SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

StartUp சாகசம் 49: ஆக்டிவ் பேக்கேஜிங்-ல் சாதிக்கும் தமிழன்!! - GreenPod Labs-ன் சாசக கதை

GreenPod Labs StartUp சாகசம் 49 இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளராக திகழும் அதே வேளையில், ஒரு கசப்பான உண்மை இந்த விவசாய வலிமையை குறைத்து மதிப்பிட வைக்கிறது.  இந்தியாவில் விளையும் புதிய விளைபொருட்களில் கிட்டத்தட்ட 15 முதல் 40 சதவீதம் நுகர்வோரை அடையவே இல்லை. போதிய சேமிப்பு வசதிகள் இன்மை, முறையாக ஒருங்கிணைக்கப்படாத விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் இவை வீணாகின்றன. இந்த ஆர்ப்பாட்டமில்லாத நெருக்கடி நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் ₹92,000 கோடி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.  இந்த பாரம் இந்திய விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு விவசாயிகள் மீது விழுகிறது. வளர்ந்த நாடுகளில் உணவு விரயம் முதன்மையாக நுகர்வோர் மட்டத்தில் நிகழும் அதே வேளையில், இந்தியாவின் சவால்,  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது, இது புதுமை சார்ந்த தீர்வுகளுக்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.  இந்த சந்தையில் பல்வேறு நுட்பங்கள் பேசப்பட்டு வந்தாலும் தற்போது ஆக்டிவ் பேக்கேஜிங் எனும் முறைப்பற்றிதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.  காய்கறிகள், பழங்கள்... ஆக்டிவ் பேக்கேஜிங் என்றால் என்ன? ஆக்டிவ் பேக்கேஜிங் அல்லது செயல்திறன் மிக்க பேக்கேஜிங் என்பது பாரம்பரிய பேக்கேஜிங்கை விட மேம்பட்ட ஒரு புதுமையான தொழில்நுட்பமாகும். சாதாரண பேக்கேஜிங் உணவைப் பாதுகாக்க வெறும் உறையாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் ஆக்டிவ் பேக்கேஜிங் உணவுடன் தொடர்ந்து வினைபுரிந்து அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது, புத்துணர்ச்சியைத் தக்கவைக்கிறது மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 1. ஈரப்பதம் கட்டுப்பாடு: சிறப்பு சாச்செட்கள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன. 2. ஆக்ஸிஜன் உறிஞ்சிகள்: பேக்கேஜுக்குள் உள்ள ஆக்ஸிஜனைக் குறைத்து, விளைபொருட்களின் சுவாச விகிதத்தைக் குறைத்து ஆயுட்காலத்தை நீட்டிக்கின்றன. 3. எத்திலீன் கட்டுப்பாடு: பழங்கள் வெளியிடும் எத்திலீன் வாயுவை உறிஞ்சி, பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. 4. ஆன்டிமைக்ரோபியல் முகவர்கள்: இயற்கையான உணவு-பாதுகாப்பான பொருட்கள் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 5. CO2 உமிழ்ப்பான்கள்: கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கும் சூழலை உருவாக்குகின்றன. தக்காளி, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், இறைச்சி, கடல் உணவுகள், பால்பொருட்கள், பேக்கரி மற்றும் தின்பண்டங்கள்  உட்பட பல உணவுப்பொருட்களின்  சேமிப்புக் காலத்தை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கிறது. இது குறிப்பாக ஏற்றுமதி மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால்  விவசாயிகளின்  பொருட்கள் கெடுவது குறைவதால் பொருளாதார இழப்பு குறைகிறது. ROI (முதலீட்டு வருவாய்) 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது. இந்தியாவில் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு முன்னோடி புதுத்தொழில் முனைவு நிறுவனம் இத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கி வருகிறது. நம் மாநிலத்திலிருந்து அனுப்பப்படும் விவசாயப் பொருட்களின் வாழ்வாதாரத்தை பன்மடங்கு அதிகரிக்கும் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள GreenPod Labs என்ற நிறுவனம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், உணவு விரயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. தீபக் ராஜ்மோகன் இனி GreenPod Labs  நிறுவனத்தின் சாகசக் கதையை நேரடியாக GreenPod Labs நிறுவனர் தீபக் ராஜ்மோகன் அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்போம். ``இந்தியாவில் பெரும் பிரச்னையே விவசாயத்திற்குப் பின் அவற்றைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது, அதில் பெரும் நஷ்டமும் இருக்கிறது. பலரும் முயற்சி செய்துவரும் இடத்தில் நீங்கள் 'Active Packaging' தொழில்நுட்பத்தை உருவாக்கி விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கிறேன் என்கிறீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? இந்தத் தொழில்நுட்பம் உருவான தருணம் பற்றிச் சொல்லுங்கள்? ``நான் இந்தியாவில் விவசாய பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றேன், பின்னர் உணவு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். நான் அமெரிக்காவில் முதுகலை