SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

`‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன்!' - சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேலின் அதிரடியை கடந்து இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. Suryakumar போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேசியவை, 'இது ஒரு நம்ப முடியாத உணர்வு. இந்தியாவில் விளையாடி, இப்படிப் பெரிய அணியை வழிநடத்துவது, அதுவும் உலகக் கோப்பை இங்கே நடக்கும்போது அஹமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு செல்வது, இவை அனைத்தும் எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. ‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’ சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தவுடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருந்தது. ஒரு விக்கெட் விழுந்தபோதும் கூட இந்த பிட்ச் நல்லதாக இருப்பதை அவர் புரிந்திருந்தார். அவர் பேட்டிங் செய்த விதம் அணிக்கு தேவையானதுதான். ஹாரி புருக்கிடம் நான் நகைச்சுவையாக, ‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன். ஆனால் உண்மையாகச் சொன்னால் அது நல்ல பிட்ச். அவர்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்கான கிரெடிட்டை அவர்களிடம் இருந்து எடுக்க விரும்பவில்லை. அவர்கள் முழுப் போட்டியிலும் ஆட்டத்தில் இருந்தார்கள், இலக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருந்தார்கள். Suryakumar ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் மற்ற பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்த விதம் அசாதாரணமானது. பும்ரா என்ன செய்யக்கூடியவர் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் செய்த பங்களிப்பும் நமக்குத் தெரியும். இன்று மீண்டும் அதையே செய்து தனது பொறுப்புணர்வை காட்டி ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றினார்' என்றார்.

விகடன் 6 Mar 2026 9:44 am

Ind v Eng: 'பும்ராவுக்குதான் எல்லா பாராட்டுகளும் போகணும்!' - ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் அடித்திருந்த சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. Samson பின்னர் சாம்சன் பேசியதாவது, 'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த போட்டியிலிருந்தே எனக்கு நல்ல ஃபார்ம் கிடைத்தது என்று தெரிந்தது. இதுபோன்ற ஆட்டங்களை தொடர்ந்து விளையாட வேண்டும், அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. நாம் ஒரு சிறந்த அரையிறுதி போட்டியை விளையாடினோம். நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். வான்கடே மைதானத்தில் நாம் நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம். இன்று அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முழு கிரெடிட்டும் ஜஸ்பிரித் பும்ராவிற்கே, தலைமுறைக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் அபூர்வ பதுவீச்சாளர் அவர். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசியதனால் தான் நான் இப்பொழுது இந்த விருதை வாங்கிருக்கிறேன். வான்கடே மைதானத்தில் விளையாடுவது நம்ப முடியாத அனுபவம். சதம் அடிக்க வேண்டும் என்று தனியாக நினைத்து அடிக்க முடியாது. Samson அது தானாக வர வேண்டும். நீங்கள் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அணிக்காக நான் பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி,” என்றார். Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' - வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

