகிழ்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது? உலக நாடுகளின் மகிழ்ச்சியை கணக்கிட, ஆறு முக்கிய கூறுகளை கவனிக்கின்றனர். 1. தனிநபர் ஜி.டி.பி நாட்டின் பொருளாதார வலிமை, தனிநபரின் வருமானம் மற்றும் வாழ்க்கைமுறையை பாதிக்கிறது. 2. சமூக ஆதரவு இது ஒரு தனிநபர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அரசினால் எவ்வளவு ஆதரிக்கப்படுகிறார் என்பதை மதிப்பிடுகிறது. 3. ஆரோக்கியம் மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு அதிக ஆயுள் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாகவும் நிறைவாகவும் வாழ்கின்றனர். 4. சுதந்திரம் ஒரு தனிமனிதர் தனது வாழ்க்கையின் மீது முழு சுதந்திரமாக, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதை குறிக்கிறது. GDP 5. தாராள மனப்பான்மை தொண்டு, பொது நன்கொடைகள் மற்றும் சேவைகளில் மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அளவிடுகிறது. 6.ஊழல் பற்றிய கருத்துகள் ஊழல் குறைவாக இருந்தாலோ, ஊழல் இல்லாமல் இருந்தாலோ குடிமக்களுக்கு அரசின் மீது அதிக நம்பிக்கை இருக்கும். நோர்டிக்கு நாடுகள் என அழைக்கப்படும் வட துருவ ஐரோப்பிய அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கை கூறுகின்றது . பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடத்தில் இருக்கின்றன. நார்வே 7-வது இடத்தில் இருக்கிறது . யூரோ டூர் 39: பின்லாந்து - சிறந்த கல்வி முறை; தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடு! Finland மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடன் வசிக்கும் நபர்கள் பற்றி அக்கறை கொண்டிருப்பதுதான் பின்லாந்து நாட்டின் மகிழ்ச்சிக்கான ரகசியம் என ஹெல்லிவெல் கூறுகின்றார். 1939-40ல் நடந்த ரூசோ - பின்னிஷ் போருக்கு பிறகு மக்களிடையே உருவான ஒற்றுமை மற்றும் நம்பிக்கைதான் இதற்கு காரணம் என பின்லாந்து அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது இருந்த சமத்துவமின்மையை போக்கியதில் மிகப் பெரிய பங்குவகிக்கிறது. Finland அந்த போரில் அவர்கள் வெல்லவில்லை என்றாலும், ஒற்றுமையாக இருக்கும்போது எத்தனை பெரிய சக்தியையும் அவர்களால் எதிர்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டனர் என்கின்றனர். பின்லாந்து மக்களிடம் உள்ள குறைவான பொருள் முதல்வாத (less meterialistic) மனநிலையும் இதற்கு காரணம் என்கின்றனர். இந்திய பொருளாதாரம் டாப் 10 நாடுகள், இந்தியாவின் இடம்... 2025 அறிக்கையில் இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள் டாப் 10 வரிசையில் இணைந்திருக்கின்றன. ஒன்று கோஸ்டாரிக்கா (6ம் இடம்) மற்றொன்று மெக்சிகோ (10ம் இடம்). உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்; முதல் இடத்தைப் பிடித்த பின்லாந்து! இந்தியா, உக்ரைன் ரஷ்யா? இரண்டு நாடுகளுமே வலுவான சமூக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் செல்லும் திசை மற்றும் தலைவர்கள், நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். டாப் 10 நாடுகளைப் பொறுத்தவரை நெதர்லாந்து 5-வது இடத்திலும், இஸ்ரேல் 8-வது இடத்திலும், லக்ஸம்பெர்க் 9-வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா முதல்முறையாக டாப் 20 இடங்களைத் தவறவிட்டு, 24-வது இடத்தில் உள்ளது. ஆனால் கனடா 18-இடத்தை தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இடம் என்ன என்பது உங்கள் மனதிலிருக்கும் கேள்வி என்பதை அறியமுடிகிறது. இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் மோசமான நிலைதான் என்றாலும், கடந்த ஆண்டின் 126-வது இடத்தில் இருந்து சில படிகள் முன்னேறியிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த பட்டியலில் கடைசி இடங்களில், ஆப்கானிஸ்தான் (147) , சியரா லியோன் (146), லெபனான் (145), மலாவி (144) மற்றும் ஜிம்பாபேவே (143) நாடுகள் இருக்கின்றன. `தனிமை ஆபத்தானது' - மகிழ்ச்சி குறித்து 87 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுவதென்ன? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel

விகடன் 25 Mar 2025 1:56 pm

உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சே! என்ன வாழ்க்கை இது??!! என்ன மனிதர்கள் இவர்கள்???!!! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான்.  காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம் ஆனதும் கவுந்தடிச்சுப் படுத்துக் கொண்டு கண்டுக்காம இருந்து விடுகிறார்கள். இனிமேல்… “ No more friends and no more relatives!”  என்றான் வசந்தன் வாழ்க்கை வெறுத்துப் போய். காதுகளில் கடவுளின் கனிவான குரல் அசரீரியாய்….” No more friends .. என்று வேணாச் சொல்!., no more relatives  என்று சொல்லாதே! காரணம் ‘நண்பர்களை வேணா நீ தீர்மானிக்கலாம்!., ஆனால் உறவை நான்தான் தீர்மானிக்கிறேன்! என்றது குரல். உறவும் நட்பும் (Relationship and friendship) எளிமையாக வாழ்வது பழமைவாதமா? - தேவையில்லாத விஷயங்களால் வரும் சிக்கல் என்ன? | My Vikatan என்ன வேணுமானாலும் கடவுள் சொல்லட்டும்., ஆனால், மனசு கேட்க மாட்டேங்குதே?!’ என்ன செய்ய?!! ‘என்ன உன் பிரச்சனை?’ ‘உறவும் நட்பும் காசுக்காகத் தானே பல்லிளிக்கிறது??’ உண்மைதான்! ஆழ யோசித்தால் நீ நினைப்பது சரிதான்.  உறவும் நட்பும் காசைக் கருதித்தான். ஆனால், உறவையும் நட்பையும்  ‘ மகசூல்தரும் ‘காசு’ என்று மனக்கோட்டை கட்டாதே! வசூல் வழங்கும் வட்டியல்ல… உறவும், நட்பும்!  அவை ஒருவகையில் மகிழ்ச்சி தரும் அந்தஸ்தைக் கொடுக்கும் முதலீடுகள்! அவ்வளவே!. ‘உறவின், நட்பின் பலம் அடுக்கு மாடியின் அஸ்திவாரம் போல…! அதை அழகு பார்க்கலாம்.,  அதன் ஆழம் பார்க்கவோ .. அசைத்துப் பார்க்கவோ கூடாது!’ ‘அசரீரிகள்’ ஆண்டவன் குரலாய் அடிமனதிலிருந்து ஒலிக்கின்றன!. அதை ‘ஆழ்மன வெளிப்பாடு!’ என்றாலும் ‘ஆன்மிக புலப்பாடு!’ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 25 Mar 2025 12:39 pm

98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).

தி ஹிந்து 24 Mar 2025 10:42 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 10:36 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 10:31 pm

விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

தி ஹிந்து 24 Mar 2025 10:27 pm

கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!

கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி ஹிந்து 24 Mar 2025 10:21 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 9:31 pm

98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).

தி ஹிந்து 24 Mar 2025 9:31 pm

விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

தி ஹிந்து 24 Mar 2025 9:31 pm

கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!

கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி ஹிந்து 24 Mar 2025 9:31 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 8:31 pm

98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).

தி ஹிந்து 24 Mar 2025 8:31 pm

கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!

கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி ஹிந்து 24 Mar 2025 8:31 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 7:31 pm

98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).

தி ஹிந்து 24 Mar 2025 7:31 pm

விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

தி ஹிந்து 24 Mar 2025 7:31 pm

கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!

கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி ஹிந்து 24 Mar 2025 7:31 pm

காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்! 

சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 6:31 pm

98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).

தி ஹிந்து 24 Mar 2025 6:31 pm

விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

தி ஹிந்து 24 Mar 2025 6:31 pm

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 5:31 am

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 5:31 am

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 4:31 am

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 3:31 am

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 2:31 am

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

தி ஹிந்து 24 Mar 2025 1:31 am

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 23 Mar 2025 7:11 pm

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 23 Mar 2025 6:31 pm

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 23 Mar 2025 5:31 pm

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 23 Mar 2025 4:31 pm

30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 23 Mar 2025 3:31 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தி ஹிந்து 23 Mar 2025 12:22 am

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 22 Mar 2025 11:56 pm

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 22 Mar 2025 11:31 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தி ஹிந்து 22 Mar 2025 11:31 pm

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 22 Mar 2025 10:31 pm

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 22 Mar 2025 9:32 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தி ஹிந்து 22 Mar 2025 9:31 pm

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 22 Mar 2025 8:32 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தி ஹிந்து 22 Mar 2025 8:31 pm

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயண கனவை சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமான கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.

தி ஹிந்து 22 Mar 2025 7:31 pm

கொடைக்கானலில் `குணா குகை'தெரியும்; இது என்ன `குக்கல் குகை' - மிஸ் செய்யக்கூடாத சூப்பர் ஸ்பாட்!

கொடைக்கானலில் பிரபலமாக இருக்கும் குணா குகை பற்றி தான் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் குக்கல் குகைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தென்னிந்தியாவில் உள்ள பழமையான செதுக்கப்பட்ட குகைகளில் இதும் ஒன்றாகும். மலை உச்சியின் காடுகளுக்குள் இந்த குக்கல் குகைகள் மறைந்துள்ளன. இது உயரமான இடத்தில் இருப்பதால் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது. செங்குத்தான பாறைகள், புல்வெளிகள் வழியாக மலையின் உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேறுபவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கிறது. பருவகாலங்களில் இந்த குகைகள் மூடுபனியுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு பல்வேறு வகையான பாறைகளால் செதுக்கப்பட்ட குகைகளை ஆராய்வது மட்டுமன்றி பழங்குடியினர் ஒருகாலத்தில் பயன்படுத்திய, இவ்விடத்திற்கு பயணித்து தனித்துவமான அனுபவத்தை பெறலாம். இப்போது மலையேறுபவர்கள் மற்றும் முகாமிடுதலில் ஈடுபடுபவர்களின் விருப்பமான இடமாக, குக்கல் குகைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள காடுகள் மாறிவிட்டன என்றே கூறலாம். அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபட்டு இயற்கை அழகை உணர, அனுபவிக்க இது ஏற்ற இடமாகும். பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் குக்கல் மலையில், வனத்துறையின் முன் அனுமதி பெற்று, நீங்கள் பழமையான காடுகளில் பாதுகாப்பாக உலா வரலாம். ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 22 Mar 2025 11:42 am

ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் ‎சோட்டானிக்கரை ‎பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இது கொச்சி தேவஸ்தானம் வாரிய நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கபட்டு வருகிறது. இங்கு மேலக்காவு மற்றும் கீழ்க்காவு என இரண்டு கோவில்கள் உள்ளது. நாம் உள்ளே நுழைந்தவுடன் முதலில் பார்ப்பது மேலக்காவு ராஜராஜேஸ்வரி அம்மன்  கோவிலும் அதன் பின்னால் சற்று தாழ்வான உயரத்தில் குளத்தின் அருகே மேற்கு நோக்கி உள்ள கோயில் கீழக்காவு பத்ர காளி அம்மன் கோவில். கோவிலின் சிறப்பு: மேல்க்காவூ கோவில் மேல்க்காவூ கோவிலில் ராஜராஜேஸ்வரி அம்மனாக காட்சியளிக்கிறாள். அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள் ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், மாலையில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், ‎இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். ஒரே பீடத்தில் மகாவிஷ்ணுவின் சிலை உள்ளது, எனவே பகவதி அம்மனை அம்மேநாராயணா, தேவிநாராயணா, லட்சுமிநாராயணா மற்றும் பத்ரேநாராயணா என்றும் அழைக்கப்படுகிறது. மேலக்காவு கோவிலில் லட்சுமி, நாராயணாவுடன் பிரம்மா, சிவன், கணபதி, சுப்பிரமணியர் மற்றும் சாஸ்தா ஆகியோரின் சிலைகளும் ஒரே பீடத்தில் உள்ளன. மண்ணுக்குள் மறையும் அபிஷேகத் தீர்த்தம்! - சிலிர்ப்பூட்டும் சோட்டானிக்கரை அற்புதங்கள்! கீழ்க்காவு கோவில் கீழ்க்காவு கோவில் கீழ்க்காவு கோவிலில் துர்க்கை வடிவில் (பத்ரகாளி) அம்மனாக காட்சியளிக்கிறாள். இந்த கீழ்க்காவு துர்க்கை அம்மன் பக்தர்களிடமிருந்து தீய சக்திகளை விரட்டுவதாக நம்பப்படுகிறது, மேலும் இங்கு செய்யப்படும் குருதி பூஜை சிறப்பு வாய்ந்தது,மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் நிவாரணம் பெற இங்கு தேடி வருகிறார்கள். கருவறையின் வடகிழக்கு பக்கத்தில் நிற்கும் ஒரு பழங்கால பாலா மரம் நீண்ட இரும்பு ஆணிகளால் அடிக்க பட்டு இருக்கும் , இங்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் குணமடைய இந்த பூஜை செய்யப்படுகிறது.கீழ்க்காவு கோவிலில் துர்க்கை அம்மன், சாஸ்தா, சிவன், கணபதி, நாகர்கள் மற்றும் பிற உப-தேவர்களுக்கான கோயில்கள் உள்ளன. கோவிலின் திருவிழாக்கள்: கும்பம் மாதம் கோயிலின் வருடாந்திர திருவிழா இந்த மாதத்தில் வருகிறது. கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 7 நாள்கள் நீடிக்கும். தினசரி பரா எழுநெல்லிப் பூவும், பின்னர் இந்த நாள்களில் ஆராட்டு நடத்தப்படும். உற்சவத்தின் போது, ​​மாகோம் என்ற முக்கியமான நாள் வருகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான மகோம் தோழல் (தேவி தரிசனம்) மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அம்மன் தங்கம் மற்றும் வைரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு முழு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பாள். காலையிலும் இரவிலும் 7 யானைகளுடன் பூரம் எழுநெல்லிப் பூவும் நடைபெறும். உற்சவம் உத்திரம் ஆராட்டு மற்றும் வலிய குருதி (அத்தம் குருதி) பூஜைகளுடன் உடன் முடிகிறது. மன நோய்க்கு மருந்தாகும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்! #AadiSpecial கன்னி மாதம் நவராத்திரி அகோஷம் என்பது ஒரு பிரபலமான விழா. நவராத்திரி உற்சவத்தின் விஜயதசமி நாளில், வித்யாரம்பம் நடத்தப்படுகிறது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவி முன்னிலையில் மூன்று பாடங்களான வாசிப்பு, எழுத்து மற்றும் எண்கணிதம் கற்பிக்கப்படுகிறது. துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி ஆகியவை மிகவும் முக்கியமானவை. யானை ஊர்வலம் உள்ளது. அன்னதானம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஏற்பாடு செய்யப்படும். விருச்சிகா மாதம் விருச்சிக மண்டல மஹோத்ஸவம் (திருவிழா) மண்டல சீசன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தினசரி அன்னதானம், மேடை நிகழ்ச்சிகள், நாமஜபம் போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த மாதத்தில் திருக்கார்த்திகை திருவிழா வருகிறது. தேவியின் பிறந்தநாளான கார்த்திகை, ரோகிணி, மகாயிரம் ஆகிய மூன்று நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்நாள்களில் எழுநெல்லிப்பு, காட்சி சீவேலி, மேடை நிகழ்ச்சி, தீபாராதனை, கார்த்திகை விளக்கு, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி முதல் 15 நாள்களுக்கு லட்சார்ச்சனை, வேதமுரை அபிஷேகம் நடக்கிறது. நவராத்திரி திருவிழா: சோட்டானிக்கரைக்கு 1 டன் மலர்களால் மாலை அனுப்பும் நிலக்கோட்டை பக்தர்..! கார்கிடகம் மாதம் இந்த காலகட்டத்தில் ராமாயண மாதம் (ராமாயண மாதம்) கொண்டாடப்படுகிறது. தினசரி புராண வாசிப்பு (ராமாயணம், பாகவதம் போன்றவை), தினசரி அன்னதானம், பக்தி உரைகள் மற்றும் சொற்பொழிவு போன்றவை நடத்தப்படுகின்றன - வருடத்தின் புதிய நெல் கடவுளுக்குப் படைக்கப்படும். சிங்கம் மாதம் கோவிலில் திருவோணம் அனைத்து பக்தர்களுக்கும் திருவோண விருந்துடன் (அன்னதானம்) கொண்டாடப்படுகிறது. மேடம் மாதம் விஷு நாளில், 3 யானைகள் மீது விஷுகனி, விஷுசத்யா மற்றும் எழுநெல்லிப்பு நடைபெறும். கோவிலின் சிறப்பம்சங்கள் பஜனம்! பஜனம் என்பது பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் நடைபெறும் ஒரு சிறப்பு பூஜை. பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்தால் மட்டுமே பஜனம் கோர முடியும். இந்த முறை அவர்கள் கோவிலை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள். இந்த நேரத்தில் பக்தர்கள் உப்பு, மிளகாய் மற்றும் புளிப்பு உணவு சாப்பிடுவதில்லை. இந்த பஜனையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மண்டபத்தில் பாட்டு! மண்டபத்தில் பாட்டு என்பது தேவியின் ஆசிகளைப் பெறும் மற்றொரு பூஜை. வெண்கல விளக்குகள் மற்றும் பூக்கள் கொண்டு கோவில் அலங்கரிக்கபட்டு பக்தர்கள் சாடின் துணிகள், அலங்காரப் பொருட்கள், அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை தெய்வத்திற்கு வழங்குகிறார்கள். பிராமணி அம்மா பாட்டு பக்தி பாடல்கள் இடம்பெறும். வழிபாட்டிற்குப் பிறகு அவர்களுக்கு சதுஷ்சாதம் கிடைக்கும். இது ஒரு வகையான இனிப்பு பானம். வலிய குருதி பூஜை! கீழ்க்காவு கோயில் அத்தாழ பூஜைக்குப் பிறகு (மாலையில் முக்கிய பூஜை), பிரபலமான மற்றும் பெரிய பூஜையான வலியகுருதி (பெரிய யாகம்) செய்யப்படுகிறது. குருதி 12 கொப்பரைகளில் (பெரிய பாத்திரம்) தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு இரவும் சுமார் இரவு 8.45 மணிக்கு நடைபெறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு நீங்க இந்த யாகத்தில் கலந்து கொள்வார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை! | Photo Album நித்யத வாழிபாடு! சோட்டானிக்கரை பகவதி கோயிலில் பக்தர்களுக்காக கொச்சி தேவசம் போர்டு நித்யதா (தினசரி வழிபாட்டு முறை) என்ற புதிய வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு பக்தர் தனக்கு ஒதுக்கப்பட்ட தேவசம் லெட்ஜர் கணக்கில் தவறாமல் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தத் தொகையையும் செலுத்தலாம். பக்தர்களின் வேண்டுகோளின்படி தேவசம் தினசரி / வாராந்திர / நட்சத்திர வாரியாக / அல்லது ஆண்டுதோறும் வழிபாட்டு முறையை நடத்தி, பிரசாதம் அவருக்கு விநியோகிக்கப்படும். கோவிலின் வழிபாட்டு நேரம் திங்கட்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 செவ்வாய் கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 புதன்கிழமை   :- காலை 04:00 - மதியம் 12:00 - காலை 04:00 - மதியம் 12:00 வியாழக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 வெள்ளிக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 சனிக்கிழமை   :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 ஞாயிற்றுக்கிழமை :- காலை 04:00 - மதியம் 12:00 - மாலை 04:00 - இரவு 08:45 கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடைவிழா - Photo Album கோவிலுக்கு செல்லும் வழி விமானம் மூலம் :- இந்த கோயில் கொச்சி விமான நிலையத்திலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும் பயண வழி :- கொச்சி விமான நிலையம்-களமசேரி–காக்கநாடு–இரிம்பனம்– கரிங்காச்சிரா -சோட்டானிக்கரா ரயில் மூலம் :- கோயிலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்புனித்துரா ரயில் நிலையம் ஆகும். இது கோயிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோயில் எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இந்த நகரத்தை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. தெற்கு ரயில் நிலையம் :– வைட்டிலா–திரிபுனித்துரா–திருவாங்குளம்-சோட்டானிக்கரா வடக்கு ரயில் நிலையம் :– பாலரிவட்டம்-வைட்டிலா-திரிபுனித்துரா-திருவாங்குளம்-சோட்டானிக்கரா சாலை வழியாக :- எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் பயணம் செய்து திருவங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் செல்லலாம். இது கலூர் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பயண தடம் :- KSRTC பேருந்து நிலையம் – வைட்டிலா- திரிபுனித்துரா- திருவாங்குளம்- சோட்டானிக்கரா கலூர் தனியார் பேருந்து நிலையம்-பாலரிவட்டம்-வைட்டிலா-திருப்புனித்துறை- திருவாங்குளம்-சோட்டானிக்கரா தெற்கிலிருந்து வரும் பாதை :- அங்கமாலி – சோட்டானிக்கரா வடக்கிலிருந்து வரும் பாதை :- அரூர் - சோட்டாணிக்கரை இதை தவிர ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் தனியார் கார்கள் கிடைக்கின்றன, இங்கு வாட்டர் மெட்ரோ ,மற்றும் ட்ரைன் மெட்ரோ வசதிகளும் உள்ளது கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒடுக்கு பூஜை வழிபாடு - சிறப்புப் புகைப்படத் தொகுப்பு! கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ளவேண்டியது # பெண்களுக்கான சேலை அல்லது சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளுக்கு அனுமதி. # ஆண்கள் சட்டை & பனியன் இல்லாத வேட்டி அல்லது கால்சட்டை மட்டும் அனுமதி # பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்தியேக வரிசையில் செல்லலாம். # பக்தர்களுக்கு மதியம் கோவிலில் அன்னதானம் நடைபெறும். # தெற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடம், குளியல் அறை,கழிப்பறை வசதிகள் உள்ளது # கோவில் நுழைவு வாயிலில் பொருள்கள் வைப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. # கோவில் அருகிலேயே உணவகங்கள்,தேநீர் விடுதி கடைகள் உள்ளது # கோவில் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது. # பக்தர்கள் முதலில் கீழ்க்காவு சென்று பின்னர் மேலக்காவு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது கோவிலில் தங்கும் வசதி கோவிலில் தங்கி வழிபாடு செய்ய விரும்புவோர்க்கு வசதியாக தேவஸ்தானம் போர்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அறைகளை வசதிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் செலுத்தியும் முன்பதிவு செய்தும் அந்த அறைகளில் தங்கி வழிபாடு செய்யலாம் . அறைகள் முன்பதிவு செய்வதற்கு :- விடுதி மேலாளர், சோட்டானிக்கரா தேவஸ்வம், சோட்டானிக்கரா,எர்ணாகுளம் மாவட்டம், கேரளா, பின் - 682 312. தொலைபேசி :- 0484 - 2711032 , 2713300 மின்னஞ்சல் :- eo@chottanikkarabhagavathy.orgavathy & chottanikkaratemple@gmail.com விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 22 Mar 2025 7:34 am

‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ - எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை.

தி ஹிந்து 21 Mar 2025 10:14 pm

‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ - எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை.

தி ஹிந்து 21 Mar 2025 9:31 pm

‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ - எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை.

தி ஹிந்து 21 Mar 2025 8:31 pm

‘காதல் உறவால் உங்கள் பிள்ளைகள் உணர்வுகளோடு விளையாடாதீர்!’ - எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டைத் தாண்டி வேறொரு காதலுறவு இருந்தால் அது ஒரு குழந்தையின் மனநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற பார்வை சார்ந்தது இக்கட்டுரை.

தி ஹிந்து 21 Mar 2025 7:31 pm

எளிமையாக வாழ்வது பழமைவாதமா? - தேவையில்லாத விஷயங்களால் வரும் சிக்கல் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்றைய காலகட்டத்தில் 'கீப் இட் சிம்பிள்' என்ற வாசகம் பலருக்கும் எதிர்மறை வாசகமாகக்கூடத் தோன்றலாம். எளிமையைப் பற்றிப் பேசுபவர்கள் பழமைவாதிகள் என்றும் சிலர் எண்ணுவதுண்டு. ஆனால் எளிமை என்பது குழப்பத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் தெளிவாகச் சிந்திப்பதற்கும் நம் மனம் அமைதியாக இருப்பதற்கும் வழிவகுக்கிறது.  நம் வேலை, உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி என எதுவாக இருந்தாலும் சரி, உண்மையில் எது முக்கியமோ அதில் நாம் கவனம் செலுத்த எளிமை நம்மை அனுமதிக்கிறது. எளிமையின் அழகு: எளிமை என்பது நம் சோம்பேறித்தனத்தால் எந்த செயலையும் குறைவாகச் செய்வதல்ல, மாறாக எது தேவையோ அதைச் செய்வது. நீங்கள் ஒரு செயலை எளிமைப்படுத்தும் போது அங்கே தேவையில்லாதவற்றை அகற்றித் தெளிவிற்கான இடத்தை உருவாக்குகிறீர்கள்.  உதாரணமாக, உங்கள் வீட்டில் சுத்தமான ஒழுங்காக அமைக்கப்பட்ட மேசை மற்றும் இன்னொரு இடத்தில் எல்லாம் சிதறிக் கிடக்கின்ற மேசையைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். முதலாவது மேசை படைப்பாற்றல் மற்றும் கவனத்தை ஈர்க்கிறது, இரண்டாவது மேசை மன அழுத்தத்தையும் கவனச்சிதறலையும் உருவாக்குகிறது.  சிக்கல்:   அதிகமான options நம் முன்பு இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமே நம்மிடம் அதிகம் காணப்படும். தேவையில்லாத பலவற்றை நாம் ஆராய்ச்சி செய்து செய்து கொண்டிருப்போம். இந்த குழப்பம் நாம் முடிவெடுக்கும் நேரத்தை அதிகரித்துவிடுகிறது. மகாபாரதக் கதை: துரியோதனனைப் பழி தீர்க்க சகுனி தீட்டிய திட்டம்! எப்படி எளிமையைக் கடைப்பிடிப்பது? முன்னுரிமை: உங்கள் வாழ்க்கையில் முக்கியமான பணிகள் என்ன? உங்கள் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதன் மீது கவனம் செலுத்துங்கள். முக்கியமில்லாத தேவையற்ற எண்ணங்கள் மீதும், செயல்கள் மீதும் கவனத்தைக் குறைத்து விடுங்கள். உதாரணத்திற்கு நாளை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று முந்தைய நாள் இரவே ஒரு டு டூ லிஸ்ட் தயாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அதில் 10 அல்லது 20 பணிகளைப் பட்டியலிட்டு, அதில் எதை முதலில் செய்வது எதைக் கடைசியாகச் செய்வது என்று குழம்புவதற்குப் பதிலாக 3 அல்லது 4 மிக முக்கியமான பணிகளைப் பட்டியலிட்டு அதில் கவனம் செலுத்துவது நிச்சயம் உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.  தெளிவாகத் தொடர்பு கொள்ளுங்கள்:  நீங்கள் உரையாடும் பொழுது, எழுதும் பொழுது, மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பும் பொழுது, சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.   மினிமலிசம்:  உங்களைச் சுற்றி இருக்கின்ற உங்களுக்குத் தேவையில்லாத அனைத்தையும் அகற்றுங்கள். அளவை விடத் தரத்தில் கவனம் செலுத்துங்கள்.  உங்கள் பீரோவிற்குள் இருக்கும் அனைத்து ஆடைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கி குவித்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்கிறதா? இல்லை இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கிறதா?  உங்கள் பழக்கங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை வாழ்வில் முன்னேற்றாத பயனற்ற பழக்கங்களை இன்றே தூக்கி எறியுங்கள். பெரும்பாலான மனிதர்கள் தேவையற்ற விஷயங்களில்தான் அதிக செலவு செய்கின்றனர். எளிமையின் நன்மைகள்: மனத் தெளிவு:  நீங்கள் உங்களை எளிமையாக வைத்துக் கொள்வது உங்கள் கவனச்சிதறலைக் குறைத்துத் தெளிவாகச் சிந்திக்க வைத்து, உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கிறது.  நேர மேலாண்மை:   தேவையில்லாதவற்றை நீங்கள் நீக்குவதன் மூலம், உண்மையில் உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து அதில் அதிக நேரத்தை உங்களால் முதலீடு செய்ய முடியும். நாம் யார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடம்பரத்தைத் தேடி ஓடும் மனிதர்கள் மத்தியில், எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன்.   `அம்மாயி மனசும், ஆலமர சுருட்டும்' - சிறுகதை| My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 21 Mar 2025 12:43 pm

தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 21 Mar 2025 12:03 am

தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 20 Mar 2025 11:31 pm

தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 20 Mar 2025 10:31 pm

தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 20 Mar 2025 8:31 pm

Socotra: 825 வகை தாவரங்கள்; 700 வகை உயிரினங்கள்; வேற்றுகிரகம் போல காட்சியளிக்கும் பாலைவன தீவு!

சகோத்ரா, ஏமனில் உள்ள ஒரு பாலைவனத் தீவு. உலக அளவில் இன்ஃப்ளூயன்சர்களாலும் சுற்றுலா செல்லும் பணக்காரர்களாலும் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த தீவு, சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு தீவாகும். பூமிக்கு உள்ளே ஏதோ வேற்றுகிரகத்துக்கு சென்றதுபோல காட்சியளிக்கும் இந்த தீவுக்கு சுற்றிலும் சிறிய தீவுகள் உள்ளன. இதன் வடக்கே ஏமன் (மத்திய கிழக்கு) மற்றும் கிழக்கே சோமாலியா அருகில் உள்ள நாடுகள். இந்தியப் பெருங்கடலில் கார்டாஃபுய் கால்வாய்க்கும் அரேபிய கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இதனை தனித்துவமான பாலைவன தீவு என்கின்றனர். dragon blood tree முழு பாலைவனமாக இல்லாமல் இந்த தீவில் தனித்துவமான டிராகன் பிளட் மரங்கள், அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகளை ஈர்த்துவரும் இந்த தீவுக்கூட்டத்தை இந்தியப் பெருங்கடலின் Galapagos என அழைக்கின்றனர். இங்கு 4 பெரும் தீவுகள் உள்ளன. சகோத்ரா, அப்துல் குரி, சம்ஹா மற்றும் தர்சா. சகோத்ரா தீவை 2008ம் ஆண்டு உலக பாரம்பர்ய தளமாக அறிவித்தது யுனெஸ்கோ. இந்த தனித்த தீவில் வெயில் காலத்தில் கொடூரமான வெயிலும், மழைக் காலத்தில் காட்டுத்தனமான பருவ மழையும் பெய்வதனால் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாகியுள்ளது. MAP சகோத்ராவின் உள்பரப்பில் பல மலைகள் உள்ளன. அங்கிருந்து பல்வேறு மட்டங்கள் பீடபூமிகள் இருக்கின்றன. அதன் புல்வெளிகளில் அரிதான புற்கள் உள்ளன. இந்த தீவுக்கூட்டம் 25 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது. வறண்ட மலைகள், சுண்ணாம்பு பீடபூமிகள் மற்றும் கடற்கரை சமவெளிகள் என பலவகையான நிலப்பரப்பும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் தீவாக இது விளங்குகிறது. சகோத்ரா அதன் இயற்கை அதிசயங்களைத் தாண்டி, மனித தலையீட்டாலும் அரசியல் காரணங்களாலும் ஆபத்தைச் சந்தித்துள்ளது. வளைகுடா பகுதியிலிருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பயணிக்கும் பாதையில் இருப்பதால், யு.ஏ.இ-க்கு இந்த தீவின் மீது ஒரு கண் உள்ளது. ஏமன் நாட்டின் உள்நாட்டு போரால் சகோத்ரா தீவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சகோத்ராவில் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் பூர்வீகமான சகோத்ரி பழங்குடியினருடன், வெளியில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். Socotra இந்த தீவு ஏன் வேற்றுகிரகம் போல இருப்பதாகக் கூறப்படுகிறது என்ற முக்கிய விஷயத்துக்கு வருவோம். இந்த தீவில் உள்ள 825 தாவர வகைகளில் 37% தாவரங்கள் இந்த தீவைத் தவிர உலகில் வேறு எங்கும் இல்லை. அதேப்போல அங்குள்ள ஊர்வனவற்றில் 90% மற்றும் நில நத்தைகளில் 95% இந்த தீவில் மட்டுமே வசிக்கும் உயிரினங்கள். தாவரங்கள் இங்குள்ள மரங்கள் விசித்திரமானவை. பெரிய அளவிலான குடை போலவும் மர குழாயில் பிங்க் நிற புதர் இருப்பதுபோலவும் விநோதமாக காணப்படும். இந்த 825 தாவரங்களில் 307 அழியும் நிலையில் உள்ளன. Socotra frankincense குடை போல காணப்படும் தாவரத்தின் பெயர் டிராகன் பிளட் மரம். இந்த மரத்திலிருந்து கிடைக்கும் சிகப்பு ரெசின் சாயமாகவும், மருத்துவத்திலும் பயன்பட்டுள்ளது. இங்குள்ள பல டிராகன் பிளாட் மரங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. The Socotra desert rose இங்கு 9 வகையான சாம்பிராணி மரங்கள் (frankincense) உள்ளன. சகோத்ரா பாலைவன ரோஜா (The Socotra desert rose) என்பது மற்றொரு உள்ளூர் மரம். பாம்போ மரம் போல காணப்படும் இந்த மரத்தில் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதில் அரிதாக இலைகளும் பூக்களும் முளைக்கும்போது மிகவும் தனித்துவமானதாகவும் அழகானதாகவும் இருக்கும். விலங்குகள், பறவைகள் இந்த தீவில் 700க்கும் மேற்பட்ட உள்ளூர் விலங்கினங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் சகோத்ரா வார்ப்ளர், சகோத்ரா பன்டிங், பேய் நண்டு, சகோத்ரா சுண்ணாம்பு நண்டு, சகோத்ரா நீர்க்காலி, சகோத்ரா சூரியப் பறவை, எகிப்திய கழுகு, மற்றும் லாகர்ஹெட் ஆமை போன்றவை மிகவும் அரிதானவை. எகிப்திய கழுகு சகோத்ரா ஸ்டார்லிங் Socotra cormorants சகோத்ரா நண்டு இங்கு பலவகையான நண்டுகள், இறால்கள், மீன்கள் இருக்கின்றன. என்றாலும் வௌவால்கள் மட்டுமே இங்குள்ள ஒரே பாலூட்டிகள். தவளை போன்ற நில நீர் வாழ்விகள் ஒன்றுகூட இல்லை. காலநிலை மாற்றமும் இங்குள்ள வளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதும் உயிரினங்களை ஆபத்தில் தள்ளியிருக்கின்றன. எனினும் உள்ளூர் சகோத்ரி மக்கள் வளங்களையும் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். Fish: நன்னீர் மீன்கள், கடல் மீன்கள்... எது உடல்நலனுக்கு சிறந்தது?! சுற்றுலாப் பயணிகளுக்கு... இயற்கை சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த மற்றும் சாகசம் நிறைந்த பயணத்தை விரும்புபவர்களுக்கு சகோத்ரா நிச்சயமாக ஏமாற்றமளிக்காத சுற்றுலாத் தளமாக இருக்கும். அரிதான விலங்குகள், பறவைகளை பார்ப்பதும் மரங்களை ரசிப்பதும் உங்களுக்கு விருப்பம் என்றால், மீன் பிடிக்கவும், கடல் ஆமைகளை ரசிக்கவும், பிசின் சேகரித்து வாழும் மக்களை அறிந்துகொள்ளவும் பிடிக்கும் என்றால் இந்த தீவு உங்கள் பயணத் திட்ட பட்டியலில் இடம்பெற வேண்டும். இங்கு புதைபடிவ ஆய்வு, மலையேற்றம், குகைகளை ஆராய்தல், முகாமிடுதல் (Camping) மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். Travel for Nature Lover: தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 7 முக்கிய சுற்றுலாத் தலங்கள்..!

விகடன் 20 Mar 2025 8:00 pm

தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 20 Mar 2025 7:31 pm

ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்று‌ மாலை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, வானைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தேன். நீல வானில் வெண்மேகங்கள் என்று எங்கோ எப்போதோ படித்த வரி நினைவில் வந்தது. ஆனால் வானத்தில் வெண் மேகங்கள் இல்லாமல், வானம் வெவ்வேறு வண்ணங்களுடன் மாலை நேரத்திற்கே உரிய அழகுடன் காட்சி அளித்தது. சற்றென்று சம்பந்தமே இல்லாமல் , *அந்த நீல நதிக் கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி  நேரம், நான் பாடி வந்தேன் ஒரு ராகம்.. நாம் பழகி வந்தோம் சில காலம் * என்ற பழைய பாடலின் வரிகள் மனதில் வந்து போனது.  வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த வரிகள் ஏன் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டு இருந்தன எனத் தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளைக் கேட்டால் நம்மால் நிச்சயமாக, நதிக் கரையில் ஒருவன் நிற்கிறான், பாட்டுப் பாடிக் கொண்டே ஒரு பெண் அங்கு வருகிறாள், இருவரும்  பழகி பின்  பிரிந்து போன காட்சியைச் சுலபமாகக் கற்பனை‌ செய்து விட முடியும்.  இந்த பழைய பாடலின் வரிகளை, சில வருடங்களுக்கு முன்‌ இன்னொரு பாடலில் துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலைப் பாடும் பாடலில் இணைத்திருப்பார்கள். 'ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா.. உன் சகுந்தலா தேடி வந்தாள்' என‌த் தொடங்கும் அந்தப் பாடல்.. துஷ்யந்தன் - சகுந்தல் கதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். வேட்டையாடச் சென்ற மன்னன் துஷ்யந்தன் மாலினி நதிக்கரையிலிருந்த முனிவரின் ஆசிரமத்தில் சகுந்தலாவைப் பார்த்து விரும்பி, காந்தர்வ முறைப்படி திருமணமும் செய்து கொண்டு, திரும்ப வருகிறேன் என்று சென்ற பின், சாபத்தால் நினைவுகளை இழந்து, சகுந்தலாவை மறந்து விடுவார்.  பிறகு கதை எப்படியோ சென்று, கடைசியில் அவருக்கும் சகுந்தலாவுக்கும் பிறந்த மகன்‌ பரதனை ஏற்றுக் கொள்வதாக முடியும். மகாபாரதத்தில் ஏராளமான கதைகள் இது போன்று உள்ளன. எப்போதாவது படித்தாலோ, இல்லை கேட்டாலோ ..‌ அப்போதுதான் கேட்பது போல் புதிதாகத் தோன்றும்..  ஆனால் இந்த துஷ்யந்தனுக்கு வந்த ஞாபகமறதி எல்லோருக்கும் வந்தால் எப்படி இருக்கும்.  திருமண விஷயங்களில் கூறவில்லை. மற்ற விஷயங்களில்.. சதா ஏதோ ஒரு நினைவு நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.. அது பெரும்பாலும் நாம் துக்கமாக இருந்த நாட்களையோ இல்லை ஏதாவது ஒரு துயரத்தை அனுபவித்ததையோ நினைவூட்டும்‌‌. மறதி என்ற‌ ஒன்று‌ மட்டும் இருந்தால், நம்மில் பாதிப் பேருக்குக் கவலைப்பட நேரமிருக்காது. நேற்றைய தின நினைவுகள், அடுத்தடுத்து வரும் நாட்களில் மனதில் தங்காமலிருந்து விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் எல்லோருக்கும். யாராவது ஒரு‌ முனிவர் வந்து, உனக்கு ஞாபக மறதி உண்டாகட்டும் என என்னைப் பார்த்துச் சபித்தால், அந்த முனிவருக்கு ஆயுட்காலம் முழுவதும் நன்றி தெரிவித்துக் கொள்வேன். ஆனால் அவர்தான்‌ எனக்குச் சாபமளித்தவர் என்பதை மறந்து விட்டால்? வெரி சாரி.‌ முனிவர் எதிரில் வந்து நின்றாலும் என் வாயிலிருந்து தேங்க்ஸ் என்ற வார்த்தை வராமலே போய்விடும்! மகன் தந்தைக்காற்றும்... - சிறுகதை விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 20 Mar 2025 4:55 pm

`இருக்கு ஆனா இல்ல...' - ஐ.நா-வால் `நாடாக'அங்கீகரிக்கப்படாத நாடுகள் பற்றி தெரியுமா?!

