SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!

2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள்... முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! விளக்கு பூஜை பல்லவ மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்ற ஊரான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டு ஊர் காரப்பாக்கம். இது அந்நாளைய திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் இருந்தது. இந்த ஊரின் கிராம தேவதையாக அமர்ந்து ஆட்சி புரிந்தவள் கங்கையம்மன். சுமார் 300 ஆண்டுகளாக அப்பகுதியில் சிறந்து விளங்கிய அன்னை கங்கை அம்மன் தற்போது சென்னை நகர் முழுமைக்கும் பிரபலமாகி வருகிறாள். நீர் நிலைகள் செழித்திருக்கும் பகுதியில் அந்நீர் நிலைகளை பாதுகாக்க எழுபவளே கங்கை அம்மன். இவ்வூரிலும் அப்படியே எழுந்தருளினார் இந்த அன்னை. ஆரம்பத்தில் வணிகர்களுக்கு வழித்துணையாக இருந்த கங்கை அம்மன் தற்போது இப்பகுதியில் தொழில்-வணிகம் சிறக்க உதவும் பரிகார தேவியாக இருந்து வருகிறாள். ஓ.எம்.ஆர் சாலையில் துரைப்பாக்கம் தாண்டியதும் இடது புற முக்கிய சாலையிலேயே ஆலயம் அமைந்துள்ளது. முன்புற வாசலில் பிரமாண்ட அனுமன் கோயிலும் பின்புற வாசலில் நுழைந்தால் அங்கே அழகிய விசாலமான கங்கை அம்மனின் ஆலயமும் அமைந்துள்ளன. கும்பிடுபவரின் குறைகளைத் தீர்க்கும் கங்கை அம்மன் பெண்களுக்கு விசேஷமானவர். திருமணம், குழந்தைப்பேறு, மங்கல வாழ்வு, நோய்நொடிகள் தீர்ப்பு, செல்வவளம் என அனைத்தையும் அருள்பவள் இந்த தாய் என்கிறார்கள் பெண் பக்தைகள். புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் வரும் டிசம்பர் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை அனுமன் ஜயந்தி விழாவும் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழாவும் நடைபெற உள்ளது. அதோடு சேர்த்து மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. விளக்கு பூஜை இத்தனை சிறப்பான ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் உங்களின் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம். 2025 டிசம்பர் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்! கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு: விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம். அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது. முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விகடன் 8 Dec 2025 12:03 pm

பழனி: திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெற்றது‌. கடந்த 4ம்தேதி அதிகாலை கணபதி வழிபாட்டுடன் முதல்காலை யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை 6ம்கால யாகவேள்வி நடைபெற்றது. 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, நன்மங்கள இசை, தேவாரம், திருவாசகம், கந்தபுராணம் ஆகியவை ஓதுவார்களால் இசைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாக வேள்வி தொடங்கியது. இன்று அதிகாலை புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவரான அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம், இராஜகோபுரம் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. தொடர்ந்து திருச்சுற்று தெய்வங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.45 மணியளவில் மூலவர் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி இன்று நடைபேற்ற கும்பாபிஷேக நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் இந்நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமடன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விகடன் 8 Dec 2025 10:04 am

Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் தனுசு ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் காலம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 8 Dec 2025 9:06 am

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!

புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம். தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, காஞ்சியை மறு தட்டில் வைத்தால் காஞ்சியே சிறந்து விளங்கும் என்பதும் ஞானியர் வாக்கு. அப்படிபப்ட்ட காஞ்சிபுரத்தில் மையமாகத் திகழ்கிறது அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலம். அன்னை பார்வதி மண்ணுலகுக்கு வந்து ஈசனை அடையும் வழியை பூமியில் உள்ள உயிர்களுக்கு உணர்த்தத் தவம் செய்தாள். அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவரைப் பல்வேறு தலங்களுக்கு வரச்சொல்லிக் காட்சி கொடுத்து அருள்பாலித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்த இடங்களில் ஒன்று காஞ்சிபுரம். கம்பா நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். ஒருநாள் கம்பா நதி வெள்ளம் திரண்டு வந்து மணல் லிங்கத்தை அழிக்க வந்தது. இதனால் அஞ்சிய அன்னை மணல் லிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அன்னையை ஏற்றுக்கொண்டார். இங்கு ஈசனுக்கு, 'கச்சி ஏகம்பன்' என்றே திருநாமம். ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் ஆகிய திருப்பெயர்களும் சுவாமிக்கு உண்டு. இங்குதான் காமாட்சி அன்னை 32 அறங்கள் செய்தார். கச்சியன், ஏலவார்குழலி, காமாட்சி என்பது அன்னையின் திருநாமம். கம்பா நதி, சிவகங்கை மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் தீர்த்தங்கள் ஆகும். ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1 சக்தி, பிரம்மா, திருமால், திருமகள், கலைமகள், ருத்திரர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன், பரணதேவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றவர்களால் வணங்கப்பட்டவர் கச்சி ஏகம்பன். 'திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து திருமணம் செய்த சுந்தரர், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தனது கண்ணை இழந்தார். இதனால் தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகத்தைப் பாடினார். அதன் பயனாக, ஒரு கண் பெற்றார். எனவே, இங்கு வந்து வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும் என்பதும் ஐதிகம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மா, திருமால், ருத்திரர்களால் பூசிக்கப்பட்ட ஈசனுக்கு இங்கே தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அவர்கள், முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்று தனிச் சந்நிதிகளில் வணங்கப்படுகிறார்கள். இந்த ஆலய தலவிநாயகர், 'விகடசக்கர விநாயகர்.' இவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். பெருமாளின் சக்கரத்தை விழுங்கி லீலை புரிந்து விகடக் கூத்தாடியவர். பெருமாள் வணங்கிக் கேட்டுக்கொள்ள அந்த சக்கரத்தை அருளியவர். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ம் ஆண்டு கட்டப்பட்டது. கருவறையில் லிங்க வடிவில் காட்சி தரும் ஈசன் மணலால் ஆனவர். சுயம்புமூர்த்தி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாகப் புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. இங்கு ஈசன் மீது ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள்பட்டு அவை வணங்கி வழிபடும் அதிசயம் நடைபெறும். எனவே இது சூரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் என்கிறார்கள். இந்த மாமரத்தில் நான்கு விதமான சுவைகளில் கனிகள் வளர்கின்றன. இதை உண்டால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள், `மாவடி சேவை’ வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறும். இதை தரிசனம் செய்தால் இல்லறம் செழிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஐயடிகள் காடவர்கோன், திருகுறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரோடு தொடர்பு கொண்ட ஆலயமிது. இங்கு பல்வேறு காலத்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவை படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தமச் சோழன், ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன், விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் வரை இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. பல்லவர்கள் காலத்துக் கோயில் இது எனப்படுகிறது. திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

விகடன் 8 Dec 2025 7:53 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 8 - 2025 திங்கட்கிழமை.

