ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி; கரூரில் இருந்து 71 நிறுவனங்கள்! - ஏன், எதற்கு?முழு தகவல்
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி ஹெய்ம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் மெஸ்ஸே என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 1971 -ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, வீட்டு உபயோக பொருட்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2026 -ம் வருடத்தின் கண்காட்சி வரும் 13-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசும், கரூர் ஜவுளி உற்ப்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ப.கோபாலகிருக்ஷ்ணன், வருடத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், பார்வையாளர்களும் வருடம் முழுவதற்கும் தேவையான ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நோக்கோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள். texiles தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கும், புதிய மாதிரிகளை பார்வையிடுவதற்கும், வீட்டு உபயோக பொருட்களில் உலகத்தில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் இந்த கண்காட்சி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்த கண்காட்சியில் 3000 - க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் / நிறுவனங்கள், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்து தங்களது பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். சுமார் 50,000 - க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிடுகிறார்கள். இந்தியாவிலிருந்து 364 நிறுவனங்களும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீன நாட்டிலிருந்து 322 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரிலிருந்து 71 நிறுவனங்களும், பானிபட் மாநகரிலிருந்து 162 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரில் இருந்து 71 நிறுவனங்களின் சார்பில் தொழிலதிபர்கள், வடிவமைப்பாளர்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஜெர்மனி நாட்டிற்கு பயணிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. அமெரிக்காவின் அதிகப்படியான இறக்குமதி வரி கொள்கையின் காரணமாக தொய்வடைந்திருக்கும் கரூர் மற்றும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் மற்ற நாடுகளின் வாடிக்கையாளர்களை கவர்ந்து புதிய ஒப்பந்தங்களை பெற்று வரும் கனவோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி; கரூரில் இருந்து 71 நிறுவனங்கள்! - ஏன், எதற்கு?முழு தகவல்
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி ஹெய்ம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் மெஸ்ஸே என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 1971 -ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, வீட்டு உபயோக பொருட்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2026 -ம் வருடத்தின் கண்காட்சி வரும் 13-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசும், கரூர் ஜவுளி உற்ப்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ப.கோபாலகிருக்ஷ்ணன், வருடத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், பார்வையாளர்களும் வருடம் முழுவதற்கும் தேவையான ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நோக்கோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள். texiles தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கும், புதிய மாதிரிகளை பார்வையிடுவதற்கும், வீட்டு உபயோக பொருட்களில் உலகத்தில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் இந்த கண்காட்சி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்த கண்காட்சியில் 3000 - க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் / நிறுவனங்கள், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்து தங்களது பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். சுமார் 50,000 - க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிடுகிறார்கள். இந்தியாவிலிருந்து 364 நிறுவனங்களும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீன நாட்டிலிருந்து 322 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரிலிருந்து 71 நிறுவனங்களும், பானிபட் மாநகரிலிருந்து 162 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரில் இருந்து 71 நிறுவனங்களின் சார்பில் தொழிலதிபர்கள், வடிவமைப்பாளர்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஜெர்மனி நாட்டிற்கு பயணிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. அமெரிக்காவின் அதிகப்படியான இறக்குமதி வரி கொள்கையின் காரணமாக தொய்வடைந்திருக்கும் கரூர் மற்றும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் மற்ற நாடுகளின் வாடிக்கையாளர்களை கவர்ந்து புதிய ஒப்பந்தங்களை பெற்று வரும் கனவோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!