படிக்கும்போது, பல உணவுத் துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் துறைகளில் எனது அடிப்படைப் புரிதல்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தினேன். அமெரிக்காவில் இருந்த மதுபானம் மற்றும் பீர் உருவாக்கும் இரு நிறுவனங்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்களைக் குறைத்து அதிலிருந்து வேறு ஏதேனும் துணைப் பொருட்கள் உருவாக்க முடியுமா என்றும் ஆய்வு செய்தேன். இந்தத் திட்டத்தில் பணியாற்றியது உணவுக் கழிவு மற்றும் உணவு இழப்பின் அளவு மற்றும் இந்தத் துறையில் தொழில்நுட்பம்/புதுமை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது. நான் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் பணியாற்ற ஆரம்பித்தேன், இறைச்சியின் ஆயுட்காலத்தை நீடிக்கும் ஒரு திட்டப்பணியில் இந்த ஆக்டிவ் பேக்கேஜிங் முறை அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதை தெரிந்துகொண்டேன். இது எனக்கு இந்தத் துறையின் அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் ஆழமான புரிதலை உருவாக்க பல பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன்.  அமெரிக்காவில் அறுவடைக்குப் பின்னான இழப்புகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல்/பொருளாதாரத் தாக்கத்தின் மீது எனது ஆர்வத்தைச் செலுத்தும்போது என் மனதை வியப்பில் ஆழ்த்திய ஒரு முக்கியமான புள்ளிவிவரம் - அமெரிக்கா,ஐரோப்பா போன்ற வளர்ந்த சந்தைகளில் சுமார் 35% உணவுக் கழிவு, நுகர்வோரை அடைந்த பிறகு ஏற்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில், சுமார் 40% உணவு நுகர்வோரை அடையும் முன்பே வீணாகிறது. வளர்ந்த சந்தைகளில், இது நுகர்வோர் பிரச்சனை, அதேசமயம் வளரும் சந்தைகளில், இது ஒரு உள்கட்டமைப்புப் பிரச்சனை. GreenPod Labs இந்தியா பழங்கள் மற்றும் காய்கறிகளின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், அறுவடைக்குப் பிந்தைய புதிய விளைபொருட்களில் சுமார் 15-40% நுகர்வோரை அடையவே இல்லை. காரணங்கள் பலவாகும், இதில் மோசமான சேமிப்பு, நீண்ட போக்குவரத்துச் சங்கிலிகள் மற்றும் காலாவதியான கையாளுதல் முறைகள் அடங்கும். இந்தத் திறமையின்மையின் பாரத்தை முதலில் விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள், அவர்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கிறார்கள். மேலும், விளைபொருட்களின் இழப்பு வாங்குபவர்களுக்கு அதிக விலைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த அமெரிக்கப் பயணம் எனக்கு ஒரு பெரிய புரிதலாக இருந்தது, அதோடு அமெரிக்காவில் எனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பும் முடிவை எடுக்க வைத்தது. இந்தியாவில் உள்ள பழங்கள் குறிப்பாக சிட்ரஸ் பழங்களுக்கு எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தோம், இதுவே எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படித்தான் என் ஆர்வம் GreenPod Labs நிறுவனமாக வளர்ந்தது. ``உணவுப் பொருட்களில் ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் நுகர்வோருக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். ஆனால், உங்கள் தயாரிப்புகள் FSSAI மற்றும் US FDA (GRAS) அங்கீகாரம் பெற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு பயோடெக் (Biotech) புதுத்தொழில்  நிறுவனமாக, ஆய்வகத்தில் தயாரிப்பை உருவாக்குவது முதல் இத்தகைய தரச் சான்றிதழ்களைப் பெறுவது வரையிலான சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? ``எங்களைப் போன்ற பயோடெக் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிகள் வணிகமயமாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை. ஆரம்பத்தில், எங்கள் தயாரிப்புகள் எளிதான ஒழுங்குமுறை அனுமதியைப் பெறுவதை உறுதிசெய்ய இயற்கையான மூலப்பொருட்கள் மற்றும் உணவு-பாதுகாப்பான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் அணுகுமுறையை எடுத்தோம். எங்கள் தொழில்நுட்பத்திற்கான புதிய தயாரிப்பு வகையை உருவாக்க FSSAI உடன் இணைந்து பணியாற்றினோம். இந்தத் தயாரிப்பை உருவாக்க ஏறக்குறைய 10 மாதத்திற்கு மேல் தரவுகளுக்காகக் காத்திருந்தோம். பொருளின் அமைப்பு, ஈரப்பதம், நிறம், மரபணு வெளிப்பாடு தரவு, என்சைம் தரவு மற்றும் VOC தரவு போன்ற 5 அடுக்குப் புறநிலைத் தரவுகள் மூலம் பயிர் சேமிப்புக் காலம் நீட்டிப்பைச் சரிபார்த்தல் போன்ற அடுக்குகளை உருவாக்கினோம். இதைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளின் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது என்பதை நிரூபிக்க இந்தத் தரவுகள் எங்களுக்கு உதவியது. எப்படி