வார ராசி பலன்: கன்னி ராசிக்கு லாபம் கொட்டும்.. எல்லாமே இனி ஜெயம் தான்
Kanni Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம். குறிப்பாக நிலப்பிரச்னை உள்ளவர்கள், சொந்த வீடு வாங்க வேண்டுபவர்கள், செல்வமும் செழிப்பும் நிறைந்த வாழ்வை விரும்புபவர்கள் வராகப் பெருமானை வழிபட்டால் வேண்டும் அனைத்தையும் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி வேண்டுபவர்களுக்கு அருளும் வராக சுவாமி கோயில் கொண்டிருக்கும் தலமாகத் திகழ்கிறது மேல்பொதட்டூர்பேட்டை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி. இரண்டாம் நரசிம்மராயருக்கு வேட்டையில் பிரியம் அதிகம். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட்டை மும்முரத்தில், மாலை மயங்கி இருள் படரத் தொடங்கியதை அரசர் கவனிக்கவில்லை. எனவே, அன்று இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்துக்கொண்டு மன்னரும் பரிவாரங்களும் தங்கினர். இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப் பகுதியில், நறுமண மலர்களின் வாசத்தில் தோய்ந்து வந்த தென்றலின் சுகமான ஸ்பரிசத்தில் லயித்திருந்தார் மன்னர். அப்போது அவரின் பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது. மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் வேட்டை நாய் ஒன்று ஒரு முயலைத் துரத்தியது. உயிர்ப்பிழைத்தால் போதும் என்று முயல் அதிவேகமாகப் பாய்ந்தோட, வேட்டை நாயும் வேகமாக முயலைத் துரத்திச் சென்றது. அதைப் பார்த்த மன்னரின் மனதில், என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தனது குதிரையில் ஏறி வேகமாகப் பின்தொடர்ந்தார். வேட்டைநாயின் வேகத்துக்கு முயலால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓர் இடத்தில் களைப்புற்று நின்றுவிட்டது. பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை... அருகிலிருந்த புற்றினை மூன்று முறை வலம் வந்தது. பிறகு தனது முழு வலிமையையும் ஒன்று திரட்டி, வேட்டை நாயின் மீது பாய்ந்தது. முயலின் திடீர் ஆவேசத்தைக் கண்டு மிரண்ட வேட்டை நாய், வந்த வழியே ஓடிச் சென்றுவிட்டது. இந்தக் காட்சியைக் கண்ட மன்னருக்கு வியப்பு தாளவில்லை. முயலின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்துப்போனவராகத் தன் குடிலுக்குத் திரும்பினார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்! அன்றிரவு அயர்ந்து உறங்கிய மன்னர், அர்த்த ஜாமத்தில் அதியற்புத கனவு ஒன்றைக் கண்டார். கனவில் மன்னருக்கு வராக மூர்த்தியாகக் காட்சியளித்த பகவான், 'முயல் வலம் வந்த புற்றினை அகற்றி, என்னுடைய திவ்யதரிசனம் காண்பாய்’ என்று கூறினார். தன் இஷ்ட தெய்வமான வராகப்பெருமானின் கருணைத்திறம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த மன்னர், பொழுது புலர்ந்ததும் காவலர்களின் உதவியுடன் புற்று மண்ணைப் பயபக்தியுடன் அகற்றினார். புற்றைத் தோண்டியதும் அருள்மிகு பூமிதேவியை வாஞ்சையுடன் அணைத்திருக்கும் கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக அர்ச்சா ரூபத்தில் திருக்காட்சி தந்தார் வராகப் பெருமான். அர்ச்சாரூபமாகப் பெருமாள் வெளிப்பட்டதை எண்ணிச் சிலிர்த்தார்கள் மன்னனும் மக்களும். வராகப் பெருமானுக்கு, மனமுவந்து மிகப் பிரமாண்டமாக ஒரு திருக்கோயிலை நிர்மாணித்தார் மன்னர். மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்! இரண்யாட்சனை ஸ்வாமி வதம் செய்த பின்னும் உக்கிரம் குறையாமல் வராகர் இருப்பதைக் கண்ட தேவர்களும் மகரிஷிகளும் சாந்த மூர்த்தியாய் சேவை சாதிக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, பாரிஜாத மலர்களால் அவரை அர்ச்சித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கிய வராகப் பெருமான், சாந்த சொரூபனாக, செந்தூரப் பொட்டும், கஸ்தூரித் திலகமும் தரித்து, பூமிதேவித் தாயாரை ஆலிங்கனம் செய்த கோலத்தில், சர்வாலங்கார, சர்வாபரண பூஷிதனாகக் காட்சி அருளினார். அன்று தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய அதே திருக்கோலத்தில்தான் அர்ச்சா மூர்த்தியாக மேல்பொதட்டூர்பேட்டையிலும் அருளாட்சி செலுத்தி வருகிறார் வராகமூர்த்தி. இந்தப் பெருமாளைத் தரிசித்தாலே முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் யாவும் விலகி ஓடும் என்கிறார்கள் பக்தர்கள். தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வராக மூர்த்தியை வழிபட்டு வந்தால், பூமி தொடர்புடைய பிரச்னைகள் நீங்கும், சனி தசை மற்றும் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் பௌர்ணமியன்று சத்யநாராயண பூஜையும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் அவ்வப்போது ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், திருக்கல்யாண உற்சவம் ஆகியனவும் நடைபெறுகின்றன. மேலும், குடும்பத்துடன் சென்று அருள்மிகு தரணி வராகரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், இல்லம் செழிக்கும்; உங்கள் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 9 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். பரணி: குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை எதிர்நோக்குவீர்கள். கார்த்திகை: தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். ரோகினி: நிலம் சம்பந்தமாக நீதிமன்றம் செல்வீர்கள். மிருகசீரிடம்: வியாபாரத்திற்குத் தேவையான பணம் புரட்டுவீர்கள். திருவாதிரை: நெருங்கிய உறவினருக்கு உத்தரவாதம் கொடுப்பீர்கள். புனர்பூசம்: கார் வாங்க முன் பணம் செலுத்துவீர்கள். பூசம்: வெளிநாட்டிலிருந்து பண உதவி
