ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 9 - 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.1.2026 திதி : இன்று காலை 11.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி நட்சத்திரம் : இன்று மாலை 06.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று இரவு 09.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம் :
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!
ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட விநாயகர் தலங்களுள் மிகவும் முக்கியமான பல தலங்கள் உண்டு. அப்படி, வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே உண்டான தலங்களில் முக்கியமானது சேண்பாக்கம். வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டின் பிரதான தலமாக விளங்கியது. இந்தத் தலத்துக்கு ஒருமுறை விஜயம் செய்த ஆதி சங்கரர் அங்கே லிங்க வடிவில் காணப்பட்ட 11 சுயம்பு மூர்த்திகளையும் கண்டு தரிசனம் செய்த போது அவருக்கு ஞானதிருஷ்டியில் விநாயகப்பெருமான் தெரிந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் விநாயகப்பெருமானே என்பதை அறிந்துகொண்டவர் அதை வெளிப்படுத்தினார். அன்று முதல் இத்தல மூர்த்திகளை விநாயகப்பெருமானாகவே வழிபட ஆரம்பித்தனர். சேண்பாக்கம் செல்வ கணபதி ஆதியில் இந்தப் பகுதி செண்பக மரங்கள் நிறைந்திருந்த வனமாகக் காட்சி அளித்ததால் 'செண்பகவனம்' என்று அழைத்தனர். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங்களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்' என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்' ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள். பின்னர் இத்தலம் கால வெள்ளத்தில் சிதைவுற்றது. 17 ம் நூற்றாண்டின் போது மராட்டி மன்னர் துக்கோஜி ராவ் என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது அவரின் ரதம் திடீரென்று நின்றுவிட்டது. மன்னரும் மற்றவர்களும் திடுக்கிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தபோது ரதத்தின் சக்கரங்களில் ரத்தக் கறை காணப்பட்டது. மன்னர் பதறினார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார். 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் மறுநாள் விடிந்ததும் அந்த இடத்துக்குச் சென்ற மன்னர், விநாயகர் ரூபங்களை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்தார். அதுவே தற்போது ஆலயம் விளங்கும் தலமாக உள்ளது. மகாபெரியவரும் இத்தல மகிமையை எடுத்துரைத்துள்ளார். இந்தத் தலத்தில் 11 விநாயகர்களையும் மூலவருக்கு எதிரே அமைந்திருக்கும் யானை வாகனத்தையும் சேர்த்து தரிசிக்க வேண்டும். அப்போது அந்த அமைப்பு ஓம்கார வடிவில் அமைந்துள்ளது தெரியும் என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. அதன் காரணம்... தேவர்களும் ரிஷிகளும் தினமும் ஆகாய மார்க்கமாக வந்து இந்த விநாயகரை வழிபாடு செய்வார்களாம். அதனாலேயே கூரை வேயப்படாமல் இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீஓம்கார விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமயூர விநாயகர், ஸ்ரீமூஷிக விநாயகர், ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோரே இங்கு எழுந்தருளியிருகிறார்கள். இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்; பிரதானமானவர். இவருக்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக விநாயகருக்கு மூஷிக வாகனம் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மூலவருக்கு யானை வாகனம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! ஒரு மனிதனுக்கு வாழ்வில் 16 செல்வங்கள் தேவை. அவற்றுள் மிகவும் முக்கியமான 11 செல்வங்களை நமக்கு அருளும் அற்புத மூர்த்தியராக இந்த விநாயகர்கள் திகழ்கிறார்கள். இந்தத் தலத்தை `விநாயக சபை' என்று சொல்லும் மரபும் உண்டு. மூலவரான செல்வ விநாயகரின் சந்நிதிக்கு எதிரிலேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தல விருட்சம் வன்னிமரம். இந்த விநாயகருக்கு எதிரிலேயே நவகிரக சந்நிதி உள்ளது. குறிப்பாக சனி பகவான் விநாயகரைத் தரிசித்தபடி அமைந்துள்ளார். யாரெல்லாம் செல்வ விநாயகர் திருவடிகளைப் பணிந்து சரணடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மங்கலம் பொங்கவும், தன்னால் உண்டாகும் தோஷம் பீடிக்காமல் இருக்கவும் இந்தச் சனி பகவான் அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் இந்தத் தலத்தில் 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால், நம் துன்பங்கள் யாவும் உடைந்து சிதறும் என்பது நம்பிக்கை. வேலூர் சுற்றுவட்டாரத்தில் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குபவர்கள் முதன்முதலில் இங்குவந்து செல்வ விநாயகரை வேண்டிச் செல்கிறார்கள். ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் விநாயக சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்புடையது. சித்ரா பௌர்ணமி அன்று பூப்பல்லக்கு உற்சவமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் லட்சதீபத் திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தியில் நடைபெறும் பவித்ரோத்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விசேஷங்களாகும். இந்த நாள்களில் விநாயகரைத் தரிசித்து வழிபடச் சகலவிதமான செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வீசும் அதிர்ஷ்டக் காற்று.. தொட்டது துலங்கும் யோகம்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: மனைவி உங்களை மட்டம் தட்டிப் பேசி மகிழ்ச்சியடைவார். பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள். கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள். ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தைப் பெரிதாக்காதீர்கள். திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள். புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 8.1.2026 திதி : இன்று காலை 11.23 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி நட்சத்திரம் : இன்று மாலை 05.06 வரை பூரம். பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று இரவு 10.02 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :
நெல்லை: பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் குறிச்சி மண் பானைகள், அடுப்புகள்! | Photo Album
நெல்லை: பொங்கல் பண்டிகைக்கு விறுவிறுப்புடன் தயாராகும் குறிச்சி பொங்கல் மண் பானைகள், அடுப்புகள்.! மங்கலத்தன்மையையும் பணவரவையும் அதிகம் ஈர்க்கும் `6' வகை பொங்கல் பூக்கள்!