அஸ்வினி: தடைகள் விலகி பணவரவு தாராளமாக இருக்கும் . பரணி: உறவினர்களின் பிரச்சனையால் வீட்டில் சலசலப்பு உண்டாகும். கார்த்திகை: வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். ரோகிணி: உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். மிருகசீரிடம்: திட்டமிட்டுச் செய்யும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்படலாம். புனர்பூசம்: தொழிலுக்கு இருந்த போட்டிகள்

ஒனிந்தியா 8 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 8 - 2025 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 8.12.2025 திதி : இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று காலை 09.39 வரை புனர்பூசம் . பின்னர் பூசம். நாமயோகம் : இன்று அதிகாலை 01.08 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10.37

ஒனிந்தியா 8 Dec 2025 12:05 am

Rasi Palan This Week: அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் சிம்ம ராசி.. செலவுகளில் கவனம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 3:31 pm

Rasi Palan This Week: அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் சிம்ம ராசி.. செலவுகளில் கவனம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 3:17 pm

Rasi Palan This Week: அடித்தாடும் மிதுன ராசி.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் யோகம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 1:11 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு வரப்போகும் பிரகாசமான மாற்றம்.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 1:09 pm

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. எல்லாமே இனி ஜெயம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 11:51 am

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. எல்லாமே இனி ஜெயம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 11:18 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. பேச்சில் மட்டும் கவனம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 11:07 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. பேச்சில் மட்டும் கவனம்

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 7 Dec 2025 10:13 am

பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 7 Dec 2025 6:00 am

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்

ஒனிந்தியா 6 Dec 2025 5:49 pm

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் 5 ராசிக்கு மெகா ஜாக்பாட்..லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்

ஒனிந்தியா 6 Dec 2025 5:17 pm

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்

ஒனிந்தியா 6 Dec 2025 5:07 pm

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வாய்ப்புகள் தேடி வரும்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 6 Dec 2025 3:32 pm

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வாய்ப்புகள் தேடி வரும்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 6 Dec 2025 3:25 pm

Ambedkar: \ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக போராடியவர் அம்பேத்கர்\ - எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

சென்னை: அம்பேத்கர் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள், அரசியல் கட்சியினர் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி

ஒனிந்தியா 6 Dec 2025 3:06 pm

December Matha Palan: கும்ப ராசிக்கு டிசம்பர் மாதத்தில் நடக்கும் மாற்றங்கள்.. ரொம்ப கவனம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 6 Dec 2025 1:48 pm

December Matha Palan: 2 கிரகங்களின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டம் கொட்டும்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 6 Dec 2025 10:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 6 - 2025 சனிக்கிழமை.

அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றி நடை போடுவீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.

ஒனிந்தியா 6 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 6 - 2025 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 6.12.2025 திதி : இன்று அதிகாலை 03.19 வரை பிரதமை. பின்னர் துவிதியை . நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.03 வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை. நாமயோகம் : இன்று காலை 06.50 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

ஒனிந்தியா 6 Dec 2025 12:05 am

December Matha Palan: தனுசு ராசியை வச்சு செய்யப்போகும் சனி.. குருவின் அருளால் யோகமும் உண்டு

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 6:41 pm

December Matha Palan: புது வீடு, புது காரு.. கலக்கப்போகும் விருச்சிக ராசி.. தொட்டதெல்லாம் யோகம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 6:17 pm

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாழ்க்கையில் விரக்தி, பிரச்னைகள், மன உளைச்சல், தனிமை, தீய சக்திகளின் பாதிப்புகள் மற்றும் பெரும் தடைகளை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் மகாருத்ர ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள். மகாருத்ர ஹோமம் என்பது ருத்ர மந்திரத்தை இடையறாது உச்சரித்து ஈசனின் அருளால் வாழ்க்கையின் எல்லா துன்பங்களையும் அகற்றி, நல்வாழ்வைப் பெறும் ஒரு மகத்தான வழிபாட்டு முறையாகும். இது ஆதியில் சப்த ரிஷிகளால் செய்யப்பட்டு பிறகு வேத காலத்தில் சிறப்படைந்த தொன்மையான மற்றும் முதன்மையான வேள்வி எனப்படுகிறது. ஹோமங்களில் சிறப்பான இந்த ஸ்ரீருத்ர ஹோமம் செய்தவர் வாழ்வில் எந்த கவலையும் அச்சமும் இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ருத்ர ஹோமத்தை மார்கழி திருவாதிரை நன்னாளில் செய்வது இரட்டிப்பு மடங்கு பலன்களைத் தரும் என்பதும் ஐதீகம். எனவே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாகவும் மாற்ற சிறப்பான இந்த மகாருத்ர பரிகார ஹோமத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்தில் நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் கலந்து கொண்டு பெரும் பயனை அடைந்தது. அவ்வாறே மீண்டும் அங்கு நடத்த வாசகர்களின் விருப்பத்தோடு நடத்தவுள்ளோம். மகாருத்ர ஹோமம் என்பது யஜுர் வேதத்தின் சாரமான மையப்பகுதியான ஸ்ரீருத்ர மந்திரங்களை 1331 முறை திரும்பத் திரும்பச் சொல்லி அந்த மகேசனை மகிழ்வித்து செய்யப்படுவது. ஆயுளில் ஒருமுறையாவது இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். செய்வதற்கு கடினமானதும் பெரும் பொருட்செலவை உண்டாக்குவதுமான இந்த ஹோமத்தை உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடனும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயமும் இணைந்து 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடத்தவுள்ளது. மகாருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கு அனைத்து மக்களும் எந்த பேதமின்றி தாமே ஈசனை பூஜிக்கலாம் என்பது சிறப்பு அம்சம். இங்கு எந்த வழிபாட்டுக்கும் கட்டணமில்லை என்பதும் சிறப்பானது. இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் 63 நாயன்மார்கள், மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய நடராஜப் பெருமான், சோமாஸ்கந்தர் என பல்வேறு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் நடராஜப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் வீதி உலா வரச் செய்ய வேண்டும் என்பது இவரது ஆயுள் கால கனவு. இதனால் இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அன்று அதிகாலை வைரத்தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் 2025 டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் மகாருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்கு கொண்டால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், கீர்த்தி, அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மகாருத்ர ஹோமம் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் கவலைகள் நீங்கும். நோய்நொடிகள் அகலும். கடன் தரித்திரம் விலகும். தோஷங்களும் பாவங்களும் நீங்கும். இந்த மகாருத்ர ஹோமத்தில் உங்கள் வேண்டுதலை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது உறுதி. எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெறுங்கள். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும்   சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும்.

