திராவிட மாடல் ஆட்சி: விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட அரசு வழங்கும் உதவிகளும், ஊக்கத்தொகைகளும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் மீது ஒரு கண்ணோட்டம். திராவிட மாடல் அரசு நடத்திய முக்கிய விளையாட்டுப் போட்டிகள் 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022 ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023 ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 சர்வதேச அலை சறுக்குப் போட்டி- 2023 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2025 முதலமைச்சர் கோப்பை-2023-2024, 2024-2025, 2025-2026 ஆகிய போட்டிகள் எல்லாம் தொடர்ந்து நடத்தி உலக அளவில் விளையாட்டு ஆர்வலர்களிடையே தமிழ்நாடு ஒரு முக்கிய விளையாட்டு களமாக மதிக்கப்படுகிறது. இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் விருது திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறைக்கு அளித்துவரும் அளப்பரிய உதவிகளையும் ஊக்கங்களையும் பாராட்டி போற்றும் வண்ணம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது. இந்து குழுமத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான விருது விளையாட்டுத்துறைக்கு திராவிட மாடல் அரசு வழங்கிவரும் அபரிமிதமான ஊக்கத்தைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான தி இந்து குழுமம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் 2024 விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. ஒலிம்பிக் அகாடெமிகள் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களும் வீராங்கணைகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் பெறுவதை ஊக்குவிப்பதற்காக ஒலிம்பிக் தங்கம் தேடல் என்னும் திட்டத்தைத் திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முறையான பயிற்சிகள் அளித்திடும் நோக்கில் சென்னை, திருச்சி, மதுரை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடெமிகளை திராவிட மாடல் அரசு நிறுவியுள்ளது. சர்வதேசத் தரத்தில் விளையாட்டுக் களங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கங்களிலும் சர்வதேசத் தரத்தில் செயற்கை ஓடுபாதைகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், மாவட்ட விளையாட்டு வளாகங்கள், சிறு விளையாட்டு அரங்குகள், தங்கும் விடுதிகள், பயிற்சி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 40 சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திராவிட மாடல் அரசின் முனைப்பால் 40 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சர்வதேசப் போட்டிகள் நம் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளன என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சாதனையாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் புகழ் கொடி நாட்டும் வகையில் சிறப்பாக வளர்த்தெடுத்து வருவதால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என இன்று பெற்றுள்ள புகழ் நாளை, உலகின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என்னும் பெருமையையும் புகழையும் ஈட்டும் என்பது உறுதி உறுதி!
T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது'பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்
டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், இது தெரு ஒன்றில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளை எல்லாம் அழைத்து 'வாங்க கிரிக்கெட் விளையாடலாம்' என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது. இந்திய அணி எட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து மூன்றை மீண்டும் அழைத்து விளையாடி, இறுதியில் 'பாருங்கள், நான் ஜெயித்துவிட்டேன்' என்று இந்தியா சொல்கிறது. இதுதான் தற்போது நடந்திருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவருடைய விமர்சனத்திற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த அவர், ”இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என் நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். Ind vs Nz இந்திய அணியின் வெற்றியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாததால் தான் அவர் இப்படி சாடுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம்' - வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!