எல்லைகள், பாஸ்போர்ட்டுகள், தேசிய கீதங்கள் இவை ஒரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படுகிறது. சில இடங்கள் நாடுகளைப் போலவே செயல்படுகின்றது. ஆனால் அவற்றை உலகின் பிற நாடுகள் நாடுகளாக கருதுவதில்லை. அப்படி நாடுகளாக அங்கீகரிக்கப்படாத இடங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம் டிரான்ஸ்னிஸ்ட்ரியா மால்டோவாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட பகுதி தான் டிரான்ஸ்னிஸ்ட்ரியா. இது ஒரு நாட்டைப் போல் தனது சொந்த நாணயம், அரசாங்கம், ராணுவம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவ்வளவு ஏன் டிரான்ஸ்னிஸ்ட்ரியா தனது சொந்த பணத்தை அச்சிட்டு (வேறு யாரும் ஏற்றுக்கொள்ளாத) ஒரு உண்மையான நாடு போல் செயல்படுகிறது. ஆனால் ஐ.நா இதனை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. சீலாந்து இங்கிலாந்து கடற்கரையில் இருந்து தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அழைத்துக் கொள்ளும் ஒரு சிறிய பகுதி தான் சீலாந்து. அரச குடும்பம், பாஸ்போர்ட்டுகள், ஒரு தேசிய கால்பந்து அணி என ஒரு நாடாக செயல்படும் சீலாந்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. சோமாலிலாந்து ஒரு சாதாரண நாடு செய்யும் அனைத்தையும் சோமாலிலாந்து செய்கிறது. அதற்கென தேர்தல்கள், செயல்படும் அரசாங்கம், நிலையான பொருளாதாரம், சொந்த ராணுவம் என அனைத்தையும் கொண்டுள்ளது.. ஆனாலும் இந்த நாடு அங்கீகரிக்கப்படாத நாடாகவே கருதப்படுகிறது. லிபர்லாந்து இது குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் மேற்குப் பகுதியில் உரிமை கோரப்படாத நிலத்தில் உள்ள ஒரு மைக்ரோநேஷனாகும். 2015 அன்று செக் சுதந்திர ஆர்வலர் விட் ஜெட்லிச்காவால் நிறுவப்பட்டது. ஒரு தனி நாடு போல் செயல்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள எந்த நாடும் லிபர்லாந்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. உலகில் `V' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டது 4 நாடுகள் மட்டும்தானா? -wow Facts

விகடன் 20 Mar 2025 3:06 pm

எல்லா வாகனங்களின் டயர்களும் கருப்பு நிறத்தில் இருக்க காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக கார், டூவீலர் பஸ் என எல்லா வகை வாகனங்களின் டயர்களும் கருப்பு நிறத்தில் மட்டும் இருப்பதை பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம். ஆரம்பத்தில் டயர்கள் வெள்ளை நிறத்தில் தான் இருந்துள்ளது. ரப்பரால் உருவாக்கப்பட்ட இது பால் போன்ற வெள்ளை நிறத்தில் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளை நிற டயர்கள் திடமாகவும் இல்லை, நீண்ட நாள்களுக்கு நீடித்து உழைக்கவில்லை,வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் அதற்கு குறைவாகவே இருந்தது. எனவே அதன் பயன்பாடும் குறைய ஆரம்பித்திருக்கிறது. டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் கார்பன் பிளாக் என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால் நமக்கு இந்த நிறத்தில் டயர்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக தான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. கருப்பு நிற டயர்கள் விரைவாக சேதம் அடையாது. வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் இதற்கு அதிகமாக இருந்தது. வாகனம் ஓட்டும்போது சூடாகும் காரின் பாகங்களிலிருந்து வெப்பத்தை அகற்ற கார்பன் கருப்பு உதவுகிறது. கருப்பு நிறம் சாதாரண தேய்மானத்திலிருந்து ஏற்படும் கீறல்கள் மற்றும் அடையாளங்களை மறைக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கருப்பு நிற டயர்களே சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தான் எல்லா வாகனங்களிலும் கருப்பு நிற டயர்களே பயன்படுத்தப்படுகின்றன. விமானப் பயணத்தில் `பவர் பேங்க்' எடுத்துச் செல்ல தடை ஏன் தெரியுமா? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 20 Mar 2025 3:01 pm

``புடவை விற்பதில் தொழில்முனைவோராக பெருமை கொள்கிறேன்'' - IIT, IIM-ல் பட்டம் பெற்ற பெண்

ஐஐடி, ஐஐஎம்-ல் படித்து பட்டம் பெற்ற ஒருவர் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக பெரும் தொகை சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, புடவை விற்கும் தொழில் தொடங்கியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது தொடர்பாக அனோரா நிறுவனத்தின் நிறுவனர் ராதிகா முன்ஷி தன் அனுபவங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் தெரிவித்துவருகிறார். அவரின் பதிவில், ``நான் மதிப்புமிக்க இந்தியக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி, ஐஐஎம்) படித்து முடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரும் கனவு. ராதிகா முன்ஷி இப்போது எனது பயணத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, ​எனக்கே வியப்பாக இருக்கிறது. நான் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் முதல் மாணவியாகத்தான் படித்து முடித்தேன். ஆனால் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கும்... இப்போது என்னுடையது இந்தப் பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும், தொழில்முனைவோராக இருப்பதன் உற்சாகத்தையும், சவால்களையும் அந்த சம்பள வேலைகளால் ஈடுகட்ட முடியாது. ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களால் நிறைந்துள்ளது. எனவே, அதற்காக நல்ல சம்பளம் தரும் நிறுவன வேலையை விட்டுவிட்டு, எனது சொந்த பிராண்ட் புடவைகளை உருவாக்க நம்பிக்கையுடன் செயல்பட்டேன். ஆரம்பத்தில் புடவைகளை வடிவமைக்கும்போது மிகவும் பயந்தேன். மக்கள் என் புடவைகளை விரும்புவார்களா என்று கூட யோசித்தேன். ஆனால், தீர்க்கமான முடிவுடன் 2023-ல் தொழிலைத் தொடங்கினேன். ராதிகா முன்ஷி ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும், இப்போது எனக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த அன்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் புடவைகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது குறித்த செய்திகளை படிக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். 'உலகின் 6 நாடுகளில் ஒன்று இந்தியா!' - பெருமை சேர்த்த தமிழர்; இனி இஸ்ரோ தலைவர்-யார் இந்த V.நாராயணன்?

விகடன் 20 Mar 2025 7:03 am

ஹெலிகாப்டர், கடல் விமான பயணம்... - கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய திட்டங்கள்!

கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Mar 2025 11:04 pm

ஹெலிகாப்டர், கடல் விமான பயணம்... - கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய திட்டங்கள்!

கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Mar 2025 9:32 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 8:37 pm

ஹெலிகாப்டர், கடல் விமான பயணம்... - கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய திட்டங்கள்!

கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Mar 2025 8:32 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 8:31 pm

ஹெலிகாப்டர், கடல் விமான பயணம்... - கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய திட்டங்கள்!

கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Mar 2025 7:32 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 7:31 pm

ஹெலிகாப்டர், கடல் விமான பயணம்... - கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய திட்டங்கள்!

கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Mar 2025 6:32 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 6:32 pm

`டிக்கெட் கவுன்ட்டர் உனக்கு; குடிநீர் தொட்டி எனக்கு'இரு மாநிலங்களுக்குப் பொதுவான ஒரே ரயில் நிலையம்

இந்தியாவில் பயணம் செய்ய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன என்பது தெரியும், ஆனால் இங்கு ஒரு ரயில் நிலையம் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. நவாபூர் நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் 2 மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. எல்லை என்றவுடன் தூரம் என்று எண்ண வேண்டாம், டிக்கெட் கவுன்ட்டர் மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்தில் அமைந்திருக்கும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா? இந்த ரயில் நிலையம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில மக்கள் அணுகக்கூடியதாக உள்ளது. நவாபூரில் உள்ள ரயில்வே பிளாட்பாரம் மாநில எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்டு, பயணிகள் ஒரு மாநிலத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து மற்ற மாநிலத்திற்குள் நுழையும் வண்ணம் உள்ளது. இரண்டு மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது டிக்கெட் கவுண்டர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் தான். நவாபூர் ரயில் நிலையத்தின் மற்றொரு அம்சம், அதன் பன்மொழி அணுகுமுறை ஆகும். நிலையத்தில் அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் வரும் பயணிகள் சுமுகமான பயண அனுபவத்தை பெறுகின்றனர். நிலையத்தில் உள்ள தகவல் பலகைகளும் இந்த நான்கு மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன. நவாபூர் நிர்வாக அம்சங்களில் மட்டுமல்ல, அதன் வசதிகளிலும் பிரிக்கப்பட்டுள்ளது. ரயில் காவல் நிலையம் மற்றும் கேட்டரிங் சேவைகள் மகாராஷ்டிரா நந்துர்பார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காத்திருப்பு அறை, தண்ணீர் தொட்டி மற்றும் கழிப்பறைகள் குஜராத் தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 800 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த ரயில் நிலையம், 300 மீட்டர் மகாராஷ்டிராவிலும், 500 மீட்டர் குஜராத்தின் எல்லையிலும் உள்ளது. நவாபூர் ரயில் நிலையம் முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஒருங்கிணைந்த மும்பை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இரு தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மே 1, 1961 அன்று, நவாபூர் ரயில் நிலையம் இந்த இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்தது. அப்போதிருந்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கலாசார மற்றும் நிர்வாக எல்லைகளை அழகாக இணைக்கும் இடமாக இது ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றது. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

விகடன் 19 Mar 2025 4:48 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 4:33 pm

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

தி ஹிந்து 19 Mar 2025 3:33 pm

அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ரகசியம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமையானால் வீட்டில் எனக்கு 5 ரூபாய்  கொடுப்பார்கள்… இது 1973இல் நான் தனியாகச் சம்பாதிக்கும் வரை தொடர்ந்தது. அன்றைய 5 ரூபாயின் மதிப்பு இன்றைய 500 ரூபாய்க்கு மேல்.. ஸ்கூலுக்கு செல்லும் நேரம் தவிரத் தினமும் Turkey red oil தயாரிக்கும் வேலை இரண்டு மூன்று மணி நேரம் தினமும் இருக்கும். 5 கிலோ டின்களில் சலவை ஆலைகளுக்கு டர்கிரெட் ஆயிலை எடுத்துச் செல்வேன். அப்பொழுதெல்லாம் ஆசிட் சிலரி வரவில்லை. பின் அடுத்த ஆண்டு ஆசிட் சிலரி வந்தவுடன் சலவை ஆலைகளுக்கு டெண்டர் ஜெண்ட் லிக்யூடை கொடுக்க ஆரம்பித்தோம். ஆசிட் சிலரியை ஒரு பிளாஸ்டிக் டிரமில் ஊற்றி கிளபர்ஸசால்ட் கரைசலை அதில் மெதுவாக ஊற்றி மர கோலில் கலக்க வேண்டும். பின் யூரியா தகுந்த அளவு போட்டுக் கலக்கினால் நுரை பொங்கும் 50 கிலோ டிடர்ஜெண்ட் லிக்யூட் அரை மணி நேரத்தில் ரெடி… ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 வரை வேலை இருக்கும். இது சைசிங் மில்களுக்கும் பஞ்சாலைகளில் பஞ்சை வெண்மையாக்கவும் சலவை ஆலைகளுக்கு வெட்டிங் அவுட் ஏஜென்டுகளாவும் செயல்பட்டது. பனியன் துணிகளை நனைத்து பெரிய தகர டேங்ககில் துணியைப் போட்டு பெரிய அடுப்பில் காஸ்டிக் சோடாவை போட்டு பெரிய அடுப்பில் விறகைப் போட்டு எரித்து, 12 மணி நேரம் கொதிக்க வைத்து பின் பெரிய சிமிட் தொட்டிகளுக்கு மாற்றி நீரில் அலாசி பிளிச்சிங் பவுடரில் நனைத்து சிமிட் தொட்டியுடன் இணைந்திருக்கும் கல்லில் துவைத்து அலாசி நீலமிட்டு பனியன் துணிகளை வெண்மையாக்குவர். வின்ச்சோ சாப்ட்ஃப்ட் ப்ளோ மிஷின்கள் வரும்வரை இது மாதிரி கையாலேயே பனியன் துணிகளை  ப்ளீச்சிங் செய்தார்கள். Turkey red oil-ன் மூலப் பொருட்கள் விளக்கெண்ணெய்யும், சல்பருமாகும். Turkey red oil என்பதன் காரணப் பெயர் துருக்கி ரெட் ஆயில் துருக்கியில் சிகப்பு சாயம் போடவும் பயன்பட்டது. அன்றெல்லாம் விளக்கெண்ணெய் 15 கிலோ கொண்ட டின்னே 20 ரூபாய்தான். மரத்தால் செய்யப்பட்ட பெரிய பீப்பாயில் கீழ் பகுதியில் சிறிய துளை இருக்கும். இதை கார்க்கை  கொண்டு அடைத்து விடுவோம். இதுபோல் ஐந்தாறு பீப்பாயிகள் இருக்கும். இதில் இரண்டு டின் விளக்கெண்ணெய்யை ஊற்றி பழைய குளுக்கோஸ் பாட்டிலிலை தலைகீழாகத் தொங்க விட்டு சல்பரை சொட்டுச் சொட்டாக விட்டு மரத்தடியில் கலக்க வேண்டும். இதற்கு இரண்டு மணி நேரமாகும். 3 பீப்பாய்கள் கலக்க மதியம் 3 மணியாகும்.. மீண்டும் அடுத்த நாள் காலையில் உப்பு கரைசல் நீரை விட்டுக் கலக்கி மீண்டும் அடுத்த நாள் மரப்பீப்பாயின் கீழே உள்ள கார்க்கை திறந்து விட்டு உப்பு கரைசல் நீரை மட்டும் வெளியேற்றி விட்டால் டர்கி ரெட் ஆயில் ரெடி.. திருப்பூர் இன்றைய நிலையை அடைய முன்னோடியாக உழைத்த நூறு குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு ரெடியாக ஆரம்பிப்பேன்.. அன்று அயர்ன் பாக்ஸ் பெரிய அளவில் வீட்டு பயன்பாட்டுக்கு வரவில்லை.. துணிகளை என் நண்பன் சுப்பனிடம் கொடுத்து தேய்ப்பேன். அன்றெல்லாம் துணி தேய்க்க 5 பைசா தான். அன்று 5 பைசாவுக்கு ஒரு சாதா டீயும் (கரும்பு சர்க்கரை டீ) ஒரு  வெங்காய போண்டாவும் சாப்பிடலாம். சில சமயம் என் நண்பன் சுப்பன் நொய்யல் ஆற்றுக்குத் துணி துவைக்கப் போயிருந்தால் வீட்டிலேயே அயர்ன் செய்து கொள்வேன். எங்கள் வீட்டில் குளிக்கச் சுடு நீருக்கு பாய்லரும். சமையலுக்கு குமுட்டி அடுப்பும் இருந்தன ஆகவே கரி மூட்டையாக வாங்கி விடுவோம்.. பழைய அலுமினிய பிளேட்டில் கரிகளை நெருப்பிட்டு சட்டை பேண்ட்டுகளை அயர்ன் செய்து கொள்வேன். சரியாக 5 மணிக்கு நண்பன் கனகராஜன் உடனோ சீனிவாசன் உடனோ கணேசன் உடனோ அல்லது எல்லோருமோ நடந்தே புறப்பட்டு விடுவோம். சினிமா சேர் டிக்கெட் 90 பைசா தான். இண்டர்வலில் டீ சாப்பிட்டால் டீ ஒன்று 5 பைசா தான். சினிமா விட்ட உடன் நடந்தே சப்பாத்தி ஸ்டால் சென்று ஆளுக்கு நான்கு சப்பாத்தி சாப்பிட்டு பாதாம் போட்ட மசால் பால் சாப்பிட்டால் ஆளுக்கு 80 பைசா தான் வரும். இருவருக்கு சினிமா டிபன் போக 5 ரூபாயில் மீதி ஒரு ரூபாய் இருக்கும்! நன்றி,                                       சுதா மோகன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 19 Mar 2025 11:13 am

