SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

IND vs NZ: இந்திதான் முக்கியமானது.! - வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோதராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. ind vs nz தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியின் நடுவே இந்திதான் நமது தேசிய மொழி என கிரிக்கெட் வர்ணனையின் போது பேசிய சஞ்சய் பங்கருக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. பவுலர் வாஷிங்டன் சுந்தரிடம், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தமிழில் பேசலாமே என வருணையாளர் ஆரோன் கூறியிருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் - கே.எல்.ராகுல் அப்போது, தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நம்முடைய தேசிய மொழி என்று சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விகடன் 12 Jan 2026 3:47 pm

IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.! - கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோதராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சிறப்பாக விளையாடி விராட் கோலி 93 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ரோஹித் ஷர்மா விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விராட் கோலி, ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது பிடிக்கவில்லை. இதே விஷயம் தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.!

விகடன் 12 Jan 2026 10:23 am