Rasi Palan This Week: துலாம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வன்மத்தால் வரும் ஆபத்து.. கவனம்
Thulam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்
சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் செல்வத்தை இழந்தவர்கள், மீண்டும் அதை அடைவார்கள். பொன் - பொருள் மட்டுமல்ல, பிரிந்த உறவுகளை மீண்டும் அடையவும் பாலாம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட அருள் தரும் அன்னையாக அம்பிகை அமர்ந்திருக்கும் திருத்தலம்தான் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை ஆலயம். திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை கோயில் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி திருக்கோயில். ஸ்ரீபாலா சித்தர்களுக்குத் தலைவியாக விளங்கி அவர்களுக்குச் சகல ஸித்திகளையும் அருளும் தேவியான ஸ்ரீவாலைதேவி வழிபாட்டை நந்தீசரிடம் இருந்து போகர் அறிந்ததாகவும், போகர் கொங்கணருக்கு உபதேசித்ததாகவும், கொங்கணர் பிற்கால சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்னை வாலையை, ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற வாலாம்பிகை மந்திரம் கொண்டு துதித்து அஷ்டமா ஸித்திகளையும் அடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது வாலை மந்திரம் என்கிறது சித்தர்கள் சுவடி. திருமூலரும், கருவூராரும், அபிராமிப் பட்டரும் இந்த அன்னையின் பெருமையைப் பலவாறு புகழ்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி! கலியுகத்தில் பாலா கலியுகத்தில் அன்னை பாலாவே குமரகுருபரருக்குக் குழந்தை வடிவில் காட்சி தந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைக் கேட்டு மகிழ்ந்து, முத்து மாலையைப் பரிசளித்த அற்புதக் கதையும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு' என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தில் சாந்நித்யம் அறிந்து, இங்கேயே ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்துத் தவம் இயற்றி, ஸித்திகள் பெற்றார். ஸ்ரீபாலாவின் அருளால் அவளைக் கனவில் கண்டு பலரின் குறைகளைத் தீர்த்தார். பிறகு இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர். அவர்களுக்கு அருள் செய்த அன்னை பாலா இங்கேயே அமர்ந்தும்விட்டாள். எனவே கொம்மடிக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தலத்துக்கு ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மருந்து அரைக்கும் இடம் கொம்மடிக்கோட்டை கோயிலில் ஒரே சந்நிதியில் வாலை சித்தரும், காசியானந்தரும் அடுத்தடுத்து அருள்கின்றனர். இங்குள்ள ஸ்ரீவாலைசித்தர், ஸ்ரீகாசியானந்தர் இருவரையும் வணங்கிய பின்னரே, ஸ்ரீவாலையை வழிபட வேண்டும் என்பது மரபு. வாலை சாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்தியெம்பெருமான் காட்சியளிக்கிறார். சித்தர்கள் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. சக்தியின் உயர்ந்த நிலை மனோன்மணி. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் மனோன்மணி. மனதில் மணியாக ஒளிர்பவள். ஆலயத்தின் பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும், சண்டிகேஸ்வரரும், நடராஜர்–சிவகாமி சந்நிதியும் உள்ளன. ஸ்ரீவாலாம்பிகை சந்நிதி தனி விமானத்துடன் அமைந்துள்ளது. பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ அலங்காரங்களுடன், நின்ற கோலத்தில் ஜொலிஜொலிக்க அருள்பாலிக் கிறாள் ஸ்ரீபாலா. `இந்த அன்னையை வணங்கினால் சகல யோகங்களையும் போகங்களையும் அருள்வாள். ஒரு கணம் அவளை எண்ணி வணங்க, கனவில் வந்து கரம் கொடுப்பாள்' என்கின்றன சாஸ்திரங்கள். மனமுருக வேண்ட மனக்கவலை தீர்ப்பாள் குறிப்பாக பொன், பொருள், உறவுகள், தேகநலன், மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பைப் போக்கி இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை. ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார். இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில் மருந்தாகும் மஞ்சனத்தி இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக - புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம். ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். வாய்ப்பிருப்பவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!
ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album
ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்?
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 23.2.2026 திதி : இன்று காலை 10.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று மாலை 05.25 வரை பரணி. பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று காலை 11.12 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: புதிய பொறுப்புகளை பெற்று பூரிப்படைவீர்கள். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு
Rasi Palan This Week: கோடீஸ்வர யோகத்தைப் பெறும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் யோகம்
Kanni Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Kadagam: சிக்கலில் சிக்கும் கடக ராசி.. கோபத்தைக் கட்டுப்படுத்துங்க பாஸ்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. 3 விஷயத்தில் ரொம்ப கவனம்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கடனில் இருந்து விடுதலை
Rishabam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்
Mesham Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Sani Peyarchi: மீனம் ராசியை வச்சு செய்யும் சனி பகவான்.. இந்த விஷயங்களில் கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சனிப்பெயர்ச்சியில் வரும் குட்நியூஸ்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Weekly Horoscope: வார ராசி பலன் 22.2.26 முதல் 28.2.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of February 22nd - February 28th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்
கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்கு கருவூராருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் என்பதால், இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு, தமிழகத்தில் உள்ள 2000 ஆண்டுகால பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்திருத்தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்பதும் இந்த கோயில் சம்மந்தப்பட்ட சிறப்பாகும். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 30 நாட்களாக ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள் வருகை தந்தனர், குறிப்பாக, கருவூரார் சித்தர் சன்னிதியை பார்ப்பதற்காகவே வருகை தந்து சித்தர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். japan paktharkal அதன்பிறகு, கோயிலின் முன்புற கோபுரம் முன்பு குழுவாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோபால் பிள்ளை சுப்பிரமணியம் குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட இவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களை தரிசித்து வருவதாக கூறினர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் திருக்கோயில் மற்றும் குளித்தலை கடம்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கரூரில் பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 22 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.2.2026 திதி : இன்று பிற்பகல் 12.17 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று மாலை 06.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி. நாமயோகம் : இன்று பிற்பகல் 02.10 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம். கரணம் :
Sani Peyarchi: சொல்லி அடிக்கும் மகர ராசி.. சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: சொல்லி அடிக்கும் மகர ராசி.. சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்ட சனியால் வரும் ஆபத்து.. 5 விஷயத்தில் ரொம்ப கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கார், வீடு வாங்கும் யோகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: கன்னி ராசிக்கு கண்டகச் சனி.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: சிம்ம ராசியை வச்சு செய்யப் போகும் அஷ்டம சனி.. 5 விஷயங்களில் மிக கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!