இருந்தாலும் இந்தச் சான்றிதழ்கள் எங்களுக்குச் சந்தையை எளிதாக அணுக உதவியது. GreenPod Labs ``உங்கள் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான ஆரம்பக்கட்ட முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? ``BIRAC, Marico Innovation Foundation மற்றும் Factor[e] ($50,000 பரிசு) போன்ற அமைப்புகளின் மானியத்தைப் பெற்றோம். வெறும் ஐடியாவாக இருக்கும்போதோ அல்லது ஆரம்ப நிலையிலோ (Early stage), இது போன்ற பெரிய நிறுவனங்களின் மானியங்கள் (Grants) மற்றும் நிதியைப் பெறுவதற்குப் புதிய ஸ்டார்ட்அப்கள் பணியாற்ற வேண்டும். அது சம்பந்தமான தகவலைத் தேடித் திரட்ட வேண்டும். முதல் வழி, ஆரம்ப நிலையில் ஆய்வைச் செய்து பொருளாக உருவாக்க நமக்கு நிதி தேவைப்படுகிறது. அதை முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டுவதன் மூலம் நிறுவனத்தை உருவாக்கலாம். இரண்டாவது வழி மானியங்கள் மற்றும் பிற போட்டிகளின் வழியே மானியங்களைத் திரட்டலாம். நான் இரண்டாவது வழியை எடுத்தேன். ஆரம்ப நாட்களில், நான் எனது நேரத்தில் 30 முதல் 40% மானியங்களைப் பெறுவதில் செலவிட்டேன்; இப்போது அது 15 முதல் 20% ஆகக் குறைந்துள்ளது. இந்த மானியங்கள் மற்றும் விருதுகளுக்கு வெவ்வேறு தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன - இந்த மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அவற்றின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்பாக, உங்கள் புதுமை ஒரு பெரிய பிரச்னையை எவ்வாறு தீர்க்கப் போகிறது என்பதைக் காண்பிப்பதுதான் மதிப்புமிக்கது. ஒவ்வொரு போட்டிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட விரிவான ஆவணங்களை எழுதினேன், மானியத் தேவைகளின் அடிப்படையில் எங்கள் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் தாக்கத்தின் பல்வேறு அம்சங்களை விவரித்தேன். ஒரு ஸ்டார்ட்அப்பாக, கதை சொல்லுதல் மற்றும் சாத்தியமானவற்றைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம் - அவர்களின் பார்வை மற்றும் செயல் திட்டத்தின் தெளிவான பிரிவினை பல மானியங்கள்/விருதுகளைப் பெற உதவும். இருப்பினும், உங்களுக்குக் கணிசமான அளவு பொறுமை தேவை. ``தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் (Deep-tech), அறிவுசார் சொத்துரிமை மிக முக்கியம். ஸ்டார்ட்அப் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே காப்புரிமைக்கு விண்ணப்பிப்பது எவ்வளவு முக்கியம்? அதற்கான செயல்முறைகள் மற்றும் உத்திகள் (IP Strategy) பற்றிப் புதிய தொழில்முனைவோருக்கு என்ன கூறுவீர்கள்? ``காப்புரிமைப் பாதுகாப்பு என்பது தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கலின் ஒரு பகுதி. எங்கள் பார்வையில், இந்தியாவில் காப்புரிமை என்பதைப் பற்றி பலருக்கும் புரியவில்லை. அதே சமயம் அதைப் புதிய நிறுவனங்களில் குறைந்த விருப்பத் தேர்வாக இருக்கிறது. மறுபுறம் பல தொழில்முனைவோர் இந்த அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு/வர்த்தக ரகசியங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சரியான தயாரிப்புகளை உருவாக்குவதை மறந்து விடுகிறார்கள். அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு என்பது சரியான தயாரிப்பு/சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதன் மதிப்பில் சுமார் 20% மட்டுமே. இந்தியாவில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் காப்புரிமைப் பதிவு மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்ய பல திட்டங்கள் மற்றும் மானியங்களைக் கொண்டு வந்துள்ளது. எனது பார்வையில், தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை உருவாக்குவதில் அதிகபட்ச முயற்சி மற்றும் ஆற்றலைச் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதே சமயம் சிறந்த ஒன்று என்று தெரிந்தபின் உடனடியாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது நாங்கள் 6 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து, அதில் ஒன்று இந்தியாவிலும், ஒன்று அமெரிக்காவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. GreenPod Labs ``உங்களது உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்? ``இந்தியாவில் அதிகமான விவசாயிகள் தக்காளி வீணாவது குறித்துக் கவலை அடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாங்கள் எங்கள் தயாரிப்புகள் தான் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு எனகூறியபோது யாரும் வாங்கவில்லை. இங்கே பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் தீர்வுகளுக்குத் யாரும் தயார் இல்லை, ஏனெனில் பொருளாதாரம் இங்கே ஒரு சிக்கலான விஷயம். எனவே எங்களது வாடிக்கையாளர்களாக விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என