விகடன் 5 Dec 2025 5:51 pm

December Matha Palan: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் துலாம் ராசி.. பேச்சால் சாதிக்கும் காலம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 2:46 pm

December Matha Palan: கன்னி ராசிக்கு குஷியோ குஷி.. நினைத்து எல்லாம் நடக்கும் யோகம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 1:25 pm

December Matha Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. பணவரவு கன்ஃபார்ம்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 9:57 am

December Matha Palan: இனிமேல் எல்லாம் இப்படித்தான் - கடக ராசிக்கு லைப் டைம் செட்டில்மென்ட்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 8:46 am

December Matha Palan: இனிமேல் எல்லாம் இப்படித்தான் - கடக ராசிக்கு லைப் டைம் செட்டில்மென்ட்

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 5 Dec 2025 8:19 am

திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

'எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் கஷ்ட காலத்தில் புலம்புவதைக் கேட்டிருப்போம். பிரம்மன் எழுதிய எழுத்தின்படிதான் நம் வாழ்க்கை நடக்கிறது என்பதுதான் ஆழ்ந்த நம்பிக்கை. அந்தத் தலையெழுத்தை மாற்றவேமுடியாதா என்று தவிப்பவர்களுக்காகவே அமைந்திருக்கிறது ஓர் அற்புதத் தலம். திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பட்டூர். இந்தத் தலத்தில்தான் தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் தன் ஆணவத்தால் பதவியை இழந்த பிரம்மன் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு மீண்டும் பதவியைப் பெற்ற தலம் என்கிறது தலபுராணம். இங்கே 12 சிவலிங்கங்கள் அமைத்து ஈசனை பூஜித்து பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களையும் தரிசனம் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றித் தருவதாக பிரம்மன் கூறியிருக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஈசனும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார். சுவாமிக்கு இடப்பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. ஈசனுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி என்கிற திருநாமம் அம்பிகைக்கு உண்டானதாம். ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள், ஈசனின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப்பாதங்களிலும் விழுவது அதிசயம். காசிக்கு நிகரான திருக்கோயில் இது என்று போற்றப்படுகிறது. மேலும் பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது பிரம்மனின் சந்நிதி. மேலும் இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர். இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தலையெழுத்தை மாற்றும் பிரம்ம வழிபாடு இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறும் என்கின்றன புராணங்கள். தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம். இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் மிகுதியான பலன் உண்டு. திங்கள், வியாழக் கிழமைகளிலும் நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்! இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் முருகனின் வாகனம், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற கோலத்துடன் முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பு. கந்தனின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அவருக்குத் திருக்காட்சி தந்து, ‘வெற்றி உனக்கே!’ என அருளிய தலம் இது. இங்கே, ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளையில் வந்து, காலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கைகளை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீட்டுத் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அழகிய தீர்த்தத்தில் கூறும் நீர் நன்னீராக விளங்குகிறது. ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே பகுள தீர்த்தம் அமைந்துள்ளது. திருப்பட்டூருக்கு மற்றொரு பெருமை மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஐயனார் கோயில். இங்குள்ளவர் அரங்கேற்ற ஐயனார் எனப்படுகிறார். ஐயனார் வடிவங்களில் இவர் மிக மிகத் தொன்மையானவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேரமான் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலாவை திருப்பட்டூருக்குக் கொண்டு வந்து அரங்கேற்றியவர் இவர். இதனால் இங்கு சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா ஆடி சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருத்தலத்துக்கு வந்தாலே வாழ்க்கை மாறும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை திருப்பட்டூருக்கு வந்து செல்லுங்கள். வாழ்க்கை வளமாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

விகடன் 5 Dec 2025 7:54 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 5 - 2025 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் . கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும். மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும். திருவாதிரை: விபத்துக்களை தவிர்க்க எச்சரிக்கை தேவை. புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும். பூசம்: மனக்

ஒனிந்தியா 5 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 5 - 2025 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.12.2025 திதி : இன்று அதிகாலை 03.55 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை . நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.32 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று காலை 09.55 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.

ஒனிந்தியா 5 Dec 2025 12:05 am

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப'வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் சென்னை, கர்நாடக மாநிலம் மைசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதுமட்டுமன்றி கானூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மதபேதமின்றி இந்த தர்காவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த தர்காவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கார்த்திகை தீபம் இது குறித்து தர்கா நிர்வாகிகள் கூறுகையில், தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், கார்த்திகை தீபத்தின்போது இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். கார்த்திகை தீப திருநாளை ஒட்டி புதன்கிழமை மாலை விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தீபம் ஏற்றப்படும் என்றனர். தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை கிராம மக்கள் ஏராளமானோர் வழிபாடு நடத்திச் சென்றனர்.

விகடன் 4 Dec 2025 8:20 pm

December Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்த ஒரு மாதம் மிக மிக கவனம் – ஆரோக்கியத்தில் ஆபத்து

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 4 Dec 2025 10:33 am

கும்பகோணம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயில்: மன்னர் ராஜராஜனின் குலதெய்வக் கோயில் இதுதான்!

