Ind v Zim : 'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவீர்களா?' - ஜிம்பாப்வேயின் பதில் என்ன?
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு அவர் பேசியதாவது, 'இது எங்களுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. அதேமாதிரி, இந்தியாவுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டியபோட்டி. இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வது சிரமமானதுதான். ஆனால், இந்தியாவுக்கும் வென்றாக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இருக்கிறது. சிக்கந்தர் ராசா 100% உடற்தகுதியோடு இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக கட்டாயம் ஆடுவார். இந்திய ரசிகர்களை இந்தியாவில் எப்படி அமைதிப்படுத்தப் போகிறீர்கள் என்பது இது பதில் சொல்வதற்கு கொஞ்சம் ஆபத்தான கேள்வி. நாங்கள் இலங்கைக்கு எதிராக இலங்கையில் எப்படி ஆடினோமோ அப்படித்தான் இங்கேயும் ஆடப்போகிறோம். எங்களுக்கென சில திட்டங்களும் அணுகுமுறையும் இருக்கிறது. அதிலிருந்து மாற விரும்பவில்லை. பர்ல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நாங்கள் தோற்றது ஒருவிதத்தில் நல்லது. அதற்கு முன்புவரைக்கும் நாங்கள் அப்படி மோசமாக ஆடியிருக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான ஆட்டம் மூலம் எங்களால் சில விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படித்தான் இந்தியாவுக்குமென நினைக்கிறேன். அவர்களும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றுவிட்டுதான் வருகிறார்கள்' என்றார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடுவாரா? - என்ன சொல்கிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்!
உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். கோடக் அவர் பேசியதாவது, 'கடந்த ஆட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் விளையாடியதிலேயே மிகவும் மோசமான ஒன்று. இந்த உலகக் கோப்பையில் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை. அதற்காக ஆடுகளத்தைக் (Pitch) குறை சொல்ல முடியாது. எதிரணிக்கு ஏற்றவாறு நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயிடம் தோற்றது எங்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. என்றவர், அபிஷேக் சர்மா குறித்த கேள்விக்கு, ``ஒரு வீரரைப் பற்றி மட்டும் அதிகம் சிந்திப்பது எனக்குப் பிடிக்காது, அது அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அவர் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். விரைவில் அவர் ஒரு பெரிய ஸ்கோரை எடுப்பார். சஞ்சு சாம்சன் & ரிங்கு சிங் குறித்து பேசிய அவர், ``சஞ்சு எப்போதும் போலவே இயல்பாக விளையாடுவார். அவரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரிங்கு சிங்கும் மீண்டும் அணியில் இணைவார் என நம்புகிறோம். பத்திரிகையாளர் சந்திப்பு குல்தீப் யாதவ் குறித்த கேள்விக்கு, ``டி20 போட்டிகளில் 8-வது வீரர் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அனைவரும் சிறந்த வீரர்கள்தான், ஆனால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்தியாவில் உலகக் கோப்பை நடப்பது ஓர் அழுத்தம் தான். கவலை மற்றும் பதற்றத்தை கையாள்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை நேர்மறையாக அணுக வேண்டும். எங்கள் விளையாடும் முறையை (Template) திடீரென மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாளை முதல் மீண்டும் ஒரு நல்ல உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்த அதே பாணியில் தான் தொடர்ந்து விளையாடுவோம் என்றார்.
WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!
நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம். சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஆட்டம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றியால், இந்தியாவுக்கு ஒரு மறைமுக சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலிருந்தே ‘டாப் கியர்’ போட்டு அதிரடி காட்டியது. WI vs ZIM ஷிம்ரான் ஹெட்மயர் – ரோவ்மேன் பவெல் ஜோடி, ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, ரன்களை வேகமாக உயர்த்தியது. அதன் விளைவாக, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 254/6 ரன்கள் குவித்தது. இது ICC Men's T20 World Cup வரலாற்றிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். (2007-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை அடித்த 260 ரன்கள் முதலிடத்தில் உள்ளது.) IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி சரண்டரான ஜிம்பாப்வே: 255 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, விண்டீஸ் பந்துவீச்சாளர்களின் வேகமும் துல்லியமும் முன்னால் நிலைகுலைந்து போனது. சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது நெட் ரன் ரேட் -ஐ மிக உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. WI vs ZIM இந்தியாவின் நிலை: தற்போதைய சூழலில், இந்திய அணியின் நிலைமை சற்று பரிதாபத்துகுரியதாவே தான் உள்ளது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, இந்தியாவின் Net Run Rate (NRR) -3.800 என்ற பாதாளத்தில் உள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்துடன் வெற்றி பெற்று, தனது ரன் ரேட்டை(+5.350) பெரிதும் உயர்த்தியிருப்பது, இந்தியாவின் செமி-பைனல் கனவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இனி இந்தியாவுக்கு என்ன வழி? இந்தியா அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை வென்றால் மட்டும் போதாது. மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ரன் ரேட்டை மின்னல் வேகத்தில் உயர்த்தினால் மட்டுமே, மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி ஆட்டத்தில் இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அது நடக்காவிட்டால், இந்தியாவின் செமி-பைனல் கனவு உண்மையிலேயே கவலைக்கிடமானதாக மாறும்.
IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்! - கேப்டன் மார்க்ரம்
T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில், ``இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். இங்கிருந்த முந்தைய ஆடுகளங்களைவிட இன்று இருந்த விக்கெட் முற்றிலும் வேறுபட்டது. அதைக் அணியினர் ஆரம்பத்திலேயே சரியாக கணித்து, தங்கள் திறமைகளை மாற்றி அமைத்து திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார்கள். குறிப்பாக பந்துவீச்சு மீது நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். தொடக்கத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், இன்று அவர்கள் களத்தில் செயலாற்றிய விதம் பாராட்டத்தக்கது. முதலில் சொல்ல வேண்டியது பார்டனர்ஷிப் பற்றிதான். டேவிட் மில்லர் மற்றும் டெவால்டு பிரேவிஸ் இணைந்து அணிக்கு நல்ல நிலைத்தன்மையை தந்தார்கள். ஆட்டத்தை சமநிலைப்படுத்தி, நம்மை போட்டியில் வைத்திருந்தார்கள். கடைசி ஓவர்களில் பந்து கொஞ்சம் ‘ஸ்பாஞ்சி’ போல வந்து வேகமாக பயணித்தது. அதனால் இடைவெளிகளை கண்டுபிடித்து, வேகமாக ஓடி அதிக ரன்களை சேர்ப்பதே திட்டமாக இருந்தது. எதிரணி தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நடு ஓவர்களில் எங்கள் பேட்டிங் தான் முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பீல்டிங்கிலும் நல்ல முயற்சி இருந்தது. இரண்டு கேட்ச் தவ்றவிட்டோம்; ஆனாலும் அது முயற்சி குறைவால் இல்லை. UAEக்கு எதிரான போட்டியில் இருந்த அணியின் ஒருங்கிணைப்பு இன்று அதிகமாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி. தவறுகள் வரும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் பிரச்சனை இல்லை. லுங்கி இங்கிடி எப்போது பந்து வீசினாலும் விக்கெட் எடுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர். அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் உண்மையான ‘டீம் மேன்’ அவர்; தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்த போட்டி வெஸ்ட் இண்டிஸ் அணியுடன். அவர்கள் ஒரு ஆபத்தான T20 அணி, நல்ல கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இன்று கிடைத்த மகிழ்ச்சியை ரசித்து விட்டு, அதை அப்படியே வைக்கிறோம். 28ஆம் தேதி முழு வேகத்துடன் களமிறங்க வேண்டும். இது எங்களுக்கு மிகப் பெரிய போட்டி. இந்த வெற்றி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என நம்புகிறோம் என்றார். IND vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!
IND vs SA: 'எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை; கம்பேக் கொடுப்போம்'- கேப்டன் சூர்யகுமார் உறுதி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அணியின் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், நாங்கள் முதலில் சிறப்பாகத்தான் பந்து வீசியிருந்தோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். எங்களின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பவர்ப்ளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ind vs sa match அர்ஶ்தீப் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து நன்றாகத்தான் பந்து வீசியிருக்கின்றனர். அடுத்தப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் எதையும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. எங்களின் ஸ்டைலில் அப்படியேத்தான் ஆடப் போகிறோம். அடுத்தப் போட்டியில் நிச்சயமாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
IND vs SA: ஸ்லோ பால் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்கா; சறுக்கிய இந்திய அணி!
இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ind vs sa match இதில் அதிகபட்சமாக பிரேவிஸ் (45), மில்லர் (63), ஸ்டப்ப்ஸ் (44) ரன்கள் எடுத்தனர். இந்தியாவிற்காக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணியின் பேட்டிங் வரிசையை தென்னாப்பிரிக்க அணி ‘ஸ்லோ பால்’ என்ற ஆயுதத்தால் ஆரம்பத்திலேயே சிதைத்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இந்திய அணி தடுமாற, தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்கள் பெரும்பாலும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அந்த சூழலில் பொறுமையாக விளையாடிய சிவம் துபே 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய மற்ற ஆட்டக்காரர்களும் தொடர்ச்சியாக அவுட் ஆக, இந்திய அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்த இந்தியா, இந்த போட்டியின் மூலம் டி20 வரலாற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இதுவரை இல்லாத மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. ind vs sa match மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. மறுபுறம், இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாக சூப்பர் 8-இன் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்க அணி.

26 C