2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இந்தியா தனது T20 உலகக் கோப்பை பட்டத்தைத் தக்க வைத்தோடு, மூன்று முறை கோப்பையை வென்ற முதல் அணியாகவும் ஆனது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நகைச்சுவையான புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில், அவர் ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி, மறுகையில் கப்பில் இருந்து டீ குடித்துக் கொண்டிருப்பது போல இருந்தது. வருண் சக்ரவர்த்தி இவரின் இந்தப் பதிவு வைரலான நிலையில், ரசிகர்கள் அதில் பல நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு, இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியா கோப்பை 2025-ஐ வென்றபோது, வருண் சக்ரவர்த்தி இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் PCB தலைவர் மற்றும் ஆசியா கோப்பை கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்ததால், அவர்கள் கோப்பையை எடுத்துக்கொள்ளாமல் திரும்பியிருந்தனர். அடுத்த நாள், சக்ரவர்த்தி தனது படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் போது அருகில் ஒரு டீ கப் வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அப்போதும் அந்தப் புகைப்படம் வைரலானது. பின்னர் ஒரு நேர்காணலில், வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ''முதலில் கோப்பையைத் தனது படுக்கையின் அருகில் வைத்து கொண்டாடும் புகைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் கோப்பை இல்லாததால், அதற்குப் பதிலாக ஒரு கப்புடன் அந்தத் தருணத்தை உருவாக்க முடிவு செய்தேன்'' எனத் தெரிவித்திருந்தார். அதை இந்திய ரசிகர்கள் பகிர்ந்து, நகைச்சுவையாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். T20 WC: என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்
IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்
அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்றோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை எடுத்தது. இந்திய அணி இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஷான் கிஷன், டி20 உலகக்கோப்பைக்கு முன் கார் விபத்தில் நான் என் சகோதரியை (cousin sister) இழந்துவிட்டேன். அவளை நினைத்துதான் நான் இறுதிப்போட்டியில் விளையாடினேன். அவளுக்கு இந்த வெற்றியைச் சமர்பிக்கிறேன். மேலும் பெண்கள் தினத்தில் இந்தக் கோப்பையை வென்றது இன்னும் சிறப்பான ஒரு விஷயமாக இருக்கிறது என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
IND vs NZ: டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்! | Photo Album
IND vs NZ: எனது அடுத்த இலக்கு தங்கப்பதக்கத்தை வெல்வதுதான்.!- கேப்டன் சூர்யகுமார் யாதவ்
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ்வும் தற்போது இடம்பெற்றிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், உலகக் கோப்பையை வென்ற இந்த உணர்வில் இருந்து முழுமையாக வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும். இந்திய அணி 2024-ல் டி20 உலகக்கோப்பையின் வெற்றிக்கு பிறகு தான் எல்லாமே மாறியது. அங்கிருந்துதான் இந்திய அணி எதிர்காலத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒரு உணர்வாகும். கடந்த ஒரு மாதமாக நாங்கள் கடந்து வந்த பயணம் மிகச் சிறப்பானது. ஆனால், எங்களது பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. எனது அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டிற்கான தங்கப் பதக்கத்தை வெல்வதுதான். அதேபோல அந்த ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் தக்கவைக்க வேண்டும். 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், இப்போது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் எங்கள் வெற்றிப் பயணம் தொடரும். சூர்யகுமார் யாதவ் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடப் போகிறோம் என்பது தெரிந்ததிலிருந்தே நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இந்தியாவில் விளையாடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்கு இந்த வெற்றியைப் பரிசளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். IND vs NZ: இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடியது, இருந்தாலும்.!- நியூசி கேப்டன் சாண்ட்னர்
IND vs NZ: 3-வது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்| Photo Album
IND vs NZ: இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடியது, இருந்தாலும்.!- நியூசி கேப்டன் சாண்ட்னர்