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 9 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.2.2026 திதி : இன்று காலை 07.05 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. நட்சத்திரம் : இன்று காலை 07.07 வரை சுவாதி. பின்னர் விசாகம் . நாமயோகம் : இன்று அதிகாலை 02.14 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம்
வார ராசி பலன்: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க
Simmam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
வார ராசி பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
வார ராசி பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
மிதுன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க
Mithunam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Meenam: மீனம் ராசிக்கு புரோமோஷன் கன்ஃபார்ம்.. வாழ்க்கையே மாறப்போகுது
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறந்துவுள்ளது. மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் நடக்கும் மேஜிக்.. அபரிமிதமான லாபம்
Mesham Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டம் உண்டு
Rishabam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Meenam: மீனம் ராசிக்கு புரோமோஷன் கன்ஃபார்ம்.. வாழ்க்கையே மாறப்போகுது
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறந்துவுள்ளது. மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 9 முதல் 15 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 8 - 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.2.2026 திதி : இன்று அதிகாலை 05.13 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.53 வரை சித்திரை. பின்னர் சுவாதி . நாமயோகம் : இன்று அதிகாலை 02.04 வரை சூலம். பின்னர் கண்டம். கரணம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 8 - 2026 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: கோயில் உழவாரப் பணியில் நாட்டம் கொள்வீர்கள். பரணி: கலைத் துறையில் வெற்றி காண்பீர்கள். கார்த்திகை: அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ரோகினி: பெரியோர்களின் நட்பில் மனம் தெளிவடையும். மிருகசீரிடம்: இடம் விற்பனையில் பணம் கிடைக்கும். திருவாதிரை: ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். புனர்பூசம்: மருத்துவச் செலவுகள் வந்து சிரமத்தை ஏற்படுத்தும். பூசம்: திடீர் திருப்பங்கள் உண்டாகி
Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Dhanusu: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நிலம், வீடு வாங்கும் யோகம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Viruchigam Rasi Palan: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிகம்.. திடீர் அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Thulam Rasi Palan: அடித்தாடும் துலாம் ராசி.. எல்லாமே ஜெயம்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Simmam Rasi Palan: சிம்ம ராசியினரே புதிய உறவுகளிடம் ரொம்ப கவனம்.. நம்பி ஏமாறாதீங்க
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய தலம் மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை கொங்கு வேட்டுவ மன்னர்கள் பராமரித்து வந்தனர். மருத மரங்கள் அடர்ந்த மலை என்பதால் இதற்கு மருதமலை என்று சுவாமிக்கு மருதாசல மூர்த்தி என்று திருநாமம் உண்டானது. இந்தத் தலத்தின் தலபுராணம் சித்தர்களோடு தொடர்புடையது. மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் நாகரத்தினப் பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்த பாம்பு வைத்தியர் ஒருவருக்கு சட்டை முனிவர் காட்சி கொடுத்தார். பூமியில் ஊர்ந்து திரியும் பாம்புகளைக் கண்டுபிடிப்பதை விட உடலுக்குள் இருக்கும் பாம்பைக் கண்டறிந்து அதை மேலெழுப்புவதே பிறவிப்பயன் என்று உபதேசித்தார். இதன் பொருள், உடலில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சஹஸ்ராரம் எனப்படும் உச்சத்தைத் தொடுவதே முக்தி அடைய வழி என்பதையே மறைபொருளோடு உபதேசம் செய்தார். இதைப் புரிந்துகொண்ட வைத்தியர் அன்றிலிருந்து உயிர்களைத் துன்புறுத்தாமல் முருகனை வணங்கித் தியானம் செய்தார். அவரின் கடும் தவத்தைக் கண்ட முருகப்பெருமான் அவருக்கு வள்ளி தேவசேனாவுடன் காட்சி கொடுத்து ஞானோப தேசமும் செய்தார். அன்று முதல் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தராகப் புகழ் பெற்றார். அப்படி பாம்பாட்டிச் சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த தலமே தற்போது இருக்கும் மருதமலைத் திருக்கோயில். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! மலையின் அடிவாரத்தில், 'தான்தோன்றி விநாயகர் சந்நிதி' அமைந்துள்ளது. இந்த விநாயகர் சுயம்பு. யானை முகம் மட்டுமே கொண்ட இவருக்கு உடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மலைமேல் அமர்ந்தருளும் முருகனை நோக்கித் தும்பிக்கையைத் தூக்கியபடி காட்சி தருவது தனிச் சிறப்பு. முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் தான்தோன்றி விநாயகருக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவதால், இவர் ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளார். தொடர்ந்து பயணித்தால் இடும்பன் சந்நிதியை அடையலாம். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் பஞ்ச விருட்ச விநாயகரும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே கையில் வேலுடன் மயில் மீது அமர்ந்தபடி காட்சித் தருகிறார் முருகன். நடைப் பயணமாக மலையேறிச் செல்லும் பக்தர்கள் பஞ்ச விருட்ச விநாயகரைத் தாண்டிதான் மருதாச்சலமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் பஞ்சவிருட்ச விநாயகர் இங்கு ஆதிமூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூவரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள் என்கிறார்கள். இந்த ஆதிமூர்த்திக்கு பூஜைகள் செய்த பிறகே கருவறையில் இருக்கும் பிரதான முருகனுக்குப் பூஜைகள் நடக்கின்றன. சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் முருகன் இருந்தால் அதை சோமாஸ்கந்த தலம் என்பார்கள். இங்கும் வெளிமண்டபத்தில் வலதுபுறத்தில் பட்டீஸ்வரர் சந்நிதியும், இடதுபுறத்தில் மரகதாம்பிகை சந்நிதியும் அமைந்திருக்க, நடுவில் உள்ள கருவறையில் வலது கையில் தண்டத்தை வைத்துக்கொண்டு இடுப்பில் இடது கையை வைத்தபடி காட்சி தருகிறார் தண்டாயுதபாணி. பழநி முருகனைப் போலவே காட்சியளிக்கும் இந்த முருகனை, முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர்தான் வடித்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மூலவரை தண்டாயுதபாணியாகத் தரிசிக்க முடியும். கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் மலையில் உள்ள ஒரு குகைக்குள் சந்நிதி கொண்டிருக்கும் பாம்பாட்டிச் சித்தர். வலது கையில் மகுடியோடும் இடது கையில் தடியோடும் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது. இந்தச் சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் நாகத்தின் வடிவம் தெரிகிறது. பாறையில் தெரியும் அந்த வடிவத்திலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். முருகனுக்குப் பூஜைகள் முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு பாம்பாட்டிச் சித்தர் இன்றும் முருகனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதிகம். சித்தர் சந்நிதியில் இரவு நேரத்தில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் காலையில் பால் குறைந்திருக்குமாம். பாம்பாட்டிச் சித்தர் இந்தப் பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்துவதாக நம்பப்படுகிறது. மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில் மனநிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. எந்தவிதமான மனச் சிக்கலாக இருந்தாலும் மருதமலை முருகப்பெருமானைத் தரிசித்தால், அது உடனே பறந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம். நாக தோஷம் உள்ளவர்களும், விஷக்கடிக்கு ஆளானவர்களும் இங்கு வந்து பாம்பாட்டிச் சித்தரின் அலங்காரத்துக்குப் பயன்படுத்திய விபூதியை நீரில் கலக்கிப் பருகினால், பிரச்னைகள் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிவிட்டால், பாம்பாட்டிச் சித்தரின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர் சூட்டி, இனிப்பான உணவு வகைகளை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். மருதமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று பால் அபிஷேகமும், தைப்பூசத்தையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும். பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும், மாலையில் தேர்த்திருவிழாவும் நடைபெறும். விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 7 - 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: உபரி வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 7 - 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை 7.2.2026 திதி : இன்று அதிகாலை 04.03 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.03 வரை அஸ்தம். பின்னர் சித்திரை . நாமயோகம் : இன்று அதிகாலை 02.12 வரை திருதி. பின்னர் சூலம். கரணம்
மாசி மாத பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனமா இருங்க
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
மாசி மாத பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனமா இருங்க
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Mithunam Rasi Palan: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
Mithunam Rasi Palan: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
மாசி மாத பலன்: அதிர்ஷ்டத்தை அள்ளும் மேஷம் ராசி.. வீடு, நிலம், பணம் பெறும் யோகம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம்
மாசி மாத பலன்: அதிரவைக்கும் மாசி மாதம்.. உலகில் நிகழும் பெரிய மாற்றங்கள்.. தங்கம் விலை குறையுமா?
