பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
StartUp சாகசம் 45: `கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்க உதவ முடியும்’ - தமிழக StartUp `Unibose’ கதை
Unibose StartUp சாகசம் 45 ஆள் நுழைவில்லா எந்திரன்கள் (No,Man Entry Robot , NME) தொழில்நுட்பம் என்பது, தொழிற்சாலைகளில் உள்ள அபாயகரமான தொட்டிகள், குழாய்கள் மற்றும் இயந்திரங்களைச் சுத்தம் செய்ய, மனிதர்களை நேரடியாக உள்ளே அனுப்பாமல், பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு முறையாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெட்ரோலியம், ரசாயன மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் (Septic Tanks) சுத்தம் செய்யும்போது, விஷ வாயு தாக்கியோ அல்லது வெடி விபத்திலோ பரிதாபமாக உயிரிழக்கின்றனர். 'கையால் மலம் அள்ளும்' இந்த கொடிய நடைமுறைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும் சக்தி NME ரோபோக்களுக்கு உள்ளது. இது மனித உயிர்களைக் காப்பாற்றுவதோடு, மீட்டெடுக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil & Gas), ரசாயனம், மருந்து (Pharma) போன்ற ஆலைகளில், ATEX Zone போன்ற மிக அபாயகரமான வெடிக்கும் சூழல்கள் இருக்கும். அங்கு மனிதர்களை அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். இந்த ரோபோக்கள் அத்தகைய இடங்களில் பாதுகாப்பாகச் செயல்பட்டு, விபத்துக்களைத் தடுத்து, நிறுவனங்களைக் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இன்னமும் சொல்லப்போனால் கழிவு நீர் கால்வாய்களிலும், கழிவறை கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இந்த எந்திரன்களை பயன்படுத்தும் நுட்பம் நம் அனைவருக்கும் வரப்பிரசாதம். தொழில்நுட்பம் என்றாலும் சமூதாயத்தில் சமூதாய தொழில்முனைவில் மிகப்பெரிய புரட்சி இது. எத்தனையோ பேர் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும்போது கழிவறை சுத்தம் செய்ய எந்த நுட்பமும் கிடைக்கவேயில்லை என்று ஆதங்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர், அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் விதமாக தமி்ழ்நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் சமூகத்தின் பிரச்னைகளை தங்களின் ஆள்நுழைவில்லா எந்திரன்களை கொண்டு தீர்வு தருகிறது என்பதும், உலக அளவில் ATEX Zone தரச்சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் நிறுவனம், உலக அளவில் இரண்டாவது நிறுவனனமா யுனிபோஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.மணிகண்டன் அவர்களின் சாகசக்கதையைத்தான் இந்த வாரம் நாம் பார்க்க விருக்கிறன்றோம். இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவிலேயே 'டீப்,டெக்' (Deep,Tech) புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு புதிய, உலகத் தரம் வாய்ந்த சந்தையைத் திறந்துள்ளது. 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உருவாகும் இந்த ரோபோக்கள், உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தமிழகத்தின் பொறியியல் திறனை சர்வதேச அரங்கில் நிரூபிக்கின்றன இனி யுனிபோஸ்(Unibose) நிறுவனத்தின் சிஇஓ மணிகண்டன் அவர்களிடமிருந்து... ``'ஆள்நுழைவில்லா எந்திரன்' (No,man Entry Robot) உருவானதன் தொடக்கம் என்ன? இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது, இது ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட அனுபவத்தால் தூண்டப்பட்டதா? ``என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணத்தில் இது தொடங்கியது. நான் L&T நிறுவனத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆலைக்குச் சென்றிருந்தேன். அங்கே தொழிலாளர்கள், தடிமனான, வெடிக்கும் தன்மை கொண்ட கசடுகள் நிறைந்த தொட்டிகளுக்குள் இறங்குவதைப் பார்த்தேன் , எந்த மனிதனும் எதிர்கொள்ளக் கூடாத சூழலில் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருந்தனர். விண்வெளித் தொழில்நுட்ப