சிந்துவின் பயணம்…. தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும் ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த 37 வயதான இல்லத்தரசி எஸ்.சிந்து, தனது கணவர் வாகனம் ஓட்டி ஈட்டி வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வந்தார். அவருக்கு தையல் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதை ஒரு நிலையான வருமானமாக மாற்றுவதற்கான முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் அவரிடம் இல்லை. குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவ வேண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுவாக இருந்தது, ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்து வந்தார். எஸ்.சிந்து வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு ஒக்கிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (PUMS) பயிலும் தனது குழந்தை மூலமாக சுதா என்பவரைச் சந்தித்தபோது, சிந்துவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவர் மூலமாக வாக்கரூ அறக்கட்டளை (Walkaroo Foundation) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடத்திய 3 மாத தையல் பயிற்சித் திட்டத்தைப் பற்றி அறிந்தார். இந்த வாய்ப்பை உறுதியுடன் ஏற்றுக்கொண்ட சிந்து, தனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையுடன் அந்தப் பயிற்சியில் சேர்ந்தார். கற்றலும் வளர்ச்சியும் பயிற்சியின் போது, சிந்து தையல் கலையை முறையாகக் கற்றுக்கொண்டார். அடிப்படை தையல் தொடங்கி கலையண உறைகள், நைட்டிகள், பட்டுப் பாவாடை, ஃபிராக் மற்றும் சுடிதார் தைப்பது வரை அனைத்தையும் கற்றார். வீட்டு வேலைகளுக்கு இடையிலும், துணிகளை வாங்கி விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தார். வகுப்பு நேரத்தைக் காண்டியும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அவருக்கு ஊக்கமளித்த பயிற்சியாளரின் ஆதரவு சிந்துவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. காலப்போக்கில், தனது தையல் தவறுகளைத் தானே கண்டறிந்து சரிசெய்யும் திறனையும் அவர் வளர்த்துக்கொண்டார். எஸ்.சிந்து திறமையை வருமானமாக மாற்றுதல் பெல்ட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சுடிதார்களைத் தைக்கும் ஆர்டர்களைப் (Bulk orders) பெற்றதன் மூலம் அவர் தனது தையல் பணியைத் தொடங்கினார். இது அவருக்கு நல்ல அனுபவத்தையும் முறையான வருமானத்தையும் தந்தது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தைத்துக் கொடுக்கத் தொடங்கியதன் மூலம் வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கினார். தற்போது அவர் ஒரு நாளைக்கு சுமார் ₹500 வரை சம்பாதிக்கிறார். ஜூன் மற்றும் ஜூலை போன்ற தேவைகள் அதிகம் உள்ள மாதங்களில் மாதம் ₹10,000 வரை வருமானம் ஈட்டுகிறார். இந்த வருமானம் அவரது குழந்தைகளின் கல்விக்கும், குடும்பச் செலவுகளுக்கும் பெரிதும் உதவுகிறது. ஒரு காலத்தில் எட்டாக் கனியாக இருந்த சேமிப்பு இப்போது அவருக்கு சாத்தியமாகியுள்ளது. வளரும் தன்னம்பிக்கையும் சமூக அங்கீகாரமும் சிந்துவின் மாற்றம் வெறும் பொருளாதாரத்தோடு நின்றுவிடவில்லை. பிளவுஸ் மற்றும் சுடிதார் தைப்பதில் தேர்ச்சி பெற்றது அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது. மேலும் எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடுகளையும் கற்றுக்கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். அவரது குடும்பம் அவருக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறது—அவரது குழந்தைகள் அவர் தைத்த ஆடைகளைப் பெருமையுடன் அணிந்து கொள்கிறார்கள், அவரது கணவரும் அவரது லட்சியங்களை ஊக்குவிக்கிறார். ஒரு இல்லத்தரசியாக மட்டுமே அறியப்பட்ட சிந்து, இன்று ஊர் மக்களால் ஒரு திறமையான தையல் கலைஞர் என்று அங்கீகரிக்கப்படுகிறார். எஸ்.சிந்து எதிர்கால லட்சியமும் உத்வேகமும் சிந்து ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளோமா (Diploma in Fashion Designing) படிக்கவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும் விரும்புகிறார். மற்ற பெண்களுக்கு அவர் கூறும் செய்தி: வகுப்புகளுக்குத் தவறாமல் செல்லுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். என்னால் இதைச் சாதிக்க முடியுமென்றால், இதை படிக்கும் உங்களாலும் கற்றுக்கொண்டு வெற்றி பெற முடியும். வாக்கரூ அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெறும் பொருளாதார வருவாயை மட்டும் தராமல், பெண்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் தங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் மேம்படுத்த எப்படி உதவுகின்றன என்பதை சிந்துவின் கதை வலிமையாகப் பறைசாற்றுகிறது.!
கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!
