Super 8: ஒரே பிரிவில் டாப் அணிகள்! காரணம் Pre Seeding; அதற்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான்! இது சரியா?
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆனால், சூப்பர் 8 இல் க்ரூப்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து சில விவாதங்கள் எழுந்திருக்கிறது. Pre Seeding முறை! க்ரூப் A இல் இருக்கும் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா என நான்கு அணிகளுமே லீகில் அவரவர் க்ரூப்களில் முதலிடம் வந்தவர்கள். சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் அணிகள் க்ரூப் B இல் நியூசிலாந்து, இலங்கை, இலங்கை, பாகிஸ்தான் இருக்கின்றன. இவையெல்லாம் லீகில் அவரவர் க்ரூப்களில் க்ரூப்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள். இப்படி ஒரு போட்டி அட்டவணையை அமைய காரணம், Pre Seeding முறை தான். முன்பே கொடுக்கும் ரேங்கிங்! உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பாகவே புள்ளிப்பட்டியலின் படி டாப் 8 அணிகளுக்கு X1, X2, X3, X4, Y1, Y2, Y3, Y4 என ஒரு ரேங்கிங்கை கொடுத்து விட்டார்கள். இதன்படிதான் அட்டவணையையே தயாரித்தார்கள். இந்தியாவை வைத்து இதை விளக்கினாலே புரியும். இந்தியாவுக்கு X 1 ரேங்கிங். இந்தியா ஆடும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதற்காக X1 அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஆடும்படியே அட்டவணை வடிவமைத்திருப்பார்கள். அதாவது லீக் போட்டிகளில் இந்திய அணி தனது க்ரூப்பில் இரண்டாமிடம் பிடித்திருந்தாலும், சூப்பர் 8 இல் அவர்கள் க்ரூப் B க்கு சென்றிருக்கமாட்டார்கள். தொடருக்கு முன்பே X1 அணி க்ரூப் A வில்தான் இருக்கும் என்பது முடிவாகிவிட்டது. பாகிஸ்தான் அணி Y3, Y4 அணிகள் அதேமாதிரிதான் பாகிஸ்தானுக்கு Y3 ரேங்கிங். அவர்கள் இந்திய மைதானங்களில் போட்டிகளில் ஆட மாட்டார்கள். இலங்கை உலகக்கோப்பையை நடத்தும் நாடு. அவர்களுக்கு Y4 ரேங்கிங். இந்த இரண்டு அணிகளும் தங்களின் எல்லா போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே ஆடும். அதனால் சூப்பர் 8 இல் Y3, Y4 ஆடும் ஆட்டங்கள் எல்லாம் முன்னதாகவே இலங்கையில் மட்டுமே நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டு விட்டது. பறிபோகும் லெவல் ப்ளேயிங் இதில் ஒரு சின்ன சுவாரஸ்யம் மட்டுமே நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு X ரேங்கிங். ஆனால் லீகிலேயே வெளியேறிவிட்டார்கள். அதனால் அந்த X ரேங்கிங் ஜிம்பாப்வேக்கு வழங்கப்பட்டு அவர்கள் சூப்பர் 8 இல் க்ரூப் A வில் இடம்பிடித்துவிட்டார்கள். வழக்கமாக நியாயமாக நடத்த வேண்டுமெனில் சூப்பர் 8 இல் ஒரு க்ரூப்பில் லீகில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் இரண்டாம் இடம் பிடித்த இரண்டு அணிகளுமே இடம்பெற்றிருக்க வேண்டும். Pre Seeding ஆல் அந்த லெவல் ப்ளேயிங் (Level Playing) தன்மை பறிபோயிருக்கிறது. இந்தியா Vs பாகிஸ்தான் இந்தியா, பாகிஸ்தான் காரணம்! இந்த Pre Seeding க்கு முக்கிய காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இரண்டு நாடுகளின் போட்டிக்கு இருக்கும் வணிகமும் அதன் அரசுகளுக்கிடையே இருக்கும் பகையுமே ஐ.சி.சியை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு முந்தையை தொடர்களிலும் இந்த முறை இருந்திருக்கிறது. வழக்கமாகவே ஐ.சி.சியின் அட்டவணை வலிமையான கிரிக்கெட் போர்டான இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்கும் என ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில கிரிக்கெட் வாரியங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஐ.சி.சி அரசியலை தவிர்த்தால்.! கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் லீகில் இந்திய அணி அமெரிக்காவில் எங்கும் பயணிக்காமல் ஒரே மைதானத்தில் 3 போட்டிகளையும் ஆடினார்கள். அதேநேரத்தில் இலங்கை போன்ற அணிகள் ஒவ்வொரு போட்டிக்கும் பல மணி நேரங்கள் பயணித்து கொண்டிருந்தன. இதை இலங்கை வீரர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தன. ICC ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியிலோ, இறுதிப்போட்டியிலோ மோதும் நிலை வந்தால் அப்போட்டிகள் இலங்கையில் நடைபெறும். உலகக் கோப்பை தொடர் என்பது, அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் நடத்த வேண்டிய தொடர். அதில், வணிகத்தையும் சுற்றியிருக்கும் அரசியலையும் தவிர்த்தால் மட்டுமே ஐ.சி.சி யால் நியாயமான போட்டி அட்டவணைகளை வெளியிட முடியும்.