யுகத்தில் கூட, மக்கள் இன்னமும் இதுபோன்ற பாதுகாப்பற்ற வேலைகளைச் செய்கிறார்களே என்பது என்னை ஆழமாகத் தாக்கியது. அதுதான் திருப்புமுனை. இந்த யதார்த்தத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினேன். என் இணை நிறுவனருடன் சேர்ந்து, பல பத்தாண்டுகளாக 'இப்படித்தான் இது செய்யப்படுகிறது' என்ற எண்ணத்தை சவாலுக்கு உட்படுத்த முடிவு செய்தோம் , அப்படித்தான் தமிழ்நாட்டில் ஆசியாவின் முதல் 'ஆள்நுழைவில்லா எந்திரன்' யுனிபோஸ் (unibose) நிறுவனம் பிறந்தது.” கேள்வி : உங்கள் நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்கள் நான்கு பேரும் எப்படி ஒன்றிணைந்தீர்கள்? அவர்களை எந்தெந்தத் துறையில் எப்படி இணைக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியது? நான் மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO). நான் அடிப்படையில் ஒரு எம்.எஸ். வேதிப் பொறியாளர் (Chemical Engineer). நான் SSN கல்லூரியில் இளங்கலை (U.G), பிட்ஸ் பிலானியில் முதுகலை (P.G) முடித்தபின் எல்.என்.டி,யில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது நண்பர் சமயராஜ் துரைராஜ், அவர் என்னுடன் SSNல் வேதிப் பொறியியல் (Chemical Engineering) படித்தவர், . நாங்கள் படித்தக்காலத்திலியே நண்பர்கள்தான். எஸ்.எஸ்.என்,ல் படிக்கும்போதே ஆளில்லா விமானங்கள் (Drones), மிதவை வானூர்திகள் (Gliders) போன்றவற்றை பொழுதுபோக்காகச் செய்து கொண்டிருப்போம். அதோடு அது சார்ந்த போட்டிகளில் எல்லாம் பங்கேற்று வந்தோம். என்னுடன் L&Tயில் வேலை, மூத்த செயல்முறை ஆலோசகராக (Senior Process Consultant) எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) துறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நான் முதன்முதலில் இதைப் பார்க்கிறேன்; மனிதர்கள் இது போன்ற தொட்டிக்குள் (Tank) இறங்கி, அபாயகரமான பொருட்களை (Hazardous Substance) சுத்தம் செய்வது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, என் நண்பரிடம் இதுபற்றிப் பேசினேன். இந்தத் தயாரிப்பை (Product) உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு வந்தது. அப்படித்தான் நானும் சமயராஜும் ஒன்றாகச் சேர்ந்தோம். அதாவது, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். பிறகு, நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அதன் முன்மாதிரியை (Prototype) செய்து கொண்டிருந்தபோது, எங்களுக்கு நிறுவன செயல்பாடுகளில் சரியான நபர் தேவைபட்டார், அப்போது என்னுடன் எல் டி யில் பணியாற்றிய சக்திவேல் பன்னீர்செல்வம் நினைவுக்கு வந்தார் , ஒரு தயாரிப்பைச் செய்கிறோம், இதற்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் திறமையான ஒருவர் தேவை என்று நினைத்து, நான் சக்திவேலை அணுகினேன். அவரும் என்னுடன் L&Tயில் வேலை செய்தவர், என் நண்பரும்கூட. அவரை அணுகியபோது, அவருக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவரும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். பிறகு, ஒரு புதுதொழில் நிறுவனத்திற்கு (Startup) நிறைய சட்டரீதியான தேவைகளும் (Statutory Requirements) இருந்தன. இதை ஒரு பகுதியாகக் கையாள்வதற்கும், வணிக மேம்பாட்டை இணையாகச் செய்வதற்கும், அதே நேரத்தில் ஓரளவுக்கு நிதியையும் (Finance) கையாள்வதற்கும், எங்களுக்கு ஒரு நபர் தேவை என்று நினைத்தோம். அந்தக் கோணத்தில்தான் வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி வந்தார். அவர் என் தம்பி. அவர் தனியாகவே ஒரு புத்தொழில் நிறுவனத்தை (Startup) அப்போது நடத்திக் கொண்டிருந்தார், அதனால் அவரால்இதை செய்யக்கூடிய அறிவு இருந்தது. இப்போது நாங்கள் கீழ்கண்ட துறைகளை எங்களுக்குள் பிரித்து செய்து எங்கள் பணிகளை செய்து வருகின்றோம் சமயராஜ் துரைராஜ், இணை நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO), சக்திவேல் பன்னீர்செல்வம், இணை