SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

புத்தாண்டு ராசி பலன் 2026: சிம்ம ராசிக்கு கடனுக்கு குட்-பை.. அடிக்க போகுது ஜாக்பாட்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 4:25 pm

பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 25 Nov 2025 2:45 pm

New Year Rasi Palan 2026: கடக ராசிக்கு தடைகள் தவிடு பொடியாகும் நேரம்.. ஒரு விஷயத்தில் கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 2:10 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. ஒரு விஷயத்தில் கவனம்

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 2:10 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு வாயில் தான் பிரச்சனையே.. ஆனா 2026 இல் சர்ப்ரைஸும் இருக்கு

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 1:41 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷ ராசிக்கு 2026 இல் வாழ்க்கையே மாறப்போகுது.. காசு மேல காசு

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட

ஒனிந்தியா 25 Nov 2025 1:06 pm

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு; நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்; ஏன் தெரியுமா?

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ. டிசம்பர் 3 - ம் தேதி அம்மணி அம்மன் ஆலயத்தில்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு அன்றாடம் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபம், ஆயுள், ஆரோக்கியம், நன்மை, ஐஸ்வர்யம், கீர்த்தி, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்கிறது பூஜாபத்தி நூல்கள். எங்கு ஒளியோடு வழிபாடு நடக்கிறதோ அங்கு வேண்டுதல்கள் நிறைவேறும். விளக்கின் அடியே பிரம்மா, விளக்கின் தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, விளக்கில் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர் என்பது ஐதிகம். யார் தீபத்தை ஏற்றி வைக்கிறாரோ அவரது வாழ்க்கையில் உள்ள இருள் விலகி ஷாந்தியும் சௌக்கியமும் நிலவும் என்பது பெரியோர் வாக்கு. அதிலும் தீபம் முதலில் பெரும் ஒளியாக எழுந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் 21 தலைமுறைகளுக்கும் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் ஈசனை எண்ணி ஈசனின் வடிவாகவே உள்ள மலையை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் எண்ணியவை யாவும் நிறைவேறும். நேர்மறை ஆற்றலும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றி வழிபட தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். இந்த நாளில் குபேரன் ஈசனை வழிபடும் நாள் என்பதால் அதே நாளில் விளக்கேற்றி வழிபட நம் வாழ்வில் செல்வ வளம் பெருகும். குறிப்பாக வியாபாரம், தொழில் செய்பவர்கள் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி அடைந்து, செல்வ வளம் பெருகும். ராசி தீப வழிபாடு முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் கூடி வழிபடுவதால் பெரும் நேர்மறை ஆற்றல் அங்கு எதிரொலிக்கும். இவ்வேளையில் தெய்வ சக்திகளின் அதிர்வு மேலோங்கி, தீய சக்திகளின் ஆற்றல் வீழும். இதனால் அங்கு சொல்ல முடியாத அளவுக்கு தெய்விக உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் எழும். இவ்வேளையில் தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றும். இதனால் உங்கள் மனதில் நன்மை மற்றும் நிம்மதி மேம்படும். மேலும் அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றம் அதிகரிக்கும். இதனாலேயே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் அத்தனை கூட்டம் கூடுகிறது எனப்படுகிறது. தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ... அக்கினி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. அதோடு ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்களின் அத்தனை வேண்டுதல்களும் நிறைவேற எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரர் நிச்சயம் அனுகிரகம் செய்வார். ராசி தீப வழிபாடு இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மங்கல காரியங்கள் தடையின்றி நடக்க என்று எது வேண்டி இந்த வழிபாட்டில் கலந்து கொண்டாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களின் அத்தனை தேவைகளும் இந்த வேண்டுதலால் நிறைவேறும். குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.   https://www.facebook.com/SakthiVikatan

விகடன் 25 Nov 2025 12:54 pm

சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது. ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது. குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது. `சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை இதற்கிடையில், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் பம்பாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், சபரிமலையில் தினசரி வருகைதரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது. அதுபோல, ஒவ்வொரு நாளும் சன்னிதானத்தில் அனைத்து துறையினரின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பம்பா மற்றும் நிலக்கல்லில் முக்கிய துறைகளின் அதிகாரிகள் தலைமையில் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது, பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 70 பேர் ஏறிச் செல்கின்றனர். அது 85 ஆக அதிகரிக்கப்படும். அதற்காக அனுபவம் வாய்ந்த போலீசாரும் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள். பார்க்கிங், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், டோலி பிரச்னை போன்ற விஷயங்களையும் அமைச்சர் வாசவன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்போது சபரிமலையில் மிதமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஐகோர்ட் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைத்ததற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. சபரிமலைக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. சபரிமலை பக்தர்கள் அதே சமயம், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருகைதராமல் இருப்பதும் கருத்தில் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும். இதன்மூலம் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு, பிற பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதே தேவசம்போர்டின் திட்டமாக உள்ளது. இது பக்தர்களுக்கு அனுகூலமான முடிவு என்றாலும், மீண்டும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்காமல் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது. சபரிமலை விசேஷங்கள்! அற்புதம் நிகழ்த்தும் ஐயப்பனின் பிரசாதம்! அரவணைப் பாயசமும் அபிஷேக நெய்யும்!

விகடன் 25 Nov 2025 7:45 am

இந்த வார ராசிபலன் நவம்பர் 25 முதல் 30 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 25 Nov 2025 7:00 am