வெனிசுலா கப்பலை பிடிக்க.. பெரும் படையை அனுப்பிய டிரம்ப்.. பாய்ந்து தடுத்த ரஷ்யா! உள்ளே என்ன இருக்கு?
நியூயார்க்: அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் பின்தொடரப்படும் பெல்லா 1 என்ற ஒரு எண்ணெய் கப்பலுக்கு ரஷ்யா கடற்படைக் கப்பல்களை அனுப்பி பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பெல்லா 1 கப்பலை அமெரிக்கா பிடிக்காத வண்ணம், அல்லது தாக்காத வண்ணம் ரஷ்ய படைகள் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பிபிசி வெரிஃபை மற்றும் சிபிஎஸ் நியூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது
Meenam: சனி பகவானின் அருளால் மீனம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வருமானம் கொட்டும்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!
மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி. மலைகள் சூழ்ந்த வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி ஓர் அற்புதத் தலம். கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார். பாலமதி முருகன் கோயில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மார்க்கத்தில் பயணித்து, ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் வழியே பாலமதி மலையை அடையலாம். எட்டுக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலை மீது பயணிப்பதே அலாதியான அனுபவம். பாலமதியில் முருகப்பெருமானின் ஆலயத்தின் அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். வலதுபுறம் வலம்புரி விநாயகரும் இடதுபுறம் விசிறி சுவாமியாரும் வீற்றிருக்கிறார்கள். அவர்களை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முருகப்பெருமானைத் தரிசனம் செய்யலாம். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! பொதுவாக வேலேந்திய வீரனாக தேவசேனாபதியாகக் காட்சி கொடுக்கும் முருகன் இங்கே பாலகனாக அருள்கிறார். பாலகன் என்றால் சாதாரணக் குழந்தை அல்ல. மும்மூர்த்திகளும் இணைந்த வடிவம். பொதுவாகவே முருக என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும்போது, `மு' முகுந்தனையும், `ரு' ருத்திரனையும், `க' எனும் கமலவாசனாம் பிரம்மனையும் சேர்ந்த வடிவினன் என்பதைக் குறிக்கும். இத்தலத்தில் முருகப்பெருமான் அவ்வாறு மும்மூர்த்திகளும் சேர்ந்த பாலக வடிவினனாக அருளுவதாக ஐதிகம். குழந்தை என்றாலும் மூர்த்தி பிரமாண்டமாக உள்ளது. ராஜ அலங்காரத்தோடு புன்முறுவல் காட்டி அருளும் இந்த முருகப்பெருமானைத் தரிசனம் செய்வதே பாக்கியம் என்கிறார்கள் பெரியோர்கள். பாலமதி முருகன் கோயில் பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன். சந்திரன் குழந்தை முருகனை வழிபட்ட தலமாக இருக்கலாம் என்பதால் இத்தலத்துக்கு பாலமதி என்று பெயர் வந்தது என்கிறார்கள் பெரியோர்கள். அதற்கு சான்று நமக்கு அங்கு தோன்றும் நிம்மதிதான். எவ்வளவு கவலையோடு இந்த முருகன் சந்நிதிக்கு வந்தாலும் வந்த கணத்தில் அக்கவலை மறைந்துபோவது இங்கு நிகழும் அற்புதம். இத்தலத்தில் உற்சவர் அழகிய திருவடிவோடும் தேவியர் இருவரோடும் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலதுபுறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்துள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின் தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது. இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலதுபுறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது. 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் பாலமதி முருகன் கோயில் தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார். உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு, 'பாலமதி மலைக்குச் செல்' என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதியைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்தத் தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார். 1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்து கிடந்த இந்தக் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப் புனரமைத்தும் கொடுத்தார். அப்படி அவர் புனரமைத்துக் கொடுத்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அங்கேயே ஜீவசமாதி அடைந்த ராமகிருஷ்ண சாதுவின் சந்நிதியிலும் வழிபடுங்கள். வாழ்வில் வளமும் நலமும் நிச்சயம் கிடைக்கும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை.
