SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

'இன்றைய இளவரசி' - பண்டிகைக்கால சலுகைகள் அறிமுகம் செய்யும் பிரின்ஸ் ஜுவல்லரி!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட தருணம் இது. ஆவலுடன் எதிர்பார்க்கும் பொங்கல் பண்டிகையும் சில நாட்களில்  வர உள்ளதால், பிரின்ஸ் ஜுவல்லரி, வரிசையாக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்குவதுடன் 'இன்றைய இளவரசி' என்ற தலைப்பில் ஒரு புதிய பிராண்ட் கேம்பனையும்  அறிமுகம் செய்கிறது.  இந்த பிராண்ட் என்பது மதிப்பும் கைவினை டிசைனின் நேர்த்தியும் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ? பிரின்ஸ் ஜுவல்லரி இன்றைய இளவரசி - பாரம்பரிய வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் அணிவகுப்பு  இந்த ஆண்டின் பண்டிகைக் கால கலக்‌ஷனில் தென் இந்திய ஆலயக் கலையின் படியும் நவீன காலத்திற்கு ஏற்றவாறும் இன்றைய பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெக்லஸ், தோடு, வங்கி, வளையல் என்று ஒவ்வொரு ஆபரணமும் அணிவதில் கம்பீரத்தை அளிக்கும். நவீனமாகவும்  லேசானதாகவும் உணர வைக்கும்.  பாரம்பரிய வேலைப்பாட்டை பிரதிபலிக்கிற இந்த ஆபரணங்கள் மகளிரை  வசீகரிக்கும். புதிதாக முகூர்த்தம் கலக்‌ஷனில் சேர்க்கப்பட்டுள்ள நகைகளில் பல புதுமையான ஆபரணங்களை  நீங்கள் காணலாம். காலத்தை வென்ற பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் உள்ளடக்கிய  இந்த ஆபரணங்களில்  திருமண வேளையில் மணமகள் அணியவும் பிற விசேஷங்களுக்கும் அணிவதற்கு உரியவை. புனித  சடங்குகளில் அணிவதற்கு மட்டுமல்லாமல் பிற கொண்டாட்டங்களின் போதும் பெருமையுடன் அணிந்து செல்லவும் இவை உகந்தவை.  பிரின்சஸ் ஆப் டுடே என்னும் இன்றைய இளவரசி தொகுப்பில் பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த ஆபரணங்கள் அதிக அளவில் பெற்றுள்ளன.  பிரின்ஸ் ஜுவல்லரி மேலும் மேலும் மிளிரச்  செய்யும் பண்டிகை கால ஆபர்கள்  சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள், குறுகிய கால சலுகைகளை பெறலாம். சலுகை - அனைத்து தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 6 % V.A மட்டுமே. வெள்ளிப் பொருட்களுக்கு - 0 % V.A வைர நகைகளுக்கு - காரட் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை தள்ளுபடி பழைய தங்கத்திற்கு புதிய BIS ஹால்மார்க் டிசைன்களைப் பெறலாம்.  இன்றைய பெண்மணிகளின் கொண்டாட்ட மனப்பான்மைக்கு உகந்த பிரிமியம் என்கிற சிறப்பு கொண்ட வேலைப்பாடுகள் கொண்ட எங்கள் கலக்‌ஷன் மற்றும் சலுகைகளை மகளிருக்கு இந்த பண்டிகை கால தருணத்தில் நாங்கள் அளிக்கிறோம். இந்த கலக்‌ஷனை அறிமுகம் செய்து பேசுகையில் பிரின்ஸ் ஜுவல்லரி இயக்குநர் ஜோசப் பிரின்ஸ் கூறியதாவது, “ கம்பீரத்துடனும் தன்னம்பிக்கையடனும் நடை போடும் நமது பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமான நகைத் தொகுப்புடன்  கூடிய  இன்றைய இளவரசி என்பது  கேம்பைன்  மட்டும் அல்லாமல் பெண்மையைப் போற்றும் எங்கள் உளமார்ந்த செயலும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் ஜுவல்லரி மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான தருணம் இது அல்லவா? கிறிஸ்துமஸ், புத்தாண்டு அதன் பின்னர் பொங்கல் என்பதாக குடும்பங்களுக்கான கொண்டாட்டப் பொழுதுகள் அடுத்தடுத்து உள்ள இந்த மங்கலமான தருண்களில் பிரின்ஸ் ஜுவல்லரி , பாரம்பரியத்தைப் போற்றும் கலக்‌ஷன்களுடன், மேலும் பலவித சலுகைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த காலத்தில் பெண்கள், தங்கள் இயற்கை அழக்குக்கு மேலும் அழகூட்டும் ஆபரணங்களை வாங்கி மகிழ உறுதுணை புரிகிறது.  நீங்காத நினைவுகளாய் இருக்கப் போகிற மகிழ்ச்சித் தருணங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள நாங்கள் நேர்த்தியான பல வகை ஆபரண அணி வகுப்புடன் காத்திருக்கிறோம். பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோருக்கு வாருங்கள். பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த பொன் நகைகள், உங்கள் ஆளுமையை சிறக்கச் செய்யட்டும்.