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Mar 2025 2:51 am

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Mar 2025 2:31 am

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Mar 2025 1:31 am

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Mar 2025 12:31 am

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த நிலையம் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டாலும், உரிமை இந்திய ரயில்வேயிடமே உள்ளது. தனியார் ஏன் நிர்வகிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம், சர்வதேச அளவில் ரயில் நிலையங்களை மாற்ற தனியாரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எட்டு ரயில் நிலையங்களை புதுப்பித்து வருகிறது. சண்டிகர், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச், புனேவில் உள்ள சிவாஜி நகர், புதுடெல்லியில் பிஜ்வாசன் மற்றும் ஆனந்த் விஹார், குஜராத்தில் சூரத், பஞ்சாபில் எஸ்ஏஎஸ் நகர் (மொஹாலி) மற்றும் குஜராத்தில் காந்தி நகர் ஆகியவை இதில் அடங்கும். மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகர் போபாலின் ஹபீப்கஞ்சில் அமைந்துள்ள ரயில் நிலையம், பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு,நாட்டின் முதல் தனியார் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் படி, இந்த ரயில் நிலையம் தனியார் பங்களிப்புடன் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இங்கு ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் உள்ளன. மேலும் இந்த நிலையம் முற்றிலும் சூரிய சக்தியாலேயே இயங்குகிறது. ஓய்வு அறைகள் மற்றும் தங்குமிடங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், ஹபீப்கஞ்ச் நிலையம் ராணி கமலாபதி நிலையம் என மறுபெயரிடப்பட்டது. போபாலின் கடைசி இந்து ராணியாக இருந்த ராணி கமலாபதியின் நினைவாக இந்த ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் ஏன் தேங்காய் எடுத்துச் செல்ல தடை தெரியுமா? - அறிவியல் சொல்லும் காரணம் இதுதான்!

விகடன் 18 Mar 2025 2:59 pm

நரமாமிசம் : மனித கறியை உண்ணும் மனிதர்கள் - விரிவான வரலாறு!

மனிதர்களால் மனிதக்கறியை உண்பது நரமாமிசம் அல்லது ஹியுமன் கானிபலிசம் என்று அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இதை anthropophagy என்று அழைக்கிறார்கள். பொதுவில் கானிபலிசம் என்பதன் பொருள் ஒரு உயிரினம் அல்லது விலங்கு தனது இனத்தின் உடலை சாப்பிடுவதாகும். உண்மையா அல்லது வதந்தியா? முந்தைய காலத்தில் நரமாமிசத்திற்கு நன்கு அறியப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடியினரான கரிப் எனும் ஸ்பானிஷ் பெயரிலிருந்து கரிபேல்ஸ் அல்லது கேனிபேல்ஸ் எனும் வார்த்தை உருவானது. ஆனால் அது உண்மையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்ததா என்ற சந்தேகம் நவீன கால அறிஞர்களுக்கு உள்ளது. கரீப்கள் பல ஐரோப்பிய சக்திகளுடன் காலனித்துவ எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதால், பல வரலாற்றாசிரியர்கள் அச்சத்தைத் தூண்டும் ஒரு பிரச்சார தந்திரமாக இத்தகைய நரமாமிச வதந்திகளை ஸ்பானியர்கள் பரப்பியிருக்கலாம் என்கின்றனர். மறுபுறம், கரிப்ஸ் மக்கள் உடல் உறுப்புகளை கோப்பைகளாகப் பயன்படுத்தியதற்கான சில சான்றுகள் உள்ளன. எனவே நரமாமிசம் சாத்தியம் என்றே வைத்துக் கொண்டாலும் குறிப்பாக ஒரு மிரட்டல் நடவடிக்கை அல்லது போர் நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. எவ்வாறாயினும், ஆரம்ப சாட்சியங்களில் பெரும்பாலானவை கொலம்பஸிடமிருந்து வந்தவை. அவர் கரீப்ஸ் மக்களை முடிந்தவரை காட்டுமிராண்டித்தனமாக காட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களைக் கொண்டிருந்தார். ஆரம்பகால மனித வரலாற்றில் நரமாமிசம் உண்ணும் வழக்கம் பெரும்பாலான கண்டங்களில் உள்ள மக்களிடையே காணப்பட்டது. நரமாமிசம் நரமாமிசம் குறித்த, வரலாற்றின் முந்தைய கால தகவல்கள் தவறாகவோ, மிகையாகவோ இருந்திருக்கின்றன. இருந்த போதிலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், மெலனேசியா – குறிப்பாக பிஜி, நியு கினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் மவோரிகள் போன்ற தீவகளில் நவீன காலம் வரை நரமாமிசம் உண்பது நடைமுறையில் இருந்தது. மேலும் பிலினேசியா தீவுகள், சுமத்ராவின் சில பழங்குடியினர் மற்றும் வடக்கு, தெற்கு அமெரிக்காவின் பழங்குடியினர் சிலரிடமும் இந்தப் பழக்கம் வழக்கத்தில் முன்னர் இருந்தது. சில பிரதேசங்களில் மனிதக் கறி, உணவு வகைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. சில இடங்களில் இது விலங்கு கறிகளின் உணவோடு சமமாக கருதப்படுகிறது. போரில் வெற்றி பெற்ற மவோரிஸ் இனக்குழுவினர் போரில் இறந்த உடல்களின் இறைச்சியை வெட்டி உண்பார்கள். டச்சு நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு சுமத்ரா தீவின் படாக் இனக்குழுவினர் மனித இறைச்சியை சந்தைகளில் விற்றதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் சடங்கு, சம்பிரதாயங்களுக்காக இறந்து போன மனித உடலின் பகுதிகளை நுகர்வது இருந்திருக்கிறது. இது பசி அல்லது உணவுப்பழக்கமாக இல்லாமல் சடங்கிற்கானது. இதன் மூலம் உண்ணப்படும் நபரின் சில குணங்களைப் பெறலாம். அல்லது சூனியத்தின் சக்திகள் பயன்படுத்தப்படலாம் என்று அம்மக்கள் நம்பினர். கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளரான அ. முத்துலிங்கம் ஆப்ரிக்காவில் பணியாற்றிய போது இயற்கையாக மரணமடைந்தவர்களின இதயத்தை சுட்டு அதன் துளியை துக்கம் விசாரிக்க வருபவர்கள் நாக்கில் தடவிக் கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறார். இது இறந்தவர்களுக்கான அஞ்சலியாக பார்க்கப்படுகிறது. சூனியம் ஆப்ரிக்காவில் சடங்கிற்காக நடத்தப்படும் மனிதக் கொலை மற்றும் நரமாமிசம் பெரும்பாலும் சூனியத்துடன் தொடர்புடையது. மனித வேட்டையாடிகள் மற்றும் பிறர், இறந்த எதிரிகளின உடல்கள் அல்லது தலைகளை உட்கொள்வதற்கு காரணம், அவர்களது பண்புகளை உறிஞ்சி, பழிவாங்கும் சக்தியைக் குறைப்பதற்கான வழிமுறையாகக் கருதுகின்றனர். ஆஸ்டெக்குள் நரமாமிசத்தை பெரிய அளவில் கடைபிடித்தனர். மத சடங்கிற்காக போர்க் கைதிகளை கொல்வது, சடங்கு சம்பிரதாயத்திற்காக அவர்களை பலி கொடுப்பது ஆகியவற்றை கடைபிடித்தனர். சில இடங்களில் இறந்த நபரின் உடலை அவரது உறவினர்கள் சடங்கு முறையில் சாப்பிட்டனர். இது எண்டோ கானிபலிசம் என்று அழைக்கப்படுகிறது. சில ஆஸ்திரேலேய பழங்குடியினர் இத்தகைய நடைமுறைகளை மரியாதைக்குரிய செயல்களாக செய்தனர். சில பகுதிகளில் சடங்கின் பொருட்டு நரம்மாமிசம் உண்பது என்பது இரகசிய சமூகங்களின் வழக்கமாக இருந்தது. நரமாமிசம் எனப்படும் கானிபலிசம் எப்படி மனித வரலாற்றில் உருவாகி இருந்தது என்பதற்கு ஏற்றுக்கொள்ளும் விதத்திலான விளக்கம் எதுவுமில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்கள் அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். ஒரு சூழலில் நரமாமிசத்தை உண்பது இயல்பாகவும் மற்றொரு சூழலில் அதை திகிலோடும் பார்க்கலாம். நவீன வரலாற்றின் பரவலாக்கமானது பொதுவாக இத்தகைய நடைமுறைகளை தடை செய்கிறது. இருப்பினும் நவீன சமூகதாயத்தில் வேறு உண்ணும் வழிவகைகள் இல்லாத போது தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் உடல் தேவைக்காக நரமாமிசம் உண்பது வேறு வழியின்றி நிகழ்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் நரமாமிசத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால சில சமயம் அதில் விதிவிலக்காகவம் நடந்து கொள்கிறார்கள். சடங்கு, சம்பிரதாயத்தைத் தாண்டி மனித நாகரீகங்களில் நரமாமிசம் தடை செய்யப்படுதற்கு ஒரு நல்ல உயிரியல் காரணம் உள்ளது. மற்ற மனித உடல்களைச் சாப்பிடுவது உங்களை நோய்வாய்ப்படுத்தும். குறிப்பாக மற்றொரு மனிதனின் முளையைச் சாப்பிடுவது மாட்டிற்கு ஏற்படும் Mad Cow நோயையைப் போல பாதிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் நடுக்கத்தில் ஆரம்பித்து மரணத்தில் முடிகிறது. இதுவும் அப்படியே இருக்காது. `2-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் நரபலி' - அச்சமூட்டும் பின்னணி; பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கைது மடிந்த மக்கள் பப்புவா நியூ கினியாவில் உள்ள, ஃபோர் மக்கள் நரமாமிசத்திற்கு பெயர் பெற்றவர்கள். 1950-களின் பிற்பகுதி வரை அவர்கள் தங்கள் ஆவிகளை சுத்தப்படுத்த உறவினர்களின் உடல்களை உண்டனர். இதில் மூளையைச் சாப்பிடும் “குரு” எனப்படும் நோய்க்கு ஆயிரக்கணக்கான ஃபோர் மக்கள் இறந்து போயினர். அதே நேரம் அவர்கள் அனைவரும் இந்த நோய்க்கு பலியாகவில்லை. கடந்த 200 ஆண்டுகளில் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் ஒரு மரபணு மாற்றத்தையும் அம்மக்கள் தமது உடலில் இயல்பாக உருவாக்கியுள்ளனர். நரமாமிசம் குறித்த இன்றைய பார்வையிலிருந்து நாம் வரலாற்றை நோக்கக் கூடாது. நரமாமிசம் பற்றி சில அடிப்படைக் கேள்விகளுக்கு வரலாற்றாசிரியர்கள் பதிலளிப்பது கடினம். எத்தனை குழுக்கள் நரமாமிசத்தை கடைபிடித்தன? இப்பழக்கம் எப்போது ஆரம்பித்தது? இந்தக் கேள்விகள் கடினமானவை. ஏனெனில் நரமாமிசம் என்பது உண்பது மட்டுமல்லாமல் பல்வேறு விசயங்களை விவரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான நவீன மானுடவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், நரமாமிசம் என்பதற்கு பதிலாக மானுடவியல் என்ற சொல்லை பயன்படுத்த விரும்புகிறார்கள். பலரும் நரமாமிசம் என்பது முந்தயை வரலாறு மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்ததாக நினைக்கின்றனர். ஆனால ஆரம்பகால அமெரிக்க வரலாற்றிலும் நரமாமிசம் ஒரு அம்சமாக இருந்தது. 2013-ம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காலனித்துவ ஜேம்ஸ்டவுனில் நரமாமிசத்தின் ஆதாரங்களைக் கண்டு பிடித்ததாகக் கூறினர். ஆரம்பகால காலனித்துவ வாழ்க்கை எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதற்கான அறிகுறியாகும இது. குறிப்பாக 14 வயது சிறுமியின் மண்டை ஓட்டில் உள்ள அடையாளங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அதன்படி 1609-ஆம் ஆண்டின் கடினமாக குளிர்காலத்தில் குடியேறியவர்களால அந்தச் சிறுமி உண்ணப்பட்டது உறுதியாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போர் வரலாறு முழுவதும் ஐரோப்பாவில் நரமாமிசத்தின் பல பயங்கர சான்றுகள் உள்ளன. அதில் வினோதமான ஒன்று ஜெர்மனியில் நடந்திருக்கிறது. கி.பி 1600 முதல் 1800 வரை மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்பாகங்களை மருத்தவ காரணத்திற்காகவும், தமது வருமானத்திற்காகவும் விற்றதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது நரமாமிசத்தின் தேவை பசி, பஞ்சம், போர் முற்றுகை காரணமாக இருந்ததைக் காணமுடிகிறது. சான்றாக 872 நாட்கள் ரசியாவின் லெனின் கிராட் முற்றுகையிடப்பட்டபோது அங்கே நரமாமிசம் சாப்பிட்டதிற்கான அறிக்கைகள் இருக்கின்றன. அனைத்து பறவைகள், எலிகள், செல்லப் பிராணிகளை சாப்பிட்ட பிறகு வேறு ஏதுமின்றி மனிதக்கறியை சாப்பிட்டதாக தெரிகிறது. இதன் பொருட்டு நரமாமிசத்தை எதிர்த்துப் போராட லெனின் கிராட் காவல்துறை ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியது. 1941-42 ஆண்டுகளில் சுமார் 28 இலட்சம் சோவியத் போர்க்கைதிகள் ஹிட்லரின் நாஜிக் காவலில் இறந்தனர். 1941 குளிர்காலத்தில் பட்டினி மற்றும் நோயினால் கற்பனை செய்ய முடியாத அளவு மரணம் ஏற்பட்டது. இந்த கொடூரமான பட்டினி, நரமாமிசத்தின் சில சம்பவங்களுக்கு வழி வகுத்த்து. இவை சூழல் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இரண்டாம் உலகப் போரில் சில இடங்களில் ஜப்பான் வீர்ர்கள் மனிதக் கறி சாப்பிட்டதும் பதிவு செய்ப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆப்ரிக்காவில் நடந்த பல உள்நாட்டுப் போர்களில் குறிப்பாக இரண்டாம் காங்கோ போர், லைபீரியா, சியாரா லியோனில் நடந்த உள்நாட்டுப் போர்களில் நரமாமிசம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அகோரிகள் எனப்படும் நமது நாட்டு துறவிகள், மனித சதையை உண்பது வயதானதைத் தடுப்பதோடு ஆன்மீக மற்றும் உடல் நலன்களை வழங்குகிறது என்று நம்புகிறார்கள். அவர்கள் இறந்தவுடன், தங்கள் உடலைத் தானாக முன்வந்து தமது பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே சாப்பிடுவதாகக் கூறுகின்றனர். இருப்பினும், அகோரிகள் அடிக்கடி தகனம் செய்யும் இடத்தில் (அல்லது இறுதிச் சடங்கு) உடல்களை எடுத்துச் செல்வதாகத் செய்திகள் தெரிவிக்கன்றன. இன்றும் அவ்வப்போது சூனியம், தொழில், கட்டிடம் கட்டுவது போன்றவற்றிகாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நரபலி கொடுப்பது ஊடகங்களில் வெளியாகிறது. எனவே நரமாமிசம் சாப்பிடாத நாடுகளோ, வரலாறோ கிடையாது. அதேநேரம் அதை இன்றைய நாகரீகப் பார்வையோடு பார்ப்பது தவறு. குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அவை வேறு வழியின்றி நடந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 18 Mar 2025 2:49 pm