அஸ்வினி: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவேதனையை உண்டாகும். பரணி: வருமானம் பெருகி கடன்கள் அடையும். கார்த்திகை: வீண் அலைச்சலும் பொருள் விரயமும் உண்டாகும். ரோகிணி: வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். மிருகசீரிடம்: திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். திருவாதிரை: வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். புனர்பூசம்: திசை மாறிப் போன உறவுகள் திரும்ப
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 7.1.2026 திதி : இன்று காலை 11.35 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி நட்சத்திரம் : இன்று மாலை 04.38 வரை மகம். பின்னர் பூரம். நாமயோகம் : இன்று அதிகாலை 12.47 வரை பிரீதி . பின்னர் இரவு 11.13
ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
ஜனவரி மாத பலன்: மகர ராசிக்கு திடீர் ராஜயோகம்.. முயற்சிகள் அனைத்திலும் ஜெயம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
ஜனவரி மாத பலன்: மகர ராசிக்கு திடீர் ராஜயோகம்.. முயற்சிகள் அனைத்திலும் ஜெயம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
Viruchigam: விருச்சிக ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான்
Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
ஈரோடு: வள்ளி கும்மி ஆடிய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் மற்றும் குஷ்பு! | Photo Album
உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு விழா! | Photo Album
January matha palan: துலாம் ராசிக்கு ஜனவரி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு வாங்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
Viruchigam: விருச்சிக ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான்
January matha palan: துலாம் ராசிக்கு ஜனவரி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு வாங்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் சும்மா கரன்ஸி கொட்டும்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் சும்மா கரன்ஸி கொட்டும்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!
சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு. இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை. சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டைப் பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர் வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். சுவாமி ஐயப்பனை இங்கே பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்துப் பக்தி செய்கிறார்கள். சுவாமியின் திருமுகமும் பால்ய பாவத்தோடு அனைவருக்கும் அன்பு செய்யும் கருணையோடு திகழ்கிறது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஒரு மண்டல காலம் கடும் விரதமிருந்து முறையாக இருமுடி சுமந்து யாத்திரை செல்வார்கள். அப்படி முறைப்படி யாத்திரை செய்து செல்பவர்களே பதினெட்டாம் படி ஏறி ஐயனைத் தரிசிக்க முடியும். அந்தக் கணத்தில் கிடைக்கும் சிலிர்ப்பை அவர்களைத் தவிர வேறு யாரும் விவரிக்க முடியாது. அதே தரிசன மகிழ்வைத் தரும் தலம்தான் சுதந்திர ஐயப்பன் கோயில். சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வருகிறார்கள். இங்கே பக்தர்கள் சுவாமியைத் தொட்டு வணங்க முடியும் என்பது கூடுதல் விசேஷம். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் இருமுடி கட்டினால் அது சபரிமலைக்குத்தான். இதை உணர்த்தும்விதமாக இங்கே இருமுடி இல்லாமல், ஆண் - பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டாம் படி ஏறி ஐயனை வழிபடலாம். இது வேறு எங்கும் காணமுடியாத நடைமுறை அதிசயம். ஆகம, தாந்திரீக முறைகளில் இந்த வழக்கம் இல்லை. ஆனால் இந்தக் கோயில் அமைக்கப் பிரச்னம் பார்த்தபோது இவ்வாறே அமைக்கப்பட வேண்டும் என்று சுவாமி ஐயப்பனே வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் ஐயனாகவும், சபரிமலையில் யோகியாகவும் இருக்கும் பகவான், இங்கே குடும்ப நலனைக் காக்கும் காப்பாளனாகச் சங்கல்பிக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்! 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் - தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் சங்கல்பம் செய்திருக்கிறார்கள் போலும்! மேலும் பக்தரானவர் தன்னுடைய தாய் - தந்தை, மனைவி - மக்களுடன் குடும்ப சமேதராக பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் என்றாலும் பக்தர்கள் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும். தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 'தான் செய்த தவற்றுக்காக வருந்தி, அந்தத் தவற்றை மீண்டும் செய்யமாட்டேன்' என்று உறுதி பூண்ட பக்தர்கள், தாங்களே கருவறைக்குச் சென்று இறைவனுக்குத் தன் கையாலேயே நெய் அபிஷேகம் செய்யலாம் எனும் வழக்கம் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது. வயதான தாய்மார்கள் தங்களின் சொந்தப் பிள்ளையாகக் கருதி, ஐயன் ஐயப்பனுக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகித்து அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இளம் வயதினரோ இந்த ஐயப்பனைத் தங்களின் தகப்பனாராகக் கருதி வணங்குகிறார்கள். குழந்தைகளோ தங்களில் ஒருவனாக ஐயனைப் போற்றுகிறார்கள். பொதுவாக ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது அவர்கள் குடும்பமும் விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து ஐயனைத் தரிசனம் செய்ய முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படி ஓர் அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அருளும். ஆண்டில் ஒருமுறை சபரிமலை சென்று வந்தபின்னர் சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து இந்த ஆலயத்துக்குக் குடும்பத்தோடு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஐயனின் அன்பு தரிசனம் ஆனந்தம் அளிக்கும். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!
இந்த வார ராசிபலன் ஜனவரி 6 முதல் 11 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: கன்ஸ்ட்ரக்ஷன் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6.1.2026 திதி : இன்று பிற்பகல் 12.16 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி நட்சத்திரம் : இன்று மாலை 04.37 வரை ஆயில்யம். பின்னர் மகம். நாமயோகம் : இன்று அதிகாலை 02.43 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி. கரணம் :
Rasi Palan This Week: மீனம் ராசியின் வாழ்க்கை மொத்தமாக மாறப்போகுது.. தொட்டதெல்லாம் இனி ஹிட்டு
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: பட்டையைக் கிளப்பும் கும்ப ராசிக்கு.. லாபம், சந்தோஷம்.. ஒரே குஷிதான்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு பேச்சில் தான் கண்டம்.. பண வரவு கூரையை பிச்சுகிட்டு கொட்டும்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
மகர ராசிக்கு தொழிலில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேலதிகாரிகளிடம் மட்டும் கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
மகர ராசிக்கு தொழிலில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேலதிகாரிகளிடம் மட்டும் கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. கையெழுத்து விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு பேச்சில் தான் கண்டம்.. பண வரவு கூரையை பிச்சுகிட்டு கொட்டும்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: அடித்தாடும் துலாம் ராசி.. தடைபட்ட விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும் காலம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!
காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மூலக் கோயிலைச் சுற்றி 58 சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு வடிவிலும் ஈசன் அமர்ந்து அருள்கிறார். பிராகாரச் சுவர்களில் சப்தமாதர், கணபதி, திருமால் போன்ற சிறு தெய்வங்களும் உள்ளனர். 58 சிறு கோயில்களின் இரு பக்கவாட்டில் உள்ள பாறை குடைவுகளில் ஒருவர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அதாவது, ஒரேவேளையில் எண்பதற்கும் மேற்பட்ட தவசிகள் இந்தச் சிறு ஆலய குடைவரையில் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பது அதிசயமான இந்த ஆலயத்தின் அமைப்பு என்கிறார்கள். காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் கி.பி. 700-ம் ஆண்டின் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் இது. இது சுதை வடிவில் உருவான பிரம்மாண்ட கோயில். சுவாமி இங்கே குடமுழுக்குக்கு வராமல் திருநின்றவூர் பூசலார் மனதில் உண்டாக்கிய கோயிலுக்கு எழுந்தருளச் சென்றார் என்கிறது சமயநூல்கள். இதைப்போன்றே ஒரு வியக்க வைக்கும் ஒரு சரித்திர உண்மையும் உண்டு. இந்த நகரையே அழிக்க வெறிகொண்டு வந்த மன்னன், தன்னையே மறந்து இந்தக் கோயிலுக்கும் கயிலாசநாதருக்கும் அடிமையான வரலாற்றுச் சம்பவம் அதிசயத்திலும் அதிசயம். 642-ஆம் ஆண்டு பல்லவ தளபதி, மேலைச் சாளுக்கியத்தின் தலைநகரும் கலைநகருமான வாதாபியை வென்று தீக்கிரையாக்கினான். சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியையும் கொன்று அழித்தான் என்கிறது வரலாறு. அதன் பிறகு காலங்கள் பல சென்ற பிறகு இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்தன் சாளுக்கிய அரசனானான். அவனுக்குப் பிறகு வினயாதித்தன், விஜயாதித்தன் காலத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான் மாவீரன் இரண்டாம் விக்ரமாதித்தன். புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்! 740-ஆம் ஆண்டு கயிலாசநாதர் கோயில் கட்டிய ராஜசிம்மனது மகன் இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ஆட்சி செய்த போது, சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்தன் மீண்டும் பல்லவர் மீது படையெடுத்துத் தாக்கினான். காஞ்சி வீழ்ந்தது. காஞ்சியைக் கைப்பற்றியதும் விக்ரமாதித்தனும் வாதாபியைப் போலவே எழில் மிகுந்த காஞ்சியையும் தீக்கிரையாக்கிவிடவே ஆத்திரம் கொண்டான். அங்கேதான் ஈசனின் கருணை அவனை மாற்றியது. பல்லவ அரசன் ராஜசிம்மன் சற்று காலத்திற்கு முன்பு எழுப்பியிருந்த காஞ்சி கயிலாசநாதரைக் கண்டவன், அதன் அழகிலும் சுவாமியின் கருணையிலும் நெகிழ்ந்து சிவபக்தனானான். சிவாலயங்கள் நிறைந்த காஞ்சியை அழிக்க எண்ணியதை உணர்ந்து வெட்கப்பட்டான். எந்தக் காஞ்சியைத் தரைமட்டமாக மண்ணோடு மண்ணாக அழிக்க படையெடுத்து வந்தானோ, அதைப் புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டான். 'நாம் எப்போது இந்த ஊரை வென்றோமோ அப்போதே இந்த ஊரும் நம் சொந்த ஊர் ஆகிவிட்டது, நம்முடைய மக்களை நாமே கொடுமை செய்யக்கூடாது, இது சிவம் வாழும் நகரம், இதைக் காப்பது நம் கடமை' என்று கூறித் தன் படையினரை போரால் அழிந்த பகுதிகளைப் புனரமைக்க உத்தரவிட்டான். காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் இது கண்டு அவன் படைவீரர்கள் மட்டுமல்ல பல்லவ தேசமும் நெகிழ்ந்து போனது. காஞ்சி மக்களுக்குப் பல தான தர்மங்களைச் செய்தான். கயிலாசநாதர் கோயிலுக்கும் திருப்பணிகள் பல செய்தான். ஏற்கெனவே வேறு தேசங்களில் வென்றெடுத்த செல்வங்களைக் கூட காஞ்சியில் இருந்த கோயில்களைப் புனரமைக்கச் செலவிட்டான். இந்த விவரங்களைக் கன்னடத்தில் கயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தின் தூண் ஒன்றில் பொறித்தும் வைத்தான். அறக்கருணை கொண்ட விக்ரமாதித்தனை காஞ்சி மக்களும் வரலாறும் ஒரு சேரப் பாராட்டின. அழிக்க வந்தவன் ஆதரித்த காரணம் காஞ்சி கயிலாசநாதர் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சியைக் குறித்து வருத்தப்பட்ட பரஞ்சோதியின் அக்கறையும் வேண்டுதலும் கூடத்தான் எனலாம். கலைகளின் பொக்கிஷமான காஞ்சி மாநகரைக் காப்பாற்ற உதவியது எனலாம். காஞ்சியின் கயிலாசநாதர் கோயில் அவனைப் பெரிதும் மயக்கியது என்பதால் அந்த ஊரை விட்டுச் செல்லவே அவனுக்கு மனமில்லையாம். தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்! ஊர் திரும்ப வேண்டிய அவசியம் உண்டான போது அந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளைப் பெரும் மரியாதையோடு சாளுக்கிய தேசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏறக்குறைய கயிலாசநாதர் கோயில் போல அதன் அச்சாகவே பட்டடக்கல்லில் 'விருபாட்சர் கோயில்' ஒன்றையும் கட்டினான் என்கிறது வரலாறு. அவனது மனைவி லோகமாதேவியின் இஷ்ட தெய்வமான விருபாட்சரை அங்கே எழுந்தருளச் செய்தான். 'இது நமது மன்னனின் பொக்கிஷம், இதைப் பாதுகாப்பது நமது கடமை' என்று கல்லில் எழுதி வைத்த பல்லவனின் எதிரியும் போற்றிய ஆலயம் கயிலாசநாதர் திருக்கோயில். தென்திசைக் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களைப் போல் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயிலில்தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான, 'சாந்தார நாழிகை' இடம் பெற்றது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து, தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று, மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வரும். இதனைச் சுற்றி வந்தால் “மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும்” என்பது ஐதிகம். கோயிலின் வெளிப்புறம் அழகான நந்தவனம்... பின்புறத்தில் ஒரு சுரங்கப்பாதை என ஆலயத்தின் அமைப்பு வியக்க வைக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை ஏகாம்பர நாதர் கோயிலில் சென்று முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்தக் கோயிலைக் கட்டிய ராஜ சிம்ம பல்லவன் கட்டுமான பணியில், தான் மட்டும் ஈடுபடாமல் தன் மனைவி மக்களையும் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தக் கோயிலை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். ஈசனின் அருளுக்குப் பாத்திரம் ஆவதோடு தமிழகத்தின் கட்டடக் கலையின் சிறப்பை அறிந்து பெருமை கொள்வீர்கள். மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 5 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 5.1.2026 திதி : இன்று பிற்பகல் 01.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை நட்சத்திரம் : இன்று மாலை 05.02 வரை பூசம். பின்னர் ஆயில்யம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.59 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம் :
