SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

BCB:``பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது! - ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் சில வலதுசாரி கும்பல், இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு எதிராக குழப்பங்களை விளைவித்தன. மேலும், சமூக ஊடகங்களில், வங்கதேச வீரர் ஐபிஎல்-ல் விளையாடுவதற்கு எதிராக பரப்புரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தது. விளையாட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல் அதில் அரசியல் செய்யப்படுகிறது என்றக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. முஸ்தஃபிசுர் ரஹ்மான் இதற்கிடையில், இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, தங்களது போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (4.1.2026) வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ``இந்தியா மற்றும் இலங்கையால் நடத்தப்படவிருக்கும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி விவாதிப்பதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) இயக்குநர் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, வாரியம் நிலைமையை விரிவாக ஆய்வு செய்தது. இந்தியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்களாதேஷ் தேசிய அணியின் பங்கேற்பைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலை குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. பிசிபி தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் உள்ள பங்களாதேஷ் குழுவினரின் பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் ஆகியவற்றை முழுமையாக மதிப்பிட்டது. அதன் பிறகு பங்களாதேஷ் அரசின் ஆலோசனையையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் இந்தத் தொடருக்காக பங்களாதேஷ் தேசிய அணி இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில், நிகழ்வின் அதிகார அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி), பங்களாதேஷின் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு இடத்திற்கு மாற்றுமாறு முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷ் வீரர்கள், அணி அதிகாரிகள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று வாரியம் நம்புகிறது. இந்த நிலைமை குறித்து ஐசிசி புரிந்துகொண்டு, இந்த விஷயத்தில் அவசரமாகப் பதிலளிக்கும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறது. 2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

விகடன் 5 Jan 2026 9:51 am