திருவலஞ்சுழிநாதர் காவிரி நதியின் கரையில் பல்வேறு தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புவாய்ந்தவை. காவிரியாலேயே பெயர்பெற்றதும், காவிரிநதி தோன்றியது குறித்த சரிதத்தை உடையதுமான திருத்தலம் திருவலஞ்சுழி. மேலும் இத்தலத்தில் உள்ள க்ஷேத்திர பாலரே மாமன்னர் ராஜராஜனின் குலதெய்வம் என்றும் சொல்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதத் தலத்தின் மகிமைகளையும் தலவரலாற்றையும் தெரிந்துகொள்வோம். கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில், சுவாமிமலையிலிருந்து வடக்கே 1 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவலஞ்சுழி. கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தில் ஈசன் திருவலஞ்சுழிநாதராக அருள்பாலிக்கிறார். இவருக்கு சித்தீசநாதர், செஞ்சடைநாதர், பொன்மலை, கற்பகநாதேஸ்வரர், கபர்த்தீசர் என்கிற திருநாமங்களும் உண்டு. இங்கே அம்பிகை கற்பக தேவி, வலஞ்சுழிநாயகி, பெரியநாயகி, பிருகந்நாயகி என்று துதிக்கப்படுகிறாள். திருவலஞ்சுழிநாதர் - பெரியநாயகி அம்பாள் திருவலஞ்சுழி ஒருமுறை, ஈசனை தரிசிக்க விரும்பிய ஆதிசேஷன் பூமியில் இருந்து வெளிப்பட்டார். அந்த இடத்தில் ஒரு பெரும் துவாரம் உருவானது. காவிரி ஆறு அந்த துவாரத்தில் பாய்ந்து பாதாளத்துக்குள் மறைந்தது. இதனால் மக்கள் அனைவரும் வருந்தினர். தேசம் முழுவதும் பாய்ந்து செழுமைப்படுத்த வேண்டிய காவிரி இப்படி மறைந்துபோனால் என்னவாகும் என்று கவலையுற்றான் சோழ மன்னன். அப்போது ஈசன் அவருக்கு வழிகாட்டினார். ஏரண்ட மகரிஷியை அழைத்துவந்து அந்த துவாரத்துக்குள் இறங்கச் செய். அப்போது காவிரி வெளிப்படுவாள் என்றார். அதன்படியே ஏரண்ட மகரிஷியை வேண்டிக்கொள்ள அவரும் மனம் மகிழ்ந்து அதைச் செய்தார். காவிரி ஆறு மீண்டும் ஓரிடத்தில் மேலேறி வலமாகச் சுழித்து வெளிப்பட்டது. அப்படி நதி வலஞ்சுழித்து ஓடிய தலம் என்பதால் இதற்குத் திருவலஞ்சுழி என்ற பெயர் ஏற்பட்டது. சுவேத விநாயகர் இங்குள்ள சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அமுதம் பெற தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, வெற்றி கிட்ட அங்கு இருந்த நுரைகளைக் கொண்டு விநாயகரை உருவாக்கி வழிபட்டனர். அந்தத் திருவுருவத்தையே இந்திரன் இங்கு கொண்டு வந்து வழிபட்டான் என்கிறது தலவரலாறு. 10 அங்குல உயரமே கொண்ட தீண்டாத் திருமேனியாக உள்ள சுவேத விநாயகரின் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி எனவும் இந்த ஊருக்குப் பெயர் ஏற்பட்டது என்பார்கள். இந்த மூர்த்திக்கு பச்சைக்கற்பூரம் மட்டும் சாத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவலஞ்சுழி பலகணி திருவலஞ்சுழி பலகணி உலகப் புகழ் கொண்டது. சிற்பக்கலைக்குச் சிறந்த உதாரணம் இந்தக் கல்லால் வடிக்கப்பட்ட ஜன்னல். காண்பவரைக்கவரும் இந்த பலகணியைப் போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாட்டை வேறு எங்கும் காண இயலாது. பெரியநாயகி இங்குள்ள பெரியநாயகி அம்மனை வழிபட்டு அவளுக்கு குங்குமார்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் திருமண வரம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள். திருமணத்துக்குத் தடையாக இருக்கும் எல்லாவித தோஷங்கள், ஜாதகக் கோளாறுகள், பாவங்கள் அனைத்தையும் நீங்கும். க்ஷேத்திர பாலர் திருவலஞ்சுழியில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திர பாலர் கோயில் உள்ளது. க்ஷேத்திர பாலர் என்றால் பைரவரையே குறிக்கும். ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திர பாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஏகவீரி இங்குள்ள அஷ்டபுஜ காளியை ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மன்னன் ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற கல்வெட்டு இங்குள்ளது. சோழர்கள் இந்த சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படுவார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது. சுவேத விநாயகர் - ஏகவீரி எண்ணற்ற சந்நிதிகளுடன் கூடிய இந்த பிரமாண்ட ஆலயத்தை முற்காலத்தில் தேவ சிற்பியான விஸ்வகர்மா எழுப்பினார் என்கிறார்கள். பிற்காலத்தில் சோழர்களால் இந்த ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது. நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், பிச்சாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் என கோஷ்ட தெய்வங்களும், லட்சுமி, சரஸ்வதி, 32 சிவலிங்கங்கள், நான்கு விநாயகர்கள், பாலமுருகன், மகாவிஷ்ணு, துர்கை, சப்த மாதர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி எனத் தனிச் சந்நிதி தெய்வங்களும் இங்கே அருள் செய்கின்றனர். ‘மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி வலங் கொள்வார் அடி என் தலைமேலவே!’ என்று பாடுகிறார் அப்பர் பெருமான். இதைப் படித்தே ராஜராஜ சோழன் தன்னை சிவபாதசேகரன் என்றும் சிவசரண சேகர தேவர் என்றும் அறிவித்துக்கொண்டார் என்கிறது வரலாறு. இந்த ஆலயத்தின் சிறப்புகள் இன்னும் பல உள்ளன. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது என்பதால் வாய்ப்புக்கிடைக்கும்போது சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

விகடன் 4 Dec 2025 8:17 am

திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத்தால் பிரகாசித்த அபிராமி அம்மன் கோயில் | Photo Album

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை திருக்கார்த்திகை

விகடன் 4 Dec 2025 7:03 am

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா| Photo Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை சொக்கப்பனை தீபத்திருவிழா.!

விகடன் 4 Dec 2025 6:53 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 4 - 2025 வியாழக்கிழமை.

அஸ்வினி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பீர்கள் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் மயங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம்

ஒனிந்தியா 4 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 4 - 2025 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 4.12.2025 திதி : இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி . நட்சத்திரம் : இன்று மாலை 03.08 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று பிற்பகல் 01.03 வரை சிவம். பின்னர் சித்தம்.