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. பணவரவு கொட்டப் போகுது
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் மாற்றம்.. தொழிலில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் மாற்றம்.. தொழிலில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Kadagam Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் கடக ராசி.. ஆடம்பரமாக வாழப் போறீங்க
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீங்க
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. முருகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
ஜனவரி மாத பலன்: கடக ராசிக்கு திடீர் பணவரவு.. வேலைவாய்ப்பு கன்ஃபார்ம்.. என்ஜாய்
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்
ஜனவரி மாத பலன்: மிதுன ராசியினருக்கு வெளிநாடுக்கு பறக்கும் யோகம்.. யாரையும் புண்படுத்தாதீங்க
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்
ஜனவரி மாத பலன்: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தங்க மழை பெய்யப் போகுது
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்
ஜனவரி மாத பலன்: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தங்க மழை பெய்யப் போகுது
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்
ஜனவரி மாத பலன்: மேஷ ராசியினருக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் காலம்
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!
ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது. `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய மகிரிஷியின் வாக்குப்படி சிவத்தலங்களை தரிசனம் செய்துவந்தார். அப்போது இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும் தலவரலாறு கூறுகிறது. மேலும் திருவான்மியூரிலேயே வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தொண்டை மண்டலத்தின் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது என்று போற்றுகிறார்கள் அடியவர்கள். இங்குதான் 7 - ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... எனப் பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது. சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றன எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகி’ எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோருக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னை பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர். புராண காலத்தில் வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காரணத்தால் காமதேனு சாபம் பெற்றது. இதன் காரணமாக சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் வந்தது. தன் சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டு அதன் மீது பால் சொரிந்து தன் சாபம் தீருமாறு வேண்டிக்கொண்டது. அப்போது அதன் கால்குழம்பு தெரியாமல் லிங்கத் திருமேனியில் பட அது அப்படியே தடமாகப் பதிந்தது. இன்றும் பால்வண்ணநாதர் அந்தக் குழம்புத் தழும்போடு இத்தலத்தில் காட்சி அருள்கிறார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் அகத்தியருக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலம் காட்டி அருளினார். மேலும் இந்த உலகம் உய்ய சித்த வைத்திய முறைகளை இங்குள்ள வன்னி மரத்தின் அடியில்தான் உபதேசம் செய்தார். எனவே இந்தத் தலம் அகத்தியரையும் வழிபட உகந்த தலம். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தின் போது ஈசன் அகத்தியருக்கு திருக்காட்சி அருளிய நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. மேலும் வால்மீகி முனிவருக்கும் நடனக் காட்சி அருளிய சம்பவமும் நிகழ்த்தப்படும். இந்த ஆலயத்தின் பழைமையை உணர்த்தும் வகையில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கால கல்வெட்டுகள் பல இங்கு காணப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவராலும் பாடல்பெற்றது இத்தலம். இத்தல ஈசனின் திருமேனி மேற்கு நோக்கி அருள்கிறது. ஆதியில் ஈசன் கிழக்கு நோக்கியே கோயில் கொண்டிருந்தார் என்றும் அவர் மேற்கு நோக்கித் திரும்பியதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அந்த சம்பவம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்பையதீக்ஷிதர் என்னும் மகான் ஈசன் மீது பெரும் பக்தி கொண்டவர். ஈசனை தரிசனம் செய்யும் ஆவலில் அவர் வந்தபோது ஆலயத்துக்குச் செல்லும் வழி வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அதைக் கண்டு கலங்கிய அவர், ஈசனின் தரிசனம் வேண்டுமே என்று மனமுருகவேண்டினார். அப்போது அவரின் குறையைத் தீர்க்கும் வண்ணம் ஈசன் மேற்கு நோக்கித் திரும்பி தீக்ஷிதருக்குக் காட்சி கொடுத்தாராம். மருந்தீசுவரர் கோயில் இங்கே மூலவருக்கு வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு `தியாகராஜ பெருமான்’ என்பது திருநாமம். இங்கு அதிகாலையில் நடைபெறும் கோபூஜை விசேஷமானது. அதேபோன்று அர்த்தஜாம பால் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவனாக விளங்கி வாழும்போது ஆரோக்கிய வாழ்வையும் வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணி தீர்க்கும் மருத்துவனாகவும் விளங்கி அருள் செய்யும் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். வாழ்வில் ஆரோக்கிய வாழ்வோடு ஆனந்தமும் கிடைக்கும்.
திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 3 - 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: சங்கடங்களில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடைக்கும் பரணி: வரவுக்கேற்ற செலவுகள் வந்து சிரமப்படுத்தும். கார்த்திகை: தொழிலை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிப்பீர்கள். ரோகிணி: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் வெளியே செல்வாக்கு உயரும். திருவாதிரை: கடுமையாகப் போராடி கடனை அடைப்பீர்கள். புனர்பூசம்: உடன் இருப்பவர் உங்களை டென்ஷன் படுத்துவார்.
