SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
...

BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?

ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. பிக் பேஷ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வணிக செயல்பாடு தலைமை அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்தியா வந்து, சென்னையில் தொடக்கப் போட்டியை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்பேஷ் தொடருக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் விதத்தில் இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்ய நினைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆடாத போட்டிகளிலும் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி மைதானம் வந்து போட்டியை ரசிக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் பரிசீலனையில் சென்னை சேப்பாக்கம் முன்னணியில் உள்ளதாம்.

விகடன் 17 Feb 2026 6:41 pm

T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறி இருக்கிறது. கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. தொடரின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சறுக்கியது எங்கே? தொடரின் ஆரம்பத்திலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சந்தித்த தோல்விதான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இரண்டாவது போட்டியில் அயார்லாந்து அணியிடம் வெற்றி பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வாழ்வா-சாவா என்ற நிலையில் இலங்கையை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் குவித்தும் பந்துவீச்சில் கோட்டை விட்டது. பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெளியேறிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி காரணங்கள் என்ன? முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு அனுபவ வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததும் அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தியது. கடந்த 2021-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, இந்த முறை சூப்பர்-8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 17 Feb 2026 6:30 pm

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!'என பதில் அளித்த வருண்! - வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய அணியினரின் உரையாடலின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 'எனக்கு இந்தி தெரியாது' எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஜாலியாக கலந்தாலோசித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் போட்டிக்கு முன்பான கலந்துரையாடலின் போது வருண் சக்ரவர்த்தியிடம் 'இந்தியில் பேசு மச்சான் ப்ளீஸ்!' என்று சூர்யகுமார் யாதவ் சொல்கிறார். அதற்கு 'எனக்கு இந்தி தெரியாது மச்சி' என்று வருண் சக்ரவர்த்தி பதிலை அளிக்கிறார். தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியிருக்கும் வருண் சக்ரவர்த்தி, 'ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். இதே மாதிரியான பெரிய போட்டிகளில் நாம் இழக்க நேரிடும் விஷயங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். வருண் சக்கரவர்த்தி நாம் அடையப்போகும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் எனக்கூறினார். அந்த அறிவுரை மிக முக்கியமானது' என வருண் பேசியிருந்தார். In Episode 3 of The Speech, we have Mr Varun Chakaravarthy ️ He is focused and has a clear message! Listen to what the message was #TeamIndia | #T20WorldCup | #MenInBlue | @chakaravarthy29 https://t.co/rCwPnGE7J0 — BCCI (@BCCI) February 17, 2026

விகடன் 17 Feb 2026 3:02 pm

`ஆஸ்திரேலியாவை சிதறடித்த `அசல்'சம்பவக்காரன்' - யார் இந்த பதும் நிசாங்கா?

டி20 உலகக்கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இலங்கை வீரர் பதும் நிசாங்கா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களை பறக்கவிட்டு சதமடித்து இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார். பதும் நிசாங்கா அதுமட்டுமின்றி ஜெயவர்த்தனேவிற்கு பிறகு இலங்கை டி20 உலகக்கோப்பையில் சதமடித்த 2- வது வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார். இளம் வயதில் சாதனை படைத்த பதும் நிசாங்காவை பலரும் பாராட்டி வருகின்றனர். யார் இந்த பதும் நிசாங்கா? இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் கடற்கரை மணலில் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறமையை நிசாங்கா வளர்த்துக்கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பதும் நிசாங்கா 2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது டி20 உலகக்கோப்பையிலும் சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி தடுமாறிய போது, அந்த அணியைத் தாங்கிப் பிடித்த ஒரு தூணாக நிசாங்கா இருந்திருக்கிறார். எவ்வளவு அழுத்தமான சூழலிலும் பதற்றப்படாமல் ஆடுவது இவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.!