அகமதாபத்தில் (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், முதலில், இந்த அளவுக்கு வந்ததற்காக எங்கள் அணியின் வீரர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ind vs nz இந்த தொடரில் பல சவால்கள் இருந்தன. ஆனாலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அருமையான ரசிகர்கள் முன்னிலையில் இந்த அணி சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் என் அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். முழுக்க நீல நிற ரசிகர்கள் நிறைந்த கூட்டத்தைப் பார்ப்பது ஒரு சிறப்பாக இருந்தது. தனது நாட்டில் விளையாடும் அணிக்கு எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தை சமாளித்து இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வீரர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பல சவால்களை சந்தித்தோம். சாண்ட்னர் அவற்றை சமாளித்து முன்னேறுவது எளிதல்ல. குறிப்பாக செமி பைனலில் நாங்கள் நல்ல ஆட்டம் காட்டினோம். ஆனால் இன்று எதிரணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் எங்கள் அணியின் முயற்சியைப் பற்றி நாங்கள் பெருமைப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
IND vs NZ: என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.!- நெகிழும் சூர்யகுமார் யாதவ்
அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. ind vs nz இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளும் ரோஹித்தும் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள். 2 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே ஆடி வந்தோம். சஞ்சு சாம்சன், வருண், அபிஷேக் போன்றோர் மேட்ச் வின்னர்கள். அவர்களிடம் ஸ்பெசலான ஒரு விஷயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். பும்ரா இந்த தேசத்தின் சொத்து. ஒரு தலைமுறைக்கான வீரர் அவர். நன்றி அகமதாபாத்! என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
IND vs NZ: நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், ஏனென்றால்.!- அர்ஷ்தீப் சிங்
டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஷ்தீப் சிங் மைதானத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். நான் வீசிய பந்து கொஞ்சம் அதிகமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி, அவரை தாக்கியது. அதை வேண்டுமென்றே செய்யவில்லை என அவரிடம் சொன்னேன். அர்ஷ்தீப் சிங் இந்த தருணத்தில் மகிழ்வாக இருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் இந்த மகிழ்ச்சியை முழுமையாக உணர முடியுமென நினைக்கிறேன். இந்த அணி ஒரு அருமையான அணி. எங்கள் அணியில் எல்லா இடத்திலும் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சாளர்களின் வேலை என்னவென்றால், பேட்ஸ்மேன்கள் 250 ரன்கள் அடிக்க முயன்றால், அவர்களை 250க்கு கீழே தடுக்க வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் பற்றி கேட்டால், இப்போது மேலே போய் என் போனை எடுத்துக் கொண்டு வருகிறேன். ஏற்கனவே 10 அல்லது 15 ரீல்ஸ் செய்ய வேண்டுமென யோசித்து வைத்திருக்கிறேன். எத்தனை செய்ய முடிகிறதென்று பார்ப்போம். ஆனால் இது ஒரு அருமையான அனுபவம். நான் இதை மிகவும் ரசிக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
IND vs NZ: சச்சின் சார் உடன் பேசிக்கொண்டே இருந்தேன் - மீண்டு வந்தது குறித்து சஞ்சு சாம்சன்
அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்நிலையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், இது ஒரு கனவு போல இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2024 உலகக்கோப்பையை வென்ற போது, நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. சஞ்சு சாம்சன் அப்போதிருந்தே இப்படியொரு தருணத்துக்காக கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சோபிக்காத போது என்னுடைய கனவு மொத்தமும் சுக்குநூறாக உடைந்ததை போல உணர்ந்தேன். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். மேலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் எனக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கொடுத்தார்கள். குறிப்பாக கடந்த சில மாதங்களாக சச்சின் டெண்டுல்கர் சார் உடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். நான் ஆஸ்திரேலியாவில் விளையாடாமல் இருந்தபோது அவரை தொடர்பு கொண்டு மனநிலையை பற்றி கேட்டேன். சஞ்சு சாம்சன் அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். நேற்று கூட எனக்கு அழைத்து எப்படி உணர்கிறாய் என்று கேட்டார். அவரைப் போன்ற ஒரு பெரியவரின் வழிகாட்டுதல் கிடைப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்த வெற்றி எனக்கு மிகவும் பெரியது. இப்போது இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்று யோசிப்போம். மிகவும் நன்றி என்று பேசியிருக்கிறார்.