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 3 - 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026 திதி : இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை நட்சத்திரம் : இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று காலை 10.18 வரை பிராமியம். பின்னர் ஐந்தரம். கரணம் :
புத்தாண்டு ராசி பலன் 2026: அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சரியம்.. மீனம் ராசிக்கு பொன்னான வாய்ப்பு
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சரியம்.. மீனம் ராசிக்கு பொன்னான வாய்ப்பு
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு இந்த ஆண்டு பணம் கொட்டும்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு இந்த ஆண்டு பணம் கொட்டும்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: சொல்லி அடிக்கும் மகர ராசி.. திட்டங்களை மட்டும் வெளியில் சொல்லாதீங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: தனுசு ராசிக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம்.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
புத்தாண்டு ராசி பலன் 2026: தனுசு ராசிக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம்.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்
நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர்.
மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர்.
புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
புத்தாண்டு ராசி பலன்: புதுமையைத் தரும் புத்தாண்டாக இந்த 2026 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த வருடம் எப்படி அமையும் என்ற ஆவல் அனைவருக்குமே இருக்கும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மேஷம் மேஷம்
புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
புத்தாண்டு ராசி பலன்: புதுமையைத் தரும் புத்தாண்டாக இந்த 2026 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த வருடம் எப்படி அமையும் என்ற ஆவல் அனைவருக்குமே இருக்கும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கனன பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கல் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மேஷம் மேஷம்
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு... ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை!
முருகப்பெருமான் வள்ளலாகத் தன்னை நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வாரிவாரி வழங்கும் ஆறு தலங்களே அறுபடைவீடுகள் என்று போற்றப்ப்டுகின்றன. அவற்றுள் திருத்தணி 5 - ம் படை வீடு. சூரபத்மனை போரில் வென்றபின் இங்கு வந்து அமர சினம் தணிந்தது என்பதால் இதனைத் திருத்தணி என்று அழைக்கின்றன ஞான நூல்கள். சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை என்பது கூடுதல் தகவல். அன்றைய தினம் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது. இங்கு மூலவராகத் திகழும் சுப்ரமணிய சுவாமியின் திருமார்பில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சூரபத்மனோடு போர் செய்தபோது ஏற்பட்டது என்கிறார்கள். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதை அறிவோம். அதேவேளை சுவாமிமலையிலும் திருத்தணியிலும் யானைதான் முருகப்பெருமானின் வாகனமாக உள்ளது. இந்த யானை வாகனம் சந்நிதியின் வெளிப்புறத்தைப் பார்த்தவாறு உள்ளது. திருத்தணி முருகன் இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை சீதனமாக கொடுத்தார். இந்திரலோக ஐஸ்வர்யங்களில் ஒன்று ஐராவதம். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது. மேலும் திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். மாறாக சக்தி ஹஸ்தம் 9 (இதை வஜ்ரவேல் என்றும் சொல்வார்கள்) எனப்படும் இடி போன்ற ஓர் ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். நோய் தீர்க்கும் சந்தன பிரசாதம் இந்தத் தலத்தில்தான் சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இருந்து சக்கராயுதத்தை மகாவிஷ்ணு முருகப்பெருமானின் துணையோடுமீட்டார் என்கிறது தலபுராணம். இங்குள்ள தீர்த்தம் ஒன்றுக்கு விஷ்ணு தீர்த்தம் என்றே பெயர். பகவான் விஷ்ணுவே இதை உருவாக்கினார் என்பது ஐதிகம். இந்தப் புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானி வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருத்தணியில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. எல்லா நாள்களும் இந்த சந்தனப் பிரசாதம் கிடைப்பதில்லை. மாறாக விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும். வள்ளிமலை சுவாமிகள் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் ஆதி பாலசுப்பிரமணியர் அருள்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளிய மூர்த்தி என்கிறார்கள். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், குழந்தையான குமரனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்தத் தலத்தில் ஆங்கிலப்புத்தாண்டை மிகவும் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கு விடையாக அமைகிறது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆண்டின் முதல் நாளில் படிபூஜை வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா' என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார். படிபூஜை சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர். முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 1- 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026 திதி : இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி நட்சத்திரம் : இன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம். கரணம் :
திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா... பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர் இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது. இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக் கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் த.வெ.கவின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனத்திற்காக காத்திருந்த சில பக்தர்களிடம், ”நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை இருக்காது” எனவும் கூறி சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். விஜய்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பக்தர் தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்திய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அப்புகாரில், கோயிலுக்குள் அரசியல் குறித்து பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “திருக்கோயில் வளாகம், கிரிப்பிரகாரம், உள் பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் இந்நிலையில், இதனை கண்காணிக்க வேண்டிய கோயில் செக்யூரிட்டிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு பணியில் யாரும் இல்லையா? இது செக்யூரிட்டிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. இக்கோயில் வழிபாட்டு தலமா அல்லது கட்சிகளின் பிரசாரத்திற்கான இடமா?” என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்குமா..தொழில், பணவரவு எப்படி
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்குமா..தொழில், பணவரவு எப்படி
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: துலாம் ராசியினருக்கான புத்தாண்டு பலன்கள்.. குட் நியூஸ் வருமா
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: சிம்ம ராசிக்கு புத்தாண்டில் சிக்கல் மேல் சிக்கல்.. மிகுந்த கவனம் தேவை
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: புத்தாண்டில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள்.. அதிர்ஷ்டம் கிடைக்குமா?
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: கடக ராசிக்கு புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள் என்ன?
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
புத்தாண்டு ராசி பலன் 2026: ரிஷப ராசிக்கு சொந்த வீடு, வேலை, நிலம், இன்கிரிமென்ட்.. செட்டிலாக போறீங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
ஆங்கிலப் புத்தாண்டு 2026: மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத்
Puthandu Palan: 2026 இல் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
New Year Rasi Palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசிக்காரர்கள் யார், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 புத்தாண்டின்
”பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் செல்ல வேண்டாம்” – ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!
கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகிறார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று (30-ம் தேதி) மீண்டும் நடை திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் இருமுடிகளுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து கோவை, தேனி மற்றும் தென்காசியில் இருந்து வாகனங்களில் சென்று வருகின்றனர். தென்காசி மாவட்டம் வழியாக வாகனங்களில் வருபவர்கள் செங்கோட்டை, புளியரை, தென்மலை, புனலூர், பத்மநாதபுரம், கோணி, நிலக்கல் வழியாக பம்பை வந்து அங்கிருந்து மலை ஏறிச் செல்வார்கள். இந்த வழக்கமான வழிகளைத் தவிர்த்து ஆபத்தான காட்டுப்பதைகள் வழியாக பக்தர்கள் சபரிமலைக்கு நடந்து வருகின்றனர். இதில், வனவிலங்குள் நடமாட்டம் உட்பட பல்வேறு ஆபத்துகள் நிறைந்து இருப்பதால் இப்பகுதிகள் வழியாக செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை குறிப்பாக, பண்பொழி, மேக்கரை, அச்சன்கோயில், பாறகுளம், கோணி வழியாக பெரும்பாலான பக்தர்கள் நடந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் இந்தப்பாதைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 24 பேர் அடங்கிய ஐயப்ப பக்தர்கள் குழுவினர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அச்சன்கோயில் வழியாக சபரிமலைக்கு நடந்து சென்றுள்ளனர். அச்சன்சோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அடர்ந்த காட்டுப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். இடையில் வழிதெரியாமல் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். அங்கு செல்போன் சிக்னலும் கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து உயரமான பாறையில் ஏறிய போது சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். ஐயப்ப பக்தர்கள் கேரள மாநில போலீஸாரும், வனத்துறையினரும் நீண்ட தேடலுக்குப் பிறகு அவர்களை மீட்டு ஒரு வேனில் சபரிமலைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். எனவே, பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் பக்தர்கள் செல்ல வேண்டாம் எனவும் இரு மாநில போலீஸாரும், வனத்துறையினரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Puthandu Palan: 2026 இல் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
New Year Rasi Palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசிக்காரர்கள் யார், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 புத்தாண்டின்
அடடா மழைடா.. பண மழைடா.. 2026 புத்தாண்டில் கோடீஸ்வரனாக மாறும் 5 ராசிகள்
2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு நாளை பிறக்கவுள்ளது. 2025 வருடத்தில் எதிர்பார்க்காத இயற்கை சீற்றங்கள், தங்கம், வெள்ளி விலை உயர்வு, அரசியல் திருப்பங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம். பலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடந்திருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்திருக்காது. இதனால் 2026 புதிய வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2026 ஆம் வருடத்தில் குரு பகவான், ராகு கேது
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்: 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் தரும் அபூர்வ தலம்!