ராமநாதபுரம் என்றாலே ஸ்ரீராமபிரான் நினைவு அனைவருக்கும் வரும். அங்கிருந்துதான் ராமபிரான் சமுத்திரத்தில் பாலம் கட்டி இலங்கை சென்றார். திரும்பி வரும்போதும் சேதுக்கரையில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவேதான் அந்த ஊர் ஸ்ரீராமரின் பெயரைத் தன்னோடு தாங்கியிருக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ முக்கிய காரணமாகவும் திகழ்வது இந்தத் தலம் தான் என்கிறது தலபுராணம். வாருங்கள் ராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கும் திருப்புல்லாணி திவ்ய தேசம் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். அயோத்தியின் சக்கரவர்த்தி தசரத மகாராஜா தனக்கு வாரிசு இல்லை என்று வருந்தித் தனக்குப் பரிகாரம் கூறுமாறு பண்டிதர்களைக் கேட்க அவர்கள் தென்பகுதியில் தர்ப்பை வனமாக இருக்கும் இடத்தில் யுகம்யுகமாக நிற்கும் ஓர் அரசமரம் உள்ளது என்றும் அது ஆதி ஜகந்நாதப் பெருமாளே என்றும் கூறினர். அந்த பெருமாளை வழிபட்டால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றனர். அதன்படி தசரதன் தென்கரைக்கு வந்து அரசமரமாக நின்ற ஆதிஜெகந்நாதப் பெருமாளை தரிசித்து, குழந்தைப் பேறு இல்லையே என்று வேண்டினார். அவரின் கடின முயற்சியால் மகிழ்ந்த பெருமாள் காட்சி கொடுத்து ஒரு மந்திரத்தையும் உபதேசித்தார். அதை உச்சரித்தபடியே தனது தோஷங்கள் நீங்க தசரதன் இங்கு ஒரு நாகப் பிரதிஷ்டை செய்தார். பின்னர் புத்ர காமேஷ்டி யாகம் செய்து பிரசாதமாக பாயசம் பெற்றார் என்கிறது திருப்புல்லாணி ஜகந்நாதப் பெருமாள் கோயில் தலவரலாறு. திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் ராமாயண காலத்துக்கும் முன்பே கிருத யுகத்தில் புல்லவர், கண்வர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளும் திருப்புல்லாணி தர்ப்பைக் தவம் இருக்க, அசுரர்களிடம் இருந்து அவர்களைக் காக்க அரசமர ரூபத்தில் தோன்றினார் பெருமாள் என்கிறது புராணம். மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகந்நாதப் பெருமாளாகத் திருக்காட்சியும் தந்தார். அதே திருக்கோலத்தில் வரும் யுகம் தோறும் அங்கேயே கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேதனைகள் தீர்த்து வரங்கள் அருள்வதாகவும் உறுதியும் கூறினார் என்கிறது தலவரலாறு. எனவே இத்தலத்துக்கு 'சரணாகதி க்ஷேத்ரம்' என்ற புகழும் உண்டு. 108 திவ்ய ஸ்தலங்களில் திருப்புல்லாணி மட்டுமே சரணாகதி க்ஷேத்ரமாக உள்ளது சிறப்பு. சமுத்திரராஜன், விபீஷணர், வருணன், புல்லவர், காலவர், கண்வர் எனத் தொடங்கி இங்கு யார் சென்றாலும் அவர்களை தன் பக்தர்களாக சரணடைய வைத்து ஏற்றுக்கொள்பவர் ஆதிஜகந்நாத பெருமாள். சீதையைப் பிரிந்த துயரில் கடற்கரையில் தம்பி லட்சுமணன் மடியில் தலைசாய்த்துத் தர்ப்பை புல் மீது படுத்தார். மேலும் சமுத்திரத்தைக் கடக்க உபாயம் வேண்டி முறைப்படி தர்ப்பைப் புல் மீது தங்கி மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். புல்லணையில் ஸ்ரீராமர் தங்கியதால் இத்தலம் ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் கொண்டது. மூலவராகக் கருவறையில் ஆதிஜகந்நாதப் பெருமாள் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகிறார். எத்தனையோ ஜெகந்நாதர் இருந்தாலும் இவரே பழைமையானவர் என்பதால் ஆதிஜெகந்நாதர் எனப்படுகிறார். ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்று திருமங்கை ஆழ்வார் இவரை அழகுத் தமிழில் மங்களாசாசனம் செய்துள்ளார். திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் கருவறைச் சுவரில் சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் சீதாதேவியை மீட்க ஆலோசனை செய்த கோலத்தில் உள்ளனர். ஜகந்நாதப் பெருமாளுக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் எனும் சயன ராமர் சந்நிதி உள்ளது. இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்துத் துயில் கொள்ளும் காட்சி வேறு எங்கும் காண முடியாத திருக்காட்சி. ராமரை அடைக்கலம் அடைந்த சமுத்திரராஜனும் அவர் மனைவியும் சரண் அடைந்த கோலத்தில் முன் மண்டபத்தில் உள்ளனர். ஆதிஜகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயன ராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், சந்தான கோபாலகிருஷ்ணர் என இத்தலத்தில் ஐந்து திவ்ய வடிவங்களில் பெருமாளை தரிசிக்கலாம் என்பது சிறப்பு. இங்கு உற்சவர் கல்யாண ஜெகந்நாதர், தாயார் கல்யாணவல்லி எனும் பத்மாசனித் தாயார், தல விருட்சம் அரசமரம்; ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தங்கள் உண்டு. இங்கு மட்டுமே சேர்த்தி உற்சவம் வெள்ளிதோறும் உண்டு. அன்று ஊஞ்சல் உற்சவமும் நடக்கும். தசரதனுக்குப் பிள்ளை வரம் தந்த தலம் என்பதால் இன்றும் பிள்ளை வரம் வேண்டி வருபவர்கள், சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, இங்குள்ள நாகர் சிலைக்கு முன்பு வணங்கி உபவாசம் இருந்து, மறுநாள் பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் மகாலட்சுமியை மடியில் வைத்துக்கொண்டு அருளும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவர் தவிர ஜெகந்நாதர் சந்நிதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மரும் அருள்கிறார். இவருக்கு சந்தனக் காப்பிட்டு வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். நாகத்தின் மீது நடமாடும் சந்தானக் கண்ணன் சிலை இங்கு விசேஷம். ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என முன்னீர்களாலும் புகழ்பெற்ற தலமிது. திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைக்கப்பட்டது. இங்குள்ள கோயிலில் இருக்கும் அனுமன் இலங்கையைப் பார்த்தபடி காட்சி தருகிறார். ஆதிஜகந்நாதரை வேண்டிக்கொண்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இந்தப் பெருமாளுக்கு `வெற்றி பெருமாள்' என்றே பெயருமுண்டு.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 21 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: தாயார் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். பரணி: முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். கார்த்திகை: அரசு வேலைக்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும். ரோகிணி: பெருமைக்குரிய செயல்களை செய்து பிரமிக்க வைப்பீர்கள். மிருகசீரிடம்: வில்லங்கமான சொத்தை விலைக்கு வாங்குவீர்கள். திருவாதிரை: பொறுப்புடன் நடந்து ஊதிய உயர்வு பெறுவீர்கள். புனர்பூசம்: சிக்கலில் இருந்த
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 21 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 21.2.2026 திதி : இன்று பிற்பகல் 02.12 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று இரவு 08.15 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று மாலை 04.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம். கரணம் :
Sani Peyarchi: திரும்பி வந்துட்டேனு சொல்லும் கடக ராசி.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: சனியின் அருளால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ராஜவாழ்க்கை நிச்சயம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: சனியின் அருளால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ராஜவாழ்க்கை நிச்சயம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: ரிஷப ராசிக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. அள்ள அள்ள பணம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
Sani Peyarchi: மேஷ ராசியினருக்கு சனிப்பெயர்ச்சியில் நடக்கும் மாற்றங்கள்.. முழு பலன்கள் விவரம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து
விஜய்க்கு முதலமைச்சராகும் யோகம் உண்டா?.. பிரபல ஜோதிடர் கணிப்பு
TVK Vijay: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. 2026 இல் விஜய் முதலமைச்சராகும் யோகம் உள்ளதா என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!
பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன. அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம். விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது. இங்கு அருளும் ஈசனுக்கு பரியா மருதீஸ்வரர் என்பது திருநாமம். அது என்ன பரியா மருதீஸ்வரர்? இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் ஆதியில் இவருக்கு, 'பறியா மருந்தீஸ்வரர்' என்பதுவே திருநாமம். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் ‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்துபவை மருந்து மற்றும் மூலிகைகள். ஆனால், பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்தாக இந்த ஈசன் திகழ்ப்வர். எனவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றியிருக்கிறார்கள். அதுவே காலப்போக்கில் `பரியா மருதீஸ்வரர்' என்ற திருநாமம் நிலைத்துவிட்டது என்கிறார்கள். மேலும் ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்! கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு பரியாமருதீஸ்வரர் ஆலயம். முதலில் தரிசிக்கவேண்டியது மருது விநாயகரை. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்துத் திருமேனிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தல விருட்சமான மருதமரம் மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயறனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள். இங்கு ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள். கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்! திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்த நிலம் இது என்பதால் ஈசனுக்கு மூலிகைச் சாறு அபிஷேகம் மிகவும் விசேஷம். குறிப்பாக மகாசிவராத்திரியின்போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களைத் தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு. கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம். (இதேபோன்று மற்றொரு நெய்நந்தித் தலமும் அந்த மாவட்டத்தில் உள்ளது) இந்தக் கோயிலின் தீர்த்தம், சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை கர்ப்பிணிகள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 20 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: வீட்டை புதுப்பித்து வசதிக்கேற்ப மாற்றுவீர்கள். பரணி: கமிஷன் தொழில்களில் முன்னேற்றம் அடைவீர்கள். கார்த்திகை: வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். ரோகிணி: தடைப்பட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். மிருகசீரிடம்: வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புனர்பூசம்: வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூசம்: வாழ்க்கைத்துணையின்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 20 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026 திதி : இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம். கரணம் :
கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!
பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்டார் என்கிறது திருக்குடந்தை புராணம். அப்படி வராக சுவாமி வழிபட்ட விநாயகரை, 'வராக விநாயகர்' என்றே மக்கள் அழைத்துவந்தனர். கும்பகோணத்தின் ஆதிக்கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோயில் விநாயகரின் திருநாமம் காலப்போக்கில், 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று மாறிவிட்டது. இதன் காரணம் என்ன... அந்தத் தல சிறப்பு என்ன என்பன குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகிய திருமேனியோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இனிப்பான வாழ்வை அருள்கிறார் இந்தக் கணபதி. இந்த விநாயகரின் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அறுகம்புல் சாத்தி வேண்டிக்கொண்டாலே அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! ஒரு மகாமகத் திருவிழாவின்போது இந்த விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இவரது திருநாமம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று மாறக் காரணமானது. வாருங்கள், அந்தச் சுவையான வரலாற்றை அறிந்துகொள்வோம். ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார். அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் விநாயகர். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். கரும்பு வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்தார். வியாபாரம் ஏதும் நடக்காததால் சலிப்போடு இருந்த வியாபாரி, ''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது'' என்றார் வியாபாரி. விநாயகரும் வியாபாரியை விடுவதாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! ''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், 'கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர். சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி. நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார். பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின. விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 19 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 19 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 19.2.2026 திதி : இன்று மாலை 05.12 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. நாமயோகம் : இன்று இரவு 09.53 வரை சித்தம். பின்னர் சாத்தியம். கரணம் :
Rishabam Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு
Mesham Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham rasi palan]. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு
Mesham Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham rasi palan]. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு
காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!
மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள். பீமன் சிவபூஜை செய்தல் பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன. பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள். பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் முருகப்பெருமான் இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.
காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!
மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள். பீமன் சிவபூஜை செய்தல் பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன. பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள். பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் முருகப்பெருமான் இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 18 2026 புதன்கிழமை.
அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 18 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 18.2.2026 திதி : இன்று மாலை 06.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று இரவு 10.23 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.39 வரை பரிகம். பின்னர் இரவு 11.53 வரை
Solar Eclipse 2026: சூரியகிரகணம் நிகழும் நேரம்?.. உலகில் ஏற்படப்போகும் பாதிப்பு - ஜோதிடம் கூறுவதென்ன
Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் எப்போது நிகழும், உலகில் ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன, பரிகாரம், கிரக நிலைகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் (Suriya grahanam). ரிங் ஆஃப்
Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு எடுத்த காரியத்தில் ஜெயம்.. பேச்சில் ரொம்ப கவனம்
Kumbam Rasi Palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Solar Eclipse 2026: சூரியகிரகணம் இந்தியாவில் தெரியுமா?.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் யார்?
Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா, சூரிய கிரகணம் தெரியக்கூடிய நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள், கிரக நிலைகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் (Suriya grahanam). ரிங்
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!
பஞ்சபூதங்களையும் இறைவனின் வடிவங்களாகப் பார்த்து வழிபடுவது நம் மரபு. அவற்றைப் பாதுகாக்க வழிபாடுகளே பிரதானமானத் திகழ்ந்தன. குறிப்பாக மலைகளில் இறைச்சந்நிதிகளை அமைத்தும் மலையையே இறைவனாக நினைத்தும் வழிபட்டுவந்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட தலங்களுக்குச் செல்வதே மிகவும் விசேஷம். நம் உடலும் மனமும் உடனே புத்துணர்ச்சி கொள்வதோடு வாழ்விலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு மலைத்தலம்தான் திருமூர்த்திமலை. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் தோணி நதிக்கரையில் அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். 'அமணலிங்கேஸ்வரர்' என்றால் 'குற்றமற்ற ஈசன்' என்று பொருள். ஈசன் அக்னி வடிவானவர். அக்னிக்குள் ஏது குறை அல்லது மாசு. மேலும் அவரை நாடினால் அவர் நம் குறைகளையும் குற்றங்களையும் போக்கித் தூய்மை செய்வார். எனவேதான் அவர் அமணலிங்கேஸ்வரர். அவருக்கு மும்மூர்த்தி ஆண்டவன், திருமூர்த்தி, தெற்குசாமி, கஞ்சிமலையான், தென்கைலாசமூர்த்தி எனப் பல திருநாமங்கள் உண்டு. அப்படி ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதி இங்கே குடைவரைக் கோயிலில் லிங்கரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் இத்தலம் புராணச் சிறப்பு பெற்றது. அகத்தியருக்கு ஈசன் திருக்கல்யாணக் காட்சி அருளிய மலைகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள். எனவே இதற்குத் தென்கயிலாயம் என்கிற திருநாமமும் உண்டு. முன்னொரு காலத்தில் வாழ்ந்த அத்திரி முனிவர், மும்மூர்த்திகளே தனக்குக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இவரது மனைவி அனுசூயாவின் முன்பு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தோன்றினர். அனுசூயாவிடம் தங்களுக்கு அன்னமிடும்படிக் கேட்டனர். அனுசூயாதேவி ஒரு செம்பில் தீர்த்தத்தை எடுத்து வந்து அவர்கள் மீது தெளிக்க அம்மூவரும் குழந்தைகளாக மாறினர். அக்குழந்தைகள் அங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி ஒரு கல் உருண்டு வந்தது. உருண்டு வந்த கல், குழந்தைகள் மீது மோதாதவாறுத் தடுக்க சப்த கன்னியர் ஏழுவரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்திக் குழந்தைகளைக் காப்பாற்றினார். பிறகு மும்மூர்த்திகளும் அந்தத் தலத்தில் கலியுகம் முடியும் மட்டும் இருந்து அருள் செய்ய அந்தக் கல்லிலேயே ஐக்கியமாயினர் என்கிறது