யார் 50 டன்களுக்கும் மேல் பொருட்களைக் கையாள்பவர்களே அவர்களே எங்கள் வாடிக்கையாளர்கள் என்று தீர்மானித்துக்கொண்டோம். அதோடு பல ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் இவர்களிடம், எங்களது 'சாச்செட்' (Sachet) அல்லது 'ஸ்ப்ரே' வடிவிலுள்ள பொருட்களை அறிமுகப்படுத்துவதில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தது. நாங்கள் முன்பே இந்த பிரச்னையை உணர்ந்ததால் எங்கள் வணிகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம்: 1. சந்தை ஆராய்ச்சி 2. விற்பனை. சந்தை ஆராய்ச்சியின் போது, வாடிக்கையாளர் பிரச்சனைகள்/அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் சந்தையில் நேரத்தைச் செலவிடுகிறோம். வாடிக்கையாளர்களின் தயாரிப்பை எங்களது தயாரிப்புகள் வணிகமயமாக்க உதவுகிறது. சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும் புத்துணர்ச்சியைத் தக்கவைப்பதன் மூலமும், எங்களது தயாரிப்பு முதன்மையாகப் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து இழப்புகளைக் குறைக்கிறது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருளாதார மதிப்பை அதிகரிக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களால் எங்கள் GreenPod Labs தயாரிப்புகளுடன் 3 முதல் 4X ROI பெற முடிகிறது.” ``உங்கள் நிறுவனம் வெறும் பேக்கேஜிங் தீர்வுடன் நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பயிர்களின் தரம் மற்றும் அழுகும் தன்மையைக் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் (Spoilage Detection) பயன்படுத்துகிறது. ஒரு பயோடெக் நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் மற்றும் AI-ஐ இணைப்பது எப்படி உங்கள் தயாரிப்பின் மதிப்பை (Value Proposition) வாடிக்கையாளர்களிடம் அதிகரித்தது?” ``எங்கள்  வளர்ச்சி மற்றும் R&D க்காகக் கடந்த 3+ ஆண்டுகளாக AI மற்றும் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி வருகிறோம். பயிரை 5 அடுக்குப் பயிர் தரவுகளாகப் பிரிக்கிறோம், அமைப்பு, ஈரப்பதம், நிறம், சுவாச விகிதம், வெளியாகும் ஈரப்பத விகிதம், மரபணு வெளிப்பாடு, படங்கள் போன்றவை. வெவ்வேறு அளவுருக்களைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் எங்கள் பயிர் விவரக்குறிப்பை உருவாக்க இந்த முழுத் தரவுத் தொகுப்பையும் பயன்படுத்தியுள்ளோம். எங்கள் தயாரிப்பு வளர்ச்சிக் காலக்கெடுவை விரைவுபடுத்த இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். பின்னர் இந்தக் கணிப்பு மாதிரிகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மதிப்புமிக்கவை என்பதை உணர்ந்தோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்க வைத்தது. பல்வேறு பயிர் தர அளவீடுகளை அளவிட வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ஆப்பைத் தொடங்கியுள்ளோம். நிறுவனத்திற்குள்ளும் வெளியேயும் பல்வேறு பயன்பாடுகளில் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். நிறுவனத்திற்குள், தயாரிப்பு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளுக்காகத் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். இந்த முக்கியமான தொழில்நுட்பங்களின் பயன்பாடு எங்கள் அடிப்படைகளை மிகவும் வலுவாக உருவாக்கியுள்ளது. இவையெல்லாமே எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வைத்தது. `உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ ``நாங்கள் இரண்டு வடிவங்களில் விரிவாக்கம் செய்கிறோம்: 1. வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துதல் 2. இந்தியாவிற்கு வெளியே பல்வேறு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்தல். அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்குள் பல பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் நீண்ட தூரங்களுக்கு அல்லது நீண்ட கால சேமிப்புக்கு சிறந்த தரமான புதிய விளைபொருட்களைக் கொண்டு செல்வதை நாங்கள் உறுதி செய்வது எங்கள் நீண்ட கால திட்டமாகும். தீர்க்க வேண்டிய அவசரப் பிரச்சனை உள்ள பிரிவுகளுக்குள் நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். அதைத் தீர்க்கச் சரியான தயாரிப்புகளை வழங்குவோம். பயிர் புரிதலில் ஆழமாகவும் ஆழமாகவும் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கிறோம். நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விட ஒரு பயிர் அறிவியல் நிறுவனமாக உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் இதை இன்னும் வலுவாக நிறுவுவோம். ஒரு நிறுவனமாக, உணவுக் கழிவு என்பது தடுக்கக்கூடிய பிரச்சனை என்பதை GreenPod Labs நிறுவனமான நாங்கள் நம்புகிறோம், மேலும் அதை நனவாக்க விரும்புகிறோம்.” (சாகசங்கள் தொடரும்)