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா... ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர். மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை தரிசிப்போம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ளது ஆவணியாபுரம். இங்குள்ள சிறுமலையில்தான் ஒன்பது நரசிம்மர்கள் கோயில் கொண்டிருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் வரவேற்பு வளைவில் காட்சிகொடுக்கும் தாயாரையும் பெருமாளையும் வணங்கிப் படியேற ஆரம்பிக்க வேண்டும். 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடைந்துவிடுவோம். மலை இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் அற்புதமாய்க் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் அமர்ந்து அருளும் லட்சுமிப் பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். பெருமாளும் தாயாரும் அருளும் இந்த சேவை மனதை நிறைக்கிறது. அதேபோன்று மனத்தில் பாரங்கள் இருந்தாலும் போக்கிவிடுகிறது. தரிசனம் செய்யும்போதே பல பக்தர்கள் உடல் சிலிர்ப்பதை இங்கே உணர்கிறார்கள். இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தபிறகு அந்த உக்கிரத்தோடு இந்த மலைமீது வந்து அமர்ந்தாராம். அதன்காரணமாக இங்கே சுயம்பு மூர்த்தி ஒன்று தோன்றிற்று. அவரே தற்போதும் சேவை சாதிக்கும் மூலவர். இவரின் உக்கிரத்தைத் தணிக்க பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்தார். அதன் முடிவில் தாயாரும் சிம்ம முகம் ஏற்க கருடரும் தானும் இங்கே சிம்ம முகத்தோடு அருள்பாலிக்க விரும்புவதைத் தெரிவித்தார். அவ்வண்ணமே இந்தக் கோயிலில் மூர்த்திகளாக எழுந்தருளி சேவை சாதித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்! மூலவர் சந்நிதியிலேயே நரசிம்மரின் இரண்டு உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒருவர் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி சமேதராக அருள்பாலிக்க, மற்றொருவர் சிம்மமுகப் பிராட்டியை மடியில் இருத்தியபடி அருள்கிறார். தனிச் சந்நிதியில் இங்கே அலர்மேல் மங்கைத் தாயார் அருள்கிறார். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதிகம். ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் இங்கே தரிசனம் முடிந்து மேலும் படிகள் ஏறினால், மலை உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச்சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். இன்றும் அவர்கள் வெப்பாலை மரங்களாக உருமாறி இந்த மலையில் நின்று வழிபட்டுவருகிறார்கள் என்கின்றன ஞானநூல்கள். மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியில் மூன்று நரசிம்மர்கள், அவரை வலம் வரும் பாதையில் ஐந்து நரசிம்மர்கள், மலைக்கு மேலே யோக நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர்கள் இங்கே அருள்கிறார்கள். இங்கே சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலரும் இந்த நரசிம்மரையே தங்களின் காவல் தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். நரசிம்மரின் அருளால் விவசாயம் செழிக்க, அவற்றில் சிறு பகுதியைக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். யோக நரசிம்மர் குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

விகடன் 25 Nov 2025 6:50 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 25 - 2025 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பரணி: கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது சிறப்பு. கார்த்திகை: எந்த வேலையிலும் நீங்கள் முன்னாடி நிற்க வேண்டும். ரோகிணி: புகழ் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மிருகசீரிடம்: நவீனமான பொருளைத் தொழிலுக்கு வாங்குவீர்கள். திருவாதிரை: பலமான ஆதரவால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். புனர்பூசம்: பக்குவமாக செயல்பட்டு

ஒனிந்தியா 25 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 25 - 2025 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25.11.2025 திதி : இன்று இரவு 08.07 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி . நட்சத்திரம் : இன்று இரவு 09.26 வரை உத்திராடம் . பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று காலை 11.18 வரை கண்டம். பின்னர் விருத்தி.

ஒனிந்தியா 25 Nov 2025 12:05 am

Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் மீன ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Nov 2025 3:49 pm

Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் மீன ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Nov 2025 2:54 pm

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - மனமுருகி `அரோகரா’ முழக்கமிட்ட பக்தர்கள்!

தி ருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. திருவண்ணாமலை தீபத்திருவிழா அதைத்தொடர்ந்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காலை 6 மணிக்குமேல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என மனமுருகி வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், நாளை இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி நடக்கிறது. திருவண்ணாமலை தீபத்திருவிழா இப்படியே, அடுத்த 10 நாள்களுக்கும் தீபப் பெருவிழா களைகட்டவிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி மகா ரத தேரோட்டம், டிசம்பர் 3-ம் தேதி காலை கருவறையில் பரணி தீபம், அன்று மாலை 2,688 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது. 4-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரையிலும் தெப்ப திருவிழா நடைபெறும். டிசம்பர் 7-ம் தேதி, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

விகடன் 24 Nov 2025 12:37 pm

Rasi Palan This Week: மகர ராசிக்கு வாயில தான் கண்டம்.. ஆனா மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Nov 2025 12:18 pm

தஞ்சையில் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழா: களப பூஜை; அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை; கலந்து கொள்ளுங்கள்!

2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன. ஸ்ரீஐயப்பன் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்கள் ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விஷேச காலங்கள் என்கின்றன சாஸ்திரங்கள். எங்கு பார்த்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களை தரிசிக்க முடியும் என்பது கார்த்திகை மாதத்தின் சிறப்பு. ஐயப்பனை எண்ணி மாலையிட்டு விரதம் இருப்பவர்களை 'கன்னிசாமி, சாமி, ஐயப்பா, மணிகண்டசாமி, மாளிகைபுரம், குருசாமி,' என்றெல்லாம் தெய்வ வடிவாகவே காண்பது நம் வழக்கம். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை இந்தியாவெங்கிலும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து மண்டல, மகர ஜோதி பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். இந்தியாவெங்கும் ஐயப்பனை ஆராதிக்கும் இவ்வேளையில் தஞ்சையிலும் 15 ஆண்டுகளாக ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் ஒரு பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. அதிலும் சபரிமலை சந்நிதான பெரியோர்களைக் கொண்டு சபரிமலை சந்நிதான வழக்கப்படியே நடைபெறுவது இன்னும் விசேஷமானது. 2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன. 15-வது ஆண்டாக நடைபெற இருக்கும் இந்த விசேஷ வைபவத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். ஐயப்ப பக்தர்களின் நலனுக்காகவும் லோக க்ஷேமத்துக்காக நடத்தி வரும் இவ்விழாக் குழுவினர், இந்த ஆண்டும் விசேஷமாகத் திருமண மற்றும் தொழில் அபிவிருத்தி யோகமளிக்கும் வேண்டுதல் பூஜையாகவே நடத்த உள்ளார்கள். அதிசயமான அத்தி மரத்தாலான ஸ்ரீஐயப்பனின் திருமேனியை நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த விசேஷமான திருப்படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளார்கள். ஐயப்ப ஆராதனை 29-11-25 அன்று காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஐயப்பன் பவனி, லட்சார்ச்சணை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, பிரமாண்ட தீபாராதனை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் உங்கள் குடும்பம் செழிக்க கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும். குருவாயூர் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ எழிக்கோடு கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, சபரிமலை மாளிகைபுரம் முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி, காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், பிரம்மஸ்ரீ ஹரிஹரன் குருஸ்வாமி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை தரிசித்தால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் சபரிமலையில் மட்டுமே செய்யப்படும் பல விசேஷ பூஜைகளை நீங்கள் இங்கே தரிசிக்க முடியும் என்பதும் விசேஷம். ஐயப்ப ஆராதனை அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளுங்கள். இந்த ஐயப்ப ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத வாசகர்கள் 29-11-25 அன்று வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் நேரடி ஒளிபரப்பாக தரிசித்து மகிழலாம்.