சிந்துவின் பயணம்…. தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும் ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த 37 வயதான இல்லத்தரசி எஸ்.சிந்து, தனது கணவர் வாகனம் ஓட்டி ஈட்டி வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வந்தார். அவருக்கு தையல் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதை ஒரு நிலையான வருமானமாக மாற்றுவதற்கான முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் அவரிடம் இல்லை. குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவ வேண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுவாக இருந்தது, ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்து வந்தார். எஸ்.சிந்து வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு ஒக்கிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (PUMS) பயிலும் தனது குழந்தை மூலமாக சுதா என்பவரைச் சந்தித்தபோது, சிந்துவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவர் மூலமாக வாக்கரூ அறக்கட்டளை (Walkaroo Foundation) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடத்திய 3 மாத தையல் பயிற்சித் திட்டத்தைப் பற்றி அறிந்தார். இந்த வாய்ப்பை உறுதியுடன் ஏற்றுக்கொண்ட சிந்து, தனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையுடன் அந்தப் பயிற்சியில் சேர்ந்தார். கற்றலும் வளர்ச்சியும் பயிற்சியின் போது, சிந்து தையல் கலையை முறையாகக் கற்றுக்கொண்டார். அடிப்படை தையல் தொடங்கி கலையண உறைகள், நைட்டிகள், பட்டுப் பாவாடை, ஃபிராக் மற்றும் சுடிதார் தைப்பது வரை அனைத்தையும் கற்றார். வீட்டு வேலைகளுக்கு இடையிலும், துணிகளை வாங்கி விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தார். வகுப்பு நேரத்தைக் காண்டியும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அவருக்கு ஊக்கமளித்த பயிற்சியாளரின் ஆதரவு சிந்துவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. காலப்போக்கில், தனது தையல் தவறுகளைத் தானே கண்டறிந்து சரிசெய்யும் திறனையும் அவர் வளர்த்துக்கொண்டார். எஸ்.சிந்து திறமையை வருமானமாக மாற்றுதல் பெல்ட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சுடிதார்களைத் தைக்கும் ஆர்டர்களைப் (Bulk orders) பெற்றதன் மூலம் அவர் தனது தையல் பணியைத் தொடங்கினார். இது அவருக்கு நல்ல அனுபவத்தையும் முறையான வருமானத்தையும் தந்தது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தைத்துக் கொடுக்கத் தொடங்கியதன் மூலம் வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கினார். தற்போது அவர் ஒரு நாளைக்கு சுமார் ₹500 வரை சம்பாதிக்கிறார். ஜூன் மற்றும் ஜூலை போன்ற தேவைகள் அதிகம் உள்ள மாதங்களில் மாதம் ₹10,000 வரை வருமானம் ஈட்டுகிறார். இந்த வருமானம் அவரது குழந்தைகளின் கல்விக்கும், குடும்பச் செலவுகளுக்கும் பெரிதும் உதவுகிறது. ஒரு காலத்தில் எட்டாக் கனியாக இருந்த சேமிப்பு இப்போது அவருக்கு சாத்தியமாகியுள்ளது. வளரும் தன்னம்பிக்கையும் சமூக அங்கீகாரமும் சிந்துவின் மாற்றம் வெறும் பொருளாதாரத்தோடு நின்றுவிடவில்லை. பிளவுஸ் மற்றும் சுடிதார் தைப்பதில் தேர்ச்சி பெற்றது அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது. மேலும் எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடுகளையும் கற்றுக்கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். அவரது குடும்பம் அவருக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறது—அவரது குழந்தைகள் அவர் தைத்த ஆடைகளைப் பெருமையுடன் அணிந்து கொள்கிறார்கள், அவரது கணவரும் அவரது லட்சியங்களை ஊக்குவிக்கிறார். ஒரு இல்லத்தரசியாக மட்டுமே அறியப்பட்ட சிந்து, இன்று ஊர் மக்களால் ஒரு திறமையான தையல் கலைஞர் என்று அங்கீகரிக்கப்படுகிறார். எஸ்.சிந்து எதிர்கால லட்சியமும் உத்வேகமும் சிந்து ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளோமா (Diploma in Fashion Designing) படிக்கவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும் விரும்புகிறார். மற்ற பெண்களுக்கு அவர் கூறும் செய்தி: வகுப்புகளுக்குத் தவறாமல் செல்லுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். என்னால் இதைச் சாதிக்க முடியுமென்றால், இதை படிக்கும் உங்களாலும் கற்றுக்கொண்டு வெற்றி பெற முடியும். வாக்கரூ அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெறும் பொருளாதார வருவாயை மட்டும் தராமல், பெண்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் தங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் மேம்படுத்த எப்படி உதவுகின்றன என்பதை சிந்துவின் கதை வலிமையாகப் பறைசாற்றுகிறது.!

27 C