விகடன் 5 Dec 2025 12:40 pm

StartUp சாகசம் 49: ஆக்டிவ் பேக்கேஜிங்-ல் சாதிக்கும் தமிழன்!! - GreenPod Labs-ன் சாசக கதை

GreenPod Labs StartUp சாகசம் 49 இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளராக திகழும் அதே வேளையில், ஒரு கசப்பான உண்மை இந்த விவசாய வலிமையை குறைத்து மதிப்பிட வைக்கிறது.  இந்தியாவில் விளையும் புதிய விளைபொருட்களில் கிட்டத்தட்ட 15 முதல் 40 சதவீதம் நுகர்வோரை அடையவே இல்லை. போதிய சேமிப்பு வசதிகள் இன்மை, முறையாக ஒருங்கிணைக்கப்படாத விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் இவை வீணாகின்றன. இந்த ஆர்ப்பாட்டமில்லாத நெருக்கடி நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் ₹92,000 கோடி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.  இந்த பாரம் இந்திய விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு விவசாயிகள் மீது விழுகிறது. வளர்ந்த நாடுகளில் உணவு விரயம் முதன்மையாக நுகர்வோர் மட்டத்தில் நிகழும் அதே வேளையில், இந்தியாவின் சவால்,  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது, இது புதுமை சார்ந்த தீர்வுகளுக்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.  இந்த சந்தையில் பல்வேறு நுட்பங்கள் பேசப்பட்டு வந்தாலும் தற்போது ஆக்டிவ் பேக்கேஜிங் எனும் முறைப்பற்றிதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.  காய்கறிகள், பழங்கள்... ஆக்டிவ் பேக்கேஜிங் என்றால் என்ன? ஆக்டிவ் பேக்கேஜிங் அல்லது செயல்திறன் மிக்க பேக்கேஜிங் என்பது பாரம்பரிய பேக்கேஜிங்கை விட மேம்பட்ட ஒரு புதுமையான தொழில்நுட்பமாகும். சாதாரண பேக்கேஜிங் உணவைப் பாதுகாக்க வெறும் உறையாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் ஆக்டிவ் பேக்கேஜிங் உணவுடன் தொடர்ந்து வினைபுரிந்து அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது, புத்துணர்ச்சியைத் தக்கவைக்கிறது மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 1. ஈரப்பதம் கட்டுப்பாடு: சிறப்பு சாச்செட்கள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன. 2. ஆக்ஸிஜன் உறிஞ்சிகள்: பேக்கேஜுக்குள் உள்ள ஆக்ஸிஜனைக் குறைத்து, விளைபொருட்களின் சுவாச விகிதத்தைக் குறைத்து ஆயுட்காலத்தை நீட்டிக்கின்றன. 3. எத்திலீன் கட்டுப்பாடு: பழங்கள் வெளியிடும் எத்திலீன் வாயுவை உறிஞ்சி, பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. 4. ஆன்டிமைக்ரோபியல் முகவர்கள்: இயற்கையான உணவு-பாதுகாப்பான பொருட்கள் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 5. CO2 உமிழ்ப்பான்கள்: கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கும் சூழலை உருவாக்குகின்றன. தக்காளி, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், இறைச்சி, கடல் உணவுகள், பால்பொருட்கள், பேக்கரி மற்றும் தின்பண்டங்கள்  உட்பட பல உணவுப்பொருட்களின்  சேமிப்புக் காலத்தை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கிறது. இது குறிப்பாக ஏற்றுமதி மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால்  விவசாயிகளின்  பொருட்கள் கெடுவது குறைவதால் பொருளாதார இழப்பு குறைகிறது. ROI (முதலீட்டு வருவாய்) 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது. இந்தியாவில் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு முன்னோடி புதுத்தொழில் முனைவு நிறுவனம் இத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கி வருகிறது. நம் மாநிலத்திலிருந்து அனுப்பப்படும் விவசாயப் பொருட்களின் வாழ்வாதாரத்தை பன்மடங்கு அதிகரிக்கும் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள GreenPod Labs என்ற நிறுவனம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், உணவு விரயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. தீபக் ராஜ்மோகன் இனி GreenPod Labs  நிறுவனத்தின் சாகசக் கதையை நேரடியாக GreenPod Labs நிறுவனர் தீபக் ராஜ்மோகன் அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்போம். ``இந்தியாவில் பெரும் பிரச்னையே விவசாயத்திற்குப் பின் அவற்றைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது, அதில் பெரும் நஷ்டமும் இருக்கிறது. பலரும் முயற்சி செய்துவரும் இடத்தில் நீங்கள் 'Active Packaging' தொழில்நுட்பத்தை உருவாக்கி விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கிறேன் என்கிறீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? இந்தத் தொழில்நுட்பம் உருவான தருணம் பற்றிச் சொல்லுங்கள்? ``நான் இந்தியாவில் விவசாய பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றேன், பின்னர் உணவு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். நான் அமெரிக்காவில் முதுகலை