விகடன் 9 Jan 2026 6:00 pm

'இன்றைய இளவரசி' - பண்டிகைக்கால சலுகைகள் அறிமுகம் செய்யும் பிரின்ஸ் ஜுவல்லரி!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட தருணம் இது. ஆவலுடன் எதிர்பார்க்கும் பொங்கல் பண்டிகையும் சில நாட்களில்  வர உள்ளதால், பிரின்ஸ் ஜுவல்லரி, வரிசையாக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்குவதுடன் 'இன்றைய இளவரசி' என்ற தலைப்பில் ஒரு புதிய பிராண்ட் கேம்பனையும்  அறிமுகம் செய்கிறது.  இந்த பிராண்ட் என்பது மதிப்பும் கைவினை டிசைனின் நேர்த்தியும் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ? பிரின்ஸ் ஜுவல்லரி இன்றைய இளவரசி - பாரம்பரிய வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் அணிவகுப்பு  இந்த ஆண்டின் பண்டிகைக் கால கலக்‌ஷனில் தென் இந்திய ஆலயக் கலையின் படியும் நவீன காலத்திற்கு ஏற்றவாறும் இன்றைய பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெக்லஸ், தோடு, வங்கி, வளையல் என்று ஒவ்வொரு ஆபரணமும் அணிவதில் கம்பீரத்தை அளிக்கும். நவீனமாகவும்  லேசானதாகவும் உணர வைக்கும்.  பாரம்பரிய வேலைப்பாட்டை பிரதிபலிக்கிற இந்த ஆபரணங்கள் மகளிரை  வசீகரிக்கும். புதிதாக முகூர்த்தம் கலக்‌ஷனில் சேர்க்கப்பட்டுள்ள நகைகளில் பல புதுமையான ஆபரணங்களை  நீங்கள் காணலாம். காலத்தை வென்ற பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் உள்ளடக்கிய  இந்த ஆபரணங்களில்  திருமண வேளையில் மணமகள் அணியவும் பிற விசேஷங்களுக்கும் அணிவதற்கு உரியவை. புனித  சடங்குகளில் அணிவதற்கு மட்டுமல்லாமல் பிற கொண்டாட்டங்களின் போதும் பெருமையுடன் அணிந்து செல்லவும் இவை உகந்தவை.  பிரின்சஸ் ஆப் டுடே என்னும் இன்றைய இளவரசி தொகுப்பில் பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த ஆபரணங்கள் அதிக அளவில் பெற்றுள்ளன.  பிரின்ஸ் ஜுவல்லரி மேலும் மேலும் மிளிரச்  செய்யும் பண்டிகை கால ஆபர்கள்  சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள், குறுகிய கால சலுகைகளை பெறலாம். சலுகை - அனைத்து தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 6 % V.A மட்டுமே. வெள்ளிப் பொருட்களுக்கு - 0 % V.A வைர நகைகளுக்கு - காரட் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை தள்ளுபடி பழைய தங்கத்திற்கு புதிய BIS ஹால்மார்க் டிசைன்களைப் பெறலாம்.  இன்றைய பெண்மணிகளின் கொண்டாட்ட மனப்பான்மைக்கு உகந்த பிரிமியம் என்கிற சிறப்பு கொண்ட வேலைப்பாடுகள் கொண்ட எங்கள் கலக்‌ஷன் மற்றும் சலுகைகளை மகளிருக்கு இந்த பண்டிகை கால தருணத்தில் நாங்கள் அளிக்கிறோம். இந்த கலக்‌ஷனை அறிமுகம் செய்து பேசுகையில் பிரின்ஸ் ஜுவல்லரி இயக்குநர் ஜோசப் பிரின்ஸ் கூறியதாவது, “ கம்பீரத்துடனும் தன்னம்பிக்கையடனும் நடை போடும் நமது பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமான நகைத் தொகுப்புடன்  கூடிய  இன்றைய இளவரசி என்பது  கேம்பைன்  மட்டும் அல்லாமல் பெண்மையைப் போற்றும் எங்கள் உளமார்ந்த செயலும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் ஜுவல்லரி மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான தருணம் இது அல்லவா? கிறிஸ்துமஸ், புத்தாண்டு அதன் பின்னர் பொங்கல் என்பதாக குடும்பங்களுக்கான கொண்டாட்டப் பொழுதுகள் அடுத்தடுத்து உள்ள இந்த மங்கலமான தருண்களில் பிரின்ஸ் ஜுவல்லரி , பாரம்பரியத்தைப் போற்றும் கலக்‌ஷன்களுடன், மேலும் பலவித சலுகைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த காலத்தில் பெண்கள், தங்கள் இயற்கை அழக்குக்கு மேலும் அழகூட்டும் ஆபரணங்களை வாங்கி மகிழ உறுதுணை புரிகிறது.  நீங்காத நினைவுகளாய் இருக்கப் போகிற மகிழ்ச்சித் தருணங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள நாங்கள் நேர்த்தியான பல வகை ஆபரண அணி வகுப்புடன் காத்திருக்கிறோம். பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோருக்கு வாருங்கள். பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த பொன் நகைகள், உங்கள் ஆளுமையை சிறக்கச் செய்யட்டும்.

விகடன் 9 Jan 2026 6:00 pm

Yubi குரூப் உடன் கைக்கோர்க்கும் DRA ஹோம்ஸ்!

குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் முதன்மை வகிக்கும் சென்னையைச் சேர்ந்த DRA ஹோம்ஸ், நிதி சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவால் (AI) முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே  இயங்குதளமாகத் திகழும் யுபி ( Yubi ) குரூப்புடன் ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் குடியிருப்பு வளாகத் திட்டங்களுக்காக நிலம் வாங்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், ₹250 கோடி மதிப்பிலான பாதுகாப்பான நிதித் தளத்தை உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.  DRA ஹோம்ஸ் இந்த நிதித் தளமானது பாதுகாக்கப்பட்ட  'மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்' (NCDs)  மூலம் கட்டமைக்கப்படும். இந்த நிதி, நிலம் வாங்குவதற்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும். மூலதனச் சந்தைகளை அணுகவும்,  UHNIs, HNIs, குடும்ப அலுவலகங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையினத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் அளவை உயர்த்தக்கூடிய  ஒரு கட்டமைப்பின் வழியாக நிதி திரட்டவும்  DRA  நிறுவனத்திற்கு செபி அங்கீகாரம் பெற்ற ஆன்லைன் பத்திரத் தளமான (OBPP)  அஸ்பெரோ ( Aspero )  உதவும். யுபி குரூப் தனது ஒருங்கிணைந்த மூலதனச் சந்தை தொழில்நுட்பம் மற்றும் பரந்த முதலீட்டாளர் வலைப்பின்னல் மூலம் இந்த NCD-களின் கட்டமைப்பு, வெளியீடு மற்றும் விநியோகத்தை முன்னெடுக்கும். விதிமுறைகளுக்கு இணக்கநிலை மற்றும் நிகழ்நேர அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு அணுகுவசதி ஆகிய அம்சங்கள் மூலம் விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், திட்டமிடப்பட்டுள்ள இந்த நிதியை DRA நிறுவனம் திரட்டுவதற்கு இக்கூட்டாண்மை உதவும்.  சென்னையின் குடியிருப்பு வகையின ரியல் எஸ்டேட் துறையில் இந்தத் கூட்டுவகிப்பு நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது.  இது பாரம்பரிய நிதி முறைகளிலிருந்து மாறி, வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி கட்டமைப்பை நோக்கி ரியல் எஸ்டேட் துறையின் நகர்வைக் காட்டுகிறது.  இந்த வளர்ச்சி குறித்து  DRA ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திரு. ரஞ்சித் ரத்தோடு  கூறுகையில்: சென்னை மாநகரம் எப்போதும் எங்களின் பெருமைக்குரிய சந்தையாக இருந்து வருகிறது. வீடு வாங்குபவர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நீண்டகால மதிப்பை வழங்குவதற்கு முறையான நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை அவசியம். யுபி குரூப் உடனான இந்தக் கூட்டணி, பாதுகாப்பான மூலதனத்தின் மூலம் நிலம் வாங்கும் நடவடிக்கையை திட்டமிடும் எமது திறனை மேலும் வலுப்படுத்தும்; நிதிசார் விவேகத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இது வழிவகுக்கும். என்று கூறினார்.  ரஞ்சித் ரத்தோடு யுபி குரூப் நிறுவனரும் தலைமை செயலாக்க அதிகாரியுமான திரு. கௌரவ் குமார்  கூறுகையில்: இந்தியாவின் மிகவும் நிலையான குடியிருப்பு சந்தைகளில் ஒன்றாக சென்னை தொடர்ந்து நீடிக்கிறது. DRA ஹோம்ஸ் உடன் நாங்கள்  கூட்டாக இணைந்திருப்பது பாதுகாப்பான ரியல் எஸ்டேட் கடன் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்று பலன் பெற வாய்ப்பளிக்கிறது. அதே சமயம், சிறந்த செயல்பாட்டுத் திறனும், மூலதனத்தைப் பயன்படுத்துவதில் ஒழுங்கு கட்டுப்பாட்டையும் கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமான DRA - க்கு இது ஆதரவளிக்கும். என்றார். நிதி திரட்டலுக்கான இந்த தளமானது DRA ஹோம்ஸ் நிறுவனத்திற்கு நிலம் வாங்கும் காலகட்டத்தில் தேவையான நிதி வசதியை தயார்நிலையை வழங்குவதோடு, நில உரிமையாளர்களுடன் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உதவும். முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, சென்னையின் வளர்ந்து வரும் வீட்டுவசதி  தேவையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான முதலீட்டு செய்வதற்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் நிதித்துறை எத்தகைய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தற்போது பெற்று வருகிறது என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரியல் எஸ்டேட்  மேம்பாட்டாளர்கள் முறைசாரா நிதி வசதியைப் பெறும் கடந்தகால வழக்கத்திலிருந்து விடுபட்டு வருவதையும் மற்றும் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சிக்கு வித்திடும் வெளிப்படையான, சந்தை சார்ந்த நிதி கட்டமைப்புகளை நோக்கி நகர்வதையும் இது உறுதிப்படுத்துகிறது என்று பேசியிருக்கிறார். DRA  பற்றி:  40 ஆண்டுகள் என்ற செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் டிஆர்ஏ, சென்னை எங்கும் உலகத் தரத்திலான செயல்திட்டங்களை வழங்கி ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது.  12,000 – க்கும் அதிகமான எண்ணிக்கையில் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் டிஆர்ஏ, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நேரத்திற்குள் டெலிவரி என்ற அதன் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது.  டிஆர்ஏ – ன் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் ரத்தோட் அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ், அபார்ட்மென்ட்களை கட்டுவது என்பதையும் கடந்து, வாடிக்கையாளர்களுக்கு “பெருமை மிகு இல்லங்களை” வழங்கி வருகிறோம். சாதித்த உணர்வையும் மற்றும் நமது வீடு என்ற உணர்வையும் வழங்கி, சிறப்பான லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற வாழ்விட அமைவிடங்களை நேர்த்தியான சிந்தனையோடு வடிவமைத்து நாங்கள் வழங்கி வருகிறோம்.  குடியிருப்பு வளாக செயல்திட்டம் மீதான நிகழ்நிலைத் தகவலுக்கு ‘டைம்லைன் மீட்டர்’ மற்றும் ‘கஸ்டமர் டிலைட் மீட்டர்’  போன்றவை வாடிக்கையாளர் திருப்தி மீது கொண்டிருக்கும் எமது அக்கறையைப் பிரதிபலிக்கின்றன; புராஜெக்ட் விவரங்களுக்கும் மற்றும் ஆவண செயல்பாடுகளுக்கும் எளிதான அணுகுவசதியை இதன் ஆன்லைன் வாடிக்கையாளர் இணையவாசல் உறுதி செய்கிறது.  டிஆர்ஏ பிரிஸ்டின் பெவிலியன், டக்ஸிடோ, அஸ்காட், ஸ்லைலான்டிஸ், எலிட், இன்ஃபினிக் மற்றும் போன்ற புராஜெக்ட்களும் நவீனத்துவத்தோடு  மதிப்பை உயர்த்துகின்ற முதலீடுகளுடன் ஒருங்கிணைப்பதில் டிஆர்ஏ – ன் பொறுப்புறுதியை எடுத்துக்காட்டுகிறது.  FICCI – ன் ரெய்சா மற்றும் டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் போன்ற சிறப்பான விருதுகளின் அங்கீகாரம் பெற்ற டிஆர்ஏ, கிரிஸில் – ன் 7 நட்சத்திர தரநிலையைப் பெற்றிருக்கின்ற சென்னையில் முதல் டெவலப்பர் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது.  இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்புகளில் குளம் போன்ற நீர்நிலைகளின் சீரமைப்பும் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கும். சமூகத்தின் நலன் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை முன்னிலைப்படுத்துவதாக இவைகள் இருக்கின்றன. “காலத்தைக் கடந்து நிற்கும் இல்லம்”, “உரிய நேரத்திற்குள் டெலிவரி”  என்ற தனது விருதுவாக்கை செயல்படுத்தி வரும் டிஆர்ஏ, அது உருவாக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் தொடர்ந்து பெருமையையும், நம்பிக்கையையும் இடம்பெறச் செய்கிறது. இங்கு கனவுகள், நிலைத்து நிற்கும் பாரம்பரியங்களாக மாறுகின்றன.  DRA ஹோம்ஸ் யுபி (Yubi) பற்றி:  கௌரவ் குமார் அவர்களால் 2020-இல் தொடங்கப்பட்ட யுபி குரூப், நிதிச் சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவினால் முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே AI- இயங்குதளமாகும் (OS). இதன் கீழ் YuVerse, Yubi, Accumn, Spocto X மற்றும் YuCollect ஆகிய சிறப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. Peak XV, Insight Partners, Lightspeed போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள யுபி குரூப், இதுவரை 3.5 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ₹3.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு கடன் தொகையை ஏதுவாக்கியிருக்கிறது. 17,000+ நிறுவனங்கள் மற்றும் 6200+ முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குனர்களுக்கு சேவையாற்றி வரும் இக்குழுமம் நிதி திரட்டுலுக்கான செலவுகளை 57% குறைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, விதிகளுக்கு இணக்கநிலை மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்களை இந்தியாவின் நிதிசார் சேவைகள் துறையில் இந்நிறுவனம் மேம்படுத்தி, மறுவரையறை செய்து வருகிறது,  மேலும் விவரங்களுக்கு காணவும்:  www.go-yubi.com அஸ்பெரோ (Aspero) பற்றி:  அஸ்பெரோ என்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஆன்லைன் பத்திரத் தளமாகும் (OBPP). இது, முதலீட்டாளர்கள் பல்வேறு தரவரிசையில் உள்ள பத்திரங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வாங்கவும் விற்கவும் உதவுகிறது. பரிவர்த்தனை தீர்வுகளுக்காக பங்குச் சந்தை தளங்களுடன் கொண்டுள்ள ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த கடன் பத்திர  வெளியீட்டாளர்கள் குறித்த விரிவான நுண்ணறிவுகள் மூலம், இத்தளம் நன்கு ஆய்வு செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் பத்திரங்களை வழங்குகிறது. மதிப்பீட்டு நிலை முதல் முதலீடு முதிர்வடையும் காலம் வரை, ஒரு முதலீட்டுச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்தத் தேவைகளையும் அஸ்பெரோ பூர்த்தி செய்கிறது.என்று பேசியிருக்கிறார்.

விகடன் 9 Jan 2026 2:57 pm

Yubi குரூப் உடன் கைக்கோர்க்கும் DRA ஹோம்ஸ்!

குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் முதன்மை வகிக்கும் சென்னையைச் சேர்ந்த DRA ஹோம்ஸ், நிதி சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவால் (AI) முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே  இயங்குதளமாகத் திகழும் யுபி ( Yubi ) குரூப்புடன் ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் குடியிருப்பு வளாகத் திட்டங்களுக்காக நிலம் வாங்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், ₹250 கோடி மதிப்பிலான பாதுகாப்பான நிதித் தளத்தை உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.  DRA ஹோம்ஸ் இந்த நிதித் தளமானது பாதுகாக்கப்பட்ட  'மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்' (NCDs)  மூலம் கட்டமைக்கப்படும். இந்த நிதி, நிலம் வாங்குவதற்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும். மூலதனச் சந்தைகளை அணுகவும்,  UHNIs, HNIs, குடும்ப அலுவலகங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையினத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் அளவை உயர்த்தக்கூடிய  ஒரு கட்டமைப்பின் வழியாக நிதி திரட்டவும்  DRA  நிறுவனத்திற்கு செபி அங்கீகாரம் பெற்ற ஆன்லைன் பத்திரத் தளமான (OBPP)  அஸ்பெரோ ( Aspero )  உதவும். யுபி குரூப் தனது ஒருங்கிணைந்த மூலதனச் சந்தை தொழில்நுட்பம் மற்றும் பரந்த முதலீட்டாளர் வலைப்பின்னல் மூலம் இந்த NCD-களின் கட்டமைப்பு, வெளியீடு மற்றும் விநியோகத்தை முன்னெடுக்கும். விதிமுறைகளுக்கு இணக்கநிலை மற்றும் நிகழ்நேர அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு அணுகுவசதி ஆகிய அம்சங்கள் மூலம் விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், திட்டமிடப்பட்டுள்ள இந்த நிதியை DRA நிறுவனம் திரட்டுவதற்கு இக்கூட்டாண்மை உதவும்.  சென்னையின் குடியிருப்பு வகையின ரியல் எஸ்டேட் துறையில் இந்தத் கூட்டுவகிப்பு நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது.  இது பாரம்பரிய நிதி முறைகளிலிருந்து மாறி, வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி கட்டமைப்பை நோக்கி ரியல் எஸ்டேட் துறையின் நகர்வைக் காட்டுகிறது.  இந்த வளர்ச்சி குறித்து  DRA ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திரு. ரஞ்சித் ரத்தோடு  கூறுகையில்: சென்னை மாநகரம் எப்போதும் எங்களின் பெருமைக்குரிய சந்தையாக இருந்து வருகிறது. வீடு வாங்குபவர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நீண்டகால மதிப்பை வழங்குவதற்கு முறையான நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை அவசியம். யுபி குரூப் உடனான இந்தக் கூட்டணி, பாதுகாப்பான மூலதனத்தின் மூலம் நிலம் வாங்கும் நடவடிக்கையை திட்டமிடும் எமது திறனை மேலும் வலுப்படுத்தும்; நிதிசார் விவேகத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இது வழிவகுக்கும். என்று கூறினார்.  ரஞ்சித் ரத்தோடு யுபி குரூப் நிறுவனரும் தலைமை செயலாக்க அதிகாரியுமான திரு. கௌரவ் குமார்  கூறுகையில்: இந்தியாவின் மிகவும் நிலையான குடியிருப்பு சந்தைகளில் ஒன்றாக சென்னை தொடர்ந்து நீடிக்கிறது. DRA ஹோம்ஸ் உடன் நாங்கள்  கூட்டாக இணைந்திருப்பது பாதுகாப்பான ரியல் எஸ்டேட் கடன் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்று பலன் பெற வாய்ப்பளிக்கிறது. அதே சமயம், சிறந்த செயல்பாட்டுத் திறனும், மூலதனத்தைப் பயன்படுத்துவதில் ஒழுங்கு கட்டுப்பாட்டையும் கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமான DRA - க்கு இது ஆதரவளிக்கும். என்றார். நிதி திரட்டலுக்கான இந்த தளமானது DRA ஹோம்ஸ் நிறுவனத்திற்கு நிலம் வாங்கும் காலகட்டத்தில் தேவையான நிதி வசதியை தயார்நிலையை வழங்குவதோடு, நில உரிமையாளர்களுடன் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உதவும். முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, சென்னையின் வளர்ந்து வரும் வீட்டுவசதி  தேவையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான முதலீட்டு செய்வதற்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் நிதித்துறை எத்தகைய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தற்போது பெற்று வருகிறது என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரியல் எஸ்டேட்  மேம்பாட்டாளர்கள் முறைசாரா நிதி வசதியைப் பெறும் கடந்தகால வழக்கத்திலிருந்து விடுபட்டு வருவதையும் மற்றும் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சிக்கு வித்திடும் வெளிப்படையான, சந்தை சார்ந்த நிதி கட்டமைப்புகளை நோக்கி நகர்வதையும் இது உறுதிப்படுத்துகிறது என்று பேசியிருக்கிறார். DRA  பற்றி:  40 ஆண்டுகள் என்ற செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் டிஆர்ஏ, சென்னை எங்கும் உலகத் தரத்திலான செயல்திட்டங்களை வழங்கி ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது.  12,000 – க்கும் அதிகமான எண்ணிக்கையில் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் டிஆர்ஏ, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நேரத்திற்குள் டெலிவரி என்ற அதன் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது.  டிஆர்ஏ – ன் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் ரத்தோட் அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ், அபார்ட்மென்ட்களை கட்டுவது என்பதையும் கடந்து, வாடிக்கையாளர்களுக்கு “பெருமை மிகு இல்லங்களை” வழங்கி வருகிறோம். சாதித்த உணர்வையும் மற்றும் நமது வீடு என்ற உணர்வையும் வழங்கி, சிறப்பான லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற வாழ்விட அமைவிடங்களை நேர்த்தியான சிந்தனையோடு வடிவமைத்து நாங்கள் வழங்கி வருகிறோம்.  குடியிருப்பு வளாக செயல்திட்டம் மீதான நிகழ்நிலைத் தகவலுக்கு ‘டைம்லைன் மீட்டர்’ மற்றும் ‘கஸ்டமர் டிலைட் மீட்டர்’  போன்றவை வாடிக்கையாளர் திருப்தி மீது கொண்டிருக்கும் எமது அக்கறையைப் பிரதிபலிக்கின்றன; புராஜெக்ட் விவரங்களுக்கும் மற்றும் ஆவண செயல்பாடுகளுக்கும் எளிதான அணுகுவசதியை இதன் ஆன்லைன் வாடிக்கையாளர் இணையவாசல் உறுதி செய்கிறது.  டிஆர்ஏ பிரிஸ்டின் பெவிலியன், டக்ஸிடோ, அஸ்காட், ஸ்லைலான்டிஸ், எலிட், இன்ஃபினிக் மற்றும் போன்ற புராஜெக்ட்களும் நவீனத்துவத்தோடு  மதிப்பை உயர்த்துகின்ற முதலீடுகளுடன் ஒருங்கிணைப்பதில் டிஆர்ஏ – ன் பொறுப்புறுதியை எடுத்துக்காட்டுகிறது.  FICCI – ன் ரெய்சா மற்றும் டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் போன்ற சிறப்பான விருதுகளின் அங்கீகாரம் பெற்ற டிஆர்ஏ, கிரிஸில் – ன் 7 நட்சத்திர தரநிலையைப் பெற்றிருக்கின்ற சென்னையில் முதல் டெவலப்பர் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது.  இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்புகளில் குளம் போன்ற நீர்நிலைகளின் சீரமைப்பும் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கும். சமூகத்தின் நலன் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை முன்னிலைப்படுத்துவதாக இவைகள் இருக்கின்றன. “காலத்தைக் கடந்து நிற்கும் இல்லம்”, “உரிய நேரத்திற்குள் டெலிவரி”  என்ற தனது விருதுவாக்கை செயல்படுத்தி வரும் டிஆர்ஏ, அது உருவாக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் தொடர்ந்து பெருமையையும், நம்பிக்கையையும் இடம்பெறச் செய்கிறது. இங்கு கனவுகள், நிலைத்து நிற்கும் பாரம்பரியங்களாக மாறுகின்றன.  DRA ஹோம்ஸ் யுபி (Yubi) பற்றி:  கௌரவ் குமார் அவர்களால் 2020-இல் தொடங்கப்பட்ட யுபி குரூப், நிதிச் சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவினால் முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே AI- இயங்குதளமாகும் (OS). இதன் கீழ் YuVerse, Yubi, Accumn, Spocto X மற்றும் YuCollect ஆகிய சிறப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. Peak XV, Insight Partners, Lightspeed போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள யுபி குரூப், இதுவரை 3.5 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ₹3.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு கடன் தொகையை ஏதுவாக்கியிருக்கிறது. 17,000+ நிறுவனங்கள் மற்றும் 6200+ முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குனர்களுக்கு சேவையாற்றி வரும் இக்குழுமம் நிதி திரட்டுலுக்கான செலவுகளை 57% குறைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, விதிகளுக்கு இணக்கநிலை மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்களை இந்தியாவின் நிதிசார் சேவைகள் துறையில் இந்நிறுவனம் மேம்படுத்தி, மறுவரையறை செய்து வருகிறது,  மேலும் விவரங்களுக்கு காணவும்:  www.go-yubi.com அஸ்பெரோ (Aspero) பற்றி:  அஸ்பெரோ என்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஆன்லைன் பத்திரத் தளமாகும் (OBPP). இது, முதலீட்டாளர்கள் பல்வேறு தரவரிசையில் உள்ள பத்திரங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வாங்கவும் விற்கவும் உதவுகிறது. பரிவர்த்தனை தீர்வுகளுக்காக பங்குச் சந்தை தளங்களுடன் கொண்டுள்ள ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த கடன் பத்திர  வெளியீட்டாளர்கள் குறித்த விரிவான நுண்ணறிவுகள் மூலம், இத்தளம் நன்கு ஆய்வு செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் பத்திரங்களை வழங்குகிறது. மதிப்பீட்டு நிலை முதல் முதலீடு முதிர்வடையும் காலம் வரை, ஒரு முதலீட்டுச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்தத் தேவைகளையும் அஸ்பெரோ பூர்த்தி செய்கிறது.என்று பேசியிருக்கிறார்.