Tattoo: சமந்தா கருத்து முதல் ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி வரை; டாட்டூ சொல்லும் வரலாறு | Explained

நடிகை சமந்தா ஒருமுறை இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தபோது ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று கேட்க, ` அவர், எப்போவும் பச்சை குத்திக்கக் கூடாதுனு எனக்கு நானே இப்போலாம் சொல்லிக்கிறேன். அதனால நீங்களும் எப்போவும் பச்சை குத்திக்காதீங்க எனப் பேசினார். நடிகர் ஜெயசங்கர், ஜெயசித்ரா நடிப்பில் 1971-ம் ஆண்டு வெளியான 'சினிமா பைத்தியம்' என்ற படத்தில் நடிகர் ஜெய்சங்கரின் பரம விசிறியான ஜெயசித்ரா, தன் கையில் ஜெய் என்று பச்சை குத்திக் கொண்டிருப்பார். திரையில் தெரிவதையெல்லாம் உண்மையென நம்புவார். ஆனால், ஒருநாள் உண்மை தெரியவரும்போது, கொள்ளிக் கட்டையால் பச்சை குத்திய தனது கைப்பகுதியை எரித்துக் கொள்ள முயல்வார். சமந்தா - Tattoo அதேபோல அரசியலிலும் ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் உருவத்தைக் கையில் பச்சைகுத்திக் கொள்ள வேண்டும் என்று கூற, அ.தி.மு.க-வினர் பலர் தங்கள் கட்சி விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணா உருவத்தை தம் கையில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர் அவர்களில் சிலர் வேறு கட்சிக்கு மாறிய போதுதான் அவர்களுக்குச் சோதனை தொடங்கியது. கையில் பச்சை குத்தியதை மறைக்க, முழுக்கைச் சட்டை அணிந்து திரிந்தனர். இன்னொருபக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் டாட்டூ போட்டுக்கொண்ட 6 பேர் எச்.ஐ.வி-யாலும், பலர் தோல் சம்பந்தமான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அரசு ஆவணம். இப்படி சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள், பொதுமக்கள் வரை `பச்சை குத்துதல்' என்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைப் பிரச்னைக்கு காரணமான டாட்டூவின் வரலாறு என்ன? எப்போது எங்கே தொடங்கியது? இதன் மறைக்கப்பட்ட இன்னொரு பகுதியை அலசுகிறது இந்தக் கட்டுரை. பழங்கால டாட்டூ டிசைன்கள் - Tattoo டாட்டூவுக்கு டாட்டூ எனப் பெயர் வைத்தது யார்? அடையாளமிடுதல் எனப் பொருள்படும்படியான சமோவான் வார்த்தை டாட்டாவ். இந்த வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் டாட்டூ. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர்தான் இந்த வார்த்தையை ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது. அப்போது முதல் சமீபகாலத்துக்கு முன்புவரை டாட்டூ வரையும் திறன் அப்பாவிடமிருந்து மகனுக்கு எனப் பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும், பச்சை குத்துதல் என்பது ஒரு சமூகத்தில் தலைமைப் பொறுப்புக்கு ஒருவர் உயர்ந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் பல்வேறு சமூகங்களில் பச்சை குத்துதல் எனும் விழாவே நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த டாட்டூ எப்போது, எப்படிப் பிறந்திருக்கும். வடுவும் - டாட்டூவும்! வேட்டையாடி உண்ணுதலில் தொடங்கி, போர்களால் தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதுவரை இந்த மனிதம் இனம் பல்வேறு காயங்களைச் சுமந்திருக்கிறது. சாதாரணத் தோலுக்கும் வடு இருக்கும் தோலுக்குமான வித்தியாசத்தில் காணப்பட்ட அழகிலிருந்து இந்த டாட்டு கலாச்சாரம் தோன்றியிருக்கலாம். குறிப்பாகத் தென் அமெரிக்காவில் இப்படித்தான் இந்தக் கலாச்சாரம் தோன்றியிருக்கிறது என நம்புகிறார் 19-ம் நூற்றாண்டின் ஜெர்மன் இனவியலாளரும், ஆய்வாளருமான கார்ல் வான் டென் ஸ்டீனென் (Karl von den Steinen). பாரம்பரிய டாட்டூவுடன் அல்ஜீரியாப் பெண் - 1935 இரத்தபோக்கைத் தடுக்க தாவரச் சாறுகளைக் காயங்களில் தேய்ப்பதால் வடு நிறமாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக வரும் அலங்காரமும் பச்சை குத்திக்கொள்வதின் வரலாறாக இருக்கலாம். வட அமெரிக்க அப்பாசி(Apache), கோமாஞ்சே (Comanche) வீரர்கள் போர் காயங்களில் மண்ணைத் தேய்த்து, வடுக்களைப் பெரிது படுத்தியிருக்கின்றனர். அதன்மூலம் பழங்குடியினருக்கும் இந்தக் கலாச்சாரம் பரவியிருக்கலாம் என்கிறது ஆய்வு. அதே நேரத்தில் நியூ கினியாவின் பிக்மிகள் தோலில் உள்ள கீறல்களில் மூலிகைகளைத் தேய்த்து தொற்றுகளுக்கு சிகிச்சையளித்தனர். இதனால் நிரந்தர வடுக்கள் ஏற்பட்டன என்றும் அது பிற்காலத்தில் அடையாளமாகவும், பாதுகாப்பாகவும், அழகுக்கலையாகவும் வளர்ந்திருக்கலாம் எனப் பல்வேறு கதைகளும், கருத்துகளும், உறுதிப்படுத்தப்படாத ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. தீக்காயம், அம்மை, காது குத்துதல் தடுப்பூசி: இவற்றால் உருவாகும் கீலாய்டு தழும்புகள் ஆபத்தானவையா? எப்போது தொடங்கியது இது? உலகில் முதன்முதலில் பச்சை குத்துதல் என்ற வழக்கம் கி.மு 6000-ம் ஆண்டு தென் அமெரிக்காவின் பெருவில், பண்டைய பழங்குடியினரில் ஒன்றில் தோன்றியிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆனால், அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 5,200 ஆண்டுகள் பழமையான மம்மி எட்ஸி தி ஐஸ்மேன் இத்தாலிய - ஆஸ்திரேலிய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மம்மியின் உடலில் 61 இடங்களில் பச்சை குத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பச்சைகுத்துதல்கள் அனைத்தும் மருத்துவம், அல்லது சடங்குகள் சார்ந்து இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமையான சைபீரிய இளவரசனின் மம்மி - டாட்டூ பெர்சியர்களிடமிருந்து பச்சை குத்துவதைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆரம்பக் காலங்களில் (கிமு 8 முதல் 6 வரை) பச்சை குத்துவதைக் காட்டுமிராண்டித்தனம் என்றே கருதியிருக்கின்றனர். அதனால், தப்பிக்க முயலும் அடிமைகள், குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் பச்சைகுத்துதல் மெல்லத் தொடங்கி வளர்ந்திருக்கிறது. எகிப்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் எனப் பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களின் ஒரு பகுதியாகப் பச்சை குத்துதல் இருந்திருக்கிறது. கவனிக்கப்பட்ட ஜப்பான் கலாச்சாரம்: டாட்டூ விவகாரத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சிக்கல்கள் இருந்ததுபோல, ஜப்பானியக் கலாச்சாரத்திலும் சிக்கல் இருந்தது. பச்சை குத்துதலை ஜப்பான் கலாச்சாரம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பெரும் குற்றச் செயல்களான யாகுசா (சூதாடுதல், வழிப்பறி, கொள்ளை)வுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுப் புறக்கணித்தது. அதனால், சட்டவிரோதிகளுக்கான (நெற்றிகளிலும் கை,கால்களிலும்) பச்சை குத்துதல் தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்தக் குற்றவியல் பச்சை குத்தப்பட்டவர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களுடனான வணிகம் மட்டுமல்லாமல் எந்த வேலையிலும் அவர்களை பணியமர்த்தப்படாமல் முற்றிலுமாக புறக்கணித்தனர். ஜப்பான் டாட்டூ அதே காலகட்டத்தில், சமூகத்தின் கீழ் அடுக்கிலிருந்த மக்கள், இன்றைய ஜப்பானிய அலங்கார பச்சை குத்தல்களுக்கு அடிப்படையாக இருக்கும் 'ஐரேசுமி' எனப்படும் தங்கள் சொந்த பச்சை குத்தும் வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் பச்சை குத்தியிருப்பவர்கள் அனைவரும் யாகுசா குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்ற அந்த பிம்பத்தை அடித்து உடைக்கும் ஒரு புரட்சிகரமான செயல்பாடாக 'ஐரேசுமி' பச்சைகுத்துதல் மாறியது. அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பச்சை குத்துதல் பயன்பாட்டை மீட்டுருவாக்கம் செய்தனர். இந்தியாவும் டாட்டூ எனும் கலாச்சார சங்கிலியும்! மத்திய இந்தியாவில் காணப்படும் 10,000 ஆண்டுகளுக்கும் பழமையான பழங்கால பாறை ஓவியங்களில் 'டாட்டூ' அலங்காரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் இந்தப் பச்சைகுத்தும் கலாச்சாரம் இருந்ததாக வரலாற்று, மானுடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பச்சை குத்தும் வழக்கம் பழங்குடி மக்களிடம் இன்றும் காணப்படுகிறது. இந்தியாவில் பச்சை குத்துதல் அடையாளத்துக்காக, பாதுகாப்புக்காக, அதிஷ்டத்துக்காக, பக்திக்காக, அழகுக்காக எனப் பல்வேறு முறையில் பயன்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு சில பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கலாம்.... பழங்குடியினப் பெண் - டாட்டூ அபதானி பழங்குடியினர்: அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் அபதானி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இளம்பெண்களின் முகத்தில் கோடுகளை பச்சைகுத்தும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஒரே பகுதியில் பல்வேறு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வதுண்டு. அப்படிப் பிறப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் இனத்து அழகான பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வது வழக்கமான இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அவர்களின் அழகைக் கெடுக்கும் வகையில், அவர்களின் முகத்தில் கோடுகளை வரைகிறார்கள். அபதானி பச்சை குத்தும் நடைமுறையில், தோலில் முட்களின் மூலம் கோடு வரைந்து, அடர் நீல நிறத்துக்கு விலங்குகளின் கொழுப்பைச் சூடாக்கி பச்சை குத்தப்பட்டது. அதனால் ஏற்படும் காயம், தொற்று போன்றவற்றால் அது பெரிதான வடுவாகவும், பச்சை குத்துதலாகவும் மாறும். 1970-களில்தான் இந்திய அரசு இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது. ஆனால் வடகிழக்கில் இன்னும் முறையான அரசு அதிகாரம் செல்லுபடியாத இடங்களில் இந்த நடைமுறை இன்னும் தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பழங்குடியின டாட்டூ சிங்போ பழங்குடியினர்: அஸ்ஸாமிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் வாழும் சிங்போ பழங்குடியின மக்கள், ஆண் - பெண் எனத் தனித்தனியாக பச்சைகுத்துதல் விதிகளை வகுத்திருக்கிறது. திருமணமான பெண்கள் கணுக்கால் முதல் முழங்கால் வரை இரு கால்களிலும், ஆண்கள் தங்கள் கைகளிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். திருமணமாகாதவர்களுக்குப் பச்சை குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கிறது. நாகாலாந்தின் வேட்டைக்காரர்களான கோன்யாக்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், போரில் தங்கள் திறமையையும், எண்ணிக்கையையும் குறிக்க முகங்களில் பச்சை குத்திக் கொண்டனர். போரில் இறந்த பிறகு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், பழங்குடிகளின் அடையாளத்தை நிறுவவும் இவர்கள் பச்சைகுத்திக்கொள்கிறார்கள். மேலும், பச்சை குத்தும்போது ஏற்படும் வலியைத் தாங்குவது ஆண்மை என்றும், தைரியம் என்றும் ஆண்கள் கருதுகின்றனர். பச்சை குத்திக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தாங்கும் பெண்களுக்குப் பிரசவ வலியைப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அபதானி பழங்குடியினப் பெண் பைகா பழங்குடி: பைகா பழங்குடியினப் பெண்கள் தங்கள் பச்சை குத்தும் பயணத்தை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்குகிறார்கள். 8 முதல் 10 வயதுக்குள், அதாவது பருவமடைவதற்கு முன்பு, நெற்றியில் முதல் பச்சை குத்திக் கொள்கிறாள். இந்த பச்சை குத்துவதுதான் அவள் பெண்மையுடன் மாறுவதற்கான அடையாளமாக மாறுவதாகவும், விரைவில் தனது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறாள் என்பதை அவளுக்கு நினைவூட்டவும் இந்த முறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், நமது ஊரில் மஞ்சள் நீராட்டுவிழா நடத்துவதுபோல, அந்தச் சிறுமி திருமணத்துக்குத் தயாராகிவருகிறாள் என்பதைக் குறிப்பிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த சிறுமி பருவ வயதை நெருங்கிவிட்டால், அதாவது 15 முதல் 18 வயதுக்குள், அவள் முதுகில் பச்சை குத்தப்படுகிறது. அதன்மூலம் அவளுடைய கவர்ச்சியை அதிகரிப்பதாக நம்புகிறார்கள். அந்தப் பெண்களின் பாரம்பரிய உடையும், முதுகில் குத்தப்பட்ட டாட்டூ வெளியில் தெரியும்படி தான் வடிவமைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் அந்தப் பெண் கைகளில் ஒன்றன்பின் ஒன்றாகப் பச்சை குத்திக் கொள்கிறாள். அதன்மூலம் சமூகத்தில் அவளின் பங்களிப்பைக் குறிப்பதாகவும், சடங்குகள், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதைக் காட்டுவதாகவும் நம்புகிறார்கள். டாட்டூ நாயகன்கள் திருமணமானதுடன் அந்தப் பெண்ணுக்குக் கால்களில் பச்சை குத்தப்படுகிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அந்தப் பெண் முழுமையாக ஈடுபடுவதைக் குறிக்கும் ஒரு அடையாளமாகும். பிரசவத்திற்குப் பிறகு, இறுதியாக அந்தப் பெண்ணின் மார்பில் பச்சை குத்தப்படுகிறது. இது தாய்மையையும், அவளுடைய குடும்பத்திற்குள் அவள் வகிக்கும் பங்கையும் குறிக்கும் ஒரு வடிவமைப்பு. இப்படி பைகா பெண்களுக்கு, இந்த பச்சை குத்தல்கள் ஒரு வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது. ஆனால், பெண்களைக் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் அடிப்படை நோக்கமாக நம்மால் கவனிக்க முடிகிறது. தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொருத்தவரை பச்சை குத்துதல் என்றால் அது குறவர் சமூக மக்கள்தான் பிரதானம் என்ற நிலை இன்றளவும் நீடிக்கிறது. காடுகளிலிருந்து நாடோடி சமூகமாக மாறிய குறவர் சமூகம், காலப்போக்கில் டாட்டூ கலைக்கு பிரத்தியேகமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சியைச் சேர்ந்த சீதா, ``எங்கள் சமூக மக்கள் கலைகளில் கை தேர்ந்தவர்கள். அப்போதுமுதல் இப்போதுவரை பச்சை குத்துதலில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள். ஆனால், சமீபமாக டாட்டூ எனும் மாடல் கலாச்சாரம் பெருகிவிட்டதால் அதில் பெரியளவில் எங்கள் சமூகம் இப்போது இல்லை. சீதா ஒவ்வொரு பச்சை குத்துதலுக்கும் ஒரு