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் உலகில் நிகழப் போகும் விஷயங்கள் என்னென்ன, மாற்றங்கள் ஏற்படுமா, தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப
மாசி மாத பலன்: அதிரவைக்கும் மாசி மாதம்.. உலகில் நிகழும் பெரிய மாற்றங்கள்.. தங்கம் விலை குறையுமா?
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் உலகில் நிகழப் போகும் விஷயங்கள் என்னென்ன, மாற்றங்கள் ஏற்படுமா, தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டில் கும்ப
விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!
நம் தேசத்தின் ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கே வழிபாடு செய்தால் சகல வரங்களும் கிடைக்கும். மேலும் இத்தலங்கள் சித்தர்களும் முனிவர்களும் வழிபட்ட தலங்கள் என்பதால் இத்தலத்தின் சாந்நித்தியம் அளவிடற்கரியதாக விளங்குகின்றன. அப்படி ஒரு தலம்தான் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் பொன்பரப்பி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்று என்றே சொல்லலாம். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. ஒருகாலத்தில் இவனது ஆட்சியில் இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன்பரப்பி' என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள். பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் இக்கோயிலைப் பற்றிய சுற்றுச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப்பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்கின்றன கல்வெட்டுகள். மேலும் இங்கே சிவ தரிசனம் செய்ய வேண்டிய முறையையும் வெளிப்படுத்துகின்றன. விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி! காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்த ஷோடசலிங்கம் இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார். நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும். பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயில் அம்பிகை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்டர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! மேலும் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது. வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாகக் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள். பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயில் பரிகார சிறப்புகள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாள்களாகும். நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்டவர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை. தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும். இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்குக் காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ நாள்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன. திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!
நட்சத்திரப் பலன்கள் பிப்ரவரி 6 முதல் 12 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 6 - 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: சிக்கலான காரியம் ஒன்று சிரமமில்லாமல் நிறைவேறும் . பரணி: மனதிற்குப் பிடித்தமான காரியம் குடும்பத்தில் நடக்கும். கார்த்திகை: வம்பு வழக்குகளால் மன நிம்மதி பறிபோகும். ரோகிணி: உங்கள் பதவி உயர்வுக்கு மேல் அதிகாரி சிபாரிசு செய்வார். மிருகசீரிடம்: புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். திருவாதிரை: வங்கிக் கடனை செலுத்தி புதிய கடன் பெறுவீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 6 - 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026 திதி : இன்று அதிகாலை 03.11 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம் . நாமயோகம் : இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி. கரணம்
புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில்: பயமில்லாத வாழ்வு அருளும் வெள்ளைக்காரப் பிள்ளையார்!