படிக்கும்போது, பல உணவுத் துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் துறைகளில் எனது அடிப்படைப் புரிதல்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தினேன். அமெரிக்காவில் இருந்த மதுபானம் மற்றும் பீர் உருவாக்கும் இரு நிறுவனங்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்களைக் குறைத்து அதிலிருந்து வேறு ஏதேனும் துணைப் பொருட்கள் உருவாக்க முடியுமா என்றும் ஆய்வு செய்தேன். இந்தத் திட்டத்தில் பணியாற்றியது உணவுக் கழிவு மற்றும் உணவு இழப்பின் அளவு மற்றும் இந்தத் துறையில் தொழில்நுட்பம்/புதுமை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது. நான் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் பணியாற்ற ஆரம்பித்தேன், இறைச்சியின் ஆயுட்காலத்தை நீடிக்கும் ஒரு திட்டப்பணியில் இந்த ஆக்டிவ் பேக்கேஜிங் முறை அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதை தெரிந்துகொண்டேன். இது எனக்கு இந்தத் துறையின் அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் ஆழமான புரிதலை உருவாக்க பல பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன்.  அமெரிக்காவில் அறுவடைக்குப் பின்னான இழப்புகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல்/பொருளாதாரத் தாக்கத்தின் மீது எனது ஆர்வத்தைச் செலுத்தும்போது என் மனதை வியப்பில் ஆழ்த்திய ஒரு முக்கியமான புள்ளிவிவரம் - அமெரிக்கா,ஐரோப்பா போன்ற வளர்ந்த சந்தைகளில் சுமார் 35% உணவுக் கழிவு, நுகர்வோரை அடைந்த பிறகு ஏற்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில், சுமார் 40% உணவு நுகர்வோரை அடையும் முன்பே வீணாகிறது. வளர்ந்த சந்தைகளில், இது நுகர்வோர் பிரச்சனை, அதேசமயம் வளரும் சந்தைகளில், இது ஒரு உள்கட்டமைப்புப் பிரச்சனை. GreenPod Labs இந்தியா பழங்கள் மற்றும் காய்கறிகளின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், அறுவடைக்குப் பிந்தைய புதிய விளைபொருட்களில் சுமார் 15-40% நுகர்வோரை அடையவே இல்லை. காரணங்கள் பலவாகும், இதில் மோசமான சேமிப்பு, நீண்ட போக்குவரத்துச் சங்கிலிகள் மற்றும் காலாவதியான கையாளுதல் முறைகள் அடங்கும். இந்தத் திறமையின்மையின் பாரத்தை முதலில் விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள், அவர்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கிறார்கள். மேலும், விளைபொருட்களின் இழப்பு வாங்குபவர்களுக்கு அதிக விலைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த அமெரிக்கப் பயணம் எனக்கு ஒரு பெரிய புரிதலாக இருந்தது, அதோடு அமெரிக்காவில் எனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பும் முடிவை எடுக்க வைத்தது. இந்தியாவில் உள்ள பழங்கள் குறிப்பாக சிட்ரஸ் பழங்களுக்கு எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தோம், இதுவே எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படித்தான் என் ஆர்வம் GreenPod Labs நிறுவனமாக வளர்ந்தது. ``உணவுப் பொருட்களில் ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் நுகர்வோருக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். ஆனால், உங்கள் தயாரிப்புகள் FSSAI மற்றும் US FDA (GRAS) அங்கீகாரம் பெற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு பயோடெக் (Biotech) புதுத்தொழில்  நிறுவனமாக, ஆய்வகத்தில் தயாரிப்பை உருவாக்குவது முதல் இத்தகைய தரச் சான்றிதழ்களைப் பெறுவது வரையிலான சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? ``எங்களைப் போன்ற பயோடெக் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிகள் வணிகமயமாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை. ஆரம்பத்தில், எங்கள் தயாரிப்புகள் எளிதான ஒழுங்குமுறை அனுமதியைப் பெறுவதை உறுதிசெய்ய இயற்கையான மூலப்பொருட்கள் மற்றும் உணவு-பாதுகாப்பான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் அணுகுமுறையை எடுத்தோம். எங்கள் தொழில்நுட்பத்திற்கான புதிய தயாரிப்பு வகையை உருவாக்க FSSAI உடன் இணைந்து பணியாற்றினோம். இந்தத் தயாரிப்பை உருவாக்க ஏறக்குறைய 10 மாதத்திற்கு மேல் தரவுகளுக்காகக் காத்திருந்தோம். பொருளின் அமைப்பு, ஈரப்பதம், நிறம், மரபணு வெளிப்பாடு தரவு, என்சைம் தரவு மற்றும் VOC தரவு போன்ற 5 அடுக்குப் புறநிலைத் தரவுகள் மூலம் பயிர் சேமிப்புக் காலம் நீட்டிப்பைச் சரிபார்த்தல் போன்ற அடுக்குகளை உருவாக்கினோம். இதைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளின் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது என்பதை நிரூபிக்க இந்தத் தரவுகள் எங்களுக்கு உதவியது. எப்படி இருந்தாலும் இந்தச் சான்றிதழ்கள் எங்களுக்குச் சந்தையை