காரணம் உண்டு. பச்சை குத்திக்கொள்பவர்களின் அடிப்படை ஒன்றுதான் 'மரணமடைந்தால் அணிந்திருக்கும், உடை, நகை என எதுவும் என்னுடன் வரப்போவதில்லை. அதனால், பச்சை குத்திக்கொண்டால் அது என்னுடன் வரும்' எனக் கருதுகிறார்கள். மேலும், தேள் படத்தைப் பச்சை குத்தினால் தேள் கடிக்காது, பாம்பு படத்தை பச்சைகுத்தினால் பாம்பு கடிக்காது, கடவுள் பாதுகாப்புக்காகக் கடவுள் சார்ந்த வேல், சூலம், உடுக்கை, கடவுள் படங்கள் எனக் குத்திக்கொள்வதும் உண்டு. சிலர் ஜோசியர் கூறும் படங்களையும் பச்சைகுத்திக்கொள்வார்கள். அதன்பிறகு, காதலர்கள், கணவன் - மனைவி பெயர்கள், குழந்தையின் கைதடம் எனக் காலத்துக்கு ஏற்றார்போல் எல்லாம் மாறிவருகிறது. எங்களைப் போலத் தத்ரூபமாக பச்சைகுத்துபவர்கள் யாரும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது எங்களிடம் பச்சைகுத்திக்கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், எங்கள் குழந்தைகளின் கைகளில் இன்றும் வரையும் கலை அருமையாக இருக்கிறது. அவர்களுக்கு அரசு சார்பில் உரியப் பயிற்சி கொடுத்தால் இன்னும் மின்னுவார்கள் எனத் தகவலோடு கோரிக்கையையும் சேர்த்துப் பேசிமுடித்தார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பழங்குடியின மக்களிடம் இன்றும் பச்சைகுத்தும் வழக்கம் இருக்கிறது. டாட்டஊ தமிழ்நாட்டின் சில சமூக மக்களிடம் இருக்கும் நம்பிக்கையில், `இறந்தவருக்கு இறந்தபிறகு கிடைப்பது உடலில் குத்திய பச்சையும், உறவினர் கொண்டு வரும் பச்சை தானியமும்' என்ற நம்பிக்கை தென்மாவட்டத்தின் ஒரு சமூகத்தினரிடம் தொடர்கிறது. இறந்தவர் வீட்டிற்கு உறவினர்கள் பாத்திரத்தில் நிரப்பிய பச்சை நெல் கொண்டு செல்வது இன்றளவும் பின்பற்றும் பண்பாடு. பச்சை குத்திய உடம்பில் நோய் தங்காது என்பதும் அவர்களின் நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பச்சை குத்திக்கொள்ளும் பழங்குடியினர் தங்களின் (சமூக, சாதி, அடக்குமுறை) அடையாளம், மரணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கு, தீய சக்தி, விஷ ஜந்துக்கள், மரணம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு என இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் பச்சைகுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. வேண்டாம் டாட்டூ மோகம்... கொட்டிக்கிடக்கும் ஆபத்துகள்... எச்சரிக்கும் மருத்துவர்! எதிர்க்கும் பெண்கள்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறச் சமூகங்களில், கோட்னா என்று அழைக்கப்படும் பச்சை குத்திக்கொள்ளும் முறை கட்டாயமாக இருந்தது. அதை எதிர்க்கும் பெண்களின் ஒருகுழு, பச்சை குத்திக்கொள்வதும், ஆபரணங்கள் அணிவதற்காகக் காது மற்றும் மூக்கில் துளையிட்டுக்கொள்வதும் பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளங்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தோம். அதற்குக் காரணம், எங்களின் அம்மாக்கள். அவர்களின் உடலில் இரண்டு இடங்களிலும், அவரின் அம்மா இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பச்சை குத்தியிருந்தனர். ராமநமி இயக்கம் நான் பச்சை குத்திக்கொள்ளாவிட்டால், நீ புனிதமற்றவள் என்று கருதி உன் புகுந்தவீட்டில் இருப்பவர்கள் உன் கைகளால் தண்ணீர்கூட வாங்கமாட்டார்கள் என்று மிரட்டப்பட்டதாக எங்களின் பெற்றோர்கள் கூறியிருக்கிறார்கள். பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பதென்பது எனக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிமட்டுமல்ல. நான் போராடிப் பெற்ற சுதந்திரத்தை உறுதிப்பட வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். அதனால், எனக்கு நானே கோடு கிழித்து பச்சை குத்திக்கொள்ளமாட்டேன் எனப் புரட்சிக் கொடியையும் தூக்கியிருக்கிறார்கள். ராமநமி இயக்கம் சாதிக்கு எதிராக டாட்டூ: சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பட்டியலின ராம பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாலும், பொதுக் கிணறை பயன்படுத்த மறுக்கப்பட்டதாலும் 19-ம் நூற்றாண்டில் இந்துகளால் ராமநமி சமாஜ் எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. அதாவது கடவுள் ஒரு இடத்தில் மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்குமட்டுமல்ல என்பதை உணர்த்தும் விதமாக உடல் முழுவதும் ராமரின் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியாக இப்போதும், சத்தீஸ்கர் மாநிலத்தின் குறைந்தது நான்கு மாவட்டங்களில் 100,000 மேற்பட்ட எண்ணிக்கையிலான ராம்நாமிகளின் பச்சை குத்திக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இப்படி டாட்டு போட்டுக்கொண்டும், டாட்டூ போட்டுக்கொள்ளமாட்டோம் என்றும் டாட்டூவை எதிர்ப்புக்கான ஆயுதமாகவும் பயன்படுத்தியிருக்கிறது இந்த மனித இனம். பச்சை குத்தப் பயன்படும் மை? சித்தர் மரபு, சித்த வைத்தியம் என உணவையே மருந்தாக்கிய தமிழ்ச் சமூகம் பச்சை குத்த மையையும் அப்படியே தயாரித்திருக்கிறது. மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்தரைத்து, ஒரு துணியில் கட்டி, தீயிட்டு எரித்துக் கரியாக்கியிருக்கிறார்கள். அந்தக் கரியில், தண்ணீர் விட்டு பசையாக்கி, கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி தேவையான உருவங்களை வரைந்து, பின் வெந்நீரில் கழுவி சுத்தம் செய்வது குறவர் முறை. மற்றொரு முறையில், மஞ்சள், விளக்கெண்ணெய், கரியாந்தழைச்சாறு கலவையே பச்சைக்கான மூலம். அவுரி சில இடங்களில் காட்டு அவுரி நீலச் செடி சாறும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் தாய்ப்பால், அகத்திச்சாறு, பாகற்காய் சாறு இம்மூன்றில் ஒன்றைக் கலந்து ஊசி, மூங்கில் முள், எலுமிச்சை முள் கொண்டு கோட்டுருவாக வரைந்து, அந்தப் படத்தின் மீது பச்சை குத்துகின்றனர். கரியாந்தழைச்சாற்றின் குரோமிய ஆக்சைடே தோலில் பரவி வடிவம் அழியா பச்சை வண்ணம் தருகிறது. அல்சைமர் நோயாளிகளுக்கு இலவச டாட்டூ... முதியவர்கள் தொலையாமல் இருக்க சீன பார்லரின் முயற்சி! பொதுச் சமூகத்தில் டாட்டூ: இப்படி பழங்குடியின மக்கள், அல்லது அடக்குமுறைக்குள்ளான மக்களிடம் மட்டுமே இருந்த இந்த டாட்டூ கலாச்சாரம் பொதுமக்களிடம் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சியின் போது (1858–1947), காலனித்துவ அதிகாரிகள் இந்தியாவில் பச்சை குத்துவதை காட்டுமிராண்டித்தனமானது எனக் குறிப்பிட்டுத் தடைவிதித்தனர். அதனால், பல இந்தியர்களுக்கு, பச்சை குத்துதல் என்பது எதிர்ப்பின் மொழியாக உருவெடுத்தது. அதன் தொடராக மெல்ல தமிழ்ச்சமூகத்தில் தந்தை, கணவனின், தாயின் பெயர்கள் பச்சைகுத்திக்கொள்ளப்பட்டன. டாட்டூ கலைஞர் மல்லிகா 1900-களின் பிற்பகுதியில், பிரபலமான அமெரிக்கப் பத்திரிகைகளில் பச்சை குத்துதல் தொடர்பான படங்கள் வெளியாகத் தொடங்கி ஜனரஞ்சகமாக்கத் தொடங்கியது. 1972-ம் ஆண்டில் 'ஃபேஷன்' என்ற வடிவத்தில் பண்டைய கலையின் மறு தோற்றங்கள் என்ற அடிப்படையில் பாப் பாடகர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை டாட்டூ வரைந்துகொள்ளத் தொடங்கினர். இந்த மாற்றத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்கள் 1981-ம் ஆண்டு MTV பாப் இசைக் கலைஞர்கள் இளைஞர்களிடையே பாப் இசைக் கலாச்சார உரையாடலைத் தொடங்கினர். `உடம்பில் டாட்டூ' - தகுதி வாய்ந்தவர்கள் குத்தினாலும் ஆபத்தா? - ஒரு விரிவான பார்வை! அப்போதுதான் இந்த டாட்டூ விவகாரம் உலகளாவிய பச்சை குத்தல் மரபுகளைத் தனித்துவமான வழிகளில் மக்களிடம் சேர்ந்தது. இதன் உச்ச வடிவமாக மாறியது ஹவாய் தீவில் நடத்தப்படும் டாட்டூ பாரம்பரியத் திருவிழா. ஹவாய் தீவில் டாட்டூ இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது. ஆண்கள் டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்குப் பெண் தரமாட்டார்களாம். மாறாத மச்சம் போன்ற அங்க அடையாளங்களில் ஒன்றாக, முக்கிய ஆவணமாக டாட்டூ அங்கீகரிக்கப்படுகிறது. டாட்டூ கலைஞர் மல்லிகா டாட்டூ எத்தனை வகை தெரியுமா? இன்று இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் செலுத்தும் டாட்டூ குறித்து மேலும் தெரிந்துகொள்ளச் சென்னையில் Laughing Budda Tattoos ஸ்டுடியோ நிறுவனர் டாட்டூ கலைஞர் மல்லிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``மௌரி ஸ்டைல், டிரெடிஸ்னல் ஸ்டைல், அமெரிகன் டிரெடிஸ்னல் ஸ்டைல், மினிமஸ் ஸ்டைல், டாட் வொர்க் ஸ்டைல், லைன் ஸ்டைல் இப்படி டாட்டூவில் 15 முதல் 20 ஸ்டைல் இருக்கிறது. முன்பெல்லாம் ஹார்ட், ஹார்ட் பீட், பட்டாம்பூச்சி, பூ போன்றவைதான் ட்ரெண்டில் இருந்தது. இப்போதெல்லாம் அப்படி யாரும் பெரிதாக விரும்புவதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் 'minimalist sticker tattoo'. அதாவது சிறிய வகையிலான டாட்டூகள், அதிக வேலைப்பாடுகளுள்ள கலைநயமிக்க artistic டாட்டூகளையே விரும்புகிறார்கள். உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் டாட்டூ போட்டுக்கொள்ளலாம். ஆனால் தற்போது மேல்கை பகுதியில் போட்டுக்கொள்ளவே விரும்புகிறார்கள். தவறான டாட்டூ ஸ்டுடியோகளில், போதுமான சுத்தமில்லாத, டாட்டூவை முறையாகப் படிக்காதவர்களின் ஸ்டுடியோகளில் டாட்டூ போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் வரலாம். தற்போது முழு கையிலும் டாட்டூ போடுவதற்கு ரூ,5000, ரூ,6000 என்றெல்லாம் வாங்கிக்கொண்டு டாட்டூ போடுகிறார்கள். அதெல்லாம் பாதுகாப்பானதாக இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் டாட்டூ போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் சரியான டாட்டூ ஸ்டூடியோவை ஒன்றுக்கு இரண்டுமுறை சோதித்து, அவர்களிடம் டாட்டூ போட்டுக்கொண்டவர்களிடம் விசாரித்து, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். டாட்டூ கலைஞர் மல்லிகா பிரபலமாக இருக்கிறார்கள், வைரலாக இருக்கிறார்கள் என்பதால்மட்டும் ஒருவரைத் தேர்வு செய்யாதீர்கள். சரியான அளவிலான ஊசிகளை, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மெட்டலில் செய்யப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்துகிறார்களா? அது சுத்தமாக இருக்கிறதா? ஒருவருக்கு ஒரு ஊசிதான் பயன்படுத்துகிறார்களா என்பதையெல்லாம் முறையாக விசாரித்து டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அது தவறான ஊசியாக இருந்தால், உங்களின் தோல் கடுமையாகப் பாதிக்கப்படும். பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். நோய்களுக்கு அழைப்பிதழ் வைக்கும் ‘டாட்டூ'! அபாய மணி அடிக்கும் டாக்டர்! டாட்டூ போட்டுக்கொள்ள விரும்புபவர்கள்... அதிகரித்து வரும் இந்த டாட்டூ கலாச்சாரத்தின் சாதகங்கள் என்ன... பாதகங்கள் என்ன? சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் வானதியிடம் கேட்டோம்… டாட்டூவை ஆசையாகப் போட்டுக் கொள்கிறவர்களுக்கு அதன் பாசிட்டிவ்வான பக்கங்கள் மட்டுமே தெரியும். ஆனால், அதன் தெரியாத இன்னொரு பக்கமாக டாட்டூவினால் ஏற்படும் பக்கவிளைவுகள், பிரச்சினைகள் போன்றவற்றை நிறையப் பார்க்கிறோம். டாட்டூவினால் ஏற்படும் தொற்று, அதில் பயன்படுத்தப்படும் மையினால் ஏற்படும் ஒவ்வாமை, சருமத்தில் கட்டிக் கட்டியாக உருவாகும் பிரச்னை (Granula changes ), தழும்பு போல உருவாகும் கீலாய்டு (Keloid) பிரச்னை என பல்வேறு நோயாளிகளைப் பார்க்கிறோம். அதனால் ஒரு சரும நல மருத்துவராக டாட்டூவை என்னால் பரிந்துரைக்க முடியாது. சருமநல மருத்துவர் வானதி பச்சை குத்துவதும், டாட்டூவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பச்சை குத்துவதில் நாம் எதிர்பார்க்கிற டிசைன் 100 சதவிகிதம் பர்ஃபெக்ட்டாக வராது. டாட்டூவில் துல்லியமாக டிசைன்கள் போடுகிறார்கள். டாட்டூவில் பல நிறங்களில் மையும் கிடைக்கிறது. ஆனால், பச்சை குத்துவதற்கு அந்தக் காலத்தில் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் பச்சை குத்துவதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வந்ததில்லை. பச்சை குத்தும் மையும் எளிதில் போய்விடும். ஆனால், தற்போது டாட்டூ போடுவதற்காக மிகவும் அடர்த்தியான மையினை (Strong dyes) பயன்படுத்துகிறார்கள். அதன் அடர்த்தி காரணமாகப் பக்கவிளைவுகள் ஏற்படவே சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. டாட்டூவினால் பலவிதமான சரும நலத் தொந்தரவுகள் உண்டாகலாம். ஸ்கார் சார்காயிடு (Scar sarcoid), ஸ்கார் க்ரானுலோமா (Scar granuloma) போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, டாட்டூ போட்டுக்கொள்ள விரும்புபவர்கள், டாட்டூ குத்தும் ஊசி சுகாதாரமாக இல்லாதபட்சத்தில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெச்.ஐவி, சருமத்தில் உண்டாகும் டியூபர்குளோசிஸ், சில தொற்றுகள், தொழுநோய் போன்றவை ஏற்படும் அபாயமும் உண்டு. டாட்டூ போடுகிறவர் தொழில்முறை கலைஞரா என்று முதலில் பார்க்க வேண்டும். உடலில் டாட்டூ குத்துகிற இடம், அந்த இடத்தில் டாட்டூ குத்துவது பாதுகாப்பானதா என்பதையும் கவனிக்க வேண்டும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் மையினால் ஒவ்வாமை ஏற்படுமா என்பதை முடிந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். டாட்டூ டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் ஊசி புதிதானதா என்று முக்கியமாகக் கவனிக்க வேண்டும். டாட்டூவை அழிப்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கும். அது ஒரே அமர்விலும் (Sitting) நடந்துவிடாது. பல அமர்வுகள் தேவைப்படும். அதனால் பொறுமை அவசியம். டாட்டூ குத்தும்போது என்ன வலி ஏற்பட்டதோ, அதைவிடப் பல மடங்கு வலியையும் அதை அகற்றும் லேசர் சிகிச்சையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, பொறுமையாகப் பல அமர்வுகளில் வலியினைப் பொறுத்துக் கொண்டு டாட்டூவை அகற்றுவதற்கு உளவியல் ரீதியாகவும் தயாராக வேண்டும். என்றார். நீங்கள் டாட்டூ போட்டுக்கொள்ள விரும்பியிருக்கிறீர்களா? உங்கள் அனுபவம் என்ன என்பதை கமெண்டில் கூறுங்கள்! நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!