விகடன் 9 Jan 2026 2:57 pm

சித்த மருத்துவத்தில் உற்பத்தி, விநியோகம்; 13 கிளை - `நல்வழி'மருந்தகத்தின் கதை | StartUp சாகசம் 52

`நல்வழி மருந்தகம்' StartUp சாகசம் 52 இந்தியாவின் 'ஆயுஷ்' (AYUSH) சந்தை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2024-25 நிதியாண்டில், இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 416 மில்லியன் டாலராக (சுமார் ₹3,400 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்குள் 707 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சித்த மருத்துவம் தென் இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் மிக வலுவான சந்தையைக் கொண்டுள்ளது. 2024-25-ல் ஆயுஷ் மருந்துகளின் ஏற்றுமதி 6.11% எட்டியுள்ளது. மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சித்த மருந்துகளுக்குப் வரவேற்பு இருக்கின்றது. ஆயுஷ் அமைச்சகம் சில ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. Ayush Drugs ஒவ்வொரு ஆண்டும்   வெளிநாட்டினர் நமது இயற்கை மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இது சித்த மருத்துவமனைகளுக்குப் பெரிய வாய்ப்பாகும். சித்த மருத்துவம் தற்போது வெறும் சிகிச்சை முறையாக மட்டுமல்லாமல், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து 'ஹெர்பல் காஸ்மெட்டிக்ஸ்' (Herbal Cosmetics) மற்றும் ஆரோக்கிய பானங்கள் துறையிலும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. சித்த மருத்துவத் துறையில் தரம் மற்றும் அறிவியல் ரீதியான தரவுகளை மேம்படுத்தினால், உலகளாவிய சந்தையில் தமிழர்களின் இந்தத் தனித்துவமான மருத்துவம் பெரும் உச்சத்தை அடையும்.  தமிழ்நாட்டில் இருந்து ஒரு நிறுவனம் தனது முயற்சிகளால் சித்த மருத்துவ மருந்தங்களை ஆரம்பித்து இதுவரை 13 கிளைகள் அமைத்து சித்த மருந்துங்களை விற்பனை செய்துவருகிறது, சித்த மருத்துவம் சார்ந்த பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்துவரும் நிலையில் அவர்களுக்கு இணையாக `நல்வழி மருந்தகம்' எனும்  இந்நிறுவனமும் ஒரு நல்ல செயல்பாட்டைக் கொண்டுவருகிறது, நல்வழி மருந்தகத்தின் நிறுவனம் திரு.கரிகாலன் அவர்களுடன் அவர் வளரும் சாகசக்கதையை கேட்போம் ``நல்வழி மருந்தகம் எனும் கடை அமைக்க எப்படி ஆர்வம் பிறந்தது?  ``என் தந்தை ஒரு ஓமியோபதி மருத்துவர். அதன் தாக்கத்தால், 1991-ல் என் அண்ணன் ‘தென்றல் மருந்தகம்’ என்ற பெயரில் ஒரு ஓமியோ, சித்த, ஆயுர்வேத மருந்தகத்தை ஆரம்பித்தார். நான் படித்து முடித்த பின் அவருடன் இணைந்து பணியாற்றினேன். எனக்கு மொத்த விற்பனையில் (Wholesale) அதிக ஈடுபாடு இருந்ததால், 1997-ல் ஊற்றங்கரையில் ‘நல்வழி மருந்தகம்’ என்ற பெயரில் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். 2000-ல் அதன் மொத்த வணிகத்தைத் திருப்பத்தூரில் ஆரம்பித்தோம். 2016-ல் எங்களது 20-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். 29-ஆம் ஆண்டில் 13 கிளைகள்,  ஓமியோ மற்றும் சித்த ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் தொடர்கிறோம். தற்பொழுது ஆன்லைன் விற்பனையும் (nalvazhiayush.com) தொடங்கியுள்ளோம்    கரிகாலன் ``சித்த மருத்துவத்தில் உற்பத்தி அல்லது விநியோகம் - இரண்டையும் செய்ய முடியும் என்ற எண்ணம் எப்படி வந்தது?  ``விற்பனைதான் எங்கள் பலம். தமிழ்நாட்டில் சித்த மருந்து மொத்த விற்பனையாளர்களில் முதல் 5 இடங்களுக்குள் நாங்கள் இருக்கிறோம். வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடம் என்றுகூடச் சொல்லலாம். உற்பத்தித் துறை நாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததல்ல; அது எங்களைத் தேடி வந்தது.  “V.J. Rao Pharma” உரிமையாளர் மரு. குருவரப்பிரசாத் DHMS அவர்கள், “என்னால் இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இயலவில்லை, உங்களால் தான் முடியும்” என்று எங்களிடம் ஒப்படைத்தார். அதேபோல, “குறிஞ்சி பார்மா” உரிமையாளரும் எனது நெருங்கிய நண்பருமான ஈரோடு மரு.கண்ணன் BSMS அவர்கள் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தை நடத்த அவரது குடும்பத்தினர் தயாராக இல்லாததால், நாங்கள் உற்பத்தியாளர் பணியையும் கையில் எடுக்க வேண்டியதாயிற்று.  ``சந்தையில் சித்த மருத்துவத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? அரசின் ஆதரவு மற்றும் திட்டங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? ``சிக்குன்குனியா பாதிப்புக்குப்பிறகு, மக்களிடையே சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. சிக்குன்குனியா காலத்தில் ‘நிலவேம்புக் குடிநீரும்’, கோவிட் காலத்தில் ‘கபசுரக் குடிநீரும்’ லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன் அளித்தன. தமிழக அரசும் அந்த நேரத்தில் சித்த மருத்துவத்திற்கு உரிய வாய்ப்பையும், மரியாதையும் வழங்கியது.  கோவிட் முடக்கக் காலத்தில், அன்றைய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவனருள் இ.ஆ.ப அவர்களின் உத்தரவுப்படி, சேவை அமைப்புகளின் உதவியுடன் ஒரு வாரத்தில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாகக் கபசுரக் குடிநீர் வழங்கியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.  இருப்பினும், அரசாங்கம் சித்த மருத்துவத்தை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். இத்துறையில் ஆய்வுகள் (Research) இன்னும் அதிகரிக்க வேண்டும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க சித்த மருத்துவத்தை முன்னிலைப்படுத்துவது அவசியம். இதற்குத் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். கிளைகள் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது? ஆங்கில மருந்துக்கடைகள் பெருகி வரும் சூழலில் இது லாபகரமானதா?   ``எங்களுக்கு தற்போது 13 கிளைகள் உள்ளன. தரமான சித்த மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் தரமான சித்த மருந்துகள் சிற்றூர்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிளைகளைத் தொடங்கினோம். இதனை மேலும் விரிவாக்குவோம்.   நிச்சயமாக, சித்த மருத்துவக் கிளைகள் லாபகரமான தொழில்தான். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, சொந்தமாகவோ அல்லது எங்கள் கிளை மேலாளர்களாகவோ அவர்கள் பணியாற்றலாம். யோகா இன்று உலகளவில் புகழ்பெற்று வருவது போல, நம் நாட்டுச் சித்த மருந்துகளும் உலகெங்கும் பரவுவது நிச்சயம் முன்னேற்றத்தைத் தரும். ``தொடக்கத்திலும் தற்போதும் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன? ``பிரச்சினைகளை நான் வாய்ப்புகளாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு சிக்கலும் ஒரு தீர்வைத் தரும்போது, அது வளர்ச்சியாக மாறுகிறது. ஆரம்ப காலத்தில் விழிப்புணர்வு இல்லாததே பெரிய சிக்கலாக இருந்தது. மருந்து நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினோம்; அது பெரிய வளர்ச்சியைத் தந்தது.  தற்காலச் சூழலில், விரைவாகப் பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சிலர் மருந்தின் தரத்தைக் கோட்டை விட்டுவிடுகின்றனர். நோய்க்குத் தீர்வு கண்டு நோயாளிகளைத் தக்கவைப்பதற்குப் பதிலாக, வந்திருக்கும் நோயாளியிடமே அதிக வருமானம் ஈட்ட நினைப்பது வளர்ச்சியைத் தடுக்கும்.  தன்னம்பிக்கையின்மையும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளாததுமே இத்துறையினரின் பலவீனமாக உள்ளது. ஆங்கில மருந்துகளுடன் ஒப்பிடும்போது நாம் இன்னும் 5% வளர்ச்சியைக் கூட எட்டவில்லை. தரத்தையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டால் 50% மேல் வளர முடியும் என்பது எனது நம்பிக்கை. ``மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலிகைகள் எளிதாகக் கிடைக்கின்றனவா? ``மூலிகைகள் கிடைப்பது பருவ காலத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. வட இந்தியாவில் மூலிகைப் பயிரிடுதல் (Herbal Farming) மிக மேம்பட்டுள்ளது. எனவே, உள்ளூரில் தேவைகள் பூர்த்தியாகாத போது மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்கிறோம். ஆங்கில மருந்துகளைப் போலச் சித்த மருந்துகளை நினைத்தவுடன் உருவாக்கிவிட முடியாது. மூலப்பொருட்களுக்கு விவசாயத்தையே நம்பி இருப்பதால் மழை, வெயில், பனி போன்ற இயற்கை மாற்றங்களே மூலிகைகளின் வரத்தைத் தீர்மானிக்கின்றன. தமிழ்நாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் பிற நிறுவனங்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?  ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘IMPCOPS’ எனும் கூட்டுறவு நிறுவனம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது ‘SKM’ நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்திய அளவில் ஆயுர்வேதத் துறையில் Dabur, Zandu, Baidyanath, Himalaya, Kottakkal, AVN போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளர்ந்து வருகின்றன.  இவை தவிர அரவிந்த் ஹெர்பல், சோலமலை, ராஜா சித்தா, ஜெம் ட்ரீஸ், சத்யாஸ் ட்ரக்ஸ், அன்னை அரவிந்த், மெடிசித், குறிஞ்சி பார்மா, அகத்தியர் ஹெர்பல் போன்ற பல நிறுவனங்கள் பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வருகின்றன. ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றுக்குச் சித்த மருத்துவமே பக்கவிளைவற்ற தீர்வைத் தரும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை மேலும் அறிவியல் பூர்வமாக விரிவுபடுத்தச் சித்த மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு செய்தால், மூலிகை விவசாயம் பெருகும், காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கை போற்றப்படும். ``சாதாரணத் தலைவலி மற்றும் காய்ச்சலுக்குச் சித்த மருத்துவம் எதைப் பரிந்துரைக்கிறது? ``சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தீவிர பாதிப்புகளுக்கு (Acute diseases) சித்த மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பது தவறான கருத்து. இம்மாதிரியான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் உடனடி பலன் தரும் மருந்துகள் உள்ளன. ‘ஆடாதோடை மணப்பாகு’, ‘சுவாசக் குடோரி’, ‘நீர்க்கோவை மாத்திரை’, ‘தாளிசாதி வடகம்’ என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்தால் உடனடி நிவாரணம் பெறலாம். ``வெளிநாடுகளில் சித்த மருந்துகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன? ``உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் சித்த மருத்துவத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆயுர்வேத நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து வெளிநாட்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளின் அனுமதியைப் பெறுகின்றன. அந்த அளவிற்குச் சித்த மருந்து நிறுவனங்களுக்கு இன்னும் பலமில்லை. இதற்கு அரசாங்கம் உதவ வேண்டும். இந்த உதவி கிடைத்தால், சித்த மருத்துவம் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். தற்போது இந்தியாவிற்குள்ளேயே விற்பனையை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்துவோம். ``புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?  ``மருத்துவராக இருந்தாலும், மருந்துக்கடை வைக்க விரும்புபவராக இருந்தாலும் முதலில் முறையான பயிற்சி எடுங்கள். உங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். சித்த மருத்துவத்திற்குப் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. எங்கள் கிளைகளில் மருத்துவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையுடன் தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.  தமிழகம் முழுவதும் கிளைகளைப் பரப்புவதே எங்கள் நோக்கம். நாள்தோறும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘நல்வழி’யை நாட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. (சாகசங்கள் தொடரும்..!)