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே, தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய், மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா! தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும், அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம் இன்புற் றிருக்க வேண்டிநின் இருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. மேற்கண்ட பாடலைப் பாடியவர் பாரதியார். பாரதி புதுச்சேரியில் வாழும் காலத்தில் தினமும் சென்று வழிபடும் ஆலயம் மணக்குள விநாயகர் ஆலயம். கடற்கரையை நோக்கி அமைந்திருக்குமிந்த திருக்கோயிலின் சிறப்புகள் அநேகம். வாருங்கள் அவற்றை அறிந்துகொள்வோம். விநாயகப்பெருமானின் அருளையும் பெறுவோம். புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில் புதுவையில் 'ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு. அதற்கு 'மணற் குளம்’ என்று பெயர். இதன் அருகில் கோயில் கொண்ட விநாயகர் என்பதால் இந்தப் பிள்ளையாருக்கு, 'மணற்குள விநாயகர்’ எனும் திருநாமம் உண்டாயிற்று. இங்கு விநாயகர் கோயில் கொண்ட வரலாறு அற்புதமானது. புதுச்சேரி முரட்டாண்டி சாவடியில் தொள்ளைக்காது சுவாமிகள் வாழ்ந்துவந்தார். ஒருநாள் இவர் கடலில் நீராடிவிட்டு மணற்குளக் கரையில் இருந்த வில்வ மரத்தடியில் அமர்ந்தபோது, ஓர் அசரீரி கேட்டது. மணற்குளத்தில் இருக்கும் தன்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டது. சுவாமிகளும் அதன்படியே விநாயகர் திருமேனியைக் கண்டு எடுத்து கோயில் அமைத்தார். விநாயகரின் அருளும் கிருபையும் பரிபூரணமாக அவருக்குள் நிரம்பியது. ஒரு நாள் அவர் பூத உடலைத் துறந்து சூட்சும உடலை அடைந்தார். பக்தர்கள் அவருக்குச் சமாதி அமைத்து வழிபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! 1688-ம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் புதுவைக்கடற்கரையில் ஒரு கோட்டை கட்டத் திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம்தான் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இதைத் தடுத்தனர். ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுவாமிக்கு உற்சவங்கள் நடத்தக்கூடாது என்று தடை போட்டனர். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்த கவர்னர் தடை உத்தரவை வாபஸ் பெற்றார். புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில் ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை. ஒருநாள் எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள். இப்படி வரலாற்றில் தன் பெருமையைப் பதிவு செய்து வைத்துள்ளது மணக்குள விநாயகர் கோயில். இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன. மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில் பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்தக் கோயிலில் விநாயகருக்குப் பள்ளியறை காணப்படுவது சிறப்பு. தங்கத்தேர் உலாவும் உண்டு. அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. தினமும் நான்கு கால பூஜை, மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியையட்டி பிரம்மோத்ஸவம், மாசிமகத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர். மேலும் கடன் பிரச்னை தீரவும் தீராத வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவும் இந்த விநாயகரை வேண்டிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும். திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 5 - 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை 5.2.2026 திதி : இன்று அதிகாலை 02.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.49 வரை பூரம். பின்னர் உத்திரம் . நாமயோகம் : இன்று அதிகாலை 03.38 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம். கரணம்
Meenam Rasi Palan: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீன ராசி.. சொத்துகள் சேர்க்கும் யோகம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Kumbam: கும்ப ராசிக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Magaram Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. அடுத்தடுத்து முன்னேற்றம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Magaram Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. அடுத்தடுத்து முன்னேற்றம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. வார்த்தையில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
விருச்சிக ராசிக்கு கைகொடுக்கும் கிரகங்கள்.. பண வரவு கன்ஃபார்ம்.. தைரியம் கூடும் நேரம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!
கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற மூன்று விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. கருவலூர் ஸ்ரீ வீர ராஜேந்திர விண்ணகரப் பெருமாள் மற்றும் விஜயமங்கலம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் கொடுவாய் விண்ணளந்த பெருமள் திருக்கோயில் ஆகியன. திருப்பதிக்கு இணையான பெருமையையும் மகத்துவத்தையும் கொண்ட இந்தத் திருத்தலங்களில் கொடுவாய் விண்ணளந்த பெருமாள் திருகோயில் பெரும் சிறப்பினை உடையது. காரணம் இந்தக் கோயில் பெருமாளின் தசாவதாரத் திருக்கோலத்தை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் பெற்றார். தானத்துக்கு ஈடாக பூலோகத்தை தன் ஒரு திருவடியாலும் விண்ணை மற்றொரு திருவடியாலும் அளந்தார் என்கின்றன புராணங்கள். அப்படி விண்ணை அளந்த பெருமாளாக திரிவிக்ரமனாக பெருமாள் அருளும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருமாள் தன் திருவடி ஒன்றை வானம் நோக்கித் தூக்கியிருப்பதுபோன்ற திருக்கோலத்திலேயே சேவை சாதிப்பார். ஆனால் கொடுவாய் திருத்தலத்தில் பெருமாள் சாதாரணமாக இரு திருவடிகளையும் பூமியில் நிறுத்தி சேவை சாதிக்கிறார். வாருங்கள் பெருமாள் விண்ணளந்தவனாக வேண்டுவோர்க்கும் இரங்கும் தயாபரனாகக் காட்சி அருள் அந்த அற்புதத் தலம் பற்றித் தெரிந்துகொள்வோம். கொடுவாய் ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடுவாய் திருத்தலம். இந்தக் கோயில் எப்போது, யாரால் எழுப்பப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. அப்படியானால் திருக்கோயில் அதற்கும் பழைமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் கி.