ஒனிந்தியா 4 Dec 2025 12:05 am

Tiruvannamalai 2025 Live | திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2025 | Karthika Deepam |

karthigai deepam tiruvannamalai live | tiruvannamalai karthigai deepam 2025 | Karthigai Maha Deepam | Karthika Deepam | Maha Deepam Live | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025

விகடன் 3 Dec 2025 5:47 pm

December Matha Palan: லட்சுமி நாராயண யோகம் பெறும் ரிஷப ராசி.. பண மழை கொட்டப் போகுது

டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்,

ஒனிந்தியா 3 Dec 2025 5:44 pm

திருக்கார்த்திகை: நெல்லையப்பர் திருக்கோயிலில் பரணி தீபம்; அகல் விளக்கு ஏற்றி வழிபாடு | Photo Album

திருக்கார்த்திகை: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் விழா.! திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

விகடன் 3 Dec 2025 4:30 pm

Sani Vakra Nivarthi: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் சனி பகவான்.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 3 Dec 2025 4:25 pm

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம். அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம். இந்த ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் நவம்பர் 24- ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷத்துடன் பரணி தீபத்தைத் தரிசனம் செய்தனர். பரணி தீபம், திருவண்ணாமலை. காலையில், பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக தீபக் கொப்பரை மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மாலை அருணாசலேஸ்வரர், கொடிமரம் அருகே அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளிய சில நிமிடங்களில் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இன்று மகாதீபத்தைத் தரிசனம் செய்வதும் கிரிவலம் வருவதும் விசேஷம் என்பதால் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!

விகடன் 3 Dec 2025 9:55 am

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் டபுள் தமாக்கா.. அதிர்ஷ்டம் கொட்ட போகும் 6 ராசிகள்

டிசம்பர் மாத பலன்கள் 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். தமிழ் மாதமான மார்கழியும் பிறக்க போகிறது. மாதங்களில் சிறந்தது என்றழைக்கப்படும் மார்கழி

ஒனிந்தியா 3 Dec 2025 9:54 am

கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!

தமிழகத்தில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்கள் என்பார்கள். அதேபோன்று ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் ஒட்டி ஆலய உற்சவங்களும் வழிபாடுகளும் நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வரும். இந்த நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கார்த்திகை தீபம் என்று வீடு தோறும் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்துவருகிறது. ஞானசம்பந்தர் இதை `விளக்கீடு’ என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த நாளில் தான் ஈசன் அடிமுடி காண முடியாத அண்ணாமலையோனாகக் காட்சி கொடுத்தார் என்பதால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதும் வழக்கம். அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியவுடன் மலையில் தீபம் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து அண்ணாமலைக்கு `அரோகரா!' என்று முழங்க தீபக்காட்சியை தரிசனம் செய்வதே பரவசமானது. வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் சென்று தரிசனம் செய்யவேண்டிய நிகழ்வு அது. அதே நேரத்தில் அந்தத் தருணத்தில் நம் வீட்டிலும் தீபம் ஏற்ற வேண்டியது அவசியம். தீப ரூபத்தில் நாம் அந்தப் பரம்பொருளை நம் இல்லத்தில் நிறையச் செய்யவேண்டும் என்பதுதான் இந்த விழாவின் தாத்பர்யம். திருவண்ணாமலை தீபம்! கார்த்திகை தீபம்... எப்படி விளக்கேற்ற வேண்டும்? பொதுவாக நம் வீட்டில் பூஜை அறையில் மட்டுமே தீபம் ஏற்றுவோம். ஆனால் திருக்கார்த்திகை அன்று நம் வீட்டின் அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. சந்திரன் முழு வலிமையோடு இருக்கும் இந்த நாளில் ஏற்றப்படும் இந்த தீப வெளிச்சம் நம்வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அமைதியையும் சுபிட்சத்தையும் கொடுக்கும். அடுத்த ஓராண்டு நம் இல்லம் சண்டை சச்சரவு இல்லாமல் ஆனந்தமாக வாழத் தேவையான நேர்மறை அதிர்வுகளைத் தங்க வைக்கும். இதை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து பலனை உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள். எனவே வீடுதோறும் நிச்சயம் விளக்குகளை ஏற்றிவைப்போம். அதேநேரத்தில் பலர் மெழுகினால் ஆன தீபங்களை ஏற்றுகிறார்கள். அது நம் மரபில் வழக்கம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. மண் அகல்களே விசேஷம். மண் அகலில் திரியிட்டு நல்லெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த நாளில் பரிகாரங்களுக்கு உகந்த இலுப்பை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முதலில் பூஜை அறையில் உள்ள குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு பூக்கள் சமர்ப்பித்து தீபலட்சுமியே இதில் எழுந்தருள்வாயாக என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அதற்கு தீபம் காட்டி வழிபட்டு ஒரு வெற்றிலை பாக்கு பழம் ஆகியன நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு அகல் விளக்குகளை அந்த தீபத்தில் இருந்து ஏற்றினால் விசேஷம். அல்லது ஒரு அகலை குத்துவிளக்கில் இருந்து ஏற்றிவிட்டு அந்த அகலைக்கொண்டு பிற விளக்குகளை ஏற்ற வேண்டும். விளக்குகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே வைக்க வேண்டும். தெற்கு நோக்கி வைக்கக்கூடாது. கார்த்திகைப் பொரி உருண்டை தீபம் ஏற்ற நல்ல நேரம் தீபம் ஏற்ற விளக்குகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டவுடன் நாமும் நம் வீட்டில் தீபம் ஏற்றலாம். இன்று திருவண்ணாமலையில் தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட இருக்கிறது. அதை தரிசனம் செய்தபிறகு நம் வீட்டில்தீபம் ஏற்றலாம். 6-7 மணி வரை சூர்ய ஹோரை. 7- 8 மணி வரை சுக்ரஹோரை. இந்த இரண்டு மணி நேரமுமே மிகவும் நல்ல நேரமாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் இறையருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளமும் சேரும். பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு நிவேதனம் உண்டு. கார்த்திகைக்கு, கார்த்திகைப்பொரி எனப்படும் நெல்பொரி நிவேதனம் செய்வது விசேஷம். பொரி உருண்டை நிவேதனம் செய்தால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விகடன் 3 Dec 2025 9:10 am

December Matha Palan: டிசம்பர் மாதத்தில் டபுள் தமாக்கா.. அதிர்ஷ்டம் கொட்ட போகும் 6 ராசிகள்

டிசம்பர் மாத பலன்கள் 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். தமிழ் மாதமான மார்கழியும் பிறக்க போகிறது. மாதங்களில் சிறந்தது என்றழைக்கப்படும் மார்கழி

ஒனிந்தியா 3 Dec 2025 8:34 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 3 - 2025 புதன்கிழமை.