IND vs NZ: உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மெரினாவில் ஆர்பரித்த ரசிகர்கள்! | Cricket Clicks
SKY: 'தோனி... ரோஹித்... சூர்யா!' - தடம்பதித்த கேப்டன்களின் வரிசையில் சூர்யகுமார்
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. தோனி, ரோஹித் வரிசையில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். சூர்யாதான் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. Suryakumar வீரராக சூர்யா மீது அந்த விமர்சனம் இருக்கலாம். ஆனால், ஒரு கேப்டனாக சூர்யா இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இந்த இறுதிப்போட்டியே பெரிய அழுத்தமிக்க போட்டி. சொந்த நாட்டில் எந்த அணியும் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை, அகமதாபாத் இந்திய அணிக்கு ஒவ்வாத மைதானம் என எத்தனையோ நெகட்டிவான கருத்துகள் சுற்றியிருந்தது. அதையெல்லாம் கடந்துதான் இந்திய அணி வென்றிருக்கிறது. குறிப்பாக, இதே அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முன்பாக நடந்த 2023 ஓடிஐ உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது சூர்யாவின் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்திருந்தது. அந்தப் போட்டியில் பொறுப்பை ஏற்று பேட்டிங் ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய நேரத்தில் டெய்ல் எண்டர்களுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து சூர்யா சொதப்பியிருப்பார். Surya இந்திய அணியின் உலகக்கோப்பை தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சூர்யா இருந்தார். மூன்றாண்டுகள் மீண்டும் அதே மைதானம்...அதே மாதிரியே சுற்றி 1 லட்சம் ரசிகர்கள்...அந்த ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் எனக் கூறிய எதிரணி கேப்டன். ஆனால், இந்த முறை ரிசல்ட் வேறாக இருந்திருக்கிறது. இந்திய அணியின் கையில் உலகக்கோப்பை இருக்கிறது. சூர்யா இந்திய அணியின் சரித்திரத்தில் இடம்பிடித்த கேப்டனாக இருக்கிறார். 2024 டி20 உலகக்கோப்பையை வென்றவுடன், இந்திய அணியில் பெரிய மாற்றம் நடக்கிறது. கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற சீனியர்கள் ஒரேடியாக ஓய்வை அறிவிக்கிறார்கள். பயிற்சியாளர் மாறுகிறார். இந்திய அணி பெரும்பாலும் அனுபவமற்ற இளம் வீரர்களை கொண்ட அணியாக மாறுகிறது. அப்படிப்பட்ட அணிக்கு கேப்டனாக சூர்யா பொறுப்பேற்கிறார். ரோஹித் வென்று கொடுத்த கோப்பையை தக்க வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. சூர்யா இந்த அணியை திறம்பட வழி நடத்தினார். Surya அதற்கு சாட்சியாக இந்த உலகக்கோப்பையில் அவர் எடுத்த முக்கியமான சில முடிவுகளை கூறலாம். ஆரம்ப சில போட்டிகளில் அபிஷேக் திணறுகிறார் என்றவுடன், அவரை பென்ச்சில் வைத்துவிட்டு சாம்சனை லெவனில் எடுக்க வேண்டும் என பேசப்பட்டது. ஆனால், சூர்யா அபிஷேக்கை உட்கார வைக்காமலேயே சாம்சனை தேவைப்பட்ட சரியான சமயத்தில் லெவனுக்குள் கொண்டு வந்தார். இந்த மாற்றம் ஒர்க் அவுட் ஆனது. நாக் அவுட்களில் சாம்சன் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தார். அதேமாதிரி, அரையிறுதுதியில் பெத்தேல் கதிகலங்க வைக்க போட்டியை இந்தியா வெல்ல சூர்யாவின் பௌலிங் ரொட்டேஷனும் முக்கிய காரணமாக இருந்தது. பும்ராவின் ஸ்பெல்லை சீக்கிரமாகவே முடிக்க வைத்து எக்கனாமிக்கலாக கட்டுப்படுத்தி, கடைசி ஓவரில் பெரிய டார்கெட்டை இங்கிலாந்துக்கு கொடுத்திருந்தார். அக்சர் படேல் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்க, துபே கையில் பந்தை கொடுத்து அந்தப் போட்டியை வென்றிருப்பார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் அபிஶேக்கை டிராப் செய்துவிட்டு ரிங்கு சிங்கை லெவனுக்குள் கொண்டு வர வேண்டுமென ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், சூர்யா அபிஷேக்கை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அபிஷேக்கும் அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். பௌலிங்கின் போதுமே நியூசிலாந்து வீரர்கள் வேகப்பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்பதால், திடீரென 3 வது ஓவரிலேயே அக்சரை அழைத்து வந்திருப்பார். அந்த மூவுக்கு பலனும் கிடைத்தது டிம் சீபர்ட் வீழ்ந்தார். இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. பும்ராவையும் கொஞ்சம் சீக்கிரமாக 4 வது ஓவரிலேயே கொண்டு வந்து ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை எடுக்க காரணமாக இருந்திருப்பார். Dhoni, Rohit ஒரு வீரராக சூர்யா இந்தத் தொடரில் சோபிக்காவிடிலும் கேப்டனாக முக்கியமான தருணங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார் என்பதை மறுக்கவே முடியாது. வாழ்த்துகள் சூர்யா!