விகடன் 17 Feb 2026 1:11 pm

SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று குரூப் B-யில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மாறாக, இந்தத் தோல்வியால் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி, மைதானத்தின் நிலையை கணித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கமே அமோகமாக அமைந்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய Travis Head (56) – Mitchell Marsh (54) ஜோடி, அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பில்லாமல் 104/0 என்ற வலுவான நிலையில் அணியை கொண்டு சென்றது. ஆனால் அதன் பிறகு காட்சியே மாறியது. இலங்கை அணியின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. முதல் 50 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, அடுத்த 70 பந்துகளில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிசாங்கா சதம்… இலங்கை கொண்டாட்டம் 182 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, 2-வது ஓவரிலேயே பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு களத்தில் நிலைத்த Kusal Mendis மற்றும் Pathum Nissanka ஜோடி, தேவையான நேரங்களில் ரன்களைத் தேடி தேடி அடித்து ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பியது. இருவரும் அரைசதம் கடந்தனர். 105 ரன்கள் இருந்த நிலையில், 13-வது ஓவரில் மெண்டிஸ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு முழுக் கவனமும் நிசாங்காவின் பேட்டிங்கில்தான். இந்த வருட T20 தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த நிசாங்கா, 100 (52 பந்துகள்) என அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றி, சூப்பர் 8 சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய நிசாங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவின் கணக்கு என்ன? இனி ஆஸ்திரேலியா சூப்பர் 8-க்கு தகுதி பெற வேண்டுமெனில், ஜிம்பாப்வே அணியின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அமையும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள ஜிம்பாப்வே, 4 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே, குரூப் B-யில் இரண்டாவது அணியாக ஜிம்பாப்வே தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது. ஜாம்பவான் அணியாக, வலுவான அணியான ஆஸ்திரேலியா முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கான சூழலே தற்பொழுது நிலவுகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

விகடன் 17 Feb 2026 7:06 am

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார். indian team இதனிடையே நேற்றையப் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்றிருந்த குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயன்றார். IND vs PAK: அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது - ஆட்டநாயகன் இஷான் கிஷன் கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது. இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை. ஹர்திக் பாண்டியா - குல்தீப் யாதவ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்திலும் ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. Here is video of Hardik Pandya & Surya Kumar Yadav angry on Kuldeep Yadav #INDvsPAK #T20WorldCup pic.twitter.com/BsGCCprKNc — cricketkayudh (@cricketkayudh) February 15, 2026

விகடன் 16 Feb 2026 12:31 pm

IND vs PAK: 'இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்தியாவுக்கானது. நாங்கள் விளையாட நினைத்த அதே விதமான கிரிக்கெட்டையே இந்தப் போட்டியிலும் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவு என்று நினைத்தோம். indian team ஆட்டம் தொடங்கியதும் 0/1 என்ற நிலையில், யாரோ ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இஷான் கிஷன் சற்று வித்தியாசமாக, ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனையுடன் விளையாடினார். அவர் அந்த பொறுப்பை எடுத்த விதம் உண்மையிலேயே அசாதாரணமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினம். இரவில் பனி (Dew) இருக்கும் அளவு, பிச்சின் நடத்தை எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இருந்தாலும், நாங்கள் எடுத்த ஸ்கோர், தேவையான ரண்களை விட சுமார் 15 ரன்கள் அதிகம் என்று உணர்ந்தோம். 155 இருந்தால்கூட அது கடினமான போட்டியாக மாறியிருக்கும்.  ind vs pak பந்து வீச்சில் அனைவரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தது மிகவும் சந்தோஷம். ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தார்கள்.  இப்போது நாங்கள் ஒரு அணியாக ஒன்றாகச் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம். அதன் பிறகு அகமதாபாத் செல்லும் பயணத்தின் போது, அடுத்த போட்டிகளைப் பற்றி யோசிப்போம்” என்று பேசியிருக்கிறார். 

விகடன் 16 Feb 2026 10:30 am

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. Ind vs pak ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அபிஷேக் பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இந்தியா அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

விகடன் 15 Feb 2026 10:54 pm