நம் தேசத்தில் கலியுகத்திலும் அற்புதங்கள் நிகழும் அநேக தலங்கள் உள்ளன. அப்படி ஒரு தலம்தான் திருக்கழுக்குன்றம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீர்க்குளம் ஒன்றில் சங்கு தோன்றும் அதிசயம் நிகழும் தலம் அது. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தின் தலபுராணத்தையும் அங்கு அருளின் ஈசனின் மகிமைகளையும் அறிந்துகொள்வோம். செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். நான்கு யுகங்களாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் இந்தத் தலத்தை சைவக் குரவர்கள் நால்வரும் பாடியிருக்கிறார்கள். திருக்கழுகுன்றம் முன்னொரு காலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தங்களுக்குள், ஈசனை அடைய உலக உயிர்களுக்கு அதிகம் உதவுவது 'யார் பெரியவர்' விவாதம் செய்யத் தொடங்கின. ஈசனோ அடிமுடி காணமுடியாத பெரியோன். அவன் அருள் இல்லாமல் யார் அவன் குறித்த ரகசியங்களை உணரமுடியும்... வேதங்கள் நான்கும் ஈசனை நோக்கித் தவம் செய்தன. இத்தலத்தில் ஈசன் கோயில்கொண்டு இருப்பதை அறிந்து தேடிவந்து வணங்கின. வேதமூர்த்தியான ஈசனும் மனம் மகிழ்ந்து அவற்றின் ஐயத்தைத் தீர்த்து தரிசனமும் தந்து அருளினார். மெய்ப்பொருளான சிவபெருமானைத் தரிசித்ததன் மூலம் தங்கள் ஐயம் நீங்க பெற்ற வேதங்கள் இத்தலத்திலேயே மலையாக நிலைபெற்று அருளின. அவற்றின் மீது ஈசனும் வேத கிரீஸ்வரராக எழுந்தருளினார். இன்றும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் அதர்வண வேதப் பாறையில் ஈசன் வீற்றிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி! இத்தலத்திற்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், கதலிவனம், சங்குபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. கல்வெட்டுகளின்படி இது 'உலகளந்த சோழபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருக்கயிலையிலிருந்து நந்திதேவரால் கொண்டு வரப்பட்ட மூன்று சிகரங்களில் ஒன்று இங்குள்ளதால், இது 'தென் கயிலாயம்' என்றும் போற்றப்படுகிறது. இத்தலம் யுகங்களாக கழுகுகளால் வழிபடப்பட்ட தலம். எனவேதான் திருக்கழுக்குன்றம் என்ற பெயரையும் பெற்றது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன்; திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு; துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்; கலியுகத்தில் சம்பு, ஆதி ஆகிய கழுகுகள் வந்து ஈசனை தினமும் வழிபட்டன என்கிறது தலபுராணம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட தினமும் உச்சிப் பொழுதில் கழுகுகள் இந்த ஆலயத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் அபூர்வமாக கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருக்கழுகுன்றம் சுமார் 500 அடி உயர மலையில் ஈசன் வாழைப் பூங்குருத்து வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகை 'சொக்கநாயகி' மற்றும் 'பெண்ணின் நல்லாளம்மை' என அழைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயிலில் ஈசன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. இவரின் திருமேனி அபூர்வ மானது. எனவே வருடத்தில் மூன்று நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோன்று மலையிலிருந்து இறங்கும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதில் சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் தரிசனம் செய்யலாம். கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்! இங்குள்ள 12 தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்க்கண்டேய ரிஷிக்காக ஈசன் சங்கைத் தோற்றுவித்த தலம் இது. இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது உலகப் புகழ்பெற்ற அதிசயம். குரு பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது இங்கு 'சங்கு புஷ்கர மகாமேளா' சிறப்பாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்துக்குத் தொடர்ந்து 12 பௌர்ணமிகள் வந்து கிரிவலம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அமைந்துள்ள மூன்று சிவமூர்த்தங்களையும் தரிசிப்பது, 12 ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்பதால் இத்தலம் பெரும் பழைமையும் மகிமையும் உடையதாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்திரன் மின்னல் வடிவில் ஈசனைப் பூஜிப்பதாகவும் ஐதிகம். திருக்கழுகுன்றம் இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வணங்குவோருக்குத் தீராத நோய்கள் நீங்கி, ஜன்ம வினைகள் யாவும் அகலும் என்பது தலபுராணம் சொல்லும் செய்தி. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை திருக்கழுக்குன்றம் வந்து வேதகிரீஸ்வரரையும் பக்தவத்சலேஸ்வரரையும் தரிசனம் செய்து பல்வேறு நற்பலன்களையும் அடையுங்கள். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி – பெருமாள் அலங்கார காட்சிகள்.!
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருமாள் அலங்கார காட்சிகள்.!
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 31 - 2025 புதன்கிழமை.
அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த

25 C