விகடன் 24 Nov 2025 10:15 am

Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Nov 2025 9:56 am

சேலம்: `56 அடி உயரம்’ - பிரமாண்ட ராஜமுருகன் சிலை பிரதிஷ்டை!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் அருள்மிகு ராஜ முருகன் சிலை 56 அடியில் பிரம்மாண்ட அமைக்க திட்டமிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முருகன் சிலை அமைக்கப்பட்டபோது முனியப்பன் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் சிலையை மாற்றி அமைக்க முடிவு செய்தது. பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. தற்போது கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டது, பக்தர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது. 56 அடி முருகர் சிலை இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட ராஜமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் நேற்றைய தினம் காலை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தி, தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராஜ முருகனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பெரிய கிரேன் வாகனம் மூலமாக முருகன் சிலைக்கு அருகே சென்று மகா கும்பாபிஷேக தீர்த்தம் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜமுருகனை வழிபட்டனர். பின்னர் தீர்த்தம் மீது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

விகடன் 24 Nov 2025 9:49 am

சிதம்பரம்: தரிசனம் செய்தாலே முக்தி அருளும் திருத்தலம்; சிதம்பர ரகசியம் என்ன தெரியுமா?

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலத்துக்குத் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசன் நடராஜராகக் கோயில்கொண்டு அருள்கிறார். சைவர்களின் தலைமைப்பீடமாகத் திகழும் இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள் சிதம்பரம் தலம் குறித்துத் தெரிந்துகொள்வோம். இத்தலத்தின் மூத்த சுவாமி திருமூலநாதர். இவர் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தலத்திலேயே ஈசன் ஆடல்வல்லானாகவும் கோயில்கொண்டார். இத்தல இறைவனுக்கு சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன் போன்ற பெயர்களில் போற்றுகின்றனர் பக்தர்கள். அம்பிகையின் திருநாமம் உமையாம்பிகை எனப்படும் சிவகாமசுந்தரி. இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்தியமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம். சிதம்பரம் நடராஜர் கோயில் ஒருமுறை மகாவிஷ்ணு சயனக் கோலத்தில் இருக்கும்போது அவர் உடல் எடை கூடுவதைப் போன்று உணர்ந்தாராம் ஆதிசேஷன். அதன் காரணம் என்ன என்று பெருமாளிடம் அவர் கேட்க, ஈசன் ஆடும் ஆனந்த நடனம் கண்டதாகவும் அந்த மகிழ்ச்சியில் தன் உடல் எடை கூடியதாகவும் தெரிவித்தார். அப்படிப்பட்ட ஆனந்த நடனத்தைத் தானும் காணவேண்டும் என்று ஆவல் கொண்டார் ஆதிசேஷன். அதற்கு வரமளித்த விஷ்ணு, சிதம்பரம் தலம் சென்று தவம் செய்யப் பணித்தார். ஆதிசேஷனின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், திருமால், நந்தி, பிரம்மன் ஆகியோர் இசைக்க, ஈசன் ஆதிசேஷனுக்காகத் திருநடனம் புரிந்த க்ஷேத்திரம் இது. ஈசன் நடம் புரிந்த தலங்கள் ஐந்து. அவற்றில் இது இரண்டாவது சபை. இதை பொற்சபை என்று போற்றுகிறார்கள். சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான சிதம்பரம் ஆலயத்தில், `நால்வர் கோயில்’ ஒன்று உள்ளது. இதுவே தேவார மூவர்களின் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்த இடம். இங்கிருந்தே திருமுறைகள் உருவாயின என்பது வரலாறு. விரைவில் திருமணம் நடைபெற இதுவே எளிய பரிகாரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜைக்கான 6 காரணங்கள் என்னென்ன? இங்கே ஒரு மகிமை வாய்ந்த ஸ்படிகலிங்கம் உள்ளது. அதற்கு தினமும் ஆறு காலம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிதம்பரம் கோயிலுக்குச் செல்பவர்கள் சிதம்பர ரகசியம் தரிசனம் செய்ய வேண்டும் என்பார்கள். அது என்ன சிதம்பர ரகசியம்? நடராஜரின் கருவறைக்கு வலது பக்கத்தில் திரை ஒன்று உள்ளது. அந்தத் திரைக்குப் பின்னே உள்ள சுவரில், தங்கத்தாலான வில்வ மாலைகள் காணப்படும். அவை, சிவா என்கிற சம்மேளனச் சக்கரங்கள் ஆகும்; இந்தத் தரிசனம் மோட்சம் தரும் ஒன்று என்கிறார்கள். ஞானம் எனும் சக்கரத்தை மாயை மூடியிருக்கிறது. இறைவன் அருளால் மனம் ஒருமுகப்பட்டு, மாயை விலகினால், ஞானமாகிய சக்கரத்தை உணரலாம் என்பதே சிதம்பர ரகசியம். நடராஜர் தில்லையில் ஈசனின் நடனக் கோலத்தைத் தரிசனம் செய்வதே முக்தியைக் கொடுக்கும் சாதனம். அதைவிட உயர்வானது எதுவும் இல்லை என்பார்கள். ஒருமுறை, பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, சிதம்பரம் தீக்ஷிதர்களை சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையில் ஈசனின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறி இந்திரனின் அழைப்பை மறுத்தனர். அப்போது, அசரீரியாக நடராஜர் யாகத்திற்குச் செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய அந்தத் திருக்கோலத்தை ரத்னசபாபதி என்று போற்றினர். நடராஜர் திருமேனியின் கீழே அமைந்திருக்கும் ரத்னசபாபதி மூர்த்திக்கு தினமும் காலையில் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக தீபாராதனை செய்வது கண்கொளாக் காட்சியாக விளங்கும். சந்திர கிரகணம்! என்ன செய்ய வேண்டும்? யார் யாருக்குப் பரிகாரம் தேவை! ராஜேந்திர சோழனின் ஆட்சியில், சிதம்பரம் கோயிலின் பெருமைகளைக் கேட்ட கம்போடிய அரசன் ஒருவன் நடராஜப்பெருமானுக்கு தங்கம் மற்றும் கம்போடிய மாணிக்கக்கற்களைக் கொண்ட நகைகளை தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது! 1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப்போரின் போது, இந்திய ராணுவத்துக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து பெருமளவு தங்கமும் தொகையும் கொடுக்கப்பட்டன. போர் முடிந்ததும், நமது அரசு இந்தக் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட தங்கம் - பணத்தை, வட்டியும் முதலுமாகத் திருப்பிக்கொடுத்தது. அந்தத் தங்கம் ஆதிமூலநாத சுவாமிக்குத் தங்கக் கவசம் செய்ய சமர்ப்பிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவிழாவின் பத்து நாள்களிலும் சாயங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும் தலம் இது. சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் வந்து வழிபட்ட தலம் இது. இவர்கள் நால்வரும் நால் திசைகளில் உள்ள கோபுரத்தின் வழியாக ஆலயத்துக்குள்ளே வந்து வழிபட்டனர் என்கிறது ஆலயவரலாறு. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனை தரிசனம் செய்து புண்ணிய பலன்களை அடையலாம். பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்?