நிறுவனர் மற்றும் முதன்மை இயக்க அதிகாரி (COO), வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி, முதன்மை வணிக அதிகாரி (CBO), மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) இப்படித்தான் நாங்கள் நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்தோம். ``உங்கள் கண்டுபிடிப்புதான் இந்தியாவிலேயே 'ATEX Zone , 0' சான்றிதழைப் பெற்ற முதல் சாதனம். குறிப்பாக வெடிக்கும் அபாயம் உள்ள சூழல்கள் உட்பட அனைத்து நிலைமைகளுக்கும் பொருத்தமான ஒரு ரோபோவை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் யாவை?” ``உலகின் மிகவும் அபாயகரமான பகுதிகளுக்காக ஒரு ரோபோவை வடிவமைப்பது என்றால், 3,000 பாகங்கள் ஒன்றாக இயங்கும்போது ஒரு சிறு தீப்பொறி, அதிர்வு அல்லது உராய்வு வினை கூட ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திருகு, சீல் (seal) மற்றும் கம்பி கூட பாதுகாப்பிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. உலகளாவிய வெடிப்பு, தடுப்பு தரநிலைகளுக்கு இணங்க, அதை வலுவானதாகவும், நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் அயராது உழைத்தோம். Unibose-ன் இந்தச் சான்றிதழ் ஒரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல , இது உலகளாவிய பொறியியல் வரைபடத்தில் இந்தியாவின் முத்திரை. 'உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இங்கேயே எங்களால் உருவாக்க முடியும்' என்று நாங்கள் உலகிற்கு அறிவித்த தருணம் இது.” ``வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற ஆரம்ப கட்டத்தில் 'சேவையாக ரோபோ' (Robot as a Service , RaaS) முறையை வழங்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அதைப்பற்றி விளக்க முடியுமா? இத்தகைய அதிக ஆபத்துள்ள மற்றும் அபாயகரமான தொழில்துறையில், புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் சந்தைக்கு இருக்கும் தயக்கத்தை நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள்?” ``எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற தொழில்துறைகளில், மாற்றம் எளிதில் வராது, அது பலதரப்பட்ட துறைகளின் ஒருங்கணிடைப்பு, குறிப்பாக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அங்கே எந்த சமரசமும் ஏற்படாது. அதில் ஒருவேளை பணம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் 'எந்திரனே ஒரு சேவையாக' (RaaS) திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். வாடிக்கையாளர்களை விலையுயர்ந்த எந்திரன்களை வாங்கச் சொல்வதற்குப் பதிலாக, அதை அவர்கள் நேரடியாக அனுபவித்து அதன் செயல்பாட்டை பார்க்க அவர்களை உணர வைத்தோம். அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் , முன்பணம் இல்லை, ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பையும், வேகத்தையும், சேமிப்பையும் நேரில் கண்டவுடன், தயக்கம் மறைந்துவிடும். இது வாக்குறுதிகளால் அல்ல, செயல்பாட்டின் முடிவுகளால் நம்பிக்கையை வெல்வது பற்றியது.” ``நீங்கள் உலகளாவிய நிறுவனங்களான ஜெரோட்டோ (Gerotto) மற்றும் காக்ஸ் (Koks) போன்றவற்றுடன் போட்டியிடுகிறீர்கள். உங்கள் ரோபோ கணிசமாகக் குறைந்த விலை என்றும் குறிப்பிட்டீர்கள். ATEX போன்ற உயர் பாதுகாப்புத் தரங்களில் சமரசம் செய்யாமல் இந்த குறைந்த செலவை எப்படி சாத்தியமாக்கினீர்கள்?” ``ATEX சான்றிதழ் பெற்றுள்ளது என்றால், அது அத்தகைய வெடிக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பாகச் செயல்பட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, கடுமையான சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அர்த்தம். அந்தச் சாதனம் எந்த வகையிலும் தீப்பொறியை ஏற்படுத்தாது அல்லது விபத்துக்குக் காரணமாக அமையாது என்பதற்கு இது ஒரு உத்தரவாதமாகும். இது உலகளவில் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாறாக, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை (products) இந்த உயர் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைத்து, தயாரித்து, பின்னர் ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட அமைப்புகளிடம் (Notified Bodies) கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்களின் தயாரிப்புகளுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும் . இது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் அதன் உருவாக்கம் சற்று கடினமானது. எனவே முதல் நாளிலிருந்தே எங்கள் நோக்கம் எளிமையானது , தொழில்நுட்பம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது விலை காரணமாக பூட்டி வைக்கப்படக் கூடாது. அதனால் நாங்கள் எல்லாவற்றையும் நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்கினோம், உள்நாட்டிலேயே பொருட்களை வாங்கினோம், மற்றும் சிக்கன உற்பத்தி (lean manufacturing) கோட்பாடுகளைப் பின்பற்றினோம். வெளிநாட்டு விற்பனையாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்ததன் மூலம், சர்வதேசத் தரத்தில் ஆனால் இந்திய யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு தயாரிப்பை நாங்கள் உருவாக்கினோம். பிறகு ATEX சான்றிதழ் பெற்றோம். இதனால் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் , தமிழ்நாட்டில் பிறந்தது, உலகிற்காக உருவாக்கப்பட்டது. அபாயகரமான இடங்களில் மனிதர்களின் நுழைவை நிறுத்தியது.” ``ATEX சான்றிதழ் பெற்ற கேமரா மற்றும் விளக்கு போன்ற முக்கிய கூறுகளை நீங்களே உள்நாட்டிலேயே உருவாக்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அந்தப் பாகங்களை வெளியில் இருந்து வாங்குவதற்குப் பதிலாக நீங்களே உருவாக்க ஏன் முடிவு செய்தீர்கள்? அது என்ன சவால்களை உருவாக்கியது?” ``தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாட்டிலிருந்துதான் உண்மையான சுதந்திரம் வருகிறது. இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளைச் சார்ந்திருப்பது புதுமையைப் மட்டுப்படுத்தியது மற்றும் செலவுகளை அதிகரித்தது. எங்கள் சொந்த கேமரா மற்றும் விளக்கு அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்தது , வேகமாகப் புதுமைகளைப் புகுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், எங்கள் ரோபோவின் ஒவ்வொரு பகுதியும் ATEX Zone,0 பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் முடிந்தது. இது ஒரு நீண்ட, செலவுமிக்க செயல்முறை, ஆனால் இது யூனிபோஸின் (Unibose) எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கான எங்களின் முதுகெலும்பாக கட்டமைத்தது. எங்களாலேயே முடியுமென்றால் எல்லாராலும் இது முடியும்தானே. ``இதுவரையிலான உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த மிகவும் சவாலான ஒற்றை அம்சம் என்ன, அதை எப்படி சமாளித்தீர்கள்? ``இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு பெரிய ஒன்றை எங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பதுதான். சந்தேகம் உண்மையானது , இத்தகைய தொழில்நுட்பம் ஐரோப்பாவிலிருந்து மட்டுமே வர முடியும் என்று பலர் நம்பினர். ஆனால் நாங்கள் அதைத் தொடர்ந்து நிரூபித்தோம். ஒவ்வொரு பின்னடைவும் கற்றலின் ஒரு புதிய அத்தியாயமாக மாறியது. மேலும் ஒவ்வொரு சிறிய வெற்றியும் பெரிதாகச் சாதிக்க எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது. இது ஒரு தயாரிப்பின் பயணம் மட்டுமல்ல, இது ஒரு உணர்ச்சிகரமான பயணம் , அவநம்பிக்கையை பெருமையாக மாற்றுவது. ``இந்த தயாரிப்பு, கழிவுநீர்த் தொட்டிகளை (sewer manholes) சுத்தம் செய்வதையும், துப்புரவு செயல்முறைகளையும் ஒரு சாத்தியமான பயன்பாடாகக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் (manual scavenging) முறையை ஒழிக்க உதவுவதற்கு உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியமான வாய்ப்பை