பி. 1212-ல் வீர ராஜேந்திரன் என்ற சோழ அரசர் இந்தக் கோயிலுக்கு அர்த்த மண்டபம் கட்டித் தந்ததாகக் குறிப்புகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! கி.பி. 13-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட கொடுவாயில் இருந்த ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் கோயில் பாண்டிய படைகளால் சிதைக்கப்பட்டது. பின்னர் கி.பி. 1489-ல் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீர நஞ்சராயர்தான் இக்கோயிலை மீட்டெடுத்துக் கட்டிமுடித்தார். பெருமாள் இங்கே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் திகழ, அலர்மேலுமங்கை நாச்சியார் சமேதராக அருள்கிறார். தனிச் சந்நிதியில் அருளும் மகாலட்சுமி தாயாரும் சிறந்த வரப்பிரசாதி. கோயிலின் மகா மண்டபமும் தசாவதார விமானமும் எழிலுடன் திகழ்கின்றன. பகவானின் தசாவதாரத் திருக்கோலங்கள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும்படித் திகழ்கிறது. கொடுவாய் ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் தாமரை பீடத்தில் வராஹர், ஹயக்ரீவர், யோக நரசிம்மர் ஆகிய தெய்வங்களின் சக்தி ஆவாஹனம் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், தனிச் சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். அவரை ஆலிங்கனம் செய்தபடி தாயார் திருக்காட்சி தருகிறார். சுவாதி மற்றும் பிரதோஷ தினங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியரின் பிரச்னைகளைக் களைந்து, அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாழ அருள்புரிகிறார். மேலும் தொழிலில் ஏற்பட்ட கடன்கள் தீரவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருகிறார்கள். தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் இந்த ஆலயத்தில் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர், வாலின் நுனியில் மணியுடன், ஒரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியபடியும், ஒரு கரத்தில் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் வர ஹஸ்தமும் காட்டி அருள்கிறார். இத்திருக்கோயிலில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பெரிய கருடன் சந்நிதியும் அமைந்திருக்கிறது. 11 நாகங்கள் கருடனின் உடலைச் சூழ்ந்திருக்க, தன் இரண்டு கரங்களால் நாகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய கருடனை, பஞ்சமி தினத்தில் வழிபட்டால் நாகதோஷம் நீங்கி, திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் கிணறு, 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததாகும். வீரசோழன் கலிமூர்க்கன் என்ற அரசன் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க, மிகப் பெரிய இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார். இன்றளவும் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்று நீரைப் புனிதத் தீர்த்தமாகவே பருகி வருகிறார்கள். கொடுவாய் ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் கோயில் அனுமன், கருடன் இத்திருக்கோயிலில் ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி, லட்சார்ச்சனை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, மகர சங்கராந்தி, ஆடிப் பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு போன்ற முக்கிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்ரீவிண்ணளந்த பெருமாளைத் தரிசித்து வழிபட்டால், நம் மனதில் இருக்கும் அகந்தையை ஒடுக்கி, பல நன்மைகளை நமக்கு அருள்வார். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கொடுவாய் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து வாருங்கள். திருப்பதி பெருமாளை தரிசனம் செய்த பலனையும் புண்ணியத்தையும் பெற்று மகிழுங்கள். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 4 - 2026 புதன்கிழமை.
அஸ்வினி: அடுத்தவர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். பரணி: தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பதை மறக்காதீர்கள். கார்த்திகை: தொலைந்து போன பொருள் உங்களுக்கு வந்து சேரும். ரோகிணி: முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மிருகசீரிடம்: இன்சூரன்ஸ் பணம் அவசியமான தேவைக்கு உதவும். திருவாதிரை: பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புனர்பூசம்: பேச்சினால்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 4 - 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.2.2026 திதி : இன்று அதிகாலை 02.59 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.24 வரை மகம். பின்னர் பூரம் . நாமயோகம் : இன்று அதிகாலை 04.55 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம்
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு வாயில் தான் கண்டமே.. பாசிட்டிவாக இருப்பது நல்லது
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. வேலையில் வரப்போகும் குட்நியூஸ்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. வேலையில் வரப்போகும் குட்நியூஸ்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால
Rasi Palan This Week: யோகத்தை அள்ளும் மீனம் ராசி.. பொற்காலம் ஆரம்பம்.. என்ஜாய்
Meenam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Simmam Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. பணவரவு கொட்டும்.. கோபம் மட்டும் வேண்டாம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
Rasi Palan This Week: செல்வத்தை குவிக்கும் கும்ப ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kumbam Rasi Palan: பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 3 கிரகங்கள்.. பண வரவு கொட்டும்
Magaram Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 3 கிரகங்கள்.. பண வரவு கொட்டும்