விகடன் 24 Nov 2025 8:17 am

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு சிக்கல்கள் தீரப்போகுது.. ஆனா ஆபத்தும் காத்திருக்கு.. ரொம்ப கவனம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Nov 2025 8:04 am

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Special Discourse by Poet Ponmani The 100th Day Celebration of Bhagawan Sri Sathya Sai Baba’s Divine Advent is being observed with great devotion around the world. On this auspicious occasion, Poet Ponmani beautifully shares the greatness, compassion, and spiritual legacy of Sathya Sai Baba. This video highlights His divine teachings, miraculous deeds, message of universal love, and the timeless wisdom He gifted to humanity. ✨ Watch this insightful discourse and feel the presence, blessings, and grace of Sathya Sai Baba. Keywords: Sathya Sai Baba, Sathya Sai Baba 100th day celebration, Sai Baba miracles, Sathya Sai teachings, Poet Ponmani speech, Sai Baba discourse, spiritual talk Tamil, Sathya Sai Baba greatness, Baba blessings, Sai devotion, Sai movement, Sathya Sai global celebration, 100th day of Sai Baba advent

விகடன் 24 Nov 2025 8:00 am

Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. வரப்போகும் சூப்பர் குட்நியூஸ்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 4:49 pm

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை.. பேச்சில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 4:11 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் லாட்டரி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 3:30 pm

Rasi Palan This Week: அடித்து ஆடப்போகும் மிதுன ராசி.. தொழில் மிகப்பெரிய உச்சம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 10:10 am

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, நிலம், சொத்துகளைக் குவிக்கும் யோகம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 9:41 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு புது வீடு, கார் வாங்கும் யோகம்.. வாக்குவாதம் வேண்டவே வேண்டாம்

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 23 Nov 2025 8:16 am

பெரியகுளம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர தினத்தில் சிறப்பு அபிஷேகம் | Photo Album

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம்.

விகடன் 23 Nov 2025 7:06 am

Kumbam Rasi Palan: அந்த வீடு என்ன விலை கேளு.. அந்த கார் என்ன விலை கேளு - கும்பம் ராசிக்கு ஜாக்பாட்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கும்பம்

ஒனிந்தியா 22 Nov 2025 5:35 pm

Makaram Rasi Palan: மகரம் ராசிக்கு மெகா ட்விஸ்ட்.. சனி பகவானால் சூப்பர் ப்ரோமோஷன்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மகரம்

ஒனிந்தியா 22 Nov 2025 1:35 pm

Dhanusu: சனி வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பண மழை கொட்டும்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தனுசு

ஒனிந்தியா 22 Nov 2025 1:24 pm

சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்!

தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரில் பல முக்கியக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல பழைமையும் பெருமையும் உடையவை. அப்படிப்பட்ட சென்னை ஆலயங்களில் ஒன்றுதான் கந்தகோட்டம். இந்த ஆலயம் அமைந்த வரலாறும் சிறப்புகளும் சிலிர்ப்பூட்டுபவை. மதுரை மீனாட்சி அம்மனின் பக்தராக விளங்கிய சிதம்பரம் சுவாமிகளை அன்னை மீனாட்சி திருப்போரூர் செல்லுமாறு ஆணையிட்டாள். சிதம்பரம் சுவாமிகளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்துவரும்போது ஓரிடத்தில் முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அந்த அற்புத தரிசனத்தில் மகிழ்ந்த சுவாமிகள் அதுதான் முருகப்பெருமான் வான் மார்க்கமாக சூரனுடன் போரிட்ட தலம் என்பதை அறிந்து மகிழ்ந்தார். அங்கேயே முருகனுக்குத் திருக்கோயில் ஒன்றையும் கட்டி வழிபடத் தொடங்கினார். அதுவே திருப்போரூரில் இன்று நாம் தரிசிக்கும் முருகப்பெருமானின் ஆலயம். இந்த ஆலயத்தின் மகிமைகளை அறிந்த முருக பக்தர்கள் அடிக்கடி சென்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். சென்னையில் இருந்து பல பக்தர்கள் மாதம்தோறும் திருப்போரூர் சென்று வழிபட்டுவந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் வேளூர் மாரி செட்டியார் மற்றும் கந்தப்ப ஆச்சாரி ஆகியோர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் தவறாமல் திருப்போரூர் சென்று தரிசனம் செய்வது இவர்களின் வழக்கம். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் கந்தகோட்டம் 1595 ம் ஆண்டு மார்கழி மாதம் அவர்கள் செல்லும்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திருப்போரூர் செல்லும் வழியில் உள்ள ஒரு தடாகக் கரையில் வேப்ப மர நிழலில் படுத்து ஓய்வெடுத்தனர் இருவரும். அப்போது மாரியின் மேனி மீது பாம்பு ஒன்று ஏறியது. ஆனால் அவர் விழிக்க வில்லை. மாறாக உள்ளூர பேரின்ப வெள்ளத்தில் மூழ்குவதுபோல் உணர்ந்தார். பாம்பு சிறிது நேரம் விளையாடுவதுபோல் ஊர்ந்து விட்டுப் பின் இறங்கிச் சென்றது. அடுத்த கணம், மாரியின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார். “இங்கே நான் புற்றுக்குள் இருக்கிறேன். என்னைச் சென்னைப் பட்டணம் கொண்டு செல்” என்று உத்தரவிட்டார். மாரி மேனி சிலிர்க்க எழுந்துகொண்டார். நண்பரிடம் நடந்ததை விவரித்தார். இருவரும் சேர்ந்து புற்றைத் தோண்டிப் பார்த்து முருக விக்ரகம் இருப்பதை அறிந்துகொண்டு பின் அந்தப் புற்றை மூடி வைத்துவிட்டுத் திருப்போரூர் சென்று வழிபட்டுத் திரும்பி வந்தனர். சென்னை கந்தகோட்டம் தாங்கள் மூடிவைத்த புற்றை மீண்டும் திறந்து அதிலிருந்த முருகப்பெருமானின் விக்ரகத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்தனர். அங்குள்ள சர்வ சித்தி விநாயகர் கோயிலில் யாவரும் காண அத்திருவுருவச் சிலையை வைத்தனர். தம்மை நாடிவந்து அருள்பாலித்த கந்தனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்று விரும்பினர். பல நல்ல உள்ளங்களை நாடி நிதி பெற்றுக் கோயில் எழுப்பினர். அப்படி எழுந்த ஆலயம்தான் பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்! கோயில் அமைப்பு கோயிலின் வாயிலை கண்கவர் ராஜகோபுரம் அழகு செய்கிறது. கந்தபுராணம் முழுதும் சுதைச் சிற்பங்களாகத் திகழ, ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் வடதிசை நோக்கி காட்சியளிக்கிறது. எதிரில் சித்தி கணபதி, வீரபாகுத் தேவர், உற்சவமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தின் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் கந்தசாமி என வழங்கும் முத்துக்குமாரசுவாமி அருங்காட்சி வழங்குகிறார். இருபுறமும் தேவியர் திகழ திருப்போரூரில் உள்ளது போல சிறிய வடிவம். எதிரில் `பிணிமுகம்’ என்னும் யானை வாகனம் உள்ளது. மூலவருக்கு இடது புறம் மீனாட்சி சுந்தரேசர் சந்நிதிகளுடன், அருகில் ஆறுமுக பரமன் தேவியருடன் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திற்கு வலது புறம் தனிச் சந்நிதியில் வள்ளி, தேவசேனை சமேத உற்சவமூர்த்தியான முத்துக்குமாரசுவாமியின் சந்நிதி அமைந்துள்ளது. பின்புறம் திருக்குளம். அதன் கிழக்குப் பகுதியில் 130 அடி நீளத்தில் வடக்கு - தெற்காக சிற்ப அழகுடன் திகழும் நீண்ட மண்டபமும் உண்டு. அருகில் பள்ளியறை, ஞான தண்டாயுதபாணி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மேலும் சுமித்ரேசர், துர்கை, வீரபத்ரர், சூரியன், வயிரவர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளையும் தரிசிக்க இயலும். பாம்பன் சுவாமிகள் வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள் வரை வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை தரிசித்துப் பாடியுள்ள தெய்வமணிமாலை 31 பாடல்களும், கந்தர் சரணப் பத்து பாடல்களும் பிரசித்திபெற்றவை. `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று தொடங்கும் பாடல் இந்த ஆலயத்தில் வேண்டிப்பாடியதுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ், கலம்பகம், திரிபந்தாதி, சந்தத் திருப்புகழ், சண்முகர் வகுப்பு, வேல் வகுப்பு, திருவருள் வினோத வகுப்பு, பதிற்றுப்பத்தந்தாதி, விமான மிசை கண்ட பதிகம், சண்முக தரிசன பதிகம், சிவகுரு தரிசன பதிகம் மற்றும் சில பதிகங்களுடன் ஏறக்குறைய 750 பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்... கந்தசாமிப்பா, கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒருபா ஒரு பஃது, கந்தர் திரு அவதாரம், கந்தர் நான்மணிமாலை, கந்தவேள் வேட்கை, சென்னைசேய முதலான பாடல்களை அருளிச் செய்துள்ளார். குளத்தூர் வரகவி கிருஷ்ணப்ப செட்டியார்... செல்வக்கந்தர் தலப் புராணம், வேதாந்த விருத்தம், கந்தர் திருப்புகழ், கந்தர் கீர்த்தனை முதலானவற்றை இயற்றியுள்ளார். இங்கே மாதாந்திர கிருத்திகை, சஷ்டி வழிபாடுகள், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய விழாவைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!

விகடன் 22 Nov 2025 8:21 am

Sivapuranam | சிவபுராணம் - ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தங்களா? | Secretes of Sivapuranam

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் திருவாசகத்தில் முக்கியமான துதி. அதன் ஒவ்வொரு வார்த்தையும் பெரும் பொருள் உடையது. அப்படிப்பட்ட சிவபுராணத்தின் தன்மையையும் ரகசியங்களையும் நம்மோடு விரிவாகப் பேசுகிறார் காளிகாம்பாள்கோயில் சிவச்ரி சண்முக சிவாசார்யர்.

விகடன் 22 Nov 2025 8:09 am

திண்டுக்கல்: 37 தம்பதிகளுக்கு அறநிலையத் துறை சார்பில் 60ஆம் கல்யாணம்! | Photo Album

60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் டிஜிட்டல் கைது: மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான் - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

விகடன் 22 Nov 2025 6:40 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 22 - 2025 சனிக்கிழமை.

அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம்

ஒனிந்தியா 22 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 22 - 2025 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 22.11.2025 திதி : இன்று மாலை 04.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை . நட்சத்திரம் : இன்று மாலை 04.49 வரை கேட்டை . பின்னர் மூலம். நாமயோகம் : இன்று காலை 11.29 வரை சுகர்மம். பின்னர் திருதி.