நீங்கள் காண்கிறீர்களா? ``நிச்சயமாக. எங்கள் பார்வை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கும் அப்பாற்பட்டது. கழிவுநீர் மற்றும் ஆள்நுழைத் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான சிறப்பு அமைப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது இறுதியாக கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்கும். ஒவ்வொரு மனிதனும் வேலையில் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தகுதியானவன். எங்கள் தொழில்நுட்பம் அதை யதார்த்தமாக்க உதவினால், அதுவே எங்களுக்குக் கிடைக்கும் மிகவும் அர்த்தமுள்ள வெற்றியாக இருக்கும். ஒன்றை நாங்கள் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். சமூகத்தின் பிரச்னைகளை தீர்வு காண்பதில் நாங்கள் செயல்படுகின்றோம், எதிர்காலத்திலும் செயல்படுவோம்.” ``தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மூலம் நீங்கள் 2.5 கோடி ரூபாய் திரட்டியுள்ளீர்கள். இந்த ஆரம்பகட்ட அரசாங்க நிதியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்? தனியார் துணிகர முதலீட்டாளர்களிடம் (VCs) நிதி திரட்டுவதிலிருந்து இந்த செயல்முறை எவ்வாறு வேறுபட்டது, மேலும் இது மிகவும் நேரடியானதாக இருந்ததா?” ‘ `` ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) அமைப்பு, டான்சிம் (TANSIM) அனுபவம் எங்களுக்கு ஆச்சர்யமளித்தது. அவர்களின் செயல்முறை மிகவும் தொழில்முறையாகவும், வெளிப்படையானதாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் இருந்தது. அவர்கள் எங்களுக்கு நிதி மட்டும் அளிக்கவில்லை, எங்கள் இலக்கைப் புரிந்து கொண்டார்கள், எங்கள் வணிக மாதிரியைச் செம்மைப்படுத்த எங்களுக்குச் சவால் விடுத்தார்கள், மேலும் வழிகாட்டிகளாக எங்கள் அருகில் இப்போதும் நிற்கிறார்கள். deep tech புத்தாக்கத்தின் அடுத்த அலைக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும் ஒரு கூட்டாளிதான் ஸ்டார்அப் தமிழ்நாடு. “ `` GITEX மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றிலிருந்து நீங்கள் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளீர்கள். எந்தவொரு பரிசுத் தொகையையும் தாண்டி, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியையும் நம்பகத்தன்மையையும் கட்டியெழுப்புவதில் இந்த அங்கீகாரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?” ``deep,tech ஸ்டார்ட்அப்பிற்கு, விற்பனை மூலம் உடனடி அங்கீகாரம் கிடைக்காது. அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரமே உங்கள் எரிபொருளாக மாறுகிறது. GITEX அல்லது இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் உங்கள் வேலையைப் பாராட்டும்போது, உலகமே கவனிக்கும் ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதற்கு அது ஒரு சக்திவாய்ந்த அறிவிப்பாக இருக்கும். விருதுகள் எங்கள் அலமாரியை மட்டும் அலங்கரிக்கவில்லை, நாங்கள் சரியான பாதையில் நடக்கிறோம் என்ற எங்கள் நம்பிக்கையை அவை வலுப்படுத்துகின்றன.” ``உங்கள் கண்டுபிடிப்பு தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் ஆழமான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. deep,tech, எந்திரன் மற்றும் அதற்கான வன்பொருள் (hardware) போன்ற துறைகளில் நீண்ட கால வளர்ச்சி தேவைப்படும் , எனவே அத்துறைகளில் உள்ள மற்ற ஸ்டார்ட்அப்களுக்கு, உத்வேகத்துடன் இருக்கவும் சரியான ஆதரவைக் கண்டறியவும் நீங்கள் வழங்கும் மிக முக்கியமான ஒற்றை அறிவுரை என்ன?” ``உத்வேகம் நமக்கு ஆற்றலைத் தருகிறது, ஆனால் ஒழுக்கமும் நிலைத்தன்மையும்தான் (consistency) நம்மை முன்னோக்கி நகர்த்துகின்றன. ஆழ்நிலை தொழில்நுட்பத் துறையில், காரியங்கள் நடக்க நேரம் எடுக்கும் , முன்னேற்றம் பெரும்பாலும் மெதுவாகத் தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியமானது. உண்மையான தாக்கம் ஒரே இரவில் கட்டமைக்கப்படுவதில்லை என்பதை எங்களுக்கு நாங்களே நினைவூட்டிக் கொள்கிறோம். யதார்த்தத்தில் காலூன்றி