எளிதாக அணுக உதவியது. GreenPod Labs ``உங்கள் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான ஆரம்பக்கட்ட முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? ``BIRAC, Marico Innovation Foundation மற்றும் Factor[e] ($50,000 பரிசு) போன்ற அமைப்புகளின் மானியத்தைப் பெற்றோம். வெறும் ஐடியாவாக இருக்கும்போதோ அல்லது ஆரம்ப நிலையிலோ (Early stage), இது போன்ற பெரிய நிறுவனங்களின் மானியங்கள் (Grants) மற்றும் நிதியைப் பெறுவதற்குப் புதிய ஸ்டார்ட்அப்கள் பணியாற்ற வேண்டும். அது சம்பந்தமான தகவலைத் தேடித் திரட்ட வேண்டும். முதல் வழி, ஆரம்ப நிலையில் ஆய்வைச் செய்து பொருளாக உருவாக்க நமக்கு நிதி தேவைப்படுகிறது. அதை முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டுவதன் மூலம் நிறுவனத்தை உருவாக்கலாம். இரண்டாவது வழி மானியங்கள் மற்றும் பிற போட்டிகளின் வழியே மானியங்களைத் திரட்டலாம். நான் இரண்டாவது வழியை எடுத்தேன். ஆரம்ப நாட்களில், நான் எனது நேரத்தில் 30 முதல் 40% மானியங்களைப் பெறுவதில் செலவிட்டேன்; இப்போது அது 15 முதல் 20% ஆகக் குறைந்துள்ளது. இந்த மானியங்கள் மற்றும் விருதுகளுக்கு வெவ்வேறு தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன - இந்த மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அவற்றின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்பாக, உங்கள் புதுமை ஒரு பெரிய பிரச்னையை எவ்வாறு தீர்க்கப் போகிறது என்பதைக் காண்பிப்பதுதான் மதிப்புமிக்கது. ஒவ்வொரு போட்டிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட விரிவான ஆவணங்களை எழுதினேன், மானியத் தேவைகளின் அடிப்படையில் எங்கள் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் தாக்கத்தின் பல்வேறு அம்சங்களை விவரித்தேன். ஒரு ஸ்டார்ட்அப்பாக, கதை சொல்லுதல் மற்றும் சாத்தியமானவற்றைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம் - அவர்களின் பார்வை மற்றும் செயல் திட்டத்தின் தெளிவான பிரிவினை பல மானியங்கள்/விருதுகளைப் பெற உதவும். இருப்பினும், உங்களுக்குக் கணிசமான அளவு பொறுமை தேவை. ``தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் (Deep-tech), அறிவுசார் சொத்துரிமை மிக முக்கியம். ஸ்டார்ட்அப் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே காப்புரிமைக்கு விண்ணப்பிப்பது எவ்வளவு முக்கியம்? அதற்கான செயல்முறைகள் மற்றும் உத்திகள் (IP Strategy) பற்றிப் புதிய தொழில்முனைவோருக்கு என்ன கூறுவீர்கள்? ``காப்புரிமைப் பாதுகாப்பு என்பது தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கலின் ஒரு பகுதி. எங்கள் பார்வையில், இந்தியாவில் காப்புரிமை என்பதைப் பற்றி பலருக்கும் புரியவில்லை. அதே சமயம் அதைப் புதிய நிறுவனங்களில் குறைந்த விருப்பத் தேர்வாக இருக்கிறது. மறுபுறம் பல தொழில்முனைவோர் இந்த அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு/வர்த்தக ரகசியங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சரியான தயாரிப்புகளை உருவாக்குவதை மறந்து விடுகிறார்கள். அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு என்பது சரியான தயாரிப்பு/சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதன் மதிப்பில் சுமார் 20% மட்டுமே. இந்தியாவில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் காப்புரிமைப் பதிவு மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்ய பல திட்டங்கள் மற்றும் மானியங்களைக் கொண்டு வந்துள்ளது. எனது பார்வையில், தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை உருவாக்குவதில் அதிகபட்ச முயற்சி மற்றும் ஆற்றலைச் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதே சமயம் சிறந்த ஒன்று என்று தெரிந்தபின் உடனடியாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது நாங்கள் 6 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து, அதில் ஒன்று இந்தியாவிலும், ஒன்று அமெரிக்காவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. GreenPod Labs ``உங்களது உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்? ``இந்தியாவில் அதிகமான விவசாயிகள் தக்காளி வீணாவது குறித்துக் கவலை அடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாங்கள் எங்கள் தயாரிப்புகள் தான் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு எனகூறியபோது யாரும் வாங்கவில்லை. இங்கே பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் தீர்வுகளுக்குத் யாரும் தயார் இல்லை, ஏனெனில் பொருளாதாரம் இங்கே ஒரு சிக்கலான விஷயம். எனவே எங்களது வாடிக்கையாளர்களாக விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என யார் 50 