விகடன் 18 Mar 2025 7:32 am

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இதமான காலநிலையை அனுபவித்தனர்

கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தி ஹிந்து 16 Mar 2025 11:28 pm

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இதமான காலநிலையை அனுபவித்தனர்

கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தி ஹிந்து 16 Mar 2025 10:31 pm

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இதமான காலநிலையை அனுபவித்தனர்

கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தி ஹிந்து 16 Mar 2025 9:31 pm

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இதமான காலநிலையை அனுபவித்தனர்

கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தி ஹிந்து 16 Mar 2025 8:31 pm

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியான இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோம். அதுவும் குறிப்பாக பக்கத்தில் இருக்கும் ’ஊட்டி’ தான் உடனே நம் நினைவிற்கு வரும். ஊட்டியில் பார்க்க தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், முதுமலை தேசிய பூங்கா என பல இடங்கள் இருந்தாலும், இந்த வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக ’கேர்ன்ஹில்’ உள்ளது. ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருப்பது குறித்து பலருக்கு தெரியவில்லை. எங்கு இருக்கிறது இந்த ’ஹிடன் ஜெம்’ வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம். ஊட்டி ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கேர்ன்ஹில். கேர்ன்ஹிலை இயற்கையின் செல்ல தொட்டி என்று அழைக்கின்றனர். இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த இடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வனப்பகுதிக்குள் சென்றதும் ஒரு குறுகிய சாலை காணப்படும். அதன் சிறிது தூரத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் இருக்கும். அங்கு நீங்கள் டிட்கெட் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் செல்லலாம். பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மலையேற்றம் செய்பவர்களுக்கு ₹350 வசூலிக்கப்படுகிறது. கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா - இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..! மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பரிய வளைவு குடிலை இங்கு நீங்கள் காணலாம். பழங்குடியினர்களின் வாழ்வாதாரமாக தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் இங்கு இருக்கும். இவற்றில் தோடர் எம்ப்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு இருக்கும் விளக்க மையத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி எப்படி இருந்தது என்றும் பல ஆண்டுகள் கழித்து உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எப்படி இருக்கிறது என்றும் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் காணலாம். இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம். கூடுதல் சிறப்பாக அந்த பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஏறி நடந்துசென்று மறக்கமுடியாத அனுபவத்தை பெறலாம். ஊட்டியில் இப்படி ஒரு மரம் இருக்கிறதா என்று அதனை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். Sleep Tourism: ஓய்வெடுப்பதற்காகப் பயணம் செய்கிறார்களா? 'ஸ்லீப் டூரிஸம்' கான்செப்ட் நல்லதா? வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 16 Mar 2025 10:00 am

மேட்டூர் காவிரி கரை அகழாய்வில் கீழடி போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அடுத்த தெலுங்கனூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழமையான எஃகினால் செய்யப்பட்ட வாள் கிடைத்த நிலையில், கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 16 Mar 2025 12:25 am

மேட்டூர் காவிரி கரை அகழாய்வில் கீழடி போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அடுத்த தெலுங்கனூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழமையான எஃகினால் செய்யப்பட்ட வாள் கிடைத்த நிலையில், கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 15 Mar 2025 11:31 pm

மேட்டூர் காவிரி கரை அகழாய்வில் கீழடி போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அடுத்த தெலுங்கனூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழமையான எஃகினால் செய்யப்பட்ட வாள் கிடைத்த நிலையில், கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 15 Mar 2025 10:31 pm

மேட்டூர் காவிரி கரை அகழாய்வில் கீழடி போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அடுத்த தெலுங்கனூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,500 ஆண்டுகள் பழமையான எஃகினால் செய்யப்பட்ட வாள் கிடைத்த நிலையில், கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 15 Mar 2025 9:31 pm