நிற்பது, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வது, ஒரு நோக்கத்துடன் செயல்படுவது, இதுவே எங்களை இயங்க வைக்கிறது.” StartupTN ஸ்டார்ட்அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கான தமிழக அரசின் StartupTN நிறுவனமும், யுனிபோஸ் நிறுவனத்திற்கு நிதி மற்றும் சந்தைக்கான ஆலோசனைகளையும் கொடுத்துவழிகாட்டிவருகிறது கூடுதலாக, யுனிபோஸ் நிறுவனம் StartupTN-இன் 'பெரியார் சமூகநீதி தொழில்வளர் மையத்தின் (Periyar Social Justice Venture Lab) பிரத்யேக ஆதரவையும் பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், குறிப்பாகசர்வதேச சந்தைகளுக்கு விரிவடைவதற்கு இந்த ஆய்வகம் முக்கியப் பங்காற்றிவருகிறது. குறிப்பாக, ஸ்டார்ட்அப் சூழமைப்பில் (startup ecosystem) தமிழகம் வளர்ந்து வருகிறது. (சாகசம் தொடரும்..)
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜியத்தில்?|InDepth
அனில் அம்பானி சில ஆண்டுகளாக அதிகம் கேட்கப்படாத... உச்சரிக்கப்படாத பெயர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியுள்ளது. பாகப்பிரிவினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் ஆணிவேரான திருபாய் அம்பானியின் மகன்கள் ஆசியாவின் தற்போதைய டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி. 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானியின் இறப்பிற்கு பிறகு, 2005-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே பாகப்பிரிவினை செய்து வைக்கப்பட்டது. இந்தப் பாகப்பிரிவினையில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் ரிலையன்ஸ் கட்டமைப்பு அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டது. அனில் அம்பானி LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained அனில் அம்பானி - பயணமும், சாதனைகளும் ரிலையன்ஸ் குழுமத்தை நடத்த தொடங்கிய அனில் அம்பானி, குறுகிய காலகட்டத்திலேயே பல பல உச்சங்களை தொட தொடங்கினார். 2004-ம் ஆண்டு, அனில் அம்பானியின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது தான் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அப்போதைய சூப்பர் ஸ்டார். கால் பதித்த இடங்களில் எல்லாம் அவருக்கு வெற்றி தான்... 2008-ம் ஆண்டு, அனில் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸ் பவரின் ஐ.பி.ஓக்கள் வெறும் அறுபதே நொடிகளில் விற்று தீர்ந்தன. இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை வெற்றி ஆகும். அதே ஆண்டு, அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி அடைய, உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற பெருமையையும் பெற்றார். ரிலையன்ஸ் தொழிற்சாலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து 2 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம், வெளிநாட்டு சந்தை கதவுகளை இந்தியாவிற்கு திறந்து வைத்ததில் அனில் அம்பானிக்கு முக்கிய பங்கு உண்டு. சறுக்கல் தொடங்கியது எங்கே? அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வந்த அனில் அம்பானியின் சரிவு, 2008-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கியது. அதுவும் தன் அண்ணனான முகேஷ் அம்பானியாலே தொடங்கியது. இதற்கு முன்பும், சில பிரச்னைகளையும், சிக்கல்களையும் அனில் அம்பானி சந்தித்து இருந்தாலும், இது தான் அவர் சந்தித்த முதல் மிகப்பெரிய பிரச்னை. ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் தனக்கான பங்குகளை கோரினார் முகேஷ் அம்பானி. இதனால், அனில் அம்பானி தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் நிறுவனத்துடன் தன்னுடைய ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் போடவிருந்த இணைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அடுத்ததாக, 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை, ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இயற்கை வளம் இடையிலான எரிவாயு சப்ளை குறித்து முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு இடையே வழக்கு நடந்தது. அதில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. கடன் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா? தலைமை பொறுப்பு ஏற்ற சில ஆண்டுகளிலேயே உலகின் டாப் பணக்காரர் என்கிற பெயரை பெற்ற அனில் அம்பானி, இதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக சரிவுகளை சந்திக்க தொடங்கினார். 