அஸ்வினி: ரகசிய நடவடிக்கை எதிலும் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். பரணி: கட்டிடம் கட்டுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் . கார்த்திகை: மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரோகிணி: திட்டமிட்டு செயல்களில் தாமதம் உண்டாகும். மிருகசீரிடம்: இன்று எடுக்கும் தீவிர முயற்சி எதிர்காலத்தில் பலனளிக்கும். திருவாதிரை: மனம் நிறைவு பெறும் வகையில் பணம் வரவு அதிகரிக்கும்.

ஒனிந்தியா 3 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 3 - 2025 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 3.12.2025 திதி : இன்று காலை 10.13 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி . நட்சத்திரம் : இன்று மாலை 04.47 வரை பரணி . பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று மாலை 04.13 வரை பரிகம். பின்னர் சிவம்.

ஒனிந்தியா 3 Dec 2025 12:05 am

Rasi Palan This Week: மீன ராசி தலைக்கு மேல் கத்தி.. இந்த தப்பை மட்டும் செய்ய கூடாது

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 7:42 pm

Rasi Palan This Week: மீன ராசி தலைக்கு மேல் கத்தி.. இந்த தப்பை மட்டும் செய்ய கூடாது

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 7:01 pm

Rasi Palan This Week: கும்ப ராசிக்கு தொட்டது துலங்கும்.. 7 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 5:41 pm

Rasi Palan This Week: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. கோபம் தான் பிரச்சனையே

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 12:21 pm

தவெக சிங்கிள் டிஜிட் தொகுதியே வெல்லும்.. விஜய்க்கு வெற்றி வாய்ப்பே இல்லை.. பிரபல ஜோசியர் கணிப்பு!

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து வைரல்

ஒனிந்தியா 2 Dec 2025 12:01 pm

கோவையில் மகாருத்ர ஹோமம்: சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்

கோவையில் மகாருத்ர ஹோமம்! சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்! ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ருத்ர ஹோமம் மார்கழி என்றாலே இறைவனைக் கொண்டாடும் புண்ணிய மாதம் என்பார்கள். அதிலும் மார்கழியின் சிறப்பாக கொண்டாடப்படுவது ஆருத்ரா அபிஷேகமும் திருவாதிரை நன்னாளுமே. இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். அப்போது நினைவுக்கு வந்தது கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. வெகு பிரமாண்டமாக அப்போது நடைபெற்ற ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரின் கடன் பிரச்னைகள் நீங்கின; திருமண வரன் தேடி வந்தன; நீங்காத நோய்கள் நீங்கின; வழக்குகள் தீர்ந்தன என்று பலராலும் அப்போது பேசப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் அதாவது ஜனவரி-2-ம் நாள் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். அரிதான அரிதான இந்த மகாருத்ர ஹோமம் பெரும் பொருட்செலவு செய்து செய்யக்கூடியது. அதிலும் இது கோயில் மற்றும் திருமடங்களில் மட்டுமே செய்ய வேண்டியது. அத்தகைய சிறப்பான ஸ்ரீருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் நடைபெற உள்ளது. . சென்ற ஆண்டு வெகு பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஹோமம் பலரின் வரவேற்பை பெற்றது. கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், சேக்கிழார்பெருமான் காட்டிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவார தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் அண்டவானப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் உலா வர வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள். ருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில்  சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விகடன் 2 Dec 2025 11:32 am

Dhanusu rasi palan: அடித்தாடும் தனுசு ராசி.. அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. என்ஜாய்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 10:22 am

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு \காசு மேல காசு வந்து\.. அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 2 Dec 2025 9:18 am

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா குடமுழுக்கு விழா

விகடன் 2 Dec 2025 6:48 am

திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யும்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்துக்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்டத் தடையில்லை. தர்காவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், அதற்கு பதிலாக மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது. மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலம் காலமாக நடந்து வந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அங்கு தீபம் ஏற்ற தடை விதித்தது. அதனால் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதை மாற்றி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது அறநிலையத்துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம ஆஜராகி பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீப்பத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது, தவறான உள் நோக்கத்தில் ஆதாரமில்லாமல் மனு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பு, வக்பு வாரியத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலையில் ஏறிச் சென்றும் பார்வையிட்டார். பின்பு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைக் கேட்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் - 2025 | Photo Album

விகடன் 2 Dec 2025 6:44 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 2 - 2025 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம். கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும். ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். மிருகசீரிடம்: தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திருவாதிரை: சின்ன வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். புனர்பூசம்:

ஒனிந்தியா 2 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 2 - 2025 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.12.2025 திதி : இன்று பிற்பகல் 12.29 வரை துவாதசி. பின்னர் திரியோதசி . நட்சத்திரம் : இன்று மாலை 06.23 வரை அஸ்வினி . பின்னர் பரணி. நாமயோகம் : இன்று இரவு 07.18 வரை வரீயான். பின்னர் பரிகம்.

ஒனிந்தியா 2 Dec 2025 12:05 am

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புரோமோஷன் கன்ஃபார்ம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 4:56 pm

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. உங்க காட்டுல மழைதான்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 3:20 pm

Rasi Palan This Week: \காசு பணம் துட்டு மணி மணி\.. கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 3:16 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. நட்பு விஷயத்தில் இதை மட்டும் பண்ணாதீங்க

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 1:18 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரச்சனைகள் ஓவர்.. கடன் எல்லாம் தீரும் யோகம்

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 11:12 am

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. ஒரு விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதை

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 9:51 am

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. ஒரு விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதை

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 9:22 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. காத்திருக்கும் பம்பர் பரிசு

வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 1 Dec 2025 7:59 am

கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்

நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஐகுந்தம் கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதியில் நடைபெறுவதைப்போலவே இந்த ஆலயத்திலும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனவே சுற்றுவட்டார மக்கள் இந்தக் கோயிலை, 'கிருஷ்ணகிரியின் திருப்பதி' என்றே போற்றுகிறார்கள். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் திருப்பதி பெருமாளை வழிபட்ட திருப்தி கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் 27.8.2009 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிவலிங்கம், பத்மாவதி தாயார், வராஹ சுவாமி, ஆஞ்சநேயர், சனி பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டாக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்து அறங்காவலர் எம். நாகேந்திர சிங் கூறும்போது, இந்த ஆலயத்தில் வழிபாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மூலவரின் திருவடிகளைத் தொட்டு வணங்கலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கோயிலின் கணக்கீட்டாளர் ரஞ்சித் விரிவாகப் பேசினார். 2007 - ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தயானந்த்சிங் மற்றும் ராதாபாய் தம்பதி இந்தக் கோயிலைக் கட்டிமுடிக்க உதவினர். இங்கே பெருமாளை தரிசித்தாலே மனம் குளிரும். அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் வந்து பெருமாளை தரிசனம் செய்வதோடு திருவடிகளைத் தொட்டு வணங்கவும் செய்யலாம் என்பதுதான் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. மேலும் பெருமாளின் திருமுன்பாகத் திருமணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கருவறைக்குள்ளேயே திருமணமும் செய்ய அனுமதிக்கிறோம். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் இங்கே, புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்குத் திருக்கல்யாண வைபவமும் சிறப்புடன் நடைபெறும். மார்கழி மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றார். இங்கே வரும் பக்தர்கள் பலரும் பெருமாள் திருவடிகளைத் தொட்டு வணங்கிய அனுபவத்தை சிலாகிக்கிறார்கள். 'திருவடிகளைத் தொட்டதுமே மனம் சிலிர்க்கிறது. மனதில் பாரங்கள் எல்லாம் கரைந்துபோகின்றன' என்கிறார்கள். இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குவதோடு குழந்தைச் செல்வமும் உடனே கிடைக்கிறது என்கிறார்கள். இதற்காக கிருஷ்ணகிரியைச் சுற்றி உள்ள ஊர்களில் இருந்தும் பெங்களூருவில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். கிருஷ்ணகிரி திருப்பதி ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில் எப்படிச் செல்வது ? : கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை பிரதான சாலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரம்பள்ளியை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் தெரியும் சாலையில் 6 கி.மீ பயணித்தால் ஐகுந்தம் தொக்கபள்ளியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை அடையலாம். ஆலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

விகடன் 1 Dec 2025 6:49 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 1 - 2025 திங்கட்கிழமை.

அஸ்வினி: வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள். பரணி: திட்டமிட்டுச் செயல்பட்டு வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். கார்த்திகை: குறுக்கு வழியில் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். ரோகினி: அரசுத் தேர்வுக்கு படிப்பவர்கள் அனுகூலம் அடைவார்கள். மிருகசீரிடம்: தகுதிக் குறைவானவரின் பேச்சை புறந்தள்ளுங்கள். திருவாதிரை: நிலம் வாங்கி விற்கும் தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். புனர்பூசம்: குடும்பத்தில் எதிர்பாராத

ஒனிந்தியா 1 Dec 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 1 - 2025 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 1.12.2025 திதி : இன்று பிற்பகல் 02.36 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி . நட்சத்திரம் : இன்று இரவு 07.52 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.04 வரை சித்தி. பின்னர் இரவு

ஒனிந்தியா 1 Dec 2025 12:05 am

இந்த வார ராசி பலன்கள்.. மேஷம் முதல் மீனம் வரை! அதிர்ஷ்டம் யாருக்கு.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது

சென்னை: இந்த வாரம் சூரியன் விருச்சிகத்தில் பயணிக்க, குரு மிதுனத்தில், சனி கும்பத்தில் இருப்பதால் பல ராசிகளுக்கு கலவையான பலன்கள். தொழில், நிதி, ஆரோக்கியம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் என்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை ஜோதிட நிபுணர்கள் தொகுத்து தருகிறார்கள். மேஷம்: குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு! தொலைபேசியில் எதிர்பார்த்த

ஒனிந்தியா 30 Nov 2025 6:39 pm

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து' - பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. மகா தீபம் கடந்த ஆண்டு, `பெஞ்சால்' புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன்தொடர்ச்சியாக அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு உண்டானது. இதனால், உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு `டிட்வா' புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு எனவே, ``புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. `மலை ஏற முயற்சிக்க வேண்டாம்' என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விகடன் 30 Nov 2025 11:05 am

Weekly Horoscope: வார ராசி பலன் 30.11.25 முதல் 6.12.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of ovember 23rd - 29th 2025, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.

விகடன் 30 Nov 2025 9:30 am

பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 30 Nov 2025 7:00 am

Sani Vakra Nivarthi: சனியின் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷப ராசி.. எதை தொட்டாலும் யோகம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 6:46 pm

Sani Vakra Nivarthi: வக்ரசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. இந்த விஷயத்தில் ரொம்ப கவனம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 6:04 pm

Sani Vakra Nivarthi: வக்ரசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. இந்த விஷயத்தில் ரொம்ப கவனம்

Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம்

ஒனிந்தியா 29 Nov 2025 5:09 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர்.. லிஸ்டில் உங்க ராசி இருக்கா பாருங்க