தலவரலாறு. சப்த கன்னியரும் விரளி மஞ்சள்களில் ஐக்கியமாயினர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் இங்கே பக்தர்கள் சந்தனத்தை மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம், பக்தர்கள் எறியும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் அவர்கள் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. அதை ஒட்டியே அருவியும் வீழ்கிறது. இந்தப் பஞ்சலிங்கங்களை இன்றும் அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயாவும் வழிபட்டு வருவதாக நம்பிக்கை. நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இன்றித் தவிக்கும் தம்பதியினர் இந்த அருவியில் நீராடி சப்த கன்னிமார்களை முறையாக வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் உள்ள சுந்தர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை வழிபட்டாலும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். இங்கு முருகப்பெருமான் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக 30 அடி உயர தீபகம்பம் அமைந்துள்ளது. இந்த தீபகம்பத்தின் அடியில் எண்திசைகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்கை, விசாலாட்சி, ஊர்த்துவத் தாண்டவர், அகோர வீரபத்திரர், ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் சப்தகன்னியர் இங்கு சப்த கன்னியருக்கு விரலி மஞ்சளால் பூஜை செய்தால் நீடித்த மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். கல்வி, நல்ல வேலை, மன நிம்மதி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து அமணலிங்கேஸ்வரரை வேண்டிச் செல்கிறார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, மார்கழி திருவாதிரை ஆகிய சிறப்பு நாள்களில் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இப்படி மனமும் ஆன்மாவும் குளிரச் செய்யும் இந்த மலைத் தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அந்தக் குறையற்ற ஈசனின் கருணையால் வாழ்வில் குறைகள் எல்லாம் நீங்கி வளம் பிறக்கும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 17 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: வயிற்றுக்கோளாறால் மருத்துவமனைக்குச் செல்வீர்கள். பரணி: அலங்காரத் துறை அற்புதமாக கைகொடுக்கும் . கார்த்திகை: அரசாங்க வேலைகள் தாமதமாகும். ரோகினி: தாயார் வழி சொந்தங்களால் உதவி கிடைக்கும். மிருகசீரிடம்: ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருவாதிரை: பெரியோர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். புனர்பூசம்: தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். பூசம்: இரும்பு வேலையில் எச்சரிக்கை தேவை. ஆயில்யம்:
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 17 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.2.2026 திதி : இன்று மாலை 06.30 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று இரவு 10.17 வரை அவிட்டம். பின்னர் சதயம். நாமயோகம் : இன்று அதிகாலை 02.47 வரை வரீயான். பின்னர் பரிகம். கரணம் :
Magaram Rasi Palan: சொல்லி அடிக்கும் மகர ராசி.. ஜாக்பாட் அடிப்பது கன்ஃபார்ம்
Magaram Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Dhanusu Rasi Palan: தடைகளை தகர்த்தெறியும் தனுசு ராசி.. எல்லா விஷயங்களிலும் ஏறுமுகம்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Viruchigam Rasi Palan: இனி சிங்கப் பாதை.. டாப் கியரைப் போட்டு தட்டித் தூக்கும் விருச்சிக ராசி
Viruchigam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. லாபம் கொட்டும் நேரம்.. என்ஜாய்
Kanni Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு சிக்கல்கள் எல்லாம் தீரப்போகுது.. ஜெயிக்கும் யோகம்
Simmam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்!
மகாசிவராத்திரியை அடுத்துவரும் அமாவாசை நாளில் நடைபெறும் வைபவம் மயானக்கொள்ளை. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் அம்மன் ஆங்காரியாக எழுந்தருளி தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் உற்சவம். இந்தத் திருவிழாவைத் தரிசித்தாலே நம் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி இன்பமும் நன்மையும் மேலோங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மகிமைவாய்ந்த இந்த உற்சவத்தினை அது தொடங்கிய ஆதித் தலத்திலேயே வழிபடுவது மிகவும் விசேஷம். வாருங்கள் அந்தத் தலம் குறித்து அறிந்துகொள்வோம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருமேனி புற்றுமண்ணால் சுயம்புவாக உருவானது. நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள் அம்பிகை. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு. கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக ‘பெரியாயி’ மல்லாந்து படுத்த நிலையில் அருள்கிறாள். பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது. கோயிலுக்குள் இருக்கும் இரட்டை விநாயகர்கள் மற்றும் இந்த 108 விநாயகர்களைத் தரிசித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. பிரம்மனின் தலையைக் கொய்ததால் சிவனாருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு, அவருடைய கையில் ஒட்டியிருந்த கபாலத்தை அங்காளம்மன் அழித்தது இந்தச் சுடுகாட்டில்தான் என்கிறது தலபுராணம். திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்! கபாலத்தை அழித்த பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லையாம். அவளது கோபத்தைத் தணிக்க தேர்த்திருவிழா நடத்தப்பட்டது. அந்தத் தேருக்கு தேவர்களும் முனிவர்களும் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறினார்களாம். அங்காள பரமேஸ்வரி அந்தத் தேரில் ஏறி வலம் வந்து சினம் தணிந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும் முனிவர்களும் தேரை விட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர். இந்த ஐதிகத்தின்படி, ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் முடிந்ததும் அந்தத் தேரைப் பிரித்துவிடுகிறார்கள். இறந்த ஆன்மாக்களுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் உணவளிக்கும் விழா இது என்றும் சொல்லப்படுகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் மாசி மாதம் அமாவாசையன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் ‘மயானக் கொள்ளை’ திருவிழா பிரசித்திபெற்றது. அம்மன் அருளால் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், நன்றிக்கடனாக காய்- கனிகள், கீரைகள் எனப் பலவைப் பொருள்களை வீசியெறிந்து சூறையிடுவார்கள். இந்த வைபவத்துக்கு வரும் பக்தர்கள், மயானச் சாம்பலை எடுத்துச் சென்று, தமது வீடுகளில் ஒரு துணிமுடிச்சில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதனால் தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. மாசித் திருவிழாவின்போது நள்ளிரவு நேரத்தில் சாமியாடிகள் சொல்லும் அருள்வாக்கு அப்படியே பலிக்குமாம். திருச்சி மாவட்டம் உத்தமசீலி ஸ்ரீவேணுகோபால சுவாமி: தடைகள் நீங்கி வீடு கட்டி முடிக்க ஒரு திருக்கோயில்! இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைத் தரிசித்தால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்து விதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். மனபயம் உடையவர்கள் எதிரிகளால் தொல்லைக்குள்ளானவர்கள் ஆகியோருக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர். ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு - கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள் ஆகியோரின் பிரச்னைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். சித்தம் கலங்கியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மலையனூருக்கு அழைத்துச் சென்றால், விரைவில் அவர்களின் மனநோய் குணமாகும் என்கிறார்கள், பக்தர்கள். பிரம்ம கபாலத்தை அழித்தபிறகு, அங்காள பரமேஸ்வரி திருவண்ணாமலைக்குச் சென்று, தீர்த்தத்தில் மூழ்கி சாப விமோசனம் பெற்றாள் என்றும் கூறுகிறார்கள். ஆகவே, திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு, மேல்மலையனூருக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் உண்டாகும். தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்!
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 16 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 16.2.2026 திதி : இன்று மாலை 06.26 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று இரவு 09.41 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.24 வரை வியதீபாதம். பின்னர் வரீயான். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 16 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள். கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும். ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம். புனர்பூசம்: ஆடம்பர சிந்தனையால் செலவு அதிகரிக்கும். பூசம்: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
கடகம் ராசி பலன்: குருவின் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழிலில் ஏற்றம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொழிலில் அற்புத மாற்றம்.. இந்த வாரம் நன்மைகளை அள்ளித் தரும்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொழிலில் அற்புத மாற்றம்.. இந்த வாரம் நன்மைகளை அள்ளித் தரும்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு லாபம், மகிழ்ச்சி.. அமோகமான வாரமாக இருக்கும்
Mesham Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 15 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026 திதி : இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம். கரணம்
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனிதராக ஏற்றுக்
காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. கடகம் கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2
காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan]. கடகம் கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2
Valentines Day Rasi Palan: காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசியினர் யார்?.. 12 ராசிகளுக்கான பலன்கள்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் எந்த ராசியினருக்கு எல்லாம் காதல் கைகூடும், காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக காதலை சொல்ல வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மேஷம் சுக்கிரன் 11 ஆம் இடத்திலும், குரு 3
மகா சிவராத்திரி கடைப்பிடிப்பது எப்படி? அர்த்தமுள்ள 6 கேள்விகள்... அறிந்துகொள்ள வேண்டிய பதில்கள்!
மாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரியே மகாசிவராத்திரி என்பார்கள். மகாசிவராத்திரி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் சிவபூஜை செய்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் மகாசிவராத்திரியின் பெருமை பலவாறு கூறப்பட்டிருக்கிறது. தெரியாமல் மகாசிவராத்திரியில் லிங்கத்தின் மீது வில்வ இலைகளைப் பிய்த்துப்போட்ட குரங்கும் வேடனும் மறுபிறவியில் பெரும் பலன்கள் அடைந்தது பற்றிய சரிதங்களை அறிந்திருப்போம். இந்த நாளின் சிறப்புகள் என்னென்ன என்பதையும் எப்படி மகாசிவராத்திரியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விபதில்களாகக் காண்போம். ``இந்த ஆண்டு மகாசிவராத்திரி எப்போது? மகாசிவராத்திரி எந்த அடிப்படையில் கணிக்கப்பபடுகிறது? ``இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 15 - ம் தேதி மாசி மாதம் 3 ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி. குறிப்பாக தேய்பிறை சதுர்த்தசி தினம் எந்த நாளில் இரவு 11 மணி முதல் 1 மணி வரை இருக்கிறதோ அந்த நாளே மகா சிவராத்திரி. பிப்ரவரி 15 ம் தேதி மாலை மாலை 5.50 வரை திரயோதசி திதி உள்ளது. பிறகு சதுர்த்தசி திதி தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை மாலை 6.24 வரை உள்ளது. முன்பு குறிப்பிட்டதைப்போல பிப்ரவரி 15 இரவுதான் சதுர்த்தசி திதி உள்ளது. எனவே நாளையே மகாசிவராத்திரி. மகாசிவராத்திரி ``மகாசிவராத்திரி விரத நாளா? அப்படியானால் எப்படி அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? ``மகா சிவராத்திரி விரதம் இருக்க உகந்த நாள். ஆனால் கட்டாயம் அல்ல. ஆனால் கட்டாயம் சிவபூஜை செய்ய வேண்டிய நாள். விரதம் இருப்பவர்கள் விரதத்தை அன்றைய நாளின் காலை வேளையிலேயே தொடங்கிவிட வேண்டும். அதாவது நாளை பிப்ரவரி - 15 காலை கண் விழித்ததுமுதல் விரதம் தொடங்கிவிடும். காலையில் நீராடி சிவபூஜை செய்ய வேண்டும். தீட்சை பெறாதவர்களாக இருந்தால் கூட சிவபெருமானின் படத்துக்கு மலர்சாத்தி வழிபட வேண்டும். நாள் முழுவதும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்கலாம். ஒரு சிலர் திரவ உணவு மட்டுமே உட்கொள்வார்கள். சிலர் ஒருவேளை உணவு உண்பார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு விரதம் இருப்பது நல்லது. மாலையும் தவறாமல் மீண்டும் நீராடி சிவ வழிபாட்டைத் தொடங்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து நான்கு காலங்களிலும் சிவவழிபாடு செய்வது சிறப்பு. சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. விரதம் மறுநாள் காலை நீராடி மீண்டும் சிவபூஜை செய்தபின்புதான் முடிவடையும். அதன்பின் நீங்கள் உணவு உட்கொள்ளலாம். `` விரதம் இருக்காமல் சிவபூஜை மட்டும் செய்யக் கூடாதா? ``தாராளமாக செய்யலாம். நம் தர்மத்தில் எதுவும் கட்டாயமில்லை. பக்திதான் பிரதானம். நீங்கள் பசியோடு இருக்கும்போது தூக்கம் வராது. சோம்பேறித்தனம் இருக்காது. அதற்காக உண்ணாநோன்பைக் கடைப்பிடித்தார்கள். அதேவேளை உணவு உண்ட உடனே பூஜையில் அமரக் கூடாது. ஒவ்வொரு வேளையும் சிவபூஜை செய்து முடித்தபின் உணவு உட்கொள்ள வேண்டும். காலை பூஜை முடித்தபின் சாப்பிடலாம். மாலையும் அதேபோன்று பூஜை முடித்தபின் சாப்பிடலாம். இரவு நான்கு கால பூஜைகளின் பின்னும் பிரசாதமாகக் கிடைபப்தை உண்ணலாம் தவறில்லை. ஆனால் சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் பிரதானம். மகா சிவராத்திரி வழிபாடு ``மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகள் என்கிறார்களே... அவை எந்தெந்த நேரம்? ``ஓர் இரவை நான்கு காலங்களாகப் பிரிக்கிறார்கள். இரவு வேளை தொடங்கும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் காலம். இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் காலம். நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை மூன்றாம் காலம். அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை நான்காம் காலம் எனப் பிரிக்கப்படுகிறது. நம் சாஸ்திரங்கள் இந்த நான்கு காலங்களும் இறைவனுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கின்றன. முதல் காலம் : சுவாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந்தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது- பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும். இரண்டாம் காலம் : பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவேண்டும். சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும். மூன்றாம் காலம் : தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும். நான்காம் காலம் : கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியா வட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும். ``நான்கு கால பூஜைகளுக்கான வழிகாட்டல்கள் விரிவாக இருக்கின்றனவே... சாமானியர்களால் இதைக் கடைப்பிடிக்க முடியுமா? ``இவை ஆலயங்களில் செய்யப்படும் பூஜை முறைகளுக்கான வழிகாட்டல்கள். இவற்றை நாமும் வீட்டில் முயலலாம். எவ்வளவுக்கு எவ்வளவு செய்ய முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிமை. இதில் ஏதேனும் ஒன்று செய்ய முடியவில்லை... கிடைக்க வில்லை... தெரியவில்லை என்றால் அதனால் ஏதும் குறைவு கிடையாது. இரவு முழுவதும் சிவ சிந்தனை அவசியம். அதற்காகத் தான் வித்தியாச வித்தியாசமான பூஜை முறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றுக்கான தயாரிப்புகளில் நம் மனம் ஈடுபடும் போது தூக்கம் வராது. மேலும் ஈஸ்வர சிந்தனையோடே இருப்போம். அதற்காகத்தான் இப்படி ஓர் ஏற்பாடு. வீட்டில் இந்த வழிபாடுகளைச் செய்யமுடியவில்லை என்றால் ஆலயங்களில் அனைவருக்காகவும் நடைபெறும் வழிபாடுகளை தரிசனம் செய்யலாம். ஆகச்சிறந்த பலன் கிடைக்கும். எனக்கு வேதங்கள் தெரியாதே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தமிழ் மறைகளான சிவபுராணத்தை வாசிக்கலாம். அதைவிடப் பெரிய வேதம் ஏதுமில்லை. திருமுறைகளைப் பாராயணம் செய்யலாம். பூஜைகள் ஏதும் செய்யாவிட்டாலும் திருமுறைப் பாராயணம் மட்டுமே போதுமானது. மேலும் ஒருவிஷயம். 'ஏகவில்வம் சிவார்ப்பணம்.' ஒருவில்வம் சமர்ப்பித்தாலே அவர் அருளும் பலன்கள் நம் ஏழு பிறவிகளுக்கான புண்ணியத்தைக் கொடுக்கும். எனவே தயக்கமோ பயமோ சிவவழிபாட்டில் தேவையே இல்லை. Sivapuranam | சிவபுராணம் - ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தங்களா? | Secretes of Sivapuranam லிங்கோத்பவர் தரிசனம் ``முழு இரவும் விழித்திருக்க முடியாது. என்ன செய்வது? ``இது பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். மறுநாள் வேலைக்குப் போகவேண்டும். சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கும். அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும். காஞ்சி மகாபெரியவர் லிங்கம் - லிங்கோற்பவம் குறித்து மிக அற்புதமாக விவரிக்கிறார் ``லிங்கம் ஏன் வட்டமாக இருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத் தான் அடி-முடி இல்லை. ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கும் சதுரத்துக்கும் உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. சரியான வட்டமாக (Circle) இல்லாமல், லிங்கம் நீள்வட்டமாக (ellipse) இருக்கிறது. `பிரபஞ்சமே ‘எலிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக்கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது’ என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரமாண்டமும், ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. யாராவது பந்துவை நினைக்கிறோம். உடனே சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஓர் உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணி னால்தான் ரொம்ப சந்தோஷ மாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு, உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம்! அதற்காகவே உருவமற்ற பரமேஸ்வரன் அருவுருவமான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்ய ரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். அடிமுடி எல்லை இல்லாமல் ஜ்யோதி ஸ்வரூபமாக - ஜ்யோதிர் லிங்கமாக, ஆகாயத் துக்கும் பூமிக்குமாகப் பரம சிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்!’’ என்பது காஞ்சிமுனிவரின் திருவாக்கு. இத்தகு அற்புத வடிவான லிங்கோத்பவ மூர்த்தியை மகாசிவராத்திரி அன்று வழிபடுவதால் சகல இன்பங்களும் வாய்க்கும்; செல்வமும் செல்வாக்கும் பொங்கிப்பெருகும் என்கின்றன ஞானநூல்கள். லிங்கோத்பவ காலத்தில் நமக்குப் பிரபஞ்ச சக்தி மிகவும் சமீபமாக இருக்கும். அப்போது நாம் விழித்திருந்து நிமிர்ந்து அமர்ந்திருந்தாலே நமக்குள் அந்த சக்தி நிறையும். அப்படி நிறையும் சக்தி வரும் ஆண்டு முழுவதும் நம் வாழ்வை வளமாக்கும். எனவே லிங்கோத்பவ காலத்தில் விழித்திருக்க முயலுங்கள். இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் அனைவரும் அந்த மகேஸ்வரனை நன்கு வழிபட்டு சகலவிதமான நற்பலன்களையும் அடைவோம். அனைவருக்கும் மகாசிவரத்திரி நல்வாழ்த்துகள்.
ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் : ராவணன் வம்சத்தினர் வழிபட்ட ஈசன்... திருமணக் கோலத்தில் அம்பிகை!
ராவணன் மாபெரும் சிவபக்தன் என்பதை அனைவரும் அறிவோம். அவன் வம்சத்தில் வந்த பலரும் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்கின்றன புராணங்கள். அவர்களில் மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் வழிபட்ட ஈசன் ஒருவர் ஈரோடு மாநகரில் அருள்கிறார். வாருங்கள் அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். ஈரோடு நகரத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். பொதுவாக ஈரோடு தலமே சிவபெருமானோடு தொடர்புடையதுதான். படைப்பு கடவுளான பிரம்மா தன்னை மறந்து சிவனை பூஜித்ததால், 'மறந்தை' எனவும், 'மயிலை' எனவும், 'ஆர்த்த கபாலபுரி' எனவும் ஈரோடு நகருக்குப் பல பெயர்கள் புராணகாலத்தில் உண்டு என்கின்றனர் புராண ஆய்வாளர்கள். ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் ஒருமுறை மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தப் பகுதிக்கு வந்த போது, சந்தியாவந்தனம் செய்து சிவவழிபாடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தனர். அப்போது ஓரிடத்தில், பாதையில் வில்வ தளங்கள் இருப்பதைக் கண்ட அவர்கள், அருகில் சிவாலயம் இருக்கவேண்டும் என்று நினைத்தவர்களாக, அந்த வழியே சென்றார்கள்.காவிரியின் தென் கரையில், வில்வ மரங்களுக்கு இடையில் ஈசன் சுயம்புவடிவில் இருந்தது கண்டு, பரவசத்துடன் வழிபட்டு, திருப்பணிகளும் செய்தனர். அதனால், இத்திருத்தலம் மஹிமாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது என்கிறது தலபுராணம். கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். 2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் சுந்தரர், அப்பர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளன. இந்தக் கோயிலில் மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் சிவனுக்கு வலப்புறமாக, திருமணக் கோலத்தில் இருப்பதுபோல் காட்சி அருள்கிறார். எனவே, அம்பிகையை வணங்கினால், திருமணப்பேறும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் மஹிமாலீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், நம் கவலைகள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆலயத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று திருமணத் தடைகள் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 11 வாரம் விரதமிருந்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து பிரார்த்திக்கொண்டால், திருமணத் தடை விரைவில் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறது. 63 நாயன்மார்கள், 16 வகை லிங்கங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. மகா சிவராத்திரியன்று மஹிமாலீஸ்வரரை வழிபடுவதால், பலன் பன்மடங்கு அதிகம் கிடைக்குமாம். அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மஹிமாலீஸ்வரரை வழிபட்டு, வேண்டிய பலன்களைப் பெற்றுச் செல்கிறார்கள். இக்கோயிலின் வரலாறு குறித்த மற்றுமொரு கருத்தும் உண்டு. முன்னொரு காலத்தில் இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆண்டு வந்தனர். கி.பி.10 - ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்த, 'மஹிமாலி இருக்குவேள்' என்ற மன்னன் இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததால் அவனுடைய பெயரிலேயே இத்தலம், ' மஹிமாலீஸ்வரம்' என்று பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில் கோயில் இந்தத் தலத்தில்தான் சுந்தரமூர்த்தி நாயனார் தன் தேவியருடன் இருந்து ஈசனை நினைத்துத் தவம் செய்தார் என்றும் அப்போது சேரமான் பெருமான் நாயனார் அவருக்கு கவரி வீசி சேவகம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். அப்படி ஒரு காட்சி கோயிலில் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வரலாற்றுச் சிறப்பும் புராண சிறப்பும் கொண்ட இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை நிச்சயம் மாறும். வளமும் நலமும் சூளும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 14 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: தொழிலில் திட்டம் போட்டு வெற்றி பெறுவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 14 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026 திதி : இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி. கரணம் :
குறிவைத்து அடிக்கும் மீனம் ராசி.. 100% ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு (Meenam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
குறிவைத்து அடிக்கும் மீனம் ராசி.. 100% ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு (Meenam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
பிப்ரவரி 14 : காதலைச் சொன்னால் ஒகே ஆகுமா? நாளை காதல் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு?