2013-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே 200 மில்லியன் மதிப்பிலான தொலைதொடர்பு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால், அண்ணன், தம்பி இடையே இருந்த மனகசப்பு சரியாகிவிட்டது என்று பரவலாக நினைக்கப்பட்டது. இருந்தும், இந்த ஒப்பந்தம் ஒன்றும் இருவருக்கும் இடையே அவ்வளவாக உறவை ஏற்படுத்தி விடவில்லை. 2014-ம் ஆண்டு, அனில் அம்பானியின் பவர் மற்று கட்டமைப்பு நிறுவனம் கடன் பிரச்னையை சந்திக்க தொடங்கியது. இதை கடன் பிரச்னை என்று கூறுவதை விட, கடன் சுமை என்று கூறுவது தான் சரியானது. கடன்... திவால்... அடுத்த அ(இ)டி விழுந்தது ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் ரிலையன்ஸ் கடல் பொறியியல் நிறுவனத்திற்கு. இந்த இரண்டு நிறுவனங்களும் 2015 - 2017 காலகட்டங்களில் திவால் நடவடிக்கைகளை சந்தித்தன. 2017-ம் ஆண்டு, நிறுவனங்களை லாப பாதைக்கு கொண்டு செல்ல, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் டேனா வங்கியிடம் இருந்து ரூ.250 கோடி கடன் வாங்கியது. ஆனால், இந்தக் கடன் பல ஆண்டுகளுக்கு அடைக்கப்படாமலேயே இருந்தது. 2018-ம் ஆண்டு, கடன் சுமை தாங்காமல், அதைக் கொஞ்சமாவது குறைக்கலாம் என்று முடிவெடுத்தார் அனில் அம்பானி. அதையடுத்து, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனத்தின் ரூ.25,000 கோடி தொலைதொடர்பு சொத்துகளை விற்க முடிவு செய்தார். இந்தச் சொத்துகளை அவரது அண்ணனான முகேஷ் அம்பானியே வாங்கினார். அனில் அம்பானி `சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா? 2019-ம் ஆண்டு, வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்தித்தார் அனில் அம்பானி. அப்போது அவரை கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருந்தது. 2020-ம் ஆண்டு அனில் அம்பானி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த பெர்சனல் கேரண்டியை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான திவாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 2021-ம் ஆண்டு, ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு எதிராக திவால் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செபியின் தடை 2022-ம் ஆண்டு, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிர்வாகிகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தவொரு நிறுவனங்களுடன் இணையவும், அதன் இயக்குநர்களாக செயல்படவும் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, அனில் அம்பானி ரிலையன்ஸ் கட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனங்களில் இருந்து இயக்குநர் பதவிகளில் இருந்து விலகினார். 2024-ம் ஆண்டு, ரிலையன்ஸ் வீட்டு நிதி நிறுவனத்தின் நிதிகளை வேறு நிறுவனங்களில் பயன்படுத்தியதால், அனில் அம்பானி மற்றும் அவரது 24 நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகால தடை விதித்தது செபி. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தடையினால், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு, பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடவும், வாங்கவும் அனில் அம்பானியால் முடியாது. செபி தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா? ஏன் இந்த சரிவு? ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற இடத்தையும், ஐ.பி.