``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை! - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் மந்தனாவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பலாஷ் முச்சல் பற்றி நிறைய பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட்டது. Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா இத்தகைய சூழலில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்தனா, ``திருமணம் ரத்தாகிவிட்டது எனத் தெரிவித்தார். அதோடு, இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள நினைப்பதாகவும், இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கோரிக்கை விடுத்த ஸ்மிருதி மந்தனா, ``எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன் என்று உறுதியளித்தார். இந்த நிலையில் மந்தனா தனது நிலை குறித்து பேசியிருக்கிறார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் நேற்று (டிசம்பர் 10) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மந்தனா , ``என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் காதலிக்கவில்லை. அதனால், பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போதும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போதும் மனதில் வேறு எந்த எண்ணங்களும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் ஜெர்சியை அணியும்போது நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம், நாட்டுக்காகப் போட்டியில் வெல்வது மட்டும்தான். ஜெர்சியை அணியும்போது அதில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். நான் எல்லோரிடமும் சொல்வது என்னவென்றால், ஜெர்சியை அணிந்ததும் உங்களின் பிரச்னைகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு களத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதுதான். ``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர். அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது என்று கூறினார். மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள். Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா நாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால், நாம் அந்த வாக்குவாதங்களைச் செய்யவில்லையென்றால், களத்தில் நம்மால் வெற்றி பெற முடியாது. ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும் வகையிலான விவாதங்களை நாம் செய்யவில்லையென்றால், அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில் நமக்குத் தேவையான அளவு ஆர்வம் இல்லை என்று அர்த்தம். எனவே, நாங்கள் நிச்சயமாக அந்த மாதிரியான விவாதங்களை மேற்கொள்கிறோம் என்று மந்தனா தெரிவித்தார். டிசம்பர் 21-ம் தேதி தொடங்கும் தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன் - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது. ஆட்டத்தின் முதற்பாதியில் ஜெர்மனியும், இரண்டாம் பாதியில் ஸ்பெயினும் ஒவ்வொரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் 1 - 1 எனப் போட்டி சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில், முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இரண்டாவது வாய்ப்பிலும் ஜெர்மனி கோல் அடிக்காமல் மிஸ் பண்ண, ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் மூன்றாவது வாய்ப்பில் இது அப்படியே தலைகீழாக மாறியது, ஸ்பெயின் கோல் அடிக்காமல் மிஸ் பண்ண மறுபக்கம் ஜெர்மனி கோல் அடித்து சமநிலைக்கு வந்தது. அடுத்து நான்காவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2 - 2 சமநிலை தொடர்ந்தது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இறுதியில் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பில் ஸ்பெயின் கோட்டைவிட ஜெர்மனி கோல் அடித்து 3 - 2 என வெற்றி வாகை சூடியது. இது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி வெல்லும் 8-வது சாம்பியன் பட்டம். இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 4 - 2 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!
14-வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 இன்று வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் 24 அணிகளுடன் நடைபெற்றது. இன்றைய இறுதிநாளில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா ஆர்ஜென்டினாவை 4-2 என்ற கணக்கில் வென்று 4-ஆவது பதக்கத்தை வென்றிருக்கிறது. இதற்குமுன் இந்திய ஹாக்கி அணி 1997-வெள்ளி, 2001மற்றும் 2016-தங்க பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. The learning never stops, even when you’re an FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 medalist. #HockeyIndia #IndiaKaGame #FIHMensJuniorWorldCup #RisingStars #JWC2025 pic.twitter.com/E0sjfOYsVK — Hockey India (@TheHockeyIndia) December 10, 2025 IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! இதையடுத்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி (7 முறை வென்ற அணி) மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்கும்.
google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?
இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது. 2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது. அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின் எழுச்சி இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. Abhishek Sharma. அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் Google Search 2025 வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பெயர் பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது. பாகிஸ்தானின் Google Search பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா. கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல்: அபிஷேக் சர்மா (இந்தியா) ஹசன் நவாஸ் இர்பான் கான் நியாசி சாஹிப்சாதா ஃபர்ஹான் முகமது அப்பாஸ் அதே நேரம், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வைபவ் சூரியவன்ஷி. 2025 IPL-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தவர், இந்தியாவின் எதிர்காலம் என்று கொண்டாடப்பட்டார். U-19 (19 வயதுக்குட்பட்ட) இந்திய அணிக்காக விளையாடினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா உலகளவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்: வைபவ் சூரியவன்ஷி ப்ரியன்ஸ் ஆர்யா அபிஷேக் சர்மா ஷேக் ரஷீத் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆயுஷ் மத்ரே ஸ்மிருதி மந்தனா கருண் நாயர் உர்வில் படேல் விக்னேஷ் புதூர் கடந்த காலங்களில் கூகிளின் தேடல் பட்டியலில் விராட் கோலி, தோனி எனப் பெரும் ஜாம்பவான்கள்தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்தத் தலைமுறை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா போன்ற பெண் விளையாட்டு வீரர்களையும் சேர்த்துத் தேடியிருப்பது, இளம் தலைமுறையிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவின் திறமைகள் போட்டித் தேசங்களில் கூட கவனத்தை ஈர்த்திருப்பது இந்தியாவிற்குக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறது. Keerthy Suresh, “Indian Women’s Cricket Victory Is Inspiring!” | Revolver Rita | Vikatan Interview
IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21) எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர். இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக் ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி, 20 ஒவர்கள் முடிவில் 175/6 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டிவோல்ட் பிரேவிஸ் 22 (14) மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்தார். மற்றவர்கள் சொற்பான ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தையே ஆடியிருந்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணி, 12.3 ஓவர்களில் 74/10 ரன்களை மட்டும் எடுத்து சுருண்டுவிட்டது. ஹர்திக்கின் அதிரடி ``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி இதன்மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டி 20 தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றிருக்கிறது இந்திய அணி. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது குறைந்தபட்ச டி20 ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் ராஜ்கோட்டில் 2022 ஆம் ஆண்டு 87 ஆல் அவுட் ஆனதே குறைந்தப்பட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..! - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது. Ind vs SA இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தியை இந்தப் போட்டியில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், வருண் சக்கரவர்த்தியை நாம் இந்தத் தொடரில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அவரைப் பாதுகாத்து வைக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து விளையாடவுள்ளோம். அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையிலும் இந்த அணிகளை நாம் சந்திக்க நேரிடும். அதனால், இப்போதே அவரை அதிகம் ஆட வைத்தால், எதிரணிகள் அவரது பந்துவீச்சு நுணுக்கங்களைக் கணித்துவிடுவார்கள். வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உலகக்கோப்பையில் ஒன்றாக இணைந்து ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். வருண் சக்கரவர்த்தி - குல்தீப் அது ஒரு பயங்கரமான கூட்டணியாக இருக்கும். ஆனால், இப்போதே அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து, எதிரணிகளுக்குப் பழக்கப்படுத்திவிடக் கூடாது. எதிரணிகள் அவர்களைக் கணிப்பதற்கு நாம் நேரம் கொடுக்கக் கூடாது. அவர்கள் வருணுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக ஆடுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்வார்கள். மர்மம் என்பது மர்மமாகவே இருக்க வேண்டும் என்று அஷ்வின் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.
வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!
சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார். இசக்கி முத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார். பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார். இசக்கி முத்து இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.
விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும். Rohit Sharma with Virat Kohli முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI. 'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். Gautam Gambhir இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ``விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற'' - கம்பீர் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!
ஜெர்மனியுடன் தோல்வி; சென்னையில் சோகத்துடன் வெளியேறிய இந்திய ஹாக்கி அணி | Photo Album

28 C