ஒனிந்தியா 22 Nov 2025 12:05 am

Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு இனி அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. 2 குட்நியூஸ் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் விருச்சிக

ஒனிந்தியா 21 Nov 2025 4:39 pm

Thulam Rasi Palan: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் துலாம் ராசி.. ராஜயோகம் காத்திருக்கு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் துலாம்

ஒனிந்தியா 21 Nov 2025 1:04 pm

``திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை'' - நிர்வாகம் எச்சரிக்கை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு முழுவதும் தொடர் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேச, திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக தமிழ் மாதப் பிறப்பு, மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாட்கள், சஷ்டி, திதி, அமாவாசை, பெளர்ணமி, வாராந்திர செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். எச்சரிக்கை பதாகை கடந்த ஜூலை7-ம் தேதி நடந்த குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து திருக்கோயிலின் தோற்றமே அழகிய கடற்கரைக்கு அழகு சேர்க்கும் விதமாக மாறியதுடன் வண்ண விளக்குகளால் இரவில் ஜொலிக்கிறது. இதனை காணவே இரவில் கூட பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, அழகுத்தோற்றம் ஆகியவை பக்தர்களை மட்டுமின்றி சமூக வலைதள விரும்பிகளையும் திரும்பி பார்க்கை வைத்துள்ளது. சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்துள்ளது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதனையறிந்த பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் கடற்கரையில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எச்சரிக்கை பதாகை இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக்கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

விகடன் 21 Nov 2025 12:37 pm

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்!

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்! 21 தலைமுறைகளுக்கும் நலமும் வளமும் தரக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப வழிபாடு. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ராசி தீப வழிபாடு தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லவே இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். அவனே சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள். சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன விழா தீப விழா. கார்த்திகை தீபத்தின் மகிமை குறித்து காஞ்சி மகாபெரியவர் சொல்லும்போது, ``இந்தக் கார்த்திகை தீபத்தை எந்த ஜீவன் பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகும் என்று சாஸ்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருக்கிறார். 21 தலைமுறைகளுக்கும் நலமும் வளமும் தரக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப வழிபாடு. கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் ஜீவாத்மாவையும் , மலை மீது மாலையில் ஏற்றப்படும் மகா தீபம் பரமாத்மாவையும் குறிப்பன . பூவுலகில் பிறந்த எந்த ஜீவனும் ஒரே ஒருமுறை இந்தத் தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் கண்டால் போதும் . பிறப்பிலா பேரின்ப நிலையை அடைந்து வாழ்வின் அத்தனை சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள் . வேண்டியதை எல்லாம் அருளக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப விளக்கீடுதான் என்கிகின்றன புனித நூல்கள். பூலோக கயிலாயமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த அற்புத நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ராசி தீப வழிபாடு கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மங்கல காரியங்கள் தடையின்றி நடக்க என்று எது வேண்டி இந்த வழிபாட்டில் கலந்து கொண்டாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களின் அத்தனை தேவைகளும் இந்த வேண்டுதலால் நிறைவேறும். உங்கள் பிரச்னைகள் யாவும் தீர வளம் சேர உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். கார்த்திகை தீபம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.   https://www.facebook.com/SakthiVikatan ராசி தீப வழிபாடு

விகடன் 21 Nov 2025 10:55 am

பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!

திருவண்ணாமலையில் ஈசனே மலையாக எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதிகம். நினைத்தாலே முக்தி தரும் தலம். இத்தலத்திற்கு வந்தாலும் கிரிவலம் செய்தாலும் பல ஜன்மப் பாவங்களும் போகும். அப்படிப்பட்ட திருவண்ணாமலைத் திருத்தலத்தில் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவில் இருக்க்கூடிய பவளக்குன்று மடம் வழியாகச் செல்லும் மலைப் படிக்கட்டுகளில் ஏறினால் இந்த ஆலயத்தை அடையலாம். இங்கே அண்ணாமலையார் சிவசக்தி சொரூபமாக – அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார். பவளக்குன்று குடைவரை சிறு குன்றினைப்போல அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியின் உச்சிக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். செல்லும் வழியிலேயே சிறு குடைவரை சிற்பங்களைக் காணமுடியும். அவற்றில், விநாயகர், முருகன், பைரவர், வீரபத்திரர், எதிரே நந்தி பகவான் ஆகியோர் அற்புதமாகக் காட்சி அருள்கிறார்கள். மேலே ஏறியதும் வலதுபுறம் ஒரு சுனை உள்ளது. இது மிகவும் பழைமையான தீர்த்தம். இந்தத் தீர்த்தம் கொண்டுதான் சுவாமி அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் தவம் செய்த அம்பிகையை ஈசன் திருவண்ணாமலைக்கு வரச் சொன்னார். அப்படி வந்தபோது கௌதம மகரிஷி அம்பிகையை வரவேற்று இந்தப் பவளக் குன்றில் அமர்ந்து தவம் செய்யுமாறு வழிகாட்டினார். இந்தக் குன்றிலேயே தேவி பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். நான்கு திசையிலும் துர்கையை காவல் புரிய அம்பிகையின் தவம் நிகழ்ந்தது. அப்போது மகிஷாசுரன் தொல்லை கொடுத்தான். அம்பாள் துர்கையை அனுப்பி மகிஷாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணம். அப்படி அவன் தலையை வெட்டியபோது அவன் தலைக்குள் ஒரு லிங்கம் இருந்ததாம். அம்பாள் அதைக் கையில் எடுத்தபோது அது அவளின் கையில் ஒட்டிக்கொண்டது. பவளக்குன்று கோயில் இதுகுறித்து கௌதம மகரிஷியிடம் அம்பிகை கேட்டபோது ஈசன் அசரீரியாக பதில் சொன்னார். “கத்தியினால தரையை பிளந்து கற்க தீர்த்தம் உண்டாக்கு. கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, சோன நதி எல்லாம் அதில் வந்து சேரும். 30 நாள்கள் அதில் நீராடி பூஜை செய்தால் லிங்கம் கையில் இருந்து விலகும்” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய 30 நாள் கழித்து லிங்கம் கையை விட்டு விலகியது என்கிறது புராணம். அந்த லிங்கத்தை 'பாவ விமோசன லிங்கேஸ்வரர்' என்று பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். இன்றும் துர்கையம்மன் கோயிலில் அந்த பாவ விமோசன லிங்கத்தை தரிசனம் பண்ணமுடியும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்! இப்படி எல்லாம் அம்பிகை கடும் தவம் புரிய ஈசன் மனம் மகிழ்ந்து இந்தப் பவளக்குன்றில் காட்சி அளித்து அம்பிகையைத் தன்னோடு சேர்த்து அர்த்தநாரீஸ்வரராக மாறினார். திருவண்ணாமலைத் தலத்தில் இரண்டு விசேஷம். ஒன்று ஈசன் மலையாக இருப்பது. மற்றொன்று அம்பிகைக்கு இடபாகம் அளித்தது. இரண்டாவது விசேஷம் நிகழ்ந்த தலம் இந்தப் பவளக் குன்று. இந்தக் குன்றின் மீது ஈசன் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கூடவே விநாயகர், முருகர், முக்தாம்பிகை ஆகியோரும் எழுந்தருளியிருக்கிறார்கள். கௌதம மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் பவளகிரீஸ்வரர் என்கிற நாமத்தோடு இங்கே காட்சி அருள்கிறார். அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அழகான கோபுரத்தின் நான்கு புறங்களில் தட்சிணாமூர்த்தி, சயன கோலத்தில் பெருமாள், மயில் மேல் முருகன், நந்தியில் சிவனும், பார்வதியும் ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர். பிராகாரத்தின் நான்கு மூலையிலும் நந்தி இருப்பதோடு நந்திக்கு கீழே முதலையின் சிற்பமும் அமைந்திருப்பது சிறப்பு. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதி உண்டு. ரமண மகரிஷி இங்கே தங்கியிருந்து தவம் செய்வார். ஒருமுறை அவரின் தாய் அழகம்மைக்கு உபதேசம் செய்த தலமும் இதுதான். திருவண்ணாமலை வரும் பக்தர்கள் பலரும் இந்தத் தலத்துக்கு வருவதில்லை. இங்கே ஆலயம் குறிப்பிட்ட வேளைகளில்தான் திறந்திருக்கும். ஆனால் பவளக்குன்றின் மீது ஏறி நின்று திருவண்ணாமலையையும் ஈசனின் ஆலய கோபுரதரிசனமும் கண்டாலே நமக்குப் புண்ணிய பலன் கிடைக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 21 Nov 2025 7:39 am

நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி ச

விகடன் 21 Nov 2025 6:00 am

கேட்டாலே புண்ணியம்... தீய சக்திகள் விலகும்... தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளிப்பட்டது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1,000 கூறும் ஸ்தோத்திரமும் உருவானது. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம். இந்த அற்புதமான ஸ்தோத்திர பாராயணத்தை வேதம் கற்றுணர்ந்த இளைஞர்களான ஷ. ஸாம்பசிவம், சு.நாகேந்திரன் சிவம், க.கைலாஷ் சிவம் ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் மிகுந்த புண்ணிய பலனைத் தரும். சக்தி விகடன் பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டுப் பார்த்துப் படித்துப் புண்ணிய பலன் அடையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

விகடன் 21 Nov 2025 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 21 - 2025 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்து இருப்பீர்கள். பரணி: வசீகரமான பேச்சால் அனைவரையும் வசியப்படுத்துவீர்கள். கார்த்திகை: உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ரோகிணி: பொருளாதார முன்னேற்றம் தொழிலுக்கு உதவும். மிருகசீரிடம்: பித்தப்பை கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. திருவாதிரை: பெரியோரின் ஆசியால் நல்ல காரியம் நடக்கும். புனர்பூசம்: மங்கல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பூசம்:

ஒனிந்தியா 21 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 21 - 2025 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.11.2025 திதி : இன்று பிற்பகல் 02.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை . நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.26 வரை அனுஷம் . பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று காலை 11.02 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

ஒனிந்தியா 21 Nov 2025 12:05 am

இது லிஸ்ட்லயே இல்லயே - கன்னி ராசிக்கு புத்தாண்டு பரிசு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கன்னி

ஒனிந்தியா 20 Nov 2025 9:02 am

திருச்சி, திருவாசி: தங்கம் சேரும் யோகம் தரும் மாற்றுரைவரதர் கோயில்; நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்!