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக

ஒனிந்தியா 29 Nov 2025 4:34 pm

திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் திருவாலங்காட்டில் நடனமாடியபோது நந்தி மிருந்தங்கம் வாசித்தார். இசையில் மூழ்கி அவர் கண்மூடியே வாசித்துமுடித்தார். கண் திறந்ததும்தாம் காணக்கிடைக்காத திருநடனக் காட்சியைக் காணத் தவறிவிட்டோமே என்கிற வருத்தம் உண்டானது. தனக்கும் திருநடனக் காட்சி வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஈசன் அவரிடம், மெய்ப்பேடு என்னும் தலத்துக்குச் சென்று தவம் செய்யுமாறும் அதன்பலனாக விரைவிலேயே திருநடன தரிசனம் கிடைக்கும் என்று கூறியருளினார். அதன்படி நந்தி வந்து தவம் செய்து சிவதரிசனம் பெற்ற தலம்தான் மெய்ப்பேடு என்று போற்றப்படும் மப்பேடு. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு. சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ. தூரம். நந்திக்கு சிங்கீ என்கிற பெயரும் உண்டு. நந்தி வழிபட்ட ஈசன் என்பதால் இந்த ஈசனுக்கு சிங்கீஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டானது. மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம். அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு `மப்பேடு’ என்று மருவியதாகச் சொல்வார்கள். ஈசன் இருக்கும் இடத்தில் சக்தி இல்லாமல் இருப்பாளா... அன்னையும் இங்கே ஆனந்தமாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கே அவளுக்கு புஷ்ப குஜாம்பாள் என்று திருநாமம். சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில்-கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள். இந்த அம்பிகை கொள்ளை அழகு. அவளை தரிசித்தாலே நம் மனக்கவலைகள் நீங்கிவிடும். மேலும் பேசுவதில் பிரச்னை இருக்கும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து இந்த அன்னையை வழிபட்டால் விரைவில் மடை திறந்த வெள்ளம்போல் அவர்கள் பேசும் நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் கம்பீரமாக நம்மை வரவேற்கும். ராஜகோபுரம் முழுவதுமே கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்ட சிற்பப் பெட்டகமாக விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அழகுற அமைந்துள்ளது ஆலயம். மகா மண்டபத்தின் முன்பு செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை. ஆலயத்தின் நீண்ட பிராகாரத்தில் ஆஸ்தான விநாயகர், இடம்புரி விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. மூலவரின் கருவறைக் கோஷ்டத்தில் பிரம்மாவின் திருவுருவம் காணப்படுகிறது. வியாழக்கிழமைதோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நம் தலையெழுத்து நல்லவிதமாக மாறி, வாழ்க்கை சிறக்கும் என்கிறார்கள். பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று, ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் காலத்தில் இங்கே திருப்பணிகள் நடந்துள்ளன. இதற்கு சாட்சியாக இங்கே கல்வெட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆலயம் கி.பி. 967-ல் இரண்டாம் ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட தகவலும் உள்ளன. பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்! மூல நட்சத்திரக் காரர்களுக்கு முன்னேற்றம் இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம். மூல நட்சத்திரம் சரஸ்வதிக்கும் அனுமனுக்கும் உரிய நட்சத்திரம். கல்வியும் வலிமையும் வழங்கும் இவ்விரு தெய்வங்களுக்கும் உகந்த இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும். வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் காண்பார்கள் என்கிறது தலபுராணம். எனவே, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்காக, தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும். மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர். இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. இங்குள்ள வீணை ஆஞ்சநேயர் விசேஷமானவர். சீதாதேவியைத் தேடிக்கொண்டு தென்திசை சென்றபோது, இந்தத் தலத்துக்கு ஆஞ்சநேயர் வந்தார். அப்போது இப்பகுதி மக்களின் வேண்டுதலுக்காக அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப் பாடி மழையை வரவழைத்துப் பஞ்சம் போக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

விகடன் 29 Nov 2025 8:36 am

ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 8 ஆண்டுக்கு பிறகு இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம்; என்ன சிறப்பு?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 1-ம் தேதி விமர்சையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பழங்காலக் கல் நாதஸ்வரம் இரண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கல் நாதஸ்வரம் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பட்டு வருகிறது. மற்றொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கல் நாதஸ்வரம் இசைத்த தமிழரசன் இந்நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயிலில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழழரசன் கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், கல் நாதஸ்வரம் இசைத்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் மெய்மறந்து கேட்டனர். பழங்கால கல் நாதஸ்வரம் குறித்து வியப்புடன் பேசிக்கொண்டனர். இது குறித்து கோயில் தரப்பில் பேசினோம், இங்குள்ள கல் நாதஸ்வரம் பல நூற்றாண்டுகள் பழமையானது. வரலாற்றுப் பொக்கிஷமான கல் நாதஸ்வரம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டதாக இருக்கும். ஆனால் கல் நாதஸ்வரம் ஆறு மடங்கு பெரியது. அதாவது சுமார் 3 கிலோ 600 கிராம் எடையும் இரண்டரை அடி நீளமும் கொண்டது. இந்த நாதஸ்வரத்தில் 2 இன்ச் உயரமுள்ள திமிரி சீவாளி உள்ளது. கும்பகோணம் வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தை கொண்டது. கல் நாதஸ்வரத்தின் உளவுப் பகுதி மூன்று உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு, வெண்கலப் பூண்டு மூலம் இணைக்கப்பட்டவை. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் ஆறு ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். எனவே சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்தியம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்தமத்தியம ராகங்களை இந்த நாதஸ்வரத்தில் வாசிக்க முடியாது. குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை! மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்தார். பிறகு, கோவில் நாதஸ்வர வித்வான் குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் இதனை வாசித்தார். அதன்பிறகு சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார். இறுதியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு செப். 30 ஆம் தேதி, சுவாமிநாதன் ஒரு மணி நேரத்திற்கு நான்கு கீர்த்தனைகளை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். என்றனர். ஆதிகும்பேஸ்வரர் தரிசனம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழரசன் சுமார் 26 நிமிடங்கள் அமிர்தவர்ஷிணி, அம்சநாதம், சாரங்க, சரஸ்வதி ஆகிய நான்கு ராகங்களை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். பின்னர் தமிழரசன் கோயில் செயல் அலுவலர் முருகனிடம் கல் நாதஸ்வரத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. கும்பகோணத்தில் சிறப்புகளில் ஒன்றான கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதை பலர் கலந்து கொண்டு பார்த்து கேட்டு ரசித்தனர். நோய்நொடி இல்லாத அமுத வாழ்வு தரும் ஆதிகும்பேஸ்வரர் தரிசனம்!

விகடன் 29 Nov 2025 7:23 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 29 - 2025 சனிக்கிழமை.

அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம். கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும். ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். மிருகசீரிடம்: தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். திருவாதிரை: சின்ன வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். புனர்பூசம்:

ஒனிந்தியா 29 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 29 - 2025 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 29.11.2025 திதி : இன்று மாலை 06.03 வரை நவமி. பின்னர் தசமி . நட்சத்திரம் : இன்று இரவு 10.07 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி. நாமயோகம் : இன்று அதிகாலை 05.52 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

ஒனிந்தியா 29 Nov 2025 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: அடித்து ஆடப்போகும் மீன ராசி.. ஜென்மசனியிலும் ஜாக்பாட் அடிக்கும் யோகம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 28 Nov 2025 9:52 pm