'லட்சம் கண்களும் கோடி இதயங்களும் கொண்டாட!' - உலகக்கோப்பையை வென்று இந்தியா அசத்தல்!
2023 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்னமும் நியாயபகம் இருக்கிறது. அகமதாபாத்தில் திரளும் லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவேன் என சொல்லியடித்திருந்தார் பேட் கம்மின்ஸ். கூடியிருந்த அத்தனை ரசிகர்களும் இந்திய அணியின் தோல்வியை காண முடியாமல் போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்திலிருந்து கிளம்பியிருப்பர். இதோ மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு உலகக்கோப்பை மீண்டும் ஒரு இறுதிப்போட்டி. அதே அகமதாபாத் மைதானத்தில். இந்த முறை ஹேப்பி க்ளைமாக்ஸ். Ahmadabad அங்கே கூடியிருந்த லட்சம் பேரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்...தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை ரசிகர்களின் இதயங்களிலும் கொண்டாட்டம். மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்து நிற்கிறது இந்திய அணி! இந்திய அணி நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது 256 ரன்கள் டார்கெட். இமாலய டார்கெட் என யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அரையிறுதியில் பெத்தேல் அடித்த அடி இன்னமும் நினைவில் நின்றது. இங்கே நியூசிலாந்து சேஸிங்கை தொடங்கியதுமே ரொம்பவே பாசிட்டிவாக இருந்தது. முதல் 2 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 25 ரன்களை சேர்த்திருந்தது. டிம் சீபர்ட் பேட்டை சுழற்றி அதிரடியாக தொடங்கியிருந்தார். Axar ஹர்திக்கின் ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருந்தது. கொஞ்சம் பதட்டமானது. ஆனால், சூர்யா கொஞ்சம் மாற்றி யோசித்தார். சட்டென அக்சர் படேலை உள்ளே இறக்கினார். இந்த சர்ப்ரைஸூக்கு பலன் கிடைத்தது. பின் ஆலனின் விக்கெட் கிடைத்தது. அடுத்த ஓவரிலேயே மாபெரும் ஆயுதமான பும்ராவை இறக்கினார் சூர்யா. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரச்சினின் விக்கெட் கிடைத்தது. அடுத்த ஓவர் மீண்டும் அக்சருக்கு. க்ளென் பிலிப்ஸின் விக்கெட் கிடைத்தது. பவர்ப்ளேயில் 52-3 என தடுமாறியது நியூசிலாந்து. இப்போதுதான் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் ஆர்ப்பரிக்க தொடங்கினர். ஆனால், சீபர்ட் மட்டும் அப்படியே அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்தார். பெத்தேலை கொஞ்சம் நியாபகப்படுத்தினார். ஆனால், கடந்த போட்டியை போல் அல்லாமல் இந்த முறை வருண் கொஞ்சம் நன்றாக வீசினார். அவரின் பந்தில் சீபர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதி ஆனது என தோன்றியது 72-5 என்ற நிலையில் நியூசிலாந்து தடுமாறிய போது கேப்டன் சாண்ட்னரும் டேரில் மிட்செலும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இந்திய அணியின் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக ஆடி இறுதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். எட்ட வேண்டிய இலக்கு மிகப்பெரிதாக இருந்ததால், இவர்களின் போராட்டம் பெரிதாக கைகொடுக்கவில்லை. டேரில் மிட்செல் அக்சரிடமே வீழ்ந்தார். சாண்ட்னரால் தோல்வி வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது. Marina - Chennai நியூசிலாந்து அணி எவ்வளவோ போராடினாலும் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. அக்சர் படேல் மிகச்சிறப்பாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி உலகக்கோப்பையை தக்கவைத்திருக்கிறது. இது இந்திய அணி வெல்லும் மூன்றாவது டி20 உலகக்கோப்பை. ஆனால், மூன்று உலகக்கோப்பைகளில் இந்த உலகக்கோப்பை கொஞ்சம் ஸ்பெஷல். ஏனெனில், சொந்த மண்ணில் இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இந்திய வீரர்களின் கையில் தவழும் முதல் டி20 உலகக்கோப்பை இது. வாழ்த்துகள் டீம் இந்தியா!