பிரபஞ்ச வடிவான ஈசன் உருவமற்றவர். அவரை உருவத்தோடு வழிபடுவதும் உண்டு. அதேபோல அவரை அருவுருவமாகவும் வழிபடுவோம். பெரும்பாலும் ஆலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபமாக அருவுருவமாகவே அருள்பாலிக்கிறார். அப்படி எழுந்தருளும் லிங்கங்களிலும் பல்வேறு விதமான திருமேனிகள் உண்டு. அவற்றில் மிகவும் சிறப்பான சகஸ்ர லிங்கம். ஒரு லிங்கத்துனுள் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது போன்ற அமைப்பு. பல ஆலயங்களில் நம்மால் சகஸ்ர லிங்கங்களை தரிசிக்க முடியும் என்றாலும் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் உருவான தலம் ஒன்று உண்டு. அதன் பின்னணியில் உணர்வு பூர்வமான சம்பவம் ஒன்றும் உண்டு. அந்தத் தலம் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவாசி திருக்கோயில். இங்குதான் ஈசன், மாற்றுரைவரதர் என்று போற்றப்படுகிறார். அவருக்கு பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்கிற திருநாமங்களும் உண்டு. திருவாசி மாற்றுரைவரதர் கோயில் சர்ப்ப நடராஜர் முன்னொரு காலத்தில் ஆயிரம் ரிஷிகள் ஈசனை எண்ணி இத்தலத்தில் தவமிருந்தனர். அவர்களின் கடும் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து வேண்டும் வரம் யாது என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர்கள், ஈசனைக் கண்டபின் இந்த உலகில் அடையவேண்டியது ஒன்றும் இல்லை. தம்மை அவரோடு சேர்த்துகொள்ளுமாறு வேண்டினர். ஈசனும் மனம் குளிர்ந்து அவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். லிங்க ரூபமான ஈசனின் திருமேனியில் ஆயிரம் ரிஷிகளும் லிங்கங்களாக மாறி சேர்ந்தனர். அதுவே உலகின் முதல் சகஸ்ரலிங்கம். இத்தலத்துக்கு திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருநாமமும் உண்டு. தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது. இங்கு வேதங்களின் பொருளை உணர்ந்துகொள்ள அம்பிகை அன்னமாக மாறிவந்து ஈசனை வழிபட்டாள். ஈசனும் அம்மையின் தவத்தில் மகிழ்ந்து காட்சி கொடுத்து வேதப் பொருளை எடுத்துரைத்தார். அன்னை, அன்னப்பறவையாக இங்கு வந்து அமர்ந்த பொய்கையே ‘அன்னமாம் பொய்கை’ என்கிறது தல வரலாறு. இங்கு அருளும் அம்பிகைக்கு பாலாம்பிகை என்பது திருநாமம். சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், சந்நிதி கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது சிறப்பம்சம். ஈசன் கருணாமூர்த்தியாக அருளும் தலம் இது. ருத்திராட்சப் பந்தலின் கீழே அருளும் இந்த சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். தங்க நகைகள் சேரும் யோகம் வாய்க்கும். இதற்கு சாட்சியாக சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம் ஒன்று உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வோர் சிவாலயமாகச் சென்று தரிசனம் செய்துவந்தார். அவருடன் அடியார் பெருமக்கள் பலரும் சேர்ந்து பயணித்தனர். அவர்களுக்கு உணவு வழங்க வேண்டியதன் பொருட்டு சுந்தரர் ஈசனிடம் ஒவ்வொரு தலத்திலும் பொன் கேட்பார். அவர் அதைக் கொடுத்ததும் அதைக்கொண்டு அடியார்களுக்கு அன்னம்பாலிப்பார். ஒருமுறை திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தபோது கைவசம் இருந்த பொன் தீர்ந்துபோனது. வழக்கம்போல் சுந்தரர் சிவனை நினைத்துப் பாடினார். ஆனால் பொன் கிடைக்கவில்லை. சுந்தரர் கோபம் கொண்டார். சிவனை இகழ்ந்து பாடுவதுபோல் பாடினார். திருவாசி மாற்றுரைவரதர் கோயில் உடனே சிவனும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்தார். இம்முறை சுந்தரருக்கு ஈசன் கொடுத்தபொன் தரமானதுதானா என்கிற சந்தேகம் வந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஈசன் ஒரு சாமானியராக வந்து அந்தத் தங்கத்தை வாங்கி உரசிக் காட்டி, சுத்தத் தங்கம்தான். போதுமா என்று கேட்டுவிட்டு உடனே மறைந்துவிட்டார். இக்காட்சியைக் கண்டு வியந்துப்போன வந்தது ஈசனே என்று புரிந்துகொண்டார். ஈசனை எண்ணி மீண்டும் ஒரு பதிகம் பாடித் துதித்தார். இந்த நிகழ்வை சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். தங்கத்தின் தரத்தை உரைத்ததனாலேயே இந்த ஈசனுக்கு 'மாற்றுரைவரதர்' என்ற திருநாமம் உண்டானது. புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்! ‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞானசம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலம் இது. கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. திருவாசியில் அருளும் நடராஜர் விசேஷமானவர். இவரின் திருவடியில் முயலகனுக்குப் பதில் சர்ப்பம் உள்ளது. இந்தத் திருக்கோலம் மிகவும் அபூர்வமானது. வேறு எங்கும் தரிசிக்க முடியாதது. நோய்களை நாகமாக்கி அதை ஈசன் மிதித்து ஆடுவதாக ஐதிகம். இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர நரம்புப் பிரச்னைகள், வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள். அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு. இங்கு தனிச்சந்நிதியில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரிக்கு உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்து வழிபட தம்பதிகள் ஒற்றுமை கூடும் எனவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பதும் நம்பிக்கை. இங்கு வள்ளி, தெய்வனை சமேத முருகன், கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு. பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தின் சிற்ப சிறப்புகள் அலாதியானவை. மகிமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று தரிசனம் செய்து வாருங்கள். ஈசன் அருளால் நோய் நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வும் ஐஸ்வர்யமும் ஸித்திக்கும். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

விகடன் 20 Nov 2025 8:13 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 20 - 2025 வியாழக்கிழமை.

அஸ்வினி: மனதில் பட்ட காரியத்தை செயல்படுத்துவீர்கள். பரணி: நல்ல செய்தியோடு உறவுகள் தேடிவரும். கார்த்திகை: கற்பனையால் மனதை வேதனைப்படுத்தி கொள்வீர்கள். ரோகிணி: அறிவுத் திறமையால் புதிய பதவி கிடைக்கும். மிருகசீரிடம்: எந்தக் காரியத்திலும் வேகம் காட்டுவீர்கள். திருவாதிரை: நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும். புனர்பூசம்: வரட்டு பிடிவாதத்தால் முரண்டு பிடிக்காதீர்கள். பூசம்: ஏதாவது ஒரு வழியில்

ஒனிந்தியா 20 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 20 - 2025 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 20.11.2025 திதி : இன்று பிற்பகல் 12.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை . நட்சத்திரம் : இன்று காலை 11.53 வரை விசாகம் . பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று காலை 10.29 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.

ஒனிந்தியா 20 Nov 2025 12:05 am

சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன

ஒனிந்தியா 19 Nov 2025 8:30 pm

Sani Vakra Nivarthi 2025: சிம்ம ராசியை பிடிக்கும் சனி.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சிம்ம

ஒனிந்தியா 19 Nov 2025 6:50 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடக

ஒனிந்தியா 19 Nov 2025 6:44 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடக

ஒனிந்தியா 19 Nov 2025 6:11 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன

ஒனிந்தியா 19 Nov 2025 5:15 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷப

ஒனிந்தியா 19 Nov 2025 4:47 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷப

ஒனிந்தியா 19 Nov 2025 4:15 pm

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 11:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 11:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 11:25 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 10:32 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 10:32 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 9:31 am

சனி வக்ர நிவர்த்தி 2025: மேஷ ராசி எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. ஆட்டத்தை மாற்றும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மேஷ

ஒனிந்தியா 19 Nov 2025 9:03 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 8:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 8:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 7:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 7:31 am

திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம். சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?! தையூர் அழகீஸ்வரர் `தை' என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, 'முருகீஸ்வரர்' என்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில். இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது. தையூர் மரகதாம்பிகை மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை. முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, 'தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்' என அருளியிருக்கிறாள். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம். தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. தையூர் முருகப்பெருமான் வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 19 Nov 2025 7:17 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 19 - 2025 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 19.11.2025 திதி : இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை . நட்சத்திரம் : இன்று காலை 09.21 வரை சுவாதி . பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று காலை 10.00 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.

ஒனிந்தியா 19 Nov 2025 1:05 am

Karthigai Matha Palan: 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Karthigai month Palan: விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் எவை, அந்த ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை

ஒனிந்தியா 18 Nov 2025 8:47 pm

Meenam: மீன ராசிக்கு நகைகளை குவிக்கும் யோகம்.. இதை மட்டும் மிஸ் செய்திடாம பண்ணுங்க

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 4:45 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 2:28 pm

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 pm

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 pm

Kumbam: கும்பம் ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 1:26 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 pm

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 11:56 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 11:50 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am