பிப்ரவரி 14 -ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் தங்கள் காதலைச் சொல்ல முயல்வார்கள். அப்படிச் சொல்பவர்கள் அனைவருக்கும் எதிர் தரப்பில் நல்ல பதில் கிடைப்பதில்லை. எனவே இந்த நாளில் யாரெல்லாம் காதலைச் சொல்லலாம்... சொல்லும் காதல் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வெற்றியாகும் என்பது குறித்து ஒரு ஜோதிட வழிகாட்டலைத் தரலாமே என்று ஜோதிடர் பாரதி ச்ரிதரிடம் கேட்டோம். காதலர் தினத்துக்கெல்லாம் ராசிபலன் சொல்லும் வழக்கம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி அமைகிறது... அதிலும் குறிப்பாகக் காதல் வாழ்க்கை ஒருவருக்கும் அந்த நாளில் எப்படி இருக்கும் என்பனவற்றை ஓரளவு சொல்லமுடியும். ஜோதிடம் காதல் என்று சொன்னாலே அது சுக்கிரன் சம்பந்தப்பட்டது. ஜோதிடத்தில் சுக்கிர பகவானை களத்திரகாரகன் என்பார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் காதல் கைகூடவும் திருமண வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்திடவும் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்க வேண்டும என்கிறது ஜோதிட சாஸ்திரம். அழகு, கவர்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, இன்ப நுகர்ச்சி, வாசனை திரவியங்கள் பயன்படுத்துதல், வாழ்க்கைத்துணை அமைதல் என சகலத்துக்கும் அவரே காரகன். கோசாரத்தில் சுக்கிரன் எப்படி இருக்கிறார் என்பதைக் கொண்டு அந்த நாளில் காதல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை ஓரளவு சொல்லமுடியும். அந்த அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் பிப் - 14 ம் தேதி காதல் யோகம் எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம். மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11 - ம் இடத்தில் இருக்கிறார். எனவே காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குருவும் மூன்றில் இருப்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அவர்களுக்கு சாதக பதில் கிடைக்க வாய்ப்புண்டு. ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 10 - ம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2 - ம் வீட்டில் இருக்கிறார். எனவே இவர்களுக்குக் காதல் கைகூடவும் அது திருமணத்தில் முடியவும் வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் குடும்பகாரகனான சந்திரன் 7 - ம் வீட்டில் இருந்து ராசியைப் பார்க்கிறார். சுக்கிரனும் சாதகமாக 9 - ம் வீட்டில் இருக்கிறார். எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் காதல் விஷயத்தில் மிகவும் சாதகமான நாளாக உள்ளது. ஜோதிடம் அடுத்து மூன்று ராசிகளான கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுப்பார்கள். அதீத நம்பிக்கையில் சிலவற்றைக் கொஞ்சம் ஓவராக செய்து சொதப்பிவிட வாய்ப்புண்டு. கடகத்துக்கு 2 -ல் கேது, 8 -ல் சுக்கிரன் ராகு, சிம்மத்துக்கு அஷ்டம சனி, 7 -ல் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் ராசிக்குள் கேது, கன்னிக்கு 7 -ல் சனி 6 -ல் சுக்கிரன் ராகு என கிரகநிலை இருப்பதால் காதல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உச்சமாக இருப்பதால் காதல், திருமணம் ஆகியன கூடிவரும் நேரம் இது. மேலும் சந்திரனும் மூன்றில் இருக்கிறார் என்பதால் தைரியமாகக் காதலைச் சொல்வார்கள். அதற்கு சாதகமான பதில்வர வாய்ப்பிருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இன்னும் ஆறு மாதத்துக்குக் காதலைச் சொல்வதை தள்ளிப்போடுவது நல்லது. குரு சாதகமில்லாதபோது அதை முயல்வது கத்திமேல் நடப்பதுபோன்றது. வார்த்தைகளால் வம்பு வரலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு 7 -ல் குரு, 3 -ல் சுக்கிரன் ராகு. எனவே தைரியமாக காதலைச் சொல்வார்கள். இவர்களின் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். ஜூன் மாதத்துக்குப் பின் திருமணம் கூடிவரும். ஜோதிடம் கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள்ளேயே சுக்கிரன் இருப்பதால் காதல் உணர்வுகள் மிகுதியாக இருக்கும். குடும்பகாரகன் குரு சாதகமாக 5 -ல் இருப்பதால் திருமண யோகமும் உண்டு. எனவே காதலைச் சொல்லலாம். ஓரளவு சாதக பதிலே கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சனி இருக்கிறார். சுக்கிரன் மறைவாக 12 -ல் இருக்கிறார். எனவே ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம். இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போடுங்கள். வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மேலே சொல்லப்பட்டவை கோசார அடிப்படையில் ஆன பலன்கள் மட்டுமே. அவரவர் சுய ஜாதகம் மூலமே துல்லியமான பலன்களைச் சொல்லமுடியும். இவை ஒரு சிறு வழிகாட்டல் மட்டுமே என்று கூறினார் ஜோதிடர் பாரதி ச்ரிதர்.!
சிங்கம் போல மாறும் கும்ப ராசி.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க கன்ஃபார்ம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு (Kumbam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
Masi Matha Palan: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு (Magaram Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகுது
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு (Dhanusu Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்தது அபசகுனமா? - கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?
கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் மகிமை வாய்ந்தது. ஏழரை அடி உயரம் கொண்டு கம்பீரமாக பிரமாண்டத் திருமேனியோடு அருள்கிறார் சரபேஸ்வரர். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். இங்கு வந்து வேண்டிக்கொண்டாலே பகை விலகும். மனபயம் நீங்கும். நோய்கள் விலகி ஆரோக்கியம் பெருகும் என்பார்கள். அப்படிப்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயில் தருமை ஆதினத்துக்கு சொந்தமானது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் கொடிமரம் நேற்று சாய்ந்தது. இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக கொடிமரம், கோபுரம், கோயில் யானை, கோயில் பசு ஆகியன மங்கலச் சின்னங்களாகக் கருதப்படுபவை. இவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்கிற அச்சம் பக்தர்களிடையே எழும். அதிலும் கொடிமரம் என்பது ஒரு கோயிலில் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படுவது. கோயிலில் உற்சவங்கள் என எதுநடந்தாலும் அது கொடிமரத்தில் இருந்துதான் தொடங்கும். அப்படிப்பட்ட கொடிமரம் சாய்வது என்பது தீய சகுனமாயிற்றே என்று அஞ்சுகிறார்கள் பக்தர்கள். திருபுவனம் சரபேஸ்வரர் திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்ததை அடுத்து பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். சமூக ஊடகங்களிலும் இது பேசுபொருளானது. பெரும் தீமை ஒன்று நடக்க இருப்பதற்கான அறிகுறி என்று கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் கொடிமரம் சாய்ந்த விவகாரம் தொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்து தருமை ஆதீன நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். தருமை ஆதீனத்துக்கு உட்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கொடிமரம் எதிர்பாராத விதமாக சாய்ந்துள்ள நிகழ்வு வருத்தம் அளிக்கிறது. இது குறித்து, பக்தர்கள் யாரும் தேவையற்ற பயமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்த சில தகவல்களையும் உங்கள் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம். கொடிமரம் நீண்ட காலப் பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாற்றம் அல்லது மரத்தின் உறுதித்தன்மை குறைவு போன்ற காரணங்களாலேயே இது நிகழ்ந்துள்ளது. இது முற்றிலும் ஒரு தற்செயலான நிகழ்வு. மேலே உள்ள கவசத்தில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக முன்னர் பெய்த கனமழையில் தண்ணீர் புகுந்து மரத்தினை சேதப்படுத்தி உள்ளது. இறையருளால் கொடி மரம் சாய்ந்தபோது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தருமை ஆதீன 27 வது குருமூர்த்திகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று துரித நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். மேலும் கொடிமரம் சாய்ந்ததை முன்னிட்டு உடனடியாக பிராய்சித்த ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்கள். தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பாக மாற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் கொடிமரம் சாய்ந்த விவகாரத்தில் ஆகம விதிப்படி தீர்வு எட்டப்பட உள்ளது. பழைய கொடி மரத்தை அகற்றுவதும், புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்வதும் ஆகம விதிகளின்படி முறையாகச் செய்யப்படும். இதற்காகத் தகுந்த ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் ஸ்தபதிகளின் ஆலோசனை பெறப்பட்டு இன்று அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது. சுவாமிக்கு நடைபெறும் நித்ய கால பூஜைகளுக்கும், இந்த நிகழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆகம வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, பக்தர்கள் எப்போதும் போலத் தடையின்றி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கு நடைபெற வேண்டிய பூஜைகளும் சிறப்புற நடைபெற்று வருகின்றன. இறைவனின் அருள் எப்போதும் நம் அனைவரையும் காக்கும். தெய்வ காரியங்களில் சிறு இடையூறுகள் ஏற்படுவது இயல்பே; அதை முறையாகச் சரி செய்வது நமது கடமை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் அமைதி காக்குமாறும் பிராத்தனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம். திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் விரைவில் புதிய கொடி மரம் கம்பீரமாக அமையப் பெறும். சாய்ந்த கொடிமரம் கலாகர்ஷணம் செய்தது புதியமரம் பொருத்த பங்குனி 2 (16-3-2026) நாள் குறிக்கப்பட்டுள்ளது அந்த நாளில் அதற்கு சிறப்பு கும்பாபிஷேம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தருமை ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Miraculous Kala Bhairavar | கலியுக அதிசயம் - வேண்டியது அருளும் திருக்குறுங்குடி கால பைரவர் சந்நிதி!