'இவன் பெயரே வரலாறு...' - நியூசிலாந்தை கதிகலங்க வைத்த சாம்சன்!
சாம்சன் என்றால் நிலையற்றத்தன்மை, சாம்சன் என்றால் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர். இப்படித்தான் இத்தனை நாளும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை . சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் பெயரை வலுவாக பதித்திருக்கிறார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உச்சத்தில் ஏற்றி வைக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். Samson இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் ஆடியிருந்தது. அந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் சேர்த்தே சாம்சன் 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆகியிருந்தார். சாம்சன் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது. விளைவாக, இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் லெவனிலேயே இல்லை. பென்ச்சில்தான் உட்கார்ந்திருந்தார். அவர் முதல் ஆப்சனாக பார்க்கப்படவே இல்லை. தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்திருந்தனர். சரியான சமயத்தில் சாம்சனின் தேவையும் ஏற்பட்டது. இந்திய அணியின் டாப் ஆர்டர் ஸ்பின்னர்களால் நிறைந்திருப்பதால் எதிரணிகள் மிக எளிதாக ஆப் ஸ்பின்னர்களை வைத்து கட்டம் கட்டினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியும் அடைந்திருந்தது. அதன்பிறகுதான் ஒரு வலது கை வீரர் வேண்டுமென சாம்சனை லெவனுக்குள் கொண்டு வந்தார்கள். Samson சூப்பர் 8 இல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அது கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டி மாதிரி. தோற்றால் இந்திய அணி வெளியே செல்லும். அந்தப் போட்டியில் நின்று 97 ரன்களை அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி. அதுவும் அழுத்தமிக்க போட்டி. அந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி 89 ரன்களை அடித்து இந்திய அணி 250 + ரன்களை எடுக்க காரணமாக இருந்தார். இதோ இப்போது இறுதிப்போட்டி. சாம்சன் தொடர்ச்சியாக சொதப்பி அணியிலிருந்து டிராப் ஆக காரணமாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பார்த்து டிபன்ஸ் ஆடியிருந்தார். 5 வது பந்தை லாங் ஆனின் தலைக்கு மேல் அடித்து சிக்சராக்கியிருப்பார். அவ்வளவுதான், அதற்கு மேல் அவர் அவுட் ஆகும் வரை எந்தத் தடையும் இல்லை. சாம்சனின் இருத்தல் அபிஷேக்குக்கும் உதவியாக இருந்தது. சாம்சன் க்ரீஸில் இருந்ததால் ஸ்பின்னரான க்ளென் பிலிப்ஸை ஒரே ஓவரோடு கட் செய்தார் சாண்டனர். இது அபிஷேக்குக்கு பேருதவியாக இருந்தது. Samson பவர்ப்ளேயை அபிஷேக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அவர் அவுட் ஆன பிறகு மிடில் ஓவர்களில் இஷான் கிஷனோடு சேர்ந்து அதிரடியை தொடங்கினார் சாம்சன். அவரின் அதிரடிக்கு நியூசிலாந்து வீரர்களிடம் எந்த பதிலும் இல்லை. 16 வது ஓவரில் நீஸமின் பந்தில் 89 ரன்களில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். சாம்சன் நினைத்திருந்தால் கடைசி வரை நின்று சௌகரியமாக சதத்தை எட்டியிருக்க முடியும். ஆனால், அணியின் நலன்தான் அவருக்கு பிரதானம். அதனால்தான் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து ஆடினார். சாம்சன் அடித்த இந்த 89 ரன்கள்தான் டி20 உலகக்கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். சாம்சனை இனியும் இரண்டாம்பட்சமாக அணி நிர்வாகம் அணுக முடியாது.