ஓ வெளியிட்ட 60 நொடிகளில் மொத்தமும் விற்பனை என்கிற சாதனையையும் பெற்ற அனில் அம்பானியின் சரிவிற்கான காரணங்கள்... அனில் அம்பானி தனது சாம்ராஜ்ஜியத்தை தொடர் கடன்களினால் தான் கட்டமைத்து வந்தார். இதனால், அவருக்கு வந்த லாபங்களும், கொட்டிய பணமும் இந்தக் கடனையும் அடைக்கவும், அதற்கான வட்டியை கொடுக்கவுமே சரியாக இருந்தது. அடுத்ததாக, எந்தவொரு அனுபவமும் இல்லாமல் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் கால் பதித்து வந்தார். உலகின் உள்ள பல பணக்கார சாம்ராஜ்ஜியங்கள் ஒரு சில துறைகளின் மீது தான் கட்டப்பட்டிருக்கும். அதில் அவர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும். ஆனால், இதற்கு நேர் மாறாக நடந்துகொண்டார் அனில் அம்பானி. அனில் அம்பானி புதிது புதிதாக கொண்டு வந்த திட்டங்களுக்கு தாமதமாக கிடைத்த ஒப்புதல்கள், சந்தித்த வழக்குகள் போன்றவைகளால் அவருக்கு வருமானம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வருமானம் வரவில்லை என்றாலும், அவர் ஆரம்பித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, செயல்பாட்டில் வைத்திருக்க காசு செலவளித்து தானே ஆக வேண்டும். ஒரு காலத்தில் தொலைதொடர்புகளில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் இல்லாமல் தள்ளாட தொடங்கின. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் சரியான நிதி மேலாண்மை இல்லை. தொடர்ந்து சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்தித்துக்கொண்டே வந்தார் அனில் அம்பானி. அனில் அம்பானி விலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&A மீண்டும் ஏன் எழவில்லை? பிசினஸ்மேன் சரிவதும், எழுவதும் வெகு இயல்பான ஒன்று தான். ஆனால், அனில் அம்பானியால் மீண்டும் எழ முடியாததற்கு மேலே கூறியவை தான் காரணங்கள். கடன், அவர் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மை, வழக்குகள் போன்றவை அவரை மீண்டும் எழவிடவில்லை. அவர் பிசினஸ்களில் கலக்கி கொண்டிருந்த காலத்தில் சக போட்டியாளர்களாக இருந்தவர்கள், இப்போதே பெரிய பெரிய உச்சங்களைத் தொட்டுவிட்டனர். இப்போது அவரால் அவர்களுடன் கட்டாயம் போட்டி போட முடியாது. இப்போது என்ன பிரச்னை? ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவருக்கு அவருடைய ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்து பிரச்னை வந்திருக்கிறது. இப்போது வந்திருப்பதோ, அவருடைய 'ராகாஸ்' நிறுவனத்தால். இந்த நிறுவனத்திற்காக, இவருக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி முன்பு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை அனில் அம்பானி சட்டத்திற்கு புறம்பாக அவருடைய பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளார். மேலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். Cobrapost என்னும் விசாரணை இணையதளம், 2006-ம் ஆண்டில் இருந்து அனில் அம்பானி கிட்டத்தட்ட ரூ.41,000 கோடி நிதிகளை சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய பிற நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மாற்றியுள்ளார் என்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது ரிலையன்ஸ் குழுமம். இது குறித்த விசாரணையின் போது, அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானி வங்கிக் கடன்... வட்டியைக் குறைக்க இதுதான் சரியான நேரம்! இதையடுத்து, அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பின்னர், அனில் அம்பானி அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியும் விளக்கமளித்தார். சமீபத்தில், இவருடைய உதவியாளர் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகளையும் முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. இன்னும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.!
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபரில் சேவை துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 C