விகடன் 9 Jan 2026 2:50 pm

சித்த மருத்துவத்தில் உற்பத்தி, விநியோகம்; 13 கிளை - `நல்வழி'மருந்தகத்தின் கதை | StartUp சாகசம் 52

`நல்வழி மருந்தகம்' StartUp சாகசம் 52 இந்தியாவின் 'ஆயுஷ்' (AYUSH) சந்தை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2024-25 நிதியாண்டில், இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 416 மில்லியன் டாலராக (சுமார் ₹3,400 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்குள் 707 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சித்த மருத்துவம் தென் இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் மிக வலுவான சந்தையைக் கொண்டுள்ளது. 2024-25-ல் ஆயுஷ் மருந்துகளின் ஏற்றுமதி 6.11% எட்டியுள்ளது. மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சித்த மருந்துகளுக்குப் வரவேற்பு இருக்கின்றது. ஆயுஷ் அமைச்சகம் சில ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. Ayush Drugs ஒவ்வொரு ஆண்டும்   வெளிநாட்டினர் நமது இயற்கை மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இது சித்த மருத்துவமனைகளுக்குப் பெரிய வாய்ப்பாகும். சித்த மருத்துவம் தற்போது வெறும் சிகிச்சை முறையாக மட்டுமல்லாமல், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து 'ஹெர்பல் காஸ்மெட்டிக்ஸ்' (Herbal Cosmetics) மற்றும் ஆரோக்கிய பானங்கள் துறையிலும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. சித்த மருத்துவத் துறையில் தரம் மற்றும் அறிவியல் ரீதியான தரவுகளை மேம்படுத்தினால், உலகளாவிய சந்தையில் தமிழர்களின் இந்தத் தனித்துவமான மருத்துவம் பெரும் உச்சத்தை அடையும்.  தமிழ்நாட்டில் இருந்து ஒரு நிறுவனம் தனது முயற்சிகளால் சித்த மருத்துவ மருந்தங்களை ஆரம்பித்து இதுவரை 13 கிளைகள் அமைத்து சித்த மருந்துங்களை விற்பனை செய்துவருகிறது, சித்த மருத்துவம் சார்ந்த பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்துவரும் நிலையில் அவர்களுக்கு இணையாக `நல்வழி மருந்தகம்' எனும்  இந்நிறுவனமும் ஒரு நல்ல செயல்பாட்டைக் கொண்டுவருகிறது, நல்வழி மருந்தகத்தின் நிறுவனம் திரு.கரிகாலன் அவர்களுடன் அவர் வளரும் சாகசக்கதையை கேட்போம் ``நல்வழி மருந்தகம் எனும் கடை அமைக்க எப்படி ஆர்வம் பிறந்தது?  ``என் தந்தை ஒரு ஓமியோபதி மருத்துவர். அதன் தாக்கத்தால், 1991-ல் என் அண்ணன் ‘தென்றல் மருந்தகம்’ என்ற பெயரில் ஒரு ஓமியோ, சித்த, ஆயுர்வேத மருந்தகத்தை ஆரம்பித்தார். நான் படித்து முடித்த பின் அவருடன் இணைந்து பணியாற்றினேன். எனக்கு மொத்த விற்பனையில் (Wholesale) அதிக ஈடுபாடு இருந்ததால், 1997-ல் ஊற்றங்கரையில் ‘நல்வழி மருந்தகம்’ என்ற பெயரில் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். 2000-ல் அதன் மொத்த வணிகத்தைத் திருப்பத்தூரில் ஆரம்பித்தோம். 2016-ல் எங்களது 20-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். 29-ஆம் ஆண்டில் 13 கிளைகள்,  ஓமியோ மற்றும் சித்த ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் தொடர்கிறோம். தற்பொழுது ஆன்லைன் விற்பனையும் (nalvazhiayush.com) தொடங்கியுள்ளோம்    கரிகாலன் ``சித்த மருத்துவத்தில் உற்பத்தி அல்லது விநியோகம் - இரண்டையும் செய்ய முடியும் என்ற எண்ணம் எப்படி வந்தது?  ``விற்பனைதான் எங்கள் பலம். தமிழ்நாட்டில் சித்த மருந்து மொத்த விற்பனையாளர்களில் முதல் 5 இடங்களுக்குள் நாங்கள் இருக்கிறோம். வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதலிடம் என்றுகூடச் சொல்லலாம். உற்பத்தித் துறை நாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததல்ல; அது எங்களைத் தேடி வந்தது.  “V.J. Rao Pharma” உரிமையாளர் மரு. குருவரப்பிரசாத் DHMS அவர்கள், “என்னால் இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இயலவில்லை, உங்களால் தான் முடியும்” என்று எங்களிடம் ஒப்படைத்தார். அதேபோல, “குறிஞ்சி பார்மா” உரிமையாளரும் எனது நெருங்கிய நண்பருமான ஈரோடு மரு.கண்ணன் BSMS அவர்கள் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தை நடத்த அவரது குடும்பத்தினர் தயாராக இல்லாததால், நாங்கள் உற்பத்தியாளர் பணியையும் கையில் எடுக்க வேண்டியதாயிற்று.  ``சந்தையில் சித்த மருத்துவத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? அரசின் ஆதரவு மற்றும் திட்டங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? ``சிக்குன்குனியா பாதிப்புக்குப்பிறகு, மக்களிடையே சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்துள்ளது. சிக்குன்குனியா காலத்தில் ‘நிலவேம்புக் குடிநீரும்’, கோவிட் காலத்தில் ‘கபசுரக் குடிநீரும்’ லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன் அளித்தன. தமிழக அரசும் அந்த நேரத்தில் சித்த மருத்துவத்திற்கு உரிய வாய்ப்பையும், மரியாதையும் வழங்கியது.  கோவிட் முடக்கக் காலத்தில், அன்றைய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவனருள் இ.ஆ.ப அவர்களின் உத்தரவுப்படி, சேவை அமைப்புகளின் உதவியுடன் ஒரு வாரத்தில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாகக் கபசுரக் குடிநீர் வழங்கியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.  இருப்பினும், அரசாங்கம் சித்த மருத்துவத்தை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். இத்துறையில் ஆய்வுகள் (Research) இன்னும் அதிகரிக்க வேண்டும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க சித்த மருத்துவத்தை முன்னிலைப்படுத்துவது அவசியம். இதற்குத் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். கிளைகள் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது? ஆங்கில மருந்துக்கடைகள் பெருகி வரும் சூழலில் இது லாபகரமானதா?   ``எங்களுக்கு தற்போது 13 கிளைகள் உள்ளன. தரமான சித்த மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் தரமான சித்த மருந்துகள் சிற்றூர்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிளைகளைத் தொடங்கினோம். இதனை மேலும் விரிவாக்குவோம்.   நிச்சயமாக, சித்த மருத்துவக் கிளைகள் லாபகரமான தொழில்தான். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, சொந்தமாகவோ அல்லது எங்கள் கிளை மேலாளர்களாகவோ அவர்கள் பணியாற்றலாம். யோகா இன்று உலகளவில் புகழ்பெற்று வருவது போல, நம் நாட்டுச் சித்த மருந்துகளும் உலகெங்கும் பரவுவது நிச்சயம் முன்னேற்றத்தைத் தரும். ``தொடக்கத்திலும் தற்போதும் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன? ``பிரச்சினைகளை நான் வாய்ப்புகளாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு சிக்கலும் ஒரு தீர்வைத் தரும்போது, அது வளர்ச்சியாக மாறுகிறது. ஆரம்ப காலத்தில் விழிப்புணர்வு இல்லாததே பெரிய சிக்கலாக இருந்தது. மருந்து நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினோம்; அது பெரிய வளர்ச்சியைத் தந்தது.  தற்காலச் சூழலில், விரைவாகப் பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சிலர் மருந்தின் தரத்தைக் கோட்டை விட்டுவிடுகின்றனர். நோய்க்குத் தீர்வு கண்டு நோயாளிகளைத் தக்கவைப்பதற்குப் பதிலாக, வந்திருக்கும் நோயாளியிடமே அதிக வருமானம் ஈட்ட நினைப்பது வளர்ச்சியைத் தடுக்கும்.  தன்னம்பிக்கையின்மையும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளாததுமே இத்துறையினரின் பலவீனமாக உள்ளது. ஆங்கில மருந்துகளுடன் ஒப்பிடும்போது நாம் இன்னும் 5% வளர்ச்சியைக் கூட எட்டவில்லை. தரத்தையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டால் 50% மேல் வளர முடியும் என்பது எனது நம்பிக்கை. ``மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலிகைகள் எளிதாகக் கிடைக்கின்றனவா? ``மூலிகைகள் கிடைப்பது பருவ காலத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. வட இந்தியாவில் மூலிகைப் பயிரிடுதல் (Herbal Farming) மிக மேம்பட்டுள்ளது. எனவே, உள்ளூரில் தேவைகள் பூர்த்தியாகாத போது மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்கிறோம். ஆங்கில மருந்துகளைப் போலச் சித்த மருந்துகளை நினைத்தவுடன் உருவாக்கிவிட முடியாது. மூலப்பொருட்களுக்கு விவசாயத்தையே நம்பி இருப்பதால் மழை, வெயில், பனி போன்ற இயற்கை மாற்றங்களே மூலிகைகளின் வரத்தைத் தீர்மானிக்கின்றன. தமிழ்நாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் பிற நிறுவனங்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?  ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ‘IMPCOPS’ எனும் கூட்டுறவு நிறுவனம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. தற்போது ‘SKM’ நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்திய அளவில் ஆயுர்வேதத் துறையில் Dabur, Zandu, Baidyanath, Himalaya, Kottakkal, AVN போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளர்ந்து வருகின்றன.  இவை தவிர அரவிந்த் ஹெர்பல், சோலமலை, ராஜா சித்தா, ஜெம் ட்ரீஸ், சத்யாஸ் ட்ரக்ஸ், அன்னை அரவிந்த், மெடிசித், குறிஞ்சி பார்மா, அகத்தியர் ஹெர்பல் போன்ற பல நிறுவனங்கள் பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வருகின்றன. ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றுக்குச் சித்த மருத்துவமே பக்கவிளைவற்ற தீர்வைத் தரும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை மேலும் அறிவியல் பூர்வமாக விரிவுபடுத்தச் சித்த மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு செய்தால், மூலிகை விவசாயம் பெருகும், காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கை போற்றப்படும். ``சாதாரணத் தலைவலி மற்றும் காய்ச்சலுக்குச் சித்த மருத்துவம் எதைப் பரிந்துரைக்கிறது? ``சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தீவிர பாதிப்புகளுக்கு (Acute diseases) சித்த மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பது தவறான கருத்து. இம்மாதிரியான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் உடனடி பலன் தரும் மருந்துகள் உள்ளன. ‘ஆடாதோடை மணப்பாகு’, ‘சுவாசக் குடோரி’, ‘நீர்க்கோவை மாத்திரை’, ‘தாளிசாதி வடகம்’ என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்தால் உடனடி நிவாரணம் பெறலாம். ``வெளிநாடுகளில் சித்த மருந்துகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன? ``உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் சித்த மருத்துவத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆயுர்வேத நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து வெளிநாட்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளின் அனுமதியைப் பெறுகின்றன. அந்த அளவிற்குச் சித்த மருந்து நிறுவனங்களுக்கு இன்னும் பலமில்லை. இதற்கு அரசாங்கம் உதவ வேண்டும். இந்த உதவி கிடைத்தால், சித்த மருத்துவம் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். தற்போது இந்தியாவிற்குள்ளேயே விற்பனையை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்துவோம். ``புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?  ``மருத்துவராக இருந்தாலும், மருந்துக்கடை வைக்க விரும்புபவராக இருந்தாலும் முதலில் முறையான பயிற்சி எடுங்கள். உங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். சித்த மருத்துவத்திற்குப் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. எங்கள் கிளைகளில் மருத்துவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையுடன் தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.  தமிழகம் முழுவதும் கிளைகளைப் பரப்புவதே எங்கள் நோக்கம். நாள்தோறும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘நல்வழி’யை நாட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. (சாகசங்கள் தொடரும்..!)