T20 WC: 'நியூசிலாந்து அணி எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படும்; ஆனால்...!'- சூர்யகுமார்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. அகமதாபத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர். Ind vs Nz இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என் இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அணிக்குத் தேவைப்படும்போது அதிரடியாக ஆடுவதே என் ஸ்டைல். கேப்டன் பதவி என் பேட்டிங்கை பாதிக்காது, மாறாக இன்னும் பொறுப்புடன் ஆடுவேன். டாஸ் வெல்வது சாதகம்தான், ஆனால் டாஸை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்தை அழுத்தத்திற்குள்ளாக்குவோம். நியூசிலாந்து ஒரு சத்தமில்லாமல் சாதிக்கும் அணி அவர்கள் எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சூர்யகுமார் யாதவ் ஆனால் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாண்ட்னர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தனித் திட்டங்கள் வைத்திருக்கிறோம். ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இந்த இளம்படை பயமில்லாமல் விளையாடுகிறது. அவர்கள் இல்லாத குறையைத் தெரியாமல், கோப்பையை வென்று அவர்களுக்குப் பெருமை சேர்ப்போம் என்று பேசியிருக்கிறார்.
T20 World Cup: ரோஹித் சர்மாவை என் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் பார்க்கிறேன் - சூர்யகுமார் யாதவ்
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மார்ச்.8) அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவும் - நியூசிலாந்தும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் நான்காவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் இந்நிலையில் நேற்று (மார்ச்.7) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், அணியை வழிநடத்துவது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. சொந்த மண்ணில் இவ்வளவு அற்புதமான அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துவது சிறப்பான அனுபவம். நிச்சயமாக, பதட்டங்கள் இருக்கும். இந்திய அணி உற்சாகமாக உள்ளது. நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம், சிக்கலாக்க விரும்பவில்லை. இவ்வளவு பெரிய நிகழ்வில் இந்தியாவை வழிநடத்துவது எனக்கு ஒரு நீண்ட பயணம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றிருக்கிறார். தொடர்ந்து, ரோஹித் ஷர்மா குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன். களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நான் முதலில் உதவிக்காக அழைப்பது ரோஹித் சர்மாவைத்தான். ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இக்கட்டான சூழலிலும் ரோஹித் காட்டும் நிதானம் எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்திருக்கிறது . வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, ரோஹித்தின் குணாதிசயங்களில் எந்த மாற்றமும் இருக்காது. நான் அவருடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் எப்படி வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும். ரோஹித் தனது வீரர்களை எவ்வாறு அணுகுவாரோ அதே பாதையை நானும் பின்பற்றுகிறேன் என்று பேசியிருக்கிறார்.

26 C