Magaram Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி அமைந்த ஓர் அற்புதக் கோயில்தான் கழுகுமலை. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தின் மகிமைகள் ஏராளம். வாருங்கள், கழுகுமலை குறித்த புராண இதிகாச தகவல்களையும் அங்கு அருள்பாலிக்கும் முருகனின் சிறப்பையும் பரிகார சிறப்பையும் அறிந்துகொள்வோம். ராமாயண காலத்தில் இதன் பெயர் கஜமுக பர்வதம். சடாயுவை ராவணன் கொன்றான். ராமபிரானே அவருக்கு மகன் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். சடாயுவின் சகோதரன் சம்பாதி. செய்தியறிந்து ஓடிவந்து ராமபிரானைச் சந்தித்து வணங்கினான். சகோதரனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைக் கூடச் செய்ய இயலாத பாவியாகிவிட்டேனே என்று புலம்பினான். கழுகுமலை கழுகாசலமூர்த்தி ராமன் அவனைத் தேற்றினார். கஜமுக பர்வதத்தில் கோயில்கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தொழுது பாவங்கள் தீர வழிகாட்டினார். கழுகு சம்பாதி, வந்து வழிபட்ட மலை இது என்பதால் இதற்குக் கழுகுமலை என்ற பெயர் ஏற்பட்டது. கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்துபாடிய அண்ணாமலைச் செட்டியார், இந்த ஊரை வீதிதோறும் ஆதிமறை வேதங்கள் முழங்கிய ஊர் என்று குறிப்பிடுகிறார். செல்வச் செழிப்பும் இயற்கை வளமும் கொண்டு சிறந்து விளங்கிய ஊர் என்று தன் காவடிச் சிந்தில் போற்றிப் புகழ்கிறார் அண்ணாமலை. இங்குள்ள கழுகாசலமூர்த்தி ஆலயம் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 300 அடி உயரம் உள்ள மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இந்த ஆலயம் முழுவதும் சிற்பங்களும் ஓவியங்களும் காண்போர் கண்ணைக் கவரும். சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்! இந்த ஆலயத்தில் தரிசனம் செய்ய ஒரு முறையை வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். முதலில் இந்தக் கோயிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் வணங்க வேண்டும். பின்பு வலதுபுறமாக தட்சிணாமூர்த்தியை வணங்கி அபிஷேகத் தீர்த்தம் வழியும் கோமுகியை அடைந்து தீர்த்தத்துளிகளைத் தொட்டுத் தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்ற சந்நிதிகளை அடைந்து வழிபடலாம் என்கின்றனர் பக்தர்கள். அபிஷேகத்தீர்த்தம் நம் ஆத்மாவைத் தூய்மை செய்து ஆண்டவன் தரிசனத்துக்கு நம்மை தயார்படுத்தும் என்பது இதன் தாத்பர்யம். இங்கு முருகப்பெருமானின் கருவறை சந்நிதி சற்று உயர்ந்த மேடையில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் முருகன் ஒரு தலையோடும் ஆறு கரங்களோடும் அருள்பாலிக்கிறார். கருவறையில் முருகனோடு வள்ளி - தெய்வயானை ஆகியோர் முருகனுக்குப் பக்கவாட்டில் இருபுறமும் நேருக்கு நேர் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளனர் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முருகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். மயில் வலதுபுறமாகத் தன் தலையைத் திருப்பியவாறு காட்சி தருகிறது. பக்தர்கள் சொல்லும் குறையைக் கேட்டு ஓடிவந்து காப்பதற்குத் தயாராக மயில் அவ்வாறு வலப்புறம் பார்த்தவாறு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அடியவர்கள். இங்கு நரசிம்ம மூர்த்திக்கும் சந்நிதி உள்ளது. நரசிம்மர் இங்கு யோக நரசிம்மராக வீற்றிருக்கிறார். கழுகுமலை என்றதும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி வைபவமே நினைவுக்கு வரும். மாறுபட்ட உருவத்தில் சூரர்களைச் செய்து விரதமிருந்து அதைச் சுமந்துகொண்டு பக்தர்கள் ஆடிவரும் அழகே தனி. வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். திருவிழாக்காலங்களில் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி தாங்கியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! பரிகாரச் சிறப்பு கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது. தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள். அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. கழுகாசல மூர்த்தியை வழிபாடு செய்துவிட்டு கோயிலோடு ஒட்டியிருக்கும் மலையையும் சென்று காணவேண்டும். சமணர்காலக் கலை கொட்டிக்கிடக்கும் இடம் கழுகுமலை. இங்குதான் எழில்மிகு வெட்டுவான் கோவில் உள்ளது. பாதி முடிந்த நிலையிலிருந்தாலும் இதன் கம்பீரமும் அழகும் காண்பவரைப் பிரமிப்பூட்டுபவை. இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் தங்கி கல்விப்பணி செய்ததற்கான சிற்ப ஆதாரங்கள் மலைமீது உள்ளன. கழுகுமலை வெட்டுவான்கோயில் வெட்டுவான்கோவில் இப்படி முடிவற்று நிற்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பெரும் தச்சன் ஒருவன் மலையின் உச்சியில் வடித்துக்கொண்டிருக்கும்போது அவன் மகன் மலையின் நடுப்பகுதியில் சிற்ப வேலைகளைச் செய்யத் தொடங்கினான். தனக்குப் போட்டியாக யாரோ வந்துவிட்டார்கள் என்று பொறாமை கொண்ட தச்சன் தன் உளியை ஒலிவந்த திசை நோக்கி எறிந்தான். அந்த உளி தச்சனின் மகன் மீது பட்டு அவன் உயிர் துறந்தான் என்னும் பெருந்தச்சனின் கதை இங்கு சொல்லப்படுகிறது. ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும். தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
இந்த வார ராசிபலன் பிப்ரவரி 3 முதல் 8 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 3 - 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பரணி: புதிய நண்பர்கள் மூலம் நினைத்துப் பாராத லாபம் கிடைக்கும். கார்த்திகை: செய்யாத தப்புக்கு குற்றம் சுமத்தினால் கவலை கொள்ளாதீர்கள். ரோகிணி: விவேகமாக இருங்கள், தொல்லைகள் நெருங்காது. மிருகசீரிடம்: வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். திருவாதிரை: வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும். புனர்பூசம்: வேலைகளை முனைப்புடன் செய்து
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 3 - 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.2.2026 திதி : இன்று அதிகாலை 03.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.29 வரை ஆயில்யம். பின்னர் மகம் . நாமயோகம் : இன்று அதிகாலை 04.30 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம்