விகடன் 9 Jan 2026 2:50 pm

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா முன்னிலை; பின்தங்கிய தமிழகம்? பேங்க் ஆஃப் பரோடாவின் அறிக்கை என்ன?

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவிற்கு எந்த நகரத்தைத் தலைநகரமாக வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முன்பு முதல்வராக இருந்த ஜெகன் மோகன் இவ்விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார். தற்போது வரை ஆந்திராவிற்கும் ஐதராபாத்தான் தலைநகரமாக உள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்கி வருகிறார். அமராவதியில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. மேலும் அமராவதிக்குப் புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் ஆந்திரா அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷும் சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்களை அமராவதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டில் 9 மாதங்களி்ல் இந்தியாவிற்கு வந்த முதலீடுகளில் 25.3 சதவீத முதலீடுகளை அமராவதி ஈர்த்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதலீடு அந்த அறிக்கையின் படி, எப்போதும் பின்தங்கிய மாநிலமாகப் பார்க்கப்படும் ஒடிசாவும் இம்முறை முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தி இருக்கிறது. மொத்த முதலீட்டில் 13.1 சதவீத முதலீடுகளை ஒடிசா ஈர்த்துள்ளது. இவ்விவகாரத்தில் மகாராஷ்டிராவையே ஒடிசா பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. மகாராஷ்டிரா 12.8 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து 51.2 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. மொத்தம் ரூ.26.6 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் அதிகம் ஆகும். தெலங்கானா மற்றும் குஜராத் அடுத்த இடங்களில் இருக்கின்றன. ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி குறைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கதக்க மின்சாரத் துறை 22.6 சதவீத முதலீடுகளை ஈர்த்து முதலிடத்தில் இருக்கிறது. உலோகங்கள் 17.3 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. இது ஒரு சாதகமான அறிகுறியாகும். ஏனெனில் உலோகங்கள் சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல்கள் முதல் வீட்டுவசதி வரையிலான பல திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கட்டுமானம் (வீட்டுவசதி மற்றும் வணிக வளாகங்கள் உட்பட) துறையின் பங்களிப்பை 4 சதவீதமாக நிலையாக வைத்திருக்க உதவுகிறது. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திரா முடிவு?

விகடன் 7 Jan 2026 11:00 am

முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா முன்னிலை; பின்தங்கிய தமிழகம்? பேங்க் ஆஃப் பரோடாவின் அறிக்கை என்ன?

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவிற்கு எந்த நகரத்தைத் தலைநகரமாக வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முன்பு முதல்வராக இருந்த ஜெகன் மோகன் இவ்விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார். தற்போது வரை ஆந்திராவிற்கும் ஐதராபாத்தான் தலைநகரமாக உள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்கி வருகிறார். அமராவதியில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. மேலும் அமராவதிக்குப் புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் ஆந்திரா அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷும் சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்களை அமராவதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டில் 9 மாதங்களி்ல் இந்தியாவிற்கு வந்த முதலீடுகளில் 25.3 சதவீத முதலீடுகளை அமராவதி ஈர்த்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதலீடு அந்த அறிக்கையின் படி, எப்போதும் பின்தங்கிய மாநிலமாகப் பார்க்கப்படும் ஒடிசாவும் இம்முறை முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தி இருக்கிறது. மொத்த முதலீட்டில் 13.1 சதவீத முதலீடுகளை ஒடிசா ஈர்த்துள்ளது. இவ்விவகாரத்தில் மகாராஷ்டிராவையே ஒடிசா பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. மகாராஷ்டிரா 12.8 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து 51.2 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. மொத்தம் ரூ.26.6 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் அதிகம் ஆகும். தெலங்கானா மற்றும் குஜராத் அடுத்த இடங்களில் இருக்கின்றன. ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி குறைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கதக்க மின்சாரத் துறை 22.6 சதவீத முதலீடுகளை ஈர்த்து முதலிடத்தில் இருக்கிறது. உலோகங்கள் 17.3 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ளன. இது ஒரு சாதகமான அறிகுறியாகும். ஏனெனில் உலோகங்கள் சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல்கள் முதல் வீட்டுவசதி வரையிலான பல திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கட்டுமானம் (வீட்டுவசதி மற்றும் வணிக வளாகங்கள் உட்பட) துறையின் பங்களிப்பை 4 சதவீதமாக நிலையாக வைத்திருக்க உதவுகிறது. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ஆந்திரா முடிவு?

விகடன் 7 Jan 2026 11:00 am