விகடன் 6 Mar 2026 9:40 am

Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' - வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது Bethell 254 ரன்கள் டார்கெட் என்பது எப்பேர்பட்ட பேட்டிங் பிட்ச்சாக இருந்தாலும் அசாத்தியமான டார்கெட்தான். அந்த டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே புயல் வேகத்தில் புறப்பட்டது. சால்ட், ப்ரூக், பட்லர் என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள்ளாகவே இங்கிலாந்து இழந்திருந்தாலும், ரன்ரேட்டில் எந்த குறைவும் வைக்காமல் தொடர்ந்து அடித்தே ஆடினர். குறிப்பாக, ஜேக்கப் பெத்தேல் ஒரு முனையில் நின்று கொண்டு இந்திய பௌலர்களை மிரளவிட்டார். வருண் சக்கரவர்த்தியை பெரும்பாலான பேட்டர்களால் எளிதில் சமாளிக்க முடியாது. ஆனால், பெத்தேல் அவர் ஓவரில் அநாயசமாக மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். டாம் பேண்டன், வில் ஜாக்ஸ் ஆகியோரும் பெத்தேலுக்கு இணையாக நின்று அடித்து ஆடினார். 7-14 இந்த மிடில் 8 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 104 ரன்களை சேர்த்திருந்தது. அர்ஷ்தீப் சிங் விடாப்பிடியாக ஒயிடாக வீசி வீசி வம்பிழுக்க அதற்கு பேட்டை விட்டு பவுண்டரில் லைனில் அக்சரால் கச்சிதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு 35 ரன்களில் வில் ஜாக்ஸ் வெளியேறினார். Jacks கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது. சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பெத்தேலும் சாம் கரனும் களத்தில் நின்றனர். பும்ராவுக்கு 2 ஓவர்கள் இருந்தது. 16 வது ஓவரையே அவருக்கு கொடுத்தார் சூர்யா. இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டும் கொடுத்து 8 ரன்களுக்குள் பும்ரா கட்டுப்படுத்தினார். ஸ்லோயர் ஒன்களை பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார். அர்ஷ்தீப் சிங் 17 வது ஓவரை வீசினார். அர்ஷ்தீப் டைட்டாக வீச முயன்றும் பெத்தேல் பவுண்டரியும் சிக்சரும் அடித்து ஓவரில் 16 ரன்கள் வர காரணமாக இருந்தார். 18 வது ஓவர் மீண்டும் பும்ராவுக்கு. அவரின் கடைசி ஓவர் இது. டைட்டாக யார்க்கிங் லெந்தில் வீசவே பும்ரா முயன்றார். அது ஒர்க் அவுட்டும் ஆனது. பும்ராவின் இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. 19 வது ஓவரை ஹர்திக் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அடித்து சதத்தை நிறைவு செய்தார் பெத்தேல். அதிரடியாக இந்த ஓவர் ஆரம்பித்திருந்தாலும், யார்க்கிங் லெந்தில் வீச முயன்று நன்றாகவே இந்த ஓவரை வீசி முடித்தார் ஹர்திக். சாம் கரணின் விக்கெட்டும் கிடைத்தது. வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். Bethell . கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை. பெத்தேல் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. அவர்தான் அந்த ஓவரை வீசியிருக்க வேண்டும். ஆனால், சூர்யா துபேவை உள்ளே கொண்டு வந்தார். ஸ்லோவாக வீசப்பட்ட முதல் பந்தையே நேராக லாங் ஆபில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயன்றார் பெத்தேல். ஹர்திக்கின் துடிப்பான பீல்டிங்கால் ரன்னை நிறைவு செய்ய முடியாமல் பெத்தேல் ரன் அவுட். ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் துள்ளிக் குதித்தது. இங்கிலாந்தின் கதை அத்தோடு முடிந்தது. இந்திய அணி வென்றது. மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இறுதிப்போட்டி. நியூசிலாந்து அணி இந்திய ரசிகர்களுக்கு பல அதிர்ச்சிகளை இதற்கு முன் கொடுத்திருக்கிறது. அதெற்கெல்லாம் பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

விகடன் 5 Mar 2026 11:01 pm

'அந்த மேன் ஆப் தி மேட்ச் அவார்டை எடுத்து வைங்க!' - சாம்சன் ருத்ரதாண்டவம்; இந்தியா அபாரம்!

உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் வான்கடேவில் ஆடி வருகின்றன. சாம்சனின் அதிரடியான தொடக்கத்தோடு இந்திய அணி இங்கிலாந்துக்கு இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருக்கிறது. Ind vs Eng இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் முழுவதையும் சாம்சன் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். சாம்சன் எதாவது ஒரு போட்டியில் மட்டுமே அடிப்பார், மற்ற போட்டிகளில் சொதப்பவே செய்வார். அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார். அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு பௌலர்களை ப்ரூக் பவர்ப்ளேயில் பயன்படுத்தியிருந்தார். எந்த வியூகமும் சாம்சனுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகவில்லை. இடையில் ஒரு கேட்ச் ட்ராப் வேறு. Samson க்ரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னங்காலை நன்றாக ஊன்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஸ்லோயர் ஒன்களையும் அநாயசமாக சிக்சராக்கினார். சதத்தை நோக்கி நகர்வார் என நினைக்கையில் 89 ரன்களில் வில் ஜாக்ஸின் பந்திலேயே அவுட் ஆகினார். இந்தப் போட்டியிலும் 'ஆட்டநாயகன்' விருதை தட்டிச் செல்லும் பெர்பார்மென்ஸ் இது.. ஆதில் ரஷீத், வில் ஜாக்ஸ் வீசியதால் துபே பிரமோட் ஆகி மேலே ஆட வந்தார். அவரும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகியிருந்தார். கடைசியில் திலக் வர்மா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. கடைசியில் ஹர்திக்கும் சில சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்தது.இங்கிலாந்தின் பிரதான பௌலரான ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ரன்களை கொடுத்து அடி மேல் அடி வாங்கியிருந்தார். இங்கிலாந்துக்கு 254 ரன்கள் டார்கெட். இமாலய சவாலில் சாதிக்குமா?

விகடன் 5 Mar 2026 8:53 pm

ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் - இஸ்ரேல் போர் இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக, முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. டேரன் சமி விமானப் போக்குவரத்து பாதிப்பால் டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினரும், ஜிம்பாப்வே அணியினரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 5 Mar 2026 5:23 pm

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் 170 என்ற இலக்கை 13வது ஓவரிலேயே அடைந்து, அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் ஃபின் அலன் 100 (33) சதம் விளாசியதுடன், T20 உலகக் கோப்பையில் அதிவேக சதத்தை பதிவு செய்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஆட்டநாயகன் விருது வென்ற ஃபின் அலன், ``கண்டிப்பாக இது நான் விளையாடிய போட்டிகளிலேயே மிகச் சிறந்தவற்றில் ஒன்றாக இருக்கும். நல்ல நிலைப்பாட்டில் சென்று, அணிக்காக ஒரு சிறந்த செயல்பாட்டை வழங்கவே விரும்பினேன். அது இன்று நடந்தது. நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களை அழுத்தத்தில் வைக்க நினைத்தோம். டிம்மி (செய்ஃபர்ட்) அந்த மாதிரி அதிரடியாக ஆடும்போது எனக்கு எளிதாக இருக்கும். நான் அமைதியாக பார்த்துக்கொண்டு, எனக்கு ஏற்ற பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடிக்க முடிந்தது. அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவும் முயற்சித்தேன். அவர் பேட்டிங் செய்த விதமே எங்களுக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளித்தது. நாங்கள் வலுவான நிலையை உருவாக்கி, நேராக அடித்து, போட்டியை சீக்கிரம் முடிக்கலாம் என்று நினைத்தோம். NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.! - மார்க்ரம் செமி பைனல் போன்ற பெரிய போட்டியில் போராட்ட மனப்பான்மையுடன் இருப்பது எளிதாக இருக்கும். இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி. டிம்மியுடன், ஸ்ட்ரைக்கில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தோம். நேராக பார்த்து, பந்தை வலுவாக அடிக்க வேண்டும் என்பதையே நினைத்தோம். மைதானத்தில் சேர்ந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிட்சின் தன்மைக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதே முக்கியம். பயிற்சி மிகவும் அவசியம்; பிட்ச் எப்படி செயல்படும் என்பதை உணர உதவும். இதற்கு முன் இந்திய தொடரில் பலர் கருப்பு மண் பிச்சில் விளையாடியிருந்தார்கள். அந்த அனுபவம் எங்களுக்கு உதவியது. இந்த உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன் அந்த தொடர் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. இந்த போட்டியில் இருந்த நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு, சிறிய வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு இறுதிப்போட்டி உள்ளது; அதை வெல்ல வேண்டும். அதற்காகவே இப்போது முன்னோக்கி பார்க்கிறோம். என்றார்.

விகடன் 5 Mar 2026 3:37 pm