டன்களுக்கும் மேல் பொருட்களைக் கையாள்பவர்களே அவர்களே எங்கள் வாடிக்கையாளர்கள் என்று தீர்மானித்துக்கொண்டோம். அதோடு பல ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் இவர்களிடம், எங்களது 'சாச்செட்' (Sachet) அல்லது 'ஸ்ப்ரே' வடிவிலுள்ள பொருட்களை அறிமுகப்படுத்துவதில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தது. நாங்கள் முன்பே இந்த பிரச்னையை உணர்ந்ததால் எங்கள் வணிகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம்: 1. சந்தை ஆராய்ச்சி 2. விற்பனை. சந்தை ஆராய்ச்சியின் போது, வாடிக்கையாளர் பிரச்சனைகள்/அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் சந்தையில் நேரத்தைச் செலவிடுகிறோம். வாடிக்கையாளர்களின் தயாரிப்பை எங்களது தயாரிப்புகள் வணிகமயமாக்க உதவுகிறது. சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும் புத்துணர்ச்சியைத் தக்கவைப்பதன் மூலமும், எங்களது தயாரிப்பு முதன்மையாகப் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து இழப்புகளைக் குறைக்கிறது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருளாதார மதிப்பை அதிகரிக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களால் எங்கள் GreenPod Labs தயாரிப்புகளுடன் 3 முதல் 4X ROI பெற முடிகிறது.” ``உங்கள் நிறுவனம் வெறும் பேக்கேஜிங் தீர்வுடன் நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பயிர்களின் தரம் மற்றும் அழுகும் தன்மையைக் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் (Spoilage Detection) பயன்படுத்துகிறது. ஒரு பயோடெக் நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் மற்றும் AI-ஐ இணைப்பது எப்படி உங்கள் தயாரிப்பின் மதிப்பை (Value Proposition) வாடிக்கையாளர்களிடம் அதிகரித்தது?” ``எங்கள்  வளர்ச்சி மற்றும் R&D க்காகக் கடந்த 3+ ஆண்டுகளாக AI மற்றும் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி வருகிறோம். பயிரை 5 அடுக்குப் பயிர் தரவுகளாகப் பிரிக்கிறோம், அமைப்பு, ஈரப்பதம், நிறம், சுவாச விகிதம், வெளியாகும் ஈரப்பத விகிதம், மரபணு வெளிப்பாடு, படங்கள் போன்றவை. வெவ்வேறு அளவுருக்களைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் எங்கள் பயிர் விவரக்குறிப்பை உருவாக்க இந்த முழுத் தரவுத் தொகுப்பையும் பயன்படுத்தியுள்ளோம். எங்கள் தயாரிப்பு வளர்ச்சிக் காலக்கெடுவை விரைவுபடுத்த இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். பின்னர் இந்தக் கணிப்பு மாதிரிகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மதிப்புமிக்கவை என்பதை உணர்ந்தோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்க வைத்தது. பல்வேறு பயிர் தர அளவீடுகளை அளவிட வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ஆப்பைத் தொடங்கியுள்ளோம். நிறுவனத்திற்குள்ளும் வெளியேயும் பல்வேறு பயன்பாடுகளில் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். நிறுவனத்திற்குள், தயாரிப்பு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளுக்காகத் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். இந்த முக்கியமான தொழில்நுட்பங்களின் பயன்பாடு எங்கள் அடிப்படைகளை மிகவும் வலுவாக உருவாக்கியுள்ளது. இவையெல்லாமே எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வைத்தது. `உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ ``நாங்கள் இரண்டு வடிவங்களில் விரிவாக்கம் செய்கிறோம்: 1. வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துதல் 2. இந்தியாவிற்கு வெளியே பல்வேறு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்தல். அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்குள் பல பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் நீண்ட தூரங்களுக்கு அல்லது நீண்ட கால சேமிப்புக்கு சிறந்த தரமான புதிய விளைபொருட்களைக் கொண்டு செல்வதை நாங்கள் உறுதி செய்வது எங்கள் நீண்ட கால திட்டமாகும். தீர்க்க வேண்டிய அவசரப் பிரச்சனை உள்ள பிரிவுகளுக்குள் நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். அதைத் தீர்க்கச் சரியான தயாரிப்புகளை வழங்குவோம். பயிர் புரிதலில் ஆழமாகவும் ஆழமாகவும் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கிறோம். நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விட ஒரு பயிர் அறிவியல் நிறுவனமாக உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் இதை இன்னும் வலுவாக நிறுவுவோம். ஒரு நிறுவனமாக, உணவுக் கழிவு என்பது தடுக்கக்கூடிய பிரச்சனை என்பதை GreenPod Labs நிறுவனமான நாங்கள் நம்புகிறோம், மேலும் அதை நனவாக்க விரும்புகிறோம்.” (சாகசங்கள் தொடரும்)

விகடன் 5 Dec 2025 12:40 pm