திருக்குறுங்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வைஷ்ணவ நம்பி திருக்கோயில்தான். இந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குள்தான் சிவன் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் உள்ளன. இங்குள்ள ஈசனுக்கு மகேந்திரகிரிநாதர் என்பது திருநாமம். சிவனுக்கு அருகிலேயே சந்நிதிகொண்டு எழுந்தருளியிருக்கிறார் காலபைரவர். பிரமாண்டத் திருமேனியராகக் காண்பவர்கள் வியக்கும் வகையில் பைரவரின் திருமேனி அமைந்துள்ளது. அந்தக் காலபைரவர் மூச்சுவிடும் அதிசயமும் அங்கே நிகழ்கிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த வீடியோ.
நட்சத்திரப் பலன்கள் பிப்ரவரி 13 முதல் 19 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரப் பலன்கள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 13 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: புதிய தொழிலுக்குத் திட்டம் போடுவீர்கள். பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தைக் கொடுக்கும் . கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும். திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள். புனர்பூசம்: நிலம், மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள். பூசம்: பிள்ளைகளின்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 13 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.2.2026 திதி : இன்று மாலை 03.11 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. நட்சத்திரம் : இன்று மாலை 05.00 வரை மூலம். பின்னர் பூராடம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.01 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம். கரணம் :
Masi Matha Palan: விருச்சிக ராசிக்கு மாசியில் மாஸ் ஆன யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு (Viruchigam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்!
காவிரிக்கரைத் தலங்களில் இரண்டு ஆடுதுறைத் தலங்கள் உள்ளன. இரண்டுமே புராண சம்பந்தம் உடையவை. இரண்டுமே குரங்குகள் நீராடி ஈசனை வழிபட்ட தலங்கள். அப்படி ஒரு தலம் தான் வடகுரங்காடுதுறை. இந்தத் தலத்தை ஆடுதுறை பெருமாள்கோவில் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டியதும், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அந்த ஊரை அடுத்து வருவது இந்த வடகுரங்காடுதுறை. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ தூரம். இதன் அருகிலேயே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு. வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் கி.பி, 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார் என்கிறது தலபுராணம். ராமாயண காலத்தவனான வாலி ஈசனை வழிபட்ட தலம் இது என்கிறது தலபுராணம். எனவே இங்குள்ள ஈசனுக்கு `வாலீசர்’ எனும் திருப்பெயர் உண்டு. ‘கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்’ என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞானசம்பந்தர் இங்குள்ள இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர். என்றாலும் வடகுரங்காடுதுறை ஈசனுக்குப் பிரதான திருநாமம், 'அருள்மிகு தயாநிதீஸ்வரர்' என்பதாகும். மேலும் இவருக்கு, 'குலை வணங்கீசர்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! கர்ப்பிணி ஒருத்தி, இந்தத் தலத்தின் வழியே சென்று கொண்டிருந்தாள். கொளுத்தும் வெயில். வயிற்றுச் சுமையுடன் நடந்த அந்தப் பெண்ணுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் யாருமே இல்லை. 'ஈசா... இது என்ன சோதனை' என்று அவள் மனமுருகி வேண்டிக்கொள்ள ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அருகிலிருந்த தென்னை மரம் தானாக தலை சாய்த்தது. பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. அதில் இருந்த இளநீர் உடைந்து அந்தப் பெண்பிள்ளையின் தாகம் தணிந்தது. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர் என்கிற திருநாமம் அவருக்கு ஏற்பட்டது. கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவருக்கு, 'அழகு சடைமுடிநாதர்' என்ற பெயர் உண்டாம். மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள். குரங்காடு துறை ஆழ்வார், குரங்காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார் இந்தச் சுவாமி. இந்தத் திருக்கோயிலுக்குப் பல்லவர்களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர். வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் இவ்வூர் ஈசனை சிட்டுக்குருவி ஒன்று தினந்தோறும் வழிபட்டு அருள்பெற்றதாம். எனவே, 'சிட்டிலிங்கேசர்' என்ற திருப்பெயரும் உண்டு. சிவனார் மட்டுமல்ல இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கோஷ்டம் மற்றுமுள்ள சந்நிதிகளில் அருளும் மற்ற தெய்வங்களும் விசேஷமானவர்கள்தான். இங்கே ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு தேவியருடன் அருள்கிறார் முருகப்பெருமான். `திரைக்கரம் கோலி நவமணி கொழித்திடும் சாரல் வயலணி திருக்குரங்காடு துறையுறை பெருமாளே’ என்று போற்றிப் பாடி அருணகிரிநாதர் வணங்கிய முருகன் இவர். வழக்கமாக சிவாலயங்களில் பிராகாரச் சுற்றில் நால்வர் பெரு மக்களைத் தரிசிக்கலாம். வடகுரங்காடுதுறை எனும் இந்தத் தலத்தில் - கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நால்வருக்குப் பதிலாக தேவார மூவர் மட்டும் அருள்கிறார்கள். தொடர்ந்து எந்தப் பெண்ணுக்காக தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அவளின் சிலையையும் காணலாம். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! கருவறைக்குச் செல்லும் வழியில் முகமண்டபத்தில் தூண் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. வலப் பக்கத்தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தியாகத் திகழ்கிறார். இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம். மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. இடப் பக்கத்தில் சாளரம் போன்ற அமைப்பு. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். பிற்காலத்தில் இந்தச் சுரங்கத்தை மூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் கருவறையின் தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. வழக்கமாக இவரின் காலடியில், சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள். இங்கு மேலும் நான்குபேர் உள்ளார்கள். அவர்கள் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் ஆவார்கள். பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். இப்படி அர்த்தநாரீஸ்வரர் இருப்பது அரிதானது. வடக்குக் கோஷ்டத்தில் அருளும் அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையைத் தரிசிக்கலாம். தங்களது படைத்தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர் இங்கு அருளும் அம்பிகையின் திருநாமம் அருள்மிகு அழகுசடை முடியம்மை. நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாள்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும். அதேபோல், அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!
MahaSivarathri | சிவலிங்கத் தத்துவம் -கணபதி முதல் பெருமாள்வரை சிவபூஜை செய்த ரகசியம்|மகாசிவராத்திரி
திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். சிவராத்திரி மகிமைகளையும் சிவராத்தியில் செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்தும் நமக்காக விளக்குகிறார். Thirumuruga Krupananda Variyar’s nephew, Sri Vadavooran Ayya, who has received the complete spiritual blessings of Variyar Swamigal in the art of oration, continues to inspire devotees across the world through his powerful spiritual discourses. In this special discourse, Sri Vadavooran Ayya beautifully explains the glory and spiritual significance of Maha Shivaratri, along with the important rituals, worship methods, and spiritual practices that devotees should follow on this sacred night. His words guide seekers on how Maha Shivaratri helps in spiritual awakening, inner purification, and receiving Lord Shiva’s divine grace. This discourse is a must-watch for devotees of Lord Shiva, spiritual seekers, and those who wish to observe Maha Shivaratri vrat and pooja in the right traditional way.
Masi Matha Palan: விருச்சிக ராசிக்கு மாசியில் மாஸ் ஆன யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு (Viruchigam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 12 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் . கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும். மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும். திருவாதிரை: விபத்துக்களைத் தவிர்க்க எச்சரிக்கை தேவை. புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும். பூசம்: மனக்

29 C