திண்டுக்கல்: 100 ஆண்டு பழமையான தாடிக்கொம்பு பழனி ஆண்டவர் கோவில்; தைப்பூசத் தேரோட்டம் | Photo Album
திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் திருக்கோவில் தேரோட்டம் தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா?
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. புரோமோஷன் கன்ஃபார்ம்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: புது வீடு புது கார் கலக்கப் போறீங்க.. விருச்சிக ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா
Viruchigam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: காசு பணம் துட்டு மணி மணி.. துலாம் ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
Thulam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கால் மேல் கால் போட்டு அமரப்போகும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
Kanni Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. பொறுமை அவசியம்
Simmam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album
தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 2 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 2 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 2.2.2026 திதி : இன்று அதிகாலை 04.43 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.01 வரை பூசம். பின்னர் ஆயில்யம் . நாமயோகம் : இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம். கரணம்
கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி கோவலன் கொலை செய்யப்பட்டார். கண்ணகி அநீதி இழைத்து தன் கணவனைக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி. கண்ணகி தரிசனம்: தமிழர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய கண்ணகிக் கோட்டம்! அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்திக் குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பளித்து வருகிறார். கண்ணகி தேவியைச் சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆற்றுகால் பகவதி அம்மன் இந்த நிலையில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலின் முன் பகுதியில் உலகிலேயே உயரமான கண்ணகி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி கோபம் கொப்பளிக்க ஆவேசமாக நிற்கும் வடிவில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த ஆழிமலை சிவன் கோயிலில் நாட்டில் உயரமான கங்காதரர் சிற்பம் அமைத்த சிற்பி தேவதத்தன் கண்ணகி சிலையை அமைக்க உள்ளார். கங்காதரர் சிற்பம் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 60 அடி உயரத்தில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. கண்ணகி சென்ற பாதையில்... பசுமை நடையுடன் ஓர் இலக்கியப் பயணம்!
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. பொறுமை அவசியம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album
தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா?
Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album
வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா திருவருள் செல்வர்கள் - 14: அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளலார் செய்யும் அற்புதங்கள்!
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்
Mithunam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Weekly Horoscope: வார ராசி பலன் 1.2.26 முதல் 7.2.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of January 25th - January 31th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 1 - 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.2.2026 திதி : இன்று அதிகாலை 04.40 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.53 வரை புனர்பூசம். பின்னர் பூசம் . நாமயோகம் : இன்று காலை 11.04 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 1 - 2026 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: மனைவி உங்களை மட்டம் தட்டிப் பேசி மகிழ்ச்சியடைவார். பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள். கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள். ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தைப் பெரிதாக்காதீர்கள். திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள். புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பூசம்:
Simmam Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. பணவரவு கொட்டும்.. கோபம் மட்டும் வேண்டாம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்! - இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?
தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும். இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம். ‘பூசம் புண்ணியம் தரும்!’ இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம். தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது. முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை. தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது என்ற பழமொழியும் உள்ளது. தைப்பூசக் கோயில்கள் தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள். வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. காவடி பக்தர்கள் திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள். தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது. முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம். முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது. குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச தரிசனம் இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது. தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. திடீர் அதிர்ஷ்டமும் காத்திருக்கு
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது

29 C