T20 WC : ``ஜிம்பாப்வே அணியை பாராட்ட வேண்டும்; ஆனால், ஏமாற்றம் எங்களுக்குத்தான்! - மிட்சல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் கடைசி லீக் போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 105 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எட்டிப் பிடித்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்தத் தொடரை ஒரு ஆறுதல் வெற்றியுடன் ஆஸ்திரேலியா நிறைவு செய்தது. போட்டிக்கு பின்னர் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ், ``இப்போது எங்கள் மனதில் இருப்பது ஒன்றுதான் — நாங்கள் தவறவிட்ட அந்த வாய்ப்பு. மற்ற அணிகளைப் போலவே நாங்களும் இந்தத் தொடருக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தயாராகி வந்தோம். ஆனால், எங்களால் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் ஒன்றில் தோற்றுவிட்டால்..! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்தப் போட்டியைப் போன்ற ஒன்றில் தோற்றுவிட்டால், தானாகவே அழுத்தம் அதிகரித்துவிடும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள், அதை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். ஆனால், ஏமாற்றம் என்னவோ எங்களுக்குத்தான். ஆடுகளத்தின் தன்மைதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. கொழும்பு மைதானத்தில் ஆட்டம் மெதுவாகத்தான் (Slow track) இருந்தது, அதற்குத் தயாராகவே வந்திருந்தோம். இருந்தும், கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை. வீரர்களாகவும், ஓர் அணியாகவும் எங்கு முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் ஆராய்வோம். ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எப்போதும் உண்டு. இந்த அனுபவத்திலிருந்து இன்னும் வலுவான அணியாக மீண்டு வருவதே எங்கள் நோக்கம்.. எனப் பேசினார். ஆஸ்திரேலியா 450/2; இந்தியா 65-ல் ஆல் அவுட்! - உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து மிட்செல் மார்ஷ்
Zimbabwe: மக்களிடம் மரியாதையைச் சம்பாதித்ததுதான் எங்களின் பெரிய வெற்றி - கேப்டன் சிக்கந்தர் ராசா
டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது. ஜிம்பாப்பே அணி எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்களின் மனதை வென்றதும், அவர்களின் மரியாதையைச் சம்பாதித்ததும்தான் எங்களின் பெரிய வெற்றி. நாம் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறோம் என்றால் டாஸ் எவ்வளவு முக்கியம் என்று வீரர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பேட்டிங் ஆர்டரை நிலைமைக்கு ஏற்ப மாற்றினோம். ஒவ்வொரு முடிவும் திட்டமிட்டதே. இதுவரை தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். SL Vs Zim : 'ஒன் டைம் வொண்டரல்ல!' - மீண்டும் மீண்டும் சாதிக்கும் ஜிம்பாப்வே!
IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார், ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது, “இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்த நேரத்தை நான் ரசித்தேன். சில சமயங்களில் அழுத்தம் இருந்தது உண்மைதான். குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் எனக்கு நன்றாக பந்துவீசினார். நான்கு டாட் பந்துகள் வந்தன. அது ஒரு நல்ல ஓவராக அமைந்தது. ஆனால் பின்னர் அதை சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பந்து ஸ்கிட் ஆகியும், லோ ஆகியும் வந்தது. ஒரு பந்து சற்று திரும்பியும் வந்தது. அதனால் ‘அடிக்கலாம்’ என்று நினைத்த நேரத்திலும், அந்த சூழ்நிலை வேறொரு விதமான ஆட்டத்தை கேட்டது. அதனால் அப்போது பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன். சிக்ஸர்கள் அடிப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால் இன்றைய போட்டியில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். அதனால் எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் விளையாட நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். நான் அவசரப்படாமல் விளையாடியதற்கு காரணம் இருக்கிறது. எல்லா பவுலர்களும் என்னை எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதைக் குறித்து முன்பே யோசித்திருந்தேன். அவர்கள் யாரும் எனக்கு யார்கர் அல்லது லெங்க்த் பந்துகளை போடமாட்டார்கள். பெரும்பாலும் ஷார்ட் பந்துகள், ஸ்லோவர் பந்துகள்தான் வரும். அதற்கேற்ப நான் தயாராக இருந்தேன். அதனால் சரியான பந்துக்காக காத்திருந்தேன். என் ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. கேப்டனும், பயிற்சியாளரும், மிடில் ஓவர்ஸில் நான் களமிறங்கும்போது ஸ்ட்ரைக் ரேட்டை உயரமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது முழுக்க முழுக்க சூழ்நிலையைப் பொறுத்தது. இன்று நான் வந்த நேரத்தில் உடனடியாக ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் சூழ்நிலை இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் ‘இது சரியான நேரம்’ என்று உணர்ந்தபோது, அங்கிருந்து ஆட்டத்தை மாற்றினேன். என் பந்துவீச்சு பற்றி சொன்னால், அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் பலனும் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது டி20 கிரிக்கெட். சில சமயம் அடிப்பீர்கள், சில சமயம் அடிபடுவீர்கள். அதே நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைக்கும். அதுதான் இந்த விளையாட்டின் தன்மை.” என்றார். IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்
IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்
நெதர்லாந்து அணியுடனான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே காணாத அணியாக இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “டாஸ் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களின் திட்டம். அதன்படி 190 ரன்கள் சேர்த்தோம். பின்னர் பந்துவீச்சுக்கு வந்தபோது சற்று பனி இருந்தது. அது பவுலர்களுக்கு சவாலாக இருந்தாலும், முடிவில் இந்த வெற்றி எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. பனி இருக்கும் நிலையிலும் முதலில் பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சிதான். அடுத்த போட்டியிலும் இதே மாதிரியான சூழ்நிலை இருக்கலாம். ஆரம்பத்தில் சற்று மெதுவாக தொடங்கினாலும், மிடில் ஓவர்ஸில் விக்கெட் எப்படி நடக்கிறது என்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டு பொறுப்புடன் ஆட வேண்டும். அதன்பிறகு ஹார்திக், சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ‘ஃபினிஷ்’ செய்ய தேவையான ஃபயர்பவர் எங்களிடம் இருக்கிறது. துபே பற்றி... துபே பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த இன்னிங்ஸ் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் அருமையாக ஆடினார். அப்போது ஆட்டநாயகன் விருது கை நழுவியது. ஆனால் இன்றைய போட்டியில் மிடில் ஓவர்ஸில் அவர் ஆடிய விதம், அனைவரின் அழுத்தத்தையும் குறைத்தது. இந்த விக்கெட்டில் 190 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோர். ‘அனைத்து பெட்டிகளும் டிக் ஆனதா?’ என்று கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் சரியாக நடந்திருக்கலாம். ஆனாலும், வெற்றி பெற்ற போட்டியில்கூட கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கும். நாளை ஓய்வு எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி குழுவாக பேசுவோம். இனிய தலைவலி பந்துவீச்சு ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது ஒரு இனிய தலைவலிதான். மிடில் ஓவர்ஸில் அபிஷேக் சர்மா, ஹார்டிக், துபே என பலர் இருக்கிறார்கள். விக்கெட் எதை கேட்டாலும், அந்த நாளுக்கு ஏற்றார் போல சில ஓவர்கள் போட அவர்கள் உதவுவார்கள். என் ஃபார்ம் பற்றிப் பேசினால், அனைத்தும் சரியான திசையில் போகிறது. முக்கியமாக, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பங்களிப்பு கொடுக்கிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும் – சிறிய சிறிய கூட்டணிகள். போட்டி இறுக்கமாக இருக்கும் நேரத்தில் ஒருவர் சிறப்பாக ஆடினாலும், நல்ல ஸ்கோருக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியம்.” என்றார்.
T20 : 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா - சாம்பியன் அணி வீழ்ந்தது எங்கே?
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா என்றாலே ஒரு மிரட்டலான அணி என்ற பிம்பம் உண்டு. ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அந்த அணி, சமீபகாலமாக டி20 போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி அந்தவகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலிய அணியின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்ன? முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது..! ஆஸ்திரேலிய அணியின் பலமே அவர்களின் வேகப்பந்து வீச்சுதான். ஆனால் இந்த முறை பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதும், மிட்செல் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அனுபவமில்லாத பந்துவீச்சு வரிசையுடன் களம் இறங்கியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம். aus vs zim ஜிம்பாவேவிடம் கண்ட அதிர்ச்சி தோல்வி இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்கு விதை போட்டது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிதான். கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிறிய அணியான ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. ஆனால் பவர்ப்ளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து தொடரின் விளிம்பிற்குத் தள்ளியது. மிடில் ஆர்டர் பேட்டிங் சரிவு இலங்கைக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து ஒரு கட்டத்தில் வலுவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு 77 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் (10 விக்கெட்டுகள்) இழந்து தவித்தது. மிட்செல் மார்ஷ் அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் கொடுத்த அதிரடித் தொடக்கத்தை மிடில் ஆர்டர் பேட்டர்கள் பயன்படுத்தத் தவறினர். தவிர கிளென் மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர்கள் ரன் எடுக்கத் திணறியது அணிக்கு பின்னடைவாகியது. பதும் நிசாங்காவின் விஸ்வரூபம் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பதும் நிசாங்கா துரதிர்ஷ்டவசமான மழை ஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி வழங்கப்பட, அவர்கள் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றனர். ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்பி இருக்கிறது.!

26 C